ஸ்ரீ -கலியன் ஒலி – சப்தம் இல்லாத சாற்றுப் பாசுரங்கள் –

கலி கன்றி செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை -1-1-10-

திருவேம்கடத்துறை செல்வனை மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்-1-8-10-

வேங்கட வேதியனை திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன் பண்ணார் பாடல் பத்து-1-9-10-

வேங்கட மா மலை மேய மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை -1-10-10-

கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம் மன்னு பாடல்-2-1-10-

எவ்வுள் கிடந்தானை வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும்-2-2-10-

திருவல்லிக்கேணி நின்றானை கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்து-2-3-10-

கடல் மல்லை தல சயனத்துத் தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவர் தம்மை
திடமாக விவை யைந்தும் ஐந்தும்-2-5-10-

அட்டபுயகரத்து ஆதி தன்னை கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை-2-8-10-

பரமேச்வர விண்ணகர் மேல் கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம் தலைவன்
கலி கன்றி குன்றாதுரைத்த சீர் மன்னு செந்தமிழ் மாலை -2-9-10-

தண் திருவயிந்திரபுரத்து மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி
விரித்து உரைத்த பாவு தண் தமிழ் பத்திவை-3-1-10-

சித்திர கூடம் அமர்ந்த– ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் தானிவை –3-3-10-

காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை சங்க முத்தமிழ் மாலை பத்து–3-4-10-

வயலாலி கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை ஐயிரண்டும் இவை –3-6-10-

வைகுந்த விண்ணகர் மேல் வண்டு அறையும் பொழில் சூழ் மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல்
துணிய வாள் வீசும் பரகாலன் கலி கன்றி சொன்ன சங்கமலி தமிழ் மாலை பத்து இவை — –3-9-10-

திருத் தேவனார் தொகை மேல் கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும்-4-1-10-

வண் புருடோத்தமத்துள் ஆலி மன் அருள் மாரி பண்ணுளார் தரப்பாடிய பாடல் இப்பத்து -4-2-10-

செம் பொன் செய் கோயிலினுள்ளே வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையர்
வாள் கலி கன்றி ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும் –4-3-10-

திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக்
கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் -4-4-10-

நாங்கைக் காவளம் பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன பாவளம் பத்து-4-6-10-

திரு வெள்ளக் குளத்து உறைவானைக் கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை-4-7-10-

நாங்கைப் பார்த்தன் பள்ளி செங்கண் மாலை வார்கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்து-4-8-10-

புள்ளம் பூதங்குடி தன் மேல் கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி
சொல் தான் ஈரைந்து இவை -5-1-10-

கூடலூர் மேல் கோவைத் தமிழால் கலியன் சொன்ன பா–5-2-10-

திரு வெள்ளறை அதன் மேய அஞ்சனம் புரையும் திரு வுருவனை யாதியை யமுதத்தை
நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ இரண்டும்–5-3-10-

அரங்கத்தைக் கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும்-5-4-10-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த பாடல் பத்திவை-5-8-10-

திருப்பேர் வரிவரவு அணையில் பள்ளி கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை-5-9-10-

விண்ணகர் மேல் காமரு சீர்க் கலிகன்றி சொன்ன பாமரு தமிழ் இவை -6-1-10-

நறையூர் தொழு நெஞ்சமே என்ற கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல்-6-4-10-

திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலைப் பொய்ம்மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன்
புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த அம்மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல் -6-6-10-

திருநறையூர் நின்றானை வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன்
பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்து-6-9-10-

நறையூர் நின்ற நம்பியைக் கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன்
சொன்னீர் சொல் மாலை-7-2-10-

மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை பாடல் பத்திவை-7-3-10-

அழுந்தூர் நின்றானை வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொதிந்த தமிழ் மாலை -7-5-10-

தென் அழுந்தையில் மன்னி நின்ற அறமுதல் ஆனவனை யணி யாலியர் கோன் மருவார்
கறை நெடுவேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்-7-6-10-

அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக் கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன்
மங்கைக் குல வேந்தன் சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை-7-7-10-

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை-7-10-10-

கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும்-8-1-10-

கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல்
சீர்மலி பாடல் இவை-8-2-10-

திருக் கண்ண புரத் துறையும் வாமனனை மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை நா மருவி யிவை -8-3-10–

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன் கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் -8-9-10-

நாகை யழகியாரை கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் -9-2-10-

செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப்
பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்றுலக ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் -9-5-10-

திருக் குறுங்குடி சேருவதே பயன்
இலங்கை பாழாளாகப் படை பொருதவன் -பெரிய பிராட்டியாரை இடைவிடாமல் அனுபவிக்கச் செய்தேயும்
என் பக்கல் விருப்பம் செய்து என்னுடன் சேர்ந்து கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இலக்காக்கி அருளி
ஒரு நொடிப் பொழுதும் பிரியாமல் இங்கே நித்ய வாசம் செய்து அருளும் திருக் குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்
காமரு சீர் கலியன் -என்னை -என்று சொல்வதால் -பரகால நாயகி – வேறே வ்யக்தி போலே-

திரு மாலிருஞ்சோலை நின்ற ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன பாடல் பனுவல் பத்து–9-9-10-

ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில் சேல்கள் பாய் கழனித் திருக் கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந் நாலும் ஆறும்–9-10-10-

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக் கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த சொல்-10-1-10-

இலங்கை யழித்தவன் தன்னைப் பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம்-10-2-10-

எழில் தோள் கலிகன்றி செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை-10-4-10-

காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-

நிகமன பாசுரத்திலும் வழக்கத்துக்கு மாறாக யசோதை பாவனை தொடருகிறது
என் நெஞ்சிலே போலேவே திரு மங்கை ஆழ்வார் திரு உள்ளத்திலும் குடி கொண்டு இருக்கும் திருமாலே
சப்பாணி கொட்ட வேணும் -என்று யசோதை பிராட்டி சொல்வதாகவே அமைந்துள்ளது
இப்படிப் பட்ட பிரார்த்தனையே பயன் என்று ஸூசிப்பித்து வேறு பயன் சொல்லாமல் தலைக் கட்டி அருளுகிறார்-

அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல்
மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே -10-7-14-

அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை-10-8-10-

அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச் சென்ற மாயனைச் செங்கண் மாலினை
மன்றிலார் புகழ் மங்கை வாள் கலி கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே -11-1-10-

வென்று விடை யுடன் ஏழு அடர்த்த வடிகளை
மன்றின் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல் ஓன்று நின்ற ஒன்பதும்–11-2-10-

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10-

ஷீராப்தி நாதனே
திரு வேங்கடத்தானே
ஆழ்வார் திரு உள்ளத்தில் நித்ய வாசம் செய்து அருளி பரத்வ சௌலப்ய திருக் கல்யாண குணங்களைக் காட்டி அருளினவன்
இவரைப் பெறவே அங்கு எல்லாம் இருந்து வந்தவன் -பரம உத்தேச்யம்
இது சித்தித்து விட்டால் அங்கு ஆதாரம் மட்டமாய் விடுமே
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவமே
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்தகம் -பெரிய திருவந்தாதி
குணாநுபவம் செய்வதே பரம போக்கியம் என்பதால் பல சுருதி தனியாக அருளிச் செய்ய வில்லை-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே-11-8-10-

விளக்கின் முன் இருள் போலே
காட்டுத் தீயின் முன் பஞ்சுத்துப் போலேயும்
இத் திருமொழி ஒதுகையாகிய ஞானத்துக்கு முன் வினைகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும் —

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை –
ரஷ்ய வர்க்கம் ஏதேனும் ஒரு படி நின்றாலும் ரஷணம் தான் மிறுக்கு உடைத்தான் ஆகையாலும்
ஒரு குறைகள் வாராது காணும் -என்று
அதுக்கு உடலாகத் தான் கோவர்த்தன உத்தாரணம் பண்ணின படியைக் காட்டி அருளினான்

ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும் வாசனையோடு கழியும் படி
அஹம் -என்று ரஷகனான தன்னைக் காட்டி அருளினான் –

——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: