ஸ்ரீ த்வயத்தில் சொல்லுகிற உபாய உபேயங்களை ஒழிந்த சகல சாதன சாத்தியங்களும் அத்யந்த விலக்ஷணமான
இந்த உபாய உபேயங்களிலே ஆரோபிக்கைக்காக பிரவ்ருத்திக்கிறது ஆகையால்
இவற்றை சகல ஸாஸ்த்ர சாரம் என்னக் குறை இல்லை
இப்படி ஸ்ருதிகளும் -ரிஷிகளும் -ஆழ்வார்களும் -ஆச்சார்யர்களும் -விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக
நிரதிசய ஸூக ரூபமான புருஷார்த்தத்தைப் பெற்று உஜ்ஜீவிக்கைக்கு உபாயம்
லோகாநாம் பரமோ தர்ம
ராமோ விக்ரஹவான் தர்ம
கிருஷ்ணம் தர்மம் சனாதனம்
நல்லறமானவும் நால்வேத மாத்தவமும் நாரணனே யாவது -என்று சொல்லப்படுகிற சித்த உபாயம் என்று
அறுதி இடுகையாலே நமக்கும் இவ்வுபாய விசேஷம் ஆதரயணீயமாகக் கடவது
ஆக இப்படி சகல பிரமாண ப்ரதிபாத்யங்களாய் -மந்த்ர ஸித்தமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு அநு ரூபமாய் அபிமதமுமாய்
இருந்துள்ள உபாய உபேயங்களை இரண்டு வாக்யத்தாலும் விசதமாக ப்ரதிபாதிக்கையாலே
வாக்ய த்வயாத்மகமாகக் கொண்டு ஸ்ரீ த்வயம் என்று திரு நாமமாய் –
ஸ்ரீ திருமந்த்ரத்தினுடைய விசத அனுசந்தானமாய்
மந்தாரம் த்ராயத இதி மந்த்ர –என்று அனுசந்தாவை ரஷிக்கையாலே மந்த்ரமாகவும்
த்வயே மந்த்ர ரத்னேந -என்று மந்த்ர ஸ்ரேஷ்டமாகவும் சொல்லப்படுகிற ஸ்ரீ த்வயம்
ஸ்ரீ கடவல்லி முதலான உபநிஷத்துக்களிலே அதீதமாய்ப் போருகையாலும்
ஸ்ரீ பகவச் சாஸ்திரத்தில்
பிரதமம் ச்ருணு மந்த்ராணாம் மந்த்ர ராஜம் அநுத்தமம் -சர்வ மந்த்ர பலான் யஸ்ய விஞ்ஞாநே ந பவந்திவை
ஏதன் மந்த்ரம் விஞ்ஞாயயோ நரோ மாமபீப்சதி -பாஹுப்யாம் சாகரம் தர்த்தும் லப்த்வாப்லம் இச்சதி –
தஸ்மாத் யோ மாம பீப்சேதயோ வா ஸூகிதும் இச்சதி -மந்த்ர ராஜமிம் வித்யாத் குரோர் வசன பூர்வகம் -என்றும்
மா மேகஞ்ச ஸ்ரீ யா யுக்தம் பக்தி யுக்தோ ந ரோத்தம -த்வயே ந மந்த்ராத்நேந மத பிரியேண பஜேத் சதா –
அசிரான் மத ப்ரஸாதேந மல்லோகஞ்ச கச்சதி –
துர்வ்ருத்தோ வா ஸூ வ்ருத்தோவா மூர்க்க பண்டித ஏவ வா -லஷ்மீஞ்ச மாம் ஸூரேசஞ்ச த்வயே ந சரணம் கத –
மல்லோக மசிரால லப்த்வா மத் சாயுஜ்யம் ச கச்சதி -என்று பல இடங்களிலும் ப்ரஹ்மாதிகளுக்கும்
த்வய வக்தாத்வம் -என்று ஸ்ரீ பாஷ்யகாரரும்
த்வயம் அர்த்த அனுசந்தானேந ஸஹச தைவம் வக்தா -ஸ்ரீ சரண்யன் தானேயும் அருளிச் செய்கையாலும்
ஸ்ருதி ஸித்தமுமாய் சரண்ய அபிமதமுமாய் இருந்ததே யாகிலும் ஆச்சார்ய பாரம்பர்யைக்கு எல்லை நிலமாய் இருந்துள்ள
நித்ய அநபாயினியான பிராட்டி
வேதாம் ருதமஹாம் போதேர் ஹரிணா த்வயமுத்த்ருதம்-தத் த்வயம் ச்ருணு வஷ்யாமி சத்யோ முக்தி ப்ரதம் ஸூபம் -என்று
தொடங்கி ப்ரஹ்மாதிகளுக்கு ஆதரித்து உபதேசிக்கையாலும்
ப்ரபந்ந ஜட கூடஸ்த பராங்குசாக்ய பரமாச்சார்யரும் -மயர்வற மதி நலம் அருளினன் -என்று தாமும் அனுசந்தித்து
திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி –
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே-என்றும் ஸங்க்ரஹேண பிறருக்கும் உபதேசித்து
இம்மந்த்ர யுக்தமான புருஷகார பூத ஸ்ரீ லஷ்மீ சம்பந்த ப்ரப்ருதி கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பிரார்த்தனா பர்யந்தமான
அர்த்த விசேஷங்களை ச கிரமமாக
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மானே நோக்கி மடவாளை மார்வில் கொண்ட மாதவா
மலராள் மைந்தன்
திரு மகளார் தனிக்கேள்வன்
திருவின் மணாளன்
பூ மகளார் தனிக்கேள்வன் -என்று இத்யாதிகளால்-புருஷகாரமான ஸ்ரீ சம்பந்தத்தையும்
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -என்று ஸமஸ்த கல்யாண குணாத்மகத்வத்தையும்
எம்பிரான் எம்மான் நாராயணனாலே -என்றும் -நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே -என்று வாத்சல்யத்தையும்
ஞான மூர்த்தி நாராயணா -என்று சர்வஞ்ஞத்தையும்
திண்ணம் நாரணம் -என்று சர்வ சக்தித்வத்தையும்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் -என்று கிருபா வத்தையும்-சொல்லி
ஆக இப்படி ஆஸ்ரயண உபயோகியாயும் கார்ய உபயோகியாயும் உள்ள குண வைச்சிஷ்ட்டியையும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட
நம்பெருமான் அடி மேல் சேமங்கொள்
கண்ணனைத் தாள் பற்றி
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள்தோறும் ஏக சிந்தையனாய் –இத்யாதிகளால்
ஸூபாஸ்ராய திவ்ய மங்கள விக்ரஹ யோகத்தையும் -தத் உபாய ஸ்வீ காரத்தையும்
எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழு உலகும் இன்பம் பயக்க
திரு மா மகள் இருந்து தாம் மலிந்து இருந்து வாழ்
கோலத்திரு மா மகளோடு உன்னை
அடிமை செய்வார் திருமாலுக்கே–இத்யாதிகளால் கைங்கர்ய பிரதி சம்பந்தியையும்
கொடியேன் பருகு இன்னமுதே
திருமாலின் சீர் இறப்பு எதிர்காலம் பருகிலும் ஆர்வனோ
அடியனேன் பெரிய அம்மானே
விண்ணவர் கோன் நங்கள் கோன்
நிறை மூ உலகுக்கும் நாயகன் -என்று கைங்கர்ய ஆஸ்ரய வஸ்துவையும்
நின் கோயில் சீய்த்து
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாய்
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்–இத்யாதிகளால் கைங்கர்யத்தையும்
விண்டே ஒழிந்த வினையாய எல்லாம்
அமரா வினைகளே
நின்னால் அல்லால் -இத்யாதிகளால் கைங்கர்ய விரோதி நிரசனத்தையும் சொல்லி
ஆக இப்படி அநேக ஸ்ரீ ஸூக்திகளாலே பிரதிபாதிக்கையாலும்
ஸ்ரீ பெரிய முதலியாரும்
ந தர்ம நிஷ்டோஸ்மி –அகிஞ்சனோ அநந்ய கதி –த்வத் பாத மூலம் சரணம் பிரபத்யே –
க்ருபயா கேவலம் ஆத்மசாத்குரு–இத்யாதிகளால் இம் மந்த்ரத்தை அனுசந்திக்கையாலும்
ஸ்ரீ பாஷ்யகாரரும்
அநந்ய சரணஸ் சரணமஹம் பிரபத்யே
அநந்ய சரணஸ் த்வத் பாதாரவிந்த யுகளம் சரணமஹம் பிரபத்யே
ஸ்ரீ மன் நாராயண தவ சரணார விந்த யுகளம் சரணமஹம் பிரபத்யே
நித்ய கிங்கரோ பவாநி –இத்யாதிகளால் இம்மந்திரத்தை அனுசந்திக்கையாலும்
சரண்ய அந்தர் கத ஞானி பரிக்ரஹம் இதுக்கு அதிசயித்து இருக்குமே –
அதுக்கு மேலே இது தான்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் என்கையாலே சர்வாதிகாரமுமாய்
ஸக்ருத் ஸ்ம்ருதோபி கோவிந்தோ ந்ருணாம் ஜென்ம சதைஸ்சிதம் -பாபராசி மத ஹதயாஸூ தூலாராசி மிவா நல-என்றும்
ஸக்ருத் உச்சாரிதே நைவ க்ருதக்ருதயோ பவிஷ்யதி -என்றும்
சக்ருதேவ ப்ரபந்நாய–இத்யாதிகளால் ஸக்ருத் அனுஷ்ட்டேயமுமாய்
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையாவே ஏதம் சாரா –என்கையாலே
புத்தி பூர்வ அநிஷ்ட பரிஹாரமுமாய் இருக்கும்
ஸாத்ய பக்திஸ்து சாஹந்த்ரீ ப்ராரப்தஸ் யாபி பூயஸீ -என்றும்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் -என்றும் சொல்லுகையாலும் ஆத்ம பரமாத்மாக்களுடைய
அத்யந்த பாரதந்தர்ய நிரங்குச ஸ்வா தந்தர்யங்களாலும் இருவருக்கும் கர்ம பாரதந்தர்யமும் கர்தவ்ய அம்சமும் இல்லாமையாலும் –
சர்வ பாப விமோசகன் ஆகையால் -கர்ம அவசானத்தில் அன்றிக்கே சரீர அவசானத்திலே பலமாகக் கடவது
தஸ்யாதாவதே வசிரம் யாவந் ந விமோஷ்யே அத சம்பத்ஸ்யே -என்கிற சாதாரண விசேஷம்
சாதனத்வய கதபி சித்த சாத்யங்களாலே சரீர மோக்ஷமும் கர்ம மோக்ஷமுமாகக் கடவது
சரீர மோக்ஷ பர்யந்தமான விளம்பமும் தத் காலீந துக்க அனுபவமும் பிரபத்தவ்யனான ஈஸ்வரன் இவன் பக்கலிலே
சபலனுமாய் ஹித காமனுமாய் இருக்கையாலே இவனுக்கு தீவிர வேக பிரதானம் பண்ணாமையாலும்
தத் அனுரூப கர்ம சம்பந்த அனுமதி பண்ணி இருக்கையாலுமாகக் கடவது
இவ்வாதிக்யங்கள் எல்லா வற்றிலும் காட்டிலும்
தர்மஞ்ஞ சமய பிரமாணம்
யதாதே தேஷு வர்த்தோன் ததா தேஷு வர்த்தேதா-இத்யாதிகளால் பிராமாணிக பரிக்ரஹமே பிரபலம் என்கையாலே
தத் ஞாபன அர்த்தமாகவும் –
சாதன சாத்யங்களில் ருசி விஸ்வாசங்களுக்காகவும் பூர்வாச்சார்ய வசனங்கள் அனுசந்தேயங்கள் –அவை எவை என்னில்
ஸ்ரீ பட்டர் பாதிரிக் குடியிலே எழுந்து அருளினை போது மறவன் -முயல் குட்டியைப் பிடித்தேன் –
அதன் தாய் முன்னே வந்து தண்டன் இட்டவாறே விட்டுப் போந்தேன் -என்ன
முயலுக்கு சரணாகதியே ரஷகம் என்று உபதேசித்தார் இல்லை
அரி ப்ராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய -என்கிற ஞானம் வேடனுக்கு இல்லை
இப்படி இருக்க பிரபத்தி வைபவம் இருந்தபடி என் என்று ஸ்ரீ பட்டர் விஸ்மிதரானார் என்கிற வார்த்தையும்
இவன் அகத்தினிலே ஒதுங்கினோம் என்று இறே நம்மை இவன் உபசரித்தது –
பரமசேதனன் தான் அபிமானித்து இருக்கிற திவ்ய தேசங்களில் வர்த்திக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவிலே
என் நினைத்து இருக்கிறானோ என்று விஸ்மிதரானார் என்கிற வார்த்தையும்
ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஜீயர் மடியிலே கண் வளர இரா முடியத் தொடை மாறத் தேடுதல் தூங்குதல் செய்யாதே
ஸர்வதா ஸ்தானராய் இருக்க -நீர் இப்படி எனக்கு பரிவராய் இருக்கைக்கு அடி நான் சொன்ன
ஸ்ரீ த்வயத்தை விஸ்வசித்த கனம் இறே என்று அருளிச் செய்த வார்த்தையும்
ஸ்ரீ பட்டர் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பாதத்தில் ரஹஸ்யம் கேட்டு இருக்கச் செய்தேயும் இவர் பதஸ்தராகிற போது
ஸ்ரீ பாஷ்யகாரர் இவர் கையிலே புஸ்தகத்தைக் கொடுத்து ஸ்ரீ த்வயத்தை அருளிச் செய்து
ஸ்ரீ பெருமாள் திருக்கையிலே காட்டிக் கொடுத்தார் என்கிற வார்த்தையும்
ஸ்ரீ சிறியாத்தான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பாதத்தில் தண்டன் இட்டு எனக்குப் பிரியமாகவும் ஹிதமாகவும் திரு உள்ளத்தில்
அறுதி இட்டு இருக்கும் அர்த்தத்தை அருளிச் செய்ய வேணும் என்ன
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பாதமே -ஸ்ரீ த்வயத்தில் அறுதி இட்டு இருக்கும் அர்த்தத்துக்கும் மேற்பட்ட
ஸ்ரேஷ்டமாய் இருப்பது ஓன்று இல்லை -இத்தை விஸ்வசித்து இரும் என்று அருளிச் செய்த வார்த்தையும்
அநாதி காலம் ஸ்ரீ எம்பெருமானோட்டை சம்பந்தத்தை இல்லை செய்து திரிகிற சேதனரை அவன் திருவடிகளில்
பிணைக்கைக்கு பற்றாசு ஸ்ரீ பிராட்டி உளள் என்று நிர்ப்பரனாய் இரு என்று ஸ்ரீ சிறியாத்தானுக்கு அருளிச் செய்த வார்த்தையும்
ஸ்ரீ பெற்றி ஸ்ரீ பாதத்தில் ஸ்ரீ த்வயம் ஸ்ரவணம் பண்ணின ஸ்ரீ கொற்றி யம்மைப்பிராட்டி
ஸ்ரீ திரு மந்த்ரத்தை அருளிச் செய்ய வேணும் என்ன
அதுவும் ஸ்ரீ த்வயத்துக்கு உள்ளே உண்டு காண்-அது கொண்டு கொள்ளும் காரியத்தையும்
ஸ்ரீ த்வயத்தைக் கொண்டு கொள்ளாய் என்று அருளிச் செய்த வார்த்தையும்
ஸ்ரீ வீராணத்து அருளாளப் பெருமாளுக்கு ஸ்ரீ த்வயம் அருளிச் செய்யும் போது ஸ்ரீ பிள்ளையைப் பார்த்து
என்னை ஒழியப் புறம்பே போமாகில் செய்தென் –
நான் சொல்லும்போது நான் விசுவாசித்து இருக்கும் அத்தையே சொல்ல வேணும் என்று அருளிச் செய்த வார்த்தையும்
ஸ்ரீ பெரிய கோயில் நாராயணன் மகன் ஏகாய நரோடே இருக்கக் கண்டு ஸ்ரீ பாஷ்யகாரர் அவனை அழைத்து
ஸ்ரீ பெருமாள் திரு முன்பே கொண்டு புக்கு
ஸ்ரீ த்வயம் ஒழியத் தஞ்சம் இல்லை -அத்தை விஸ்வசித்து இரு என்று ஸ்ரீ சடகோபனை எடுத்துச் சூழ்த்துக் கொடுத்த வார்த்தையும்
ஸ்ரீ பாஷ்யகாரரை பிரிந்து திருமேனி வெளுத்து ஸ்ரீ திரு நாராயண புறத்திலே எழுந்து அருளினை ஸ்ரீ அம்மங்கி அம்மாளுக்கு
என்னைப் பிரிந்து கிலேசித்த உனக்கு முன்பு சொன்ன த்வயம் ஒழியக் கண்டிலேன் என்று ஒரு த்வயத்தை அருளிச் செய்தார் என்ற வார்த்தையும்
ஸ்ரீ ஆழ்வான் திரு நாட்டுக்கு எழுந்து அருளப் புறவீடு விட்டு இருக்கிற தசையில் ஸ்ரீ ஆழ்வானுக்கு கற்பூர நிகரத்தை
வாயில் இட்டால் போலே இருக்கும் காணுங்கோள்என்று அவருக்கு ஸ்ரீ த்வயத்தை அருளிச் செய்தார் என்கிற வார்த்தையும்
ஸ்ரீ எம்பெருமானார் அந்திம தசையில் சேவித்து இருந்த ஸ்ரீ முதலிகளுக்கு ஸ்ரீ த்வயம் ஒழியத் தஞ்சம் இல்லை என்று
இருங்கோள் என்று அருளிச் செய்த வார்த்தையும்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ நஞ்சீயரைப் பார்த்து ஸ்ரீ திருமந்த்ரத்திலே பிறந்து ஸ்ரீ த்வயத்திலே வாழ்ந்து
ஸ்ரீ த்வய ஏக சரணனாவாய் என்று வாழ்த்தினார் என்கிற வார்த்தையும்
இவை முதலான இவ்வாச்சார்யர்களுடைய வசனங்கள் அடைய ருசி விஸ்வாசங்களுக்காக இவ்விடத்தில் அநுசந்தேயங்கள்
இப்படி ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான ஸ்ரீ த்வயம்
அநந்ய சாதனனாய் -அநந்ய பிரயோஜனனான முமுஷுவுக்கு அனுசந்தேயமான அர்த்த விசேஷங்களை பிரகாசிப்பிக்கிற ஸ்ரீ ரஹஸ்ய த்ரயத்தில்
ஸ்ரீ திரு மந்திரத்தில் மத்யம பத யுக்தமான ஆத்ம பாரதந்தர்யத்தாலும்
ஸ்ரீ சரம ஸ்லோகத்தில் அஹம் பத யுக்தமான ஈஸ்வர ஸ்வா தந்தர்யத்தாலும் தோன்றின உபாய விசேஷத்தையும்
அவற்றில் சதுர்த்தியாலும் உத்தமனாலும் தோன்றின உபேய விசேஷத்தையும்
இதில் பிரதம பத யுக்தமான ஸ்ரீ சம்பந்தத்தால் வந்த ஆஸ்ரித பாரதந்தர்யத்தை முன்னிட்டுக் கொண்டு
ஸ்வீ கரித்து பிரார்த்திகையாலே அவற்றில் காட்டில் இது அதிகமாய் இருக்கும்
ஆகை இறே -சம்சார ஆர்ணவ மக்நாநாம் சத்யஸ் சம்சார தாரணம் -த்வயமே சந்து விப்ரேந்தர நாஸ்த்யஸ்ய சத்ருசம் புவி -என்றதும்
த்வயே ந மந்த்ர ரத்னேந –
மந்த்ர ரத்ன த்வயம் ப்ரஹ்மன் ச்ருணு வஹ்யாமி ஸூ விரத-என்பதுவும்
இத்துவயத்துக்கு அதிகாரி
பிரணவத்தில் பிரதம பதத்தில் தாது பிரத்யயங்களால் தோன்றின ரக்ஷகத்வ சேஷித்வங்களை
அதில் சரம பதத்தில் தாது அர்த்தத்தாலே தோற்றின ஞானத்தால் தெளிந்து தேறி
தத் பத யுக்த ஆனந்த ராகாரமான ஆனந்தத்தில் நிலை நின்றவன் ஆகையால்
இப்படிப்பட்ட சேதனன் துர்லபானாகையாலே நம் பூர்வாச்சார்யர்கள் இத்தை ரஹஸ்யமாக உபதேசித்துப் போருவார்கள்-
ஆகையால் தாது வர்த்த வீசதீ காரமான நமஸ் சப்தார்த்த ஞான காரியமான உபாய வர்ணத்தையும்
ப்ரத்யய அர்த்த பிரதி சம்பந்தி பூத மகார அர்த்த விசதீ காரமான சதுர்த்தி அர்த்த ஞான கார்யமான உபேய பிரார்த்தனையையும்
வாக்ய த்வயத்தாலும் சொல்லுகிறது ஆகையால் இம்மந்திரம் சர்வாதிகமாய் இருக்குமா போலே
தன்னிஷ்டனான இவ்வதிகாரியும் சாத்யாந்தரத்திலும் சாதனாந்தரத்திலும் நிஷ்டரானவர்களில் அத்யந்தம் அதிகனாய் இருக்கும்
மூர்க்கோ வா பண்டிதோ வாபி ஸூத்தோ வாப்ய ஸூசிஸ் சதா -தஸ்மிந் த்வயே யதி ஸ்ரத்தாச பூஜ்யோ பவதி த்ருவம்-
ஸ்ருதவாந் வாகுலீநோவா தபஸ்வீ வா பராசர -த்வய அதிகாரீநோ சேத்தம் தூரத பரிவர்ஜயேத் -என்று
அந்ய நிஷேத பூர்வகமாக தத் அதிகாரி யானவன் பூஜ்யன் என்று சொல்லா நின்றது இறே
சரணம் இத்யபி வாசமுதைரயம்
குரு பரம் தவ ரங்க துரந்தர
மாதவன் என்றதே கொண்டு தீதவம் கெடுக்கும்
மாதவன் என்று என்றே ஓத வல்லீரேல் -என்று சொல்லுகையாலும்
சர்வ குஹ்யதமம் பூயஸ் ஸ்ருணுமே
குஹ்யா நாம் குஹ்யம் -என்றும் சொல்லுகையாலும் நம் பூர்வாச்சார்யர்கள் மற்ற ரஹஸ்ய த்வயத்திலும்
அர்த்த மாத்ரத்தை மறைத்துப் போருவர்கள்-
இதில் சப்தங்கள் அர்த்தங்கள் இரண்டையும் மறைத்துப் போருவர்கள்
இங்கு இப்பரிசு உரைப்பார் –திருவருள் பெற்று இன்புறுவர் -என்கிறபடியே
நம்மைப் பாராதே முன்பு சொன்னவர்களை பார்த்து இரங்கும்படி பண்ணும்
இஸ் சப்த விசேஷத்தாலே இவ்வர்த்தத்தை அனுசந்தித்தால் இறே கார்யகரமாவது
இம்மந்திர நிஷ்டையை ஒழிய ஈஸ்வரனை லபிக்கத் தேடுகை மூர்க்க க்ருத்யம் -ஸ்வ நாசத்தோடே போம் –
பல அலாப மாத்ரமாய் விடும் என்னும் இடம் -ஏதந் மந்த்ரம் விஞ்ஞாய யோ நரோ மாமபீப்சதி-பாஹுப் யாப சாகரம் தர்த்தும்
லப்த்வாப்லவமிச்சத்தி -என்கிற கிரந்தத்தால் சொல்லிற்று
பொய்யே கைம்மை சொல்லி -மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்று
தேனே இன்னமுதே என்று என்றே சில கூற்றுச் சொல்ல தானேல் எம்பருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
மாயம் சொல்லி வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னைக் கண்டு கொண்டு ஒழிந்தேன் -என்கிறபடியே
உபாய பூதன் பக்கலிலே -கிருபையும் -பிராப்தியும் -ஓவ்தார்யமும் –
தன் பக்கலிலே ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களும் ஆர்த்தி அபி நிவேசங்களும் இறே இவ்வுபாயத்துக்கு அபேக்ஷிதம்
அல்லது ஆபி ஜாத்ய அநு கூல்யாதிகள் அன்றே
அபவித்ர பவித்ரோ வா சர்வா வஸ்தாங்கதோபி வா -த்வய ஸ்மரண மாத்ரேண ச பாஹ்யாப் யந்தரஸ் ஸூசி –
மூர்க்கோவா பண்டிதோவாபி நிந்திதோவாப்ய நிந்தித -த்வய உச்சாரண மாத்ரேண நர பூஜ்யோ ந சம்சய -என்னக் கடவது இறே
ஏழை ஏதலன்–இத்யாதியாலே அபிஜான வித்யா விருத்தங்களால் தண்ணியரான ஸ்ரீ குஹப்பெருமாள் விஷயமாக
அவை ஒன்றையும் பாராதே சரண்யரான பெருமாள் தாம்
உன் தோழி என்று புருஷகார சம்பந்தத்தையும்
உம்பி-என்று பாகவத அங்கீ காரத்தையும் உண்டாக்கி
தோழன் நீ எனக்கு -என்று தாமும் அங்கீ கரித்து
இங்கு ஒழி-என்று தாம் உகந்த கைங்கர்யத்தையும் கொண்டார் என்கையாலே
ஜென்ம விருத்தாதிகள் அப்ரயோஜம் -பகவத் கிருபையே பிரயோஜகம் என்னும் இடம் வியக்தம்
இம்மந்திரம் தான் வாக்ய த்வயத்தாலும் -சித்த உபாய விஷயமான ப்ரதி பத்தியையும்
தத் பலமான உபேய பிரார்த்தனையும் முக்கியமாக பிரதிபாதிக்கிறது
அதில் பூர்வ வாக்கியத்தில் சொல்லுகிற உபாய பிரதிபத்தி அநாதிகால ஆர்ஜிதமான அக்ருத்ய கரணாதிகளாலே தூஷித
அந்தக்கரணான இவனுக்குக் கூடாமையாலே அந்த தோஷ தர்சன பய நிவ்ருத்தி ஹேது பூதமான
புருஷகாரத்தைச் சொல்லுகிறது ஸ்ரீ மத் பதம் –
அந்த புருஷகாரத்தாலே உத் பூதங்களாய்- தத் உபாய ப்ரதிபாத்ய ஆஸ்ரய பூத சேதனனுடைய ச தோஷத்வ அப்ராப்தத்வ
நிகர்ஷாதிகளுக்கு நிவர்த்ததகமான வாத்சல்யாதி குண யோகத்தையும் –
பிரபத்தி அந்தர் கதமான விஸ்வாசத்துக்கு ஹேது பூதமான ஞான சக்த்யாதி குண யோகத்தையும்
ப்ரதிபாதிக்கிறது நாராயண பதம்
பிரபத்திக்கு விஷயமான உபாயத்துக்கு பிரதி சம்பந்தி ஸூல பனாக வேண்டுகையாலே –
அந்த ஸுலப்யத்தைச் சொல்லுகிறது சரணவ் -என்று –
பிரபத்தி விஷய பூதனான அவனுடைய உபாயத்தைச் சொல்லுகிறது சரணம் என்று –
ஆக பூர்வ வாக்யத்துக்கு முக்கியமாகச் சொல்லப்பட்ட உபாயத்வ பிரதிபத்திக்கு உப யுக்தங்களாகக் கிடக்கின்றன
இதிலே சொல்லுகிற புருஷகாராதிகள் –
உத்தர வாக்கியத்தில் சொல்லுகிற பிரார்த்தனைக்கு விஷயமான கைங்கர்யம் -மிதுன சேஷ பூதனான இவனுக்கு மிதுனம் விஷயம்
ஆனால் அல்லது பூர்ணம் ஆகாமையாலே தத் பூர்ண ஹேதுவான ஸ்ரீ யபதித்வத்தைச் சொல்லுகிறது -ஸ்ரீ மதே-என்று –
அந்தக் கைங்கர்யம் ஸ்வரூப அனுரூபமாக வேண்டுகையாலே தத் ஹேதுவான ஸ்வாமித்வத்தைச் சொல்லுகிறது நாராயண பதம்
அதில் ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி பிறந்தால் அல்லது சேஷ பூத ஸ்வரூபத்துக்கு அனுரூபம் ஆகாமையாலே
தந் நிவ்ருத்தியைப் பண்ணுகிறது நமஸ் சப்தம்
ஆக உத்தர வாக்யத்துக்கு முக்யமாகச் சொல்லுகிற கைங்கர்ய பிரார்த்தனைக்கு உப யுக்தங்களாகக் கிடக்கிறது
இதில் சொல்லுகிற ஸ்ரீ சம்பந்தாதிகள்
ஆக இப்படி வாக்ய த்வயத்தாலும் ப்ராப்ய ப்ராபகங்களைச் சொல்லுகையாலே இதுக்கு வாக்யார்த்தம்
ப்ராப்ய ப்ராபக ஸ்வரூப நிரூபணமாகக் கடவது –
இது தான் பூர்வாச்சார்ய ருசி பரிக்ருஹீதம் ஆகையால் சகல ஸாஸ்த்ர ஸங்க்ரஹ மந்த்ர ஸித்தமான உபாய உபேயங்கள்
சிஷ்டாசார சித்தம் என்கை -இதுக்குத் தாத்பர்ய அர்த்தமாகக் கடவது
இதில் வாக்ய த்வயத்திலும் சொன்ன உபாய உபேய பிரதிபத்தி பிரார்த்தனைகள் –
பூர்வ அபராத பய நிவ்ருத்தி ஹேது பூத புருஷகார வியதிரேகணவும்-
கைங்கர்ய பிரதி சம்பந்த பூர்த்தி ஹேது பூத ஸ்ரீ லஷ்மீ சம்பந்த வியதிரேகணவும்-உதியாமையாலே
இவ் வாக்ய த்வயத்துக்கும் பிரதான அர்த்தம்
புருஷகார பராதாநயமும் மிதுன கைங்கர்ய ப்ராதான்யமுமாகக் கடவது
இப்பிரதிபத்தி -அபராதாநாம் ஆலயத்வாதி தோஷ அனுசந்தான பூர்வகமாய் இருக்கையாலும்
அனுபவ அலாபத்துக்கும்-அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்ய அலாபத்துக்கும் ஹேது
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித்
மத் பாபமேவாத்ர நிமித்த மாஸீத்
என் பிழையே நினைந்து அருளி –இத்யாதிகளாலே ஸ்வ தோஷமாகச் சொல்லுகையாலே
இந்த பிரார்த்தனையும் ஸ்வ தோஷ அனுசந்தான பூர்வகமாய் இருக்கையாலும் அனுசந்தான அர்த்தம் ஸ்வ தோஷமாகக் கடவது
அதில் பூர்வ வாக்கியம் புருஷகார பிரதானம் ஆகையால் இதில் சொல்லுகிற அர்த்த விசேஷங்களை அனுசந்திக்க
ஸ்வ அபராத நிபந்தன பீதி நிவ்ருத்தியாம் –
உத்தர வாக்கியம் மிதுன கைங்கர்ய பிரார்த்தனா பிரதானம் ஆகையால் இதில் சொல்லுகிற அர்த்த விசேஷங்களை
அனுசந்திக்க ஸ்வரூப அனுரூப பல அலாப நிபந்தன பீதி நிவ்ருத்தியாம்
பூர்வ வாக்ய அனுசந்தானத்தாலே பகவத் கிருபா விஷயத்வ சித்தி –
உத்தர வாக்ய அனுசந்தானத்தாலே பகவத் ப்ரீதி விஷயத்வ சித்தி -என்று ஸ்ரீ ஆச்சான் பிள்ளை வார்த்தை –
பூர்வ வாக்ய யுக்த தத் ஏக உபாயத்வ பிரதிபத்தி இல்லாத போது அசித் வ்யாவ்ருத்தி இல்லை
தத் கைங்கர்ய பிரார்த்தனை இல்லாத போது ஈஸ்வர வ்யாவ்ருத்தி இல்லை
நான் அடியேன்
அடியேன் நான் -என்கிற உபய வ்யாவ்ருத்தியும் சித்திக்கும் போதைக்கு உபய வாக்ய அனுசந்தானமும் வேணும்
ஆக இதில் வாக்யார்த்தமும்
தாத்பர்ய அர்த்தமும்
பிரதான அர்த்தமும்
அனுசந்தான பிரயோஜனமும் –சொல்லிற்று ஆயிற்று –
ஆக இப்படி ப்ராப்ய பிராபகங்களுக்கு ப்ரதிபாதகமாய்
சர்வாதிகாரமாய்
ஸக்ருத் அநுஷ்டேயமாய்
பரம ரஹஸ்யமாய்
மந்த்ர நிஷ்டருடைய அனுஷ்டானம் ஆகையால் மந்த்ர அர்த்தத்துக்கு சிஷ்டாசார த்வாரா ப்ரமாணமாய்
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமாய் –
வாக்ய த்வயாத்மகமாய் இருந்துள்ள ஸ்ரீ த்வயம் -பஞ்ச விம்சத் அக்ஷரமாய் -ஷட் பதமாய் –
1-புருஷகாரம்
2-நித்ய யோகம்
3-தத் உத் பூதங்களாய் ஆஸ்ரயண உபயோகியான வாத்சல்யாதி குணங்கள்
4-உபாய உப யோகியான ஞான சக்த்யாதி குணங்கள்
5-ஸூபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹம்
6-தத் உபாயத்வம்
7-தத் விஷய பிரதிபத்தி
8-உபாய பல கைங்கர்ய பிரதிசம்பந்தி பூர்த்தி
9-பிரதி சம்பந்தி கைங்கர்ய பிரார்த்தனை
10-தத் விரோதி நிவ்ருத்தி -ஆகிய பத்து அர்த்தத்தையும் சொல்லக் கடவதாய் இருக்கும்
அதில் பூர்வ வாக்கியம் பத த்ரயாத்மகமாய் –
ச ப்ராதுஸ் சரணவ் காடம் நிபீட்ய ரகுநந்தன–என்கிற உபாய வரணத்தையும்
தத் பிரதி சம்பந்தியான திருவடிகளையும்
ததேகாந்தமானந் குண விசேஷங்களையும்
தத் உத்பாதகத்வ புருஷகாரத்தையும் சொல்லுகிறது
உத்தர வாக்கியம் பத த்ரயாத்மகமாய்
பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரி சாநுஷூரம்ஸ்யதே -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று
புருஷகாரமும் -உபாயமுமான இருவருடையவும் சேர்த்தியிலே
சஹஜ சார்வ காலீந கைங்கர்ய ரூபமான உபேயத்தை அபேக்ஷிக்கிறது
ப்ரபத்யே என்று ஸ்வ அனுஷ்டானம் ஆகையால் பல ஹேது பூத அனுஷ்டான வாக்யம் முற்பட்டது
பிராப்தி வேளையில் இறே பலம் முற்பட வேண்டுவது –
அனுஷ்டான தசையில் சாதனம் இறே முற்பட வேண்டுவது
அதில் பிரதம பதம்
உபாய ஸ்வீ காரத்துக்கு ஏகாந்தமான குண விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவினுடைய புருஷகார சம்பந்தத்தைச் சொல்லுகிறது –
அதில் பிரதம அபேக்ஷிதமான புருஷகாரத்தையும் நித்ய யோகத்தையும் சொல்லுகிறது ஸ்ரீ மன் -என்று
அதில் ஸ்ரீ பதம் புருஷகார உபயோகி ஸ்வ பாவ விசேஷ உபேதையாய் இருந்துள்ள ஸ்ரீ க்குத் திரு நாமமாய்க் கொண்டு
ஸ்ரீஞ் சேவாயாம் -என்கிற தாதுவிலே முடிகையாலே ஆஸ்ரயத்வ விஷயத்வங்களைக் காட்டுகிறது
ஏக ஆஸ்ரயத்தில் உபயமும் கூடுமோ என்னில் கர்த்த்ரு பேதமும் விஷய பேதமும் உண்டாகையாலே கூடும் –
அந்த பேதங்களைச் சொல்லுகிறது –
ஸ்ரியத இதி ஸ்ரீ -என்கிற கர்மணி வ்யுத்பத்தியும்
ஸ்ரயத இதி ஸ்ரீ என்கிற கர்த்தரி வ்யுத்பத்தியும் -எங்கனே என்னில்
ஸ் ரீயதே -என்கிற கர்மணி வ்யுத்பத்தியாலே ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த ஆத்ம வர்க்கத்தாலும்
தம் தாமுடைய ஸ்வரூப ஸ்தித் யாதிகளுக்காக ஆஸ்ரயணீயையாய்க் கொண்டு
நங்கள் திரு -என்னும்படி இவர்களுடைய உபாய உபேய அத்யாவசாயங்கள் ஆகிற சம்பந்தங்களுக்கு
அஸ்து தே ததைவ சர்வம் சம்பத்ஸ்யதே -என்கிறபடியே அபி விருத்தியைப் பண்ணா நின்று கொண்டு ஆஸ்ரயணீயையாகவும்
ஸ் ரயதே -என்கிற கர்த்த்ரி வ்யுத்பத்தியாலே –
தன்னாகத் திரு மங்கை தங்கிய -என்கிறபடியே தன் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ரூப சத்தா ஸித்திக்காக சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து
உன் திரு
விஷ்ணோஸ் ஸ்ரீ -என்னும்படி அவனுக்கு சம்பத் ரூபையாய்க் கொண்டு ஆஸ்ரிகை யாகவும்
இவளுக்கு வஸ்துத்வ நாம பாக்த்வங்களும் ஸ்திதி பிரவ்ருத்திகளும் அவன் அதீனம் என்கையாலே
இவள் புருஷகார நிரபேஷமாக ஆஸ்ரயனீயையுமாய் ஆஸ்ரிதை யாயும் இருக்கும் என்று
உபய அனுபந்தியான ஸ்வத் ஸ்வாமிநீத்வங்களைச் சொல்லுகிறது
அதவா
ஈஸ்வரன் பரம பிரணயி யாகையாலே அந்த பிரணயித்வம் அடியாக ஸ்வ வைஸ்வரூப யாதிகளாலே
சர்வ காலமும் அனுபவியா நின்றாலும் அபூர்வவத் விஸ்மய ஜனகமான வை லக்ஷண்யத்தையும் யுடையளாய் இருக்கிற இவளை
க்ஷண கால விஸ்லேஷ அசஹனாய்க் கொண்டு சேவித்து இருக்கையாலே
ஸ்வ வியதிரிக்த சமஸ்தராலும் ஸ்வரூபதோ குண தஸ்ச ஸேவ்யமாய் இருக்கும் என்னவுமாம்
கீழே சொன்ன ஸ்வத்வ ஸ்வாமிநீத்வங்கள் ஆகிற இரண்டு சம்பந்தமும் இல்லாத போது
ஆஸ்ரயிக்கிற சேதனருடைய அபேஷா சித்தி ஹேதுவாய் இருந்துள்ள புருஷகாரத்வம் கடியாது –
ஆகையால் ஆகந்துகம் இன்றியிலே இவள் ஸ்வரூபத்துக்கு நிரூபகமாய் இருந்துள்ள உபய சம்பந்தத்தையும்
தர்மி க்ராஹமான ஸ்ரீ சப்தத்தில் வ்யுத்பத்தி த்வயத்தாலும் சொல்லிற்று ஆயிற்று
இந்த சம்பந்த த்வயத்தையும்
ஈஸ்வரீம் சர்வ பூதாநாம்
அஸ்யே சாநா ஜகதோ விஷ்ணு பத்னீ
ஹ்ரீஸ் சதே லஷ்மீஸ் ச பத்த்ந்யவ்-இத்யாதிகளாலே ஸ்ருதியும் தானே சொல்லிற்று –
யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வராணாம் ஐஸ்வர்ய ஹேதுரிதி ஸார்வ ஜனீனி மேதத் –
தாம சரீரி தித்வதுப ஸமஸ்ரயணாந நிராஹு த்வாமஹி ஸ்ரீ யஸ் ஸ்ரீ யம் உதாஹுருகாரவாச -என்றும்
யஸ்யா வீஷ்ய முகமதத் இங்கித பராதீனோ விதத்தேகிலம் -என்றும் இத்யாதிகளாலே
சர்வ பிராணிகளுக்கும் உண்டான ஸ்புரத்தை எல்லாம் இவளுடைய கடாக்ஷ அதீனம் என்றும்
இப்படிக்கு ஒத்த இவளுடைய சத்தை பகவத் ஸமாஸ்ரயணத்தாலேயாய் இருக்கும் என்றும்
வ்யுத்பத்தி ஸித்தமான உபய சம்பந்தத்தையும் அபி யுக்தர் அருளிச் செய்தார்கள் –
த்வம் மாதா சர்வ லோகாநாம் தேவ தேவோ ஹரி பிதா
தேவ தேவ திவ்ய மஹிஷீம்
அகில ஜெகன் மாதரம் -என்னக் கடவது இறே –
இந்த சம்பந்த த்வயத்துக்கு உண்டான பிரயோஜக விஷயத்தைச் சொல்லுகிறது
ஸ்ருணோதி -ஸ்ராவயதி -என்கிற நிருத்தம்-அதாவது
ஆச்சார்ய உபதேசத்தால் ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களையும் -தத் அநு ரூபமாய் நிரதிசய ஆனந்தமாய் இருந்துள்ள
புருஷார்த்தத்தையும் யாதாவாக அறிந்து தத் பிரதிபடமான சம்சாரத்தினுடைய ஹேயத்வ துக்க ரூபத்வ ஞானத்தையும் உடையவன்
ஸ்வரூப பாரதந்தர்யத்தாலும் பகவத் ஸ்வா தந்தர்யத்தாலும் விரோதி பாஹுள்யத்தாலும் சாதனாந்தரங்களுக்கு ஆளாகாதே
ப்ராப்ய ருசி அதிசயத்தாலும் சம்சார பீதியாலும் ஆஸ்ரயண விமுகனாக மாட்டாதே கிங்கர்த்தவ்யதாகுலனாய் நிற்க
நிருபாதிக ஸூஹ்ருத்தாய் நிரவதிக க்ருபாவானாய் இருந்துள்ள ஈஸ்வரன் –
அந்தப்பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜெநா நாம் சர்வாத்மா
ஓர் உயிரேயோ யுலகங்கட்க்கு எல்லாம் -என்னும்படி சத்தா தாரகனாய்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் –அவையுள் தனி முதல் அம்மான்-என்று
கரண களேபரைர்க் கடயிதும் தயமானமநா -என்றும்
விசித்ரா தேஹ சம்பத்தி ரீஸ்வராய நிவேதிதும்-என்றும் -இவை புருஷார்த்த ஞானம் உண்டாய் -தரிக்கைக்காக கரணங்களைக் கொடுத்து
தத் ஸ்ருஷ்ட்வா தத் ஏவ அநு ப்ராவிசத் -தத் அநு பிரவிஸ்ய சச் சத் யச் சா பவத் -என்று அவற்றுக்கு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தி
உண்டாகைக்காக அநு பிரவேசித்தும்
அவை ஸ்வ தேஹ போஷணாதி ப்ரவ்ருத்திகளுக்கு உறுப்பாகப் புக்கவாறே அவற்றை உபசம்ஹரித்தும் –
அவ்வளவிலும் நிராசனாய் விடாதே தெரியவும் ஸ்ருஷ்ட்டித்தும் இவற்றைப் பிரிய மாட்டாமையாலும்
இவை படுகிற வியசனத்தாலும் மிகவும் துக்கிதனாயும்-இப்படி
உபாதத்தே சத்தாஸ்திதி நியமநாத்யைஸ் சித் அசிதவ் ஸ்வ முத்திஸ்ய ஸ்ரீ மா நிதி வததிவா கௌபநிஷதீ -என்றும்
அடியான் இவன் என்று எனக்கு அருள் செய்யும் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வதஸ் ஸித்தமான ஸ்வ ஸ்வாமி சம்பந்தமே ஹேதுவாக இவற்றினுடைய சத்தா பிரதாஸநாதியான ரக்ஷணங்களைப் பண்ணி
இவ்வர்த்தத்திலே சர்வரும் விஸ்வசிக்கும் படி உபநிஷத்தின் படியே எடுப்பான் வேத மயனான கொடியைக் கட்டி
எல்லை நடந்து காட்டி ஆஸ்ரித உஜ்ஜீவன உத்ஸூகனாய் இருக்க
இப்படி சர்வ பூத ஸூஹ்ருத்தான ஈஸ்வரனுடைய திரு உள்ளம் புண்படும்படி சேதனர்-
அதிக்ராமந் நாஜ்ஞாம் -என்றும்
புதவாச நோ ச -என்றும் சொல்லுகிறபடியே அநாதி காலம் புத்தி பூர்வகமாகவும் அபுத்தி பூர்வகமாகவும் த்ரிவித கரணங்களாலும்
அக்ருத்ய கரண க்ருத்ய அகரண பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்ய அபசாராதிகளைப் பண்ண
யத் ப்ரஹ்ம கல்ப நியதா நுபவேப்ய நாஸ்யம் -என்று அநேகம் ஆயிரம் ப்ரஹ்ம கல்பம் அனுபவியா நின்றாலும்
அளவுபட்டுத் தோற்றாத படி செய்கிற அபராத பரம்பரைகளை உணர்ந்து
ஷிபாம் யஜஸ்ரம்ஸூபாநா ஸூ ரீஷ்வே வயோநிஷு
ந ஷமாமி கதாசன
எரி பொங்கிக் காட்டும் அழல் விழித்தானே அவுணர்க்கு
சலம் புரிந்து அங்கு அருள் இல்லாத் தன்மையாளன் -என்னும்படி நிக்ரஹ விஷய பூதரான சேதனரை
ராஜாக்கள் முனிந்தவர்களை பாணர் புலையருக்கு கொடுக்குமா போலே
பிரணமந்தி தேவதா -என்று கும்பிட்டுக் கடக்க நிற்கிற யமாதிகள் கையிலே காட்டிக் கொடுத்து
ரௌரவாதி நரகங்களிலே தள்ளி அறுத்துத் தீற்றிப் போரா நிற்க
அவ்வளவில் நிவாரகர் இல்லாதபடி நிரங்குச ஸ்வ தந்திரனாய் இருக்கிற ஈஸ்வரனை ஆஸ்ரயிக்க என்பது ஓன்று இல்லை –
இனி பழைய நரகம் ஒழிய கதி இல்லை என்று தெகுடாடா நிற்கிற இச் சேதனர் பக்கல் அவன் திரு உள்ளத்தில் உண்டான
அழற்றியை ஆற்றி இவர்களை அவன் திருவடிகளில் பொகடுகைக்கு
இவர்களோடும் அவனோடும் மாத்ருத்வ மஹிஷீத்வ சம்பந்தத்தை உடையளாய்
பிரணிபாத ப்ரசன்னாஹி மைதிலீ ஜனகாத்மஜா -என்று பிரணிபாத மாத்திரத்திலே பிரச்சன்னையாம் என்று பிரசித்தையாய்
செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு -என்று தலை சீய்ப்பது
ஏஷ சர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹனூமதா -என்று சர்வ ஸ்வதானம் பண்ணுவதாம்படி
த்ருஷ்டா சீதா -என்று பெருமாளையும் உண்டாக்கி
க்ருஹீத்வா ப்ரேஷமாணா சா பர்த்து கர விபூஷணம் -பர்த்தாரம் இவ ஸம்ப்ராப்தா ஜானகீம் உதிதாபவத்-என்று
அக்கரையும் இக்கரையுமான இருப்புத் தோற்றாத படி பெருமாளோடே ஒரு படுக்கையிலே இருந்தால் போலே ப்ரீதையாம்படி
கைக்கண்ட அடையாளம் கொடுத்து ராம குணங்களால் தேற்றி அது பர்த்தாரம் இவ -என்று த்ருஷ்டாந்தமாகப் போகாமல்
இரண்டு தலைக்கும் உபகாரகனான திருவடிக்கு எத்தைச் செய்வுதோம் என்று தடுமாறுகிற அளவில்
அவன் -தேவர் அளவிலே தர்ஜன பர்த்சநாதிகளைப் பண்ணிப் போந்த இந்த ராக்ஷஸிகள் பாபைகள் வத்த்யர் –
இவர்களை எனக்கு ஒரு க்ஷண காலம் லீலைக்கு விஷயமாக்க வேணும் -என்ன
பாபாநாம் வா ஸூபா நாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம கார்யம் கருண மார்யேன் ந கச்சின் ந அபராத்யதி என்று
அவர்கள் தர்ஜன பர்த்ஸ்னாதிகளை பண்ணுகையாலே பாபர் ஆகிலுமாம்
ராஜசர்ச்ரய வஸ்யாநாம் குர்வந்திநாம் ததாஜ்ஞயா-என்று சோறு இட்டவன் சொன்னது செய்கையாலே ஸூபராகிலுமாம்-
உன் பக்ஷத்தாலே வாதார்ஹராகிலுமாம் -நல்ல மனிசரால் சர்வ விஷயமாக கிருபை பண்ணுகை காண் பிராப்தம் –
நிரூபித்தால் பெருமாள் விஜயத்தைச் சொல்லி மீண்டு போகாமல்
தாசீநாம் ராவணஸ்யாஹம் மர்ஷயா மீஹ துர்பலா -என்று பாதகரே யாகிலும் பிறர் கண் குழிவு காண்கைக்கு சக்தை அல்லாத
என் முன்பே பெருமாளுடைய நியோகமும் இன்றிக்கே இருக்க இவர்களை நலிய விசாரித்த நீ அன்றோ அபராதம் பண்ணினவன் என்று
பவனாத்மஜனோடே மறுதலித்து அவர்களை ரக்ஷிக்குமவளாய்
அவர்கள் தங்களுக்கும் -பவேயம் சரணம் ஹிவ-என்று அபய பிரதானம் பண்ணி –
அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத்–என்று இப்பய நிமித்தமாக நம்மை ரஷிக்கைக்கு நம்மாலே
பர்த்சிதையான இவள் தானே அமையும்படி விஸ்வசிக்கும்படி இருக்குமவளாய்
ஜென்ம வ்ருத்த ஞானங்களால் குறைய நின்ற காக விபீஷண குஹ ஸூக்ரீவாதிகளும் இவளை முன்னிட்டு ஆஸ்ரயிக்கையாலே
தந்தாமுடைய அபீஷ்டம் பெற்று க்ருதார்த்தராம்படி காருண்ய வர்ஷத்தைச் சொரிகிற மழைக் கண் மடந்தையான இவளை ஒழிய
இல்லை என்று அறுதி இட்டு -சர்வ லோக சரண்யாய -ஏதத் விரதம் மம -என்று விருது பிடித்து விரதம் கொண்டு திரிகிறவர்
அசரண்யரான அன்றும் – அசரண்ய சரண்யாம் -என்று சரண்யையான இவளை ஒழியப் புகல் அன்று என்று புகுந்து
பூர்வ அபராதத்தாலே பகவத் ஸமாஸ்ரயணத்துக்கு அஞ்சி சம்சார தோஷத்தால் இங்குப் பொருத்தம் அற்று
ஸ்வரூப பாரதந்தர்யத்தாலே கத்யந்தர ரஹிதனாய் இருக்கிற என்னை அவன் திருவடிகளில் சேர்த்து ரஷிக்கை
தேவருக்கு பரம் என்று இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளைக் கேட்டு
மாதாவான தன் நிழலிலே இட்டு வைத்துக் கொண்டு
அனந்தரம் -ஸ்வ வைஸ்வ ரூப்யேண சதா அனுபூதயாப்ய பூர்வவத விஸ்மய மாததாநயா -என்றும்
போகாபாத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ரூப்யானுபாவா-என்றும் சொல்லுகிறபடியே
சர்வஞ்ஞனாய்-சர்வ சக்தி உக்தனாய் இருக்கிற ஈஸ்வரன் தன்னுடைய பாரா வியூஹாதி சகல விக்ரஹங்களாலும்
வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய்
என்னை உன் செய்கை நைவிக்கும்
பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -என்று அதில் அபி மக்நரானவர்கள் ஈடுபடும் படியான
குண சேஷ்டிதங்களாலும் போக்யதையாலும் சர்வ காலமும் அனுபவியா நின்றாலும் அபூர்வமான ஆச்சார்யங்களை உடைத்தாய் –
விபுவான தன் ஸ்வரூபத்திலே ஏக தேசத்துக்குள்ளே அணுவான இவள் ஸ்வரூபம் இருக்குமா போலே
இவளுடைய லீலா ரூப விலாச வியாபாரங்களால் உண்டான போக்யதைக்கு உள்ளே மக்நனாய்
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் -என்று இடைவிடாமல் ஆலிங்கனத்துக்கு மேற்பட்ட தர்மி இல்லை என்னும்படி
பண்ணக் கடவதான போக்யதாதிசயத்தாலும்
மலராள் தனத்துள்ளான்
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் –
மலர் மங்கை மண நோக்கம் உண்டான் -என்று ஸ்வரூப சத்தா போகங்கள் எல்லாம் அவளிட்ட வழக்காய்
ஆலிங்கன அலாப விலோக நாத்யைர் விலாச பேதைர் விவிதைர் விலோப்ய-ஆஹ்லாத யந்தீ ப்ரிய மாஸ்ரிதா
நாமம் போருஹேரோஷம பாக ரோஷி -என்கிறபடியே
மதுரா மதுரா லாப
பண்ணை வென்ற இன் சொல் மங்கை
பண்ணுலாவு மென்மொழிப் படைத் தடம் கண்ணாள்
பான் மொழியாய் –என்னும்படியே இனிய பேச்சுக்களாலும்
வடிக்கோல வாள் நெடும் கண்களாலும் துவக்கிக் கொண்டு
திருமகட்கே தீர்ந்தவாறு -என்னும்படியே திரு உள்ளம் ஈடுபட்டு ஓடம் ஏற்றிக் கூவிக் கொள்ளும் போது ஆன அளவிலே
தன்னுடைய பூர்வ அபதாரத்தாலே நேர் கொடு நேரே உம்முடைய திரு முன்பே வர அஞ்சி உம்மை ஆஸ்ரயிக்கைக்கு
என்னைக் கால் கட்டுகிறான் ஒரு சேதனன்-கைக்கொண்டு அருளீர் -என்று தனக்கு
இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளையும் அவனைக் கேட்ப்பித்து
அவன் இவளுக்கு நியாய நிஷ்டூரமாகக் கண்ணழிவு சொல்லும் பூர்வ அபராத ரூப கர்மங்களுக்கும்
நீர் உம்முடைய ஆஸ்ரயணத்தில் அபிமுகரானவர்கள் விஷயத்தில் குற்றம் பார்த்தல் -சிறுமை பார்த்து உபேக்ஷித்தல் –
காட்டித் தருகிற என்னைப் பாராது ஒழிதல் செய்தீராகில் உம்முடைய வாத்சல்ய சீலாதிகள் உமக்கு இல்லையாய்–
பிரணயித்வத்துக்கு அசலாய் -உமக்கு தாத் வர்த்த சித்தியும் இன்றிக்கே -எனக்கு பிரகிருதி அர்த்த சித்தியும் இன்றியிலே –
அவர்களுக்கு பிரத்யய அர்த்த சித்தியும் இன்றியிலே
தாது ஷயத்தாலே போக ஷயம் பிறந்து
ரஷித்தும் ரஷிப்பித்தும் ரஷ்யமாயும் சித்திக்கக் கடவதான ஸ்வரூப சித்தியும் இன்றிக்கே
உமக்கும் அவர்களுக்கும் உண்டான ஒழிக்க ஒழியாத உறவுக்கும்
ஜகத் ரக்ஷண அர்த்தமாகப் பண்ணின ஸ்ருஷ்ட்டி அவதாராதிகளுக்கும் பிரயோஜனம் இன்றிக்கே
உம்முடைய ஞான சக்தி பூர்த்தி பிராப்திகளை ரக்ஷண உப யுக்தமாக்குகிற கிருபையும் இன்றியிலே
அவை குற்றம் அறிகைக்கும் தண்டிக்கைக்கும்-இவன் இடம் பச்சை வாங்காமைக்கும் -இட்ட பச்சை பார்த்து -தவிராமைக்கும் –
நிவாரகர் இல்லாமைக்கும் உறுப்பாய்-காதுகராய் விடுவீர் காணும்
கடலுக்குத் தொடுத்த அம்பை காட்டிலே விட்டால் போலே நீர் சொன்ன உம்முடைய கர்ம பாரதந்தர்யத்தால் வந்த காலுஷ்யத்தை –
உம்முடைய பக்கல் விமுகராய் -சம்சார பாந்தராய் -அந்நிய பரராய்த் திரிகிறவர் பக்கலிலே நடத்திக் கொள்வீர்
அவித்யையாலும் ஜென்ம மரணங்களாலும் காம க்ரோதாதிகளாலும் அபிபூதராய்க் கிடக்கிற இருள் தரும் மா ஞாலத்துக்கு உள்ளே
குற்றம் காண்கை மூர்க்கக் க்ருத்யம் காணும்
இவர்களுடைய பூர்வ அபராதங்களைப் பொறுத்துக் கைக்கொண்டு அருளீர் என்று
சரணாகதியில் அவிரதிரூப அத்யவசாயத்தை அபேக்ஷித்தவருக்கு -தயா சரணாகத்யா சர்வம் சம்பத்ஸ்யதே -என்று
சரணாகதி தன்னாலே உமக்கு எல்லாம் உண்டாகக் கடவது என்று
அஸ்து தே-என்றால் போலே அவன் குணவத்தை தன்னாலே அவன் இவனைக் கைக்கொள்ளும்படி
தோஷ தர்சனத்தால் அமுங்கிக் கிடந்த வாத்சல்யாதி குணங்களை பிரகாசிப்பித்து
ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் -என்று பொற்பாவையான தான் விளக்குப் பொன் போலே
இவனை அவன் அங்கீ கரிக்கும் படி பண்ணி
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பே
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை
நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை அமரர் முழு முதல் -என்னுடைய நன்னெஞ்சம் தன்னை
யகல்விக்கத் தானும் கில்லான்-என்னும்படி
ஏக ரசனாக்கி சர்வ சக்தியாலும் இவள் தன்னாலும் விடுவிக்க ஒண்ணாதபடியான அவ்வளவில் –
அவன் நிழலிலே ஒதுங்கி நின்று
நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே
அடியேன் செய்யும் விண்ணப்பம் –மெய் நின்று கேட்டு அருளாய்
போற்றும் பொருள் கேளாய் -மற்றை நம் காமங்கள் மாற்று -என்று
இவன் பண்ணுகிற சரண வர்ண யுக்தி முதலாக கைங்கர்ய பிரார்த்தனா பர்யந்தமாக
இவன் விண்ணப்பம் செய்யும் இவ்வார்த்தைகளைக் கேட்ப்பியா நிற்கும்
இப்படி அல்லது அநாதி காலம் இவன் பண்ணின அக்ருத்ய கரணாதிகளை
வில்லாளன் என் நெஞ்சத்துளன்
உடன் இருந்து அறுதி -என்று சொல்லும்படி ஹ்ருதய குஹாகதனாய்க் கொண்டு
அறிந்து தண்டதரனான ஈஸ்வரன் சந்நிதியில் நின்று
க்ஷமஸ்வ -என்பது
சரணம் பிரபத்யே -என்பதனால் அது தானே அபராதமாய்ப் பரிணமிக்கும் இறே
ஆகை இறே ஸ்ரீ பாஷ்ய காரர்
தேவ தேவ திவ்ய மஹிஷீம்–என்று ஸ்ரீ பிராட்டியைச் சரணம் புக்கு
பாதார விந்த யுகளம் சரணமஹம் பிரபத்யே -என்று பின்னை ஸ்ரீ பகவத் விஷயத்திலே சரணம் புக்கு
மநோ வாக் காயை –என்று தொடங்கி -வர்த்தமானம் வர்த்திஷ்யமாணஞ்ச சர்வம் க்ஷமஸ்வ -என்று
கரண த்ரயத்தாலும் கால த்ரயத்தாலும் பண்ணும் அபராதங்களைப் பொறுக்க வேணும் என்றதும் –
ஆக ஸ்ரீ சப்தத்தால்
ஸ்ரீத்வ ப்ரயுக்தமான மென்மையாலும்
மாத்ருத்வ ப்ரயுக்தமான வாத்சல்ய அதிசயத்தாலும்
அநாதி கால ஆர்ஜிதமான அக்ருத்ய கரணத்தாலே அஞ்சின சேதனரை அங்கீ கரித்து
மஹிஷீத்வ நிபந்தமான வாத்சல்ய அதிசயத்தாலும் நிரதிசய போக்யனாய் அபரிச்சின்னனான சர்வேஸ்வரனைத்
தன் பக்கலிலே அகப்படுத்தும் படியான போக்யதா அதிசயத்தாலும் அவன் இவர்களைக் கைக்கொள்ளும்படி
பண்ணக் கடவதான ஸ்வபாவ விசேஷங்களைச் சொல்லிற்று ஆயிற்று
பிதேவத் வத் ப்ரேயான் ஜனனி பரிபூர்ணாக சிஜநேஹி தஸ் ரோதோ வ்ருத்த்யா பவதி சகதா சித் கலுஷதீ-
கிமே தந் நிர்தோஷ க இஹ ஜெகதீதித்வ முசிதை ரூபாயைர் விஸ்மார்ய ஸ்வ ஜனயஸீமா தாத தசிந -என்று
சாபராத சேதனர் விஷயத்தில் பித்ருத்வ பிரயுக்தமான ஹித பரதையாலே சீறி அருளின ஸ்வ அபிமத காந்தனை
விபூதி தோஷ ப்ரதர்ஸநாதியான யுசித உபாயங்களாலே அவன் இவர்கள் அபராதத்தை மறந்து அங்கீ கரிக்கும் படி
பண்ணுகையாலே மாதாவாகா நின்றீர் என்று இவ்வர்த்தத்தை ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் –
ஆக இந்த வ்யுத்பத்தி த்வயத்தாலும் –
த்ரிவித ஆத்ம வர்க்கத்தாலும்-தம் தாமுடைய ஸ்வரூபாதிகளுடைய ஸித்த்யர்த்தமாக ஆஸ்ரயணீயையாய் இருக்கும் என்றும்
தன்னுடைய ஸ்வரூப ஸித்த்யர்த்தமாக ஈஸ்வரனை ஆஸ்ரயித்து இருக்கும் என்றும் சொல்லுகையாலே
அவனைக் குறித்து பரதந்தரையாய் இருக்கும் என்னும் இடமும்
த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் பூஜ்யையாய் இருக்கும் என்னும் இடமும் சொல்லிற்று ஆயிற்று –
இப்படி சர்வ பிரகார சேஷ பூதையாய் இருக்கையாலே இவனிலும் இவளுக்கு ஆதிக்யம் போல் தோற்றின பிரமாணம் உண்டாகில்
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்று இவள் பக்கலிலே அவன் துவக்குண்டு
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக
கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே படர்ந்தான் -என்னும்படி மேல் வருவதும் அறியாதே
க்ருதய அக்ருத்ய விவேகம் அற கார்யம் செய்யும் படியாய் தேச கால வஸ்துக்களால் அபரிச்சேதயமான அவன் ஸ்வரூபத்தை
அளவிடிலும் அளவிட ஒண்ணாத போக்யதாசியத்தாலே அவனுக்கு உண்டான பிரணயித்வ பாரதந்தர்யமாம் அத்தனை –
ஆனால் பரதந்த்ர வஸ்துவுக்கு சம பிரதான க்ருத்யமான புருஷகாரத்வம் விருத்தம் அன்றோ என்னில்-
ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் தன்னுடைய நிருபாதிக ஸுஹார்த்தத்தாலே அதுவேஷாதி ஸமஸ்த ஆத்ம குணங்களையும்
ஆச்சார்ய சமாஸ்ரயணத்தையும் உண்டாக்கி -தத் த்வாரா ப்ராப்ய வைலக்ஷண்ய ஞானத்தையும் பிறப்பித்து –
சம்சார தோஷத்தையும் பிரகாசிப்பித்து -புருஷகார பூர்வகமாக ஆஸ்ரயிக்க வேணும் என்கிற சங்கல்ப அனுரூபமாக
ஆஸ்ரயிப்பிக்கிறான் ஆகையால் அவனுடைய ஹ்ருதய அநு கமனம் பண்ணிப் புருஷீ கரிப்பித்து
சேஷியான ஈஸ்வரனுக்கு சேஷ பிரதானம் பண்ணி -அவன் இவர்களையும் ரஷித்துத் தானும் உளனாம் படி பண்ணி
அவன் ஸ்வரூப ரூப குணாதிகளுக்கு அதிசயம் உண்டாக்குகிறான் ஆகையால்
சேஷத்வ பாரதந்தர்யங்களுடைய கார்யம் அத்தனை அல்லது விருத்தம் அன்று –
ஆனால் அந்நிய அதீனாதிசயம் ஸ்வ தந்த்ர வஸ்துவுக்கு அநு ரூபம் அன்றே என்னில்
ஸ்வரூப அந்தர் கதையாய்க் கொண்டே இவளுடைய வஸ்துத்வம் ஆகையால் அந்யத்வம் இல்லாமையால்
ஸ்வ அதீன விபவமே யாகக் கடவது -ஆகையால் அநு ரூபமாய் இருக்கும்
ஸ்வதஸ் ஸ்ரீஸ்த்வம விஷ்ணோஸ் ஸ்வ மஸீ தத ஏவைஷ பகவா நத்வதா யத்தர்த்தித் வேப்யபவத பராதீன விபவ
ஸ்வயா தீப்த்யர்த்தம் பவதபி மஹார்க்கம் நவி குணம் ந குண்ட் ஸ்வா தந்தர்யம் பவதிச ந சாந்யா ஹித குணம் –என்றும்
ப்ரஸூநம் புஷ்யந்தீ மபி பரிமளர்த்திதம் ஜிகதிஷந் நசை வந்த்வா தேவம் ஸ்வ தத இத கஸ்சித் தவயதே -என்று
ஸ்வ கதையான தீப்தி யாலே மஹார்க்கமான ரத்னங்களுக்கும் ஸ்வ கத பரிமளத்தாலே ஆதரணீயமான புஷ்பத்துக்கும்
பராதீ நாதி சயத்வ நிபந்தனமான வைகுண்யம் இல்லாதாப் போலே பகவத் ஸ்வம்மாய்க் கொண்டே
ஸ்ரீ யாய் இருப்புதி யாகையாலே ஷாட் குண்ய பரிபூர்ணனான சர்வேஸ்வரனுக்கு உன்னால் வருகிற அதிசயம் பராதீனம் அன்று
என்று இவ்வர்த்த விசேஷங்களை ஸ்ரீ பட்டரும் அருளிச் செய்தார்
ரக்ஷண உன்முகனான ஈஸ்வரனுடைய ஹ்ருதய அனுதாபவனம் மாத்ரமாகில் இவளுக்கு உள்ளது –
அது புருஷகாரமாமோ என்னில்
ரஷ்ய பூதனான சேதனனுடைய ஸ்வ அபராத நிபந்தனமான பயம் நிவ்ருத்தமாம் போது இவளை ஆஸ்ரயிக்க வேண்டுகையாலும்
இவள் அபராதங்களைப் பொறுப்பித்துச் சேர விட நாம் கைக்கொள்ளக் கடவோம் என்கிற
ஈஸ்வர சங்கல்பத்தாலும் புருஷகாரமாகக் குறை இல்லை
அனந்தரம் -பிரத்யய ரூபமான மதிப்பு-நித்ய யோக மதிப்பு -என்கையாலே ஸ்ரயதே -என்கிற
வர்த்தமான ஸித்தமான நித்ய யோகத்தைச் சொல்லுகிறது -அதாவது
ஸ்ரீ யபதிர் நிகில ஹேயபிரத்ய நீக -என்கிறபடியே அகில ஹேயபிரத்ய நீக கல்யாணைகதாநமாய் –
உணர் முழு நலமான -திவ்யாத்ம ஸ்வரூபத்தை ஸ்ரீ யபதி -என்று விசேஷிக்கையாலும்
ந ச சீதா த்வயா ஹீநா -என்று இவள் பிரகிருதி அறிந்தவர்கள் உம்மைப் பிரிந்தால் இவள் க்ஷண காலமும் சத்தையோடு இராள்-
என்று சொல்லும்படி விஸ்லேஷிக்க சத்தை இன்றிக்கே இருக்கையாலும்
அநந்யா ராகவேணாகம் பாஸ்கரேண ப்ரபாயதா
அநன்யாஹி மயா சீதா பாஸ்கரேண ப்ரபாயதா -என்று
சத்தையும் சஞ்சாரமும் பிரகாச பிரகாசங்களும் ஆஸ்ரயமான ஆதித்யனை ஒழிய இன்றிக்கே இருக்கக் கடவதான ஆதபம் போலே –
எனக்கும் அவ்வோ ஆகாரங்களும் ஆஸ்ரயமான பெருமாளை ஒழிய என்று தாமும் சொல்லி
ஆஸ்ரயமானவர் தாமும் சொல்லுகையாலே நித்ய அநபாயி நியாய்க் கொண்டு பிரியில் சத்தை இன்றிக்கே இருக்கையாலும்
ஸ்வரூபத்துக்கு நிரூபக பூதையாய்
ஸ்ரீ வத்ச வஷா
ஸ்ரீ வத்ச வஷா சம்ஜாதம்
யயவ் வக்ஷஸ்தலம் ஹரே
திரு மார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார்
அலர்மேல் மங்கை உறை மார்பா –என்கிறபடியே லப்த சா ரூப்யரான நித்ய முக்த விக்ரஹங்களில் காட்டில்
பகவத் விக்ரஹத்துக்கு வ்யாவர்த்தக விசேஷணமாய்க் கொண்டு அவன் மார்பு விடாதவளாய்
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ யா சார்த்தம் ஜகத் பதி-ஆஸ்தே விஷ்ணோர் அசிந்த்யாத்ம பக்தைர் பாகவதைஸ் சஹ –
வ்யூஹேஷு சைவ சர்வேஷு விபவேஷு ச ஸர்வஸ –ததா வ்யூஹீ பவத்யேஷா மம சைவ அநபாயிநீ –
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ -விஷ்ணோர் தேஹ அநு ரூபாம் வைகரோத் யேஷாத்ம நஸ் தநூம்–இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே -பர வ்யூஹாதி விக்ரஹங்கள் தோறும் அநு ரூப விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி
வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்படிக் கோலம் கண்டு அகலாள் பன்னாள் -என்கிறபடியே
அருகு விட்டு அகலாதவளாய்-இப்படி சர்வ காலமும் அவன் ஸ்வரூபாதிகளோடு நித்ய சம்ஸ்லிஷ்டையாய் இருக்கை
ஆக இப்படிப் புருஷகார பூதையான இவள்
திரு மார்பத்து மாலை நங்கை வாசம் செய் பூங்குழலாள் -என்றும்
சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வரூப ரூபாதிகளோடு பர வ்யூஹாதிகளோடு வாசி அற அவனை விடாதே அனுபவித்துக் கொண்டு இருக்கையாலே
சஞ்சலம் ஹி மந கிருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம் -தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிய ஸூ துஷ்கரம் -என்கிறபடியே
த்ருடத கதியான வாயுவை மீட்க்கிலும் மீட்க ஒண்ணாத படி கண்ட இடம் எங்கும் பட்டி புக்குத் திரிகிற
நின்றவா நில்லா நெஞ்சில் பிறந்த ருசி குலைவதற்கு முன்பே
திருமாலை விரைந்து அடி சேர்மினே -என்கிறபடியே ஆஸ்ரயிக்கலாம் என்கிறது-
இந்த நித்ய வாசம் ஈஸ்வரனுடைய சர்வ கால ஸமாஸ்ரயணீயத்வத்தை த்யோதிப்பிக்கிறது
நநு
அனவதிக அஸங்க்யேய கல்யாண குணாகரமாய் உணர் முழு நலமாய் இருக்கிற ஸ்வரூபத்தையும்
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரியாய் இருக்கிற ரூபத்தையும்
ஸம்ஸ்லேஷித்துக் கொண்டு ஓவ்தார்ய சீலாதி குணங்களையும் இடைவிடாமல் அசங்குசிதமாக அனுபவித்துப் போருகிற
இவளுக்கு பர துக்க தர்சனமும் தந் நிவ்ருத்தி அபேக்ஷையும் அநுப பன்னம் ஆகையால்
கீழ்ச் சொன்ன புருஷகாரம் அகடிகடிதம் அன்றோ -என்னில்;
சர்வ சேஷியாய் இருக்கிற ஈஸ்வரன் தனக்கு சேஷபூதரான நித்ய முக்தரையும் சேஷித்வ அநு ரூபமாக
ஸோஸ்நுதே சேர்வான் காமான் சக ப்ரஹ்மண விபச்சிதா
லப்த ஆனந்தீ பவதி
சதா பஸ்யந்தி ஸூரயா –இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
தன் ஸ்வரூபாதிகளை அனுபவிப்பித்து அத்தாலே தான் ஆனந்தித்துக் கொண்டு போருவது -அதுக்கு மேலே
இன்புறும் இவ்விளையாட்டுடையான் -என்று லீலா விபூதியில் உள்ளாரைக் கொண்டு லீலா ரூபேண ரசிப்பதாய்ப் போரச் செய்தேயும்
ரக்ஷகத் வேன சித்த ஸ்வரூபனாகையாலே
நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும்-என்று ஜகாத் ரக்ஷணம் பண்ணிக் கொண்டு போகிறாப்போலே
இவளும் அவனுக்கு பத்நீத்வேந சேஷ பூதையுமாய் பரம ப்ராணயநீயாய் இருக்கையாலே இந்த பத்நீத்வ நிபந்தனமாக உண்டான
பிரஜைகள் பக்கல் மாத்ருத்வ ரூப பந்த கார்யமான பிரஜா சம்ரக்ஷணமும் இவள் திரு உள்ளத்திலே நடந்து போருகையாலே
அவனுடைய வைஸ்வ ரூப்ய போகம் எல்லாவற்றையும் உபோத்காத கிரீடா ரசத்துக்கு உள்ளே சிறாங்கித்துக் கொள்ளும்படியான
போக்யதா பிரகர்ஷத்தை அனுபவித்து ஆனந்தித்து உன்மஸ்தக ரசமாய் –
அந்த ரஸ அதிசயத்தால் வந்த ப்ரீதி அதிசயத்தாலே தன்னை நோக்கி சாடு வாதங்களை பண்ணுவது
இப்படி போக்ய பூதையாய் இருக்கிற இவளுக்கு எத்தைச் செய்வோம் என்று கண் கலங்குவதாகப் புக்கவாறே
அத்தசையிலே அவனுடைய நீச பாஷணங்களும்-அவனுடைய ரசனைகளும் இவளுக்கு அதிசயார்த்தமாகத்
தோற்றமோபாதி அந்த ப்ரத்யுபகார சாபேக்ஷதா நிபந்தனமாகக் கண் கலக்கமும் தோற்றுகையாலே-
தன் பக்கலிலே ஏதேனும் ஒரு உபகாரம் கொள்ளாத போது அவன் நினைவை பின் செல்லுகை யாகிற
நம்முடைய பாரதந்தர்யமும் இழந்து ஆஸ்ரயமும் இழக்கும் படி வருமாகையாலே
நமக்கு ஆஸ்ரயமும் அற்று போகமும் இழக்கும் படி வரும் என்று பார்த்து –
நீர் கொடுத்த அத்வேஷாதிகளால் உண்டான வாசார்ய ப்ராப்தியாலே லப்த சம்யக் ஞானராகையாலே
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களை யுடையராய் சம்சாரத்திலும் பொருத்தம் அற்று பூர்வ அபராத தர்சனத்தாலே
அதடியான சீற்றத்தை யுடையராய் இருக்கிற யும்முடைய பக்கல் வர அஞ்சி உம்மைக் கிட்டுகைக்கு என்னை ஆஸ்ரயித்து நிற்கிற
சேதனரை அவர்களுடைய பூர்வ அபராதங்களைப் பொறுத்துக் கைக்கொண்டு அருளீர் என்று
அவன் பிரயோஜனமே தனக்கு பிரயோஜனம் ஆகையால் அவனுடைய ஸ்ருஷ்ட்டி அவதார ரூபமான கிருஷியின் பலமான
சேதன அங்கீ காரத்தை அவனுக்கும் தனக்கும் உண்டான பிரணயி பிரணயிநி பாவம் தோற்ற நியமியா நிற்கும்
அவனும் விபூதி த்வயமும் ஸ்வ அதீனமாம் படி நியந்தாவாய்ப் போருகிற அதிசயத்திலும் காட்டில்
பிரணயித்தவ நிபந்தனமான நியாம்ய பாவம் தனக்கு அதிசயமாக நினைத்து இருப்பான் ஒருவன் ஆகையால்
இவளுடைய நியமனத்தை சிரஸா வஹித்துக் கொண்டு இவர்களுடைய ரக்ஷணத்தைப் பண்ணா நிற்கும் ஆகையால்
இவளுடைய ஸ்வரூபத்துக்கும் அனுரூபமாய்க் கொண்டு அத்யந்தம் உப பன்னம் என்றதாயிற்று
ஆக -மதுப்பாலே –புருஷகாரத்துக்கு உப யுக்தமான உபய சம்பந்தத்தையும் உடையளாய் இருக்கிற இவள்
செவ்விப் படிக்கோலம் கண்டு அகலாள்
திரு இருந்த மார்பில் சிரீதரன்–என்கிறபடியே
ஆஸ்ரயணீய வஸ்துவோடு நித்ய சம்ஸ்லிஷ்டையாய் இருக்கையாலே அந்த சம்ஸ்லேஷத்தில் வர்த்திக்கிற அனுபவம்
தஜ் ஜெனிதமான ஹர்ஷம்
தத் பரா காஷ்டையான ப்ரத்யுபகார சாபேஷதை
இவற்றால் வருகிற ரக்ஷணமும் நித்யம் ஆகையால் ஆஸ்ரயண உன் முகனான சேதனர்க்கு
தம் தாமுடைய ஜென்ம வ்ருத்த ஞானங்களால் உண்டான நிகர்ஷமாதல் –
அவனுடைய ஸ்வா தந்தர்ய நிபந்தனமான பீதியாதல் இன்றிக்கே
சர்வ காலமும் ஆஸ்ரயிக்கலாம் என்றிட்டு
சர்வ கால ஸமாஸ்ரயணீயத்வத்தையும்
ஆஸ்ரயணீயத்தினுடைய சர்வாதிகாரத்வத்தையும் சொல்லுகிறது –
ஆக
ஸ்ரீ மத் சப்தம் புருஷகாரத்தையும்
புருஷகாரத்தினுடைய நித்ய சம்யோகத்தையும் சொல்லிற்று ஆயிற்று –
———————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply