முமுஷுக்கு தத்வ த்ரய ஞானம் வேண்டுமே
தேஹ ஆத்ம அபிமானம் நீங்க -சித்-அசித் -வாசிகள் ப்ரத்யக்ஷமாகவே -காணலாமே
1–நாம் -நான் -என்று ஆத்மாவைச் சொல்லி –இது அது என்று அசித்தைச் சொல்கிறோமே
2-உடையவன் -ஸ்வாமி என்றும் உடைமை -சொத்து என்றும் சொல்கிறோமே
3-அறிபவன் -அறியப்படும் பொருள் என்று வேறே வேறாகச் சொல்கிறோமே
4-நான் -ஏகம் -ஒருமையில் சொல்லி -அநேக பொருள்களை கண்டு கேட்டு இருப்பதால் -பன்மையாக சொல்லி வேறுபாடு
5-நான் -அவயவ ரஹிதம் -துண்டாக்க முடியாமல் -கை கால்கள் -தோல்-சதை இப்படி அவயவ ஸஹிதம்-வாசியும் உண்டே
6-நான் -ஸ்வயம் பிரகாசம் -தன்னையும் காட்டும் பிறருக்கும் காட்டும் -அதுவோ ஜடம் -ஞானத்து விஷயமாகும்
7-ப்ரத்யக் -தனக்குத் தானே தோன்றும் -நான் எங்கு இருக்கிறேன் -என்று தானே சொல்வோம்-அதுவோ பராக் -பிறருக்குத் தோன்றுமவை
8-இதுவோ எப்போதும் அநு கோலம் -அதுவோ நோய் இத்யாதி இல்லாத போது தான் அநு கூலம் -இருக்கும் பொழுது பிரதி கூலம்
9-இதுவோ போக்தா அனுபவிப்பவர் -அவர்களோ போக்யம் -அனுபவிக்கப்படுபவை
10-இது ஸ்வ தந்திரம் -அவர்களோ பர தந்திரம்
11-இவை சேஷி உடையவர் -அவை சேஷம் -உடைமைகள்
12-இவர்கள் கர்த்தாக்கள் -அவை கரணம் -அவற்றைக் கொண்டு கார்யம் செய்கிறோம்
13-அணுத்வ பரிமாணம் -வெட்டவோ கூட்டவோ முடியாது -அவை மத்யம பரிமாணம் கூறாக்கவும் கூட்டவும் முடியுமே
——————-
இந்த வாசியை உணர்ந்த பின்பு சாஸ்திரம் மூலம் ஈஸ்வர தத்வத்துக்கும் ஜீவ தத்வத்துக்கும் உள்ள வாசி அறிவோம்
1–பிதா -காரணம் / புத்திரர் -காரியம்
2–ரக்ஷகர் -ரஷ்யம்
3–சேஷி -சேஷன்
4–பர்த்தா–பார்யை
5–ஜேயன்-அறியப்படுபவன் -ஞாதா -அறிபவன்
6– ஸ்வாமி -ஸ்வம் –
7–ஆதாரம் –ஆதேயன்
8–வியாபி -அந்தர்யாமி -ஆத்மா அனைத்துக்கும் அனைவருக்கும் -நாமோ அவனுக்கு சரீரம் -வியாப்யம்
9–போக்தா -நம்மை அடைந்து அனுபவிப்பவன் -நாமோ போக்யம் -படியாய் கிடந்து பவள வாய் காண்போம்
10–நிரங்குச ஸ்வ தந்த்ரன் -நாம் பரதந்த்ரர் -ஏவிப் பணி கொள்ளப் பிரார்த்திப்போம்
11–ஸ்வா பாவிக அபஹத பாப்மா -இயற்கையாகவே பாபங்களால் தீண்டப்படாமல் -நாம் அப்படி இல்லையே
12–ஸ்வா பாவிக வி ஜரன்-மூப்பு இல்லாத
13–ஸ்வா பாவிக வி ம்ருத்யு -இறப்பு இல்லாத
14–ஸ்வா பாவிக வி சோகன்-சோகம் இல்லாத
15–ஸ்வா பாவிக வி ஜிகஸ்தன் -பசி இல்லாத
16–ஸ்வா பாவிக அபி பாசன் –தாகம் இல்லாத
17–ஸ்வா பாவிக சத்ய காமன்
18–ஸ்வா பாவிக சத்ய ஸங்கல்பன்
19–அனந்தன் -தேச கால வஸ்து த்ரிவித அபரிச்சேதன்
20–அகில காரண அத்புத காரண -நிஷ்காரண காரணன் –
நாம் அவனது அனுக்ரஹத்தாலே அவனை அடைந்து இந்த அஷ்ட வித –
அபஹத பாப்மா -வி ஜர -வி ம்ருத்யு -வி சோக -வி ஜிகிஸ்தா -அபிபாச-சத்யா காம -சத்யா சங்கல்ப -குணங்களில்
சாம்யம் பெறுவோம் அன்றோ
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply