ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –226–

க்ருதஞ்ஞதா பல ப்ரதி க்ருதமானத்தை யுணர்ந்து -அங்கும் இங்கும் இல்லை என்று ஆறி இருக்காமல் –
செய் நன்றி பண்ண உந்தி-பிரதி க்ருதமானம் -ஆத்மாவை உணர்ந்து -தோள்களை ஆரத்தழுவி –
நியத பிரகாரம் -சரீரம் -நாமே நீர் -தன்மையை அவன் காட்ட உணர்ந்து -பிரகாரம் -அபிருத்தக் சித்தம் –
சீதா பிராட்டியை ஜனகர் சமர்ப்பித்தது போலே அஹந்தா அவளே – -அனைத்தும் அவனது சரீரம் என்று உணர்ந்து –
சமர்ப்பிக்க ஒன்றும் இல்லை என்று ஸமாஹிதரானார் –

ப்ராப்ய ப்ராபக ஆபாசகங்கள் ஒழிந்து முதல் படி
ப்ராப்யம் -திருவேங்கடம் நடுவில்
ப்ராப்யம் அவதி -திருவாறன் விளை -கீழே பார்த்தோம்
ப்ராப்யம் ஏக பரர் ஆக்குகிறார்
பயிலும் சேஷிகள் -நெடுமாற்கு அடிமை-அவர்களே போக்யம் -ததீய சேஷத்வம் -பாகவதர்கள் சேஷிகள் –
அவனுக்கே சேஷபூதன் -8-8-/-8–9-உகாரம் நமஸ் அர்த்தம்
ஆந்திர அபிப்ராயம் –பாகவத சேஷத்வம் பாரதந்தர்யம் -8-10-கொடு மா வினையேன்
அடியார் உடன் கூடும் இது அல்லாமல் பழுதே பலகாலம் போயின என்று அழுகிறார்
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
செல்வச் சிறுமீர்காள் -முதலிலே ஆண்டாள்

சத்ய காமத்வம்-எட்டாம் பத்தில்

பதிகங்கள் சங்கதி –
திருவாறன் விளை–ஆனந்தமாக பாட -தன்னைப் பார்த்து -பாஹ்ய சம்ச்லேஷம் இல்லாமல் வியசனப்பட்டார் –
ஆஸ்ரித பாரதந்த்ரம் குணத்தில் சங்கை -அசேஷ பிரகாரத்வம் -ஸ்வரூபத்திலும் சங்கை–இரண்டும் தஞ்சமாக நினைத்து இருந்தாரே –
அதி சங்கை பண்ணக் கூடாது ஆழ்வீர்-உபகார பரம்பரைகளை காட்ட – ப்ராபக பிரதான பதிகம் –8-1-ஸமாஹிதரானார் –
தனது பாக்ய குறைவு –சீதாப் பிராட்டி போலே -முகம் காட்ட வில்லை –
தமக்கு அந்ய ருசி தவிர்ந்ததை அறிவித்து -அத்தனையும் விட்டேன் -8-2-ப்ராப்ய விரோதிகளும் ப்ராபக விரோதி களும் இல்லை
-8-2-4-பெருங்குளத்துக்கு ஒரு பாசுரம் -குடபால் நின்ற மாயக் கூத்தன்–மங்களா சாசனம் –
கோல நீல நல் நெடும் குன்றம் வருவது ஓப்பான் -8-2-10–பாசுரம் வந்ததும்
பரிவர் இல்லையே கலங்கி -8-3-இதில் வருவார் செல்வார் திரு வாழ் மார்பன் –
அமர்ந்த திருக்கோலம் -ஒரே திவ்ய தேசம் மலையாள திவ்ய தேசங்களில் இது –
நீர் இருக்க சர்வரும் இருந்தது போலே என்று காட்டி அருள –
சுக்ரீவன் கலங்க வீர ஸுர்ய பராக்கிரமம் காட்டியது போலே -மஹா மதிகள் அச்சம் கெட -திருச் சிற்றாறு பதிகம் -8-4-
திகழ என் சிந்தையுள் இருந்தான் -பாசுரம் -அணைக்க முடியாமல் -மாயக்கூத்தா -ஒரு நாள் காண வாராய் -வாசத் தடாகம் போல் -8-5-
இது வரை ஆழ்வார் விடாய்–
மேலே-8-6- பெருமாளுக்கு ஆழ்வார் மேல் உள்ள விடாய் -இப்படி ஆழ்வாரை உருவாக்க எத்தனை ஜென்மங்கள் –
தண்டகாரண்ய ரிஷிகளைக் கண்டு வெட்கி பெருமாள் –
வந்து திருக் கடித்தானாம் நின்றார் -தங்குவீடாக –நாளை வதுவை மனம் -பரதனை ஆசுவாசப்படுத்தி பெருமாள் –
பாண்டவ தூதன் -விதுரர் போல்வார் ஆசுவாசப்படுத்த -குசஸ்தலம் தங்கி -வந்தது போலே
எல்லியும் காலையும் –8-6-திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் –
பேற்றுக்கு கிருஷி பண்ணினது இது வரை -பக்தி உழவன்
கிருஷி பலித்தது வேலி போட்டு பாதுகாக்க -8-7–இருத்தும் வியந்து –மூன்று தத்துக்கு பிழைத்து வந்த குழந்தையை
தாய் பார்த்துக் கொண்டே இருப்பது போலே வியந்து இருத்தும் –
கண்டு கொண்டு எனது ஏழை நெஞ்சை ஆளும் –
பிராதி கூல்யம் போக்கி –அனைத்தையும் அவனே பண்ணி -ஆழ்வார் கிடைப்பாரா தவித்தார் –
சுக்ரீவன் நாதம் இச்சதி -விபீஷணன் கிடைப்பானா -போலே –
கண்களால் பருகுமா போலே பார்த்தார் –
மெய்யே ஆஸ்ரித பாரதந்தர்யம் உடையவர் என்று தெளிந்தார் இத்தால்
இவர் அகலப் பார்க்கும் பிரகிருதி -ஆத்மாவின் வை லக்ஷண்யம் புரிய வைக்க -8-8–கண்கள் சிவந்து –
கரிய வாய் வாயும் சிவந்து -ஆழ்வாரைப் பெற்ற பின்பே சோகம் தீர்ந்து -தலை அசைய குண்டலங்கள் ஒளி வீச
அடியேன் உள்ளான் -இயத்தா ராஹித்யம்-படியே இது என்று குறைக்கலாம் படி அல்லன்-பராத்பரன் –
உணர்வில் உள்ளே இருத்தினேன் -அதுவும் அவனது இன்னருளே- பரமாத்மா ஸ்வரூபம் உணர்ந்தீரே ஆழ்வீர்
நியத பிரகாரம்–ஸ்ரீ கௌஸ்துபம் போலே அன்றோ பகவத் சரீரம் -நீர் பிரிந்து போக முடியாதே –
யானும் தானாய் ஒழிந்தானே–
இவ்வளவு நெருக்கம் இருக்க -சேஷ ரசம் அறிந்து -அடியேன் உள்ளான் -அடிமை தன்னை அனுபவிக்க
அநந்யார்ஹ சேஷத்வம் -பர்யந்தம் –வளர -தோழி பதிகம் -மண விலக்கு -குட்ட நாட்டுத் திருப்புலியூர் –இவர் நேர் பட்டாள்-
உகாரம் நமஸ் சப்தார்த்தம் -அநந்யார்ஹத்வம் சம்பந்தம் -அவனுக்கே -நான் எனக்கு உரியன் அல்லேன் -பாரதந்தர்யம் –
அதன் யாதாத்ம்யம் -ஆழ்ந்த பொருள் -ததீய சேஷத்வம் பர்யந்தம் -நெடுமாற்கு அடிமை -8-10-
பிரியா அடிமை -சயமே அடிமை தலை நின்றார் -கோதிலா அடிமை –
அம்மணி ஆழ்வான் கோசல சாம்ராஜ்யம் வந்தவருக்கு இந்த பதிகம் கால ஷேபம் பட்டர் சாதித்த ஐதிக்யம்

எட்டாம் பத்தால்-

கீழ் சொன்ன சர்வ சக்தி யோகத்தாலே நித்யமாக கல்பிதமான –
போக்ய – போக உபகரண -போக ஸ்தானங்களை உடையவன் ஆகையாலே –
சத்ய காமனான சர்வேஸ்வரன் -கீழ்
தமக்கு உண்டான வாசிகமான அடிமையையும் விஸ்வமரித்து -தன் அனுபவ அலாபத்தாலே
கலங்கி -தன்னுடைய குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ணி –
சம்சார தோஷ அனுசந் தானத்தாலே -அஞ்சின இவரைத் தரிப்பிக்கைக்காக –
பூர்வோக்த உபகாரத்தை ஸ்மரிப்பிக்க –
அத்தாலே க்ருதஜ்ஞராய் -அதுக்கு பலமாக –
இவர் ஆத்ம சமர்ப்பணம் பண்ண –
(பேர் உதவிக் கைம்மாறா தோள்களை ஆரத்தழுவி என்னுயிரை அற விலை செய்தனன் சோதீ – 8-1-10)
அத்தாலே தான் பெறாப் பேறு பெற்றானாய்-
இவருக்கு உண்டான ஆத்ம குணங்களாலே அதி ப்ரீதனாய் –
இவர் திரு உள்ளத்திலே இருந்து நிரதிசயமாக அனுபவிப்பித்து –( 8-6-8-7-)இனி
அயோக்யர் என்று அகலாதபடி ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தைப் பிரகாசிப்பிக்க –(8-8)
அதனுடைய யாதாத்ம்யத்தை அனுசந்தித்தவர்
கீழ் தம்முடைய பிராப்ய பிராபகங்களை கேட்டு உகந்தவர்கள் –
பிராப்யம் ஒன்றும் -பிராபகம் ஒன்றுமாய் -இரு கரையர் ஆகாதபடி –
பிராப்யமாக சொன்ன விஷயம் ஒன்றிலுமே அவர்களை தத் பரர் ஆக்குகிறார் என்கிறார் ..

(உப பத்தேச ச பொருந்துகிறபடியால் ப்ராபகமான ப்ரஹ்மமே ப்ராப்யம் -வேத வியாசர் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்
இங்கு பிராப் யமான அர்ச்சா திவ்ய தேசமே பிராபகம் –
பாகவதர்களே ப்ராபகம்–அவதியையும் தாண்டி ஒன்றாக -திவ்ய தேசமே இருக்குமானால்
பாகவதர்கள் இருக்கச் சொல்ல வேணுமோ – கிம் புன நியாயம் )

——————————————-

1-தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு
என்னும்படி சக்தியாலே நித்யமாக கல்பித்த
பத்னி பரிஜனாதிகளை உடைய சத்ய காமன்
கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும்
கலக்கமும் சங்கையும் அச்சமும் தீரத்
2-தலைச் சிறப்ப தந்தவதில் க்ருதஜ்ஞதா பல
பிரத்யு உபகாரமாக வேந்தர் தலைவன்
கன்யகா தானம் போலே ஆரத் தழுவி
அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே
அதீவ விளங்கிப் பணைத்து
3-ஜன்ம பாசம் விட்டு ஆத்வாரம் ஆளும் ஆளார்
என்று பரிந்து அனுரூபனோடே அமர்ந்து பிரிவில்
க்ருபண தசையாகத் துவரும் சீதா குணங்களாலே
ப்ரீதி வர்த்தித்து
4-தித்திக்க உள்ளே உறைந்தது கண்டு கொண்டு இருந்து
அமானுஷ போகம் ஆக்கினவன்
5-மூன்று தத்துக்குப் பிழைத்த அருவினை நோய்
மறுவலிடாமல் சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
6-தேஹாதிகளில் பரமாய் ,நின்று நினைக்கில் லஷ்மீ துல்யமாய் –
அவர்க்கே குடிகளாம் பர தந்திர ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்
7-ஸ்வ சாதன சாத்யஸ்தர் இருகரையர் ஆகாமல்
மண்ணவரும் வானவரும் நண்ணும் அத்தையே
குறிக் கொண்மின் உள்ளத்து என்று
பிராப்ய ஏக பரர் ஆக்குகிறார்
எட்டாம் பத்தில் ..

(சத்யகாமன் -ஆத்ம லாபத்தாலே அதீவ விளங்கி -பணைத்து -ப்ரீதி வர்த்தித்து -உறைந்து -கண்டு கொண்டு இருந்து –
அமானுஷ போகம் ஆக்கினான் -அங்கனம் ஆக்கினவனாகி நோய் மறுவலிடாமல் சிறியேன் என்றதன் பெருமையைக் காட்டினேன் –
காட்டக் கண்டு அனுசந்தித்த ஆழ்வார் ஸ்வ சாதன சாத்யஸ்தர் -இருகரையராகாமல் -அவர்களை ப்ராப்ய ஏக பரராக்குகிறார் -என்றபடி-

வேந்தர் தலைவன் -ஜனக மகாராஜன் / ஜென்ம பாசம் விட்டு-முதல் – சீதா குணங்களால் -வரை
ப்ரீதி வர்த்திக்க காரணங்கள் -சீதா பிராட்டி -ஆழ்வார் சாம்யம் சொல்லிற்று இத்தால் )

————————————–

1-தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு
என்னும்படி சக்தியாலே நித்யமாக கல்பித்த
பத்னி பரிஜனாதிகளை உடைய சத்ய காமன்-
அதாவது-
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார் மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி-8-1-1- -என்றும் –
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே யாம்–8-3-6-என்றும் –
நேர்பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன்–8-9-11-என்றும் –
நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த-8-10-11 -என்றும்
லஷ்மீ பிரப்ருதி திவ்ய மகிஷிகளுக்கு வல்லபனாய் -நித்ய ஸூரிகள் ஏவிற்றுச் செய்ய –
அவர்கள் சேஷ வ்ருத்திக்கும் -ஜ்ஞானாதிகளுக்கும் தானே விஷயமாய் –
தன்னோடு பொருந்தி பூர்ணமாய் கட்டளைப் பட்டு இருக்கிற லோக
த்ரயத்துக்கும் நிர்வாஹனாய் இருக்கும் என்னும் படி —
கீழ் சொன்ன சக்தி தன்னாலே நித்யமாக கல்பிக்க பட்ட -பத்னி பரிஜன ஸ்தான –
போக்ய போக உபகரணங்களை உடையவன் ஆகையாலே
சத்ய காமனாய் இருக்கிறவன்-

கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும் கலக்கமும் சங்கையும் அச்சமும் தீரத்
அதாவது
உம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ள வைத்தோம் -என்று
தான் இவரைக் கொண்டு வாசிகமான அடிமையும் விஸ்மரிக்கும் படி ஆக்கின –
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி -8-1-2–என்று
தன்னைக் கண்டால் கண்டு அனுபவிக்கப் பெறாமையால் வந்த கலக்கமும் –
அவ்வளவு இன்றிக்கே –
உமர் உகந்து உகந்து -8-1-4–என்று தொடங்கி –அறிவொன்றும் சங்கிப்பன்—8-1-4-என்று
தன்னுடைய ஆஸ்ரித பாரதந்த்ரமாகிய குணத்திலும் –
இறந்ததும் நீயே -8-1-7–என்று தொடங்கி –அறிவொன்றும் சங்கிப்பன்–8-1-7-என்று
தன்னுடைய சர்வ பிரகாரித்வம் ஆகிய ஸ்வரூபத்திலும் -பண்ணிய சங்கையும் –
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல்-8-1-9–என்று
சம்சார தோஷ அனுசந்தானத்தால் வந்த அச்சமும் நிவ்ருதம் ஆகும் படியாக
( கலக்கம் -குண சங்கை -ஸ்வரூப சங்கை -அச்சம் -நான்கும் தீரும் படி )

————————————-

2-தலை சிறப்ப தந்தவதில் க்ருதஜ்ஞதா பல பிரத்யு உபகாரமாக-
அதாவது-
தாள்களை எனக்கே தலை தலை சிறப்பத் தந்த-8-1-10- -என்னும்படி-
மலரடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க பல அடியார் முன் அருளிய –7-10-5-
என்று பராசராதிகள் -முதல் ஆழ்வார்கள்- உண்டாய் இருக்க -தம்மைக் கொண்டு வாசிகமான அடிமையைக் கொண்ட
பூர்வோ உபகாரத்தை ஸ்மரிப்பிக்க –
(மலர் அடிப் போதுகளை பிரார்த்திக்க தாள்களை எனக்கே தலை சிறப்பத் தந்தானே )
அப்படி மிக சிறக்கும்படி உபகரித்ததில் தமக்கு உண்டான
க்ருதஜ்ஞ்தைக்கு பலம் சத்ருச பிரதுபகாரம் ஆக-

வேந்தர் தலைவன் கன்யகா தானம் போலே ஆரத் தழுவி அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே-
அதாவது
உதவிக் கைம்மாறு என் ஆர் உயிர் என்ன -உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -7-9-10–என்று
கீழ் பிரதுபகாரமாக ஆத்மாவை சமர்ப்பிக்கத் தேடி அதின் பகவதீயத் அனுசந்தானத்தாலே
நிவ்ருத்தர் ஆனபடியும் அறியாதபடி -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தால் கலங்கி –

வேந்தர் தலைவன் சனகராசன்-என்கிறபடி
ஷத்ரிய அக்ரேசனராய் -ஜ்ஞானாதிகனான ஜனக ராஜன் -மகோஸ்வரமான தனுர் பங்கம் பண்ணின
பெருமாள் ஆண் பிள்ளைத் தனைத்தை கண்ட ஹர்ஷத்தால் கலங்கி –
விஷ்ணோஸ் ஸ்ரீரீர அனபாயிநீ – ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-8-17–என்கிறபடியே -தத் அப்ருதக் சித்தையாய் –
ராகவத்வே பவத் சீதா – ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-9-144–என்று தத் அவதார அனுகூலமாக அவதரித்த பிராட்டியை –

இயம் சீதா மம ஸூதா சஹ தர்ம சரீதவ -பிரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணிம்
க்ருஹ்னீஷ்வ பாணிநா-பால–73-26 -என்று சமர்ப்பித்தாப் போலே-( மமகாரம் விட்டவன் மமகாரம் )
பேர் உதவிக் கைம்மாறத் தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன்-8-1-10–என்று
அமூர்தமாய் இருக்க செய்தே -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தாலே –

தாளும் தோளுமாய் பணைத்துத் தோற்ற -பாவன பிரகர்ஷத்தாலே அணைத்துக் கொண்டு அத்ர ஆதரத்தோடு
அனந்யார்ஹமாக சமர்ப்பித்த ஆத்ம வஸ்துவைப் பெருகையாலே
அதீவ விளங்கிப் பணைத்து
அதீவ ராமச் சுசுபே –பால-77-30-என்றும்
அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய சா ஜனகத்மஜா -ஆரண்ய-37-18–என்றும்
அவளைப் பெற்று விளங்கினாப் போலே –
சோதி-8-1-10- -என்று
இவர் பேசும் படி இவர் தம்மது அல்லாத ஒன்றைத் தம்மதாகப் பிரமித்து கொடுத்தாப் போலே –
அவனும் தன்னது அல்லாத ஒன்றைப் பெற்றாப் போலே பிரமித்து அத்யுஜ்வல்லனாய் –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்-8-1-10- -என்னும்படி
சதசாகமாகப் பணைத்து-

————————————

3-ஜன்ம பாசம் விட்டு ஆத்வாரம் ஆளும் ஆளார் என்று பரிந்து அனுரூபனோடே அமர்ந்து பிரிவில்
க்ருபண தசையாகத் துவரும் சீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து-
அதாவது –
ஸ்ரீ ஜனக மகா ராஜன் திருமகள் பெருமாளைக் கைப் பிடித்த பின்பு அவர் அளவில்
பிரேமத்தால் ஜன்ம பூமியான ஸ்ரீ மிதிலையை நினையாதாப் போலே –இவரும் –
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு -8-2-11-என்று
திருவடிகளைக் கிட்டுகையில் சங்கத்தாலே -புறம்புண்டான வழிய சங்கங்களை நிச் சேஷமாக விட்டு –

ஆத்வாரம் அனுவவ்ராஜ மங்களான்யா பிதத்யுஷீ -அயோத்யா-16-21-(ஆத்வாரம் -வாசல் அளவும் )-என்று
அவள் பெருமாள் உடைய வடிவழகைக் கண்டு மங்களா சாசனம் பண்ணினாப் போலே -இவரும் –
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்-8-3-3-என்று
தமக்கு பரிகைக்கு ஒரு ஆளும் ஆளுகிறிலீர்–மலை சுமந்தார் போலே திரு ஆழியையும்
திரு பாஞ்ச சந்யத்தையும் தரிப்பார் தாமாய் இரா நின்றது என்று -அவன் சௌ குமார்யத்தைக் கண்டு பரிந்து –

அவள் பெருமாளுடைய சௌர்யாதிகளை நினைத்து பயம் கெட்டு -துல்ய சீல-ஸூந்தர-16-5 -இத்யாதிப் படியே
தனக்கு அனுரூபரான இவரோடு பொருந்து அனுபவித்தாப் போலே -இவரும் –
வார் கடா வருவி–8-4-1-என்று தொடங்கி -அவன் சௌர்யாதிகளை அனுசந்தித்து -நிர்பரராய் –
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான் முகனை யமர்ந்தேனே-8-4-10 -என்று
அவனோடு பொருந்தி அனுபவித்து –

விஸ்லேஷ தசையிலே -அவள் –
ஹி மகத நலிநீவ நஷ்ட சோபா வ்யசன பரம்பர யாதி பீட்ய மானா
சஹ சர ரஹீதேவ சக்ர வாகி ஜனக சுதா க்ருபாணாம் தசாம் பிரபன்னா -ஸூந்தர-16-30-என்று
நிர்க்க்ருணரும் இரங்க வேண்டும்படியான தசையைப் பிராப்தையானாப் போலே -இவரும் –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -8-5-2–என்று
அவனைக் காண ஆசைப்பட்டு -திக்குகள் தோறும் பார்ப்பது -கூப்பிடுவது ஆகையாலே –
கண்ணும் வாயும் நீர் பசை அறும்படி ஆகையால் –

ஜனக குல சுந்தரியின் குணங்கள் எல்லாம் இவர் பக்கலிலே காண்கையாலே –
ப்ரியாது சீதா ராமஸ்ய தாரா பித்ரு க்ருதா இதி குணாத் ரூப குணச் சாபி ப்ரீதிர்ப் பூயோப் ப்யவர்த்தத–பால -77-25-என்று
குண தர்சனத்தாலே அவள் பக்கல் ப்ரீதி வர்த்தித்தால் போலே
இவர் அளவில் ப்ரீதி வர்தித்தது —

————————————————–

4-தித்திக்க உள்ளே உறைந்தது-
அதாவது –
மனஸ்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித -பால -77-25 -என்று
எப்பொழுதும் அவள் நெஞ்சுக்கு இனிதாம்படி -இருந்தாப் போலே –
உள்ளும் தோறும் தித்திப்பான்–8-6-3–என்றும் ,
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் -8-6-2–என்று
அனுசந்திக்கும் தோறும் நிரதிசய போக்யனாய்க் கொண்டு
இவர் திரு உள்ளத்தில் நித்ய வாசம் பண்ணி –

கண்டு கொண்டு இருந்து அமானுஷ போகம் ஆக்கினவன்
அதாவது –
இருந்தான் கண்டு கொண்டு -8-7-2-என்று
தரித்திரன் தன லாபம் உண்டானால் பார்த்துக் கொண்டே இருக்குமா போலே
இவரைப் பெற்ற ப்ரீதியாலே -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருந்து –
சமா த்வாதச தத்ராஹம் ராகவச்ய நிவேசன
புஞ்சானா அமானுஷான் போகான் சர்வ காம சம்ருத்திநீ –ஸூ ந்தர-33-17-
(திரு அயோத்தியில் -12-வர்ஷங்கள் பெருமாளுடன் அமானுஷ போகம் அனுபவித்து அவாப்த ஸமஸ்த காமாளக இருந்தேன் )-என்று
விஸ்லேஷ தசையிலும் வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிக்கலாம் படி -அவளை –
மானுஷம் அன்றிக்கே -திவ்யமாய் இருந்துள்ள போகங்களைப் புஜிப்பித்தாப் போலே -இவரையும் –
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேன்-8-7-2–என்றும் –
செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் அன்றி நான் அறியேன் மற்று அருளே –8-7-7-
என்று வித்தராய்ப் பேசும்படி -அப்ராக்ருத போகங்களைப் புஜிப்பித்தவன்-

——————————————

5-மூன்று தத்துக்கு பிழைத்த -அருவினை நோய் மறுவலிடாமல் – சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
அதாவது –
அருவினை நோய் மறுவலிடாமல்-
மருள் தானீதோ—8-7-3–என்றும்
பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் -8-7-6–என்றும்
அருள் தான் இனி யான் அறியேன் -8-7-3-என்றும்-
உகப்பு செல்லா நிற்கச் செய்தே –

மூன்று தத்துக்கு பிழைத்த — சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
அதாவது
சிறியேனுடை சிந்தையுள் நின்று ஒழிந்தார் -என்று
தம் சிறுமையை அனுசந்தித்தவாறே –
1-வள வேழ் உலகிலே -1-5-
களவேழ் வெண்ணெய் தொட உண்ட கள்வா என்பேன் -அரு வினையேன் -என்றும் –
வணங்கினால் உன் பெருமை மாசுணாதோ-என்றும் –
அடியேன் காண்பான் அலற்றுவன் இதினால் மிக்கு ஓர் அயர்ப்பு உண்டே -என்றும்-

2-பொரு மா நீள் படையிலே –1-10-
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் -என்றும் –

3-அம் தாமத்து அன்பிலே –2-5-
அல்லாவி உள் கலந்த -என்றும் –
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை -என்றும் –

இப்படி மூன்று இடத்தில் வந்து பரிஹ்ருதம் ஆகையாலே -மூன்று தத்துக்கு இவர் பிழைத்த
அயோக்யதா அனுசந்தான வியாதி -மறுவலிட்டு இன்னும் இவர் அகலில் செய்வது என் என்று அஞ்சி –
இனி இவர் தாம் அகலுகிறது -வந்தேறியான அசித் சம்பந்தத்தை இட்டு -இது நமக்கு அனர்ஹம் என்று இறே –
இதனிடைய யதாவஸ்தித வேஷத்தைக் கண்டால் அகல ஒண்ணாதே என்று பார்த்து –

அது மறுவல் இடாதபடியாக –சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட-
அதாவது –
நமக்கு கௌஸ்துபம் போலவும்
ஸ்ரீ ஸ்தனம் போலவும்
தேஜஸ் கரமுமாய் போக்யமுமாய் இருக்கும் –
அப்ருக்து ஸித்த விசேஷணமாய்க் காணும் உம்முடைய ஆத்ம ஸ்வரூபம் இருப்பது என்று –
சிறிதாக இவர் அனுசந்தித்த ஆத்ம வஸ்துவின் வைலஷண்யத்தை –
யானும் தானாய் ஒழிந்தான்-8-8-4 -என்றும் –
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாக தித்தித்து -8-8-4–என்று தனக்கு அப்ருதக் ஸித்த பிரகாரமாகவும்
நிரதிசய போக்யமுமாகவும் அனுசந்திக்கும் படி காட்டிக் கொடுக்க

(பிரகலாதன் -திரௌபதி -கஜேந்திரன்–மூன்று தப்புதல் பகவானுக்கு
விந்த்யாவாடம் -ஸ்ரீ ரெங்க விஷ விபத்து- கிருமி கண்ட சோழ ஆபத்து -மூன்றும் எம்பெருமானுக்கு )

——————————————————-

6-தேஹாதிகளில் பரமாய் ,நின்று நினைக்கில் ஸ்ரீ மஹா லஷ்மீ துல்யமாய் –
அவர்க்கே குடிகளாம் பர தந்திர ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்
அதாவது –
சென்று சென்று பரம் பரமாய் -8-8-5–என்கிறபடியே
தேக இந்திரியங்களில் வ்யாவிருத்தமாய் -ஞான ஆனந்த மயமாய் –

நினையும் நீர்மை யதன்றி வட்கிது நின்று நினைக்கப் புக்கால் -8-9-5-என்றும் –
அருமாயன் பேச்சின்றி பேச்சு இலள் -8-9-1–என்றும் –
அன்று மற்றோர் உபாயம் என் -8-9-10–என்றும் –
யதா நிரூபணம் பண்ணில் பிராட்டியோபாதி -அனந்யார்ஹமாய் –

அவ்வளவும் அன்றிக்கே –
மாகாயம் பூக் கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்கமிலா அடியார் அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட் பாடே —ஊழி தொரு ஊழி வாய்க்க தமியேற்கு –8-10-10-
என்று விலஷண விக்ரக யுக்தனான சர்வேஸ்வரனை விஸ்லேஷிக்க ஷமர் அல்லாத பாகவதர்களுடைய
சேஷத்வத்தின் எல்லையில் நிற்கிறவர்கள் எனக்கு சேஷிகள்-
இரு கரையர் -அன்றிக்கே அவர்களுக்கே ச பரிகரமாக அனந்யார்ஹனாய்ச் செல்லும்
நல்ல கோட் பாடு கால தத்துவமுள்ள அனையும் எனக்கு சித்திக்க வேண்டும் என்று –
இப்படி ததீய சேஷத்வ காஷ்டை அளவும் செல்ல நிற்கும் படி பரதந்த்ரமான
ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்-

(தேகாதி இந்திரியங்கள் -காட்டில் விலக்ஷணமான ஞான ஆனந்த மயம்-8-8 -திருவாய் மொழி அர்த்தம்
அதுக்கும் மேலே அநந்யார்ஹ சேஷத்வம் ஸ்வரூபம்
ஸ்ரீ மஹா லஷ்மீ துல்யம் –நினையும் நீர்மை யது அன்று –
இந்த அளவு என்ற தன்மை நினைக்கவும் முடியாதே -8-9-திருவாய் மொழி அர்த்தம்
அதுக்கும் மேலே -அத்யந்த பாரதந்தர்யம் –
அவருக்கே குடிகளாம்–ததீய சேஷத்வ பரதந்த்ர ஸ்வரூபம் -8-10-நெடுமாற்கு அடிமை திருவாய் மொழி அர்த்தம்
இனிப் பிறவி யான் வேண்டேன் என்று உபக்ரமித்தவர் ஊழி ஊழி தோறும் பிறந்து
அவர்களுக்கே குடிகளாக செல்ல பிரார்த்தனை -இதுவே நல்ல கோட்ப்பாடு )

—————————————–

7-ஸ்வ சாதன சாத்யஸ்தர் இரு கரையர் ஆகாமல்
மண்ணவரும் வானவரும் நண்ணும் அத்தையே
குறிக் கொண்மின் உள்ளத்து என்று
பிராப்யை ஏக பரர் ஆக்குகிறார்
எட்டாம் பத்தில்
அதாவது
தம்முடைய சாதன சாத்தியங்களே தங்களுக்கு என்று இருக்கிறவர்கள்-
தத் விஷயம் பிராபகமும் ததீய விஷயம் பிராப்யமுமாய் -இரு கரையர் -ஆகாதபடி-
(அவன் உபாயம் -திவ்ய தேசம் உபேயம் -என்று உபாய உபேயங்களை வெவ்வேறாகக் கொள்ளாமல் -என்றபடி-
வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் -ஸ்ரீ வசன பூஷணம் -411-)
திருக் கடித் தானத்தை ஏத்த நில்லா குறிக் கொள் மினிடரே -8-6-6–என்றும்-
கோவிந்தன் மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை மண்ணவர் தாம் தொழ –
வானவர் தாம் வந்து நண்ணு திருக் கடித் தான நகரே இடர் கெட உள்ளத்து கொள்மின்-8-6-7–என்றும்-
திருக் கடித் தானத்தை ஸ்தோத்ரம் பண்ணின அளவில் -துக்கங்கள் எல்லாம் நிலை குலைந்து போம் –
இத்தை குறிக் கொள்ளுங்கோள் –சர்வேஸ்வரனுடைய சர்வ சுலபமான திரு அடிகளை
உபய விபூதியில் உள்ளார் எல்லாரும் அனுபவிக்கும் படியான திருக் கடித் தான நகரை
உங்கள் சமஸ்த துக்கங்களும் போம்படி நெஞ்சில் கொண்டு அனுசந்தியுங்கோள் என்று
கீழில் பத்தில்- பிராப்யமாக உபதேசித்த அர்ச்சாவதார பூமியே -துக்க நிவர்தகம் என்கையாலே –
பிராப்யமான விஷயமே பிராபகம் என்று தர்சிப்பித்து -பிராப்ய விஷயம் ஒன்றிலுமே –
தத் பரர் ஆக்குகிறார் எட்டாம் பத்தில் என்கை —

(நமஸ் சப்தம் -அவனுக்கே -ஆர்த்த -அடியாருக்கு அடியார் –திவ்ய தேசமே ப்ராப்யம் –
அடியாருக்கு அடியார் சரம காஷ்டை-இதில் அந்தர் கதம்-
கிம் புந நியாயம் -திவ்ய தேசமே என்பதால் அடியார் அடியார் எல்லை வரை வருமே
உபாதானமே நிமித்தம்-ஏக மேவ அத்விதீயம் சாந்தோக்யம் -உபபத்தேச்ச–ஸ்ரீ ப்ரஹ்ம சூத்ரம்
பிராப்யமும் பிராபகமும் ஒன்றே -இங்கு
ததீய விஷயம் -திவ்ய தேசம் -8-6-திருக்கடித்தானம் -ஏத்த இடர் நில்லா என்பதால் ப்ராபகம்-மண்ணவரும் விண்ணவரும் அடையும் இடம் –
திருவாறன் விளை கீழே -ஆகவே திவ்ய தேசங்கள் எல்லாம் என்றதாயிற்று –
அதன் காஷ்டை-எல்லை நிலம் -8-10- )

( அகாராரத்தம் -8-8-பிரணவம்
நமஸ் சப்தம் -8-9-
நமஸ் அர்த்தம் -8-10-
நாராயண ஆய அர்த்தம் -9-1-/9-2-/9-3-இப்படி ஆறுக்கும் சங்கதி ஈட்டில் உண்டே )

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: