இவ்வோ இடங்களிலே நிற்கிறவன் தான் ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணுமவனுமாய் ஸூசீலனுமாய்
இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார்-கீழ்ச் சொன்ன திருப்பதிகள் நெஞ்சை அனுவர்த்திக்கிற படி –
இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும்
புறையறக் கலக்கும் ஸீலாவான் கிடீர் -என்கிறார்-
இவையவன் கோயில் இரணியனதாகம்
அவை செய்தரியுருவமானான் -செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவேற்றான்
பாகத்தான் பாற் கடலுளான் —–31–
நற வென்று பொல்லாத மதுவாய்-தண்ணிதான மதுவைக் கையிலே ஏற்றுள்ள ருத்ரனுக்குத் தன் திரு மேனியிலே
இடம் கொடுக்கும் ஸ்வ பாவனாய் உள்ள சீலவான் –
————
இப்படி சீலவானான இவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் –என்கிறார் –
பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-
விரோதி நிரசன சீலனான கிருஷ்ணன் ஆவான் இப்படி இருக்கிற இவன் கிடீர் எனக்கு எளியன் ஆனான் –
இவனுடைய உண்மை எல்லாம் பரார்த்தம்-
———
இப்படி இருக்கிறவன் அபேஷித்தார் அபேஷித்தது எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –
இவனுடைய உடைமை எல்லாம் பரார்த்தம் என்கிறது
பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்
மேலோருநாள் உண்டவனே மெய்ம்மையே -மாலவனே
மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம்
அந்தரத்தாக்கு ஈந்தாய் நீ யன்று —33–
ஸ்வர்க்கத்திலே வர்த்திக்கக் கடவரான தேவர்களுக்கு அன்று கொடுத்தாய்
சம்சாரத்தைப் பூண் கட்டி நடுவில் பரணிலே இருக்கிறவர்கள் –
–——-
காஞ்சி புரத்திலே பல திருப்பதிகளிலே நிற்பது இருப்பது கிடப்பதான இவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்து
இதுக்கடி பண்டு திரு உலகு அளந்து அருளின ஸ்ரமத்தாலே வந்தது ஓன்று அன்றோ என்று கொண்டு அஞ்சுகிறார் –
அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் என்று தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து
அருளிச் செய்கிறார் –
அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று
கிடந்தானைக் கேடில் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்—-34-
உனக்கு இது ஒழிய வேறு அந்ய பரதை என்-நமக்காகத் தன்னை அழிய மாறினவனை அனுசந்தியாது இருக்க வேணுமோ
பூமியை அடங்கலும் அளந்த வருத்தத் தாலேயோ-திரு வேளுக்கையில் இருக்கிறதுவும்
திரு வெக்காவில் கண் வளர்ந்து அருளுகிறதுவும் என்று வயிறு எரிச்சலாலே நெஞ்சே அனுசந்திக்கப் பார்-
———–
நெஞ்சமே காண் என்று உபதேசித்தாரே கீழே – அதடியாக மற்றைக் கரணங்கள்-இவர் தம்மை ப்ரேரிக்கத் தொடங்கிற்றன-
மனஸ் சஹ காரத்தோடேயாய் இருக்கும் இறே -அல்லாத இந்த்ரியங்களுக்கும் அனுபவம் –
இந்த்ரியங்கள் தான் முற்பட்டு இவர் மூட்டும் அளவாய்த்து –
காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–
காண வேணும் காண வேணும் என்று விரும்பி நின்றன கண்கள் ஷாம காலத்தில் பசல்கள் சோறுசோறு -என்னுமா போலே –
வண்டுகள் மீட்கில் இறே என் இந்த்ரியங்களை மீட்கலாவது –
நமக்கு இவற்றின் கீழ் குடி இருப்பு அரிதான பின்பு இனி நாமும் அவனுடைய ஸ்லாக்யமான திருவடிகளை
வாயாரப் பாடி கையாலே தொழுவோம் –
—————-
யாம் தொழுதும் என்றாரே –மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –
கையனலாழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெஞ் சுடர் வாள் -செய்ய
படை பரவை பாழி பனி நீருலகம்
அடியளந்த மாயரவர்க்கு —–36–
செய்ய படை என்கிறது-ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு விதேயமாய் இருக்கை-
ஆபரணமான போது புகரைச் சொல்லுகிறது –
அப்போது அவனுக்கு என் புகுகிருறதோ என்று அஞ்ச வேண்டா
அவை தனக்கு -திசை வாழி எழ -என்று மங்களா சாசனம் பண்ண அமையும்
———-
இப்படிப் பட்டவன் திருவடிகளிலே நான் ஒரு வழியாலே அடிமை புக்கேன்-இங்கனே இருந்துள்ள நான்
அவனை ஸ்ப்ருஹநீயனாக புத்தி பண்ணுகை அன்றிக்கே அவன் தானே என்னை ஸ்ப்ருஹநீயனாக
புத்தி பண்ணா நின்றான் என்கிறார் –
அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் -துவர்க்கும்
பவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம்
திகழும் திரு மார்வன் தான் ——37–
அஹ்ருதயமாக அடிமை புக்கேன்-அடிமையிலே அந்வயித்த மாத்ரத்திலே உள்ளும் புறமும் ஒக்கக்
கை விட மாட்டாதே சௌபரியைப் போலே பல வடிவு கொண்டு பூஜியா நின்றான் -விட சக்தன் ஆகிறிலன்-
அகத்தான் புறத்தான் ஆகைக்கு அடி அவள் முறுவல் பெறுகைக்கு-
ஒருவனுடைய அபி நிவேசம் இருக்கும் படியே என்று ஈடுபடுகிறார் –
————
இப்படி என்னை வந்து விரும்பினவன் தான் சால எளியான் ஒருவனோ-சர்வேஸ்வரன் கிடீர் என்கிறார் –
தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் –தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை –38-
உபமான ராஹித்யத்துவக்கு அடி-சகல பதார்த்தங்களும் தனக்குப் பிரகாரமாய்த் தான் ப்ரகாரியாய்
தனக்கு ஒரு ப்ரகார்யந்தரம் இன்றிக்கே இருக்கை -சகல ஜந்துக்களும் தனக்கு சரீரம் என்றபடி-
எல்லாம் தான் இட்ட வழக்கு-இவை எல்லாமாய் நின்ற சர்வேஸ்வரன் தனக்கு ஒப்பாகச் சொல்லலாவானும் தானே-
————-
இப்படி ஜகதாகாரனான சர்வேஸ்வரன் திரு மலையிலே புகுந்து சந்நிஹிதனாய்ப் பின்பு
என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் என்கிறார் –
இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன் —–39-
திருமலையில் நின்று என்னுடைய ஹிருதயத்தில் புகுர அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு வந்து புகுந்தான் –
அங்குத்தை இருப்பானது என் பக்கலிலே வருகைக்குக் காலம் பார்த்து இருந்தான் என்று தோற்றி இரா நின்றது –
என்னுடைய ஹிருதயத்தின் உள்ளே நித்ய சந்நிஹிதனாய் இரா நின்றான் –
———–
இப்படி சர்வாதிகனான சர்வேஸ்வரன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே
இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை கிடாய் என்கிறார் –
உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-
பண்டு உளன் அன்றிக்கே-இன்று உளன் ஆனான் என்கிறார் -தம்மைப் பெற்றவாறே –
அவன் நம்மை உஜ்ஜீவிப்பிக்கைக்கு உளன் ஆனபடி – அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது
நம்மை உள்ளவர்களாக ஆக்கிக் கொண்டு தான் உளனாக இருக்கின்றான் –
நாம் வேண்டாத காலமும் நம்மை வேண்டி இருக்குமவன் –சத்தா ஹேது அவன் என்று நினைத்து இரா அன்றும் –
புகுரப் புக்கால் விலக்காதார் ஹிருதயத்திலே உளன் –
மன்-உடையவன் –இந்த்ரன் இழந்தது பெறுகையாலும்-மகாபலியைப் பறித்து வாங்குகையாலும்
இவனே உடையவன் -என்று தோற்றா நின்றது –
தன்னுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு பயத்தோடு வ்யாப்தம்-அவனுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு அபயத்தோடே வ்யாப்தம்
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply