திரு வுலகு அளந்து அருளின இடம் ப்ராப்தமாய்த் திரியட்டும் அவ்விடம் தன்னிலே அந்த
அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –
மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண்டிசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே -மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்
குடையாக ஆ காத்த கோ ———41-
ஒருக்கால் திருவடிகளை யிட்டு ஜகத்தை மறைத்தான் –ஒருக்கால் மலையை இட்டுத் தன்னை மறைத்தான் –
பிறந்தவன்றே செய்த காரியமும் ஏழு பிராயத்தே செய்த காரியமும் லோகத்தையும் ஒரு ஊரையும் நோக்கின படி –
————-
ஒரு நாடாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டு நோக்கினான் என்கிற பிரசங்கத்தாலே
ஒரூருக்காக வந்த விரோதங்களைப் போக்கி அங்கு உள்ளாரை நோக்கின படி சொல்லுகிறார் –
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரியுருவமாகி இரணியனதாகம்
தெரியுகிரால் கீண்டான் சினம் —-42–
விரோதியைப் போக்குகையாலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்க் கொண்டு நின்றவன் –அப்போதை அழகு –
அருள் அன்று நமக்கு உத்தேஸ்யம்-ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு உண்டான சினம் உத்தேஸ்யம் –
அச்சினத்தை அனுசந்தி –
———-
ஆஸ்ரிதரான ஸ்ரீ பிரஹலாத ஆழ்வான் ஒருவனையும் நோக்கின அளவேயோ
ஆபத்து கரை புரண்டால் எல்லாரையும் தன் பக்கலிலே வைத்து நோக்குவான் ஒருவன் கிடீர் என்கிறார் –
அவன் சங்கல்பத்திலே யன்றோ லோகம் கிடக்கிறது என்கிறார் –
சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து
புனமேய பூமி யதனைத் -தனமாகப்
பேரகலத்துள் ஒடுக்கும் பேரார மார்வனார்
ஓரகலத்துள்ள உலகு —–43-
தன்னுடைமை யானது ரஷிக்கப்பட்டது என்ற ஹர்ஷத்தாலே ஒருபடி ஆபரணம் பூண்டால் போலே இருக்கிறபடி –
அத்விதீயமாய் அபரிச்சேத்யமான சங்கல்பத்து உள்ளது ஜகத்து –
சங்கல்ப்பத்தாலே ரஷிக்க வல்லனாய் இருக்கச் செய்தே கை தொட்டு செய்கிறது ஆஸ்ரித வாத்சல்யம் –
————
நெஞ்சே உபய விபூதி யுக்தனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆச்ரயிக்கப் பார் என்கிறார் –
உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் -பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என்னெஞ்சே புரி —-44—
நூறாயிரம் ஆதித்யர்கள் உடைய ஒளியை யுடைத்தாய் அநேகம் கிரணங்களைப் புறப்பட விடா நின்றுள்ள
ஸ்ப்ருஹநீயமான திரு வபிஷேகத்தை யுடையவனுடைய –பைம் பொன் முடி-திவி சூர்ய-என்றதுவும்
போந்து இருந்தது இல்லை –ஹர்ஷ பிரகர்ஷத்தாலே பூர்ணமாய் அபிமுகமாய்க் கொண்டு ஆஸ்ரயி –
———-
பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் -என்று பரம பதத்தைக் கலவிருக்கையாக உடையவன் என்று
ப்ரஸ்துதமான வாறே அவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே கண்டு கொள்ள வேணும் –
அவன் நமக்கு ஸூ லபனோ என்னில் – அக்குறைகள் தீர நமக்காக வன்றோ
திருமலையிலே வந்து சந்நிஹிதனாய் ஸூலபன் ஆயத்து -என்கிறார் –
புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-
முன்னொரு நாள் பூமி அடங்கலும் தன் திரு எயிற்றிலே அடக்கினவன் வர்த்திக்கிற திருமலை
ஸ்ரீ வராஹ ரூபியாய் எயிற்றிலே கொண்டவன் உடைய மலை
திரு மலையில் ஆனைகளுக்குச் சேரும் இறே ஸ்ரீ வராஹமான வடிவு
இந்த மத்த கஜத்தின் உடைய ஸ்வரூபமானது ஸ்ரீ வராஹ ரூபியானவனுடைய செருக்கை ஸ்மரிப்பித்த தாய்த்து
———
திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவன் பிரயோஜனாந்தர பரர் உடைய அபேஷிதமும்
செய்து தலைக் கட்டுமவன் கிடீர் என்கிறார் –
மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்
தலை முகடு தான் ஒரு கை பற்றி -அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் – ——46–
கார்யமான இவை அழிந்து தானே யான அன்று இவற்றுக்கு அடங்க ஹிதம் பார்க்கும் உபகாரகன்
ஜகத் காரண பூதனான பரிவன் -பெற்ற பாவிக்கு ஜீவனம் தேடி விட வேண்டாவோ
சங்கல்ப்பத்தாலே ரஷிக்கலாய் இருக்க உடம்பு நோவக் கடல் கடைவதே என்ன சௌலப்யம் தான் –
————
தேவர்கள் உடைய அபேஷிதம் செய்யுமவன் கிடீர் நம்முடைய விரோதிகளைப் போக்கி
நம்மை அடிமை கொள்ளுவான் என்கிறார் –
நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ ——–47-
சேஷித்வம் தோன்றும்படி நின்றவனே –ஜகத் அடங்கலும் தானே யாம்படி அளந்து கொண்டான் ஆய்த்து
உடையவன் என்று தோன்றும்படி நின்றவனே-எங்கள் உடைய சம்சாரத்தின் வாயைக் கிழித்துப் பொகட்டவன் அன்றோ –
விலஷணர்க்கு சம்சாரம் இறே நரகம் –நிரயோ யஸ்த்வயா விநா -ஆரண்யம் -30-18-
உன்னைப் பிரிந்து இருப்பது அன்றோ நரகம் -சீதைப் பிராட்டி –
ஒரு கேசி வாயைக் கிழித்தது ஆச்சர்யமோ -எங்கள் நரகத்தின் வாயைக் கிழித்த யுனக்கு –
———
நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ-என்ன 0பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் –
நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -நீ யன்றே
மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்
தேவாசுரம் பொருதாய் செற்று —–48-
ஜ்ஞான ஹீனமான அசேதனங்களைப் போக்கின அதுவேயோ-சேதனரான விரோதி களையும் போக்கிற்று இலையோ
தேவாசூர சம்ப்ரமத்திலே அசூர வர்க்கத்தை முடித்துப் பொருதாய் நீ அன்றோ
திரிபுர தஹனம் பண்ணின ருத்ரனை இவருக்கு தோற்றுகிறது இல்லை
———–
இன்னும் இவ்வளவேயோ-அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரம் என்கிறார் –
செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -முற்றல்
முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்
சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —-49-
பின்னைக்காய் –ரசிகத்வத்தாலே தன்னை அழிய மாறின படி –
———————-
அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணின வியாபாரங்களுக்கு ஓர் அவதி இல்லை என்றதே -கீழே –
அது எங்கே கண்டோம் -என்னில் ஓர் ஆனைக்காக பீஷ்மாதிகள் பக்கலிலும் சீறாத சீற்றத்தை
ஒரு நீர்ப் புழுவின் மேலே பண்ணிற்றிலனோ -என்று ஆஸ்ரித பஷபாதத்தை யருளிச் செய்கிறார் –
சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த வருவித் தடவரைவாய் -ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் ————50-
அணி நீல வண்ணத்தவன்-இத்தை முடித்துப் பின்னை தன்னிறம் பெறுகிறான் ஆய்த்து –
ஆஸ்ரித விரோதியான முதலை போயிற்றது என்று ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –
அணி நீல வண்ணத்தவன் –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விடாய் தீர்த்த படி –
மா முதலை கொன்றான் –தன் விடாய் தீர்ந்தான் –
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply