Archive for September, 2020

ஸ்ரீ நாராயணீயம் – தஶகம் 68–ஸ்ரீ கோபிகா கீதம்–ஸ்ரீ கோபிகானாம் ஆஹ்லாத பிரகடனம் —

September 30, 2020

இந்த தசகம் முழுவதும் (ஸ்ரீ க்ருஷ்ணா) என்பதைச் சேர்த்தே சொல்ல வேண்டும்.
ஸ்ரீ பாகவதத்திலுள்ள கோபிகா கீதம் போல் பாட வேண்டும்.

தவ விலோகநாத்(க்ருஷ்ணா)கோபிகாஜநா:
ப்ரமதஸங்குலா: (க்ருஷ்ணா)பங்கஜேக்ஷண |
அம்ருததாரயா(க்ருஷ்ணா) ஸம்ப்லுதா இவ
ஸ்திமிததாம் தது(க்ருஷ்ணா)ஸ்த்வத்புரோகதா: || 1||

தங்களை நேரில் கண்ட கோபியர்கள் அளவற்ற சந்தோஷத்தினால் திகைத்து நின்றனர்.
அமிர்த மழையால் நனைக்கப் பட்டவர்கள் போல் அசைவற்று நின்றனர்.

ததநு காசந(க்ருஷ்ணா) த்வத்கராம்புஜம்
ஸபதி க்ருஹ்ணதீ(க்ருஷ்ணா) நிர்விஶங்கிதம் |
கநபயோதரே(க்ருஷ்ணா) ஸந்நிதாய ஸா
புலகஸம்வ்ருதா(க்ருஷ்ணா) தஸ்துஷீ சிரம் || 2||

ஒரு கோபிகை, மயிர்க்கூச்சலுடன், உமது கையை எடுத்து, தனது மார்பில் வைத்துக்கொண்டு நின்றாள்.

தவ விபோ(அ)பரா(க்ருஷ்ணா) கோமலம் புஜம்
நிஜகலாந்தரே(க்ருஷ்ணா) பர்யவேஷ்டயத் |
கலஸமுத்கதம்(க்ருஷ்ணா) ப்ராணமாருதம்
ப்ரதிநிருந்ததீவ(க்ருஷ்ணா)அதிஹர்ஷுலா || 3||

மற்றொருவள், உமது கையை எடுத்து, தன் மூச்சே நின்றுவிடும்படி தனது கழுத்தில் இறுகச் சுற்றிக் கொண்டாள்.

அபகதத்ரபா(க்ருஷ்ணா) காபி காமிநீ
தவ முகாம்புஜாத்(க்ருஷ்ணா) பூகசர்விதம் |
ப்ரதிக்ருஹய்ய தத்(க்ருஷ்ணா)வக்த்ரபங்கஜே
நிதததீ கதா(க்ருஷ்ணா) பூர்ணகாமதாம் || 4||

இன்னொரு கோபிகை, வெட்கத்தை விட்டு, உமது வாயிலிருந்து தாம்பூலத்தைப் பெற்று,
அதை உண்டு, அனைத்தையும் அடைந்து விட்டதாய் நினைத்தாள்.

விகருணோ வநே(க்ருஷ்ணா) ஸம்விஹாய மாம்
அபகதோ(அ)ஸி கா(க்ருஷ்ணா) த்வாமிஹ ஸ்ப்ருஶேத் |
இதி ஸரோஷயா(க்ருஷ்ணா) தாவதேகயா
ஸஜலலோசநம்(க்ருஷ்ணா) வீக்ஷிதோ பவாந் || 5||

இரக்கமில்லாமல் என்னைக் காட்டில் விட்டுவிட்டுச் சென்ற உன்னை யாரும் தொடமாட்டார்கள் என்று
ஒரு கோபிகை கண்ணில் நீர் வழிய கோபத்துடன் கூறினாள்.

இதி முதா(அ)(அ)குலைர்(க்ருஷ்ணா)வல்லவீஜநை:
ஸமமுபாகதோ(க்ருஷ்ணா) யாமுநே தடே |
ம்ருதுகுசாம்பரை: (க்ருஷ்ணா)கல்பிதாஸநே
குஸ்ருணபாஸுரே(க்ருஷ்ணா) பர்யஶோபதா: || 6||

ஆனந்தப் பரவசர்களாகி அக்கோபியர்கள், யமுனைக்கரையில் தமது மேலாக்கினால்
ஆசனம் செய்தார்கள். தாங்களும் அதில் அமர்ந்தீர்கள்.

கதிவிதா க்ருபா(க்ருஷ்ணா) கே(அ)பி ஸர்வதோ
த்ருததயோதயா: (க்ருஷ்ணா)கேசிதாஶ்ரிதே |
கதிசிதீத்ருஶா(க்ருஷ்ணா) மாத்ருஶேஷ்வபீதி
அபிஹிதோ பவாந்(க்ருஷ்ணா) வல்லவீஜநை: || 7||

கருணை எத்தனை விதம்? சிலர் அனைவரிடத்திலும், சிலர் தன்னை அண்டியவர்களிடத்திலும் கருணை காட்டுகிறார்கள்.
சிலர், வீடு வாசலை விட்டு அண்டியவர்களிடத்திலும்கூட கருணையற்று இருக்கிறார்கள் என்று உம்மைப் பார்த்து கோபியர் கூறினர்.

அயி குமாரிகா(ராதே) நைவ ஶங்க்யதாம்
கடிநதா மயி(ராதே) ப்ரேமகாதரே |
மயி து சேதஸோ(ராதே) வோ(அ)நுவ்ருத்தயே
க்ருதமிதம் மயா(க்ருஷ்ணா)இத்யூசிவாந் பவாந் || 8||

பெண்களே! கல்நெஞ்சம் படைத்தவன் என்று என்னை சந்தேகப்படாதீர்கள். உங்கள் அதிக அன்பினால் பயந்து,
உங்களுடைய மனம் என்னையே நாடவேண்டும் என்று நான் மறைந்து சென்றேன் என்று அவர்களிடம் கூறினீர்கள்.

அயி நிஶம்யதாம்(ராதே) ஜீவவல்லபா:
ப்ரியதமோ ஜன: (ராதே) நேத்ருஶோ மம |
ததிஹ ரம்யதாம்(ராதே) ரம்யயாமிநீஷு
அநுபரோதமிதி(க்ருஷ்ணா)ஆலபோ விபோ || 9||

உயிரினும் மேலான கோபியர்களே! உங்களைவிட என்னிடம் அன்பு கொண்டவர் எவரும் கிடையாது.
ஆகையால், நிலவொளி வீசும் இந்த இரவில், என்னுடன் தடையின்றி விளையாடுங்கள் என்று கூறினீர்.

இதி கிராதிகம்(க்ருஷ்ணா) மோதமேதுரை:
வ்ரஜவதூஜநை: (க்ருஷ்ணா)ஸாகமாரமந் |
கலிதகௌதுகோ(க்ருஷ்ணா) ராஸகேலநே
குருபுரீபதே(க்ருஷ்ணா) பாஹி மாம் கதாத் || 10||

தங்கள் வார்த்தையால் மிகுந்த ஆனந்தம் அடைந்த கோபியர்களுடன் யமுனைக்கரையில் விளையாடினீர்கள்.
குருவாயூரப்பா! தாங்கள் என்னை நோய்க் கூட்டத்திலிருந்து காத்து அருள வேண்டும்.

—————–——————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -67–ஸ்ரீ– கிருஷ்ண திரு தானம் -ததா புன ப்ரத்யஷீ பூய கோபிகா ப்ரீணனம்

September 30, 2020

ஸ்புரத் பரா நந்த ரஸாத் மகே ந த்வயா சமா சாதி தபோ கலீ லா
அஸீ மமா நந்த பரம் ப்ரபந்நா மஹாந்த மாபுர் மத மம்பு ஜாஷ்ய –1–

பரமானந்த ரூபியான தங்களுடன் காதல் லீலைகளில் மூழ்கி இருந்த கோபியர்கள்
அளவற்ற ஆனந்தம் அடைந்ததால் மிகுந்த கர்வம் கொண்டார்கள் –

நி லீ யதே அசவ் மயி மய்ய மாயம் ரமா பதிர் விஸ்வ மநோபி ராம
இதி ஸ்ம ஸர்வா கலிதாபி மாநா நிரீஷ்ய கோவிந்த் திரோ ஹிதோ அபூ –2-

உலகிலேயே அழகான கண்ணன் என்னிடம் மட்டுமே அன்பு பூண்டு இருந்தான் என்று
ஒவ்வொரு கோபியரும் நினைத்தார்கள் –
அதனால் மிகவும் கர்வம் கொண்டவர் ஆனார்கள் –அத்தை அறிந்த கோவிந்தனான
தேவரீர் அந்த நொடியிலே மறைந்து போனீர்கள் –

ராதா பிதாம் தாவத ஜாத கர்வா மதி ப்ரியாம் கோப வதூம் முராரே
பவா நு பாதாய கதோ விதூரம் தயா ஸஹ ஸ்வைர விஹார காரீ –3-

ராதை என்ற கோபி மட்டும் கர்வம் இல்லாமல் தங்கள் இடம் மிகுந்த அன்பு கொண்டாள் –
அவளை மட்டும் அழைத்துக் கொண்டு வேலு தூரம் சென்று அவளுடன் லீலா ரசம் அனுபவித்தீர் –

திரோ ஹிதே அத த்வயி ஜாத தாபா சமம் சமேதா கமலாய தாஷ்ய
வநே வநே த்வாம் பரி மார்க யந்த்யோ விஷாத மாபுர் பக வன்ன பாரம் –4-

தாங்கள் மறைந்ததால் கோபியர் மிகவும் துயரம் அடைந்தனர் -அனைவரும் ஓன்று கூடி
கானகம் முழுவதும் தங்களைத் தேடினார்கள் –
தாங்கள் கிடைக்காததால் வருத்தம் அடைந்தனர் –

ஹா சூத ஹா சம்பக கர்ணி கார ஹா மல்லிகே மாலதி பால வல்ய
கிம் வீஷீ தோ நோ ஹ்ருதயைக சோர இத்யாதி தாஸ் த்வத் பிரவணா வி லேபு –5-

மா மரமே -செண்பக மரமே -கர்ணி கார மரமே – மல்லிகைக் கொடியே -மாலதியே –
எங்கள் கண்ணனைக் கண்டீர்களா என்று மரங்களையும் கொடிகளையும் கேட்டு
கவலையுடன் புலம்பினார்கள் –

நிரீ ஷிதோ அயம் சகி பங்க ஜாஷ புரோ மமேத்யா குல மால பந்தீ
த்வாம் பாவ நாச ஷு ஷி வீஷ்ய காசித் தாபம் ஸகீ நாம் த்வி குணீ சகார –6-

கோபிகை ஒருத்தி கற்பனையில் தங்களைக் கண்டு மற்ற கோபியர் இடம் கண்ணனை
நான் எதிரில் பார்த்தேன் என்று கூற
அத்தைக் கேட்ட மற்ற கோபியர்கள் அதிகம் துன்பம் அடைந்தார்கள் –

த்வதாத் மிகாஸ்தா யமுனா தடாந்தே தவானு சக்ரு கில சேஷ்டிதாநி
வி சித்ய பூயோ அபி ததைவ மாநாத் த்வயா விமுக்தாம் தத்ரு ஸூஸ் ச ராதாம் –7-

அவர்கள் எல்லாரும் எப்பொழுதும் தங்களையே நினைத்து தங்கள் சேஷ்டிதங்களைப்
பற்றியே பேசி வந்தார்கள் –
அப்போது ராதையைத் தனியே கண்டனர் – அவளும் கர்வம் கொண்டதால்
அவளையும் விட்டு மாயையால் மறைந்தீர்கள் –

தத சமம் தா விபநே சமந்தாத்தமோ வாதாரவதி மார்க யந்த்ய
புனர் விமிஸ்ரா யமுனா தடாந்தே ப்ருசம் விலே புஸ் ச ஜகுர் குணாம்ஸ் தே –8-

அனைவரும் ராதையுடன் கூட இருட்டும் வரை கானகத்தில் தேடிமார்கள் –
மனம் கலங்கி மீண்டும் யமுனைக் கரைக்கு வந்து புலம்பினார்கள்
தங்களுடைய கல்யாண குணங்களை பாடினார்கள் –

ததா வ்யதா சங்குல மானஸா நாம் வ்ரஜாங்க நாநாம் கருணைக ஸிந்தோ

ஜகத் த்ரயீ மோஹன மோஹ நாத்மா த்வம் ப்ராது ராஸீ ரயி மந்த ஹாஸீ –9-

கருணைக் கடலே துன்பம் அடைந்த மனத்தை உடைய கோபியரின் முன் மன்மதனையும்
மயங்கச் செய்யும் அழகுடன்
மூ உலகங்களையும் மயக்கும் மந்த ஹாஸத்துடனும் தங்கள் தோன்றினீர்கள் –

சந் நிக்த சந் தர்சன மாத்ம காந்தம் த்வாம் வீஷ்ய தன்வய ஸஹஸா ததா நீம்
கிம் கிம் ந சக்ரு பிரமதாதி பாராத் ச த்வம் கதாத் பாலய மாருதேச –10-

தங்களை நேரில் கண்ட அப்பெண்கள் மகிழ்ச்சியை வித விதமாக வெளிப்படுத்தினார்கள் –
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -66–ஸ்ரீ கோபீ ஜன ஆஹ்லாதனம் –

September 30, 2020

உபயாதா நாம் ஸூத் ருசாம் குஸூ மாயுத பாண பாத விவசா நாம்
அபி வாஞ்சிதம் விதா தும் க்ருத மதிரபி தா ஜகாத வாம மிவ –1-

தங்கள் அருகே நின்ற கோபிமார்கள் மயங்கி நின்றார்கள் –
அவர்கள் விருப்பத்தைப் பற்றித் தெரிந்து இருந்தும் நேர் மாறாகப் பேசினீர்கள் –

கக நகதம் முனி நிவஹம் ஸ்ரா வயிதும் ஐகித குல வதூ தர்மம்
தர்ம்யம் கலு தே வசனம் கர்ம து நோ நிர்மலஸ்ய விஸ் வாஸ் யம் –2-

வானத்தில் கூடி இருக்கும் முனிவர்களும் -உலக மக்களும் கேட்பதற்காக குடும்பப் பெண்களின்
தர்மத்தைப் பற்றி அப்பெண்களுக்கு எடுத்துக் கூறினீர்கள் –
தர்மம் நிறைந்த அச் சொற்களைக் கடைப்பிடிக்க வேண்டும் –
உம்முடைய செய்கைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது –

ஆகர்ண்ய தே பிரதீ பாம் வாணீ மே ணீ த்ருஸ பரம் தீநா
மா மா கருணா ஸிந்தோ பரித்ய ஜேத்யதி சிரம் விலே புஸ் தா –3-

நேர் மாறான தங்கள் வார்த்தைகளைக் கேட்ட கோபியர் மிகுந்த சோகம் அடைந்தனர் –
கருணைக் கடலே அடியோங்களைப் புறக் கணிக்காதீர்கள் என்று புலம்பினார்கள் –

தாஸாம் ருதி தைர் லபிதை கருணா குல மாநஸோ முராரே த்வம்
தாபிஸ் சமம் ப்ரவ்ருத்தோ யமுனா புலி நேஷு காம ரபி ரந்தும் –4-

முரனைக் கொன்றவன் அவர்கள் புலம்பிக் கொண்டு அழுவதைப் பார்த்த தாங்கள்
கருணை கொண்டீர்கள் –
யமுனைக் கரையில் மணல் குன்றுகளில் அவர்களுடன் விளையாடினீர்கள் –

சந்த்ர கரஸ் யந்தல ஸத் ஸூ ந்தர யமுநா தடாந்த வீதீ ஷு
கோபீ ஜனோத் தரீயை ராபாதித ஸம்ஸ்தரோ ந்யஷீ தஸ் த்வம் –5-

நில ஒளி வீசும் யமுனைக் கரையில் மணல் குன்றுகளில் கோபிகள் மேல் ஆடையினால்
தங்களுக்கு ஆசனம் அமைத்தார்கள் -அதில் தங்கள் அமர்ந்தீர்கள் –

ஸூ மதுர நர்மாலபநை கர ஸம் க்ரஹனைஸ் ச சும்ப நோல்லாஸை
காடா லிங்கந சங்கைஸ் த்வ மங்க நா லோக மா குலீ சக்ரு ஷே –6-

கைகளைப் பிடித்தும் முத்தம் இட்டும் கட்டி அணைத்தும் இனிமையைப் பேசியும்
அந்த கோபிகைகள் மனங்களை மயக்கி அவர்களை மகிழ்வித்தீர்கள் –

வாஸோ ஹரணதி நே யத்வா ஸோ ஹரணம் ப்ரதி ஸ்ருதம் தாஸாம்
ததபி விபோ ரஸ விவஸஸ் வாந்தா நாம் காந்த ஸூப்ருவாமத தா –7-

முன்பு ஆடைகளைக் கவர்ந்த போது தங்கள் கொடுத்த வாக்கின் படி தங்கள் செய்கையால்
மனம் கலங்கிய அந்தப் பெண்களின் ஆடைகளை மீண்டும் கவர்ந்தீர்கள் –

கந்த லித கர்ம லேஸம் குந்தம் ருதுஸ் மேர வக்த்ர பாதோ ஜம்
நந்த ஸூ த த்வாம் த்ரி ஜகத் ஸூ ந்தர முப கூஹ்ய நந்திதா பாலா –8-

நந்தனின் புத்திரனே குந்த மலர் போல் மந்தஹாசம் செய்தீர் -தாமரை போன்ற தங்கள் திரு முகம்
சிறு வியர்வைத் துளிகளால் நிறைந்து இருந்தது – மூ உலகிலும் அழகு வாய்ந்த தங்களை
அப் பெண்கள் ஆலிங்கனம் செய்து கொண்டார்கள் –

விரஹேஷ் வங்கா ரமய ஸ்ருங்கார மயஸ் ச சங்க மே ஹி த்வம்
நிதார மங்கா ரமயஸ் தத்ர புனஸ் சங்கமே அபி சித்ரமிதம் –9-

தங்களைப் பிரியும் போது நெருப்பைப் போல் தாபம் அளிப்பவராயும் – சேரும் போது
ஸ்ருங்காரமாகவும் இருப்பீர்கள்
ஆனால் இப்போதோ சேர்க்கையிலும் அளவில்லாத ஆனந்தம் அளிப்பவராய் இருக்கிறீர்கள் -ஆச்சர்யம் –

ராதா துங்க பயோதர சாது பரீ ரம்ப லோலு பாத்மா நம்
ஆராதயே பவந்தம் பவன புராதீச சமய சகல கதான் –10-

உயர்ந்த கொங்கைகளை யுடைய ராதையைத் தழுவ எண்ணம் கொண்ட தங்களையே தொழுகிறேன்
அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -65–கோபீனாம் பகவத் சமீபம்-

September 30, 2020

கோபீ ஜநாய கதிதம் நியமா வசாநே
மாரோத் சவம் த்வமத சாதியிதும் ப்ரவ்ருத்த
சாந்த்ரேண ஸாந்த்ர மஹஸா சிசி ரீக்ருதாஸே
ப்ரா பூரயோ முரலிகாம் யமுனா வநாந்தே –1-

காத்யாயினி பூஜை முடிவில் தாங்கள் முன்பே கோபியர் இடம் கூறிய படியே
நில ஒளியில் யமுனைக் கரையில் குழலூதினீர்கள் –

சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்*  செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக* 
குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்*  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது*
பறவையின் கணங்கள் கூடு துறந்து*  வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்* 
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்*  கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே.* 

ப்ராயஸ் ததா3ஹ்வாந விதவ்4 நியோக்தும் ப்ரக்3ருஹ்ய வேணும் ப்ரதிபந்ந தூ3த்யம் 
ந்யேவஷயத் குட்மலிதே ஸரிலம் பி3ம்பா3த4ேர ஸூசித சித்தராக (-ஸ்ரீ யாதவாப்யுதயம்–8-45)

தூது செய்யும் திறங்கொண்ட தன் குழலைக் கை யெடுத்துக் காதலரை அழைத்து வரும் காரியத்தில் விடுக்கத்
தன் காதலினை வெளிப் படுத்தும் கருத்துடனே செம் பவள அதரத்தை அழகுடனே அக் குழலில் வைத்தனனே !
தூது செய்யும் தன் புல்லாங்குழலை எடுத்து அவர் களை அழைக்கும் நோக்குைடையவனாகி தன் சித்தத்திலே உள்ள
ராகத்தை (காதலை ) தெரிவிப்பது போல் ராகமுள்ளதான ( சிவந்ததான) திருப்பவளத்தை மூடிக் கொண்டு அதில் அப்புல்லாங்குழலை அமத்தினான்.

—————-

ஸம் மூர்ச நாபி ருதி தஸ்வர மண்டலாபி
ஸம் மூர்ச யந்த மகிலம் புவனாந்தராலம்
த்வத் வேணு நாத முப கர்ண்ய விபோ தருண்யஸ்
தத் சாத்ருசம் கமபி சித்த விமோஹ மாபு –2-

தங்கள் புல்லாங்குழலில் இருந்து கிளம்பிய ஏழு ஸ்வரங்களால் உண்டான நாதம்
உலகம் முழுவதையும் மயங்கச் செய்தது –
அதைக் கேட்ட கோபியர்களும் சொல்ல ஒண்ணாத மதி மயக்கம் கொண்டனர்-

தா கேஹ க்ருத்ய நிரதாஸ் தனய ப்ரஸக்தா
காந்தோப சேவந பராஸ் ச ஸரோரு ஹாஷ்யா
சர்வம் விஸ்ருஜ்ய முரளீ ரவ மோஹி தாஸ்தே
காந்தார தேச மயி காந்த த நோ சமேதா –3-

வீட்டு வேளையில் ஈடு பட்டுக் கொண்டும் குழந்தைகளை கவனித்துக் கொண்டும்
கணவனுக்கு பணிவிடை செய்து கொண்டும் இருந்த கோபிமார்கள்
தங்கள் குழலோசையைக் கேட்டதும் மனம் மயங்கி எல்லாவற்றையும் விட்டு விட்டு
உம்மைத் தேடி ஓடி வந்தார்கள் –

காஸ் சிந்நி ஜாங்க பரி பூஷண மாத தா நா
வேணு ப்ரணாத முப கர்ண்ய க்ருதார்த்த பூஷா
த்வாம் ஆகதா நநு ததைவ விபூஷி தாப்ய
ஸ்தா ஏவ ஸம் ருரு சிரே தவ லோச நாய–4-

சில கோபியர் பாதி நகைகளைப் போட்டுக் கொண்டும் பாதி அலங்கரித்துக் கொண்டும் ஓடி வந்தார்கள் –
நன்கு அலங்கரித்துக் கொண்டவர்களை விட பாதி அலங்கரித்துக் கொண்டு வந்தவர்களே
தங்களுக்கு மிக அழகாக த் தெரிந்தனர் –

ஹாரம் நிதம்ப புவி காசந தாரயந்தீ
காஞ்சீம் ச கண்ட புவி தேவ சமாகதா த்வாம்
ஹாரித்வ மாத்ம ஜக நஸ்ய முகுந்த துப்யம்
வ்யக்தம் ப பாஷ இவம் முக்த முகீ விசேஷாத் –5-

ஒரு பெண் தன் கழுத்தில் ஒட்டியாணத்தையும் இடுப்பில் ஹாரத்தையும் மாற்றி அணிந்து கொண்டு வந்தாள்
அவள் தங்களோடு பேசியது மனதை மயக்கும் தன் இடை அழகைக் கூறுவது போல் தோன்றியது –

காசித் குஸே புனர ஸஞ்ஜித கஞ்சு லீகா
வ்யாமோஹத பரவ தூபி ர லஷ்ய மாணா
த்வா மாயயவ் நிருபம ப்ரணயாதி பார
ராஜ்யாபிஷேக விதயே காலஸீத ரேவ –6-

மற்ற ஒரு பெண் அதிக அன்பினால் ரவிக்கை அணிய மறந்து மற்றவர்களுக்குத் தெரியாமல்
ஓடி வந்தாள் –அவள் ஓடி வந்து தங்களுக்கு அன்பு ஆகிற பாரத்தை அபிஷேகம் செய்ய
இரு குடங்களை எடுத்து வந்தது போலத் தோன்றியது –

காஸ் சித் க்ருஹாத் கில நிரேதும பார யந்த்யஸ்
த்வாமேவ தேவ ஹ்ருதயே ஸூ த்ருடம் வி பாவ்ய
தேஹம் விதூய பரசீத் ஸூ க ரூப மேகம்
த்வாமா விசன் பரமிமா நநு தன்ய தன்யா –7-

கணவர்களாலும் வீட்டில் உள்ள வர்களாலும் தடுக்கப்பட்ட சில பெண்கள் தங்களை
மனதால் தியானம் செய்தார்கள் –
அவர்கள் உடலை விட்டு ஆனந்த வடிவமான உம்மை அடைந்தனர் –
அவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள் ஆனார்கள் –

ஜாராத்மநா ந பரமாத்ம தயா ஸ்ம ரந்த்யோ
நார்யோ கதா பரம ஹம்ஸ கதிம் ஷணேந
தம் த்வாம் ப்ரகாஸ பரமாத்ம த நும் கதஞ்சித்
சித்தே வஹந்தம் ருதமஸ்ரம மஸ்நு வீய –8-

அந்தப் பெண்கள் எவரும் தங்களைப் பரமாத்மா என நினைத்து வரவில்லை –
காதலனாகவே நினைத்து வந்தனர் –
ஆயினும் துறவிகள் அடையக் கூடிய முக்தியை நொடியில் அடைந்தனர் –
அடியேனும் அதே போல் பரமாத்ம ஸ்வரூபமான தங்களை
மனதில் தியானம் செய்து மோக்ஷத்தை அடைவேனோ –

அப்யாகதாபி ரபிதோ வ்ரஜ ஸூ ந்தரீபிர்
முக்தஸ் மிதார்த் ரவதந கருணா வ லோகீ
நிஸ் ஸீம காந்தி ஜலதிஸ் த்வம வேஷ்ய மானோ
விஸ்வை கஹ் ருத்ய ஹர மே பவநேச ரோகா ந் –9–

கருணா கடாக்ஷத்தாலும் மந்தஹாசத்தாலும் அழகாய் விளங்கும் தங்களைக் கோபிமார்கள்
பார்த்துக் கொண்டே இருந்தார்கள்
உலகோர் கண்ணையும் நெஞ்சையும் கவரும் தாங்கள் அடியேனை ரக்ஷித்து அருள வேணும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -64–ஸ்ரீ கோவிந்தா அபிஷேகம்-

September 30, 2020

ஆலோக்ய சைலோத் தரணாதி ரூபம் ப்ரபாவ முச்சைஸ் தவ கோப லோகா
விஸ்வேஸ்வரம் த்வாம் அபி மத்ய விஸ்வ நந்தம் பவஜ் ஜாதக மன்வ ப்ருஸ் சந் –1-

மலையைத் தூக்கியது முதலிய தங்கள் மஹிமையைப் பார்த்த கோபர்கள் தங்களை
உலகிற்கு எல்லாம் நாயகன் என்று உணர்ந்தனர் –
நந்தகோபன் இடம் தங்கள் ஜாதகத்தின் பலனைக் கேட்டார்கள் –

கர்கோதி தோ நிர் கதி தோ நிஜாய வர்காய தாதே ந தவ ப்ரபாவ
பூர்வாதி கஸ் த்வய் யநுராக ஏஷா மை திஷ்ட தாவத் பஹு மாந பார –2-

அவர்கள் இடம் நந்தகோபர் முன்பு கர்க்க முனிவர் கூறியவற்றைச் சொன்னார் –
அவர்கள் தங்கள் மேல் அன்பும் பாசமும் கொண்டனர் –

ததோ அவ மாநோதி ததத்த்வ போத ஸூராதி ராஜ ஸஹ திவ்ய கவ்யா
உபேத்ய துஷ்டாவ ச நஷ்ட கர்வ ஸ் ப்ருஷ்ட்வா பதாப்ஜம் மணி மௌலிநா தே –3-

தோல்வி அடைந்த இந்திரன் கர்வத்தை விட்டு தங்களைப் புகழ்ந்து ஸ்துதித்து
காமதேனுவைத் தங்களுக்குப் பரிசாக அளித்தான்

ஸ்நேஹஸ் நுதைஸ் த்வாம் ஸூ ரபி பயோபிர்
கோவிந்த நாமாங்கித மப்ய ஷிஞ்சித்
ஐராவதோ பாஹ்ருத திவ்ய கங்கா
பாதோபிர் இந்த்ரோ அபி ச ஜாத ஹர்ஷ –4-

காமதேனு என்ற அந்தப்பசு பாலைச் சுரந்து தங்களுக்கு கோவிந்தன் என்ற
திரு நாமம் சூட்டி திரு அபிஷேகம் செய்தது –
இந்திரனும் ஐராவதம் கொண்டு வந்த கங்கா தீர்த்தம் கொண்டு திரு அபிஷேகம் செய்தான் –
தங்கள் திருவடித் தாமரைகளில் தலை வைத்து வணங்கினான் –

ஜகத் த்ரயே ஸே த்வயி கோகுலே ஸே ததா அபி ஷிக்தே சதி கோப வாட
நாகே அபி வைகுண்ட பதே அப்ய லப்யாம் ஸ்ரி யம் ப்ரபேதே பவத ப்ரபாவாத் –5-

தங்களுக்கு கோவிந்தன் என்ற பட்டாபிஷேகம் செய்ததும் திரு ஆயர்பாடியில்
ஸ்ரீ வைகுண்டத்திலும் சுவர்க்கத்தில் கிடைக்காத ஐஸ்வர்யம் நிறைந்தது –

கதா சிதந்தர்ய முநம் ப்ரபாதே ஸ்நாயன் பிதா வாருண பூருஷே ண
நீதஸ் தமா நேது மகா புரீம் த்வம் தாம் வாருணீம் காரண மர்த்ய ரூப –6-

ஒரு நாள் தங்கள் தந்தை ஏகாதசி விரதம் இருந்து துவாதசி விடியல் காலை என்று
நினைத்து இரவில் யமுனையில் நீராடினார்
வருணனின் வேலையாளாந ஒரு அசுரன் அவரை இழுத்துச் சென்றான்
உலகம் நன்மைக்காக திரு அவதாரம் செய்த தாங்கள் உடனே வருண லோகம் சென்றான் –

ச ஸம் பிரமம் தேந ஜலதி பேந பிர பூஜிதஸ் த்வம் ப்ரதி க்ருஹ்ய தாதம்
உபாகதஸ் தத் க்ஷண மாத்ம கேஹம் பிதா அவதத் தச் சரிதம் நிஜேப்ய –7-

தங்களைக் கண்ட வருணன் பக்தியுடன் தொழுது தங்களுக்கு பூஜை செய்தான் –
அதே நொடியில் தாங்கள் நந்த கோபரை
அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றீர்கள்–நந்த கோபரும் தன் சுற்றத்தார் இடம்
அதைப் பற்றிக் கூறினார் —

ஹரிம் விநிஸ் சித்ய பவந்த மேதான் பகத் பதா லோகந பத்த த்ருஷ்ணா ந்
நிரீஷ்ய விஷ்ணோ பரமம் பதம் தத் துராப மன்யைஸ் த்வ மதீத்ரு சஸ்தான் –8-

ஆயர்கள் தங்களை ஸ்ரீ ஹரியே என்று நிச்சயித்து தங்கள் இருப்பிடமான ஸ்ரீ வைகுண்டத்தை
காண விரும்பினார்கள்
எங்கும் நிறைந்து இருக்கும் தாங்கள் அவர்களுக்கு ஸ்ரீ வைகுண்டத்தைக் காண்பித்து அருளினீர்களே –

ஸ்புரத் பரா நந்த ரஸ ப்ரவாஹ ப்ர பூர்ண கைவல்ய மஹா பயோதவ்
சிரம் நிமக் நா கலு கோப ஸங்காஸ் த்வயைவ பூமன் புனருத்த்ரு தாஸ்தே –9-

ஸ்ரீ வைகுண்டத்தைக் கண்ட கோபர்கள் ஆனந்த நிலையை அடைந்து கைவல்யம் ஆகிற
மோக்ஷம் என்கிற சமுத்திரத்தில் மூழ்கினார்கள்
அவர்களை மீண்டும் உலக நிலைக்கு உணர்வு வரச் செய்து அழைத்து -வந்தீர்கள் –

கர பத ரவ தேவம் தேவ குத்ராவதாரே நிஜ பத மந வாப்யம் தர்சிதம் பக்தி பாஜாம்
ததிஹ பஸூ பரூ பீ த்வம் ஹி ஸாஷாத் பராத்ம பவன புர நிவாஸின் பாஹி மாமா மயேப்ய –10-

யாராலும் அடைய முடியாத ஸ்ரீ வைகுண்ட லோகத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல் காட்டி அருளினீர்கள் –
எந்த அவதாரத்தில் இல்லாத இடையன் வேஷம்
பூண்ட இந்த அவதாரத்தில் ப்ரத்யக்ஷமாக காட்டி அருளினீர்களே –
அடியேனை ஸ்ரீ குருவாயூரப்பா ரக்ஷித்து அருள வேணும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -63–ஸ்ரீ கோவர்தன உத்தாரணம்-

September 30, 2020

தத்ரு சிரே கில தத் க்ஷணமஷ தஸ் த நிதஜ் ரும்பி த கம்பி ததிக் தடா
ஸூ ஷ மயா பவ தங்க துலாம் கதா வ்ரஜ பதோ பரி வாரித ராஸ் த்வயா –1-

அப்பொழுது கோகுலத்திற்கு மேல் எங்கும் கருமேகங்கள் சூழ்ந்தன. அந்த மேகங்கள் தங்களது
திருமேனியைப் போல் காணப் பட்டன. வானில் தொடர்ந்து உண்டான இடி முழக்கத்தால் அனைத்து
திசைகளும் நடுங்கின. -இவை யனைத்தையும் தாங்கள் பார்த்தீர்கள் அல்லவா?

விபுல கரக மிஸ்ரைஸ் தோயதாரா நிபாதைர் திசிதி ஸி பஸூ பாநாம் மண்டலே தண்ட்ய மாநே
குபித ஹரி க்ருதாந்ந பாஹி பாஹீ தி தேஷாம் வசன மஜித ஸ்ர் ருண்வந் மாபி பீ தேத்ய பாணீ –2-

எவராலும் வெல்லப்பட முடியாத பகவானே! பெரிய பெரிய ஆலங்கட்டியுடன் எங்கும் இடைவிடாது மழை கொட்டியது.
அதனால் துன்பமடைந்த கோபர்கள், கிருஷ்ணா! இந்திரனுடைய சினத்திலிருந்து எங்களைக் காப்பாற்று ! காப்பாற்று!’
என்று அலற, அவர்களது கூக்குரலைக் கேட்ட தாங்கள் பயப்படாதீர்கள்’ என்று அவர்களிடம் கூறினீர்கள்.

குல இஹ கலு கோத்ரோ தைவதம் கோத்ர சத்ரோர் விஹிதி மிஹ ச ருந்த்யாத் கோ நு வ சம்சயோ அஸ்மின்
இதி ஸஹ சித வாதீ தேவ கோவர்த்த நாத்ரிம் த்வரித முத மு மூலோ மூலதோ பால தோர்ப்யாம் –3-

இந்த நம் கோகுலத்திற்கு (பசுக் கூட்டங்களையும், நம்மையும் காப்பாற்றும் ) தெய்வம் –
இந்த கோவர்த்தன மலை தான். மலைகளுக்குப் பகைவனான இந்திரனிடமிருந்து தோன்றும் நாசத்தை
இந்தத் தெய்வம் கட்டாயம் தடுக்கும். இதில் உங்களுக்கு ஏன் சந்தேகம்?’ என்று சிரித்துக் கொண்டே
கூறிய தாங்கள், கோவர்த்தன மலையைத் தங்களது இளங்கைகளால் அடியோடு பிடுங்கித் தூக்கினீர்கள்.

தத நு கிரி வரஸ்ய ப்ரோத்த்ருதஸ் யாஸ்ய தாவத் ஸிகதிலம் ருது தேசே தூரதோ வாரி தாபே
பரிகர பரி மிஸ்ரான் தேநு கோபா நதஸ்தா துப நித தத தத்தா ஹஸ்த பத்மே ந சைலம் –4-

அப்படி மேலே தூக்கப்பட்ட மலையின் கீழ்ப்பகுதியில் மணற்பாங்காகவும், மெதுவாகவும், பரவலாகவும் இருந்த
இடத்தில் கோபர்களைத் தங்களது உடைமைகளுடனும், பசுக்களுடனும் தங்கச் செய்து, தாங்கள் தங்களது
தாமரைக் கையால் மலையைத் தாங்கி நின்றீர்கள். மலை இருந்த இடத்தில் திட்டாக இருந்ததால்
மழை வெள்ளம் தொலைவிலேயே தடுக்கப்பட்டு விட்டது.

பவதி வித்ருத சைலே பாலிகா பிர் வயஸ்யைரபி விஹித விலாஸம் கேலிலா பாதி லோலே
ஸவித மிலிததே நூரே கஹஸ் தேந கண்டூ யதி சதி பஸூ பாலாஸ் தோஷ மை ஷந்த சர்வே -5-

தாங்கள் ஒரு கையால் மலையைத் தூக்கிக் கொண்டும், மற்றொரு கையால் அருகில் வந்த பசுக்களை
சொறிந்து கொடுத்துக் கொண்டும், இடைப்பெண்களுடனும், நண்பர்களுடனும் அபிநயத்துடன்
கேலிப் பேச்சுகள் பேசிக் கொண்டும் இருந்ததைக் கண்ட கோபர்கள் மிக்க மகிழ்ச்சி கொண்டனர்.

அதி மஹான் கிரி ரேஷ து வாமகே கர சரோ ருஹி தம் தரதே சிரம்
கிமித மத்புத மத்ரி பலம் ந்விதித் வத வலோகிபி ராகதி கோப கை –6-

இம்மலையோ மிகப் பெரியதாக உள்ளது. கிருஷ்ணனோ தாமரைப் போன்ற தனது இடது கையினால்
அதை நெடுநேரமாகத் தாங்கி நிற்கிறான். இது என்ன வியப்பு! ஒருக்கால் இது மலையின்
மகிமையாக இருக்குமோ!’ என்று தங்களைப் பார்த்து கோபர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.

அஹ ஹ தார்ஷ்ட்ய மமுஷ்ய வடோர் கிரிம் வ்யதி தபா ஹுரசா வவ ரோபயேத்
இதி ஹரிஸ் த்வயி பத்தவி கர்ஹனோ திவஸ ஸப்தக முக்ரம வர்ஷயத் –7-

இதைக் கண்ட இந்திரன், ‘இந்தச் சிறுவனுக்குத் தான் எவ்வளவு துணிவு?
இவன் கை சோர்வுற்று (நிச்சயம்) மலையைக் கீழே போட்டு விடுவான் என்று கர்வத்தால் நினைத்துத்
தங்களிடத்தில் வெறுப்பு கொண்டு ஏழு நாட்கள் கடுமையாக மழை பெய்யச் செய்தான்

அசலதி த்வயி தேவ பதாத் பரம் கலித ஸர்வ ஜலே ச க நோத் கரே
அபஹ்ருதே மருதா மருதாம் பதிஸ் த்வத் அபி சங்கிததீ சமுபாத்ரவத் — 8-

தேவ தேவனே! தாங்கள் (அவ் வேழு நாட்களும் ) – நின்ற இடத்திலிருந்து ஓர் அடி கூட நகராது இருக்கையில்
மழையெல்லாம் கொட்டித் தீர்ந்த மேகக் கூட்டங்கள் காற்றினால் – விரட்டி யடிக்கப் பட்டன.
அப்பொழுது வானவர் கோனான இந்திரன் தங்களிடம் பயந்து அங்கிருந்து ஓடி விட்டான்.

சம முபே யுஷி வர்ஷ பரே ததா பஸூ பதே நு குலே ச விநிர் கதே
புவி விபோ சமு பாஹித பூ தர ப்ரமுதிதை பஸூ பை பரி ரேபி ஷே –9-

விபுவே! அந்த பெருத்த அடை மழை ஓய்ந்ததும் கோபர்களும், பசுக் கூட்டங்களும் – உணர்ந்து (அங்கிருந்து)
வெளியே வந்தனர். தாங்கள் அம் மலையை முன்பு போல் இருந்த இடத்திலேயே கீரிடம் வைத்தீர்கள்.
இதைக் கண்ட கோபர்கள் பெரு மகிழ்ச்சி கொண்டு தங்களைக் கட்டி அணைத்துக் கொண்டனர்.

தரணி மேவ புரா த்ருதவாநஸி ஷிதி தரோத் தரணே தவ கஸ் ஸ்ரம
இதி நுதஸ் த்ரித ஸை கமலா பதே குரு புராலய பாலய மாம் கதாத் –10-

திருமகள் கேள்வனே! முன்பொரு சமயம் (வராஹ அவதாரத்தில்) தாங்கள் இப் பூமியையே தூக்கி இருக்கிறீர்கள்.
(அப்படியிருக்க) இச் சிறிய மலையைத் தூக்குவதில் தங்களுக்கு என்ன கஷ்டம்?” என்று
தேவர்களனைவரும் தங்களைத் துதித்தனர்.
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேணும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -62–ஸ்ரீ கோவர்தன பலி-

September 30, 2020

கதாசித் கோபாலான் விஹித மக சம்பா ரவி பாவான்
நிரீஷ்ய த்வம் ஸு வ்ரே மகவமத முத்த்வம் சிது மநா
விஜா நந்நப் யே தான் விநயம் ருது நந்தாதி ப ஸூ பா
நப்ருச்ச கோவா அயம் ஜனக பவதா முத் யம இதி –1-

ஒரு முறை இடையர்கள் இந்திரனைப் பூஜிக்க பொருள்களைச் சேகரித்துக் கொண்டு இருந்தார்கள் –
தாங்கள் இந்திரனின் கர்வத்தை அடக்க திரு உள்ளம் கொண்டீர்கள்
தங்கள் தந்தையிடம் இந்த ஏற்பாடுகள் எதற்கு என்று அறியாதவர் போல் கேட்டீர்கள் –

பபா ஷே நந்தஸ் த்வாம் ஸூத நநு விதேயோ மகவதோ
மகோ வர்ஷே வர்ஷே ஸூக யதி ச வர்ஷே ண ப்ருதிவீம்
ந்ருணாம் வர்ஷா யத்தம் நிகில முப ஜீவ்யம் மஹி தலே
விசேஷாதஸ் மாகம் த்ருண சலில ஜீவா ஹி பஸவ –2-

நந்தனும் -மகனே இந்திரன் மழை பொழியச் செய்து நம் பூமியை செழிப்பாக வைக்கிறார் –
அதனால் அவருக்கு ஒவ் ஒரு வருஷமும் பூஜை செய்ய வேண்டும் –
அனைவரின் பிழைப்பும் மழை மூலம் ஏற்படுகிறது –
பசுக்களும் நீரையும் புல்லையும் நம்பி இருக்கின்றன -என்று கூறினார் –

இதி ஸ்ருத்வா வாசம் பிதுரயி பவாநாஹ ஸரஸம்
திகே தந்நோ ஸத்யம் மக வஜ நிதா வ்ருஷ்டிரிதி யத்
அத்ருஷ்டம் ஜீவாநாம் ஸ்ருஜதி கலு வ்ருஷ்டிம் சமுசிதாம்
மஹாரண்யே வ்ருஷா கிமவ பலி மிந்த்ராய தததே –3-

தந்தையின் சொல் கேட்டு -இந்திரனால் மலை கிடைக்கிறது என்பது உண்மை அல்ல –
நாம் முன் ஜென்மத்தில் செய்த தர்மத்தால் மழை பெய்கிறது -காட்டில் உள்ள மரங்கள்
இந்திரனுக்கு என்ன பூஜை செய்கின்றன என்று சாமர்த்தியத்தால் பதில் சொன்னீர் –

இதம் தாவத் ஸத்யம் யதிஹ பசவோ ந குல தனம்
ததா ஜீவ்யா யாஸவ் பலி ரசல பர்த்ரே சமுசித
ஸூ ரேப்யோ அப்யுத் க்ருஷ்டா நநு தரணி தேவா ஷிதி தலே
ததஸ்தே அப்யா ராத்யா இதி ஜகதித த்வம் நிஜ ஐநா ன் –4–

இந்தப் பசுக்கள் நம் இடையர்கள் சொத்து -அவர்களுக்கு புல்லும் நீரையும் கொடுப்பது கோவர்த்தன மலை –
அதனால் கோவர்த்தன மலைக்கும் தேவர்களை விடச் சிறந்த முனிவர்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்
என்று கூறினீர் –

பவத் வாஸம் ஸ்ருத்வா பஹு மதி யுதாஸ் தே அபி பஸூ பா
த்வி ஜேந்த்ரா தர்சந்தோ பலி மதது ருச்சை ஷிதி ப்ருதே
வ்யது ப்ரா தக்ஷிண்யம் ஸூ ப்ருஸ மந மந்நாத ரயுதா
ஸ்தவ மாதஸ் சைலாத்மா பலி மகில மா பீரபுரத –5–

அதைக் கேட்ட இடையர்கள் முனிவர்களையும் கோவர்த்தன மலையையும் பூஜித்தனர் –
பிறகு மலையை வளம் வந்து நமஸ்கரித்தனர்
அனைத்து பூஜைகளையும் தாங்களே மலை வடிவில் ஏற்றுக் கொண்டீர் –

அவோசஸ் சைவம் தான் கிமஹ விததம் மேனி கதிதம்
கிரீந்த்ரோ நன்வேஷ ஸ்வ பலி முப புங்க்தே ஸ் வ வபுஷா
அயம் கோத்ரோ கோத்ரத் விஷி ச குபிதே ரஷிது மலம்
ஸமஸ்தா நித் யுக்தா ஜஹ்ரு ஷுரகிலா கோகுல ஜூஷ –6

இடையர்கள் இடம் நான் சொன்னது போல் இம்மலை பூஜையை ஏற்றுக் கொண்டது -அதனால் இந்திரன்
கோபித்துக் கொண்டாலும் இம்மலையே நம் எல்லாரையும் ரக்ஷிக்கும் என்று கூறினீர்கள் –

பரி ப்ரீதா யாதா கலு பவது பேதா வ்ரஜ ஜூ ஷோ
வ்ரஜம் யாவத் தாவன் நிஜ மக வி பங்கம் நிச மயன்
பவந்தம் ஜாநன் நப்யதி கரஜசா அ அ க்ராந்த ஹ்ருதயோ
ந ஸே ஹே தேவேந்திரஸ் த்வது பரசி தாத் மோன் நதி ரபி –7-

அனைவரும் மகிச்சியுடன் வீடு சென்றனர் -தனக்குச் சேர வேண்டிய பூஜையில் இடையூறு
ஏற்டபட்டதைக் கேட்ட இந்திரன் கோபம் கொண்டான்
தங்களைப் பற்றியும் தங்களால் கிடைத்த பதவியைப் பற்றியும் அறிந்து இருந்தும்
மிகுந்த அஹங்காரத்தால் கோபம் அடைந்தான் —

மனுஷ்யத்வம் யாதோ மது பிதபி தேவேஷ் வவி நயம்
விதத்தே சேன் நஷ்டஸ் த்ரித சஸ தஸாம் கோ அபி மஹி மா
ததஸ் ச த்வம் சிஷ்யே பஸூ பஹத கஸ்ய ஸ்ரியமிதி
ப்ரவ்ருத்தஸ் த்வாம் ஜேதும் ச கில மக வா துர் மத நிதி –8-

நாராயணனே மானுஷ அவதாரம் எடுத்து இவ்வாறு செய்வது தேவர்களுக்கு ஒரு குறை அல்லவா –
இடையர்களின் சொத்துக்களை அழித்து நாசம் செய்கிறேன் என்று இந்திரன் ஆர்பரித்தான் –

த்வதா வாஸம் ஹந்தும் ப்ரலய ஜலதா நம் பர புவி
ப்ரஹிண் வந்பி ப்ராண குலிச மயம ப்ரே பகம ந
ப்ரதஸ்தே அந்யை ரந்தர் தஹ நமரு தாத்யை விம்ஹசிதோ
பவன் மாயா நைவ த்ரி புவன பதே மோஹ யதி கம் –9-

ஐரா வதம் என்ற யானையின் மீது ஏறிக் கொண்டு வஜ்ராயுதத்தை எடுத்துக் கொண்டு
பிரளய காலத்து மேகங்களை உருவாக்கி இடையர்கள் இருப்பிடத்தை அழிக்கப் புறப்பட்டான்
பின் தொடர்ந்த அக்னி வாயு முதலிய மற்ற தேவர்கள் மனதிற்கும் பரிகசித்தார்கள் –
மூ உலகிற்கும் நாயகனே உமது மாயையை யாரால் வெல்ல முடியும் –

ஸூ ரேந்த்ர க்ருத் தஸ் சேத் த்விஜ கருணயா சைல க்ருபயா
அப்ய நாதங்கோ அஸ்மாகம் நியத இதி விச்வாஸ்ய பஸூ பான்
அஹோ கிந் நாயாதோ கிரி பிதி தி சஞ்சிந்த்ய நிவஸன்
மருத் கேஹா தீச பிரணுத முர வைரின் மம கதான் –10-

இந்திரனால் நமக்கு ஒரு கெடுதலும் நேராது -முனிவர்களும் கோவர்த்தன மலையும் நிச்சயம்
நம்மை ரக்ஷிப்பார்கள் என்று இடையர்களுக்கு சமாதானம் கூறினீர்கள் –
இந்திரன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தீர்
முரனை நிரசித்த ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -61–விப்ர பத்னி -ரிஷி பத்னிகளை பூதராக்கி -அனுக்ரஹம் –

September 30, 2020

ததஸ் ச வ்ருந்தா வனதோ அதி தூரதோ
வனம் கதஸ் த்வம் கலு கோபகோ குலை
ஹ்ரு தந்தரே பக்த தரத் விஜாங்க நா
கதம்ப கா நுக்ரஹணா க்ரஹம் வஹன் –1–

ஒரு முறை தங்கள் இடத்தில் பக்தி கொண்ட பிராமணப் பெண்களை ஆசீர்வதிக்கும்
நோக்கத்துடன் தாங்கள் ஸ்ரீ ப்ருந்தா வனத்தில் இருந்து வெகு தூரத்தில் உள்ள காட்டுக்கு
பசுக்களுடனும் இடைச் சிறுவர்களுடனும் சென்றீர்கள் –

ததோ நிரீஷ்யா சரணே வநாந்தரே
கிசோர லோகம் ஷுதி தம் த்ருஷா குலம்
அதூ ரதோ யஜ்ஞ பரான் த்வி ஜான் ப்ரதி
வ்யஸர் ஐயோ தீதி வியாச நாய தான் –2-

மனித நடமாட்டம் அற்ற அக்காட்டிலே சிறுவர்களும் பசுக்களும் பசியாலும் தாகத்தாலும் வாடினர் –
அதைக் கண்ட தாங்கள் அருகே யாகம் செய்து கொண்டு இருக்கும் அந்தணர்கள் இடம்
உணவு கேட்கச் சொல்லி அச் சிறுவர்களை அனுப்பினீர்கள் –

கதேஷ் வதோ தேஷ் வபிதாய தே அபிதாம்
குமார கேஷ் வோத நயாசி ஷு ப்ரபோ
ஸ்ருதிஸ் திரா அப்யபி நின்யுர ஸ்ருதிம்
ந கிஞ்சி தூ சுஸ் ச மஹீஸூ ரோத்தமா –3-

அவர்கள் அந்தணர்கள் இடம் தம் பெயரைக் கூறி யாசித்தார்கள் – வேதம் அறிந்த அந்த
அந்தணர்கள் காது கேட்க்காதவர்கள் போல் பேசாது இருந்தார்கள் –

அநாதராத் கிந் நதியோ ஹி பாலகா
சமா யயுர் யுக்தமிதம் ஹி யஜ் வஸூ
சிராத பக்தா கலு தே மஹீ ஸூ ரா
கதம் ஹி பக்தம் த்வயி தை ஸமர்ப்யதே –4-

உணவு கிடைக்காததால் சிறுவர்கள் வருந்தி திரும்பி வந்தார்கள் -உண்மையான பக்தி இல்லாத
அந்தணர்கள் எவ்வாறு தங்களுக்கு உணவைத் தர முன் வருவார்கள் –

நிவேத யத்வம் க்ருஹிணீ ஜநாய மாம்
திசேயுர் அன்னம் கருணா குலா இமா
இதி ஸ்மிதார்த்ரம் பவ தேரிதா கதா
ஸ்தே தாரகா தார ஜனம் யயா சிரே –5-

அந்தணர்கள் மனைவியர் இடம் நான் வந்து இருப்பதாகக் கூறி உணவு கேளுங்கோள் –
இரக்கம் மிகுந்த அவர்கள் அன்னம் கொடுப்பார்கள் என்று சிறுவர்கள் இடம் கூறினீர்கள் –
குழந்தைகளும் அந்தப் பெண்கள் இடம் உணவு கேட்டனர் –

க்ருஹீத நாம்நி த்வயி ஸம் பிரமாகுலாஸ்
சதுர் விதம் போஜ்ய ரஸம் ப்ர க்ருஹ்ய தா
சிரம் த்ருத த்வத் ப்ர விலோக நாக்ரஹா
ஸ்வ கைர் நிருத்தா அபி தூர்ண மாய யு –6-

தங்கள் பெயரைக் கேட்டவுடன் நெடு நாட்களாக த் தங்களைக் காண விரும்பிய
அப்பெண்கள் ஆவலுடன் தங்களைக் காண வேணும் என்று
நான்கு விதமான அன்னங்களை எடுத்துக் கொண்டு வந்தார்கள் –
அவர்கள் கணவன்மார் தடுத்தும் கூட வேகமாக தங்கள் இடம் வந்தார்கள் –

வி லோல பிஞ்சம் சிகுரே கபோலயோ
ஸ முல்ல சத் குண்டல மார்த்ர மீஷிதே
நிதாய பாஹும் ஸூஹ்ருதம் சஸீ மநி
ஸ்திதம் பவந்தம் சம லோக யந்ததா –7-

தலையில் மயில் பீலி உடனும் ஒளி வீசும் குண்டலங்களுடனும் கருணை பொழியும் கடாக்ஷங்களுடனும்
நண்பனின் தோளில் கையை வைத்துக் கொண்டு இருக்கும் தாங்களை அப்பெண்கள் கண்டார்கள் –

ததா ச காசித் த்வது பாக்க மோத்யதா
க்ருஹீத ஹஸ்தா தயிதேந யஜ்ஜ்வன
ததை வ சஞ்சின்த்ய பவந்த மஞ்ஜ சா
விவேச கைவல்ய மஹோ க்ருதின் யசவ் –8-

அவர்களில் ஒரு பெண்ணுக்கு அவளுடைய கணவன் தடுத்ததால் வர முடியவில்லை
அவள் அங்கேயே தங்களைத் த்யானம் செய்து தங்களுடன் கலந்து மோக்ஷம் அடைந்தாள் –
என்ன ஆச்சர்யம் –

ஆதாய போஜ்ய அந்ய அனுக்ருஹ்ய தா புன
ஸ்தவ தங்க சங்க ஸ்ப்ருஹ யோஜ்ஐதீர் க்ருஹம்
வி லோக்ய யஜ்ஞாய வி ஸர்ஜயந்நி மா
ஸ் சகர்த பர்த்ரு நபி தாஸ்வ கர்ஹாணான்–9-

அந்தணப் பெண்கள் அளித்த உணவை ஏற்று அவர்களை அனுக்ரஹித்தீர் -உம்முடைய சேவையை
விரும்பிய அவர்களை யாகத்துக்குச் செல்லும்படி உத்தரவிட்டு
அவர்கள் கணவர்களை அவர்கள் இடம் அன்புடன் இருக்கச் செய்தீர் –

நிரூப்ய தோஷம் நிஜ மங்க நா ஐநே
வி லோக்ய பக்திம் ச புனர் விசாரி பி
ப்ரபுத்த தத் த்வைஸ் த்வ மபிஷ்டு தோத் விஜைர்
மருத் புராதீச நிருந்தி மே கதான் -10-

அவர்களும் தங்கள் தவறுகளை உணர்ந்து தம் தம் மனைவியரின் பக்தியையும் உணர்ந்து
தங்களை ஸ்துதித்தனர்
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேணும் —

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -60–கோபி வஸ்திர அபஹரணம்–

September 29, 2020

மத நா துர சேதஸோ அன்வஹம் பவத் அங்கரி த்வய தாஸ்ய காம்யயா
யமுனா தட ஸீம் நி ஸை கதீம் தர லாஷ்யோ கிரி ஜாம் சமார்சி சன் –1-

மன்மதனால் கோபிகளின் மனம் சஞ்சலம் உற்றது -தங்களுக்கே சேவை செய்ய விரும்பி
யமுனா நதிக்கரையில் கூடி மணலால் பார்வதி தேவியைப் போன்ற பிம்பம் செய்து பூஜித்தனர் –

தவ நாம கதா ரதா சமம் ஸூத்ருஸ ப்ராத ரூபா கதா நதீம்
உபஹார சதைர பூஜயன் தயிதோ நந்த ஸூ தோ பவே திதி –2-

கோபிகள் தங்கள் திரு நாமத்தையும் தங்கள் கதைகளையும் கூறிக் கொண்டு யமுனா நதிக்கு வந்தார்கள் –
பிறகு நந்தகோபன் திருக்குமாரரான தாங்களே கணவனாக வர வேண்டும் என்று பூஜித்து வேண்டினர் –

இதி மாஸம் உபாஹித வ்ரதாஸ் தர லாஷீரபி வீஷ்ய தா பவான்
கருணாம் ருது லோ நதீ தடம் சமயா ஸீ த் ததனுக்ர ஹேச் சயா –3-

இவ்வாறு ஒரு மாதம் விரதம் இருந்தார்கள் – தங்கள் அவர்கள் இடம் கருணை கொண்டு
அவர்களை ஆசீர்வதிக்க யமுனைக் கரைக்குச் சென்றீர்கள் –

நியமா வசிதவ் நிஜாம் பரம் தட ஸீ மன்ய வமுஸ்ய தாஸ் ததா
யமுனா ஜல கேல நாகுலா புரதஸ் த்வா மவலோக்ய லஜ்ஜிதா –4–

வரதம் முடிந்ததும் கோபிகைகள் தங்கள் ஆடைகளைக் களைந்து கரையில் மேல்
வைத்து விட்டு யமுனையில் விளையாடத் தொடங்கினார்கள் –
அப்போது தங்களைக் கண்டு வெட்கப்பட்டனர் –

த்ரபயா நமிதா நநாஸ் வதோ வனிதாஸ் வம்பர ஜால மந்திகே
நிஹிதம் பரி க்ருஹ்ய பூருஹோ விடபம் த்வம் தரஸா அதி ரூடவான் –5-

வெட்கத்துடன் தலை குனிந்து நின்ற அந்த கோபிகளின் ஆடைகளை எடுத்துக் கொண்டு
தாங்கள் அருகில் உள்ள மரத்தின் மேல் ஏறினீர்கள் –

இஹ தாவது பேத்ய நீயதாம் வசனம் வ ஸூத்ருஸோ யதா யுதம்
இதி நர்மம்ருது ஸ்மி தே த்வயி ப்ருவதி வ்யாமு முஹே வதூ ஜனை –6-

பெண்களே இங்கு வந்து உங்கள் ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கோள் -என்று
புன் சிரிப்புடன் கூறினீர்கள் –
கோபிகள் வெட்கத்தினால் வெளியே வர முடியாமல் திகைத்தனர் –

அயி ஜீவ சிரம் கிசோர நஸ்தவ தா ஸீரவ ஸீ கரோஷி கிம்
ப்ரதி சாம் பரமம் புஜே ஷணே த்யுதி தஸ் த்வம் ஸ்மிதமேவ தத்தவான் –7-

செந்தாமரைக் கண்ணனே தங்களுக்கு சேவை செய்ய வந்த அடியோங்களை
இப்படி ஸ்ரமம் படுத்தலாமா –
எங்கள் ஆடையைக் கொடுத்து அருள வேண்டும் என்று வேண்டிய கோபிகளுக்கு
மந்தஹாசத்தையே பதிலாகத் தந்தீர்கள் –

அதி ருஹ்ய தடம் க்ருதாஞ்ஐலீ பரி ஸூத்தா ஸ்வக தீர் நிரீஷ்ய தா
வசநான்ய கிலா ன் யநுக்ரஹம் புனரேவம் கி ரமப்யதா முதா–8-

அவர்கள் கரை ஏறி கை கூப்பி வணங்கினார்கள் -அதனால் ஆடை இல்லாமல்
குளித்த பாபம் நீங்கியவர்களாய் ஆனார்கள் –
தங்களையே சரண் அடைந்ததால் அவர்களுக்கு ஆடைகளையும் அளித்து
உபதேசமும் செய்து அருளினீர்கள் –

விதிதம் தநு வோ மநீஷிதம் வதிதாரஸ் த்வி ஹ யோக்யமுத்தரம்
யமுனா புலிநே ச சந்திரிகா க்ஷண தா இத்ய பலாஸ் த்வ மூசி வான் –9–

உங்கள் எண்ணத்தை அறிந்து கொண்டேன் -நதியின் மணல் குன்றுகளின் நிலா வெளிச்சத்துடன்
கூடிய இரவில் உங்களுக்கு வேண்டுவது கிடைக்கும் என்று அருளினீர் –

உப கர்ண்ய பவன் முகஸ்யுதம் மது நிஷ்யந்தி வஸோ ம்ருகீத் ருச
ப்ரண யாதயி வீஷ்ய தே வத நாப் ஜம் சநகைர் க்ருஹம் கதா –10-

தேனினும் இனிய தங்கள் சொற்களைக் கேட்ட கோபியர்கள் தங்கள் தாமரை
திரு முகத்தைத் திரும்பிப் பார்த்த படியே மெதுவே வீடு சென்றார்கள் –

இதி நன்வ நுக் ருஹ்ய வல்ல வீர்விபி நாந்தே ஷு புரேவ ஸஞ்சரன்
கருணா ஸி ஸி ரோ ஹரே ஹர த்வரயா மே சகலா மயா வலிம் –11-

இவ்வாறு அப் பெண்களுக்கு அனுக்ரஹம் செய்து காட்டில் திரிந்து மகிழ்ந்தீர் –
கருணை உள்ளம் கொண்ட ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை சீக்கிரம் ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -59–திருக் குழல் ஓசை வர்ணனை -திரு வேணு கானம்-

September 29, 2020

த்வத் வபுர் நவ கலாய கோமலம் ப்ரேம தோஹ நம சேஷ மோஹநம்
ப்ரஹ்ம தத்துவ பர சின் முதாத்மகம் வீஷ்ய சம்மு முஹுரந்வஹம் ஸ்த்ரிய –1-

காயாம்பூ போன்ற நிறமுள்ள தங்கள் திருமேனி அனைவரையும் ஆநந்திக்கச் செய்தது –
தங்களது நிரதிசய ஆனந்த ப்ரஹ்ம திவ்ய மங்கள விக்ரஹத்தைக் கண்ட கோபிமார்கள்
மிகுந்த மோஹத்தை அடைந்தனர் –

மன்மதோன் மதித மானசா க்ரமாத் த்வத் விலோக நரதாஸ் தத ஸ் தத
கோபிகாஸ் தவ ந சேஹிரே ஹரே காந நோப கதி மப்யஹர் முகே –2-

தாங்களைக் காண்பதிலேயே விருப்பம் கொண்ட கோபிமார் மன்மதனால் தாக்கப்பட்ட
மனதை உடையவர்களாய் இருந்தார்கள் –
ஆகையால் காலையில் காட்டுக்கு மாடுகளை மேய்க்கப் கூடச் செல்லவில்லை –

நிர் கதே பவதி தத்த த்ருஷ்டய ஸ் த்வத் கதேந மனசா ம்ருகேஷணா
வேணு நாதம் உப கர்ண்ய தூரதஸ் த்வத் விலாஸ கதயா அபி ரேமிரே –3–

தங்கள் மாடு மேய்க்கச் சென்ற போது தாங்கள் செல்லும் வழியையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள் –
தங்கள் திரு வடிவை மனதில் வைத்து வெகு தூரத்தில் இருந்து கேட்க்கும்
தங்கள் குழல் ஓசையைக் கேட்டு மகிழ்ந்தனர் –
தங்கள் விளையாட்டுக்களைப் பற்றிய கதைகளை பேசியே ஆனந்தித்தனர் –

காந நாந்த மிதவான் பவா நபி ஸ்நிக்த பாத பதலே மநோர மே
வ்யத்ய யாக லித பாத மாஸ்தித ப்ரத்யு பூரயத வேணு நாலிகாம் –4–

கானகம் சென்ற உடன் அழகு நிரம்பிய மரத்தடியில் திருவடிகளை மாற்றி நின்று
திருப் புல்லாங்குழலை ஊதினீர்கள் –

மார பாணது தகே சரீ குலம் நிர்விகார பஸூ பக்ஷி மண்டலம்
த்ரா வணம் சத்ருஷதா மபி ப்ரபோ தாவகம் வ்யஜநி வேணு கூஜிதம் –5-

தங்கள் திருக் குழலின் இனிமையான ஓசை வானில் உள்ள அப்சரஸ் கூட்டங்களை மயங்கச் செய்தது –
பசுக்கள் பறவைகள் முதலியவை செயல் அற்று நின்றன –
கற்களையும் உருகச் செய்தது –

வேணுர் அந்தர தரலாங்கு லீத லம் தால சஞ்சலித பாத பல்லவம்
தத் ஸ்திதம் தவ பரோக்ஷ மப்யஹோ சம் விசிந்த்ய முமுஹுர் வ்ரஜாங்க நா –6–

கோபிகைகள் தொலைவில் இருந்தாலும் திருக் குழலின் மீது விளையாடும் தங்கள் விரல்களையும்
தாளம் இடும் தங்கள் திருப் பாதங்களையும் நினைத்து மெய் மறந்தனர் –

நிர் வி சங்க பவ தங்க தர்ஸி நீ கேசரீ கக ம்ருகாந் பஸூ நபி
த்வத் பத பிரணயி காந நம் ச தா தன்ய தன்யமிதி நன்வ மா நயன் –7-

தங்களைப் பார்க்கும் தேவப் பெண்டிரையும் மிருகங்களையும் பசுக்களையும் தங்கள்
சம்பந்தம் பெற்ற கானகத்தையும் மிக்க பேறு பெற்றவை என்று கோபிமார் எண்ணினார்கள் –

ஆபி பேய மதராம்ருதம் கதா வேணு புக்த ரஸ சேஷ மேகதா
தூரதோ பத க்ருதம் துரா சயேத் யாகுலா முஹு ரிமா சமா முஹன் –8-

திருப் புல்லாங்குழல் அனுபவித்த தங்கள் அதர அம்ருதத்தின் மிச்சத்தை ஒரு தடவையாவது அனுபவிப்போமோ –
வெகு தூரத்தில் உள்ள கிடைக்காத இதைப் பற்றிய ஆசையே போதும் என்று ஏங்கித் தவித்தனர் –

ப்ரத்யஹம் ச புநரித்த மங்க நாஸ் சித்த யோநி ஜெனிதா தனுக்ரஹாத்
பத்த ராக விவசாஸ் த்வயி ப்ரபோ நித்ய மாபுரிஹ க்ருத்ய மூடதாம் –9–

இவ்வாறு தினமும் மன்மதனால் கோபிகைகள் மனம் கலக்கம் உற்றது – தங்கள் இடம் வைத்த
அன்பால் அவர்கள் தினமும் செய்யும் காரியங்களையும் அறியாதவர்களாக ஆனார்கள் –

ராக ஸ் தாவஜ் ஜாயதே ஹி ஸ்வ பாவாந்
மோக்ஷ உபாயோ யத்நத ஸ்யாந்த வா ஸ்யாத்
தாஸாம் த்வேகம் தத் த்வயம் லப்த மாஸீத்
பாக்யம் பாக்யம் பாஹி மாம் மாருதேச –10-

உலகில் எல்லாருக்கும் இயற்கையாவே ஆசை உண்டாகிறது -முயற்சியினால் மோக்ஷம்
உண்டாகலாம் அல்லது உண்டாகாமல் இருக்கலாம்
ஆனால் கோபிகைகளுக்கு இவ்விரண்டும் ஒன்றாகவே கிடைத்து விட்டது –
என்னே பாக்யம் -ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்