கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ –81-
பதவுரை
கடைந்த |
– |
(கூர்மாவதாரத்திலே) கடையப்பட்ட |
பால் கடல் |
– |
திருப்பாற்கடலிலே |
கிடந்து |
– |
கண்வளர்ந்தருளியும் |
காலநேமியை |
– |
காலநேமியென்னுமசுரனை |
கடிந்து |
– |
ஒழித்தருளியும் |
உடைந்த |
– |
நடுங்கிக் கிடந்த |
வாலி தந்தனுக்கு வாலியின் தம்பியான சுக்ரீவனுக்கு |
||
உதவ |
– |
உபகாரம் செய்ய |
இராமன் ஆய் வந்து |
– |
இராமபிரானாய் வந்து தோன்றி |
மிடத்தை |
– |
ஒன்றொடொன்றாகப் பிணைந்து கிடந்த |
ஏழ் மரங்களும் |
– |
ஸப்தஸால வ்ருக்ஷங்களையும் |
அடங்க |
– |
ஏழேழாகவுள்ள ஸப்தகுலபாவதாதிகளான மற்றவற்றையும் |
எய்து |
– |
பாணத்தாலே துளைபடுத்தி |
வேங்கடம் அடைந்த |
– |
திருவேற்கடமலையிலே எழுந்தருளியிருப்பவான |
மால |
– |
எம்பெருமானுடைய |
பாதமே |
– |
திருவடிகளையே |
நாளும் |
– |
நாள்தோறும் |
அடைந்து |
– |
ஆச்ரயித்து |
உய்ம்மின் |
– |
உஜ்ஜிவியுங்கள் |
கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து–கூர்ம அவதாரத்தில் கடையப் பெற்ற
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்–நடுங்கிக் கிடந்த சுக்ரீவனுக்கு
உடைந்த -தளர்ந்த -வாலிக்கும் சுக்ரீவனுக்கும் விசேஷணம் –
(உடைந்தவாலி தந்தனுக்கு.) ‘உடைந்த’ என்ற அடைமொழி வாலிக்கும் ஆகலாம்; வாலிதம்பிக்குமாகலாம்.
உடைதல்- தளர்வு.
வாலி, ‘நமக்குப் பகையான ஸுக்ரீவன் நாம் புகவொண்ணாதரிச்யமூகமலையிலே ஹனுமானைத் துணைகொண்டு வாழாநின்றான்;
எந்த ஸமயத்திலே நமக்கு என்ன தீங்கை விளைப்பானோ’ என்று உடைந்து கிடப்பவன்.
ஸுக்ரீவனுடைய உடைதல் சொல்ல வேண்டா. “வாலி தன்பினுக்கு” எனப் பாடமிருந்திருக்க மென்பர்.
—————————————————————–
எத்திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்
முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற நின்
பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு
எத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே –82-
பதவுரை
எத்திறத்தும் ஒத்து நின்று |
– |
எந்த ஜாதியில் அவதரித்தாலும் ஸஜாதீயன் என்ற காரணத்தால் சேதநா சேதநங்களோடு ஒத்திருக்கச் செய்தேயும் |
உயர்ந்து உயர்ந்த பெற்றியோய் |
– |
(குணவிசேஷத்தால்) மேன்மேலுமுயர்ந்த ப்ரபாவத்தையுடையோனே! |
மூத்திறத்து மூரி நீர் |
– |
திருப்பாற்கடலிலே |
அரா அணை துயின்ற |
– |
சேஷசயனத்திலே திருக்கண் வளர்ந்தருள்கின்ற |
நின் |
– |
தேவரீர் விஷயத்திலே |
பத்து உறுத்த சிந்தையோடு நின்று |
– |
பக்தி அழுந்தின நெஞ்சோடு கூடியிருந்து |
பாசம் விட்டவர்க்கு எத்திறத்தும் இன்பம் |
– |
விஷயாந்தரப் பற்றுக்களை விட்டவர்கட்கு ஸர்வவித ஸுகமும் |
இங்கும் |
– |
இவ்வுலகத்திலும் |
அங்கம் |
– |
அவ்வுலகத்திலும் |
எங்கும் மற்றெவ்வுலகத்திலும் |
||
ஆகும் |
– |
எளிதாம். |
பாட்டு |
– |
பின்பிறக்கவைத்தனன் கொல். |
எத்திறத்தும் ஒத்து நின்று
எந்த ஜாதியில் பிறந்து இருந்தாலும் -சேதன அசேதனர்களுடன் ஒத்து இருந்து
பத்து உறுத்த சிந்தையோடு நின்று
பக்தி அழுந்தின நெஞ்சத்தோடு கூடி இருந்து
பாசம் விட்டவர்க்கு
விஷயாந்தர பற்றுக்களை விட்டவர்களுக்கு
எத்திறத்தும் -சர்வ பிரகாரங்களிலும்
இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே –
இவ்வுலகத்திலும் அவ்வுலகத்திலும் எவ்வுலகத்திலும் இன்பம் கிட்டும்
தேவ மனுஷ்ய ஜந்து ஸ்தாவர ஜாதியிலும் அவதார ஜாதியில் ஒத்து இருந்தாலும் குண பெருமையால் உணர்ந்தவன்
மூரிநீர் கடல் ஆற்று ஊற்று– மழை நீர் என்னவுமாம்
மூரி –பழையதாக என்றும் பெருமையாக என்றும் –
தேவஜாதியிலும் மநுஷ்யனாதியிலும் திர்யக்ஜாதியிலும் ஸ்தாவரஜாதியிலும் ஸஜாதீயனாய் அவதரித்து
தஜ்ஜாதியர்களை அந்தந்த ஜாதியாலே ஒருபுடையொத்திருந்தாலும் குணப்பெருமயாலுண்டான மேன்மையையுடையவனே!
திருப்பாற்கடலிலே திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்தருளாநின்ற உன்பக்கல் பக்திமிகுந்த மநோரதத்தோடே நின்று
விஷயாந்தரங்களில் பற்றை அறுத்துக்கொள்பவர்கட்கு
இம்மண்ணுலகத்திலும் வானுலகத்திலும் மற்றெவ்வுலகத்திலும் ஸர்வப்காரங்களாலும் ஆநந்தம்- நிரம்புமென்கிறார்.
முந்நிறத்து மூரிநீர், ஊற்றுநீர், மழைநீர் என்று மூன்றுவகைப்பட்ட நீரையுடையது கடல்.
“முந்நீர்’ என்னக்கடவதிறே.
மூரி- பழையதான; பெரிதான என்றுமாம்.
——————————————————
மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய் புலன் கழல்
விட்டு வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக்
கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே –83-
பதவுரை
மட்டு உணவு |
– |
தேன் நித்யாயிருக்கபெற்ற |
தண் |
– |
குளிர்ந்த |
துழாய் |
– |
திருத்துழாயினால் தொடுக்கப்பட்ட |
அலங்கலாய் |
– |
திருமாலையை அணிந்துள்ளவனே! |
புலன் கழல் விட்டு |
– |
(உன்னுடைய) விலக்ஷணமான திருவடிகளை (இந்நிலத்திலேயே அநுபவிப்பதை) விட்டு |
விண்ணில் ஏறி |
– |
பரமபதத்திற் சென்று |
வீழ்வு இலாத போகம் கண்ணிலும் |
– |
அழிவில்லாதொரு போகத்தை அடையப்பெற்றாலும். (அது கிடக்கட்டும்) |
(இந்நிலத்தில் இருந்துகொண்டே) |
||
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் |
– |
பத்து என்கிற பக்தியாகிற பாசத்தினாலே |
மனம் தனை |
– |
மநஸ்ஸை |
கட்டி |
– |
கட்டுப்படுத்தி |
வீடு இலாது |
– |
விச்சேதமில்லாபடி |
வைத்த |
– |
அமைக்கப்பட்ட |
காதல் |
– |
ப்ரேமத்தினாலுண்டாகக் கூடிய |
இன்பம் ஆகுமே |
– |
ஆநந்தத்தை ஒக்குமோ அப்பரமபதாநுபவம்! |
மட்டுலாவு –
தேன் நித்தியமாய் இருக்கும்
தண் துழாய் அலங்கலாய் புலன் கழல் விட்டு-
திருவடிகளை இந்த பூ உலகத்திலேயே அனுபவிப்பதை விட்டு
வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்-அழிவில்லாத கைங்கர்யம் பரம பதத்திலே சென்று கிட்டினாலும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி
பத்து என்ற பக்தி யாகிற பாசத்தால் மனசைக் கட்டுப் படுத்தி
வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே –
விச்சேதம் இல்லாத அமைக்கப் பட்ட ப்ரேமையால் கிடக்கும் ஆனந்தத்துக்கு ஈடு இல்லை
பத்துடை அடியவர்க்கு எளியவன் போலே –பத்து -பக்தி –வைத்த காதலே இன்பம் பயக்கும்
வைத்த காதலே இன்பமாகும் -ப்ரேமம் ஒரு ஸூகத்துக்கு சாதனமாக இல்லாமல் ஸ்வதஸ் ஸூகமாகவே இருக்கும்
எட்டினோ டிரண்டெனுங் கயிற்றினால் – எட்டோடு இரண்டு சேர்ந்தால் பத்து;
இவ்விடத்தில் பத்து என்கிற எண் விலக்ஷிதமல்ல. ‘பத்துடைபடியவர்க்கெளியலன்” என்றபடி
பக்திக்கும் பத்து என்று பேருண்டாதலால் அப்பொருளே இங்கு விவக்ஷிதம்.
வைத்தகாதலின்பமாகுமே- வைத்தகாதலே இன்பமாகும் என்று அந்வயித்து,
உன் திருவடிகளில் வைக்கும் ப்ரேமமானது ஒரு ஸுகத்துக்கு ஸாதகனமாகையன்றிக்கே ஸ்வதன்ஸுகமாயிருக்கமென்றுமாம்.
அநுபவரசிகர்களான ஆழ்வார்கள் எம்பெருமானை யானையாகவே பல இடங்களில் பேசுவார்கள்.
யானைக்கும் எம்பெருமானுக்கும் பல விதங்களில் ஒத்த கருத்து நிலவும்
1.யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே இருந்து பரமாநந்தம் பயக்கும்.
எம்பெருமானும் எப்பொழுதும் நாள், திங்கள், ஆண்டு ஊழி யூழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது
என்னாராவமுதம் என்னும்படி யிருப்பான்.
2.யானையின் மீது ஏற வேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏறவேண்டும்.
எம்பெருமானிடம் சென்று சேர வேண்டியவுர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேர வேண்டும்.
3.யானை தன்னை கட்ட தானே கயிற்றை எடுத்துக் கொடுக்கும். எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் (திருச்சந்த விருத்தம்) என்கிறபடியே,
எம்பெருமானை கட்டுப் படுத்தும் பக்தியாகிற கயிற்றை அவன் தந்தருள்வான்.
4. யானையை நீராட்டினாலும் அடுத்த ஷணத்திலேயே அழுக்கோடு சேரும் எம்பெருமான் சுத்த ஸத்வ மயனாய் பரம பவித்ரனாய்
இருக்கச் செய்வதாயும் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குமுடைய நம் போல்வாரோடு
சேர திருவுள்ள மாயிருப்பான் வாத்ஸல்யத்தாலே.
5.யானையைப் பிடிக்க வேண்டில் பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும்
அதன் போன்றே பிராட்டியின் புருஷாகாரமின்றி எம்பிரான் வசப்படான் .
6.யானை பாகனுடைய அனுமதியின்றி தன்னிடம் வருபவர்களை தள்ளி விடும்.
எம்பெருமானும் “வேதம் வல்லார் துணைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து” என்கிறபடியே
பாகவதர்களை முன்னிட்டு புகாதாரை அங்கீகரித்தருளான்.
7. யானையின் மொழி யானைப் பாகனுக்குத் தெரியும், எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பிகள் போல்வார்க்கே தெரியும்
(பேரருளானப் பெருமானோடே பேசுபவர் நம்பிகள்).
8. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்
எம்பெருமான் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தாலே பல கோடி பக்த வர்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம்.
9.யானைக்கு கை நீளம் எம்பெருமானும் அலம் புரிந்த நெடுந்தடக்கையன் இறே
“நீண்ட அந்தக் கருமுகிலை யெம்மான் தன்னை.”(பெரிய திருமொழி 205-2)
10.யானை இறந்த பின்பும் உதவும் எம்பெருமானும் தீர்த்தம் பிரசாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளின பின்பும்
இதிகாச புராணங்கள் உணர்த்தி உதவுகின்றன.
11. யானை ஒரு கையே உள்ளது எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழிய கொள்ளும் கையில்லை
12. யானை பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும். எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகம் பிரக்குருதிகளுக்கு சம்பாத்யத்திற்கு வழி செய்கிறார்.
13. யானை மெல்ல அசைந்து அசைந்து செல்லும். எம்பெருமானும் உலா வரும் பொழுது அசைந்து அசைந்து வருவார்.
14. யானை சாதுவானது எம்பெருமானும் சாதுவானவரே
————————
பின் பிறக்க வைத்தனன் கொல் அன்றி நின்று தன் கழற்கு
அன்புறைக்க வைத்த நாள் அறிந்தனன் கொல் யாழியான்
தன் திறத்தோர் அன்பிலா வறிவிலாத நாயினேன்
என்திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே -84-
பதவுரை
ஆழியான் |
– |
சக்ரஹஸ்தனான எம்பெருமான் |
பின் பிறந்த வைத்தனன் கொல் |
– |
நான் இன்னும் சில பிறவிகள் பிறக்கும்படியாகத் திருவுளம் பற்றி யிருக்கிறானோ! |
அன்றி |
– |
அல்லது |
தன் கழற்கு |
– |
தன் திருவடிகளிலே |
நின்று |
– |
நிலைத்துநின்று |
அன்பு உறைக்க வைத்து |
– |
(எனக்கு) அன்பு ஊர்ஜிதமாம்படியாக ஸங்கல்பித்து |
அந்நாள் அறிந்தனன் சொல் |
– |
பரமபதத்திலே சென்று அநுபவிக்குமொரு நாளைத்திருவுள்ளம் பற்றியிருக்கிறானோ! |
தன் திறந்து |
– |
தன் விஷயத்திலே |
ஓர் அன்பு இலா |
– |
சிறிதும் அன்பு இல்லாதவனும் |
அறிவு இலாத |
– |
விவேகமில்லாதவனும் |
நாயினேன் |
– |
நீசனுமாகிய |
என் திறத்தில் |
– |
என் விஷயத்திலே |
எம்பிரான் |
– |
எம்பெருமான் |
குறிப்பில் வைத்தது |
– |
திருவுள்ளம்பற்றி விருப்பதானது |
என் சொல் |
– |
எதுவோ (அறியேன்) |
பின் பிறக்க வைத்தனன் கொல்
நான் இன்னும் பல பிறவிகள் எடுவிக்க திரு உள்ளமா
பின்பு இறக்க வைத்தனன் கொல்-இறப்பு -மறப்பு-அவனை மறந்து இருப்பதே ஆத்மாவுக்கு இறப்பு
தன் பக்கல் ஞானம் பிறந்த பின்பும் தன்னை மறக்கும் படி வைக்கிறானோ என்றுமாம்
அன்றி நின்று தன் கழற்கு அன்புறைக்க வைத்த நாள்-நிலைத்து நின்று-அறிந்தனன் கொல் யாழியான்
பரம பதத்தில் சென்று அனுபவிக்கும் நல்ல திரு உள்ளமா
தன் திறத்தோர் அன்பிலா வறிவிலாத நாயினேன்
தன் விஷயத்தில்
என் திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே
அவன் திரு உள்ளம் உகப்பு தான் பரம பதம் அடைய உபாயம்
கீழ்ப்பாட்டிலே ப்ரஸ்தாவித்த பக்தியானது தம்மிடத்தில் இல்லாமையாலும்
தாம் ப்ரக்ருதி பரவசராயிருக்கக் காண்கையாலும்,
எம்பெருமான் கேட்பாரற்ற ஸ்வதந்தரனாகையாலும்-,
அவன் திருவுள்ளமுகந்தாலல்லது பேறு பெற முடியாதாகையாலும்
இக்காரணங்களையெல்லாம் கருதி
‘எம்பெருமான் என்னைத் தன் திருவடிகளிலே பரமபக்தனாம்படி பண்ணியருள நினைத்திருக்கிறானோ!
அன்றி நித்ய ஸம்ஸாரியாக்க நினைத்திருக்கிறானோ?
என் திறத்தில் என் நாதன் திருவுள்ளப்பற்றியிருப்பது என்னோ! என்கிறார்.
இந்த சரீரம் முடிந்தபின்பும் கூட இன்னும் சில சரீரங்களையும் நான் கொள்ளும்படியாக நினைத்திருக்கிறானோ?
அன்றியே, தனது திருவடிகளில் இடையறாத அன்பை எனக்கு உறைக்க வைத்து
அத்திருவடிகளை யநுபவிப்பேனாம்படி ஒரு நல்ல காலமுண்டாக நினைத்திருக்கிறானோ?
அவன் விஷயத்திலே அணுமாதரமும் அன்பில்லாத அஜ்ஞனும் நீசனுமாகிய என் விஷயத்திலே
எது செய்வதாகத் திருவுள்ளமோ தெரியவில்லையே! என்று அலமருகின்றார்.
“பின் பிறக்கவைத்தனன் கொல்” என்றவிடத்து, ‘பின்பு இறக்கவைத்தணன்’ கொல் என்றும் பிரிக்கலாம்;
இறப்பானது மறுப்பு; (எம்பெருமானை மறந்திருப்பதே ஆத்மாவுக்கு இறப்பு.)
தன் பக்கலிலே எனக்கு ஞானம் பிறந்த பின்பும் தன்னை மறக்கும்படியாக்கி வைக்கிறானோ? என்றவாறு.
————————————
நச்சராவணைக் கிடந்த நாத பாத போதினில்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம்
மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே –85-
பதவுரை
நஞ்சு அரா அணை |
– |
(ஆச்ரித விரோதிகள்மேல்) விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வானாகிற சயனத்திலே |
கிடந்த |
– |
திருக்கண் வளர்ந்தருள்கிற |
நாத |
– |
ஸ்வேச்வரனே! |
பாத போதினில் |
– |
(உன்னுடைய) திருவடித் தாமரைகளிலே |
வைத்த |
– |
(இப்போது) வைக்கப்பட்டுள்ள |
சிந்தை |
– |
மகஸ்ஸை |
வாங்குவித்து |
– |
அதில் நின்றும் திருப்பி |
நீங்குவிக்க |
– |
வேறு விஷயங்களில் போக்க |
நீ |
– |
ஸ்வதந்த்ரனான நீ |
இனம் |
– |
இன்னமும் |
மெய்த்தன் |
– |
மெய்யாகவே |
வல்லை ஆதல் |
– |
ஸமர்த்தனாயிருக்கிறாய் என்பதை |
அறிந்தனன் |
– |
அறிந்திருக்கிறேன் |
மாயனே! |
– |
ஆச்சரியசக்தியுக்தனே! |
என்னை |
– |
அடியேனை |
நின் மாயமே உய்ந்து |
– |
உன்னுடைய மாயச்செயலையே கடத்தி |
மயக்கினில் |
– |
ப்ராக்ருத பாசங்களிலே (வைத்து) |
மயக்கல் |
– |
மயக்கவேண்டா |
நச்சராவணைக் கிடந்த நாத
ஆஸ்ரித விரோதிகளின் மேலே விஷத்தை உமிழும் திரு வநந்த வாழ்வான் என்னும் சயனத்தில்
திருக் கண் வளரும் சர்வேஸ்வரனே
பாத போதினில் வைத்த சிந்தை
திருவடி தாமரைகளில் எப்போதும் வைத்து இருக்கும் மனசை
வாங்குவித்து-அதில் நின்றும் திருப்பி
நீங்குவிக்க நீயினம்-வேறு விஷயத்தில் போக்க -ஸ்வ தந்த்ரனான நீ இன்னம்
மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே
மெய்யாகவே சமர்த்தன் என்பதை அறிந்தனன்
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே
அடியேனை ப்ராக்ருத பாசங்களில் மாய்க்க வேண்டாம் என்கிறார்
உனது ஸ்வா தந்த்ர்யத்தால் என்னை சம்சார படு குழியில் தள்ளாமல் கிருபை பண்ணி அருள வேணும் என்கிறார் –
அடியேன் விஷயத்திலே எம்பெருமான் திருவுள்ளம் எப்படிப்பட்டதோ வென்று ஸந்தேஹித்தார் கீழ்ப்பாட்டில்;
என்னை உன் ஸ்வாதந்திரியத்தினால் ஸம்ஸாரப்படுகுழியிலே இன்னமும் தள்ளாமல்
கிருபைபண்ணி யருளவேணுமென்று இரக்கிறார். இப்பாட்டில்
——————————
சாடு சாடு பாதனே சலங்கலந்த பொய்கை வாய்
ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாத நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் கண்ணனே –86-
பதவுரை
சாடு நாடு பாதனே |
– |
சகடாஸுரனை உதைத்தொழித்த திருவடியையுடையவனே! |
சலம் கலந்த பொய்கை வாய் |
– |
(விஷமே அதிகமாகி அத்துடன் சிறிது) ஜலமும் கலந்திருக்கப்பெற்ற ஒரு மடுவிலே |
ஆடு அரவின் |
– |
(செருக்கினால் படமெடுத்து) ஆடிக்கொண்டிருந்த காளியநாகத்தினுடைய |
வன்பிடர் |
– |
வலியதான பிடரியிலே |
நடம் பயின்ற |
– |
நர்த்தனம் செய்த |
நாதனே! |
– |
ஸ்வாமியே |
கோடு நீடு கைய |
– |
ஸ்ரீபாஞ்சஜந்யத்தினால் நித்ராஸங்க்குதாமன திருக்கையையுடையவனே! |
கண்ணனே |
– |
கண்ணபிரானே! |
செய்ய பாதம் |
– |
(உனது) செந்தாமரைபோற் சிவந்த திருவடிகளை |
நாளும் |
– |
நாள்தோறும் |
உன்னினால் |
– |
அடியேன் தியானித்துக் கொண்டிருக்கும்போது |
மெய் |
– |
மெய்யாகவே |
வீடன் ஆக செயாத வண்ணம் என் கொல் |
– |
(அடியேனை) முத்தனாக்காதது ஏனோ! |
சாடு சாடு பாதனே
சகடாசுரனை உதைத்து ஒழித்த திருவடிகளை உடையவனே
சலங்கலந்த பொய்கை வாய்
விஷமமாகவே இருந்த அத்துடன் சிறிது தண்ணீரும் கலந்த மடுவில்
ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே
செருக்கினால் படம் எடுத்து ஆடும் காளிங்கனின் வலிய பிடரியில் நர்த்தனம் செய்த ஸ்வாமியே
கோடு நீடு கைய
பாஞ்ச ஜன்யம் நீங்காது வைத்து இருக்கும் திருக் கையின் கண்ணபிரான்
செய்ய பாத நாளும் உள்ளினால்
த்யானம் பண்ணிக் கொண்டு இருந்தால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் கண்ணனே
மெய்யாகவே அடியேனை முக்தன் ஆக்காதது ஏனோ-
விரோதி போக்கி அருளும் சமர்த்தன் நீ எனது விரோதிகளை நிவர்த்தித்து அருள வேண்டாவோ என்கிறார்-
எம்பெருமான் விரோதிநிரஸநத்தில் ஸமர்த்தன் என்னுமிடத்தை நிரூபித்துக் கொண்டு
இப்படி ஸமர்த்தனான நீ என் விரோதியை மாத்திரம் நிவர்த்திப்பியாமல் உபேக்ஷை பண்ணுவது தகுதியோவென்கிறார்.
சலம் கலந்த பொய்கை = அப்பொய்கையிலே விஷமே விஞ்சினதென்றும் அத்தோடு கூட ஜலமும் சிறிது சேர்ந்திருக்குமென்றும் உணர்க.
வீடன் = வீட்டையந்தவன், முக்தன்.
—————————
நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல்
நல் தவத்த நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே –87-
பதவுரை
நெற்றிபெற்ற கண்ணன் |
– |
நெற்றியிலே கண்ணைப் பெற்றவனான சிவனும்: |
விண்ணின் நாதன் |
– |
தேவேந்திரனும் |
போதின் மேல் நல் தவத்து நாதன் |
– |
தாமரைப்பூவிலே பிறந்த நல்ல தபாஸனான நான்முகக் கடவுளும் |
மற்றும் உள்ள வானவர் |
– |
மற்றுமுண்டான பல தேவதைகளும் |
கற்ற வெற்றியால் |
– |
தாங்கள் தாங்கள் அப்பயணித்துள்ள முறைமைக் கிணங்க |
வணங்குபாத! |
– |
வந்து வணங்கப்பெற்ற திருவடிகளை யுடையவனே! |
நாத! |
– |
நாயகனே! |
வேத! |
– |
வேதப்ரதிபாத்யனே! |
உரைக்கில் |
– |
(என் அத்யவஸாயத்தைச்) சொல்லப்புக்கால் (சொல்லுகிறேன் கேளாய்.) |
நின் பற்று அலால் |
– |
உன்னையே ஆச்ரயமாகக் கொண்டிருப்பது தவிர |
மற்றது ஓர் பற்று |
– |
வேறொர் ஆச்ரயத்தை |
உற்றிலேன் |
– |
நான் நெஞ்சாலும் ஸ்பர்சிக்கவில்லை. |
நெற்றி பெற்ற கண்ணன்
நெற்றிக் கண் உள்ள சிவன்
விண்ணின் நாதனோடு போதின் மேல் நல் தவத்த நாதனோடு
இந்த்ரன் பிரமன்
மற்றும் உள்ள வானவர் கற்ற பெற்றியால் –
தங்கள் தாங்கள் அப்யசித்த முறைப்படி
வணங்கு பாத நாத-
வேத-வேதத்தில் சொல்லப் பட்டவனே
நின் பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே –
எனது அத்யவசாயத்தைச் சொல்லப் புகுந்தால் -உன்னையே பற்றி இருப்பேன் –
வேறு புகலிடம் நெஞ்சாலும் நினைக்க மாட்டேன்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -போல
தங்களன்பார தமது சொல் வலத்தால் தலைத் தலை சிறந்து பூசிப்ப -திருவாய்-போலே
தேவர்கள் எல்லோரும் இவன் திருக்கை எதிர் பார்த்து இருக்கிறார்கள்-
முக்கண்ணன் முதலிய தேவதைகளுங்கூடத் தங்களுடைய அபீஷ்ட ஸித்திக்கு
தேவரீருடைய கையையே எதிர்பார்த்திருக்கறார்களாகையாலே
அடியேனுக்கும் தேவரீரொழிய வேறு புகலில்லையனென்று தம்முடைய அநந்யயதித்வத்தை விளம்புகிறார்.
நெற்றிக்கண்ணனான சிவனென்ன, ஸ்வர்க்கத்துக்கு நிர்வாஹகனான இந்திரனென்ன,
திருநாபிக்கமலத்திலே பிறந்து மஹாபஸ்வியான பிரமனென்ன இவர்களும்
மற்றுமுள்ள பற்பல தேவதைகளும் தங்கள் தங்களறிவுக்குத் தகுதியானத் திருவடி பணியப்பெற்றவனே!
உலகங்கட்கெல்லாம் தனி நாயகனான வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்டுள்ளவனே!
“களைவாய் துன்பங் களையாதெழிவாய் களை கண்மற்றிலேன்” என்றாற்போல
உன்னையே சரணமாகப் பற்றியிருக்குமதொழிவாய்
களை கண் மற்றிலேன்” என்றாற்போல உன்னையே சரணமாகப் பற்றியிருக்குமதொழிய
வேறொரு சரணமும் அடியேனுடைய நெஞ்சினால் கொள்ளப்படவில்லை யென்கிறார்.
இரண்டாமடியில் ‘நற்றவத்து” என்றும் “நற்றவத்த” என்றும் பாடபேதங்களுண்டு.
“கற்ற பெற்றியால்” என்றவிடத்து
“தங்களன்பாரத் தமதுசொல் வலத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப” என்று திருவாய்மொழி நினைக்கத்தக்கது.
—————————
வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள் எயிற்று அரவு அளாய்
அள்ளலாய் கடைந்த வன்று அருவரைக்கு ஓர் ஆமையாய்
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம்
வள்ளலாரை யன்றி மற்று ஓர் தெய்வம் நான் மதிப்பேனே –88-
பதவுரை
வெள்ளை வேலை |
– |
வெண்கடலாகிய திருப்பாற்கடலிலே |
வெற்பு |
– |
மந்தரமலையை |
நாட்டி |
– |
நட்டு |
வேள் எயிறு அரர் |
– |
வெளுத்த பற்களையுடைய வாஸுகி நாகத்தை |
அளாய் |
– |
(கடைகயிறாகச்) சுற்றி |
அள்ளல் ஆ |
– |
அலைகள் செறியும்படி |
கடைந்தஅன்று |
– |
(கடலைக்) கடைந்தருளின காலத்தில் |
அருவரைக்கு |
– |
தாங்க முடியாததான அம்மலைக்கு |
ஓர் ஆமை நெய் |
– |
(தாரகமான) ஒரு ஆமையாகி |
வானவர்களுக்கு |
– |
தேவதைகளுக்கு |
உள்ள நோய்கள் தீர் மருந்து |
– |
ஏற்பட்டிருந்த நோய்களைத் தீர்க்கவல்ல மருந்தாகிய அம்ருதத்தை |
அளித்த |
– |
(கடலிற் கடைந்தெடுத்து) அருளின |
எம் வள்ளலாரை |
– |
உதாரனான எம்பெருமானை |
அன்றி |
– |
யன்றி |
மற்று ஓர் தெய்வம் |
– |
வேறொரு தேவதையை |
நான் மதிப்பவனே |
– |
நான் (ஒருபொருளாக) மதிப்பனோ! |
வெள்ளை வேலை
வெண்மையான கடலான திருப் பாற் கடலில்
வெற்பு நாட்டி
மந்தர மலையை நாட்டி
வெள் எயிற்று அரவு அளாய்
வெளுத்த பற்களை உடைய வாசுகி நாகத்தை கயிறாக சுற்றி
அள்ளலாய்
அலைகள் செறியும்படி
கடைந்த வன்று அருவரைக்கு
தாங்க முடியாத அந்த மலைக்கு–ஓர் ஆமையாய்
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம் வள்ளலாரை யன்றி
மற்று ஓர் தெய்வம் நான் மதிப்பேனே-
வெளுத்தகடலிலே மந்தரமலையை மத்தாகநாட்டி வெளுத்த பற்களையுடைய
வாஸுகியென்னும் நாகத்தைக் கடை கயிறாக அதிலேற்றி
அந்த மாகடலை “கடல்மாறு சுழன்றழைக்கின்ற வொலி” என்னும்படியே
திசைகள் எதிரேவந்து செறியும்படியாகக் கடைந்தருளின காலத்து
அம்மலை ஆழந்துபோகாமல் தன் முதுகிலே நின்று சுழலும்படி கூர்மரூபியாய்த் தாங்கிக் கிடந்து,
தேவதைகட்கு ஏற்பட்டிருந்த துன்பங்களெல்லாம் தீரும்படியான மருந்தாகிய அம்ருதத்தை அவர்கட்கு எடுத்தருளி
பரமோதானான பரமபுருஷனையன்றி வேறொரு தெய்வத்தை ஆச்ரயபணீயமாக நினைப்பனோ நான் என்கிறார்.
——————————————
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன்
தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம்
சீர் மிகுத்த நின் அலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே –89-
பதவுரை
முன் |
– |
முற்காலத்தில் |
பார் மிகுந்த பரம் |
– |
பூமியிலே அதிமாகவுண்டான சுமையாகிய துஷ்டவர்க்கத்தை |
ஒழிச்சுவான் |
– |
ஒழிப்பதற்காக |
அருச்சுனன் தேர் மிகுத்து |
– |
அர்ஜுனனுடைய தேரை நன்றாக நடத்தி |
மாயம் |
– |
(பகலை இரவாக்குகை முதலான) ஆச்சரியச் செயல்களை |
ஆக்கி நின்று |
– |
உண்டாக்கி |
கொன்று |
– |
(எதிரிகளைக்) கொன்று |
வெள்ளிசேர் மாரதர்க்கு |
– |
ஐயம்பெறுவதாக நினைத்திருந்த மஹாரதர்களான துர்யோதநாதிகளுக்கு |
வான் கொடுத்து |
– |
வீரஸ்வர்க்கத்தைக் கொடுத்து |
வையம் |
– |
பூமண்டலத்தை |
ஐவர் பாலது ஆம் |
– |
பஞ்சபாண்டவர்களுடையதாக அக்குவித்த |
சீர் மிகுந்த |
– |
புகழ் மிகுந்த |
நின் அலால் |
– |
உன்னைத்தவிர |
ஓர் தெய்வம் |
– |
மற்றொரு தெய்வத்தை |
நான் மதிப்பனே |
– |
நான் ஆதரிப்பேனோ! |
பார் மிகுத்த பாரம் முன்
முன் ஒரு காலத்தில் பூமியில் பாரமாக இருந்த துஷ்ட வர்க்கத்தை
ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று
பகலை இரவாக்கியும் போன்ற பல மாயங்களைச் செய்து எதிரிகளைக் கொன்று
வென்றி சேர் மாரதர்க்கு வான் கொடுத்து
வெற்றி பெறுவதற்காக நினைத்து இருந்த மகா ரதர்களான துரியோதானாதிகளை வீர ஸ்வர்க்கம் அனுப்பி
வையம் ஐவர் பாலதாம்
பூ மண்டலத்தை பஞ்ச பாண்டவர்களுக்கு ஆக்குவித்து அருளி
சீர் மிகுத்த நின் அலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே
அதி ரதர் -1-1000
மகா ரதர் -1- பல 1000
சம ரதர் -1-1-
அர்த்தரர் -1-தோற்று -இப்படி ரதர்கள் -நான்கு வகைகள் உண்டே
(மாரதர்க்கு.) அதிரதர், மஹாரதர் , ஸமரதர், அர்த்தரதர் எனத் தேர்வீரர் நால்வகைப்படுவர்;
அஸஹாயராய்த் தாம் ஒரு தேரின் மேலிருந்து தமது ரதகஜ துரகபதாதிகளுக்கு அழிவுவராமல் காத்துக்கொண்டு
பல்லாயிரம் தேர் வீரர்களோடு பொருது வெல்லும் வல்லமையுள்ளார் அதிரதர் என்றும்,
கீழ்சொன்னபடியே தாமிருந்து பதினோராயிரம் தேர்வீரரோடு பொருபவர் மஹாதரர் என்றும்,
ஒரு தேர்வீரரோடு தாமுமொருவராய் நின்று எதிர்க்கவல்லவர் ஸமரதர் என்றும்,
அங்ஙனமே பொருது தம் தேர் முதலியவற்றை இழந்துவிடுபவர் அர்த்தரதர் என்றும் சொல்லப்படுவர்.
இப்பாட்டில் மாரதர் என்றது மஹாரதர் என்றபடி,
போர்க்களத்திலே மடிந்த வீரர்கட்கு ஸ்வர்க்கம் கிடைப்பதாக சாஸ்திரம் கூறுவது பற்றி “மாரதர்க்கு வான் கொடுத்து” என்றார்.
தோற்றொழிந்த மாரதர்கட்கு வென்றிசேர் என்ற அடைமொழி தருமோவெனின்;
ஐயம் பெறுதற்கு யோக்யதையுடையவர்கள் என்று பொருளேயல்லது வெற்றிபெற்றவர்களென்று பொருளல்ல;
ஆகவே,வென்றிசேர்- ஐயமுண்டாவதாக நினைத்திருந்து- என்றதாயிற்று.
—————————
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன் –நாவிலும் என்றும் பட பேதம் -இங்கே
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின்
இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே –90-
பதவுரை
புனித |
– |
பரிசுத்தமான |
எம் ஈசனே |
– |
எம்பெருமானே! |
குலங்கள் ஆய ஈர் இரண்டில் |
– |
(ப்ராஹங்மணாதி) நான்கு வர்ணங்களுக்குள் |
ஒன்றிலும் ஒரு வர்ணத்திலும் |
||
பிறந்திலேன் |
– |
நான் பிறக்கவில்லை |
கலங்கள் ஆய நல்கலைகள் காலிலும் |
– |
(சேதநர்க்கு) நன்மையைக் காட்டுவதான நல்ல நான்கு வேதங்களிலும் |
நவின்றிலேன் |
– |
பயிற்சி செய்யவில்லை; |
புலன்கள் ஐந்தும் |
– |
பஞ்சேந்திரியங்களையும் |
வென்றிலேன் |
– |
ஜயிக்கவில்லை. |
பொறியிலேன் |
– |
பச்தாகி விஷயங்களில் அகப்பட்டிருக்கிறேன்; (ஆனபின்பு) |
நின் |
– |
உன்னுடைய |
இலங்கு பாதம் அன்றி |
– |
ஒளிமிக்க திருவடிகளைத் தவிர |
மற்று ஓர் பற்று இலேன் |
– |
வேறொரு ஆச்ரயத்தை யுடையேனல்லேன் |
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நான்கு வர்ணங்களில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன் —
நான்கு வேதங்களையும் நவின்றிலேன்
நாவிலும் என்றும் பட பேதம் -இங்கே
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன்
சப்தாதி விஷயங்களிலே அகப்பட்டு இருக்கிறேன்
புனித நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே –
இலங்கு ஒளி மிக்க
முன் பாசுரத்தில் அநந்ய கதித்வம் சொல்லி இதில் ஆகிஞ்சன்யம் அருளுகிறார்
உபாயமும் உபேயமும் அவன் திருவடிகள் தான் என்கிறார் –
அநந்ய கதித்வமும் ஆகிஞ்சன்யமும் சொல்லி உபாயாந்தரங்கள் அனுஷ்ட்டிக்க அயோக்யனாய் இருந்து
உன் திருவடிகளே உபாயம் என்கிற அத்யாவசாயம் மாத்திரம் குறைவற்று இரா நின்றேன் என்கிறார் –
கீழ்ப்பாட்டுக்களில், தாம் வேறுகதியற்றவர் என்னுமிடத்தை வெளியிட்டதுபோல
இப்பாட்டில் வேறு உபாயமொன்றுமில்லாகையை வெளியிட்டருள்கிறார்.
ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமுமாக இரண்டு முண்டாக வேணுமே;
அவற்றுள் அநந்யகதித்வ முண்டானமை கீழே சொல்லிற்றாயிற்று.
ஆகிஞ்சந்யஞ் சொல்லுகிறது இதில்.
ஆக இரண்டாலும். உபாயமும் உபேயமும் எம்பெருமானே என்றதாகிறது.
ப்ரஹ்ம க்ஷத்ரிய வைச்ய சூத்ரரூபமான நான்கு வருணங்களுள் ஒரு வருணத்திலும் ஜகிக்கப் பெற்றிலேன்;
சேதநர்களுடைய அதிகாரங்கட்கும் குணங்கட்கும் தக்கபடி ப்ரியஹிதங்களை விதிக்கும்
விலக்ஷணமான சாஸ்த்ரங்களையும் அதிகரிக்கப் பெற்றிலேன்;
இந்திரியங்கள் என்னைத் தம் வசமாகப் பிடித்திழுத்துக் கொண்டுபோக
நான் அவையிட்ட வழக்காய்த் திரிந்தொழிந்தேனே யொழிய
அவற்றிலே ஓர் இந்திரியத்தையும் சிக்ஷிக்க ஸமர்த்தனாகப்பெற்றிலேன்;
ஆகவே சப்தாதி விஷயப்ரவணனாய்ப் போந்தேன்;
ஆகையாலே ஒருவித உபாயமும் அநுஷ்டிக்கைக்கு அயோக்யனாயிருந்தேனெனும்
“உன் திருவடிகளே உபாயம்” என்ற அத்யவஸாயம் மாத்திரம் குறைய்றறரா நின்றது என்கிறார்.
————————————
பண்ணுலாவு மென் மொழி படைத்தடம் காணாள் பொருட்டு
எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
கண்ணலாலோர் கண்ணிலேன் கலந்த சுற்றம் மற்றிலேன்
எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே -91-
பதவுரை
பண் உலாவும் மென்மொழி |
– |
(குறிஞ்சி காந்தாரம் காமரம் முதலிய) ராகங்கள் விளங்குகின்ற இனிய பேச்சை யுடையவளும் |
படை தடம்கணாள் பொருட்டு |
– |
வாள் போன்று பெரிய கண்களையுடையவளுமான பிராட்டிக்காக |
எண் இலா அரக்கரை |
– |
கணக்கிலாத ராக்ஷஸரை |
நெருப்பினால் |
– |
அம்புகளின் தீயினால் |
நெருக்கினாய் |
– |
தொலைத்தருளினவனே! |
கண் அலால் |
– |
(எனக்கு நீ) நிர்வாஹகனேயொழிய |
ஓர் கண் இலேன் |
– |
வேறொரு நிர்வாஹகனே காணுடையேனல்லேன்; |
கலந்த சுற்றும்மற்று இலேன் |
– |
நெஞ்சு பொருந்தின உறவும் வேறில்லை; |
எண் இலாத மாய! |
– |
அநந்தமான ஆச்சரிய சக்தியையுடையவனே! |
நின்னை |
– |
உன்னை |
என்றும் |
– |
எக்காலத்திலும் |
என்னுள் நீக்கல் |
– |
என்னைவிட்டுப் ப்ரிக்கவே கூடாது. |
பண்ணுலாவு மென் மொழி
ராகங்கள் -குறிஞ்சி காந்தாரம் காமாரம் விளங்கும் இனிய பேட்சு உடையவள்
படைத்தடம் காணாள் பொருட்டு
வாள் போன்ற பெரிய கண் உடைய பிராட்டியின் பொருட்டு
எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
அம்புகளின் தீயால் தொலைத்து அருளினாய்
கண்ணலாலோர் கண்ணிலேன்
நீயே தான் நிர்வாஹகன் -வேறு நிர்வாஹகன் யாரும் இல்லை
கலந்த சுற்றம் மற்றிலேன்
நெஞ்சு பொருந்தின சுற்றம் வேறு இல்லை
எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே
அநந்தமான ஆச்சர்ய சக்தி உடையவனே உன்னை எக்காலத்திலும் என்னை விட்டுப் பிரிக்கக் கூடாது -என்கிறார் –
——————————
விடைக்குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேற் கண் மாதரார்
கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாயா வேலை நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின் தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே –-92-
பதவுரை
வேலை நீர் |
– |
ஜலதத்துவமாகிய கடலை |
படைத்து |
– |
(முதல்முதலாக) ஸ்ருஷ்டித்தும் |
அடைத்து |
– |
(ஸ்ரீராமாவதாரத்திலே அக்கடலில்) அணைகட்டியும்; |
அதில் கிடந்து |
– |
(தங்கள் தங்கள் ஆபத்தை முறையிட்டுக் கொள்வார்க்கு முகங்கொடுக்க) அக்கடலில் பள்ளிகொண்டளியும் |
முன் |
– |
முன்னொருகாலத்திலே |
கநைடபுது |
– |
(தேவதைகளுக்காக அதைக்) கடைந்தும் (இப்படியெல்லாம் செய்தது மல்லாமல்) |
ஏழ்விடை குலங்கள் |
– |
நாநாவர்ணமான ஏழு ரிஷபங்களையும் |
அடர்ந்து |
– |
கொழுப்படக்கி |
வென்றிவேல் மண்மாதரர் |
– |
ஜயசீலமான வேல்போன்ற கண்ககளையுடையளான நப்பின்னைப் பிராட்டியினுடைய |
கடி கலந்த |
– |
பரிமளம் மிக்க திருத்தோளோடே |
புணர்ந்த |
– |
ஸம்ச்லேஷித்த |
காலி ஆய |
– |
கோபாலகிருஷ்ணனே! |
நின் தனக்கு |
– |
உன் பக்கலிலே |
அடைக்கலம் புகுந்த என்னை |
– |
சரணம் புகுந்த என்னை நோக்கி |
அஞ்சல் என்ன வேண்டும் |
– |
“பயப்படாதே” என்றொரு வார்த்தை யருளிச்செய்ய வேணும். |
விடைக்குலங்கள் ஏழு அடர்த்து
ஏழு ரிஷபங்களையும் கொழுப்பை அடக்கி
வென்றி வேற் கண் மாதரார்
ஜெயசீலமான வேல் போன்ற கண்கள் உடைய நப்பின்னை பிராட்டி உடைய
கடிக் கலந்த தோள் புணர்ந்த
பரிமளம் மிக்க தோள்களுடன் சம்ஸ்லேஷித்த
காலி யாயா
கோபால கிருஷ்ணனாக
வேலை நீர் படைத்து
ஜல தத்வமான கடலை சிருஷ்டித்து
அடைத்து
ஸ்ரீ ராமாவதாரத்திலே அணை கட்டி அடைத்து
அதில் கிடந்து
தங்கள் ஆபத்தை சொல்லி முறை இட ஹேது வாக அதிலே பள்ளி கொண்டு அருளி
முன் கடைந்த நின் தனக்கு அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே
எனக்கும் மாஸுசா என்று அருளிச் செய்ய வேணும்-
ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு அபயப்ரதாநம் செய்தருளினாற் போலவும்
அர்ஜுநனை நோக்கி “மாசுச:” என்றாற்போலவும்
அடியேனை நோக்கி அஞ்சேல் என்றருளிச் செய்யவேணும் பிரானே! என்கிறார்.
“முன்கடைந்த நின்றனக்கு” என்றும் பாடமுண்டு.
அஞ்சல்- எதிர்மறை வினைமுற்று.
—————————
சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே-93-
பதவுரை
கரும்பு இருந்த கட்டியே |
– |
கருப்பங் கட்டிபோலே பரம போக்யனாயிருந்தவனே! |
கடல் கிடந்த கண்ணனே |
– |
திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளும் ஸுலபனே! |
இரும்பு |
– |
இரும்புபோல் வலிய ராக்ஷஸசரீரங்கள் |
அரங்க |
– |
அழியும்படி |
வெம்சரம் |
– |
தீக்ஷ்ணமான அம்புகளை |
துரந்த |
– |
பிரயோகித்த |
வில் |
– |
ஸ்ரீசார்ங்கவில்லையுடையவனே! |
இராமனே |
– |
இராமபிரானே! |
அரங்கம் வாணனே |
– |
கோயிலில் வாழ்பவனே |
கரும்பு |
– |
வண்டுகளானவை |
அரங்கு |
– |
படிந்திருக்கபெற்ற |
தண் துழாய் |
– |
குளிர்ந்த திருத்துழாய் |
துதைத்து |
– |
நெருங்கி |
அலர்ந்த |
– |
விசுஸித்திருக்கப்பெற்ற |
பாதமே |
– |
(உனது) திருவடிகளையே |
விரும்பி நின்று |
– |
ஸ்வயம்ப்ரயோஜகமாக ஆசைப்பட்டு |
இறைஞ்சு வேற்கு |
– |
தொழுகின்ற அடியேன் பக்கல் |
இரங்கு |
– |
க்ருபைபண்ணியருள். |
சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
வண்டுகள் படிந்த குளிர்ந்த திரு துழாய்
துகைத்து அலர்ந்த பாதமாய் –
நெருங்கி விகசிக்க பெற்ற உனது திருவடிகளையே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே -கரும்பு இருந்த கட்டியே -கடல் கிடந்த கண்ணனே-
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே
இரும்பு போன்ற ராஷச சரீரங்கள் அழியும் படி
அஞ்சேல் என்று மட்டும் அருளினால் போராது-உனது திருவடியில் நித்ய கைங்கர்யம் பண்ணும் அனுபவம்
தந்து அருள வேண்டும் என்கிறார்-
கீழ்ப்பாட்டில் “அஞ்சலென்னவேண்டுமே” என்று அபயப்ரதாநமாத்ரத்தை வேண்டினாயினும்
அவ்வளவினால் த்ருப்திபெறக் கூடியவரல்லரே;
பெரியபெருமாள் திருவடிகளிலே நித்யாநுபவம் அபேக்ஷிதமாயிருக்குமே;
அவ்வநுபவம் வாய்க்குமாறு கிருபை செய்தருளவேணுமென்கிறார் இதில்.
“நான்காமடியில், இரும்பு போல் வலியநெஞ்சினரான அரக்காக என்ன வேண்டு மிடத்து
இரும்பு என்று அபேதமாகச் சொன்னது ரூபகாதிரயோக்தியாம்.
அரங்குதல்- (இங்கு) அழிதல்.
———————
ஊனின் மேய வாவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ யவற்றின் நின்ற தூய்மை நீ
வானினொடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ
யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே –94-
பதவுரை
இராமனே |
– |
இராமபிரானே! |
ஊனில் மேய ஆவி நீ |
– |
சரீரத்திலே பொருந்தியிருக்கின்ற பிராணன் நீயிட்ட வழக்கு |
உற்றமோடு உணர்ச்சி நீ |
– |
ஜ்ஞாநமும் அஜ்ஞானமும் நீ விட்ட வழக்கு. |
ஆனில் மேய ஐந்தும் நீ |
– |
பசுக்களிடத்து உண்டான பஞ்சகவ்யமும் நீ; |
அவற்றுள் நின்ற தூய்மை நீ |
– |
அப்பஞ்ச கவ்யங்களுக்குள்ள பரிசுத்தியும் நீ ஸங்கல்பித்தது; |
வானினோடு மண்ணும் நீ |
– |
நித்ய விபூதி லீலா விபூதியென்ற உபய விபூதியும் நீயிட்ட வழக்கும் |
வளம் கடல் பயனும் நீ |
– |
அழகிய ஸமுத்திரத்திலுண்டான (அம்ருதம் ரத்னம் முலான) பிரயோஜனங்களும் நீ; |
யானும் நீ |
– |
அடியேனு“ உன் அதீகன்; |
அது அன்றி |
– |
இப்படி பலவாறு பிரித்துச் சொல்வதல்லாமல் |
எம்பிரானும் நீ |
– |
ஸர்வேச்வரனும் நீ காண். |
ஊனின் மேய வாவி நீ-
சரீரத்தில் உள்ள பிராணன் நீ இட்ட வழக்கு
உறக்கமோடு உணர்ச்சி நீ
ஜ்ஞானமும் அஜ்ஞ்ஞானமும் நீ இட்ட வழக்கு
ஆனில் மேய ஐந்தும் நீ
பசுவின் பஞ்ச கவ்யமும் நீ
யவற்றின் நின்ற தூய்மை நீ வானினொடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே
அவன் சர்வ பிரகாரி -கடல் அமுதம் தேவர்களுக்கு தந்தது போலே ரத்னம் போன்றவற்றை ஐஸ்வர் யார்த்திகளுக்கும் தருகிறாய்
வானினொடு மண்ணும் நீ -என்றது –
ஆகாசத்தில் பல பல தேவதைகள் ஏங்குவதும் நீரிலே கரையாமல் பூ லோகம் இருப்பதும் உன்னாலே தான்
யானும் நீ என்றது –
எனக்கு உன் பக்கல் ருசி பிறவாத காலத்திலும் எனக்கு நல்ல மதி அளித்து ருசியை பெருக்கினதும் நீ தான் என்கிறார்
எம்பெருமான் ஸர்வப்ரகாரி என்னுமிடத்தை யருளிச்செய்கிறார்.
உறக்கமோடு உணர்ச்சி நீ = தமோகுணத்தின் காரியமான உறக்கமும்
ஸத்வகுணத்தின் காரியமான புத்திய விகாஸமும் நீயிட்ட வழக்கு;
சிலர் விஷயாந்தா ப்ரவணராய் அறிவுகேடராய்க் கிடப்பதும்,
சிலர் உன்பாதமே பரவிப்பணிந்து கிடப்பதுமெல்லாம் நீ. ஸங்கல்பிக்கும் வகைகளேயா மென்றவாறு.
வளங்கடற்பயனும்நீ = சிறந்த கடலிலுள்ள பயன்- அம்ருதம் ரத்னம் முதலியவை; அவையும் உன் ஸங்கல்பாதீநமென்றபடி,
பிரயோஜநாந்தா, பரர்களான தேவர்களுக்குக் கடலினின்றும் அமுதமாகிற பிரயோஜநரந்தரத்தை யெடுத்துக் கொடுத்தருளினதுபோல்
மற்றுள்ள பிரயோஜநாந்தர பரர்கட்கும் நீயே அப்பிரயோஜகங்களை அளிக்கவல்லை என்பது உட்கருத்தாம்.
(ஆனின்மேய இத்யாதி.) சுத்தியை வினைக்கக்கூடிய பதார்த்தங்களுள் முதன்மையாகக் கூறப்படுகிற பஞ்சகவ்யமும்,
அவற்றிலுண்டான பரிசுத்தியும் உனது ஸங்கல்பத்தினாலாயது.
ஊனின்மேய ஆலிநீ என்றது – சரீரம் நின்றிருப்பதும் நசித்துப் போவதும் உன்னுடைய இச்சா தீநமென்றபடி.
வானினோடு மண்ணும் நீ என்றது- ஆலம்பநமற்ற ஆகாசத்திலே பலபல தேவதைகள் ஸஞ்சரிக்கிறதும்,
நீரிலேகிடக்கிற பூமியானது கரையாமல் ஸகலத்துக்கும் ஆதாரமாயிருப்பதும் உன்னாலே என்றபடி,
யானும் நீ என்றது- எனக்கு உன்பக்கல் ருசி பிறவாதகாலத்திலும் எனக்கு நல்லமதியை யளித்து ருசியைப் பெருக்கினதும் நீயென்றபடி.
———————
அடக்கரும் புலன்கள் ஐந்தும் அடக்கி யாசையாம் யவை
துடக்கு அறுத்து வந்து நின் தொழில் கண் நின்ற வென்னை நீ
விடக்கருதி மெய் செயாதே மிக்கோர் யாசை யாக்கிலும்
கடல் கிடந்த நின்னலாலோர் கண் இலேன் எம் அண்ணலே -95-
பதவுரை
எம் அண்ணலே! |
– |
எம்பெருமானே! |
அடக்க அரு |
– |
அடக்க முடியாத |
ஐந்து புலன்கள் |
– |
பஞ்சேந்திரியங்களை |
அடக்கி |
– |
பட்டிமேயாதபடி நியமித்து |
ஆசை அரும் அவை |
– |
விஷயந்தரப் பற்றுக்களை |
துடக்கு அறுத்து வந்து |
– |
ஸவாஸகமாகத் தொல்லைத்து விட்டு வந்து |
நின் தொழில் கண் |
– |
உன் கைங்கரியத்திலே |
நின்ற |
– |
நிஷ்டனாயிருக்கிற |
என்னை |
– |
அடையேனே |
நீ |
||
இவ்வளவு ஆளாக்கின நீ |
||
விட கருதி |
– |
உபேக்ஷிக்கத் திருவள்ளம்பற்றி |
மெய் செயாது |
– |
என் உஜ்ஜீவநார்த்தமான க்ருஷியை மெய்யாக நடத்தாமல் |
மிக்க ஓர் ஆசை ஆக்கிலும் |
– |
விஷயாந்தரப்ராவண்யத்தை அதிகரிப்பித்தாலும் |
கடல் கிடந்த நின் அலால் |
– |
க்ஷீரஸாகர சாயியான உன்னையல்லது |
ஓர் கண் இலேன் |
– |
வேறொரு ஸ்வாமியையுடைய னல்லேன். |
என்னை நெகிழ்கிலும் என்னுடைய நல் நெஞ்சம் தன்னை அகல்விக்க தானும் இங்கிலன் போலே
நீ எது செய்தாலும்-ஒரு கால் கை விட்டாலும் – என் மனம் உன்னை விட்டு போகாது
மெய் செயாது -என்னை உஜ்ஜீவிப்பிக்க திரு உள்ளம் பற்றி தொடங்கின கிருஷிகளை
மெய்யாகத் தலைக் காட்டாமல் -என்கை-
புறப்பண்டான விஷயங்களில் விருப்பத்தை விலக்கி உன்னளவில் அபிநிவேசத்தைப் பிறப்பித்து
கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கும்படி அடியேனை இவ்வளவு நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்த நீ
தானே என்னை உபேக்ஷித்து விஷயாந்தர ப்ரவணானகக் கெட்டுப்போகும்படி ஒருகால் கைவிட்டபோதிலும்
உன்னையொழிய வேறொரு கதி இல்லை யெனக்கு என்று தம்முடைய அத்யவ ஸாயத்தை அருளிச்செய்கிறார்.
ஆசார்யனுடைய நல்ல உபதேசங்களைக்கொண்டும் சாஸ்த்ர பரிசயத்தைக் கொண்டும்
இந்திரியங்களை அடக்கப்பார்த்தால் அடக்கமுடியாத இவ்விந்திரியங்களை
உன் திவ்யமங்கள விக்ரஹவலக்ஷண்யத்தைக் காட்டி ஈடுபடுத்தி விஷயாந்தாங்களில் போகாதபடி தகைந்து
புருஷார்த்தங்களின் மேலெல்லையாகிய கைங்கர்ய ப்ரார்த்தனையிலேயே நிலைநிற்கும்படி
உன் திருவருளுக்குப் பாத்திரமாøகி நின்ற என்னை நீ உபேக்ஷிப்பதாகத் திருவுள்ளம்பற்றி
எனது உஜ்ஜீவ நக்குஷியை முட்டமுடியா நடத்தாமல் இன்னும் விஷயாந்தரங்களிலேயே ருசியைப் பிறப்பித்து
உன்னைவிட்டு நீங்கும்படி நீ செய்தாயாகிலும் என் மனம் உன்னைவிட்டு நீங்காது என்றவாறு.
“என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சந்தன்னை அகல்விக்க தானுங் கில்லாணினி” என்ற நம்மாழ்வாரைப்போல அருளிச் செய்கிறபடி.
மெய்செயாது- என்னை உஜ்ஜிவிப்பிக்க வேணுமென்ற திருவுள்ளத்துடன் தொடங்கின க்ருஷிகளை மெய்யாகத் தலைகாட்டாமல் என்கை.
——————
வரம்பிலாத மாயமாயா வையம் ஏழும் மெய்ம்மையே
வரம்பிலூழி யேத்திலும் வரம்பிலாத கீர்த்தியாய்
வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல்
பொருந்துமாறு திருந்த நீ வரம் செய் புண்டரீகனே–96-
பதவுரை
வரம்பு இலாத மாய |
– |
அளவிறந்த ஸ்வரூபத்தையுடைய பிரகிருதிதத்துவத்தை ஸ்வாதீகமாகவுடையவனே |
மாய! |
– |
ஆச்சரியசக்தியுக்தனே! |
வையம் எழும் |
– |
ஏழுலகத்திலுமுள்ள ஜனங்களும் (கூடி) |
மெய்ம்மையே |
– |
மெய்யாகவே |
வரம்பு இல் ஊழி |
– |
பலபல கற்பகங்கள் வரையிலும் |
ஏத்திலும் |
– |
தோத்திரம் பண்ணினாலும் |
வரம்பு இலாத கீர்த்தியாய் |
– |
எல்லைகாண முடியாத புகழையுடையோனே! |
புண்டரீகனே |
– |
புண்டரீகாக்ஷனே! (அடியேன்) |
வரம்பு இலாயா |
– |
முடிவில்லாமல் நேரக்கூடியவனான |
பல் பிறப்பு |
– |
பற்பல ஜன்மங்களை |
அறுத்து |
– |
இன்றோடு முடித்துவிட்டு |
நின் கழல் வந்து |
– |
உனது திருவடிகளைக் கிட்டி |
பொருந்தும் ஆ |
– |
அவற்றிலேயே ஸக்தனாயிருக்கும்படி |
திருந்த |
– |
நன்றாக |
நீ வரம் செய் |
– |
அநுக்ரஹித்தருள வேணும் |
வரம்பிலாத மாயமாயா வையம் ஏழும் மெய்ம்மையே வரம்பிலூழி யேத்திலும்
பல பல கல்பங்கள் ஸ்தோத்ரம் பண்ணினாலும்
வரம்பிலாத கீர்த்தியாய்
எல்லை காண முடியாத புகழ் உடையோனாய்
வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் பொருந்துமாறு
உனது திருவடிகள் கிட்டி அவற்றிலே சக்தனாய் இருக்கும் படி
திருந்த நீ வரம் செய் புண்டரீகனே
தம்முடைய பிராப்யத்தை ஸ்பஷ்டமாக பிரார்த்திக்கிறார்-
அஞ்சல் என்ன வேண்டுமே -இரங்கு அரங்க வாணனே-என்று பொதுப்பட அருளிச் செய்ததை
விவரியா நின்று கொண்டு
சம்சாரத்தை வேர் அறுத்து உன் திருவடிகளில் பொருந்தும்படி அனுக்ரஹம் பண்ணி அருள வேணும் –
என்று ப்ராப்ய நிஷ்கர்ஷம் இதில் –
“அஞ்சலென்னவேண்டுமே” என்றும்
“இரங்கு அரங்கவாணனே!” என்றும் பொதுப்பட அருளிச்செய்ததை விவரியாநின்றுகொண்டு,
“ஸம்ஸாரத்தை வேரறுத்து உன் திருவடிகளிலே பொருந்தும்படியாக அநுக்ரஹம் பண்ணியருளவேணும்” என்று
தம்முடைய ப்ராப்யத்தை ஸ்பஷ்டமாகப் பிரார்த்திக்கிறார்.
———————
வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க்
கைய ! செய்ய போதில் மாது சேரு மார்பா !நாதனே !
ஐயிலாய வாக்கை நோய் அறுத்து வந்து நின்னடைந்து
உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே -97-
பதவுரை
வெய்ய ஆழி |
– |
(எதிரிகள்மேல்) தீக்ஷ்ணமான திருவாழியையும் |
சங்கு தண்டு வில்லும் வாளும் |
– |
திருசங்கையும் கதையையும் ஸ்ரீசார்ங்கத்தையும் நந்தகவாளையும் |
சேரும் மார்ப |
– |
நித்யவானம் பண்ணுகிற திருமார்பையுடைவனே! |
நாதனே |
– |
ஸர்வஸ்வாமியே! |
ஐயில் ஆய ஆக்கை நோய் |
– |
சிலேஷ்யம் முதலியவற்றுக்கு இருப்பிடமாகிய சரீரமாகிய வியாதியை |
ஏந்து சீர் கைய! |
– |
தரித்துக் கொண்டிருக்கிற அழகிய திருக்கைளையுடையவனே |
செய்யபோதில் மாது |
– |
செந்தாமரை மலரில் பிறந்த பிராட்டி |
அறுத்து வந்து |
– |
தொலைத்து வந்து |
நின் அடைந்து |
– |
உன்னை அடைந்து |
உய்வது ஓர் உபாயம் |
– |
நான் உஜ்ஜீவிக்கும்படியானவொரு உபாயத்தை |
எனக்கு |
– |
அடியேனுக்கு |
நீ நல்கவேண்டும் |
– |
அருள வேணும். |
ஐயிலாய வாக்கை நோய்-ஸ்லேஷ்யம் முதலியவற்றுக்கு இருப்பிடமாகிய சரீரம் என்கிற வியாதியை
——————————
மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம் புலன்கள் ஆசையும்
துறந்து நின் கண் ஆசையே தொடர்ந்து நின்ற நாயினேன்
பிறந்து இறந்து பேர் இடர் சுழிக் கண் நின்று நீங்குமா
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே -98-
பதவுரை
மாய! |
– |
ஆச்சரிய சக்தி யுக்தனான பெருமானே! |
மறம் துறந்து |
– |
கோபத்தை ஒழித்து |
வஞ்சம் மாற்றி |
– |
கன்னங்சுவடுகளைத் தவிர்த்து |
ஐம்புலன்கள் ஆசையும் துறந்து |
– |
பஞ்சேந்த்ரியங்களினுடைய விஷயாந்தரப் பற்றையும் ஒழித்து |
நின் கண் |
– |
உன் பக்கலில் |
ஆசையே தொடர்ந்து நின்ற காயினேன் |
– |
பக்தியே மேன்மேலும் பெருகி வரப்பெற்ற அடியேன் |
பிறந்து இறந்து |
– |
பிறப்பது இறப்பதுமான விகாரங்களையடைந்து கொண்டு |
பேர் இடர் கழிக்கண் நின்றும் |
– |
மஹாதுக்க மண்டலான ஸம்ஸுரத்தில் நின்றும் |
நீக்கும் ஆ |
– |
நீங்கும் பிரகாரத்தையும் |
மற்று |
– |
அதற்கு மேற்பட்டுப் பரமாநந்த மடையும் பிரகாரத்தையும் |
எனக்கு |
– |
அடியேனுக்கு |
மறந்திடாது |
– |
மறவாமல் |
கல்க வேண்டும் |
– |
அருளவேணும் |
மறம் துறந்து -கோபத்தை ஒழித்து
நீங்குமா– நீங்குமா ஆ -வழியையும்
நீங்கும் ஆ மற்று–நீங்கும் பிரகாரத்தையும் அதற்கு மேற்பட்ட பரம ஆனந்தம் அடையும் பிரகாரத்தையும்
இரண்டையும் மறந்திடாது எனக்கு மாய நல்க வேண்டுமே-
பிறர்க்கு ஒரு ஏற்றமிருந்தால் அதனை பொறுக்கமாட்டாமையும்
பிறர்க்குத் தீங்கு விளைவிப்பதையே சிந்திக்கையும் மறம் எனப்படும்.
அதனை யொழித்து, வஞ்கமாவது- அநுகூலன் போலத் தோற்றி முடிவில் பிரதிகூலனாய் நிற்றல்;
அதனையும் தொலைத்து, இந்திரியங்களுக்கு விஷயாந்தரங்களிலுண்டான ஆசையையும் அகற்றி
உன்பக்கல் ஆசையே மேன்மேலும் தொடர்ந்து பெரும்படியான நிலைமையிலேயே நின்ற அடியேன்,
பிறப்பதும் இறப்பதுமான மஹா துக்கசக்கரத்தில் நின்றும் நீங்கும் விதத்தையும்
அதற்குப் பிறகு ப்ராப்தமாகக் கூடிய பரமாநந்த ஸாம்ராஜ்யத்தையும் நீயே தந்தருளவேணும்.
மற்று என்பதை அசைச்சொல்லாகக் கொண்டு,
பேரிடர் சுழிக்கணின்று நீங்குதலை மாத்திரமே பிரார்த்திக்கின்றா ரென்னவுமாம்.
—————————————
காட்டி நான் செய் வல் வினைப் பயன்தனால் மனம் தனை
நாட்டி வைத்து நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக்
கேட்டதன்றி என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே -99-
பதவுரை
பூவை வண்ணனே |
– |
காயாம்பூப்போன்ற நிறமுடையவனே! |
பின்னைகேள்வ! |
– |
! நப்பின்னைப் பிராட்டிக்கு நாதனே |
(யமகிங்கர ரானவர்கள்) |
|
|
நான் செய் வல்வினை காட்டி |
– |
நான் செய்த பிரபலமான பாவங்களை எனக்கு ஞாபகப்படுத்தி |
பயன் தனில் |
– |
அப்பாவங்களின் பலன்களை அநுபவிப்பதில் |
மனம் தனை |
– |
எனது மநஸ்ஸை |
நாட்டி வைத்து |
– |
துணியும்படி செய்வித்த |
நல்ல அல்ல |
– |
அஸஹ்ரயமான ஹிம்ஸைகளை |
செய்ய எண்ணினார் |
– |
செய்ய நினைத்திருக்கிறார்கள் |
என கேட்டது அன்றி |
– |
என்று நான் கேட்டிருக்கிற படியாகையாமைக்காக |
உன்னது ஆவி |
– |
என்னுடைய ஆத்மாவை |
நின்னொடும் பூட்டிவைத்த என்னை |
– |
உன் பக்கலில் ஸமர்ப்பித்து நீர்ப்பரனாயிருக்கி என்னை |
காட்டி நான் செய் வல் வினை-
நான் செய்யும் பெரிய பாபங்களை எனக்கு நினைவு படுத்தி
பயன்தனால் மனம் தனை நாட்டி வைத்து
அந்த பாபங்களின் பயன்களை அனுபவிப்பதில் மனசை செலுத்தி
நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக
ஹிம்சைகளை செய்ய நினைத்து இருக்கிறார்கள் என்று
கேட்டதன்றி
நான் கேட்டு இருக்கிற படி யாமைக்காக
என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும் பூட்டி வைத்த வென்னை
என்னுடைய ஆத்மாவை உன் பக்கலில் சமர்ப்பித்து நிர்ப்பரனாய் இருக்கும் என்னை-
நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே
உன்னை விட்டுப் பிரித்திட வேண்டாம்-
நான் கணக்கு வழக்கில்லாதபடி செய்திருக்கும் பாவங்களுக்குப் பலன் அனுபவித்தே தீரவேண்டியதாகும்;
நான் செய்த பாவங்கள் இவ்வுலகத்தில் அந்தந்த க்ஷணங்களில் அழிந்துபோய்விட்டாலும்
அவற்றை நான் மறந்தொழிந்தாலும் பாபபலன்களை ஊட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள யமகிங்கரர்கள்
என்னுடைய ஒவ்வொரு பாவத்தையும் எடுத்தெடுத்துக்கூறி
‘இவற்றின் பலனை அநுபவித்தே தீரவேணும்’ என்று வற்புறுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்களென்பதை
நான் பெரியோர் முகமாகவும், சாஸ்திரமுகமாகவும் கேட்டிருக்கிறேன்;
அப்படிப்பட்ட பயங்கராமன யமகிங்கரயாதனைகள் அடியேனுக்கு நேரக்கூடாதென்று ஏற்கனவே
தேவரீர்பக்கல் ஆத்மஸமர்ப்பணம் பண்ணியிருக்கிறேன்;
இவ்வடியேனை அந்த ரங்கபூதனாக தேவரீர் திருவுள்ளத்தில் கூட்டிக்கொண்டருளினால்
*** என்றபடி அந்த நரகவேதனைகட்கு ஆளாகதொழியலாம்;
ஆகையாலே தேவரீர் அடியேனை அவிநாபூதனாகக் கொண்டருள வேணும் என்று பிரார்த்திகிறார்.
செய்யவெண்ணினார் என்ற வினைமுற்றுக்கு ஏற்ப “நமன் தீமர்” என்ற எழுவாய் வருவித்துக் கொள்ளவேணும்.
என்றைக்கோ செய்து முடிந்துபோன வல்வினைகளைக் காட்டுவதாவது- நினைப்பூட்டுகை;
இன்ன இன்ன பாவங்களைச் செய்தாயென்று தெரிவித்தல்
“பயன்றனால்” என்பதும் சிலருடைய பாடம்.
பயன்றனில் மனந்தனை நாட்டி வைக்கயாவது – பிறரை வஞ்சித்து ஏகாந்தாமகப் பாவங்களைச் செய்து தீர்த்தோம்;
அவற்றின் பலன்களை இப்போது அநுபவித்தே தீர வேண்டும்;
இப்போது யமபடர்களை வஞ்சிக்க முடியாது என்று தீர்மானித்துக் கொள்ளுகை.
யமபடர் செய்யக்கூடிய ஹிம்ஸைகளின் கொடுமையை நினைத்து இன்ன ஹிம்ஸையென்று சொல்ல அஞ்சி
நல்ல அல்ல என்று பொதுவிலே அருளிச் செய்கிறார்: நல்லதாகாத செயல்களையென்கிறார்.
—————————
பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே -100-
பதவுரை
பெறற்கு அரிய மாயனே |
– |
(ஒருவர்க்கும் ஸ்வயத்தக்கதாலே பெறுவதற்கு முடியாத எம்பெருமானே! |
பிறப்பினோடு பேர் இடர் கழிக்கன் நின்றும் |
– |
பிறப்பு முதலிய பெருப்பெருத்த துக்கங்களை நினைக்கின்ற ஸம்ஸாரத்தில் நின்றும் |
நீங்கும் அஃது |
– |
நீங்குவதற் குறும்பான தத்வ ஹிதரங்கள் |
இறப்ப வைத்த |
– |
மறந்தொழிந்த |
ஞான நீசரை |
– |
ஸர்வஜ்ஞராகத் தங்களை நினைத்துக்கொண்டிருக்கிற நீசர்களை |
கரை கொடு |
– |
ஏற்றம் ஆ |
கரையிலே கொண்டு சேர்க்கும்படியாக |
||
பெறற்கு அரிய |
– |
துர்லபமான |
சின்ன பாதம் பத்தி ஆன |
– |
உன் திருவடிகளில் பக்தியாகிற |
பாசனம் |
– |
மரக்கல (ஓட) த்தை |
எனக்கு நல்க வேண்டும் |
– |
அடியேனுக்கு அருளவேணும். |
பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது இறப்ப வைத்த -மறந்து ஒழிந்த
ஞான நீசரைக் -சர்வஜ்ஞ்ஞராக நினைந்து கொண்டு இருக்கும் நீசரை
கரைக்கொடு ஏற்றமா-கரையில் கொண்டு சேர்க்கும் படியாக
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்-மரக் கலம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே-
‘என்னை நின்னுள் நீக்கல்’ என்ற ஆழ்வாரை நோக்கி
எம்பெருமான் ‘ஆழ்வீர்! அவிச்சிந்நமான திவ்ய ஸம்ச்லெஷத்தைப் பிரார்த்திக்கின்றீரே;
அது பெறவேணுமானால் நீர் பரமபக்தியோடு கூடியிருக்க வேணுமே’ என்ன;
அப்படிப்பட்ட பரமபக்தியையும் நீயே தந்தருளவேணுமென்று இரக்கிறார்.
தேவரீருடைய பாதாரவிந்தத்திலே பக்தியுண்டாவது ஸாமாந்யமல்ல;
அஃது அனைவர்க்கும் எளிதில் பெறுதற்கு அரிது;
அதனை அடியேனுக்கு நிர்ஹேதுகக்குபையினால் தந்தருளவேணுமென்று பின்னடிகளில் பிரார்த்திக்கிறார்.
அப்படிப்படட் பக்தி அடியேனுக்கு தேவரீர் அருளினால் அஃது என்னொருவனுடைய உஜ்ஜீவநத்துக்கு மாத்திரம் உபயுக்தமாகாது;
அதனைக்கொண்டு பல நீசர்களை நான் கரையேற்றப் பார்ப்பேனென்கிறார் முன்னடிகளில்.
——————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply