ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தோடு இம்பராய்
மாய மாய மாயை கொல் அதன்றி நீ வகுத்தலும்
மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே –41-
பதவுரை
மாய ! |
– |
ஆச்சரியபூதனே. (நீ) |
அயன் ஆகி |
– |
இடப்பிள்ளையாய்ப் பிறந்து |
ஆயர் மங்கை |
– |
இடைப்பெண்ணான நப்பின்னைப்பிராட்டியினுடைய |
வேய தோள் |
– |
வேய்போன்ற தோள்களை |
விரும்பினாய் விரும்பிப் புணர்ந்தாய்; |
||
அம்பரத்தோடு இம்பராய் |
– |
மேலுலகத்தவர்களும் இவ்வுலகத்தவர்களுமா யுள்ளவர்களில் |
யாவர் |
– |
யார்தான் |
நின்னை ஆயவல்லர் |
– |
உன் ஸ்வரூபத்தை ஆராய்ந்து அறியவல்லர்? (யாரும் அறிய கில்லார்.) |
மாயம் மாயை கொல்! |
– |
(இப்படி அறியமாட்டாதது) பிரகிருதியைப் பற்றின அஜ்ஞாகத்தலல்ல. (ஸர்வஜ்ஞராயிருந்தாலும் உன் ஸ்வரூபம் அறியமுடியாததே.) |
அது அன்றி |
– |
அது அப்படியிருக்கட்டும்; |
நீ |
– |
ஸர்வசக்தனான நீ |
வகுத்தலும் |
– |
(உன்னை வணங்கி வழிபடுவதற்கு உறுப்பாகக் கரணகளே பராதிகளை) உபகரித்திருக்கச் செய்தேயும். |
மாய |
– |
(சேதகர்கள் அவற்றைக்கொண்டு நல்வழியில் புகாமல்) மாய்ந்துபோக |
(அந்த விநாசத்தை நீ ஸஹிக்கமாட்டாமல்) |
||
மாயம் ஆக்கினாய் |
– |
(இவரக்ளை ஸம்ஹரிப்பதே க்ஷேமமென்று) ப்ரக்ருத்யவஸ்தையிலே கொண்டு நிறுத்தினாய்; |
உன் மாயம் முற்றும் |
– |
உன்னுடைய ஸங்கல்பமெல்லாம் |
மாயமே |
– |
ஆச்சரியமாயிருக்கின்றன. |
ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய்-
இடையனாகி –இடைப்பெண் நப்பின்னை பிராட்டியின் மூங்கில் போன்ற தோள்களை விரும்பி புணர்ந்தாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தோடு இம்பராய்-
உனது ஸ்வரூபத்தை ஆராய மேல் உலகத்திலும் இவ் உலகத்திலும் வல்லார் யார்
மாய மாய மாயை கொல்-இப்படி அறியாததற்கு பிரகிருதி காரணம் அன்று –
ஆச்சர்ய பூதனாய் -சர்வஜ்ஞ்ஞனாய் இருந்தும் உன்னாலேயும் உனது ஸ்வரூபம் அறிய முடியாதே
அதன்றி நீ வகுத்தலும் மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே –
அது அப்படி இருக்கட்டும் –
சர்வ சக்தனான நீ உன்னை வணங்கி வழிபட கரண களேபரங்களை கொடுத்து இருந்தும்
சேதனர்கள்-நல் வழியில் புகாமல் மாய்ந்து போக அந்த விநாசத்தை நீ சகிக்க மாட்டாமல் –
பிரகிருதி அவஸ்தையில் நிறுத்தினாய்
உனது மாயம் -சங்கல்பம் எல்லாம் எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறதே
நல் வழி தவிர்ந்து தீய வழிகளில் செல்லும் சம்சாரிகளை சம்ஹரிப்பதும் –
கர்ம அனுகுணமாக ரஷணம் என்று அருளுகிறார்
எம்பெருமானே! நீ உகந்தாரைத் தத்ஸஜாதீயவான்ய வந்தவதரித்து ஸ்வரூபாநுரூபமாக ரக்ஷித்தருளும்படியையும்,
விமுகரான ஸம்ஸாரிகளை ஸங்கல்பத்தாலே கர்மாநுகூலமாக ரக்ஷித்தருளும்படியையும்
அநுஸந்திக்கப்புகுந்தால் பரிச்சோதிக்க முடியாத ஆச்சர்மாயிருக்கிறதே! என்கிறார்.
(நீ வகுத்தலும் இத்யாதி.) ஸம்ஸாரிகளுடைய இழவைக்கண்டு இரங்குமவனான நீ
அவர்கள் உன்னையடைந்து உய்வதற்காக அவர்கட்கு நீ கரணகளேபரங்களைக் கொடுத்திருக்கச் செய்தேயும்
அவர்கள் அவற்றைக்கொண்டு நன்மை தேடிக்கொள்ளாமல் விஷயாந்தரப்வணராய் அழிந்துபோக,
‘இவர்கட்கு இனி ஸம்ஹாரமே நல்லது’ என்று திருவுள்ளம்பற்றி அவர்களை ப்ரக்ருத்யவஸ்தையிலே கொண்டு நிறுத்தினாய்;
உன்னுடைய மாநஸவயாபாரரூபமான ஸங்கல்பஜ்ஞாநமடங்கலும் ஆச்சர்யகரமாயிருக்கினற்து காணென்கிறார்.
நல்வழி தவிர்ந்து தீயவழியிற்சென்ற ஸம்ஸாரிகளை ஸம்ஹரிப்பதும் கர்மாநுகுணமான ரக்ஷணமென்று திருவுள்ளம்
——————————————————————-
வேறு இசைந்த செக்கர் மேனி நீறணிந்த புன் சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால மிசை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை
ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே –42-
பதவுரை
கூசம் இன்றியே சென்று ஏறு அடர்ந்த ஈச |
– |
கூசாமல் சென்று (நப்பின்னைப் பிராட்டிக்காக) எருதுகளை வலியடக்கின பெருமானை! |
வேறு |
– |
வேறாக |
இசைக்க |
– |
ஸம்ஹாரத்தொழிலுக்குத் தகுதியான |
செக்கர் மேனி |
– |
சிவந்த உடலையுடையனாய் |
நீறு அணிந்த |
– |
பஸ்தாரியாய் |
புண் சடை கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த |
– |
ஹேயாமன ஜடையிலே சந்திரகலையை வைத்துக் கொண்டிருப்பவனான ருத்திரன் |
கை வைத்த |
– |
தன்கையில் வைத்துக் கொண்டிருந்த |
வல் கபால் மிசை |
– |
வலிதான கபாலத்தை |
ஊறுசெம் குருதியால் |
– |
உள் திருமேனியிலே ஊறா நின்றுள்ள சிவந்த ரத்தத்தாலே |
நிறைந்த காரணம்தனை |
– |
நிறைந்த காரணத்தை |
பேசு |
– |
அருளிச் செய்யவேணும். |
பாட்டு |
|
பாலினீர்மை |
வேறு இசைந்த செக்கர் மேனி -வேறாக சம்ஹார தொழிலுக்கு தக்க சிவந்த உடலை உடையானாய்
நீறணிந்த புன் சடைக் கீறு திங்கள் வைத்தவன் -ருத்ரன் –
கை வைத்தவன் கபால மிசை-தன் கையில் வைத்து இருந்த வழிய கபாலத்தை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை-ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே-
கூசாமல் சென்று நப்பின்னை பிராட்டிக்காக எருதுகளை வலி அடக்கிய பெருமானே அருளிச் செய்ய வேணும்-
கூசம் இன்றியே பேசு என்றும்
கூசம் இன்றியே ஏறு சென்று அடர்த்த யீச-என்றும் அன்வயம்
“அரசுடைய கபாலத்தை நிறைந்தது எதற்காக? சொல்” என்று கேட்பதற்குக் கருத்து-
நீ ஸர்வஸ்மாத்பரனாய் அவன் உன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டவனாயிருக்கையாலே அவன் யாசிக்கவும்
நீ அவனை அநுக்ரஹிக்கவும் நேர்ந்ததென்று நாங்களெல்லாரும் நினைத்திருக்கிறாய்;
இப்படி உனது பரத்வத்தை வெளியிடுதல் தவிர வேறு காரணமுண்டாகில் அருளிச்செய்யவேறும் என்கை.
“கூசமின்றியே பேசு” என்றாவது, “கூசமின்றியே ஏறு சென்றடர்த்தவீச!” என்றாவது அந்வயிக்கலாம்.
“ஏறு சென்றடர்த்தவீச! பேசு” என்ற ஸம்போதந் ஸ்வாரஸ்யத்தால்-
நீ சாஸ்த்ரத்துக்கு வசப்படாத ஜந்மத்திலே பிறந்து ஏழு கோ (ஹோ) ஹத்யை பண்ணச் செய்தேயும் ஈச்வரத்யம் நிறம் பெறநின்றாய்;
ருத்ரன் தன் ஈச்வரத்வத்தால் வந்த மேன்மை குலையாமல் நிற்க செய்தேயும் பாதகியானான்;
அந்தப் பாதகத்தை உனது திருவருளால் போக்கிக் கொண்டான்;
இந்த நெடுவாசியை அறியவல்லாரார்; என்பதாக உட்கருத்துத் தோனறும்.
வேறு இசைந்த செக்கர் மேனி = எம்பெருமான் ஸர்வரக்ஷகனாயிருக்குந் தன்மைக்கு ஏற்ப அவனுக்குக் கடல்
போன்ற அழகிய வடிவம் அமைந்தால்,
சிவன் ஸர்வஸம்ஹாரகனாயிருக்குந்தன்மைக்கு ஏற்ப அவனுக்குக் கோபாவேச ஸூசகமாய்ச் செந்நிறமான உடல் அமைந்ததாம்.
கபால்- ‘கபாலம்’ என்ற வடசொல்லின்குறை. எவ்வளவு ப்ரயாஸப்படும்
அக் கபாலம் கையைவிட்டு நீங்காதிருந்ததனால் வன் கபால் எனப்பட்து.
——————————————————————
வெஞ்சினத்த வேழ வெண் மருப்பொசித்து உருத்தமா
கஞ்சனைக் கடிந்து மண் அளந்து கொண்ட காலனே
வஞ்சனது வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணனாய வாதி தேவன் அல்லையே –43-
பதவுரை
வெம்சினந்த |
– |
உக்ரமான கோபத்தையுடைய |
வேழம் |
– |
குவலயாபீட மென்னும் யானை யினுடைய |
வெண் மருப்பு |
– |
வெண்ணிறமான தந்தத்தை |
ஒசித்து |
– |
ஒடித்து (அந்த யானையை முடித்து) |
உருத்த |
– |
கோபிஷ்டனாயும் |
மா |
– |
பல்ஷ்டனாயுமிருந்த |
கஞ்சனை |
– |
கம்ஸனை |
கடிந்து |
– |
வதைசெய்து |
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி |
– |
வஞ்சனையால் வந்த பூதனையின் உயிரை |
பாலுன் வாங்கினாய் |
– |
முலைப்பாலுண்கிற பாவனையினால் ஆகர்ஜித்தவனே! |
மண் அளந்து கொண்ட காலனே! |
– |
(த்ரிவிக்ரமனாய்) பூமியெல்லாமளந்துகொண்ட திருவடியையுடையவனே! நீ. |
அஞ்சனந்த வண்ணன் ஆய |
– |
மைபோன்ற காந்தியையுடையனான |
ஆதிதேவன் அல்லையே |
– |
ஆதிபுருஷனன்றோ? |
வெஞ்சினத்த வேழவெண் மருப்பொசித்து-உக்ரமான கோபத்தை உடைய குவலயாபீடம் என்ற யானையின்
வெண்மையான தந்தத்தை ஒடித்து அந்த யானையை முடித்து
உருத்த மா கஞ்சனைக் கடிந்து –கோபிஷ்ட பலிஷ்டன் ஆகிய கம்சனை வதம் செய்து
மண் அளந்து கொண்ட காலனே-திரு விக்ரமனாய் உலகம் எல்லாம் அளந்த திருவடியை உடையவனே-
ப்ரஹ்மாதி புல்லீறாக சர்வ ஜகத்தையும் அளந்து சர்வ சேஷித்வத்தைக் காட்டி அருளிய படியாலும் நீயே ஜகத் காரண பூதன்
ருத்ரனுடைய பாதகத்தைப் போக்கினவளவேயன்றிக்கே க்ருஷ்ணனாய் வந்தவதரித்த மண்ணின் பாரமான
கம்ஸனைக் கூண்டோடு களைத்தருளுகையாலும்,
அந்த ருத்ராதிகளோடு க்ரிமிகீடோதிகளோடு வாசியின்றி
எல்லார் தலைகளிலும் த்ரிவிக்ரமனாய்த் திருவடிகளை வைத்து ஸர்வேஷித்வத்தை விளக்கிக்கொண்டபடியாலும்
ஜதத்காரணபூதன் நீயேயென்கிறார்.
————————————————————————
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம்
போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா
நீல நீர்மை யென்றிவை நிறைந்த கால நான்குமாம்
மாலின் நீர்மை வையகம் மறைத்ததென்ன நீர்மையே –44-
பதவுரை
பாலின் நீர்மை |
– |
பாலின் நிறம்போன்ற வெண்மையென்ன |
செம்பொன் நீர்மை |
– |
சிவந்த பொன்னின் நிறம் போன்ற செம்மையென்ன |
பாசியின் பசும்புறம் போலும் நீர்மை |
– |
பாசியினுடைய பசும்புறம் போன்ற பசுமை நிறமென்ன |
பொற்பு உடை தடத்து வண்டு விண்டு உலாம் நீலம் நீர்மை |
– |
அழகையுடைய தடாகத்திலேயுள்ள வண்டுகள் சிறகு விரித்து பரவாநிற்கும் கருநெய்தல் பூவின் நிறம்போன்ற கருநிறமென்ன. |
என்று இவை நிறைந்த |
– |
என்கிற இந்த நான்கு நிறங்களும் நிறையப்பெற்ற |
காலம் நான்கும் ஆம் மாவின் நீர்மை |
– |
நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனான எம்பெருமானுடைய ஸௌலப்யகுணத்தை |
வையகம் |
– |
இவ்வுலகத்திலுள்ளவர்கள் |
மறைத்தது |
– |
திரஸ்கரித்தது |
என்ன நீர்மை |
– |
என்ன ஸ்வபாவம்! |
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம் போலு நீர்மை-
பால் போலே வெண்மை நிறம் கொண்டும்
சிவந்த பொன்னின் நிறம் போலே செம்மை நிறமும்
பாசியின் வெளி நிறம் பச்சை போலே
பாசி போலும் நீர்மை என்னாதே பாசியின் பசும் புறம் போலும் நீர்மை என்றது
பசுமை நிறத்தின் சிறப்புத் தோற்றவே
பாசியில் பசுமை குறைந்த புறமும் உண்டே
பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா நீல நீர்மை
அழகான தடாகத்தில் உள்ள வண்டுகள் சிறகை விரித்து கரு நெய்தல் பூவின் நிறம் போலே கரு நீலம் என்ன
நீலத்துக்கு இத்தனை அடைமொழி உபமேயத்தின் போக்யதையை காட்டவே
யென்றிவை நிறைந்த கால நான்குமாய் மாலின் நீர்மை
நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனாய் இருக்கும் எம்பெருமானின் சௌலப்ய குணத்தை
வையகம் மறைத்ததென்ன நீர்மையே –இப்படி முகம் காட்டினத்தை அனுசந்தித்து இன்னும் சம்சாரிகள் கடை தேற வில்லை
ஏது என்ன துர்வாசன பலம் என்கிறார்
நான்குமாம் மாலின் -சரியான பாடம் -நான்குமாய் மாலின் பாடம் உபேக்ஷிக்கத் தக்கது
கீழ்ப்பாட்டின் “அஞ்சனத்தவண்ணனாய்” என்று திருமேனி நிறம் ப்ரஸ்துதமாகவே,
க்ருதம் முதலிய யுகங்களில் சேதநர் தமது ஸத்வம் முதலிய குணங்கட்குத் தகுதியாக
ச்வேதம் முதலிய வர்ணங்களை விரும்புகையாலே அவ்வக் காலங்களிலே அந்தந்த நிறங்களைப் பரிக்ரஹித்து
முகங்காட்டினபடியை அநுஸந்தித்து, இப்படி முகங்காட்டச் செய்தேயும் ஸம்ஸாரிகள் காற்கடைக் கொள்ளுகிறார்களே!
இதென்ன துர்வாஸநாபலம்!! என்று வருந்துகிறார்.
“பாசிபோலும் நீர்மை” என்னாதே “பாசியின் பசும்புறம்போலு நீர்மை” என்றது- பசுமை நிறத்தின் சிறப்புத்தோற்றலாம்;
பாசியின் பசுமை குறைந்த புறமும் உண்டிறே. “நீலநீர்மை” என்னுமளவே போதுமாயிருக்க
“பொற்புடைத்தடத்து வண்டுவிண்டுலல்” என்று நீலத்திற்கு அடைமொழி கொடுத்தது-
உபமேயத்தில் போக்யதையைத் தோற்றுவிக்கைகாக வென்க.
மூன்றாமடியின் முடிவில் “நான்குமாய்” என்று பெரும்பாலும் பாடமோதுவார்களேனும் அது உபேக்ஷிக்கத்தக்கதாம்.
“நான்குமாம் மாலின்” என்க.
———————————————————
மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய் கொல் என்ன மாயை நின்தமர்
கண்ணுளாய் கொல் சேயை கொல் அநந்தன் மேல் கிடந்த வெம்
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே –45-
பதவுரை
அனந்தன் மேல் கிடந்த |
– |
திருவனந்தாழ்வான்மேலே சாய்ந்தருள்கின்ற |
எம் புண்ணியா |
– |
எங்களுடைய ஸுக்ருத ஸ்வரூபியான எம்பெருமானே! |
புனம் துழாய் அலங்கல் |
– |
தன்னிலத்திலே வளர்ந்த திருத்துழாயாலே செய்யப்பட்ட மாலையையுடைய |
அம் புனிதனே |
– |
பரமபாவகனே! |
மண் உளாய் |
– |
லீலாவிபூதியில் அவதரித்திரா நின்றாய்; |
விண் உளாய் |
– |
பரமபதத்தில் எழுந்தருளியிரா நின்றாய்; |
மண்ணுள் மயஙகி நின்று எண்ணும் எண் அகப்படாய் |
– |
இந்நிலத்திலே விபரீதஜ்ஞாநிகளாயிருக்கிற ஸம்ஸாரிகளுடைய எண்ணங்களுக்கு விஷயமாகாதிருக்கிறாய்; |
நின் தமர் |
– |
உன்னுடையவர்களான அநந்ய ப்ரயோஜநர்களுக்கு |
கண்ணுளாய் |
– |
சக்ஷுர்விஷயமாகாநின்றாய்; |
சேயை |
– |
(மற்றையோர்க்கு) தூரஸ்தனாயிரா நின்றாய்; |
என்ன மாயை |
– |
இது என்ன ஆச்சரியம்! |
மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் –
லீலா விபூதியிலே திருவவதரித்தாய் -பரம பத நாதனாய் இருந்து வைத்தும்
மண்ணுளே மயங்கி நின்று எண்ணும் எண் அகப்படாய்
சம்சாரிகளின் எண்ணங்களுக்கு விஷயம் ஆகாது இருக்கின்றாய்
கொல் என்ன மாயை நின்தமர் கண்ணுளாய் கொல்
உனது அநந்ய பிரயோஜன அடியார்களுக்கு எளிதாக விஷயம் ஆகிறாய்
சேயை கொல்
மற்றவர்களுக்கு தூரஸ்தனாய் இருக்கிறாய்
அநந்தன் மேல் கிடந்த வெம் புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே
பல பல வகையாக பரந்து நிற்கிற எல்லா ஆற்றல் -இது என்ன ஆச்சர்யம் என்கிறார் –
தானும் சம்சாரத்தில் இருந்தும் அவனது சௌலப்யங்களையும் பரத்வங்களையும்
ஏடு படுத்தி அருளுவது அவனாலேயே என்கிறார்
வாய் வெருவுதலே போது போக்காகாப் பெரும் படி அருளுகிறாயே-
“மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே!” என்று ஸம்ஸாரிகளின் கொடுமையை நினைத்து வருந்தினார் கீழ்ப்பாட்டில்.
அப்படிப்பட்ட ஸம்ஸாரிகளிலே தாமும் ஒருவராயிருக்கச் செய்தேயும் தாம் அவர்களைப் போலன்றியே
எம்பெருமானுடைய பரத்வம், ஸௌலப்பம் முதலிய குணங்களிலே ஈடுபட்டு அவற்றை வாய்வெருவுதலே
போதுபோக்காயிருக்கப் பெற்றமை அருளிச் செய்கிறார்.
“மண்ணுவாய்” “விண்ணுளாய்” இத்யாதி பதங்களுக்கு அடுத்தபடியாக உள்ள (சொல்) என்ற இடைச்சொற்களெல்லாம்
வாக்யாலங்காரமாக நினைக்கத் தக்கன.
‘மண்ணுளாய், என்ன மாயைகொல்? விண்ணுளாய், என்ன மாயைசொல்?” என்றிங்ஙனே யோஜிக்கவுமாம்.
அப்ராக்ருதமாய் அதீத்ரியமான திவ்ய மாயைசொல்?” என்றிங்ஙனே யோஜிக்கவுமாம்.
அப்ராக்ருதமாய் அதீந்த்ரியமான திவ்ய விக்ரஹத்தை ப்ராக்குத ஸஜாதீயமாக்கிக் கொண்டு அவதரித்துக் கண்ணுக்கு விஷயமாக்கா நின்றாய்;
ஸம்ஸார நாற்றமே தெரியாத நித்யஸூரிகட்கும் அபரிச்சேத்யனாக விண்ணிலே உள்ளாய்;
ப்ரக்குரதி ஸம்பந்தத்தாலேவந்த விபரீதஜ்ஞாதத்தையுடையராய் ப்ரயோஜநாந்தபாரான ஸம்ஸாரிகள் மநோரதிக்கும் மகோதங்களுக்கு அவிஷயமாயிராநின்றாய்;
உன் திருவடிகளிலே அநந்யப்ரயோஜநராயிருப்பார்க்கும் உனது நிஜஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிப்பியா நின்றாய்;
ஆச்ரித விரோதிகள் உன்னை அறியவொண்ணாதே எதிரிட்டு முடிந்துபோம்படி அவர்கட்கு தூரஸ்தனாயிரநின்றாய்;
இப்படி பல்வகையாகப்பரந்து நிற்கவல்ல ஆற்றல் உனக்கே உள்ளது- என்று ஈடுபடுகிறார்
———————————————
தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய்
கோடு பற்றி யாழி யேந்தி யஞ்சிறைப் புள்ளூர்தியால்
நாடு பெற்ற நன்மை நன்மை யில்லை யேனும் நாயினேன்
வீடு பெற்று இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே –46-
பதவுரை
தோடு பெற்ற |
– |
இதழ்களையுடைய |
தண் துழாய் |
– |
குளிர்ந்த திருத்துழாயினாலாகிய |
அலங்கல் |
– |
மாலையானது |
ஆடு |
– |
விளங்கப்பெற்ற |
சென்னியாய் |
– |
திருமுடியையுடைவனே! |
கோடு |
– |
ஸ்ரீபாஞ்சஜக்யாழ்வானை |
பற்றி |
– |
தரித்து |
ஆழி |
– |
திருவாழியாழ்வானை |
ஏந்தி |
– |
ஏந்திக்கொண்டு |
அம் சிறைபுள் |
– |
அழகிய சிறகையுடைய பெரிய திருவடியை |
ஊர்தி |
– |
வாஹகமாக நடந்தாநின்றார்; |
நாடு பெற்ற நன்மை |
– |
மற்ற பேர்கள் பெற்ற நன்மையை |
கண்ணம் இல்லையேனும் |
– |
நான் பெற்றிலேனாகிலும் |
காயினேன் |
– |
நீசனான அடியேன் |
வீடுபெற்று |
– |
மோக்ஷத்தைப் பெற்று |
இறப்பொடும் பிறப்பு அறுக்கும் ஆ |
– |
இறப்பதும் பிறப்பதுமான ஸம்ஸாரத்தைத் தொலைக்கும் வகையை |
சொல் |
– |
அருளிச் செய்யவேணும். |
தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய்-
இதழ்கள் உடைய குளிர்ந்த திருத் துழாய் மாலை சூடிய திரு அபிஷேகத்தை உடையவனாய்
கோடு பற்றி யாழி யேந்தி யஞ்சிறைப் புள்ளூர்தியால்-
சங்கு சக்கரம் ஏந்தி கொண்டு கருட வாகனாகவும் உள்ள உன்னால்
நாடு பெற்ற நன்மை நன்மை யில்லை யேனும்
மற்ற பேர்கள் பெற்ற நன்மை நான் பெற வில்லை யாயினும்
நாயினேன் வீடு பெற்று இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே
நீசனான அடியேன் மோஷம் பெற்று சம்சாரம் தொலைக்கும் வகையை அருளிச் செய்ய வேண்டும் –
நித்ய ஸூரிகளுடைய ஒலக்கத்திலே புக்குத் திளைக்கும்படியாக அருள வேணும் –
உன்னையே விச்சேதமாக அனுபவிக்கும் அடியார் குழாங்களை உடன் கூட வேண்டுமே-
அநாதிகாலம் இழந்தொழிந்த நான் இனியாகிலும் உய்யுமாறு அருள்செய்ய வேணுமென்கிறார்.
நாடுபெற்ற நன்மையாவது- திருத்துழாய் மாலையும் திருமுடியுமாக விளங்க நின்ற ஸமயத்தையும்
திவ்யாயுதபாணியாய்ப் பெரிய திருவடியின் மீதேறி எழுந்தருளின ஸமயத்தையும் அநபவிக்கப்பெற்ற நன்மை.
அந்த நன்மையை அடியேன் பெறாதிருந்தாலும் இனியாகிலும் இந்த ஸம்ஸாரபந்தம் அறும்படியான பாக்கியம் பெற்று
நித்யஸூரிகளுடைய திருவோலகத்திலே புக்குத் தினைக்கும்படியாக அருள்செய்ய வேணுமென்று வேண்டுகிறார்.
—————————————————————
காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண விண்ணின் நாதனே
நீரிடத்து அரவணைக் கிடத்தி என்பர் அன்றியும்
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே –47-
பதவுரை
காரொடு ஒத்த மேனி |
– |
காளமேகத்தோடு ஒத்த திருமேனியையுடையனாய் |
நங்கள் கண்ண |
– |
எங்களுக்கு அநுபால்யனான கண்ணனே! |
விண்ணின் நாதனே |
– |
நித்யஸூரிகட்குத் தலைவனே! |
நீர் இடத்து |
– |
(நீதி) திருப்பாற்கடலிலே |
அரா அணை |
– |
திருவனந்தாழ்வான் ஆகிறபடுக்கையிலே |
கிடத்தி |
– |
பள்ளிகொண்டருளா நின்றாய் |
என்பர் |
– |
என்று (ஞானிகள்) சொல்லுவார்கள் |
அன்றியும் |
– |
அது தவிரவும் (நீ) |
ஓர் இடத்தை அல்லை |
– |
ஓரிடத்தை இருப்பிடமாகவுடையையல்லை. |
எல்லை இல்லை |
– |
(நீ உறையுமிடங்கட்கு) எல்லை இல்லை. |
என்பர் |
– |
என்றும் சொல்லுவார்கள் |
ஆதலால் |
– |
இப்படி உன் இருப்பிடம் ஸுல பமல்லாமையாலே |
காயினேன் |
– |
மிகவும் நீசனாகிய அடியேன். |
சேர்வு இடத்தை தெரிந்து |
– |
ஆச்ரயிப்பதற்கு உரியஸ்தலத்தை (இன்னதென்று) தெரிந்துகொண்டு |
இறைஞ்சும் ஆ |
– |
ஆச்ரயிக்கலாம்படியை |
சொல் |
– |
அருளிச் செய்யவேணும். |
காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண விண்ணின் நாதனே நீரிடத்து அரவணைக் கிடத்தி என்பர் அன்றியும்-
ஷீராப்தி நாதனாகவும் இருந்து–அதுக்கும் மேலே-
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதார நிலைகளில்
நீர் உகந்து அருளி இருக்கும் இடங்களுக்கு எல்லை இல்லையே
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே
ஆஸ்ரியர்க்காக உறையும் இடத்தை தெரிந்து கொண்டு ஆஸ்ரயிக்கும் படியை அருளிச் செய்ய வேண்டும் –
சர்வ வஸ்துக்களிலும் வ்யாப்தியாய் இருக்கிறான் என்கிறார்-
கீழ்ப்பாட்டில் “வீடுபெற்றிறப்பொடும் பிறப்பறுக்குமா சொல்” என்று பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கி
எம்பெருமான், “ஆழ்வீர்! பரவ்யூஹ விபவங்களென்ற நமது நிலைகள் ஆச்ரயிக்கத்தக்க ஸ்தலங்களன்றோ?
அவற்றில் ஒரு நிலையைப் பற்றி யாச்ரயித்து நன்மை பெற்றுப்போம்” என்றருளிச்செய்ய;
அந்த நிலைகள் அடியேனுக்கு ஆச்ரயனார்ஹமான நிலங்களல்ல;
மிகவும் நிஹீகநனான அடியேன் ப்ரதிபத்திபண்ணி ஆச்ரயிக்கத்தக்கதோரிடத்தை அருளிச் செய்யவேணுமென்கிறார்.
ஓரிடத்தை அல்லை= இன்னஸ்தலமென்று குறிப்பிடக்கூடிய ஓரிடத்தை இருப்பிடமாக வுடைந்தாயிருக்கின்றாயில்லை.
ஒருவர் கண்ணுக்கும் புலப்படாதபடி அந்தர்யாமியாய் ஸர்வ வஸ்துக்களிலும் வ்யாப்தனாய் இராநின்றாய் என்றபடி.
எல்லையில்லை என்பர் = தஹாவித்யை,சாண்டில்பவிதத்யை, வைச்வாநரவித்யை உபகோஸலவித்யை என்றாப்போலே
சொல்லப்படுகிற வித்யைகளுக்கு எல்லையில்லாமையாலே அவற்றில் சொல்லப்படுகிற ஆச்ரணிய ஸ்தலங்கட்கும் எல்லை என்கை.
ஆகையால் = இப்படி, பரமபதம் தேசத்தால் விப்ரக்ருஷ்டமாய், க்ஷீராப்தி அதிக்ருதாதிகாரமாய்,
அந்தர்யாமித்வம் ப்ரதிக்கே ட்டாததாய் ஆச்ரயணீயஸ்தலம் அபரிச்சேத்யமாயிருக்கையாலே என்றவாறு.
அயோக்யனான அடியேன் “இது நமக்கு ஆச்ரயணார்ஹமான ஸ்தலம்” என்று ஓரிடத்தை நிஷ்கர்ஷித்து ஆச்ரயித்து
உஜ்ஜீவித்துப்போம்படியாக ஓரிடத்தைக் காட்டிக்கொடுக்க வேணுமென்று தலைக்கட்டுகிறார்.
ஓரிடத்தை = ‘ஓரிடத்தன்’ என்பதன் முன்னிலையுருவம்.
———————————————————
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே –48-
குன்றில் நின்று |
– |
திருவேங்கடமலையில் நின்றும் |
வான் இருந்து |
– |
பரமபதத்தில் வீற்றிருந்தும் |
நீள் கடல் கிடந்து |
– |
பெரிதான திருப்பாற்கடலிலே திருக்கண்வளர்ந்தருளியும் |
மண் ஒன்று சென்று |
– |
இப்பூமண்டலத்தை ஒருகால் (த்ரிவிக்ரமனாய்) வியாபித்தும் |
ஒன்று அதை உண்டு |
– |
மற்றொருகால் அப்பூமியை விழுங்கியும் |
ஒன்று அது பன்றி ஆய் இடந்து |
– |
மற்றொருகால் அப்பூமியை வராஹருபியாய் இடந்தும் |
கன்று சென்ற நாள் அவற்றுள் |
– |
கன்றாய் சென்ற நாட்களிலே |
நல் உயிர் படைத்து |
– |
நல்ல உயிரான மனிதர்களை ஸ்ருஷ்டித்தும் |
அன்று |
– |
அப்போது |
அவர்க்கு |
– |
அந்த மனிதர்கட்கு |
தேவு |
– |
(தங்கள் தங்கள் குணங்களுக்குத் தக்கபடி ஆச்ரயிக்கத்தக்க) தேவதைகளை |
அமைத்து |
– |
ஏற்படுத்தியும் (இப்படிகளாலே) |
அளித்த |
– |
நன்மை செய்தருளின |
ஆதிதேவன் இல்லையே |
– |
பரமபுருஷன் நீயேகாண். |
பாட்டு |
– |
மன்னுமாமலர் |
குன்றில் நின்று
திருவேங்கட திருமலையிலே நின்று
வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண் ஓன்று சென்று
ஒரு திருவடியால் -ஒரு காலத்தில் — திரிவிக்ரமனாய் எல்லை கடந்து அளந்து –
அது ஒன்றை உண்டு-
மற்று ஒரு கால் அந்த பூமியை விழுங்கியும்
ஓன்று இடந்து பன்றியாய்-
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு-
நன்றாய் சென்ற நாட்களிலே நல்ல உயிரான மனுஷ்யர்களை ஸ்ருஷ்டித்தும்
அளித்த வாதி தேவன் அல்லையே-
தங்கள் குணங்களுக்குத் தக்க தேவாதிகளை ஏற்படுத்தி அருளிய பரம புருஷன் நீயே என்கிறார் –
————————————
இது முதல் ஏழு பாசுரங்களால் திரு அரங்கம் மங்களா சாசனம் செய்து அருளுகிறார் –
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே –49-
————
வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னொரு நாள்
திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேருமூர்
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி யாடும் தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50-
————–
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்தறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்
பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே –51-
———–
பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –52-
———–
மோடியோட இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே –53-
பதவுரை
மோடியோடு |
– |
காளியும் |
இலச்சை ஆய சாபம் எய்தி முக்கணான் |
– |
வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் |
மக்களோடு |
– |
ஸ்வஜனங்களோடு |
கூடு |
– |
திரண்ட |
சேனை |
– |
ஸேனையை |
கொண்டு |
– |
அழைத்துக்கொண்டு |
வெம் சமத்து |
– |
பயங்கரமான போர்க்களத்திலிருந்து |
மண்டி ஓட |
– |
வேகமாக ஓடிப்போன வளவிலே |
வாணன் |
– |
பாணாஸுரனது |
ஆயிரம் கரம் |
– |
ஆயிரம் கைகளை |
கழித்த |
– |
அறித்தொழித்த |
ஆதி மால் |
– |
பரமபுருஷனுடைய |
பீடுகோயில் |
– |
பெருமைதங்கிய கோயில் |
நீர் கூடு |
– |
காவேரியோடு கூடின |
அரங்கம் என்றபோது |
– |
திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம் |
மோடியோட-காளி உடன் –
இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்-வெட்கத்தை விளைப்பதான சாபம் பெற்ற ருத்ரனும்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து ஓட-ஸ்வ ஜனங்களோடு திரண்ட சேனையை அழித்துக் கொண்டு
பயங்கரமான போர் களத்தில் இருந்து வேகமாக ஓடி போக
வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்-பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்றபேரதே
இலச்சை -லச்சை என்னும் வேதா சொல்லின் திருப்பு –
இலச்சை- ‘லஜ்ஜா’ என்ற வடசொல் திரிபு; வெட்கமென்று பொருள்.
லஜ்ஜாவஹமான சாபத்தை யடைந்த முக்கண்ணன் என்றவாறு.
சாபமெய்தி = வினையெச்சமல்ல; பெயர்.
—————————————————————-
இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –54-
பதவுரை
இலை தலை |
– |
இலைபோன்ற நுனியையுடைய |
சரம் |
– |
அம்புகளை |
துரந்து |
– |
பிரயோகித்து |
இலங்கை |
– |
எல்லையினுடைய |
கட்டு |
– |
அரண்களை |
அழித்தவன் |
– |
அழியச்செய்த இராமபிரான்; |
மலைத்தலை |
– |
(ஸஹ்யமென்னும்) மலையிலே |
பிறந்து |
– |
பிறந்து |
இழிந்து |
– |
அங்கு நின்றும் ப்ரவஹித்து |
வந்து |
– |
நெடுக ஓடிவந்து |
சந்தனம் |
– |
சந்தன மரங்களை |
நுந்து |
– |
(போர்த்துத்) தள்ளாநின்றதாயும், |
குலைத்து |
– |
(குங்குமப்படர்கொடியை சிதிலப்படுத்தி |
அலைத்து |
– |
அலசி |
இறுத்து |
– |
முறிக்க |
எறிந்த |
– |
(அக்கொடிகள் தம்மிலிருந்து) வெளிப்படுத்தின |
குங்குமம் குழம்பினோடு |
– |
குங்குமத் துகள்களினாலாய குழம்புடனேகூட |
அலைத்து ஒழுகு காவிரி |
– |
அலைமோதிக்கொண்டு பெருகா நின்றதாயுமுள்ள திருக்காவேரியுடைய |
அரங்கம் |
– |
கோயிலிலே |
மேய |
– |
எழுந்தருளியிருக்கிற |
அண்ணன் |
– |
ஸ்வாமியாவர். |
இலைத்தலைச் சரம் துரந்து-
இலை போலே நுனி உடைய அம்புகளை உபயோகித்து
இலங்கை கட்டு அழித்தவன்-
இலங்கையின் அரண்களை அழித்த ராம பிரான்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்–
சக்யம் என்னும் மலையிலே பிறந்து -அங்கேயே பிரவகித்து நெடுதாய் ஓடி வந்து சந்தன மரங்களை பேர்த்தும்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு-
கும்குமப் படர் கொடியை சிதில படுத்தி -அந்தக் கொடிகளில் இருந்து வெளிப்பட்ட கும்கும குழம்புடன் கூடி
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –
அலை மோதிக் கொண்டு நெருக்கமாக இருக்கும் திருக் காவேரி உடைய –
இலங்கையை கட்டழித்தவன் அரங்கம் மேய அண்ணலே என்கிறார்-
இந்த பாசுரத்தை ஸ்ரீ வைஷ்ணவர்கள் நாள் தோறும் நீராடும் பொழுது அனுசந்திப்பார்கள்-
(இலங்கை கட்டழித்தவன் அரங்கமேய அண்ணல் என்றவாறு.
ஸ்ரீவைஷ்ணவர்கள் நாடோறும் நீராடும்போது இப்பாட்டை அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம்.
———————————————-
மன்னு மா மலர்க்கிழத்தி வைய மங்கை மைந்தனாய்ப்
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
பொன்னி சூழ் அரங்கமேய புண்டரீகன் அல்லையே –55-
பதவுரை
மா மலர் மன்னு கிழத்தி |
– |
சிறந்த தாமரைப்பூவில் பொருந்திய பிராட்டுக்கும் |
வையம் மங்கை |
– |
ஸ்ரீபூமிப்பிராட்டிக்கும் |
மைந்தன் ஆய் |
– |
(விரும்பத்தக்க) யுவாவாய், |
பின்னும் |
– |
மேலும் |
ஆயர் பின்னை |
– |
(கோபாலரான ஸ்ரீகும்பருடைய மகளான நப்பின்னைப் பிராட்டியினுடைய |
தோள் |
– |
தோளோடே |
மணம் புணர்ந்து |
– |
ஸம்ச்லேஷித்து (விளங்குமவனாய்) |
அது அன்றியும் |
– |
அதுக்கு மேலும் |
உன்ன பாதம் |
– |
உன்னுடைய திருவடிகளை |
என்ன சிந்தை |
– |
என்னுடைய நெஞ்சினுள்ளே |
மன்னை வைத்து |
– |
பொருந்தவைத்து |
கல்கினாய் |
– |
அருள்செய்த பெருமானே! |
பொன்னி சூழ் அரங்கம் மேய |
– |
(நீ) காவிரி சூழ்ந்த கோயிலிலே எழுந்திருளியிருக்கிற |
புண்டரீகன் அல்லையே |
– |
தாமரைபோன்ற அவயங்களையுடைய தேவனன்றோ. |
மன்னு மா மலர்க் கிழத்தி-
சிறந்த தாமரை பூவில் பொருந்திய பிராட்டிக்கும்
வைய மங்கை மைந்தனாய்ப் பின்னும்-
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும் விரும்பத் தக்க யுவாவாய்
ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும்-
கோபாலரான கும்பனின் மகள் நப்பின்னை பிராட்டி உடைய தோளோடு சம்ச்லேஷித்து இருக்கும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் பொன்னி சூழ் அரங்க மேய புண்டரீகன் அல்லையே –
அவர்களுடன் இருக்கும் திவ்ய அனுபவம் அசாதாரணம் என்று நினைத்து எனது ஹிருதயத்திலே நொடிப் பொழுதும் அகலாமல்
உனது திருவடிகளை வைத்து அருளினாய் -என்ன வாத்சல்யம்-
அவர்கள் இடத்திலே அன்பு மட்டம் என்று விளங்கும் படி அன்றோ உனது வாத்சல்ய அதிசயத்தாலே
அடியேனுடைய புன்மையைப் பார்க்காமலும் உன்னுடைய மேன்மையைப் பார்க்காமலும்
என்னை அங்கீ கரித்து அருளுகிறாய் –
எனக்கு மட்டும் இல்லாமல் சர்வ ஜனங்களும் சேவிக்க திருவரங்கத்தில் பள்ளி கொண்டாய்
புண்டரீகன்–தாமரைக் காடு பூத்த தாமரை போன்ற அவயவங்களுடன் இருப்பதாலேயே இந்த விழிச் சொல் –
லக்ஷ்மீபூமிநீளாதேவிகளுக்கு நாயகனாயிருந்துவைத்து உனக்கு அவர்களிடத்திலே அன்பு மட்டம் என்று
விளங்கும்படியாக என்னை அங்கீகரித்தருளின மஹோபகாரம் என்னே! என்கிறார்.
தாமரைப் பூவிலே பிறந்த பெரிய பிராட்டியாரென்ன, பூமிப் பிராட்டியென்ன, நப்பின்னைப் பிராட்டியென்ன
இவர்களுக்கு கொழுநனாய் இவர்களோடு திவ்யாநுபவங்களை இடைவிடாது அநுபவிக்கச் செய்தேயும்
அவ்வநுபவம் அஸாரம் என்றிட்டு, ஸூரிபோக்யான உன் திருவடிகளை நித்ய ஸம்ஸாரியாயிருக்கிற
என்னுடைய ஹ்ருதயத்திலே நொடிப்பொழுதும் விச்லேஷமின்றி வைத்தருளி என் பக்கலுள்ள ப்ரீதி விசேஷத்தைக் காட்டியருளினாய்;
உன்னுடைய வைலக்ஷணியத்தைப் பார்த்தாலும் என்னை விஷீகரிக்க ப்ராப்தியில்லை;
என்னுடைய புன்மையைப் பார்த்தாலும் விஷயீகரிக்க ப்ராப்தியில்லை;
இப்படியிருக்கச் செய்தேயும் வாத்ஸல்யாதிசயமன்றோ இப்படி செய்வித்தது.
என்னொருவனை விஷயீகரித்தது மாத்திரமேயோ?
காவிரி சூழ்ந்ததென் திருவரங்கத்திலே கிடந்தருளிப் பரமயோக்யமான திவ்யாவயங்களை
ஸர்வஜந ஸேவ்யமாகக் காட்டிக் கொடுக்கும் மஹோபகாரகனமாயிருக்கின்றாயிறே.
புண்டரீகன் = புண்டரீகம்போன்ற அவயங்கள் நிறைந்து கிடக்கின்றமை பற்றிப் புண்டரீகன் என்று எம்பெருமானையே சொல்லுகிறார்.
—————————————————-
இது முதல் ஆறு பாசுரங்களால் திருக் குடந்தை பெருமாளை மங்களா சாசனம் செய்து அருளுகிறார் –
இலங்கை மன்னன் ஐந் தொடு ஐந்து பைந்தலை நிலத் துகக்
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –56-
பதவுரை
அன்று |
– |
முற்காலத்தில் |
இலங்கை மன்னன் |
– |
இராவணனுடைய |
ஐந்தொடு ஐந்து |
– |
பத்தாகிய |
பை தலை |
– |
வலிய தலைகள் |
நீலத்து உலக |
– |
பூமியிலே விழுந்தொழியவும் |
கலங்க |
– |
(அவ்வரக்கன் அஞ்சிக்) கலங்கவும் |
சென்று |
– |
இலங்கையிற் புகுந்து |
கொன்று |
– |
(அவனைக் கூட்டத்தோடு) கொலை செய்து |
வென்றி கொண்ட |
– |
விஜயம் பெற்ற |
வீரனே |
– |
மஹாவீரனே! |
விலக்கு நூலர் |
– |
உடம்பிலே யஜ்ஞோபவீதத்தையுடையவரும் |
வேதம் நாவர் |
– |
வேதங்களை நாக்கின் நுனியிலோ உடையரும் |
நீதி ஆன கேள்வி யார் |
– |
(நல்லாசிரியர் பக்கலிலே) ஸாரமான அர்த்தங்களைக் கேட்டுணர்ந்தவர்களுமான வைதிகர்கள். |
வலம் கொள |
– |
வழிபாடுகள் செய்யும்படியாக |
குடந்தையுள் |
– |
திருக்குடந்தையிலே |
கிடந்த |
– |
திருக்கண் வளர்ந்தருளா நின்ற |
மாலும் அல்லையே |
– |
ஸர்வேச்வரனும் நீயன்றோ |
பைந்தலை நிலத்துக-வலிய தலைகள் பூமியில் விழுந்து ஒழியவும்
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் –பூணூல் தரித்த
வேத நாவர் -வேதங்களை நாவின் நுனியில் உடையவர் –
நீதியான கேள்வியார்-நல்ல ஆசரியர் பக்கல் சாரமான அர்த்தங்களைக் கேட்டு உணர்ந்த வைதிகர்களும்
வலம் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே-
வழி பாடுகள் செய்யும் படி குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே
இப்பாட்டுமுதல் மேல் ஆறு பரசுரங்களாலே, திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளுகிற படியை அநுபவிக்கிறார்.
—————————————————————-
சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே –-57-
பதவுரை
சங்கு தங்கு முன் கை நங்கை |
– |
(நித்ய ஸம்ச்லேஷத்தாலே) சங்கு வளைகள் பொருந்தியிருக்கப்பெற்ற பிராட்டியினுடைய |
கொங்கை |
– |
திருமுலைத்தடத்திலே |
தங்கல் உற்றவன் |
– |
விஹாரத்தை விரும்பின படுபாவியினுடைய (இராவணனுடைய) |
அங்கம் |
– |
சரீரமானது |
மங்க |
– |
மாளவேணுமென்று |
அன்று சென்று |
– |
முன்பு (இலங்கைக்கு) எழுந்தருளி |
அடர்ந்து |
– |
அவ்வூரை ஆக்ரமித்து |
எறிந்த |
– |
(அவன் தலைகளை) அறுத்தொழித்தவனாய். |
ஆழியான் |
– |
கடல்போன்ற ச்ரமஹராமன திருமேனியையுடையவனான இராமபிரான் |
கொஞ்கு தங்குவார் குழல் |
– |
நீண்ட கூந்தலையுடையவர்களான |
மடந்தையார் |
– |
திவ்யஸுந்தரிகள் |
குடந்தை |
– |
அவகாஹிக்கப்பெற்ற |
நீர் |
– |
தீர்த்தமானது |
பொங்கு |
– |
வ்ருத்தியடைந்திருக்கப்பெற்ற |
தண் குடந்தையுள் |
– |
குளிர்ந்த திருக்குடந்தையிலே |
கிடந்த |
– |
பள்ளிகொண்டிராநின்ற |
புண்டரீகன் |
– |
ஸுந்தராங்கன். |
சங்கு தங்கு முன்கை நங்கை-நித்ய சம்ஸ்லேஷத்தாலே-சங்கு வளைகள் பொருந்திய பிராட்டி
கொங்கை தங்கல் உற்றவன் அங்க மங்க-ராவணன் சரீரம் மாள
வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான்-
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர் பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே
பரிமளம் பொருந்திய -நீண்ட கூந்தலை உடைய திவ்ய ஸூந்தரிகள் –
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே என்றது போலே –மடைந்தமார் -திவ்ய ஸ்த்ரீகளை அருளிச் செய்கிறார்-
புண்டரீகன் -ஸூந்தராங்கன் –
“கொங்கைதங்கு வார்குழல் மடந்தைமார்” என்றது லௌகிக ஸ்த்ரீகளையல்ல;
“மதிமுக. மடந்தைய ரேந்தினர்வந்தே” என்று ஆழ்வாரருளிச் செய்தபடி பரமபதத்திலே
எதிர்கொண்டழைக்கு மலர்களான திவ்யஸுந்தரிகளைச் சொல்லுகிறது.
—————————————————————–
மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து
உரம் கெடப் புடைத்து ஓர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர்
வரம் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –58-
பதவுரை
மரம் கெட கடந்து |
– |
யமனார்ஜுந ஸ்ருக்ஷங்கள் முடியும்படி கடைகற்று. |
மத்த யானை அடர்ந்து |
– |
(குவலயாபீடமென்னும்) கொழுத்த யானையை மத மொழித்து |
மத்தகத்து |
– |
(அவ்வானையின்) தலைமேல் |
உரம்கெட புடைத்து |
– |
(அதன்) வலிமான ப்ரஹாரங்கள் கொடுத்து |
ஓர்கொம்பு ஒசித்த உத்தமர் |
– |
(அதன்) தந்தத்தை முறித்தெறிந்த பரமபுருஷனே! |
துரங்கம் |
– |
குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனுடைய |
வாய்பிளந்து |
– |
வாயைப்பிளந்து (அவனையொழித்த பெருமானே) |
மண் அளந்த பாத! |
– |
உலகங்களை யளந்து கொண்ட திருவடிகளையுடையோனே! (நீ.) |
வேதியர் வசம் கொள |
– |
வைதியர்கள் தங்கள் தங்களுடைய விருப்பங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு |
குடந்தையுள் கிடந்தமால் அல்லையே. |
மரம் கெட நடந்து-யமளார்ஜுன மரங்கள் முடியும் படி நடந்த
அடர்த்து மத்த யானை-குவலயாபீடம் என்ற கொழுத்த யானையின் மதம் ஒழித்து
மத்தகத்து-அதன் தலையிலே
உரம் கெடப் புடைத்து-அதன் வலி மாள பிரகாரங்கள் கொடுத்து
ஓர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா-
துரங்கம் வாய் பிளந்து-குதிரை வடிவம் கொண்ட கேசி என்னும் அரக்கனை வாயைப் பிளந்து அவனை ஒழித்தவனை
வேதியர் வரம் கொளக் குடந்தையுள் கிடந்த–வைதிகர்கள் தங்கள் தங்கள் விருப்பங்களைப் பெற்றும் கொள்ளுமாறு
கிடந்தது அருளுகிறான் –
——————————————————————
சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில்
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே –59-
பதவுரை
சாலிவேலி |
– |
செந்நெற் பயிர்களை வேலியாகவுடைய |
தண் வயல் தடம் கிடங்கு |
– |
குளிர்ந்த கழனிகளென்ன பெரிய அகழிகளென்ன |
தண் |
– |
குளிர்ந்ததான |
குடந்தை |
– |
திருக்குடந்தையிலே |
மேய எழுந்தருளியிராநின்ற |
||
கோவலா |
– |
க்ருஷ்ணனே! |
காலநேமி |
– |
காலநேமியென்ன |
வக்கரன் |
– |
தந்தவக்ரனென்ன |
பூபொழில் கோலம் நீடு மாடம் |
– |
புஷ்பித்த சோலைகளென்ன அழகாக ஓங்கின மாடங்களென்ன இவற்றையுடைத்தாய் |
கரன் முரன் |
– |
கொடியவனான முரனென்ன இவர்களுடைய |
சிரம் அவை |
– |
தலைகளானவை |
காலனோடு கூட |
– |
யமலோகம் போய்ச் சேரும்படியாக |
வில்குனித்த |
– |
வில்லை வளைத்த |
வில் கை |
– |
அழகிய திருக்கையையுடைய |
வீரனே |
– |
தனி வீரனே! (என்று ஏத்துகிறார்) |
சாலி வேலி -தண் வயல்–செந்நெல் பயிர்கள் வெளியாக உடைய வயல்கள்
தட கிடங்கு பூம் பொழில்-பெரிய அகழிகள் புஷ்பங்கள் மிக்க சோலைகள்
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா-அழகிய ஓங்கிய மாடங்கள்
கால நேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை-தலைகளை யம லோகம் சேரும்படி செய்த
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே-வில்லை வளைத்த –
கால நேமி -ராவணனின் மாதுலன் -தாரகாசுர யுத்தத்தில் கொல்லப் பட்டவன்
தந்த வக்ரன் -ருக்மிணி பிராட்டியை சுவீகரிக்கும் பொழுது எதிர்த்த அரக்கன்
முரன் நரகாசுரனின் மந்த்ரி -இவர்கள் மூவரும் கிருஷ்ணனால் வதம் செய்யப் பட்டார்கள்
கரன் -ராம திருவவதாரத்தில் வதம் செய்யப் பட்டவன்-
காலநேமி யென்பவன் இராவணனுடைய மாதுலன்;
இவன், தாரகாசுர யுத்தத்தில் எம்பெருமானாற் கொல்லப்பட்டவன்,
வக்கரன் – தந்தவக்ரன்; தத்துவக்த்ரன் என்று சொல்வதுமுண்டு.
கண்ணபிரான் ருக்மிணிப்பிராட்டியை ஸ்வீகரித்தருளினபோது எதிர்த்து வந்து போர்செய்த அரசர்களில் இவனொருவன்,
முரண் = நரகாசுரனுடைய மந்திரி. கரன் என்று ஒரு ராக்ஷணுண்டாகிலும் அவன் இங்கே விவக்ஷிதனல்லன்;
அவன் ராமாவதாரத்தில் கொல்லப்பட்டவன்;
இப்பாட்டில் க்ருஷ்ணாவதார சரிதங்கள் அநுஸந்திக்கப்படுவதால் கரன் என்பது முரனுக்கு அடைமொழியாயிற்று.
*** என்ற வடசொல் க்ரூரனென்ற பொருளையுமுடையது.
“சிரமவை காலனோடுகூட” என்றவிடத்து “அறுத்து” என்றொரு வினையெச்சத்தை வருவித்துக்கொண்டு உரைத்ததுமொன்று.
——————————————————————–
செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட வுயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –60-
பதவுரை
செழும் கொழும் பெரும்பணி |
– |
இடைவிடாதே தாரைகளாய் விழுகிற கனத்த மூடுபனியானது. |
பொழிந்திட |
– |
பொழிந்தவளவிலே |
உயர்ந்த வேய் விழுந்து |
– |
முன்பு ஓங்கியிருந்த மூங்கிற்பணைகள் (அப்பணியின் கனத்தாலே) தரையிலே சாய்ந்து |
உலர்ந்து எழுந்து |
– |
(பிறகு ஸூர்யகிரணங்களாலே அப்பனி) உலர்ந்த பின்பு |
எழுந்து |
– |
(அம்மூங்கிற்பணைகள்) உயரக் கிளம்பி |
விண் புடைக்கும் |
– |
விண்ணுலகத்தை முட்டும்படியான உந்நதியை யுடைய |
வேங்கடத்துள் |
– |
திருவேங்கடமலையிலே |
நின்று |
– |
நின்றருளி |
தேன் |
– |
வண்டுகளானவை |
எழுந்து இருந்து பொருந்து |
– |
மேலே கிளம்புவதும் கீழே படிந்திருப்பதுமான நிலைமைகளோ பொருந்தியிருக்கப் பெற்ற |
பூ பொழில் |
– |
புஷ்பங்கள் நிறைந்த சோலைகள் |
தழை கொழும் |
– |
தழைத்தோங்கா நிற்கப்பெற்றதாய் |
செழும்கடல் |
– |
செழுமை தங்கிய தடாகங்களையுடைத்தான் |
குடந்தையுள் |
– |
திருக்குடந்தையிலே |
கிடந்த |
– |
திருக்கண்வளர்ந்தருளா நின்ற |
மால் அல்லையே |
– |
பெருமாள் நீயிறே. |
செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட-இடை விடாத தாரைகளாய் விழுகிற கனத்த மூடு பனியானது பொழிந்த அளவிலே
வுயர்ந்த வேய் விழுந்து-முன்பு ஓங்கி இருந்த மூங்கில் பனைகள் அந்த பனியின் கனத்தால் தரையிலே சாய்ந்து
உலர்ந்து எழுந்து-பின்பு சூர்ய கிரணங்களால் உலர்ந்து -அந்த மூங்கில் பனைகள் உயர கிளம்பி
விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்-வண்டுகள் மேலே கிளம்புவதுவும்
கீழே படிந்தும் இருக்குமாறு -புஷ்பங்கள் மிகுந்த சோலைகள் தழைத்து ஓங்கி
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே-செழுமையான தடாகங்கள் உடைய -திருக் குடந்தையுள்
நின்றும் கிடந்தும் சேவை அருளுகிறான்
நிலையார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே-
கிடந்ததோர் கிடக்கை கண்டு எங்கனம் மறந்து வாழ்வேன்-
வ்யாமோஹத்தால் நின்றும் கிடந்தும் ஆசைப்பட்டார்க்கு சேவை அருளுகிறாயே –
“நிலையார நின்றான் தன் நீள்கழலே யடைநெஞ்சே” என்று நிலையழகிலே ஈடுபடுவார்க்கும்
“கிடந்ததோர் கிடக்கைகண்டு மெங்ஙனம் மறந்து வாழ்கேன்?” என்று சயகத் திருகோலத்திலே ஈடுபடுவார்க்கும்
போக்யமாகத் திருவேங்கடமலையில் நின்றருளியும் திருக்குடந்தையில் சாய்தருளியும் போருகிறது.
அடியார் பக்கலுள்ள வ்யாமோஹத்தின் காரியமன்றோ வென்கிறார்.
உலர்ந்து= பணி உரை; எச்சத்திரிபு.
——————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply