ஸ்ரீ பிரணவத்தாலே
பகவத் ஸ்வரூபம் என்ன
சித் ஸ்வரூபம் என்ன
தத் சம்பந்த ஸ்வரூப விசேஷம் என்ன
உபாய ஸ்வரூபம் என்ன
ப்ராப்ய ஸ்வரூபம் என்ன –இத்யாதிகளான சகல அர்த்தங்களும் சொல்லப்படுகிறது –
ஆகையால் சகல சாஸ்த்ரா ஸங்க்ரஹம் என்னும் இடம் ஸம்ப்ரதி பன்னமாகச் சொல்லிற்று ஆயிற்று
————–
அநந்தரம் உகார விவரணமான நமஸ் சப்தம்
இப்படி சேஷபூதனான ஆத்மாவினுடைய அஹங்கார மமகார நிவ்ருத்தியைப் பண்ணா நின்று கொண்டு
ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தியையும் –
தத் ஸித்தமான அந்நிய சேஷத்வ அபாவத்தையும்-
ஸ்வ கதமான ஸ்வாமித்வ சேஷித்வங்களினுடைய ராஹித்யத்தையும்
தத் பலிதமான பாரதந்தர்யத்தையும்
தத் பர்யவசான பூமியான ததீய சேஷத்வத்தையும்
பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு அனுரூபமான உபாயத்தையும் சொல்லுகிறது –
பிரதம அக்ஷரமான அகாரத்தை பிரதமம் விவரியாதே பிரதமம் உகார விவரணமான நமஸ் சப்தம் ஆகைக்கு அடி என் என்னில் –
இம்மந்திரம் தான் ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்ய ப்ரதிபாதன பரமாகையாலே உகார யுக்தமான பகவத் வ்யதிரிக்த
அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி மாத்ரத்தாலே ஸ்வரூப யாதாத்ம்ய பூர்த்தி பிறவாமையாலே
தத் பூர்த்தி ஹேதுவான ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி பண்ணுகை அநந்தரம் பிராப்தம் ஆகையால்
தத் வாசகமான நமஸ் சப்தம் முற்பட வேண்டுகையாலும்
ஸ்வரூபத்தை ததீய சேஷத்வத்தை பர்யந்தமாக அனுசந்தித்து தத் அனுரூப புருஷார்த்த சிஷை பண்ண வேண்டுகையாலே
ததீய சேஷத்வ வாசகமான நமஸ் சப்தம் புருஷார்த்த பிரார்த்தனா வாசகமான நாராயண பதத்துக்கு முன்னேயாக வேண்டுகையாலும்
இப்பதத்தில் சொல்லுகிற ஸ்வரூப உபாய வர்ணம் ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி பூர்வகமாக வேண்டுகையாலும்
பிரணவத்தில் சொல்லுகிற பிரகாரத்வ ரஷ்யத்வ சேஷத்வ தத் அநந்யார்ஹத்வ ஞானானந்த ஸ்வரூபத்வ
ஞான குணகத்வாதிகளுடைய ஸ்வார்தததை ஸ்வாதீநதை -இவற்றினுடைய நிவ்ருத்தியையும்
மேலே நாராயண பதத்தில் சொல்லுகிற புருஷார்த்த ஸ்வரூப கைங்கர்யத்தில் வருகிற
ஸ்வ கீயத்வ ஸ்வ ஸ்வாரஸ்யாதி நிவ்ருத்தியையும் பண்ணும் போதைக்கு காகாஷி நியாயத்தாலே
இது நடுவே கிடக்க வேண்டுகையாலும் பிரதமம் உகார விவரணமான நமஸ் சப்தமாகக் கடவது –
இந்த நமஸ் சப்தம் தான் ந என்றும் ம என்றும் இரண்டுபதமாய் இருக்கும் –
இதில் மகாரம் மந ஞாநே -என்கிற தாதுவிலே ஷஷ்ட்யந்த வசனமாய் -தாத்வர்த்தம் ஞாத்ருத்வம் ஆகையால்
எனக்கு என்கிற அர்த்தத்துக்கு வாசகம் ஆகிறது –
இங்கு விஷய நியமம் பண்ணாமையாலே –
சேநஸ் யயதாமம்யம் ஸ்வஸ்மிந் ஸ்வீயேச வஸ்துநி–மம இத்யஷரத் வந்த்வம் ததாமம் யஸ்ய வாசகம் –
அநாதி வாசநா ரூடமித் யாஜ்ஞா ந நிபந்தநா -ஆத்மாத்மீய பதார்த்தஸ் தாயா ஸ்வா தந்தர்யஸ் வதாமதி -என்கிறபடியே
அநாதி கால ஸஹிதமான விபரீத ஞானம் அடியாக வுண்டாமதாய் –
மமாஹம் மமேகம்-என்று கொண்டு ஸ்வ கதமாகவும் ஸ்வ கத கீயமாகவும் கிடக்கிற மமதா முகேன ஸ்வரூப விருத்தமாய்
நிவர்த்த்யமான அஹங்கார மமகாரங்களைச் சொல்லுகிறது
நிஷேத வாசியான நகாரம் அத்தை நிஷேதித்து
நாஹம் மம ஸ்வ தந்த்ரோஹம் நாஸ்மீத்யஸ் யார்த்த உசயதே-நமே தேஹாதிகம் வஸ்து ச சேஷ பரமாத்மந –
இதி புத்தயா நிவர்த்தந்தே தாஸ்தாஸ் ஸ்வீயா மநீஷிதா –அநாதி வாசநா ஜாதைர் போதைஸ் தைஸ் கைர் விகல்பிதை-
ரூஷி தம்யத் த்ருடம் சித்தம் ஸ்வா தந்தர்ய ஸ்வ தவ தீமயம் -தத் தத் வைஷ்ணவ சார் வாத்ம்ய பிரதிபோத சமுத்தயா –
நம இத்ய நயா வாசாநஞாஸ்வஸ் மாத போஹ்யதே-என்றும்
யானே நீ என்னுடைமையும் நீயே -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வ ஸ்வ கீய பகவத் சேஷத்வத்தை த்ருடீ கரியா நின்று கொண்டு ஸ்வ அஹங்கார மமகார நிவ்ருத்தியைப் பண்ணுகிறது
இதில் அஹங்கார நிவ்ருத்தியால் ஸ்வ சேஷத்வ அபாவம் சொல்லிற்று –
மமகார நிவ்ருத்தியாலே ஸ்வாமித்வ சேஷித்வங்களினுடைய ராஹித்யமும்
ஸ்வ கீய வியாபாராதிகளுடைய ஸ்வ அதீனதா நிவ்ருத்தியும் பலிக்கையாலே–
இத்தாலே ஸ்வ ஆராதத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களினுடைய நிவ்ருத்தி சொல்லிற்று –
ஆக நமஸ் ச பதத்தாலே
தவ்யக்ஷரஸ் து பவேந் ம்ருத்யு
மமேதி த்வ யக்ஷரோ ம்ருத்யு
யானே என் தனதே என்று இருந்தேன் -என்றும் ஆத்மாவுக்கு நாசகமான அஹங்கார மமகாரங்களை நிவர்த்திப்பித்து
த்ரயக்ஷரம் ப்ரஹ்மண பதம்
நமமே திசை சாஸ்வதம்
அஹம் அபி ந மம பகவத ஏவாஹம் அஸ்மி
யா காஸ்சந க்ருதயோ மம பவந்தி தாஸூம மதா நாஸ்தி பகவத ஏவதா-என்று
ஆத்ம உஜ்ஜீவனமாய் இருக்கிற சேஷத்வ பாரதந்தர்யங்களைச் சொல்லுகிறது
ஆத்ம ஸ்வரூபம் சேஷமாய் ஞாதாவாய் இருக்கையாலே பிரதமம் சேஷத்வ வாசியான பதம் உதித்தால் போலே
அஹங்காராதிகள் நிஷேத்யமாய் இருக்கையாலே இங்கும் நிஷேத்யத்துக்கு முன்னே நிஷேதம் முற்படுகிறது
கீழே அநந்யார்ஹ சேஷத்வம் சொன்ன போதே ஸ்வ ஸ்வா தந்தர்யம் நிவ்ருத்தம் அன்றோ என்னில்
பார்யைக்கு பர்த்தரு சிசுரூஷணம் ஸ்வரூபமாய் -அது அவனுக்குப் போக்யமாய் இருக்கச் செய்தேயும்
போக ரசத்தில் தனக்கும் அன்வயம் உண்டாய்
பதிம் யா நாதி சரதி மநோ வாக் காய கர்மபி சா பர்த்த்ருலோகா நாப்நோதி சதபிஸ் சாத்வீதி சோஸ்யதே -என்று
அந்த சிசுருஷணம் தான் பர்த்த்ரு லோக பிராப்திக்கு ஸாதனமாய் இருக்கையாலே
சேஷ பூதையானவளுக்கு ஸ்வா தந்தர்யம் அநுவிருத்தமாயிற்று
உபாசகனுக்கு பகவச் சேஷத்வ ஞானம் பிறந்து -கைங்கர்ய ருசியும் நடந்து போரா நிற்கச் செய்தேயும்
ப்ராப்ய பிராப்தி சாதனம் ஸ்வ பிரவ்ருத்தி ரூப கர்மாதிகளாகையாலே
பகவச் சேஷமான ஸ்வரூபத்துக்கு ஸ்வா தந்தர்யம் அநுவிருத்தமாய்ப் போந்தது
அங்கன் இன்றியிலே ஸ்வரூப புருஷார்த்தங்கள் ஸ்வ கதம் அல்லாதவோபாதி
ஸ்வ ரக்ஷணார்த்த வியாபாரமும் ஸ்வ கதமல்ல என்றதாயிற்று –
அது ஸ்வரூபம் பரகதம் -விரோதி பரகதம் -புருஷார்த்தம் பரகதம் என்கிற பிரதிபத்தி ஸ்வ கதம் -அதுவும் பராதீனம் -என்கிற
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை வார்த்தை இவ்விடத்தில் அனுசந்தேயம்
அதவா
சேஷமான வஸ்து ஞாதாவாய் இருக்கும் என்று மகாரத்தாலே சொல்லுகையாலே
அந்த ஞானத்தாலே ஹித அஹித விஷயீகாரம் உண்டாய் -அத்தாலே ஹித ரூப கிரியை பண்ணிக் கொண்டு
நமஸ் சப்தம் அது அடியாக வருகிற ஸ்வா தந்தர்யத்தை நிஷேதிக்கிறது என்னவுமாம்
ஆகையால் அங்கு பகவத் சேஷத்வ விரோதியான ஸ்வா தந்தர்யத்தினுடைய நிவ்ருத்தி சொல்லிற்று
இங்கு அந்த சேஷத்வத்தினுடைய ஸ்வ அதீன நிவ்ருத்தியையும்
சேஷிபூத பகவத் ரக்ஷகத்வ விரோதியான ஸ்வா தந்தர்யத்தினுடைய நிவ்ருத்தியையும் பண்ணுகிறது –
சேஷபூதனான சேதனன் ஸ்வ ரக்ஷணத்தினின்றும் நிவ்ருத்தமானால்
சேஷியான ஈஸ்வரன் ரக்ஷகனாய் அறுமாகையாலே ஈஸ்வரனுடைய உபாய பாவம் அர்த்தமாகாது தோற்றுகிறது
ஆக இப்படி சேதன ஸ்வரூபம் -பகவத் ஏக சேஷமுமாய் -பகவத் ஏக ரஷ்யமுமாய் இருக்கையாலே
பகவத் கதமான குணங்களோபாதி ப்ராப்யத்வ பிரதிபத்தி பண்ணலாய் இருக்கிறது –
அவன் குணங்களோபாதி அவன் அபிமானத்திலே கிடக்கையாலே என்றபடி
இவ்வர்த்தத்தை -அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கல்பித்துத் தொழுது வைத்தேன் -என்று ஸ்ரீ நாய்ச்சியாரும் அருளிச் செய்தார்
இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்தம் சத்தா நித்யம் பிரியாஸ் தவது கேசந தேஹி நித்யா -நித்யம் த்வத் ஏக பரதந்த்ர
நிஜ ஸ்வரூபா பாவத்க மங்கள குணாஹி நிதர்சனம் – என்று பகவத் ப்ரீத்தி விஷய பூதராய்க் கொண்டு தத் அபிமான
அந்தர்ப் பூதரானவர்கள் அவன் குணங்களோபாதி ப்ராப்யபூதர் என்னும் அர்த்தத்தை ஸ்ரீ ஆழ்வானும் அருளிச் செய்தார்
குணங்களோபாதி பரதந்த்ரங்களாகச் சொல்லுகையாலே அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹர் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று
இஷ்ட விநியோக அர்ஹத்வமாவது -அவன் கொடுத்ததற்கு ஸ்வம்மாம் படி இருக்கை இறே –
அப்போது இறே பாரதந்தர்யம் ஸித்திக்கும்-ஆகையால்
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும்
யா ப்ரீதிர் பஹுமானஞ்ச மய்ய யோக்யா நிவாஸிநாம் -மத ப்ரீயார்த்தம் விசேஷேண பாதேசா நிவேதயதாம் -என்றும்
சொல்லுகிறபடியே சேஷிபூத பகவத் ப்ரேரிதமாய் சேஷபூத சேதன பாரதந்தர்ய பூர்த்தி ஹேதுவாய் இருக்கிற
ததீய சேஷத்வம் இப்பதத்தில் சொல்லிற்று ஆயிற்று –
பகவத் சேஷத்வ பூர்த்தி ததீயா சேஷத்வத்தாலே யாகில் அது கீழ்ச் சொன்ன
பகவத் அநந்யார்ஹ சேஷத்வத்தோடு விருத்தமாகாதோ என்னில்
இந்த ததீய சேஷத்வம் சேஷியான ஈஸ்வரனுடைய நியோக நிபந்தமாய்க் கொண்டு சேஷத்வ காரியமாய் வருகிறது ஆகையால்
பதிவ்ரதையானவள் பர்த்த்ரு நியோகத்தால் தத் பந்து சிசுருஷணம் பண்ணினால் பர்த்த்ரு பிரியகரமாய்க் கொண்டு
பாதிவ்ரத அபிவிருத்தியாமாப் போலே
அநந்யார்ஹ சேஷத்வ அபி விருத்தி ஹேதுவாமது ஒழிய தத் விருத்தமாகாது –
ஆனாலும் உத்தம புருஷஸ் த்வநய-என்கிற நியாத்தாலும்
மனன் உணர்வு அவை இலன் பொறி உணர்வு அவை இலன்
இல்லதும் உள்ளதும் அவன் உரு -என்கிறபடி சேதன அசேதன விஸஜாதீயன் ஆகையாலும்
ததீயரே யாகிலும் அந்யத்வம் வாராதோ என்னில்
அநந்யாஸ் சிந்தயந்த -என்கிறபடியே இவர்கள் தான் அவனுக்கு அப்ருதக் சித்த விசேஷண ஞானவான்களாய்க் கொண்டு
அந்யன் அன்றிக்கே இருக்கையாலும்
ஞானீத்வாத்மைவ -என்றும் -பத்தராவியை என்றும் ததீய சேஷத்வ பர்யந்தமான தச் சேஷத்வ ஞானம் உடையவர்கள்
சர்வாத்ம பூதனான தனக்கும் ஆத்ம பூதராகச் சொல்லுகிற ஸ்ரீ கிருஷ்ண அபிப்பிராயத்தாலே
ஆத்ம சரீரங்களுக்கு அந்யத்வம் வாராது
இந்த ததீய சேஷத்வம்
ஸ்வேச்சயைவபரே சஸ்யதா ததீன்ய பலாத்துந-பகவத் பக்த சேஷத்வம் ஸ்வேச்சயாபிக்வசித் பவேத் -என்கிறபடியே
சேஷ பூதனான தன்னுடைய அதீனமானது அல்லாதாப் போலே -சேஷ பூத பிரதிசம்பந்தி நியோக அதீனமாக அன்றிக்கே
இதி ஸ்வோக்தி நயாதேவ ஸ்வ பக்த விஷயே பிரபு-ஆத்மாத்மீயஸ்ய சர்வஸ்ய சங்கல்பயதி சேஷதாம் –
அந்யோந்ய சேஷ பாவோபி பர ஸ்வா தந்தர்ய சம்பவ -தத் தத் ஆகார பேதேந யுக்த இத் யுப பாதிதம்-என்கிறபடியே
சேஷியான ஈஸ்வரனுக்கு ப்ரீதி விஷய பூதரானவர்களைப் பற்ற தத் ப்ரேரிதமாய்க் கொண்டு வந்தது ஆகையால்
இஷ்ட விநியோக அர்ஹதா லக்ஷணமான அநந்யார்ஹ சேஷத்வ கார்யம் அத்தனை ஒழிய அத்தோடு விருத்தம் அன்று
ஸ்வ ப்ரிய விஷய பூதரைப் பற்ற சேஷ பூத சேதனரை சேஷமாக்கி அது அடியாகத் தான் ப்ரியதமனாய் இருக்கும் என்கையாலே
தத் ப்ரீதியே புருஷார்த்தமாய் இருக்கும்
அவர்களுக்கு அந்த ப்ரீதி ஓவ் பாதிகமாக மாட்டாது -அது தானே பிரயோஜனமாம் அத்தனை ஆகையால்
ததீய சேஷத்வம் நிருபாதிகமாகக் கடவது
அங்கன் அன்றியிலே பகவச் சேஷத்வம் போலே ஸ்வத வருகை அன்றிக்கே பகவத் ப்ரேரிதமாய்க் கொண்டு
வருகையால் ஓவ்பாதிகம் என்னவுமாம்
பிரதிசம்பந்தி விஷயங்களினுடைய புத்த்ய அதீனமாக ஏக காலீனமாக ஏக ஆஸ்ரயஸ்தமாய் வருகிற சேஷ சேஷி பாவம்
ஆஸ்ரய பேதேந யுண்டாகிறது ஆகையால் அன்யோன்ய ஆஸ்ரய தோஷம் இல்லாமையால்
இந்த ததீய சேஷத்வம் உப பன்னம் என்றதாயிற்று
ஆக இந்த நமஸ் ஸப்தத்தாலே
அஹங்கார மமகார நிவ்ருத்தியும்
நிவ்ருத்தமான ஸ்வரூபத்தினுடைய அத்யந்த பாரதந்தர்யமும்
பாரதந்தர்ய காஷ்டையான ததீய சேஷத்வமும்
பாரதந்தர்ய அனுரூபமான உபாயமும் ஆகிற நாலு அர்த்தமும் சொல்லிற்று
ஆனாலும் இது அநந்ய சரணத்வ பிரதானமாய் இருக்கும் -எங்கனே என்னில்
கீழே ஆர்த்தமாக உபாய பாவம் சொல்லா நிற்கச் செய்தேயும் அவ்வளவில் பர்யவசியாதே
யஸ் ச தேவோ மயா த்ருஷ்டா புரா பத்மா யதேஷண -ச ஏஷ ப்ருது தீர்க்காக்ஷஸ் சம்பந்தீ தே ஜனார்த்தன –
ஸர்வேஷா மேவ லோகா நாம் அபி தாமாதா ச மாதவ -கச்ச த்வமே நம சரணம் சரண்யம் புருஷர்ஷபா -என்று
சர்வ லோகங்களுக்கும் ப்ரிய ஹிதங்களை நடத்திக் கொண்டு போருவான் ஒருவன் ஆகையால் எல்லாருக்கும் மாதாவுமாய் பிதாவுமாய்
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன்-என்கிறபடியே
அந்த பிரிய ஹிதை பரதைகள் எல்லாம் தோன்றும்படி பத்மாய தேஷணனாய் இருப்பான் யாவன் ஒருவன் –
அவன் ஒரு தேவன் என்னால் முன்னாள் காணப்பட்டான் -அந்த ஜனார்த்தனன் ப்ருதுதீர்க்காஷனாய்க் கொண்டு
உங்களுக்கு சம்பந்தியாய் இருக்கிறான் -அவனைச் சரணம் புகுருங்கோள் என்று உபதேசிக்க
அனுஷ்டான வேளையில் -ஏவ முக்தாஸ் த்ரய பார்த்தாயமவ் ச பரதர்ஷப-திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ்சக்ருர் ஜனார்த்தனம் -என்று
இப்படி சொல்லப்பட்ட பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியோடே கூடிக் கொண்டு நமஸ்ஸைப் பண்ணினார்கள் என்கிற
ஸ்தான பிரமாணத்தாலும் உபாய வாசமாகச் சொல்லுகையாலும்
பநதா நகா உத்திஷ்டோ ம ப்ரதா உதீர்யதே-விஸர்க்க பரமே சஸ்து தத ரார்த்தோயம் நிரூப்யதே-அநாதி பரமே
சோயஸ் சக்தி மாநசயுத பிரபு -தத் ப்ராப்தயே பிரதாநோயம் பந்தா ந மந நாமவாந் -என்று
பகவத் பிராப்திக்கு கர்ம ஞானாதிகளில் காட்டில் பிரதான உபாயமாக பகவத் விஷயத்தைச் சொல்லுகிறது
நமஸ் சப்தம் என்று நிர்வகிக்கையாலும்
இவ்வுபாய அங்கமான ஸ்வ பிரவ்ருத்தி தியாகத்தை ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி முகேன
இந்த நமஸ் ஸப்தத்திலே சொல்லுகையாலும் இந்த நமஸ் சப்தம் அநந்ய சரணத்வ பிரதானமாகக் கடவது
ஆக நமஸ் சப்தத்தால்
ஸ்வரூப விருத்தமான அஹங்கார மமகாரங்களினுடைய நிவ்ருத்தியும்
நிவ்ருத்தமான ஸ்வரூபத்தினுடைய அத்யந்த பாரதந்தர்யமும்
இந்த பாரதந்தர்ய காஷ்டையான ததீய சேஷத்வமும்
பரதந்த்ரனுக்கு அனுரூபமான உபாயமும் சொல்லிற்று ஆயிற்று
ஆக பிரணவத்தால் ஸ்வரூபம் சொல்லி
நமஸ் சப்தத்தால் ஸ்வரூப அனுரூபமான உபாயம் சொல்லிற்று ஆயிற்று
———————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply