பரிபாடல் தொல்காப்பியத்துக்கும் முன் என்பர் –
இளம் பெரு வழுதியார் –கடுவன் இள வெழியநியார் -கீரந்தையார் -நல்லேழினியார் – ஆகிய நால்வரும்
இயற்றியவை –பரி மேல் அழகர் உரை உண்டு -( ஸ்ரீ சூர்ய நாராயண சாஸ்திரி )
திருப்பரங்குன்றம்-திருமாலிருஞ்சோலை பற்றி உண்டே
இரண்டாம் சங்கம் -3700–வருஷங்கள் மூன்றாம் சங்கம் -1850-வருஷங்கள் -அது முடிந்து -1000-வருஷங்கள் முடிந்தன –
இரண்டாம் சங்கத்துக்கு –துவரைக் கோமான் -ஸ்ரீ கிருஷ்ண பகவானே இருந்ததாக உண்டாம்
திருமாற்கு இரு நான்கு செவ்வேளுக்கு முப்போதொரு பாட்டு காட்டுக்கு ஓன்று
மருவினிய வைகை இருபத்தாறு மா மதுரை நான்கு என்பர் செய்ய பரிபாடல் திறம் —
திருமாலுக்கு -8-/ செவ்வேல் முருகற்கு –31-/காட்டுக்கு -1-/ வைகை ஆற்றுக்கு -26-/மதுரைக்கு -4-ஆக -70-
இப்பொழுது -33-மட்டுமே உண்டு -இவற்றில் -22-ஓலைச்சுவடியில்
(இந்த -22-பாடல்களில் –திருமாலுக்கு -6-முருகனுக்கு -8-வைகைக்கு -8-)
மீதம்-11- நச்சினார்க்கு இனியார் உரைகளிலும் உள்ளவை-(இவற்றுள் -1-திருமாலுக்கு -6-முருகனுக்கு -4 வைகைக்கு -)
இந்த -7-பாடல்கள் திருமாலுக்கு -இவற்றுள் -6-திருமாலிருஞ்சோலை அழகருக்கும் -1-இருந்தையூர் பெருமாளுக்கும்
சோழ வர்மன் -சிபி -இஷுவாகு வம்சம்
நாவலம் தீவை சிலப்பதிகாரமும் சொல்லும்
————————
“செய்யாட் கிழைத்த திலகம்போல் சீர்க்கொப்ப
வையம் விளங்கிப் புகழ் பூத்தல் அல்லது
பொய்யாதலுண்டோ மதுரை புனைதேரான்
வையை உண்டாகும் அளவு. “–பரிபாடல் திரட்டில்
(திருமகளுக்கு இட்ட திலகம் போல, ஒப்பனை செய்யப்பட்ட பாண்டியனது வையை ஆறு மதுரை மாநகரத்துக்கு இட்ட திலகம் போன்றது.
அந்த ஆறு உள்ள வரையிலும் மதுரை மாநகர் சீர் பெற்று புகழ் பரப்பி விளங்கும் என்பது பொய்யாகுமோ? )
—————-
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும் பொகுட்கு அனைத்தே, அண்ணல் கோயில்;
தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;
தாது உண் பறவை அனையர், பரி சில் வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.
(எமது அழகிய மதுரை , மாயோனது கொப்பூழில் மலர்ந்த தாமரையை ஒக்கும் . மதுரையின் தெருக்கள் அத்தாமரையின் இதழ்களை ஒக்கும் .
மதுரையின் நடுவில் அமைந்துள்ள அண்ணல் கோயில் அம்மலரின் நடுவில் உள்ள தாதை ஒக்கும் . சுற்றி வாழும் தண்டமிழ் மக்கள் ,
அந்தத் தாதின் மகரந்தத் தூளை ஒப்பர் . அவரை நாடி பரிசில் பெற வரும் இரவலர் , அந்த மகரந்தத்தை உண்ண வரும் பறவைகளை ஒப்பர் .
அந்தத் தாமரைப் பூவின் கண் தோன்றிய பிரம்ம தேவனின் நாவிலே தோன்றிய நான் மறைகளை , வைகறைப் பொழுதில் ஓதும் இசையே ,
மதுரை மாநகர மக்களாகிய எங்களைத் துயிலேழுப்புமே தவிர , சேரனது வஞ்சியும் , சோழனது கோழியும் (உறையூர்)
கோழியின் குரல் கேட்டு தூக்கம் கலைவது போல் அல்ல , நாம் வாழும் ஊரே . வாழிய இவ்வூரே.)
—————-
கடவுள் வாழ்த்து –கீரந்தையார் பாட்ட-நன்னாகனாரிசை–பண்ணுப்பாலை யாழ்.
ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை
தீ உமிழ் திறலோடு முடிமிசை அணவர
மாயுடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனிச்
சேய் உயிர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய
வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு குழை ஒருவனை –5-
எரி மலர் சினை இய கண்ணை பூவை
விரி மலர் புரையும் மேனியை மேனித்
திரு ஜெமிர்ந்து அமர்ந்த மார்பனை மார்பில்
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை -10-
சேவல் அம் கொடியோய் –
நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே
அமர் வென்ற கணை
இணைபிரி அணி துணி பணி எரி புரை
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15
நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு
கடறரு மணியடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20
றுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப் 25
போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை.(இவை நான்கும் அராகம்)
சொல்லில் அடங்காப் பெரும் புகழ்
‘பொருவேம்‘ என்றவர் மதம் தபக் கடந்து,
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30
இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:(இது ஆசிரியம்)
அன்ன மரபின் அனையோய்! நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35(இது பேரெண்)
அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்.(இது ஆசிரியம்)
விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40
அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50
நிலனும், நீடிய இமயமும், நீ.(இவை ஆறும் பேரெண்)
அதனால்,( இது தனிச் சொல் )
‘இன்னோர் அனையை; இனையையால்‘ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55
மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!(இது சுரிதகம்)
நின் ஒக்கும் புகழ் நிழலவை;
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60
எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,( இவை சிற்றெண்னும் பேரெண்னும் இடைஎண்ணும்)
ஆங்கு,( இது தனிச் சொல் )
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை–65-
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68(இது சுரிதகம்)
——————
பாடல் 01–
ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை
தீ உமிழ் திறலோடு முடிமிசை அணவர
மாயுடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனிச்
சேய் உயிர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய
வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு குழை ஒருவனை –5-
எவ்வுயிருக்கும் அச்சத்தைத் தரக்கூடிய இயல்பை உடைய , சினத் தீயை உமிழுகின்ற படம் விரிந்த
ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேஷன் உன் தலை மீது நிழலாக இருக்கிறான் .
திருமகள் வீற்றிருக்கும் மலர் மார்பினை உடையவன் நீ.
குற்றமில்லா வெண்மையான சங்கினைப் போன்ற நிறத்தையும், மிக உயர்ந்த மூங்கில் கம்பின் உச்சியில் கட்டப்பட்ட
யானைக் கொடியினை உடையவனும், கூர்மையாகவும் , வளைந்தும் இருக்கும் கலப்பையினை உடையவனும்,
ஒற்றைக் குழையை அணிநதவனுமாகிய பலதேவனாகவும் நீ விளங்குகின்றாய்.
எரி மலர் சினை இய கண்ணை பூவை
விரி மலர் புரையும் மேனியை மேனித்
திரு ஜெமிர்ந்து அமர்ந்த மார்பனை மார்பில்
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை -10-
சேவல் அம் கொடியோய்
கருடச் சேவல் கொடியைக் கொண்டவனே! தாமரை போன்ற அழகிய கண்களை உடையவன் நீ .
காயாம் பூவினது நிறத்தை உடையது உன் மேனி.
அத்திரு மேனியின் கண், திருமகள் விரும்பி உறையும் மார்பிடத்தே நினக்கே உரியது என்று தெரியும் வண்ணம்
கௌஸ்துப மாலையை உடையவன் நீ.
கரிய மலையைச் சூழ்ந்து தீப்பிழம்பு சுற்றினாற்போல, பொன்னிற ஆடையை உடுத்தி உளாய்.
நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே
அமர் வென்ற கணை
இணைபிரி அணி துணி பணி எரி புரை
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15
நாவன்மை உடைய அந்தணர் உணர்தற்குரிய அரு மறைப் பொருளே !
நினது அருளாலே உனது வலப்பக்கம் நிலை நிறுத்தப்பட்ட உயிர்கள், உன்னுடைய அருள் தழுவுதலாலே
நின்னை வழிபடும் தன்மையை அவர்கள் எவ்வாறு கூற வல்லவர்கள் ஆவார்கள்? –(ஆக மாட்டார்கள்).
தம் அறியாமையினாலே உன்னோடு போர் செய்வோம் என்று வந்த அவுணர்களுடைய வலிமை கெடும் வண்ணம்,
போரின் கண் வென்ற குற்றமற்ற தலைமை உடைய அண்ணலே !
நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு
கடறரு மணியடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20-
காமன், சாமன் என்னும் இருவருடைய தந்தையே !
விளங்குகின்ற ஆபரணங்களை அணிந்தவனே !
உன் வரவினை, (அவதாரத்தை அல்லது வரலாற்றை ) விளக்கமாக அறிந்து கொள்ளுதல் என்பது,
மயக்கம் தீர்ந்த தேர்ச்சி பெற்ற முனிவருக்கும் அரிதானது!
அப்படிப்பட்ட இயல்பினை உடையவனே !
முனிவர்களுக்கே அப்படி என்றால், நீ எப்படிபட்டவன் என்று உரைப்பது எங்களுக்கு மட்டும் எப்படி எளிதாகும் ?
அழகிய தாமரை மலரின் கண் வீற்றிருக்கும் திருமகளை மார்பினிலே தாங்கியுள்ளவனே!
அறிவதற்கு இயலாதது உன் வரலாறு என்று நாங்கள் நன்றாக அறிந்திருந்தாலும் ,
உன் மேல் எங்களுக்குள்ள ஆர்வமும் அன்பும் பெருமையுடையது என்பதால், நாங்கள் கூறுவதை சிறுமை உடையது
என்று நீ கருதி எங்களை வெறுத்து விடாமல் அருள வேண்டும்.
அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45
வெற்றி மிகுந்த பெரும் புகழினை உடைய அந்தணர்களாலே காக்கப்படும் அறமும்,
நின் அன்பர்களுக்கு நீ அருள்கின்ற திருவருளும் நீயே;
நன்னெறியில் செல்லும் திறனில்லாதவரை, அந்நெறியில் செல்லுமாறு திருத்தும் தீதறு சிறப்புடை மறமும் நீயே;
அவ்வாறு திருத்துவதால், உனக்குப் பகையாக இருப்பவரை வருத்தும் துன்பமும் நீயே;
அழகும், எழுச்சியும் உடைய வானத்தின் கண் அணிபெற விளங்கும் ஒளிதரும் நிலவும் நீ;
சுடுகின்ற சுடரை உடைய சூரியனும் நீயே.
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50
நிலனும், நீடிய இமயமும், நீ.(இவை ஆறும் பேரெண்)
அதனால்,( இது தனிச் சொல் )
‘இன்னோர் அனையை; இனையையால்‘ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
ஐந்து தலைகளைத் தனக்குத் தோற்றுவித்துக் கொண்ட கொல்லும் தொழிலை உடையவனும்,
கடத்தற்கரிய திறமையையும், வலிமையையும் உடைய ஒப்பற்ற சிவ பெருமானும் நீயே;
அவனால் செய்யப்படுகின்ற மடங்கலாகிய ஒடுக்கும் தொழிலும் நீயே;
நன்மை தருகின்ற, குற்றமற்ற மெய் உணர்வினை அளிக்கின்ற வேதமும் நீ;
பூவின் மேல் இருக்கும் பிரம்மனும் நீ;
அவன் செய்யும் நாறுதல் என்னும் தோற்றம் என்னும் படைப்புத் தொழிலும் நீயே;
வானின் கண் உயரும் மேகமும் நீ;
மாகம் என்னும் வானமும் நீ;
இந்தப் பூமியும் நீ;
நீண்டு நெடிதுயர்ந்த இமயமும் நீயே.
நீ இவரைப் போன்றவன், இவருக்கு இணையானவன் என்று உவமை காட்ட யாருமே இங்கு காணப்படாமையால்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய
மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!(இது சுரிதகம்)
நின் ஒக்கும் புகழ் நிழலவை;
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60
பொன்னின் அழகினைக் கொண்ட சக்கரப் படையினை எல்லா உலகையும் ஆள்வதற்கு அடையாளமாக
நின் வலப் பக்கத்தே ஏந்தி, நிலை பெற்ற உயிர்களுக்குத் தலைவனுமாக நீ இருப்பதால், உனக்கு ஒப்புமை நீயேதான்!
உன் புகழ்தான் உனக்கு ஒப்புமையானது.
புள் என்னும் கருடப்பறவையைக் கொடியில் உடையவன் நீ.
முறுக்கிய சங்கினை உடையவன் நீ.
எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,( இவை சிற்றெண்னும் பேரெண்னும் இடைஎண்ணும்)
ஆங்கு,( இது தனிச் சொல் )
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை–65-
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68(இது சுரிதகம்)
இகழ்வாராகிய பகைவரை வென்று, கொன்று என்று தக்கவாறு செயல் புரியும்
மாறுபாட்டினை உடைய சக்கரப்படையை உடையவன் நீ.
கழுவப்பட்ட நீல மணி பரப்பும் நிறத்தை உடைய திருமேனியை உடையவன் நீ.
அளவற்ற புகழ் உடையவன் நீ.
அழகிய மார்பினை உடையவன் நீ.
என இவ்வாறு கூறி, நாங்கள் விரும்பும் அல்லது எங்களை விரும்பும் சுற்றத்தாரோடு ஒன்று கூடி,
உன் திருவடியில் இணைந்து, என்றும் இந்தத் திருவடி விளங்குவதாக,
பொலிக இவ்வடி என்று இன்பமுறும் நெஞ்சத்தோடு கூறுகிறோம்.
வாய்மொழிப் புலவனே!
வாய்மொழியாகச் சொல்லப்படும் வேதத்தை அருளிச் செய்த புலவனே!
உன் திருவடி நிழலைத் தொழுகிறோம் .
———————
பாடல் 02
(வராக கற்பம்)
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுதும்
(திருமாலின் நிலைகள் )
நீயே, ‘வளையொடு புரையும் வாலியோற்கு அவன் 20
இளையன்‘ என்போர்க்கு இளையை ஆதலும்,
‘புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்,
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும், 25
இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை
நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச்சிறப்பே.
(திருமாலின் சிறப்பு)
ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில
நித்தில மதாணி அத்தகு மதி மறுச் 30
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்-
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
‘புள்ளி நிலனும் புரைபடல் அரிது‘ என
உள்ளுநர் உரைப்போர் உரையடு சிறந்தன்று. 35
————-
பாடல் 03 (மாஅயோயே)பாடியவர் -கடுவன் இளவெயினனார்/இசையமைத்தவர்–பெட்டனாகனார்/பண் -பாலையாழ்
மா அயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மா அயோயே!
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், 5
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் 10
மாயா வாய்மொழி உரைதர வலந்து:
‘வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ‘ என பொழியுமால், அந்தணர் அரு மறை.
முனிவரும் தேவரும் பாடும் வகை
‘ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின், 15
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; 20
தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும்,
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்
ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு
கேழலாய் மருப்பின் உழுதோய்‘ எனவும்,
‘மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் 25
சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய்‘ எனவும்,
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
பாடும் வகையே: எம் பாடல்தாம் அப்
பாடுவார் பாடும் வகை. 30
வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும்
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை,
இரு கை மாஅல் ! 35
முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 40
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! 45
நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,
முன்னை மரபின் முதுமொழி முதல்வ!
வனப்பும் வலியும்
நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! 50
அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,
பிறை வளர், நிறை மதி உண்டி,
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,
நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் 55
அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்‘ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?
ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட
சேவல் ஊர்தியும், ‘செங் கண் மாஅல்! 60
ஓ!‘ எனக் கிளக்கும் கால முதல்வனை;
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்;
சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள்
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; 65
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,
உறையும் உறைவதும் இலையே; உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே;
நால்வகை யுகங்களிலும் ஆராயப்படும் சிறப்பு
பறவாப் பூவைப் பூவினோயே!
அருள் குடையாக, அறம் கோலாக,
இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும் 75
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை; 80
நால் வகை வியூகம்
செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!
பல திறப் பெயரியல்புகள்
இடவல! குட அல! கோவல! காவல!
காணா மரப! நீயா நினைவ!
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! 85
தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!
மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண
பருதி வலவ! பொரு திறல் மல்ல!
திருவின் கணவ! பொரு விறல் மள்ள! 90
மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே! 94
—————
இரணியனைத் தடிந்தமை )
செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ- 10
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா 15
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்-
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியடு, 20
தடி தடி பல பட-வகிர் வாய்த்த உகிரினை;
வராகம் ஆகி உலகத்தை எடுத்தமை
புருவத்துக் கரு வல் கந்தத்தால்
தாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்;
உலகு உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள; 25
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள; 30
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,
ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,
மேவல் சான்றன, எல்லாம். 35
(கருடக் கொடி )
சேவல் ஓங்கு உயர் கொடியோயே!
சேவல் ஓங்கு உயர் கொடி
நின் ஒன்று உயர் கொடி பனை;
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்;
நின் ஒன்று உயர் கொடி யானை; 40
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று;
விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்;
அவன் மடிமேல் வலந்தது பாம்பு;
பாம்பு தொடி; பாம்பு முடி மேலன;
பாம்பு பூண்; பாம்பு தலைமேலது; 45
பாம்பு சிறை தலையன;
பாம்பு படி மதம் சாய்த்தோய்! பசும் பூணவை
கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு;
(பகையும் நட்பும் இன்மை )
கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் 50
உள்வழி உடையை; இல்வழி இலையே;
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,
மாற்று ஏமாற்றல் இலையே; ‘நினக்கு
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்‘ எனும்
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: 55
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே;
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி,
நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை;
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப!
நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை 60
அன்ன நாட்டத்து அளப்பரியவை;
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;
நின்னில் சிறந்த நிறை கடவுளவை;
அன்னோர் அல்லா வேறும் உள; அவை
நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை. 65
பல்வேறு திருப்பெயர் கொண்ட ஒரு பொருள்
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர் 70
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;
அவரவர் ஏவலாளனும் நீயே;
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. 73
———–
பாடல் 13 (மணிவரை)பாடியவர் –நல்லெழுதியார்/ இசையமைத்தவர் பெயர் அறியப்படவில்லை/பண் -நோதிறம்
(திருமாலைத் தொழுவார் பெறும் பேறு)
மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று
அணி வனப்பு அமைந்த பூந் துகில், புனை முடி,
இறு வரை இழிதரும் பொன் மணி அருவியின்
நிறனொடு மாறும் தார், புள்ளுப் பொறி புனை கொடி,
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத் 5
தண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்!
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையாந்–
கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண், 10
அருவி உருவின் ஆரமொடு, அணிந்த நின்
திரு வரை அகலம் –தொழுவோர்க்கு
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து.
(எங்குமாய் எல்லாமாய் நிறைந்த பெருமை)
சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடு போர் அண்ணால்! 15
அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே; 20
நான்கின் உணரும் நீரும் நீயே;
அதனால், நின் மருங்கின்று–மூ-ஏழ் உலகமும்,
மூலமும், அறனும், முதன்மையின் இகந்த
காலமும், விசும்பும், காற்றொடு கனலும் 25
(பல்வேறு தோற்றத்துடன் விளங்கும் ஒரு முதல்வன்)
தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்,
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த
கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத்
துளவம் சூடிய அறிதுயிலோனும்–
மறம் மிகு மலி ஒலி மாறு அடி தானையால், 30
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்,
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்–
நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி 35
இலங்கு ஒளி மருப்பின் களிறும் — ஆகி,
மூஉரு ஆகிய தலைபிரி ஒருவனை!
(புகழ்ந்து போற்றுதல் )
படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக்
கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை;
ஏவல் இன் முது மொழி கூறும், 40
சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ! நல் புகழவை;
கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;
வலம்புரி, வாய்பொழி, அதிர்பு வான், முழக்குச் செல்,
அவை நான்கும் உறழும்–அருள், செறல், வயின் மொழி; 45
முடிந்ததும், முடிவதும், முகிழ்ப்பதும், அவை மூன்றும்
கடந்து, அவை அமைந்த கழலின் நிழலவை;
இருமை வினையும் இல, ஏத்துமவை;
ஒருமை வினை மேவும் உள்ளத்தினை;
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை– 50
அடியும், கையும், கண்ணும், வாயும்;
தொடியும், உந்தியும், தோள் அணி வலயமும்,
தாளும், தோளும், எருத்தொடு, பெரியை;
மார்பும், அல்குலும், மனத்தொடு, பரியை;
கேள்வியும், அறிவும், அறத்தொடு, நுண்ணியை; 55
வேள்வியும், மறனும், விருப்பொடு வெய்யை;
அறாஅ மைந்தின், செறாஅச் செங்கண்,
செரு மிகு திகிரிச் செல்வ! வெல் போர்
எரி நகை இடை இடுபு இழைத்த நறுந் தார்ப்
புரி மலர்த் துழா அய் மேவல் மார்பினோய்!– 60
அன்னை எனநினைஇ, நின் அடி தொழுதனெம்;
பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்–
முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்;
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே! 64
———————-
பாடல் 15 (புலவரை)-பாடியவர் -இளம்பெருவழுதியார்/இசையமைத்தவர் -மருத்துவன் நல்லச்சுதனார்/பண் -நோதிறம்
(திருமாலிருங்குன்றத்தின் சிறப்பு )
புல வரை அறியாப் புகழொடு பொலிந்து,
நில வரைத் தாங்கிய நிலைமையின் பெயராத்
தொலையா நேமி முதல், தொல் இசை அமையும்
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம்
பல; எனின், ஆங்கு-அவை பலவே: பலவினும், 5
நிலவரை ஆற்றி, நிறை பயன் ஒருங்கு உடன்
நின்று பெற நிகழும் குன்று–அவை சிலவே:
சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய
குல வரை சிலவே: குல வரை சிலவினும் 10
சிறந்தது–கல் அறை கடாம் கானலும் போலவும்,
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்,
எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த்
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்.
நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை 15
ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்?
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப.
(‘திருமால் பலராமனுடன் அமர்ந்துள்ள நிலை நினைந்து ஏத்துக’ எனல்)
அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின்
மரா மலர்த்தாரின் மாண் வரத் தோன்றி, 20
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய,
சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின்
சோலையடு தொடர் மொழி மாலிருங்குன்றம்–
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்–
நாமத் தன்மை நன்கனம் படி எழ, 25
யாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து,
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வென,
பொன் புனை உடுக்கையோன் புணஎந்து அமர் நிலையே
நினைமின், மாந்தீர்! கேண்மின், கமழ் சீர்!
(மாயோனை ஒத்த நிலையுடைத்து திருமாலிருஞ்சோலைக் குன்றம்)
சுனையெலாம் நீலம் மலர, சுனை சூழ் 30
சினையெலாம் செயலை மலர, காய் கனி
உறழ, நனை வேங்கை ஒள் இணர் மலர,
மாயோன் ஒத்த இன் நிலைத்தே.
(சென்று தொழ மாட்டாதார் அம் மலையைக் கண்டு தொழுக எனல்)
சென்று தொழுகல்லீர்! கண்டு பணிமின்மே–
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே 35
பெருங் கலி ஞாலத்துத் தொன்று இயல் புகழது
கண்டு, மயர் அறுக்கும் காமக் கடவுள்.
(குன்றத்தில் பிறக்கும் ஓசைகள் )
மக முயங்கு மந்தி வரைவரை பாய,
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட,
மணி மருள் நல் நீர்ச் சினை மடமயில் அகவ, 40
குருகு இலை உதிர, குயிலினம் கூவ,
பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்
நா நவில் பாடல் முழவு எதிர்ந்தன்ன,
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது–ஒன்னார்க்
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று. 45
(குன்றத்தானைச் சுற்றம் புடை சூழப் போற்றுமின்)
தையலவரொடும், தந்தாரவரொடும்
கைம் மகவோடும், காதலவரொடும்,
தெய்வம் பேணித் திசை தொழுதனிர் செல்மின்–
புவ்வத் தாமரை புரையும் கண்ணன்,
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன், 50
எவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ் வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்
அன்பு-அது மேஎய் இருங்குன்றத்தான்.
(பலதேவ வாசுதேவர்கள் இருவரையும் வாழ்த்துதல்)
கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை;
ஒள் ஒளியவை, ஒரு குழையவை; 55
புள் அணி பொலங் கொடியவை;
வள் அணி வளை நாஞ்சிலவை,
சலம் புரி தண்டு ஏந்தினவை;
வலம்புரி வய நேமியவை;
வரி சிலை வய அம்பினவை; 60
புகர் இணர் சூழ் வட்டத்தவை; புகர் வாளவை;
என ஆங்கு-
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி
இது என உரைத்த[லி]ன், எம் உள் அமர்ந்து இசைத்து, இறை,
‘இருங்குன்றத்து அடி உறை இயைக!‘ என,
பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே. 66
—————
வான் ஆர் எழிலி மழை வளம் தந்த
தேன் ஆர் சிமைய மலையின் இழி தந்து
நான் மாடக் கூடல் எதிர் கொள்ள ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வா
நின் திருந்து அடி தலை உறப் பரவுதும் தொழுது –
(முகில் மலையின் கண் மழையை மிகுதியாகப் பொழிய ,
அந்நீர் நான் மாடக் கூடலில் உள்ள மக்கள்
விரும்பி எதிர் கொள்ளும்படி வருகின்ற துறையிடத்தே உள்ள
இருந்தையூர் என்னும் பதியில் எழுந்தருளியுள்ள செல்வ (திருமாலே )!
நின் திருவடியைத் தொழுது வாழ்த்துகின்றோம் .)
இருந்து அருளும்-செல்வன் -திரு நிறை மார்பன் -ஸ்ரீ கூடல் அழகர்- பெருமாள் பெயராலே திவ்ய தேசப் பெயர்
“செல்வனைப் போலத் திருமாலே ! நானும் உனக்குப் பழவடியேன் ”,
நான் மாடக் கூடல் -மதுரைக்கு முன் நாள் திரு நாமம்
இரும் துறையூர் –நீராடும் துறை
“ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனை சாந்தும் கண்ணியும்
நீடு நீர் வையை நெடுமால் அடியேத்தத்
தூவித் துறை படியப் போயினாள் ..” (மதுரைக் காண்டம் – துன்ப மாலை–சிலப்பதிகாரம் ஸ்ரீ இருந்த வளமுடையார் —
வானின் நின்று உலகம் வழங்கி வருதலான்
தான் அமிழ்தம் என்று உணரர் பாற்று -திருக்குறள் –
இங்கும் மருந்து என்கிறதே
நின் திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது.-திருந்தடி – திருத்தமான அடி
திருந்தடி எம் தலை மீது பொருந்தும் வண்ணம் , உன்னைத் துதித்து வணங்குகின்றோம்
இருக்கும் நிலையில் இருந்து , மேம்பட்ட நிலைக்கு , திருத்தி எடுத்துச் செல்லும் அடியாக இருந்ததனால் , அது திருந்தடி ஆயிற்று எனலாம் .
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் “.(ஆழ்வார்)
மகாபலியின் தலை மீது தன் அடி வைத்து அவனை அடக்கவும் செய்தார் , ஆட் கொள்ளவும் செய்தார் .
ஆட் கொண்டதன் பயனாக , அடுத்த மன்வந்திரத்தில் , அவனுக்கு இந்திர பதவியும் அருளினார் .
எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதர்கெந்ட்ரு
எந்நாளும் நின்றிமையோர்கள் ஏந்தி இறைஞ்சி யினமினமாய் ,
மெய் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே ,
மெய்ன்னான் எய்தி என்னாளுன் அடிக்கண் அடியேன் மேவுவதே ?”(ஆழ்வார்)
ஒருசார்-அணி மலர் வேங்கை, மராஅ, மகிழம்,
பிணி நெகிழ் பிண்டி, நிவந்து சேர்பு ஓங்கி,
மணி நிறம் கொண்ட மலை.
(இருந்தையூரின் ஒரு பக்கத்தில் ,வேங்கையும் , வெண் கடம்பும் , மகிழ மரமும் ,அரும்புகள் மலர்ந்த நிலையில்
மற்றும் பல மரங்களும் ஒன்றாக வளர்ந்திருக்க ,நீல நிறம் கொண்ட மலை உள்ளது .)
இவ்வாறு இருந்தையூரின் மலை வளம் சொல்லப்படுகிறது .
ஒருசார்-தண் நறுந் தாமரைப் பூவின் இடைஇடை
வண்ண வரி இதழ்ப் போதின்வாய் வண்டு ஆர்ப்ப,
விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின்
கண் வீற்றிருக்கும் கயம்.
( இருந்தையூரின் மற்றொரு பக்கம் , விண்ணென விரிந்த நீர் நிலைகள் உள்ளன .
அவற்றின் கண் உள்ள தாமரைப் பூக்களின் நடு நடுவே , வண்டுகள் தேன் பருக விரும்பி ஆர்பரித்துக் கொண்டிருக்கும் .
ஆங்கே , கயல் மீன்கள் விண் மீன்களைப் போல ஒளி வீசிக் கொண்டிருந்தன )இவ்வாறு இருந்தையூரின் நீர் வளம் சொல்லபடுகிறது .
ஒருசார்-சாறுகொள் ஓதத்து இசையடு மாறுஉற்று
உழவின் ஓதை பயின்று, அறிவு இழந்து
திரி நரும், ஆர்த்து நடுநரும், ஈண்டித்,
திரு நயத்தக்க வயல்.
(இருந்தையூரின் மற்றொரு பக்கம் ,கருப்பஞ்சாறு பிழியப்படும் ஒலியுடன் , கள்ளுண்டு – அதனால் அறிவிழந்து திர்பவர்களும் ,
அந்த சாறு பிழியப்படும் ஒலிக்கு மாறு பட்டு ஒலிக்கும் வண்ணம் , ஏர் மங்கலப் பாட்டுப் பாடி வயலில் நாற்று
நட்டு வேலை செய்யும் ஆண்களும் , பெண்களும் இருக்கும் ,திரு எனப்படும் திருமகளும் விரும்பத் தக்க வயல் நிலைமைகள் .)
இவ்வாறு இருந்தையூரின் நில வளம் சொல்லபடுகிறது.
திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை
மருவு செய்களின் நற்பயன் மல்குவை
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்fடணை.
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே)-வந்தே மாதரம் -மஹா கவி பாரதியார்
ஒருசார்-அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி,
விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித்
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி,
அறத்திற் திரியா பதி.
(இருந்தையூர் என்னும் அந்நகரத்தின் ஒரு புறம் , அற வழியில் நின்று , வேதத்தை நன்குணர்ந்து , முற்றிய தவத்துடன் ,
மாறாப் புகழுடன் அந்தணர்கள் வாழ்தலானே, ஏனையோரும் தத்தமக்குரிய அற ஒழுக்கத்தினின்று பிறழாமல் வாழும் ஊராக இருந்தது .)
இங்கே கேள்வித் திறத்தின் திரிவில்லா அந்தணர் என்று – வேதம் மற்றும் ஞான வழியில் தவறாத அந்தணர்கள் என்று காட்டுகிறது .
எங்கே அந்தணர்கள் நெறி தவறாமல் வாழ்கிறார்களோ , அங்கே மற்றவர்களும் , நெறி தவறாமல் வாழ்வார் என்று கூறப்படுகிறது .
ஆங்கு ஒருசார்-உண்ணுவ, பூசுவ, பூண்ப, உடுப்பவை
மண்ணுவ, மணி பொன் மலைய, கடல்
பண்ணியம், மாசு அறு பயம் தரு காருகப்
புண்ணிய வணிகர் புனை மறுகு
(அங்கே மற்றொரு பக்கத்தில் , உண்ணக்க்கூடியவையும் , பூசக்கூடியவையும் , பூணக் கூடியவையும் , உடுக்ககூடியவையும் ,
மஞ்சனமாடக் கூடியவையும் ஆகிய பொருட்களையும் , மேலும் பொன் , மணி மற்றும் மலையில் கிடைத்த பொருட்கள் ,
கடலில் கிடைக்கும் பொருட்கள் ஆகியவற்றுடன் , பட்டாலும் , பருத்தியாலும் நெய்த துணிமணிகளை விற்கும்
வணிகர்கள் வாழும், அழகாகப் புனையப் பட்ட தெருவும் இருந்தது .)
ஒருசார்
விளைவதை வினை எவன் மென் புல வன் புலக்
களமர் உழவர் கடி மறுகு பிறசார்
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம்
இயல் கொள நண்ணியவை
(ஒரு புறம் , மென்புலம் என்னும் மருத நிலத்திலும் , மற்றும் ,வன்புலம் என்னும் குறிஞ்சி, முல்லை நிலத்திலும்
தொழில் செய்யும் களமர் மற்றும் உழவர் வாழும் இடம் இருந்தது . இருந்தையூர் என்னும் அந்தப் பதியில்,
இம்மக்கள் அனைவரும் கூடி இன்பமாக வாழ்ந்து வந்தனர் .)
விளைந்தார் வினையின் விழுப் பயன் துய்க்கும்
துளங்கா விழுச் சீர்த் துறக்கம் புரையும்-
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின்
வரை கெழு செல்வன் நகர்.
இரு கேழ் – இரண்டு விதமாக கருமை நிறம் உடைய /உத்தி – பாம்பினது படத்தின் கட்பொறி /எருத்தின்– கழுத்து–
வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப, .
விண்ட கட கரி மேகமொடு அதிரத்
தண்டா அருவியடு இரு முழவு ஆர்ப்ப,
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப்
புரி வுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற,
சூடு நறவொடு தாமம் முகிழ் விரியச்
சூடா நறவொடு காமம் விரும்ப,
இனைய பிறவும், இவை போல்வனவும்,
அனையவை எல்லாம் இயையும்-புனை இழைப்
பூ முடி நாகர் நகர்.
(வண்டும் , தும்பியும் யாழிசையுடன் போட்டி போட்டுக் கொண்டு இசை பரப்ப , கரு மேகங்களும் அதிரடியுடன் ஒலிக்க,
அதற்குப் போட்டியாய் அருவிகளும் ஒலி எழுப்ப, அந்த இசைப் பின்னணியில் , மை தீட்டிய பெண்களுடன் ,
மணம் கமழும் மலர் மாலைகளை அணிந்த ஆடவரும் , பாடிக் கொண்டும் , ஆடிக் கொண்டும் இருக்க , பலவகைப் பட்ட விருப்பங்களுடனும் ,
விரும்பியவற்றைப் பெற்ற மகிழ்ச்சியுடனும் , பலரும் வணங்கும் வண்ணம் ஆங்கே தலை மீது சிறப்பாக அணிவகைகள் செய்தவண்ணமும்,
பூமகளைத் தன் தலை மீது அணிந்தவருமான நாகர் வீற்றிருக்கும் நகரமாக , அந்த செல்வன் நகர் திகழ்ந்தது .)
மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி
அவிர் நிமிர் புகழ் கூந்தல்.
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ்
தெரி அரி மது மகிழ்பு அரி மலர்
மகிழ் உண்கண், வாணுதலோர்-
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது
இகழ் கடுங் கடாக் களிற்று
அண்ணலவரோடு,
அணி மிக வந்து இறைஞ்ச, அல் இகப்ப, பிணி நீங்க,
நல்லவை எல்லாம் இயைதரும்-தொல் சீர்
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கைக்
குளவாய் அம்ர்ந்தான் நகர்.
(நீல மணி போன்ற நிறத்தினையும் அழகினையும் , கூறாகப் பிரித்து , அழகு படுத்தப பட்ட கூந்தலையும் , தெளிவான ஒலி எழுப்பும்
நெகிழ்ந்த சிலம்பினையும், வண்டுகள் மது உண்ணும் மலர் போன்ற அழகிய கண்களையும் , ஒளி பொருந்திய நெற்றியையும் , அழகாலும் ,
நடையாலும் மயில் போலவும் , அவற்றினின்று மாறுபட்டும் விளங்கும் பெண்கள் , மத யானை நடை உடைய தங்கள்
கணவன்மாரோடு , இணைந்து , அழகுபட வந்து , தங்கள் துன்பமும் , பிணியும் தீர்ந்து , நல்லவற்றை எல்லாம் தரவல்ல ,
தொன்று தொட்டு புகழ் உடைய மலையின் அடிவாரத்தில் , கல் சேர்ந்து கிடக்கும்
குள வாய் என்னும் நகரில் அமர்ந்த அந்த இறைவனைத் தேடி வருவார் .)
வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப, .
விண்ட கட கரி மேகமொடு அதிரத்
தண்டா அருவியடு இரு முழவு ஆர்ப்ப,
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப்
புரி வுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற,
சூடு நறவொடு தாமம் முகிழ் விரியச்
சூடா நறவொடு காமம் விரும்ப,
இனைய பிறவும், இவை போல்வனவும்,
அனையவை எல்லாம் இயையும்-புனை இழைப்
பூ முடி நாகர் நகர்.
(வண்டும் , தும்பியும் யாழிசையுடன் போட்டி போட்டுக் கொண்டு இசை பரப்ப , கரு மேகங்களும் அதிரடியுடன் ஒலிக்க,
அதற்குப் போட்டியாய் அருவிகளும் ஒலி எழுப்ப, அந்த இசைப் பின்னணியில் , மை தீட்டிய பெண்களுடன் , மணம் கமழும்
மலர் மாலைகளை அணிந்த ஆடவரும் , பாடிக் கொண்டும் , ஆடிக் கொண்டும் இருக்க , பலவகைப் பட்ட விருப்பங்களுடனும் ,
விரும்பியவற்றைப் பெற்ற மகிழ்ச்சியுடனும் , பலரும் வணங்கும் வண்ணம் ஆங்கே தலை மீது சிறப்பாக அணிவகைகள்
செய்தவண்ணமும், பூமகளைத் தன் தலை மீது அணிந்தவருமான நாகர் வீற்றிருக்கும் நகரமாக , அந்த செல்வன் நகர் திகழ்ந்தது .)
ஒருசார்-அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி,
விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித்
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி,
அறத்திற் திரியா பதி.
(இருந்தையூர் என்னும் அந்நகரத்தின் ஒரு புறம் , அற வழியில்நின்று , வேதத்தை நன்குணர்ந்து , முற்றிய தவத்துடன் ,
மாறாப் புகழுடன் அந்தணர்கள் வாழ்தலானே, ஏனையோரும் தத்தமக்குரிய அற ஒழுக்கத்தினின்று பிறழாமல் வாழும் ஊராக இருந்தது .)
ஆதி சேஷனுக்கு தனி சன்னதி உண்டாம் இதில் -கடலில் இழந்த பின்பு மதுரையை பாண்டியர் நிர்மாணம் செய்தர் என்பர்
ஆகவே தான் இன்றும் நவகிரஹ சந்நிதி கூடல் அழகர் கோவிலில் உண்டே
————
திருக்குறள் -ஸ்ரீ கீதார்த்தம்
ஸ்திதிப்ரதஞ்ஞன் -மத்பாவம்
அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
திருக்குறள் – கடவுள் வாழ்த்து-பத்து பாட்டுக்களில் ஏழிலும் திருவடி
(1) ‘வாலறிவன் நற்றாள் ’ (குறள்-1) – நற்றாள் “நல்ல அடி ” -“
அடலாழி கொண்ட அறிவன் ” (ஆழ்வார்)
(2) “மண்மிசை ஏகினான் மாணடி” (குறள்- 3) – மாணடி “மாட்சிமை பொருந்திய அடி ” –
“மனனக மலமற மலர்மிசை எழுதரு மனனுணர் வளவிலன் ”(ஆழ்வார்).
(3) “வேண்டுதல் வேண்டாமை இலானடி ” (குறள் 4) –
“கொள்கை கொளாமை இலாதான் என் கலி ராகமிலாதான் ” (ஆழ்வார்)
(4) “தனக்குவமை இல்லாதான் தாள் ” (குறள்- 7) –
“தன்னோப்பாரில்லா அப்பன் ” (ஆழ்வார்)
(5) “அறவாழி அந்தணன் தாள் ” (குறள்- 8) –
“அறவனை ஆழிப்படை அந்தணனை ” (ஆழ்வார்)
(6) எண்குணத்தான் தாள் ” (குறள்- 9) – -(-வாத்சல்யம் -ஸ்வாமித்வம் -ஸுசீல்யம் -ஸுலப்யம் -ஞானம் -பலம் -பிராப்தி -பூர்த்தி–பரிமேலழகர் உரை )
(7) “பிறவிப் பெரும் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி ” (குறள் -10)
திருக்குறள் இரண்டு அடிகளால் அறம் பொருள் இன்பம் மூன்றையும் விவரிக்கும் –
குறளன்- வாமனன் இரண்டு திருவடிகளாலே அனைத்தையும் அளந்தான்
மடியிலா மன்னவன் எய்தும் உலகு அளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு -சோம்பல் இல்லாத அரசன்
உலகு அளந்த உலகங்கள் எல்லாம் எய்துவான் -குறள்
ஒரு குறள் பாடும் குறள் பாடும் -வாமனன் பற்றிய குறள் –
———————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-