என்னோடு கலந்த ஸ்ரீ எம்பெருமானுடைய குணங்களைக் கால தத்வம் உள்ளதனையும்
அனுபவியா நின்றாலும் திருப்தன் ஆகிறிலேன் என்கிறார்
———————–
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை –
————————
அகலில் அகலும் அணுகில் அணுகும்
புகலும் அரியன் பொரு வல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே -1-7-10—
அகலில் அகலும்
இவன் அகன்றபடியே நிற்கில் -யதி வா ராவண ஸ்வயம் -என்கிற சாபலமும் கிடக்கச் செய்தே
கண்ண நீரோடு கை வாங்கும் –
த்விதா பஜ்யேயமப் யேவம் ந நமேயம் -என்னும் நிர்பந்தத்தோடே நிற்கில் முடித்தே விடும் –
அணுகில் அணுகும் –
தன பக்கலே ஆபிமுக்யம் பண்ணினால்-ஆக்யாஹி மம தத்வேந -என்னும்
இளைய பெருமாள் நிற்க -நாலடி வர நின்றவனை இறே-ராஜ கார்யம் செய்யும்படி சொல்லீரோ -என்றது –
ராக்ஷஸாநாம் பலாபலம் -இவனை ராக்ஷஸ சஜாதீயனாக நினைக்கை அன்றிக்கே இஷுவாகு வம்சயனாகவே புத்தி பண்ணி –
ராக்ஷஸருடைய பலாபலம் சொல்லீரோ என்றார் இறே
இத் திருவாய் மொழியில் முதல் பாட்டு அகலில் அகலும் என்ற இடம் சொல்லிற்று
இரண்டாம் பாட்டு அணுகில் அணுகும் என்ற இடம் சொல்லிற்று –
புகலும் அரியன்
அர்ஜுனனும் துரியோதனனும் கூட வரச் செய்தே-அர்ஜுனனுக்குத் தன்னைக் கொடுத்து
துரியோதனனுக்கு தன்னை ஒழிந்த பங்களத்தை கொடுத்து விட்டான் இறே
உகவாதற்குக் கிட்ட அரியனாய் இருக்கும்
பொரு வல்லன்
ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டும் இடத்தில் தடை உடையன் அல்லன்-
யாத்ரா கிருஷ்ணோ ச கிருஷ்ணா ச சத்யபாமா ச பாமிநீ -புத்ரர்களுக்கும் புக ஒண்ணாத சமயத்தில் இறே
சஞ்சயனை அழைத்துக் காட்சி கொடுத்தது –
பொரு-என்று ஒப்பாய் -ஒப்பாவது நேர் நிற்குமதாய் –
அத்தாலே தடையைச் சொல்லிற்றாய் தடை உடையன் அல்லன் என்கை –
எம்மான் –
இஸ் ஸ்வ பாவங்களைக் காட்டி என்னை அநந்யார்ஹன் ஆக்கியவன்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம்-
அவனுடைய ஒப்பில்லாத கல்யாண குணங்களைப் பாடி ஒரு காலும் விச்சேதிக்க ஷமன் ஆகிறேன் அல்லேன் –
இப்படி விடுகைக்கு ஷமன் இன்றிக்கே ஒழிகிறது காலம் சாவதியாயோ -என்னில்
பகலும் இரவும்
சர்வ காலமும் -ஆனால் விஷயத்தைகே குறைய அனுபவித்தோ என்னில்
படிந்து குடைந்தே –
எங்கும் கிட்டி விஷயத்தை அனுபவியா நிற்கச் செய்தே விட மாட்டுகிறிலேன்
——————————
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
அகலில் -அர்த்த த்வயம் -பராங்முகதையும்-துவேஷமும் / கண்ண நீரோடு -வெறுப்போடு /
தன்னை ஆஸ்ரயித்தும் ப்ரயோஜனாந்தர பரனாய் நிற்கில் அத்தைக் கொடுத்து அநந்ய ப்ரயோஜனனாகப் பெற்றது இல்லையே –
என்ற இழவோடே கை வாங்கும் -என்றபடி –
இப் பஷத்தில் அணுகில் அணுகும் என்றதும் அநந்ய ப்ரயோஜனனாய் நிற்கில் ப்ராப்ய ப்ராபக பூதனாய் நிற்கும் என்றபடி –
ஆபிமுக்யம் இல்லையாகில் அவர்களால் அறியப்படான் –
ஆபிமுக்யம் உண்டாகில் பக்த்யாத் சாஸ்த்ராத் வேத்மி என்கிறபடியே அவர்களால் அறியப்படும் –
புகலும் அரியன் -பொரு வல்லன் -இதி பதத்வயம் –
அகலில் அகலும் அணுகில் அணுகும் இதி ப்ரதிஜ்ஜாதார்த்த உபபாதன பரம் –
பங்களம்-கூளக் கூட்டம் -அசாரம்-இஞ்சித் தழைக் கூறு போலே சப்பரை -என்றபடி –
இளைப்பிலம் என்றது திருப்தி அடையோம் என்றபடி –
இளைப்பு என்று ஸ்ரமமாய்-தத் கார்யமான விச்சேதத்தை லஷிக்கிறது –
படிந்து கிட்டி -உட்புகுந்து அனுபவிக்கை -குடைந்து -அவகாஹித்து –
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply