ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -பதினொன்றாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை
அன்று காத்த அம்மான் அரக்கரை
வென்ற வில்லியார் வீரமே கொலோ
தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் –11-1-1-பிரவேசம் –

பஷிகளின் காலிலே விழுந்து என்னையும் அவனையும் சேர விட வேணும் என்றாள்- கீழ்த் திரு மொழியிலே –
அவை இது செய்தன வில்லை –
அதுக்கு மேலே
தென்றல் தொடக்கமான பாதக பதார்த்தங்களின் கீழே-ஜீவிக்கப் போகாமையாலே
ஜீவனத்தில் நசை அற்று நோவு பட்டுச் சொல்லுகிற ஸ்ரீ பிராட்டி பாசுரத்தாலே தம் தசையைப் பேசுகிறார் –

——————–

குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ–11-2-1- பிரவேசம் –

என் செய்கேன் -என்ற இடத்திலும் இரங்காதே பாதக பதார்த்தங்கள் மிகைத்தன –
ரஷகன் ஆனவன் கை விட்டான் –
என் கார்யம் ஸ்வ யத்ன சித்தமாய் இருந்தது –
எனக்கு இனி ரஷகராக வல்லார் உண்டோ – என்கிறார் –

———————

மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப்
பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கிது காணீர்
என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1- பிரவேசம் –

பிரிந்தவன்று தொடங்கி பாதக பதார்த்தங்களாலே நோவு பட்டு அத்தாலே மிகவும் அசந்நையாய்-
நம்மை உபாஸ்ய கோடியிலே நினைத்து -அவன் தான் – வேணுமாகில் நம்மை உபாஸித்து வந்து பெறுகிறான் – என்று
நாம் தலைமை கொண்டாடி இருந்தது அமையும் –
அவனை உபாச்யனாய்க் கொண்டு-நாம் உபாஸித்து போரும் இத்தனை என்று அதிலே ஒருப்பட்டார் கீழ் –

காமன் கணைக்கு ஓர் இலக்கமாய் -என்கிறபடியே இத்தனை பொறுப்பான் ஒருவன் அல்லனே அவன் –
அநந்தரம்
வந்து முகம் காட்டி அரை ஷணம் தாழ்க்கும் காட்டில் இத்தனை சாஹசத்தில் ஒருப்படக் கடவதோ
இத்தலை பெறுகைக்கு எதிர் சூழல் புக்கு திரிந்தேன் நான் அல்லேனோ –
என்னது அன்றோ கிலேசம் –
ஜன்ம வ்ருத்தாதிகளாலே குறைய நின்றார் ஆகிலும் நம்மை ஒழிய செல்லாமை உண்டானால்
பின்னை அவர்களை ஒழிய ஜீவிப்பேனோ நான் –
ஆஸ்ரித ஸ்பர்ச த்ரவ்யம் ஒழிய எனக்குத் தாரகம் உண்டோ -என்று
அவன் செல்லாமை அடங்கலும் காட்ட அவற்றை அடைய அனுசந்தித்து
பிபாசி தனுக்கு குடித்த தண்ணீர் தாக சாந்திக்கு உடலாகி தவிர்ந்து-மேன்மேல் என விடாய்க்கு உடல் ஆமா போலே
அவ்வனுசந்தானம் தான் மேலே விடாயைப் பிறக்க –
அத்தாலே போர நோவு பட்டு-பின்னையும் அவனைக் கிட்டி நித்ய அனுபவம் பண்ணப் பெற்றிலோமே யாகிலும்
இவ்விடாயும் த்வரையும் எல்லாம் இவ்விஷயத்தில் ஆகப் பெற்றோம் இறே -என்னும்
இவ்வளவால் வந்த திருப்தியோடு தலைக் கட்டிற்றாய் இருக்கிறது –

———————

நிலையிடமெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலைகடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே –11-4-1-பிரவேசம் –

கார் முகில் வண்ணரை கண்களால் காணலாம் கொலோ -என்றும்
நெஞ்சுடலம் துயின்றால் நமக்கினி நல்லதே -என்றும் இவர் வெறுக்க –
நமக்கு உள்ள வெறுப்பு உண்டோ உமக்கு
உம்மைச் சுட்டி நாம் பிறந்த பிறப்பு அறியீரோ -யென்ன –
பரித்ராணாய சாதூனாம் – என்கிறபடியே
நமக்காக இறே வந்து பிறந்தது -யென்று ஹிருஷ்டராய்-அவனை ஆஸ்ரயிக்கப் பார் -யென்று
திரு உள்ளத்தை நோக்கி அருளிச் செய்கிறார் –

அங்கன் இன்றிக்கே
ஸ்ரீ திருவாலியிலே வந்து சந்நிஹிதனாகப் பெற்றோம்
அங்கே புஷ்பாதிகளைக் கொண்டு ஆஸ்ரயிக்கப் பெற்றோம் -யென்று இவர் ஆஸ்வசித்த படியைக் கொண்டு
நம்முடைமையான இஜ் ஜகத்தை விட மாட்டாமை வந்திருக்கிற இந்த அர்ச்சாவதாரமேயோ –
நாம் விபூதி ரஷணார்த்த மாகவும்
அவர்கள் விரோதிகளை நிரசித்து அவர்களுக்கு காட்சி கொடுக்கைக்காவும் அன்றோ நாம் அவதரித்தது –
அந்த அவதாரங்களையும் அனுசந்தித்து தரிக்க மாட்டீரோ யென்று தன் அவதாரங்களைக் காட்டிக் கொடுத்தான் –
அவற்றை அனுசந்தித்து
ஹ்ருஷ்டராய்-அந்த ஹர்ஷம் தன்னளவிலே அடங்காமையாலே பரோபதேசத்தில் ப்ரவர்த்தர் ஆகிறார் –
அவன் தன்னை அழிய மாறியும் ஆஸ்ரிதரை கை விடாதவனாய் இருந்தான் – இனி நமக்கு ஒரு குறை உண்டோ -என்கிறார் –

————————-

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே —-11-5-1- பிரவேசம் –

கீழில் திரு மொழியில் ஆஸ்ரித அர்த்தமாக அநேக அவதாரங்களைப் பண்ணினத்தை அனுசந்தித்து –
அவ்வாஸ்ரித பாரதந்த்ர்யத்திலே ஈடுபட்டு –
தாமான தன்மை அழிந்து –
வேறே இரண்டு பிராட்டிமார் பேச்சாலே –
ஒருத்தி மேன்மையை அனுசந்திக்க –
ஒருத்தி சௌலப்யத்தை அனுசந்தித்து -இவனுடைய தாழ்வுகளைச் சொல்ல
அப்படி தாழ்வுகள் செய்தானே யாகிலும்
ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு மேலானவன் கிடாய் இப்படிச் செய்கிறான் -என்று
இருவர் பேச்சாலுமாக-அவனுடைய மேன்மையையும் சௌலப்யத்தையும்-பேசுகிறார் –

இரண்டு ஸ்ரீ பிராட்டிமார் தசை ஏக காலத்தில் கூடும்படி என் –
என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க
தேச விசேஷத்திலே அநேக சரீர பரிக்ரஹம் ஏக காலத்தில் கூடும் படி எங்கனே
அப்படியே இவரையும் பார்த்து அருளினால் -ஸ்ரீ எம்பெருமான் கடாஷித்து அருளினால் -கூடும்
நதே ரூபம் நச ஆகாரோ ந ஆயுதானி ந சாஸ்பதம் ததாபி புருஷாகாரோ பக்தா நாம் த்வம் பிரகாசசே-
உன் ஸ்வரூப ரூப குண விபூதிகள் அடைய உனக்கு இல்லையாய்த் தோற்றுவதி -என்ன –
இப்படி இதடையே தனக்கு இன்றிக்கே இருந்தால்
இத்தடைய ஆருக்கு என்னும் அபேஷையில்
பக்தா நாம் –
ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் –
இப்படி ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் என்னும் இடம் எங்கே கண்டோம் என்னில்
த்வம் பிரகாசசே –
தூத்ய சாரத்யாதிகளிலே நீயே காட்டுவுதி
இதடைய ஆஸ்ரித அர்த்தமாக பெறுகையாலே நீ உஜ்ஜ்வலனாகா நிற்புதி -என்னவுமாம் –

இப்படி
பரத்வத்தையும்
அவதாரங்களையும்
அவதரித்துப் பண்ணும் வியாபாரங்களையும்
இவ்விடத்தே உண்டான மனுஷ்யத்வே பரத்வத்தையும் –-அனுசந்தித்து
தனக்காக்கிக் கொண்டு இருக்கும் இவ்விருப்பையும்
தனக்கு உதவுகைக்கும்
உறுப்பாக வந்து அவதரிக்கும் அவதாரத்தையும் அனுசந்தித்து
இப்படி அவதரித்து வ்யாபரிக்கிறதும்-ஆஸ்ரித ரஷண அர்த்தமாக –
அவன் பரா அவஸ்தனாய் இருக்கிறதும் ஆஸ்ரிதர் குறை தீர்க்கைக்காக –
இப்படி இது அடைய ஆஸ்ரித அர்த்தமான பின்பு
நமக்கு ஒரு குறை உண்டோ -என்று அனுசந்தித்த இத்தால்
பிறந்த ப்ரீதி பிரகர்ஷம்-ஓர் ஆஸ்ரயத்தில் அடங்காது இருக்கையாலே
அந்தபுர பரிகரமாய்-sதங்களில் தோழமையாய் இருப்பார்
ஒருவருக்கு ஒருவர்
பரத்வ அவதாரங்களில் இரண்டிலும் தனித் தனியே ஊன்றி அவற்றை அனுசந்தித்து
களித்துப் பேசுகிற இவர்கள் பேச்சாலே தாம் அவற்றையே பேசி அனுபவிக்கிறார் –

இவ்வாத்மாவின் ஸ்வரூபத்தை அனுசந்தித்தால்
தனாக்காய் இருக்கை -ஸ்வரூப விரோதியாய் –
அவனதாய் இருக்கும் இருப்பு -ஸ்வரூப அனுரூபமாய் – இருக்குமா போலே
அவன் ஸ்வரூபத்தை அனுசந்திக்கப் புக்காலும்
அதடைய ஆஸ்ரித அர்த்தமாக இருக்கும் இருப்பை அனுசந்தித்தால்
ஆனந்த நிர்பரராய் களிக்கும் படியாய் இருக்கும் இறே-
இப்படி பரத்வ சௌலப்யங்கள் இரண்டையும் மாறி மாறி அனுபவிக்கிறார் –

———————

மைந்நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்
மெய்ந்நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர்
எந்நன்றி செய்தாரா வேதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்
செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள் அண்டனையே யேத்தீர்களே –11-6-1- பிரவேசம் –

ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய வைலஷண்யத்தையும் சௌலப்யத்தையும் சேர
ஓர் ஒன்றே கரை காண ஒண்ணாத இரண்டையும் சேர அனுபவித்தார் –
அநந்தரம்
போதயந்த பரஸ்பரம் -பண்ணுகைக்கு சிலர் தேட்டமாயிற்று
அதுக்கு ஆவாரார் -என்று லோகத்தில் ஆராய்ந்தார் –
அவர்கள் அடைய ஸ்ருஜ்யத்வ -கர்ம வஸ்யத் வாதிகளால் தங்களோட்டையரான
இதர தேவதையை ஆஸ்ரயிப்பாரும்- ஸ்துதிப்பாருமாய்ச் செல்லா நின்றது –
இவர்கள் இப்படிச் செய்கிறது -ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய
ஸ்ரீ சர்வேஸ்வரத்வ விஷயமாயும்
சௌலப்ய விஷயமாயும்
பிராப்தி விஷயமாயும்-உள்ள ஜ்ஞானம் இல்லாமை என்று பார்த்து –
கெடுவிகாள்-நீங்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகளோடு-உங்களோடு வாசி இல்லை காணுங்கோள்
அவனுக்குக் குழைச் சரக்காம் இடத்தில் –
ஆனபின்பு அவனையே ஆஸ்ரயிக்கப் பாருங்கோள்- என்கிறார் –

———————–

நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானைப்
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையைக்
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே —11-7-1-பிரவேசம் –

ஸ்ரீ சர்வேஸ்வரன் தன்னை அனுபவிக்கக் கொடுத்த கரணங்களைக் கொண்டு வ்யர்த்தமே திரிகிறவர்களை –
அவனுடைய செயல்களை அனுபவியாதவர்கள் கரணங்கள் – ஒன்றும் அன்று – என்கிறார் –

———————–

மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ—11-8-1-பிரவேசம் –

அடியிலே வாதி பிரதிவாதிகளாய் யாயிற்று இழிகிறது –
இவர் தாம் ஒரு வார்த்தை சொன்னால் இறே-அவனுக்கு மறு மாற்றம் உள்ளது –
இவர் சொன்ன வார்த்தை ஏது என்றல் –
இவ்வாத்ம வஸ்து வானது அங்குத்தைக்கு-
ஸ்ரீ கௌஸ்துபத்தோ பாதியும் -பூணார மார்வனை –
ஸ்ரீ நாய்ச்சியார் திரு முலைத் தடத்தோபாதியும்-தட மலர்க் கண்ணிக்காய் –
ஸ்ப்ருஹ விஷயமுமாய்
போக்யமுமாய் இருந்தது –
அநாதி காலம் இழந்து அதபதிக்க வேண்டுவான் என் -என்று கேட்டால்
சொல்லலாவன சில வார்த்தைகள் உள-
அவ்வார்த்தைகள் தான் என் என்னில்
அங்கைத் தலத்திடை -இத்யாதி -என்றும் ஒக்க ஸ்ரீ ஈஸ்வரன் முகத்தில்
விழியேன் என்று பிரதிஞ்ஞையைப் பண்ணி
நம் பக்கலில் விமுகனாய்
சப்தாதிகளிலே பிரவணனாய்
நம் பக்கலிலே அத்வேஷமும் இன்றிக்கே
போருகையாலே சம்சரித்துப் போந்தான் -இது ஒரு வார்த்தை –

அநித்யம் சுகம் லோகம் -இத்யாதி
சம்சார பீதனாய்க் கொண்டு
நம் பக்கல் புகுராதே
நம் பக்கல் நிரபேஷனாய்
கர்ம சாபேஷையைப் பண்ணிப் போந்த
அநாதி கால வாஸிதமான புண்ய பாப ரூபமான கர்ம பரம்பரை யானது
ஜன்ம பரம்பரைகளிலே மூட்ட -அவ் வழிகளாலே சம்சரித்துப் போந்தான் –

இனி
கர்த்தா காரயிதா -என்றும்
கர்த்தா சாஸ்த்ரத்வாத் -என்றும்
சாஸ்திர பலம் பிரயோக்தரி -என்றும்
சொல்லுகிறபடியே
கர்த்த்ருத்வ போக்த்ருத்வங்கள்
சைதன்ய க்ருத்யமாய் யாயிற்று இருப்பது –
அது இல்லாமையாலே சம்சரித்துப் போந்தான் என்றாப் போலே சொல்லலாம் –
இவை உனக்கு வார்த்தை அல்ல –

ஆகிலும் சொல்லுவன்-
இது பக்நமாம் படி -இவற்றுக்கு மேலே உத்தரம் சொல்லுவன்-
எங்கனே என்னில் –
ருசி இல்லை என்றே முதல் வார்த்தை –
ருசி அசுருசிகளுக்கும் அடி ஏது என்னில் -மனஸ்ஸாயே யாய் இருப்பது –
அந்த மனஸ்ஸூ நீ இட்ட வழக்கு அன்றோ –
சர்வஸ் யசாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்ட –
தீ மனம் கெடுத்தாய் –
மருவித் தொழும் மனமே தந்தாய் –
என்று சொல்லுகிறபடியாலே-ருசி ஜனகன் நீயான பின்பு
ருசி இல்லை என்று சொன்ன இடம் வார்த்தை இல்லை –

அநந்தரம்
கர்மம் அடியாக சம்சரித்து போந்தான் என்னாதே –
கர்ம ஸ்வரூபத்தைப் பார்த்தால் -அது கிரியா ரூபம் ஆகையாலே அப்போதே நசிக்குமே –
கிரியாவான் மறக்குமே –
அது நிக்ரஹ அனுக்ரஹ ரூபேண உன் திரு உள்ளத்தில் கிடந்து அன்றோ அனுபாவ்யம் ஆவது –
உனக்கு நிவாரகர் இல்லாமையாலே -அத்தை ஷமிக்கத் தீருமே –
ஆகையால் அதுவும் வார்த்தை அல்ல –

இனி
கர்ம கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சைதன்ய க்ருத்யம்-
அது இல்லாமையாலே சம்சரித்துப் போந்தான் -என்னதுவும் வார்த்தை அல்ல –
உனக்கு இது சரீரதயா பரதந்த்ரம் ஆகையாலே –
ஸ்வ தந்திர க்ருத்யமான கர்த்ருத்வம் பரதந்த்ரனுக்கு கூடாமையாலே -அதுவும் வார்த்தை அல்ல –
சரீர ரஷணம் சரீரி அன்றோ பண்ணுவான் –
சம்பந்தத்தையும் மறந்தாயோ -என்கிறார்

ஆன பின்பு உன்னுடைய அநாதாரமே ஹேது –

இருவரும் என் நினைத்து சொன்னார்கள் -என்னில் –
அவன் -கர்மத்தைப் பற்றி நின்று வார்த்தை சொன்னான் –
இவர் ப்ரஹ்மத்தை பற்றி நின்று அத்தை அழித்தார்-
அவன் வேதத்தை பற்றி நின்று வார்த்தை சொன்னான் –
இவர் வேதாந்த தாத்பர்யத்தைப் பற்றி நின்று அத்தை அழித்தார் –
அவன் ஸ்வரூபத்தை பற்றி நின்று வார்த்தை சொன்னான் –
இவர் ஸ்வரூபய தாம்யத்தைப் பற்றி நின்று அத்தை அழித்தார் –
அவன் பாரதந்த்ர்யத்தைப் பற்றி நின்று சாத்திய உபாயத்தை பற்றி நின்று சொன்னான்
இவர் பாரதந்த்ர்யா காஷ்டையைப் பற்றி நின்று
சித்தோ உபாயத்தைப் பற்றி
அத்தை அழிக்கிறார்-
இது காணும் உபாசகனில் காட்டில் பிரபன்னனுக்கு ஏற்றம் –
மக்கள் தோற்றக் குழி -தொடங்கி
மேல் பாட்டு குறையும் இவற்றைச் சொன்னபடி –

மெய்நின்ற -இத்யாதி
போக்யதை அளவிறந்தது
அனுபவித்து வாழுங்கோள் நாடடைய -என்கிறார் –
மெய்நின்ற பாவம் அகல –
அனுபவித்து அல்லது நசியாத படியான பாபமானது போக -என்னுதல் –
தேஹோபாதிகமானது அகல -என்னுதல் –
திருமாலை –
விரோதி என்று பேர் பெற்றவை அடைய போக்குவிக்கும் பிராட்டியை அருகே உடையவனை –
கைநின்ற-
எப்பொழுதும் கை கழலா நேமியானாய் இருக்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய போக்யதை மிக்கு இருந்துள்ள திருவடிகளை -என்னுதல்
ஸூலபமான திருவடிகளை சிரஸா வஹித்து -என்னுதல்
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஐஸ்வர்ர்ய ப்ரகாசகமான ஸ்ரீ திரு வாழியைக் கையிலே உடையவன் ஆனால் போலே
சேஷத்வ பிரகாசகமான வேலை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தையும்
பாடுவது ஆடுவது ஆங்கோள்-
விரோதி போக்குகையில் பணி இல்லை –
அது தன்னடையே போம் –
மேல் உள்ளத்து உங்களுக்கு ஹர்ஷமே –

ஸ்ரீ பகவத் விஷயத்தில் அந்வயியாதார் உடைய கரணங்கள்
அவர்கள் அவற்றைத் தங்களுக்கு உறுப்பு என்று நினைத்தார்களே யாகிலும் –
அவை அவர்களுக்கு அடைத்தவை அல்ல வென்றும்
பகவத் ப்ராவண்யம் இல்லாதார் முதலிலே சேதனர் அல்லர் என்றும் சொன்னார் கீழில் திரு மொழியில் –
இவர் தாம் பிறர் குறை அறிந்து பரிஹரிப்பாராய் நின்றார் –
நாம் நின்ற நிலை ஏது என்று ஆராய்வோம்
இவர் தாம் தம் குறை கிடக்க பிறர் குறை பரிஹரிக்கப் பார்க்கிறது –
தான் குறைவற்றவராக நினைத்து இருந்தோ –
அன்றிக்கே –
தம்முடைய கிருபா குண ப்ராசுர்யத்தாலேயோ –
தயாவான்களாய் இருப்பார் தம்தாம் குறை கிடக்கச் செய்தேயும்
பிறர் குறையைப் பரிஹரிக்கப் பார்ப்பார்கள் இறே –
ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ பிராட்டியைப் பிரிந்து
தடுமாறி
கண்ணாஞ்சுழலை இட்டு வாரா நிற்கச் செய்தேயும்
ஸ்ரீ மகா ராஜர் இழவைக் கண்ட பின்பு அவற்றை மறந்து
அத்தைப் பரிஹரிக்கப் பார்த்தார் இறே –

இவை கிடக்க –
இவர் தாம் நின்ற நிலையை இவருக்கு அறிவிப்போம் –
சம்சாரத்தின் உடைய பொல்லாங்கை அறிவித்தால்
இதுவே அமையும் என்று அறிந்தார் ஆகில் இங்கே வைக்கிறோம்
இதில் பொருந்தாத படி ஆனார் ஆகில் அமர்ந்த நிலத்திலே கொடு போகிறோம் -என்று பார்த்து
பிறரை இகழ்கிற நீர் தான் நின்ற நிலையைப் பார்த்து காணீர் -என்ன
தம்மைப் பார்த்தார் –
ஜ்ஞான லாபம் உண்டே யாகிலும்
அவன் உபேஷித்த அன்று இவ்வருகே போகைக்கும் உடலாய்
அவன் ஆதரித்த போது அவ்வருகே போகைக்கும் உடலாம் படி
பொதுவான நிலத்திலே
தேக சம்ஸ்ருஷ்டராய் இருக்கிற இருப்பைக் கண்டார் –
குறைவற்றார் இருக்கிற் கோடியிலேயுமாகப் பெற்றது இல்லை –
இக்குறை நெஞ்சில் படாதே போது போக்கி இருக்கிறவர்கள் கோடியிலேயுமாகப் பெற்றது இல்லை-

இது தான் –
தேஹமாயும்
இந்த்ரியமாயும்
போக்யமாயும்
பந்தகமாயும் -தோற்றி இருந்தது –
இது தான் அசத் கல்பபாம் படி இறே பிறந்த ஜ்ஞானம் –
அந்த ஜ்ஞானம் தான் ஆறி இருக்கைக்கு உடல் அன்றிக்கே –
த்வரிக்கைக்கு உடலாய் இருக்கும் இறே –
புற்றின் அருகே பழுதை கிடந்தாலும் -பாம்பு -என்றே பயம் அனுவர்த்திக்கும் இறே
ஆகையால் இது தான்
அவசியம் பரிஹரித்து கொள்ள வேண்டுவது ஒன்றாய் இருக்கிற படியும் –
தம்மால் பரிஹரித்து கொள்ள ஒண்ணாத படியாய் இருக்கிற படியும் –
அவனையே கால் கட்டி பரிஹரித்துக் கொள்ள வேண்டி இருக்கிற படியையும் –
அனுசந்தித்து –
த்வத் அனுபவ விரோதியான தேக சம்பந்தத்தை
அறுத்துத் தந்து அருள வேணும் என்று
ஸ்ரீ திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகிறார் –

————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: