Archive for November, 2019

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம உரை– மூன்று – தடவை வரும் திரு நாமங்கள் ..

November 28, 2019

மூன்று தடவை வரும் திரு நாமங்கள்..

1-அச்யுத–101/319/557

101-ஆஸ்ரித வத்சலன் திருநாமம்
319-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் திருநாமம்
557-சுத்த ஸ்வரூபி திருநாமம்

———

2-அஜ : 96/206/524

96-பரத்வம்-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி
206-அஜ – ஸ்ரீ நரசிம்ஹ அவதார திருநாமம்
524-அஜ –பிரணவ ஸ்வரூபி திருநாமம்

————-

3-பிராண : 67 /321/408

67-பிராண –பரத்வம்-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திருநாமம்
321-பிராண-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் திருநாமம்
408-பிராண –-ஸ்ரீ ராம அவதார திருநாமம்

——————–

4-பத்ம நாப : 48/198/347-

48-பத்ம நாப –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
198-பத்ம நாபன் – ஸ்ரீ பத்மநாபாவதாரம் திருநாமம்
347-பத்ம நாப –பர வாசுதேவன் ரூப குண வாசகம் -திருநாமம்

————–

5-மாதவ : 73/169/741-

73-மாதவ-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திருநாமம்
169-மாதவ –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -திருநாமம்
741-மாதவ-ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்

————-

6-வீரஹா 168/747/927-

168-வீரஹா –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் திருநாமம்
747-வீரஹா-கிருஷ்ணாவதார திருநாமம்
927-வீரஹா –ஸ்ரீ கஜேந்திர மோஷ பரமான திருநாமம்

—————

7-ஸ்ரீமான் 22/180/222..

22-ஸ்ரீ மான் –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
180- ஸ்ரீ மான் –ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் திருநாமம்
222–ஸ்ரீ மான் –ஸ்ரீ மத்ஸ்ய அவதார திருநாமம்

—————-

8-வாசுதேவ 333/700/714

333-வாஸூ தேவ- ஸ்ரீ பர வாசுதேவன் குண வாசகம் திருநாமம்
700- வாஸூ தேவ -ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்
714-வாஸூதேவ –ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்

———-

9–விஷ்ணு –2/259/663-

2-விஷ்ணு –பரத்வம் – வ்யாப்தி –ஸர்வேஸ்வரத்வம்-திருநாமம்
259-விஷ்ணு–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி-திருநாமம்
663-விஷ்ணு –சக்தீசம் அவதார திரு நாமம்

————-

10-வீர: 168/464/664-

168-வீரஹா –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் திரு நாமம்
464-வீர பாஹூ-அலை கடல் கடைந்து அமுதம் கொண்டவன்-திரு நாமம்
664-வீர–சக்தீசம் அவதார திரு நாமம்

—————-

11-சௌரி : 341/649/650

341- சௌரி –பர வாசுதேவன் குண வாசகம்-திருநாமம்
649-சௌரி-அர்ச்சாவதாரம் பரமான திருநாமம்
650-அர்ச்சாவதாரம் பரமான திருநாமம்

——————

12-பாவந : 32/293/817-

32-பாவந –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
293-பாவநா–விஸ்வ ரூபம்-திருநாமம் –
817-பவன –தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திருநாமம் –

—————

13.போக்தா -145/502/889-

145-போக்தா-ஸ்ரீ வ்யூஹ நிலை திருநாமம்
502-போக்தா–தர்ம ஸ்வரூபி -திருநாமம்
889-அநந்த ஹூத புக் போக்தா –அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திருநாமம் –

———–

14-வஸூ : -105/271/701

105-வஸூ-ஆஸ்ரித வத்சலன் திருநாமம்
271-வஸூ –சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி-திருநாமம்
701-வஸூ–ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம் –

————–

15-சத்ய :- -107/213/873-

107 ஸத்ய –பரத்வம்-ஆஸ்ரித வத்சலன்-திருநாமம்
213-சத்ய-ஸ்ரீ மத்ஸ்ய அவதார திருநாமம்
873-சத்ய –சத்வ குணம் வளர்க்கும் -சாத்விகர் தலைவன் பரமான திருநாமம்

————-

1-அச்யுத–101/319/557

101-அச்யுத–ஆஸ்ரித வத்சலன் திருநாமம்

தன்னைப் பற்றினாரை நழுவ விடாதவன் –
ஆபிமுக்யம் மாத்ரம் இருந்தாலும் அறிந்து -மித்ர பாவேன-சம்ப்ராப்தம் நத்யஜேயம் -கதஞ்சன –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் –
கார்திகையானும் –முதுகிட்டு -பாணனை நிர்கதியாக விட்டு ஓடிப் போனவர்கள் போலே அன்று
அச்சுதன் -அமலன் -என்கோ -3-4-5-

தம்மை அடைந்தவரை விட்டு நீங்காதவர் -ஸ்ரீ பராசர பட்டர்

யஸ்மாத் ந ச்யுத பூர்வ அஹம் அச்யுத தேந கர்மணா
தஸ்ய அஹம் ந ப்ரணஸ்யாமி –ஸ்ரீ கீதை-6-30-
நத்யஜேயம் கதஞ்சன –யுத்த -18-3-

தம் ஸ்வரூப மகிமை முக்காலத்திலும் நீங்காதவர் -ஸ்ரீ சங்கரர்

தேச கால குணங்களால் வீழ்ச்சி இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

ஓம் அச்சுதாய நம
அடியார்களை விடாதவன் –மீண்டும் -320-/-557-நாமாவளி வரும்

————–

319-அச்யுத –ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் திருநாமம்

நழுவாதவன்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே -திரு மாலை 2
முன்பே 101-பார்த்தோம் -மீண்டும் 557-வரும்

பிரமன் முதலியவர்க்கு சமமாக அவதரித்த போதும் தம் இறைமை குன்றாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆறுவித விகாரங்கள் அற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

தேசம் காலம் குணம் முதலியவற்றில் நழுவுதல் இல்லாதவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

557-அச்யுத –சுத்த ஸ்வரூபி திருநாமம்

நித்ய ஈஸ்வரன்
வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் -4-5-3-
அச்சுதன் அமலன் -3-4-5
முன்பே 101-320 பார்த்தோம்

வ்யூஹத்திலும் தமது ஸ்தானத்தில் இருந்து நழுவாதவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்யவந உத்பத்தி யக்தஷு ப்ரஹ்ம இந்த்ர வருணாதிஷு யஸ்மாந்ந ஸ்யவசே ஸ்தாநாத் தஸ்மாத்
சங்கீர்த்தயசே அச்யுத–ப்ரஹ்மாதிகள் கர்மவசப்பட்டவர்கள்

——————–

2-அஜ : 96/206/524

96-அஜ –-பரத்வம்-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி
தடைகளை விலக்குபவன்-
அடியார்கள் வினைத் தொடரை அருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைபவன் –
என் தன் மெய் வினை நோய் களைந்து நல் ஞானம் அளித்தவன்
ஒ இறப்பிலி -அகாரத்தால் சொல்லப்படுபவன் -206-524- மீண்டும் வரும் –

அவர்கள் தம்மை அடைவதற்கு இடையூறுகளை தாமே விலக்குபவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

தேஷாம் ஏவ அநு கம்பார்த்தம் அஹம் அஞ்ஞானஜம் தமஸ் நாசயாமி ஆத்ம பாவஸ்த ஞான தீபேந பாஸ்வதா –ஸ்ரீ கீதை -10-11-
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி –ஸ்ரீ கீதை -18-66-

பிறப்பற்றவர்-ஸ்ரீ சங்கரர் —

பிறப்பற்றவர் -செல்பவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்

ஓம் அஜாய நம
தாமே பிரதிபந்தகங்களைப போக்கி தன்னிடம் சேர்த்துக் கொள்பவன்

———–

206-அஜ – ஸ்ரீ நரசிம்ஹ அவதார திருநாமம்

பிறப்பிலி -ஸ்தம்பம் -நம் போல் பிறவாதவன் –
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுவே -பெரியாழ்வார் -1-6-9
இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப் பிரான் -2-8-9-
அஜன் -யாவரையும் வெற்றி கொள்பவன் அகார வாச்யன் 96/514-

தூணில் தோன்றியதால் பிறரைப் போல் பிறவாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வ்யாபிப்பவர் -நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

பிறப்பில்லாதவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

————–

524-அஜ –பிரணவ ஸ்வரூபி திருநாமம்

அகாரத்தால் பேசப்படும் நாராயணன் -அழிவற்ற -ஜகத் காரணன்
ஆதியாதி யாதி நீ சோதியாக சோதி நீ ஆதியாகி ஆயனாய மாயனே –திருச்சந்த -30-34-
முன்பே 96-206-பார்த்தோம்

பிரணவத்தின் முதலாகிய ஆகாரத்தின் பொருளாக எண்ணப் படுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தஸ்ய ப்ரக்ருதி லீ நஸ்ய ய பர ச மஹேஸ்வர

அகாரப் பொருளாகிய ஸ்ரீ விஷ்ணுவிடம் பிறந்த மன்மதனாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நான்முகனுக்குத் தந்தை — ஸ்ரீ சத்ய சந்தர் –

————————-

3-பிராண : 67 /321/408

67-பிராண –பரத்வம்-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திருநாமம்

உயிராக இருப்பவனே –
ஒத்தே எப்பொருட்கும் உயிராய் -2-3-2-
ததேதத் அஷரம் ப்ரஹ்ம ச பிராண தது வாங்மந -உயிர் வாக் மனம் அனைத்துமாக இருக்கிறான் –

அவர்களுக்கு உயிராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

தேவர்களுக்கும் பிராணனாக உள்ளவன்
ததோ தேவாநாம் நிரவர்த்தா ஸூரேக –தைத்ரியம் -4-1-8-ஒரே உயிராக தேவர்களுக்கு அவனே இருந்தான்
கோ ஹி ஏவ அந்யாத் க ப்ராண்யாத்–தைத்ரியம் ஆனந்த வல்லீ -7-அவன் இல்லை என்றால் இந்த உலகிலும் அந்த உலகிலும்
யாரால் ஆனந்தம் அனுபவிக்க இயலும்
பிரானோ ரஷதி விஸ்வம் ரஷத் –பிராணனாகிய அவனே பாதுகாக்குகிறான்
பிராணஸ் ததா அநு கதாம் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1-1-29-அவனே பிராணன் என்று உணரலாம்
அதைநம் ஏதே தேவா பிராணா அம்ருதோ ஆவிசந்தி –அதன் பின்னர் இறவாமை பெற்ற தேவர்கள் பிராணன் எனப்படும் அவனுள் புகுந்தனர்
தத் ஏதத் அக்ஷரம் ப்ரஹ்ம ச பிராண தது வாங்மந முண்டகம் –2-2-2-அழியாத ப்ரஹ்மமே மனம் வாக்கு பிராணன்
சத்யாத்ம ப்ராணாராமம் மம ஆனந்தம் –தைத்ரியம் சீஷா வல்லி-6-2-முக்தர்களுக்கும் தேவர்களுக்கும்
அவனே பிராணன் மற்றும் ஆனந்தமாக உள்ளான்
மநோ மய பிராண சரீரோ பா ரூப ஸத்ய சங்கல்ப –சாந்தோக்யம் -3-14-2–மனத்தால் மட்டும் உணரப்பட வேண்டியவன் –
பிராணனை சரீரமாகக் கொண்டவன் ஸத்ய ஸங்கல்பன்
அதோபகரணம் திவ்யம் பஞ்ச சக்தி உபலஷிதம் கால ஞான கிரியா இச்சாக்ய பிராண சம்ஜ்ஞம் மஹா மதே பிராண
ஸக்தேஸ்து ச அத்யாத்மம் ஷட் குணம் அகிலம் ஹி யத் அதி தேவதம் அப்ஜாஷோ வாஸூ தேவோ சநாதந –பவ்ஷகரை சம்ஹிதை —
காலம் ஞானம் செயல்பாடு விருப்பம் பிராணன் -ஆகிய ஐந்து வித திவ்ய சக்தியைக் கொண்டுள்ளான் –
பிராணன் சேரும் பொது ஆறு குணங்களும் உண்டாகின்றன -இப்படியாக உள்ள புண்டரீகாக்ஷனான வாஸூ தேவனே உயர்ந்தவன்
ஞான கிரியா இச்சா பிராண ரூபம் சக்தி வ்யூஹம் த்விஜ அச்யுதம் -தவ்ம்ய சம்ஹிதை —இரண்டு பிறவி கொண்ட
ப்ராஹ்மணரே ஞானம் செயல்பாடு விருப்பம் பிராணன் ஆகியவற்றை உடைய அவனை அச்யுதன் என்கிறோம்

உயிராக இருப்பவர் -முக்ய பிராணன் ஆனவர் –ஸ்ரீ சங்கரர் —

செயல்பாடுகளை நன்கு நடத்துபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் பிராண நம
ஸ்திதி அளிப்பவன் -அவனை அடைவதற்கு உயிராக இருப்பவன்

———–

321-பிராண-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் திருநாமம்

உயிர் ஆனவன் -அடியார்க்கு ஜீவநாடி
உலகுக்கே ஒரு உயிருமானாய் -6-9-7-

தன்னை அண்டிய ஜீவர்களுக்கு உயிரானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணா அஸ்மி பிரஞ்ஞாத்மா தம் மாம் ஆயுஸ் அம்ருதம் இதி உபாஸ் ஸ்வ –கௌஷீதகீ -இப்படி பிராணனாக
உள்ள நான் ஆயுஸ் என்றும் அமிர்தம் என்றும் உபாசிக்கப்படுகிறேன்
அம்ருதம் தேவாநாம் ஆயுஸ் பிரஜாநாம்
பிராணா ததா அநு கமாத்-1-1-9-

வாயு ரூபியாக பிராணிகளைப் பிழைப்பிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களை மோஷ லோகம் அழைத்துச் செல்பவர் -சரஸ்வதியைக் காட்டிலும் மிகவும் மேம்பட்டவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

408-பிராண –-ஸ்ரீ ராம அவதார திருநாமம்

பிராணனாய் இருப்பவன் -என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -1-7-5
சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -7-5-1–முன்பே 57 321 பார்த்தோம்-

எல்லாவற்றையும் உய்விப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஜீவ ரூபியாய் இருப்பவர் -பிராணனாக இருந்து செயல் படுத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

முக்தர்களைக் காட்டிலும் மேலானவர் -உயர்ந்த பெயர்களைக் கொண்டவராக செயல்படுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————

4-பத்ம நாப : 48/198/347-

48-பத்ம நாப –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்

கொப்பூழில் எழு கமலப் பூ வழகன் -நாச் -11-2-
பூவில் நான் முகனைப் படைத்த தேவன் எம்பெருமான் -2-2-4-
மீண்டும் 198-347 வரும்
தாமரை உந்தி தனிப் பெரும் நாயகன் -திருவாசிரியம்
அயனைப் படைத்த எழில் உந்தி -அமலனாதி –

நான்முகனுக்குப் பிறப்பிடமான தாமரையைத் தம் திரு நாபியிலே யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-

தாதோத்தாந சம்விசதி பஞ்ச வர்ஷ ச தாநி து
தாதுர் நாப்யாம் புஷ்கரம் ப்ராதுர் பவதி புஷ்கரம் புண்டரீகம் ச பத்மம் சக்ரம் இத்யேஷ கால
அஜஸ்ய நாபா வத்யேகம் அர்ப்பிதம்
அஜஸ்ய நாபா வத்யேகம் யஸ்மின் விஸ்வம் ப்ரதிஷ்டிதம்

உலக்குக்கு எல்லாம் காரணமான தாமரையைத் தன் உந்தியிலே உடையவர் -ஸ்ரீ சங்கரர்—

தாமரையை அலர்த்துகின்ற சூர்யனைப் போன்ற ஒளி உள்ளவர் -நாபியில் தாமரையை யுடையவர் –
திருவடியில் திரு மகளை யுடையவர் -ஒளி யுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் பத்ம நாபோ நம
கொப்பூழில் எழு கமலப்பூவால் நான்முகனைப் படைத்து
தொப்பூள் கொடியால் குழந்தைக்கு போஷகம் ஆகுமா போலே ஸ்ருஷ்டித்த உலகங்களைப் போஷிப்பவன்

————-

347-பத்ம நாப –பர வாசுதேவன் ரூப குண வாசகம் -திருநாமம்

தாமரை உந்தி தனிப் பெரும் நாயகா
அயனைப் படைத்த எழில் உந்தி
கொப்பூழில் எழு கமலப் பூ வழகன்

தாமரை போன்ற நாபியை யுடையவன் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாமரையின் நாபியாகிய உள்காயில் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தாமரையை மலர்த்தும் சூரியன் போன்ற ஒளியுள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

198-பத்ம நாபன் – ஸ்ரீ பத்மநாபாவதாரம் திருநாமம்
கீழே 48 அநிருத்தன் பேசப் பட்டது இங்கு பத்ம நாப அவதாரம் -மீண்டும் 347-

நாபியில் பத்மத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கதாசித் தஸ்ய ஸூப்தஸ்ய நாப்யாம் காமாத் அஜாயத திவ்யம் அஷ்ட தளம் பூரி பங்கஜம் பார்த்திவம் மஹத்
யஸ்ய ஹேம மயீ திவ்யா கர்ணிகா மேரு உத்யதே –ப்ரஹ்ம புராணம் —
திரு நாபி கமலத்தின் தங்கமயமாக காயே மேரு

தாமரை போல் வட்டமான நாபியை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு நன்கு பிரகாசிப்பவர் -பிரமனைத் தம் நாபியில் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————–

5-மாதவ : 73/169/741-

73-மாதவ-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திருநாமம்

திரு மகளார் தனிக் கேள்வன் -மா -ஸ்ரீ தேவி அவளுக்கு ஸ்வாமி
அஸ்ய ஈசாநா ஜகதோ விஷ்ணு பத்நீ
ஸ்ரத்தையா தேவோ தேவத்வம் அஸ்நுதே –
திருவுக்கும் திருவாகிய செல்வன்
நித்யைவ ஏஷா ஜகன்மாதா விஷ்ணோ ஸ்ரீ அநபாயிநீ
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்
அமுதில் வரும் பெண்ணமுதம் கொள்ள வங்கக் கடல் கடைந்த மாதவன்
ஸ்ரீ வல்லபன்

மா எனப்படும் திருமகளுக்கு கேள்வன் -இவளுக்கு ஸ்வரூபத்தை போலவே நித்ய நிர்மலமான ரூபம் ஸ்வா பாவிகமான பரம ஐஸ் வர்யம்
உலகு அனைத்துக்கும் தாயாக இருக்கும் தன்மை -எம்பெருமாபெருமானுடன் நித்தியமான ஸ்வா பாவிகமான தொடர்பு ஆகியவை
தத்வ பர சாஸ்திரங்களான ஸ்ரீ ஸூ க்தம் -சரத்தா ஸூ க்தம் மேதா ஸூ க்தம்-உத்தர நாராயணம் –
கௌஷீதகீ ப்ராஹ்மணம் முதலியவற்றால் விரிவாகச் சொல்லப் படுகின்றன -ஸ்ரீ பராசர பட்டர் —

அஸ்ய ஈசாநா ஜகதோ விஷ்ணு பத்நீ
ஹ்ரீச்சதே லஷ்மீம் ச பத்ந்யை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-18-17–
நித்யைவ ஏஷா ஜெகன் மாதா விஷ்ணோர் ஸ்ரீ அநபாயிநீ யதா சர்வகதோ விஷ்ணோர் ததைவ இயம் த்விஜோத்தம – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-18-17–
தச் சக்தி துர்ஜயா பீமா விஷ்ணு சக்தி இதை ஸ்ம்ருதா சர்வ பூத ஹ்ருதப்ஜஸ்தா நாநா ரூப தரா பரா
ப்ராணாக்யா மந்த்ரமாயா ச விஸ்வஸ்ய ஜநநீ த்ருவா தேவீ பிந் நாஞ்ஜன ஸ்யாமா நிர் குணா வ்யோம ஏவ ஹி –ஸ்ரீ ப்ரஹ்ம புராணம் —
அவனது சக்தியே இவள் -உலகை வாழ்விப்பவள் என்பதால் பிராணன் எனப்படுபவள்
ததைவ ஏகா பரா சக்தி ஸ்ரீர் தஸ்ய கருணாஸ்ரயா ஞானாதி ஷாட் குண்யமயீ யா ப்ரோக்தோ ப்ரக்ருதி பரா ஏகைவ சக்தி
ஸ்ரீர் தஸ்ய த்வதீயா பரிவர்த்திதே பராவரேண ரூபேண சார்வாகாரா சநாதநீ அநந்த நாமதேயோ ச சக்தி சக்ரஸ்ய
நாசிகா ஜகத் சராசரம் இதம் சர்வம் வ்யாப்ய வ்யபஸ்திதா
மஹா விபூதே சம்பூர்ண ஷாட் குண்ய வபுஷு ப்ரபோ பகவத் வாஸூ தேவஸ்ய நித்யேவ ஏஷ அநபாயிநீ
ஏகைவ வர்த்ததே பிந்நா ஜ்யோத்ஸ் நேவ ஹிமதீ திதே
சர்வ சக்த்யாத்மிகா சைவ விஸ்வம் வ்யாப்ய வ்யவஸ்திதா சர்வ ஐஸ்வர்ய குணோபேதா நித்யம் தத் தர்ம தர்மிநீ
பிராண சக்தி பரா ஹி ஏஷ ஸர்வேஷாம் பிராணி நாம் புவி சக்தீ நாம் சைவ ஸர்வாசாம் யோனி பூதா பரா கலா யஸ்மாத்
லஷ்ம்யம்ச ஸம்பூதோ சக்த்யோ விஸ்வகா சதா காரணத்வேந திஷ்டந்தி ஜகத் அஸ்மின் ததாஜ்ஞாயா தஸ்மாத் ப்ரீதா
ஜெகன் மாதா ஸ்ரீர் யஸ்ய அச் யுத வல்லபா ஸூ ப்ரீதா சக்த்ய தஸ்ய சித்திம் இஷ்டாம் நிஷாந்தி ச -ஸ்ரீ மஹா லஸ்மி சஹஸ்ர நாமம்
காவ்யம் இராமாயணம் க்ருஸ்த்னம் ஸீதாயா சரிதம் மஹத் –பாலகாண்டம் -4-7-
ஸ்ரத்தாயா தேவோ தேவத்வம் அஸ்னுத் –ஸ்ரீ லஷ்மீ தத்வம் சொல்லுமே இவை

மா எனப்படும் திருமகளுக்கு கேள்வன் -மது வித்யையினால் அறியப்படுபவர் -மௌனம் த்யானம் யோகம் இவற்றால்
மாதவனை அறியாவாக -வியாசர் என்பதால் மாதவன் -ஸ்ரீ சங்கரர் –

லஷ்மிக்கு கணவன் -தனக்கு யஜமானன் இல்லாதவன் -மதுவின் வம்சத்தில் உதித்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் மாதவா நம
திரு மா மகள் கொழுநன் -நித்ய சம்ச்லேஷம் -க்ஷண விஸ்லேஷ அஸஹயன்

———-

169-மாதவ –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -திருநாமம்
ஞான ப்ரதன்-வித்யைக்கு ஈசன்
கற்கும் கல்வி நாதன் -5-6-2-
அறியாதன அறிவித்த அத்தா -2-3-2-
மா -மௌநம் –த -த்யானம் –வ -யோகம் -இவற்றுடன் கூடியவன்
மீண்டும் 73-741- லஷ்மி பதித்வம் யது குலத்தில் ஆவிர்பவித்தவன்

மா -எனப்படும் பரமாத்ம ஞானத்தைக் கொடுப்பவர் -மா -மௌனம் /த-த்யானம் -வ -யோகம் –
இவற்றுடன் கூடினவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

மா வித்யா சா ஹரே ப்ரோக்தா தஸ்யா ஈசோ யதோ பவாந் தஸ்மாத் மாதவ நாமா அஸீ தவ ஸ்வாமீ இதி சப்தித–
மவ்நாத் த்யாநாத் ச யோகாச்ச வித்தி பாரத மாதவம் –உத்யோக பர்வம்

வித்யைக்குத் தலைவர் –ஸ்ரீ சங்கரர் –

அசைவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————-

741-மாதவ-ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்

லஷ்மி வல்லபன் -மலர்மகளுக்கு அன்பன் -திரு மகளார் தனிக் கேள்வன் -வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை –
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்
ம் -மௌநம் –த-த்யானம் –வ -யோகம் -இவற்றால் சாஷாத் கரிக்கப் படுமவன்

உலகங்களுக்கு லஷ்மி தாயும் தாம் தந்தையுமான உறவாக இருப்பவர் -மது குலத்தில் பிறந்தவர் –
மௌனம் த்யானம் யோகம் ஆகியவற்றை உடையவர் மாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மவ்நாத் த்யாநாச் ச யோகாச்ச வித்தி பாரத மாதவம் -உத்யோக பர்வம் -71-4-மவ்னம் த்யானம் யோகம் கொண்டதால் மாதவன்

யாதவ -மது -குலத்தில் பிறந்தவர் -ஸ்ரீ சங்கரர்-

மதுவின் புத்திரர் -சுகத்தைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————

6-வீரஹா 168/747/927-

168-வீரஹா –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் திருநாமம்

வீரர்களை கொள்பவன் -பாஹ்ய குத்ருஷ்டிகளை-தர்க்க சூரரை
சிறு பிள்ளையாய் பூதனை போன்ற அசுரர்களை வென்றவன் -மீண்டும் 747-927 வரும்

குதர்க்க வாதங்களால் பரமாத்ம ஞானத்தைக் கெடுக்கும் துர்வாதிகளை அழிப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

தாநஹம் த்விஷத க்ரூராந்ஸம் ஸாரேஷு நராதமாந்–க்ஷிபாம்யஜஸ்ரமஷுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷
என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்

தர்மத்தைக் காப்பதற்காக அசுர வீரர்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

கருடனிலும் வாயுவிலும் செல்பவர் -முக்ய பிராணனின் பகைவர்களை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————

747-வீரஹா-கிருஷ்ணாவதார திருநாமம்

வீரர்களை மாய்த்த பேறு வீரன்
பேய் முலை உண்டு -=களிறட்ட தூ முறுவல் பிரான் -5-3-8-
வெந்திறல் வீரரின் வீரர் ஒப்பார் -பெரிய திருமொழி -2-8-2-

முலைப் பால் உண்ணும் சிறு பருவத்திலும் பூதனை சகடாசுரன் இரட்டை மருதமரங்கள் போன்ற அசுரர்களை
வேரோடு களைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மத்தைக் காப்பாற்றும் பொருட்டு வீரர்களான அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

வீரர்களை அழிப்பவர் -முக்ய பிராணன் அற்றவரை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————

927-வீரஹா –ஸ்ரீ கஜேந்திர மோஷ பரமான திருநாமம்

பாசங்களை விடுவிப்பவன் -யானையை முதலை இடம் இருந்தும் -யம பாசத்தின் நின்றும் விடுவிப்பவன்
முன்பே 168/747 பார்த்தோம்
எம்பிரான் ஏழையேன் இடரைக் களையாயே-பெரியாழ்வார் -5-1-9-
அண்ணா அடியேன் இடரைக் களையாயே -பெரிய திருமொழி -1-10-1-

யானைக்கு விரோதியைப் போக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மோக்ஷ மா மாச நகேந்த்ரம் பா சேப்யஸ் சரணாகதம்

பலவிதமான சம்சார கதிகளைக் கெடுத்து முக்தி அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

லிக மது அருந்துபவரை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————-

7-ஸ்ரீமான் 22/180/222..

22-ஸ்ரீ மான் –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்

அழகியவன் –
இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு -நான் திரு -21
அழகியான் தானே அரி யுவன் தானே -நான் -திரு 22
180-222 மேலும் இதே திரு நாமம் வரும் –
180-திவ்ய ஆபரண செல்வம்
உள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன்
சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவனே -8-8-1-
222-தாமரைக் கண்ணன் -மத்ஸ்ய கமல லோஷண
மீனாய் ஆமையாய் –கார் வண்ணனே –கமலத் தடம் கண்ணன் -5-1-11
மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தன் -2-8-5-

ஒன்றுக்கு ஓன்று முரண்பட்ட வடிவங்களைச் சேர்த்துக் கொண்ட போதும் அழகு மிக்க மநோஹரமான வடிவை யுடையவர்
அப்போது கலந்த அழகைக் கண்டவர்கள் பிறகு மனிதனை மட்டுமோ சிங்கத்தை மட்டுமோ
கண்டால் அருவெறுப்பு யுண்டாகும் படி அழகன் –
அப்படிப்பட்ட ரூபத்தைக் கொண்டதால் மட்டுமே யன்றோ உலகம் காக்கப்பட்டது -ஸ்ரீ பராசர பட்டர் —
ஸ்ரீ மான் –பரஸ்பர -துர்கடா பூர்வ விக்ருத ரூப பரிக்ருத சௌந்தர்ய லாவண்ய அதிபி மநோஹர திவ்ய ரூப

————–

180- ஸ்ரீ மான் –ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் திருநாமம்

திவ்ய ஆபரணங்களால்-திவ்ய ஆயுதங்கள் -ஸ்ரீ வத்ஸ வஷஸ் நித்ய ஸ்ரீ –
உள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-

அந்த திரு மேனிக்குத் தகுந்த திவ்ய ஆபரணங்கள் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

-22-/ -222-நாமாவளி மீண்டும் உண்டே

பரிபூரணமான ஐஸ்வர்யம் ஆகிற ஸ்ரீ யை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ லஷ்மீ தேவியோடு கூடி இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —

————–

222–ஸ்ரீ மான் –ஸ்ரீ மத்ஸ்ய அவதார திருநாமம்

சிறப்புடையவன் -மத்ஸ்ய கமல லோஷண
மீனாய் ஆமையுமாய் –கார் வண்ணனே
கார் வண்ணன் கமலத் தடம் கண்ணன் -5-1-11
மீனாகி மானிடமாம் தேவாதி தேவபெருமான் என் தீர்த்தன் -2-8-5-
முன்பே 22/180 பார்த்தோம்

பரத்வ சின்னமான தாமரைக் கண்களை மத்ஸ்ய திருவவதாரத்திலும் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிற்கும் மேம்பட்ட ஒளியுள்ளவர்–ஸ்ரீ சங்கரர் –

எப்போதும் ஸ்ரீ லஷ்மியுடன் கூடியிருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

8-வாசுதேவ 333/700/714

333-வாஸூ தேவ- ஸ்ரீ பர வாசுதேவன் குண வாசகம் திருநாமம்

சர்வம் வசதி –சர்வத்ர வசதி -த்வாதச அஷரி
ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ் மேல் அளவிறந்து நேர்ந்த வுருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே -1-5-10
உன் தன பொய் கேட்டு நின்றேன் வாசு தேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திரு -6-1
மீண்டும் 701 வரும்

பறவைகள் குஞ்சுக்களை சிறகினால் அணைத்துக் காப்பது போலே உலகங்களைத் தமக்குள்ள வைத்துக் காத்தும் –
அவற்றில் தாமந்தர்யாமியாக இருப்பதாலும் வாஸூ என்றும்
இதை விளையாட்டாகச் செய்வது ஆகியவற்றால் தேவ -என்றும் கூறப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸாதயாமி ஜகத் சர்வம் பூத்வா ஸூர்யா இவ அம்சுபி சர்வ பூதாநி வாசச்ச வாஸூ தேவ தத ஸ்ம்ருத –மஹா பாரதம் –
சூர்ய கதிர்கள் போலே எங்கும் வியாபித்து -தூங்குகிறேன்
வஸனாத் சர்வ பூதா நாம் வஸூத் வாத் தேவ யோநித வாஸூ தேவஸ் ததோ ஜ்ஜே ய ஸர்வேஷாம் அபி பச்யதே-மஹா பாரதம்
ஸர்வத்ர அசவ் சமஸ்தம் ச வஸத்யத் ரேதி வை யதஸ் தத ச வாஸூ தேவேதி வித்வத்பிஸ் பரி பட்யதே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-12-
எல்லாவற்றிலும் வசித்தும் -எல்லாவற்றையும் தம்மிடம் வைத்தும் -மறைத்தும் இருப்பதனால் வாஸூ என்றும்
விளையாடுவது வெல்வது பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் உண்டாக்குவது பிரகாசிப்பது
துதிக்கப் பெறுவது முதலிய வற்றால் தேவ என்றும் கூறப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –

வாஸூ தேவ புத்திரர் -எல்லா இடங்களிலும் வசிப்பதனாலும் எல்லாவற்றையும் வசிக்கச் செய்வதனாலும் –
எல்லாவற்றின் வாசத்திற்கும் ஆதாரமாக இருப்பதாலும் வாஸூ என்றும் –
பிரகாசிப்பதனால் தேவ என்றும் கூறப் பெறுபவதனால் வாஸூ தேவர் என்று போற்றப் பெறுபவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

700- வாஸூ தேவ -ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்

வஸூதேவ புத்திரன் -பிறந்து பெற்ற பெயர் -தாசரதி போலே
எங்கும் உளன் கண்ணன் -வ்யாப்தியை
மல் பொரு தோளுடை வாசுதேவா -பெருமாள் திரு-6-6-
முன்பே 333 பார்த்தோம்–ஸ்ரீ பராசர பட்டர் –

வஸூ தேவருக்குப் புத்திரர் –-ஸ்ரீ சங்கரர் –

வஸூ தேவருக்குப் புத்திரர் –-ஸ்ரீ சத்ய சந்தர் –

வஸூக்களில் சிறந்த பீஷ்மருக்குத் தலைவர் -தேவர்களால் -அல்லது ஞானம் முதலியவற்றால் பிரகாசிப்பவர் என்ற
பொருள் கொண்ட வஸூ தேவ சப்தத்தினால் சொல்லப்படும் ப்ரஹ்ம சரீரத்தினால் அறியப்படுபவர் –
ப்ரஹ்ம சரீரத்துக்கு ஆதாரமாக இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

714-வாஸூதேவ –ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்

வாசுதேவ புத்திரன் -த்வாதச மந்திர ப்ரவர்த்திப்பிதவன்
கம்சாதிகளுக்கு ம்ருத்யு -மதுரா நகர் பெண்களுக்கு மன்மதன் -வசுதேவாதிகள் குழந்தை யோகிகளுக்கு பரதத்வம்
கூசி நடுங்கி யமுனை யாற்றில் நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திரு -6-1-
முன்பே 334-700 பார்த்தோம்

வசுதேவர் பிள்ளையாக பன்னிரண்டு எழுத்துக்களை உடைய வாஸூ தேவ மந்திரத்தை வெளியிட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மாதுராத அத்புத மாயாய -மதுரையில் ஜனித்த பல அத்புதங்களுடன் கூடியவன்

மாயையினால் உலகத்தை மறைக்கும் தேவராக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயுவிற்கு தேவன் –அறிவிற்க்காகப் பிறக்கும் பிராண தேவனை யுண்டாக்கியவர்-
அவாஸூதேவ -என்று ஸ்ருகால வாஸூ தேவனை அழித்தவர் – ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

9–விஷ்ணு –2/259/663

2-விஷ்ணு –பரத்வம் – வ்யாப்தி –ஸர்வேஸ்வரத்வம்-திருநாமம்

எங்கும் வியாபித்து உள்ளவன்
ஸ்வ விபூதி பூதி பூதம் சித் அசிதாத்மகம் சர்வம் விசதி இதி
யாவையும் யாவரும் தானாய்-
விச்வம் -பூர்த்தியில் நோக்கு
விஷ்ணு – வ்யாப்தியில் நோக்கு
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென -1-1-10-

தம் உடைமைகளான சேதன அசேதனங்கள் எல்லாவற்றிலும் உட்புகுந்து இருப்பவர் —
விஷ்ணு திருவவதாரத்தில்-one in all
அனுபிரவேசித்து இருப்பவர் -விச்வம் பூரணத்வம் விஷ்ணு வ்யாதியையும் சொல்வதால்
கூறியது கூறல் குறை ஆகாது -ஸ்ரீ பராசர பட்டர் –

விவேச பூதாநி சராசராணி —-தைத்ரியம் நாராயண வல்லி
ததேவா னு ப்ரவிஸத்
வியாப்ய சர்வான் இமான் லோகான் ஸ்தித ஸர்வத்ர கேசவ ததச்ச விஷ்ணு நாமா அஸி விசேர்த்தாதோ பிரவேச நாத்

எங்கும் வியாபித்து இருப்பவர் -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதர்-ஸ்ரீ சங்கரர்

சர்வ வியாபி -ஓங்கி உலகளந்த உத்தமர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் விஷ்ணவே நம
கரந்து எங்கும் பரந்துளன்

மீண்டும் 259/663 விஷ்ணு திருநாமம் உண்டு
மீண்டும் -259- நாமாவளியாக —ஐஸ்வர்ய பூர்த்தி -எங்கும் தானாய் -நாங்கள் நாதனே -1-9-9-
நமக்கும் அவனுக்கும் நெருப்புக்கு புகைக்கும் உள்ள சம்பந்தம் போலே -விட்டுப் பிரியாமல் -அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே
புகை இருந்தால் நெருப்பு இருக்கும் -சூடான இரும்பு இருந்தால் புகை இருக்காதே
உள்ளே புகுந்து நியமிக்கிறான்-நிரவதிக ஸுவ்சீல்யம் தயா குணம் அடியாகவே உகந்து அருளினை நிலங்களை
சாதனமாக கொண்டு நம் ஹ்ருதயத்துக்குள் வருவதை சாத்தியமாக கொள்கிறான்
இளங்கோவில் கைவிடேல் என்று பிரார்த்திக்க வேண்டுமே
நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதுமுவை அவை அவை தொறும் உடல் மிசை உயிர்
எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-
பஞ்சபூதங்களையும் படைத்து அவை உள்ளும் புகுந்து

மீண்டும் -663-நாமாவளியாக வரும் –சர்வ சகதீசன்
மூவடி இரந்து இரண்டடியால் அளந்தவன்
என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பறக்கைத்து எமர் ஏழு ஏழு பிறப்பும் மேவும்
தன் மயம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் -2-7-4-
முதல் திருநாமம் – விஸ்வம் -பூர்த்தியைச் சொல்லி இதில் -விஷ்ணு -வியாப்தியைச் சொல்லிற்று
சாத்விகர்கள் அனைத்தும் விஷ்ணு மயம் என்று உணர்வார்கள்

————

259-விஷ்ணு–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி-திருநாமம்

எங்கும் பரந்து கருணை மழை பொழிபவன்
எங்கும் தானாய நாங்கள் நாதனே -1-9-9-
2–பார்த்தோம் -663 மீண்டும் வரும்

அப்படி அருளைப் பெற்றவர்களை விட்டு நீங்காதவர் -கடாஷத்தைப் பொழிந்ததும் மற்றும் பல உபகாரங்கள் செய்தும்
தமது உயர்வையும் தாழ்வையும் பாராமல் என்றும் அவர்களை விட்டுப் பிரியாமல் பரவி இருப்பவர் –
தார்க்கிகர்களின் வியாப்தியானது இங்கே கருதப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகங்களை வியாபித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

நதிகள் பாயும்படி செய்பவர் -காண முடியாதவர் -அறிய முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————–

663-விஷ்ணு –சக்தீசம் அவதார திரு நாமம்

எங்கும் வியாபித்து இருப்பவன்
சிருஷ்டி -அந்தர் பிரவேசம் -வ்யாப்தி -நியமனம் -நான்கும் உள்ள சகதீசன் -சர்வ சகத் யாத்மனே
என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து —எம்பிரான் விட்டுவே -2-7-4-
முன்பே 2-259-பார்த்தோம் –

ஸ்வரூபத்தினாலும் நடத்துவது முதலிய சக்தியினாலும் எல்லாவற்றையும் வியாபித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சர்வ சக்த்யாத்மநே
யஸ்மாத் விஷ்டமிதம் சர்வம் தஸ்ய சக்த்யா மஹாத்மந தஸ்மாத் ச ப்ரோச்யதே பிரவேச நாத்
விஷ்ணுர் விக்ரமனாத் –உத்யோகபர்வம்

எல்லா வற்றையும் வியாபித்துள்ள மிக்க ஒளியையுடையவர் –ஸ்ரீசங்கரர் –

எங்கும் பரவியிருப்பவர் -எல்லையற்றவர் -என்றபடி -பலவகையாக விஷ்ணு சப்தம் விளக்கப் படும் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————

10-வீர: 168/ 464 /664-

168-வீரஹா –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் திரு நாமம்

வீரர்களை கொள்பவன் -பாஹ்ய குத்ருஷ்டிகளை-தர்க்க சூரரை
சிறு பிள்ளையாய் பூதனை போன்ற அசுரர்களை வென்றவன் -மீண்டும் 747-927 வரும்

குதர்க்க வாதங்களால் பரமாத்ம ஞானத்தைக் கெடுக்கும் துர்வாதிகளை அழிப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

தாநஹம் த்விஷத க்ரூராந்ஸம் ஸாரேஷு நராதமாந்–க்ஷிபாம்யஜஸ்ரமஷுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷
என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்

தர்மத்தைக் காப்பதற்காக அசுர வீரர்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

கருடனிலும் வாயுவிலும் செல்பவர் -முக்ய பிராணனின் பகைவர்களை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————–

464-வீர பாஹூ-அலை கடல் கடைந்து அமுதம் கொண்டவன்-திரு நாமம்

சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே -பெரிய திருமொழி -5-7-4-
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணன்
ஈரிரண்டு மால் வரைத் தோள்

வளை தோள்வளை மாலை முதலியவற்றால் அலங்கரிக்கப் பட்டுக் கடல் கடையும் காலத்தில் நான் நான் என்று
ஒன்றன்பின் ஒன்றாக முன்வரும் ஆயிரம் தோள்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களின் விரோதிகளை அழித்து வேத மரியாதையை நிலை நாட்டும் பராக்ரமுடைய கைகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

வீரர்களான ஷத்ரியர்கள் தோன்றிய தோள்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

664-வீர–சக்தீசம் அவதார திரு நாமம்

வீரன்
வெங்கதிரோன் -குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்யக் கொண்ட -வீரன் -பெருமாள் திரு -10-9-
சங்கோடு சக்கரம் உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள்ளூர்ந்து உலகில்
வன்மையுடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொறுத்த நன்மை உடையவன் -3-10-1-
அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -திருச் -116-

தமது கட்டளையை எதிர்பார்த்து இருக்கும் கதை சக்கரம் மூலமாக விரைவில் நல்லோர்களை துன்புறுத்தும்
துஷ்டர்களை அழிப்பவர்-வீரமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆஞ்ஞாத ப்ரவீஷ கேனைவ கதா சக்ர த்வயேன து ப்ரேரிதேந ஹிநஸ்த்யாசு சாது சந்தாபக காரிண

கதி படைப்பு ஒளி இருப்பிடம் போஜனம் இவற்றை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்முடைய நினைவுக்கு ஏற்றபடி சுகம் உடையவர் -அல்லது சாமர்த்தியம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

11-சௌரி : 341/649/650

341- சௌரி –பர வாசுதேவன் குண வாசகம்-திருநாமம்

சூரனான வாஸு தேவர் பிள்ளை -ஓடாத தோள் வலியன் நந்த கோபன் குமரன் –
மன் உலகத் தேவர் வாழ் முதல் -பெரிய திருமொழி -6-8-10
தயரதற்கு மகனாய் தோன்றி கொல்லியலும் படைத்தான் -பெருமாள் திரு -10-10-

சூரர் எனப்படும் வாசுதேவனுடைய புத்திரர் -அடியவர்கள் இடம் செல்லும் விசேஷ குணமானது கூறப் படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

சூரா குலத்தில் பிறந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

சூரா ராஜனின் கோத்திரத்தில் பிறந்தவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

649-சௌரி-அர்ச்சாவதாரம் பரமான-திருநாமம்

ஸ்ரீ சௌரி பெருமாள் -உத்பதாவதகத்தில் -திருக் கண்ண புரம் சேவை
உத்பலா வதகே திவே விமானே புஷ்கரேஷணம் -சௌரி ராஜம் அஹம் வந்தே சதா சர்வாங்க ஸூந்தரம்
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட –திருக் கண்ண புரத்து
ஆலின் மேலால் அமர்ந்தான் அடி இணைகளே-9-10-1
திருக் கண்ண புரத் தரசே – பெருமாள் திருமொழி –

உத்பால வர்த்தகம் -திருக் கண்ணபுரம் -என்னும் ஸ்தலத்தில் சௌரி என்னும் திரு நாமத்துடன் எழுந்து அருளி இருப்பவர் —
சூரர் என்னும் வசுதேவருடைய மகன் –ஸ்ரீ பராசர பட்டர்-

சூர குலத்தில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணனாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சூர குலத்தில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணனாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——

650-சூர-அர்ச்சாவதாரம் பரமான திருநாமம்

எதிரிகளை அழிப்பவர்-
திருச் சித்திர கூடம் தன்னுள் எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை பிராமன் -பெருமாள் திரு -10-3-முன்பே 341 பார்த்தோம்

சித்ர கூட மலையில் ராஷசர்களை அழிப்பவரும் தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களை யுடையவருமான
ஸ்ரீ ராமபிரான் இருக்கிறார் -என்றபடி சூரரான ஸ்ரீ ராமபிரானாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தராதரே சித்ரா கூடே ரக்ஷ ஷயகரோ மஹாந் சம்ஸ்தி தச்ச பரோ ராம பத்ம பத்ராய தேஷண

வீரராக இருப்பவர் -வீர -என்பது பாடம் –ஸ்ரீ சங்கரர் –

மேன்மை யுள்ளவரை நோக்கிச் செல்பவர் -வீர என்பது பாடம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————

12-பாவந : 32/293/817-

32-பாவந –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்

உய்விப்பவன் -பக்தியை உண்டாக்கி வளரச் செய்து பூர்ண பக்தனாக்கி உஜ்ஜீவிப்பவன்
அடியவர் வினை கெடுக்கும் நச்சு மா மருந்தம் நலம் கடல் அமுதம் -3-4-5-

திருவவதரித்து துன்பங்களை போக்கி உய்விப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-
ஏவம் சம்பூய அநிஷ்ட நிவாரண ஆதினாம் உஜ்ஜீவன யதீனாம் –

பரித்ராணாய ஸாதூ நாம் –ஸ்ரீ கீதை -4-8-

எல்லாருக்கும் எல்லாப் பலன்களையும் அளிப்பவர்-ஸ்ரீ சங்கரர்—-

மங்களங்களைச் செலுத்துபவர் -அபாவன -என்று கொண்டு பிறப்பு இல்லாதவர் –
சூர்யன் ஒளியால் பொருள்களை காட்டுபவர் -ஒளிகள் அடையும் இடமாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—–

ஓம் பாவந நம
திருவவதரித்து அனைவரையும் வாழ்விப்பவன்
கர்ம பலன்களை அளித்து அருளுபவர்

——————–

293-பாவநா–விஸ்வ ரூபம்-திருநாமம் –

தூய்மை அளிப்பவன் -பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம் ச மங்களம் –
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே -2-8-5-
திரு வாறன் விளை யுறை தீர்த்தன் -7-10-10
கரம் நான்குடையான் பேரோதி தீர்த்த கரராமின் -இரண்டாம் திரு -14-

உலகைத் தூய்மை யாக்கும் கங்கை முதலியவற்றுக்கும் அத் தூய்மை தம் தொடர்பால் உண்டாகும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பாவந சர்வ லோகா நாம் த்வமேவ ராகு நந்தன -உத்தர -32-9-அகஸ்தியர்

காற்றை வீசும்படி செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அரசர்கள் காப்பதற்கு காரணமாக இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————-

817-பவன –தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திருநாமம் –

தானாக வந்து பக்தர்கள் தாபம் தீர்த்து அருளி
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -பெரிய திரு மொழி -1-10-9-
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7-
பாவனா -பாடமாகில் பவித்ரம் -அமலங்களாக விழிக்கும் கமலக் கண்ணன் -1-9-9-

தாமே பக்தர்களிடம் செல்லுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மை நினைத்த மாத்திரத்திலே புனிதப் படுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

அரசர்களைக் காப்பவர் -புனிதப் படுத்துபவர் -வாயுவின் தந்தை -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————-

13.போக்தா -145/502/889-

145-போக்தா-ஸ்ரீ வ்யூஹ நிலை திருநாமம்

அனுபவிப்பவன்
அஹம் அன்னம் அஹம் அந்நாத –
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில்-9-6-10—என்னின் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
அவாவறச் சூழ் அரி -10-10-11
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் -5-6-4-

பக்தர்களால் சமர்ப்பிக்கப் படும் ப்ராபணம் முதலியவற்றை அமுதம் போலே ஏற்றுக் கொள்பவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

அஸ்நாமி ப்ரயதாத்மந–தூய மனஸுடன் அளிப்பதை ஏற்றுக் கொள்கிறேன்
போக்தாரம் யஜ்ஜ தபஸாம் –ஏற்று மகிழ்கிறேன்

அந்தப் பிரக்ருதியை அனுபவிக்கும் புருஷனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்து சாரங்களையும் அனுபவிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் போக்தாய நம
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் –பக்தியையே பார்த்து ஸ்வீகாரம்

————–

502-போக்தா–தர்ம ஸ்வரூபி -திருநாமம்

உண்பவன் –
செய்கைப் பயன் உண்பேனும் யானே
முன்பே 145 பார்த்தோம்

ஹய சிரஸ் ரூபமாக ஹவ்ய கவ்யங்களை புஜிப்பவர் – ஸ்ரீ பராசர பட்டர் –

யத்து தத்கதிதம் பூர்வம் த்வயா ஹய ஸீரோ மஹத் ஹவ்ய கவ்ய பூஜோ விஷ்ணோ உதக் பூர்வே மஹோததவ் –சாந்திபர்வம்
ஹவ்யம்-தேவர்களைக் குறித்து / கவ்யம் -பித்ருக்களைக் குறித்து கொடுப்பது –

காப்பவர் -தம்முடைய ஸ்வரூபம் ஆகிய ஆனந்தத்தை அனுபவிப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றையும் உண்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

889-அநந்த ஹூத புக் போக்தா –அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திருநாமம் –

மிக்க மகிமை யுள்ள இந்த்ரனையும் பிரமனையும் உடையவன்
யாகங்களில் அக்னியில் சேர்க்கப்படுமவைகளை புசிப்பதால் இந்த்ரன் ஹூத புக் –
பிரஜைகளைக் காப்பாற்றுவதால் பிரமனுக்கு போக்தா
11/12 படிகள்

யாகங்களில் ஹோமம் செய்வதை உண்பவனான -பதினோராம்படி -இந்த்ரனையும் பிரஜைகளைக்
காப்பவனான -பன்னிரண்டாம் படி -பிரமனையும் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ச இந்திரலோகம் ச பிரஜாபதி லோகம்

அனந்த -தேச கால வஸ்து பேதங்களால் அளவுபடாதவர் –
ஹூதபுக் -ஹோமம் செய்வதை உண்பவர் –
போக்தா -பிரகிருதியை அனுபவிப்பவர் -உலகைக் காப்பவர் -மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

அனந்த -பந்தம் இல்லாதவர் -முடிவில்லாதவர் –
ஹூதபுக் -ஆஹூதியை நன்கு உண்பவர் –
போக்தா-உண்பவர்-மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————

14-வஸூ : -105/271/701-

105-வஸூ-ஆஸ்ரித வத்சலன் திருநாமம்

ஆஸ்ரிதர் இடம் வசிப்பவன் –
எண்ணிலும் வருவான் -என் ஊரைச் சொன்னாய் –
மீண்டும் 271/701 வரும்

அடியவர்களிடம் மிக்க அன்புடன் வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாம் தம்மிடம் வசிக்கும்படி இருப்பவர் -தாமும் அவற்றில் வசிப்பவர் –
வசுக்களில் அக்னியாக இருக்கிறேன் -ஸ்ரீ கீதை -ஸ்ரீ சங்கரர்-

எங்கும் வசிப்பவர் -ஞானத்தை வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் வஸூ-நம
மனத்துள்ளான்–

———————-

271-வஸூ –சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி-திருநாமம்

தனமாய் உள்ளவன் வைத்த மா நிதி
உண்ணும் சோறு -வாசுதேவஸ் சர்வம்
தன்னைத் தந்த கற்பகம்
105 பார்த்தோம் மீண்டும் 701 வரும்-

உயர்ந்தவர்களுக்குத் தாமே செல்வமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தம் ஸ்வரூபத்தை மாயையினால் மறைப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எங்கும் வசிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

701-வஸூ–ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம் –
வசிப்பவன் -லோக ஹிததுக்காக ஷீராப்தி
பாற்கடலில் பையத் துயின்ற பரமன்
பயில விநிய நம் பாற்கடல் சேர்ந்த பரமன் -3-7-1
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஹரி வம்சம் –
முன்பே 105/271 பார்த்தோம்

திரு வவதாரத்திற்குக் காரணமாகிய திருப் பாற் கடலில் வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

ச லோகா நாம் ஹிதார்த்தாய ஷீரோதே வசதி பிரபு –சபா பர்வம் -47-26-
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந –ஸ்ரீ ஹரி வம்சம் -113-62-

எல்லாம் தம்மிடம் வசிக்கப் பெற்றவர் -தாம் எல்லாவற்றிலும் வசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

எங்கும் வசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————

15-சத்ய :- -107/213/873-

107 ஸத்ய –பரத்வம்-ஆஸ்ரித வத்சலன்-திருநாமம்

சத்துக்களுக்கு அனுகூலன்
அவர்கள் நினைத்ததை தலைக் கட்டி வைப்பவன்

அடியவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
அசத்தியத்திற்கு மாறானவர் -உருவத்துடனும் அருவத்துடனும் கூடியவர்

-213–873-மீண்டும் வரும்

சத் -பிராணம் -தீ -அன்னம் -யம்-சூர்யம் -பிராணன் அன்னம் சூர்யன் ஆகிய ரூபம் உள்ளவர் -சாதுவானவர் -ஸ்ரீ சங்கரர்-

உலகங்களைப் படைப்பவர் -இருப்பை யுண்டாக்குபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சத்யாய நம

————————-

213-சத்ய-ஸ்ரீ மத்ஸ்ய அவதார திருநாமம்

நல்லவன் மநு போன்ற பக்தர்களுக்கு நல்லவன் -107-871-
நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் -9-10-6/7

பிரளய காலத்தில் தம்மை அடைந்த மனு முதலிய சத்துக்களுக்கு உபகரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்திய வசனம் என்னும் தர்ம ஸ்வரூபியாக இருப்பவர் -சத்யத்தின் சத்யமானவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகைப் படைப்பவர் -நற் கதியைத் தருபவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

873-சத்ய –சத்வ குணம் வளர்க்கும் -சாத்விகர் தலைவன் பரமான திருநாமம்

உண்மை -மெய்யன்
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் –நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே -9-10-7/6-
திரு மெய் மலையாளா -பெரிய திரு மொழி -3-6-9-
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகன் -பெரிய திரு மொழி -5-6-9-

சாத்விக சாஸ்த்ரங்களில் சொல்லப்படுவதால் உண்மையான பெருமை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்யே ப்ரதிஷ்டித க்ருஷ்ண சத்யமஸ்மின் ப்ரதிஷ்டிதம் சத்தா சத்தே ச கோவிந்த தஸ்மாத்
சத்ய சதாம் மத –உத்யோக பர்வம் 69-12-13-

சாதுக்களுக்கு உபகாரம் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

சுதந்திரமானவர் -அழியாத நற்குணங்களால் பரவியிருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————–———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம உரை– நான்கு – தடவை வரும் திரு நாமங்கள் ..

November 27, 2019

நான்கு தடவை வரும் திரு நாமங்கள்

நிவ்ருத் தாத்மா–231/453/604/780

231-புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப திரு நாமம்
453-நிவ்ருத்தி தர்ம ப்ரவர்தக திரு நாமம்
604-தர்மம் படி பலன் அழிப்பவன் திரு நாமம்
780-ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்

————————-

பிராணத : -66/322/409/956-

66-பரத்வம்-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திரு நாமம்
322-ஸ்ரீ கூர்மாவதாரம் திரு நாமம்
409-ஸ்ரீ ராம அவதார திரு நாமம்
956-ஸ்ரீ பகவான் செய்து அருளும் செயல்களின் பிரயோஜனம் சொல்லும் திரு நாமம்

————–

231-நிவ்ருத்தாத்மா –

புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப திரு நாமம்

ப்ராக்ருதங்களுக்கு அப்பால் பட்டவன் -சர்வ உத்க்ருஷ்டன் -பராத்பரன் –
மீண்டும் 453–604–780-வரும்

ப்ரக்ருதிக்கு மூன்று மடங்கான நித்ய விபூதியில் இருப்பதாகிய தம் ஸ்வரூபம் பிரவ்ருதியை கடந்ததாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சார பந்தம் இல்லாத ஸ்வரூபம் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரளயத்தில் ஆத்மாக்கள் திரும்பும்படி செய்பவர் -அநிவ்ருத்தாத்மா-அழியாத சரீரம் உடையவர் -என்றுமாம் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

453-நிவ்ருத்தாத்மா

நிவ்ருத்தி தர்ம ப்ரவர்தக திரு நாமம்

விஷயங்களைத் துரந்த மனம் உடையவன்
நர நாராயணராக அவதரித்தவன் -திருமந்தரம் உபதேசித்து அருள
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாராயணனே -பெரிய திரு -3-8-1-
எங்கானும் ஈதொப்பதோர் மாயம் உண்டோ நர நாரணனாய் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -பெரிய திரு மொழி -10-6-1-
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே -நாச் திரு -2-1-

நிவ்ருத்தி தர்மத்தை உபதேசிப்பதற்காகவும் சிறந்த வைராக்யத்தை அனுஷ்டானத்தினால் வெளிப்படுத்துவதற்காகவும்
நர நாராயண அவதாரம் எடுத்து சப்தாதி விஷயங்களை மனத்தினால் துறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அந்தர் நிவிஷ்ட பாவம் ச -த்யானத்தில் மனசை அடக்கி
ஆத்ம த்யான பராயணாய -ஆத்ம த்யானத்தில் ஊக்கம் கொண்டு
ஹ்ருத் பத்மார்பித மாநசம் –ஹ்ருதய கமலத்தில் மனதை நிலை நிறுத்தி

இயற்கையாகவே எல்லாப் பற்றுகளையும் விட்ட ஆத்மாவாகவே இருப்பவர் -சம்சாரத்தில் இருந்து விடுபட்ட
ஆத்மா என்றுமாம் -விமுக்தாத்மா -என்ற பாடம் –ஸ்ரீ சங்கரர் –

ஜீவாத்மாக்களை முக்தி அடையும்படி அனுக்ரஹிப்பவர் -விசேஷமாக முக்தர்களுக்கு தலைவராக இருப்பவர் –
விமுக்தாத்மா என்ற பாடம்-ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

604-நிவ்ருத்தாத்மா –

தர்மம் படி பலன் அழிப்பவன் திரு நாமம்

நிவ்ருத்தனுக்கு ஈஸ்வரன் ஸ்வாமி
ஆழியான் அருள் தருவான் விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் -10-6-3-

நிவ்ருத்தி மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு ஈஸ்வரர் –ஸ்ரீ பராசர பட்டர்-

விஷயங்களில் செல்லாத மனத்தை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரளயத்தில் ஜீவர்களை மோஷம் அடைவிப்பவர் -ஆத்மாவின் மனமானது எண்ண முடியாமல் பின் திரும்பும்படி
இருப்பவர் -மனத்தால் அளவிடமுடியாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

780-நிவ்ருத்தாத்மா

ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்

திருப்பப்பட்ட மனதை உடையவன்
அவாகீ அநாதர
வரம்பிலாத மாயை மாய வரம்பிலாத கீர்த்தியாய் -திருச்சந்த

கிருபையினால் இப்படி உலகோடு சேர்ந்து இருந்தாலும் இயற்கையில் எதிலும் சேராத தனித்த மனமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவாகீ அநாதர –சாந்தோக்யம் -3-14-

அநிவ்ருத்தாத்மா -எங்கும் நிறைந்து இருப்பவர் ஆதலின் ஒர் இடத்திலும் இல்லாமல் போகாதவர் –
நிவ்ருத்தாத்மா -விஷயங்களில் இருந்து திருப்பட்ட மனமுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அநிவ்ருத்தாத்மா -அழியாத தேஹம் உள்ளவர் -அயோக்யர் செய்யும் யஜ்ஞங்களில் இருந்து விலகிய மனமுடையவர் —
நிவ்ருத்தாத்மா -அனைத்து விஷயங்களிலும் மனத்தைச் செலுத்துபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————–

பிராணத : -66/322/409/956-

66-பிராணத-

பரத்வம்-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திரு நாமம்

பிராணனைக் கொடுப்பவன் –
தன்னை நித்ய அனுபவ சக்தி கொடுப்பவன்
தனியேன் ஆர் உயிரே-10-10-1-உன் சுவட்டை அறிவித்து
சுவட்டை சுவையை பிரித்தாளும் முடியாதபடி
குணாவிஷ்காரத்தாலே -தரிப்பித்தவனே –மேலும் -322-409-956 பார்ப்போம் –

எக்காலமும் தர்சித்து மகிழ்வுடன் நித்ய கைங்கர்யம் செய்யும் சக்தியை நித்ய ஸூரிகளுக்கு அளிப்பவர்-
இவனுடைய ஐஸ்வர்யங்களில் முதன்மையானது இது –ஸ்ரீ பராசர பட்டர் —
எஜமானன் என்கிற தன்மைக்கு முதன்மையான திரு நாமம்
நித்ய ஸூரிகளுக்கு உயிரும் வலிமையையும் அளித்து நித்ய கைங்கர்யத்தில் ஈடுபத்துபவன்
ய ஆத்மா தா பலதா–தைத்ரியம் -4-1-8-அவன் தன்னையே ஆத்மாவாகவும் வலிமையாகவும் அளிக்கிறான்
ச தை வ பிராண ஆவிசதி–பிருஹத் 3-5-20–அவனே பிராணனாக அனைத்து உயிர்களிலும் புகுகிறான்

உயிர்களை நடத்துபவர் -கால ரூபியாக உயிர்களைக் கண்டிப்பவர் -அழிப்பவர்-
பிராணன்களை சோதிப்பவர் -கண்டிப்பவர் –ஸ்ரீ சங்கரர் —

பிராணங்களைத் தருபவர் -விசேஷமாக சுகத்திற்கு எதிரான துக்கத்தை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் பிராணத நம
அனைவருக்கும் சத்தையை -உயிரை -அளிப்பவன் –
நித்ய கைங்கர்யம் செய்வதற்கு உரிய சக்தி நித்யர்களுக்கு கொடுப்பவன்

———————-

322-பிராணத

ஸ்ரீ கூர்மாவதாரம் திரு நாமம்

உயிர் அளிப்பான் -பலம் உள்ளவன் -அநந்த பல சக்த்யே -மந்தர பர்வதம் தாங்கி
அமரர்கட்கு அன்று ஆரமுதூட்டிய அப்பன் -3-7-5- -முன்பே 66- பார்த்தோம் -மேலும் -409-956 பார்ப்போம் –

ஸ்ரீ கூர்மமாக தேவர்களுக்குக் கடல் கடைவதற்கு உரிய பலத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களுக்கு பலம் கொடுப்பவர் -அசுரர்களுக்கு பலத்தைக் கெடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பிராணனை அழிப்பவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

409-பிராணத

ஸ்ரீ ராம அவதார திரு நாமம்

உயிர் அளிப்பவன் -அகாலபலி நோ வ்ருஷா –
உலகங்கள் உய்ய செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் -திரு மாலை -11
முன்பே 66-322 பார்த்தோம் -மேலும் 956 பார்ப்போம் –

பிரசித்தமான பிராணனை எல்லோருக்கும் தருபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அபி வ்ருஷா பரிம் லாநா ச புஷ்ப அங்குர கோரகா –அயோத்யா
பரிசுஷ்க பலாசாநி வநாந் யுபவ நாநி ச –அயோத்யா

சிருஷ்டியில் பிராணிகளுக்கு அந்தர்யாமியாகி உயிரைக்கொடுப்பவர் –
பிரளய காலத்தில் பிராணிகளின் பிராணன்களை நீக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

துன்பத்தை அழிப்பவர்-பக்தர்களுக்கு முக்ய பிராணனைக் கொடுப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

956-பிராணத-

ஸ்ரீ பகவான் செய்து அருளும் செயல்களின் பிரயோஜனம் சொல்லும் திரு நாமம்

உயிர் அளிப்பவன்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -1-7-5-

சப்தாதி விஷயங்களாகிய விஷம் தீண்டி மயங்கித் தம்மை மறந்து ஆத்மநாசம் அடைந்தவர்களுக்கு
ஆத்மா உய்வதாகிய உயிர் அளிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இறந்து போன பரீஷித் போன்றவர்களைப் பிழைப்பிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த கதியைக் கொடுப்பவர் -சப்த ரூபமான வேதங்களை நான்முகனுக்கு நன்கு கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்-3-10- புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப திரு நாமங்கள் -226-247/3-11–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி -248-271—

November 27, 2019

அக்ரணீர் க்ராமணீஸ் ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸ்மரணீ
சஹஸ்ர மூர்த்தா விஸ்வாத்மா சஹஸ்ர ராஷஸ் சஹஸ்ர பாத் –24-

ஆவர்த்தநோ நிவ்ருத்தாத்மா சம்வ்ருதஸ் சம்ப்ரமர்த்தன
அஹஸ் சம்வர்த்தோ வஹ்நி அநிலோ தரணீதர –25

ஸூ ப்ரசாத பிரசன்னாத்மா விஸ்வஸ்ருக் விஸ்வபுக் விபு
சத்கர்த்தா சத்க்ருதஸ் சதூர் ஜஹ்நுர் நாராயணோ நர –26

அசங்க்யேயோ அப்ரமேயாத்மா விசிஷ்ஸ் சிஷ்டக்ருச் சுசி
சித்தார்த்தஸ் சித்த சங்கல்பஸ் சித்திதஸ் சித்தி சாதன –27-

வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர
வர்த்த நோ வர்த்தமா நஸ்ச விவிக்தஸ் ஸ்ருதிசாகர –28

ஸூ புஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸூதோ வஸூ
நைகரூபோ ப்ரருஹத்ரூபஸ் சிபிவிஷ்ட ப்ரகாசன–29

——————

3-1-பிரதம அவதாரம் விஷ்ணு -147-152- திரு நாமங்கள்–6 -திரு நாமங்கள்
3-2-வாமன அவதார பரமான -153-164 திரு நாமங்கள் —12-திரு நாமங்கள்
3-3- துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -165-170-திரு நாமங்கள்–6-திரு நாமங்கள்
3-4-ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் -171-181- திரு நாமங்கள்-11-திரு நாமங்கள்
3-5-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் -182-186-திரு நாமங்கள்–5 திரு நாமங்கள்
3-6-ஹம்ஸாவதாரம் -187-194-திரு நாமங்கள்-7 திரு நாமங்கள்
3-7-பத்மநாபாவதாரம்-195-199-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்
3-8-நரசிம்ஹ அவதாரம் ——200-210—திரு நாமங்கள்—11 திரு நாமங்கள்
3-9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்
3-10- புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப—226-247- திரு நாமங்கள் -22-திரு நாமங்கள்
3-11–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி -248-271-திரு நாமங்கள் -23-திரு நாமங்கள்
3-12-விஸ்வ ரூபம் —272-300-திரு நாமங்கள் -29-திரு நாமங்கள்

நரசிம்ஹ அவதாரம் ——–200-210——11 திரு நாமங்கள்
மத்ஸ்யாவதாரம் ———–211-225——15 திரு நாமங்கள்
உபநிஷத் திரு நாமங்கள் —226–246—–21 திரு நாமங்கள்
நாராயணன் ———————247–271—–25 திரு நாமங்கள் –
விஸ்வரூபன் ———————272–300—–29 திரு நாமங்கள் –

—————-

3-10- புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப திரு நாமங்கள் -226-247-

அக்ரணீர் க்ராமணீஸ் ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸ்மரணீ
ஸஹஸ்ர மூர்த்தா விஸ்வாத்மா சஹஸ்ர ராஷஸ் ஸஹஸ்ர பாத் –24-

226-ஸஹஸ்ர மூர்தா –
தலைகள் பல பல – உடையவன் -தோள்கள் ஆயிரத்தாய்-முடிகள் ஆயிரத்தாய் -8-1-10-

விஸ்வத சஷுஸ் விஸ்வதோ முகம் –தைத்ரியம் –அனைத்துப் பக்கங்களிலும் கண்களும் முகங்களும் உள்ளவன்

ஸ்ரீ மத் பகவத் கீதை –13-13-ஸர்வதஸ் பாணீ பாதம் தத் –
அனைத்து திசைகளிலும் தனது கைகளையும் கால்களையும் ப்ரஹ்மம் கொண்டுள்ளது

அறிதல் செயல் புரிதல் இவற்றுக்கு உப லக்ஷணம் -திறன்களை எல்லையே இல்லை என்றவாறு

ஆயிரக் கணக்கான தலைகளை உடையவர் -ஞானத்தின் வடிவமான மத்ஸ்யாவதாரத்தில் வெளிப்படுத்தப் பட்டவையும்
புருஷ ஸூக்தம் முதலிய பர வித்யைகளில் கூறப் பட்டவையுமான ஸஹஸ்ர மூர்த்தா முதலிய திரு நாமங்கள் கூறப் படுகின்றன –
ஆயிரம் தலைகளை உடையவர் -தலை என்பது கண் பாதம் ஞானம் செயல்கள் உபகரணங்கள் முதலிய வற்றையும் குறிக்கும் –
ஆயிரம் -எண்ணற்றவை என்ற பொருளில் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆயிரம் தலைகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆயிரக் கணக்கான தலைகளை உடையவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

227-விஸ்வாத்மா –
எங்கும் உள்ளவன் -ஞான சக்திகளால் வியாபித்து

ஸ பூமிம் விஸ்வதோ வ்ருத்வா –புருஷ ஸூக்தம் —அனைத்து திசைகளிலும் பூமியை வியாபித்து

யேந ஏஷ பூத திஷ்டதி அந்தராத்மா –தைத்ரியம் –
யார் எங்கும் வியாபித்து உள்ளானோ அவனே அனைத்தின் அந்தர்யாமியாகவும் உள்ளான்

யேந ஸர்வம் இதம் ப்ரோதம் –தைத்ரியம்
ப்ரக்ருதி காலம் சம்சார ஜீவன் முக்த ஜீவன் மற்றும் நித்ய ஸூரிகள் பலருக்கும் இவனே அந்தராத்மா
அனைத்தும் இவனால் பரவப்பட்டு உள்ளன

அஹமாத்மா குடாகேச ஸர்வ பூதா –கீதை -10-20-
சோம்பலை வென்ற அர்ஜுனா -அனைத்து உயிரிகளின் இருதயத்தில் நானே உள்ளேன்

உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-

ஞான சக்திகளினால் உலகு எங்கும் பரவி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகிற்கு ஆத்மாவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகிற்குக் கட்டளை இடுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

————–

228-ஸஹஸ்ராஷ-
துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் -8-1-10

ஆயிரக் கணக்கான கண்களை உடையவர் -ஆயிரம் இந்திரியங்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆயிரம் கண்களை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆயிரக் கணக்கான கண்கள் உள்ளவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

229–ஸஹஸ்ரபாத்-
தாள்கள் ஆயிரத்தாய் -8-1-10-

இங்கு முன்னும் பின்னும் ஆயிரம் என்பது அளவற்றது என்பதைத் தெரிவிக்கும்
தலை கண் என்றதால் மற்ற ஞான இந்திரியங்களையும்
கால் என்றதனால் மற்றக் கர்ம இந்திரியங்களையும் உப லக்ஷண முறையில் குறிக்கும் –

ஆயிரக் கணக்கான பாதங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆயிரம் கால்களை உடையவர் -விராட் ஸ்வரூபி –ஸ்ரீ சங்கரர் –

ஆயிரக் கணக்கான பாதங்களை உடையவர் –

—————

ஆவர்த்தநோ நிவ்ருத்தாத்மா சம்வ்ருதஸ் சம்ப்ரமர்த்தன
அஹஸ் சம்வர்த்தோ வஹ்நி அநிலோ தரணீதர –25-

————-

230-ஆவர்த்தன –
திருப்புவான் -சம்சார சுழலை சுழற்றுபவன் –

தேநேதம் ப்ராம்யதே ப்ரஹ்ம சக்ரம் –மஹா பாரதம்
ஸம்ஸாரம் என்னும் சக்கரம் அவனால் சுழற்றப்படுகிறது

பிராமயன் ஸர்வ பூதாநி –கீதை -18-6-
தனது சக்தியால் இயந்திரம் போன்று சுழற்றுகிறான்

கால சக்ரம் ஜகத் சக்ரம் யுக சக்ரம் ச கேசவ ஆத்ம யோகேந பகவான் பரிவர்த்தயதே அநிசம் –மஹா பாரதம்
தனது யோக சக்தி மூலம் எம்பெருமான் காலம் உலகம் யுகம் என்ற சக்கரங்கள் ஆகியவற்றை இடைவிடாது சுழற்றியபடியே உள்ளான்

தஸ்மாத் விராட் அஜாயத –புருஷ ஸூக்தம் –இவனிடம் இருந்து விராட் புருஷன் தோன்றினான்

கால சக்கரத்தான் -4-3-5-

ஏற்றச் சாலைப் போல் சாம்சாரத்தைத் திருப்புவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சார சக்ரத்தை திருப்பும் இயல்வுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நதிகளில் உள்ள நீரில் சூழல்களை உண்டாக்குபவர் -எல்லா இடத்திலும் இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

231-நிவ்ருத்தாத்மா –
ப்ராக்ருதங்களுக்கு அப்பால் பட்டவன் -சர்வ உத்க்ருஷ்டன் -பராத்பரன் –
மீண்டும் 453–604–780-வரும்

த்ரிபாத் ஊர்த்வம் உதேத் புருஷ –புருஷ ஸூக்தம் –ஸம்ஸார மண்டலத்தைக் காட்டிலும் மூன்று
மடங்கு பெரிதாக உள்ள பரமபதத்தில் வீற்றுள்ளான்

பராத் பரம் யத் மஹதோ மஹாந்தம் –தைத்ரியம் –
உயர்ந்த வற்றை விட உயர்ந்தவனாகப் புகழப்படும் அனைத்தையும் விட உயர்ந்தவனாக

ப்ரக்ருதிக்கு மூன்று மடங்கான நித்ய விபூதியில் இருப்பதாகிய தம் ஸ்வரூபம் பிரவ்ருதியை கடந்ததாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சார பந்தம் இல்லாத ஸ்வரூபம் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரளயத்தில் ஆத்மாக்கள் திரும்பும்படி செய்பவர் -அநிவ்ருத்தாத்மா-அழியாத சரீரம் உடையவர் -என்றுமாம் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

232-சம்வ்ருத
நன்கு மறைக்கப் பட்டவன் –

தமஸஸ் பரஸ்தாத் –புருஷ ஸூக்தம் –தமஸ் என்னும் இருளுக்கு அப்பால் உள்ளவன்

அஹம் வேத்மி -விச்வாமித்ராதிகளுக்கு
உயர்வற உயர் நலம் உடையவன் -ஆழ்வார் உணர்ந்தார்
காணலுமாகான் உளன் அல்லன் இல்லை அல்லன் -2-5-10-

-ஸ்ரீ பராசர பட்டர் –

-பகலை நன்றாக உண்டாக்கும் ஸூர்யன் -–ஸ்ரீ சங்கரர் –

நற் குணங்களுடன் கூடியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

233-சம் ப்ரமர்த்தன –
நன்றாக அழிப்பவன்-அஞ்ஞானம் தமஸ் அழித்து-

தம் ஏவம் வித்வான் அம்ருத இஹ பவதி –புருஷ ஸூக்தம்
இப்படியாக யார் எம்பெருமானை உபாஸனை செய்கிறானோ அவன் இங்கேயே இறவாமை அடைகிறான்

ய ஏவம் விது அம்ருதா தே பவந்தி அத இதரே துக்கம் ஏவ அபியந்தி –ப்ருஹத் உபநிஷத்
இப்படியாக உபாஸிக்கிறவர்கள் முக்தி அடைகிறார்கள்
உபாஸனை செய்யாதவர்கள் துன்பமான ஸம்ஸாரத்தை மீண்டும் அடைகின்றனர் –

உணர்விலும் உம்பர் ஒருவனை என் உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -8-8-3-

தம்மை உபாஸனை செய்வதால் அந்தப் பிரக்ருதி என்னும் இருளை முழுதுமாக அழிப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

ருத்ரன் எமன் முதலிய தமது பரிவாரங்களினால் உலகை சம்ஹரிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களை நன்கு அழிப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

234-அஹஸ் சம்வர்த்தக –
பகலை காலத்தை நடத்துபவன் –

அஷ்டாத்யாயீ –யுவோ அநாகவ் –-யு மற்றும் வு என்பதில் அந மற்றும் அக என்பது சேர்க்கப்படும் என்றது போல் இங்கு உள்ளது

ஸர்வே நிமேஷா ஜக்ஜிரே வித்யுதஸ் புருஷா அதி –தைத்ரிய நாராயண வல்லி
மின்னல் போன்று ஒரு நொடிக்குள்ளும் தோன்றி மறைகிற அனைத்தும் கூட மின்னல் போன்ற
ஒளியை யுடைய பரம் பொருள் இடம் இருந்தே உண்டாகின்றன

கால சக்ரம் இத்யாதி -மஹா பாரத உத்யோக பர்வம் –காலம் என்ற சக்கரத்தை அவனே சுழற்றுகிறான்

காலஸ்ய ஹி -மஹா பாரத உத்யோக பர்வம்–
காலம் போன்ற பலவற்றை தன் வசம் வைத்துள்ளான்

காலம் அவனது லீலா உபகரணம்

அத்யாத்மம் கால தத்வீயம் அதி தைவதம் அஸ்ய வை ப்ரபவ அப்யவ மூர்த்தி வை விஸ்வாத்ம பரமேஸ்வர
அதிபுதம் பரிஜ் ஜேயம் த்ரை லோக்யம் பூத பூர்வகம் கால ச அவ்யக்த தத் வஸ்ய ஹி அத்யாத் மத் வேந வர்த்ததே
அதி தைவதம் இஜ்யா ச தத் போகம் அதி பூததா –பவ்ஷ்கர ஸம்ஹிதை
அத்யாத்மம் காலதத்வம் -அதன் தோற்றம் அழிவுக்கும் காரணமாகவும் அனைத்து உயிர்களுக்கும் ஆத்மாவாகவும் உள்ள பரமாத்மா அதி தைவதம் ஆகிறான்
பஞ்சபூதங்களாலான மூன்று உலகங்களும் காலத்தின் அதிபூதம் ஆகும்
இது அனுபவிக்கப்பட வேண்டியது -அதி தைவதம் வணங்கப்பட்ட வேண்டும் –

கால சக்கரத்தாய் -7-2-7-காலம் அவன் அதீனம்

பகல் முதலிய கால சக்ரத்தை உருட்டுபவர் -முக் காலமானது லீலைக்கு உபகரணம் -ஷட்பாவ
விகாரம் -பிரகிருதி புருஷன் சேர்ந்து -உழன்று பிரிந்து -இருக்க காரணம் -ஸ்ரீ பராசர பட்டர் –

பகலை நன்றாக உண்டாக்கும் ஸூர்ய ரூபி –ஸ்ரீ சங்கரர் –

நாள்களை நடத்துபவர் -பக்தர்களை கைவிடாதவர் -உலகச் சுழற்சிக்கு முழு ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

235-வஹ்நி-வஹிப்பவன் –

உணாதி ஸூத்ரம் –வஹி -ச்ரு -ச்ரி யுத்ருச்லாஹா த்வரிப்யோ நித் –
வஹி -ச்ரு -ச்ரி யுத்ரு க்லை போன்ற தாதுக்களுடன் நித் என்பது இணையும் -வஹ் +நி =வஹ்நி

அஸ்ய அம்ருதம் திவி -புருஷ ஸூக்தம் –அவனது பரமபதம் அழியாமல் நித்தியமாக உள்ளது

ஸ்வே மஹிம்நி ஸ்திதம் -விஷ்ணு தர்மம் -7-22-மேன்மை கொண்ட தனது பரமபதத்தில் உள்ளான்

பாதோஸ்ய இஹ அபவாத் புந –புருஷ ஸூக்தம் -4-
அநிருத்தன் என்ற நான்காவது ரூபத்தில் இந்தப் பரம பதத்தில் எம்பெருமான் தோன்றினான்

இந்தப்பொருள் இங்கே உள்ளது இந்த தேசம் போல் குறிப்பிட்டு கூற ஹேதுவாக தேசம்
இந்த இடம் பத்தர் முக்தர் நித்யர் மூவருக்கும் அவனால் அளிக்கப் பட்டதாகும்

ஒரு மூ யுலகும் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மால் -10-8-9-

தேச வடிவில் உலகத் தாங்குபவர் -பரமபதம் -முதன்மை அதில் -லீலா விபூதி -அடுத்து –
இங்கே இது என்கிற ஞானத்திற்கு காரணம் -இவை பத்தர் முக்தர் நித்யர் மூவகைச் சேதனர்க்கும் அவன் தந்ததே -ஸ்ரீ பராசர பட்டர் –

ஹவிஸ் ஸூக்களைத் தாங்கும் அக்னியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

உலகை நடத்துபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

236- அநில –
ஜீவிக்கச் செய்பவன் காற்று-அநிலம்-பிராண வாயு நம்மை ஜீவிக்க செய்வதால்–மேலும் 818 வரும்

உணாதி ஸூத்ரம் –ஸலி -கலி -அநி ஆகிய தாதுக்களுடன் இலச் என்பது இணைகிறது

ப்ராணாத் வாயு அஜாயத -புருஷ ஸூக்தம் –இவனிடம் இருந்து பிராணனும் –அதில் இருந்து வாயுவும் தோன்றின

கோ ஹி ஏவ அந்யாத் கஸ் ப்ராண்யாத் –தைத்ரியம்
அவனைத் தவிர யாரால் அளிக்க இயலும் -பிராணன் இன்றி எவ்வாறு மூச்சு விட இயலும்

காண்கின்ற இக் காற்று எல்லாம் நானே என்னும் -5-6-3-
உலகு எல்லாம் ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்து உழலும் அம்மான் -10-8-1-

இப்படி யாவரையும் உய்விப்பவர் -இதனுடைய கலா மாத்ரமே காற்று என்று பிரசித்தமானது-காற்றும் அநிலம் எனப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

அநாதி யானவர் -ஒன்றையும் ஆதாரமாகக் கொள்ளாதவர் -பிராண ரூபியாக அன்னங்களைப் புஜிப்பவர்  -ஸ்ரீ சங்கரர் –

தனக்கு அடைக்கலம் ஒன்றும் தேவை இல்லாதவர் -தமக்கு பூமி ஆதாரமாக இல்லாமல் தாமே பூமிக்கு ஆதாரமானவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

237-தரணீதர-
தரிப்பவைகளையும் தரிப்பவன்

ஸ தாதார ப்ருத்வீம் த்யாம் உத இமாம் -தைத்ரிய காட கம் -4-1-8-
பூமி ஸ்வர்க்கம் உள்ளிட்ட அனைத்தையும் அவனே தாங்குகிறான்

அத்ருதா அ ஸி வராஹேண –தைத்ரியம் -வராஹ வடிவில் பூமியை உயர்த்தினான்

ப்ருதிவீம் ச அந்தரிக்ஷம் சத்யாம் சைவ புருஷோத்தம மந ஸா இவ வீஸ் ருஷ்டாத்மா நயதி ஆத்ம வசம் வஸீ -மஹா பாரதம்
அந்தப் புருஷோத்தமன் தன்னுடைய ஸங்கல்ப லேச மட்டுமே பூமி ஸ்வர்க்கம் அந்தரிக்ஷம் போன்றவற்றை எல்லாம் அடக்கி தன் வசத்தில் வைத்துள்ளான்

நாகமேந்து மண்ணினைக் காத்து ஏகமேந்தி நின்றவன் -திருச்சந்த -6-

அனைத்தையும் தாங்கும் பூமியையும் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வராஹ அவதாரமாகவும்-ஆதிசேஷன் -அஷ்ட திக் கஜங்கள் ரூபமாக -வடிவில் பூமியைத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

பூமியைத் தாங்குபவர் -சிறந்த கோவர்த்தன மலையைத் தாங்குபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

ஸூ ப்ரசாத பிரசன்னாத்மா விஸ்வஸ்ருக் விஸ்வபுக் விபு
சத்கர்த்தா சத்க்ருதஸ் சாதூர் ஜஹ்நுர் நாராயணோ நர –26

——————–

238-ஸூப்ரஸாத –
மிக்க அருள் புரிபவன் –

தம் அக்ரதும் பஸ்யதி வீத சோக தாது ப்ரஸாதாத் -ஸ்வேதாஸ்வர -3-20-
இந்தப் பரம புருஷனை யார் ஒருவன் எப்போது காண்கிறானோ
அப்போதே அவன் அருள் மூலம் துன்பங்கள் ஏதும் இல்லாமல் உள்ளான்

ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் -விஷ்ணு புராணம் -5-19-21
அனைவருக்கும் அருள் புரிகின்ற கிருஷ்ணனும் நம்பி மூத்த பிரானும் எனது இல்லத்துக்கு வந்துள்ளனர் –

அக்ரூர் மாலா காரர் –ஈரம் கொல்லி
நல் அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-

தம்மை அடைந்தவர்களுக்கு மிக்க அருள் புரிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அபகாரம் செய்த சிசுபாலன் முதலியோர்க்கும் மோஷம் அளிப்பவர் -மங்களகரமான அருளை உடையவர் -ஸ்ரீ சங்கரர்

மங்கள கரமான மோஷத்தை அளிப்பவர் -மங்கள கரமான அருள் புரிவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

239-பிரசன்நாத்மா-

அவிஜி தத் ஸோ அபி பாஸஸ் ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப –சாந்தோக்யம் -8-1-5-
பசி தாக்கம் போன்ற எந்த வித தேவையும் அற்றவன்
விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றப் பெற்றவன்
உறுதியான மனம் கொண்டவன்

சாந்தி ஸம் ருதம் அம்ருதம் –தைத்ரியம்
பரிபூரணமான அமைதி உள்ளவன் -அம்ருதம் போன்றவன்

தெளிவுற்ற சிந்தையன் -7-5-22
சமோஹம் சர்வ பூதேஷு -இளையவர்கட்கு அருளுடையாய் இராகவனே -பெருமாள் திருமொழி -8-9-

அவாப்த சமஸ்த காமன் -விருப்பு வெறுப்புக்களால் கலக்கம் அற்ற தெளிந்த மனம் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

குறைவாளராயும் -கருமி யாவும் இருப்பவன் தானே ஆராதிப்பதற்கு அரியவன் –
ரஜோ குண தமோ குணங்களினால் கலங்காத மனம் உடையவர் -அனுக்ரஹிக்கும் தன்மை உள்ளவர் –ஸ்ரீ சங்கரர்

அருளை ஸ்வபாவமாக உடையவர் -அவாப்த சமஸ்த காமன் –தெளிந்த மனம் உள்ளவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

240-விஸ்வருக்
அனைத்தையும் படைப்பவன்
பாமரு மூ வுலகும் படைத்த பற்ப நாபா -7-6-1
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -3-2-1-
யாதும் இல்லா வன்று நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -4-10-1-
புவனி எல்லாம் படைத்தவனே -பெருமாள் திரு -8-2 –

குணம் குற்றம் பாராமல் உயிர்கள் உய்வதைக் கருதி உலகைப் படைப்பவர் -விஸ்வ ஸ்ருட் -என்றும் பாட பேதம் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகத் தாங்குபவர் –உலகத்துக்கு பிரபு -விஸ்வ த்ருத்-என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –

உலகில் துணிவுள்ளவர் -விஸ்வத்ருத்-என்ற பாடம்- ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

241- விஸ்வபுக் விபு –
எங்கும் பரந்து இருந்து ரஷிப்பவன்

ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமானி க்ருத்வா அபிவதன் யதாஸ்த்தே –புருஷ ஸூக்தம்
தனது ஸங்கல்பம் மூலம் படைக்கப்பட்ட அனைத்தைக்கும் பெயர்கள் இட்டு -அவற்றை
அந்தப் பெயர் கொண்டு அழைத்து அவனுடன் உரையாடியபடி யார் உள்ளானோ

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இருந்து நின்ற பெரு மாயா -8-5-10
தானேயாகி நிறைந்து எல்லா யுலகும் உயிரும் தானேயாய் -1-7-2-

உலகங்களை வியாபித்துக் காப்பவர் -ஒரே திரு நாமம் -ஸ்ரீ பராசர பட்டர் –

விஸ்வபுக் –உலகை அழிக்கும் போது உண்பவர் -காப்பவர் –
விஸ்வபுக் –உலகை அழிக்கும் போது உண்பவர் -காப்பவர் –
விபு –ஹிரண்ய கர்ப்பர்-முதலிய பல உருவங்களாய் இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –
விஸ்வபுக் –உலகை அழிக்கும் போது உண்பவர் -காப்பவர் –
விபு –ஹிரண்ய கர்ப்பர்-முதலிய பல உருவங்களைக் கொண்டு -பரவி – இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

242-சத் கர்த்தா –
சத்துக்களை பஹூ மானிப்பவன்-

ஸஜ் ஜநஸ் ப்ரதி பூஜக –ராமாயணம் –சாதுக்களை ஆதரித்து மரியாதை செய்பவன்
தண்ட பூபிகா நியாயம் -அனைவரையும் ரக்ஷிப்பவன் என்னும் போது ஸாதுக்களைக் கௌரவிப்பான் என்றும் சொல்லவும் வேண்டுமோ

தமர்கட்கு எளியான் -10-5-9-

சத் புருஷர்களைப் பூஜிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்காரம் செய்பவர் -பூஜிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உண்மையான உலகுக்குக் கர்த்தா -துன்பம் முதலியன அற்றவன் -அனைத்து செயல்களையும் செய்பவன் –
அழிவில் விருப்பமுள்ள அசுரர்களை அழிப்பவன்-ஸ்ரீ சத்ய சந்தர்-

———————

243-சத் க்ருத –
சாதுக்களால் பூஜிக்கப் படுமவன்

அஹோ ஹி ஏகாந்தி ந ஸர்வான் பரீணாத பகவான் ஹரி விதி ப்ரயுக்தாம் புஜாம் ச க்ருஹ்ணாதி சிரஸா ஸ்வயம் –ஸாத்வத ஸம்ஹிதை
தன்னிடம் மட்டுமே நின்று மற்றத் தெய்வங்களை நாடாமல் உள்ளவர்கள் அனைவரையும் ஸ்ரீ ஹரி மகிழ்விக்கிறான்
அவர்கள் செய்யும் பூஜையைத் தனது திரு முடியால் ஏற்றுக் கொள்கிறான்

சபர்யா பூஜித ஸம்யக் -பால காண்டம் -1-59-சபரியால் நன்றாகவே பூஜிக்கப் பட்டான்

மாலா காரணே பூஜிதா -விஷ்ணு புராணம் -5-19-29-மாலை கட்டுபவரால் வணங்கப்பட்டான்

செழு நிலத் தேவர் நான் மறையோர் திசை கை கூப்பி ஏத்தும் -8-4-8
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
சபரி மாலாகாரர் -போல்வார் இடம்-

சபரி போல்வார் ஸ்ரத்தையுடன் ஈடுபாட்டுடன் கிஞ்சித் கரித்த சிறிய பொருள்களையும் தம் மகிமைக்குத் தக்கவற்றைப் போலே ஏற்று மகிழ்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

ப்ரஹ்மாதிகளாலும் -பூஜிக்கப் படுபவர்களாலும் பூஜிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

உண்மையான செயல்களை உடையவர் -சத்க்ருதி -என்று பாடம் –
பிரத்யும்னனாக கருதி என்பவளை மனைவியாக அடைந்தவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

244-சாது –
ஆஸ்ரிதர் நியமனம் -தூது போதல்-தேரோட்டல்

உணாதி ஸூத்ரம் –க்ரு வா பா ஜி ஸாத் போன்ற தாதுக்களின் இறுதியில் உ சேர்க்கப் பட வேண்டும்

இன்னார் தூதன் என நின்றான்
இந்த்ரன் சிறுவன் தேர் முன் நின்றான்

அடியவர் விரும்பியபடி தூது சென்றும் தேர் ஒட்டியும் போன்ற வற்றைச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நியாமமாக நடப்பவர் -எல்லாவற்றையும் சாதிப்பவர் -சாதனம் எதுவும் இல்லாமல் சாதிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மற்றவர்களின் கார்யங்களை சாதித்துக் கொடுப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

245-ஜஹ்நு-
மறைப்பவன் -பிறர்களுக்கு அரிய வித்தகன் -1-3-1-

சக்ரம் தத் வாஸூ தேவஸ்ய மாயயா வர்த்ததே விபோ சாபஹ் நவம் பாண்ட வேஷு சேஷ்டதே ராஜ தத்தம் –உத்யோக பர்வம் -6-72-
வாஸூ தேவனின் வியக்க வைக்கும் சக்தி மூலமாக அவனது சக்ரம் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் இருக்கும்
ஆக பாண்டர்வர்கள் உள்ளிட்ட அவன் அடியார்களுக்காக அனைத்தையும் செய்கிறான்

அடியவர் அல்லாதவர்க்கு தம் மகிமையை மறைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்ஹார காலத்தில் எல்லாவற்றையும் மறைப்பவர் -பக்தர் அல்லாதவரைக் கை விடுபவர் –
பக்தர்களை உயர்ந்த கதிக்கு அழைத்துச் செல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அயோக்யர்களைக் கை விடுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————

246-நாராயண –
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்த்ரே சமீரித-ஆளவந்தார்

நாராயணாய வித்மஹே -தைத்ரியம் நாராயண வல்லி –6-1-26--நாராயணனை உபாஸனை செய்கிறோம்

நாராயண பர ப்ரஹ்ம –தைத்ரியம் -6-11-நாராயணனே பர ப்ரஹ்மம்

அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித

ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான நே மே த்யாவா ப்ருதிவீ–மஹா உபநிஷத் -நாராயணன் மட்டுமே
முதலில் இருந்தான்

அத புந ஏவ நாராயண –மஹா உபநிஷத் –-அதன் பின்னர் மீண்டும் நாராயணன்

சஷுஸ் ச த்ரஷ்டாவ்யம் ச நாராயண –ஸூ பால உபநிஷத்
காண்கின்ற கண்களும் அந்தக் கண்களால் காணப்படும் பொருளும் நாராயணனே

அத திவ்யோ தேவ ஏக நாராயண –ஸூ பால உபநிஷத் –திவ்யமான ஒருவன் நாராயணனே

யத் ச கிஞ்சித் –தைத்ரியம் –இந்த உலகில் எவை பார்க்கப்பட்டும் -எவை கேட்கப்பட்டும் -உள்ளனவோ
அவை அனைத்தின் உள்ளும் புறமும் நாராயணன் வியாபித்து உள்ளான்

ஷட் கண்களால் -அறியக்கூடாத ரஹஸ்ய திரு நாமம் –
ஆச்சார்யன் சிஷ்யன் இருவருக்கும் மட்டுமே அறிந்து கொள்ள வேண்டியது என்றவாறு –

வண் புகழ் நாரணன் -10-9-1
நாரணன் முழு வெழ் உலகுக்கும் நாதன் வேத முயன் -2-7-2
நாடு நகரமும் நன்கறிய நமோ நாராயணாய
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -பெரிய திருமொழி -1-1-1-
நாராயணாவோ மணி வண்ணா நாகணையாய் -சிறிய திருமடல்
நானும் சொன்னேன் நமர்களும் உரைமின் நமோ நாரணமே -பெரிய திருமொழி -6-10-6-
நாராயணா என்று ஓதுவார் உரைக்கும் உரை உண்டே -முதல் திரு -95
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -இரண்டாம் திருவந்தாதி -81
நாமம் பல சொல்லி நாராயணா -மூன்றாம் திரு -8
நலம் திகழ் நாரணன் -பெருமாள் திருமொழி -10-11
இன்னம் பல உண்டே –

நார -அழியாத நித்ய வஸ்துக்களின் -ஆத்மாக்களின் கூட்டத்துக்கு
அயனம் -ஆதாரமாக இருப்பவர் -அந்தர்யாமியாய் அவற்றுள் இருந்து நியமிப்பவர் உபநிஷத்துக்களில் சாகைகள் தோறும் ஒதப்படுகிற பரம்பொருளின் தனித் திரு நாமம் –
மிக ரஹஸ்யமாகையால் விரித்துச் சொல்ல வில்லை -ஸ்ரீ பராசர பட்டர் –

நரர் -ஜீவர்களுக்கு பிரளயத்தில் ஆதாரமானவர் -நர -ஆத்மா -அதில் இருந்து உண்டான ஆகாசம் முதலியவை நாரங்கள் -அவற்றில் காரணமாக
வ்யாபிப்பவர் -அதனால் அவற்றைத் தமக்கு இருப்பிடமாக உடையவர் -பிரளய காலத்தில் ஜீவர்கள் சேருமிடமாய் இருப்பவர் -நரன் இடத்தில்
இருந்து யுண்டான தன்னார் -நாரம் -அத்தை இருப்பிடமாகக் கொண்டவர் நாராயணன் –மனு ஸ்ம்ருதி -நாராயணாய நம-
என்ற மந்த்ரமே கோரமான சம்சார விஷத்தை யுடனே போக்க வல்லது -இதை நான் மிக உயர்ந்த குரலில் கையைத் தூக்கிக்
கூறுகிறேன் -முனிவர்களே பணிவுடன் கேளுங்கள் -என்று ஸ்ரீ நரசிம்ஹ புராணத்தில் கூறப் பட்டுள்ளது – -ஸ்ரீ சங்கரர் –

குணங்களுக்கு இருப்பிடமானவர் -தோஷங்களுக்கு இருப்பிடம் அல்லாதவர் -அழிவற்றவர் -அனுபவிக்கத் தக்கவர் -தோஷங்கள் அற்ற
வேதங்களால் அறியப்படுபவர் -ஞானத்திற்குப் புகலிடமானவர் -முக்தர்கள் அடையும் இடமானவர் -நாரங்களின் கூட்டங்களுக்கு
வணங்கத் தக்க புகலிடமானவர் -முக்ய ப்ரானனான வாயு தேவருக்கு புகலிடமானவர்-
நாரம் என்னும் ஜகத்துக்கு ஆச்ரயமாக இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

247-நர –
அழியாதவன் -அழிவற்ற நித்ய வஸ்துக்கள்
நரனாக அவதரித்தவன் –
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணனே நரனே -நாச் திரு -2-1-
நர நாராயணனாய் உலகத்தற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -பெரிய திரு மொழி -10-6-1-

சேதன அசேதன விபூதிகள் அழியாமல் இருக்கப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் நடத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

மாறுதல் அற்றவர் -அழிவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————-

3-11–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி -248-271-

அசங்க்யேயோ அப்ரமேயாத்மா விசிஷ்ஸ் சிஷ்டக்ருச் சுசி
சித்தார்த்தஸ் சித்த சங்கல்பஸ் சித்திதஸ் சித்தி சாதன –27-

———

248-அசங்யேய-
எண்ணில் அடங்காதவன் -நித்ய வஸ்துக்களின் திரள் -சமூஹம் எண்ணிறந்தவை –
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன் -3-3-3-

எண்ணில் அடங்காத சேதன அசேதனங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அளவிடக் கூடிய நாம ரூப பேதங்கள் அற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

எண்ண முடியாத குணங்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

249-அப்ரமேயாத்மா –
அனைத்திலும் உள்ளும் புறமும் வியாபித்து
எங்கும் உளன் கண்ணன் -2-8-9
கரந்து எங்கும் பரந்து உளன் -1-1-10
பரந்து தனி நின்றவன் -2-8-10-

எண்ணில் அடங்காப் பொருள்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் பரவியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அளவிட்டறிய முடியாத ஸ்வரூபம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அளவிட்டறிய முடியாத ஸ்வரூப தேக ஸ்வ பாவங்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

250-விசிஷ்ட –
தனிச் சிறப்பு யுடையவன் -ஸ்வாபாவிக பராத்பரன் –

அவை எல்லாவற்றையும் விடத் தனிச் சிறப்பு மிக்கவர் -வி லக்ஷணமாய் இருப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிற்கும் மேலானவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரமன் முதலியவர்களுக்கும் காரணமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

251-சிஷ்டக்ருத் –
பிறரை உயர்த்துபவன் -சிட்டன் ச்ரேஷ்டன்
சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய் -7-2-4-
தம்மையே ஒத்த அருள் செய்வர் -செய்வார்கட்கு உகந்து

தமது சம்பந்தம் பெற்றவர்களைத் தம்மிடம் சேரத் தக்க கல்யாண குணங்கள் உள்ளவர்கள் ஆக்குபவராய் -ஸ்ரீ பராசர பட்டர் –

கட்டளை இடுபவர் -நல்லோர்களைக் காப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

திறமை உள்ளவர்கள் எல்லாரும் கூடிச் செய்ததை முடிக்க முடியாத போது அதை முழுமை செய்து முடிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

252- சுசி –
தூய்மை உடையவன் -தேஜஸ் -157 பார்த்தோம்
அரங்க மேய அந்தணனை அந்தணர் தம் சிந்தையானை –
தேவர்க்கும் அறியலாகா அந்தணனை

தமக்குத் தாமே தூய்மை பெற்றவர் -ஸ்வயம் ஸூத்தமானவர் -பிறரால் பிரகாசம் உண்டு பண்ண வேண்டாதவர் -சிஷ்டக்ருத் ஸூசி -ஒரே திரு நாமம் -ஸ்ரீ பராசர பட்டர் –

மாயையாகிய குற்றம் அற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

தூய்மையானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

253-சித்தார்த்த –
எல்லாம் உடையவன் -அவாப்த சமஸ்த காமன்
நிகரில் புகழாய்- உலகம் மூன்று உடையாய் என்னை யாள்வானே -6-10-10-

வேண்டியவை தமக்குத் தாமே அடைந்து இருப்பவர்-ஸத்ய காமர் அன்றோ -ஸ்ரீ பராசர பட்டர் –

அடைய வேண்டியவை எல்லாம் அடைந்து இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அடியவர் விருப்பங்களை வழங்க ஆயத்தமாக இருப்பவர் -சித்த புருஷர்களுக்குச் செல்வமாக இருப்பவர் –
அயோக்யர்களின் அழிவுக்கு காரணமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

254-சித்த சங்கல்ப –
நினைத்த படி நடத்த வல்ல சத்ய ஸங்கல்பன் –

ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப –சாந்தோக்யம் -8-1-5-
விரும்பியவற்றை உடனே அடைபவன் என்பதாலேயே ஸத்ய ஸங்கல்பனும் ஆகிறான்

எல்லையில் ஞானத்தன் –ஞானம் அக்தே கொண்டு எல்லாக் கருமங்களும் செய் எல்லையில் மாயன் -3-10-8
மழுங்காத ஞானமே படையாக உடையவன் -3-1-9-

நினைத்தவை நினைத்த மாத்திரத்தில் அடைந்து இருப்பவர் -ஸத்ய ஸங்கல்பர் அன்றோ -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் சங்கல்பங்கள் நிறைவேறப் பெற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

அடியவர் விருப்பங்களைச் செயல்படுத்த முனைபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

255- சித்தித-
சித்திகளை அளிப்பவன் –
ஆய கொண்ட சீர் வள்ளல் ஆழிப்பிரான் -3-9-9-

யோகிகளுக்கு அணிமா கரிமா முதலிய அஷ்ட சித்திகளைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவரவர் தகுதிப்படி கேட்ட பலன்களைத் தருபவர் –ஸ்ரீ சங்கரர் –

தகுதி யுள்ளவர்களுக்கு சித்தியைத் தருபவர் -அயோக்யர்களுக்கு சித்தியைத் தடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

256-சித்தி சாதந-
ஆறும் -உபாயமும் -இனிதாக உள்ளவன்

யே து தர்ம்ய–கீதை -12-20- என்னையே பலனாக எண்ணி உபாஸனை செய்பவர்கள் எனக்குப் பிரியமானவர்கள்

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -6-7-10-
தேனே மலரும் திருப்பாதம் இறே

தம்மை உபாசிப்பதும் பலன் போல் ஸூகமாகத் தோன்றும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சித்திகளை நிறைவேற்றுபவர் –ஸ்ரீ சங்கரர் –

மோஷ ரூபமான பலனை சாதிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர
வர்த்த நோ வர்த்தமா நச்ச விவிக்தஸ் ஸ்ருதிசாகர –28

——————-

257-வ்ருஷாஹீ
அடையும் நாள் நன்னாளாய் இருப்பவன்

அஷ்டாத்யாயீ –ராஜ அஹஸ் சஹிப் யஷ் டச் —ராஜன் -அஹன் -சகின் -டச் என்பதை சேர்த்துக் கொள்ளும்

அத்யமே சபலம் ஜன்ம ஸூப்ரபாதா ச மே நிசா -விஷ்ணு புராணம் -5-17-3-
இன்று ஏன் வாழ்வின் பயன் அடைந்தேன் -எனது வாழ்வின் இரவு நீங்கியது

தாஸ் நிசாஸ் தே ச திவஸா–விஷ்ணு புராணம்
நான் என்று எல்லாம் கிருஷ்ணனைக் காணவில்லையே அன்று அனைத்துமே இரவே
இனி அவன் உடன் உள்ள நாட்கள் மட்டுமே பகல் பொழுதாகும்

எதாஹி ஏவ ஏஷ –அதச அபயம் கதோ பவதி–தைத்ரியம்
எப்போது உபாசகன் காண இயலாத அவனைக் குறித்த நினைவிலேயே உள்ளானோ அப்போதே அவன் ஸம்ஸார பயம் நீங்கப் பெறுகிறான் –

அடியேன் அரு வாணாள் செந்நாள் எந்நாள் அந்நாள் உன்தாள் பிடித்தே செலக் காணே -5-8-3-
அக்ரூரர் பாரித்த படியே

தம்மை முதன் முதலில் அடையும் தினமே எல்லா மங்களங்களுக்கும் வித்திடும் நாள் போலே இருப்பதால் அந்த ஆரம்ப தினம் தர்ம ரூபமாகவே சிறப்பாக இருக்கப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பகல் போலே பிரகாசிக்கும் தர்மங்களை உடையவர் -த்வாதசாஹம் முதலிய யஜ்ஞ விசேஷமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்மத்தின் மூலமாகப் பரவி இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

258-வ்ருஷப –
அனுக்ரஹத்தை பொழிபவன்

உணாதி ஸூத்ரம் -ருஷிஸ் வ்ருஷிப்யாம் கித்–ருஷி
வ்ருஷி என்பதால் பின்னால் அப் என்ற ப்ரத்யயமும் கித் என்ற ப்ரத்யயமும் சேர்கிறது
வ்ருஷ் +அபச் +அ –வ்ருஷப

எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-

சம்சாரத் தீயினால் தகிக்கப் பட்டுத் தம்மை வந்து அடைந்தவர் மீது அமுதமன்ன அருளைப் பொழிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் விரும்பியவற்றை வர்ஷிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அருளைப் பொழிபவர் -தர்மத்தால் பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

259-விஷ்ணு
எங்கும் பரந்து கருணை மழை பொழிபவன்
எங்கும் தானாய நங்கள் நாதனே -1-9-9-
2–பார்த்தோம் -663 மீண்டும் வரும்

உணாதி ஸூத்ரம் –விஷே -கித் ச இதி ணு –-வியாபித்த படி இருத்தல் என்னும் பொருளில் -விஷல் என்பதுடன் ணு மற்றும் இத் சேர்கின்றன

ந தத் அஸ்தி விநா யத் ஸ்யாத் மாயா பூதம் சராசரம் –கீதை -10-39-
இந்த உலகத்தில் எந்த வஸ்து என்னைப் பிரிந்து உள்ளதோ அப்படியான வஸ்து ஏதும் இல்லை
நான் இல்லாத பொருள் இல்லை -நான் எங்கும் உள்ளேன்
நெருப்புக்கு புகைக்கும் பிரியாத தொடர்பு போல் நானும் மற்ற ஸமஸ்த பொருள்களும் –

அப்படி அருளைப் பெற்றவர்களை விட்டு நீங்காதவர் -கடாஷத்தைப் பொழிந்ததும் மற்றும் பல உபகாரங்கள் செய்தும்
தமது உயர்வையும் தாழ்வையும் பாராமல் என்றும் அவர்களை விட்டுப் பிரியாமல் பரவி இருப்பவர் –
தார்க்கிகர்களின் வியாப்தியானது இங்கே கருதப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

த்ரிவிக்ரம அவதாரம் மூலம் உலகங்களை வியாபித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

நதிகள் பாயும்படி செய்பவர் -காண முடியாதவர் -அறிய முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

260-வ்ருஷபர்வா -தர்மம் படிகளால் அடையப்படுபவன் வர்ணாஸ்ரம கர்ம யோகம்

தம்மை அடைவதற்கு வர்ணாஸ்ரம தர்மங்களைப் படிகளாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தர்ம ரூபமான படிகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

புண்ய சாதனங்களான அமாவாஸ்யை முதலிய பர்வ தினங்களுக்கு யஜமானர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

261-வ்ருஷோதர –
தர்மமே உருவான திரு வயிற்றை உடையவன் -உதரம்
தாமோதரனை தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரம் அறிய-2-7-12
ஆராத்ய ஸூலபன்

அடியவர் இடும் எளிய உணவையும் ஏற்பதனாலும்-பிரளயத்தில் துன்புற்றவர்களை வைத்துக் காப்பதனாலும்
தரும மயமான வயிறு யுள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரஜைகளை வர்ஷிக்கும் -சிருஷ்டிக்கும் -வயிறு யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

திரி விக்ரமாவதாரத்தில் கங்கை நீரை பிரம்மாண்டத்தில் உள்ளவர்களுக்குத் தந்தவர் –
புண்ணிய தீர்த்ததால் மகிழ்பவர்-அருளைப் பொழிபவர் –
மற்றும் தோஷங்களுக்குத் தொலைவில் இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

262-வர்த்தன
வ்ருத்தி செய்பவன்

அவர்களைத் தாய் போல் வயிற்றில் வைத்து வளர்ப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அனைத்தையும் விருத்தி செய்பவர் -வளர்ப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தன்னைச் சார்ந்தவரை வளரச் செய்பவர் -உயர்ந்த செல்வத்தை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

263-வர்த்தமான
வளர்ச்சி அடைபவன் -ஆஸ்ரிதர்களுக்கு உதவியதால் வந்த புகர்
திகழும் தன் திருவருள் செய்து என்னுள் திகழும் மணிக்குன்றம் என்றே ஒத்து நின்றான் -8-7-5-

அவர்களை வளர்ப்பதனாலேயே தாமும் வளர்பவர் இப்படி எல்லாருக்கும் எல்லாவற்றையும் அளித்தும் தமது பெருமையில் சற்றும் குறையாமல் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலக வடிவாக விருத்தி அடைபவர் –ஸ்ரீ சங்கரர் –

நாடோறும் விருத்தி ஆக்குபவர் – அல்லது இவ்வாறு அளவிட முடியாத சம்ருத்தியை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

264-விவிக்த –
அத்விதீயன் -நிகரில் புகழாய் தன் ஒப்பார் இல் அப்பன் -6-3-9-

தமக்கே உரிய சிறந்த சரித்ரங்களை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகவடிவாக இருந்தாலும் தனித்து நிற்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகைக் காட்டிலும் வேறுபட்டவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————-

265-ஸ்ருதிசாகர
ஸ்ருதிகளுக்கு கொள்கலம் –

நாராயண பரா வேதா -ஸ்ரீ மத் பாகவதம் -2-5-25–வேதங்கள் நாராயணனையே பேசுகின்றன

வேதைச்ச சர்வை அஹமேவ வேத்ய–கீதை -15-15- அனைத்து வேதங்களாலுமே அறியப்படும் பொருளே நானே ஆவேன்

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை -பெரிய திருமொழி -2-3-2-
வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் ஆதியும் ஆனான் -பெரிய திரு மொழி -9-4-9-
நாரணன் வேதமயன் -2-7-2-

நதிகளுக்கு கடல் போலே இக் குணங்களை உரைக்கும் ஸ்ருதிகளுக்கு முடிவான இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேதங்களுக்குக் கடல் போலே இருப்பிடமானவர் -எல்லா வேதங்களும் அவரையே சொல்லுகின்றன –ஸ்ரீ சங்கரர் –

வேதங்களைக் கொடுப்பவர் -வேதங்களைத் தம்மிடம் வைத்துக் கொள்பவர் -வேதங்கள் ஆகிற கடலை வெளியிட்டவர் -வேதக்கடல்
மற்றும் கோவர்த்தன மலை முதலியன மூலம் மகிழ்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

———————–

ஸூ புஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸூதோ வஸூ
நைகரூபோ ப்ரருஹத்ரூபஸ் சிபிவிஷ்ட ப்ரகாசன–29

————-

266-ஸூ புஜ –
அழகிய புஜங்களை உடையவன்
கற்பக காவென நற்பல தோளன் -6-6-6
ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திரு மால்

சரணம் அடைந்தவர்களின் பாரத்தைத் தாங்குவதால் விளங்கும் கைகள் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைக் காக்கும் அழகிய புஜமுள்ளவர்–ஸ்ரீ சங்கரர் –

அழகிய தோள்கள் உள்ளவர் -இன்பத்தை அனுபவிக்கும்படி செய்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

267-துர்த்தர –
தடுக்க முடியாதவன்
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி -பெரிய திருமொழி -9-1-4-

இச் சிறந்த கை வன்மையினால் -பிரளய சமுத்ரம் போல் வேகம் உடைமையினால் பிறர் சக்திகள் மணல் அணைகள்
போலத் தடுக்க மாட்டாமல் உடைந்து போம்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷத்தை விரும்புகிறவர்கள் தியானிக்கும் போது மனத்தில் நிறுத்துவதற்கு அரிதாக இருப்பவர் –
பூமி முதலிய எல்லாவற்றையும் தாங்குகின்ற தம்மைத் தாங்குபவர் இல்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

பிறரால் தாங்க முடியாதவராக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

268-வாக்மீ-
கொண்டாடும்படியான வாக்கை உடையவன்

உத்தர உத்தர உக்தவ் ச வக்தா வாசஸ்பதிர் யதா –அயோத்யா -1-17-
மற்றவர்களின் வாதங்களுக்கு ஏற்ற பதில் அளிக்க இராமன் வல்லவன் –
இத்தகைய நிலையில் அவனே வாசஸ்பதி யாவான்

வாக் விவ்ருதாச்ச வேதா —வேதங்கள் அனைத்தும் அவனது வாக்குகளே யாகும்

பூயஸ் கதய திருப்திர் ஹி ஸ்ருண் வதோ நாஸ்தி மே அம்ருதம் -கீதை -10-18-
மேலும் பேசுவாயாக -உனது அம்ருதம் போன்ற சொற்கள் எவ்வளவு கேட்டாலும் நான் திருப்தி அடைய மாட்டேன்

புத்திமான் மதுரா பாஷீ பூர்வ பாஷீ பிரியம் வத -அயோத்யா -1-13-
இராமன் புத்திமான் -இனிய சொற்களைக் கொண்டவன் –
முதலில் பேசத் தொடங்கி அனைத்து விதமான சொற்களையும் பேசக் கூடியவன் –

ஜர யந்தம் பாரதீம் அநீர்யாம் கங்கரீம் ஸ்ருஜ்ஜயாநாம் விபூஷப்தி க்ரஹணீயாம நிந்தாம் பரா ஸூ நாம் அக்ரஹணீய ரூபாம்
அவன் பாரதர்கள் மற்றும் ஸ்ருஜ்ஜயர்கள் ஆகியவர்களின் மென்மையான சரித்திரங்களை உரைக்கிறான்
அவை மகிழ்ச்சி அளிப்பவை யாகும் -உயர்ந்தவையுமாகும் –
மோக்ஷத்தை விரும்புவர்களுக்கு ஏற்றது -துன்பம் கொண்டவர்களுக்கு ஏற்றது

அமேத மேதஸ் வநஸ் காலே பர க்ருஹா விபுலம் புஜம் அநர்மக்ருதம் ஆத் ரஸ்தம்
அநி ரஸ்தம் அசம் குலம் ராஜீவ நேத்ரோ ராஜா நாம் ஹேது மத்தாக்யம் அப்ரவீத்
தாமரைக் கண்ணன் நீளமான கைகளைக் கொண்ட அரசனின் கரங்களைப் பிடித்துக் கொண்டான்
சரியான காலத்தில் மழை அளிக்க வல்ல மேகங்களின் இடி குழப்பம் போன்று அவன் குரல் இருந்தது
அவை அச்சம் விளைவிப்பதாக இல்லை
அவை தெளிவாகவும் ஏற்கும்படியாகவும் இருந்தன

வேதம் அவன் வாக்கு -கீதாம்ருதம் பொழிபவன்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று -நடந்த நல் வார்த்தை அறிந்துமே
வார்த்தை அறிபவர் மாயவர்க்கு ஆள் அன்றி யாவரோ -7-5-9
தேசுடைய தேவர் திரு வரங்க செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே -நாச் 11-8-

சிறந்த வாக்கை யுடையவர் -சிறப்பாவது வேதத்தில் கூறப் பட்டதாகவும் வெற்றியை யுடையதாகவும் இனிமையாகவும்
கம்பீரமாகவும் பிரியமாகவும் ஹிதமாகவும் இருப்பதாகும் -ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் கேட்கக்கேட்க அமுதம் போன்ற இனிய வாக்குகளை உரைப்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

வேத ரூபமான சிறந்த வாக்கை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

வேத ரூபமான சிறந்த வாக்கை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

269-மஹேந்திர
சிறந்த ஐஸ்வர்யம் உடையவன்
இந்திர – இதி பரம ஐஸ்வர்யே-
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்

யாவராலும் கொண்டாடப் படும் பரமேஸ்வரத் தன்மை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உயர்ந்த இந்திரர் ஈஸ்வரர்களுக்கும் ஈஸ்வரர் –ஸ்ரீ சங்கரர் –

விரும்பியவற்றைக் கொடுக்கும் மேன்மை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————-

270- வஸூத-
தன்னைக் கொடுப்பவன்
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான்

தடையற்ற பெரும் செல்வம் இருந்தபோதும் பொருளை விரும்பும் சிறியோர்க்கும் அப் பொருளைக் கொடுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

செல்வத்தைக் கொடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஜனங்களை அவரவர்க்கு உரிய இடங்களில் வைப்பவர் -தம் ஸ்வரூபத்தை மறைப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

271-வஸூ –
தனமாய் உள்ளவன் வைத்த மா நிதி
உண்ணும் சோறு -வாசுதேவஸ் சர்வம்
தன்னைத் தந்த கற்பகம்
105 பார்த்தோம் மீண்டும் 701 வரும்-

வஸூ தேவஸ் ஸர்வம் இதி –7-19-
வாஸூ தேவனே அனைத்தும் என்று உள்ளவனுக்குத் தானே பெரும் செல்வம் ஆகிறான்

உயர்ந்தவர்களுக்குத் தாமே செல்வமாக இருப்பவர் -அவர்கள் மற்றப் பொருள்களை பொருளாகவே நினைப்பதில்லையே –ஸ்ரீ பராசர பட்டர் –

தம் ஸ்வரூபத்தை மாயையினால் மறைப்பவர் -தாமே தனமாக இருப்பவர் -ஸூர்ய ரூபத்தால் ஆகாசத்தில் வஸிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எங்கும் வசிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————-

மேல் இவ்வாறு சொன்ன மஹிமைக்குத் தக்க விஸ்வ ரூப பரமான திரு நாமங்கள் கூறப்படுகின்றன

———

புருஷ சூக்தத்தில் விளக்கப்பட்ட திரு நாமங்கள் –

226-சஹஸ்ர மூர்தா –ஆயிரம் -எண்ணற்ற -தலைகளை உடையவர் –
227-விச்வாத்மா – தன்னுடைய ஞான சக்திகளால் பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பவர் –
228-சஹஸ்ராஷ -எண்ணற்ற கண்களை உடையவர் –
229-சஹஸ்ரபாத் -எண்ணற்ற திருவடிகளை உடையவர் –
230-ஆவர்த்தன -சம்சாரச் சக்கரத்தை சுழற்றுபவர் -கால சக்ரம் -உலக சக்ரம் -யுக சக்ரம் -ஆகியவற்றை சுழற்றுபவர் –

231-நிவ்ருத்தாத்மா -பிரக்ருதியைக் காட்டிலும் மும்மடங்கு பெருத்த நித்ய மண்டலத்தை உடையவரானபடியால் மிகச் சிறந்த ஸ்வரூபம் உடையவர் –
232-சம்வ்ருத -பிரக்ருதியின் தமோ குணத்தால் அறிவு இழந்தவர்களுக்கு மறைந்து இருப்பவர் –
233-சம்ப்ரமர்த்தன -தன்னை உபாசிப்பவர்களுக்குத் தமோ குணமாகிய இருட்டை ஒழிப்பவர் –
234-அஹஸ் சம்வர்த்தக -நாள் பஷம் மாதம் முதலான பிரிவுகள் உடைய கால சக்கரத்தை சுழற்றுபவர் –
235-வஹ்நி- எங்கும் உள்ள பரம ஆகாச உருவத்தில் பிரபஞ்சத்தையே தாங்குபவர்
236-அநில- பிராண வாயுவாக இருந்து யாவரும் வாழும்படி செய்பவர் –
237-தரணீதர-தன் சங்கல்பத்தாலேயே பூமியைத் தாங்குபவர் –
238-ஸூ ப்ரசாத -தன்னை வேண்டியவர்களுக்காக அனைத்து பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுபவர்
239-பிரசன்னாத்மா -நிறைவேறாத ஆசையே இல்லாத படியால் நிறைந்த மனம் உள்ளவர் –
240-விஸ்வஸ்ருக் -ஜீவர்களின் குற்றம் பெறாமல் கருணையே காரணமாக உலகைப் படைப்பவர் –

241-விஸ்வ புக் விபு -ஒரே காப்பாளானாக உலகில் எங்கும் பரவி இருப்பவர் –
242-சத்கர்த்தா – மெய்யன்பர்களைப் பூசிப்பவர் –
243-சத்க்ருத -சபரி முதலான சாதுகளால் பூசிக்கப் படுபவர்
244-சாது -அடியார்கள் விரும்பிய படி தூது போவது தேர் ஓட்டுவது ஆகியவற்றைச் செய்பவர் –
245-ஜஹ்நு-பொறாமையும் பகைமையும் உள்ளோருக்குத் தன்னை மறைப்பவர் –
246-நாராயண -அழியாத நித்யமான சித் அசித் கூட்டத்துக்கு இருப்பிடம் ஆனவர் -அந்தர்யாமி யானவர் -‘
247-நர -தன் உடைமையாகிய சித் அசித்துக்களை அழியாமல் இருக்கப் பெற்றவர் –

——————————————————————

யானே நீ என்னுடைமையும் நீயே —

248-அசங்க்யேய-எண்ணிறந்தவர்-உடைமைகள் எண்ணிறந்தபடியால் –
249-அப்ரமேயாத்மா -எண்ணிறந்த பொருட்களின் உள்ளும் புறமும் வியாபிக்கிற படியால் அளவிட முடியாதவர் –
250-விசிஷ்ட -எதிலும் பற்று இல்லாதபடியால் -அனைத்தையும் விட உயர்ந்தவர் –
251-சிஷ்டக்ருத் -தன் அடியார்களை நற்பண்பு உடையவர்களாக ஆக்குபவர் –
252-சூசி -தானே தூய்மையாக இருந்தவர் -தன்னை அண்டியவர்களைத் தூய்மை யாக்குபவர் –
253-சித்தார்த்த -வேண்டியது எல்லாம் அமையப் பெற்றவர் –
254-சித்த சங்கல்ப -நினைத்தது எல்லாம் நடத்தி முடிக்கும் பெருமை உள்ளவர் –
255-சித்தித-எட்டு திக்குகளையும் யோகிகளுக்கு அருளுபவர்
256-சித்தி சாதன -இவரை அடைவிக்கும் வழியான பக்தியே இனிதாக உடையவர் –
257-வ்ருஷாஹீ -அவனை அடையும் நாளே நன்னாளான தர்மமாக இருப்பவர் –
258-வ்ருஷப – சம்சார தீயால் சுடப் பட்டவர்களுக்கு அருள் என்னும் அமுதைப் பொழிபவர் –
259-விஷ்ணு -அருள் மழையாலேயே எங்கும் இருப்பவர் –
260-வ்ருஷபர்வா -தன்னை அடைவதற்கு தர்மங்களைப் படிக்கட்டாக உடையவர் –
261-வ்ருஷோதர -தன் வயிறே தர்மமானவர் -அடியார்கள் அளிக்கும் நைவேத்யத்தால் வயிறு நிறைபவர் –
262-வர்தன -தாய் போலே தன் வயிற்றிலே வைத்து அடியார்களை வளர்ப்பவர் –
263-வர்த்தமான –அடியார்கள் வளரும் போது தானும் மகிழ்ந்து வளர்பவர் –
264-விவிக்த -மேற்கண்ட செயல்களால் தன்னிகர் அற்றவர் –
265-ஸ்ருதி சாகர -நதிகளுக்கு கடல் போலே -வேதங்களுக்கு இருப்பிடமானவர் –
266-ஸூபுஜ-அடியார்களின் சுமையைத் தாங்கும் மங்களமான தோள்கள் உடையவர் –
267-துர்தர -கடல் போலே தடுக்க முடியாத வேகம் உடையவர் –
268-வாக்மீ–வேத வடிவமான சிறந்த வாக்கை உடையவர் -வேதங்களால் துதிக்கப் படுபவர் -இனிமையாகப் பேசுபவர் –
269-மஹேந்திர-நிகரற்ற அளவிட முடியாத -அனைவரையும் ஆளும் செல்வம் உடையவர் –
270-வஸூத-குபேரனைப் போலே பொருட்செல்வத்தை விரும்புவோருக்கு அதை அருளுபவர் –
271-வஸூ -ஆழ்வார்கள் போன்றோர்களுக்கு தானே செல்வமாக இருப்பவர்

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–ஸ்லோகம் –57-58-59-60-61-62-63-64-65—-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ ரத்ன பிரபா வியாக்யானம்

November 27, 2019

ந தேஹம் ந ப்ராணான்ந ஸ ஸூ க மேசேஷாபி லஷிதம்
ந சாத்மானம் நாந்யத்  கிமபி தவ சேஷத்வ விபவாத்
பஹிர்ப்பூதம் நாத ஷணம் அபி சஹே யாது ஸததா
விநாஸம் தத் ஸத்யம் மது மதன விஜ்ஞாப நமிதம்—57-

நாத
தவ சேஷத்வ விபவாத் பஹிர்ப்பூதம்–உனது சேஷப்பட்டு இருக்கும் செல்வத்துக்குப் புறம்பான -உனக்கு சேஷப்படாத
தேஹம் க்ஷணம் அபி ந –உடம்பை ஒரு க்ஷணமும் பொறுக்க மாட்டேன்
ந ப்ராணான் சஹே –அப்படிப்பட்ட பிராணனையும் பொறுக்க மாட்டேன்
ந ஸ ஸூகம் அசேஷ அபி லஷிதம் சஹே -எல்லாரும் விரும்பக் கூடிய ஸூகத்தையும் ஸஹிக்க மாட்டேன்
ந ச ஆத்மானம் சஹே –ஆத்மாவையும் ஸஹிக்க மாட்டேன்
அந்யத்  கிமபி ந சஹே -சேஷத்வ சூன்யமான வேறே ஒன்றையும் ஸஹிக்க மாட்டேன்
யாது ஸததா விநாஸம் -சேஷத்வ சூன்யமான கீழ்ச் சொன்ன தேஹாதிகள் எல்லாம் உரு மாய்ந்து போகட்டும்
தத் ஸத்யம் மது மதன விஜ்ஞாபநம் இதம் —-இங்கனம் விண்ணப்பம் செய்த இது சத்யம்
இது பொய்யாகச் சொன்னேன் ஆகில் மது பட்டது படுவேன் அத்தனை

கீழே இஷ்ட பிராப்தி -இதில் அநிஷ்ட நிவ்ருத்தி –
ஏறாளும் இறையோனும் -4-8-உடம்பினால் குறையிலமே-உயிரினால் குறையிலமே -மணிமாமை குறைவிலமே —
பத்தும் பத்தாக பரக்க அருளிச் செய்ததை ஒரு ஸ்லோகத்திலே அடக்கி அருளிச் செய்கிறார் –
ந தேவ லோகா க்ரமணம் -இது இளைய பெருமாள் உடைய -ஏறாளும் இறையோன்
ந ஹி மே ஜீவிதே நாரத்த -இது பிராட்டியினுடைய ஏறாளும் இறையோன்
பகவத் கைங்கர்யத்துக்கு உறுப்பு அல்லாதது முமுஷுக்களுக்கு த்யாஜ்யம் என்னும் சாஸ்த்ரார்த்தம் –
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எரிந்து
எண் அழலை தீர்வேனே போலே –
அழிவில்லா ஆத்மவஸ்துவையும் உருமாய்ந்து போகட்டும் என்றது சேஷத்வ ஊற்றத்தைப் பற்ற –
விஞ்ஞாபனம் — விஞ்ஞாபிதம் –பாட பேதங்கள் –

————-

துரந்தஸ்யா நாதே ரபரிஹரணீ யஸ்ய மஹதோ
நிஹீந ஆசாரோ அஹம் ந்ருபஸூர ஸூபஸ்யாஸ் பதமபி !
தயா ஸிந்தோ ! பந்தோ ! நிரவதிக வாத்ஸல்ய ஜலதே !
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணமி தீச்சாமி கத பீ—58-

தயா ஸிந்தோ ! –கருணைக் கடலே
பந்தோ !–சகலவித பந்துவானவனே
நிரவதிக வாத்ஸல்ய ஜலதே !–எல்லையற்ற வாத்சல்ய சமுத்ரமே
நிஹீந ஆசாரோ அஹம்–இழிவான நடத்தை உள்ள நான்
துரந்தஸ்ய –முடிவு இல்லாததும்
அநாதே-அடி அற்றதும்
அபரிஹரணீ யஸ்ய –பரிஹரிக்க முடியாததும்
மஹதோ–பெரியதுமான
அஸூபஸ்ய–பாபத்திற்கு
ஆஸ்பதமபி !–இருப்பிடமாய் இருந்தாலும்
தவ குணகணம் –உன்னுடைய அளவற்ற குணங்களை
ஸ்மாரம ஸமாரம் –பலகாலும் நினைத்து
கதபீ—அச்சம் கெட்டவனாய்
இதி இச்சாமி –இங்கனே இச்சிக்கின்றேன்
உனது சேஷத்வத்தை ஆசைப் படுகிறேன் என்கை –
பாபங்கள் வலிமை அச்சப்பட வைத்தாலும் திருவருள் முதலிய திருக் கல்யாண குணங்களை அனுசந்திக்க
பயங்கள் விலகி கைங்கர்யப் பிரார்த்தனை பண்ணுகிறார்
ந்ருபசு –ம்ருக பிராயன் -வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானங்களை மீறி ஆகார நித்தமும் இன்றி
மனம் போனபடி திரிவதால் –

——————–

அநிச்சன்நப் யேவம் யதி புநரி தீச்சந்நிவ ரஜஸ்
தமஸ் சந்தஸ் சத்மஸ்துதி வசன பங்கீ மரசயம்
ததா அபித்தம் ரூபம் வசநம வலம்ப்யா அபி க்ருபயா
த்வமேவை வம்பூதம் தரணி தர மே சிஷ்ய மந–59-

ஹே தரணி தர–சர்வ லோக நிர்வாஹனான எம்பெருமானே
ரஜஸ் தமஸ் சந்தஸ்-அஹம் -ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் மூடப்பட்டுள்ள அடியேன்
அநிச்சந் அபி ஏவம் -உண்மையாக இப்படி இச்சியாது இருந்த போதிலும்
இச்சந்நிவ–இச்சிப்பவன் போலே அபிநயித்து
சத்மஸ்துதி வசன பங்கீம் -கபடமாக ஸ்தோத்ரம் சொல்லுகிற இத்தை
யதி புநஸ் அரசயம்ந் ததா அபி -செய்தேனேயாகிலும்
இத்தம் ரூபம் வசநம் –இப்படிப்பட்ட கபடமான சொல்லை
அவலம்ப்ய அபி –ஆதாரமாகக் கொண்டாவது
இந்த பொறி தடவின வார்த்தையைவாவது பற்றாசாகக் கொண்டு
க்ருபயா–திருவருளாலே நீ தானே
ஏவம் பூதம் மே மநஸ் சிஷ்ய –இப்படிப்பட்ட எனது மனஸ்ஸைத் திருத்த வேணும்
திருத்திப் பணி கொண்டு அருள வேணும்

நாஸ்திகர் அல்லாமையாலே இச்சை இல்லை -என்ன மாட்டார் –
பேற்றுக்கு அனுரூபமான இச்சை பெறாமையாலே உண்டு -என்ன மாட்டார்
மாதவன் என்றதே கொண்டு -திருவாய் -2-7-3-என்றும்
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -திருவாய் -10-8-1- என்றும்
உக்தி மாத்ரமே ஜீவிக்கையாம் விஷயம் இறே –

தீ மனம் கெடுத்தாய் -2-7-8-
மருவித் தொழும் மனமே தந்தாய் -2-7-7-என்கிறபடியே-பாஹ்யமான மனஸ் ஸைத் தவிர்த்து
அடிமைக்கு அனுகூலமான மனஸ் ஸைத் தந்து அருள வேணும்-மனனக மலமறக் கழுவி -1-3-8-என்கிறபடியே
மநோ நைர்மல்யம் யோகத்தாலே பிறக்கக் கடவது உபாஸ்கனுக்கு –
அந்த யோக ஸ்தானத்திலே-பகவத் அனுக்ரஹமாய் இறே இவ்வதிகாரிக்கு இருப்பது –
கையார் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே
யாடி மெய்யே பெற்று ஒழிந்தேன் –
ஏதேனும் வியாஜ்யத்தை கொண்டு அஸ்மாதாதிகள் அஹ்ருதயமாக சொல்வதையும் கொண்டு
கார்யம் செய்ய வல்லவன் அன்றோ –

————-

பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ் த்வம் ப்ரிய ஸூஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஸ் சாஸி ஜகதாம்
த்வதீ யஸ் த்வத் ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத் கதி ரஹம்
பிரபன்னஸ் சைவம் ஸத்யஹம்பி தவை வாஸ்மி ஹி பர–60-

ஜகதாம் பிதா த்வம் மாதா த்வம் –உலகங்கட்க்கு எல்லாம் தகப்பனும் நீயே பெற்ற தாயும் நீயே
தயித தநயஸ் த்வம் –அன்பனான மகனும் நீயே
ப்ரிய ஸூஹ்ருத் த்வமேவ –உயிர்த் தோழனும் நீயே
த்வம் மித்ரம் –சர்வ ரஹஸ்யங்களும் சொல்லிக் கொள்ளுதற்குப் பாங்கான மித்ரனும் நீயே
குருரஸி –ஆச்சார்யனும் நீயே
கதிஸ்சாஸி –உபாய உபேயமும் நீயே
அஹம் த்வதீயஸ் –அடியேனோ என்றால் உன்னுடையவன்
த்வத் ப்ருத்யஸ் -உன்னாலே பரிகரிக்கத் தகுந்தவன்
தவ பரிஜநஸ் –உனக்குத் தொண்டன்
த்வத் கதிர் –உன்னையே கதியாகக் கொண்டவன்
பிரபன்னஸ் ச -ப்ரபன்னனுமாயும் இருக்கிறேன்
ஏவம் ஸதி –ஆன பின்பு
அஹம் அபி தவ ஏவ –அடியேனும் உனக்கே
பர அஸ்மி ஹி–ரஷ்யனாக இரா நின்றேன் காண் –

ஒழிக்க ஒழியாத உறவு முறை உள்ளதே
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வனும் நல் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவரே-என்றும்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு -என்றும் -போலே –

——————

ஜநித்வா அஹம் வம்ஸே மஹதி ஜகதி க்யாதய ஸ ஸாம்
ஸூசீ நாம் யுக்தா நாம் குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்
நிஸர்க்காத் ஏவ த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்
அதோ அத பாபாத்மா ஸரணத! நிமஜ்ஜாமி தமஸி–61-

ஸரணத! –வழி காட்டும் பெருமானே –அவர் அவர்களுக்கு தகுந்த உபாயத்தைக் கொடுத்து அருளுபவனே
அஹம் ஜகதி க்யாதய ஸஸாம்–அடியேன் உலகம் எங்கும் பரவின புகழை யுடையவர்களும்
ஸூசீநாம்–பரிசுத்தர்களும்
யுக்தா நாம்–உன்னை விட்டுப் பிரியாதவர்களும்
ஆத்ம சாஷாத்காரமான யோகத்தில் ஊன்றினவர்கள் என்றும்
உன்னுடன் நித்ய சம்ச்லேஷத்தை விரும்பி இருப்பவர்கள் என்றும்
ஒரு காலும் உன்னை விட்டுப் பிரியாதவர்கள் என்றும் மூன்றுமே உண்டே
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய் -9-3-7-என்று இருக்கை
இளைய பெருமாளைப் போலே தேவரோடே யல்லது
செல்லாதவர்கள் -என்னுதல்
குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்–அசேதன தத்வம் என்ன சேதன தத்வம் என்ன இவற்றின்
ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறிந்தவர்களும்
குண த்ரயாத்மகமான பிரக்ருதியை குணம் -புருஷன் -ஆத்மா –
தத்வ ஸ்திதி உண்மை நிலையை உணர்ந்தவர்கள் -தத்துவங்களின் ஸ்தியை உணர்ந்தவர்கள் என்றுமாம்
நிஸர்க்காத் ஏவ –த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்–பரிமளத்துடனே அங்குரிக்கும் திருத்துழாய் போலவும்
வத்ஸ்ம் ஆனது ஜனித்த போதே தாய் முலையிலே வாய் வைக்குமா போலவும்
இயற்கையாகவே உன்னுடைய திருவடித் தாமரைகளில் ஊன்றின மனமுடையவர்களான மஹான்களினுடைய
ஜநித்வா வம்ஸே மஹதி –சிறந்த குலத்திலே பிறந்து வைத்து
அதோ அத பாபாத்மா தமஸி–பாபிஷ்டனாய்க் கொண்டு இருள்மயமான மூதாவியிலே
அடி காண ஒண்ணாத கீழ் எல்லையில்
நிமஜ்ஜாமி–அழுந்திக் கொண்டே கிடக்கிறேன்
பன்மாமாயப் பல் பிறவியில் படிகின்ற யான் -திருவாய் -3-2-2-என்கிறபடியே
இன்னம் தரை கண்டிலன் -என்கிறார் –
சந்தாநிகர் தேவர் பக்கல் அவகா ஹித்த அளவும் நான் பிரக்ருதியில் உள் புக்கேன் -என்கை –

ஜனித்த வம்சம் இது
தேவர் சரண்யர்
நான் படுகிற பாடு இது இறே
அவமஞ்ஜனைப் போலே -வம்ஸ ப்ரபாவமும் ஜீவியாதே
தேவருடைய நீர்மையும் ஜீவியாதே இருக்கிற படி இறே -என்னுடைய பாப ப்ராசுர்யம் என்கிறார் –

——————–

அமர்யாத ஷூத்ரஸ் சலமதிர ஸூயாப்ரஸ்வபூ
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மர ப்ரவஸோ வஞ்சன பர
ந்ரு ஸ்ம்ஸ பாபிஷ்ட கத மஹமிதோ துக்க ஜலதே
அபாராதுத் தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ—62-

1-அமர்யாத –வரம்பு மீறினவனும்
2-ஷூத்ரஸ் –அற்ப விஷயங்களில் சாபல்யம் உள்ளவனும்
3-சலமதிர் -நின்றவா நில்லா நெஞ்சை உடையவனாயும்
4-அஸூயா ப்ரஸ்வபூ–பொறாமைக்குப் பிறப்பிடமானவனும்
5-க்ருதக்நோ -நன்றி கெட்டவனும்
6-துர்மாநீ –துர் அஹங்காரம் உள்ளவனும்
7-ஸ்மர ப்ரவஸோ –காமத்துக்குப் பரவசப் பட்டவனும்
8-வஞ்சன பர–பிறரை வஞ்சிப்பவனும்
சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே-
9-ந்ரு ஸ்ம்ஸ –கொடும் தொழில் புரிபவனும்
10-பாபிஷ்ட –மஹா பாபியுமான
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம்தாமை-பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –
அஹம் இத அபாராத துக்க ஜலதே-அடியேன் இந்த கங்கு கரை அற்ற துன்பக் கடலில் நின்றும்
உத்தீர்ணஸ் –கரை சேர்ந்தவனாய்
கதம் பரிசரேயம் தவ சரணயோ—உனது திருவடிகளில் எங்கனே கைங்கர்யம் பண்ணப் பெறுவேன் –

முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே கரை ஏற்ற வேண்டும் -என்கை –
கீழே பாபாத்மா என்று சுருங்கச் சொன்னதை விரித்து அருளுகிறார் -நம்முடைய அனுசந்தானத்துக்காக
நான் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க ஒரு பத்து விசேஷணங்களை விஸ்தாரமாக அருளிச் செய்கிறார்
துக்க நிவ்ருத்தியும் தேவருக்கே பரம் –
அடிமை கொள்ளுகையும் தேவருக்கே பரம் -என்கை —

—————

ரகுவர யத பூ ஸ்தவம் தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய
ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
பிரதிப வமபராத்துர் முக்த சாயுஜ்யதோ அபூ
வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா-63-

ஹே ரகுவர –ராகு வம்சத்தில் ஸ்ரீ ராமனாக திரு அவதரித்தவனே
த்வம் -நீ
தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய-அப்படிப்பட்ட மஹா அபராதியான காகாஸூரனது விஷயத்திலே
ப்ரணத இதி-இக் காகம் நம்மை வணங்கிற்று என்பதையே கொண்டு
தயாளூர் யத் அபூ –தயை பண்ணினாய் இறே
ஷிபாமி -என்றும் ந ஷமாமி -என்றும் பண்ணி வைத்த பிரதிஜ்ஞை பழியாதே
தேவர் க்ருபா கார்யமே பலித்து விட்டது – பிராட்டி சந்நிதி யாகையால் இறே-

முக்த கிருஷ்ண-குற்றம் அறியாத கண்ண பிரானே
கிருஷ்ணனாகி என்றும் கிருஷ்ண என்று சம்போதானமாகவும் –
பிரதிபவம் அபராத்துர்–பிறவி தோறும் அபராதம் பண்ணின
சைதயஸ்ய–சிசுபாலனுக்கு – யது வம்ஸ பூதரில் காட்டில்
சேதி குலோத்பவன் என்று தன்னை உத்க்ருஷ்டனாக அபிமானித்து இருக்குமவன் –
சாயுஜ்யதோ அபூச சயத-சாயுஜ்யம் அளித்தவனாயும் ஆனாய் இறே
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை –திருவாய் -7-5-3-
தஸ்ய தே ஷமாயா-அப்படி எல்லாம் செய்தவனான உன்னுடைய பொறுமைக்கு
அபதம ஆகஸ் கிம் அஸ்தி -இலக்காகாத குற்றம் என்ன இருக்கிறது
வத –அருளிச் செய்ய வேணும்
உனக்குப் பொறுக்க முடியாதது உண்டோ
சர்வஜ்ஞரான தேவருக்கும் மறு மாற்றம் இல்லை
க்ஷமித்து அருளி விஷயீ கரிக்கும் இத்தனை -என்கை –

—————

நநு பிரபன்னஸ் ஸக்ருதேவ நாத
தவாஹ மஸ்மீதி ச யாசமாந
தவா நுகம்ப்ய ஸ்மரத பிரதிஜ்ஞாம்
மதே கவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே–64-

நநு நாத-ஸ்வாமிந்
அஹம் ஸக்ருதேவ பிரபன்னஸ் இதி –நான் ஒரு கால் பிரபத்தி பண்ணினவன் என்றும்
அஹம் தவ அஸ்மி இதி ச -நான் உனக்கே உரிமைப்பட்டு இருக்கிறேன் என்றும் சொல்லிக் கொண்டு
யாசமாநஸ் அஹம் -கைங்கர்ய புருஷார்த்தத்தைப் பிரார்திக்கிற அடியேன்
தவ ஸ்மரத பிரதிஜ்ஞாம்–அன்று நீ கடற்கரையில் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்குப் பண்ணின ப்ரதிஜ்ஜையைத்
திரு உள்ளத்திலே கொண்டு இருக்கிற உனக்கு
அநு கம்ப்ய –அருள் புரிய அறியேன் –
மதேக வர்ஜம் கிம் இதம் வ்ரதம் தே–உன்னுடைய இந்த விரதம் என் ஒருவனைத் தவிர்த்ததோ
சர்வ சாதாரணமான ப்ரதிஜ்ஜை பொய்யோ
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே –ஸக்ருத் பிரபதனம் பண்ணினேன்
கதா அஹம் ஐகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்று
தவாஸ்மீதி யாசநனும் பண்ணினேன் -ப்ராப்ய அபேஷையும் பண்ணினேன் –
அபயம் ததாமி ப்ரதிஜ்ஜை பலிக்க வேண்டியது அன்றோ –

சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே -அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம
ஸ்க்ருதேவ -என்றது –
சஹசைவ -உடனேயே -என்று ஆழ்வான் நிர்வஹிக்கும் –
அநாதி காலம் சம்சரித்துப் போந்த இவன் ஒரு ஜன்மம் எல்லாம் ப்ரபத்தியை
அனுசந்தித்தால் தான் -ஸ்க்ருத் -என்கைக்குப் போருமோ -என்பர் எம்பார் –
பகவத் ப்ரபாவத்தைப் பார்த்தால் ஒரு காலுக்கு மேல் மிகை –
ப்ராப்ய ருசி ப்ராப்தி அளவும் அனுவர்த்திக்கும் -என்பர் பட்டர் –

—————-

அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-

மத் வ்ருத்தம் –என்னுடைய நடவடிக்கையை
அசிந்தயித்வா–கணிசியாமல்
அக்ருத்ரிம த்வச் சரணார விந்த ப்ரேம ப்ரகர்ஷ அவதிதம் -உனது திருவடித் தாமரையில் உண்மையாக
உண்டான பரம பக்திக்கு எல்லை நிலமாய் இருப்பவரும்
ஆத்மவந்தம்–ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்தவரும் -ஜிதேந்த்ரியர் -சத்தை பெற்றவர்
பிதாமஹம் நாத முநிம் -எனக்குப் பாட்டனாருமாகிய ஸ்ரீ மந் நாத முனிகளை–
ஸ்ரீ ஈஸ்வர பட்டரது திருக்குமாரர் நம் ஆளவந்தார்
விலோக்ய–கடாக்ஷித்து
ப்ரஸீத –அடியேனை அனுக்ரஹித்து அருளாய்

ஸ்ரீமந் நாத முனிகளுடைய தேக சம்பந்தமும் ஆத்ம சம்பந்தமும்–ஜென்மத்தாலும் -வித்யையாலும் -சம்பந்தம்
முக்கிய ஹேது -அவனாலும் விட ஒண்ணாதது அன்றோ
மத் வ்ருத்தம சிந்தயித்வா-நிக்ரஹத்துக்கு என்னுடைய பாபங்கள் ஹேதுவானாலும்
அனுக்ரஹத்துக்கு இந்த மஹத் சம்பந்தம் உண்டே
மத் வ்ருத்தம் -என்று சத் கர்மத்தை நினைக்கிறது -என்றுமாம் –
வ்ருத்தவான் என்றால் சத் கர்ம யுக்தனை இறே சொல்லுகிறது –
ஸ்வ கதமான வற்றை அநாதரித்து
பெரிய முதலியார் சம்பந்தம் எனக்குத் தஞ்சமாக வேணும் என்று பிரார்த்தித்து
ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –
அப்படியே அனுக்ரஹித்தோம் என்று சோதிவாய் திறந்து அருளிச் செய்ய
மநோ ரதம் தலைக் கட்டப் பெற்று ஸ்தோத்ரத்தையும் தலைக் கட்டி அருளுகிறார்

யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்து தாம் உபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்

எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய ஸ்ரீ யாமுனாசார்யரை வணங்குகிறேன் –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–ஸ்லோகம் –47-48-49-50-51-52-53-54-55-56—-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ ரத்ன பிரபா வியாக்யானம்

November 26, 2019

திக ஸூ சிமவி நீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ யோ அஹம் யோகி வர்யாக் ரகண்யை
விதி ஸிவ ஸ்நகாத் யைர் த்யாது மத்யந்த தூரம்
தவ பரி ஜன பாவம் காம்யே காம வ்ருத்த —47–

பரம புருஷ-புருஷோத்தமனே
காம வ்ருத்த —மனம் போகும் படி நடக்கிற
ய அஹம்–யாவன் ஒருவன்
யோகி வர்யாக் ரகண்யை–யோகி ஸ்ரேஷ்டர்களுள் சிரந்தவர்களான
விதி ஸிவ ஸ்நகாத் யைர்-பிரமன் சிவன் சனகர் முதலான வர்களாலும்
த்யாதும் அத்யந்த தூரம்–நெஞ்சால் நினைப்பதற்கும் மிகவும் எட்டாதான
தவ பரி ஜன பாவம் காம்யே –உனது பரிசாரகன் ஆவதற்கு விரும்புகின்றேனோ
தம -அப்படிப்பட்ட
அ ஸூசிம் அ விநீதம் நிர்த்தயம் அலஜ்ஜம்-மாம் திக் -அபரிசுத்தனும் -வணக்கம் அற்றவனும்
இரக்கம் அற்றவனும் வெட்கம் அற்றவனுமான என்னை நிந்திக்க வேணும்

கீழே பவந்தம் -என்று அனுசந்தித்து -அஹம் -தன்னைப் பார்த்த வாறே
அசுசிம் -அவிநீதம் –நிர்த்தயம் -அலஜ்ஜம் -நான்கு விசேஷணங்கள்
நிர்த்தயம்-அம்ருதத்தை விஷத்தாலே தூஷித்தால் போலே விலஷண போக்யமான பகவத் தத்தவத்தை
கண்ணற்று தூஷிக்கப் பார்த்த நிர்த்தயனை
நிர்ப்பயம் -பாட பேதம் தேசிகன் காட்டுகிறார் –
நிரதிசய போக்யரான தேவர் உடைய கைங்கர்ய அம்ருதத்தை சத்தா பிரயுக்தமான ருசியையும்
வைலஷண்யத்தையும் உடையநித்ய ஸூரிகள் ஆதரிக்கும் அத்தை அன்றோ நான் ஆதரித்தது –
சங்கத்து அளவிலே நின்றேனோ-பெற்று அல்லது தரியாத தசையைப் பற்றி நின்றேன்
கதா நு சாஷாத் கரவாணி -என்றும் கதா ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்றும் -கூப்பிட்டேன்
ராஜ அன்னம் விஷ சம்ஸ்ப்ருஷ்டம் ஆவதே -என்று-வளவேழுலகில்-1-5- ஆழ்வாரைப் போலே
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் -யான் யார்
திருமாற்கு யாமார் வணக்கமார் ஏ பாவம் நல் நெஞ்சே நாமா மிகவுடையோம் நாழ் -பெரிய திருவந்தாதி -10-)
ஹா ஹா என்ன சகாசமான கார்யம் செய்ய முயன்றோம் என்று தம்மை நிந்திக்கிறார் –

——————-

அபராத சஹஸ்ர பாஜநம்-
பதிதம் பீம்ப வார்ண வோதரே
அகதிம் சரணா கதம் ஹரே
க்ருபயா கேவல மாத்மஸாத் குரு–48–

ஹரே-ப்ரணதார்த்தி ஹரனான பெருமானே
அபராத சஹஸ்ர பாஜநம்-பலவகைப்பட்ட அபராதங்களுக்கு கொள்கலமாகவும்
பதிதம் பீம்ப வார்ண வோதரே–பீம பாவ அர்ணவ உதரே பதிதம்–பயங்கரமான சம்சாரக் கடலினுள்ளே விழுந்தவனாயும்
உதரே-நின் பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான் -3-2-2- என்கிறபடியே
எடுக்கப் பார்த்தாலும் எட்டாத படியாய் இருக்கை –
அகதிம் –வேறே கதி அற்றவனாயும்
சரணா கதம் -சரணாகத்தான் என்று பேர் இட்டுக் கொண்டவனாயும் இருக்கிற அடியேனை
க்ருபயா கேவல மாத்மஸாத் குரு–உனது திருவருள் ஒன்றையே கொண்டு திருவுள்ளம் பற்றி அருள வேணும் –

அகலப்பார்த்தார் கீழ் -கைங்கர்ய அபிநிவேசம் மிக்க இருக்க கை வாங்க முடியாதே –
இரும்பையும் பொன்னாக்க வல்ல சர்வசக்தன் அன்றோ –
கிருபை ஒன்றையே கொண்டு நித்ய கைங்கர்யத்துக்கு
ஆளாக்கிக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்
இங்கு விசேஷணங்களை மாத்திரமே சொல்லி –
மாம் –நிந்தைக்கு யோக்யமாயும் வெறுப்புக்கு இடமாயும் உள்ளத்தை –
தம்மைச் சொல்லிக் கொள்ள திரு உள்ளம் இல்லாமல் –
வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச் திருமொழி -5-4-என்னக் கடவது இறே
பகவத் சந்நிக்குள் புகும் பொழுது அனுசந்திக்க வேண்டிய ஸ்லோகம் – இதுவும் –

————-

அவிவேகக நாந்த திங்முகே
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி
பகவன் பவது ர்த்தி நே பத
ஸ்கலிதம் மாமவ லோகயாச்யுத—49–

பகவன் அச்யுத—அடியாரைக் கை விடாத எம்பெருமானே
அவிவேகக நாந்த திங்முகே–அவிவிவேகம் ஆகிற மேகங்களினால் இருந்து கிடக்கிற திசைகளை உடையதும்
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி–பலவிதமாக இடைவிடாமல் பெருகுகின்ற துக்கங்களை வர்ஷித்துக் கொண்டு இருப்பதுமான
பவதுர்த்திநே –சம்சாரமாகிற துர் ததிநத்திலே–மழைக் கால விருளிலே—மப்பு மூடின தினத்துக்கு துர்த்தினம்
நண்ணாதார் முறுவலிப்ப நல்ல உற்றார் கரைந்து ஏங்க எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை –
பத ஸ்கலிதம் மாமவ லோகயா–கொடு வினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம்
வழி திகைத்து அலமருகின்றேன்-3-3-9-என்கிறபடியே
நல் வழியில் நின்றும் தப்பி இருக்கிற அடியேனை கடாக்ஷித்து அருள வேணும்
கிருபயா கேவல மாத்ம ஸாத் குரு – என்று-உனது கடாக்ஷம் அடியேனுக்கு உஜ்ஜீவன ஹேது

—————–

ந ம்ருஷா பரமார்த்த மேவ மே
ஸ்ருணு விஜ்ஞாப நமேக மக்ரத
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தய நீயஸ் தவ நாத துர்லப—50-

நாத-எம்பெருமானே
ந ம்ருஷா –பொய் அன்றிக்கே
பரமார்த்த மேவ –உண்மையாகவே இருக்கிற
மே ஏக விஜ்ஞாபநம் –அடியேனது ஒரு விண்ணப்பத்தை
ஸ்ருணும் அக்ரத–முந்துற முன்னம் கேட்டு அருள்
இமையோர் தலைவா மெய் நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பம் -ஆழ்வார் போலே இங்கு இவரும்
மே ந தயிஷ்யஸே யதி -அடியேனுக்கு அருள் செய்யாயாகில்
தத -அடியேன் கை தப்பிப் போன பின்பு
தய நீயஸ் தவ துர்லப—உனக்கு அருள் செய்யத் தகுந்தவன் கிடைக்க மாட்டான்
கொள்வார் தேட்டமான தேவரீர் கிருபைக்கு என்னைப் பாத்ரமாக்கா விடில் வேறு கிடைப்பது அரிது –
இழக்காதே -என்று சமத்காரமாக அருளிச் செய்கிறார்

—————–

தத் அஹம் த்வத் ருதே ந நாதவான்
மத்ருதே த்வம் தயநீயவான் ந ஸ
விதி நிர்மிதமே ததந்வயம்
பகவன் பாலய மா ஸம ஜீஹப —51-

பகவன்-எம்பெருமானே
தத் அஹம் த்வத் ருதே ந நாத வான்–ஆகையினால் அடியேன் உன்னைத் தவிர வேறே ஒருவனை நாதனாக உடையேன் அல்லேன்
மத்ருதே த்வம் தயநீயவான் ந ஸ-நீயும் என்னைத் தவிர வேறு ஒருவனை அருள் கொள்பவனாக உடையை அல்ல
விதி நிர்மிதமே ததந்வயம்–தெய்வ வசத்தால் நேர்ந்த இந்த சம்பந்தத்தை
விதி வாய்க்கின்று காப்பாரார் -5-1-1- என்கிறபடியே –
விதி வசத்தால் வாய்ந்து இருக்கிற ரஷ்ய ரஷக பாவத்தை
ஸூஹ்ருத விசேஷம் அடியாகப் பிறக்கும் பகவத் கிருபையை -நம்மால் பரிஹரிக்க ஒண்ணாததை -விதி என்கிறோம்
உன் தன்னோடு உறவேல் நம்மோடு இங்கு ஒழிக்க ஒழியாதே-அவனாலும் பரிஹரிக்க ஒண்ணாதே
ஏதத் அந்வயம் ஏதம் அந்வயம் -பாட பேதங்கள்

பாலய மா ஸம ஜீஹப —காப்பாற்றிக் கொள் விடுவிக்க வேண்டாம் –
இந்த சம்பந்தத்தை நான் விட நினைத்தாலும் நீ விடுவிக்க ஒண்ணாது தடுக்க வேண்டும் என்றபடி –
இத்தலையில் பூர்வ அபராதத்தைப் பார்த்தாதல்
தேவர் பூர்த்தியைப் பார்த்த்தாதல்
கை விட்டு அருளாது ஒழிய வேண்டும் –

————

வபுராதி ஷூ யோ அபி கோ அபி வா
குண தோ அஸாநி யதா ததா வித
ததயம் தவ பாத பத்மயோ
அஹமத் யைவ மயா ஸ்மர்ப்பித்த –52-

வபுராதி ஷூ –சரீரம் முதலியவைக்குள்
யோ அபி கோ அபி வா-ஏதாவது ஒன்றாகவும்
குண தோ அஸாநி யதா ததா வித–குணத்தினால் எனும் ஒருபடிப் பட்டவனாகவும் இருக்கக் கடவேன் –
அவற்றில் ஒரு நிர்பந்தம் இல்லை
ததயம் தவ பாத பத்மயோ அஹம் -ஆகையினால் இந்த ஆத்ம வஸ்துவானது உன்னுடைய திருவடித் தாமரைகளில்
மத் யைவ மயா ஸ்மர்ப்பித்த –இப்பொழுதே என்னால் சமர்ப்பிக்கப் பட்டதாயிற்று

சம்பந்தம் உண்டு என்று ஹ்ருதய விசுவாசம் இல்லாமல் மேல் எழுந்த -பொறி புறம் பூசின பாசுரம் இல்லை
த்வம் மே அஹம் மே -விவாதம் செய்யாமல் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறார்
ஆத்மா ராஜ்யம் தனம் மித்ரம் களத்ரம் வஹநானி ஸ –இதி தத் ப்ரேஷிதம் சதா –
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி –
சித்தி த்ர்யம் அருளிச் செய்த இவரே ஆத்மா தேகமோ இந்த்ரியமோ பிராணனோ எதுவாக இருந்தாலும்
ஆத்மா அணுவாகவோ சர்வ வியாபியோ ஏக ரூபனோ பரிணாமம் கொண்டதோ ஞானியா அஞ்ஞானியா –
இவற்றை நிஷ்கரிக்கப் போகிறேன் அல்லேன்
அதுவாகவே கொண்டு உன்னை ஆராதிப்பேன் என்கிற வேத வாக்கியத்தின் படியே -என்பது சேஷத்வ
பிரதானத்தை அருளிச் செய்கிறார்

இங்கு ஆத்மாவை அஹம்-அஹம் –
பராகர்த்த வ்யாவ்ருத்தனாய்
பிரத்யகர்த்த பூதனாய்
ப்ரத்யஷ பூதனாய்
பிரகாசிக்கிற நான் – என்கிறார் ஆகையால்
தேக இந்திரிய மனா பிராணாதி விலக்ஷணனாய் அஹம் புத்தி போத்யனாய் உள்ள ஆத்மா
என்கிற சித்தாந்தமும் வெளியிட்டு அருளுகிறார்

—————–

மம நாத யதஸ்தி யோஅஸ்ம்யஹம்
சகலம் தத்தி தவைவ மாதவ
நியத ஸ்வ மிதி பரப்புத்ததீ
அதவா கிந்நு சமர்ப்பயாமி தே–53-

மாதவ நாத-ஸ்ரீ யபதியான பெருமானே
மம யதஸ்தி யோஅஸ்ம்யஹம்—-யத மம அஸ்தி -அஹம் யஸ் அஸ்மி –யாது ஓன்று எனக்கு உரியதாய்
இருக்கின்றதோ -நான் எப்படிப்பட்டவனோ
சகலம் தத்தி தவைவ –நியத ஸ்வ மிதி-அது எல்லாம் உனக்கே எப்போதும் உரிமைப் பட்டது என்று
பரப்புத்ததீ–நன்றாகத் தெரிந்து கொண்ட அடியேன்
அதவா கிந்நு சமர்ப்பயாமி தே–உனக்கு எத்தை சமர்ப்பிப்பேன்
அதவா -கீழில் சமர்ப்பண பஷ வ்யாவ்ருத்தி –

யானே நீ என் உடைமையும் நீயே -அனுதபிக்கிறார்
எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே –என்றதுமே –
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய் -எனது யாவி யார் யான் யார் தந்த நீ கொண்டாக்கினையே –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் –இப்படி எம்பெருமான் உடன் கலந்த கலவையால் உள்ள நிரவதிக ப்ரீதியாலே
அறிவு இழந்து இவ்வாத்மா தன்னுடையது அன்று என்று நிரூபிக்க மாட்டாராய் –
அவன் தம்மோடு கலந்த இப்பெரு நல் உதவிக்கு கைம்மாறாக தம்முடைய ஆத்மாவை அவனுக்கு மீளா வடிமையாகக் கொடுத்து –
பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து -என்று அருளிச் செய்கிறார் –
கர்ம உபாத்திகம் அன்றிக்கே ஞான விபாக கார்யம் -ஆகையால் அடிக் கழஞ்சு பெறுமே

ஒட்டு உரைத்து இவ் வுலகு உன்னை புகழ்வு எல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி —
இழிவுச் செயல் –என்றவரே கொண்டல் வண்ணா கடல்வண்ணா என்று பலகாலும் அருளிச் செய்கிறார்களே
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் -என்று அருளிச் செய்தெ பலவாறு புகழ்கின்றார்களே
பரஸ்பர வ்ருத்தமாக தோற்றினாலும் விருத்தம் இல்லையே

சமர்ப்பணீயம் ஆகைக்கு ஸ்வாம்யம் இல்லை –
சமர்ப்பிக்கைக்கு ஸ்வா தந்த்ர்யம் இல்லை –
சம்சார பீதையாலே சமர்ப்பிக்கையும்
ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானத்தாலே அநு சயிக்கையும்
இரண்டும் யாவன் மோஷம் அநு வர்த்திக்கக் கடவது-

—————–

அவபோதி தவா நிமாம் யதா
மயி நித்யாம் பவதீ யதாம் ஸ்வயம்
க்ருபயைதத நனய போக்யதாம்
பகவன் பக்திமபி ப்ரயச்ச மே—54-

பகவன் மயி நித்யாம்–எம்பெருமானே என் பக்கல் சாஸ்வதமாய் உள்ள
இமாம் பவதீ யதாம்–உனக்கே உரிமைப்பட்டு இருக்கிற இந்த சேஷத்வத்தை
யதா ஸ்வயம் அவபோதி த்வாந் -எப்படி நீ தானே அறிவித்தாயோ
ஏதத் அநந்ய போக்யதாம-இது தவிர வேறு ஒன்றில் போக்யதையை உடைத்தது ஆகாதே -பரம போக்யமான
பக்திமபி ப்ரயச்ச மே—பக்தியையும் அடியேனுக்குத் தந்து அருள வேணும்

ஸ்வயம் புருஷார்த்தமான பக்தியையும் தந்து அருள வேணும்
வேறு ஒன்றில் போக்யதா புத்தியையும் தவிர்த்து அருளி -வேறு ஒன்றுக்கு நெஞ்சுக்கு விஷயம்
ஆக்காதபடியான பக்தியைத் தந்து அருள வேணும் –
நிர்ஹேதுக கிருபையால்-இந்த சேஷத்வத்தை உணர்த்தினாப் போலே
இந்த ஜ்ஞானம் புருஷார்த்த உபயோகியாம்படி-இந்த கிருபையாலே
ஸ்தான த்ரயோதித -பர பக்தியைத் தந்து அருள வேண்டும் என்கிறார் –
ஸ்தான த்ரயம் ஆவது
புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வ நன்யயா -ஸ்ரீ கீதை -8-22
பக்த்யா த்வ நன்யயா சக்ய -11-54-என்றும்
மத் பக்திம் லபதே பராம் -18-54-

—————

தவ தாஸ்ய ஸூ கைக ஸங்கி நாம்
பவ நேஷ் வஸ்த்வபி கீட ஜன்ம மே
இதரா வஸ தே ஷூ மா ஸம பூத்
அபி மே ஜன்ம சதுர்முகாத்மா நா—55-

தவ தாஸ்ய ஸூ கைக ஸ்ங்கி நாம்–உன்னுடைய அடிமை யாகிற இன்பம் ஒன்றிலேயே
விருப்பம் உள்ள மஹான்களுடைய
பவ நேஷ் வஸ்த்வபி கீட ஜன்ம மே-அஸ்து -திரு மாளிகைகளில் அடியேனுக்குப் புழுவாகப் பிறப்பதுவும் ஆயிடுக
அபி -சப்தம் அவதாரணத்திலே யாய் கீட ஜன்மமே உண்டாக வேண்டும் என்றுமாம் –

இதரா வஸ தேஷூ –அடிமைச் சுவடு அறியாத மற்றையோர் வீடுகளில்
மா ஸம பூத்அபி மே ஜன்ம சதுர்முகாத்மா நா–நான்முகனாகப் பிறப்பது தானும் எனக்கு வேண்டா

பாகவத சேஷத்வ பர்யந்தம் போனால் தானே பகவத் சேஷத்வம் ரசிக்கும் -என்கிற
சாஸ்த்ரார்த்தம் அருளிச் செய்கிறார்
ஜாதியில் ஏற்றத்தாழ்வு உபயோகம் அற்றது பாகவத சேஷத்வமே வாய்க்கும் அத்தனையே வேண்டுவது
பகவத் ப்ரசாதத்தாலே லப்தமான பக்தி ப்ராசுர்யத்தாலே
தச் சேஷத்வ அளவில் பர்யவசியாதே
ததீய சேஷத்வத்தை பிரார்த்திக்கிறார் –
ஆழ்வார் -கண்கள் சிவந்து -8-8- விலே பகவச் சேஷத்வத்தை அனுபவித்து
கருமாணிக்க மலை -யிலே அனன்யார்ஹ சேஷத்வத்தை அனுசந்தித்து
அவ்வளவிலும் பர்யவசியாதே
நெடுமாற்கு அடிமை யிலே ததீய சேஷத்வத்தை அனுசந்தித்தாப் போலேயும்
ஸ்ரீ இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருகன ஆழ்வானைப் போலேயும்
ததீய சேஷத்வத்தை பிரார்த்திக்கிறார் –
அன்வயத்திலும் வ்யதிரேகத்திலும் இரண்டிலும் உண்டான நிர்ப்பந்தம் தோற்ற இருக்கலாம் -என்கிறார் –

—————-

ஸ்க்ருத் த்வ தாகார விலோக நாஸ்யா
த்ருணீ கருதா நுத்தம புக்தி முக்திபி
மஹாத்மபிர் மாமவ லோக்யதாம் நய
ஷானே அபி தே யத் விரஹொ அதிது ஸ்ஸ்ஹ–56-

ஸ்க்ருத் த்வ தாகார விலோக நாஸ்யா–ஒரு கால் உனது திரு மேனியை சேவிக்க வேணும் என்கிற விருப்பத்தினால்
த்ருணீ கருதா நுத்தம புக்தி முக்திபி-மிகவும் சிறந்த செல்வத்தையும் மோக்ஷத்தையும் த்ருணமாக வெறுத்து இருக்கிற
மஹாத்மபிர் அவ லோக்யதாம் –மஹானுபவர்களால் கடாக்ஷிக்க உரியனாய் இருக்கையையே
மாம் நய–அடியேனுக்கு அளித்து அருள வேண்டும்
எப்படிப்பட்ட மஹான்களின் கடாக்ஷத்தை விரும்புகிறேன் என்னில்
ஷனே அபி தே யத் விரஹ–எந்த மஹான்களினுடைய பிரிவானது உனக்கு ஒரு நொடிப் பொழுதும்
அதிது ஸ்ஸ்ஹ–மிகவும் பொறுக்க முடியாததோ
தை- மஹாத்மபிர் அவ லோக்யதாம்–என்று கீழோடே அந்வயம்

கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியின் பால் வாராய் விண்ணும் மண்ணும் மகிழவே -என்று பிரார்த்தித்து
இந்திரா லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
வானாளும் மா மதி போல் வெண் குடைக் கீழ் மன்னவர் தம் கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வம் அறியேன்
கம்ப மத யானைக் கழுத்தகத்தின் மேல் இருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் —
ஆழ்வார்கள் கடாக்ஷம் பெற ஆசைப்படுகிறார்
இவர்கள் தானே -அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே ஒரு மா நொடியும் பிரியான
என் ஊழி முதல்வன் ஒருவனே -என்று இருப்பார்கள் அன்றோ –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–ஸ்லோகம் –31-32-33-34-35-36-37-38-39-40-41-42-43-44-45-46—ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ ரத்ன பிரபா வியாக்யானம்

November 26, 2019

கதா புநஸ் சங்க ரதாங்க கல்பக
த்வஜார விந்த அங்குஸ வஜ்ர லாஞ்சநம்
த்ரிவிக்ரம த்வச் சரணாம் புஜத்வயம்
மதிய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி—31-

த்ரிவிக்ரம–மூவடி நிமிர்த்தி மூ வுலகு அளந்த பெருமானே
சங்க ரதாங்க கல்பக த்வஜார விந்த அங்குஸ வஜ்ர லாஞ்சநம்-சங்கு சக்கரம் கற்பக வ்ருக்ஷம் கொடி
தாமரைப்பூ மாவட்டி வஜ்ராயுதம் இவற்றை அடையாளமாக உடைய
த்வச் சரணாம் புஜத்வயம்-உனது திருவடித் தாமரை இணைகள்
மதிய மூர்த்தாநம் -கதா புநஸ் -அலங்கரிஷ்யதி—எனது தலையை எப்போது அலங்கரிக்கப் போகிறது

கீழே திருவடித் தாமரைகளைக் கண்ணாலே எப்போது காணப் போகிறோம் என்றார் –
அவ்வளவில் திருப்தி பெறாதே
நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்
கோலமாம் என் சென்னிக்கு கமலம் அன்ன குரை கழலே
அடிச்சியாம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா உன் கோலப் பாதம்
ஸ்ரீ பரதாழ்வானுக்கு கிட்டிய பேறு பாவியேனுக்கும் கிடைக்க வழி யுண்டோ என்கிறார்
இந்த விபூதியிலேயே பிரார்த்தனை என்றும்
பர வாஸூதேவனுடைய பாதாரவிந்தங்களை அங்கு ஸீரோ பூஷணமாகப் பெறப் போவது என்றோ என்கிறார் என்றுமாம்
அவனுக்கு ஐஸ்வர்ய ஸூசகமாய் ஆகர்ஷகமுமாய் –
திருவடிகளோட்டை சம்பந்தத்தாலே இவர் தலைக்கு
சேஷத்வ லஷணமுமாய் ஆபரணமுமாய் இறே இருப்பது –

——————–

விராஜமானே உஜ்ஜ்வல பீதவாஸஸம்
ஸ்மித அதஸீ ஸூந அமலச்சவிம்
நிமக்ன நாபிம் தநு மத்யம் உந்நதம்
விஸால வஷச் ஸ்தல ஸோபி லஷணம்–32-

விராஜமானே உஜ்ஜ்வல பீதவாஸஸம்–விளங்கிக் கொண்டு இருக்கிற மிகவும் பிரகாசமான
பீதாம்பரத்தை யுடையவனாயும்
உடையார்ந்த ஆடை -திருவாய்மொழி -3-7-4-என்று-திருவரை பூத்தால் போலே இருக்கிற திருப் பீதாம்பரம்
விராஜமானே உஜ்ஜ்வல-இரண்டு விசேஷணங்கள்-இயற்கையான சோபா பிரகாசமும் –
நீல நிற திவ்ய மங்கள விக்ரஹ சேர்த்தியால் உண்டான பர பாக சோபையும்
ஸ்மித அதஸீ ஸூந அமலச்சவிம–மலர்ந்த காயாம்பூப் போன்ற நிர்மலமான ஒளியை உடையவனாயும்
காயம் மலர் நிறவா
பூவைப்பூ வண்ணா

நிமக்ன நாபிம் -ஆழ்ந்த திரு நாபியை உடையவனாயும் –
ஸுவ்ந்தர்ய அமுத வெள்ளம் நான்கு புறமும் ஓடி வந்து இங்கு சுழித்துக் கிடக்குமே-
தநு மத்யம் -நுட்பமான இடையை உடையவனாயும்
அனைத்து உலகுக்கும் இருப்பிடமாய் இருக்கும் உதரம் க்ருசமாய் இருக்கின்றதே என்று ஆச்சர்யப்பட வைக்குமே

உந்நதம்-உயர்ந்தவனையும் –இவ்வடிவாலும்-உடையாலும்
அழகாலும்-சர்வாதிகன் என்று தொடரும்படி திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன்
விஸால வஷச் ஸ்தல ஸோபி லஷணம்–விசாலமான திரு மார்பிலே விளங்குகின்ற
ஸ்ரீ வத்சம் என்கிற மறுவை உடையவனாயும் இருக்கிற
திரு மறு மார்பன் –
இப்படி உள்ள உன்னை என்று நான் அனுபவிக்கப் போகிறேன் –

கீழ் இரண்டு ஸ்லோகங்களிலும் பிரார்த்தித்தபடி சாஷாத்காரமும் ஸம்ஸ்லேஷமும் வாய்த்த பின்பு
விளையும் கைங்கர்யத்துக்கு உத்தேச்யனான எம்பெருமானை -திவ்ய அவயவங்கள் -திவ்ய மங்கள விக்ரஹம் –
திவ்ய ஆயுதங்கள் -திவ்ய பிராட்டிமார்கள் -திவ்ய பரிஜன வர்க்கங்கள் –
கூடியவனாக -14-ஸ்லோகங்களால் விசதமாக அனுசந்திக்கிறார்
இவற்றில் விசேஷங்கள் மாத்திரம் -விசேஷ்ய பதம் கிரியா பதம் –
பவந்தமே அநு சரந் –நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித–என்று அணுகி -46-ஸ்லோகத்தில் –
இவை குளகம்
இப்படி அனுபவித்துக் கொண்டு கைங்கர்யங்களைச் செய்து உன்னை உகப்பிப்பது என்றைக்கோ –
என்று தலைக் கட்டுகிறபடி –

—————-

சகாஸதம் ஜ்யாகிண கர்க்கசைஸ் ஸூபைஸ்
சதுர்ப்பிர் ஆஜாநு விளம்பிபிர் புஜை
ப்ரியாவதம் ஸோத் பல கர்ண பூஷண
ஸ்லதாலகா பந்த விமர்த்த ஸம ஸிபி–33-

ஆஜாநு விளம்பிபிர் –திரு முழந்தாள் வரை தொங்குகின்றவைகளாயும்
ஜ்யாகிண கர்க்கசைஸ்–நாண் தழும்பு ஏறிக் கரடுமுரடாய் இருப்பவைகளாயும்
வீரச் செயலின் பெருமையை -தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவா மங்கை –
விபவத்தில் பெற்ற தழும்புடன் பர வாஸூ தேவன் இடமும் விளங்குவதாக அனுசந்திக்கிறார்

ப்ரியாவதம் ஸோத் பல கர்ண பூஷண ஸ்லதாலகா பந்த விமர்த்த ஸம ஸிபி–பிராட்டிமார்களுக்குக் கரண அலங்காரமான
கரு நெய்தல் மலர் என்ன-கரண பூஷணங்கள் என்ன -அலைந்த திருக்குழல் கற்றை என்ன -ஆகிய இவை
பிராட்டி அணைக்கும் பொழுது அழுந்தி இருக்கிற படியைத் தெரிவிக்கின்றவைகளாயும்
ஆஸ்ரித ரஷணமே யாத்ரையாம்படி சொல்லிற்று -கீழ்
அதுவே பச்சையாக பிராட்டி அணைக்கும் படி சொல்லுகிறது இங்கு
ப்ரணய சிஹனங்களும்-ரஷண சிஹனங்களும் இறே திருத் தோள்களுக்கு மாங்கள்யம்

ஸூபைஸ்-அழகியவைகளாயும் -ஓவ்தார்யம் வீர்யம் ஸுவ்ந்தர்யம்-எல்லாம் அமைந்து உள்ளவை
சகாஸதம் சதுர்ப்பி ராபுஜை–நான்கு புஜங்களோடே பிரகாசியா நிற்கிற
பர வாஸூ தேவனுக்கும் சதுர் புஜத்வம் பிராமண சித்தம்

திருப் பீதாம்பரத்தைப் பிடித்து திரு மார்பு அளவும் வந்தார் கீழ் –
திரு மார்பில் இருந்து திருத் தோள் அழகில் -ஐஸ்வர்ய வீர்யங்களையும் அழகையும் அனுபவித்துப் பேசுகிறார்
இப்படித் திகழும் உன்னை என்று அனுபவிக்கப் போகிறேன் –

——————–

உதக்ர பீன அம்ஸ விலம்பி குண்டல
அலக ஆவளீ பந்துர கம்பு கந்தரம்
முக ஸ்ரீ யா ந்யக்ருத பூர்ண நிர்மலா
அம்ருதாம் ஸூ பிம்பாம்புருஹ உஜ்ஜ்வல ஸ்ரீயம்–34-

உதக்ர பீன அம்ஸ விலம்பி குண்டல-அலக ஆவளீ பந்துர கம்பு கந்தரம்-உயர்ந்தும் பருத்தும் இருக்கிற
திருத் தோள்கள் வரையில் தொங்குகின்ற திருக் குண்டலங்களாலும் திருக் குழல் கற்றைகளாலும்
அழகு பெற்றுச் சங்கு போல் விளங்குகின்ற திருக் கழுத்தை உடையவனாய்
முக ஸ்ரீ யா –திரு முகத்தின் காந்தியினால்
ந்யக்ருத பூர்ண நிர்மலா அம்ருதாம் ஸூ பிம்பாம்புருஹ உஜ்ஜ்வல ஸ்ரீயம்–பூர்ணமாய் நிர்மலமான
சந்த்ர மண்டலத்தையும் அப்போது அலர்ந்த செந்தாமரைப் பூவையையும் திரஸ்கரித்து மிக விளங்கா நிற்கிற –
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய் -பெரியாழ்வார் திருமொழி -1-4-3-என்று
அது தன்னைத் தாழ விட்ட இடத்திலே யாயிற்று ஒவ்வாது ஒழிவது
திருத் தோள்களில் இருந்தும் திருக் கழுத்தைப் பற்றுகிறார்
கழுத்தில் மூன்று ரேகைகள் இருப்பது புருஷோத்தம லக்ஷணம் -எனவே சங்கு உவமை–
சங்குக்கு வட மொழி -சொல் -கம்பு —
கம்பு க்ரீவா -மூன்று ரேகைகள் அமைந்த கழுத்து –

————-

ப்ரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்
ஸவிப்ரமப் ரூலத முஜ்ஜ்வலாதரம்
ஸூ சிஸ்மிதம் கோமள கண்ட முந்நஸ்ம்
லலாட பர்யந்த விலம்பி தாலகம்–35-

ப்ரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்–அப்போது அலர்ந்த தாமரைப் பூ போன்று அழகிய
திருக் கண்களை உடையனாய்
முக்த -அழகிய என்றும் புதிதான என்றும்
ஸவிப்ரம ப்ரூலதம் –விலாசத்தோடு கூடினதாய்-கொடி போன்றதான திருப் புருவங்களை
யுடையனாய்
உஜ்ஜ்வலாதரம்–பிரகாசிக்கின்ற திரு அதரத்தை உடையனாய்
ஸூ சிஸ்மிதம் –கபடம் அற்ற புன் சிரிப்பை உடையனாய்
ஸூசி -வெளுத்த என்றுமாம் –ருஜு வான அபிப்ராயத்துடன் சிரிக்கிறபடி
கோமள கண்டம் -அழகிய கபோலங்களை உடையனாய்
உந்நஸ்ம்–உயர்ந்த திரு மூக்கை உடையனாய்
லலாட பர்யந்த விலம்பித அலகம்—திரு நெற்றி அளவும் தொங்குகின்ற முன்னுச்சி
மயிர்களை உடையனாய் இருக்கிற

கீழே பின் தொங்கும் திருக்குழல் அனுபவம் -இதில் முன் நெற்றியில் தொங்கும் அழகு
களி வண்டு எங்கும் கலந்தால் போலே கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல்
மிளிர நின்று விளையாட -நாச் -14–8-
செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டே போல் –பங்கிகள் வந்து உன் பவள வாய்
மொய்ப்ப –பெரியாழ்வார் -1–8–2—பங்கி -மயிர் )

—————–

ஸ்புரத் கிரீ டாங்க தா ஹார கண்டிகா
மணீந்த்ர காஞ்சீ குண நூபுராதி பி
ரதாங்க சங்க அஸி கதா த நுர்வரை
லஸ்த் துளஸ்யா வனமாலய உஜ்ஜ்வலம்–36-

ஸ்புரத் கிரீ டாங்க தா ஹார கண்டிகாமணீந்த்ர காஞ்சீ குண நூபுராதிபி–விளங்குகின்ற திரு அபிஷேகம் –
திருத் தோள் வளை-முக்தாஹாரம் -திருக் கழுத்து அணி -குரு மா மணிப் பூண்-ஸ்ரீ கௌஸ்துபம் -திருவரை நாண் –
திருப் பாடகம் முதலிய திரு ஆபரணங்களாலும்
ஆதி -சப்தத்தாலே
பல பலவே ஆபரணம் -என்றும்
அபரிமித திவ்ய பூஷண – என்றும் சொல்லுகிறபடியே அசங்க்யாதம் என்கை –
ரதாங்க சங்க அஸி கதா த நுர்வரை–சக்கரம் சங்கு வாள் கதை சார்ங்கம் என்கிற பஞ்சாயுதங்களாலும்
லஸ்த் துளஸ்யா வனமாலய -ஒளி விடுகின்ற திருத் துழாய் மாலையை உடைய வனமாலையினாலும்
உஜ்ஜ்வலம்–பிரகாசித்துக் கொண்டு இருக்கிற
கதிராயிர மிரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடி -பெரியாழ்வார் திருமொழி -4-1-1-இறே –
பொன்னின் மா மணி யார மணியாகத் திலங்கு மால் –பெரியாழ்வார் திருமொழி -8-1-3–என்றும்

—————

சகரத்த யஸ்யா பவனம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதி யஜன்மபூ
ஜகத் சமஸ்தம் யத் அபாங்க சம்ச்ராயம்
யதர்த்த மம்போதிர மந்தய பந்தி ச–37-

தவ புஜாந்தரம்-உன்னுடைய திரு மார்பை
சகரத்த யஸ்யா பவனம் –யாவள் ஒரு பிராட்டிக்கு இருப்பிடமாக பண்ணி அருளினாயோ
யதிய ஜன்மபூ–யாவள் ஒரு பிராட்டியின் பிறந்தகமான திருப் பாற் கடல்
தவ ப்ரியம தாம–உனக்கு இனிதான இருப்பிடம் ஆயிற்றோ
ஜகத் சமஸ்தம் –உலகம் எல்லாம்
யத் அபாங்க சம்ச்ராயம்–யாவள் ஒரு பிராட்டியின் கடாக்ஷத்தைப் பற்றி இருக்கிறதோ
யதர்த்தம் அம்போதிர் அமந்தி அபந்தி ச–யாவள் ஒரு பிராட்டிக்காக கடலானது கடையவும் அணை கட்டவும் பட்டதோ –

கீழே -திவ்ய அவயவ திவ்ய ஆபரண சோபை எவ்வளவு இருந்தாலும்
திவ்ய பிராட்டி உடன் சேர்த்தி இல்லாத போது நிறம் பெறாதே
இது முதல் மூன்று ஸ்லோகங்களாலும் ஸ்ரீ யபதித்தவம்
யஸ்யா -என்கிறது இதில் உண்டான பிரமாண பிரசித்தியாலே-
நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை –
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திரு மாலார் -திருவாய் மொழி -10-6-9
என் திருமகள் சேர் மார்பன் -திருவாய் மொழி -7-2-9-
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் -திருவாய்மொழி -4-5-2-
அலர்மேல் மங்கை யுறை மார்பா -திருவாய்மொழி -610-10-
மார்வத்து மாலை -திருவாய்மொழி -10-10-2-
செய்யாள் திரு மார்பினில் சேர் திருமால் -திருவாய் மொழி -9-4-1-
விண்ணவர் அமுது உண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமான் -பெரிய திருமொழி -6-1-2-
உன்மூல்யாஹர மந்தராத்ரி மஹிநா பலேக்ரஹிர் ஹி கமல ஆலாபேந சரவச்சிரம -உத்தர சதகம் –

————–

ஸ்வ வைஸ்வ ரூப்யேண் சதா அநு பூதா அப்
யா பூர்வவத் விஸ்மயம் ஆகததாநயா
குணேந ரூபேண விலாஸ சேஷ்டி தைஸ்
சதா தவை வோ சிதயா தவ ஸ்ரீ யா–38–

ஸ்வ வைஸ்வ ரூப்யேண் சதா அநு பூதா அபி -தனது விஸ்வரூப நிலைமையைக் கொண்டு
எப்போதும் அனுபவிக்கப் பட்டாலும்
அபூர்வவத் –புதிய புதிய வஸ்து போலே
விஸ்மயம் ஆகததாநயா–ஆச்சர்யத்தை விளைவிப்பவளாய்
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதைஸ்–குணங்களாலும் வடிவு அழகாலும் விலாச சேஷ்டைகளாலும்
சதா -பரம் வ்யூஹம் முதலிய எல்லா நிலைமைகளிலும்
தவ ஏவ உசிதயா –உனக்கே ஏற்றவளாய்
தவ ஸ்ரீ யா–உனக்கு செல்வமாய் இருப்பவளான

பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில் -பெரிய திருமொழி -8-1-9- என்றும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -திருவாய் மொழி -2-6-6- என்றும் ஆழ்வார்களும்
சதா பஸ்யந்தி -என்று நித்ய ஸூரிகளும்
நித்ய அபூர்வதையாலே தேவர் திறத்தில் படுமது எல்லாம்
தேவர் படும்படி இறே பிராட்டி போக்யதை இருப்பது –

அவன் ஸ்வரூபத்தாலே அபரிச்சின்னன்
இவள் போக்யதையாலே அபரிச்சின்னை
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை -என்றும் சொல்லுகிறபடியே
தேவர் தமக்குத் தகுதியாய் இருக்குமவள் –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய் –
கொண்டு அனுபவித்தாலும் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதாகும் விலக்ஷண வஸ்து –
தவைவ உசிதயா ஸ்ரீரியா –என்னும் அளவே போதுமாய் இருக்க -தவ ஸ்ரீயா -என்றது
பிராட்டியின் அநந்யார்ஹத்வத்தை நிலை நாட்டி அருளவே –

—————-

தயா ஸஹா ஸீ நம நந்த போகி நி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி
பணா மணி வ்ராதம யூக மண்டல
பிரகாஸ மாநோதர திவ்யதா மநி–39-

நிவாஸ ஸய்யா ஆஸன பாதுகா அமஸூக
உப தான வர்ஷா தபவாரணாதிபி
சரீர பேதைஸ் தவ சேஷதாம் கதைர்
யதோ சிதம் சேஷ இதீரிதே ஜனை–40-

தயா ஸஹா -அப்படிப்பட்ட பிராட்டியோடே கூட
ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி-சிறந்த ஞான சக்திகளுக்கு முக்கியமான இருப்பிடமானவனும்
பணா மணி வ்ராதம யூக மண்டல பிரகாஸ மாநோதர திவ்ய தாமநி–தனது பண மணிகளின் ஸமூஹங்களினுடைய
கிரண ராசிகளாலே பள பள என்று விளங்கா நின்ற மத்ய பிரதேசத்தை எம்பெருமானுக்குத் திருக் கோயிலாக யுடையவனும்
மணி விளக்காம் -முதல் திருவந்தாதி -53 என்கிறபடியே
திவ்ய அந்தப்புரத்துக்கு மங்கள தீபமாய் இறே இருப்பது –

நிவாஸ ஸய்யா ஆஸன பாதுகா அமஸூக
உப தான வர்ஷா தபவாரணாதிபி–எம்பெருமானுக்கு எழுந்து அருளி இருக்கிற திரு மாளிகையாகவும்
திருக்கண் வளர்ந்து அருளும் இடமாகவும் சிங்காசனமாகவும் பாதுகையாகவும் திருப்பரி யட்டமாயும்
அணையாகவும் குடையாகவும் மற்றும் பலவிதமாகவும் ஆவதற்கு உரியவைகளாய்
யதோ சிதம்- தவ சேஷதாம் கதைர்-சரீர பேதைஸ்–உசிதமானபடி உனக்கு அடிமைப்பட்டவைகளான
பல பல வடிவங்களாலே
சேஷ இதீரிதே ஜனை–சேஷன் என்று ஜனங்களால் சொல்லப்படுபவனுமான
பரகத அதிசய அதான இச்சா உபாதேயதவ மேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ -பரஸ் சேஷி –
என்கிற சேஷத்வத்தின் படியே

அநந்த போகிநி -ஆஸீ நம-திருவனந்த ஆழ்வான் இடத்தில் எழுந்து அருளி இருக்கின்ற
உன்னை எப்போது சேவிக்கப் பெறுவேன் -என்று -46-ஸ்லோகத்தில் சேர்ந்து முடிகிறது

மன்னிய பல் பொறி சேர் ஆயிரவாய் வாள் அரவின் சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள் மன்னிய
நாகத்தணை மேல் -ஸ்ரீ பெரிய திருமடல் பாசுரம் படியே – பணா மணி வ்ராத-
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையாம் அணி விளக்காம்
பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு -முதல் திருவந்தாதி பாசுரம் அடி ஒற்றியே இந்த ஸ்லோகம் –
வர்ஷாத பவாரண–வெய்யில் மழை இரண்டாலும் காக்கும் குடை என்றவாறு

—————-

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸனம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜனம் த்ரயீமய
உபஸ்திதம் தேன புரோ கருத்மதா
த்வத் அங்க்ரி சம்மர்த்த கிண அங்க ஸோபிநா–41–

த்ரயீமய யா -வேத மூர்த்தியான யாவன் ஒரு பெரிய திருவடி
தே சாசஸ் ஸகா வாஹநம் ஆஸனம் த்வஜோ விதாநம் வ்யஜனம் –உனக்கு அடியவனாயும் தோழனாயும்
வாஹனமாயும் ஆசனமாயும் கொடியையும் மேற்கட்டியாயும் விசிறியாயும் இருக்கிறானோ
தேன-அப்படிப்பட்ட
த்வத் அங்க்ரி சம்மர்த்த கிண அங்க ஸோபிநா–உன்னுடைய திருவடி நெருக்கின தழும்பை
அடையாளமாகக் கொண்டு விளங்குகிற
ஈஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துபம் லஷணம் ஆனால் போலே
இவனுக்கும் அது தாஸ்ய சிஹ்னமாய் இருக்கும்-
கருத்மதா-பெரிய திருவடியால்
உபஸ்திதம் புரோ –திரு முன்பே சேவிக்கப்பட்டு இருக்கிற

ஸூபர்னோ அஸீ கருத்மான் த்ரிவ்ருத் தே ஸிர காயத்ரம் சஷூ -என்கிறபடியே
வேதங்களை அவயவங்களாக உடையனாய் இருக்கை –
வேதாத்மா விஹகேஸ்வர -சதுஸ் ஸ்லோகி
பொன் மலையின் மீமிசைக் கார்முகில் போலே -திருவாய் மொழி -9-2-6–என்றும்
புள்ளூர் கொடியான் -திருவாய்மொழி -3-8-1-என்றும் உண்டான பிரசித்தியைச் சொல்லுகிறது

—————-

த்வதீய புக்த உஜ்ஜீத சேஷ போஜிநா
த்வயா நிச் ருஷ்டாத்ம பரேண யத் யதா
பிரியேண  சேநாபதிநா ந்யவேதி தத்
ததா அநு ஜாநந்த முதார வீஷணை–42-

த்வதீய புக்த உஜ்ஜீத சேஷ போஜிநா-உனது போனகம் செய்த சேஷத்தை உண்பவனும்
த்வயா நிச் ருஷ்டாத்ம பரேண -உன்னாலே வைக்கப்பட்ட உபய விபூதி நிர்வாக பாரத்தை உடையவனும்
பிரியேண  சேநாபதிநா-உனக்கு அன்பனுமான சேனாபதி ஆழ்வானாலே
அனைவரும் பிரியமானவர்களே அங்கே -இங்கு விசேஷித்து அருளியது இவருக்கு அசாதாரண பிரியம் –
ஆகவே இத்தத்துவம் சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழே வளருவது என்றார் பட்டர்
யத் யதா–யாதொரு விஷயம் யாது ஒரு படியாக
ந்யவேதி தத்-விண்ணப்பம் செய்யப் பட்டதோ அந்த விஷயத்தை
ததா அநு ஜாநந்த முதார வீஷணை–அப்படியே செய்வது என்று அழகிய கடாக்ஷங்களாலே நியமித்து அருளா நிற்கிற

உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி -7-1-9-என்றும்
சொல்லுகிறபடியே
அநவதிக தயா சௌஹார்த்த அநு ராக கர்ப்பமான இக் கடாஷங்களாலே யாயிற்று –
இவன் இப்படிச் செய்வது -என்று நினைப்பிடுவது –

———————-

ஹத அகில க்லேஸ் மலை ஸ்வ பாவாத
ஸ்தா ஆநு கூல்யை கரசைஸ் தவ உசித
க்ருஹீத தத் தத் பரிசார சாதநை
நிஷேவ்ய மாணம் ஸ சிவைர் யதோ சிதம்–43-

ஸ்வ பாவாத-இயற்கையாகவே
ஹத அகில க்லேஸ் மலை –வருத்தங்களும் மலர்களும் எல்லாம் அற்ற வர்களாயும்
அவித்யை அஹங்காரம் ராகம் த்வேஷம் அபிநிவேசம் ஐந்து கிலேசங்கள்
பிரகிருதி சம்பந்தமாகிய மலம் -இவை இல்லாதவர்கள்
இவற்றை இயற்கையாக உள்ள நித்ய ஸூரிகளைச் சொல்கிறது
தவ ஆநு கூல்ய ஏக ரசைஸ்-உனது கைங்கர்யம் ஒன்றையே போகமாக உடையவர்களாயும்
தவ உசித–உனக்கு ஏற்றவர்களாயும் -ஸ்வரூப ரூப குணங்களால் உன்னோடே ஒத்து இருப்பவர்களாயும்
க்ருஹீத தத் தத் பரிசார சாதநை–அந்த அந்த கைங்கர்யங்களுக்கு உபகரணங்களான
குடை சாமரம் முதலியவற்றை கையிலே ஏந்தி இருப்பவர்களையும் உள்ள
ஸ சிவைர்-மந்திரிகள் போன்ற நித்ய ஸூரி களாலே

வாத்சல்யத்தாலே அவன் முறை அழியப் பரிமாற்ற நினைத்தாலும்
அவனை முறை உணர்த்தி அடிமை செய்யுமவர்கள்
நீதி வானவர் -அமலனாதி -1- இறே
ஆஸ்ரித ரஷணத்தில் தேவரை பிரேரிக்கும் அவர்கள் இறே
நிஷேவ்ய மாணம் யதோ சிதம்–தகுதியாக சேவிக்கப் படா நிற்கிற
யாதோசிதம் நிஷேவ்ய மாணம் –அவரவர்கள் அதிகாரத்துக்கு தக்கபடியும் –
அவன் திரு உள்ளத்துக்கு தக்கபடியும் -சமயங்களுக்கு தக்க படியும் கைங்கர்யம்

——————-

அபூர்வ நாநா ரஸ்பாவ நிர்ப்பர
ப்ரபத்தயா முக்த விதக்த லீலயா
ஷணாணுவத் ஷிப்த பராதி காலயா
ப்ரஹர்ஷ யந்தம் மஹி ஷீம் மஹா புஜம் –44-

அபூர்வ நாநா ரஸ்பாவ நிர்ப்பர ப்ரபத்தயா–விலக்ஷணங்களான பலவகை ரசங்களாலும் பாவங்களாலும்
நெருக்குண்டு இடைவிடாது தொடர்ந்து நடப்பதாய்
ஷணாணுவத் ஷிப்த பராதி காலயா–ஒரு க்ஷணப் பொழுதிலே ஏக தேசம் போலே விரைவாகக்
கழிக்கப் பட்ட காலங்களை யுடையதான
முக்த விதக்த லீலயா–மிகவும் அழகிய லீலையினாலே
ப்ரஹர்ஷ யந்தம் மஹி ஷீம் மஹா புஜம் -பெரிய பிராட்டியாரை சந்தோஷப்படுத்தா நிற்கிற
விசாலமான புஜங்களை யுடையனாய் இருக்கிற

கீழே -37-/38-/39–பாசுரங்களில் பிராட்டி சேத்தி அழகு அனுபவம் –
இதில் பிராட்டியை உகப்பிக்கும் பரிசு சொல்லுகிறது –
காந்தர்வ வேதத்தில் உள்ள வீரம் சிருங்கார ரசங்களும் உத்ஸாஹம் போன்ற பாவங்களும் புதிது புதிதாக
தொடர்ந்து செல்லும் லீலைகளை அனுபவிக்கிறார்
பராதி காலயா -பிரமன் காலம் பரம் -அதில் பாதி பரார்த்தம் -அது கூட க்ஷணம் பொழுதில்
அவலீலையாக கழிகின்றனவாம்
அவிதித கதயாமா ராத்ரிரேவ வயரம்ஸீத-உத்தர ஸ்ரீ ராமாயணம்-
மஹா புஜம் –
கீழ் சொன்ன லீலா ரசத்தாலே உகப்பிக்கும் அவனோபாதி யன்று
அணி மானத் தட வரைத் தோளாலே -திருவாய் -4-8-2- அணைத்து உகப்பிக்கும் என்றும்
ஸ்வரூப குணங்களைக் காட்டில் ரூப குணம் இறே இனிதாய் இருப்பது –
ப்ரஹர்ஷ யந்தம் -என்கையாலே -இவ் உகப்பு நித்யம் -என்கை –

———————

அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய யௌவன
ஸ்வ பாவ லாவண்யமய அம்ருதோதிதம்
ஸ்ரீய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்
ஸ்மர்த்த மாபத்ஸ்க மர்த்தி கல்பகம்-45-

அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய யௌவன ஸ்வ பாவ லாவண்யமய அம்ருதோதிதம்–சிந்தைக்கு எட்டாததாய் –
ஆச்சர்யமாய் –நித்தியமாய் –இருக்கிற யவ்வனத்தை ஸ்வ பாவமாக யுடைய
லாவண்யம் நிறைந்த அமுதக்கடலாய்
ஸ்ரீய ஸ்ரீயம் –திருவுக்கும் திருவாய்
பக்த ஜனைக ஜீவிதம்–பக்த ஜனங்களுக்கு நற் சீவனாய்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருப்பார்க்கு
இவன் ஜீவன் –சாத்மிக்க போக ப்ரதன் –
பக்த ஜனங்களையே தனக்கு தாரகமாய் -உயிர் நிலையாக -உடையவன் -என்றுமாம் –
மம ப்ராணா ஹி பாண்டவா –

ஸ்மர்த்தம-சர்வ சக்தனாய் –ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான்
ஆபத்ஸ்கம –ஆபத்துக்களிலே வந்து உதவுமவனாய் –
காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்த அளவிலே -8-5-2-
உதவும் ஸ்வ பாவனான உன்னை –

அர்த்தி கல்பகம்-யாசிப்பவர்களுக்கு கற்பக வ்ருக்ஷம் என்னத் தகுந்தவனாய் இருக்கிற
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -2-7-11-
என்கிறபடியே தன்னை ஔதார்யம் பண்ணுமவனை-

விசேஷண சங்கீர்த்தனம் -32-ஸ்லோகம் தொடங்கி இது வரை தனித்தனியே பிரஸ்தாபிக்கப் பட்ட
திவ்ய மங்கள விக்ரஹ குணம் திவ்ய ஆத்ம குணம் எல்லாவற்றையும் ஓன்று சேர்த்து அனுபவிக்கிறார் இதில்
லாவண்யமய அம்ருதோதிதம்-விசேஷமாகக் கொண்டு யௌவன
ஸ்வ பாவத்தை அதுக்கு விசேஷணமாக உரைத்து அருளினார் தூப்புல் அம்மான்
லாவண்யம் -சமுதாய சோபை -நீரோட்டம் -மிருதுவாயும் கண்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும் தேஜஸ்ஸூ
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு
அடியேனை அனுபவிக்கப்ப் பண்ணுவது என்றோ -என்று கீழ் உடன் அன்வயம் –

———–

பவந்தமேவா நுசரன் நிரந்தரம்
ப்ரசாந்த நிஸ் சேஷ மநோ ரதாந்த்ர
கதா அஹ மை காந்திக நித்ய கிங்கர
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித–46-

பவந்தமேவ அஹம் அநுசரன் நிரந்தரம்-உன்னையே நான் இடைவிடாமல் பின் தொடர்ந்து கொண்டு
ப்ரசாந்த நிஸ் சேஷ மநோ ரதாந்த்ர–வேறே எவ்விதமான இதர ஆசையும் அற்றவனாய்
ஐகாந்திக நித்ய கிங்கர–நித்ய நியதி கைங்கர்யத்தை யுடையவனாய்
ஸநாத ஜீவித–நாதனோடு கூடிய உயிரை யுடையவனாய்
கதா ப்ரஹர்ஷயிஷ்யாமி –எப்போது திரு உள்ளத்தை உகப்பிக்கப் போகிறேன்

நிரந்தரம் அநு சரன் -சென்றால் குடையாம் இத்யாதி சகல வித கைங்கர்யங்களும்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் –
மற்றை நம் காமங்கள் மாற்று -ஐகாந்திக நித்ய கிங்கர –
சேதன லாபம் எம்பெருமானுக்கே புருஷார்த்தம் –
ப்ரஹர்ஷயிஷ்யாமி -எப்பொழுது உன்னை ஸந்துஷ்டனாக செய்யப் போகிறேன் என்றபடி

இந்நிலத்திலும் நீயே நாதனாக இருந்தாலும் உபேக்ஷிக்கப்பட்டு அநாதன் போலே தீனனாய் அன்றோ இருக்கின்றேன்
நித்ய கைங்கர்யம் செய்வேனாக என்னை ஆக்கி அருளினால் ஒழிய என்னுடைய சத்தை பயன் பெறாதே
என்பதையே சநாத ஜீவித -என்று அருளிச் செய்கிறார்

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் –சம்பிரதாய ப்ரக்ரியா பாகம் –அதிகாரம் -31–ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

November 25, 2019

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

—————————————————————————

அஸிதில குரு பக்தி தத் ப்ரஸம்சாதி சீல
பிரசுர பஹு மதி தத் வஸ்து வாஸ்து ஆதிகே அபி
குணவதி விநி யோக்தும் கோபயந் சம்ப்ரதாயம்
க்ருதவித் அநக வ்ருத்தி கிம் ச விந்தேத் நிதாநம்

இவ்வர்த்தங்களை எல்லாம் மிடியனுக்கு அகத்துக்குள்ளே மஹா நிதியைக் காட்டிக் கொடுக்குமா போலே
வெளியிடுகையாலே மஹா உபகாரகனான ஆச்சார்யன் திறத்தில் சிஷ்யன்

க்ருதஞ்ஞனாய் இருக்க வேண்டும் என்றும் -த்ரோஹம் பண்ணாது ஒழிய வேண்டும் என்றும் –
சாஸ்திரங்கள் சொன்ன இடம் -இரண்டு விபூதியும் விபூதி மானும் இவனைச் சீச் சீ என்னும் படியுமாய் –
ஹிதம் சொன்ன ப்ரஹ்லாத விபீஷணாதிகளுக்குப் பிரதிகூலரான ஹிரண்ய ராவணாதிகளோடே துல்யனுமாய்
வித்யா சோரோ குருத்ரோஹீ வேதேஸ்வர விதூஷக –த ஏதே பஹு பாப்மாந -சத்யோ தண்டயோ இதி சுருதி –என்கிறபடியே
தண்டியனும் ஆகாமைக்காக அத்தனை –பிரதியுபகாரம் சொன்னபடி அன்று

சரீரம் அர்த்தம் பிராணம் ச ஸத் குருப்யோ நிவேதயத் –விஹஹேச்வர சம்ஹிதை –என்றும்
சர்வஸ்வம் வா ததர்த்தம் வா ததர்த் தார்த்தார்த்தம் ஏவ வா டு குரவே தக்ஷிணாம் தத்யாத் யதா சக்த்யபி வா புந –என்றும்
இப்புடைகளில் சொல்லுகிறவையும்
பிரணிபாத அபிவாத நாதிகளைப் போலே இவனுக்கு சில கர்த்தவ்யங்களைச் சொல்லிற்று அத்தனை போக்கி
க்ருபயா நிஸ்ப்ருஹோ வதேத்—சாண்டில்ய ஸ்ம்ருதி -1-115-என்னும்படி இருக்கிற
அநந்ய ப்ரயோஜனனான ஆச்சார்யனுக்குப் பிரதியுபகாரம் சொன்னபடி அன்று

பகவான் பக்கல் போலே ஆச்சார்யன் பக்கலிலே வர்த்திப்பான் என்றும் அவனுக்கு நல்லன் ஆனால் போலே
ஆச்சார்யனுக்கும் நல்லனாய் இருப்பான் என்றும் வேதாந்தங்களில் சொன்னதும்
ந பிரமாத்யேத் குரவ் சிஷ்யோ வாங் மன காயா கர்மபி டு அபி பஜ்யாத்மநா ஆச்சார்யம் வர்த்ததே அஸ்மின் யதா அச்யுதே
தேவ மிவாசார்யம் உபாஸீத -என்று சாண்டில்ய ஆபஸ்தம்பாதிகள் சொன்னதாவும் ஆச்சார்யனுக்கு பிரதியுபகாரம் சொன்னபடி அன்று
ஸாஸ்த்ர சஷுஸ் ஸான இவன் விழி கண் குருடன் ஆகாமைக்கும் பகவத் அனுபவம் போலே
விலக்ஷணமான இவ்வனுபவத்தை ஜென்ம பிஷுவான இவன் இழவாமைக்கும் சொல்லிற்று அத்தனை

இப்படி இவ்விஷயத்தில் பிரதியுபகாரம் இல்லை என்னும் இடத்தை
ப்ரஹ்ம வித்யா பிரதாநஸ்ய தேவைரபி ந சக்யதே -பிரதி பிரதானம் அபி வா தத்யாத் சக்தித ஆதாராத் -1-117–என்று
சாண்டில்ய பகவான் அருளிச் செய்தான் –
இதில் யதா சக்தி தாநம்–சொன்னதுவும் தன் ஆதாரத்துக்குப் போக்கு வீடாகச் சொன்னது அத்தனை
இவ்வளவைக் கொண்டு பிரதியுபகாரம் பண்ணினானாகத் தன்னை நினைத்து இருக்கப் பெறான்

இவன் உபதேசித்த அர்த்தங்களை
கபாலஸ்தம் யதா தோயம் ஸ்வ த்ருதவ் ச யதா பயஸ் த்ருஷ்டம் ஸ்யாத் ஸ்தாந தோஷேண
வ்ருத்தி ஹீநே ததா ஸ்ருதம் –சாந்தி பர்வம் -35-42-மண்டை ஓட்டில் தண்ணீரும் நாய் தோலால் செய்யப்பட பையில்
உள்ள பாலும் உள்ள இடங்கள் காரணமாக தோஷம் ஆவது போலே ஒழுக்கம் இல்லாவனுக்கு உபதேசமும் -என்கிறபடியே
தன் விபரீத அனுஷ்டானங்களாலே கபாலஸ்த தோயாதிகளைப் போலே அனுப ஜீவ்யம் ஆக்காது ஒழியவும்

யச்ச் ருதம் ந விராகாய ந தர்மாய ந சாந்தயே -ஸூ பத்தமபி சப்தேந காகவசிதமேவ தத் –எந்த கல்வியானது
வைராக்யம் தர்மம் அடக்கம் ஆகியவற்றை அளிக்க வில்லையோ அது காக்கையின் ஒலி போலே பயன் அற்றதே ஆகும் –
என்கிறபடியே கற்றதே பிரயோஜனம் ஆகாது ஒழியவும்
இவற்றைக் கொண்டு–கக்கியதை உண்பவது போலே – வாந்தாசியாகாது ஒழியவும்-வியாபாரம் ஆக்குதல் கூடாது
இவற்றை எல்லாம்
பண்டிதை ரர்த்த கார்பண்யாத் பண்ய ஸ்த்ரீபிரிவ ஸ்வயம் -ஆத்மா சம்ஸ்க்ருத்ய சம்ஸ்க்ருத்ய பரோபகரணீ க்ருத —
விலைமாதர்கள் உடம்பைக் கொடுத்து பணம் பெறுவது போலே -கல்வியை பொருளாசைக்கு பயன் படுத்துவது போலே —
இத்யாதிகளில் பரிகசிக்கும் படி
கணிக அலங்காரம் ஆக்குதல் -விலைச் சாந்தம் ஆக்குதல் -அம்பலத்தில் அவல் பொறி ஆக்குதல் –
குரங்கின் கையில் பூ மாலை ஆக்குதல் செய்யாது ஒழியவும்

அடியிலே வித்யை தான் சேவதிஷ்டே அஸ்மி ரக்ஷ மாம் –மனு ஸ்ம்ருதி -2-114-நான் உனக்கு சேம நிதியாகவே
எப்போதும் இருப்பேன் -என்னை நீ காப்பாயாக – என்று ப்ராஹ்மணனை அபேக்ஷித்த படியே முன்பே
அஸூயாதிகளைக் கைப்பிடித்து வைப்பார் கையில் காட்டிக் கொடுக்காதே ரக்ஷித்துக் கொள்ளவும்

பிறவிக் குருடனான தன்னை அயர்வறும் அமரர்கள் பரிஷத்துக்கு அர்ஹனமாம் படி திருத்தின மஹா உபாகாரகனுக்குச்
செய்யலாம் பிரதியுபகாரம் இல்லை என்னும் இடத்தை தெளிந்து
ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி -விஷ்ணு நா வ்யபதேஷ்டவ்ய தஸ்ய சர்வம் ச ஏவ ஹி —
ஸ்ரீ விஷ்வக் சேந சம்ஹிதை —என்கிற நிலையிலும் காட்டில்
வசிஷ்ட வ்யபதேசிந –பால காண்டம் -19-2-வசிஷ்டரைக் கொண்டு உன்னை கூறிக் கொள்கின்ற – என்கிறபடியே
சரண்யனான பெருமாள் வம்ச க்ரமா கதமாகப் பிறந்து படைத்துக் கைக்கொண்ட நிலை இந் நிலை–
ஆச்சார்யரைக் கொண்டே அடையாளப்படுத்தி கொள்வது என்று பரிக்ரஹித்து
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் –திருவாய் -6-7-8-என்று இருக்கவும் பிராப்தம்

தான் இப்படிப் பெற்ற ரஹஸ்யத்ரய சாரார்த்தமான மஹா தனத்தை முன்னில் அதிகாரத்தில் சொன்னபடியே
உசித ஸ்தானம் அறிந்து சமர்ப்பிக்கும் போது
கதயாமி யதா பூர்வ தஷாத்யைர் முனி சத்தமை–ப்ருஷ்ட ப்ரவோச பகவான் அப்ஜயோநி விதாமஹ சைத்தோக்தம்
புருகுத்ஸாய பூபுஷே நர்மதாதடே -ஸாரஸ்வதாய தே நாபி மம சாரஸ்வ தேந ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் 1-2-8-/-9—
முன்பு தாமரையில் உதித்த நான்முகன் தக்ஷர் போன்ற முனிவர்களால் கேட்கப்பட்டு அவர்களுக்கு உரைக்க –
அவர்களால் நர்மதையின் கரையில் புருகுத்சன் என்ற அரசனுக்கு உபதேசிக்க -அந்த அரசன் ஸாரஸ்வதனுக்கு உபதேசிக்க –
அதனை நான் உனக்குக் கூறுகிறேன் – என்று ஸ்ரீ பராசர ப்ரஹ்மரிஷி மைத்ரேய பகவானுக்கு அருளிச் செய்தது போலே
குரு பரம்பரையைப் பிரகாசிப்பித்துக் கொண்டு தன் க்ருதஜ்ஞதையும் அர்த்தத்தை சீர்மையும் தோற்ற உபதேசிக்க வேண்டும் –

அத்யாத்ம ரஹஸ்யங்களைச் சொல்லுமவன் சம்ப்ரதாயம் இன்றிக்கே இருக்க -ஏடு பார்த்தாதல் -சுவர் ஏறிக் கேட்டதாதல் –
சொல்லுமாகில் -களவு கொண்டு ஆபரணம் பூண்டால் போலே கண்டார்க்கு எல்லாம் தான் அஞ்ச வேண்டும்படியாம்
யத்ருச்சயா ஸ்ருதோ மந்த்ரஸ் சந்நே நாதச் சலேந வா பத்ரேஷிதோ வா வ்யர்த்த –
ஸ்யாத் ப்ரத்யுதா நார்த்ததோ பவேத் —பாத்ம சம்ஹிதை –இத்யாதிகளில் படியே ப்ரத்யவாய பர்யந்தமுமாம்
கேட்டுச் சொல்லச் செய்தே –தத் வித்தி ப்ரணி பாதேந பரிப்ரச்நேந சேவயா–ஸ்ரீ கீதை -4-34-
ப்ரணிபத்யாபி வாத்ய ச –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-1-1-இத்யாதிகளில் சொல்லுகிற முறை ஒழியக் கேட்டுச் சொல்லுமாகில்
காலன் கொண்டு ஆபரணம் பூண்டால் போலே
கண்டார் எல்லாரும் தன்னை அருவருக்கும் படியும்
யச் சா தர்மேண விப்ரூதே யச்சாதர்மேண ப்ருச்சதி தயோர் அந்யதரஸ் ப்ரைதி வித்வேஷம் வா
அதி கச்சதி -சாந்தி பர்வம் -335-51–என்கிறபடியே அநர்த்தவஹமுமாம் –

யதா நியாயம் கேட்டுச் சொல்லச் செய்தே சொல்லும் போது குருவைப் பிரகாசிப்பியாது ஒழியுமாகில்
இவன் சொல்லுகிற அர்த்தங்கள் வேர் இல்லாக் கொற்றான் போலே அடி அற்றவையோ என்று
சிஷ்யனுக்கு அதி சங்கை பிறக்கும்படியாய் அநாதர விஷயமுமாம்
ஸ்வ குரூணாம் ஸ்வ சிஷ்யேப்யஸ் க்யாபநம் சாக்ருதம் ததா-என்று த்வாத்ரிம்சத் அபசார வர்க்கத்தில்
குருவைப் பிரகாசிப்பியாது ஒழிகையும் படிக்கப்பட்டது
அப்போதும் குரும் பிரகாச யேத்தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் -அப்ரகாச ப்ரகாசாப்யாம் ஷீயேதே சம்பதாயுஷீ —
குருவை வெளிப்படுத்த வேண்டும் -மந்த்ரத்தை மறைக்க வேண்டும் -குருவை வெளிப்படுத்தாமல் மந்த்ரத்தை
மறைக்காமல் இருந்தால் ஞானமும் நிஷ்டையும் தேயும் -என்கிறபடியே
ஞான வைஸத்ய பூர்வகமான பகவத் அனுபவ சம்பத்தும் ஆத்மாவுக்கு சத்தா அனுவ்ருத்தி ஹேதுவான
சேஷத்வ அனுசந்தான பூர்வக ஸ்வ நிஷ்டையும் குலையும்படியாம்
குருவைப் பிரகாசிப்பியா நிற்கச் செய்தே அவன் பண்ணின சாஸ்த்ரீய உபதேசத்துக்கு விருத்தம் சொல்லுமாகில்
விப்ரலம்பகன் என்று பேருமாய்
ஜ்யோதிஷாம் வ்யவஹாரம் ச பிராயச்சித்தம் சிகித்சனம் –விநா ஸாஸ்த்ரேண யோ ப்ரூயாத் தமாஹுர் ப்ரஹ்ம காதகம் —
ஜ்யோதிடம் நீதி பிராயச்சித்தம் வைத்தியம் ஆகியவற்றுக்கு ஸாஸ்த்ர முரணாக பொருள் உறைபவன்
ப்ரஹ்மஹத்தி செய்தவனே –என்கிறபடியே பாபிஷ்டனுமாம்

ஸச் சிஷ்யனுக்கு ப்ராப்த தசையில் உபதேசத்தைத் தவிருமாகில் லுப்தன் என்று பேருமாய்
பாத்ரஸ்தம் ஆத்ம ஞானம் ச க்ருத்வா பிண்டம் சமுத் ஸ்ருஜேத் –நாந்தர் தாயநம் ஸ்வயம் யதா யாதி
ஜகத் பீஜம் அபீ ஜக்ருத் –தான் அறிந்த ஆத்ம ஞானத்தைத் தகுந்த சிஷ்யனுக்கு உபதேசித்த பின்னர் இறக்க வேண்டும் –
இந்த உலகின் விதை போன்ற ஆத்ம ஞானத்தை தகுந்த இடத்தில் விதைத்த பின்பே இறக்க வேண்டும் –
அவ்விதம் செய்யாமல் செல்லக் கூடாது என்கிற பகவத் ஆஜ்ஜையும் — பகவத் நியோகத்தையும் கடந்தானாம்

ஆகையால் விளக்கு பிடிக்குமவன் -தன்னை ராஜா ஒரு காரியத்துக்குப் போகச் சொன்னால் தன் கையில்
விளக்கு அதுக்கு பிராப்தரானவர் கையிலே கொடுத்துப் போமா போலே
சத் பாத்ரமானவர்க்கு தான் சொல்லும் போது தமக்கு உபதேசித்த ஆச்சார்யனை முற்பட வெளியிட்டு பின்பு
தனக்கு உபதிஷ்டமான அர்த்தங்களையே சொல்லவும் –
சில காரணங்களாலே திவ்ய சஷுஸ் ஸ்ரோத்ரங்கள் பெற்றுத் தான் இவற்றால் அறிந்து சொல்லுமவற்றையும்
வ்யாஸ பிரஸாதாத் ஸ்ருதவாந் ஏதத் குஹ்யமஹம் பரம் -யோகம் யோகேஸ்வராத் கிருஷ்ணாத் சாஷாத்
கதயதஸ் ஸ்வயம் –ஸ்ரீ கீதை -18-75-சஞ்சயன் கூற்று -ஸ்ரீ வ்யாஸ பகவான் அருளால் தெய்விகமான பார்வை பெற்ற
நான் நேராக இந்த ரஹஸ்யத்தை ஸ்ரீ கிருஷ்ண பகவான் இடம் கேட்டேன் –என்கிறபடியே
சதாசார்யர் பிரசாதம் அடியாக இவ்வர்த்தம் அறிந்தேன் என் கை மிடுக்காலே அறிந்து சொல்லுகிறேன் அல்லேன் என்ற
இவ் உண்மையை வெளியிட்டுக் கொண்டு சொல்லவும் பெறில்
இவன் சொல்லும் அர்த்தங்கள் எல்லாம் சர்வர்க்கும் ஆதரயணீயங்களுமாய்
இவன் க்ருதஞ்ஞனாய் இருந்தான் என்று சாத்விகரும் ப்ரஸம்ஸித்துப் பிரசாதிக்கும் படியாய் சத்யவாதியாய் இருந்தான்
என்று உபநிஷத்துக்களும் உபநிஷத் ப்ரதிபாத்யனான பரம புருஷனும் தங்களோடு ஓக்க
இவனைப் பிராமண பூதன் என்று ஆதரிக்கும் படியுமாம் –
இப்படி க்ருதஞ்ஞனாய் அவஹிதனான சிஷ்யனைப் பற்ற நாம் செய்த கிருஷி பலித்தது என்று
ஆச்சார்யனும் க்ருதார்த்தனாய் இருக்கும்

சாஷாந் முக்தே ரூபாயாந் யோ வித்யா பேதாநுபாதிசத்
கத்யதே மோக்ஷ சாஸ்த்ரேஷு ச து ஸ்ரேஷ்ட தமோ குரு

மோக்ஷத்துக்கு நேரடியான உபாயங்களாக வித்யைகளை உபதேசிக்கும் ஆச்சார்யனே மோக்ஷம் குறித்த
சாஸ்த்ரங்களால் மிகச் சிறந்த ஆச்சார்யன் -என்று கொண்டாடப்படுகிறார்

ஆசார்ய வத்தயா மோக்ஷம் ஆமநந்தி ஸ்மரந்தி ச
இஹா முத்ர ச தத் பாதவ் சரணம் தேசிகா விது

ஆச்சார்யரை அடைவதன் மூலம் மோக்ஷம் கிட்டுவதாக உபநிஷத்துக்கள் கூறுகின்றன
இந்த உலகிலும் மோக்ஷம் பெற்ற பின்னரும் ஆச்சார்யருடைய திருவடிகளே தஞ்சம் என்று ஆச்சார்யர்கள் அறிந்தார்கள்

ஏற்றி மனத்து எழில் ஞான விளக்கை இருள் அனைத்தும்
மாற்றினவருக்கு ஒரு கைம்மாறு மாயனும் காண கில்லான்
போற்றி உகப்பதும் புந்தியில் கொள்வதும் பொங்கு புகழ்
சாற்றி வளர்ப்பதும் கற்றல்லவோ முன்னம் பெற்றதற்கே

நாம் செய்யும் அனைத்தும் அவர் உபகாரத்தைக் காணும் போது அற்பமே

அத்யா சீன துரங்க வக்த்ர விலஸத் ஜிஹ்வா அக்ர ஸிம்ஹாஸனாத்
ஆசார்யாத் இஹ தேவதாம் சமாதிகாம் அந்யாம் ந மந்யாமஹே
யஸ்ய அசவ் பஜேத கதாசித் அஜஹத் பூமா ஸ்வயம் பூமிகாம்
மக்நாநாம் பவிநாம் பவார்ணவ சமுத்தாராய நாராயண

சம்சார கரையைத் தாண்டுவிக்கவே பகவான் தனது மேன்மையைக் கைவிடாமல் ஆச்சார்ய பதம் வகிக்கிறான்
ஆச்சார்யர் நாக்கு நுனி ஸ்ரீ ஹயக்ரீவ பகவானது ஸிம்ஹாஸனமாகும்
அவரைக் காட்டிலும் எந்த தேவதையையும் நாம் உயர்ந்ததாக எண்ண வில்லை –

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–ஸ்லோகம் –21-22-23-24-25-26-27-28-29-30—-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ ரத்ன பிரபா வியாக்யானம்

November 25, 2019

நமோ நமோ வாங் மனஸாதி பூமயே
நமோ நமோ வாங் மனசைக பூமயே
நமோ நமோ அநந்த மஹா விபூதயே
நமோ நமோ அநந்த தயைக சிந்தவே—-21-

வாங் மனஸாதி பூமயே-ஸ்வ தந்த்ரர்களுடைய வாக்குக்கும் மனஸுக்கும் எட்டாதவனான உன் பொருட்டு
நமோ நமோ –நமஸ்காரம் -நமஸ்காரம்
வாங் மனசைக பூமயே-தன்னுடைய நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு பாத்திரமாய் இருக்கிற-அந்தரங்கர்களுடைய
வாக்குக்கும் மனஸுக்குமே விஷயமாய் இருக்கிற உன் பொருட்டு
நமோ நமோ -நமஸ்காரம் -நமஸ்காரம் –
அநந்த மஹா விபூதயே– வேத வேதாந்தங்களிலும் எல்லையில்லாத பெரிய ஐஸ்வர்யங்களை உடைய உனக்கு
நமோ நமோ -நமஸ்காரம் -நமஸ்காரம் –
அநந்த தயைக சிந்தவே—எல்லையில்லாத கருணைக்கே கடலாய் இருக்கின்ற உனக்கு
தயை -என்றது வாத்சல்யம் ஸுவ்சீல்யம் ஸுவ்லப்யம் -போன்ற பல கல்யாண குணங்களுக்கும் உப லக்ஷணம்
நமோ நமோ -நமஸ்காரம் -நமஸ்காரம் —
எம்பெருமானுடைய பெருமையை பரக்கப் பேசின பின்பு அந்தப் பெருமைக்குத் தோற்றுத் தொழுகின்றார் –

ஏக கிருஷ்ணோ நமஸ்கார முக்தி தீரஸ்ய தேசிக -ஸக்ருத் நமஸ்காரம் –
ப்ரஸம்சாயம் ப்ரதிஞ்ஞாயம் ப்ரலாபே தர்ஜ நேபிச பயேச விஜயே சைவ பவ்ந புந்யம் அலங்க்ருதி -என்று
பிரதிஜ்ஜை செய்யும் பொழுதும் -அழும் பொழுதும் -வெருட்டும் பொழுதும் -அச்சம் தோற்றச் சொல்லும் பொழுதும்
வெற்றி தோற்றச் சொல்லும் பொழுதும் ஒரு சொல்லையே அடுத்து அடுத்துச் சொல்வதானது அலங்காரம் ஆகும்
பாம்பு பாம்பு பாம்பு என்று அஞ்சிச் சொல்வது உண்டே
தண்டவத் நிபபாத -தண்டனை சமர்ப்பித்தல் -வேர் அற்ற மரம் போலே விழுந்து இருக்க
ஸக்ருத் நமஸ்காரத்துக்கு மேல் வேண்டாமே
ஸ்ரீ வைகுண்ட கத்யம் -பிரணம்ய உத்தாய உத்தாய புந புந பிரணம்ய-என்றது எம்பெருமானைக் கிட்டும் அளவும்
காலால் நடந்து செல்லாமல் தண்டனை இட்டுக் கொண்டு செல்வதையே அருளிச் செய்கிறார்
கணக்கு எண்ணி சேவிப்பதை விட பக்தி பாரவஸ்யத்தாலே மெய் மறந்து –
அத்யந்த பக்தி யுக்தா நாம் ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம

———–

ந தர்ம நிஷ்ட்டோஸ்மி ந சாத்ம வேதீ
ந பக்திமாம் ஸ்தவச சரணாரவிந்தே
அகிஞ்சநோ அநந்ய கதிஸ் சரண்ய
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே–22-

சரண்ய-சர்வ ரக்ஷகனே
ந தர்ம நிஷ்ட்டோஸ்மி -அடியேன் கர்ம யோகத்தில் நிலை நின்றவன் அல்லேன்
ந சாத்ம வேதீ அஸ்மி –ஆத்ம ஞானமும் உடையேன் அல்லேன்
ந பக்திமாம் ஸ்தவச சரணாரவிந்தே-உனது திருவடித் தாமரைகளில் பக்தியையும் உடையேன் அல்லேன்
அகிஞ்சநோ அநந்ய கதிஸ் -ஒரு சாதனமும் இல்லாதவனாய் வேறு புகல் அற்றவனுமான அடியேன்
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே–உனது திருவடித் தாமரையை சரணமாக அடைகிறேன்
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன்
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறி கொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன் என் கண் இலை
நின் கணும் பக்தனும் அல்லேன்
புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -இத்யாதிகளைத்
திரு உள்ளத்தில் கொண்டு அருளிச் செய்த படி
பகவத் சந்நிதியில் எம்பெருமானை சேவிக்கும் பொழுதில் இந்த ஸ்லோகம் அனுசந்தித்துக் கொண்டு
தண்டம் சமர்ப்பித்து நம் சம்ப்ரதாயம்
இந்த ஸ்லோகத்தாலே-அதிகாரி ஸ்வரூபமும்-சரணாகதி பிரயோகமும்-சொல்லிற்று –

—————

ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
சஹஸ்ரசோ யன்ன மயா வ்யதாயி
ஸோ அஹம் விபாகா வஸ்ரே முகுந்த
க்ரந்தாமி ஸம்ப்ரத்ய கதிஸ் தவாக்ரே —23-

முகுந்த–பகவானே
யத் நிந்திதம் கர்ம –யாதொரு சாஸ்த்ரங்களாலும் சிஷ்டர்களாலும் நிந்திக்கப்பட்ட பாப க்ருத்யமானது
மயா சஹஸ்ரச–அடியேனால் பல்லாயிரம் தடவை
ந வ்யதாயி- செய்யப்பட வில்லையோ
தத் லோகே நாஸ்தி -அப்படிப்பட்ட தீவினை உலகத்திலேயே இல்லையே
ஸோ அஹம் –அப்படிப்பட்ட கடு வினைகளைச் செய்தவனான அடியேன்
விபாகா வஸ்ரே ஸம்ப்ரத்ய-அக் கடு வினைகள் பலன் கொடுக்கும் தருணமாகிய இப்போது
அகதிஸ்–வேறு கதி அற்றவனாய்
க்ரந்தாமி தவாக்ரே —உன் முன்னிலையில் காத்திருக்கின்றேன்
பிரதிபந்தக சாமாக்ரிகள் என்னிடத்தில் அளவற்றவை உண்டு என்கிறார்
நான் செய்யாத இழி தொழிலே உலகிலே இல்லையே -ஒப்பற்ற பாபாத்மா
லோகே -சாஸ்திரத்தில் -என்பதே மிக பொருந்தும்
ஆயிரம் மடங்கு என்னால் பண்ணப் படாதது
யாதொரு நிந்தித்த கர்மம் உண்டு
அதி பாதக மஹா பாதகாதிகள்
அது சாஸ்த்ரத்தில் இல்லை
அனுஷ்டாதாக்கள் பக்கல் இல்லாத நிஷித்தங்களும்
சாஸ்த்ரத்திலே காணலாம் இறே-
இது ஒரு சமத்காரச் சொல்லாகும்

பாபங்களை அதிகமாகச் செய்தாலும் பின்பு அஞ்சி அனுதாபமோ வெட்கமோ படாமலும்
பிராயச்சித்தமோ செய்யாமல் துன்பங்களை அனுபவிக்க முடியாமல் கதறுகின்றேன்
முகுந்த-முக்தி பூமி பரத
இத் துர்தசையை ப்ராப்தனானவனுக்கும் தேவரே உஜ்ஜீவன ஹேது என்னும்
இத்தையே புத்தி பண்ணி கதறுகின்றேன்
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன் ஆர் உளர் களை கண் அம்மா
அரங்க மா நகர் உளானே –திருமாலை -போலே
கோவிந்தா என்று திரௌபதி கதறினது உன் திரு உள்ளத்தை புண் படுத்திற்றே
இப்பொழுது என் கதறுதலுக்கு பரிஹாரம் செய்யா விடில் அது வெளி வேஷம் என்று
நிச்சயிக்கலாமே என்பது உள்ளுறைப் பொருள் –

—————–

நி மஜ்ஜதோ அநந்த பவ அர்ணவ அந்தஸ்
சிராய மே கூலம் இவ அஸி லப்த
த்வயாபி லப்தம் பகவந் நிதா நீம்
அநுத்தமம் பாத்ரம் இதம் தயாயா—24-

ஹே அநந்த-எல்லை அற்ற குண விபூதியை உடைய பெருமானே
பவ அர்ணவ அந்தஸ்-சம்சாரமாகிற கடலினுள்ளே
அநந்த பவ அர்ணவ அந்தஸ்-சேர்த்தும் -கரை காண ஒண்ணாத சம்சாரக் கடலினுள்ளே என்றுமாம்
நி மஜ்ஜதோ மே -மூழ்கிக் கொண்டே இருக்கிற அடியேனுக்கு
சிராய கூலம் இவ அஸி லப்த–நெடு நாள் களித்து கரை போலே நீ கிடைத்தாய்
ஆவாரார் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று
நான் துளங்க-என்பதை அடி ஒற்றி அருளிச் செய்தபடி
சனகாதிகளைப் போலே கண் பற்றிலே இருந்தேனோ –

த்வயாபி பகவந் –பகவானே உன்னாலும்
தயாயா- அநுத்தமம் பாத்ரம் இதம் இதா நீம் லப்தம்-உனது அருளுக்கு சிறந்த பாத்ரமாகிய
இந்த வஸ்து-நான் -அடையப் பெற்றது –
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய -உன்னுடைய கிருஷியும் பலித்ததே
என்பதை நீ நோக்கி அருள வேணும்
ஆகவே ரஷ்யனான எனக்கும் ரக்ஷகனான உனக்கும் லாபம் கிடைக்க நேர்ந்த இப்பொழுது இழக்கலாமா
என்று அற்றோ கதறுகின்றேன்
என்னிடத்தில் யோக்யதைக் கண்டு நீ கைக் கொள்ள விஷயம் இல்லாவிடினும்
உன்னுடைய நிருஹேதுக கிருபையினால் கைக் கொண்டே தீர வேண்டிய நிலை யுண்டே என்று விஞ்ஞாபித்தபடி
உன் பேர் அருளால் இக்கரை ஏறி -பெரியாழ்வார் திருமொழி -5-3-7-என்னும்படி
அழுந்துகிற இடத்தில் கரை கிட்டினால் போலே லப்தனாகா நின்றாய்

அநுத்தமம்-ந வித்யதே உத்தமம் யஸ்மாத் தத் -வ்யுத்பத்தி —
இதற்கு மேல் சிறந்தது இல்லை என்னும்படி லோக உத்தமமானது என்றபடி –

—————–

அபூத பூர்வம் மம பாவி கிம் வா
சர்வம் சஹே மே சஹஜம் ஹி துக்கம்
கிந்து த்வதக்ரே சரணாக தா நாம்
பராபவோ நாத ந தே அநுரூப—–25-

ஹே நாத-
அபூத பூர்வம் மம -அடியேனுக்கு இதற்கு முன்பு உண்டாகாத
கிம் வா துக்கம்-பாவி –என்ன துக்கம் புதிதாக உண்டாகப் போகிறது -ஒன்றுமே இல்லையே
துக்கம் மே சஹஜம் ஹி -துக்கம் என்பது என்னுடன் கூடவே பிறந்தது அன்றோ
சர்வம் சஹே -எல்லாத் துயரங்களையும் பொறுத்துக் கொண்டே இருக்கிறேன்
தனது காய்களைப் பொறாத கொம்பு உலகில் உண்டோ
கிந்து -ஆனால்

த்வதக்ரே சரண ஆகதாநாம்–உன் எதிரிலே வந்து சரணம் புகுந்தவர்களுக்கு
பராபவோ ந தே அநுரூப—-ஒரு அவமானம் உண்டாவது உனக்குத் தகுதி அல்லவே
சர்வ ரக்ஷகன் சர்வ சக்தன் சரணாகத ரக்ஷகன் என்று எல்லாம் சொல்லப்படும் பேற்றை அன்றோ நீ இழக்க இருக்கிறாய்
நமது ஸ்வாமிக்கு அபவாதம் ஏற்படுகிறதே என்கிற பெரிய துக்கத்தைப் பொறுக்க ஒண்ணாதே
இதற்காக அன்றோ இப்பொழுது கதறுகின்றேன்

எங்கனம் தேறுவர் உமர் -திருவாய் மொழி -8-1-3-என்கிறபடியே
உனக்குக் கை புகுந்தவர்களும் உன்னுடைய ரஷணத்தில் அதி சங்கை பண்ணுவார்கள் -என்கை –
ஆஸ்ரிதர்க்கு விஷயங்களால் வரும் பரிபவம் ரஷகரான தேவருக்கு தேஜோ ஹாநி -என்று
அத்தைப் பரிஹரிக்கச் சொல்லுகிறேன் என்கிறார்-
என்னத்த தவறாமல் ரஷித்தே தீர வேண்டும் -என்கிற பிராத்தனையில் விசித்திரமான முறை அன்றோ இது

—————-

நிராஸ கஸ்ய அபி ந தவ உத்ஸஹே
மஹேஸ ஹாதும் தவ பாத பங்கஜம்
ருஷா நிரஸ்தோ அபி ஸிஸூ ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஸ் சரனௌ ஜிஹாஸதி—26–

மஹேஸ-ஸர்வேஸ்வரனே
நிராஸ கஸ்ய அபி – என்னை நீ துரத்தித் தள்ளினாலும்
தவ பாத பங்கஜம் ஹாதும் -உன்னுடைய திருவடித் தாமரையை விடுவதற்கு
ந உத்ஸஹே தாவத் –அடியேன் துணிய மாட்டேன் காண்
ஸ்தநந்தயோ ஸிஸூ–முலைப்பால் குடிக்கும் பருவமுள்ள குழந்தை
ருஷா நிரஸ்தோ அபி –கோபத்தினால் தள்ளப்பட்டாலும்
கையாலே தள்ளுகை அன்றிக்கே-காலாலே தள்ளிலும் அந்தக் காலைக் கட்டிக் கொள்ளும் அத்தனை ஒழிய
புறம்பு போகப் பாராதாப் போலே-
மாதுஸ் சரனௌ -ஜாது -ந ஜிஹாஸதி—தாயாருடைய கால்களை ஒரு போதும் விடுவதற்கு விரும்ப மாட்டாது அன்றோ

ரஷகமுமாய்
ப்ராப்தமமுமாய்
போக்யமுமான
திருவடிகளை முந்துற முன்னம் விட்டு ஜீவிக்க ஸ்ரத்தை பண்ணு கிறிலேன்-
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் -என்று
தேவர் ரஷகர் அன்றியிலே ஒழிந்தாலும் புறம்பு போக்கில்லை -என்கை –
இவ்வ்வாத்ம வஸ்து ஈஸ்வர ஏக ரஷ்யமாய் நித்ய ஸ்தனந்த்யமாய் இறே இருப்பது
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை –அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன்
அருள் நினைந்ததே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -பாசுரம் தழுவிய ஸ்லோகம்
ஈன்ற தாய் -என்றும் -அரி சினம் -என்றும் விருத்த தர்மம் – ஏக ஆஸ்ரயத்தில் சம்பவியாது என்கை
பிதாவுக்கு ஹிதார்த்தமாக குரோதம் சம்பவித்தாலும் மாத்ரு விஷயத்தில் சம்பாவனை இல்லை இறே –
நீ நெறி காட்டி நீக்கப் பார்த்தாலும் நான் உன்னுடைய தின் கழலை விட்டு நீங்குவேன் அல்லேன் -என்கிற
திட அத்யாவசாயத்தை வெளியிட்டு அருளுகிறார்

————–

தவாம்ருதஸ் யந்தி நி பாத பங்கஜே
நிவேஸி தாத்மா கத மந்யதிச் சதி
ஸ்திதே அரவிந்தே மகரந்த நிர்ப்பரே
மது வ்ரதோ நே ஷூ ரகம் ஹி வீஷதே–27-

அம்ருதஸ் யந்திநி –அம்ருதத்தைப் பெருக்குகின்ற -மோக்ஷத்தை அளிக்கின்ற
தவ பாத பங்கஜே–உன்னுடைய திருவடித் தாமரையில்
நிவேஸி தாத்மா –வைக்கப்பட்ட மனமானது
கதம் அந்யத் இச்சதி-வேறு ஒன்றை எப்படி விரும்பும்
மகரந்த நிர்ப்பரே-அரவிந்தே -ஸ்திதே -சதி–தேன் நிறைந்த தாமரைப் பூவானது இருக்கும் பொழுது
மது வ்ரதோ இஷூரகம் ந வீஷதே–ஹி–வந்து முள்ளிப் பூவைக் கண் எடுத்தும் பார்க்க மாட்டாது அன்றோ
இஷூரகம் -முள்ளிப் பூவை
உனது திருவடித் தாமரையின் போக்யதையை நோக்கும் இடத்தில் வேறு ஒன்றினில் நெஞ்சு செல்லுமோ

உன் தேனே மலரும் திருப்பாதம்
அம்ருதம் -தேன் என்றும் மோக்ஷம் என்றும் –
சப்த சக்தியால் மோக்ஷ பிரதத்வத்தையும் கொள்ளலாம் என்று ஸ்ரீ தேசிகர் திரு உள்ளம்

நிவேஸி தாத்மா-தேவர் உடைய நிர்ஹேதுகமான ப்ரசாதத்தாலே
நிவேசிக்கப் பட்ட மனஸ் ஸானது-அபோக்யமுமாய் அப்ராப்தமுமான ஹேய விஷயங்களிலே
பழகிப் போந்த மனஸ்ஸூ
ஸூரி போக்யமான தேவர் திருவடிகளிலே அவகாஹிக்கும் போது தேவர் ப்ரசாதமே வேண்டாவோ –
நிவேசித ஆத்மா யஸ்ய ச -பஹு வ்ரீஹி சமாசம் -ஸ்தாபிக்கப்பட்ட மனம் -என்பது
ஸ்ரீ தேசிகர் ஸ்ரீ ஸூக்தி விருத்தமாகும் -அஸ்வரஸமும் ஆகும் –

ஹி
இது உபதேசிக்க வேண்டுமோ — தேவருக்கு சம்ப்ரதிபன்னம் அன்றோ
எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால் –பெருமாள் திருமொழி -5-5-என்று இராதோ-

———————

த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய கதா அபி கேநசித்
யதா ததா வா அபி சத்ருக் ருத்தோ அஞ்ஜலி
ததைவ முஷ்ணாத்ய ஸூ பான்யசேஷ தஸ்
ஸூ பானி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே—28-

த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய -உனது திருவடியை நோக்கி -பிராப்யமுமாய் -பிராபகமுமாய் –ப்ராப்தமுமாய் –
இருக்கிறபடியைச் சொல்லுகிறது
கதா அபி கேநசித்–எப்பொழுதாவது -எவனாலாவது –
யதா ததா வா அபி –எவ்விதமாகவாவது
சத்ருக் ருத்தோ அஞ்ஜலி–ஒரு தடவை பண்ணப்பட்ட கை கூப்புதலானது
ததைவ முஷ்ணாத்ய அஸூபாந அசேஷ தஸ்-அப்பொழுதே பாபங்களை மிகுதி இல்லாமல் போக்கி விடுகின்றது
ஸூ பானி புஷ்ணாதி –நன்மைகளை வளரச் செய்கின்றது
விரோதியைப் போக்கி விடும் அளவு அன்றிக்கே அபிமதங்களாலே பூர்ணமாக்கும் –
பஹூ வசனத்தாலே-பர பக்தி பரஜ்ஞானம் பரம பக்தி
தேச விசேஷ பிராப்தி பகவல் லாபம் ,ப்ராப்தி பலமான கைங்கர்யம் -இவற்றைச் சொல்லுகிறது
இத்தால் ஸ்வர்க்காதி களான ஒரோ பலங்களிலே நியதமான கர்மங்களில் வ்யாவருத்தி

ந ஜாது ஹீயதே—ஒரு போதும் குறைவது இல்லையே
அஞ்சலி வைபவம் அருளிச் செய்கிறார்
கீழ் இரண்டு ஸ்லோகங்களையும் சேர்த்து -வேறு புகல் இல்லாமை -போக்யதையின் மிகுதி –
உபாயத்தை ஸுவ்கர்யம்-மூன்றாலும் உன்னை விட முடியாது என்கிறார்
கதா அபி கேநசித் யதா ததா வா அபி சத்ருக் -நான்காலும் –கால நியமன இல்லை -அதிகாரி நியமம் இல்லை –
கோணலாக கூப்பினாலும் -வாயினால் மொழிந்தாலும் நெஞ்சால் நினைத்தாலும் போதும் என்கிறது
அஞ்சலி -அம் ஜலயத்தி -அவனை நீர்ப்பண்டமாக உருக்குமே
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பண்ணின அஞ்சலி ஆகையாலே
பிரசன்னனான ஈஸ்வரன் எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யாதானாய் இருக்கையாலே
ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயான் நாப சர்ப்பதி
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திருவந்தாதி -58-என்னக் கடவது இ றே-

ந ஜாது ஹீயதே-அஞ்சலி செய்த பின்பு அனுக்ரஹம் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் செல்லும் என்றுமாம்
எப்போதும் அனுவர்த்தித்திக் கொண்டே இருக்கும்
பலன் கை புகுந்த பின்பும் அஞ்சலியை போது போக்காய் இருக்குமே
மநோ வாக் காயங்கள் மூன்றாலும் பண்ணின பிரபத்தி எல்லாம் வேண்டுமோ –
பத்தாஞ்சலி புடம் தீநம் யாசந்தம் சரணாகதம் -என்கிற
காயிகமான அஞ்சலி ஒன்றுமே அமையாதோ -என்கிறார் இதில்–

ஸ்ரீ ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் –1-6-பரிவதில் ஈசனை பிரவேசம் –

உன்னுடைய திருவடிகளைக் குறித்து ஒரு காலத்தில் ஒருவன் எவ்விதத்திலாயினும் ஒரு முறை அஞ்சலி செய்ய
முயற்சி செய்வானேயாயின், செய்யப்படும் அவ்வஞ்சலியினால், அப்பொழுதே பாவங்கள் அனைத்தும் அடியோடே ஓடிவிடுகின்றன;
மேலும், அவ்வஞ்சலியானது, புண்ணியங்களைக் கொடுத்துப் போஷித்துத் தானும் அழியாமல் இருக்கின்றது,’ என்பது ஸ்தோத்திர ரத்தினம்.

த்வத் அங்கரி முத்திச்ச்ய – உன்னுடைய திருவடிகள்’ என்றதனால், மற்றைத் தேவர்களைக் காட்டிலும்
இறைவனுக்கு உண்டான வ்யாவ்ருத்தியும் வேற்றுமையும்,
இறைவனிடத்தில் அடியார்கள் இழியுந்துறை திருவடிகள் என்னுமிடமும் அருளிச் செய்தாராவார்.
மேலும், கதா அபி ‘ஒரு காலத்தில்’ என்றதனால்,
இன்ன காலத்தில் இன்ன காரியங்களைச் செய்யவேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும்,
கேநசித் ‘ஒருவன்’ என்றதனால், இந்தத் தகுதிகளையுடையவனே இக்காரியத்தை மேற்கோடல் வேண்டும்
என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும்,
யதா ததா‘எவ்விதத்தாலாயினும்’ என்றதனால், இன்ன முறையில் இக்காரியத்தைச் செய்தல் வேண்டும் என்று
விதிக்கிற விதியினின்று வேறு படுத்தியும்,
ஸக்ருத் ‘ஒரு முறை’ என்றதனால், பல வருடங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கிற தீர்க்க சத்திரம்
முதலான யாகங்களினின்று வேறுபடுத்தியும்,
‘அஞ்சலி’என்றதனால், மிக்க பொருட் செலவினாலும் சரீரத்தின் பிரயாசை முதலியவற்றாலும் செய்யப்படுகின்ற
அஸ்வமேதயாகம் முதலியவற்றினின்று வேறுபடுத்தியும்,
அசுபானி ‘பாவங்கள்’ என்ற பன்மையால், ஒரு தர்மம் ஒரு பாவத்தையே போக்கும் என்று கூறப்படுகிற
தர்மங்களினின்று வேறுபடுத்தியும்,
அசேஷத ‘அடியோடே’ என்றதனால், வாசனை கிடக்கப்போக்கும் கர்மங்களினின்று வேறுபடுத்தியும்,
சுபானி ‘புண்ணியங்களை’ என்ற பன்மையால் ஒரு தர்மம் ஒரு பலனையே கொடுக்கும் என்று கூறப்படுகிற
தர்மங்களினின்று வேறுபடுத்தியும்,
நஜாது ஹீயதே ‘அழியாமலிருக்கின்றது’என்றதனால், பலன்களைக் கொடுத்துத் தாம் அழிந்து போகிற
தர்மங்களினின்று வேறுபடுத்தியும்
அருளிச் செய்திருத்தல் நோக்கல் தகும்.

மற்றும்,முஷ்ணாதி ‘ஓடிவிடுகின்றன’ என்றதனால், சும் எனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே’ என்கிறபடியே,
பாவங்கள், இவன் தான் தொடர்ந்து பிடிப்பான் என்று நினைத்து இவனை அறியாமலே போய் விடும் என்பதனையும்,
புஷ்ணாதி ‘கொடுத்துப் போஷிக்கிறது’ என்றதனால், தீவினைகளைப் போக்குதலேயன்றி,
அது போன இடம் எங்கும் நன்மையினையே நிறையச்செய்யும் என்பதனையும் தெரிவித்தவராவர்-

பத்ரம் புஷ்பம் இத்யாதி -பச்சிலை மலர் பழம் நீர் ஆகிய இவற்றை எவன் ஒருவன் அன்போடு கொடுக்கின்றானோ,
தூய மனத்தினனான அவனால் பத்தியோடு கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்கிறேன்,’ என்பது ஸ்ரீ கீதை.
இதனால், பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்;
அஸ்னாமி- இப்படித் தரப்பட்டவற்றை மனோரத பதத்துக்கும் அவ்வருகானவை கைப்புகுந்தாற்போன்று நினைக்கிறான்;
அல்லது, அவன் அன்பினால் கலங்கித் தருமாறு போன்று, இறைவனும் கலங்கி அடைவு கெட
விநியோகம் கொள்ளுகிறான் என்பன விளங்குதல் காண்க.

அந்யாத் பூர்ணாதபாம் கும்பாத் இத்யாதி ‘ஸ்ரீகிருஷ்ணனானவன், பூர்ண கும்பத்தைக் காட்டிலும் வேறு ஒன்றையும் விரும்பான்;
அவனுடைய திருவடிகளைக் கழுவுதலே சாலும்; அதனைத் தவிர வேறு ஒன்றனையும் விரும்பான்,’
என்பது மகாபாரதத்தில் சஞ்சயன் கூற்று.
நச்சேதி- இதனால், ஒருவன் இறைவனை ஆராதனை புரிதல் வேண்டும் என்று முயன்ற அளவிலேயே
அவனுக்கு வயிறு நிறையும் என்பது பெறுதும்.
ஏகாந்தகத புத்திபி ‘இறைவனாகிய தன்னை அன்றி வேறு ஒரு பலனையும் விரும்பாத பெரியோர்களால்
தூய்மையான மனத்துடன் செய்யப்படும் காரியங்கள் எல்லாவற்றையும்,
சிரஸா பிரதி க்ருஹ்ணாதி-தேவ தேவனாகிய பகவான் தானே தலையால் ஏற்றுக் கொள்ளுகிறான்,’ என்பது மோக்ஷ தர்மம்.

இதனால், தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது என்பதும், அவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் யா க்ரியாஸ்
ஸம்ப்ரயுக்தாஸ் ஸ்யு -அபிமத விஷயத்தின் பரிமாற்றம் போலே உத்தேஸ்யமாய்த் தோற்றும் என்பதும்,
அவற்றில் ஒன்றையும் விடான் என்பதும், எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன்,
இவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான் என்பதும்,
ஸ்வயம் -செவ்வக் கிடப்பு உண்டாயினும் மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று,
அவ் வேலைகளைத் தானே செய்வான் என்பதும் போதருதல் காண்க.

இவற்றால், இறைவனை அடைதல் எளிது என்பது போதரும்.
ஆக, இப்படிகளாலே, இறைவன் எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதனை அருளிச் செய்கிறார் இத்திருவாய்மொழியில்.

————

உதீர்ண சம்சார தவ ஆஸூஸூ ஷணிம்
ஷாணோத நிர்வாப்ய பராம் ஸ நிர்வ்ருதிம்
ப்ரயச்சதி தவச் சரணா ருணாம் புஜ
த்வய அநு ராக அம்ருத ஸிந்து ஸீகர–29-

தவச் சரணா ருணாம் புஜ
த்வய அநு ராக அம்ருத ஸிந்து ஸீகர–உனது செந்தாமரை திருவடியை இணையைப் பற்றின
அன்பாகிய அமுதக்கடலின் ஒரு திவலையானது
உதீர்ண சம்சார தவ ஆஸூஸூ ஷணிம்–மேன்மேலும் ஜ்வலிக்கின்ற சம்சாரம் ஆகிய காட்டுத்தீயை
ஷாணோத நிர்வாப்ய –ஒரே நொடிப் பொழுதில் தனித்து விட்டு
பராம் ஸ நிர்வ்ருதிம் ப்ரயச்சதி –மேலான இன்பத்தையும் தருகின்றது

அநுராக-
திருவடிகளில் அத்யவஸா யாத்மகமான ருசி -என்னுதல்
பிரபத்தி பலமாய் கைங்கர்ய உபகரணமான பக்தி -என்னுதல்
ப்ரீதி காரிதம் இறே கைங்கர்யம்

பிரபத்தி தான் வேணுமோ -அஞ்சலியே போதும் என்றார் கீழ் –
அதுவும் வேணுமோ நெஞ்சிலே சிறிது ஆசை இருந்தாலே போதுமே என்கிறார் இதில்
தீயை அணைக்கத் தண்ணீர் வேண்டுமே –
சம்சார காட்டுத்தீயை ஒரு நொடிப்பொழுதில் அணைக்க அம்ருத சாகர திவலையே போதும் என்கிறார்
அவ்வதிகாரிக்கு பலத்துக்கு விளம்பம் இல்லை என்கிறார்
ஆஸூஸூ ஷணி-என்று அக்னிக்குப் பெயர்
அநந்ய ப்ரயோஜன பக்தி கேசம் உண்டானால் -அது பரம பக்தி தசையை அடைந்து –
சம்சார விமோசனத்தைப் பிறப்பித்து நித்ய கைங்கர்யச் செல்வத்தையும் அளித்திடும் –
ந தர்ம நிஷ்ட்டோஸ்மி -என்கிற இது வாசிக ப்ரபத்தியாய்
த்வத் அங்க்ரி உத்திஸ்ய -என்றது காயிக ப்ரபத்தியாய்
இதில் மானசமான பிரபத்தி -என்னவுமாம்

————–

விலாஸ விக்ராந்த பர அவர ஆலயம்
நமஸ் யதார்த்தி ஷபணே க்ருத ஷணம்
தனம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா—30-

விலாஸ விக்ராந்த பர அவர ஆலயம்–விளையாட்டாகவே அளக்கப்பட்ட மேல் உலகங்களையும்
கீழ் உலகங்களையும் உடையதும்
பரர் ஆலயம் -ப்ரஹ்மாதிகள் லோகம் -மேல் லோகம் -அவர லோகம் -மனுஷ்ய லோகம் -கீழ் உலகம்
நமஸ் யதார்த்தி ஷபணே-சேவிப்பவர்களின் துன்பங்களைத் தொலைப்பதில்
க்ருத ஷணம்-போது போக்கு உடையதும்
ஆஸ்ரித ரக்ஷணத்துக்காகவே கை ஒழிந்து இருக்கும் திருவடிகள் அன்றோ

தனம் மதீயம் தவ பாத பங்கஜம்-எனது செல்வமுமாய் உள்ள உனது திருவடித் தாமரையை
வைத்த மா நிதி -திருவாய் மொழி -6-7-11-என்கிறபடியே
எனக்கு ப்ராப்யமுமாய் பிராபகமுமாய் உள்ளத்தை-சர்வ ஸூ லபமுமாய் ஆஸ்ரித வத்ஸ்லமுமாய்
நிரதிசய போக்யமுமான திருவடிகளை
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா–எப்பொழுது கண்ணால் சேவிக்கப் போகிறேன்
சஷூஷா-திருநாட்டில் சதா பஸ்யந்தி சொல்லுகிறார் இல்லை –
திவ்ய சஷூஸ் -அர்ஜுனனுக்குத் தந்து அருளினது போலே தமக்கும் வேண்டும் என்கிறார்
நெஞ்சு என்னும் உள் கண்ணால் காண விரும்புகிறார்
பரமபத பிராப்தியும் சொல்லுகிறார் என்னவுமாம்

அவனைக் கிட்டும் வழியின் ஸுவ்கர்யத்தை அருளிச் செய்து இது முதல்
அடுத்த -17-ஸ்லோகங்களால் வைலக்ஷண்யத்தை பரக்க அருளிச் செய்கிறார் –
இதுவரை ஸ்ரீ மந்த்ர ரத்ன பூர்வ கண்டம் -மேல் ஸ்ரீ த்வயத்தின் உத்தர கண்டம்
இதிலும் அடுத்த ஸ்லோகத்திலும் திருவடியை சேவிப்பதில் கரை புரண்டு ஓடும் தமது த்வராதிசயத்தை அருளிச் செய்கிறார்
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ
அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ கண்களே
சாஷாத்காரத்தில் த்வரை மிக்கு பதறி அருளிச் செய்கிறார்
ஆஸ்ரித ஆர்த்தியை அடியோடு அகற்ற வியாபாரிக்கும் -பரம புருஷார்த்தமாயும் இருக்கும் திருவடிகள் அன்றோ

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–ஸ்லோகம் -15-16-17-18-19-20–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ ரத்ன பிரபா வியாக்யானம்

November 24, 2019

த்வாம் சீல ரூப சரிதை பரம ப்ரக்ருஷ்ட
சத்த் வேன சாத்த்விகதயா ப்ரபலைச்ச சாஸ்த்ரை
பரக்யாத தைவ பரமார்த்த விதாம் மதைச்ச
நைவாஸூர ப்ரக்ருதய ப்ரபவந்தி போத்தும்-15-

த்வாம் -இப்படிப்பட்ட உன்னை
சீல ரூப சரிதை –குண ரூப சரிதைகளாலும்
பரம ப்ரக்ருஷ்ட சத்த் வேன –மிகச் சிறந்த சத்வ குணத்தினாலும்
சாத்த்விகதயா ப்ரபலைச்ச சாஸ்த்ரை–சாத்வீகங்கள் என்பதினாலேயே பிரபலமான சாஸ்த்ரங்களினாலும்
பரக்யாத தைவ பரமார்த்த விதாம் மதைச்ச–பிரசித்தர்களாய் தெய்வத்தின் உண்மையை அறிந்த
மஹான்களினுடைய மதங்களினாலும்
நைவாஸூர ப்ரக்ருதய ப்ரபவந்தி போத்தும்-அஸூரத் தன்மை பொருந்திய நீசர்னல் அறிவதற்கு வல்லர் அல்லர்

எம்பெருமானைப் பற்றி அறியும் வழிகளில் ஐந்து ஆறு இங்கே அருளிச் செய்கிறார்
வேடன் வேடுவிச்சி குரங்கு இடைச்சிக்கள் முதலானோர் ஒரு நீராகக் கலந்த ஸுவ்சீல்யம்
பஹுஸ்யாம்-என்று சங்கல்பித்த சீர்மை
திவ்ய மங்கள விக்ரஹ வை லக்ஷண்யம்
வேத அபஹாராதி நிரசனாதிகள் -க்ரந்தவா நிகிய புனர் உதக்ரதி போன்ற சேஷ்டிதங்கள் –
ஆலிலை துயின்ற மற்றும் பல அதி மானுஷ சேஷ்டிதங்கள்
அப்ராக்ருத சுத்த சத்வமயத்வம் –
பரக்யாத தைவ பரமார்த்த விதாம் மதைச்ச–இதில் பரக்யாத-என்ற விசேஷணம் தைவத்துக்கும்
தைவ பரமார்த்த வித்துக்களுக்கும் –
நாராயண அநு வாக்கம் -ஸூ பால உபநிஷத் -அந்தர்யாமி பிராமணம் இத்யாதிகளில் பிரசித்தமான தைவத்தை
வியாசர் பராசர வால்மீகி மனு ஆஞ்ஞவல்கர் ஸுவ்நகர் ஆபஸ்தம்பர் ஆழ்வார்கள் போன்றவர்களை
பரமார்த்த வித்துக்கள் என்கிறார்
பாக்யசாலிகளே நன்கு அறிந்து உஜ்ஜீவிக்கிறார்கள் என்றதாயிற்று

மூடர்கள் இழந்தே போகிறார்களே என்று பரிதவிக்கிறார்
விலக்ஷண பகவத் விஷயம் இவர்கள் கண்ணில் படாமல் போனதே என்று மகிழ்கிறார் என்னவுமாம்
இவர்களைப்போலே நாம் இழந்தே போகாமல் பகவத் பரத்வத்தை அனுபவிக்கப் பெற்றோமே என்ற
உகப்பு உள்ளுறைப் பொருளாகும்

————-

உல்லங்கித த்ரிவித சீம சமாதி சாயி
சம்பாவனம் தவ பரிப்ரடிம ஸ்வ பாவம்
மாயா பலே ந பவதா அபி நிகூஹ்ய மாநம்
பஸ்யந்தி கேசித் அநிஸம் த்வத் அநன்ய பாவா–16-

உல்லங்கித த்ரிவித சீம சம அதிசாயி சம்பாவனம் –த்ரிவித அபரிச்சேதனானோ –
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயவனோ என்று எல்லாம் சங்கிப்பதற்கும் கூடாததுமான
விபுத்வாத் தேச பரிச்சேத ரஹித
நித்யத்வாத் கால பரிச்சேத ரஹித
சர்வ பிரகாரித்வேன ப்ருதக் ஸ்திதி யோக்ய அவஸ்த அந்தராபாவத் வஸ்து பரிச்சேத ரஹித –
சீமை -எல்லை –
உல்லங்கித-விசேஷணம் சம அதிசாயி சம்பாவனம் -என்பதிலும் அந்வயிக்கும்
சமம் -துல்யம் அதிசாயி -மேம்பட்ட வஸ்து

தவ பரிப்ரடிம ஸ்வ பாவம்-உன்னுடைய பரத்வமாகிற ஸ்வ பாவத்தை
மாயா பலே ந பவதா அபி நிகூஹ்ய மாநம்–நீ மாயையினால் மறைத்த போதிலும்
மாயா பலம் -குணமயமான பிரகிருதியின் சாமர்த்தியம்
திவ்ய விக்ரஹத்தை இதர சஜாதீயம் ஆக்கும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே -என்னுதல்

த்வத் அநன்ய  பாவா–உன்னிடத்திலேயே மனம் பொருந்தி உள்ளவர்களான

பஸ்யந்தி கேசித் அநிஸம் –சில மஹான்கள் எப்போதும் சாஷாத்கரிக்கிறார்கள்
அவர்களின் திவ்ய சஷுஸ் களை பிரகிருதி மறைக்க மாட்டாதே
ஸ்ரீ மந் நாராயணனுடைய பரத்வம் சாஸ்த்ரங்களால் மட்டும் அறிந்து கொள்ளலாம் என்று இல்லாமல்
நேராக சாஷாத்கரிக்கும் மகான்களும் உண்டே

பஸ்யந்தி-பார்க்கிறார்கள் -முதலில் சாஸ்த்ரத்தால் பார்த்து அறிந்து யோக பலத்தால் சாஷாத்கரிக்கிறார்கள்
சரபங்க மகரிஷி -ததி பாண்டன் போல்வார் அறிந்து கொண்டார்களே அவதார தசையில்
அநிஸம் பஸ்யந்தி என்றும் அநிஸம் த்வத் அநன்ய பாவா -என்றும் கொள்ளலாம்
உன்னை ஒழிய வேறு நினைவு-விஷயம் – இல்லாதவர்கள் -என்னுதல்
அநிஸம்-எப்பொழுதும்
அநன்ய பாவா
உன்னை ஒழிய உபாயாந்தரம் அறியாதவர்கள் என்னுதல்
உன்னை ஒழிய வேறு பரதவ புத்தி இல்லாதவர்கள் -என்னுதல்-

—————–

யத் அண்டம் அண்டாந்தர கோ சரஞ்ச யத்
தச உத்தராணி ஆவரணாநி யாநி ஸ
குணா பிரதானம் புருஷ பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூ தய—17-

யத் அண்டம் அண்டாந்தர கோ சரஞ்ச யத்-எந்த ப்ரஹ்மாண்டமோ அண்டங்களுக்குள் இருக்கக் கூடியது எதுவோ
தச உத்தராணி ஆவரணாநி யாநி -ஒன்றுக்கு ஓன்று பத்து மடங்கு மேற்பட்டுச் சொல்லுகின்ற
அண்டங்களின் ஆவரணங்களும் எவையோ
அண்டம் -ஏக வசனமாக இருந்தாலும் சமுதாயத்தைச் சொல்லும்
ஸ குணா –சத்வம் ரஜஸ் தமஸ் என்னும் குணங்களும்
பிரதானம் புருஷ பரம் பதம்-ப்ரக்ருதியும் ஜீவாத்ம வர்க்கமும் ஸ்ரீ வைகுண்டமும்
பராத்பரம் –அசேதனங்களில் காட்டில் சிறந்த சேதன வர்க்கங்களுள் சிறந்த முக்தாத்ம நித்யாத்ம வர்க்கமும்
ப்ரஹ்ம ச –திவ்ய மங்கள விக்ரஹமும்
தே விபூ தய—உமக்கு சேஷப்பட்டவை

கீழே அருளிச் செய்த சர்வேஸ்வரத்தை த்ருடப்படுத்தி அருளுகிறார் –
அசாதாரண உபய விபூதி உக்தன் அன்றோ

ஒவ் ஒரு அண்டத்திலும் அண்டாதிபதி -சர்வ வித ஜந்துக்கள் போக்ய போக உபகரண பதார்த்தங்கள்
எல்லை அற்று இருக்குமே -இவற்றையே அண்டாந்தர கோசாரம் எனப்படுகிறது
அனைத்துக்கும் ஆதாரகன் நியாமகன் சேஷி இவனே
பிரகிருதி த்ரிவித குணங்களும் அவன் இட்ட வழக்கு
பிரதானம் -விகாரம் அற்று இருக்கும் மூலப்பிரக்ருதி

குணங்களைத் தனிப்பட பிரித்து அருளிச் செய்தது ஸாம்யாவஸ்தமான குண த்ரயமே பிரகிருதி-
குணங்களை ஜகத் காரணமாகச் சொன்ன என்னும் சாங்க்ய மத நிரசனத்துக்காக

புருஷ -பிரக்ருதியை வியாபித்து இருக்கும் ஷேத்ரஞ்ஞ சமுதாயம்
கோட்டைக்குள் நெருப்பு போலவும் எள்ளுக்குள் எண்ணெய் போலவும் பிரதானத்தில் உறைந்து இருக்குமே
அண்டாந்தர கோசரம் என்று வ்யஷ்டியைச் சொல்லுகையாலே-இது சமஷ்டி விஷயம்

ப்ரஹ்ம -ஸ்வரூபத்தை குறிக்கும் யாகிலும் இங்கே அனைத்தும் உன் விபூதிகள் என்று முடிப்பதால்
இங்கு திவ்ய மங்கள விக்ரஹமே
வ்-இவை அனைத்தும் உனக்கு ஆதேயங்கள் -நியாம்யங்கள் -சேஷங்கள்-என்றபடி –

—————

வஸீ வதாந்யோ குணவான் ருஜூஸ் ஸூசிர்
ம்ருதுர் தயாளூர் மது ரஸ் ஸ்திரஸ் ஸம
க்ருதீ க்ருதஜ்ஞஸ் த்வமஸி ஸ்வ பாவதஸ்
சமஸ்த கல்யாண குணாம்ருதோ ததி—18–

ஸ்வ பாவதஸ்–இயற்கையாகவே –இது அனைத்துக் குணங்களிலும் அந்வயம்
1-வஸீ –பிரபுவாய் -அல்லது ஆஸ்ரித பரதந்த்ரனாய் -தூது போனமை கட்டுண்ணப் பண்ணிக் கொண்டமை –
ஸ்வ இச்சையால் வந்த பாரதந்தர்யம் -கர்மம் அடியாக இல்லவே -இத்தைக் காட்டவே ஸ்வ பாவதஸ்-விசேஷணம் –
2-வதாந்யோ –உதாரனாய்–தன்னையும் தனது உடைமையையும் ஆஸ்ரிதற்கு அளிப்பவன்
3-குணவான் –ஸுவ்சீல்ய குணசாலியாய்–குண பிரகரணத்தில் குணவான் என்றாலே ஸுவ்சீல்யமே
கோன்வஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் -என்று தொடங்கி
இஷ்வாகு வம்ச பிரபவ -பபூவ குணவத்தர ச ஹி தேவைருதீர்ண்ஸ்ய -என்கிறபடியே
சீல கார்யம் அவதாரம் -என்கை
4-ருஜூஸ் –த்ரி கரணங்களினாலும் கபடம் அற்றுச் செவ்வியனாய்
ருஜு புத்திதயா சர்வம் ஆக்யாதும் உபசக்ரமே -வால்மீகி -பெருமாள் சூர்பணை இடம்
5-ஸூசிர்–பரிசுத்தனாய் -அபிப்ராய சுத்தியும் சரீர சுத்தியும் –
நித்ய சம்சாரிகளை நித்ய சூரிகளோடே ஓக்க அருளுமவன் என்றுமாம்
6-ம்ருதுர் -ஸூ குமாரனாய் –திவ்ய மங்கள விக்ரஹ குணமும் ஆத்ம குணமும் –
மஹாத்மாக்களை க்ஷணம் நேர விஸ்லேஷம் அஸஹிஷ்ணு -பொறாதவன்
இங்கு ஆத்ம குணத்தை குறிப்பதே உசிதம்
7-தயாளூர் –இரக்கமுடையவனாய்-பிறர் துக்கம் கண்டு தானும் துக்கப்படுபவன்
வ்யசநேஷூ மனுஷ்யாணாம்
அவிகாரஸ்வபாவனாவனுக்கு பிறர் துக்கம் போக்க நினைக்கும் கருணையே என்று ஸ்ரீ தேசிகர் திரு உள்ளம்
8-மது ரஸ் –ச ரசனாய் -மதுரமான வாக் சாமர்த்தியம் -என்றும்
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலைக் கோனே -என்னும்படி திவ்ய மங்கள விக்ரஹம் என்றுமாம் –
ரஸோ வை ச –சர்வ ரஸா –
9-ஸ்திரஸ் –ஒருவராலும் அசைக்க முடியாதவனாய் –ஆஸ்ரிதர் அபராதங்களைக் கண்டு திரு உள்ளம் சீறிக் கை விடாதவன்
தன் அடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என் அடியார் அது செய்யார்
செய்தாரேல் நன்றே செய்தார் என்னுமவன்
10-ஸம-அனைவருடன் வாசி இன்றி ஒத்துப் பரிமாறுபவனாய் -பரம பவித்ரன் என்றவாறு
ஜாதி குண வ்ருத்தங்களைப் பாராதவன் -சமோஹம் சர்வ பூதானாம் -விஷம ஸ்ருஷ்ட்டி கர்மங்கள் அடியாகவே –
ஈடும் எடுப்புமில் ஈசன் –திருவாய் மொழி -1-6-3-
கொள்கை கொளாமை இலாதான் -திருவாய் மொழி -1-6-5-
11-க்ருதீ -நன்றி புரியுபவனாய் –தனக்கு செய்ய வேண்டிய க்ருத்யம் ஒன்றும் இல்லாதவனாய்
ஆஸ்ரித ரக்ஷணமே விரதமாகக் கொண்டவன்
ஆஸ்ரிதர் தன்னை லபித்தால் இழந்தவர்கள் பெற்றாராய் இருக்குமது அன்றிக்கே -தன் பேறாய் இருக்கை –
அபி ஷிச்ய ஸ
12-க்ருதஜ்ஞஸ் -ஆஸ்ரிதர் செய்யும் ஸ்வல்ப அனுகூல்யத்தையும் பெருக்க மதிப்பவனாய்
என் ஊரைச் சொன்னாய் –இத்யாதிகளால் மடி மாங்காய் இட்டு ஸூஹ்ருதங்களை ஓன்று பத்தாக்கிக் கொண்டு போருபவன்
ருணம் ப்ரவ்ருத்த மிவ மே ஹ்ருதயானநாப ஸ்ர்ப்பத்தி -என்று இருக்குமவன் –
சிரஸா யாசத்
அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி
தவம் சமஸ்த கல்யாண குணாம்ருதோ ததி–அஸி -நீ கல்யாண குணங்கள் எல்லாவற்றுக்கும் அமுதக் கடலாய் இராநின்றாய்
அனைத்தையும் சொல்ல சந்தஸிசில் இடம் இல்லாமையால் ஒரு பன்னிரண்டு குணங்களை எடுத்துக் காட்டி அனுபவிக்கிறார்

———–

உபர்யுபர்யப் ஜபு வோ அபி பூருஷான்
பிரகல்ப்ய தே யே சதா மித்ய நுக்ரமாத்
கிரஸ் த்வதே கைக குணாவதீ ப்ஸயா
ஸதா ஸ்திதா நோத் யமதோ அதி ஸேரதே–19-

கிரஸ்-வேத வாக்யங்களானவை
உபர்யுபர் -மேன்மேலும்
யப்ஜபு வோ அபி பூருஷான் பிரகல்ப்ய –ப்ரஹ்மாக்களையும் மநுஷ்யர்களாகக் கற்பனை செய்து
தே யே சதா மித்ய நுக்ரமாத்-தே யே சதம் தே யே சதம் என்று ஓயாமல் சொல்லிக் கொண்டே போவதானால்
த்வத் ஏகைக குண அவதீ ப்ஸயா-உன்னுடைய ஒவ் ஒரு குணத்தின் எல்லையைக் கண்டு பிடிக்க வேண்டும்
என்கிற விருப்பத்தோடு
ஸதா ஸ்திதா –எப்போதும் இருக்கின்றன -ஆகையினால்
நோத் யமதோ அதி ஸேரதே—ஆரம்ப தசையைக் கடந்து அப்பால் சொல்லவில்லையே

குணங்கள் கணக்கில்லாதவை என்பது மட்டும் இல்லை –
ஒவ் ஒரு குணமும் எல்லை காண ஒண்ணாத படி அநவதிகமாய் இருக்குமே –
ஆனந்த வல்லீ -நூறு நூறு என்று திரும்பிக் கொண்டே இருக்குமா -வர்த்தமான பிரயோகம் –
ப்ரஹ்ம ஆநந்தத்தின் அத்யந்த அபரிச்சேத் யத்தை சொன்னவாறு
ப்ரஹ்மாக்களை மனுஷ்ய ஸ்தானத்தில் வைத்து வைத்து மேலே மேலே ஓயாமல் கற்பனைகள்
நிகழ்நின்றனவே ஒழிய முடிந்த பாடு இல்லையே
அநுக்ரமம்–ஒன்றின் பின் ஒன்றாக சொல்லிக் கொண்டே போகை
கிர-வாக்குகள் அர்த்தமானாலும் இங்கு வேத வாக்குகள் –
சதா ஸ்திதா -எப்பொழுதும் உள்ள வேத வாக்குகள் என்றும் கொள்ளலாம்
யுவா ஸ்வாத் என்று உபக்ரமித்து யவ்வனம் உபதேசிகத்வம் ஆசிஷ்டத்வம் த்ரடிஷ்டத்வம் பலிஷ்டத்வம்
சர்வ பிருத்வீ பதித்வம் குணங்களும் கூறப்பட்டமையால் இவற்றின் எல்லை இல்லாதத் தன்மைகளையும் சொன்னவாறு
ஆனந்த வல்லீ தவ குண நிவஹம் யவ்வன ஆனந்த பூர்வம் -ஸ்ரீ பட்டர்
அத்யாயக இதி ஜ்ஞானம்
ஆசிஷ்ட்ட இதி சக்தி
த்ரடிஷ்ட்ட இதி வீர்யம்
பலிஷ்ட்ட இதி பலம்
தஸ்யேயம் -இதி ஐஸ்வர்யம்
குணங்களின் எல்லையைக் காணத் தொடக்கி இருக்கின்ற வேதம் என்கிற வார்த்தையே
என்றைக்கும் நிகழ்வதே அன்றி எல்லை கண்டு முடித்தது என்பதற்கு அவகாசம் இல்லையே
உயர்வரஉயர் நலம் உடையவன் என்று சொல்லத் தெரியாமல்
நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்று திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்யும் படி இருப்பானே
இஸ் ஸ்லோகார்த்தம் களங்கம் இல்லாமல் அறிய ஆச்சார்யர் பாக்கள் அடி பணிந்து முயல வேண்டும்
வேதாந்த விழுப் பொருள் அன்றோ அவன் –

———-

த்வத் ஆஸ்ரிதா நாம் ஜகத் உத்பப ஸ்திதி
பிரணாச சம்சார விமோசன ஆதய
பவந்தி லீலா வித யஸ்ஸ வைதிகாஸ்
த்வதீய கம்பீர மநோ நுசாரிண–20-

த்வத் ஆஸ்ரிதா நாம் ஜகத் உத்பப ஸ்திதி பிரணாச சம்சார விமோசன ஆதயபவந்தி லீலா –உலகத்தைப் படைப்பது
காப்பது அழிப்பது மோக்ஷம் அளிப்பது-முதலிய விளையாடல்கள் உனது அடியவர்களுக்காக ஆகின்றன
வித யஸ்ஸ வைதிகாஸ்த்வதீய கம்பீர மநோ நுசாரிண–வேத விதிகளும் உன்னுடைய பக்தர்களின் கம்பீரமான
திரு உள்ளத்தைப் பின் செல்பவைகளாக இருக்கின்றன
காட்டில் எரியும் நிலா போலே இல்லாமல் உன்னுடைய அபரிமித குண மகிமைகளை அனுபவிக்க பலரும் உண்டே –
குண விபூதிகள் லீலைக்கு மட்டும் அல்ல -ஆஸ்ரிதர் ஆனந்தத்துக்காகவே

ஜகத் உத்பப ஸ்திதி பிரணாச சம்சார விமோசன ஆதய -தவ -லீலா –த்வதீய கம்பீர மநோ நுசாரிண-
தவ வைதிகாஸ்-வித யஸ்ஸ -த்வத் ஆஸ்ரிதா நாம்-பவந்தி-என்று அந்வயித்து
படைத்தல் அளித்தல் அழித்தல் மோக்ஷம் அளித்தல்-மற்றும் உனது லீலைகளை -பரமைகாந்திகளின்
திரு உள்ளத்தைப் பின் செல்லும்
ஸாஸ்த்ர விதிகளும் -எல்லாமே உன்னுடைய ஆஸ்ரிதர்களுக்கு ஆகவே ஆகின்றன
அவாப்த ஸமஸ்த காமன்
நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச் சென்று சென்று ஆகிலும் ஜன்மம் கழிப்பான்
எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் –
அனைத்தும் ஒரு சேதனன் நமக்கு அகப்படுவான் என்ற திரு உள்ளத்தால் அன்றோ

ஜகத் உத்பப ஸ்திதி பிரணாச சம்சார விமோசன ஆதய–த்வத் ஆஸ்ரிதா நாம்-லீலா — வைதிகாஸ்-வித யஸ்ஸ-
த்வதீய கம்பீர மநோ நுசாரிண–பவந்தி -என்றும் அன்வயித்து
உனது அடியவர்களான ப்ரஹ்மாதிகளுக்கு விளையாட்டாய் -உன்னுடைய கிருபாதிகளால் அவலீலையாகச் செய்யும் படி இருக்கும்
அப்படியே ஸாஸ்த்ர விதிகளும் உன்னை அடி பணிந்தவர்களுடைய ஆழ்ந்த திரு உள்ளத்தை அனுசரிக்கின்றன
சிஷ்டாசாரத்தை முதன்மையான பிரதானமாகச் சொல்லி
அதற்கு பிந்தின பிரமாணமாக வேதங்களைச் சொல்ல வேணும்

உனது ஆஸ்ரிதர்களின் பெருமை அப்படியானால் உனது பெருமையின் அளவை எண்ணவும் முடியுமோ –என்றவாறு
ப்ரஹ்ம வாதினோ வதந்தி -மனு மகரிஷி சொன்னது எல்லாம் மருந்து –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–ஸ்லோகம் -10-11-12-13-14–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ ரத்ன பிரபா வியாக்யானம்

November 24, 2019

ந அவேஷசே யதி ததோ புவ நான்ய மூநி
நாலாம் ப்ரபோ பவிது மேவ குத ப்ரவ்ருத்தி
ஏவம் நி சரக்க ஸூ ஹ்ருதி த்வயி சர்வ ஜந்தோ
ஸ்வாமின் ந சித்ர மித மாஸ்ரித வத்ஸ்லத்வம்–10-

ப்ரபோ-பகவானே
ந அவேஷசே யதி –நீ கடாக்ஷித்து அருளா விட்டால்
ததோ புவ நான்ய மூநி நாலாம் -ததஸ் அமூநி புவநாநி பவிதும் ஏவ ந அலம்-அப்போது இவ்வுலகங்கள் உண்டாகவே மாட்டா
குத ப்ரவ்ருத்தி–ஒரு காரியமும் செய்ய மாட்டா என்பதைச் சொல்லவும் வேணுமோ
ஸ்வாமின்-இப்படியே
ஏவம் சர்வ ஜந்தோ-இப்படி எல்லா உயிர்கட்க்கும்
நி சரக்க ஸூ ஹ்ருதி -இயற்கையாகவே ஸூஹ்ருதம்-நன்மை -விரும்புவானான
த்வயி -உன்னிடத்தில்
ந சித்ர மித மாஸ்ரித வத்ஸ்லத்வம்–ஆஸ்ரித வாத்சல்யமான இந்தக் குணமானது ஆச்சர்யமே இல்லையே

ஸ்தோத்ரம் பண்ணுவதற்கு அதிகாரம் உண்டு என்று ஸ்தாபித்த பின்பு ஸ்தோத்ரம் பண்ணத் தொடங்குகிறார் இது முதல்
அப்ஜ நேத்ர-என்று கீழே சம்போதித்த உடனே தண் தாமரைக் கண்களால் கடாக்ஷித்து அருளி அனுக்ரஹித்தான்
தத் ஐஷத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி –ஸ்ருதி அடி ஒற்றி இவரும் அவேஷசே -என்று அருளிச் செய்கிறார்
ஈஷணம்-அனுக்ரஹத்தோடு கூடிய சங்கல்பம்
ஸ்வாபாவிக ஸூஹ்ருத்தாய் எல்லார் விஷயத்திலும் இருக்கும் நீ
என் விஷயத்திலும் -ப்ரீதி விசேஷமான வாத்சல்யம் காட்டி அருளுவது ஆச்சர்யமே இல்லையே –

ஜகத் காரணத் வத்தாலே -சர்வ உத்க்ருஷ்டன் என்றும்
காரணம் து த்யேய-என்கையாலே சர்வ சமாஸ்ரயணீயன் என்றும்
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்கையாலே ப்ராப்யன் என்றும்
ஸ்ருஷ்ட்யாதிகளை தன் பேறாகப் பண்ணுகையாலே சர்வ ஸ்வாமி என்றும்
தாம் ஸ்தோத்ரத்தில் மூளும் படி முகம் காட்டுகையாலே ஆஸ்ரித வத்சலத்வமும் –சொல்லிற்று ஆயிற்று –

———-

ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஈசித்ருத்வம்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக க
ப்ரஹ்மா சிவச் சதமக பரம ஸ்வ ராடித்
யேதே அபி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸதே–11-

நாராயண-நாராயணனே
ப்ரஹ்மா சிவச் சதமக பரம ஸ்வராட் -பிரமன் சிவன் இந்திரன் -இவர்களை விட சிறந்த முக்தாத்மா
இதி ஏத அபி -என்கிற இவர்கள் எல்லாரும்
யஸ்ய தே மஹிமார்ணவ விப்ருஷஸதே-யாதொரு உன்னுடைய பெருமையாகிற கடலிலே திவலையாக ஆகின்றனரோ
( தஸ்மிந் ) த்வயி-அப்படிப்பட்ட உன்னிடத்தில்
ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஈசித்ருத்வம்-இயற்கையான உயர்வற்ற அதிசய ஐஸ்வர்யத்தை
க வைதிக ந ம்ருஷ்யதி –எந்த வைதிகன் ஸஹிக்க மாட்டான் –சஹியாதவன் அவைதிகன் ஆவான் என்கை

ஸ்ரீ மன் நாராயணனே சர்வ ஸ்மாத் பரன்-என்பதை ஸ்தாபித்து அருளுகிறார் –
நாராயண அநுவாகத்திலே சொல்லிற்றே-
ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்தரஸ் ச அக்ஷரஸ் பரம ஸ்வராட் -முக்தர்கள் கர்ம வஸ்யர்கள் என்றதே
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -ஜகத் வியாபார வர்ஜனம் -அவனுக்கு பரதந்த்ரர்களே
ப்ரஹ்மாதிகளுக்கு சொல்லப்படும் ஏற்றம் எல்லாம் உனது பெருமையின் சிறு திவலையே
அவர்களது ஈஸ்வரத்தன்மை ஸ்வாபாவிகமும் இல்லை -அநவதிக அதிசயமும் இல்லையே –
கர்ம வஸ்யர்கள் அன்றோ –
ஸ்வாபாவிக –
இத்தால் கர்ம உபாதிகமாய் -அத்தாலே
அநித்யமாய் துக்க மிஸ்ரமான ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்யத்தை வ்யாவர்த்திக்கிறது –
அநவதிக அதிசய-
இத்தால் நித்யரையும் முக்தரையும் வ்யாவர்த்திக்கிறது –
ஸ்ரீ மன் நாராயணனுடைய ஜகத் காரணத்வம்-சர்வ ஸ்வாமித்வம் -ஐஸ்வர்யம் பொறாதவர்கள்
வேத பாஹ்யர்களே அன்றோ –

——————–

கஸ்ஸ்ரீ ஸ்ரீய பரம சத்த்வ சமாஸ்ரய க
க  புண்டரீக நயன புருஷோத்தம க
கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே
விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம்—12-

கஸ்ஸ்ரீ ஸ்ரீய -திருவுக்கும் திருவாகிய செல்வன் யார்
பரம சத்த்வ சமாஸ்ரய க-சிறந்த சுத்த சத்வ குணத்துக்கு இருப்பிடம் யார்
பிரமன் ரஜோகுண அதிகன் -ருத்ரன் தமோகுண அதிகன் அன்றோ
க  புண்டரீக நயன -செங்கண் மால் யார்
உயிர்களுக்கு எல்லாம் தாயாய் அளிக்கிற தண் தாமரைக் கண்ணன் யார்
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
புருஷோத்தம க–புருஷோத்தமன் எனப்படுபவன் யார்
கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே-எவனுடைய அநேகம் ஆயிரம் கோடி பாகங்களின் ஒரு பகுதியில்
விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம்—இப்பிரபஞ்சம் முழுவதும் விசித்திரமான
சேதந அசேதன பிரிவுகளை உடையதாக இருக்கின்றது
அவனுடைய ஸ்வரூப ஏக தேசத்தில் சகல கார்ய வர்க்கங்களும் அடங்கும்

யஸ்யாயுதா யுதாம் சாம்சே விஸ்வ சக்திரியம் ஸ்திதா
மேரோரிவாணுர் யஸ்ய தத் ப்ரஹ்மாண்ட அகிலம் முநே –இத்யாதி பிரமாணங்கள்
அவனே சர்வ வியாபகன்-ப்ரஹ்மாதிகள் இவனுடைய ஏகதேசத்தில் அடங்கி உள்ளார்கள் என்பதை பறை சாற்றும்
ஸ்ரீ கீதையில் விஸ்வரூப அத்தியாயத்தில் அர்ஜுனன் வியந்து நின்றானே
அயுதம் -பதினாயிரம் கலா என்றும்
அம்சம் -ஏக தேசம் என்றும் காட்டும்

இவனே சர்வ ஸ்மாத் பரன் என்பதை த்ருடப்படுத்தி அருளுகிறார்
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரசி யத் பாத சிஹ்னைஸ் தரந்தி–ஸ்ரீ குணரத்னகோசம்
விசித்திரம் -தேவ மனுஷ்யாதி ரூபா பேதம்
போக்ய போக உபகரணங்கள் போக ஸ்தானங்கள் -என்கிற விபாகன்கள்
வ்ருத்தம் -நிலை நிற்கிற படியைச் சொல்லும்
இதிலும் அடுத்த இரண்டு ஸ்லோகங்களிலும் கேள்விகள்
14-ஸ்லோகத்தில் த்வத் அந்ய க –உன்னைத் தவிர வேறே யார் -ஸ்பஷ்டமாக இருக்கும்
ஆகவே நீயே பரம் பொருள் என்று விஞ்ஞாபித்து அருளுகிறார் –

———–

வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத்
யாபத் விமோசன மஹிஷ்ட்ட பலப்ரதானை
கோ அந்ய ப்ரஜா பஸூ பதி பரிபாதி கஸ்ய
பாதோ தகேந ச சிவஸ் ஸ்வ சிரோத்ருதேந–13-

வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத்
யாபத் விமோசன மஹிஷ்ட்ட பலப்ரதானை–இவை போன்ற இவர்கள் ஆபத்துக்களை விடுவிப்பதானாலும்
உயர்ந்த பலன்களை அளித்து அருளுவதாலும்
ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் எடுத்து -மது கைடபர்களை அழித்து வேதங்களை மீட்டு அருளி
சோமுகன் அசுரன் இடம் இருந்து ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம் எடுத்து அருளி
ஹம்ஸாவதாரத்தாலும் வேதங்களை அருளி
குரு பாதகம் -குரு விஷயமான மஹா பாதகம்
தைய பீடை -அந்தகாசுரன் –வ்ருகாசூரன்-ஹிரண்ய ராவணாதிகள்
ஆதி -இவை முதலாக பல ஆபத்துக்களையும் போக்கி ரஷித்து அருளினவன்
ரக்ஷணம் -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
மஹிஷ்ட்ட பலப்ரதானை-சாமான்ய ஜீவர்களை ஈஸ்வரர் என்று கொண்டாடும் படி ஆக்கி அருளினவன்
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்ம பூ -புநஸ் தரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவா நிதி சுச்ரும -என்றும்
ப்ரஹ்மாதயஸ் ஸூராஸ் சர்வே விஷ்ணும் ஆராத்ய தே புரா ஸ்வம் ஸ்வம் பதம் அநு பிரதா-என்றும்
கேசவஸ்ய ப்ரசாததஸ் –என்றும் பிரமாணங்கள் உண்டே
கோ அந்ய -உன்னைத்தவிர வேறே யார்
ப்ரஜா பஸூ பதி பரிபாதி கஸ்ய-பிரஜாபதியான பிராமனையும் பசுபதியான சிவனையும் ரஷிப்பார் யார்
பாதோ தகேந ச சிவஸ் ஸ்வ சிரோத்ருதேந–அந்த சிவனானவன் தனது தலையிலே தரிக்கப்பட்ட
யாருடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தால் பரிசுத்தனானான்
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கிக் கதிர் முக மணி கொண்டு
இழி புனல் கங்கை –பெரியாழ்வார்
ததம்பு பரயா பக்த்யா ததார சிரஸா ஹரஸ் பாவனார்த்தம் ஜடா மத்யே –ஈஸ்வர சம்ஹிதை
யஸ் ஸுவ்சனிஸ் ஸ்ருத சரித் ப்ரவரோதகேந தீர்த்தேன மூர்த்நீ விக்ருதேன சிவச் சிவோ பூத் –ஸ்ரீ மத் பாகவதம்

இதிஹாச புராண விருத்தங்களாலே இவனே சர்வ ஸ்மாத் பரன் என்று அருளிச் செய்கிறார்

ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
மங்கை பாகன் சடையினில் வைத்த கங்கை யார் பாதத்து நீர் வனசமேவு முனிவனுக்கு மைந்தனானது இல்லையோ
செங்கையால் இரந்தவன் கபாலம் யார் அகற்றினார் -செய்ய தாளின் மலரான் சிரத்திலானது இல்லையோ
வெங்கண் வேழம் மூலம் என்ன வந்தது உங்கள் தேவனோ -வீறு வாணன் அமரில் அன்று விறல் அழிந்தது இல்லையோ
அங்கண் ஞானம் உண்ட போது வெள்ளி வெற்பு அகன்றதோ -ஆதலால் அரங்கன் அன்றி வேறு தெய்வம் இல்லையே

————

கஸ்யோ தர ரே ஹர விரிஞ்சி முக ப்ரபஞ்ச
கோ ரஷதீ மமஜ நிஷ்ட ச கஸ்ய நாபே
க்ரந்த்வா நிகீர்ய புனருத் கீரதி தவ தன்ய
க கேன வைஷ பரவாநிதி சக்ய சங்க—14-

ஹர விரிஞ்சி முக ப்ரபஞ்ச -சிவன் பிரமன் முதலான உலகம்
கஸ்ய உதரே–யாருடைய வயிற்றில் இருக்கிறது
உதரே–பிரளய காலத்தில் ப்ரஹ்மத்திடம் அனைத்தும் உள்ளனவே
நின்னுள்ளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் நின்னுள்ளே அடங்குகின்ற -என்பதால்
திரு வயிற்றின் உள்ளே என்றது தன்னுள்ளே என்றபடி
நாராயணே பிரலீ யந்தே
லீயதே பரமாத்மனி
கோ ரஷதீ இமம் –இந்த பிரபஞ்சத்தை யார் காப்பாற்றுகிறார் –
காக்கும் இயல்பினன் கண்ணபிரான் –
(ப்ரபஞ்ச )அஜநிஷ்ட ச கஸ்ய நாபே-எவருடைய உந்தியில் நின்றும் இவ்வுலகம் உண்டாயிற்று
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை
திரு நாபிக் கமலத்திலே நாராயணன் நான்முகனைப் படைக்க -நான்முகனும் சங்கரனைப் படைக்க
திரு நாபிக் கமலம் முதல் கிழங்காம்
த்வத் அந்ய க –உம்மை விட வேறு யார்
(இமம ) க்ரந்த்வா -இவ்வுலகத்தை ஒரு கால் அளந்தும்
க்ரந்த்வா -உள்ளும் புறமும் உறைந்து வியாபித்து நியமிக்கும் படி -சர்வ அந்தர்யாமித்வத்தை சொல்லும் என்றுமாம்
நிகீர்ய –அவாந்தர பிரளயங்களிலே -ஒருகால் விழுங்கியும்
புனருத் கீரதி -மறுபடியும் வெளி நாடு காண உமிழ்கிறான்
பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட பேராளன்
கேன வைஷ -இவ்வுலகம் வேறு எவனால்
பரவாநிதி சக்ய சங்க—தலைவனை உடையது என்று சங்கிப்பதற்கும் கூடியது

ராஜஸ தாமச புராணங்களிலும் கூட ப்ரஹ்மாதிகள் ஸ்ருஷ்டிக்கப்படுபவர்கள் என்றும் கர்ம வஸ்யர்கள் என்றும் உள்ளனவே
அன்று எல்லாரும் யார்யாரோ இவர்கள் எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்கள் என்று
சர்வ ஆதார -சர்வ நியாமகன்-சர்வ சேஷி நீ ஒருவனே -உனக்கே பரத்வம் பொலிகிற படியால்
வேறே சங்கைக்கும் இடம் இல்லை -என்று நிகமிக்கிறார்

ஒருவன் ஜனகனாய் -ஒருவன் ஜன்யனாய்
ஒருவன் சேஷியாய் -ஒருவன் சேஷனாய்
ஒருவன் ஸ்ரீ ய பதியாய் ஒருவன் உமாபதியாய்
ஒருவன் புண்டரீ காஷனாய் ஒருவன் விரூ பாஷனாய்
ஒருவன் கருட வாஹனாய் ஒருவன் வ்ருஷப வாகனனாய்
ஒருவன் பாதகியாய் ஒருவன் சோதகனாய்
ஒருவன் புருஷோத்தமனாய் ஒருவன் புருஷனாய்
ஒருவன் சிரஸ் ஸ்தித பாத பங்கஜனாய்-ஒருவன் பாத பாம்ஸூ மாத்ரமாய்
ஒருவன் ஸூரி த்ருச்யனாய் -ஒருவன் வேதாள த்ருச்யனாய்
இப்படி தம பரகாசங்கள் போலே
ருத்ரனுக்கும் சர்வேஸ்வரனுக்கும் நெடு வாசி உண்டு ஆகையாலே
ருத்ரனுக்கு அஸ்மத் யாதிகளோபதி ஷேத்ரஜ்ஞதையாலே
ஈஸ்வரத்வ சங்கை இல்லை
பிரம்மாவுக்கும் சமான ந்யாயத்தாலே ஈஸ்வரத்வ சங்கை இல்லை –
என்றது ஆயிற்று –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –