ஸ்ரீ இராமாயண நூல்கள்
ஸ்ரீ வான்மீகியின் காப்பியம் எழுந்த பின்னர் வடமொழி முதலான இருபதுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில்
ஸ்ரீ இராமாயணம் காப்பிய வடிவம் பெற்று வழங்கி வருகிறது-
சமஸ்கிருதம்
1.ஸ்ரீ வான்மீகி இராமாயணம்
ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற சமஸ்கிருத நூல்கள்
1.ஸ்ரீ மகாபாரதம் : (நான்கிடங்களில்)
ஆரணிய பருவம் 147:28-38; 252-275
துரோண பருவம் 59:1-31
சாந்தி பருவம் 22;51-62
ஏறக்குறைய 700 பாடல்களில் இராமகாதை குறிக்கப்படுகிறது.
2. புராணங்கள் : (முதன்மையானவை)
1.ஸ்ரீ விஷ்ணு புராணம் (கி.பி. 4) ( IV, 4,5)
2.ஸ்ரீ பிரும்மானந்த புராணம் (கி.பி. 4) (2. 21)
3.ஸ்ரீ வாயு புராணம் (கி.பி. 5) ( II.26) விஷ்ணு புராணம் போன்றது.
4.ஸ்ரீ பாகவத புராணம் (கி.பி. 6) (IX 10-11) இங்கு தான் சீதை திருமகளின் அவதாரம் என்னும் செய்தி முதலில் கூறப்படுகிறது.
5.ஸ்ரீ கூர்ம புராணம் (கி.பி. 7) (.19: 1; II 34)
6.ஸ்ரீ அக்கினி புராணம் (கி.பி. 8-9) (.5-12) வான்மீகியின் சுருக்கம்
7.ஸ்ரீ நாரதர் புராணம் (கி.பி. 10) (1. 79; II.75) வான்மீகியின் சுருக்கம்.
8.ஸ்ரீ பிரம்ம புராணம் – அரிவம்சத்தின் சுருக்கம்.
9.ஸ்ரீ கருட புராணம் (கி.பி. 10) பெரும்பான்மையும் பிற்கால இடைச்செருகல்கள்
10.ஸ்ரீ ஸ்கந்த புராணம் (கி.பி. 8க்குப் பின்) (II : 30) சிற்சில செய்திகள்
11.ஸ்ரீ பத்ம புராணம் (கி.பி. 12-15) (116 படலம், உத்தர 24, 43,44)
சிறியன
1.ஸ்ரீ தர்மோத்ர புராணம் (கி.பி. 7)
2.ஸ்ரீ நரசிம்ம புராணம் (கி.பி. 4-5) (இயல் 47-52)
3.ஸ்ரீ தேவி பாகவதம் (கி.பி. 10-11) ( III 28-30)
4.ஸ்ரீ பிரகதர்ம, சௌரபுராணம் (கி.பி. 950-1050) (இயல் : 30)
மேற்கண்ட புராணங்கள் தவிர வான்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சில
முழு ஸ்ரீ இராமாயண நூல்களும் வடமொழியில் காணப் படுகின்றன.
1.ஸ்ரீ யோக வசிஷ்ட (அ) வசிஷ்ட இராமாயணம் (கி.பி. 8 (அ) 12)
2.ஸ்ரீ அத்யாத்ம இராமாயணம் (கி.பி. 13 இராமசர்மர்)
3.ஸ்ரீ அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்டது)
4.ஸ்ரீ ஆனந்த இராமாயணம் (கி.பி. 15) வால்மீகி பெயரால் வழங்குகிறது.
இவையேயன்றி இன்னும் பல்வேறு சிறுசிறு ஸ்ரீ இராமாயண நூல்கள்
வடமொழியில் கி. பி 19ஆம் நூற்றாண்டு வரையில் தோன்றியுள்ளன.
இவற்றுள் பெரும்புகழ் வாய்ந்தன:
1.ஸ்ரீ காளிதாசர் : ஸ்ரீ இரகுவம்சம் (கி. பி. 4)
2.ஸ்ரீ பிரவர்சேனர் : ஸ்ரீ இராவணவகோ (அ) சேதுபந்தா (கி. பி. 550-600)
3.ஸ்ரீ பட்டி : ஸ்ரீ இராவணவதா (கி. பி. 500-650)
4.ஸ்ரீ குமாரதாசர் : ஸ்ரீ ஜானகி ஹரணா (கி. பி. 8)
5.ஸ்ரீ அபிநந்தர் : ஸ்ரீ இராமசரிதை (கி. பி. 9)
6.ஸ்ரீ க்ஷேமேந்திரர் : (a)ஸ்ரீ இராமயண மஞ்சரி (கி. பி. 11).: (b)ஸ்ரீ தசாவதார சரிதை
7.ஸ்ரீ சாகல்ய மல்லர் : ஸ்ரீ உதார ராகவர் (கி. பி. 12)
8.ஸ்ரீ சகர கவி : ஸ்ரீ ஜானகி பரிணயம் (கி. பி. 17)
9.ஸ்ரீ அத்வைத கவி : ஸ்ரீ இராமலிங்காம்ருதம் (கி. பி. 17)
10.ஸ்ரீ மோகனஸ்வாமி : ஸ்ரீ இராம ரகசியம் (அ)ஸ்ரீ இராம சரிதை)(கி. பி. 1608)
ஸ்ரீ இராமகாதை நாடக வடிவிலும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை
பல நூல்களாக வெளி வந்துள்ளன. ஸ்ரீ பாசர், ஸ்ரீ பவபூதி, ஸ்ரீ ஜெயதேவர் முதலான நாடகாசிரியர்கள் இதில் அடங்குவர்.
பௌத்த இராமாயணங்கள்
1. தசரத ஜாதகம் (பாலி, கி. மு. 5)
2. அனமகம் ஜாதகம் (பாலி, கி. மு. 5)
3. தசரத கதனம் (பாலி, கி. மு. 5)
ஜைன இராமாயணங்கள்
1. விமல சூரி : பௌம சரிதம் (பிராக்ருதம், கி. பி. 4)
2. சங்க தாசர் : வாசுதேவ ஹிண்டி (பிராக்ருதம், கி. பி. 5)
3. இரவி சேனர் : பத்ம புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 6)
4. குணபத்ரர் : உத்தர புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 10)
5. சுயம்பு தேவர் : பௌம சரிதம் (அபப்பிரம்சம், கி. பி. 9)
6. சீலங்கர் : சௌபன்ன மகா புருஷ சரிதம் (பிராக்ருதம், கி. பி.868)
7. பத்ரேசுவரர் : ககாவலி (பிராக்ருதம், கி. பி. 11)
தமிழ்
ஸ்ரீ கம்பன் : ஸ்ரீ கம்பராமாயணம் (கி. பி. 9)
தெலுகு
1.ஸ்ரீ கோன புத்தா ரெட்டி : ஸ்ரீ ரங்கநாத ராமாயணம் (கி. பி. 13)
2.ஸ்ரீ பாஸ்கரன் மற்றும் மூவர் : ஸ்ரீ பாஸ்கர ராமாயணம் (கி. பி. 13)
3.ஸ்ரீ ஆதுகூரி மொல்ல : ஸ்ரீ மொல்ல ராமாயணம் (கி. பி. 15)
கன்னடம்
1. ஸ்ரீ அபிநவ பம்பா என்னும் ஸ்ரீ நாக சந்திரர் : ஸ்ரீ பம்ப ராமாயணம் (கி. பி. 11)
2. ஸ்ரீ குமார வான்மீகி என்னும் ஸ்ரீ நரகரி : தொரவெ ராமாயணம் (கி. பி. 16)
மலையாளம்
1. ஸ்ரீ கன்னச இராம பணிக்கர் : ஸ்ரீ கன்னச ராமாயணம் (கி. பி. 14)
2. ஸ்ரீ துஞ்சத்த எழுத்தச்சன் : ஸ்ரீ அத்யாத்ம ராமாயணம் (கி. பி. 16)
இந்தி
1.ஸ்ரீ கோஸ்வாமி துளசிதாஸ் : ஸ்ரீ துளசி ராமாயணம் (கி. பி. 1574)
2.ஸ்ரீ கேசவ தாஸ் : ஸ்ரீ இராம சந்திரிகா (கி. பி. 16)
அசாமி
ஸ்ரீ மாதவ் கந்தவி : ஸ்ரீ அசாமி ராமாயணம் (கி. பி. 14)
வங்காளம்
ஸ்ரீ கிருத்திவாசன் : ஸ்ரீ வங்காள ராமாயணம் (கி. பி. 15)
ஒரியா
ஸ்ரீ பலராமதாஸ் : ஸ்ரீ ஒரியா ராமயணம் (கி. பி. 16)
மராத்தி
ஸ்ரீ ஏக நாதர் :ஸ்ரீ பாவார்த ராமாயணம் (கி. பி. 16)
நாட்டுப்புற இலக்கியங்கள்
தமிழ், மைதிலி, போஜ்புரி, வ்ரஜ், இந்தி, மற்றும் சில வடநாட்டு மக்களிலக்கியப் பாடல்கள்.
———-
தெலுகு இராமாயணங்களான ரங்க நாத ராமாயணம், பாஸ்கர ராமாயணம், மொல்ல ராமாயணம்
மூன்றிலும் காண்ட உட்பிரிவுகள் இல்லை.
குமார வான்மீகியின் தொரவெ இராமாயணம் காண்டந்தோறும் சந்தி என்னும் உட்பிரிவை உடையதாக விளங்குகிறது.
மலையாள இராமாயணங்களில் காண்டப் பிரிவுகள் உண்டு.
துளசி இராமாயணத்தில் காண்டப் பிரிவு தவிர, படலம், சருக்கம் போன்ற உட்பிரிவுகள் உடையதாகத் துளசியின்
காப்பியம் அமையவில்லை.
தெலுகு மொழியின் முதல் பெண் காப்பியக் கவிஞராகிய ஆதுகூரி மொல்ல, மறுமைப் பயனாகிய முக்தியை அடையும் நோக்குடன்
மொல்ல இராமாயணத்தைப் படைத்ததாகக் கூறுகிறார். மேலும், இவர் தாமே இக்காப்பியத்தைப் படைக்க முனையவில்லை என்றும்,
ஸ்ரீராமரே தம் கதையைக் கூறி எழுதுமாறு கட்டளையிடத் தாம் எழுதியதாகவும் கூறுகிறார்.
—————————————————————-—————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply