Archive for October, 2019

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -ஸ்லோகங்கள்—1-10–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

October 31, 2019

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

ஸ்ரீ திருமாலிருஞ்சோலை எழுந்து அருளும் பொழுது வழியிடையிலே –
பகவத் குண அனுபவத்தாலும் அனுபவ ஜெனித ப்ரீதிகார வாசிக்க கைங்கர்யத்தாலும்
தம்முடைய நெஞ்சாறல்களை மறக்கக் கருதி எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை விசதமாக அனுசந்தித்து
அவ்வனுசந்தான பரிவாக ரூபமாக
முதலில் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவமும் அடுத்து ஸ்ரீ அதிமானுஷ ஸ்தவமும் ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவமும் அருளிச் செய்தார்
பின்பு எம்பெருமானார் நியமனத்தால் ஸ்ரீ வரதராஜ ஸ்தவமும் நிகமத்தில் ஸ்ரீ ஸ்தவமும் அருளிச் செய்தார்
பஞ்ச ரத்னம் போன்ற இவையே பஞ்ச ஸ்தவமாகும்
எனவே இதில் ஆச்சார்ய வந்தனத்துடன் உபக்ரமிக்கிறார்
இந்த ஸ்தவங்களில் சொல் நோக்கும் பொருள் நோக்கும் தொடை நோக்கும் மற்று எந்நோக்கும் சிறப்பாக அமைந்துள்ளன
உபய வேதாந்த ரஹஸ்ய அர்த்தங்கள் பொதிந்து இருக்கும்
வான் இள அரசன் வைகுண்டக் குட்டன் ஒண் டொடியாள் திரு மகளும் தாணுமாய் நலம் அந்தமில்லதோர் நாட்டில்
நித்ய முக்தர் சேவிக்க ஓலக்கம் இருக்கும் இருப்பை இதில் அனுபவிக்கிறார்
திருநாட்டின் பெருமைகளை பரக்க பேசி-தமது பெரு விடாயை அருளிச் செய்கிறார்

————

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-

யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில் உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்

மேல் -ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவத்தில் ஸ்ரீ ராமா வரஜ முனீந்திர லப்த போதாஸ் -என்று
தம் சத்தை பெறுவித்தமை அருளிச் செய்கிறார்

அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
வேதா த்வேதா பிரமம் சக்ரே காந்தாஸூ கநகேஷூ ச –ஸ்வர்ணத்தில் பிரமம் சார்வார்க்கும் அவர்ஜனீயம் என்பதால்
சமத்காரமாக அருளிச் செய்கிறார்
கோயில் திருமலை பெருமாள் கோயில் -முதலான திருப்பதிகளில் நித்ய வாசம் செய்வதே ஆஸ்ரிதர்களை
நழுவ ஒண்ணாமைக்காக என்பதால் அச்யுத-பதாம்புஜம் –
த்ருணீ க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதயா ராமானுஜ பதாம்போஜ ஸமாச்ரயண சாலிநா -என்று
இவர் தம் பொன்னடியை பேணுமவர்கள் போலே இவரும் அச்யுத-பதாம்புஜத்தில் இருப்பாரே –
திருக்கச்சி நம்பியும் -நமஸ்தே ஹஸ்தி சைலே ப்ரணதார்த்திஹர அச்யுத -என்றார்
பச்சை மா மலை போல் மேனி –அச்யுதா அமரர் என்றே -தொண்டர் அடிப் போடி ஆழ்வார்
தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன் -பொன் அரங்கம் என்னில் மயிலே பெருகும் ராமானுஜன் அன்றோ

அஸ்மத் குரோர் -அஞ்ஞானத்தை போக்குபவரே குரு –
கடல் அளவாய திசை எட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு காலத்து ராமானுஜன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்திலனேல் உயிரை உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந் யத்ர-
புண்யம் போஜ விகாஸாய பாப த்வாந்த ஷயாய ச ஸ்ரீமாந் ஆவிர்பூத் ராமானுஜ திவாகர–
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைவரையும் கூட்டிக் கொண்டு அஸ்மாத் சப்த பிரயோகம் –அஸ்மாகம் குரோ என்றபடி

பகவத்
ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் –
முக்கிய வ்ருத்தம் அவனுக்கே பொருந்தும் -இங்கு பொருந்துமாறு எங்கனே என்னில்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -என்றும்
சாஷாந் நாராயணோ தேவ க்ருத்வா மார்த்ய மயீம் தநும் மக்நாந் உத்தரதே லோகான் காருண்யாத் சாஸ்த்ர பாணிநா –என்றும்
சாஷாத் சர்வேஸ்வர அவதாரமே அன்றோ ஸ்வாமியும்
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகிலா யுலகோர்கள் எல்லாம்
அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆயினரே–
அவனுக்கும் பகவத் சப்தத்தை த்ருடமாக்கி அருளிய வீறு உண்டே ஸ்வாமிக்கு

அஸ்ய
யச் சப்த பிரயோகம் இல்லாமல் -அஸ்ய-என்று இதம் சப்தத்தால் பிரதி நிர்த்தேசம் பண்ணுவது
இதம் -ப்ரத்யக்ஷ கதம் -தத் இதி பரோக்ஷ விஜா நீயாத் –என்கிறபடி ப்ரத்யக்ஷ விஷயம் -ஸ்வாரஸ்ய அதிசயம் உண்டே
காஷாய சோபி கமனீய சிகா நிவேசம் தண்ட த்ர்ய உஜ்ஜ்வல்யகரம் விமல உபவீதம் உத்யத்திநேசநிபம்
உல்லச ஊர்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்தி யதிராஜ த்ருசோர் மம அக்ரே –என்று இடைவிடாமல் சாஷாத்கோசாரமாய்
ஆழ்வானுக்கு இருப்பதால் தச் சப்தம் இல்லாமல் இதம் சப்தமே ஏற்குமாயிற்று

தயைக ஸிந்தோ
முலைக் கடுப்பாலே பீச்சுவாரைப் போலே -பயன் அன்றாகிலும் பங்கு அல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்தி
பணி கொண்டு தம் பேறாக சிஷ்யர்களை உஜ்ஜீவிப்பிக்கும் கிருபா மாத்ரா பிரசன்னாசார்யர் வர்க்கம் ஸ்வாமி தொடங்கிய அன்றோ
ஓராண் வழியா உபதேசித்தார் முன்னோர் ஏரார் எதிராசர் இன்னருளால் பார் உலகில் ஆசை யுடையோர்க்கு எல்லாம்
ஆரியர்கள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார் பின் –
ருசி விசுவாச ஹீனரையையும் நிர்பந்தித்து சரம உபாயஸ்தராக்கியும்
அதிகாரம் பாராமல் இவர்களுடைய துர்க்கதியையே பார்த்து உபதேசித்து அருளுபவர் அன்றோ

ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே —
ஸ்நந்த்ய பிரஜை முளையிலே வாய் வைக்குமா போலே ஸ்வாமி திருவடிகளில் சாய்ப்பதே நமக்கு பிராப்யம்

————–

மாறன் அடி பணிந்து உயந்த ராமானுஜன் திரு உள்ளம் உகக்கவும்
ஆழ்வாரை வணங்காமல் எம்பருமான் இடம் சென்றால் திருமுகம் பெறமாட்டாமையாலும்
இதிலும் அடுத்த ஸ்லோகத்தாலும் ஆழ்வாரைத் தொழுது இறைஞ்சுகிறார்

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –2-

யாதொரு நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ –
யாதொரு திருவடி இணையே சர்வகாலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமாக இருக்கின்றதோ
யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றும் இல்லாதவர்களுக்குத் தஞ்சமாக இருக்கின்றதோ
அப்படிப்பட்ட பரம பாவனமான நம்மாழ்வார் திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம் –

தத் வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸம்ஸ்ரயேம–மகிழ் மாலை மார்பினன் -என்று தாமே
பேசிக் கொள்ளலாம் படி வகுளமாலையை நிரூபகமாக உடையவர்

யத்-த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம்
த்ரை வித்ய வ்ருத்தர் ஆகிறார் மதுரகவிகள் போல்வார்
மேவினேன் பொன்னடி மெய்ம்மையே
குருகூர் நம்பீ முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –
ப்ராவண்யம் உடையார் தம் தலைக்கு பூஷணமாக கொள்வர்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ண மாட்டேன்
மற்ற அரசு தானே
இங்கு -த்ரை வித்ய வ்ருத்தம் -சப்தம்
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசனையே கருத்தில் கொண்டதாகும்
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்த
ராமானுஜன் போன்ற மஹ நீயர்கள் என்கை

சாத்விக ஜனஸ்ய-நித்யம் -யதேவ -சம்பத்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று -என்று அன்றோ
சாத்விகர்களது அத்யவசாயம்
லௌகீகர்கள் சம்பத்தாக நினைத்து இருக்கும் வஸ்து வஸ்து ஸ்திதியில் விபத்தமாய் இருக்கும்
உபய விபூதியும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யம் உடையவர் இட்ட வழக்காய் இருக்குமே
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேந மத் அந்வயா நாம் -என்று அருளிச் செய்த
ஆளவந்தார் போல்வாரை இங்கே சாத்விக ஜனம் என்கிறது
நித்யம்
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்-என்னுமா போலே
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய
எம்பெருமான் தன்னாலும் திருத்த ஒண்ணாது என்று கைவிடப்பட்டவர்கள்
அசரண்யர்
அவர்களையும் வலியப் பிடித்து இழுத்து –
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வன் கேண்மினோ –இத்யாதிகளை உபதேசித்து
திருத்திப் பணி கொண்டவர் அன்றோ

புண்யம்
புநா தீதி புண்
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய் நின்ற நிலையைப் போக்கி
சகல ஆத்மாக்களை பரிசுத்தமாக்க வல்லவை
புண்யம் ஸூந்தரம் -பர்யாயம் -அழகிய திருவடிகள் என்றுமாம் -என்றாலும் பாவனத்வத்திலே இங்கு நோக்கு

ஆக இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளை வணங்கின படி சொல்லிற்று ஆயிற்று

———————-

ஆழ்வாருக்கு மங்களா சாசனம் -கடலாக உருவகம் -நான்கு விசேஷணங்கள்
பயோநிதிக்கு இருக்கக் கடவ தன்மைகள் ஆழ்வார் இடம் குறைவற இருக்கும் படியை மூதலித்து அருளுகிறார்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர் அஸீம பூமா –3-

பக்தியின் கனத்தினால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப்பட்ட சார பூதமான
ப்ரணயமாகிற தீர்த்தத்தினுடைய ப்ரவாஹத்தாலே
நவ ரஸ சமூகத்தால் நிறைந்ததாயும் வேதப்பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும்
எம்பெருமானுக்கு திவ்யமான ஸ்தானமாயும்
அளவில்லாப் பெருமையையும் உடைத்தாய் இருக்கிற நம்மாழ்வார் ஆகிற கடல் நெடு நாள் வாழ வேணும்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
கடலானது ரஸவ்க சப்த வாஸ்யமான ஜல பிரவாகத்தாலே பரிபூர்ணமாய் இருக்கும்
ஆழ்வாரோ சிருங்கார வீர கருணை அத்புத ஹாஸ்ய பய அநக ரௌத்ர பீபத்ச பக்தி ரசங்களாலே பரிபூர்ணராய் இரா நின்றார்
இவை விளைந்தமைக்கு நிதானம் விலக்ஷண பக்தி விசேஷத்தாலே ஆச்சர்யமான பாவ பந்தங்கள் உண்டாகி-
அவை பல தலைத்து நாநா ரஸ பரிபாகங்கள் ஆயின

பக்தி ப்ரபாவ
ஆழ்வார் பக்திக்கு ஒப்புச் சொலலாவது இல்லையே
காதல் கடல் புரைய விளைவித்த காரமார் மேனி -என்று முதலிலே கடல் போலதாய்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
அநந்தரம்
சூழ்ந்த அதனில் பெரிய என் அவா -என்று தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொள்ள வல்லதாய்
ஆக இப்படி மென்மேலும் பெருகிச் செல்லும் பக்தி பிரபாவத்தாலே

பவத் அத்புத பாவ பந்த
உண்டான அத்புதமான பாவ பந்தங்களினாலே -அதாவது
அந்த பக்தி தானே சிருங்கார வ்ருத்தயா பரிணமித்து -தலைமகள் -தாய் -தோழி பாசுரங்களாக பேசும்படிக்கு ஈடான ஆச்சர்யமான பாவ பந்தங்கள்

சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண–
அப்படிப்பட்ட பாவ பந்தங்கள் ப்ரணய ரசத்தை வளரச் செய்யுமாயிற்று
உயர்வற உயர் நலம் உடையவன்
வீடுமின் முற்றவும்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிறவித்துயர் அற
பொரு மா நீள் படை –இத்யாதிகளில் சாதாரண பக்தி ரசம் விளங்கும்
அஞ்சிறைய மட நாராய்
மின்னிடை மடவார்கள்
வேய் மறு தோளிணை–இவற்றில் அன்றோ அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சாரம் விளங்குவது
அப்படிப்பட்ட ப்ரணய மீதூர்ந்து வெளிவரும் ஸ்ரீ ஸூக்தி களில் நவ ரசமும் பொலிய நிற்கும் அன்றோ –
நவ ரசங்களுள் சிருங்காரம் வீரம் கருணம் அத்புதம் பயாநகம் சாந்தி ஆகிய பக்தி இந்த ரசங்கள்
ஓரோ திருவாய் மொழிகளிலே பிரதானமாகப் பொதிந்து இருக்கும்
மற்ற ஹாஸ்ய பீபீஸ்ய ரௌத்ர ரசங்கள் ஒரோ இடங்களிலே மறைய நின்று சிறிது சிறுது தலைக்கட்டி நிற்கும்
மின்னிடை மடவார்கள் -நங்கள் வரிவளை-வேய் மறு தோளிணை -முதலான திருவாய் மொழிகளில்
சிருங்கார ரசம் தலை எடுக்கும்
மாயா வாமனனே-புகழு நல் ஒருவன் -நல் குறைவும் செல்வமும் –இவற்றில் அத்புத ரசம் தலை எடுக்கும்
உண்ணிலாய ஐவரால் இத்யாதிகளில் பயாநக ரசம்
ஊரெல்லாம் துஞ்சி -வாயும் திரையுகளும் -ஆடியாடி யகம் கரைந்து இத்யாதிகளில் கருணரசம்
குரவை ஆய்ச்சியாரோடும் கோத்ததும் -வீற்று இருந்து ஏழு உலகும் -இத்யாதிகளில் வீர ரசம்
ஆக இங்கனே நாநா ரசங்கள் பொதிந்த ஸ்ரீ ஸூக்தி கள்-ரஸவ்க பரிபூர்ணராய் இருப்பார் ஆய்த்து ஆழ்வார் –

வேதார்த்த ரத்ன நிதிர்
கடல் ரத்நாகாரம் -பராங்குச பயோ நிதியும் -ஓதம் போல் கிளர் வேதம் என்றும் –
சுருதி சாகரம் என்றும் கடல் போன்ற சாஸ்திரங்களில் அல்ப சாரம் சாரம் சாரதமம் –
போக சார தமமாய் உள்ள அர்த்தங்கள் ரத்னமாகும்
த்ரை குண்யா விஷயங் வேதா -போல் இல்லாமல் மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
குருகூர் சடகோபன் சொன்ன சொற்களில் சாரதமமான அர்த்தங்களேயாய் இருக்கும் –
அப்படிப்பட்ட ரத்னங்களுக்கு நிதியாய் இருப்பர் ஆழ்வார்

அச்யுத திவ்ய தாம
மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு ஆலினிலைத் துயின்ற ஆழியான்
கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று –என்கிறபடியே
எம்பெருமானுக்கு திவ்ய ஆலயமாய் இருக்கும்
ஆழ்வாரும் அப்படியேயாய் இருப்பர்
கல்லும் கனை கடலும் வைகுண்ட வான் நாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்து அகம் -என்றும்
கொண்டல் வண்ணன் சுடர் முடியின் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே -என்றும்
ஆழ்வார் எம்பெருமானுக்கு நித்ய நிகேதனமாய் இருப்பவர் அன்றோ
இவையும் அவையும் -திருவாய் மொழியில் இத்தை விசத தமமாக காணலாமே

அஸீம பூமா-
ப்ருஹத்வம் என்கிறபடியே -ஆகாரத்தாலும் குணத்தாலும் த்வி விதமாய் இருக்குமே ப்ருஹத்வம்
பெரிய மலை -பெரிய குளம்-பெரிய மாளிகை –இவை ஆகாரத்தினால் ப்ருஹத்வம்
பெரிய மனுஷர் -குணங்களால் ப்ருஹத்வம்
இருவகையில் ஆகார ப்ரயுக்தம் கடலுக்கும் குண ப்ரயுக்தம் ஆழ்வாருக்கும் உண்டே
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
எல்லை காண ஒண்ணாத கிருபா குணம் ஒன்றின் பெருமையே போதுமே

ஆக நான்கு விசேஷணங்களால்
நம்மாழ்வாருக்கு கடலுக்கும் உள்ள சாதரம்யம் நிர்வஹிக்கப் பட்டதாயிற்று

இப்படிப்பட்ட
பராங்குச பயோதிர் –ஜீயாத் —
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழ வேணும் -என்றதாயிற்று –

—————–

யந் மங்கலாய மஹதே ஜகதா முசந்தி
த்ரை விஷ்ட பாந்யபி பதாநி யதாச்ரயாணி
வந்தா மஹே ஸரஸி ஜேஷண மத்விதீயம்
வேதாந்த வேத்யம் அநிதம் ப்ரதமம் மஹஸ் தத்-4-

பகவான் ஆகிற தேஜஸ்ஸை -உலகங்களின் மிகுந்த மங்களத்தின் பொருட்டு -மஹா மங்களகரமாக -என்றபடி
தத்வ ஞானிகள் அபிப்ராயப் படுகிறார்களோ -மூ வுலகங்களினுள்ளே ஸ்தான விசேஷங்களை எல்லாம்
யாதொரு தேஜஸ்ஸை ஆதாரமாக யுடையவைகளோ
அப்படிப்பட்டதும் செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையதும் ஒப்பற்றதும் வேதாந்தங்களாலே அறியக் கூடியதும்
அநாதி ஸித்தமான தேஜஸ்ஸை ஸ்தோத்ரம் செய்கிறோம்

இந்த ஸ்லோகம் தொடங்கி எம்பெருமானை ஸ்தோத்ரம் பண்ணத் தொடங்குகிறார்
தேஜஸாம் ராசி மூர்ஜிதம்-என்றும்
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு -என்றும் சொல்லுகிறபடி
தேஜஸ் -என்றும் அத்தை உடைய எம்பெருமான் -என்றும் இரண்டு படச் சொல்லும்படி அன்றிக்கே
தேஜஸ்ஸே உருவாக–தேஜஸ் தத்துவமே எம்பெருமான் என்று அத்வைதமாக பேசலாம் படி அன்றோ
அவனது தேஜஸ் விசேஷம் இருப்பது

யாதொரு தேஜஸ்ஸானது
சகல லோகங்களுக்கும் மங்கள பிரதமாய் இரா நின்றதோ
த்ரி லோகத்தில் உள்ள சகல ஸ்தானங்களும் யாதொரு தேஜஸ்ஸை ஆதாரமாகக் கொண்டு நிலை பெற்று உள்ளனவோ
யாதொரு தேஜஸ் தாமரை போன்ற திருக்கண்களுடன் பொலிய நின்றதோ
வேதாந்தங்களாலே அறியப்படுகின்றதோ
யந் மங்கலாய மஹதே
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயா என்கிறபடியே நிஸ் சமாப்யதிகமாய் சாஸ்வதமாய் விளங்குகின்றதோ
அந்த தேஜஸ்ஸை வணங்கி ஸ்தோத்ரம் பண்ணுவோம்
அநாதி ப்ரதமம் -அநாதி சித்தம் என்றபடி பதிம் விஸ்வஸ்ய சுருதியில் சாஸ்வதம் என்று உள்ளதை எடுத்து அருளிய படி –

—————-

பீதாம்பரம் வரத சீதல த்ருஷ்ட்டி பாதம்
ஆஜாநு லம்பி புஜம் ஆயத கர்ண பாசம்
தன் மேக மேச கமுதக்ர விசால வக்ஷஸ்
லஷ்மீ தரம் கிமபி வஸ்து மமாவிரஸ்து-5-

பீதகவாடை யுடையதும் -வர பிரதமுமாய் சீதளமான கடாக்ஷ பாதத்தை யுடையதும் –
திரு முழந்தாள் வரை தொங்கும் திருக்கைகளை யுடையதும்
மேகம் போல் ஸ்யாமளமானதும் உன்னதமும் விசாலமுமான திரு மார்பை உடையதும்
ஸ்ரீ மஹா லஷ்மியைத் தரிப்பதுமான -எம்பெருமான் ஆகிற -அந்த ஒரு வஸ்து -அடியேன் பால் ஆவிர்பவிக்க வேணும்
கீழே -ஸரஸி ஜேஷணம் -என்று பிரஸ்துதமான திவ்ய மங்கள விக்ரஹ யோகத்தை விசேஷேண அனுபவிக்கிறார் இதில்
இதிலும் அவன் திரு நாமத்தை சாஷாத்தாக நிர்த்தேசியாமல்-கிமபி வஸ்து -என்று அநிர்வசனீய தயா அருளிச் செய்கிறார்

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அறையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தவிர வீசீரே -என்று
ஆண்டாள் போல்வார் அர்த்திக்கவே பீதக வாடை அணிந்ததும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் என்று வேண்டும் அடியார்க்கு
சகல அபீஷ்ட பிரதமாய் நின்று குளிர நோக்கும் திருக்கண் பார்வை கொண்டும்
முழந்தாள் அளவும் நீண்ட திருக்கைகளோடு கூடியும்
தோள்கள் அளவும் தள தள என்று தொங்குகின்ற திருச் செவிகள் கொண்டும்
நீல மேக நிபஸ்யாமமாயும் –நீண்டு அகன்ற திரு மார்பை உடைத்ததாயும்
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறையும் மார்பா என்றபடி இடைவிடாது
திரு மார்பிலே திரு மா மகள் திகழப் பெற்றும் இரா நின்ற ஒரு விலக்ஷண வஸ்து என் முன்னே காட்சி தர வேணும் என்கிறார்
கர்ணபாசம் -பாச சப்தம் சிறந்தது என்ற பொருளில் வந்தது
உதக்ர விசால வக்ஷஸ் லஷ்மீ தரம் –என்று ஸமஸ்த பதமாகவும் கொள்ளலாம்
அப்போது வஷஸ்ஸிலே ஸ்ரீ மஹா லஷ்மியைத் தரிப்பதாகப் பொருள்

———————

யத் தத்வம் அக்ஷரம் அத்ருஸ்யம் அகோத்ரவர்ணம்
அக்ராஹ்யம் அவ்யயம் அநீத்ருசம் அத்விதீயம்
ஈஸாநாம் அஸ்ய ஜகதோ யத் அணோர் அணீய
தத் வைஷ்ணவம் பதம் உதாரம் உதாஹராம–6-

எம்பெருமானுடையதான யாதொரு ஸ்வரூபமானது சத்யமானதோ -நிர்விகாரமானதோ -கண்ணால் காணக் கூடாததோ –
நாமமும் ரூபமும் இல்லாததோ-அநு மானம் முதலியவற்றைக் கொண்டு க்ரஹிக்க முடியாததோ–விநாசம் இல்லாததோ –
நாம் கண்களால் காணும் வஸ்துக்கள் போல் அல்லாததோ -இணை இல்லாததோ –
யாதொரு ஸ்வரூபமானது இந்த ஜகத்துக்கு ஈஸ்வரமானதோ -அணுவான வஸ்துக்களில் காட்டிலும் மிகவும் அணுவானதோ –
மஹத்தானதோ -அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஸ்துதிக்கிறோம்

யாதொரு பகவத் ஸ்வரூபமானது சத்யமாயும் அநந்தமாயும்-என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுரு -என்கிறபடியே
மாம்ச சஷுஸ்ஸாலே காணக் கூடாததாயும் நாம ரூப ரஹிதமாயும் அநு மாநாதிகளுக்கும் அவிஷயமாயும்
அசங்கிசித கல்யாண குண விசிஷ்டமாயும் இப்படிப்பட்டது என்று ஒருபடி நிரூபித்துச் சொல்ல மூடியாததாயும்-அதாவது
அபரிச்சின்ன ஸ்வரூப குண விபூதிக மாயும்-சேதன அசேதன விசஜாதீயமாயும் -ஸமாப் யதிக வஸ்து வேறு ஓன்று இல்லாததாயும்
பதிம் விஸ்வஸ் யாத் மேஸ்வரம் –இத்யாதிப்படியே சேதன அசேதநாத்மக சகல ஜகத்துக்கும் நியாமகமாயும்-
அணுவைக் காட்டிலும் மிகவும் அணுபூதமாயும்-அதாவது
பரந்த தண் பரவையுள் நீர் தோறும் பரந்துளன் பரந்த அண்டம் மீதென நில விசும்பு ஒழி வற கரந்த சில் இடம் தோறும்
பரந்து உளன் இவை உண்ட கரனே –என்கிறபடியே மிக சிறிய வஸ்துக்கள் உள்ளே பிரவேசிக்க அநு குணமான
நிலையை உடையதாய் மஹதோ மஹீயஸ்சாயும் இரா நின்றதோ அப்படிப்பட்ட விஷ்ணு ஸ்வரூபத்தை வாய் கொண்டு பேசப் புகுகிறோம்
உதாரம் தாத்ரு மஹதோ -நிகண்டு –உதாத்தம் பாட பேதம் -அந்த பகவத் ஸ்வரூபத்தை உயர்த்திச் சொல்கிறோம்

—————–

ஆம் நாய மூர்த்தநீ ச மூர்த்த நீ சோர்த்வ பும்ஸாம்
யத் தாம வைஷ்ணவம் அபீஷ்ண தரம் ஸகாஸ்தி
தந் மாத்ருசாம் அபி ச கோசரம் ஏதி வாசஸ்
மந்யே ததீயம் ஆஸ்ரித வத்சலத்வம் –7-

யாதொரு பகவத் தேஜஸ்ஸானது -வேத அந்தத்திலும் பூர்வ புருஷர்களின் திரு முடியிலும் மிகவும் விளங்குகின்றதோ
அந்த தேஜஸ்ஸானது என் போன்றவர்களுடைய வாக்குக்கும் விஷயமாய் இருக்கையை அடைகின்றது
இப்படி ஆவதானது அவனுடைய ஆஸ்ரித வாத்சல்ய கார்யம் போலும்

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார்
அந்த உத்துங்க தத்வம் நீசனேன் நிறை ஒன்றும் இல்லா அடியேனால் வாய் கொண்டு பேசும்படி –
வாத்சல்யம் கரை புரண்டு ஓடி வந்த கார்யம் அன்றோ
ஆம் நாய மூர்த்தநீ-
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு அன்றோ இந்த தேஜஸ்ஸூ
யந் மூர்த்நி மே சுருதி சிரஸ்ஸூ ச பாதி –ஆளவந்தார் திரு முடியிலும்
திருமாலிருஞ்சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே –
யச்ச மூர்த்தா சடாரே-நம்மாழ்வார் திரு முடியிலும் விளங்கும் இந்த தேஜஸ்ஸானது
இந்த தேஜஸ்ஸூ அன்றோ இளைய என் புன் கவிதைக்கும் இலக்கு ஆயிற்று
கோசரம் என்றது கோசரத்வம் என்றபடி -பாவ பிரதான நிர்த்தேசம்
ஆஸ்ரித வாத்சல்ய ப்ரயுக்தம் என்னாமல் ஆஸ்ரித வத்சலத்வம் என்றது கார்ய காரண அபேத உபசாரம் இருந்தபடி
அவன் தோஷ போக்யன் ஆகையால் என்னுடைய துஷ்ட வாக்குகளைக் கொண்டு நிர்ப்பயமாக
ஸ்துதி செய்யப் புகுந்தேன் -என்று தாத்பர்யம்

————-

ஜாநந் நபீஹ கில மாம் அந பத்ர பிஷ்ணு
விஷ்ணோ பாத பிரணயி நீம் கிரம் ஆத்ரி யேஹம்
ந ஸ்வ அவ லீடம் அபி அதீர்த்தம் தீர்த்தமாஹு
நோதந்யதாபி ச சுநா கில லஜ்ஜி தவ்யம்–8-

அடியேன் என்னை அஞ்ஞனாய் தெரிந்து கொண்டவனாய் இருந்தும் வெட்கப்படாதவனாய்
எம்பெருமானுடைய திருவடியில் ப்ரேமம் பொருந்திய வாக்கை இங்கு தொடுக்க விரும்புகிறேன் –
இயற்கையாகவே பவித்ரமான கங்கை முதலிய தீர்த்தம் நாயினால் நக்கப்பட்டதே யாகிலும்
அதனைத் தீர்த்தம் அல்லாததாகச் சொல்ல மாட்டார்கள் அல்லவா
தாஹம் கொண்ட நாயினாலும் நாணப் படத் தகுதி இல்லையே

நைச்ய அனுசந்தானத்தில் எல்லையின் நின்று அருளுகிறார்
மா சூணா வான் கோலத்து அமரர் கோமான் வழிப் பட்டால் மா சூணா யுன பாத மலர்ச்சோதி மழுங்காதே –என்று
இருக்க அல்பஞ்ஞரான தாம் ஸ்துதித்தால் நிறக்கேடாகாது என்று சமாதானம்
எனது புல்லிய வாக்கில் புகுந்து புறப்படுவதால் பகவத் விஷய தூய்மை குன்றாதே
வசிஷ்ட சண்டாள விபாகம் இன்றிக்கே எல்லாரும் படிந்து குடைந்து ஆடலாம் படி பரம பவித்ரம்
பகவத் விஷயத்தை பேசி அல்லது தரிக்க கில்லாத அடியேனும் பேசுவதற்கு லஜ்ஜிக்கவும் அவகாசம் இல்லையே
இவர் தாமே ஸ்ரீ ஸ்தவத்தில் -ஷோ தீயா நபி துஷ்ட புத்தி ரபி –என்கிறார்
உதந்யந் –தாக்கமுடையவன் என்றதாயிற்று

—————-

தேவஸ்ய தைத்யமத நஸ்ய குணேஷ் வியத்தா
சங்க்யா ச வாங் மனச கோசரமத்ய பூதம்
அப்யேவ மண்வபி ச தத்ர ம மார்த்தி சாந்த்யை
கீடஸ்ய த்ருஷ்யத உதன்வதி விப்ருஷாலம் –9-

அஸூர நிரசன சீலனான எம்பெருமானுடைய திருக் கல்யாண குணங்களில் எண்ணிக்கையும்
இவ்வளவு என்கைக்கும் வாக்குக்கும் நெஞ்சுக்கும் எட்டும் தன்மையைக் கடந்து விட்டன –
இப்படியான போதிலும் அக்குணங்களில் அணு அளவும் அடியேனுடைய ஆர்த்தி தணிவதற்குப் போதும்
தாஹித்து இருக்கின்ற புழுவுக்குக் கடலில் ஒரு திவலை மாத்திரத்தாலே பர்யாப்தி பிறக்கும் இறே

உயர்வற உயர் நலம் உடையவன் -கல்யாண குண சாகரம் –குணக்கூட்டங்களையும் எண்ணி முடிக்க முடியாதே —
அவற்றைப் பேச அல்ப ஞான சக்தனான அடியேன் இழியத் தகுமோ என்ற சங்கைக்கு சமாதானம் –
அமுதக்கடலில் யதா சக்தி வாய் வைத்து விடாய் தீருவேன் -அவற்றின் எல்லை கண்டு விடுவதற்காக அன்று என்கிறார்
யத்வா ஸ்ரமாவதி யதா மதி வாபி–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்ன ஸ்லோகம் இதுக்கு அடி

——————-

ப்ரேம ஆர்த்த விஹ்வல கிரஸ் புருஷா புராணா
த்வாம் துஷ்டுவுர் மதுரிபோ மதுரைர் வசோபி
வாசோ விடம்பிதமதம் மம நீசவாச
ஷாந்திஸ் து தே ச விஷயா மம துர்வசோபி –10-

வாரீர் மது சூதனான பெருமானே -பக்தியினால் கனிந்த -தழ தழத்த குரலை உடைய ஆழ்வார்களும் ஆச்சார்யர்களுமான
முன்னோர்கள் இனிய ஸ்ரீ ஸூக்தி களாலே தேவரீரை ஸ்துதித்தார்கள்
புல்லிய வாக்குகளை யுடைய அடியேன் இந்த ஸ்துதி அந்த முன்னோர்களின் வாக்கின் அநுகார ரூபமாம் அத்தனை –
அடியேனுடைய துர் உக்திகளினால் தேவரீருடைய ஷமா குணம் இலக்குப் பெற்றதாகின்றது –

ப்ரேம ஆர்த்த விஹ்வல கிரஸ்
உள்ளம் எல்லாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எல்லாம் கண்ண நீர் சோர -என்றும்
வேவாரா வேட்கை நோய் மேதாவி உள்ளுலர்த்த-என்றும்
ஆராவமுதே அடியேன் உடலம் நின் பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற –என்றும்
ப்ரேமத்தால் நெஞ்சு கனிந்து பேசும் ஆழ்வார்கள் -ஆச்சார்யர்கள்
புருஷா புராணா
மதுரைர் வசோபி-த்வாம் துஷ்டுவுர்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னேன் -என்றும்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரம் -என்றும் ஸ்ரீ ஸூக்தி மாதுர்யம் அவர்களையே மெய் மறந்து
பேசப் பண்ணிற்றே -அப்படி அன்றோ தேவரீரை ஸ்துதித்தார்கள் –

மம -துர்வசோபி –நீசவாச – தே
ஷாந்திஸ் து ச விஷயா – அடியேன் பேசாது ஒழிந்தால் தேவரீர் ஷமா குணம் எங்கே காட்டி அருளுவீர்
அடியேன் விண்ணப்பம் செய்தவை தப்பும் தவறுமாக இருந்தாலும் சீறி அருளாதே
க்ஷமித்து அருள வேண்டும் என்கிறார் –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம-இத்யாதி தனியன் விவரணம் —

October 31, 2019

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

ஸ்ரீ திருமாலிருஞ்சோலை எழுந்து அருளும் பொழுது வழியிடையிலே –
பகவத் குண அனுபவத்தாலும் அனுபவ ஜெனித ப்ரீதிகார வாசிக்க கைங்கர்யத்தாலும்
தம்முடைய நெஞ்சாறல்களை மறக்கக் கருதி எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை விசதமாக அனுசந்தித்து
அவ்வனுசந்தான பரிவாக ரூபமாக
முதலில் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவமும் அடுத்து ஸ்ரீ அதிமானுஷ ஸ்தவமும் ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவமும் அருளிச் செய்தார்
பின்பு ஸ்ரீ எம்பெருமானார் நியமனத்தால் ஸ்ரீ வரதராஜ ஸ்தவமும் நிகமத்தில் ஸ்ரீ ஸ்தவமும் அருளிச் செய்தார்
பஞ்ச ரத்னம் போன்ற இவையே பஞ்ச ஸ்தவமாகும்
எனவே இதில் ஆச்சார்ய வந்தனத்துடன் உபக்ரமிக்கிறார்
இந்த ஸ்தவங்களில் சொல் நோக்கும் பொருள் நோக்கும் தொடை நோக்கும் மற்று எந்நோக்கும் சிறப்பாக அமைந்துள்ளன
உபய வேதாந்த ரஹஸ்ய அர்த்தங்கள் பொதிந்து இருக்கும்
வான் இள அரசன் வைகுண்டக் குட்டன் ஒண் டொடியாள் திரு மகளும் தாணுமாய் நலம் அந்தமில்லதோர் நாட்டில்
நித்ய முக்தர் சேவிக்க ஓலக்கம் இருக்கும் இருப்பை இதில் அனுபவிக்கிறார்
திருநாட்டின் பெருமைகளை பரக்க பேசி-தமது பெரு விடாயை அருளிச் செய்கிறார்

————

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-

யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில்
உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்

மேல் -ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவத்தில் ஸ்ரீ ராமா வரஜ முனீந்திர லப்த போதாஸ் -என்று
தம் சத்தை பெறுவித்தமை அருளிச் செய்கிறார்

அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
வேதா த்வேதா பிரமம் சக்ரே காந்தாஸூ கநகேஷூ ச –ஸ்வர்ணத்தில் பிரமம் சர்வர்க்கும் அவர்ஜனீயம் என்பதால்
சமத்காரமாக அருளிச் செய்கிறார்
கோயில் திருமலை பெருமாள் கோயில் -முதலான திருப்பதிகளில் நித்ய வாசம் செய்வதே ஆஸ்ரிதர்களை
நழுவ ஒண்ணாமைக்காக என்பதால் அச்யுத-பதாம்புஜம் –
த்ருணீ க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதயா ராமானுஜ பதாம்போஜ ஸமாச்ரயண சாலிநா -என்று
இவர் தம் பொன்னடியை பேணுமவர்கள் போலே இவரும் அச்யுத-பதாம்புஜத்தில் இருப்பாரே –
திருக்கச்சி நம்பியும் -நமஸ்தே ஹஸ்தி சைலே ப்ரணதார்த்திஹர அச்யுத -என்றார்
பச்சை மா மலை போல் மேனி –அச்யுதா அமரர் என்றே -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன் -பொன் அரங்கம் என்னில் மயிலே பெருகும் ராமானுஜன் அன்றோ

அஸ்மத் குரோர் -அஞ்ஞானத்தை போக்குபவரே குரு –
கடல் அளவாய திசை எட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு காலத்து ராமானுஜன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்திலனேல் உயிரை உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந் யத்ர-
புண்யம் போஜ விகாஸாய பாப த்வாந்த ஷயாய ச ஸ்ரீமாந் ஆவிர்பூத் ராமானுஜ திவாகர–
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைவரையும் கூட்டிக் கொண்டு அஸ்மத் சப்த பிரயோகம் –அஸ்மாகம் குரோ என்றபடி

பகவத்
ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் –
முக்கிய வ்ருத்தம் அவனுக்கே பொருந்தும் -இங்கு பொருந்துமாறு எங்கனே என்னில்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -என்றும்
சாஷாந் நாராயணோ தேவ க்ருத்வா மார்த்ய மயீம் தநும் மக்நாந் உத்தரதே லோகான் காருண்யாத் சாஸ்த்ர பாணிநா –என்றும்
சாஷாத் சர்வேஸ்வர அவதாரமே அன்றோ ஸ்வாமியும்
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகிலா யுலகோர்கள் எல்லாம்
அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆயினரே–
அவனுக்கும் பகவத் சப்தத்தை த்ருடமாக்கி அருளிய வீறு உண்டே ஸ்வாமிக்கு

அஸ்ய
யச் சப்த பிரயோகம் இல்லாமல் -அஸ்ய-என்று இதம் சப்தத்தால் பிரதி நிர்த்தேசம் பண்ணுவது
இதம் -ப்ரத்யக்ஷ கதம் -தத் இதி பரோக்ஷ விஜா நீயாத் –என்கிறபடி ப்ரத்யக்ஷ விஷயம் -ஸ்வாரஸ்ய அதிசயம் உண்டே
காஷாய சோபி கமனீய சிகா நிவேசம் தண்ட த்ர்ய உஜ்ஜ்வல்யகரம் விமல உபவீதம் உத்யத்திநேசநிபம்
உல்லச ஊர்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்தி யதிராஜ த்ருசோர் மம அக்ரே –என்று இடைவிடாமல் சாஷாத்கோசாரமாய்
ஆழ்வானுக்கு இருப்பதால் தச் சப்தம் இல்லாமல் இதம் சப்தமே ஏற்குமாயிற்று

தயைக ஸிந்தோ
முலைக் கடுப்பாலே பீச்சுவாரைப் போலே -பயன் அன்றாகிலும் பங்கு அல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்தி
பணி கொண்டு தம் பேறாக சிஷ்யர்களை உஜ்ஜீவிப்பிக்கும் கிருபா மாத்ரா பிரசன்னாசார்யர் வர்க்கம் ஸ்வாமி தொடங்கிய அன்றோ
ஓராண் வழியா உபதேசித்தார் முன்னோர் ஏரார் எதிராசர் இன்னருளால் பார் உலகில் ஆசை யுடையோர்க்கு எல்லாம்
ஆரியர்கள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார் பின் –
ருசி விசுவாச ஹீனரையையும் நிர்பந்தித்து சரம உபாயஸ்தராக்கியும்
அதிகாரம் பாராமல் இவர்களுடைய துர்க்கதியையே பார்த்து உபதேசித்து அருளுபவர் அன்றோ

ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே —
ஸ்நந்த்ய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே ஸ்வாமி திருவடிகளில் சாய்ப்பதே நமக்கு பிராப்யம்

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -ஸ்லோகங்கள்—117–132–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

October 30, 2019

த்வம் ஹி ஸூந்தர வநாத்ரி நாத ஹே வேங்கடாஹ்வய நகேந்த்ர மூர்த்தநி
தேவ சேவித பதாம்புஜ த்வய சம்ஸ்ரீதேப்ய இஹ திஷ்டசே சதா –117-

ஸ்ரீ கல்கி அவதார அனுபவம் -120-ஸ்லோகத்தில் –
இடையில் இம் மூன்றும் திருமலை பெருமாள் கோயில் திருவரங்கம் அனுபவம்
கோயில் திருமலை பெருமாள் கோயில் என்று இருக்க இந்த கிரமத்துக்கு அடியாவது
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையா –பெரிய திருமடல் -என்பதால்-
இத் திருமலையோடே சேர்த்தி உண்டாகையாலே அத்தை முதலில் எடுத்து –
இவ்விரண்டு திருமலைகளோடு ஸ்ரீ ஹஸ்தி கிரிக்கும் பர்வதத் வேந சேர்த்தி என்பதால் அத்தை அனுபவித்து
அனந்தரம் கோயில் அனுபவம்

ஹே – வநாத்ரி நாத-ஸூந்தர-அழகரே
த்வம் -தேவரீர்
வேங்கடாஹ்வய நகேந்த்ர மூர்த்தநி–திருவேங்கடம் என்னும் திருமலையின் உச்சியில்
தேவ சேவித-பதாம்புஜ த்வய சந் –சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
மந்தி பாய் வடவேங்கட மா மலை வானவர்கள் சாந்தி செய்ய நின்றான்
வானவர்கள் தொழும் திருவடி இணையை உடையராய்க் கொண்டு
இஹ சம்ஸ்ரீதேப்யஸ் சதா திஷ்டசே –இத்தலத்தில் அடியார்களுக்கு ஸ்வ அபிப்ராயத்தைத் தெரிவித்துக் கொண்டு
எஞ்ஞான்றும் எழுந்து அருளி இருக்கிறீர்

ஸ்வ அபிப்ராயமாவது -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன்-என்பதாம்

—————

ஹஸ்தி சைல நிலயோ பவந் பவாந் சாம்ப்ரதம் வரத ராஜ ஸாஹ்வய
இஷ்டம் அர்த்தம் அநு கம்பயா ததத் விஸ்வமேவ தயதே ஹி ஸூந்தர –118-

ஸ்ரீ ஹஸ்தி சைல சிகர உஜ்ஜ்வல பாரிஜாதத்தின் உதார குணத்தை அனுபவிக்கிறார் இதில்
ஹே ஸூந்தர –பவாந் சாம்ப்ரதம் வரத ராஜ ஸாஹ்வய-ஹஸ்தி சைல நிலயோ பவந் –வாரீர் அழகரே -தேவரீர் இப்போது
வரம் தரும் பெருமாள் என்று திரு நாமம் உடையீராய் திருவத்தி மலையிலே வாழ்பவராய்க் கொண்டு
அநு கம்பயா இஷ்டம் அர்த்தம் ததத் சந் –திருவருளால் அர்த்திதார்த்த பரிதாந தீஷிதராய்
விஸ்வமேவ ஹி தயதே –உலகுக்கு எல்லாம் அருள் புரியா நின்றீர்
சதுர்முகப்பெருமான் தான் சாஷாத் கரித்து அனுபவித்துக் கழிக்க அஸ்வமேத யாகம் செய்தான்
சாதகஸ் த்ரி சதுரான் பய கணான் யாசதே ஜலதரம் பியாசயா சோபி பூரயதி விஸ்வமம்பசா ஹந்த ஹந்த மஹதாம் உதாரதா -என்றும்
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் அங்கே பொசியுமால் -என்றும் சொல்லுகிறபடி
பேறு உத்தேஷ்டாவான அவன் ஒருவன் அளவிலே சுவரிப் போகாமல்
உலகம் எல்லாம் பேர் அருள் பெற்று வாளா நின்றது -என்கிறார்

——————-

மத்யே ஷீர பயோதி சேஷ சயநே சேஷே சதா ஸூந்தர
த்வம் தத் வைபவம் ஆத்ம நோ புவி பவத் பக்தேஷு வாத்சல்யத
விச்ராண்ய அகில நேத்ர பாத்ரம் இஹ சந் சஹ்யோத்பவாயாஸ் தடே
ஸ்ரீ ரெங்கே நிஜதாம் நி சேஷ சயநே சேஷே வநாத் ரீஸ்வர –119-

குடதிசை முடியை வைத்துக் குண திசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென் திசை இலங்கை நோக்கிக்
கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமாற்றைத் திருவரங்கம் பெரிய கோயிலிலே அனுபவித்து இனியராகிறார்
ஷீர சாகர தரங்க சீகரா சார தார கித சாரு மூர்த்தயே போக்கி போக சயநீய சாயிநே மாதவாய–என்கிறபடியே
திருப் பாற் கடலிலே அரவணை மேல் பள்ளி கொண்டு அருளும் கோலம் காட்டில் எறிந்த நிலா வாக அன்றோ உள்ளது
அது அங்கண் ஆகாயமே கண் படைத்தார் எல்லாம் கண்டு களித்து வாழலாம் படி
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி திருக்கையால் அடி வருடப் பள்ளி கொள்கின்ற படியை அனுபவிக்கிறார்

ஹே வநாத் ரீஸ்வர –ஸூந்தர –
மத்யே ஷீர பயோதி சேஷ சயநே சதா சேஷே –திருப் பாற் கடலினுடைய அரவணைப் பள்ளியிலே
அநவரதம் பள்ளி கொண்டு அருளா நின்றீர்
ஆத்ம நோ- தத் வைபவம் புவி பவத் பக்தேஷு வாத்சல்யத விச்ராண்ய –சேஷ ஸாயித்வ ரூபமான
அந்த ஸ்வ கீய வைபவத்தை இந்நிலை உலகத்திலும் பக்தர்கள் பக்கலில் வாத்சல்ய அதிசயத்தாலே
காட்டிக் கொடுக்கத் திரு உள்ளம் பற்றி
அகில நேத்ர பாத்ரம் சந் –சகல ஜன நயன விஷயமாய்க் கொண்டு
இஹ சஹ்யோத்பவாயாஸ் தடே -இங்கே திருக்காவேரிக் கரையிலே
நிஜதாம் நி ஸ்ரீ ரெங்கே –விசேஷித்துத் தன்னிலமான திருவரங்கம் பெரிய கோயிலிலே
சேஷ சயநே சேஷே –அரவணை மேல் பள்ளி கொண்டு அருளா நின்றீர்–

——————

கல்கீ பவிஷ்யந் கலிகல்க தூஷிதாந்
துஷ்டாந் அசேஷாந் பகவந் ஹநிஷ்யசி
ச ஏஷ தஸ்யா வசரஸ் ஸூ ஸூந்தர
ப்ரஸாதி லஷ்மீ ச சமஷமேவ ந –120-

என்றைக்கோ செய்வதாகத் திரு உள்ளம் பற்றி இருக்கிற அந்த அவதாரத்தை சமத்காரமாக
மகா க்ரூரர்கள் மலிந்துல்ல இக்காலத்திலேயே செய்து அருளுவது நன்று என்கிறார்
ஹே லஷ்மீ ச பகவந்-ஸ்ரீ யபதியான திருமாலிருஞ்சோலை மலைப் பெருமாளே
கல்கீ பவிஷ்யந் –இனி ஒரு கால் கல்கி அவதாரம் செய்து
கலிகல்க தூஷிதாந் -அசேஷாந்-துஷ்டாந் ஹநிஷ்யசி —கலிகல்மஷ தூஷிதர்களான சகல துஷ்டர்களை
தொலைத்து அருளப் போகிறீர்
அதற்கு ஒரு சமய ப்ரதீஷை வேணுமோ
தஸ்ய ச ஏஷ அவசரஸ் ஸூ ஸூந்தர –அதற்கு இந்த சமயம் தான் மிக வாய்ப்பானது
ந சமஷமேவ ப்ரஸாதி –எங்கள் கண் முகப்பே பாபிகளை தொலைத்து அருள வேணும்
கல்கி அவதாரம் செய்து தொலைக்க வேண்டிய பாபிகள் மலிந்து இருப்பதாக
ஆழ்வான் திருவாக்கில் வெளிவந்தால் அக்காலத்தின் கொடுமையை என் என்போம்

——————————————

ஈத்ருசாஸ் த்வத் அவதார சத்தமா சர்வ ஏவ பவதாஸ்ரிதான் ஜநாந்
த்ராதுமேவ ந கதாசிதந்யதா தேந ஸூந்தர பவந்த மாச்ரயே –121-

ஸ்வ அபிமத சித்திக்காக திருவடிகளில் பிரபத்தி செய்து அருளுகிறார்
பிரபத்திக்கு அபேக்ஷிதங்களான குண விசேஷங்களை எல்லாம் கீழே பஹு முகமாக
அருளிச் செய்து இதில் சரணம் புகுகிறார்
ஹே ஸூந்தர-ஈத்ருசாஸ் த்வத் அவதார சத்தமா சர்வ ஏவ பவதாஸ்ரிதான் ஜநாந் -த்ராதுமேவ –இப்படிப்பட்ட உம்முடைய
மிக சிறந்த திரு அவதாரங்கள் எல்லாமும் உமது திருமுகப்படியே சாது பரித்ராணத்திற்கே யாகுமே
கதாசித் அந்யதா ந தே–திரு அவதாரத்துக்கு இதுவே பிரயோஜனம் அல்லது வேறு பிரயோஜனம் இல்லை ஒரு போதும்
தேந பவந்தம் ஆஸ்ரயே –இந்த திருமலையில் வந்து திரு அவதரிப்பதுவும் சாது பரித்ராணத்திற்காகவே
ஆதலால் அடியேனையும் ஒரு சாதுவாக திரு உள்ளம் பற்றி ரஷித்து அருள வேணும் என்று
தேவரீரை சரணம் புகுகிறேன் -என்கிறார்

————————

த்வாம் ஆம நந்தி கவய கருணாம் ருதாப்திம்
த்வா மேவ சமஸ்ரித ஜநிக்ந முபக்ந மேஷாம்
யேஷாம் வ்ரஜந் நிஹ ஹி லோசந கோசரத்வம்
ஹை ஸூந்தராஹ்வ பரிசஸ் கரிஷே வநாத்ரிம் –122-

கீழே பண்ணின சரணாகதி சபலமாகியே தீர வேணும் என்று நான்கு ஸ்லோகம் அருளிச் செய்கிறார்
ஹே ஸூந்தராஹ்வ-த்வாம் – கவய கருணாம் ருதாப்திம் -ஆம நந்தி–வாரீர் அழகரே -அப்ரத்யக்ஷ தத்வார்த்த
சாஷாத் கார ஷமர்களான பராசர பாரஸர்யாதிகள் தேவரீரை அருள் கடலாகச் சொல்லுகின்றார்கள்
த்வா மேவ சமஸ்ரித ஜநிக்நம் உபக்நம்-ஆம நந்தி–ஆஸ்ரிதர்களுக்கு சம்சார விமோசகராயும் –
அவர்களுக்கு ஆஸ்ரய பூதராகவும் தேவரீரையே சொல்லுகிறார்கள்
எவர்களுக்கு என்னில்
இஹ ஹி யேஷாம் லோசந கோசரத்வம் வ்ரஜந் -வநாத்ரிம் –பரிசஸ் கரிஷே –இந்நிலத்திலே யாவர் சிலருக்கு
கண் புலனுக்கு இலக்காகி திருமாலிருஞ்சோலை மலையை பரிஷ்க்ருதமாக்கி அருள்கின்றீரோ –
பராசர பாரஸர்யாதிகளான மகரிஷிகளின் வாக்கு பொய்யாகாது படி அருள் புரிய வேணும் என்கிறார்

—————————–

அசக்யம் நோ கிஞ்சித் தவ நச ந ஜாநாசி நிகிலம்
தயாலு ஷந்தா ஸாசீ அஹம் அபி ந ஆகாம்சி தரிதும்
ஷமோதஸ் த்வச் சேஷோ ஹ்யகதிரிதி ச ஷூத்ர இதி ச
ஷமஸ் வைதாவந் நோ பலமிஹ ஹரே ஸூந்தர புஜ –123-

ஹரே ஸூந்தர புஜ –தவ–அசக்யம் நோ கிஞ்சித் –சர்வ சக்தரான தேவரீருக்குச் செய்ய முடியாதது ஒன்றுமே இல்லையே –
சங்கல்ப மாத்திரத்தாலே எத்தையும் செய்ய வல்லீர் அன்றோ
நிகிலம்-நச ந ஜாநாசி –சக்தியில் குறை இல்லாதாப் போலே ஞானத்திலும் குறை இல்லை கிடீர்
உள்ளூர் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி–எண்ணப்பட்ட தேவரீர் அறியாதது ஒன்றும் இல்லையே
தயாலு ஷந்தாஸ அசீ –ஞான சக்திகளுக்கு மேலே தயா குணமும் ஷமா குணமும் உடையராய் இரா நின்றீர்
தேவரீர் படியை விண்ணப்பம் செய்த அடியேன் -என் படியையும் விண்ணப்பம் செய்து கொள்கின்றேன் -கேட்டு அருளீர்
அஹம் அபி ஆகாம்சி தரிதும் ந
ஷம–அடியேனோ செய்த பாபங்களை ப்ராயச்சித்தாதிகளாலே போக்கிக் கொள்ள ஷமனாகின்றிலேன்
பாபங்கள் கூடு பூரித்துக் கிடக்கிறேன்
அத -தேவரீர் சர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வ தயாளுதவ ஷமா நிதித்வாதி குண பூர்ணராய் இருப்பதாலும்
அடியேன் பாபா நிபர்ஹண ஷமன் இன்றிக்கே இருப்பதாலும்
த்வத் சேஷ இதி அகதிரிதி ஷூத்ர இதி ச –தேவரீருக்கு சேஷப்பட்டவன் -வேறு புகல் அற்றவன் –
பிறரும் கண் எடுத்துப் பார்க்கத் தகாத நீசனானவன் -என்னும் இக்காரணங்களைக் கொண்டும்
ஷமஸ்வ –சர்வ அபசாரங்களையும் க்ஷமித்து அருள வேணும்
ந இஹ ஏதாவத் பலம் –தேவரீருடைய ஞான சக்தியாதிகளை அனுசந்திப்பதும் –
அடியோங்களுடைய அஞ்ஞான அசக்தியாதிகளை அனுசதிக்கு இதுவே எங்கள் பக்கல் உள்ள கைம்முதல்
நோபலம் -ந அபலம்-ந ஏதாவத் அபலம் க்ஷமஸ்வ என்றும் அந்வயம் -அபலமாவது அபசாரம்

—————————————

லங்கா யுத்த ஹதரந் ஹரீந் த்விஜ ஸூதம் சம்பூக தோஷாந்ம்ருதம்
சாந்தீபந்ய பிஜம் ம்ருதம் த்விஜ ஸூதாந் பாலாம்ச் ச வைகுண்ட காந்
கர்ப்பஞ் சார்ஜூ நி சம்பவம் வ்யுத தரஸ் ஸ்வேநைவ ரூபேண ய
ஸ்வ அபீஷ்டம் மம மத் குருரோச் ச ததசே நா கிம் வநாத் ரீஸ்வர –124-

ஸ்ரீ ராம கிருஷ்ண அவதாரங்களில் செய்து அருளின மஹா உபகாரங்களை எடுத்து உரைத்து
இப்படி விலக்ஷண சக்தி உக்தரான தேவரீர் எம் அபேக்ஷிதம் தலைக்கட்டாமை என்று ஓன்று உண்டோ என்கிறார் –
ஹே வநாத் ரீஸ்வர –
லங்கா யுத்த ஹதரந் ஹரீந் -இலங்கையில் ராக்ஷஸ யுத்தத்தில் கொலை உண்ட வானர முதலிகளையும்
சம்பூக தோஷாந்ம்ருதம் -த்விஜ ஸூதம் -சூத்ர யோனியில் பிறந்த சம்புகன் தவம் புரிந்த குற்றத்துக்குப் பலனாக
அகால ம்ருத்யுவை அடைந்த அயோத்யா வாசி ப்ராஹ்மண குமாரனையும்
சாந்தீபந்ய பிஜம் ம்ருதம் –மா தவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை என்கிறபடியே
ப்ரபாஸ தீர்த்தத்தில் மாண்டு போன சாந்தீபந புத்ரனையும்
த்விஜ ஸூதாந் பாலாம்ச் ச வைகுண்ட காந் –பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் –என்கிறபடியே
தன்னடிச் சோதி சேர்ந்த ப்ராஹ்மண புத்ரர்களான நான்கு சிசுக்களையும்
கர்ப்பஞ்ச ஆர்ஜூ நி சம்பவம் –மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு –உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட
யுயிராளன் -அஸ்வத்தாமாவின் அபாண்டவ அஸ்திர பிரயோகத்தால் கரிக்கட்டையாய் விழுந்த அபிமன்யு புத்ரனையும் –
அர்ஜுனஸ்ய அபத்யம் புமான்–ஆர்ஜு நீ
வ்யுத தரஸ் ஸ்வேநைவ ரூபேண ய –யாவரொரு தேவரீர் பண்டு இருந்த வடிவில் சிறிதும் குறையாமே சிதையாமே
அப்படியே புனருத்தாரணம் செய்து அருளிற்றோ -அப்படிப்பட்ட தேவரீர்
ஸ்வ அபீஷ்டம் மம மத் குருரோச் ச ததசே நா கிம் –அடியேனுக்கும் அடியேனுடைய ஆச்சார்யரான எம்பெருமானாருக்கும்
அபீஷ்டமானதைக் கொடுத்து அருளாது ஒழியுமோ
அவசியம் கொடுத்து அருளும் என்கிற ப்ரத்யயம் உள்ளது எமக்கு –

————–

ஆயோத் யிகாந் ச பசு கீட த்ருணாம்ச் ச ஐந்தூன்
கிங் கர்மனோ நு பத கீத்ருஸ வேத நாட்யான்
சாயுஜ்ய லப்ய விபவான் நிஜ நித்ய லோகான்
சாந்தா நிகான் அகமயோ வந சைல நாத –125-

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அருளியதை உட்க்கொண்டு இந்த ஸ்லோகம்
ஹே சைல நாத —
ஆயோத் யிகாந் ச பசு கீட த்ருணாம்ச் ச ஐந்தூன்–அயோத்யா வாசிகளாய் பசுக்களும் கீடங்களும் புற்களும்
உட்பட சகல ஜந்துக்களும்
சாயுஜ்ய லப்ய விபவான் நிஜ நித்ய லோகான் -சாந்தா நிகான் அகமயோ–சாயுஜ்யம் என்னும் மோக்ஷத்தில்
அடையக் கூடிய செல்வம் மல்கிய ஸ்ரீ வைகுண்டம் துல்ய பகவத் அனுபவ அனுகூலங்களான
சாந்தா நிகம் என்னும் லோக விசேஷங்களை பிராபிக்கச் செய்து அருளிற்றே-இது
கிங் கர்மனோ நு பத கீத்ருஸ வேத நாட்–யாந் –அந்த ஜந்துக்களை என்ன கர்ம யோகம் உடையனவாகவும்
எவ்விதமான ஞானயோகம் உடையனவாகவும் திரு உள்ளம் பற்றிற்றோ-
ஸ்வ கீய கிருபையால் அன்றோ செய்து அருளிற்று
இங்கும் அங்கனே ஆகாதோ

———————

ஹரித வாரண ப்ருத்ய சமாஹ் வயம்
கரி கிரவ் வரதஸ் த்வமபூர்விகாம்
த்ருஸ மலம்பய ஏவ ஹி ஸூந்தர
ஸ்புட மதாச்ச பரச் சத மீத்ருசம்–126-

அழகருக்கும் வரதருக்கும் உண்டான ஐக்கியத்தைப் பற்றி இந்த ஸ்லோகம்
பச்சை வாரண தாசர் -இவர் திருக் கச்சி நம்பிகளுக்கு பிதா என்றும் பிதாமகர் என்றும் பித்ருவ்யர் என்றும் சொல்வர் –
இவர் பிறவிக் குருடராக இருந்து தேவப்பெருமாள் கிருபையால் கண் பெற்ற ஐதிக்யம்
யஸ்ய பிரசாத கல–என்கிற ஸ்லோகத்தில் -ஆளவந்தார் -அந்த ப்ரபஸ்யதி என்று அருளிச் செய்ததும்
இந்த இதிகாசத்தை பற்றியே என்பர்
ஹே -ஸூந்தர-கரி கிரவ் வரதஸ் த்வம் -வாரீர் அழகரே வேகவத் யுத்தர தீரே புண்ய கோட்யாம் ஹரிஸ் ஸ்வயம்
வரதஸ் சர்வ பூதா நாம் அத்யாபி பரி த்ருச்யதே -என்கிறபடியே
ஸ்ரீ ஹஸ்திகிரியிலே வரதாதி ராஜனாக சேவை தந்து அருளா நின்ற தேவரீர்
ஹரித வாரண ப்ருத்ய சமாஹ் வயம் அபூர்விகாம் த்ருஸம் அலம்பய ஏவ ஹி –பச்சை வாரண தாசர் என்னும்
பரம பக்தருக்கு அபூர்வமான த்ருஷ்ட்டியைக் கொடுத்து அருளினது பிரசித்தம் அன்றோ –
இது த்வி கர்ம பிரயோகம்
ஸ்புடம் அதாச் ச பரச்சதம் ஈத்ருசம்-இது ஒன்றே அன்று இறே –
இப்படி அருள்செய்தது பரச்சதம் உண்டு அன்றோ -அடியேனுக்கும் திருவருள் செய்தலாகாதோ –

————————-

இஹ ச தேவ ததாஸி வரான் பரான்
வரத ஸூந்தர ஸூந்தர தோர்த்தர
வந கிரேர் அபிதஸ் தடம் ஆவசந்
அகில லோசந கோசார வைபவ –127-

ஸ்ரீ ஹஸ்திகிரியில் போலவே இத்திருமலையிலும் வரம் தரும் பெருமையைப் பேசுகிறார் இதில்
ஹே -வரத ஸூந்தர ஸூந்தர தோர்த்தர –
இஹ ச -வந கிரேர் அபிதஸ் தடம் ஆவசந் -இங்கும் திருமலை தாழ்வரைகளிலே எழுந்து அருளி இருந்து
அகில லோசந கோசார வைபவ –சந் –எல்லாருடைய கண்ணுக்கும் இலக்கான வைபவத்தை உடையவராய்க் கொண்டு
ததாஸி வரான் பரான் –சிறந்த வரங்களைத் தந்து அருளா நின்றீர்

————

இதமிமே ஸ்ருணுமோ மலையத்வஜம்
நிருபமிஹ ஸ்வயமேவ ஹி ஸூந்தர
சரண ஸாத் க்ருத்வா நிதி தத் வயம்
வந கிரீஸ்வர ஜாத மநா ரதா –128-

மலய பர்வதத்தில் சென்று கொடி நாட்டிய -மலையத்வஜன் தேர் ஏறி கங்கை நீராட போகா நிற்க
தேர் மதி தவழும் குடுமி அளவிலே ஓடாமல் நிற்க -அழகரே அவனுக்கு நூபுர கங்கையை காட்டிக் கொடுத்து அருளிய ஐதிக்யம்
கொன்னவில் கூர் வேல் கோன் நெடு மாறன் தென் கூடல் கோன் தென்னன் கொண்டாடும் தென் திருமாலிருஞ்சோலையே
இவனையே பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி-என்று கொண்டாடுகிறார்
ஹே -வந கிரீஸ்வர-ஸூந்தர
இஹ மலையத்வஜம் ந்ருபம்–இத்திருமலையிலே மலையத்வஜன் என்னும் அரசனை
ஸ்வயமேவ -அவனுடைய சாதன அனுஷ்டானாதி ப்ரதீஷை இன்றிக்கே தேவரீருடைய நிர்ஹேதுக கிருபையால்
சரண ஸாத் க்ருதவாநிதி இதமிமே வயம் ஸ்ருணுமோ–திருவடிக்கு ஆளாக்கிக் கொண்டீர் என்னும்
வரலாற்றை நாம் கேள்விப் படுகிறோம்
தத் வயம் ஜாத மநா ரதா –அப்படிப்பட்ட நிர்ஹேதுக கிருபையை தம் பக்கலிலும் பெருகும் என்று மநோ ரதிக்கிறார்

—————-

விஞ்ஞாபநாம் வநகிரீஸ்வர சத்யரூபாம்
அங்கீ குருஷ்வ கருணார்ணவ மாமகீநாம்
ஸ்ரீ ரெங்க தாமநீ யதாபுர மேகதோஹம்
ராமாநுஜார்ய வசகஸ் பரி வர்த்திஷீய–129-

இது முதல் நான்கு ஸ்லோகங்களால் ஸ்வ அபீஷ்டத்தை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்
ஆச்சார்ய விஸ்லேஷம் அஸஹ்யமாய் இருக்கையாலே இந்த விஸ்லேஷ வியசனம் நீங்கப் பெற
பிரார்த்திக்கிறார்
கருணார்ணவ -வநகிரீஸ்வர-
சத்யரூபாம் –மாமகீநாம்-விஞ்ஞாபநாம் -அங்கீ குருஷ்வ –யதார்த்தமான அடியேனது விண்ணப்பத்தை
திரு உள்ளம் பற்றி அருள வேணும்
அஹம் யதாபுரம் ஸ்ரீ ரெங்க தாமநீ ஏகத-ராமாநுஜார்ய வசகஸ் பரி வர்த்திஷீய–அடியேன் முன்பு போலே
திருவரங்கம் பெரிய கோயிலிலே ஒரு புறத்திலே எம்பெருமானார் திருவடி நிழலிலே வாழ்வேனாக –
எம்பெருமானாரும் கோயில் வந்து சேர –
அடியேன் அவர் திருவடிகளில் சேர்ந்து வாழ்வேனாம் படி அருள் செய்ய வேணும் என்கிறார் –

————–

கிஞ்சே தஞ்ச விரிஞ்ச பாவந வநாத் ரீச ப்ரபோ ஸூந்தர
ப்ரத்யாக்க்யாந பராங்முகோ வரததாம் பஸ்யன்ன வஸ்யம் ச்ருணு
ஸ்ரீ ரெங்க ஸ்ரியம் அந்வஹம் ப்ரகுணயந் த்வத் பக்த போக்யாம் குரு
ப்ரத்யக்ஷம் ஸூ நிரஸ்த மேவ விததத் ப்ரத்யர்த்தி நாம் ப்ரார்த்தநம் –130-

ஹே -விரிஞ்ச பாவந வநாத் ரீச ப்ரபோ ஸூந்தர –உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் நான்முகனைத்
தோன்றுவித்த திருமாலிருஞ்சோலை அழகரே
வரததாம் பஸ்யந்–அடியார் வேண்டுமவற்றைத் தந்து அருளக் கடவோம் என்று இருக்கும் இருப்பைத் திரு உள்ளம் பற்றி
ப்ரத்யாக்க்யாந பராங்முகோ–உபேக்ஷித்து அருளால் -என்றபடி -நெறி காட்டி நீக்கி விடாமல் –
கிஞ்ச இதஞ்ச அவஸ்யம் ச்ருணு –கீழ் ஸ்லோகத்தில் சொன்னது அன்றிக்கே இதையும் கேட்டு அருளியாக வேணும்
ப்ரத்யர்த்தி நாம் ப்ரார்த்தநம் — ப்ரத்யக்ஷம் ஏவ ஸூநிரஸ்தம் — விததத் -அடியேன் போலவே
ப்ரதிபஷிகளும் விபரீதமாக ஏதேனும் பிரார்த்திக்கக் கூடும் –
அந்த பிரார்த்தனையை எல்லாம் எங்கள் கண் முகப்பே நிரஸ்தமாக்கி
ஸ்ரீ ரெங்க ஸ்ரியம் அந்வஹம் ப்ரகுணயந் த்வத் பக்த போக்யாம் குரு–தென் திருவரங்கம் கோயில் செல்வத்தை
நாள் தோறும் அபி வ்ருத்தமாக்கி தேவரீருடைய பக்தர்களுக்கே போக்யமாம்படி செய்து அருள வேணும் –

——————–

காருண்யாம்ருத வாரிதே வ்ருஷபதே தே சத்ய சங்கல்பந
ஸ்ரீ மந் ஸூந்தர யோக்யதா விரஹிதாந் உத்ஸார்ய சத்வத்சல
ஷாம்யந் சாது ஜநைஸ் க்ருதாம்ஸ் து நிகிலாநே வாப சாராந் க்ஷணாத்
தத் போக்யாம் நிசம் குருஷவ பகவந் ஸ்ரீ ரெங்க தாம் ஆஸ்ரியம்–131-

காருண்யாம்ருத வாரிதே –கருணைக்கு அமுதக்கடல் போன்றவரே -பர துக்க அஸஹிஷ்ணுதவமே காருண்யம் ஆகையால்
அது தன்னை உடைய தேவரீருக்கு அடியேன் பிரார்த்திப்பது மிகை அன்றோ என்று காட்டுகிற படி –
வ்ருஷபதே -வ்ருஷபாத்ரி பதே -என்றபடி -வ்ருஷ பாத்ரி என்கிற திருமாலிருஞ்சோலை மலைக்குத் தலைவரே –
ஸ்ரீ வைகுண்டம் ஷீராப்தி முதலானவற்றை விட்டு தேவரீர் இங்கே எழுந்து அருளி இருப்பதை நோக்கி அருள வேண்டும் என்று காட்டுகிற படி
ஹே சத்ய சங்கல்பந –சத்ய சங்கல்பரான தேவரீருக்கு -எதுவும் சங்கல்ப மாத்ர சாத்யமாய் இருக்க –
அந்த சங்கல்பத்துக்கு வந்த துர்பிக்ஷம் என்னோ என்கை
ஸ்ரீ மந் ஸூந்தர பகவந்–தேவரீருடைய வடிவு அழகிலே கண் வைத்து இருக்கும் அடியோங்கள் இவ் வழகுக்கு
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் என்று மங்களா சாசனம் பண்ண வேண்டும் இத்தனை போக்கி வேறு ஓன்று பிரார்த்திக்கத் தகாது —
ஆயினும் பிரார்த்திக்க நேர்கின்றது என்கை
பகவந்-தேவரீருடைய ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ்ஸூக்கள் ஆகிற ஷாட் குண்யம் காட்டில் எறிந்த நிலா வாகாமே
சபலம் ஆகைக்காக பிரார்த்திக்கிறோம் என்று காட்டுகிறார் போலும்
சத்வத்சல -தேவரீருடைய வாத்சல்யம் ஆகிற குண விசேஷமும் பிரார்த்திக்கச் செய்கிறது என்கை
பிரார்த்தனை தான் ஏது என்னில்
யோக்யதா விரஹிதாந் உத்ஸார்ய –நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கம் -என்கிறபடி நல்லார்களே வாழ்ந்த இடமான கோயிலிலே
இப்போது மண்ணின் பாரமான அயோக்கியர்கள் அன்றோ மலிந்து கிடக்கிறது
அவர்களை அங்கு நின்றும் அகல்வித்து
சாது ஜநைஸ் க்ருதாம்ஸ் து -நிகிலாநே வாப சாராந் க்ஷணாத் ஷாம்யந்–தேவரீருக்கு உயிர் நிலையான
சத்புருஷர்கள் தேவரீருடைய வாத்சல்யத்தை நம்பி அபசாரங்கள் பட்டு இருந்தாலும் அவற்றை
ஒரு நொடிப் பொழுதில் ஷமா விஷயமாகி அருளி
ஸ்ரீ ரெங்க தாம் ஆஸ்ரியம்–அநிசம்-தத் போக்யாம் குருஷ்வ –திருவரங்கம் பெரிய கோயில் செல்வம் எந்நாளும்
சத்புருஷர்களுக்கே போக்யமாம் படி செய்து அருள வேணும்
இதில் காட்டிலும் வேறே ப்ரார்த்த நீயம் இல்லை என்றதாயிற்று

——————–

இயம் பூயோ பூய புநரபி ச பூய புநரபி
ஸ்புடம் விஜ்ஞாப்சாமித்யக் அகதி அபுதஸ் அநந்ய சரண
க்ருதாகா துஷ்டாத்மா கலுஷமதிர் அஸ்மீ த்யநவதே
தயாயாஸ் தே பாத்ரம் வந கிரி பதே ஸூந்தர புஜ –132-

வாசா மகோசர மஹா குண தேசிகாக்ர்ய கூராதி நாத கொதித்த அகில நைச்ய -நைச்யமே வடிவு எடுத்த ஆழ்வான்
அகதி அபுதஸ் அநந்ய சரண
க்ருதாகா துஷ்டாத்மா கலுஷமதிர்–என்னும் இவை ஆழ்வான் திரு நாமத்துக்கு பர்யாய பூதங்களாக
யாயிற்று தம்மை நினைத்து இருப்பது
ஹே வந கிரி பதே ஸூந்தர புஜ —
அகதி -உபாய ஸூந்யனாய்
அபுதஸ் –ஞான ஸூந்யனாய்
அநந்ய சரண -தேவரீரைத் தவிர்த்து வேறே புகல் அறியாத வனாய் இருக்கும் அடியேன்
இயம் பூயோ பூய புநரபி ச பூய புநரபி
ஸ்புடம் விஜ்ஞாப்சாமி-இது தன்னையே மீண்டும் மீண்டும் திருப்பித் திருப்பி விண்ணப்பம் செய்யா நின்றேன்
இதி -இந்த விஞ்ஞாபநத்தையே மீண்டும் மீண்டும் செய்கிறேன் என்ற காரணத்தினாலேயே
க்ருதாகா துஷ்டாத்மா கலுஷமதிர் த்யக் அஸ்மீ –குற்றவாளனாகிறேன்-துஷ்ட ஸ்வ பாவமுடையவன் ஆகிறேன்-
கலங்கின புத்தி உடையவன் ஆகிறேன்
இதி -என்று திரு உள்ளம் பற்றும்படியாகி
தயாயாஸ் தே பாத்ரம் -தேவரீருடைய திருவருளுக்குக் கொள்கலமாக ஆகிறேன் அத்தனை
தேவரீருடைய தயா குணம் அடியேன் பால் அவசியம் பிரசரிப்பதற்கு விஷய புஷ்கலம் உண்டு
என்று விண்ணப்பம் செய்து தலைக்கட்டுகிறார் –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -ஸ்லோகங்கள்—100–116–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

October 30, 2019

ஆஜ்ஞா தவ அத்ர பவதீ விதிதா த்ரயீ சா
தர்மம் ததுக்தம் அகிலேந வநாத்ரி நாத
அந்யூந மா சரிது மாஸ்திக சிக்ஷணார்த்தம்
அத்ர அவதீர்ய கில ஸூந்தர ராகவோ அபூ -100–

இது முதல் ஏழு ஸ்லோகங்களால் ஸ்ரீ ராம அனுபவம்
வநாத்ரி நாத ஹே ஸூந்தர த்வம் ராகவோ அபூ -பண்டு வேத யுக்த தர்மங்களை எல்லாம் குறை அற
அனுஷ்டிப்பதற்காகவே சக்ரவர்த்தி திருமகனாய் திரு அவதாரம் செய்து அருளியவரும்
இப்பொழுது அழகராய் சேவை சாதித்து அருளுபவரும் ஒருவரே
அத்ர பவதீ-சா-த்ரயீ -தவ -ஆஜ்ஞா விதிதா –பரம பூஜ்யமான வேதமானது-
சுருதிஸ் ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா –என்கிறபடியே தேவரீருடைய திவ்ய ஆஜ்ஜையாக பிரசித்தமானது
தர்மம் ததுக்தம் ஆஸ்திக சிக்ஷணார்த்தம் அகிலேந
அந்யூநம் ஆசரிதும் –வேதோ அகிலோ தர்ம மூலம் –என்கிறபடியே சகலவித தர்மங்களும் மூலம் அன்றோ
ஆச்ரித சிஷார்த்தமாக சகல வித தர்மங்களையும் தாம் குறை அற அனுஷ்டிப்பதற்காக
அத்ர அவதீர்ய ராகவ அபூ –ரகு குல திலகராக ஆனீர்
ராமோ விக்ரஹவான் தர்ம -பித்ரு வாக்ய பரிபாலனம் போன்ற சாமான்ய தர்மங்களையும்
சரணாகத பரித்ராணாம் போன்ற விசேஷ தர்மங்களையும் அனுஷ்டித்துக் காட்டி
ஆஸ்ரிதர்களையும் அனுஷ்டிப்பிக்கவே ஸ்ரீ ராமாவதாரம் என்றதாயிற்று
ஆஸ்திக சிக்ஷணார்த்தம் –சிஷ்யனாய் நின்றது சிஷ்யனாய் இருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையால்
அத்தை அறிவிக்கைக்காக -ஸ்ரீ முமுஷுப்படி ஸ்ரீ ஸூக்தி அனுசந்தேயம்

——————

வந கிரி பதிரீசிதேதி தேவை த்ரி புரஹர த்ரி புரக்ந சாப பங்காத்
வ்யகணி பரசுராம தர்சி தஸ்ய ஸ்வக தநுஷ பரிமர்ச தர்சனாச் ச –101-

ஆத்மாநம் மானுஷே மன்யே ராமம் தசரதாத்மஜம் –என்று பரத்வத்தை மறைத்து
மனிச்சை ஏறிட்டுக் கொண்டாலும் இரண்டு செயகைகளால் பரத்வம் தேவர்கள் அறியும் படி ஆயிற்றே
த்ரி புர ஹரத்ரி புரக்ந சாப பங்காத் –த்ரி புரம் எரித்த சிவபெருமான் வில் சிறிது முறிபட –
அவன் ஜனக குலத்து அரசன் தேவராதன் இடம் கொடுக்க அது வம்ச பரம்பரையாக ஜனக ராஜன் அளவும் வர –
ஸ்ரீ சீதா பிராட்டி கன்யா சுல்கமாக வைக்க -அத்தை முறித்து தனது பேர் ஆற்றலை விளங்கச் செய்ததாலும்
பரசுராம தர்சி தஸ்ய ஸ்வக தநுஷ பரிமர்ச தர்சனாச் ச –விஸ்வகர்மா செய்த மற்ற ஒரு வில்லை
மஹா விஷ்ணு எடுத்து ரிஸீக முனிவருக்கு கொடுக்க அது அவன் குமரன் ஜமதக்கினி மூலம் பரசுராமன் பெற்று –
அத்தை வாங்கி–ஸ்வ கதநுஷு –தன்னுடைய தன்றோ – நாண் ஏற்றி அவன் தவத்தை கவர்ந்த வ்ருத்தாந்தம்
இந்த தர்சனத்தாலும் ஸ்ரீ ராமனே சர்வேஸ்வரன் என்று அறுதியிடப்பட்டானோ
அவனே ஸ்ரீ அழகராக சேவை சாதித்து அருளுகிறார்

—————–

அநவாப்தமத்ர கில லிப்ஸ்யதே ஜனை
நச லப்த மேததிஹ போக்தும் இஷ்யதே
அநவாப்தமத்ர கில நாஸ்தி ராம தத்
ஜெகதீ த்வயா த்ருண மவைஷி ஸூந்தர –102-

கூனி சொல் கேட்ட கூடியவள் தன் சொல் கொண்டு -குவலயத் துங்க கரியும் புரியும் ராஜ்யமும் எல்லாம் துறந்து
கானகமே மிக விரும்பிப் போனது அவாப்த ஸமஸ்த காமனாகையாலே
ஜகத்தை எல்லாம் த்ருணமாக நினைத்ததால் அன்றோ என்கிறார் இதில்
ராம ஸூந்தர —
ஜனை அத்ர அநவாப்தம் கில லிப்ஸ்யதே –மநுஷ்யர்கள் எல்லாம் தங்களுக்கு கிடைக்காத பொருள்களை
எல்லாம் பெற விரும்புவது இயல்பு
நச லப்த மேததிஹ போக்தும் இஷ்யதே -அனுபவிக்கப் பங்காகக் கிடைத்த வஸ்துவானது விரும்பப் படுகிறது இல்லை –
சித்தமானதில் விருப்பம் உண்டாக ப்ரஸக்தி இல்லாமையால்
ஆக கிடைக்காத வஸ்துவில் ஆசையும் கிடைத்து முடிந்த வஸ்துவில் ஆசை இல்லாமையும் உலக இயல்பு
மேல் எம்பருமான் படி சொல்கிறது
அநவாப்தமத்ர கில நாஸ்தி -அவாப்த ஸமஸ்த காமர் என்று புகழ் பெற்ற தேவரீருக்கு
அநவாப்தம் என்று ஓன்று இல்லை அன்றோ
தத் -ஆகையினாலே
ஜெகதீ த்வயா த்ருணம் அவைஷி -பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் ங்காதும் சோராமே ஆள்கின்ற
எம்பெருமானாய் உபய விபூதி நாதரான தேவரீராலே இஷுவாகு ராஜ்யமானது மிக அற்பமாக காணப்பட்டது –
அதனாலே அன்றோ நாடு துறந்து காடு சென்றீர் என்கை

———————-

சிகரிஷு விபிநேஷ்வப் யாபகா ஸ்வச்ச தோயா ஸூ
அநுபவசி ரசஞ்ஜோ தண்டகாரண்ய வாசாந்
ததிஹ தத் அநு பூதவ் சாபிலாஷோத்ய ராம
ஸ்ரயஸி வந கிரீந்த்ரம் ஸூந்தரீ பூய பூயஸ் –103 —

சித்ரகூடம் போன்ற மலைகள் -தண்டகாரண்யம் போன்ற காடுகள் கோதாவரி கங்கை போன்ற நதிகள் –
இவற்றால் உண்டான விலக்ஷண ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டியே
இங்கே அழகராக சேவை சாதித்து அருளுகிறீர்
சித்ரா கூடாதி பர்வத ஸ்தானத்தில் இத்திருமலையும்
தண்டகாரண்யம் -ஸ்தானத்தில் வனராஜிகளும்
கங்கா நதி ஸ்தானத்தில் நூபுர கங்கையும் கொள்ளக் கடவன
ஹே ராம ரசஞ்ஜோ த்வம் –ரசிகரான தேவரீர்
சிகரிஷு –சித்ரா கூடாதி பர்வத ராஜங்களிலும்
விபிநேஷு-தே வநேந வானம் கத்வா -என்னும்படியான வனங்களிலும்
தண்டகாரண்ய வாசாந் -அநுபவசி -சித்ரகூட மனு ப்ராப்ய பரத்வாஜஸ்ய சாஸனாத் ரம்யமா வசதம் க்ருத்வா
ரமமானா வநே த்ரய தேவ கந்தர்வ சங்கா சாஸ் தத்ர சே ந்யவசன் ஸூகம் –இத்யாதிப்படியே
ஆரண்ய வாச ஸூ கத்தை அனுபவித்தீர்
அநுபவசி -வர்த்தமான பிரயோகம் –அனுபவம் தொடர்ந்து கொண்டே இருப்பது பற்றி
தத் -இங்கனம் திரு உள்ளத்துக்கு பங்காக அனுபவித்த ராசிக்ய அதிசயத்தாலே
இஹ பூய தத் அநு பூதவ் சாபிலாஷஸ் சன் –மீண்டும் அவ்வனுபவங்களைச் செய்து போர திரு உள்ளம்
பற்றினவராய்க் கொண்டு
ஸூந்தரீ பூயஸ்–வந கிரீந்த்ரம் –ஸ்ரயஸி –அழகராக திருவாவதரித்து
திருமாலிருஞ்சோலை மலையை உறைவிடமாகக் கொண்டு அருளிற்று

————–

உபவந தருஷண்டைர் மண்டிதே கண்ட சைல
பிரணயி பவது தந்தோத்காயி கந்தர்வசித்தே
வந கிரி தட பூமிப் ரஸ்தரே ஸூந்தர த்வம்
பஜஸி நு ம்ருகயாநா நுத்ரவ ஸ்ராந்தி சாந்திம் –104-

கீழ் ஸ்லோக அர்த்தத்தை பரிஷ்கரித்து-தண்டகாரண்ய வாச சிரமங்கள் ஆறுவதைக்காகவே
இங்கு உகந்து நித்யவாஸம் செய்து அருளுகிறீர் -என்கிறார்
ஹே ஸூந்தர -த்வம்
ம்ருகயாநா நுத்ரவ ஸ்ராந்தி சாந்திம் –வந கிரி தட பூமிப் ரஸ்தரே பஜஸி நு–பண்டு பஞ்சவடியில்
மாரீச மாயா மிருகத்தின் பின்னே தொடர்ந்து சென்றதால் உண்டான சிரமத்தின் பரிகாரத்தைத் திருமாலிருஞ்சோலைத்
தாழ்வரையிலே அடைகிறீர் போலும்
அத்தாழ்வரைக்கு இரண்டு விசேஷணங்கள்
உபவந தருஷண்டைர் மண்டிதே –ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும் பூம் பொழிலுமுடை
மாலிருஞ்சோலை யதுவே –என்கிறபடியே பூஞ்சோலைகள் நிரம்பப் பெற்றது
கண்ட சைல பிரணயி பவது தந்தோத்காயி கந்தர்வ சித்தே –கந்தர்வர்களும் சித்தர்களும் பாறைகள் மேல் வீற்று இருந்து
எம்பெருமானுடைய திவ்ய சரிதைகளை உரக்கப் பாடுகின்றார்கள்
ஆக இப்பெருமைகள் வாய்ந்த திருமலை தாழ்வரையிலே பண்டு வனவாசத்தில் உண்டான
விடாய் தீரப் பெருகிறீர் போலும் என்கிறார் –

—————-

கூலேப்தே கில தஷிணஸ்ய நிவஸந் துரோத்ராம் பேதிகாந்
தைத்யா நேக பத த்ரினாஸ் சிந இதீயம் கிம் வதந்தீ ஸ்ருதா
தத்ரைவ ஈஸ்வரம் அம்பஸாம் வ்யஜய தாஸ் தஸ்மாத் வநாத்ரீஸ்வர
ஸ்ரீ மந் ஸூந்தர சேது பந்தன முகா க்ரீடாஸ் தவாடம்பரம்—105-

ஹே வநாத்ரீஸ்வர -ஸ்ரீ மந் ஸூந்தர
தஷிணஸ்ய-அப்தே-கூலே-நிவஸந்-த்வம் –தெற்குக் கடற்கரையிலே எழுந்து அருளி இருந்த தேவரீர்
துரோத்ராம் பேதிகாந் தைத்யாந் –மிகவும் தூரஸ்தமான வடபுறக்கடலில் –த்ரும குல்யம் என்கிற தீவில் – வாழ்ந்த
சமுத்திர ராஜனுடைய சத்ருக்களை -தைத்யர்களை –
ஏக பத த்ரினாஸ் அச்சிந இதீயம் கிம் வதந்தீ ஸ்ருதா –ஒரே அம்பினால் தொலைத்து அருளிற்று என்று கேள்விப்பட்டோம்
அது அன்றியும்
தத்ரைவ –தெற்கு கடற்கரையிலே
அம்பஸாம்–ஈஸ்வரம் – வ்யஜய தாஸ் –சமுத்திர ராஜனை வெற்றி கொண்டீர்
தஸ்மாத் –மனுஷ்யத்வே அபி பரத்வம் பொலிய நிற்கும் பெருமை குறையற்று இருக்கையாலே -என்றபடி
அங்கே இருந்து ஒரு பாணத்தையே லங்கைக்குப் போக விட்டு ராவணன் தலையையும் அறுக்கலாமாய் இருக்க
அப்படிச் செய்யாதே
சேது பந்தன முகா தவா க்ரீடாஸ் –குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டினது முதலான
லீலைகளை தேவரீர் செய்து அருளினதானது
ஆடம்பரம்—இராவணனைத் தொலைத்து விட வேண்டும் என்ற திரு உள்ளமாகில் அப்படிச் செய்து இருக்கலாம்
யதி வா ராவணஸ் ஸ்வயம் என்றவருக்கு திரு உள்ளம் அப்படி இருக்காதே –
அவனையும் எப்படியாவது அபிமுகனாக்கிக் கொள்ளவே ஆடம்பரமாகச் செய்ததன்னை
த்வம் தஷிணஸ்ய நிவஸந்–அதிமானுஷ ஸ்தவம் -25- இந்த கேள்வியை எழுப்பி அனுசந்திக்கிறார்
அதுக்கு சமாதானம் இங்கே -சேது பந்தன முகா க்ரீடாஸ் தவாடம்பரம்–என்றதாயிற்று –

———————–

ரகு குல திலக த்வம் ஜாதுசித் யாது தாந
ச் சலம்ருக ம்ருகயாயாம் ஸம்ப்ர சக்த புரா பூ
தது பஜநித கேதச் சேதநா யாத்ய காயன்
மதுகரதரு ஷண்டம் ரஜ்ய சே கிம் வநாத் ரிம் –106-

ஸ்ரீ ராமாவதார அனுபவம் இந்த ஸ்லோகத்துடன் தலைக்கட்டி அருளுகிறார்
கீழே உபவன தரு ஷண்டை-104-ஸ்லோகத்தில் மாயமான் பின் சென்ற ஆயாசம் திரவே இங்குத்தை வாசம் என்றார் –
அந்த ஒரு விடாய் தானோ -ராக்ஷஸ வேட்டையடின விடாய் கனத்து இருக்குமே –
அது தீரவோ இங்குத்தை வாசம் -என்று கேட்க்கிறார் ஆயிற்று
ஹே ரகு குல திலக –பண்டு ஸ்ரீ ராமாவதாரம் செய்து அருளின அழகரே
புரா – ஜாதுசித்-த்வம்- யாது தாந ச் சலம்ருக ம்ருகயாயாம் ஸம்ப்ர சக்த அபூ –முன்னொரு கால் தேவரீர்
ராவணனாதி ராக்ஷஸர்கள் ஆகிய மிருகங்கள் இடையே வேட்டை யாடி விளையாடுவதில் வ்யாபாரித்தீர்
தது பஜநித கேதச் சேதநாய–அந்த வேட்டை ஆடியதால் வந்த சிரமம் தீர
காயன் மதுகரதரு ஷண்டம்-வநாத் ரி- அத்ய -ரஜ்யசே கிம் –பாண் தகு வண்டினங்கள் பண்கள் பாடி மது பருக-பெரியாழ்வார் –
படியே வண்டினம் முரலும் சோலைகளை உடைய இத்திருமலையிலே இப்போது உகந்து வர்த்திக்கிறீர் போலும்
யாது தாந ச் சலம்ருக ம்ருக-என்பதற்கு மாரீச மிருக வைத்த வ்ருத்தாந்தம் என்பர் சிலர் -அது பொருத்தம் அன்று –
முன்பே சொல்லிற்றே -இங்கு ஸ்ரீ ராமாவதார அனுபவம் தலைக்கட்டி அருளுகையாலே
ராக்ஷஸ வேட்டையையே மிருக வேட்டை ஆடினால் போலே அருளிச் செய்கிறார் –
இத்தால் பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை -என்றபடி அநாயாசேந அழித்தமை சொன்னதாயிற்று

—————-

ஹே ஸூந்தர ஏக தர ஜென்மநி கிருஷ்ண பாவே
த்வே மாதரவ் ச பிதரவ் ச குல அபி த்வே
ஏக க்ஷணா தநு க்ருஹீதவதஸ் பலம் தே
நீலா குலேந சத்ருசீ கில ருக்மிணீ ச –107

கீழே -7 -ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமாவதார அனுபவம்
இது முதல் -10-ஸ்லோகங்கள் ஸ்ரீ கிருஷ்ணாவதார அனுபவம் –
அழகருக்கு கண்ணனுக்கும் உள்ள அபேதத்தை திடப்படுத்துகிற படி
இரண்டு மனைவியரையும் பரிஹரிக்கைக்காகவே ஏக க்ஷணத்தில் இரண்டு மாதாக்கள் -இரண்டு பிதாக்கள் இரண்டு குலங்கள்-
என்று சமத்காரமாக அருளிச் செய்கிறார் இதில்
ஹே ஸூந்தர
ஏக தர ஜென்மநி கிருஷ்ண பாவே –கண்ணனாக ஆவிர்பவித்த ஒரு அவதாரம் தன்னிலே
த்வே மாதரவ் ச பிதரவ் ச த்வே குல அபி ச –தேவகி யசோதை -நந்தகோபர் வஸூ தேவர் -யது குலம் கோபால குலங்கள் –
ஆக எல்லாம் இரண்டாக
ஏக க்ஷணா தநு க்ருஹீதவதஸ் தே பலம் -ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் என்னும்படி
ஸ்வல்ப காலம் தன்னிலே பரிக்ரஹித்து அருளின தேவரீருக்கு உத்தேச்யம் யாது எனில் -அதை உள்ளபடி அறியப் பெற்றோம் கேளீர்
நீலா குலேந சத்ருசீ கில ருக்மிணீ ச –கோபால குலத்துக்குத் தகுதியாக நப்பின்னைப் பிராட்டியையும் ஷத்ரிய குலத்துக்குத் தகுதியாக
ருக்மிணிப் பிராட்டியையும் பெறுவதற்கு யாமத்தனை
ஆயனாகி ஆயர் மங்கை தோள் விரும்பினாய் –
குல ஆயர் கொழுந்து என்று நம்மாழ்வார் சிறப்பித்து அருளிச் செய்வது திவ்ய மஹிஷி யானதாலே

——————-

த்வம் ஹி ஸூந்தர யதா ஸ்தந்தய
பூதநாஸ்த நமதாஸ் ததா நு கிம்
ஜீர்ணம் ஏவ ஜடரே பயோ விஷம்
துர்ஜரம் வத ததாத்மநா ஸஹ–108-

யசோதா ஸ்தந்தயனாகவும் பூதநா ஸ்தந்தயனாகவும் ஆன அத்புதத்தை அனுபவித்து பேசுகிறார்
ஸ்தந்யம் தத் விஷ சம்மிஸ்ரம் ரஸ்யமாஸீத் ஜகத் குரோ —
அவன் தன்னையே இதைப்பற்றி கேள்வி கேட்கும் முகத்தால் ஸ்வ அனுபவ ராஸிக்யத்தைக் காட்டி அருளுகிறார் –
ஹே ஸூந்தர
த்வம் யதா ஸ்தந்தய பூதநாஸ்தநம் அதாஸ் –அழகரே பண்டு கண்ண பிரானாகத் திரு அவதரித்த தேவரீர்
ஸ்தந்தய சிசுவாய் எப்போது போதனையின் முலைப்பால் அமுது செய்து அருளிற்றோ
ததா துர்ஜரம் பயோ விஷம் ததாத்மநா -ஸஹ–ஜீர்ணம் ஏவ கிம் வத –அப்போது பிறரால் உண்டு அறுக்க
முடியாத ஸ்தந்ய விஷமானது அவளுடைய ஆவியோடு கூடவே தேவரீருடைய திரு வயிற்றில் ஜீரணமாகி ஒழிந்ததோ-
இத்தைத் தேவரீர் தாமே அருளிச் செய்ய வேணும் என்கிறார் –
விஷம் முடித்து அல்லது விடாதே -அது உமக்கு ஜீரணமான அளவன்றிக்கே அவள் உயிரைத் தானே முடித்து நின்றதே
இது என் கொல் -சைசவத்திலும் பரத்வம் குலையாத பெருமை பேசப்பட்டது –

—————————-

ஆஸ்ரிதேஷு ஸூலபோ பவந் பவாந் மர்த்யதாம் யதி ஜகாம ஸூந்தர
அஸ்து நாம ததுலூகலே கியத் தாம பத்த இதி கிம் ததாஸ்ருதே –109-

ஸுவ்லப்ய பரம காஷ்டையில் ஈடுபடுகிறார் –
அழகரே கட்கிலியான உமது திரு உருவத்தை -துயரில் மலியும் மனுஷர் பிறவியில் தோன்றிக்
கண் காண வந்து அதுக்கும் மேலே
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுது
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் அழுகையும்
அஞ்சி நோக்கும் அந்நோக்கும் அணி கொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும் -என்றும் சொல்லுகிறபடியும்
கண்ணி நுண் சிறுதாம்பினால் உரலோடு கட்டுண்டு ஏங்கி அழுது கிடந்தது எதற்க்காக
இக்குணத்தை எந்த வகுப்பில் சேர்ப்பது என்கிறார்
ஹே ஸூந்தர -பவாந் ஆஸ்ரிதேஷு ஸூலபோ பவந் மர்த்யதாம் யதி ஜகாம தத் அஸ்து நாம –அழகரே ஆஸ்ரிதர் பக்கல்
எளியராய் -மனுஷ்ய சஜாதீயராய்ப் பிறந்தீர் ஆகில் அது கிடக்கட்டும் –
அதில் விசிகித்சை ஒன்றும் செய்கின்றிலோம்-பின்னை விசிகித்சை உள்ளது எதிலே என்னில்–
ததுலூகலே கியத் தாம பத்த இதி கிம் அருதஸ் –அப்படி மனுஷ்ய யோனியில் பிறந்த காலத்தில்
வெண்ணெய் களவு கண்டு அதற்காக உரலில் சிறு தாம்பினால் கட்டுண்டு கிடந்தது அழுது நின்றாயே-
அது எதற்க்காக -என்று இதிலே யாயிற்று என் போல்வார்க்குப் போர விசிகித்சை உள்ளது-என்கிறார்
இப்படி கேள்வி கேட்க்கும் இவருடைய திரு உள்ளம்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு எத்திறம் உரலினோடு இணைந்து
இருந்து ஏங்கிய எளிவே–என்று ஆழ்வாரை மோஹிப்பிக்கவே செய்த க்ருத்யம்
க்யத் தாம பத்த –என்றது ஸ்வல்ப தாம பத்து -என்றபடி
தாம பத்தஸ் சந் அருதஸ் –என்னாமல்-தாம பத்த இதி அருதஸ்-என்றது
இவனை ஆய்ச்சியர் கட்டினார் அல்லர்-நீயே கட்டுண்டவனாகச் செய்து கொண்டாய்
உனது குண அதிசயத்தைக் காட்டி அருளவே நீ செய்தவை –

———————-

ஸூந்தாரோரு புஜ நந்த நந்தஸ் த்வம் பவந் ப்ரமர விப்ரமாலக
மந்திரேஷு நவ நீத தல்லஜம் வல்லவீதிய முத வ்யஸூசுர–110-

களவு கண்டது வெண்ணெயை யோ ஆச்சியார் உள்ளத்தையோ -என்று வினவுகிறார்
ஸூந்தாரோரு புஜ த்வம் ப்ரமர விப்ரமாலக நந்த நந்தஸ் பவந் –தேவரீர் வண்டு ஒத்த திருக்குழல் கற்றையை உடைய
நந்தன் மதலையாய்க் கொண்டு
களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று -என்றும்
அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர் வண்டு ஒத்து இந்தக்குழல் -என்றும் போலே இவரும்
மந்திரேஷு நவ நீத தல்லஜம் வ்யஸூசுர–உத வல்லவீதியம் –ஆயர் மனைகளில் புக்கு வெண்ணெயைத் தான் களவு கண்டீரோ
அல்லது ஆய்ச்சியர் உள்ளத்தைத் தான் கொள்ளை கொண்டீரோ
இரண்டையும் கொள்ளை கொண்டேன் என்று அன்றோ அவனது பதில்
நவநீத சோரனாய் இருந்த நிலையிலே கோபி மனோஹரமாயும் இருந்தபடி
கோப க்ருஹேஷு கிம் த்வம் கோபீ மநாம் சி நவநீதம் உதாப்யமோஷீ -ஸ்ரீ அதிமானுஷ ஸ்தவ ஸ்லோகமும் இங்கே அனுசந்தேயம்
நவநீத தல்லஜம்–தல்லஜ சப்தம்-ஸ்ரேஷ்ட வாசகம் -கண்ணபிரானால் கைக் கொள்ளப் பெற்ற ஸ்ரேஷ்டம் உண்டே –

———————-

காலி யஸ்ய பணதாம் சிரஸ்து மே சத் கதம்ப சிகரத்வ மேவ வா
வஷ்டி ஜுஷ்ட வந சைல ஸூந்தர த்வத் பாதாப்ஜ யுக மர்பிதம் யயோ–110-

ஏகதா து விநா ராமம் கிருஷ்ணோ பிருந்தா வநம் யயவ் –என்றபடி நம்பி மூத்த பிரான் துணை இல்லாமல்
தனியாக கதம்ப மரத்தின் மேல் ஏறி மடுவில் காளியன் பணைகளின் மேல் குதித்து
நர்த்தனம் செய்ததை அனுபவித்து
காளிய நாகத்தின் மத்தமாகவோ -கதம்ப மரத்தின் உச்சியாகவோ ஆகப்பெற வேணும் என்று
தம்முடைய முடி விரும்புவதாக அருளிச் செய்கிறார் –
ஜுஷ்ட வந சைல ஸூந்தர
மே சிரஸ்து-அடியேனுடைய தலையோ என்றால்
காலி யஸ்ய பணதாம் சத் கதம்ப சிகரத்வ மேவ வா வஷ்டி –காளிய நாகத்தின் படமாய் இருக்கையையோ –
கதம்ப மரத்தின் உச்சியாய் இருக்கையையோ மெச்சுகின்றது -வஷ்ட்டி -விரும்புகிறது
அவற்றில் என்ன ஏற்றம் உண்டு என்னில்
யயோ–த்வத் பாதாப்ஜ யுகம் அர்பிதம் –தேவரீருடைய திருவடித் தாமரை இணையை வைத்து அருள பெற்றவை அன்றோ
அடிச்சியாம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா யூன் கோலப்பாதம் -என்றும்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும்
கதா புந –த்வத் சரணாம்புஜ த்வயம் மதிய மூர்த்தா நாம் அலங்கரிஷ்யதி -என்றும்
பிரார்த்தித்துப் பெற வேண்டிய பேறு அவற்றுக்கு அநாயாச மாகக் கிடைக்கப் பெற்றதே என்று வியந்து பேசின படி

————–

கூஹித ஸ்வ மஹிமாபி ஸூந்தர த்வம் வ்ரஜே கிமிதி சக்ரம் ஆக்ரமீ
சப்த ராத்ர மததாச்ச கிம் கிரிம் ப்ருச்ச தச்ச ஸூஹ்ருத கிம் அக்ருத –111-

ஸுவ்லப்ய ஸுவ்சீல்யங்களைக் காட்டி அருள வந்த இடத்தில் பரத்வமும் பொலியும் படி
அதி மானுஷ சேஷ்டிதங்களை ஊடே வெளியிட்டு அருளியது எதற்க்காக -என்கிறார்
ஸூந்தர த்வம்-கூஹித ஸ்வ மஹிமாபி வ்ரஜே கிமிதி சக்ரம் ஆக்ரமீ –அழகரே தேவரீர் ஒருத்தி மகனாய்ப் பிறந்து
ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தது ஸ்வ கீரை சக்தி விசேஷங்களை எல்லாம் மறைத்து அன்றோ -அப்படி இருந்தும்
கேட்டு அறியாதது கேட்க்கின்றேன் கேசவா -கோவலர் இந்திரற்குக் காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும் –என்றும்
ஆயிரம் கண்ணுடை இந்த்ரனார்க்கு என்று ஆயர் விழவு எடுப்ப பாசன நல்லன பண்டிகளால் புகப்பெய்த யதனை எல்லாம்
போய் இருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய் மாயன் அதனை எல்லாம் முற்றும் வாரி
வளைத்து உண்டு இருந்தான் போலும் -என்றும் சொல்லுகிறபடியே
இந்த்ர பூஜையைத் தடை செய்து அவனை யுத்தோந் முகனாக ஆக்கிக் கொண்டது என்னோ
சப்த ராத்ரம் அததாச்ச கிம் கிரிம் ப்ருச்ச–வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து
விடுக்கப்பட்ட மழை வந்து ஏழு நாள் பெய்து மாத்தடைப்ப மது சூதன் எடுத்து மறித்த மலை -என்றும்
செப்பாடுடைய திருமாலவன் தன் செந்தாமரைக்கை விரல் ஐந்தினையும் கப்பாக மடுத்து மணி நெடும் தோள்
காம்பாகக் கொடுத்துக் கவித்த மலை -என்றும் சொல்லுகிறபடியே
கொடியேறு செந்தாமரைக்கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில வடிவேறு திரு யுகிர் நொந்துமில -என்னும் படியாக
ஏழு நாள் வாடாதே வதங்காதே மலையைத் தாங்கி நின்றது என்னோ
ப்ருச்சதச் ச ஸூஹ்ருத கிம் அக்ருத –மலை எடுத்து நின்ற அதி மானுஷ சேஷ்டிதம் கண்டு ஆச்சர்யப்பட்ட ஆயர்கள் –
நீ தேவனோ தானவனா யக்ஷனா கந்தர்வனா என்று கேட்க -நீ சீற்றம் கொண்டது ஏனோ

இதில் மூன்றுகேள்விகள்
தேவதாந்த்ர சமாராதனையைத் தடுத்தது ஏன்-தான் வளருகின்ற ஊரில் தேவதாந்தரத்துக்கு ஆராதனை எதற்கு -விடை
இந்திரன் பொறுக்க ஒண்ணாத தீங்கை விளைக்க அவனை தலை எரித்து
பொகடாமல் ஏழு நாள்கள் மலையைக் குடையாக எடுத்தது ஏன்
அவன் உணவைக் கொண்ட நாம் உயிரையும் கொள்ள வேணுமோ -மழையே ரக்ஷகம் என்ற வார்த்தையை மெய்ப்பிக்க வேணுமே
ஆந்ரு சம்சயம் கொண்டாடி அவன் கை சலித்தவாறே தானே ஓய்ந்து நிற்கிறான் என்று அன்றோ செய்தாய்
மூன்றாவது கேள்வி ஆயர்கள் கேட்டதற்கு சீற்றம் கொண்டது பரத்வத்திலே வெறுப்புக் கொண்டு
மனுஷ்ய சஜாதீயனாய் -அதிலும் கடை கேட்ட இடையனாய் ஆசையுடன் பிறந்து இருக்க வேறாக சங்கித்து கேட்டது –
தேவத்வமும் நிந்தையானவனுக்கு –என்றபடி நிந்தா ரூபமாக தோற்றுகையாலே சீற்றம் கொண்டான்
ஆக மூன்று கேள்விகளாலும் சமாதானங்களாலும் விலக்ஷண குண அனுபவம் செய்து அருளினார்

—————–

ஹே நந்த நந்தன ஸூ ஸூந்தர ஸூந்தரஹ்வ
பிருந்தா வநே விஹரதஸ் தவ வல்லவீ பி
வேணு த்வனி சரவண தஸ் தருபிஸ் ததா வை
சக்ரா வபிர் ஜதுவிலாயமஹோ விலில் யே –113-

வேணு கானத்தில் மலைகளும் மரங்களும் கூட உருகின படியைப் பேசி அனுபவிக்கிறார் இதில்
ஹே நந்த நந்தன ஸூ ஸூந்தர ஸூந்தரஹ்வ–நந்த கோப ஸூநு வாகத் திரு வவதரித்த அழகரே —
அழகரே என்ற திரு நாமம் படைத்தவரே
தத் பிருந்தா வநே வல்லவீ பிஸ் ஸஹ விஹரதஸ் தவ -முன்பு பிருந்தாவனத்தில் ஆயர் மங்கைகளோடே
லீலா ரசம் அனுபவியா நின்ற தேவரீருடைய
வேணு த்வனி சரவண தஸ் –குழலூதும் இசையைக் கேட்டதனாலே
ததா வை சக்ரா வபிர்-தருபிஸ்- ஜதுவிலாயம் –விலில் யே — அஹோ –மலைகளும் மரங்களும்
தீயோடு உடன் சேர் மெழுகு உருகுமா போலே உருகின படி என்னே
நாவலம் பெரிய தீவினில் –மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா எழுத்து சித்ரங்கள் போல நின்றனவே -என்றும்
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் இரங்கும் கூம்பும்
திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே -பாசுரங்கள் இங்கே அனுசந்தேயங்கள்
சைல உக் நிச்ச ஜலாம் பபூவ—தொடங்கி உள்ள ஸ்லோகம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -அனுசந்தேயம்

————-

காயம் காயம் வந கிரி பதே த்வம் ஹி பிருந்தா வநாந்த
கோபீ சங்கைர் விஹரசி யதா ஸூந்தர வ்யூட பாஹோ
ராசாரம்போத்சவ பஹு வித ப்ரேம ஸீமந்தி நீநாம்
சேதச் சேதஸ் தவ ச து ததா காம் தசாம் அந்வ பூதாம்–114-

வேணு கானத்தில் அசேதனங்கள் பட்ட பாடு கிடக்கட்டும் –
அவனுடைய ஹ்ருதயமும் கோபிகளுடைய ஹ்ருதயங்களும் பட்ட பாடு அவனது திரு உள்ளத்துக்கே தெரியும்
என்று தெளிந்து அவன் தன்னையே கேட்டு அருளுகிறார் இதில் –
ஹே-வந கிரி பதே -ஸூந்தர வ்யூட பாஹோ
த்வம் பிருந்தா வநாந்த -காயம் காயம் -கோபீ சங்கைர் ஸஹ -யதா – விஹரசி –தேவரீர் பிருந்தா வனத்தின் உள்ளே
வேணு கானத்தை அடுத்து அடுத்து செய்து கோபிகள் திரளோடே லீலா ரசம் கொண்டாடின காலத்திலே
ராசாரம்போத்சவ பஹு வித ப்ரேம ஸீமந்தி நீநாம் சேதச் -தவ ச-சேதஸ் து ததா காம் தசாம் அந்வ பூதாம்–
ராசாரம்போத்சவம் ஆவது–ராஸக்ரீடை -அதாவது குரவைக்கூத்து
அங்கநாம் அங்கநாம் அந்தரே மாதவ மாதவம் மாதவஞ்ச அந்தரேன அங்க நா–என்கிறபடி
பல வடிவு எடுத்துக் கொண்டு ராஸக்ரீடா மண்டலத்தின் நடுவே இருந்து ஆடின கூத்து –
இத்தமா கல்பிதே மண்டல மத்யகே சஞ்சகவ் வேணு நா தேவகி நந்தன –அற்புதமாக வேணு கானம் செய்ய
ஆய்ச்சிகளின் ப்ரேமம் பேச்சுக்கு நிலம் அன்றே –
அவர்கள் திரு உள்ளமும் கண்ணபிரான் திரு உள்ளமும் எந்த நிலையில் இருக்கும் என்று
அவன் தன்னையே கேட்க்கும் அத்தனை அன்றோ
இங்கனம் அழகர் இடம் கேட்ட கேள்விக்கு –
இப்போது நீரும் நாமும் கலந்து பரிமாறும் பொழுது நம் உள்ளம் இருக்கும் நிலையே அப்போதும்
என்கிற சமாதானம் உண்டே –

————–

இங்கிதம் நிமிஷிதம் ச தாவகம் ரம்யம் அத்புதம் அதி பிரியங்கரம்
தேந கம்சமுக கீட சாசனம் ஸூந்தர அல்பகம் அபி பிரசஸ்யதே–115-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் -தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்யப் பூடுகள் அடங்க உழக்கினதும்
வார்கெடா வருவி யானை மா மலையின் மருப்பின் இணைக் குவது இறுத்து உருட்டி ஊர் கொள் திண் பாகன்
உயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று காஞ்சனை தகர்த்ததும் முதலான துஷ்க்ருதா விநாசக சரிதைகள் –
எம்பெருமானுக்கு கிருமி கீட நிரசன ப்ராயமே –
யா கம்ச முக்கிய அந்ரூப கீட நிபர்ஹண உத்தா சா நிர்ஜித த்ரி ஜெகதஸ் தவ நைவ கீர்த்தி –அதிமானுஷ ஸ்தவம்
இருந்தும் ஸ்தோதாக்கள் இவற்றை புகழ்ந்து பேசுவது –
செயல் சிறிது பெரிதோ என்று கொள்ளாமல் அவன் செய்தது என்பதாலேயே-சகல சரிதைகளையும் சம ரீதியாகவே பேசுவார் –
என்னும் அர்த்தத்தை இங்கே வெளியிட்டு அருளுகிறார்
ஹே ஸூந்தர
இங்கிதம் நிமிஷிதம் ச தாவகம் –இங்கிதமோ வீக்ஷிதமோ எதுவாகிலுமாம்–தேவரீருடையதாக இருக்கும்
அத்தனையே வேண்டுவது
அபிப்ராய அனுரூபமான சேஷ்டிதைக்கு இங்கிதம் என்று பெயர் –
கண் இமைத்தலுக்கு நிமிஷிதம் என்று பெயர் –
எங்களுக்கு சரித்திர பர்யந்தம் வேண்டா -இங்கித நிமிஷதங்களே போதும் உருகைக்கு-என்கைக்காக சொன்னபடி
ரம்யம் அத்புதம் அதி பிரியங்கரம் –தேவரீருடையது எல்லாம் ரமணீயமும் அத்புதமாயும் பரம பாக்யமுமாயும் இருக்குமே
தேந -இக்காரணம் பற்றியே
கம்சமுக கீட சாசனம் அல்பகம் அபி பிரசஸ்யதே–கம்சன் முதலான புழுக்களைத் தண்டித்தவை
சிறுச் சேவ கமாய் இருந்தாலும் குலாவப்படுகிறது
அது இது உது என்னாலாவன வல்ல என்னை யுன் செய்கை நைவிக்கும்–திருவாய் -5-10-2-விவரணம் இந்த ஸ்லோகம் –

—————–

வாராணஸீ தஹந பவுண்டரக பவ்ம பங்க
கல்பத்ருமா ஹரண சங்கர ஜ்ரும்பணாத்யா
அந்யாச் ச பாரத பல்க்ரத நாதயஸ் தே
க்ரீடாஸ் ஸூ ஸூந்தர புஜ ஸ்வரணாம்ரு தாநி–116-

கீழே அல்பகமபி என்றாரே -அல்பம் இன்ரிக்கே அநல்பம் என்று மதிக்கக் கூடிய சேஷ்டிதங்களும் உண்டே
அவற்றை எடுத்து இறைத்து இவை எல்லாம் கர்ண அம்ருதமான சரித்திரங்கள் என்கிறார் இதில்
வாராணஸீ தஹந பவுண்டரக பங்க–பவுண்டரக பங்கம் முன்பும் -வாராணஸீ தஹநம் பின்னும் நடந்தவை
பவ்ம பங்க கல்பத்ருமா ஹரண –பவ்ம-என்று நரகாசூரன் –
சக்ராயுதத்தால் அவன் மந்திரி முரனையும் அவனையும் பங்கப்படுத்தியது
கல்பத்ருமா ஹரண-ரி சத்யபாமா தேவிக்காக ஸ்ரீ துவாரகைக்கு கொண்டு வந்த வ்ருத்தாந்தம்
சங்கர ஜ்ரும்பணாத்யா –பாணாசூர யுத்தத்தில் ஜ்ரும்பகாஸ்த்ரம் பிரயோகம் பண்ணி
சிவபிரானை கொட்டாவி வீட்டுக் கிடைக்கும்படி செய்த சேஷ்டிதம்
அந்யாச் ச பாரத பல்க்ரத நாதயஸ் தே க்ரீடாஸ் –மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலர் குலைய
நூற்றுவரும் பட்டு அழியப் பார்த்தன் சிலை வளையத் திண் தேர் மேல் முன் நின்று செய்த லீலைகளை எல்லாம்
ஸ்வரணாம்ரு தாநி–தேவரீர் திறத்திலே விஸ்மயப்பட தக்கவை அல்லவே யாகிலும்
ஒவ் ஒரு செயலும் செவிக்கு இன்பமாய் இருப்பது அன்றோ
செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றிப்
புவியின் மேல் பொன்னெடும் சக்கரத்து உன்னையே ஒய்வின்றி ஆதரிக்கும் என் ஆவியே –திருவாய் மொழி
பாசுரம் இங்கே அனுசந்தேயம்

ஆக இவ்வளவும் ஸ்ரீ கிருஷ்ண அவதார அனுபவமாய் தலைக்கட்டிற்று

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -ஸ்லோகங்கள்—84–99–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

October 29, 2019

தேவஸ்ய ஸூந்தர புஜஸ்ய வநாத்ரி பர்த்து
ஹை சீலவத்த்வம் அதவா ஆஸ்ரித வத்சலத்வம்
ஐசஸ்வபாம் அஜஹத் பிரிஹ் அவதாரைஸ்
ய அலஞ்ச கார ஜகத் ஆஸ்ரித துல்ய தர்மா –84-

இனி மத்ஸ்ய கூர்மாதி விபவ அவதாரங்களை விரிவாக அனுபவிக்கத் திரு உள்ளம் பற்றி
அதற்கு அவதரிணிகை போலே ஐந்தாறு ஸ்லோகங்கள் அருளிச் செய்கிறார்
அஜோபிசந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபி சந் ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாம் ஆத்ம மாயயா–என்றபடி
அஜஹத் ஸ்வ பாவனாய்க் கொண்டும் மனுஜய சஜாதீயனாய்க் கொண்டும் விபவ அவதாரங்கள் செய்து அருளினது
ஸுவ்சீல்ய ப்ரயுக்தமோ -அல்லது ஆஸ்ரித வாத்சல்ய நிபந்தநமோ-என்கிறார் இதில்
ய ஸூந்தர புஜஸ்ய–ஐசஸ்வபாம் அஜஹத் பிரிஹ் அவதாரைஸ்-இஹ -ஆஸ்ரித துல்ய தர்மா –சந் ஜகத் அலஞ்சகார–
யாவர் ஒரு அழகர் சர்வேஸ்வரத்துக்கு ஏற்ப ஸ்வரூப ரூப குண விபவாதிகளை-
அல்லது ஸர்வஞ்ஞத்வ சர்வ சக்தித் வாதிகளை – விடாதே இருக்கின்ற திரு அவதாரங்களினால்
இந்நிலத்திலே அடியார்களான மனுஷ்யாதிகளோடு துல்ய சீலராய்க் கொண்டு
இந்த ஜகத்தை அலங்கரித்து அருளினாரோ
தஸ்ய வநாத்ரி பர்த்து ஸூந்தர புஜஸ்ய தேவஸ்ய சீலவத்த்வம் அதவா ஆஸ்ரித வத்சலத்வம் ஹை –அழகருடைய
சீல குணமோ அல்லது ஆஸ்ரித வாத்சல்ய குணமோ ஆச்சர்யமானது –

—————

சிம்ஹாத்ரி நாத தவ வாங் மனஸ அதி வ்ருத்தம்
ரூபம் தவ அதீந்திரியம் உதாஹ ரஹஸ்ய வாணீ
ஏவஞ்ச ந த்வம் இஹ சேத் சமவாதரிஷ்ய
த்வத் ஞான பக்தி விதயம் அத்ய முத்தா அபவிஷ்யத் –85-

சிம்ஹாத்ரி நாத
ரஹஸ்ய வாணீ -வாங் மனஸ அதி வ்ருத்தம் தவ ரூபம் அதீந்திரியம் உதாஹ–உபநிஷத்தானது தேவரீருடைய
அ வாங் மானஸ கோசரமான திரு உருவத்தை அதீந்த்ரியம் என்று ஓதி வைத்ததோ –
கண்ணால் காண முடியாதது என்றதோ
ஏவஞ்ச த்வம் இஹ ந சமவாதரிஷ்ய சேத்-இங்கனே உபநிஷத் ஓதி இருப்பதற்கு ஏற்ப தேவரீரும்
இந்நிலை உலகில் விபவ அவதாரங்களை செய்து அருளாமலே இருந்து விட்டீர்கள் ஆகில் –
ஒருவர் கண்ணுக்கும் இலக்காகது இருந்தீராகில்
த்வத் ஞான பக்தி விதயம் அத்ய முத்தா அபவிஷ்யத் –சாஸ்திரங்களில் விகிதங்களாய் இருக்கும்
விதிகளுக்கு ஒரு இலக்கு கிடையாமல் போனால் அந்த சாஸ்திரங்கள் நிரார்த்தங்கள் ஆகுமே
ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மாமை ஆஜ்ஞா -என்கிற திருமுகப் பாசுரமும் பழுதேயாகுமே
அங்கன் ஆகாமைக்கு ஆயிற்று திருவவதாரங்கள் செய்து அருளினது

————–

யோ பக்தா பவத் ஏக போக மநசோ அநந்யத்ம சஞ்சீவநா
தத் சம்ஸ்லேஷண தத் விரோதி நிதநாத் யர்த்தம் வநாத்ரீஸ்வர
மத்யேண்டம் யதவா தரஸ் ஸூர நராத்யாகார திவ்யாக்ருதி
தேநைவ த்ரி தசைர் நரைச் ச ஸூ கரம் ஸ்வ பிரார்த்தித பிரார்த்தநம் –86-

விபவ அவதாரங்கள் செய்து அருளின காரணத்தையும் -அவதாரங்களால் விளைந்த ஸுவ்கர்த்தையும்
அருளிச் செய்கிறார் இதில்
ஹி வநாத்ரீஸ்வர
அநந்யத்ம சஞ்சீவநா பவத் ஏக போக மநசோ யே பக்தா–அநந்ய உபாயர்களும் அநந்ய உபேயர்களுமான
யாவர் சில பக்தர் உளரோ என்றபடி –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -என்றும்
உனக்கு பணி செய்து இருக்கும் தவமுடையேன் -என்றும் அனுசந்தித்து இருக்குமவர்களான பக்தர்கள் சிலர் உண்டே
தத் சம்ஸ்லேஷண தத் விரோதி நிதநாத் யர்த்தம் –அப்படிப்பட்ட பரம பக்தர்களோடு ஸம்ஸ்லேஷிக்கவும் –
அவர்களுடைய விரோதிகளை நிரசிக்கவும்
ஆதி சப்தத்தால் தர்ம ஸம்ஸ்தாபாநார்த்தம்
பரித்ராணாயா சாது நாம் –அங்கு உள்ள பரித்ராணாயா -இங்கு சம்ஸ்லேஷம் —
சாமான்யமான பரித்ராணாம் சங்கல்ப மாத்திரத்தாலே ஆகுமே -அதற்காக வந்து பிறக்க வேண்டாவே –
ஸ்ரீ கீதா பாஷ்யம் அந்தரதிகரணம் இரண்டிலும் எம்பெருமானார் பற்றின திரு உள்ளம் இதுவே
ஸூர நராத்யாகார திவ்யாக்ருதி –மத்யேண்டம் யத் அவாதரஸ்–தேவாதி சஜாதீயராய் -திவ்யமான உருவத்தைக் கொண்டு
அண்டங்களின் இடையே அவதரித்தீர் என்பது யாது ஓன்று உண்டு
தேநைவ –இப்படி அவதரித்து அருளியதனாலேயே –
த்ரி தசைர் நரைச் ச –தேவர்களாலும் மநுஷ்யர்களாலும்
ஸ்வ பிரார்த்தித பிரார்த்தநம் –ஸூ கரம் –தம் தமக்கு வேண்டியவற்றை வேண்டிக் கொள்வது எளிதாகவே
கண்ணுக்கு புலப்பட்டு நிற்கவே அன்றோ வணங்கி வழிபட்டு யாசிக்க அவகாசம் உண்டாயிற்று
ஸ்வ அபி லஷித வஸ்து -பிரார்த்தனம் -என்றதாயிற்று –

——————–

ஸ்ரீ மத் மஹா வந கிரீச விசீதயோர்ஸ் தே
மத்யே து விஷ்ணுரிதி ய பிரதம அவதார
தேநைவ சேத தவ மஹிம்நா ஜனா கில அந்தாத்
த்வந் மத்ஸ்ய பாவம் அவகம்ய கதம் பவேயு —87-

விபவ அவதாரம் பிரசுத்துதமாகவே இதில் விவஷிதமான விஷயங்களை எல்லாம் அடைவே அருளிச் செய்கிறார்
மத்யே விரிஞ்ச கிரிஸம் பிரதம அவதாரம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் உத்தர சதகம் -51-ஸ்லோகம் இந்த ஸ்லோக விவரணம்
ஸ்ரீ மத் மஹா வந கிரீச –இரண்டும் சம்போதானம் -ஒன்றே-ஸ்ரீ மத்வத்தை திருமலைக்கு அழகருக்கு அன்வயித்து – என்றுமாம்
விசீதயோர்ஸ் மத்யே து விஷ்ணுரிதி தே ய பிரதம அவதார –பிரமன் சிவன் இவர்களின் இடையே
தேவரீர் விஷ்ணு என்று முதல் முதலிலே செய்த திரு அவதாரம் யாது ஓன்று உண்டு
தேநைவ தவ மஹிம்நா ஜனாந் அந்தாத் சேத் -அது கொண்டு ஜனங்கள் தேவரீருடைய பெருமையில்
குருடர்களாக ஆவார்கள் ஆனால் -தேவரீருடைய மஹிமையை உள்ளபடியே உணராதே
விபரீதமாககே கொள்வார்களாகில்
த்வந் மத்ஸ்ய பாவம் அவகம்ய கதம் பவேயு —தேவரீர் மத்ஸ்ய அவதாரம் செய்து அருளின படியை
அறிந்து என்னாவார்களோ –
தேவயானில் அவதரித்து இருந்தாலும் ப்ரபாவத்தை பிரமித்து இருக்க நீச யோனியில் ஜெனித்தது கொண்டு
அதிகமாக பிரமிப்பார்கள் அன்றோ என்றபடி
தவான் மத்ஸ்ய பாவம் -மர்த்ய பாவம் -பாட பேதங்கள்
நல்லரன் நாரணன் நான்முகனுக்கு –பெரிய திருமொழி -2-9-1-
பிரஹ்மேஸ மத்ய கணநா –அதி மானுஷ ஸ்தவம்
இவர்களோடு ஓக்க நினைப்பது அநுசிதம் அன்றோ

——————-

ஹே தேவ ஸூந்தர புஜ இஹ அண்ட மத்யே
ஸுவ்லப்யதோ விசத்ருசம் சரிதம் மஹிம்ந
அங்கீ கரோஷி யதி தத்ர ஸூரரைர் அமீபி
சாம்யாந் நிகர்ஷ பரிபாலநம் ஏவ சாது—88–

புருஷோத்தமனை இவர்களுக்கு சமமாக எண்ணுவதில் காட்டில் தாழ்வாக எண்ணுவதே நலம் –
ஷூத்ரர்களோடே சமமாக நினைப்பதும் தாழ்வாக நினைப்பதும் துல்யமே -என்பது கருத்து
ஹே ஸூந்தர புஜ -தேவ-
இஹ அண்ட மத்யே -இந்த அண்ட மத்யத்திலே திரு அவதரித்து
மஹிம்ந–விசத்ருசம்- சரிதம்-அங்கீ கரோஷி யதி-பரத்வத்துக்கு எதிர்த்தட்டாய் இருக்கும்
நிலைமை ஏற்றுக் கொள்ளும் அளவில்
சாம்யாத் நிகர்ஷ பரிபாலநம் ஏவ சாது -சாம்யா பிரதிபத்தி கொள்ளுமத்தில் காட்டிலும்
அபகர்ஷ பிரதிபத்தி கொள்ளுமதே நன்றாம்
அபகர்ஷ பிரதிபத்தி எப்படி அவிவிவேக க்ருத்யமோ அப்படியே
சாம்யா பிரதிபத்தியும் அவிவிவேகம் -என்றதாயிற்று
ப்ரஹ்மாதி இடையில் அவதரித்து அவர்களுக்கு சாம்யம் சொல்லும்படி பிரமிப்பதில் காட்டில்
திர்யக்க்காதிகளின் இடையில் அவதரித்து அவர்களுக்கு சாம்யம் சொல்லும் படி இருப்பதே மேல் -என்றுமாம்

———–

இஹ அவதீர்ணஸ்ய வநாத்ரி நாத
நீ கூ ஹத ஸ்வம் மஹிமாநம் ஐஸ்வரம்
உமாபதே கிம் விஜய பிரியங்கர
பிரியங்கரா வா இந்த்ரஜிதஸ்த்ர பந்த நா –89-

அவதாரங்களில் எம்பெருமானுக்கு அபகர்ஷம் நினைக்கும்படியாக சில சரித்திரங்கள் உண்டே
தனது பெருமையை மறைத்துக் காட்ட விலக்ஷண சங்கல்ப விசேஷணத்தாலேயான அந்தச் சரித்ரங்களைக் கொண்டே
அந்யதா பிரதிபத்தி கொள்ளலாகாது என்கிற தாத்பர்யத்தை திரு உள்ளத்திலே கொண்டு
எம்பெருமானையே கேள்வி கிடக்கிறார் இதில்
ஹே வநாத்ரி நாத ஐஸ்வரம்-ஸ்வம் மஹிமாநம்-நீ கூ ஹத-இஹ அவதீர்ணஸ்ய தே –ஸர்வேச்வரத்வ நிபந்தமாய்
ஸ்வதஸ் ஸித்தமான பெருமையை மறைத்துக் கொண்டு இந்த லீலா விபூதியில்
அவதாரங்களைச் செய்து அருளா நின்ற தேவரீருக்கு
உமாபதே விஜய பிரியங்கர கிம்-இந்த்ரஜிதஸ்த்ர பந்த நா –பிரியங்கரா வா-பாணாசூர யுத்தத்தில் சிவனைப்
பங்கப்படுத்தின செயல் திரு உள்ளத்துக்கு உகப்பானதோ அல்லது
இந்திரஜித்தின் மாயா அஸ்திரத்தால் கட்டுண்டு கிடந்தது–ஸ்ரீ ராமாயணம் உத்தர காண்டம் -45-சர்க்கத்தில் -உள்ள
வ்ருத்தாந்தம் – திரு உள்ளத்துக்கு உகப்பானதோ -என்பர் சமஸ்க்ருத வ்யாக்யாதா
உமாபதே விஜய-என்பதற்கு உமாபதியான சிவனை தோற்ப்பித்தது -என்பதை விட
உமாபதியான சிவன் வெற்றி அடையும்படி செய்தது என்ற பொருளே சிறக்கும்
நீ கூ ஹத ஸ்வம் மஹிமாநம் ஐஸ்வரம் –என்று மேன்மையை மறைத்துக் கொண்டு அவதாரம் செய்து
அருளின படியை அன்றோ இங்கு பிரஸ்தாபம்
எம்பெருமான் சிவன் இடம் புத்ர வரம் கேட்பது முதலான அபதானங்களில் சிவனுக்கு
வெற்றி சொல்லலாம் படி அன்றோ உள்ளது
கள்வா எம்மையும் ஏழு உலகையும் நின்னுள்ளே தோற்றிய இறைவா என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே –திருவாய் -2-2-1-

——————–

புச்சோத் புச்சந மூர்ச்சந உத்ததிதுத வ்யாவ்ருத்தி தாவர்த்தவத்
சம்வர்த்தவ அர்ணவ நீர பூர விலுடத் பாடீந திவ்யாக்ருதே
ஸிம்ஹாத்ரீச ந வைபவம் தவ கதம் ஸ்வா லஷ்யம் அலஷ்யதே
பத்மா ஷஸ்ய ஜூ குஷதோபி விபவம் லஷ்மிதா அதோ ஷஜ–90-

எம்பெருமான் பரத்வம் மறைத்துக் கொள்ள நினைத்தாலும் மறைக்க உண்ணாமல் வெளிப்படும் இடங்கள் உண்டே
இது தொடக்கி மத்யாதி அவதாரங்களை அடைவே அனுபவிக்கிறார் -மத்ஸ்யாக்ருதியை அத்புதமாக வர்ணிக்கிறார்
ஹே ஸிம்ஹாத்ரீச–
லஷ்மிதா அதோ ஷஜ-
புச்சோத் புச்சந மூர்ச்சந உத்ததிதுத வ்யாவ்ருத்தி தாவர்த்தவத்
சம்வர்த்தவ அர்ணவ நீர பூர விலுடத் பாடீந திவ்யாக்ருதேஸ் தவ –மீனாய் அவதரித்த போது–
வாலை உயரத் தூக்குவது -குறுக்கே பரப்புவது -ஆகிய இச்செயல்களினால்
நடுக்கமுற்றதாகச் செய்யப்பட்டதும்
சுழற்சியை உடையதாய்ச் செய்யப்பட்டதுமான பிரளய ஆர்ணவத்தின் நீர் வெள்ளத்திலே புரளா நின்ற
திவ்ய மத்ஸ்யாக்ருதியைக் கொண்ட தேவரீருடைய
ஆவர்த்தவத்–என்றது -நீர்ச் சுழிகளை உடைய என்றபடி -இது ஸ்வபாவிக விசேஷணம்
சாமான்ய மீன் உருவம் இல்லையே -அப்ராக்ருத அதி விலக்ஷண மத்ஸ்ய விக்ரஹத்தைக் கொண்ட தேவரீருடைய
ஸ்வா லஷ்யம் – வைபவம் கதம் ந அலஷ்யதே -நன்கு காணக்கூடிய வைபவம் எங்கனே காண முடியாமல் போகும்
விபவம்-ஜூ குஷதோபி-பத்மா ஷஸ்ய -தவ -என்று கீழோடே அன்வயம் –
தேவரீர் பெருமையை மறைத்துக் கொள்ள வேணும் என்று தேவரீர் விரும்பின போதிலும் -என்று தாத்பர்யம்
இங்கு -பத்மா ஷஸ்ய-சாபிப்ராயம் -செந்தாமரைக் கண்ணரான தேவரீர் அவதாரத்தில் அக்கண் அழகை
மறைத்துக் கொள்ள முடியுமாகில் மற்றுள்ள பெருமைகளையும் மறைத்துக் கொள்ள முடியும் என்று காட்டின படி
பீஷ்ம த்ரோண வதிக்ரம்ய மாஞ்சைவ மது ஸூதந–கிமர்த்தம் புக்தம் வ்ருஷல போஜனம் -என்று
அதி ஷேபிக்க வந்த துர்யோதனும் -கிமர்த்தம் புண்டரீகாக்ஷ -என்று பரவசமாகச் சொல்லும்படி ஆயிற்றே

———————

சா சலா வட தடாக தீர்க்கிகா ஜாஹ்நவீ ஜல விவர்த்தித ஷயே
ச்ருங்க சங்கமித நவ்ர் மநோரபூ ர் அக்ர தோண்டஜ வபுர் ஹி ஸூந்தர -91-

க்ருதமாலா நதி -சத்யவ்ரதர் -ஏழு நாட்களுக்குப் பின் பிரளயம் -அண்டகடாஹத்து அளவும் துள்ளி விளையாட –
பிரளய ஆபத்தில் இருந்து பிரஜைகளை வேதத்தையும் ரஷித்து அருளின சரித்திரம்
இதிலும் அடுத்த ஸ்லோகத்திலும் அனுபவம்
ஹே ஸூந்தர –
ஷயே-பிரளய காலத்திலே
அண்டஜவபுஸ் சந் –மத்ஸ்ய திருமேனியை உடையராய்க் கொண்டு
சா சலா வட தடாக தீர்க்கிகா ஜாஹ்நவீ ஜல விவர்த்தித –அமர கோசாப்படி -அசலா என்று பூமிக்கு வாசகம்
அவடம் -என்பது பள்ளம்
தடாகம் என்பது ஏரி
தீர்க்கிகா -என்பது நடை வாவி
ஜாஹ்நவீ–என்பது கங்கை -இவற்றினுடைய தீர்த்தத்தினால் வளரச் செய்யப்பட்டவராய் -என்றபடி –
முதலிலே பூமியிலே விட -பின்பு பள்ளத்தில் விட -முடிவிலே கடலிலே விட்ட வருந்த்தாந்தம் உண்டே
ஜாஹ்நவி ஜலதி வர்த்தித -பாடம் திரிந்து ஜலவி வர்த்தித -என்று திரிந்து இருக்கும் என்பர்
மநோ-அக்ர தோ -ச்ருங்க சங்கமித நவ்ர் அபூ ர் –சத்யவ்ரதரே மனு என்னப்படுகிறார் இங்கு –
அவர் முன்னிலையில் சிரசில் தோன்றிய கொம்பிலே கட்டப்பட்ட படகை உடையீர் ஆனீர் என்றபடி –
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்தர சதகத்தில் –மீந தநுஸ் த்வம் நாவி நிதாய ஸ்திர சர பரிகரம் அநுமநு பகவன்
இத்யாதி ஸ்லோகமும் அனுசந்தேயம்

———————-

ப்ரலயஜ நீரபூர பரிபூரி தஸ்வ நிலய அவசந் நவ தந
ப்ரமத் அசரண்ய பூத சரணார்த்தி நாகி சரணம் பவந் ஸ்வ க்ருபயா
சலதுத தீரி தாம்பு கலுஷீ க்ரியாட்ய கமன ஸ்வ ப்ருஷ்ட வித்ருதா
சலகுல ஏஷ மீநதநு ரத்ர ஸூந்தர புஜோ வநாத்ரி நிலய–92-

நிலையிடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட இமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை என்ன அரணாவான் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப வகடாடவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வரு மீனமாலை இறைஞ்சு என் மனனே –பெரிய திருமொழி
பாசுரத்தில் -பொருள் ஒற்றுமை -வ்ருத்த பங்கி -பாதம் தோறும் -23- அக்ஷரங்கள் கொண்டது இந்த ஸ்லோகம் –

ஸ்வ க்ருபயா –தன்னுடைய இயற்க்கை இன்னருளாலே

ப்ரலயஜ நீரபூர பரிபூரி தஸ்வ நிலய அவசந் நவ தந ப்ரமத் அசரண்ய பூத சரணார்த்தி நாகி சரணம் பவந் –
பிரளயத்தில் உண்டான பெரு வெள்ளத்தால் நிரப்பட்ட தம் தாம் இருப்பிடங்களை உடையவர்களாய் –
அத ஏவ மிக வருந்தின முகத்தை உடையவராய் –
தடுமாறினவர்களாய் –
நாதன் அற்றவர்களாய் –
புகலிடம் விரும்புவர்களான தேவர்களுக்குத் தஞ்சமாகக் கொண்டு
1-பரிபூரி தஸ்வ நிலய-2- அவசந் நவ தந-3-ப்ரமத் -4- அசரண்ய பூத -5-சரணார்த்தி-ஆகிய ஐந்தும்
நாகிகளுக்கு விசேஷணங்கள்

சலதுத தீரி தாம்பு கலுஷீ க்ரியாட்ய கமன ஸ்வ ப்ருஷ்ட வித்ருதா
சலகுல ஏஷ மீந தநுர–இவற்றை ஸமஸ்த பதமாகக் கொள்ளவுமாம் –இடையில் உள்ள –
கலுஷீ க்ரியாட்ய கமன என்று விஸர்க்க அந்தமாக்கி -அதை ஒருபதமாகவும்
மேல் உள்ளதை ஒருபதமாகவும் கொள்ளலாம் -பொருளிலும் கருத்திலும் வாசி இல்லை
அலை கடல் நீர் குழம்ப வகடாடவோடி அகல் வான் உரிஞ்ச-என்றதற்கான கருத்தை –
சலதுத தீரி தாம்பு கலுஷீ க்ரியாட்ய கமன-என்றதானாலே அருளிச் செய்கிறார் –
முதுகில் மலைகளை மீது கொண்டு வரு மீனமாலை-என்றதற்கான கருத்தை –
ஸ்வ ப்ருஷ்ட வித்ருதா சலகுல ஏஷ மீநதநு-என்றதானாலே அருளிச் செய்கிறார் –
கொந்தளிக்கின்ற கடல் நீர் வெள்ளத்தை எல்லாம் கலக்கிக் கொண்டு அதனுள்ளே சஞ்சரிப்பவரும் –
முதுகிலே மலைத் திரள்களைத் தாங்கிக் கொண்டு இருந்தவருமான மத்ஸ்யவதாரப் பெருமாள்
அத்ர ஸூந்தர புஜோ வநாத்ரி நிலய–இங்கே திருமாலிருஞ்சோலை மலை உறையும்
சுந்தரத் தோளராக சேவை சாதித்து அருளுகிறார் -என்கை –

————-

ஸ்வ ப்ருஷ்டே ப்ரஷ்டாத்ரி பிரமண கரணை கிஞ்ச பணிந
விக்ருஷ்டி வ்யாக்ருஷ்டி வ்யதி விதுத துக்தாப்தி சலிதை
அவிஷ் பந்தோ நந்தந் விகஸதர விந்தேஷண ருசிர்
புராபூஸ் சிம்ஹாத்ரே ப்ரியதம ஹரே கச்சப வபுஸ் –93-

ஸ்ரீ கூர்மாவதார வைபவ அனுபவம்
ஹே சிம்ஹாத்ரே ப்ரியதம ஹரே –திருமாலிருஞ்சோலை மலைக்கு அன்பரான அழகரே
புரா-பண்டு ஒரு காலத்தில் -தேவர்களுக்கு அமுதம் அளிக்கக் கடல் கடைந்த காலத்தில் -என்றபடி –
ஸ்வ ப்ருஷ்டே ப்ரஷ்டாத்ரி பிரமண கரணை –தம்முடைய முதுகின் மீது முந்துற முன்னம் வந்து நின்ற
மந்தர மலையைச் சுழற்றினதாலும்
ப்ரஷ்டாத்ரி-சிறந்த மலை என்று மந்த்ர மலையைச் சொல்லிற்றாகும்
கிஞ்ச பணிந விக்ருஷ்டி வ்யாக்ருஷ்டி வ்யதி விதுத துக்தாப்தி சலிதை –மந்த்ர மலையை மத்தாக நாட்டிச் சுழன்ற
அளவு அன்றிக்கே-வாசுகி நாகத்தைக் கடை கயிறாகப் பூட்டி இடம் வலம் கொள்ள இழுப்பதினாலே
மிகவும் அசைத்தல் உற்ற திருப் பாற் கடலின் அசைவினாலும்
அவிஷ் பந்தோ –தான் சிறிதும் அசைதல் அற்று
நந்தந் –ஆஸ்ரிதர்களான தேவர்கள் கார்யம் தலைக்கட்டப் பெறுகிறது என்று திரு உள்ளம் உகந்து
விகஸதர விந்தேஷண ருசிர் -அப்போது அலர்ந்த செந்தாமரை போன்ற திருக் கண் அழகை உடைய
கச்சப வபுஸ் அபூஸ் –ஆமை வடிவை உடையீர் ஆனீர் -தம் உடலைப் பேணாமல்
ப்ரணத ஜன மனோ ரத பரிபூர்ணத்தையே விரதமாகக் கொண்டவர் என்கிற
குண அதிசயம் அனுபவிக்கப் பட்டதாயிற்று –

———————–

ஜகத் ப்ரலீ நம் புநருத்தி தீர்ஷத
ஸிம்ஹ ஷிதிஷிந் நிலயஸ்த ஸூந்தர
புரா வராஹஸ்ய தவேய முர்வரா
தம்ஷ்ட் ராஹ்வய இந்தோ கில லஷ்மி லஷிதா –94-

திவ்ய ஸ்ரீ வராஹ மூர்த்தி அனுபவம் -கோலா வராஹ திருமேனி பெருமையை யாவரும்
ஒரே சமத்கார வகையிலே பேசி அனுபவிப்பார்கள்
சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக்குளம்பில் கண கணப்பத் திருவாகாரம் குலுங்க
நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எம் கோமான் –என்றும்
தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உலகு ஏழு உடன் உடனே மாதிர மண் சுமந்த வட குன்று நின்ற மலை
யாறும் ஏழு கடலும் பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின் ஒரு பால் அடங்க வளர் சேர்
ஆதி முன் ஏனமாகி யரணாய மூர்த்தி யது –என்றும் திருமங்கை ஆழ்வார் அனுபவம்
இங்கு ஆழ்வானுடைய விலக்ஷணமான உல்லோகம் காணீர்
ஸிம்ஹ ஷிதிஷிந் நிலயஸ்த ஸூந்தர -சிம்ஹாத்ரியான திருமாலிருஞ்சோலை மலையிலே
எழுந்து அருளி இரா நின்ற அழகரே
ஷிதிஷித் -பர்வதம்
புரா ப்ரலீ நம் ஜகத் புநருத்தி தீர்ஷத வராஹஸ்ய தவ–பண்டு ஒருகால் ப்ரளய அர்ணவ மக்நமான ஜகத்தை
புனருத்தாரம் செய்ய நினைத்து அருளின ஸ்ரீ வராஹ ரூபியான தேவரீருடைய
தம்ஷ்ட் ராஹ்வய இந்தோ–கோரைப்பற்கள் என்னும் சந்திரனுக்கு
இயம் உர்வரா லஷ்மி கில லஷிதா –ஸஸ்யங்கள் நிறைந்த இந்த பூமியானது ஒரு களங்கமாக
அன்றோ காணப்பட்டது
பூ மண்டலம் முழுவதும் கோரப்பல்லிலே ஏக தேசமாகக் காணப்பட்டது என்றால்
அந்த ஸ்ரீ வராஹ மூர்த்தியின் வைபுல்யம் அளவிட முடியாது என்கை –

———————-

நவாயுர் பஸ் பந்தே யயதுர் அதவா அஸ்தம் சசிரவீ
திச அநஸ்யந் விஸ்வாபி அசலா அசலத் சா சலகுலா
நபச் ச ப்ரச்ச்சோதி க்வதி தமபி பாதோ நரஹரவ்
த்வயி ஸ்தம்பே சும்பத் விபூஷி சதி ஹே ஸூந்தர புஜ –95-

இது முதல் மூன்று ஸ்லோகங்களால் ஸ்ரீ நரஸிம்ஹ அவதார அனுபவம்
அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் தோன்றிய போது உலகம் எல்லாம் நடுங்க –
காற்றும் அசையாமல் -சந்த்ர சூரியர்கள் உதிக்காமல் -திசைகள் தென்படாமல் –
பர்வத சமூகங்களோடு கூடிய ஸமஸ்த பூ மண்டலமும் ஆடி அசைந்ததே -ஆகாசமும் விகாரப்பட்டது –
கடல் நீரும் கொதிப்படைந்து -இப்படியாக அந்த நிலைமையை என் சொல்வோம் என்கிறார் இதில்
ஹே ஸூந்தர புஜ —
த்வயி நரஹரவ் ஸ்தம்பே சும்பத் விபூஷி சதி –தேவரீர் ஸ்ரீ நரஸிம்ஹ உருவினராய்க் கொண்டு
ஹிரண்யாசூர க்ருஹ ஸ்தம்பத்திலே பிரகாசித்த வடிவை யுடையவரான அளவிலே –
ப்ராதுர்பவித்து அருளின அளவிலே
வாயுர் ந பஸ் பந்தே –தேவரீருடைய திவ்ய ஆஜ்ஜைக்குக் கட்டுப்பட்டு சதாகாதியாய் இருக்கக் கடவனான
வாயுவும் கூட அசைந்திலேன்
அதவா-சசிரவீ- அஸ்தம் -யயதுர்-அதற்கு மேல் சந்த்ர சூர்யர்களும் அஸ்தமித்தே கிடந்தார்கள் -உதிக்கப் பெற்றிலர்
திச அநஸ்யந் –கிழக்கு முதலிய திசைகளும் தெரியாது ஒழிந்தன
சா சலகுலா விஸ்வாபி அசலா அசலத்–பர்வத சமூகங்களோடு கூடின நிலவுலகம் முழுவதும் ஆடல் கொடுத்தது
நபச் ச ப்ரச்ச்சோதி –ஆகாசமும் சரிந்து கடலில் ஆழ்ந்தது -என்று அதிசய யுக்தி இருக்கிற படி
பாத அபி க்வதிதம் -கடல் நீரும் கொதிப்படைந்ததாயிற்று

————-

அராலம் பாதாலம் த்ரிதச நிலய பிராபித லய
தரித்ரீ நிர்த்தூதா யயுரபி திச காமபி திசம்
அஜ்ரும்பிஷ்ட அம்போதி குமுகுமிதி கூர்ணந் ஸூரரிபோ
விபந்தாநே வக்ஷஸ் த்வயி நர ஹரவ் ஸூந்தர புஜ –96-

கீழ் ஸ்லோகத்தில் தூணில் நின்று ஆவிர்பவித்த போது நடந்தவை சொல்லிற்று
இதில் ஹிரண்யன் உடலைப் பிளந்த போது உண்டான சம்பவம் சொல்லுகிறது
ஹே ஸூந்தர புஜ –த்வயி நர ஹரவ் -ஸூரரிபோ-வக்ஷஸ் -விபந்தாநே -சதி–தேவரீர் ஸ்ரீ நரஸிம்ஹ மூர்த்தியாகி
ஹிரண்யாசூரனுடைய மார்பைத் திரு உகிறாள் கீண்டு அருளின அளவிலே
பாதாலம்-அராலம் –பாதாள லோகமானது தலை தடுமாறிற்று
த்ரிதச நிலய பிராபித லய –தேவர்களின் குடியிருப்பான ஸ்வர்க்க லோகமும் லாயமடைந்ததாயிற்று –
இருந்த இடமே தெரியவில்லை என்றபடி
தரித்ரீ நிர்த்தூதா –பூமியானது மிகவும் கம்பம் அடைந்தது
திச அபி காமபி திசம் யயுர் –திக்குகளும் ஏதேனும் ஒரு திக்கை அடைந்தன –
திசைகளும் மறைந்தன என்றபடி
அம்போதி குமுகுமிதி கூர்ணந் அஜ்ரும்பிஷ்ட –கடலும் குழு குழு என்கிற ஓசையோடு சுழன்று கொந்தளித்தது
ஆக இவ்வளவு பயங்கரமான நிலை யாயிற்று -என்கை

————–

நக க்ரக சக பிரதி க்ரதித தைத்ய வக்ஷஸ் ஸ்தலீ
சமுத்த ருதிரச் சடாச்சுரித பிம்பிதம் ஸ்வயம் வபுஸ்
வி லோக்ய ருஷித புந பிரதி ம்ருகேந்த்ர சங்கா வசாத்
ய ஏஷ நரகேஸரீ ச இஹ த்ருச்யதே ஸூந்தர –97-

கீழ் இரண்டால் சீற்றத்தின் விளைவு அருளிச் செய்தார் –
இதில் மற்றும் ஒரு காரணத்தால் சீற்றம் விளைந்தது என்கிறார்
ஸ்ரீ பேயாழ்வார் -பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு பேர்த்து ஒரு கடுவன் எனப் பேர்ந்து–என்று
அருளிச் செய்த கணக்கிலே பிரதிபிம்பம் கண்டு மிருகங்கள் சீறுமே -அது தன்னைச் சொல்கிறார் இதில்
ய ஏஷ நரகேஸரீ
நக க்ரக சக பிரதி க்ரதித தைத்ய வக்ஷஸ் ஸ்தலீ-சமுத்த ருதிரச் சடாச்சுரித பிம்பிதம் ஸ்வயம் வபுஸ் வி லோக்ய —
திரு நகங்களாகிற ரம்பங்களின் நுதியாலே பிளக்கப்பட்ட ஹிரண்யனின் மார்வகலத்தில் நின்றும் கிளர்ந்த
உதிர வெள்ளத்தால் தோன்றின பிரதிபிம்ப ரூபமான தம்முடைய திரு மேனியைத் தாமே பார்த்து
பிரதி ம்ருகேந்த்ர சங்கா வசாத் புநர் ருஷித -தமக்கு எதிராகத் தோன்றின மற்றொரு சிம்ஹமோ என்ற
சங்கையினால் முன்னிலும் அதிகமாக சீற்றம் உற்றனரோ
ஏஷ இஹ ஸூந்தர –த்ருச்யதே–அவர் தாமே இந்தத் திருமலையில் அழகராக சேவை சாதிக்கிறார் என்று
தர்மி ஐக்கியம் அனுசந்திக்கப்பட்டதாயிற்று
ஸ்வ ப்ரதிபிம்பத்தைக் கண்டு சீற்றம் உற்றதாகச் சொன்ன இதனால்
ஸிம்ஹ ஜாதியின் மெய்ப்பாடு சொல்லிற்று

——————-

ஷிதிரியம் ஜநி ஸம்ஹ்ருதி பாலநை நிகிரண உத்கிரண உத்தரணைர் அபி
வந கிரீச தவைவ ஸதீ கதம் வரத வாமன பிஷணம் அர்ஹதி-98–

ஸ்ரீ வாமன அவதாரத்தில் ஈடுபடுகிறார்
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாகாக்கால் பேராளா-மார்பாரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி
நீர் ஏற்பு அரிதே சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து -என்று பெரிய திருவந்தாதியில் எம்பெருமானை
மடி பிடித்து ஒரு கேள்வி கேட்டாரே -அத்தை தழுவியே இந்த ஸ்லோகம்
வந கிரீச -வரத வாமன-இயம் ஷிதி ஜநி ஸம்ஹ்ருதி பாலநை நிகிரண உத்கிரண உத்தரணைர் அபி
தவைவ ஸதீ கதம் பிஷணம் அர்ஹதி—திருமாலிருஞ்சோலைக்குத் தலைவனான வரம் தரும் வாமன மூர்த்தியே
இப்பூ மண்டலம் முழுதும் படைத்தல் துடைத்தல் காத்தல் உண்டு உமிழ்தல் இடந்து எடுத்தல் முதலிய செயல்களால்
சர்வாத்மநா உனக்கே அன்றோ வஸ்யமாய் இரா நின்றது
இதனை ஒரு பையல் பக்கல் பிஷுவாய்
சென்று யாசித்துப் பெற்றது என் கொல் என்று கேட்க்கிறார்
ஜன்ம வாசகமான ஜனி சப்தம் உபசாராத ஸ்ருஷ்டிக்கு வாசகம் –

சதுர்முக முகேன ஸ்ருஷ்ட்டித்தும் -ஸ்வேந ரூபேண ரஷித்தும் போருகிற பிரகாரங்களாலே உனக்கே ஸ்வம்மான
இந்த லோகத்தை ஒரு பையல் தன்னதாக அபிமானித்து இருந்தானாகில்
அவனை நேர் கொடு நேராக தண்டித்து வாங்கிக் கொள்ளலாய் இருக்க அது செய்யாதே யாசகனாய்ச் சென்று
பல் பன்னிரண்டும் காட்டி இரந்து தான் பெற வேணுமோ –
பெறுவதற்கு வேறே உபாயம் அறிந்திலையோ -என்று கேள்வியை விரித்துக் கொள்க
வரத–என்கிற சம்போதானம் சாபிப்ராயம் –
வரம் தரும் பெருமாள் என்று விருது வஹித்து அலம் புரிந்த நெடும் தடக்கையனாய் இருந்து வைத்தும் பிஷுகனாகலாமோ
மகாபலியின் ஓவ்தார்யம் என்ற ஒரு தர்ம ஆபாசத்தை ஏன்று கொண்டு அதுக்குத் தக்க வேஷம் என்று சமாதானம்
ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் உத்தர தசகத்திலும்–
தைத்ய ஓவ்தார்யேந்த்ர யாஸ்ஞா விஹதிமபநயந் –ஸ்லோகமும் அனுசந்தேயம்

—————

பார்க்கவ கில பவந் பவாந் புரா குந்த ஸூந்தர வநாசலேஸ்வர
அர்ஜுனஸ்ய பல தர்ப்பி தஸ்ய து ச்சேத்ஸ்யதி ஸ்மரதி பாஹு காநநம் –99-

ஸ்ரீ பரசுராம அனுபவம்
கார்த்த வீர்யார்ஜுனன் ஜமதக்கினி முனிவரைக்கொன்றுகாமதேனுவை கவர்ந்திட —
ஷத்ரிய -21-தலைமுறை பொருதுபி அழித்தபி சரித்திரம்
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால் அழித்திட்டவன்
அடல் புரை எழில் திகழ் திறல் தோள் ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி மற்று
அவன் அகல் விசும்பு அணைய–திருமங்கை ஆழ்வார் -அருளிச் செய்ததை ஆதி ஒற்றி இந்த ஸ்லோகம்
கோகுல மன்னரை மூ வெழு கால் ஓர் கூர் மழுவால் போக்கிய தேவனை போற்றும் புனிதன் –ராமானுஜன்
பிருகு குலத்தில் தோன்றியபடியால் பார்க்கவ -என்றது

ஹே குந்த ஸூந்தர வநாசலேஸ்வர –குருந்த மரங்களால் அழகிய திருமாலிருஞ்சோலை
திருமலைக்குத் தலைவரே
புரா கில பவாந் பார்க்கவ பவந் –பண்டு தேவரீர் பரசுராமராக திருவவதரித்து
பல தர்ப்பி தஸ்ய அர்ஜுனஸ்ய–வலிமைச் செருக்கு உள்ளவனான கார்த்த வீர்யார்ஜுனனுடைய
பாஹு காநநம் சேத்ஸ்யதி ஸ்மரதி –புஜ வனத்தை அறுத்து ஒழித்தீர்

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -ஸ்லோகங்கள்—69–83–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

October 28, 2019

கீழே -30-ஸ்லோகங்களாலே -39-முதல் -68-வரை அழகருடைய கேசாதி பாதாந்த திவ்ய அவயவ வர்ணனம்
இனி ஸ்ரீ பூமி நீளா தேவிகள் ஆகிய திவ்ய மஹிஷிகளின் சேர்த்தியையும்
சேஷ சேஷாசந கருட பிரமுக நித்ய ஸூரி களின் பரிசார்யா விசேஷங்களையும் அனுபவிக்கத் திரு உள்ளம் பற்றி
ஸ்ரீ மஹா லஷ்மியின் நித்ய யோகத்தை அருளிச் செய்கிறார் இதில்
யாவள் ஒரு பிராட்டியின் கடாக்ஷமானது இந்திராதி தேவர்களுக்கும் ஐஸ்வர்ய ஹேது என்பது சர்வ ஜன சம்மதமோ –
அந்தப் பிராட்டியும் அழகரை ஆஸ்ரயித்தே ஸ்ரீ என்கிற திரு நாமம் பெறுகிறாள் –
அழகர் தாமும் திருவுக்கும் திருவாகிய செல்வராக விளங்குகிறார் என்கிறார்

யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வரானாம்
ஐஸ்வர்ய ஹேதுரிதி சர்வ ஜநீ நமேதத்
ஸ்ரீஸ் சேதி ஸூந்தர நிஷே வணதோ நிராஹூ
தம் ஹி ஸ்ரிய ஸ்ரியம் உதாஹு ரு தாரவாச –69 –

யஸ்யா கடாக்ஷணம் –யாவள் ஒரு பிராட்டியின் கடைக்கண் பார்வை யானது
ஈஸ்வரானாம் -அநு க்ஷணம்-
ஐஸ்வர்ய ஹேதுரிதி ஏதத் சர்வ ஜநீ நம் –ஈஸ்வரர் என்று பேர் பெற்றவர்களுக்கு எல்லாம் அடிக்கடி
ஐஸ்வர்ய ஹேது வாகிறது என்பது நிர்விவாதமாய் இருக்கின்றதோ
சா ஸூந்தர நிஷே வணதோ ஸ்ரீ இதி நிராஹூ -அந்தப்பிராட்டி தானும் அழகரை ஆஸ்ரயிப்பதானாலேயே
ஸ்ரீ என்று பேர் பெறுகிறாள் என்று ஸ்ரீ சப்த நிர்வசன கர்த்தாக்கள் கூறுகின்றனர்
ஸ்ரீ சப்தத்துக்கு ஆறு வகை வியுத்பத்திகள் உள்ளன
அவற்றுள் ஸ்ரேயதே என்பது ஒரு வ்யுத்பத்தி -எம்பெருமானைப் பற்றி ஸ்வரூப லாபம் அடைபவள் –
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -என்றதாயிற்று –
இனி பிராட்டிக்கு எம்பெருமானாலே ஏற்றம் என்பது போலே
எம்பெருமானுக்கும் பிராட்டியாலே ஏற்றம் என்பது ஓன்று உண்டு அன்றோ -அது சொல்லுகிறது நான்காவது பாதத்தினால்
உ தாரவாச –தம் ஸ்ரிய ஸ்ரியம் உதாஹு –திருவுக்கும் திருவாகிய செல்வா-என்று அருளிச் செய்த திருமங்கை ஆழ்வாரையும் –
க ஸ்ரீ ஸ்ரிய-என்று அருளிச் செய்த ஆளவந்தாரையும்-இங்கே உதார வாக்குகள் என்கிறார் –
திருவே துயில் எழாய்–திருப்பாவை -20-ஆறாயிரப்படியிலும் உதார வாக்குகள் ஆகிறார் –
திருமங்கை ஆழ்வாரும் ஆளவந்தாரும் பட்டரும் -என்று அருளிச் செய்ததும் காணலாம்

ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் -29-ஸ்லோகம் இதே போலே முதல் இரண்டு பாதங்களில் வாசி இல்லை
மூன்றாம் பாதம் –தாம் ஸ்ரீ ரிதி த்வத் உபசம் ஸ்ரயணான் நிராஹு –என்று அங்கே உள்ளது
இங்கு அழகர் திரு நாமம் இட்டு சொல்ல வேண்டுகையாலே -ஸ்ரீஸ் சேதி ஸூந்தர நிஷே வணதோ நிராஹூ என்று
சிறிது மாறுபட்டு உள்ளது –
இனி நான்காம் பாதத்திலும் -அங்கு த்வத் உப ஸம்ஸரயணாத்–என்று மத்யம புருஷ நிர்த்தேசமாக மூன்றாம் பாதத்தில்
இருப்பதுக்குச் சேர நான்காம் பாதத்திலும் த்வத் என்று – யுஷ்மத்-சப்த நிர்தேசம் பிராப்தம் ஆயிற்று –
இங்கு -ஸூந்தர நிஷே வணதோ–என்று பிரதம புருஷ நிரதேசமே உள்ளதால் அதுக்குச் சேர
நான்காம் பாதத்தில் -தம் -என்று இருக்கத் தாக்குமே அல்லது -த்வாம் -என்று இருக்காது தகாது –

————————

திவ்ய அசிந்த்ய மஹாத்புத உத்தம குணைஸ் தாருண்ய லாவண்யக
ப்ராயைர் அத்புத பாவ கர்ப்ப சததா பூர்வ பிரியைர் விப்ரமை
ரூப ஆகார விபூதி பிச்ச சத்ருசீம் நித்யாந பேதாம் ஸ்ரியம்
நீலாம் பூமி நபீ த்ருசீம் ரமயிதா நித்யம் வநாத் ரீஸ்வர–70-

கீழே பெரிய பிராட்டியாரை மட்டும் அருளிச் செய்து இதில் –
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் -என்கிறபடியே
ஸ்ரீ பூமி நீளா தேவிகளின் பெருமையையும்
அப்பிராட்டிமார்களை அழகர் ரசிப்பித்து அருளும் பரிசையும் பேசுகிறார் –
திவ்ய அசிந்த்ய மஹாத்புத உத்தம குணைஸ் –அப்ராக்ருதங்களாயும் -அப்படிப்பட்டவை என்று
சிந்திக்க முடியாதவைகளாயும் மிக ஆச்சர்யங்களாயும் உத்தமங்களாயுமாய் இருக்கிற
வாத்சல்ய காருண்யாதி ஆத்ம குணங்களாலும்
தாருண்ய லாவண்யக ப்ராயைர் குணைஸ் –யவ்வனம் லாவண்யம் போன்ற
திவ்ய மங்கள விக்ரஹ குணங்களாலும்
அத்புத பாவ கர்ப்ப சததா பூர்வ பிரியைர் விப்ரமை –ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களை உள்ளே
உடையவவைகளாய்-அப்பொழுதைக்கு அப்பொழுது அபூர்வங்களாய் பிரியங்களாயும் இருக்கின்ற விலாசங்களாலும்
ரூப ஆகார விபூதி பிச்ச –ஸ்வரூப விக்ரஹ விபவங்களினாலும்
சத்ருசீம் –துல்ய சீல வயோ வ்ருத்தாம் -துல்ய அபி ஜன லக்ஷணாம் -ராகவோ அர்ஹதி
வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா –என்றும்
பகவந் நாராயண அபிமத அநு ரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி அநவதிக அதிசய அஸங்க்யேய
கல்யாண குண கணாம் –என்றும் சொல்லுகிறபடியே அநு ரூபையாய் இருக்கின்ற
நித்யாந பேதாம் ஸ்ரியம் –நித்ய அந பாயிநீ யான ஸ்ரீ மஹா லஷ்மியையும்
ஈத்ருஸீம் பூமிம் நீலாம் அபி –பூர்வ யுக்த விசேஷண விசிஷ்டைகளான பூமி நீலைகளும்
வநாத் ரீஸ்வர-நித்யம்-ரமயிதா –அழகர் இடையறாமல் ரசிப்பிக்கும் தன்மையர்

இத்தால் அழகரைப் பற்றுவார்க்குக் காலம் பார்க்க வேண்டாதே
புருஷகார சாந்நித்யம் எப்பொழுதும் உள்ளது என்றார் ஆயிற்று –

——————-

அந்யோந்ய சேஷ்டித நிரீக்ஷண ஹார்த பாவ
பிரேமாநுபாவ மதுர ப்ரணய ப்ரபாவ
ஆஜஸ்ரநவ்யதர திவ்ய ரஸ அநு பூதி
ஸ்வாம் ப்ரேயஸீம் ரமயிதா வந சைல நாத –71-

அந்யோந்ய -பெருமாளுக்கும் பிராட்டிக்கும் சர்வாத்மனா உள்ள ஸுவ்மநஸ்யம் பேசப்படுகிறது –
திவ்ய தம்பதிகளுக்கு பரஸ்பரம் அநு பாவ்யம்
சேஷ்டித –புருவ நெறிப்பு -புன் சிரிப்பு முதலான விலாச வியாபார விசேஷங்ககள்
நிரீக்ஷண –கடைக்கண் பார்வை
ஹார்த பாவ –உள்ளே உறையும் அபிப்ராயம் -அதாவது தாருண்ய லாவண்யாதிகள் அநு த்யானம்
பிரேமாநுபாவ –பிரேமாதிசயம் ஆகிய இவற்றால்
மதுர ப்ரணய ப்ரபாவ –பரம போக்யமான அநு ராக அதிசயத்தை உடையரான
வந சைல நாத –அழகர்
ஆஜஸ்ர நவ்யதர திவ்ய ரஸ அநு பூதி சந் -அநவரதம் உண்டாய் இருக்கச் செய்தேயும்
அப்பொழுதைக்கு அப்பொழுது அபூர்வமாய்த் தோன்றுகின்ற அப்ராக்ருதமான
ஆனந்த அனுபவத்தை உடையவராய்க் கொண்டு
ஸ்வாம் ப்ரேயஸீம் ரமயிதா -தம்முடைய தேவியாரை ரசிப்பியா நின்றார்

—————–

ஸூந்தரஸ்ய வன சைல வாசிநோ
போகமேவ நிஜ போகம் ஆபஜந்
சேஷ ஏஷ இதி சேஷதா க்ருதே
ஸ்வநாமநி- அஹிபதிஸ் -ப்ரீதிமாந் —72-

இந்த ஸ்லோகம் முதல் மூன்றால் அநந்த கருட விஷ்வக் சேனர்-முதலானோர் பரிசார்யா விசேஷங்களை
எடுத்து உரைக்கத் திரு உள்ளம் பற்றி –
இத்தால் திரு அனந்தாழ்வானுடைய பரிசார்யா விசேஷத்தை பேசுகிறார்
இந்தத் திருமலைக்கும் சேஷாத்ரி திரு நாமம் உண்டே –
தானே திருமலையாக வடிவு எடுத்து எம்பெருமானுக்கு பரம ஆனந்த ஸந்தோஹ சந்தயாக
ஸ்தான விசேஷமாய் அமைந்து இருக்கிற படி –
இப்படியான விலக்ஷண சேஷத்வம் வாய்த்த படியால் சேஷன் என்கிற தனது
திரு நாமத்தால் மிகவும் உகப்புடையான் என்கிறார் –
அஹிபதிஸ் –சர்ப்ப ராஜனான திருவனந்த ஆழ்வான்
வன சைல வாசிநோ –ஸூந்தரஸ்ய-போகமேவ நிஜ போகம் ஆபஜந் –அழகருடைய ஸ்வ இச்சா விகார
அனுபவத்தையே தன்னுடைய உடலுக்கு சாபல்யமாக நினைத்தவன் என்றபடி –
சர்ப்பத்தின் உடலுக்கு போகம் என்று வடமொழியில் உண்டே –
பகவத் போகத்தையே ஸ்வ பாகமாக கொண்டான் என்று சாடு யுக்தி இருக்கிறபடி
சேஷதா க்ருதே -பரகத அதிசய ஆதேய லக்ஷண -சேஷத்வம் சித்தித்த படியால்
சேஷ ஏஷ இதி ஸ்வநாமநி–ப்ரீதிமாந் –இவன் சேஷன் என்று பலரும் சொல்லும்படியாகத்
தனக்கு வாய்த்த சேஷ நாமத்தில் போர உகப்புடையான் -என்றபடி –

—————

வாஹந ஆசந விதாந சாமராத்யா க்ருதி ககபதிஸ் த்ரயீ மயஸ்
நித்ய தாஸ்ய ரதிரேவ யஸ்ய வை ஏஷ ஸூந்தர புஜோ வநாத்ரிகஸ் –73-

பெரிய திருவடியின் பரிசார்யா விசேஷங்களைப் பேசுகிறார் இதில் –
ககபதிஸ் த்ரயீ மயஸ் –வேதாத்மா விஹகேஸ்வரா என்று வேத ஸ்வரூபியாகச் சொல்லப் பட்ட பெரிய திருவடி
வாஹந ஆசந விதாந சாமராத்யா க்ருதிஸ் சந் —
தாஸஸ் சஹா வாஹனம் ஆசனம் த்வஜோ யஸ்தே விதாநம் வ்யஜனம் த்ரயீ மயஸ் –என்று ஆளவந்தார்
அருளிச் செய்த படியே சமய அநு குணமாக வாஹனமாயும் ஆசனமாயும் விதானமாயும் சாமரமாயும்
மற்றும் பலவாயும் வடிவு எடுத்தவனாய்க் கொண்டு
யஸ்ய வை நித்ய தாஸ்ய ரதி–யாவர் ஒரு அழகருக்கே நித்ய கைங்கர்ய நிரதராய் இரா நின்றாரோ
ஏஷ ஸூந்தர புஜோ வநாத்ரிகஸ் –அப்படிப்பட்ட சுந்தரத் தோளுடைய பெருமாள் திருமாலிருஞ்சோலை மலை உறைகின்றார்
திருமாலிருஞ்சோலை அழகர் பெரிய திருவடியினுடைய சகலவித கைங்கர்யங்களையும் கொண்டு அருளுமா போலே
அடியேன் இடத்திலும் கொண்டு அருள வேணும் என்று விஞ்ஞாபித்த படி

————————

வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய வை
ப்ரபுக்த சிஷ்டாச்யுத ஸைன்ய சத்பதி
ஸமஸ்த லோகைக துரந்தரஸ் சதா
கடாக்ஷ வீஷ்யோ அஸ்ய ச சர்வ கர்ம ஸூ -74-

இதில் சேனாபதி ஆழ்வானுடைய பரிசார்யா விசேஷத்தைப் பேசுகிறார்
ஸைன்ய சத்பதி-ஸ்ரீ சேனாபதி ஆழ்வான்
வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய ப்ரபுக்த சிஷ்டாஸீ சந் –அழகருடைய போனகம் செய்த சேஷம்
உண்பவராய்க் கொண்டு சேனை முதலியாருக்கு சேஷா சநன் –என்றே திரு நாமம் அன்றோ
த்வதீய புக்த உஜ்ஜித சேஷ போஜிநா –ப்ரியேண சேநா பதிநா — என்றார் இறே ஆளவந்தாரும்
சர்வ கர்ம ஸூ-அஸ்ய -கடாக்ஷ வீஷ்யோ –ஜகத் ஸ்ருஷ்ட்யாதி சகல வ்யாபாரங்களிலும்
அழகருடைய கடாக்ஷ வீக்ஷணம் ஒன்றையே எதிர்பார்ப்பவராய்
சதா ஸமஸ்த லோகைக துரந்தரஸ்–ஸ்ரீ மதி விஷ்வக் சேநே ந்யஸ்த ஸமஸ்த ஐஸ்வர்யம் -என்றும்
ஸ்ரீ ரெங்க சந்த்ர மசம் இந்திராயா விஹர்த்தும் விந் யஸ்ய விஸ்வ சித் அசிந்நயனாதிகாரம் யோ நிர்வஹதி–என்றும்
சொல்லுகிறபடியே எப்போதும் ஸமஸ்த லோக நிர்வாஹகராய் விளங்கா நின்றார்

——————

சத்ர சாமர முகா பரிச்சதா ஸூரய பரிஜநச்ச நைத்யகா
ஸூந்தரோரு புஜ மிந்ததே சதா ஞான சக்தி முக நித்ய ஸத் குணாஸ் –75-

அழகருடைய பரிஜன பரிச்சதா கல்யாண குண ஸம்ருத்தியை அருளிச் செய்கிறார்-
நைத்யகா- ஸூரய-நித்ய கைங்கர்ய பாகிகளான ஸூரிகளும்
பரிஜந–பரிஜனங்கள் என்று பேர் பெற்றவர்களும்
சத்ர சாமர முகா பரிச்சதா–குடை சாமரம் முதலிய எடுபிடு சாமான்களும்
ஞான சக்தி முக நித்ய ஸத் குணாஸ் ச –ஞான சக்தி பல ஐஸ்வர்யாதிகளான நித்ய கல்யாண குணங்களும்
ஸூந்தரோரு புஜம் சதா இந்ததே — அழகரை அடைந்து எப்போதும் விளங்கா நின்றன

—————-

த்வார நாத கண நாத தல்லஜா பாரிஷத்ய பத பாகிநஸ் ததா
மாமகாச்ச குரவ புரா தநா ஸூந்தரம் வந மஹீத் ரகம் ஸ்ரிதா-76–

சண்ட ப்ரசண்டாதிகளான த்வார பாலக ஸ்ரேஷ்டர்களும்
குமுதா குமுதாஷாதிகளான கண நாயக ஸ்ரேஷ்டர்களும்
பாரிஷத்யா பரச்சதம்–என்கிறபடியே பாரிஷத்ய பத வியபதேசர்யர்களானவர்களும்
ஸ்ரீ பராங்குச பரகால யதிவராதிகளான நம் முன்னோர்களும்
ஸ்ரீ அழகரை பணிந்து உந்து போனார்கள் என்றார் ஆயிற்று
தல்லஜ–சப்தம் ஸ்ரேஷ்ட வாசகம்

—————

ஈத்ருஸை பரிஜனை பரிச்சதை
நித்ய சித்த நிஜ போக பூமிக
ஸூந்தரோ வந கிரேஸ் தடீ ஷுவை
ரஜ்யதே சகல த்ருஷ்ட்டி கோசார —77-

கீழே சொல்லப்பட்ட அநந்த கருட விஷ்வக் சேனாதிகளான பரிஜனங்களோடும்
சத்ர சாமராதிகளான பரிச் சதங்களோடும்-அழகர் திருமாலிருஞ்சோலை மலை தாழ் வரையிலே அனைவரும்
கண்ணாரக் கண்டு களிக்கலாம் படி எழுந்து அருளி இருந்து சேவை சாதித்து அருளுமாற்றை
அனுபவித்துப் பேசுகிறார் இதில்
ஈத்ருஸை பரிஜனை பரிச்சதைஸ் ஸஹ –பூர்வ யுக்த பிரகாரங்களான பரி ஜன பரிச் சதங்களோடே கூட —
கீழே ஸூந்தரஸ்ய வந சைல வாசிந –என்கிற ஸ்லோகம் தொடங்கி முந்திய ஸ்லோகம் அளவாக ஐந்திலும்
அருளிச் செய்தவற்றைச் சேரப்பிடித்து -ஈத்ருஸை -என்று அருளிச் செய்தபடி
நித்ய சித்த நிஜ போக பூமிக–நித்ய சித்த -என்றது சதா ஏக ரூபமான என்றபடி
நிஜ போக பூமி-என்று தனக்கு அசாதாரணமான நலம் அந்தமில்லாதோர் நாடாகிய நித்ய விபூதியைச் சொல்கிறது
வைகுண்டே து பரேலோகே ஸ்ரியா சார்த்தம் ஜகத் பதி -ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா பக்தைர் பாகவதஸ் ஸஹ —
என்கிறபடியே ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருக்கும் எம்பெருமான்
சகல த்ருஷ்ட்டி கோசார —ஸூந்தரஸ் சந் –சகல ஜன நயன விஷய பூதரான அழகராய்க் கொண்டு
வந கிரேஸ் தடீ ஷுவை ரஜ்யதே – திருமாலிருஞ்சோலை மலை அடிவாரத்தில் திரு உள்ளம் உகந்து வர்த்திக்கிறார் என்றபடி –
திரு நாட்டிலே நம் போழ்வாருடைய கண்ணுக்கு இலக்கு ஆகாமல் இருக்கும் குறை தீர
அங்குத்தை நிலைமையோடே இங்கு இனக்குறவர்கள் உட்பட சகலருக்கும் சஷுர் விஷயனாய்க் கொண்டு
சேவை சாதிக்கிறார் என்றதாயிற்று

——————-

ஆக்ரீட பூமி ஷு ஸூகந்தி ஷு பவ்ஷ்பிகீஷு
வைகுண்ட தாமநி சம்ருத்தஸ் வாபிகாஸூ
ஸ்ரீ மல்ல தாக்ரு ஹவதீஷு யதா ததைவ
லஷ்மீ தரஸ் ஸஜதி ஸிம்ஹ கிரேஸ் தடீ ஷு –78-

வைகுண்ட தாமநி–ஸ்ரீ வைகுண்டம் ஆகிற நித்ய விபூதியிலே
சம்ருத்தஸ் வாபிகாஸூ —வாவித் தடங்கள் நிரம்பியவையாயும்
ஸ்ரீ மல்ல தாக்ரு ஹவதீஷு –அழகிய கொடி மண்டபங்களை உடையவனாயும்
பவ்ஷ்பிகீஷு–புஷ்பங்கள் நிறைந்தனவாயும்
ஸூகந்தி ஷு -நறுமணம் மிக்கவையாயும் இருக்கிற
ஆக்ரீட பூமி ஷு -விஹார உபயோகிகளான உத்யான வனங்களில்
லஷ்மீ தரஸ் யதா ஸஜதி–ஸ்ரீ யபதியான எம்பெருமான் எவ்விதமாகத் திரு உள்ளம் உகந்து வர்த்திக்கிறானோ
ததைவ ஸிம்ஹ கிரேஸ் தடீ ஷு –ஸஜதி-
அவ்விதமாகவே திருமாலிருஞ்சோலை மலை தாழ் வரைகளிலும் திரு உள்ளம் உகந்து வர்த்திக்கிறான் ஆயிற்று
இத்தால் திருமலை பூ லோக வைகுண்டம் என்றதாயிற்று-

—————-

ஆனந்த மந்திர மஹா மணி மண்டபாந்த
லஷ்ம்யா புவா அஹிபதவ் ஸஹ நீலயா ச
நிஸ் சங்க்ய நித்ய நிஜ திவ்ய ஜநைக ஸேவ்ய
நித்யம் வசந் ஸஜதி ஸூந்தர தோர் வநாத்ரவ்–79-

ஆனந்த மந்திர மஹா மணி மண்டபாந்த –ஸ்வரூப ரூப குண விபூதிகளோடும் -நித்ய முக்தர்களோடும்
கூடி இருக்கும் இருப்பை அனுபவிப்பதால் உண்டாகும் மஹா ஆனந்தத்துக்கு பிறப்பிடமான
திரு மா மணி மண்டபத்தின் உள்ளே -என்றபடி –
அஹிபதவ் லஷ்ம்யா புவா நீலயா சஹ – திருவனந்த ஆழ்வான் மீது ஸ்ரீ தேவி பூ தேவி நீளா தேவிகளோடும் கூட
நிஸ் சங்க்ய நித்ய நிஜ திவ்ய ஜநைக ஸேவ்ய –த்ரிபாத் விபூதி ஆகையால் எண்ணிறந்த நித்ய முக்தர்கள் அன்றோ
அங்கு இருப்பது -அவர்களுக்கு மாத்திரமே ஸேவ்யனாய் இருக்கின்ற
ஸூந்தர தோர்–ஸூந்தரத் தோளுடைய பெருமாள்
வநாத்ரவ்–நித்யம் வசந் ஸஜதி –திருமாலிருஞ்சோலை மலையிலே நித்ய வாச ரசிகராய் இரா நின்றார்
விரஜையை மறக்கும்படியான நூபுர கங்கையும்
திரு மா மணி மண்டபத்தை மறக்கும் படியான திவ்ய ஆலய மண்டப ஸந்நிவேசமும் இருக்கையாலே
திருநாட்டு வாசமும் மறந்து இங்கே வர்த்திக்கிற படி –
ஸஜதி -சக்தோ பவதி -என்றபடி

————

ப்ரத்யர்த்திநி த்ரி குணிக ப்ரக்ருதே அஸீம்நி
வைகுண்ட தாமநி பராம் பரநாம் நி நித்யே
நித்யம் வசந் பரம சத்வ மயேபி அதீத
யோகீந்த்ர வாங் மநச ஏஷ ஹரிர் வநாத்ரவ் –80-

ஆவரண ஜலம் போலே பரத்வம் பெருக்காறு போலே விபவங்கள்-
அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் –
அதன் ஏற்றத்தை திரு உள்ளத்தில் கொண்டு அருளிச் செய்கிறார்
வைகுண்ட தாமநி-நித்யம்- வசந் நபி -ஏஷ ஹரிர் வநாத்ரவ் –இவ்வழகர் திரு நாட்டிலே எழுந்து அருளி
இருப்பவராயினும் இத்திருமலையிலே ஸந்நிஹிதராய் இரா நின்றார் என்கிறார்
ஸ்ரீ வைகுண்டத்துக்கு அநேக விசேஷணங்கள் இட்டு அருளுகிறார் –
பரம சத்வ மயே–சுத்த சத்வமயமாய் இருக்கை
த்ரி குணிக ப்ரக்ருதே ப்ரத்யர்த்திநி–முக்குணங்கள் கூட்டரவாகிய மூல பிரக்ருதிக்கு எதிராக உள்ளது
அ ஸீம்நி –லீலா விபூதியின் பரிமாணம் எல்லை கண்டு கூறப்பட்டுள்ளது
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் ஸ்வாமி அருளிச் செய்த படி -இது -நித்ய அங்குசித ஞானாதிகர்களுக்கும்
அளவிட ஒண்ணாத பரிமாணத்தை உடைத்தாய் இருக்கும்
பராம் பரநாம் நி-பரம ஆகாசம் என்னும் பெயரை உடைத்தாய் இருக்கும்
நித்யே வைகுண்ட தாமநி –நித்ய விபூதி எண்ணப்படும் ஸ்ரீ வைகுண்ட லோகத்தில்
அதீத யோகீந்த்ர வாங் மநச ஏஷ –சப்தமந்தமாகவும் ப்ரதமம் சாந்தமாகவும் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட தாமத்துக்கும் ஸ்ரீ அழகருக்கும் விசேஷணமாய் இருக்கும்
வசந் நபி -ஏஷ ஹரிர் வநாத்ரவ் -ஸஜதி–பதத்தை கீழ் ஸ்லோகத்தில் இருந்து வருவித்து கொள்ள வேண்டும்

——————–

லோகான் சதுர்தச ததத் கில ஸூந்தரஸ்ய
பங்க்தீ குணோத்தரித சப்த வ்ருதீத மண்டம்
அண்டாநி சாஸ்ய ஸூ சத்ரும்ஸி பரச்சதா நி
கிரீடா விதேரிஹ பரிச்சததாம் அகச்சந் — –81-

இதிலும் அடுத்த ஸ்லோகத்திலும் லீலா விபூதி அனுபவம்
யத் அண்ட மண்டாந்தர கோசரஞ்ச யத் தச உத்தராண்ய ஆவரணாநி யாநி ச -ஸ்ரீ ஆளவந்தார் –
அருளிச் செய்ததை அடி ஒற்றி இதில் பூர்வார்த்தம்
சதுர்தச லோகான் ததத் பங்க்தீ குணோத்தரித சப்த வ்ருதீத மண்டம்–பதினான்கு லோகங்களையும்
தன்னுள்ளே அடக்கிக் கொண்டு இருப்பதும் மேலே ஒன்றுக்கு ஓன்று பதின் மடங்காகப் பெருக்கப் பட்ட
வைஸால்யத்தை யுடைய சப்த ஆவரணங்களை யுடையதுமான இவ்வண்டமும்
அஸ்ய ஸூ சத்ரும்ஸி பரச்சதா நி அண்டாநி ச –கீழ்ச் சொன்ன அண்டத்தோடு மிகவும் ஒத்து இருக்கின்ற
நூற்றுக்கணக்கான அண்டங்களும்
இஹ ஸூந்தரஸ்ய கிரீடா விதேரிஹ பரிச்சததாம் அகச்சந் — இங்குள்ள அழகருக்கு
கிரீடா பரிகரங்களாய் இரா நின்றன
அண்டக்குலத்துக்கு அதிபதியாய் அவற்றை லீலா உபகரணமாய்க் கொண்டவருமான
அழகர் இத்திருமலையிலே சேவை சாதிக்கிறார் என்றதாயிற்று –

—————-

ஸூர நர திர்யகாதி பஹு பேதக பின்னம் இதம்
ஜகத் அதச அண்டம் அண்ட வரணாநி ச சப்த ததா
குண புருஷவ் ச முக்த புருஷாச் ச வநாத்ரி பதே
உபகரணாநி நர்மவிதயேஹி பவந்தி விபோ –82-

ஸூர நர திர்யகாதி பஹு பேதக பின்னம் இதம் ஜகத் –தேவாதி பலவகைப்பட்ட விசேஷணங்களாலே
வேறு பட்டு இருக்கிற ஜகத்தும்
அ தச அண்டம் அண்ட வரணாநி ச சப்த ததா -இவ்வளவும் அன்றி அண்டமும் ஏழு அண்ட ஆவரணங்களும்
குண புருஷவ் ச –பிரக்ருதியும் ஜீவாத்ம வர்க்கமும்
முக்த புருஷாச் ச -பிரகிருதி சம்பந்த விநிர் முக்தர்களான புருஷர்களும்
தேஷாம் சதத யுக்தா நாம் —என்ற இடத்தில் சதத யோகம் காங்ஷ மாணாநாம் –என்று
ஸ்ரீ பாஷ்ய ரீதியா பொருள் போலே இங்கும் முக்தியை விரும்பும் புருஷர்கள் என்றுமாம் –
விண்ணுளாரிலும் சீரியர் -என்னப்பட்டவர்களை விவஷித்ததாம்
வநாத்ரி பதே விபோ –உபகரணாநி நர்மவிதயேஹி பவந்தி –அழகருக்கு லீலா பரிகரங்கள் என்றதாயிற்று

————————

ஞானி நஸ் சதத யோகிநோ நோ ஹி யே
ஸூந்தர அங்க்ரி பர பக்தி பாகிந
முக்தி மாப்ய பரமாம் பரே பதே
நித்ய கிங்கர பதம் பஜந்தி தே —83-

கீழே முக்த புருஷாச்ச -என்று முமுஷு பிரஸ்தாபம் செய்து அருளி அவர்களை
விசேஷிக்கிறார் இதில்
தேஷாம் ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விசிஷ்யதே —
ஞாநீ து ஆத்மைவ மே மதம் –என்னப் பட்ட ஞாநீகள்
அழகர் திருவடியில் பக்தி பண்ணியே மோக்ஷம் அடைவர் என்கிறார் இதில்
சதத யோகிநாம் ஞானி நஸ் நோ ஹி யே–என்றது
கீதையில் -சதத யுக்தா நாம் –எப்போதுமே கூடி இருந்து அனுபவிக்க விரும்புவர்கள்
ஸூந்தர அங்க்ரி பர பக்தி பாகிந –இங்கு ஸூந்தர அங்க்ரி பர-என்றும்
ஸூந்தர அங்க்ரி பத-என்றும் பாட பேதங்கள்
அங்க்ரி -பதம் புனர் யுக்தி அன்றி திருவடியே ஆஸ்பதம் என்றவாறு –
அழகர் திருவடிகளை ஆஸ்பதமாகக் கொண்ட பக்தி உடையவர்கள் என்றவாறு
பரே பதே –ஆப்ய-என்றது -ஆப்தவா -என்றபடி ஆங்-உபசர்க்கம் அந்தரகதம்
இதில் அதி மானுஷ ஸ்தவத்திலும் -ரஸ மஞ்சன மஞ்ச சாப்ய-என்ற இடம் போலே
தே -பரமாம்- முக்தி மாப்ய -பரே பதே-நித்ய கிங்கர பதம் பஜந்தி தே –அழகர் திருவடிகளில்
பக்தியை செலுத்தியவர்கள் அபுநா வ்ருத்தி லக்ஷணமான மோக்ஷத்தைப் பெற்று திரு நாட்டிலே
நித்ய கைங்கர்ய சாலிகள் ஆகின்றனர் -என்ற படி –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -ஸ்லோகங்கள்—54–68–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

October 27, 2019

திருக்கைத்தலத்தில் விளங்கும் திருவாழி திருச்சங்கு ஆழ்வார்களை அனுபவிக்கிறார் –

ஸ்ரீ மத் வநாத்ரி பதி பாணி தலாப்ஜ யுக்மம்
ஆரூட யோர் விமல சங்க ரதாங்கயோஸ் து
ஏகம் அப்ஜம் ஆஸ்ரித இவ உத்தம ராஜ ஹம்ஸ
பத்ம பிரியோர்க்க இவ தத் சமிதோ த்விதீய –55-

ஸ்ரீ மத் வநாத்ரி பதி பாணி தலாப்ஜ யுக்மம் ஆரூட யோர் –அழகருடைய இரண்டு திருக்கைகளிலும் ஏறி இருக்கிற —
ஊழியான் கைத்தலத் திடரில் குடியேறி என்றும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில் குடியேறி வீற்று இருந்தாய் கோலப் பெறும் சங்கே -என்றும் –
இருப்பதை அடி ஒற்றி ஆரூட பத பிரயோகம்
விமல சங்க ரதாங்கயோஸ் து –வெள்ளை விளி சங்கும் திருவாழி ஆழ்வானும் ஆகிற இருவருக்குள்
ஏகம் அப்ஜம் ஆஸ்ரித இவ உத்தம ராஜ ஹம்ஸ –ஒருவரான ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வான் தாமரை மலரில் துயிலும்
ராஜ ஹம்சம் போலே விளங்கா நின்றார்
செங்கமல நாண் மலர் மேல் தேனுகரும் அன்னம் போல் செங்கண் கருமேனி வாசுதேவனுடைய அங்கைத் தலம் ஏறி
அன்னவசம் செய்யும் சங்கரய்யா உன் செல்வம் சால அழகியதே –அடி ஒற்றி அருளிச் செய்தபடி
த்விதீயஸ்து –தத் சமிதோ –பத்ம பிரியோர்க்க இவ –மற்று ஒருவரான திருவாழி ஆழ்வானோ என்னில் –
தாமரை மலரில் வந்து வீற்று இருக்கும் சூர்யன் போலே விளங்கா நின்றார் –
சூர்யன் தாமரை மலரில் வீற்று இருக்க ப்ரஸக்தி ஏது என்னில் –
பத்ம பிரிய-இது ஹேது கர்ப்ப விசேஷணம் -கமல பாந்தவன் ஆகையால் கமலத்தில் வந்து கிடக்கலாம் இறே
ஆக அழகருடைய இரண்டு திருக்கைகளும் இரண்டு தாமரை ஆகையால் –
ஒரு தாமரையில் அன்னம் வந்து படிந்து சங்காக விளங்க –
மற்று ஒன்றில் சூர்யன் வந்து படிந்து ஸூதர்சனமாக விளங்குகிறார் என்கிறார்

——————-

லஷ்ம்யா பதம் கௌஸ்துப ஸம்ஸ்க்ருதஞ்ச
ஸ்ரீ வத்ஸ பூமிர் விமலம் விசாலம்
விபாதி வஷோ வனமால யாட்யம்
வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய–56-

வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய–வஷோ-விபாதி –அழகருடைய திரு மார்பு விளங்கா நிற்கிறது -எங்கனே என்னில்
லஷ்ம்யா பதம் –அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்
பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா -என்றும் சொல்லுகிறபடியே பெரிய பிராட்டியாருக்கு நித்ய நிகேதமாய் இரா நின்றது
கௌஸ்துப ஸம்ஸ்க்ருதஞ்ச–குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு என்கிறபடியே கௌஸ்துப அலங்க்ருதமாய் இரா நின்றது
ஸ்ரீ வத்ஸ பூமிர் –திரு மறு மார்பன் ஆகையால் ஸ்ரீ வத்சம் என்னும் மயிர்ச் சுழிக்கு இருப்பிடம்
விமலம் விசாலம் –பளை பளை என்று அகன்று காட வ்யூடமாய் விளங்கா நின்றது
வனமால யாட்யம்–ஆ பாத சூடம் யா மாலா வனமாலாதி கத்தயதே -என்கிறபடியே திருமுடி தொடங்கி திருவடி ஈறாக
விளங்கா நின்ற வனமாலையாலே சோபிதமானது
ஆக இப்படிப்பட்ட திரு மார்பு திகழா நின்றதாயிற்று –

—————-

ஸுவ்ந்தர்ய அம்ருத சார பூர பரிவாஹா வார்த்த கர்த்தாயிதம்
யாத கிஞ்ச விரிஞ்ச சம்பவன பூம்யம் போஜ சம்பூதி பூ
நாபிச் சும்பதி கும்பி கும்ப நிப நிர்ப்பாத ஸ்தநஸ் வர்வதூ
சம்புக்த த்ரும ஷண்ட சைல வஸதேர் ஆரூட லஷ்ம்யா ஹரே–57-

கும்பி கும்ப நிப நிர்ப்பாத ஸ்தநஸ் வர்வதூ சம்புக்த த்ரும ஷண்ட சைல வஸதேர் ஆரூட லஷ்ம்யா ஹரே-சும்பதி–
யானையினுடைய கும்ப ஸ்தலம் போன்று விளங்குகின்ற கொங்கைத் தலங்களை உடைய –
ஊர்வசீ மேனகா ரம்பா திலோத்தமைகள் ஆகிய தேவ மாதர்கள் வந்து இறைஞ்சி ஏத்தி அனுபவிக்கும் இடமான
திருமாலிருஞ்சோலை மலையை உறைவிடமாக உடையவரும் –
ஏறு திருவுடையான் என்னப் பெற்றவருமான அழகருடைய திரு நாபியானது –
கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் –என்று ஆண்டாள் அனுபவித்த படியே -விளங்கா நின்றது –
அது எப்படிப்பட்டது என்ன -இரண்டு விசேஷணங்களால் அனுபவிக்கிறார்

ஸுவ்ந்தர்ய அம்ருத சார பூர பரிவாஹா வார்த்த கர்த்தாயிதம் யாத –ஸுவ்ந்தர்யம் ஆகிற அமுதவாறு
பெருகப் புக அதிலே தோன்றின சுழியோ இது -என்னலாம் படி இரா நின்றது –
மஹா ப்ரவாஹம் உள்ள இடங்களிலே சுழி உண்டாவது காணா நின்றோமே –
அழகருடைய திருமேனி அடங்கலும் பெரு வெள்ளம் கோத்துப் பெருகா நின்ற ஸுவ்ந்தர்ய ப்ரவாஹத்தின் வேகத்தினால்
உண்டான சுழி தான் திரு நாபி என்று வ்யபதேசிக்கப் படுகிறது என்றது ஆயிற்று
பகவத் அனுபவ ரஸ விவசருடைய அபி நிவேச பாசபரி ப்ராமித மதி மந்தான மத்த்யமாநமான ஸுவ்ந்தர்ய துக்த சிந்துவானது
சுற்றோரம் திரைத்து எழுந்து நடுக் குழித்திட்ட சுழி போலே சுந்தரமாம் உந்தி மலரும் –என்று ஈடுபடுவார்கள்
கிஞ்ச மேலும் –

விரிஞ்ச சம்பவன பூமி அம்போஜ சம்பூதி- பூ —
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை -என்றும்
தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர் மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர் மேல் முன்னம்
திசை முகனைத் தான் படைக்க –என்றும் சொல்லுகிறபடியே நான்முகனுக்கு பிறப்பிடமாக உள்ளது
ஆக இப்படிப்பட்ட திரு நாபி திகழ்கின்றது-

———————-

ஸூந்தரஸ்ய கில ஸூந்தர பாஹோ ஸ்ரீ மஹாதருவ நாசலபர்த்து
ஹந்த யத்ர நிவ சந்தி ஜகந்தி பிராபிதக்ரசிம தத் தநு மத்யம் –58-

ஸ்ரீ மஹாதருவ நாசலபர்த்து -ஸூந்தரஸ்ய கில ஸூந்தர பாஹோ -பிராபிதக்ரசிம-ஹந்த –ஸ்ரீ அழகப் பிரானுடைய
எந்த மத்யத்திலே ப்ரலய காலத்தில் உலகங்கள் எல்லாம் உறைகின்றனவோ -அது எவ்வளவோ பருத்து இருக்க வேணுமே –
அப்படி இன்றிக்கே க்ருசமாய் இரா நின்றது அந்தோ என்று விஸ்மயம் தோற்ற அருளிச் செய்கிறபடி –
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழு மால் வரை முற்றும் உண்ட -என்றும்
மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் எஞ்சாமல் வயிற்று அடக்கி -என்றும்
சொல்லுகிறபடியே சகல சராசரங்களையும் உள்ளே கொண்டும் உண்டது உருக்காட்டாதே சிறுத்துக் கிடக்கிற படி என்னோ
உத்தம புருஷர்களின் உதரம் ப்ரக்ருதயா க்ருசம் என்றது ஆயிற்று
பிராபிதக்ரசிம –அடைவிக்கப்பட்ட க்ருத்ஸ்வத்தை யுடையது –
க்ருசமாய் இருக்கும் தன்மையைப் பெற்று இருக்கிறது என்றபடி –
தநு மத்யம் –இதனை ஸமஸ்த பதமாகவும் வியஸ்த பதமாகவும் கொள்ளலாம் –
ஸமஸ்த மாக கொண்டு தநு என்று திருமேனியைச் சொன்னவாறு –
திவ்ய மங்கள விக்ரஹத்தை மத்ய பிரதேசம் என்றதாயிற்று –
வ்யஸ்த பதமாக தநு ஸூ சமம் என்றவாறு –

——————-

பிஷ்ட துஷ்ட மது கைடப கீடவ்
ஹஸ்தி ஹஸ்த யுகளாப ஸூவ்ருத்தவ்
ராஜத க்ரம க்ருசவ் ச ச தூரு
ஸூந்தரஸ்ய வந பூதர பர்த்து –59-

வந பூதர பர்த்து –ஸூந்தரஸ்ய –ச தூரு -ராஜத–அழகருடைய திருத் தொடைகள் விளங்கா நின்றன –
அவை தாம் எப்படிப்பட்டவை என்னில்
பிஷ்ட துஷ்ட மது கைடப கீடவ்-ஆதி ஸ்ருஷ்ட்டி காலத்தில் தோன்றினவர்களாய் மஹா பலிஷ்டர்களான
மது கைடபர்களை துடையிலே இறுக்கி முடித்த ஐதிக்யம் பிரசித்தம்
மதமிவ மதுகைடபஸ்ய –என்று ஸ்ரீ பட்டரும் அருளிச் செய்கிறார் –
ஆக மது கைடபர்களைப் பேஷணம் பண்ணின பெருமையை யுடையவை அழகருடைய திருத்துடைகள் என்றதாயிற்று –
மேலும்
ஹஸ்தி ஹஸ்த யுகளாப ஸூவ்ருத்தவ் –யானையின் துதிக்கையையும் துடைகளுக்கு உவமை கூறுவது கவி மரபு –
ரம்பாஸ் தம்பா கரிவர காரா –என்று ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்திலும் அருளிச் செய்கிறார்
யானையினுடைய துதிக்கைகளோடே ஒத்தவையாயும் உருண்டு இருப்பனவாயும் விளங்கா நின்றன -என்கை –
க்ரம க்ருசவ் ச–அடி பருத்து நுனி சிறுத்து இருப்பவை என்றபடி –

———————

யவ்வன வ்ருஷ ககுதோத்பேத நிபம் நிதராம்
பாதி விபோர் உபயம் ஜாநு சுபாக்ருதிகம்
ஸூந்தர புஜ நாம் நோ மந்தர மதி தாப்தே
சந்த நவந விலஸத் கந்தர வ்ருஷ பபதே-60-

மந்தர மதி தாப்தே சந்த நவந விலஸத் கந்தர வ்ருஷ பபதே-ஸூந்தர புஜ நாம் நோ–விபோர் –
சுபாக்ருதிகம் உபயம் ஜாநு -நிதராம்-பாதி —
அழகருடைய முழம் தாள்களை அனுபவிக்கிறார் இதில்
மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான் –என்கிறபடியே
மந்தர மலையை மத்தாக நாட்டிக் கடல் கடைந்தவரும்
சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல் –மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –என்கிறபடியே
சந்தனப் பொழில்கள் விளங்கப் பெற்ற திருமாலிருஞ்சோலைக்குத் தலைவரும் –
சுந்தரத் தோளுடையான் என்று திரு நாமம் உடையவருமான பெருமாளுடைய மிக அழகிய உருவம் அமைந்த
முழம் தாளிணை யானது மிகவும் விளங்கா நின்றது –
அது தான் எங்கனே உத் ப்ரேஷிக்கலாம் படி இரா நின்றது என்னில் –
யவ்வன வ்ருஷ ககுதோத்பேத நிபம் –யவ்வனமாகிற வ்ருஷப ராஜத்தின் முசுப்புக்கள் தான் முழம் தாள்களாக
மிளிர்கின்றன என்னலாம் படி இரா நின்றது –
வ்ருஷபத்துக்கு முசுப்பானது அசாதாரண நிரூபகம் ஆவது போலே திரு முழம் தாள்கள் எம்பெருமானுடைய
நித்ய யவ்வனத்துக்கு அசாதாரண நிரூபகமாய் இரா நின்றது என்றபடி —
ஸ்யா துஷ்ணோர் வா காகுத்தயுகலம் யவ்வன ஐஸ்வர்ய நாம்நோ –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்
யுவா குமாரா –யுவா அ குமாரா –கௌமாரம் கழியும் தசையாயும் யவ்வனம் வந்து தலைக்கட்டும் தசையாயும்
இருக்கப் பெற்ற நிலையே எம்பெருமான் பருவம் என்றதாயிற்று –அது தான் யவ்வனம் என்னப் படுகிறது –

——————-

அதோ முக ந்யஸ்த பதார விந்தயோ
உதஞ்சி தோ தாத்தஸூ நால சந்நிபே
விலங்க்ய ஜங்கே க்வ நு ரம்ஹதோ த்ருஸவ்
வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய மே –61-

அழகருடைய திருக் கணைக் கால்கள் அனுபவிக்கிறார் இதில் –
அழகருடைய திருவடிகளானவை கீழ் முகமாக வைக்கப்பட்ட தாமரை மலர்கள் போன்று இருப்பனவாகவும்
திருக் கணைக் கால்கள் அத்தாமரைகளின் நாள தண்டங்களோ என்னலாம் படி இருப்பனவாகவும் அருளிச் செய்கிறார்
வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய —அதோ முக ந்யஸ்த பதார விந்தயோ
உதஞ்சி தோ தாத்தஸூ நால சந்நிபே -ஜங்கே-விலங்க்ய —
அதோ முகமாக வைக்கப்பட்ட திருவடித் தாமரைகளினுடைய வ்ருத்தாகரமாய் ஆயுதமாய் இருக்கின்ற
அழகிய நாள தண்டங்களை ஒத்த திருக் கணைக் கால்களைத் தவிர்த்து
மே -த்ருஸவ் -க்வ நு ரம்ஹதோ —
என்னுடைய கண்களானவை வேறு எங்குச் செல்லும் -எங்கும் செல்லாது –
இத்திருக் கணைக் கால்களையும் அனுபவித்து நிற்கும் அத்தனை என்றதாயிற்று –
திருவடித் தாமரைகளை அதோ முகமாக வைக்க வேண்டிய காரணம் ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தில் –
ப்ரேம்நா க்ராதும் கரி கிரி சிரோதோ முகீ பாவ பாஜோ அங்க்ரி த்வந்த் வாஹ்வய கமலயோர் தண்ட
காண்டாய மாநே -என்று அருளிச் செய்த படியே
திருமலையின் போக்ய அதிசய ப்ரயுக்தமான ப்ரீதி விசேஷத்தாலே அதனை உச்சி மோந்து மகிழ வேணும் என்று
நினைத்துத் திருவடித் தாமரைகள் கீழ் முகம் ஆக்கப் பட்டன -என்க –

———————————–

ஸூ ஸூந்தரஸ் யாஸ்ய பதாரவிந்தே பதார விந்தாதிக ஸுவ்குமார்யே
அதோந்யதா தே பிப்ர்யாத் கதம் நு ததா சநம் நாம சஹஸ்ர பதம் –62-

இதிலும் அடுத்த ஸ்லோகத்திலும் திருவடி இணைகளும் ஆசன பத்மமுமான சேர்த்தி அழகை
உத்ப்ரேஷை யோடும் கூட அனுபவிக்கிறார்
தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமானை –திருவாய் -4-5-8-குளிர்ந்த ஆசன பத்மத்தாலே தரிக்கப் பட்ட
திருவடிகளை உடையவன் என்கை –
எம்பெருமானுடைய திருவடிகளின் கீழே பத்மாசனம் ஓன்று உண்டே -அதன் மேல் அன்றோ திருவடிகள் விளங்குகின்றன —
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ -என்ற பாசுரமும் இங்கே அனுசந்தேயம்
குளிர்த்தியிலும் பரிமளத்திலும் செவ்வியில் தாமரைப் பூவானது திருவடிக்குத் தோற்று அன்றோ சுமக்கிறது
இந்த விஷயத்தை இதில் சாமான்யமாக அனுபவித்து அடுத்த ஸ்லோகத்தில் வ்யக்தமாக அருளிச் செய்கிறார்
அஸ்ய -ஸூ ஸூந்தரஸ் பதாரவிந்தே –அழகருடைய திருவடித்தாமரைகள்
பதார விந்தாதிக ஸுவ்குமார்யே -ஆசன பத்மத்தைக் காட்டிலும் அதிசயித்த ஸுவ்குமார்யத்தை உடையன
இது எங்கு தெரிகிறது என்னில்
அதோந்யதா-கீழ்ச் சொன்ன படி யல்லவாகில்
ஆசநம் நாம –தத் சஹஸ்ர பத்ரம் —தே -கதம் நு பிப்ருயாத் –ஆசன பத்மம் என்று பிரசித்தமான அந்தத் தாமரை யானது
திருவடித் தாமரைகளை ஏன் சுமக்கும் -தோற்றதால் அன்றோ சுமக்கிறது என்று திரு உள்ளம் –
இது அடுத்த ஸ்லோகத்தில் விசதமாகும் –

——————-

ஸுவ்ந்தர்ய மார்த்தவ ஸூ கந்த ரஸ ப்ரவாஹை
ஏதே ஹி ஸூந்தர புஜஸ்ய பதார விந்தே
அம்போஜ டம்ப பரி ரம்பண மப்யஜைஷ்டாம்
தத் வை பராஜி தமிமே சிரஸா பிபர்த்தி –63-

ஸூந்தர புஜஸ்ய ஏதே பதார விந்தே
ஸுவ்ந்தர்ய மார்த்தவ ஸூ கந்த ரஸ ப்ரவாஹை –அழகு மென்மை நறுமணம் மகரந்த ரஸ ப்ரவாஹம்
ஆகிய இவற்றால்
அம்போஜ டம்ப பரி ரம்பண மப்யஜைஷ்டாம் –தாமரை மலரின் செருக்குக் கிளர்ச்சியை வென்று ஒழித்தன
தத் வை பராஜிதம் -ஸத் -இமே சிரஸா பிபர்த்தி –அந்தத் தாமாரையானது பராஜிதமாகி
இத்திருவடிகளை ஆசன பத்மமாகக் கொண்டு சுமந்து இரா நின்றது –

———————

ஏதே தே பத ஸூந்த ராஹ்வய ஜூஷ பாதார விந்தே சுபே
யந் நிர்னே ஜசமுத்தித த்ரி பதகர ஸ்ரோதஸ்ஸூ கிஞ்சித் கில
தத்தேசவ் சிரஸா த்ருவஸ் ததபரம் ஸ்ரோதோ பவா நீபதி
யஸ்யாஸ்ய அலக நந்திகேதி நிஜகுர் நாமைவமந் வர்த்தகம் –64-

யந் நிர்னே ஜசமுத்தித த்ரி பதகர ஸ்ரோதஸ்ஸூ –பண்டு ஒரு நாள் த்ரிவிக்ரம அவதாரம் செய்து அருளினை காலத்தில் –
குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர்ப் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்திக்
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு –நான்முகன் -9-என்று
அருளிச் செய்தபடி திருவடி விளக்கினை தீர்த்தம் பலமுகமாகப் பெருகிற்றே -அவற்றுள்
கிஞ்சித் கில அசவ் த்ருவஸ் சிரஸா தத்தே–ஒரு பெருக்கை உத்தான பாத சக்ரவர்த்தி புதல்வனான
த்ருவன் தன் தலையால் தங்கி நிற்கிறான்

யஸ்யாஸ்ய அலக நந்திகேதி ஏவம் நாம அந் வர்த்தகம் –நிஜகுர்–யாதொரு பெருக்குக்கு -அலக நந்தா -என்று
இங்கனே வழங்கி வரும் பெயரை அந்வர்த்தமாகச் சொல்லுகிறார்களோ -அதனை பரமசிவன் தாங்குகின்றான் என்கை –
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கிக் கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை –என்று
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த படியே சங்கரனுடைய அலக சம்பந்தம் பெற்றது காரணமாகவே -அலக நந்தா-என்று பெயர் பெற்றதாயிற்று
ஸூந்த ராஹ்வய ஜூஷ- தே -ஏதே– பாதார விந்தே சுபே –அழகருடைய இந்தத் திருவடித் தாமரைகள் பரம போக்யங்கள்
த்ருவனும் சிவனும் சிரஸா வஹிக்கும் படியான பெருக்குகளை உடைய கங்கைக்கு உத்பத்தி பூமியான
அழகர் திருவடிகள் பரம போக்யங்கள் என்றதாயிற்று –

————–

ஆம்நாய கல்பலதி கோத்த ஸூ கந்தி புஷ்பம்
யோகீந்த்ர ஹார்த ஸரஸீருஹ ராஜ ஹம்சம்
உத்பக்வ தர்ம சஹகார பல பிரகாண்டம்
வந்தேய ஸூந்தர புஜஸ்ய பதார விந்தம் –65–

ஆம்நாய கல்பலதி கோத்த ஸூ கந்தி புஷ்பம் –வேதங்கள் ஆகிற கற்பகக் கொடியில் நின்றும் உண்டான
நறு மணம் மிக்க மலர்களோ இவை -என்னலாய் இருந்தது –
வேதங்களில் பரிமளிக்கும் இத்திருவடிகள் -வேத ப்ரதிபாத்யங்கள் -என்று கறுத்து –
யோகீந்த்ர ஹார்த ஸரஸீருஹ ராஜ ஹம்சம் –யோகி ஸ்ரேஷ்டர்களின் ஹ்ருதய கமலங்களில் விளங்கும்
ராஜ ஹம்சங்களோ இவை -என்னலாய் இருந்தது -யோகி த்யேயங்கள்-என்றபடி –
உத்பக்வ தர்ம சஹகார பல பிரகாண்டம்–பரி பக்குவமான தர்மம் ஆகிற தேன் மாம்பழங்களோ இவை
என்னலாய் இருந்ததோ –
த்யான பலமும் இவையேயாய் –பரம புருஷார்த்தமாய் இருப்பவை என்றவாறு
பிரகாண்ட–சப்தம் ஸ்ரேஷ்ட வாசகம் -ஆக இப்படிப்பட்ட
ஸூந்தர புஜஸ்ய பதார விந்தம் –வந்தேய-சுந்தரத் தோளுடையானுடைய திருவடித் தாமரையை
வணங்கக் கடவேன்

——————–

ஸூ ஸூந்தரஸ் யாஸ்ய து வாமநாக்ருதே
க்ரம த்ரய ப்ரார்த்திநி மாநஸே கில
இமே பதே தாவத் இஹ அஸஹிஷ்ணு நீ
வி சக்ரமாதே த்ரி ஜகத் பத த்வயே–66-

என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூ வடி மண் மன்னா தருக என்று வாய் திறப்ப –
மூவடி வேண்டி இரண்டு அடிகளால் முடித்து விட்டதால்
ஆஸ்ரித சம்ரக்ஷண த்வர அதிசயம் -சொல்லிற்று ஆகிறது –
வாமநாக்ருதே—அஸ்ய –ஸூ ஸூந்தரஸ் –பண்டு வாமன மூர்த்தியாகக் கோலம் கொண்ட இவ் வழகருடைய
மாநஸே–திரு உள்ளமானது
க்ரம த்ரய ப்ரார்த்திநி சதி–மஹா பலி பக்கலிலே மூவடி வைப்புக்கு உரித்தான மூவடி நிலம் வேண்டி இருக்கையில்
கில இமே பதே தாவத் இஹ அஸஹிஷ்ணு நீ–இத் திரு வடிகளோ என்னில்
இந் நிலத்திலே மூவடி வைப்பை ஸஹிக்க மாட்டாதவைகளாய்
த்ரி ஜகத் பத த்வயே–வி சக்ரமாதே–மூ உலகங்களையும் இரண்டு வைப்பில் கொள்ளை கொண்டன வாயின
எம்பெருமானுடைய திரு உள்ளத்தைக் காட்டிலும் திருவடிகளின் செயல் த்வராதிசயத்திலே
வியக்கத்தக்கது என்று கருத்து –

———————–

ஸுவ்ந்தர்ய சார அம்ருத சிந்து வீசி
ஸ்ரேநீஷு பாதாங்குலி நாமிகாஸூ
ந்யக்க்ருத்ய சந்த்ர ச்ரியமாத் மகாந்த்யா
நகா வலீ சும்பதி ஸூந்தரஸ்ய –67-

திரு நகங்களை வர்ணிக்கிறார் –திரு விரல்களின் வர்ணமும் அர்த்தாத் சித்திக்கும் –
அழகர் திரு மேனியில் அழகு என்னும் அமுதக்கடல் ஓன்று உண்டாயிற்று -கடல் இருந்தால் அலைகள் இருக்க வேணுமே –
அந்த அலைகள் தானோ என்னலாம் படி திரு விரல்கள் -அத்திரு விரல்களில் திரு நகங்கள்
சந்திரனுடைய ஒளியையும் திரஸ்கரித்து மிக அழகியவாக விளங்குகின்றன -என்கிறார்
ஸூந்தரஸ்ய –அழகருடைய
பாதாங்குலி நாமிகாஸூ ஸுவ்ந்தர்ய சார அம்ருத சிந்து வீசி ஸ்ரேநீஷு –திருவடி விரல்கள் ஆகிற
ஸுவ்ந்தர்ய அமுத சாகர தரங்க பரம்பரைகளிலே
நகா வலீ மாத்ம காந்த்யா-சந்த்ர ச்ரியம்
ந்யக்க்ருத்ய சும்பதி–திரு நகங்களின் வரிசையானது தன் ஒளியினால் சந்திரன் ஒளியையும் கீழ்ப் படுத்தி விளங்கா நின்றது –

——————-

யோ ஜாத க்ரஸிமா மலீ ச சிரஸா சம்பாவிதச் சம்புநா
சோயம் யத் சரணாஸ்ரயீ சசதரோ நூநம் நக வ்யாஜத
பூர்ணத்வம் விமலத்வம் உஜ்ஜவலத்தயா சார்த்தம் பஹுத்வம் ததா
யாதஸ் தம் தருஷண்ட சைல நிலையம் வந்தா மஹே ஸூந்தரம் –68-

திரு நகங்கள் -சந்த்ர சத்ருசமான அளவே அன்று -தேவதாந்த்ர ஸமாச்ரயணத்தால் வந்த குறை தீர
நக வ்யாஜத்தாலே அழகர் திருவடிகளை ஆஸ்ரயித்து குறைகள் தீர்ந்து பரி பூர்ணன் ஆனான் என்கிறார்
யோ சசதரோ-சம்புநா -சிரஸா -சம்பாவிதச் -சந் -ஜாத க்ரஸிமா ஜாத க்ரஸிமா மலீ ச -அபூத் –யாவன் ஒரு சந்திரன்
சிவன் சிரஸ்ஸாலே தரிக்கப்பட்டவனாகி ஷயிஷ்ணுவும் களங்கியும் ஆனானோ
சோயம் -நக வ்யாஜத -யத் சரணாஸ்ரயீ சந் பூர்ணத்வம் விமலத்வம் உஜ்ஜவலத்தயா சார்த்தம் பஹுத்வம் யாத–எப்போதும்
பூர்ணனாய் இருக்கை -நிஷ் களங்கனாய் இருக்கை -ஒளி மிக்கு இருக்கை -பல வடிவு பெற்று இருக்கை –
ஆகிய இத்தன்மையை அடைந்தானோ
தம் தருஷண்ட சைல நிலையம் வந்தா மஹே ஸூந்தரம் –அந்த திருமாலிருஞ்சோலைமலை அழகரை வணங்குகிறோம்
ததா நூநம் –இப்படி அருளிச் செய்தது உத்ப்ரேஷ அலங்கார ரீதியில் என்பதைக் காட்டுகிறது -நூநம் -என்பது
பஹுத்வம் அடைந்தான் என்றது பத்து திரு நகங்களும் பத்து சந்திரன் போலே விளங்கி
எப்போதும் புஷ்கலமாய் அ களங்கமாய் ஜாஜ்வல்யமானமாய் இருப்பதும் சொல்லிற்று ஆயிற்று –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -ஸ்லோகங்கள்–39 -54–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

October 27, 2019

அழகருடைய திருமுடியை அனுபவிக்கிறார் —

ஆஜாநஜ ஸ்வகத பந்துர கந்த லுப்த
ப்ராம்யத் விதக்த மது பாளி ஸதேச கேசம்
விசுவாதி ராஜ்ய பரி பர்ஹ கிரீட ராஜம்
ஹை ஸூந்தரஸ்ய பத ஸூந்தரம் உத்தம அங்கம் —39-

ஸூந்தரஸ்ய உத்தம அங்கம் ஸூந்தரம் —-அழகருடைய திரு முடியானது மிக அழகியது
ஹை -பத – இரண்டு அவ்யவங்களாலே
இந்த அழகை உள்ளபடி வருணிக்க முடியாமல் தளருகின்றமை தோற்றும்
திருமுடி எப்படிப்பட்டது -என்ன -சிறந்த கூந்தலையும் உயர்ந்த மகுடத்தையும் உடையது என்று
இரண்டு விசேஷணங்களால் அதன் சிறப்பைப் பேசுகிறார்
ஆஜாநஜ ஸ்வகத பந்துர கந்த லுப்த ப்ராம்யத் விதக்த மது பாளி ஸதேச கேசம்
ஸ்வ கத என்ற இடத்தில் ஸ்வ சப்தத்தால் கேசம் க்ரஹிக்கத் தக்கது -`அதன் விசேஷணங்களைச் சொல்லுவதால் –
இயற்கையான பரிமளத்தில் லோபத்தாலே சுழலம் இடா நின்ற வண்டுகளின் திரள் படிந்த கூந்தலை உடையது திருமுடி என்கை –
ஆஜாநஜ–என்றது ஆரோபிதம் இன்றிக்கே ஜென்ம ஸித்தமான என்றபடி –
சர்வ கந்த -உபநிஷத் பிரசித்தனானவனுடைய கூந்தல் அன்றோ -இயற்கையான நறுமணம் பெற்று இருக்குமாயிற்று –

பந்துர -சம்ருத்தம் என்றபடி -ஸ்வா பாவிகமாக தன்னிடத்தில் உள்ள சம்ருத்தமான நறு மணத்தில் லோபம்
உடையவையாய்க் கொண்டு மேலே சுழலம் இடா நின்ற ரசிக ப்ரமர பங்க்திகள் படியப்பெற்ற
திருக்குழல் கற்றையை யுடையது என்றது ஆயிற்று
ஸதேச கேசம் -மது பா வளிகளோடே சாமானாதி கரண்யமாய் –வண்டுகளும் கேசங்களும் உத்தம அங்கத்தில் உள்ளது என்றும்
மதுபா வளிகளோடே சமானமாய் –களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல்
மிளிர நின்று -நாச்சியார் அருளிச் செய்த படி களி வண்டுகள் படிந்து இருக்கின்றனவோ என்று
சங்கிக்கலாம் படியான கூந்தலை யுடைய உத்தம அங்கம்

விசுவாதி ராஜ்ய பரி பர்ஹ கிரீட ராஜம் –ஸர்வேச்வரத்வ ஸூ சகமாய் இருக்கின்ற திரு அபிஷேகத்தை யுடையது என்கை
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற உபய விபூதி நிர்வாஹகன்
என்று கோள் சொல்லும் திரு அபிஷேகம்
பரி பர்ஹம் -என்று ஸாமக்ரிக்கு பெயர்
ஸூசகம் என்பது தாத்பர்ய சித்தம்

————————

கீழ் ஸ்லோகத்தில் கேசபாச வர்ணனம் விசேஷண மாத்ரம் -அது தன்னையே விசேஷ்யமாக்கி இதில் அனுபவம்
கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின் உட் கொண்ட நீல நன்னூல் தழை கொல்–அன்று மாயன் குழல் -என்று
அந்த அபூத உவமையையும் சஹியாதபடி அன்றோ திருக்குழல் இருப்பது –
மாயன் திருக்குழல் என்றே சொல்லிப் போம் அத்தனை -அதே ரீதியில் இஸ் ஸ்லோகம்

அந்தம் தமஸ் திமிர நிர்மித மேவ யத் ஸ்யாத்
தத் சார சாதித ஸூ தந்த்வதி வ்ருத்த வார்த்தம்
ஈஸஸ்ய கேசவகிரே ரலகாலி ஜாலம்
தத் துல்ய குல்ய மது பாட்ய மஹாவநஸ்ய–40-

திமிர நிர்மித மேவ–அந்தம் தமஸ் – யத் ஸ்யாத் -தத் சார சாதித ஸூ தந்த்து அதி வ்ருத்த வார்த்தம் –இருளையே
உபாதானமாகக் கொண்டு நிருமிக்கப்பட்ட ஒரு காடாந்தகாரம் இருக்குமாகில் அதனுடைய சாரத்தைக் கொண்டு செய்யப்பட
நல்ல நூல் தொகுதி தான் அழகருடைய திருக்குழல் என்னப் பார்த்தால்
அதி வ்ருத்த வார்த்தம்-
அதை அதிக்ரமித்த வார்த்தை உடையது –அங்கனே சொல்ல ஒண்ணாதாய் இருக்கும் என்றபடி
அது தான் ஏது என்னில்
அளகாலி ஜாலம் –வண்டு ஒத்து இருந்த குழல் காற்றை
அது யாருடையது என்னில்
தத் துல்ய குல்ய மது பாட்ய-மஹாவநஸ்ய– கேசவகிரே ஈஸஸ்ய–
தத் சப்தமானது அகலஜாலத்தை பராமர்சிக்கக் கடவது
அந்த அகலஜாலத்தோடு துல்ய குல்யமான-ஸமான ஆகாரங்களான வண்டுகள் நிறைந்த சோலைகளை உடைத்தான
திருமலைக்குத் தலைவரான அழகருடையது –

அழகருடைய திருக்குழல் கற்றையானது -ஸூ தந்த்வதி வ்ருத்த வார்த்தம் -என்று முடிப்பது
கேசவகிரே–தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற கேசவ நம்பி –பெரிய திருமொழி —
கேசவன் வர்த்திக்கிற படியால் கேசவ கிரி -இதனாலே ஸிம்ஹ கிரி என்று அடிக்கடி அருளிச் செய்வதும் பொருந்தும்
அலகாலி ஜாலம் –ஆளி என்றது ஆவளி என்றபடி -அதுக்கும் மேலே ஜால சப்தம் அடர்த்தியைக் காட்டும்

———————

ஜுஷ்ட அஷ்டமீக ஜ்வல திந்து ஸந்நிபம்
த்ருத ஊர்த்வ புண்ட்ரம் விலஸத் விசேஷகம்
பூம் நா லலாடம் விமலம் விராஜதே
வாநாத்ரி நாதஸ்ய சமுச்ச்ரித ஸ்ரீ யா –41-

சமுச்ச்ரித ஸ்ரீ யா –வாநாத்ரி நாதஸ்ய –லலாடம்–பூம் நா–விராஜதே –ஏறு திருவுடையான் என்னப்பட்ட
அழகருடைய திரு நெற்றியானது அதிசயித்து விளங்கா நின்றது -அந்த நெற்றி எப்படிப்பட்டது என்னில்
ஜுஷ்ட அஷ்டமீக ஜ்வல திந்து ஸந்நிபம் –அஷ்டமீ திதி அன்று விளங்கா நின்ற சந்திரனை ஒத்து இரா நின்றது –
பாதிச் சந்திரன் போலே என்றவாறு
ஸ்ரீ வரதராஜ ஸ்த்வம்-32-ஸ்லோகம் அனுசந்தேயாம்
தூப்புல் பிள்ளையும் பரமபத சோபானத்தில் -9-பராப்தி பர்வத்தில் –திருக்குழல் சேர்த்தியாலே ஒரு பாகம் இருளோடே
சேர்ந்த அஷ்டமீ சந்திரனை அநு கரிக்கிற திரு நெற்றியை அனுபவித்து –என்றும் உள்ளதே
த்ருத ஊர்த்வ புண்ட்ரம் –ஊர்த்வ புண்ட்ரம் அணிந்தும் உள்ளதே
விலஸத் விசேஷகம் –கஸ்தூரீ திலகமும் விளங்கப் பெற்றது
விமலம் –ஆக இப்படி திரு நெற்றி விமலமாக விளங்குகின்றது
விமலம் விபுலம் -பாட பேதங்கள்

———————

ஸூ சாருசாப த்வய விப்ரமம் ப்ருவோ
யுகம் ஸூ நேத்ராஹ்வ சஹஸ்ர பத்ரயோ
உபாந்தகம் வா மதுபர வலீ யுகம்
விராஜதே ஸூந்தர பாஹு சம்ஸ்ரயம் -42-

ஸூந்தர பாஹு சம்ஸ்ரயம் -ப்ருவோ யுகம்-விராஜதே-அழகருடைய திருப்புருவம் இரண்டும் விளங்கா நின்றது –
எங்கனே என்னில் –
ஸூ சாருசாப த்வய விப்ரமம் –தன் கைச் சார்ங்கம் அதுவே போல் புருவ வட்டம் அழகிய பொருத்தமிலி–
பரம ஸூந்தரமான இரண்டு விற்களின் விலாசம் போன்ற விலாசத்தை உடையது
இந்த புருவ இணை எங்கனம் உல்லே கிக்கும் படி இரா நின்றது என்ன
ஸூ நேத்ராஹ்வ சஹஸ்ர பத்ரயோ உபாந்தகம் மதுபர வலீ யுகம் -வா-திருக்கண்கள் ஆகிற இரண்டு தாமரை மலர்களின்
சமீபத்தில் வந்து படிந்த வண்டுத்திரளோ இவை என்னலாம் படி இரா நின்றது –
வா -சப்தம் இவார்த்தகம் –
மதுபர வலீ யுகமிவ விராஜதே -என்றதாயிற்று –

———————

அதீர்க்கம் அப்ரேமதுகம் க்ஷண உஜ்ஜ்வலம்
ந சோரம் அந்தக்கரணஸ்ய பச்யதாம்
அநுப்ஜமப்ஜம் நு கதம் நிதர்சனம்
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ –43-

அதீர்க்கம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் -என்றும்
இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை -என்று பேசும்படி யாகத் திருக்கண்கள்
நீண்டு இருப்பது போலே தாமரை நீண்டு இருக்க வில்லையே -நீட்சிக்குத் தாமரை ஒப்பாக மாட்டாதே
அப்ரேமதுகம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் பேதைமை செய்தனவே –என்னும் படி பிச்சேற்றும் திறம்
திருக்கண்களுக்கு அல்லது தாமரைக்கு இல்லையே -பிரேம பிரகர்ஷத்தை விலைப்பதில் தாமரை ஒப்பாக மாட்டாதே
க்ஷண உஜ்ஜ்வலம் –எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப் பொழுது
என் ஆராவமுதமே –என்னும் படி நவம் நவமாய் விளங்கா நின்ற திருக்கண்களுக்கு அதி ஸ்வல்ப காலமே
விகாசத்தோடே கூடி விளங்கக் கடவதான தாமரை போய் ஒப்பாக மாட்டாதே
பச்யதாம்-அந்தக்கரணஸ்ய -ந சோரம்–கண்டவர் தம் மனம் வழங்கும் —
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் –
என்னும்படியான கண்டாருடைய மனத்தைக் கொள்ளை கொள்ளும் திருக்கண்களுக்கு தாமரை ஒப்பாக மாட்டாதே
அநுப்ஜம்–உப்ஜ -ஆர்ஜவே -என்ற தாது பாடம்–ஆர்ஜவம் அற்றது என்றபடி –குடிலமாய் இறே தாமரை மலர் இருப்பது –
ஆக ஆர்ஜவமே வடிவெடுத்த திருக்கண்களுக்கு ஒப்பாக மாட்டாதே
அப்ஜம் –ஆக அதீர்க்கத்வாதி விசிஷ்டமான அப்ஜமானது
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ – கதம் –நு-நிதர்சனம் –அழகருடைய கரியவாகிச் செவ்வரி ஓடி புடை பரந்து
நீண்ட அப்பெரியவாய திருக்கண்களுக்கு எங்கனே த்ருஷ்டாந்தம் ஆகவற்று–ஒரு போதும் ஆக மாட்டாதே
இங்கனம் அருளிச் செய்தவர் கீழே அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தலம்–என்றது
ஏதேனும் ஒன்றை த்ருஷ்டாந்தீ கரித்து போது போக்கவே
ஆழ்வாரும் -ஒட்டு உரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெறும் பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே
காட்டுமால் பரஞ்சோதி –என்னா நிற்கச் செய்தேயும் ஒட்டு உரைத்து புகழாது ஒழியார் இறே –

—————–

ப்ரச் சோதத் ப்ரேம சார அம்ருத ரஸ சுளக பிரக்ரம ப்ரக்ரியாப்யாம்
வி ஷிப்தா லோகி தோர்மி பிரசரண முஷித ஸ்வாந்த காந்தா ஜநாப்யாம்
விஸ்வோத்பத்தி ப்ரவ்ருத்தி ஸ்திதி லய கரணை காந்த சாந்த க்ரியாப்யாம்
தேவோ லங்கார நாமா வநகிரி நிலயோ வீக்ஷதாம் ஈஷணாப்யாம் –44-

வநகிரி நிலயோ –அலங்கார நாமா –தேவ –வீக்ஷதாம் ஈஷணாப்யாம் -அழகன் அலங்காரன் திருக்கண்களாலே
குளிர நோக்கி அருள வேண்டும் —
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் விழியாவோ –
உன் தாமரைக்கு கண்களால் நோக்காய் –என்று பிரார்த்தனை –
அத்திருக்கண்கள் எப்படிப்பட்டவை என்னில்
ப்ரச் சோதத் ப்ரேம சார அம்ருத ரஸ சுளக பிராக்ரம ப்ரக்ரியாப்யாம் –பெருகு கின்ற அன்பு வெள்ளம் ஆகிற
அமுதப் பெருக்கை உடைய சிறாங்கையோ இவை–என்னலாம் படி
சுளகம் -சிறாங்கை–கண்களின் விசாலத்துக்கு இது உவமை
ஒரோ குடங்கைப் பெரியன கெண்டைக் குலம் –திரு விருத்தம் -11-
பிரேமசார ரசமாகிய அன்பு வெள்ளம் பெருகுகிற என்கிற இத்தால் அன்போடு கடாக்ஷித்து அருளுகின்றமை சொல்லிற்று
பிரக்ரம–பிரகாரம் என்றவாறு -பிரகிரியை என்றாலும் பிரகாரம்
சுலகத்தின் தன்மை போன்ற தன்மையை உடைய திருக்கண்கள் என்றவாறு –
விஷிப்தாலோகி தோர்மி பிரசரண முஷித ஸ்வாந்த காந்தா ஜநாப்யாம் –அலை எறிகின்ற கடாக்ஷ தாரைகளால்
கோபீ ஜனங்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவை என்கை –
விஷிப்தங்களான –ஆலோகிதங்கள் ஆகிற அலைகளின் பிரசரணத்தாலே கவரப்பட்ட காந்தா ஜன ஸ்வாந்தங்களை
யுடையவை திருக்கண்கள்
விஷிப்த –விசேஷண ப்ரேரித என்றபடி –ஆலோகிதமாவது -ஆலோகநம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி –என்றபடி திருக்கண்கள் நாக்காலே உள்ளத்தைக் கொள்ளை கொள்பவர் அன்றோ
விஸ்வோத்பத்தி ப்ரவ்ருத்தி ஸ்திதி லய கரணை காந்த சாந்த க்ரியாப்யாம் –சகல சராசரங்களினுடைய உத்பத்தி ப்ரவ்ருத்தி
சம்ரக்ஷண சம்ஹாரங்களைச் செய்வதில் மிகவும் ஊக்கம் உடையவை
நா வேஷஸே யதி ததோ புவந அந்யமுநி நாலம் ப்ரபோ பவிதுமேவ குத ப்ரவ்ருத்தி –ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -படியே
ஆவேஷண மாத்திரத்தாலே அன்றோ விஸ்வோத்பத்தி ப்ரவ்ருத்தி ஸ்திதி லயங்கள் நடைபெறுகின்றன
ஆக இப்படிப்பட்ட திருக்கண்களாலே அழகர் கடாக்ஷித்து அருள வேணும் –

——————————–

பிரேம அம்ருதவ்க பரிவாஹி மஹாஷி சிந்து
மத்யே பிரபத்த சமுதஞ்சித சேது கல்பா
ருஜ்வீ ஸூ ஸூந்தர புஜஸ்ய விபாதி நாசா
கல்பத்ருமாங்குர நிபா வந சைல பர்த்து–45-

வந சைல பர்த்து–ஸூ ஸூந்தர புஜஸ்ய–
ருஜ்வீ–கல்பத்ருமாங்குர நிபா -நாசா –நேர்மை பொருந்திய கற்பகக் கொடியின் பல்லவம் போன்றதான நாசிகையானது
பிரேம அம்ருதவ்க பரிவாஹி மஹாஷி சிந்து மத்யே பிரபத்த சமுதஞ்சித சேது கல்பா விபாதி –அழகருடைய
திருக்கண்கள் ஆஸ்ரித வாத்சல்ய அதிசயத்தாலே -எப்போதும் அலை பாயா நின்று கொண்டு இருப்பதால் –
அலை எறிகின்ற பெறும் கடலோ இது -என்னலாம் படி இருக்கும்
அத் திருக் கண்களின் இடையே கோல நீள் கொடி மூக்கு அமைந்து இருப்பது கடலிடையே கட்டின
அணை தானோ இது என்னும்படி இரா நின்றது
திருக்கண்களை கடலாக ரூபம் பண்ணினத்துக்கு சேர -பிரேம அம்ருதவ்க பரிவாஹி–என்கிற விசேஷணம் இடப்பட்டது –
ப்ரேமமாகிற அமுத ப்ரவாஹத்தை பெருக்குமே
ஈட்டிய வெண்ணெய் யுண்டான் திரு மூக்கு –மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் -என்று
அருளிச் செய்ததை அடி ஒற்றி -கல்பத்ருமாங்குர நிபா–என்று அருளிச் செய்த படி –

——————

வ்யாபாஷித அப்யதிகநந்தந பந்ந நர்த்தி
மந்த ஸ்மித அம்ருத பரிஸ்ரவ சம்ஸ்தவாட்யம்
ஆபாதி வித்ரும சமாதரம் ஆஸ்யம் அஸ்ய
தேவஸ்ய ஸூந்தர புஜஸ்ய வநாத்ரி பர்த்து –46-

வநாத்ரி பர்த்து — ஸூந்தர புஜஸ்ய–அஸ்ய தேவஸ்ய
வித்ரும-சமாதரம் ஆஸ்யம் -ஆபாதி–பவளம் போல் கனிவாய் சிவப்ப–என்கிறபடி சிவந்து கனிந்த
திருப்பவள வாயானது விளங்கா நின்றது -எப்படிப் பட்டது என்னில்
வ்யாபாஷித அப்யதிகநந்தந பந்ந நர்த்தி மந்த ஸ்மித அம்ருத பரிஸ்ரவ சம்ஸ்தவாட்யம் –திருப் பவள வாய் திறந்து
பேசுவதில் காட்டிலும் இனிதான புன்முறுவல் பூத்து இருக்கப் பெற்றது என்றவாறு
வ்யாபாஷி தம் –ஆவது வ்யா பாஷாணம் அதாவது –வாய் திறந்து ஓன்று பணிக்கை-
அதில் காட்டிலும் -அப்யதிகநந்தந–மிகவும் ஆனந்த கரமாயும் -கல்யாணாவஹமான ஸம்ருத்தியை
உடையதாவும் இருக்கிறது -மந்த ஸ்மிதம் -புன்னகை —
அதுவாகிற அம்ருத பரிஸ்ரவத்தாலே –அம்ருதப் பெருக்கினாலே -ஆட்யம் -நிறைந்தது
அபிமத ஜன தர்சன ஆனந்த வேகத்தால் அர்ச்சா சமாதியைக் கடந்து விம்மி வெளி விழுகின்ற
அவ்யக்த மதுர மந்தகாச விலாசமானது திருவாய் திறந்து சொல்லுவதைக் காட்டிலும்
பரமானந்த ஸந்தோஹ சந்தாயகமாய் இருக்குமாய்த்து
அந்த மந்த ஸ்மிதம் அம்ருத ப்ரவாஹம் என்றும் சொல்லலாம் படி இருக்கும்
அது விஞ்சி இருக்கப் பெற்ற திருப் பவளச் செவ்வாய் அனுபவிக்கப் பட்டது

————–

யசோதா அங்குல்ய அக்ர உந்நமித சுபுகாக்ராண முதிதவ்
கபாலவ் அத்யாபி ஹ்ய அநு பரத தத்தர்ஷ கமகவ்
விராஜேதே விஷ்வக் விதத சஹகாரா சவரச
ப்ரமாத்யத் ப்ருங்காட்ய த்ருமவநகிரேஸ் ஸூந்தர ஹரே –47-

விஷ்வக் விதத சஹகாரா சவரச ப்ரமாத்யத் ப்ருங்காட்ய த்ருமவநகிரேஸ் ஸூந்தர ஹரே -கபாலவ்-விராஜேதே —
எங்கும் பரந்த தேன் மா மரங்களின் மதுவைப் பருகி களித்து இரா நின்ற வண்டுகள் நிரம்பிய சோலைகளை உடைய
திருமலையை உறைவிடமாக உடையரான ஸ்ரீ அழகருடைய திருக் கபோலங்கள் மிக விளங்குகின்றன
இவை எங்கனே இரா நின்றன என்னில்
யசோதா அங்குல்ய அக்ர உந்நமித சுபுகாக்ராண முதிதவ் அத்யாபி ஹ்ய அநு பரத தத்தர்ஷ கமகவ் –பண்டு
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீ யசோதா பிராட்டி தன்னுடைய விரல் நுனியால் மோவாயைத் தூக்கி முத்தம் இட்டதனாலே
ரோமாஞ்சிதங்களாய் இன்னமும் அந்நிலை மாறாமல் இருப்பனவாம்
முத்தம் இடுவது கபோலத்தில் அன்று ஆகிலும் ஹர்ஷம் தோற்றுவது கபோலத்திலே யாகையாலே
இங்கனம் அருளிச் செய்யக் குறை இல்லையே
ஸ்ரீ அழகருடைய திவ்ய மங்கள விக்ரகத்தில் ஸ்ரீ கிருஷ்ண தாதாம்ய பாவனை முற்றி அருளிச் செய்ததாம் இது
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அண்டர் கோன் அணி யரங்கன் என்று அன்றோ
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வாரது அனுபவமும் –

——————-

வ்யாலம்பி குண்டலம் உத்க்ர ஸூவர்ண புஷ்ப
நிஷ் பந்ந கல்பலதிகா யுகளாநுகாரம்
யத் கர்ணா பாச யுகளம் நிகளம் தியாம் ந
சோயம் ஸூ ஸூந்தர புஜோ வநஸைல பூஷா–48-

வ்யாலம்பி குண்டலம் –மகரம் சேர் குழை இருபாடு இலங்கி யாட –என்கிறபடியே
தள தள என்று தொங்குகின்ற கன மகரக் குழைகளை உடைத்தாய்
உத்க்ர ஸூவர்ண புஷ்ப -நிஷ் பந்ந கல்பலதிகா யுகளாநுகாரம் –மிகச் சிறந்த ஸ்வர்ண புஷ்பங்களோடு
விளங்கப்பெற்ற இரண்டு கல்பதைகள் போன்றதாய்
திருச்செவி மாடல்களின் ஸ்தானத்தில் கல்பதையும் —
கன மகரக் குழைகளின் ஸ்தானத்தில் ஸூ வர்ண புஷ்பமும் கொள்ளக் கடவது –
ஆக இப்படிப்பட்டதான
யத் கர்ணா பாச யுகளம் தியாம் ந–நிகளம்-யாவர் ஒரு அழகருடைய திருச்செவி மடல்கள் இரண்டும்
நம்முடைய புத்திக்கு விலங்கு போல் ஆகின்றதோ
விலங்கிடப் பட்டவன் இடம் விட்டுப் பெயர்ந்து வேறு இடம் செல்ல முடியாமல் திகைத்து போலே
தம்முடைய திரு உள்ளம் ஸ்ரீ அழகருடைய கர்ண பாசத்தை விட்டு மற்றொரு அவயவத்தில் ஈடுபட முடியாமல்
திகைத்து இருக்கிறது என்று காட்டியவாறு
சோயம் ஸூ ஸூந்தர புஜோ வநஸைல பூஷா—இத்தகைய கர்ண பாச ஸுவ்ந்தர்யம் வாய்ந்த ஸ்ரீ அழகர்
ஸ்ரீ திருமலைக்கு திவ்ய அலங்காரமாக விளங்குகின்றான் -என்கை –

—————–

களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று விளையாட –என்றும்
மை வண்ண நறுங்குஞ்சிக் குழல் பின் தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கி யாட –என்றும்
தனித்தனியே அனுபவித்த அழகுகளைச் சேரப்பிடித்து அனுபவிக்கிறார் இதில்

சதம்ச சம் சஞ்சித குந்த லாந்திகா
வதீர்ண கர்ணா பரணாட்ய கந்தர
ஸூ பந்துர ஸ்கந்த நிபந்தநோ யுவா
ஸூ ஸூந்தரஸ் ஸூந்தரதோர் விஜ்ரும்பத -49–

சதம்ச சம் சஞ்சித குந்த லாந்திகா வதீர்ண கர்ணா பரணாட்ய கந்தர –அழகிய திருத் தோள்களில் வந்து அலையா நின்ற
திருக் குழல்களின் அருகே தொங்குகின்ற கன மகரக் குழை விளங்கா நின்ற திருக்கழுத்தை உடையவராய்
ஸூ பந்துர ஸ்கந்த நிபந்தநோ–ஸ்கந்த நிபந்தநமாவது –திருத் தோள் பட்டைகள் அமைப்பு –
திருக்கழுத்தின் பின்புறம் சந்தி பந்தம் -அது ஸூ பந்துரம் -மிக அழகியதாய் இருக்கின்றது –
இங்கனே இருக்கப் பெற்றவராய்
யுவா ஸூ ஸூந்தரஸ் –இளகிப்பதித்த திரு மேனியை உடையவர் ஆகையால் நித்ய யவ்வனசாலியாய்
அழகர் என்ற திரு நாமம் உடையரான
ஸூந்தரதோர் விஜ்ரும்பத —பெருமாள் ஓங்கி விளங்குகின்றார்

—————

வ்யூட கூட புஜ ஜத்ரும் உல்லஸத் கம்பு கந்தர தரம்
வ்ருஷ ஷண்ட மயூ பூப்ருதஸ் தடே ஸூந்தராயத புஜம் பஜா மஹே –50-

வ்ருஷ ஷண்ட மயூ பூப்ருதஸ் தடே–திருமலை தாழ் வரையில் அடியிலே
ஸூந்தராயத புஜம் பஜா மஹே –பெருமாளை பஜிக்கிறோம் –அவர் தாம் எப்படிப்பட்டவர் என்றால்
வ்யூட கூட புஜ ஜத்ரும் –ஸ்கந்தத்திற்கும் கஜத்திற்கும் சந்தியான இடம் -ஜத்ரு-என்னப் படும் –
அதன் மேல் பாகமானது புஜ ஜத்ரு-எனப்படும் -அது பருத்தும் அவ்யக்தமாயும் இருக்கிறதாயிற்று –
மாமசலத்வாதிசயத்தாலே அவ்யக்தமாய் இருக்கிற படி -இப்படிப்பட்ட புஜ்ஜத்ருவை உடையராய்
கம்பு கந்தர தரம் -சங்கு போன்ற அழகிய திருக்கழுத்தை உடையவராக அழகரை
ரேகா த்ரய விபக்த அங்கமான திருக்கழுத்துக்கு சங்கை உவமை சொல்வது கவி மரபு
ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவத்தில் –க்ரமுக தருணக்ரீவா கம்பு ப்ரலம்ப மலிம் லுசஸ் கண்ட என்று -ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார்
சங்கு போன்ற திருக்கழுத்தை தரிப்பவர் என்றதாயிற்று

—————-

மந்த்ர ப்ரமண விப்ரமோத்படாஸ் ஸூந்தரஸ்ய விலசந்தி பாஹவஸ்
இந்திரா சமபிநந்த பந்த நாச் சந்தநாகரு விலேப பூஷிதா –51-

ஸூந்தர தோளுடையான் என்பதால் இது முதல் நான்கு ஸ்லோகங்களால் திருத் தோள்கள் அனுபவம் –
நான்கு திருத் தோள்களுக்கும் நான்கு ஸ்லோகங்கள் போலும்

ஸூந்தரஸ்ய – பாஹவஸ் -விலஸந்தி–அழகருடைய பாஹுக்கள் அழகு பிழிந்து விளங்குகின்றன —
அவை எப்படிப்பட்டவை என்னில்
மந்த்ர ப்ரமண விப்ரமோத்படாஸ் -மந்த்ரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான் —
ஸ்ரீ நாச்சியார் ஸ்ரீ ஸூக்தியைத் திரு உள்ளம் கொண்டு இந்த விசேஷணம் –
அத்தை சுழற்றுகிற விலாச காரியத்தில் உத்ஸாஹம் பொருந்தியவை அழகருடைய பாஹுக்கள் –
அநாயாசமாக மந்த்ர மலையை சுழற்றின என்றபடி
இன்னமும் எப்படிப் பட்டவை என்னில்
இந்திரா சமபி நந்த பந்த நாச் –ஸ்ரீ மஹா லஷ்மியை சந்தோஷப்படுத்தி அதனாலே உகப்புப் பெற்றவை
விண்ணவர் அமுது உண்ண அமுதினில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமான் ஆகையால்
சீதக்கடலுள் அமுதாக அவதரித்த ஸ்ரீ மஹா லஷ்மியை ஆரத்தழுவி அவளையும் மகிழ்வித்துத் தாமும் மகிழ்ந்தவை
இன்னமும் எப்படிப்பட்டவை என்னில்
சாந்த நாகரு விலேப பூஷிதா –ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச் சாவத் தகர்த்த
சாந்தணி தோள் சதுரன் –பெரியாழ்வார் அருளிச் செய்த படி
ஸ்ரீ வடமதுரையில் கூனி பூசின சாந்து குறி அழியாமே மல்லரோடே பொருது வெற்றி பெற்ற திருத் தோள்களே
இவை என்று காட்டின படி -ஸூ கந்த சந்தனம் அணிந்து விளங்குபவை

————————

ஜியா கிணாங்க பரிகர்ம தர்மினோ
பாந்தி பாஹவ புஜஸ்ய பாஹவ
பாரிஜாத விடபாயி தர்த்தய
ப்ரார்த்த தார்த்த பரிதாந தீக்ஷிதா –52-

இந்த ஸ்லோகமும் பாஹு வர்ணனம்
ஸூந்தர புஜஸ்ய பாஹவ பாந்தி–பாஹுக்கள் விளங்குகின்றன -அவை தாம் எப்படிப்பட்டவை என்னில்
ஜியா கிணாங்க பரிகர்ம தர்மினோ–மஹா வீரனுடைய பாஹுக்கள் கண்டவாற்றால் தெரிகிறபடி
தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்த வா மங்கை –பொய்கையார் பாசுரம் படியே
ஸ்ரீ சார்ங்க வில்லின் நாணித் தழும்பாலே அலங்கரிக்கப் பட்டவை –
விபவ அவதாரங்களில் ஆஸ்ரித விரோதிகளைத் தொலைக்கும் பொருட்டு -செய்த யுத்தங்களில் நேர்ந்த
வில் நாணியின் வடுக்கள் அவதார திசையில் ஸ்ரீ ராம கிருஷ்ணாதி மூர்த்திகளின் திருக்கைகளை அலங்கரித்து இருந்தன —
அவையே அர்ச்சையிலே இவர்களுடைய ப்ரத்யக் த்ருஷ்டிக்கு கோசாரம் ஆகிறபடி
ஸ்ரீ ஆளவந்தார் –சகாசதம் ஜியாகிண கர்க்கஸைஸ் ஸுபைஸ் சதுர்ப்பிராஜாநு விலம்பிர் புஜை–என்று
பர தசையில் அனுசந்தித்தால் அர்ச்சையில் அனுசந்திக்கக் கேட்க வேணுமோ
இன்னமும் எப்படிப் பட்டவை என்னில்
பாரிஜாத விடபாயி தர்த்தய–கற்பகத்தருவின் கிளைகளோ என்னலாம் படி அமைந்த ஸம்ருத்தியை உடையன -மேலும்
ப்ரார்த்த தார்த்த பரிதாந தீக்ஷிதா –கேட்டார் கேட்டது எல்லாம் வழங்குவதில் தீக்ஷை கொண்டவை –
அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் அன்றோ –

—————–

சாகர அம்பர தமால காநந ஸ்யாமள ருத்தயா உதார பீவரா
சேஷ போக பரி போக பாகிநஸ் தந்நிபா வந கிரீ ஸிதுர் புஜா –53-

சாகர அம்பர தமால காநந ஸ்யாமள ருத்தயா –கடல் போலவும் ஆகாசம் போலவும் –
பச்சிலைப் பொழில் போலவும் பேசலாம் படியான பசுமை வாய்ந்தவை
இவை வெறும் நிறத்துக்கு மாத்ரம் அன்றிக்கே வைஸால்யத்திற்கும் உவமையாம்-
அம்பர தமால காநந ஸ்யாமள -இவற்றின் சாம நிறத்தின் ஸம்ருத்தியை யுடையவை
அழகருடைய திருத்தோள்கள்
உதார பீவரா –இங்கு உதார பதத்தினால் தாத்ருத்வமும் மஹத்வமும் விவஷிதம் –
நீண்டு பருத்தவை என்றவாறு
மேலும்
சேஷ போக பரி போக பாகிநஸ் –திருவந்தாழ்வானுடைய திருமேனியின் மேல் கிடந்து ஆனந்தி அனுபவம் செய்யுமவை
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல் கள்ள நித்திரை செய்யும் போது
தன் தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பித் திருக்கண் வளர்ந்து அருளுகிற படியை அனுசந்தித்து அருளிச் செய்கிறார்
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின்னிலக ஆயிரம் பைந்தலைய அநந்த சயன ஆளும் மலை –மாலிருஞ்சோலை யதே –பெரியாழ்வார்
தந்நிபா –போகி போக சய நீயசாயிகள் –என்று கீழே சொல்லிற்று –
அவ்வளவே அன்றிக்கே அந்த திருவானந்தாழ்வானுடைய திருமேனியோடே சாம்யமும் உடையவை இவை என்கிறது இங்கே
ஆக இப்படிப்பட்டவை வந கிரீ ஸிதுர் புஜா

——————————-

அஹம் அஹம் இகா பாஜோ கோவர்த்தந உத்த்ருதி நர்மணி
பிரமதநவித்தா வப்தேர் லப்தே ப்ரபந்ந சமக்ரியா
அபிமத பஹு பாவா காந்தா அபிரம்பண ஸம்ப்ரமே
வந கிரி பதேர் பாஹாச் சும்பந்தி ஸூந்தரதோர் ஹரே –54-

இந்த ஸ்லோகத்துடன் பஹு வர்ணனம் தலைக் கட்டுகிறார் ஆயிற்று
வந கிரி பதேர்–ஸூந்தரதோர் ஹரே –பாஹாச் சும்பந்தி –அழகருடைய திருத்தோள்கள் சால விளங்குகின்றன —
அவை தாம் எப்படிப் பட்டவை என்னில்
கோவர்த்தந உத்த்ருதி நர்மணி அஹம் அஹம் இகா பாஜோ–கோவர்த்தனம் என்னும் மலையைக் கொற்றக் குடையாக
ஏந்தி நிற்கும் லீலா விசேஷத்திலே நான் முன்னே நான் முன்னே என்று முற்கோளி நிற்குமவை —
இத்தால் உத்ஸாஹ அதிசயம் சொன்னபடி –
உத்ஸாகத்தோடு கோவர்த்தன கிரியை குடையாக ஏந்தி நின்றவை என்றபடி -மேலும்
அப்தே பிரமதநவித்தா வப்தேர் ப்ரபந்ந சமக்ரியா –கடல் கடையும் வியாபாரத்தில் முயன்று நின்று
தேவ அசுரர்களுடன் ஓக்கத் தொழில் செய்தவை –
ப்ரபந்தமாவது -முயற்சி –
லப்த பிரபந்தா–முயன்று நின்றவர்கள் -அவர்கள் ஆகிறார்கள் சுரர்களும் அசுரர்களும் –
அவர்கள் இளைத்து நின்ற காலத்தில் இவை தானே கார்யம் செய்து தலைக்கட்டிற்று
அரங்கனே தரங்க நீர் கலங்க அன்று குன்று சூழ் மரங்கள் தேய மா நிலம் குலுங்க மாசுணம் சுலாய் நெருங்க
நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார் –திருச்சந்த —
மேலும்
காந்தா அபிரம்பண ஸம்ப்ரமே அபிமத பஹு பாவா –கடைந்த கடலில் நின்று பிராட்டி தோன்ற
அவளை ஆரத் தழுவுகிற சம்பிரமத்தில் விஸ்வரூபம் எடுக்கக் கோலினவை –
இரண்டாயும் நான்காயும் இருந்து தழுவுகையிலே பர்யாப்தி பிறவாமையாலே பஹு பவந சங்கல்பம் கொண்டபடி –
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளுடையான் அன்றோ

ஆக இப்படிப்பட்டவையாம் அழகருடைய திருத்தோள்கள் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -ஸ்லோகங்கள்–26 -38–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

October 26, 2019

ஏஷு ஏகஸ்ய குணஸ்ய விப்ருடபி வை லோகோத்தரம் ஸ்வாஸ்ரயம்
குர்யாத் தாத்ருச வைபவைர் அகணிதைர் நிஸ் ஸீம பூமாந்விதை
நித்யைர் திவ்ய குணைஸ் ததோதிக சுபத்வைகாஸ் பதாத்மாஸ்ரயை
இத்தம் ஸூந்தர பாஹுமஸ்மி சரணம் யாதோ வநாத் ரீஸ்வரம் –26-

ஏஷு ஏகஸ்ய குணஸ்ய விப்ருடபி வை லோகோத்தரம் ஸ்வாஸ்ரயம் குர்யாத் —
கீழே பிரிய அனுசந்தித்த கல்யாண குணங்களும் ஒன்றை -அதிலும் ஏக தேசம் -விப்ருடபி-பிந்து –
யத் கிஞ்சித் அம்சமாக இருந்தாலும் அதனுடைய உத்கர்ஷம் வாக்குக்கு நிலம் இன்றிக்கே இருக்கும்-
தாத்ருச வைபவைர் –ஏக தேச சம்பந்த மாத்திரத்தாலே ஸ்வ ஆஸ்ரயத்தை நிறம் பெறுவிக்க வல்ல
பெருமை ஒவ் ஒரு திருக் குணத்துக்கும் உண்டே
அகணிதைர் -கடலில் மணலை என்ன முடிந்தாலும் இவற்றின் வகைகளையே எண்ணி முடிக்க முடியாதே
நிஸ் ஸீம பூமாந்விதை –இங்கு அப்பர்யாப்தி பிறவாமல் -தாத்ருச வைபவைர்-கீழே இருந்தாலும் —
யத்யத் நான்யத் பச்யதி நான்யச் ஸ்ருனோதி நான்யத் விஜா நாதி ச பூமா —
சிந்தை மற்று ஒன்றின் திறத்து ஆகாதபடி துவக்க வல்லவை அன்றோ
நித்யைர் –ஆகமாபாயி அன்றிக்கே ஸ்வரூப அநு பந்திகளாய் இருக்குமே
ததோதிக சுபத்வைகாஸ் பதாத்மாஸ்ரயை –கீழே குணஜம் குணி நோ ஹி மங்கலத்வம் -22-அருளிச் செய்தபடி
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை ஆஸ்ரயித்து இவை பெருமை பெற்ற படி
ஆக இப்படிப்பட்ட
திவ்ய குணைஸ் –இத்தம் ஸூந்தர பாஹுமஸ்மி சரணம் யாதோ வநாத் ரீஸ்வரம் –திருக் கல்யாண குணங்களால்
நிறைந்த அழகரைச் சரணம் அடைந்தேன் –

—————

ஞான குண அனுபவம் இதில் -ஷாட் குணங்களில் மற்ற ஐந்தையும் அடுத்த ஸ்லோகத்தில் அனுபவம் –

சதா சமஸ்தம் ஜெகதீ ஷதே ஹி ய
ப்ரத்யக்ஷ த்ருஷ்ட்யா யுகபத் புவா ஸ்வதஸ்
ச ஈத்ருஸ ஞான நிதிர் நிதிஸ் து ந
சிம்ஹாத்ரி குஞ்ஜேஷு சகாஸ்தி ஸூந்தர -27-

ய –யாவன் ஒரு பகவான்
ஸ்வதஸ் யுகபத் புவா ப்ரத்யக்ஷ த்ருஷ்ட்யா –ஒரு கிலேசம் இன்றிக்கே இயற்கையாகவே பவ்ர்வாபர்யம் இன்றிக்கே
ஏக காலத்தில் உண்டான ப்ரத்யக்ஷ த்ருஷ்டியாலே
சமஸ்தம் ஜெகத் சதா யீஷதே ஹி –சகல பிரபஞ்சங்களையும் என்றும் ஓக்க சாஷாத் கரியா நின்றானோ
ஈத்ருஸ ஞான நிதிர் ச –இப்படிப்பட்ட யுகபாத் சர்வ சாஷாத்கார சமமான ஞானத்துக்கு நிதியான அந்த பகவான்
ந நிதிஸ் ஸந்–அந்தர் ஹிதா நிதி ராசி த்வம் அசேஷ பும்ஸாம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் அருளிச் செய்தபடி
அக்ஷய்ய நிதியாய்க் கொண்டு
ஸூந்தர சிம்ஹாத்ரி குஞ்ஜேஷு சகாஸ்தி –அழகப் பிரானாய் திருமாலிருஞ்சோலை மலையின் லதா க்ருஹங்களிலே
சேவை சாதியா நின்றான் என்றார் ஆயிற்று
வநாத்ரி வ்ருஷாத்ரி போலே சிம்ஹாத்ரி என்பதும் உண்டு
மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை –பெரிய திருமொழியில் நோக்கு

——————

ஐஸ்வர்ய தேஜோ பல வீர்ய சக்தயே
கீத்ருக் விதாஸ் ஸூந்தர பாஹு ஸம்ஸ்ரயா
யோசவ் ஜெகஜ் ஜென்ம லய ஸ்திதி க்ரியாஸ்
சங்கல்ப தோல்பா து பகல் பயத்யஜ –28-

யோசவ் அஜஸ் –யாவர் ஒரு அழகர்
அல்பாத் சங்கல்ப –மிகச் சிறிய சங்கல்பம் கொண்டே
ஜெகஜ் ஜென்ம லய ஸ்திதி க்ரியாஸ் சங்கல்பயதி –சகல ஜகத்துக்களினுடைய ஸ்ருஷ்ட்டி ஸ்திதி
சம்ஹாரங்களை நடத்திக் கொண்டு போருகிறாரோ
ஸூந்தர பாஹு ஸம்ஸ்ரயா -அப்படிப்பட்ட அழகரை அவலம்பித்துக் கொண்டு இருக்கிற
ஐஸ்வர்ய தேஜோ பல வீர்ய சக்தயே கீத்ருக் விதாஸ் –ஐஸ்வர்யம் தேஜஸ்ஸூ பலம் வீர்யம் சக்தி
ஆகிற இக்குணங்களின் அந்தோ எப்படி பட்டவை
அபரிச்சேதயமான வைபவத்தை உடையவர்கள் அன்றோ

—————–

ஷமா குண சீர்மை அனுபவம் -ஒரு பிரணாம மாத்திரத்திலே ஷமித்து அருளுகிறார் அழகர் அன்றோ –

யத் கல்பாயுத போகதோபி க்ருசதாம் யாயாந் ந தாவத் பலம்
யேஷ்வே கஸ்ய ததா விதைஸ் சதத ஜைரம் ஹோபி ருத்ஸீ மபி
அஸ்தாதா விஹ ஸம்ஸ்ருதாவு பஸிதைச் சந்நம் ஸூ சந்நம் ஜனம்
சந் நத்யா ஷமதே க்ஷணாத் வந கிரி ப்ரஸ்த பிரியஸ் ஸூந்தர –29-

யத்–அம்ஹஸ் – கல்பாயுத போகதோபி க்ருசதாம் ந யாயாத்– யாதொரு பாபம் பதினாயிரம் கல்பம்
பல அனுபவம் செய்யப் பெற்றாலும் க்ஷயிக்க மாட்டாது
தாவத் பலம் யேஷ்வே கஸ்ய -எந்த பாபங்களுள் ஒரு பாபத்திற்கு அவ்வளவு மிடுக்கு உள்ளதோ
ததா விதைஸ் –அப்படிப்பட்டவைகளாய்
சதத ஜைரம்–இடைவீடு இன்றிக்கே செய்யப்படுமவையாய்
உத்ஸீ மபி –எல்லை கடைந்தவையாய்
அஸ்தாதா விஹ ஸம்ஸ்ருதாவு பஸிதைச்–அநாதியான இந்த சம்சார மண்டலத்தில் வளர்ந்து செல்லுமவையான
அம் ஹோபி சந்நம் -பாபங்களால் திரோஹித ஆத்ம ஸ்வரூபனாய்
ஸூ சந்நம் ஜனம் –அத ஏவ ஸூ தராம் அவசன்னனான ஒரு பிராணியை
வந கிரி ப்ரஸ்த பிரியஸ் ஸூந்தர –திருமாலிருஞ்சோலை அடிவாரத்தில் திருந்த உள்ளம் உகந்து வர்த்திக்கும் அழகர்
சந் நத்யா ஷமதே க்ஷணாத் –பிரணிபாத பிரதீ காரஸ் சம்ரம்போ ஹி மஹாத்மநாம் –என்று
காளிதாசன் சொன்னபடியே பிரணிபாத மாத்திரமே பற்றாசாக நொடிப் பொழுதிலே ஷமைக்கு இலக்கு ஆக்குகிறான்
யத் ப்ரஹ்ம கல்ப நியுத அநுபவேபி –ஸ்ரீ வைகுண்ட ஸ்த்வ ஸ்லோகம் இங்கு அனுசந்தேயம்

———–

யஞ்ஜாதீயோ யாத்ருசோ யத் ஸ்வ பாவ
பாதச் சாயாம் ஸம்ஸ்ரிதோ யோபிகோபி
தஜ்ஜாதீயஸ் தாத்ருஸஸ் தத் ஸ்வ பாவஸ்
ஸ்லிஷ்யத்யேநம் ஸூந்தரோ வத்சலத்வாத் –30-

யஞ்ஜாதீயோ–தேவாதி ஜாதிகளில் ஏதேனுமாகவுமாம்
யாத்ருசோ –ஒழுக்கத்தில் ஏதேனுமாகவுமாம்
யத் ஸ்வ பாவ –இயல்பு ஏதேனுமாகவுமாம்
யோபிகோபி-இன்னான் இனையான் என்று இல்லை –எவனாகவுமாம் –
பாதச் சாயாம் ஸம்ஸ்ரிதோ –திருவடி நிழலில் ஒதுங்கினானாக அமையும்
ஏனம் ஜனம் -இப்படிப்பட்ட பிராணியோடே
ஸூந்தரோ வத்சலத்வாத் –அழகர் தம்முடைய வாத்சல்யமே பற்றாசாக
தஜ்ஜாதீயஸ் தாத்ருஸஸ் தத் ஸ்வ பாவஸ் சந் ஸ்லிஷ்யதி –வேற்றுமை இன்றி ஒக்கக் கலந்து பரிமாறுகிறார்
கீழே அபராத ஸஹிஷ்ணுதாவ ரூப மாகிற ஷமா குண அனுபவம்
இதில் தோஷ போக்யதா ரூபமான வாத்சல்யத்தை அனுபவிக்கிறார்
எக்குற்றவாளர் ஏது இயல்பு ஏது பிறப்பாக நின்றாலும் உன் பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம்
நான் எங்கும் காண்கின்றிலேன் திருமாலிருஞ்சோலை எந்தாய்

———————

நிஹீநோ ஜாத்யா வா ப்ருசம குசலைர்வா ஸ்வ சரிதைஸ்
புமாந் வை யஸ் கச்சித் பஹு த்ருணமபி ஸ்யாத குணதஸ்
பஜந்தம் தம் பஸ்யேத் புஜகபதிநா துல்யமபி யஸ்
வநாத்ரி ப்ரஸ்தஸ் தஸ் ச மம சரணம் ஸூந்தர புஜஸ் –31-

யஸ் கச்சித் புமாந் வை-பெயர் இட்டுச் சொல்ல ஒண்ணாதவன் எவன் ஆகிலும்
ஜாத்யா வா ப்ருசம நிஹீநோ–ஜாதியினால் தண்ணியனாகவுமாம்
அ குசலைர் ஸ்வ சரிதைஸ் வா ப்ருசம நிஹீநோ–தீய நடத்தைகளினால் தண்ணியனாகவுமாம்
அகுணதஸ் பஹு த்ருணமபி ஸ்யாத் –ஒரு குணம் இல்லாமை பற்றி த்ருண ப்ராயனாகவுமாம்
ஆக இங்கனே சர்வாத்மா தண்ணியனாய் இருந்தானே யாகிலும்
பஜந்தம் தம் புஜகபதிநா துல்யமபி யஸ் பஸ்யேத் –பகவத் பஜனம் என்கிற குணம் அவனிடம் வாய்க்குமாகில் –
அன்னவனை ஆதி சேஷனோடே ஒக்கவுமாம் கடாக்ஷித்து அருளா நின்றான் யாவன் ஒருவன்
ச வநாத்ரி ப்ரஸ்தஸ் தஸ் ஸூந்தர புஜஸ் மம சரணம் –அழகர் தானே எனக்குப் புகல்
குகனோடும் ஐவர் ஆனோம் முன்பு –பின் குன்று சூழ்வான் மகனோடும் அறுவரானோம்-
எம்முழை யன்பின் வந்த அகனமர் காதலையே நின்னோடும் எழுவரானோம்
இந்த பஹு குணம் அசம்பாவிதம் அன்றோ

——————-

ஏக ஏக மங்கள குண அனுபவ அபி நந்தம்
ஈத்ருக்த இயா நிதி ச ஸூந்தர தோஷ்ணி கிருஷ்னே
தேயே சதந்த் விதி நியந்து மநாஸ் ஸ்ருதிர் ஹை
நைவை ஷ வாங் மனச கோசர இத்யுதாஹ –32-

ஸூந்தர தோஷ்ணி கிருஷ்னே–அஸங்க்யேய கல்யாண குண கண நிதியான ஸூந்தர தோளுடையான் பக்கலிலே
ஏக ஏக மங்கள குண அனுபவ அபி நந்தம்–ஒவ்வொரு திருக் கல்யாண குணத்தையும் அனுபவிப்பதில் உண்டாகும் ஆனந்தத்தை
ஈத்ருக்த இயா நிதி நியந்து மநாஸ் ஸ்ருதிஸ் து –இப்படிப்பட்டது என்றும் இவ்வளவற்றது என்றும்
பரிச்சேதிக்கப் புகுந்த வேதமோ என்னில்
தேயே சதந்த் விதி ஹை ஏஷ வாங் மனச கோசர நைவ இத்யுதாஹ –இது வாக்குக்கும் மனசுக்கும் எட்டவே மாட்டாது
என்று சொல்லித் தலைக்கட்டிற்று
யாதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹா
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்திலும் -51-த்ரயீ யுத்யதா தவ யுவத்வமுகைர் குணவ்கை –என்ற ஸ்லோகமும்
இதே பொருளில் -அங்கும் நான்காவது பாதம்-நைவை ஷ வாங் மனச கோசர இத்யுதாஹ-என்று அமைந்து இருக்கும் –
ஸ்தோத்ர ரத்னம் -உபர்யுபர்யப்ஜபுவோபி –ஸ்லோகமும்
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்தர சதகத்திலும் -மர்த்யோத்தாயம் விரிஞ்சாவதிகம் -ஸ்லோகமும்
ஆனந்த வல்லி பிரிகிரியை அடி ஒற்றி அமைத்துள்ளவை

—————

திருக்கல்யாண குண அனுபவத்தில் இருந்து
திவ்ய மங்கள விக்ரஹ ஸுந்தர்ய லாவண்யாதி அனுபவங்களில் தோள் மாறுகிறார்

அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தல மஞ்ஜன ப்ரபம்
ஸூந்தரோரு புஜம் இந்திரா பதிம் வந்தி ஷீய வரதம் வநாத்ரிகம் –33-

அப்ஜம் -அரவிந்தம் -பத்மம் -பதபேதமே ஒழிய அர்த்த பேதம் இல்லை –
தாமரை கமலம் அரவிந்தம் என்று ஆழ்வார்கள் அனுபவித்தது போலவே
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா —
அப்ஜம் நு கதம் நிதர்சனம் -என்று இந்த ஸ்தவத்திலும் அருளிச் செய்வார்
அப்ஜ பாதம் –செந்தாமரை போன்ற திருவடிகளை உடையவன்
அரவிந்த லோசனம் –அரவிந்தம் போன்ற நீண்ட கண்ணான்
பத்ம பாணி தலம் –பத்மம் என்னலாம் படியான திருக்கைத்தலம் உடையவன்
பத்மத்தைப் பாணி தலத்திலே உடையவன் -என்னவுமாம் –
அப்போது பத்மம் என்றது பத்ம ரேகையைச் சொன்ன படி –
பத்மத்தைக் கையிலே தரித்து சேவை சாதிப்பதும் உண்டே -அதை சொல்லிற்று ஆகவுமாம்
செம் பொன் இலங்கு –ஒண் மலர் பற்றி -திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ அட்டபுயகரப் பதிகத்தில் -அருளிச் செய்கிறார்
அஞ்ஜன ப்ரபம் –மைப்படி மேனி அன்றோ –
அஞ்சன வண்ணனை என்றும் –
அஞ்சனம் புரையும் திரு வுருவன் என்றும் ஆழ்வார்கள் வாய் புலற்றுவர்களே
ஸூந்தரோரு புஜம் –அழகியவாய் நீண்டவையான திருத்தோள்களை யுடையவன்
இந்திரா பதிம் –திரு மகளார் தனிக்கேள்வன்
வந்தி ஷீய வரதம் வநாத்ரிகம் –ஸ்ரீ ஹஸ்திகிரியில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ வரதனே
ஸ்ரீ வநாதரியிலும் சேவை சாதித்து அருளுகிறார் ஸ்ரீ ஆழ்வானுக்கு
நாவாயில் உளானை நறையூரில் கண்டேனே
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே
நின்றவூர் நித்திலத்தைக் கண்டது நான் கடல் மல்லை தல சயனத்தே –என்பவை போலே

——————–

கநக மரகத அஞ்சனத்ரவாணாம்
மதன சமுத்தித சார மேல நோத்தம்
ஜயதி கிமபி ரூபம் அஸ்ய தேஜஸ்
வந கிரி நந்தன ஸூந்தரோரு பாஹோ–34-

திவ்ய மங்கள விக்ரஹ லாவண்யா அனுபவம்
அஸ்ய வந கிரி நந்தன ஸூந்தரோரு பாஹோ–கிமபி ரூபம் தேஜஸ் – ஜயதி –பரம விலக்ஷண தேஜஸ்ஸூ
கிமபி ரூபம்-ஸமஸ்த பதமாகவும் இரண்டு பதங்களாகவும் கொள்ளலாம் –
அநிர்வச நீயமான ரூபம் என்று ஸமஸ்த பதமாகவும்
தேஜஸ் -கிமபி ரூபம் – ஜயதி–தேஜோ மயமான ஓர் உருவம் திகழ்கின்றது என்று வ்யஸ்த பதமாகவும் கொள்ளலாம்
கநக மரகத அஞ்சனத்ரவாணாம் மதன சமுத்தித சார மேல நோத்தம்–
கனகம் மரகதம் அஞ்சனம் இவற்றை உருக்கி -அந்த திரவத்தை தனித்தனியே மதனம் பண்ணி –
அதை வடிகட்டி ஓன்று சேர்த்தால் போலே உள்ளதாம் -அழகருடைய திரு உருவம் –
மதனம் பண்ணுகை புடம் போடுகை-
அநந்தரம் வெளிறு கழித்து சாரத்தைத் திரட்டி ஓன்று கூட்டி உண்டாகும்
கூட்டரவே அழகருடைய திவ்ய மங்கள விக்ரஹம் –

——————

கிம் நு ஸ்வயம் ஸ்வாத்ம விபூஷணம் பவந்
அசவ் அலங்கார இதி ஈரித ஜநை
வரத்திஷ்ணு பல த்ரும ஷண்ட மண்டிதம்
வநாசலம் வா பரிதஸ் பிரசாதயந் –35-

அசவ் ஜநை அலங்கார இதி ஈரித –இந்த அழகப் பிரானார் உலகத்தவர்களால் அலங்காரர் என்று வழங்கப்படுகிறார்
பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை அலை வலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை –பெரியாழ்வார்
கிம் நு ஸ்வயம் ஸ்வாத்ம விபூஷணம் பவந் –ஆபரணாதிகளால் அழகு பெற வேண்டாதே
தனக்குத் தானே அலங்காரமாய் இருப்பதை பற்றி என்னலாமோ -அன்றிக்கே –
வரத்திஷ்ணு பல த்ரும ஷண்ட மண்டிதம் வநாசலம் வா பரிதஸ் பிரசாதயந் —
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலையைச் சுற்றிலும் அலங்கரிப்பது பற்றி என்னலாமோ
ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தில் –கர்ணிகா தவ கரீச கிமேஷா –ஸ்லோகத்தில் உள்ள உல்லேகங்களை
இங்கு இதற்குப் போலியாக நினைப்பது
ஸ்வயம் ஸ்வாத்ம விபூஷணமாய் இருப்பது பற்றியும்
வந கிரி விபூஷணமாய் இருப்பது பற்றியும் -அலங்காரம் என்று திரு நாமம் ஆயிற்று என்று தாத்பர்யம்
வரத்திஷ்ணு பல த்ரும ஷண்ட மண்டிதம் வநாசலம்–
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை –ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியின் மொழி பெயர்ப்பு

———————

ஸூகஸ் பர்ஸைர் நித்யைர் குஸூ மஸூ குமாராங்க ஸூகதை
ஸூ ஸுவ்கந்த்யைர் திவ்ய ஆபரண கண திவ்ய ஆயுத கணைர்
அலங்கார்யைஸ் சர்வைர் நிகதிம் அலங்கார இதி யஸ்
சமாக்க்யா நம் தத்தே ச வந கிரி நாதோஸ்து சரணம் –36-

ஸூகஸ் பர்ஸைர் –நிரதிசய ஸூகஸ் பர்ஸைர் –கத்யம் –மெத்தென்று இருக்குமவை
குஸூ மஸூ குமாராங்க ஸூகதை–புஷ்ப ஹாஸ ஸூ குமாரங்களான பாதாதி கேசாந்த அவயவங்களுக்குக்
கருமுகை மாலை போலே இனிமையைத் தரும்படி யானவை
ஸூஸுவ்கந்த்யைர்–லோக விலக்ஷணமான திவ்ய பரிமளம் பொருந்தியவை
அலங்கார்யைஸ்–திரு மேனிக்கு சோபாவஹங்களாய் இருக்குமவை
ஆக இப்படிப்பட்ட
சர்வைர் திவ்ய ஆபரண கண திவ்ய ஆயுத கணைர் –சகல திவ்ய ஆபரணங்களாலும் சகல திவ்ய ஆயுத கணங்களாலும்
நிகதிம் அலங்கார இதி யஸ் சமாக்க்யா நம் –தெரிவிக்கப் பட்டதான அலங்காரம் என்னும் திரு நாமத்தை
வந கிரி நாதஸ் தத்தே ச–யாதொரு அழகர் தமக்குத் திரு நாமமாகக் கொண்டுள்ளாரோ
ஸ சரணம் அஸ்து –அவர் நமக்குத் தஞ்சமாகக் கடவர் —
ஆக இந்த ஸ்லோகம் முன் ஸ்லோஹத்துக்கு சேஷபூத மாகி —
கீழே விதர்க்கமாய் -இங்கே நிஷ் கர்ஷமாய் -அலங்கார நாம நிர்வசனம் செய்தார் ஆயிற்று

———————

மகுட மகுட மாலோத்தம்ச சூடா லலாம
ஸ்வலக திலக மாலா குண்டலைஸ் ச ஊர்த்வ புண்ட்ரை
மணி வர வந மாலா ஹார கேயூர கண்ட்யைர்
துளஸீ கடக காஞ்சீ நூபுராத்யைச் ச பூஷை —37-

அஸி ஜலஜ ரதாங்கைச் சார்ங்க கௌமோதகீப்யாம்
அகணித குண ஜாலைர் ஆயுதைர் அப்ய தாந்யை
சதத விதத சோபம் பத்ம நாபம் வநாத்ரே
உபவந ஸூக லீலம் ஸூந்தரம் வந்திஷீய–38-

இவன் இரண்டும் குளகம்–ஏக அந்வயம் –
சில திவ்ய ஆபரணங்களையும் சில திவ்ய ஆயுதங்களையும் அருளிச் செய்து
இவை எல்லாம் ஆபரண கோடியிலே அமைந்து இருக்கும் படியை அருளிச் செய்து தலைக்கட்டுகிறார்

மகுட மகுட மாலோத்தம்ச சூடா லலாம ஸ்வலக திலக மாலா –மகுடம் -திரு அபிஷேகம் என்ன –
மகுட மாலா–திரு அபிஷேகத்தைச் சுற்றி அலங்காரமாகச் சாத்தப்பட்டு இருக்கும் மாலை என்ன –
உத்தம்ச–திரு அபிஷேகத்தின் முனையிலேயாம் ஆபரண விசேஷம் என்ன –
ஸ்வலக திலக மாலா-மாலா சப்தம் இரண்டு இடத்திலும் அன்வயித்து
ஸ்வலக மாலா -திலக மாலா -என்று ஆக்கி திருக்குழல் கற்றைக்குச் சாத்தும் ஆபரணமும்
திரு நெற்றிக்குச் சாத்தும் ஆபரணமும் என்ன
குண்டலைஸ் ச ஊர்த்வ புண்ட்ரை
மகர குண்டலம் என்ன -ஊர்த்வ புண்ட்ர அலங்காரம் என்ன
மணி வர வந மாலா –குரு மா மணிப் பூண் என்னப் பட்ட ஸ்ரீ கௌஸ்துபம் என்ன
ஆபாத சூடம் யா மாலா வனமாலேதி கத்த்யதே -எனப்பட்ட வனமாலை என்ன
ஹார கேயூர கண்ட்யைர்
துளஸீ கடக காஞ்சீ நூபுராத்யைச் ச பூஷை –ஹாரம் என்னும் முத்து வடங்கள் என்ன –
கேயூரம் என்னும் திருத் தோள் வளைகள் என்ன — கண்ட்யை -காரை என்னும் கண்ட ஆபரணம் என்ன
துளஸீ-தண்ணம் துழாய் மாலை என்ன –
கடகம் என்னும் ஹஸ்த ஆபரணம் என்ன – காஞ்சீ என்னும் –திருவரை நாண் என்ன
நூபுராத்யைச் ச பூஷை –திருவடிச் சதங்கை என்ன
ஆக இவை முதலான திரு ஆபரணங்களாலும் —
இதற்கு அடுத்த ஸ்லோகத்தில் உள்ள -சதத விதத சோபம்-என்பதில் அந்வயம் –
ஆக இந்த ஸ்லோகத்தாலே திவ்ய பாஷாணங்களை ஸங்க்ரஹித்தார் ஆயிற்று

அஸி ஜலஜ ரதாங்கைச் –நந்தகம் என்றும்–பாஞ்ச சைன்யம் என்றும் –
ஸூ தர்சனம் என்றும் பேர் பெற்ற வாள் சங்கு சக்கரங்களாலும்
சார்ங்க கௌமோதகீப்யாம் –சார்ங்கம் என்றும் கௌமோதகீ என்றும் பேர் பெற்ற வில் தண்டுகளாலும்
அத -அகணித குண ஜாலைர் அந்யைர் அபி ஆயுதைர் –எண்ணித் தலைக் கட்ட ஒண்ணாத
குண கணங்களை யுடைய மற்றும் உள்ள ஹல முசல பரசு ப்ரப்ருதிகளான ஆயுதங்களாலும்
அப்ய தா சதத விதத சோபம் –நிரந்தரமாக பரம்பின ஸுவ்ந்தர்யத்தை யுடையவரான
பத்ம நாபம் வநாத்ரே உபவந ஸூக லீலம் ஸூந்தரம் வந்திஷீய–அழகரை வணங்கக் கடவேன்

திவ்ய ஆயுதங்களும் திவ்ய ஆபரணம் போலே திரு மேனிக்கு சோபாவஹமாய் இருக்கப் பெற்ற
வைலக்ஷண்யத்தை அனுபவித்தார் ஆயிற்று –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -ஸ்லோகங்கள்-14-25 –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

October 25, 2019

ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவத்துக்கு பிரவேசம் -கீழே -13-ஸ்லோகங்கள் –
திருமலையின் வளம் சொல்லித் தலைக்கட்டினார்
இனி ஸ்ரீ அழகருடைய ஸ்துதியிலே ஒருப்படுகிறார்

பீதாம்பரம் வரத சீதல த்ருஷ்ட்டி பாதம் ஆஜாநு லம்பி புஜம் ஆயத கர்ண பாசம்
ஸ்ரீ மத் மஹா வந கிரீந்த்ர நிவாஸ தீக்ஷம் லஷ்மீ தரம் கிமபி வஸ்து மம ஆவி ரஸ்து–14-

கிமபி வஸ்து மம ஆவி ரஸ்து–அழகர் என்கிற ஒரு பரஞ்சோதி -என் கண் முன்னே –
நெஞ்சின் உள்ளே தோன்றக் கடவது -அது தான் எப்படிப்பட்டது என்னில்
பீதாம்பரம் –பீதாக ஆடைப் பிரானார் –என்கிறபடிஏபி பீதாம்பர தரமாய் இருக்கும்
வரத சீதல த்ருஷ்ட்டி பாதம் –வேண்டுவார் வேண்டின வரங்கள் எல்லாம் அளிக்க வல்லதாய் சீதளமான
கடாக்ஷ வீக்ஷணத்தை உடையதாய் இருக்கும்
ஆஜாநு லம்பி புஜம் –முழம் தாள் அளவும் தொங்குகின்ற புஜங்களை உடைத்ததாயும் இருக்கும்
ஆயத கர்ண பாசம் –தோள் அளவும் நீண்ட திருச் சேவி மடல்களை யுடைத்தாயும் இருக்கும்
ஸ்ரீ மத் மஹா வந கிரீந்த்ர நிவாஸ தீக்ஷம் -திருமாலிருஞ்சோலை மலையிலே நித்ய வாச நிரதமாய் இருக்கும்
லஷ்மீ தரம்–பூவார் திரு மா மகள் புல்கிய மார்பதாயும் இருக்கும்
ஆக இப்படிப்பட்ட ஒரு விலக்ஷண வஸ்து அடியேனுக்கு விளங்க வேணும் என்கிறார்

——————

இனி வேதாந்த பிரகிரியையிலே ஸ்துதிக்க உபக்ரமிக்கிறார்
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி யத் ப்ரத்யந்த்யபி சம் விசந்தி
தத் ப்ரஹ்ம -என்கிற உபநிஷத் கட்டளைப்படியே

ஜநி ஜீவநாப்யய விமுக்தயோ யதோ
ஜெகதாமிதி சுருதி சிரஸ்ஸூ கீயதே
ததிதம் ஸமஸ்த துரித ஏக பேஷஜம்
வந சைல சம்பவம் அஹம் பஜே மஹ –15-

ஜெகதாம் ஜநி ஜீவநாப்யய விமுக்தயோ -ஜகத்துக்களுக்கு எல்லாம் உத்பத்தி -ஸ்திதி -லயங்களும் –
மோக்ஷ பிராப்தியும்
கீழே சொன்ன உபநிஷத் படியும் அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கிற
ஸ்ரீ கீதா ஸித்தமான விமுக்தியையும் சேர்த்து அருளிச் செய்கிறார்
யதோ இதி சுருதி சிரஸ்ஸூ கீயதே –யாதொரு பரஞ்சோதியிடத்தின் நின்றும் ஆகின்றன என்று
வேதாந்தங்களிலே ஓதப்படுகின்றதோ
கீயதே -பத பிரயோகம் ஸ்ரீ கீதா ஸ்லோக அர்த்தத்தையும் சேர்த்து அருளிச் செய்ததுக்கு சேர –
வீடாம் தெளி தரு நிலைமையது ஒழிவிலன் –என்று ஆழ்வாரும்
த்வத் ஆஸ்ரிதா நாம் ஜகத் உத்பவ ஸ்திதி பிராணா ச சம்சார விமோசன –என்று ஆளவந்தாரும்
அருளிச் செய்ததை அடி ஒற்றியே இங்கும்
ஸமஸ்த துரித ஏக பேஷஜம் –சகல பாபங்களும் அரு மருந்தாய்
வந சைல சம்பவம்–திருமாலிருஞ்சோலை மலையிலே தோன்றிற்றாக உள்ள
ததிதம் மஹ –அஹம் பஜே -அப்படிப்பட்ட பரஞ்சோதியை நான் பஜிக்கிறேன்

———————-

ஸத் ப்ரஹமாத்ம பதைஸ் த்ரயீ சிரஸி யோ நாராயண உக்தயா ததா
வ்யாக்யாதோ கதி சாம்ய லப்த விஷய அநந்யத்வ போத உஜ்ஜ்வலை
நிஸ் துல்யாதி கமத் விதீயம் அம்ருதம் தம் புண்டரீகேஷணம்
ப்ராரூடஸ்ரியம் ஆஸ்ரயே வநகிரேஸ் குஞ்ஜோதிதம் ஸூந்தரம்–16-

கதி சாம்ய
சகல சாகா ப்ரத்யய நியாயம் -சகல வேதாந்த ப்ரத்யய நியாயம் -இரண்டையும் சொன்னபடி
சாந்தோக்யம் -ஸத் ஏவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம்
வாஜசநேயகம் –ப்ரஹ்மம் வா இதம் ஏவ அக்ர ஆஸீத்
இப்படி அந்த சத்தான வஸ்துவே பெரியதான ப்ரஹ்மம் என்று சொல்லி
மம யோ நிர் மஹத் ப்ரஹ்ம
தத் ஞான ப்ரஹ்ம சம்ஜ்ஜிதம் -என்று இருப்பதால் ப்ரஹ்ம சப்தம் சேதன அசேதன சாதாரணம் ஆகையால்
ஐதரேயகத்தில் -ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத் நான்யத் கிஞ்சனமிஷத் –என்று
சேதனுக்கே என்னுமத்தை சொல்லி -இவன் இந்த்ராதிகள் இல்லை நாராயணனே என்னும் இடத்தை
நாராயண அனுவாகம்–ஸூ பால உபநிஷத்துக்கள்-
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசாந -இத்யாதிகளில் ஸ்பஷ்டமாக நிஷ்கர்ஷித்துக் கொடுத்தனவே

கதி சாம்ய லப்த விஷய அநந்யத்வ போத உஜ்ஜ்வலை
அந்த நாராயணனே இங்கே சேவை சாதித்து அருளுகிறார்
ஏஷ ஈஸ இதி நிர்ணயம் த்ரயீ பாகதேய ரஹிதஷூ நோ திசேத் ஹஸ்தி தாமநி ந நிர்ணயேத க தேவராஜம்
அயம் ஈஸ்வரஸ் த்விதி –என்று பரத்வ நிஷ்கர்ஷம் வேதாந்தங்களில் போலே
ஆயாச பாஹுல்யமாய் இல்லாமல் திவ்ய தேசத்தில் எளிது அன்றோ

நிஸ் துல்யாதிகம் –ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
ந தத் சமாச் ச அப்யதிகச்ச த்ருச்யதே
உபமான உபமேயத்வம் யத் ஏகஸ்யைவ வஸ்துந —
இந்துர் இந்துர் இவ ஸ்ரீ மான் –ககனம் ககனாகாரம் -சாகரஸ் சாகர உபம –
ராம ராவணயோர் யுத்தம் ராம ராவணயோரிவ —
தானே தனக்கு உவமன்-தன் ஓப்பான் தானாய் உளன் காண் –

அத்விதீயம் அம்ருதம் -ரஸோ வை ச –
எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலைக் கோனே –
விலக்ஷண திவ்ய அம்ருதம் போலே பரம போக்யன்

புண்டரீகேஷணம்
தாமரை போல் கண்ணான்
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ

ப்ராரூடஸ்ரியம் –நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு –பாசுரத்தில்
ஏறு திருவுடையான் –திருநாமத்துக்கு ஏற்ப இந்த பத யோகம்
மேலே ஆரூட ஸ்ரீ –என்றும் ஆரூட லக்ஷம்யா ஹரே –என்றும் அருளிச் செய்வார்
பிராட்டி தானே ஸ்வயம்வரித்து வந்து சேர பெற்ற பெருமாள் என்றபடி

ஆஸ்ரயே வநகிரேஸ் குஞ்ஜோதிதம் ஸூந்தரம்–
குஞ்சமாவது லதாக்ருஹம்–
அதிலே சேவை சாதிக்கின்ற அழகரை அடி பணிகின்றேன் என்கிறார்

——————–

பதிம் விஸ்வத் யாத்மேஸ்வரம் இதி பரம் ப்ரஹ்ம புருஷ
பரம் ஜ்யோதிஸ் தத்வம் பரம் இதி ச நாராயண இதி
ஸ்ருதிர் ப்ரஹ்மேசாதீந் ததுதித விபூதீம்ஸ்து க்ருணதீ
யம் ஆஹ ஆரூட ஸ்ரீஸ் ச வந கிரி தாமா விஜயதே –17-

பதிம் விஸ்வத் யாத்மேஸ்வரம் இதி பரம் ப்ரஹ்ம புருஷ
பரம் ஜ்யோதிஸ் தத்வம் பரம் இதி ச நாராயண இதி —
பதிம் விஸ்வத் யாத்மேஸ்வரம்
நாராயண பரம் ப்ரஹ்ம
விஸ்வமே வேதம் புருஷ
பரம் ஜ்யோதிஸ் ரூப சம்பத்ய
தத்வம் நாராயண பர
நாராயண ஏவேதம் சர்வம் –சுருதி வாக்கியங்களைச் சேர்த்து அருளிச் செய்கிறார்

இதி ஸ்ருதிர் –பூர்வார்த்தத்தில் உதாஹரிக்கப் பட்ட சுருதி வாக்யங்களானவை என்றபடி
ப்ரஹ்மேசாதீந் ததுதித விபூதீம்ஸ்து க்ருணதீ சதீ –ப்ரஹ்மாதி தேவர்களை பகவத் விபூதிகளாகவே
தெரிவித்ததாய்க் கொண்டு
யம் ஆஹ –யாவர் ஒரு திருமாலிருஞ்சோலை அழகரைப் பேசி நின்றதோ
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே -நாராயணாத் ருத்ரோ ஜாயதே–இத்யாதிகளால்
பகவத் விபூதிகளாகவே சொல்லப் பட்டார்கள் அன்றோ

ச ஆரூட ஸ்ரீஸ் வந கிரி தாமா விஜயதே -வேதாந்த சித்தனான அந்த எம்பெருமானே ஏறு திருவுடையான் என்கிற
திரு நாமத்தோடே தெற்குத் திருமலையில் சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார் என்கிறார்

————

ப்ருதிவ்யாத் யாத்மாந்தம் நியமயதி யஸ் தத்வ நிகரம்
தத் அந்தர்யாமீ தத்வ புரவிதி தஸ் தேந பகவான்
ச ஏஷஸ் ஐஸ்வர்யம் ந விஜ ஹத சேஷம் வந கிரிம்
சமத்யாஸீநோ நோ விசது ஹ்ருதயம் ஸூந்தார புஜ–18-

ப்ருதிவ்யாத் யாத்மாந்தம் தத்வ நிகரம் — தத் அந்தர்யாமீ சந் –தத் வபுஸ் சந் — தேந அவிதிதஸ் சந் –
நியமயதி –அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில் சொன்னபடி யாவன் ஒரு பகவான் பிருத்வி முதல் ஆத்மா வரையில் உள்ள
தத்துவங்களை எல்லாம் -அந்த தத்வங்களில் அந்தர்யாமியாய்க் கொண்டும் –
அவற்றை சரீரமாகக் கொண்டு தான் அவற்றுக்கு சரீரியாயும் –
அவற்றால் இவன் நம் உள்ளே உறைகிறான் என்று அறியப் படாதவனாயும் –
அவற்றின் பிரவ்ருத்தி நிவ்ருத்திகளை நிர்வஹிகித்துக் கொண்டு போருகிறானோ

ச ஏஷ –இப்படி சுருதி பிரதிபாதிதனான எம்பெருமான்
ஸ்ஐஸ்வர்யம் அசேஷம் ந விஜஹத் –ஸ்ரீ கீதையில் -அஜோபி சந் அவயயாத்மா பூதா நாம் ஈஸ்வரோபி சந்
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாமி ஆத்ம மாயயா –என்றும்
ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்று ஆழ்வார் அருளிச் செய்த படியும்
தன்னுடைய பரம ஐஸ்வர்ய பிரகாரம் ஒன்றையும் விடாதானாய்க் கொண்டு
ந விஜஹத்–என்ற இடத்தில் -நைக -சப்தத்தில் போலே ந சப்தேந சமாசம் என்று கொள்ள வேண்டும் –

வந கிரிம் சமத்யாஸீநோ ஸூந்தார புஜ–திருமாலிருஞ்சோலை மலையைக் கலவிருக்கையாகக் கொண்டு
இருக்கின்ற ஸூந்தர பாஹு

ந – ஹ்ருதயம் -விசது-நம்முடைய ஹ்ருதயத்தில் உள்ளே புகுந்து வர்த்திப்பனாக
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை–என்கிற திருவாய் மொழி பாசுரத்தில் நோக்கு
அங்குத்தை வாசம் சாதனம் -இங்குத்தை வாசம் ஸாத்யம்–ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி

————–

கீழே அந்தர்யாமித்வம் அருளிச் செய்து –
இதில் தத்கத தோஷங்களால் அசம்ப்ருஷ்டனாய் -இருக்கை யாகிற
ஹேய பிரத்ய நீகத்வமும்-கல்யாணை கதா நத்வமும் ஜீவாத்மாவுக்கு ஒரு காலும் அசம்பாவிதமாய்
பகவானுக்கே அசாதாரணமாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

பிரத்ய காத்மநி கதாபி அசம்பவத் பூம பூமிம் அபி வக்தி யம் சுருதி
தம் வநாத்ரி நிலயம் ஸூ ஸூந்தரம் ஸூந்தராயத புஜம் பஜாமஹே–19-

யம் சுருதி–ஏஷ சர்வ பூத அந்தராத்மா -அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -இத்யாதி
உபநிஷத் வாக்கியம் இங்கு சுருதி சப்த விவஷிதம் -இப்படிப்பட்ட ஸ்ருதியானது –
யம் பகவந்தம்–யாவன் ஒரு பகவானை
பிரத்ய காத்மநி கதாபி அசம்பவத் பூம பூமிம் அபி வக்தி –ஜீவாத்மாவின் இடத்தில் முக்தி திசையிலும் கூட
சம்பவிக்க மாட்டாதான அதிசயங்களை ஆஸ்பத பூதனாய் ஓதி இரா நின்றதோ
பூமா -சப்த பிரயோகம் பூமாதி காரணத்தின் பிரமேயம் இங்கே விவஷிதம்
தம் வநாத்ரி நிலயம் ஸூ ஸூந்தரம் ஸூந்தராயத புஜம் பஜாமஹே—அந்த பகவான் தானே
தெற்குத் திருமலையில் சுந்தரத் தோளுடையானாக சேவை சாதிக்கின்றான்
இங்கே நம்முடைய பக்தியைச் செலுத்தக் கடவோம் என்கை –

————-

வந்தேய ஸூந்தர புஜம் புஜகேந்திர போக
சக்தம் மஹா வந கிரி ப்ரணய ப்ரவீணம்
யம் தம் விதுர்பி தஹரம் அஷ்ட குண உப ஜுஷ்டம்
ஆகாசம் ஓவ்பநிஷதீஷு ஸரஸ்வதீ ஷு –20-

ஓவ்பநிஷதீஷு ஸரஸ்வதீ ஷு –உபநிஷத் வாக்யங்களாலே
அஷ்ட குண உப ஜுஷ்டம் தஹரம்
ஆகாசம் யம் விதுர் –அபஹத பாப்மத்வாதி அஷ்ட குணங்களோடு கூடியவனாக எந்த பரம புருஷனை
வைதிகர்கள் அறிகின்றார்களோ
தஹர உத்தரேப்ய –ஸூத்ர ப்ரமேயமே இதில்

தம் ஸூந்தர புஜம் வந்தேய–அந்த பரம புருஷனே ஸூந்தர பாஹுவாக சேவை சாதிக்கும் இடத்தில்
சேவிக்கக் கடவேன்-அவர் எப்படிப்பட்டவர் என்னில்
புஜகேந்திர போக சக்தம்–அரவணை மேல் பள்ளி கொண்டு அருளுபவர்
இந்த திவ்ய தேசத்தில் நின்ற நிலை தன்னில் இல்லை யாகிலும் இது பகவானுக்கு ஐகாந்திகம் என்பதால்
இப்படி அருளிச் செய்யக் குறையில்லை
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகர உஜ்ஜ்வல பாரிஜாதமான தேவப் பெருமாளை —
அத்தி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -என்று பூதத்தாழ்வாரும்
அனந்தசயனம் த்வாம் என்று இவரும் அருளிச் செய்தமை உண்டே –
மஹா வந கிரி ப்ரணய ப்ரவீணம் –திருமாலிருஞ்சோலை மலை வாசத்தில் ரசிகராயும் இருப்பவர்

————–

யத் ஸ்வா யத்த ஸ்வரூப ஸ்திதி க்ருதக நிஜேச்சா நியாம்யஸ்வ சேஷ
அநந்தா சேஷ ப்ரபஞ்சஸ் தத இஹ சிதி வாஸித் வபுர் வாசி சப்தைர்
விஸ்வைஸ் சப்தைர் ப்ரவாஸ்யோ ஹத வ்ருஜி நதயா நித்ய மேவா ந வத்ய
தம் வந்தே ஸூந்தராஹ்வம் வந கிரி நிலயம் புண்டரீகாயதாக்ஷம் –21-

இஹ–இந்த ஜகத்தில்
அசித் வபுர் வாசி சப்தைர் சித் இவ –அசித் பரிமாண பூத தேவ மனுஷ்யாதி சரீரங்களைச் சொல்லக் கடவதான
சப்தங்களாலே ஜீவாத்மா எப்படி சொல்லப்படுகிறானோ -அப்படியே –
அதாவது -ஸ்தூலோஹம்–க்ருஸோஹம் –இத்யாதி வியவஹாரங்களாலே ஸ்தூலத்வமும் க்ருஸத்வமும்
ஆத்மாவில் உள்ளது அன்றிக்கே சரீரத்தில் உள்ளதாய் இருக்கச் செய்தேயும் –
அஹம் ஸ்தூல அஹம் க்ருஷா என்று சரீர த்ருஷ்ட்யா சொல்லுகிறாப் போலே என்கை
இந்த த்ருஷ்டாந்தத்தைக் கொண்டு சாதிக்கப்படும் அம்சம் ஏது என்னில்

யத் ஸ்வா யத்த ஸ்வரூப ஸ்திதி க்ருதக நிஜேச்சா நியாம்யஸ்வ சேஷ அநந்தா சேஷ ப்ரபஞ்சஸ் தத
யத் -என்றது யாது ஒரு காரணத்தால் என்றபடி
அநந்தமாய் உள்ள அசேஷ பிரபஞ்சமும் ஸ்வா யத்த ஸ்வரூப ஸ்திதி க்ருதகமாய்–
நிஜேச்சா நியாம்யமாய் –ஸ்வ சேஷமாய் இருக்கையாலே -என்றபடி
சரீர லக்ஷணம் ஸமஸ்த ப்ரபஞ்சத்தனிடத்தும் சமன்விதமாகிறது
சகல ப்ரபஞ்சனத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்திகள் எம்பெருமான் அதீனமாகையாலும்
அந்தப்ரவிஷ்டா சாஸ்தா ஜனானாம் என்கிறபடியே
சகல பிரபஞ்ச நியமனமும் அவனுடைய இச்சாதீனம் ஆகையாலும்
இவை சமஸ்தமும் அவனுக்கே சேஷன் ஆகையாலும் சரீர லக்ஷணம் சமன்வயமாகுமே

தத விஸ்வைஸ் சப்தைர் ப்ரவாஸ்யோ –ஆகவே சர்வ பதார்த்த வாசக சகல சப்தங்களோடே
எம்பெருமானை சாமானாதி கரிக்க குறையில்லை என்றபடி
சகலம் ஜகத் பகவத சேஷ பூதம் –வ்யதிகரண நிர்த்தேசம்
சகலம் ஜகத் பகவான் -சாமானாதி கரண்ய நிர்த்தேசம்
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம
ஐததாத்ம்யம் இயம் சர்வம்
தத்வமஸி –சுருதிகள் உண்டே

ஹத வ்ருஜி நதயா நித்ய மேவா ந வத்ய
அபஹத பாப்மா வாகையாலே எப்போதும் ஹேயபிரத்யநீகனாய் இருப்பவன் என்றபடி
வ்ருஜினம் -பாவம் –ஹேய சாமான்யத்தையும் சொல்லுகிறது
ஹத -என்று பரத்வம்ஸா பாவம் சொல்லுகிறது அன்று -அத்யந்த பாவமே இங்கே விவஷிதம் –
இத்தால் முக்த புருஷ வ்யாவ்ருத்தி

தம் ஸூந்தராஹ்வம் வந கிரி நிலயம் புண்டரீகாயதாக்ஷம் –வந்தே- ஆக இப்படி வேதாந்த வேத்யனான
எம்பெருமான் தாமரைக் கண் அழகுடன் தெற்குத் திருமலையில் சேவை சாதிக்கும் இருப்பில்
சேவிக்கப் பெற்றேன் என்கிறார் –

க்ருதி சப்தம் ப்ரவ்ருத்தியை சொல்கிறது
உயர்வற உயர் நலம் உடையவன் திருவாய் மொழியில்
நாம் அவன் இவன் யுவன்
அவரவர் தமதமது
நின்றனர் இருந்தனர் –மூன்று பாசுரங்களால் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் எம்பெருமான் அதீனம் என்று சொல்லி அடுத்து
உடல் மிசை உயிர் என -என்று ஜீவாத்மாவை த்ருஷ்டாந்தீ கரித்து
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்–என்று ஆழ்வார் தலைக்கட்டி அருளினார் போலே
இந்த ஸ்லோகமும் அமைந்துள்ளது

—————-

குணஜம் குணி நோ ஹி மங்கலத்வம் பிரமிதம் ப்ரத்யுத யத் ஸ்வரூப மேத்ய
தம் அநந்த ஸூகாவ போத ரூபம் -விமலம் ஸூந்தர பாஹும் ஆஸ்ரயாம —22-

குணி நோ மங்கலத்வம் குணஜம் ஹி பிரமிதம் –லோகே –சாமான்யமாக உலகில் வஸ்துவுக்கு
மங்கலத்வம் குண சம்பந்தத்தால்
ப்ரத்யுத யத் ஸ்வரூப மேத்ய –அந்த நியாயம் இங்கு விபரீதம் -பகவத் ஸ்வரூபத்தை ஆஸ்ரயித்தே
அக்குணங்கள் மங்களத்தன்மை பெறுகின்றன -லோக விலக்ஷணமாய் அன்றோ பகவத் விஷயம்
அநந்த ஸூகாவ போத ரூபம் –அநந்த ரூபம் ஸூக ரூபம் அவபோத ரூபம் -என்று யோஜித்து
தேச கால வஸ்து பரிச்சேதங்கள் இல்லாமை -அனந்தத்வம் ஆகும் –
ஸூக ரூபம் என்றது ஆனந்த மாயம் –
அவபோத ரூபம் என்றது ஞான மாயம் என்றபடி
தம் விமலம் ஸூந்தர பாஹும் ஆஸ்ரயாம –அகில ஹேயபிரத்ய நீகனாய் இரா நின்ற
அந்த ஸூந்தர பாஹுவை ஆஸ்ரயிக்கிறோம் –

ஸர்வஸ்ய சைவ குணதோ ஹி விலக்ஷணத்வம் —ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
குணாயத்தம் லோகே குணிஷு ஹி மதம் மங்கல பதம் –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்
இவையும் ஸமான அர்த்தம்
பர துக்க துக்கித்தவம் குணமாகவே அனுசந்திக்கப்படும் -துக்கித்தவம் தோஷமாகவே லோகத்தில் இருந்தாலும்
ஆகவே எம்பெருமானைப் பற்றி உள்ளது எதுவாயினும் அது சுப குணமே ஒழிய வேறு ஓன்று அன்று
என்பதைக் காட்டி அருளவே இப்படி ஸக்ருத் இல்லாமல் அருளிச் செய்து காட்டி அருளுகிறார்

———————

தன் வைபவத்தை அனுபவித்து உகந்து இருக்கும் தசை நித்யோதித தசை
தனது விபூதியை அனுபவித்து உகந்து இருக்கும் தசை சாந்தோதித தசை –
இந்த ஸ்லோகம் நித்யோதித தசை அனுபவ அனுசந்தானம் –

அதிபதி தாவதி ஸ்வ மஹிம அனுபவ ப்ரபவத்
ஸூக க்ருத நிஸ் தரங்க ஜலதீயித நித்ய தசம்
பிரதிபடமேவ ஹேய நீகரஸ்ய சதாபிரதிமம்
ஹரிமிஹ ஸூந்தராஹ்வ முபயாமி வநாத்ரி தடே –23-

அதிபதி தாவதி ஸ்வ மஹிம அனுபவ ப்ரபவத் ஸூக க்ருத நிஸ் தரங்க ஜலதீயித
நித்ய தசம் –நித்ய தசை என்றது நித்யோதித தசை என்றவாறு –
அதிபதி தாவதி-அவதியைக் கடந்த யாதொரு ஸ்வ வைபவம் –
அந்த அனுபவ ஜெனித ஹர்ஷம் அலை ஓய்ந்த கடல் போலே என்றவாறு –
ஜலதீயித–என்றது ஜலதி போன்றதான என்றபடி –
பிரசாந்த அநந்த ஆத்ம அனுபவஜ மஹா ஆனந்த மஹிம ப்ரசக்த ஸ்தைமித்யா அநு க்ருத
விதரங்கார்ணவதசம் –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்

சதைவ ஹேய நீகரஸ்ய பிரதிபடம் -தமஸுக்கு தேஜஸ் ஸூ போலவும் -சர்ப்பத்துக்கு கருடன் போலவும்
ஹேயமான அவதியை சமூகத்துக்கு எதிர்த்தட்டாய் இருக்குமே
ஹேய சாமா நாதி காரண்ய அஸஹிஷ்ணுத்வம் என்றபடி
சதைவ -ஸ்வ பாவத ஏவ -முக்தர்களுக்கு ஸமாச்ரயண தசையில் இல்லையே –
நித்யர்களுக்கு பகவத் இச்சாதீனம் -ஸ்வா பாவிகம் அன்று —
அப்பிரதிமம் –கீழ்ச் சொன்னதுவே ஹேதுவாக ஒப்பற்ற படி
ஸூந்தராஹ்வம் ஹரிமிஹ வநாத்ரி தடே உபயாமி –இப்படி பெருமைவாய்ந்த அழகப்பிரானை
திருமாலிருஞ்சோலை அடிவாரம் தன்னிலே சேவிக்கப் பெற்றேன்

——————

சதா ஷாட் குண்யாக்யை ப்ருதுலபல விஞ்ஞான சகந
பிரபா வீர்யைஸ்வர்யைர் அவதிவிதுரை ஏதிததசம்
த்ரும ஸ்தோம ஷமா ப்ருத் பரிசர மஹோத்யானமுதிதம்
ப்ரபத்யே அத்யாரூடஸ்ரியம் இமம் அஹம் ஸூந்தர புஜம் –24-

சதா ஷாட் குண்யாக்யை ப்ருதுலபல விஞ்ஞான சகந -பிரபா வீர்யைஸ்வர்யைர் அவதிவிதுரை ஏதிததசம் —
அபரிமிதமான –அவதி ரஹிதமான ஆறு குணங்களும் உண்டே –
அது தோன்ற ப்ரதூல விசேஷணமும் அவதி விதுரை விசேஷணமும் –
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில் -உத்தர சதகத்தில் -யுகபதநிசமஷை –ஸ்லோகம் தொடங்கி
ஸஹ கார்ய பேஷமபி–என்ற அளவாக ஏழு ஸ்லோகங்களாலும்
ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தில் பிரக்ருஷ்டம் விஞ்ஞானம் -ஸ்லோகத்திலும் -இவை பற்றி உண்டே
ஏதிததசம் –அதிசயிதமான ஸ்வ வைபவத்தை உடையவர் என்றபடி –

த்ரும ஸ்தோம ஷமா ப்ருத் பரிசர மஹோத்யானமுதிதம் —
த்ரும ஸ்தோம ஷமா ப்ருத்-என்றது திருமாலிருஞ்சோலை மலை என்றபடி
அதனுடைய பரிசரம் -தாழ்வரை -அங்குள்ள மஹா உத்யானத்தில் -பெரியதொரு சோலையிலே –
முதிதம்-திரு உள்ளம் உகந்து வர்த்திப்பர்

அத்யாரூடஸ்ரியம் இமம் அஹம் ஸூந்தர புஜம் ப்ரபத்யே-ஏறு திரு உடையரராய்
ஸூந்தர தோளுடையானை அடியேன் திருவடி பணிகின்றேன்

———————–

ஷாட் குணங்களின் பரிணாமமான பல குணங்களை அனுபவிக்கிறார்
ஸ்வரூப நிரூபக குணங்கள் –நிரூபித ஸ்வரூப விசேஷண குணங்கள் –
ஆஸ்ரயண ஸுவ்ஹர்ய ஆபாதக குணங்கள் -ஆஸ்ரித கார்ய ஆபாதக குணங்கள் –
திவ்யாத்ம ஸ்வரூப ஆஸ்ரித குணங்கள் -திவ்ய மங்கள விக்ரஹ ஆஸ்ரித குணங்கள் –
போன்ற வகுப்புக்கள் உண்டே
தவ வரதராஜ உத்தம குணா வி ஸீமாந அஸங்க்யர–ப்ரணத ஜன போகம் ப்ரஸூவதே –ஸ்ரீ வரதராஜ ஸ்த்வம் –
படியே இத்திருக் கல்யாண குணங்கள் எல்லாம் அனுபவ ரசிகர்களுக்கு பரம போக்யமாய் இருக்குமே

ஸுவ்சீல்ய ஆஸ்ரித வத்சலத்வ ம்ருதுதாஸ் ஸுவ் ஹார்த்த ஸாம்ய ஆர்ஜவ
தைர்ய ஸ்தைர்ய ஸூவீர்ய ஸுவ்ர்ய க்ருதிதா காம்பீர்ய சாதுர்யகை
ஸுவ்ந்தர்ய அந்வித ஸுவ்குமார்ய சமதா லாவண்ய முக்க்யைர் குணைர்
தேவ ஸ்ரீ தருஷண்ட சைல நிலயோ நித்யம் ஸ்திதஸ் ஸூந்தர –25-

ஸுவ்சீல்ய –குகப்பெருமாள் போல்வார் இடம் பெருமாள்
ஆஸ்ரித வத்சலத்வ –என் அடியார் செய்யார் செய்தாரேலும் நன்று செய்தார் என்னுமவன்
ம்ருதுதாஸ் -மார்த்வம் -இது ஸ்வரூபத்துக்கும் திவ்ய மங்கள விக்ரஹத்துக்கும் உண்டே –
மகாத்மாக்கள் விரகம் சஹியாத மார்த்வம் –நாயனார்
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய க்ஷணம் அபி தே யத் விரஹோதி துஸ் ஸஹ –ஆளவந்தார்
ஸுவ் ஹார்த்த –சோபனாசம்ஸி ஹ்ருதய சாலித்தவம் -சர்வ ஜன ஹிதைஷித்வம் –
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்த என்றபடி
ஸாம்ய -சமோஹம் சர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய –ஆஸ்ரயித்வேண சர்வசமனாய் இருக்கை
ஆர்ஜவ –கரண த்ரய செம்மை
தைர்ய –அனிஷ்டங்கள் வந்து புகுந்தாலும் நெஞ்சில் விகார லேசமும் இன்றி இருக்கை
அத்யந்த அநிஷ்ட ப்ரசங்கேபி அப்ரதிஹத சித்த வ்ருத்தித்தவம் தைர்யம்
ஸ்தைர்ய -ஆஸ்ரிதர்களை கைவிடாத திண்ணிய ஊற்றம்–ஏதத் விரதம் மம –
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன
ஸூவீர்ய –அரிய பெரிய போர் செய்யிலும் ஆயாசம் அற்று இருக்கை
ஸுவ்ர்ய–ஏகாகியாய் சென்று புக வல்லமை -அஸஹாய சூரா -அநபாய சாஹாசா
க்ருதிதா –க்ருதக்ருத்யத்வம் -அபி சிஷ்யச்ச ச லங்காயாம் ராக்ஷஸேந்திரம் வீபீஷணம்
க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர பிரமுமோத ஹ
காம்பீர்ய -ஆழம் அறிய அரிய–அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி
சாதுர்யகை –அரிய பெரிய செயல்களை அநாயாசேந செய்து தலைக்கட்டுகை
ஸுவ்ந்தர்ய –பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம்-போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து
தன் பால் ஆதரம் வைத்த அழகன் -விமுக வைமுக்யம் மாற்றி ஈடுபடுத்திக் கொள்ள வல்ல அழகு
ஸுவ்ந்தர்ய அந்வித ஸுவ்குமார்ய –கூசிப்பிடிக்கும் மெல்லடி –
சமதா –இங்கு திவ்ய மங்கள விக்ரஹ -சம பரிமாண சாலி -சாமுத்ரிகா லக்ஷணப்படி
லாவண்ய -சமுதாய சோபை இது -அவயவ சோபை ஸுவ்ந்தர்யம் –
முக்க்யைர் குணைர் –சந்தஸிசில் இடம் இல்லாமல் நிகழித்தபடி அஸங்க்யேய கல்யாண குண என்னுமா போலே
ஸூந்தர தேவ ஸ்ரீ தருஷண்ட சைல நிலயோ நித்யம் ஸ்திதஸ் –அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்யம் ஸ்திதஸ்-

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்