முதல் பத்து பாசுரங்களால் எம்பெருமானே உபாதான காரணம் என்று அறுதியிட்டு
11-48- தேவதாந்த்ர விலக்ஷணம் -கூர்மாவதாரம் நரசிம்ம கிருஷ்ண அவதாரங்களில் ஈடுபட்டு பரத்வ ஸ்தாபனம்
49–தொடங்கி 56-திரு அரங்கனுக்கு -ஏழு பாசுரங்கள்
திருக்குறுங்குடி ஒரு பாசுரம்
ஆறு பாசுரங்கள் திருக்குடந்தை
63-64-65-நெஞ்சுக்குள் வந்தமை
சம்சாரி இழவை -66 பாசுரத்தால் அனுசந்தித்து
67-73- பர உபதேசம் அ ல்பம் அஸ்திரம் –
74- தன்னைப் பார்த்து-அவனது நிர்ஹேதுக கிருபை
75-81உபாயாந்தரங்களின் தோஷம் அப்ராப்தம் -மீண்டும்
82-120-பகவான் உடம் சம்வாதம் -ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம்
நெஞ்சுக்கு உபதேசம் சில பாசுரங்கள் இவற்றில் உண்டு
ப்ராப்ய ருசியை விண்ணப்பம் 119 பாசுரம்
பெற்ற பேற்றைச் சொல்லி நிகமிக்கிறார்
———-
இவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பர வியூகங்கள் தேச விப்ரக்ர்ஷ்டத்வத்தாலே
அஸ்மத்தாதிகளுக்கு ஆஸ்ரயணீயம் ஆக மாட்டாது –
அவதாரங்கள் கால விப்ரக்ர்ஷ்டதை யாகையாலே ஆஸ்ரயணீயங்கள் ஆக மாட்டாது –
இரண்டுக்கும் தூரஸ்தரான பாஹ்ய ஹீநருக்கும் இழக்க வேண்டாதபடி
அர்ச்சக பராதீநனாய் -சர்வ அபராத சஹனாய் -சர்வ அபேஷித ப்ரதனாய் -வர்த்திக்கும்
அர்ச்சாவதாரத்தின் நீர்மையை அனுசந்தித்து –ஆகிஞ்சன்யத்தை அதிகாரமாக்கி –
ப்ரபத்தியை அதிகாரி விசேஷணமாய் ஆக்கி -பகவத் கிருபையை நிரபேஷ உபாயம் என்று அத்யவசித்து
அவனை ஆஸ்ரயித்து -அவன் கிருபை பண்ணி முகம் காட்ட இவ்விஷயத்தை லபிக்கப் பெற்றேன் என்று
தமக்கு பிறந்த லாபத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –
உபய விபூதி யோகத்தை நிர்ஹேதுக க்ருபையால் தேவரீர் காட்ட
வருத்தமற நான் கண்டாப் போலே வேறு ஸ்வ சாமர்த்யத்தால் காண வல்லார் இல்லை என்கிறார் –
ஜகத் ஏக காரணத்வத்தாலும் சகல ஆதாரனாய் இருக்கும் ஸ்வபாவத்தை திரள
அறியும் இத்தனை ஒழிய தேவரீர் காட்ட நான் கண்டால் போலே ஏவம்விதன்
என்று ஒருவருக்கும் அறிய ஒண்ணாது என்கிறார்
தாரக பதார்த்தங்களும் பகவதாஹித சக்திகமாய் கொண்டு தரிக்கின்றன
அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமாளே அனைத்துக்கும் தாரகம்-
தாம்தாம் சத்தாதிகள் தேவரீர் இட்ட வழக்காய் இருந்த பின்பு தேவரீரை
பரிச்சேதிக்க வல்லார் உண்டோ – -என்கிறார்-
முதல் பாட்டில் சொன்ன காரணத்வத்தை தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –-பத்தாம் பாட்டில் திருஷ்டாந்த சஹிதமாய்
சொல்லி முடித்தாராய் விட்டது –
ஜகத் காரண பூதனாய் -ஸ்ருஷ்டியாதி முகத்தால் ரஷிக்கும் அளவே அன்றி
அசாதாராண விக்ரஹ உக்தனாய் அவதரித்து ரஷிக்கும் உன் படியை லோகத்திலே ஆர்
நினைக்க வல்லார் என்கிறார்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி
ஜகத்து உனக்கு சரீரம் ஆகையாலே உன்னை பிரியாதே நிற்க -அசாதாராண விக்ரஹ
உக்தனாய் கொண்டு வ்யாவர்த்தனாய் இருத்தி –
அதாகிறது –
விமுகரான காலத்திலே ஆத்மாவே நின்று சத்தியை நோக்கியும் –
அபிமுகீ கரித்த வன்று சுபாஸ்ரயன் ஆகைக்கு அசாதாராண விக்ரஹ உக்தனாய் இருக்கும் என்கை –
ஆகையால் ஒரு வகையாலும் பரிச்சேதிக்கஒண்ணாமையாலே
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே –
ஆச்சர்யமான படிகளை உடைய உன்னை லௌகிக புருஷர்களில் அறிய வல்லார் ஆர் –
கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த நீ காட்டித்தர -உன் வைலஷண்யம் காணும்
அது ஒழிய ஸ்வ சாமர்த்யத்தாலே காண முடியாது என்கிறார் –
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து நிற்கச் செய்தே -சர்வ விஸ ஜாதீயமான வைலஷ்ண்யத்தை உடைய
விக்ரஹம் என்ன -அவதாரத்தில் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான
திருநாமங்கள் என்ன -அவதரித்த தேசப் பிரபாவம் என்ன -அவதார விக்ரஹத்துக்கு
நிதானம் என்ன -இவற்றை உடையனான உன்னை ஸ்வ சாமர்த்யத்தாலே காண முடியாது என்கிறார் –
ஆமையாகி –
பிரயோஜநாந்தர பரரான தேவர்களுக்கு அமர்த மதனதுக்கு அனுகூலமான கூர்ம வேஷத்தை கொண்டு
ஆழ் கடல் துயின்ற –
அகாதமான கடலிலே மந்த்ரம் அமிழ்ந்தாத படி உன் முதுகிலே அது நின்ற சுழலக் கண் வளர்ந்து அருளினவனே –
சாமவேத கீதனாய சக்ர பாணி அல்லையே —
நீ அழிவுக்கு இட்ட கூர்ம விக்ரஹம் சாந்தோக்ய சித்தமாய் -கையும் திரு வாழியுமான
அதி ரமணீய விக்ரஹம் என்று அறிந்தேன்
ஷீரார்ணவசாயித்வம் பரத்தாசை என்னும்படி அங்கு நின்றும் க்ருத யுகத்திலே
சேதனர் விரும்புகைகாக சங்கம் போலே இருக்கிற திரு மேனியை உடையாய் அவதரித்து –
அதுக்கு மேலே த்ரேதா யுகத்தில் ஆஸ்ரித விரோதிகளான ராவணாதி கண்டகரை
நிரசிக்கைகாக ஷத்ரிய குலத்தில் வந்து அவதரித்து ஸ்ரீ சார்ங்கத்தை திருக் கையில் தரித்தவன் அல்லையோ –
இப்படி காளமேக நிபாஸ்யாமமான திரு நிறத்தை அழிய மாறியும் –
ஆத்மாநாம் மாநுஷம் மநயே -என்று பரத்வத்தை அழிய மாறியும் ரஷித்த உன்னுடைய
நீர்மையை பரிச்சேதித்து அறியலாவார் ஆர்
மேலாக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் –
அதுக்கு மேலே ஆஸ்ரிதர் தேவரீருக்கு விக்ரஹமாக நினைத்த த்ரவ்யத்திலே ஸ்வ அசாதாராண
விக்ரஹத்தில் பண்ணும் விருப்பத்தை பண்ணுகிற இஸ் ஸ்வபாவம் என்னாய் இருக்கிறது –
ஆத்ம குணங்களால் ரஷகன் ஆனால் போலே ரூப குணங்களாலே போக
பூதனான படியைச் சொல்லுகிறது
அநாதியாய் அஹங்காரத்தை விரும்பிப் போந்த சேதனனை சேஷதைகரசரான
நித்ய சூரிகளோடு ஒரு கோவை யாக்குவது இச் சக்தி
நீர்மைக்கு எல்லை பாற் கடல் சயனம் –
மேன்மைக்கு எல்லை கடல் கடைந்தது –
இவற்றை பிரித்து எனக்கு அருளிச் செய வேணும் –
எல்லா அவதாரங்களிலும் இரண்டும் கலந்து இருக்குமே-
ஈஸ்வரன் ஒருவன் உளான் என்று அறியாத சம்சாரத்தில் இஸ் ஆஸ்ரித பஷபாதத்தை-பிரகாசிப்பிக்கைகாக
அர்ச்சையாய் வந்து கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற தேவரீர்-
இத்தை விசேஷித்து தெரிய அருளிச் செய்ய வேணும் -கீழ்-
வ்யூஹத்திலும் விபவத்திலும் சொன்ன பஷபாதங்கள் காணலாவது பெரிய பெருமாள் பக்கலிலே என்று கருத்து
சர்வாதிகன் கிடீர் பிரளய ஆர்ணவத்திலே ஒருவர் இல்லாதாரைப் போலே தனியே கண் வளர்ந்து அருளுகிறான்
சிங்கமாய தேவ தேவ –
அத் திவ்யாயுதங்கள் அசத் சமமாம் படி வரம் கொண்ட ஹிரண்யனை நக ஆயுதமான
சிம்ஹமாய் அழியச் செய்த ஆஸ்ரித பஷபாதத்தாலே நித்ய சூரிகளை எழுதிக் கொண்டவனே –
திவ்ய மங்கள விக்ரஹத்தின் சுவடு அறியும் நித்ய சூரிகளுக்கு இறே அவ்வடிவையும் அழிய மாறி
ரஷித்த ஆஸ்ரித பஷபாதத்தின் எல்லை தெரிவது-
அநந்ய பிரயோஜனனான பிரகலாதனோடு -பிரயோஜநாந்த பரனான இந்த்ரனோடு விமுகரான
சம்சாரிகளோடு வாசியற ரஷிக்கிற உன் நினைவை ஜ்ஞானாதிகர் ஆர் தான் அறிய வல்லார்
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்யும் இடத்தில் சங்கல்பத்தால் அன்றிக்கே கை தொட்டு
ஆயுதத்தால் அழிக்குமவன்
பகவத் சம்பந்தத்தை அறுத்துக் கொள்ளும் சம்சாரிகளை -தன்னை அழிய மாறி ரஷிக்கிற
அனுக்ரஹத்தை எவர் அறிய வல்லரே –
திருவடிகளின் சௌகுமார்யமும் பார்த்திலை –-மகாபலி பக்கல் ஔதார் யமும் பார்த்திலை –
அர்திக்கிறவன் பிரயோஜநாந்த பரன் என்றும் பார்த்திலை -இந்த இந்தரனுடைய இரப்பையே பார்த்த இத்தனை இறே
அதீந்த்ரியிமான இவ் விக்ரஹத்தை கோபால சஜாதீயமாக்கிக் கொண்டு ருசி இல்லாருக்கு ருசி ஜனகனாயக் கொண்டு
வந்து அவதரித்த இது என்ன ஆச்சர்யம் –
ஒரு கோப ஸ்திரீக்கு கட்டவும் அடிக்கவுமாம்படி ந்யாம்யனாய் வந்து அவதரித்த குணாதிக்யம் உண்டு இறே
ஸ்வரூபம் ஸ்வா தந்த்ர்யம் -என்கிற ஸ்வரூபமும் அழிந்தது இறே இதில் –
கல்பாதியிலே ஒரு ஸ்ரீ வராஹமாய் -ஒருத்தர் அர்த்தியாக இருக்க பூமியை எடுத்து ரஷித்து
அந்த பூமியை மகாபலி அபஹரிக்க ஸ்ரீ வாமனனாய் அளந்து கொண்டவனே –
தன்னை அழிய மாறி ரஷித்த சௌலப்யத்துக்கும்–வரையாதே எல்லாரையும் தீண்டின சீலத்துக்கும்
க்ருஷ்ணாவதாரத்தொடு சாம்யம் உண்டாகையாலே இவ்வதாரங்களை அனுபவிக்கிறார்
சாஸ்திர வஸ்ய ஜன்மத்திலே பிறந்து ஏழு கோ ஹத்தியைப் பண்ணச் செய்தேயும்
ஈச்வரத்வம் நிறம் பெற நின்றாய் நீ –
புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே —
தோளும் தோள் மாலையுமான அழகைக் காட்டி -விஷயாந்தர ருசி என்ன -சோரேண ,ஆத்ம
அபஹாரிணா -என்கிற ஆத்ம அபஹாரம் என்ன -இவ் வசுதங்களைத் தவிர்த்த பரம-பாவனனே-
நாயினேன் வீடு பெற்று –இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே —
அநாதி காலம் திறந்து கிடந்த வாசல் எல்லாம் நுழைந்து சர்வராலும் பரிபூஹதனான நான்
உகந்து தொட்டாலும் எதிர்தலைக்கு அசுத்தியை விளைப்பிக்கும் நிஹீநதையை உடைய நான்
இப்படி பட்டு இருந்துள்ள நான் உனக்கு ஸத்ர்சராய் இருந்துள்ள நித்ய ஸூரிகள் பேற்றைப் பெற்று
அகிஞ்சனான நான் பூரணனுடைய பேற்றைப் பெற்று-இச் சரீரத்தினுடைய விமோசனத்தோடே இனி ஒரு சரீர பரிக்ரஹம்
பண்ண வேண்டாதபடி சம்சாரத்தை அறுக்கும் விரகு அருளிச் செய்ய வேணும் –
சிறைக்கூடத்தில் இருக்கும் ராஜ குமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்பு
சிறையை வெட்டி விட்டால் போலே ப்ராப்தி முன்பாக விரோதியைப் போக்கும் விரகு அருளிச் செய்ய வேணும் –
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே —
பரமபதம் தேசத்தால் விபக்ர்ஷ்டம் ஆகையாலும்-அவதாரம் காலத்தால் விபக்ர்ஷ்டம் ஆகையாலும் –
ஷீராப்தி அதிக்ர்த அதிகாரம் ஆகையாலும்-அந்தர்யாமித்வம் பிரதிபத்திக்கு அபூமி ஆகையாலும் –
த்ரைவர்ணிக அதிகாரம் ஆகையாலும் – நிலம் அல்ல –அயோக்யனான நான் -இதம் -என்று புத்தி பண்ணி
ஆஸ்ரயிக்கலாம் படி ஆஸ்ரயணீய ஸ்தலத்தை அருளிச் செய்ய வேணும் –
நீலமே அண்டை கொண்டு கெண்டை மேயும் –
அதன் மிகுதியைக் கண்டு கெண்டை யானது பயத்தாலே பரப்பு மாற பூத்த நீலத்தின் இருட்சியை அண்டை கொண்டு –
அரணுக்கு உள்ளே வர்த்திப்பாரைப் பயம் கெட்டு மேய்ந்து வர்த்திக்கிற தேசம் –
இத்தால் -சம்சாரிகளை நலிகிற அஹங்காரத்தைக் கண்டு பீதராய் –முமுஷுக்களாய்-உபாசநத்திலே இழிந்த சாதகரைக் கண்டு
இவை இரண்டும் பய ஸ்தானம் என்று சர்வேஸ்வரனையே உபாயமாகப் பற்றி நிர்ப்பரராய் -ஸ்வரூப அநுரூபமான
பகவத் குண அநுபவமே யாத்ரையாய் வர்த்திக்கும் பிரபன்னரருக்கு ஸ்மா ரகமாய் இருக்கிறது ஆய்த்து –
கெண்டைகளினுடைய யாத்ரை -என்கை-
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50
அவதாரத்துக்கு பிற் பாடரான ஆஸ்ரிதருக்கு ஸ்வ அநுபவ விரோதியான சப்தாதிகளில் ப்ராவண்யத்தைப் போக்குகைக்காக
கோயிலிலே நித்ய வாஸம் பண்ணுகிறபடி -என்கை-
அற்ற பத்தர் –
புருஷார்த்தாந்தரங்களிலும் சாதநாந்தரங்களிலும் பற்று அற்று பெரிய பெருமாளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று இருக்குமவர்கள் –
த்ரிதண்ட தாரிகளாய் பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயராய் பகவத் வ்யதிர்க்தங்களை த்ரணமாக புத்தி பண்ணும் சந்நியாசிகள்-
சுற்றி வாழும் –
சர்வ அவஸ்தையிலும் விடாதே கோயில் வாசமே வாழ்வாக இருக்குமவர்கள்
தேச ஸம்ர்த்தியை மநோரதித்து அதுவே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள்-
ஆஸ்ரிதருக்கு விரோதிகளாம் இத்தனையே வேண்டுவது –எதிர்தலை திர்யக் ஆகவுமாம்-சர்வாதிகனான ருத்ரன் ஆகவுமாம்
அழியச் செய்கைக்கு குவலயாபீடம் -கொலை யானையாய்த் தோற்றுகையாலே கொன்று அருளினான் –
க்ருஷ்ணனைத் தோற்ப்பித்து பாணனை ரஷிக்க கடவோம் என்று வந்த ருத்ரன் தோற்று போம்படி பண்ணி யருளினான் –
பாராய மம கிம் புஜை -என்று தோள் வலி கொண்டு வந்த பாணனுடைய தோள்களைக் கழித்தான் –
ஆக –அவர்கள் உடைய நினைவு அவர்கள் தலையிலே யாக்குமவன் என்கை –
புண்டரீக அவயவன் அல்லையோ –திவ்ய அவயவங்களுக்கு ஸ்ரமஹரமான தேச வாசத்தாலே பிறந்த செவ்விக்கு மேலே
என்னோட்டை சம்ச்லேஷத்தாலேயும் புதுக் கணித்தது என்கை –
கிடந்த புண்டரீகனே —
தாமரைக்காடு பரப்பு மாறப் பூத்தாப் போலே இருக்கிற திவ்ய அவயவங்களோடு தன்னை
அனுபவிக்கைக்காக கண் வளர்ந்து அருளுகிறவன் –
தன் வாத்ஸல்யத்தாலே-பிற்பாடருக்கு உதவ வந்து கிடக்கிற தேசம் திருக் குடந்தை கிடை அழகிலே துவக்குண்டு அனுபவிப்பார்
ஆரோ -என்று அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற வ்யாமுக்தன் அல்லையோ –
சர்வாதிகனாய் அத்யந்த ஸூகுமாரமான அவன் –விமுகரான சம்சாரிகள் நடுவே திருக் குருங்குடியிலே வந்து தாழ்ந்தாருக்கு
முகம் கொடுக்க நிற்கிற நிலை யாய்த்து அவ் ஊரில் பதார்த்தங்களுக்கு அதி சங்கை மாறாதே செல்லுகைக்கும்
இவ் வாழ்வாருக்கு நம்பி உடைய சௌகுமார்யத்தையே அனுசந்திகைக்கும் ஹேது
பாடகத்தும் ஊரகத்தும் நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே –63-
உன்னை நோக்கோம் என்று இருந்த சம்சாரிகள் உடைய உகப்பை ஆசைப்பட்டு வளைப்பு கிடக்கிற இது என்ன நீர்மை -என்கிறார்
உபய விபூதி நாதனான தான் -சம்சாரியான எனக்கு ருசி பிறவாத காலம் எல்லாம் ருசி பிறக்கைக்காக -நிற்பது இருப்பது கிடப்பது ஆவதே –
என்னுடைய சத்தை தன்னுடைய கடாஷம் அதீனமாய் இருக்க -இத்தலையில் கடாஷம் தனக்கு தேட்டமாவதே
எனக்கு மறக்க ஒண்ணாதபடி ருசி பிறந்த பின்பு -அவன் திருப்பதிகளில் பண்ணின செயல்கள் எல்லாவற்றையும் –
திருப்பதிகளை காற்கடைக் கொண்டு என்னுடைய ஹ்ர்தயத்தில் பண்ணி அருளா நின்றான்-
முதலிலே தான் என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் –அசத் சமனாய் இருந்துள்ள என்னையும் உளனாம்படி பண்ணி –
தன்னை மறக்க ஒண்ணாத பிரேமத்தை விளைத்து – அதுக்கு விஷய பூதனாய் -தன்னுடைய விடாயும் தீர்ந்தான் என்றது ஆய்த்து –
தன் திருவடிகளில் போக்யதையை எனக்கு அறிவித்த பின்பு -பரம பதத்தில் இருப்பை
மாறி -என் நெஞ்சிலே போக ஸ்தானமாய் இருந்தான் –
தாபார்த்தோ ஜல சாயிநம் -என்கிறபடியே திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியைக் காட்டி –என்னுடைய சாம்சாரிகமான
தாபத்தை தீர்த்த பின்பு திருப் பாற் கடலில் கிடையை மாறி என் நெஞ்சிலே கண் வளர்ந்து அருளி தன் விடாய் தீர்ந்தான் –
இப்படி என் பக்கலிலே பண்ணின வ்யாமோஹம் என்னால் மறக்கலாய் இருக்கிறது இல்லை -என்கிறார் –
சிந்திப்பே அமையும் -என்னக் கடவது இறே-ஆஸ்ரயணத்தில் ஆயாசம் இன்றிக்கே ஒழிந்தால் -பலமும் ஷூத்ர மாய் இருக்குமோ என்னில்
வானின் மேல் சென்று சென்று – அர்ச்சிராதி மார்க்கத்திலே போய் அபுநா வ்ர்த்தி லஷணமான பரமபதத்திலே சென்று
சென்று சென்று –-தேசப் ப்ராப்தியில் காட்டில் வழிப் போக்குக்கு தானே இனிதாய் இருக்கிறபடியை சொல்லிற்று ஆகவுமாம் –
வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே –தேவதாந்தரங்கள் ரஷகர் ஆனாலும் ஆபத்துக்கு உதவாதவர்கள்
ஈஸ்வரன் முனிந்த தசையிலும் ஆபத்சகன் என்றது ஆய்த்து– க்ருபயா பர்ய பாலயத் –
விரோதி நிரசந சீலனான தசரதாத்மஜன் பிரசன்னரானார்க்கு அல்லது
ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய அதிகாரத்தாலே நின்றாருக்கும் நித்யமான மோஷத்தை ப்ராபிக்க விரகு இல்லை
அறிந்து அறிந்து -என்று–சாஸ்திர ச்ரவணத்தாலும் -ஆசார்ய உபதேசத்தாலும்
இந்த்ரியங்களுக்கு விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து – பகவத் விஷயமே விஷயமாக்கி –தத் விஷய ஜ்ஞானம்
பக்தி ரூபாபன்ன ஜ்ஞாநமாய் அது பரபக்தியாதிகளாய் பழுத்தால் அல்லது சர்வேஸ்வரனை லபிக்க விரகு இல்லை -ஆய்த்து –
திரு அஷ்டாஷரத்தை வாயாலே உச்சரிக்குமவர்கள் – வல்லர் வானம் ஆளவே –
அர்த்தத்தை மனசாலே அனுசந்தித்தும் –வாயாலே சப்தத்தை உச்சரித்தும் –சாரீரமான ப்ரணாமத்தை பண்ணியும்
இப்படி மநோ வாக் காயங்களாலே பஜிக்குமவர்கள் இட்ட வழக்கு பரம பதம் -என்கை-
அவன் பெயர் எட்டு எழுத்தும் –
ஷீராப்தி நாதன் திருநாமமான திருவஷ்டாஷரத்தையும் –ஏஷ நாராயண ச ஸ்ரீ மான் -என்றும் –
நாராயணனே நமக்கே பறை -தருவான் என்றும் –பவான் நாராயணோ தேவ -என்றும் –
தர்மி புக்க விடம் எங்கும் இத்திருநாமம் பிரதம அபிதாநமாய் இருக்கும் –
உன்னுடைய விரோதி நிரசன சீலதயை அனுசந்தித்து உன் பக்கலிலே ப்ரேமம் உடையாருக்கு அல்லது
நித்ய ஸூரிகளோடு ஸத்ர்சராய் தேவரீரை அனுபவிக்கப் போமோ -என்கிறார் –
ஆஸ்ரிதருக்கு திருவேங்கடமுடையான் திருவடிகளே ஆஸ்ரயணீய ஸ்தலம்
திருவேங்கடமுடையானுக்கு ஆஸ்ரயணீய ஸ்தலம் திருமலை –
எத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே —
சரீரத்தோடே இருக்கும் இருப்பிலும் –பரம பதத்தில் இருக்கும் இருப்பிலும் –உத்க்ரமண தசையிலும் –
அர்ச்சிராதி மார்க்கம் என்கிற அவஸ்தா விசேஷங்களிலும் –ஸூ கமேயாய் இருக்கும் –
எத்திறத்தும் இன்பமான சர்வேஸ்வரனான -உன்னுடைய – ஸ்வரூப ரூப குண விபூதிகளை அநுபவித்து பிரகார பேதங்களிலும்
த்வத் அநுபவத்தால் வந்த ஸூகமே யல்லது இல்லை-விஷயாந்தர ப்ராவண்யாம் எங்கனம் யாகிலும் துக்கமே யானவோபாதி
பகவத் பராவண்யம் எங்கனம் யாகிலும் ஸூகமேயாய் இருக்கும் -என்கை –
வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே-
விச்சேதம் இல்லாதபடி தேவரீர் திருவடிகளிலே வைத்த ப்ரேமம் சுகத்துக்கு சாதனமாய் இருக்கை யன்றிக்கே தானே சுகமாய் இருக்கும் –
ஓர் அன்பிலா அறிவிலாத நாயினேன் –
அவன் ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே ப்ரேம கந்தம் இன்றிக்கே – அதுக்கடியான ஜ்ஞான லேசமும் இன்றிக்கே ஹேயனான நான் –
ப்ரேம கந்தம் இன்றிக்கே -அது இல்லை என்கிற அறிவும் இல்லாத -என்றுமாம் –
பிறந்த பின் மறந்திலேன் -என்கிற ஜ்ஞாநத்தையும்-நடந்த கால்கள் நொந்தவோ -என்கிற பிரேமத்தையும் -உபாயம் -என்று இருக்கிலர்
ஈஸ்வரன் நினைவே தனக்கு உபாயம் -என்று இருக்கிறார் –
எதிர் அம்பு கோக்க பண்ண வல்லை -பிராதிகூல்யத்தில் வ்யவஸ்திதனான சிசுபாலனுக்கு சாயுஜ்ய ப்ரதனாகவும் வல்லை –
இதுவன்றோ தேவரீர் உடைய ஸ்வாதந்த்ர்யம் -என்கிறார்
அஹங்கார லேசம் உண்டானால் அது நிரஸநீயம் என்று தோற்றுகைக்காக சகடாசூர நிரசநத்தை அருளிச் செய்தார் –
தனக்கு போக்யமான ஆத்மாவுக்கு விஷ ஸம்ஸர்க்கம் போலே நிரஸநீயம் தேக சம்பந்தம் என்று தோற்றுகைக்காக
காளியமர்த்தனத்தை அருளிச் செய்தார்-
புனித –
விஷயாந்தர ப்ராவண்யத்தால் அசுத்தராய் -தாம்தாம் பக்கல் சுத்தி ஹேது இன்றிக்கே இருக்கும் குறைவாளரையும்
ஸ்வ ஸ்பர்சத்தாலே சுத்தராக்க வல்ல சுத்தியை உடையவன் அல்லையோ
அதாவது –
உத்கர்ஷ்ட ஜன்மம் என்ன –வேத ஸ்பர்சம் என்ன -வேதார்த்த அனுஷ்டானம் என்ன –-இவற்றினுடைய ஸ்தானத்திலே
பகவத் அனுக்ரஹம் நின்று விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து தருகை
நின்னிலங்கு பாதமஅன்றி மற்று ஓர் பற்றிலேன் –
இருட்டு மிக்கதனையும் விளக்கு ஒளி வீறு பெறுமாபோலே-குறைவாளர்க்கு முகம் கொடுக்கையாலே விளங்கா
நின்றுள்ள திருவடிகளை ஒழிய வேறு ஜீவன உபாயத்தை உடையேன் அல்லேன்-
எம் மீசனே-வேறு முதல் இன்றிக்கே அகதிகளான எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –
நின்னை என்னுள் நீக்கல் –என்றுமே-
சர்வ சக்தியாய் இருந்துள்ள உன்னை –அகிஞ்சனனாய் இருந்துள்ள என் பக்கலில் நின்றும்-ஷூத்ரமான உபாயாந்தரங்களைக்
காட்டி அகற்றாது ஒழிய வேணும் -நான் கலங்கின வன்றும் என்னை விடாது ஒழிய வேணும் –
அரங்க வாணனே –கோயிலுக்கு நிர்வாஹகனாகக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனே –
தம் தாம் பக்கலிலே முதல் இன்றிக்கே இருக்க -அனுபவத்திலே இழிந்தவர்களுக்கு தேவரீர் அழகாலே –
விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து –தேவரீர் பக்கலில் ஆதரத்தை பிறப்பித்து – அனுபவிக்கைக்காக அன்றோ
கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது –
போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வாய்த்த அழகன் –என்னக் கடவது இறே
கரும்பு இருந்த கட்டியே –இவருக்கு ருசி பிறப்பித்த உபாத்யாயரைச் சொல்லுகிறது –
1-ப்ராப்தராய் -2–சந்நிஹிதராய் -3–நிரதிசய போக்ய பூதராய்-4- -விரோதி நிரசன சீலராய் -தேவரீர் இருக்க –
5-இத்தலையில் ருசி உண்டாய் இருக்க –நான் இழக்க வேண்டுகிறது என்
வந்து நின்னடைந்து –உய்வதோர் உபாயம் –நல்க வேண்டுமே
ஒரு தேச விசேஷத்திலே வந்து-நிரதிசய போக்யனான உன்னை ப்ராபித்து-அடிமை செய்து -உஜ்ஜீவிப்பதொரு வழியை
நீ எனக்கு –1-ஸ்ரீ ய பதியாய் –2-திவ்ய ஆயுத உபேதனாய் –3-எனக்கு இல்லாதவை எல்லாம் தரக் கடவ-நீயே –
4-எல்லாவற்றுக்கும் உன் கையை எதிர்பார்த்து இருக்கிற எனக்கு-தந்தருள வேணும் –
எனக்கு நல்க வேண்டுமே –
பெற வேண்டுமவை எல்லாவற்றுக்கும் உன் கிருபையை அல்லாது அறியாத எனக்கு-அந்த பக்தியை தேவரீர் தந்து அருள வேணும்
பிரயோஜநாந்த பரருக்கு மோஷ ருசியைப் பிறப்பித்து -தத் சாதனமான பக்தியைக் கொடுத்தருளக் கடவ தேவரீர் –
அநந்ய ப்ரயோஜனனாய் –அநந்ய சாதனனாய் –இருந்துள்ள எனக்கு த்வத் அனுபவ பரிகரமான அந்த பக்தியை தந்து அருளுகை
தேவரீருக்கு அபிமதம் அன்றோ -அத்தை தந்து அருள வேணும் -என்றது ஆய்த்து –
என் நினைவும் -என் செயலும் -அகிஞ்சித்கரம்-உன் நினைவுக்கே பல வ்யாப்தி உள்ளது -என்கை –
அத் திருவடிகளை தஞ்சம் என்று நினைத்து இருக்கிற எனக்கு -ஊனத்தை விளைக்கும்-சரீர சம்பந்தம் ஆகிற
நோயை போக்க நினைத்து இருக்கிற விரகு
ஊனமாகிறது –ஸ்வ ஸ்வரூப விஷயமான ஜ்ஞான சங்கோசமும் –பகவத் ஜ்ஞான சங்கோசமும் –பகவத் அனுபவ சங்கோசமும் –
இவற்றை விளைக்கும் அது இறே தேக சம்பந்தம் –சரீரம் -என்றும் -வியாதி -என்றும் -பர்யாயம் இறே
இத்தால் –வேறு ஒன்றைத் தஞ்சம் என்று இழக்கிறேனோ –சரீரத்தில் ஆதாரம் உண்டாய் இழக்கிறேனோ –
ஸ்ரீ ய பதி-அயர்வறும் அமரர்கள் அதிபதி -ஹேயப் ப்ரத்யநீகன் -விலஷண விக்ரஹ உக்தன் –ஆஸ்ரித சுலபன் -என்று
நிர்தோஷ பிரமாண ப்ரதிபாத்யனான உன் குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை-
வடிவு அழகோடே -இடைவிடாதே நான் பேசுகைக்கு வழியை அருளிச் செய்ய வேணும் –
உன்னுடைய விசேஷ கடாஷத்துக்கு அடியான வாத்ஸல்யாதி குணங்கள் ஒழிய உன் வடிவு அழகே எனக்கு
இம் மநோ ரதத்துக்கு ஹேது என்கை-
ப்ரயோஜநாந்த பரரான இந்த்ராதிகள் உடைய ஆபத்தை ஆயுதத்தாலே அழித்தும்
ஸ்வ அபிமாநத்துக்கு உள்ளே கிடக்கிற பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தை மலையை எடுத்து ரஷித்தும்
இப்படியால் வந்த உன் ஆபத் சகத்வத்துக்கு அல்லது என் நெஞ்சுக்கு வேறு ஒரு ஸ்நேஹம் இல்லை
எம் ஈசனே –-என் நாதனே-விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபங்களையும் தேவரீர் பக்கலில் பிரேமத்துக்கு
விரோதியான பாபங்களையும் போக்கி இவ்வளவும் புகுர நிறுத்துகைக்கு அடி -இத்தை உடையவன் ஆகை -என்கை-
வீற்று இருந்த போதிலும் – கைங்கர்ய உபகரணங்கள் குறைவற்று இருந்த போதிலும் -என்னுதல்
நிரதிசய ஆனந்த நிர்பரனாய் இருந்த போதிலும் -என்னுதல்
கைங்கர்ய உபகரண சம்பத்தி சங்கல்ப மாத்ரத்திலே உண்டாமது இறே -போக மோஷங்கள் ஏக ஆஸ்ரயத்தில் சம்பவிக்கிலும்-
கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே –
உன்னைக் கூட வேணும் என்னும் யாசை யல்லது வேறு ஒன்றை நெஞ்சால் விரும்புவனோ-
தேவரீர் உடைய சௌலப்யத்தையும் -விரோதி நிரசன சீலத்தையும் பேசி-கால ஷேபம் பண்ணி யல்லது நிற்க மாட்டாமையாலே
யானும் ஏத்தினேன் இத்தனை-இது ஒழிய ஒரு சாதனா புத்த்யா ஏத்தினேன் அல்லேன்
இது தம்மைப் பெறுகைக்கு ஹேது அருளிச் செய்கிறார்-திருப் பாற் கடலிலே படுக்கையோடே -அக்கடல் செவ்வே நின்றாப் போல்
ஸ்ரமஹரமான வடிவோடே -ஆஸ்ரிதர் உடைய ஹ்ர்தயத்தில் சகல தாபங்களும் போம்படி நித்ய வாஸம் பண்ணும் ஸ்வபாவனே –
ஆஸ்ரிதர் உடைய ஹ்ர்தயத்தில் புகுரக் கணிசித்து -திருப் பாற் கடலிலே அவசரப் ப்ரதீஷனாய் வந்து கண் வளர்ந்து அருளி –
ஆசாலேசம் உடையாருடைய ஹ்ர்தயத்தில் ஸ்ரமஹரமாகப் புகுருமவன் ஆகையாலே என்னைப் பொறுத்து நல்க வேணும் -என்கிறார் –
அநந்ய பிரயோஜனரான நம்முடைய துர்மாநாதிகளைப் போக்குவிக்கக் குறை இல்லை –
நீ அவனை ப்ராபிக்கும் பிரகாரம் அவன் இரக்கமே என்று புத்தி பண்ணி இரு
அதாகிறது –அவனை நம் தலையாலே ப்ராபிக்க விரகு இல்லை –
அவன் தானே இரங்கி தன்னைத் தந்து அருள வேணும் என்று வ்யவஸ்திதனாய் இருக்கை-
பாதம் எண்ணியே – அவன் திருவடிகளையே உபாயமாக அனுசந்தித்து – மஹா வராஹமாய் -பிரளய ஆர்ணவத்தின் நின்றும்
பூமியை உத்தரித்தாப் போலே சம்சார ஆர்ணவத்தின் நின்றும் நம்மை உத்தரிக்கும் என்று அத்யவசித்து வணங்கி வாழ்த்தி -என்கிறார்-
புகுந்து நம்முள் மேவினார் –ஷிபாமி -என்கிறபடிய த்யாக விஷயமாம் படி சூழ்த்துக் கொண்ட நம்முடைய நெஞ்சில் –
ஹேய பிரத்யநீகர் ஆனவர் புகுந்து -ஒரு நீராக பொருந்தினார் –
நம்முடைய தண்மை பாராதே –தம்முடைய பெருமை பாராதே –
சர்வ பரத்தையும் தாமே ஏறிட்டுக் கொண்டு செய்வாராக புகுந்து பொருந்தினார் -என்கிறார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி –நம்முடைய ஹிதம் அறிக்கைக்கு நாம் சர்வஜ்ஞராயோ -அவன் அஜ்ஞனாயோ –
ஹிதத்தை ப்ரவர்த்திப்பிக்கைக்கு நாம் சக்தராயோ -அவன் அசக்தனாயோ –கார்யம் செய்து கொள்ளுகைக்கு நாம் ப்ராப்தராயோ –
அவன் அப்ராப்தனாயோ –தன் மேன்மை பாராதே தாழ நின்று -உபகரிக்குமவனாய் இருக்க – துக்க சாகரத்திலே கிடக்கிறது எத்தினாலே –
ஏழை நெஞ்சமே –பகவத் விஷயத்தில் கை வைப்பதற்கு முன்பு சோகிக்கவும் அறியாதே –
ஆனை கழுத்திலே இருந்தால் போல் இருக்கிற அறிவுகேடு போலே காண்
நம் கார்யத்துக்கு அவன் கடவனான பின்பு இன்று சோகிக்கிற அறிவு கேடும் -என்கை 0
வாட்டமின்றி எங்கும் நின்றதே – ஷூத்ர விஷய வாசனையால் சலிப்பிக்க ஒண்ணாத படி உன்னுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகள் எனக்கு ப்ராப்தமாய் நின்றது –
அவ் விக்ரஹம் தான் ஷாட் குண்ய விக்ரஹம் என்னும்படி குண பிரகாசகம் என்கையாலே குணங்களிலே மூட்டிற்று –
அக்குணங்கள் தான் ஸ்வ ஆஸ்ரயமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில் மூட்டிற்று –
அஸ் ஸ்வரூபம் தான் ஸ்வ ந்யாம்யமான விபூதியிலே மூட்டிற்று –
ஆக –
என்னுடைய ஆதரத்துக்கு உள்ளே ஸ்வரூப ரூப குண விபூதிகள் -எல்லாம் அந்தர்பூதமாய்த்து -என்கை –
மயக்கினான் தன் மன்னு சோதி –
அபிமதமாய் -அநுரூபமாய் -ஜ்யோதிர் மயமான – திவ்ய மங்கள விக்ரஹத்தை பிரிக்க ஒண்ணாதபடி கலந்தான் –
மயக்கம் -செறிவு – தன்னை ஒழிய எனக்கு ஒரு ஷண காலமும் செல்லாதபடி பண்ணினான் என்கை –
ஆதலால் –இப்படி தான் மேல் விழுந்து இவ்வளவும் புகுர நிறுத்துகையாலே
என்னாவி தான் –தனக்கு அநந்ய சேஷமாய் -ஸ்ரீ கௌஸ்துபம் போலே -அபிமதமுமான என் ஆத்மாவானது –
இயக்கெலா மறுத்து –
அந்யோந்ய கார்ய காரண பவத்தாலே ஒழுக்கறாத -அவித்யா கர்ம வாசன ருசி ப்ரகர்தி சம்பந்தங்களை யறுத்து –
இயக்கறாத பல் பிறப்பில் -என்று காரணமான தேக சம்பந்தகளை சொல்லிற்றாய் –
தத் கார்யமான அஞ்ஞான கர்மங்கள் என்ன – தத் ஆஸ்ரயமான வாசனா ருசிகள் என்ன -இவற்றையும் கூட்டி –
எலாம் –அறுத்து என்கிறார்
அறாத இன்ப வீடு பெற்றதே –
யாவதாத்மபாவி விச்சேதம் இல்லாத –நிரதிசய ஆனந்தமான -கைங்கர்ய ரூப மோஷத்தைப் -பெற்றது
————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply