Archive for March, 2020

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –17-முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் இத்யாதி —

March 31, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி ஸ்ரீ எம்பெருமானார் செய்த உபகாரத்தை கேட்டு தத் சமாஸ்ரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை
ஆஸ்ரயித்தாலும்-சுக துக்க நிபந்தனமான -கலக்கம் வரில் செய்வது என்ன –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பக்கலிலே சிநேக யுக்தராய் -எங்கள் நாதராய் இருக்கிற
ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்கள் அவை மேலிட்டாலும் கலங்கார் என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ் எல்லாம் ஸ்ரீ ஆழ்வார்களை இட்டே ஸ்ரீ எம்பெருமானாரை கொண்டாடுகிற பிரகரணம் ஆகையாலே
இப்படி ஸ்ரீ எம்பெருமானார் செய்து அருளின உபகாரங்களைக் கேட்டு -தத்சமாசரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை
ஆஸ்ரயித்தாலும் சுக துக்க நிபந்தமாக கலக்கம் வரில் -செய்வது என் என்று -ஸ்ரீ திருக் கண்ண மங்கையுள் நின்று அருளின
பக்தராவி விஷயமாக திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்த -ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு பிரிய தமரான
ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்களுக்கு -சுக துக்கங்கள் வந்து மேல் விழுந்தாலும் –
ஹர்ஷாமர்ஷங்களாலே சலியார்கள்-என்கிறார் .

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

இங்கனம் கலியினால் நலி உறாது உலகினைக் காத்து ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றிடினும்
இன்ப துன்பங்களால் நேரிடும் கலக்கம் விளக்க ஒண்ணாதது அன்றோ என்பாரை நோக்கி-
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருக்கு இனியரும் எங்களுக்கு நாதருமான ஸ்ரீ எம்பெருமானாரைப்-பற்றினவர்கள்
இன்ப துன்பங்களால் கலங்க மாட்டார்கள் -என்கிறார் —

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே -17 –

பத உரை –

கலை-சாஸ்திரங்கள்
பரவும் -துதிக்கும்
தனி ஆனையை -ஒப்பற்ற மதம் கொண்ட யானை போன்றவனான
கண்ண மங்கை நின்றானை -திருக் கண்ண மங்கையில் எழுந்து அருளி இருக்கும் பத்தராவி எம்பெருமானை
தண் தமிழ் செய்த -குளிர்ந்த தமிழ் கவி பாடின
நீலன் தனக்கு -திரு மங்கை ஆழ்வாருக்கு
உலகில் -உலகத்தில்
இனியானை -அன்பரான
எங்கள் -எங்களுடைய
இராமானுசனை -எம்பெருமானாரை
வந்து -அடைந்து
எய்தினர் -பற்றினவர்கள்
துயரங்கள் -துன்பங்கள்
முந்திலும் -முன் முன்னாக வரினும்
முனியார் -வெறுப்படைய மாட்டார்கள்
இன்பங்கள் -சுகங்கள்
மொய்த்திடினும் -ஓன்று திரண்டு வந்தாலும்
மனம் கனியார் -உள்ளம் நெகிழ மாட்டார்கள் –

சகல சாச்த்ரங்களாலும் ஸ்துதிகப் படுபவனாய் அத்வதீயமான மத்த கஜம் போலே -அத்தால் வந்த செருக்கை உடையனாய் கொண்டு –
ஸ்ரீ திருக் கண்ண மங்கையிலே நின்று அருளினவனை –
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் -ஸ்ரீ பெரிய திருமொழி – 7-10 10- என்னும்படி பிரதிபாத்யார்த்த
கௌரவத்தாலே சாம்சாரிக சகல தாப ஹரமான தமிழை செய்து அருளின
ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு லோகத்திலே ச்நேஹியாய் இருப்பாராய்-
எங்களுக்கு நாதரான – ஸ்ரீ எம்பெருமானாரை வந்து ப்ராபித்தவர்கள் –
துக்கங்கள் ஆனவை அஹமஹமிகயா வந்தாலும் இது வந்ததே என்று வெறார்கள்–
சுகங்கள் ஆனவை எகோத்யோகென வந்து திரண்டாலும் பக்வபலம் போலே மனசு இளையார்கள் –
ஆன பின்பு நீங்களும் இவற்றால் வரும் ஹ்ருதயகாலுஷ்யத்தை-நினைத்து அஞ்ச வேண்டாம் என்று கருத்து –
முனிவு -வெறுப்பு / மொய்த்தல்-திரளுதல்

ப்ராசங்கிக்கமாக -அமைந்த பாசுரம் இது –ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளை ஆஸ்ரயித்தால் துன்பம் வாராதோ என்று கேட்டவர்களுக்கு
பதில் அளிக்க இந்த பாசுரம் -சுகம் துக்கம் ஏற்படும் -ஆனாலும் கலங்காத திடமான நெஞ்சை திருவடிகளே கொடுத்து அருளும் என்றவாறு –
கலை பரவும் தனியான்–தனியானை–அத்விதீயம் -செருக்கு அவனுக்கு குணம் —ஸ்ரீ கண்ண மங்கையுள் நின்றான் –
நின்றது -இவர் பாசுரம் கேட்ட பின்பு அன்றோ –ஆடினவன் நின்றான் —

ஸ்ரீ பெரும் புறக்கடல் -ஸ்ரீ பிருஹத் பஹு சிந்து -ஸ்ரீ திருப் பாற் கடல் பிராட்டி தோன்றி மாலை சாத்த –
முப்பத்து முக்கோடி தேவர்கள் தேனீக்கள் வடிவில் திருக் கல்யாணம் அனுபவிக்க -ஸ்ரீ பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள் –
பத்தர் ஆவி ஸ்ரீ பத்தராவி -பெருமாள் -ஸ்ரீ கருடனுக்கு -கட்டம் போட்ட புடவையை சாத்திக் கொள்வார் –
ஸ்ரீ திருப் பாற் கடலை விட்டு வந்ததால் புறக் கடல்
அநவசாதம்-அனுத்ருஷம் -துன்பம் இன்பம் கண்டு கஷ்டம் இன்பம் பெறாமல் ஸூக துக்க சமம் –
திருவடிகளில் ஈடுபட்டு இவை முக்கியம் இல்லை –
கோவையை பத்தராவியை நித்திலத் தொத்தினை -கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –
ஸ்ரீ பராங்குச முகத்தாமரை ஸ்ரீ ராமானுஜர் என்றாலே மலரும் –

கலை பரவும்
சர்வே வேதாயாத் பதமாமனந்தி -வேதாஷராணி யாவந்தி படிதா நித்விஜாதிபி-தாவந்தி ஹரி நாமானி கீர்த்தி தாநி ந சம்சய
வேதே ராமாயனே-புண்யே பாராதே பரதர்ஷப -ஆதவ் மத்யே ததாந்தேச விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்கிறபடியே
சகல சுருதி ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலும் ஸ்துத்திக்கப் படுபவனாய்-

தனி யானையை
த்யாவாப்ர்தி வீஜ நயன் தேவ ஏக -என்றும் –
சயசாயம் புருஷே யாச்சா சாவித்த்யே ச ஏக -என்றும்
திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்கிறபடியே -அத்விதீயமாய் -மத்த கஜம் போலே -செருக்கை உடையனாய் கொண்டு –

பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபாலனாய்
குணபால மதயானாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே–திரு நெடும் தாண்டகம்–10-

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்—திருப்பாவை–15

கண்ண மங்கையுள் நின்றானை –
முத்தின் திரள் கோவையை -பத்தராவியை -நித்திலத்தொத்தினை –யரும்பினை யலரை -யடியேன் மனத்தாசையை
அமுதம் பொதியும் சுவைக் கரும்பினை -கனியை-சென்று நாடி -கண்ண மங்கையுள் கொண்டு கொண்டேனே -என்கிறபடி
தன்னுடைய போக்யதையை-எல்லாரும் அனுபவிக்கும் படி -ஸ்ரீ திருக் கண்ண மங்கையில் எழுந்து அருளி இருக்கிற -ஸ்ரீ பத்தராவியை –

கண்ண மங்கை நின்றானை –
ஸ்ரீ திருக் கண்ண மங்கை சோழ நாட்டுத் திவ்ய தேசமாம் -அங்கு எழுந்து அருளி உள்ள ஸ்ரீ எம்பெருமானுக்கு
ஸ்ரீ பத்தராவி -எனபது திரு நாமம்

தண் தமிழ் செய்த
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே -என்கிறபடியே
அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளாகிற பிரதிபாத்யர்த்த கௌரவத்தாலே தன்னை அப்யசித்தவர்களுடைய
சகல தாபங்களும் மாறும்படி -ஸ்ரம ஹரமாய் திராவிட பாஷா ரூபமாய் பிரபந்தீ கரித்து அருளின

கலை பரவும் தனி யானையை –
பரவுதல்-துதித்தல்
சாஸ்திரங்கள் பத்தராவி பெருமாள் குணங்களை பரக்க பேசுதலின் துதிப்பன ஆயின –
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்று–எல்லா வேதங்களாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன் -என்றபடி
வேதம் அனைத்தும் துதிக்கும் நோக்கம் உடையவைகளாய் இருத்தல் பற்றி செருக்கு தோற்ற ஒப்பற்ற மதம் பிடித்த யானை போலே
தோற்றம் அளிக்கிறான் –
அவ் வெம்பெருமான் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு –
வேதத்தில் சொல்லப்படுதல் என்னும்படி -நெருங்க ஒண்ணாதபடி யானைக்கு பிடித்து இருக்கும் மதம் போன்று உள்ளது –
வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே –பெரிய திருமொழி – 7-10 8-
வெஞ்சினக் களிற்றை – -என்று
வெவ்விய சினம் உடைய யானை போலே இருப்பவன் -என்று இவ் எம்பெருமானைத் திரு மங்கை-ஆழ்வாரே வர்ணித்து உள்ளார் –
கிட்ட ஒண்ணாத வனேயாயினும்-யானை போல் கண்டு களிக்கத் தக்கவன் -என்பது அதன் கருத்து –

தொடர் சங்கிலி கை சலார் பிலார் என்னத் தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய நின்றூர்வது போல் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-–1-7-1-

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்த தோர் வேழத்தின் கரும் கன்று போல்
தெண் புழுதி யாடித் திரிவிக்ரமன்-1-7-9-

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ அம்புயத் தடம் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ வேழ போதக மன்னவன் தாலோ-பெருமாள் திருமொழி -7-1-

கலை பரவும் பீடு படைத்த அவ் எம்பெருமான் திரு மங்கை ஆழ்வார் உடைய ஈடு இல்லாத
தண் தமிழ்க் கவியைக் கண்டு வியக்கிறான் –
வேதம் அனைத்தும் சேர்ந்து பரவுவதைத் தண் தமிழ் காவியம் ஒரு பதிகத்திலே பொருள் ஆழத்துடன் ரசமாக
காட்டுவது வியப்பூட்டுவதாக இருந்தது அவ் எம்பெருமானுக்கு .
வேதங்கள் பரவுவது கிடக்கட்டுமே-அதனால் செருக்கு உற்று என் பயன் –
இத் தண் தமிழ் கவியின் உள் ஈடான பொருள் சீர்மையை ஆராய்ந்து இன்புறுவோம் என்று கருதி அத் துறையில் இறங்கினான் –
தானாகப் பார்த்து அறியத் தக்கதாக அத் தண் தமிழ் அமைய வில்லை –
வேத விதேவசாஹம்-வேதப்-பொருளை அறிந்தவனும் நானே -என்று கூறிக் கொண்ட கண்ணனுக்கும்
கற்றே அறிய வேண்டும்படியாக அமைந்து இருந்ததாம்
இக் கவியின் உள்ளீட்டான கனம்-அவன் கருத்தை அறிந்து –

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10–என்கிறார் ஆழ்வார் –
உனக்கு இதிலே ஆதரம் உண்டாகில் எனக்கு சிஷ்யனாய் உனக்கும் அதிகரிக்க வேண்டும் படி யாயிற்று
இதின் உள்ளீட்டின் கனம் இருக்கிறபடி -எனபது பெரியவாச்சான் பிள்ளை-வியாக்யானம் .
ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது
என்னோடு அதிகரிக்கில் அறியலாம்
ஒரு வசிஷ்டனோடே
ஒரு சாந்தீபனோடே
தாழ நின்று அதிகரிக்கக் கடவ
அவனுக்கு திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –
இங்கனம் செருக்குற்ற சர்வேஸ்வரனையும் கற்பிக்கலாம் படியான கவிதை எனபது தோன்ற –
தனியானைத் தண் தமிழ் செய்த – என்கிறார் –

தமிழ் –
தமிழ் ஆகிய கவிக்கு ஆகு பெயர்-தண் தமிழ் செய்த -தண் தமிழ் கவி பாடின என்றபடி –
கவி வாணர்கள் யானையை பாடுவார் -அதனைப் பரிசிலாகப் பெருவது கவி வாணர் நோக்கம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும்-தனி யானையைப் பாடுகிறார் -அதனைப் பரிசிலாகப் பெறுவது இவர்க்கும் நோக்கமாகும் –
இந்த யானையை கொடுப்பார் வேறு எவரும் இலர் –
தன்னையே தான் தருவது இது – தன்னைத் தந்த கற்பகம் -என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் திரு வாக்கும் காண்க-

கண மங்கை கற்பகத்தை -என்பது திரு மங்கை ஆழ்வார் அருளிய பெரிய திரு மடல் –

தண் தமிழ்-
ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் என்னும் இவை அனைத்தும் இறைவன் காட்ட -தம் கண்டபடியே கற்பவர் மனத்தில் பதியும் படியும் –
உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் அவனுக்கு போலி யாயும் –
பிரியாது இணைந்த பிரகாரமாயும் இருப்பதை உணரும் படியும் -அவனது இனிமையை நுகரும்படியும் – செய்து –
சம்சார தாபத்தை அறவே போக்கி குளிர வைப்பதாய் இருத்தல் பற்றி –தண் தமிழ் -என்கிறார் –
நீலன்-
திருமங்கை ஆழ்வார் திரு நாமங்களில் இதுவும் ஓன்று
நீலன் தனக்கு உலகில் இனியானை-
இந்த உலகத்தில் எம்பெருமானார் ஒருவரே திரு மங்கை ஆழ்வாருடைய தண் தமிழ் கவியின்
பொருள் உணர்ந்து தாபம் அற்றவராய் விளங்குதலின் –
நீலன் தனக்கு உலகில் இனியானை-என்கிறார் –

நீலன் தனக்கு –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருக்கு-
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலியன் உரை செய்த வண் ஒண் தமிழ்-என்று
ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் இறே –

உலகில் இனியானை –
இவ் விபூதியில் சமஸ்த பாப ஜனங்களும்-அதி பிரியகரரான –
ஸ்ரீ பரகால முகாப்ஜமித்ரம் -என்று ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்தார் இறே –

எங்கள் இராமானுசனை –
என்னைப் போலே எல்லாரையும் உத்தர்பிக்கைக்காக வந்து-அவதரித்து அருளின ஸ்ரீ எம்பெருமானாரை –

வந்து எய்தினரே
ஸ்ரீ மான் ஆவிரபூத பூமவ்ர ராமானுஜ திவாகர –என்னும்படியான பிரபாவத்தை அறிந்து வைத்து –
சபக்தி பண்ணி ஆஸ்ரயித்த பாக்யவான்கள்-

அக்கரை என்னும் அநர்த்தக்கடல் -சம்சாரம் / இக்கரை ஏறி-என்று பரமபதத்தையும் அருளிச் செய்வார்களே –

வந்து எய்தினர் –
சென்று ஆஸ்ரயித்தவர்கள் என்னாது வந்து ஆஸ்ரயித்தவர்கள் என்கிறார் –
தாம் எப்பொழுதும் பிரியாது ஸ்ரீ எம்பெருமானார் சந்நிதியிலேயே இருப்பவர் ஆதலின் – எய்தினர் –
வினையால் அணையும் பெயர் –
நீலன் பத்தராவிப் பெருமாளையே கண்களார அளவும் நின்று -கண்ண மங்கையுள் காண வேண்டும்படியான காதல் விஞ்சியவராய் –
காணாது பிரிந்து இருப்பதையே துன்பமாகவும் -கண்டு கொண்டு கிட்டி இருப்பதையே இன்பமாகவும் கொண்டு இருத்தலின் –
ப்ராக்ருதமான -தேக சம்பந்தத்தால் ஆன-முனிவும் கனிவும் அற்றவர் ஆனார் –
ஸ்ரீ எம்பெருமானாரும் அந்நீலன் தண் தமிழ் இன்பத்திலேயே மூழ்கி -அவருக்கு இனியராய் -அத்தகையரானார்-
அவரைப் பற்றினவர்களும் தண் தமிழ் இன்பத்தைக் காட்டின நீலனுக்கு இனிய ஆசார்யன் திறத்து உரிமைப் பட்டு
இருத்தலாம் பேரின்பத்திலே திளைத்து -அத்தகையார் ஆனார் -என்க-
எய்தினர் முனியார் மனம் கனியார் -என்று கூட்டிப் பொருள் கூறுக —

முனியார் துயரங்கள் முந்திலும் –
துக்கங்கள் ஆனவை அஹம் அஹம் என்கையாய் வந்து மொசிந்தாலும்-இவை வந்ததே என்று வியாகுலப் படார்கள்-
முனிவு -வெறுப்பு .

இன்பங்கள் மொய்ந்திடிலும் கனியார் மனம் –
சுகங்களானவை ஏகோத் யோகென வந்து திரண்டாலும் இந்த அதிசயம் நமக்கு வந்ததே என்று பக்வ பலம்-போலே –
மனசிலே ஏகாகாரங்களாய்
மொய்த்தல் -திரளுதல் –
ந பிரகர்ஷ்யதே த்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்-ப்ராப்யசாபிரியம் -என்றார் இறே ஸ்ரீ கீதாசார்யரும் .
மதன கதனைர் நக்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா -என்று-இவ் அர்த்தத்தை அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் மனம் –
துன்பத்தையும் இன்பத்தையும் துல்யமாக பார்க்கிறவர்கள் ஸ்ரீ எம்பெருமானார் அடியார்கள் -என்றபடி –
துன்பங்களோ இன்பங்களோ -கன்ம பலங்களாக தாமே வந்து தாமே தொலைகின்றன –
கர்மம் தொலைகின்ற்றது என்று அமைதியாய் இருத்தல் வேண்டும் -என் தளரவோ கிளறவோ
வேண்டும் எனபது அவர்கள் உறுதிப்பாடு –
ந ப்ரகுருஷ்யேத் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய சாப்ரியம் -கீதை – 5-20 – என்று விரும்பிய பொருளைப் பெற்று களிப்புறலாகாது –
விரும்பத் தகாத பொருளைப் பெற்று வெறுப்பு உறலும் ஆகாது -எனபது இங்கு நினைவு உரத்தக்கது –
ஆன்ம தத்தவத்தின் உண்மை நிலையை தத்துவ ஞானிகள் இடம் இருந்து தெரிந்து அதனைப் பெற முயல்வானாய் –
உடலையே ஆன்மாவாக கருதும் அறியாமையை விட்டு ஒழிந்து –ஸ்த்திரமான ஆத்மா தர்சன சுகத்தில் நிலை நிற்றலின் –
அஸ்திரமான பொருள்களைப் பற்றிய களிப்பும் கவர்வும் அற்றவனாய் இருத்தல் வேண்டும் என்கிறது இந்த ஸ்ரீ கீதா ஸ்லோகம் –
ஸ்ரீ எம்பெருமானைப் பற்றினவர்களும் –தத்துவம் அறிந்த பெரியோர் இடம் இருந்து ஆசார்யனுக்கு உரிமை பட்டு இருத்தலே
ஆன்ம தத்துவத்தின் உண்மை நிலை என்பதை தெரிந்து அந்நிலையிலே ஊன்றி நிற்க முயல்வராய் உடலையும் உடல் உறவு
படைத்தவர்களையும் -நான் எனது -என்று கருதும் அறியாமையை விட்டு ஒழிந்து –
ஸ்திரமான ஆசார்யனுக்கு உரிமைப் பட்டு இருத்தலாம் சுகத்தில்-நிலை நின்ற பின்
அஸ்திரமான உடல் முதலிய பொருள்களைப் பற்றிய களிப்பும்-கவர்வும் அற்றவர்களாய் இருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள் -என்க –

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக, எய்தற்க; யானும்
பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே–திருவாய்மொழி-2-9-5-

இங்கு –
ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் ஒழிந்திடுக
என்றும் இறவாது இருந்திடுக -இன்றே
இறக்க களிப்பும் கவர்வும் இவற்றால்’
பிறக்குமோ தற்றேளிந்த பின் – ஞான சாரம் -17 – என்று
விண்ணவர் கோன் செல்வம் என்பதை முன்னும் பின்னும் கூட்டுக –
தற்றேளிந்த பின் -தன் ஸ்வரூபத்தை தெளிவாக அறிந்த பிறகு
பின் இவற்றால் களிப்பும் கவர்வும் பிறக்குமோ என்று கூட்டிப் பொருள் கூறுக –

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –16- தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து இத்யாதி —

March 31, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி ஸ்வ லாப அனுசந்தானத்தாலே ஹ்ருஷ்டரானவர் –
எல்லாரும் தம்மைப் போலே தத் விஷய பிரவணர் ஆகைக்கு உறுப்பாக –
பகவத் வல்லபையான ஸ்ரீ ஆண்டாள் உடைய ப்ரஸாத பாத்ரமான ஸ்ரீ எம்பெருமானார்
லோகத்துக்கு செய்த உபகாரத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டிலே ஸ்ரீ பெரியாழ்வார் சம்பந்தத்தை இட்டு ஸ்ரீ எம்பெருமானாரைக் கொண்டாடி –
இப்பாட்டிலே –அந்த ஆழ்வாருடைய பெண் பிள்ளையான ஸ்ரீ ஆண்டாளுடைய ஸ்வபாவிக கிருபையாலே வாழ்ந்து கொண்டு –
பரமோதார ஸ்வபாவராய்-அத்தாலே எல்லார்க்கும் பரம பதத்தை கொடுக்கைக்கு மனனம் பண்ணிக் கொண்டு போருகிற ஸ்ரீ எம்பெருமானார் –
வேத மார்க்கம் எல்லாம் அழிந்து -பூ மண்டலம் எங்கும் ஒக்க -வியாபித்து கலியானது -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் –
விண்ணின் தலை நின்றும் – மண்ணின் தலத்து உதித்து -எல்லாரையும் ரஷித்து அருளின நல்லன்பர் என்று சர்வரும் தம்மைப் போலே
தத் விஷய ப்ரவணர் ஆகைக்கு உடலாக அவர் செய்து அருளின உபகாரத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

தாழ்வு வர வழி இல்லாத வாழ்வு தமக்கு கிடைத்தது போலே எல்லோருக்கும் கிடைக்க வேணும் என்ற பெரு நோக்குடன் –
அவர்கட்கு ஸ்ரீ எம்பெருமானார் திறத்தும் -அவர் குணங்களை சார்ந்தோர் திறத்தும் -ஈடுபாடு உண்டாவதற்கு உறுப்பாக –
அரங்கற்கு இனிய துணைவியான ஸ்ரீ ஆண்டாள் அருளினால் வாழ்வு பெற்றவரான ஸ்ரீ எம்பெருமானார் மறை நெறியை
நிலை நாட்டி -கலியைக் கெடுத்து -உலகினுக்கு பேருதவி புரிந்ததை அருளி செய்கிறார்

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –

பத உரை –
அரங்கர் -திருவரங்கத்து அம்மானுடைய
மௌலி -திரு முடியில்
சூழ்கின்ற -சுற்றிக் கொள்கிற
மாலையை-திரு மாலையை
சூடி-தன் குழலிலே அணிந்து
கொடுத்தவள் -கொடுக்கும்பெருமை வாய்ந்த ஆண்டாள் உடைய
தொல் அருளால்-இயல்பான கிருபையினாலே
வாழ்கின்ற -வாழ்ந்து கொண்டு இருக்கிற
வள்ளல்-பெரும் கொடை யாளியும்
மா முனி -பெருமை வாய்ந்த முனிவர்
என்னும்-என்றும் சொல்லப்படுபவரான
இராமானுசன் -எம்பெருமானார்
தாழ்வு ஓன்று இல்லா -குறை ஒன்றும் இல்லாத
மறை-வேதம்
தாழ்ந்து -இழிவு பட்டு
அதனால்
தலம் முழுதும்– பூமி எங்கும்
கலியே -கலி புருஷனே
ஆள்கின்ற காலத்து -தனிக் கோல் செலுத்துகிற காலத்திலே
வந்து -தாமாகவே வந்து
அளித்தவன் காண்மின் -உலகத்தை காத்து அருளினவர் காணுங்கள்

ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய திருமுடியை -சூழா நின்று உள்ள திரு மாலையை -தன்னுடைய திருக் குழலிலே சூடி
வாஸிதம் ஆக்கிக் கொடுத்த வைபவத்தை உடையளான ஸ்ரீ ஆண்டாள் உடைய ஸ்வாபாவிகமான கிருபையையே
விளை நீராக வாழா நிற்பவராய் –பரம ஒவ்தாரராய் -முனி ஸ்ரேஷ்டரான -ஸ்ரீ எம்பெருமானார் –
நித்யத்வ -அபௌருஷேயத்வ -யுக்தமாய் -பிரத்யஷாதி பிரமாண விலஷணமாய் -யதாபூதவாதயாய் –
இருக்கையாலே -ஸ்வ பிரமாண்யத்தில் -ஒரு குறை வற்று இருக்கிற வேதமானது -பாஹ்ய குத்ருஷ்டிகளாலே –
அபிபூதமாய் கொண்டு -இழிவு பட்டு -தீப சங்கோசத்தில் திமிரவ்யாப்தி போலே பூமி எங்கும் கலி யுகமானது
தனிக்கோல் செலுத்துகிற காலத்திலே-அபேஷா நிரபேஷமாய் வந்து -அந்த வேதத்தை உத்தரிப்பித்து –
லோகத்தை ரஷித்து அருளினவர் காணும் கோள்–ஆதலால் நீங்களும் என்னைப் போலே அவரை அல்லாது
அறியோம் என்று இருக்கை அன்றோ அடுப்பது என்று கருத்து –

நவ நீதம் ஐயங்கவீனம் புதிதாக வரும் வெண்ணெய் -அக்கார அடிசில் பாலில் காய்ச்சி
நீரிலே இல்லாமல்-சமைத்த அன்னம் -ஸ்ரீ திருமால் இரும் சோலை -விருத்தாந்தம் -ஸ்ரீ கோதாக்ரஜர் -ஸ்ரீ கோயில் அண்ணன் –
ஸ்ரீ திருப்பாவை ஜீயர்-ஆசை உடையார்க்கு என்று அருளிய வள்ளல் தன்மை -நமக்காக சரணாகதி செய்து அருளிய வள்ளல் –
ஸ்ரீ திருப்பாவை ஜீயர் –உபாயம் அறிந்து -ஸ்ரீ கோயில் அண்ணன்–உபேயம் கைங்கர்யம் –
த்வயார்த்தம் திருப்பாவை நாச்சியார் திருமொழி மூலம் அறிந்து பெற்ற இரண்டு திரு நாமங்கள் –

அரங்கர் மௌலி
ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் தானே
ஸ்ரீ வில்லி புத்தூரிலே ஸ்ரீ வட பெரும் கோவில் உடையான் என்னும் திரு நாமத்தை உடையராய் கொண்டு
கண் வளர்ந்து அருளுகையாலே -அவரை -அரங்கர் -என்று அருளிச் செய்கிறார் –
அப்படி பட்ட ஸ்வாமி உடைய-உத்தமாங்கத்துக்கு-

சூழ்கின்ற மாலையை
அலங்கரிக்கத் தக்க புஷ்ப மாலையை -சூடிக் கொடுத்தவள்-முந்துற முன்னம்
குழல் கோதை முன் கூறிய பாடல் பத்தும்- 4-11-
சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ்ப் பத்தும் வல்லார் -9-10-
தாழ் குழலாள் துணிந்த துணிவை -12-10-
தாழ் குழலாள்–என்னும்படியான தன்னுடைய திருக் குழலிலே அலங்கரித்துக் கொண்டு -அது தன்னைக் களைந்து
ஸ்வாமிக்கு சமர்ப்பிக்கும்படி கொடுத்தவள் -இப்படி யாகையாலே இவளுக்கு -சூடிக் கொடுத்தவள் -என்று அதுவே நிரூபகமாய் ஆய்த்து –
சூடிக் கொடுத்த சுடர் கொடியே -என்னக் கடவது இறே –

அரங்கர் –
மௌலி சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் –
ஸ்ரீ அமுதனார் ஏனைய இடங்களில் போலே அரங்கன் -என்னாது அரங்கர் -என்று பன்மையில் கூறுகிறார் –
ஸ்ரீ ஆண்டாள் ப்ரணய ரோஷம் தலை எடுத்து அங்கனமே பலகாலும் பன்மையில் சொன்னதை அப்படியே கை யாண்ட படி –
இனி முக்தி அடைந்தவர்கள் தங்கள் இன்பத்துக்கு போக்கு வீடாக ஸ்ரீ எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யப்
பல வடிவங்கள் கொள்வது போலே –
ஸ்ரீ அரங்கனும் ஆண்டாள் மீது உள்ள காதல் மிகுதியால்
ஸ்ரீ ரங்கத்தில் உள்ள வடிவோடு அமையாது அவளது அவதார ஸ்தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரிலும்
ஸ்ரீ வட பெரும் கோயில் உடையான் வடிவம் கொண்டு காத்துக் கிடத்தலின் அரங்கர் -என்று பன்மையில் கூறினார் ஆகவுமாம்-
இதனால் ஸ்ரீ வட பெரும் கோயில் உடையானுக்கு அன்றோ அவள் சூடிக் கொடுத்தது –
அரங்கர்க்கு சூடிக் கொடுத்ததாக கூறுவது எங்கனம் பொருந்தும் என்னும் கேள்விக்கு விடை இறுத்ததும் ஆகிறது –

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் ––இரண்டாம் திருவந்தாதி – 70-
தலையரங்கம்– -என்றபடி திருவரங்கமே தலைமையகமாகவும்
ஏனைய திவ்ய தேசங்கள் கிளை யகங்களாகவும்-அரங்கனே எல்லா இடங்களிலும் எழுந்து அருளி இருந்து
அருள் புரிவதாகவும் கூறப்படும் சம்ப்ரதாயமும் இங்கு உணரத் தக்கது –

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–-நாச்சியார் திரு மொழி-4-1-
பிரணயிநி முகம் காட்டுவது ஓலக்கத்திலே அன்றே –படுக்கையிலே இறே -அதாகிறது –கோயிலாய்த்து –
பள்ளி கொள்ளும் இடமாகிறது கோயில் என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று
ஸ்ரீ பிள்ளை அழகிய மணவாள அரையர் பணிப்பர்

தொண்டர்கள் சூடிக் களைந்தன சூடிடுவர் –
இங்கே அண்டர் கோனான ஸ்ரீ அரங்கன் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்-களைந்தன சூடும் தொண்டன் ஆகிறான் –
அவ்வளவு காதல் ஆண்டாள் மீது மண்டிக் கிடக்கிறது ஸ்ரீ அரங்கனுக்கு
நம்மது போன்று அரங்கனது தொண்டு இயல்பான தொண்டு அன்று –காதல் அடியாக வந்தது அது –
ஆதலின் அது நிறையே -குறை அன்று -என்று உணர்க –
இனி அடியாளாகிய ஸ்ரீ ஆண்டாள் சூடிக் கொடுப்பது தகுமோ -எனில் கூறுவாம் –
ஆண்டாள் தான் தன அழகைக் கண்டு களிப்பதற்க்காக சூடிக் கொண்டாள் அல்லள்-
மருங்கே அரங்கன் வந்து நிற்பதை மனக் கண்ணால் கண்டு அலங்கலால் அலங்கரித்து கொண்ட நிலை
அக் குழல் அழகருக்கு இயைந்து இருக்கிறதா என்பதை அவள் பார்த்தாலே அன்றி –
தான் தன அழகை கண்டு களித்து இலள்-அம் மலரின் மணம் நுகர்ந்து மகிழ்ந்து இலள் என்று அறிக –
அவன் உகப்புக்கு உறுப்பாய் இருப்பதையே லஷ்யமாக கொண்டவள் ஸ்ரீ ஆண்டாள் என்க –

ஸ்ரீ சபரி தன் நாவுக்கு இனியனவாய் இருந்த பழம் முதலியவற்றை ஸ்ரீ இராம பிரானுக்கு என்று சேர்த்து வைத்து கொடுத்து
அவனை மிகவும் மகிழ்வித்தது போலே –
ஸ்ரீ ஆண்டாளும் தன் சுரும்பார் குழலுக்கு ஏற்ற பூக்களை சேர்த்து மாலையாக தலை மிசை வைத்து
ஸ்ரீ அரங்கருக்கு கொடுத்து அவனை மிகவும் மகிழ்விக்கின்றனள் -என்க-

இருவரும் ஆச்சார்ய நிஷ்டையை உடையவர்கள் ஆதலின் அவர்கள் கொடுத்தவைகளால் ஸ்ரீ இராம பிரானுக்கும்
ஸ்ரீ அரங்கருக்கும் -அளவு கடந்த ஆனந்தம் உண்டாகிறது –
ஸ்ரீ அகஸ்தியர் முதலிய முனிவர்கள் கொடுத்தவைகளில் அவ்வளவு ஆனந்தம் இல்லை –
ஸ்ரீ பெரியாழ்வார் உகந்து -பூச்சூட்ட வாராய் -என்று அழைத்து சூட்டிய பூக்களிலும் இவ்வளவு ஆனந்தம் இல்லை –
ஆச்சார்ய நிஷ்டை உடையளான ஸ்ரீ சபரி ருசி பார்த்தவை மிகவும் இனித்தன ஸ்ரீ இராமபிரானுக்கு –
அத்தகைய நிஷ்டை உடைய ஸ்ரீ ஆண்டாள் சூடியவை மிகவும் மணத்தன ஸ்ரீ அரங்கற்கு-

சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ்ப் பத்தும் வல்லார் -9-10-
சுரும்பார் குழல் கோதை யாதலின் இயல்பாகவே மணம் கமழுகின்றது கூந்தலிலே
உத்தம பெண்களின் கூந்தலிலே இயல்பாக மணம் உண்டு என்பதை-
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி –நறியவுமுளவோ நீ யறியும் பூவே – என்னும் குறும்தொகை செய்யுளாலும் அறியலாம்-
இச் செய்யுளை ஒத்த –
வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–திரு விருத்தம் – 55-இங்கு அறியத் தக்கது –

இயல்பாய் அமைந்த கூந்தல் மனத்துக்கு மேலே –
நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன்றன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை யற்றது என் செய்வதோ
ஊடாடு பனி வாடாய்! உரைத்து ஈராய் எனது உடலே––திருவாய் மொழி – 1-4 9–

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத் துள்ளே–5-5-11-

நாடாத மலர் – நறிய நன் மலர் நாடி- எனப்படும் ஆத்ம புஷ்பத்தின் உடைய ஆசார்ய பாரதத்ரியம் என்னும்
மணமும் கூடவே ஸ்ரீ ஆண்டாள் சூடிய மாலை-நிகரற்ற நறு மணம் கமழுவது ஆயிற்று
இங்கனம் செழும் குழல் மேல் மாலைத் தொடை ஸ்ரீ தென்னரங்கற்கு ஈயும் மதிப்பு உடையவள் ஆனாள் ஸ்ரீ ஆண்டாள் –
இதனையே -தன்னுடைய திருக் குழலிலே சூடி வாசிதமாக்கி கொடுத்த வைபவத்தை உடையவள் -என்று
இவ்விடத்திலே உரையை அருளி செய்தார் ஸ்ரீ பெரிய ஜீயர்-

ஸ்ரீ வேதாந்த தேசிகனும்
ததாஸ்துதே மதுபித ஸ்துதி லேச வச்யாத் காணாம்ருதை
ஸ்துதிசதை ரனவாப்த பூர்வம் தவன் மௌளிகந்த சூபகா
முபஹ்ருத்யமாலாம் லேபே மகத்தர பதானுகுணம் பிரசாதம் -என்று
தாயே உனது தந்தை சிறிது துதித்தாலும் வசப்படும் ஸ்ரீ மதுசூதனாகிற ஸ்ரீ அரங்கன் இடம் இருந்து
செவிக்கு இனிய அமுதாய் அமைந்த நூற்றுக்கணக்கான பாடல்களால் இது வரையிலும் பெற்று இடாத
மிகப் பெரியவர் -ஸ்ரீ பெரியாழ்வார் -என்னும் பதவிக்கு தக்க அனுக்ரகத்தை
நின் கூந்தல் மணத்தால் சீர்மை பெற்ற மாலையை சமர்ப்பிப்பதன் மூலம் பெற்று விட்டார் -என்று ஸ்ரீ கோதா ஸ்துதியில் அருளியதும்
இங்கு அனுசந்திக்க தக்கது –

இங்கு ஸ்ரீ பெரியாழ்வார் ஆனது கூந்தல் மணம் கமழும் ஸ்ரீ ஆண்டாள் மாலையை சமர்ப்பித்ததனால் என்றது –
சமர்ப்பித்ததன் மூலம் ஸ்ரீ அரங்கனுக்கு மாமனார் ஆகி அமரர்கள் வந்திக்கும் பெருமை எய்தியதைக் கருதி -என்க –
இது எக்காலத்தும் மற்றைய ஸ்ரீ ஆழ்வார்களுக்கு இல்லாத தனிப் பெருமை அன்றோ –
சர்வ கந்த -எல்லா வாசனை -ஸ்வரூபனாக சொல்லப்படும் ஸ்ரீ அரங்கன்
இவள் சூடிக் கொடுத்த மாலையின் கனத்தை ஆதரவுடன் ஏற்கிறான் எனின் இந்த ஆண்டாள் உடைய
வீறுடைமையை பற்றி நாம் என் என்பது –
அடியிலே வேத மணம் –
நாபியிலே தாமரை மணம்-
மார்பகத்திலே மலராள் கொங்கையில் பூசின சந்தன மணம் –
இவ்வளவு இருந்தும்
ஸ்ரீ ஆண்டாள் பேர் அவாவுடன் சூடிக் கொடுத்த மாலையை தலையாலே தாங்குகிறான் ஸ்ரீ அரங்கன் –
தலையாய மணத்தை தலையாலே தானே தாங்க வேணும் -இதனை –
தத்தே நதேனசிரசாதவ மௌலி மாலாம் -உன்னுடைய தலயில் சூடிய மாலையை
வணங்கிய தலையாலே தாங்கிக் கொண்டு இருக்கிறான் -என்று ஸ்ரீ வேதாந்த தேசிகன் வர்ணிக்கிறார் –
தலை வணங்கி ஏற்கும் படியான மதிப்பு ஸ்ரீ அரங்கனுக்கு ஸ்ரீ ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையிலே –
அத்தகைய மதிப்பு தோற்ற அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலை -என்கிறார் –

முற்றப் புவனம் எல்லாம் உண்ட முகில் வண்ணன்
கதறத் துழாய் சேர் கழல் அன்றி -மற்று ஒன்றை
இச்சியா அன்பர் தனக்கு எங்கனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து -ஞான சாரம் – 8- – என்கிறபடி
பயன் கருதாத பரமை காந்திகள் செய்வது அனைத்தையும் உச்சியால் ஏற்கும் அவன்
காதலியான காரிகை சூடிக் கொடுத்ததை தலையாலே தாங்கக் கேட்க வேணுமோ –

சூடிக் கொடுத்த மாலையை திரு முடியிலே ஒரு புறத்திலே மட்டும் தாங்கினால் போதாதாம் -திருப்தி இல்லை
ஆசை தீர முடி எங்கும் படும்படி சூழ்கின்றதாக அந்த மாலையை தாங்க வேண்டுமாம் –
அது தோன்ற-மௌலி சூழ்கின்ற மாலை-என்றார்
சூடிக் கொடுத்தவள்-என்பதையே திரு நாமமாக அமைத்தார் -அவள் பிரபாவம் அனைத்தும் தோற்றுதற்கு-
மேலே இவளது தொல் அருளால் வாழ்கின்றவராக ஸ்ரீ எம்பெருமானாரை சொல்லுவதற்கு ஏற்ப
இவளுடைய அருளின் வீறுடைமை தோற்ற சூடிக் கொடுத்தவள் -என்னும் சொல் அமைந்து உள்ளது –

பிராட்டிமார்களுடைய அருள் இறைவன் மூலமாகத் தான் பலிக்க வேண்டும் –
பயன் தருபவன் இறைவனே –
அவனை தரும்படி செய்யுமவர்கள் பிராட்டிமார்கள் –
தரும்படி செய்திடினும் கட்டுப்பாடு அற்ற இறைவன் விரும்பா விடின் என் ஆகுமோ என்று அஞ்சுவதற்கு இடம் இன்றி
சூழ்கின்ற மாலையால் கட்டுப் பட்டவன் ஆயினான் அவன் –
ஸ்ரீ ஆண்டாளுக்கு ஸ்ரீ அரங்கன் இங்கனம் அன்புத் தொண்டனாக இருத்தலின் பயன் தப்பாது என்னும் உறுதிப் பாட்டை
அளிக்கின்றது –சூடிக் கொடுத்தவள்-என்னும் சொல் –

நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்தம் உத்போத்ய கிருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய–

ஸ்ரஜி -மாலையால்
நிகளிதம்-விலங்கிடப்பட்டவனாய் இருக்கிற
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே –
தான் சாத்திக் கழித்த மாலையாகிற விலங்காலே இவனைப் பேராதபடி -விலங்கிட்டு யாவாள் ஒருத்தி -அவனை பலாத்கரித்து புஜித்தாள்-
ஸ்வ உச்சிஷ்டமாவது –
சூடிக் களைந்தது –
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் –
க்வயோபா புக்தஸ் ரக் கந்த –உச்சிஷ்ட பஷினோ தாஸாஸ் – என்னுமது பிரணயித்வத்தால் மாறாடிக் கிடக்கிறது
இப்படி ஈஸ்வரன் யதேஷ்ட விநியோர்ஹ அர்ஹனாம் படி தன்னை ஒக்கி வைக்கையாலே-
அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யமே தோற்றுகிறது –
பார் வண்ண மடமங்கை பத்தர் இறே
அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் இறே
வாசம் செய் பூம் குழலிலே வாசிதமாக்கிக் கொடுத்தபடி
ஸ்ரஜி நிகளிதம் -மாலையால் விலங்கு இடப்பட்டவன் –என்கிற ஸ்ரீ பட்டர் ஸ்ரீ சூக்தியை நினைக்க –

குற்றங்கள் புரிந்த வண்ணமாய் இருப்பவர்கள் இடமும் அருள் உடையளான ஸ்ரீ ரங்க நாச்சியார் அவர்களை காக்குமாறு
தெரிவிக்கும் போது பக்கத்தில் ஸ்ரீ ஆண்டாள் இல்லாது இருந்தால் அவன் அதனுக்கு இசையாது முகத்தை மாற வைத்து
இருப்பான் போலும் -என்று கோத ஸ்துதியில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளி செய்கிறார் –
ஸ்ரீ ரங்க நாச்சியாருக்காவன்றி ஸ்ரீ ஆண்டாளுக்காகவே ஸ்ரீ அரங்கன் காப்பாற்றுகிறான் என்றது ஆயிற்று –
சூடிக் கொடுத்தவள் -எனபது
பாடிக் கொடுத்தவள் என்பதற்கும் உப லஷணம்-
இன்னிசையால் பாடிக் கொடுத்தால் நற்பா மாலை பூ மாலை சூடிக் கொடுத்தாள்-என்னும் பிரசித்தி காண்க –
பூ மாலையை மௌலியில் சூடுகின்றான்-
பா மாலையை தலையில் வைத்து கொண்டாடி இன்ப வெள்ளத்தில் ஆழகின்றான் –

தொல் அருளால் –
உததி பரம வ்யேம் நோர்க்கவிஸ் ம்ர்த்யமாதர்ச ரேஷன ஷமமிதிதி யாபூயஸ் ஸ்ரீ ரங்க தாமனி மோதசே –என்றும் –
அனுக்ரஹா மயீம் வந்தே நித்ய அஞ்ஞான நிக்ரஹாம் -என்றும் சொல்லுகிறபடி
அகில ஜகன் மாத்ர்த்வத்தால் வந்த குடல் துடக்கை உடைத்தான -அவளுடைய ஸ்வபாவிகமான கிருபையாலே –

வாழ்கின்ற –
அவளுடைய கிருபையிலே காணும் இவருடைய வாழ்வு எல்லாம் -ஸ்ரீ எம்பெருமானார் சரணா கதி பண்ணும் போது –
ஸ்ரீ ரெங்க நாயகியார் உடைய சந்நிதியிலே -ஸ்ரீ அழகிய மணவாளன் சேர்த்தி கொடுத்து இருக்கச் செய்தே –
பகவன் நாராயண அபிமத அநு ரூப -என்று தொடங்கி முந்துற முன்னம் அவள் திருவடிகளில் பிரபத்தி பண்ணிற்று-பிரசித்தம் இறே –

வள்ளல்-
இப்படி அவள் முன்னிலையாக அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணி தாம் பெற்ற பலத்தை
இந்த லோகத்தில் எல்லாருக்கும் கொடுத்த பரமோதாரன் –
கால த்ரயேபி கரண த்ரய நிர்மிதாதி பாபக்ரியச்ய சரணம் பகவத் ஷமைவ –
சரஸ்த்வைகமலா ரமேனேர்த்திதா யத்ஷேமஸ் யேவஹீயதேந்திர பவத்ச்ரிதானாம்-என்று இந்த சௌந்தர் யத்தை –
ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்தார் இறே -என்றும்-

தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல்
தொன்மையான அருள்–இயல்பான அருள் என்றபடி
உலகிற்கு தந்தையான ஸ்ரீ அரங்கன் கைப்பிடிததனாலும் –
சாஷாத் ஸ்ரீ பூமிப் பிராட்டி யாதளாலும் உலகிற்கு தாய் ஆகிறாள் ஸ்ரீ ஆண்டாள் –
இனி பிரபன்ன சந்தானத்துக்கு தாயாக ஸ்ரீ ஆண்டாளைக் கொள்வது பற்றியும் சீரிய தாய் ஆகிறாள் ஸ்ரீ ஆண்டாள் –
திரு அருள் இயல்பானது அன்றோ –
பன்னகத்திலே கிடக்கும் பரமனை காதல் ரசம் ததும்பும் தன்னகத்திலே வைத்து பண்படித்திய பெண்மணியான
ஸ்ரீ ஆண்டாளுடைய இயல்பான அருள் ஸ்ரீ எம்பெருமானாருக்கு கிடைத்தது –

அவள் மீது பக்தி அரும்பியது -அவள் பாடல்களில் ஈடுபடல் ஆனார்
ஸ்ரீ கண்ணனாம் ஸ்ரீ அரங்கன் மீது காமம் மீதூர்ந்தது –
அருளியவள் மீதும் –
அருளிச் செயல் மீதும் –
அதில் நுவலப்படும் அரங்கன் மீதும் நிரந்தரமான பக்தி உண்டாயிற்று –
ஸ்ரீ ஆண்டாள் உடைய அருளி செயல்களான திருப்பாவை யினுடையவும்-நாச்சியார் திருமொழி யினுடையவும் –
உண்மை பொருள்கள் அவர் திரு உள்ளத்தில் துளங்கின –
வேதப் பொருள்கள் எல்லாம் அவற்றில் அடங்கி இருப்பதைக் கண்டார்
வேதம் காட்டும் தூய அற நெறி அவைகளிலே துலங்கியது –
நாராயணனே நமக்கேபறை தருவான் – என்னும் தொடக்கத்திலேயே அவருக்குத் துலங்கி விட்டது –
அத் தூய நெறி நாராயணனே –
அந் நெறி நமக்காக ஏற்பட்டது -நான் அந் நெறியிலே நடக்க வேண்டும் –
அந் நெறி பறையிலே-கைங்கர்யம் என்னும் பேற்றிலே – நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கும் –

அந் நெறியிலே நடப்பதாவது
நாராயணன் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றி நிற்கை -இதுவே தூய நெறி –
மற்றவைகள் அஹங்கார கலப்புடையவை யாதலின் தூயன அல்ல -இதனையே திருப் பாவை முழுதும் அறிவுறுத்துகிறது –
இங்கனம் முடிவு கட்டி எத்தனை கற்ப கோடி காலம் ஆனாலும் ப்ரபத்தியை தவிர வேறு வழி இல்லை என்று துணிந்து –
பறை தரும் நாராயணன் என்னும் அற நெறியையே பற்றி நின்றார் –
நாச்சியார் திரு மொழியில் கேசவ நம்பியைக் கால் பிடிப்பது என்னும் பேற்றில் உண்டான ஆசை
சாதனம் ஆகாவிடினும் மேலும் மேலும் வளர்ந்து ஆற்றாமையாக முற்றிப் பேற்றினைக் கண்டாக
வேண்டும் என்னும் நிலையை விளைவிக்கும் என்பதனையும் கண்டு கொண்டார் –

நாராயணனைப் பற்றினோர்க்குப் பேறு தப்பாதலின் -மன ஒர்மைவுடன் அதனைப் பெரும் விதத்தினை
நாள் தோறும் நினைத்து -அதனை சாதனமாக கருதாது –
வாழ் நாள் வீண் ஆகாத படி இன்பம் எய்தி –
எப்பொழுது பகவானைக் கண்ணால் காண்பேன் –
எப்பொழுது திருவடிகளைத் தலையால் தாங்குவேன் –
எப்பொழுது என்னை முகப்பே கூவிப் பணி கொள்ளப் போகிறான் -என்று பேற்றினில் ஆசையை வளர்த்துப்
பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத ஆற்றாமை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செயலின் படி
தான் நின்றதோடு தம்மை அண்டினாரையும் அவ்வாறே நிற்கும்படி செய்தார் ஸ்ரீ எம்பெருமானார் –
உபநிஷத்துக்களில் தெளிவற்ற நிலையில் சொல்லப்படும் பொருள்கள் தெள்ளத் தெளிய திருப்பாவை யாகிய கோதோ உபநிஷத்தில்
சொல்லப் பட்டு இருப்பது கண்டு விசேஷித்து அதனில் மிக்க ஈடுபாடு கொண்டார் –
சந்நியாசிகள் உபநிஷத்தை அனுசந்திக்க வேண்டும் என்னும் முறைக்கு ஏற்ப
ஸ்ரீ எம்பெருமானார் அனுசந்திக்கும் உபநிஷத்தாய் அமைந்தது -திருப்பாவை –
அதனால்-திருப்பாவை ஜீயர் -என்ற பிரசித்தி அவருக்கு ஏற்பட்டது-

நாச்சியார்திருமொழியில் – 9-6 – நூறு தடாவில் வெண்ணெய் சமர்ப்பிபதாக ஸ்ரீ ஆண்டாள் பிரார்த்தனை செய்து கொண்டதை
அவள் சந்தானத்தில் பிறந்த நமக்கு நிறைவேற்றுவது பொறுப்பாகும் என்று ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ அழகருக்கு
சமர்ப்பித்து நிறைவேற்றி நம் ஸ்ரீ கோயில் அண்ணன் -என்று ஸ்ரீ ஆண்டாளாலே விசேஷித்து
அபிமானிக்கப் பெற்றதும் இங்கு அறியத் தக்கது –

இவ்விதம் ஸ்ரீ ஆண்டாள் அருளி செயல்களின் ஆழ் பொருள்களை ஆரணத்தின் பொருள்களாகத் தெரிந்து
அவைகளுக்கு ஏற்ப தாமும் ஒழுகி
தம்மை அண்டின பல்லாயிரக் கணக்கில் உள்ள சீடர்களையும் ஒழுகுமாறு செய்து –
கடல் வண்ணன் பூதங்கள் ஆக்கித் தலம் முழுதும் எங்கும் இடம் கொள்ளும்படி செய்து விட்டார் -ஸ்ரீ எம்பெருமானார் –
செய்யவே கலியின் தனி கோல் ஆட்சி சாய்வுறத் தொடங்கியது –
மறைந்த மறை யாட்சி மீண்டும் தலை தூக்கத் தொடங்கியது –
கிருத யுக தர்மம் கிளர்ந்து எழுந்தது –
மறைக்கு அவப் பொருள் கண்ட குத்ருஷ்டிகளும் அது பிரமாணம் ஆகாது என்று ஒதுக்கிய பாஹ்யர்களும்
ஸ்ரீ பாஷ்யம் முதலிய நூல்களாலும் வாதங்களாலும் வெல்லப்பட்டு இருக்கும் இடம் தெரியாதபடி ஓடி ஒளிந்தனர் –
தன்னைக் கை விட்டு தன் கை ஆட்கள் ஓடி ஒளியவே-கலி தானே கெட்டு ஒழிந்தான் –
அல்லா வழிகள் அனைத்தும் மறைந்தன –
மறையின் பண்டைய தூய நெறி புதுமை பெற்றுத் துலங்குகிறது –
அந் நெறியில் தான் நின்று -இனிக்க வருமவை கவர -சோகம் இகந்து –
இமையவரான நித்ய சூரிகளுக்கு நிகராக வாழ்கின்றார் ஸ்ரீ எம்பெருமானார் –
வள்ளல் ஆதலின் தான் பெற்ற வாழ்வை தாரணிக்கு எல்லாம் வழங்கி வாழ்விக்கிறார் என்னும் கருத்துடன்-
தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல்-என்கிறார் –
ஸ்ரீ ஆண்டாள் தொல் அருளே ஸ்ரீ எம்பெருமானார் வாழ்வுக்கு எல்லாம் அடித்தளமாய் அமைந்தமை பற்றித் –
தொல் அருளால் வாழ்கின்ற -என்றார் –

மா முனி –
இப்படி பரமோதாரர் ஆகையாலே சர்வ காலத்திலும் ஸ்வ ஆஸ்ரித
ரக்ஷணத்தில் தானே மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

இராமானுசன் என்னும் மா முனி –
மா முனி என்னும் இராமானுசன் என்று மாற்றுக –
ஸ்ரீ இராமானுசனே இந் நூலில் எங்கும் அடை கொளி யாய் இருத்தலில் இங்கும் அங்கனமே கொண்டு
முநி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ எம்பெருமானார் -என்று உரை அருளினார் ஸ்ரீ மணவாள மா முனிகள் –

வேதம் அனைத்துக்கும் வித்து ஆண்டாள் சம்பந்தத்தால் எம்பெருமானார் மா முனி ஆனார் இந்த பாசுரத்தில் —
வர வர முனி பின்பு புனர் அவதாரமாக -வர போவதை பொசிந்து காட்ட –

அரங்கர் –வாழ்கின்ற வள்ளல் மா முநி என்னும் இராமானுசன் கலியே ஆள்கின்ற நாள் வந்து
அளித்தவன் காண்மின் -என்று கூட்டிப் பொருள் கொள்க –

தாழ்வு ஒன்றும் இல்லா மறை
வேதத்துக்கு தாழ்வு ஒன்றும் இல்லாமையாவது –
ப்ரமப்ரமாத விப்ரலம்பாதி தர்ம விசிஷ்டத்வம் புருஷ ப்ரநீதத்வம் -ஸ்வ ப்ராமான்யே அந்ய சாபேஷத்வம்
அநித்யத்வம் -தொடக்கமான வற்றில் ஓன்று இன்றிக்கே -யதா பூதவாதியாய் -அபௌருஷேயமாய்-நித்யமுமாய் இருக்கை

மறை தாழ்ந்து –
இப்படிப் பட்ட வேதமானது -ஈர்ஷ்யாடம்பரான பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆதல் –
கலி தோஷத்தாலே யாதல் -அபிபூதமாய்க் கொண்டு இழிவு பட்டு -கலி யுகமானது வேதத்தை சங்கோசிப்பித்து அழித்தபடி –
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீ மத் பாகவதத்திலும் விஸ்த்ரேண உபபாதிக்கப் பட்டது இறே –
கலவ் ஜகத்பதிம் விஷ்ணும் சர்வஸ்ரஷ்டாரமீச்வரம் -நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பகதாஜன -என்றும் –
அந்தஸ் சக்தாம் -பஹிஸ் சைவம் சபரமேத்யது வைஷ்ணவம் கலவ் கஷ்டா ப்ரவர்த்தந்தே வர்ணாஸ்ரம ஜனாமுனே
கலவ் கார்த்த யுக தர்மம் கர்த்தும் இச்சதி யோ நர ச்வாமித்ரேர் ஹீதிதம் மத்வா தஸ்மை பிரத்விஷதே கலி -என்றும் சொல்லுகிறபடி –
நிஷித்த மார்க்கத்தை நடப்பித்துக் கொண்டு -போருகிற கலி தோஷத்தாலே -வேத மார்க்கமானது மூலையடியே நடந்து –

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து –
ப்ரத்யஷம் அனுமானம் சப்தம் -என்று பிரமாணங்கள் மூன்று
அவற்றுள் சப்த பிரமாணத்தில் அடங்கியது மறை எனப்படும் வேதம் –
அது என்றும் உள்ளது -நித்தியமானது -யாராலும் ஆக்கப்படாதது -அபௌருஷேயமானது –
என்றும் உள்ளமையாவது -சொற்களின் அமைப்பு முறை எல்லா காலத்திலும் ஒரு படிப் பட்டு இருக்கை –
உலகும் உயிரும் இல்லாத பிரளய காலத்திலும் -இறைவனுடைய திரு உள்ளத்திலே இச் சொற்களின் அமைப்பு முறை
அப்படியே சம்ஸ்கார ரூபமாய் இருந்து -சிருஷ்டி காலத்தில் அதனை பிரமனுக்கு அவன் வெளி இட்டான் -என்பர் –

யாராலும் ஆக்கப் படாமை யாவது –
ஒருவன் தன் இஷ்டப் படி சொற்களை கோக்கும் வாக்யமாக அமையாது
தானே பொருள் அமைந்த வாக்யமாய் இருத்தல் –
இங்கனம்-என்றும் உள்ளதும்-ஆக்கப் படாததும் -சப்த ரூபமுமான வேதத்துக்கு பிரமாண்யம் இயல்பாய் அமைந்தது –
பிரமாண்யம் ஆவது -உண்மை அறிவுக்கு சாதனமாய் இருத்தல் –
சப்தம் இயல்பினில் உண்மை அறிவை தரும் பிரமாணம் -அது அங்கனம் சில இடங்களில் உண்மை அறிவினை
தராமல் இருப்பது அதன் குற்றம் அன்று –
அதனை உபயோகிப்பார் இடம் உள்ள அறியாமை -கவனம் இன்மை -ஏமாற்றும் எண்ணம் – முதலிய குற்றமே என்பர் ஆன்றோர் –
நைவ சபதே -ஸ்வதோதோஷ ப்ரமாண்ய பரிபந்தின சந்தி கிந்து ஸ்வ தஸ் தஸ்ய பிரமாணத்வ மிதி ஸ்த்திதி
வக்துராசாய தோஷேன கேஷசித் தத போத்யதே – என்று சப்தத்தில்
பிரமாணத்துக்கு தடங்கலான குற்றங்கள் இயல்பாக இல்லை -பின்னையோ எனின்
பிரமாணம் ஆகும் தன்மையே அதன் இடத்தில் இயல்பாக அமைந்து
உள்ளது என்பது தான் உண்மை நிலை -இயல்பான அந்த பிரமாண தன்மை சொல்லுகிறவனுடைய கருத்தில்
உள்ள குற்றத்தாலே சில இடங்களிலே வேறு படுகிறது -என்பது ஆளவந்தார் அருளிய ஆகம ப்ராமாண்யம் –

இயல்பினில் பிரமாணமாய் இருத்தல் என்னும் சிறப்புடன் மற்று ஒரு சிறப்பு அம்சமும் வேதத்துக்கு உண்டு-
ப்ரத்யஷம் அனுமானம் என்னும் மற்றைய பிரமாணங்களை விட தனி சிறப்பு வாய்ந்தது அது –
பிரத்யஷமும் -அதாவது -நேரே காணும் காட்சியும் -சில இடங்களில் பிரமாணம் ஆகாது –
பாதிக்கப் படுவதும் உண்டு -விளக்கின் ஜ்வாலையை நேரில் பார்க்கிறோம் -உண்மையில் அது ஒரே ஜ்வாலை அன்று –
ஒரே மாதிரியான பல ஜ்வாலைகள் -ஒன்றன் பின் ஒன்றாக உண்டாகி தொடர்ந்து அங்கே வருகின்றன –
விளக்கு ஏற்றும் போது ஜ்வாலை உண்டாவது போல தொடர்ந்து உண்டாகின்றன –
இறுதியில் அணையும் ஜ்வாலை போன்று தொடர்ந்து ஜ்வாலைகள் அணைகின்றன –
அதனால் தான் ஜ்வாலைகள் பலவாக நமக்கு தோற்ற வில்லை -இங்கனம் கொள்ளா விடில்
விளக்கு ஏற்றி நெடு நேரம் ஆன பிறகு நாம் பார்க்கும் பொழுது திரியும் எண்ணெயும் குறைந்து இருப்பதற்கு காரணம்கூற முடியாது –
திரியின் ஒரு பகுதி எரிந்ததும் அப்பகுதியை பற்றி இருந்த ஜ்வாலை அணைந்து விடுகிறது –
மற்று ஒரு பகுதியில் அதே ஷணத்தில் வேறு ஒரு ஜ்வாலை உண்டாகிறது –
இங்கனம் ஷன நேரத்தில் ஜ்வாலை அணைவதும் எழுவதுமாய் இருப்பது -விரைவு-பற்றி நம் கண்ணுக்கு புலப்படுவது இல்லை –
ஒரே ஜ்வாலை என்று பிரமிக்கிறோம் -இங்கே தீப ஜ்வாலைகள் வேறு பட்டன –
வெவேறு சாமக்ரிகளினால் -திரிப் பகுதி -எண்ணெய-உண்டாகுதலின் என்னும் அனுமானம் ஒரே ஜ்வாலை
என்னும் பிரத்யஷத்தை பாதிப்பதைப் பார்க்கிறோம் –

இவ்வாறே அனுமான பிரமாணம் பிரத்யஷ பிரமாணத்தால் பாதிக்கப் படுகிறது –
நெருப்பு சுடாது அது ஒரு பொருளாய் இருத்தலின் -என்கிற அனுமானம் தொட்டதும் சுடுகிற பிரத்யஷ அனுபவத்தால்
பாதிக்கப் படுவதைப் பார்க்கிறோம் –

வேதம் என்கிற பிரமாணமோ -மற்றை பிரமாணங்கள் ஆன பிரத்யஷத்தினாலோ அனுமானத்தினாலோ
எந்த விதத்திலும் பாதிக்க படுவது இல்லை –
இதனால் பிரமானங்களுக்குள் சிறந்த பிரமாணம் வேதம் என்றது ஆயிற்று –

இங்கே
திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்துஎங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே.—1-1-7—சுடர் மிகு சுருதி -என்கிற நம் ஆழ்வார் திவ்ய சூக்தியும்-
பிரத்யஷாதி பிரமாணங்கள் போலே ஹேத்வந்தரத்தால் கழிக்க ஒண்ணாத ஒளியை உடைத்தாய் இருக்கை -என்கிற
ஈட்டு ஸ்ரீ சூக்தியையும் அனுசந்திக்க தக்கன –
இத்தகைய வேதம் –
யதா பூதவாதிஹி சாஸ்திரம் -உள்ளது உள்ளபடி சொல்லுவது அன்றோ சாஸ்திரம் – என்றபடி உண்மையையே கூறும் –
போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –திருச் சந்த விருத்தம் – 72–
வேத நூல் ஓதுகின்றது உண்மை – என்பர்-திரு மழிசை பிரானும் –

இவ்வண்ணம் ப்ராமணயத்தில் எல்லா வகையிலும் ஏற்றம் உற்று இருக்கும் மறைக்கு
ஒரு வகையிலும் தாழ்வு இன்மையின் –தாழ்வு ஓன்று இல்லா மறை –என்கிறார் –

தாழ்வு ஓன்று இல்லா மறையும் தாழ்வு பட்டது பிற் காலத்திலேயே -தாழ்வு படுத்தல் ஆவது
இழிவு படுத்தல்-வேதம் நித்யம் அன்று -அபௌ ருஷேயம் அன்று அது பிரமாணமாக மாட்டாது – என்று இழிவு படுத்தினர் சிலர் –
அவர்களுள் பல கருத்து வேறு பாடுகள் இருப்பினும் வேதம் பிரமாணம் அன்று என்பதில் கருத்து வேறுபாடு இன்றி ஓன்று பட்டனர் அவர்கள்-
அங்கனம் அவர்கள் அனைவரும் ஒதுக்கி -வேதத்துக்கு உள் புகாது புறம்பே நின்று விட்டமையின் –
பாஹ்யர் -புற மதத்தவர் -எனப்படுகின்றனர் –

மற்றும் சிலர் அவர்களைப் போலே ஒதுக்காது -வேதத்தை பிரமாணமாக ஒத்துக் கொண்டு -உள் புகுந்தாலும் –
அது உணர்த்தும் உண்மை பொருளை காண்கிலாது -தம் தமக்கு தோற்றின வகையில் அவப் பொருளைக் காண்பவர் ஆயினர் –
இவர்கள் வேதத்தின் உள் புக்கும் பார்வை கோளாறினால் பொருளை உள்ளவாறு காணாமையின் –
குத்ருஷ்டிகள்-பார்வைக் கோளாறு உடையவர்கள்- எனப்படுகின்றனர் –
இவ் விரு திறத்தாராலும் வேதம் மாசு படுத்தப் பட்டு ஒளி மங்கி விட்டது –
ஒளி மங்க மங்க இருள் படர்வது போலே அற நெறியை காட்டும் வேத ஒளி குறைய குறைய கலி
புருஷன் உலகு எங்கும் பரவித் தனிக் கோல் செலுத்த முற்பட்டு விட்டான் –

பாஹ்யரும் குத்ருஷ்டிகளும் கலி புருஷனுடைய கையாட்கள் -மறை ஆட்சியை மாற்றினர்
அது காட்டும் நேரிய அற நெறியை மறைய செய்தனர் -வெவ்வேறு வழி அல்லா வழிகளைக் காட்டினர் –
உலகம் வழி திகைத்து அலமாந்தது -இதுவே தக்க சமயம் என்று கலி புருஷன்
தலம் முழுவதும் தன் ஆட்சியை பரப்பி நிலை நாட்டிக் கொண்டு விட்டான் -இதனைக் காட்டுகிறது –

மறை தாழ்ந்து தலம் முழுதும் கலியே ஆள்கின்ற நாள்-என்னும் சொற்தொடர் –
மழை பெய்து நெல் விளைந்தது என்னும் இடத்து போலே –
தாழ்ந்து ஆள்கின்ற நாள் என்னும் இடத்துத் தாழ்ந்ததனால் ஆள்கின்ற நாள் -என்று பொருள் படுத்தல் காண்க –

கலியே –
ஏகாரம் பிரிநிலை கண் வந்தது -மறை ஆட்சி முழுதும் மறைந்தது -கலி ஆட்சி காலூன்றி நின்றது –
இருளும் ஒளியும் சேர்ந்து இருக்க இயலாது அன்றோ –

தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் –
தீப சங்கோசத்தில் -திமிர வ்யாப்தி போலே -இருள் தரும் மா ஞாலமான பூமிக்கு -கலி யுகமானது தனிக் கோல்
செல்லும்படி -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் –
தேச காலங்கள் சமீசீநங்களானால் திருத்தி ரஷிக்கலாம்–
அப்படி இன்றிக்கே தேசமோ அநேக பூயிஷ்டமானது –
காலமோ தத் வசருக்கு வர்த்தகமானது

வந்து –
இப்படி அதி க்ரூரங்களான தேச காலங்களிலே பரம பதத்தில்-நின்றும் இந்த விபூதியிலே –
ஸ்ரீ பெரும் புதூரிலே அவதரித்து அருளி-

அளித்தவன் காண்மின்
உத்தரிப்பித்து இந்த-லோகத்தை ரஷித்தவர் காணும் கோள்-எல்லாரும் இவரை ரஷகர் என்று தெளிந்து –
ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்று கருத்து –
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்னக் கடவது இறே –

வந்து அளித்தவன் –
உய்யும் வழி புலன் ஆகாது அலமரும் உலகு அனைத்தையும் -நலியா நிற்கும் கலி ஆட்சியினின்றும் விடுவித்து காப்பதற்காக –
எவருடைய வேண்டுகோளும் இன்றி -தாமே அவதரித்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் என்றது ஆயிற்று –
அளித்தால் ஆவது –
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்–என்று–திருவாய்மொழி -5 2-1 – – கலியை கெடுத்து உய்யும் வழியை
புலப்படுத்தும் மறையை தாழ்வுற்ற நிலையிலிருந்து மேம்பட உயர்த்தி அது காட்டும் வீட்டு நெறிக்கண் செலுத்துதல்-
உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – 95 – என்று மேலே இவரே கூறுவதும் காண்க –
பவ பயா பிதப்த ஜன பாகதேய வைபவ பாவிதாவ தரனேனபகவதா பாஷ்யகாரேண-என்று சம்சார பயத்தாலே தவித்துக் கொண்டு
இருக்கும் மக்களின்-பாக்யத்தின் வைபவத்தினால் நேர்ந்தது ஸ்ரீ பகவான் ஸ்ரீ பாஷ்ய காரருடைய அவதாரம் -என்னும்
ஸ்ருதப்ரகாசிகை ஸ்ரீ சூக்தி இங்கு நினைத்தற்கு உரியது –

காண்மின் –
இது அனுபவத்திலே கண்ட உண்மை அன்றோ –
நான் உபதேசித்து தெரிந்து கொள்ள வேண்டும்படி யாவோ இருக்கிறது என்கிறார் –
எனவே நீங்கள் ஒவ் ஒருவரும் -எனக்கு என்ன தாழ்வு இனி -என்னும்படி என்னைப் போலே அடியார் அளவும்
பெருகும் வண்ணம் ஸ்ரீ எம்பெருமானார் இடம் ஈடுபடுவதே அடுப்பது என்னும் கருத்தும் தோற்றுகிறது-இது குறிப்பு எச்சம் –

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –15- சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை இத்யாதி —

March 30, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளிலே பிரவண சித்தரான எம்பெருமானார் குணங்களில்
அனந்விதரைச் சேரேன் -எனக்கு என்ன தாழ்வு உண்டு -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டிலே ஸ்ரீ குலசேகரப் பெருமாள் சம்பந்தத்தை இட்டு -தம்மாலே கொண்டாடப் பட்ட
ஸ்ரீ எம்பெருமானார் -தம்மை பரிகிரகித்த வைபவத்தை சொல்லி -இப்பாட்டிலே –
சர்வ பூத ஸூஹ்ர்த்தாய் சர்வ ரஷகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை -சாஷாத் கரித்து -அவனுடைய ரஷகத்யவாதிகளிலே கண் வையாதே –
பிரேம தசை தலை எடுத்து -அவனுக்கு என் வருகிறதோ என்னும் அதி சங்கையாலே-
திருப் பல்லாண்டாலே மங்களா சாசனம் பண்ணி -அவனுக்கு காப்பிட்ட
ஸ்ரீ பெரியாழ்வார் உடைய திருவடிகளுக்கு ஆஸ்ரயம் ஆக்கின திரு உள்ளத்தை உடையரான
ஸ்ரீ எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை -தங்களுக்கு ஆஸ்ரயமாக பற்றி இராத
மனுஷ்யரை நான் கிட்டேன் -ஆகையாலே எனக்கு இனி என்ன குறை -என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளை விட்டு -நீங்காத திரு உள்ளம் படைத்த ஸ்ரீ எம்பெருமானார் குணங்களை-
தங்களுக்கு சார்பாக கொள்ளாதவர்களை சேர மாட்டேன் -இனி எனக்கு என்ன தாழ்வு இருக்கிறது -என்கிறார் –

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே -15 –

பத உரை –
சோராத -விட்டு நீங்காத
காதல்-பக்தி வெள்ளத்தின்
பெரும் சுழிப்பால் -பெரிய சுழியினாலே-அதனில் அகப்பட்ட படியினாலே
தொல்லை -பண்டையோனான
மாலை -பெரியோனாகிய எம்பெருமானை
ஒன்றும் -அவன் பெருமையில் எதனையும்
பாராது -கவனியாமல்
அவனை -அப் பண்டைய பெரியோனைக் குறித்து
பல்லாண்டு என்று -பல்லாண்டு பல்லாண்டு என்று காலத்தை பெருக்கி –
காப்பு இடும் -ரஷை-மங்களா சாசனம் செய்யும்
பான்மையன் -ஸ்வபாவம் படைத்த பெரி யாழ்வார் உடைய
தாள்-திருவடிகளை
பேராத -விட்டு நீங்காத
உள்ளத்து -திரு உள்ளம் வாய்ந்தவரான
இராமானுசன் தன் -எம்பெருமானாரை சேர்ந்த
பிறங்கிய -மிகுதியான
சீர்-கல்யாண குணங்களை
சாரா -பற்றி நிற்காத
மனிசரை –அற்ப மானிடரை
சேரேன் -சேர மாட்டேன்
இனி -இந்நிலை எய்தியதற்கு பிறகு
எனக்கு என்ன தாழ்வு -எனக்கு என்ன குறை

அவ்யபிசாரினியான பக்தியினுடைய பிரவாஹத்தில் -பெரிய சுழியில் அகப்படுகையாலே
நித்யனாய் -ஸ்வ இதர சம்ஸ்த வஸ்துக்களுக்கும் ரஷகன் ஆகையாலே -வந்த பெருமை உடையவனை –ஏக தேசமும் நிரூபியாதே –
அநித்யராய் – ரஷ்ய பூதராய்-இருப்பார்க்கு -ஆயுரர்தமாக மங்களா சாசனம் பண்ணுவாரைப் போலே
அவனைக் குறித்து – பல்லாண்டு பல்லாண்டு -என்று காலத்தை பெருக்கி –
உன் சேவடி செவ்வி திருக் காப்பு -திருப் பல்லாண்டு – 1-என்று மங்களா சாசனம் பண்ணா நின்றுள்ள
இத்தையே தமக்கு ஸ்வபாவமாய் உடையரான ஸ்ரீ பெரியாழ்வார் உடைய திருவடிகளை விட்டு நீங்காத திரு உள்ளதை உடையரான
ஸ்ரீ எம்பெருமானார் உடைய நிரவதிக குணங்களை தங்களுக்கு அபாஸ்ரயமாகப் பற்றி இராத மனுஷ்யரைச் சேரேன் –
இந்நினைவு பிறந்த பின்பு எனக்கு என்ன குறை உண்டு –

பிறங்குதல்-மிகுதி –பிரகாசமுமாம்
சோராத காதல் என்றது அசங்குசிதமான காதல் என்னவுமாம் –
அப்போதைக்கு சோர்தல் -வாடுதல்-அதாவது சங்கோசம் –சோராமை -அசங்குசிதமாய் இருக்கை
இத்தால் பரி பூர்ண பக்தி என்றபடி–

ஸ்ரீ கோதாக்ரஜர்– ஸ்ரீ கோயில் அண்ணன்-ஸ்ரீ ஆண்டாள் -இவர்கள் இடம் தானே ஸ்ரீ பெரியாழ்வார் சொத்து-
திருவந்திக் காப்பு -செய்து அருளி –
தயிர் சாதம் நாவல் பலம் சேர்ந்து அமுது செய்து -திரு முகம் வாட -கண்டு -ஸ்ரீ கருட வாகன பண்டிதர் -ஸ்ரீ தன்வந்திரி- சந்நிதி
கஷாயம் கொடுத்து அருளி -இவர் தான் திவ்ய ஸூரி வைபவம் அருளிச் செய்தவர் -திருவடி -காப்பு ஏற்படுத்தி அருளி-
பய நிவர்த்தகங்களுக்கு பயப்பட்டு அஸ்த்தானே -உறகல் -உறகல் -கொடியார் மாடம் -காட்டிக் கொடுக்கும் –
யசோதை மொசு மொசு வளர்க்க -நான் சமர்ப்பித்ததை கொண்டு அருளால் –கண்டு அருளி –
சோராத காதல் – கண்ணனுக்கே ஆம் அது காதல் என்றுமாம் –
வினைச்சொல் இல்லாத பாசுரம் -இன்றும் பல்லாண்டு சொல்லிக் கொண்டே இருக்கிறார் –
குணங்களை நினைக்க நினைக்க சீரும் பிறங்கி-பயம் நீங்கி- அவனை ஓக்க ஆக்கி அருளுவான் –
விட வேண்டியதை விட்டாலே பிராப்தி கிட்டும் -பகவத் -சேஷத்வம் விட அந்நிய சேஷத்வம் கழிவதே பிரதான்யம் –

சோராத காதல் –
சோராத -வாடாதே -சங்குசிதமாகாதே இருக்கிற பக்தி -பரி பூர்ண பக்தி என்றபடி –
புநர் விஸ்லேஷ பீருத்வா பரமாபக்தி ருச்யதே -என்னும்படியான பக்தி -என்றபடி –
அன்றிக்கே –சோராத காதல் -அவ்யபிசாரினியான பக்தி என்னவுமாம்-

பெரும் சுழிப்பால் –
அவர் பட்ட-சுழி தான் சங்குசிதம் அன்று காணும் –பெரும் சுழி -பரி பூரணையான பக்தி கரை புரண்டவோ பாதி
அதினுடைய மகா பிரவாகத்தின் நடுவே பிறந்தது ஆகையாலே -மகா வேக கர்த்தத்தோடு கூடி –
அதி விஸ்தாரமாய் இருக்கிற சுழியிலே அகப்பட்டு -ஆழம் கால் படுகையாலே –

சோராத காதல் பெரும் சுழிப்பால்
காதல் -பக்தி -அது சோராதது-பகவானை விட்டு விலகாதது –
வேறு தெய்வத்தை பற்றாது -பகவானையே பற்றி ஸ்த்திரமாய் இருப்பது -என்றபடி –
இத்தகையே பக்தியே கீதையில் -மயிசாநத்ய யோகே ந பக்தி ரவ்ய பி சாரிணீ -என்று கூறப் பட்டு உள்ளது –

இனி சோர்வுறாத-அதாவது குறை வுறாத காதல் என்னலுமாம்
காதலின் பெரும் சுழிப்பு என்னவே – பெருக்கு எடுத்தோடும் பெரு வெள்ளமாகக் காதல் உருவகம்-செய்யப் பட்டமை தெரிகிறது –
வெள்ளத்தில் பெரும் சுழிப்பில் அகப்பட்டவர் -ஒன்றும் தோன்றாது தப்ப வழி இன்றி -தத்தளிப்பது போல் –
ஸ்ரீ பெரி யாழ்வாரும் காதல் வெள்ளப் பெரும் சுழியில் அகப்பட்டு ஒன்றும் பாராது தப்ப வழி இன்றி தத்தளிக்கிறார் –
அங்கனம் தத்தளித்தல் ஆவது -திரு மாலின் மீது அளவு கடந்த ப்ரேமம் மீதூர்ந்து –
அதிஸ்நேக பாபசங்கீ-அளவு கடந்த ச்நேஹம் தீங்கு நேருமா என்னும் சங்கையை உண்டு பண்ணும் –-என்றபடி
தமக்கு புலனாய் -இவ் உலகில் தோன்றிக் காட்சி தரும் அவனுடைய திரு மேனி அழகு -மென்மை –
என்னும் இவற்றில் ஈடுபாடாகிய சுழியில் ஆழ்ந்து -யாராலே இவற்றுக்கு என்ன தீங்கு நேரிடுமோ என்று தீங்கை சங்கித்து-
எவராலும் தீங்கு இழைக்க ஒண்ணாத சூரத் தன்மை முதலிய வற்றைப் பாராது –
சங்கையில் இருந்து தப்ப வழி இன்றி அலமருதலே யாம் –
அழகை மட்டும் கண்டு அவனது ரஷிக்கும் ஆற்றலைக் காணாமையின் அச்சத்தில் ஆழ்ந்தவர் எழுந்து இலர் –என்க-

தொல்லை மாலை –
நித்யஸ் சத்யா -என்கிறபடி -நித்ய சத்யனுமாய் –
ஏகோஹைவை நாராயணா ஆஸீத் ந பிரம்மா ந ஈசான ச ஏகாகீ நாமேத -என்றும்-
அசிதவிஷ்டா ந் பிரளயே ஜந்தூ நவலோக்ய ஜாத நிர்வேத – என்றும் -சொல்லுகிறபடியே
சம்சாரமாகிற பெரும் கடலிலே விழுந்து நோவு பட்டு உரு மாய்ந்து கிடக்கிற இச் சேதனருக்காக
நிர்வேதப்படும்படியான வ்யாமோஹத்தை வுடைய ஸ்ரீயபதியை

ஒன்றும் பாராது –
மங்களா நாஞ்ச மங்களம் -என்றும் –
ந வாசுதேவாத் பரமஸ்தி மங்களம் -என்றும் –
உயர்வற உயர்நலம் உடையவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் –
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே -என்றும் –
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றும் சொல்லுகிறபடியே
சகல ஜகத் ஸ்ரஷ்டாவாய் -ஸ்ரீ சர்வேஸ்வரனாய் -சர்வ மங்களங்களையும் கொடுக்க கடவனான -அவனை
இப்புடைகளாலே ஏக தேசமும் நிரூபியாதே -தம்முடைய பிரேம பரவசராய்க் கொண்டு –இவை ஒன்றும் விசாரியாதே –
இவற்றில் ஒன்றிலும் கண் வையாதே -என்றபடி –

தொல்லை மாலை ஒன்றும் பாராது –
பண்டைக் காலம் தொடங்கி இன்று காரும் எவராலும் எவ்வித தீங்கும் இழைக்க ஒண்ணாது இருந்தவனுக்கு
இன்று என்ன தீங்கு நேர்ந்து விடப் போகிறது –தொல்லை-அநாதி என்றபடி
இதனால் ஆதியந்தம் அற்ற நித்யதன்மை கருதப்படுகிறது
நித்தியமாய் இருக்கிற பகவத் தத்வத்தை யாராலே அழிக்க முடியும் –

மால்-
பெரியவன் -அனைவரையும் காப்பதால் வந்தது அந்த பெருமை –
அந்த மாலுக்கு தன்னைப் பாத்து காத்துக் கொள்ளும் திறன் இல்லையா –
இவைகளில் ஒன்றையும் பார்க்கவில்லை ஸ்ரீ பெரியாழ்வார்
முகப்பில் தோற்றும் அழகையும் -மென்மையும் பார்த்தாரே அன்றி அழிக்க ஒண்ணாத அழியாப்பொருள் அளித்துப் பெருமை
யுறும் பொருள் அழிவுற்று சிறுமை உறாது என்பதை அவர் பார்த்திலர்-

அவனை பல்லாண்டு என்னும் காப்பிடும் பான்மையன் தாள் –
லோகத்திலே பரிமித கால வர்த்தியான-சாதாரண ஜனங்களுக்கு ஆயுர் அர்த்தமாக -ஆயுராசாச்தே -என்கிறபடியே –
தீர்க்கா யுஷ்மான் பவேத் – என்று மங்களா சாசனம் பண்ணுவாரைப் போலே -அந்த ஸ்ரீயபதியைக் குறித்து –
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு -பல் கோடி நூறாயிரமும் –
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு – என்றும் –
நின் வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு -சுடர் ஆழியும் பல்லாண்டு -அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு –-என்று
அபரிமிதமான காலத்தை உண்டாக்கி -அது தன்னையே பெருக்கி -இப்படிப் பட்ட கால தத்வம் உள்ளது அனையும் செவ்வி மாறாதே –
நித்ய ஸ்ரீ யாக வாழ வேணும் என்று -இப்படி மங்களா சாசனம் பண்ணுகையே
தமக்கு ஸ்வபாவமாக உடையரான ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளை –
பான்மை -ஸ்வபாவம் -தாள்-திருவடிகள் –

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் –
தொல்லை மால் என்பதில் ஒன்றையும் பாராமையாலே –
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் -என்று காலத்தை பெருக்கி
நீடூழி தீர்க்காயுசாய் வாழ வேண்டும் என்று -அளவு பட்ட ஆயுள் உள்ளவர்களையும் -தன்னைக் காக்கும் திறன் அன்றி
காக்கப் படவேண்டியவராய் இருப்பவர்களையும் ஆயுள் விருத்தி யடைய வேண்டும் என்று மங்களா சாசனம்பண்ணுவாரைப் போலே
பல்லாண்டு பாடுகிறார் ஸ்ரீ பெரியாழ்வார் -என்க –

இங்கனம் பல்லாண்டு பாடி -உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்று காப்பிடுவது ஸ்ரீ பெரியாழ்வாருடைய இயல்பு –
அது தோன்ற அவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் -என்கிறார் –
தான் அழிவற்று -மற்ற அனைவரையும் அளிக்கும் பரம் பொருளை -அங்கனம் பாராமை அறியாமை அன்றோ –
மயர்வற மதி நலம் வாய்ந்த ஸ்ரீ பெரியாழ்வாருக்கு அது குறை யாகாதோ எனின் -ஆகாது என்க –
இவ்வறியாமை கன்மத்தால் வந்ததாயின் குறையாம்-
அன்பின் மிகுதியால் வந்தமையின் குறை ஆகாததோடு பெருமையுமாம் -என்க
இதனை சோராத காதல் பெரும் சுழிப்பால் பாராது -என்பதனால் உய்த்து உணர வைத்தார் ஸ்ரீ அமுதனார் –
காதல் பெரும் சுழிப்பில் அகப்பட்டது -பாராது பல்லாண்டு பாடும் -பெருமையை இவர்க்கு அளிப்பது ஆயிற்று என்க –
ஆதல் பற்றியே இவர்க்கு ஸ்ரீ பெரியாழ்வார் என்னும் பெயர் ஏற்ப்பட்டது என்கின்றனர் ஆன்றோர் –

இங்கு ஸ்ரீ மணவாள மா முனிகள் உபதேச ரத்ன மாலையில் –
மங்களா சாசனத்தில் மற்று உள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்து அளவு தான் அன்றிப் பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர் பிரான் பெற்றான்
ஸ்ரீ பெரியாழ்வார் என்னும் பெயர் -என்று அருளிச் செய்த பாசுரத்தை நினைவு கூர்க-

இனி காதல் பெரும் சுழிப்பால் பாரா விடினும் இறைவன் தன் ஆற்றலை தானே காட்டி யாயினும் இவரைப் பெரும் சுழி யினின்றும்
தப்புவிக்கல் ஆகாதோ எனின் –இறைவனுக்கும் அது ஆகாததாய் ஆயிற்று என்க –
கண் உள்ளவர்கர்க்கு அன்றோ காட்ட இயலும் –அன்பினால் குருடரான ஸ்ரீ ஆழ்வாருக்கு –ப்ரேமாந்தருக்கு -எங்கனம் காட்டுவது –
தன் ஆற்றலைப் பார்த்து அன்பினால் ஆன அச்சப் பெரும் சுழி யினின்றும்
வெளியேறட்டும் என்று இறைவன் வலிமை மிக்க தன் தோளைக் காட்டினான் –

அது மேலும் இவரை அப் பெரும் சுழி யில் ஆழ்த்தி சுழல செய்து விட்டது -வலிமை அச்சத்தை கெடுக்க வில்லை –
அதனை மேலும் வலு வுறச் செய்து விட்டது -வலிமையை உள்ளடக்கி அழகே விஞ்சித் தோற்றுகிறது இவருக்கு –
இவ்வலிமை கொண்டு எதிரிகளோடு பொருது என்ன தீங்கை விளைவித்துக் கொள்வானோ
என்று மீண்டும் அச்சமே தலை தூக்கி நிற்கிறது ஆழ்வாருக்கு -இதனை
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்னும் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியில் காண்கிறோம் –
காணவே இறைவனாலும் போக்க ஒண்ணாதபடி அன்பினால் விளைந்த-அச்சம் ஆழ்வாரது இயல்பு எனபது போதரும் –
துச்த்யஜா பிரக்குதிர் நாம -இயல்பு தவிர்க்க ஒண்ணாத தன்றோ-இக்கருத்துப் புலப்பட பான்மையன் -என்றார் அமுதனார் –
பான்மை -இயல்பு

பேராத உள்ளத்து இராமானுசன் தன் –
விட்டு நீங்காத திரு உள்ளத்தை உடையரான ஸ்ரீ எம்பெருமானார் உடைய
பேருகை -நீங்குகை –

தாள் பேராத உள்ளத்து இராமானுசன்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளை விட்டு மற்று ஒன்றை நினையாத திரு உள்ளம் படைத்தவர் ஸ்ரீ எம்பெருமானார் என்றபடி –
தாள் என்பது
திரு மேனிக்கு உப லஷணமாய் ஸ்ரீ பெரியாழ்வாரையே எப்பொழுதும் நெஞ்சில்
வைத்துக் கொண்டு இருப்பவர் ஸ்ரீ எம்பெருமானார் –
ஸ்ரீ விஷ்ணுவை சித்தத்தில் வைத்துக் கொண்டு இருப்பவர் ஸ்ரீ விஷ்ணு சித்தர் -ஸ்ரீ பெரியாழ்வார் –
அந்த ஸ்ரீ விஷ்ணு சித்தரை தம் திரு உள்ளத்தில் வைத்துக் கொண்டு இருப்பவர் ஸ்ரீ எம்பெருமானார் –
அதனால் ஸ்ரீ விஷ்ணு சித்த சித்தர் ஆகிறார் -அவர் –
ஸ்ரீ விஷ்ணு பிரவணர்-ஈடுபட்டவர் ஸ்ரீ ஆழ்வார் –
ஸ்ரீ விஷ்ணு சித்த பிரவணர் ஸ்ரீ எம்பெருமானார் –
எப்பொழுதும் ஸ்ரீ பெரியாழ்வாரையே நெஞ்சில் வைத்துக் கொண்டமையால் ஸ்ரீ பெரியாழ்வாரைப்
போன்றவர் ஆகி விடுகிறார் ஸ்ரீ எம்பெருமானார் –
ஸ்ரீ விஷ்ணு தன்னை த்யானம் செய்பவரை தன்னைப் போல் ஆக்குவது போல ஸ்ரீ விஷ்ணு சித்தரும்
ஸ்ரீ எம்பெருமானாரை தன்னை போல் ஆக்கி விட்டார் –
மங்களா சாசனத்துக்கு ஆள் தேடி பிரதி கூலரை அநு கூலராக்க உபதேசிப்பது போலே –
மங்களா சாசனத்துக்கு ஆள் தேட உபதேசிக்கும்படி ஸ்ரீ எம்பெருமானாரையும் அவர் செய்து அருளினார் –
இங்கனம் ஸ்ரீ பெரியாழ்வாரோடு ஸ்ரீ எம்பெருமானாருக்கு ஒப்புமை
ஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்திலே தெளிவாக காட்டப் பட்டு உள்ளது -விரிவு அங்கு கண்டு கொள்வது –

பிறங்கிய சீர் –
நித்ய அபிவ்ர்த்தமான கல்யாண குணங்களை
குதர்ஷ்டி குஹநாமுகே நிபதத பரப்ரமணா -கரக்ரஹா விசஷணோ ஜயதி லஷ்மனோயமுனி – என்கிறபடியே –
குதர்ஷ்டிகளால் அழிக்கப்பட்ட பகவத் வைபவத்தை -ஸ்ரீ பாஷ்ய முகேன வெளிப்படுத்தி –
இவ்வளவும் இனி மேல் உள்ள காலம் எல்லாம் -நித்ய அபிவ்ர்த்திதாம்படி பண்ணுகையாலே
இவருடைய கல்யாண குணங்களும் நித்ய அபிவ்ர்த்தமாய் காணும் இறே இருப்பது –
பிறங்குதல் -மிகுதி –

பிறங்கிய சீர் –
பிறங்குதல் -மிகுதல் -விளங்குதலும் ஆம் –சீர்-குணம்

சாரா மனிசரை –
அவற்றை தங்களுக்கு அபாஸ்ரயமாக பற்றி இராத மனுஷ்யரை –
ந்ர்தேக மாத்ய பிரதி லப்ய துர்லபம் -என்கிறபடியே -அதி துர்லபரான மனுஷ்ய தேகத்தை உடையராய் இருந்தும்
புவான் பவாப்த்தி நதரேத் ச ஆத்மாஹா -என்னும்படி நஷ்ட ப்ராயரான மனுஷ்யர் என்றபடி –
யோக்யதை இல்லாதே அகன்று போனார்கள் என்று ஆறி இருக்கப் போமோ
ஸ்ரவண மனனங்களுக்கு சாதனங்களை உடைத்தான மனுஷ்ய தேகத்தை பெற்றும் ஆஸ்ரயியாத-கர்ப்ப நிர்பாக்யரை

சேரேன் –
அப்படிப் பட்டவரை ஒருக்காலும் கிட்டாதே சவாசனமாக விட்டு இருந்தேன்
நாஸ்தி சங்கதி ரச்மாகம் யுஷ்மா கஞ்ச பரஸ்பரம் -என்கிற படியே குட நீர் வழித்துக் கொண்டு இருந்தேன் –

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடிஎன்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–-ஸ்ரீ திருவாய் மொழி3-9-2-

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழி தோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான் கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-

என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்!
மின்னார் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே–3-9-4-

சாரா மனிசரை சேரேன் –
ஸ்ரீ எம்பெருமானார் உடைய மிக்க குணங்களை அனுசந்திப்பதே நமக்கு பற்றுக் கொடு –
அதனைக் கொளற்கு மானிடவர் எல்லோரும் உரியர் –
ஆயினும் அதனைக் கொள்ளாது நிற்கின்றனரே – என்று பேர் இரக்கம் தோற்றுகிறது-மனிசர் -என்னும் சொல்லாலே –
அத்தகையோரை சேர்ந்தேன் என்றிலர் –
அவர்கள் சேர்க்கையினும் -சாரா மனிசரை சேராமையின் முக்கிய தன்மை விளக்குதற்கு
நன்மை வராவிடினும் கேடில்லை–தீமை தொலைவது முக்கியம் அன்றோ –
இனி சீரை சார்ந்தோரை சேர்ந்து இருத்தல் என்னும் உயர் நிலையில் இருப்பவன் -அந்நிலையில் இருந்து தவறி
சாரா மனிசரை சேரேன் -உயர் நிலையினின்றும் விழுந்து -தாழ்வு உறுவது தப்பாது என்னும் அதன் கொடுமை
தோற்றற்கு அங்கனம் கூறினார் ஆகலுமாம் –

எனக்கு என்ன தாழ்வு இனியே
இப்படியான பின்பு ஸ்ரீ எம்பெருமானாருடைய க்ருபைக்கு விஷய பூதனான அடியேனுக்கு என்ன தாழ்வு உண்டு –
என்ன அவத்யம் உண்டு –
ததேவ முஷ்ணா த்யசுபான்ய சேஷத -என்றும் –
சித்தே ததீய சேஷத்வே சர்வார்த்தாஸ் சம்பவந்திஹி -என்றும் சொல்லுகிறபடி –
ஒரு குறைகளும் இன்றிக்கே -சர்வமும் கரதலாமலகமாய் இருக்கும் என்றபடி .

எனக்கு என்ன தாழ்வு இனியே
இனி-சேராமை உறுதிப் பட்ட பின்பு
சாரா மனிசரை சேர்ந்தால் அன்றோ தாழ்வு வாரா நிற்கும்
சாரும் மகான்களை சாராதவரை சேராமையாலே எனக்கு தாழ்வு வர வழி இல்லை அன்றோ –
அதுவே நான் பெற்ற பேறு என்கிறார் –

இங்கு ஸ்ரீ வசன பூஷணம் ஸூரணைகளும் மணவாள மா முனிகள் வியாக்யானமும்
பெரியாழ்வார் பாஷ்யகாரர் உபதேசம் பற்றியும் மங்களா சாசனம் ஸ்வரூப அனுகுனம்
என்பதையும் தெளிவாக காட்டும் –

ஸூரணை-250
ஆழ்வார்கள் எல்லோரையும் போல் அல்லர் பெரியாழ்வார்
இவ் ஆழ்வார்கள் தாங்கள் மங்களா சாசனத்தில் வந்தால் தங்களில் ஒப்பார்களோ என்ன -அருளி செய்கிறார் மேல் –
அதாவது
மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்களுக்கும் பெரிய ஆழ்வாருக்கும் நெடுவாசி உண்டு என்கை-

ஸூரணை -251
அவர்களுக்கு இது காதா சித்தம் –
இவர்க்கு இது நித்யம் –
அவர்களை பற்ற இவர்க்கு இதில் ஏற்றம் எது என்ன – அருளி செய்கிறார் –
அதாவது –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றமை ஒத்து இருக்க செய்தே -வைர உருக்காய்-
ஆண்களையும் பெண்ணுடை உடுத்தும் -பாகவத விக்ரக வைலஷன்யத்தை அநு சந்தித்தால் –
உத்தோரத்தர அனுபவ காமராராக இருக்கும் –
மற்ற ஆழ்வார்களுக்கு பர சம்ருத்தியே பிரயோஜநமான இந்த மங்களா சாசனம் -எப்போதும் ஒக்க இன்றிகே –
எங்கேனும் ஒரு தசையிலே தேடித் பிடிக்க வேண்டும்படியாய் இருக்கும் –
தத் வைலஷன்ய தர்சன அநந்தரம்-தத் அனுபவ பரராகை அன்றிகே –
அஸ்தானே பய சங்கை பண்ணி -திருப் பல்லாண்டு பாடும் -பிரேம ச்வாபரான இவருக்கு இந்த
மங்களா சாசனம் சர்வ கால வர்த்தியாய் செல்லும் என்கை –

ஸூரணை -252
அவர்களுடைய ஆழம்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –
அதுக்கு ஹேது ஏன் என்ன –
அருளி செய்கிறார் –
அதாவது –
அனுபவபரரான அவர்களை -த்ருஷ்டி சித்த அபகாரம் பண்ணி – ஆழம்கால் படுத்தும்-அவனுடைய சௌந்தர்யம் தானே –
அதுக்கு என் வருகிறதோ என்று அஞ்சி -மேன்மேலும் காப்பிடும்படி -மங்களா சாசனபரரான இவர்க்கு தரித்து
நின்று மங்களா சாசனம் பண்ணுகைக்கு ஈடான நிலமாய் இருக்கும் என்கை –

ஸூரணை -253
அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும் அழித்து
ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது -விருத்திக்கும் ஹேதுவாய் ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –

இவருக்கு பய ஹேது எங்கனே -என்னும் அபேஷையில் அருளி செய்கிறார் –
அதாவது
பகவத் அனுபவ ஏக பரராய் -தத் அலாபத்தால் ஆற்றாமை கரை புரளும்படி
இருக்கும் மற்றை ஆழ்வார்களுக்கு –
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -என்றும் –
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும்
அநு சந்திக்கும் படி -பிரதம மத்திய பத சித்தமான பகவத் சேஷத்வமும்-
தத் காஷ்டையான பாகவத சேஷத்வமும் -ஆகிய உபய சேஷத்வத்தையும் –
நமக்கே நலமாதலில் -என்னும் படி ஸ்வ பிரயோஜனத்தில் மூட்டியும் -விளம்ப ரோஷத்தாலே –
போகு நம்பீ
கழகமேறேல் நம்பீ -என்னும்படி ஆக்கியும் –
ஸ்வ பிரவ்ருத்தி ஆகாதோ என்னும் அளவில் –
உங்களோடு எங்களிடை இல்லை -என்று உதறும்படி பண்ணியும் –
வன் சிறைப் புள் -இத்யாதியாலே வெறுத்து வார்த்தை சொல்லுவித்தும் -அழித்து –
பராதிசயகரத்வமே வடிவான ஸ்வரூபத்தை -மங்களா சாசனம் எனபது -ஓன்று அறியாதபடி –
தன் பக்கலிலே மக்நமாக பண்ணுமதான பகவத் ஸௌந்த்ர்யம் -அந்த ஸௌ ந்தர்ய தர்சனத்தில்
அனுபவத்தில் நெஞ்சு செல்லாதே -அதுக்கு என்-வருகிறதோ என்று வயிறு எரிந்து காப்பிடும்வரான இவர்க்கு –
உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு –
மங்கையும் பல்லாண்டு –
சுடர் ஆழியும் பல்லாண்டு –
அப் பாஞ்சசன்யமும் பல்லாண்டு -என்று
தத் விஷயத்துக்கும் -ததீய விஷயத்துக்கும் -மங்களா சாசனம் பண்ணுவிக்கை யாலே –
உபய சேஷத்வ விருத்திக்கும் ஹேதுவாய் -ஸ்வரூபத்தை தன் பக்கல் மக்னம் ஆகாதபடி நடத்தும் என்றபடி –

ஆக –அவர்களுக்கு அப்படி ஸ்வரூபத்தை குமிழ் நீர் உண்ணப் பண்ணுகிற அவனுடைய ஸௌ ந்த்ர்யம் –
இவருக்கு இப்படி செய்கையாலே -அவர்களுடைய ஆழம் கால் தானே இவர்க்கு மேடாய் இருக்கையாலே –
அவர்களுக்கு போலே காத சித்தம் ஆகை அன்றிகே –மங்களா சாசனம் இவர்க்கு நித்தியமாய் செல்லும் என்றது ஆயிற்று –

ஸூரணை -256
பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –
பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –
அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது
பிராரப்த பலமும் இதுவே எனபது –
அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு –
இது தானே -யாத்ரையாய் நடக்கும் –மற்றை ஆழ்வாருக்கு மங்களா சாசனம் காதா சித்தமாக செய்தே -இவர்க்கு
நித்யம் ஆகைக்கு -நிதானம் இன்னது என்று தர்சிப்பிக்கிறார் கீழ் –
இதுதான் இவர்க்கு நித்யமாக செல்லும்படி தன்னை வ்யக்தமாக அருளி செய்கிறார் மேல் –
அதாவது –
தன் ஸௌ குமார்யத்தை கண்டு கலங்கி -இவ் விஷயத்துக்கு என் வருகிறதோ
என்று மறுகுகிற இவர் பயத்தை பரிகரிகைக்காக -மல்ல வர்க்கத்தை அநாயாசேன அழித்த தோள் வலியைக் காட்ட –
இந்த தோள் வலியை நினைத்து மதியாதே -அசூர ராஷச யுத்தத்தில் புகில் என்னாக கடவது என்று –
அது தனக்கு பயப்பட்டு மங்களா சாசனம் பண்ணுவது -உண்டான அவமங்களங்கள் போக்கைகும் –
இல்லாத மங்களங்கள் உண்டாகைகும் தன் கடாஷமே அமைந்து இருக்கிற இவள் –
அகலகில்லேன் இறையும்-என்று நம்மை பிரிய மாட்டாதே இருக்க -நமக்கு
வருவதொரு அவமங்களங்கள் உண்டோ -என் செய்யப் படுகிறீர் என்று – லஷ்மீ சம்பந்தத்தை காட்ட –
இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வரில் செய்வது என் என்று அஞ்சி -மங்கையும் பல்லாண்டு -என்று மங்களா சாசனம் பண்ணுவது –
இந்தபயத்தை பரிகரிக்கைகாக -இச் சேர்த்திகு ஒரு தீங்கு வராதபடி -கல் மதிள் இட்டால் போலே இருக்கிற
இவர்களை பாரீர் என்று -இரண்டு இடத்திலும்
ஏந்தின ஆழ்வார்களைக் காட்ட -அவர்களுக்கு ஒரு தீங்கு வரில் செய்வது என் என்று அஞ்சி –
சுடர் ஆழியும் பல்லாண்டு –
அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு -என்று
மங்களா சாசனம் பண்ணுவது –
அநந்ய பிரயோஜன தயா அனுகூலரான பகவத் சரணார்த்திகளை துணையாக கூட்டிக் கொண்ட அளவால் –
பர்யாப்தி பிறவாமையாலே-பிரயோஜனாந்தர பர தயா பிரதிகூலரான கேவலரையும் -ஐஸ் வர்யார்த்திகளையும் திருத்தி –
மங்களா சாசனத்துக்கு ஆளாகும் படி அனுகூளர் ஆக்கிக் கொள்ளுவது –
இலங்கை பாழ் ஆளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே -இத்யாதியாலே
கீழ் கழிந்த காலத்தில் அவன் செய்த அபதானங்களுக்கு -பிற் காலத்திலேயே -சம
காலத்தில் போல் வயிறு எரிந்து -மங்களா சாசனம் பண்ணுவது –
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்று பகவத் பிராப்திக்கு பலமும்
அந்த மங்களா சாசனமே எனபது –
ச்நேஹாதஸ்த்தா நர ஷாவ்யச நிபிரபயம் சாரங்க சக்ராசி முக்க்யை-என்கிறபடியே
அஸ்தானே ரஷாவ்யசநிகள் ஆகையாலே -அநிமிஷராய் இருக்கிற திவ்யாயூத ஆழ்வார்கள்
முதலானவரை பார்த்து -குண வித்தராய் -நஞ்சுண்டாரை போலே உந்தாமை அறியாது இருத்தல் –
அனுபவத்திலே அழுந்து கைங்கர்ய பரராய் இருத்தல் செய்யாதே –உணர்ந்து நோக்கும் கோள் என்று
பலகாலும் சொல்லுவதாய் கொண்டு –
இவ் மங்களா சாசனமே விருத்தியாய் செல்லும் என்கை –

ஸூரணை-255
அல்லாதவர்களைப் போல் கேட்கிற வர்களுடையவும் சொல்லுகிற வர்களுடையவும்
தனிமையை தவிர்க்கை அன்றிகே –
ஆளும் ஆளார்-என்கிறவனுடையதனிமையைத் தவிர்க்கைகாக வாயிற்று
பாஷ்யகாரரும் இவரும் உபதேசிப்பது –
இப்படி மங்களா சாசனத்துக்கு ஆள் தேடி -பிரதி கூலரை அனுகூலர்
ஆக்குகைக்கு பண்ணுகிற உபதேசம் திரு பல்லாண்டு ஒன்றிலும் அன்றோ உள்ளது –
மேல் இவர் உபதேசித்த இடங்களில் -அல்லாதார் உபதேசத்தில் காட்டிலும்
வ்யாவிருத்தி என்கிற சங்கையில் அருளி செய்கிறார் –
அதாவது

பரோ உபதேசத்தில் வந்தால் -மற்றுள்ள ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் போல் –
உபதேசிக்கிறவர் தம்மிடம் கேட்கிற சம்சாரிகளுடைய அநாதி அஞாநாத்தாலே-நல துணையான
பகவத் விஷயத்தை அகன்று திரிகையால் வந்த தனிமையையும் –
வக்த்தாக்களான தங்களுடைய பகவத் குண அநு சந்தான தசையில் -போதயந்த
பரஸ்பரம் பண்ணுகைக்கு உசாத் துணை இல்லாமையால் வந்த தனிமையையும் –
தவிர்க்கை பிரயோஜனமாக உபதேசிக்கை அன்றிக்கே -சௌகுமார்யா அநு சந்தானத்தாலே வயிறு
மறுகின ஆழ்வார் ஆராய்ந்து பார்த்த இடத்தில் -அடைய அந்ய பரராய் தோற்றுகையாலே –
உபய விபூதியிலும் பரிகைக்கு ஆளில்லை -தம் வாசி அறிந்து நோக்க்குகைகும் -ஒரு ஆளும் ஆளுகிறிலர்- என்று
பேசும்படி இருக்கிற நிரதிசய சௌகுமார்ய யுக்தனான சர்வேஸ்வரனுடைய தனிமை தீர
மங்களா சாசனத்துக்கு இவர்கள் ஆளாக வேணும் என்று -இதுவே பிரயோஜனமாக வாயிற்று –
பரம காருணிகரான ஆச்சர்யர்களில் பாஷ்ய காரரும் -மயர்வற மதி நலம் அருள பெற்றவர்களில் –
இவ் ஆழ்வாரும் உபதேசித்து அருளுவர் என்கை-
ஆகையால் –
இவ் ஆழ்வார் பிரதிகூலரை அனுகூலராக உபதேசிக்கும் இடம் எல்லாம் மங்களா சாசன
அர்த்தமாக என்னக் குறை இல்லை -என்று கருத்து –
எம்பெருமானார் என்னாதே பாஷ்ய காரர் என்றது -ஸ்ரீ பாஷ்ய முகத்தாலே வேதாந்த
தாத்பர்யம் பண்ணி அருளினவர் என்னும் வைபவம் தோற்றுகைக்காக–

ஸூரணை-256
அல்லாதார்க்கு
சத்தா சம்ருத்திகள்
பகவத் தார்ச அனுபவ கைங்கர்யங்களாலே
இவர்க்கு
மங்களா சாசனத்தாலே –
மயர்வற மதிநலம் பெற்றவர்கள் எல்லாருக்கும் -சத்தா சம்ருத்திகள் -பகவத் தர்சன அனுபவ
கைங்கர்யங்கள் லாலேயாக அன்றோ தோற்றுகிறது-அவ்வாகாரம் இவர்க்கும் ஒவ்வாதோ –
அப்போதைக்குமங்களா சாசனமே யாத்ரையாக நடக்கும் என்னுமது கூடும்படி என்-என்கிற
சங்கையிலே அருளி செய்கிறார் –

சத்தை யாவது -தாங்கள் உளராகை-இது பகவத் தர்சன அனுபவ கைங்கர்ய பரரான
மற்றை ஆழ்வார்களுக்கு அவனைக் காணாத போது தரிக்க மாட்டாதே –
காண வாராய் -என்று கூப்பிடுகையாலே -தத் தர்சனத்தாலே யாய் இருக்கும் –
அவராவி துவராமுன் –
அவர் வீதி ஒருநாள் –
அருளாழி புள் கடவீர் -என்று எங்கள் சத்தை கிடைக்கைக்கு
ஜால கரந்தரத்திலே ஆகிலும் ஒருக்கால் காணும்படி எங்கள் தெருவே
ஒருநாள் போக அமையும் என்று -சொல்-என்கையாலே தர்சனமே சத்தா ஹேது என்னும் இடம்
சித்தம் இறே–
சம்ருத்தியாவது -உளராய் இருக்கிற மாதரம் அன்றிக்கே -மேலுண்டாய் செல்லும் தழைப்புஅது அவர்களுக்கு
அந்தாமத்து அன்பு –
முடிச்சோதி-
துடக்கமானவற்றில் போலுண்டான அனுபவத்தாலும் –
ஒழிவில் காலத்தில் படியே செய்யும் கைங்கர்யத்தாலுமாய் இருக்கும் –
அன்றிகே –
தர்சன -அனுபவங்கள் இரண்டாலும் சத்தையும் –
கைங்கர்யத்தால் சம்ருத்தியுமாக சொல்லவுமாம்–
அங்கனம் அன்றிக்கே –
அந்த சத்தை பிராவண்யா கார்யமான அனுவம் இல்லாத போது குலையும் -என்று
இவர் தாமே கீழே அருளி செய்கையாலும் -நாளை விநியோகம் கொள்ளுகிறோம் என்னில்
அழுகவும் கூட சத்தை இல்லை என்று -கைங்கர்யம் சத்தா ஹேதுவாக அநு சந்தானத்திலே
சொல்லுகையாலும் –
கண்டு களிப்பன்-என்று தர்சனம் தான் சம்ருத்தி ஹேதுவாக தோற்றுகையாலும்-
சத்திக்கும் சம்ருத்திக்கும் மூன்றுமே காரணமாம் என்னவுமாம் –
மயர்வற மதிநலம் அருள பெற்ற அன்று முதல் பகவத் ஸௌகுமார்யாதிகளைக் கண்டு
இவற்றுக்கு என் வருகிறதோ என்று -வயிறு எரிந்து – மங்களா சாசன அபிநிவிஷ்டரான இவர்க்கு -மங்களா சாசன விச்சேதம் வரில்
தாமுளராக மாட்டாமையாலும் -அப்படி அவிச்சின்னமாக செல்லுகை தானே
தழை புக்கு உடலாய் இருக்கையாலும் –
சத்தையும் சம்ருத்தியும் இரண்டும் மங்களா சாசனத்தாலே யாய் இருக்கும் –
ஆகையால் இவர்க்கு மங்களா சாசனம் நித்யமாக செல்லத் தட்டில்லை -என்று கருத்து –

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –14- கதிக்குப் பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம் இத்யாதி —

March 30, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் உடைய திவ்ய சூக்தியை பாடுமவர்களை ஏத்தும் ஸ்ரீ எம்பெருமானார் என்னைப் பிரியாமையாலே –
புருஷார்த்த லாபத்துக்கு துச்சக சாதனங்களை அனுஷ்டிக்கும் ஸ்வபாவம் போகப் பெற்றேன் -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

இவ் எம்பெருமானார் தம்முடைய பூர்வ அவதாரத்திலே -தாம் ஈடுபட்ட ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் – விஷயத்திலே அதி வ்யாமுக்த்தரான –
ஸ்ரீ குலசேகர பெருமாள் -சூத்ரே மணி கதா இவ -என்னும்படி முகம் அறிந்தவர் -மாணிக்கங்களை கோக்குமா போலே –
சாஸ்திரம் சொல்லைக் களை பறித்து – தம்முடைய திவ்ய சூக்திகளாலே நிர்மித்த திவ்ய பிரபந்தங்களை -அனுசந்திக்கும்
பெரியோர்களுடைய திருவடிகளை ஸ்துதிக்கும் ஸ்ரீ எம்பெருமானார் என்னை விட மாட்டார் –
ஆன பின்பு புருஷார்த்த லாபத்துக்காக – துஸ் சககங்களான சாதனாந்தரங்களை அனுஷ்டிக்கும் ஸ்வபாவம் போகப் பெற்றேன் -என்கிறார் .-

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ குலசேகர பெருமாள் உடைய கவிகளை பாடும் அவர்களை ஏத்தும் ஸ்ரீ எம்பெருமானார் என்னை கை விட மாட்டார் –
ஆகையாலே இனி பேறு பெற வேண்டி தவம் செய்யும் கொள்கை இல்லாதவன் ஆயினேன் -என்கிறார் –

கதிக்குப் பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்க தவம் செய்யும் கொள்கை ஆற்றேன் கொல்லி காவகன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமானுசன் என்னைச் சோர்விலனே -14 –

பத உரை –
கொல்லி காவலன் -ஸ்ரீ குலசேகர பெருமாள்
கலைச் சொல் -சாஸ்திர சொற்களை
பதிக்கும் -பதிய வைத்து இருக்கும்
கவி -கவிகளை
பாடும் -பாடுகிற
பெரியவர் -பெருமை உடையவர் களுடைய
பாதங்களே -திருவடிகளையே
துதிக்கும் -ஸ்தோத்திரம் செய்யும்
பரமன் -தன்னிலும் மேற்பட்டவர் வேறு எவரும் இல்லாத
இராமானுசன் -எம்பெருமானார்
என்னை சோர்விலன் -என்னைக் கை விட்டு விட மாட்டார்
கதிக்கு -ஆகையால்-பேற்றுக்கு
பதறி -ஆத்திரப்பட்டு
வெம் கானமும் -வெம்மை வாய்ந்த காட்டிலும்
கல்லும் -மலைகளிலும்
கடலும் -சமுத்ரத்திலும்
எல்லாம் -எல்லா இடமும்
கொதிக்க -கொதிக்கும் படியாக
தவம் செய்யும் -தவம் புரியும்
கொள்கை ஆற்றேன் -கொள்கை இல்லாதவனாயினேன் –

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் ரத்னங்களைப் பதித்தால் போல் சாஸ்திர சொற்களை பதித்த கவிகளை –
ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாடா நின்றுள்ள வைபவத்தை உடையவர்களுடைய திருவடிகளையே யேத்துமவராய் –
பாகவத விஷய பிரேமத்துக்கு தமக்கு மேற்பட்டார் இல்லாத படி இருக்கும் ஸ்ரீ எம்பெருமானார் என்னை விட்டு நீங்கு கிறிலர்-
ஆதலால் ப்ராப்ய லாபத்தை பற்ற த்வரித்து-

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——–மூன்றாம் திருவந்தாதி – 76- என்கிறபடியே
அத்யுஷ்ணமான காட்டோடு மலையோடு கடலோடு வாசி யற-எல்லா இடத்திலும் –
சர்வ அவயவங்களும் ஒக்க நின்று -கொதிக்கும் படியாக தபச்சுக்களைப் பண்ணும் ஸ்வபாவம் போகப் பெற்றேன் –
அன்றிக்கே –
வெம்கானமும் கல்லும் கடலும் எல்லாம் கொதிக்க தவம் செய்யும் கொள்கை -என்றதுக்கு
இவனுடைய தப க்ரௌர்யத்தைக் கண்டு -அவை தானும் நின்று பரிதபிக்க -அவ்வவ ஸ்தலங்களிலே
தபசு பண்ணா நிற்கும் ஸ்வபாவம் என்றும் சொல்லுவார்கள் –
கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி –என்றதற்கு –
ஸ்ரீ குலசேகர பெருமாள் அனுபவ பரீவாஹா ரூபமான ச்வோக்திகளை ரத்னங்களைப் பதித்து வைத்தால் போலே நிறைத்து வைத்ததாய்-
சாஸ்திர ரூபமாய் இருந்துள்ள கவிகள் என்னவுமாம் –
கொள்கை -ஸ்வபாவம் / சோர்வு -பிரிவு /சோர்விலன் -என்றது பிரிவு இலன் என்றபடி –
(சோர்வை இல்லமாக கொண்டவன் என்று கொள்ளக் கூடாதே என்று இத்தையும் பரம காருண்யத்தால் காட்டி அருளுகிறார் )

மாஸூசா -போகும் இடம் பெருமையும் பார்த்து பார்த்தும் -நாம் செய்த பாபங்களை பார்த்தும் –
நம் இயலாமை கண்டும் தவிப்போமே -அந்தக துக்கம் போக்க –
நீர் நம்மை விட்டாலும் நான் உன்னை விட்டேன் -சோர்விலன் –
இவையும் கொதிக்கும் கடும் தவத்தால் -தவம் செய்தவர்களும் கொதிக்க –
பாடும் பெரியவர் -ஸ்ரீ நாத முனிகள் -ஸ்ரீ பிள்ளான் போல்வார் – என்றுமாம் –

தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1-

ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2-

அரங்கன் கோவில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-

நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4-

மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே -2-5-

தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-

கசிந்து இழிந்த கண்ண நீர்களால் வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –2-7-

மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-

அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே–2-9-

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10-

தேட்டரும் திறல் –அடியார் ஈட்டங்கள் -அரங்கன் முற்றம் சேறு செய்யும் தொண்டர்களே பாடும் பெரியவர்-
உபாயத்தில் கண் வைக்காமல் -உபேயம் புத்தி பண்ணி கைங்கர்ய நிஷ்டராகவே இருக்க சரம தசையில்
உபதேசித்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார்-
அநந்யார்ஹம் திடமாக அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் அன்றோ –நம் ஸ்ரீ குலசேகரப் பெருமாள்

கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி
கொல்லி நகர் என்று சொல்லப் படுகிற-திரு வஞ்சிக் களத்துக்கு ரஷகரான -ஸ்ரீ குலசேகர பெருமாள் -சாஸ்திர சொல்லுக்களினுடைய
தாத்பர்ய விஷய பூதங்களாய் இருக்கிற பகவத் ஸ்வரூப-ரூப குண விபூதிகளையும் -தத்வ ஹித புருஷார்த்தங்களையும்
முத்துக்களையும் ரத்னங்களையும்-முகம் அறிந்து கோக்கும் விரகரைப் போலே -விசதமாக தத் தத் ஸ்தானங்களிலே சேர்த்து

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1 என்று தொடங்கி–

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11– என்னும் அளவாக -திவ்ய பிரபந்த ரூபேண அருளிச் செய்த -போக்யமான கவிகளை –

காவலன்-
ரஷகன் –

கொல்லி காவலன்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் -என்று அவரே கூறிக் கொள்வது காண்க –
கூடல் என்னும் பாண்டிய நாட்டு தலை நகர் ஆகிய மதுரையும் –
கோழி என்னும் சோழ நாட்டு தலை நகராகிய உறையூரும் –
வென்றி கைப்பற்றியவையே யாதலின் சொந்தத் தலை நகராகிய கொல்லி நகரை-மட்டுமே கூறினார் அமுதனார்
கொல்லி என்பது -கொல்லி மலை சூழ்ந்த நாடு என்பர் சிலர்
இங்கே கூடல் கோழி என்னும் நகரங்களோடு ஒரு கோவையாக கூறலின்-கொல்லி -என்பது நகரமே என்று உணர்க –
கொல்லிக் கண்ணன் -என்று புலவர் ஒருவர் பேர் பெற்று உள்ளார் –ஆதலின் அது நகரமே -என்க-

கோழியும் கூடலும்– ஒரு வார்த்தை இருந்தாலும் திவ்ய தேசம் தான் –

நம் சம்பிரதாயத்தில் பெருமாள்–ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன்
பெரிய பெருமாள்– ஸ்ரீ ரெங்கத்தில் மூலவர்
நம் பெருமாள் -உத்சவர்
இதனால் இவரும் பெருமாள் -பெயரை பெற்றார் .-அதனால் பெருமாள் திரு மொழி .
தினமும் திரு அரங்க யாத்ரை -மெய்ப்பாடு –

சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே-
கலை -சாஸ்திரம்
கலை சொல் பதிக்கும் கவி என்று கூட்டுக
சாஸ்திர சொற்களை அமைத்து திரு மொழி அருளி செய்து உள்ளாராம் ஸ்ரீ குலசேகர பெருமாள் –
ஸ்ரீ திருக் கண்ண புரத்தில் உள்ளவர் பேசும் வார்த்தைகளிலே சாஸ்திரங்கள் இலங்கும் என்கிறார்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ -8 1-1 – -என்பது அவர் திரு மொழி
கட்புலன் ஆகாதவைகளான பகவானுடைய ஸ்வரூப ரூப குண விபவங்களை சாஸ்திரங்கள் நமக்கு தெரிவிப்பது போலே –
அவர்கள் பேசும் வார்த்தைகளும் நமக்கு அவற்றை உணர்த்துவனவாய் இருத்தலின் –கலை இலங்கு மொழி யாளர் –என்றார் ஸ்ரீ ஆழ்வார் –
அங்கனமே ஸ்ரீ குலசேகர பெருமாள்
திவ்ய பிரபந்தத்திலும் சொற்கள் சாஸ்திரம் போலே அவற்றை அறியுமாறு செய்தலின்
கலை சொல் என்று வருணிக்கிறார் ஸ்ரீ அமுதனார் –
இடம் அறிந்து ரத்னங்களை பதிப்பது போலத் தக்கவாறு பெருமாள் திரு மொழியில் சொற்கள் பதிக்கப் பட்டு உள்ளன
பதிக்கும் என்பதால்
சொல்லை ரத்னமாகவும் -கவியை ஆரமாகவும் -உருவகம் செய்தமை போதரும் –
ஏக தேச உருவகம் ஹாரத்தில் ரத்னங்கள் போலத் தமிழ் மாலையில் சொற்கள் பதிக்கப் பட்டு உள்ளன –
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10-––என்பது பெருமாள் திருமொழி
சொல்லின் இன் தமிழ் மாலை-இதனால் சொற்களின் சேர்க்கை அழகு கருதப் படுகிறது –
பதங்கள் -சொற்களின் இணைப்பை சய்யை-என்பர் வட நூலார் –

இனி கலைச் சொல் என்று கொண்டு கூட்டாது இருந்தபடியே கலை என்பதைக் கவிக்கு அடையாக்கிப் பொருள் கூறலுமாம் –
கலையாகிய கவி என்று இரு பெயரொட்டுப் பண்புத் தொகை
சாஸ்த்ரமான பெருமாள் திரு மொழி -என்றபடி – இதனால் கொல்லி காவலன் தனது அனுபவம் உள் அடங்காது -வெளிப்படும்
தன் சொற்களை ரத்னங்களைப் பதித்து வைத்தால் போன்று அழகு பட இணையக் கோத்து வைத்த சாஸ்திர ரூபமான கவி -என்றதாயிற்று –

சூத்திர மணி கணாம் இவ-நூலும் மணியும் போல கீதை /உண்டியும் பாவும் ஒத்து கிடக்கும் அது போல இல்லை–
நூல் ஓன்று மணிகள் நிறைய கண்ணுக்கு தெரியாத நூல் போல இருக்கிறான்..
மணிகளை நூல் தானே தாங்கும்…நாராயணனே -சூத்ரே நமக்கே- பன்மைகள்- மணி கணாம்
ஏகமேவ -ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -நாராயணனே
நமக்கே -நாமோ பலர் –
அது போல சாஸ்திர சொல் தெரியும் படி பெருமாள் திரு மொழி-
தத்வ ஹித புருஷார்த்தங்களை -அனுபவம்
சொரூபம் -ரூபம்-குணம்-விபவம்- போன்ற ரத்னங்களை ஸ்ரீ அரங்கன் இடம் ஆரம்பித்து ஸ்ரீ நாரணன் இடம் முடித்தார்
இது தான் நூல்- தெளியாத மறை நூல்கள் தெளிகின்றோம் அருளி செயல்களால்-ஸ்ரீ வேதாந்த தேசிகன்
பல சூத்திர வாக்யங்களுக்கு ஒரு பிர பந்தம்..
இது கொண்டு சூத்திர வாக்யங்களை ஒருங்க விட்டார் ஸ்ரீ பாஷ்யகாரர்

பாடும் பெரியவர் பாதங்களே –
தம் தாமுடைய ப்ரீதிக்கு போக்குவீடாய்-பாடா நின்றுள்ள வைபவத்தை உடையரான –
நம் ஸ்ரீ நாத முனிகள் -ஸ்ரீ ஆள வந்தார் -ஸ்ரீ பெரிய நம்பி –ஸ்ரீ திருமலை நம்பி -ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி –
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் -ஸ்ரீ திருமாலை ஆண்டான் – முதலான ஞானாதிகருடைய திருவடிகளையே-

பாடும் பெரியவர் –
பெருமாள் திருமொழியை அனுசந்திக்கும் போது-கவி இன்பத்துடன் அது தரும் இறை உணர்வின்
இன்பமும் -சேர்ந்து பேரின்பக் கடலில் திளைத்துப் பாடத் தொடங்குகிறார்கள் ரசிகர்கள் –
அவர்களைப் பாடும் பெரியவர் -என்கிறார் ஸ்ரீ அமுதனார் –
இனி -இன்னிசையில் மேவிச் சொல்லிய இன் தமிழ் — 6-10 – என்றபடி இன்னிசை மேவியதாலின் பாடுகின்றனர் என்னலுமாம் –
பாடுவதே பெருமை என்க –

துதிக்கும் பரமன்
குரு பாதம் புஜாம் த்யாயேத்-குரோர் நாம சதா ஜபேத் -குரோர் வ்ர்த்தாஸ் சகதயேத் குரோர் அந்ய நபாலயேத்-அர்ச்சநீயஸ்
சவந்த்யஸ் கீரத்த நீயஸ் ச சர்வதா -என்கிறபடியே சதா ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டு -போந்து –
அந்த பாகவத நிஷ்டைக்கு மேற்பட்டார் இல்லை என்னும்படி உத்க்ருஷ்டரான –
யவரேலும் என்னை யாளும் பரமர் -என்றும் –
நம்மை அளிக்கும் பிராக்கள் -என்றும் –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவரும் அப்படியே அருளிச் செய்தார் இறே –

பாதங்களே துதிக்கும் பரமன்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அடியிலும் இடையிலும் முடிவிலும் முறையே
பொன்னி வருடும் அடியையும்-1-11
முடி மேல் மாலடியையும் –7 11- –
அரசு அமர்ந்தான் அடியையும் – 10-7 -சொல்லி
நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவதையே முதலிலும் இறுதியிலும் பலனாக அமைத்து துதிக்கிறார் –

பொன்னி திரைகையால் அடி வருடப் பள்ளி கொள்ளும்-1-1-

நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-

அம்மான் தன் அடி இணைக்கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று கொலோ வணுகு நாளே –1-3-

மெய் தழும்ப தொழுது ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என்நெஞ்சமே-2-4-

அங்கை யாழி அரங்கனடியிணை தங்கு சிந்தை தனிப் பெரும் பித்தனாம் கொங்கர் கோன் குலசேகரன் -3-9-

வட வேங்கடத்தான் தன் பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி -4-11-

தரு துயரம் தடையேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை -5-1-

எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால்-5-5-

வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல் தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே– 5-10-

கொல்லி காவலன் மாலடி முடி மேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– 7-11-

யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகரத் துயின்றவனே -8-10-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்தென் காகுத்தன் தன்னடி மேல் தாலேலோ வென்றுரைத்த தமிழ் மாலை -8-11-

அம்மானை யிராமன் தன்னை ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே-10-6-

தில்லை நகரத் திருச் சித்ரா கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான்
அடி சூடும் அரசை அல்லால் அரசாக வெண்னேன் மற்றரசு தானே -10-7-

அர்ச்சனம் வந்தனம் கீர்த்தனம் பண்ணி- பாகவத நிஷ்ட்டை-அதில் -எவரேலும் அவர் கண்டீர் எங்கள் ஆளும் பரமரே -ஸ்ரீ ஆழ்வார் போலே
மாறன் அடி பணிந்து உய்ந்த சுவாமி-பர கத ச்வீகாரமாக கொண்ட -ஸ்ரீ ஆழ்வானை இட்டு ஸ்ரீ அமுதனாரை கொண்டாரே

அடித் துதியான கலை கவியாம் சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர்க்கு தொண்டர் தொண்டரான
ஸ்ரீ எம்பெருமானாரோ அவர்கள் பாதங்களையே துதிக்கிறார் –
அதனால் தொண்டர்கள் திறத்துக் கொண்ட ஈடுபாட்டில் தமக்கு மேற் பட்டார் எவருமே இல்லாத நிலையை எய்தினமையின்
ஸ்ரீ எம்பெருமானாரை பரமன் -என்கிறார் –
பரமன் -தனக்கு மேற் பட்டவர் இல்லாதவன்
என்னைச் சோர்விலன் –
என்னை -தானே அபிமானித்து ஏற்ற என்னை
நானாகப் பற்றினால் அன்றோ விட்டுப் பிரிய இடம் உண்டாகும் என்பது கருத்து –
சோர்வு -பிரிவு

இராமானுசன் என்னை சோர்விலனே –
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார் –
என்னை -பரகத ச்வீகாரமாக அங்கீ கரிக்க பட்ட –
சோர்விலன்-இனி விட மாட்டார் –
சோர்வு -பிரிவு சோர்விலன் -என்றது பிரிகிறிலன்-என்றபடி –
ஆன பின்பு -பிராப்யத்திலே த்வரித்து – ப்ராபகாந்தரங்களிலே கண் வைக்கும் ஸ்வபாவத்தை தவிர்ந்தேன் -என்கிறார் .-
பிராபகாந்தர பரித்யாகத்துக்கும் -அஞ்ஞான அசக்திகள் அன்று –ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது –
ப்ராபகாந்தரம் அஞ்ஞருக்கு உபாயம் – ஞானிகளுக்கு அபயம் -என்னக் கடவது இறே-

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை பாராது காப்பிடும் பான்மையினன் தாள் பேராத வுள்ளத்து
ஸ்வாமியை அண்டை கொண்ட பலத்தால் என்னை -என்று சாத்விக அஹங்காரம் தோற்ற அருளிச் செய்கிறார் –

கதிக்கு பதறி –
பரம புருஷார்த்தத்துக்கு த்வரித்து –

வெம் கானமும் கல்லும் கடலும்
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——–மூன்றாம் திருவந்தாதி – 76- -என்றும் –

ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா
தமதா இமையோர் உலகாள கிற்பீர்—திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே—பெரிய திருமொழி-3-2-1- -என்றும் –
காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்துதீயோடு நின்று தவம் செய்ய வேண்டா
திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்—திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–பெரிய திருமொழி-3-2-2- -என்றும்
உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் –திரு விருத்தம்-66-என்றும்-
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் –அமலனாதி பிரான் -என்றும்-
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய வெக்காவே சேர்ந்தானை
மெய்ம்மலர் தூயக் கை தொழுதால் அக்காவே தீ வினைகள் ஆய்ந்து- என்றும்–மூன்றாம் திருவந்தாதி – 76–சொல்லுகிறபடியே –
அதி க்ரூரமான காடுகளிலே இருந்தும் பர்வதாக்ரங்களிலே வசித்தும்
சீதளமான தீர்த்தங்களிலே அவகாஹித்தும் –
பஞ்சாக்னி மத்யத்தில் நின்றும்
எல்லாம் கொதிக்கத் தவம் செய்யும் -எல்லா அவயவங்களும் ஒக்க பரிதபித்து-க்லேசிக்கும்படியாக தபச்சுக்களை பண்ணும் –

கொள்கை அற்றேன்
ஸ்வபாவம் போகப்-பெற்றேன் –கொள்கை -ஸ்வபாவம் –
அன்றிக்கே –
வெம் கானமும் –கொள்கை அற்றேன் -என்றது –
எதாத்த்ரிஷ்டி மவஷ்டப்ய நஷ்டாத்மா நோல்ப புத்திய ப்ரபவத்வுக்ர கர்மணா
ஷயாய ஜகதோ ஹீத காமமாஸ்ரித்யு துஷ்ப்பூரம் டம்பமா நம தான் வித மோஹாந்தர்
ஹீத்வா சத்க்ரஹான் ப்ரவர்த்தந்தே சூசிவ்ரதா-என்று கீதையிலும் –

பஹூபிகாரணை ர்த்தேவோ விச்வாமித்ரோ மகா முனி -லோபிதக்கோபி தச்சைத
பசாசாபிவர்த்ததே– நஹ்யச்திவ்ரஜி ந கிஞ்சித் தர்ச்யதே சூஷ்ம மப்யதா -நதீயதே
யதித்வச்ய மனசோய தபீப்சிதம் -விநாசயே தத்ரை லோக்ய தபஸா ச சராசரம் –
வ்யாகுலஸ் சதிசஸ் சர்வ நாசா கிஞ்சித் பிரகாசதே –சாகர ஷூபிதாஸ் சர்வே விசீர்யந்தேச சர்வத –
பிரகம்பதேச பிரத்வீ வாயுர்வாதி ப்ர்சாகுலா — பாஸ்கரோ நிஷ்ப்ரபஸ் சைவ மகர்ஷேஸ் தஸ்ய தேஜஸா –என்று ஸ்ரீ ராமாயணத்திலும் –

தஸ்ய தூமஸ் சமுத்பன்ன தூமோக்நிசத போமய-திர்ய கூர்த்தவ மதோலோகோ நதபத் விஷ்வ கீரித –
திவிச்த்தாது -நசக்துவன் –என்று பாகவதத்திலும் -சொல்லுகிறபடியே –
இப்படி ப்ராப்யாந்தரங்களுக்காக தபச்சுக்களை பண்ணி –லோகத்துக்கு எல்லாம் ஷோபத்தை பண்ணும் ஸ்வபாவம்
போகப் பெற்றேன் -என்கிறார் -என்னவுமாம் –

கதிக்கு பதறி கொள்கை ஆற்றேன் –
பேற்றை எவ் வழி யினாலாவது பெற்று விட வேண்டும் -என்று ஆத்திரப்பட்டு –
மிகக் கொடிய தவம் செய்ய எக்ல்காலத்திலும் நான் முயல மாட்டேன் -என்றபடி –
தவம் செய்யுமவர்கள் -கானகத்திலும் -மலைகளிலும் -கடல்களிலும் இருந்து –
வரும் துயரத்தை பொருள் படுத்தாமல் -தவத்தில் நிலை நிற்பர்கள்-

வெம் கானம் -வெம்மையான கானம் -பண்புத் தொகை
கல்-மலை
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்தகம்–-பெரிய திருவந்தாதி – 68-
கல் எடுத்து கல் மாரி காத்தாய் என்னும் -திரு நெடும் தாண்டகம் – 13– என்று
முறையே ஸ்ரீ நம் ஆழ்வாரும் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும் அருளி உள்ளமை காண்க –

ஸ்ரீ நைமிசாரண்யம் முதலிய கானகங்களிலும்
ஸ்ரீ திருமலை முதலிய பர்வதங்களிலும்
கடலிலும் பலர் தவம் புரிந்து உள்ளமை புராணங்களில் காணலாம் –

ப்ராசீன பர்ஹீஷ் -என்பவருடைய புதல்வர்களாகிய ப்ரசெதசர் -பதின்மர் பதினாயிரம் ஆண்டுகள்
கடலுக்குள் இருந்து தவம் புரிந்து கடவுளைக் கண்டதாக ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம் – 4- அத்யாயம் – 30 –கூறுகிறது –

கடல் என்பது உப லஷணமாய் நீர் நிலைகளையும் குறிக்கும் –
ஸௌபரி நீருக்குள் நெடும் காலம் தவம் புரிந்ததாக புராணம் கூறுகிறது –

எல்லாம் கொதிக்க –
தவம் புரிவோர் உடலில் உறுப்புக்கள் அனைத்தும் கொதிக்கும்படியாக -என்றபடி
இனி –வெம் கானமும் கல்லும் கடலும் -இவை அனைத்தும் தவம் தணலின் வெம்மை தாங்காது
கொதிக்கும்படியாக -என்று உரைப்பதும் உண்டு –
ஹிரண்ய கசிபு தவம் செய்யும் போது –
தஸ்ய மூர்த்த்ன ச்சமுபந்த ச்தூமோக்நிச்த போமய திர்யக் ஊர்த்த்வ மதோலோகான்
அதபத் விஷ்வகீரித க ஷூபுர்நத்யுதன்வந்த சத்வீபாத் ரிச்ச்சால பூ நிபேதுஸ் சக்ர ஹாச்தாரா
ஜஜ்வளுச்ச திசோதச -பாகவதம் – 7-9 49-என்று
அந்த ஹிரண்ய கசிபுவினுடைய தலையிலிருந்து தவத்தின் வடிவமான புகையோடு நெருப்பு உண்டாயிற்று –
அது இடையிலும் மேலும் கீழும் உள்ள உலகங்களை நாலு புறங்களிலும் பரவித் தபிக்கும்படி செய்தது –
ஆறுகளும் கடல்களும் கலங்கின -தீவுகள் மலைகளுடன் கூடிய பூமி நடுங்கியது –
கிரகங்களுடன் கூடிய நஷத்ரங்கள் விழுந்தன -திசைகள் பத்தும் தீப் பற்றியவைகளாய் ஜ்வலித்தன – என்றபடி
உலகம் நிலை கொள்ளாது தவித்தமை காண்க –

கொள்கை -ஸ்வபாவம் என்பது ஸ்ரீ ஜீயர் உரை

ஆசார்யர் அபிமானமே உத்தாரகம் -ஆசார்யர் கைங்கர்யமே காலஷேபம் என்று இருக்க வேண்டும்-

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –13-செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் இத்யாதி —

March 29, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளை ஒழிய மற்று ஒன்றில்
ஆதாரம் அற்று இருக்கும் எம்பெருமானார் திருவடிகளே எனக்கு ப்ராப்யம் -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டிலே திரு மழிசை ஆழ்வார் உடைய சம்பந்தத்தை இட்டு எம்பெருமானாரைக் கொண்டாடி –இப்பாட்டில் –
தாம் முந்துற முன்னம் தொண்டு பட்ட -பெரிய பெருமாள் திருவடிகளில் அதி ப்ரவணராய் –மற்றுமோர் தெய்வம் உண்டே -என்று
அவரை ஒழிந்த எம்பெருமான்களை விரும்பாத -பாதிவ்ரத்யத்தை உடையரான-ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் உடைய
திருவடிகள் ஒழிய வேர் ஒன்றில் ஆதாரம் அற்று இருக்கிற எம்பெருமானார்-திருவடிகளே எனக்கு பிராப்யம் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளை ஒழிய மற்று ஒன்றில் ஆதரம் அற்று இருக்கும்-
எம்பெருமானார் திருவடிகளே நமக்கு ப்ராப்யம் -என்கிறார் –

செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் செம் தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்
தய்யன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே – 13-

பத உரை –
செய்யும் -செய்யப்படும்
பசும் துளவம் -வாய்ந்த திருத் துழாயிலான
தொழில் -வெளிப்பாட்டை -அதாவது -தக்கவாறு அமைப்புடைய
மாலையும் -திரு மாலையும்
செம் தமிழில் -செம்மையான தமிழ் மொழியில்
பெய்யும் -செய்யப்படும்
மறை -வேதமான
தமிழ் மாலையும் -திரு மாலை-திருப் பள்ளி எழுச்சி என்னும் தமிழ் பா மாலையும்
பேராத -நீங்காது -இயல்பாய் அமைந்த
சீர் -நற் குணங்களை உடையனான
அரங்கத்து ஐயன் -திருவரங்கத்தில் கண் வளர்ய்ம் பெரிய பெருமாள் உடைய
கழற்கு -திருவடிகட்கு
அணியும் -அலங்காரம் செய்யும்
பரன் -மிக சிறந்த தொண்டர் அடி பொடி ஆழ்வார் உடைய
தாள் அன்றி -திருவடிகளைத் தவிர
ஆதரியா -ஆதரிக்காத
மெய்யன் -மெய்மையை உடையவரான
இராமானுசன் -எம்பெருமானார் உடைய
சரணே -திருவடிகளே
எனக்கு -எனக்கு
வேறு கதி -தனிப்பட்டு பெறத் தக்கதாம் -அதாவது ப்ராப்யமாம் .

கெண்டை ஒண் கண்ணும் துயிலும் எந்நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்
தொண்டரிட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டு வந்தூதும் ஆகிலே –11-1-9-
மிக்க சீர்த் தொண்டரான -பெரிய திரு மொழி -11 1-9 – தம்மாலே செய்யப்பட்டதாய் –
தம்முடைய கர ஸ்பர்சத்தாலே வந்த புதுக் கணிப்பு எல்லாம் நிறத்திலே காணலாம்படி இருக்கிற திருத் துழாயாலே-
வகுப்புண்டாய்ச் சமைத்த திரு மாலையையும் -ச்வார்த்த ப்ரகாசகமான தமிழிலே உண்டாக்கப் பட்டதொரு வேதம்
என்னலாம்-ஆன தமிழ் தொடையையும் –
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே–4-10-2—வீடில் சீர் -திருவாய் மொழி – – என்கிறபடியே
நித்ய சித்தமான கல்யாண குணங்களை உடையராய் கொண்டு

மெய் எல்லாம் போகவிட்டு விரி குழலாரில் பட்டு
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே – -திருமாலை – 39-
ஐயனே அரங்கனே -என்னும்படியே-
பரம பந்துத்வம் தோற்ற கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் உடைய திருவடிகளுக்கு-சாத்துமவராய் –
சேஷத்வ காஷ்டையில் நிற்கையாலே சேஷத்வத்துக்கும் தமக்கு மேற் பட்டார் இல்லை-என்னும்படி இருக்கிற
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் உடைய திருவடிகளை ஒழிய விரும்பாத-சத்ய சீலரான
எம்பெருமானார் உடைய திருவடிகளே எனக்கு விசேஷித்து ப்ராப்யம் –
பெய்தல்-உண்டாக்குதல் / பெறாமை -நீங்காமை-

வேறு கதி -விசேஷ ஸூ லபமான–பந்தத்துக்கு இல்லாமல் – மோக்ஷம் ஏக கதி –
பேராத சீர் -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று இருக்கும் அரங்கன் —
தொண்டர்களில் பரன் -தொண்டர் தலைவர் -தாஸ்யர்களில் பரன் -பராத் பரன் மேன்மையிலே பரன் -சேஷி சேஷ பரர்கள் இருவரும் –
அரங்கன் என்றால் மயலே பெருகும் படி அருளிச் செய்த ஆழ்வார் இவரே-வனமாலை அம்சம் –
வேறு பட்ட கதி உபாயம் உபேயம் ப்ராப்யம் பிராப்பகம் ஒன்றான விலக்ஷண கதி-

செய்யும் பசும் துளபத் தொழில் மாலையும் –
மிக்க சீர் தொண்டரான தம்மாலே –வைஜயந்தீ வனமாலை என்றும் கலம்பகன் மாலை என்றும்
அனுபோக்தாக்களாலே உல்லேக்கிக்கும் படி சந்தர்ப்பிக்கப் பட்டதாய் -தம்முடைய கர ச்பர்சத்தாலே வந்த புதுக் கணிப்பு எல்லாம்
நிறத்திலே காணலாம் படியான பசுமை உடைத்தான -திருத் துழாயாலே வகுப்புண்டாய் சமைத்த திரு மாலையும் –
கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—–திருப்பள்ளி எழுச்சி–10-
தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும் இவர்
தம்மை தாமே நிரூபித்து கொள்ள வல்லவர் இறே –

செய்யும் மறைத் தமிழ் மாலையும் –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் இருவகை மாலைகளை அரங்கத்து ஐயனுக்கு சமர்ப்பிக்கின்றார் –
ஒருவகை -திரு துழாய் மாலை
மற்று ஒரு வகை -தமிழ் மாலை
ஆண்டாளும் அரங்கனுக்கு பா மாலையும் பூ மாலையும் சமர்பித்து உள்ளாள்-
ஆயின் அப்பூ மாலை அவளால் தொடுக்கப் பட்டது அன்று -சூடி சமர்பிக்கப் பட்டது தான்
திருத் துழாய் மாலையோ தொண்டர் அடி பொடி ஆழ்வார் தம் கையினாலேயே தொடுத்தது –ஆதலின் –
செய்யும் துளப மாலை -என்றார் –

திருத் துழாய் அடியிலே பிறந்து திருத் துழாய் போலே பிறப்பே தொடங்கி ஞானம் மணம் கமழும் ஆண்டாளை
திருத் துழாயோடு உண்டான தொடர்பாலும் ஒப்புமையாலும் மிக இனியவளாக கருதி
அவள் சூடிய பூ மாலையை அரங்கன் தலையாலே தாங்குவான் ஆயின் –
நேரே திருத் துழாய் மாலையை தொண்டர் அடி பொடி ஆழ்வார் மிக்க ஆதரத்துடன் கையாலே தொடுத்து -சமர்பித்தது அரங்கனுக்கு
எவ்வளவு இனியதாக இருக்கும் என்பதை நாம் சொல்ல வல்லோம் அல்லோம் –
இத்தகைய துழாய் மாலையை அரங்கன் கழற்கு அணிவிக்கிறார் ஆழ்வார் -அம்மாலை என்ன ஆயிற்று என்பதை நாம் அறிகிலோம் –
திருத் துழாய் சம்பந்தம் பெற்றவள் தந்த மாலை தலை மேல் ஏறியது –
இது சாஷாத் திருத் துழாய் மாலை –
சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே–16-
அதற்க்கு மேல் தன் பால் ஆதரம் பெருகி ஆழ்வார் தம் கைப்பட தொடுத்து சமர்ப்பித்தது
அதற்க்கு மேல் அரங்கனை பிரிந்து வருந்துவோர் -அரும் துயரைப் போக்கி -கண் உறங்கப் பண்ணுவதும் அதுவே –
முதன் முதல் இருந்து மறைந்து போன அவர்களது மாந்தளிர் நிறம் மறுபடியும் பளிச்சிட செய்வதும் அதுவே –

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத் துழாய் மாலையை கீழ் சொன்ன பூ மாலையோடு ஒப்பத் தலை மேல் தாங்கினால் போதுமா –
என்ன செய்வது என்று ஒன்றும் தோன்றாது –
ஆழ்வார் தாம் தொண்டர் ஆனமைக்கு ஏற்ப கழலில் அணிவித்ததும்
அவர் பத்தி கண்டு மயங்கிக் கிடக்கிறான் போலும் ஐயன் அரங்கத்திலே –
இனி ஆழ்வார் இடம் உள்ள மதிப்பினால் மாற்றாது அங்கனமே கழலில் அணிந்து இருந்தான் ஆகவுமாம்-
இனி கழலில் அணிந்தது உப லஷணமாய்-
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண் அம் துழாயுடை அம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாளணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவினுளானே–1-9-7–திருவாய் மொழி -1 9-7 – -என்ற பாசுரப்படி
அந்த அந்த-அவயவங்களிலே புனைந்தான் ஆகலுமாம் –

திருமங்கை ஆழ்வார் -பிரிவால் வருந்தும் தலைவி நிலை எய்தி –
தொண்டர் அடி பொடி ஆழ்வார் போல்வார் அருகு இருந்து திருத் துழாய் சமர்ப்பிக்க –
அவ் வாசனையை வண்டு கொண்டு வந்து ஊதினால் கண்கள் உறங்கும் –
முதன் முதல் இருந்த எனது நிறம் மீண்டும் வரும் என்னும் கருத்துப்பட அருளி செய்யும் பாசுரம் இங்கு அனுசந்திக்க தக்கது –
கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்த்
தொண்டர் இட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டு வந்தூதுமாகிலே -பெரிய திருமொழி -11 1-9 – –
சூத்திர பலன்களை விரும்பி தொண்டு செய்பவர் -தொண்டர் –
உபயாந்தரங்கள் மூலம் சிறந்த புருஷார்தத்துக்கு அடிமை செய்பவர் -சீர்த் தொண்டர் –
ஒரு பலனும் பேணாதே ஸ்வயம் பிரயோஜனமாக அடிமை செய்பவர் மிக்க சீர்த் தொண்டர் –
இங்கு மிக்க சீர்த் தொண்டர் எனபது -தமக்கு ஒரு பயன் கருதாது -பரிவுடன் அரங்கனை பரிந்து-காப்பவரைக் குறிக்கிறது –
பூம் துளவு அவர் இட்டதாயின் வருந்த வேண்டியது இல்லை –
பிரிந்து வருந்தும் தலைவிக்கு தான் இன்பம் காண வில்லையே என்பதனால் அன்று ஏக்கம் –
தான் பிரிந்த நிலையில் தலைவனை அருகில் இருந்து பாதுகாப்பார் யாரும் இல்லையே என்பதனால் ஆயது அது –
மிக்க சீர் தொண்டர் பக்கத்தில் இருப்பது தெரிந்தால் அவ் ஏக்கம் நீங்குகிறது என்க-
அத்தகைய மிக்க சீர் தொண்டர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரே என்று கொள்ளல் தகும் –
பூத் துளவு இடுபவர் அவர் தானே –

திரு மங்கை ஆழ்வார் அரணாக அரங்கனுக்கு மதிள் கட்டும் போதும் –
தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருமாலை கட்டும் இடத்தை இடிக்காது -ஒதுக்கிக் கட்டினார் -என்று கூறப் படுவதும் காண்க –
அவர் கையால் தொடுத்தது என்னும் கருத்துடன் –செய்யும் துளவ மாலை -என்கிறார் அமுதனார் –
வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே–திரு மாலை – 45-
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி – என்று திருத் துழாய் தொண்டையே
தமக்கு நிரூபகமாக இவரே சொல்லுகையாலும் –
தொடை யொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தொல் தொண்டர் அடிப் பொடி -திருப் பள்ளி எழுச்சி -என்று
பெருமாள் திரு அவயவத்துக்கு தக்கவாறு அமைந்த திருத் துழாய் மாலையுடன் கூடையைக் தமக்கு அடையாளமாக
இவரே அருளிச் செய்கையாலும் -துளவ மாலை -என்றார் –

ஏனையோர் மாலை தொடுக்கும் போது அவர் கைப்பட்டுத் திருத் துழாய் வாடும் –
இவ் ஆழ்வார் கைப் படினோ- புதுக் கணிக்கிறது திருத் துழாய் –
அதற்க்கு காரணம் அரங்கனுக்கு அணி செய்ய திருத் துழாய் வடிவத்தில் நித்ய சூரியே வந்து இருப்பதால் -தனக்கு
தொண்டு பட்ட ஆழ்வார் உடைய திருக் கரம் பட்டதும் புத்துணர்ச்சி ஏற்பட்டு புதுக் கணிப்பு உண்டாகிறது –
அது பசுமை நிறத்தாலே வெளிப்படுகிறது -அது தோன்ற -பசும் துளவ மாலை -என்கிறார் –
எம்பெருமானுடைய ஆடை ஆபரணம் ஆயுதம் மாலை இவை எல்லாம் அறிவற்ற பொருள்கள் அல்ல –
நித்ய சூரிகளே இவ்வடிவுகளில் பணி புரிகின்றனர் -எனபது நூல் கொள்கை –
ஆதலின் திருத் துழாய் மிக்க சீர் தொண்டர் திருக் கரம் பட்டதும் -புதுக் கணித்தல் கூடும் –என்க –
இவ்விடத்தில் -திரு மாலை எடுத்தால் திருக் குழலுக்கும் மார்வுக்கும் அளவாய் இருக்கை –
திரு மாலை யாயும் -திருப்-பரிவட்டமாயும் -நிற்கிறார் சேதன வர்க்கம் இறே-என்று திருப்பள்ளி எழுச்சி யில் –
தொடை யொத்த துளவமும் -என்னும் பகுதிக்கு பெரிய வாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் அறிய தக்கது –

தொழில் மாலை –
நடுவில் பருத்தும் -வர வர சிறுத்தும் வேலைத் திறன் தோற்ற சமைத்த மாலை -என்றபடி –
அரங்கனுக்கு இவர் துளவ மாலை அணிவித்தாலும் இவர் செய்வது அரங்கன் தொண்டு அன்று -துளவத் தொண்டே –
அதாவது திருத் துழாய் ஆழ்வாருக்கு புரியும் தொண்டே எனபது அறிய தக்கது –
துளவத் தொண்டரே -இவர் -துளவத் தொண்டாய் -என்று இவர் கூறிக் கொள்வது காண்க –
திருத் துழாய் ஆழ்வாருக்கு புரியும் தொண்டு அவருக்கு ஆள் பட்ட தொண்டர் அனைவருக்கும் புரியும் தொண்டாய் தலைக் கட்டும் –
ஸ்வா பாவிகமான பகவத் சேஷத்வத்தின் சீமையிலே –
சஹஜ கைங்கர்யத்தின் உடைய மேல் எல்லை ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்யம் இறே –
தொண்டர் அடிமையில் எல்லை நிலையில்-வந்து அபிமானம் அற்ற நிலையில் -அடிப் பொடியாக தம்மை சொல்லிக் கொள்கிறார் –
இங்கு துளவ மாலை அணியும் பணி கூறவே தன்னடைவே தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் என்பது போதரும் –
திரு மாலை கடைசி பாசுர வியாக்யானம் காண்க –

துழாய் சம்பந்தத்தால் உகந்தான் ஆண்டாள் சூடிய மாலை.-அந்த துளவதுக்கே தொண்டு புரிந்தவர் இவர்
அது போல் இவருக்கும் ஏற்றம்
புது கணிப்பு தளிர்கிறது இவர் கர ஸ்பர்சம் பட்டதால்
மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-திரு நெடும் தாண்டகம்–1-
தளிர் புரையும் திருவடி -போலே
நித்ய சூரிகள் தானே இந்த புஷ்பங்கள்-கைங்கர்யம் செய்ய இங்கே வந்தவை இந்த ரூபத்திலே
கர ஸ்பர்சம் பெற்று புது கணிப்பு பெற்றதாம்
தொடை யத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றும் தோள்

செந்தமிழ் பெய்யும் மறைத் தமிழ் மாலையும் –
அருமறைகள் போலே த்ரை வர்ணிக அதிகாரமாய் இருக்கை அன்றிக்கே
பெண்ணுக்கும் பேதைக்கும் அதிகரிக்கலாம் படி சர்வாதிகாரமாய் –
அந்யோன்யோ பமதர்த்த வாக்யங்களாலே பிரம்மத்தை விநாசிப்பித்தும்-ஸ்வ அர்த்தத்தை அறிவதற்கும்
துரவஹாகங்களாயும் இருக்கை அன்றிக்கே
சார தம அர்த்த பிரகாசமாய் -த்ரமிட பாஷையாலே நிர்மிக்கப்பட்ட -திரு வேதம் என்று நிரூபிக்கும்படியாய் இருப்பதாய்
திரு மாலை என்னும் பேரை உடைத்தான தமிழ் மாலையும் -பெய்தல்-உண்டாக்குதல்

செந்தமிழ் பெய்யும் மறைத் தமிழ் மாலையும் –
துளவ மாலையை பற்றிக் கூறப்பட்டது -இனி தமிழ் மாலையை பற்றிக் கூறப்படுகிறது –
திருத் துழாயால் ஆவது அம்மாலை -இம்மாலை செம் தமிழால் ஆவது –
செம் தமிழ் ஆவது -தெளிவாக தன் பொருளை காட்டும் சொல் –
அத்தகைய சொல்களை கொண்டு செய்யப்பட்டது -தமிழ் மாலை
பெய்தல்-செய்தல்
வேலைப்பாடு அமைந்தது துளவ மாலை -இது மறை தமிழ் மாலையாய் அமைந்தது –

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே
யிருத்தும் பரமன் இராமானுசன் எம் இறையவனே -8 –
மறையின் குருத்தின் பொருளையும் செம் தமிழையும் ஒன்றாக திரித்தி பாடினார் -பொய்கை ஆழ்வார் –
நான் மறை செம் பொருளை செம் தமிழால் அளித்தார் பாண் பெருமாள்-
இவரோ மற்று ஒரு பாஷையாய் இராது தமிழாகவே ஆகி விட்ட வேதம் என்னும்படியான
தமிழ் மாலையை தொடுத்து அளிக்கிறார் –
தம் சொற்களை மலராகவும் -தமது நூலை மாலையாகவும் ஆழ்வார்கள் பல இடங்களில் அருளி செய்து உள்ளனர் –
நறிய நன் மலர் நாடி நன் குருகூர் சடகோபன் சொன்ன -என்றார் நம் ஆழ்வார்
இதில் சொற்களை நறிய நன் மலர்களாக குறிப்பிட்டு இருப்பது காண்க –
நூலை சங்கத் தமிழ் மாலை -என்றாள் ஆண்டாள் –

பேராத சீர் அரங்கத்து ஐயன் –
பராஸ்ய சக்திர் விவிதை வஸ்ருயதே ஸ்வாபாவி கீஜ்ஞா நபலக்ரியாச -என்றும்
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -என்றும் –
நித்யஸ் சத்யோ நிஷ் களங்கோ நிரஞ்சனோ நிர்விகல்போ நிராக்யாத அச்சுதோ தேவ ஏகோ நாராயணா -என்றும் –
எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே-1-2-10-
ஈறில வண் புகழ் நாரணன் -என்றும் -சொல்லுகிறபடியே
ஹேயப் பிரதிபடங்களாய் நித்யங்களாய் இருக்கிற கல்யாண குணங்களை உடையவனாய் –
மாதா பிதா ப்ராதா நிவாசஸ் சரண சூக்ர்த் கதி -என்றும் -பிதாசி லோகஸ்ய சராசரஸ்ய -என்றும் –
பிதா ப்ராதா சமாதாச மாதவ -என்றும் -தாயாய் தந்தையாய் -என்றும் -சொல்லுகிறபடி சர்வ வித பந்துவாய்
தோற்றும் படி கோயிலிலே கண் வளர்ந்து அருளின பெரிய பெருமாள் –
ஐயனே அரங்கனே என்று இவரும் தம் பிரபந்தத்திலே அருளிச் செய்தார் இறே
அரங்கத்து ஐயன் –
அந்த ஸ்தலத்தை இட்டு அவர் தம்மை நிரூபிக்க வேண்டும்படி காணும் இவர் தமக்கு அதிலே ப்ராவண்ய அதிசயம் இருப்பது –
பேராமை -நீங்காமை -அப்படி பட்டவருடைய

பேராத சீர் அரங்கத்து ஐயன் –
பேராத -நீங்காத
சீர் -கல்யாண குணங்கள்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப் பிரான் -என்றார் நம் ஆழ்வாரும்
நீங்காமல் என்றும் உள்ளவையையாய் இருத்தற்கு ஹேது -இயல்பாய் அமைந்தமை –
ஞான சக்திகள் ஸ்வபாவிகங்கள்-என்றது வேதமும் –
எளிமைப்பட்ட அர்ச்சை நிலையிலும் -பரத்வ நிலை மாறாமல் இருப்பது பற்றி –பேராத சீர் -என்றதுமாம் –
காவேரீ விரஜா ஸேயம்
வைகுண்டம் ரங்க மந்திரம்
ச வாஸூதேவோ பகவான்
ப்ரத்யஷம் பரமம் பதம் -என்று
காவேரியே விரஜை யாறு -ஸ்ரீ ரங்க விமானம் ஸ்ரீ வைகுண்டம் -ஸ்ரீ ரங்க நாதன் பர வாசுதேவன் –
ஆக கண் எதிரே தோன்றும் பரம பதம் -எனபது காண்க –
முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான் முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே–திருவாய்மொழி – 7-2 10-
வடிவுடை வானோர் தலைவனே –என்று நம் ஆழ்வார் அரங்கனை நித்ய சூரிகளின் தலைவனாகக் கூறுகிறார் –
தமேவமத்வா பரவாஸூதேவம் ரங்கேசயம் ரரஜவதர்ஹநீயம்-என்று
திரு வரங்கத்தில் பள்ளி கொண்ட பர வாசுதேவனை ராஜ உபசாரத்துக்கு உரியவனாக நினைத்து
தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருப் பள்ளி எழுச்சி பாடுகிறார் –

இனி சீர் ரங்கம் என்பதை ஸ்ரீரங்கமாக கொண்டு -அத் திரு வரங்கத்துக்கு -பேராத – என்பதை அடை மொழி யாக்கலுமாம் –
பேராத -நகராத
திரு அயோத்யையில் இருந்து ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஸ்ரீ ரங்க விமானத்தை எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு போகும் பொழுது
இங்கு காவேரிக் கரையிலிருந்து விபீடணற்கு பேராமல் இருந்தது பிரசித்தம் –
இனி சத்ய லோகத்தில் இருந்தும் -அயோத்திக்கும் -அங்கு இருந்து விபீடணன் மூலம் காவிரி ஆற்று இடைக்கும் பேர்ந்து வந்தது போலே –
இங்கு இருந்து வேறு ஓர் இடத்துக்கு எக்காலத்தும் பேராமல் இருத்தல் பற்றி –பேராத சீர்ரங்கம் -என்றார் ஆகவுமாம்-
இங்கு -சத்யால்லோகாத் சகல மகிதாத் சத்தா நதொவாரகூனாம்
சங்கே மாதஸ் சமதிக குணம் சைகதம் சஹ்ய ஜாயா
பூர்வம் பூர்வம் சிரபரிசிதம் பாதுகே யத்த்ய சந்த்யா
நீதோ நாத சததி மிதரன் நீயதே நத்வா நசவ்-பாதுகா சகஸ்ரம் – 53- என்று
தாயே பாதுகையே –
அனைவரும் போற்றும் சத்ய லோகத்தை பார்க்கிலும் –
ரகு மகாராஜன் வம்சத்தவர்க்கு உறைவிடமான அயோத்யைப் பார்க்கிலும் –
காவேரியின் மணல் திடர் மிகவும் சிறப்பு உற்றது என்று நினைக்கிறேன்-ஏன் எனில்
நெடு நாட்கள் பழகின முந்தின இடத்தை விட்ட உன்னால் ஸ்ரீ ரங்க நாதன் இந்த மணல் திடருக்கு எழுந்து அருளப் பண்ணப் பட்டான் –
இவ் ரங்கநாதன் இங்கு இருந்து வேறு ஓர் இடத்துக்கு எழுந்து அருள பண்ணப் பட வில்லை -என்னும்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ ஸூக்தி அனுசந்திக்க தக்கது –

அரங்கத்து ஐயன் –
ஐயனே அரங்கனே -திரு மாலை – 33- என்று தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அருளியதையே முன் பின்னாக மாற்றி
அரங்கத்து ஐயன் – என்று அருளி செய்கிறார் அமுதனார் –
பெரியவாச்சான் பிள்ளை -நிருபாதிக பந்து – இயல்பாய் அமைந்த -பந்து என்று ஐயன் என்பதற்கு வியாக்யானம் அருளினார் –
அதனையே இங்கும் கொள்க –

கழற்கு அணியும் –
திருவடிகளுக்கு அலங்காரமாக சமர்ப்பித்த –

பரன் –
சேஷத்வத்துக்கு தமக்கு மேற்பட்டார் இல்லை என்னும்படி அதனுடைய சரம அவதியிலே -நிற்கையாகிற அதிகாரத்தைப் பெற்று
உத்கர்ஷ்டரான ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி-ஆழ்வார் உடைய –
தொண்டர் அடிப் பொடி என்னும் அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் –
என்று சேஷத்வத்தின் உடைய சரம அவதியை இறே இவர் பிரார்த்தித்தது

பரன் –
எல்லோரிலும் மேம்பட்டவர் -தொண்டர் அடிப் பொடியாய் -உன் அடியார்க்கு ஆள் படுத்தாய் -என்று அந் நிலைமையை வேண்டி
சேஷத்வத்தினுடைய எல்லையிலே நிலை நிற்கையாலே சேதனரில் இவரிலும் மேற்பட்டவர் யாரும் இல்லை என்க-
சேஷித்வத்தின் எல்லை நிலையில் இருந்து தனக்கு மேற்பட்டவர் இல்லாமையாலே
எம்பெருமானை –பரன் -என்பது போலே -சேஷத்வத்தின் எல்லையில் இருந்து தனக்கு
மேம்பட்டவர் இல்லாமையாலே தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை -பரன் -என்கிறார் –
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற் கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திரு வுடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடைதோறு எம்மை ஆளும் பரமரே–-ஸ்ரீ திருவாய் மொழி–3-7-1-
வடிவழகிலும் குணங்களிலும் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமிகள் போலவே இங்கும் –

சேஷியினுடைய பரத்வத்துக்கு சங்கு சக்கரங்கள் அடையாளங்கள்-
ஆழியும் சங்கும் உடைய நாங்கள் அடிகள் -என்பது காண்க –
சேஷத்வத்தின் எல்லையில் இருக்கும் இவ் ஆழ்வார் உடைய பரத்வத்துக்கு அடையாளம்
துவளக் கூடை -கூடையும் பொலிந்து தோன்றிய தோள் -திரு பள்ளி எழுச்சி -10 -என்பது காண்க –

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்–7-

மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே–9-

வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை யாங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் யரங்க மா நகர் உளானே–8-

அருளியவரை சேர்க்க தெளிவாக அருளினார் .-பதிவிரதை பூர்த்தி- அரங்கனுக்கே ஆட்பட்ட ஸ்ரீ ஆழ்வார் –
அர்ச்சா விசேஷத்தில் – மட்டும் பூர்ண ஆசை.
முனியே நான்முகனே – போலே சங்கை இன்றி அருளிய திருமாலை
மறந்தும் புறம் தொழா மாந்தர் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு –

தாள் அன்றி
திருவடிகளை ஒழிய –இவர் கோடியான ஆழ்வார்கள் உடையவும்
ஸ்ரீ பெரிய முதலியார் தொடக்கமான பிரபன்னர் உடையவும்-திருவடிகளை ஒழிய -என்றபடி –

ஆதரியா மெய்யன்–
வேறொரு சாதனாந்தர நிஷ்டரை விரும்பாத சத்ய சீலரான –யதாத்ர்ஷ்டார்த்த வாதித்வம் -சத்ய சீலத்வம் –
சர்வேஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை – தாம்
அவனுக்கு பர்யங்கமாய் இருக்கிற தசையிலே -கண்டபடியே அவதாரத்திலே ஸ்ரீ பாஷ்யத்தை அருளிச் செய்த
சத்ய சீலர் ஆகையாலே –மெய்யன் -என்கிறார் –

பரன் தாள் அன்றி ஆதரியா மெய்யன்
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளைத் தவிர மற்று எதைனையும் விரும்பாதவராம் எம்பெருமானார் –
ஸ்ரீ ஆழ்வார் தொடர்களுடைய அடிப் பொடியை ஆதரித்து அதனையே தனக்கு நிரூபகமாக கொண்டார் -ஸ்ரீ எம்பெருமானார்
அடிப் பொடியின் அடியை அன்றி -ஆதரியாதவர் ஆனார் –
தாயின் கொங்கைகளில் அன்றி வெறும் எங்கும் கண் வையாத குழந்தை போலே -ஸ்ரீ ஆழ்வார்கள் அடிகளில் அன்றி
வேறு எங்கும் கண் வையாதவர் ஸ்ரீ எம்பெருமானார் -என்க
இனி பரனாக ஸ்ரீ ஆழ்வாரையே கொண்டமையின் –
அவன் தாள் அன்றி பரன் என்று பேர் கொண்ட ஸ்ரீ எம்பெருமான் தாள்களையும் ஆதரியார் -என்னுமாம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் அனைவரும் ஒரே சமஷ்டியாய் -ஒரே தரத்தினராய் இருத்தலின் – அவர்கள் திருவடிகளையும் –
அவர்கள் தந்த ஞானத்தால் உய்ந்த அவர்களுடைய சீடரான
ஸ்ரீ நாதமுனி முதலிய ஆசார்யர்கள் உடைய திருவடிகளையும் ஸ்ரீ எம்பெருமானார் ஆதரிப்பது இதற்கு முரண் படாது -என்க –

மெய்யன்
உண்மை கூறுபவர் –
காண்பது அனைத்துமுன்மை என்று கண்டவற்றை மாற்றாது உரைப்பவர் –
காண்பது அனைத்தும் சத்தியமே என்று வேதம் அறிந்தவரான இவர் கொள்கை –
எனவே காண்பதை இல்லை என்னும் பொய் உரையை சஹிக்காதவர் -என்க
பரன் தாள் அன்றி ஆதரியாதது போலே மெய்யை அன்றி ஆதரியாதவர் ஸ்ரீ எம்பெருமானார் -என்க –
பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கி யாதென்று லர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்லோர் நல்லறி விழந்தே – – 79- – என்பர் மேலும் –
ஆத்மாவினுடைய தேக பரிமாணத்வ ஷணிக ஜ்ஞானரூபத்வ ஜடத்வாதிகள் என்ன –
ப்ரஹ்மத்தினுடைய மாயா சபளிதத்வ உபாதி மிஸ்ரத்வ விகாரித்வாதிகள் என்ன –
சுத்த அசத்யமாய் இருப்பதொன்றை மேன்மேலும் உபபாதியா நிற்கும் பாஹ்ய குத்ருஷ்டி மதத்தை ஒட்டி இந்த பூமியிலே
யதார்த்தத்தை பரிபாலித்து அருளும் ஸ்ரீ எம்பெருமானார் –என்றபடி –

இராமானுசன்
ஸ்ரீ எம்பருமானாருடைய

சரணே கதி வேறு எனக்கே
திருவடிகளே -என்கிற அவதாரணத்தாலே -அநந்ய கதித்வம் சொல்லிற்று
எனக்கே -வேறு
ஒரு க்ரியா விசேஷத்தை-பண்ண மாட்டாத -அகிஞ்சனான அடியேனுக்கு -திருவடிகளே விசேஷித்து -உபாயமும் உபேயமும் -என்றபடி –
உபாய உபேய பாவேன தத்வதஸ் சர்வ தேசிகை-சூநிச்சிதான்க்ரி பத்மாய யதிராஜாய மங்களம் – என்னக் கடவது இறே –

சரணே கதி வேறு எனக்கு –
சரண்-திருவடிகள்
ஏ-பிரி நிலையின் கண் வந்தது
சரண் அல்லாதது எனக்கு கதி அன்று -என்றதாயிற்று –
கதி -பேறு–கம்யதே -பெறப்படுகிறது -இதி -என்கிற காரணத்தால் கதி -பேறு என்க
வேறு கதி -தனி சிறப்புற்ற பேறு
ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடி -பேறு
ஆச்சார்யராம் ஸ்ரீ எம்பெருமானாருடைய திருவடியோ-சிறப்பு வாய்ந்த வேறு பேறு -என்று உணர்க –

திருத் துழாய் ஆழ்வாருக்கு ப்ராப்யம் அரங்கத்து ஐயன் திருவடி –
அணிவிப்பவரான ஸ்ரீ ஆழ்வாருக்கு பிராப்யம் திரு துழாய் ஆழ்வாருக்கு அடிமை புரிவதால் உகக்கும் தொண்டர்கள் அடி
ஸ்ரீ எம்பெருமானாருக்கு ப்ராப்யம் பரரான ஸ்ரீ ஆழ்வாருடைய திருவடி
ஸ்ரீ அமுதனார்க்கு ப்ராப்யம் ஆசார்யரான ஸ்ரீ எம்பெருமானார் திருவடி-என்றது ஆயிற்று-

ஸ்ரீ ராமானுஜர் -ஸ்ரீ அமுதனார் -ஸ்ரீ ஆழ்வார் மூவரும் பதி விரதை.. முறையே –
ஸ்ரீ ஆழ்வாரையும் -ஸ்ரீ சுவாமியையும் -ஸ்ரீ அரங்கனையும் -மட்டுமே என்று இருந்தவர்கள்-

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –12-இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இத்யாதி —

March 28, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ திரு மழிசை பிரானுடைய திருவடிகளுக்கு ஆவாசமான திரு உள்ளத்தை உடைய ஸ்ரீ எம்பெருமானாரை-ஆஸ்ரயித்து
இருப்பார்க்கு ஒழிய ச்நேஹியாதவர்கட்கே நான் ச்நேஹித்து இருப்பது -என்கிறார்-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ் நாலு பாட்டாலும் -ஸ்ரீ ஆழ்வாருடைய சம்பந்தத்தை இட்டு ஸ்ரீ எம்பெருமானாரை அனுபவிக்கும்-பிரகரணம் ஆகையாலே –
ஸ்ரீ முதல் ஆழ்வாரோடு சம காலராய் -பேயாழ்வார் உடைய பிரசாதத்தாலே-தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய ஜ்ஞானரான
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வாருடைய பரஸ்பர சதர்சமான-திருவடிகளை தம்முடைய திரு உள்ளத்தில் நிறுத்திக் கொண்ட
ஸ்ரீ எம்பெருமானாருடைய பரம போக்யமான திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு ஒழிய வேறு ஒருவருக்கு விதேயமாகாத
த்ரட அத்யவசாய பரரான-ஜ்ஞாநிகளுக்கு அடியேன் பக்தனாக நின்றேன் -என்கிறார்-.

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் திருவடிகளுக்கு உறைவிடமான திரு உள்ளத்தை உடைய
ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றும் திருவாளரை ஒழிய மற்றவரை விரும்பாத உறுதிப்பாடு
வாய்ந்த ஞாநியரையே தாம் விரும்புவதாக கூறுகிறார் –

இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது
அடங்கும் இதயத்து இராமானுசன் அம் பொன் பாதம் என்னும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே —12-

பத உரை –
இடம் கொண்ட -உலகத்தை தனக்கு உள்ளே கொண்ட -அதாவது- உலகு எங்கும் பரவிய
கீர்த்தி -புகழ் படைத்த
மழிசைக்கு இறைவன் – திரு மழிசைக்கு தலைவரான திரு மழிசைப் பிரான் உடைய
இணை -ஒன்றுக்கு ஓன்று இணைந்து சேர்த்தி அழகு வாய்ந்த
அடிப்போது -திருவடிகள் ஆகிற மலர்கள்
அடங்கும் -தனக்குள் அடங்கும்படியான
இதயத்து -இதயம் வாய்ந்தவரான
இராமானுசன் -எம்பெருமானார் உடைய
அம் பொன் பாதம் -அழகிய பொன் போன்ற திருவடிகளை
என்றும் -எக்காலத்திலும்
கடம் கொண்டு -கடைமையாக நினைத்துக் கொண்டு
இறைஞ்சும் -வழி படும்
திரு -செல்வம் படைத்த
முனிவருக்கு அன்றி -மறப்பற உள்ளத்தில் உள்ளும் அவர்களுக்கு அல்லாது
காதல் செய்யா -மற்றவர்களுக்கு அன்பு செலுத்தாத
திடம் கொண்ட -திண்மை வாய்ந்த
ஞானியர்க்கே -ஞானம் உள்ளவர்களுக்கே
அடியேன் -அடிமை இன்பம் நுகரும் நான்
அன்பு செய்வது -பக்தி செய்வது

பூமி எங்கும் வ்யாப்தையான குண வத்தா ப்ரதையை உடையரான திரு மழிசைப் பிரான் உடைய-சேர்த்தி அழகை
உடைத்தான திருவடிகள் ஆகிற செவ்விப் பூக்கள் தன்னுள்ளே அடங்கும்படியான-திரு உள்ளத்தை உடையராய் இருக்கிற
எம்பெருமானார் உடைய விலஷணமாய் -சர்வ சமாஸ்ரயநீயமான-திருவடிகளை சர்வ காலத்திலும் ஸ்வரூப ப்ராப்தம் என்று
நினைத்து வணங்குகை ஆகிற சம்பத்தை உடையராய்-தத்விஷய மனன சீலராய் இருக்கும் அவர்கள் ஒழிய
ச்நேஹத்தைப் பண்ணாத த்ருட தர ஜ்ஞான யுக்தர்க்கே அடியேன்-ச்நேஹத்தை பண்ணுவது –

கடம்-கடன் ப்ராப்தம்/ திடம் -த்ருடம்/ கொள்கை -உடைத்தாகை-

உறையில் இடாத ஆழ்வார் -சக்கரத் தாழ்வார் அம்சம் –
பக்திசாரர் -சிவனே இவர் விஷ்ணு பக்தியை சோதித்து அளித்த பட்டம் -இடம் கொண்ட கீர்த்தி அன்றோ இவரது –

இடம் கொண்ட கீர்த்தி –
பூமி எங்கும் வ்யாப்தமான குணவத்தா பிரதையை உடைய மகாத்ம்யத்தை-சோதிப்பதாக ருத்ரன் -பார்வதி சமேதனாய்
கொண்டு வந்து அனேகமாக சம்வாதித்து இவருடைய-பிரபாவத்தைக் கண்டு ஆச்சர்யப் பட்டு போனான் –

காஞ்சி நகரத்திலே ஒரு வ்ருத்த ஸ்திரீ சில நாள்-அனுவர்த்தனம் பண்ணினவாறே –
அவளுக்கு யவ்வன சௌந்தர் யாதிகளைக் கொடுத்தார் என்றும்
அப்படியே இவ் ஆழ்வார் உடைய நகரத்தில் நின்றும் சூத்திர உபத்வ வயாஜேன தஷிண திக்கேற போகத் தொடங்க-
அக் காலத்திலேயே அங்கே பள்ளி கொண்டு அருளின எம்பெருமானும் இவருடன் எழுந்து அருளுவதாக-புறப்பட –
அவரும் அதைக் கண்டு -அவ்விடத்திலே தானே இருக்க வேணும் என்று அருளிச் செய்ய
அப்படியே அந்த எம்பெருமானும் இவர் சொன்னபடி செய்து –சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -என்று-
சர்வ லோக பிரசித்தமாக கொண்டு -அதுவே நிரூபகமாம் படி இருந்தான் -என்றும் சோழ மண்டலத்திலே-

ஒரு அக்ரஹாரத்திலெ இவர் எழுந்து அருள -வீதியிலே அத்யயனம் பண்ணுகிற சில பிராமணர்கள் -இவரைக் கண்டு அத்தை நிறுத்தி –
இவர் புறம்பே சென்றவாறே -அந்த பிராமணருக்கு தரவே தெரியாது போக -இது என்ன ஆச்சர்யம் என்று இவரைப் போய் அழைக்க –
இவரும் கருப்பு நெல்லை எடுத்து உகிராலே உரிக்க –
அத்தை கண்ட அந்த பிராமண்ர்களுக்கு மேல் தோன்றிற்று என்றும் -பிரசித்தம் இறே –

இவ் அர்த்தங்களை எல்லாம்-அனுசந்தித்து –இடம் கொண்ட கீர்த்தி -என்கிறார் .

இடம் கொண்ட கீர்த்தி –
நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே –65-–என்கிற பாசுரப்படியே -சர்வ திக்குகளிலும் வ்யாப்யதையான-கீர்த்தியை உடையரான –

இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் –
இடம் -உலகம் -திரு மழிசைப் பிரான் உடைய கீர்த்தி இடம் அடங்கத் தன்னுள் கொண்டு இருக்கும்
படி கொண்ட கீர்த்தி என்பர் மேலும் –
கீர்த்தி வியாபித்து இருப்பது –உலகம் -வியாபிக்க படுவது -கீர்த்தி -பெரிது -உலகம் -சிறிது –
கீர்த்தி யாவது உலகினர் அனைவருக்கும் குணம் உடைமை தெரியும் படியாய் அமைதல் –
மகா விஷ்ணு போன்றது பக்தரான திரு மழிசை பிரான் கீர்த்தியும்
விஷ்ணு வ்யாபிப்பான் -இவர் கீர்த்தியும் எங்கும் உளதாய் இருக்கிறது

இடம் என்று பொதுப்பட சொல்லுகையாலே இவ் உலகினையும் சரி -விண் உலகினையும் சரி –
இவர் கீர்த்தி எல்லா இடங்களையும் தன்னுள் கொண்டமை புலனாகிறது –
காக்கும் இயல்பினன் கண்ண பெருமான் –
உயிர் இனங்கள் காக்கப் படும் இயல்வினவே
ஆதலின் கண்ணனால் அன்றிப் பிறராலும் -ஏன் -தன்னாலுமே -இவ் உயிர் -ஆன்ம தத்துவம் –
காக்கப்பட இயலாது என்னும் தெள்ளிய அறிவு –
ஸ்வரூப ஞானம் -திரு மழிசைப் பிரானுக்குப் போலே வேறு ஒருவருக்கும் ஏற்ப்பட வில்லையாம் –
அதனால் இவருக்கு ஒப்பாவார் இவ் உலகில் எவருமே இலர் ஆயினர் –

இனி விண் உலகில் -பரம பதத்தில் -இத்தகைய தெள்ளிய அறிவு படைத்தவர் உளரோ என்று பார்க்கும் அளவில் –
தெளி விசும்பில் உள்ளவர் அத்தகைய தெள்ளிய அறிவு படைத்தது இருந்தாலும் -இருள் தரும் மா ஞாலத்தில்
இருந்து அத்தகைய தெளிவை அவர்கள் பெற்றிலரே -இந்நில உலகில் இருந்தும் அத்தகைய தெளிவு பெற்று விளங்கும்
இவருக்கு அவர்கள் எங்கனம் ஒப்பவராக இயலும் –
இனி உபய விபூதி நாயகனான எம்பெருமான் இவருக்கு ஒப்பாவானோ என்று பார்த்தால்-
அவனை ரஷிப்பவன் வேறு ஒருவன் இல்லாமையின் அவனுக்கு அவனுக்கு இத்தகைய ஸ்வரூப ஞானம்
ஏற்பட வழியே இல்லை யாதலின் அவனும் ஒப்பாகான் –

ஆக இவ் உலகில் உள்ளவர்களும் –
இவ் உலகிலும் விண் உலகிலும் உள்ள எம்பெருமானும்
விண்ணில் உள்ளவர்களும் ஒப்பாகாமையால் -ஒப்பற்ற தெள் அறிவு படைத்த புகழ் இவர்-ஒருவருக்கே –
இரண்டு உலகுகளிலும் பரவி ஓங்கி இருக்கிறது -இருக்கவே –
என் மதிக்கு –-ஸ்வரூப ஞானத்துக்கு விண் எல்லாம் சேர்ந்தாலும் தக்க விலை யாகுமோ என்று கேட்கிறார் –
திரு மழிசைப் பிரான் -அவரது பாடலில் அவரது பெருமிதத்தை நாம் காண முடிகிறது –
இதோ அவரது பாடல்
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே உன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை -நான் முகன்திருவந்தாதி – 5-
எனக்கு ஆவார் -எனக்கு ஒப்பாவார்
தானே தனக்கு அல்லால் -தனக்குத் தானே ஒப்பாவான் அன்றி எனக்கு ஒப்பாகான் என்றபடி –

என் மதி -என்னும் இவருடைய மதியைத் –
துய்ய மதி -என்று மணவாள மாமுனிகள் போற்றிப்-புகழுகிறார் உபதேச ரத்ன மாலையிலே –
இதனால் மண்ணகம் விண்ணகம் இரண்டையும் தன்னுள் கொண்டதாக திரு மழிசைப் பிரான்-கீர்த்தி விளங்குகிறதன்றோ –
இதனையே இடம் கொண்ட கீர்த்தி என்கிறார் அமுதனார் –
புகழ் மழிசை ஐயன் -எனபது உபதேச ரத்ன மாலை –

இனி –இடம் கொண்ட கீர்த்தி -விரிவடைந்த கீர்த்தி எனினுமாம்
இவர் சொன்னபடி எம்பெருமான் தான் இருக்கும் இடத்தைக் கொண்டமையால் வந்த கீர்த்தி என்னலுமாம் –
இடம்-இருக்கும் இடம்
மணி வண்ணா நீ கிடக்க வேண்டும் பைந்நாகப் பாய் படுத்துக்கொள் -என்று இவர் சொன்ன படி-
திரு வெக்காவில் எம்பெருமான் மீண்டும் இடம் கொண்டு -சொன்ன வண்ணம் செய்த பெருமாள்-என்று
பேர் பெற்று விளங்கும் ஐதிஹ்யம் காண்க –
இனி எம்பெருமான் தான் கோயில் கொண்டு உள்ள ஊரகம் பாடகம் திரு வெக்கா என்னும்-தளங்களை விட்டு –
இவர் திரு உள்ளத்திலே இடம் கொண்டமையால் வந்த கீர்த்தியை சொல்லலுமாம் –
நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே –65–திருச் சந்த விருத்தம் -64 -என்றது காண்க

இனி இடம் கொண்ட கீர்த்தியை -மழிசைக்கு அடை ஆக்கலுமாம் –
உலகும் மழிசை யும் புகழ்க் கோலால் தூக்க உலகு தன்னை வைத்தெடுத்த பக்கத்தினும்
மழிசையை வைத்து எடுத்த பக்கமே வலிதான புகழ் உடைமை திரு மழிசைக்கு கூறப் பட்டதாகிறது –
உலகின் மகிமைகளை எல்லாம் தன்னுள் கொண்டது திரு மழிசை -என்க-
மஹீசார ஷேத்ரம் மழிசை எனப்படுகிறது –

மழிசைக்கு இறைவன் –
திரு மழிசை என்கிற திவ்ய தேசத்துக்கு ஸ்வாமி யாய் –
அதுவே நிரூபகமாக உடையரான திரு மழிசைப் பிரான் உடைய —
இணை அடிப் போதுகள் –
பரம போக்யமாய் –
பரஸ்பர சதர்சமான திருவடிகளாகிற பத்மங்கள் -போது -பத்மம் –
அடங்கும் இதயத்து –
அணுவான மனசிலே மகத்தான அத்திருவடிகள் அடங்கும்படி அமைத்து கொள்ளுகிற ஹ்ருதய பிரதேசத்தை உடையரான –
அணுவில் மகத்தை அடக்கிய எம்பெருமானாரின் அகடிகதடா சாமர்த்தியம்–

இணை அடிப் போது அடங்கும் இதயம் –
ஒரு சிறிய மலரிலே இரண்டு பெரிய மலர்கள் அடங்குகின்றன –
இதய மலர் சிறிது –இணை அடிப் போதுகள் பெரியன-
அழகிய இரண்டு திருவடிகளையும் இதயத்திலே வைத்து த்யானம் செய்கிறார் எம்பெருமானார் -என்றபடி .

அம் பொன் பாதம் –
தங்கப் பாத்தரத்தை எவர் தீண்டினும் மாசு படாது –
எம்பெருமானார் பாதத்தை எவர் பற்றினாலும் குற்றம் அன்று –
சர்வ சமாஸ்ரயநீயம்-என்ற படி

இராமானுசன் -எம்பெருமானாருடைய –
அம் பொற் பாதம் என்றும் –
சௌந்தர் யத்துக்கு கொள்கலம் ஆகையாலே -அதி விலஷணமாய்-ஸ்பர்ஹநீயம் ஆகையாலே -சர்வருக்கும்
சமாஸ்ரயநீயமாய் இருக்கிற திருவடிகளை -சர்வ காலத்திலும் –

கடம் கொண்டு இறைஞ்சும் –
நசம்சயச்து தத் பக்த பரிசர்ய ரதாத்மனாம் -என்றும் –
குருரேவ பரப்ரம்ம -என்றும் –
நீக்கமில்லா யடியார் தம் அடியார் அடியார் எம் கோக்கள் அவர்களுக்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்பாடே –
என்றும் சொல்லுகிறபடியே -பிராப்யம் என்று அத்யவசித்து ஆஸ்ரயிக்கும் –
கடம் -பிராப்யம்
கொள்கை -அத்யவசிக்கை –

திரு முனிவர்க்கன்றி காதல் செய்யா –
இப்படிப் பட்ட நிரவதிக சம்பத்தை உடையராய் கொண்டு -அதில் உபகார ச்ம்ருதியால் –
அத்தையே மனனம் கொண்டு இருக்கிற ஞானாதிகர் –
த்ரணீ க்ருத விரிஞ்சாதி நிரன்குச விபூதய ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண சாலின -என்னும்படியானவர்களுக்கு ஒழிய
மற்று ஒருவருக்கு –
சுருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களிலே -அதி ரகஸ்யமான-சரம பர்வ விஷயத்தில் பண்ணப்படும் ஸ்தோத்ரத்தை பண்ணாத

கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர் –
கடம் கொண்டு -கடைமையாக நினைத்து-தவிர்க்க ஒணாது இயல்பாக நாம் செய்ய வேண்டிய செயல் என்ற எண்ணம் வாய்ந்து -என்றபடி –
இறைஞ்சும் திரு –
இறைஞ்சுதலே திரு என்க-எம்பெருமானாரை இறைஞ்சுதலே செல்வம் என்றது ஆயிற்று –
எம்பெருமானை இறைஞ்சுதலும் செல்வமே யாயினும் –
கஜாந்தம் ஐஸ்வர்யம் -என்று-யானையைக் கட்டித் தீனி போடுவதை இறுதியாகக் கொண்டது ஐஸ்வர்யம் -எனபது போலே-
ஆசார்யன் அளவும் இறைஞ்சுதல் சென்றால் தான் செல்வம் ஆகும் -என்க –

முனிவர் –
எம்பெருமானாரையே இடை விடாது மனனம் பண்ணும் இயல்பினர் –
எம்பெருமானார் இதயத்திலே மழிசைக்கு இறைவன் இணை அடிப் போதுகளையே த்யானிப்பது போலே –
இத் திருவாளர்கள் இராமானுசன் அம் பொன் பாதத்தையே நினைந்த-வண்ணம் இருக்கின்றனர் -என்க –

திடம் கொண்ட ஞாநியர்க்கே –
த்ருட அத்யாவச்யத்தை கொண்ட ஞாநாதிகற்கே –திடம் -த்ர்டம் –கொள்கை -உடைத்தாகை
ஒரு நாள் வரையில் அழகிய மணவாளர் வாகனத்துடன் எம்பெருமானார் மடத்தருகே எழுந்து அருள –
எம்பெருமானாரும் திரு வீதி எழுந்து அருளி -அவரை திருவடி தொழுது –மடத்திலே எழுந்து அருள
வடுக நம்பி அவரை திருவடி தொழாதே அங்கே தானே இருக்கையாலே -அத்தை கடாஷித்து –
நம் பெருமாளை சேவிக்க ஏன் காணும் வரவில்லை -என்ன -அவரும் –
தேவரீருடைய பெருமாளை சேவிக்கப் போனால்-அடியேனுடைய பெருமாளுக்கு காய்ச்சின பால்
பொங்கிப் போனாலோ -என்றார் -என்று பிரசித்தம் இறே –

கிருமி கண்டன் உபத்ரவத்துக்காக -எம்பெருமானார் மேல் நாட்டுக்கு எழுந்து அருளின பின்பு-
ஆழ்வான் அந்த பையலுடைய சதச்சிலே புகுந்து -அங்கு உண்டான குத்ருஷ்டிகளை ஜெயித்து-மீண்டும் கோயிலுக்கு
எழுந்து அருளி அங்கு இருக்கிற காலத்தில் -ஒரு நாள் பெரிய பெருமாளை-சேவிக்க கோயிலுக்கு உள்ளே எழுந்து அருள –
திருக் கோயில் த்வாரத்திலே இருக்கிற ராஜபடர்-இவரைப் பார்த்து -ராமானுஜர் சம்பந்தம் உடையார் ஒருவரை யாகிலும்
கோயிலுக்கு உள்ளே புக விட வேண்டா –என்ற ராஜ சாசனத்தை சொல்ல –
வேறே சிலர் -அப்படியே ஆகிலும் இவர் ஞானாதிகர் உள்ளே புகுர விடும் கோள்-என்ன –
இவரும் அவர்களுடைய உக்தி பிரத்யுக்திகளை கேட்டருளி -தம்மை போர வெறுத்து -உடனே நாலடி-பிறகாலித்து –
எம்பெருமானார் சம்பந்தத்துக்கு புறம்பான இந்த ஞானாதிக்யமும் இந்த பகவத் சேவையும் நமக்கு வேண்டா -என்று
அன்று முதலாக கொண்டு -எம்பெருமானார் திரும்பவும் கோயிலுக்கு எழுந்து-அருளுகிற பர்யந்தமும் –
பெரிய பெருமாளை -திருவடி தொழாதே -இருந்தார் என்றும் பிரசித்தம் இறே –

இப்படிப் பட்ட த்ருட அத்யாவச்ய யுக்தரான ஞானாதிக்கருக்கு என்றபடி –

காதல் செய்யாத் திடம் கொண்ட ஞாநியர்க்கே –
காதல்-அன்பு
திடம்-வட சொல்-த்ருடம்-உறுதிப் பாடு
முனிவர்க்குக் காதல் செய்யும் ஞானியர்க்கு என்றிலர் –
முனிவர் திறத்துக் காதலினும் அல்லாதார் திறத்துக் காதல் செய்யாமையே குறிக்கோளாக-கொண்டமை தோற்றற்கு-
மறந்தும் புறம் தொழா மாந்தர் -எனபது போலே இதனையும் கொள்க ..
இக்கருத்தை வெளிப்படுத்துகிறது –திடம் கொண்ட -என்று ஞானத்துக்கு இட்ட அடை மொழி –
திரு முனிவர் இடம் உள்ள ஞானம் –
அம்முனிவருக்கு காதல் செய்பவர் இடம் உள்ளது அதனினும் சீரிய த்ருட ஞானம் –
முனிவர்க்கு அன்றிக் காதல் செய்யாதவர் இடம் உள்ளது -அதனினும் சிறந்த த்ருட தர ஞானம் என்க –

அடியேன் அன்பு செய்வதுவே –
அடியேன் -இப்படி ததீய பர்யந்தம் சேஷ ஏக ஸ்வரூபனான நான் –
அன்பு செய்வதுவே -சிநேகத்துக்கு சக்தனாய் இருப்பது -என்கிறார் –
வாசா யதீந்திர மனசா வபுஷாச யுஷ்மத் பாதார விந்த யுகளம் பஜதாம் குருணாம்
கூராதி நாத குருகேச முகாத்யபும்சாம் பாதானுசிந்தன பரஸ் சததம் பவேயம் -என்று ஜீயரும் பிரார்த்தித்தார் -இறே-

அடியேன் அன்பு செய்வது
அடியேன் -எல்லை நிலம் பர்யந்தம் அடிமையின் சுவை அறிந்த நான் –
அன்பு செய்வது -பக்தன் ஆவது-செய்வதுவே-குற்றியலுகரம் வகர வுடம்படுமெய் பெற்று வந்தது –

அடியேன் அன்பு செய்வதுவே-இதுவே இவருக்கு சொரூப நிரூபக தர்மம்-

கீர்த்தி ஜகத்தை மிஞ்சும்…அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே போலே –
அவா சூழ்ந்து ..தத்வ த்ரயத்தை விட பெரியது
சுவாமி திருவடி கிட்டினால் அனைவரின் அருளும் கிட்டும்-மதுர கவி நிலையை உணவாகப் பெறுவோம் –

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–

அன்பன் –
வாத்சல்யத்தையே நிரூபகமாக உடையவன் ஆயிற்று ஈஸ்வரன் –
இன்னானுக்கு அன்பன் என்று விசேஷியாமையாலே
ரிபூணாமபி வத்சலா -என்கிறபடியே-சர்வ விஷயம் ஆயிற்று அவனுடைய வாத்சல்யம் இருப்பது –
அதுக்கு ஹேது என் என்னில் சர்வேஷா மேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ -என்றும்
தேவா நாம் தாநவாநாஞ்ச சாமான்யமதி தைவதம் -என்றும்
ஜனகத்வ பிரயுக்தமான சம்பந்தம்-சர்வ சாதாரணமாய் இருக்கையாலே வாத்சல்யமும் பொதுவாய் இருக்கும் –

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம் அன்பன் –தென் குருகூர் நகர் நம்பி-
ஆழ்வாருடைய அன்பு அங்கன் பொதுவாய் அன்றே இருப்பது
பரமனைப் பயிலும் திருவுடையார் எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -என்கிறபடியே
பகவத் சம்பந்த நிபந்தனமாய் இறே இருப்பது –
வாத்சல்ய குணத்துக்கு தோற்று -தம்முடைய திருவடிகளை ஆஸ்ரயித்த என் போல்வார்க்கு எல்லாம் வத்சலராய் இருக்குமவர்
அடைந்தவர்கட்க்கு எல்லாம் அன்பன்
அவனை சேஷியாக வரிக்க்கவுமாம் -பந்துத்வன வரிக்க்கவுமாம் -உபாயத்வென வரிக்க்கவுமாம் -உபேயத்வென வரிக்க்கவுமாம்
இவருக்கு ஆதரிக்க வேண்டுவது ஏதேனும் ஒரு சம்பந்தம் ஆய்த்து
அவர்களுடைய ஜாத்யாதி நியமம் பாராதே தத் சம்பந்தமே ஹேதுவாக நல்லராய் இருக்குமவர்
கும்பி நரகர்க ளேதத்துவரேலும் –எம் தொழு குலம் தாங்கள் -என்றும் எத்தனை நலம் தாம் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகள் -என்று இருக்குமவர் –

தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
ஆழ்வாருக்கே அன்பராய் இருக்கை ஸ்ரீ மதுர கவிகளுக்கு ஸ்வரூபம் ப்ரீதி ப்ரேரிதராய்க் காணும் சொல்லிற்று-

ஆசார்ய வான் -என்று ஆயிற்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் உகப்பது
1–பிரதமத்திலே ஆசார்யன் தனக்கு அஜ்ஞாத ஜ்ஞாபந முகத்தாலே ஸ்வரூப ஜ்ஞாநத்தைப் பிறப்பித்து
2–பகவத் சமாஸ்ரயண வேளையிலே புருஷகார -பூதனாய்
3–தன்னுடைய அனுஷ்டாநத்தாலே இவனை நல் வழியே கொண்டு போய்
4–ப்ராப்தி தசையிலும் சாத்ய வ்ருத்தியை -கைங்கர்யம் வளர்த்து பண்ணிக் கொடுக்கக் கடவனாய்
இப்படி பஹூ முகத்தாலே உத்தேச்யனாய் இறே -இருப்பது-

இவ்வர்த்தத்தை தங்களுக்குத் தஞ்சமாக விஸ்வசித்து இருப்பார்
பதி வைகுந்தம் காண்மினே
அவர்களுக்கு வஸ்தவ்ய பூமி பரம பதம்

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –11- சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த இத்யாதி —

March 27, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் திருவடிகளை சிரஸா வஹிக்கும் ஸ்ரீ எம்பெருமானாரைத் தங்களுக்கு
அபாஸ்ரயமாகப் பற்றி இருக்கும் அவர்களுடைய கார்ய வை லஷண்யம் இந்த லோகத்தில்
என்னால் சொல்லித் தலைக் கட்ட ஒண்ணாது-என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

இவ்வளவாக மூன்று பாட்டாலும் -ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் மூவருடைய சம்பந்தத்தை உடைய
ஸ்ரீ எம்பெருமானாரை கொண்டாடி -இப்பாட்டிலே -தமக்கு இவ்வளவாம் அதிகாரம் உண்டாகும்படி -முதல் அடியிலே
தம்மை விஷயீ கரித்த ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருவடிகளிலே –திரு அவதாரமே பிடித்து -இடைவிடாதே –
நிரவதிக பிரவணராய் -இசைகாரர் -என்று ஸ்ரீ நம் ஆழ்வாரால் கொண்டாடப் பட்ட மகா வைபவத்தை உடையரான –
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் திருவடித் தாமரைகளிலே -நிரவதிக பிரவணரான -ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவருடைய
அனுஷ்டானம் -இந்த மகா பிருதிவியிலே -என்னால் சொல்லித் தலைக் கட்ட போகாது -என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் திருவடிகளைத் தலையால் தாங்கும் ஸ்ரீ எம்பெருமானாரைச் சார்வாக கொண்டவர்கள் உடைய
அனுஷ்டானத்தின் சிறப்பு இவ்வுலகில் என்னால் சொல்லித் தலைக் கட்ட ஒண்ணாது என்கிறார் –

பெயரையும் வூரையும் பல ஸ்ருதியும் இன்றி அருளிய ஐவரையும் சொல்ல வந்தவர் –
முதல் மூவரும் -திரு மழிசை ஆழ்வாரும் திரு பாண் ஆழ்வாரும்.-அயோநிஜராக தோன்றினார்
நெல் கதிரில் தோன்றி .மூவரும் போல…அதனால் நால்வரையும் சேர்த்தார்.
இந்த வாசி அறிவதற்காக திரு மழிசை ஆழ்வாரை அப்புறம் பாடினார்-பாலேய் தமிழர் இசைகாரர் -என்ற கிரமத்தாலும்-
கார்த்திகை ரோகிணி உறையூரில் -திரு பாண் பெருமாள்-

சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த
பாரியிலும் புகழ்ப் பாண் பெருமாள் சரணாம் பதுமத்
தாரியல் சென்னி யிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை என்னால் சொல்ல ஒண்ணாது இக்கடலிடத்தே – 11-

பத உரை –

சீரிய -சிறப்பு வாய்ந்த
நான் மறை -நான்கு வகைப் பட்ட வேதத்தினுடைய
செம் பொருள்-நேரிய பொருளை
செம் தமிழால் -செவ்விய தமிழ் நூலினாலே
அளித்த -அருளிச் செய்த
பாண் பெருமாள் -திருப் பாண் ஆழ்வார் உடைய
பதுமத்தார் -தாமரைப் பூ
இயல்-அலங்கரிக்கிற
சென்னி -திரு முடியயுடைய
இராமானுசன் தன்னை -எம்பெருமானாரை
சார்ந்தவர் தம் -பற்றி நிற்பவர்களுடைய
காரிய வண்மை -நெறிப்பட ஒழுகும் மாட்சியை
இக்கடல் இடத்து -இந்த கடல் சூழ்ந்த உலகத்தில்
என்னால் சொல்ல ஒண்ணாது -என்னால் சொல்லித் தலைக் கட்ட இயலாது

பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை உள்ளபடி பிரதிபாதிக்கையால் வந்த சீர்மையை உடைத்தாய்
ருகாதி பேதத்தாலே நாலு வகை பட்டு இருந்துள்ள வேதத்தின் உடைய ஸ்வ ரசமான அர்த்தத்தை
நடை விளங்கு தமிழால்( -பெருமாள் திருமொழி -1 – 10- )-உபகரித்து அருளின வராய்-
பூமியில் வர்த்தியா நின்று உள்ள கீர்த்தியை உடைய திருப் பாண் ஆழ்வார் திருவடிகள் ஆகிற
தாமரைப் பூவாலே அலங்க்ருதமான திரு முடியை உடைய எம்பெருமானாரை
அபாஸ்ரயமாக பற்றி இருக்கும் அவர்களுடைய அநுஷ்டான வைலஷண்யம்
இந்த கடல் சூழ்ந்த பூமியில் என்னால் சொல்லித் தலைக் கட்ட ஒண்ணாது

இக்கடல் இடத்தே இராமானுசன் தன்னைச் சார்ந்தவர் -என்று அன்வயித்து –
பகவத் சமாஸ்ரயணத்துக்கு கூட இசைவார் இல்லாத இந்த லோகத்திலே -அதனுடைய எல்லை
நிலத்து அளவும் வந்து எம்பருமானாரை ஆஸ்ரயிக்க பெற்றவர்கள் -என்னவுமாம் –

பாரியல் -என்ற இடத்தில் இயல்தல் -நடத்தல்
தாரியல்-என்கிற இடத்தில் இயல்தல்-அலங்கரித்தல்
தார்-பூ
காரியம் -க்ருத்யம்
காரியல் வண்ணம் -என்று பாடமான போது -காரி யினுடைய இயல்வை உடைத்தான ஒவ்தார்யம் -என்கை
அதாவது ஜல ஸ்தல விபாகம் பாராதே அது வர்ஷிக்குமா போலே -சர்வ விஷயமாக-எம்பெருமானாருடைய திவ்ய குணங்களை வர்ஷிக்கை –

சீரிய -விசேஷணம் –
1-நான் மறைக்கும் –2-செந் தமிழுக்கும் -3–பாரியிலும் புகழுக்கும் -4- பாண் பெருமாளுக்கும் -5-சரணத்துக்கும் –
6- பதுமத்தாரியல்லுக்கும் -7–சென்னிக்கும் –8-இராமானுஜருக்கும் -9–தன்னைச் சார்ந்தவர்களுக்கும் –
8-அவர்களின் காரிய வண்மைக்கும் -கொள்ளலாமே –
அ சாரம்-அல்ப சாரம்-சாரம் -சாராதரம்-தள்ளி – சாரதமம் கொள்ள வேண்டுமே அதுவே -செம் பொருள் –
கர்த்தவ்யம் பகவத் – ஆச்சார்ய -பாகவத கைங்கர்யங்கள் –
கூரத் ஆழ்வான் /முதலியாண்டான் /திருக் குருகை பிரான் பிள்ளான் – அனந்தன் ஆண் பிள்ளை – போன்றோர் வைபவம்-
காரியல் வண்மை-மேகம் போன்ற ஸ்வ பாவம் -திருப்பாண் ஆழ்வார் திருவடி சம்பந்தத்தால் பெற்ற ராமானுஜன் தன்னை
சார்ந்தவர்களுக்கு அருளிய – காரேய் கருணை வள்ளல் அன்றோ -அமுதனார் திரு உள்ளம் படி நாமும் இருக்க வேண்டுமே
ராமானுஜர் அடியவர் என்று பேர் கொண்டால் -பொறுப்பு நமக்கும் வருமே-
ஆச்சார்யர் திருவடி ஒத்து பிரசாதம் சென்னியில் நித்யம் சூடிக் கொள்கிறோம் –
நம்பாடுவான் -குலமே திருப் பாண் ஆழ்வார்-

சீரிய நான் மறைச் செம் பொருள் –
சாஹி ஸ்ரீ ரம்ர்தாசதாம் -என்று சத்துக்களுக்கு சம்பத்தாய் -ரிக் யஜுஸ் சாம அதர்வண ரூபேண
நாலு வகைப் பட்டு இருக்கிற -வேதங்களில் வைத்துக் கொண்டு
அசாரம் -அல்ப சாரம் – சாரம் -சார தரம் -த்யஜேத் –
பஜேத் சார தர -சாஸ்திர -ரத்னாகர இவாம்ர்தம் -அனுப்யச்ய-மகாத்ப்யஸ் ச சாஸ்த்ரேப்யோ-என்றும் –
சுருதி பத விபரீத ஷ்வேவகல்ப ஸ்ருதவ்ச பிரகிருதி புருஷ யோக பிரபாக சோனதத்ய-ததிஹா விபுத குப்த
ம்ர்த்யு பீதாவி சின்வந்த்யுபு நிஷதம்ர்தாப்த்தே ருத்ம சாரமார்யா – என்றும் சொல்லுகிறபடியே –
உபாதேய -சார தமமாய் -இருந்துள்ள திரு மந்த்ரத்தின் உடைய பிரக்ருதியான -பிரணவத்தினுடைய –
அவயவங்களான -அகார உகார மகாரங்களுடைய அர்த்த விசேஷங்களை செந்தமிழால்-
அமலனாதி பிரான் என்றும் -உவந்த உள்ளத்தனாய் -என்றும் -மந்தி பாய் வட வேங்கட மா மலை என்றும் –
தம்முடைய பிரபந்த ஆதி யான மூன்று பாட்டுக்களுடைய முதல் அடியிலே -சார தம அர்த்த விசேஷ பிரதி பாதங்களாய் இருக்கையாலே
சகல வேத சாரம் என்று -ச்லாக்கிக்கப் படுகிற -அஷரத்தையும் கூட்டி சந்தர்ப்பித்த பிரபந்தத்தாலே –

சீரிய நான்மறைச் செம் பொருள் –
ருக் யஜுர் சாம அதர்வணம் -என்று வேதம் நான்கு வகை பட்டது என்கை –
அந்த வேதத்துக்கு சீர்மையாவது –
பரம் பொருளின் ஸ்வரூபம் -ரூபம்-குணம்-விபூதி -இவைகளை உள்ளபடி விளங்க வைத்தல்-
ஸ்வரூபம் பகவானது திவ்யாத்ம தத்துவம்
ரூபம் –அவனது மாசூணாச் சுடர் உடம்பு
குணம்-ஆன்ம தத்துவத்தைப் பற்றி நிற்கும் அறிவு -ஆற்றல்-கருணை முதலிய பண்புகளும் –சுடர் உடம்பை பற்றி நிற்கும்
அழகு மென்மை இளமை முதலியவைகளும்
விபூதி -பரம பதமும் -இவ் உலகங்களுமாகிய இறைவனுடைய சொத்து –

இனி பிரத்யஷம் -அநுமானம்-எனப்படும் ஏனைய பிரமாணங்களை விட -யாராலும் ஆக்கப்படாது -சொல் வடிவமாய் அமைந்த
மறை சிறந்த பிரமாணமாய் இருத்தலைச் சீர்மையாகக் கொள்ளலுமாம் –
திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்துஎங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே.—1-1-7- சுடர் மிகு சுருதி -என்று-நம் ஆழ்வார் அருளியதும் காண்க
செம் பொருள் –பண்புத் தொகை -செம்மையான பொருள் என்று விரிக்க –
பொருளுக்கு செம்மையாவது -போக்கிலேயே இடர் படாது விளங்குதல் -ஸ்வ ராசர்தம்-என்பர் வட மொழியில்

அளித்த –
சர்வரையும் ரஷித்து அருளினவராய் –

செம் தமிழால் பாண் பெருமாள்-
நான்கு வகைப்பட்ட மறைகளும் வட மொழியில் கூறும் செம் பொருளை செம் தமிழ் அமைத்தஒரு திவ்ய பிரபந்தத்தாலே அருளி செய்தார்
திருப் பாண் ஆழ்வார் -நால் வகையில் விரிந்து கிடக்கும் வட மொழி மறைகளில் நாம் உணர வேண்டிய செவ்விய பொருளை
செம் தமிழால் அமைந்த பத்துப் பாட்டுக்களே கொண்ட-
அமலனாதி பிரான் -என்னும் திவ்ய பிரபந்தத்தாலே காட்டி அருளி பேருதவி புரிந்தவர் திருப் பாண் ஆழ்வார் -என்க-

வேதியர் தாம் விரித்து உரைக்கும் விளைவுக்கு எல்லாம் விதையாகும் இது வென்று விளம்பினோமே – என்று
வேதாந்த தேசிகன் முனி வாஹன போகத்தில் அனுபவித்து அறிந்து பேசுவதை இங்கு நினைவு கூறுக –
செம் தமிழ்
பொருள் விளங்கும் நடையிலே அமைந்த தமிழ் செம் தமிழ் எனப்படும் –
திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11- நடை விளங்கு தமிழ் மாலை -எனபது பெருமாள் திருமொழி – 1-11-

செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப்பட்டன் சொல் -1-3-10–
பட்டர் பிரான் சொன்ன பாடல் சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே -2-5-10-
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே–பெரிய திருமொழி -2-8-10-

பாரியலும் புகழ்
அகண்டமான பூ மண்டலத்தில் வியாபித்த கல்யாண குணங்களும் கீர்த்தியையும் உடையவராய்-
இயலுதல்-நடத்தல் –

பாண் பெருமாள்
இசைகாரர் -என்கிறபடியே -தந்த்ரீ லயைகளை அடைவே அறிந்து -ஏதத் சாமகாயன் நாஸ்தே – என்றால் போலே –
பெரிய பெருமாளுக்கு உகப்பாம் படி -இனிதாகப் பாடுமவர் ஆகையாலே -அந்த இசையை
நமக்கு -நிரூபகமாக உடையவராய் -மகானுபாவரான -திருப் பாண் ஆழ்வாருடைய –

பார் இயலும் புகழ்
இயலுதல் -நடத்துதல் –அதாவது புகழ் பூமியில் பரவுதல் –
அரும்பாடு பட்டு பெற வேண்டிய பொருள் ஆகிய வேதத்தின் செம் பொருளை -எல்லாருக்கும் புரியும்படி -சுருக்கமாக –
செம் தமிழால் -அளித்தமைபற்றி இப் புகழ் பாரினில் இயல்கின்றது என்க –

அமலனாதி பிரான் -என்கிற முதல் பாசுரத்திலே –
ஆதி -என்று காரணமான பரமாத்மா ஸ்வரூபமும்
விண்ணவர் கோன் -என்பதனால் நித்ய சூரிகள் சேவிக்கும் பர ரூபமும் –
வேம்கடவன் -என்பதனாலும் -அரங்கத்தம்மான் -என்பதனாலும் அர்ச்சாரூபமும் –
அமலன் நிமலன் -முதலிய சொற்களினால் ஹேய ப்ரத்ய நீகத்வம் -மாசு நீக்கித் தூய்மை படுத்துதல் -முதலிய குணங்களும்
கமல பாதம் -என்பதனால் திரு மேனிக்கு உண்டான அழகும் மென்மை குளிர்ச்சி முதலிய குணங்களும்
நீதி வானவன் -என்பதனால் -பரம பதமாகிய நித்ய விபூதி செல்வமும்
அடியார்க்கு என்னை ஆள் படுத்த -என்பதனால் லீலா விபூதி என்னும் இவ் உலக செல்வமும்-சேரச் சொல்லப் பட்டு உள்ளமை காண்க –

பாண் பெருமாள்-
ஆழ்வார்கள் பதின்மருள் குலசேகரரும் பாணருமே -பெருமாள் -என்று நூல்களில் வழங்கப் படுகின்றனர்
குலசேகரர்-அருளி செய்த திருமொழி -பெருமாள் திருமொழி -என்று வழங்கப் படுவது காண்க
இங்கே அமுதனார் -பாண் பெருமாள்-என்று வழங்குகிறார் திருப் பாண் ஆழ்வாரை –

இவரை அடி ஒற்றி இவர் குலத்தவரான ஐயங்கார் திருவரங்கத் தந்தாதியில் –
வையம் புகழ் பொய்கை பேய் பூதன் மாறன் மதுரகவி
யையன் மழிசை மன் கோழியர் கோன் அருள் பாண் பெருமான்
மெய்யன்பர் காற் பொடி விண்டு சித்தன் வியன் கோதை வெற்றி
நெய்யங்கை வேற் கலியன் தமிழ் வேத நிலை நிற்கவே –-அருள் பாண் பெருமாள் -என்கிறார் –

வேதாந்த தேசிகன் முனி வாஹன போகத்தில் –
காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி
கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல்
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழ மறையின் பொருள் என்று பரவுகின்றோம்
வேண் பெரிய விரி திரை நீர் வையத்துள்ளே
வேதாந்த வாரியன் என்று இயம்ப நின்றோம்
நாம் பெரியோம் அல்லோம் நாம் அன்றும் தீதும்
நமக்கு உரைப்பார் உளர் என்று நாடுவோமே–கண்ணனையே கண்டு உரைத்தக கடிய காதல் பாண் பெருமாள் -என்று
அருளி இருப்பதும் அறியத் தக்கது –

பாணர் குலத்தினில் சேர்ந்தவர் ஆதலால் இவருக்கு பாணர் -என்ற பெயர் ஏற்ப்பட்டது -என்பர்
பாண்-இசைப் பாட்டு -அதனைப் பாடுதலின் பாணர் எனப் பட்டோர் அக்குலத்தினர் –
கையில் யாழ் ஏந்தி இசைத்து வள்ளல்கள் இடம் பரிசு பெறுவது இவர் தம் தொழில் –
இனிது தூது இசைத்து தலைவின் ஊடல் நீக்கி பிரிவாற்றாத தலைவனஈனைத்து இன்புறச் செய்வதும் இவர்கள் தொழிலாம்
நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –பெரிய திரு மொழி -8-2-2-
பாணனார் திண்ண மிருக்க இனி இவள் நாணுமோ -– என்னும் திரு மங்கை மன்னன் திரு வாக்கும் –
தலை மகன் பிரிந்தால் எதிர் தலையிலே உண்டான மறத்தைப் போக்கி சேர விடுகைக்காக பாணனை கொடுத்து வர விடும் –
அவர்களும் இனிய சொற்களாலே அவர்கள் நெஞ்சிலே மறத்தைப் போக்கி சேர விடுவார்கள்-என்று பெரிய வாச்சான் பிள்ளை
அதனுடைய வியாக்யானமும் இங்கு அறிய தக்கன –
திருமங்கை மன்னன் திரு வாக்கில் பாணன் -என்னாது பாணனார் -என்று சிறப்பு தோற்ற அருளி செய்து இருப்பது குறிக் கொள்ளத் தக்கது –
உலகியலில் சேர்த்து வைக்கும் பாணன் அல்லன் இங்கே குறிப்பிடப் படுமவன் –
ஆன்ம இயலில் தலைவன் ஆகிற பரமாத்மாவோடு தலைவியாகிய ஜீவாத்மாவை சேர்த்து வைக்கும் ஆசார்யனே இங்கு
பாணனார் -என்று குறிப்பிடப் படுகிறான் எனபது திருமங்கை மன்னன் திரு உள்ளக் குறிப்பு –
இத் திருமங்கை மன்னனுக்கு ஆசார்யன் திரு நறையூர் நம்பி -ஆகவே -பாணனார் -என்று தாய்ப் பேச்சில்
குறிப்பிட படுபவர் திரு நறையூர் நம்பியே –
இதனை கடைசி அடியில் -நன்று நன்று நரையூரர்க்கே -என்று தாய் வெளிப்படையாக சொல்லுகிறாள்-
பெரிய வாச்சான் பிள்ளை இதனையும் தெளிவாக -தம் வ்யாக்யானதிலே காட்டி உள்ளார் –
இங்கு பாணனார் ஆகிறார் சேதனருக்கு ஸ்வா தத்ரியத்தால் வந்த மறத்தைப் போக்கி -சேஷத்வ ஞானத்தை உணர்த்தி சேர விடும்
ஆசார்யன் இறே -பாணனார் -என்கிறாள் காணும் இவள் -எனபது வியாக்யான ஸ்ரீ ஸூக்தி –

நம் பாண் பெருமாள்
பாணர் குலத்திலே பிறந்தவர் அல்லர் -உறையூரில் நெல் கதிரில் தோன்றி பாணர் குலத்தான் ஒருவனால் வளர்க்கப் பட்டார் –
அம்மரபுக்கு ஏற்ப கையிலே யாழ் ஏந்தி -அரங்க செல்வனாரை பாண் பாடி பரிசில் பெற்றார் –
இவர் பெற்ற பரிசில் மோஷம் –
அமலனாதி பிரானில் முதன்முதலாக மோஷம் கொடுப்பவன் என்னும் கருத்துடன் -அமலன் – என்கிறார் -வேதாந்த தேசிகன் –
அமலன் -என்கிறது மல பிரதிபடன் -என்றபடி –
இத்தால் மோஷ ப்ரதத்வம் சொல்லிற்று ஆயிற்று –என்று முனி வாஹன போகத்திலே அருளி செய்துள்ளமை காண்க –
பெருமாள் திருவடி வாரத்தில் கையும் வீணையுமாய் நின்று
பாண் பாடிப் பரிசிலாகப் பெருமாளோடு இரண்டற ஒன்றி விட்டமை பற்றி இவரும் பெருமாள் ஆயினார் போலும் –
இனி நான் மறை செம் பொருளை செம் தமிழால் அளித்து சேதனருக்கு ஸ்வா தத்ரியத்தால் வந்த மறத்தை போக்கி –
சேஷத்வ ஞானத்தை உணர்த்தி -பரமாத்மாவோடு சேர விடும் ஆசார்யனைப் பற்றி -பாண் பெருமாள்-என்கிறார் ஆகலுமாம் –

சரணாம் பதுமத் தாரியல் சென்னி –
குரு பாதம் புஜாத்யாதேத் -பவத் பதாப்ஜே ஹ்ர்ஷ்டாச்து நித்யமனுபூய மமாச்யபுத்தி – என்றும் சொல்லுகிறபடியே –
போக்ய தமமான பாத பத்மத்தாலே -கிரீடாதி சிரோ பூஷனங்களாலே -தம்தாமுடைய சிரச்சுக்களை –
அலங்கரித்து கொள்ளுவாரைப் போலே -அலங்கரிக்கப்பட்ட -உத்தம அங்கத்தை உடையவராய் –

சரணாம் பதுமத்தாரியல் சென்னி –
பாணனார் ஆசார்யர் ஆதலின் -அவர் திருவடிகளை தலையால் தாங்குகிறார் எம்பெருமானார் –
லோக சாரங்க மகா முனிகள் தோளினாலே தாங்கினார் நம் பாணரை –
எம்பெருமானாரோ தலையிலே வைத்து கொண்டாடுகிறார் -அவரை –
நம் பாணனார் கண்ணின் உள்ள அரங்கத் தம்மான் திருக் கமல பாதங்கள் எம்பெருமானார் சென்னியை அலங்கரித்தன –
நம் பாண் பெருமாள் சரணாம் பதுமம் –
சரண் ஆம் பதுமத்தார் -திருவடி யாகிய தாமரைப் பூ /தார் -பூ /இயலுதல்-அலங்கரித்தல்
துறவியும் பூணும் தாமரைப் பூ இது –

இராமானுசன் தன்னை –
இப்படி ததீய ப்ராவண்ய சீமா பூமியான எம்பெருமானாரை-சார்ந்தவர் தம் –ஆபாஸ்ரயமாய் பற்றி இருக்குமவர்களுடைய

காரிய வண்மை
சமயநியத யாசா சாதுவ்ர்த்யா -என்கிறபடியே சம்ப்ரதாய சித்தமாக கொண்டு –
கர்த்தவ்யம் ஆசார்ய கைங்கர்யமும் – பகவத் கைங்கர்யமும் -என்று உபதேசிக்கப்பட்ட அனுஷ்டான
சவ்ஷ்டவம் -சர்வ பிரபன்ன ஜனங்களுக்கும் இது ஒன்றுமே கர்த்தவ்யம் என்று தெரியும்படி
வெளிச் செறிப்பாக பண்ணினவர்கள் ஆகையாலே -அவர்களுடைய இப்படிப்பட்ட ஔ தார்யத்தை -என்றபடி .

என்னால் சொல்ல ஒணாது இக்கடலிடதே –
சதுச்சமுத்திர பரிவேஷ்டிதமான பூலோகத்திலே அவர்களுடைய பிரபாவத்தை உள்ளபடி அறிய மாட்டாதே
என்னால் சொல்லி தலைக் கட்ட அரிதாய் இருக்கும்
பதுமத்தார் -தாமரை புஷ்பம் /-இயல்தல் -அலங்கரித்தல் /கார்யம் -க்ர்த்தயம்–

அன்றிக்கே
இக்கடலிடத்தே –
என்கிற வாக்யத்தை –இராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம் -என்கிற வாக்யத்தோடு கூட்டி அன்வயித்த போது –
பகவத் சமாஸ்ரயணத்துக்கும் கூட இசைவார் இல்லாத இருள் தரும் மா ஞாலத்திலே –
அதனுடைய எல்லை நிலமான எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயிக்க பெற்றவர்களுடைய
பிரபாவம் என்னால் சொல்லி தலைக் கட்ட அரிதாய் இருக்கும் என்றபடி .
காரியல் வண்மை -என்ற பாடமான போது –
கார் வர்ஷூகவலாகம்-அதினுடைய இயலாவது ஜல ஸ்தல விபாகம் பாராதே ஏக ரூபமாக வர்ஷிக்கை –
வண்மை –
அம் மேகம் போலே சர்வ விஷயமாகவும் எம்பெருமானாருடைய திவ்ய குணங்களை வர்ஷிக்கை யாகிற ஔ தார்யத்தை -என்றபடி ..

இராமானுசன் தம்மை சார்ந்தவர் தம் காரிய வண்மை -என்றது
போதாயன வ்ருத்தியை சஸக்ருத் தர்சனத்தாலே ஆநு பூர்வியாக கிரஹித்தும்
கிருமிகண்டன் சதச்சிலே சென்று குத்ருஷ்டிகளை பிரசங்க முகத்தாலே ஜெயித்தும் நிர்வாஹராய் இருந்துள்ள ஆழ்வானும்

எம்பெருமானார் மேல் நாட்டில் -திக்விஜயம் பண்ணி யருளி கோயில் ஏற எழுந்து அருளிய போது –
மார்க்கத்திலே ஒரு அக்ரஹாரத்திலே-மாயாவாதிகள் வித்வான்கள் அநேகம் பேர் திரண்டு இருக்க –அவர்களை கடாஷித்து –
எல்லாரையும் ஸ்ரீ வைஷ்ணவராம்படி திருத்த வேணும் என்று திரு உள்ளம் பற்றி – ஆண்டானை கடாஷித்து –
நீர் போய் அவர்களை ஸ்நானம் பண்ணுகிற துறையிலே நித்யம் ஸ்ரீ பாதத்தை விளக்கிக் கொண்டு வாரும் -என்று அருளிச் செய்ய –
அவரும் அப்படியே பண்ண -பின்பு அத் தீர்த்த பானத்தாலே அந்த மாயாவாதிகள் எல்லாருக்கும் துர் வாசனை போய் –
ஆபி முக்கியம் பிறந்து -எம்பெருமானார் திருவடிகளிலே ஆஸ்ரயித்தார்கள் -என்று குரு பரம்பரா ப்ரபாவத்தில் சொல்லப்பட்ட முதலி ஆண்டானும் –

சகல வேதாந்த சாரமான திருவாய் மொழிக்கு வியாக்யானம் பண்ணின பிள்ளானும் –

திரு வேங்கடமுடையான் விஷயமாக -ஒழுவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் –
என்று ஆழ்வார் பிரார்த்தித்து அருளின கைங்கர்யங்களைப் பண்ணிக் கொண்டு போந்து -தாமாக ஒரு தடாகம்
நிர்மாணம் பண்ணுகிற போது -திருவேங்கடமுடையான் தாமாகவே தம்மோடு ஒக்க மண் தட்டை சுமந்து கொண்டு
வந்து சகாயம் பண்ணும்படி அப்ரதிமப்ரபாவரான அனந்த்தாழ்வானும் –

ஒரு நாள் வரையில் எம்பெருமானாருடைய கோஷ்டிக்கு போரும்படியாக ததீயாராதனம் பண்ணின பருத்தி கொல்லை யம்மாள் தேவிகள்
முதலானவர்களுடைய பிரபாபத்தை பாசுரம் இட்டு சொல்லப் போமோ -வாசாமகோசரம் -என்றபடி –

இராமானுசன் தன்னை சார்ந்தவர் தம் காரிய வண்மை –
அரங்கத் தம்மான் தன்னைக் காட்டப் பட்டதனால் கண்டு வாழ்ந்தார் பாணர் –
பாணர் அடி முதல் முடி வரை தாம் கண்டதை பாட்டினால் காட்ட -எம்பெருமானார் கண்டு
பிறருக்கும் அரங்கத் தம்மானுடைய அவ் அரும் கட்சியை அப் பாட்டினாலேயே காட்டிக் கொடுத்தார் –
அரங்கனை தமக்கு காட்டிய பாணர் சரணங்களை தலை மேல் புனைந்தார் எம்பெருமானார் –
அத்தகைய எம்பெருமானார் பாணர் பாட்டினாலேயே அரங்கனைக் காட்டித் தருதலின் -ஆசார்யராகிய அவரையே
தமக்கு சார்வாக கொண்டனர் சில சால்புடையோர் –
அவர்கள் அங்கனம் கொண்டதோடு ஆச்சார்யா அபிமான நிஷ்டையில் வழுவாது -ஒழுகி நிலை நிற்றல் அமுதனாருக்கு
மிக்க வியப்பும் நயப்பும் தருகிறது –
காரியம்-
அனுஷ்டானம் -அதாவது ஆச்சார்யா அபிமான நிஷ்டை வழுவாது ஒழுகுதல்-
வண்மை-
ஒவ்தார்யம் -சிறப்பு என்றபடி –வள்ளன்மையை சொல்லாது
எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே–திருவாய் மொழி 1-2 10- – -என்னும் இடத்தில் போலே சீர்மையைக் குறிக்கிறது
எம்பெருமானார் பாணர் பாட்டால் அரங்கனைக் காட்டக் கண்ட அவர் சிஷ்யர்கள் வழியாக
பின்புள்ளாரும் கண்டு உகந்தமை வேதாந்த தேசிகன் திரு வாக்கால் நமக்கு புலன் ஆகிறது –
பா வளரும் தமிழ் மறையின் பயனே கொண்ட
பாண் பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில்
காவலுனும் கணவனுமாய் கலந்து நின்ற
காரணனைக் கருத்துற நான் கண்ட பின்பு -முனி வாஹன போகம் -என்பது அவர் தம் திரு வாக்கு –
இதில் தமிழ் மறையின் பயனே கொண்ட -என்பதனால் குரு முகமாய் அறிய வேண்டிய ப்ரபந்தம் என்பது காட்டப் பட்டது ஆயிற்று –
பாடல் பத்தில் கருத்துறக் கண்டமை கூறவே பாண் பாட்டால் குரு முகம் ஓதியவர்-காண்பது புலனாதல் காண்க –

காரியல் வண்மை -என்றுமொரு பாடம் உண்டு
அப்பொழுது காரினுடைய இயல்பை உடைத்தான வள்ளன்மை என்று பொருள் படும் .அதாவது
மேகம் நீர் நிலம் என்ற வேறுபாடு இன்றி மழை பொழிவது போலே எம்பெருமானாரை சார்ந்தவர்களும்
வேண்டுபவர் வேண்டாதவர் என்ற வேறு பாடு இன்றி எம்பெருமானார் திவ்ய குணங்களை பொழியும் வள்ளன்மை -என்றபடி –

என்னால் சொல்ல ஒண்ணாது இக் கடல் இடத்தே –
காரிய வண்மையை தெரிந்து கொண்டேனே அன்றி -அதனை என்னால் சொல்லித் தலைக் கட்ட இயலாது என்கிறார் –
இயலாமை இவர் குறை அன்று –
காரிய வண்மையின் சீர்மை-என்னால் –
இராமானுஜர் புகழை சொல்ல வந்த என்னாலும் இவர்கள் கார்ய வன்மை சொல்ல ஒண்ணாது -விஷயத்தின் சீர்மை -இருக்கும் படி –
அப்படி பட்டது –கடல் இடம் -கடலை உடைய உலகம் -கடல் சூழ்ந்த பூமி -என்றபடி
கடல் இடத்தே சொல்ல ஒண்ணாது என்று இயையும்
இனி இக்கடல் இடத்தே இராமானுசன் தன்னை சார்ந்தவர் என்று பொருள் கொள்ளலுமாம்
அப்பொழுது பகவானை பற்றுவதற்கு கூட இசைவார் இல்லாத இவ் உலகிலே அதனுடைய
எல்லை நிலத்தளவும் வந்து எம்பெருமானாரைப் பற்றி நிற்கும் பெற்றிமை வாய்ந்தவர்கள் என்றது ஆயிற்று –

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –10- மன்னிய பேரிருள் மாண்ட பின் இத்யாதி —

March 27, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை அவதாரிகை–
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளை ஸ்துதிக்கும் ஸ்வபாவரான ஸ்ரீ எம்பெருமானார்-விஷயத்திலே சிநேக யுகதர் திருவடிகளை
சிரசா வஹிக்குமவர்கள்-எல்லா காலத்திலும் சீரியர் என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை அவதாரிகை –
கீழ் இரண்டு பாட்டாலும் ஸ்ரீ பொய்கை யாழ்வார் ஸ்ரீ பூதத் தாழ்வார் ஆகிற இருவராலும் எடுக்கப் பட்ட
பரி பூர்ண தீபமான திவ்ய பிரபந்தங்கள் இரண்டாலும் -லோகத்திலே ஒருவராலும் பரிகரிக்க அரிதாம் படி
வ்யாப்தமாய் நின்ற அஞ்ஞானம் ஆகிற அந்தகாரம் நசித்த பின்பு
தாம் ஸ்ரீ திருக் கோவலூரில் வீற்று இருந்த ஸ்ரீயபதியை சாஷாத் கரித்து -அந்த லாபத்தை எல்லார்க்கும் திவ்ய பிரபந்த ரூபேண -உபதேசிக்கும்
ஸ்ரீ பேய் ஆழ்வாருடைய ச்ப்ர்ஹநீயமான திருவடிகளை ஸ்துதிக்கிற ஸ்ரீ எம்பெருமானார்-விஷயமான ப்ரீதியாலே பரிஷ்கரிக்க பட்டவர்களுடைய
ஸ்ரீ பாதங்களை தம்தாமுடைய தலை மேல் தரிக்கும்-சம்பத்தை உடையவர்கள் சர்வ காலத்திலும் ஸ்ரீ மான்கள் -என்கிறார் .

ஸ்ரீ அமுத உரை–ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய அவதாரிகை
ஸ்ரீ பேய் ஆழ்வார் -இருள் நீங்கியதும் -தாம் கண்ட இறைக் காட்சியினைத் தம் திவ்ய பிரபந்தத்தால் காட்டும்
வள்ளன்மைக்காக-அவர் திருவடிகளைப் போற்றும் ஸ்ரீ எம்பெருமானார் திறத்து அன்புடையார் திருவடிகளை
தலையில் சூடும் திருவாளர்கள் எல்லா காலத்திலும் சிறப்புடையோர் ஆவர் என்கிறார் –

மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – 10-

பத உரை –
மன்னிய -நிலை நின்ற
பேர் இருள் -அறியாமை என்னும் பெரிய இருள்
மாண்ட பின் -ஒழிந்த பிறகு
கோவலுள்-திருக் கோவலூரில்
மா மலராள் தன்னோடும் -மலரில் தோன்றிய பெரிய பிராட்டியாரோடு கூட
ஆயனை -இடையனான ஆயனார் என்னும் எம்பெருமானை
கண்டமை -தாம் பார்த்தமையை
காட்டும் -தம் திவ்ய பிரபந்தத்தால் காட்டிக் கொடுக்கிற
தமிழ் தலைவன் -தமிழுக்கு தலைவரான பேய் ஆழ்வார் உடைய
பொன்னடி -பொன் போலே விரும்பத் தக்க திருவடிகளை
போற்றும் – புகழும் இயல்பினரான
இராமானுசனுக்கு -எம்பெருமானார் திறத்து
அன்பு பூண்டவர் -பக்தியை அணியாக கொண்டவர்களுடைய
தாள் -திருவடிகளை
சென்னியில் -தலையில்
சூடும் -சூட்டிக் கொள்ளும்
திரு உடையார் -செல்வம் படைத்தவர்கள்
என்றும் -எப்பொழுதும்
சீரியர் -சிறப்புடையார் ஆவர்-

பேர்க்கப் பேராத படி நின்ற அஞ்ஞானம் ஆகிற மகா அந்தகாரம் ஆனது
முற்பாடரான ஆழ்வார்கள்-இருவரும் ஏற்றின திரு விளக்காலே நிச் சேஷமாக போன பின்பு
நீயும் திரு மகளும் -முதல் திருவந்தாதி -86-–என்கிற பாட்டின் படியே திருக் கோவலூரிலே -திரு மகளாருடனே கிருஷ்ண அவதாரத்திலே
ஆஸ்ரித பவ்யத்தை அடங்கலும் தோற்றும்படி வந்து நின்ற சர்வேஸ்வரனை-சாஷாத் கரித்த பிரகாரத்தை
திருக் கண்டேன் -இத்யாதியாலே தர்சிப்பித்த தமிழுக்கு-தலைவரான பேய் ஆழ்வாருடைய ச்ப்ருஹநீயமான திருவடிகளை புகழும்
ஸ்வபாவரான எம்பெருமானார் விஷயத்தில் பிரேமத்தை தங்களுக்கு ஆபரணமாக-தரித்து இருக்குமவர்களுடைய திருவடிகளை
செவ்விப் பூ சூடுவாரைப் போலே-தங்கள் சிரச்சிலே தரிக்கும் சம்பத்தை உடையவர்கள் சர்வ காலத்திலும் சீரியர் –
போற்றுதல் -புகழ்தல்
அன்பு பூண்டவர் என்றது -அன்பிலே பூட்சியை உடையவர்கள்-அதிலே ஊன்றி இருக்குமவர்கள் என்னவுமாம் .

இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து அவனை சாஷாத் கரித்து அனுபவிக்க பெற்றிலை இறே என்று சொன்னது
பொறுக்க மாட்டாமல் -இவர் இருந்த இடத்திலேயே பிராட்டியும் தானுமாக வந்து நெருக்க -அத்தைக் கண்டு அனுபவிக்கிறார் –
நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86-

மூன்றிலும் இருள் -புற இருள் -இதயத்து இருள்- பேர் இருள் —
நெருக்கு உகந்த ஆயன் இன்றும் மன்னி ஆழ்வார்கள் இருந்த இடை கழி ஸ்பர்சம் உகந்து-சேவை சாதிக்கிறான் –
விண்ணுளாரிலும் சீரியர்-பேராளன் பேரோதும் பெரியவர்களே சீரியரே–
தமிழ் -என்றாலே அமுது –பிராட்டி -திருவில் தொடக்கி திருவில் முடித்தார் -தமிழ் தலைவன்-அதனாலே திரு உடையார் –
பாதம் இந்த பாசுரத்திலும்-அடியார் அடியார் போலே –
பகவான்-ஸ்ரீ யபதி -ஆழ்வார் -எம்பெருமானார் -அவர் மேல் ஸ்நேக உக்தர்கள் –அவர் திருவடி சென்னியில் சூடும் பக்தர்கள் -என்றபடி –
நழுவி விழுந்தாலும் அடியார் இடம் தானே –

மன்னிய பேர் இருள் –
தத்வ ஞாநேனவினா -மற்று ஒன்றால் போக்குகைக்கு அரியதாய் -ஆத்மாவைப் பற்றிக் கிடக்கிற அஞ்ஞானம் ஆகிற அந்தகாரம் –
அவிவேக கநாந்த திந்முகே பஹூதாசந்தத துக்க வர்ஷிணி பகவன் பவதுர்பினே – என்று சொல்லுகிற இருளானது-

மாண்ட பின்
இந்த பேய் ஆழ்வாருக்கு முன்னே ஞான தீபத்தை எடுத்தருளின-பொய்கை ஆழ்வார் பூதத் ஆழ்வார் ஆகிற இருவராலேயும் நசிப்பித்த பின்பு
கு சப்த்த ஸ்த்வன்தகாரச்யாத்-ரூ சப்தத ஸ்தன் நிரோதக -அந்தகார நிரோதித்வாத் குரு ரித்யபிதீயதே – என்னும்படி
அஞ்ஞான அந்தகாரத்தை சவாசனமாக போக்கின பின்பு
கோவலுள் மா மலராள் தன்னொடும் –
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப -என்றும்
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா -என்றும்
ருக்மிணீ க்ரிஷ்ணஜனநீ -என்கிறபடியே புருஷகார பூதையான -பெரிய பிராட்டியார் உடனே –

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே–4-9-10-பேற்றினைப்
பிரீதி அதிசயத்தாலே ‘விட்டது இது; பற்றினது இது’ என்று வியக்தமாக – விளக்கமாக அருளிச் செய்கிறார் இதில்.

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே!
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே–6-10-10-

தம்முடைய அபேக்ஷிதம் சடக்கெனச் சித்திக்கைக்காக ஸ்ரீ பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு
ஸ்ரீ திரு வேங்கட முடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
மேலே ஒன்பது திருப் பாசுரங்களாலும் சரண்யனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தைச் சொன்னார்.
இதில் தம்முடைய ஸ்வரூபம் சொல்லிச் சரண் புகுகிறார்.
கீழில்
அடியேன்” என்றும்,
அருவினையேன்” என்றும் தம்முடைய ஆகிஞ்சந்யத்தையும், சேஷத்வத்தையும்,
அவனுடைய சரண்யதைக்கு உறுப்பாகச் சொல்லிக் கொடு போந்தார்.
இங்கு அது தன்னையே பேற்றுக்கு உடலாகச் சொல்லிச் சரணம் புகுகிறார்.
இத் திருப் பாசுரத்தை, ஸ்ரீ துவயத்தில் பதங்களோடு ஒக்க யோஜித்துத் தலைக் கட்டக் கடவது

அலர் மேல் மங்கை” என்கையாலே, “ஸ்ரீ” என்ற சொல்லின் பொருளும்,
அகலகில்லேன்” என்கையாலே, “மத்” என்ற சொல்லின் பொருளும்,
உறை மார்பா” என்கையாலே, நித்ய யோகமும்,
நிகரில் புகழாய் என்றது முதல் “திருவேங்கடத்தானே” என்றது முடிய “நாராயண” என்ற சொல்லின் பொருளும்,
புகல் ஒன்றில்லா அடியேன் என்கையாலே, உத்தமனால் (உத்தமன் – தன்மையிடம்) போதருகின்ற அதிகாரியும்,
உன்னடிக் கீழ்” என்கையாலே, “சரணௌ” என்ற சொல்லின் பொருளும்,
அமர்ந்து புகுந்தேனே” என்கையாலே,“பிரபத்யே” என்ற சொல்லின் பொருளும் கூறி யுள்ளதைத் தெரிவித்தபடி.

சரணம்” என்ற சொல்லின் பொருளைத் தெரிவிக்கும் பதம் திருப் பாசுரத்தில் இல்லையே? எனின்,
புகுந்தேன்” என்றதனால்-சரணம்” என்ற சொல் கோல் விழுக் காட்டாலே வருவது ஒன்றாம்
ஆதலின், தனியே கூறிற்றிலர் என்க.

அதில் அர்த்த ப்ராப்தமான -அர்த்தத்தால் போதருகின்ற ‘அஹம்’ என்ற சொல்லின்
பொருளை இங்கு ‘அடியேன்’ என்கிறது.

மன்னிய பேரிருள் மாண்ட பின் –
மன்னிய இருள்-
அநாதி காலமாகப் புறத்தே உள்ள பொருளைப் பற்றியும்
இதயத்தே உள்ள பொருளைப் பற்றியும் ஏற்பட்ட அறியாமை என்னும் இருள்
இதுகாறும் நிலைத்து நின்றமை பற்றி -மன்னிய இருள் –என்றார் –
பேரிருள்-
எக்காரணத்தாலும் அசைக்க முடியாத திண்மை வாய்ந்து இருத்தலின் -பேரிருள் –என்றார் –
பேராத திண்மை வாய்ந்த இந்தப் பெரிய இருள் -பொய்கையாரும் பூதத்தாரும் ஏற்றிய விளக்கின் ஒளியால் பேர்ந்து ஒழிந்தது –
பேரிருள் முன்பு பண்புத் தொகையாய்ப் பெருமை-வாய்ந்து இருந்தது-
இப்பொழுது அந்தப் பேரிருள் வினைத் தொகையாய் பேர்கின்ற இருளாய் மாண்டது –
இவ்விருளுக்கு ஆதி இல்லை -அந்தம் உண்டு -மன்னிய இருள் ஆதி இல்லாதது –
பேர்கின்ற இருள் அந்தம் உள்ளது –
இருளை மாண்டதாகக் கூறவே மீண்டு வாராது அடியோடு ஒழிந்தமை பெற்றாம்-

ஆயன் –
இடையனாகப் பழகும் பண்புடன் அவதரித்தவன் -திருக் கோவலூர் எம்பெருமான் அப்பண்பு தோன்ற
எழுந்து அருளி இருத்தலின் -ஆயனார் -என்று பேர் பெற்றான் என்க –தம்பி வளைக்காரி அன்றோ –-
கற்புடைய மடக்கண்ணி காவல் பூண்ட -மங்களா சாசனம் -ஹாரத்தி பண்ண ஆலத்தி எடுக்கும் அக்கா வளை சப்தம் –ஆயன் –
கண்ணன் இடையன் -இவனும் இடை கழியில் சேவை சாதித்து -இடையன் -இடைப்பட்டவன் -நெருக்கு உகந்த படியால் இடையன் –
ஆஸ்ரித பவ்யன்-
ஆயன்- போற்றும் படி வந்து நின்ற சர்வேஸ்வரனை-
மா முனிகள்- மனுஷ்யச்ய பராத்பரன் என்பர்

மாயனை
கிருஷ்ணனாய் அவதரித்து -ஸ்வ ஆஸ்ரிதரான பாண்டவர்களுக்கு கழுத்திலே ஓலையைக் கட்டிக் கொண்டு போந்த தூதவ்த்யமும் –
அர்ஜுனன் தன் காலாலே ப்ரேரிக்க பண்ணின சாரத்தியம் ஆகிற நிஹீன க்ர்த்தயங்களை பண்ணுகையும்
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுக்கையும் -பகலை இரவாக்கையும் -கோவர்த்தன உத்தாரணம் பண்ணுகையும் –
அர்ஜுனனை நித்ய விபூதிக்கு அருகே கொண்டு போகையும் -அவனுக்கு சரம உபாயத்தை உபதேசிக்கையும் -ஆகிய
இவ் ஆச்சர்ய குணங்களை உடையனனான சர்வேஸ்வரனை –

கண்டமை –
அவ் அந்தகாரத்தை போக்கின -ஞான தீபத்தாலே தாம் சாஷாத் கரித்து-அந்தப் பிரகாரத்தை எல்லாம் காட்டும் –
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன்
செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன் என் ஆழி வண்ணன் பால் இன்று –
என்று தொடங்கி தாம் இட்டருளின திவ்ய பிரபந்தத்தாலே காட்டி யருளும் –

அநிஷ்டம் தொலைந்தால் தானே இஷ்டம் பிறக்கும் என்று காட்ட –
தனக்கு தான் ரஷணம் எண்ணம் போன பின்பு தான்
இத்தை எல்லாம் தான் மன்னிய பேர் இருள் மாண்ட பின்பு என்கிறார் –
பின்பு இஷ்ட பிராப்தி -தாம் மா மலராள் தன்னோடு மாயனை கண்டு–புருஷ காரம் பூதை உண்டே..

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–-பெரிய திருமொழி–2-7-1-

அவளும் .நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும்
இங்கே –மூன்று உம்மை தொகை-
ஆகிலும் ஆசை விடாளால் ..நிச்சயம் நடக்கும்..என்ற உறுதி உண்டே அவளும் நின் ஆகத்தில் இருப்பது கண்ட பின்பு
திரு மகளும் நீயும் நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு சிற்றின்பம் ஒட்டேன் -ஆழ்வார்..
பூவினை மேவிய தேவி மணாளனை -திருவிருத்தம் பாசுரம் போலே ….
தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – திரு விருத்தம்– 89- – –

கோவலுள்— –கண்டமை காட்டும் –
திருக் கோவலூரில் முதல் ஆழ்வார்கள் ஆகிய இம் மூவரும் சிறியதோர் இடை கழியில்
மழைக்காக ஒரு நாள் இரவில் நெருங்கி நிற்கும் பொது எம்பெருமான் தானும் பிராட்டியுமாக வந்து –
நீயும் திருமகளும் நின்றாயால்–குன்று எடுத்துப் பாயும் பனி மறைத்த பண்பாளா -வாசல்
கடைகழியா உள் புகாக் காமரு பூம் கோவல்-இடை கழியே பற்றி இனி -முதல் திருவந்தாதி – 86-என்றபடி
உள் புகாமலும் வெளி ஏறாமலும் இவர்களை நெருக்கி-உராய்ந்து -பேரின்பம் எய்தி –
மெய்ம்மறந்து நிற்கப் –பொய்கையாரும் பூதத்தாரும் விளக்கு ஏற்ற -இருள் நீங்கியதும்
பேயாழ்வார் கண்டு மகிழ்ந்து -தாம் கண்ட காட்சியை –
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -திகழும்-அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்-என்னாழி வண்ணன் பால் இன்று –என்று தொடங்கும்
தம் திவ்ய பிரபந்தத்தால் காட்டுகிறார் -என்க-

மா மலராள் தன்னோடும் ஆயனை
மா மலராளோடு கூடியதனால் -இகழ்வு பாராது ஆவினை மேய்க்கும் ஆயனாக காட்சி தருகிறான் சர்வேஸ்வரன் –
மாதவோ பக்தவத்சல -மலராள் கொழுநன் ஆதலின் பக்தர்கள் இடம் வாத்சல்யம் -குற்றமும்
நற்றமாய்த் தோற்றும் பண்பு -உடையவன் ஆகிறான் -என்னும் சகஸ்ரநாமம் காண்க –

கண்டமை சொல்லும் என்னாது –காட்டும் என்கிறார் –
ஆழ்வார் சொல்லும் திறம் கேட்பதாக மட்டும் அமையாமல் நேரே பார்ப்பதாக இருப்பது தோன்ற
சிறந்த கவிதை -விஷயங்களை கண் எதிரே கொணர்ந்து நிறுத்தும் -என்ப –
இதனால் தமிழ் தலைவனுடைய தமிழ் -வண் தமிழாய் அமைந்து உள்ளமையைப் புலப் படுத்தினார் ஆயிற்று –

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே–4-5-10–வண் தமிழ் நூற்க நோற்றேன் –என்றார் நம் ஆழ்வாரும்-
அவ்விடத்துக்கு அமைந்த ஈட்டு ஸ்ரீ சூக்தி –4 5-10 – – இங்கு நினைவு கூரத் தக்கது –
வண் தமிழ் ஆவது பழையதாக செய்தவை இவர் பேச்சாலே -இன்று செய்த செயல் ஸ்பஷ்டமாயிருக்கை –
சிர நிர் வ்ருத்தம ப்யேதத் ப்ரத்யஷ மிவ தர்சிதம் -பால காண்டம் -என்று
நெடும் காலத்துக்கு முன்பு இது நிகழ்ந்து இருந்தும் நேரில் நிகழ்வது போலே காட்டப் பட்டது –
கண்டவாற்றால் -என்று பிரத்யட்ஷமாய் இருக்கிறது இறே-ஈட்டு ஸ்ரீ சூக்தி இங்கு

ஸ்ரீ வேதாந்த தேசிகன் -ரத்னா வளியில் – –
பிரத்யக் ப்ரத்யஷ யேந்ந ப்ரதி நிய தர மா சந்நிதானம் நிதானம் -என்று
லஷ்மி நித்ய சான்னிந்த்யம் செய்யும் வைத்த மா நிதியை உள் கண்ணுக்கு புலன் ஆக்கும் -என்று
திருவாய் மொழியை ப்ரத்யக் தத்த்குவத்தையும் பிரத்யட்ஷமாக காட்டுவதாக-அருளி செய்து இருப்பதும் இங்கு அறியத் தக்கது –
கம்பன் சடகோபர் அந்தாதியில் –
செய்யோடருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்-கை யோர் கனி எனக் காட்டித் தந்தான் -என்பதும் காண்க –

தமிழ்த் தலைவன் –
பாலேய் தமிழர் என்றும் -இன் கவி பாடும் பரம கவிகள் –என்றும்
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற நம் ஆழ்வாராலே கொண்டாடப்பட்ட -திராவிட சாஸ்திர ப்ரவர்த்தகரில்
மூல பூதரான பேய் ஆழ்வார் உடைய

தமிழ்த் தலைவன் –
மா மலராளோடும் ஆயனாம் பரதத்துவத்தையும் காட்டும்படி வண் தமிழில் கவி பாடும் வல்லமை
படைத்துள்ளமை பற்றி திரு நாமம் குறிப்பிடாமல் பெரு மதிப்பு தோற்ற –தமிழ்த் தலைவன் -என்கிறார் .
தமிழ் மொழி இவர் இட்ட வழக்காம்படி வசப்பட்டு உள்ளது எனபது கருத்து –
இதனால் அமுத கவியாகிய ஆசிரியர் கவி அமுதத்தை மாந்தி நுகர்ந்து இன்புற்றமை வெளிப்படுகிறது –

பொன்னடி போற்றும் –
பிரபன்ன ஜனங்களுக்கு எல்லாம் ச்ப்ர்ஹநீயமான திருவடிகளை
மங்களா சாசனம் பண்ணுகிற -சேஷத்வ அநு ரூபமாக -அடிமை தொழில் செய்கை தவிர்ந்து –
ச்ப்ர்ஹநீயம் ஆகையாலே பிரேம பரவசராய் கொண்டு மங்களா சாசனம் பண்ணத் தொடங்கினார் காணும் –
போற்றுதல்-புகழ்தல் –

பொன்னடி போற்றும் –
உலகமளந்த பொன்னடியில் ஈடுபாடு மட்டுப்பட்டு –தமிழ்த் தலைவன் பொன்னடியில்
மிகவும் ஈடுபட்டுப் போற்றுகிறார் எம்பெருமானார் –
அச்சுதன் பதாம் புஜமாம் பொன் மீது வ்யாமோஹம் கொண்டு மற்றவைகளை தருணமாக
மதிக்கும் எம்பெருமானார் -தமிழ்த் தலைவன் பொன்னடியைப் போற்றுகிறார் –

யோ நித்ய -அச்சுதன் திருவடி தவிர மற்ற எல்லாம் புல்-அப்புறம் காட்டி கொடுத்த பின்பு .
தமிழ் தலைவன் பொன் அடி-அச்சுதன் திருவடி தவிர புல்-முதல் நிலை -இவர் காட்டவே கண்டதால்
சரம பர்வ நிலைக்கு வந்தார் ஸ்வாமி –என்றவாறு
ஸ்ரீ வைஷ்ணவ லாபமே பேய் ஆழ்வார் மூலம் தானே.
விஷ்ணுவால் வைஷ்ணவன் ஆக முடியாது
ஸ்ரீ தேவியால் ஸ்ரீ வைஷ்ணவன் ஆக முடியாதே
பூமா தேவி நீளா தேவி நித்யர் ஆழ்வார் ஆசார்யர் நம் போல்வார் தானே மிதுனத்தில் கைங்கர்யம்
செய்து ஸ்ரீ வைஷ்ணவர் என்று பட்டம் பூண்டு மகிழலாம்

இப்போது மா மலராளோடு கூடி ஆயனாய் எளிமை பட்ட பரம் பொருளைக் காட்டித் தந்த
பரம உபகாரம் அங்கனம் போற்றும்படி செய்கிறது –

பொன்னடி-பத பிரயோகம் -அருளிச் செயல்களில் –
உலகு ஏழும் புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே யடை நெஞ்சே-பெரிய திருமொழி -6-9-5-

ஸ்ரீ ரெங்கம்-கோயில் –பொது நின்ற பொன் அம் கழல்
திருமலை –பூவார் கழல்
பெருமாள் கோயில் -துயரறு சுடர் அடி
திரு நாராயண புரம் –திரு நாரணன் தாள்
செம் பொற் கழலடி செல்வா பலதேவா –

உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் –

வில்லிபுத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையினால் –

உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே

பொன் அம் கழற்கே மனம் துழாய் மாலாய் வரும் –

மேல் எடுத்த பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய் கடந்து —

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88–மூன்றாம் திருவந்தாதி -88 – என்று உபதேசிக்கிறார் பேய் ஆழ்வார்
அங்கனம் உபதேசித்து எம்பெருமானைக் காட்டும் தமிழ்த் தலைவன் பொன்னடிகளைப் போற்றுகிறார் எம்பெருமானார் –

பொன் போலே எல்லோராலும் விரும்ப தக்கது
ஆதலானும் -பொன் கிண்டியில் தண்ணீர் அந்தணர் அந்தியர் அந்நியர் என்கிற வேறுபாடு இன்றி
பயன் படுவது போலே எல்லோரும் காணும் வண்ணம் அமைந்த வண் தமிழ் நூலால் காட்டி உபகரித்தலின்
அதிகாரி நியமம் இல்லாமல் பயன் படுதலானும் திருவடி போற்றத் தக்கது என்பார் –பொன்னடி என்றார் –
அடி திருமேனிக்கு உப லஷணமாய்-பேய் ஆழ்வாரைக் கருதுகிறது –
பொன் கிண்டி போன்றவர் பேய் ஆழ்வார் -தண்ணீர் போன்றது மூன்றாம் திருவந்தாதி -என்று உணர்க –

இராமானுசற்கு –
எம்பெருமானார் விஷயமான அன்பு பூண்டவர் தாள்-ப்ரீதியை தங்களுக்கு ஆபரணாம் படி அலங்கரித்து கொண்ட-
மகாத்மாக்களுடைய திருவடியை –

சென்னியில் சூடும்
தம்தாமுடைய சிரச்சிலே செவ்விப் பூவை சூடுவாரைப் போலே தரிக்கும்
திரு வுடையார்
சது நாகவரஸ் ஸ்ரீமான் -லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -அந்தரிஷகதஸ் ஸ்ரீ மான் –என்கிற சம்பத்துக்கு
சீமா பூமியான சம்பத்தை வுடையவர்கள் –

என்றும் சீரியரே
ததீய ப்ராவண்யத்தை உடையார் ஆகையாலே -அவர்கள் கால தத்வம் உள்ள அளவும்-ஸ்ரீ மான்கள்
ஸ்ரீ மத் பாகவாத அர்ச்சானாம் பகவத பூஜா விதேருத்தம -ஸ்ரீ விஷ்னோரவம நநாத் குருதர –
ஸ்ரீ வைஷ்ணவோல்லன்கனம்-தீர்த்த அச்யுத பாத ஜாத்குரு தர -தீர்த்த ததீயாங்கிரிஜா –
தாஸ்மான் நித்யமதந்த்ரி தீப வசதா தே ஷாம சமாராதனே -என்றும்
தஸ்மாத் குரு தரம் ப்ரோக்த ததீயாராதனம் நர்ப மம மத் பக்த பக்தேஷூ ப்ரீதி ப்யதி காபவேத்
தஸ்மாத் மத் பக்த பக்தாச பூஜா நீயா விசேஷத -என்றும்
திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்கள் -என்று ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே
அப்படியே வாசா யதீந்திர -என்று தொடங்கி -பாதானுசிந்தநபர சத்ததபவேயம் -என்று-இது
ஒன்றையே பார்த்து அருளினார் ஜீயரும்-

அன்பு பூண்டவர் –
பேய் ஆழ்வாரைப் போற்றும் இராமானுசன் திறத்து கொண்ட அன்பு -ஆசார்ய பக்தி –
மூன்றாம் திருவந்தாதியில் பேய் ஆழ்வார் காட்டும் ஆயனைக் காணச் செய்து –
ப்ரஹ்ம வித்துக்களாய்க் குழையும் வாண் முகம் வாய்ந்து பொலி உறச் செய்தலின்-பொலிவு ஊட்டும்
அணியாக உருவகம் செய்யப் படுகிறது –
பூண்டவர் என்பதால் அன்பு பூணும் அணி எனபது பெறப்படும் –
தெய்வத்தின் இடத்தில் போலே குருவினிடத்திலும் எவனுக்கு பக்தி உள்ளதோ-அவனுக்கு
பொருள் பிரகாசிக்கும் எனபது சாஸ்திரம் –
இனி ஞான பக்தி வைராக்யங்களை ஆன்ம தத்துவத்துக்கு அணிகளாக வருணிக்கும் மரபு பற்றி-
அன்பு பூண்டவர் -என்றார் என்னலுமாம் –
இனி அன்பு பூண்டவர் -என்றது
அன்பிலே பூட்சியை உடையவர்கள்-அதிலே ஊன்றி இருக்குமவர்கள் என்னலுமாம் -என்று மணவாள மா முனிகள்
உரைத்து இருப்பதும் இங்கு அறியத் தக்கது –

தான் சென்னியில் சூடும் திரு உடையார் –
நாட்டிலே திரு உடை மன்னர் சென்னியில் முடி சூடுவர் –
எம்பெருமானார் உடைய அடியார் அடியார் ஆகிய திரு உடை மன்னரோ –சென்னியிலே அடி சூடுவர் —
முன்னவர் சென்னியில் சூடிய முடி யாவர்க்கும் அடங்காத சுதந்தரத்தின் சீர்மையை தெரிவிக்கும் –
பின்னவர் சூடிய அடியோ -இயல்பாக அமைந்தது பரி போகாது நிலை நிற்கும் பாரதந்திரியம் என்னும்
செல்வம் உடைமையை தெளி உறக் காட்டும் –
பகவானுக்கும் அவனை சார்ந்தவருக்கும் பர தந்த்ரமாய் இருத்தல் ஜீவான்மாவுக்கு இயல்பாய் அமைந்த செல்வம் என்க –
பார தந்திரியமாவது பகவானுக்கும் அடியாருக்கும் உள் பட்ட வடிவமும் இருத்தலும் இயங்குதலும் வாய்ந்து இருத்தல் –

ஸ்வ தந்திரனான இராம பிரான் முடி சூடி அரசு அமர்ந்தான் –
அவன் தம்பி பரதன் -தன் பார தந்திரியம் பறி போகாமல் காப்பதற்காக அவ் விராம பிரான் அடி சூட அவாவுகின்றான் –
யாவன் சரணவ் ப்ராது பார்த்திவ வ்யஞ்ச நான்விதவ்-சிரஸா தார யிஷ்யாமி நமே சாந்திர் பவிஷ்யதி -என்று
அரசர்க்கு உரிய சங்கு சக்கரம் முதலிய அடையாள ரேகைகள் உடன் கூடின உடன் பிறந்தான் –
இராம பிரான் -உடைய திருவடிகளை தலையாலே தாங்காத வரையிலும் என் தாபம் தீராது –என்னும்
பரதனது பேச்சாலே அவனது அவாவினை அறிகிறோம் –
வாங்கு சிலை இராமன் தம்பி யாங்கவன்–அடி பொறை யாற்றி னல்லது
முடி பொறை யாற்றலன் படி பொறை குறித்தே -என்னும்-பழம் தமிழ் பாடல் இங்கு நினைவுறல் பாலது –
இராமன் தம்பி அவ் இராமனுடைய திருவடிகள் ஆகிற வல்லன் அல்லன் -என்கிறது இப் பாடல் –
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை யல்லால்-அரசாக எண்ணேன் மற்றரசு தானே -என்று
குலசேகர பெருமாள் அருளியதும் இங்கு அறியத் தக்கது –
பரதனும் குலசேகரப் பெருமாளும் சூடிய அடிமுடி -பகவான் திறத்து அவர்கட்க்கு உள்ள பாரதந்திரிய செல்வத்தை புலப்படுத்தும் –
நீள் முடியாய் – பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யம் அவர்கள் கைப் பட்டு இருப்பதைக்-காட்டுகிறது –
அமுதனார் காட்டும் அவர்கள் சென்னியில் சூடிய அடி முடியோ –
பகவானைக் காட்டித் தரும் ஆசார்யனான எம்பெருமானார் அளவோடு நில்லாது –
அவர்க்கு அன்பு பூண்டவர் திறத்தும் அவர்கட்கு உள்ள பார தந்திரிய செல்வதை புலப்படுத்தும்
துளங்கு நீள் முடியாய் -பாகவத கைங்கர்யத்தின் முடிவு எல்லையாய் -பரம புருஷார்த்தமான ஆசார்ய பக்த கைங்கர்ய
சாம்ராஜ்யமே -அவர்கள் கைப் பட்டு இருப்பதைக் காட்டுகிறது

திரு உடையார் –
திரு -செல்வம்
பாரதந்திரியமே செல்வம் -என்க –
பரமனைப் பயிலும் திரு -பரதன் போல் வாராது-அதன் முழு வளர்சியாலான பாகவத பாரதந்திரியத்தின்
முடிவு எல்லை அளவும் செல்லும்
ஆசார்ய பக்த பாரதந்திரியம் எனப்படும் திரு -இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள் சென்னியில் சூடும் அவரது

என்றும் சீரியரே
எக்காலத்திலும் சிறந்தவர்களே
பரமனைப் பயிலும் திருவுடையாரினும் இராமானுசற்கு அன்பு பூணும் திரு உடையாரினும்-சிறந்தவர்கள் -என்றபடி –
சென்னியில் சூடும் திரு உடையாரே நிலை நின்ற மிகப் பெரும் செல்வத்தர் எனபது கருத்து
பரமனைப் பயிலும் திரு -அவன் அடியார் அளவும் படராமையின் அளவு பட்டு சிறுத்தது
இராமானுசற்கு அன்பு பூணும் திரு -தம்மை முதன்முதலில் தத்தவ உணர்வை ஊட்டி திருத்தி –
ஆயனைக் காட்டித் தரும் மகோ உபகாரத்தை முன்னிட்டு நேர்ந்ததையும் —
அடியார் அனைவரையும் இன்புருத்துவதாயும் -அமைதலின் —
பரமன் அடியார் அளவும் படர்ந்து பெருமை பெற்று இருப்பினும் –
இராமானுசற்கு அன்பு பூண்டவர் -ஆசார்யன் அடியார் அளவும் –வளராமையின் முழு வளர்ச்சியை பெற்று இலது –
அன்பு பூண்டவர் தாள் சென்னியில் சூடும் திருவோ -இனிப் படர வேண்டிய மேல் எல்லை வேறு இல்லாமையின்
முழு வளர்ச்சி பெற்ற பெரும் செல்வம் ஆகின்றது என்று உணர்க –

இங்கு ஆச்சார்யா ஹிருதயம் -முதல் சூரணை
-அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி
பிறங்கு இருள் நீங்கி மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு நல்லதும் தீயதும்
விவேகிக்கைக்கு மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான
கலைகளை நீர்மையினால் அருள் செய்தான்
பிறங்கு இருள் நிறம் கெட என்றும்
பின் இவ் உலகினில் பேர் இருள் நீங்க என்றும்
என்று சொல்லுகிற படியே மிகுந்த அஞ்ஞான அந்த காரம் போய்
மேல் இருந்த நந்தா விளக்கை கண்டு
வேதார்த்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு என்றும்
நந்தா விளக்கு என்றும்
வேத விளக்கினை என்றும்
சொல்லுகிற படியே
மறையார் விரிந்த விளக்கை என்றும்
துளக்கமில் விளக்கமாய் என்றும்வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு-பெரிய ஆழ்வார்
நந்தா விளக்கே -திரு மங்கை ஆழ்வார்
மிக ஞான மூர்த்தியாய வேத விளக்கினை கண்டு -நம் ஆழ்வார்
மூன்றையும் சேர்த்து மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு –
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய -நம் ஆழ்வார்
சதச்தீச விவேக்தும் -பட்டர்
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை -திரு மங்கை ஆழ்வார்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கமில் விளக்கமாய் -திரு மழிசை ஆழ்வார்
இந்த சூர்ணையில்
ஞானம் ஒரு விளக்கு
எம்பெருமானை ஒரு விளக்கு
அ காரம் ஒரு விளக்கு
சாஸ்திரம் ஒரு விளக்கு-பிரதீபமான -(மானம் பிரதீபமிவ காருணிகோ ததாதி -பட்டர் )
கலைகளை -விசேஷ்யம் -கலைகளும் வேதமும் நீதி நூலும் -என்றும் –
பன்னு கலை நால் வேதம்-என்றும் திரு மங்கை ஆழ்வார் மறையாய் விரிந்த விளக்கு-எம்பெருமானை
பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

பகவத் பாரதந்த்ரியம் -செல்வம்
பாகவத பாரதந்த்ரியம் -ஆச்சார்ய பாரதந்த்ரியம் -பெரும் செல்வம் –
ஆச்சார்ய பக்த பாரதந்திரியம் மிகப் பெரும் செல்வம் –என்றது ஆயிற்று –
ஏனைய திரு உடையார் போல் அல்லாது-இனி மேலும் பெற வேண்டிய செல்வம்
இல்லாமையின் இந்நிலையிலேயே நிலை நிற்றல் பற்றி என்றும் சீரியர் -என்கிறார்-

ஆயன் திருவடி சூடினாலும் விபத்து தான்..
சில காலத்தில் தான் சீரியர் பரதன் 14 வருஷம்.
ஆழ்வாரும் ஒரு வினாடி வூழி போல
.10 மாசம் சீதையே பிரிய நேர்ந்ததே
பகல் பொழுது கோபிகள் பிரிந்து -மாடு மேய்க்க போனவன் வரும் வரை -காலை பூசல் மாலை பூசல் பதிகம் –
10 வருஷம் தேவகி பிரிந்து இருந்தாள்-என்றும் சீரியரே –
பரத ஆழ்வான் -சீதை பிராட்டி –கோபிமார்கள் -நம்மாழ்வார் -போல்வாரை பிரிந்து துடிக்கப் பண்ணுவான் -அவன்

தமிழ் தலைவன் பொன் அடி போற்றும் இராமனுசன்/ராமானுசர்க்கு அன்பு பூண்டவர் தாள் சென்னியில் சூடும் திரு உடையார்/
மாயன் இல்லை– ஆழ்வார் இல்லை– ஸ்வாமி இல்லை –ஸ்வாமி மீது அன்பு பூண்டவர் இல்லை —
அன்பு பூண்டவர் தாள் சென்னியில் சூடுபவர்–எல்லா காலத்திலும் சீரியர்
மதுர கவி ஆழ்வார் –ததீய சேஷத்வம் அசைக்க ஒண்ணாதது

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –9-இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட இத்யாதி —

March 25, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய அவதாரிகை –

ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளைத் தம் திரு உள்ளத்திலே வைத்து அனுபவிக்கும் ஸ்ரீ எம்பெருமானார்
திவ்ய குணங்களைச் சொல்லும் அவர்கள் -வேதத்தை ரஷித்து-லோகத்திலே பிரதிஷ்டிப்பிக்கும்-அவர்கள் என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய அவதாரிகை –
கீழ்ப் பாட்டிலே ஸ்ரீ பொய்கை யாழ்வார் சம்பந்தத்தாலே -சர்வோ நாதரான ஸ்ரீ எம்பெருமானார்
தமக்கு ஸ்வாமி என்று அருளிச் செய்தது -இப்பாட்டிலே
சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரனை காண்கைக்கு சர்வர்க்கும் உபகரணமாய்-இருந்துள்ள ஹ்ருதயம் –
அஞ்ஞான அந்தகாரத்தாலே மோஹித்து போகையாலே -அத்தை நசிப்பதாக பர ஞானம் ஆகிற பரி பூர்ண தீபத்தை ஏற்றி அருளின –
ஸ்ரீ பூதத் ஆழ்வாருடைய திருவடிகளை மனசிலே வைத்துக் கொண்டு
அனுபவிக்கிற ஸ்ரீ எம்பெருமானார் உடைய கல்யாண குணங்களை அனுசந்தித்து –
சத்துக்களானவர்கள் இந்த லோகத்திலே சகல வேதங்களையும் பாஹ்ய குத்ருஷ்டிகளால்
அழிக்க ஒண்ணாதபடி ரஷித்து ஸூ பிரதிஷ்டமாக வைக்க வல்லவர்கள்-என்கிறார் .

அமுத விருந்து –ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் அருளிய அவதாரிகை –
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளைத் தம் திரு உள்ளத்திலே வைத்து அனுபவிக்கும் ஸ்ரீ எம்பெருமானார்
கல்யாண குணங்களை சொல்லும் அவர்கள் -வேதத்தை காப்பாற்றி நிலை நிறுத்தும் அவர்கள் என்கிறார் –

இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழோதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – 9-

பத உரை –
இறைவனை-சேஷியான எம்பெருமானை
காணும் -காண்பதற்கு கருவியான
இதயத்து -நெஞ்சத்தின் கண் உள்ள
இருள் -அறியாமை என்னும் இருள்
கெட -ஒழியும்படி
ஞானம் என்னும் -பர -சிறந்த -ஞானம் என்னும்
நிறை விளக்கு -நிறை உற்ற விளக்கை
ஏற்றிய -எரிந்து ஒளிரும்படி செய்த
பூதத் திருவடி -பூதத்தாழ்வார் ஆகிய பெரியவருடைய
தாள்கள்-திருவடிகள்
நெஞ்சத்து -உள்ளத்தில்
உறைய -நிலை நிற்கும் படி
வைத்து -அனுசந்தித்துக் கொண்டு
ஆளும் -அனுபவிக்கிற
இராமானுசன் -எம்பெருமானார் உடைய
புகழ்-கல்யாண குணங்களை
ஓதும் -சொல்லிக் கொண்டு இருக்கும்
நல்லோர் -நல்லவர்களை
மறையினை -வேதத்தை
காத்து -காப்பாற்றி
இந்த மண்ணகத்தே -இந்த நில உலகில்
மன்ன -நிலை நிற்கும்படி
வைப்பவர் -வைப்பவர்கள் ஆவர்

வகுத்த சேஷியான அவனை சாஷாத் கரிக்கைக்கு உப கரணமாக ஹ்ருதயத்தை
பற்றிக் கிடக்கிற அஞ்ஞான அந்தகாரமானது -நசிக்கும்படியாக –
அன்பே தகளியா -என்று தொடங்கி -ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் -என்று பரஞ்ஞானம் ஆகிற பரிபூர்ண தீபத்தை
பிரகாசிப்பித்த ஸ்ரீ பூதத்தார் ஆகிற ஸ்வாமி உடைய திருவடிகளை திரு உள்ளத்திலே
நிரந்தர வாசம் பண்ணும்படியாக வைத்து அனுபவிக்கும் எம்பெருமானாருடைய
கல்யாண குணங்களை ஸ்தோச்சாரணம் பண்ணும் சத்துக்கள் ஆனவர்கள் –
பாஹ்ய குத்ருஷ்டிகளால் ஒழிக்க ஒண்ணாதபடி வேதத்தை ரஷித்து இந்த-லோகத்திலே ஸூப்ரதிஷ்டதமாக வைக்கும் அவர்கள் —

அவிட்டம் பிறந்து தவிட்டு பானை எல்லாம் தங்கம் ஆகுமே –
அகண்ட தீபம் -பத்ரிகாஸ்ரமம் எரிந்து கொண்டே இருக்குமாம் ஆறு மாசங்களும் –தீபாவளி -தொடங்கி அக்ஷய த்ருதியி வரை அகண்ட தீபம் –
ஞான தரிசன பிராப்தி -ஞானம் த்ரஸ்ட்டும் பிரவேஷ்டும் -அறிகை- அடைதல் -அனுபவம் –
இதயத்து இருள் கெட ஞானம்- உள்ளூர் உள்ளத்தே உறையும் மாலை -விலவறச் .சிரித்திட்டேனே
cell phone -sim card -charging -ஜீவ –பர ப்ரஹ்ம–ஆச்சார்யர் –
பிரகாரி பிரகார -மான் மூக்கு பெரிசாக -எறும்பு இதே உலகம் என்று இருப்பது போலே அவனுக்கு உட்பட்ட பிரபஞ்சத்தில்
ஒரு பகுதி என்று உணர வேண்டுமே -அனைத்து உலகும் வாழப் பிறந்த எதிராசர் மா முனி அற்றோ –
மறை -வேதமுமும் அருளிச் செயல்களும் பிள்ளான் போல்வாரும் நல்லார்-
வேதத்தின் உட் பொருள்-ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -என்பதே -வேதார்த்தம் அறுதி இடுவது ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –
ஸ்ரீ மத் ராமானுஜ சரணம் சரணவ் பிரபத்யே -ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -என்பதே –

இறைவனை -சர்வ லோகத்துக்கும் ஸ்வாமியானவனை
காணும் -தர்சனம் பண்ணுகைக்கு உபகரணமான
இதயத்து -ஹ்ருதயத்தை பற்றி கிடக்கிற
இருள் கெட -சர்வேஸ்வரனுக்கு இருப்பிடமான ஹ்ருதய ஸ்தானம் இறே -அவனை அறிய கடவ
ஞானத்துக்கு பிரசரனத்வாரம் -இந்த ஞானத்துக்கு வாரகமாய் -இவர்களுடைய -பூர்வ கர்ம வாசனையாலே
வந்து இருப்பதொரு அஞ்ஞானம் உண்டு –
அது கெட
யாதாத்ம்ய ஜ்ஞானபாத்யமான அஞ்ஞான அந்தகாரம் வாசனையோடு நசிக்கும்படியாக –

இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட –
புறக் கண்ணால் காணும் புறப் பொருளைப் பற்றிய -அறியாமையை -மாற்ற விளக்கு எரித்தார் பொய்கை ஆழ்வார் –
நெஞ்சு என்னும் உள் கண்ணால் உள் பொருளாகிய பிரத்யக் தத்துவமான ஜீவான்மையும் பற்றிய இருளை –
அறியாமையை -கெடும்படியாக விளக்கு ஏற்றி வைக்கிறார் பூதத்தாழ்வார் –
சுத்தமான மனத்தால் ஆன்ம தத்துவத்தைக் காணலாம் என்றது உபநிஷதம் –
காணும் இதயம் –
காணும் கண் எனபது போலக் காண்பதற்குக் கருவியான இதயம் என்றபடி –
இதயத்து இருள் –
இதயத்தின் உள்ள பொருளைப் பற்றிய அறியாமை என்றபடி —
ஏற்றினது நிறை விளக்கு ஆதலின் இருள் மீள வழி இல்லை -என்பார் –கெட -என்றார்

ஞானம் என்னும் நிறை விளக்கு
பர ஞானம் ஆகிற பரிபூர்ண தீபத்தை-
ஏற்றிய –
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடு திரியா நன்புருகி ஞான சுடர்
விளக்கு ஏற்றினேன் நாரணற்கு -என்று தம்முடைய பக்தியை தகளியாக பண்ணி -அபிநிவேச அதிசயத்தை நெய்யாக்கி
பகவத் அனுபவ ஆனந்தத்தாலே உருகிக் கிடக்கிற மனசை திரியாக்கி -நாராயணனுக்கு பர ஞானம்
ஆகிற பரி பூர்ண தீபத்தை ஏற்றினேன் நான் -என்று தொடங்கி -தாம் இட்டு அருளின
திவ்ய ப்ரபந்தம் ஆகிற பரி பூர்ண தீபத்தை ஏற்றி -சர்வர்க்கும் உபகாரமாகும்படி பிரகாசிப்பித்த
பூதத் திருவடி தாள்கள்
பூதத் தாழ்வார் என்கிற ஸ்வாமி களுடைய திருவடிகள் –
அம் தமிழால் நற் கலைகள் ஆய்ந்து உரைத்த ஆழ்வார்கள்
இவ் உலகு இருள் நீங்க வந்து உதித்த —உபதேச ரத்னமாலை -5-–என்று ஜீயர் அருளிச் செய்தார் இறே –

ஞானம் என்னும் நிறை விளக்கு ஏற்றிய –
நிறை விளக்கு என்பதற்கு ஏற்ப ஞானம் -அதாவது பர ஞானம் -என்று கொள்க –
பர ஞானம் ஆவது -காணாத ஏக்கம் தீரக் கண்டு இன்புறும் வேட்கை முதிர்ச்சியால் ஏற்படும் சாஷாத் காரம் –
நிறை விளக்கு
நேரே பொருள்களை தெளியக் காட்டுவது போலப் பர ஞானமும் –ஜீவ பரமான்ம தத்துவங்களை நேரே தெளியக் காட்டுகின்றது என்க-
ஆன்மாவைப் பற்றிய அறியாமையை ஒழித்த பர ஞானம் கதிரவன் போலப் புலனாம் பொருளை
முழுதும் உள்ளபடி காட்டுகிறது -என்னும் பொருள் கொண்ட
ஜ்ஞானே நது ததஜ்ஞானம் ஏஷாம் நாசித மாத்மன-தேஷாமாதித் யாவத் ஞானம் பிரகாசயதி தத்பரம் -என்னும்
கீதா ஸ்லோகம் இங்கு நினைவுக்கு வருகிறது –
பர ஞானம் ஆவது சுருக்கம் இன்றி ஞானம் விரிந்து கிடத்தலால் பொருளைக் காட்டுவதில்-அளவு படாமை -என்பது கீதா பாஷ்ய சந்த்ரிகை –
ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் -என்னும் பூதத்தாழ்வார் திரு வாக்கை -ஞானம் என்னும் நிறை
விளக்கு ஏற்றிய -என்று அமுதனார் பொருளோடு அச் சொல்லாலே பொன்னே போல் போற்றிக் கையாளுகிறார் –
சுடர் விளக்கு -என்பதை –நிறை விளக்கு -என்கிறார் –
விளக்கு ஏற்றுதல்-இரண்டாம் திருவந்தாதி திவ்ய ப்ரபந்தம் அருளி செய்தல் –

நிறை விளக்கு ஏற்றிய ..மணிக்கு ஒளி வூட்ட முடியாது
கிணறு வெட்டினால் ஜலம் உருவாக்க முடியாது –புகுத்த முடியாது –இருக்கிற ஜலம் உபயோகிக்கலாம்
அஞ்ஞானம் விலக தானே ஞானம் பிரகாசிக்கும்..

திருவடி–
பெரியோர்களைத் திருவடிகள் என்று மதிப்பு தோன்றக் கூருவதுமரபு –
வட மொழியிலும் தந்தையை -தாதபாதா-என்றும்
குருவை-ஆசார்யபாதர் -என்றும் வழங்குவது உண்டு –
திரு மங்கை ஆழ்வார்
உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் உங்கள் தம் ஆநிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம்போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் –10-4-8-
உம் தம் அடிகள் முனிவர் – என்று யசோதை கண்ணனைப் பார்த்து
பேசும் போது தந்தையாகிய நந்த கோபரை -அடிகள் -என்று குறிப்பிடுவதாக காட்டி உள்ளார் –
உங்கள் முதலியார் சீறுவர் கிடீர் – என்பது அத் திருமொழிக்கு பெரிய வாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –
நம் ஆழ்வார் பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே! –ஸ்ரீ திருவாய் மொழி-—1-3-1-
மலர் மகள் விரும்பும் நமரும் பெறலடிகள் -என்று எம்பெருமானை குறிப்பிடுகிறார் –

அடிகள்-ஸ்வாமிகள் என்பது வியாக்யானம் –
உயர்வு பன்மையில் வரும் இச் சொல் ஒருமையிலும் வருவது உண்டு –
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -என்று நம் ஆழ்வாரும்-
என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்ற
என் பிழையே நினைந் தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென்று ஒரு வாய் சொல்
என் பிழைக்கும் இளங்கிளியே! யான் வளர்த்த நீ யலையே?––ஸ்ரீ திருவாய் மொழி–1-4-7-

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு––நான்முகன் திருவந்தாதி–68-
திருவடி தன் நாமம் மறந்தும் – என்று திரு மழிசைப் பிரானும் -ஒருமையில் வழங்கியது போல்-அமுதனாரும் -பூதத் திருவடி -என்கிறார்
ஆழ்வார் என்பதும் அடிகள் என்பதும் ஒரே பொருள் கொண்டவை என்பது அமுதனார் கருத்து –

பூதம் -என்னும் சொல்லுக்கு ப்ரஹ்ம ஞானம் பெற்று சத்தை -உண்மையில் இருத்தல்-பெற்றது என்பது பொருள் –
ப்ரஹ்ம ஞானம் இல்லாதவன் இருந்தும் இல்லாதவனாகிறான் என்றும் –
ப்ரஹ்ம ஞானம் உள்ளவன் உண்மையில் இருப்பவன் ஆகிறான் -என்றும்-வேதம் ஓதுவது இங்கு அறியத் தக்கது –
ப்ரஹ்ம ஞானி யானவன் தனக்கு ஒரு பயனை இனி பெற வேண்டாதவனாயினும்
உலகம் புனிதம் அடைவதற்காக நாடு எங்கும் சஞ்சரித்துக் கொண்டு இருப்பான் –
அங்கனம் சஞ்சரிக்கும் அவர்களைப் பூதங்கள் -என்னும் சொல்லாலே வழங்குவது பண்டைய மரபு –
விஷ்ணோர் பூதா நிலோ கா நாம்பாவ நாய சரந்திஹி -என்று விஷ்ணுவின் பூதங்கள் உலகங்களை
புனிதம் ஆக்குவதற்கு சஞ்சரிக்கிறார்கள் அன்றோ -என்று பாகவத்திலும் –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து இசை பாடி யாடி யூழி தரக் கண்டோம் -5-2-1-–என்றும்
மாதவன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே -5-2-2–என்றும்
இவ்வாறே திருவாய் மொழியிலும் வழங்கி உள்ளமை காணத் தக்கது –
இம்முறையில் சஞ்சாரம் செய்து கொண்டு இருந்தமையின் பூதம் என்னும் பெயர் ஆழ்வாருக்கு வழங்கல் ஆயிற்று –
இறைவனை -ப்ரஹ்மம்-என்று மிக பெருமை தோற்ற வழங்குவது போலே- பூதம் -என்று நபும்சக லிங்கத்தில் வழங்கலாயினர் –

முதல் ஆழ்வார்கள் மூவரும் நாடு எங்கும் நடமாடிக் கொண்டு இருந்தவர்களே ஆயினும்
ஒருவர் பொய்கையார் -என்றும்
மற்று ஒருவர் பேயார் என்றும்
அவதரித்த இடத்தை பொறுத்தும் பக்தி பரவசத்தை பொறுத்தும் முறையே பேர் பெற்று விட்டமையால்
இடைப் பட்ட இவருக்கே சஞ்சரித்தலால் வரும் -பூதம் -என்னும் பெயர் உரித்தாயிற்று என்க –
மேலும் உலகு அனைத்தும் தான் அலைந்து புனிதம் ஆக்குவதோடு அமையாது –
பிறரையும் அங்கன் திருத்திப் புனிதம் ஆக்கும்படி உபதேசிப்பவர் இந்த ஆழ்வாரே –
ஆதல் பற்றியும் -பூதத்தார் -என்னும் பெயர் இவருக்கே பரவல் ஆயிற்று என்க –

பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—–இரண்டாம் திருவந்தாதி–14–என்பது இவரது உபதேசம் –
அறிவிலிகளே -வரும் பொருள்களை எல்லாம் ஏற்கும் பெரு நகரைப் போலத் தம் வயிற்றைப் பெருக்கிப்
பழிக்கும் பாவத்துக்கும் இடமாகி வாழும் சுய நலக்காரர்களை புகழ்ந்து உழலாமல் -த்ரி விக்கிரம அவதாரத்தில் திசை எட்டும்
முட்டும்படி விம்மி வளர்ந்த நான்கு தோள்கள் படைத்த எம்பெருமான் திரு நாமங்களை ஓதிக் கொண்டே
உலகு எங்கும்-திரிந்து புனிதம் ஆக்குகங்கள் -என்பது இப்பாசுரத்தின் பொருள் –
தீர்த்தக்காரர் -சுத்தமாக்குகிறவர்
திரிந்து தீர்த்த கரர் ஆமின் -திரிவதனால் உங்கள் பாத தூளி பட்டுப் புனிதம் ஆகும்படி செய்யுங்கள் -என்பது கருத்து –
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவார்கள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ் உலகம் பாக்கியம் செய்ததே -என்று பெரியாழ்வார் திரு மொழி – 4-4 6– என்பதும் காண்க –
இந்த உபதேசப் பாசுரத்தில் -பேர்த்தகரம் நான்குடையான் பேரோதித் திரிந்து தீர்த்த கரர் ஆமின் -என்னும்
சொல் தொடர் மிகவும் சுவை உடைத்து –
திசை அளப்பான் எண் திசையும் பேர்த்தகரம் நான்குடையான் திரு மேனி சம்பந்தத்தால் உலகம் தூயதாகிலது –
அதனை அவன் பேரோதித் திரிந்து அவனினும் பெரியோர்களாகிய நீங்கள் உங்கள் பாத தூளியினால்
புனிதம் ஆக்குங்கள் -என்று பாகவதர்களின் சிறப்பை உணர்த்திச் சுவை தருவதுதைத் துய்த்து இன்புறுக –

நெஞ்சத்து உறைய வைத்தாளும்
தம்முடைய மனசிலே நிரந்தர வாசம் பண்ணும்படியாக வைத்து-சர்வ காலமும் அனுபவித்துக் கொண்டு இருக்கிற
ஆளுகை -எதேஷ்ட விநியோக அர்ஹ்யமாம் படி -விநியோகம் கொள்ளுகை
இராமானுசன் -எம்பெருமானாருடைய

தாள்கள் நெஞ்சத்து உறைய வைத்து ஆளும் –
தானும் திரிந்து -பிறரையும் திரியச் சொன்ன பூதத்தாழ்வார் திருவடிகள் எம்பெருமானார் நெஞ்சத்தில் பேர முடியாதபடி உறைந்தன –
அங்கனம் உறையும் படி அன்புடன் பேணி வைத்துக் கொண்டார் எம்பெருமானார் –
ஆழ்வார் உபதேசத்துக்கு செவி சாய்த்து திரிந்து தீர்த்த காரராக எம்பெருமானார் முற்படவே –ஆழ்வார் திருவடிகள்
தமக்கு பணி இன்மையின்-அவர் நெஞ்சகத்திலேயே உறைந்து விட்டன –அவற்றை அங்கனம் உறையும்படி ஆழ்வார்
சொல் படி நடக்கும் எம்பெருமானார் தம் நெஞ்சத்தில் வைத்து ஆளுகிறாராம் –
ஆளுதல்-அனுபவித்தல் –
இதனால் திருவடிகளின் போக்யதை புலன் ஆகிறது –
மறவாமல் ஆழ்வார் திருவடிகளை இனிது-அனுசந்தித்துக் கொள்கிறார் எம்பெருமானார் -என்றபடி
புகழோதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே –
ஆழ்வார் சொல் படி நடந்து அவர் ஏற்றிய நிறை விளக்கினால் உலகத்தார் உடைய இதயத்து இருள்-கெடும்படி செய்தலின்
அக இருளை நீக்கும் லோக குரு ஆகிறார் எம்பெருமானார் –

புகழோதும் -கல்யாண குணங்களை சதா உச்சாரணம் பண்ணும்
நல்லோர் –
ரெங்கநாதன் -உடையவர் பட்டம் சாத்தியது போல அர்ச்சா ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ரெங்க ராஜனும்
சீட்டு எழுதி கொடுத்த மோர் காரிக்கு மோஷம் கொடுத்த திரு வேங்கடத்தானும்
யஞ்ச மூர்த்தியை வாதத்தில் ஸ்வாமி வெல்ல தேவ பிரான் உதவிய விருத்தாந்தம்
ஆல வட்டம் சாதித்த திரு கச்சி நம்பிகளுக்கும் நீர் வீசினீர் நான் பேசினேன் -சரியாக போனது –
ஸ்வாமி திரு முடி சம்பந்தத்தால் மோஷம் செல்லலாம் என்று சாதித்த தேவாதி ராஜன்
பிள்ளை மடியில் இருந்து எதிராஜ சம்பத் குமரன் பெயரை வைத்து கொண்டு –
அழகர் சிஷ்யர்களை கூப்பிட பெரிய நம்பி வர்க்கம் வராமல் இருக்க
தசரதன் ராமனை தன் பிள்ளை போல நினைத்தீரோ.என்று அருளிய திரு மால் இரும் சோலை அழகரும்
கிடாம்பி ஆச்சான்– ஆள வந்தார் ஸ்தோத்ர ரத்னத்தில் அசக்தன் அநாதன்- நைச்ய பாவனை அனுசந்திக்க அழகர்
ஸ்வாமி அவதாரத்துக்கு பின்பு யாரும் அநாதன் இல்லை -நாதனாக அவர் இருக்கிறபடியால் -என்றாரே .
திரு குறுங்குடி ..நம்பி தானே சிஷ்யன் வைஷ்ணவ நம்பி என்று பெயர் பெற ஆசை கொண்டானே
இப்படிப் பட்டோர் நல்லோர் –

கலியும் கெடும் கண்டு கொண்மின் -5-2-1–என்று அருளிச் செய்த நம் ஆழ்வார்
அவ் ஆழ்வாருடைய ப்ரசாதத்தாலே லபித்த பவிஷ்யதாசார்யா விக்ரகத்தை -தம்முடைய காலம்
எல்லாம் ஆராய்ந்து கொண்டு போந்த ஸ்ரீ மன் நாத முனிகள் –
இவர் அவதரித்த பின்பு இவருடைய கல்யாண குணங்களை கேட்டு அருளி -வித்தராய் -திருப் புற்றுக்கு கிழக்காக
கரிய மாணிக்க பெருமாள் திரு முன்பு -இவரைக் கடாஷித்து -ஆ முதல்வன் -என்று பிரார்த்தித்து அருளின
ஆளவந்தார் போல்வாரான சத்துக்கள் –

திரு கோஷ்டியூர் நம்பியும் -உகந்து எம்பெருமானார் என்ற திரு நாமம் சாத்தி –
ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையரும் கொள்ளை கொண்டு போக வந்த கண்ணனே நீர்-இப்படி
நல்லோர் பட்டியல் நீண்டு கொண்டே போகும்
திரு மாலை ஆண்டான் -ஆழ்வான் ஆண்டான் பிள்ளான் ஆழ்வான்-போல்வாரும்
ராமானுஜர் திருவடிகளே உபாயம் –பட்டரும் சாதித்தார் நம்ஜீயருக்கு

மறையினைக் காத்து –
பிபேத் அல்ப ஸ்ருதாத் வேத -என்று சொல்கிறபடி அல்ப ஸ்ருதரான பாஹ்ய குத்ருஷ்டிகளாலே
கலங்காதபடி வேதத்தை எல்லாம் ரஷித்து –
அவர்கள் தான் யார் என்னில் –
ஸ்ருதியை ஸ்திரம் ஆக்கின ஆழ்வான் தொடக்கமானவரும்
மறையினை -என்று பொதுவாக சொல்லுகையாலே திராவிட வேதத்துக்கு பிற்காலத்திலே
அல்ப ஸ்ருதரான குத்ருஷ்டிகளாலே அழிவு வாராதபடி -அத்தை வியாக்யானம் பண்ணி யருளின பிள்ளான் தொடக்கமானாரும் -என்றபடி –
அவர்கள் செய்தது அவ்வளவே அன்று காணும் –
இந்த மண்ணகத்தே மன்ன வைப்பரே –
விரோதி பூயிஷ்டமான இந்த மகா ப்ர்த்வியிலேயே -அவ்விரண்டையும் ஸூ பிரதிஷ்டமாம்படி-
ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு போந்தார்கள்-என்கிறார் .

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே—கண்ணி நுண் சிறுத் தாம்பு –2- -என்றபடி அவர் புகழை ஓதுகின்றனர் -திருந்தின நல்லோர் –
அவர்கள் வேதத்தை பாதுகாத்து நிலை பெறச் செய்கிறார்களாம்
வேதத்தின் பொருளாகிய இறைவனினும் அதன் உள் பொருளாம் ஆசார்யனை மிக விரும்பி-புகழ் பாடுதலின் –
பிறர் வேதத்துக்கு கூறும் அவப் பொருள்களைப் களைந்து அதனைப்-பாது காத்தவர்கள் ஆகிறார்கள் நல்லோர் —
அவர்கள் தங்களை சார்ந்தவர்களையும் உள் பொருளைப் பற்றி நிற்கும்படி செய்து வருதலின்
அந்த வேதத்தை காத்ததோடு அமையாமல் -நிலை நிற்கவும் செய்கிறார்கள் -என்றபடி –
இவ் இருள் தரும் மா ஞாலத்தில் இது செயற்கு அறிய செயல் என்பது தோன்ற -இந்த மண்ணகத்தே -என்றார் –

முழுமை வாய்ந்த ஆசார்யர் எம்பெருமானாரே –
ஆதலின் அவரே வேதத்தின் உள் பொருள் –
அவரைப் பற்றி நிற்றலே வேத மார்க்கம் என்றும்
மற்றவர்களை அங்கனம் பற்றி நிற்க செய்தாலே வேத மார்க்கத்தை பிரதிஷ்ட்டாபனம் செய்தல் -நிலை நிறுத்துதல் –
என்றும் சம்ப்ரதாயம் வல்லோர் கருதுகின்றனர் –
ஆகையால் ஸ்ரீ மத் வேத மார்க்க பிரதிஷ்டாபநாசாரியர் என்று எம்பெருமானார் சம்பந்தம் உடைய
ஆசார்ர்யர்களை இன்றும் உலகில் வழங்கி வருகிறார்கள் –
இதனையே அமுதனார் -நல்லோர் மறையினைக் காத்து மன்ன வைப்பவர் -என்பதனால்
அருளி செய்கிறார் என்பது உணரத் தக்கது-

வேதத்தின் பொருள் ராமானுஜ சரணவ் சரணம் பிரபத்யே –ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்-
வேதாந்தம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலே என்று -தொடங்கி-ஆச்சார்ய அபிமானம் தான்
பிரதமம் ஸ்வரூபத்தை பல்லவிதம் ஆக்கும்பின்பு புஷ்பிதம் ஆக்கும் -அநந்தரம் பல பர்யந்தம் ஆக்கும் -என்று
ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்தி முடிக்குமே -அது போலே-

கீழே எம் பொய்கைப் பிரான் அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன்
இராமானுசன் எம் இறையவனே-என்றார்
இதில்-ஞானம் என்னும் நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து உறைய வைத்து ஆளும்
இராமானுசன் புகழோதும் நல்லோர் மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே -என்கிறார் –

—-

பூதத் திருவடி தாள்கள்

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-8-

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு––நான்முகன் திருவந்தாதி –68-

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ எம்பெருமானும் ஸ்ரீ எம்பெருமானாரும் -ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய ஸ்ரீ இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–

March 24, 2020

1. எம்பெருமான் படி:

‘அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன், அன்று ஆரணச்சொல்
கடல் கொண்ட ஒண்பொருள் கண்டளிப்ப, பின்னும் காசினியோர் இடரின் கண் வீழ்ந்திட..36.’

எம்பெருமான், கிருஷ்ணாவதாரத்தில் உபநிஷத் ஸாரமாகிய பகவத் கீதையைத் தானே உபதேசித்தான்.
அவ்வுபதேசன் அர்ச்சுனனைத் தவிர மற்ற யாருக்கும் பயன்படவில்லையே என்று வருத்தப்பட நேர்ந்தது.
அர்ஜுனனுக்கும் பூர்த்தியாகப் பயன்பட்டிருக்குமோவென்று சந்தேகிக்கவும் இடமுளது.

1. எம்பெருமானார் படி:

‘ தானுமவ்வொண்பொருள் கொண்டு அவர் பின் படரும் குணன், எம் இராமானுசன் தன் படியிதுவே’.-36-

ஆனால், எம்பெருமானாரோ எம்பெருமான் உபதேசித்தும் பயனளிக்காத அந்தக் கீதையைக் கொண்டே
உலகோர்களெல்லாரையும் திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆளாக்கினார்.

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய வியாக்யானம் –
விரோதி நிரசன சக்தியை உடைத்தான திரு வாழியை உடையனாய் -சகல ஆத்மாக்களுக்கும்-சேஷியானவன்-
அஸ்த்தானே சிநேக காருண்யா தர்ம அதர்ம தியாகுலனாய் -கீதார்த்த சங்க்ரஹம் -கொண்டு-அர்ஜுனன் சோகா விஷ்டனான அன்று –
அவனை வ்யாஜீகரித்து -பெரும்கடலிலே மறைந்து கிடக்கும்
பெரு விலையனான -ரத்னங்கள் போலே வேத சப்தமாகிற சமுத்ரத்துக்கு உள்ளே
ஒருவருக்கும் தெரியாதபடி -மறைந்து கிடக்கிற விலஷனமான அர்த்தங்களை -தர்சித்து –சகல சேதனருடைய
உஜ்ஜீவன அர்த்தமாக ஸ்ரீ கீதா முகேன உபகரித்து அருள –
பின்னையும் பூமியில் உள்ளவர்கள் சம்சாரதுக்கத்தில் அழுந்தி தரைப்பட-தாமும் முன்பு
சர்வேஸ்வரன் அருளி செய்த அந்த விலஷனமான அர்த்தத்தைக் கொண்டு இது கைக் கொள்ளும் அளவும் –
அவர்களைப் பின் தொடரா நின்ற குணத்தை உடையராய் இருப்பராய் –எங்களுக்கு தம்மை முற்றூட்டாக தந்த
எம்பெருமானார் உடைய ஸ்வபாவம் இது –
ஆருயிர் நாதன் என்று ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண்பொருள் கண்டு அளிப்ப –என்று பாடமான போது –
அடல் கொண்ட நேமியனான சர்வேஸ்வரனே ஆத்மாக்களுக்கு சேஷி என்று கொண்டு –வேதத்தில் மறைந்து கிடக்கிற அர்த்தத்தை
தர்சித்து -ஸ்ரீ கீதா முகேன அருளி செய்த -என்ற பொருளாக கடவது –
அடல்-மிடுக்கு
காசினி-பூமி
இடரின் கண் -என்றது -இடரின் இடத்திலே என்கை-
படி -ஸ்வபாவம்–

ஸ்ரீ கீதா பாஷ்யம் அருளி -ஸ்ரீ கீதா சாரம் சரம ஸ்லோகம் அர்த்தம் பெற 18 தடவை திருக் கோஷ்டியூர் நம்பி இடம் பெற்று
அதன் ஏற்றம் நமக்கு காட்டி அருளி -ஆசை உடையோர் அனைவருக்கும் உபதேசித்து அருளி -வேத கடல் கொண்ட வஸ்து –
கீதாச்சார்யர் -இரண்டாவது கடல் கடைந்து அ மிர்தம்–சர்வ உபநிஷத் பசு –கன்றுக்கு குட்டி அர்ஜுனன் கீதை பால் –
நமக்கு –பின்னும் -கருட வாஹனனும் நிற்க -நாம் நம் கார்யம் செய்து கொண்டே இருக்க –
அத்தை கடைந்து -கீதா சாரம் -ஸ்வாமி அருளி -தானும் -அவனே ஸ்வாமியாக ஆவிர்பவித்து –
அவர் கண் படரும் குணன் -சம்சாரிகளை விடாமல் -திவ்ய தேசங்கள் எல்லாம் -நீர் நம்மை விட்டாலும் நான் உன்னை விட்டேன் –
எங்கும் இருப்பார் -பராகால பராங்குச யதிராஜர் எல்லா கோயில்களிலும் பிரதிஷ்டை உண்டே –
தத்வ ஹித புருஷார்த்தங்கள் அனைத்தும் நமக்கு தெளிய அருளி –18 சொல்லி அத்தாலே கலங்கிய அர்ஜுனனுக்கு
சரணாகதி சாஸ்திரம் வழங்கி –சர்வ தரமான இத்யாதி – சோகம் போக்கி என்றுமாம் –
அங்கு ஒருவன் -இங்கே நாம் அனைவரும் -அதனாலே தானும் -ஸ்வாமி –பின்னும் தானும் -அவ் ஒண் பொருள் கொண்டு –
இரண்டு உம்மை தொகை -ஸ்வாமி பெருமை காட்ட -கலி யுகம் -பாப பிரசுரம் -தோஷம் பூயிஷ்டர் நாம் –

————-

2. எம்பெருமான் படி:

‘மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே, கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்களெல்லாம்..41-‘

இந்நிலவுலகில் அநேக அவதாரங்களை எம்பெருமான் எடுத்தும் அவன் திவ்விய சொரூபத்தை அறிந்து ஜனங்கள் திருந்தவில்லை.
(‘அவஜானந்தி மாம் மூடா:’) என்னை மூடர்கள் அவமானப்படுத்துகிறார்கள் என்று வருந்தும்படி நேர்ந்தது.

2. எம்பெருமானார் படி:

(அந்த உலகோர்களெல்லாம்) ‘அண்ணல் இராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே,
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணர்க்கு ஆயினரே’.41-

ஆனால், எம்பெருமானாருடைய அவதாரம் எம்பெருமானுடைய அவதாரத்தைக் காட்டிலும் சிறந்தது.
ஏனெனில் எம்பெருமானார் அவதரித்த பின்னர் ஸம்ஸாரிகள் அறிவுக்குத் தக்கபடி ஞானத்தைப் புகட்டி
எல்லாரையும் ஞானவான்களாக்கிப் பகவானுக்கு அடிமைகளாக்கினார்.

மண் மிசையோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை – வியாக்யானம் –
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் -திரு விருத்தம் – 1- என்கிறபடியே பூமியிலே
மனுஷ்ய திர்யகாதி யோநிகள் தோறும் அவதரித்து -நமக்கு நாதனான ஸ்ரீய பதியே
நமாம்ச சஷூ ரபி வீஷதேதம் -என்கிற தன்னைக் கண்ணுக்கு விஷயம் ஆக்கிக் கொண்டு நிற்கிலும் –
இவன் நமக்கு சேஷி என்று தர்சிக்க மாட்டாத லௌகிகர் எல்லாரும்
ஆஸ்ரிதருடைய இழவு பேறுகள் தம்மதாம் படியான -ச்வாமித்வ-ப்ராப்தியை உடையரான எம்பெருமானார் வந்து –
பாஷ்ய கரணாதி களாலே பிரகாசரான அக்காலத்திலே -ஸ்வ யத்னத்தாலே
துஷ்ப்ராபமான ஜ்ஞானமானது அதிசயித்து –சகல சேதன அசேதனங்களும் பிரகாரமாக
தான் பிரகாரியாய் இருக்கையாலே நாராயணா என்னும் திரு நாமத்தை உடையவனுக்கு-சேஷம் ஆனார்கள்
தோன்றல்-பிரகாசித்தல்
அதவா
தோன்றிய அப்பொழுதே -என்றது ஆவிர்பவித்த அப்பொழுதே என்னவுமாம்
அந்தப் பஷத்திலும் அப்பொழுதே என்றது அவதரித்து அருளின அக்காலத்திலே -என்றபடி
அல்லது தத் ஷணத்திலே என்ன ஒண்ணாது இறே
கண்ணுற நிற்க்கையாவது-சஷூர் விஷயமாக நிற்கை
ஞானம் தலைக் கொள்ளுகையாவது -ஞானம் அதிசயிக்கை-

நாராயணன் என்று பேர் கொண்டவருக்கு ஆளாக்கினார் -இவனே பர ப்ரஹ்மம் என்று யார் என்று காட்டி அருளினார் –
திரிபுரா தேவியார் வார்த்தை
அடியேன் -சொல்லாதார் இடத்தில் சொல்லாதே என்றாரே அந்த ராமானுஜர் பெருமாள் இடமும் -கடல் அரசன் இடம் –

————————–

3. எம்பெருமான் படி:

‘ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொறும் நைபவர்க்கு, வானம் கொடுப்பது மாதவன்..66-.’

எம்பெருமான் யாவரொருவர் ஞானத்தினால் பக்தி, பரபக்தி, பரமபக்தி என்னும் நிலைகளையடைந்து ஸம்ஸாரத்தில்
இருப்புக் கொள்ளாமல் துடிதுடிக்கிறார்களோ அவர்களைச் சிரமப்படுத்தியே அவர்களுக்கு மோக்ஷமளிக்கிறான்.

3. எம்பெருமானார் படி:

‘வல்வினையேன் மனத்தில், ஈனங்கடிந்த இராமானுசன் தன்னை எய்தினார்க்கு அத்தானம் கொடுப்பது
தன், தகவென்னும் சரண் கொடுத்தே’.-66-

ஆனால், எம்பெருமானாரோ கிருபாமாத்திரப் பிரஸந்நாசாரியராகையால் ஒரு அதிகாரமும் பெறமுடியாத அடியார்களையும்,
அவர்களுடைய பாபங்களைப் போக்கி அவர்களைத் தம் திருவருளால் திருத்தி அவர்களும் மோக்ஷம் அடையும் படிச் செய்வார்.

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த விராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே -66 –

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை – வியாக்யானம் –
ஸ்ரீய பதியான சர்வேஸ்வரன் மோஷம் கொடுப்பது -ஜ்ஞான விபாக ரூபமான பிரேமத்தை உடையராய் –
அந்த பிரேம அநுரூபமாக தன்னை ப்ராபித்து -அநுபவித்து -அவ்வனுபவ ஜனித ப்ரீதி காரித-கைங்கர்யம் செய்வது
எப்போதோ என்கிற ப்ராப்ய த்வரையாலே
ஒரு பகல் ஆயிரமூழி-திருவாய் மொழி -10 3-1 – – யாய்க் கொண்டு நாடொறும் சிதிலராமவர்களுக்கு –
மகா பாபியான என்னுடைய மனசிலே தோஷத்தை போக்கி அருளின எம்பெருமானார்
தம்மை யடைந்தவர்களுக்கு –வானம் -என்று சொன்ன அந்த ஸ்த்தானம் கொடுத்து அருளுவது -தம்முடைய கிருபை என்று
சொல்லப்படுகிற சாதனத்தை அவர்களுக்கு கைம்முதலாகக் கொடுத்து
இது ஒரு மோஷ பிரதனம் இருக்கும் படியே என்று கருத்து .
ஞானம் கனிந்த நலம் -என்றது -ஜ்ஞானத்தின் உடைய பக்வ தசையான
ப்ரேமம் -என்றபடி ./நலம் -ச்நேஹம் .
தாதாமி புத்தி யோகம் -திருவடிகளில் விழாமல் -கிருபையால் கூட்டிச் செல்பவர் திருவடிகளில் –ஞானம் பக்தி கொடுத்தது அனுபவிக்க –
ஆசை பிராப்யத்தில் ருசி வளர பண்ண /தகவு -கிருபை -/ உத்தாராக ஆச்சார்யர் அன்றி நம் ஸ்வாமி –
ஞானம் கனிந்து -பக்தி ஞான விசேஷம் -நலம் -பக்தி ரூபா பன்ன ஞானம் கொண்டு -மாதவன் கொடுக்க -இனி இனி கதறியபின் –
ஷேமுஷி பக்தி ரூபா -மதி நலம்–நைபவர்க்கு அவன் எய்தினவர்களுக்கு நம் ஸ்வாமி –கிருபை உந்த –
பிராட்டி ஸ்தானத்தில் ஸ்வாமி கிருபை -கிருபா பரதந்த்ரர் ஸ்வாமி -கொண்டு -அங்கு
இங்கு கொடுத்து –நெடும் வாசி -நினைவு கூட வாராத படி -கிருபையையை கொடுத்து -ஞான பலாதிகள் சொல்லி –
மோக்ஷ பிரதத்வம் -சரண முகுந்தத்வம் -சிரமம் இல்லாமல் நம் போல்வாருக்கும் -ஸ்வாமி அருளுகிறார் –

—————-

4. எம்பெருமான் படி:

‘சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள், அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென்றனக்கன்றருளால்,
தந்தவரங்கனும் தன் சரண் தந்திலன்..69.’

பிரளய காலத்தில் கரணங்களே பரங்களின்றி இருந்த சேதனர்களுக்குச் சிருஷ்டி காலத்தில் அவைகளைக் கொடுத்துச்
சேதனர்களை ஸம்ஸாரத்தில் தள்ளி தன் சுயநலத்தைக் கருதித் தன் லீலாரஸத்திற்குச் சேதனரை எம்பெருமான் ஆளாக்குகிறான்.

4. எம்பெருமானார் படி:

‘தானது தந்து, எந்தை இராமானுசன் வந்தெடுத்தனன் இன்று என்னையே’.-69-
ஆனால், எம்பெருமானாரோ தாய் போல் பிரியபரராய், தந்தைபோல் ஹிதபரராய் பகவானுடைய திருவடிகளைக் காட்டிக் கொடுத்து
நம்மை ஸம்ஸாரத்திலிருந்து உத்தரிப்பித்தார். ஆகவே, எம்பெருமானாருடைய பரமகிருபை ஏற்றத்தையுடையதாகும்.

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69- –

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை – வியாக்யானம் –
ஸ்ருஷ்டே-பூர்வ காலத்தில் பிரதான கரணமான மனச்சோடே கூட சர்வ கரணங்களும்
அழிந்து நாசத்தை அடைந்து -அசித் விசேஷமாம் படி தரைப்பட்ட படி கண்டு -அந்தக்
கரணங்களை அசித் கல்பனாய் கிடக்கிற எனக்கு -அக்காலத்திலே –
கரண களேபரைர் கடயிதும் தயமாநமநா -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-41 – – என்கிறபடியே
கேவலக் கிருபையாலே -உபகரித்து அருளின பெரிய பெருமாளும் –
கரணங்களைத் தந்தவோபாதி -தம்முடைய சரணங்களைத் தந்திலர்-
எம்பெருமானார் எனக்கு ஜனகராய்க் கொண்டு வந்து -அரங்கன் செய்ய தாளிணை யோடார்த்தான் – -52 –என்னும்படி –
தாம் அந்தத் திருவடிகளை தந்து அருளி-சம்சார ஆர்ணவ மக்னனான என்னை இன்று-எடுத்து அருளினார் -இது ஒரு உபகாரமே ! என்று கருத்து ..
தான் தந்து -அது -அரங்கன் திருவடிகள் / தனது திருவடிகள் -அத்ரபரத்ர ஸாபிதருவதற்கு அவன் திருவடிகள் அவரது இல்லையே –
உடையவர் இடமே எல்லா சொத்துக்களும் -/ உபாய உபேயங்களாக தன்னுடைய திருவடிகளை தந்து என்றுமாம் –
சிந்தை -கரணங்கள் -தனி மதிப்பு மனஸ் என்பதால் தனியாக எடுத்து -அரங்கனுக்கு -இங்கே வந்த பின்பும் தன் சரண் கொடுக்க வில்லையே –
இங்கே வந்ததே ரக்ஷிக்க என்று விருது வூதி –ஸ்வாமியை வரவழைத்த அரங்கன் -அமுத்தனாரை கைக் கொள்ள –
ஆழ்வான் ஆண்டான் போல்வார் இல்லையே அமுதனார் -அவர்கள் போலே தாமே சென்று ஸ்வாமியை பற்ற
ஆச்சார்ய சம்பந்தம் பெற்றாள் தானே கொடுக்க முடியும் -இரண்டு காரணங்கள் தாராமைக்கு –
பிரளய ஆர்ணவத்தில் இருந்து அரங்கன் உதாரணம் பண்ண சம்சார ஆர்ணவத்தில் இருந்து இவர் –
அவன் விபசரிக்க கரணங்களைக் கொடுக்க ஸ்வாமி கைங்கர்யம் பண்ண அருளினார் –
என்னையே எடுத்தனர் -நீசனேன் -என்னை எடுத்தால் லோகங்கள் எல்லாம் எடுத்தது போலே தானே-
தனது திருவடிகளை தந்தது தானே கூரத் தாழ்வானை இட்டு என்னை உத்தரித்தது –

————

5. எம்பெருமான் படி:

‘தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக், கூராழி கொண்டு குறைப்பது..74.’

எம்பெருமான் தன் ஆஞ்ஞா ரூபமான வேதங்களின் கட்டளைப்படி நடவாதவர்களைத் தம் சக்கராயுதத்தைக் கொண்டு நிரஸிப்பான்.

5. எம்பெருமானார் படி:

‘கொண்டலனைய வண்மை ஏரார் குணத்து எம் இராமானுசன் அவ்வெழில் மறையில் சேராதவரைச் சிதைப்பது
அப்போதொரு சிந்தை செய்தே’.–74-

ஆனால், எம்பெருமானாரோ பாஹ்யர்களையும் குத்ருஷ்டிகளையும் வாதப் போரில் அப்போதப்போது
திருவுள்ளத்தில் உதிக்கின்ற நல்ல யுக்திகளைக் கொண்டு கண்டித்துவிடுவர்.

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74- –

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை – வியாக்யானம் –
நித்யத்வ அபௌருஷேயத்வ யுக்தமாய் -பிரத்யஷாதி பிரமாண விலஷணமாய் -சமஸ்த சேதன ஹித அஹித ஜ்ஞாபகமாய் –
தம்முடைய சாசனா ரூபமாய் -இருந்துள்ள வேதத்தின் உடைய பிரகாரத்தை நிரூபிக்கிறிலர்கள் என்று
ஆச்சர்ய ஞான சக்திகனான சர்வேஸ்வரன் அஞ்ஞாதி லங்கன சீலரான துஷ்டரை சேதித்து அருளுவது –கூரிய திரு ஆழியாலே –

சர்வ விஷயமாக உபகரிக்கும்படியாலே மேகத்தோடு ஒக்க -சொல்லலாம்படியான ஔதார்யத்தை உடையவராய் –
அனுத்தமமான கல்யாண குணங்களை உடையவராய் – நமக்கு சேஷிகளாய் இருக்கிற எம்பெருமானார் –
அந்த விலஷணமான வேதத்தில் -அப்ராமணிய புத்தியாலும் – அயதார்த்த பிரதிபத்தியாலும் -பொருந்தாத நிலை உடையவர்களை
பங்கயத்து அருளுவது -தாதாத் விகைகளான யுக்திகளாலே -ஈதொரு வீர்யம் இருக்கும் படியே -என்று கருத்து .
குறைக்கை-சேதிக்கை
சிதைக்கை-அழிக்கை-
அப்போதொரு சிந்தை செய்கையாவது -அப்போதொரு விசாரத்தைப் பண்ணுகை.
திருவாழி எதிர் பார்ப்பான் அவன் -இவர் யுக்தி மாத்ரத்தால் -உண்ணும் குலத்தில் பிறந்து –
தசரத கோபாலர் 18 நாடான் -மாதவன் /-திர்யக் காலில் விழுந்தும் ,-ஸ்தம்பத்தில் இருந்து ஆவிர்பவித்தும்..-
இப்படி எல்லாம் உயர்ந்த செயல்களை செய்தும் –அலங்கிரித்த சிரை சேதம்-சம்சாரிகளை போல பல தடவை பிறந்து-
பால்ய சேஷ்டிதங்களாலே விரோதி நிரசனம்-கண்ணன் -பெருமாள் போலே வில் வித்யை இத்யாதி கற்ற பின் இல்லாமல் –
அவனும் ஆழி உதவியால் – ராமானுஜர் அப்போது ஒரு சிந்தை செய்தே -அவ வப்போது ஒவ்வொரு சிந்தை –
யதாயத்தா தர்ம -தலை குனிவு சொல்லிப் போந்தத்தை இவர் சிந்தை செய்தே – யுக்தி சாதுர்யத்தால் மட்டுமே –

———-

பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – – -95 – –

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை – வியாக்யானம் –
இவர் பரிவுடன் ஒப்பிட்டால் எம்பெருமானுக்கும் ஒப்பாகாதே-அதி மானுஷ சேஷ்டிதங்கள் -மோக்ஷ ஏக ஹேதுவாக
இந்த மண்ணின் தோஷம் தட்டாமல் -செய்த உபகாரங்கள் -வேதம் வளர்த்து -இதுவே -தர்மம் சமஸ்தானம் –
ஆத்மா யதாம்யா ஞானம் வந்து ருசி பிறந்து -கர்மங்களை போக்க பிரபத்தி பண்ண வைத்து -இத்யாதி
அவன் உள் நின்று -இவர் வெளியில் பயம் இல்லாமல் -இரா மடம் ஊட்டுவரைப் போலே -அவன்–
இவரோ சேதனருடைய ஸ்வா தந்த்ரயதிற்கு அஞ்சாது கண் காண வந்து உய்விக்கிறார் .
அவனோ பரன் -அந்நியன் -இவரோ எம் இராமானுசன் –அவன் சர்வ வியாபகம் -உள் நின்று -அதிசயம் இல்லையே –
இவரோ விண்ணின் தலை நின்று உதித்து –
விலை பால் போல அவன் பரிவு தாய் போல் ஸ்வாமி பரிவு-அது தத்வ வசனம் இது தத்வ தரிசினி வாக்கியம்-
அன்னமாய் அற மறை நூல் பயந்தான்-கொடுத்தான் அவன்– வளர்த்தார் ஸ்வாமி-பெற்ற தாய் அவன் வளர்த்த இதத் தாய் ஸ்வாமி –

ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ -தாடீபஞ்சகம்-

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை – வியாக்யானம் –

—————

எம்பெருமானாருடைய ஜீவதசையில் நேர்ந்த முக்கிய சம்பவங்களின் காலக்குறிப்பு

1. ஜனனம்: கி.பி. 1017
2. யாதவப்பிரகாசரிடம் படித்தது: கி.பி. 1033
3. ஸ்ரீரங்கம் முதல் தடவை (ஆளவந்தாரைச் சேவிக்கச்) சென்றது: கி.பி. 1042
4. ஸந்யஸித்தது: கி.பி. 1049
5. சோழனுடைய இம்சைக்கு அஞ்சி மைசூர் பிராந்தியம் சென்றது: கி.பி. 1096
6. விட்டலதேவனென்னுமரசனை தம் சித்தாந்தத்தில் சேர்த்துக் கொண்டு விஷ்ணுவர்த்தனனென்று நாமமிட்டது: கி.பி. 1098
7. மேல்கோட்டையில் ஸ்ரீநாராயணப்பெருமாளை எழுந்தருளப் பண்ணியது: கி.பி. 1100
8. மேல்நாட்டிலிருந்தது (வரை): கி.பி. 1116
9. ஸ்ரீரங்கம் திரும்பியது: கி.பி. 1118
10. திருநாட்டை அலங்கரித்தது: கி.பி. 1137

மொத்த ஆயுள்கால வருடங்கள்: 120

எம்பெருமானாருடைய திருநாமங்களின் குறிப்பு

திருநாமங்களும் சாற்றினவர்களும்:

1. இராமாநுஜர் – திருமலைநம்பி
2. இளையாழ்வார் – திருமலைநம்பி
3. எதிராசர் – பகவான் வரதன் (பேரருளாளன்)
4. உடையவர் – அழகிய மணவாளன் (ஸ்ரீ ரங்கநாதன்)
5. எம்பெருமானார் – திருக்கோட்டியூர் நம்பி
6. ஸ்ரீபாஷ்யகாரர் – ஸரஸ்வதிதேவி
7. அப்பனுக்குச் சங்காழி அளித்த பெருமான் – திருவேங்கட சம்பவம்
8. நங்கோயிலண்ணர் – கோதையார் (ஸ்ரீ ஆண்டாள்)

மஹான்களுடைய பெருமையைச் சொல்லியிருக்கும் பாசுரங்களின் குறிப்பு

1. ‘பரமனை, பயிலும் திருவுடையார் யவரேலும் அவர் கண்டீர், பயிலும் பிறப்பிடை தோறு எம்மையாளும் பரமரே’

2. ‘பரமனை, பணியுமர் கண்டீர், நாளும் பிறப்பிடைதோறு எம்மையாளுடை நாதரே’

3. ‘எந்தை பிரான் தன்னை, பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர், ஓதும் பிறப்பிடைதோறு எம்மையாளுடையவர்களே’

4 ‘அவனடியாரடியே கூடுமிதுவல்லால் விடுமாறென்பதென்? அந்தோ! வியன்மூவுலகு பெறிலுமே’

5. ‘அவனடியார் சிறுமாமனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே’

6. ‘பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு’

7. ‘உன் தொண்டர்கட்கே, அன்புற்றிருக்கும்படி, என்னையாக்கி அங்காட்படுத்தே’

8. வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை, வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே’

9. ‘தென்குருகூர் நம்பியென்றக்கால், அண்ணிக்கும் அமுதூறும் என்னாவுக்கே’

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-