எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை -என்கிறது என்
தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்தால் உஜ்ஜீவிக்க ஒண்ணாமை என் என்ன –
அந்த தேவதாந்தர சமாஸ்ரயணம் துஷ்கரம்
அத்தைப் பெற்றாலும் அபிமத பிரதானத்தில் அவர்கள் அசக்தர்
ஆனபின்பு ஜகத் காரண பூதனான யாஸ்ரயித்து சம்சார துரிதத்தை அறுத்துக் கொள்ள
வல்லிகோள் -என்கிறார் –
காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே —ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–69-
காணிலும் உருப்பொலார் –
தாமஸ தேவதைகள் ஆகையாலே முமுஷுக்களுக்கு அவர்கள் த்ரஷ்டவ்யர் அல்லர் –
ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா பிரதி ஷித்தாஸ் து பூஜநே –
அசுத்தாஸ் தே சமஸ்தாச்ச தேவாத்ய கர்மயோநய -என்னக் கடவது இ றே –
ஆத்மாவாரேத்ரஷ்டவ்ய -என்னும் அவன் அல்லன் இறே
இங்கன் இருக்கச் செய்தே உங்கள் குண அநுரூபமான ருசியாலே கண்டாலும்
விருபா ஷத்வாதிகளாலே வடிவு பொல்லாதாய் இருப்பர்
திரு உள்ளத்தில் தண்ணளியை கோட் சொல்லித் தாரா நின்ற புண்டரீகாஷனைப் போலே
வடிவு ஆகர்ஷமாய் இருக்கிறது அன்றே
அவர்களுடைய ஹ்ர்தயத்தில் க்ரௌர்யமே அவர்கள் வடிவில் பிரகாசிப்பது
செவிக்கினாத கீர்த்தியார் –
த்ரஷ்டவ்யர் அல்லாதவோபாதி ச்ரோதவ்யரும் அல்லர்
கேட்க வேண்டி இருந்தி கோளே யாகிலும்
பித்ர் வத ப்ரசித்தி என்ன –
தத் பலான பிஷாடந சாரித்ர ப்ரதை என்ன –
அத்வரத்வம்ச கதை என்ன –
சுர அசுர வத கதை -என்ன –
இத்யாதி சரவண கடுகமான கீர்த்தியை உடையராய் இருப்பர் –
ம்ர்தனான புத்ரனை சாந்தீபிநிக்கு மீட்டுக் கொடுத்தான்
புநராவ்ர்த்தி யில்லாத தேசத்தில் நின்றும் வைதிகன் புத்ரர்களை மீட்டுக் கொடுத்தான்
என்று -இத்யாதிகளாலே ஸம்ச்ரவே மதுரமான கீர்த்தி இ றே
பேணிலும் –
ஆஸ்ரயணீயரும் அல்லர் –
ஆஸ்ரயித்தார் திறத்தில் -உன் பயலை அறுத்து இடும் -என்றும் -ஊட்டியிலே தட்டிற்றிலை
காண் -என்றும் சொல்லுகையாலே -உங்கள் ருசியாலே அவற்றையும் பொறுத்து
ச்ரவண கடோரமான கீர்த்தியையும் ஸ்வரூபத்தையும் பொறுத்து ஆஸ்ரயித்தாலும் –
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் -என்றும் -ஸூ ஸூகம் கர்த்தும் -என்றும் ஆஸ்ரயணம்
ஸூக கரமுமாய் ஸூக ரூபமுமாய் இருக்கிறது அன்றே –
வரந்தர மிடுக்கிலாத தேவரை –
பர ஹிம்சையிலே வந்தால் -ஜகது உபசம்ஹார ஷமராய்
அபிமத பலம் தருகைக்கு சக்தி இல்லாத தேவதைகளை
ஒரு பிசாசுக்கு மோஷம் கொடுப்பது
ஒரு பஷிக்கு மோஷம் கொடுப்பது
உதாராஸ் சர்வ யேவைதே -என்று தானும் -பிறரும் –
சகல பல ப்ரதோ ஹி விஷ்ணு -என்னும் விஷயம் அன்று இறே
நீ தந்த நித்யத்வம் எனக்கு கழுத்து கட்டி யாய்த்து -என்று மார்கண்டேயன் அவனை வளைக்க
மோஷ ப்ரதன் கையிலே காட்டிக் கொடுத்து நழுவும் சீலம் இறே பிறரது
ஆணம் என்று அடைந்து –
இப்படி இவர்கள் ஆஸ்ரயணீயரும் அன்றிக்கே இருக்கச் செய்தே தங்கள் பிரேமத்தால் ஆஸ்ரயித்து
ஆணம் -அரண்
நத்யஜேயம் -என்னும் விஷயம் அன்றே
மா சுச -என்ன மாட்டான்
ஏறுண்டவன் ஆகையாலே-
வாழும் ஆதர்காள் –
ம்ர்த்ராய் இருக்கிற அறிவு கேடர்காள்
ஆதர் -குருடரும் -அறிவு கேடரும்
நா ஹாரயதி சந்த்ரா சம்பாஹூ ராமஸ்ய சம்ஸ்ரிதா -என்றும்
பாஹூ இச்சாயமவஷ்ட ப்தோ யஸ்ய லோகோ மகாத்மாந -என்றும் –
அதஸோ பயங்கதோ பவதி -என்றும் -இருக்கிறார்கள் அன்றே
எம் ஆதி பால் பேணி –
எங்களுக்கு காரண பூதனானவன் பக்கலிலே ஆதரத்தைப் பண்ணி –
ஜகத் காரண வஸ்துவாய் இருக்கிறவனை
எம்மாதி -என்பான் என் என்னில் –
ஈஸ்வரன் ஜகத் ஸ்ர்ஷ்டியைப் பண்ணுகிறது முமுஷூ சிஸ்ர்ஷையால் யாகையாலே
அந்த ஸ்ர்ஷ்டி பலித்தது அநந்ய பிரயோஜனர் பக்கலிலே என்று எம்மாதி -என்று
விசேஷிக்கிறார்
நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே –
ஒருத்தராலும் அறுக்கப் போகாத உங்களுடைய பிறப்பு என்கிற தூற்றை அறுத்துக் கொள்ள
வல்லி கோளே
பிணப்பு அறுக்க -ஜன்மம் அறுக்க
ஜென்மத்தை தூறு என்கிறது அகப்பட்டவனுக்கு புறப்படாது போக ஒழிகையும்
தன்னால் தரிக்க ஒண்ணாது ஒழிகையும்
முதலும் முடிவும் காண முடியாது இருக்கையும் –
காணிலும் உருப்பொலார் -கண்டாலும் விஹார உருவம் உடையவர்கள்
செவிக்கினாத கீர்த்தியார்
கடினமான வார்த்தைகள் உடையவர்
பேணிலும் -எப்படி இருந்தாலும் ஆஸ்ரயித்தால்
வரந்தர மிடுக்கிலாத தேவரை-ஆணம் என்று அடைந்து-சரணம் என்று அடைந்து கேட்டுப் பெரும் குருடர்களே
வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்-பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே-
தேவ தாந்த்ரங்களை பார்க்கவே கூடாதே -அவற்றின் அயோக்யதைகளை சொல்லி –
ஜகத் காரணனைப் பற்றி முக்தர் ஆகணும் என்கிறார்
மற்ற தேவர்கள் “பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவர்களே” என்கிறார். மேலும், “காணிலும் உருப்பொலார்” என்கிறார்.
மற்ற தேவர்களை (தெய்வங்களை) அப்படியே போய் ஆஸ்ரயித்தாலும் (பற்றினாலும்), அவர்கள் பார்ப்பதற்கும் அழகாக இல்லை;
பகவான் புண்டரீகாஷன் (தாமரைக் கண்ணன்) – மற்றொருத்தன் (சிவன்) விரூபாக்ஷன்.
பகவான் சந்தனத்தைத் தன் திருமார்பிலே ஈஷிக்கொண்டவன்; சிவனோ சாம்பலை எடுத்து திருமார்பிலே பூசிக்கொண்டவன்.
பகவானுக்கு இருப்பதோ சிறந்த கேஸ வாசம்; சிவனுக்கு இருப்பதோ சடைமுடி!
பகவான் தலையில் இருப்பதோ உயர்ந்த புஷ்பஹாரம்; சிவன் தலையில் இருப்பதோ வெறும் கங்கா தீர்த்தம்!
இவன் ஏறுவது கருடன் மீது; அவன் ஏறுவது ரிஷபமான தாழ்ந்த வலிய பந்தமான ஜந்துவைப் படைத்திருக்கிறான்!
இவனுக்கு அடியார்கள் அத்தனை பேரும் நித்யஸுரிகள்; அவனது அடியார்களோ பேய்க் கணங்களும் பூதகணங்களும்!
இவன் பிடித்திருப்பதோ சிறந்த சங்க சக்கரங்களை; அவன் பிடித்திருப்பதோ ஒண்மழுவான ஆயுதத்தை!
எப்படிப் பார்த்தாலும் இருவருக்கும் ஒருநாளும் ஒத்துவரப்போவது கிடையாது.
ஆகவே “காணிலும் உருப்பொலார்” என்று பாடியுள்ளார் ஆழ்வார். சிவனது காட்சி ஒருநாளும் உருப்பெறுவது முடியாது.
“செவிக்கினாத கீர்த்தியார்” –
செவிக்கு இனிய கீர்த்தி என்றால், பகவானுடைய ஸ்ரீ திரிவிக்கிரம அவதாரமா – ஸ்ரீ வாமன மூர்த்தியாய் உலகளந்தானே –
அந்தப் புகழைக் கேட்பதா அல்லது ஸ்ரீ ந்ருசிம்ஹ மூர்த்திக்காகவா?
ஒவ்வொன்றும் அடியார்க்காக அடியார்க்காக என்று அவன் புகழ் செவிக்கு இனியதான கீர்த்தியாக இருக்கிறது.
“ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம்” என்பது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம அத்தியாயத்திலே தெரிவித்ததார்.
“ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:” – “ஸ்தவ்ய:” என்றால் ஸ்தோத்ரம் என்று பண்ணணும்னா, பகவான் ஒருத்தன் தான்;
அதற்கு அருகதை என்றும், மற்ற யாருக்கும் அதற்கு அருகதையே கிடையாது என்று அர்த்தம்.
ஆக, பகவான் ஸ்தவ்யன்! ஆனால், சிவனை என்னவென்று சொல்லி ஸ்தோத்ரம் செய்வது?
இவர் தானும் சுடுகாட்டிலே பஸ்பதாரியாய் சுற்றித் திரிகிறார்;
தன் தகப்பனார் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கிள்ளித் தன் கையில் வைத்துக் கொண்டிருந்தவர்;
பத்மாசுரனைக் கண்டு பயந்து ஓடிவிட்டார்; வாணாசுரனையும் கண்டு பயந்து ஓடிவிட்டார்;
தன் சிஷ்யனிடத்திலேயே அவர் “பிள்ளைக் கறி கொண்டுவா என்று! தலையை அறுத்து தனக்கு யாக யஞ்ஞம் செய்” என்று கூறினார்.
இவற்றை எல்லாம் பாடினால் அது கீர்த்தி (புகழ், தோத்திரம்) ஆகுமோ?
அப்படியே இவற்றைப் பற்றிப் பாடினாலும், அது செவிக்குத்தான் இனியதாக இருக்குமா?
இத்தனையும் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மறுபடியும் நீங்கள் அவனைத்தான் விடாமல் பிடித்துக்கொள்வோம் என்று
பிடிவாதம் பிடித்தாலும் பிடிக்கலாம்! அவர்களுக்கும் ஆழ்வார் சமாதானம் சொல்லிவிட்டார் –
“பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவரை” என்று
பாடி! அதாவது, இத்தனையும் தாண்டி நீங்கள் அவனையே ஆஸ்ரயிக்க (பற்ற) நினைத்தாலும்,
நீங்கள் கேட்கப் போவதைக் கொடுக்கிற சக்தி மட்டும் அவனுக்குக் கிடையாது!
அது இருக்குன்னாலும் அவனிடத்தில் போய் நீங்கள் ஆஸ்ரயிப்பதில் அர்த்தமுண்டு.
அதுவும் இல்லாதவனைப் போய் ஆஸ்ரயிப்பதில் ஏதானும் இலாபம் உண்டா?
அவனே லக்னனாகத் திரிய, அவனிடத்தில் போய் வேஷ்டி தானம் வேணும்னு கேட்டா தருவானா?
ஒரு கடையில் நிறைய வேஷ்டிகள் அடுக்கப் பட்டிருக்க, அவனிடத்தில் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டால் கேட்டால்,
அவன் கொடுத்துவிடுவான். ஒருத்தன் இடுப்பில் ஒன்று ஒன்று கொடியில் மாட்டிவைத்திருக்க,
அவனிடம் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டாலும் ஒன்றைக் கொடுத்துவிடுவான்;
இன்னொருத்தன் ஒரே ஒரு வஸ்திரத்தை இடுப்பில் அணிந்து கொண்டிருக்க, அவனிடம் தானம் கேட்டாலும்
அவன் அதையும் கழற்றிக் கொடுத்துவிடுவான்! ஆனால், சிவனோ, லக்னனாக, அவனே வேஷ்டி இல்லாதவனாக இருக்க,
அவனிடம் போய் வஸ்திர தானம் வேணும்னு கேட்டா, கொடுக்கமுடியலை என்றுமட்டுமில்லை; அவனும் கொடுக்கபோறதில்லை;
நமக்கும் கிடைக்கப் போறதில்லை!ஐயோ! என்னிடமே ஒன்றுமில்லை; என்னிடத்தில வந்து கேட்கிறாயே! என்று வருத்தமும் படுவான்.
இதனால்தான், ஸ்ரீ ஆழ்வார் தெரிவித்தார்: “அப்படி உங்கள் சிவனுக்கு வருத்தம் ஏற்படும்படி நீங்கள் இருக்கவேண்டாம்!
நீங்கள் ஒவ்வொரு நாளும் அவனிடத்தில் போய் கேட்கக் கேட்க, கொடுக்கமுடியாத ஸ்ரமத்தாலே அவர் துடிக்க போறார்!
ஏன் வீணாக அவனையும் சிரமப்படுத்திண்டு, உங்களுக்கும் கிடைக்காமால்….!
ஆகையால், சிரமப்பட வேண்டாம் என்று தவிர்க்கிறார் ஸ்ரீ ஆழ்வார்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை. மேலே உள்ள பாடலுக்கு வேத அர்த்த ரீதியாகவும் இவர் மேற்கோள்கள் காட்டியுள்ளார்.
“திவுக்ரீடாயாந் தாது; || திவு விஜிஹீஷாந் தாது; || திவு வியவஹாரந்: தாது; || திவு த்யுதீந்: தாது; || திவு ஸ்துதிந்:தாது; ||
திவு மோதாந்: தாது; || திவு மதாந்: தாது; || திவு காந்தீந்:தாது; || திவு கதீந்:தாது.”
“கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தனே! (இராமபிரான்) (நான்.திரு.53) – அவன் ஒருத்தன் தான் தெய்வமே தவிர,
மற்ற அனைவரும் பொல்லாத தேவரே” என்றும்,
அதனால் “திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு” –
எவனுக்குத் திருமகள் சம்மந்தம் இருக்கிறதோ அவனே பரதெய்வம்; அப்படிப்பட்ட சம்மந்தம் இல்லாதவர்கள் தெய்வம் அல்லர்;
ஆகையால், அவர்களை வணங்குவதில் எந்தப் பயனும் இல்லை என்று அற்புதமாகத் தன் பாசுரத்தில் காட்டினார் ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் .
இவருக்கும் பரமசிவனாருக்கும் நடந்த வாக்குவாத யுத்தத்தின் முடிவில்தான் பரமசிவன் இவர் பக்தியை மெச்சி,
இவருக்கு ஸ்ரீ “பக்திஸாரர்” என்ற திருநாமத்தையும் கொடுத்தார் பரமசிவனார்.
——
அநந்த க்லேச பாஜனம் -என்கிறபடியே துக்க ப்ரசுரமான இஸ் சம்சாரத்தில் சுகம்
உண்டாகக் கூடுமோ -என்னில்
ப்ராப்தி தசையில் சுகமும் –
சம்சாரத்தே இருந்து வைத்து தேவரீர் திருவடிகளிலே விச்சேதம் இல்லாத ப்ரேமத்தால்
பிறக்கும் சுகத்துக்கு போராது -என்கிறார் –
மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய் புலன் கழல்
விட்டு வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக்
கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே –83-
மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய்-
தேன் மாறாத செவ்வித் திருத் துழாய் மாலையாலே அலங்க்ர்தன் ஆனவனே
இத்தால் -திருத் துழாய் யோட்டை சம்பந்தத்தால் -சர்வாதிக வஸ்து -என்னும் இடமும் –
உபய விபூதி நிர்வாஹணத்துக்கு இட்ட தனி மாலை என்னும் இடமும் –
ஒப்பனை யழகும் -சொல்லிற்று ஆய்த்து
புலன் கழல்விட்டு வீள்விலாத போகம் –
தர்சநீயகமாய் -நித்ய சூரிகளுக்கு சதா தர்சநீயமான தேவரீர் திருவடிகளை விட்டு
வேறு போக்கில்லாத போகத்தை
புலன் கழல் -புலப்படும் திருவடிகளை
விண்ணில் நண்ணி ஏறினும்-
பரமபதத்தில் ஏறிக் கிட்டினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால்-திருஅஷ்டாஷரம் -த்வயம் –
எட்டும் இரண்டும் கூட்டு –பத்தாய் -அத்தை பக்தி -என்கிறது
பகவத் பக்தியிலே தமக்கு உள்ள கௌரவாதி அதிசயத்தாலே மறைத்துச் சொல்லுகிறார் –
கயிறு -என்று பந்தகம் என்றபடி –
மனம் தனைக்கட்டி –
சர்வ இந்திரியங்களுக்கும் ப்ரதானமான மனசை விஷயாந்தரங்களில் போகாதபடி
பந்தித்து –
வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே-
விச்சேதம் இல்லாதபடி தேவரீர் திருவடிகளிலே வைத்த ப்ரேமம்
சுகத்துக்கு சாதனமாய் இருக்கை யன்றிக்கே
தானே சுகமாய் இருக்கும் –
மட்டுலாவு –
தேன் நித்தியமாய் இருக்கும்
தண் துழாய் அலங்கலாய் புலன் கழல் விட்டு-
திருவடிகளை இந்த பூ உலகத்திலேயே அனுபவிப்பதை விட்டு
வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்-அழிவில்லாத கைங்கர்யம் பரம பதத்திலே சென்று கிட்டினாலும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி
பத்து என்ற பக்தி யாகிற பாசத்தால் மனசைக் கட்டுப் படுத்தி
வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே –
விச்சேதம் இல்லாத அமைக்கப் பட்ட ப்ரேமையால் கிடக்கும் ஆனந்தத்துக்கு ஈடு இல்லை
பத்துடை அடியவர்க்கு எளியவன் போலே –பத்து -பக்தி –வைத்த காதலே இன்பம் பயக்கும்
வைத்த காதலே இன்பமாகும் -ப்ரேமம் ஒரு ஸூகத்துக்கு சாதனமாக இல்லாமல் ஸ்வதஸ் ஸூகமாகவே இருக்கும்
அநுபவரசிகர்களான ஆழ்வார்கள் எம்பெருமானை யானையாகவே பல இடங்களில் பேசுவார்கள்.
யானைக்கும் எம்பெருமானுக்கும் பல விதங்களில் ஒத்த கருத்து நிலவும்
1.யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே இருந்து பரமாநந்தம் பயக்கும்.
எம்பெருமானும் எப்பொழுதும் நாள், திங்கள், ஆண்டு ஊழியூழிதோறும் அப்பொழுதைக்கப்பொழுதென்னாராவமுதம் என்னும்படியிருபான்.
2.யானையின் மீது ஏறவேண்டியவன் யானையின் காலைப்பற்றியே ஏறவேண்டும்.
எம்பெருமானிடம் சென்று சேரவேண்டியவுர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேரவேண்டும்.
3.யானை தன்னை கட்ட தானே கயிற்றை எடுத்துகொடுக்கும். எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் (திருச்சந்த விருத்தம்) என்கிறபடியே,
எம்பெருமானை கட்டுபடுத்தும் பக்தியாகிற கயிற்றை அவன் தந்தருள்வான்.
4. யானையை நீராட்டினாலும் அடுத்த ஷணத்திலேயே அழுக்கோடு சேரும் எம்பெருமான் சுத்தஸத்வமயனாய் பரம பவித்ரனாய்
இருக்கச் செய்வதாயும் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குமுடைய நம் போல்வாரோடு சேர திருவுள்ள மாயிருப்பான் வாத்ஸல்யத்தாலே.
5.யானையைப் பிடிக்க வேனில் பெண்யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும் அதன் போன்றே பிராட்டியின் புருஷாகாரமின்றி எம்பிரான் வசப்படான் .
6.யானை பாகனுடைய அனுமதியின்றி தன்னிடம் வருபவர்களை தள்ளிவிடும்.
எம்பெருமானும் “வேதம் வல்லார் துணைக்கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்கிறபடியே
பாகவதர்களை முன்னிட்டு புகாதாரை அங்கீகரத்தருளான்.
7. யானையின் மொழி யானைப் பாகனுக்குத் தெரியும், எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பிகள் போல்வார்க்கே தெரியும்
(பேரருளானப் பெருமானோடே பேசுபவர் நம்பிகள்).
8. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடிநூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்
எம்பெருமான் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தாலே பலகோடி பக்தவர்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம்.
9.யானைக்கு கை நீளம் எம்பெருமானு அலம்புரிந்த நெடுந்தடக்கையளிறே “நீண்ட அந்தக் கருமுகிலை யெம்மாள் தன்னை.”(பெரிய திருமொழி 205-2)
10.யானை இறந்த பின்பும் உதவும் எம்பெருமானும் தீர்த்தம் பிரசாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளின பின்பும்
இதிகாச புராணங்கள் உணர்த்தி உதவுகின்றன.
11. யானை ஒரு கையே உள்ளது எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழிய கொள்ளும் கையில்லை
12. யானை பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும். எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகம் பிரக்குருதிகளுக்கு சம்பாத்யத்திற்கு வழி செய்கிறார்.
13. யானை மெல்ல அசைந்து அசைந்து செல்லும். எம்பெருமானும் உலாவரும் பொழுது அசைந்து அசைந்து வருவார்.
14. யானை சாதுவானது எம்பெருமானும் சாதுவானவரே-
———-
120-பாட்டு –அவதாரிகை –
உன்னபாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர் மன்ன வந்து பூண்டு –
என்று வடிவு அழகிலே வந்த ஆதரத்துக்கு அவ் வடிவே விஷயமான படியை சொன்னார் -கீழ்-
இதில் –
கிடந்தானை கண்டேறுமா போலே தாமே அவ் விக்ரஹத்தை பற்றுகை அன்றிக்கே
நிர்ஹேதுகமாக பெரிய பெருமாள் தம்முடைய விக்ரஹத்தை என்னுள்ளே பிரியாதபடி வைக்கையாலே விரோதி வர்க்கத்தை
அடையப் போக்கி – அபுநா வ்ர்த்தி லஷணமாய் நிரதிசய ஆநந்த ரூபமான கைங்கர்யத்தைப் பெற்றேன் என்று –
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று உபகார ஸ்ம்ர்தியோடே தலைக் கட்டுகிறார் –
இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே -120-
வியாக்யானம்-
இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி-
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து என்கிறபடியே விச்சேதியாதே
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஆத்மகமான பல வகைப் பட ஜன்மங்களில் நின்றும் –
அஞ்ஞனாய் -நித்ய சம்சாரியாய் போந்த என்னை மாற்ற நினைத்து –
இயக்க யறாமை யாவது -ஒரு தேகத்துக்கு ஆரம்பகமான கர்மத்தை அனுபவிக்க இழிந்து –
அநேக தேக ஆரம்பகமான கர்மங்களைப் பண்ணுகையாலே
தேக பரம்பரைக்கு விச்சேதம் இன்றி செல்லுகை –
இயக்கு -நடையாட்டம் –
இயக்கல் -என்று வல் ஒற்றாய் கிடக்கிறது –
மாற்ற நினைப்பதை –மாற்றி -என்பான் என் என்னில் –
உயிர் முதலாய் முற்றுமாய் -என்றாப் போலே –
இன்று வந்துதுயக் கொண் மேக வண்ணன் நண்ணி –
விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து
தன பக்கலிலே பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை தரும்
காளமேக நிபச்யாமானவன் –
எனக்கு நினைவு இன்றிக்கே இருக்க
இன்று நிரஹேதுக கிருபையினால்
நான் இருந்த இடத்தே வந்து கிட்டி –
நண்ணுதல் -அணைதல்
நச்சு நாகணைக் கிடந்தான் -என்றும் –
பொன்னி சூழ் அரங்கமேயபூவை வண்ணா -என்றும் –
சொல்லிப் போந்தவர் ஆகையாலே -இங்கும் உய்யக் கொள் மேக வண்ணன் என்று
பெரிய பெருமாள் திருமேனியைத் தமக்கு உஜ்ஜீவன ஹேது-என்கிறார்-
என்னிலாய தன்னுளே –
அஹம் புத்தி சப்தங்கள் தன்னளவிலே பர்வசிக்கும்படி –
தனக்கு பிரகாரமான என்னுடைய ஹ்ர்த்யத்திலே –
தத்வமஸி -என்று -உபதேசித்து -அஹம் ப்ரஹ்மாசி -என்று அனுசந்தித்துப் போந்த
அர்த்தம் இ றே இவர் இங்கு அருளிச் செய்கிறார் –
இந்த சரீர ஆத்ம சம்பந்தம் இங்கே சொல்லுகிறது -தன் பேறாக உபகரித்த விதுக்குக் ஹேதுவாக –
மயக்கினான் தன் மன்னு சோதி –
அபிமதமாய் -அநுரூபமாய் -ஜ்யோதிர் மயமான –
திவ்ய மங்கள விக்ரஹத்தை பிரிக்க ஒண்ணாதபடி கலந்தான் –
மயக்கம் -செறிவு – தன்னை ஒழிய எனக்கு ஒரு ஷண காலமும் செல்லாதபடி பண்ணினான் என்கை –
ஆதலால் –
இப்படி தான் மேல் விழுந்து இவ்வளவும் புகுர நிறுத்துகையாலே
என்னாவி தான் –
தனக்கு அநந்ய சேஷமாய் -ஸ்ரீ கௌஸ்துபம் போலே -அபிமதமுமான என் ஆத்மாவானது –
இயக்கெலா மறுத்து –
அந்யோந்ய கார்ய காரண பவத்தாலே ஒழுக்கறாத -அவித்யா கர்ம வாசன ருசி ப்ரகர்தி
சம்பந்தங்களை யறுத்து –
இயக்கறாத பல் பிறப்பில் -என்று காரணமான தேக சம்பந்தகளை சொல்லிற்றாய் –
தத் கார்யமான அஞ்ஞான கர்மங்கள் என்ன –
தத் ஆஸ்ரயமான வாசனா ருசிகள் என்ன -இவற்றையும் கூட்டி -எலாம் –அறுத்து என்கிறார்
அறாத இன்ப வீடு பெற்றதே –
யாவதாத்மபாவி விச்சேதம் இல்லாத –நிரதிசய ஆனந்தமான
கைங்கர்ய ரூப மோஷத்தைப் -பெற்றது
————————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply