மூ உலகம் விளைத்த உந்தி மாயக் கடவுள் மா முதல் அடியே ஊழி தோறு ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?-என்றார் கீழே
நமக்கு மங்களா சாசனம் பண்ணப் புக்க உமக்குக் கருத்து என் என்னில் –
உறங்குகிற பிரஜைக்குத் தான் அறிந்தபடி ஹிதம் பார்க்கும் தாயைப் போலே
நீ பண்ணின உபகாரம் அறிகைக்கு அடி ஒருவரும் இன்றியே இருக்க –
அமிழ்ந்து கிடந்தவற்றை அடைய உண்டாக்கி –
உண்டானவற்றுக்குக்-(உண்டாக்கினவற்றுக்குக் ) காவலாக திக் பாலாதிகளை அடைத்து விட்ட அநந்தரம்-
சிறியத்தை பெரியது நலியாதபடி நீ நாட்டுக்குக் காவலாக நிறுத்தின இந்திரன்-
ஒரு ஆஸூர பிரக்ருதியான மஹாபலி கையிலே ராஜ்யத்தைப் பறி கொடுத்துக் கண் பிசைய –
முதலிலே இவற்றை உண்டாக்கினோம் –
அநந்தரம் இவற்றுக்குக் காவலாக திக் பாலாதிகளைக் கை யடைப்பாக்கி நோக்கினோம் –
ஆகில் இவை பட்டது படுகின்றன -என்று
கை வாங்கி இராதே –
ஸ்ரீ யபதியான உன்னை அழித்து இரப்பாளன் ஆக்கிக் கொடுத்து –
இட்டு வளர்ந்த கையைக் கொண்டு இரந்து-
இந்திரன் கார்யம் செய்து –
தலைக் கட்டின செயல் ஒன்றையும் அனுசந்தித்தால்
உனக்கு அன்றிக்கே மற்றையார்க்கோ மங்களா சாசனம் பண்ண (வகுப்பது )அடுப்பது-என்று
இந்தப் பிரசங்கத்தில்
திரு உலகு அளந்தபடி ப்ரஸ்துதமாக-அத்தைப் பேசி அனுபவிக்கிறார் –
மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப் புத்தேள்
நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை
வழி பட நெறீ இ தாமரை காடு
மலர்க் கண்ணொடு கனி வாய் உடையது
மாய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பகக காவு பற்பல வன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த
நெடியோய் கல்லது அடியதோ வுலகே ?
மா முதல் -பரம காரணனான உன்னுடைய
அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி-திருப் பாதம் ஆகிற ஒரு சிவந்த தாமரைப் பூவை கவிழ்த்துப் பரப்பி
மண் முழுதும் அகப்படுத்து -பூமிப் பரப்பு எல்லாம் கைப் பற்றியும்
ஒண் சுடர் அடி போது ஓன்று-அழகிய தேஜஸ்ஸை யுடைய புஷ்பம் போன்றதான மற்றொரு திருவடியை
நான் முகப் புத்தேள் -பிரமனாகிற தேவதையின்
நாடு வியந்து உவப்ப –லோகமானது அதிசயப்பட்டு மகிழ்ச்சி யுறவும்
வானவர் நெறீ இ முறை -அவ்வுலகத்தில் உள்ள தேவதைகள் -சரியான வழியில் செல்லுகையை முறையிடுகிற
முறை வழி பட -ஸாஸ்த்ர வழிப்பட வணங்கும் படியும்
விண் செலீ இ-ஆகாசத்தில் செலுத்தியும்
தாமரை காடு மலர்க் கண்ணொடு-தாமரைப் பூக்கள் நிறைந்த காடு புஷ்பித்தால் போலே இருக்கிற திருக் கண்களோடே கூட
கனி வாய் உடையதுமாய் -பழம் போன்ற சிவந்த திருப் பவளத்தை யுடையதாய்
இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன-அநேகமான கிரணங்களை உடையதாய் -ஆயிரம் ஸூர்யர்கள் உதித்தால் போலே இருக்கிற
முடி பற்பல-பல க்ரீடங்களையும்
கற்பகக காவு வன்ன-கற்பக வனம் போல் இருக்கிற
தழைத்த ஆயிரம் தோள்-ஓங்கி வளர்ந்துள்ள ஆயிரம் திருத் தோள்களையும் உடையனாய்
நெடியோய்க்கு அல்லதும் -எல்லாருக்கும் மேலானவனாய் விளங்குகிற எம்பெருமானை ஒழிந்த மற்று எவர்க்கும்
அடியதோ வுலகே –இவ் வுலகமானது அடிமைப் பட்டதோ –
மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி-
நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனே உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு–இரண்டாம் திருவந்தாதி -61-என்கிறபடியே
திரு உலகு அளந்து அருளுவதாக நின்ற போது நின்ற திருவடி அந் நிலையில்
ஒண் மிதியில் புனலுருவி ஒரு கால் நிற்ப–திரு நெடும் தாண்டகம் -5- என்கிறபடியே
ஆவரண ஜலத்துக்கு உட்பட்டத்தை அடைய தன் கீழே இட்டுக் கொண்டது –
வளர்ந்த திருத் தோள்கள்
வியாபித்து திக்குகளை அளந்து கொண்டன
அன்று கரு மாணியாய்
ஸ்ரீ யபதியான நீ –
உண்டு -என்று இட்ட போதொடு -இல்லை என்று மறுத்த போதொடு வாசியற
ப்ரீதியோடே போம்படியான
இரப்பிலே தகண் ஏறின வடிவை உடையையாய்க் கொண்டு இரந்து
உன் படி ஒருவருக்கும் தெரியாதபடி மறைத்து வர்த்திக்கிறவனே
நீ இச் செயல் செய்தது இந்திரன் ஒருவனுடைய அபேக்ஷிதம் செய்கைக்கு அன்று இறே
ஆரேனுமாகத் தன் திருவடிகளில் தலை சாய்த்தார்க்குமாக தன்னை அழிய மாறியும் கார்யம் செய்வான் ஒருவன் என்று
உன் படியை அனுசந்தித்து ஆஸ்ரிதர் மார்விலே கை வைத்து உறங்குகைக்காகச் செய்த செயல் இறே இது
கீழ்ச் சொன்ன படியே –
மா முதல் அடிப் போது -என்று
பரம காரணமானவனுடைய திருவடி என்னுதல் –
அன்றிக்கே
மா முதல் அடிப்போது -என்றது
திருவடி தனக்கேயாய்
சேஷ பூதர் அடைய வந்து சேருவது திருவடிகளில் ஆகையால்
அவர்களுக்குப் பரம ப்ராப்யமான திருவடி என்னுதல்
அடிப்போது -என்றது
அடி யாகிற செவ்விப் பூ -என்றபடி –
அடியாகிய அன்று அலர்ந்த செவ்விப்பூ -என்றபடி
அடி -திருவடி -திருவடி யாகிற செவ்விப் பூவை
கவிழ்த்து அலர்த்தி
திருவடியைப் பரப்பி எல்லாவற்றையும் அளந்து கொள்ளுகிற இடத்தில் சிறியதின் தலையில் பெரியது இருந்தால்
சிறியது நெருக்குண்ணக் கடவது –
அப்படியே திருவடியின் கீழ்ப் பட்ட பதார்த்தங்கள் நெருங்குண்டது இல்லையோ என்னில் –
ஒரு செவ்வித் தாமரைப் பூவை கவிழ்த்து அலர்த்தினால் அதினுள் அல்லிக்கு உள்ள நெருக்கு இறே
திருவடியின் கீழ்ப் பட்ட பதார்த்தங்கள் உள்ளது
ஒண் மிதி என்னக் கடவது இறே
மண் முழுதும் அகப்படுத்து
புனலுருவி என்கிறபடி –
ஆவரண ஜலத்துக்கு உட்பட்டது அடையத் தன் கீழே இட்டுக் கொண்டு –
இது வாகில் இத் திருவடி செய்தது –
மற்றைத் திருவடி செய்தது என் என்னில்
ஒண் சுடர் அடி போது
ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து அண்டமீது போகி இரு விசும்பினூடு போய்
எழுந்து என்று தொடங்கி –மண் முழுதும் அகப்படுத்து –என்கிறபடியே
மேல் உள்ள லோகங்கள் அடைய அளந்து கொண்டது –
ஒண் சுடர் அடி போது ஓன்று
மநுஷ்யர்களுக்கு எல்லாருக்கும் உள்ள துர்மானம்-இந்த்ராதிகளில் ஓர் ஒருவருக்கும் உண்டாய் இருக்கும் –
அப்படிப்பட்டவர்களை அடைய பக்ந அபிமானர் ஆக்கிக் கொள்ளுகையாலே வந்த புகரை உடைத்தாய் இருக்கை –
அழகிய சுடரை உடைய செவ்விப் பூவாகிய ஒரு திருவடி –
விண் செலீ இ
விண்ணை அடைய வியாபித்தது –
எவ்வளவில் சென்றது என் என்னில்
நான் முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப
சதுர்முகன் ஆகிற தேவதையினுடைய லோகமானது இத்தைக் கண்டு வியப்பதும் செய்தது –
அந் நீர்மை ஏறிப் பாயாததொரு மேடு தேடித் போந்தோம் ஆனோம் –
நீர்மை இங்கே வந்து ஏறுவதே –
இஃதோர் ஆச்சர்யம் இருந்தபடி என் -என்று விஸ்மயப்படுவதும் செய்தது
திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை யாகாதே
அவன் உளனாக்க நாம் அல்லோம் என்று அகலப் பார்த்தாலும் அகல விரகு இன்றிக்கே இருந்ததீ –
இது ஒரு அலாப்ய லாபம் இருந்தபடியே என்று உகப்பதும் செய்து
அவ்வளவில் ப்ரஹ்மா செய்தது என் என்னில் –
குறை கொண்டு நான் முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை அங்கு –ஸ்ரீ நான்முகன் -9-என்கிறபடியே
நினைவு இன்றிக்கே இருக்க திருவடி கையிலே வந்து இருந்தவாறே
அலாப்ய லாபத்தால் தடுமாறிச் சுற்றிலே பார்த்தான் –
அவ்வளவில் தர்ம தத்வம் நீராய்க் குண்டிகையிலே புக்கு இருந்தது –
அத்தைக் கொண்டு திருவடியை விளக்கினான் –
அவ்வளவில் இது நமக்கு நல்ல இடம் -என்று சிவன் தன் தலையை மடுத்தான்-
த்ரவீ பூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹாமுநே
க்ருஹீத்வா தர்மபாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரயா பக்த்யா பாத்யார்க்க்யாதி ரர்ச்சிதம்
ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவநார்த்தம் ஜடா மத்யே யோக்யோஸ் மீதிய வதாரணார்த்
வர்ஷாயுதாந்யத பஹுந் ந முமோச ததா ஹர–ஈஸ்வர சம்ஹிதை —
(மா முனிவரே திரு உலகு அளந்து அருளின அச்சமயம் ஹரியின் இடம் பக்தியால் தர்மம் ஜலம் ஆயிற்று
ஜெகந்நாதானான அவன் சந்தோஷத்துக்காக அந்த ஜலத்தைக் கொண்டு அவன் திருவடிகள்
என்னால் மேலான பக்தியுடன் விளக்கப் பட்டது
பாத்யம் அர்க்யம் முதலானவைகளால் பூஜிக்கப் பட்டது
விழுந்த ஜலத்தைப் பார்த்து நான் பரிசுத்தப்படுத்த தகுந்தவனாய் இருக்கிறேன் என்று நிச்சயத்தில்
சிவன் ஜடையில் நடுவில் தாங்கினான்
பல வருஷங்கள் ருத்ரன் அத்தைத் தாங்கிக் கொண்டே விடாமல் இருந்தான் )–என்று
பாவநார்த்தம் ஜடா மத்யே–சிரஸா ஹர–தன்னுடைய ஸூத்யர்த்தமாக ஜடையில் தரித்தான் –
யோக்யோஸ் மீதிய வதாரணார்த்–
திருவடிகளுக்கு யோக்யர் அல்லாதார் இல்லை என்று பார்த்தான்
வர்ஷாயுதாந்யத பஹுந் ந முமோச ததா ஹர–என்கிறபடியே
நற் சரக்கு வந்தால் விடுவார் இல்லை இறே
கிடையாதது கிடைத்தவாறே விடேன் என்று தலையில் வைத்துத்
திருவடியைக் கட்டிக் கொண்டு நெடுங்காலம் நின்றான்
சது முகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி –ஸ்ரீ பெரியாழ்வார் -4-7-3-என்று இறே
கங்கைக்கு வரலாறு (வரவாறு ) சொல்லுகிறது
முந்துற ப்ரஹ்மாவின் கையிலே இருந்து
பின்னர் சர்வேஸ்வரன் திருவடிகளில் தங்கி –
அநந்தரம் ருத்ரன் தலையிலே வந்து விழுந்தது –
இத்தால் ப்ரஹ்மா தான் பெற்றது என் என்னில்
தவம் செய்து நான்முகன் பெற்றான் தாரணி
நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் -கங்கை நீர்
பெய்து அனைத்துப் பேர் மொழிந்து பின் -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -78-என்றபடி
அநேகம் கைகளை படைத்ததால் உள்ள பிரயோஜனம் பெறும்படி திருவடியை விளக்கப் பெற்றான்
குறை கொண்டு –
தன்னுடைய வெறுமையை முன்னிட்டுக் கொண்டு
குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி –
வேதத்தில் அநந்ய பரமான வாக்யங்களைக் கொண்டு மங்களா சாசனம் பண்ணி
கறை கொண்ட –
இவன் ஆவி விவேகத்தால் விளைவது அறியாமே அநர்த்த ரூபங்களாய் இருக்குமவற்றைச் செய்யா நின்றான் –
இனி இங்கன் ஒத்த அமங்களங்கள் வாராது ஒழிய வேணும் -என்று
விஷம பிரஜைகள் மேலே தீர்த்தைக் கொண்டு விநீதனாக வேணும்-என்று தெளிக்குமா போலே
ருத்ரன் ஜடையில் விழும்படி கழுவினான் –
இதுவாகில் அவன் செயல் –
அவ்வவ லோகத்தில் உள்ள தேவதைகள் செய்தது என் என்னில்
வானவர் முறை முறை வழி பட நெறீ இ
தேவர்கள் நெறி பட்டு
வானவர் நெறீ இ-முறை முறை வழிபட -என்று அந்வயம் –
தேவர்கள் நெறி பட்டு பகவத் சமாஸ்ரயணம் பண்ணும்படியைச் சொல்லுகிற
சாஸ்திரங்களின் வழியே திரளாக ஆஸ்ரயிக்க-
திரு அணுக்கன் திரு வாசலில் திரள் திரளாகப் புக்கு திருவடி தொழுமா போலே
ஸமாராதன விதியின் படி வழிபட்டு ஆஸ்ரயிக்க
அவ்வளவில் அவன் செய்தது என் என்னில்
தாமரை காடு மலர்க் கண்ணொடு கனி வாய் உடையதுமாய்
ஆரேனுமாகத் தன திருவடிகளைத் தலையிலே வைத்தால் ஆதித்ய சந்நிதியில் தாமரை போலே
திருக்கண் செவ்வி பெறுமாயிற்று-
தாமரைக் காடு அலர்ந்தால் போலே இருக்கிற திருக் கண்ணோடே கனிந்த வாயையும் யுடைத்தாய் இருப்பதுமாய் –
இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
நாம் இங்கு காண்கிற ஆதித்யனைப் போல் அன்றிக்கே
அநேக ஆயிரம் கிரணங்களையும் கீழ்ச் சொன்ன விசேஷங்களையும் உடையராய் இருப்பார்
ஆயிரம் ஆதித்யர்கள் -சேர உதித்தால் போலேயாய்
கற்பகக காவு பற்பல வன்ன –
பலவான கற்பகச் சோலை -போலே –
இப்படி இருக்கிறது எது என்னில்
முடி தோள் ஆயிரம் தழைத்த
ஞாயிறு ஆயிரம் மலர்ந்தால் போலே இருக்கிறது திரு அபிஷேகம்
பலவகைப்பட்ட கற்பகச்சோலை போலே இருக்கிறது –
அநேகம் ஆயிரம் பணைத்த திருத் தோள்கள் –
நெடியோய்
இப்படி தன்னை அழிய மாறி இரந்து-அவன் கார்யம் செய்து -தலைக் கட்டச் செய்தேயும் –
தன்னை விஸ்வசித்து –
உடனே கிடந்தவன் முடி அவிழ்த்தனைப் போலே அநு தபித்து –
மஹா பலி போல்வார் நலிவதற்கு முன்னே
முற்கோலி நோக்கப் பெற்றிலோம் -பறி கொடுத்தோம் -பிற்பாடாரானோம் -என்று நோக்கி
லஜ்ஜித்து ஒன்றும் செய்யாதானாய்த்
தன் குறையை நினைத்து இருக்குமவன் ஆயிற்று –
செய்ய வேண்டிவற்றை நீள நினைப்பவன் -நெடியோன் -என்றபடி
நெடியோய்க் கல்லது அடியதோ வுலகே
இப்படி சர்வ ரக்ஷகனான தன்னை ஒழிய ஜகத்து மற்றும் சிலர் கால் கீழே கிடந்ததோ
மங்களா சாசனம் பண்ண
எல்லாரையும் ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுகிறவர்கள் தலை மேலே காலை வைத்த
உனக்கு மங்களா சாணம் பண்ண அடுக்குமோ –
சிலர் கால் கீழே கிடந்தவர்களிலே சிலருக்கு மங்களா சாசனம் பண்ண அடுக்குமோ –
உன் காலின் கீழே துகை உண்டவர்களுக்கு மங்களா சாசனம் பண்ண அடுக்குமோ –
சொல்லிக் காண்
நீ அன்றோ நெடியோன் –
அனைவரிலும் சாலப் பெரியவனான திரிவிக்ரமன்
நீ அன்றோ என்றவாறு
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –
Leave a Reply