அஸ்மத் குரும் நமஸ் க்ருத்ய வஷ்யே ஸும்யவரேஸ்வரம்
ரஹஸ்ய த்ரய சாரார்த்தம் யதா மதி யதா ஸ்ருதம் –
ஸ்ரீ திரு மந்த்ரார்த்த விவரணம்
ஸ்வத்வம் ஆத்மநி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்
ஞான ஆனந்த மயஸ்த்வ ஆத்மா சேஷோஹி பரமாத்மாநி
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே
தாஸோஹம் வாஸூதேவஸ்ய
யஸ்யாஸ்மி
பரவாநஸ்மி
குல தொல் அடியேன்
தொல் அடிமை வழி வரும் தொண்டர்
அடியேன் நான் –இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஸ்வதஸ் சித்தமாக ஸ்ரீ பகவத் அநந்யார்ஹ சேஷ பூதராய்
நித்ய நிர்மல ஞான அனந்த ஸ்வரூபராய் நிரதிசய ஆனந்த அனுபவ யோக்யராய் இருக்கிற ஆத்மாக்கள்
அநாதி மாயயா ஸூப்த-
மூதாவியில் தடுமாறும் உயிர் -இத்யாதிப்படியே
அநாதி அசித் ஸம்பந்தத்தாலே அபிபூதராய்-அத்தாலே-திரோஹித ஸ்வ ப்ரகாசராய் –
ஸ்வ ஸ்வரூபம் என்ன -தத் பிரதி சம்பந்தியான பர ஸ்வரூபம் என்ன – தத் அனுரூபமான பல ஸ்வரூபம் என்ன –
உபாய அனுரூபமான உபாய ஸ்வரூபம் என்ன -இவற்றில் ஒரு ஞானமும் இன்றிக்கே–
இந்த ஞான அனுகுணமான சாத்விகதாஸ்திக்யாதிகளான ஆத்ம குணங்களாலும் விஹீநராய்
ஸ்வதஸ் ஸித்த ஸ்வத்வ பாரதந்த்ரங்களை அழிய மாறி
ஸ்ரீ சர்வேஸ்வரனுடையதான ஸ்வாமித்வ ஸ்வா தந்தர்யங்களை ஆரோபித்திக் கொண்டு
அஹம் புத்தி விஷயமாய்-ஞான ஆனந்த மயமான ஸ்வரூபத்துக்கு அத்யந்த தூரஸ்தமாய் -இதம் புத்தி விஷயமாய் –
மாம்ஸாஸ்ருகாதி மயமான தேகத்தை தானாக நினைத்து -அந்த தேகம் அடியாக உத்பன்னரான புத்ர மித்ராதி விஷயாசக்தமநாக்களாய்-
தத் தத் கிலேச விஷயமான நிரர்த்தக சிந்தனத்தாலே பரிதப்த ஹ்ருதராய் ஸ்வ ஹித விசார விமுகராய்
அப்ரதிக்ரியமான ஆதி வ்யாதிகளாலும் இஷ்ட அநிஷ்ட வியோக சம்யோகங்களாலும்-ஸ்வ இஷ்ட விகாசதங்களாலும் நிர்விண்ண ஹ்ருதராய் –
அல்பமாய் அஸ்திரமாய் அநேக துக்க மிஸ்ரமாய் அநர்த்தோதர்க்கமாய்-அப்ராப்தமாய்-அபவர்க்க விரோதியாய் இருக்கிற
சம்சார ஸூகத்திலே சங்கத்தைப் பண்ணி அதினுடைய அலாபத்தாலும்-அநாதி வாசனா தார்ட்டயாத்தாலே விடுகைக்கு அசக்தராய் –
இப்படி அனந்த துக்க பாஜனமாய் அநாதி பாப வாசனா மஹார்ணவ கார்யமான சம்சார ஆர்ணவத்திலே மக்நராய் –
அநாதி அவித்யா சஞ்ஜிதமாய்-அவிட்க்க அரிதான கர்ம பாசத்தாலே ப்ரக்ரிகதரராய் அனாகத அனந்த காலம் கூடினாலும்
அத்ருஷ்ட சந்தாரோபராய் அதோபூதராய்க் கொண்டு பிரமியா நிற்பர்கள் –
அனந்தரம் –
யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
சர்வ காரண அகாரேண
நான்முகனை மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று முதல் படைத்தாய்
முதல் தனி வித்தேயோ
வேர் முதல் வித்தாய்
உலகம் படைத்தவன்
உலகுக்கோர் தனி அப்பன் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே சர்வ காரண பூதனாய்
யேந ஜாதாநி ஜீவந்தி
யோவை வேதாம்ஸ் ச ப்ரஹினோதி தஸ்மை
நஹி பாலந சாமர்த்தியம்ருதே ஸர்வேச்வரம் ஹரிம்
ந சம்பதாம் சமா ஹாரே விபதாம் விநிவர்த்தநே-சமர்த்தோத் ருஸ்ய தேகஸ் சிததம் விநா புருஷோத்தமம்
மூவுலகை ஒருங்காக அளிப்பாய்
வென்றி மூவுலகை அளித்து உழல்வான்
எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன் –இத்யாதிகளில் சொல்லுகிறபடியே சர்வ ரக்ஷகனாய்
பதிம் விஸ்வஸ்யாத்மேஸ்வரம்
பிரதான ஷேத்ரஞ்ஞ பதிர் குணேச
அசேஷ சித் அசித் வஸ்து சேஷிணே
அகில ஜகத் ஸ்வாமின் அஸ்மத் ஸ்வாமின் ஸ்ரீ மன் நாராயண
தாஸோஹம் கமலா நாத
திருவுடை யடிகள்
மலர்மகள் விரும்பும் நம் யரும் பெறல் அடிகள் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஸ்ரீ யபதியாய் -சர்வ சேஷியாய்
தம்ஹிதேவ மாத்ம புத்தி பிரசாதம் முமுஷுர்வை சரணம் அஹம் பிரபத்யே
ந்யாஸ இதி ப்ரஹ்ம
ந்யாஸ இதயாஹுர் மநிஷினோ ப்ரஹ்மாணம்
சரண்யம் சரணம் யாதா
சர்வலோக சரண்யாய
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம்
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அகில ஜகத் உபாய பூதனாய்
யஸ்மின் விஸ்வா புவனாநிதஸ்து
யஸ்யா யுதரயுதாம்சாம்ஸே விஸ்வ சக்திர் இயம் ஸ்திதா
அகில ஆதார பரமாத்மா
நிகில ஜெகதாதார
மயி சர்வம் இதம் ப்ரோக்தம் –இத்யாதிப்படியே அகில ஜகத்துக்கும் ஆதாரபூதனாய்
தத் சர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்தித
ஆத்மாஹி விஷ்ணுஸ் சகலஸ்ய ஐந்தோ
தேநேதம் பூர்ணம் புருஷேண சர்வம்
சர்வம் நாராயணாத்மகம்
ஓர் உயிரேயோ உலகங்கட்க்கு எல்லாம்
எல்லாப் பொருள்களுக்கும் அருவாகிய–இத்யாதிகளில் படியே அகில ஜகத் அந்தராத்மாவாய்
மாதா பிதா பிராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண
தாயாய் தந்தையாய்
சேலேய் கண்ணியரும்–இத்யாதிகளில் சொல்லுகிறபடியே சர்வவித பந்துவுமாய் இருக்கிற சர்வேஸ்வரன்
சோபநஸம் ஸீ ஸூஹ்ருத் -என்கிற ஸூஹ்ருதம் தோன்ற -ஸ்ரேயோத் யாயதி கேசவ -என்கிறபடியே
இவர்களுக்கு நன்மையே தேடி இருப்பான் ஒருவன் ஆகையால்
அவர்ஜனீயமுமாய் -நிருபாதிகமுமாய் -ஸ்வ கதமாய் –அநேகவிதமான இந்த சம்பந்தமே ஹேதுவாக
நரமேத ப்ருசம் பவதி துக்கித–என்கிறபடியே திரு உள்ளம் நோவுபட்டு
ஜீவேது காகுலே விஷ்ணோ க்ருபா காப்யுப ஜாயதே
கேவலம் ஸ்வேச்சயை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன
என்னை ஆளும் பிரானார் வெறிதே அருள் செய்வர்
என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
மயர்வற மதி நலம் அருளினன்–இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஆஸ்ரய ஸத்பாவம் தான் இந்த க்ருபா விக்ஷயத்வாநந்தரம்-என்னும்படி பர துக்க அஸஹிஷ்ணுத்வ லக்ஷணையான
கிருபையை இப்படி சம்சரிக்கிற ஆத்மாக்கள் விஷயத்தில் அவ்யாஜமாகப் பண்ணா நிற்கும்
அனந்தரம் இந்த நிர்ஹேதுக கிருபையால் சாம்சாரிக சகல துரித துக்கங்களிலும் ஜுகுப்ஸை பிறந்து வேதாவஷ்டம்ப மாத்ரம் அன்றியிலே
ஆகம பிராமண ஏக சமதிகம்யமான சைவாதி தரிசனங்கள் என்ன -இவற்றில் உபேக்ஷகனாய் நித்ய நிர்தோஷ நிகம ப்ராமாண்ய புத்தி பிறந்து
அந்த ப்ராமாண்யத்தினுடைய தாத்பர்ய ஞானம் இன்றியிலே ஆபாத ப்ரதீதி தர்சனம் பண்ணி இருக்கிற அல்பஜ்ஞ சேதனரையும்
அங்கீ கரிக்க வேண்டும்படியான வாத்சல்யாதிசயத்தாலே அவர்களுடைய குண ருசிகளுக்கு அனுகுணமாக அதில் விதிக்கக் கடவதான
ஸ்யேந விதி தொடக்கமாக ஸ்வர்க்க அனுபவம் நடுவாக ஆத்ம அனுபவம் முடிவாக உண்டான புருஷார்த்தங்களில்
அல்பத்வ துக்க மிஸ்ரத்வ அபாய பஹுளத்வ அசிர கால வர்த்தித்தவ அப்ராப்தத்வ சங்குசிதத்தவாதிகளை அறிந்து அத்தாலே
ஏதேவை நிரயா-என்னும்படி அவற்றிலே குத்சை பிறக்கையாலே தத் தத் சாதனங்களிலும் விமுகனாய்
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூப புருஷார்த்த ஸ்வரூபங்களினுடைய யாதவத் ஸ்ரவணத்திலே உத் ஸூகனாய்-
தத் அர்த்தமாக ஏவம்பூத ஞான வைஸ்யத்தை யுடையனாய் இந்த ஞான விஷயமான ஸ்ரீ பகவத் விஷயத்திலே பக்தனாய் -விமத்சரனாய்-
இந்த ஞான ஆச்ரயமான ஸ்ரீ திருமந்த்ரத்திலே ஞான பக்திகளை யுடையனாய்
ஏதத் ஞான உபதேஷ்டாவான ஆச்சார்ய விசேஷத்திலே அதிஸ்நிக்தனாய்-ஆஸ்ரித உஜ்ஜீவன ஏக உத்ஸூகனாய் –
அவற்றிலே ஸ்வ கர்த்ருத்வாதி பிரதிபத்தி ரஹிதனாய் இருப்பான் ஒரு சதாச்சார்யனை ஆஸ்ரயித்த அதிகாரிக்கு அவஸ்ய ஞாதவ்யமாய்-
ஸ்வரூப புருஷார்த்த சாதனங்களுக்கு ப்ரதிமந்த்ரம் பிரகாசகமாய்-ப்ராமாண்ய பேதத்தாலே அர்த்த தார்ட்டய ஹேது பூதமான
ஸ்ரீ ரஹஸ்ய த்ரயமும் ஞாதவ்யமாகக் கடவது
அந்த ப்ராமாண்ய பேதங்கள் எவை என்னில் –
சகல சாஸ்த்ர ஸங்க்ரஹமாகையும்
ஸ்வரூப யாதாத்ம்ய ப்ரதிபாதமாகையும்
ஸ்ருதி ஸித்தமாகையும்
ஸிஷ்டாச்சாரமாகையும்
புருஷகார பிரதானமாகையும்
சரண்ய அபிமதையாகையும்
உப ப்ரும்ஹண ஸித்தமாகையும்
உபாய யாதாத்ம்ய பிரதிபாதகமாகையும்–ஆகிற இவைகள்
இப்படி ப்ராமாண்ய பேதம் உண்டாகையாலே மூன்றுமே அனுசந்தேயங்கள் –
அதுக்கு மேலே அகார வாச்யனுடைய சேஷித்வ ஸித்த ஹேதுவான அந்யார்ஹதா நிவ்ருத்தியைப் பண்ணா நின்று கொண்டு
உகாரம் மகார விவரணம் ஆகிறாப் போலேயும்
இதில் விபக்தியில் சொல்லுகிற சேஷத்வத்துக்கு விஷய விசேஷ ப்ரகாசகமாய்க் கொண்டு மகாரம் சதுர்த்தீ விவரணம் ஆகிறாப் போலேயும்
உகார உக்த்யா அந்யாந்யதம ஸ்வத்வ நிவ்ருத்தி முகேன நமஸ் சப்தம் உகார விவரணம் ஆகிறாப் போலேயும்
சேஷத்வ உபபத்தி ஹேதுவான கிஞ்சித்காரத்தை பிரகாசிப்பிக்கையாலே ச விபத்திக நாராயண பதம்
சேஷபூத வஸ்து வாசகமான மகாரத்துக்கு விவரணம் ஆகிறாப் போலேயும்
நமஸ் சப்தத்தில் ஆர்த்தமாகவும் சாப்தமாகவும் சொல்லுகிற உபாய விசேஷ ஸ்வரூபத்தையும்
அதினுடைய நித்ய யோகத்தையும்
அதுவும் மிகையாம்படியான ஆஸ்ரயணீய வஸ்துவினுடைய குண யோகத்தையும்
ஸூபாஸ்ரய விக்ரஹ வத்தையையும்
உபாய விசேஷ சேதன அத்யாவசாயத்தையும் -சொல்லுகிற ஸ்ரீ த்வயத்தில்
பூர்வ வாக்கியம் நமஸ் சப்த விவரணமாயும்
கைங்கர்ய பிரார்த்தனா வாசகமான நாராயணா என்கிற பதத்துக்கு கைங்கர்ய பிரதிசம்பந்தி பூர்த்தி ஹேதுவான ஸ்ரீமத்தையும்
தத் ஸ்வரூப பிராப்தி ஹேதுவான ஸ்வாமித்வத்தையும்
தத் விரோதி நிவ்ருத்தியையும் சொல்லுகிற ஸ்ரீ த்வயத்தில் உத்தர வாக்ய விவரணமாயும்
உபாய ஸ்வீகாரத்தைச் சொல்லுகிற ஸ்ரீ த்வயத்தில் பூர்வ வாக்யத்துக்கு தத் அங்கமான சாதனாந்தர தியாகத்தையும்
ஸ்வீகாராநபேஷத்வத்தையும் விதிக்கிற ஸ்ரீ சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்தம் விவரணமாயும்
ப்ராப்ய பிரார்த்தனை பண்ணுகிற உத்தர வாக்யத்துக்கு தத் சித்தி ஹேதுவான விரோதி நிவ்ருத்தியைப் பிரதிபாதிக்கிற
உத்தாரர்த்தம் விவரணமாயும்
ஆக இப்படி அன்யோன்ய ஸங்க்ரஹ விவரணமாய்ப் போருகையாலும் ஸ்ரீ ரஹஸ்யத்ரயமும் அனுசந்தேயமாகக் கடவது
அவற்றில் வைத்துக் கொண்டு த்யாஜ்ய உபாதேய நிர்ணாயக ஹேது ஸ்வரூபம் ஆகையாலே
அந்த ஸ்வரூப ஞானம் பிரதமபாவியாக வேணும் இறே-
தத் ப்ரதிபாதிகமாகையாலும் ஸ்வரூப அனுரூப நிஷேத விதிகளை உகார நமஸ்ஸூக்களாலே சொல்லுகையாலும்
பிரதம ரஹஸ்யமான ஸ்ரீ திருமந்திரம் பிரதம அனுசந்தேயமாகக் கடவது —
இப்படி பிரதம அனுசந்தேயமான ஸ்ரீ திருமந்திரம் -ஐஹிக லௌகிக ஐஸ்வர்யம் -இத்யாதிப்படியே சகல புருஷார்த்த ஏக ஸாதனமாய்
ஸ்ரீ விஷ்ணு காயத்ரியில் நாராயணாய என்று பிரதமோ பாத்தமாய் -ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய சகல கல்யாண குணங்களுக்கும்
பிரதிபாதகமாய் இருக்கையாலே அல்லாத ஸ்ரீ பகவத் மந்திரங்களில் அதிகமாய் இருக்கும் –
அதுக்கு மேலே வ்யாப்ய பதார்த்தம் -வியாபக ஸ்வரூபம் -வ்யாபந பிரகாரம் -வ்யாபகனுடைய குணம் -வ்யாப்தி பலம்
இவற்றை பூர்ணமாக ப்ரதிபாதிக்கையாலே வ்யாபகரந்தரங்களிலும் அதிகமாய் இருக்கும்
இவ்வாதிக்யம் இல்லையே யாகிலும் ஆழ்வார்களாலும் ஆச்சார்யர்களாலும் வேதாந்தங்களாலும்
வைதிக புருஷர்களாலும் ஆதரிக்கப்படுகையாலும்
கர்ம ஞான பக்திகளுக்கும் சஹகரித்துப் போருகையாலும்-சகல சப்த காரணம் ஆகையாலும்-சகலார்த்த காரண பூத வஸ்து
ப்ரதிபாதிகம் ஆகையாலும் ஆதரிக்க வேண்டும்படியான ஆதிக்யம் உண்டு
கர்மாத்யுபாயங்களுக்கு ஜெப ஹோம தர்ப்பணாதிகளாலே சஹகரித்துப் போகா நிற்கச் செய்தேயும்
இம்மந்திரம் பகவத் ஏக உபாயர்க்கு அவ்வுபாயம் இதினுடைய சப்த ஆவ்ருத்தியை சஹியாமையாலும்
வேதங்களும் வேத தாத்பர்ய சாஷாத்காரம் பண்ணி இருக்கிற ஆழ்வார்களும் இம்மந்திர அனுசந்தான காலத்திலே
சர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்தித-
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன்
நாரணன் எம்மான் பார் அணங்கு ஆளன்-
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -இத்யாதிகளாலே அர்த்த அனுசந்தான தத் பரராய் அனுசந்தித்துப்
போருவதொரு நிர்பந்தம் உண்டாகையாலும்
தத் உபாய நிஷ்டரான நம் ஆச்சார்யர்களும் அர்த்த அனுசந்தான தத் பரராய் அர்த்தத்துக்கு நிராஸ்ரயமாக
நிலை இல்லாமையாலே சப்தத்தையும் ஆதரித்துக் கொண்டு போருவர்கள்-
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன் -என்று இவ்வர்த்த ஞாந ஜனனமே ஜனனம் என்னும் இடத்தையும்
இவ் வநுஸந்தானமே கால க்ஷேபம் என்னும் இடத்தையும் ஸ்ரீ திருமழிசைப் பிரானும் அருளிச் செய்தார் –
இவ்வர்த்தத்தை -திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய ஏக சரணனாவாய் -என்று ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தார்
விலக்ஷனரான நம் ஆச்சார்யர்கள் எல்லாருக்கும் இவ்வர்த்த அனுசந்தானமே யாத்ரையாகப் போருகையாலே
அவர்கள் பிரசாதத்தாலே லப்த ஞானரான நமக்கும் அதில் அர்த்த அனுசந்தானமே யாத்ரையாகக் கடவது –
இப்படி சர்வ உத்க்ருஷ்டமான இம்மந்திரம் தான்
ஓம் இத்யேக அக்ஷரம் -நம இதி த்வே அக்ஷரே-நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி -இத்யஷ்டாக்ஷரம் சந்தஸா காயத்ரீ சேதி-
ஓமித் அக்ரே வ்யாஹரேத்-நம இதி பஸ்ஸாத் -நாராயணாயேத் யுபரிஷ்டாத் –
ப்ரணவாத்யம் நமோ மத்யம் நாராயண பதாந்திதம்-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பிரணவ ஸஹிதமாகவே அஷ்டாக்ஷரமாய் -பிரணவம் முதலாக -நமஸ்ஸூ நடுவாக–நாராயண பதம் நடுவாக –
உச்சரிக்கக் கடவன் என்கிற பத க்ரம நியதியையும் உடைத்தாய் இருக்கும் –
ஸ்ருதியிலே யஸ்யாஸ்மி
கோஹ்யேவாந்யாத் க பராண்யாத
ஏஷஹ் யேவா நந்தயாதி –என்று ஓதுகிற-அநந்யார்ஹ சேஷத்வ -அநந்ய சரண்யத்வ-அநந்ய போக்யத்வங்களை
அவ்வேத தாத்பர்யமான இம்மந்த்ரத்தில் பதங்கள் மூன்றும் அடைவே ப்ரதிபாதிக்கையாலே இது ஸூகர அனுசந்தேயமாய் இருக்கும் –
இம்மந்திரம் ஆத்ம பரமாத்மாக்களுடைய சேஷ சேஷி பாவ சம்பந்தத்தை ப்ரதானயேன பிரகாசிப்பிக்கிறது –
இதுக்கு விஷய அபேக்ஷையும் பிரதிசம்பந்த அபேக்ஷையும் உண்டாகையாலும் –
அந்த சேஷத்வ சித்தி தான் ஸ்வ விரோதியான ஸ்வா தந்தர்யம் நிவ்ருத்தமானாலாகையாலும்
அகிஞ்சதகரஸ்ய சேஷத்வ அனுபபத்தி-என்னும்படி கிஞித்காரம் இல்லாத போது சேஷத்வம் அனுப பன்னம் ஆகையாலும்
அந்த சம்பந்தத்துக்கு சேஷதயா அவ்வர்த்தங்களும் இதிலே பிரதிபாதிதமாகிறன
அதில் பிரணவத்தாலே சேஷத்வம் சொல்லி –
நமஸ் சப்தத்தாலே தத் விரோதியான ஸ்வா தந்திரத்தினுடைய நிவ்ருத்தி சொல்லி
நாராயண பதத்தாலே அந்த சேஷத்வத்தை சரீராத்மா பாவ சம்பந்த முகேன த்ருடீகரிக்கிறது –
இதில் பிரதம பதம் அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமான அநந்யார்ஹ சேஷத்வத்தைச் சொல்லுகிறது
மத்யமபதம் ஸ்வ ரக்ஷகத்வ நிவ்ருத்தி பூர்வகமான பகவத் ஏக உபாயத்தைச் சொல்லுகிறது –
அனந்தர பதம் உபேய ஆபாச நிவ்ருத்தி பூர்வகமான பகவத் ஏக உபேயத்வத்தை ப்ரதிபாதிக்கிறது
ஆகையால் ஸ்வரூப யாதாத்ம்ய பரமாய் இருக்கும்
ஆக பத த்ரயத்தாலும் ஸ்வரூப உபாய உபேய யாதாத்ம்யங்களைச் சொல்லுகிறது –
இவ்வாகாரத் த்ரயமும் இவனுக்கு ஸ்வரூபம் ஆகையாலே இத்தாலும் ஸ்வரூபம் சொல்லுகிறது என்னக் குறையில்லை –
இது தான் இதுக்கு முன்பு பிராப்தம் இன்றியிலே ப்ராப்தவ்யம் ஆகையாலே ப்ராப்யம் சொல்லுகிறது என்றும் அருளிச் செய்வர்கள்-
ஆகையால் இதுக்கு வாக்யார்த்தமான ஸ்வரூப ப்ரதிபாதன பரத்வமும் ப்ராப்ய ப்ரதிபாதன பரத்வமும் சொல்லிற்று ஆயிற்று
இது தனக்கு தாத்பர்யம் சர்வேஸ்வரனுடைய சர்வ சேஷித்வ -சர்வ ரக்ஷகத்வ -பரம போக்யத்வங்களை -ப்ரதிபாதிக்கை –
ப்ரணவத்தாலே சொல்லுகிற பகவச் சேஷித்வத்தையும் -தத் விஷயமான ஸ்வ சேஷத்வத்தையும் அனுசந்திக்க
தேவதாந்தர பரத்வ புத்தியும் அந்ய சேஷத்வ புத்தியும் நிவ்ருத்தையாகும் –
நமஸ்ஸாலே சொல்லுகிற பாரதந்தர்யத்தையும் பகவத் உபாயத்வத்தையும் அனுசந்திக்க
ஸ்வ ஸ்வா தந்தர்ய புத்தியும் ஸாத்ய சாதன சம்பந்தமும் நிவ்ருத்தமாம் –
நாராயண பதத்தாலே சொல்லுகிற பகவத் போக்ய அதிசயத்தையும்-கைங்கர்ய பிரார்த்தனையையும் அனுசந்திக்கவே
அப்ராப்த விஷய கிஞ்சித்கார புத்தியும்-ப்ராப்யாந்தர சம்பந்தமும் நிவ்ருத்தமாம் –
ஆக இம்மந்திரத்துக்கு
பிரதான அர்த்தமும்
வாக்யார்த்தமும்
தாத்பர்ய அர்த்தமும்
அனுசந்தான அர்த்தமும்
அனுசந்தான பிரயோஜனமும் -சொல்லிற்று ஆயிற்று
அங்கன் அன்றிக்கே
இதுக்கு பிரதான அர்த்தம் ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகை என்றும் –
தாத்பர்ய அர்த்தம் -சகல சாஸ்த்ர சாரமாய் இருக்கை என்றும்
வாக்யார்த்தம் ப்ராப்ய ஸ்வரூப நிரூபணம் என்றும்
அனுசந்தான அர்த்தம் சம்பந்தம் என்றும் சொல்லுவார்கள்
இதுதான் சர்வேஸ்வரனுடைய
சர்வ காரணத்வம்
சர்வ ரக்ஷகத்வம்
ஸ்ரீ யபதித்வம்
சர்வ சேஷித்வம்
அவற்றினுடைய அநந்யார்ஹதை
ஏதத் பிரதிசம்பந்த உபாயத்வம்
சர்வ ஆதாரத்வம்
சர்வ அந்தர்யாமித்வம்
சர்வ சரீரத்வம்
சர்வவித பந்துத்வம்
கைங்கர்ய பிரதிசம்பந்த்வம் –தொடக்கமான அர்த்த விசேஷங்களை ப்ரதிபாதிக்கையாலே
ஸ்ரீ பகவத் ஸ்வரூபம் சொல்லுகிறது என்னவுமாம் –
சேதனனுடைய பிரகாரத்வம்
ரஷ்யத்வம்
சேஷத்வம்
இவற்றினுடைய அநந்யார்ஹதை
சேஷ பூத வஸ்துவினுடைய ஞாந ஆனந்த்வம்
ஞாந குணகத்வம்
ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி
தத் ஸித்தமான பாரதந்தர்யம்
தத்பல ததீய சேஷத்வம்
ஆதேயத்வம்
வ்யாப்யத்வம்
சரீரத்வம்
கைங்கர்ய ஆஸ்ரயத்வம்–தொடக்கமான அர்த்த விசேஷங்களையும் பிரதிபாதிக்கையாலே
ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகிறது என்னவுமாம் –
இதில் பிரதம பதமான பிரணவம்
அகார உகார மகார இதி தாநேகதா சமபரத்தேததோமிதி -என்று மூன்று அக்ஷரமாய்
ஓமித்யேக அக்ஷரம் -மூலமாகிய ஒற்றை எழுத்தை -என்றும் ஏக அக்ஷரமாய் –
சேஷி சேஷ தத் அநந்யார்ஹத்வங்கள் ஆகிற அர்த்தங்களை அஷர த்ரயமும் வாசகம் ஆகையாலே மூன்று பதமாய் –
ஏவம்பூதமான சம்பந்தத்தைச் சொல்லித் தலைக் கட்டுகையாலே ஒரு வாக்யமாய் இருக்கும்
நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருதபா நாஞ்ச ப்ரபஞ்சனம் -வேத சப்தேப்ய ஏவாதவ் தேவாதீநாஞ்சகார சா-என்று
லௌகிக சப்தங்களுக்கு வேதம் காரணமாய் இருக்கும்
ரிசோ யஜும்ஷி சாமாநிததைவ அதர்வணா நிச-சர்வம் அஷ்டாக்ஷர அந்தஸ்ஸ்தம் –என்று
வேதம் தனக்கும் திருமந்திரம் காரணமாய் இருக்கும் –
இதில் மேலில் பத த்வயத்துக்கும் இப்பிரணவம் ஸங்க்ரஹம் ஆகையாலே இம் மந்திரத்துக்கு பிரணவம் காரணமாய் இருக்கும் –
ப்ரணவஸ்ய ச பிரக்ருதிர் அகார – தஸ்ய பிரகிருதி லீநஸ்ய பரஸ் ச மஹேஸ்வர -என்று
பிரணவம் தனக்கு அகாரம் காரணமாய் இருக்கும்
இப்படி ஸர்வஸப்தா காரணமான அகாரம் –
ஸமஸ்த சப்த மூலத்வாத் ப்ரஹ்மணோ அபி ஸ்வ பாவத-வாஸ்ய வாசக சம்பந்தஸ்தயோர் அர்த்தாத் பிரதீயதே -என்கிற நியாயத்தாலே
சகலார்த்த காரண பூத வஸ்துக்கு வாசகம் ஆகையாலும்
யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி -என்றும்
மூவாத் தனி முதலாய் மூ வுலகுக்கும் காவலோன் -என்றும்
காரணத்வ ரக்ஷகத்வங்கள் இரண்டும் ஏக ஆஸ்ரயமாகச் சொல்லுகையாலும்
அகாரோ விஷ்ணு வாசக -என்று சர்வ வியாபகனாய் சர்வ ரக்ஷகனான ஸ்ரீ எம்பெருமானுடைய
ஸமஸ்த சித்த அசித் காரணத்வத்தைச் சொல்லுகிறது
இக்காரணம் தான் ஸ்வரூப காரணதவம் என்றும் ஸ்வபாவ காரணத்வம்-என்றும் த்விதம்-
அதில் ஸ்வரூப காரணத்வமாவது -சித் அசித்துக்களுடைய ஸ்வரூப ஸத்பாவம் ஸ்ரீ பகவத் ஸ்வரூப அதீனமாய் இருக்கை -அதாவது –
யஸ்யாஸ்மி
பகவத ஏவாஹமஸ்மி
நததஸ்தி விநாய தஸ்யாந்மயா பூதமசராசரம
யஸ்ய சேதனஸ்ய யத்த்ரவ்யம் யாவத்ஸத்தம் சேக்ஷத்வாபாத நார்ஹம் தத் சேஷதைக ஸ்வரூபம்
தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இல்லை -இத்யாதிகளில் சித் அசித்துக்களுடைய ஸ்வரூபம்
வ்யாபகமான ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்துக்கு விசேஷணதயா சேஷமாய்க் கொண்டு உண்டாய் –
அல்லாத போது இல்லையாய் இருக்கும் என்று சொல்லுகையாலே
இந்த ஸ்வரூப ஸத்பாவ ஹேதுவான விசேஷண ரூப சேஷத்வத்துக்கு
பிரதிசம்பந்தி தயா சேஷியான ஸ்ரீ பகவத் ஸ்வரூபம்
முன்னை அமரர் முழு முதலானே
அமரர் முழு முதல்
யாதும் யாவர்க்கும் முன்னோன் -இத்யாதிகளில் சொல்லுகிறபடி காரணமாய் இருக்கை –
ஆனால் பிரக்ருதிம் புருஷஞ்சைவ வித்யநாதீ உபாவபி -என்று சொல்லுகிற இவற்றினுடைய அநாதித்வத்துக்கு
பங்கம் வாராதோ வென்னில்
விசேஷணத்வேந ஸ்திதமான வஸ்துக்களுக்கு விசேஷ்ய ஹேது உத்பத்தியாக வேண்டுகையாலே
விசேஷ்ய ஹேதுக வ்யவஹாரம் பண்ணுகிறது அத்தனை ஒழிய ஒரு காலத்தில் உண்டு -காலாந்தரத்தில் இல்லை என்று
ஸத்பாவ அசத் பாவங்களை சொல்லுதல் -ஏவம் பூத உதயத்துக்கு ஒரு கால விசேஷ கல்பனை செய்யாமையாலே
அநாதித்வ பங்கம் வாராது –
ஆனால் விசிஷ்டமாய்க் கொண்டே நித்தியமாய் இருக்குமாகில் இக்காரணத்வம் அநு பன்னமாமே என்னில்-
அந்நிய நிரபேஷமாக ஸித்தமான ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்தை நின்றும் சா பேஷமாய்க் கொண்டே சித் அசித்துக்களினுடைய
உதயமாகையாலே உப பன்னம்-
பிரதான பும்சோரஜயோ காரணம் கார்ய பூதயோ -என்று சித் அசித்துக்களினுடைய கார்யத்வ நித்யத்வங்களை
ஸ்ரீ பராசர பகவானாலும் சொல்லப்பட்டது –
அநந்தரம்-ஸ்வபாவ காரணத்வமாவது
சித் அசித்துக்களை ஸ்வ இச்சாதீனமாகத் தன்னுடைய லீலா போக விசேஷங்களுக்கு விஷயமாக நினைத்த வன்று
தத் உபகாரணமான தேச தேஹ பிரதானம் பண்ணுகைக்கும் தத் அனுரூப சாஸ்த்ர ப்ரதானாதிகளுக்கும் ஹேது பூதனாகை-
இவை கர்ம ஹேதுகம் என்னா நிற்க சர்வேஸ்வரன் ஹேது என்கிறபடி என் என்னில்
ஏஷ ஏவ சாது கர்ம காரயதி -என்று கர்மத்துக்கு உத்பத்தியே பிடித்து சர்வேஸ்வரன் ப்ரேரகனாக வேண்டுகையாலும்
அசேதன கிரியை யாகையாலே தான் இதுக்கு உத்பாதகம் ஆக மாட்டாமையாலும்
ஒரு கிரியை தானே கால கர்த்ரு பேதங்களாலே புண்ய பாபங்கள் இரண்டுக்கும் ஹேதுவாய் இருக்கையாலும்-
இவற்றுக்கு சர்வேஸ்வர இச்சை ஹேதுவாம் அத்தனை ஒழிய கர்மம் ஹேது அன்று –
சர்வேஸ்வர இச்சை தான் கர்ம ஹேதுகம் ஆனாலோ என்னில் அவனுக்கு கர்ம பாரதந்த்ரிய வ்யவஸ்தித்வம் இல்லை –
ஸ்வ இச்சாதீன கர்ம ஹேதுக வ்யவஸ்தித்வமும் ஸ்வ இஷ்டமான ஞான ப்ரதானாதிகளோடே விரோதிக்கையாலும் –
போகரச வைவித்யம் இல்லாமையாலும்
சக்ருத்த அஞ்சலி ததைவம் உஷ்ணாத்ய-ஸூப அந்நிய சேஷ தஸ்ஸூபாநீ பூஷணாதி -என்றும்
ஷாம்யஸ் பஹோதத் அபிசந்திவிராம மாத்ராத் -என்றும்
தீயினில் தூசாகும் -என்றும்
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -என்றும் சொல்லுகிறபடியே
ஓர் அஞ்சலி மாத்திரத்தாலே சகல பாபங்களையும் போக்கும் என்கையாலே
ஆஸ்ரித விஷயத்தில் கர்ம பாரதந்தர்ய வ்யவஸ்திதி குலைகையாலும்
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுக்கையாலும்
சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனுக்குக் கூடாது
இனி இங்கு உள்ளது ஸ்வ இஷ்ட கார்ய உபயோகியான கர்ம சம்பந்தத்தையும் தத் காரியங்களையும்
ஸ்வ இச்சையால் நிர்வகித்துப் போருகிறான் அத்தனை -ஆகையால் ஸ்வ இச்சையே ஹேதுவாகக் கடவது –
இவ்வர்த்தத்தை
நீ தந்த ஆக்கை
நீ வைத்த மாய வல் ஐம்புலன்கள்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன்
தூபமும் இன்பமுமாகிய செய்வினையாய்
கருமமும் கரும பலனுமாகிய காரணன்
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய்
உற்ற இரு வினையாய் -இத்யாதிகளிலே ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்தார் –
வைதிக புத்ர வ்ருத்தாந்தத்திலும்
அயோத்யா வாசிகளுடைய மோக்ஷ லாபத்திலும்
சிசுபால மோஷாதிகளிலும் இவ்வர்த்தம் காணலாம் –
ஆக இவ்வஷர ஸ்வ பாவத்தாலே-சர்வேஸ்வரனுடைய சர்வ காரணத்வமும் சர்வ பிரகார காரணத்வமும் சொல்லிற்று ஆயிற்று –
அநந்தரம் இவ்வாகாரம் -அவ ரக்ஷனே-என்கிற தாதுவிலே ஸித்தமாய்-
வகார லோபம் பண்ணி -அ-என்ற பதமாய் ரக்ஷண தர்மத்தைக் காட்டி –
நஹி பலான சாமர்த்யம்ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்
விஷ்ணுஸ் த்ரைலோக்ய பாலக
பாலநே விஷ்ணு ருச்யதே
நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும்-என்று சொல்லுகிறபடியே இத்தர்மத்துக்கு ஆஸ்ரய பூதனுமாய்
அ இதி ப்ரஹ்ம
அகாரோவை விஷ்ணு
அகாரோ விஷ்ணு வாசக
அக்ஷராணாம் அகாரோஸ்மி
அ இதி பகவதோ நாராயணஸ்ய பிரதம அபிதானம் -என்று இவ்வஷரத்துக்கு
முக்கிய ரூபேண வாச்யனுமாய் இருக்கிற ஸ்ரீ எம்பெருமானைச் சொல்லுகிறது
இவ்வாகாரம் தான் -அகாரோவை சர்வா வாக் -என்று எல்லா அக்ஷரங்களுக்கும் உயிராய்க் கொண்டு –
அவ்வஷர ஸ்வரூபங்களை ஸ்திதிப்பித்துக் கொண்டு நிற்கும் என்கையாலே அவ்வோ சப்தங்களுக்கு வாஸ்யமான
சகல பதார்த்தங்களினுடையவும் சத்தையை நோக்கிக் கொண்டு அந்த ஸ்திதனான எம்பெருமானுக்கு வாசகமாகக் கடவது இறே
ஆக இத்தால் அகார வாச்யனான சர்வேஸ்வரன் ரக்ஷகன் என்றதாயிற்று —
இந்த ரக்ஷண தர்மத்துக்கு விஷய அபேக்ஷை யுண்டாகையாலும் விஷய விசேஷ நியமம் பண்ணாமையாலும்
பக்த முக்த நித்யாத்மகமான உபய விபூதியும் ரஷ்யமாகக் கடவது -இத்தால் சர்வ ரக்ஷகன் என்கிறது –
இந்த பக்த வர்க்கம் தான் முமுஷுக்கள் என்றும் அஞ்ஞர் என்றும் உபய கோடியாய் இருக்கும் –
இதில் அஞ்ஞ கோடியை ஸ்வ லீலைக்கும் ஸ்வ அதீனமான பூர்வ பாக ஸாஸ்த்ரத்துக்கும்-
அவர்களுடைய கர்மத்துக்கும் அனுகுணமாக ரஷிக்கும் –
அதாவது புண்ய பாப ரூபமான கர்மங்களை அவர்கள் பண்ணப் புக்கால் அனுமதி தானத்தைப் பண்ணியும் –
அவை அவர்களுடைய பூர்வ பூர்வ கர்ம கார்யம் என்று நினைக்கும்படி உதாசீனனாய் இருந்து அவை தத் தத் காலங்களில்
ஸ்வ ஸ்வ அனுபவங்களை பண்ணும்படி செய்வித்தும்
அவர்கள் விமுகரான வன்று அந்தர்யாமியாய் நின்று சத்தையை நோக்கியும் –
அவர்களுக்கு விரோதியான சத்ருபீடை வியாதி பீடை இத்யாதிகளை நிவ்ருத்தமாக்கி
அபேக்ஷிதமான அன்ன பானாதிகளைக் கொடுத்தும் ரஷிக்கை –
முமுஷுக்களை ஸ்வரூப அனுரூபமாக ரக்ஷிக்கும்-அதாவது
ஸ்வரூப விரோதியான அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யாதி நிவ்ருத்தியைப் பண்ணி
ஸ்வரூப அனுரூபமான ஸ்வ ஸ்வகீய சேஷத்வத்தைப் பிறப்பித்தும்
ஸ்வரூப அனுரூப புருஷார்த்தத்தில் ருசியைப் பிறப்பித்து தத் அனுரூபமான சாதன விசேஷத்தை பரிக்ரஹிப்பித்தும்
அந்த சாதனத்தில் அத்யவசாயத்தை பிராப்தி பர்யந்தம் ஆக்கியும்
விபவ அர்ச்சாவதார ரூபேண நின்று அவர்களுக்கு தாரகனாயும்
அநாதியான சம்சார சம்பந்தத்தை அறுத்து -அனந்தமான ஸ்வ அனுபவத்தை அவிரோதமாகப் பண்ணிக் கொடுத்தும்
ஸ்வ போகத்துக்கும் ஸ்வ ப்ரவ்ருத்தமான உத்தர பாக ஸாஸ்த்ரத்துக்கும் அனுகுணமாக ரஷிக்கை –
நித்யரையும் முக்தரையும் போக அனுகுணமாக ரக்ஷிக்கும் -அதாவது
ஆனந்த மய-என்கிறபடியே தான் நிரதிசய ஆனந்த உக்தனாய் இருக்கையாலே
ந சாஸ்திரம் நைவ ச க்ரம-என்கிறபடியே க்ரம விவஷை பண்ண அறியாதே அல்ப ஆனந்தத்தில் மக்நராய் சத்தை அழிந்து
ஸ்வ அனுபவத்துக்கு ஆளாகாத அளவிலே -மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு-என்கிறபடியே ஸ்வ அனுபவத்தை சாத்மிப்பித்து –
ஸ்வ அனுபவத்துக்கு ஆளாக்கி -ஸ்வ அனுபவத்தைப் பண்ணிக் கொடுத்தும்
தத் ஜெனித ப்ரீதி காரிதமான கைங்கர்யத்தைக் கொண்டும் -அந்தக் கைங்கர்யத்துக்கு ஆளாக்கி
இவர்களுடைய சைதன்ய நிபந்தமான ஸ்வாரஸ்ய நிவ்ருத்தியைப் பண்ணி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்கிறபடியே கைங்கர்ய பிரதிசம்பந்தி பூத பகவன் முக விலாச விஷயத்வமே பிரயோஜனம் என்றும் –
தத் விஷய ஞானமே சைதன்ய கார்யம் என்றும் பிரதிபத்தி யுண்டாம்படி பண்ணியும் ரஷிக்கை
ஆக -சகல சப்த காரணமான ஆகாரத்தில் தத் தத் சப்த வாஸ்யங்களாய் ரஷ்ய பூதங்களான த்ரிவித சேதன அசேதனங்களையும் –
ரக்ஷகனான ஸ்ரீ சர்வேஸ்வரனையும்
ரக்ஷண பிரகார விசேஷங்களையும்
ரக்ஷணத்தினுடைய நிர்ஹேதுகத்வமும்
இத்தனையும் ரக்ஷகனான தன்னுடைய பிரயோஜன விசேஷங்கள் என்னும் இடமும் சொல்லிற்று ஆயிற்று –
ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் -என்று இவ்வர்த்தத்தை ஸ்ரீ பாஷ்யகாரரும் அருளிச் செய்தார்
இச்சாத ஏவ தவ விஸ்வபதார்த்த சத்தா–என்கிற ஸ்லோகத்தாலே இவ்வர்த்தத்தை ஸ்ரீ ஆழ்வானும் அருளிச் செய்தார் –
ஆனால் இந்த ரக்ஷகனுடைய விதா பேதத்தாலும் -லீலா விபூதியில் உள்ளாருடைய துக்க அனுபவத்தாலும்
நித்ய விபூதியில் உள்ளாருடைய ஸூக அனுபவத்தாலும் இவற்றுக்கு ஹேது பூதனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய
சமோஹம் சர்வ பூதேஷூ ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய-
ஈடும் எடுப்புமில் ஈசன்
எள்கல் இராகம் இலாதான்-என்கிற சர்வ ஸமத்வத்துக்கும்
நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத்
ஸூஹ்ருத் சர்வ பூதாநாம் -என்கிற சர்வ பூத ஸூஹ்ருத்வத்துக்கும்
சதா காருணிகோபிசன் -என்கிற பர துக்க அஸஹிஷ்ணுதாருபையான கிருபைக்கும் ஹானி வாராதோ என்னில்
இது ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூப புருஷார்த்த ஸ்வரூபங்களினுடைய யாதாத்ம்ய ஞானம் இல்லாதார்
சொல்லும் வார்த்தை -எங்கனே என்னில் –
ஆனந்தோ ப்ரஹ்ம
ஆனந்தம் ப்ரஹ்மண
முழு நலம்
எல்லையில் அந் நலம்
நலமுடையவன்
அபார சச்சித் ஸூக சாகரே–என்கிறபடியே ஸ்வரூப ஸ்வ பாவங்கள் இரண்டாலும் அபரிச்சேத்யமான
ஆனந்தத்தை யுடையனாய் இருக்கையாலும்
அசேஷ சித் அசித் வஸ்து சேஷி பூத
அசேஷ சித் அசித் வஸ்து சேஷிணே -என்று சர்வ சேஷி யாகையாலும்
யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மநா ஸ்வார்த்ததே நியந்தும் தாரயிதுஞ்ச சக்யம் தத் சேஷதைக ஸ்வரூபம் – என்றும்
எதேஷ்ட விநியோக அர்ஹம் சேஷ சப்தேந கத்யதே -என்றும் சொல்லுகிறபடியே ஸ்வார்த்த-நியாம்யத்வ தார்யத்வாதிகளாலே
இஷ்ட விநியோக அர்ஹமான சேஷ வஸ்துக்களைத் தனக்கு அதிசய சித்த்யர்த்தமாகத் தன் இச்சையாலே
தனக்கு இஷ்டமான பிரகாரத்திலே விநியோகம் கொள்ளுகையும் -அப்படியே விநியோகப்படுகையும்
அம்மா அடியேன் என்கிற உபய ஸ்வரூபத்துக்கும் பிராப்தமாய் அது தானே புருஷார்த்தமுமாய் இருக்கையாலே
ஏவம் பூத விநியோக விஷயத்வ ஞானம் இறே சைதன்ய கார்யம் –
ஆனால் லீலா விபூதியில் உள்ளாருக்கு இதில் துக்கம் நடப்பான் என் என்னில் –
ஏவம் பூத ஸ்வரூப யாதாம்ய ஞானம் இல்லாமையாலே-
ஆனால் ஞானம் பிறந்த அதிகாரிகள்
மங்க வொட்டு
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ
அடைய வருளாய் -இத்யாதிகளாலே சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக மோக்ஷத்தை ஆசைப்படுவான் என் என்னில்
சேஷ பூதரான சேதனர்க்கு சேஷத்வ பராகாஷ்ட தர்சனம் பண்ணினவாறே இந்த லீலா விசேஷம் ப்ராப்தமாய் இருந்ததே யாகிலும்
ஸ்திதி யுத்பத்தி ப்ரவ்ருத்தி க்ரசன நியமன வ்யாபனைர் ஆத்மநஸ்தே சேஷோ சேஷ பிரபஞ்சோ வபு–என்கிறபடியே
ரக்ஷகத்வ -காரணத்வ -ப்ரவர்த்தகத்வ-சம்ஹர்த்ருத்வ -நியந்த்ருத்வ -வ்யாபகத்வாதி சகல பிரகாரங்களாலும்
இந்த ஸ்தித்யாதி விஷயமான சகல பிரபஞ்சத்துக்கு சேஷியான சர்வேஸ்வரன் –
இப்படி சர்வ பிரகார சேஷம் யாகையாலே -ஸ்வாயத்த ஸ்வரூப ரூபமாய்
ஸ்வ ஆதார க்ரியாக ரூபமாய் -ஸ்வ போக்ய பூதருமான சேதனரை –
சப்தாதீந் விஷயாந பிரதர்சய விபவம் விஸ்மார்யதாஸ் யாத்மகம் வைஷ்ணவ வ்யாகுண மாயயாத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ புமான்-
பும்ஸாபண்யவதூ விடம் பிவ புஷா தூர்த்தா நிவா யாசயந் ஸ்ரீ ரெங்கேஸ்வரி கல்பதே தவ பரீஹாசாத்மநே கேளயே-
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய் –
உன்னடிப்போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அவர்களுக்கு ஸ்வதஸ் ஸித்தமான தாஸ்ய ஐஸ்வர்யத்தை விஸ்மரிப்பித்து அத்தை த்ருடீகரிப்பிக்கும் சப்தாதி விஷயங்களிலே
சங்கத்தைப் பண்ணுவித்து ஸ்வ விசேஷண தயா ஸ்வ அதீனையான மாயையாலே கலங்கும்படி பண்ணி –
பண்யவதூ விடமபி வபுஸ்ஸான புருஷனாலே தூர்த்தரை ஆயாசிப்பித்து ரசிக்கும் செருக்கரைப் போலே-
சர்வ காரண பூதனான சர்வேஸ்வரன் தனக்கு அபிமதையான ஸ்ரீ ரெங்கேஸ்வரிக்குப் பரிஹாச ஹேதுவான லீலைக்கு விஷயமாக்கி
க்ரீடதே பகவான் பூதைர் பால க்ரீடநகைரிவ-என்றும்
இன்புறும் இவ்விளையாட்டு உடையான் -என்றும்
நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -என்றும் சொல்லுகிறபடியே
இவனை இசைவித்து -இவன் அனுமதிப்படியே மோக்ஷ பிரதானம் பண்ணி
ஸ்வ போகத்துக்கு விஷயமாக நினைத்த அன்று அந்த மோக்ஷ ரூப போகத்திலே ருசி பிறக்கும் போதைக்கு தத் பிரதிபடமான சம்சாரத்திலே –
நரகத்தை நகு -என்கிற அருசி பூர்வகமாக வேண்டுகையாலும் –
அந்த அருசி தனக்கு தத் விஷயமான ஹேயத்வ துக்க ரூபத்வாதி பிரதிபத்தி அபேக்ஷிதம் ஆகையாலும்-
ஸ்வ போகார்த்தமாக அதில் ஹேயத்வாதிகளைப் பிரகாசிப்பித்து-அது அடியாக அருசியை விளைப்பித்து-
அது அடியாக உபேஷாதிகளை யுண்டாக்குகிறான் ஆகையால் தந் நிவ்ருத்தி பூர்வகமாக போக ரூபமான மோக்ஷத்தை
மங்க வொட்டு
கூவிக் கொள்ளாய்
இனி உண்டு ஒழியாய்–என்று பிரார்த்திக்கிறார்கள் அத்தனை அல்லது
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பு –தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே-என்று இருக்கிறவர்கள்
பகவத் விநியோக விசேஷ விஷயத்தினுடைய ஸ்வரூப அப்ராப்ததையாலே தந் நிவ்ருத்தியை அபேக்ஷித்தார்கள் அன்று –
ஆகையால் சமோஹம் சர்வ பூதேஷூ -என்கிற இடத்தில் வியாபகத்வ தாரகத்வ ஆஸ்ரயணீயத்வ ரக்ஷகத்வ சேஷித்வங்களில்
சாம்யத்தைச் சொல்லுகிறது அத்தனை அல்லது சர்வ விநியோக சாம்யம் சொல்லுகிறது அன்று –
விநியோக சாம்யம் சொல்லுமாகில் விநியோக பேத நிபந்தமான ரஸ வைவித்யம் இல்லாமையாலே
சர்வ பிரகார ஆனந்த விசிஷ்டமான சேஷி ஸ்வரூபத்துக்கும் சேராது –
இஷ்ட விநியோக அர்ஹதையே வேஷமான சேஷ பூத ஸ்வரூபத்துக்கும் சேராது
நித்ய விபூதியில் குண அனுபவம் விக்ரஹ அனுபவம் கைங்கர்ய பரதை என்கிற விசேஷங்களுக்கும் சேராது
ஆகையால் உபய ஸ்வரூபத்துக்கும் அனுகுணமான வைஷம்யம் தோஷம் அன்று
ப்ராப்தமான சாம்யத்துக்கு ஹானி சொல்லாமையாலே சமத்துவ ஹானி இல்லை
ஏவம் ஸ்வரூப ஞானம் இன்றியிலே சம்சாரத்திலே துக்க பிரதிபத்தி பண்ணி இருக்குமவர்களுக்கு இந்தப் பிரதிபத்தி தான்
ஞான விரோதியான சம்சாரத்தில் அருசி பிறந்து தந் நிவ்ருத்ய அபேக்ஷை பிறக்கைக்கு உறுப்பு ஆகையாலே –
அந்த பிரதிபத்தி நிவ்ருத்தி பண்ணாது ஒழிந்ததும் ஸூஹ்ருத்வ கார்யமான ஹித பரதையாலே யாகையாலே
ஸூஹ்ருத்வத்துக்கு ஹானி இல்லை
சம்சாரத்தில் வாசமும் -அஞ்ஞாவஸ்தை குலைந்து ஞானம் பிறந்த போது ததீயத்வ ஆகாரேணவே தோற்றுகையாலே
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று அது தானே புருஷார்த்தமாய் இருக்கையாலும் -தத் அனுகுணமான ஞான விசேஷத்தை –
ததாமி புத்தி யோகம் தம் -என்றும்
மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானம் அபோஹஞ்ச-என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்றும் சொல்லுகிறபடியே
நிர்ஹேதுகமாகத் தானே பிறப்பிக்கையாலும் கிருபா ஹானி வாராது
ஆகையால் சேஷபூத சகல வஸ்துக்களுடையவும் சர்வ வியாபாரங்களும் ஸ்ரீ பகவத் ப்ரேரிதங்களுமாய்-
ஸ்ரீ பகவத் ப்ரயோஜன ஹேதுக்களாயுமாய் இருக்கும் என்றதாயிற்று
ஆனால் விதி நிஷேத ரூபமான சாஸ்திரத்துக்கு பிரயோஜனம் என் என்னில் -சாஸ்திரமாவது
ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவ ஆஜ்ஜா-என்கிறபடியே ஸ்வதஸ் சித்த ஸ்வாமித்வ சேஷித்வ ரக்ஷகத்வாதி விசிஷ்டனான
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஆஜ்ஜா ரூபமாய்க் கொண்டு -அவனுக்கு அதிசய ரூப சகல வியாபாராதிகளுக்கும் உண்டான
ருசி பிரவ்ருதத் யாதிகளுக்கு ப்ரதர்சகமாய் இருப்பது ஓன்று ஆகையாலே –
த்ரை குண்ய விஷயா வேதா -என்கிறபடியே அவனுக்கு லீலா விஷய பூதருமாய்க் கொண்டு ஸ்வம்மாய் இருக்கிற
சகல சேதனரையும் விஷயமாக உடைத்தாய் இருக்கும் –
ஆகையாலே இப்படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய பஹு விதையான லீலைக்கு உபயோகிகளாய்க் கொண்டு
லீலா விஷய பூத சேதன கதங்களான கர்ம விசேஷங்களும் பஹு விதங்களாய் இருக்கையாலே அவற்றில்
சில கர்ம விசேஷங்களாலே பர ஹிம்ஸா பரராய் நாஸ்திகராய் இருப்பாரைக் குறித்து –
சட சித்த சாஸ்த்ர வஸதோபாயோபிசார ஸ்ருதி -என்கிறபடியே அவர்களுக்கு சாஸ்த்ர விஸ்வாசம் பிறக்கைக்கு உறுப்பாக
அவர்களுடைய ருஸ்யனுசாரம் பண்ணி அபிசார கிரியை விதித்தும்
சாஸ்த்ர யுக்த தத் அனுஷ்டான அநந்தரம் தத் பல லாபத்தாலே சாஸ்த்ர விஸ்வாசம் பிறந்து –
அத்தாலே நாஸ்திக்ய ஹேதுவான பாப ஷயமாய் -அந்த கிரியையில் பரஹிம்சாதி நிபந்தமான பயம் பிறந்த அநந்தரம்
பார லௌகிக தத் சாதனங்களை விதித்தும் -அநந்தரம்
அத்தை நிரூபித்து ஸூஹ்ருதத்துக்கு ஹேது ஸூஹ்ருதாந்தரமாக வேணும்-அதுக்கு ஹேதுவாய் இருபத்தொரு ஸூஹ்ருதம் வேணும் –
அப்போது அநவஸ்தை வரும் ஆகையாலும் ஸ்வாதீன பிரவ்ருத்தி இல்லாதவனுக்கு ஸூஹ்ருத யோக்யதை இல்லையாகிலும்
ஸூஹ்ருத ஹேதுவுக்கு சொல்ல ஒண்ணாது என்று சமசயித்தவனுக்கு ஸூஹ்ருத ஹேது பகவத் கிருபை என்னும் இடத்தை பிரகாசிப்பித்தும் –
கிருபா கார்யமான ஸூஹ்ருதத்தாலே-நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷணமான மோக்ஷத்திலே ருசி பிறந்தவனுக்கு
மோக்ஷ தத் சாதனங்களை விதித்தும்
அந்த சாதனங்களினுடைய துஷ்கரத்வ சாபாயத்வ ஸ்வரூப அநனு ரூபமான உபாயத்தை விதித்தும்
உபாய பூதனான வவனுடைய ஸ்வ தோஷ தர்சனத்வ அகார்யகரத்வ உத்துங்கத்வ துர்லபத்வாதிகளாலே இளைத்தவனுக்கு
அவனுடைய வாத்சல்ய ஸ்வாமித்வ ஸுசீல்ய ஸுலப்யங்களை பிரகாசிப்பித்தும்
இப்படி ஆஸ்ரயணீனவனுடைய கார்யகரத்வ ஹேதுவான ஸர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வ அவாப்த ஸமஸ்த காமத்வாதிகளை விதித்தும்
அவற்றினுடைய அபராத ஞான தத் தண்ட தரத்வாதி அனுசந்தானத்தாலே வெருவினவனுக்கு
அவற்றை ரக்ஷண உபயுக்தம் ஆக்குகிற பரம காருணிகத்வத்தை பிரகாசிப்பித்தும்
பகவத் ஆத்மனோ ஸ்வ ஸ்வாமி பாவ சம்பந்த ஞான நிபந்தன பகவத் உபாய வரணத்வ ப்ராப்ய பாவாத் வாத்ததிஷ்ட
விநியோகத்வேநே தத் அந்தர்பூதரானவர்களுக்கு தத் தத் ஞான ஹேதுக கிருபா விதானம் பண்ணியும்
ஆக இவ்வளவும் வரும் தனையும் அவர்களுக்குப் பிறந்த பர்வ க்ரம அனுசந்தானம் பண்ணி கார்யக்ரத்வ ஹேதுவான
ஸ்ரீ பகவத் கிருபையை விதித்துத் தலைக்கட்டுவது ஓன்று ஆகையாலே சாஸ்திரத்துக்கு பிரயோஜனம்
இவற்றில் பந்தகங்களான பலன்களில் நின்றவர்கள் விஷயத்தில் சர்வேஸ்வரனுக்கு லீலா ரசம் நடந்து போருகையாலும்
அல்லாத இடங்களிலே அனுக்ரஹ ரசமும் கிருபா ரசமும் நடந்து போருகையாலும்
பகவத் லீலா ஹேதுத்வமும் பகவத் கிருபா விசுவாச ஹேது த்வமுமாய் இருக்கும்
இவ்வாகார த்வயத்திலும் இருவருக்கும் பிரயோஜனம் உண்டாகையாலே சாஸ்திரத்தாலே
இருடைய பிரயோஜனமும் சொல்லிற்று ஆயிற்று
ஆக இவ்வக்ஷரத்தில் சொல்லுகிற ரக்ஷகத்தினுடைய நிர்ஹேதுகத்வம் ப்ரதிபாதமாயிற்று –
இப்படி சர்வ காரண பூதமாய் -சர்வ ரக்ஷகமாய் -அகார வாஸ்யமான ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்தை
ஸ்ரீ லஷ்மீ ஸ்வரூபம் ஆஸ்ரயித்துக் கொண்டு நிரூபகமாய் இருக்கையாலும்
இதில் சொல்லுகிற ரக்ஷகத்வத்துக்கு புருஷகார த்வாரா இவள் சந்நிதி அபேக்ஷிதமாகையாலும்
இவ்வக்ஷரத்தில் ஏறின விபக்தியில் சொல்லுகிற சேஷத்வத்துக்கு பிரதி சம்பந்தி மிதுனமாக வேண்டுகையாலும்
இவ்வக்ஷரத்திலே ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் அர்த்தமாகச் சொல்லுகிறது
ஸ்ரயத இதி ஸ்ரீ
அநந்யார்ஹவேணாகம்
விஷ்ணோஸ் ஸ்ரீ
தாம் ஸ்ரீ ரிதித்வதுப ஸம்ஸரயணாந் நிராஹு -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பிரபாவானை ஆஸ்ரயித்து இருக்கும் பிரபையைப் போலே பிரிவில் ஸ்திதி இல்லாதபடி
ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்தை ஆஸ்ரயித்துக் கொண்டு தன்னுடைய ஸ்தியாய் இறே இருப்பது –
ஸ்வரூப நிரூபகத்வமாவது -சாதாரண தர்மங்களைக் கொண்டு வஸ்து ஏது என்று சங்கை யுண்டானால் –
இன்ன வஸ்து என்று விசேஷித்துக் கொடுக்குமது –
அதாவது -ஜகத் காரணத்வ -ஜகத் ரக்ஷகத்வ -ஜகத் பதித்வாதிகளாலே வஸ்துவை நிரூபிக்கும் போதைக்கு
அவை ஒவ்பாதிக உத்பாதகருமாய்-ஒவ்பாதிக ரக்ஷகருமாய் –
ஒவ்பாதிக சேஷிகளுமான ப்ரஹ்மாதி சேதனர் பக்கல் கவ்ண ரூபேண வர்த்திக்கையாலே அவை சாதாரணம் ஆகையாலும்
சேஷித்வமும் ஸ்வ நியோகத்தாலே ஸ்வ அங்கீ க்ருத சேதன ப்ரப்ருதி ஸ்ரீ லஷ்மீ பர்யந்தனார் பக்கலிலே
அநு வ்ருத்தம் ஆகையாலும் -அதுவும் சாதாரணம் ஆகையாலும் –
விபுத்வமும் பிரக்ருதியாதிகளிலே ஒவ்பசாரிகமாக விபுத்வ வ்யவஹாரம் நடக்கையாலே சாதாரணம் ஆகையாலும்
இவை நிரூபகம் ஆக மாட்டாது
இனி ஓர் ஆகாரத்தாலும் வ்யக்த்யந்தர சம்பந்தம் இன்றியிலே அகாரார்த்த பூதனுக்கே அசாதாரணமாய் இருப்பது
ஸ்ரீயபதித்தவம் ஆகையாலே தத் பிரதிசம்பந்தியான ஸ்ரீ லஷ்மீ ஸ்வரூபம்
ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்துக்கு நிரூபகமாய் இருக்கக் கடவது என்கை –
ஹேய ப்ரத்ய நீகத்வம் அசாதாரணம் அன்றோ என்னில் -ஸ்ரீ யபதிர் நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந -என்று
நிகில ஹேய ப்ரத்ய நீகமான ஸ்வரூபத்துக்கு ஸ்ரீ யபதித்வத்தை பிரதான நிரூபகமாக ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்கையாலும்
திருமாலின் சீர் -என்று ஸ்ரீ யபதியினுடைய குணங்கள் என்று விசேஷிக்கையாலும்
ஸ்ரீ லஷ்மீ ஸ்வரூபம் நிரூபகமாய் ஹேய ப்ரத்ய நீகத்வாதிகள் தத் விசேஷணமாகக் கடவது
ஆத்மா ச சர்வ பூதாநாம் அஹம் பூதோ ஹரிஸ் ஸ்ம்ருத-அஹந்தா ப்ரஹ்மணஸ் தஸ்ய சாஹமஸ்மிசநாதநீ
அஹந்தயாவி நாஹம் ஹி நிருபாக்யோ ந சித்யதி -அஹம் அர்த்தம் விநா ஹந்தா நிராதாரா ந சித்த்யதி -என்கிறபடியே
சர்வ பூதங்களுக்கும் அந்தராத்மதயா வ்யாப்தமாய் அஹமர்த்த பூதமான ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்திலே
அஹந்தா ரூபேண வ்யபேதஸ்யையுமாய் அஹந்தா ரூபேண நிரூபக பூதையுமாய் இருக்கும் என்கையாலும்
ஸ்ரீ லஷ்மீ ஸ்வரூபம் நிரூபகமாய் இருக்கக் கடவது –
அதுக்கு மேலே — ஸ்ரயத இதி ஸ்ரீ -என்று ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்தை ஆஸ்ரயித்துத் தன் சத்தையாம்படி நித்யனுமாய்-
நிகில ஜெகஜ் ஜனகனுமாய் -இவளோடு நிரபாய பூதனுமாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
சகல ஜெகத் ரக்ஷணார்த்தமாக ஸ்வ அபீஷ்ட விக்ரஹங்களிலே வ்யாப்தனான போது
நித்யத்வ நிகில ஜெகஜ் ஜநநீத்வாதி விசிஷ்டையாய் இருக்கிற இவளும் தந் நிரபாயத்வ ரக்ஷண அர்த்தமாகத் தத் அனுரூப விக்ரஹங்களிலே
உபயோர் வியாப்தி ராகாசாதித்ய யோரிவ-என்றும்
தத் அனுரூப ஸ்வரூப -என்றும்
குணாத்வா லோகவத் -என்றும் சொல்லுகிறபடியே குண த்வாரா அனுபிரவேசித்து
சந்நிஹிதையாய் இருக்கும் என்கையாலே ஸ்ரீ பகவத் ஸ்வரூபம் உள்ள இடம் எங்கும் வியாபிக்கக் கடவளுமாய்
நித்ய ஸ்ரீ என்று ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்தினுடைய இதர வ்யாவ்ருத்தி ஹேது பூதையுமாய்
விஷ்ணு பத்னீ -என்றும் விஷ்ணோஸ் ஸ்ரீ என்றும் ஸ்ரீ பகவத் விசேஷண பூதையுமாய் இருக்கும்
ஆகையால் வ்யக்தி லக்ஷண விசிஷ்டமான ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்துக்கு ஜாதி லக்ஷண விசிஷ்டமான
ஸ்ரீ லஷ்மீ ஸ்வரூபம் நிரூபகம் என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம்-
இப்படி ஸ்வரூப நிரூபக பூதையாம் அளவன்றியிலே
ததஸ்ஸ்ப் புரத காந்திமதீ விகாஸி கமலேஸ்திதா -ஸ்ரீர் தேவி பயஸ்ஸ் தஸ்மா துததிதாத்ருத பங்கஜா
திவ்ய மாலயாமபரதர ஸ்நாதா பூஷண பூஷிதா -பஸ்யதாம் சர்வ தேவானாம் யவ் வக்ஷஸ்தலம் ஹரே —
காஸான்யாத் வாம்ருதே தேவி சர்வ யஜ்ஜமயம் வபு-அத்யாஸ்தே தேவ தேவஸ்ய யோகி சிந்த்யம் கதாப்ருத –
ஸ்ரீ வத்ஸ வஷா
அலர்மேல் மங்கை வுறை மார்பா –இத்யாதிகளில் படியே
ஸ்வா பாவிகமாயும் ஓவ் பாதிகமாகவும் ஸ்ரீ பகவத் சாரூப்யம் பெற்று இருக்கிற நித்ய முக்த விக்ரஹங்களில்
வ்யாவ்ருத்தி தோன்றும்படி திவ்ய மங்கள விக்ரஹ நிரூபக பூதையாகையாலும்
அகலகில்லேன் இறையும்-என்று ஸ்ரீ பகவத் போக்யதையில் ஆழங்கால் பட்டு க்ஷண காலமும் விஸ்லேஷ அசஹையாய்க் கொண்டு
போக்யத்வ குணத்தை அவகாஹித்து அனுபவிக்கும் என்று சொல்லுகையாலும்
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வரூப்ய அனுபாவ-என்று
வைஸ்வரூப்யத்தைச் சிறாங்கிற்று அனுபவிக்கும் என்கையாலும்
ப்ரசக நபல ஜ்யோதிர் ஞான ஐஸ்வரீ விஜய ப்ரதா-ப்ரணத பரண ப்ரேமஷே மங்கரத்வ புரஸ்சரா
அபி பரிமள காந்திர் லாவண்யம் அர்ச்சிர் இந்திரே தவ பகவதஸ் சைதே சாதாராணா குணராசய
அந்யேபி யவ்வன முகாயுவயோஸ் சமாநாஸ் ஸ்ரீ ரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயநதி
தஸ்மிம்ஸ் தவத்வயிசதஸ்ய பரஸ்பரேண ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரமஸ்வ தந்தே -இத்யாதிகளாலே
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் ஸூக்களும் -ஆஸ்ரித அங்கீ கார தத் ப்ரீதியாதிகளும் முதலான ஸ்வரூப குணங்களும்
ஸுந்தர்ய ஸுகந்த்ய லாவண்யாதி யவ்வன முகங்களான விக்ரஹ குணங்களும்
ஸ்ரீ லஷ்மீ தத் பதிகள் இருவருக்கும் ஸ்வாதீனமாகவும் பராதீனமாகவும் யுண்டாய் இருந்ததே யாகிலும்
ஸ்ரீ ரங்க மங்கள வைஜயந்தியாய் இருக்கிற ஸ்ரீ லஷ்மீ பக்கலிலே ஸ்ரீ லஷ்மீ பதியினுடைய குணங்களும்
ஸ்ரீ லஷ்மீ பதியானவன் பக்கலிலே ஸ்ரீ லஷ்மீ குணங்களும் கண்ணாடிப் புறத்தில் போலே அந்யோன்யம் பிரதிபலியா நின்று கொண்டு
பரம்பி மிகவும் இனியவாகா நிற்கும் என்று ஸ்ரீ பகவத் குணங்களுக்கு இவளோடு உண்டான அன்வயத்தையும்
அத்தாலே உண்டான அதிசயத்தையும் சொல்லுகையாலும்
ஸ்ரீ பகவத் குணத்துக்கு நிரூபக பூதையாகையாலும்
ஸ்ரீ யா சார்த்தம் ஜகத் பதிர் ஆஸ்தே
வ்யூஹேஷு சை சர்வேஷு விபவேஷு ச ஸர்வஸ ததா வ்யூஹீ பவத்யேஷா மமசைவாநபாயிநீ
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ -விஷ்ணோர் தேஹ அனுரூபாம் வைகரோத் யேஷாத்மநஸ் தநூம்-என்று
உபய விபூதியிலும் இவளுடைய நித்ய சந்நிதி உண்டாகையாலே ஸ்ரீ பகவத் விபூதிக்கு நிரூபக பூதையாகையாலும்
ஸ்ரீ பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளுக்கு நிரூபக பூதை என்றதாயிற்று
யத் ப்ரூபங்கா பிரமாணம் ஸ்திதி
கடாக்ஷ லாபாய கரோதி லோகான் பராக்ரமம் தே பரிரம்பணாய-முதேவ முக்திம் முர பித்ரமேதத் கதம் பாலபாவ கதாஸ்யகர்த்து-என்றும்
ஜகத் காரணத்வ ஜகத் ரக்ஷகத்வ மோக்ஷ ப்ரதத்வாதிகள் இவளுடைய ப்ரூபங்கா அநந்தரம் பண்ணும் என்றும் –
இவளுடைய கடாக்ஷ லாபாதிகளுக்கு உறுப்பாகச் செய்யும் என்றும் சொல்லுகையாலும்
ஸஹ பத்ந்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் -என்று ஜகத் ரக்ஷணத்துக்கு இவளோடு கூட
பூர்வ ரங்க அனுஷ்டானம் பண்ணினான் என்றும் சொல்லுகையாலும்
அநந்தரம் ஆஸ்ரித அபராதங்களைப் பொறுப்பித்து ரஷிக்க வேணும் என்று இவள் அபேக்ஷிக்க அவர்களை ரக்ஷிக்கும் என்கையாலும் –
காகாதிகள் இவள் சந்நிதியால் உஜ்ஜீவித்தார்கள் என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்கையாலும்
ஆஸ்ரித அங்கீ காரத்துக்கு இவளைப் புரஸ்கரிப்பிக்கும் என்னும் இடம்
ஸ்ரீ குஹ ஸூக்ரீவ விபீஷண ஆதிகள் அளவில் காண்கையாலும்
ரஷிக்கைக்கு இவன் சந்நிதியே அபேக்ஷிதம் என்றதாயிற்று
தாஸோஹம் கமலா நாத
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்
திருமகளார் தனிக்கேள்வன் பெருமையுடைய பிரானார் -இத்யாதிகளால் இவ்விபக்தியில் சொல்லுகிற சேஷத்வத்துக்கு
பிரதிசம்பந்தி மிதுனம் என்றதாயிற்று –
ஆகையால் இப்பதத்தில் சாப்தமாக ஸ்ரீ லஷ்மீ சம்பந்தம் அனுசந்தித்தது இல்லையாகிலும் –
யத்யபி சச்சித்தா–இத்யாதிகளில் சொல்லுகிற குண சித்தி நியாயத்தாலே ஆர்த்தமாக
ஸ்ரீ லஷ்மீ சம்பந்தம் அனுசந்தேயமாகக் கடவது
இவ்வகாரத்திலே சதுர்த்தீ விபக்தியாய் ஸூபாம் ஸூலுக் -என்று விபக்தி லோபமாய் –
ப்ரத்யய லோபே ப்ரத்யய லக்ஷணம் -என்கிற நியாயத்தாலே ப்ரத்யயம் லுப்தமானாலும் ப்ரத்யயார்த்தம் கிடக்கும் என்கையாலே –
சர்வ காரண பூதனாய் சர்வ ரக்ஷகனான ஸ்ரீ எம்பெருமான் பொருட்டு என்கிறது -அதாவது
இந்த சதுர்த்தி தாதர்த்தயே சதுர்த்தியாய் இவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாம் படி சேஷமாய் இருக்கும் என்கை –
சேஷத்வம் துக்க ரூபமாக வன்றோ நாட்டில் கண்டு போருகிறது என்னில் அகார வாஸ்ய வஸ்து பிரதிசம்பந்தி யாகையாலே
ஸ்வரூப சித்தி ஹேதுவாகையாலும் -ஸ்வரூப அனுரூபமாகையாலும் -ஞானம் பிறந்தால் இது தானே புருஷார்த்தம் ஆகையாலும்
அபிமத விஷய சேஷத்வத் ஸூக ரூபமாய் இருக்கும் என்கிறது -இத்தால் அகார வாச்யனுடைய சேஷித்வம் சொல்லிற்று ஆயிற்று –
இதில் விபக்தி வ்யக்தம் இன்றியிலே இருக்கச் செய்தே சதுர்த்தீ விபக்தி என்னும் இடத்துக்கு பிரமாணம் என்
பிரதம விபக்தி ஆனாலோ என்னில்
அப்போது ஆத்ம வாசகமான மகாரமும் பிரதம அந்தமாய் -பகவத் வாசகமான அகாரமும் பிரதம அந்தமானால்
இருவருடையவும் ஐக்ய பரமாதல் சமத்துவ பரமாதல் அத்தனை –
அப்போது சகல ஸாஸ்த்ரங்களுக்கும் வையர்த்தம் வரும் –
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களுக்கு சேராது -எங்கனே என்னில்
பதிம் விஸ்வஸ்ய
பதிம் பதீநாம்
பிரதான க்ஷேத்ரஜ்ஜபதிர் குணேச
கரணாதி பாதிப
ஈஸதே தேவஏச
பரவா நஸ்மி
பகவத ஏவாஹமஸ்மி
தாஸோஹம் -இத்யாதிகளாலே ஸ்ரீ பகவச் சேஷித்வத்தையும் ஆத்ம சேஷத்வத்தையும் சொல்லுகிற
சகல ஸாஸ்த்ரங்களுக்கும் வையர்த்தம் வரம்
இந்த சேஷித்வ சேஷத்வங்கள் தன்னாலே உபய ஸ்வரூபத்துக்கும் சேராது என்னும் இடம் சொல்லிற்று
இவ்வஷரத்தில் சொன்ன கார்யத்வ ரஷ்யத்வங்களோடே விரோதிக்கும்
ஆத்மா நித்யனே யாகிலும் இவனுடைய நித்ய ப்ரஹ்ம விசேஷணத் வத்தாலே விசேஷ த்வாரா கார்யத்வம் சொல்லக் குறையில்லை –
ஆத்மா நித்யனே யாகிலும் இவனுடைய நித்ய ப்ரஹ்ம விசேஷணத்தாலே விசேஷ த்வாரா கார்யத்வம் சொல்லக் குறையில்லை
அஹம் அபி ந மம -பகவத ஏவாஹம் அஸ்மி -என்று ஸ்வாதந்தர்ய நிவ்ருத்தி பூர்வகமாக பகவத் ஏக
பாரதந்தர்யத்தைச் சொல்லுகிற நமஸ் சப்தத்துக்கும் நைரர்த்த்யம் வரும் -சரீராத்ம பாவத்தைச் சொல்லுகிற
நாராயண பத்துக்கும் பங்கம் வரும் -அதில் சதுர்த்தியில் சொல்லுகிற கைங்கர்ய பிரார்த்தனைக்கு உதயம் இல்லை
ஆக சாஸ்திரத்தோடு -சாஸ்த்ர தாத்பர்யத்தோடு -ப்ரதிபாதித்த வஸ்துவோடு -சாஸ்த்ர விதி அனுஷ்டானத்தோடு வாசி அற
சகலத்தோடும் விரோதிக்கையாலே இவ்வகாரம் பிரதம அந்தமாக மாட்டாது -சதுர்த்தி யந்தமாகக் கடவது
ப்ரஹ்மணேத் வாமஹஸ ஓமித்யாத்மாநம் யூஞ்ஜீத -என்று இந்த சேஷத்வத்தை சமர்ப்பண முகேன சொல்லுகிற
ஸ்ருதி வாக்கியத்தில் ப்ரஹ்மணே என்கிற சதுர்த்தி யந்தத்வமும் –
இதன் விவரணமாய் விஷேஷ்யமான நாராயண பதத்தில் சதுர்த்தி யந்தமே இதுக்கு ப்ரமாணமாகக் கடவது
ஆக இவ்வகாரம் சதுர்த்தி அந்தமாய் -அகார வாச்யனுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாம்படி சேஷமாய் இருக்கும் என்றதாயிற்று –
ஆக அகாரத்தினுடைய சப்த சக்தியால் காரணத்வமும்
தாதுவாலே ரக்ஷகத்வமும்
அர்த்தபலத்தாலே ஸ்ரீ யபதித்வமும்
சதுர்த்தி அந்த பத சக்தியால் சேஷித்வமும் சொல்லிற்று ஆயிற்று
இப்பத்தில் சொல்லுகிற காரணத்வ ரக்ஷகத்வ ஸ்ரீ யபத்வ சேஷித்வங்களுக்கு ஆஸ்ரயமான ஸ்ரீ பகவத் ஸ்வரூபம்
ஸ்ரீ லஷ்மீ ஸ்வரூப விசிஷ்டமாய் இருக்கச் செய்தே
இதில் சொல்லுகிற ஸ்ரீ யபதித்வ சேஷித்வங்களில் ஸ்ரீ லஷ்மீ ஸ்வரூபத்துக்கு அந்தர்பாவம் உண்டானவோ பாதி
காரணத்வ ரக்ஷகத்வங்களிலும் அந்தர்பாவம் உண்டாகக் குறை இல்லையே என்னில்
காரணத்வம் ப்ரஹ்மத்துக்கு அசாதாரண தர்மதயா லக்ஷணத்வேந நிர்தேசிக்கப் படுகையால்
வ்யக்தியந்தரத்தில் கிடவாதது ஆகையாலே பிரதான்யேன இவளுக்குக் காரணத்வம் இல்லை
இனி காரணத்வ அந்தர்பாவம் சொல்லும் போது
நிமித்த ரூபேண வாதல் -உபாதான ரூபேண வாதல் -சஹகாரி ரூபேண வாதல் சொல்ல வேணும்
சதேவ சோம்யே தமக்ரே ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்
ஸ்ருஷ்டவ் ஸ்ருஜதி சாத்மாநம்
கார்யே நந்தே ஸ்வ தனுமுகதஸ் தவாம் உபாதானம் ஆஹு -இத்யாதிகளால் நிமித்த உபாதானங்கள் இரண்டும்
அவன் என்று சொல்லுகையாலே அந்தர் பாவம் சொல்ல ஒண்ணாது –
இனி ஸஹ காரி என்ன வேணும் –
அப்போதைக்கு ஸஹ காரிகள் நிமித்த உபாதேனே உபகரண ரூபேண த்ரிவிதமாய் இருக்கும்
அதில் நிமித்த ரூப ஸஹ காரிகளாவன
பட நிர்மாண நிமித்தனான குவிந்தனுக்கு ஸஹ காரிகளான குவிந்தாந்தரங்கள்
உபாதான ரூப ஸஹ காரிகளாவன -பட உபாதான பூத தந்துவுக்கு ரத்ன கிருஷ்ணாதி ரூபேண ஸஹ கரிக்கிற த்ரவ்யாந்தரங்கள்
உபகரண ரூப ஸஹ காரிகளாவன ரத நிர்மாண க்ரியா ஹேது பூதங்களான வாஸ்யாதிகள்
அவற்றில் -மனஸ் ஏவ ஜகத் ஸ்ருஷ்டிம் சம்ஹாரஞ்ச கரோதிய-என்றும்
ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களை செய் எல்லையில் மாயன் -என்றும்
நிமித்த பூதனான ஈஸ்வரனுக்கு தன் சங்கல்ப ஞானம் ஒழிய வேறு ஓன்று அபேக்ஷிதம் அல்ல என்று சொல்லுகையாலும்
அத்விதீயம் என்று நிமித்தாந்தர நிஷேதம் பண்ணுகையாலும்
சதேவ -ஏகமேவ -அஹமேவ -பஹுஸ்யாம்-ஸ்வயமகுருத – -இத்யாதிகளாலே
சச் சப்த வாச்யனான பர வஸ்து ஒழிய உபாதானாந்தரம் இல்லை என்று சொல்லுகையாலும்
ஸ்ருஷ்டிஸ் தித்யந்தகரணீம ப்ரஹ்ம விஷ்ணு சிவாத் மிகாம்-ச சம்ஜாம்யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -என்று
ப்ரஹ்ம ருத்ராதி ரூபேண நின்று ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணுகிறான் ஜனார்த்தனன் ஒருவனுமே-
வேறு ஸஹ காரிகள் இல்லை -என்றும்
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்-என்றும் ஸஹ கார்யாந்தர நிஷேதம் பண்ணுகையாலும்
இவளை நிமித்த உபாதான ஸஹ காரி ரூபேண ஸஹ காரி என்ன ஒண்ணாது –
சித் அசித்துக்களில் இவன் அநு பிரவேசிப்பித்து நின்று ஸ்ருஷ்டிக்கிறாவோபாதி இவள் பக்கலிலே இவன் அனுபிரவேசிப்பித்தாலும்
உபாதானாந்தர நிஷேதத்துக்கு விரோதம் பிறவாதீ என்னில் -அப்படிச் சொல்ல ஒண்ணாது –
அபரிணாமியாய் பரி ஸூத்தமான ப்ரஹ்மத்துக்கு அவற்றினுடைய அனுபிரவேசாபாவத்தில் உபாதான ஹேதுகமான பரிணாமித்வமும்
அஜ்ஞத்வ துக்கித்வ ரூபமான அ ஸூத்தியும் பிரசங்கிக்கும் ஆகையாலே பரிணாமியான அசித்தையும் –
அவித்யா ஆஸ்ரயமான ஆத்மாவையும் அனுபிரவேசிக்க வேண்டுகையாலும்
இவளுடைய அனுபிரவேசாபாவத்தில் இப்படி வருவது ஒரு விரோதம் இல்லாமையாலும்
அதுக்கு மேலே ப்ரஹ்ம ஸ்வரூபத்தை க்ரஹிக்கிற பிரமாணம் தான்
யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே -இத்யாதிகளாலே காரணத்வாதி விசிஷ்டமாக க்ரஹிக்கையாலும்
பஹுஸ்யாம் என்கிற ப்ரஹ்ம சங்கல்ப அநந்தரம் ஜகத்து உண்டாகையாலும்
சங்கல்பாத் பூர்வம் ஜகத்து இல்லாமையாலும்
அஜா மேகம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ச ரூபாம் -என்று
குணத்ரயாத்மிகையான பிரகிருதி பிரஜைகளை உத்பாதிக்கும் இடத்தில் தான் அசேதனம் ஆகையாலே
அசேதனமான ம்ருத்து புருஷ பிரயத்தன சாபேஷமாய்க் கொண்டு கடாதிகளை உத்பாதிக்குமா போலே
மயாத்யஷேண ப்ரக்ருதிஸ் ஸூபதேச சராசரம் -என்கிறபடியே ப்ரஹ்மாதிஷ்டிதமாய்க் கொண்டே
ஜகத்தை யுத்பாதிக்கும் என்று சொல்லுகையாலும்
விஷ்ணோஸ் சகாஸாதுத்புதம் ஜகத் தத்ரைவச ஸ்திதம் -என்றும்
சர்வ காரண காரணே-என்றும் –
விஷ்ணு சப்த வாச்யனான சர்வேஸ்வரன் ஜகத் காரண புதன் என்றும் சொல்லுகையாலும்
இவள் ஸ்வரூபத்தை காரணத்வேன கிரஹிப்பதோர் பிரமாணம் இல்லாமையாலும் –
இவள் சங்கல்பத்தை ஒழியவும் ஜகத்து உண்டாகையாலும் –
இவள் கூடாதபோது ஜகத்து உத்பன்னமாகாது என்கைக்கு ஒரு அனுபபத்தி இல்லாமையாலும்
இவள் காரண பூதை என்று சொல்லுவதொரு பிரமாணம் இல்லாமையாலும்
இவளுக்கு காரணத்வ அந்தர் பாவ சங்கையே பிடித்து இல்லையே
காரண பூத ப்ரஹ்ம ஸ்வரூப நிரூபகத்வேன இவளுக்கு அவர்ஜனீய சந்நிதி யுண்டேயாகிலும்
அனுப யுக்த விசேஷணங்களோபாதி தத் க்ரிய அன்வயம் இன்றியிலே தத் விஷய ப்ரீதியாதிகளிலே அன்வயமாகக் கடவது –
அப்படியே ரக்ஷகத்வமும் -யேந ஜாதாநி ஜீவந்தி-இத்யாதிகளிலே ப்ரஹ்ம லக்ஷணமாகச் சொல்லப்படுகையாலும்
ஈச்வரஸ் சர்வ பூதா நாம்
விஷ்ணுஸ் த்ரை லோக்ய பாலாக
பாலநே விஷ்ணு ருச்யதே
ச ஏவபாதி
விஷ்ணு பால்யஞ்ச பாதிச-இத்யாதிகளாலே விஷ்ணு சப்த வாச்யனான சர்வேஸ்வரனை ரக்ஷகனாகச் சொல்லுகையாலும்
இவளுக்கு ரக்ஷகத்வ அந்தர் பாவம் சொல்ல ஒண்ணாது
இந்த ரக்ஷகத்வ விசிஷ்டமாய் அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்ட பிராப்தி பிரதத்வ லக்ஷணமாய் இருக்கிற
யுபாயத்வம் யாது ஓன்று அதிலும் இவளுக்கு அந்தர்ப் பாவம் இல்லை -எங்கனே என்னில்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
தமேவ சரணம் கச்ச
மாம் ஏவ யே பிரபத்யந்தே
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே
யோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹினோதி தஸ்மை –
தம் ஹி தேவ மாத்ம புத்தி பிரசாதம் முமுஷுர்வை சரணம் அஹம் பிரபத்யே –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்
களை கண் மற்று இலேன்
மூவாத் தனி முதலாய் மூ வு லகும் காவலோன்-இத்யாதிகளில்
வ்யக்த்யந்தர நிஷேத பூர்வகமாக சர்வ காரண வஸ்துவுக்கே உபாயத்தை விதிக்கையாலே
ஜ்யோதிஷ்டோமம் ஸ்வர்க்க ஸாதனமாகா நிற்கச் செய்தேயும் ப்ரயாஜாதிகளான கர்ம விசேஷங்கள்
ஸஹ காரித்வேந சகாயம் ஆகிறாப் போலேயும்-
பக்தி பகவத் பிராப்தி ஸாதனமாகா நிற்கச் செய்தேயும் கர்ம ஞானங்கள் ஸஹ காரித்வேந சகாயம் ஆகிறாப் போலேயும்
இவளுக்கும் ஸஹ காரித்வேந உபாயத்வ அந்தர் பாவம் உண்டானாலோ என்னில்
ஏதேனும் ஒன்றுக்கு சஹகாரித்வம் உண்டாவது –
ஸ்வரூப உத்பத்தி முகேனே ஆதல் –
உத்பன்ன ஸ்வரூப வர்த்தக முகேனே யாதல் –
வர்த்தித்த ஸ்வரூப பல பிரதான முகேனே யாதல் -யாயிற்று
உபாய பூதனான ஈஸ்வரன் -உபாய உபேயத்வே ததி ஹதத்வம் -என்று சித்த ஸ்வரூபனுமாய் -ஏக ரூபனுமாய் –
அமோக சங்கல்பனுமாய் இருக்கையாலே உத்பத்தி யாதிகளில் சஹகாரி சாபேஷதை இல்லாமையாலும்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -என்றும் ஸஹ காரி நிரபேஷமாகச் சொல்லுகையாலும்
இவளுக்கு ஸஹ காரித்வம் இல்லை
ப்ரஹ்ம ஸ்வரூப க்ராஹக பிரமாணம் -யேந ஜாதாநி ஜீவந்தி -யோவை வேதாம்ஸ் ச ப்ரஹினோதி தஸ்மை-இத்யாதிகளாலே
ப்ரஹ்ம ஸ்வரூபத்தை உபாயத்வேன க்ரஹிக்கையாலும்
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற யுக்தி அநந்தரம் சோக நிவ்ருத்தி பிறக்கையாலும்
இந்த யுக்திக்கு முன்பு சோக நிவ்ருத்தி பிறவாமையாலும் –
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட பிராப்தி -நிர்ஹேதுக கிருபா விசிஷ்டனான சர்வேஸ்வரன்
தன்னாலே உப பன்னம் ஆகையாலும்
சர்வ லோக சரண்யாய
சரண்யம் சரண மயாத
சரணவ் சரணம் மயாத
முமுஷுர் வை சரணம் அஹம் பிரபத்யே -என்று சர்வ சரண்யனாகச் சொல்லுகையாலும்
இவள் ஸ்வரூபத்தை உபாயத்வேந க்ரஹிப்பதொரு பிரமாணம் இல்லாமையாலும்
இவளுடைய யுக்தி ஒழிய கேவல பகவத் யுக்தியாலே சோக நிவ்ருத்தி பிறக்கையாலும்
இவள் சஹகரியாத போதும் உபாயத்வம் உப பன்னம் ஆகையாலும்
இவள் ஜகத்துக்கு உபாய பூதை என்று சொல்லுவதொரு பிரமாணம் இல்லாமையாலும்
இவளுக்கு உபாயத்வம் இல்லை என்னும் இடம் சம் பிரதிபன்னம் –
சர்வஞ்ஞத்வாதி குண முகேன கார்யகரன் ஆகிறவோபாதி இவளையும் ஸஹ காரித்வேந அந்தர் பவித்துக் கொண்டு
கார்யகரனாகக் குறை என் என்னில் –
குணங்கள் கார்ய உபயோகி யாகையாலும் குணத்வேந உண்டான அப்ருதக் புத்தி யோக்யத்வத்தாலும்
சைதன்ய அநாதாரத்வத்தாலே கர்த்தந்த்ர சங்க அவகாசம் இல்லாமையாலே நைரபேஷ்ய ஹானி இல்லாமையாலும்
இவள் கார்ய அனுப யுக்தையாகையாலும் த்ரவ்யத்வேந வருகிற ப்ருதக் புத்தி யோக்யத்வத்தாலும் –
சைதன்ய ஆதரத்வ நிபந்தனை கர்த்ருத்வ பிரதிபத்தி யோக்யதையாலே நைரபேஷ்ய ஹானி யுண்டாகையாலும் அதுவும் ஒண்ணாது –
ஆகையாலே சர்வ பிரகாரத்தாலும் இவளுக்கு உபாயத்வ அந்தர் பாவம் இல்லை என்றதாயிற்று –
ஆகையாலே உபாய தசையில் இவளுக்கு உண்டான ஸ்வரூப அந்தர் பாவம் உபாய பூதனானவனை
உபாயத்வேந ஆஸ்ரயிக்கிற சேதனருடைய ஸ்வ அபராத நிபந்தன பய நிவ்ருத்தி ஹேது பூத
புருஷகார உபயோகியாகக் கடவது –
அப்படி இன்றியிலே ஸ்ரீ யபதித்வத்துக்கு பிரதி சம்பந்தி அபேக்ஷை யுண்டாகையாலும் –
தர்மி க்ராஹகமான ஸ்ரீ ரீச பதம் தான் -ஸ்ரயதே இதி ஸ்ரீ -என்று பகவத் ஸ்வரூபத்தை ஆஸ்ரயித்து இருக்கையாலே
ஸ்ரீ சப்த வாஸ்யை ஆனாள் என்று சொல்லுகையாலும்
ஸ்ரீ ஞ் சேவாயாம் -என்கிற தாதுவிலே
கர்த்தரி வ்யுத்பத்தியாலே ஸ்வாஸ்ரயமான பகவத் ஸ்வரூபத்தை சேவித்து இருக்கும் என்கையாலும்
அநந்யார்ஹ வேணாஹம் பாஸ்கரேண பிரபாயதா-என்றும் நிராதாரா ந சித்தயதி-என்றும்
பகவத் ஸ்வரூபத்தை ஆஸ்ரயித்த போது தன் சத்தையாய்-ஒழிந்த போது சத்தை இல்லை என்று சொல்லுகையாலும்
ஸ்ரீ யை ஒழிய அவனுக்கு ஸ்ரீ யபதித்வம் அனுபபன்னம் ஆகையாலும்
விஷ்ணோஸ் ஸ்ரீ
விஷ்ணு பத்னீ
ஹ்ரீஸ் சதே லஷ்மீஸ் ச பத்ந்யவ்
தவ ஸ்ரீ யா
மலராள் மணவாளன்
நாண் மலராள் நாயகன்
திரு மகளார் தனிக் கேள்வன்-இத்யாதிகளாலே இவளை பத்னீத்வேந சேஷ பூதையாய்ச் சொல்லுகையாலும்
ஸ்ரீ யபதித்வத்தில் அன்வயம் உண்டு என்னும் இடம் ஸூ ஸ்பஷ்டம்
அப்படியே ஸ்ரீ யதே இதி ஸ்ரீ -என்று சர்வராலும் ஆஸ்ரயிக்கப்படும் என்று சொல்லுகையாலும்
ஸ்ரீ ஞ் சேவாயாம் என்கிற தாதுவிலே கர்மணி வ்யுத்பத்தியாலே சர்வருக்கும் சேவா விஷய பூதையாகச் சொல்லுமிவள்
தன்னுடைய மாத்ருத்வ ரூபமான சேஷித்வத்தாலே ஆஸ்ரிதரை அபராத உபகரண பூர்வகமாக
ரஷித்துக் கொண்டு போரும் என்று சொல்லுகையாலும்
ஏவம் பூத சேஷித்வத்தாலே இவளுடைய புருஷகாராந்தர நிரபேஷ ஆஸ்ரயணீயத்வம் உப பன்னம் ஆகையாலும்
அஸ்யே சாநா ஜகதோ விஷ்ணு பத்னீ
சகலம் தத்திதவைவ மாதவ
தாஸோஹம் கமலா நாதா
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்
திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
திருமாலை வணங்குவனே -இத்யாதிகளிலே இவளை சேஷித்வத்திலே அந்தர் பவித்துச் சொல்லுகையாலும்
இவளுக்கு சேஷித்வத்திலே அன்வயம் உண்டு என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம்
ஆகையாலே நாராயண பதத்தில் சொல்லுகிற சகல குணங்களும் பகவத் ஸ்வரூப ஆஸ்ரயமாய் இருக்கச் செய்தேயும்
வாத்சல்யாதிகள் ஆஸ்ரயணத்தில் உபயுக்தமாயும்
சர்வஞ்ஞத்வாதிகள் கார்யகரத்வத்திலே உபயுக்தமாயும் ஸுந்தர்யாதிகள் அனுபாவ்யமாயும் போருகிற இடத்தில்
விரோதம் இல்லாதப் போலேயும்
காரணதசையில் சித் அசித்துக்கள் உபாதான உபயோகியாயும் சங்கல்பம் நிமித்த பர்யவாசியியாயும்
ஞானாதிகள் ஸஹ காரியாயும் போருகிற இடத்தில் விரோதம் இல்லாதப் போலேயும்
ஸ்ரீ லஷ்மீ ஸ்வரூபம் அகார வாஸ்யமான ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்தை ஆஸ்ரயித்து இருந்ததே யாகிலும்
காரணத்வ ரஷாகத் வாதிகளில் அன்வயம் இன்றியிலே தத் விஷய அனுமோத புருஷகாரத்வ மாத்ரமாய்
ஸ்ரீ யபதித்தவ சேஷித்வங்களில் அன்வயம் உண்டாம் இடத்தில் விரோதம் இல்லை
இந்த காரணத்வ ரக்ஷகத்வங்களுக்கு சர்வஞ்ஞாதி குண அபேக்ஷை யுண்டாகையாலும் –
உபய விபூதி ரக்ஷகனாகையாலும்
ஸ்ரீ யபதியாகையாலும்
சர்வ ஸ்மாத் பரனாகையாலும்
காரணந்து த்யேய
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் முமுஷுர்வை சரணம் அஹம் பிரபத்யே -என்றும்
காரண வஸ்துவே உபாஸ்யமாகவும் சரண்யமாகவும் சொல்லுகையாலும்
உபாஸ்யமாயும் சரண்யமாயும் இருக்கிற வஸ்துவே அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்ட பிராப்தியைப் பண்ணுகையாலும்
உபாஸ்யமாயும் சரண்யமாயும் இருக்கிற வஸ்துவே உபாயமாய் அறுகையாலும்
இது தான் இதுக்கு முன்பு பிராப்தம் இன்றியிலே மேல் பிராப்தவ்யம் ஆகையாலும்
இந்த உபாஸ்யத்வ சரண்யாத்வ உபாயத்வ ப்ராப்யத்வங்களுக்கு விலக்ஷனா விக்ரஹ அபேக்ஷை யுண்டாகையாலும்
இவ்வகாரத்தாலே-ஸமஸ்த கல்யாண குணாத்மகமும் உபய விபூதி நாதத்வமும் ஸ்ரீ யபதித்வமும்
சர்வ ஸ்மாத் பரத்வமும் உபாஸ்யத்வமும் சரண்யத்வமும் உபாயத்வமும் உபேயத்வமும்
விலக்ஷண விக்ரஹ யோகமும் சொல்லிற்று ஆயிற்று
——————
ஸ்ரீ ராமானுஜ சித்தாந்த ஏற்றம் -தாத்பர்ய அர்த்தம் -பாகவத சேஷத்வம்
ஸ்ரீ சங்கல்ப ஸூர்ய உதயம் -சாவத கரவீராதீன ஸூதே சாகர மேகலா ம்ருத சஞ்சீவநீ யதர ம்ருகமயாண தசமா கதா –
அல்ப அசாரங்கள் மலிந்து இருக்கும் சார தமம் குறைந்தே இருக்கும்
ஞான அனுஷ்டானங்களை ஒழிந்தாலும் பேற்றுக்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் சம்பந்தமே அமைகிறாப் போலே
அவை உண்டானாலும் இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரம் போதுமே –ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி –
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உளவாகப் பெற்றோம் -முழுதும் அவை நமக்கு பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஓன்று தனில் நெஞ்சு செல்லாமை பெற்றோம் -பிறர் மினுக்கம் பொறாமை இலாப் பெருமையும் பெற்றோமே
ஸ்ரீ மணவாள மா முனிகள் ஸ்ரீ ஸூக்தி
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது -சம்பந்த ஞானத்தை உணர்ந்து
த்வம் மே என்றால் அஹம் மே என்னும் விரதத்தை விட்டு ஒழிந்தால்
பொன்னுலகு ஆளீரோ-புவனா முழு ஆளீரோ -என்னும்படு அனுபவிக்கப்ப் படுவோமே –
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே
———————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply