திக ஸூ சிமவி நீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ யோ அஹம் யோகி வர்யாக் ரகண்யை
விதி ஸிவ ஸ்நகாத் யைர் த்யாது மத்யந்த தூரம்
தவ பரி ஜன பாவம் காம்யே காம வ்ருத்த —47–
பரம புருஷ-புருஷோத்தமனே
காம வ்ருத்த —மனம் போகும் படி நடக்கிற
ய அஹம்–யாவன் ஒருவன்
யோகி வர்யாக் ரகண்யை–யோகி ஸ்ரேஷ்டர்களுள் சிரந்தவர்களான
விதி ஸிவ ஸ்நகாத் யைர்-பிரமன் சிவன் சனகர் முதலான வர்களாலும்
த்யாதும் அத்யந்த தூரம்–நெஞ்சால் நினைப்பதற்கும் மிகவும் எட்டாதான
தவ பரி ஜன பாவம் காம்யே –உனது பரிசாரகன் ஆவதற்கு விரும்புகின்றேனோ
தம -அப்படிப்பட்ட
அ ஸூசிம் அ விநீதம் நிர்த்தயம் அலஜ்ஜம்-மாம் திக் -அபரிசுத்தனும் -வணக்கம் அற்றவனும்
இரக்கம் அற்றவனும் வெட்கம் அற்றவனுமான என்னை நிந்திக்க வேணும்
கீழே பவந்தம் -என்று அனுசந்தித்து -அஹம் -தன்னைப் பார்த்த வாறே
அசுசிம் -அவிநீதம் –நிர்த்தயம் -அலஜ்ஜம் -நான்கு விசேஷணங்கள்
நிர்த்தயம்-அம்ருதத்தை விஷத்தாலே தூஷித்தால் போலே விலஷண போக்யமான பகவத் தத்தவத்தை
கண்ணற்று தூஷிக்கப் பார்த்த நிர்த்தயனை
நிர்ப்பயம் -பாட பேதம் தேசிகன் காட்டுகிறார் –
நிரதிசய போக்யரான தேவர் உடைய கைங்கர்ய அம்ருதத்தை சத்தா பிரயுக்தமான ருசியையும்
வைலஷண்யத்தையும் உடையநித்ய ஸூரிகள் ஆதரிக்கும் அத்தை அன்றோ நான் ஆதரித்தது –
சங்கத்து அளவிலே நின்றேனோ-பெற்று அல்லது தரியாத தசையைப் பற்றி நின்றேன்
கதா நு சாஷாத் கரவாணி -என்றும் கதா ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்றும் -கூப்பிட்டேன்
ராஜ அன்னம் விஷ சம்ஸ்ப்ருஷ்டம் ஆவதே -என்று-வளவேழுலகில்-1-5- ஆழ்வாரைப் போலே
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் -யான் யார்
திருமாற்கு யாமார் வணக்கமார் ஏ பாவம் நல் நெஞ்சே நாமா மிகவுடையோம் நாழ் -பெரிய திருவந்தாதி -10-)
ஹா ஹா என்ன சகாசமான கார்யம் செய்ய முயன்றோம் என்று தம்மை நிந்திக்கிறார் –
——————-
அபராத சஹஸ்ர பாஜநம்-
பதிதம் பீம்ப வார்ண வோதரே
அகதிம் சரணா கதம் ஹரே
க்ருபயா கேவல மாத்மஸாத் குரு–48–
ஹரே-ப்ரணதார்த்தி ஹரனான பெருமானே
அபராத சஹஸ்ர பாஜநம்-பலவகைப்பட்ட அபராதங்களுக்கு கொள்கலமாகவும்
பதிதம் பீம்ப வார்ண வோதரே–பீம பாவ அர்ணவ உதரே பதிதம்–பயங்கரமான சம்சாரக் கடலினுள்ளே விழுந்தவனாயும்
உதரே-நின் பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான் -3-2-2- என்கிறபடியே
எடுக்கப் பார்த்தாலும் எட்டாத படியாய் இருக்கை –
அகதிம் –வேறே கதி அற்றவனாயும்
சரணா கதம் -சரணாகத்தான் என்று பேர் இட்டுக் கொண்டவனாயும் இருக்கிற அடியேனை
க்ருபயா கேவல மாத்மஸாத் குரு–உனது திருவருள் ஒன்றையே கொண்டு திருவுள்ளம் பற்றி அருள வேணும் –
அகலப்பார்த்தார் கீழ் -கைங்கர்ய அபிநிவேசம் மிக்க இருக்க கை வாங்க முடியாதே –
இரும்பையும் பொன்னாக்க வல்ல சர்வசக்தன் அன்றோ –
கிருபை ஒன்றையே கொண்டு நித்ய கைங்கர்யத்துக்கு
ஆளாக்கிக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்
இங்கு விசேஷணங்களை மாத்திரமே சொல்லி –
மாம் –நிந்தைக்கு யோக்யமாயும் வெறுப்புக்கு இடமாயும் உள்ளத்தை –
தம்மைச் சொல்லிக் கொள்ள திரு உள்ளம் இல்லாமல் –
வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச் திருமொழி -5-4-என்னக் கடவது இறே
பகவத் சந்நிக்குள் புகும் பொழுது அனுசந்திக்க வேண்டிய ஸ்லோகம் – இதுவும் –
————-
அவிவேகக நாந்த திங்முகே
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி
பகவன் பவது ர்த்தி நே பத
ஸ்கலிதம் மாமவ லோகயாச்யுத—49–
பகவன் அச்யுத—அடியாரைக் கை விடாத எம்பெருமானே
அவிவேகக நாந்த திங்முகே–அவிவிவேகம் ஆகிற மேகங்களினால் இருந்து கிடக்கிற திசைகளை உடையதும்
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி–பலவிதமாக இடைவிடாமல் பெருகுகின்ற துக்கங்களை வர்ஷித்துக் கொண்டு இருப்பதுமான
பவதுர்த்திநே –சம்சாரமாகிற துர் ததிநத்திலே–மழைக் கால விருளிலே—மப்பு மூடின தினத்துக்கு துர்த்தினம்
நண்ணாதார் முறுவலிப்ப நல்ல உற்றார் கரைந்து ஏங்க எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை –
பத ஸ்கலிதம் மாமவ லோகயா–கொடு வினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம்
வழி திகைத்து அலமருகின்றேன்-3-3-9-என்கிறபடியே
நல் வழியில் நின்றும் தப்பி இருக்கிற அடியேனை கடாக்ஷித்து அருள வேணும்
கிருபயா கேவல மாத்ம ஸாத் குரு – என்று-உனது கடாக்ஷம் அடியேனுக்கு உஜ்ஜீவன ஹேது
—————–
ந ம்ருஷா பரமார்த்த மேவ மே
ஸ்ருணு விஜ்ஞாப நமேக மக்ரத
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தய நீயஸ் தவ நாத துர்லப—50-
நாத-எம்பெருமானே
ந ம்ருஷா –பொய் அன்றிக்கே
பரமார்த்த மேவ –உண்மையாகவே இருக்கிற
மே ஏக விஜ்ஞாபநம் –அடியேனது ஒரு விண்ணப்பத்தை
ஸ்ருணும் அக்ரத–முந்துற முன்னம் கேட்டு அருள்
இமையோர் தலைவா மெய் நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பம் -ஆழ்வார் போலே இங்கு இவரும்
மே ந தயிஷ்யஸே யதி -அடியேனுக்கு அருள் செய்யாயாகில்
தத -அடியேன் கை தப்பிப் போன பின்பு
தய நீயஸ் தவ துர்லப—உனக்கு அருள் செய்யத் தகுந்தவன் கிடைக்க மாட்டான்
கொள்வார் தேட்டமான தேவரீர் கிருபைக்கு என்னைப் பாத்ரமாக்கா விடில் வேறு கிடைப்பது அரிது –
இழக்காதே -என்று சமத்காரமாக அருளிச் செய்கிறார்
—————–
தத் அஹம் த்வத் ருதே ந நாதவான்
மத்ருதே த்வம் தயநீயவான் ந ஸ
விதி நிர்மிதமே ததந்வயம்
பகவன் பாலய மா ஸம ஜீஹப —51-
பகவன்-எம்பெருமானே
தத் அஹம் த்வத் ருதே ந நாத வான்–ஆகையினால் அடியேன் உன்னைத் தவிர வேறே ஒருவனை நாதனாக உடையேன் அல்லேன்
மத்ருதே த்வம் தயநீயவான் ந ஸ-நீயும் என்னைத் தவிர வேறு ஒருவனை அருள் கொள்பவனாக உடையை அல்ல
விதி நிர்மிதமே ததந்வயம்–தெய்வ வசத்தால் நேர்ந்த இந்த சம்பந்தத்தை
விதி வாய்க்கின்று காப்பாரார் -5-1-1- என்கிறபடியே –
விதி வசத்தால் வாய்ந்து இருக்கிற ரஷ்ய ரஷக பாவத்தை
ஸூஹ்ருத விசேஷம் அடியாகப் பிறக்கும் பகவத் கிருபையை -நம்மால் பரிஹரிக்க ஒண்ணாததை -விதி என்கிறோம்
உன் தன்னோடு உறவேல் நம்மோடு இங்கு ஒழிக்க ஒழியாதே-அவனாலும் பரிஹரிக்க ஒண்ணாதே
ஏதத் அந்வயம் ஏதம் அந்வயம் -பாட பேதங்கள்
பாலய மா ஸம ஜீஹப —காப்பாற்றிக் கொள் விடுவிக்க வேண்டாம் –
இந்த சம்பந்தத்தை நான் விட நினைத்தாலும் நீ விடுவிக்க ஒண்ணாது தடுக்க வேண்டும் என்றபடி –
இத்தலையில் பூர்வ அபராதத்தைப் பார்த்தாதல்
தேவர் பூர்த்தியைப் பார்த்த்தாதல்
கை விட்டு அருளாது ஒழிய வேண்டும் –
————
வபுராதி ஷூ யோ அபி கோ அபி வா
குண தோ அஸாநி யதா ததா வித
ததயம் தவ பாத பத்மயோ
அஹமத் யைவ மயா ஸ்மர்ப்பித்த –52-
வபுராதி ஷூ –சரீரம் முதலியவைக்குள்
யோ அபி கோ அபி வா-ஏதாவது ஒன்றாகவும்
குண தோ அஸாநி யதா ததா வித–குணத்தினால் எனும் ஒருபடிப் பட்டவனாகவும் இருக்கக் கடவேன் –
அவற்றில் ஒரு நிர்பந்தம் இல்லை
ததயம் தவ பாத பத்மயோ அஹம் -ஆகையினால் இந்த ஆத்ம வஸ்துவானது உன்னுடைய திருவடித் தாமரைகளில்
மத் யைவ மயா ஸ்மர்ப்பித்த –இப்பொழுதே என்னால் சமர்ப்பிக்கப் பட்டதாயிற்று
சம்பந்தம் உண்டு என்று ஹ்ருதய விசுவாசம் இல்லாமல் மேல் எழுந்த -பொறி புறம் பூசின பாசுரம் இல்லை
த்வம் மே அஹம் மே -விவாதம் செய்யாமல் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறார்
ஆத்மா ராஜ்யம் தனம் மித்ரம் களத்ரம் வஹநானி ஸ –இதி தத் ப்ரேஷிதம் சதா –
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி –
சித்தி த்ர்யம் அருளிச் செய்த இவரே ஆத்மா தேகமோ இந்த்ரியமோ பிராணனோ எதுவாக இருந்தாலும்
ஆத்மா அணுவாகவோ சர்வ வியாபியோ ஏக ரூபனோ பரிணாமம் கொண்டதோ ஞானியா அஞ்ஞானியா –
இவற்றை நிஷ்கரிக்கப் போகிறேன் அல்லேன்
அதுவாகவே கொண்டு உன்னை ஆராதிப்பேன் என்கிற வேத வாக்கியத்தின் படியே -என்பது சேஷத்வ
பிரதானத்தை அருளிச் செய்கிறார்
இங்கு ஆத்மாவை அஹம்-அஹம் –
பராகர்த்த வ்யாவ்ருத்தனாய்
பிரத்யகர்த்த பூதனாய்
ப்ரத்யஷ பூதனாய்
பிரகாசிக்கிற நான் – என்கிறார் ஆகையால்
தேக இந்திரிய மனா பிராணாதி விலக்ஷணனாய் அஹம் புத்தி போத்யனாய் உள்ள ஆத்மா
என்கிற சித்தாந்தமும் வெளியிட்டு அருளுகிறார்
—————–
மம நாத யதஸ்தி யோஅஸ்ம்யஹம்
சகலம் தத்தி தவைவ மாதவ
நியத ஸ்வ மிதி பரப்புத்ததீ
அதவா கிந்நு சமர்ப்பயாமி தே–53-
மாதவ நாத-ஸ்ரீ யபதியான பெருமானே
மம யதஸ்தி யோஅஸ்ம்யஹம்—-யத மம அஸ்தி -அஹம் யஸ் அஸ்மி –யாது ஓன்று எனக்கு உரியதாய்
இருக்கின்றதோ -நான் எப்படிப்பட்டவனோ
சகலம் தத்தி தவைவ –நியத ஸ்வ மிதி-அது எல்லாம் உனக்கே எப்போதும் உரிமைப் பட்டது என்று
பரப்புத்ததீ–நன்றாகத் தெரிந்து கொண்ட அடியேன்
அதவா கிந்நு சமர்ப்பயாமி தே–உனக்கு எத்தை சமர்ப்பிப்பேன்
அதவா -கீழில் சமர்ப்பண பஷ வ்யாவ்ருத்தி –
யானே நீ என் உடைமையும் நீயே -அனுதபிக்கிறார்
எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே –என்றதுமே –
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய் -எனது யாவி யார் யான் யார் தந்த நீ கொண்டாக்கினையே –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் –இப்படி எம்பெருமான் உடன் கலந்த கலவையால் உள்ள நிரவதிக ப்ரீதியாலே
அறிவு இழந்து இவ்வாத்மா தன்னுடையது அன்று என்று நிரூபிக்க மாட்டாராய் –
அவன் தம்மோடு கலந்த இப்பெரு நல் உதவிக்கு கைம்மாறாக தம்முடைய ஆத்மாவை அவனுக்கு மீளா வடிமையாகக் கொடுத்து –
பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து -என்று அருளிச் செய்கிறார் –
கர்ம உபாத்திகம் அன்றிக்கே ஞான விபாக கார்யம் -ஆகையால் அடிக் கழஞ்சு பெறுமே
ஒட்டு உரைத்து இவ் வுலகு உன்னை புகழ்வு எல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி —
இழிவுச் செயல் –என்றவரே கொண்டல் வண்ணா கடல்வண்ணா என்று பலகாலும் அருளிச் செய்கிறார்களே
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் -என்று அருளிச் செய்தெ பலவாறு புகழ்கின்றார்களே
பரஸ்பர வ்ருத்தமாக தோற்றினாலும் விருத்தம் இல்லையே
சமர்ப்பணீயம் ஆகைக்கு ஸ்வாம்யம் இல்லை –
சமர்ப்பிக்கைக்கு ஸ்வா தந்த்ர்யம் இல்லை –
சம்சார பீதையாலே சமர்ப்பிக்கையும்
ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானத்தாலே அநு சயிக்கையும்
இரண்டும் யாவன் மோஷம் அநு வர்த்திக்கக் கடவது-
—————–
அவபோதி தவா நிமாம் யதா
மயி நித்யாம் பவதீ யதாம் ஸ்வயம்
க்ருபயைதத நனய போக்யதாம்
பகவன் பக்திமபி ப்ரயச்ச மே—54-
பகவன் மயி நித்யாம்–எம்பெருமானே என் பக்கல் சாஸ்வதமாய் உள்ள
இமாம் பவதீ யதாம்–உனக்கே உரிமைப்பட்டு இருக்கிற இந்த சேஷத்வத்தை
யதா ஸ்வயம் அவபோதி த்வாந் -எப்படி நீ தானே அறிவித்தாயோ
ஏதத் அநந்ய போக்யதாம-இது தவிர வேறு ஒன்றில் போக்யதையை உடைத்தது ஆகாதே -பரம போக்யமான
பக்திமபி ப்ரயச்ச மே—பக்தியையும் அடியேனுக்குத் தந்து அருள வேணும்
ஸ்வயம் புருஷார்த்தமான பக்தியையும் தந்து அருள வேணும்
வேறு ஒன்றில் போக்யதா புத்தியையும் தவிர்த்து அருளி -வேறு ஒன்றுக்கு நெஞ்சுக்கு விஷயம்
ஆக்காதபடியான பக்தியைத் தந்து அருள வேணும் –
நிர்ஹேதுக கிருபையால்-இந்த சேஷத்வத்தை உணர்த்தினாப் போலே
இந்த ஜ்ஞானம் புருஷார்த்த உபயோகியாம்படி-இந்த கிருபையாலே
ஸ்தான த்ரயோதித -பர பக்தியைத் தந்து அருள வேண்டும் என்கிறார் –
ஸ்தான த்ரயம் ஆவது
புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வ நன்யயா -ஸ்ரீ கீதை -8-22
பக்த்யா த்வ நன்யயா சக்ய -11-54-என்றும்
மத் பக்திம் லபதே பராம் -18-54-
—————
தவ தாஸ்ய ஸூ கைக ஸங்கி நாம்
பவ நேஷ் வஸ்த்வபி கீட ஜன்ம மே
இதரா வஸ தே ஷூ மா ஸம பூத்
அபி மே ஜன்ம சதுர்முகாத்மா நா—55-
தவ தாஸ்ய ஸூ கைக ஸ்ங்கி நாம்–உன்னுடைய அடிமை யாகிற இன்பம் ஒன்றிலேயே
விருப்பம் உள்ள மஹான்களுடைய
பவ நேஷ் வஸ்த்வபி கீட ஜன்ம மே-அஸ்து -திரு மாளிகைகளில் அடியேனுக்குப் புழுவாகப் பிறப்பதுவும் ஆயிடுக
அபி -சப்தம் அவதாரணத்திலே யாய் கீட ஜன்மமே உண்டாக வேண்டும் என்றுமாம் –
இதரா வஸ தேஷூ –அடிமைச் சுவடு அறியாத மற்றையோர் வீடுகளில்
மா ஸம பூத்அபி மே ஜன்ம சதுர்முகாத்மா நா–நான்முகனாகப் பிறப்பது தானும் எனக்கு வேண்டா
பாகவத சேஷத்வ பர்யந்தம் போனால் தானே பகவத் சேஷத்வம் ரசிக்கும் -என்கிற
சாஸ்த்ரார்த்தம் அருளிச் செய்கிறார்
ஜாதியில் ஏற்றத்தாழ்வு உபயோகம் அற்றது பாகவத சேஷத்வமே வாய்க்கும் அத்தனையே வேண்டுவது
பகவத் ப்ரசாதத்தாலே லப்தமான பக்தி ப்ராசுர்யத்தாலே
தச் சேஷத்வ அளவில் பர்யவசியாதே
ததீய சேஷத்வத்தை பிரார்த்திக்கிறார் –
ஆழ்வார் -கண்கள் சிவந்து -8-8- விலே பகவச் சேஷத்வத்தை அனுபவித்து
கருமாணிக்க மலை -யிலே அனன்யார்ஹ சேஷத்வத்தை அனுசந்தித்து
அவ்வளவிலும் பர்யவசியாதே
நெடுமாற்கு அடிமை யிலே ததீய சேஷத்வத்தை அனுசந்தித்தாப் போலேயும்
ஸ்ரீ இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருகன ஆழ்வானைப் போலேயும்
ததீய சேஷத்வத்தை பிரார்த்திக்கிறார் –
அன்வயத்திலும் வ்யதிரேகத்திலும் இரண்டிலும் உண்டான நிர்ப்பந்தம் தோற்ற இருக்கலாம் -என்கிறார் –
—————-
ஸ்க்ருத் த்வ தாகார விலோக நாஸ்யா
த்ருணீ கருதா நுத்தம புக்தி முக்திபி
மஹாத்மபிர் மாமவ லோக்யதாம் நய
ஷானே அபி தே யத் விரஹொ அதிது ஸ்ஸ்ஹ–56-
ஸ்க்ருத் த்வ தாகார விலோக நாஸ்யா–ஒரு கால் உனது திரு மேனியை சேவிக்க வேணும் என்கிற விருப்பத்தினால்
த்ருணீ கருதா நுத்தம புக்தி முக்திபி-மிகவும் சிறந்த செல்வத்தையும் மோக்ஷத்தையும் த்ருணமாக வெறுத்து இருக்கிற
மஹாத்மபிர் அவ லோக்யதாம் –மஹானுபவர்களால் கடாக்ஷிக்க உரியனாய் இருக்கையையே
மாம் நய–அடியேனுக்கு அளித்து அருள வேண்டும்
எப்படிப்பட்ட மஹான்களின் கடாக்ஷத்தை விரும்புகிறேன் என்னில்
ஷனே அபி தே யத் விரஹ–எந்த மஹான்களினுடைய பிரிவானது உனக்கு ஒரு நொடிப் பொழுதும்
அதிது ஸ்ஸ்ஹ–மிகவும் பொறுக்க முடியாததோ
தை- மஹாத்மபிர் அவ லோக்யதாம்–என்று கீழோடே அந்வயம்
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியின் பால் வாராய் விண்ணும் மண்ணும் மகிழவே -என்று பிரார்த்தித்து
இந்திரா லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
வானாளும் மா மதி போல் வெண் குடைக் கீழ் மன்னவர் தம் கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வம் அறியேன்
கம்ப மத யானைக் கழுத்தகத்தின் மேல் இருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் —
ஆழ்வார்கள் கடாக்ஷம் பெற ஆசைப்படுகிறார்
இவர்கள் தானே -அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே ஒரு மா நொடியும் பிரியான
என் ஊழி முதல்வன் ஒருவனே -என்று இருப்பார்கள் அன்றோ –
—————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply