Archive for January, 2020

ஸ்ரீ பாஷ்யம்— -1-4–5-சமந்வய அத்யாயம்- ஜகத்வாசித்வாதி கரணம் -3-ஸூத்ரங்கள்–ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

January 30, 2020

ஸ்ரீ பாஷ்யம்— -1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள் /
ஐந்தாவது -ஜகத்வாசித்வாதி கரணம் -3-ஸூத்ரங்கள்-/
ஆறாவது – வாக்ய அந்வயாதி கரணம்-ஸூத்ரங்கள் -4 ஸூத்ரங்கள்/
ஏழாவது பிரக்ருத்யதிகரணம்-6 ஸூத்ரங்கள் /
எட்டாவது -சர்வ வியாக்யான அதிகரணம்–1-ஸூத்ரம்-ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள்
ஐந்தாவது அதிகரணம்- ஜகத்வாசித்வாதி கரணம் -3-ஸூத்ரங்கள்-

விஷயம்
கௌஷீதகீ உபநிஷத்தில் அறியத்தக்கவனாக உபதேசிக்கப்படுபவன் பரமாத்மாவே ஆவான் -என்கிறது

1-4-16-ஜகத் வாசித்வாத்

உலகத்தைக் கூறுவதால் இங்கு கூறப்படுவது பரமாத்மாவே

பூர்வ பக்ஷம்
சாங்க்யர்கள் மீண்டும் ஒரு ஆஷேபம்
வேதாந்தங்களில் சேதனனே ஜகத் காரணம் என்று கூறப்பட்டாலும் கபில தந்திரத்தின் மூலம் வெளிப்படுவதாக
பிரதானம் மற்றும் புருஷன் இவற்றை விட வேறே வஸ்து ஜகத்காரணமாக உள்ளது என்றால்
அதை நம்மால் அறிய முடியவில்லை
கௌஷீதகீ உபநிஷத்தில் -பாலாகி -அஜாத சத்ரு -சம்வாதம் -அனுபவிக்கும் புருஷனே -ஜீவாத்மாவே -ஜகத் காரணம்
என்று அறியப்பட வேண்டும் என்கிறது –
அதில் தொடக்கத்தில் பாலாகியால்-அறியப்பட வேண்டிய ப்ரஹ்மம் குறித்து கேட்ட போது அதற்கு விடையாக
ப்ரஹ்மதே பிரவாணி -4-1-ப்ரஹ்மத்தைக் குறித்து உபதேசிக்கிறேன் என்று
தொடங்கி- 4-18-யோவை பாலாகே ஏதேஷாம் புருஷணாம் கர்த்தா யஸ்ய ச ஏதத் கர்ம ச வை வேதி தவ்ய-என்று
யார் இந்த புருஷர்களுக்கு கர்த்தாவாக உள்ளானோ -யாருக்கு இந்த புண்ய பாப ரூபமான கர்மா உள்ளதோ
அவனே அறியத் தக்கவன் என்று நிகமிக்கப்படுகிறது

பாலாகி என்ற அந்தணன் அஜாத சத்ரு அரசன் இடம் தன்னுடைய ப்ரஹ்ம ஞானம் வெளிப்படுத்த
ஸூர்ய மண்டலம் சந்த்ர மண்டலம் மின்னல் ஆகாசம் என்று ஒவ் ஒன்றாக உரைத்து அங்கே உள்ள ஆத்மாவை –
ஜீவாத்மாவே ப்ரஹ்மம் -என்று உரைக்க –
அரசன் ஏற்க மறுக்க –
பாலாகி பணிந்து அரசன் இடம் ப்ரஹ்மத்தை பற்றி உபதேசிக்க பிரார்த்திக்க –
இதுவே இந்த பகுதியின் அறிமுகம்

பாலாகியால் தொடக்கத்தில் எந்த ஒரு ப்ரஹ்மம் அறியப்பட வேண்டியதாகக் கூறப்பட்டதோ-அந்த ப்ரஹ்மமே –
அஜாத சத்ருவால் -ச வேதி திவ்ய -அவனே அறியப்பட வேண்டியவன் -என்று உபதேசிக்கப்பட்டதில் உள்ள ப்ரஹ்மம் ஆகும்
அந்த வரியில் உள்ள -யஸ்ய ச ஏதத் கர்ம -இது யாருடைய கர்மமோ -என்ற பகுதி அறியப்பட வேண்டிய வஸ்துவை
கர்மத்துடன் சம்பந்தப்படுத்துவதாக உள்ளது
ஆகவே இங்கே கூறப்படும் ப்ரஹ்மம் என்பது ப்ரக்ருதியை நியமிக்க வல்லவனும் அனுபவிப்பவனும் ஆகிய புருஷன் –
ஜீவாத்மா -என்று நிச்சயிக்கப் படுகிறது அல்லாமல் வேறே ஏதும் இல்லை -ஏன் என்றால்
வேறு ஏதும் கர்மத்துடன் சம்பந்தம் கொள்வது இல்லை –
கர்மங்கள் ஷேத்திரஞ்ஞனுக்கே-ஜீவாத்மாவுக்கே -சம்பவிக்கும்

பாலாகி வித்யை -ப்ராஹ்மணன் ஷத்ரியன் இடம் கேட்டு அறிகிறான் -ப்ரஹ்ம வித்யை யார் இடமும் கேட்கலாம்
தர்மவியாதான் இடம் ரிஷிகள் கேட்டது மஹா பாரதத்தில் உண்டே
-16-மந்த்ரங்கள் உண்டு இதில் -பூர்ண ப்ரஹ்ம ஞானம் இல்லாத பாலாகிக்கு அஜாத சத்ரு –
யோவை பாலாகே ஏதேஷாம் புருஷணாம் கர்த்தா யஸ்ய ச ஏதத் கர்ம ச வை வேதி தவ்ய-
ஸ்ருஷ்டித்தவன் யாரோ -அவனை அறிய வேண்டும் –
நிறை குடம் தழும்பாதே-உபதேசிக்க வந்தவன் உபதேசம் பெற்றுப் போனான்-
சமித் பாணியாக ப்ரஹ்ம உபதேசம் கேட்டான் –
இதம் ஏதத் அதோ மூன்று சப்தங்கள் -this-ஒரே சப்தம் -ஏதத் பிரத்யக்ஷமான இந்த ஜகத்து -என்றபடி –
கர்ம சம்பந்தம் -பிரகிருதி சம்பந்தத்தால் என்பது பூர்வ பக்ஷம் –

இதுக்கு சித்தாந்தி –
எது செய்யப்படுகிறதோ அதுவே கர்மம் என்ற சொல்லுக்கான பொருளாகும்
இங்குள்ள ஏதத் கர்ம -என்பதன் மூலம் ப்ரத்யக்ஷம் முதலான ப்ரமாணங்களால் ஸ்தாபிக்கப்பட்ட ஜகத்தே கூறப்படுகிறது
ஆகவே ஷேத்ரஞ்ஞனைக் காட்டிலும் வேறாக உள்ளவனும் யாருடைய கர்மம் -செயல் -என்பதே இந்த ஜகத்தாக உள்ளதோ –
என்று கூறப்படும் ஒருவனே அறியப்பட வேண்டியவன் -என்று கூறக் கூடும்

உபாதான காரணம் பற்றிய ஞானம் இச்சை பிரயத்தனம் பண்ண சாமர்த்தியம் மூன்றும் இருக்க வேண்டுமே –
கர்த்ருத்வத்துக்கு -இவை -பரமாத்மாவுக்கே பொருந்தும் –

இத்தை பூர்வ பக்ஷி மறுப்பான்
நீங்கள் கூறுவது போன்று வைத்துக் கொண்டால்
யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய -கௌஷீகீ -4-18-என்று
தனித் தனியாக இரண்டையும் உரைப்பது அவசியம் இல்லையே
கர்மம் பொதுவாக லோகத்திலும் வேதத்திலும் புண்ய பாப ரூபமாகவே உள்ள செயல்களைக் குறிக்கும்
ஆக புருஷணாம் கர்த்தா -என்பது கர்மங்களை அனுபவிப்பவர்களுக்கே பொருந்தும்
மேலும் கௌஷீதகீ –4-18-
தவ் ஹ ஸூப்தம் புருஷமீயது ஜூ தம் யஷ்டயா சிஷேபா -என்று
உறங்கும் அவன் இடம் செல்லுதல் -அவனைத் தடியால் அடித்தல் -அவனை எழுப்புதல் -இவை
புருஷனை வெளிப்படுத்தும் அடையாளங்களே

இதைத் தொடர்ந்து -கௌஷீதகீ -4-20-
தத் யதா ஸ்ரேஷ்டீ ஸ்வைர் புங்க்தே யதா ஸ்வா ஸ்ரேஷ்ட்டிநம் புஞ்ஜந்தி ஏவம் ஏவ ஏஷ பிரஞ்ஜாத்மா ஏதைராத்மபிர்
புங்க்தே ஏவம் ஏத ஏவ ஆத்மாந ஏநம் புஞ்ஜந்தி -என்று
எவ்விதம் இந்த செல்வந்த வைசியன் தனது வேலையாட்களுடன் இன்பமாக உள்ளானோ –
எவ்விதம் அந்த வேலையாட்கள் இவனுடன் சேர்ந்து இன்பமாக உள்ளார்களா
அதே போன்று புருஷன் -மற்ற புருஷர்களை -இந்த பிராணன் -முதலானவற்றை அனுபவிக்கிறான் –
அவர்களும் இந்த புருஷனை அனுபவிக்கிறார்கள் என்பதுவும் அனுபவிப்பவனையே -ஜீவாத்மாவையே கூறுவதாக உள்ளது –

யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
பாலாகி என்னும் ஒருவன் அஜாத சத்ரு என்ற அரசன் இடம் வந்து ப்ரஹ்மத்தை குறித்து கூறுவதாக சொல்லி
ப்ரஹ்ம தே ப்ருவாணி யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
யஸ்யா வா ஏதத் கர்ம -யாருக்கு இது கர்மமோ -இது என்றது உலகம் -கர்மம் -உலகை உருவாக்கும் செயலையும் சொல்லி
பர ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் என்றதாயிற்று

இது போன்றே கௌஷீ –4-18-க்வா ஏஷ பாலாகே புருஷோ சயிஷ்ட -க்வா ஏதத் அபூத் -குத ஏதத் ஆகாத்–என்ற
கேள்விகளை அஜாத சத்ரு கேட்க பாலாகி மௌனமாக இருக்க தானே பதில் கூறத் தொடங்கினான்
கௌஷீ -4-19-ஹிதா நாம ஹ்ருதயஸ்ய நாட்ய தாஸூ ததா பவதி யதா ஸூப்த–ஸ்வப்னம் ந கதஞ்சன பச்யதி
அதாஸ்மின் பிராண ஏவைகதா பவதி ததைநம் வாக் சர்வைர்நாமபி சஹாப்யேதி மந சர்வைர்த்யாநை சஹாப்யேதி
ச யதா பிரதிபத்யதே யதா அக்நோஜ் வலந்த சர்வாதிசோ விஸ்பு லிங்கா வி பிரதிஷ்டேரந் ஏவம் ஏவ ஏதஸ்மாத் ஆத்மந
பிராணா யதாயதநம் வி ப்ரதிஷ்டந்தே ப்ராணேப்யோ தேவா தேவேப்யோ லோகா -என்று
இதயத்தில் ஹிதா என்னும் நாடியில் இருந்தான் -ஆழ்ந்த உறக்கத்தில் கனவு காண்பதில்லை –
மனம் இந்திரியங்கள் ப்ராணனுடன் கலந்து ஒன்றாக உள்ளன -விழித்துக் கொள்ளும் போது
அக்னியில் இருந்து தீ பொறிகள் சிதறுவது போலே ஆத்மாவில் இருந்து இந்திரியங்கள் புறப்பட்டு
தங்கள் இருப்பிடங்களை அடைந்து இந்திரியங்கள் இந்திரிய விஷயங்களை அடைகின்றன
உபநிஷத்தில் தேவ பதம் இந்திரியங்களும் லோக பதம் இந்திரிய விஷயங்களையும் குறிக்கும் –

அஸ்மின் -ஜீவாத்மாவை சொல்லி -அதாஸ்மின் பிராண ஏவைகதா பவதி -பிராண என்று பிராணனைத் தாங்கும் ஜீவாத்மா –
இப்படியாக இந்த பகுதியின் தொடக்கத்தில் கூறப்பட்ட ப்ரஹ்மம் ஜீவாத்மாவே –
ஈஷம் -பார்த்தல் போன்றவை ஜீவாத்மாவுக்கே பொருந்தும்
எனவே ஜீவாத்மாவால் நியமிக்கப்படும் பிரதானமே ஜகத் காரணம் ஆகும் என்பர் பூர்வ பக்ஷி

சித்தாந்தம்
புருஷோத்தமனே கூறப்படுகிறான் -யஸ்ய ச ஏதத் கர்ம -என்பதில் ஏதத் -இந்த என்பதுடன் சம்பந்தம் கொண்டுள்ள
கர்ம -பரம புருஷனின் கார்யமான ஜகத்தைக் கூறுவதாகும் –
ப்ரத்யக்ஷம் முதலான ப்ரமாணங்களால் அறியப்படுவதும் சித் அசித் வஸ்துக்கள் கலந்த ஜகத் என்பதே கூறப்படுகிறது –
அல்லது புண்ய பாப செயல்களைக் கூற வில்லை
கௌஷீ -4-1-ப்ரஹ்ம தே பிரவாணி –என்று சொல்லத் னத்தொடங்கிய பாலாகி ஆதித்ய மண்டலத்தில் வசிக்கும்
புருஷர்கள் போன்ற ப்ரஹ்மம் அல்லாதவர்கள் குறித்து பேசிய பாலாகி இடம்
கௌஷீ -4-18- ம்ருஷா வை கலு மா ஸம்வ திஷ்டா —என்று தவறாக வாதாடாதே என்று அஜாதசத்ரு உரைத்தான் —
யோ வை பாலாகி –என்று கூறத் தொடங்கினான்

இங்கே கர்ம -என்னும் சொல் அவன் அறியாத ப்ரஹ்மத்தை உணர்த்த குறிக்க வந்ததால் இங்கு ஜகத்தையே குறிக்கும்
யஸ்ய கர்ம ச வேதி தவ்ய–யாருக்கு கர்மம் உள்ளதோ அவனே அறியப்பட வேண்டியவன் என்று இல்லாமல்
யஸ்ய வா ஏதத் கர்ம -இது யாருடைய கர்மமோ என்று இருப்பதால் -ஏதத் இது என்ற சொல்லுக்கு பயன் வேண்டுமே
அந்த உபநிஷத் வரியில் -யா ஏத்த ஏஷாம் கர்த்தா -யார் இவர்களுக்கு கர்த்தாவோ —
மற்றும் யஸ்ய வா ஏதத் கர்ம -இது யாருடைய கர்மமோ என்று தனித்தனியாக உபதேசிக்கப்பட்டதின்
அபிப்ராயம் ஏது என்றால் -நீ எந்த புருஷர்களை ப்ரஹ்மம் என்று உபதேசித்தாயோ
உண்மையில் அந்த ப்ரஹ்மமே அவர்களுடைய கர்த்தாவாகும்-அவர்கள் அந்த ப்ரஹ்மத்தின் கார்ய பூதங்கள்
ஆகவே புருஷர்களை -ஆதித்யன் போன்றவர்களைப் படைக்கும் சக்தி ஜீவாத்மாவுக்குப் பொருந்தாது –
எனவே இங்குள்ள உபநிஷத் வரியில் -அனைத்து வேதாந்தங்களிலும் அனைத்துக்கும் காரணம் என்று
வெளிப்படுத்தப்படுகின்ற பர ப்ரஹ்மமே அறியப்பட வேண்டியதாகும் என்பதே உபதேசிக்கப் படுகிறது –

——————

1-4-17-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத தத் வ்யாக்யாதம் –

இங்கு ஜீவன் மற்றும் முக்கிய பிராணன் ஆகிய அடையாளங்கள் காணப்படுவதால் பரமாத்மா அல்லன்-என்றால்
முன்பு சொன்னபடியே அது பொருந்தாது

பிரதர்சன வித்யை -1-1-31–முன்பே இதன் விளக்கம் பார்த்தோம்
அதாஸ்மின் பிராண ஏவ ஏகதாபவதி-என்றும்
தத்யதா ச்ரெஷ்டீ ஸ்வைர்ப்புங்க்தே யதா ஸ்வா ஸ்ரேஷ்டி நம் புஞ்ஜந்தி
ஏவமேவைஷா பிரஜ்ஞாத்மா ஏதைராத்மயிர் புங்க்தே
ஏவமேவைத ஆத்மான எனம் புஞ்ஜந்தி -என்றும்
ப்ரஹ்மேதே பிரவாணி -என்றும்
உனக்கு நான் ப்ரஹ்மத்தைக் குறித்து உபதேசிக்கிறேன் -என்று ப்ரஹ்மத்தைக் குறித்தே உள்ளது

நடுவில் உள்ள பகுதியில் -யஸ்ய வா ஏதத் கர்ம –இது யாருடைய கர்மமோ என்பதிலும் ஜீவாத்மா கூறப்படவில்லை
அனைத்து ஜகத்துக்கும் ஒரே காரணமான ப்ரஹ்மமே கூறப்பட்டது என்றும் பார்த்தோம்

இறுதியிலும்
சர்வான் பாப்மநோப ஹத்ய சர்வேஷாம் பூதானாம் ஸ்ரைஷ்ட்யம் ஸ்வா ராஜ்ய மாதிபத்யம் பர்யேதி யா ஏவம் வேத -என்று
இதனை அறிபவன் தனது அனைத்து பாபங்களையும் நீக்கிக் கொண்டவனாக -அனைத்து ஜீவ ராசிகளில் உயர்ந்தவனாக –
அவற்றின் தலைவனாக -கர்ம வசப்படாதவனாக உள்ளான் என்பதன் மூலம்
பிராணனை உடலாக உடைய ப்ரஹ்மத்தை உபாசனை செய்ய வேண்டும் என்றதாயிற்று –
ப்ரஹ்ம உபாசனம் பலன் உடன் கூடியதாக உள்ள அனைத்துப் பாபங்களில் நின்றும் நீங்கப் பெற்ற மோக்ஷ சாம்ராஜ்யம்
பெறுவதை சொல்வதால் ப்ரஹ்ம விஷயமாகவே அனைத்தும் உள்ளன

பிரதர்சன வித்யையில் கூறப்படும் மூன்று வகை ப்ரஹ்ம உபாசனையில் உள்ள
ஜீவாத்மா முக்கிய பிராணன் போன்ற அடையாளங்கள் ப்ரஹ்மத்தைக் குறித்தே உள்ளன
அஸ்மிந் பிராணன் -என்றும்
அதாஸ்மிந் பிராண ஏவ ஏகதா பவதி –கௌஷீகீ -4-19-உறங்கும் போது பிராணன் உடன் சேர்ந்து ஒன்றாகிறான் –
என்பதில் உள்ள அஸ்மிந் பிராண சொற்கள் சாமா நாதி கரண்யத்தில்
பிராணனை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்ம உபாசனம் என்று சொல்லவே பிராண சப்தம்
ஜீவாத்மாவைக் குறித்து சொல்லும் அடையாளங்கள் எவ்வாறு ப்ரஹ்மத்தைக் குறிக்கும் என்பது அடுத்த ஸூத்ரம்

ஜீவாத்மாவுக்கு உரிய பல விசேஷணங்கள் இருப்பதால் இது ஜீவாத்மாவையே குறிக்கும்
பரமாத்மாவுக்கே உரிய ஒரு விசேஷணம் இருந்தாலும் இது ஒவ்வாதே
பிரகரணம் பரமாத்மாவையே குறிக்கும் –
ஜீவா முக்கிய பிராண லிங்காத் ஸமஸ்த பதம்
ஜீவ லிங்காத் முக்கிய பிராண லிங்காத்-என்று பிரித்தே அர்த்தம் –
உபக்ரம உபஸம்ஹார நியாயம் –போக்தா ஏவ -பரமாத்மாவே-ப்ரஹ்மம் உபதேசிக்க ஆரம்பம்-அதுவே நிகமனம்-
பாட க்ரமம் வேறாக இருந்தாலும் அர்த்த க்ரமமே பிரதானம்
ப்ரஹ்ம உபாசனமே சொல்லிற்று ஆயிற்று — –
மாம் உபாஸ்வா-என்றாலும் ப்ரஹ்மம் அந்தர்யாமியாய் இருப்பவனையே -சொல்லும்
சர்வ தேவ நமஸ்காரம் கேசவனையே சொல்லும் –

————

1-4-18-அன்யார்த்தம் து ஜைமினி ப்ரசன வியாக்யா நாப்யாம் அபி ச ஏவம் ஏகே –

அஜாத சத்ருவும் பாலாகியும் தூங்கிக் கொண்டு இருந்த மனிதனை எழுப்ப –
உடலில் வேறுபட்டவன் ஜீவன் -ஜீவனில் வேறுபட்டவன் பர ப்ரஹ்மம்
க்வ ஏஷ ஏதத் பாலாகே புருஷோசயிஷ்ட -தூங்கி எழுவதற்கு முன்னால் எங்கு இருந்தான்
விடையாக அதாஸ்மின் பிராண ஏவ ஏகதா-தூங்கும் பொழுது பிராணனில் ஒன்றி விடுகிறான்

சாந்தோக்யம் –
சதா சோம்ய ததா சம்பன்னோ பவதி –தூங்கும் பொழுது சத்துடன் ஒன்றி விடுகிறான்
பிராணன் என்றது ப்ரஹ்மமே
ப்ருஹத் உபநிஷத் –
ய ஏஷோந்தர் ஹ்ருதய ஆகாசஸ் தஸ்மின் சேதே-என்று தூங்குபவன் இதயத்திலுள்ள
ஆகாயம் ஆகிய பரம் பொருளிடம் தூங்குகின்றான்
பிராணன் போன்ற சொற்கள் ப்ரஹ்மமே என்றதாயிற்று-

அன்யார்த்தம்-ஜீவனுக்கு மேலே பரமாத்மா உள்ளது என்று காட்டவே
து ஜைமினி ப்ரசன வியாக்யா நாப்யாம் அபி ச ஏவம் ஏகே–ஜீவாத்மா- போக்தா -போன்ற சப்தங்கள் -நடுவில் –
இவற்றைக் காட்டிலும் மேலான பர ப்ரஹ்மம் இருப்பதை சொல்லவே வந்தது
தனது சிஷ்யர் -பாதராயணர் -இருவரும் இருவர் இடம் கௌரவ புத்தி கொண்டனர்
அந்தர் கர்பிதமான அர்த்தம் -face-value-கொள்ளாமல் -ப்ரஸ்ன வியாக்யானம் போலவே இங்கும் கொள்ள வேண்டும் –
வாஜசனேய சாகையிலும் இது போலவே உண்டே
ஆகவே காரணத்வம் பர ப்ரஹ்மத்திடமே நிலைக்கும் —

——————–——————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாழி -திருப் பாஞ்ச ஜன்யம்–திருவாய் மொழி வ்யாக்யான ஸ்ரீ ஸூக்திகள்–

January 28, 2020

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9-

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
சிலரை வசீகரிக்க நினைத்தவர்கள் -கையிலே மருந்து கொண்டு திரியுமா போலே
அவதாரங்கள் தோறும் திவ்ய ஆயுதங்களோடு வந்து அவதரிக்கும்
திவ்யாயுதங்கள் எல்லாம் அவதாரங்களிலும் உண்டோ என்னில் எங்கும் உண்டு
ராஜாக்கள் கறுப்புடுத்துப் புறப்பட்டால் அந்தரங்கர் அபேஷித்த தசையிலே முகம் காட்டுகைக்கா பிரியத் திரிவார்கள் –
அது போலே தோற்றாதாயும் நிற்பார்கள்
கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய் என்னும் இவர்களுக்கு அப்படி இறே தோற்றுவது
கையினார் சுரி சங்கு -காட்டவே கண்டார் திருப் பாண் ஆழ்வார்
சங்குச் சக்கரம்
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் கையிலே திவ்ய ஆயுதங்களைத் தரித்தான்

—————–

பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8-

பூவியில் நால் தடம் தோளன்
1-பூவால் அல்லது செல்லாத படி ஸூகுமாரமாய் -கல்ப தரு பணைத்தால் போலே நாலாய்ச் சுற்றுடைத்தாய்
இருக்கிற திருத் தோள்களை உடையவன் –சுந்தரத் தோள் உடையான் -சர்வ பூஷண பூஷணாயா-
2-பூவியல் -பூவாலே அலங்க்ருதமான தோள் என்னுதல் –
3-பூவை ஒழியச் செல்லாத சௌகுமார்யத்தை உடையவன் என்னுதல்
பொரு படை
பணைத்து பூத்த கல்பக தரு போலே யாயிற்று -யுத்தத்துக்கு பரிகரமான திவ்ய ஆயுதங்களைத் தரித்தால் இருக்கும் படி
பொரு படை –
யுத்த சாதனங்கள் ஆனவை -கற்பக -கிளைகள் தோள்கள் -போலே திவ்யாயுதங்கள்
யாழி சங்கேந்தும்-காவி நன் மேனிக்
அவ்வாயுதங்களாலே விரோதியைப் போக்கி அனுபவிக்கும் வடிவு அழகு
நன் மேனி –
காவி வடிவு அழகுக்கு உபமானமாக நேர் நில்லாமையாலே –நன் மேனி -என்கிறார் –
சந்திர காந்தானாம் –அதீவ ப்ரீதி தர்சனம்- ராமம் போலே காவி நல் மேனி –

————–

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

த்ரி விக்கிரம அபதானத்தால் சர்வ லோகத்தையும் உபகரித்தால் போலே -அத்தைக் காட்டி எனக்கு உபகரித்தான்
பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு-ஆழி எழ –
இவையும் எழுந்து ஆர்பரிக்க -விரோதி நிரசன சீலமாய்-
ஹர்ஷத்தால் வளருமே நிரசனதுக்கு பின்பு -அதிசய உத்க்ருஷ்டம் –
மா -பெருத்து —நீள் -மனத்தால் வளர்ந்து –திரு விக்ரஹமும் வளர்ந்து -சிருஷ்டி பிரயோஜனம் பெற்றோமே –

—————–

விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

விட்டிலங்கு மதியம் சீர் சங்கு
விட்டிலங்குகிற பிரகாசத்தை உடைய சந்தரனைப் போலே யாயிற்று ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்
சீர் சங்கு –
பகவத் பிரத்யாசத்தியாலே வந்த ஐஸ்வர்யம் –உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்
கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே –
பிரசாதத்தைச் சூடி கைப்புடையிலே கிடப்பாரைப் போலே அவன் வாயாலே ஊட்ட உண்டு –
வடிவை பாராத் திருக்கையிலே சாயும் அத்தனை
சீர் சங்கு
உன் செல்வம் சால அழகியது -என்னும்படி வாயது கையதான ஐஸ்வர்யம் இறே –
சக்கரம் பரிதி –
கண்டதில் மின்னிற்று ஒன்றை உபமானமாகச் சொல்லும் அத்தனை இறே –
ஆதித்யனைப் போலே அன்றே திரு வாழி வாழ்வான் இருப்பது
(பத்ம பர்வத சந்த்ர -உபமானம்–கீழே விசேஷித்து சொல்லி இங்கு -விசேஷணம் சொன்னாலும்
திருச் சக்கரத்துக்கு நிகர் ஆகாதே –
ஆக சொல்லாமல் -கண்டத்தில் மின்னும் ஒன்றை சொல்லி விட்டார் அத்தனை )

———————

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ண பிரானே –2-9-3-

கையும் திரு வாழியும் பொருந்தி இருக்கும் இருப்பைக் கண்டாயே
நம் பவ்யத்தை கண்டாயே-நம்மை அனுபவிக்கை அழகியதோ
ஷூத்ர விஷயங்களில் பிரவணனாய் அனர்த்தப் படுக்கை அழகியதோ -என்று
கையில் திரு வாழியையும் பவ்யதையும் காட்டி யாயிற்று இவருடைய விஷய பிராவண்யத்தைத் தவிர்த்தது –
சாஸ்திர ப்ரதா நாதிகளால் அன்று -ஐயப்பாடு அறுத்து –ஆதரம் பெருக வைத்த அழகன் –

—————–

விடலில் சக்கரத் தண்ணலை –2-9-11-

மோஷ ஆனந்தம் பிரதம் இத் திருவாய்மொழி
விடலில் சக்கரத் தண்ணலை-விடாமல் -ஆழியை விட்டால் தானே உம்மை விடுவேன் -அச்சுதன் அன்றோ
விடலில் சக்கரத் தண்ணலை –
வீடு தானே பிராப்யம் –ஸ்வார்த்த -கந்த ரஹிதமான ததேக பாரதந்த்ர்யம் —
நாம் விடுகிறோம் என்று அதிசங்கை பண்ணுகிறது என் –
நாம் ஒருவரையும் விடோம் காணும் -என்று திருக் கையில் திரு வாழியைக் காட்டினான் –
விடலில் சக்கரத் தண்ணலை —
ஒரு காலும் விடாத திரு வாழியைக் கையிலே உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று
மேவல் விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒருவரையும் விடாத -அவன் ஸ்வபாவத்தாலே கிட்டி-

—————

மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே –3-1-9-

மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
சத்ரு சரீரங்களிலே படப்பட சாணையில் இட்டால் போலே புகர் பெற்று வாரா நிற்குமாயிற்று திரு வாழி
மழுங்கக் கடவது அன்றியே கூரிய முனையை யுடைய திரு வாழியை –
வடிவார் சோதி வலத்துறையும் -என்னும்படி வலவருகே யுடையையாய் –
நல் வலத்தையாய் தோன்றினையே
கையில் திரு வாழி இருந்தது அறிந்திலன்
அறிந்தான் ஆகில் இருந்த விடத்தே இருந்து அத்தை ஏவிக் கார்யம் கொள்ளலாம் இறே
ஆர்த்த நாதம் செவிப் பட்டவாறே -தன்னை மறந்தான் -கையும் திரு வாழியுமான தன்னை –
தான் ரஷகன் என்பதை மறக்க வில்லை –
நினைத்தாலும் இருந்த இடத்திலே இருந்து துக்க நிவ்ருத்தி பண்ண ஒண்ணாது
தொழும் காதல் களிறு ஆயிற்று
கையும் திரு வாழியுமான அழகு காண ஆசைப்பட்டு இருக்கிறவன் ஆயிற்று –

————–

சங்கு சக்கரத்தின் என்கோ சாதி மாணிக்கத்தையே!–3-4-3-

‘இச் சேர்த்திக்கு என் வருகிறதோ!’ என்று இடமல்லாத இடத்திலும் அச்சத்தாலே ஐயங்கொள்ளுகிற
பிரேமத்தின் முடிவெல்லையிலே
நிற்கின்றவர்களுடைய வயிற்றெரிச்சலைத் தவிர்ப்பன திவ்விய ஆயுதங்கள் அல்லவோ?
‘வயிற்றெரிச்சலைத் தவிர்ப்பதற்குத் திவ்விய ஆயுதங்கள் காரணம் ஆமோ?’ எனின்,
‘வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’ என்னா,
‘சுடராழியும் பல்லாண்டு’ என்னாநின்றார்களன்றோ?

—————

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னை–3-7-3-

பொன் போன்று அழகியதாய், அழகுக்கும் ஆபரணத்துக்கும் மிடுக்குக்கும்
தனக்கு அவ்வருகு இன்றியே இருப்பதாய், இனிமையாலே அளவு இறந்து இருப்பதான திருவாழியை உடையனாய்,
அவ்வழியாலே என்னை எழுதிக்கொண்ட உபகாரகனை. ‘ஆயின், பலகால் திருவாழியைச் சொல்லுவான் என்?’ எனின்,
இராஜகுமாரர்களுக்குப் பிடிதோறும் நெய் வேண்டுமாறு போன்று, இவரும் ‘ஆழிப்பிரான்’ என்பது,
‘பொன் நெடுஞ்சக்கரத்து எந்தை பிரான்’ என்பதாய் அடிக்கடி கையும் திருவாழியுமான சேர்த்தியை அனுபவிக்கிறார்.

—————

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை–3-7-6-

‘நாயுதாநி – ஆயுதங்கள் உனக்காக இல்லை’ என்கிறபடியே, தன்னோடு ஆயுதத்தோடு வாசி அற
‘பக்தாநாம் – பக்தர்களுக்காகவே’ என்று இருக்குமவனை

————

வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-

‘வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’ என்றவர்,
‘வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு’ என்னுமாறு போன்று,
இவரும் மேற் பாசுரத்திலே‘திருமார்பனை’ என்றார்; இங்கே ‘வலந்தாங்கு சக்கரம்’ என்கிறார்.
அந்தப்புரத்துக்கு காவல் வேண்டுமே -இதனால் நம்மாழ்வார் பெரியாழ்வார் -இப்படி அருளிச் செய்கிறார்கள் –
வலப்பக்கத்தே தரிக்கப்பட்ட திருஆழியை உடையனாய் அதற்குப் புகலிடமான நீலமணி போலே சிரமத்தைப் போக்குகின்ற
வடிவழகையுடைய அறப்பெரியவனுக்கு.
ஆள் என்று உள் கலந்தார் அடியார்தம் அடியார் என் அடிகளே –
‘சொரூப ஞானம் முன்பாக ‘அடிமை செய்கையே பிரயோஜனம்’ என்று இருக்குமவர்களுடைய அடியார் எனக்கு ஸ்வாமிகள்,’ என்கிறார்.
விருத்தவான் அபிமானத்திலே ஒதுங்கும் இதுவே அன்றோ வேண்டுவது? அவர்கள் அவனிலும் உத்தேஸ்யர் ஆவர்கள் அன்றோ!
அத்யந்த நிஹீனாக இருந்தாலும் -வ்ருத்தவான்கள் -வலக்கை ஆழியான் -பற்றியவர்கள் -மகாத்மா உடைய பிரபாவத்தால் பாபம் ஒட்டாதே-

————

ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-

அழகுக்கும் விரோதிகளை அழிப்பதற்கும் தானேயாக இருக்கும் கருவியை உடையவன்;
இதனால், ‘வரும் வழியில் எவையாகிலும் தடைகள் உளவாகிலும் கைம் மேலே தீர்த்துக் கொண்டு
வருகைக்குக் கருவி உண்டு,’ என்பதனைத் தெரிவித்தபடி.

————–

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;–3-9-9-

இக்குணங்களைக் காத்து ஊட்ட வல்ல கருவியை உடையவன்.
எனக்கே உளன் –
என் கவிக்கே தன்னை விஷயம் ஆக்கினான்.
ஆழிப்பிரான் –
தானும் தன் ஆயுதமுமாய் இருக்கிற இருப்பை நான் கவி பாடலாம்படி எனக்கு விஷயம் ஆக்கினான்.
‘வலக் கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை மால் வண்ணனை,
மலக்கு நா உடையேற்கு மாறு உளதோ இம்மண்ணின் மிசையே’ என்பர் பின்னும்.

————–

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு –3-10-1-

‘ஸ்ரீ சத்துருக்நாழ்வான், அப்போது தாய் மாமனான யுதா ஜித்தினுடைய வீட்டிற்குச் செல்லுகின்ற ஸ்ரீ பரதாழ்வானால்
அழைத்துச் செல்லப்பட்டார்,’ என்கிறபடியே, இறைவனை விட்டுப் பிரியாத ஒற்றுமையைத் தெரிவிப்பார், ‘சங்கொடு’ என்கிறார்.
‘நல்லாரைக் காத்தற்கும் பொல்லாரைப் போக்கற்கும் சங்கு ஒன்றே போதியதாக இருக்க, சக்கரத்தையும் கொண்டு வந்தான்’ என்பார்,
‘சங்கொடு சக்கரம்’ என்கிறார். -ஸ்ரீ பரத ஆழ்வான் திருச்சங்கு அம்சம் ஸ்ரீ சத்ருன ஆழ்வான் திருச்சக்கர அம்சம் –
ஒரு கொத்துக்கு ஒருவரைக் கொண்டு வருதலோடு அமையாது, வில்லையும் கொண்டு வந்தானாதலின், ‘சக்கரம் வில்’ என்கிறார்.
ஆதித்யானாம் -விஷ்ணு போலே -ஒரு கொத்துக்கு ஓன்று சொல்லி இல்லாமல் -அது அர்ஜுனனுக்கு சரி- ஆழ்வாருக்கு போதாதே
கருதும் இடம் பொரும்படி ஞானத்தாலே மேம்பட்டிருப்பவர்களாதலின், ‘ஒண்மையுடைய உலக்கை’ என்கிறார். ஒண்மை – அறிவு.

கையில் திவ்விய ஆயுதங்களைக் கண்டால், ‘இவற்றைப் போருக்குக் காரணமாகத் தரித்துக் கொண்டிருக்கிறான்,’ என்று
இருப்பர்கள் சமுசாரிகள்; அவ்வாறு அன்றி, நித்தியசூரிகள், ‘அழகிற்குக் காரணமாகத் தரித்துக் கொண்டிருக்கிறான்’ என்று இருப்பர்கள்;
இவரும் அவர்களிலே ஒருவர் ஆகையாலே, -விண்ணுளாரிலும் சீரியர் -அழகிற்குக் காரணமாகவே கொண்டு, ‘ஒள்வாள்’ என்கிறார். ஒண்மை – அழகு.
‘ஒரு கற்பகத் தரு பணைத்துக் கணுத்தோறும் அரும்பினாற்போலே ஆயிற்று வடிவும் திவ்விய ஆயுதங்களும் சேர்ந்த சேர்த்தி இருப்பது,’ என்றபடி.
ஆக, இங்கு நின்றும் போவார்க்கு அடையத் தக்கவர்களான நித்திய சூரிகளோடே கூட வந்து அவதரிக்கிறான் என்பதனையும்,
அவ்வாறு அவதரிப்பதுவும் கண்டு அனுபவித்த பின்னர், ‘அடியார்கள் குழாங்கனை உடன் கூடுவது என்றுகொலோ!’ என்று
பிரார்த்திக்க வேண்டாதபடி அவர்களோடே கூடக் காட்சி கொடுக்கைக்காக என்பதனையும் தெரிவித்தபடி.

————-

சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன்?–4-2-9-

நீ அண்மையில் இருப்பவள் அன்றோ?
தெரிந்த மட்டு அதனைச் சொல்லிக் காணாய்’ என்ன, கைமேலே சொல்லுகிறாள் :–கேட்ட உடனே சொன்னாள்
சங்கு என்னும் –மலையை எடுத்தாற்போலே பெரு வருத்தத்தோடே சங்கு என்னும். அது பொறுத்தவாறே,
சக்கரம் என்னும் – மீளவும் மாட்டுகின்றிலள், சொல்லவும் மாட்டுகின்றிலள்.
இரண்டற்கும் நடுவே கிடக்கிற மாலையை நினைத்து,-துழாய் என்னும் –

————

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்று என்று,–4-3-6-

பகைவர்களுக்குக் கூற்றுவனான திருவாழியோடேகூட, நீலநிறம் பொருந்திய
திருமேனிக்குப் பரபாகமான வெண்மையை யுடைத்தான ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை, வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியிருக்கிற
அழகிய திருக்கையிலே பூ ஏந்தினாற்போலே ஏந்தினவனே! ஸ்ரீ பாஞ்சஜன்யத்துக்கு வெளுப்புத் தன்மை ஆனாற்போலே,
திருவாழிக்குப் பகைவர்களை அழித்தலும் தன்மையாய் இருக்குமாதலின், ‘காலசக்கரம்’ என்கிறார்,

————-

கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறு உண்டோ?–4-5-9-

சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்தவனாய் வந்து அவதரித்தாய்,’ என்று சொல்லும்படியாயிற்று இருந்தது என்றபடி.
‘அஞ்சலி செய்தவராய் வணக்கத்துடன் இருக்கின்ற’ என்கிற இளைய பெருமாளைப் போலே, பகவானுடைய அனுபவத்தால்
வந்த மகிழ்ச்சியாலே சரீரத்தை வளைத்துக் கொண்டிருப்பவன் ஆதலின், ‘கூனல் சங்கம்’ என்கிறது. என்றது,
‘வாயது கையதுவாக அனுபவிக்கின்றவன் அன்றோ?’ என்றபடி.
‘உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்; கண்படை கொள்ளல் கடல்வண்ணன் கைத்தலத்தே;
பெண் படையார் உன்மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார்; பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே!’-என்ற நாய்ச்சியார் திருமொழிப்
பாசுரத்தை அடியாகக்கொண்டு எழுந்தது.–‘வாயது கையது’ என்பது, சிலேடை.
உரிமை நிலை நாட்டி -வாரணமாயிரம் -இப்பொழுது அத்தை கேட்கிறாள் -கற்பூரம் நாறுமோ –
சங்கரய்யா உன் செல்வம் சால பெரியதே -நிகர் உனக்கு யார் -என்கிறாள்

——————-

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;–4-7-10-

சக்கரத்தையுடைய சுவாமியே!’ என்று சொல்லி அனுபவிக்கப் பெறாமையாலே கீழே விழுந்து
சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து –
‘திருவாழியைக் காட்டி என்னை எழுதிக்கொண்டவனே!’ என்று இவ் வார்த்தையோடே தரைப்பட்டு.

————-

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,–4-10-11-

அடிமை செய்து சர்வேசுவரனைக் கிட்டினவர். முறையிலே சர்வேசுவரனைப் பற்றினவர் ஆயிற்று இவர்
தான் விருத்தவானாய்க் காணும் இவரை விருத்தியிலே சேர்ப்பித்தது.
கையில் திருவாழி சேர்ந்தாற்போலே ஆயிற்று இவரும் சேர்ந்தபடி.
கெடு மரக்கலம் கரை சேர்ந்தாற்போலே இருத்தலின் ‘சேர்ந்த’ என்கிறார்.

——————

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! –5-1-1-

வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியான கையிலே திருவாழியைத் தரித்தானாயிற்று.
இது தான் ஆபரணமுமாய் வினைத் தலையில ஆயுதமுமாய் அன்றோ இருப்பது.
ஒரு கைக்குப் படையாய்-யுத்தத்துக்கு – இருக்குமே யன்றோ?
கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய்” என்று அநுகூலர்க்கு ஆசைப் படுகைக்கு உடலாய்,
விரோதிகளைத் துணிக்கைக்கும் உடலாய் ஆயிற்று இருப்பது.

——————

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?–5-1-7-

சர்வேச்வரன்- கையும் திருவாழியுமான அழகை நித்திய சூரிகளுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்குமவன்.
அவன் எத்தகைய பெருமை பொருந்திய நித்திய சூரிகளால் ஆராதிக்கப்படுமவன்.
நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் இருந்தேன் யான்.
பிள்ளையமுதனார், ‘அம்மான் ஆழிப்பிரான்’ என்று மேலே காட்டி, ‘யான் ஆர்’ என்று குறையச் சொல்லிக் காட்டுவர்.

————–

தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்விய உறுப்புகளோடும் அவ் வுறுப்புக்களில் சேர்ந்த திவ்விய ஆயுதங்களோடுங்கூட வந்து,
ஐயோ! ஐயோ! என்று என் பக்கலிலே கிருபையைச் செய்து என்னோடே வந்து கலந்தான்.-ஆவா என்று ஆராய்ந்து அருளினான் –
“கையில் ஆழ்வார்களோடு பொருந்தினாற் போலே என்னோடே வந்து கலந்தான்” என்று ஆளவந்தார்
அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பணிப்பர்.
இதனை எம்பெருமானார் கேட்டருளி இங்ஙனேயாக அடுக்கும்,
‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய்’ -திருவாய். 6. 9 : 1.-என்றாயிற்று இவர் ஆசைப்பட்டிருப்பது;
ஆசைப்பட்டபடியே திவ்விய ஆயுதங்களோடே வந்து கலந்தான்” என்று அருளிச் செய்தார்.
இவர் தாம் பூ வேளைக்காரரைப் போலே, இவை காணாத போது கை மேலே முடிவார் ஒருவரே யன்றோ.
பூ வேளைக்காரர் – அரசர்களுக்கு அவ்வக்காலங்களில் பூ இடாவிடில் குத்திக் கொண்டு முடியுமவர்கள்.
இவை காணாத போது’ என்றது, இவற்றைக் கைமேலே காணாத போது என்றபடி.
கைமேலே முடிவார்” என்பதற்குப் போரிலே முடிவார் என்பது வேறும் ஒரு பொருள்.
ஸ்வரூபத்திற்குத் தகுதியாகச் சேஷியாகவே வந்து கலந்தான் என்பார் ‘அடியேனொடும் ஆனானே’ என்கிறார்.

அப்ராகிருதமாய் அழகியதான திருமேனியோடே திருவாழியோடும் ஸ்ரீ பாஞ்ச சன்னியத்தோடும் பொருந்தினாற்போலே,
அப்ராகிருத விக்கிரகத்தோடே என்னோடே வந்து கலந்தான் என்பது, ஸ்ரீ-ஆளவந்தாருடைய திருவுள்ளக் கருத்து.
“அடியேனொடும்” என்ற உம்மையாலே, கையில் ஆழ்வார்களோடு சேர்ந்தார்போலே என்னோடும் சேர்ந்தான் என்றபடி.

——————-

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார்-5-2-6-

கையும் திருவாழியுமான அழகிலே தோற்றிருக்குமவர்கள் வந்தார்கள்.
நேமிப் பிரான் தமர்-ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்திலே நித்திய சூரிகள்.-
எம்பெருமானார் நிர்வாஹத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள்.

—————–

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்–5-3-10-

யாம்
முதலில் சொல்லி
ஆழி அம் கைப் பிரான் –
பின்னால் சொல்லி -பிரணவம் -அகாரம் சொல்லித் தானே மகாரம் –
பிரணவத்தை விட இங்கே நன்றாக அருளிச் செய்த படி –கேட்டு திருந்த வேண்டியது ஜீவாத்மா தானே
ராஜ புருஷன் -சப்தம் முன்னால் இருந்தாலும் சேவகனுக்கு முக்கியம்

எம் ஆழி அம் கைப் பிரானுடைத் தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம்-
எம் பிரான்’ என்றதனால் நாராயண சப்தார்த்தம் சொல்லப்படுகிறது.
இவனைக் கொண்டு அன்றோ அவனை நிரூபிப்பது.
அகாரம் நாராயணம் நடுவில் மகாரம் விளங்குகிறார் -அவனை இட்டே சேஷன்-
இவன் கைங்கர்யம் செய்யச் செய்ய நாராயணன் -பெருமை பெருகிறானே –
அவன் கையும் திருவாழியுமாகப் புறப்பட்டாற்போலே அன்றோ நான், கையும் மடலுமாகப் புறப்பட்டால் இருப்பது என்பாள்
இரண்டும் அமோகம் -வீணாகாதே –ஈஸ்வரத்வம் திரு ஆழி காட்டும் –
பிரணயித்வம் மடல் காட்டுமே – தேஜோ கரம் இரண்டும் இருவருக்கும்
நான் கையும் மடலுமாகப் புறப்பட்டால், அஞ்சி எதிரே வந்து தன்கையில் ஆபரணத்தை வாங்கி என் கையிலே இட்டு,
தன் தோளில் மாலையை வாங்கி என் தோளிலே இட்டானாகில் குடி இருக்கிறான்;
இல்லையாகில் எல்லாங்கூட இல்லை யாகின்றன. -உபய ஸ்வரூபமும் அழியும் என்றவாறு –
ஆபரணம் என்பதால் இங்கு ஆழி -மோதிரம் என்றபடி -திவ்யாயுதமும் திவ்யாபரணம் தானே அநு கூலர்களுக்கு –

————-

தூப் பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால் – 5-4-7-
இருளைப் போக்கும் போது சந்திர சூரியர்கள் சேர உதித்தாற் போன்று இருக்கின்ற
திவ்விய ஆயுதங்களை யுடையவன் வருகின்றிலன்.
அந்தச் சந்திர சூரியர்கள் வேணுங்காணும் இந்த இருளைப் போக்கும் போது.

ஆங்கத் திகிரி சுடரென்றும் வெண்சங்கம் வானில் பகரும் மதி என்றும் பார்த்து” -மூன்றாந் திருவந். 67.-என்று
சொல்லக் கடவதன்றோ.
பண்டே இவள் கை கண்டு வைத்தமையன்றோ இவை தாம்.
இருளோடே சீறு பாறு என்று போக்குவான் ஒருவனும்,
இருளோடே கண்கலந்து நின்று போக்குவான் ஒருவனுமாயிற்று.
தூய்மையை ஸ்வபாவமாகவுடைத்தான வெண்சங்கு ஆதலின் ‘தூப்பால வெண்சங்கு’ என்கிறாள்.
அன்றிக்கே, பால் என்பது, இடமாய், குறைவற்ற இடத்தை யுடைத்தான வெண்சங்கு என்னுதல்;
“பெரு முழக்கு” என்றும், “நன்றாக நிரம்பின மத்தியினின்றும் வெளிக் கிளம்பின ஒலியையுடைய
ஸ்ரீபாஞ்ச சன்னியம்” என்றும் சொல்லப்படுவது அன்றோ.
ஆயின், ‘தூய்மை’ என்ற சொல் குறைவறுதல் என்றபொருளைக் காட்டுமோ? எனின்,
‘அவன் இவ்வர்த்தத்தில் குறைவற்றவன்’ என்று சொல்ல வேண்டுவதனை ‘அவன் இவ்வர்த்தத்திலே தூயன்காண்’ என்று
வழங்கும் வழக்கு உண்டே அன்றோ. இலக்ஷணை இருக்கிறபடி.
அன்றிக்கே, தூய்மையாலும் வெண்மையாலும், வெளுப்பின் மிகுதியைச் சொல்லுகிறதாகவுமாம்;
அப்போது வேறுசொல் இடையில் வரலாகா. வந்திருப்பதனால், அவ்வாறு பொருள் கூறுதல் பொருத்தம் அன்று.

———————

கை வந்த சக்கரத்து-5-4-8
இந்தத் துன்பத்தைப் போக்குவதற்குச் சாதனம் இல்லாமல் தான் இருக்கிறானோ?
அழையா திருக்கச் செய்தேயும் நினைவறிந்து கையிலே வந்திருக்கும் திருவாழியை யுடையவன்.
“பாவஜ்ஞேந – மாய்-கருத்து அறிந்து காரியம் செய்யும் சாதனத்தை யுடையவன் என்றபடி.
கைவந்த சக்கரத்து என்பதற்கு, அற விதேயமான சாதனத்தையுடையவன் என்னலுமாம்.
“ஸ்ரீ ராமபிரானுக்கு வலக்கை போன்றவர்” என்கிறபடியே, விதேயமாய்க் காரியம் செய்யும் சாதனத்தையுடையவர் என்றபடி.
“பாவஜ்ஞேந-கிருதஜ்ஞேந –தர்மஜ்ஞேந–த்வயா புத்ரேண-தர்மாத்மா-ந ஸம்விருத்த: பிதா மம

—————-

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.–5-5-1-

தண்ணீர் போன பின்னர் அணையைக் கட்டுதல் அன்றோ நீங்கள் செய்கிறது என்றபடி.
மீட்கப் போகாதேபடி இப்போது வந்தது என்? என்ன,
கை மேலே ஒரு முகத்தாலே தான் அகப் பட்டபடியைச் சொல்லுகிறாள் மேல்:
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே –
இதனால், நீங்கள் ஹிதம் சொல்லுவது நெஞ்சுடையார்க் கன்றோ என்கிறாள் என்றபடி.
சங்கினோடும் –
செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்” என்கிறபடியே, கரு நிறமான திரு மேனிக்குப் பரபாகமான
வெளுத்த நிறத்தையுடைத்தான ஸ்ரீ பாஞ்சசன்யத்தோடும்,
நேமி யோடும் –
இந்தக் கைக்கு இது ஆபரணமானால், வேறு ஒன்று வேண்டாதே தானே ஆபரணமாகப் போரும்படி இருக்கிற திருச் சக்கரத்தோடும்,

————–

நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7-

நேமி அம் கை உளதே-
வடிவழகு எல்லாம் ஒரு தட்டும், கையுந் திருவாழியுமான அழகு ஒரு தட்டுமாயாயிற்று இருப்பது. என்றது,
அவன் கையில் திருவாழி பிடித்திலனாகில் நான் பழி பரிஹரித்து மீளேனோ?
அவன் கையில் திருவாழி இருக்க, என்னாலே பழிக்கு அஞ்சி மீளப்போமோ? என்றபடி.

————–

அறி வரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன-5-5-11-

ஆழி அம் கையனையே அலற்றி –
“சங்கினோடும் நேமியோடும்” என்று, தொடங்கின படியே தலைக் கட்டுகிறார்.
அவனைக் கை விடாமல் -இடைவிடாமல் -அநுபவித்ததித்தனை இதற்கு முன்பெல்லாம்;
இதில், கையும் திருவாழியுமான அழகை யாயிற்று உருவச் சொல்லிக் கூப்பிட்டது.

—————

சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-

சங்கு சக்கரத்தாய் –
அங்ஙன் கண்ணழிவு சொல்லலாமோ? ஒரோ கைக்குப் படை அன்றோ கூட நிற்கிறது என்கிறார்.
அங்கு ஒரே கையில் ஒரே வில்-
இங்கு, “இலக்குமணனே! வில்லைக் கொண்டு வா” என்னவேண்டும் குறை உண்டோ.
பிறர் கை பார்த்திருக்கவேண்டும் குறை உண்டோ இங்கு.
பரிகரங்களை அழைத்துக் காரியம் கொள்ளவேண்டும்படியோ உனக்கு இருக்கிறது.
1-நீ அண்மையிலிருப்பவன் அல்லாமையோ,-நீ சந்நிஹிதன் —
2-நீ ஆற்றலுடையவன் அல்லாமையோ,
3-உனக்குப் பரிகரம் இல்லாமையோ,
4-பரிகரம் தான் கை கழிய நின்றோ,-
சங்கு சக்கரத்தாய் -இதுவே நிரூபகம் – எதனாலே தான் இழக்கிறது?

—————–

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!–5-8-8-

வளைவாய் நேமிப்படையாய்-
பார்த்த இடம் எங்கும் வாயான திருவாழியை ஆயுதமாகவுடையவனே!
களையாதொழிகைக்குச் சொல்லலாம் கண்ணழிவு உண்டோ? என்பார் ‘நேமிப்படையாய்’ என்கிறார்.
என்றது, ‘பரிகரம் இல்லை என்னப் போமோ; கைகழிந்து போயிற்று, இனிப் படை திரட்ட வேண்டும்’ என்னும் கண்ணழிவு உண்டோ? என்றபடி.
தொழுவித்துக் கொள்ளும் கைக்கு பரிகரம் உண்டு -சங்கு சக்கரம் ஏந்தும் கையான் -தொழும் கைக்கு அஞ்சலி பரிகரம் உண்டே
வில் கை வீரன் வெறும் கை வீரன் -அகிஞ்சனன் -நம-என்பதே முமுஷுக்கு வீரத்தனம் –
உன் கையில் ஆயுதத்துக்கு வாய் இல்லாத இடம் உண்டோ, அது வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டாவோ? என்பார் ‘வளைவாய்’ என்கிறார்.
மா ஸூ ச சொல்ல வேண்டாமோ -வாய் படைத்த பிரயோஜனம் இது அன்றோ –
நேமிப் படையாய் களைகண் மற்றிலேன் –
அப்படி இருப்பது என் கையில் ஓர் ஆயுதம் உண்டோ, பிறர் கையில் ஓர் ஆயுதம் உண்டோ, உன் கையில் ஆயுதம் இல்லையோ.

—————–

திருவல்லவாழ் சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.–5-9-9-

பகைவர்களை அழிக்க வேண்டும் என்னும் விரைவாலே மிகவும் சுழன்று வாரா நின்றுள்ள திருவாழியையுடைய சர்வேச்வரன்.
அன்றிக்கே, சுழலின் மலி சக்கரம் என்பதற்கு, சுழல்வது போலத் துளங்கா நின்றுள்ள சக்கரம் என்னுதல்.

————-

கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-

கைகொள் சக்கரத்து-
செந்நெலின்படியாயிருக்கை. கைக்கெல்லாம் தானே ஆபரணமாயிருக்கை.
நெல் வயலை மறைத்து உயர்ந்து இருப்பது போலே திருக்கையை இடமாக கொண்ட திருச் சக்கரம்
இராஜபுத்திரர்கள் கையில் இடைச்செறி கடைச்செறிகட்குத் தோற்றிருக்குமாறு போலே,
திருவதரத்தில் பழுப்புக்கும் கையும் திருவாழியுமான சேர்த்திக்குமாயிற்று இவள் எழுதிக்கொடுத்தது.

——————–

கறங்கு சக்கரக்கை க் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.–6-1-3-

பகைவர்களை அழிக்கும் விரைவாலே சுழன்று வாராநின்றுள்ள திருவாழியைக் கையிலேயுடையனான சர்வேசுவரனை. -பூர்வர் நிர்வாகப்படி –
அன்றிக்கே,–பட்டர் நிர்வாகப்படி –
இத்தலையைத் தோற்பித்துக் கொண்டோம் என்னும் மேன்மை தோற்ற, ஆயுதத்தைச் சுழற்றிப் புன்முறுவல்செய்து இருக்கிறபடியாகவுமாம்.

——————

ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6-

செய்யப் பெற்றிலோம்’ என்று நோவுபட்டு இருப்பான் ஒருவனுமாய்,
அவர்கள் இரக்ஷணத்துக்குக் கருவியான திருவாழியைக் கையிலே யுடையனாய்,
நான் காண ஆசைப்பட்ட கையும் திருவாழியுமான அழகை விருப்பமில்லாதார்க்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்குமவனை.
அன்றிக்கே,
‘ஆற்றல்’ என்பதனைத் திருவாழிக்கு அடைமொழியாகக் கொண்டு,
அடியார்களைக் காப்பாற்றுவதில் அவனைக் காட்டிலும் கிருபையை யுடைய திருவாழியைக் கையிலே யுடையவனை என்னுதல்.
அன்றியே,
‘ஆற்றல்’ என்பதனை, அவன் தனக்கே அடையாகக்கொண்டு,
பிரிவுக்குச் சிளையாதே ஆறியிருப்பானாய்க் கையும் திருவாழியுமான சர்வேசுவரனை என்று பட்டர் அருளிச்செய்வர்.

—————-

கரு வண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.–6-1-7-

செரு ஒண் சக்கரம் சங்கு –
இவ் வடிவழகை யெல்லாம் காத்து ஊட்டவற்றனவுமாய், அஸ்தாநே பய சங்கை பண்ணி யுத்தோந்முகமாய்,
கை கழியப் போய் நின்று ரக்ஷிப்பதும், கை விடாதே வாய்க் கரையிலே நின்று ரக்ஷிப்பதுமான திவ்விய ஆயுதங்கள்.
கிட்டினாரை ‘இன்னார் என்று அறியேன்’ என்று மதி மயங்கப் பண்ணுவிக்கும் திவ்விய ஆயுதங்கள் ஆதலின் ‘ஒண்’ என்கிறாள்.

——————-

வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9-

இவ்விடத்தைப் பட்டர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே கஞ்சனூரில் இருந்தவரான வண்டு வரைப்பெருமாள் என்பவர்,
மால் வண்ணனை ‘மலக்கு நாவுடையேன்’ என்ன அமையாதோ?
‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை’ என்று விசேடித்ததற்குக் கருத்து என்? என்ன,
“சோளேந்திர சிங்கனை உளுக்காக்கப் பண்ணுகிறேன் என்கிறார் காணும்” என்று அருளிச்செய்தார்.
‘சோளேந்திர சிங்கன்’ என்பது, நம் பெருமாளுடைய யானை. உளுக்காக்க – இருக்கும்படி. என்றது
சர்வேசுவரனாகிற மத்த யானையானது பணிந்து கொடுக்கும்படி செய்கிறேன் என்கிறார் என்றபடி.
அறப் பெரியவனுக்கு லக்ஷணம் அன்றோ சங்க சக்கரங்கள்.

—————

தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-

தவளம் ஒண் சங்கு –
கரிய நிறமுடைய திருமேனிக்குப் பரபாகமான வெண்மையை யுடைத்தாய்,
“உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்” என்கிற அழகை யுடைத்தான சங்கு. சக்கரம் –
அங்ஙனம் ஒரு விசேடணம் இட்டுச் சொல்ல வேண்டாத அழகை யுடைய சக்கரம். என்றும் –
‘இவற்றைக் காண வேணும்’ என்னுதல்;
‘இவற்றோடே வர வேணும்’ என்னுதல் சொல்ல மாட்டுகின்றிலள் பலக் குறைவாலே.
திவ்வியாயுதங்களையும் கண்ணழகையும் காட்டியாயிற்று இவளைத் தோற்பித்தது.

—————–

சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச்செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்குஎன்
மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2-

சங்கம் வில் வாள் தண்டு சக்கரம் என்னும் ஐந்து ஆயுதங்களையும் தரித்த திருக் கரங்களை யுடையவனுக்கு
பஞ்சாயுதங்களையும் ஒருசேர அருளிச் செய்திருத்தல் காண்க.
திருவுலகு அளந்தருளின காலத்தில் திவ்விய ஆயுதங்கள் முதலியவைகளின் அழகிலே அகப்பட்டுத்
தன்னுடைய அழகிய நிறத்தை இழந்தாள்
ஸ்ரீபஞ்சாயுதங்களின் சேர்த்தி அழகிலே ஆயிற்று இவள் ஈடுபட்டது.
பரம ஸ்வாமி திருமால் இரும் சோலை மூலவர் பஞ்சாயுதம் உடன் சேவை உண்டே –
இவளுடைய ஓர் ஆபரணம் வாங்குகைக்கு எத்தனை ஆபரணம் பூண்டு காட்டினான்?
கைக்கு மேல் ஐந்துங் காட்டிக்காணும் இவளுடைய ஆபரணம் வாங்கிற்று.
புரடு கீறி ஆடுகிற அளவிலே -தாயக் கட்டம் -அஞ்சுக்கு இலக்காக -ஒரு கை இருக்க -கை மேல் அஞ்சு போட்டு வெட்டுகிறேன் போலே –
ஆபரண கோடியிலும் ஆயுத கோடியிலும் இரு புடை மெய்க் காட்டின அன்றோ இவைதாம்.–உபய கோஷ்டி –

————

கறங்கிய சக்கரக் கையவ னுக்கு என்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.–6-6-3-

பகைவர்களை அழிக்கவேண்டும் விரைவாலே எப்பொழுதும் சுழலாநின்றுள்ள திருவாழியைத் திருக்கையிலே யுடையவனுக்கு:
தான் ரக்ஷகனான அளவன்றியே, பரிகரமும் ரக்ஷணத்திலே முயற்சியோடு கூடி இருக்கிறபடி.
அவன் கைப்பிடித்தார் எல்லாரும் ரக்ஷணத்திலே விரைவுடையராயன்றோ இருப்பது.
ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானும், “ஒரு வினை உண்டாகவற்றே, நாம் வாய்க்கரையிலே நின்று
ஓசையை விளைத்து வினை தீர்க்க” என்று பிரார்த்தியா நிற்கும்.

————–

கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2-

எப்போதும் கை கழலா நேமியானாய் இருத்தலின் ‘கையமர் சக்கரம்’ என்கிறது.
கையும் திருவாழியுமான அழகினைக் காட்டுவது முறுவலைக் காட்டுவதாய் என்னைத் தனக்கே உரிமை ஆக்கினவன்.
திருவாழிக்கு முற்றூட்டு ஆயிற்றுத் திருக்கை; தமக்கு முற்றூட்டு திருப்பவளம்.
அவன் ஜீவனத்தை நித்யமாக்கினான், என் ஜீவனத்தைக் காதா சித்கமாக்கினான்.
அவனுக்கே கையடைப்பு ஆயிற்றே. கைமேலே இடுமே.

———————

கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

ஸ்ரீ பாஞ்சஜன்யத்தில் வெண்மைபோன்று திருவாழியில் கூர்மையும் இவர்க்குக் கவர்ச்சியாயிருக்கிறபடி
பகைவர்களைத் துணிக்கத் துணிக்கச் சாணையில் ஏறிட்டாற்போலே கூர்மை மிக்கிருத்தலின் ‘கூர்ஆர் ஆழி’ என்கிறது.
அசாதாரண விக்கிரஹத்துக்கு லக்ஷணமோ தான் கையும் திருவாழியுமாயிருக்கை.

—————-

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!–6-10-2-

நீ கைகழலா நேமியானாய்இருக்கிறதற்கும் என் தீவினைகள் கிடக்கைக்கும் என்ன சேர்த்தி உண்டு?
தடை இல்லதா சக்தியையுடைய திவ்விய ஆயுதங்களானவை இவனுடைய பாபங்கள் எல்லாவற்றையும்
போக்கிக் காப்பாற்றக் கூடியனவாயிருக்கும்.
அவனாலே வருமவற்றையும் போக்கக் கூடியனவாயிருக்கும்.
அருளார் திருச்சக்கரம் அன்றோ-திருவிருத்தம், 33.-
பண்டே அவனைக் கை கண்டிருப்பவர்கள் அன்றோ. –
வரம் ததாதி வரத–அவன் அருள் மறுத்தபோதும் இங்குத்தை அருள்மாறாதே அன்றோ இருப்பது.
ஆகையாலே, அவன் திருவருளைப் பெற்றவர்கள் திருவாழியில் கூர்மையை அன்றோ
தங்களுக்குத் தஞ்சமாக நினைத்திருப்பது.

———————-

கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2-

மின்னு நேமியனாய் –‘இயற்றி-யத்னம்- உண்டு என்னா, சங்கற்பத்தால் நோக்குமவனோ?
ஆசிலே வைத்தகையும் நீயுமாயன்றோ நோக்குவது? -ஆசு -பிடி -ஆயுதம்
‘அருளார் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல்
நடாவுதிர்,’ திருவிருத்தம், 33.– என்னக் கடவதன்றோ?
உருவின வாள் உறையில் இடாதே அன்றோ நோக்குவது?
விளங்காநின்றுள்ள திருவாழி. -கிருபையால் மிக்கு இருக்கும் திரு ஆழி

————–

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்–7-2-1-

கண்ணநீரை மாற்றினால் கண்களாலே காண வந்து தோற்றும் படியை நினையா நின்றாள்.
சொல்லா நின்றாள் என்ன வில்லை –விலக்கின பின்பு சேவை சாதிப்பானே -அத்வேஷம் மாத்திரம் போதுமே –
‘தவள ஒண் சங்கு சக்கரம்’ திருவாய்மொழி, 6. 5:1.-என்று திவ்விய ஆயுதங்களோடு காண அன்றோ இவள் தான் ஆசைப்பட்டிருப்பது!
‘தேநைவ ரூபேண சதுர்ப் புஜேந’ என்பது, ஸ்ரீகீதை, 11.46.
‘கையினார்சுரி சங்கு அனல் ஆழியர் நீள்வரைபோல் மெய்யனார் –என்பது, அநுசந்தேயம். ( அமலனாதிபிரான்.7.)
உகவாத கம்ஸன் முதலாயினோர்களுக்கு அன்றோ இரு தோளனாக வேண்டுவது’
‘நான்கு தோள்களையுடைய அந்த உருவமாகவே ஆகக் கடவீர்’ என்றான் அன்றோ காண ஆசைப்பட்ட அருச்சுனன்?
‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய். என்னக் கணிசித்து,திருவாய். 6. 9:1. கணிசித்து-விரும்பி.-
வலி இல்லாமையாலே தலைக்கட்ட மாட்டாதே, விடாயன் கையை மடுத்துத் தண்ணீரை வேண்டுமாறு போலே,
குறையும் அஞ்சலியாலே தலைக்கட்டா நின்றாள்.சங்கு சக்கரங்கள் ஏந்தி வாராய் முடிக்க முடியாமல் –
சங்கு சக்கரம் சொல்லி தாமரைக் கண் -திரு மேனி முழுவதும் திருக் கண்கள் அகப்படுத்த -அர்ச்சை அன்றோ —

———–

‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்–7-2-4-

‘சங்கு சக்கரங்கள்’ என்று சொல்லும் நிலையும் போயிற்று,
இப்போது கண்களுக்கு விஷயம் அன்றிக்கே இருக்கச் செய்தேயும், அவற்றினுடைய அமைப்பு, புத்தியிற்படிந்ததாய் இருக்கிறபடி.
பிடித்த இடம் எங்கும் வாயாக இருத்தலின், ‘வட்டவாய்’ என்கிறது.
இதனால், ‘விரோதியைப் போக்கப் பரிகரம் இன்றிக்கே இருக்கிறாய் அன்றே?’ என்கிறாள் என்றபடி.

————-

‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்–7-2-6-

திவ்ய ஆயுதங்கள் பகைவர்களை அழிப்பதற்கு உடலாக இருக்குமாறு போலே
காதலிகளை அழிக்கைக்கும் உடலாக இருக்குமன்றோ உகப்பாரையும் உகவாதாரையும் ஒக்கத் தோற்பிக்குமவை?
முன்னே கை கண்டு வைக்கிறவை அன்றோ?
காணவே பகைவர்கள் மண்ணுண்ணும்படியான திவ்ய ஆயுதங்களைத் தரித்திருக்கிற நீ
என் விரோதிகளைப் போக்கி முகங்காட்டாது ஒழிவதே!
திவ்விய ஆயுதங்களினுடைய சேர்த்தியால் வந்த அழகினைக் காட்டி நடத்த, அதுவே ஜீவனம் ஆயிற்று அந்நாடு கிடப்பது.
இல்லையாகில், அங்கே வினை உண்டாகத் தரித்திருக்கிறான் அன்றோ?

———————–

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!–7-3-1-

‘தவள ஒண்சங்கு சக்கரம்’ -திருவாய். 6. 5:1.-என்றும்,
‘கூரார் ஆழி வெண்சங்கு’ திருவாய். 6. 9:1.-என்றும்,
‘சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்’ -7. 2:1.-என்றும் கையும் திருவாழியுமான அழகு கைவிடாதே இவரைத் தொடருகிறபடி.
முகில் வண்ணன் அன்றோ? அந்த நிறத்துக்குப் பரபாகமான வெளுப்பையும் சுரியையுமுடைத்தான ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும்,
அங்ஙனம் ஒரு விசேடணம் இட்டுச் சொல்ல வேண்டாதபடியான அழகையுடைத்தான திருவாழியையும் ஏந்தி,
தாமரைக் கண்ணன்–‘தாமரைக் கண் என்றே தளரும்’ என்றது. பின் நாட்டுகிறபடி.

திருமேனிக்குத் திவ்விய ஆயுதங்கள் பிரகாசகமாய் இருக்குமாறு போலே,
ஆத்தும குணங்களுக்குத் திருக்கண்கள் பிரகாசகமாய் இருக்கிறபடி. என்றது,
‘அகவாயில் தண்ணளி எல்லாம் கண்வழியே அன்றோ தோற்றுவது?’ என்றபடி.
பகைவார்களுக்குத் திவ்விய ஆயுதங்களோடு ஒக்கத் திருக்கண்களும் விரோதியாய்த் தோற்றுமாறு போலே அன்றோ,-
அழல விழித்தான் அச்சோ அச்சோ
அனுகூலர்க்குத் திருக்கண்களைப் போன்று திவ்விய ஆயுதங்களும் அழகுக்கு உடலாகத் தோற்றுகிறபடி?
திருக்கண்களோடே திவ்விய ஆயுதங்களையும் திவ்விய ஆயுதங்களோடே திருக்கண்களையும் சேர்த்து அனுபவிப்பர்கள்.
தாமரை சூரிய சந்திரன் பார்த்து -சேர்ந்தே அருளிச் செய்வார் -நாடு பிடிக்க பார்க்க ஆழ்வார்கள் தடை -என்றுமாம் –
ஆயுதங்களோடே திருக்கண்களைக் கூட்டுகிறது, தோற்பித்தபடிக்கு;
‘உனக்குத் தோற்றோம்’ என்னப் பண்ணுமன்றோ? கண்களோடு திவ்விய ஆயுதங்களைக் கூட்டுகிறது அழகுக்கு.
ஜிதந்தே புண்டரீகாஷா -செய்ய கண்ணா செஞ்சுடர் ஆழி-திருக்கண்களை சொல்லியும் ஆழ்வார்களை சொல்லுவதும் உண்டே
இவ்விடத்தே நிலாத்துக் குறிப் பகவர் வார்த்தையை அருளிச் செய்வர் சீயர். -ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு இரண்டு தோள்களா நான்கு தோள்களா —
கைக்கு ஆழ்வார்கள் ஆபரணமாய் இருக்குமாறு போலே ஆயிற்று, முகத் திருக் கண்கள் ஆபரணமாய் இருக்கும்படியும்.

‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்-செருக்கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன், என் ஆழி வண்ணன்பால் இன்று’-என்று வடிவழகைப் போன்று
திவ்விய ஆயுதங்களும் ஆபரணமாய் அழகியனவாயன்றோ இருப்பன?
ஆழ்வார்கள் தாம் அவனைக் கை செய்திருக்கையாலே ஆபரணகோடியிலே இருப்பார்கள்.
கை செய்தல் –- அலங்கரித்தல்.-சகாயம் செய்தல் -யுத்தம் செய்தல்

—————-

முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4-

வேத ஒலியானது ஸ்ரீபாஞ்சஜன்யத்தைக் கிட்டி எதிர் ஒலி எழா நிற்கும்.

————-

ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே.–7-3-11-

கையும் திருவாழியுமான அழகிலே இவர் அகப்பட்ட படியைத் தெரிவித்தபடி.
அல்லாத அழகுகள் ஒருபடியும் இது ஒரு படியுமாய் இருக்கை; இது கை மேலே அனுபவித்துக் காணலாமே.
அடிமைக் கூட்டத்தில் திருவாழியின் தன்மையை யுடையவர் என்னுதல்;-திறம் -வர்க்கம் சமூகம் என்றபடி –
அடிமை இடையாட்டத்தில் ஒருவரால் மீட்க ஒண்ணாதபடி உட்புகுவர் என்னுதல்.திறம்-யத்னம் –ஊற்றம்-என்றபடி

————

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-

ஆழி எழ – ‘மூன்று உலகங்களையும் காற்கீழே இட்டுக்கொள்ள வேணும்’ என்னும் கறுவுதல் உள்ளது சர்வேஸ்வரனுக்கே அன்றோ?
அந்த எண்ணம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும் அவனுக்கு முன்பே பரிகரம் முற்பட்டபடி.
‘காட்டுக்குப் போம்’ என்று நியமித்தது பெருமாளையேயாயிருக்க. இளைய பெருமாள் முற்பட்டாற்போலே.
ஆழி எழ –-தோற்றத்திலே அரசு போராயிற்று; ஹேதி ராஜன் அன்றோ? திவ்விய ஆயுதங்களுக்கெல்லாம் பிரதானம் அன்றோ திருவாழி?
பரிகரம் நிற்க மஹாராஜர் இராவணன் மேலே பாய்ந்தாற்போலே;
ஆழி எழ –‘ஆயிரக் காதம் பறப்பதன் குட்டி ஐந்நூற்றுக் காதம் சிறகு அடிக் கொள்ளும்’ என்னுமாறு போலே முற்கோலி வளர்ந்தபடி.
சிறகடிக் கொள்ளுகையாவது, பின்பு தூரப் பரப்பதற்குத் தகுதியாம்படி இளமையிலே பயிலுதல்.
அச்சங்கொள்ளுதற்கு இடம் அல்லாத இடத்திலும் பயப்படக் கூடியவர்கள், அஞ்சத்தக்க இடத்தைக் கண்டால் வாளா இரார்களே அன்றோ?
பயசங்கை இல்லாத இடத்திலும் அஞ்சும்படி செய்கிறது விஷய வைலக்ஷண்யம் அன்றோ?

இவன் வளர்ந்தருளுகைக்குக் கணிசித்தபடியைக் கண்டு, ‘தனியாக ஒண்ணாத’ என்று அஞ்சித் திருவாழியாழ்வான் ஒரு கையிலே ஏறினார்.

சங்கும் வில்லும் எழ- தூசி ஏறினவர்கள் பொரப் புக்கவாறே நின்ற இளவணி கலங்கி மேலே நடக்குமாறு போலே,இளவணி-காலாள்.
மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கைகளிலே ஏறினார்கள்.
அன்றிக்கே, ‘இரை பெறாத இடத்தே இருந்து சீறுபாறு என்னக்கூடியவர்கள் இரையுள்ள இடத்தில்
ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடார்கள் அன்றோ?’ என்னுதல்;
இனத்திலே ஒருவன் வாழ்வதனைக் கண்டவாறே உறவினர்கள் கூட்டம் வந்து மேல் விழுமாறு போலே,
மற்றைத் திவ்விய ஆயுதங்களும் மேல் விழுந்தபடி என்னுதல்.
‘இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இரண்டாந். 71.
எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி-
அவனைப்போல் ஆர்த்துக் கொள்ளுதற்குக் காலம் அற்று நெருப்பினை உமிழ்ந்துகொண்டு
நமுசி முதலானவர்களை வாய்வாய் என்றது திருவாழி.
விடம் காலும் தீவாய் அரவுகிடந்த இடத்தே கிடந்து பகைவர்கள் மேலே விஷமாகிய நெருப்பினை
உமிழுமத்தனை அன்றோ திருவனந்தாழ்வானாலாவது?

—————

சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்–7-8-3-

திருச்சக்கரத்தாய் –பகலை இரவாக்கும் பரிகரத்தையுடையவனே!

————

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை–8-3-3-

ஆபரணமான திவ்ய ஆயுதங்கள் -அவனுடைய மிருதுத் தன்மையினாலே
மலை எடுத்தாப் போலே சுமையாகத் தோன்றுகிறது இவர்க்கு
பகைவர்களுக்கு ஆயுதங்களாய் -அனுபவிப்பார்க்கு ஆபரணமாய் இருக்கிறவை –
தாம் —தம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டாவோ
எப்போதும் கை கழலா நேமியான் அன்றோ –
அவனுக்கு நிரூபகங்களான இவை சுமையோ -என்ன-இவருக்கு அடையாளமாகவும் தோன்றும் –
இப்படி சுமப்பதாகவும் பண்ணும் -நீயே தான் இப்படி எல்லாம் பாட வைக்கிறாய்-

——–

இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் ஏறு மிருஞ் சிறைப்புள்
அதுவே கொடியா வுயர்த்தானே–8-5-9-

மேகத்திலே மின்னினாப் போலே அடியார்கள் உடைய-விரோதிகளை அழித்தலையே இயல்பாக உடைய
திரு ஆழியைப் படையாக உடையவனே -என்றது-
அத் திரு ஆழியைக் கொண்டு என்னுடைய தடைகளின் மேலே செலுத்தினால் ஆகாதோ -என்றபடி –

————–

எங்கும் திகழும் எரியோடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி –8-9-3-

பரப்பு மாறிக் கொண்டு பிரகாசிக்கின்ற நெருப்போடு கூட-நடந்து சொல்லுமாறு போலே ஆயிற்று
ஆயுதங்களால் வந்த புகரும்-திருமேனியும் இருக்கிறபடி –
புகழும் பொரு படை -செழும் கதிர் ஆழி முதல்-ஏந்தி –போர் செய்கின்ற மிக்க ஒளியை உடைத்தான
திரு ஆழி முதலான அழகிய ஆயுதங்களை ஏந்திக் கொண்டு –
புகழும் படை -என்றது-ஞானம் உடைய திரு ஆழி முதலான ஆயுதங்களாலே-புகழப் பட்ட வெற்றி ஒலியை உடைய பெருமானே –என்கிறபடியே
ஹேதிபி சேதனாவத்பி உதீரித ஜெயஸ்வனம் – இரகுவம்சம் -10-
ஆழி எழ சங்கும் வில்லும் எழ போலே -அழகிய ஆயுதங்களால் புகழப் படுகின்ற எம்பெருமான் –

——————–

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-

இவள் கையில் உள்ள விளையாட்டுத் தாமரைப் பூ அவனுக்கு-இனிதாக இருக்குமா போலே ஆயிற்று
அவன் கையில் திவ்ய ஆயுதங்கள் இவளுக்கு இனியவை இருக்கிறபடி-பிராட்டியை கூறி திவ்ய ஆயுதங்களை அருளுவதால் –
ஸ்ரீ குணரத்ன கோசம் -47 ஸ்லோகம் -இது போலே
இவள் உகப்புக்காக அடியார்கள் உடைய பகைவர்களை அழியச் செய்கைக்கு காரணமாய்
காட்சிக்கு இனியதாய் இருக்கும் ஆயிற்று –
பகைவர்கள் மேல் மிக வெம்மையை உடைத்தாய்-புகரோடு கூடி இருக்கிற திரு ஆழி –
இருக்கும் தோற்றப் பொலிவே அமைந்து -வேறு ஒரு கார்யம் கொள்ள வேண்டாதே-
வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டு இருக்கும் படியான-ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் –
ஏந்தும் கையா –வெற்று ஆயுதங்களையே அன்று –வெறும் திருக் கரங்களையே அன்று –
இரண்டின் உடைய சேர்த்தியை யாயிற்று இவர் ஆசைப் படுகிறது-
கூர் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய் -6-9-1- என்னுமவர் அன்றோ

——————

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-

அனுபவிப்பார்க்கு விரோதிகளையும் போக்கி-திருக் கைக்குத் தானே ஆபரணமாய்-
அனுபவிப்பார்க்கு விரும்பத் தக்கதான-வடிவை உடைய திரு ஆழியைக் கையிலே உடையவன் -என்றது –
அனுபவத்துக்கும் தானேயாய்-விரோதிகளை அழிப்பதற்கும்-தானே யான கருவியை உடையவன் -என்றபடி –

———-

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8-

ஆழியான் –பரத்வ சின்னமான திரு ஆழியைக் கையிலே-உடையவன் –
ஆழி யமரர்க்கும் அப்பாலான் – அத் திரு வாழி ஆழ்வானைப் போன்று-பெருமிதத்தை உடைய நித்ய சூரிகளுடைய
ஸ்வரூபம் ஸ்திதி-முதலானவைகள் தன் அதீனமாய் இருக்குமவன் –

————–

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

சர்வேஸ்வரன் நம் பக்கல் முழு நோக்காக நோக்கி மிக்க அருளிச் செய்வானாகா பாரியா நின்றான் –
திரு வாழியை ஒரு கண்ணாலே பார்ப்பது –
இவரை ஒரு கண்ணாலே பார்ப்பது -ஆகா நின்றான் –
விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல் விடல் இல் -2-9-11–என்கிறபடியே-
கையில் திரு ஆழியை விடல் அன்றோ உம்மை விடுவது -என்னா நின்றான்-
அவர்களை இட்டுத் தன்னை நிரூபிக்க வேண்டும்படி-இருத்தலின் -ஆழியான் -என்கிறார் –

—————-

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-

கருதுமிடம் பொருது -கைந்நின்ற சக்கரத்தன் –
குறிப்பினை அறிகின்றவன் ஆகையாலே-சர்வேஸ்வரன் திரு உள்ளத்தின் கருத்து அறிந்து
போரிலே புக்கு எதிரிகளை அழியச் செய்து வெற்றி கொண்டு –

————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்—சமந்வய அத்யாயம்— சங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணம்-1-4–3-ஸூத்ரங்கள்- ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

January 27, 2020

ஸ்ரீ பாஷ்யம்— -1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள் —
இரண்டாம் அதிகரணம்-சமச அதிகரணம் –3-ஸூத்ரங்கள்—
மூன்றாம் அதிகரணம்—சங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணம் -3-ஸூத்ரங்கள்-
நான்காம் அதிகரணம்— காரணத்வாதிகரணம்–2-ஸூத்ரங்கள்- ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாசாரர்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

————————————————————

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் 29–ஸூத்ரங்கள் –
இரண்டாம் அதிகரணம்–சமச அதிகரணம் –3-ஸூத்ரங்கள்–1-4-8/9/10-—-ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள்
மூன்றாம் அதிகரணம்—சங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணம்–3-ஸூத்ரங்கள்-

—————

விஷயம்
இந்திரியங்கள் ஆகாசம் போன்ற அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே என்று நிரூபணம் –

1-4-11-ந சங்க்ய உப சங்கரஹாத் அபி நாநா பாவாத் அதிரேகாத் ச –

எண்ணிக்கையைக் கூறுகிறது என்பதால் சாங்க்ய யோகம் என்றது ஆகாது –
வேறுபடுவதாலும்-அதிகம் உள்ளதாலும் -என்றவாறு –

ப்ருஹத் ஆரண்யாகாவில்-4-4-17-
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா ஆகாசாஸ்ஸ ப்ரதிஷ்டித தமேவ மன்ய ஆத்மானம் வித்வான் ப்ரஹ்மாத்ருதோம்ருதம் –
என்று-எந்த ஆத்மாவிடம் ஐந்து ஐந்து பேர்கள் மற்றும் ஆகாசம் நிலை பெறுகின்றனவோ அவனே ஆத்மா –
அந்த ஆத்மாவை இப்படியாக அறிபவன் முக்தனாகிறான்
இந்த மந்திரத்தில் ஐந்து ஐந்து என்று -25-தத்வங்களோ-சாங்க்யர்கள் சொல்வது போலே என்ற சங்கை

பூர்வ பக்ஷம்
கபில தந்திரத்தில் கூறப்பட்டதே இங்கு பஞ்சநா ஐந்து கூட்டங்கள் -25-இவையே முக்தி பெற அறிய வேண்டியவை
கபில மதத்தில் –மூல ப்ரக்ருதி அவிக்ருதிர் மஹாதாத்யா பிரகிருதி விக்ருதய சப்த -ஷோட சகச்ச விகாரோ -விகாரஸ்து –
ந ப்ரக்ருதிர் ந விக்ருதி புருஷ –என்று அனைத்துக்கும் காரணம் மூல ப்ரக்ருதியே —
மஹத் அஹங்காரம் ஆகாசம் வாயு அக்னி நீர் பூமி ஆகிய எழும் ஓன்று மற்ற ஒன்றின் காரணம் –
பஞ்ச பூதங்கள் பதினோரு இந்திரியங்கள் கார்யம் –ஆத்மா காரியமும் அல்ல காரணமும் அல்ல –
இதுவே இந்த மந்திரத்தில் கூறப்படுகிறது என்பதே கபில தந்திரம்

சித்தாந்தம்
ந சங்க்ய உப சங்கரஹாத் அபி
இங்குள்ள பஞ்ச பஞ்ச ஜனா -என்று -25-பற்றி கூறினாலும் இது கபில தந்த்ரத்தை உணர்த்தப்பட வில்லை –
நாநா பாவாத் –
வேறாக உள்ளதால்
பிருஹு -6-4-17-
யஸ்மின் பஞ்ச பஞ்சநா ஆகாசச்ச ப்ரதிஷ்டித -என்பதில் யஸ்மின் -யத் என்ற சொல்லால் –
அவை அனைத்தும் ப்ரஹ்மத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளன என்பதால் ப்ரஹ்மாத்மகமே
மேலும் பிருஹு -4-4-17-
தமேவ மன்ய ஆத்மானம் வித்வான் ப்ரஹ்மாத்ருதோம்ருதம் -என்று அந்த ஆத்மாவை இப்படியாக அறிபவன்
முக்தி அடைகிறான் என்பதில் உள்ள
தம் -அந்த -என்பது ப்ரஹ்மமே ஆகிறது
இதுவே கீழே யத் என்ற சொல்லால் காட்டப்பட்ட ப்ரஹ்மம் –
எனவே வேறுபட்டதாகும்
அதிரேகாத் ச –
இங்கு கூறப்பட்டவை கபில தந்திரத்தில் கூறப்பட்ட எண்ணக்கையை விட அதிகமாக உள்ளன –
அதாவது -யத் -என்பதால் கூறப்பட்ட ஆத்மா -ப்ரஹ்மம் -மற்றும் ஆகாசம் ஆகியவை இரண்டும் கூடுதலாகும்
ஆகவே -தம் ஷட்விம்சகம் இத்யாஹு சப்த விம்சதா பரே–தத்வங்கள் -26-என்றும் -உயர்ந்த ப்ரஹ்மம் -27-என்றும் சொல்லும்
சுருதி வாக்கியத்தின் படியே அனைத்துக்கும் ஆதாரமாக உள்ள சர்வேஸ்வரனும் பரமபுருஷனும் ஆகிய
ப்ரஹ்மமே இங்கு உபதேசிக்கப்படுகிறான்
ஸூத்ரத்தில் -ந சங்க்ய உப சங்கரஹாத் அபி-என்பதில் அபி சப்தம் -என்றால் கூட -என்பதன் மூலம்
பஞ்ச பஞ்ச நா என்று இருந்தால் கூட -25-தத்துவங்களே கூறப்பட்டன என்று கூற முடியாது
இங்கு ஒவ் ஒன்றும் ஐந்து எண்ணிக்கைகள் கொண்ட ஐந்து கூட்டங்களாக உள்ளன என்று கூறப்பட வில்லை
பொதுவான ஜாதி குணங்கள் வேறே எந்த அடிப்படையிலோ ஐந்து கூட்டங்களாக பிரிக்க முடியாதே
ஐந்து கர்ம இந்திரியங்கள் ஐந்து ஞான இந்திரியங்கள் ரோந்து பூதங்கள் ஐந்து தன்மாத்திரைகள் மீதம் உள்ள ஐந்து என்று
கொள்ளலாமே என்னில் இது சரி அல்ல -ஆகாசம் தனியாக –4-17-மந்திரத்தில் இருப்பதால் –
ஆக பஞ்ச அடைமொழிகள் உடன் கூடிய பஞ்ச ஜனா -என்றது
சப்த சப்த ரிஷிகள் ஏழு சப்த ரிஷிகள் என்றால் போலவே –

ஆக -5 தன்மாத்ரைகள் -5-ஞான இந்த்ரியங்கள் -5 கர்ம இந்த்ரியங்கள் -பிரகிருதி -மனம் -அஹங்காரம் -ஆத்மா
என்று 25 தத்வமாக ஜீவனைக் குறித்து-இவற்றை அறிந்தால் மோஷம் பெறலாம் என்கிறது உபநிஷத்
சாங்க்ய மதம் போலே சுதந்திரமான தத்வங்கள் அல்ல
யஸ்மின்-என்று பரம் பொருளைச் சார்ந்தே உள்ளவை-என்றவாறு

அத்யாத்ம விஞ்ஞானம் –பரமாத்மா உபாஸகம்-சஷூசா -கண்ணால் குடிக்கும் படி –
ஸ்ரீ ராமாயணத்தில் -உபாதேயமான வஸ்துக்களை நாம் கண்ணாலும் பருகுகிறோமே பிராக்ருதத்தில் -அர்ச்சை மூலம் ஆரம்பம் –
மேலே மேலே பரத்வம் பர்யந்தம் அனுபவம்
பௌமா பிபந்து அந்வஹம்—பூமியில் உள்ளார் அனைவரும் குடிக்கட்டும் -இந்த அம்ருதம் -மங்கள ஸ்லோகம் படி –
தேவதா -ஸ்வரூபம் -மட்டும் இல்லாமல் ஸ்வரூபதயா பர ப்ரஹ்மம் உபாஸகம் மிகவும் ஸ்ரேஷ்டம் -பூர்த்தி இதுவே -அத்யாத்ம உபாஸகம் –
முதல் நூறு -திருவாய் மொழி -ஸ்வரூபமே -அர்ச்சை கலசாமல் -கண்ணன் அருகிலானே–முடியில் உளானே –
யோக சாஸ்திரம் -படியே அனுபவம் -மானஸ அனுபவம் –
இதில் சர்ச்சைகளோ -சம்பிரதாய பேதங்களோ வராதே-
அனைத்தையும் தாண்டி நேராக பர ப்ரஹ்ம அனுபவம் –அஹம் ப்ரஹ்மாஸ்மி உபாசனமும் அனுபவமும் –
யாருக்கும் நினைக்கவும் கற்பனை பண்ணவும் எட்டாத விஷயம்

ஜ்யோதிஷம் ஜ்யோதி வித்யை இது -மூல ஸ்வரூபம் -அனைத்துக்கும் அந்தர்யாமி -25-தத்துவங்களும் இவன் இடம் பிரதிஷ்டை —
பரஞ்சோதி ஓ -ஆயிரம் இரவி கலந்தால் ஒத்த –
சமாசம் –பல உண்டே சமஸ்க்ருதத்தில் -பிதரவ் – மாதாவையும் பிதாவையும் -ஏக சேஷ சமாசம் –
த்வந்த சமாசம் இரண்டு சமாகாரம் group-பாணவ் பாதவ் –
தாராகா புல்லிங்கம் பஹு வசனம் -ஒருவளாக இருந்தாலும் – ப்ரத்யயம் பொறுத்து லிங்கம் /
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா-25-entities-

நாநா பாவாத் -இருப்பதாலும் -யஸ்மின் பஞ்ச பஞ்சநா ஆகாசச்ச ப்ரதிஷ்டித-இருப்பதாலும் –
நாஸ்திக தரிசனங்கள் ஆறு –
ஆஸ்திக தரிசனங்கள் ஆறு -நியாயம் வைசேஷிகம் -சாங்க்யம் யோகம் -பூர்வ மீமாம்ச உத்தர மீமாம்ச –
-சாங்க்யம் நிராகாரம் ஞான யோகம் -யோகம் சா ஆகாரம் பக்தி மார்க்கம் -குண மார்க்கம் –
பக்தி மார்க்கமே நமக்கு என்று வலியுறுத்தி அருளவே இவ்வளவு அதிகரணங்களால் சாங்க்ய நிரசனம்
அக்ஷரம் அவ்யக்தம் –பக்தர் நித்ய யுக்தர் -ஸ்ரீ கீதை -இருவரும் மாம் ஏவ-சேர்ந்தாலும் -ஸ்ரமம் படுவார்கள் அவர்கள் –
பக்தர் -அத்யந்த ப்ரீதி யுக்தர் –
ஞான மார்க்கம் பக்தி ரூபா பன்ன மார்க்கமே -பக்தி ரேவா முக்தி உபாயம் –

வித்வான் -பரமாத்மா சாஷாத்காரம் அடைந்தவன் -25-தத்துவங்களும் ஆகாசமும் யார் இடம் பிரதிஷ்டை செய்யப்பட்டனவோ –
யத் சப்தமும் உண்டே -இதில் -சாங்க்ய மத பிரக்ருதியை சொல்லவில்லை
சமாசம் அடிப்படையிலும் இது ஒவ்வாது -சமகாராம் -சமாகம்-

இதுக்கு பூர்வ பக்ஷம்
அப்படியானால் பஞ்ச பஞ்ச ஜனா என்று கூறப்படுபவை எவை

அடுத்த ஸூத்திரத்தில் சமாதானம்

—————–

1-4-12-ப்ராணாதய வாக்ய சேஷாத்-

முடிக்கும் பகுதி மூலமாக பிராணன் போன்றவையே கூறப்பட்டதாகிறது -என்றவாறு

பஞ்ச பஞ்ச ஜனா -ஐந்து பொருள்கள் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் 6-4-18-
பிராணஸ்ய பிராணமுத சஷூஷஸ் சஷூ ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம்-
அந்நஸ் யாந்னம்- மநஸோ யே மநோ விது—என்று
ப்ராணனுக்கு பிராணன்-கண்ணுக்கு கண் -காதுக்கு காது -அன்னத்துக்கு அன்னம் அல்லது நாக்குக்கு நாக்கு –
மனஸூக்கு மனமாக எதை அறிகிறார்களோ என்று கூறப்படுகிறது
ஆகவே ப்ரஹ்மத்தை ஆதாரமாகக் கொண்ட பிராணன் போன்றவையே இங்கு பஞ்ச பஞ்ச ஜனா -என்று அறியப்படுகிறது

கண்ணாலே வஸ்துவை பார்க்க முடியாது –நம் கண் பார்ப்பதற்கு காரணம் பர ப்ரஹ்மமே –
இது போலே மனசு கிரஹிக்கவும் -காதால் கேட்பதற்கும் –
கண்ணுக்கும் கண் காதுக்கும் காது மனஸுக்கும் மனசு பிராணனுக்கும் பிராணன் பர ப்ரஹ்மமே –
கேனோ உபநிஷத்துக்கும் இத்தையே சொல்லும் –

பூர்வ பக்ஷம்
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா-6-4 17-என்ற மந்த்ரம் காண்வர்கள் மற்றும் மாத்யந்தினர்களுக்கும் பொதுவானதாகும் –
ஆனால் -பிராணஸ்ய ப்ராணம் -6-4-18-என்ற மந்த்ரத்தை காண்வர்கள் ஓதும் போது
அவர்கள்- அன்னஸ்ய-என்று படிப்பதில்லை
அப்படி என்றால் அவர்கள் சாகையில் பஞ்ச பஞ்ச ஜனா என்பதன் மூலம் பிராணன் போன்றவை
கூறப்படுகிறது என்று சொல்ல முடியாதே

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

—————

1-4-13-ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸ்தி அந்நே –

முன்பு உள்ள ஜ்யோதி என்ற பதம் மூலம் அன்னம் என்பது இல்லாத போது
அவ்விதம் அறியப்படுகிறது -என்றவாறு

ஏகேஷாம் –என்றால் –
காண்வ சாகை பாடத்தில் -என்று பொருள்
அஸ்தி அந்நே –
அன்னம் கூறப்படவில்லை என்றாலும்
ஜ்யோதிஷாம்
ஜ்யோதி என்ற சொல்லால் -பஞ்ச ஜனா என்பது இந்த்ரியங்களைக் குறிக்கிறது என்று அறியப்படுகிறது
பிருஹு 4-4-17-யஸ்மின் பஞ்ச பஞ்சஜனா என்ற மந்திரத்தின் முன்பு
4-4-16-தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிராயுர் ஹோபாஸதே அம்ருதம் –என்று பரமாத்மாவை தேவர்கள் உபாசிக்கிறார்கள் –
அவன் பிரசாதம் மூலம் பெற்ற ஜ்யோதிஸ்ஸூக்கள் எவை என்று நிச்சயிக்காமல் இருக்க
இந்த மந்த்ரம் -4-4-17-யஸ்மின் பஞ்ச பஞ்சஜனா-என்று இவை வெளி விஷயங்களை பிரகாசித்து உணர்த்தப்படும்
இந்த்ரியங்களே என்று சொல்லி
அடுத்து -4-4-18-பிராணஸ்ய ப்ராணம் –என்பதில் இரண்டாவது பிராணன் மூலம் ஸ்பர்ச இந்திரியம் –
வாயு வுடன் தொடர்பு கொண்டது அன்றோ -என்பதாலும்
முக்கிய பிராணனை ஜ்யோதி என்ற பதம் காண்பிக்க இயலாது என்பதாலும் ஆகும் –

சஷுஸ் ச சஷு -என்பதில் உள்ள -சஷுஸ் ச என்பதன் மூலம் பார்க்கும் இந்த்ரியமான கண்ணும்
ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம் என்பதில் உள்ள ஸ்ரோத்ரஸ்ய என்பதன் மூலம் கேட்க்கும் இந்த்ரியமான காதும் கூறப்பட்டது
இது தந்திரமாக -ஒரு முறை செய்யும் ஒரு செயல் மூலம் பலவும் நிறைவேறுதலே தந்திரம் எனப்படும் –
பூமியானது மணம்-கந்தம் -என்பதுடன் சம்பந்தம் கொண்டுள்ளதால் –அந்த பூமியில் விளையும் அந்நம் மூலம்
அந்த சுவைக்கும் இந்த்ரியத்துடன் அன்னத்துக்கு தொடர்பு
மனஸ யே மன -என்பதில் மனச -என்றது மனத்தைக் குறிக்கும்
இங்கு மணம் மற்றும் சுவை ஆகிய இந்திரியங்கள் தந்திரமாக எடுக்கப்பட்டதால் ஐந்து என்று எண்ணிக்கை கூறும்
பஞ்ச பஞ்ச ஜனா வாக்யத்துடன் முரண்படாமல் உள்ளது –
ஆக ஞானத்தை ஏற்படுத்தும் மனம் முடிய உள்ளதான இந்த்ரியங்களே இங்கு பஞ்ச ஜனா என்று கூறப்படுகிறது –
மனத்துடன் சேர்த்து இந்திரியங்கள் ஆறு அன்றோ என்ற சங்கைக்கு விடை அளிக்கிறார்
இங்கு முரண்பட்டு வாராமல் இருக்க நுகருதல் சுவைத்தல் இரண்டையும் தந்த்ரத்தல் சொன்னதாயிற்று

ப்ருஹதாரண்யம் சுக்ல யஜுர் வேதம் -காண்வ சாகை -மாத்யந்தகம் சாகை -இரண்டு உண்டே
அந்தர்யாமி ப்ராஹ்மணம் -காண்வ சாகை -பாட பேதம் உண்டு –
ஜ்யோதிஷாம் ஜ்யோதிராயுர் ஹோபாஸதே அம்ருதம்-முதல் ஜ்யோதி இந்திரியங்களைச் சொல்லி -flame-
இவற்றுக்கும் ஜ்யோதி கொடுப்பவன் அவனே -கட உபநிஷத் சொல்லுவதை முன்பே பார்த்தோம் –
இத்தையே யஸ்மின் பஞ்ச பஞ்ச -என்பதால் இது பிரகிருதி இல்லை பரமாத்மாவையே சொல்லும் –
அவனை அந்தர்யாமியாகக் கொண்ட ப்ரஹ்மத்தையே சொல்லும் -உபாதானமும் ப்ரஹ்மமே ப்ரக்ருதி இல்லை என்றவாறு –

ஆகவே ப்ருஹு -4-4-17-
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா ஆகாசச்ச ப்ரதிஷ்டித -என்ற வாக்யத்தால்
பஞ்ச இந்திரியங்களும் ஆகாசம் என்பதன் மூலம் பஞ்ச பூதங்களும் ப்ரஹ்மத்தில் நிலை நிற்கின்றன என்பதும்
அனைத்து தத்துவங்களும் ப்ரஹ்மத்தையே அண்டியுள்ளவை என்பதையும் கூறப்பட்டதாயிற்று

இதன் காரணமாக கபில தந்திரத்தில் மூலம் வெளிப்படும் -25- தத்வங்கள் குறித்து
இங்கு ஏதும் இல்லை என்று நிரூபணம்

—————-——————–———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— -1-4-1-ஆநு மாநிகதிகரணம் -7-ஸூத்ரங்கள்—- ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

January 26, 2020

ஸ்ரீ பாஷ்யம்— -1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள் /
முதல் அதிகரணம்-ஆநு மாநிகதிகரணம் -7-ஸூத்ரங்கள்—- ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாசாரர்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

——————————————————————————–

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் 29–ஸூத்ரங்கள் –

ஆநு மாநிகதிகரணம் –7-ஸூத்ரங்கள்-1-4-1 /2/3/4/5/6/7–

1-4-1-ஆநு மா நிகம் அபி ஏகேஷாம் இதி சேத் ந சரீர ரூபக விந்யஸ் தக்ரு ஹூதே தர்சயதி ச –

பிரக்ருதியும் காரணப் பொருளாக உபநிஷத் வாக்யங்கள் உள்ளன என்பர் -அது சரி அல்ல –
உடலை உருவகப் படுத்தவே அப்படி சொல்லப் பட்டது
கட உபநிஷத் -இந் த்ரியேப்ய பரா ஹ்யர்த்தா அர்த்தேப் யஸ்ஸ பரமமந
மநசஸ்து பரா புத்திர் புத்தேராத்மா மஹான்பர
மஹத பரம வ்யக்த மவ்யக்தாத் புருஷ பர
புருஷா ன்ன பரம் கிஞ்சித் சா காஷ்டா சா பராகதி –கட உபநிஷத்-10-11-என்று
புலன் -பொருள்கள் -மனம் -அறிவு -மஹான்-அவயகதம் உடல் -புருஷன் -இதை விட மேல் ஒன்றும் இல்லை –
இது சாங்க்ய மதம் ஈஸ்வர தத்தவத்தை ஒத்துக் கொள்ளவது இல்லை –

சித்தாந்தம் -முன்னால் அதே உபநிஷத்தில் யமன் நசிகேதனிடம்
ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ ச
புத்திம் து சாரதிம் வித்தி மன பிரக்ரஹமேவ ச
இந்த்ரியாணி ஹயா நா ஹூர் விஷயாம்ஸ் தேஷு கோசாரான்-என்றும்

விஜ்ஞாந சாரதிர் யஸ்து மன ப்ரக்ரஹ வான் நர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்

உடலைத் தேராகக் கொண்டு மன உறுதியை தேர் ஒட்டுபவனாகவும் -மனத்தை கடிவாளமாகவும்
புலன்களை குதிரைகளாகவும் உலக விஷயங்களை பாதையாகவும்
யார் ஒருவனுக்கு இந்த தேர் சரியாக ஓடுகின்றதோ அவன் பரமபதம் சென்று அடைகின்றான்
இத்தால் பூர்வ பஷ வாதங்கள் உடைக்கப் படுகின்றன-

மனஸ் வேறே புத்தி வேறே -மனஸ் இந்திரியம் -புத்தி ஆத்மாவின் தர்மம் –
brain-வேறே மனஸ் வேறே
இதே ரூபகம் ஸ்ரீ கீதையிலும் உண்டே
புத்தி சாரதி மனஸ் ஆகிய கயிற்றால் இந்திரியங்களை வசப்படுத்தி –
கடவல்லி து ஆம் நாயதே -அன்று அனைவரும் இத்தை அறிந்தவர்கள்
பராகதி-உத்க்ருஷ்டம் -பரம் இதுவே -stronger–supriyar –
இந் த்ரியேப்ய பரா ஹ்யர்த்தா -இந்திரியங்களை விட சப்த ஸ்பர்சம் ரூப ரஸ கந்தங்கள் வலிமை யானவை –
அர்த்தேப் யஸ்ஸ பரமமந-அர்த்தங்களை விட மனஸ் வலிமை -கட்டுப்படுத்தும் கயிறு இது ரூபகத்தில்-
மநசஸ்து பரா புத்திர் -கயிற்றை விட பிடிக்கும் சாரதி வலிமை
புத்தேராத்மா மஹான்பர-சாரதி விட -சொந்தக்காரர் -ரதி -ஆத்மா புத்தியை விட வலிமை

மஹத பரம் அவ்யக்தம் -பிரகிருதி –மூல பிரகிருதி -சாங்க்யர் இதுவே மூல காரணம் என்பர்
நாம் -24-தத்துவங்களாக கொண்டதாக சொல்லுகிறோம் –
மஹத் தவம் புத்தி என்பது வேறே இந்த புத்தி வேறே
மஹத் தத்வம் -அஹங்காரம் -சாத்விக ரஜஸ் தமஸ் அஹங்காரம்-
குண குணி-தர்ம தர்மி பாவம் -நிறமும் வஸ்துவும் –
அஹங்காரத்தில் இருந்து -16–பஞ்ச ஞான இந்திரியங்கள் – பஞ்ச கர்ம இந்திரியங்கள் பஞ்ச தன்மாத்திரைகள் -மனஸ்
பஞ்ச பூதங்கள் -பஞ்ச தன்மாத்திரைகளில் இருந்து -ஆக இப்படி -24-
ஏக தத்வ வாதம் -புத்தர் -ஞானம் மட்டும் -சூன்ய தத்வ வாதம்
mind matter த்வி தத்வ வாதம் சாங்க்யர்
த்ரி தத்வ வாதம் நம்மது –சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் ஏகமேவ அத்விதீயம் –

ஆநு மாநிகதிகரணம் —
சங்கதி -அங்கதமாக இருக்கக் கூடாதே -பாத சங்கதி ஸ்வாமியே காட்டி –
பக்த முக்த உபய அவஸ்தா விலக்ஷணம் -இதர ஸமஸ்த விலக்ஷணம் -ஜகத் காரணம் ஸ்தாபித்த பின்பு
பிரகிருதி ஜகத் காரணம் இல்லை என்று காட்ட -ப்ரஹ்ம ஏவ காரணம் ஸ்தாபிக்க -இந்த பாதம் –
தினவு அடங்க வியாக்யானம் -சங்காலேசமும் இருக்கக் கூடாதே -ஸ்ருதி வாக்கியங்கள் சில கொண்டு –
மேலும் வியாக்யானம் -ஸ்தூணா நிகனான நியாயம் –
அவ்யக்தம் -விஷய வாக்கியம் -பிரகிருதி -சரீரம் -நாசிகேத வித்யை -1-3-3/4–கட உபநிஷத்

அலங்கார சாஸ்திரம் -125-அலங்காரங்கள் -ரூபக அலங்காரம் இதில் -உவமானம் வேற –
முக கமலம் ரூபகம்-சந்த்ர இவை முகம் -உவமானம் உபமேயம் –

ஆத்மாந் ரதிநம் வித்தி ஷரீர் ரதமேவ து .
புத்திம் து ஸாரதிம் வித்தி மந ப்ரக்ரஹமேவ ச ৷৷ 1.3.3 ৷৷

தேரில் இருவர்-முதலாளி ஆத்மா – தேரோட்டி -புத்தி ஞானம் உறுதி தேரோட்டி -சரீரம் தேர் -இந்திரியங்கள் குதிரை -மனஸ் கடிவாளம் –
ஒழுங்காக ஓட்ட வேண்டுமே -மனஸ் இந்திரியங்கள் வேண்டும் இல்லாமல் ஆக்க முடியாது –
சரியான இடங்களில் செலுத்த வேண்டும் -பரமாத்மா இடம் சேர வேண்டும் -இவற்றை எல்லாம் விட்டு ஆத்மா அவனையே அனுபவிக்கும்
ஆத்மா புத்தி மனஸ் இந்திரியங்கள் -ஒன்றை அடுத்து நியமிக்கும்

இந்த்ரியாணி ஹயாநாஹுர் விஷயா் ஸ்தேஷு கோசராந் –
ஆத்மேந்த்ரிய மநோ யுக்தம் போக்தேத்யாஹுர்மநீஷிண ৷৷ 1.3.4 ৷৷

போக்த்ரு போக்தா சம்பந்தம் -இந்திரியங்கள் குதிரை -விஷயாந்தரங்கள் சப்தம் இத்யாதி
கண் ரூபம் -காது சப்தம் -தோள் ஸ்பர்சம் நாக்கு ரசம் மூக்கு கந்தம்

இந்த்ரியேப்ய பரா ஹ்யர்தா அர்தேப்யஷ்ச பரம் மந–
மநஸஸ்து பரா புத்திர்புத்தேராத்மா மஹாந் பர ৷৷ 1.3.10 ৷৷

ஒன்றுக்கு ஓன்று யார் வலிமை -புலன்களை விட -அர்தேப்யஷ்ச-சப்தம் இத்யாதி வலிமை -இவற்றை இழுக்கும் —
நாக்கை விட ருசிக்கு -சக்தி அதிகம் –
விஷயங்களை விட மனஸ் சக்தி மிக்கது –மனசை விட புத்தி வலிமை கொண்டது –மனம் சிந்திக்க கருவி –
புத்தி ஞானம் முடிவு எடுக்கும் -புத்தியை விட ஆத்மா வல்லமை -புத்தியையும் அடக்கலாம்

மஹத பரமவ்யக்தமவ்யக்தாத் புருஷ பர–
புருஷாந்ந பரம் கிம் சித் ஸா காஷ்டா ஸா பரா கதி ৷৷ 1.3.11 ৷৷

பர ப்ரஹ்மம் வலிமை -பரம புருஷனுக்கு மேலே யாரும் இல்லை -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ

ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோத்மா ந ப்ரகாஷதே .
தரிஷ்யதே த்வக்ர்யயா புத்த்யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்ம தர்ஷிபி ৷৷ 1.3.12 ৷৷

சுலபமாக அறிய முடியாது -சரீரம் தடை -மறைக்கும் -திரோதானம் -பகவத் ஸ்வரூபம் திரோதான கரி -ஏகாக்ர புத்தி வேண்டும்
பார்க்க முடியும் -பஸ்யந்தி இல்லை -த்ருஷ்யந்தி -பார்க்கப்படக் கூடிய விஷயம் – கர்மணி பிரயோகம் –
ஆசை உண்டாக வேணும் -மார்க்கம் இருக்கு -காட்ட எழுப்புகிறது மக்களை உபநிஷத் –
உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வராந் நிபோதத .-விஷயங்களை அறிந்து அடையுங்கோள்-

இந்திரியங்கள் -சப்தாதிகள் -மனஸ் -புத்தி -அவ்யக்தம் -புருஷ -பர ப்ரஹ்மம் -ஒன்றுக்கு ஓன்று பரம்
சப்த ரசம் ரூபம் ஸ்பர்சம் கந்தம்-இவை அர்த்தங்கள் –
அவ்யக்தம் -பிரகிருதி -பூர்வ பக்ஷம் —
சாங்க்ய வாதம் -இதுவே ஜகத் காரணம் –
இங்கு சரீர வாசகம் சித்தாந்தம்
ஆநு மா நிகம் அபி ஏகேஷாம் -பூர்வ பக்ஷம் –
இதி சேத் ந -அப்படி இல்லை –
சரீர ரூபக விந்யஸ் தக்ரு ஹூதே தர்சயதி ச -என்றவாறு –
மனஸ் -mind -brain -வேறே வேறே -புத்தி ஆத்ம தர்மம் -புத்தி சாரதி என்பதால் –
இதே ரூபகம் கீதையிலும் உண்டே கட உபநிஷத்தில் உண்டு –
விஷய வாக்கியங்கள் -10-11-மந்த்ரங்கள் -இங்கு /கடவல்லி ஸூ ஆம் நாயதே -நேராக ஆரம்பித்து –
ஸ்ரீ பாஷ்யம் கற்க வருபவர் உபநிஷத் அனைத்தும் அறிந்தவர்கள் –
மனசை விட அவ்யக்தம் பரம் -பிரகிருதி -மூல பிரகிருதி சாங்க்யர் சொல்வர்-
நாம் பிரக்ருதி விசிஷ்ட ப்ரஹ்மம் காரணம்-
புத்தி -மஹத் தத்வம் -அஹங்காரம் தத்வம் ego இல்லை -சத்வம் ரஜஸ் தமஸ் மூன்றாக பிரிந்து –
வஸ்து வர்ணம் தர்ம தர்மி பாவம் –குண குணி பாவம் –
தஸ்மாத் ஷோடச -16-ஞான கர்ம இந்திரியங்கள் மனஸ் தன்மாத்திரைகள் -சப்த ரஸ ஸ்பர்ச ரூப கந்த மூல அவஸ்தைகள் –
பஞ்ச பூதங்கள் -பஞ்ச குணங்கள்–சூன்ய தத்வ வாதம் -/ ஏக தத்வ வாதம் -த்வி/ த்ரி /
சேதன அசேதன இரண்டையும் சாங்க்யம் –mattar- mind-சேதனம் ஒன்றே அத்வைதி /சப்த விவர்த்த வாதம் ஜைனர் –
ஒரே தத்துவமாக இருந்தாலும்–/போக்யம் போக்தா பிரேரிதா-தத்வ த்ரய வாதம் நம்மது -/
பூர்ணமாக பார்த்து அனுபவம் -நம்மது -menifestation of brahmam –
புருஷ -புஷ்கரத் பலாத்வத் -தாமரை இலைத்தண்ணீர் போலே ஒட்டாதே -பிரகிருதி கார்யங்களை தன்னிடம் ஆரோபித்து –
அதன் வசமாகிறான் -அஹங்கார விமூடாத்மா -பந்துக்கு உள்படுகிறான் -சாங்க்யர் -ஆத்மா அறிந்து கைவல்யம் அடைகிறான் –
பர ப்ரஹ்மம் தத்வம் ஒத்துக் கொள்ளாத மதம்
அவ்யக்தம் -தான் ஜகத்காரணம் என்பர் -ஏகேஷாம் -சிலர் -ஆனு மானிகம் பிரதானம் என்று சொல்பவர் -என்றவாறு –
சில சாகைகளில் சிலர் இப்படி சொல்கிறார்கள் –பல சாகைகள் -யஜுர் வேதம் -82-சாகைகள் —
அசித் த்வயம் -ஏழு காண்டம் -மூன்று அஷ்டகம் -80-ப்ரச்னம் -அடுத்து -2-ப்ரச்னம் -அக்னி மூன்று சேர்த்து ஒன்றாக்கி –

புருஷ -ஜீவாத்மா -25–பரமாத்மா தத்வம்-26- ஒத்துக் கொள்ளாத சாங்க்யர்
புருஷர்கள் பலர் என்பதையும் ஒத்துக் கொள்கிறார்கள் – நிரீஸ்வர வாதம் –
முக்த தசையில்- பிரகிருதி புருஷ விவேகம் தான் மோக்ஷ சாதனம் –
புஷ்கரம் -இலை-தாமரை இலையில் ஒட்டாதது போலே-பந்த மோக்ஷங்கள் கிடையாது
பிரகிருதி செய்யும் காரியத்தை தன்னிடம் ஆரோபித்து பந்தத்துக்கு உள்படுகிறான் – —
அவித்யாதிகளுக்கு உட்பட்டு -ஏறிட்டுக் கொள்கிறான்-

சங்க்யா-theory-of-numbers-வேறே சாங்க்ய மதம் வேறே -மஹத் தத்வம் -அஹங்காரத்துக்கு காரண தசை –
அவ்யக்தம் -ப்ரத்யக்ஷத்துக்கு விஷயம் ஆகாது -அனுமானம் பண்ணி அறிய வேண்டும் -inferance-
ப்ரக்ருதியே தான் ஜகத் காரணம் என்று சொல்லும் சாங்க்ய மதம் –
ஸ்தூணா நிகர்ன நியாயம் -ப்ரஹ்மம் ஏவ காரணம் சொல்லவே முதல் இரண்டு அத்தியாயங்கள் –
சங்கைகளை போக்கி -வேறே வேறே ப்ரஹ்ம பிரகாரங்களை விளக்கும் இந்த அதிகரணங்கள்-redentant-இல்லை இவை –
தேராக உருவகம் செய்து இருப்பதால் பிரகிருதி -அவ்யக்தம் என்று சொல்ல முடியாது -சரீரத்தையே சொன்னபடி
சரீரம் வியக்தம் தானே -எப்படி அவ்யக்தம் என்று சொல்ல முடியும் –
விஷ்ணு பதம்-ஸ்ரீ வைகுண்டம் -பரமம் பதம் கச்சதி -உபாசகன் தானே இதுக்கு பிரயத்தனம் பண்ணுவான் –
அவனது சரீரத்தை சொன்னபடி -சரீரம் இந்த்ரியங்களை மனசையும் புத்தியையும் வசப்படுத்தி தானே அடைகிறான் –
கோசரம் -குதிரையை விட -வலிமை -விஷயங்கள் இந்த்ரியங்களை இழுக்கும் -இவற்றை விட மனசு வலிமை –
கயிறு ஸ்தானம் இது -வசீகாரத்வே பிரதானம் –
சாரதி புத்தி இதை விட வலிமை -திடமான அத்யாவசயா புத்தி -இதுக்கு முன் மனசு வால் ஆட்ட முடியாதே

தேர் முழுவதும் அத்யாவசாயத்தின் வசப்பட்டு இருக்கும் -திடமான அத்யவசாயம் –இதை விட ஆத்மா பிரதானம் –
ஜீவாத்மாவின் அதீனம்-ஆகவே இதுக்கு மஹான் -என்று சொல்லி இதை விட சரீரத்துக்கு பலம் -சாதன ப்ரவ்ருத்தி –
சகல புருஷார்த்தங்களுக்கும் -சரீரம் இருக்கும் வரை ஸூக துக்கங்கள் -உண்டே -சரீரம் பெரியது என்றது –
இதைக் கொண்டே -சாதிக்க வேண்டும் உபாசனனுக்கு –
பஞ்ச அக்நி வித்யை மேலே இத்தையே விவரிக்கும் –
மோக்ஷ தசையில் -சரீரம் இல்லையே எண்ணில் -அங்கு இச்சா க்ருஹீத சரீரம் கொள்ளும் சக்தி உண்டே –
கைங்கர்யத்துக்கு அனுகுணமாக -சரீர சம்யோகம் வியோகம் கஹன விஷயம் -சரீரத்தை விட பரமாத்மா -பரம் -நியமனம் –
அந்தர்யாமி -பரம புருஷன் -அனைத்தும் இவனே அதீனம் –பராயத்து அதிகரணம் மேலே வரும்-
காஷ்டா இதுவே -அந்தர்யாமி ப்ராஹ்மணம் ப்ருஹதாரண்யம் உபநிஷத் -விஸ்தாரமாக உண்டே –
சர்வம் சாஷாத்காரம் -சர்வம் நியமனம் -இவனே –

கடம் படம் ஓன்று என்று யாரும் சொல்லாமல் -விவாதம் இல்லாமல் -இருக்கும் -ஆனால் -ஜீவாத்மா பரமாத்மா இரண்டும்
அத்யந்த ஸூஷ்மம் -ஆகவே பல வாதங்கள் -ஆத்ம ஸ்வரூபம் சித்தாந்தங்கள் தோறும் மாறுபடும் -அஹம் அர்த்தம் ஆத்மா –
பூதாத்மா -இந்த்ரியாத்மா -மனசாதமா -புத்தியாத்மா -ப்ராணாத்மா-இவற்றுக்கு ஆத்மா சொல்வதற்கு பிரசக்தி உண்டே –
கல் மண் இவைகள் ஆத்மா சொல்வார் இல்லையே –
சாரம் வேதார்த்த ஸங்க்ரஹம் -ஸ்ரீ சைல நாதன் முன்னால் அருளி நிகமனத்தில்
சார அசார விவேகம் அறிந்த பெரியோர்கள் -பிரமாணம் கொண்டு சாதித்த -விஷயங்கள் -தர்மபூத ஞான வியாப்தி –
ஸூஷ்ப்தி நிலையில் தர்மபூத ஞானம் அசத்கல்பம் தானே-

தைத்ரியம் -பிருகு கேட்டதும் யதோ வாசோ -தபோ ப்ரஹமேதி-அன்னம் -தொடங்கி–விஞ்ஞானம் –
ஆனந்த ப்ரஹ்மோ திவ்யாஞானாதி-சொன்னதும் மீண்டும் போகவில்லையே -புரிந்து கொண்டான் –
ஜீவ பர யோக யாதாம்ய ஞானம் பூர்வகம் -யத் ஆத்மாம்யம்-in–full-depth-நாம் அறிந்தது –
பக்தி கோயிலுக்கு செல்வது திருவாராதனம் இவை எல்லாம் ஆரம்ப நிலை -சப்த ரூப உபதேசம் ஆரம்ப நிலை –
தர்க்காதிகளாலே உபதேசம் அடுத்த நிலை -அடுத்து சாஷாத்காரம் –
ஹ்ருதயம் மூலம் -நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாருக்கும் நாதமுனிகளுக்கும்
சப்தம் மூலம் -பலவாக அறிந்து கொள்ள வாய்ப்பு உண்டே –
தர்மபூத ஞானம் வியாப்தி -சரியாக புரிந்து கொள்ள வேண்டும் –
ஜீவாத்மா அணு என்பது பிருத்வி பாரமான -atomic-போலே அன்றே —
நினைக்கவே வெட்டவோ முடியாதே -it-is-not -physical entity –அணுவுக்குள்ளும் பரமாத்மா –
அந்தராத்மா -ஆத்ம ஸ்வரூபம் புரிவது மிகவும் கஷ்டம் தானே –

இதுக்கு பூர்வபக்ஷம்
சரீரம் கண்களால் காணப்படும் -அவ்யக்தம் காணப்படாதது -இப்படியானதால் எவ்வாறு
அவ்யக்தம் என்பது சரீரத்தைக் குறிக்கும் –

இதற்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

——————–

1-4-2-ஸூஷ்மம் து ததர்ஹத்வாத் –

ஸூஷ்ம தசையில் உள்ள பிரகிருதி ஒருவகையாக மாறுதலை அடைந்து உடலாகி –
ஸ்தூல உடலாலே கார்யங்கள் செய்ய வேண்டுமே -கர்த்ருத்வ தகுதி அடைகிறது என்றவாறு
இந்த உடலே ஜீவன் என்னும் என்னும் தேரினை அதன் இலக்குக்கு எடுத்துச் செல்ல உதவும்-

பஞ்ச பூதங்கள் அவ்யாக்ருத -மாறுபடாத நிலையில் தகுந்த நேரத்தில் சரிரமாகும்
இத்தையே அவ்யக்தம் என்கிறோம்
தத் அர்ஹத்வாத் -கர்த்ருத்வ தகுதி அடைய என்றவாறு
எனவே சரீரம் -தேர் – தனக்கு சேஷியான ஆத்மாவுக்கு ஏற்றதான புருஷார்த்தம் பெற வைக்கும் சாதனம் –

வியக்தி-manifest-அடைந்தது -அபிநாபாவ சம்பந்தம்-சம்சார தசையில் – –
சரீரம் ஆத்மா -ஒன்றை விட்டு ஓன்று இருக்க முடியாதே –
வியாப்தி -there can be no smoke without fire -pole –
பூத ஸூஷ்மம் -un-manifest-பாஞ்ச பவ்திகம் சரீரம் -பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது –
பிருத்விக்கு அப்புறம் -நீர் ஆகாரம் அற்றது -சோம்பு தீர்த்தம் ஆற்று தீர்த்தம் -தேஜஸ் இன்னும் மாறும்
பவ்ம தேஜஸ்-ஹோம புகை -பூமி சம்பந்தம் ஸ்பஷ்டம் – திவ்ய தேஜஸ் -அபிநிதானம் ஜலமே அக்னிக்கு உபகரணம் –
ஆகாசம் இன்னும் மேலும் -subtle-
பூத காரணங்களே நாம் அறிவோம் -பூதங்களை அறியோம் -ஸூஷ்ம பூதங்களை கொஞ்சம் அறிவோம் –
சித்ர குப்தன் –குப்த சித்ரம்-phsaicci- என்பதையே சொல்கிறோம்
அவ்யக்தமே வியக்தமாக சரீரம் -காரண அவஸ்தையை சொன்னபடி
ரதவத் புருஷார்த்தம் அடைய ப்ரவ்ருத்திக்கு -கொடுத்ததே சரீரம் —
ஆத்மாவின் போகாதாயனம் சரீரம் -தர்க்க சாஸ்திரம் -சரீரம் கொண்டே போக அனுபவம் தர்ம சாதனம் மோக்ஷ சாதனம்
ரதம் கொண்டே போக வேண்டும் -மார்க்க சாதனம் –

இதற்கு பூர்வ பக்ஷம்
மாறுபாடு அடையாத பூத் ஸூஷ்மம்-இதுவே கபில தந்திரத்தின் படி அவ்யக்தம் என்று சொல்லலாமே

இதுக்கு சமாதானம் சுத்த ஸூத்ரம்

———–

1-4-3-தத் அதீனத்வாத் அர்த்தவத் –

பிரகிருதி எனபது பரம் பொரூடன் தொடர்பு கொண்டால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்
சாங்க்ய மதம் போலே பிரகிருதி மாறும் என்பதை ஒத்துக் கொண்டாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாது
பரம் பொருளின் ஆணைக்கு இடங்க நடந்தால் மட்டுமே பயனுள்ளதாகும்-

சுருதி ஸ்ம்ருதிகள் -பரமாத்மாவை அனைத்துக்கும் ஆத்மாவாக சொல்லுமே
ஸூபால உபநிஷத் -2-
பிருதிவி அப்ஸூ ப்ரலீ யதே என்று தொடங்கி -தன்மாத்ராணி பூதாதவ் லீயந்தே –பூதாதிம் அர்ஹதி லீயதே –
மஹான் அவ்யக்தே லீயதே -அவ்யக்தம் அக்ஷரே லீயதே -அக்ஷரம் தமஸி லீயதே -தம பரே தேவ ஏகிபவதி —
என்று இருப்பது போலேயும்
தஸ்ய பிருத்வி சரீரம் -யஸ்ய ஆப சரீரம் -யஸ்ய தேஜஸ் சரீரம் -யஸ்ய வாயு சரீரம் -யஸ்ய ஆகாசம் சரீரம் –
யஸ்ய அஹங்காரம் சரீரம் -யஸ்ய புத்தி சரீரம் -யஸ்ய அவ்யக்தம் சரீர -யஸ்ய அக்ஷரம் சரீரம் -யஸ்ய ம்ருத்யு சரீரம் –
ஏஷ ஸர்வபூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபால -3-என்றும் உள்ளதே

இதே போன்று ஸ்ரீ கீதையிலும்
பூமி ஆப அநலோ வாயு கம் மநோ புத்தி ஏவ ச அஹங்காரம் இதீயம் மே பிந்நா ப்ரக்ருதி அஷ்டதா -7-4-என்றும்
அபரா இயம் இத து அந்யாம் ப்ரக்ருதிம் வித்திமே பராம் -ஜீவ பூதாம் மஹா பாஹோ யயா இதம் தார்யாதி ஜகத்-7-5- என்றும்
ஏதத் யோநி இதி பூதாபணி ஸர்வாணி இதி உப தாரய அஹம் க்ருத்ஸ் நஸ்ய ஜகத பிரபவ ப்ரளயஸ் ததா -7-6-என்றும்
மத்த பரதரம் ந அந்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்சய -மயி சர்வம் இதம் ப்ரோதம் ஸூத்ர மணி கணாம் இவ -7-7-என்றும் உள்ளதே

இதே போலே ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்
வ்யக்தம் விஷ்ணு தத் அவ்யக்தம் புருஷ கால ஏவ ச –1-2-18- என்றும்
ப்ரக்ருதிர் யா மயா க்யாதா வ்யக்த அவ்யக்த ஸ்வரூபாணீ–புருஷச்ச அப்யுபாவேதவ் லீயதே பரமாத்மநி –
பரமாத்மா ச ஸர்வேஷாம் ஆதார புருஷோத்தம -விஷ்ணு நாமா ச வேதேஷூ வேதாந்தேஷு ச கீயதே -6-4-38-/39-
என்றும் கூறப்பட்டுள்ளதே

—————

1-4-4-ஜ்ஞேயத்வ அவசநாத் ச

சாங்க்ய மதத்தின் படி அவ்யக்த-பிரகிருதி – ஞானம் பற்றியே மோட்ஷம் என்று உபநிஷத் கூற வில்லை-
அவ்யக்தத்தை அறியப்பட ஒன்றாக கபில தந்திரத்தில் கூறப்பட வில்லையே

—————–
1-4-5-வததி இதி சேத் ந ப்ராஜ்ஞோ ஹ பிரகரணாத்–

அவ்யக்தம் அறியப்பட வேண்டியது என்று கூறப்படுகிறதே என்றால் -அப்படி அல்ல –
பிரகரணத்தை ஆராய்ந்தால் அங்கு கூறப்படுபவன் பரமாத்மாவே ஆவான்

பூர்வ பக்ஷம்
கடவல்லி -3-15-
அசப்தம் அஸ்பர்சம் அரூபம் அவ்யயம் தத் அரசம் நித்யம் அகந்த வச்ச யத்-
அநாதி அநந்தம் மஹத பரம் த்ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே –என்ற
சுருதி வரியானது அவ்யக்தம் அறியப்பட வேண்டியது என்று கூறுகிறது

அசப்தம் அஸ்பர்சம் அரூபம் அவ்யயம் தத் அரசம் நித்யம் அகந்த வச்ச யத்-
அநாதி அநந்தம் மஹத பரம் த்ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே
பஞ்ச பூத குணங்கள் -போலே இல்லாமல் அநாதி அநந்தம் மஹத பரம் த்ருவம்-
உபாசித்து முக்தன் ஆகிறான் -ம்ருத்யுமுகாத்-ம்ருத்யு கிடையாது –
பிரகிருதி க்கும் இந்த விசேஷங்கள் அந்வயிக்கும்

சித்தாந்தம்
அப்படி அல்ல -அனைத்தும் அறிந்த பரம புருஷனே அறியத் தக்கவனாக கூறப்படுகிறான் –
இந்த வரிகளுக்கு முன்னால்–கட -3-9-
விஜ்ஞான சாரதி யஸ்து மன ப்ரக்ரஹவான் நர-
ச அத்வன பாரம் ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்—ஞானத்தை தேர் ஓட்டுபவனாகவும்
மனத்தைக் கடிவாளமாகவும் கொண்டு ஸ்ரீ பரமபதத்தை அடைகிறான் -என்றும்
அதற்கு கீழே -ஏஷ சர்வேஷூ பூதேஷு கூடஸ் ஆத்மாந பிரகாசதே
த்ருச்யதே த்வக்யயா புத்த்யா ஸூஷ்மயா ஸூஷ்ம தர்சிபி – என்று அனைத்தும் அறிபவனாகிய
பரம புருஷனே இந்த பகுதியில் கூறப்படுகிறான் –

ப்ராஜ்ஞோ ஹ பிரகரணாத்–சர்வஞ்ஞனையே சொல்லும் -பிரகரணம் அன்றோ இது –
பிரகிருதி விவேக அறிந்தால் முக்தி என்று தானே சாங்க்யர் சொல்கிறார்கள்
ப்ரக்ருதியை உபாஸிக்க சொல்ல வில்லையே –
பரமாத்மா ஞானம் வந்தால் பிரகிருதி அவனுக்கு அந்தர்கதம் அறிவோம்
ஏஷ சர்வேஷூ பூதேஷு கூடஸ் ஆத்மாந –பிரகாசதே–உள்ளே இருந்தும் இருப்பதை காட்டிக் கொடுக்கிறான் இல்லையே
த்ருச்யதே த்வக்யயா புத்த்யா ஸூஷ்மயா ஸூஷ்ம தர்சிபி-கூர்மையான புத்தி உடையவர்களுக்கே காட்டிக் கொடுக்கிறான்

புருஷான் ந பரம் கிஞ்சித் –கட 3-12-புருஷனைக் காட்டிலும் உயர்ந்தது ஏதும் இல்லை என்பது மறுக்கப்பட வில்லை
புருஷன் இங்கே கூறப்பட வில்லை
அந்த பரம் புருஷனுக்கே சப்தம் போன்ற குணங்கள் இல்லை என்பதை
முண்டகம்–1-1-5-
யத் தத் அத்ரேச்யம் அக்ராஹ்யம் – -என்று எது காண இயலாதோ எடுக்க இயலாதோ -என்ற சுருதி வாக்கியங்கள் உணர்த்தும்
மேலும் கட -3-15-
மஹத பரம த்ருவம்-என்று மஹத்தை விட பெரியது என்று கூறப்பட்ட வஸ்துவான
பரம் பொருள் தானே –
கட –3-10-
புத்தரோத்மா மஹான் பர -என்று புத்தியைக் காட்டிலும் மஹான் என்ற ஆத்மா பெரியது என்று
ஜீவாத்மாவை விட மேலானவன் என்று உணர முடியலாம்-

—————————

1-4-6-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபன்யாச ப்ரசன ச –

உபாயமும் உபேயமும் உபேதாவையும் -மூன்றையும் பற்றியே உண்டு —
மூன்றைக் குறித்தே அறிய வேண்டும் என்ற பதில் இருப்பதால் கேள்வியும் மூன்றையும் பற்றியே இருக்க வேண்டும்
மூன்றைப் பற்றிய கேள்வியும் பதிலுமே உள்ளதால் பிரக்ருதியைப் பற்றிக் குறிப்பிட வில்லை என்று அறியலாம்

சித்தாந்தம்
இந்த பிரகரணத்தில் -உபாயம் உபாசனம் —உபேயம்–அடையப்படும் பரமாத்மா -உபேதா அடைபவனாகிய ஜீவாத்மா –
ஆகிய மூன்றையும் குறித்த விளக்கம் -இவற்றைக் குறித்தே அறிய வேண்டும் என்னும்
விதி கேள்விகள் உள்ளன -அவ்யக்தம் பற்றி ஒன்றுமே இல்லை

யமனிடம் இருந்து மூன்று வரங்களைப் பெற்ற நசிகேதன்
முதல் வரத்தின் முலம் தந்தையை அருகில் கேட்டான்–
புருஷார்த்தம் அடைய வல்ல -தனது தந்தை தன்னுடன் மகிழ்வுடன் இருக்கும் வரம் –
இரண்டாம் வரத்தின் முலம் அக்னியைக் குறித்து–மோக்ஷ சாதனமாக உள்ள -நாசி கேதஸ் -என்ற பெயர் கொண்ட
அக்னி வித்யையை குறித்து அறிய வேண்டும் என்று கேட்டான்
ஸ்வர்க்கம் என்று உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷமே கூறப்படுகிறது

கடவல்லி -1-1-13-
ச த்வம் அக்நிம் ஸ்வர்கயமவ்யேஷி ம்ருத்யோ ப்ரப்ரூஹி தம் ஸ்ரத்த தாநாய மஹ்யம் –
ஸ்வர்க்க லோகா அம்ருதத்வம் பஜந்தே ஏதத் த்விதீ யேந வ்ருண வரேண–என்று உபதேசிக்க பிரார்த்திக்கிறான்

கடவல்லி -1-1-13-
அம்ருதத்வம் பஜந்தே -பிறப்பு இறப்பு இல்லா அம்ருதத் தன்மை அடைகிறார்கள்
மேலும் -கடவல்லி -1-1-17-
த்ரிணாசிகேதஸ் த்ரி ப்ரேத்ய சந்திம் த்ரி கர்ம க்ருத தரதி ஜென்ம ம்ருத்யு -என்று நாசி கேதஸ்ஸின் மூன்று வித அநுவாகங்களை
-தாய் தந்தை குரு மூவரிடம் கற்று -அந்த அக்னியை மகிழ வைத்து -யஜ்ஜம் இயற்றுதல் -தானம் அளித்தல்-வேத அத்யயனம் செய்தல் –
ஆகிய மூன்று வித கர்மங்களை செய்து -சம்சாரம் கடந்து மோக்ஷம் அடைகிறான் –
அடுத்து 1-1-20-
யேயம் ப்ரேத விசிகித்சா மனுஷ்யே அஸ்தீத்யேக நாயமஸ்தீதி சைகே -ஏதத் வித்யாம் அநு சிஷ்டஸ் த்வயாஹம்
வரணாம் ஏஷ வரஸ் த்ருதீய –என்று மூன்றாவது கேள்வி

பின்பு அவனுக்கு மோக்ஷம் பற்றி அறிய தகுதி இருப்பதை பலவாறாக பரிசோதித்து யமன்
கட -2-12-
தம் துர் தர்ஸோ கூடம் அநு ப்ரவிஷ்டம் குஹா ஹிதம் கஹ்வ ரேஷ்டம் புராணம் -அத்யாத்ம யோகாதி கமேந தேவம்
மத்வா தீரோ ஹர்ஷ சோகவ் ஜஹாதி –என்று பரமாத்மாவை அறியும் ஞானி சம்சார கர்ம வினைகளை விட்டு
அவனையே அடைகிறான் -என்று உரைத்தான்

தேவம் மத்வா –என்று அடையப்படு அவனது ஸ்வரூபம்
அத்யாத்ம யோகாதி கமேந-இலக்கை அடையும் பிரத்யாகாத்மாவின் ஸ்வரூபம்
மத்வா தீரோ ஹர்ஷ சோகவ் ஜஹாதி- ப்ரஹ்ம உபாசனையில் ஸ்வரூபம்
இதன் காரணமாக நசிகேதஸ் மீண்டும் -2-14-
அந்யத்ர தர்மாத் அந்யத்ர அதர்மாத் அந்யத்ர அஸ்மாத் க்ருத அக்ருதாத் -அந்யத்ர பூதாச்ச பவ்யாச்ச
தத் பச்யதி தத் வத -என்று
அனைத்துக்கும் வேறுபட்ட அந்த பரமாத்மாவை -மோக்ஷத்தை காண்கிறாய் அல்லவா –
அதனை எனக்கு கூற வேண்டும் என்று கேட்டான்

இதற்கு பதிலாக யமன் பிரணவத்தை புகழ்ந்து ப்ராப்ய ஸ்வரூபம் ஜீவ ஸ்வரூபம் பற்றி விளக்கினான்
இதுவே கட -2-15-
சர்வே வேதா யத் பதம் அமநந்தி தபாம்சி ஸர்வாணி ச யத் வதந்தி -யத் இச்சந்தோ ப்ரஹ்மசர்ய சரந்தி தத்தே பதம்
ஸங்க்ரஹேன பிரவீம் ஓம் இதி ஏதத் –என்று உபக்ரமித்து உபதேசித்து மீண்டும் பிரணவத்தை புகழ்ந்தான்
கட -2-18-
ஜீவாத்மா ஸ்வரூபம் -ந ஜாயதே ந ம்ரியதே வா விபச்சித் என்றும்
கட -2-20-
பர ப்ரஹ்மமான ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஸ்வரூபம் –
அனோர் அணீயான்-என்று தொடங்கி
கட -2-24-
க இத்தா வேத யத்ர ச-துர்க்கம் பதஸ்தத் கவயோ வதந்தி–என்று முடிய உபதேசிக்கப்பட்டது

இந்த வாக்யங்களுக்கு நடுவில் -2-24-
நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயோ ந பஹுநா ஸ்ருதேந –என்று தொடங்கி உபாஸனையின் ஸ்வரூபம் சொல்லப்பட்டது
கட -3-1-மூலம்
ருதம் பிபந்தவ் –என்று இருவர் கர்ம பலனை புஜிக்கிறார்கள்-என்பதால் அவன் அருகிலே இருப்பதால் உபாஸனை எளிது என்றும்
கட -3-3-
ஆத்மாநம் ரதிநம் வித்தி -என்று தொடங்கி
கட -3-14-
துர்கே பதஸ் தத் கவயோ வதந்தி –என்று பாதை கடினம் என்று அறிந்தவர்கள் கூறுகிறார்கள் என்று நிகமிப்பதன் மூலம்
உபாஸனையின் வழி முறைகளும் உபாசகன் ஸ்ரீ விஷ்ணுவின் பரமபதம் அடைதல் பற்றியும் கூறப்பட்ட இந்த பிரகரணத்தில்
கட -3-15-
அ சப்தம் அ ஸ்பர்சம் என்று முடிக்கப்பட்டுள்ளது –

ப்ரவசநேந லப்யோ ந-உபன்யாசம் மாத்ரத்தால் அடைய முடியாதே -அது சஹகாரி -ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம்
அவனே காட்டக் காணலாம் –அவன் கிருபையே காரணம் -இசைவித்து என்னுள் இருத்தி -அதுவும் அவனது இன்னருளே

இங்கு அறியப்பட வேண்டியவர்களாக மூன்று விஷயங்களும் -அவற்றைக் குறித்த கேள்விகளும் மட்டுமே உள்ளன –
கபில தந்திரத்தில் கூறப்பட்ட அவ்யக்தம் பற்றி ஒன்றும் கூறப்பட வில்லை

அவன் கிருபையால் அவனைக் காணலாம் -புருஷார்த்த யோக்யதை பெறவே சரீரம் –
ப்ரஹ்ம வித்யை பெற ஸூ மனசர் இடம் அபசாரம் கூடாதே –
அம்ருத்யம் -ஸ்வர்க்க சப்தம் இங்கே மோக்ஷம் பரமபதம் -குறிக்கும் –
மோக்ஷ ஸ்வரூபம் ப்ரஸ்ன வ்யாஜ்யேன-த்வாரேந – உபாயம் உபாஸ்யம் உபேயம் மூன்றையுமே இங்கே கேட்க்கிறான்
பிரகிருதி அம்சம் ஒன்றுமே இல்லையே இதில் –

—————–

1-4-7-மஹத்வத் ச –

மஹத் தத்வம் போன்றது என்றவாறு-

மஹத் என்று கூறும் இடத்திலும் பிரக்ருதியைப் பற்றி கூறவில்லை
கட -3-10-
புத்தேர் ஆத்மா மஹான் பர – புத்தியைக் காட்டிலும் மஹான் என்று கூறப்படும் ஆத்மா உயர்ந்தது -என்றது
சாமாநாதி கரண்யத்தால் –
கபில தந்திரத்தில் கூறப்பட்ட மஹான் சொல் இல்லை
இதே வரியில் ஆத்மா என்பதைக் காட்டிலும் அவ்யக்தம் மேம்பட்டது என்ற பொருளில் படிக்கப்பட்டதால்
இந்த அவ்யக்தம் கபில தந்திரத்தில் கூறப்பட்ட அவ்யக்தம் என்ற சொல்லைக் கருத்தில் கொண்டு
எடுக்கப்பட விலை என்று அறியலாம்
ஹந்த-ஹர்ஷத்தால் -எம தர்ம ராஜன் -மரணத்தை அடைந்ததும் ஆத்மாவுக்கு -நிலை –
யோனி மாறி மாறி பல பிறப்பும் பிறக்கிறான் -முன் இலையில் காலை வைத்து பின் இலையில் காலை எடுப்பது போலே –
முன்னால் சேரும் இடம் தீர்மானமான பின்பு சரீரம் விடுகிறான் –
சில ஆத்மாக்கள் கர்ம அனுகுணமாக ஸ்தாணுத்வா அவஸ்தை அடைகிறார்கள்-பரம ரஹஸ்யம்

———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருப்பங்கள் தரும் திருநாங்கூர் கருட சேவை தரிசனம்-ஸ்ரீ திருக்குடந்தை டாக்ட ர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் –

January 25, 2020

இறைவனை நமக்குக் காட்டித் தரும் கருவியாக வேதம் உள்ளது. ஆனால் நம் போன்ற சாமானியர்களுக்கு, வேதத்தைக் கற்று,
அதன் பொருளை அறிந்து, அதைப் பின்பற்றி இறைவனை அறிவது என்பது மிகவும் கடினமான காரியம்.
எனவே நம்மேல் கருணை கொண்ட வேதமே, இறைவனை நமக்கு எளிதில் காட்டித் தரும் பொருட்டு மற்றோர் உருவம் எடுத்துக் கொண்டது.

அவ்வுருவத்தின் தலையாக வேதத்திலுள்ள திரிவ்ருத் மந்திரமும், கண்களாக காயத்திரி மந்திரமும், உடலாக வாமதேவ்யம் எனும் வேதப்பகுதியும்,
இரு இறக்கைகளாக பிருகத்-ரதந்தரம் ஆகிய வேதப்பகுதிகளும், கால்களாக வேதத்தின் சந்தங்களும், நகங்களாக திஷ்ண்யம் எனும் வேதப்பகுதியும்,
வாலாக யஜ்ஞாயஜ்ஞம் எனும் வேதப்பகுதியும், ஆத்மாவாக ஸ்தோமம் எனும் வேதப்பகுதியும் வடிவெடுக்க,
அவ்வாறு உருவான வடிவமே வேதசொரூபியான கருடனின் வடிவம்.

கருட சேவை உற்சவத்தின் போது, இறைவனைத் தனது தோளில் சுமந்தபடி நம்மைத் தேடி வரும் வேத சொரூபியான கருட பகவான்,
நம்மைப் பார்த்து, “நீ வேதங்களின் துணைகொண்டு இறைவனைத் தேடிக் கொண்டிருந்தாயே!
இதோ அந்த இறைவனையே நான் உன்னிடம் அழைத்து வந்துவிட்டேன் பார்!” என்று சொல்லிப் பரமனின் பாதங்களைப் பாமரர்க்கும்
எளிதில் காட்டித் தந்து விடுகிறார்.
கச்யப மகரிஷிக்கும் வினதைக்கும் மகனாக ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி நன்னாளில்
சுவாதி நட்சத்திரத்தில் தோன்றினார் கருடன்.
பருத்த உடல், பொன்மயமான சிறகுகள், வெண்மையான கழுத்துப் பகுதி,
உருண்டையான கண்கள், நீண்ட மூக்கு, கூரிய நகங்களுடன் கூடியவராய்க் கருடன் திகழ்கிறார்.
‘கரு’ என்றால் சிறகு என்று பொருள். ‘ட’ என்றால் பறப்பவர். சிறகுகளைக் கொண்டு பறப்பதால் ‘கருடன்’ என்றழைக்கப்படுகிறார்.
வடமொழியில் ‘க்ரு’ என்பது வேத ஒலிகளைக் குறிக்கும். வேத ஒலிகளின் வடிவாய்த் திகழ்வதாலும் ‘கருடன்’ எனப் பெயர் பெற்றார்.

கருடனின் தாயான வினதை, தனது சகோதரியான கத்ருவிடம் ஒரு பந்தயத்தில் தோற்றாள்.
அதன் விளைவாகக் கத்ருவுக்கும் அவளது பிள்ளைகளான நாகங்களுக்கும் அடிமையாகிச் சிறைப்பட்டிருந்தாள் வினதை.
அவளை விடுவிக்க வேண்டும் என்றால், தேவலோகத்தில் இருந்து அமுதத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நிபந்தனை விதித்தாள் கத்ரு.
தேவலோகத்துக்குச் சென்று அமுதத்தைக் கொண்டு வந்து தன் தாயான வினதையைச் சிறையிலிருந்து மீட்டார் கருடன்.
தனது தாயைக் கத்ருவும் அவள் ஈன்றெடுத்த பாம்புகளும் சிறை வைத்தபடியால், பாம்புகளைப் பழிவாங்க நினைத்த கருடன்,
பாம்புகளை வீழ்த்தி அவற்றையே தனது திருமேனியில் ஆபரணங்களாக அணிந்தார்.
திருமால் ஒருமுறை கருடனிடம், “நான் உனக்கு ஒரு வரம் தரட்டுமா?” என்று கேட்டார்.
கருடனோ, “திருமாலே! எனக்கு வரம் வேண்டாம்! உமக்கு ஏதேனும் வரம் வேண்டுமென்றால், நான் தருகிறேன்! கேளுங்கள்!” என்றார்.
கருடனின் பிரபாவத்தைக் கண்டு வியந்த திருமால், “நீயே எனக்கு வாகனமாகி விடு!” என்று கருடனிடம் வரம் கேட்டார்.
கருடனும் அதற்கு இசைந்து, திருமாலுக்கு வாகனமானார்.

அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பெருமாள் சந்நதிக்கு நேராகக் கருடன் சந்நதி இருப்பதைக் காணலாம்.
ஏனெனில், நாம் ஒப்பனை செய்து கொண்டால், கண்ணாடியில் அழகு பார்ப்போம் அல்லவா?
அதுபோல் அலங்காரப் பிரியரான திருமால் அலங்காரம் செய்துகொண்டால் அழகு பார்க்க ஒரு கண்ணாடி வேண்டுமல்லவா?
இறைவனைக் காட்டும் கண்ணாடி வேதம்! கருடன் வேத சொரூபியாகவே இருப்பதால், கருடனையே கண்ணாடியாகக் கொண்டு
திருமால் அழகு பார்க்கிறார். அதனால் தான் பெருமாள் சந்நதிக்கு நேரே, கண்ணாடி போல் கருடன் சந்நதி இருக்கும்.
பெருமாள் கோயில்களில் பிரம்மோற்சவங்கள் நடைபெறும் போது கருடன் படம் வரைந்த கொடி, கொடிமரத்தில் ஏற்றப்படுவதைக் காணலாம்.
திருமலையிலுள்ள ஏழு மலைகளுள் கருடனின் பெயரில் ‘கருடாத்ரி’ என்றொரு மலை உள்ளது.

ராம ராவணப் போரில், இந்திரஜித்தின் நாகபாசத்தால் தாக்கப்பட்டு ராமனும் வானர சேனையும் மயங்கிக் கிடந்த வேளையில்,
வானிலிருந்து தோன்றிய கருடன் அந்த நாக பாசங்களை உடைத்து, ராமனும் வானர வீரர்களும் மீண்டும் எழுவதற்கு உதவினார்.
இறைவனை நாம் அழைக்கும் போதெல்லாம், அவனை விரைவில் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் வாகனமாகக் கருடன் திகழ்கிறார்.
கருடனை வழிபடுவோர்க்குப் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் ஏற்படும் பயம் விலகி, குடும்பத்தில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.
இப்படி எண்ணற்ற உருவங்கள் உடையவராகக் கருடன் விளங்குவதால், கருட சேவை உற்சவங்களில் பற்பல உருவங்களோடு
கருடன் வருவதைக் காணலாம்.

தஞ்சையில் நடைபெறும் 24 கருட சேவை,
காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையிலுள்ள கூழமந்தலில் நடைபெறும் 15 கருட சேவை,
அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் நடைபெறும் 12 கருட சேவை,
திருநெல்வேலிக்கு அருகே ஆழ்வார் திருநகரியில் நடைபெறும் 9 கருட சேவை,
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் 5 கருட சேவை உள்ளிட்ட உற்சவங்கள் இதற்குச் சான்றாகும்.
நாச்சியார்கோவிலில் கல் கருடனாகத் திகழும் கருடன், தானே உற்சவராகவும், மூலவராகவும், வாகனமாகவும் திகழ்கிறார்.

இப்படிப் பல ஊர்களில் கருட சேவை உற்சவங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றாலும், தை அமாவாசைக்கு மறுநாளன்று,
சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூரில் நடைபெறும் 11 கருட சேவை உற்சவம் உலகப் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
சுமார் 125 வருடங்களுக்கு முன்பு திருநாங்கூரில் வாழ்ந்த திருநாராயணப் பிள்ளை, இன்ஸ்பெக்டர் சுவாமி ஐயங்கார் போன்ற பெரியோர்கள்
இந்த உற்சவத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
அன்று தொட்டு இன்று வரை வருடந்தோறும் இவ்வுற்சவம் செவ்வனே நடந்து வருகிறது.
ஆழ்வார்களால் பாடப் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களுள் சீர்காழிக்கு அருகே உள்ள
திருநாங்கூர் எனும் ஊரைச் சுற்றி 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.
தட்சனின் யாகத்துக்குச் சென்ற சதிதேவியை தட்சன்
அவமானப் படுத்திய செய்தியைக் கேள்வியுற்றுக் கடுஞ்சினம் கொண்டபரம சிவன்,
சீர்காழிக்கு அருகிலுள்ள உபய காவிரி எனும் இடத்தில் ருத்திர தாண்டவம் ஆடத் தொடங்கினார்.
அவரது ரோமம் விழுந்த இடங்களில் எல்லாம் புதிய ருத்திரர்கள் தோன்றத் தொடங்கினார்கள்.
சிவபெருமானின் கோபத்தை அடக்க வழிதெரியாது தேவர்கள் தவித்தபோது, திருநாங்கூரில் பதினொரு வடிவங்களோடு
திருமால் வந்து காட்சி கொடுத்து, பதினொரு வடிவங்களில் இருந்த பரமசிவனின் கோபத்தைத் தணித்தார்.
அதனால் தான் இன்றும் திருநாங்கூரில் 11 பெருமாள் கோவில்களும்,
அவற்றுக்கு இணையாக 11 சிவன் கோயில்களும் இருப்பதைக் காணலாம்.

1. திருமணிமாடக்கோயில் (ஸ்ரீநாராயணப் பெருமாள்)
2. திரு அரிமேய விண்ணகரம் (குடமாடுகூத்தர்)
3. திருச்செம்பொன்செய்கோயில் (செம்பொன் அரங்கர்)
4. திருத்தெற்றியம்பலம் (செங்கண்மால்)
5. திருவெள்ளக்குளம் (அண்ணன் பெருமாள்)
6. திருவண்புருடோத்தமம் (புருஷோத்தமப் பெருமாள்)
7. திருமணிக்கூடம் (வரதராஜப் பெருமாள்)
8. திருவைகுந்த விண்ணகரம் (வைகுந்தநாதன்)
9. திருத்தேவனார்த் தொகை (மாதவன்)
10. திருப்பார்த்தன்பள்ளி (தாமரையாள்கேள்வன்)
11. திருக்காவளம்பாடி (கோபாலன்)
ஆகியவையே திருநாங்கூரைச் சுற்றியுள்ள பதினொரு திருமால் திருத்தலங்களாகும்.

1. திருநாங்கூர் மதங்கேஸ்வரர்
2. திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர்
3. திருயோகீஸ்வரம் யோகநாதசுவாமி
4. கார்த்தியாயினி இருப்பு (காத்திருப்பு) சுவர்ணபுரீஸ்வரர்
5. திருநாங்கூர் ஜ்வரஹரேஸ்வரர்
6. அல்லிவிளாகம் நாகநாதசுவாமி
7. திருநாங்கூர் நம்புவார்க்கு அன்பர்
8. திருநாங்கூர் கயிலாயநாதர்
9. திருநாங்கூர் சுந்தரேஸ்வரர்
10.பெருந்தோட்டம் ஐராவதேஸ்வரர்
11.அன்னப்பன்பேட்டை கலிக்காமேஸ்வரர்

எனப் பதினொரு வடிவங்களுடன் திருநாங்கூரைச் சுற்றி சிவபெருமான் காட்சி தருகிறார்.

திருவரங்கத்தில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் பகல்பத்து – இராப்பத்து உற்வசவங்களைப் பன்னிரு ஆழ்வார்களுள்
கடைக்குட்டியான திருமங்கையாழ்வார் நடத்தி வைத்தார். அது நிறைவடைந்த பின், தைமாதம் அமாவாசை அன்று திருநாங்கூரில்
கோவில் கொண்டிருக்கும் பதினொரு பெருமாள்களையும் இனிய தமிழ் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்வதற்காகத்
திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு வருகிறார். அப்பாசுரங்களைப் பெறும் ஆர்வத்தில் பதினொரு பெருமாள்களும்
தங்கக் கருட வாகனத்தில் வந்து காட்சி கொடுத்து, ஆழ்வாரிடம் பாடல் பெற்றுச் செல்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியை நம் கண்முன்னே காட்டுவதுதான் திருநாங்கூர் பதினொரு கருட சேவை.

ஒவ்வொரு வருடமும் இந்தப் பெருமாள்களைப் பாடத் திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு நேரே வருவதாக ஐதீகம்.
இந்தக் கருட சேவைக்கு முந்தைய நாள் நள்ளிரவில், திருநாங்கூர் வயல் வெளிகளில் காற்றினால் நெற்பயிர்கள் சலசலவென ஓசையிடும்.
இந்த ஓசையைக் கேட்டவுடன் திருமங்கையாழ்வார் ஊருக்குள் நுழைந்துவிட்டதாக மக்கள் புரிந்து கொள்வார்கள்.
திருமங்கையாழ்வாரின் பாதம் பட்ட வயல்களில் நல்ல விளைச்சல் ஏற்படும் என்பது அவ்வூர் விவசாயிகளின் நம்பிக்கை.

திருநாங்கூர் 11 கருட சேவை உற்சவம் மூன்று நாள் உற்சவமாக நடைபெறுகிறது.
1. தை அமாவாசை அன்று நடைபெறும் திருமங்கை ஆழ்வாரின் மஞ்சள் குளி உற்சவம்.
2. தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் பதினொரு கருட சேவை.
3. அதற்கு மறுநாள் பெருமாள்களும் ஆழ்வாரும் தத்தம் திருக்கோவில்களுக்குத் திரும்புதல்
அன்றைய தினம் நள்ளிரவில், தோளுக்கினியானில் மணவாள மாமுனிகள் முதலில் மணிமாடக் கோவிலில் இருந்து வெளியே வருகிறார்.
அவரைத் தொடர்ந்து, அன்னப்பறவை (ஹம்ஸ) வாகனத்தில், குமுதவல்லி நாச்சியாரோடு திருமங்கை ஆழ்வார் வெளியே வந்து,
பெருமாள்களை வரவேற்கத் தயாராக நிற்கிறார்.

1. மணிமாடக் கோவிலின் நாராயணப் பெருமாள்
2. அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்
3. செம்பொன்செய்கோவிலின் செம்பொன் அரங்கர்
4. திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்
5. திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள்
6. திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்
7. திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள்
8. வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்தநாதப் பெருமாள்
9. திருத் தேவனார் தொகையின் மாதவப் பெருமாள்
10.திருப்பார்த்தன் பள்ளியின் தாமரையாள் கேள்வன்
11.திருக்காவளம்பாடியின் கோபாலக் கிருஷ்ணன்
ஆகிய பதினொரு பெருமாள்களும் விசேஷ அலங்காரங்களோடு தங்கக் கருட வாகனங்களில் திருநாங்கூர் மணிமாடக் கோவிலில்
இருந்து புறப்படுகிறார்கள்.பதினொரு பெருமாள்கள் மங்களாசாசனம் பெறும் வரிசை பற்றி
அழகான வடமொழி சுலோகம் ஒன்று உள்ளது:

“நந்தாதீப கடப்ரணர்தக மஹாகாருண்ய ரக்தாம்மக
ஸ்ரீநாராயண புருஷோத்தமதி ஸ்ரீரத்னகூடாதிபாந் |
வைகுண்டேச்வர மாதவௌ ச கமலாநாதம் ச கோபீபதிம்
நௌமி ஏகாதசாந் நாகபுரி அதிபதீந் ஸார்தம் கலித்வம்ஸிநா ||”

இதன்பொருள்:
மணிமாடக் கோவிலின் நாராயணப் பெருமாள், அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்,
செம்பொன்செய் கோயிலின் செம்பொன் அரங்கர், திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்,
திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள், திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்,
திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள், வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்தநாதப் பெருமாள்,
திருத்தேவனார்தொகையின் மாதவப் பெருமாள், திருப்பார்த்தன்பள்ளியின் தாமரையாள் கேள்வன்,
திருக்காவளம்பாடியின் கோபாலக்கிருஷ்ணன் ஆகிய பதினொரு பெருமாள்களையும் திருமங்கை ஆழ்வாரையும் வணங்குகிறேன்.

மணிமாடக் கோவிலிலிருந்து வரிசையாக வெளியே வரும் ஒவ்வொரு பெருமாளுக்கும் கோவில் வாசலில் விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது.
ஒவ்வொரு பெருமாளாகத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார். பதினொரு பெருமாள்களுக்கும் மங்களாசாசனம் ஆனபின்,
கருட வாகனத்தில் வீதி உலா செல்லும் பெருமாள்களைப் பின் தொடர்ந்து, ஹம்ஸ வாகனத்தில் திருமங்கையாழ்வாரும் செல்கிறார்.
ஆழ்வாரின் பாடல்களைப் பெற்று அவருக்கு அருள்புரிந்தாற்போல், ஊர்மக்களுக்கும், உற்சவத்தைத் தரிசிக்க வந்த அடியார்களுக்கும்
அருள்புரிய வேண்டும் என்ற எண்ணத்தில், பக்தர்கள் வெள்ளத்துக்கு மத்தியில், பதினொரு பெருமாள்களும் கருட வாகனத்தில்
திருநாங்கூர் மாட வீதிகளைச் சுற்றி மேளவாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் வலம் வருகிறார்கள்.

நாங்கூர் வெள்ளாளத் தெருவையும், வடக்கு வீதியையும் கடக்கும் பெருமாள்கள், கீழ வீதியிலுள்ள
செம்பொன்செய் கோவில் வாசலை அடைகிறார்கள்.
அதன்பின் தெற்கு வீதி வழியாக வந்து மீண்டும் மணிமாடக் கோவிலை அதிகாலையில் அடைகிறார்கள்.
இந்த 11 கருட சேவையைத் தரிசிக்கும் அடியார்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பதினொரு திவ்ய தேசங்களைத் தரிசித்த
பலன் கிட்டும் என்பது பெரியோர்களின் வாக்கு.
11 கருட சேவை உற்சவம் நடைபெற்ற மறுநாள் காலை, மணிமாடக் கோவிலிலிருந்து புறப்பட்டு,
அந்தந்தப் பெருமாள்கள் தத்தம் திருத்தலங்களுக்கு மீண்டும் எழுந்தருள்கிறார்கள்.

காலையில் மணிமாடக் கோவிலில் திருமஞ்சனம் கண்டருளும் திருமங்கையாழ்வார், மாலையில் குமுதவல்லியுடன் புறப்பட்டு,
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாளை,
“அண்ணா அடியேன் இடரைக் களையாயே!” என்று மங்களாசாசனம் செய்து,
திருத்தேவனார்தொகை மாதவப் பெருமாளை, “தேதென என்றிசைப் பாடும் திருத்தேவனார்த் தொகையே!” என்று பாடி,
திருவாலியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலட்சுமிநரசிம்மப் பெருமாளை “திருவாலி அம்மானே!” என்று பாடிவிட்டுத்
தனது இருப்பிடமான திருநகரியை அடைகிறார்.
திருநகரியில் எழுந்தருளியிருக்கும் வயலாளி மணவாளன் எனப்படும் பெருமாள், கருட வாகனத்தில் வந்து,
ராஜகோபுரத்தின் முன்னே திருமங்கையாழ்வாரையும் குமுதவல்லியையும் எதிர்கொண்டு அழைக்கிறார்.

“கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீள்வயல்சூழ் வயலாலி அம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே!”

என்று திருமங்கையாழ்வார் பாடி, வயலாலி மணவாளனோடு திருக்கோவிலுக்குள்ளே எழுந்தருளுவதோடு,
இந்தப் பதினொரு கருட சேவைத் திருவிழா இனிதே நிறைவடைகிறது.
திருநாங்கூர் மணிமாடக் கோவிலில் ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் ஒன்று கூடி
இறைவனை வணங்கும் ஒப்பற்ற உற்சவமாகிய இந்தப் பதினொரு கருட சேவை விழாவில் பங்கேற்று,
தங்கக் கருட வாகனத்தில் காட்சி அளிக்கும் பதினொரு பெருமாள்களையும், கருடன்களையும்,
அன்ன வாகனத்தில் வரும் திருமங்கையாழ்வார்-குமுதவல்லி நாச்சியாரையும், மணவாள மாமுனிகளையும் கண்ணாரக் கண்டு,
மனதாரத் தொழும் அனைத்து அன்பர்களுக்கும் உடல்நலம், மன அமைதி, நீண்ட ஆயுள், ஆற்றல், பொலிவு ஆகியவை பெருகும்.
நினைத்த நற்செயல்கள் கைகூடும். நோய்கள் அகலும். நற்செல்வம் பெற்றுப் பல்லாண்டு வாழ்வர் என்பதில் ஐயமில்லை.

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்ட ர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் –

January 25, 2020

திருமாலின் ஐந்து நிலைகள்: அடியார்களுக்கு அருள்புரிவதற்காக ஐந்து விதமான நிலைகளில் திருமால் காட்சி தருகிறார். அவை,

1. பரநிலை – வைகுண்டத்தில் முக்தி அடைந்த ஜீவாத்மாக்களுக்குத் தரிசனம் தந்தருளும் பரவாசுதேவன்.
2. வியூஹ நிலை – தேவர்களின் குறைகேட்டு அவர்களுக்கு அருள்புரிவதற்குத் தயாராகப் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள்.
3. விபவ நிலை – மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ணாதி அவதாரங்கள்.
4. அந்தர்யாமி நிலை – அனைத்து உயிர்களுக்குள்ளும், உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் இறைவன்.
5. அர்ச்சை நிலை – கோயில்களிலும் நம் இல்லங்களிலும் நமக்கு அருள்புரிவதற்காக விக்கிரக வடிவில் காட்சி தரும் இறைவன்.

அர்ச்சை நிலையின் சிறப்பு

இந்த ஐந்து நிலைகளுள் அர்ச்சை என்ற நிலை கடைசியாகச் சொல்லப்பட்டிருந்தாலும், மற்ற நான்கு நிலைகளைக் காட்டிலும்
அர்ச்சையே மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. எல்லையில்லாத கருணை நிறைந்தவராகவும், எளிமையின் எல்லை நிலமாகவும்
அர்ச்சை நிலையில் இருக்கும் இறைவனை நாத்திகர், ஆத்திகர், நல்லவர், தீயவர், மனிதர், மிருகம் என அனைவரும்
காணலாம், வணங்கலாம், வணங்கி அருள் பெறலாம்.
அர்ச்சை நிலையின் வகைகள் இந்த அர்ச்சை நிலையைப் பிரதிஷ்டை செய்பவர்களைப் பொருத்து நான்கு விதமாகப் பிரிக்கிறார்கள்:

1. ஸ்வயம் வியக்தம் – இறைவன் தானாகவே விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால்,
அதை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள்.
ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம் என்று பொருள்.
ஸ்ரீ நாங்குநேரி, ஸ்ரீ திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீ திருவேங்கடம், ஸ்ரீ புஷ்கரம், ஸ்ரீ நைமிசாரண்யம், ஸ்ரீ பத்ரிநாத், ஸ்ரீ முக்திநாத் ஆகிய
எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகும்.

2. தைவிகம் – பிரம்மா, இந்திரன், சூரியன் போன்ற தேவர்கள் இறைவனை ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்தால்,
அதை தைவிகப் பிரதிஷ்டை என்று சொல்வார்கள். தைவிகம் என்றால் தேவர்களால் செய்யப்பட்டது என்று பொருள்.
உதாரணமாக, ஸ்ரீ காஞ்சீபுரத்தில் பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ அத்தி வரதர்,
குடந்தையில் சூரியனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரபாணிப் பெருமாள் உள்ளிட்டோர் தைவிகப் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்கள்.

3. ஆர்ஷம் – முனிவர்கள், ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களை ஆர்ஷம் என்று சொல்கிறோம்.
ஸ்ரீ மார்க்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோயில்,
ஸ்ரீ கோபில கோப்பிரளய ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் உள்ளிட்டவை
ஆர்ஷம் என்ற பிரிவின் கீழ் வரும்.

4. மானுஷம் – அரசர்கள், பக்தர்கள் உள்ளிட்ட மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருத்தலங்கள் மானுஷம் என்றழைக்கப்படும்.
கீழத் திருப்பதியில் ஸ்ரீ ராமாநுஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில்,
ஸ்ரீ பஞ்ச பாண்டவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கேரளாவில் உள்ள ஸ்ரீ திருவித்துவக்கோடு உள்ளிட்டவை இந்தப் பிரிவில் அடங்கும்.

இந்த நான்கு விதமான திருத்தலங்களிலும் இறைவன் முழு சக்தியுடனும் முழு சாந்நித்தியத்துடனும் திகழ்கிறார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
எனினும், இறைவன் தானே விக்கிரக வடிவில் ஆவிர்ப்பவித்த இடங்கள் என்பதால், இவற்றுள் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள்
தனிச்சிறப்பு பெற்றவையாகக் கொண்டாடப் படுகின்றன.

எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள்
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ வேங்கடாத்ரிச்ச ஸ்ரீ முஷ்ணம் ஸ்ரீ தோதபர்வதம் ஸ்ரீ ஸாளக்ராமம் ஸ்ரீ புஷ்கரம் ஸ்ரீ நரநாராயணாச்ரமம் ஸ்ரீ நைமிஷம்
சேதி மே ஸ்தானானி அஸௌ முக்தி ப்ரதானி வையே து அஷ்டாக்ஷர ஏகைக: வர்ணமூர்த்தி: வஸாமி அஹம்”என்ற
ஸ்ரீ புராண ஸ்லோகம் கூறும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகிய

1. ஸ்ரீரங்கம்
2. ஸ்ரீ திருவேங்கடம்
3. ஸ்ரீமுஷ்ணம்
4. ஸ்ரீ நாங்குநேரி
5. ஸ்ரீ முக்திநாத்
6. ஸ்ரீ புஷ்கரம்
7. ஸ்ரீ பத்ரிநாத்
8. ஸ்ரீ நைமிசாரண்யம்

என்னும் எட்டு திருத்தலங்களும் நாராயண மந்திரமாகிய எட்டெழுத்து மந்திரத்தில் உள்ள எட்டு எழுத்துகளையும் குறிப்பதாகவும்
பெரியோர்கள் கூறுகிறார்கள். அந்த எட்டு திருத்தலங்களின் பெருமைகளை இக் கட்டுரையில் காண்போம்.

ஸ்ரீ திருவரங்கம்
“ஆராத அருளமுதம் பொதிந்த கோவில்!
அம்புயத்தோன் அயோத்தி மன்னர்க்கு அளித்த கோவில்!
தோலாத தனிவீரன் தொழுத கோவில்!
துணையான வீடணற்குத் துணையாம் கோவில்!
சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோவில்!
செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோவில்!
தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோவில்!
திருவரங்கம் எனத்திகழும் கோவில் தானே!”-என்று ஸ்ரீ திருவரங்கம் கோவிலின் பெருமைகளைப் பட்டியலிடுகிறார் ஸ்ரீ வேதாந்த தேசிகன்.

1. ஆராத அருளமுதம் பொதிந்த கோவில் எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத அமுதம் போன்றவனும்,
கருணை நிறைந்தவனுமான திருவரங்கநாதன் கோவில் கொண்டிருக்கும் திருத்தலம் திருவரங்கமாகும்.
அத்தகைய அரங்கனின் கருணை உள்ளிட்ட குணங்களிலும், அமுதம் போன்ற அழகிலும் ஆழ்வார்கள் மிகவும் ஆழ்ந்திருந்தார்கள்.
ஸ்ரீ மதுரகவிகளைத் தவிர மீதமுள்ள அனைத்து ஆழ்வார்களாலும் பாடப்பட்ட ஒரே திருத்தலம் திருவரங்கமே ஆகும்.
தமிழ் மொழியில் உள்ள 247 எழுத்துகளுக்கு இணையாக 247 பாசுரங்களால் இப்பெருமாளை ஆழ்வார்கள் துதித்துள்ளார்கள்.

ஸ்ரீ ஆண்டாளும், ஸ்ரீ திருப்பாணாழ்வாரும் ஸ்ரீ அரங்கனின் திருவடிகளிலேயே கலந்து நித்திய கைங்கரியத்தைப் பெற்றார்கள்.
ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் ஸ்ரீ வைகுண்டத்தையும் விரும்பாமல், ஸ்ரீ திருவரங்கத்திலேயே இருந்து கொண்டு
ஸ்ரீ பெரிய பெருமாளை அனுபவித்து வருகிறார்.
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அரங்கனுக்காக மதில் சுவர் எழுப்பித் தொண்டு செய்தார்.

2. அம்புயத்தோன் அயோத்தி மன்னர்க்கு அளித்த கோவில் தாமரையில் வீற்றிருக்கும் பிரம்ம தேவரால்,
அயோத்தியை ஆண்டு வந்த இக்ஷ்வாகு மன்னருக்குப் பரிசாக வழங்கப்பட்ட கோவிலாகும் ஸ்ரீ திருவரங்கம்.
ஸ்ரீ திருப்பாற்கடல் கடையப்பட்ட போது, அதிலிருந்து ஸ்ரீரங்க விமானம் தோன்றியது. அந்த விமானத்தை ஸ்ரீ கருடன் ஏந்தி வர,
ஸ்ரீ ஆதிசேஷன் விமானத்தின் மேல் குடை பிடிக்க, ஸ்ரீ விஷ்வக்சேனர் கையில் பிரம்புடன் வழியில் உள்ளோரை விலக்க,
சூரியனும் சந்திரனும் சாமரம் வீச, நாரதரும் தும்புருவும் கானம் இசைக்க, தேவர்கள் பூமாரி பொழிய,
வெளிவந்த அவ்விமானத்தின் உள்ளே தேவி பூதேவியோடு துயில் கொண்ட நிலையில் ஸ்ரீமந்நாராயணன் பிரம்மாவுக்குக் காட்சி தந்தார்.

இந்த துயில் கொண்ட திருக்கோலம் திருமால் சுயமாக ஆவிர்ப்பவித்த திருக்கோலமாகும்.
ஸ்ரீமந்நாராயணன் என்று பெயர்பெற்ற இந்தப் பள்ளிகொண்ட பெருமாளைத் தனது சத்திய லோகத்தில் எழுந்தருளச் செய்து வழிபட்டு வந்தார் பிரம்மா.
பல யுகங்கள் கழித்து, பூமியை ஆண்டு வந்த இக்ஷ்வாகு மன்னர் சத்திய லோகத்துக்கு வந்த போது,
அந்தப் பள்ளிகொண்ட பெருமாளைத் தரிசித்துப் பரவசம் அடைந்தார். அவரைத் தனது தலைநகரான அயோத்திக்கு அழைத்துச் செல்ல
விரும்புவதாகவும் பிரம்மாவிடம் பிரார்த்தித்தார். இக்ஷ்வாகுவின் பிரார்த்தனையை பிரம்மாவும் ஏற்றதால், அந்தப் பெருமாளை
ஸ்ரீ அயோத்தியில் பிரதிஷ்டை செய்தார் இக்ஷ்வாகு. ஜகந்நாதன் என்ற பெயரோடு அங்கிருந்தபடி ஸ்ரீ அயோத்தியின்
மன்னர்களுக்கும் குடிமக்களுக்கும் அந்தப் பெருமாள் அருட்பாலித்து வந்தார். அவர் தான் பின்னாளில் திருவரங்கத்தை அடைந்தார்.

3. தோலாத தனிவீரன் தொழுத கோவில் தோலாத தனிவீரன் என்று போற்றப்படும் ஸ்ரீ ராமனால் பூஜிக்கப்பட்ட கோவிலாகும் ஸ்ரீ திருவரங்கம்.
இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய மன்னர்கள் வழி வழியாக அயோத்தியில் திகழ்ந்த இப்பெருமாளுக்கு தினசரி பூஜைகளைச் செய்து வந்தார்.
அந்த வகையில், இறைவனே அந்த இக்ஷ்வாகு குலத்தில் ஸ்ரீ ராமனாக அவதரித்த போது, அவனும் இப்பெருமாளுக்குப் பூஜை செய்து வந்தான்.
ஸ்ரீ திருவரங்கத்தில் தான் கம்பர் தாம் இயற்றிய ஸ்ரீ ராமாயணத்தை அரங்கேற்றம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ பெருமாளாலே ஆராதிக்கப்பட்ட ஸ்ரீ பெருமாள் என்பதால், ஸ்ரீ பெரிய பெருமாள் என்ற பெயர் இந்தப் பெருமாளுக்கு உண்டானது.
அதனாலேயே, இந்தப் பெரிய பெருமாளோடு தொடர்புடைய அனைத்துக்கும் பெரிய என்ற அடைமொழி ஏற்பட்டுவிட்டது.
ஊர் – பேரரங்கம், கோவில் – பெரிய கோவில், தாயார் – பெரிய பிராட்டியார், நிவேதனம் – பெரிய அவசரம்,
வாத்தியம் – பெரிய மேளம், பட்சணங்கள் – பெரிய திருப்பணியாரங்கள்.
இரவில் மற்ற திவ்யதேசத்துப் பெருமாள்கள் அனைவரும் சயனிப்பதற்குத் திருவரங்கநாதனின் கருவறைக்கு வருவதாகவும்,
காலையில் மீண்டும் தத்தம் திவ்ய தேசங்களுக்குச் சென்று விடுவதாகவும் ஓர் ஐதீகம் உண்டு.

4. துணையான வீடணற்குத் துணையாம் கோவில் ராமனுக்குத் துணைநின்ற விபீஷணனுக்குத் துணையாக நின்று காப்பது திருவரங்கம் கோவிலாகும்.
ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் நிறைவடைந்தபின், விபீஷணனுக்குப் பரிசாக, ஸ்ரீரங்கவிமானத்தையும் அதில்
துயில்கொள்ளும் பெருமாளையும் ஸ்ரீ ராமன் அளித்தான். அந்தப் பெருமாளைத் தன் புஷ்பக விமானத்தில் எழுந்தருளச் செய்து
இலங்கை நோக்கி விபீஷணன் சென்ற போது, வழியில் காவிரிக் கரையில் உள்ள திருவரங்கத்தைக் கண்டான்.

“வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை அணிதிருவரங்கம்”
என்று புகழப்படும் அந்த அழகிய ஊரில் பெருமாளுக்குப் பிரம்மோற்சவத்தைக் கொண்டாடவும் விரும்பினான் ஸ்ரீ விபீஷணன்.

அதனால் தற்காலிகமாகப் பெருமாளை அங்கே பிரதிஷ்டை செய்து பிரம்மோற்சவத்தை நடத்தினான் விபீஷணன். ஆனால், பெருமாளோ திருவரங்கத்திலேயே நிரந்தரமாகக் குடிகொண்டிருக்க விரும்பினார். அதனால் இலங்கைக்கு வரமறுத்து, திருவரங்கத்திலேயே துயில்கொண்டு விட்டார். எனினும், விபீஷணனுக்கு அருள்புரிவதற்காக அவன் இருக்கும் தென்திசையை நோக்கிப் பள்ளிகொண்டார் அரங்கன். தினந்தோறும் இரவில் விபீஷணன் திருவரங்கத்துக்கு வந்து பெருமாளை வழிபட்டுவிட்டுச் செல்வதாக ஐதீகம் உண்டு.

5. சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோவில் பெறுவதற்கு அரிய பலன்களையும் தரவல்லது திருவரங்கம் கோவிலாகும்.
ஸ்ரீ ராமாநுஜர் வாழ்ந்த காலத்தில், பங்குனி உத்திர நன்னாளில் ஸ்ரீ ரங்கநாயகித் தாயார் மற்றும் ஸ்ரீ ரங்கநாதன் திருவடிகளில்
ஸ்ரீ ராமானுஜர் சரணாகதி செய்து, தமது அடியார்கள் அனைவருக்கும் முக்தி அருள வேண்டும் என்று பிரார்த்திக்க,
அதை ஸ்ரீ அரங்கனும் ஏற்று அருள்புரிந்தான். ஸ்ரீ ராமாநுஜரின் நெறியில் வந்த ஸ்ரீ வேதாந்த தேசிகன், அரங்கனின் திருவருளால்,
அரங்கனின் பாதுகைகளைக் குறித்து ‘பாதுகா ஸஹஸ்ரம்’ எனப்படும் 1008 ஸ்லோகங்களை ஒரே இரவில் பாடி,
கவிதார்க்கிக சிம்மம் என்னும் பட்டம் பெற்றார். ஸ்ரீ ராமாநுஜரின் மறு அவதாரமான ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு சிஷ்யனாக இருந்து,
ஓராண்டு காலம் திருவாய்மொழி விளக்கவுரையை அவரிடமிருந்து கேட்டு மகிழ்ந்தான் ஸ்ரீ அரங்கன்.
தனது ஆதிசேஷ சிம்மாசனத்தையே ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்குப் பரிசாக அளித்தான் அரங்கன்.

6. செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோவில் வேதங்கள் அனைத்துக்கும் பிரணவமாகிய ஓம்காரமே முதல் எழுத்தாகும்.
அந்த ஓம்கார வடிவில் திருவரங்கத்தின் விமானம் இருப்பதால், ‘பிரணவாகார விமானம்’ என்று ஸ்ரீ ரங்க விமானம் அழைக்கப்படுகிறது.
அந்த வேதங்களால் போற்றப்படும் விழுப்பொருளான திருமால், அந்த ஓம்கார விமானத்தின் கீழே துயில்கொள்கிறார்.

7. தீராத வினையனைத்தும் தீர்க்கும் கோவில் ஸ்ரீ திருவரங்கம் எனத்திகழும் ஸ்ரீ கோவில் தானே
இக் கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்கள் ஏழு உலகங்களை குறிப்பதாகச் சொல்வார்கள்:

1. வெளி மாடங்கள் சூழ்ந்த சுற்று – பூலோகம்
2. திரிவிக்கிரம சோழன் சுற்று – புவர்லோகம்
3. கிளிச்சோழன் சுற்று – சுவர்லோகம்
4. திருமங்கை மன்னன் சுற்று – மஹர்லோகம்
5. குலசேகரன் சுற்று – ஜனோலோகம்
6. ராஜ மகேந்திர சோழன் சுற்று – தபோலோகம்
7. கருவறையைச் சுற்றி உள்ள தருமவர்ம சோழன் சுற்று – சத்யலோகம்.

எனவே, ஏழு உலகங்களும் ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோவிலுக்குள் அடக்கம் என்பார்கள்.
ஸ்ரீ வைகுண்டத்தில் ஓடும் விரஜா நதிக்கு நிகராகக் காவிரியும், வைகுண்ட லோகத்தைப் போல ஸ்ரீ அரங்கனின் திருக்கோவிலும்,
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள பெருமாளுக்கு இணையாகத் திருவரங்கநாதனும் திகழ்வதால், திருவரங்கம் ‘பூலோக வைகுண்டம்’ என்றழைக்கப்படுகிறது.
இத்தகைய சிறப்புகள் நிறைந்த திருவரங்கத் திருத்தலம் அனைத்துப் பாபங்களையும் – தீராத வினைகளையும் – தீர்க்க வல்லது.
ஸ்ரீ திருவரங்கநாதனைக் குறித்து ஸ்ரீ ரங்கநாதாஷ்டகம் பாடிய ஆதி சங்கரர்,
“இதம் ஹி ரங்கம் த்யஜதாம் இஹ அங்கம் புனர்ந சாங்கம் யதி சாங்கமேதி
பாணௌ ரதாங்கம் சரணேம்பு காங்கம் யானே விஹங்கம் சயனே புஜங்கம்” என்று பாடினார்.
அதாவது, “அனைத்துப் பாபங்களையும் போக்கவல்ல திருவரங்கத்தில் ஒருவன் உயிர் நீத்தால், அவன் மீண்டும் பிறக்க மாட்டான்.
அப்படிப் பிறக்க நேர்ந்தால், முக்தாத்மாவாக ஸ்ரீ வைகுண்டத்தில் தான் பிறப்பான்!” என்பது இதன் கருத்தாகும்.

திருவேங்கடம்
“கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்பு!
கடுவினையர் இருவினையும் கடியும் வெற்பு!
திண்ணம் இது வீடென்னத் திகழும் வெற்பு!
தெளிந்த பெருந்தீர்த்தங்கள் செறிந்த வெற்பு!
புண்ணியத்தின் புகல் இதெனப் புகழும் வெற்பு!
பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு!
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு!
வேங்கடவெற்பு என விளங்கும் வேத வெற்பே!”-என்று திருவேங்கடமலையைப் போற்றுகிறார் வேதாந்த தேசிகன்.

1. கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்பு
“குறையொன்றும் இல்லை! மறைமூர்த்தி கண்ணா!” என்று கிருஷ்ணனை நாம் புகழ்கிறோம். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் யசோதைக்கு
மட்டும் ஒரு குறை இருந்ததாம். ஸ்ரீ கண்ணனை வளர்த்து, அவனது ஆச்சரியமான பால லீலைகளைக் கண்டு களிக்கும் பேறு பெற்ற யசோதை,
ஸ்ரீ கண்ணனுக்குத் தான் ஏற்பாடு செய்து ஒரு கல்யாணத்தை நடத்திப் பார்க்க இயலவில்லையே என வருந்தினாளாம்.
ஸ்ரீ கண்ணன் பதினாறாயிரத்து எட்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டாலும், அந்த அனைத்துத் திருமணங்களையும்
ஸ்ரீ ஆயர்பாடியை விட்டுச் சென்ற பின்னரே செய்து கொண்டார்.

எந்த திருமணத்தையும் யசோதை ஏற்பாடு செய்து நடத்தவில்லை, அவளால் வந்து காணவும் இயலவில்லை, அவளுக்கு அழைப்பிதழ் கூட வரவில்லை.
இதை எண்ணி வருந்திய யசோதையிடம் ஸ்ரீ கண்ணன், “கலியுகத்தில் நான் எடுக்க உள்ள அடுத்த அவதாரத்தில் இக்குறையைப் போக்குகிறேன்!” என்றான்.
அதனால் தான், கலியுகத்தில் ஸ்ரீ திருமலையில் ஸ்ரீநிவாசனாக இறைவன் அவதரித்த போது, அங்கே ஸ்ரீ வகுளமாலிகையாக வந்து பிறக்கும்படி
யசோதைக்கு அவன் அருள்புரிந்தான். அந்த ஸ்ரீ வகுளமாலிகையே ஸ்ரீ பத்மாவதிக்கும் ஸ்ரீ நிவாசனுக்கும் கல்யாண ஏற்பாடுகளைச் செய்வித்து,
திருமணத்தை நடத்தித் தனது கண்ணாறக் கண்டு களித்தாள்.

இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் யசோதைக்கு ஏற்பட்ட குறையை நிவர்த்தி செய்து, குறையொன்றும் இல்லாத கோவிந்தனாக –
ஸ்ரீ கண்ணனின் மறுவடிவமாக – மலையப்பன் நமக்குக் காட்சி தருகிறார்.
ஸ்ரீ கண்ணனான அந்த மலையப்பனின் திருவடி இணைகளை நமக்குக் காட்டித் தருகிற மலையாகத்திருவேங்கட மலை திகழ்கிறது.

2. கடுவினையர் இருவினையும் கடியும் வெற்பு
“பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே!”என்று பாடினார் ஸ்ரீ நம்மாழ்வார்.
ஸ்ரீ திருவேங்கடமுடையானைத் தரிசிக்கிறோமோ இல்லையோ, ஸ்ரீ திருவேங்கட மலையைத் தரிசித்தாலே போதும்,
நமது பாபங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது இப்பாடலின் கருத்தாகும்.
‘கடம்’ என்றால் பாபங்கள் என்று பொருள். ‘வேம்’ என்றால் போக்குவது.
பாபங்களைப் போக்கும் மலையாதலால், ‘வேங்கடம்’ என்று இம்மலை அழைக்கப் படுகிறது.

3. திண்ணம் இது வீடென்னத் திகழும் வெற்பு
பூலோக வைகுண்டம் என்று ஸ்ரீ ரங்கத்தைச் சொல்வது போல்,‘கலியுக வைகுண்டம்’ என்று ஸ்ரீ திருமலையைச் சொல்வார்கள்.
கலியுகத்தில் பிறவிப் பிணியில் துன்புறும் மக்களைக் கடைத்தேற்ற என்ன வழி என்று ஸ்ரீ வைகுண்டத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தாராம் ஸ்ரீ திருமால்.
அப்போது, ஸ்ரீ லட்சுமி தேவி, “நீங்கள் இங்கிருந்தபடிச் சிந்திப்பதால் ஒரு பயனும் இல்லை! நீங்கள் பூமியில் போய் ஸ்ரீ கோயில் கொண்டு
காட்சி தந்தால் தான் அடியார்கள் உங்களை வந்து சரணடைந்து உய்ய முடியும்! எனவே பூமியில் முதலில் குதியுங்கள்!” என்றாளாம்.

ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து நேராகப் பூமியில் குதிப்பதற்குப் பதிலாக, முதலில் ஒரு மலையில் குதித்து விட்டு,
அதன்பின் பூமியில் இறங்க நினைத்த திருமால், வைகுண்டத்திலிருந்து நேராகத் திருவேங்கட மலையில் குதித்தார்.
அங்கிருந்து தான் மற்ற திருக்கோயில்களுக்கு எழுந்தருளினாராம். எனவே மற்ற திருத்தலங்களுக்கும் முன்னோடியாக,
கலியுகத்தில் நாம் கண்ணால் காணக் கூடிய வைகுண்டமாக – மோக்ஷ லோகமாக – திருவேங்கட மாமலை விளங்குகிறது.

4. தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு சுவாமி
ஸ்ரீ புஷ்கரிணி, பாபநாச தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாய கங்கை, பாண்டவ தீர்த்தம், குமார தாரா எனப்
பற்பல புண்ணியப் பொய்கைகள் ஸ்ரீ திருமலையில் மலிந்துள்ளன. அவற்றில் நீராடுவோர் அனைத்துப் பாபங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள்.

5. புண்ணியத்தின் புகல் இது என்னப் புகழும் வெற்பு
புண்ணியத்தின் மொத்த வடிவமாகவும், பாபங்களிலிருந்து விடுபட விரும்புவோர்க்கு ஒரே புகலிடமாகவும் விளங்கும்
ஸ்ரீ திருவேங்கடமுடையான் திகழும் மலை திருவேங்கட மலையாகும். ஸ்ரீ கீதையில் ஸ்ரீ கண்ணன் சொன்ன,
“ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:” என்ற ஸ்ரீ சரம ஸ்லோகத்தின்
வடிவமாகவே திருமலையப்பன் காட்சி தருகிறார். “மற்ற மார்க்கங்களைக் கொண்டு என்னை அடையலாம் என்ற எண்ணத்தை விட்டு,
என்னையே வழியாகப் புரிந்து கொண்டு என் திருவடிகளைப் பற்றிக்கொள்! நான் உன்னை அனைத்துப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்!
சோகப்படாதே!” என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்தாகும்.
ஸ்ரீ திருவேங்கட முடையான் தன் வலது திருக்கரத்தைத் தன் திருவடி நோக்கிக் காட்டுகிறார்.

அதாவது, “பிற மார்க்கங்களைக் கொண்டு என்னை அடையலாம் என்ற எண்ணத்தை விட்டு, என் திருவடிகளை வந்து பிடித்துக் கொள்!” என்று
அந்த வலது திருக்கரத்தாலே சரம ஸ்லோகத்தின் முதல் பாதியை விளக்குகிறார். இடது திருக்கரத்தைத் தன் தொடையில் வைத்துக் கொண்டிருக்கிறார்.
அதன் மூலம், “அவ்வாறு நீ என்னைச் சரணடைந்தால் பிறவிப் பெருங்கடலையே தொடை அளவாக வற்றச் செய்துவிடுவேன்! சோகப் படாதே!” என்று
ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் இரண்டாம் பாகத்தில் அளித்த உறுதியை நமக்குத் தெளிவாக்குகிறார்.
எனவே ஸ்ரீ கீதையின் சரம ஸ்லோகமே ஒரு வடிவம் தாங்கி வந்திருப்பது போல் அமைந்துள்ளது மலையப்பனின் தோற்றம்.

“மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட பெருமாள்” என்று திருவேங்கடமுடையானை அழைப்பார்கள்.
தலைகனத்தை விட்டு இறைவனிடம் சரணாகதி செய்வதையே ‘மொட்டைத் தலை’ என்று இங்கே குறிப்பிடுகிறார்கள்.
அவ்வாறு தலைகனம் அற்றவர்களாக (மொட்டைத் தலையோடு) திருவேங்கடமுடையானிடம் சரணாகதி செய்பவர்களுக்குப் பிறவிக் கடலையே
முழங்கால் அளவாக வற்ற வைக்கிறார் அப்பெருமாள்.
எனவே தான் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட பெருமாள் என்று அவரைச் சொல்கிறோம்.

6. பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு
முக்தி பெற்று வைகுண்டத்தை அடையும் ஜீவாத்மா எத்தகைய மகிழ்ச்சியைப் பெறுவாரோ, அதே மகிழ்ச்சியை ஏழு மலை ஏறி வந்து
தன்னைத் தரிசிக்கும் அனைத்து அடியார்களுக்கும் இவ்வுலகிலேயே வழங்குகிறார் திருமலையப்பன்.
அதனால் தான் ஸ்ரீ குலசேகர ஆழ்வார், “செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே! நெடியானே! வேங்கடவா! நின் கோவிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!” என்ற பாடலில்,
ஸ்ரீ திருமலையில் பெருமாள் சந்நதிக்கு எதிரே படியாக இருக்கும் பேறு தமக்கு வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.
ஸ்ரீ வைகுண்டம் அடைந்து பெறும் மகிழ்ச்சியை விட திருமலையில் படியாய் இருப்பது தமக்குப் பெருமகிழ்ச்சி என்று இதன் வாயிலாகத் தெரிவிக்கிறார்.

7. விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
மண்ணவர்கள் ஏறி வந்து தரிசிக்கவும், விண்ணவர்கள் இறங்கி வந்து தரிசிக்கவும் வசதியாக, இருவருக்கும் நடுவே மலைக்கு மேல்
மலையப்ப சுவாமி எழுந்தருளியிருந்து அருட்பாலித்து வருகிறார். திருமலையில் ஸ்ரீநிவாசனாக அவதாரம் செய்த ஸ்ரீ பெருமாள்,
ஆகாச ராஜனின் மகளாகத் தோன்றிய பத்மாவதியை மணந்து கொள்வதற்காக குபேரனிடம் இருந்து பெருந்தொகையைக்
கடனாகப் பெற்றார் என்பதை நாம் அறிவோம். அதனால் தான் ஸ்ரீநிவாசனுக்கும் ஸ்ரீ பத்மாவதிக்கும் நடைபெற்ற
திருமணத்தைப் பத்மாவதி கல்யாணம் என்று சொல்லாமல்‘ஸ்ரீநிவாச கல்யாணம்’ என்கிறோம்.

(பொதுவாகப் பெண் வீட்டார் செலவு செய்து கல்யாணம் செய்வதால், ஸ்ரீ லட்சுமி கல்யாணம், ஸ்ரீ ருக்மிணி கல்யாணம்,
ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம், ஸ்ரீ சீதா கல்யாணம், ஸ்ரீ பார்வதி கல்யாணம், ஸ்ரீ வள்ளித் திருமணம் என்று மணமகளின் பெயரை இட்டுச் சொல்கிறோம்.
ஆனால் இங்கே மணமகனே கடன் வாங்கிச் செலவு செய்து கல்யாணத்த நடத்திக் கொண்டதால், மணமகனின் பெயரை இட்டு ஸ்ரீநிவாச கல்யாணம் என்று
அழைக்கும் வழக்கம் ஏற்பட்டு விட்டது.)
திருமாலை விட ஸ்ரீ மகாலட்சுமிக்கு அடியார்கள் மேலே கருணை அதிகம். அதனால் தான் தனது அடியார்கள் தன்னைத் தரிசிக்க
ஏழு மலை ஏறி வந்து சிரமப்பட வேண்டாம் என்று கருதிய ஸ்ரீ பத்மாவதித் தாயார், மலைக்குக் கீழேயே கோயில் கொண்டு நமக்கு அருட்பாலித்து வருகிறாள்.
அவளை முதலில் தரிசித்து விட்டு அவளுடைய பரிந்துரையோடு மலையப்பனிடம் செல்வோர்களின் அனைத்துக் கோரிக்கைகளும்
நிறைவேற்றப்படும் என்பது பெரியோர்களின் வாக்கு.

8. வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பே
திருமலையில் உள்ள ஏழு மலைகள் என்ன? அடியார்கள் மேல் திருமலையப்பன் கொண்ட கருணை என்னும் கருப்பஞ்சாறு
திட வடிவம் பெற்று ஏழு மலைகளாக மாறி விட்டது என்கிறார் ஸ்ரீ வேதாந்த தேசிகன்.
இந்த ஸ்ரீ வேங்கட மலையை ‘வேத மலை’ என்றும் அவர் அழைக்கிறார்.
ஏனெனில், ரிக் வேதத்தில் உள்ள ஒரு மந்திரம் இந்தத் திருமலையின் பெருமையைப் பேசுகிறது.

ரிக் வேதத்தில் உள்ள,
“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே சிரிம்பிடஸ்ய ஸத்வபி: தே பிஷ்ட்வா சாதயாமஸி”
என்ற மந்திரம், “மனிதா! நீ செல்வமில்லாதவனாகவோ, எதிர்காலம் பற்றிய பார்வை இல்லாதவனாகவோ, உலகியல் வாழ்க்கையில்
தவிப்பவனாகவோ, சுற்றி உள்ளவர்களால் ஒதுக்கப்படுபவனாகவோ இருக்கிறாயா? வருந்தாதே! அலர்மேல் மங்கைத் தாயாரைத்
திருமார்பில் கொண்ட திருவேங்கடமுடையானின் மலையைச் சென்று அடைவாயாக! பக்தர்களோடு இணைந்து
கோவிந்தா! கோவிந்தா! என கோஷம் இட்டபடி அந்தப் பெருமாளிடம் சென்றால், அவர் உன்னைக் காப்பார்!
திருப்பதி வந்தால் திருப்பம் வரும்!” என்று சொல்கிறது.

—————

ஸ்ரீ முஷ்ணம்
1. பெயர்க்காரணம்
‘முஷணம்’ என்றால் நமக்குத் தெரியாமல் அபகரித்துச் செல்லுதல் என்று பொருள். இந்தத் திருத்தலத்துக்கு வரும் அடியார்களின் பாபங்களை
எல்லாம் அவர்களுக்கே தெரியாமல் இவ்வூர் அபகரித்து விடுவதால் (முஷணம் செய்வதால்) இவ்வூர் ‘ஸ்ரீமுஷ்ணம்’ என்று பெயர் பெற்றது.
இந்தத் திருத் தலம் கடலூர் மாவட்டத்தில் உள்ளது.

2. தல வரலாறு
ஹிரண்யாட்சன் என்ற அசுரன் பூமியைக் கடலுக்கு அடியில் ஒளித்து வைத்த போது, ஸ்ரீ முஷ்ணம் என்னும் இந்த க்ஷேத்திரத்தில்
பன்றி வடிவில் வராகனாகத் தோன்றினார் திருமால். ஹிரண்யாட்சனைத் தாக்கி அவர் கீழே தள்ளிய போது, ஸ்ரீ வராகனின் திருமேனியில் இருந்து
சிந்திய வியர்வை இங்குள்ள நித்ய புஷ்கரிணி என்னும் பொய்கையாக உருவானது. ஸ்ரீ பூமிதேவியை மீட்டபின், மேற்கு நோக்கிய திருமேனியோடும்,
தெற்கு நோக்கிய முகத்தோடும், இரண்டு திருக்கரங்களையும் இடுப்பில் வைத்தபடி, ஸ்ரீ தேவி பூதேவியோடு இங்கே காட்சி தருகிறார் ஸ்ரீ பூவராகப் பெருமாள்.
இவரது திருமேனியில் அனைத்து யாக யக்ஞங்களும் இருப்பதால், யக்ஞவராக மூர்த்தி என்று இவர் அழைக்கப்படுகிறார்.

3. கோயிலின் சிறப்பம்சங்கள்
பன்றிக்கு மிகவும் விருப்பமானதான கோரைக் கிழங்கு இப்பெருமாளுக்குச் சிறப்பு பிரசாதமாக நிவேதனம் செய்யப்படுகிறது.
மாசி மக உற்சவத்தின் போது, இக்கோயிலின் உற்சவர் சிதம்பரம் அருகில் உள்ள கிள்ளை என்ற கிராமத்துக்கு எழுந்தருள்வார்.
அவ்வூரில் உள்ள தர்காவின் வாசலுக்குப் பெருமாள் எழுந்தருளும் போது, அங்குள்ள இஸ்லாமியப் பெரியவர்கள் பெருமாளுக்கு
அரிசி, பூ, பழம் சமர்ப்பித்து மரியாதை செய்வார்கள்.
ஹிரண்யாட்சனிடமிருந்து பூமியை மீட்பதற்காகச் சுயம்புவாக இங்கே திருமால் தோன்றியபடியால், ஸ்ரீ முஷ்ண க்ஷேத்திரம்
எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

—————

ஸ்ரீ நாங்குநேரி
1. பெயர்க்காரணம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்த க்ஷேத்திரத்தில் உள்ள ஒரு குளம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளதால்,
இவ்வூர் நான்கு ஏரி என்றழைக்கப்பட்டது. அந்தப் பெயர் மருவி ‘நாங்குநேரி’ என்று மாறியதாகச் சொல்வார்கள்.
அல்லது, அந்த நான்கு ஏரிகளின் கூரிய முனைகள் சந்திக்கும் மையப் பகுதி ஆதலால், நான்கு கூர் ஏரி என்று இவ்வூர் அழைக்கப்பட்டு,
காலப்போக்கில் ஸ்ரீ ‘நாங்குநேரி’ என்று ஆனதாகவும் சொல்வார்கள்.

2. பெருமாளின் திருக்கோலம்
ஸ்ரீ வைகுண்டத்தில் எப்படித் திருமால் காட்சி தருகிறாரோ, அதுபோன்ற தோற்றத்துடன், அமர்ந்த திருக்கோலத்தில்,
ஸ்ரீ ஆதிசேஷன் குடையாய் இருக்க, இருபுறமும் ஸ்ரீ தேவியும், ஸ்ரீ பூதேவியும் வீற்றிருக்க, ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீச,
இவ்வூரில் சுயமாகவே ஆவிர்ப்பவித்த ஸ்ரீ பெருமாள், சூரியன், சந்திரன், பிருகு முனிவர், மார்க்கண்டேய முனிவர் ஆகியோருக்கு இங்கே காட்சி தந்தார்.
வானளவு ஓங்கிய மலை போன்ற தோற்றத்துடன் இங்கே திருமால் திகழ்வதால், அவருக்கு ஸ்ரீ ‘வானமாமலை’ என்ற பெயர் ஏற்பட்டது.
அந்தப் பெருமாளின் பெயரை இட்டே ஸ்ரீ வானமாமலை என்ற பெயராலும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.
இங்கே ஸ்ரீ வரமங்கைத் தாயார் என்ற பெயரோடு மகாலட்சுமி அவதாரம் செய்தபடியால், ஸ்ரீவரமங்கல நகர் என்றும்இவ்வூருக்குப் பெயருண்டு.

3. எண்ணெய் அபிஷேகம்
இவ்வாறு சுயமாக இங்கே ஆவிர்ப்பவித்த பெருமாள், இடைக்காலத்தில் மண்ணுக்குள் புதைந்து கிடந்தார்.
சில காலம் கழித்து, திருக்குருகூரை ஆண்டு வந்த காரிமன்னரும் உடையநங்கையும், பிள்ளை வரம் வேண்டித் திருக்குறுங்குடி பெருமாளை வணங்கினார்கள்.
அவர்களின் கனவில் தோன்றிய திருக்குறுங்குடி பெருமாள், “உங்களுக்கு எப்படிப்பட்ட பிள்ளை வேண்டும்?” என்று கேட்டார்.
“உன்னைப் போலவே ஒரு பிள்ளை வேண்டும்!” என்றார்கள் காரியும் உடைய நங்கையும்.
“என்னைப் போல் இன்னொருவன் இல்லை! அதனால் நானே வந்து உங்களுக்கு மகனாகப் பிறக்கிறேன்!” என்று சொன்ன திருக்குறுங்குடி பெருமாள்,
“இங்கிருந்து கிழக்கே சென்றால், நான்கு ஏரிகள் சூழ்ந்த ஓர் இடத்தில் எறும்புகள் சாரை சாரையாகச் செல்லும்.
அந்த எறும்புப் புற்றுக்கு மேலே கருடன் வட்டமிட்டுக் கொண்டிருப்பான். அந்த இடத்தைத் தோண்டினால் நான் தென்படுவேன்!
உங்களுக்கு அனுக்கிரகமும் புரிவேன்!” என்றும் கூறினார்.
அவ்வாறே காரி மன்னரும் அவ்விடத்தைக் கண்டறிந்து தோண்டுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்.
நிலத்தை அகழ்ந்த போது, கடப்பாறையானது பெருமாளின் விக்கிரகத்தின் நெற்றியில் பட்டு ரத்தம் கசியத் தொடங்கிற்று.
அதனால் பெருமாளின் தலையில் எண்ணெயை வைத்து ரத்தம் வழிவதைத் தடுத்தார்கள். அதன்பின் நிலத்தில் இருந்து வெளிவந்த
ஸ்ரீ வானமாமலை பெருமாளை நாங்குநேரியில் மீண்டும் பிரதிஷ்டை செய்தார்கள்.
அந்தப் பெருமாளின் அருளால் தான் காரிக்கும் உடையநங்கைக்கும்
மகனாக நம்மாழ்வார் அவதரித்தார்.
பூமியை அகழ்கையில் பெருமாளின் நெற்றியில் ரத்தம் வந்த போது எண்ணெய் தேய்த்து அதைத் தடுத்தார்கள் அல்லவா?
அதன் நினைவாக இன்றும் வானமாமலையில் பெருமாளுக்குத் தினந்தோறும் எண்ணெய் அபிஷேகம் செய்யும் வழக்கம் உள்ளது.
அவ்வாறு அபிஷேகம் செய்த எண்ணெயை இங்குள்ள நாழிக் கிணற்றில் சேமித்து வைப்பார்கள்.
அந்த எண்ணெயை உண்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.

4.ஸ்ரீ ஆழ்வார் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடி இந்த திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.

————-

ஸ்ரீ முக்திநாத் க்ஷேத்திரம்

இறைவன் சுயமாக ஆவிர்ப்பவித்த திருத்தலங்களுள் இதுவும் ஒன்றாகும். ஸ்ரீ முக்திநாத் நேபாளத்தில் உள்ள ஸ்ரீ சாளக்கிராமம் எனப்படும்
ஸ்ரீ முக்திநாத் க்ஷேத்திரம் 108 திவ்ய தேசங்களுள் ஒன்று, 8 ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களுள் ஒன்று.
அடியார்களுக்கு அருள் புரிவதற்காக ஸ்ரீ சாளக்கிராமக் கற்களின் வடிவிலே ஸ்ரீ திருமால் காட்சி அளிக்கத் திருவுள்ளம் கொண்டார்.
அதனால் இத் திருத்தலத்தில் ஓடும் கண்டகி நதியில் மலிந்து கிடக்கும் ஸ்ரீ சாளக்கிராமக் கற்களாக அவரே வடிவம் கொண்டார்.
அத்தகைய ஸ்ரீ சாளக்கிராம ரூபத்தில் இந்தத் திருக்கோயிலில் திருமாலே சுயமாகத் தோன்றியதாகத் தல வரலாறு சொல்கிறது.
இங்கு வந்து திருமாலை வணங்குவோர் அனைவருக்கும் திருமால் முக்தியை அருள்வதால், ஸ்ரீ முக்திநாத் என்று இத்தலம் வழங்கப்படுகிறது.
ஸ்ரீ குலசேகர ஆழ்வார், ஸ்ரீ பெரியாழ்வார்,ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஆகிய மூவரும் இப் பெருமாளைத் தங்கள் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.

————-

ஸ்ரீ புஷ்கரம்
ராஜஸ்தானில் உள்ள அஜ்மீருக்கு அருகில் உள்ள ஸ்ரீ புஷ்கரம் என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ வராகப் பெருமாளும்
சுயமாகத் தோன்றிய மூர்த்தி ஆவார். ஸ்ரீ முஷ்ணத்தைப் போலவே, ஹிரண்யாட்சனிடம் இருந்து பூமியை மீட்டுப் பழைய நிலையில்
பூமியை நிலைநிறுத்திய பின், இங்கே வந்து ஸ்ரீ வராகப் பெருமாள் கோவில் கொண்டதாகத் தலவரலாறு.
(ஒரே மாதிரியான சம்பவங்கள் இப்படி இரண்டு திருத்தலங்களின் வரலாற்றில் குறிப்பிடப் பட்டிருந்தால், வெவ்வேறு யுகங்களில்
அந்தந்த ஊர்களில் அதே வரலாற்றை இறைவன் நிகழ்த்தி இருப்பார் என்று புரிந்து கொள்ள வேண்டும் எனப் பெரியோர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.)
ஸ்ரீ பரமபுருஷன் என்ற பெயரோடு வராகனும், ஸ்ரீ புண்டரீகவல்லி என்ற பெயரோடு ஸ்ரீ பூமி தேவியும் இங்கே நமக்கு அருட்பாலிக்கிறார்கள்.

———————

ஸ்ரீ பத்ரிநாத்
அலகனந்தா நதிக்கரையில், பூமியில் இருந்து சுமார் 10000 அடி உயரத்தில் இமய மலைப்பகுதியில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது.
ஸ்ரீ அஷ்டாக்ஷரம் எனப்படும் எட்டெழுத்து மந்திரத்தை உலகில் பிரச்சாரம் செய்ய நினைத்த திருமால், தானே நாராயணன் என்னும் குருவாகவும்,
நரன் என்னும் சீடனாகவும் இங்கே சுயமாகத் தோன்றினார். நாராயணன் நரனுக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்தார்.
பத்மாசனத்தில் யோகம் செய்யும் திருக்கோலத்தில் இன்றும் திருமால் நமக்கு இங்கே காட்சி தருகிறார்.
திருமால் கடுங்குளிருக்கு மத்தியில் இங்கே தவம் புரிந்த போது, ஸ்ரீ லட்சுமி தேவி இலந்தை மரமாக வந்து திருமாலைச் சூழ்ந்து குளிரில் இருந்து காத்தாள்.
இலந்தை மரத்துக்கு ‘பதரி’ என்று பெயர். பதரி மரமாக இங்கே லட்சுமி தேவி தோன்றியதால், ‘பதரிகாசிரமம்’ என்று இத்தலம் பெயர்பெற்றது.
இத்திருத் தலத்தை ஸ்ரீ பெரியாழ்வாரும் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.

———-

ஸ்ரீ நைமிசாரண்யம்
உத்திரப் பிரதேசத்தில் லக்னோவுக்கு வடக்கே உள்ளது இந்தத் திருத்தலம்.
இது எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களுள் ஒன்று, 108 திவ்ய தேசங்களுள் ஒன்று, 9 தபோ வனங்களுள் ஒன்று.
ஆதி காலத்தில் தவம் புரிய விரும்பிய முனிவர்கள், தாங்கள் தவம் புரிவதற்கு ஏற்ற இடத்தைக் கூறுமாறு பிரம்மாவிடம் வேண்டினார்கள்.
ஒரு தர்ப்பைப் புல்லை வளையமாக வளைத்து உருட்டிய பிரம்மா, “இது எங்கே போய் நிற்கிறதோ, அங்கே தவம் புரியுங்கள்!” என்று கூறினார்.
அந்தப் புல் வளையம் இந்தத் திருத்தலத்தில் வந்து நின்றது. ‘நேமி’ என்றால் வளையம் என்று பொருள்.
நேமி நின்ற இடமாதலால், ‘நைமிசாரண்யம்’ என்று இவ்வூர் பெயர் பெற்றது. இங்கே தவம் புரிந்த முனிவர்களுக்குத்
திருமால் நேரில் வந்து காட்சி அளித்தார். இங்குதான் பதினெட்டு புராணங்களும் சூத பௌராணிகரால் உபதேசம் செய்யப்பட்டன.
இன்றும் இங்கே காட்டின் வடிவிலேயே திருமால் திகழ்கிறார். இப்பெருமானிடம் சரணாகதி செய்து பத்து பாடல்கள் பாடினார் திருமங்கை ஆழ்வார்.

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராம பிரபாவம் / ஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்-/ ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்)/ ஸ்ரீ பிராரத்நா பஞ்சகம் –ஸ்ரீ வேதாந்த சபா -USA-தொகுப்பு

January 25, 2020

ஸ்ரீ வால்மீகி கூறும் ஸ்ரீ ராமரின் திரு வம்ச வ்ருக்ஷம்.

1) ப்ரம்மாவின் பிள்ளை மரீசி
2) மரீசியின் பிள்ளை காஸ்யபன்.
3) காஸ்யபரின் பிள்ளை சூரியன்.
4) சூரியனின் பிள்ளை மனு.
5) மனுவின் பிள்ளை இக்ஷாவக:
6) இக்ஷாவகனின் பிள்ளை குக்ஷி.
6) குக்ஷியின் பிள்ளை விகுக்ஷி.
7) விகுக்ஷியின் பிள்ளை பாணு
8) பாணுவின் பிள்ளை அரண்யகன்.
9) அரண்யகனின் பிள்ளை வ்ருத்து.
10) வ்ருதுவின் பிள்ளை த்ரிசங்கு.
11) த்ரிசங்குவின் பிள்ளை துந்துமாரன் (யவனாஸ்யன்)
12) துந்துமாரனின் பிள்ளை மாந்தாதா.
13) மாந்தாதாவின் பிள்ளை சுசந்தி.
14) சுசந்தியின் பிள்ளை துருவசந்தி.
15) துருவசந்தியின் பிள்ளை பரதன்.
16) பரதனின் பிள்ளை ஆஷிதன்.
17) ஆஷிதனின் பிள்ளை சாகரன்.
18) சாகரனின் பிள்ளை அசமஞ்சன்
19) அசமஞ்சனின் பிள்ளை அம்சமந்தன்.
20)அம்சமஞ்சனின் பிள்ளை திலீபன்.
21) திலீபனின் பிள்ளை பகீரதன்.
22) பகீரதனின் பிள்ளை காகுஸ்தன்.
23) காகுஸ்தனின் பிள்ளை ரகு.
24) ரகுவின் பிள்ளை ப்ரவருத்தன்.
25) ப்ரவருத்தனின் பிள்ளை சங்கனன்.
26) சங்கனின் பிள்ளை சுதர்மன்.
27) சுதர்மனின் பிள்ளை அக்நிவர்ணன்.
28) அக்நிவர்ணனின் பிள்ளை சீக்ரவேது
29) சீக்ரவேதுவுக்கு பிள்ளை மருவு.
30) மருவுக்கு பிள்ளை ப்ரஷீக்யன்.
31) ப்ரஷீக்யனின் பிள்ளை அம்பரீஷன்.
32) அம்பரீஷனின் பிள்ளை நகுஷன்.
33) நகுஷனின் பிள்ளை யயயாதி.
34) யயாதியின் பிள்ளை நாபாகு.
35) நாபாகுவின் பிள்ளை அஜன்.
36) அஜனின் பிள்ளை தசரதன்.
36) தசரதனின் பிள்ளை ராமர்.

—————

ஸ்ரீ இராமாயண சுருக்கம் -16-வார்த்தைகளில் –

“பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்
மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்
இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்
துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்”

விளக்கம்:
1. பிறந்தார்:
ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.
2.வளர்ந்தார்:
தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது
3.கற்றார்:
வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.
4.பெற்றார்:
வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.
5.மணந்தார்:
ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.
6.சிறந்தார்:
அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.
7.துறந்தார்:
கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.
8. நெகிழ்ந்தார்:
அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய
அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, ‘கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை.
என்னால் முடிந்தது என்னையே தருவது’ எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.
9.இழந்தார்:
மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.
10.அலைந்தார்:
அன்னை சீதையை தேடி அலைந்தது.
11.அழித்தார்:
இலங்கையை அழித்தது.
12.செழித்தார்:
சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது.
ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.
13.துறந்தார்:
அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.
13.துவண்டார்:
அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.
15.ஆண்டார்:
என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து
மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.
16.மீண்டார்:
பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி
தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது”.

————

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்

ஸ்ரீ நரசிம்மரின் பல திருநாமங்கள்

1. அகோபில நரசிம்மர்
2. அழகிய சிங்கர்
3. அனந்த வீரவிக்ரம நரசிம்மர்
4. உக்கிர நரசிம்மர்
5. கதலி நரசிங்கர்
6. கதலி லக்ஷ்மி நரசிம்மர்
7. கதிர் நரசிம்மர்
8. கருடாத்ரிலக்ஷ்மி நரசிம்மர்
9. கல்யாண நரசிம்மர்
10. குகாந்தர நரசிம்மர்
11. குஞ்சால நரசிம்மர்
12. கும்பி நரசிம்மர்
13. சாந்த நரசிம்மர்
14. சிங்கப் பெருமாள்
15. தெள்ளிய சிங்கர்
16. நரசிங்கர்
17. பானக நரசிம்மர்
18. பாடலாத்ரி நரசிம்மர்
19. பார்க்கவ நரசிம்மர்
20. பாவன நரசிம்மர்
21. பிரஹ்லாத நரசிம்மர்
22. பிரஹ்லாத வரத நரசிம்மர்
23. பூவராக நரசிம்மர்
24. மாலோல நரசிம்மர்
25. யோக நரசிம்மர்
26. லட்சுமி நரசிம்மர்
27. வரதயோக நரசிம்மர்
28. வராக நரசிம்மர்
29. வியாக்ர நரசிம்மர்
30. ஜ்வாலா நரசிம்மர்

————–

ஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்

ஸ்ரீ அஹோபிலம் நாரஸிம்ஹம் கத்வா ராம பிரதாபவான்
நமஸ்க்ருத்வா ஸ்ரீ நரஸிம்ஹ மஸ்தவ்ஷீத் கமலாபதிம்

கோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸூ தேவ ரூப
விஸ்வேச விஸ்வ மது ஸூதன விஸ்வரூப
ஸ்ரீ பத்ம நாப புருஷோத்தம புஷ்கராஷ
நாராயண அச்யுத நரஸிம்ஹ நமோ நமஸ்தே

தேவா சமஸ்தா கலு யோகி முக்யா
கந்தர்வ வித்யாதர கின்ன ராஸ்ச
யத் பாத மூலம் சததம் நமந்தி
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

வேதான் சமஸ்தான் கலு சாஸ்த்ர கர்பான்
வித்யாம் பலம் கீர்த்தி மதீம் ச லஷ்மீம்
யஸ்ய ப்ரஸாதாத் புருஷா லபந்தே
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

ப்ரஹ்மா சிவஸ்த்வம் புருஷோத்தமஸ்ச
நாராயணோசவ் மருதாம் பதிஸ் ச
சந்த்ரார்க்க வாய்வாக்நி மருத் காணாஸ் ச
த்வமேவ தம் த்வாம் சததம் ந தோஸ்மி

ஸ்வப் நபி நித்யம் ஜகதாம சேஷம்
ஸ்ரஷ்டா ச ஹந்தா ச விபுரப்ரமேய
த்ராதா த்வமேகம் த்ரிவிதோ விபின்ன
தம் த்வாம் ந்ருஸிம்ஹம் சததம் நதோஸ்மி

இதி ஸ்துத்வா ரகு ஸ்ரேஷ்ட பூஜயாமாச தம் ஹ்ரீம்– ஸ்ரீ ஹரிவம்ச புராணம் – சேஷ தர்மம் -47- அத்யாயம்

———————

ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர், நீர் பெரிய ராமபக்தர்,
பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்களே… எங்கே, ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும்” என்றார்.

நான் மாயாஜாலக்காரன் அல்ல; ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே!” என்று துளசிதாசர் சொல்ல, கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத்தார்.
‘எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம்’ என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர், தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார்.
இப்படி நாற்பது பாடல்களை எழுதியதும், திடீரென எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள் அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன.
படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை.
அக்பரிடம் சென்ற சிலர், ‘ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப்படுத்துவதால் ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது.
துளசிதாசரை விடுவித்தால் பிரச்னை நீங்கிவிடும்’ என்று ஆலோசனை அளித்தனர்.
அதையடுத்து, துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் அக்பர். மறுகணமே, வானரப் படைகள் மாயமாய் மறைந்தன.
துளசிதாசர் சிறையில் இருந்தபோது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ‘ஸ்ரீ அனுமன் சாலிஸா’.
இதைத் தினமும் பாராயணம் செய்தால், துன்பங்கள் நீங்கும்; நன்மைகள் தேடி வரும்!

மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன் ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே

ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்)

ஜயஹனுமானே..ஞானகடலே,
உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1)
ராமதூதனே..ஆற்றலின் வடிவமே,
அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2)
மஹா வீரனே..மாருதி தீரனே..
ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3)
தங்க மேனியில் குண்டலம் மின்ன,
பொன்னிற ஆடையும்..கேசமும் ஒளிர (4)
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய,
இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5)
சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே..
உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6)
அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா,
ராம சேவையே..சுவாசமானவா.. (7)
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்,
ராமனின் புகழை கேட்பது பரவசம் (8)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்,
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9)
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே,
ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10)
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி,
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11)
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்,
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12)
ஆயிரம் தலைக் கொண்ட சே-ஷனும் புகழ்ந்தான்,
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13)
மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும்.
நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14)
எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ.. (15)
சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17)
கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18)
முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்,
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19)
உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ (20)
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே,
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21)
சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்,
கண் இமை போல காத்தே அருள்வாய் (22)
உனது வல்லமை சொல்லத் தகுமோ,
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23)
உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும். (24)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே. (25)
மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26)
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே,
ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27)
அடியவர் நிறைவே கற்பகத் தருவே,
இறையனுபூதியை தந்திடும் திருவே. (28)
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29)
ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30)
அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே (31)
ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33)
ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34)
என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35)
நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36)
ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37)
“ஹனுமான் சாலீஸா” அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38)
சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39)
அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

——————-

ஸ்ரீ பிராரத்நா பஞ்சகம்

யதீஸ்வர ஸ்ருணு ஸ்ரீமன் கிருபயா பரயா தவ
மம விஜ்ஞாபனம் இதம் விலோகய வரதம் குரும்-1–

யதிகளின் தலைவரே! கைங்கர்ய ஸ்ரீயை உடையவரே! பரமமான க்ருபையோடே (அடியேனுடைய)
ஆசார்யரான நடாதூர் அம்மாளைப் பார்த்து, அடியேனுடையதான இந்த விண்ணப்பத்தை
தேவரீர் திருச் செவி சாற்றி யருள வேணும்.

அநாதி பாப ரசிதாம் அந்தக்கரண நிஷ்டிதாம்
யதீந்த்ர விஷய சாந்த்ராம் விநிவாசய வாசநாம் -2-

எண்ணற்ற காலங்கள் பாவங்களையே செய்து, அதன் வாசனையானது என்னுள்ளே ஊறிக் கிடக்கிறது.
யதிராஜரே! இதனால் நான் தவறுகளைத் தொடர்ந்தபடி உள்ளேன். இவ்விதம் இருக்கின்ற உலக விஷயங்களில்
இருந்து எனது புலன்களை மீட்கவேண்டும்.

அபி பிரார்த்தய மாநாநாம் புத்ர ஷேத்ராதி சம்பதாம்
குரு வைராக்யம் ஏவ அத்ர ஹித காரிந் யதீந்த்ர -3-

யதிராஜரே! நான் உம்மிடம் புத்திரன், வீடு, செல்வம் முதலானவற்றைக் கேட்கக் கூடும். ஆனால் அவற்றை விலக்கி,
நீவீர் எனக்கு வைராக்யத்தை அளிக்கவேண்டும் – காரணம் எனது நன்மையை மட்டுமே அல்லவா நீவிர் எண்ணியபடி உள்ளீர்.

யத் அபராதா ந ஸ்யுர் மே பக்தேஷு பகவத் அபி
ததா லஷ்மண யோகீந்த்ர யாவத் தேகம் பிரவத்தய -4-

யதிராஜரே! முக்தி அடியும் வரையில், இந்த உடலுடன் இங்கு வாழும் நான், ஒருபோதும்
பகவானையோ அவனது அடியார்களையோ அவமானப்படுத்திவிடக்கூடாது.

ஆ மோக்ஷம் லஷ்மணாய த்வத் பிரபந்த பரிசீலநை
காலக்ஷேப அஸ்து ந ஸத்பிஸ் ஸஹவாஸம் உபேயுஷாம் -5-

லக்ஷ்மணமுனியே! இந்த உடல் பிரியும் காலம்வரை நான் உமது ப்ரபந்தங்களையே ஆராய்ந்தபடி,
அவற்றையே காலக்ஷேபம் செய்தபடி எனது பொழுதைக் கழிக்கவேண்டும்.

பல சுருதி
இத் ஏதத் சாதரம் வித்வாந் ப்ரார்த்தநா பஞ்சகம் படந்
ப்ரபானுயாத் பரமாம் பக்தி யதிராஜா பாதாப்ஜயோ

யதிராஜரின் திருவடிகளின் மீது வைக்கப்பட்ட இந்த ஐந்து விண்ணப்பங்களை யார் ஒருவர் பக்தியுடன்
படிக்கிறார்களோ, அவர்கள் எம்பெருமானாரின் திருவடிகளின் மீது மேலும் பக்தி பெறுவர்.

—————————–

ஸ்ரீ கொங்கில் ஆச்சான் திருமாளிகை -55-மங்கம்மா நகர் -ஸ்ரீ ரெங்கம்
ஸ்ரீ ராமானுஜர் சிஷ்யர்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் பண்ணி அருளிய சங்கு சக்கரங்ககளையும்
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ பாதுகைகளையும்
ஸ்ரீ நரசிம்மர் சாளக்ராமமும் இன்றும் சேவிக்கலாம் –

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஹனுமத் சமேத ஸ்ரீ சீதா ராம சந்த்ரன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –4-என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி-

January 24, 2020

பெரிய ஜீயர் உரை –

இப்படி இவர் திரு உள்ளத்தைக் கொண்டாடினவாறே –
இன்னமும் துர் வாசனையாலே இந் நெஞ்சு தான் நழுவ நிற்குமாகில் உம்முடைய-நிஷ்டைக்கு ஹானி வாராதோ -என்ன
சர்வரும் விரும்பி விவேகித்து அனுபவிக்கும் படி-ஸ்ரீ பாஷ்யமும் கீதா பாஷ்யமும் அருளி-விவேக்கும் படி-
எம்பெருமானார் தாமே நிர்ஹேதுகமாக அங்கீகரிக்கப் பெற்ற-எனக்கு ஒரு ஹானியும் வாராது -என்கிறார் –

இப்படி மூன்று பாட்டு அளவும் தம்முடைய அபிநிவேச அதிசயத்தை சொல்லினால் –இது ஸ்வகதமாக வந்தது –
அத்யந்த பாரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு சேருமோ -பரகதமாக வந்ததே யாகிலும்-
அதுக்கு பிரச்யுதி இல்லையோ என்ன அருளிச் செய்கிறார்-

அடிக் கீழ் சேர்த்த நெஞ்சு -நின்றவா நில்லாது பண்டைய பழக்கம் தலை தூக்கி அந்நிலை யினின்றும்
நழுவி விடில் -உம் நிலை என்னாவது என்ன –
எம்பெருமானார் நிர் ஹேதுக கிருபையாலே கண்டு கொண்டேன் –
என்னைப் பண்டை வல் வினை வேர் அறுத்து தம் பாதத்தினை என் சென்னியில்
வைத்திடலால் எனக்கு ஒரு குறையும் வர வழி இல்லை என்கிறார் –

முன் பாசுரங்களில் எம்பெருமானார் தம் பெருமை பாராட்டாது பழகும் தன்மையில்
ஈடுபட்ட நெஞ்சு அவர் அளவோடு நில்லாது அவர் அடியார் திறத்திலும் என்னை இழுத்து சென்று
ஈடுபடுத்தியது என்று தமக்கு ஆசார்யன் இடம் உள்ள அபிமானத்தை காண்பித்தார் –
இதில் நிர்ஹேதுகமாக தம் மீது ஆசார்யன் செலுத்தும் அபிமானத்தை காட்டுகிறார் –
முன்பு ஓன்று அறியேன் எனக்கு உற்ற பேரியில்வே-என்று உபாயம் தெரிய வில்லை என்றார் –
இப்பொழுது உபாயம் எம்பெருமானாரே என்று தெளிந்து காட்டுகிறார்-

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதை வில்லையே -4 –

ஊழி முதல்வனையே –
காலோபலஷித சகல பதார்த்தங்களுக்கும் காரண பூதனான சர்வேஸ்வரனையே–
காலோபலஷிதமான சர்வ கார்ய வர்க்கத்துக்கும் பிரதான காரண பூதனான சர்வேஸ்வரனை –
புறம்புண்டான பற்றுக்களை அடைய வாசனையோடு விடுகையும் –
எம்பெருமானே தஞ்சம் என்றுபற்றுகையும் -என்றும் சொல்லுகிற படியே
இச் சேதனருடைய ப்ராப்தி பிரதிபந்தங்கள் எல்லாவற்றையும் விடுவித்து

முதல்வனையே –
என்கிற ஏவ காரத்தால் அநந்ய யோக அவ்யச்சேதம் பண்ணினபடி –
பன்னப் பணித்த –
சர்வரும் விரும்பி –விவேகித்து -அனுபவிக்கும் படி பண்ணி –
சர்வரும் விவேகித்து அனுசந்திக்கும்படி ஸ்ரீ பாஷ்யம் -கீதா பாஷ்ய-முகேன அருளி செய்த-சர்வோத்க்ருஷ்டரான எம்பெருமானார்

முதல்வனையே –
ஜகத் காரணத்வம்-அந்நிய யோக விவச்சேதம் –
முதல் முதல்வன் அபின்ன நிமித்த உபாதான காரணம் –
முதல்வனையே–
அவனையே பன்னப் பணித்த -இராமானுஜன் -என்றவாறு –
பன்னுதல்-விவேகித்தல் –
இராமானுஜர் -எம்பெருமானார் -அபியுக்தோக்தியாலும் -அந்வய வ்யதிரேகங்களாலே சொன்ன கட்டளையாலே –
தம்மை சகல ஜகத் காரண பூதரான எம்பெருமான் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பித்த எம்பெருமானார்

ஊழி முதல்வனையே பன்னப் பணித்த –
ஊழி -எனபது பிரளயமாய் -அதற்க்கு உள் பட்ட பொருள் அனைத்துக்கும் உப லஷணமாய்-
எல்லா பொருள்களுக்கும் காரணமான சர்வேஸ்வரனை சொல்லுகிறது – ஊழி முதல்வன் -என்னும் சொல் –
அவனையே ஆராய்ந்து த்யானம் செய்து உய்யும்படியாக எம்பெருமானார் பணித்தது ஸ்ரீ பாஷ்யத்திலே –
ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ பாஷ்யம் மட்டுமே காட்டி அருள ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ கீதா பாஷ்யம் இரண்டையும் காட்டி அருளுகிறார் –
காரணப் பொருளை ஆராய வேண்டும் என்று தொடங்குவது பிரதம சூத்தரம் ஆதலின்-அதனை விளக்கும் ஸ்ரீ பாஷ்யமும் அதனையே பணிப்பதாயிற்று –
முதலினையே -என்னாது முதல்வனையே -என்று உயர் திணையாக கூறினது –
பல பொருள்களாக கடவேன் -என்று படைப்பது பிரதான தத்துவமாகிய அசேதன பொருளுக்கு இயையாது –
பரம சேதனான சர்வேஸ்வரனுக்கு இயையும் எனபது தோற்றதற்கு என்க –
இதனால் காரணமாய் இருத்தல் பிரமத்துக்கு இயையும் என்பதை கூறும்-சமன்வய அத்யாயத்தின் பொருள் கருதப் பட்டதாய் ஆகிறது

பன்ன -என்பதால்-
முதல்வனையே ஆராயும்படி அம் முதன்மை -காரணத்வதை -யை உறுதிப்படுத்துவதால் -பிறர் கூறும் குற்றங்களால் பாதிக்க படாமை
கூறும் இரண்டாவதான-அவிரோத அத்யாயத்தின் பொருள் கருதப் படுகிறது –
இனி பன்னுதல் விவேகித்து -அனுசந்தித்தலாதலின் உபாயம் தோற்றலின்-மூன்றாவதான -சாதன அத்யாயத்தின்
பொருளையும் இங்கேயே கருதுவதற்கும் இடமுண்டு –
இனி பன்னுதல்-நெருங்குதலாய் -பர பிரமத்தை கிட்டுதல் -கூறுவதாக-கொண்டு இங்கேயே
நான்காவதான பல அத்யாயத்தின் பொருளையும் கூறுவதாக-கருதுவதற்கும் இடம் உண்டு –

ஊழி முதல்வனையே பன்ன –
காரணப் பொருளையே சிந்திக்கும் படி -என்றபடி –ஏ-பிரி நிலையின் கண் வந்தது-
காரிய பொருளான பிரம்மா முதலியோரினின்றும் பிரித்துக் காட்டுகிறது –

பணித்த இராமானுசன் பரன் –
படைத்தவனைப் பன்னும்படி பணித்தவர் ஆதலின் -இராமானுசனை –பரன் -என்கிறார்
யஸ்மாத் தத் உபதேஷ்டா ஸௌதஸ்மாத் குரு தரோ குரு -உபதேசம் பண்ணுகிற
ஆசார்யன் உபதேசிக்கப் படும் எம்பெருமானை விட மிக மேம்பாடு உடையவன் –என்றபடி பணித்த ஆசார்யனை பரன் என்கிறார் –

இராமானுசன் பரன் –
ஆக்கை கொடுத்து அளித்த ஊழி முதல்வன் இவர்க்குப் பரன் அல்லன் –
ஆவி -ஆத்ம தத்வம் -கொடுத்து அளித்த இராமானுசனே இவர்க்குப் பரனாக தோன்றுகிறார்
அறிவினால் பொருள் ஆக்கினாரே இவரை-நித்ய சம்சாரிகளாய் இருந்த தங்களை நித்ய சூரிகளுக்கு ஒப்பப் பொருள் ஆககினமை
கண்டு பரன் எனப் பற்றினர் ஆழ்வார்கள் ஊழி முதல்வனை –
அவனாலும் ஆகாது கை விடப் பட்ட தம்மை -விண்ணுளாரிலும் சீரிய ஒரு பொருளாக
இப்புவியில் ஆக்கினமை கண்டு எம்பெருமானாரையே பரன் எனப் பற்றுகிறார் அமுதனார் –

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி –
அவஸ்துவான என்னை லோகத்திலே-ஒரு வஸ்துவாம் படி பண்ணி –
வஸ்து உபாதேயம்-ஆளவந்தார் துளி கடாக்ஷம் பெற்று-
என்னை –
பூர்வ காலத்திலே அசத்தாக -பொருள் அல்லாத என்னை-
புவியில்-
இருள் தரும் மா ஞாலத்தில்
ஒரு பொருளாக்கி –
ஒரு வஸ்துவாகும் படி பண்ணி -ப்ரஹ்ம வித்துக்களிலே அத்வதீயனாக பண்ணி-

என்னையும் –
அஞ்ஞானம் -காரணம் -அநாதி கால கர்மம் -நீர் நுமது என்று இவர் வேர் முதல் மாய்த்து –

என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி-
அடியேன் வாய் வார்த்தையாக கூட சொல்ல தெரியாமல் இருந்த என்னை –
பகவத் விஷயத்துக்கும் -கூட ஆள் ஆகாதபடி உலகியல் இன்பத்திலே உழன்ற படியால்
பெரியோர்களால் ஒரு பொருளாக மதிக்கத் தகாத என்னைக் கூட எங்கனம் பொருள் ஆக்கினாரோ எம்பெருமானார் என்று வியக்கிறார் –
ப்ரஹ்மத்தை பற்றி அறிவில்லாதவன் அசத்- அதாவது இல்லாதவன் ஆகிறான் -என்கிறது வேதம் –
இன்று உருவாக்கப் பட்டு மிக உயர்ந்த நிலையில் வைக்கப் பட்டு உள்ள அமுதனார் முன்பு தாம் உருமாய்ந்து
படு குழியில் கிடந்தமையை புரிந்து பார்த்து வியக்கிறார்
எம்பெருமானைப் பற்றுதல் அறிவின் முதல் நிலை –
அந்நிலையினை எம்பெருமான் அருளினால் எய்தினவர் ஆழ்வார் –
பொருள் அல்லாத என்னைப் பொருள் ஆக்கி அடிமை கொண்டாய்-என்று வியக்கிறார் அவர் –
எம்பெருமானாரை பற்றுதல் அறிவின் முதிர் நிலை –
அந்நிலையை எய்தினவர் வடுக நம்பி –
எம்பெருமானார் அடியார்கள் அளவும் பற்றுதல் அறிவின் முதிர்ச்சிக்கு எல்லை நிலம் –அந்நிலையை எய்தி விட்டார் அமுதனார் –

பொருளானார் ஆழ்வார்
மேலோர் ஆசைப் படும் பொருள் ஆனார் வடுக நம்பி
மணவாள மா முனிகள்-உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா-மன்னு புகழ் சேர் வடுக நம்பி -தன்னிலைமை-
என் தனக்கு நீ தந்து எதிராசா -எந்நாளும்-உன் தனக்கே ஆள் கொள்ளு உகந்து -என்று
வடுக நம்பியைப் போலே தம்மையும் பொருளாக்கி ஆள் கொள்ள வேணும் என்று பிரார்த்திப்பது காண்க –
அமுதனாரோ மேலோர்க்கும் வாய்த்தற்கு அரிதான நிலையை எய்தினவர் ஆதலின்-ஒப்பற்ற பொருள் ஆனார் –

ஒரு பொருள்-
ஒப்பற்ற பொருள்
சீரிய பேறு உடையாரான ஆழ்வான் திருவடிக் கீழ் சேர்த்து எம்பெருமானார்
பொருளாக்கினமையின் அமுதனார் ஒப்பு இல்லாத பொருள் ஆனார் -என்க-
கூரத் ஆழ்வான் சரண் கூடி –இராமானுசன் புகழ் பாடி -ஆள் செய்வதாக -மொழியைக் கடக்கும் –என்னும் பாசுரத்தில்
அமுதனார் அருளி செய்வது இங்குக் கருத தக்கது –
இவ் ஒப்பற்ற நிலையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாத்ரம் அன்று –உலகு எங்கும் -என்பார் புவியில் -என்கிறார் –
இனி இருள் தரும் மா ஞாலத்திலே என்னவுமாம் –

மருள் சுரந்த முன்னைப் பழ வினை வேர் அறுத்து –
இந் நிலையினின்றும் நழுவாத வண்ணம் -என் கர்ம சம்பந்தத்தை அறுத்ததோடு அன்றி –வாசனையாகிய வேரையும் களைந்து எறிந்தார் -என்கிறார் –
வாசனை யாவது -கர்மம் மீண்டும் தளிர்க்கும் படி மனத்தில் ஒட்டிக் கொண்டு இருக்கும்
பண்டைப் பழக்கத்தின் நுண்ணிய நிலைமை -சம்ஸ்கார விசேஷம் -பல்வகை பிறப்புகளுக்கும்
காரணமாகிய இக்கர்ம சம்பந்தம் அஞ்ஞானத்தால் ஏற்படுவதாலின்-மருள் சுரந்த -என்கிறார் –
மருள் சுரந்த –
மருளாலே சுரக்கப் பட்ட என்றபடி –மருளாவது -பொருள் அல்லாதவற்றை பொருள் என்று உணர்தல் –
இனி மருளை சுரந்த வினை என்னலுமாம் –
முன்பு அவித்தை வினைக்கு ஹேதுவாயிற்று -இப் பொழுது வினை அவித்யைக்கு ஹேது வாகிறது –
மருளால் வினை -எனபது விதையால் மரம் -எனபது போன்றது –வினையால் மருள் எனபது மரத்தால் விதை எனபது போன்றது –
முடிபு அநாதி எனபது தவிர வேறு இல்லை –அதனைக் கூறுகிறார் -முன்னைப் பழ வினை -என்று
முன் -பழைமை -இரண்டும் ஒரே பொருளை சொல்வன –இவ் இரு சொற்களும் மீ மிசை எனபது போலே மிக்க பழைமையை உணர்த்தி –
அநாதி -என்னும் கருத்தை உள் கொண்டு உள்ளன –வினைகள் நீங்கினும் அவற்றை செய்த பழைய வாசனை மீண்டும்
செய்யத் தூண்டுமாதலின் அதனையும் போக்கினார் என்னும் கருத்துப் பட -வேர் அறுத்து -என்றார் –
வேர் எனபது வாசனையை –
வாசனையை வேராக உருவினை செய்யவே -வினை மரம் எனபது பெற்றோம் –இது ஏக தேச உருவகம் –

மருள் -தெருளுற்ற ஆழ்வார்கள் –அடியேனை சொல்லாமல் -என்னை -அசன்னேவ பவதி –
புவி -சம்சார சாகரம் -கருணை கடல் -தயா சிந்து -பக்தி வெள்ளம் -புறம்பு உண்டான பற்றுக்களை –சேஷி பக்கல் –
காரணத்து த்யேயா -சென்னியில் தரிக்க வைத்தான் -பரகத ஸ் வீ காரம் -பாண்டியர் குல பதி-
பரன் மேன்மை
வைத்தான் ஸுலப்யம்
என் சென்னியில் ஸுசீல்யம்-

மருள் சுரந்த முன்னைப் பழ வினை வேர் அறுத்து
அவித்யா சம்வர்த்திதமாய் -அநாதி ஆகையாலே-மிகவும் பழையதாய்ப் போருகிற கர்மங்களை ஸ வாசனமாகப் போக்கி
மருள் சுரந்த முன்னை பழ வினை
அநாதி -அவித்யா கர்மா வாஸநா ருசி பிரகிருதி-சம்பந்தாத்மகமாய் இருந்துள்ள புண்ய பாப ரூபமான கர்மங்களை
வேரறுத்து -வேர் கிடந்தால் திரியட்டும் அங்குரித்து வளர்ந்து வரும் என்று-சமூலோன்மூலனகமாக சேதித்து

பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான்
தம்முடைய திருவடிகளையும் என் தலையிலே தரிக்கும்படி வைத்து அருளினார் –ஆன பின்பு-எனக்கு ஒரு ஹானியும் இல்லை-
அன்றிக்கே –
பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான் -என்று பரன் -என்கிற இத்தை மேலே- கூட்டி –
சர்வஸ்மாத் பரனான சர்வேஸ்வரனுடைய திருவடிகளையும் என் சென்னியிலே-தரிக்க வைத்தான் என்னவுமாம்
பரன் பாதம் என் தன் சென்னித் தரிக்க வைத்தான் – என்று பாடமுமாம்
பன்னுதல்-ஆராய்தல்-சிதைவு -அழிவு –

பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்த
சர்வோத்கர்ஷ்டரான எம்பெருமானார்-
என்னுடைய சிரச்சிலே தரிக்கும்படி தம்முடைய ஸ்ரீ பாதத்தை -இவ் விஷயத்திலே பரத்வ புத்தி-பண்ணினவர் ஆகையாலே –
பரன் பாதம் -என்கிறார் –
அன்றிக்கே –
சர்வ ஸ்மாத் பரனுடைய ஸ்ரீ பாதத்தை நான் சிரச்சிலே தரிக்கும் படி -என்னவுமாம்
வைத்தான் —
நிர்ஹேதுகமாக –பரகத ச்வீகாரமாக தானே வைத்தான் -இப்படி ஸ்வரூப அநு ரூபமான பேற்றை-
நான் பெறும் படி உபகரித்தான் -என்றபடி –
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்-செம்மா பாத பற்ப்புத் தலை சேர்த்து ஒல்லை-கைம்மா துன்பம் கடிந்த பிரானே அம்மா-
அடியேன் வேண்டுவது ஈதே -என்று மயர்வற மதி நலம் அருளப் பட்ட ஆழ்வாரும் பிரதம-பர்வத்தில் அருளிச் செய்தார் இறே –
இப்படி ஆன பின்பு

பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான் –
பாதமும் -உயர்வு சிறப்பு உம்மை
என் -என்று தம் இழிவை எல்லாம் எண்ணிப் பார்க்கிறார்
இகழ்வாய தொண்டனேன் சென்னியில் பரன் பாதம் வைத்து அருளினாரே -இது என்ன பெறா பேறு
என்று பேருவகை கொள்கிறார் அமுதனார் –
ஆச்சார்யர்களுக்கு அருள் மிகுந்தால் தன் திருவடிகளை-அண்டினவர்கள் தலை மீது வைப்பார் போலும் –
மருளாம் இருளோடு மத்தகத்து தன் தாள் அருளாலே வைத்தவர் -என்று அனுபவித்து அறிந்த-அருளாள பெருமாள் எம்பெருமானார்
ஞான சாரத்தில் அருளி இருப்பது இங்கு அறிய தக்கது –

தரிக்க -தாங்க
இதனால் வைத்ததும் திருவடியை எடுக்காமல் நெடு நேரம் வைத்து இருந்த சுகத்தை அனுபவித்து பேசுவது தெரிகிறது –
இனி –தரிக்க -என்பதற்கு
இவர் தலை மேல் வைக்காமையினால் நிலை கொள்ளாது துடித்த
திருவடிகள் நிலை நிற்று தரிப்புக் கொள்ளும்படி என்று பொருள் கூறலுமாம்
இதனால் தம் பேறாக எம்பெருமானார் இவர் திரு முடியில் திருவடி விதமாய் தெரிகிறது
இவ்விடத்தில் தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே -என்னும் திருமங்கை மன்னன் ஸ்ரீ சூக்தியையும்
என் தலை மேலவே தளிர் புரையும் திருவடி -இவர் தலையிலே ஸ்பர்சித்த பின்பு தளிர் புரையும் திருவடி யாயிற்று –
அல்லாத போது திருவடிகள் சருகு ஆனால் போலே இருக்கை –என்னும் வ்யாக்யானதையும் நினைக –

இனி ஒரு பொருளாக்கி அந்நிலை புறம்பே போய்க் கெடாது ஒழிய வேணும் என்று
அமுதனாரை தம்மடிக் கீழ் வைத்துக் கொண்டார் என்று கருதலுமாம் .இங்கு
அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ்ப் புக வைப்பாய் -என்னும்
திருவாய் மொழி அனுசந்திக்க தக்கது -பொருள் ஆனாரை வைத்துக் கொள்ளும் ஸ்த்தானம்
பொன்னடிக் கீழ்ப் போலே காணும் -எனபது அவ்விடத்திய சுவை மிகு ஈடு வியாக்யானம் .
பரன் -என்று எம்பெருமானார் மேன்மையையும்
பாதம் வைத்தான் -என்று எளிமையையும்
என் சென்னியில் தரிக்க வைத்தான் -என்று சீலமும் அருளும் தோற்றுகின்றன –
எம்பெருமானார் தாமாகவே வந்து தமது நிர்ஹேதுக கிருபையால் தம் திருவடிகளை-
சென்னியில் தரிக்க வைத்து உய்வித்தல் அரங்கமாளி விஷயத்திலும் கண்டு அறிந்ததாம் –

இனி –பரன் -என்பதை
இராமானுசனுக்கு அடை மொழி யாகக் கொள்ளாது மேலே கூட்டிப் பரன் பாதமும் –
பரம-புருஷனாகிய ரெங்க நாதன் திருவடிகளையும் என்று கூறலுமாம்
இப்பொழுது-சர்வேஸ்வரனுடைய திருவடிகளையும் என் சென்னியிலே தரிக்கும்படியாக எம்பெருமானார் வைத்தார் என்றதாயிற்று
பரம புருஷனான ரெங்க நாதனும் எம்பெருமானாருக்கு-வசப்பட்டு இருத்தலின் -அவன் திருவடிகளை வைத்து அருளுவதாக அமுதனார் அருளி செய்கிறார்
இதனை அடி ஒற்றியே வேதாந்த தேசிகனும் நியாச திலகத்தில்
தத்தே ரங்கீ நிஜமபி பதம்-தேசிகாதே சகான்க்க்ஷீ-அரங்கன் ஆசார்யன் கட்டளையை எதிர்பார்ப்பவனாய்
தன் பதத்தையும் தருகிறான் –என்று அருளி உள்ளார்
இங்கு கட்டளைப் படி நடப்பதால் ஆசார்யனுக்கு அரங்கன் விதேயனாக கூறப் பட்டு இருப்பது-கவனிக்க தக்கது –
இங்கே தேசிகன் எனபது எம்பெருமானாரையே –
குரு ரிதி சபதம் பாதி ராமானுஜார்யே -என்று-குரு என்னும் சொல் எம்பெருமானார் இடம் பொலிவுறுகிறது –
மற்றவர் இடம் அன்று -என்றபடி
எம்பெருமானாரே தேசிகர் என்க –

தேசிகோ மே தயாளு -என்று முன்னும் -தேசிகா தேச காங்கி-என்று பின்னும் சொல்லைக் கையாண்டு
இடையே லஷ்மன முனி என்று எம்பெருமானாரைக் குறிப்பிடுவதால் தேசிக என்னும் சொல்
அவரையே குறிப்பிடுவதாக கொள்வது ஏற்புடையதாகும் -ஆகவே தேசிக ஆதேசம் -கட்டளை
எனபது ராமாநுஜார்ய திவ்ய ஆக்ஜையையே -நிஜம் அபிபதம் எனபது பரம பதத்தை கூறும்
என்று கொண்டாலும் -தனது திருவடியையும் -என்னும் பொருளும் ஒவ்வாதது அன்று –
ஏற்புடையதே -மோ ஷதை தரும் போதும் தலையில் திருவடித் தாமரையை வைப்பதாக கூறப்பட்டு-இருப்பதும் இங்கு உணர தக்கது –
அரங்கன் செய்ய தாள் இணையோடு ஆர்த்தான் -என்று மேலே இவர் அருளி செய்வதற்கு ஏற்ப
பரன் என்பதற்கு-ரங்க நாதன் என்று பொருள் உரைக்கப் பட்டது –

திருப்பாதம் என்னாது பாதம் என்றது -தலையில் வைபதர்க்கு முன்பு அதற்க்கான-சீர்மை அறியாமையினால் என்க –
இனி சென்னியில் வைத்த பாதத்தை தரிப்பது குணம் கண்டு அன்று –
சத்தா பிரயுக்தம் -இயல்பாக அமைந்தது -என்னும் கருத்துடன் அங்கனம் கூறினார் ஆகவுமாம்-
பரன் பாதம் என்று ப்ராப்தி -சம்பந்தம் கூறப் பட்டது
ஆழ்வார் ஆள வந்தார் போன்ற மேலோர் முடிகளில் போலே எம்பெருமானார் அருளினால் அமுதனார்
முடியிலும் பரன் பாதம் விளங்குவதாயிற்று-பரன் பாதம் என் தன் சென்னி -என்றும் ஒரு பாடம் உண்டாம்

எனக்கு ஏதும் சிதைவு இல்லையே
எம்பெருமானார் தாமே ஏற்றுக் கொண்டமையின் எனக்கு ஒரு குறையும் வர வழி இல்லை-என்றபடி-
நான் முயலின் அன்றோ சிதைவு எனக்கு நேருவது எனபது கருத்து

எனக்கு ஏதும் சிதைவில்லையே
பரகத ஸ்வீகார பாத்திர பூதனான -எனக்கு ஏதேனும் ஒரு ஹானி உண்டோ –சிதைவு –அழிவு
சிதைவு இல்லையே -ஆகையால் எனக்கு ஒரு குறையும் இல்லை என்கிறார் –

இவர் அடியே பிடித்து பாட்டுக்கள் தோறும்
சரணாரவிந்தம் -என்றும் -கமலப் பதங்கள் -என்றும் –பாதம் -அடி -என்றும் இடை விடாதே வாய் விட்டுப் புலம்புகிறார்
மோருள்ளதனையும் சோறேயோ-ஆகிலும் இவர் தம்முடைய காதல் இருக்கும்படி –
ஒரு கால் சொன்னதை ஒன்பதின் கால் சொல்லிக் கொண்டு போந்தார் என்கை-

ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தாருக்கு அருளிச் செய்த தனியன்
யோ நித்ய அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாஹாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேனே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ ராமானுஜஸ்ய சரனௌ சரணம் ப்ரபத்யே —

த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ
அழிக்கப்பட்ட அனைத்து பாபங்களையும் கொண்ட -என்பதால்
ஒரு முறை கடாக்ஷ லேசத்தாலே பலவிதமான பாபங்களும் அழிக்கப் பட்டன –
அதன் பின்னர் இடைவிடாமல் அந்த ஸ்ரீ ஆளவந்தாருடைய திருவடித் தாமரைகளையே எண்ணி இருப்பதால்
அவை வாசனையோடு முழுமையாக நீக்கப் பட்டன -என்றவாறு

வஸ்துதாம்
வஸ்துவாக இருத்தல் –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேநம் ததோ விது –தைத்ரியம் -2-6-1-ப்ரஹ்மத்தை அறிந்து கொண்டவன்
என்றால் அவனை இருக்கிறவனாக அறிகிறார்கள்
அஹம் வஸ்துதாம் உபயாத
நான் அடைந்துள்ளேனா -என்ற வியப்பால் அருளிச் செய்கிறார்
இப்படியாக தனது அநிஷ்டங்களும் அப்ராப்தங்களும் நீங்கப்பெற்று இஷ்டப் பிராப்தி அருளியதற்கு
மனம் வாக்கு காயம் -முக்கரணங்களாலும் ஏவப்பட்டு நமஸ்காரம் செய்கிறார்
இதைக் கேட்பவர்களுக்கும் அநேக மங்களங்களும் உண்டாகும்
இத்தால் ஆச்சார்ய வந்தனம் குரு பரம்பரயா த்யானம் பூர்வகமாக பக்தி செய்ய வேண்டும்
என்று உணர்த்தப்பட்டது

யதா பதாம் —அம்போருஹம் தாமரை திருவடிகளை தியானித்து
அசேஷ கல்மஷம்
வஸ்துத்வத்வம் அடைந்தேன் -இரண்டும்
த்யாநேன–கண்டு -இடைவிடாமல் நினைப்பதே-விமல சரீர சேவையால்
ஸ்ரீ ஆளவந்தாரை குறித்து மட்டும்

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–.
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் தரிஷ்ட்வா நிவர்ததே––ஸ்ரீ கீதை -৷৷2.59৷৷

விஷயங்களில் இருந்து இந்திரியங்களை இழுத்த ஜீவனுக்கு விஷயங்கள் நீங்குகின்றன
ஆனால் விஷயங்களில் ஆசை நீங்குவது இல்லை –
ஞான யோக நிஷ்டனுக்கு மேலான ஆத்ம ஸ்வரூபத்தைக் கண்டவுடன் இவ்வாசையும் நீங்குகிறது
ஆத்ம தரிசனத்தால் இந்திரியங்கள் அடக்கலாம் -ஏக ஆஸ்ரய தோஷம் –

ஆத்மாவை கண்டாலே போகும்
முயன்றாலும் -இந்திரியங்கள் மனத்தை இழுத்து செல்லும்
அன்யோன்ய ஆஸ்ரயம் வரும்
இத்தை போக்க அடுத்த ஸ்லோகம்

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஷ்சத.–
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந—৷৷2.60৷৷

இந்திரியங்கள் அடக்கி ஆத்ம தர்சனம் -என்கிறான் –
பிரத்யனம் செய்தாலும் –இந்திரியங்கள் பலமானவை -மனசை பலாத்காரமாக இழுக்கும் –

இந்திரியங்களை விலக்கி என்னிடம் செலுத்து -த்யானம் பண்ண பண்ண சத்வ குணம் வளர்ந்து
ஸூபாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை வைத்து
அதே போலே திருவடித் தாமரை த்யானம்
வஸ்துத்வம் அடைந்தது -அடுத்த நிலை
இருப்பு -தன்மையுடன் -ஸத்வித்யா பிரகரணம் -சங்கல்பித்து ஸ்ருஷ்ட்டி செய்தது -சங்காத்வம்-உள்ளே புகுந்து
தேறி இருத்தல் -சஸாபி ராம –பரிஷத் கத சனையி அனுபவிக்க ஆசை உடன் –
பூ சத்தாயாம் சத்தை பெற ஸ்ரீ ராமாயணம் கேட்க இறங்கி

பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி அடிமை கொண்டாய்
தமியேனுக்கு அருளாய் முந்திய பாசுரம்
அறிவித்து சத்தாக ஆக்கி
வஸ்துவை உருவாக்கி உஜ்ஜீவனமும் கொடுத்து
அசந்நேவ பவதி–
நான்கு நிலைகள் பார்த்தோம்
1-இருத்தல் 2-நிலை பெருத்து இருத்தல் -3-பகவத் ஞானம் -4-கைங்கர்யம்

மருள் சுரந்த முன்னை வினை -சூழலாக அஞ்ஞானம் கர்மா இரண்டும் உண்டே –
வேர் அறுத்து அசேஷ -சவாசனமாக ருசி யுடன் போக்கி
பன்ன பணித்த –ஆராய -பரன் பாதம் சென்னியில் தரிக்க வைத்தான்
பொருள் ஆக்குதல் இல்லை -ஒரு பொருள் -அத்விதீயமாய் -ஒருத்தி மகனாய் போலே
சேஷ பூதனாக அறிந்து அடிமை
ஆச்சார்ய நிஷ்டை வடுக நம்பி நிலை
அமுதனார் -அதுக்கும் மேலே -அன்பு செய்யும் சீரிய பேறுடையார் அடிக்கீழ் –
இந்த தனித்தன்மை ஒரு பொருள் பாகவத சேஷத்வம்

———–

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-நிதானப் பாட்டு இந்த ஸ்ரீ திருவாய் மொழிக்கு

இன்று என்னை அங்கீ கரிக்கைக்கும்- முன்பு என்னை பாராமுகம் செய்தமைக்கும் காரணம் என்
என்று கேட்க வேண்டி இருந்தேன் – இது தனக்குத் தானே சிந்தித்தலில் நோக்கு –
அன்றிக்கே
ஸ்ரீ சர்வேஸ்வரன் தன்னை ஸ்ரீ பரமபததுக்கு கொடு போகையில் விரைகிறபடியைக் கண்டு
இன்று என் அளவு அல்லாதபடி த்வரிக்கிற -விரைகிற தேவர் இதற்கு முன்பு பல காலம் விட்டு ஆறி இருந்தமை எங்கனே
என்று அவனைக் கேட்கிறார் -என்னவுமாம் –
அன்றிக்கே
மூன்றாவது அவதாரிகை அதி சங்கையிலே நோக்கு –
இப்படி விரைகிறமை மெய்யாகில் முன்பு விட்டு ஆறி இருக்கக் கூடாது -என்கிறார்-

நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே ராம கமல லோசனே தேநத்வாம் நாநயதி ஆஸூ சசீமிவ புரந்தர -சுந்தர -36-33-
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திருவடியைப் பார்த்து அருளியது –

நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே-
தேவரீர் இங்கு இருப்பதனை பெருமாள் அறிய வில்லை -என்கிறபடியே
நடுவே சிலர் சொல்லும்படி ஆயிற்று எழுந்து அருளிய இடம் அறியாமையாலே
ஆறி இருந்தார் இத்தனை போக்கி -அறிந்தால் ஒரு ஷாணம் ஆறி இருப்பாரோ –
இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேண்டுமோ –
கமல லோசனே-
உம்முடைய கண் அழகே அன்றோ பிரமாணம் –
ராம-
அவரை அறியாது ஒழிய வேண்டுமோ –
சிரஞ்ஜீவதி வைதேஹீ யதிமாசம் தரிஷ்யதி ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர 66-10-
கருத்த கண்களை உடைய சீதையைப் பிரிந்து ஒரு ஷணம் கூட உயிர் வாழேன் -என்றே அன்றோ அவர் இருப்பது –
ராம கமல லோசனே –
அவரை அறியாமையும் இல்லை –
உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாமையும் இல்லை –
கமல லோசனே —
அன்றிக்கே
யார் எதிராகத் தான் இக்கண் சிவப்பும் சீற்றமும் எல்லாம் -என்னுதல்
பிரணய ரோஷத்திலே நோக்கு-என்னுதல் –

இவர் கேட்ட இதற்கு காரணம் காணாமையாலே-நிருத்தரானாய் – விடை அளித்தால் அற்றவனாய்
உமக்கு மேல் செய்ய வேண்டுவது என் -என்ன
ப்ரீதி முன்னாக அடிமை செய்யப் பெற்றேன் இதுவே இன்னம் வேண்டுவது -என்கிறார்
அவன் தானே செய்தான் -என்னும் அன்று
அவனுக்கு வைஷம்யமும் -உயர்வு தாழ்வு காண்டலும்-நைர்க்ருண்யமும்- அருள் பெற்ற தன்மையும்-சர்வ முக்தி பிரசங்கமும் –
எல்லார்க்கும் மோஷம் கொடுத்தலும்-என்னும் இவை வாராவோ -என்னில்
இத் தலையில் ருசியை அபேக்ஷித்து -விரும்பிச் செய்கையாலே அவனுக்கு அவை உண்டாக மாட்டா
அதுவே காரணம் என்று ஈஸ்வரன் அதனைச் சொன்னாலோ என்னில்
அது உபாயம் ஆக மாட்டாது-பல வ்யாப்த மானது – பலத்தோடு கூடி இருப்பது அன்றோ உபாயம் ஆவது
இந்த ருசி அதிகாரியின் உடைய ஸ்வரூபம் ஆகையாலே-அவனுக்கு விசேஷணம் ஆம் இத்தனை
உபாயம் ஸஹ காரி நிரபேஷம் -வேறு துணையை விரும்பாதது ஆகையாலும்
இந்த ருசி உபாயம் ஆக மாட்டாது
ஆக
இது உபாயம் ஆகாமையாலே இவர்க்கு இல்லை என்னவுமாம்
சர்வ முக்தி பிரசங்கம் பரிஹார்த்தமாக -நீங்குவதற்காக அவனுக்கு உண்டு -என்னவுமாம் –

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –3-பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன்-

January 24, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர்
ப்ராக்ருதரோட்டை சம்பந்தத்தை நீக்கி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்கள்-திருவடிகளிலே
என்னை சேர்த்த உபகாரத்துக்கு நெஞ்சே உன்னை வணங்கினேன் என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்
கீழ்ப்பாட்டில் தம்முடைய நெஞ்சானது எம்பெருமானார் உடைய சீல குணத்தில் ஈடுபட்ட மாத்ரமன்றிக்கே -இப்படி அனுபவிக்க அனுபவிக்க
அபிநிவேசம் கரை புரண்டு –என்னைக் கொண்டு போய் ததீயர் உடைய திருவடிக் கீழ் சேர்த்தது –இந்த மகா உபகாரத்துக்கு தக்க
சமர்ப்பணம் தம் பக்கல் ஒன்றும் இல்லை என்று நெஞ்சினாருடைய காலில் விழுகிறார் .

இந்தப் பாட்டில் என் நெஞ்சு எனக்கு உரிய-கருவி இல்லாமல் என்னைத் தனக்கு உரியவனாக -ஆக்கிக் கொண்டு விட்டது –
விடவே என்னிடம் பேர் இயல்வு ஒன்றும் இல்லாமல்–சீல குணத்தில் ஆழ்ந்து –அவன் அடியாரார் அளவும் தான்
ஈடுபட்டதோடு அமையாமல் -தீய பிறப்பாளரோடு எனக்கு உள்ள உறவை அறுத்து –
எம்பெருமானாருக்கு அன்பர்கள் உடைய அடிகளில் என்னை சேர்த்தும் விட்ட உபகாரத்துக்காக –
அந் நெஞ்சினைப் பணிந்தேன் -என்றார்-

பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னைப் பேய்ப் பிறவிப்
பூரியரோடு உள்ள சுற்றம் புலத்திப் பொரு வரும் சீர்
ஆரியன் செம்மை இராமானுசன் முனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடிக் கீழ் என்னைச் சேர்ததற்கே -3-

பேரியல் நெஞ்சே -பெரிய ஸ்வபாவத்தை உடைய – மனசே –
முதலில் எம்பெருமானார் உடைய சீல-குணத்திலே இழிந்து அதிலே அத்ய அபிநிவிஷ்டமாய்-
உன்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக -என்னையும்-ததீய பர்யந்தமாக அத்யவிசிப்பித்த ஸ்வபாவத்தை உடைய -மனசே என்றபடி –
வள்ளலே -என்று வாரி வழங்குவாரை விளிப்பது போலப் -பேரியல் நெஞ்சே -என்று நன்றி அறிவுடன் விளிக்கிறார்
மால் இடம் ஈடுபடுதல் நெஞ்சுக்கு இயல்பு –
கோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும் மனம் -இது இயல்வு -பேர் இயல்வு என்பது
இங்கு திருமாலடியார்கள் இடம் ஈடுபாடு கொண்டமையின் நெஞ்சின் இயல்பு பெரிதாயிற்று –
இனி என் சிற்று இயல்புக்கு எம்பெருமானார் அன்பர்கள் திருவடிக் கீழ் சேர்த்தல் இயையாதாயினும் –
நெஞ்சு தன பெரும் தன்மைக்கு ஏற்ப அந்நிலையை தந்தது -என்னும் கருத்துடன் -பேரியல் நெஞ்சே -என்று -விளித்தார் ஆகவுமாம்–
ஓன்று நீ கை கரவேல் -என்று அன்றோ நாச்சியார் திவ்யாஜ்ஜை பர்ஜன்ய தேவனுக்கு –
இங்கு பெறுபவர் என் பெறினும் கொள்வர் கொடுப்பவர் தாம் அறிவார் தம் கொடையின் சீர் -என்னும் -ஔவையார் பாடலை நினைவு கூறுக –
இங்கனம் பெரும் தன்மையினால் வேறுபட்டு வணங்க தக்க முறையில் இருப்பதனால் தனிப்படுத்தி -நெஞ்சே -என்று விளிக்கிறார்

முன் பாசுரத்தில் போல் என் நெஞ்சே என்று விளிக்கிலர்
இங்கு என் நெஞ்சே -சொல்லாமல் -சம்பந்தம் -கீழே சொல்ல வில்லை ஒதுக்கி வைத்து உபதேசம்
இரண்டாவதில் சம்பந்தம் கொண்டாடி –
மூன்றாவதில் அதன் நிலை உத்க்ருஷ்டம் -கண்ணபுரம் தொழும் பிள்ளை அன்றோ –
பிரதம பர்வ நிஷ்ட்டை ஆழ்வார்களுக்கு
இங்கு ராமனுஷ முனிக்கு அன்பு செய்யும் சீரிய பேறு உடையார் அடிக் கீழ் என்னை சேர்த்த தற்கே-என்று சரம பர்வ நிஷ்டை
பாகவத சமாசம் அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய்-என்று விண்ணப்பம் செய்தார் தொண்டர் அடி பொடி ஆழ்வார்
அடியார்க்கு என்னை ஆட் படுத்திய விமலன் .-திரு பாண் ஆழ்வார் முதலிலே க்ருதக்ஜை அருளி –
ப்ராக்ருதரோட்டை சம்பந்தத்தை நீக்கி எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்கள்-திருவடிகளிலே சேர்த்த
உபகாரத்துக்கு நெஞ்சே !உன்னை வணங்கினேன் என்கிறார் .
ஆழ்வான் சம்பந்தம் பெற்ற பேற்றால் அருளுகிறார் .

பேய்ப் பிறவிப் பூரியரோடு உள்ள சுற்றம் புலத்தி-
ஹேய ஜன்மாக்களாய் அஹங்காராதி தோஷ தூஷிதரானவர்களோடு உண்டான -சம்பத்தை நீக்கி –
அசூர வர்க்கத்திலே ஜனித்து -நிஹீநரான மூடரோடே உண்டான சம்பந்தத்தை சவாசநமாகப் போக்கி –
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம் -என்னும்படியே பண்ணுவித்து -என்கிறபடி-
வாழ ஆட் பட்டு உள்ளீரேல்- தேட வேண்டுமே-
பேய்ப்பிறவி -தீதான பிறவி –
பூரியர் -பொல்லாதவர்கள் –
புலத்தல் -நீக்குதல் –

பேய்ப் பிறவிப் பூரியர் –
பகவானுக்கு கூட ஆளாகாத பிறவி பேய்ப் பிறவி என்க –
நிலை நின்ற மகத்தான புருஷார்தமாகிய பகவானை விட்டு -நிலை இல்லாததும் அல்பமுமான உலகு -இன்பத்தை
பற்றி நிற்பது பேய்ப் பிறவியின் இலக்கணம் –அப்பிறவியினர் விடத் தக்கவர் ஆவர் –
பூரியர்-
பேய்ப் பிறவி யாரோடு உள்ள சுற்றம் புலத்தி என்றாலே போதுமாய் இருக்க –
பூரியர் என்று மேலும் கூறியதற்கு கருத்து என் –என்னில் –
உலகத்தவர் கண்ணால் காணும் இன்பத்தை ஒழிய வேறே ஓன்று உண்டு என்று பகவத் விஷயத்தை பற்றி
விடாப் பிடியாய் -நிற்றலைப் பேய்ப் பிறவி என்பர்-ஞானிகட்கு உலகத்தவர் பேய்ப் பிறவியர் –
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே–-பெருமாள் திருமொழி -2-9-
பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும் இது பேசி என்?
ஆயனே அரங்கா என்று அழைகின்றேன் பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே -பெருமாள் திருமொழி—3-8-
உலகத்தவர் சொல்லும் பேய்ப் பிறவியை நீக்கல் பொருட்டு மேலும் பூரியர் என்று கூறினார் என்க –
இனி விட்டு ஒழிக்க வேண்டியவரை பற்றிப் பேசுதலானும் ஞானியாகிய அமுதனார் பேச்சாதலானும்-தானே விளங்காதோ -எனின்
அப் பிறப்பின் கண் உள்ள நோவு மிகுதியை நன்கு புலப் படுத்ததற்கு மேலும் பூரியர் என்றார் என்க –
ஊறி -தோஷம் -அதாவது அஹங்காரம் மமகாரம் முதலிய பொல்லாங்கு –

பேய்ப் பிறவிப் பூரியர்-
இனி பூரியரோடு உள்ள சுற்றம் புலத்தி என்றாலே போதுமாய் இருக்க பேய்ப் பிறவிப் பூரியர் என்று -விசேடித்தது ஏன்-என்னில் –
தோஷம் சேர்க்கையால் வந்த தன்று பிறவிக் குணம் –
உபதேசாதிகளால் நீங்காது என்று தோஷத்தின் கொடுமை காட்டுவதற்காக அங்கன் விசேடித்தார் என்க –
இங்கே -ப்ரக்ருதிம் யாந்தி பூதானி நிக்ரஹா கிம் கரிஷ்யதி -உயிர் இனங்கள் தம் ஸ்வபாவத்துக்கு ஏற்ப -நடப்பன –
சாஸ்த்ரத்தால் தடுப்பது என்கண் பயன் பெறும் – என்னும் கீதா வசனம் நினைக தகும் –
நல்லார் தொடர்பினும் பொல்லார் தொடர்பு அறுதல் சிறப்பு உறுதலின் அது முன்னர்க் கூறப் பட்டது –
பூரியரை திருத்த ஒண்ணாத நிலையில் அவர்கள் தொடர்பினை நீக்கி விலக்குவதே நல்லது அன்றோ –
நெருப்பு பற்றிய இடத்தில் அவிக்க ஒண்ணாத போது அதனில் அகப்பட்டோரை அதனின் நின்றும் விலக்கித் தப்புவிப்பதன்றோ முதல் கடமை –
அந்ய சேஷத்வம் ஒழிகையே பிரதானம் .விலக்கியே நல்லத்தில் சேர வேண்டும் –
புலத்தல்-நீக்குதல் புலர்த்தி-என்றும் சொல்வார்..

பொருவரும் சீர் ஆரியன் செம்மை –
உபமான ரஹீதமான குணங்களை உடையராய் –சமாதிகத சமஸ்த சாஸ்த்ரராய்-ஆஸ்ரிதருடைய கௌடில்யம் பார்த்துக் கை விடாதே –
அவர்களுக்கு ஈடாகத் தம்மை யமைத்துப் பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தரான
பொருவரும் சீர் ஆரியன் இராமானுசன் – மூன்று விசேஷணங்கள் –
திருக் கல்யாண குணங்கள் – அனுஷ்டானம் – ஆர்ஜவம் -மூன்றும்-அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ -என்பதே
பொரு வரும் சீர் -ஆரியர் -ஆசார்ய சீலர்
பொருவரும் சீர் -உபமான ரஹிதம் ஆகையாலே -ஏவம் பூதம் -என்று நிரூபித்து சொல்ல அரிதாய் இருக்கிற கல்யாண குணங்களை உடையராய் –
ஆரியன் -சகல சாஸ்திர பாரீணராய்-இவ் விபூதியில் இருந்துள்ள சகல சேதனருக்கும்-
திருவேங்கடமுடையானுக்கும் ஆசார்யனாய்
தன்னாரியனுக்கு -என்று ஆரிய பதத்தை -ஆசார்ய பத சமானார்த்தமாக ஜீயர் பிரயோகித்து அருளினார் இறே
செம்மை -தாம் சங்கல்ப்பித்த படியே அனுஷ்டித்தும் -உபதேசித்தும் -இப்படி கரண த்ரய சாரூப்யத்தை உடையரான
ஞானம் அனுஷ்டானம் நன்கு உடைய -ஆசார்ய லஷணம் மிக்கு இருக்கும் படி –

இராமானுசன் முனிக்கு அன்பு செய்யும் சீரிய பேறு உடையார் அடிக் கீழ் என்னைச் சேர்ததற்கே-
எம்பெருமானார் விஷயத்திலே-ப்ரேமத்தை பண்ணுகை யாகிற பரம புருஷார்த்தத்தை உடையவர்களுடைய திருவடிகளின்-கீழே
என்னை சேர்த்த இந்த மகோ உபகாரத்துக்கு உன்னை வணங்கினேன்

இராமானுச முனிக்கு –
தம் அவதார பிரயோஜனத்தில் எப்போதும் மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற-எம்பெருமானார் விஷயத்தில் –

ஆரியன்-சகல சாஸ்த்ர உணர்ந்தவர்..பொரு அரும் சீர் ஆரியன்.
ஜகத்குரு இவர் இடம் தான் இராமனுசன் சப்தம் சேரும்.
பகவான் சப்தம் அவன் இடம் மட்டும் லஷ்மணன் பரதன் சத்ருக்னன்
பெரிய பிராட்டியாரையும் பெரிய பெருமாளையும் விலக்குகிறார்
அவனை போல் ஸ்வா தந்த்ர்யம் இல்லை அவள் அவனை எதிர் பார்க்கணும்..
இவருக்கு இந்த குற்றம் இல்லையே
சகல சேதனருக்கும் ஸ்வாமி இவர் தானே
திரு வேங்கடத்தானுக்கும் -ஜகதாச்சர்யன் -அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த்தான்
ஆரியன்-ஆசார்யன் ஆரியன்-வித்வான் செம்மை கரண த்ரயம் ஒன்றி-
வேற மருந்து வேண்டாம்- நேர்மை-பொரு அரும் சீர்-தனியாக செம்மை ஆரியன் சொல்ல காரணம் தனி சிறப்பு தோற்ற
சாஸ்த்ர அர்த்தம் தெரிந்தும் ,அனுஷ்டித்தும் உபதேசித்தும் நீர் புரை வண்ணன்
எங்கும் புகும் நீர் போலே -அனைவர் உடன் கூடும் சீலம்.
முனிக்கு- மனனம் பண்ணி கொண்டு இருக்கிறார்
அக்லிஷ்ட ஞான வைக்ராய ராசேயே –
செம்மை ஆர்ஜவம்
ராமாநுஜாய திவ்ய சரிதை ஆச்சார்யார்
புண்யாம்சா போக விகாசாயாம் –சாது பரித்ராணாம் –
பாபத்வந்த ஷயாயச -துஷ்ட
ஸ்ரீ மான் -தர்ம சமஸ்தானம் அர்த்தம் கைங்கர்ய ஸ்ரீ மத்வம்
மனனம் பண்ணும் முனி -பாப கூட்டங்கள் விலக ராமானுஜ திவாகரன்.

அன்பு செய்யும் சீரிய பேறுடையார் –
அத்ய அபிநிவிஷ்ட சித்தராய் – அது தானே விலஷணம் என்று அத்யவசித்து இருக்கும் -ஆழ்வான் முதலிய ததீயர் உடைய-
அடிக் கீழ் –
திருவடிகளின் கீழே
என்னைச் தேர்த்ததற்கே –
என்னுடைய சிரச்சிலே அத் திருவடிகள் பூஷணமாகும் படி –
பூர்வ காலத்தில்-சரம பர்வத்தினுடைய பிரபாவத்தை அறியாதே -இருக்கிற என்னை அமைத்து வைத்தர்க்கே –
தனக்கு நான் உபதேசிக்க வேண்டி இருக்க-தானே எனக்கு புருஷகாரமாய்-
என்னைக் கொண்டு போய் ததீயர் உடைய ஸ்ரீ பாதத்திலே சேர்த்ததற்கு –
இந்த மகா உபகாரத்துக்கு நான் எத்தை பிரத்யுபகாரமாக பண்ணுவது என்று ஆராய்ந்து பார்த்தால் –

அவதார பிரயோஜனமே அமுதனாரை கூரத் ஆழ்வான் இடம் சேர்பதற்கே
சீரிய பேறு உடையார் ராமானுஜர் திருவடி சேர்ந்த சீர்மை.
ஆழ்வான் முதலானவர்கள் அடி கீழ் என்னை சேர்த்தற்கே
மனசுக்கு நான் உபதேசிக்க வேண்டி இருக்க தானே புருஷ காரம் பண்ணி சேர்ததற்கு-எத்தை என்று -தேடி பார்த்தால் -ஒன்றும் இல்லை
கண்டேன் சீதை- என்ற திருவடிக்கு பெருமாள் ஆலிங்கனம் பண்ணி-இரண்டு உயிரை ரஷித்ததர்க்கு ஒரு உயிர் தானே கொடுக்க முடிந்தது
அடி பணிந்தேன் உன்னை தலை அல்லால் கைம்மாறு இல்லை-–வருக என்று மட கிளியை கை கூப்பி போல.–
வாக்கும் மனசும் காயமும் ஓன்று சேர்ந்து ராமானுஜர் அடி கீழ் இருத்தும் நன்றிக்கு வணங்குகிறார்
ஆசார்யன் செய்த நன்றிக்கு பிரத் உபகாரம் செய்ய நான்கு விபூதிகளும் இரண்டு பர ப்ரஹ்மமும் வேண்டுமே —முடியாமல் வணங்குகிறார் இதில்-

அடி பணிந்தேன் உன்னை –
உன்னுடைய திருவடிகளில் ஆஸ்ரயித்தேன் –
உனக்கு நமஸ்காரம் பண்ணினேன் -என்றபடி
பெறப் பேறாக-ஜீயர் பிரார்த்தித்து அருளின ததீய ப்ராவண்யத்தைக் காணும் -இவருக்கு
இவருடைய மனச்சு-முதலில் உண்டாக்கிற்று –

அடி பணிந்தேன் உன்னை
தன் நெஞ்சுக்கு உருவம் கொடுத்து அதன் அடிகளில் விழுகிறார் அமுதனார் –
வேறு எவரும் இங்கன் அடி பணிந்ததாக தெரிய வில்லை –
நெஞ்சை பலர் கொண்டாடி உள்ளனர் -அடி பணிந்திலர் –அமுதனார் நெஞ்சு தனிப்பட்டது
ஆழ்வார்களுடைய நெஞ்சிலும் அது தனி சிறப்புற்றது –
ஆழ்வார்களுடைய நெஞ்சு அவர்கள் உடைய உபதேசத்துக்கு செவி தாழ்த்தி –
வைராக்ய காலத்திலும் -சுடர் அடி தொழும் காலத்திலும் -அனுபவ காலத்திலும் –
அன்னாருக்கு பாங்காய் வாய்ந்து உதவும் -இந்நிலையிலே மகிழ்ச்சி கொண்டு –
வாழலாம் மட நெஞ்சமே -என்றும்
நெஞ்சமே நல்லை நல்லை -என்றும் நெஞ்சை கொண்டாடுகின்றனர் –
மீமிசை -நெஞ்சகத்துக்கு தூது விட வேண்டிய நிலை –
இனி சில வேளைகளில் அந் நெஞ்சு –
நின்னடையேன் அல்லேன் -என்று நீங்கி
இவர்களை விட்டு தான் மட்டும் எம்பெருமான் நாண் மலர்ப்பாதம் அடைவதும் உண்டு –
அடைந்தது மீளாது -இவர்களையே மறந்து விடுவதும் உண்டு –
காரார் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும் வாராதே என்னை மறந்தது தான் -என்னும் -திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ சூக்தி காண்க
இனி கண்ணனோடு கலந்த நெஞ்சத்துக்கு அன்னம் முதலியவற்றைத் தூது விட வேண்டிய-நிலைமை ஏற்படுவதும் உண்டு –
தம் நெஞ்சோடு தம்மை சேர்பதற்கு வேறு பொருள்கள் தேவைப் படுகின்றன -அவர்கட்கு –
அத்தகைய குறை ஒன்றும் இன்றி எம்பெருமானார் அன்பர் அடிக் கீழ் தாள் சேர்த்ததோடு
அமுதனாரையும் அவ்விடத்திலே சேர்த்து வைக்கிறது நெஞ்சு –
அப் பேருதவிக்காக நெஞ்சின் அடிகளிலே விழுகிறார் அமுதனார்

ஆழ்வார்கள் தம் நெஞ்சை மார்பில் அணைத்து கொண்டாடுகிறார்கள் –
இவர் அடிமைப் பட்டு தலை அல்லால் கைம்மாறு இலேன் -என்று அடி பணிகிறார்
சேர்த்து வைப்பவர் காலிலே விழுவது முறை அன்றோ –
அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை -என்று சேர்த்து வைக்க புறப்படுவதற்கு முன்பே –
வண்டைத் தொழுதார் -திரு மங்கை ஆழ்வார் -இங்கனமே
செங்கால மட நாராய் -நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே -என்று நாரையை-
அதனை சேர்ந்தவைகளோடு கால்களை தன தலை மேலே வைக்குமாறு கோருகிறார் நம் ஆழ்வார் – இவ்வாறே
தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இலேனே -என்று குயிலுக்கு-தன்னையே
கைம்மாறாக அர்ப்பணம் செய்கிறாள் ஆண்டாள் –
முதல்நிலை -பிரதம பர்வம் நிலையில் சேர்த்து-வைக்கப் போகும் பறவைகள் திறத்து அவர்கள் அங்கனம்
நடந்து கொண்டால் இறுதி நிலை -சரம பர்வம் நிலையில்
சேர்த்து வைத்த நெஞ்சின் திருவடிகளில் அமுதனார் பணிவதற்கு கேட்க வேணுமோ –

இமயத்துள் –பிருதி சென்று அடை நெஞ்சே -பெரிய திருமொழி–1-2-
அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே –-பெரிய திருமொழி 1-5-
பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே -திரு நெடும் தாண்டகம் ––6
பூம் பாடகத்துள் இருந்தானை ஏத்தும் என் நெஞ்சே -இரண்டாம் திருவந்தாதி–94-
கழல் தொழுதும் வா நெஞ்சே–மூன்றாம் திருவந்தாதி – 7-
உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய்-நான்முகன் திருவந்தாதி –-86-
என்னெஞ்சே எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் -பெரிய திருவந்தாதி – –87-
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே -திருவாய் மொழி ––1-1-1-
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே -திருவாய் மொழி–10-6-1-

அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே -திரு விருத்தம் ––3-
பூசும் சாந்து என்னஞ்சமே–திருவாய் மொழி -4-3-1-

என் அரங்கனுக்கு அடியார்களாய் நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே––பெருமாள் திருமொழி -2-4-
அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-
அரும் பெரும் சுடர் ஒன்றினை சேரும் நெஞ்சினராகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால்
வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –2-7-
அரங்கன் எம்மானுக்கேமாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -அமலனாதி பிரான் -1-
எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே -திரு மாலை-42-

கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே—-பெரிய திருமொழி -2-6-1-
கார் வண்ண முது நீர்க் கடல் மல்லைத் தல சயனம் ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே—2-6-2-
கடல் மல்லைத் தல சயனத்துறை கின்ற ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே –2-6-3-
கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே –2-6-4-
கச்சிக் கிடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம் நச்சித் தொழுவாரை நச்சென்றன் நன்னெஞ்சே—2-6-5-
கடல் மல்லைத் தல சயனம் வலங்கொள் மனததாரவரை வல்ங்கொள் என் மட நெஞ்சே–2-6-6-
கஞ்சைக் கடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம் நெஞ்சில் தொழு வாரைத் தொழு வாய் என் தூய் நெஞ்சே—2-6-7-
மல்லைக் கடல் தல சயனம் வணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட நெஞ்சே–2-6-9-

தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-
தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப் போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -7-4-3-
தண் சேறை எம்பெருமான் உம்பராளும் பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–7-4-4-
தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பார்க்கு என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5-
வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே-7-4-6-
தண் சேறை எம்பெருமான் திருவடியைச் சிந்தித்தேற்கு என்
ஐ யறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே –7-4-7-
தண் சேறை யம்மான் தன்னைக்கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே –7-4-8-
தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –7-4-9-

பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் அவர் கண்டீர் பயிலும் பிறப்பிடை தோறு
எம்மை ஆளும் பரமரே–-ஸ்ரீ திருவாய் மொழி -3-7-1-
எம்மான் தன்னைத் தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே–3-7-2-
எந்தை பிரான் தன்னைப் பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடையார்களே–3-7-3-
திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர் இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே–3-7-4-
அப்பனைப் பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே–3-7-5-
எம்மான் தன்னை ஒளிக் கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே–3-7-6-
உணர்வு அரியான் தன்னைச் கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடை தோறு எம் தொழு குலம் தாங்களே–3-7-8-
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் மடியார் எம் அடிகளே–3-7-9-
எந்தை பிரான் தனக்கு அடியார் அடியார் தம் மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே–3-7-10-

கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ வியன் மூ வுலகு பெறினுமே—8-10-1-
சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே–8-10-2-
திருக் குறளன் நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே–8-10-3-
என் அம்மான் பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழி பட்டு ஓட அருளிலே–8-10-4-
தனி மாத தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-
குமரன் கோல வைங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தாமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-
பொன்னாழிக் கை என்னம்மான் நீக்க மில்லா வடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே–8-10-10-

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

நவராத்திரியும் ஆழ்வார்களும்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்-

January 24, 2020

நவராத்திரியும் ஆழ்வார்களும் –
ஏல் கேள்
ஓர் பின்பற்றி சொல்
பாவாய் -பாவை பதுமை -இந்த பொம்மை வடிவில் உள்ள தேவியை வழிபடு -நவராத்ரி
சிற்றில் வந்து சிதையாதே மணல் வீடு
மழையே மழையே மண் புறம் பூசி -மெழுகு ஊற்றினால் போலே -பொம்மை பண்ணும் முறையும் -உண்டே –
மண் மடந்தை ஸ்ரீ பூமி தேவி
அஷ்ட லஷ்மி -தான்ய லஷ்மீ -கடாக்ஷம் கிடைக்கும் -ஓங்கு பெரும் செந்நெல் -தீங்கு இன்றி திங்கள் மும்மாரி

கொலு -அழகாக வீற்று -நிலைத்து வீற்று இருத்தல் –
இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந்துறை கின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை–7-10-1-
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செய்ய-ஸ்ரீ நம்மாழ்வார் -கொலு வீற்று இருப்பதை
அலகிலா விளையாடும் -இங்கு நித்யவாஸம் செய்யம் இவனே அவன்

உலகம் -chess-board-மூன்று நிறங்கள் -குணத்ரயம் வெள்ளை சிகப்பு கறுப்பு-
நாம் தாம் chess-coins-முக்தர் நித்யர் -பார்வையாளர் –
கொலுப் படிகள் -ஒற்றைப்படை -கீழ் உலகம் -பூ லோகம் -மேல் லோகம்
ஏழு உலகம் -ஏழு உலகும்
ஸ்ரீ வைகுண்ட ஸ்தானம் -தமர் உகந்த இவ்வுருவம் அவ்வுருவம் தான் -தன்னது என்று அபிமானிப்பானே
மணல் விளையாடும் சிறுவர்கள் -ராமானுஜர் -ஸ்வீ கரித்து அருளிய விருத்தாந்தம்

அர்ச்சாவதார -இதம் பூர்ணம் -பின்னானார் வணங்கும் சோதி -தேங்கிய மடுகள் -சாய்கர தண்ணீர் –
வீற்று இருந்த அம்மான் தன்னைத் தில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் என்றும் நின்றான்
அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே -ஸ்ரீ குலசேகரப் பெருமாள்
பிண்டியார் -மண்டினார்க்கு அல்லால் மற்றை யார்க்கு உய்யலாலாமே -ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்
நன்று நன்று நறையூரார்க்கே -ஸ்ரீ சீதா கல்யாணம் தர்சனம் பெறலாம்-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –
இரண்டு திருக்கரங்கள் -ஏக பத்னி வரதன் -வஞ்சுள வல்லி தாயார் –
சங்கர்ஷணன் -லஷ்மணன்
பரதன் – சங்கு – சத்ருக்கனன் – சக்கரம்
ஆஞ்சநேயர் -கல் கருடன் -ப்ரஹ்மாதிகள் காட்சி –

அடியேன் உள்ளான் -உடல் உள்ளான் -ஜீவாத்மாவையும் உடலையும் சரீரமாகக் கொண்டு தான்
இவற்றுக்குள் உயிராக -அனைத்துக்குள்ளும் நிறைந்து –
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் –
ஓர் அறிவு ஜீவராசிகள் தொடக்கி –செடி கொடி-சங்கு நந்தை இரண்டு அறிவு -ஊர்ந்து செல்லும் பிராணி மீன் தொட்டிகள்
நண்டு வந்து நான்கு அறிவு மிருகங்கள் பறவைகள் -யானை சிங்கம் –
ஐந்தாம் வரிசை -செட்டியார் மரப்பாச்சி பொம்மை ஆறாவது படி – மகாத்மாக்கள் ஆச்சார்யர்கள் ஆழ்வார்கள்
தேவர்கள் நவக்ரஹம் எட்டாம் இறைவன் விரைவு ஒன்பது பரமாத்மாவான
நவ த்வார பட்டணம் -நவ வித சம்பந்தம் -நவ ரசம் -நவராத்ரி
துர்க்கா லஷ்மீ சரஸ்வதி
பார்வதி தேவி நவவிதம் வட இந்தியா
அஷ்ட லஷ்மி லஷ்மீ ஹயக்ரீவர்
லௌகிக ஆன்மிக தொடர்பு நவராத்ரி
வேத நூல் –பிராயம் நூறு -பிறவி வேண்டேன் -இறைவனை நோக்கி பிரயாணம்
ஆறாவது அறிவை பயன்படுத்தி இறைவனை அடைய –
உத்தரே ஆத்மா -உன் வாழ்க்கை உன் கையில் -ஸ்ரீ கீதா ஸ்லோகம் உணர்த்தவே நவராத்ரி

திருக் கண்டேன் – தேன் அமரும் பூ மேல் திரு -கருண கடாக்ஷம் பொழியும் –
தாமரை மொட்டுக்களை திருக்கரங்களில் ஏந்தி -நித்யம் அனுக்ரஹம் வடிவு –
மைத்தடம் கண்ணி-சார்வு -பெரும் ஆளான பெருமாள் இடம் இவள் மூலமே செல்ல வேண்டும் —
ஈஸ்வரனை அழகாலும் இவனை அருளாலும் திருத்துவாள்
திருவில்லாத் தேவரை தேறேன் மின் தேவே -இவளை இட்டே அவனை -சுவையன் திருவின் மணாளன் –
பெருமை உடைய பிரானார் -திரு மகள் கேள்வன் நம் இரு வினை கடிவார் –
அஷ்ட லஷ்மீ -ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் -நவராத்ரி -கருணை -செல்வம்- செழிப்பு -உயர் பதவி –
புத்ர பாக்யம் -வெற்றி – வீரம் ஆரோக்யம் -ஞானம் –

இரண்டாம் -தன லஷ்மி-போன் போன்ற சிவந்த வஸ்திரம் -தாமரை மேல் -சங்கு சக்கரம் தங்க குடம் ஏந்தி -தங்க மழை பொழிபவள் –
குசேலர் -காலடி -சங்கர் -கனகதாரா ஸ்தவம் -தங்க நெல்லிக்கனி மழை –
பெரும் தேவி தாயார் -ஸ்ரீ தேவி பூ தேவி ஆண்டாள் திரு மார்பு நாச்சியார் -மலையாள நாச்சியார் -ஆறு தேவிமார்கள்
தேசிகன் -ஸ்ரீ ஸ்துதி -தர்ம நிஷ்டருக்கு தங்க மழை
நீங்காத செல்வமும் பெற்று தருபவள் –

தான்ய லஷ்மி -மூன்றாவது லஷ்மி
காலங்கள் மூன்று -கரணங்கள் மூன்று வாக் மனம் காயம்
தத்வ த்ரயம் -அக்ஷர அர்த்தம் -மூன்று எழுத்து தமிழ் -சிறப்பு
பச்சை நிற அஸ்திரம் -பசுமை புரட்சி -பசி போக்க –
எட்டு கரங்கள் தாமரை நெல் வாழை கரும்பு ஏந்தி
பொய்ச்சூது-தர்மர் தான்ய லஷ்மி உபாசனம் –
அக்ஷய பாத்ரம்-திரௌபதி -பெற்றாள்- 13-வருஷம் இதன் அருளாலே அதிதி அருள் பெறும்படி வாழ்ந்தார்கள்

நான்காம் நாள் -கஜ லஷ்மி -யானைகள் பன்னீர் சொம்பு பொலிந்து பட்டாபிஷேகம் -ராஜ்ஜியம் செல்வம் வீடு
துர்வாசர் சாபம் இந்திரன் -பெற்ற ஐஸ்வர்யம்
தாமரை மேல் அமர்ந்து -தாமரை போலவே -தாமரைக்கண்கள் -அனைத்தும் தாமரை -கையிலும் தாமரை ஏந்தி –
கடல் அரசன் வஸ்திரம் சமர்ப்பித்தான்
திக் கஜங்கள் பட்டாபிஷேகம் -செய்த திருக்கோலம் -புண்ய நதி இவள் வடிவம் –
யமுனா கூந்தல் கங்கா புன்னகை காவேரி –
ஸ்வர்ண முகி ஆபரணம் -ஆகாய கங்கை ஆபரணம் -பாலாறு திரு மார்பு –
ஸ்வயம்வரம் -திரு மார்பில் ஏறி அமர்ந்து வனமாலை ஊஞ்சல் ஆனதே –
நீர் வளம் நிலா வளம் பால் வளம் பெருகுமே -இவள் அருளாலே –

ஐந்தாம் -நாள் -சந்தான லஷ்மி -மடியில் குழந்தை -ஆறு திருக்கரங்கள் -கத்தி கேடயம் தரித்து –
பட்டர் திருவவதாரம் இவள் அருளாலே -ஞானப்பாலும் ஊட்டி அருளுகிறாள் –
கோமள வல்லி தாயார் சுந்தர தாத்தாச்சாரியார் -16-நூற்றாண்டு -அருளிய விருத்தாந்தம் -லஷ்மீ குமாரன் -தாத்தாச்சாரியார் வம்சம் –
ஜனக குல ஸூந்தரி -ருக்மிணி வஞ்சுளவல்லி தாயார் –
ஹேமாம்புஜ வல்லி ஆண்டாள் -தானாகவே அவதரித்து அருளுபவள்
வாயும் நல் மக்களைப் பெற்று மகிழ்வர்

ஆறாம் நாள் -வீர தைர்ய லஷ்மி -சிவந்த வஸ்திரம் -எட்டு திருக்கரங்கள் -ஆரோக்யம் -sound–mind–sound-body-
பக்த பிரகலாதனுக்கு அருளிய விருத்தாந்தம் -தூணிலும் உளன் –இல்லை என்று நீ சொல்லும் சொல்லிலும் உளன் –
ராமானுஜர் -தைரியமாக எதிர்த்து பேசும் திறன் -யாதவ பிரகாசர்
போஜ ராஜன் -நித்யம் அஷ்ட லஷ்மி ஆராதனம் -வீர லஷ்மீ இருக்கும் இடத்தில் விஜயம் தானம் தான்யம் சந்தானம் எல்லாமே இருக்குமே –

ஏழாம் -விஜய லஷ்மீ -சிவந்த ஆடை -எட்டு திருக்கரங்கள் -நம்பிக்கை நாச்சியார் ஸ்ரீ வஞ்சுள வல்லி தாயார் –
யானை வாஹனம் பிரசித்தம் -பெருமாள் பின்னே -இவள் முன் அமர்ந்து சேவை -கோயில் சாவி இவள் இடமே –
கோ செங்கண்ண சோழன் -70-எழில் மாடம் -போரில் வென்று -63-நாயன்மார்களில் ஒருவன் –
தெய்வ வாள் இவனுக்கு வழங்கி -இத்தை திரு மங்கை ஆழ்வார் அருளிச் செய்கிறார் -71-மணி மாடக் கோயில் கட்டி
புண்டரீக வல்லி தாயார் சிதம்பரம் -கம்பர் -முதலில் இங்கே தில்லை மூவாயிரவர் அனுமதி பெற்று வரச் சொல்ல
சிறை இருந்தவள் ஏற்றம் தானே10000-பாடல்கள் -எழுதி உள்ளேன் அருள வேண்டும்
ரமா உடைய பெருமையே ஸ்ரீ ராமாயணம்
சுடுகாட்டுக்கு சென்று சிவாச்சார்யர்களைக் கண்ட விருத்தாந்தம் -இறந்த சிறுவன் உயிர் பெற்று எழுவான் -நடந்ததே –

மஹா நவமி -சரஸ்வதி பூஜை – -ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் –
பரி முகமாக அருளிய பரமன் காண்மின் -திருமங்கை ஆழ்வார் -தேரழுந்தூர் -கம்பநாட்டாழ்வார் அவதாரம் –
தேவாதி ராஜன் ஆ மருவி அப்பன் –
கர்வம் -நான் முகன்-மார் கழி-மாரை தட்டும் அஹங்காரம் கழிந்தால் தான் மதி நிறையும்
மது கைடபர்களை அனுப்பி லீலை -ஹை மின்னல் -துர்கா தேவி பீஜாக்ஷரம் –
வரம் -தாங்களே சாவ நினைத்த அன்றே மரணம் -அதுக்கு உட்பட்டே அழித்து-அவர்கள் இடமே வரம் கேட்டுப் பெற்றான் –
தலை எழுத்து மாற்ற ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் அருள் -திருவடி துகள் பட்டாலே போதும் -தேசிகன் –
இதுவே ஆயுத பூஜை -விராட தேசம் -இன்று பூஜை செய்தான் அர்ஜுனன் -அதன் நினைவாகவே ஆயுத பூஜை –
அவர்கள் உபயோகிக்கும் உபகரணங்கள் பூஜை -செய்து விஜயம் பெறுவோம் நாமும் –
உத்தரன் விராட தேச மன்னன் -அர்ஜுனன் தேர் ஒட்டி -உத்தரனை தேர் ஓட்ட சொல்லி தான் போர் –
மரத்தில் உள்ள ஆயுதங்களுக்கு பூஜை செய்தான் -அந்த நாளே இந்த நாள் –
மறு நாள் விஜய தசமி நாட்டுக்குள் நுழைந்தார்கள்
அனைத்தும் அவனுக்கு உடல் -பொருள்களை பூஜை செய்து வழி படுகிறோம்
சரஸ்வதி -வார்த்தை -தேவி – புஸ்தகம் அனைத்துக்கும் பொருள் உண்டே
ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் -உபாசனம் -திருவடி துகள் நம்மை உஜ்ஜீவிக்கும் -தேசிகன் –

விஜய தசமி -வெற்றி தரும் நாள் –
தேவி பாகவதம் -மனஹிஷாசுரன் மஹிஷா சூ றன் -துர்கா தேவி உசி நுனி தவம் -விஜயம் பெட்ரா நாள்
ராமன் ராவணனை வீழ்த்தி சீதா பிராட்டியை மீட்ட நாள் விஜயம்
கல்லா ஐம்புலன்கள் -கண்டவாறு -மல்லா -இலங்கை அளித்த வில்லா என்னையும்
மீட்க வேணும் -திரு விண்ணகர் -உத்தம வில்லன் -ஸ்ரீ ராமபிரான் –
இலங்கை -உலக வாழ்க்கை -சம்சாரம் -அசோக வானம் -உடல் -ஐந்து கர்ம ஞான இந்திரியங்கள் –
பத்து தலை -மனம் தான் ராவணனின் சரீரம்
முக்குணம் -சத்வ விபீஷணன் விரட்டி ரஜஸ் தமஸ் சூர்ப்பனகை கும்பகர்ணன் வைத்து –
திருவடி -ஆச்சார்யர் -முத்திரை பொறித்து -நமக்காக தூது -அவன் இடம் -இணைத்து வைக்கிறார் –
இதுவே விஜய தசமி -தடைகளை போக்கி பெருமாள் திருவடி சேர்வோம்
இறைவனுக்கும் விஜயம் தனது சொத்தை அடைகிறான்
அம்பு போடும் உத்சவம் திருக்கண் கடாக்ஷம்
விஜய ஸூஹ்ருதம் -ஜெய -18-அத்யாயம் விஜயனுக்கு சொல்லி ஜகம் மறந்து -கஜம் ரக்ஷணம் –
ஜகந்நாதன் ஜெயம் அருளுவான் -ஜய ஜய விஜய ராகவன் நமக்கு விஜயம் அருளட்டும் –

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்