ந தேஹம் ந ப்ராணான்ந ஸ ஸூ க மேசேஷாபி லஷிதம்
ந சாத்மானம் நாந்யத் கிமபி தவ சேஷத்வ விபவாத்
பஹிர்ப்பூதம் நாத ஷணம் அபி சஹே யாது ஸததா
விநாஸம் தத் ஸத்யம் மது மதன விஜ்ஞாப நமிதம்—57-
நாத
தவ சேஷத்வ விபவாத் பஹிர்ப்பூதம்–உனது சேஷப்பட்டு இருக்கும் செல்வத்துக்குப் புறம்பான -உனக்கு சேஷப்படாத
தேஹம் க்ஷணம் அபி ந –உடம்பை ஒரு க்ஷணமும் பொறுக்க மாட்டேன்
ந ப்ராணான் சஹே –அப்படிப்பட்ட பிராணனையும் பொறுக்க மாட்டேன்
ந ஸ ஸூகம் அசேஷ அபி லஷிதம் சஹே -எல்லாரும் விரும்பக் கூடிய ஸூகத்தையும் ஸஹிக்க மாட்டேன்
ந ச ஆத்மானம் சஹே –ஆத்மாவையும் ஸஹிக்க மாட்டேன்
அந்யத் கிமபி ந சஹே -சேஷத்வ சூன்யமான வேறே ஒன்றையும் ஸஹிக்க மாட்டேன்
யாது ஸததா விநாஸம் -சேஷத்வ சூன்யமான கீழ்ச் சொன்ன தேஹாதிகள் எல்லாம் உரு மாய்ந்து போகட்டும்
தத் ஸத்யம் மது மதன விஜ்ஞாபநம் இதம் —-இங்கனம் விண்ணப்பம் செய்த இது சத்யம்
இது பொய்யாகச் சொன்னேன் ஆகில் மது பட்டது படுவேன் அத்தனை
கீழே இஷ்ட பிராப்தி -இதில் அநிஷ்ட நிவ்ருத்தி –
ஏறாளும் இறையோனும் -4-8-உடம்பினால் குறையிலமே-உயிரினால் குறையிலமே -மணிமாமை குறைவிலமே —
பத்தும் பத்தாக பரக்க அருளிச் செய்ததை ஒரு ஸ்லோகத்திலே அடக்கி அருளிச் செய்கிறார் –
ந தேவ லோகா க்ரமணம் -இது இளைய பெருமாள் உடைய -ஏறாளும் இறையோன்
ந ஹி மே ஜீவிதே நாரத்த -இது பிராட்டியினுடைய ஏறாளும் இறையோன்
பகவத் கைங்கர்யத்துக்கு உறுப்பு அல்லாதது முமுஷுக்களுக்கு த்யாஜ்யம் என்னும் சாஸ்த்ரார்த்தம் –
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எரிந்து
எண் அழலை தீர்வேனே போலே –
அழிவில்லா ஆத்மவஸ்துவையும் உருமாய்ந்து போகட்டும் என்றது சேஷத்வ ஊற்றத்தைப் பற்ற –
விஞ்ஞாபனம் — விஞ்ஞாபிதம் –பாட பேதங்கள் –
————-
துரந்தஸ்யா நாதே ரபரிஹரணீ யஸ்ய மஹதோ
நிஹீந ஆசாரோ அஹம் ந்ருபஸூர ஸூபஸ்யாஸ் பதமபி !
தயா ஸிந்தோ ! பந்தோ ! நிரவதிக வாத்ஸல்ய ஜலதே !
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணமி தீச்சாமி கத பீ—58-
தயா ஸிந்தோ ! –கருணைக் கடலே
பந்தோ !–சகலவித பந்துவானவனே
நிரவதிக வாத்ஸல்ய ஜலதே !–எல்லையற்ற வாத்சல்ய சமுத்ரமே
நிஹீந ஆசாரோ அஹம்–இழிவான நடத்தை உள்ள நான்
துரந்தஸ்ய –முடிவு இல்லாததும்
அநாதே-அடி அற்றதும்
அபரிஹரணீ யஸ்ய –பரிஹரிக்க முடியாததும்
மஹதோ–பெரியதுமான
அஸூபஸ்ய–பாபத்திற்கு
ஆஸ்பதமபி !–இருப்பிடமாய் இருந்தாலும்
தவ குணகணம் –உன்னுடைய அளவற்ற குணங்களை
ஸ்மாரம ஸமாரம் –பலகாலும் நினைத்து
கதபீ—அச்சம் கெட்டவனாய்
இதி இச்சாமி –இங்கனே இச்சிக்கின்றேன்
உனது சேஷத்வத்தை ஆசைப் படுகிறேன் என்கை –
பாபங்கள் வலிமை அச்சப்பட வைத்தாலும் திருவருள் முதலிய திருக் கல்யாண குணங்களை அனுசந்திக்க
பயங்கள் விலகி கைங்கர்யப் பிரார்த்தனை பண்ணுகிறார்
ந்ருபசு –ம்ருக பிராயன் -வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானங்களை மீறி ஆகார நித்தமும் இன்றி
மனம் போனபடி திரிவதால் –
——————–
அநிச்சன்நப் யேவம் யதி புநரி தீச்சந்நிவ ரஜஸ்
தமஸ் சந்தஸ் சத்மஸ்துதி வசன பங்கீ மரசயம்
ததா அபித்தம் ரூபம் வசநம வலம்ப்யா அபி க்ருபயா
த்வமேவை வம்பூதம் தரணி தர மே சிஷ்ய மந–59-
ஹே தரணி தர–சர்வ லோக நிர்வாஹனான எம்பெருமானே
ரஜஸ் தமஸ் சந்தஸ்-அஹம் -ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் மூடப்பட்டுள்ள அடியேன்
அநிச்சந் அபி ஏவம் -உண்மையாக இப்படி இச்சியாது இருந்த போதிலும்
இச்சந்நிவ–இச்சிப்பவன் போலே அபிநயித்து
சத்மஸ்துதி வசன பங்கீம் -கபடமாக ஸ்தோத்ரம் சொல்லுகிற இத்தை
யதி புநஸ் அரசயம்ந் ததா அபி -செய்தேனேயாகிலும்
இத்தம் ரூபம் வசநம் –இப்படிப்பட்ட கபடமான சொல்லை
அவலம்ப்ய அபி –ஆதாரமாகக் கொண்டாவது
இந்த பொறி தடவின வார்த்தையைவாவது பற்றாசாகக் கொண்டு
க்ருபயா–திருவருளாலே நீ தானே
ஏவம் பூதம் மே மநஸ் சிஷ்ய –இப்படிப்பட்ட எனது மனஸ்ஸைத் திருத்த வேணும்
திருத்திப் பணி கொண்டு அருள வேணும்
நாஸ்திகர் அல்லாமையாலே இச்சை இல்லை -என்ன மாட்டார் –
பேற்றுக்கு அனுரூபமான இச்சை பெறாமையாலே உண்டு -என்ன மாட்டார்
மாதவன் என்றதே கொண்டு -திருவாய் -2-7-3-என்றும்
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -திருவாய் -10-8-1- என்றும்
உக்தி மாத்ரமே ஜீவிக்கையாம் விஷயம் இறே –
தீ மனம் கெடுத்தாய் -2-7-8-
மருவித் தொழும் மனமே தந்தாய் -2-7-7-என்கிறபடியே-பாஹ்யமான மனஸ் ஸைத் தவிர்த்து
அடிமைக்கு அனுகூலமான மனஸ் ஸைத் தந்து அருள வேணும்-மனனக மலமறக் கழுவி -1-3-8-என்கிறபடியே
மநோ நைர்மல்யம் யோகத்தாலே பிறக்கக் கடவது உபாஸ்கனுக்கு –
அந்த யோக ஸ்தானத்திலே-பகவத் அனுக்ரஹமாய் இறே இவ்வதிகாரிக்கு இருப்பது –
கையார் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே
யாடி மெய்யே பெற்று ஒழிந்தேன் –
ஏதேனும் வியாஜ்யத்தை கொண்டு அஸ்மாதாதிகள் அஹ்ருதயமாக சொல்வதையும் கொண்டு
கார்யம் செய்ய வல்லவன் அன்றோ –
————-
பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ் த்வம் ப்ரிய ஸூஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஸ் சாஸி ஜகதாம்
த்வதீ யஸ் த்வத் ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத் கதி ரஹம்
பிரபன்னஸ் சைவம் ஸத்யஹம்பி தவை வாஸ்மி ஹி பர–60-
ஜகதாம் பிதா த்வம் மாதா த்வம் –உலகங்கட்க்கு எல்லாம் தகப்பனும் நீயே பெற்ற தாயும் நீயே
தயித தநயஸ் த்வம் –அன்பனான மகனும் நீயே
ப்ரிய ஸூஹ்ருத் த்வமேவ –உயிர்த் தோழனும் நீயே
த்வம் மித்ரம் –சர்வ ரஹஸ்யங்களும் சொல்லிக் கொள்ளுதற்குப் பாங்கான மித்ரனும் நீயே
குருரஸி –ஆச்சார்யனும் நீயே
கதிஸ்சாஸி –உபாய உபேயமும் நீயே
அஹம் த்வதீயஸ் –அடியேனோ என்றால் உன்னுடையவன்
த்வத் ப்ருத்யஸ் -உன்னாலே பரிகரிக்கத் தகுந்தவன்
தவ பரிஜநஸ் –உனக்குத் தொண்டன்
த்வத் கதிர் –உன்னையே கதியாகக் கொண்டவன்
பிரபன்னஸ் ச -ப்ரபன்னனுமாயும் இருக்கிறேன்
ஏவம் ஸதி –ஆன பின்பு
அஹம் அபி தவ ஏவ –அடியேனும் உனக்கே
பர அஸ்மி ஹி–ரஷ்யனாக இரா நின்றேன் காண் –
ஒழிக்க ஒழியாத உறவு முறை உள்ளதே
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வனும் நல் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவரே-என்றும்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு -என்றும் -போலே –
——————
ஜநித்வா அஹம் வம்ஸே மஹதி ஜகதி க்யாதய ஸ ஸாம்
ஸூசீ நாம் யுக்தா நாம் குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்
நிஸர்க்காத் ஏவ த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்
அதோ அத பாபாத்மா ஸரணத! நிமஜ்ஜாமி தமஸி–61-
ஸரணத! –வழி காட்டும் பெருமானே –அவர் அவர்களுக்கு தகுந்த உபாயத்தைக் கொடுத்து அருளுபவனே
அஹம் ஜகதி க்யாதய ஸஸாம்–அடியேன் உலகம் எங்கும் பரவின புகழை யுடையவர்களும்
ஸூசீநாம்–பரிசுத்தர்களும்
யுக்தா நாம்–உன்னை விட்டுப் பிரியாதவர்களும்
ஆத்ம சாஷாத்காரமான யோகத்தில் ஊன்றினவர்கள் என்றும்
உன்னுடன் நித்ய சம்ச்லேஷத்தை விரும்பி இருப்பவர்கள் என்றும்
ஒரு காலும் உன்னை விட்டுப் பிரியாதவர்கள் என்றும் மூன்றுமே உண்டே
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய் -9-3-7-என்று இருக்கை
இளைய பெருமாளைப் போலே தேவரோடே யல்லது
செல்லாதவர்கள் -என்னுதல்
குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்–அசேதன தத்வம் என்ன சேதன தத்வம் என்ன இவற்றின்
ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறிந்தவர்களும்
குண த்ரயாத்மகமான பிரக்ருதியை குணம் -புருஷன் -ஆத்மா –
தத்வ ஸ்திதி உண்மை நிலையை உணர்ந்தவர்கள் -தத்துவங்களின் ஸ்தியை உணர்ந்தவர்கள் என்றுமாம்
நிஸர்க்காத் ஏவ –த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்–பரிமளத்துடனே அங்குரிக்கும் திருத்துழாய் போலவும்
வத்ஸ்ம் ஆனது ஜனித்த போதே தாய் முலையிலே வாய் வைக்குமா போலவும்
இயற்கையாகவே உன்னுடைய திருவடித் தாமரைகளில் ஊன்றின மனமுடையவர்களான மஹான்களினுடைய
ஜநித்வா வம்ஸே மஹதி –சிறந்த குலத்திலே பிறந்து வைத்து
அதோ அத பாபாத்மா தமஸி–பாபிஷ்டனாய்க் கொண்டு இருள்மயமான மூதாவியிலே
அடி காண ஒண்ணாத கீழ் எல்லையில்
நிமஜ்ஜாமி–அழுந்திக் கொண்டே கிடக்கிறேன்
பன்மாமாயப் பல் பிறவியில் படிகின்ற யான் -திருவாய் -3-2-2-என்கிறபடியே
இன்னம் தரை கண்டிலன் -என்கிறார் –
சந்தாநிகர் தேவர் பக்கல் அவகா ஹித்த அளவும் நான் பிரக்ருதியில் உள் புக்கேன் -என்கை –
ஜனித்த வம்சம் இது
தேவர் சரண்யர்
நான் படுகிற பாடு இது இறே
அவமஞ்ஜனைப் போலே -வம்ஸ ப்ரபாவமும் ஜீவியாதே
தேவருடைய நீர்மையும் ஜீவியாதே இருக்கிற படி இறே -என்னுடைய பாப ப்ராசுர்யம் என்கிறார் –
——————–
அமர்யாத ஷூத்ரஸ் சலமதிர ஸூயாப்ரஸ்வபூ
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மர ப்ரவஸோ வஞ்சன பர
ந்ரு ஸ்ம்ஸ பாபிஷ்ட கத மஹமிதோ துக்க ஜலதே
அபாராதுத் தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ—62-
1-அமர்யாத –வரம்பு மீறினவனும்
2-ஷூத்ரஸ் –அற்ப விஷயங்களில் சாபல்யம் உள்ளவனும்
3-சலமதிர் -நின்றவா நில்லா நெஞ்சை உடையவனாயும்
4-அஸூயா ப்ரஸ்வபூ–பொறாமைக்குப் பிறப்பிடமானவனும்
5-க்ருதக்நோ -நன்றி கெட்டவனும்
6-துர்மாநீ –துர் அஹங்காரம் உள்ளவனும்
7-ஸ்மர ப்ரவஸோ –காமத்துக்குப் பரவசப் பட்டவனும்
8-வஞ்சன பர–பிறரை வஞ்சிப்பவனும்
சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே-
9-ந்ரு ஸ்ம்ஸ –கொடும் தொழில் புரிபவனும்
10-பாபிஷ்ட –மஹா பாபியுமான
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம்தாமை-பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –
அஹம் இத அபாராத துக்க ஜலதே-அடியேன் இந்த கங்கு கரை அற்ற துன்பக் கடலில் நின்றும்
உத்தீர்ணஸ் –கரை சேர்ந்தவனாய்
கதம் பரிசரேயம் தவ சரணயோ—உனது திருவடிகளில் எங்கனே கைங்கர்யம் பண்ணப் பெறுவேன் –
முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே கரை ஏற்ற வேண்டும் -என்கை –
கீழே பாபாத்மா என்று சுருங்கச் சொன்னதை விரித்து அருளுகிறார் -நம்முடைய அனுசந்தானத்துக்காக
நான் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க ஒரு பத்து விசேஷணங்களை விஸ்தாரமாக அருளிச் செய்கிறார்
துக்க நிவ்ருத்தியும் தேவருக்கே பரம் –
அடிமை கொள்ளுகையும் தேவருக்கே பரம் -என்கை —
—————
ரகுவர யத பூ ஸ்தவம் தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய
ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
பிரதிப வமபராத்துர் முக்த சாயுஜ்யதோ அபூ
வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா-63-
ஹே ரகுவர –ராகு வம்சத்தில் ஸ்ரீ ராமனாக திரு அவதரித்தவனே
த்வம் -நீ
தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய-அப்படிப்பட்ட மஹா அபராதியான காகாஸூரனது விஷயத்திலே
ப்ரணத இதி-இக் காகம் நம்மை வணங்கிற்று என்பதையே கொண்டு
தயாளூர் யத் அபூ –தயை பண்ணினாய் இறே
ஷிபாமி -என்றும் ந ஷமாமி -என்றும் பண்ணி வைத்த பிரதிஜ்ஞை பழியாதே
தேவர் க்ருபா கார்யமே பலித்து விட்டது – பிராட்டி சந்நிதி யாகையால் இறே-
முக்த கிருஷ்ண-குற்றம் அறியாத கண்ண பிரானே
கிருஷ்ணனாகி என்றும் கிருஷ்ண என்று சம்போதானமாகவும் –
பிரதிபவம் அபராத்துர்–பிறவி தோறும் அபராதம் பண்ணின
சைதயஸ்ய–சிசுபாலனுக்கு – யது வம்ஸ பூதரில் காட்டில்
சேதி குலோத்பவன் என்று தன்னை உத்க்ருஷ்டனாக அபிமானித்து இருக்குமவன் –
சாயுஜ்யதோ அபூச சயத-சாயுஜ்யம் அளித்தவனாயும் ஆனாய் இறே
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை –திருவாய் -7-5-3-
தஸ்ய தே ஷமாயா-அப்படி எல்லாம் செய்தவனான உன்னுடைய பொறுமைக்கு
அபதம ஆகஸ் கிம் அஸ்தி -இலக்காகாத குற்றம் என்ன இருக்கிறது
வத –அருளிச் செய்ய வேணும்
உனக்குப் பொறுக்க முடியாதது உண்டோ
சர்வஜ்ஞரான தேவருக்கும் மறு மாற்றம் இல்லை
க்ஷமித்து அருளி விஷயீ கரிக்கும் இத்தனை -என்கை –
—————
நநு பிரபன்னஸ் ஸக்ருதேவ நாத
தவாஹ மஸ்மீதி ச யாசமாந
தவா நுகம்ப்ய ஸ்மரத பிரதிஜ்ஞாம்
மதே கவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே–64-
நநு நாத-ஸ்வாமிந்
அஹம் ஸக்ருதேவ பிரபன்னஸ் இதி –நான் ஒரு கால் பிரபத்தி பண்ணினவன் என்றும்
அஹம் தவ அஸ்மி இதி ச -நான் உனக்கே உரிமைப்பட்டு இருக்கிறேன் என்றும் சொல்லிக் கொண்டு
யாசமாநஸ் அஹம் -கைங்கர்ய புருஷார்த்தத்தைப் பிரார்திக்கிற அடியேன்
தவ ஸ்மரத பிரதிஜ்ஞாம்–அன்று நீ கடற்கரையில் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்குப் பண்ணின ப்ரதிஜ்ஜையைத்
திரு உள்ளத்திலே கொண்டு இருக்கிற உனக்கு
அநு கம்ப்ய –அருள் புரிய அறியேன் –
மதேக வர்ஜம் கிம் இதம் வ்ரதம் தே–உன்னுடைய இந்த விரதம் என் ஒருவனைத் தவிர்த்ததோ
சர்வ சாதாரணமான ப்ரதிஜ்ஜை பொய்யோ
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே –ஸக்ருத் பிரபதனம் பண்ணினேன்
கதா அஹம் ஐகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்று
தவாஸ்மீதி யாசநனும் பண்ணினேன் -ப்ராப்ய அபேஷையும் பண்ணினேன் –
அபயம் ததாமி ப்ரதிஜ்ஜை பலிக்க வேண்டியது அன்றோ –
சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே -அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம
ஸ்க்ருதேவ -என்றது –
சஹசைவ -உடனேயே -என்று ஆழ்வான் நிர்வஹிக்கும் –
அநாதி காலம் சம்சரித்துப் போந்த இவன் ஒரு ஜன்மம் எல்லாம் ப்ரபத்தியை
அனுசந்தித்தால் தான் -ஸ்க்ருத் -என்கைக்குப் போருமோ -என்பர் எம்பார் –
பகவத் ப்ரபாவத்தைப் பார்த்தால் ஒரு காலுக்கு மேல் மிகை –
ப்ராப்ய ருசி ப்ராப்தி அளவும் அனுவர்த்திக்கும் -என்பர் பட்டர் –
—————-
அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-
மத் வ்ருத்தம் –என்னுடைய நடவடிக்கையை
அசிந்தயித்வா–கணிசியாமல்
அக்ருத்ரிம த்வச் சரணார விந்த ப்ரேம ப்ரகர்ஷ அவதிதம் -உனது திருவடித் தாமரையில் உண்மையாக
உண்டான பரம பக்திக்கு எல்லை நிலமாய் இருப்பவரும்
ஆத்மவந்தம்–ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்தவரும் -ஜிதேந்த்ரியர் -சத்தை பெற்றவர்
பிதாமஹம் நாத முநிம் -எனக்குப் பாட்டனாருமாகிய ஸ்ரீ மந் நாத முனிகளை–
ஸ்ரீ ஈஸ்வர பட்டரது திருக்குமாரர் நம் ஆளவந்தார்
விலோக்ய–கடாக்ஷித்து
ப்ரஸீத –அடியேனை அனுக்ரஹித்து அருளாய்
ஸ்ரீமந் நாத முனிகளுடைய தேக சம்பந்தமும் ஆத்ம சம்பந்தமும்–ஜென்மத்தாலும் -வித்யையாலும் -சம்பந்தம்
முக்கிய ஹேது -அவனாலும் விட ஒண்ணாதது அன்றோ
மத் வ்ருத்தம சிந்தயித்வா-நிக்ரஹத்துக்கு என்னுடைய பாபங்கள் ஹேதுவானாலும்
அனுக்ரஹத்துக்கு இந்த மஹத் சம்பந்தம் உண்டே
மத் வ்ருத்தம் -என்று சத் கர்மத்தை நினைக்கிறது -என்றுமாம் –
வ்ருத்தவான் என்றால் சத் கர்ம யுக்தனை இறே சொல்லுகிறது –
ஸ்வ கதமான வற்றை அநாதரித்து
பெரிய முதலியார் சம்பந்தம் எனக்குத் தஞ்சமாக வேணும் என்று பிரார்த்தித்து
ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –
அப்படியே அனுக்ரஹித்தோம் என்று சோதிவாய் திறந்து அருளிச் செய்ய
மநோ ரதம் தலைக் கட்டப் பெற்று ஸ்தோத்ரத்தையும் தலைக் கட்டி அருளுகிறார்
யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்து தாம் உபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்
எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய ஸ்ரீ யாமுனாசார்யரை வணங்குகிறேன் –
—————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply