ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி /ஸ்ரீ அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதியும் / ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் அருளிச் செய்த – திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியும் –முதல் பத்து —

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -1-

உயர்வே பரன்-படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—–1

———–

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

தத்ராதி மே து சதகே தஸகே ததாத் யே சம்யக் குணா க்ருதி விபூதி சமேத மீசம்
அத்யக்ஷயந் பரமனுக்ரஹதஸ் ததீயாத தத்தாஸ்யா யோஜிதமநா சடஜித் பபூவ -1-உயர்வற

தத்ர ஆதி மே து சதகே –ஆயிரத்தில் முதல் பத்தில்
தஸகே ததாத் யே -முதல் தசகத்தில்
சம்யக் குண ஆக்ருதி விபூதி சமேதம் -குண ஐஸ்வர்ய விசிஷ்டன்
ஈசம்–பரத்வம்
சடஜித் பபூவ –சடத்தை ஜெயித்தவர் இப்படி ஆனார்
சம்யக்-சமேதம் ஈசம் -கூடி -விசிஷ்ட குண ஆகிருதி விபூதி சமேதன் -ஆகிருதி செல்வம்
ஈசம் -பரத்வம் -ஈசிதவ்ய மற்றவர்கள்

———————-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி

இப்படி பத்து ஸ்லோகத்தாலே திருவாய் மொழியின் தாத்பர்யத்தை
சம்பாவித சங்கா பரிகார பூர்வகமாக நிஷ்கர்ஷித்து அருளி –
அநந்தரம் -அடைவிலே தத் தத் தசகார்த்தத்தை அருளிச் செய்யக் கடவராய்
பிரதமம் பிரதம சதகத்தில் பிரதம தசககாதார்த்தத்தை ஸங்க்ரஹித்து அருளுகிறார் –

நிஸ் ஸீமோத் யத் குணத்வாத்
அமிதரசதயா
அனந்த லீலாஸ் பதத்வாத்
ஸ்வாயாத்தா சேஷ சத்தாஸ்தி தியதாநபி தாவைபவாத்
வைஸ்வரூப்யாத்
த்ர்யஷ ப்ரஹ்மாத்ம பாவாத்
சத சத வகதே
சர்வ தத்வேஷூ பூர்த்தே
பஸ்யன் யோகீ பரம்
தத் பத கமலநதாவந்வ சாதி ஆத்ம சித்தம் -2-உயர்வற

1-நிஸ் ஸீமோத் யத் குணத்வாத் -உயர்வற உயர் நலம் உடையவன் –
இதோபி உத்க்ருஷ்டம் இல்லாதபடி உத்க்ருஷ்ட கல்யாண குணங்களை உடைத்தாகையாலும் –

2-அமிதரசதயா-முழு நலம்-முழு உணர்வு- -நிரவதிக ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலும்-

3-அனந்த லீலாஸ் பதத்வாத் -நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்-பாதாளம் ஆரப்ய-பரமபத பர்யந்தமாக
உண்டான சேதன அசேதன விபூதிகன் ஆகையாலும்

4-5-6-ஸ்வாயாத்தா சேஷ சத்தாஸ்தி தியதநபி தாவைபவாத் -இது நாம் அவன் இவன் யுவன் -என்றும்
அவரவர் தமதமது-என்றும் -நின்றனர் இருந்தனர் -என்றும் உள்ள மூன்று பாட்டுக்கள் அர்த்தம் –

விவித நிர்தேச நிரதிசயமான ஸமஸ்த வஸ்து ஸ்வரூபம் பகவத் அதீனம் என்றும்

எம்பெருமான் சகல தேவதாந்தர அந்தராத்மதயா ஆராத்யனாய் -சகல பல பிரதனாகையாலே ரக்ஷணமும் தத் அதீனம் என்றும்

சேதன அசேதன ஸமஸ்த வஸ்து ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் தத் சங்கல்ப அதீனம் என்றும் காதாத்ரயத்திலே சொல்லுகையாலே
ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவிருத்தி பேதனாகையாலும்-

7-வைஸ்வரூப்யாத்–திட விசும்பு எரி வளி ஜகத்துக்கும் தனக்கும் ஐக்கியம் சொல்லுகிற குத்ருஷ்ட்டி பக்ஷம் அஸங்கதம் என்று
தோற்றும்படி தான் சரீரியாய் ஜகத்தை சரீரமாக யுடைத்தாகையாலும்

8-த்ர்யஷ ப்ரஹ்மாத்ம பாவாத் –அரன் அயன் என -இந்த ஜகத்துக்கு நிர்வாஹகத்வேந சங்கிதரான
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு அந்தராத்மாவாய் நிற்கையாலும்

9-சத சத வகதே -உளன் எனில் உளன் -ஏவம் பூதனான ஈஸ்வரனை இல்லை என்று ஸூந்ய வாதிகளாலே
சொல்லி முடிக்க ஒண்ணாத படி -அவஸ்தா பேதத்தாலே சத சச்சப்த வாச்யனாய் அறியப்படுகையாலும்

10-சர்வ தத்வேஷூ பூர்த்தே-பரந்த தண் பரவையுள்-செத்தான் சரீரைக தேசத்திலே நின்று ஞானத்தால் எங்கும் வியாபிக்கும் படி இன்றிக்கே –
சர்வ வஸ்துக்களிலேயும் ஸ்வரூபேண எங்கும் ஓக்க வியாபித்து நிற்கையாலும்

பஸ்யன் யோகீ பரம் -எம்பெருமானை சர்வ ஸ்மாத் பரன் என்று சாஷாத் கரியா நின்று கொண்டு
யோகீ ஸ்ரேஷ்டரான ஆழ்வார்
சாஷாத் கரித்து-பிணம் கிடக்க மணம் கொள்வார் இல்லை -யோகம் வேண்டாம் உய்யக் கொண்டார்

தத் பத கமலநதாவந்வ சாதி ஆத்ம சித்தம் -தம்முய திரு உள்ளத்தைக் குறித்து
திருவடியில் கொக்குவாயும் படு கண்ணியமாக திரு உள்ளம் சேர்ந்தவர்-
அவனுடைய திருவடி மலர்களைத் தொழுது எழு என்று பிரதம சதகத்தில் அருளிச் செய்தார் என்கிறார் –

சொல் பணி—சொற்கள் ஆழ்வாருக்கு கிஞ்சித் கரிக்க போட்டி போட்டுக் கொண்டு வருமே –
திருவுடைய சொற்கள்–வாசிகமாக அங்கு அடிமை செய்தான்

—————————

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -2-

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து-——-2-

————-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

ஸம்ஸாரிணோ அப்யநு ஜிக் ருஷூரசவ் தயாளு
அல்பாஸ்திரேதர புமர்த்த ருசிம் நிரஸ்யந்
தத் த்யாக பூர்வ ஹரி பக்தி ஸூதாம் புதாநாம்
உத்தீபி நீமுபதி தேச முநிர் த்விதீய-2-வீடுமின் –

———————–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி-

ஸ்வாமித்வாத்
ஸூஸ்திரத்வாத்
நிகில நிருபதி ஸ்வாத்ம வித் க்ராஹ்ய பாவாத்
தாத்ருக் சர்வ அநு கூல்யாத்
ஸ்யவ நவதி தர ப்ராப்ய வைஷம்யவத் த்வாத்
சர்வத்ர பஷ பாதாத்
ஸூப விபவ தயா
மாநசாத்யர்ச்ச பாவாத்
சங்கோச உன்மோசகத்வாத்
ஜக தயநதயா தயோபாதிசத் சர்வ யோக்யம் –2-வீடுமின்

1-ஸ்வாமித்வாத்–உம்முயிர் வீடுடையான் -எல்லாருக்கும் ஸ்வாமி யாகையாலும்

2-ஸூஸ்திரத்வாத்-மின்னின் நிலையில-ஸ்வ வியதிரிக்தர் எல்லாரும் அஸ்திரராய்-தான் ஒருவனே ஸூஸ்திரராகையாலும்

3-நிகில நிருபதி ஸ்வாத்ம வித் க்ராஹ்ய பாவாத் -நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து –
அஹங்கார மமகாரங்கள் ஆகிற விரோதிகளை விட்ட பேர்களாலே ஸூக்ரஹனாகையாலும்

4-தாத்ருக் சர்வ அநு கூல்யாத்-எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே -அப்படி எல்லாருக்கும் அனுகூலனாய் இருக்கையாலும்

5-ஸ்யவ நவதி தர ப்ராப்ய வைஷம்யவத் த்வாத் -உற்றது வீடு உயிர் செற்றது மன்னுரில்-நஸ் வரமான
கைவல்யத்தில் காட்டிலும் விலக்ஷணமான ஸ்வ பிராப்தி ரூப மோக்ஷத்தை உடைத்தாகையாலும்

6-சர்வத்ர பஷ பாதாத்-பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் -அநாதியாக ஆஸ்ரயித்த ஸூரிகளில் காட்டிலும்
இன்று ஆஸ்ரயித்த சேதனர் இடத்தில் மிகவும் வாத்சல்யத்தை உடைத்தாகையாலும் –

7-ஸூப விபவ தயா -அடங்கு எழில் சம்பத்து -கட்டடங்க நன்றான சம்பத்தை உடைத்தாகையாலும்

8-மாநசாத்யர்ச்ச பாவாத்-உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்-மநோ வாக் காயங்களால் -பஜிக்கப் படுபவனாகையாலும்

9-சங்கோச உன்மோசகத்வாத்-ஒடுங்கலும் எல்லாம் விடும் -அவித்யாதிகளால் -உண்டான ஞான சங்கோசத்தை விடுவிக்கையாலும்-

10-ஜக தயநதயா தயோபாதிசத் சர்வ யோக்யம் –வண் புகழ் நாரணன்-லோகங்களுக்கு எல்லாம் ஆதாரமுமாய் -அந்தர்யாமியுமாய்-
உபாயமுமாய் -உபேயமுமாய் -நிற்கையாலும் எம்பெருமான் சர்வ ஆராதனாய் இருக்கும் –
அவனை பஜியுங்கோள்-என்று வீடுமின் முற்றவும் -என்கிற தசகத்திலே பரரைக் குறித்து
ஸ்ரீ ஆழ்வார் உபதேசித்து அருளினார் என்கிறார் –

—————-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -3-

பத்துடையோர்க்கேன்றும் பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மா நிலத்தீர் -மூண்டவன் பால் -பத்தி செய்யும்
என்று உரைத்த மாறன் தன் இன் சொல்லால் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை–3-

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

தூரஸ்த மப்யத முனி கமலா சகாயம்
ஐச்சை ஸமுத்பவ சதை ஸூலபீ பவந்தம்
ஆக்யாய பக்திமபி தத்ர விதாய தஸ்ய
சேவாம் சகாங்ஷ கரணத்ரயதஸ் த்ருதீயே –3- பத்துடை அடியவர்

—————

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

பந்தார் ஹத்வாத் ஸ்வ பக்தை
அதிக தர குணா நந்ததி வ்யாவதாராத்
சர்வேஷ் வா சக்தி மத்தவாத்
நத ஸூக மதயா
ஸ்வ ப்ரபோத ப்ரதத்வாத்
க்யாதாபிக் யாதி சிஹ் நாத் ஸ்வருசி விதரணாத்
சர்வ காலாஸ்ராயத்வாத்
சர்வாதே ஸ்வாங்க தாநாத்
ப்ரஹித பததயா அனந்த ஸுலப்யமாஹ–3- பத்துடை அடியவர்

1-பந்தார் ஹத்வாத் ஸ்வ பக்தை -கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு –
பக்த ஜனங்களால் கட்டுண்ணும்படி பவ்யனாய் இருக்கையாலும் –

2-3-அதிக தர குணா நந்ததி வ்யாவதாராத்-இது இரண்டு பாட்டின் அர்த்தம் -நிலை வரம்பில் பல பிறப்பாய் –
அமைவுடை நாரணன் மாயை -அஸங்யேய கல்யாண குண விசிஷ்டனாய்-அப்ராக்ருத சமஸ்தானத்தோடே வந்து
அநேக அவதாரங்களை பண்ணுகையாலும் –

அவதரிக்கும் போதும் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நியாந்தாவான தான் –
பிதரம் ரோசயாமாச-என்கிறபடியே -ஸ்வ நியாம்யனான ஒருவனுக்குப் புத்ரனாம்படி ஆச்சர்யமாய் வந்து பிறக்கையாலும்

4-சர்வேஷ் வா சக்தி மத்தவாத்-யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் -ஜென்ம வ்ருத்தங்களால்
எத்தனையேனும் தண்ணியரான குஹ சபரீ வானர கோபால மாலாகாராதி களான எல்லார் இடத்திலும் அநுரக்தனாகையாலும்

5-நத ஸூக மதயா-வணக்குடைத் தவ நெறி வழி நின்று-வணங்கின பேர்களால் ஸூ ப்ராபனாகையாலும்

6-ஸ்வ ப்ரபோத ப்ரதத்வாத்-உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் -ஸ்வ விஷய ஞானத்தை உண்டாக்குகையாலும்

7-க்யாதாபிக் யாதி சிஹ் நாத் ஸ்வருசி விதரணாத்–நன்று எழில் நாரணன் -உள்ளி நும் இரு பசை யறுத்து –
ஸூபால -தைத்ரிய -மைத்ராயணீய மஹா உபநிஷத் ப்ரப்ருதிகளிலே பிரசித்தமான நாராயணன் -என்கிற திரு நாமத்தையும்
ததர்த்தமான நியந்த்ருத்வத்தையும் சிஹ்னமாக உடைத்தாகையாலும் –
தன்னை மனசிலே சிந்தித்தவாறே இதர விஷயத்தில் நசையைப் போக்கி ஸ்வ விஷயத்தில் ருசியை உண்டாக்குகையாலும்

8-சர்வ காலாஸ்ராயத்வாத்-மாளும் ஓர் இடத்திலும் வணக்கோடு மாள்வது வலம் -ஆஸ்ரயணத்துக்குக் காலம்
அதிக்ராந்தம் ஆயிற்று என்று கை வாங்க ஒண்ணாதபடி அந்திம சமயத்திலும் ஆஸ்ரயமாகையாலும்-

9-சர்வாதே ஸ்வாங்க தாநாத்-வலத்தனன் திரிபுரம் எரித்தவன் -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் தன் திரு மேனியில் இடம் கொடுக்கையாலும் –

10-ப்ரஹித பததயா அனந்த ஸுலப்யமாஹ–பெரு நிலம் கடந்த நல்லடிப் போது -த்ரிவிக்ரம அவதாரம் பண்ணி
நிம்நோந்நத விபாகமற எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலும்

எம்பெருமான் நிரவதிக ஸுலப்ய விசிஷ்டன் என்று பத்துடை அடியவர்க்கு-என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் ப்ரதிபாதித்து அருளினார் என்கிறார் –

—————–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -4-

அஞ்சிறைய புட்கள் தமை யாழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என விரந்து-விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம் -4-அஞ்சிறைய

———–

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

தத் காங்ஷிதா நதி கமேந முநிர் விஷண்ண
ப்ராப்தோ தசாஞ்ச ஹரி புக்த வியுக்த நார்யா
சர்வ அபராத ஸஹ தாமவ போக்த்ய தூதை
ஸுரே ஸ்வ தோஷ பரதாமலு நாச் சதுர்த்தே -4-அஞ்சிறைய

தத் காங்ஷித –ஆசைப்பட்ட
அநதி கமேந முநிர் விஷண்ண-கிட்டாமையால் சடகோப முனி சோகப்பட்டு
ப்ராப்தோ தசாஞ்ச –பிராட்டி தசையை அடைந்து
ஹரி புக்த வியுக்த நார்யா –கலந்து பிரிந்த நாயகி நிலை அடைந்து
சர்வ அபராத ஸஹதம் அவ போக் த்ய -அபராத ஸஹத்வ குணத்தை நினைவு படுத்தி
தூதை –ஸுரே -முதல் தூது
ஸ்வ தோஷ -தனக்கு அபராதங்கள் இருப்பதையும் உணர்ந்து

————–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி-

த்ராணே பத்த த்வஜத்வாத்
ஸூப நயந தயா
ஸ்வார்த்த லாபே அர்த்தி பாவாத்
திம் யந்மேக ஸ்வ பாவாத்
ஜகதுப ஜன நாஸ்தாப நாதி ப்ரியத்வாத்
காருண்யாப் தத்வயோகாத்
அநுகத மஹிஷீ சன்னிதேஸ்
சங்கதைர்க் யாத்
நாநா பந்தைஸ்
ஸூரஷா வஹித தமதயா ஷாம்யதீத்யாஹ கிருஷ்ணம் -4-அஞ்சிறைய

1-த்ராணே பத்த த்வஜத்வாத்-வெஞ்சிறைப் புள் உயர்த்தார்க்கு-ரக்ஷணத்திலே விரோதி நிரசன சீலனான
ஸ்ரீ பெரிய திருவடியைக் கொடியாகக் கட்டிக் கொண்டு இருக்கையாலும்

2-ஸூப நயந தயா –என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு -புண்டரீக தள அமலாய தேஷண் ஆகையாலும் –

3-ஸ்வார்த்த லாபே அர்த்தி பாவாத்-மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு -ஸ்வ கீயலோக லாப அர்த்தமாகத்
தான் இரப்பாளானாகையாலும்-

4-திம் யந்மேக ஸ்வ பாவாத்-என் நீல முகில் வண்ணர்க்கு -வர்ஷுகவலாஹக ஸ்வ பாவத்தை யுடைத்தாகையாலும்-

5-ஜகதுப ஜன நாஸ்தாப நாதி ப்ரியத்வாத்-நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும்-லோகங்களினுடைய ஜனன
ஸ்தாபனங்களில் அத்யந்தம் ப்ரீதியை யுடைத்தாகையாலும்-

6-காருண்யாப் தத்வ யோகாத்–அருளாத நீர் அருளி -கிருபையினால் எல்லாருக்கும் ஆப்தனாகையாலும்

7-அநுகத மஹிஷீ சன்னிதேஸ் –திருமாலார்க்கு -ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே ஒரு காலும் பிரியாமையாலும் –

8-சங்கதைர்க் யாத்-நெடுமாலார்க்கு -ஆஸ்ரிதர் இடத்தில் மிகவும் வ்யாமோஹத்தை யுடைத்தாகையாலும்-

9-நாநா பந்தைஸ் -நாரணன் தன் -மாதா பிதா பிராதா -இத்யாதிகளில் படியே -சகல வித சம்பந்தத்தை யுடைத்தாகையாலும்-

10-ஸூரஷா வஹித தமதயா ஷாம்யதீத்யாஹ கிருஷ்ணம் -கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் -ஸ்ரீ திருப் பாற் கடலிலே
லோக ரக்ஷணத்திலே அவஹிதனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலும் –

ஸ்ரீ எம்பெருமான் ஆஸ்ரித அபராதங்கள் எல்லாம் பொறுத்து அருளும் என்று –
அஞ்சிறைய மட நாராய் -என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

———–

ஸ்த்ரீ பவ்யான்
ஸூ வாசஸ்
ஸூ சரித ஸூபகாந்
கிருஷ்ண ஸாரூப்ய ஸும்யாந்
ஸ்வாஹா ரோதார ஸீலாந்
தநு த்ருத பகவல் லஷ்மண
பால்ய குப்தான்
ஸாத்ர ஸ்வச் சந்த வ்ருத்தீந்
அபிகத சிசிரான்
அந்தரங்க யுக்தி யோக்யான்
ஆசார்யான் கிருஷ்ண லப்தவ் சரணம வ்ருணுத ப்ரேய ஸீதூத நீத்யா -5-

1-ஸ்த்ரீ பவ்யான் -அஞ்சிறைய மடநாராய்-புருஷகார சாஹித்யத்தாலே எளிதாகக் கிட்டலாய் இருக்கிற ஆச்சார்யர்களை –
ஸர்வதா பேடையோடே சஞ்சரிக்கையாலே-பவ்யங்களாய் இருக்கிற நாரைகளாக நிரூபித்தார் – –

2-ஸூ வாசஸ் -இனக் குயில்காள்-ஸம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்கிறபடியே சோபனையான-ஸ்ரீ ஸூக்தியை யுடையரான
ஆச்சார்யர்களை -மதுர வசஸ்ஸூக் களான கோகிலங்களாக நிர்தேசித்தார் –

3-ஸூ சரித ஸூபகாந் -மென்னடைய அன்னங்காள் -சார அசார விவேகம் பண்ணி சார தரமான நடவடிக்கையை யுடையராய்
இருக்கிற ஆச்சார்யர்களை -நீர ஷீர விபாக ஷமங்களாய்-மநோ ஹரங்களாய் சஞ்சரியா நிற்கிற ஹம்சங்களாக அருளிச் செய்தார் –

4-கிருஷ்ண ஸாரூப்ய ஸும்யாந் -நன்னீல மகின்றில்காள் -ஸ்ரீ கிருஷ்ண சாரூப்யம் பெற்று அதினாலே சவ்ம்யராய் இருக்கிற
ஆச்சார்யர்களை – ஸ்ரீ கிருஷ்ணனோடு ச ரூபங்களான அன்றில்களாக அருளிச் செய்தார் –

5-ஸ்வாஹா ரோதார ஸீலாந்-மல்கு நீர்ப் புனல் படைப்பை இரை தேர் வண் சிறு குருகே -உண்ணும் சோறு பருகும் நீர்
தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்கிறபடியே வண்டுவரைப் பெருமானையே தாரக போஷக போக்யமாக
அனுபவித்துத் தங்களுடைய நிஷ்டையை ஆஸ்ரித ஜனங்களுக்கும் வழங்கிக் கொண்டு இருக்கிற மஹாத்மாக்களான ஆசார்யர்களை –
சம்ருத்தமாய் நிர்மலமான சலில பிரவாஹ மத்யத்திலே ஸூத்தமான ஆஹாரத்தைத் தேடி
அத்தை ஸ்வ அனுபந்திகளுக்கும் வழங்கிக் கொண்டு உதாரங்களாய் இருக்கிற சாரசங்களாக சம்பாதித்து அருளினார் –

6-தநு த்ருத பகவல் லஷ்மண -ஆழி வரி வண்டே-தங்களுடைய திருமேனியில் பகவச் சிஹ்னமான-திருவாழி திருச்சங்கை –
தரியா நிற்கிற ஆச்சார்யர்களை -ஷாட் குண்ய பகவல் லக்ஷணத்தை ஷட் பதமாகையாலே
ஸ்வ சரீரத்தில் வ்யஞ்ஜிப்பிக்கிற வண்டுகளாக அருளிச் செய்கிறார் –

7-பால்ய குப்தான்-இளங்கிளியே -ஸ்வ மஹாத்ம்யகோபந பிரதர்சித பால பாவரான ஆச்சார்யர்களை
பால ஸூசகங்களாக ப்ரதிபாதித்து அருளினார் – இளம் கிளியே –முன்னோர் மொழிந்த

8-ஸாத்ர ஸ்வச் சந்த வ்ருத்தீந்-சிறு பூவாய் சிஷ்ய ஜன வசம் வைத்த வ்யாபாரரான ஆச்சார்யர்களை –
பேடை முதலான ஸ்வ யூதங்கள் ஏவிக் காரியம் கொள்ளும்படி முக்தங்களாக இருக்கிற பூவைகளாக நிரூபித்து அருளினார் –

9-அபிகத சிசிரான்-ஊடாடு பனி வாடாய் -ஆஸ்ரயித்த பேர்களுக்கு அத்யந்தம் சீதல ஸ்வ பாவரான ஆச்சார்யர்களைக்
குளிர்ந்த வாடையாக அருளிச் செய்தார் –

10-அந்தரங்க யுக்தி யோக்யான் -மட நெஞ்சே -அந்தரங்கமான சொல்லுக்கு உசிதரான ஆச்சார்யர்களை –
அந்தரங்கமாய் இருக்கிற நெஞ்சமாக நிர்த்தேசித்து அருளினார் –

ஆசார்யான் கிருஷ்ண லப்தவ் சரணம வ்ருணுத ப்ரேய ஸீதூத நீத்யா -இப்படி ஆச்சார்யர்களைத் தானே
தத் தத் குண யோகத்தால் அந்தந்தப் பஷிகளாக நிரூபித்து –
பிரணயியான நாயகனைப் பிரிந்த ப்ரேயஸியானவள் -ஆற்றாமையால் பரிசர வர்த்திகளான பக்ஷிகளைத் தூது விடுமா போலே –
அவர்களை சரணம் புக்கு தூத்யத்திலே நியோகித்து அருளினார் –
இப் பிரகாரத்திலே இன்னமும் சம்பாவிதமான ஸ்தலங்களில் ஸ்வாபதேச அர்த்தங்களை ஊகித்துக் கொள்ளக் கடவது -என்று திரு உள்ளம் –

—————-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -5-

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து–5-

————

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

ஸ்வ ஆலிங்க நாதி சபலே புருஷோத்தமே அபி
ஸுவ அயோக்யதாம் அபி ததத் விமுகஸ் சடாரி
த்ரைவிக்ரமாதி சரிதம் பிரதி போத்ய
தேந நீதஸ் ஸ்வ ஸீல வசதாமத பஞ்சமே அபூத்-5-வள வேழ் உலகு –

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

ஷூத்ராஹ்வா நாபி முக்யாத்
நிஜ மஹிம திரஸ்கார கார்ச்சா ப்ரியத்வாத்
சர்வ த்ராப் யங்க்ரிதாநாத்
சவித சயனத
ஸ்வ அங்க்ரி சக்தைகரஸ்யாத்
கோபாத் யாப்தே
அசேஷ அஷண விஷய தயா
பக்த வஸ்து ப்ரசக்தே
ஸ்லிஷ்யந்நா சவ்ய போஹாத்
தத் அஹித சமனாத் பிராஹ நாதம் ஸூஸீலம்–5-வள வேழ் உலகு –

1-ஷூத்ராஹ்வா நாபி முக்யாத்-வள வேழ் உலகின் -இத்யாதி -அகில ஜகத் காரண பூதனாய் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை -வெண்ணெய் களவு கண்டு அமுது செய்த க்ருத்ரிமனே -என்று
ஷூத்ரமான பேராலே சொல்ல -அது கொண்டு அபிமுகனாகையாலும் -அருவினையேன் என்னலாம் படி –
தாழ்ந்தவர்களுடைய கூப்பீட்டுக்கும் முகம் காட்டுமவன் -என்றுமாம் –

2-நிஜ மஹிம திரஸ்கார கார்ச்சா ப்ரியத்வாத் -இமையோர் பலரும் இத்யாதி -ப்ரஹ்மாதி சகல பதார்த்தங்களையும்
சங்கல்பத்தாலே ஸ்ருஷ்டித்த ஆச்சார்யமான தன் மஹிமைக்கு அவத்யாவஹமான ப்ரஹ்மாதிகள் செய்யும்
பூஜனத்தாலே ப்ரீதனாகையாலும்

3-சர்வ த்ராப் யங்க்ரிதாநாத் -திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -குணாகுண நிரூபணம் பண்ணாதே
எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலும் –

4-சவித சயனத-தானோர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி யதனுள் கண் வளரும் -அணித்தாக ஷீரார்ணவத்திலே
திருக் கண் வளர்ந்து அருளுகையாலும் –

5-ஸ்வ அங்க்ரி சக்தைகரஸ்யாத் -நீ அருளாய் -உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு -நிரதிசய போக்யமான
தன் திருவடிகளில் அநுரக்தரானவர்கள் இடத்தில் தானும் அநு ரக்தனாகையாலும் –

6-கோபாத் யாப்தே -விண்ணோர் தலைவா -இத்யாதி ஸூரிகளுக்கு எல்லாம் தலைவனான தான்
கோப ஜாதிகளோடே பொருந்தி நிற்கையாலும்

7-அசேஷ அஷண விஷய தயா-அடியேன் காண்பான் அலற்றுவன் -எல்லார்க்கும் காண வேண்டும் விஷயமாகையாலும்

8-பக்த வஸ்து ப்ரசக்தே -உண்டாய் வெண்ணெய் -ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்ய ஏக தாரகனாகையாலும்

9-ஸ்லிஷ்யந்நா சவ்ய போஹாத்-அம்மா மூர்த்தியைச் சார்ந்தே மாயோம் -தன்னை ஆஸ்ரயித்தவர்கள் மாயாதபடி பண்ணுகையாலும்

10-தத் அஹித சமனாத் பிராஹ நாதம் ஸூஸீலம்– சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து -ஆஸ்ரிதர்களுக்கு விரோதிகளான
புண்ய பாப ரூப கர்மங்களை சமிப்பிக்கையாலும்

ஸ்ரீ எம்பெருமான் ஸுசீல்யத்தை உடையவன் என்று வள வேழ் உலகு -என்கிற சதகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார்-

————–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -6-

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு–6–

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

தாஸ்யேஷூ தேச சமயாங்க கலாப கர்த்ரு
த்ரவ்யாதி நா ந நியம புருஷோத்தமஸ்ய
பக்தி பரம் பஹு மதா தத ஏவ சோ அயம்
ஸ்வாராத இத்யுபதிதேச முநிஸ்து ஷஷ்டே-6-பரிவதில் –

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

அக்ரீதைரர்ச்ய பாவாத்
அநியத விவிதாப் யர்ச்சநாத்
அல்ப துஷ்டே
ப்ரஹ்வா வர்ஜ்யேச பாவாத்
ஸ்வ விஷய நியதேஷ் வாதராத்
ஸ்வாது பூம்நா
பாதா சக்த ப்ரசக்தேஸ்
சக்ருது பசத நே மோக்ஷணாத்
தர்ம ஸவ்ஸ்த்யாத்
ஷிப்ர ஷிப்தாஹி தத்வாத்
ஸூகரபஜநதாம் மாதவஸ்யாப்யதத்த–6-பரிவதில்

1-அக்ரீதைரர்ச்ய பாவாத் -நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகை பூவே -அர்த்தவ்யயம் பண்ணி சம்பாதிக்க வேண்டாத படி
ஸூலபமான புஷ்ப சலிலாதிகளால் பூஜிக்கப் படுமவனாகையாலும் –

2-அநியத விவிதாப் யர்ச்சநாத் -எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே -அதிகாரி நியமம் இல்லாதபடி
பஹு விதிமான பூஜனத்தை யுடைத்தாகையாலும்

3-அல்ப துஷ்டே-ஈடும் எடுப்புமில் ஈசன் -இது யோக்யம் -இது அயோக்யம் -என்னாதே நாம் செய்கிறது
அல்பமானாலும் அத்தாலே ப்ரீதனாகையாலும் –

4-ப்ரஹ்வா வர்ஜ்யேச பாவாத் -வணங்கி வழிபடும் ஈசன்-பிரஹ்வீ பாவத்தால் தானே ஆவர்ஜிக்கப் படுமவனாகையாலும்

5–ஸ்வ விஷய நியதேஷ் வாதராத் -உள் கலந்தார்க்கு ஓர் அமுதே -தன்னையே பிரயோஜனமாகப் பற்றினார்
இடத்திலே ஆதர யுக்தனாகையாலும்

6–ஸ்வாது பூம்நா -அமுதிலும் ஆற்ற இனியன் -அத்யந்த போக்யனாகையாலும்

7-பாதா சக்த ப்ரசக்தேஸ் -தாள்கள் தலையிலே வணங்கி நாள் கடலைக் கழிமினே-தன் திருவடிகளைத் தலையாலே வணங்கினவர்கள்
இடத்திலே மிகவும் பிரசாதத்தைப் பண்ணுமவனாகையாலும் –

8-சக்ருது பசத நே மோக்ஷணாத்-அவனைத் தொழுதால் இத்யாதி -ஒருகால் உபசத்தி பண்ணினார்க்கு விரோதி நிரசன பூர்வகமாக
அபுநரா வ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தைக் கொடுக்கையாலும்

9-தர்ம ஸவ்ஸ் த்யாத்-தருமவரும் பயனாய்-தர்மங்களினுடைய பரம பல ரூபனாய் இருக்கையாலும்

10-ஷிப்ர ஷிப்தாஹி தத்வாத் -கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக் கண் -விரோதிகளை நிரசிக்கும் இடத்தில்
ஒரு க்ஷணத்தில் தானே போக்குகையாலும் –

ஸூகர பஜநதாம் மாதவஸ் யாப்யதத்த– ஸ்ரீ எம்பெருமான் ஸ்வாராதன் -என்று பரிவதில் ஈசனை என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் பிரதிபாதித்து அருளுகிறார் என்கிறார் –

——

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -7-

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் -அறவினியன்
பற்றும் அவர்க்கு என்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே ஓடு–7–

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

பும்ஸ ஸ்ரீய பிரணயிந புருஷார்த்த ஸீம் நோ
நிந்தந் பலாந்தர பராந் நிரவத்ய கந்தாத்
தத் ரஸ்யதா அர்ஹ குண ஜாத சமர்த்த நேந
தத் ஸேவனம் சரசமாஹ ச சப்தமேந -7-பிறவித்துயர் –

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

ஸச் சித்தா கர்ஷஹேதோர்
அக சமந நிதேர்
நித்ய போக்யாம்ருதஸ்ய
த்யாகே ஹேதூஜ் ஜிதஸ்ய
ப்ரவஹதுபக்த்ருதேர்
துஸ் த்யஜ ஸ்வ அநு பூதே
த்யாகா காங்ஷா நிரோத்துஸ்
ஸ்ரீத ஹ்ருதய ப்ருதக்கார நித்யாஷமஸ்ய
ஸ்வாத்மஸ் லிஷ்டஸ்ய
காய்ச்ச்ர மஹரயசஸஸ்
ஸேவனம் ஸ்வாத் வவோசத் –7-பிறவித்துயர் –

1-ஸச் சித்தா கர்ஷஹேதோர் -மறவியை இன்றி மனத்து வைப்பார் -சத்துக்களுடைய சித்தாகர்ஷணத்திலே ப்ரவீணனுமாய்-

2-அக சமந நிதேர் -வைப்பாம் மருந்தாம் இத்யாதி -தன்னை பிராபிக்கைக்கு விரோதியான பாபத்தைப் போக்குமவனாய் –

3-நித்ய போக்யாம்ருதஸ்ய-தூய அமுதை -சதா ஸேவ்யமான அம்ருதமுமாய் –

4-த்யாகே ஹேதூஜ் ஜிதஸ்ய-என் சொல்லி யான் விடுவேனோ -தன்னை விடுகைக்கு ஹேது ரஹிதனுமாய் –

5-ப்ரவஹதுபக்த்ருதேர்-பிரானையே -உபகார பரம்பரா நிரதனுமாய்-

6-துஸ் த்யஜ ஸ்வ அநு பூதே-என்னுள் இரான் எனில் பின்னை யான் ஓட்டுவனோ -விடுவேன் என்றாலும்
விட ஒண்ணாதபடியான அனுபவத்தை யுடையனுமாய் –

7-த்யாகா காங்ஷா நிரோத்துஸ்-ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே -விட வேணும் என்கிற இச்சைக்கு நிரோதகனுமாய்

8-ஸ்ரீத ஹ்ருதய ப்ருதக்கார நித்யாஷமஸ்ய-என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் -ஆஸ்ரிதருடைய
மனஸ்ஸைத் தன்னிடத்தில் நின்றும் விடுவிக்கத் தானும் நித்ய அசக்தனுமாய் –

9-ஸ்வாத்மஸ் லிஷ்டஸ்ய-அமரத் தழுவிற்று இனி அகலுமோ -ஒருவராலும் பிரிக்க ஒண்ணாதபடி தம்மோடு ஒரு நீராகக் கலந்து நிற்குமவனாய்

10-காய்ச்ச்ர மஹரயசஸஸ்-நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் -தன்னை ஸ்துதிக்கிற பேர்களுடைய இளைப்பைப் போக்க வல்ல
கல்யாண குணங்களை யுடையவனுமாய் இருக்கிற

ஸேவனம் ஸ்வாத் வவோசத் — ஸ்ரீ எம்பெருமானுடைய பஜனம் ஸூக ரூபமாய் இருக்கும் -என்று
பிறவித்துயர் அற என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் பிரதிபாதித்து அருளினார் -என்கிறார் –

————–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -8-

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை –நாடறிய
ஒர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை–8–

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

கௌடில்ய வத்ஸூ கரண த்ரிதயே அபி ஜந்துஷூ
ஆத்மீயம் ஏவ கரண த்ரதய ஏக ரூப்யம்
சந்தர்ஸ்ய தாநபி ஹரிஸ் ஸ்வ வஸீ கரோதீத்
ஆசஷ்ட சாந்த்ர கருணோ முநிர் அஷ்டமேந -8-ஓடும் புள் —

கௌடில்ய வத்ஸூ கரண த்ரிதயே அபி ஜந்துஷூ–ஜனனம் உள்ள அனைவருக்கும் -ஜந்துஷூ -குடில புத்தி குறுக்கு புத்தி இருந்தாலும்
ஆத்மீயம் ஏவ கரண த்ரதய ஏக ரூப்யம் -ஆர்ஜவம்
சந்தர்ஸ்ய –வெளிப்படுத்திக் கொண்டு
தாநபி –அப்படி இல்லாதவர்களை கூட
ஹரிஸ் ஸ்வ வஸீ கரோதீத் –ஹரி ஹரதி பாபானி -அநார்ஜவம் அபஹரித்து–ஆர்ஜவம் கருவியாக கொண்டு வசீகரிக்கிறார்
ஆசஷ்ட –விளக்கி உரைத்தார்
சாந்த்ர கருணோ முநிர் அஷ்டமேந —கருணையே வடிவான ஆழ்வார்– —

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

ஸூரிணாம் ஸ்வைரா சேவ்யே
ஸ்வயமவதரதி
ஷூத்ரதிவ் யைக நேத்ரே
கோபாத்யர்த்தம் த்ருதாத்ரவ்
ஸ்ரீ ததநுரசிகே
வாமநீ பாவத் ருஸ்யே
ஸச் சித்தா நந்ய வ்ருத்தவ்
விபவ சமதநவ்
ஸ்வாயுதா ரூட ஹஸ்தே
நீஸோச் சக்ராஹ்ய பாதே
நிருபதிம் ருஜு தாம் நீர வர்ணே ஜகாத -8-ஓடும் புள்

1-ஸூரிணாம் ஸ்வைரா சேவ்யே-ஓடும் புள்ளேறி-வைநதேயர் முதலான நித்ய ஸூரி களாலே யதேஷ்ட சேவ்யனுமாய்

2-ஸ்வயமவதரதி-வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே -விரோதி நிரசன சீலனான ஸ்ரீ கிருஷ்ணனுமாய்

3-ஷூத்ரதிவ் யைக நேத்ரே -கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -மனுஷ்யர்க்கும் வானவர்க்கு நிர்வாஹகனாய்

4-கோபாத்யர்த்தம் த்ருதாத்ரவ்-வெற்பை ஒன்றை எடுத்து -தன்னை ஆஸ்ரயித்த கோ கோப ரக்ஷண அர்த்தமாக
ஸ்ரீ கோவர்த்தனத்தைத் தரித்தவனுமாய்

5-ஸ்ரீ ததநுரசிகே-என் மெய் கலந்தானே -ஆஸ்ரிதருடைய சரீரத்தில் அத்யாதர யுக்தனுமாய்

6-வாமநீ பாவத் ருஸ்யே -புலன் கொள் மாணாய் -பார்க்கிற பேர்களுடைய த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான
ஸ்ரீ வாமன ரூபத்தை யுடையவனுமாய்

7-ஸச் சித்தா நந்ய வ்ருத்தவ்-என் எண் தான் ஆனானே -ஆஸ்ரித மநோ ரத சத்ருச வியாபாரத்தை யுடையவனுமாய்

8-விபவ சமதநவ் -ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும் -தன்னுடைய விபவம் போலே அளவில்லாத
மத்ஸ்ய வராஹாதிரூபங்களை யுடையவனுமாய்

9-ஸ்வாயுதா ரூட ஹஸ்தே-சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் -அழகிய திருக்கைகளிலே அநவரதம்
திருவாழி திருச் சங்குகளை தரித்துக் கொண்டு இருக்குமவனாய் –

10-நீஸோச் சக்ராஹ்ய பாதே-ஞாலம் கொள் பாதன்-நிம்நோந்நதா விபாகம் அற எல்லார் தலையிலும்
பரப்பின திருவடிகளை யுடையனுமாய் இருக்கிற

நிருபதிம் ருஜு தாம் நீர வர்ணே ஜகாத -நீரவர்ணனான ஸ்ரீ எம்பருமான் இடத்திலே நிருபாதிகமான ஆர்ஜவத்தை –
ஓடும் புள்ளேறி-என்கிற சதகத்தில் ஸ்ரீ ஆழ்வார் உபபாதித்து அருளினார் என்கிறார் –

——————–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -9-

இவை யறிந்தோர் தம்மளவில் ஈசன் உவந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும்–9–

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

ஆத்மார்ஜ்வ அனுபவ கௌதுகிநோ ஆசிய சவ்ரி
ஆத்மோப போக ருசி மப்யதி காம் ததா ந
தேவ்யாதி வத்ர சயிதா க்ரமதோ அகி லங்காந்
யாசிஸ்ரயத் ததவதந் நவமே சடாரி -9-இவையும்

தேவிகள் உடன் அணைவது போலே -ரசத்துடன் கலந்தான்

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

பர்யந்தே த்ருஷ்டம்
அங்கே ச த்ருஷ்டம்
ஸ்வ விரஹ விமுகம்
டிம்பவத் பார்ஸ்வ லீநம்
சித்தே க்லுப்த பிரவேசம்
புஜ சிகர கதம்
தாலு ஸிம்ஹாஸ நஸ்தம்
சஷூர் மத்யே நிவிஷ்டம்
ஸ்தித மலிகதடே
மஸ்தகே தஸ்தி வாம்சம்
ப்ரத்யாஹா ரோக்தரீத்யா விபு மனுபு புஜே சாத்ம்ய போக பிரதா நாத் -9-இவையும்

1-பர்யந்தே த்ருஷ்டம் -என்னுடைச் சூழல் உளானே –

2-அங்கே ச த்ருஷ்டம் -அவன் என் அருகிலிலானே -சமீபத்தில் வந்து தோற்றியும்-

3-ஸ்வ விரஹ விமுகம் -ஒழிவிலன் என்னோடு உடனே -விட்டுப் பிரிய மாட்டாதேயும் –

4-டிம்பவத் பார்ஸ்வ லீநம்–கண்ணன் என் ஓக்கலையானே -குழந்தையைப் போலே ஓக்கலையிலே வந்து இருந்தும் –

5-சித்தே க்லுப்த பிரவேசம்-மாயன் என் நெஞ்சின் உளானே -மனசிலே வந்து பிரவேசித்தும்

6-புஜ சிகர கதம் -என்னுடைத் தோளிணையானே -தோளிணை மேல் ஏறியும்

7-தாலு ஸிம்ஹாஸ நஸ்தம்-என்னுடை நாவின் உளானே -ஜிஹ்வா சிம்ஹாசனத்திலே இருந்தும் –

8-சஷூர் மத்யே நிவிஷ்டம் -கமலக்கண்ணன் என் கண்ணின் உளானே -கண்ணின் உள்ளே இருந்தும்

9-ஸ்தித மலிகதடே-என் நெற்றி உளானே -நெற்றியிலே நின்றும் –

10-மஸ்தகே தஸ்தி வாம்சம்-என் உச்சி உளானே -சிரஸிலே இருந்தும்

ப்ரத்யாஹா ரோக்தரீத்யா விபு மனுபு புஜே சாத்ம்ய போக பிரதா நாத் -இப்படி அனுபவிக்கிற ஸ்ரீ எம்பெருமானை –
இவையும் அவையும் -என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் பத்தி அங்கமான ப்ரத்யாஹாரத்தில் யுக்த க்ரமத்தாலே
சாத்மிக்க சாத்மிக்க அனுபவித்து அருளினார் -என்கிறார் –

——————-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -10-

பெருமாழி சங்குடையோன் பூதலத்தே வந்து
தருமாறு ஓர் ஏது அறத் தன்னை -திறமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக வென் சென்னி
வாழ்த்திடுக வென்னுடைய வாய்–10–

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

இத்தம் ஸ்ரீ யபதி க்ருத ஸ்வ ஸமஸ்த தேஹ
சம்ஸ்லேஷ லக்ஷண பலஸ்ய ஸூ துர் லபஸ்ய
பக்த்யாதி வத் ஸ்வ கணநே அபி ச தத் ப்ரஸாதாத்
நிர்ஹேதுக த்வம வதத் தசமே சடாரி -10-பொரு மா நீள்

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

விஷ்வக் விக்ராந்தி த்ருஸ்யம்
விகணந ஸூலபம்
வ்யக்த பூர்வ உபகாரம்
ஸ்வாந் தஸ்யை காக்ர்ய ஹேதும்
ஸ்வயமுத யஜூஷம்
பந்த மாத்ரோபயாதம்
சிந்தாஸ் துத்யாதி லஷ்யம்
நத ஜன சததஸ் லேக்ஷிணம்
தர்சி தார்ச்சம்
ஸ்ம்ருத்யை சித்தே மிஷந்தம்
ஸ்வ விதரண மஹவ்தார்ய துஷ்டோப்யாஷ்டே -10-பொரு மா நீள்

1-விஷ்வக் விக்ராந்தி த்ருஸ்யம்-ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்கருமாணிக்கம் -த்ரிவிக்ரம அவதாரம் பண்ணித்
திரு வுலகு அளந்து அருளினை போது அத்யாச்சர்யமாக எல்லாராலும் காணப்படுமவனாய்

2-விகணந ஸூலபம் -எண்ணிலும் வரும் -ஓன்று இரண்டு தொடங்கி இருபத்தஞ்சு இருபத்தாறு -என்று சொன்னால்
இருபத்தாறாவாவன் நான் என்று தன்னைச் சொன்னதாகக் கொண்டு ரஷிக்கும் ஸ்வ பாவனுமாய் –

3-வ்யக்த பூர்வ உபகாரம் எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை –
இன்று உபகரிக்கை இன்றிக்கே பூர்வ பூர்வர்களுக்கும் உபகாரகனாய்

4-ஸ்வாந் தஸ்யை காக்ர்ய ஹேதும் -நெஞ்சமே மலராள் மணவாளனைத் துஞ்சும் போதும் விடாது தொடர் கொண்டாய் -மனஸ்ஸூ
தன்னிடத்தில் தானே ஐகாக்ர்யத்தை பஜிக்கைக்கு ஹேது பூதனுமாய் –

5-ஸ்வயமுத யஜூஷம்-ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு -எண்ணிக்கை இன்றியே தானே வருவானுமாய் –

6-பந்த மாத்ரோபயாதம்-தாயும் தந்தையாய் இவ்வுலகினில் வாயும் ஈசன் -மாதா பிதாக்களைப் போலே
சம்பந்த மாத்திரத்தாலே வந்து உதவுமவனாய் –

7-சிந்தாஸ் துத்யாதி லஷ்யம் -சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் -சிந்தா ஸ்துதி ப்ரணாமங்களுக்கு லஷ்யமுமாய்

8-நத ஜன சததஸ் லேக்ஷிணம்-இடைவீடு இன்றி நல்கி என்னை விடான் -ஆஸ்ரிதரை ஒரு க்ஷணமும் விட்டுப் பிரிவில்
தரிக்க மாட்டாதவனாய் –

9-தர்சி தார்ச்சம் -நம்பியைத் தென் குறுங்குடி நின்ற -அதுக்கு உதாஹரணமாக தான் திருக் குறுங்குடியிலே
நின்று அருளின படியைக் காட்டுமவனாய் –

10-ஸ்ம்ருத்யை சித்தே மிஷந்தம்-மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை -மறவாதபடி மனசிலே ஜாகரூகனுமாய் இருக்கிற
ஸ்ரீ பெருமாளை அனுசந்தித்து

ஸ்வ விதரண மஹவ்தார்ய துஷ்டோப்யாஷ்டே – தன்னைத் தந்த கற்பகம் -என்கிறபடியே தன்னை அனுபவிக்க விதரணம் பண்ணுகிற
அவனுடைய மஹா உதார குணத்தால் -பொரு மா நீள் படை -என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் அதி ஸந்துஷ்டரானார் -என்கிறார் –

—————

ஆதா வித்தம் பரத்வாத் அகில சமதயா பக்த ஸுலப்ய பூம்நா
நிஸ் சேஷாகஸ்சஹத்வாத் க்ருபண ஸூகட நாச்சாக்ய சம்ராத நத்வாத்
ஸ்வாது ஸ்வோபாச நத்வாத் ப்ரக்ருதி ருஜு தயா சாத்ம்ய போக ப்ரதத்வாத்
அவ்யா ஜோதாரபாவாத் மநுத சதகே மாதவம் சேவ நீயம் -11-

இப்படி பிரதம சதகத்தில் பத்து சதகங்களாலும் பிரதி பாதிதங்களான அர்த்தங்களை பிரகாசிப்பித்து அருளுகிறார்
1-ஆதா வித்தம் பரத்வாத்–சர்வ ஸ்மாத் பரனாகையாலும்

2-அகில சமதயா–சர்வ சமனாகையாலும்

3-பக்த ஸுலப்ய பூம்நா–ஆஸ்ரித ஸூலபனாகையாலும்

4-நிஸ் சேஷாகஸ்சஹத்வாத்–சர்வ அபராத சஹனாகையாலும்

5-க்ருபண ஸூகட நாச்சாக்ய–ஸூ சீலனாகையாலும்

6-சம்ராத நத்வாத் –ஸ்வா ராதனாகையாலும்

7-ஸ்வாது ஸ்வோபாச நத்வாத்–ஸூக ரூப உபாசகனாகையாலும்

8-ப்ரக்ருதி ருஜு தயா–ருஜு பிரகிருதி ஆகையாலும்

9-சாத்ம்ய போக ப்ரதத்வாத் –சாத்மிக்க சாத்மிக்க அனுபவிப்பிக்கையாலும்

10-அவ்யா ஜோதாரபாவாத்–அத்யந்த ஆதர நிர்ஹேதுக உதாரானாகையாலும்

ஸ்ரீ எம்பெருமான் ஸேவ்யன் என்று பிரதம சதகத்தில் ஸ்ரீ ஆழ்வார் அனுசந்தித்து அருளினார் என்கிறார் –

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: