ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாபதேசம்
அரவணை பிரவேசம் –
அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன்-என்று அல்வழக்கு ஒன்றும் இல்லாதே
அறுதியிட்டது தேசமாக்கி-தத் தேசிகனை அவதார கந்தமாக வஸ்து நிர்த்தேசம் செய்து
நாவ கார்யம் சொல் இல்லாதவர்களை தேசிகராக்கி
கார்ய பூதனானவன் அவதரித்த ஊரில் கொண்டாட்டம் ஒக்க நின்று கண்டால் போலே
மிகவும் உகந்து மங்களா சாசனம் செய்து
அவதரித்தவனுடைய திவ்ய அவயவங்களை பாதாதி கேசாந்தமாக நிரவத்யமான வளவன்றிக்கே
இதுவே பரம புருஷார்த்தம் என்று வஸ்து நிர்த்தேசம் செய்து
தாமும் மிகவும் உகந்து தம் போல்வார்க்கும் காணீர் –காணீர் -என்று -காட்டி அருளி
இவனுக்கு ஆஞ்ஞா ரூபமாகவும் அனுஜ்ஞ்ஞா ரூபமாகவும்
ப்ராப்தி நிபந்தனமான அபிமான ரூபமாகவும்
உபய விபூதியில் உள்ளாரும் உபகரித்த பிரகாரங்களை அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்ற
அவர்கள் வரவிட்ட வற்றையும்
அவர்கள் கொடுவந்த வற்றையும்
மேன்மையும் நீர்மையுமான மெய்ப்பாடு தோன்ற அங்கீ கரிக்க வேணும் என்று பிரார்த்தித்து-
அவன் அங்கீ கரித்த பின்பு
தொட்டிலேற்றித்
தாலாட்டி
ஜ்ஞானத்துக்கு ஆஸ்ரயத்தில் காட்டிலும் ஜஞேய ப்ராதான்யத்தைக் கற்ப்பித்து
அவற்றுக்கு ஜஞேய சீமை இவ்விஷயமாக்கி விஷயீ கரித்த ஜ்ஞானத்தை –
விஜ்ஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே-என்கிற ந்யாயத்தாலே ஜ்ஞாதாக்கள் ஆக்கி
இள மா மதீ -1-5-1-என்றும் –
விண்டனில் மன்னிய மா மதீ -1-5-6-என்றும்
உபய விபூதியில் உள்ளாரையும் உப லஷண நியாயத்தாலே இவன்
புழுதி அளைவது தொடக்கமான வ்யாபாரங்களைக் கண்டு
தாமும் மிகவும் உகந்து தம் போல்வாரையும் அழைத்துக் காட்டி
நோக்கின கண் கொண்டு போக வல்லீர்கள் ஆகில் போங்கோள்-என்று
முன்பு பச்சை வரவிட்டுத் தாங்கள் வாராதவர்களையும் வந்து கண்டு போங்கோள் -என்று
உய்ய உலகு படைத்து -என்று ஜகத் காரண பிரகாசகமான பரமபதம் முதலாக
கீழே அருளிச் செய்த திவ்ய தேசங்களையும்
இதில் அருளிச் செய்த திருக் குறுங்குடி முதலான திவ்ய தேசங்களிலும் சந்நிஹிதனாய் நின்றவனும்
நாநாவான அவதாரங்களும் அபதாநங்களுமாக பிரகாசித்தவனும்
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -கீதை -15-15-என்கிறபடியே
சகல வேத சாஸ்திர இதிஹாச புராணாதிகளாலும் அறியப்படுமவன் நான் -என்றவனை -கீழே
நாராயணா அழேல் அழேல் -என்றவர் ஆகையால் –
நான் மறையின் பொருளே -1-6-3-
ஏலு மறைப் பொருளே -1-6-9-
எங்கள் குடிக்கு அரசே -1-6-10-என்று வாசகத்துக்கு வாச்யமும் -வாச்யத்துக்கு வாசகமுமாக அறுதியிட்டு அவனை
செய்யவள் நின்னகலம் சேமம் எனக்கருதி –ஆயர்கள் போரேறே ஆடுக செங்கீரை -1-6-1- என்கையாலே
லோகத்தில் உள்ளாருக்கு பீதி பக்தி பிராப்தி மூலமான ஆசாரங்கள் பிரமாண அனுகுனமாகத் தோன்றும்படி யாகவும்
சொல் வழுவாத ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தோன்றும்படியாகவும்
செங்கீரை என்கிற வ்யாஜ்யம் முதலாக
சப்பாணி
தளர்நடை
அச்சோ அச்சோ
புறம் புல்கல்
அப்பூச்சி என்கிற வியாபார விசேஷங்களைப் பிரார்த்தித்து
அவன் இவை செய்யச் செய்ய அவற்றுக்குத் திருவடிகள் நோம் -என்றும்
தளர் நடையில் விழுந்து எழுந்து இருக்கையாலே திரு மேனி நோம் -என்றும்
அச்சோ புறம் புல்குகளாலே தம்முடைய திரு மேனியை வன்மை என்று நினைத்து
அத்தாலும் திரு மார்பு நோம் என்று அஞ்சி
நாம் பிரார்த்தித்து என்ன கார்யம் செய்தோம் -என்று அனுதபிக்கிற அளவில்
தன் நிவ்ருத்த அர்த்தமாக தன் திருத் தோள்களையும் ஆழ்வார்களையும் காட்ட
அவையும் பயா அபாய ஹேது வாகையாலே அவற்றை அமைத்து திரு மேனியில் வாட்டத்தை நினைத்து
படுக்கை வாய்ப்பாலே உறங்குகிறான் இத்தனை என்று உறங்குகிறவனை எழுப்பி
அநச்னன்-என்கிற பிரதிஜ்ஞ்ஞையைக் குலைத்து
அஸ்நாமி -என்கிறபடியே அமுது செய்ய வேணும் -என்கிறார் –
————————————————————————————
ஸ்ரீ மணவாள மா முனிகள்
அவதாரிகை –
ஆழ்வார்கள் எல்லாரும் ஸ்ரீ கிருஷ்ண அவதார ப்ரவணராய் இருந்தார்களே ஆகிலும் –
அவர்கள் எல்லாரையும் போல் அன்றிக்கே –
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலே அதி ப்ரவணராய் –
அவ்வதார ரச அனுபவத்துக்காக கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன்-என்கிறபடியே
அவ்வதார ரசம் உள்ளது எல்லாம் அனுபவிக்கிறவர் ஆகையாலே –
முதல் திருமொழியிலே அவன் அவதரித்த சமயத்தில் -அங்குள்ளார் செய்த உபலாவன விசேஷங்களையும் –
அநந்தரம்-1-2-
யசோதை பிராட்டி அவனுடைய பாதாதி கேசாந்தமான அவயவங்களில் உண்டான அழகை
ப்ரத்யேகம் பிரத்யேகமாக தான் அனுபவித்து –
அனுபுபூஷுக்களையும் தான் அழைத்துக் காட்டின படியையும் –
அநந்தரம் -1-3-
அவள் அவனைத் தொட்டிலிலே ஏற்றித் தாலாட்டின படியையும் –
பிற்காலமாய் இருக்க தத் காலம் போலே பாவனா பிரகர்ஷத்தாலே யசோதாதிகளுடைய
ப்ராப்தியையும் சிநேகத்தையும் உடையராய் கொண்டு -தாம் அனுபவித்து –
அநந்தரம் –
அவன் அம்புலியை அழைக்கை-1-4-
செங்கீரை ஆடுகை -1-5-
சப்பாணி கொட்டுகை -1-6-
தளர் நடை நடைக்கை -1-7-
அச்சோ என்றும் -1-8-
புறம் புல்குவான் என்றும் -1-9-
யசோதை பிராட்டி அபேஷிக்க
முன்னும் பின்னும் வந்து அணைக்கை ஆகிற பால சேஷ்டிதங்களை-
தத் பாவ யுக்தராய் கொண்டு அடைவே அனுபவித்துக் கொண்டு வந்து –
கீழ்த் திரு மொழியிலே -2-1-
அவன் திரு ஆய்ப்பாடியில் உள்ளோரோடு அப்பூச்சி காட்டி விளையாடின சேஷ்டிதத்தையும் –
தத் காலத்திலேயே அவள் அனுபவித்து பேசினால் போலே தாமும் அனுபவித்து பேசி ஹ்ர்ஷ்டரானார் –
இனி -2-2-
அவன் லீலா வ்யாபாரச்ராந்தனாய் -முலை உண்கையும் மறந்து -நெடும் போதாக கிடந்தது உறங்குகையாலே –
உண்ணாப் பிள்ளையை தாய் அறியும் -என்கிறபடியே யசோதை பிராட்டி அத்தை அறிந்து –
அம்மம் உண்ணத் துயில் எழாயே-என்று அவனை எழுப்பி –
நெடும் போதாக முலை உண்ணாமையை அவனுக்கு அறிவித்து –
நெறித்து பாய்கிற தன முலைகளை உண்ண வேண்டும் என்று அபேஷித்து-
அவன் இறாய்த்து இருந்த அளவிலும் -விடாதே நிர்பந்தித்து முலை ஊட்டின பிரகாரத்தை
தாம் அனுபவிக்க ஆசைப் பட்டு –
தத் பாவ யுக்தராய் கொண்டு -அவனை அம்மம் உண்ண எழுப்புகை முதலான ரசத்தை அனுபவித்து
பேசி ஹ்ர்ஷ்டராகிறார் இத் திரு மொழியில் –
—————————————-
அரவு அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே
இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய
திரு உடைய வாய் மடுத்து திளைத்து உதைத்து பருகிடாயே -2 2-1 –
அரவணையாய் ஆயரேறே–
திரு வநந்த ஆழ்வான் படுக்கை வாய்ப்ப்பாலே கண் வளர்ந்த வாசனையோ
ஆயர் ஏறான இடத்திலும் பள்ளி கொள்ள வேண்டுகிறது
மென்மை குளிர்த்தி நாற்றம் தொடக்கமானவற்றை பிரகிருதியாக உடைய
திரு அனந்தாழ்வானைப் படுக்கையாய் உடையனாய் இருந்து வைத்து –
நாக பர்யங்கம் உத்சர்ஜ்ய ஹ்யாகத -என்கிறபடியே அப்படுக்கையை விட்டு -போந்து -அவதீரணனாய்-
ஆயருக்கு பிரதானன் ஆனவனே -அப்படுக்கை வாய்ப்பாலே பள்ளி கொண்டு போந்த வாசனையோ –
ஆயர் ஏறான இடத்திலும் படுக்கை விட்டு எழுந்து இராதே பள்ளி கொள்ளுகிறது –
அவன் தான் இதர சஜாதீயனாய் அவதரித்தால்-
சென்றால் குடையாம் -என்கிறபடி -சந்தானுவர்த்தயாய் அடிமை செய்யக் கடவ –
திரு வனந்தாழ்வானும் அவனுடைய அவஸ்த அனுகுணமாக பள்ளி கொள்வதொரு திருப் படுக்கையான
வடிவைக் கொள்ளக் கூடும் இறே -ஆகையால்-அங்கு உள்ள சுகம் எல்லாம் இங்கும் உண்டாய் இருக்கும் இறே
கண் வளர்ந்து அருளுகிறவனுக்கு-
அம்மம் உண்ணத் துயில் எழாயே –
சோறு -என்றாலும்
பிரசாதம் -என்றாலும்
அறியான் என்று நினைத்து -அம்மம் உண்ணத் துயில் எழாயே என்கிறார் –
முலை உண்ண- என்னாதே- அம்மம் உண்ண -என்றது
சைசவ அனுகுணமாக அவள் சொல்லும் பாசுரம் அது ஆகையாலே
துயில் -நித்தரை
எழுகையாவது-அது குலைந்து எழுந்து இருக்கை-
எழாய்-என்கிற இது எழுந்து இருக்க வேணும் என்கிற பிரார்த்தனை-
இரவும் யுண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ –
பகல் யுண்டத்தை மறந்தார் போலே காணும்
பகல் உண்ணாதார் இரவும் உண்ணார்களோ
எழுப்பின அளவிலும் எழுந்து இராமையாலே -கன்ற எழுப்ப ஒண்ணாது -என்று விட்டேன்
இன்றும் போய் உச்சிப் பட்டது என்கிறார் விடிந்த மாத்ரத்தையே கொண்டு –
நீ ராத்திரி உண்ணாதே உறங்கி -அவ்வளவும் இன்றிக்கே இன்றும் போது உச்சிப் பட்டது –
ராத்திரி அலைத்தலாலே கிடந்தது உறங்கினால் -விடிந்து ஆற்றானாகிலும் உண்ண வேண்டாவோ –
விடிந்த அளவேயோ போது உச்சிப் பட்டது காண்
ஆலும் ஓவு மாகிற அவ்யயம் இரண்டும் விஷாதாதிசய சூசகம்
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாயத் –
உண்ண வேண்டா -என்னும் போதும் எழுந்து இருந்து வந்து
வேண்டா என்ன வேண்டாவோ -என்ற அளவிலே
எழுந்து இருந்து வருகிறவனைக் கண்டு
வயிறு தளர்ந்து முகம் வாடிற்று -என்று எடுத்து அணைத்துக் கொண்ட அளவிலே
அழகிய முலைகள் நெறித்துப் பாயத் தொடங்கிற்று –
வனப்பு -அழகும் பெருமையும்-
நீ எழுந்து இருந்து அம்மம் உண்ண வேண்டும் என்று வரவும் கண்டிலேன் –
அபேஷை இல்லை என்ன ஒண்ணாதபடி வயிறு தளர்ந்து இரா நின்றாய்
முலைகள் ஆனவை உன் பக்கல் சிநேகத்தால் நெறிந்து-பால் உள் அடங்காமல் வடிந்து பரக்க-
உனக்கு பசி உண்டாய் இருக்க -இப்பால் இப்படி வடிந்து போக -உண்ணாது ஒழிவதே -என்று கருத்து –
திருவுடைய வாய் மடுத்துத் –
பிராட்டிக்கு அசாதரணமான வாய் என்னுதல்-
திருவாய்ப்பாடியில் சுருட்டார் மென் குழல் -3-1-7-என்கிறபடியே குழல் அழகு படைத்தார்க்கு எல்லாம்
அம்ருத பானம் பண்ணும்படி சாதாரணமான வாய் -என்னுதல்
அழகிய வாய் -என்னுதல்
திரு-அழகு
அழகிய திருப் பவளத்தை மடுத்து -திரு-அழகு –
இவ்வண முலையிலே உன்னுடைய திரு உடைய வாயை அபிநிவேசம் தோற்ற மடுத்து –
திளைத்து உதைத்துப் பருகிடாயே –
முலையிலே வாய் வைத்து
முழுசி
வயிற்றிலே உதைத்து
அமுது செய்ய வேணும் என்று பிரார்த்திக்கிறார்-
முலை உண்ணுகிற ஹர்ஷம் தோற்ற கர்வித்து கால்களாலே
என் உடம்பிலே உதைத்து கொண்டு -இருந்து உண்டிடாய் –
பருகுதல்-பானம் பண்ணுதல் –
————————————-
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை உணாயே- 2-2 2- –
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
நறு வெண்ணெய்-பழுதற உருக்கி வைத்த நெய்யும்
செறிவுறக் காய்ந்த பாலும்
பனி நீர் அறும்படி நன்றாகத் தோய்த்த தயிரும் -சாய்த்தால் வடிவத்தை இருக்கிற தயிர் என்னவுமாம் –
நறு வெண்ணெயும் -செவ்வி குன்றாமல் கடையும் பக்வம் அறிந்து கடைந்து வைத்த நறு வெண்ணெயும்-
பழுதற உருக்கி வைத்த நெய்யும் -செறிவுறக் காய்ந்த பாலும் –
நீர் உள்ள்து வடித்து கட்டியாய் இருக்கிற தயிரும் -செவ்வையிலே கடைந்து எடுத்த நறுவிய வெண்ணையும்
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
ஒன்றும் பெற்று அறியேன் -என்னுதல்
இவை வைத்த பாத்ரங்களில் சிறிதும் பெற்று அறியேன் என்னுதல்
அன்றிக்கே –
இத்தனையும் என்றது -ஏக தேசமும் என்றபடியாய்-இவற்றில் அல்பமும் பெற்று அறியேன் என்னுதல்-
இப்படி என்னை களவேற்றுவதே-என்னைப் பிடித்தல் அடித்தல் செய்ய வன்றோ நீ இவ்வார்த்தை
சொல்லிற்று என்று குபிதனாக –
ஆரோ கொண்டு போனார் -என்று அறிகிலேன் -என்றவாறே –
எம்பிரான் -என்ற போதை முக விகாரத்தாலும்
நீ பிறந்த பின்னைப் பெற்று அறியேன் -என்றதாலும்
என்னைக் குறித்து அன்றோ நீ இவை இவை எல்லாம் சொல்லுகிறது -என்று கோபத்தோடு போகப் புக்கவனை
வா -என்று அழைத்த வாறே
என்னைப் பிடித்து அடித்தல் செய்ய வன்றோ நீ அழைக்கிறாய்
நான் எது செய்தேன் -என்ன –
எத்தனையும் செய்யப் பெற்றாய்-
உனக்கு வேண்டினது எல்லாம் செய்யக் கடவை -என்ன
இப்போது சொல்லுகிறாய் உன் வார்த்தை அன்றோ -என்ன
ஏதும் செய்யேன் கதம் படாதே –
நான் யுன்னை அடித்தல் கோபித்தல் செய்யேன்
நீ கோபியாதே வா -என்ன -என்றவாறே-
நான் உன்னைப் பிடித்தல் அடித்தல் ஒன்றும் செய்யக் கடவேன் அல்லேன் –
நீ கோபிக்க வேண்டா -கதம்-கோபம்
முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை யுணாயே
முத்துப் போலே இருக்கிற திரு முத்து தோன்ற மந்த ஸ்மிதம் செய்து நின்ற அளவிலே
சென்று எடுத்துக் கொண்டு
இவனை சிஷிப்பதாக நினைத்தவை எல்லாம் மறந்து
அந்த முறுவலோடு வந்து
முத்துப் போலே ஒளி விடா நிற்கும் முறுவலை செய்து –
அதாவது -கோபத்தை தவிர்ந்து ஸ்மிதம் பண்ணி கொண்டு -என்கை
மூக்காலே முழுசி
முலை மார்புகளிலே முகத்தாலும் மூக்காலும் உரோசி முலை யுண்ணாய் -என்கிறார்-
முலைக் கீழை -முழுசி -முட்டி -மூக்காலே உரோசி இருந்து
முலையை அமுது செய்யாய் –
இத்தால்
வைத்த நெய்யால் -சாஷாத் முத்தரையும்
காய்ந்த பாலால் -சொல்லுவதே ஓத்தின் சுருக்கு -என்றும்
நாம நிஷ்டோசம் யஹம் ஹரே -என்றும் இருக்கிறவர்களையும்
வடி தயிரால் -சதுர்த்தி உகாரங்களிலே தெளிந்து -தந் நிஷ்டராய் –
மகாரத்திலே ப்ர்க்ருத்யாத்ம விவேக யோக்யரானவர்களையும் –
நறு வெண்ணெயால் -செவ்வி குன்றாமல் இவ்வடைவிலே ப்ரக்ருத்யாத்ம விவேகம் பிறந்து
அஹங்கார மமகார நிவ்ருத்தமான ஆத்ம குணங்களால் பூரணராய்
மோஷ சாபேஷராய்-இருக்கிறவர்களையும் சொல்லுகிறது –
—————————————————————————-
தம் தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவார் தரிக்க கில்லார்
வந்து நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா
உந்தையார் உன் திறத்தர் அல்லர் உன்னை நான் ஓன்று உரப்ப மாட்டேன்
நந்தகோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை உணாயே -2-2-3 –
தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார் வந்து நின் மேல் பூசல் செய்ய –
தெருவிலே விளையாடுகிற பிள்ளைகள் முதலானோர் பலரும் -உன் மகன் எங்களை அடித்தான் -என்று முறைப்படுவதாக
பிள்ளைகளையும் கொண்டு வந்து தீம்பேற்றிக் காட்டின அளவிலே
ஆய்ச்சி நான் ஒன்றும் செய்திலேன்
இவர்கள் தாங்களாக்கும் இவை எல்லாம் செய்தார்கள் -என்று இவர் பீதனாய் அழப் புகுந்தவாறே
இவள் அமுது கொடு வந்தவர்களை அழுகை மாற்றுதல்
இவனை சிஷித்தல் செய்யாதே
தன்னைத் தானே நலிந்து கொள்ளப் புக்கவாறே
அவர்கள் தாய்மார் வந்தவர்கள் -இது என் என்று விலக்கப் புக்கவாறே
இந் நேரிலே தம் தாம் பிள்ளைகள் தாய்மார் பக்கலிலே அழுது சென்றால் தரிப்பார்களோ -என்றது கேட்டு
அவர்கள் போனவாறே இவனைப் பிடித்து நலிவதாகத் தேடி -இவன் அழுகையைக் கண்டு
உன் மேல் எல்லாரும் தீம்பேற்றி அலர் தூற்ற -அதுவே யாத்ரையாக –
ஊரில் பிள்ளைகளோடே விளையாடப் புக்கால் எல்லாரையும் போல் அன்றிக்கே –
நீ அவர்களை அடித்து குத்தி விளையாடா நின்றாய் -இப்படி செய்யலாமோ -தம் தம் பிள்ளைகள் அழுது சென்றால் –
அவர்கள் தாய்மாரானவர்கள் பொறுக்க மாட்டார்கள் –
வந்து நின் மேல் பூசல் செய்ய -அவர்கள் தாங்கள்-தங்கள் பிள்ளைகளையும் பிடித்து கொடுவந்து உன் மேலே
சிலுகு -சண்டை -இட்டு பிணங்க
வாழ வல்ல வாசுதேவா -உந்தையார் உன் திறத்தரல்லர்-
பசுவின் வயிற்றில் புலியாய் இருந்தாயீ-என்று கோபித்து –
வாழ வல்ல -அதிலே ஒரு சுற்றும் இளைப்பு இன்றிக்கே -பிரியப்பட்டு -இதுவே போகமாக இருக்க வல்ல –
வாசுதேவா -வாசுதேவன் புத்திரன் ஆனவனே -பசுவின் வயிற்றில் புலியாய் இருந்தாயீ
அத்தை மறந்து
நந்த கோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே –
நந்த கோபனுக்கு என்றே வாய்த்த பிள்ளாய் -என்று கோபித்து
உந்தையரான ஸ்ரீ நந்தகோபர் உன் திறத்தல்லர் -உன்னை சிஷித்து வளர்க்க மாட்டார்-
உன்னுடைய தமப்பன் ஆனவர் உன்னிடையாட்டம் இட்டு எண்ணார்-என்றபடி –
ஸ்ரீ நந்த கோபர்க்கு வாய்த்த பிள்ளாய் -அணி -அழகு –
இவன் தீம்பிலே உளைந்து சொல்லுகிற வார்த்தை
உன்னை நான் ஓன்று இரப்ப மாட்டேன் –
நானும் உன்னை அதிரக் கோபித்து -நியமிக்க மாட்டேன் –
தீம்பனான உன்னை -அபலையான நான் -ஒரு வழியாலும் தீர நியமிக்க மாட்டேன் –
அத்தையும் மறைத்து -இவனை எடுத்து
சுரந்த முலையை -நான் தர -நீ உண்ணாய்-என்று பிரார்த்திக்க வேண்டி நில்லா நின்றது இறே-
அவை எல்லாம் கிடக்க -இப்போது நான் சுரந்த முலையை அமுது செய்யாய் –
—————————————
கஞ்சன் தன்னால் புணர்க்கப் பட்ட கள்ளச் சகடு கலக்கழிய
பஞ்சி அன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று
அஞ்சினேன் காண் அமரர்கோவே ஆயர் கூட்டத்து அளவு அன்றாலோ
கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப் படுத்தாய் முலை உணாயே -2-2-4-
பஞ்சி என்கிற இது பஞ்சு என்பதற்கு போலி –
கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு-
பிறப்பதற்கு முன்னே கொலை கருதிப் பார்த்து இருக்கிறவன்
திருவாய்ப்பாடியிலே வளருகிறான் -என்று கேட்டால் கொலை கருதி விடாது இரான் இறே
இனி -இதுக்காவான் இவன் -என்று தன் நெஞ்சில் தோன்றின க்ருத்ரிம வியாபாரங்கள் எல்லாத்துக்கும் தானே
சப்தமிட்டுப் புணர்ந்து சகடாசூரனைக் கற்பித்து வரவிட வருகையாலே -கள்ளச் சகடு -என்கிறார் –
பூதனையிலும் களவு மிகுத்து இருக்கும் காணும் -ஆவேசம் ஆகையாலே சகடாசுரனுக்கு-
உன் மேலே கறுவதலை உடையனான கம்சனாலே உன்னை நலிகைக்காக –
கற்ப்பிக்கப் பட்ட க்ர்த்ரிமமான சகடமானது -அசூரா விஷ்டமாய் வருகையாலே -கள்ளச் சகடு -என்கிறது –
கலக்கழியப்பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது -நொந்திடும் என்று-அஞ்சினேன் காண்
கலக்கழிய –
தளர்ந்தும் முறிந்தும் உடல் வேறாக பிளந்து வீய -என்கிறபடியே கட்டுக் குலைந்து உரு மாய்ந்து போம்படியாக
பஞ்சி இத்யாதி –
பஞ்சு போன்ற மிருதுவான திருவடிகளாலே உதைத்த போது -திருவடிகள் நோம் -என்று பயப்பட்டேன் காண் –
சாடு கட்டுக் குலைந்து அச்சு தெறித்து போம்படி பஞ்சிலும் காட்டிலும் அதி மார்த்வமான
திருவடிகளால் பாய்ந்த போது நொந்திடும் என்று அஞ்சினேன் காண்-
அமரர் கோவே -தேவர்களுக்கு நிர்வாகன் ஆனவனே –
அமரர் கோவே –
அமரருடைய பாக்யத்தாலே இறே நீ பிழைத்தது -என்னுதல்-
அன்றிக்கே
பிரதிகூலித்து கிட்டினார் முடியும்படியான முஹூர்த்த விசேஷத்திலே நீ பிறக்கையாலே -என்னுதல் –
இப்படி பய நிவர்த்தகங்களைக் கண்டாலும் பயம் மாறாது இறே இவருக்கு –
உன்னைக் கொண்டு தங்கள் விரோதியைப் போக்கி –
வாழ இருக்கிற அவர்கள் பாக்யத்தால் இறே -உனக்கு ஒரு நோவு வராமல் இருந்தது -என்கை –
ஆயர் கூட்டத்து அளவன்றாலோ-
பஞ்ச லஷம் குடி இருப்பிலும் திரண்ட பிள்ளைகள் அளவன்றாகில்
ஒ ஒ உன்னை எங்கனே நியமித்து வளர்ப்பேன்
ஆயருடைய திரள் அஞ்சின அளவல்ல காண் -நான் அஞ்சின படி –
ஆல் ஒ என்றவை விஷாத சூசகமான அவ்யயங்கள்
இங்கனே இவர் ஈடுபட புகுந்தவாறே -நம் கையில் கம்சன் பட்டது அறியீரோ -என்ன
கஞ்சனையுன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலை யுணாயே-
கம்சன் பட்டது உன் பக்கல் பண்ணின வஞ்சனை ஆகிய பாப வலை சூழ்ந்து அன்றோ பட்டது
நீ வலைப்படுத்தாய் -என்கிறது வ்யாஜம் மாதரம் அன்றோ –
அன்றைக்கு நீ பிழைத்தது என் பாக்கியம் அன்றோ -என்னுதல் –
அன்றிக்கே
நீ வஞ்சனை செய்து சிறைப்படுத்திக் கொல்ல-அவன் பிராணன் இழந்த படியால் -நான் பிராணன் பெற்றேன்
என்று தேறி முலை யுண்ணாய் என்கிறார்-
உன் திறத்திலே வஞ்சனைகளை செய்த கம்சனை -நீ அவன் திறத்தில் செய்த வஞ்சனையாலே
தப்பாதபடி அகப்படுத்தி முடித்தவனே
முலை உணாயே -இப்போது முலையை அமுது செய்ய வேணும் –
—————————————————————————–
தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து
மாயம் தன்னால் வலைப் படுக்கில் வாழ கில்லேன் வாசு தேவா
தாயர் வாய் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
ஆயர் பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே -2 -2-5 – –
தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினமுடையன் –
ஜன்மாந்தர வாசனையாலும்
அசத் சஹ வாசங்களாலும்
துஷ்ட மந்த்ரிகள் வார்த்தை கேட்கையாலும்
சாதுவான அக்ரூரர் வார்த்தை கேலாமையாலும்
ராஜ குலத்தில் பிறந்து இருக்கச் செய்தேயும் தனக்கு என்று ஓர் அறிவு இல்லாமையாலும்
சகல பிராணி விருத்தமான அசன் மார்க்க நிரூபகன் ஆகையாலும்
இவை எல்லாத்துக்கும் ஹேதுவான கர்ப்ப தோஷத்தாலும் -தீய புந்திக் கஞ்சன் -என்கிறார் –
தீய புந்தியாவது –
அஹங்கார மமகார நிபந்தனமாக
தன்னைத் தானே முடிக்க விசாரித்து அத்யவசித்து இருக்கை-
இப்படிப்பட்ட புத்தியை யுடையவன் நிர் நிபந்தனமாக உன் மேல் அதி குபிதசலித ஹ்ருதயனாய்
விபரீத தர்மங்களான மாயா ரூபிகளை பரிகாரமாக யுடையவனாய்
தீய புந்திக் கஞ்சன் -துர் புத்தியான கம்சன் -பிள்ளைக் கொல்லி இறே-
மக்கள் அறுவரைக் கல்லிடை மோதின பாபிஷ்டன் இறே –
உன் மேல் சினமுடையன் -தேவகி உடைய அஷ்டம கர்ப்பம் உனக்கு சத்ரு -என்று
அசரீரி வாக்யத்தாலே கேட்டு இருக்கையாலும் –
பின்பு துர்க்கை சொல்லிப் போந்த வார்த்தையாலும் –
நமக்கு சத்ரு வானவன் கை தப்பிப் போய் நம்மால் கிட்ட ஒண்ணாத ஸ்தலத்திலே புகுந்தான் –
இவனை ஒரு வழியாலே ஹிம்சித்தாய் விடும்படி என் -என்று இருக்கையாலும் –
உன்னுடைய மேலே மிகவும் குரோதம் உடையவன் –
எப்போதோ இடம் -என்று சோர்வு பார்த்து மாயா ரூபிகளை வரவிட்டு
அவர்களுடைய சூட்சி யாகிற வலையிலே அகப்படில் நான் உயிர் வாழ்ந்து இரேன்-முடிவன் –
சோர்வு பார்த்து-மாயம் தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா-
தனியே புறப்படுகை –
உன்னாலே இறே சாதுவான வாசுதேவன் முதலானாரையும் அவன் நலிகிறது
உன்னைக் கண்டால் அவன் வர விட்ட மாயா ரூபிகள் விடுவார்களோ –
சோர்வு பார்த்து -அவிழ்ச்சி பார்த்து -அதாவது நீ அசஹாயனாய் திரியும் அவசரம் பார்த்து -என்கை-
மாயம் தன்னால் வலைப் படுக்கில் -உன்னை நலிகைக்காக மாயா ரூபிகளான ஆசூர பிரகிருதிகளை
திர்யக்காகவும் ஸ்தாவரமாகவும் உள்ள வடிவுகளை கொண்டு நீ வியாபாரிக்கும்
ஸ்தலங்களில் நிற்கும் படி பண்ணியும் -நீ அறியாமல் வஞ்சனத்தால் நழுவாதபடி பிடித்து கொள்ளில் –
வாழ கில்லேன் -நான் பின்னை ஜீவித்து இருக்க ஷமை அல்லேன் -முடிந்தே விடுவேன் –
வாசுதேவா -உன்னாலே இறே சாதுவான அவரும் சிறைப்பட வேண்டிற்று
தாயர் வாய்ச் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா-
கீழே -தேவகி சிங்கமே -என்று சொல்லி வைத்து
இப்போது தன்னை மாதாவாக சொல்லும் போது
பித்ருத்வம் நோபலஷயே -அயோத்யா -58-31-
உந்தை யாவன் என்று உரைப்ப -பெருமாள் திரு மொழி -7-3-
நந்த கோபன் மைந்தன்
நந்த கோபன் பெற்றனன் –
எங்கு இங்கிதத்தாலே காட்டினானாக வேணும் இறே
பிறந்த அன்றே மாத்ரு வசனம் கார்யம் -என்று கொண்ட யுனக்கு
என் வார்த்தையும் கார்யம் என்று கைக் கொள்ள வேணும் காண்-
பலரும் அறியும்படி பல காலும் சொன்னேன்
லீலா ரசத்தை நச்சியும் போகாதே கொள்-
உத்தேச்யதையாலும் பரிவாலும் தாய்மார் வாக்கால் சொல்லுவது பிள்ளைகளுக்கு அவசிய கரணீயம் காண் -என்கை-
சாற்றிச் சொன்னேன் போக வேண்டா -இது தன்னை குன்னாம் குருச்சியாக -ரகஸ்யமாக -அன்றிக்கே
எல்லாரும் அறியும் படி பிரசித்தமாக சொன்னேன் -லீலா அர்த்தமாகவும் நீ தனித்து ஓர் இடத்தில் போக வேண்டா
ஆயர்பாடிக்கு அணி விளக்கே –
என் அளவேயோ
இவ் ஊரில் உள்ள எல்லாரும் உன்னையே காணும்படி அழகிதான தீபம் போலேயான
சௌந்த்ர்யாதி குணங்களாலே பிரகாசிதன் ஆனவனே –
விளக்குக்கு அழகு தூண்டாமையும் நந்தாமையும் –
இப்படி இருப்பதொரு விளக்கு யுண்டோ என்னில்
ப்ரதீதியில் ப்ரத்யஷ மாத்ரத்தாலே யுண்டு என்னவுமாம் –
அனுமானம் ப்ரத்யஷ சாபேஷம் ஆனாலும் ப்ரத்யஷம் அனுமானம் சாபேஷம் ஆகாது
ஆயிருக்க இரண்டும் ஸ்மாரக தர்சனத்தாலே ஏக ஆஸ்ரயத்திலே காண்கையாலே
இவை நிரூபியாமல் கண்ட மாத்ரமே கொண்டு -அணி விளக்கு -என்னுதல்
அன்றியிலே
அபூதம் என்னுதல் –
ஆயர்பாடிக்கு அணி விளக்கே -திரு வாய்ப்பாடிக்கு ஒரு மங்கள தீபம் ஆனவனே –
அணி-அழகு
இத்தால்-எனக்கே அன்று -உனக்கு ஒரு தீங்கு வரில் -இவ்வூராக இருள் மூடி விடும் கிடாய் -என்கை
யமர்ந்து என் முலை யுணாயே —
உன் இஷ்டத்திலே போக்குவரத்து சீகர கதி யானாலும்
அழைக்க வரும் போது மந்த கதியாக வேணும் காண் –
ஆனபின்பு பரபரப்பை விட்டு பிரதிஷ்டனாய் வந்து உனக்கு என்று சுரந்து இருக்கிற முலையை
அமுது செய்ய வேணும் –
இனி இவர்க்கு முலைப்பால் ஆவது
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை உசிதமாய் –
மங்களா சாசன பர்யந்தமான பக்தி ரூபா பன்ன ஜ்ஞான ப்ரவாஹம் இறே
பக்தி உழவன் ஆனவனுக்கு தாரகாதிகள் எல்லாம் இது தானே இறே-
————————————————————————–
மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே -2 2-6 – –
மின்னனைய நுண்ணிடையார் –
மின்கொடி ஒரு வகை ஒப்பாயிற்று ஆகிலும் -அது போராமை இறே நுண்ணிடையார் என்கிறது –
மின்னோடு ஒத்த நுண்ணிய இடையை உடையவர்கள் என்னுதல்-
மின்னை ஒரு வகைக்கு ஒப்பாக உடைத்தாய் -அவ்வளவு இன்றிக்கே சூஷ்மமான இடையை உடையவர்கள் என்னுதல் –
விரி குழல் மேல் நுழைந்த வண்டு –
விரி குழல் -என்கையால் -நீண்டு பரந்து இருண்டு சுருண்டு நெய்தது-என்றால் போலே
சொல்லுகிற எல்லா வற்றுக்கும் உப லஷணம்
விச்தர்தமான குழல் மேலே மது பான அர்த்தமாக அவஹாகித்த வண்டுகள் ஆனவை –
குழல் மேல் வந்து படிந்து உள்ளே முழுகின வண்டுகள் மது பானம் செய்த செருக்கால் –
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்
இனிதான இசைகளைப் பாடா நிற்கிற ஸ்ரீ வில்லிபுத்தூரை-
மது பானத்தாலே செருக்கி இனிய இசைகளை பாடா நிற்கும் -ஸ்ரீ வில்லி புத்தூரிலே –
ஸ்ரீ பரம பதத்திலும் காட்டில் இனிதாக பொருந்தி வர்த்திகிறவனே-
தாழ்ந்தார்க்கு முகம் கொடுக்கும் தேசம் ஆகையாலே திரு உள்ளம் பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே-
பரம சாம்யாபந்யருக்கு முகம் கொடுத்து கொண்டு இருக்கும் இத்தனை இறே ஸ்ரீ பரம பதத்தில் –
இங்கு இரண்டுமே சித்திக்குமே –
இனிது அமர்ந்தாய் –
பரமபதத்திலும் காட்டிலும் மிகவும் விரும்பி அந்த இசையைக் கேட்டு
இனிது அமர்ந்து இறே- வட பெரும் கோயில் யுடையான் கண் வளர்ந்து அருளுகிறது –
நித்ய நிர்தோஷ
ஸ்வயம் பிரகாச
அபௌருஷேய
ஏகாரத்த நிர்ணயமான
சகல வேதங்களையும் மங்களா சாசன பர்யந்தமாக நிர்ணயித்து
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் -என்று பிரசித்தரான இவர்
வேறு ஒரு வ்யக்தியில் சேர்க்கவும் அரிதாய்
அசாதாரணங்களான-விஷ்ணு வாசுதேவன் -நாராயணன் -என்னும் திரு நாமங்கள் யுண்டாய் இருக்க
வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் -என்று வஸ்து நிர்த்தேசம் செய்தார் இறே
இது இறே பிரமாணிகருக்கும் சாஷாத் கர பரருக்கும் உத்தேச்யம் –
யுன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு யுடையாள் என்னும் வார்த்தை எய்துவித்த –
உன்னைக் கண்ட பாக்யாதிகர் -ஸூக தாதம் -என்னும்படி யான வ்யாசாதிகள் உடைய உபாசன மாத்ரங்கள் அன்றிக்கே
இதுவே இறே ஒரு படியாய் இரா நின்றதீ -என்று விஸ்மிதராய்
இவனைப் பெற்ற வயிறு யுடையாள்-என்ன நோன்பு நோற்றாள் கொலோ-என்று
பலகாலும் சொல்லும்படியான வார்த்தையால் வந்த பிரசித்தியை யுன்டாக்கித் தந்த –
நாட்டில் பிள்ளைகள் போல் அன்றிக்கே -ரூப குண சேஷ்டிதங்களால் வ்யாவர்தனாய் இருக்கிற உன்னைக் கண்டவர்கள் –
நாட்டிலே பாக்யாதிகைகளாய் விலஷணமான பிள்ளைகளை பெறுவாரும் உண்டு இறே –
அவ்வளவு அன்றிக்கே லோகத்தில் கண்டு அறியாத வைலஷண்யத்தை உடைய இவனைப் பெற்ற வயிறு உடையவள் –
இதுக்கு உடலாக என்ன தபஸை பண்ணினாளோ என்று ஸ்லாகித்து சொல்லும் வார்த்தையை –
எனக்கு உண்டாக்கித் தந்த
இருடீ கேசா முலை யுணாயே-
இந்த்ரியங்கள் வ்யக்தி அந்தரங்களிலே செல்லாதபடி சௌந்தர்யாதிகளாலே அபஹரிக்க வல்லவனே –
இருடீகேசா -கண்டவர்களுடைய சர்வேந்த்ரியங்களையும் வ்யக்த்யந்தரத்தில் போகாதபடி உன் வசம்
ஆக்கிக் கொள்ளும் வைலஷண்யத்தை உடையவனே –
முலை உணாயே-
இடையாலே
ஒன்றையும் பொறாத வைராக்யமும் –
இடை நோக்குவது
முலைகள் விம்மி பெருத்தல் ஆகையாலே மிக்க பக்தியையும்
விரி குழல் -என்கையாலே –
நாநா வானப் பிரபத்திகளை ஏகாஸ்ரயத்தில் சேர்த்து முடித்து நிஷ்டனாய் -ஸூ மநாவுமாய் உபதேசிக்க வல்ல ஆச்சார்யனையும்
மேல் நுழைந்த வண்டு -என்கையாலே இவற்றுக்கு பாத்ரமான பிரபன்னனையும்
இன்னிசை -என்கையாலே
ஆச்சார்யனுடைய ஜ்ஞான பக்தி வைராக்ய வைபவங்களை இனிதாகப் பேசி அனுபவிக்கிற வாக்மித்வங்களையும்
இவை எல்லாம் காணவும் கேட்க்கவுமாவது திரு மாளிகையிலே ஆகையாலே இத்தை உகந்து அருளி
இனிது அமர்ந்த வில்லி புத்தூர் உறைவாரையும் காட்டுகிறது-
—————————————————————————
பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்கி நோக்கி
வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா முலை உணாயே -2-2 7- –
பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
புத்ர சாபேஷராய் வர்த்திக்கிற ஸ்திரீகள் உன்னைக் கண்டால் அபஹ்ருத சித்தைகளாய்-
நாம் இப்படி ஒரு பிள்ளை பெறப் பெறுகிறோம் இல்லையே நமக்கு இது கூடுமோ என்கிற ஆசையோடு –
ஸ்வ பர்த்தாக்களுக்கு பார்யைகளாய் வர்த்திப்பராய் உன்னைக் கண்டவர்கள் –
உன்னைப் போலே இருக்கும் பிள்ளைகளை பெற வேணும் என்னும் ஆசையாலே கால் வாங்கி
போக மாட்டாதபடியாய் விட்டார்கள் –
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
தம்தாமுடைய உத்தியோகங்களை மறந்து நில்லா நின்றார்கள் –
வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுது உண்ண வேண்டிக் கொண்டு போவான் வந்து நின்றார்-
வேறு யுவதிகளாய் இருப்பார் வண்டு முழுகி முழுசும்படியான செவ்வி மாறாத மாலைகளாலே
அலங்க்ருதமான குழல்களையும் யுடையார் சிலர்
தம் தாமுடைய அபிமதங்களாலே ஸ்பர்சிப்பதாக நினைத்து
தங்கள் கண்களாலே சமுதாய சோபா தர்சனம் செய்து அணைத்து எடுத்து
வாக் அம்ருத சாபேஷைகளாய் கொண்டு போவதாக வந்து நில்லா நின்றார்கள் –
நீயும் அவர்களோடு போவதாக பார்த்து ஒருப்படா நின்றாய் –
வண்டுலாம் பூம் குழலினார் கண் இணையால் கலக்கி நோக்கி-பெருக்காற்றிலே இழிய மாட்டாமையால்
கரையிலே நின்று சஞ்சரிப்பாரைப் போலே
மதுவின் சமர்த்தியாலே உள்ளே அவஹாகிக்க மாட்டா வண்டுகள் ஆனவை மேலே நின்று சஞ்சரிக்கும் படி –
பூவாலே அலங்க்ர்தமான குழலை உடையவர்கள் –
தன்னுடைய கண்களால் உன்னுடைய சமுதாய சோப தர்சனம் செய்து –
கலக்க நோக்குகையாவது -ஓர் அவயவத்தில் உற்று நிற்கை அன்றிக்கே திருமேனியை எங்கும் ஒக்க பார்க்கை –
கீழ் -பெண்டிர் வாழ்வார் -என்று
பக்வைகளாய் பர்த்ர் பரதந்த்ரைதகளாய்-புத்திர சாபேஷைகளானவர்களை சொல்லிற்று –
இங்கு வண்டுலாம் பூம் குழலினார் என்று –
ப்ராப்த யவ்வனைகளாய்-போக சாபேஷைகளானவர்களை சொல்லுகிறது –
உன் வாக் அமிர்தம் புசிக்க வேண்டி -உன்னை எடுத்து கொண்டு போவதாக வந்து நின்றார்கள்-
கோவிந்தா நீ முலை யுணாயே –
நீ கோவிந்தன் ஆகையாலே அவர்களோடு போகவும் வேணும்
போம் போது- யுண்டு போகவும் வேணும் காண்-என்று பிரார்த்திக்கிறார் –
கோவிந்தா -சர்வ சுலபனாணவனே -உன் ஸுவ்லப்யத்துக்கு இது சேராது -நீ முலை உணாயே –
————————————————–
இருமலை போல் எதிர்ந்த மள்ளர் இருவர் அங்கம் எரி செய்தாய் உன்
திரு மலிந்து திகழ் மார்பு தேக்க வந்து என் அல்குல் ஏறி
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே -2 2-8 – –
இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அரங்கம் எரி செய்தாய்-
ஷீராப்தியில் வந்து நலிவதாகக் கோலி
இரண்டு பெரிய மலை போலே கிளர்ந்து வந்த
மது கைடபர்கள் என்கிற இரண்டு மல்லரை
திரு வநந்த ஆழ்வானாலே உரு மாயும் படி எரித்துப் பொகட்டாய்-என்னுதல்-
கம்சனுடைய மல்லர் உன்னைக் கண்ட பய அக்னியாலே எரித்து விழும்படி செய்தாய் -என்னுதல் –
வடிவின் பெருமையாலும் -திண்மையாலும் இரண்டு மலை போலே வந்து
அறப் பொருவதாக எதிர்த்த சாணூர முஷ்டிகர் ஆகிற இரண்டு மல்லருடைய சரீரம் ஆனது
பய அக்னியால் தக்தமாம் விழும் படி பண்ணினவனே-
உன் திரு மலிந்து திகழ் மார்வு தேக்க –
திரு மலிந்து தேர்க்கும் உன் மார்வு திகழ –
மலிகை யாவது -க்ராம நிர்வாஹன் முதலாக
பஞ்சாசத் கோடி விச்தீர்ண அண்டாதிபதி பர்யந்தமான அளவன்றிக்கே
த்ரிபாத் விபூதியில் யுள்ளாரிலும் வ்யாவ்ருத்தையாய்
சர்வ பூதாநாம் ஈஸ்வரி -என்கிற சர்வாதிக்யத்தை யுடைய
பெரிய பிராட்டியாராலே நிரூபிக்கப் பட்ட உன் மார்பு திகழ –
இத்தால் -அவன் ஸ்ரீ யபதி -என்ன வேணுமே
மலிதல் -கிளப்பும்
தேர்க்கை -நிரூபகம்
திகழ்தல் -ஸ்ரீ யபதி -என்னும் விளக்கம்
உன் இத்யாதி -உன்னுடைய அழகு மிக்கு விளங்கா நின்று உள்ள மார்பானது
மலிதல் -மிகுதி —
திகழ்ச்சி -விளக்கம்
அன்றிக்கே-திரு என்று பிராட்டியை சொல்லுகிறதே -அவள் எழுந்து அருளி இருக்கையாலே
மிகவும் விளங்கா நின்று உள்ள உன்னுடைய மார்வு என்னவுமாம் –
தேக்க -தேங்க -முலைப்பாலாலே நிறையும்படியாக –
அன்றிக்கே
தேக்க -என்ற பாடம் ஆயிற்றாகில் -உன் மார்பில் முலைப்பால் தேங்க -என்கிறது –
என்னல்குல் ஏறி-
என் ஒக்கலையிலே வந்து ஏறி –என் மடியிலே வந்து ஏறி –
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
ஒரு முலையைத் திருப் பவளத்திலே வைத்து-ஒரு முலையை திருக்கையிலே பற்றி நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே-
இரண்டு முலையையும் மாறி மாறி பால் வரவின் மிகுதி திருப் பவளத்தில் அடங்காமையாலே-விட்டு விட்டு என்னுதல்-
உடலை முறுக்கி ஏங்கி ஏங்கி என்னுதல்
அமர விருந்து யுண்ண வேணும் –
மிகுதி -திருப் பவளத்தில் அடங்காமையால் நடு நடுவே இளைத்து இளைத்து -அமர இருந்து –
அமுது செய்ய வேணும் –
———————————–
புழுதி அளைந்த ஆயாசத்தாலே வந்த வேர்ப்பு முகத்திலே காண வந்து
அமுது செய்ய வேணும் -என்கிறார் –
அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல்
செங்கமல முகம் வெயர்ப்ப தீமை செய்தீம் முற்றத்தூடே
அங்கம் எல்லாம் புழுதியாக வளைய வேண்டா அம்ம விம்ம
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே -2 2-9 – –
போதகத்தில்-நிறத்தாலும் -மணத்தாலும் -செவ்வியாலும் -விகாசத்தாலும் அழகியதாய் இருக்கும் –
தாமரைப் பூவின் இடத்தில் -போது -புஷ்பம் -அகம் -இடம்
அணி இத்யாதி -நீர்மையாலும் -ஒளியாலும் -அழகாய் உடைத்தான முத்துக்கள் ஆனவை சிதறினால் போலே
அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல் செங்கமல முகம் வியர்ப்பத் –
அழகிதாக மலர்ந்த தாமரைப் பூவினுள்ளே
செவ்வி மாறாத மது வெள்ளத்தை வண்டுகள் யுண்டு களித்து சிதறின மது திவலை முத்து போலே –
அச் செங்கமலம் போலே இருக்கிற திரு முகத்திலே வேர்ப்பு துளிகள் அரும்ப -என்னுதல்-
அங்கமலச் செங்கமல முகத்தில் ஒளியை யுடைத்தான முத்துக்கள் சிந்தினால் போலே வேர்ப்ப அரும்ப -என்னுதல்
அப்போது -கமலம் -என்று ஜலத்துக்கு பேராம்
அம் -என்று அழகு-
சிவந்து மலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற திரு முகமானது குறு வெயர்ப்பு அரும்பும்படியாக –
தீமை செய்து இம் முற்றத்தூடே அங்கமெல்லாம் புழுதியாக வளைய வேண்டா-
இப்போது முற்றத்தோடு அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா –
இப்போது திரு மேனி எல்லாம் புழுதியாக முற்றத்தின் நடுவே இருந்து அளைய வேண்டா-
இம்முற்றத்துள்ளே நின்று தீம்புகளை செய்து -உடம்பு எல்லாம் புழுதியாக இருந்து புழுதி அளைய வேண்டா –
வம்ம-
ஆச்சர்யம் -என்னுதல்
இவன் சேஷ்டித தர்சனத்தால் வந்த ஆசார்ய உக்தி ஆதல் –
ஸ்வாமி -என்னுதல் –
விம்ம அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை யுணாயே
அங்கு அமரர்க்கு விம்ம அமுதம் அளித்த அமரர் கோவானவனே
விம்மல் -நிறைதல் –
விம்ம-நிரந்தரமாக –
துர்வாச சாபோபஹதராய் அசுரர்கள் கையில் ஈடுபட்டு சாவாமைக்கு மருந்து பெறுகைக்கு
உன்னை வந்து ஆஸ்ரயித்த தேவர்களுக்கு -அத்தசையில் வயிறு நிரம்ப அம்ர்தத்தை இடுகையாலே
அவர்களுக்கு நிர்வாஹனானவனே-
முலை உணாயே –
அப்போது அவர்கள் அபேஷைக்கு அது செய்தால் போலே -இப்போது என்னுடைய
அபேஷைக்காக நீ முலை உன்ன வேணும் என்கை-
————————————————-
ஓட ஓட கிண் கிணிகள் ஒலிக்கும் ஓசை பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன்
ஆடி ஆடி அசைந்து அசைந்து இட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை யாடி
ஓடி ஓடி போய் விடாதே உத்தமா நீ முலை உணாதே -2 2-10 – –
ஓடவோடக் கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணியாலே பாடிப் பாடி –
ஓசைக் கிண்கிணிகள் ஓடவோட ஆட ஒலிக்கும் பாணியாலே
பாணி -த்வனி –
கிண்கிணி ஒலிக்கும் பாணி தாளமாகப் பாடிப் பாடி –
அதனுக்கு ஏற்ற கூத்தை அசைந்து அசைந்து ஆடி –
ஓட ஓட இத்யாதி –
நடக்கும் போது மெத்தென நடக்கை அன்றிக்கே -பால்யத்துக்கு ஈடான செருக்காலே பதறி ஓட ஓட –
பாத சதங்கைகளான கிண் கிணிகள் த்வனிக்கும் -த்வநியாகிற சப்தத்தாலே
பாடிப்பாடி -அதனுக்கு ஏற்ற கூத்தை -அசைந்து அசைந்து இட்டு –
ஆடி ஆடி -அந்த பாட்டுக்கு தகுதியான ந்ர்த்தத்தை
திரு மேனி இடம் வலம் கொண்டு -அசைந்து அசைந்திட்டு நடக்கிற நடையாலே-ஆடி ஆடி –
கூத்தன் கோவலன் -இறே-நடக்கிற நடை எல்லாம் வல்லார் ஆடினால் போலே இறே இருப்பது –
ஆகையால் விரைந்து நடந்து வரும் போது -திருவடிகளில் சதங்கைகளின் உடைய ஓசைகள்
தானே பாட்டாய்-நடக்கிற நடை எல்லாம் ஆட்டமாய் இருக்கும் ஆய்த்து –
அன்றிகே –
கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசை தாளமாய் -வாயாலே பாடிப் பாடி -அதனுக்கு ஏற்ற
கூத்தை அசைந்து அசைந்திட்டு ஆடி ஆடி என்று பொருளாகவுமாம்
வருகின்றாயைப்
வருகிற யுன்னை –
பற்பநாபன் என்று இருந்தேன் –
கீழே பற்பநாபா சப்பாணி -1-7-5-என்றத்தை நினைத்து
பற்ப நாபன் என்று இருந்தேன் -என்கிறார் –
ஜகத் காரண வஸ்துவான மேன்மையை நினைந்து இருந்தேன் –
அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்றும்படி பிள்ளைத்தனத்தால் வந்த நீர்மை மாத்ரம் அன்றிக்கே
அதிமாத்ரமான இந்த லீலா ரசம் எல்லாம் வேணுமோ -வாராய் -என்ன –
வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன் –
இப்படி என்னை நோக்கி வாரா நின்றுள்ள
உன்னை -கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் -என்கிறபடியே வேறு ஒரு ஆபரணம் வேண்டாதே –
திரு நாபி கமலம் தானே ஒரு ஆபரணம் ஆம்படி இருப்பான் ஒருவன் அன்றோ –
இவனுக்கு வேறு ஒரு ஆட்டும் பாட்டும் வேணுமோ –
சதங்கை ஓசையும் நடை அழகும் தானே பாட்டும் ஆட்டுமாய் இருந்தபடி என்-என்று
ஆச்சர்யப்பட்டு இருந்தேன் -என்னுதல்
அழிந்து கிடந்ததை உண்டாக்கும் அவனன்றோ -நம்முடைய சத்தியை தருகைக்காக வருகிறான் என்று
இருந்தேன் -என்னுதல்-
ஆடியாடி யசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தையாடி ஓடியோடிப் போய் விடாதே யுத்தமா நீ முலை யுணாயே –
ஒடப்புகுந்தான் –
தாமும் அடிப்பதாக செல்ல ஓடி ஓடி போகிறதைக் கண்டு
போகாதே கொள்ளாய்-நீ உத்தமன் அன்றோ -முலை யுண்ண வாராய் -என்கிறார் –
புருஷோத்தமத்வம் ஆவது -ஆஸ்ரித பாரதந்த்ர்யம் போலே காணும்
இத்தால் அப்ராப்ய மனசா சஹ -என்று வேதங்களுக்கு எட்டாமல் போனால் போலே
பரம வைதிக அக்ரேசரராய் இருக்கிற இவர்க்கும் எட்டாமல் போகலாமோ என்று தோற்றுகிறது-
ஓடி ஓடி இத்யாதி -இவள் சொன்னதின் கருத்து அறியாதே -இவள் நம்முடைய நீர்மையை சொல்லாமல் –
ஸுவ்ந்தர்ய பிரகாசமான மேன்மையை சொல்லுவதே -என்று -மீண்டு ஓடிப் போக தொடங்குகையாலே-
இப்படி ஆடி ஆடி கொண்டு என் கைக்கு எட்டாதபடி -ஓடி ஓடி போய் விடாதே -நீ புருஷோத்தமன் ஆகையாலே –
ஆஸ்ரித பரதந்த்ரனான பின்பு -என் வசத்திலே வந்து -என் முலையை உண்ண வேணும் -என்கிறாள் –
ஓசை கிண்கிணிகள் ஓடவோட ஆடியாடி ஒலிக்கும் பாணியாலே
பாடிப் பாடி அதனுக்கு ஏற்ற கூத்தை யசைந்து யசைந்திட்டு
ஆடியாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன்
ஓடியோடிப் போய் விடாதே யுத்தமா நீ முலை யுணாயே -என்று அந்வயம் –
———————————————————————–
நிகமத்தில் -இத் திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –
வாரணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம்
நீரணிந்த குவளை வாச நிகழ் நாறும் வில்லி புத்தூர்
பாரணிந்த தொல் புகழான் பட்டார் பிரான் பாடல் வல்லார்
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்றசிந்தை பெறுவார் தாமே -2 2-11 – –
வாரணிந்த கொங்கை யாச்சி –
ராஜாக்களுக்கு அபிமதமான த்ரவ்யங்களை
பரிசாரகர் ஆனவர்கள் கட்டி இலச்சினை இட்டு கொண்டு திரிவாரைப் போலே இறே
கிருஷ்ணனுக்கு அபிமதமான முலைகள் கச்சிட்டு சேமித்து வைத்து -என்னும் இடம் தோன்ற
வாரணிந்த கொங்கை யாச்சி -என்கிறார்
புத்ரவத் ஸ்நேஹம் நடக்கும் போது ராஜவத் உபசாரமும் வேணும் இறே
வார் -கச்சு –
ராஜாக்களுக்கு அபிமதமான த்ரவ்யங்களை பரிசாரகரானவர்கள் கட்டி
இலச்சினை இட்டுக் கொண்டு திரியுமா போலே -ஸ்ரீ கிருஷ்ணனுக்கு போக்யமான முலைகள் பிறர்
கண் படாதபடி கச்சாலே சேமித்துக் கொண்டு திரிகையாலே -வாராலே அலங்க்ர்தமான முலையை
உடையவளான ஆய்ச்சி என்று ஸ்லாகித்துக் கொண்டு அருளிச் செய்கிறார் –
மாதவா யுண் என்ற மாற்றம் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாராலே அவாப்த சமஸ்த காமன் ஆனவனை இறே
முலை யுண்ண வா -என்று ஆச்சி அழைத்ததும் –அவள் அளித்த பிரகாரங்களை-
மாதவா உண் என்ற மாற்றம் -ஸ்ரீ யபதி யாகையாலே -அவாப்த சமஸ்த காமனான அவனை –
அவதாரத்தின் மெய்ப்பாட்டுக்கு ஈடாக முலை உண் என்ற சப்தத்தை –
நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லி புத்தூர் –
நீருக்கு அலங்காரமாக மலர்ந்த செங்கழு நீரில் மிக்க பரிமளம் ஒருபடிப்பட தோன்றுகிற
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹகராய்-
பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார் –
பூமியில் யுண்டான ராஜாக்களுக்கு எல்லாம் பிரதானனான
ஸ்ரீ வல்லபன் -செல்வ நம்பி -முதலானோர் கொண்டாடும் படியுமாய்
அநாதி சித்தமான மங்களா சாசன பிரசித்தியையும் யுடையவர் –
பட்டர் பிரான் –
சத்ய வாதிகளான ப்ராஹ்மன உத்தமர்க்கு உபகாரகர் ஆனவர்
பாடல் வல்லார் –
இவருடைய பாவ பந்தம் இல்லை யாகிலும்
இவர் அருளிச் செய்த சப்த மாதரத்தையே பாட வல்லார்-
பூமியில் ராஜாக்களுக்கு பிரதானனான பாண்டியனும் –
ஞாதாக்களில் பிரதானரான செல்வ நம்பி தொடக்கமானவர்கள் அன்றிக்கே
பூமி எங்கும் கொண்டாடும்படி வ்யாப்தமாய் -வந்தேறி அன்றிக்கே -ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமான
புகழை உடையராய் ப்ராஹ்மன உத்தமரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளி செய்த பாடலை அப்யசிக்க வல்லவர்கள் –
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே —
பாட வல்லார் தாமே சென்ற சிந்தை பெறுவார்
சீர் –
ஆஸ்ரித பாரதந்த்ர்யம்
செங்கண் –
உபய விபூதி நாதத்வத்தால் வந்த ஐஸ்வர்யம் -ஆதல்
பெருமை யாதல்
வ்யாமோஹம் ஆதல் –
ஆத்ம குணங்களாலே அலங்க்ர்தனாய்-அவயவ சோபைக்கு பிரகாசகமான சிவந்த திருக் கண்களை உடையனாய் –
இவை இரண்டையும் ஆஸ்ரிதர் அனுபவிக்கும்படி அவர்கள் பக்கல் வ்யாமோகத்தை உடையவனாய் -இருக்குமவன் விஷயத்தில் –
அன்றிக்கே –
சீர் இத்யாதிக்கு -ஆஸ்ரித பாரதந்த்ரம் ஆகிற குணத்தாலே அலங்க்ர்தனாய் -இந்நீர்மைக்கும் மேன்மைக்கும்
ப்ரகாசகமான சிவந்த திருக் கண்களை உடையவனாய் -சர்வ ஸ்மாத்பரனாய் -இருக்குமவன்
விஷயத்திலே என்று பொருளாகவுமாம்
சென்ற இத்யாதி -பாடல் வல்லார் தாம் செங்கண் மால் பக்கலிலே ஒருபடி படச் சென்ற மனசை உடையவர் ஆவர்
ஜல சம்ருதி மாறாத செங்கழு நீரைச் சொல்லுகையாலே
மங்களாசாசன குணத்திலே ஒருப்பட்ட ஸூமநாக்களையும்-
நிகழ் நாறும் -என்கையாலே -அவர்களுடைய பிரசித்தியையும் சொல்லுகிறது –
————————————————————————————-
அவதாரிகை –3-1-
திரு ஆய்ப்பாடியிலே ப்ராப்த யவனைகளாய் லீலா பரைகளாய் திரிகிற –
பெண்கள் திறத்திலே அவன் -துச்சஹமான தீம்புகளை செய்து -தணலை நலிகிற பிரகாரத்தை –
தத் பாவ யுக்தராய் கொண்டு –
தாமும் அவர்களைப் போலே பேசி –
அவனுடைய அந்த லீலா அனுபவ ரசத்தை அனுபவித்தாராய் நின்றார் கீழ் –2-10-
மாதர் ஸ்நேஹத்தாலே பலகாலும் அவனை அம்மம் உண்ண அழைத்தும் –
அம்மமூட்டியும் போரும் ஸ்ரீ யசோதை பிராட்டி –
அவனுடைய பருவத்தின் இளமையையும் –
அதுக்கு அநுரூபம் அல்லாதபடியான – அதிமாநுஷ சேஷ்டிதங்களையும் கண்டு –
அவனை -தன்னுடைய பிள்ளை -என்று நினைந்து இருக்கை தவிர்ந்து –
அநியாம்யனாய் அப்ரதிஹத லீலா ரச பரனான சர்வேஸ்வரன் -என்று அனுசநதித்து –
அவனைக் குறித்து அவை தன்னைச் சொல்லி –
உனக்கு அம்மம் தர அஞ்சுவன் -என்று பல காலும் பேசின பாசுரத்தை –
தத் அவஸ்தா பன்னராய் கொண்டு –
தாமும் அப்படி பேசி –
அந்த ரசத்தை அனுபவிக்கிறார்
இத் திருமொழியில் –
——————————————————-
தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடை இட்டு வருவான்
பொன் ஏய் நெய்யோடு பால் அமுதுண்டொரு புள்ளுவன் பொய்யே தவழும்
மின்னேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-1 – –
அன்னே -அம்மே என்று அச்சத்தால் சொல்லுகிற வார்த்தை
தன்னேர் இத்யாதி –
கிருஷ்ணன் திரு ஆய்ப்பாடியிலே வந்து அவதரித்த போது அவனோடு ஒக்க ஆயிரம் பிள்ளைகள்
சேரப் பிறந்தார்கள் -என்று சொல்லுவதொரு பிரசித்தி உண்டு இறே
பிறப்பாலும் வளர்ப்பாலும் வயஸ்சாலும் வளர்த்தியாலும் -அந்யோந்யம் உண்டான ஸ்நேகத்தாலும் –
தன்னோடு ஒக்க சொல்லலாம்படி இருப்பார் ஆயிரம் பிள்ளைகளோடு ஆய்த்து தளர் நடை இட்டு வருவது –
பால்யாத் பிரபர்த்தி சுச்நிக்த – என்று பால்யம் தொடங்கி ஸ்ரீ பெருமாளை
ஒழிய தரிக்க மாட்டாத ஸ்ரீ இளைய பெருமாளைப் போலே -இவர்களும் பால்யமே தொடங்கி
இவனை ஒழிய தரிக்க மாட்டாத சிநேகத்தை உடையராய் -எப்போதும் ஒக்க கூடித் திரிகையாலே
இவர்களோடு கூடியே தளர் நடை இட்டு வருமவனே -என்று சம்புத்தி
பொன் ஏய் நெய்யோடு பால் அமுதுண்டு –
செவ்வி குன்றாமல் உருக்கி துஞ்சினது ஆகையாலே பொன்னோடு ஒத்த நிறத்தை உடைத்தான
நெய்யோடு -ரச்ச்யமான பால் அமுதை உண்டு –
ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்
புள்ளுவம் ஆவது -மெய் போல் இருக்கும் பொய் —
உண்டு இருக்க செய்தே -உண்டிலேன் -என்கையாலே -அசத்யவாதி -என்று தோற்றும் இறே –
ஒரு புள்ளுவன் -என்றது -களவுக்கு அத்வதீயன் -என்றபடி
பொய்யே தவழும் –
தளர் நடை இட்டுத் திரிகிறவன் -அதுக்கு ஷமர் அல்லாதாரைப் போலே –
தவழுகிறதும் -க்ரித்ரிமம் என்று தோற்றும் இறே -ஆகை இறே பொய்யே தவழும் -என்ற இது –
இதுவும் பொய்யே தவழும் ஒரு புள்ளுவனே-என்று சம்புத்தி
மின்னேர் இத்யாதி –
பெற்ற தாய் வருகையாலே மின்னொடு ஒத்த நுண்ணிய இடையும் வஞ்சனத்தையும்
உடையளான பேய்ச்சி யானவள் முடியும் படி -அவள் முலையிலே திருப் பவளத்தை வைத்துண்ட உபகாரகன் ஆனவனே
இவ்விடத்தில் உபகாரம் ஆவது –
உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரான தன்னை முடிக்க வந்தவளை நிரசித்து -தன்னை நோக்கி தந்த இது இறே
அன்னே
அதாவது -அம்மே -என்று அச்சத்தால் சொல்லுகிற வார்த்தை
உன்னை அறிந்து கொண்டேன் –
முன்பு எல்லாம் என் பிள்ளையாகவும் -நான் தருகிற அம்மம் முதலானவை
உனக்கு தாரகாதிகளாகவும் நினைத்து இருந்தேன் -உன் படிகள் அதி மானுஷ்யங்கள் ஆகையால்
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் -என்கிறபடியே இவன் நம்மோடு சஜாதீயனும் அல்லன்
நாம் கொடுக்கிறவை இவனுக்கு தாரகாதிகளும் அல்ல என்று நன்று அறிந்து கொண்டேன் –
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
இப்படி இருக்கிற உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
தவழுகை பொய் என்றவோபாதி அம்மம் என்கிற இவன் சொலவும் பொய் என்று தோற்றா நிற்கச் செய்தேயும்
அவன் சொலவை அனுசரித்து சொல்கிறாள்
—————————————
பொன் போல் மஞ்சனமாட்டி யமுதூட்டிப் போனேன் வரும் அளவு இப்பால்
வல் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கு இருந்து
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த
அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-2 – –
பொன் இத்யாதி
திருமேனி அழகு விளங்கும்படியாக திரு மஞ்சனம் செய்து –
என் இளம் கொங்கை அமுதூட்டி-என்கிறபடியே அமுது செய்யப் பண்ணி –
யமுனை நீராடப் போனேன் -என்கிறபடியே
யமுனை யாகிற ஆற்றிலே குளிப்பதாக போன நான் வருவதற்கு முன்னே –
வல் பாரச் சகடம் இறச் சாடி –
வலியதாய் கனவிதாய் இருக்கிற சகடமானது கட்டுக் குலைந்து முறியும் படியாக –
முலை வரவு தாழ்த்துச் சீறி நிமிர்த்த திருவடிகளாலே உதைத்து –
வடக்கில் அகம் புக்கு இருந்து -இவ்வகத்துக்கு வட அருகில் அகத்திலே புக்கு இருந்து –
வல் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கு இருந்து
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை –
மின் போலே நுண்ணியதான இடையை உடையளாய்-நவ யவ்னையாய் இருப்பாள் ஒருத்தியை
வேற்று உருவம் செய்து வைத்த –
சம்போக சிஹ்னங்களாலே விகர்த வேஷையாம்படி பண்ணி வைத்த
அன்பா
கண்டது ஒன்றிலே மேல் விழும்படியான சிநேகத்தை உடையவனே
இத்தால்
தீம்பன் -என்ற படி –
உன்னை அறிந்து கொண்டேன் –
இவன் நம்மோடு சஜாதீயன் அல்லன் -வ்யாவர்த்தன் என்று உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன் –
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –
ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
———————————————–
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய் மாய மருதான அசுரரை பொன்று வித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 3-1-3- –
கும்மாய இத்யாதி –
குழைய சமைத்து வைத்த -பருப்போடு வெண்ணெயையும் சேர விழுங்கி
குடத்தயிர் இத்யாதி –
குடத்திலே நிறைந்த தயிரை-அத்தோடு சாய்த்து -அமுது செய்தது –
பொய் இத்யாதி –
தங்கள் வேஷம் அது அன்றிகே இருக்க செய்தே -பொய்யே ஆஸ்ரயமான மருதுகளாய் நின்ற
அசுரர்களை மறிய விழுந்து முறியும்படி பண்ணி
இன்று நீ வந்தாய் –
இப்போது ஒன்றும் செய்யாதவரைப் போலே நீ வந்தாய்
இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ –
இந்த ஆச்சர்யங்களை செய்ய வல்லவனாய்-பிள்ளைத் தனத்தால் பூர்ணம் ஆனவனே
உன் என் மகனே என்பர் நின்றார் –
இப்படி இருக்கிற உன்னை உன் வாசி அறியாத நடு நின்றவர்கள்-என்னுடைய மகன் -என்று சொல்லுவார்கள் –
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் –
நான் அங்கன் இன்றிக்கே -என் மகன் அன்று -என்றும் –
எல்லார்க்கும் ஸ்வாமி -என்றும் -உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன்
உனக்கு இத்யாதி
ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன்
——————————————————–
மையார் கண் மட வாய்ச்சியர் மக்களை மையன்மை செய்தவர் பின் போய்க்
கொய்யார் பூம் துகில் பற்றித் தனி நின்று குற்றம் பல பல செய்தாய்
பொய்யா உன்னை புறம் பல பேசுவ புத்தகத்தக்குள் கேட்டேன்
ஐயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-4 – –
கொய்யார் பூம் துகிலாவது -புடைவைகளின் கொய்ச்சகம்
மையார் இத்யாதி –
அஞ்சனத்தாலே அலங்க்ர்தமான கண்களையும் –
ஆத்ம குணங்களில் பிரதானமான மடப்பத்தையும் -குடிப் பிறப்பையும் உடையரான பெண்களை –
மையன்மை செய்து –
உன் பக்கலிலே ஸ்நேகிதிகளாய் -தாய்மார் முதலானாருக்கு வசவர்த்திநிகள் ஆகாதபடி
உன்னுடைய ஸௌந்தர்யாதிகளால் பிச்சேற்றி –
அவர் பின் போய் –
அவர்களுடையே பின்னே போய்
கொய்யார் பூம் துகில் பற்றி –
கொய்தல் ஆர்ந்து இருந்து உள்ள அழகிய பரியட்டங்களை பிடித்து –
இத்தால் –
அவர்கள் பரியட்டங்களின் கொய்சகங்களைப் பிடித்து கொண்டு -அவர்கள் பின்னே போய் -என்கை
தனி நின்று குற்றம் பலபல செய்தாய் –
ஏகாந்த ஸ்தலத்திலே நின்று -அவஸ்யமான வியாபாரங்களை அபரிகங்யமாம்படி செய்தாய்
ஆவது என் -நான் ஒரு குற்றமும் செய்திலன் -நீ மாற்றுக் கண்டாயோ என்ன –
பொய்யா -இத்யாதி –
க்ரித்ரிமனே -உன்னைப் பொல்லாங்கு பலவற்றையும் பிறர் சொல்லும் அவைகள்
ஒரு புஸ்தகம் நிறைய எழுத தக்கவை கேட்டேன்
அவர்கள் சொல்லுவதும் நீ கேட்டதுமேயோ சத்யம் -நான் சொன்னதன்றோ சத்யம் -என்ன
ஐயா இது என்ன தெளிவு தான் என்று கொண்டாடுகிறாள்
அன்றிக்கே
ஐயா என்று க்ரித்மர்க்கு எல்லாம் ஸ்வாமி யானவனே என்கிறாள் ஆதல்
உன்னை அறிந்து கொண்டேன்
உன்னை அதி லோகமான வுக்தி சேஷ்டிதங்களை உடையவன் என்று அறிந்து கொண்டேன் –
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
———————————————–
முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெய் யினோடு தயிரும் விழுங்கிக்
கப்பால் ஆயர்கள் காவில் கொணர்ந்த காலத்தோடு சாய்த்துப் பருகி
மெய்ப்பாலுண்டு அழு பிள்ளைகள் போல நீ விம்மி விம்மி அழுகின்ற
அப்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – 3-1 5- –
கப்பால்-தோளாலே
முப்போதும் இத்யாதி –
எப்போதும் கறப்பன கடைவனவாய் செல்லும் போலே காணும் திரு ஆய்ப்பாடி –
சிறு காலையும் உச்சியும் அந்தியும் ஆகிற மூன்று பொழுதும் கடைந்து திரண்ட
வெண்ணெய் யோடே-அக்காலங்கள் எல்லாவற்றிலும் உண்டான செறிய தோய்த்த தயிரையும் விழுங்கி –
கப்பால் இத்யாதி –
தோளாலே இடையர் காவில் கொண்டு வந்த பால்களை -கொண்டு வந்த பாத்ரத்தோடே சாய்த்துப் பருகி
மெய்ப்பால் இத்யாதி –
உடம்பில் முலைப்பால் தாரகமாக உண்டு- அது பெறாத போது அழும் பிள்ளைகளைப் போலே
என் இளம் கொங்கை அமுது உண்கைக்கு நீ பொருமிப் பொருமி அழுகின்ற
அப்பா உன்னை அறிந்து கொண்டேன் –
இந்த அதி மானுஷ சேஷ்டிதத்தை உடைய பெரியோனே -உன்னை
மனுஷ்ய ஜாதி அல்லன் -என்று அறிந்து கொண்டேன்
உனக்கு இத்யாதி
ஆன பின்பு உனக்கு அஞ்சம் தர அஞ்சுவன்
——————————————-
கரும்பார் நீள் வயல் காய் கதிர் செந் நெலைக் கன்று ஆநிரை மண்டி தின்ன
விரும்பா கன்று ஓன்று கொண்டு விளம் கனி வீழ எறிந்த பிரானே
கரும்பார் மென் குழல் கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும்
அரம்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – 3-1 6- –
கரும்பு இத்யாதி –
பரந்த வயலிலே கரும்பு போலே எழுந்து பசும் காயான கதிரை உடைய செந் நெல்லை
கற்றாநிரை –
கன்றுகளோடு கூடின பசு நிரையானது –
மண்டித்தின்ன –
விரும்பி மேல் விழுந்து -தின்னா நிற்கச் செய்தே
விரும்பா கன்று ஓன்று கொண்டு –
தானும் தின்பாரைப் போலே பாவியா நிற்க செய்தே -தின்கையில் விருப்பம் இல்லாததொரு கன்றைக் கொண்டு –
விளம் கனி வீழ எறிந்த பிரானே –
ஆகர்ஷமாம்படி பழுத்து நின்ற விளாவினுடைய பழங்கள் சிதறி விழும்படி எறிந்த உபகாரகனே –
ஓர் அசுரன் கன்றாய் வந்து நிற்க -ஓர் அசுரன் விளைவாய் வந்து நிற்க –
இத்தை அறிந்து -ஒன்றை இட்டு ஒன்றை எறிந்து -இரண்டையும் நிரசித்து பொகட்ட -உபகாரத்தை சொல்லுகிறது –
கரும்பார் இத்யாதி –
எப்போதும் ஒக்க பூ மாறாமையாலே வண்டுகளானவை நெருங்கப் படிந்து –
கிடக்கும்படி இருப்பதாய் -மிருதுவாய் இருந்து உள்ள குழலை உடையளாய்-
நவ யவ்னையாய் இருப்பாள் ஒருத்திக்கு
சூழ் வலை வைத்து திரியும் அரம்பா –
வாசுதேவன் வலை -என்றும் –
தாமரைத் தடம் கண் விழிகளினகவலை -என்றும் –
காரத் தண் கமலக் கண் என்னும் நெடும் கயிறு –என்றும் சொல்லுகிறபடியே
தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளும் திருக் கண்கள் ஆகிற வலையை
எப்போதும் ஒக்க அவள் விஷயத்தில் வைத்து -அகப்படும் அளவும் –
அந்ய பரரைப் போலே சஞ்சரிக்கிற தீம்பன் ஆனவன்
உன்னை அறிந்து கொண்டேன் –
ஏவம் பூதனானவனை நன்றாக அறிந்து கொண்டேன்
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
———————————————-
மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய் வைத்து அவ்வாயர் தம் பாடி
சுருட்டார் மென் குழல் கன்னியர் வந்து உன்னை சுற்றும் தொழ நின்ற சோதி
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லான் மற்று இங்கு
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-7 – –
மருட்டார் இத்யாதி –
கேட்டவர்களை மற்று ஓன்று அறியாதபடி மருளப் பண்ணுதலால் மிக்கு இருப்பதாய்
அவர்கள் செவியைப் பற்றி வாங்கும்படியாய் மிருதுவான த்வனியை உடைத்தான வேய்ங்குழலைக் கொண்டு –
போகத்துக்கு ஏகாந்தமான பொழிலிலே போய்ப் புக்கு திருப் பவளத்திலே வைத்தூதி
அவ்வாயர் இத்யாதி –
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் -என்று பெண்களை காத்துக் கொண்டு திரியும் -அவ்விடையருடைய ஊரில்
சுருட்டார் இத்யாதி –
சுருண்டு பூவாலே அலங்க்ருதமாய் -மிருதுவாய் இருந்துள்ள குழலை உடைய பெண்கள்
ஆனவர்கள் குழலோசையாலே ப்ரேரிதராய் வந்து உன்னை சூழ நின்று தொழ –
அத்தால் வந்த தேஜசை உடையனாய் நின்றவனே –
பொருள் தாயம் இத்யாதி –
என்னுடைய நாதனானவனே-இப்படி தீம்பனான உன்னைப் பிள்ளையாகப் பெற்ற குற்றம் ஒழிய
இவ் ஊரில் உள்ளார் என்னோடு காறுகாறு என்ன -எறிவார்களோடு ஓரர்த்த தாயம் உடையேன் அல்லேன் –
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன்
இப்படி தீம்பனானவனே-உன்னை நன்றாக அறிந்து கொண்டேன் –
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
————————————
வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து
தோளால் இட்டவரோடு திளைத்து நீ சொல்லப்படாதவன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வு இல்லை நந்தன்
காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-8 –
வாளா இத்யாதி
நீ தீம்பு செய்யாது இருக்கிலும் -உன் மினுக்கம் பொறாதவர்கள் வெறுமனே ஆகிலும்
உன்னை காண வேண்டார்கள் -அதுக்கு மேலே –
பிறர் மக்களை மையன்மை செய்து –
பிறருடைய பெண்களை உன்னுடைய இங்கிதாதிகளாலே அறிவு கேட்டை விளைவித்து
தோளால் இட்டவரோடு திளைத்து
தோளாலே அணைத்திட்டு அவர்களோடே நின்று விளையாடி
நீ சொல்லப்படாதன செய்தாய் –
வாக்கால் சொல்ல ஒண்ணாத வற்றை நீ செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி
இடைக்குலத்தில் உள்ளவர்கள் இப் பழி கேட்க பொறார்கள்
கெட்டேன் வாழ்வு இல்லை –
கெட்டேன் இவ் ஊரில் எனக்கு ஒரு வாழ்வு இல்லை
அதாவது இவ் ஊரில் வர்த்திக்கப் போகாது என்கை
கெட்டேன் என்றது -விஷாதி அதிசயத்தாலே கை நெரித்து சொல்லுகிற வார்த்தை
நந்தன் காளாய்
பசும் புல்லுசாவம் மிதியாதே ஸ்ரீ நந்தகோபர் பிள்ளையான நீ இப்படி செய்யக் கடவையோ
அன்றிக்கே –
அவர் உன்னை நியமித்து வளர்க்காமை இறே நீ இப்படி தீம்பனாய் ஆய்த்து என்னுதல்-
உன்னை அறிந்து கொண்டேன் –
பருவம் இதுவே இருக்க -செய்கிற செயல்கள் இது வாகையாலே உன்னை
நாட்டார் படி இல்லை -என்று அறிந்து கொண்டேன் –
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன்
——————————————————-
தாய்மார் மோர் விற்கப் போவார் தகப்பன்மார் கற்று ஆநிரை பின்பு போவார்
நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை நேர்படவே கொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பவனே செய்து கண்டார் கழறத் திரியும்
ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-9 – –
தாய்மார் இத்யாதி –
பெண்களை அகம் பார்க்க வைத்து -தாய்மாரானவர்கள் மோர் விற்க போகா நிற்ப்பார்கள் –
இடையர்க்கு ஐஸ்வர்யம் மிக உண்டானாலும் இடைச்சிகள் மோர் விற்று ஜீவிக்கும் அது இறே
தங்களுக்கு தகுதியான ஜீவனமாக நினைத்து இருப்பது -மோர் தான் விற்கை அரிதாய் இருக்கும் இறே
திரு ஆய்ப்பாடியில் பஞ்ச லஷம் குடியிலும் கறப்பன கடைவன குறைவு அற்று இருக்கையாலே
அசலூர்களிலே போய் விற்க வேண்டுகையாலே -இக்கால விளம்பம் இவனுக்கு அவகாச ஹேதுவாய் இறே இருப்பது
தமப்பன்மார் இத்யாதி –
தாய்மார் போனால் தமப்பன்மார் தான் இருந்தாலும் இவனுக்கு நினைத்தபடி செய்யப் போகாதது இறே –
அதுவும் இல்லாதபடி தமப்பன்மார் ஆனவர்கள் கற்றா ஆநிரையின் பின்னே போகா நிற்ப்பார்கள் –
அவை மேச்சல் உள்ள இடங்களிலே தூரப் போகையும்-
இவர்கள் வரத்தை நியமியாமல் அவற்றின் பின்னே போகையும் –
அவை மேய்ந்து வயிறு நிறைந்தால் அல்லது மீளாது ஒழிகையும்-
அவை மீண்டால் அவற்றின் பின்னே இவர்கள் வருகையுமாம் இறே இருப்பது –
ஆகையால் இந்த கால விளம்பமும் இவனுக்கு அவகாசம் இறே
நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை நேர் படவே கொண்டு போதி –
நீ திரு ஆய்ப்பாடியிலே யுவதிகளான பெண்களை உன் நினைவுக்கு வாய்க்கும்படி கொண்டு போதி
அதாவது –
உனக்கு அபிமதமான ஸ்தலங்களிலே கொண்டு போகா நின்றாய் -என்றபடி –
தாய்மார் தகப்பன்மார் போகையாலும்-கால விளம்பம் உண்டாகையாலும் –
அவ்வகம் தானே அபிமத ஸ்தலமாய் இருக்க செய்தேயும் –
ப்ராமாதிகமாக ஆரேனும் வரக் கூடும் -என்று இறே ஸ்த்லாந்தரம் தேடித் போக வேண்டுகிறது –
காய்வார்க்கு என்றும் உகப்பவனே செய்து –
உன் குணத்திலும் தோஷத்தை ஆவிஷ்கரிக்கும் அவர்களாய்-உன் பக்கல் த்வேஷ பரராயே போரும்
சிசுபாலாதிகளுக்கு -சொல்லி பரிபவிக்கைக்கு – இடம் பெற்றோம் -என்று சர்வ காலமும்
உகக்கும்படியானவற்றை செய்து
கண்டார் கழறத் திரியும் மாயா –
காய்வார் அன்றிக்கே -உனக்கு நல்லவர்களாய் நீ செய்கிற வியாபாரங்களை கண்டவர்கள்
நீ செய்கிற தீம்பு பொறாமல் நியமிக்கும்படி திரியா நிற்கிற ஆயனே –
குல மரியாதை தன்னையும் பார்கிறிலையே என்கை –
உன்னை அறிந்து கொண்டேன் –
நீ இப்படி திரிந்தாய் ஆகிலும் உன்னுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களை கண்ட பின்பு –
உன்னை மனுஷ்ய சஜாதீயன் அல்லன் -என்று அறிந்து கொண்டேன்
உனக்கு இத்யாதி –
ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
———————————————
தொத்தார் பூம் குழல் கன்னி ஒருத்தியை சோலைத் தடம் கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூ வேழு சென்ற பின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3-1-10 –
தொத்தார் இத்யாதி
கொத்தாய் சேர்ந்து உள்ள பூக்களாலே அலங்க்ர்தமான குழலை உடையளாய் –
திரு ஆய்ப்பாடியில் உள்ள பெண்களில் காட்டிலும் -இன்னாள்-என்று குறிக்க படுவாள் ஒருத்தியை –
சோலைத் தடம் கொண்டு புக்கு –
இடம் உடைத்தான சோலையிலே கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து –
முத்து வடத்தாலே அலங்க்ர்தமான முலைகளிலே சம்ச்லேஷித்து
இரா நாழிகை மூ வேழு சென்ற பின் வந்தாய் –
ராத்திரி மூன்று யாமம் அற்ற பின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை –
உன் செயல் இதுவாகையாலே வேண்டுவார்க்கு வேண்டுவது சொல்லுவர் உன்னை –
உனக்கு தோஷம் சொல்லுவார்க்கு எல்லாம் இடம் ஆம்படி செய்யா நின்றாய் -என்கை
உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன் –
இப்படி இருக்கிற உன்னை கோபிக்க என்றால் நான் ஏக தேசமும் ஷமை ஆகிறேன் அல்லேன் –
பிள்ளைகள் தீம்பு கண்டால் தாய்மார் சிஷியார்களோ –
உன்னுடைய முகம் கன்றும் -என்னும் அத்தாலே அது என்னால் செய்யப் போகிறது இல்லை
அத்தா
என்னுடைய நாதனை
உன்னை அறிந்து கொண்டேன் –
உன்னுடைய அதிமானுஷம் கண்ட பின்னை -அநியாம்யன் -என்று அறிந்து கொண்டேன் –
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
——————————————————-
நிகமத்தில் -இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –
காரார் மேனித் நிறத்து எம்பிரானை கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி
ஆரா இன்னமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம்
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல்
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே -3-1 11- –
காரார் இத்யாதி –
மேகத்தோடு சேர்ந்த திருமேனியின் நிறத்தை உடையனாய் -எனக்கு உபகாரகன் ஆனவனை –
கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி-
நறு நாற்றம் கமழா நின்று உள்ள அழகிய குழலை உடைய ளான யசோதை பிராட்டி
ஆரா இத்யாதி –
ஒருகாலும் தெகுட்டாததாய்-இனிதாய் இருந்துள்ள -என் இளம் கொங்கை அமுது
உண்ண முன்பும் தந்து மேலும் தருவாளாய் இருந்த நான் உன்னை அறிந்து கொண்ட பின்பு
உனக்கு அம்மம் தாரேன் அஞ்சுவன் -என்று சொன்ன சொலவை
பாரார் இத்யாதி –
விசேஷஞ்சரோடு அவிசேஷஞ்சரோடு வாசி அற-இருந்தார் இருந்த இடம் எங்கும் –
கொண்டாடுகையாலே பூமி எங்கும் நிறைந்து இருப்பதாய் -ஸ்வாபாவிகமான புகழை உடையராய் –
ஸ்ரீ திருப் புதுவைக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த பாடலான
ஏரார் இத்யாதி –
இயல் அழகால் மிக்கு -அதுக்கு மேலே இனிய இசையோடு கூடி இருந்து -உள்ள சந்தர்பத்தை சாபிப்ராயமாக வல்லவர்கள்
இருடீகேசன் அடியாரே –
இந்திரியங்களை பட்டி புகாமல் ஸ்வரூப அநுரூபமாக நடக்கும்படி நியமிக்கும் அவனுக்கு
நித்ய கிங்கராய் பெறுவர்-
————————————————————–
சந்த மலர்-10-4- -பிரவேசம் –
ஸ்ரீ ராமாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு இறே-ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –
த்வேஷத்துக்கு எல்லையானார்க்கும் இசைய வேண்டும்படி இருக்கிற
ஸ்ரீ ராமாவதாரத்தில் விஜயத்துக்கு தோற்றவர்கள் பாசுரத்தாலே
அனுபவித்தார் கீழ் –
ராகத்துக்கு எல்லையான யசோதைப் பிராட்டி பாசுரத்தாலே
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை
அனுபவிக்கிறார் இதில் –
சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே
வந்து என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப்பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-1-
சந்த மலர்க் குழல் தாழத் தான்-
செவ்விப் பூக்களாலே அலங்கரித்து வைப்பார்கள் இறே திருக் குழல்களை –
சந்தம் -என்று அழகாயிற்று –
வெறும் புறத்திலே ஆகர்ஷகமான குழல் –
தாழ –
பூவாலே அலங்க்ருதமாய்
பேணாமையாலே அலைந்து வர-
உகந்தோடித் –
ஆதரித்து அபி நிவேசத்தாலே ஓடி –
தனியே வந்து –
பலதேவன் என்னும் தன தம்பியோடத் பின் கூடச் செல்வான் -பெரியாழ்வார் திரு மொழி -1-8-5-
என்கிறபடியே இருவரும் கூட வாயிற்று முலை உண்ண வருவது –
கூடவரில் இருவருக்கும் ஒரோ முலையாம் என்று தனியே வந்து –
என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து –
அவை தனக்கு போகமாய் இருக்கிறபடி –
பாலாலே நிரம்பின முலையை -தடத்தை என்னாதே –
தடம் தன்னை -என்கிறதால் பாலால் நிரம்பியவை என்றதாய்த்து –
நந்தன் பெறப்பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே –
குணைர் தசரதோபம –
பரம பதத்தில் உள்ள ஸ்வாபாவிக குணங்களும்
அவதரித்து ஆர்ஜித்த குணங்களும்
கூடினால் சக்கரவர்த்தியோடு உபமானமாக மட்டமாய் நிற்கும் இத்தனை -என்று
இத்தை ஜீயர் அருளிச் செய்ய –
பரம புருஷனுக்கு ஓர் இடத்தே பிறந்து ஒரு குணம் தேட வேண்டுமோ -என்றார்
சுந்தர பாண்டிய தேவர் –
நாம் ஓடுகிற நரம்பு இவன் அறிந்திலன் -என்றத்தை விட்டு
பரம புருஷன் என்ற போதை அழகு இருந்தபடி என் -என்றாராம்
எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே அந்வயம் இல்லாதார்
பகவத் விஷயத்தில் சொன்ன ஏற்றம் எல்லாம் அர்த்தவாதம் என்று இருப்பார்கள் –
அது உடையவர்கள் பகவத் பிரபாவத்துக்கு அவதி இல்லாமையாலே
சொன்னவை சில சொன்ன அத்தனை -சொல்லாததுவே பெரிது -என்று இருப்பார்கள் –
சத்யே நாதி வததி-இறே –
நந்தன் பெறப்பெற்ற நம்பி –
ஈஸ்வரனுக்கு இது அலாப்ய லாபமாய் இருக்கிற படி –
இவர் பிள்ளையாகப் பெற்ற ஏற்றம் உடையவனே –
பிதரம் ரோசயா மாச -என்று அவனை ஆசைப் பட்டு இறே பிறந்தது
தனக்கு கிடையாதது பெறுகை இறே -அலாப்ய லாபம் –
பிறக்கிற சம்சாரிக்கு பிறவாமை ஏற்றமோபாதி இறே
அவனுக்குப் பிறக்கப் பெறுகையும் –
நானுகந்து உண்ணும் அமுதே -எந்தை பெருமானே உண்ணாய்-
தேவர்கள் தாங்கள் புஜிக்கும் அம்ருதத்தில் வாசி –
என் குல நாதனே –
நந்தன் பெறப்பெற்ற என்று தொடங்கி இவன் ஆதரித்து முலை உண்கைக்காக ஸ்தோத்ரம் பண்ணுகிறாள் –
என் அம்மம் சேமம் உண்ணாயே –
என்னுடைய அம்மம் ஆகிற சேமத்தை –
சேமம் எடுத்தது -என்னக் கடவது இறே –
ராஜாக்களுக்கு காவலோடே வரும் சோறாயிற்று சேமம் ஆகிறது –
—————————————————–
வங்கமறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கு நம்பி
செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா
கொங்கை சுரந்திட யுன்னைக் கூவியும் காணாது இருந்தேன்
எங்கிருந்து ஆயர் தங்களோடு என் விளையாடுகின்றாயே–10-4-2-
வங்கமறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கு நம்பி
மரக் கலங்களோடு கூடி
ஓதம் கிளர்ந்த கடல் போன்ற வடிவை உடையவனே –
வடிவு அழகுக்கு போலி தேடப் புக்கால்
அங்கும் இங்கும் கதிர் பொறுக்க வேண்டும்படியான
பூர்த்தியை உடையவனே
செங்கண்-
அவயவ சோபையோ தான் சொல்லி முடியலாய் இருக்கிறது –
நெடிய திருவே –
சர்வாதிக வஸ்துவை -திரு -என்று போலே காணும் சொல்லுவது –
செங்கமலம் புரை வாயா –
எல்லா அவயவமும் அப்படியேயாய் இருப்பது –
கொங்கை சுரந்திட யுன்னைக் கூவியும் காணாது இருந்தேன் –
நீயோ பாவஞ்ஞனாய்
தாய் முலை சுரந்து பார்த்து இருக்கும் அன்று வருகை அன்றிக்கே
நான் அழைத்தும் வரக் காணாது இருந்தேன் –
எங்கிருந்து ஆயர் தங்களோடு என் விளையாடுகின்றாயே –
எங்கே புக்கிருந்து
உன் பக்கல் நிரபேஷரானார் உடன் –
சாபேஷையாய் நான் பார்த்து இருக்க –
என்ன விளையாட்டு விளையாடுகிறது –
—————————————————–
திருவில் பொலிந்த எழிலார் ஆயர் தம் பிள்ளைகளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு
உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய்—10-4-3-
திருவில் பொலிந்த எழிலார் ஆயர் தம் பிள்ளைகளோடு தெருவில் திளைக்கின்ற நம்பீ –
சம்பத்தால் மிக்கு
வடிவு அழகிலும் உன்னோடு ஒத்த
தன்னேராயிரம் பிள்ளைகளோடு
தெருவிலே இருந்து விளையாடுகிற விளையாட்டுக்கு அவதி இல்லாதவனே
முலை உண்ணுகையும் விட்டு இறே அத்தை விரும்புகிறது
போகத்தையும் விட்டு லீலையை விரும்புமவன் நீ –
செய்கின்ற தீமைகள் கண்டிட்டு-
விளையாடுகிற படியை ஒளித்து கண்டு நின்றாள் போலே –
உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற –
உன் ஸ்வம் அடைய அன்றோ பாழ் போகிறது –
தீம் பால் -இனிய பால்
மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய் –
அவயவங்கள் தோறும் முழுசா முகத்தைப் பாரா
முலை சுரக்கப் பண்ணாமல்
மடியிலே இருந்தாயிற்று உண்பது –
இது அடைய தரையிலே போகாமே
உன் வாயிலேயாம்படி முலை யுண்ண வாராய் –
————————————————————
மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மதக் களிறன்னாய்
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன்
ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் –10-4-4-
மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார் மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா –
நாட்டிலே வர்த்திக்கிற ஸ்திரீகள்
மற்று உண்டான மனுஷ்யர்கள்
இவர்கள் கண்ணுக்கு பிள்ளை பெறுகைக்கு நோற்கும்
தபஸ்ஸூ தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிறவனே –
மதக் களிறன்னாய்-செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன்
சிவந்த ஆகாசம் இருக்கிறபடி கண்டாயே –
அதுக்கு பரபாகமான பிறை இருக்கிற படி கண்டாயே
அப்பிறை யை வாங்கி உன் சிவந்த கையிலே தருவேன் –
ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் –
என் ஒக்கலையிலே இழியாது இருந்து
ஆதரித்து இனிதாக
அம்மம் உண்ண வாராய் –
———————————————————-
மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய்
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா
இத்தனை போதன்றி எந்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா
உத்தமனே அம்மம் உண்ணாய் யுலகளந்தாய் அம்மம் உண்ணாயே —10-4-5-
மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய் –
மையின் தன்மையை உடைத்தாய்
கண்ணுக்கு குளிர்ந்து
இருண்ட குழலை உடைய முக்த்தனே –
பெரிய மருதுகளின் நடுவே நடந்தாய் –
வித்தகனே-
பெரியவற்றை எல்லாம் செய்கைக்கு ஈடான
ஆச்சர்ய சக்தியை உடையவனே –
விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா –
இனி இதுசெய்யான் -என்னும்படி
படுக்கையிலே கிடந்தது
அவள் பேர நின்றவாறே வெண்ணெயை விழுங்கும்
விகிர்தமான செயலை உடையவனே –
இத்தனை போதன்றி எந்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா –
நெடும் போது உண்டாயிற்று
முலைக் கடுப்போடு இருக்கிறது –
இத்தனை போது அல்லாதே என்னால் பொறுத்து பாடாற்றப் போகாது –
உத்தமனே அம்மம் உண்ணாய் யுலகளந்தாய் அம்மம் உண்ணாயே –
உன் நோவிலும் தாய் நோவு அறியும்வன் அன்றோ –
வேண்டும் அளவில் வந்து ஸ்பர்சித்த நீ அன்றோ-
——————————————–
பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசில் பெரிதும் வலியை
கள்ள மனத்தில் உடையைக் காணவே தீமைகள் செய்தி
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
பள்ளிக் குறிப்புச் செய்யாதே பாலமுது உண்ண நீ வாராய் —10-4-6-
பிள்ளைகள் செய்வன செய்யாய் –
உன் பருவத்தில் பிள்ளைகள் செய்வன
அன்று நீ செய்வது –
பேசில் பெரிதும் வலியை-
கண் எச்சில் ஆனவற்றை செய்யா நிற்புதி-
கண் எச்சிலாம் என்று சொல்லாது ஒழியும் இத்தனை –
கள்ள மனத்தில் உடையைக்-
சொல்லில் பெரிய மிடுக்கை உடைய உன் நெஞ்சில் நினைக்குமவை இன்னது என்று தெரியாது –
காணவே தீமைகள் செய்தி –
விலக்குவார்க்கும் கண்டு கொண்டு நிற்க வேண்டும்
தீமைகள் செய்யா நிற்புதி
கண்டு இருக்க ஆகர்ஷகமான தீம்புகளை செய்வுதி –
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற –
அத்தீமை காண என் ஹிருதயம் உருகி
முலை வழியே பாலாய் புறப்படா நின்றது –
பள்ளிக் குறிப்புச் செய்யாதே பாலமுது உண்ண நீ வாராய் –
கண்கள் சிவப்பது
மூரி நிமிர்வது
கொட்டாவி கொள்வது
அழுவது -ஆகாதே –
——————————————
தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை யுண்ட நம்பீ
நன் மகள் ஆய் மகளோடு நானில மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே —10-4-7-
தன் மகனாக –
யசோதை பிராட்டியாக வந்தாள் ஆயிற்று –
வன் பேய்ச்சி –
இவனைக் கண்ட விடத்திலும் நெகிழாத
நெஞ்சில் வன்மையை உடையவள் –
தான் முலை யுண்ணக் கொடுக்க –
பரிவோடே கொடுக்கிறாள் என்று தோற்றும் படி கொடுக்க –
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை யுண்ட நம்பீ –
தானும் தாய் என்று பிரமியாதே
அவள் அபிசந்தியைப் புத்தி பண்ணி
அப்பருவத்திலே பெரிய ஆண் பிள்ளையாய்
அவள் பிராணன்களை முலை வழியே உண்டு
அவளை முடித்து இப்படிப் பட்ட செயல்களாலே
பூரணன் ஆனவனே –
நன் மகள் ஆய் மகளோடு நானில மங்கை மணாளா –
இப்படி பூதனை கையிலே அகப்பட்ட உன்னை
ஆராக நினைத்தாய் –
நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய நப்பின்னை பிராட்டிக்கும்
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும்
வல்லபன் ஆனவனே –
என் மகனே –
அப்படியே ஓர் ஏத்தம் போலே காணும்
இவள் மகன் ஆனதுவும் –
அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –
அம்மம் என்று -புஜிக்கப் படும் எல்லாவற்றுக்கும் பெயர் –
—————————————————–
உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் உங்கள் தம் ஆநிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம்போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் —10-4-8-
உந்தம் அடிகள் முனிவர்-
தாயாரைக் கண்டால் தீமையிலே ஓன்று பத்தாக பணைக்கும்-
ஸ்ரீ நந்த கோபர்க்காயிற்று அஞ்சுவது
அத்தாலே அவனுக்கு அச்சம் உறுத்துக்கைக்காக
யசோதை பிராட்டி சொல்லும் பாசுரம் ஆயிற்று –
உங்கள் முதலியார் சீறுவர் கிடீர் –
உன்னை நான் என் கையில் கோலால் -நொந்திட மோதவும் கில்லேன்-
தீம்பிலே கை வளருகிற உன்னை
நோக்க இருக்கிற நான் –
கண்டாய் இறே இதன் பேர்
இப்போதே சிவட்கு என்ன அடிக்கலாம் இறே
அது மாட்டு கிறிலேன் –
அடிக்க வேண்டும்படி செய்த தீமை தான் என்ன –
உங்கள் தம் ஆநிரை எல்லாம் வந்து புகுதரும் போது –
உபய விபூதியோபாதியும் பரப்புப் போருமாயிற்று
இவன் தன்னை ஒழிய வேயும் கண் எச்சிலாம் படி யாயிற்று
அவை வந்து புகுரும் போது இருப்பது –
இங்கு காண்கின்றார் உண்டோ -என்ன -வேண்டா
வானிடைத் தெய்வங்கள் காண –
எத்தனை தேவதைகள் ஆகாசத்தில் பார்த்து நிற்கக் கடவது –
அந்தியம்போது அங்கு நில்லேல்
அசுரர்களுக்கு பலம் வர்த்திக்கும் போது அங்கு நில்லாதே கொள் –
அங்கு
இவன் இவனின -என்று உன்னோடு சேர்த்து சொல்லலாம் படி அங்கு நில்லாதே கொள் –
ஆழி யங்கையனே வாராய் —
இவற்றை ஒழியவேயும்
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு –
என்னும்படி யாயிற்று இருப்பது –
————————————————-
பெற்றம் தலைவன் என் கோமான் பேர் அருளாளன் மதலாய்
சுற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா
கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே—-10-4-9-
பெற்றம் தலைவன் என் கோமான் –
பசுக்களுக்கு பிரதானன் ஆனவனே –
மேல் விழுந்து முலை உண்ண ஏத்துகிறாள் –
எனக்கு ஸ்வாமி யானவனே –
இத்தால் ஐஸ்வர்யம் சொல்லுகிறது –
பேர் அருளாளன் மதலாய்-
அருளால் குறைவற்றவன் மகன் அன்றோ நீ
அவன் படி உனக்கும் உண்டாக வேண்டாவோ –
சுற்றக் குழாத்து இளங்கோவே
பந்து வர்க்கத்துக்கு எல்லாம்
யுவராஜா வானவனே –
தோன்றிய தொல் புகழாளா-
எங்கும் ஒக்க பிரசித்தமான
ஸ்வா பாவிக மான புகழின் உடைய வார்த்தைப் பாட்டையும் உடையவனே –
கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே –
கன்றின் உடைய திரள்
ஓன்று இரண்டு போராது –
கன்றுகளை திரளாக மறித்து
காட்டிலே அங்கே இங்கே தட்டித் திரியும் போது
ஒரு மத்தகஜம் உலாவுமா போலே யாயிற்று இருப்பது –
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே –
உனக்கு விடாய் இல்லாமையோ –
உனக்கு முலை தாராது ஒழியும் போது
நான் தரிப்பனாயோ –
——————————————————
இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி
செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலுமாமே —10-4-10-
இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி –
இவள் முலை கொடுத்து அல்லது தரியாதாப் போலே
கவி பாடி அல்லது தரியாதாராய் பாடின கவி யாயிற்று –
மிக்க எழிலை உடைத்தான தோளை உடைய ஆழ்வார் –
செம்மைப் பனுவல் நூல் கொண்டு-
சாஸ்த்ரங்களில் பரக்கச் சொல்லுகிற லஷணங்களில் ஒன்றும் குறையாமல் செய்ததுமாய்-
இது தான் இவ்வருகு உள்ளாருக்கு சாஸ்த்ரமாய் எழுதிக் கொள்ளலாய் இருக்கிற இவற்றைக் கொண்டு
பனுவல் -என்றும் -நூல் -என்றும் -சாஸ்திரம் ஆகையாலே சொல்லிற்று –
செங்கண் நெடியவன் தன்னை
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனை –
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
அம்மம் உண் என்று சொன்ன இப்பத்தையும் –
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலுமாமே –
அந்த பாவ வ்ருத்தியோடே சொல்லுவாருக்கு
வந்தேறியான முக்தர் ஆனவர்கள் அன்றிக்கே
அஸ்ப்ருஷ்ட சம்சாரிகளான நித்ய சூரிகளோடே ஒக்க தரம் பெறலாம் –
————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply