Archive for October, 2020

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -20-

October 31, 2020

பல அத்யாயம் விம்சதி லக்ஷண மீமாம்ஸையில் இறுதி அத்யாயம்
சாதனமும் பலமும் ஒருவாறு ஓத்தே இருக்கும் -ஒன்றும் ஆகும் –
சித்த லக்ஷணம் ஆகிற ப்ரஹ்மமே பலமும் ஆகிறது –
ஆகையால் பலமான பர ப்ரஹ்ம ஸ்வரூபமே சாதன அத்தியாயத்தின் நடுவில்
உபய லிங்க அதிகரணம் முதல் சில அதிகரணங்களிலே விசாரிக்கப் படுகிறது என்று
அதிகரண சாராவளியில் காட்டப் பட்டுள்ளது
முக்தி பலத்தைக் கீர்த்தனம் செய்து முக்தி பல அதிகரணத்தோடு சாதன அத்யாயம் முடிந்தது –

ஆ வ்ருத்திர் அஸக்ருத் உபதேசாத் -என்று அன்வஹம் த்யானம் செய்யும் பக்தி உபாயத்தோடு
பல அத்யாயம் தொடங்கிற்று
முதல் பாதம் முன் பாகத்தில் சாதனமான பக்தியின் ஸ்வரூபத்தை விசாரித்தது –
சாதனமான பக்தியும் மிகுந்த ஸூ கமாய் இருப்பதால் பல கோடியில் சேருவதால் சாதனத்தையும்
விசாரித்தது என்று ஸ்ருத ப்ரகாசிகை காட்டிற்று –
பலத்திற்காக சாதனமா -அல்லது சாதனமே பலமா என்கிற விசாரம் கேவலம் ஸ்ரம பலமே யல்லாது
முடிவு ஏற்படுவது கஷ்டம் என்றது சங்கல்ப ஸூர்ய உதயம்
பலார்த்தம் தத் கிம் வா பலமிதி விதர்க்க ஸ்ரம பல
பலா நாம் நேதா ய பலமிதி ச சாரீரக மித -என்று சதுஸ்லோகீ ஸ்லோக மங்கள ஸ்லோகம் –

பத்தொன்பதாம் ஸ்லோகத்திலேயே போக பலத்தையும் ஸூ சித்து விட்டதாகவும் சொல்லலாம் –
நித்ய சேஷித்வ யோகாத் -என்றபடி பெருமாளுக்கு சேஷித்வமே நித்யம் என்பது போல்
நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் –என்று ஆழ்வார் திருவடிகளே எக்காலத்திலும் சரணம் என்றது
எமக்கு எம்பெருமானார் விஷயத்திலும் துல்யமே–
இந்த ஸ்துதி முடிவிலும் எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்பது
அநந்ய சரணோ பவதீதி -என்று அறுதி இட்டு ஸ்துதியை முடிக்கும் அழகு ரசிக்கத் தக்கது –

ஸ்துதியின் கடைசி பக்கத்திலேயே உம் திருவடிகளே சரணம் என்று சொல்லி விட்டார் –
ஸ்துதியை முடித்து விட்டு ஸ்துதிக்கு வெளியில் சொல்லிக் கொள்ளும் படி விட்டு விடவில்லை –
எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்னும் ஸ்ரீ வைஷ்ணவ முத்ரை ஸ்தோத்திரத்தின்
கடைசி பாகத்திலேயே அமைந்து விட்டது –

பெருமாள் திருவடி சேவா பலமான மோக்ஷ பலமும் முன் ஸ்லோகத்திலேயே கூறப்பட்டு உள்ளது –
இந்த ஸ்துதிக்கு பலம் ஸ்துத்யரான எம்பெருமானாருடைய அங்கீ காரம் –
அது இந்த ஸ்துதிக்கு ஸாஷாத்தான பலம் –அந்த பலத்தை இங்கே கூறுகிறார் –
மது மதந விஞ்ஞாபன மிதம் -என்று ஸ்தோத்ர ரத்ன முடிவில் உள்ளத்தையும்
ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா –என்கிற கடைசி வார்த்தையும் இங்கே அநுஸந்திப்பதும் ஸ்பஷ்டம் –
பிதாமஹம் நாத முனிம் விலோக்ய – என்று அங்கே பிரார்த்தித்தபடியே இங்கும்

ஸ்ரீ சைல நாதர் -என்கிற ஒரு நாதர் திரு நாமத்தைச் சொல்லி
அவர் கொடுத்த தானத்தை நீர் யதார்த்தம் ஆக்க வேண்டும் என்று முன் ஸ்லோகத்தில் கூறினார் –
அவர் செய்த தானத்தை நீர் விக்னம் வாராமல் பறி பாலனம் செய்ய வேண்டும்
என்று முன் ஸ்லோக பிரார்த்தனை –
உம் திருவடி சேவையை தானம் செய்தார்
அந்த தானம் அழியாமல் நீர் பரி பாலனம் செய்ய வேண்டும் -என்று அங்கே பிரார்த்தித்தது –
தான பாலனங்களுக்குள் பாலனமே உயர்ந்தது என்பர் –

விஜ்ஞாபனம் யதித மத்ய து மா மகீநம் –
அங்கீ குருஷ்வ யதிராஜ தயாம்புராசே
அஜ்ஞ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தச்ச –
தஸ்மாத் அநந்ய சரணோ பவதி இதி மத்வா –20-

யதிராஜ தயாம்புராசே-கருணைக் கடலான யதிராஜரே
அத்ய -இன்று
மா மகீநம்-அடியேனுடையதான
இதம் விஜ்ஞாபனம் -இந்த ஸ்துதி -விண்ணப்பம் என்று உம் திருவடிகளில் நித்ய சேவா பிரார்த்தனை –
யத் -யாது ஓன்று உண்டோ
அதை
அஜ்ஞ அயம் -இவன் அறிவில்லாதவன் -ஸம்யக் ஞானம் இல்லாதவன்
ஆத்ம குண லேச விவர்ஜி தச்ச -ஆத்ம குண லேசமும் அடியோடு இல்லாதவன் -சம்பந்த குண லேசமும் இல்லாதவன்
தஸ்மாத்-ஆகையால்
அநந்ய சரணோ பவதி இதி -வேறே கதி இல்லாதவனாய் இருக்கிறான்
இதி -என்று எண்ணி
மத்வா –என்னை
அங்கீ குருஷ்வ-திரு உள்ளம் பற்றி அருள வேணும்

விஜ்ஞாபனம்
ஸ்ரீ ருக்மிணி பிராட்டி ஸ்ரீ கண்ணனுக்கு -விஞ்ஞா பயதி தே கிஞ்சித் – என்று
ஏழு ஸ்லோகங்களை விஞ்ஞாபனம் செய்தார் –
அங்கே ஸப்த பதியான விவாஹ பிரார்த்தனைக்கு ஏற்ப ஏழு ஸ்லோகங்கள்
இங்கே விம்சதி லக்ஷண மீமாம்ஸாதி பலமான மோக்ஷத்துக்கு ஏற்ப இருபது ஸ்லோகங்களால் விஞ்ஞாபனம் –
உம் திருவடி சேவை நித்யமாக நிர்விக்னமாக இருக்கும் படி காத்து அருள வேணும் –

யதிதம்
ஏதோ விது ஒரு கணக்கிலும் சேரத் தக்கது அல்ல
ஏதோ ஒரு முறையானது

அத்ய
நித்யமும் பாடி இன்று இன்று என்று சொல்லும் படி இருக்க வேண்டும்

மா மகீநம் –
விஞ்ஞாபநம் வனகிரீஸ்வர ஸத்ய ரூபாம் அங்கீ குருஷ்வ கருணார்ணவ மா மகீநம் –
ஸ்ரீ ரெங்க தாமநி யதா புர சேஷ போகம் ராமாநுஜார்ய வசக பரி வர்க்திஷீய -என்று
ஸ்ரீ ஸூ ந்தர பாஹு ஸ்தவ முடிவு ஸ்லோகம் அனுசரிப்பது ஸ்பஷ்டம் –
என்னுடைய ஸ்துதியை -ஏதோ என்று சொல்லும்படியான இந்த ஸ்துதியை -பெரியோர் அனுக்ரஹத்தால்
வந்தது என்று அவர்கள் சிரஸ்ஸில் பாரத்தைப் போட இஷ்டம் இல்லை –
எல்லாக் குறைகளும் என்னுடையவைகளாகவே இருக்கட்டும்
என்னைச் சேர்ந்தவர் பாடும் இந்த ஸ்துதியை -இந்த ஸ்துதி மூலம் அவர்கள் செய்யும் விஞ்ஞாபனத்தையும்
அங்கீ கரித்து அவர்கள் எல்லாரையும் நித்தியமாக உம் திருவடி சேவையைத் தந்து காத்து அருள வேணும் –

அங்கீ குருஷ்வ
திரு உள்ளம் பற்ற வேண்டும்
குருஷ்வ மாம் அநு சரம்

யதிராஜ
யதி சக்ரவர்த்தியே
ராஜா ப்ரக்ருதி ரஜ்ஞநாத் -உம் பிரஜைகளை ரஜ்ஞநம் செய்ய வேண்டியது உம் யதிராஜர் என்ற
திரு நாமத்துக்கு ஏற்றது –

தயாம்புராசே
தயை நீர்க்கடல்
உப்புக்கடல் அல்ல
பேர் அருளாளன் பேர் அருளும் உம் சாலைக் கிணற்று ஜலத்தைப் பருகிப் பெருகுகிறது என்று
தத்வ டீகை மங்களத்தில் அபி யுக்தர் அருளிச் செய்தார் –
ஸப்ததியிலும் – காலே ந கரிசைல கிருஷ்ண ஜலத காங்ஷாதிகம் வர்ஷதி -என்றார் –

அஜ்ஞ அயம்
அஞ்ஜோ ஜந்துர நீ சோயம் ஆத்ம ந ஸூக துக்கயோ -என்ற
பிரமாணத்தை நினைக்கிறார்
கர்ம பாரவஸ்யதயை அடைந்து அதனால் ஸம்ஸார பதவியில் பிரமித்து வருந்துகிறான்
இவன் தன்னையே ரஷித்துக் கொள்ள சக்தி இல்லாதவன்

இவன் அஞ்ஞனான ஐந்து -பசு ப்ராயன்
பெருமாள் உமக்கு வஸ்யராய் இருப்பதாலும்
உமது கருணை கடலை ஒத்து இருப்பதாலும்
உம் திருவடியைப் பற்றும் அஞ்ஞனான என் போன்ற ஆஸ்ரிதர்களைப் பெருமாள் திருவடிகளில்
சேர்த்துக் கரை ஏற்றினால் ஒழிய உம்முடைய தயா பூர்ண மனம் திருப்தி அடையாதது ஆகையால்
நீர் என் பிரார்த்தனையை அங்கீ கரித்து அருள வேணும் –

ஆத்ம குண லேச விவர்ஜி தச்ச –
ஞானம் தான் இல்லை
ஆத்ம குணம் தினை யாகிலும் இருக்கல் ஆகாதோ
அதுவும் அடியோடு இல்லை
வர்ஜித -விவர்ஜித –

தஸ்மாத்
நற் குணம் ஒன்றுமே இல்லை -ஞானமும் இல்லை –
ஆஸ்ரிதேத்ய ஆன்ரு சம்ஸ்யத
ஆன்ரு சம்ஸயம் பரோ தர்ம
ஆஸ்ரிதனைக் கைவிட்டால் ந்ருசம்சதா தோஷம் வரும்
கருணைக் கடலாய் இருப்பார்க்கு ந்ருசம்சதை அணுகலாமோ
அஞ்ஞத்வமும் ஆத்ம குண லேச விவர்ஜித்வமும் வேறே புகல் ஒன்றும் இல்லை என்பதை ஸ்தாபிக்கின்றன –
மீமாம்ஸா ஸூ த்ரங்கள் நியாய ஸூ த்ரங்கள் தஸ்மாத் என்று ஹேதுக்களால் நிகமனமாக சாதித்து வருகின்றன

இயம் பூயோ பூய புநரபி ச பூய புநரபி
ஸ்புடம் விஜ்ஞாப்சாமித்யக் அகதி அபுதஸ் அநந்ய சரண
க்ருதாகா துஷ்டாத்மா கலுஷமதிர் அஸ்மீ த்யநவதே
தயாயாஸ் தே பாத்ரம் வந கிரி பதே ஸூந்தர புஜ -ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -–132–
இந்த ஸ்லோகத்தை இங்கே அனுசரிப்பது ஸ்பஷ்டம்
ஸ்துதி ஆரம்பம் -2 ஸ்லோகம் ஆழ்வான் நினைவுடன் தொடங்கி ஆழ்வான் ஸ்மரணத்தோடே நிகமிக்கிறார்

அநந்ய சரணோ பவதி
தன்னிடம் குணம் ஒன்றும் இல்லை -ஞானமும் இல்லை
கருணைக் கடலான எம்பெருமானார் தயையை சரணம் பற்றுவதைத் தவிர வேறே கதி இல்லை
அவர் உடன் சம்பந்தத்தைத் தேடி அவரது அருளை –
கடாக்ஷத்தைப் பெறுவது தவிர வேறே புகல் இல்லை

இதி மத்வா –
என்று நினைத்து
ப்ரணத இதி தயாளு என்றபடி தாம் இருக்கும் இடம் –

சரணம் –
வீடு -வந்து பூமியில் நிபதினான காயினை சரணாகத்தான் என்று தம் நினைவாலே நினைத்து
கிருபையால் பரிபாலனம் பண்ணி அருளினார்
என்னுடைய துர் வ்ருத்தத்தை -துர் நடத்தையை

அசிந்த்யித்வ
நினையாமல் -அக்ருத்ரிமமாய் -வேஷம் இல்லாமல் முழு உண்மையாக உம் திருவடிகளில்
உயர்வற உயர்ந்த நிரதிசய ப்ரீதியை யுடைய ஆத்மாவான நாதமுனிகளை உத்தேசித்து
தேவரீர் பிரசாதம் செய்து அருள வேண்டும் -அங்கீ கரிக்க வேண்டும் என்று ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் முடிந்தது
அங்கெ ஸ்ரீ ராமனிடம் ஸ்ரீ நாதமுனிகளுக்கு அக்ருத்ரிமமான பக்தி இருந்தது என்றும்
காகாதி பக்தி எல்லாம் வேஷமே என்றும் ஸூசிதம்
காகம் இடத்தில் போல் பக்தி என்னிடம் க்ருத்ரிமமாய் இருந்தாலும் என்னைச் சரணாகதனாகவே
நீர் திரு உள்ளம் பற்றி என்னை ரக்ஷித்து அருள வேணும் என்று நிகமனம் செய்து அருளுகிறார் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -19-

October 31, 2020

சாரீரகத்தில் மூன்றாம் அத்யாயம் சாதன அத்யாயம் –
ப்ரஹ்ம பிராப்தி சாதனத்தில் -ஆச்சார்ய உபாசனம் ஸுவ்ஸம் -ஆச்சார்ய உபாசனம் முக்யம்
ஸ்வ ஆச்சார்ய பரம ஆச்சார்யர் எம்பெருமானார்
இந்த ஆச்சார்யர்களின் உபாசனம் பர ப்ரஹ்ம பிராப்தி சாதனம் ஆகும் –
புருஷகாரத்தில் எம்பெருமானார் புருஷகாரம் வேண்டும் -பெரிய பிராட்டியாரின் புருஷகாரமும் வேண்டும் –
அந்த ஸ்ரீ முக்கிய சாதனம் -ஸ்ரீ மன் என்று சாதனமான ஸ்ரீ விசிஷ்டனான நாராயணனை
ஸ்ரீ மன் ஸ்ரீ மன் என்று கத்யத்தில் திரும்பவும் திரும்பவும் கூப்பிடுவது போலே கூப்பிட வேண்டும் –
ஸ்ரீ சப்தத்தை முதலில் வைப்பதால் ஸ்ரீ யும் ஸ்ரீ மானும் முக்ய சாதனம் என்பதையும்
பக்தி பரிவாஹமான கைங்கர்ய லஷ்மியான ஸ்ரீ யினுடைய வை சிஷ்ட்யம் முக்கியம் என்பதையும் ஸூசித்து
இந்த ஸ்லோகத்தை சாதன அத்யாய ஸூசகமாக அமைக்கிறார் –

பகவத் சேவா சாதனம்
சேவா பக்தி உபாசனம் பர்யாய பதங்கள்
மாதவம் சேவ நீயம் -என்று முதல் பத்தில் மாதவ சேவை கூறப்பட்டது -அது அல்லவோ ப்ரஹ்ம பிராப்தி
இங்கே எம்பெருமானார் பாதாப்ஜ சேவையை சாதனமாகவும் பலமாகவும் கூறலாமோ என்னில்
இதற்கு சமாதானம் ஸ்தோத்ரத்தில் முதலிலேயே காட்டப்பட்டுள்ளது –
அங்கே தம்முடைய உத்தேச்யம்
ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா –பிரேம ஆவில ஆசய பராங்குச பாத பக்தம்-என்ற விசேஷணங்களால்
ஆழ்வார் கையில் பெருமாள் திருவடிகள் -ஆழ்வார் திருவடிகள் எம்பெருமானார் திரு முடியிலுமாக அனுசந்தானம்
எம்பெருமானார் திருவடிகள் சேவை கிடைத்தால் தன்னடையே பெருமாள் திருவடிகளில் சேவை ஸித்திக்கிறது

ஸ்ரீ மன் யதீந்திர தவ திவ்ய பதாப்ஜ சேவாம்-
ஸ்ரீ சைல நாத கருணா பரிணாம் தத்தாம் –
தாம் அந்வஹம் மம விவர்த்தய நாத தஸ்யா-
காமம் விருத்தம் அகிலம் ச நிவர்த்தய த்வம் –19-

ஸ்ரீ மன் யதீந்திர -ஸ்ரீ பகவத் பக்தி பரிவாஹ கைங்கர்ய ஸ்ரீ யை யுடைய ஸ்ரீ லஷ்மண யோகியே
ஸ்ரீ சைல நாத கருணா பரிணாம தத்தாம் –எம் ஆச்சார்யர் ஸ்ரீ சைல நாதர் தயா காஷ்டையாகத் தந்து அருளிய
தவ திவ்ய பதாப்ஜ சேவாம்-உம்முடைய திவ்யமான திருவடித் தாமரைகளின் சேவை யாகிய
தாம் -அந்த அரும் பெரும் பேற்றை
அந்வஹம் -தினம் தோறும்
மம விவர்த்தய -எனக்கு விசேஷமாகப் பெருகச் செய்ய வேண்டும்
தஸ்யா விருத்தம்-அந்தப் பேற்றுக்கு இடையூறான
அகிலம்-எல்லாவற்றையும்
காமம் நிவர்த்தய -அடியோடு தொலைக்க வேண்டும்
அல்லது
அகிலம் காமம் நிவர்த்தய –எல்லாக் காமத்தையும் போக்க வேண்டும் –

ஸ்ரீ மன்
லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -என்று லஷ்மணன் விஷயத்தில் ருஷி கூறியது
லஷ்மண முனிக்கும் பொருந்தியதே
அந்தரிக்ஷ கத ஸ்ரீ மான் என்று விஷ்ணு பதமான அந்தரிக்ஷத்திலே நின்றவனை
ஸ்ரீ மான் என்றார் ருஷி –
ஸா ஹி ஸ்ரீர் அம்ருதா ஸதாம் -அம்ருத ஸ்ரீ ஸம் பன்னர்
இந்த ஸ்ரீ அவர் கையில் ஸித்தமாய் உள்ளதாய் அவர் பாதாப்ஜ சேவையை
பகவத் பாதாப்ஜ சேவையை உட்கொண்ட தீரும் –
மதுப் நித்ய யோகத்தையும் காட்டுகிறது –
சேஷத்வமே ஸ்ரீ யாகும் – நீர் சேஷனே -நிவாஸ ஸய்யா ஆஸனம்

யதீந்திர
ஸ்ரீ யபதித்தவம் என்பது பெருமாளுக்கு என்றைக்கும் அசாதாரணம் –
ஸ்ரீ மன் என்று கூப்பிட்டதில் அந்தப் பொருளில் இல்லை
ஸந்யாசியான யதீந்த்ரரை அன்றோ கூப்பிடுகிறேன்
செல்வ நாராயணனான சேஷி அல்ல
ஸந்யாசியான சேஷனைக் கூப்பிடுகிறேன் என்று உடனே வியாவருத்தி செய்கிறார் –
ஆம் பரிசு அறிந்து கொண்டு -என்று ப்ராப்யமான கைங்கர்யத்தைச் சொன்ன அநந்தரம்
ஐம்புலன் அகத்து அடக்கி – என்று அதிலே ஸ்வ ப்ரயோஜன புத்தியால் ப்ரவணம் ஆகிற இந்திரியங்களை
நியமித்துக் கொண்டு போரும் படியைச் சொல்லிற்று இறே -என்ற
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்ரீ ஸூ க்திகள் ரசிக்கத் தக்கவை –

தவ
முன் சொன்ன இரண்டு விசேஷணங்களோடே விசிஷ்டமான உம்முடைய
முனி விசேஷணங்கள் அல்ல
பெருமாள் திருவடி சேவையோடு கூடியவர் என்று சித்தித்து விட்டது –
இதற்காகவே விசேஷணங்களை முந்துறக் கூறி -பின்பு -தவ -என்கிறார் –

திவ்ய பதாப்ஜ சேவாம்-
தாமரைப் பூ போன்ற ஸூ குமாரமான மெல்லடி
தாமரைப் பூவை விளையாட்டிற்காகக் கையில் வைத்துக் கொண்டு அதன் பரிமளத்தை
ஆக்ராணம் செய்து கொண்டு கண்களில் ஒத்திக் கொள்வர்
லீல அரவிந்தம் என்பர் -ஆகையால் இந்த சேவை பரம போக்யமே
ஸ பலமாக ஆசைப்பட்டுச் செய்வது –

ஸ்ரீ சைல நாத
எம் அடிகளான ஸ்ரீ சைல நாதருடைய

கருணா பரிணாம்
கருணா காஷ்டையால்-பேர் அருளாளன் –
பூதாநி ஹந்த நிகிலாநி நிசா மயந்தி -என்று ஸகல மநுஷ நயன விஷயமான பொருள் –

கருணா பரிணாமதஸ் தே -என்று அருளின் காஷ்டையாக அபி யுக்தரான தூப்புல் பிள்ளையும்
அருளிச் செய்தார்
அது போன்ற அருளின் காஷ்டை –
இந்த ஸ்லோகம் திரு உள்ளத்தில் ஓடுகிறது –

தத்தாம் –
எனக்கு அருளப் பட்டது -தானம் செய்யப் பட்டது –
ஸ்ரீ சைல நாதருடைய உம்முடைய பாதாப்ஜ சேவை ஸ்வம் சொந்த தனம் –
தம்முடையதான ஸ்வத்தை -தனத்தை -எனக்கு ஸ்வம் ஆகச் செய்தார் –
பரஸ்வத்வ ஆபாதநம் செய்து வைத்தார் –
என்னை யதீந்த்ர பிரவணர் ஆக்கினார்
ஸ்ரீ சைல தயா பாத்ரம் -என்பது யதீந்த்ர ப்ராவண்யத்தில் பரிணமித்தது –

தாம்
எம் ஆச்சார்யர் தந்து அருளினார் என்று சொல்லலாமே ஒழிய அவர் தந்து அருளிய பாக்யத்தை –
இத்தம் -என்று வர்ணிக்க முடியாது –
தாம் -தஸ்யா- என்றே தான் பேசலாம் –

அந்வஹம்
பவ்மா பிபந்த் வன்மஹம் -திருவடி சேவை எனக்கு சததமாய் இருந்தால் போதும் –

மம விவர்த்தய
மென்மேலும் வளரச் செய்ய வேணும் –

நாத
ஸ்ரீ சைல நாத -என்று நாத ஸப்த அங்கிதமான திரு நாமத்தைச் சொன்னேன் –
அவரை நாதன் -என்று நான் சொன்னால் சீறுவர் -கருணை எல்லாம் பரந்து போம் –

தஸ்யா-
அந்த ஸேவைக்கு

விருத்தம் அகிலம் ச
ஸ்ரேயாம் ஸி பஹு விக்நாநி
த்ரி தசா பரி பந்த்திந
இந்திரன் முதல் பரி பந்தீ
யதீந்த்ரரே நீர் தானே இந்த்ராதி தேவ பரி பந்திகளை நிவாரணம் செய்ய வேண்டும் –
சம்சாரத்தின் விருத்தியில் அவர்களுக்கு மிகுந்த ஆசை
சம்சாரன் யூ நதை -சம்சார நிவ்ருத்தி அவர்களுக்கு ஆகாது –
சம்சார நிவ்ருத்தி யதீந்த்ரரால் தான் ஆகும்

காமம் நிவர்த்தய த்வம்
யதீந்த்ரராகிய நீர் அடியோடு போக்கி அருள வேண்டும் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -18-

October 30, 2020

சரணாகதாருடைய சர்வ பாப விமோசனத்தில் எம்பெருமானார் ஸக்தர் என்றார் –
ஸ்ரீ காந்தனுக்கு அல்லவோ அந்த சக்தி -எம்பெருமானார் அந்த விஷயத்தில் சக்தர் என்று
எப்படிக் கூறுவது என்ற விரோத சங்கை உதிக்க -அதை அவிரோதமாக சமர்த்திக்கிறார் –

அபாத்யத்வ நிரூபணம் -என்பது அவிரோத அத்யாயம் என்னும் இரண்டாம் அத்யாய விஷயம்
எம்பெருமான் மோக்ஷ காரணத் வத்திற்கும் ஸ்ரீ யபதியின் மோக்ஷ காரணத் வத்திற்கும்
அவிரோதம் சமர்த்திக்கப் படுகிறது இங்கே –
உம்முடைய ஆஸ்ரிதர் ஆகிவிட்டால் ஸ்ரீ காந்தனுடைய க்ஷமை அவர்கள் செய்த எத்தகைய
கொடுமைகளாலும் பாதிக்கப் படுவது இல்லை –
அக்கொடுமைகள் எல்லாவற்றையும் அவர் க்ஷமையே பாதித்து விடுகிறது என்றும்
ரசமாக அபாத்யத்வம் என்னும் விஷயத்தை ஸூ சிக்கிறார் –

அஹம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று சரம ஸ்லோகத்தில் ப்ரதிஜ்ஜை செய்தவர் தான்
எம்பெருமானார் ஆஸ்ரிதர் விஷயத்தில் பாப விமோசனம் செய்கிறவர்
எம்பெருமானார் தமக்காகவும் தம்மோடு குடல் துவக்குள்ள பவிஷ்யத் வர்த்தமான ஸகல ஆஸ்ரிதற்காகவும் செய்த
ஸர்வ பாப ஷமா பிரார்த்தனையான சரணாகதி
என்னும் பிரார்த்தநா மதிக்கு இணங்கி அன்றே கமலா ரமணன்
அப்படியே உம் திருவடிகளுக்கு சரணம் என்னும் திரு உடையரான பவிஷ்யத் காலத்தில் வரும்
உம் ஆஸ்ரிதருக்கும் பொறுக்க சங்கல்பித்து விட்டேன் என்று எல்லாருக்குமான ஸர்வ பாப விமோசனத்துக்கு
சங்கல்பம் செய்து விட்டார் –

அன்று நீர் எல்லாருக்குமான செய்த சரணாகதி என்னும் சர்வ பாப விமோசன பிரார்த்தனையால்
அவன் த்வாரமாக உமக்கும் உம் சரணாகதர்களுக்கும் சர்வ பாப விமோசன சக்தி உள்ளதே
ஆகையால் விரோதம் இல்லை அவிரோதமே
இன்று ஆஸ்ரயிப்பவருக்கும் அன்றே செய்த சங்கல்பம் படி சர்வ பாபா விமோசனம் லப்த ப்ராப்யமே
அன்றே லப்தமானதை இன்று நழுவாமல் நாங்கள் பூர்வ லப்த பரிபாலனம் செய்ய வேண்டுவது மட்டுமே
என்பதை வ்யஞ்ஜனம் செய்வது ஷேம ஸப்தம்
யோகம் -என்பது முன்பு கிடையாததன் லாபம்
க்ஷேமம் என்பது லப்தஸ்ய பரிபாலனம் -முன்பே கிடைத்தத்தை இழக்காமல் காப்பாற்றுவதே –

கால த்ரயேபி கர்ண த்ரய நிர்மிதாதி
பாபக்ரியச்ய சரணம் பகவத் ஷமைவ
சா ச த்வயைவ கமலா ரமணே அர்த்திதா யத் –
ஷேமஸ்ச ஏவ ஹி யதீந்திர பவஸ்ரிதா நாம்–18-

யதீந்திர–யதீந்த்ரரே
கால த்ரயேபி -எதிர் நிகழ் கழிவிலும்
கர்ண த்ரய நிர்மிதாதி பாபக்ரியச்ய -முக்கரணங்களாலும் மிகக் கொடிய பாபங்களைச் செய்பவனுக்கு
பகவத் ஷமைவ-பகவானுடைய ஷமா குணமே தான்
சரணம் – தஞ்சமாகும்
சா ச -அந்த க்ஷமை யும் -அபராத ஸஹனமும் -குற்றம் பொறு த்தலும்
த்வயைவ கமலா ரமணே -ஸ்ரீ காந்தன் இடம் உம்மாலேயே
அர்த்திதா யத் -பிரார்த்திக்கப்பட்டது என்பது யாது ஓன்று உண்டோ
ஷேமஸ்ச ஏவ ஹி பவஸ்ரிதா நாம்-அதுவே உம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு மோக்ஷம் என்னும் க்ஷேமம் ஆகும் –

கால த்ரயேபி
ரஹஸ்ய த்ரயத்தாலே சர்வ காலமும் கால ஷேபம் செய்வது உசிதம்
அதற்கு எதிர்த்தட்டாய் அதி பாபச் செயல்களாலேயே முக்காலத்தையும் கழித்து வருகிறேன்

கர்ண த்ரய நிர்மித
முக்கரணங்களும் ரஹஸ்ய த்ரய நிஷ்டையிலே பொருந்தி இருக்க வேண்டி இருந்தும்
அதற்கு நேர் விரோதமான அதி பாபா சரணை செய்கிறேன் –
முக்காலங்களிலும் முக்கரணங்களாலும் பாபப் பெருக்கு மூன்று ஒன்பதாகப் பெருகுகிறது –

அதி பாபக்ரியச்ய
வாங் மனஸ் ஸு க்களுக்கு அதீதமான பாபங்களைச் செய்கிறவனுக்கு வாங் மனசீ அதி -என்றார் ஆழ்வான்
பாபிஷ்ட க்ஷத்ர பந்து ச -என்றதின் ஞாப நம்
அபி சேதஸி பாபேப்ய சர்வேப்ய பாப க்ருத்தம-என்று கீதையில் பெருமாள் அருளிச் செய்கிறார்
தமப்பின் பொருளை அதி என்று காட்டுகிறார்
கீதா ஸ்லோகத்தை அநு சரிக்கிறார்
அங்கும் வ்ருஜின சந்தரணம் பாப விமோசனம் –
வ்ருஜினம் ஸந்தரிஷ்யசி

சரணம் –
தஞ்சமாவது -ரஷிப்பது –

பகவத் ஷமைவ
பாப விமோசனத்தில் நீர் சக்தர் என்று நான் சொன்னது பகவத் த்வாரமாகத் தான்
அவர் க்ஷமை தான் பொறுத்து அருளுவது
உமக்கு வஸ்யர் ஆனபடியால் உம் ஆஸ்ரிதர் விஷயத்திலும் அவர் க்ஷமை ப்ரசரிக்கிறது –
உமது பாப விமோசன சக்தி அவருடைய ஷமா த்வாரமானது –
ஆகையால் நீர் சக்தர் என்று சொன்னதோடு விரோதம் இல்லை –

சா ச த்வயைவ கமலா ரமணே அர்த்திதா யத் –
அந்த பகவத் சாமையும் உம்மாலேயே தான் சரணாகதி ரூபா பிரார்த்தனை செய்யப் பட்டதே
யத் -என்பதற்கு அது என்றும் யஸ்மாத் என்றும் பொருள் கொள்ளலாம்
யஸ்மாத் -யாது காரணம் பற்றி முன் ஸ்லோகங்களிலே கூறி
தஸ்மாத் என்று அநுமான நிகமன க்ரமத்தை ஆதரிப்பது போலே இங்கும்
யஸ்மாத் தஸ்மாத் என்றும் பொருள் கொள்ளலாம் –

ஷேமஸ்ச ஏவ ஹி
யத் என்றது உத்தேச்யம்
விதேயமான ஷேம என்பது என்பது ஆண்பால் ஆனதால் புல்லிங்க பிரயோகம்
உத்தேச்ய அநு குணமாயும் விதேய அநு குணமாயும் லிங்கத்தை உபயோகிக்கலாம்

ஷேம ஏவ ஹி
எங்களுக்குப் புதிதாக லாபம் என்னும் யோகம் இல்லை
முன்பே லப்தமானதின் பரிபாலனமான க்ஷேமம் தான் என்றும் திரு உள்ளம் –
யோக ஷேம நிர்வாகம் எம்பெருமானார் ஆஸ்ரயணத்தால்

யதீந்திர
தேவேந்த்ரனான இந்த்ரனைப் போலே
ஷீ ணே புண்யே
ஸ்வர்க்கேபி பாத பீதஸ்ய க்ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர் வ்ருதி0என்று சொல்லுகிறபடியே
புண்யம் கழிந்த பின்பு கீழே தள்ளி விடுகிறது என்பது கிடையாதே
கிடைத்தது அஷய மாகவே இருக்கும்

பவஸ்ரிதா நாம்
யதீந்த்ரரே உம்மை ஆஸ்ரயித்தவற்கு

ஷேம ஏவ
என்றுமே ஷேமமே
நிரதிசயமான ஷேமமே அல்லாது புனரா வ்ருத்தி என்கிற
ப்ரஸக்தியே இல்லையே என்கிறார் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -17-

October 30, 2020

மீமாம்ஸையில் -17-வது அத்யாயம் ப்ரஹ்ம ஸூத்ர முதல் அத்யாயம் ஆகும்
ஸ்ருதி சிரஸி வி தீப்தே ப்ரஹ்மணி -மங்கள ஸ்லோகம் அநு சரிப்பது ஸ்பஷ்டம்
இங்கே வேதாந்த விசார ஆரம்பம் –வேதாந்தமே ஸ்ருதி சிரஸ்ஸூ -ஸ்ருதி யக்ரம்-
சுடர் மிகு ஸ்ருதியுள் -முதல் திருவாய் மொழியையும் நினைக்கிறார் –
திருவாய் மொழியும் சாரீரக மீமாம்ஸை –
முதல் இரண்டு திருவாய் மொழிகளும் சாரீரக அதிகரணங்களைக் கோர்வையாக நிரூபிக்கின்றன –
அணி அரங்கர் மேல் ஆயிரம் -முதல் அத்யாயம் சமன்வய அத்யாயம் –

திவ்ய குண விசிஷ்டமான ஸ்வரூபத்தை உடைய ப்ரஹ்மத்தின் இடமும் சகல வேதாந்தங்களும்
சமன்வித மாவதை நிரூபிப்பது –
சமன்வய அத்யாயம் சர்வ வேதாந்த வேத்யம் என்பதை விளக்குவது –
ஸாஸ்த்ர யோநித்வாத் -என்பதை -ச்ருத்யக்ர வேத்ய-என்பதால் ஸூ சிக்கிறார்
தத் து சமன்வயாத் -ஸூத்ர அர்த்தங்களையும் ஸூ சிக்கிறார்
தத் -அது -என்ற பரோக்ஷ ப்ரஹ்மமே -இங்கே ப்ரத்யக்ஷமாக பெரிய பெருமாளாக சேவை சாதிக்கிறார்
ஆனந்த மயம் என்று ஆனந்த குண பூர்ணவத்தைப் பேசியதும்
அடுத்து அந்தர் அதிகரணத்தில் அந்த திவ்ய ஆத்ம ஸ்வரூபத்திலும் ஆனந்த குணத்திலும் இன்னமும்
அதிக போக்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை ஸூ த்ரகாரர் விளக்கினார்
பரம் ப்ரஹ்ம புருஷோத்தமோ நாராயண-என்று புலப்படாத பரம் பொருளே கண்ணனாக அவதரித்து
சகல மனுஷ நயன விஷய தாங்கதன் ஆனது போல்
இங்கே அந்த பரதத்வமே -பிரத்யஷதாம் உபகத -என்கிறார் –

ச்ருத் யக்ர வேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப –
பிரத்யஷதாம் உபகத இஹ ரங்க ராஜ –
வஸ்ய சதா பவதி தே யதிராஜ தஸ்மாத் –
சக்த ஸ்வ கீய ஜன பாப விமோசன் த்வம் –17-

யதிராஜ–யதிராஜனே
ச்ருத்யக்ர –ஸ்ருதிகளின் சிரஸ்ஸுகளான உபநிஷத்துக்களால்
வேத்ய -அறிய வேண்டிய
நிஜ திவ்ய குண ஸ்வரூப -தன் ஸ்வ பாவிக திவ்ய குணங்களையும் ஸ்வரூபத்தையும் உடையவராய்
இஹ -இங்கே
பிரத்யஷதாம் உபகத –கண்களால் காணும் படி அருகே வந்து இருக்கிற
ரெங்கராஜ -அரங்கத்து அம்மான்
தே -உமக்கு
வஸ்ய சதா பவதி -எப்பொழுதும் வஸ்யராகவே இருக்கிறார்
தஸ்மாத் -ஆகையால்
ஸ்வ கீய ஜன பாப விமோசன் -உம்மைச் சேர்ந்த ஜனங்களின் பாபத்தைப் போக்குவதில் –
த்வம் சக்த–நீர் சக்தி உள்ளவரே-

ச்ருத் யக்ர வேத்ய
ஸ்ருதியின் உச்சியில் வேதாந்தத்தில் மலையின் மேல் ஜ்வலிக்கும் தீபம் போல்
வேதகிரி சிகரத்தில் ஜ்வலிக்கும்
வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய
வேத வேத்யே பரே பும்ஸி
ஸ்ருதியின் அக்ர வேத்யமான முதல் வேத்யத் பொருள்
மூல வேத்யம் அக்ர குணம் உள்ளது -அக்ர ஸ்வரூபம் உடையது –

அக்ரம்-உயர்வு -உச்சி –

நிஜ திவ்ய குண ஸ்வரூப
உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன்
நிஜம் -என்பது உடையவன் என்னும் பொருளை ஸூ சிக்கிறது
திவ்ய குணமும் திவ்ய ஸ்வரூபமும் நலம்
அக்ரமான நலம்

ஸ்ருதி அக்ரம்
வேத ஆதியான பிரணவம்
ப்ரஹ்மம் வேத மயமான பிரணவ விமானத்தில் ஜ்வலிக்கும் பொருள்
ப்ரணவத்திற்குள் எல்லா வேதமும் அடங்கியது –

பிரத்யஷதாம் உபகத
ப்ரத்யக் ப்ரத்யக்ஷம் ஆகிறது -பராக்கு போல் விஷயம் ஆகிறது
தத் -ஏதத் ஆகிறது
அது இது வாகிறது
மயர்வற மதி நலம் அருளினன்
அப்ரோக்ஷ ஸாஷாத் கார ஞானம் நம் சமீபத்திலே வந்துள்ளத்து

இஹ
இந்த இருள் தரும் மா ஞாலத்தில்
எல்லாருக்கும் கிட்ட எளியதான கோயில்

ரங்க ராஜ –
அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹங்களுக்கு மூல ப்ரக்ருதியான இந்த பெரிய பெருமாள் –

தே வஸ்ய
ஸர்வஸ்ய வஸீ
ஸர்வஸ்ய ஈஸான -என்ற விஸ்வபதி யாகிற ரெங்கராஜர் உமக்கு வஸ்யராக நீர் இட்டது சட்டமாக இருக்கிறார் –
முதல் அத்யாயம் ஆனு மானிக அதிகரணத்தில் -ஈஸ்வரனை வசப்படுத்தும் உபாயம்
அவனை சரணாகதி செய்வது தான் என்று ஸ்ரீ பாஷ்யம் –
தஸ்ய ச வஸீ கரணம் தச் சரணாகதி ரேவ
பெரிய கத்யம் தவிர ஸ்ரீ ரெங்க கத்யம் தனியாக அருளப்பட்டது
ஸம்வாத ஏஷ சரணாகத மந்த்ர சார

சதா பவதி
என்றைக்கும் உமக்குப் பர தந்தரராகவே இருக்கிறார் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீர் அனுதினம் ஸம் வர்த்ததாம் -என்று அனுதினம் ஜபிக்கிற படி
அரங்கனும் -ராமாநுஜார்ய திவ்ய ஆஜ்ஞா வர்த்ததாம் அபி வர்த்ததாம் என்று நம் ஆஜ்ஞயை
அபி விருத்தி அடையும்படி அனுசானம் செய்கிறார் –

தஸ்மாத்
ஆகையால் ஸர்வ லோக சரண்யனான அரங்கனை சரணம் பற்ற வேண்டி இருக்க
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மான பரமாத்மனே -அதோ அஹம் அபி தே தாஸ -என்று
அனுமான ஆகாரமாக அத
ஆகையால் நானும் அவனுக்கு தாஸன் -என்று பிராமண வசனம் அறுதி இடுகையாலே
என் அடியார்க்கு தாஸன் என்னலாமோ என்ற கேள்வி வர
இங்கும் -அத –என்பது போல் -தஸ்மாத் -என்று அது மாதிரியாகவே நிகமனம் செய்கிறார்
பெருமாளை நீர் நேரில் சரணாகதி செய்து உம் வசமாக்கி விட்டீர்
உம் திருவடிகளை சரணம் பற்றினால் உம் வசமான அவர் எனக்கு மோக்ஷம் அளிப்பார்
உம் தாஸ அநு தாஸருக்கு தாஸ்யம் செய்தால் நீர் உகப்பது போலே

ஸ்வ கீய ஜன பாப விமோசன்
என் ஒருவனையே சரணம் பற்று -நான் உன்னை எல்லாப் பாபங்களில் இருந்தும் மோக்ஷணம்
செய்யக் கடவேன் -உனக்கு சோக நிமித்தம் இல்லை
என்று கண்ணன் கீதா உபநிஷத்தில் முடிவில் வேதாந்தமாக அருளிச் செய்தார்
பெருமாள் திருவடி உம் திரு முடியில் கிரீடமாக விளங்குவதால் உம் திருவடியில் செய்யும் பிரணாமம்
பெருமாள் திருவடிகளில் சேர்ந்து விடுகிறது –
கீதா ஸ்லோகத்தில் உமக்கு வஸ்யரான பெரிய பெருமாளுக்குச் சொன்ன சர்வ பாபா விமோசன மஹிமை
உமக்கும் உள்ளதே
த்வா -என்பது உப லக்ஷணமாக எல்லாரையும் சொல்லும் –
விநத விவித பூத வ்ராத ரக்ஷ ஏக தீகஷே -என்பதை அநு சரிப்பதாகும் இந்த நான்காம் பாதம் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -16-

October 30, 2020

தேவதா காண்டம் நாலாவது அத்தியாயத்தில் பலம் விஷயம்
தேவ போகத்தில் ஸ்வர்க்கத்தில்
கந்தர்வ காநங்களும்
ஸ்வர்க்க ஸ்த்ரீகளின் ரூப தர்சனமும்
ஸ்பர்சமும்
அம்ருத ரஸமும்
பாரிஜாத குஸூம கந்தமும் –போகங்களாகக் கிடைக்கும்
அந்த தேவதா உபாசனத்தால் கிடைக்கும் அந்த ஸ்வர்க்கமும் எனக்கு வேண்டாம்
இங்கேயே ஒரு அத்புத ஸ்வர்க்க ஸூகம் உண்டு -அந்த ஸூகம் எனக்கு நீங்காமல் இருக்க வேண்டும்
ஸ்வர்க்கத்துக்குப் போய் அனுபவிப்பது என்பது தேவர்களுக்கு பசுவைப் போலே
ஊழியம் செய்வதாகும் என்று வேதம் கூறுகிறது –

அவர்களுக்கு பசுவாக அடிமையாய் இருப்பதை விட இங்குள்ள உம்முடைய அடியார்க்கு
அடியார்களில் கடைசித் தாழ்ந்த படியில்
எவர் இருப்பாரோ அவருக்கே பசுவைப் போல் ஊழியம் செய்வதிலேயே எனக்கு ரஸம் மீளாமல்
இருக்கும் படி அனுக்ரஹித்து அருள வேண்டும்
எனக்கு இதுவே பரமபுருஷார்த்தம் என்று நிஷ்கர்ஷித்து பிரார்த்திக்கிறார் –
இந்த ரஸமே தான் எனக்கு அம்ருத ரஸம்-
இப்படி பாகவத் தாஸ்யமே எனக்கு புருஷார்த்த காஷ்டை என்று அருளிச் செய்கிறார் –

சப்தாதி போக விஷயா ருசி அஸ்மதீயா –
நஷ்டா பவதி இஹ பவத் தயயா யதீந்திர
த்வத் தாஸ தாஸ கணா நா சரம அவதௌ-
யஸ் தத் தாஸ தைக ரசதா அவிரதா மம அஸ்து–16-

சப்தாதி போக விஷயா -சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் இவைகளை அனுபவிக்கும் விஷயமான
ருசி அஸ்மதீயா -எங்களுடைய ஆசையானது
யதீந்திர-யதீந்த்ரரே
நஷ்டா பவதி இஹ பவத் தயயா -தேவரீருடைய கிருபையாலேயே இங்கே அடியோடே அழியட்டும்
த்வத் தாஸ தாஸ கணா நா சரம அவதௌ-தேவரீருடைய தாஸ தாஸ தாஸன் என்று
தாழ தாழப் போகும் எண்ணிக்கைக் கணக்கில் கடைப்படியில்
யஸ் -எவர் இருக்கிறாரோ
தத் தாஸ தைக ரசதா -அவருக்கே ஆட்பட்டு இன்புறும் தன்மை
அவிரதா மம அஸ்து-ஓய்வில்லாமல் எனக்கு இருக்க அருள் புரிய வேண்டும் –

சப்தாதி போக விஷயா
ஸ்வர்க்கத்திலும் விஷய போகங்கள் தானே உண்டு –ஸ்வர்க்க போகங்கள் விஷய ருசியை
மென்மேலும் விருத்தி செய்யுமே
நெய் வார்ப்பதால் நெருப்பு விருத்தி அடைவது போல் -இந்திரன் ரசிப்பது விஷய போகமும்
அதன் மேல் ருசியையுமே —
அந்த ருசி அடியோடே நசிக்கும் படி யதீந்த்ரரான தேவரீர் தான் அனுக்ரஹிக்க வேண்டும் என்று
யதீந்த்ர சப்தத்தால் இங்கே கூப்பிடுவது அழகு –

ருசி அஸ்மதீயா –
எங்கள் ருசி -விஷய ருசியைப் பலர் கூடிச் சேர்ந்து அனுபவிபிப்பர்கள்
நட விட காயக ராஸ கோஷ்ட்யாம் –
அந்த ருசிக்கும் மோகத்திற்கும் தனிமை உதவாது –
ஆகையால் இதுவரை அஹம் -மம -என்று ஒருமையாகப் பேசியதை மாற்றி -அஸ்மதீயா -என்று
பன்மையாகப் பேசுகிறார் –
விஷயா வி நிவர்த்தந்தே நிரா ஹாரஸ்ய தேஹிந ரஸ வர்ஜம் ரஸோப் யஸ்ய பரம் த்ருஷ்ட்வா
நிவர்த்ததே -என்ற ஸ்ரீ கீதாச்சார்யர் ஸ்ரீ ஸூ க்தியை நினைத்து ருசி நஸிக்க வேண்டும்
என்று பிரார்த்திக்கிறார் –

பவத் தயயா
தேவரீருடைய கிருபையால்

நஷ்டா பவதி
நாஸமாய் போகட்டும்
அடியோடே தொலையட்டும் –

இஹ
அமுத்ர-லோகாந்த்ரம் போய்க் கிடைக்கும் ஸ்வர்க்கம் வேண்டாம்
யான் போய் இந்திரா லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்று பரமபதத்தையும்
திரஸ்கரிக்கும் இங்கே இச்சுவை
இங்கே -இவ்வரங்க மா நகரிலே

யதீந்திர
விஷய ருசி அறுவதற்கு ஈஷணா த்ரயங்களையும் அறுத்த இந்த யதீந்த்ரனையே
தானே கூப்பிட வேண்டும் –

த்வத் தாஸ தாஸ கணா நா சரம அவதௌ-
எவன் உமக்கு அடிமைப் பரம்பரையில் கடையோனாகத் தாழ்ந்தவனோ
ஆனந்தம் மேலே படி ஏற ஏறப் பெருகும்
இங்கே ஊழியப்படி தாழ தாழ ஆனந்தம் பெருகுகிறது –

தத் தாஸ தைக ரசதா
உம் அடியாரில் எல்லாருக்கும் தாழ்ந்த படியில் உள்ளவருக்குத் தாஸ்யம் புரிவதையிலேயே
இன்புறும் தன்மை ரஸம்
நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவை -என்று பரமபதத்தில் உள்ளவர்களுக்கு
ஒருவருக்கு ஒருவர் சேஷத்வத்தில் ஆசை –
அப்படி நீசத்வத்தில் ஆசை இங்கேயே -இஹ -என்று கோறப் படுகிறது –
முன் சொன்ன நைச்யம் எல்லாம் கழிந்து இந்த நைச்யத்துக்குப் பாத்ரம் ஆக வேண்டும் என்கிறார் –
யதி சக்கரவர்த்தியின் பத பத்தணத்தில் வசித்து ஹரி பக்த தாஸ்ய ரசிகராய் வாழ வேண்டும்

அவிரதா
அனாவ்ருத்தி சப்தாத்
நீங்காமல் -மீளாமல் –

மம அஸ்து
அஸ்து என்று பலமாஸை
அஸ்து மே அஸ்து தே என்றது போலே –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -15-

October 30, 2020

ஆழ்வான் அனுசந்தித்த நைச்யங்கள் வேறு
என் நைச்யத்தை அளக்க அந்த பாத்ரம் போதாது
இன்னும் நிறைய னைச்சிங்களால் பூரணமான பாத்திரம் வேணும்
அடியேன் ஆகிற நைச்ய பாத்திரம் நிரம்பி உள்ளது
ஸ்ரீ யாமுனர் ஆழ்வான் பட்டர் முதலிய தேசிகருடைய எல்லா நைச்ய அனுசந்தானங்களையும்
ஒரு மிக்கச் சேர்த்தால் நான் என்னும் நைச்ய பாத்திரம் நிரம்பும் என்று
ஆத்ம நிந்தை செய்யும் ரசம்

தேவதா உபாசானம் மூன்றாவது அத்யாய விஷயம் என்பர்
நாம் சரணாகதியை இழிபவர்
ஆச்சார்யருடைய கருணையே கதியாக வரிக்கிறார்
இந்திரன் தேவராஜன் ஸூ ர நாயகன்
தேவதா ஏற்கும்படி யதிராஜனை இங்கே யதீந்த்ரர் என்று அழைக்கும் அழகு ரசிக்கத் தக்கது

சுத்த ஆத்ம யாமுன குருத்தம கூர நாத
பட்டாக்க்ய தேசிக வர உக்த சமஸ்த நைச்யம்
அத்ய அஸ்தி அசங்கி சிதம் ஏவ மயி இஹ லோகே –
தஸ்மாத் யதீந்திர கருணைவது மத் கதிஸ் தே-15-

சுத்த ஆத்ம -பரிசுத்தமான மனமுடைய
யாமுன -ஆளவந்தாராலும்
குருத்தம கூர நாத -ஆச்சார்ய உத்தமரான ஆழ்வானாலும்
பட்டாக்க்ய தேசிக வர -பட்டர் என்னும் ஆச்சார்ய ஸ்ரேஷ்டராலும்
உக்த சமஸ்த நைச்யம்-சொல்லப்பட்ட எல்லா நீசத்தன்மைகளும் -தோஷங்களும் –
இஹ லோகே-இப்பூ மண்டலத்திலேயே
அத்ய அஸ்தி அசங்கி சிதம் ஏவ மயி -என்னிடத்திலேயே எல்லாமே எள்ளளவும்
சுருங்காமல் மிக்க விரிவாய் இருக்கிறது
தஸ்மாத் யதீந்திர கருணைவது மத் கதிஸ் தே-ஆகவே யதிகட்க்கு இறைவனே உமது கருணை ஒன்றே
எனக்கு உத்தாரகமான கதி –உமது கருணைக்கும் நானே உத்தமமான கதி –

சுத்தாத்மா
இவர் குறிக்கும் எல்லா ஆச்சார்யர்களுக்கும் அடைமொழியாவது ரஸம்
இவர்கள் எல்லாருமே மாசு அற்றவர்கள் -மனதை மலம் அறக் கழுவினவர்கள்
உண்மையில் தோஷ லேசமும் கிடையாது
அவர்கள் தங்கள் சிஷ்ய பரம்பரையில் அடியேன் ஒருவன் நீச ராமனாக வரப் போகிறேன் என்று எனக்காகவே
அவ்வளவு நைச்யங்கள் எல்லாம் கருணையால் அனுசந்தித்தார்கள் என்கிறார் –

யாமுன
தூய பெரு நீர் யமுனை -என்பர் -அது போன்ற பரிசுத்தி
தர்சனா தேவ சாதவ -என்றபடி உலகத்தைப் பரிசுத்தம் ஆக்கும் பெரியவர்

குருத்தம கூர நாத -ஆச்சார்ய உத்தமரான ஆழ்வான்

பட்டாக்க்ய தேசிக வர
பட்டர் என்று திரு நாமம் உடைய ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்

தேசிக வர
தனித்து யோஜித்து இதர பூர்வ ஆச்சார்யர்களையும் கொள்ளலாம்

உக்த
சொல்லிய
சுத்தாத்மாக்களான அவர்கள் விஷயத்தில் அவை அனைத்துமே யுக்தி மாத்திரமே
ஒழிய உண்மை அல்லவே

சமஸ்த நைச்யம்
எல்லா நீச பாவமும்
அத்ய அஸ்தி அசங்கி சிதம் ஏவ மயி இஹ லோகே –
கோன் வஸ்மின் சாம்பிரதம் லோகே குணவான் -என்ற ப்ரஸ்னம் நினைத்து
இங்கே குண ஹீனரில் இவ்வுலகில் இப்போது யார் முதல்வர் என்ற ப்ரஸ்னம் செய்தால்
என்னையே பொறுக்கி எடுத்து நிர்த்தாரணம் செய்ய வேண்டி இருக்கும் என்று ஆத்ம நிந்தா ரசம்
சாம்ப்ரதம்-என்று அங்கு -இங்கே அத்ய
அஸ்மின் லோகே அங்கு -இஹ லோகே இங்கு
குணவானான புருஷோத்தமனுக்கு எதிர்த்தட்டான அதம தம நரன்

அசங்கி சிதம் ஏவம் அஸ்தி
பலி புஜி சிசு பாலே தாத்ரு காகஸ் கரே வா குண லவ ஸஹ வாஸாத் த்வத் ஷமா சங்கு சந்தீ –
மயி குண பரமானு தந்த சிந்தனா பிஞ்ஞா விஹரது வரதாஸவ் ஸர்வதா ஸார்வ பவ் மீ -என்று
பட்டர் நைச்ய ஸ்லோகத்தை அனுஷ்டிப்பது ஸ்பஷ்டம் -சங்கோசம் என்பது சுருக்கம் –
அசங்கோசம் என்பது
சுருக்கமே இல்லாத மிக்க விஸ்தாரம் –
ஸமஸ்த என்று இரண்டாம் பாதத்தில் வியாசமான விரிவுக்கு எதிர்த்தட்டான சமாசம்
என்னும் சங்ஷேபமும் பொருளாம்
அவர்கள் பேசிய பேச்சு எல்லாம் சங்ஷேபம்–சுருக்கம் – –
அந்த சங்ஷேபங்கள் எல்லாம் கூடி என்னிடம் அங்குசிதமாய் விஸ்தாரமாய் அமைகின்றன
என்னும் ரஸம் கவனிக்காத தக்கது –
இதற்கு ஏற்ப ஸ்ரீ இராமாயண சங்ஷேப ஸ்லோகமும் திரு உள்ளத்தில் ஓடுகிறது –

தஸ்மாத்
ஆகையால்
அசங்கோச நியாயம் -சாஸ்திரகாரர் சொல்வது படி -எங்கே அசங்கோசமாகப் பொருந்துமோ
அந்த விஷயம் தான் பிரபலம்
அதையே தான் அநு சரிக்க வேண்டும் சங்கோசத்திலும் அசங்கோசமே பொருந்துவது
அந்த அசங்கோச நியாயத்தால் என்று நியாயத்தை நேராக்க காட்டுவதற்காக
சங்கு சந்தீ என்று பட்டர் ஸ்லோகத்தில் இருப்பதை
அங்குசித -என்று மாற்றி இருப்பதும் ரஸம்

யதீந்திர
தேவதா காண்டத்தில் தேவேந்திரனை ஸூர நாயகனாக ஹவிர்பாகம் வாங்க –
இந்த்ர ஆயாஹி -என்று கூப்பிடுவார்
இங்கு தம் ஆத்ம ஹவிஸ்ஸை சமர்ப்பிக்கையில் அதே போலவே யதீந்த்ர என்று
கூப்பிடுவது ரசிக்கத் தக்கது –

கருணைவது மத் கதிஸ் தே-
உம்முடைய கருணை தாம் எனக்குப் புகல் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -14-

October 30, 2020

தேவதா காண்டம் முதல் அத்தியாயத்தில் தேவதா ஸ்வரூபத்தையும்
இரண்டாவது அத்தியாயத்தில் தேவதா விசேஷத்தையும் சொல்லியது என்பர்
கீழே -13 -வது ஸ்லோகத்தில் -அஞ்ஞானத்வ அந்த ரோதாத் அகபரி ஹரணாத் -என்றபடி
அஞ்ஞான இருளை நீக்கி பாபத்தைக் கழித்து சுத்தியைத் தரும் ஆச்சார்ய ஸ்வரூபத்தைக் காட்டினார்
இங்கே -எம்பெருமானாருடைய ராமாநுஜ என்கிற சதுர அக்ஷர நாமத்தைக் குறித்துக் காட்டி
தேவதா விசேஷத்தைப் பேசுகிறார் –
தேவதையைப் போலே ஆச்சார்யனை உபாஸிக்க வேணும் என்பதற்கு –
அஞ்ஞானத்வ அந்த ரோதாத்–என்று தொடங்கிய ஸ்லோகத்தில் பல ஸாம்யங்கள் காட்டப் பட்டன –

பெருமாளுடைய ஆனந்தாதி மஹா குணங்கள் வாசா மகோசரம் -என்று ஸ்ருதி வர்ணித்தது –
இவர் எம்பெருமானார் விஷயத்திலும் அது துல்யம் என்கிறார் –
கமப்யாத்யம் குரும் வந்தே
பிரதம குரு க்ருபா க்ருஹ்யமாண –என்றபடி பெருமாள் ஆதி குரு
எம்பெருமானார் குரு பரம்பரையில் உத்தமர் –
நான் சிஷ்யபாரம்பரையில் அதமன் -என்னிலும் கடையோன் அல்ல என்று நைச்ய அனுசந்தானம் செய்கிறார்
கருணை யல்லால் வேறு கதி இல்லை என்று கருணைக்கு உத்தம்பகமான
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களைப் பேசுகிறார் –

வாசாம் அகோசர மஹா குண தேசிக அக்ர்ய-
கூராதி நாத கதித அகில நைச்ய பாத்ரம்
ஏஷ அஹம் ஏவ ந புநர் ஜகதி ஈத்ருசஸ் –
தத் ராமாநுஜார்ய கருணைவ து மத் கதிஸ்தே-14-

வாசாம் அகோசர மஹா குண -வாக்குகளுக்கு எட்டாத -கரணங்களுக்குள் அடங்காத –
பெரும் குண விசேஷம் உடையவரே
வாசாம் அகோசர மஹா குண-தனித்தனி பதங்களாகவும் கொள்ளலாம்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஸ்ருதி ப்ரஹ்ம ஆனந்த குணத்தைப் பற்றி பேசும் –
அது மற்ற குணங்களுக்கும் உப லக்ஷணம்
தேசிக அக்ர்ய-ஆச்சார்யர்களுக்குள் ஸ்ரேஷ்டரே
அமுநா தப நாதி சாயி பூம்நா யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி விபுதா நாம் ஹ்ருத யங்க மா விபாதி -யதிராஜ சப்ததி
குரு பரம்பரை ஹாரத்தில் நடு நாயகம் -பின்பு எத்தனை ஆச்சார்யர்கள் வந்து சேர்க்கப் பட்டாலும்
என்றைக்குமே நடு நாயகம்
கூராதி நாத கதித அகில நைச்ய பாத்ரம்-கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸகல நைச்ய வார்த்தைகளுக்கும்
விஷயமான பாத்திரம் -வியக்தி –
ஏஷ அஹம் ஏவ -இந்த நானே தான்
ஜகதி-பொங்கோதம் சூழ்ந்த புவனியில்
ந புநர் ஈத்ருசஸ் -என் போன்ற இவ்வித அதிகாரி இல்லவே இல்லை –
இனி உண்டாகப் போவதும் இல்லை -ந பூதோ ந பவிஷ்யதி
தத் ராமாநுஜார்ய கருணைவ து மத் கதிஸ்தே-ஆகையால் ராமானுஜாச்சார்யரே தேவரீருடைய
கருணை ஒன்றே எனக்கு கதி -எனக்குச் சரண் –

வாசாம் அகோசர
அகோசரம் வசஸாம் -என்று சுத்த ஜீவ விஷயமான பராசர வசனத்தையும் அநு சரிக்கிறார் –
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்ற ஸ்ருதியை நினைத்து -வசஸாம்-என்பதை -வாசாம் -என்று வைத்தார் –
அந்த ஸ்ருதி பெருமாள் விஷயம் –எம்பெருமானார் விஷயத்தில் இரண்டையும் கூட்டுகிறார் –

மஹா குண
பெருமாளுடைய குணத்தை ஸ்ருதி வாக்குக்கு எட்டாது என்கிறது -அங்கே ஆனந்த குணம்
மற்ற கல்யாண குணங்களுக்கு உப லக்ஷணம் –
மனுஷ்யர் ஆனந்தம் -தேவர்கள் ஆனந்தம் -அகா மஹத ஸ்ரோத்ரியரான முக்தர் முக்தர் துல்ய ஆனந்தம் –
ப்ரஹ்மானந்தம் -இவை எல்லாம் வேத புருஷன் மீமாம்ஸை செய்த ப்ரஹ்மானந்த மீமாம்ஸ பிரகரணத்தையே
இங்கே ஸூ சிப்பது ரசிக்கத் தக்கது –
ஆச்சார்ய உபாசனம் என்பது பகவான் இடம் அநந்ய போகத்தால் வியபிசாரியாத பக்தி -என்னும்
கீதாச்சார்யர் உபதேசிக்கும் சாதனங்கள் –
ஆச்சார்ய ப்ரபாவ மஹா குண மீமாம்ஸை -ப்ரஹ்ம குண மீமாம்ஸை -என்ற மீமாம்சைகளைச் சேர்த்து
தேவதா உபாசன காண்டத்தையும் ப்ரஹ்ம ஞான காண்டத்தையும் சேர்த்து
இந்த எட்டு ஸ்லோகங்களாலும் எட்டு அத்தியாயங்களை ஸூசிப்பதில் திரு உள்ளம் –

தேசிக அக்ர்ய-
ஸமித் பாணி ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்றபடி
ப்ரஹ்ம நிஷ்ட ஸ்ரோத்ரிய ஆச்சார்ய உபாசனத்தை ஸூசிக்கிறார் –

கூராதி நாத கதித அகில நைச்ய பாத்ரம்
இந்த தயா பாத்ரம் அந்த தயா பாத்திரம் என்று உத் கோஷிப்பார்கள் –
உண்மையில் நைச்ய பாத்ரம் என்பதே தகும் என்று ரசமாக நைச்ய அனுசந்தானம் –
இந்த நைச்ய அனுசந்தானத்தின் பலம் தயா பாத்ரம் -கருணா பாத்ரம் ஆவது என்று
பின் பாதியில் ஸூ சிக்கும் அழகு ரசிக்கத் தக்கது –
முக்குறும்பு அறுத்த கூரத்தாழ்வானிலும் நிர் தோஷரான மஹா குணவான்கள் உண்டோ –
அவர் கூறிய நைச்யம் எல்லாம் எனக்காகவே என்கிறார் –
எம்பெருமானாரை நாதன் என்றார் முன் ஸ்லோகத்தில்
ஆழ்வானை இங்கே ஆதி நாதன் என்னும்படி அவருடைய வாசா மகோசரமான மஹிமையை ஸூ சிக்கிறார் –

அகில நைச்ய பாத்ரம் –
எல்லா நைச்யங்களும்
ஒவ்வொரு நைச்யத்தில் முழுவதும் -எல்லாம் எனக்குள் அடங்கும் –
வாசா மகோசர முதல் -பாத்ரம் வரையில் -ஒரே பதமாக வைத்து முழுவதையும்
வாசாம் அகோசர மஹா குண தேசிக அக்ர்ய-கூராதி நாத கதித அகில நைச்ய பாத்ரம்-
கூராதி நாதருக்கே -மூன்று விசேஷணங்களாகக் கொள்வதும் ரஸம்
அவர் மாசு அற்றவர் -ஸர்வ உத்தமர் –
பாபீய ஸோபி –நைவ பாவம் பாராக்ர மிதுமர்ஹதி மாம கீனம் என்றது எல்லாம் அவர் விஷயம் ஆகாது –

ஏஷ அஹம் ஏவ –
நாரத பகவான் ஸநத்குமாரர் இடம் சென்ற போது -பகவன் -என்று கூப்பிட்டு
நான் சோக சாகரத்தில் மூழ்கி உள்ளேன்
அந்த என்னை இந்த சோக சாகரத்தின் அக்கரையில் சேர்ப்பிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்
அதே விதமாக இங்கு எம்பெருமானாரை -தேசிக அக்ர்ய-என்று கூப்பிட்டு
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்று முறையிட்டு நாரதர் ஸோஹம் சோசாமி -என்றது போல்
இங்கு -ஏஷ அஹம் ஏவ -என்று பேசுவது ரசிக்கத் தக்கது –

ஸோஹம் என்றால் வேதாந்தித்தில் பெருமாளோடு சாமா நாதி கரணமாக –
அஹம் ப்ரஹ்ம -கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -என்பது போல்
பெருமாளுக்குள்ளே ஒன்றாகச் சொருகி முழுகுவதாக அர்த்தம் ஆகலாம்
இங்கே நைச்யத்தில் நரா தமனாக அநுஸந்திக்கும் இடத்தில் புருஷோத்தமனோடு
சாமா நாதி கரண பேச்சாக நினைக்கக் கூடிய சப்தம் அநு சிதம் –
ஆகையால் ஸ்ருதியில் போல் ஸோஹம் என்று பேசாமல் ஏஷ அஹம் என்கிறார்
இந்த நானே -எல்லாரும் ஜெகதாசார்யர் -தீ பக்த்யாதி குணார்ணவ என்று
மகிழ்ந்து புகழ்ந்து பாடும் நானே என்கிறார் –

ந புநர் ஜகதி ஈத்ருசஸ் –
அந்வயமாக அவதாரணத்தோடு அறுதி இடுதல் போதாது –
நான்ய பந்தா —
அஹமேவ நான்ய -என்றது போல்
வியதிரேகமாகவும் பேசி அகம்பநீய நியாயமாக இதை உறுதிப்படுத்த வேணும் –
தயா பாத்ரம் என்பதும் நைச்ய பாத்ரமாக இருப்பதால் ஸித்திப்பது
அநு த்தமம் பாத்ர மிதம் தயாயா -என்றபடி -நீசத் தன்மையின் கடைப்படியே –
தயா பாத்ரத்தில் உச்சிப்படியை அளிக்கும்
அந்த ஸ்லோகத்தின் அனுபவமும் நாரத பகவானின் அனுபவமும் திரு உள்ளத்தில் கலந்து ஓடுகிறது –
ஆளவந்தார் ஸ்லோகத்தில் நாரதர் சோக சாகரத்தில் முழுகி அலை நீர்க் கடலில் அழுந்தும்
நாவாய் போல் தத்தளித்த அனுபவம் ஓடுகிறது –
நாரதர் சோக சாகரத்தில் முழுகியதைப் பேசியது போல்
நிமஜ்ஜத அநந்த பவ ஆர்ண வாந்த -என்று யாமுனாச்சார்யரும் அருளிச் செய்கிறார் –

போனால் வாராது -அகப்பட்ட மஹா லாபத்தை நழுவ விடாதேயும் என்னைப் போல் நீசன் இல்லை –
என்னிலும் தயா பாத்ரம் இல்லை –
ஸித்தமான இந்த உத்தம ஆனந்தத்தை பரி யஜித்து வேறே பிஷாடனம் செய்ய வேண்டாம் –
என்னைக் கரை ஏற்றி உம்முடைய அபார கருணையை சபலம் ஆக்கிக் கொள்ளும் –
இப்படி இந்த ஸ்லோகத்தில் ஆளவந்தார் ஸ்லோகமும் நெஞ்சில் ஓடுகிறது என்பது
அடுத்த ஸ்லோகத்தில் -சுத்த ஆத்ம யாமுன-என்று தொடங்குவதாலும் நிச்சயம் என்று
ஸஹ்ருதய மனஸ் சாஷிகமாகத் தட்டு இல்லை –

தத்
ஆகையால் -கொள்வார் இல்லாவிடில் கொடுப்பார் கொடைக் குணம் கானக நிலவாகும் –
உம் தயையைப் பிரகாசப் படுத்த -உம் கருணைக் கடலை சபலமாக்க –
என் போன்ற நீசன் வேணும் –
என்னைக் காப்பாற்ற கருணா வருணா லயரான பெருமாள் போதாது –
காரேய் கருணை இராமானுசன் கருணை தான் என்னைக் காப்பாற்ற வல்லமை உள்ளது –
க்ருதார்த் தோஹம் பவிஷ்யாமி தவ சார்த்த பர கல்பதே

ராமாநுஜார்ய
தேவதா காண்டத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் தேவதா விசேஷத்தைப் பேசியது என்பர் –
இங்கே பெருமாளைத் தவிர ஆசார்ய தேவர் ஒருவரையே வழி படுவதால் அந்த ஆச்சார்ய தேவ ருடைய
நாம விசேஷமாகிய சதுரஷரீ நாமத்தைக் குறித்து தேவதா ஆஹ்வானம் செய்கிறார்
இங்கு ஓர் இடத்தில் ராமானுஜ என்று கூப்பிடுவது –
முதல் ஸ்லோகத்தில் பரோஷமாக நாம நிர்த்தேசம் – இங்கே தான் ப்ரத்யக்ஷ ஆஹ்வானம் செய்கிறார் –
ராமானுஜ காயத்ரியின் காரேய் கருணை இராமானுச -என்று அழைத்தத்தை அநு சரித்து இங்கே
ராமாநுஜார்ய கருணைவ-என்று அந்த சப்தங்கள் வைக்கப் படுகின்றன
காயத்ரி மந்திரத்தில் ய -என்று பரோக்ஷ நிர்த்தேசம்

தே கருணைவ
உம் கருணை ஒன்றே தான்

மத் கதி
எனக்கு உய்யும் வழி

தே கருணைவ
எனக்கு உய்யும் வழி உபாயம் உன் கருணையே

தே கருணா மத் கதி ரேவ
உம் கருணை என்னையே கதியாக உடையது என்னும் பொருளைக் கொண்டு
ஆளவந்தார் ஸ்லோகத்தின் பூர்ண ஸாம்யம் சம்பாதிக்கலாம்
எனக்கும் உம் கருணையே கதி -உம் கருணைக்கும் நானே கதி –
என் போன்ற கதி வேறே கிடையாதே –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -13-

October 29, 2020

13-அத்யாயம் முதல் 16 அத்யாயம் வரை உள்ள நான்கு அத்தியாயங்கள் தேவதை உபாஸன காண்டம் -என்றும்
ஸங்கர்ஷண காண்டம் என்றும் சொல்வார்கள்
இந்த நான்கும் எம்பெருமானார் காலத்திலேயே அகப்பட வில்லை என்று தெரிகிறது
தத்வடீ கையில் தேவதா காண்டம் அகப்படவில்லை -அதன் விஷயங்கள் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது –
நாநா வா தேவதா -என்று அந்த காண்டத்தில் ஸூ த்ரம் இருப்பதாக பிறர் பாஷ்யத்தில் இருந்து தெரிகிறது –

அந்த தேவதா உபாஸன காண்ட விவரங்கள் தெரியாததாலும்
ஈஸ்வர ஸரீரமான மற்ற தேவதைகளை உபாஸிக்க
முமுஷுக்களுக்கு அதிகாரம் இல்லை யாதலாலும் –
ஆச்சார்யன் என்னும் தேவதையையே உபாசிக்கும் படி
தேவம் இவ ஆச்சார்யம் உபாஸீத –
ஆச்சார்ய தேவோ பவ –
யஸ்ய தேவா பர பக்தி யதா தேவ ததா குரவ்-தஸ்யை தே கதி தா ஹ்யர்த்தா ப்ரகாசந்தே மஹாத்மான -என்றும் –
ஆசார்யாதிஹ தேவதாம் ஸமதி காமன்யாம் ந மன்யமஹே-என்று
ஈஸ்வரனைப் போலே ஆச்சார்ய தேவதையும் உபாஸிப்பது முமுஸுக்களின் கடைமை யாகையாலும்
இந்த ஸ்துதி முக்கியமான ஆச்சார்ய தேவதை ஸ்துதி யாகையாலும்
13 -முதல் -16 வரை நான்கு ஸ்லோகங்களால் எம்பெருமானார் உபாசனையாகவும்

17 வது ஸ்லோகத்தால் பெரிய பெருமாள் இடம் வேதாந்தங்களில் சொல்லப்பட்ட சகல குணங்களின்
சமன்வயத்தைப் பேசி
சாரீரக சமன்வய அத்தியாயத்தை ஸூ சிப்பித்து

18 -அத்தியாயத்தில் -லோக வத்து லீலா கைவல்யம் என்று தொடங்கி இரண்டாவது அத்தியாயத்தில்
காட்டிய பகவானுடைய தயையால் தான் தன் பாபங்கள் க்ஷமிக்கப் பட அவை நசிக்க வேணும் என்றும்
எம்பெருமானாருடைய பிரார்த்தனைக்கு இணங்கி பெரிய பெருமாள் நம்மை நம்முடைய பாபங்களில் இருந்து
மோக்ஷம் என்னும் உத்தமமான க்ஷேமத்தை அளிப்பார் ஆகையால்
அவர் தயைக்கும் பெருமாள் தயைக்கும் உபாய பாவத்தில் விரோதம் இல்லை என்று அவிரோதத்தையும்

19 வது ஸ்லோகத்தில் எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயிக்க ஸ்தானம்
தம் ஆச்சார்யரான ஸ்ரீ சைலேசருடைய தயையே என்றும்

இருபதில் தம்மையும் தமது சரணாகதி ஸ்துதியையும் எம்பெருமானார் அங்கீ கரித்து
அருள வேணும் என்றும் பலத்தைப் பிரார்த்தித்து அந்த பலத்தோடே
ஸ்துதியைத் தலைக் கட்டுகிறார் –

தாபத் த்ரயீ ஜனித துக்க நிபாதி நோபி-
தேஹஸ்தி தௌ மம ருசிஸ்து ந தன்னிவ்ருத்தௌ
ஏகச்ய காரண மஹோ மம பாவமேவ நாத –
த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –13-

தாபத் த்ரயீ ஜனித துக்க நிபாதி நோபி-ஆத்யாத்மிகம் ஆதி தைவிகம் ஆதி பவ்திகம் -ஆகிய மூன்று வித
தாபங்களால் உண்டாகும் துக்கத்தில் விழுந்து வருந்தினாலும்
தேஹஸ்தி தௌ மம ருசிஸ்து ந தன்னிவ்ருத்தௌ-எனக்கு சரீரம் இருப்பதிலேயே ஆசை –
அதை விடுவதில் ஆசை இல்லை
ஏகச்ய காரண மஹோ மம பாவமேவ நாத -ஐயோ இதற்குக் ஹேது என் பாபமே தான்
த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –என் நாதனே -யதிராஜரே – தேவரீரே அந்தப் பாபத்தை
விரைவில் போக்கி அருள வேணும் –

தாபத் த்ரயீ ஜனித துக்க நிபாதி நோபி-மம –
மூன்றுவித தாபங்களால் உண்டாகும் துக்கங்களில் தள்ளப்பட்டு அதில் அழுந்தி இருந்தாலும்
தாபத்ரயா துரை ரம்ருவத்வாய ச ஏவ ஜிஜ் ஞாஸ்ய-
மூன்று வித தாபங்களால் வருந்தும் ஆதுர்களால் மோக்ஷத்திற்காக ஸர்வேஸ்வரனான பகவானே
விரும்பி விசாரித்து அறிந்து உபாஸிக்கத் தக்கவன் -ஸ்ரீ பாஷ்ய ஆரம்ப ஸ்ரீ ஸூக்தியை இங்கே நினைக்கிறது ஸ்பஷ்டம்
துக்கம் கழிய வேண்டும் என்கிற ஆசை ப்ரஹ்ம ஜிஜ்ஞாசையில் கொண்டு போய் விடும் –
துக்க த்ரயா பிகாதாத் ஜிஜ்ஞாஸா -என்பர் –

தேஹஸ்தி தௌ மம ருசிஸ்து ந தன்னிவ்ருத்தௌ
தேகம் இருக்க வேண்டும் என்னும் ஆசையில் குறை இல்லை -துக்கம் மட்டும் தொலைந்து தீர வேண்டும் –
ஆனாலும் தேகம் இருக்க வேண்டும் என்னும் ஆசை இருக்கிறது -தேகம் தொலைவதில் ஆசை இல்லை
தேகம் தொலைந்தால் அல்லது துக்கம் தொலையாதே என்றாய் நன்றாக அனுபவ பூர்வகமாக உணரவில்லை –
மகவன் மர்த்யம் வா இதம் சரீரம் ம்ருத்யு நைவ ததாத்தம் நஹ வை ச ஸரீரஸ்ய சத ப்ரிய அப்ரிய
யோரபஹதி ரஸ்தி-என்று பிரஜாபதி இந்திரனுக்கு உபதேசித்தத்தை நினைக்கிறார்
பிராகிருத தேகம் தானே சர்வ துக்கங்களுக்கு எல்லாம் மூலம் –
தேகமும் வேண்டும் துக்கமும் கூடாது என்று இரண்டையும் கொள்ளுவது எப்படிக் கூடும்

ஏகச்ய
இந்தத் துக்கம் தொலைய வேணும்
ஆனாலும் தேகம் மட்டும் இருக்க வேணும் என்கிற இந்த ஆசைக்கு

காரண மஹோ மம பாவமேவ
ஐயோ என் பாவமே தான் ஹேது

நாத -த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –
யதிராஜனே என் தெய்வமே-தேவரீர் தான் இத்தைப் போக்கி அருள வேணும்
என் பாபத்தைப் போக்கி எனக்குத் தேகத்திலும் வைராக்யம் உண்டாக்கி அருளி அனுக்ரஹிக்க வேணும் –
குரு சரணத்தின் சகாயம் இல்லாமல் இந்திரியங்களை ஜெயிக்க முடியாது என்று ஸ்ரீ கீதை சொல்லுமே
விஜித ஹ்ருஷீக வாஜிபிர தாந்த மனஸ் துரகம் -என்று உள்ளதே –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -12-

October 29, 2020

பன்னிரண்டாம் அத்யாயம் பிரசங்கம் என்பதைப் பற்றியதே
இரண்டு காரியங்களுக்கும் உபயோகப்படுவதை உத்தேசித்து ஒரே தடவை தந்திரமாக அனுஷ்ட்டிக்கும் கர்மம்
இரண்டுக்கும் உபயோகப்பட்டு உபகரிக்கிறது என்று முன் அத்தியாயத்தில் கூறப் பட்டது –
இரண்டு கர்மங்களையும் உத்தேசிக்காமல் ஒரே கர்மத்தை மட்டும் உத்தேசித்துச் செய்ய அதே இடத்தில்
செய்யப்படும் மற்ற ஒரு கர்மத்துக்கும் இதற்கு என்று எண்ணிச் செய்யாமல் போனாலும்-
தானாக -ப்ராசங்கிகமாக உபயோகப்படுவதை ப்ரஸங்கம் என்பர் –

இரண்டையும் உத்தேசித்து ஒரே தடவை அனுஷ்டிப்பது தந்திரம்
ஒன்றையே உத்தேசித்துச் செய்து மற்ற ஒன்றுக்கு தானாகவே -அத்தை உத்தேசித்து
செய்யப்படா விட்டாலும் -உபயோகப்படுவது பிரசங்கம்
வீட்டு வாசல் திண்ணையில் வீட்டுத் திண்ணையின் பிரகாசத்துக்காக வைக்கப்பட்ட தீபம்
வீதியில் போவார்களுக்கும் வெளிச்சம் தருவது போல் –
ஸோம யாகத்துக்கு உத்தேசமாக அமைத்த வேதி இஷ்டி ஹவிஸ்ஸுக்களுக்கும் வேதியாகும்

பெருமாள் எங்கும் ஜ்யோதிஸ்ஸாக வியாபித்து இருக்கிறார் -உள்ளும் வெளியிலும் வியாபித்து இருக்கிறார்
நாம் மனம் கண் கொண்டு பொருள்களைப் பார்க்கிறோம் –
நாம் பார்க்கும் பொருள்களுக்கும் உள்ளும் புறமும் பெருமாள் வியாபித்து உள்ளார்
பெருமாளைப் பார்க்க வேண்டும் என்ற உத்தேச்யம் இல்லா விட்டாலும் மற்றப் பொருள்களைப் பார்க்கையில்
தாமாகவே ஜ்வலிக்கும் பெருமாளையும் ப்ராசங்கிகமாக வாவது பாவியேன் பார்க்கக் கூடாதோ
ப்ராசங்கிகமாகக் கூடப் பார்க்காமல் சார தமமான அவரை நீக்கி அசார தமமான மற்றப் பொருள்களையே
பார்க்கிறேனே என்று இங்கே பிரசங்க அத்யாய ஸூ ஸனத்தில் திரு உள்ளம்
எங்கும் பிரகாசிக்கும் பெருமாளைப் பார்க்காமல் இருப்பது என்பது தான் கடினம் -பார்ப்பது மிகவும் எளிது –
வேணும் என்று அவரைப் பார்க்கக் கூடாது என்று கண்ணை மூடிக் கொண்டு குருடரைப் போல் இருந்தால் ஒழிய
அவரைக் காணாமல் இருக்க முடியாது

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் -எண்ணினும் வரும் -என் இனி வேண்டுவம் –
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணுமாய் விரியும் எம்பிரானையே -என்ற பாசுரம் திரு உள்ளத்தில் ஓடுகிறது
கண்ணுள்ளே நிற்பதைக் காட்டுவது அந்தர் அதிகரண விஷய வாக்கியம் –

அந்தர் ஆதித்யனிலும் அந்தஸ் ஸஷுஸ்ஸிலும் இருக்கிற அந்த புருஷன் மண் முதலிய
பிரபஞ்சமாக விரிந்து எங்கும் -பிரகாசிப்பவன்
அந்தர் பஹிச் ச தத் சர்வம் வியாப்ய நாராயண ஸ்த்தித -என்ற ஸ்ருதியையும் நினைத்து
அந்தர் பஹி –என்று தொடங்கி
தத் சர்வம் என்பதை
சகல வஸ்து ஷூ-என்றும்
ஸ்த்தித -என்ற ஸ்ருதி பதத்தை
சந்தம் என்றும் வைக்கிறார் –

மன்மதனுக்கும் மன்மதனான அழகுக் கடலான பெருமாள் -சேதனன் -எப்பொழுதாவது
எந்த வியாஜத்தால் ஆவது -என்னைக் காண ஆசைப்படானோ
துளி ஆசைப்பட்டால் உடனே காட்சி தருவோம் என்று மிக்க ஆசையோடு காத்துக் கொண்டு இருக்கிறான் –
தித்ருஷா த்ருஸ்யத்வாத் –என்று ரத்னாவளி
எண்ணினும் வரும் -என்ற ஸுவ்லப்ய மிகுதியில் நான் எண்ண வேணுமே
தித்ருஷா -காண ஆசை -துளி இருந்தால் எதிரிலே புலப்பட சஜ்ஜமே
எங்கும் உளன் கண்ணன் என்று அல்லவோ அவா உள்ள சிசுவான ப்ரஹ்லாதன் உறுதிச் சொல்
ஹரி ஸர்வத்ர த்ருஸ்யதே -என்ற
அவர் ப்ரதஜ்ஜை சத்யம் என்று காட்ட வல்லவோ ஸ்தம்பத்தைப் பிளந்து கொண்டு வெளி வந்து
பெருமாள் எங்கும் பிரகாசிக்கிறார் –
நான் தான் குருடன்
நான் தான் காண நசை அற்றவன்
அல்ப ரூபங்களில் காமத்தால் மன்மத வசமாகி -அழகுக் கடலை -ஸாஷாத் மன்மதனைக் கண் எடுத்தும்
பாராமல் இருக்கிறேன் -என்று ஆத்ம நிந்தை –

அந்தர் பஹி சகல வஸ்து ஷூ சந்தம் ஈசம் –
அந்த புரஸ் ஸ்திதமிவ அஹம் அவீஷமாணா
கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ் சததம் பவாமி –
ஹந்த த்வத் அக்ர கமனச்ய யதீந்திர நார்ஹ–12-

சகல வஸ்து ஷூ-எல்லாப் பொருள்களிலும்
அந்தர் -உள்ளேயும்
பஹி -வெளியிலும்
சந்தம் -இருக்கிற
ஈசம் -ஈஸ்வரனை
அந்த -குருடன்
புரஸ் ஸ்திதமிவ -எதிரே நிற்பவனை -பார்க்காதது போல்
அஹம் அவீஷமாணா-நான் பார்க்காமல்
சததம்-எப்பொழுதும்
கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ் -மன்மதனுக்கு வசப்பட்ட மனம் உடையவனாகவே
பவாமி -இருக்கிறேன்
யதீந்திர-மனத்தை அடக்கிய யதிகளுக்கு அக்ர கண்யரே
ஹந்த -ஐயோ
த்வத் அக்ர கமனச்ய -உமது எதிரில் செல்ல
அஹம் -நான்
நார்ஹ-யோக்யன் அல்லன்

சகல வஸ்து ஷூ
எல்லா வஸ்துக்களிலும்
நிர் அவயவங்களுக்குள் அந்தர் வியாப்தி இல்லை என்று சொல்லுவரேல் அவர்களோடு கலகம் செய்யோம் –
ஸகல என்பது அவயவம் உள்ள என்பதையும் சொல்லும் –
நிர் அவயவப் பொருள் நிஷ் கலம்
நிர் அவயவத்தில் அந்தர் வியாப்தி இருந்தாலும் இல்லாது இருந்தாலும் அதனால் என்ன –
ஒருவருக்கும் உத்வேகம் வேண்டா –

அந்தர் பஹி
உள்ளும் வெளியிலும்
நெஞ்சத்தினுள் கோயில் கொண்டவனை மனத்தினால் தரிசிக்கலாம்
மனஸா து விசுத்தேந
த்ருச்யதே த்வக்ர்யயா புத்யா ஸூஷ்மயா ஸூஷ்ம தர்சிபி
உள்ளே வித்யுல்லேகேவ பாஸ்வரா -என்று மின்னும் சர்வ சரீரியான பரமாத்மா
பிரதான பிரதிதந்தரமாக யதிராஜன் பிரகாசப்படுத்திய சர்வ சரீரத்வத்தை இங்கே
பன்னிரண்டு அத்தியாயங்கள் முடிக்கையில் ஸூ சிக்கிறார் –
யதத பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷு அநூத்தமே ஷு உத்தமே ஷு வா -என்றபடி
ஜ்வலிக்கும் விஸ்வ வியாப்த தேஜஸ்ஸூ –

சகல வஸ்து ஷூ
எல்லா வஸ்துக்களிலும்
அவன் உள்ளே உயிராய் இருந்து தான் எப்பொருளும் வஸ்து வாகும்-உளதாகும்
ப்ரஹ்மாத் மகமாய் இல்லா விடில் வஸ்து வாகாது
அவன் ஆத்மாவாய் உள்ளே இருந்து முழுவதும் வியாபித்து அதை உளதாக்க வேணும்
இதை ஸூ சிக்கவே வஸ்து என்கிறார் –

சந்தம்
ஸ்வதஸ் ஸத் -அந்நயாதீன சத்தை யுடையது -அதுவே –
சந் மூலா -என்று ஸத் வித்யை –
எல்லாப் பொருள்களுக்கும் உயிராய் மூலமாய் ஆயதனமாய் ப்ரதிஷ்டையாய் –
ஓதப்பட்ட ஸத் என்ற உபநிஷத் ப்ரஸித்தப் பொருள் –
ஸஹைவ சந்தம் ந விஜா நந்தி தேவா —கூடவே அருகில் -எதிரில் -இருப்பதை
தேவர்கள் -இந்திரியங்கள் -அறிகிறது இல்லை –

ஈசம் –
ஸமான வ்ருஷே புருஷோ நிமக்ந அநீசயா சோசதி முஹ்யமான -ஜூஷ்டம் யதா
பஸ்யத் யன்ய மீசம் -என்ற
ஸ்ருதியில் ஓதப்பட்ட நெஞ்சில் உள்ள ஈஸ்வரப் பொருள்
அந்த ஸ்ருதியை திரு உள்ளத்தில் கொண்டு இங்கு ஈசம் என்கிறார் –
நாம் ஈஸ்வர தரிசனத்துக்கு ப்ரஹ்ம புரத்தில் அவர் ராஜ தானியில் அவர்
அரண்மனைக்குப் போக வேண்டி இருக்கும் –
அவர் நம் நெஞ்சுக்குள்ளே கோயில் கொண்டுள்ளார்
ஸ்ரீ சங்கரர் ஹ்ருதய ஆலயர் -என்று ஹார்த்தப் பெருமாளை வர்ணிக்கிறார் –
என் நெஞ்சம் கோயில் கொண்டான் – என்று அவர் அனுபவம்
வட தளமும் வைகுந்தமும் மதிள் த்வராபதியும் இட வகைகள் இகழ்ந்திட்டு என் பால்
இட வகை கொண்டனையே -என்றும்
பனிக்கடலுள் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என் மனக் கடலுள்
வாழ வல்ல மாய மணாளா நம்பி -என்றும்
அன்றோ விஷ்ணுவையே நெஞ்சில் கொண்ட விஷ்ணு சித்தர் முதலிய அபி யுக்தர்களின்
ஹார்த்த அனுபவ ரஸம் இருக்கும் படி –

புரஸ் ஸ்திதமிவ சந்தம்
எதிரே நிற்பது போல் நிறைந்து நிற்கும் பொருள்

அந்தஸ் அஹம் அவீஷமாணா
கண் இல்லாதவன் -பிறவிக் குருடன் -கண்ணுக்கு எதிரே உள்ளதையும் பார்க்க மாட்டான் –
அவா இருந்தால் பெருமாள் சஷுர் விஷயம் ஆவார் –
ஆசை அற்று இருப்பது சூன்யத் தன்மை
அத்யயநம் ஆகிற சஷுஸ்ஸால் பார்க்கலாம் -மாம்சக் கண்ணால் பார்க்க முடியாது –
ந மாம்ஸ சஷுரபி வீக்ஷதே தம் -என்ற ஸ்ருதியில் உள்ள
வீக்ஷ -தாதுவை பிரயோகிக்கிறார் –

கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ்
வலுவில் நெஞ்சில் நிற்கும் மன்மத மன்மதனான பெருமாளைக் கண் எடுத்துக் பார்க்காமல்
நெஞ்சில் ஈசனாக வைத்து அவன் வசமாக நெஞ்சம் இருக்கும் போது ஈசன் அணுகைக்கு இடம் ஏது
த்வை ராஜ்ஜியம் உண்டோ –

சததம் பவாமி –
எக்காலத்திலும் மன்மதன் ராஜ்யத்துக்கு ஒய்வு இல்லை
அவனே என் ஹ்ருதயத்திலே அந்தர்யாமியான ஈசன் –

ஹந்த
இது கொடுமை -அநியாயம்

த்வத் அக்ர கமனச்ய
தேவரீர் திரு வீதி எழுந்து அருளும் உத்ஸவங்களிலும் -அத்யாபக கோஷ்டிகளிலும் –
யதீஸ்வரர் ஸம்ஸ்ரிதன் போல் முன் செல்ல –

யதீந்திர
இந்திரிய ஜெயம் உள்ள ஸம் யதிகளுக்குள் முதல்வரே –

நார்ஹ-
யோக்யன் அல்லன்
மத நகத நைர் ந க்லிஸ் யந்தே யதீஸ்வர ஸம்ஸ்ரயா -என்பர்
ஜைமினி -12 அத்யாயம் கடைசி அதிகரணத்தில்
ரித்விக்குக்காக யாகத்தை நடத்தி வைக்க விப்ரர் மட்டும் தான் அர்ஹர் –
மற்ற த்விஜர்கள் அர்ஹர் அல்லர் என்று தீர்மானம் –
த்ரயோ வர்ணா –என்று பூர்வ பக்ஷ வார்த்திகம்
விப்ரர் தான் அர்ஹர் -மற்றவர் அர்ஹர் அல்லர் என்று ஸித்தாந்தம்
இங்கு அஹம் நார்ஹ -என்ற முடிவு

இங்கே 12 ஸ்லோகம் முடிவில் இப்படி வர்ணிப்பது ரசிக்கத் தக்கது –
ஆத்ம யாகத்தைச் செய்து வைக்கும் ரித்விக்குப் பதவிக்கு நான் அர்ஹன் அல்லன்
என்றும் ஸூசனம் —

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -11-

October 29, 2020

பதினோராவது அத்யாயம் -தந்த்ர அத்யாயம்
தந்திரம் என்பது ஒரு கர்மத்தை ஒரே தடவை அனுஷ்டிப்பதால் இரண்டு காரியங்களுக்கு
உபயோகப்படுத்துவத்தைச் சொல்லும்
தந்திரம் -ஸக்ருத் க்ருதம் என்ற பொருள்
ப்ரஹ்ம நிஷ்டர் நித்ய கர்மங்களை அனுஷ்டிப்பது அவர்கள் பக்தி நிஷ்டைக்கும் அங்கம் ஆகும் –
பக்தி யோகத்துக்காக ஒரு முறை அனுஷ்டிப்பது வர்ணாஸ்ரம தர்மத்துக்காக
ஒரு முறை அனுஷ்டிப்பது என்பது இல்லை
ஸர்வதாபி த ஏவ உபய லிங்காத -என்னும் ப்ரஹ்ம ஸூ திறத்தால் இது காட்டப்பட்டது
ஒரே தடவை செய்வது தந்திரம் -பல தடவை செய்வது ஆவ்ருத்தி
ஏழு முதல் பத்து அத்தியாயங்கள் வரை விக்ருதிகளில் ப்ரக்ருதிகளில் இருந்து
தர்மங்களை வாங்கிக் கொள்வதைப் பற்றின விசாரம்
தந்திரமா ஆவ்ருத்தியா என்ற விசாரம் ப்ரக்ருதி விக்ருதி என்ற இரண்டு கர்மங்களுக்கும் பொது

தானியத்தை உலக்கையால் உரலில் குத்தி உமியை எடுக்க வேணும் என்பது இரண்டிலும் உண்டு –
ஒரு தடவையா பல தடவையா என்ற விசாரம் இரண்டுக்கும் பொது
ஒரு தடவை குத்தினால் உமி போவது இல்லை -உமியைப் போக்கி மாவாக்கி புரோடாசத்தைத் தட்ட வேணும்
இந்த மாவாக்கும் த்ருஷ்ட ப்ரயோஜனத்துக்கு உலக்கை குத்துக்களை திரும்ப திரும்ப
மாவாக்கும் வரையில் ஆவ்ருத்தி செய்ய வேணும்
ப்ரயாஜன்கள் என்னும் அத்ருஷ்ட பிரயோஜனமாக அங்கங்களை ஒரு தடவை செய்தால் போதும் –
அது அத்ருஷ்டத்திற்காக
ஸக்ருத் க்ருத சாஸ்த்ரார்த்த -அத்ருஷ்ட ப்ரயோஜனத்துக்காக சாஸ்திரம் செய்ய விதிப்பதை
ஒரு தடவை செய்தால் போதும் என்பது சாமான்ய நியாயம்
கார்ய கர்மங்களை பல தடவை செய்தால் அதிக பலன்கள் கிடைக்கும்
ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய -பிரபத்தி என்னும் சாஸ்த்ரார்த்துக்கு ஒரு அனுஷ்டானம்
ஆவிருத்திர் அஸக்ருத் -என்று பக்தி ஸ்மரணத்துக்கு யாவதாயுஷம்
ஆவ்ருத்திக்க வேண்டும் என்று ஸூத்ரம் –

நான் பாபம் செய்தாலும் தந்திரமாக ஒரு தடவை செய்து விட்டு விடுகிறேனோ –
திரும்பவும் திரும்பவும் ஆவ்ருத்தி செய்கிறேனே என்று
தந்திரம் ஆவ்ருத்தி என்ற பத்தாவது அத்யாய விஷயத்தை இங்கே ஸூசிப்பது ஸ்பஷ்டம் என்பது
ரசிகர் ரசிக்கத் தக்க விஷயம்
புன புன கரணம் என்பது தந்த்ரத்துக்கு எதிர்த்தட்டான ஆவ்ருத்தி சாஸ்த்ரார்த்தமான அத்ருஷ்டத்துக்கு
அனுஷ்டிப்பது அல்லவோ ஒரே தடவை என்னும் ஸக்ருத் மரியாதை
ருசியினால் ஸ்வ இச்சையினால் அதிக சற்று இன்பத்துக்காக பாபம் செய்கையில் அதில்
ஆவ்ருத்தியே போக்யமாய் இருக்கும் என்று பாபத்தை புன புன கரணத்தைக் கூறுகிறார்
பதினோராம் அத்யாயம் நான்காம் பாதத்தில்
தஸ்ய புன பிரயோகாத் மந்த்ரஸ்ய ச தத் ஸ்மரண்த்வாத் புன பிரயோக என்று
வேத மந்த்ரங்களை -ப்ரோக்தங்களை –
மந்த்ர அப்பியாச கர்மண புன பிரயோகாத் -என்றது முதலான ஸூ த்ரங்கள் விசதம் ஆக்குகின்றன –

பாபே க்ருதே யதி பவந்தி பய அனுதாப –
லஜ்ஜா புன கரணம் அஸ்ய கதம் கடேத
மோஹேந மே ந பவதி இஹ பயாதிலேச-
தஸ்மாத் புன புன அகம் யதிராஜ குர்வே–11-

யதிராஜ-யதிராஜனே
பாபே க்ருதே -பாபம் செய்யப் பட்ட அளவிலே
பய அனுதாப -லஜ்ஜா-என்ன தீங்கு விளையும் என்கிற பயம் -தீமை செய்து விட்டோமே
என்கிற பச்சாதாபம் -வருத்தம் – வெட்கம் ஆகிய இவை
யதி பவந்தி -உண்டாகுமே யானால் -இருக்குமே யாகில்
அஸ்ய -இவ்விதமான செய்கையை
புன கரணம் -திரும்பவும் செய்வது என்பது
கதம் கடேத-எப்படிக் கூடும்
மோஹேந –மோஹத்தால் -மதி மயக்கத்தால்
மே -எனக்கு
இஹ-இந்த விஷயத்தில் –பாபம் செய்தலில் –
பயாதிலேச-பயம் முதலியவைகள் ஈஷத்தேனும்
ந பவதி -உண்டாகிறதே இல்லை –
தஸ்மாத் -அதனால்
அஹம் புன புன அகம் குர்வே-நான் திரும்பவும் திரும்பவும் தீங்கையே செய்கிறேன்

பாபே க்ருதே
க்ருதே பாபே அநு தாபோ வை யஸ்ய பும்ஸ ப்ரஜாயதே -பிராயச்சித்தம் து தஸ் யைகம்
ஹரி ஸம் ஸ்மரணம் ஸ்ம்ருதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6 ஸ்லோகத்தை ஸ்மரித்து
அதே பதங்களுடன் தொடங்குகிறார் –
ஆனால் ருஷி பேசிய கிரமப்படி பாவியேனும் பேசலாமோ என்று நினைத்து க்ரமத்தை மாற்றுகிறார்
அநு தாபம் உள்ளவனுக்குத் தான் ப்ராயச்சித்தத்தில் அதிகாரம் -ஹரி ஸ்மரணம் ப்ராயச்சித்தமே –
ஆனாலும் அனுதாபம் இருந்து தீர வேணும் -என்று ஸ்ரீ விஷ்ணு சித்தர் வியாக்யானம் –

க்ருதே என்றால் ஒரு தடவை செய்யப்பட அளவில் என்று ஆகலாம் –
ஒரு தடவை செய்தால் மறு தடவை செய்ய வேண்டியது இல்லை என்கிற நியாயம் தர்ம அனுஷ்டான விஷயம்
பாப்பம் செய்வது சாஸ்த்ரார்த்தம் அல்ல -பாபத்தை ஒரு தடவை கூட செய்யக் கூடாது சாஸ்திரத்தை மீறி
ஸ்வதந்த்ரனாகச் செய்யத் துணிந்த போது கூட ஸக்ருத் என்கிற சாஸ்த்ர நியதி உண்டோ என்பது இதில் ரஸம்

பய அநு தாப லஜ்ஜா
சிஷை வருமோ என்கிற பயம்
பாப்பம் செய்கிறோமே என்கிற பச்சாதாபம்
பாபியான பான் எங்கனே ஜனங்கள் முகத்தில் விழிப்பது -தலை காட்டுவது என்கிற வெட்கம்
திக சுசி மவி நீதம் நிர்த்தயம் -நிர்ப்பயம் -மாமலஜ்ஜம் –என்கிறபடி
பாப்பம் செய்தும் பயமும் அனுதாபமும் லஜ்ஜையும் இல்லாது இருப்பது தீமை
பாபம் செய்ததும் லஜ்ஜையும் அனுதாபமும் பின்னொரு தடவை பாபம் செய்கிறது இல்லை
என்கிற உப ரதியும் நிறுத்தலும் -வேண்டும் –

அநுதாபாது பரமாத் பிராயச்சித்த உன் முகத்வத -என்பர்
இவை பாபத்தை லகு படுத்திக் கழிக்க உபாயங்கள்

யதி பவந்தி
உண்டாகுமே யானால்

அஸ்ய
இந்தப் பாபத்தை
பாபத்தை இன்னது என்று குறிப்பிட்டுச் சொல்லக் கூட நா எழும்ப வில்லை
பொதுவான பேச்சே இங்கு -இன்னது என்று குறிப்பிட்டு பேசக் கூடாதலால்
இது -என்று பொதுவான பேச்சு 0பேதை பாலகன் அது ஆகும் போல்
இது என்பதால் செய்த பாபம் எதிரே நிற்கிறது என்றும் பொருள் கிடைக்குமே –

புன கரணம்
இரண்டாவது தடவை செய்தால் ஆவிருத்தி -நினைப்பதோடு நிற்காமல் செய்து தீருவது இங்கே புன கரணம்
நான்காவது பாதத்தில் புன புன அகம் யதிராஜ குர்வே-என்கிறார்

கதம் கடேத
எப்படிக் கூடும்
பயம் அனுதாபம் லஜ்ஜை இவைகள் ஒருந்தால் அதை திரும்பவும் செய்வாரோ
மறுபடியும் மறுபடியும் செய்வதால் நிறுத்துவதற்குக் காரணமான இவற்றின் லேசமும் இல்லை என்று தீர்மானம்
விருத்த கார்ய ஸத்வாத் காரணா பாவ –வ்யாபக விருத்தோ பலப்தி
பாபத்தின் உப ரதி -நிறுத்துதல் -என்றகார்யம் இல்லாததால் நிறுத்துவதற்குக் காரணங்களான
இவைகளின் லேசமும் இல்லை என்பது திண்ணம் –

மோஹேந
மோஹத்தால்
பாப ருசி வெறி மயக்கத்தால் விவேகம் இருள் மூடிப்போய்
புகையால் அக்னி போலும்
அழுக்கால் கண்ணாடி போலும்
கர்ப்பப்பையினால் கர்ப்பம் போலும்
ஞானம் மூடித் தலை எடுக்க மாளாமல் அழுந்திப் போய் விட்டது
பாப அனுதாப லஜ்ஜைகள் ஏன் உண்டாக வில்லை என்று கேட்பீரோ
அவை உண்டாகாமல் செய்யும் காரணம் மோஹம் என்னும் இருள் சூழ்ந்து இருப்பதே –
பாபா ருசி என்னும் விகாரம் வெறி மோகம் மண்டிப் போய்விட்டது –

மே
எனக்கு

பயாதிலேச
மூன்றும் உண்டாக வேண்டாம்
ஒன்றில் துளியாவது உண்டாக வில்லையே

ந பவதி இஹ –
இந்த தர்ம க்ஷேத்ரமான கோயிலிலும்
ஸந்யாசியான எனக்கும்
ஸத்யம் தலை எடுக்காமல் மோகம் மூடுகிறதே
பீட் யந்தே க்ருஹீண கதம் நு -சம்சாரிகள் என்ன பாடு படுவரோ –

தஸ்மாத் புன
அதனாலே அல்லவோ
இம்மூன்றின் லேசமும் இல்லாத காரணத்தில் அல்லவோ என்று அன்வயம்
புன –
காரணம் சம்வபிக்குமோ என்று முதலில் கேட்டதுக்கு
புன
கரணம் மட்டும் அல்ல
புன புன
கரணமும் சம்பவிக்கலாம் என்பதை ஸ்தாபிப்பதாகும்

புன புன
திரும்பவும் திரும்பவும் -இத்தனை தடவை என்று கணக்கு இல்லை
சப்தத்தால் இரண்டு தடவை வீப்ஸை செய்ததற்கு எண்ணற்ற அநேகம் தடவைகள் என்று பொருள்

அகம் குர்வே
பாபத்தைச் செய்கிறேன்
என் சந்தோஷத்துக்கே செய்கிறேன்
செய்து சந்தோஷிக்கிறேன்
ஆத்மநே பத பிரயோகம் அழகு –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–