Archive for May, 2019

ஸ்ரீ மத் த்வாரகா விஷயமான அருளிச் செயல்கள் -வியாக்யானங்களுடன்–

May 31, 2019

ஸ்ரீ மத் த்வாரகா விஷயமான அருளிச் செயல்கள் –
பெரியாழ்வார் -4–1–6-/-4-7-8-/-4-7–9-/-4–9–4-/-5–4–10-/
நாச்சியார் -1–4-/-9-8-/-12–9-/-12–10-/
பெரிய திருமொழி -6–6–7-/-6–8–7-
நான்முகன் -71-
திருவாய் மொழி -4-6-10-/-5-3–6-/

———————-

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 1-6 –

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச-
வரண்டு வளைந்து -நரம்பும் எலும்பும் -தோன்றும்படி இருக்கையாலே
பொல்லாதான வடிவை உடைய பேய்ச்சியான அவள் முடியும்படியாக –
புணர் முலை வாய் மடுக்க வல்லானை —
அந்த வடிவை மறைத்து -பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி -என்கிறபடியே
யசோதை பிராட்டி யோடு ஒத்த வடிவைக் கொண்டு வருகையாலே
தன்னில் தான் சேர்ந்துள்ள முலையில் -அவள் முலை கொடா விடில்
தரியாதாளாய் கொண்டு -முலைப்பால் உண்-என்று கொடுத்தால் போல் –
தானும் முலை உண்ணா விடில் தரியாதானாய் கொண்டு பெரிய அபிநிவேசத்தோடே
வாயை மடுத்து உண்ண வல்லவனை –
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி -என்கிறபடியே வருகிற போதே அவள் க்ர்த்ரிமம் எல்லாம்
திரு உள்ளத்திலே ஊன்ற தர்சித்து இருக்க செய்தே -அவள் தாயாகவே இருந்து
முலை கொடுத்தால் போலே -தானும் பிள்ளையாகவே இருந்து முலை உண்டு அவளை முடித்த
சாமர்த்தியத்தை சொல்லுகிறது -வல்லானை-என்று
மா மணி வண்ணனை
விடப்பால் அமுதால் அமுது செய்திட்ட -என்கிறபடியே அவளுடைய விஷப் பாலை
அம்ர்தமாக அமுது செய்து -அவளை முடித்து ஜகத்துக்கு சேஷியான தன்னை நோக்கிக்
கொடுக்கையாலே -நீல ரத்னம் போலே உஜ்ஜ்வலமான திருமேனியை உடையவனாய் இருந்தவனை
மருவும் இடம் நாடுதிரேல்
திரு உள்ளம் பொருந்தி வர்த்திக்கிற ஸ்தலம் தேடுகிறி கோள் ஆகில்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு- பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் –

—————————————————

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – -4 7-8 –

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து-
கடலை செறுத்து-அணை கட்டி – படை வீடு செய்தது ஆகையாலே -திரை பொரு கடலால்
சூழப் பட்டு இருப்பதாய் -திண்ணியதான மதிளை உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ மத் த்வாரகைக்கு ராஜாவானவன்
வண் துவராபதி மன்னன் -இறே
தன் மைத்துனன் மார்க்காய் –
ஸ்ரீ கிருஷ்ண ஆஸ்ரய ஸ்ரீ கிருஷ்ண பலா ஸ்ரீ கிருஷ்ண நாதச்ச பாண்டவா –என்கிறபடியே
தன்னையே தங்களுக்கு ஆஸ்ரயமும் -பலமும் -நாதனும் ஆகப்
பற்றி இருக்கிற -தன் மைத்துனமாரான பாண்டவர்களுக்கு பஷ பாதியாய் நின்று
அரசனை அவிய அரசினை அருளும்-
பொய் சூதிலே அவர்களை தோற்ப்பித்து-அவர்கள் ராஜ்யத்தை தாங்கள் பறித்து கொண்டு
பத்தூர் ஓரூர் கொடுக்க சொன்ன இடத்தில் கொடோம் என்று தாங்களே அடைய
புஜிப்பதாக இருந்த துரியோததா நாதி ராஜாக்கள் விளக்கு பிணம் போலே விழுந்து போகப்
பண்ணி -ராஜ்யத்தை பாண்டவர்களுக்கு கொடுத்து அருளும்
அரி புருடோத்தமன் அமர்வு –
மகத்யாபதி சம்ப்ப்ராப்தே ச்மர்தவ்யோ பகவான் ஹரி -என்று
ஆபத் தசையிலே ஸ்மரிக்க படுபவனாக -ஸ்ரீ வசிஷ்ட பகவானாலே
திரௌபதிக்கு சொல்லப் பட்டவனாய் –
ஹரிர் ஹராதி பாபானி துஷ்ட சித்ரை ரபி ஸ்மர்த-என்கிறபடியே
ஸ்மரித்த வர்களுடைய சகல பாபங்களையும் போக்கும் அவனான புருஷோத்தமன் பொருந்தி வர்த்திக்கிற ஸ்தலம்
நிரை நிரையாக நெடியன யூபம் –
ஓரோர் ஒழுங்காய் கொண்டு -நெடிதாய் இருந்துள்ள -பசுக்கள் பந்திக்கிற யூபங்கள் ஆனவை
நிரந்தரம் ஒழுக்கு இட்டு-
இடைவிடாமல் நெடுக சென்று இருப்பதாய்
இரண்டு கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை-
இரண்டு கரையும் ஒத்து யாக தூமம் கந்தியா நிற்கிற கங்கையினுடைய கரை மேல்
கண்டம் என்னும் கடி நகரே –

———————————————

வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதரி இடவகயுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிர தரணி விண்டிடிய தலை பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-9 –
வட திசை மதுரை

வடக்கு திக்கில் மதுரை –
தென் திசை மதுரை உண்டாகையாலே விசேஷிககிறது
சாளக் கிராமம்
புண்ய ஷேத்ரங்களில் பிரதானமாக எண்ணப்படும் ஸ்ரீ சாளக் கிராமம்
வைகுந்தம்-
அப்ராக்ருதமாய் -நித்ய வாசத்தலமான ஸ்ரீ மத் வைகுண்டம்
துவரை –
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய மணவாளராய் வீற்று இருந்த ஸ்ரீ மத் த்வாரகை
யயோத்தி
அயோத்தி நகர்க்கு அதிபதி -என்கிற படியே ஸ்ரீ ராம அவதார ஸ்தலமாய் அத்யந்த அபிமதமாய் இருந்துள்ள ஸ்ரீ அயோதியை
இடமுடை வதரி
-நர நாராயண ரூபியாய் கொண்டு -திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளி
உகப்புடனே எழுந்து அருளி இருக்கும் ஸ்தலமாய் -இடமுடைத்தாய் இருந்துள்ள ஸ்ரீ பதரி
இடவகயுடைய –
இவற்றை வாசச்தானமாக உடையனான
வெம் புருடோத்தமன் இருக்கை
ஆஸ்ரிதரான நமக்கு இனியனான புருஷோத்தமன் உடைய இருப்பிடம்
தடவரை அதிர தரணி விண்டிடிய –
பகீரதன் தபோ பலத்தாலே இறக்கிக் கொடு போகிறபோது
வந்து இழிகிற வேகத்தைச் சொல்லுகிறது -உயர்ந்த நிலத்தில் நின்றும்
வந்து இழிகிற வேகத்தால் மந்த்ராதிகளான பெரிய மலைகள் சலிக்கும்படி
தரணி வண்டிடிய
பர்வதத்தில் நின்றும் பூமியில் குதிக்கிற அளவிலே பூமி விண்டு இடிந்து விழ
தலை பற்றி கரை மரம் சாடி
வர்ஷங்களுடைய தலை அளவும் செல்லக் கிளம்பி
கரையில் நிற்கிற மரங்களை மோதி முறித்து
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே
ஒன்றாலும் கலங்காத கடலும் கலங்கும்படி -வேகித்து கொண்டு இழியா நின்ற கங்கை உடைய கரை மேலே
கண்டம் என்னும் கடி நகரே –

———————–

ஸ்ரீ மத் த்வாரகையிலே -பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய இருந்தவன்
வர்த்திக்கிற தேசம் இது என்கிறார் –

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – 4-9 4-

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய-
நரகாசுரன் திரட்டி வைத்த -ராஜ கன்னிகைகளாய் -அவனை நிரசித்த அநந்தரம்
அங்கு நின்றும் கொண்டு வந்து -திருமணம் புணர்ந்து அருளின பதினாறாயிரம் தேவிமார்
ஆனவர்கள் -தங்களுடைய பிரேம அனுகுணமாகவும் -ப்ராப்ய அனுகுணமாகவும் நித்ய பரிசர்யை பண்ண
துவரை என்னும் அதில்-
ஸ்ரீ மதுரையில் எழுந்து அருளி நிற்க செய்தே -இங்கு உள்ள எல்லாரையும் அங்கு கொடு
போய் வைக்க திரு உள்ளம் பற்றி -ஸ்வ சங்கல்ப்பத்தாலே உண்டாகினது ஆகையாலே
அத்யந்த விலஷணமாய்-ஸ்ரீ மத் த்வாரகை என்று பிரசித்தமான திருப் படை வீட்டிலே
நாயகராகி வீற்று இருந்த மணவாளர்-
அவர்களுக்குத் தனித் தனியே -என்னை ஒழிய அறியார்-என்னும்படி நாயகராய் கொண்டு
தன்னுடைய வ்யாவர்த்தி தோன்ற எழுந்து அருளி இருந்த மணவாளர் ஆனவர் –
மன்னு கோயில் –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருக்கும் மங்கள சூத்தரத்தை தரித்து –
தமக்கு
அனந்யார்ஹராய் -அநந்ய போகராய்-இருக்கும் அவர்களோடு கலந்து
அடிமை கொள்ளுகைகாக -அழகிய மணவாளப் பெருமாளாய்க் கொண்டு –
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே -நித்ய வாசம் பண்ணுகிற கோயில் –
புது நாள் மலர் கமலம்-
அப்போது அலர்ந்த செவ்வி தாமரைபூ வானது
எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் –
ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரனுடைய ஸ்பர்ஹநீயமான திரு வயிற்றிலே
பூவை ஒப்பான் -பூவையே போல்வதாக என்றபடி
பொது நாயகம் பாவித்து-
சர்வ நிர்வாஹகத்தை பாவித்து
அதாவது
ஜகத் காரண தயா சர்வ நிர்வாஹகமாய் இருக்கிற இருப்பை -தான் உடையதாகப் பாவித்து -என்கை-
இறுமாந்து –
இந்த நினைவாலே கர்வித்து
பொன் சாய்க்கும்-
மற்று உண்டான தாமரைகளின் உடைய அழகைத் தள்ளி விடா நிற்கும்
புனல் அரங்கமே –
இப்படி இருந்துள்ள ஜல ஸம்ருத்தியை உடைத்தாய் இருந்துள்ள திருவரங்கமே –

———————————————-

பத்தாம் பாட்டு -தட வரை -இத்யாதி -அவதாரிகை –
கீழில் பாட்டிலே உகந்து அருளின நிலங்களோடு ஒக்க தம் திரு மேனியை விரும்பினான் -என்றார் –
இப்பாட்டில் -அவற்றை விட்டு தம்மையே விரும்பின படியை அருளி செய்கிறார் –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 4-10 –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே –
பரப்பை உடைத்தான மலையிலே பிரகாசமுமாய் –
தேஜஸ்சாலே விளங்கா நிற்பதுமாய் –
பரிசுத்தமுமான பெரிய கொடி எல்லாருக்கும் காணலாம் இருக்குமா போலே –
பெரிய பர்வத சிகரத்திலே அதி தவளமாய் மிளிருகிற பெரிய கொடி போலே –
மிளிருகை -திகழுகை
சுடர் ஒளியாய் –
நிரவதிக தேஜசாய்
நெஞ்சின் உள்ளே தோன்றும் –
ஹ்ருதய கமலத்துள்ளே தோன்றா நிற்கும்
என் சோதி நம்பீ –
தேஜஸ்சாலே பூரணன் ஆனவனே
சுடர் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
ஒளி -திவ்ய மங்கள விக்ரகம்
சோதி -குணங்கள்
நம்பீ -குறை வற்று இருக்கிற படி
என் -என்று இவை எல்லாம் தமக்கு பிரகாசித்த படி
தம்முடைய திரு உள்ளத்தே திவ்ய மங்கள விக்ரகத்தோடே பிரகாசித்த படி
இவர் திரு உள்ளத்தே புகுந்த பின்பு திரு மேனியிலே புகர் உண்டாய் -பூர்த்தியும் உண்டான படி –
சிக்கனே சிறிதோர் இடமும் -இத்யாதி
இவர் சரமத்திலே இப்படி அருளி செய்கையாலே -அனுபவித்த ஸ்ரீ கிருஷ்ண விஷயம் உள்ளே பூரித்த படி
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
ப்ரஹ்மாதிகளுக்கு முகம் கொடுக்கிற திரு பாற் கடலும் –
சதா பச்யந்தி -படியே நித்ய சூரிகளுக்கு முகம் கொடுக்கிற பரம பதமும் –
ப்ரனயிநிகளுக்கு முகம் கொடுக்கிற ஸ்ரீ மத் த்வாரகையும் –
இடவகைகள் இகழ்ந்திட்டு-
இப்படிக்கொத்த இடங்களை எல்லாம் –
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் -என்கிறபடியே உபேஷித்து
என்பால் இடவகை கொண்டனையே-
இவற்றில் பண்ணும் ஆதரங்கள் எல்லாவற்றையும் என் பக்கலிலே பண்ணினாயே –
உனக்கு உரித்து ஆக்கினாயே –
என் பால் இட வகை கொண்டனையே -என்று
இப்படி செய்தாயே என்று அவன் திருவடிகளில் விழுந்து கூப்பிட
இவரை எடுத்து மடியில் வைத்து -தானும் ஆஸ்வச்தனான படியைக் கண்டு-ப்ரீதராய் தலை கட்டுகிறார் –
அதனில் பெரிய என் அவா -என்று நம் ஆழ்வாருக்கு பகவத் விஷயத்தில்
பிறந்த அபிநிவேசம் எல்லாம் -இப் பெரியாழ்வார் பக்கலிலே ஈஸ்வரனுக்கு பிறந்த படி -இத் திரு மொழி –
தனிக் கடலே –
ஈஸ்வரனுடைய முனியே நான்முகன் -வட தடமும் -இத்யாதி-

—————————————-

சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே–1-4-

சுறவ -நற் கொடிக்களும்–சுறா என்னும் மத்ச்யங்கள் எழுதின நல்ல துகில் கொடிகளையும் –
அவரைப் பிராயம்-பால்ய பிராயம்-

சுவரில் புராண நின் பேர் எழுதிச்-
தன் த்வரையாலே ஒன்றைச் செய்கிறாள் இத்தனை போக்கி -கிருஷ்ணனை ஸ்மரித்த வாறே இவனை மறக்கக் கூடுமே –
அதுக்காக அவன் பெயரை ஒரு பித்தியிலே எழுதி வைக்கும் யாய்த்து –
எழுதி வாசித்து கேட்டும் வணங்கி –வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது –நான்முகன் -63-என்கிறது எல்லாம்-
இவன் விஷயத்திலே யாய்த்து இவளுக்கு –புராண -பழையதாகப் பிரிந்தாரை சேர்த்துப் போருமவன் அன்றோ நீ

சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்-
கருடத்வஜனோடே வாசனை பண்ணிப் போருமது தவிர்ந்து –மகரத்வஜனை நினைக்கும்படியாய் வந்து விழுந்தது
சுறவம் -ஒரு மத்ஸ்ய விசேஷம் –

துரங்கங்களும்-
கிருஷ்ணனுடைய தேர் பூண்ட புரவிகளை நினைத்து இருக்குமது தவிர்ந்து இவனுடைய குதிரைகளை நினைத்து இருக்கிறாள்-
கவரிப் பிணாக்ககளும் –
விமலாதிகளை ஸ்மரிக்கும் அது தவிர்ந்து -இவனுக்கு சாமரம் இடுகிற ஸ்திரீகளை யாய்த்து நினைக்கிறது –பிணா -என்று பெண் பேர் –
கருப்பு வில்லும்-
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்னுமது தவிர்ந்து கருப்பு வில்லை யாய்த்து நினைக்கிறது
காட்டித் தந்தேன் கண்டாய் –
இவள் தன் நெஞ்சில் படிந்தவற்றை நமக்கு அறிவித்தால் என்று நீ புத்தி பண்ணி இரு கிடாய் –
வாஹ நாதிகள் சமாராதன காலத்தில் கண்டு அருளப் பண்ணும் வாசனையால் இங்குச் செய்கிறாள் –
சவிபூதிகனாய் இருக்குமவனுக்கு உபாசித்துப் போந்த வாசனை –
காம தேவா-
அபிமத விஷயத்தை பெறுகைக்கு-வயிற்றில் பிறந்த உன் காலில் விழும்படி யன்றோ என் தசை –
அவரைப் பிராயம் தொடங்கி -அரை விதைப் பருவம் தொடங்கி-பிராயம் தொடங்கி அவரை என்றும் ஆதரித்து –
பால்யாத் பிரப்ருதி ஸூ ஸ நிக்தோ லஷ்மணோ லஷ்மி வர்த்தன -ராமஸ்ய லோக ராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்டச்ய நித்யச -பால -18-27-
என்று பருவம் நிரம்பாத அளவே தொடங்கி
என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்-
என்றும் ஒக்க அவனை ஆதரித்து –
அவ்வாதரமே எருவாக வளர்ந்து -போக்தாவால் உண்டு அறுக்க ஒண்ணாதபடி இருக்கிற முலைகளை –
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்-
பதினாறாயிரம் பெண்களுக்கும் -7-9-முன்னோட்டுக் -முந்தி சம்ச்லேஷிக்கை -கொடுத்தவன் வேண்டுமாய்த்து இவற்றுக்கு ஆடல் கொடுக்கைக்கு –
தொழுது வைத்தேன்-
அவனுக்கு என்று சங்கல்ப்பித்தால் பின்னை அவன் குணங்களோ பாதி உபாச்யமாம் இத்தனை இறே-
இந்த முலைகளை தொழுது வைத்தேன் -இவற்றை தொழுது வைக்கக் குறை இல்லையே –
ஒல்லை விதிக்கிற்றயே-
என் ஆற்றாமை இருந்தபடி கண்டாயே
இனி இம் முலைகளிலே செவ்வி அழிவதற்கு முன்பே சேர்க்க வல்லையே –

————————————————————————————

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-

சிறியாத்தான் பணித்ததாக நஞ்சீயர் அருளிச் செய்யும் படி –
இவள் பிறந்த ஊரில் திர்யக்குகளுக்குத் தான் வேறு பொது போக்கு உண்டோ
கண்ணுறக்கம் தான் உண்டோ –என்று
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -திருவாய் -6-7-2-வி றே பண்ணிக் கொண்டு இருப்பது –
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-
ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தையே தாத்மனோ ஹிதம் ஹரிர் ஹரிர் ஹரிரிதி
-வ்யாஹரேத் வைஷ்ணவ புமான் -வங்கி புரத்து நம்பி நித்ய கிரந்தம் –
என்னுமா போலே யாய்த்து
கரிய குருவிக் கணங்கள்-
வடிவாலும் பேச்சாலும் உபகரிக்குமவை யாய்த்து –
மாலின் வரவு சொல்லி –
அவன் முன்னடி தோற்றாதே வரும்படியைச் சொல்லி
மருள் இந்தளம் என்கிற பண்ணைப் பாடுகிறது மெய்யாக வற்றோ
கிந்நு ஸ்யாச் சித்த மஓஹோ அயம் -சீதா பிராட்டி பட்டது எல்லாம் ஆண்டாளும் படுகிறாள் –

சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே —
எல்லாருடையவும் ரஷணத்தில் ஒருப்பட்டு இருக்கிறவன்
பதினாறாயிரம் பெண்களோடு ஆனைக்கு குதிரை வைத்து பரிமாறின பரம ரசிகன்
ப்ரணய தாரையிலே விஞ்சி இருக்கும் பெருமான்
அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையவன்
அவன் வார்த்தை சொல்லா நின்றன –

மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-
இது மெய்யாக வற்றோ –

———————————————————————————————–

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்-

இவள் விரஹத்தாலே தரிப்பற்று நோவு படுகிற சமயத்திலே -வளர்த்த கிளியானது முன்பு கற்பித்து வைத்த திரு நாமத்தை
இவளுக்கு சாத்மியாதே தசையிலே சொல்லிக் கொண்டு அங்கே இங்கே திரியத் தொடங்கிற்று
இது தான் ச்வைரமாக சஞ்சரிக்கும் போது அன்றோ நம்மை நலிகிறது -என்று பார்த்து கூட்டிலே பிடித்து அடைத்தாள்-(கண்ணன் நாமமே குழறிக் கொல்ல கூட்டில் அடைக்க கோவிந்தா என்றதே )
அங்கே இருந்து கோவிந்தா கோவிந்தா என்னத் தொடங்கிற்று –
கோவிந்தா கோவிந்தா –
நாராயணாதி நாமங்களும் உண்டு இ றே –
இவள் தான் நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று கற்பித்து வைக்கும் இ றே
அது மர்மம் அறிந்து உயிர் நிலையிலே நலியா நின்றது –
இவன் தான் பசுக்களை விட்டுக் கொண்டு தன்னைப் பேணாதே அவற்றினுடைய ரஷணத்துக்காக அவற்றின் பின்னே போம்
தனிமையிலே யாய்த்து -கோவிந்தன் -பசுக்களை அடைபவன் -இவள் தான் நெஞ்சு உருகிக் கிடப்பது –
இப்போது அந்த மர்மம் அறிந்து சொல்லா நின்றதாய்த்து –

ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
இது சோற்றுச் செருக்காலே இ றே இப்படிச் சொல்லுகிறது -அத்தைக் குறைக்கவே தவிருகிறது -என்று பட்டினியே விட்டு வைத்தாள்
ஊண் அடங்க வீண் அடங்கும் -என்று இ றே அவள் நினைவு –
விண்ணப்பம் செய்வார்கள் -அத்யயன உத்சவத்தில் -மிடற்றுக்கு எண்ணெய் இட்டு -பட்டினி விட்டு- மிடற்றிலே கணம் மாற்றிப்
பாடுமா போலே உயரப் பாடுகைக்கு உடலாய் விட்டது
அவன் திருவடிகளைப் பரப்பின இடம் எங்கும் இது த்வநியைப் பரப்பா நின்றது
கிருஷ்ணாவதாரத்தை விட்டு அவ்வருகே போந்ததாகில் அத்தோடு போலியான ஸ்ரீ வாமன அவதாரத்தை சொல்லியாய்த்து நலிவது –

நாட்டில் தலைப் பழி எய்தி
நாட்டிலே தலையான பழியை பிராபித்து -நாட்டார்க்கு துக்க நிவர்த்தகமாய் நமக்கு தாரகமான(-திரு நாமம் ) -இவளுக்கு மோஹ ஹேது வாகா நின்றது
இது என்னாய்த் தலைக் கட்ட கடவதோ -என்று நாட்டிலே தலையாய் இருப்பதொரு பழியை பிராபித்து –

உங்கள் நன்மை இழந்து தலையிடாதே-
அவன் தானே வரும் அளவும் பார்த்து இருந்து இலள்-இவள் தானே போவதாக ஒருப்பட்டாள்-என்று உங்கள் நன்மையை இழந்து கவிழ தலை இடாதே
முகம் நோக்க முடியாதபடி லஜ்ஜையால் தலை கவிழ்ந்து கிடப்பதைக் சொல்கிறது –

சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–
நெற்றிகள் உயர்ந்து தோன்றா நின்றுள்ள மாடங்களால் சூழ்ந்து தோன்றா நின்றுள்ள ஸ்ரீ மத் த்வாரகையிலே கொடு போய் பொகடுங்கோள்-
பதினாறாயிரத்து ஒரு மாளிகையாக எடுத்து -என்னை அதிலே வைத்து அவன் அவர்களோடு ஒக்க அனுபவிக்கலாம் படியாக-
என்னை அங்கே கொடு போய் பொகடுங்கோள்

———————————————————————————–

மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சித் தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –12-10-

மன்னு மதுரை -பகவத் சம்பந்தம் மாறாத -என்றபடி தொடக்கமாக –வண் துவாராபதி தன்னளவும்
அவ்வளவு போலே பூமி உள்ளது –
அவன் உகந்து அருளின தேசங்களே பூமி –வாசஸ் ஸ்தவயமான தேசம் – என்று இருக்கிறாள் போலும்-

தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித்
மதுரைப் புறத்து -என்று தொடங்கி–துவராபதிக்கு உய்த்திடுமின் -என்கிறாள் இ றே
தன்னை உறவுமுறையார் உய்த்து பெய்து கொடு போய் விட வேண்டி
தாழ் குழலாள் துணிந்த துணிவை-
தன் மயிர் முடியை பேணாமையிலே தோற்று அவன் தன் வழி வரும்படி இருக்கிற இவள் தான் துணிந்த துணிவை –

பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும்
ஸ்ரீ மத் த்வாரகையிலே மாளிகையோடு ஒக்குமாய்த்து இவ் ஊரும்

புதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –
இனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல் என்று தோற்றி இருக்கிற வற்றை அப்யசிக்க வல்லார்கள் –
தனக்கு கால் நடை தாராத தசையிலே- தேசிகரைப் பார்த்து- நீங்கள் என்னை கொடு போங்கோள்- என்ன வேண்டாதே –
அவன் அனுமதிப்படியே- ஆதி வாஹிக குணம் நடத்த – அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்- ஸ்ரீ வைகுண்டத்திலே-அனுபவிக்கப் பெறுவர்

————————–

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே
இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன்
சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–6-6-7

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி –
பூதனை முடியும்படி
அவளுடைய வடிவுக்கு தக்க
பெரிய முலையை உண்டு

முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான்அடிக் கீழ் எய்த கிற்பீர் –
ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்
பசுக்களின் பின்னே பெருத்த இலைக் குழலை ஊதிக் கொடு போய் -அவற்றை மேய்த்து –
மீண்டு திரு வாய்ப்பாடியிலே புகுந்து –
இடைப் பெண்கள் உடைய வளை தொடக்கமான வற்றை கொண்டவன்
திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர்

மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன் –
மலைத் தாழ்வரைகளில் உண்டான ரத்னங்களைக் கொடு வந்து
பூமி அடைய உஜ்ஜீவிக்கும்படி சம்ருத்தியைத் தள்ளா நின்றுள்ள
ஜல சம்ருத்தியை உடைத்தாய்
தர்ச நீயமான பொன்னி நாட்டை உடையவன் –

சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –
பெரிய ஆண் பிள்ளை யானவன்
அவ் வாண் பிள்ளை தனத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக
ஆஸ்ரயிக்கிற தேசம் –

——————————————————-

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே —6-8-7-

கட்டேறு நீள் சோலைக் –
இந்த்ரன் உடைய காவல் காடு என்கிற மதிப்பாலே மிக்க அரணை உடைத்தாய் இருக்கிற-

காண்டவத்தைத் தீ மூட்டி விட்டானை –
அர்ஜுனனும் தாமுமாய் யமுனா தீரத்தில் பூம் பந்து இறட்டு
விளையாடா நிற்க
அக்னி ஒரு ப்ராஹ்மன வேஷத்தை கொண்டு வந்து நிற்க
நீ இந்த்ரன் உடைய காட்டை புஜி-என்று விட்டான் –

மூட்டி விட்டானை –
துஷ்ட மிருகங்களின் மேலே விட்டானாய்
தான் கிட்டுகைக்கு பயப்படுமா போலே
பிரவேசிப்பிக்கையில் உண்டான அருமை சொன்னபடி –

மெய்யமர்ந்த பெருமானை –
இன்னும் ஆரேனும் அர்த்தித்து வரில் செய்வது என்-என்று
திரு மெய்யத்தில் வந்து சந்நிஹிதன் ஆனவனை-

மட்டேறு கற்பகத்தை –
பரிமளம் மிக்கு வாரா நின்றுள்ள
கல்பக விருஷத்தை –

மாதர்க்காய் –
ஸ்ரீ சத்ய பாமைப் பிராட்டி பக்கல்
தாதர்த்தத்தை முடிய நடத்தின் படி –

வண்டுவரை நட்டானை –
இந்தரனுக்கு நரகாசுரன் உடன் விரோதம் விளைய
அவனுக்காக எடுத்து விட்டு
அவனை அழித்து
மீண்டு வந்து ஸ்வர்க்கத்தை குடி ஏற்றுகிற அளவிலே
இந்த்ராணி யானவள் -கல்பக வருஷத்தின் பூ வர
உங்களுக்கு இது பொராது இறே
உடம்பு வேர்க்கும் இறே
தரையில் அல்லது கால் பாவாதே -என்று இங்கனே
தன்னுடைய தேவதத்வத்தையும்
இவள் உடைய மனுஷ்யத்வத்தையும் சொல்லி
ஷேபித்துச் சூடினாள்-
அவளும் கிருஷ்ணன் தோளைப் பற்றி -இத்தை என் புழக் கடையில் நட வேணும் -என்ன
அத்தை பிடுங்கிக் கொடு போந்து
ஸ்ரீமத் த்வாரகையிலே நட்டு
பின்னை யாய்த்து திரு மஞ்சனம் பண்ணிற்று
தான் சோபன -நன்றாக -குடி ஏறுவதற்கு முன்பே தன்னைக் குடி இருத்தினவன்
தன் புழக் கடையிலே ஒரு குப்பை மேனியைப் பிடுங்கினான் என்று
வஜ்ரத்தை கொண்டு தொடருவதே -என்று
பிள்ளை அமுதனார் பணிக்கும் படி –

நாடி நறையூரில் கண்டேனே –
என்னுடைய அபேஷிதம் செய்கைக்காக
திரு நறையூரிலே வந்து நின்றவனைக்
காணப் பெற்றேன் –

—————————————————-

எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்த ஸ்ரீ கீதையை
அறிவு கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

சேயன் இத்யாதி –
எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு –
ஆஸ்ரிதர்க்கு பவ்யனாய் அணியனாயும்-
அநாஸ்ரிதர் எட்ட ஒண்ணாத படி மிகவும் பெரியனாய்க் கொண்டு
சேயனாய் -அதி தூரஸ்தனாயும் இருக்கும்
ஆயன் துவரைக்கோன் –
நின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –
கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –
மாயன் –
ஒரு ஷூத்ரனுக்குத் தோற்று
அவ்விரவிலே கடலைச் செறுத்து படை வீடு பண்ணினான் –
மதுரையில் கட்டளையிலே யங்கே குடியேற்றி
அதுக்கு மேலே நரவதம் பண்ணிக் கொண்டு வந்த கந்யகைகள் பதினாறாயிரத்து ஒரு நூற்றுவரையும் ஒரு முஹூர்த்தத்திலே
அத்தனை வடிவு கொண்டு அவர்களோடு புஜித்த படி தொடக்கமான ஆச்சர்யங்கள்
அன்று -இத்யாதி
அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-உலகத்திலேதிலராய்
லோகத்தில் அந்யராய் ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்
மெய் ஞானமில் –
மெய்யான ஞானம் இல்லை –

————————————————————————–

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71–

பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது
அறியாது இருந்த அளவேயோ –
சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க
அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான்
அறியப் போமோ -என்கிறார்
சேயன் மிகப் பெரியன் –
யதோவாசோ நிவர்த்தந்தே -என்று
வாக் மனஸ் ஸூ களுக்கு நிலமில்லாத படியாலே
ப்ரஹ்மாதிகளுக்கும் தூரச்தனாய் இருக்கும்
அணியன் சிறியன்-
சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் பிறந்து
அனுகூலர்க்கு அண்ணி யானாய் இருக்கும்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன்
அண்ணி யனானமைக்கு உதாரஹனம்
இடையனாய்
ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்
ஒரு ஷூத்ரனுக்கு-ஜராசந்தன் – தோற்க வல்ல ஆச்சர்ய குணத்தை உடையவன் –
அன்று ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்
தேர் தட்டிலே நின்று
உன்னுடைய சகலத்துக்கும் நானே கடவன்
நீ சோகிக்க வேண்டா –
என்று அருளிச் செய்த வார்த்தையை தஞ்சமாக
நினைத்து இருக்கைக்கு அடியான
தத்வ ஞானம் இன்றிக்கே ஈஸ்வரன்
தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று
நினைக்கும்படி சத்ருக்களாய்
தாங்களும் கிருஷ்ணன் எங்களுக்கு சத்ரு என்றும் இருப்பார்கள்

————————-

இவளுக்குக் கிருஷ்ணன் திருவடிகளில் உண்டான ஐகாந்தியத்தை நினைத்து,
அவனை ஏத்துங்கோள்; இவள் பிழைப்பாள்,’ என்கிறாள்.

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படு மறை வாணனை வண் துவ ராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே–4-6-10-

உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் அவனை அல்லால் –
தன் நெஞ்சாலே மதித்து வேறு ஒரு தெய்வத்தைத் தொழுது அறியாள் இவள்.
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த–ஸ்ரீ ராமா. பால. 18 : 27 தொட்டில் பருவமே தொடங்கிப் பரம சினேகிதராய் இராநின்றார்’ என்கிறபடியே,
பிறை தொழும் பருவத்திலும் பிறை தொழுது அறியாள்.
முலையோ முழுமுற்றும் போந்தில; பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே!’-திருவிருத்தம், 60 என்று
நீங்கள் ஆச்சரியப்படும்படி அன்றோ அவ் விளமைப் பருவத்திலும் இருந்தது?
இனி, ‘இப்போது பர்வதத்தை விட்டுப் பதர்க் கூட்டத்தைப் பற்றுமோ?
ஆகையாலே, இன்னார்க்கு இன்னது பரிஹாரம் என்று ஒன்று இல்லையோ? அது அறிந்து பரிஹரிக்க வேண்டாவோ?
முழங்கால் தகர மூக்கிலே ஈரச்சீரை கட்டுமாறு போலே யன்றோ நீங்கள் செய்கிற பரிஹாரம்?
தேவதாந்த்ர ஸ்பர்சம் -வேறு தெய்வங்களின் சம்பந்தம் இவளுக்குப் பொறாது,’ என்று அறிய வேண்டாவோ?’ என்கிறாள் என்றபடி.
அநந்ய தைவத்வம் – ‘வேறும் பற்றக்கூடிய ஒரு தெய்வம்-ஆஸ்ரய தேவதை – உண்டு, அது ரஷிக்கிறது -காப்பாற்றுகிறது,’ என்று
நினைக்க விரகு இல்லை கண்டாய் எனக்கு.
ஸஹபத்நியா -சுந். 28 : 12– என்று, பெரிய பெருமாள் திருவடிகளிலே இவர் புகும் போதும் இவர்க்கு எடுத்துக் கை நீட்டப் புகுமத்தனை போக்கி,
பெரியபெருமாள் தாம் உத்தேசியமாகப் புக்கு அறியேன்.
இயம்க்ஷமாச -ராவணன் பலவாறாகப் பிதற்றிய வார்த்தைகளையும் ராக்ஷசிகளுடைய கைகளாலும் வாயாலும் அச்சம் உறுத்துதலையும் –
தர்ஜன பர்த்தஸ்னங்களையும் பொறுத்திருந்ததும் ‘அவருடைய ஓர் இன் சொல் கேட்கலாம்’ என்று கண்டாய்.
பூமௌசஸய்யா – ‘இத் தரைக் கிடை கிடந்ததும்– தவாங்கே சமுபாவிசம் -தேவரீருடைய மடியில் படுத்துக்கொண்டேன்,’ என்கிறபடியே, ‘
அவருடைய மடியில் இருப்பு ஒருகால் சிந்திக்குமோ?’ என்னுமதனாலே கண்டாய்.
நியமஸ்தர்மமே – ரக்ஷகத்வம் -காப்பாற்றும் தர்மம் அவர் தலையிலே’ என்னுமதனாலே கண்டாய் நான் இருந்தது; என்றது, –
ந த்வா குர்மி தசக்ரீவ பஸ்ம பஸ்மார்க தேஜஸா -ஸ்ரீ ராமா. சுந். 22 : 20– பத்துத் தலைகளையுடையவனே! எரிக்கப்படுவதற்குத் தகுந்தவனே!
எனக்கு ஆற்றல் இருந்தும், என்னுடைய கற்பாகிய ஒளியால் உன்னைச் சாம்பலாகச் செய்யேன்,’ என்று
ராவணனைப் பார்த்துக் கூறியது ஸ்ரீ ராமபிரானை நினைத்து’ என்றபடி.
பதிவிரதாத்வம் – ஏதத் விரதம் மம -சரணாகதி அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்கு விரதம்,’ என்றவருடைய விரதம் ஒழிய,
எனக்கு’ என ஒரு சங்கல்பத்தை உண்டாக்கி இவற்றை அழிக்க நினைத்திலேன் கண்டாய்.
விபலம் மம இதம் – தப்பாதவையும் தப்பிவிட்டன. ‘எது போலே?’ என்னில்,
மாநுஷாணாம் கிருதக்னேஷூ கிருதமிவ –ஆத்மாநம் மானுஷம் மன்யே ‘நான் என்னை மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்றவர்க்கும்
உண்டே அன்றோ மனிதத் தன்மை? அவரை ஒழிந்தார் திறத்துச் செய்த காரியங்களைப் போன்று விழுந்தது. என்றது,
தப்பாதது தப்பிற்று,’ என்றபடி, ‘அதற்கு அடி என்?’ என்னில்,
மம இதம் – ‘அவர் பக்கல் குறையில்லை; அதற்கு இலக்கு நான் ஆகையாலே,’ என்றாள் பிராட்டி.

அல்லன் மாக்கள் இலங்கைய தாகுமோ
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினாற்சுடு வேன்!அது தூயவன்
வில்லினாற்றற்கு மாசு என்று வீசினேன்.’– என்ற கம்ப நாடர் திருவாக்கு

நும் இச்சை சொல்லி –
உங்களுக்கு இஷ்டமானவற்றைச் சொல்லி; என்றது, ‘பொருளின் உண்மையைப் பார்த்தாலும் இவளைப் பார்த்தாலும்
வேறு தெய்வங்களின் சம்பந்தம் பொறாததாய் இருந்ததே அன்றோ?
இனி உள்ளது உங்களுக்குத் தோற்றிய வார்த்தைகளைச் சொல்லுகையாயிற்றே அன்றோ?’ என்றபடி.
நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் –
துர்விருத்தர் செய்வதை விருத்தவான்கள் செய்வர்களோ?
தோள் அவனை அல்லால் தொழா’ என்றே அன்றோ நீங்கள் சொல்லுவது?
ஆதலால், நீங்கள் -விக்ருதர்கள் -இவற்றுக்கு வேறுபட்டவர்களாமவர்கள் அல்லிரே,’ என்றபடி. ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்ன,

மன்னப்படு மறை வாணனை –
வேதைக சமைதி கம்யனை -நித்யமான வேதங்களாலே சொல்லப்படுகையாலே வந்த ஏற்றத்தினையுடையவனை;
மன்னப்படுதல் -நித்தியமாய் இருத்தல். என்றது, மனிதனுடைய புத்தியினாலே உண்டானவை அல்லாமையாலே,
வஞ்சனை முதலான தோஷங்கள் இன்றிக்கே, முன்னே முன்னே உச்சரித்துப் போந்த கிரமத்திலே பின்னே பின்னே
உச்சரித்து வருகின்ற தன்மையைப் பற்றச் சொன்னபடி.
அன்றிக்கே ‘மன்னுகையாவது, பயிலுதலாய், ஓதுகின்ற விதியின்படி வந்துகொண்டிருக்கும் வேதங்களால் சொல்லப்படுகின்றவனை’ என்னுதல்.
ஆக, ‘ஆகமம் முதலானவைகளில் சொன்னவற்றைக்கொண்டோ பரிஹரிக்கப் பார்ப்பது?
வேதங்களால் அறியப்படுகின்றவனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறாள் என்றபடி.

வண் துவராபதி மன்னனை –
கேட்டார் வாய்க் கேட்டுப் போகாமே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி வந்து அவதரித்தவனை.
நீரிலே புக்கு அழுந்தினாரை முகத்திலே நீரைத் தெளித்துப் பரிஹரிக்குமாறு போலே,
தேர்ப் பாகனார்க்கு மோஹித்த இவளை, வண் துவராபதி மன்னன் திருநாமத்தைச் சொல்லித் தெளியச் செய்யப் -ஆஸ்வசிக்க –
பாருங்கோள்,’ என்பாள், ‘வண் துவராபதி மன்னனை ஏத்துமின்’ என்கிறாள்.

ஏத்துமின் –
வாய் படைத்த பிரயோஜனம் பெற ஏத்துங்கோள்.
சீர் பரவாது, உண்ண வாய் தான் உறுமோ ஒன்று?’-பெரிய திருவந். 52- என்று அன்றோ நீங்கள் சொல்லுவது?

ஏத்துதலும் தொழுது ஆடும் –
நீங்கள் க்ருதார்த்தைகளாம் – செய்யத்தகும் காரியத்தைச் செய்து முடித்தவர்கள் ஆகுமளவே அன்று;
அதசோ அபயங்கதோ பவதி ‘பிறகு அவன் அச்சம் இல்லாதவன் ஆகிறான்,’ என்கிறபடியே,
ஏத்தின உடனேயே -ப்ரபுத்தையாய் -தெளிவை யுடையவளாய்த் தொழுது ஆடுவாள்.

தொழுது ஆடுமே
உணர்த்தி உண்டானால் செய்வது அது போலே காணும். என்றது, ‘தரித்து –
வியாபார க்ஷமை -ஆடுதற்குத் தக்க ஆற்றலை யுடையவளும் ஆவாள்,’ என்றபடி.

—————————————————————-

கீழ் -அன்னை, நீ செய்கிற இதனைப் பொறுக்க மாட்டாள்’ என்ன, “அன்னை என் செய்யும்” என்று,
அவள் பொறாமல் செய்வது என்? என்னுமளவிலே நின்றாள்.
இப் பாசுரத்தில், நீ இப்படி ஒரு விஷயத்தில் வியவசிதையானபடி -அறுதியிட்டிருப்பதை அறிந்தால்,
அவள் ஜீவியாள் கிடாய் – பிழைக்க மாட்டாள் என்ன,
அவள் பிழைத்தால் என்? முடிந்தால் என்? என்கிறாள்.

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே–5-3-6-

அன்னை என் செய்யில் என்-
அவள் பிழைத்தால் என்? முடியில் என்? என்கிறாள்.
குரவ : கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா”- ஸ்ரீ விஷ்ணுபுராணம், 5. 18 : 22
விரக அக்னியினால் கொளுத்தப்பட்டிருக்கிற நமக்குப் பெரியோர்கள் என்ன செய்வார்கள்” என்கிறபடியே,
முடியாதே இருப்பார்க்கு அன்றோ இதனை பரிஹரிக்க – நீக்க வேண்டுவது,
கையற்றார்க்கு இது கொண்டு காரியம் என்?
நன்று-தாயாருடைய நாசம் ஒரு தலையாகவும் மீளாதபடியாய்,
இவள் நாயகனுடைய ஸுந்தரியாதிகளில் -அழகு முதலானவைகளில்- ஈடுபட்டவள் ஆனாள்’ என்று
ஊரார் பழி சொல்லுவார்களே என்ன,

ஊர் என் சொல்லில் என்-
அவர்கள் பழி சொல்லில் என்?
குணங்களைச் சொல்லில் என்?
“கொல்லை” என்னுதல், “குணமிக்கனள்” என்னுதல், இத்தனை அன்றோ அவர்கள் பழி சொல்லுவது.

தோழிமீர்-
தாய் என் செய்யில் என், ஊர் என் சொல்லில் என்’ என்று நீங்கள் மேல் விழுந்து என்னை இவ் விஷயத்தில் –
பிரவணையாக்குகை -ஈடுபாடு உடையவளாக ஆக்குகை அன்றிக்கே,
தாய் பிழையாள், ஊரார் பழி சொல்லுவர்கள்’ என்று இதனைப் பழியாகச் சொல்லுமளவு உங்களது ஆன பின்பு.

என்னை –
“தாய் வாயிற் சொற்கேளாள் தன் ஆயத்தோடு அணையாள்” என்கிற
தாயார் பிழையாள், ஊரார் பழி சொல்லுவார்கள்’ என்றால் மீளாதபடி இவ் விஷயத்தில் ஈடுபாடுடையவளாய்
இருக்கிற என்னை.

இனி-
உங்கள் சொல்லும் கேளாதபடி கைகழிந்த பின்.

உமக்கு –
இது பழி’ என்று மீட்கப் பார்க்கிற அளவிலே நிற்கிற உங்களுக்கு.

ஆசை இல்லை-
இனி என் பக்கல் உங்களுக்கு நசை அற அமையும்.

தோழிமீர் –
இதற்கு முன்பு எல்லாம் ‘தோழி’ என்று உயிர்த் தோழி ஒருத்தியையும் பார்த்து வார்த்தை சொல்லிப் போந்தாள்;
இப்போது இவளுடைய துணிவின் மிகுதியைக் கண்டவாறே
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தை சொல்லி யாகிலும் மீட்க வேணும்’ என்று ஆய வெள்ளம் எல்லாம் திரண்டன;
அதனாலே ‘தோழிமீர்’ என்கிறாள்.

அகப்பட்டேன்-
இப்போது ‘ஹிதம்’ என்கிற புத்தியாலே ஒரு வார்த்தை சொன்னோமே யாகிலும், ஊரார்க்கும் தாய்மார்க்கும்
இவ்வருகே எங்களிடத்தில் ஒரு வாசி நினைத்திருக்க வேண்டாவோ உனக்கு” என்ன,
அது அப்படியே, அதில் குறை இல்லை; என்னைக் கடல் கொண்டது காணுங்கோள், நான் என் செய்வேன் என்கிறாள்.

முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதிமன்னன் –
“சிறியார் பெரியார்’ என்ற வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒரு சேர ஆழப் பண்ணும் கடலிலே அன்றோ நான் அகப்பட்டது.
ரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும் அநுபவிக்கலாம்படி
தன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை.
“குணம்” என்றது, கொள்ளுகிறவனைக் காட்டிலும் தாம் தாழ நின்று கொடுக்கும் சீலத்தை.
தன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே அன்றோ;
அதற்காகத் தாழ நின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது.
“பும்சாம்” – அந்த அழகும் கொடையும் சீலமும் வயிர உருக்கானவாம்; என்றது, பலம் அற்ற பெண்கள் படுமதனை
வன்னெஞ்சரையும் படுத்த வல்லனவாம் என்றபடி.
அன்றிக்கே, “பிரகிருதி புருஷர்கள்” என்றால் போலேயாய், அசித்துக்கு வேறுபட்டவர்கள் எல்லாரையும்
ஈடுபடுத்த வல்லன என்னவுமாம்.
“திருஷ்டி சித்தாபஹாரிணம்”-கண்களுக்கு மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின் செல்லுமத்தனை நெஞ்சு.
தாய் வேறு, கன்று வேறு ஆக்கும் விஷயம் அன்றோ என்றபடி.
(மனத்தினைத்‘தாய்’ என்றும், மற்றைக் கரணங்கள் மனத்தினைப் பின் செல்லுவன ஆதலின், அவற்றைக் ‘கன்று’ என்றும்
அருளிச்செய்கிறார். ஸ்ரீ பரதாழ்வானையும் கைகேசியையும் வேறாக்கின விஷயம் அன்றோ இது என்பது, தொனிப் பொருள்,)
யத்ருஷ்ய பிரதமஜாயே புராணா “எந்தப் பரம பதத்தில் எல்லாவற்றையும் காண்கிறவர்களும், எப்பொழுதும் உள்ளவர்களும்,
பகவானுடைய அநுபவத்தில் எப்பொழுதும் ஒருபடிப் பட்டவர்களும்” என்னும்படி இருக்கிறவர்கள்
ஆகையாலே ‘முன்னை அமரர்’ என்கிறது.
நித்ய ஸூரிகளுக்கும் சத்தைக்குக் காரணமாயிருக்கிற மேன்மையுடையவன் ஆதலாலே முதல்வன்’ என்கிறது.
அன்றிக்கே, அப் பொழுதைக்கு அப் பொழுது ஆசைப் படக்கூடிய-நித்ய ஸ்ப்ருஹா- விஷயமானவன் என்னுதல்.
ஆக, அத்தகைய விஷயத்திலே அன்றோ நான் அகப்பட்டது என்பதனைத் தெரிவித்தபடி.

வண் துவராபதி மன்னன்’
என்றதனால், முதன்மை தோற்ற ஓலக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிற துறை அல்லாததிலேயோ நான் இழிந்தது’
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராக வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்”
என்கிறபடியே பெண்களுக்கு உடம்பு கொடுத்துக் கொண்டிருக்கிற நம் துறையிலே அன்றோ இழிந்தது
என்பதனைத் தெரிவிக்கிறாள்.
அன்றிக்கே, ‘மன்னன்’ என்றதனால் மேன்மை தோற்ற ஓலக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிற இடமே நன்றாய் விட்டது
நீர்மை தோற்ற இருக்கிற இடத்தில் விழுகிற பிரம்புகளிற் காட்டில் என்பதனைத் தெரிவிக்கிறாள் ஆதலுமாம்.

மணி வண்ணன்-
அவ் விரண்டும் இல்லையே யாகிலும் விட ஒண்ணாததாயிற்று வடிவழகு.
காதலி துவக்குண்பது வடிவழகிலே அன்றோ.

வாசுதேவன்-
வடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப் பிறப்பு.
ஸ்னுஷா தசரதஸ் யாஹம் -நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே,
பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது ‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும்.
ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந: ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ருசைந்ய பிரதாபிந:”- சுந். 33 : 15, 16
சத்ரு சைன ப்ரதாபி ந -எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே,
எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ? பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.

முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன்-
அவனுடைய நைர் க்ருண்யத்தோடே -அருள் அற்ற தன்மையோடு நீர்மையோடு,
ஊராருடைய பழியோடு புகழோடு வாசி அற்றால் போலே,
அவன் மேன்மையோடு சௌலப்யத்தோடு வாசி அற இரண்டும் ஆகர்ஷகமாய் -மனக் கவர்ச்சியாய் இருக்கிறதாயிற்று இவளுக்கு.

வலையுள் . . . அகப்பட்டேன் –
அந்தப் பொதுவானதில் அன்றிக்கே, அவன் என்னைக் குறித்து நோக்கின
நோக்கிலும் புன் முறுவலிலும் அன்றோ நான் அகப்பட்டது.
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் வலையாக அபிநயித்துப் பாடா நிற்க,
எம்பெருமானார் திருக் கண்களைக் காட்டி யருளினார்,
“கமலக்கண் என்னும் நெடுங்கயிறு” எனக் கடவதன்றோ.
அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்-

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –24-/ 25-

May 29, 2019

ஸ்ரீ தாரகா மந்த்ரம் -இருபத்து நான்காம் அத்யாயம் –

ஸ்ரீர் உவாச –
பரம் ப்ரஹ்ம பரம் தாம பரம் ஜ்யோதிர் அநுபமம்
லஷ்மீ நாராயணம் ப்ரஹ்ம தோஷ சூன்யம் நிரஞ்சனம் -1-
ஏக ஸர்வமிதம் வ்யாப்ய ஸ்திதம் சர்வ உத்தரம் மஹ
அஹந்தா அஹம் பரா தஸ்ய ப்ரஹ்மண பரமாத்மன-2-
ஹிதாயா சர்வ ஜீவாநாம் உன்மிஷந்தீ ஸ்வ வாஞ்சயா
சப்த ப்ரஹ்ம மயீ பூத்வா மாத்ருகா மந்த்ர விக்ரஹா -3-
பவாமிரிணீ
ப்ரதமம் தார ரூபேண யத் அஸ்மி ஏவம் சமுத்தரேத்-4-
ப்ரதமம் த்ருவமாதய தத கர்ணம் சமுத்தரேத்
நாபிம் சமுத்தரேத் பச்சாத் த்ரயம் ஏகத்ர யோஜயேத் மந்த்ரரூப அஹம் தத் தத் வாஸ்ய அநு கா -5-
ஓம் இதி ஏதத் ஸமுத்பன்னம் ப்ரதமம் ப்ரஹ்ம தாரகம்
பிந்துநா பூஷயேத் பச்சா நாதேன ததநந்தரம் -6-
த்யாயேத் சந்தத நாதேன தைல தாரா மிவாததாம்
ஏதத் தத் வைஷ்ணவம் ரூபம் தர்யக்ஷரம் ப்ரஹ்ம சாஸ்வதம் -7-

அநிருத்தஸ் த்வகார அத்ர ப்ரத்யும்ன பஞ்சம ஸ்வர
ஸங்கர்ஷனோ மகாராஸ்து வாஸூ தேவஸ்து பிந்துக–8
சதுர்ணாம விபாகஸ்து நாதஸ் தத்ர ஸூரேஸ்வர
நாதஸ்ய யா பரா காஷ்டா சா ஹந்தா பரமேஸ்வரி -9-நான்கு அக்ஷரங்களும் பிரிக்காத நிலையே நாதம் –
பகவானின் அஹம்-தானே பரமேஸ்வரி –
சக்தி ச பரமா ஸூஷ்மா நாதாந்தகக நாஹ்வயா
சப்த ப்ரஹ்ம மயீ ஸூஷ்மா சாஹம் சர்வாவகாஹிநீ –10-
விராமே சதி நாதஸ்ய ய ஸ்புடீ பவதி ஸ்வயம்
ஜ்யோதிஸ் தத் பரமம் ப்ரஹ்ம லஷ்மீ நாராயணாஹ்வயம்–11-
ஏதத்தே வைஷ்ணவம் தாம கதிதம் பவ்ருஷம் பரம்
சாந்தமஸ் யைவ யத்ரூபம் தஸ்ய தத்த்வம் நிஸாம்ய -12-
விஸ்ருஷ்டிம் பூர்வமாதாய ஸூர்ய மந்தே நியோஜயேத்
சன்னிகர்ஷே பரே ஜாதி தத் ஓம் இதி உதிதம் மஹ-13-
ஏதத் தத் பரமம் தாம சக்தி சம்ஹார லக்ஷணம்
ஸ்மர்ய மாணம் பரம் தத்வம் ப்ரகாசயதி யத் த்ருவம்-14-பிரணவம் உபாசகனுக்கு உயர்ந்த ப்ரஹ்ம தத்வம் காட்டி அருளும் –

ஸம்ஹ்ருத்ய சர்வ சம்பாரம் சுத்த அசுத்தாத்வ சம்பவம்
ஸ்ருஷ்டவ் ஸமுத்யதா சக்தி ஸூர்யே பும்சி சநாதனே–15-
பரமே போக்த்ரு சா விதாய பிரதி சஞ்சரம்
அக்னீ ஷோம மயாத் பாவாத் ஸ்தூலாத் சா பிரதிநிர்கதா -16-
தாம்பத்யம் மத்யமம் சஸ்வத் பிந்து நாத மயம் ச்ரிதா
சக்தி சாந்தாத்மகம் திவ்யம் ஸூஷ்ம தாம்பத்யம் ஆஸ்ரிதா-17-
பிரதி திஷ்டதி சா திவ்யே வ்யாபகே பரமாத்மனி
அஸ்ய மாத்ரா விதாநஜ்ஜை சார்தாஸ் திஸ்ர உதாஹ்ருதா-18-
த்ரயோ அக்நயஸ் த்ரயோ லோகாஸ் த்ரயோ வேதாஸ் த்ரயோ
வ்யூஹாஸ் த்ரயோ வர்ணாஸ் த்ரயோ ஸ்வரா -19-
த்ரி தயம் த்ரி தயம் சக்ர யத் கிஞ்சித் ஜகதீ கதம்
ததாதி த்ரி தயம் ஜ்ஜேயமர்த மாத்ரா நிரஞ்ஜனா-20-

சர்வே சப்த அகாரோத்தா உகாராத் தேஜஸாம் த்ரயம்
பிருதிவ்யாதி ப்ரக்ருத் யந்தம் மகாரோத்தம் புரந்தர -21-
ஜ்யோதிர்மயீ அர்த்தமாத்ரா சா சின்மயீ பரமா கலா
யுக்பி ஸ்வரை சபின் த்வந்தை ராத்யன்ன ஸ்வர ஷட்கயோ -22-
ஓம் ஆம் ஹ்ருதய நம/ஓம் ஈம் சிரசே ஸ்வாஹா / ஓம் ஊம் சிகாயை வசட்/ ஓம் லூம் கவசாய ஹூம் /
ஓம் ஐம் நேத்ராய ஓவ்ஷட்/உச்சரித்து அந்த அந்த இடங்களை எழுவத்துவது போலே தொட வேண்டும்
ஞானாதி குண ஷாட்காந்தை ரங்க க்லுப்திர முஷ்ய
நாபவ் ப்ருஷ்டே ததா பாஹ்வோ ரூருஜாநுப தேஷூ -23-
தார பூர்வான் குணான் பூயோ வின்யசேத் பாக சாசன
ஏவ வின்யஸ்ய தன் மந்த்ரம் அங்கோப அங்க சமன்விதம் -24-
ஸ்வ தேஹே குருராத்மஸ்தம் சிந்தயேத் புருஷோத்தமம்
விஸ்வாதி லய பூர்வம் து யதாவத் தன்னிபோத-25-
ஓம் ஞானாய நம-ஓம் ஐஸ்வர்யாய நம /ஓம் சக்தயே நம / ஓம் பலாய நம / ஓம் வீர்யாய நம /ஓம் தேஜஸே நம /
உபாசகன் தன் சரீரத்தில் உள்ளவனை புருஷோத்தமனாகவே சிந்தித்தபடி இருக்க வேண்டும் –

விஸ்வம் ஜாக்ரத் பத ஈசானம் ஸர்வேந்த்ரிய சமீரகம்
போக்தாரம் சப்த பூர்வாணம் பஞ்சாநாம் விஷயாத்மநாம் -26-
விஸ்வம் என்னும் தேவதையே விழிப்பு நிலையில் அதிஷ்டான தேவதை

அநிருத்தாத்மகம் தம் ச சிந்தயேத் பிரதம அக்ஷரம்
தம் சோப கரணம் தேவமகாரே ப்ரவிலாப்பய து–27-
அநிருத்தனாகவே அந்த விஸ்வத்தை உபாசகன் தியானித்து -அகாரத்தில் லயிக்கச் செய்ய வேண்டும்

அகாரம் தைஜஸே தேவே ப்ரத்யும்நே ஸ்வப்ந வர்த்தமகே
அந்தகரண வ்ருத்தினாம் ப்ரேரக ப்ரவிலாபயேத்-28-
அடுத்து ப்ரத்யும்ன ஸ்வப்ன அதிஷ்டான தேவதை-

தம் சோபகரணம் தேவம் உகாரே ப்ரவிலாபயேத்
உகாரம் சேஸ்வரே ப்ராஜ்ஜே சங்கர்ஷண தநுஸ்திதே–29-
ப்ராஜ்ஜ தேவதை சங்கர்ஷணன் -ஸூஷூப் தி நிலை அதிஷ்டான தேவதை

ஸூஷூப்தி பதகே சாஸ்வத் பிராணாதி ப்ரேரகே விபவ்
விலாப்ய தம் ச தேவேசம் துர்ய சமஸ்தே அர்த்த மாத்ரகே-30-
ஞான ஆனந்த மயே தேவே வாஸூதேவே விலாபயேத்
துர்யாதீதே ச தத் துர்யம் லஷ்மீ நாராயணாத்மநி -31-
வாஸூதேவனே துர்ய அவஸ் தையிலும் – அப்பாலும் உள்ள அதிஷ்டான தேவதை

ப்ரவிலாப்பய ஸ்வயம் திவ்யா மஹந்தாம் வைஷ்ணவீம் ச்ரயேத்
தன்மயஸ் தாத்ருசம் ப்ராப்ய லயஸ்தானம் தத க்ரமாத் –32-
ஜாகராமவ தீர்யாத தீஷிதம் சிஷ்யமப்ரத
சத்குருர் மன்மயோ பூத்வா தாரமத்யா பயேத் ஸ்வயம் -33-
சாங்கோ பாங்க க்ரமம் சஸ்வத் சசமாதிம் சவிஸ்தரம்
ச ச தத்யாத் ஸ்வ மாத்மாநம் தக்ஷிணாம் குரவே தனை–34-
லப்தாநுஜ்ஞஸ்தத குர்வன் பவ்ரச்சரணிகம் விதிக்கு
மஹா நதீ தடம் கத்வா ஸித்தாத்யாயதனம் து வா -35-
பாலசம் வா வனம் சம்யக் பர்யந்தாத்ருஷ்ட பூதலம்
ஸ்நாநம் த்ரிஷவணம் குர்வன் ப்ரஹ்மசாரி ஜிதேந்த்ரிய -36-
பயோயாவக பைஷாணா மச்ரந்நந் யதமம் ஸக்ருத்
குசோச்சயே நிஷண்ண சன் காசசீர குசேசய–37-
பவ்ரச்சரணிகம் -ஜபம் தியாகம் யாகம் முறைப்படி ஸ்நானம் அந்தணர்களுக்கு உணவு அளித்தால் ஆகிய ஐந்தும்

பாலாசம் தாரயேத் தண்டம் சம்வீதஸ் க்ருஷ்ண சர்மணா
மச்சித்தோ மன்மயோ பூத்வா குர்வாதிஷ்டேன வர்தமநா –38-
நித்யம் யோக பரோ பூத்வா சம்யக் ஜ்ஞான சமாதிமான்
தச லக்ஷம் ஜபேன் மௌநீ தாரம் சம்சார தாரகம் -39-
தாரக மந்த்ரத்தை -10-லக்ஷம் முறை ஜபித்து சம்சார லோகம் காப்பவன் ஆகிறான்

தசாம்சம் ஜுஹுயாத் பர்ணைர் சமித்பிர் சர்பிஷாபி வா
ப்ரீதா தஸ்ய ப்ரகாஸே அஹம் அஹந்தா வைஷ்ணவீ பரா –40-
சாதகஸ்ய தத சம்யக் சத் விவேகினி சேதஸி
லஷ்மீ நாராயணாக்யம் தத் சமாஸ்ரயம் ப்ரகாஸதே -41-
நூறாயிரம் முறையால் யாகம் செய்து ஸ்ரீ லஷ்மீ நாராயணன் சாஷாத்காரம் அடையச் செய்கிறேன்

ஜீவன்னேவா பவேன் முக்த புனீதே சஷுஷா ஜகத்
சித்தா ஸ்யுஸ் தஸ்ய மந்த்ராஸ்தே லௌகிகா வைதிகாச்ச யே -42-
ஸ்நாத சர்வேஷு தேவேஷு வித்யாஸூ சகலாஸூ ச
சித்தாந்தேஷு ச சர்வேஷு தீர்த்தேஷு ச பவேதசவ் -43-
இங்கேயே முக்தி பெற்ற நிலை அடைந்து கடாக்ஷத்தாலே ஜகாத்தை பாவனம் ஆக்குகிறான்
அனைத்து மந்திரங்களும் கை கூடி அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான் –
ப்ரயோகா சர்வ மந்த்ராணாம் யாவந்தோ யாத்ருசாச்ச யே
தாவந்தரஸ் தாத்ரு சாஸ்தே அஸ்ய ப்ரயோகா இதி நிர்ணய –44—பூ புவ ஸ்வ -அ உ ம கரங்களில்
அஸ்ய வ்யாஹ்ருத யஸ்திஸ்ரோ வர்ண த்ரய சமுத்கதா
பத்ப்ய சமுத்கதா ஹயஸ்யா ஸாவித்ரீ சர்வ பாவநீ-45- –காயத்ரி மந்த்ரம் இவற்றால்
அஸ்யா பத் பட்யஸ்த்ரயோ வேதா ருக் யஜுர் சாம லக்ஷணா
இத்யேதன்மயம் ஏவேதம் லௌகிகம் வைதிகம் வச -46 -மூன்று பாதங்களில் இருந்தே மூன்று வேதங்களும்
யதா ந்யக்ரோத தாநாயாம் அந்தர் பூதோ மஹா த்ரும
ததேதம் வாங்மயம் விஸ்வம் அஸ்மின் அந்தஸ் ஸ்திதம் சதா 47–ஆலமர விதை போலே பிரணவம் -அனைத்தும் அடங்கும்
ஏதத் ஆத்யம் மஹா பீஜம் சப்தா நாம் ப்ரக்ருதி பரா
சப்த ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் மஹத் 48—மஹா பீஜ மந்த்ரம் -சப்த ப்ரஹ்மம்
ஓங்கார ப்ரணவஸ் தாரோ ஹம்ஸோ நாராயணோ த்ருவ
வேதாத்மா சர்வ வேதாதிராதித்ய சர்வ பாவன–49-
மோக்ஷதோ முக்தி மார்கச்ச சர்வ சந்தாரண ஷம
ஏவமாதீநி நாமாநி சாஸ்த்ரே சாஸ்த்ரே விசசணை -50-
ஓங்காரம்- பிரணவம் – தாரா -ஹம்சம்- நாராயணா- த்ருவம்- வேதாத்மா – சர்வ வேதாதி -ஆதித்யன் -சர்வ பாவாநம் —
மோக்ஷதா -முக்தி மார்க்கம் -சந்தாரண ஷம-போன்ற பலவும் – ஓம் -என்பதை குறிப்பதாகவே சாஸ்திரம் சொல்லும் –

அதீதாநி மஹா புண்யான் ஓங்காரஸ்ய மஹாத்மந
இதம் சரணம் அஞ்ஞானம் இதமேவ விஜாநதாம் –51-
அயமின்விச்சதாம் ஸ்வர்க்க போத பாரம் திதீர்ஷ்தாம்
ஹகாரவ்கார சம்யோகாதயம் பிரசாத சம்ஜ்ஞக –52-பிரணவமே ஓடம் -ஹ -ஓவ் -த்வனிகளின் கூட்டம் என்பதால் பிரசாதம்
பிண்டோ அயம் சர்வ தத்தவாநாம் பிண்ட பூத ச நாதந
சாதனம் பிரதிபத்திச் ச விநியோகோ அத தாரணா –53-
ஜீவஸ் யேவ ஹரேசாந பிரசாதஸ் யாஸ்ய வித்தி தத்
அஸ்யைவ சம்ஜ்ஞா மந்த்ரோ அயம் ஹம்ஸோ நாம மஹா மனு –54-
போக்தாரம் ப்ரதமம் வர்ணம் வித்தி போக்யம் த்விதீயகம்
நாராயண மயம் பூர்வமக்ஷரம் ஸ்ரீ யம் பரம் –55-
அக்நீஷோ மாத்மகாவேதவ் வர்ணவ் வித்தி சனாதனவ்
அநயோ ரந்தரா சக்ர பிந்து தர்மவ் வ்யவஸ்திதவ்–56-
சம்ஜ்ஞா -தொடக்கம் -ஹம்சம் உயர்ந்த மந்த்ரம் –ஹ — நாராயணன் / ஸ -ஸ்ரீ யை /சொல்லும்
இவை இரண்டும் அக்னி சோமன் -ஆகியவர்களை உள்ளடக்கி இருக்கும்
இவை இரண்டின் நடுவில் பிந்துவும் -ஸ்ருஷ்ட்டி /தர்மம் -சம்ஹாரம் -உள்ளது

ஆதாரான் மூர்த பர்யந்தம் போக்தாரம் வர்ண முந்நயேத்
விஸ்ரு ஜேந் முகதோ வர்ணம் த்வதீயம் போக்ய சம்ஜ்ஞகம் –57-
சர்வா ஸ்ருஷ்ட்டி க்ருதா தேந ஹம்ஸோச்சார ப்ரயோகத
அஜபேயம் சமாக்யாதா வித்யா சர்வாங்க சோபநா -58-
சதுஸ் ஷஷ்ட்யாதிகா சீதி கோடி சம்க்யாஸூ யோநிஷூ
தத் பேதேஷூ ச மந்த்ரோ அயம் ஸ்வயம் உச்சரதே சதா -59-
ஹம்ச-உச்சரிப்பு மூலம் ஸ்ருஷ்ட்டி / அஜபேயம் -என்னும் வித்யை -அனைத்து அங்கங்களுடன் கூடியது
பிரபஞ்சத்தில் -84-லக்ஷம் வகையான உயிர் இனங்களால் தானாகவே உச்சாடனம் செய்யப்பட்டுள்ளது –
நிச்வாஸேந சமம் வித்யா சமுதேத்யந்த உஜ்ஜ்வலா
உதயாஸ்தமயா வஸ்யா ச்வாஸ நிச்வாஸ துல்யகவ -60-
இந்த வித்யை உள்ள வளர்ந்தபடி இருந்து தானாகவே மூச்சு வழியாக மேலே எழுந்தது
இதன் வெளிப்படுதல் மற்றும் மறைதல் என்பது உசுவாச நிச்வாஸம் என்பது போன்றே உள்ளது –
ஷஷ்டி ச்வாஸ பவேத் ப்ராணா ஷட் ப்ராணா நாடிகா மதா
நாட்யா ஷஷ்டி ஹோராத்ர மேவம் கால க்ரியா கத்தி-61-
பிராணனின் -60-ஸ்வாசங்கள் உள்ளன -ஆறு பிராணங்கள் ஒரு நாடி -60-நாடி ஒரு பகல் இரவு ஆகும் –
இப்படி காலத்தின் பாகம்

ஏவம் ஹம்ஸோ தயாத் வித்தி ஸஹஸ்ராண்யேக விம்சதிம்
சதாநி ஷட் ச தேவேச தாவந்த ஸ்யுர்ஜபா க்ருதா -62-
இவ்விதம் ஹம்ச மந்த்ரத்தை வெளிப்படுத்தல் என்பது எந்த
ஒரு மந்திரத்தையும் -21600-உச்சாடனம் செய்த சக்தியை உண்டாக்கும் –

கிந்து சங்கல்ப நம் குர்யா தர ஹராதவ் மநீஷயா
ஏவம் சம்க் யான் ஜபாநஸ்ய கரிஷ்யாமீதி புத்தி மான் -63-
விச்யஸேத் பஞ்ச சங்காநி தேஷாம் ரூபம் நிபோத மே
ஸூர்ய சோமவ் சதுர்த்யந்தவ் நம ஸ்வாஹா சமன்விதவ் -64-
நிரஞ்சநவ் நிராபாசவ் வவ்ஷங் ஹூம்ஸ் படந்தகவ்
படந்தம் மூலமே வாஸ்த்ரம் இத் யங்காந் யஸ்ய பஞ்ச து -65-

ஓம் நமோ ஹஸ்தாய ஸ்வாஹா வவ்ஷத் ஹூம் பட்-என்ற மந்த்ரத்தை ஐந்து அங்கங்கள் உடன்
(தோஷங்கள் மயக்கங்கள் அற்ற ஸூர்ய சோமவ் இருவருக்கும் நம-
ஸ்வாஹா என்றும் – சதுர்த்யந்தவ் -நான்காம் வேற்றுமையுடன் இணைக்கப் பட்டு -இவையே ஐந்து அங்கங்கள்)

அயமேவ விபர்யஸ்ய பரமாத்ம மநு ஸ்ம்ருத
சம்ருத்வா சக்திம் ச சம்பாராம் ஸூர்யே போக்தரி சம்நயேத் -66-
சிஷ்டம் பிரணவ வச்சிந்த்யம் இதி சம்ஜ்ஞா மநோர் விதி
பத மந்த்ராஸ் த்ரயோ அஸ்ய ஸ்யுர் விதாநே பஞ்ச ராத்ரிகே -67-
விஷ்ணவே நம இத்யேவம் நமோ நாராயணாய ச
நமோ பகவதே பூர்வம் வாஸூ தேவாய சேத் யபி-68-
ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவந
நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ-69-
பதமந்த்ரச் சதுர்தோ அயம் ப்ரணவஸ்ய புரந்தர
ஓங்கார சஹிதா நேதாந் மந்த்ரான் பூர்வ விதோ விது-70-
இந்தமந்த்ரத்தை மாற்றி படிக்கும் போது பரமாத்ம மந்த்ரம் ஆகும் -ஸ்ரீ விஷ்ணு காயத்ரி –

ஞானாதி குண சம்யுக்தைரஷரை ப்ரணவாதிபி
நமோஸ்தை அங்க க்லுப்தி ஸ்யாத் ததைவ உப அங்க கல்பநா-71-
ந்யூநா ஷரஸ்ய மந்த்ரஸ்ய வர்ணேந சரமேண து
உப அங்க கல்ப நா கார்யா தத் தத் குண பதைர் யுதா-72-
ததைவ ஸ்பீத வர்ணஸ்ய சிஷ்டைஸ் து த்வாத சாதிகை
ஸம்ஸ்தைச் சரமோ பங்கம் கல்பயேத் தேஜஸா ஸஹ -73-
கேவலஸ் தாரகச் சைவ சத்வாரச்ச ததாதிகா
பஞ்சை தே வியாபகா மந்த்ரா பாஞ்ச ராத்ரே ப்ரகீர்த்திதா -74-
நா ஸாத்யம் கிஞ்சி தஸ் தீஹ மந்த்ரைரேபிர் மஹாத்மபி
நிஸ்ரேணீ பஞ்ச பர்வைஷ பர ப்ரஹ்மாதி ரோஹணே -75-
ஏஷ திவ்யா மஹா சத்தா பஞ்ச மந்த்ரீ து மந்மயீ
அர்ச்சாநாஜ்ஜபதோ த்யாநாதி மாம் சம்யக் ஸமச்ரித
ஸ்வாம் சத்தாம் வைஷ்ணவீம் ப்ராப்ய பரம் ப்ரஹ்மாதி கச்சதி -76-

——————————–

அத்யாயம் –25 -கீழே தாரக மந்த்ரம் இனி சம்சார ரஷாக -தாரா அநு தாரா -மந்த்ரங்கள் –

இத்தம் தே கதித சக்ர தாரகஸ் யை ஷா விஸ்தர
சம்சார தாரிகாயா மே தாரிகாயா ஸ்ருணு க்ரமம் -1-
வர்ணா நாம் விதி சித்யர்த்தம் சம்ஜ்ஞா பூர்வம் நிசாமயா
ஸ்ருதாஸூ வித்வத்யாஸூ விதிர் மந்த்ரஸ் ப்ரவர்த்ததே -2-
அகாராஸ்வா ப்ரமேயச்ச பிரதமோ வ்யாபகஸ் ஸ்ம்ருத
ஆதி தேவஸ் தசாகார ஆனந்த கோபநஸ் ஸ்ம்ருத -3-அகாரம் பிரமம் -வியாபகம் -ஆதி தேவன் -அனந்தன் -கோபநன்

ராம சம்ஜ்ஞ இகாராச்ச இத்த இஷ்ட ப்ரகீர்த்தித
ஈகார பஞ்ச பிந்துர் வை விஷ்ணுர் மாயா புரந்தர -4-ஐகாரம் ராம -இத்தம் இஷ்டம் / ஈகாரம்-பஞ்ச பிந்து -விஷ்ணு -மாயா
உகாரோ புவநாக்யச்ச உத்தாம உதயஸ் ததா
ஊகார ஊர்ஜோ லோகேச ப்ரஜ்ஞா தாராக்ய ஏவ ச -5-

சத்யச்ச ருதாமா ச ருகார ச து ச அங்குச
ருகாரோ விஷ்டராக் யச்ச ஜ்வாலா சைவ பிரசாரணம்–6-
லிங்காத்மா பகவான் ப்ரோக்தோ லுகார ஸ்தாரக ஸ்ம்ருத
லுகாரோ தீர்க்க கோணச்ச தேவதத்தஸ் ததா விராட் –7-
த்ரயச்ர ஏகார சம்ஜ் ஞச்ச ஜகத் யோநி அவிக்ரஹ
ஐஸ்வர்யம் யோக தா தா ச ஜ ச ஐராவண ஸ்ம்ருத –8-
ஓகார ஓத தேஹச்ச ஓத நஸ் சைவ விக்ரமீ
ஓவ்ர்வோ அத பூத ராக்யச்ச ஒவ் ஸ்ம்ருதோ ஹி ஏஷ தாத்மக –9-
த்ரை லோக்ய ஐஸ்வர்யதோ வ்யாபீ வ்யோமேச ஓங்கார ஏவ ச
விசர்க ஸ்ருஷ்ட்டி க்ருத் க்யாதோ ஹி அகார பரமேஸ்வர -10-

ரு அக்ஷரம் -சத்யம் -ருதாமன் -அங்குச /ரூ அக்ஷரம் -விஷ்டரம் -ஜ்வாலா -பிரசாரணம்
லு அக்ஷரம் -லிங்காத்மா -பகவான் -தாரக /தீர்க்க கோண /தேவ தத்த -விராட்
ஏ அக்ஷரம் -த்ரயச்ர -ஜகத் யோநி -அவிக்ரஹ / ஐ அக்ஷரம் -ஐஸ்வர்யம் -யோக தாதா -ஐராவண
ஓ அக்ஷரம் -ஓத தேஹ -ஓதந -விக்ரமீ / ஒவ் -அக்ஷரம் -ஒவ்ர்வ – பூதார-ஒவ்ஷதம்
ஓம் -த்ரைலோக்ய ஐஸ்வர்யத -வ்யாபிந் -வ்யோமேச / ஹ அக்ஷரம் -வி சர்க்கம் -ஸ்ருஷ்ட்டி க்ருத் -பரமேஸ்வர

கமலச்ச கராலச்ச ககார ப்ரக்ருதி பரா
ககார கர்வ தேஹம்ச வேதாத்மா விஷ்வா பாவந -11-
கதத் வம்சீ ககாரஸ்து கோவிந்தாச்ச கதாதர
ககாரஸ் த்வத கர்மாம்சுஸ் தேஜஸ்வீ தீப்தமாம்ஸ் தத-12-
ங்கார ஏக தம்ஷ்ட்ராக்யோ பூதாத்மா பூத பாவன
சகாராச் சஞ்சலச் சக்ரீ சந்த்ராம்சு ச து கத்யதே -13-
சந்தபதிச் சலத்வம்சீந் சகாரச் சந்த எவச
ஜந்மகந்த்ரு அஜிதச் சைவ ஐகாரச் சைவ சாஸ்வத -14-
ஜகரோ ஜஷ சம்ஜ்ஞச்ச சாமக சாம பாடக
ஈஸ்வரச் ச உத்தமாக்யச்ச ஞகாரஸ் தத்த்வதாரக -15-

சந்த்ரீ டகார ஆஹ்லாதோ விச்வாப்யாய கரஸ் ததா
தாரா தரஷ்ட காரச்ச நேமி கோஸ்துப உச்யதே -16-
தண்ட தாரோ டகாராச்ச மவ்லச அகண்ட விக்ரம
டகார விஸ்வ ரூபச்ச வ்ருஷகர்மா ப்ரதர்தன -17-
ணகார அபயத சாஸ்தா வைகுண்ட இதி கீர்த்தித
தகாரஸ் தா லலஷ்மா ச வைராஜா ஸ்ரக்தர ஸ்ம்ருத -18-
தன்வீ புவந பாலச்ச தகார சர்வ ரோதக
தத்தாவகோசோ தமநோ தகார சாந்தித ஸ்ம்ருத -19-
தகார சார்ங்கத்ருத் தர்த்தா மாதவச்ச ப்ரகீர்த்தித
நரோ நாராயண பந்தா நகார சமுதாஹ்ருத -20-

டகாரம் -சந்த்ரீ -ஆஹ்லாத–விச்வாப்யாயகர – தராதர -நேமி -கௌஸ்துப -தண்ட தார -மவ்சல -அகண்ட விக்ரம –
விஸ்வரூப -வ்ருஷகர்ம -ப்ரதர்த்தன
ண காரம் -அபயத -சாஸ்த – வைகுண்ட –
த கராம் -தால லஷ்மண் -வைராஜ -ஸ்ரக்தர-தந்வீந் -புவந பால -சர்வ ரோதக -தத்தாவகாச -தமந- சாந்தித –
சார்ங்க த்ருத் -தர்த்தா -மாதவ –
ந காரம் -நர -நாராயண -பந்தா

பகார பத்ம நாபச்ச பவித்ர பச்சிமாநந
பகார புல்ல நயநோ லங்காலீ ஸ்வேத சம்ஜ்ஜிதா–21-
பகாரோ வாமநோ ஹ்ரஸ்வ பூர்ணாங்க ச ச கத்யதே
பல்லாதகோ பகாராச்ச ஜ்ஜேய சித்தி ப்ரதோ த்ருவ –22-
மகாரோ மர்த்ந கால பிரதாந பரிபட்யதே
சதுர் கதிர் யகாரச்ச ஸூ ஸூஷ்ம சங்க உச்யதே -23-
அசேஷ புவநாதாரோ ரோநல கால பாவக
லகாரோ விபுதாக்யச்ச தரேச புருஷேஸ்வர –24-
வராஹச் ச அம்ருதாதாரோ வகாரோ வருண ஸ்ம்ருத
சகார சங்கர சாந்த புண்டரீக ப்ரகீர்த்தித–25-
ந்ருஸிம்ஹச்ச அக்னி ரூபச்ச ஷகாரோ பாஸ்கரஸ் ததா
சகாரஸ்தவம் ருதஸ் த்ருப்தி சோமச்ச பரிகீர்த்தித -26-
ஸூர்யோ ஹகார பிராணஸ்து பரமாத்மா ப்ரகீர்த்தித
அனந்தேச ஷகாரஸ்து வர்காந்தோ கருடஸ்ததா -27-
அசேஷ சம்ஞ்ஞா வர்ணாநாம் இத்யேதா கீர்த்திதா மயா
அநுலோம விலோமேந வர்ண்யா வர்ணஸ்ய வை புந -28-
சம்ஞ்ஞா சங்க்யா ச யா சக்ர சாமான்ய சா மஹாமதே
சிதம்ஸா சர்வ ஏவைதே வர்ணா பாஸ்வர விக்ரஹா -29-
காரணம் சர்வ மந்த்ராணா லஷ்மீ சக்த் யுப ப்ரும்ஹிதா
ஸ்துதா சம்பூஜிதா தியாதா வர்ணா சம்ஞ்ஞா பிராதராத் -30-
எழுத்துக்களே மந்திரங்களின் காரணம் -ஸ்ரீ லஷ்மீ சக்தியால் அவை வலுவாக்கப்பட்டு
உபாசகனால் ஸ்துதிக்கப்பட்டும் பூஜிக்கப்பட்டும் த்யானிக்கப்படும் செய்யப்படுகின்றன

ப்ரய்ச் சந்தி பராம் ருத்தம் விஞ்ஞானம் பாவயந்த்யபி
பரஸ்பராங்க பாவம் ச மந்த்ரோத் பத்தவ் வ்ரஜந்த்யமீ–31-
அக்ஷரங்கள் மந்திரங்களில் ஓன்று மற்று ஒன்றுக்கு அங்கமாக இருந்து உபாசகனுக்கு செழிப்பும் ஞானமும் அளிக்கும்

சராசரே அஸ்மிம்ஸ் தன் நாஸ்தி யதமீபிர்ந பாவிதம்
நித்யா யத்யபி தா திவ்யா மந்த்ராணாம் மூர்த்தவ்ய பரா -32-
தாதாப்யே வம்விதைர் வர்ணைர்ப்பாவித இதை சிந்தனா
பவந்தி பூர்ண சமர்த்யா மந்த்ரா சாஸ்த்ர நிதர்சநாத் -33-அக்ஷரங்களால் ஆக்கப்பட்ட மந்த்ரங்கள் திவ்யம் நித்யம் பரிபூரணம் –

ஆலம்பனம் தியாம் சைவ பவந்த்யேவம் மஹா மதே
அபாக அபி யதா வ்யோம்நி தியா பாக பிரகல்ப்யதே–34-
ஸுகர்யாய ததா மந்தரே வர்ண பாக அனுசிந்த்யதே
க்ருதவைவ பாவகாம் வ்யாப்திம் வர்ணாநாம் பூஜனம் த்ரிதா -35-
மனசில் சிந்தித்து மூன்று முறைகள் பூமியில் எழுதப்பட்டதாக பூஜிக்க வேண்டும்

பூமவ் பத்மே ததா தேவ்யாஸ்தாநவ் மந்த்ரான் சமுத்தரேத்
பரமாத்மாந மாதாய யோஜயேத் கால வஹ்னி நா –36-
த்ரை லோக்ய ஐஸ்வர்ய தோபேத மாயாம் அஸ்மின் நியோஜயேத்
இதம் சா பரமா சக்திர் வைஷ்ணவீ சர்வ காமதா -37-
சதா பூர்ணா சிதா நந்தா மம மூர்த்திர் நிரந்தரா
இயம் சா பரமா நிஷ்டா யா சா ப்ரஹ்ம விதாம் த்ருவா-38-
அஸ்யாம் நிஷ்டாய தத்வஞ்ஞா விசந்தி ப்ரஹ்ம மன்மயம்
சவ்ஷா தத்வவிதாம் முக்யை சாஸ்த்ரே சாஸ்த்ரே விசிந்தயதே-39-
ஓதம் ப்ரேதம முஷ்யாம் வை ஜகச் சபிதார்த்த தாமயம்
அநயைவ சதா சாங்க்யை சாங்க்யா யே ஹம் சனாதநீ -40-

அநயைவ சமாதிஸ்த்தை ஸமாதீய சமாதிநா
அபிதீயே அநயை வாஹம் சைவ ஷட்த்ரிம்ச தந்திமா-41-
அவள் தாருகா -மூலமாகவே சமாதி நிலை அடைகிறார்கள் –
சைவர்களால் -36-வது தத்துவமாக கொள்ளப்படுகிறேன்–பதி மற்றும் சக்தி -பசு அல்லது ஜீவாத்மா -கலை காலம் -நியதி –
வித்யா- ராகம் -ப்ரக்ருதி -குணம் -பஞ்ச தன்மாத்திரைகள் -பஞ்ச பூதங்கள் -தச இந்திரியங்கள் –
மனம் -புத்தி -அஹங்காரம் -நான்கு பாசங்கள் –

மஹா ராஜீ ததைவாஹ மநயைவ த்ரயீ பரா
ருக் யஜு சாம சங்கதே ஸிந்த்யே ஸவ்ரே ச மண்டல -42-
ஸுரர்கள் வேத மண்டல மஹா ராணியாகக் கொள்ளப்படும் படி செய்கிறேன்

தருணீம் ரூப சம்பன்னாம் சர்வ அவயவ ஸூந்தரீம்
அநயைவ வ்யவஸ்யநித லோகாய தாவி ஸஷுணா-43-
லோகாயத உபாசகன் அனைத்து அவயவங்களிலும் அழகான பெண் -என்பவளாகக் கொள்ளும்படி செய்கிறேன்

க்ஷண பங்கவிதா நஜ்ஜைச் ஸிந்த்யே நிர்விஷயா ச தீ
ஆர்ஹதைச்சா நயை வாஹம் யஷீ நாம் நா ஸ்தோதிதா
அவள் மூலமே அனைத்தும் க்ஷண நேரம் நீடிக்கும் என்றும் தீர்மானிக்க இயலாதபடியான ஞானம் என்று
புத்தர்களால் நான் கொள்ளும் படி இருக்கிறேன் –
ஆர்ஹதர்-ஜைனர் -என்னை யஷை யாகக் கொள்ளும் படி இருக்கிறேன்

பரமா தாரிகா சக்திஸ் தாரிணீ தாரிகாக்ருதி
லஷ்மீ பத்மா மஹா லஷ்மீஸ் தாரா கௌரீ நிரஞ்ஜனா -45-
ஹ்ருல்லேகா பரமாத்மஸ்தா யா சக்திர் புவநேஸ்வரீ
சிச்சக்தி சாந்தி ரூபா ச கோக்ஷணீ கோஷஸம்பவா-46-
காமதேநுர் மஹாதேநுர் ஜகத்யோநிர் விர்பாவரீ
ஏவமா தீநி நாமாநி சாஸ்த்ரே விசஷணை-47-
தாரிகாயா நிருக்தாநி வேதே வேதே ச பண்டிதை
அஸ்யா ஏவாபரா மூர்த்திர் விஜ்ஜேயோ த்வநு தாரிகா -48-

ஸ்ரீ தாரிகாவின் திருநாமங்களை சாஸ்திரங்களும் வேதங்களும் பண்டிதர்களும் இவ்வாறு சொல்லும்
அநு தாரிகா அவளுடைய மற்றொரு ரூபம்

சாந்தம் நியோஜயேத் ஸ்தாநே பூர்வஸ்ய பரமாத்மந
சேஷமந்யத் சமம் ஹி ஏஷா தநுர்மே அந்ய அநு தாரிகா -49-
பரமாத்மந் என்பதற்குப் பதிலாக -சாந்தம் -என்பதைச் சேர்த்தால் -அதுவே அநு தாரிகா ரூபம் ஆகும் –
அதாவது -ச என்பதைச் சேர்த்து ஸ்ரீம் ஆகும் என்றவாறு –
தாரிகா யாமி வாஸ்யாம் ச விஜ்ஜேயம் வைபவம் மஹத்
இமே சக்தீ பரே திவ்யே மம தந்வவ் புரந்தர -50-
அநுதாரிகாவின் வைபவமும் தாரிகாவின் மேன்மை போன்றதே -இரண்டும் உயர்ந்த திவ்ய ரூபங்கள்

யத்கிம் சிதேதயா சாத்யம் சாதநீயம் ததன்யயா
இமே பூர்வா பரீபாவம் வ்ரஜத அந்யோந்ய வாஞ்சயா
சம்யக் சாதயதச் சைவ சாதகாநாம பீப்சிதம் -51-
இவற்றில் ஒன்றின் திறம் மற்று ஒன்றில் அடங்கியே காணப்படும் -இரண்டும் உபாசகனுடைய விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக உள்ளன –

-25-அத்யாயம் சம்பூர்ணம் –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் பாசுரங்கள்–ஸ்ரீ ஈட்டில் -அர்த்தங்கள்-தொகுப்பு

May 28, 2019

1-1-

பாட்டு தோறும் அருளியதை தொகுத்து சொல்கிறார்
முதல் பாட்டிலே — கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் -விக்ரக வைலஷண்யத்தையும் -என்றும்
இரண்டாம் பாட்டிலே -இவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபம் சேதன அசேதன விலக்ஷணம் என்றும்
மூன்றாம் பாட்டில் -நித்ய விபூதியோபாதி ததீயத்வ ஆகாரத்தாலே அவனுக்கு அந்தரங்கமாய்த் தோற்றுகிற லீலா விபூதி யோகத்தை அனுபவித்தார்
நாலாம் பாட்டிலே அந்த லீலா விபூதியினுடைய ஸ்வரூபம் அவன் ஆதீனம்-என்றார் –
ஐந்தாம் பாட்டிலே அதனுடைய ஸ்திதியும் அவன் அதீனம் என்றார்
ஆறாம் பாட்டிலே பிரவ்ருத்தி நிவ்ருத்தியும் பகவத் அதீனம் என்றார்
ஏழாம் பாட்டிலே சரீர சரீரிகளுக்கு உண்டான லக்ஷணம் ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டாகையாலே
இதுக்கும் அவனுக்கும் சொன்ன ஐக்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்றார் சரீர சரீரி
எட்டாம் பாட்டிலே குதிர்ஷ்டிகளை மிராசுதார்
ஒன்பதாம் பாட்டிலே சூன்ய வாதியை நிரசித்தார்
பத்தாம் பாட்டிலே வ்யாப்தி சௌகர்யத்தை அருளிச் செய்தார்
இப்படிகளாலே அவனுடைய பரத்வத்தை நிஷ்கர்ஷித்தாராய் நின்றார் கீழ்
நிகமத்தில் இத் திருவாய் மொழியில் அந்வயித்தவர்களுக்கு தாம் பெற்ற பேறே பேறு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

—————–

1-2-

முதல் பாட்டில் -வ்யதிரிக்த விஷயங்களை -வேறுபட்ட பொருள்களை விட்டு, சர்வேஸ்வரன் பக்கல்
ஆத்துமாவைச் சமர்ப்பிக்க இசைமின்,’ என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘வ்யதிரிக்த விஷயங்களினுடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம்,’ என்றார்;
மூன்றாம் பாட்டில்,-த்யாஜ்ய அம்சத்தை – விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்தார்;
நான்காம் பாட்டில் பற்றப் படுகிற விஷயத்தினுடைய நன்மையினை அருளிச் செய்தார்;
ஐந்தாம் பாட்டில், பற்றுமிடத்தில், வரும்-அந்தராய பரிக்ரஹத்தை – தடைகளை நீக்கும் வழியினை அருளிச் செய்தார்;
ஆறாம் பாட்டில், அவன்-சங்க ஸ்வ பாவன்- அன்பே உருவமானவன்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘சம்பந்த ஞானம் உண்டாகவே பொருந்தலாம்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘வேறு உபகரணம் தேட வேண்டா; அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்,’ என்றார்:
ஒன்பதாம் பாட்டில், ‘அப்படிச் செய்யவே, -பஜன விரோதிகள்– வழிபாட்டிற்குத் தடையாக உள்ளவை எல்லாம்
தன்னடையே விட்டுப் போம் ’ என்றார்;
பத்தாம் பாட்டில்,-பஜனத்துக்கு ஆலம்பமான மந்திரம் இன்னது என்றார்;
நிகமத்தில் ‘இவை தாம் வாய் வந்தபடி சொன்னவை அல்ல; சேதனருடைய -ஹிதத்துக்கு ஈடாக -நன்மைக்குத் தக
ஆராய்ந்து சொல்லப்பட்டவை,’ என்கிறார்.
அன்றி, ‘இவை தாம் ஹித தமமாய் இருப்பன ஆகையாலே, எப்போதும் ஒக்க ஓரப் படுவன,’ என்கிறார் என்னலுமாம் -.

இது தான் -என்றது கீழ்ச் சொல்லப்பட்ட அர்த்தம் –
வாய் வந்தபடி கை வந்தபடி -இதி கேஷுசித் ஸ்ரீ கோசேஷூ வர்த்ததே -தத் லேகக தோஷா கதம்

———————-

1-3-

முதற்பாட்டில்,ஸூலபன் -‘எளியவன்’ என்றார்;
இரண்டாம் பாட்டில்,-ப்ரஸ்துதமான ஸுலப்யத்தை – சொன்ன அவ்வெளிமையை வகைப்படுத்தி -ச பிரகாரமாக -அருளிச்செய்தார்;
மூன்றாம் பாட்டில், ‘அவனுடைய அவதார ரஹஸ்யம் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று,’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘அத்தன்மைகள் தாம் அடியார்க்கு அறியலாம்; அல்லாதார்க்கு அறியப்போகா,’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘இப்படிப்பட்டவனை அவன் அருளிச்செய்த பத்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயியுங்கோள் – அடைமின்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், ஆஸ்ரயணீய வஸ்து -அடையத்தக்க பொருள் இன்னது’ என்றும், ஆஸ்ரயிக்கும் பிரகாரம் -அடையும் விதம் இன்னது என்றும் அருளிச் செய்தார்;
ஏழாம் பாட்டில், ‘நீங்கள் சில் வாழ் நாள் பல் பிணிச் சிற்றறிவினிர் ஆகையாலே, விளம்பிக்க ஒண்ணாது; கடுக அடைமின,’ என்றார்:
எட்டாம் பாட்டில், ‘பற்றிய அளவில் விரோதிகள் அடங்கலும் நசிக்கும்,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், பிரமன் சிவன் முதலியோர்கட்கும் காரணமானவன் வந்து அவதரிக்கைக்குக் காரணம் அருளிச்செய்தார்;
பத்தாம் பாட்டில், இப்படி எளியவனானவனை முக் கரணங்களாலும் அனுபவிக்கப் பாரித்தார்;
முடிவில், இதனைக் கற்றார்க்குப்-அப்யசித்தார்க்கு – பலன் அருளிச்செய்தார்.

அம்ருதாத் ப்ராஸனாத் மரண ராஹித்யார்த்தித்த -அமரர் -சாகாமைக்கு அம்ருதத்தில் அபிநிவேசம் உள்ளாரையும்
தனக்கு அடிமை ஆக்கிக் கொள்ள வல்லவனுடைய ஸுந்தர்ய அதிசயம் –
தோளும் தோள் மாலையும் –மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்
குற்றேவல் -குறுகின ஏவல் -அந்தரங்க கைங்கர்யம் / நெட்டேவல் -பகிரங்க கைங்கர்யம்
தத் விப்ராஸ -மேதாவிந -ஸ்துதி ஸீலா-வாசிக கைங்கர்ய பரம்/ ஜாக்ருவாம்ச -எப்போதும் ஓக்க விளங்கி நிற்பவர் /
சதா பஸ்யந்தி -போக்யதையே இழியப் பண்ணும் கார்ய புத்யா செய்ய வேண்டாம்
இத்திருவாய் மொழி ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த அவதார ரஹஸ்ய பிரகாரத்தை வெளியிடுகையாலே
அதுக்குச் சொன்ன பலமே இதுக்கும் பலம் -தேஹம் த்யக்த்வா மாமேதி புநர் ஜென்ம நைதி –
ஸ்ரோத்ரு புத்தி சமாதானார்த்தம் பாட்டுக்கள் தோறும் ப்ரமேயம் அருளிச் செய்கிறார் –

—————————

1-4-

முதற்பாட்டில், ஒரு நாரையைத் தூதுவிட்டாள்;
இரண்டாம் பாட்டில், அங்குப் போனால் சொல்லும் வார்த்தைகளைச் சில குயில்களுக்குச் சொன்னாள்;
மூன்றாம் பாட்டில், ‘நான் செய்த பாபமேயோ மாளாதது என்று சொல்லுங்கள்,’ என்று சில அன்னங்களை இரந்தாள்;
நாலாம் பாட்டில், சில மகன்றில்களைப் பார்த்து, ‘என் நிலையை அங்கே சென்று சொல்லுவீர்களோ, மாட்டீர்களோ?’ என்றாள்;
ஐந்தாம் பாட்டில், சில குயில்களைப் பார்த்து, ‘தன்னுடைய நாராயணன் என்ற பெயர் ஒறுவாய்ப் போகாமே
நோக்கிக் கொள்ளச் சொல்லுங்கோள்,’ என்றாள்;
ஆறாம் பாட்டில், ஒரு வண்டைக் குறித்து, ‘தம்முடைய நாராயணன் என்ற பெயருக்கு ஒரு குறைவு வாராமே
எங்கள் சத்தையும் கிடக்கும்படி இத் தெருவே எழுந்தருளச்சொல்,’ என்றாள்;
ஏழாம் பாட்டில், ஒரு கிளியைக் குறித்து, ‘இத் தலையில் குற்றங்களைப் பார்க்கும் அத்தனையோ? தம்முடைய
குற்றங்களைப் பொறுக்குந் தன்மையையும் ஒருகால் பார்க்கச்சொல்,’ என்றாள்;
எட்டாம் பாட்டில், தான் உறாவினவாறே முன் கையிலிருந்த பூவையும் உறாவ, ‘நானோ முடியா நின்றேன்;
நீ உன்னைக் காக்கின்றவரைத் தேடிக்கொள்’ என்றாள்;
ஒன்பதாம் பாட்டில், ஒரு வாடையைக் குறித்து, ‘என் நிலையை அங்கே சென்று அறிவித்தால்,
அவன் ‘அவள் நமக்கு வேண்டா’ என்றானாகில், வந்து என்னை முடிக்க வேண்டும்,’ என்று இரந்தாள்;
பத்தாம் பாட்டில், தன் நெஞ்சைக் குறித்து, ‘நம் காரியம் ஓர் அறுதி பிறக்குமளவும் நீஅவனை விடாதேகொள்,’ என்று போக விட்டாள்;
முடிவில், இத் திருவாய்மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினாள்.

முதற்பாட்டில், ஆசாரியனுடைய ஞானத்தின் பெருமையை -வைபவத்தை -அருளிச்செய்தார்;
இரண்டாம் பாட்டில்,மதுர பாஷியாய் – இனிமையாகப் பேசுகின்றவனாக இருப்பான் என்றார்;
மூன்றாம் பாட்டில், ஸாராஸாரங்களைப் பகுத்து அறிகின்றவன்-சாரசார விவேகாஞ்ஞன் – என்றார்;
நான்காம் பாட்டில், திருமேனியின் பேரழகினை-விக்ரஹ ஸுந்தர்யத்தை- அருளிச்செய்தார்;
ஐந்தாம் பாட்டில், ‘நினைத்தது கிட்டும் அளவும் சலியாத தூய தன்மையுடையான்’-சுத்த ஸ்வபாவன் என்றார்.
ஆறாம் பாட்டில், ‘பகவானையே அனுபவிக்கின்றவனாய் இருக்கும் -பகவத் ஏக போகனாய் -ரூபாவானாய் அழகனுமாய்ப்-
கிருபாவானுமாய் -கம்பீர ஸ்வ பாவனாயும் -பெருமிதமுடைவனுமாய் இருப்பான்’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘தான்-சர்வஞ்ஞன் – முற்றறிவினன் ஆகிலும் ஆசாரியர்கள் பக்கல் கேட்ட வார்த்தை அல்லது அருளிச் செய்யான்,’
என்று அவனுடைய ஆப்தியை அருளிச் செய்தார்;
எட்டாம் பாட்டில், ‘ஆசாரியனுடைய தேக யாத்திரையே இவனுக்கு ஆத்தும யாத்திரை’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘ஆசாரியனுடைய சம்பந்த மாத்திரமே-சத்தா – இருப்புக்குத் தாரகம்; இதர ஸ்பர்சம் சத்தா பாதகம்
பத்தாம் பாட்டில்- -இப்படி ஞானவானுமாய் மதுரபாஷியுமாய் சாரசார விகேகஞ்ஞனுமாய் -தர்ச நீயனுமாய் -சுத்த ஸ்வபாவனாய் –
கிருபா கம்பீரயாதிகளை யுடையவனாய் சிரோபாதிஸ சத்வருத்த ஸேவ்யனாய்-
ஸச் சிஷ்யனாகையாலே ஏவம்பூதனான ஆச்சார்யனுடைய தேஹ யாத்திரையே தனக்கு ஆத்ம யாத்ரையாய் –
இதர ஸ்பர்சமும் தனக்கு பாதகமாய் -இப்படி சதாச்சார்ய சேவை பண்ணுகையாலே பகவத் கைங்கர்யத்தில் பிரவணமாய் –
நின்னடையேன் அல்லேன்-என்று நீங்கி ஓர் கோல நீல நன் நெடும் குன்றம் வருவது ஒப்ப
நாண் மலர்ப்பாதம் அடைந்தது தம் திரு உள்ளம் என்று தலைக் கட்டினார் –

ஞானத்தின் பெருமையை அருளிச்செய்தார்’ என்றது, ‘அஞ்சிறைய மடநாராய்’ என்றதில் நோக்கு;
இரண்டு சிறகுகளும் ஞான அநுஷ்டானங்களாகக் கூறப்படும்.
‘இனிமையாகப் பேசுகின்றவன்’ என்றது, குயிலின் ஒலி இனியதாயிருத்தல் நோக்கி,
‘சாராசாரங்களைப் பகுத்தறிகின்றவன்’ என்றது, ‘மென்னடைய அன்னங்காள்’ என்றதனை நோக்கி.
‘திருமேனியின் பேரழகினை’ என்றது –‘நன்னீல மகன்றில்காள்’ என்றதனை நோக்கி.
‘நினைத்தது கிட்டுமளவும் சலியாத நிலையினன்’ என்றது, ‘இரைதேர்’ என்றதனை நோக்கி.
பகவானையே அனுபவிக்கின்றவனாய் இருக்கும் அழகனுமாய்ப் பேரருள் வாய்ந்தவனுமாய்ப் பெருமிதமுடையவனுமாய்’ என்றது –
முறையே ‘வண்டு என்றதனையும்,’ ‘வரி’ என்றதனையும், ‘ஆழி’ என்றதனையும் நோக்கி.
‘வண்டு ஏகபோகமோ?’ எனின், வண்டு தேனையன்றி உண்ணாது; மதுகரம் என்ற பெயரின் பொருளையும் நோக்குக
‘தான் முற்றறிவினனாகிலும் ஆசாரியர்கள் பக்கல் கேட்ட வார்த்தை யல்லது அருளி ச்செய்யான்’ என்றது, ‘இளங்கிளியே’ என்றதனை நோக்கி.
‘ஆசாரியனுடைய தேக யாத்திரையே இவனுக்கு ஆத்தும யாத்திரை,’ என்றது, ‘இன்னடிசில் வைப்பாரை நாடாயே’ என்றதனை நோக்கி.
ஆசாரியனுடைய சம்பந்த மாத்திரமே சத்தாதாரகம், மற்றையோருடைய உறவு சத்தா பாதகம்’ என்றது, காற்றின் ஸ்பரிசம் பாதகம்
என்றதனால், எதிர்மறைப் பொருளில் ஆசாரிய சம்பந்தமே தாரகம் என்பது போதரும்.

இத் திருப்பதிகத்தில் ஏழாம் பாசுரம் முடிய, சதாசாரியனுடைய இலக்கணம்;
மேல் மூன்று பாசுரங்கள் ஸச் சிஷ்யனுடைய மாணாக்கனுடைய இலக்கணம்.

சேர்ப்பாரை பஷிகளாக்கி ஞான கர்மங்களை சிறகு என்று –
குயில் மதுர பாஷி
ஹம்ஸோ யதா ஷீரம் இவாம்பு மிஸ்ரம் -சார அசாரே விவேகஞ்சா கரீயாம்சோ விமத்சரா
இறை தேர் -புருஷார்த்தம் சித்திக்கும் அளவும்
ரூபவான் -வரி -கிருபாவன் -கம்பீர ஸ்வ பாவன்-ஆழி
வந்து -பகவத் ஏக போகத்வம்-மதுகரம்
உரைக்கை -சர்வேஸ்வரன் சந்நிதியில் சிஷ்யனுடைய உஜ்ஜீவன அர்த்தமாக விண்ணப்பம் செய்கை
வாடை -பாதகம் -பிரகிருதி ப்ராக்ருதங்கள் -வ்யதிரேகத்தில் ஆச்சார்யன் சந்நிதியே தாரகம்
ஸூத்த ஸ்வ பாவன் -வெண்மையைப் பற்ற
எனக்குப் பவ்யமாய்ப் போந்த நெஞ்சானது -கரணியான என்னை விட்டு அகன்று
திருவாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் இரண்டு திருக்கையிலும் என்திக் கொண்டு பலவாய்ப் பரந்து சூழ்ந்த
சுடரை யுடைத்தான ஆதித்யனோடே கூட -பால் போல் வெளுத்த நிறத்தை யுடைய சந்திரனையும் தன் கொடி முடிகளில் ஏந்தி
அத்விதீயமாய் தர்சனீய ஆகாரமாய்-நீல நிறத்தை யுடைத்தாய் தாதுவை சித்ர்யாதிகளால் உண்டான வைலக்ஷண்யத்தை உடைத்தாய்
உத்துங்கமான மலை நடந்து வருமது ஒத்து ஆஸ்ரிதற்கு வந்து தோற்றுமவனுடைய அபி நவமான தாமரை போலே இருக்கிற
திருவடிகளை அடைந்தது -என்றபடி –

————————–

1-5-

முதற்பாட்டில், ‘அயோக்கியன்’ என்று அகன்றார்;
இரண்டாம் பாட்டில், ‘அகலுவதற்கும் நான் அதிகாரி அல்லேன்’ என்றார்;
மூன்றாம் பாட்டில், சில குணத்தைக் காட்டித் துவக்கத் துவக்கு உண்டார்;
நான்காம் பாட்டில், ‘அகல ஒட்டுவார்களோ உடையவர்கள்?’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘உடைய உன் திருவடிகளைக் கிட்டும்படி பார்த்தருளல் வேண்டும்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், அவன் அரைக் கணம் தாழ்க்க, ‘முடியப் புகுகின்றேன்’ என்றார்;
ஏழாம் பாட்டில், அவ்வளவில் இறைவன் வரக்கொள்ள, ‘அயோக்கியன்’ என்று அகன்றார்;
எட்டாம் பாட்டில், ‘திருவாய்ப்பாடியில் வெண்ணெயைப் போன்று உம்முடைய சம்பந்தம் தாரகம்,’ என்றான் இறைவன்;
ஒன்பதாம் பாட்டில், ‘அப்படி அன்று; இது நஞ்சு,’ என்ன, ‘நஞ்சு தானே நமக்குத் தாரகம்?’ என்றான்;
பத்தாம் பாட்டில், தம்மை இசைவித்துப் பரம பதத்தை கோடிக்க- அலங்கரிக்கத் தொடங்கினான் என்றார்;
முடிவில், கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

—————

1-6-

முதற்பாட்டில், ‘இறைவனைப் பற்றுகின்றவர்கட்குப்-ஆஸ்ரயிக்கிறவனுக்கு த்ரவ்ய பொருள் நியதி இன்று,’ என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘அதிகாரி நியதி இல்லை,’ என்றார்;
மூன்றாம் பாட்டில் தம்முடைய முக் கரணங்களும்-கரண த்ரயமும் – பகவானிடத்தில்-ப்ரவணமான – அன்பு கொண்ட-படியை அருளிச் செய்தார்;
நான்காம் பாட்டில், ‘நித்திய சூரிகளைப் போன்று அதுவே யாத்திரை ஆயிற்று,’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘தன்னையே பிரயோஜனமாக – பலமாகப் பற்றினார்க்கு அவன்-நிரதிசய போக்யன் – எல்லை இல்லாத இனியன்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘இப்படி-போக்கிய பூதனானவை – இனியன் ஆனவனை விட்டு வேறு பிரயோஜனத்தை –
பலத்தைக் கொண்டு அகலுவதே!’ என்று-ப்ரயோஜனாந்தர பரரை- தேவர்களை நிந்தித்தார்;
ஏழாம் பாட்டில், ‘இறைவனையே பலமாகப் பற்றினார்க்குக் காலத்தைப் போக்குதல்-கால ஷேபம்- இன்ன வகை’ என்றார்;
எட்டாம் பாட்டில்,-பிராப்தி விரோதிகளையும் – ‘இறைவனைப் பற்றுதற்குத் தடையாக உள்ளனவற்றையும் அவன் தானே போக்குவான்,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘இது கூடுமோ!’ என்று ஐயம் உண்டாக, ‘வெறும் அவன் படியையோ பார்ப்பது?
அருகு இருப்பார் படியையும் பார்க்க வேண்டாவோ?’ என்றார்;
பத்தாம் பாட்டில், ‘இவர்கள் விரோதிகளைப் போக்குவது எத்துணைக் காலத்தில்?’ என்ன, க்ஷண நேரத்திலே’ என்றார்;
முடிவில், இத் திருவாய்மொழியைக் கற்கவே-அப்யஸிக்கவே பிறக்க வேண்டா,’ என்றார்-

———————-

1-7-

முதற்பாட்டில், கேவலரை நிந்தித்தார்;
இரண்டாம் பாட்டில்-அநந்ய பிரயோஜனர் – வேறு பயனைக் கருதாத அடியார்களிடத்தில் அவன் இருக்கும்படியை அருளிச் செய்தார்;
மூன்றாம் பாட்டில், ‘இவ்விரண்டு கோடியிலும் நீவிர் யாவிர்?’ என்ன,
‘உன்னை அனுபவியா நிற்க விரோதி கழிந்தவன் நான்,’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘என்னை இவ்வளவாகப் புகுர நிறுத்தினவனை என்ன காரணத்தால் விடுவேன்?’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘திருவாய்ப்பாடியில் பெண்கள் கிருஷ்ணனை விடும் அன்று அன்றோ, நான் அவனை விடுவேன்?’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘அவன் தான் விடிலோ?’ என்ன, ‘அவன் போக்கை இசையேன்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘நீர்தாம் விடிலோ?’ என்ன, ‘அவன் என்னைப்போக ஒட்டான்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘இந்நாள் வரை போக விட்டிலனோ?’ என்ன, ‘நப்பின்னைப்பிராட்டி புருஷகாரமாகப் பற்றின என்னை
இனி அவனாலும் விடப்போகாது, என்றார்;
ஒன்பதாம் பாட்டில், இப்பிரசங்கம் – -‘இவ்வார்த்தைகள் தாம் எற்றிற்கு?
ஒரு நீராகக் கலந்ததை ஒருவராலும் பிரிக்க ஒண்ணாது,’ என்றார்;
பத்தாம் பாட்டில். ‘அவனுடைய கல்யாண குணங்களை எல்லாக் காலத்தும் அனுபவித்து வருத்தமுடையேன் அல்லேன்,’ என்றார்;
முடிவில், இத் திருவாய்மொழியைக் கற்றார்க்குப்-அப்யசித்தார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

————————

1-8-

முதற்பாட்டில், நித்திய விபூதியில் உள்ளாரோடு செவ்வையனாய்ப் பரிமாறும் படியை அருளிச் செய்தார்;
இரண்டாம் பாட்டில், லீலா விபூதியில் உள்ளாரோடு செவ்வையனாய்ப் பரிமாறும் படியை அருளிச் செய்தார்;
மூன்றாம் பாட்டில், இரண்டு உலகத்திலும் உள்ளார்க்கு முகங்கொடுக்கைக்காகத் திருமலையில் நிற்கிற படியை அருளிச் செய்தார்;
நான்காம் பாட்டில், அவ்வார்ஜவ குணம் தம் அளவிலே பலித்த படியை அருளிச் செய்தார்;
ஐந்தாம் பாட்டில், ‘நான் அவன் குணங்களை விரும்புமாறு போன்று, அவனும் என் தேகத்தை விரும்புகின்றான்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘என் தேகத்தின் அளவு அன்றிக்கே என் ஆத்துமாவையுங் கைக் கொண்டான்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், அவ்வளவே அன்று; நித்திய விபூதியில் செய்யும் ஆசையை என் பக்கலில் செலுத்துகிறான்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘என்னைக் குறித்து அவன் பிறந்த பிறவிகளுக்கு முடிவு இல்லை,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘இப்படிப் பிறந்த பிறவிகள் தோறும் தன் இறைமைத் தன்மையோடே வந்து அவதரித்தான்,’ என்றார்;
பத்தாம் பாட்டில், ‘அவனுடைய ஆர்ஜவ குணத்தைப் பேசும் போது வேதமே பேச வேண்டும்,’ என்றார்;
முடிவில், ‘இத் திருவாய்மொழி சம்சாரிகளுக்கு எப்போதும் ஒக்க அநுசந்திக்கத் தக்கது,’ என்றார்.

———————-

1-9-

முதல் பாட்டில் என்னுடைய பர்யந்தத்திலே வந்து நின்றான் என்றார்
இரண்டாம் பாட்டிலே அது சாத்மித்தவாறே அருகே நின்றான் என்றார்
மூன்றாம் பாட்டில் தம்முடன் கூட நின்றான் என்றார்
நாலாம் பாட்டில் ஓக்கலையிலே வந்து நின்றான் என்றார்
அஞ்சாம் பாட்டில் நெஞ்சிலே வந்து புகுந்தான் என்றார்
ஆறாம் பாட்டிலே தோளிலே வந்து இருந்தான் என்றார்
ஏழாம் பாட்டில் நாவிலே வந்து புகுந்தான் என்றார்
எட்டாம் பாட்டில் கண்ணுள்ளே வந்து நின்றான் என்றார்
ஒன்பதாம் பாட்டில் நெற்றியிலே நின்றான் என்றார்
பத்தாம் பாட்டில் திருமுடியில் நின்றான் என்றார்
நிகமத்தில் -ஆக -இத்தால் தம்முடன் சாத்மிக்கும்படி கலக்கையாலே அவனை சிரஸா வகித்தார் –
பலம் சொல்லித் தலைக் கட்டினார்-

—————–

இத் திருவாய் மொழியில், மேல் பரக்க அருளிச் செய்யப் புகும் பொருள்களை எல்லாம் சுருக்கமாக முதற்பாட்டிலே அருளிச் செய்தார்;
இரண்டாம் பாட்டில் ‘பரம பத்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க முகங்காட்டும்,’ என்றார்;
மூன்றாம் பாட்டில், ‘கண்டாயே அவன் ஸ்வரூபம் இருந்தபடி; நீயும் உன் ஸ்வரூபத்துக்குத் தக்கபடி நிற்கப் பாராய்,’ என்றார்;
நான்காம் பாட்டில் ஸ்வரூபத்திற்குத் தகுதியாக நெஞ்சு தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடினார்;
ஐந்தாம் பாட்டில், மேல் ‘எண்ணிலும் வரும்’ என்றது, பலத்தோடே சேர்ந்து முடிவுற்ற படியை நெஞ்சுக்கு அருளிச் செய்தார்;
ஆறாம் பாட்டில், ‘நாம் இருவரும் இப்படி நிற்கப் பெறில் நமக்கு ஒரு கேடும் வாராது,’ என்றார்;
ஏழாம் பாட்டில், மேல் இவர் அஞ்சினபடியே விடிந்தபடி அருளிச் செய்தார்;
எட்டாம் பாட்டில் திரு நாமத்தைக் கேட்டவாறே தம்முடைய காரணங்களுக்குப் பிறந்த வேறுபாட்டைச் சொன்னார்;
ஒன்பதாம் பாட்டில், ‘வேறுபட்டவர் ஆகாதே மறந்தாலோ?’ என்ன, ‘என் மனத்திலே இருக்கிறவனை மறக்கப் போமோ?’ என்றார்;
முடிவில், கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக் கட்டினார்.

முதற்பதிகத்தால்,-சர்வ ஸ்மாத் பரன் -‘எல்லாரினும் அறப் பெரியன் இறைவன்’ என்றார்;
இரண்டாம் பதிகத்தால்,பஜனீயன் ‘வணங்கத் தக்கவன்’ என்றார்;
மூன்றாம் பதிகத்தால், ‘அவன்தான் -ஸூலபன் எளியவன்,’ என்றார்;
நான்காம் பதிகத்தால்,ஸூலபனானவன் அபராத சஹன் ‘எளியனானவன் குற்றங்களைப் பொறுப்பவன்,’ என்றார்;
ஐந்தாம் பதிகத்தால், ‘அவன் சீலவான்,’ என்றார்;
ஆறாம் பதிகத்தால்,ஸ்வாராதன் ‘எளிதாக ஆராதிக்கத் தக்கவன்,’ என்றார்;
ஏழாம் பதிகத்தால்,நிரதிசய போக்யன் – ‘எல்லை இல்லாத இனியன்,’ என்றார்;
எட்டாம் பதிகத்தால், அவனுடைய ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்தார்;
ஒன்பதாம் பதிகத்தால்,-சாத்ம்ய போகப்பிரதன் – பொறுக்கப் பொறுக்க இன்பத்தினைக் கொடுப்பவன் என்றார்;
பத்தாம் பதிகத்தால், ஏவம்பூதனானவன் -‘இத் தன்மைகளை யுடையவன் ஒருவன் இறைவன் ஆதலின், நிர்ஹேதுகமாக
ஒருவிதக் காரணமும் இன்றியே -விஷயீ கரிப்பவன் -உயிர்களை அங்கீகரிப்பவன்,’ என்றார்;
ஆகையாலே,
‘அவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே’ என்று
தம் திரு வுள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து தலைக் கட்டினார்.

ஆக, ‘அடி தொழுது எழு’ என்று தொடங்கி,
‘கல்வி வாயும்’ என்று முடித்ததனால்,
ஒரு மனிதன் விரும்பிப் பெறத் தக்க உயர்வு அற உயர்ந்த
உறுதிப்பொருள் செய்யும் கைங்கரியமேயாம் என்பதனை
முதல் நூறு திருப் பாசுரங்களால் அறுதியிட்டு அருளிச் செய்தார் ஆயிற்று.

முதல் பத்தால் பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார்
இரண்டாம் பத்தால் அந்தக் கைங்கர்யத்தில் களை அறுத்தார்
மூன்றாம் பத்தால் விரோதி கழிந்த கைங்கர்ய வேஷம் பாகவத சேஷ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்
நாலாம் பத்தால் இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதி ஐஸ்வர்ய கைவல்யம் என்றார்
அஞ்சாம் பத்தால் அந்த விரோதியைப் போக்குவானும் அவனே என்றார்
ஆறாம் பத்தால் விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளில் சரணம் புக்கார்
ஏழாம் பத்தால் இப்படிப் பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும் தக்த்த பட நியாயம் போலே
சம்சாரம் அனுவர்த்திக்கிற படியைக் கண்டு விஷண்ணரானார்
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தேயும் தக்த்த பட நியாயம் போலே நம்மை விடாதே அனுவர்த்திக்கிறது
நம்முடைய ஆத்மாத்மீயங்களில் நசை அறாத படியால் என்று பார்த்து அவற்றில் ஒரு நசை இல்லை என்கிறார்
ஒன்பதாம் பத்தால் இப்படி நசை அற்ற பின்பும் ரஷியாது ஒழிவான் என் என்று அதிசங்கை பண்ண
நான் நாராயணன் -சர்வ சக்தி உக்தன் -உம்முடைய சர்வ அபேக்ஷிதங்களையும் செய்து முடிக்கிறோம் என்று அருளிச் செய்ய
அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் படுகிறார்
பத்தாம் பத்தில் ஸ்ரீ ஆழ்வாருடைய பதற்றத்தைக் கண்டு -ஸ்ரீ திரு மோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி –
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டி இவருடைய அபேக்ஷித சம்விதானம் பண்ணின படியை அருளிச் செய்தார் –

கைங்கர்யம் புருஷார்த்தம் என்றது -தொழுது ஏழு -என்று உபக்ரமித்து கல்வி வாயும் -என்று உபசம்ஹரிக்கையாலே –
களை அறுத்தது -என்றது -தனக்கே யாக -என்கிற இடத்தில்
பாகவத சேஷ பர்யந்தம் -பயிலும் சுடர் ஒளியிலே
கைங்கர்யத்துக்கு விரோதி ஐஸ்வர்யம் கைவல்யம் -என்றது ஒரு நாயகமாய் -திருவாய் மொழியிலே
அந்த விரோதியைப் போக்குவானும் அவனே -களை கண் மற்றிலேன் என்கிற இடத்தில் –
உழலை என்பிற் பேய்ச்சி-இத்யாதியைப் பற்ற என்றுமாம் –
சரணம் புக்கார் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் என்கிற இடத்திலே -/ முன்னிலையாக என்றது -புருஷகாரமாக
விஷண்ணராகிறார்-என்றது -உண்ணிலாவியிலே -விண்ணுளார் பெருமானேயோ -7-1-5–என்றதை பற்ற
நசை இல்லை என்கிறது -நங்கள் வரிவளையிலே -உங்களோடு எங்கள் இடை இல்லை -8-2-7-என்றதை பற்ற –
அதி சங்கை பண்ண என்றது-அறிவு ஒன்றும் சங்கிப்பன் -8-1-7– என்றதை பற்ற
சீல குணத்தில் ஆலங்கால் படுகிறார் -மாலை நண்ணியிலே -9-10-
பதற்றம் என்றது ஆழ்வாருடைய த்வாராதிசயத்தை –
தனக்கு வேட்டையாக வந்து -என்று தொடங்கி-அபேக்ஷித சம்விதானம் பண்ணின படியை அருளிச் செய்தார் என்றது –
அவா அறச் சூழ்ந்தாயே -என்கையாலே –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -திருவாய் மொழிகளின் சங்கதிகளின்-ப்ரவேசங்களின் -தொகுப்பு

May 28, 2019

உயர்வற உயர்நலம் உடையவன் -முதல் பத்து முதல் திருவாயமொழி பிரவேசம் –

தான் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்
அக் குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெற வேண்டும்படியாக இருக்கிற திவ்யாத்ம ஸ்வரூப வை லக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்;
இப்பேற்றுக்கு என் பக்கல் சொல்லலாவது ஒன்றும் இன்றிக்கே இன்றி இருக்கவும் நிர்ஹேதுகமாகத் தானே உபகாரகன் ஆனான்;
ஸ்வ ஸ்ரூபாபந்நராய் இருக்கிறவர்களுக்கும் அவ்வருகாக இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்;
தன்னுடைய திவ்விய விக்ரஹ வைலக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்,
என்று அவன் பண்ணின உபகாரங்களை அடையச் சொல்லி,
‘இப்படி உபகாரகனானவன் திருவடிகளிலே நித்தியமான கைங்கரியத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க வாராய்,’ என்று
தம் திரு வுள்ளத்தோடே கூட்டுகிறார் .

ஆறு கிண்ணகம் எடுத்தால் நேர் நின்ற மரங்கள் பறி உண்டு போய்க் கடலிலே புகும்;
நீர் வஞ்சிக்கொடி தொடக்கமானவை வளைந்து பிழைக்கும்;
அவை போலே பகவத் குணங்களினுடைய எடுப்பு இருந்தபடி கண்டோமுக்கு எதிரே நான் என்று பிழைக்க விரகு இல்லை;
அவன் திருவடிகளிலே தலை சாய்த்துப் பிழைக்க வாராய் நெஞ்சே,’ என்கிறார்
அஹம் அஸ்யாவரோ பிராதா குணைர் தாஸ்யம் உபாகதா -என்னுமா போலே
ஸ்ரீ இளைய பெருமாளை ‘நீர் இவருக்கு என் ஆவீர்?’ என்ன,
ஸ்ரீ பெருமாளும் ஒரு படி நினைத்திருப்பர்; நானும் ஒருபடி நினைத்திருப்பன்,’ என்றார்.
‘அவர் நினைத்திருக்கிறபடி என்? நீர் நினைத்திருக்கும்படி என்?’ என்ன,
‘அவர் தம் பின் பிறந்தவன் என்று இருப்பர்’ நான் அவர் குணங்களுக்குத் தோற்று அடியேனாய் இருப்பன் என்று இருப்பன்,’ என்றார்.
அப்படியே இவரும் ‘உயர்வற உயர்நலம் உடையவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழுப் பாராய் நெஞ்சே என்கிறார்.

ஆயின், இவர் தாம் முற்படக் குணங்களில் இழிந்து பேசுதற்குக் காரணம் யாது?’ எனில்,
தாம் அகப்பட்ட துறை அக் குணங்களாகையாலே அவற்றையே முதன் முன்னம் பேசுகிறார்.
இவரைக் குணத்தை இட்டாயிற்று வணங்குவித்தது.

———————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஸ்வ அனுபவ பரமான இத்திருவாய் மொழியில் -நான் கைங்கர்யம் பண்ணுகிறேன் என்ன அமைந்து இருக்கத்
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்தது -கைங்கர்யம் பக்தி மூலமாய் வருகிறது ஆகையாலே இவ்விஷயத்தில்
பக்தி பிறக்கைக்கு உறுப்பான அவனுடைய உபகார பரம்பரைகள் தோற்றுகைக்காகத் தன் திரு உள்ளத்தை அபிமுகீ கரிக்கையாலே-
என்று திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் –
வாக்ய ஏக வாக்யதா யோஜன அனுகுணமாக அவதாரிகை –
தொழுது எழு என்று கைங்கர்யம் ப்ரீதி காரிதமாக வேண்டுகையாலே ப்ரீதி ஹேதுத்வேந உபகார பரம்பரையை அருளிச் செய்கிறார்
அருளினன்-என்றத்தை பிரதிவாக்யம் அன்வயித்து உபகரித்தான் என்கிறார் –
இப் பிரபந்தம் அனுபவ பரிவாக ரூபமாகையாலே உபகரித்தமை அர்த்த சித்தமாதல் என்றுமாம் –
தான் ஸமஸ்த –இத்யாதிக்கு உயர் நலம் -என்றதிலே நோக்கு

அக்குணங்களும் தன்னைப் பற்றி -என்கிற இடத்தில் குணாயத்தம் லோகே குணி ஷூ ஹி மதம் மங்கள பதம் விபர்யஸ்தம்
ஹஸ்தி ஷி தி தர பதே தத் த்வயி புந -குணாஸ் சத்ய ஞான ப்ரப்ருதய உத த்வத் கத தயா ஸூபீ பூயம்
யாதா இதி ஹி நிரணைஷ்ம ஸ்ருதி வசாத் -என்கிற ஸ்லோகமும் –ஹேம அரவிந்த பரிமள நியாயமும் அனுசந்தேயம் –
மங்கள பதம் -மங்கள பத பிரயோக -ஸூபீ பூயம் -ஸூபத்வம்
ஜ்யோதிஷம் ஜ்யோதி -பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களா நாஞ்ச மங்களம் -இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதி வசாத்
அக்குணங்களும் இத்யாதிக்கு யவன் -என்கிற விசேஷ்ய அம்சத்தில் நோக்கு
ஸ்வ ஸ்வரூபாபன்னராய்-என்றது அசாதாரண ஆகாரத்தை அடைந்தவர்கள் –பரம சாம்யா பன்னர்
இவ்விபூதியில் ஆள் இல்லாமையால் -ப்ரீதி அதிசயத்தாலே உசாவ வேண்டி முந்துற்ற நெஞ்சான தன் திரு உள்ளத்தோடு
கூட்டுகிறார் என்றது தொழுது எழுகையாகிற கிரியையில் அந்வயிக்கிறார் -தொழுகையை திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் –
கூட்டுகை -உபதேசிக்கை என்றுமாம் –
கூடுகிறார் -என்ற பாடத்தில் நான் உஜ்ஜீவிக்கும்படி வாராய் -என்றபடி –

கிண்ணகம் -பிரவாஹம் –அவன் பண்ணின உபகாரங்களைச்சொல்லி தொழு என்கிறார் –
தொழ மாட்டோம் என்று இருந்தாலும் குணங்களுடைய உத்ரேகம் கண்டு தொழுது அல்லது ஜீவிக்க விரகு இல்லை –
சார்வஜ்ஞய சர்வ சக்தித்வ தண்ட தரத்வாதிகளைக் கண்டால் எதிரே நிற்க விரகு இல்லை –
சம்சார சாகரத்தில் தள்ளி விடுமாகையாலே அவன் திருவடிகளில் தலை சாய்க்கப் பாராய் என்றபடி –
ந நமேயம்-என்று இருக்க விரகு இல்லை -ஆகையால் நாமே முந்துற இசைவோம் நெஞ்சே என்கிறார் என்றபடி –
ஸ்ரீ இளைய பெருமாள்-குண க்ருத தாஸ்யஸ்ய த்ருஷ்டாந்தம் –
விருத்த தர்மங்களான ப்ராத்ருத்வ தாஸத்வங்களுக்கு ஏக ஆஸ்ரயத்தில் அனுசந்தானம் கூடாமையாலே -என்று
ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர்-
தாஸத்வம் – க்ரய விக்ரயார்ஹத்வம்

குணத்தை இட்டாயிற்று வணங்குவிப்பது -சாடு-தனுஸ்ஸை குணத்தை -என்று -குணம் கயிறு –
வேதம் பரிச்சேதிக்க என்று இழிகையாலே நிலம் இல்லாமல் மீண்டது –
இவர் அபரிச்சின்னம் என்று சொல்ல இழிந்தவர் ஆகையால் இவருக்கு நிலமாகப் பேசத் தட்டில்லை என்றபடி-
அன்றிக்கே ஸ்ருதி ஆனந்த குணம் ஒன்றையும் இறே விஸ்தரித்துச் சொன்னது –
இவர் அவ்வளவு அன்றிக்கே ஒரோ திருவாய் மொழியிலே ஒரோ குணமாக குணாந்தரங்களையும் விஸ்தரித்து அருளிச் செய்தார் இறே
அன்றிக்கே -ஸ்ருதி ஆனந்த குணம் ஒன்றையே யாதோ வாசோ நிவர்த்தந்தே என்று அபரிச்சின்னமாகச் சொல்லிற்று –
இவரோ உயர் நலம் -என்று எல்லா குணங்களையும் அபரிச்சின்னம் என்கிறாரே -என்று
ஸ்ரீ ஆழ்வாருடைய ஞான வைபவம் சொல்லுகிறது –

———————–—————————-

முதல் பத்து -இரண்டாம் திருவாய்மொழி-வீடுமின் முற்றவும்- பிரவேசம்

தத்வ பரமாயும் -உபாசனை பரமாயும் இறே மோஷ சாஸ்திரம் தான் இருப்பது
அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய்மொழியிலே
உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத் திருவாய் மொழி-

இத் திருவாய்மொழியை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தாராக ஸ்ரீ திருமாலை யாண்டான் பிரபத்தி விஷயமாக்கி
நிர்வகித்துக்கொண்டு போந்து -ஸ்ரீ எம்பெருமானாரும் அப்படியே அருளிச்செய்து கொண்டு போந்து,
ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்த பின்னர்,பத்தி விஷயமாக அருளிச் செய்து கொண்டு போந்தார்,
பின்னர் ஸ்ரீ எம்பாரும் அவ்வாறே அருளிச் செய்தார்.
இவருடைய பத்தியும் பிரபத்தியும் விகற்பிக்கலாய் அன்றே இருப்பது? ,
‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று இவர் தாம் பெற்றது பத்தி ரூபா பன்ன ஞானமாய் இருந்தது;
தாம் பெற்றது ஒன்றும் இங்குக் கூறுவது ஒன்றுமாக ஒண்ணாதே! அவ்வாறு கூறுவராயின், விப்ரலம்பக கோடியிலே ஆவரே.
ஆதலால், தாம் பெற்ற அதனையே பிறர்க்கு உபதேசிக்கின்றார் எனல் அமையும்.
ஆயின், பத்தி என்பது உபய கர்மிதஸ் வாந்தஸ்ய (‘கர்ம ஞானங்கள் இரண்டாலும் அலங்கரிக்கப்பட்ட மனத்தையுடையவனுக்கு’)
என்கிறபடியே, கர்ம ஞானங்கள் இரண்டாலும்-சம்ஸ்க்ருத அந்தகரணனுக்கு- தூய்மை செய்யப்பட்ட மனத்தினை யுடையவனுக்கு
உண்டாவது அன்றோ? பர பக்தி –
அந்த ஞான கர்மங்களினுடைய-ஸ்தாநேந – இடத்தில் பகவத் பிரசாதமாய் நிற்க,
அது அடியாகப் பின்னர் விளைந்தது அன்றே!இவருடைய பக்தி தான் –
‘இதுதான் வேதாந்த விஹிதையான பத்தி தானே ஆனாலோ?’ என்னில்,
ஸ்ரீ சர்வேஸ்வரன் அருள இவர் பெற்றாராகிற ஏற்றம் போம்;
அபசூத்ராதிகரண நியாயமும் பிரசங்கிக்கும்;
ஆன பின்பு தான் பெற்றத்தையே பிறருக்கு உபதேசிக்கிறாராக அமையும்

கீழில் திருவாய்மொழியில் அவனுடைய பரத்துவத்தை அனுபவித்து ஒரு பெரிய திருநாள் போலே இறே போந்து –
இவர் இப்போது நெஞ்சு ஒழிந்திருந்து பிறர்க்கு உபதேசிக்கிறபடி எங்ஙனே?
தாம் அனுபவித்த பொருளை எல்லை கண்டோ,
அன்றி, தாம் அப்பொருளில் விரக்தராகியோ?’ என்னில், விஷயமோ என்றால்,
‘தனக்கும் தன் தன்மை அறிவரியான்’ என்கிறபடியே, அபரிச்சின்ன -அளவிற்கு அப்பாற்பட்ட -விஷயம் –
‘கொள்ள மாளா இன்பவெள்ளம்’ அன்றே?

இனி தம் அபிநிவேசமமோ என்றால், ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ என்றும்,
‘மண்திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிதால்’ என்றும்,
‘சூழ்ந்ததனிற் பெரிய என் அவா’ என்றும் சொல்லும்படி பெருகி இருந்தது; .
ஆயினும், ஒருகால் ஒரு பொருளில் அபிநிவேசம் பிறந்தால் அப்பொருளிலேயே வேறு காலங்களில் -காலாந்தரத்தில் –
விரக்தி பிறக்கக் காண்கின்றோம்;
அப்படியே, சில காலம் அனுபவித்துப் பின் விரக்தி பிறந்ததோ?’ என்னில், அங்ஙனமும் சொல்ல ஒண்ணாது;
‘எப்பொழுதும், நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதோறும், அப்பொழுதைக்கு ‘அப்பொழுது என் ஆரா அமுதம்’
என்னும்படி-நித்ய அபூர்வமாய் இருக்கும்-

இனி, ஆசாரிய பதம் -நிர்வஹிக்கைக்காக மேற்கொள்ளுகைக்காக அன்று; க்யாதி லாப பூஜைகளுக்காக அன்று;
ப்ரப்ரூயாத் -என்று ஒரு விதி பரதந்த்ரராய் அன்று (‘ஒரு வருடம் குருகுலவாசம் செய்யாத மாணவனுக்குச் சொல்லக்கடவன்
அல்லன்,’ என்னும் விதிக்குக்கட்டுப்பட்டவராயும் அன்று.)
‘ஆயின், இது பின்னர் எத்தாலே ஆவது?’ என்னில்,
ஸ்வ அனுபவ பிரகர்ஷம்-இன்பப் பெருக்கு- இருக்கிறபடி –
தாம் அனுபவித்த விஷயம் தனியே அனுபவிக்குமது அன்றிக்கே இருந்தது;
இனி நமக்கு போதயந்த பரஸ்பரத்துக்கு -ஆளாவார் யார் , (‘நாம் ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு நுகர்தற்கு
ஆளாவார் யாவர்?’ )என்று நினைந்து சம்சாரிகள் பக்கல் கண்வைத்தார்;
தாம் பகவத் விஷயத்தில் பிரவணராய் இருக்குமா போலே அவர்கள் சப்தாதி விஷயங்களில் பிரவணராய் இருந்தார்கள்
அவர்கள் அனர்த்தம் பரிஹரித்து அல்லது நிற்க ஒண்ணாதாய் இருந்தது
‘ஒருவனுக்கு வைணவத்துவமுண்டு, இல்லை என்னும் இடம் தனக்கே தெரியுங்காண்’ என்று பலகாலும் அருளிச் செய்வர்;
அதாவது, பிறர் அநர்த்தம் கண்டால் ‘ஐயோ!’ என்று இரங்குவானாகில்,
அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று இருக்க அடுக்கும்;
‘இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு’ என்று இருந்தானாகில்,
அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தமில்லை’ என்று இருக்க அடுக்கும் என்றபடி.

‘ஆயின், அவர்களை இவர் மீட்கப் பார்க்கிற வழிதான் என்?’என்னில்,
இவர்கள்-சேதனராய் – அறிவு உள்ளவர்களாய்- இருக்கிறார்கள்; சப்தாதி விஷயங்களில் வாசியறிந்து,
தீயவை கழித்து, நல்லவை பற்றி போருகிறது ஓன்று உண்டாய் இருந்தது –
ஆதலால், அவற்றினுடைய ஹேயதையையும் ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய உபாதேயதையையும் இவர்களுக்கு அறிவித்தால்,
அவற்றை விட்டு இறைவனைப் பற்ற அடுக்கும் என்று பார்த்து, ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய நன்மையினையும்,
இவர்கள் பற்றியுள்ள விஷயங்கள் அல்ப அஸ்திரத்வாதி தோஷ துஷ்டங்கள் என்னும் இடத்தையும்
பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிஹாரத்தையும்
பற்றும் இடத்தில் இன்று புதிதாக செய்ய வேண்டுவது ஓன்று இல்லை -பழைய
சம்பந்தத்தை உணர அமையும் என்னும் இடத்தையும் (‘அடங்குக உள்ளே’)
பற்றுவாருக்கு அனுசந்திக்கப்படும் மந்த்ரம் இன்னது என்னும் இடத்தையும் (‘வண்புகழ் நாரணன்’ )
அவனுடைய பஜநீயதையையும் அருளிச் செய்யா நின்று கொண்டு
இதர விஷய வைராக்ய பூர்வகமாக பகவத் பக்தியைப் பண்ணி ஆஸ்ரயியுங்கோள் என்று
பர உபதேச ப்ரவ்ருத்தராகிறார் –

——————

முதல் பத்து -மூன்றாம் -திருவாய்மொழி -பத்துடை அடியவர்க்கு எளியவன்-பிரவேசம்-

சர்வ ஸ்மாத் பரன் ‘எல்லாரினும் உயர்வு அற உயர்ந்தவன்’ என்றார் முதல் திருவாய்மொழியில்;
பரனாகையாலே பஜனீயன் ‘உயர்ந்தவன் ஆகையாலே வழிபடத் தக்கவன்’ என்று பல காலும் அருளிச் செய்யா நின்றார்
இரண்டாந்திருவாய்மொழியில்;
இத் திருவாய்மொழியில் அவனது சௌலப்யத்தை அருளிச்செய்கிறார். ‘யாங்ஙனம்?’ எனின்,
‘வழிபாடு செய்யுங்கள் என்று பலகாலும் அருளிச் செய்கின்றீர்;
இருகை முடவனை ‘யானை ஏறு’ என்றால் அவனாலே ஏறப் போமோ?
அப்படியே, ஸ்ரீ சர்வேஸ்வரனாய், அவாப்த ஸமஸ்த காமனாய்- எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாய் இருக்கிறவனை
இந்த ஷூத்ரனான- அற்பனான சம்சாரி சேதனனால் பற்றப்போமோ? என்ன,
‘அவ்யானை தானே அவ்விருகை முடவனுக்கும் ஏறலாம்படி படிந்து கொடுக்குமன்று ஏறத் தட்டு இல்லையே?
அப்படியே, இச் சம்சாரி சேதனனுக்கு-பஜிக்கலாம் படி – வழிபடலாம்படி -அவன் தன்னைக் கொண்டு வந்து
தாழ விட்டு எளியனாமாகில், இவனுக்கு வழி படத் தட்டு இல்லையே?’ என்று
கூறுமுகத்தால் அவன் எளிமையை அருளிச் செய்கிறார்.

‘ஆயின், அனைவரும் அவனை வழிபட்டு உய்வு பெறாமைக்குக் காரணம் யாது?’ எனின்,-
பாக்ய ஹீனருக்கு – நல்வினை அற்ற மக்கள் ஸ்ரீ இராமன் ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைத்
தமது பிறவினைப் போன்ற பிறவியாம் என நினைந்து-சஜாதீய பிரதிபத்தி பண்ணி – கேடுறுதற்கும்,
பாக்யாதிகருக்கு- நல்வினை வாய்ந்த பெரியோர்கள், அரியன் எளியனாகப் பெற்றோமே!’ என்று நினைந்து-
ஆஸ்ரயிக்கலாம் படி – அடைந்து உய்வு பெறுதற்கும் பொதுவாக அவதாரங்கள் இருத்தலால் என்க.
ஸ்ரீ சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விளங்க விரித்துச் சொல்லிக் கொண்டு போந்தோம்;
அது தானே ‘இவர்களுக்கு இத்தனை எளியனோ?’ என்று விடுகைக்கு உடல் ஆயிற்று?
அவ் வெளிமை தானே ஆதரிக்கைக்கு உடல் ஆயிற்று உமக்கு ஒருவருக்குமே!’ என்று
ஸ்ரீ எம்பாரைப் பார்த்து ஸ்ரீ உடையவர் அருளிச் செய்தாராம் .

தார்மிகர் -அறவோர் சிலர், ஏரி கல்லினால், சேற்றிலே தலையை நொழுந்திப் பட்டுப் போகாநிற்பர் சிலர்;
விடாயர் அதிலே முழ்கி விடாய் தீர்ந்து போகா நிற்பார்கள்;
விளக்கை ஏற்றினால் அதிலே விட்டில் முதலிய சில பொருள்கள் விழுந்து முடிந்து போம்;
சிலர், அதன் ஒளியிலே ஜீவியா நிற்பர்கள்- உய்வு பெறுவார்கள்.
‘ஆயின், இறைவன் தடாகமும் விளக்கும் ஆவனோ?’ எனின்,
‘வாசத் தடம்’,
‘மரகத மணித் தடம்’ என்றும்,
‘வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை’,
‘ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை’,
‘வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி’ என்றும்
இறைவன் தடாகமாகவும் விளக்காகவும் கூறப்படுதல் காண்க.

‘ஆயின், தீ வினையாளர் கேடுற்றதும், நல் வினையாளர் உய்வு பெற்றதும் காணும் இடம் உண்டோ?’ எனின்,
அவன்தான், ‘அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டதும்’-இப்படி வந்து அவதரித்து
எளியனான நிலை தன்னிலே யன்றே?
அப்படியே சிசு பாலன் முதலியோர், பூதனை, சகடாசுரன், இரட்டை மருத மரங்கள் இவர்கள் எதிரிட்டு முடிவுற்றமையும்,
ஸ்ரீ அக்குரூரர் ஸ்ரீ மாலாகாரர் முதலியோர்-அனுகூலித்து உஜ்ஜீவிப்பார்க்கு உஜ்ஜீவிக்கவும் ஆயிற்றே –

‘‘அவனை பஜியுங்கோள் வழிபடுமின்’ என்று பலகாலும் அருளிச் செய்கின்றீர்;
கண்ணாலே கண்டால் அல்லது-பஜிக்க – வழிபட விரகு இல்லை;பஜித்தால் – வழிபட்டால் அல்லது காண விரகு இல்லை;
ஆன பின்னர்,ஆஸ்ரயிக்கும் படி – அவனை அடைதல் எங்ஙனம்?’ எனின்,
தஸ்மிந் த்ருஷ்டே பராவரே (‘நம்மைக் காட்டிலும் உயர்ந்தவர்களான பிரமன் சிவன் இவர்களைத் தனக்கு அடிமையாகவுடைய
இறைவனைப் பர பத்தியால் பார்த்த அளவில் மனத்தில் இருக்கின்ற அவா முதலியன அழிகின்றன,’ )என்றும்,
விசதே தத் அநந்தரம் (‘பரபத்தியால் என்னை உண்மையாக அறிகின்றவன் பிறகு என்னையே அடைகின்றான்,’ )என்றும்
சொல்லுகிறபடியே, சில வருத்தங்களோடே காணக்கூடிய சாதன பத்தியை அன்று இங்குச் சொல்லுகிறது;
காண வேண்டும் என்னும்-ஆகா லேசம் – ஆசை சிறிதுடையார்க்கும் அவன் எளியனாம்படியைச் சொல்லுகிறது.
‘ஆயின், அறப் பெரியவன் ஆசை சிறிது உடையார்க்கு எளியனாகை கூடுமோ?’ எனின்,
சர்வாதிகன் -அறப் பெரியவன் தாழ நிற்கும் அன்று நிவாரகர் -தடை செய்குநர் எவருமிலர்

அறப் பெரிய அவன் இம் மண்ணுலகில் வந்து அவதரித்தான் என்பது பொய்யே அன்றோ?’ எனின்,
பஹு நி மே வியதீதாநி(‘பகைவர்களை அழியச் செய்கின்ற அருச்சுனா, எனக்கும் பல பிறவிகள் கழிந்தன;
உனக்கும் பல பிறவிகள் கழிந்தன; ஆயின், அப்பிறவிகள் பலவற்றையும் யான் அறிகின்றேன்;
அவற்றை நீ அறியாய்,’) என்று அருச்சுனனை நோக்கி, ‘நீ பிறந்தது போன்று, நானும் பிறக்கின்றேன்,’ என்கிறான் ஸ்ரீ கிருஷ்ணன்;
அருச்சுனன் பிறந்தது பொய் அன்று; ஆதலால், இறைவன் அவதரித்ததும் பொய் அன்று.
அவதாரங்களில் புரை இல்லை

‘ஆயின், அருச்சுனன் பிறவிக்குக் காரணம் கர்மம்; இறைவன் பிறவிக்குக் காரணம் யாது?’ எனின், இச்சையே;
இது தன்னை அவதார ரஹஸ்யத்தில் தானும் அருளிச் செய்தான் அன்றே,
ஜென்ம கர்மா ச மே திவ்யம் (‘என்னுடைய பிறவிகளும் பிறவிகளிற் செய்யப்படுகின்ற தொழில்களும்
தெய்வத் தன்மை வாய்ந்தவை,’) என்று?
அதாவது, ‘என்னுடைய பிறவிகள் கர்மம் அடியாக அல்ல; இச்சை அடியாக இருக்கும்.
நாம் பிறவா நிற்கச் செய்தே பிறவாமையும் கிடக்கும்; தாழ நின்ற நிலையிலே மேன்மையும் கிடக்கும்;
அப்ராக்கிருத சம்ஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி வந்து பிறப்போம்;
இவற்றுள் ஒன்றை அறிந்தவர்கட்குப் பின்னர்ப் பிறவி இல்லை; நானும் பிறந்து அவர்களும் பிறக்க வேண்டுமோ?
ஈர் இறை உண்டோ?’ என்றான் என்றபடி.
ஆக, ஸ்ரீ இறைவன் ஸ்ரீ இராமன், ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைப் பண்ணிக் கொண்டு எளியனாம்;
ஆன பின்பு, அடைதல் கூடும்; நீங்களும் அவன் ஸ்ரீ கீதையில் நான்காம் அத்தியாயத்தில் அருளிச் செய்தவாறே
உபஜீவித்துக் கொண்டு நின்று, அவற்றை உயர்வதற்கு உரிய சிறந்த நெறியாகக் கொண்டு
அவனை ஆஸ்ரயியுங்கோள் அடைமின்,’ என்கிறார்.

‘நன்று; பிறர்க்கு உபதேசிக்கப் புக்க இவர், தாம் கலங்குதற்குக் காரணம் என்னை?’ எனின்,
அவதாரங்களை முன்னிட்டுக் கொண்டு, அவதாரங்களிலும் நீர்மைக்கு எல்லை நிலமான ஸ்ரீ கிருஷணாவதாரத்திலே இழிந்து,
அது தன்னிலும் பரத்துவத்தோடு ஒக்கச் சொல்லக் கூடிய நிலைகளைக் கழித்து,
நவநீத சௌர்ய நகர க்ஷோபத்திலே அகப்பட்டு, இள மணற்பாய்ந்து ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடக்கிறார்.
‘ஆயின், பரத்துவத்தைக் காட்டிலும் சௌலப்யம் ஈடுபடுத்துமோ?’ எனின், பரத்துவத்தை நினைந்தார்,
தெளிந்திருந்து பிறர்க்கு உபதேசம் செய்தார்;
எளிமையினை நினைந்தார், ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடக்கிறார்.

சர்வ ஸ்மாத் பரன் என்று தொடங்கி அனுகூலித்து உஜ்ஜீவிப்பார்க்கு உஜ்ஜீவிக்கவுமாம் ஆயிற்று அவதாரம் தான் இருப்பது
என்னும் அளவும் ஸங்க்ரஹம் -மேல் விஸ்தாரம்-
பல பிறப்பாய் ஒளி வரும் இயல்வினன் -என்றத்தைக் கடாக்ஷித்து சங்கதி –
இரு கை முடவன் என்றது இரு கையாலும் முடவன் -எழுந்து இருக்கவும் மாட்டாதவன் –
பற்றிலன் ஈசனும் என்கிற பாட்டில் -ஆஸ்ரயித்தால் அவன் அவாப்த ஸமஸ்த காணக்காண சர்வேஸ்வரன் -நமக்கு முகம் கொடுத்து
நம்மோடு கலசி இருக்குமோ என்கிற சங்கையிலே அவன் அப்படி இருக்கும் என்றார்
இங்கே சர்வேஸ்வரனாய் இருக்கிறவனை நாம் ஆஸ்ரயிக்கக் கூடாது என்கிற சங்கையிலே
அவன் ஸூலபன்-என்று பரிஹரிக்கிறார் என்று பேதம் –

அவஜா நந்தி மாம் மூடா மானுஷீம் தனுமாஸ்ரிதம் பரம் பாவமஜா நந்த -என்று சிலர் அவமதி பண்ணிக் கொண்டு போகைக்கும்
மஹாத்மா நஸ்து மாம் பார்த்த தேவீம் ப்ரக்ருதிம் ஆஸ்ரிதா-பஜந்த்ய அநன்ய மனாசோ ஞாத்வா பூதாதி மவ்யயம் என்று சிலர்
அனுகூலித்து உஜ்ஜீவிக்கைக்கும் அடி எது என்கிற சங்கையிலே –
ந மாம் துஷ்க்ருதிநோ மூடா பிரபத்யந்தே நாரதமா-மாயயா அபஹ்ருதா ஞானா ஆஸூரம் பாவம் ஆஸ்ரிதா என்கிறபடியே
அவர்கள் பாக்ய ஹானியும்
யேஷாம் த்வந்தகதம் பாப்பம் நராணாம் புண்ய கர்மணாம் தே த்வந்த்வ மோஹ நிர்முக்தா பஜந்தே மாம் த்ருட வ்ரதா-என்கிறபடியே
அவர்கள் பாக்ய அதிசயமும் அடி என்கிறார் –
இந்த அர்த்தத்தை இரண்டு த்ருஷ்டாந்தங்களாலே தர்சிப்பிக்கிறார்

வேத நல் விளக்கு என்றது வேதங்களுக்கு நிரதிசய பிரகாசகமான தீபம் என்றபடி –
ஸ்ரீ திரு வேங்கடமுடையானை சொன்னவாறு –
ஆயர் குலத்திலே ஆவிர்பவித்த மணி தீபம் –குணங்கள் இடைச்சேரியிலே அத்யுஜ்ஜ்வலமான படி —
ஆதித்யனுடைய குலத்துக்கு அத்விதீயமான விளக்கு – ஆதித்யனைப் போலே இரவு கலாசாதே அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –
பலகாலும் பஜியுங்கோள்-என்றது –
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே என்றும் இறை சேர்மினே -என்றும் அந்நலம் புக்கு -என்றும் இறை பற்றே-இத்யாதிகளைப் பற்ற-

கண்டால் அல்லது என்றது – பயபக்தி ரூப ஞானம் தரிசன சமா நா காரா பண்ணமானால் அல்லது –
காண விரகில்லை -மோக்ஷ தசையில் பகவத் அனுபவ ரூபா பலம் வர விரகில்லை-என்றபடி –
கண்டால் அல்லது பஜிக்க விரகு இல்லை -பஜித்தால் அல்லது காண விரகில்லை-என்றது
தரிசன சமானாகாரமான பக்தி உண்டானால் அல்லாதது இவன் பஜித்தானாக விரகு இல்லை –
இப்படிப்பட்ட பஜனத்தைப் பண்ணினால் அல்லது ப்ராப்ய சித்தி உண்டாகாது என்று தாத்பர்யம் –
தஸ்மிந் த்ருஷ்டே பராவரே -பராவரே -அஸ்மதாதிகளைப் பற்ற பரர்களான ப்ரஹ்மாதிகளைத் தனக்கு சேஷ பூதர்களாக உடையவன்

பர பக்தி யாவது -சாஸ்த்ராதி முகேன அறிந்த விஷயத்தை இப்போதே பெற வேணும் என்கிற இச்சை –
பர ஞானமாவது -ப்ரத்யக்ஷ சாமானாகாரமான மானஸ அனுபவம்
பரம பக்தி யாவது -விஸ்லேஷ அஸஹத்வம் –
பயபக்திர த்ருஷ்டார்த்த ப்ரத்யக்ஷாபி நிவேசனம் -பர ஞானந்து தஸ்யைவ சாஷாத்கார பரிஸ்புட –
புநர் விஸ்லேஷ பீருத்வம் பரமா பக்தி ருச்யதே -என்னக் கடவது இறே
இனி நித்ய ஸூரிகளுடைய பரபக்தி பர ஞான பரம பக்திகளாவது
உத்தர உத்தரம் அனுபவ இச்சை -பரபக்தி -அனுபவம் பர ஞானம் -அகலகில்லேன் என்கிறபடியே விஸ்லேஷ அஸஹத்வம் பரம பக்தி –
அவதாரம் -இச்சா ஹேது-இச்சா க்ருஹாதீபிமதோரு தேஹ -அஜோ அபிசன்-ஸ்லோகத்தை உட்கொண்டு -அருளிச் செய்கிறார் –
இவனுக்காக தான் பிறந்ததாகையாலே இறை என்கிறது
பரத்வாபேஷயா ஸுலப்யமே ஈடுபடுத்தும் ஆகையால் எத்திறம் என்று மோஹித்தார்

——————-

முதல் பத்து -நாலாம் -திருவாய்மொழி–அஞ்சிறைய மடநாராய்- பிரவேசம்-

கீழ் மூன்று திருவாய்மொழிகளால், பரத்வத்தையும் -பஜனீயத்வத்தையும் -ஸுலப்யத்தையும் -அனுபவித்து மகிழ்ந்தவராய்த்
தாமான தன்மையில் நின்று பேசினார்;
இத் திருவாய்மொழி, தாமான தன்மை அழிந்து, ஒரு ஸ்ரீ பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியால் கூறும் பாசுரம் போய்,
ஆற்றாமையாலே கூறும் பாசுரமாய்ச் செல்லுகிறது.
அயம பர ஆகாரக நியம (‘இது மற்றொரு காரகம்’ ) என்னுமாறு போன்று, மேல் போந்த நெறி வேறு;
இங்குச் செல்லும் நெறி வேறு.
முற்காலத்தில்-அல்பம் விவஷிதனாய்- சிற்றறிஞன் ஒருவன், வீதராகராய் –
‘பற்று அற்ற பரம ஞானிகளும் போற்றத் தக்கனவாக இருக்கின்றன;-தத்வ பரமாக – உண்மைப் பொருளை
உள்ளவாறு கூறுகின்றன,’ என்று
இத் திருவாய்மொழி அளவும் பாடங்கேட்டு, இந்தத் திருவாய்மொழி வந்த அளவில்,
‘இது காமுகர் வார்த்தையாய் இருந்ததே!’ என்று கை விட்டுப் போனானாம்;

ஸ்ரவணம்- மனனம்- நிதித்யாசித்வய சாஷாத்காரம் (‘இறைவன் கேட்கத் தக்கவன், நினைக்கத் தக்கவன், தியானம் செய்யத் தக்கவன்,
பார்க்கத் தக்கவன்’ )என்று விதிக்கிற பகவத் காமம் என்று அறிந்திலன், நல்வினை அற்றவன் ஆதலாலே.
கீழே ‘அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே,’ என்பதற்கு
‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப் பாரிக்கிறார்,’ என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த பொருள்
அதற்கு அடுத்த இத் திருவாய்மொழிக்கு மிகப் பொருந்தும்.
‘அனுபவிக்கிறார்’ என்று ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த பொருள்,
இவ் வாழ்வாருக்கு ‘முனியே நான்முகனே’ என்னும் திருவாய்மொழி முடிய உள்ளது
மானச அநுபவமாகையாலே அதற்குப் பொருந்துவதாம்.
‘ஆயின், ஆற்றாமையாலே கூறும் பாசுரமாகச் சொல்லுவதற்குக் காரணம் யாது?’ எனின்,
கீழே திரு உலகு அளந்தவனுடைய திருவடிகளை அனுபவிப்பதாக ஒருப் பட்டுக் கட்டிக் கொண்டார்;
அது ஒரு கால விசேடத்திலேயாய், தாம் பிற்பாடராய்த் தோற்றுகையாலே, துணுக்கு என்று தாமான தன்மை அழிந்து
ஒரு ஸ்ரீ பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியினால் சொல்லும் பாசுரம் போய், ஆற்றாமையால் சொல்லும் பாசுரமாய் விட்டது.

‘ஆயின், ஆர்த்தோ வா யதிவா த்ருப்த (‘சரணம் அடைந்த பகைவன் ஆர்த்தனாயினும் சரி, திருப்தனாயினும் சரி,
அவன் ரஷிக்கத் தக்கவன்,’) என்று கூறிய இறைவனை அனுபவித்த இவர்க்குப்
பிரிவாலாய துன்பம் வருகைக்குக் காரணம் என்?’ என்னில்,
ஆமத்தில்-‘பசி இல்லாத காலத்தில் உணவு நோயினைத் தருவதாம்,’ எனப்படுதலால்,
நிதானஞ்ஞரான நோயின் மூலத்தை அறியும் -பிஷக்கக்குள்- மருத்துவர்கள் ‘உணவு உண்ணலாகாது,’ என்று விலக்குவது போன்று,
மேல் வரும் அனுபவங்களை இவர் பொறுப்பதற்காக, இப்பொழுது நுகரும் இன்பம் நீங்கும்படி நாலடி பெயர நின்றான்;
பெயர நிற்கவே, இவர் கலங்கினார்.
‘ஆயின், இறைவன் மருத்துவனோ?’ எனின், ‘மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணன்’ எனப்படுதலால் மருத்துவனேயாம்.
‘நன்று; ஞான தேசிகரான இவர் கலங்கலாமோ?’ எனின், ஞானத்தை மட்டும் உடையவராய் இருப்பின் கலங்கார்;
‘மயர்வற மதிநலம் அருளப்’ பெற்றவர் ஆகையாலே கலங்குகிறார்.
மற்றும், அவன் தானே கொடுத்த அறிவும்-விஸ்லேஷத்தில் – பிரிவில் அகிஞ்சித்கரமாம்படி அன்றோ அவனுடைய வைலக்ஷண்யம் இருப்பது?
தத் தஸ்ய சத்ருசம் பவேத் ( ‘அவர் வந்து என்னை மீட்டுச் செல்வராகில், செல்லும் அச் செயல் அவ் விராமனுக்குத் தக்கதாம்,’ ) என்று
கூறிய ஸ்ரீ பிராட்டியே பிரிவுத் துன்பத்தைப் பொறுக்கிலளாகித் -வேண்யுத்க்ரத நாதிகளிலே- தன் சடையினைக் கொண்டு தூக்கிட்டு இறப்பதற்கு
நினைந்தமையும் ஈண்டு நினைத்தல் தகும்.

‘ஆயின், பறவை முதலானவைகளைத் தூதுவிடல் பண்டைய மரபு ஆமோ?’ எனின்,
ஹம்ஸ காரண்ட வா கீர்ணம் வந்தே கோதாவரீம் நதீம் ( ‘அன்னங்களும் நீர்க்காகங்களும் நிறைந்திருக்கின்ற
கோதாவிரி நதியே, உன்னை வணங்குகிறேன்;) என்றும்
ஸ்ரீ ‘சீதையை இராவணன் தேரில் ஏற்றுக்கொண்டு செல்கிறான்,’ என்று நீ ஸ்ரீ இராமனிடம் சென்று விரைவிற்கூறு,’ என்று ஸ்ரீ பிராட்டியும்,
அசோக சோகாபநுத சோகோ பஹத சேதசம் (சோகத்தினை நீக்குதலையே இயல்பாகவுடைய அசோக மரமே, கலங்கி இருக்கும்
எனக்கு ஸ்ரீ பிராட்டி இருக்கும் இடத்தினைத் தெரிவித்து, என்னையும் விரைவில் உன் பெயரைப் போலவே செய்,’ )என்று
ஸ்ரீ பெருமாளும் கூறுதலால், தூது விடல் பண்டைய மரபேயாம்.

‘ஆயின், ஸ்ரீ பிராட்டியின் நிலை உண்டாகிறபடி எங்ஙனே?’ என்னில்,
அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்துவம், அன்வயத்தில் -கூடி இருக்கும் போது தரிக்கை,
விஸ்லேஷத்தில் -பிரிந்திருக்கும் போது தரியாதொழிகை, -ததேக போகராகையாலும் -அவனுக்கே இன்பத்தை அளிக்கை,
அவன் நிர்வாஹகனாக- காப்பாற்றுகின்றவனாகத் தாம் நிர்வாஹ்யமாகையாலும்- காப்பாற்றப்படும் பொருளாக இருக்கை
ஆகிய இவ்வாறு குணங்களும் ஸ்ரீ ஆழ்வார்க்கும் உள ஆதலின், ஸ்ரீ பிராட்டியின் நிலை உண்டாகத் தட்டு இல்லை.

‘ஆயின், ஸ்ரீ பிராட்டி தானாகப் பேசுவான் என்?’ என்னில், தாமரை திருவடிகளுக்குப் போலியாக இருக்க,
‘வையங்கொண்ட தடந்தாமரை’ என்று தாமரையாகவே திருவடிகளைப் பேசுவது போன்று,
இங்கு ஸ்ரீ பிராட்டியாகவே பேசப்படுகிறது; முற்றுவமை இருக்கிறபடி.
‘ஆயினும், இவர் ஆடவர் ஆகையாலே ஆண் தன்மை பின் நாடாதோ?’ எனின்,
இராஜ ருஷி பிரம ருஷி யான பின்னர்-ஷத்ரியத்வம் – அரசருடைய தன்மை பின் நாட்டிற்றில்லை அன்றே?
எதிர்த்தலையில் -பும்ஸத்வத்தை -ஆண் தன்மையை அழித்துப் பெண்ணுடை உடுத்தும்படியன்றோ
அவனுடைய புருஷோத்தமனாந்தன்மை இருப்பது? ஆதலால், பின் நாடாது என்றபடி –

‘நன்று; அந்தப்புரத்தில் வசிக்கும் இப்பெண்ணிற்குத் தூது விடுகைக்குப் பறவைகள் உளவோ?’ எனின்,
கூடும் இடம் குறிஞ்சி; அதற்குப் பூதம் ஆகாயம்.
பிரியும் இடம் பாலை; அதற்குப் பூதம் நெருப்பு.
ஊடும் இடம் மருதம்; அதற்குப் பூதம் வாயு.
இரங்கும் இடம் நெய்தல்; அதற்குப் பூதம் தண்ணீர்.
இவ் வகையில், பிரிந்தார் இரங்குவது நெய்தல் ஆகையாலே, ஸ்ரீ பிராட்டி, தானும் தன் தோழிகளுமாக விளையாடும்
பூஞ்சோலைக்குப் புறப்பட்டுச் செல்ல, சென்றதும் தோழிமார் பூக் கொய்கையில் கருத்தூன்றினவர்களாய்த் தனித்தனியே பிரிய,
தலைவனும் தன் நேராயிரம் பிள்ளைகளும் தானுமாக வேட்டைக்குப் புறப்பட்டு வர,
ஏவுண்ட விலங்கு இவனை இப் பூஞ்சோலையில் தனியே கொண்டு வந்து மூட்டி மறைய,
முற்பிறவியிற் செய்த நல்வினைப் பயனால் இருவருக்கும் புணர்ச்சி உண்டாக,
பின்னர், கூட்டின தெய்வம் பிரிக்கப் பிரிந்து,
‘இனி, இரண்டு தலையையும் அழித்தாகிலும் கிட்ட வேண்டும்,’ என்னும் ஆற்றாமை பிறந்து,
தன் அருகிலுள்ள தோழிகள் ‘எம்மின் முன் அவனுக்கு மாய்வர்’ என்கிறபடியே தளர்ந்தவர்கள் ஆதலின்,
கால்நடை தருவார் இல்லாமையாலே, அப் பக்கத்தில் வசிக்கின்ற விலங்குகள் சிலவற்றைப் பார்த்து,
‘இவை வார்த்தை சொல்ல மாட்டா,’ என்னுமது அறியாதே, ‘இவற்றுக்குப் பக் ஷபாதம் உண்டாய் இருந்தது ஆகையாலே,
இவை கடுகப்போய் நங்காரியம் செய்யவல்லன்,’ என்று பறப்பதற்குச் சாதனமான பக்ஷபாதமே பற்றாசாக,
இராவண மாயையால் வரும் ஐயமும் இல்லாமையாலே கண்ணாலே கண்டவற்றை எல்லாம் தூது விடுகிறாள்.
இவ்விடத்தில் ஸ்ரீ ‘சக்கரவர்த்தி திருமகன் திருவவதரித்த பின்பு வானர ஜாதி வீறு பெற்றாற்போலே காணும்,
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவவதரித்துத் திரியக்குச் ஜாதி வீறு பெற்றபடி’ என்று ஸ்ரீ பட்டர் ரஸோக்தியாக அருளிச்செய்வர்.

‘பிரிந்தவன் மீண்டு வருவான் என்று நினைந்து தூது விடுதற்குக் காரணம் யாது?’ எனின்,
தன் மேன்மையாலே இத்தலையில் தன்மை பாராதே வந்து கலந்தான்;
கலந்த பின்னர் இவளிடத்துள்ள குற்றங்களைக் கண்டான்; கண்டு பிரிந்தான்;
பிரிந்த அளவிலே ‘இது அன்றோ இருந்தபடி’ என்று அநாதரித்தான்.
கண்ட தலைவி, ‘குற்றங்களைப் பார்த்தல் மட்டுமே அன்றிச் செய்தார் செய்த குற்றங்களைப் பொறுத்துக்கோடல் என்ற
குணவிசேடம் தம் ஒருவருக்கே அடையாளமாக இருப்பது ஒன்று உண்டு; அதனை அறிவிக்க வருவான்,’ என்று
அந்த அபராத ஸஹத்வத்தையே பற்றாசாகக் கொண்டு தூது விடுகிறாள்.

அநாதி காலம் இவ் வாழ்வாரைத் தன்னோடே சேர விடுகைக்குக் காலம் பார்த்து இருந்த-அவசர பிரதீஷனாய்ப் போந்தவன் –
இவர் பக்கல் அப்ரதிஷேதம் -வெறுப்பின்மை உண்டான சமயம் பார்த்து,
இவருக்கு மயர்வற மதிநலம் அருளல் ஈண்டுப் புணர்ச்சி-யாதிருச்சிக்க சம்ச்லேஷம் – எனப்படும்.
அவன் கொடுத்த அந்த ஞானம் பேற்றோடே தலைக் கட்டப் பெறாமை-விஸ்லேஷம் – பிரிவு எனப்படும்.

பக்தி கார்யமான யுக்தியை காமுக வாக்ய ரூபேண அருளிச் செய்தது -புருஷனை புருஷன் ஸ்நேஹிக்கும் அதிலும்
காம மஷ்ட குணம் பவேத் -என்கிறபடியே ஸ்த்ரீக்கு புருஷ விஷய ஸ்நேஹம் பள்ளமடையாகையாலே
தாத்ருசமான அதி மாத்ர ப்ராவண்ய ஸூசகம் ஆகையால் –
குட ஜிஹ்விகா ந்யாயத்தாலே -மருந்தை நாவுக்கு இனிய வெள்ளத்தில் வைத்துக் கொடுப்பது –
விஷய ப்ரவணரான சம்சாரிகள் பரிக்ரஹித்து உஜ்ஜீவிப்பார்கள் என்னுமத்தாலும் அருளிச் செய்வர்
மேலே விஸ்தார சங்கதி – ஸ்ரீ திரு உலகு அளந்து அருளினவன் இத்யாதியால் –
ஸ்ரீ பிள்ளான் கீழே அயர்ப்பிலன் இத்யாதி மானஸ அனுபவத்துக்கும் ஸ்ரீ நஞ்சீயர் நிர்வாகத்துக்கும் சேர வியாக்யானம் –

மருத்துவனாய் நின்ற -ஆச்சார்யாதி ரூபேண சம்சார ரோக பிஷக்காய் நின்ற நீல மணி போலே கறுத்த நிறத்தை யுடையவன்
பாஹ்ய சம்ச்லேஷம் கிடையாமையாலே -ஸித்தமான ஸ்வ அனுபவம் அசத் கல்பமாய் தோன்றி கலக்கம்
மயர்வற மதி நலம் அருளப் பெற்று இருக்கிற இவரை அவ்வறிவு அகார்யகரமாம் படி கலங்கப் பண்ணும் வைலக்ஷண்யம் –
ஸ்வ யத்ன சாத்தியமான ஞான பக்திகளால் வந்த கலக்கமாகில் இறே அளவு பட்டு இருக்கும் –
விலக்ஷண விஷயத்தைப் பிரிந்து பொறுக்க மாட்டாமல் வேண் யுத்க்ரதநத்திலே ஒருப்படடாள்-
கோதாவரி நதிக்குப் பக்ஷிகளைக் கொண்டு தேசாந்தரத்தே யாகிலும் அறிவிப்பிக்கைக்கு சக்தி உண்டு
என்று இருக்கிறாள் கலக்கத்தாலே –

அநந்யார்ஹ சேஷத்வம் -அனன்யா ராகவேணாகம் /
யஸ் த்வயா ஸஹ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா -என்றும் ந ச சீதா த்வயா ஹீநா -என்றும்
விஸ்லேஷத்தில் தரியாமையும் சம்ஸ்லேஷத்தில் தரிக்கையும்-
நைஷா பஸ்யதி–தந்யா பஸ்யந்தி மே நாதம் -இத்யாதிட்டாலே தத் ஏக போகத்வமும்-
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா -என்கையாலே தத் ஏக நிர்வாஹயத்வமும் –
தத் தஸ்ய சத்ருசம் பவேத் –தபஸஸ் ச அநுபாவ நாத்-என்கையாலே அநந்ய சரண்யத்வமும்-
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரியாய் அப்ராக்ருதமான வடிவழகு பண்ணும் என்று சொல்ல வேண்டா இறே –

போக்கு எல்லாம் பாலை புணர்தல் நறும் குறிஞ்சி ஆக்கம் சேர் ஊடல் அணி மருதம் நோக்குங்கால்
இல்லிருக்கை முல்லை இரங்கல் நறு நெய்தல் சொல்லிருக்கும் ஐம்பால் தொகை
போக்கு -தனிப்போக்கு -புணர்ந்து உடன் போக்கு இரு வகை -கொடும் காற் சிலையா -திரு விருத்தம் -37-தனிப் போக்கு
நானிலம் வாய்க்க கொண்டு –திரு விருத்தம் -26-புணர்ந்து உடன் போக்கு
காடு சார்ந்த நிலம் முல்லை /நாடு சார்ந்த நிலம் மருதம் /மலைச்சார்வு -குறிஞ்சி நிலம் /
கடல் சார்வு நெய்தல் நிலம் -நீர் இன்றி வேனில் தெறு நிலம் பாலை -தெறு சம்ஹரிக்கிற

ப்ராஹ்மம் தைவம் ப்ராஜாபத்யம் ஆஸூரம் ஆர்ஷம் காந்தர்வம் ராக்ஷஸம் பைசாயம் -8-வகை விவாஹம்
உத்யானம் என்றது பின்னை யம் பொழில் சூழ் / திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் பெய்த காவு /
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை யாடி வருவான் /

யாத்ருச்சிக சம்ஸ்லேஷத்துக்கு ஸ்வாபதேசம் அருளிச் செய்கிறார் –
மேன்மையாலே ஸ்வாதந்தர்யத்தாலே இத்தலையில் தண்மை பாராமல் கலந்தான் –
தோஷ தர்சனத்தைப் பண்ணவே பிரிந்தான் –
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -என்றதை பற்ற அபராத சஹத்வம் –

——————

முதல் பத்து -ஐந்தாம் -திருவாய்மொழி–வளவேழ் உலகின் – பிரவேசம்-

முதல் திருவாய்மொழியில்
‘சர்வேஸ்வரன் சர்வ ஸ்மாத் பரன் ஆகையாலே அவனைப் பற்றுவார்க்கு ஒரு குறை இல்லை,’ என்றார்;
இரண்டாந்திருவாய்மொழியால்,
அந்த ஆஸ்ரயணம் தான் புருடோத்தமனைப் பற்றுகிறது ஆகையாலே பலத்தோடே வ்யாப்தம் அல்லது இராது,’ என்றார்;
மூன்றாந்திருவாய்மொழியால்,
பஜிப்பார்க்காகத் தான் அவதரித்து ஸூலபனாகையாலே பஜிக்கத் தட்டு இல்லை,’ என்றார்;
நான்காந்திருவாய்மொழியால்
ஸூலபனானவன் ஆனவன் தானே -அபராத சஹனாகையாலே பலத்தோடே வ்யாப்தம் அல்லது இராது ,’ என்றார்;
அயோக்ய அநுஸந்தானம் ‘தம் தாழ்வினை நினைந்து அகலுவாரையும் தன் செல்லாமையைக் காட்டிப்
பொருந்த விட்டுக் கொள்ளும் சீலவான்,’ என்கிறார், இத்திருவாய்மொழியால்.

‘ஆயின், காதல் விஞ்சிக் கலங்கி மேல் திருவாய்மொழியில் தூது விட்டவர்,-இங்கு அகலுவான் என்?’ என்னில்,
கீழ் கலங்கித் தூதுவிட்ட இடம்-ப்ரேம- அன்பின் காரியம்;
இங்கு அகலப் பார்க்கிற இடம் ஞான காரியம்.
‘ஆயின், இவ் விரண்டும் இவர்க்கு உண்டோ?’ எனின்,
இவர்க்கு இறைவன் திருவருள் புரிந்தது -பக்தி ரூபா பன்ன ஞானம் – பத்தியின் நிலையினை அடைந்த ஞானத்தை ஆதலின்,
இரண்டும் உண்டு; ‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்பது இவருடைய திருவாக்கு.

‘இத் திருவாய்மொழியில் இறைவனுடைய சீலத்தை அருளிச் செய்தவாறு யாங்ஙனம்?’ எனின்,
கீழ் திருவாய்மொழியில் தூது விடுகின்ற வியாஜத்தால் தம்முடைய ஆற்றாமையை அறிவித்த பின்னர்,
‘இவரை இங்ஙனம் நோவு பட விட்டோமே!’ என்று பிற்பாட்டுக்கு நொந்து யானைக்கு உதவ வந்து தோன்றியது போன்று,
அரை குலையத் தலை குலைய வந்து தோன்றினான்;
அவனுடைய-வை லக்ஷண்யத்தையும் – வேறுபட்ட சிறப்பினையும் தம்முடைய -ஸ்வரூபத்தையும் -தன்மையினையும் கண்டார்;
‘தார்மிகன் வைத்த தண்ணீர்ப் பந்தலை அழிப்பாரைப் போன்று, நித்திய சூரிகளுக்கு-அனுபாவ்யமான வஸ்து –
நுகரப்படும் பொருளாக உள்ள இறைவனை- நாம் கிட்டிக் கெடுக்கப் பார்ப்போம் அல்லோம், அகலும் இத்தனை,’ என்று நினைத்தார்.
‘அகன்றால், பிழைக்க வல்லரோ?’ என்னில், பிழையார்; முடியும் இத்தனையே.
‘ஆயின், அகலுவான் என்?’ என்னில்,-
சேஷிக்கு – தலைவனுக்கு அதிசயத்தைத் தேடுமவர்கள் தம் தாம் விநாசத்தை அழிவினைப் பாரார்கள் அன்றே?

ஸ்ரீ பெருமாளும் தேவ தூதனும் ஆலோசனை தொடங்கும் சமயத்தில், ஸ்ரீ துர்வாசர் ‘என்னை உள்ளே புக விட வேண்டும்’ என்ன,
இவனைத் தகைந்து பெருமாளுக்கு ஒரு தாழ்வினை விளைப்பதில் நாம் அகன்று முடிய அமையும்’ என்று நினைந்து, அவனைப் புகவிட்டு,
யதி ப்ரீதிர் மஹா ராஜா யத் அனுக்ராஹ்யதா மயி ஜஹி மாம் நிர்விசங்கஸ்த்வம் ப்ரதிஞ்ஞா அநுபாலய ( ‘அரசர்க்கு அரசரே,
உமக்கு என்னிடத்தில் அன்பு இருக்குமாகில், என்னிடத்து அருள் புரியவேணும் என்னும் கருத்து இருக்குமாகில்,
யாதொரு ஐயமும் இன்றி என்னை விட்டு விடும்; உம்முடைய சூளுறவைக் காப்பாற்றும்,’ )
என்று விடை கொண்டார் அன்றே ஸ்ரீ இளைய பெருமாள்?

த்யஜேயம் ராகவம் வம்சே பர்த்துர் மா பரிஹாஸ்யதி ( ஸ்ரீ இலக்குமணரே, என் நாயகரான இராகவருடைய வமிசத்தில் சந்தானம் இல்லாமல்
இருக்க ஒண்ணாது என்று என் உயிரை இப்பொழுதே இக் கங்கையில் விடாமல் இருக்கிறேன்,’ )என்று விடை கொண்டாள் அன்றே ஸ்ரீ பிராட்டி?

அப்படியே, இவரும்-ஊருணியிலே கள்ளியை வெட்டி எறிவாரைப் போலவும்,
அமிருதத்திலே விஷத்தைக் கலப்பாரைப் போலவும்.
நித்திய சூரிகள் அனுபவிக்கும் பொருளை நாம் புக்கு அழிக்கையாவது என்?’ என்று அகலப் புக்கார்.
அதனைக் கண்ட ஸ்ரீ இறைவன், ‘இவரை இழந்தோமே’ என்று நினைந்து, ‘ஆழ்வீர், அகலப் பார்த்திரோ?’ என்ன,
‘அடியேன் அகலப்பார்த்தேன்,’ என்ன,
‘நீர், எனக்குத் அவத்யம் -தாழ்வு வரும் அன்றே அகலப் பார்த்தீர்?
நீர் அகலவே, ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே யுடைய பெரியவர்களாலேயே அடையத் தக்கவன் நான் என்று நினைத்து
என்னை ஒருவரும் சாரார்-இவ்விஷயம் அதிக்ருதாதிகாரம் ஆகாதே –
இப்படித் தண்ணியராக நினைந்திருக்கிற நீர் ஒருவரும் என்னைக் கிட்டவே,
நான், ‘இன்னார் இனியார் என்னும் வேறுபாடு இன்றி
எல்லாரும் வந்து சேரத்தக்கவன்; என்று தோற்றும்;-சர்வாதிகாரம் ஆகும்
ஆன பின்னர், நீர் அகலுமதுவே எனக்குத் தாழ்வு-அவத்யம் -.

மற்றும், ‘எனக்கு ஆகாதார் இலர் என்னுமிடம் பண்டே அடி பட்டுக் காணுங் கிடப்பது,
நான், நல்லார் தீயார் என்று நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் என் காலை வைத்ததைக் கண்டீரே,’
எனத் தான் திருவுலகு அளந்தருளின எளிமையைக்காட்ட, ‘ஆகில் கிட்டுவோம்’ என்று நினைந்தார்;
உடனே,-ஒரு குணாதிக்யமோ வேண்டுவது ‘நம்மால் வரும் மேன்மையும் இவனுக்கு வேண்டா,’ என்று
‘பின்னையும் அகலப்புக,

‘உம்மால் வரும் மேன்மையேயன்றோ நீர் வேண்டாதது? உம்மால் வரும் நான்தான் வேண்டுமோ, வேண்டாவோ?
நீர் தாழ்ந்தவர் என்று அகலுமதிலும் சேர்கிறது, ஸ்ரீ திருவாய்ப்பாடியில் வெண்ணெயினைப் போன்று எனக்குத் தாரகங்காணும்;
இனி, நீர் அகலில், ஸ்ரீ திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினார் புக்க உலகம் புகுதல் திண்ணம்;
நீர் அகலுமது என்னுடைய இருப்புக்குக் கேடு-சத்தா ஹானி ,’ என்று கூறி, பின்னர்
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ‘நட்பு உணர்ச்சியோடு வந்து சேர்ந்த இந்த ஸ்ரீ விபீடணன் -போட்கன்- வஞ்சனையுள்ளவன் ஆகவுமாம்;
நான் இவனை விடில் உளேன் ஆகேன்,’ என்று சேர்த்துக் கொண்டாற்போலவும்,
பந்து வதம் -‘உற்றாரை எல்லாம் உடன் கொன்று அரசாளப் பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்,’ என்ற ஸ்ரீ அருச்சுனனை,
கரிஷ்யே வசனம் தவ -ஸ்ரீ கிருஷ்ணா, உனது அருளால் உண்மை ஞானத்தை அடைந்தேன்; திரிபு உணர்ச்சியானது என்னை விட்டு நீங்கிற்று;
ஐயவுணர்வும் நீங்கினவன் ஆனேன்; ஆதலால், ‘இப்பொழுதே போரினைச் செய்’ என்று நீ கூறுகின்ற இச்செயலை நான் செய்கிறேன் என்று
சொல்லப் பண்ணினாற்போலவும்,
வருந்தித் தம்மை இசை வித்து, சேர்தற்கு அவன் தான் விரும்பியவாறே -சம்ச்லேஷ உன்முகனான படியே ஸம்ஸ்லேஷித்து
சேர்த்து- தலைக் கட்டினான்,’ என்கிறார்.-
ஆதலின், சீல குணத்தை அருளிச் செய்தவாறு காணல் தகும்.

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அனுபவ கர்ப்ப பர உபதேச ப்ரக்ரியையாலே -அவனை ஆஸ்ரயிப்பார்க்கு ஓரு குறை இல்லை என்கிறார் –
ஸ்ரீ புருஷோத்தமன் என்றது -பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் என்றதின் தாத்பர்யம் –
பலத்தோடு என்றது பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே-என்றதின் தாத்பர்யம் –
பலத்தோடு வ்யாப்தமாய் அல்லது இராது -என்கிறது அளவியன்ற -என்றதின் தாத்பர்யம்
அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகன்ற தம்மை உண்டாய் உலகு ஏழ் முன்னமே என்கிற பாட்டில்
உம்மை ஒழிய தரியோம் -என்று பொருந்த விட்டுக் கொள்ளுகையைப் பற்ற அருளிச் செய்கிறார்
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் என்றதை பற்ற ஸீலவான் -என்றது
ஸ்வரூபம் என்றது ப்ரக்ருதி ஸம்ஸ்ருஷ்டராய் இருக்கிற தம்முடைய ஹேயதையை
தண்ணீர் பந்தல் என்றபோதே வைத்தவன் தார்மிகன் என்று சித்திக்கும் இறே-அப்படி இருக்கவும் தார்மிகன் என்றது
அதிக தர்மதிஷ்டன்-என்றபடி இறே
ஊருணி -ஊராக வினியிகம் கொள்ளும் தாக்கம் -இதுக்கு பிரதி கோடித்வேந-வாசத்தடம் -மரகத மணித்தடம் –
அடிபடுகை -சாடு-ப்ரஹதமாஹை -திருவடிகள் பட்டுக் கிடக்கிறது -என்றுமாம் –
சார்ந்த இரு வல்வினை -இத்யாதியைப் பற்ற ஸம்ஸ்லேஷித்துத் தலைக் கட்டினான் –
வீடு நிறுத்துவான் என்கையாலே ஸம்ஸ்லேஷித்த படி –

——————————–

முதல் பத்து -ஆறாம்-திருவாய்மொழி-பரிவதில் ஈசனை’-பிரவேசம்-

முதல் திருவாய்மொழியிலே, அவன் -சர்வ ஸ்மாத் பரனாய் -எல்லாரினும் அறப் பெரியவனாய் இருக்கிறபடியை அனுபவித்தார்;
இரண்டாந் திருவாய்மொழியிலே, ‘இப்படிப் பரனானவனை பஜியுங்கோள் வழிபடுமின்,’ என்றார்,
மூன்றாந்திருவாய்மொழியிலே, அப் பஜனத்துக்கு -அவ்வழிபாட்டிற்கு உறுப்புகளாக அவனுடைய எளிமையையும்,
நான்காந் திருவாய்மொழியிலே, அவனுடைய -அபராத சஹத்வத்தையும் பொறை யுடைமைக் குணத்தையும்,
ஐந்தாந்திருவாய் மொழியிலே, -அதற்கு உறுப்பாக -அவனுடைய சீல குணத்தையும் அருளிச்செய்தார்;
‘இவை எல்லாம் உண்டாயினும், -பரிமாற்றத்தில் அருமை இருக்குமாகில் பசை இல்லை அன்றே?’ என்ன,
‘அது வேண்டா; ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத்தக்கவன்’ என்கிறார் இத் திருவாய்மொழியில்.

‘யாங்ஙனம்?’ எனின்,
ஷூத்ரரான – மிகச் சிறியோர்களான இம் மக்களாலே -ஷூத்ர உபகரணங்களை- மிகச் சிறிய பொருள்களைக் கொண்டு
ஸ்ரீ சர்வேஸ்வரனான நம்மை அடைந்து தலைக் கட்டப் போகாமையாலே, கீழ் திருவாய்மொழியிலே, ‘தாழ்ந்தவன்’ என்று அகன்ற
இவரைப் பொருந்த விட்டுக் கொண்டோம்; ‘பெருந்த விட்டுக் கொண்டது தான் ஒரு பரிமாற்றத்துக்கு அன்றோ?
அதற்கு ஒரு பிரயோஜனம் கண்டோம் இல்லையே!’ என்று இருப்பான் ஒருவன் இறைவன்.
இனி, ‘சம்சாரியான இவனாலே நேர்கொடு நேர் ஆஸ்ரயித்து – அடைந்து தலைக்கட்ட ஒண்ணாதபடி, இறைவன் –
அவாப்த ஸமஸ்த காமனாய- ஒன்றிலும் விருப்பம் இல்லாதவனாய் இருக்கையாலும்,
இவன் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாதபடி பரிபூர்ணனாய் இருக்கையாலும்
இவ்விரண்டற்கும் காரணமாகத் ஸ்ரீ திருமகள் கேள்வனாய் -ஸ்ரீயப்பதியாய் இருக்கையாலும்
இவன் அவ்விறைவனை ஆஸ்ரயித்து – அடைந்து ஆராதனை புரிதல் முடியாதே?’ எனின்,
அங்ஙனம் அன்று;
இவன் இடுவதற்கு மேற்படத் தனக்கு வேறு ஒன்று தேட வேண்டாதபடி எல்லாம் கைப் புகுந்திருப்பான் ஒருவன் ஆகையாலும்,
இவன் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாதபடி பரிபூர்ணனா யிருக்கையாலே இவன் பக்கல் பெற்றது கொண்டு
முகங்காட்டுகைக்கு அதுவே காரணமாய் இருக்கையாலும்,
ஸ்ரீ திருமகள் கேள்வனாகையாலே ஸூசீலனாய் இருக்கையாலும்,
இப்படிகள் அனைத்தும் ஆஸ்ரயணீயத்துக்கு- அடைவதற்கு உறுப்புகளேயாகும் என்கிறார்.

ஆக, இவன், தன் ஸ்வரூப லாபத்திற்கு உறுப்பாக-கிஞ்சித்க்கரிக்கும் – தொண்டினைச் செய்வான்;
இதனை இறைவன் தன் பேறாக நினைத்திருப்பான் என்றபடி.
ஆதலால், மற்றைத் தெய்வங்களை அடைதல் போன்று, பகவானை அடைதல் -ஸமாச்ரயணம் -அருமைப் பட்டு இராது என்கிறார் என்றபடி.
மேலும், ஸ்ரீ பகவானை அடைந்த அளவில் விரோதிகள் அடங்கலும் நசிக்கும்: பகவானை அடைதல்-கிலேச – துக்க ரூபமாய் இராது, –
போக ரூபமாய் -இன்ப மயமாய் இருக்கும்;
வருந்தி ஒன்றும் தேட வேண்டாதபடி பெற்றது உபகரணமாக இருக்கும்;
பகவானைப் பற்றுதல் ஆகையாலே-ப்ரத்யவாய பிரசங்கம் – வணங்கும் முறைகளில் சிறிது பிறழினும் கேடு வருவதற்கு இடன் இல்லை;
திரவிய நியதி இல்லை, கால நியதி இல்லை, அதிகாரி நியதி இல்லை;
இப்படி இருக்கையாலே இறைவனை ஆஸ்ரயணீயம் ஸூகரம் அடைதல் எளிது; ஆதலால்,-ஆஸ்ரயியுங்கோள் – ‘அடைமின்’ என்கிறார்.

உன்னுடைய திருவடிகளைக் குறித்து ஒரு காலத்தில் ஒருவன் எவ்விதத்திலாயினும் ஒரு முறை அஞ்சலி செய்ய
முயற்சி செய்வானேயாயின், செய்யப்படும் அவ்வஞ்சலியினால், அப்பொழுதே பாவங்கள் அனைத்தும் அடியோடே ஓடிவிடுகின்றன;
மேலும், அவ்வஞ்சலியானது, புண்ணியங்களைக் கொடுத்துப் போஷித்துத் தானும் அழியாமல் இருக்கின்றது,’ என்பது ஸ்தோத்திர ரத்தினம்.
த்வத் அங்கரி முத்திச்ச்ய –
உன்னுடைய திருவடிகள்’ என்றதனால், மற்றைத் தேவர்களைக் காட்டிலும்
இறைவனுக்கு உண்டான வ்யாவ்ருத்தியும் வேற்றுமையும்,
இறைவனிடத்தில் அடியார்கள் இழியுந்துறை திருவடிகள் என்னுமிடமும் அருளிச் செய்தாராவார்.
மேலும், கதா அபி ‘ஒரு காலத்தில்’ என்றதனால்,
இன்ன காலத்தில் இன்ன காரியங்களைச் செய்யவேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும்,
கேநசித்
‘ஒருவன்’ என்றதனால், இந்தத் தகுதிகளையுடையவனே இக்காரியத்தை மேற்கோடல் வேண்டும்
என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும்,
யதா ததா‘
எவ்விதத்தாலாயினும்’ என்றதனால், இன்ன முறையில் இக்காரியத்தைச் செய்தல் வேண்டும் என்று
விதிக்கிற விதியினின்று வேறு படுத்தியும்,
ஸக்ருத் ‘ஒரு முறை’ என்றதனால்,
பல வருடங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கிற தீர்க்க சத்திரம் முதலான யாகங்களினின்று வேறுபடுத்தியும்,
‘அஞ்சலி’என்றதனால்,
மிக்க பொருட் செலவினாலும் சரீரத்தின் பிரயாசை முதலியவற்றாலும் செய்யப்படுகின்ற
அஸ்வமேதயாகம் முதலியவற்றினின்று வேறுபடுத்தியும்,
அசுபானி ‘பாவங்கள்’ என்ற பன்மையால்,
ஒரு தர்மம் ஒரு பாவத்தையே போக்கும் என்று கூறப்படுகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும்,
அசேஷத ‘அடியோடே’ என்றதனால்,
வாசனை கிடக்கப் போக்கும் கர்மங்களினின்று வேறுபடுத்தியும்,
சுபானி ‘புண்ணியங்களை’ என்ற பன்மையால்
ஒரு தர்மம் ஒரு பலனையே கொடுக்கும் என்று கூறப்படுகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும்,
நஜாது ஹீயதே ‘அழியாமலிருக்கின்றது’என்றதனால்,
பலன்களைக் கொடுத்துத் தாம் அழிந்து போகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும்
அருளிச் செய்திருத்தல் நோக்கல் தகும்.

மற்றும்,முஷ்ணாதி ‘ஓடிவிடுகின்றன’ என்றதனால்,
சும் எனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே’ என்கிறபடியே,
பாவங்கள், இவன் தான் தொடர்ந்து பிடிப்பான் என்று நினைத்து இவனை அறியாமலே போய் விடும் என்பதனையும்,
புஷ்ணாதி ‘கொடுத்துப் போஷிக்கிறது’ என்றதனால்,
தீவினைகளைப் போக்குதலே யன்றி,
அது போன இடம் எங்கும் நன்மையினையே நிறையச்செய்யும் என்பதனையும் தெரிவித்தவராவர்-

பத்ரம் புஷ்பம் இத்யாதி -பச்சிலை மலர் பழம் நீர் ஆகிய இவற்றை எவன் ஒருவன் அன்போடு கொடுக்கின்றானோ,
தூய மனத்தினனான அவனால் பத்தியோடு கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்கிறேன்,’ என்பது ஸ்ரீ கீதை.
இதனால், பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்;
அஸ்னாமி-
இப்படித் தரப்பட்டவற்றை மனோரத பதத்துக்கும் அவ்வருகானவை கைப்புகுந்தாற்போன்று நினைக்கிறான்;
அல்லது, அவன் அன்பினால் கலங்கித் தருமாறு போன்று, இறைவனும் கலங்கி அடைவு கெட
விநியோகம் கொள்ளுகிறான் என்பன விளங்குதல் காண்க.

அந்யாத் பூர்ணாதபாம் கும்பாத் இத்யாதி
ஸ்ரீ கிருஷ்ணனானவன், பூர்ணகும்பத்தைக்காட்டிலும் வேறு ஒன்றையும் விரும்பான்;
அவனுடைய திருவடிகளைக் கழுவுதலே சாலும்; அதனைத் தவிர வேறு ஒன்றனையும் விரும்பான்,’
என்பது ஸ்ரீ மகாபாரதத்தில் ஸ்ரீ சஞ்சயன் கூற்று.
நச்சேதி-
இதனால், ஒருவன் ஸ்ரீ இறைவனை ஆராதனை புரிதல் வேண்டும் என்று முயன்ற அளவிலேயே
அவனுக்கு வயிறு நிறையும் என்பது பெறுதும்.
ஏகாந்தகத புத்திபி
ஸ்ரீ இறைவனாகிய தன்னை அன்றி வேறு ஒரு பலனையும் விரும்பாத பெரியோர்களால்
தூய்மையான மனத்துடன் செய்யப்படும் காரியங்கள் எல்லாவற்றையும்,
சிரஸா பிரதி க்ருஹ்ணாதி-
ஸ்ரீ தேவ தேவனாகிய ஸ்ரீ பகவான் தானே தலையால் ஏற்றுக் கொள்ளுகிறான்,’ என்பது ஸ்ரீ மோக்ஷ தர்மம்.

இதனால், தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது என்பதும்,
அவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் யா க்ரியாஸ் ஸம்ப்ரயுக்தாஸ் ஸ்யு -அபிமத விஷயத்தின் பரிமாற்றம் போலே
உத்தேஸ்யமாய்த் தோற்றும் என்பதும்,
அவற்றில் ஒன்றையும் விடான் என்பதும்,
எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன்,
இவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான் என்பதும்,
ஸ்வயம் -செவ்வக் கிடப்பு உண்டாயினும் மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று,
அவ் வேலைகளைத் தானே செய்வான் என்பதும் போதருதல் காண்க.

இவற்றால், ஸ்ரீ இறைவனை அடைதல் எளிது என்பது போதரும்.
ஆக, இப்படிகளாலே, ஸ்ரீ இறைவன் எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதனை அருளிச் செய்கிறார் இத்திருவாய்மொழியில்.

கீழில் அஞ்சு திருவாய் மொழிகளிலும் ப்ரதிபாதிக்கப்பட்ட குணங்களை அனுபாஷியா நின்று கொண்டு
இதில் ப்ரதிபாத்யம் ஸ்வ ஆராததை என்னுமத்தை சங்கா பரிஹார முகேன அருளிச் செய்கிறார் –
அயோக்கியன் என்று அகன்ற இவரைப் பொருந்த விட்டுக் கொண்ட ஸுசீல்ய குணத்தை அனுசந்தித்து
எல்லாரும் ஆஸ்ரயித்துப் பரிசர்யை பண்ணுகைக்கு இறே என்றபடி-
வள வேழு உலகின் முதலாய வானோர் இறையை -5-1-அவாப்த ஸமஸ்த காம்தவம் யுக்தம்
ஏத்தி வணங்கினால் -5-2-பரிபூர்ணத்வம்
மதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வன் -6-2-என்றதிலே அவாப்த ஸமஸ்த காமத்வமும் பூர்த்தியும் சொல்லுகிறது –
அதாவது நிரபேஷத்வமும்-அபேஷா ஸத்பாவே அபி பூர்ணன் -என்றபடி
திருமகளார் தனிக்கேள்வன் -6-9-என்றதை பற்ற ஸ்ரீ யபதியாய்-என்றது
புகை பூவே -என்றதை பற்ற அருமைப்பட்டு இராது என்றது –
கடிவார் தீய வினைகள் நொடியாருமளவைக் கண் -6-10-என்றும் -வல்வினை மாள்வித்து -6-8-என்பதையும் பற்ற
விரோதிகள் அடங்கலும் நசிக்கும் என்றது –
உள் கலந்தார்க்கு ஓர் அமுது-6-5 –அமுதிலும் ஆற்ற இனியன் -6-6-என்றதை பற்ற போக ரூபமாய் இருக்கும்
பெற்றது உபகரணமாய் இருக்கும் என்றது புரிவதுவும் புகை பூவே என்றதை பற்ற -6-1-
முதல் இரண்டு பாட்டாலே த்ரவ்ய அதிகார நியமம் இல்லை என்றும்
மூன்றாம் பாட்டால் கால நியதி இல்லை என்றும் சொல்லுகிறது-

————————–

முதல் பத்து -ஏழாம் திருவாய்மொழி–பிறவித்துயர் அற-பிரவேசம்-

கீழில் திருவாய்மொழியில் ஸ்வாராதன் என்றார் –
அதில் சொன்ன ஆஸ்ரயணம் தான் போக ரூபமாய் இருக்கும்,’ என்கிறார் இத் திருவாய்மொழியில்

ஸ்ரீ பகவத் ஸமாச்ரயணம் ஆகிறது தான்
இதுக்கு இட்டுப் பிறவாத ஸ்ரீ சர்வேஸ்வரனும் ஆசைப்படும் படி போக ரூபமாய் இருப்பது ஓன்று இறே .
ஸ்ரீ யபதியாய்- திருமகள் கேள்வனாய், -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -எல்லா நற்குணங்கட்கும் கொள்கலனாய்,
சகல ஆத்துமாக்களுக்கும் சேஷியாய்,-நிரதிசய ஆனந்த யுக்தனாய் – எல்லை இல்லாத ஆனந்தத்தையுடையவனாய் –
ஏஷக்யேவாநந்தயாதி ( ஸ்ரீ இறைவன் தன்னைக் கிட்டினாரையுந் தான் சந்தோஷிப்பிக்கிறான்,’ )என்கிறபடியே,
தன்னைக் கிட்டினாரையும் ஆனந்திப்பிக்கக் கடவனாய் இருப்பவன் ஸ்ரீ இறைவன் ஆதலின்,
அவனுடைய ஆராதனையானது இன்ப மயமாக இருக்கும் என்கிறார்.
‘நன்று; ஸ்ரீ இறைவனிடத்தில் அனுபவிக்கும் அனுபவம் அன்றோ இன்ப மயமாய் இருக்கும்?
அவனை ஆராதிக்கும் ஆராதனையும் இன்ப மயமாய் இருக்குமோ?’ எனின்,
மோக்ஷ தசையில் அனுபவம் இனிது ஆகிறதும் அவனைப் பற்றி வருகையாலே யன்றோ?
அப்படியே, ஆராதனையும் அவனைப் பற்றி வருகையாலே போக ரூபமாய் இருக்கும்
இதனால் தான் இறைவனுடைய ஆராதனையானது இதற்கு இட்டுப் பிறவாத ஸ்ரீ சர்வேஸ்வரனும்
ஆசைப்படும்படி போக ரூபமாய் இருப்பது ஒன்று இறே -என்கிறார்

அஸ்ரத்ததாந புருஷ -விசுவாச பூர்வக த்வரா ரஹிதரானவர்கள் –
அஸ்ய தர்மஸ்ய -என்றான் இறே தனக்கும் இனிதாய் இருக்கையாலே
பரந்தப -விரோதி வர்க்கத்தை உத்தர வல்லாய் நீ அன்றோ –
அப்ராப்யமாம் நிவர்த்ததந்தே–செய்த குற்றங்கள் அத்தனையும் பொறுத்து அவர்களை நல் வழியிற்
செலுத்துகின்ற என்னை யடையாது, தாமதாமுடைய விநாசத்தை சூழ்ப்பதான
சம்சாரத்தை விரும்பி அவ்வழியே போகின்றார்கள்,’ இது தான் இருந்தபடி பாராய் என்கிறான்
ப்ரத்யஷா வகம் அஹம்-ந மாம்ச சஷூர் அபி வீக்ஷதே தம் – என்கிறானான் ப்ரத்யக்ஷ பூதனானவன்
தர்ம்யம் நம்மைக் காண்கை ஒரு தலையானால் அதர்ம்யம் ஆனாலும் மேல் விழ வேணும் –
இது அங்கன் அன்றிக்கே தர்மாதன பேதமுமாயும் இருக்கும்
ஸூ ஸூகம் கர்த்தும் – ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே தானும் போகரூபமாய் இருக்கும் –
அவ்யயம் -கோலின பலன்களைக் கொடுக்கச் செய்தேயும் ஒன்றும் செய்யாதோமாய் நம் நெஞ்சிலே கிடக்கையாலே
தான் முதல் அழியாதே கிடக்கும் – –

‘இந்த ஞானமானது எல்லா வித்தைகளுக்குள்ளும் உயர்ந்தது;
இரகஸ்யங்களுக்கு எல்லாம் தலையாயது; உத்தமமானது; பரிசுத்தமானது;
நேராக என்னைக் காட்ட வல்லது; மோக்ஷத்திற்குச் சாதனமானது; செய்வதற்கு இனிமையாய் இருப்பது;
என்றும் அழிவற்றது,’ என்றும் ஸ்ரீ பகவான் தானும் அருளிச் செய்தான்.

ஆக, இப்படி சாதனா சமயமே தொடங்கி, மோக்ஷத்தை அடைதல் ஈறாக,
அவன் சம்பந்தமான காரியங்கள் அனைத்தும் இன்ப மயமாகவே இருக்கவும்,
அவனை விட்டு ஸூத்ர பிரயோஜனத்தை – மிகச் சிறிய பயனைக்கொண்டு அகலுவதே!’ என்று
கேவலரை நிந்தித்துக் கொண்டு,
இதனை ஒழியில்தாம் உளர் ஆகாதபடி தமக்கு இனிதாய் இருக்கையாலே
இவ் வாஸ்ரயணத்தினுடைய இனிமையைச் சொல்லித் தலைக் கட்டுகிறார்-

யுக்த அனுவாத பூர்வகமாக -தூய அமுதை பருகிப் பருகி என்ற பதத்தைக் கடாக்ஷித்துக் கொண்டு சங்கதி –
ஸ்ரீ வைஷ்ணவ போக்ய லிப்சயா-தாமும் இதில் போக்யத்தை அறிய வேணும் என்கிற வாஞ்சையாலேயே
திருப் பவளத்திலே வைத்து அருளிற்று –
ஸ்ரீ யபதியாய் -சமஸ்த கல்யாண குணாத்மகனாய் -சகல ஆத்மாக்களுக்கு சேஷியாய் -நிரதிசய ஆனந்த யுக்தனாய் –
விசேஷண சதுஷ்ட்யமும்–பின்னை நெடும் பணைத் தோள் -நிகரில் அவன் புகழ் -உய்யக்கொள்கின்ற நாதன் –
எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து -என்கிற பாசுரங்களைப் பற்ற
ஆஸ்ரயணம் போக ரூபம் என்னுமதுக்கு சப்தம் தூய அமுது —
பிரான் பெரு நிலம் கீண்டவன் -அவனை விட்டு ஷூத்ர பிரயோஜனங்களை -என்றது பிறவித் துயர் அற -என்றது
பின்னை யான் ஓட்டுவனோ என்றதை பற்றி தாம் உளராகாத படி இத்யாதி –

———————–

முதல் பத்து -எட்டாந்திருவாய்மொழி – ‘ஓடும் புள்’பிரவேசம்-

கீழில் திருவாய்மொழியில் நிரதிசய போக்யன் என்றார்;
அவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்கிறார் இத் திருவாய்மொழியில்.
‘பத்துடை அடியவரில்’ சௌலப்யமும், ‘வளவேழ் உலகில்’ சௌசீல்யமும் அருளிச் செய்தார்;
இத் திருவாய்மொழியில் ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்தார்;
இவற்றின் வேறுபாடு என்னை?’ எனின்,
சௌலப்யமாவது, ஸ்ரீ வைகுண்டத்தைக் கலவிருக்கையாக வுடையவன், அங்கு நின்றும் சம்சாரி சேதனர்
நின்ற இடத்தே வந்து அவதரித்து எளியனாகை.
சௌசீல்யமாவது இப்படித் தாழ விட்டால், ‘சிறியார் அளவிலே நம்மைத் தாழவிட்டோமே!’ என்று
தன் திரு வுள்ளத்திலும் இன்றிக்கே இருக்கை.
ஆர்ஜவமாவது, இப்படிப் பொருந்தினால், நினைவும் சொல்லும் செயலும் ஒரு படிப்பட்டு இராமல், பல வகைப்பட்ட சேதநரோடு
தான் பரிமாறும் இடத்தில், அவர்கள் போன வழி தனக்கும் வழியாம்படி தான் அவர்களுக்குச் செவ்வியனாய்ப் பரிமாறுகை.

‘சௌசீல்யம்-ஆர்ஜவம்’ என்னும் இரண்டும் ஒன்று போலக் காணப் படினும், வேறு வேறு என்பதே
நம் பெரியோர்களுடைய திருவுள்ளம்.
ஸ்ரீ ஆளவந்தார் ‘குணவான்’ என்று சௌசீல்ய குணத்தை முன்னர் அருளிச் செய்து,
பின்னர் ‘ருஜூ’ என்று ஆர்ஜவ குணத்தைப் பிரித்து வேறாக அருளிச் செய்தார்.

இத் திருவாய்மொழி சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்யம் கூறுகிறது என்பாரும்
ஈஸ்வரத்வ லக்ஷணம் கூறுகிறது என்பாரும் –
கீழ் ‘பாடி இளைப்பிலம்’ என்றார், அப்படியே பாடி அனுபவிக்கின்றார் என்பாரும் உளர்.
‘ஆயின்’ இறைவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்லுகிறது என்பதுவே ஸ்ரீ பட்டருடைய திருவுள்ளம்.
‘யாங்ஙனம்?’ எனின், பத்தர் முத்தர் நித்தியர் என்னும் மூவகைச் சேதநரோடும் இறைவனாகிய தான் பரிமாறும் இடத்தில்,
அவர்களைத் தன் நினைவின் வண்ணம் வருமாறு செய்தல் இன்றி, நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர் ஏற்றுவாரைப் போன்று,
தன்னை அவர்களுக்கு ஈடாக அமைத்துப் பரிமாறும் என்னும் அம் முறையிலே அவனுடைய ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்கிறார்.

இத் திருவாய்மொழியில் வருகின்ற ‘ஓடும் புள் ஏறி,’ ‘சூடும் தண்துழாய்’,‘நீர் புரை வண்ணன்’ என்ற திருப்பாசுரங்களை நோக்கி
‘ஆர்ஜவ குணத்தைச் சொல்லுகிறார் இத் திருவாய்மொழியில்’ என்கிறார்.
இத் திருவாய்மொழியில் வருகின்ற ‘கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு’ என்பது முதலான
திருப் பாசுரங்களை நோக்கிப்‘பரத்துவத்தைக் கூறுகிறது’ என்பர்.
‘ஓடும் புள் ஏறி’, ‘சங்கு சக்கரம் அங்கையிற் கொண்டான்’ என்பன முதலான திருப் பாசுரங்களை நோக்கி
ஈஸ்வரத்வ லக்ஷணம் கூறுகிறது, என்பர்.
‘அம்மான் சீர் கற்பன் வைகலே என்ற திருப் பாசுரத்தை நோக்கிப் ‘பாடி அனுபவிக்கின்றார்’என்பர்.
ஸ்ரீ பட்டர் ‘நீர் புரை வண்ணன்’ என்பது முதலான திருப் பாசுரங்களைக் கடாக்ஷித்து,
ஆர்ஜவ குணத்தைக் கூறுகிறது’ என்று அருளிச் செய்வார்.

கீழில் திருவாய் மொழியில் நிரதிசய போக்யன் -என்றார் –
இப்படி போக்யனான தன்னை அனுபவிக்கும் போது போக்தாக்கள் அளவில் தன்னை அமைத்து
அனுபவிப்பிக்கும் என்று இதற்கு சங்கதி –
புள்ளேறி ஓடும் -தண் துழாய் சூடும் -நீர் புரை வண்ணன் இத்யாதி பற்ற ஆர்ஜவ குணம்
அருளிச் செய்கிறார் என்று அருளிச் செய்கிறார் –
ஸுலப்யம் ஸுசீல்யம் ஆர்ஜவம் மூன்றுக்கும் பேதம் அருளிச் செய்கிறார் –
ஸுசீலமாவது மஹதோ மந்தைஸ் ஸஹ நீரந்தரேண சம்ச்லேஷம் -அது தன் நெஞ்சிலும் இன்றிக்கே இருக்கை ஸுசீல்யம்
அதவா-மந்தர்களோடே புரையற கலக்கை சீலம் -அது ஸ்வயம் பிரயோஜனமாய் இருக்கை ஸுசீல்யம் -என்னுதல்
ஆர்ஜவமாவது கரண த்ரயத்தாலும் செவ்வையனாகையாய் இருக்கை யாகிலும் ஆஸ்ரிதருடைய செவ்வைக் கேடே
தனக்கு செவ்வையாய் இருக்கை என்று ஸுசீல்யத்தில் இதுக்கு உண்டான வாசி –

வசீ -வதான்யோ-குணவான் -ருஜு -ம்ருதிர்-தயாளுர் -மதுர -ஸ்திர -சம -க்ருதீ-
க்ருதஜ்ஜஸ் த்வமஸி ஸ்வ பாவத-ஸமஸ்த கல்யாண குண அம்ருதோ ததி
வசீ -சர்வத்தையும் ஸ்வ வசமாக யுடையவன் -ஆஸ்ரித பரதந்த்ரன் என்றுமாம் –
வதான்யோ-அர்த்திகளைக் கொண்டாடிக் கொடுக்குமவன் –
குணவான் -ஸுசீல்ய பரம்
ருஜு -ஆர்ஜவ குண யுக்தன்
ம்ருதிர்-ஆஸ்ரித விஸ்லேஷம் சஹியாத மார்த்வம்
தயாளுர் -பர துக்க அஸஹிஷ்ணுத்வம்
மதுர -சர்வ ஆகாயத்திலும் போக்யன்
ஸ்திர -ஆஸ்ரிதர்கள் எத்தை சொல்லினும் நத்யஜேயம் என்னுமவன்
சம -சமோஹம் சர்வ பூதேஷு -அனுகூல பிரதிகூல விபாகமற ஆஸ்ரயித்வே சர்வ சமன்
க்ருதீ-க்ருதக்ருத்யன்
க்ருதஜ்ஜஸ்-ஆஸ்ரிதருடைய அபராதங்களைக் காணாக்கண் இட்டு நன்மையைப் பார்க்குமவன்
த்வமஸி -இவற்றில் ஒன்றும் இல்லை யாகிலும் ஸ்வரூபத்தினுடைய போக்யதைச் சொல்லுகிறது
ஸ்வ பாவத-இது தான் உபாதை அடியாக இல்லாமல் ஸ்வ பாவிகம்
ஸமஸ்த கல்யாண குண அம்ருதோ ததி-இங்கனம் பிரித்துச் சொல்லுகிறது என் –
ஐஸ்வர்யத்தை என்றது -பரத்வத்தை -இது முதல் பாட்டைப் பற்ற –
அன்றிக்கே-கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்றதை பற்றவாதல் –
சங்கு சக்கரம் -ஓடும் புள்ளேறி-இத்யாதியைப் பற்ற லக்ஷணம் -ஈஸ்வரத்வ வியஞ்சக லக்ஷணம் –
பாடி அனுபவிக்கிறார் என்றது -அம்மான் சீர் கற்பன்-என்றதை பற்ற
நிகமத்திலே இவை பத்துப் பாட்டும் நீர் புரை வண்ணன் சீர் நேர்தல்-நீர் போலே ருஜுவான ஸ்வ பாவம்-
ஆர்ஜவ பிரகார விசேஷங்களை பிரதானமாக சொல்லுகிறது என்று
திரு வாயோலை இடுகிறார் -என்று கடாக்ஷித்து ஸ்ரீ பட்டர் நிர்வாகம்
மநோ வாக் காயம் ஏகைக ரூபியாம் ஆர்ஜவம் -ஸ்ரீ தூப்பூல் பிள்ளை –

——————————

முதல் பத்து -ஒன்பதாந்திருவாய்மொழி – ‘இவையும் அவையும்’-பிரவேசம்

கீழ் திருவாய்மொழியில் ஸ்ரீ இறைவனுடைய ஆர்ஜவ குணத்தை அநுசந்தானம் செய்தார்;
இப்படி அநுசந்தித்தார் திறத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரன் இருக்கும்படியை அருளிச் செய்கிறார் இத் திருவாய்மொழியில்-
ஸ்ரீ சர்வேஸ்வரனாய் ஸ்ரீ திருமகள் கேள்வனாய்ப் பரம ரசிகனாய் இருக்கிற இறைவன்,
ஸ்ரீ ஆழ்வார் பத்தியிலே துவக்குண்டு இவரோடே கலந்து -ஏக ரசனாய் -இனிமையில் ஒன்று ஆனான்;
ஸ்ரீ ஆழ்வாரானவர் மேற்கூறிய ஆர்ஜவ குண அநுசந்தானத்தால் இறைவன் பக்கல் பெரிய விடாயை உடையவர் ஆனார்;
ஸ்ரீ இறைவன், ‘இது நமக்கு நல்ல வாய்ப்பாய் இருந்தது’ என்று பார்த்து,
ஸ்ரீ அருச்சுனன்,‘விபூதி ஸ்ரவணத்தாலே விபூதிமான் ஆனவனைக் காண வேண்டும்’ என்று விரும்ப,
‘அதற்கு உறுப்பாக-திவ்யம் ததாமி தே சஷூ – உனக்கு ஞானக் கண்களைக் கொடுக்கிறேன்’ என்கிறபடியே,
திவ்வியமான கண்களைக் கொடுத்து, உலகமே உருவமாக இருக்கும் தனது தன்மையைக் காட்டியது போன்று,
இவ் வாழ்வார்க்கும் தன்னை அனுபவிக்கைக்கு ஈடான விடாயைப் பிறப்பித்துப்
ஸ்ரீ பரம பதத்தில் உள்ளாரோடு பரிமாறுவது போன்று பரிமாறக் கோலித் தன்னை அனுபவிப்பிக்கிறான்.
அதாவது, ஸ்ரீ பிராட்டிமாரோடு பரிமாறுவது, தேவியர் என்னும் முறையாலே;
ஸ்ரீ திருவடியோடு பரிமாறுவது, வாகனம் என்னும் முறையாலே;
ஸ்ரீ திருவனந்தாழ்வானோடு பரிமாறுவது, படுக்கை என்னும் முறையாலே.
இப்படி அவர்களோடு ஒவ்வொரு முறையாலே பரிமாறும் பரிமாற்றங்கள் எல்லாம் இவர் ஒருவரோடு பரிமாறுகிறானாய்,
அது தன்னையும் குளப்படியிலே கடலை மடுத்தாற்போன்று அன்றி,(குளப்படி-மாடு முதலியவற்றின் குளம்பு படிந்த சுவடு)-
(‘என்னுடைச் சூழலுளான்’, ‘என்னருகலிலான்’ என்பன போன்று அருளிச் செய்வதால் )பொறுக்கப் பொறுக்கப் பரிமாற,
இவரும் அவனை எல்லா இந்திரியங்களாலும் எல்லா உறுப்புகளாலும் தாம் விரும்பியவாறே நுகர்ந்து,
(‘என் நெஞ்சினுளான்’, ‘என் கண்ணிலுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா இந்திரியங்களாலும்’ என்கிறார்,
‘ஒக்கலையான்’, ‘நெற்றியுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா உறுப்புகளாலும்’ என்கிறார்.)
அந் நுகர்ச்சியால் உண்டான பிரீதியாலே அவன் குணங்களைப் பேசி அனுபவிக்கிறார்.

இத் திருப் பதிகத்தில் வருகின்ற முதல் பாசுரத்தினை நோக்கி,
ஸ்ரீ சர்வேஸ்வரனாய்த் திருமகள் கேள்வனாய்ப் பரம ரசிகனாய்’ என்கிறார்.
‘தனி முதல் எம்மான்,’ ‘என் அமுதம் சுவையன்,’ ‘திருவின் மணாளன்’என்பவற்றை நோக்குக.

வ்ருத்த அனுவாத பூர்வகமாக சங்கதி அருளிச் செய்கிறார் -சாத்ம்ய போகப் பிரதத்வம் அருளிச் செய்கிறார் என்றபடி –
இருதலைக் காமம் உண்டானால் போகம் இனிதாய் இருக்கும் என்று திரு உள்ளம் பற்றி
ஸ்ரீ ஆழ்வார் இடத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரன் இடத்தில் ஸ்ரீ ஆழ்வாருக்கும் உண்டான
அபிநிவேசத்தை அருளிச் செய்கிறார்
ஸ்ரீ திருவின் மணாளன் -ஸ்ரீ சர்வேஸ்வரனாய் / சுவையன் -பரம ரசிகன் /
துவக்குண்டு -ஈடுபட்டு -அன்யோன்ய பிராவண்யம்/ சர்வாங்க சம்ச்லேஷத்தை அடியிலே பண்ணாமைக்கு
திருஷ்டாந்தம் காட்டி அருளுகிறார் -ஸ்ரீ அர்ஜுனன் இத்யாதியால் –
விடாயைப் பிறப்பித்து -என்றது பக்தி ரூபா பன்னம் ஞானம் -தரிசன சாமானாகாரம் க்ருத்வா -தத் அனுகுண த்வாராதிசயம் –
அமலங்களாக விழிக்கும்
ஸ்ரீ பிராட்டிமாரோடு-என்றது ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே -என் நெஞ்சில் உளானே /
தோளிணையான் -திருவடி ஓக்க /
சூழல் உளான் என்று தொடங்கி-உச்சி உளானே -என்றது முடிவாயத் தலைக் கட்டுகையாலே
பொறுக்கப் பொறுக்க என்கிறது -சாத்மிக்க சாத்மிக்க -என்றபடி
சர்வ இந்த்ரியத்தாலும் என்றது -நெஞ்சின் உளான் -நாவின் உளான் -கண்ணின் உளான் -இத்யாதியைப் பற்ற
சர்வ காத்ரத்தாலும் -என்றது-ஓக்கலையான் -தோளிணையான் -உச்சி உளான் -நெற்றி உளான் இத்யாதியைப் பற்ற
அவனைப் பேசி என்றது அவனுடைய குணங்களை பேசி என்றபடி

—————————

முதல் பத்து -பத்தாந்திருவாய்மொழி – ‘பொருமா நீள்’பிரவேசம்

கீழ் திருவாய்மொழியில்,-சர்வாங்க சம்ஸ்லேஷத்தை அனுசந்தித்து –
தமது எல்லா அவயவங்களிலும் ஸ்ரீ இறைவன் சேர்ந்த சேர்க்கையை -நினைத்து -நிர்வ்ருதராகிறார் -இன்புறுகின்றார்
என்று கீழ் திருவாய்மொழிக்கும் இத் திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச் செய்வர் முன்புள்ள ஸ்ரீ பெரியோர்கள்.
இங்கு, சர்வாங்க சம்ஸ்லேஷத்தை அனுசந்தித்து – எல்லா உறுப்புகளிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை
அநுசந்தித்து ஸ்ரீ பட்டர் அருளிச் செய்வதோர் ஏற்றம் உண்டு. அதாவது,
கீழ் திருவாய்மொழியில் ‘உச்சியுள்ளே நிற்கும்’ என்று அன்றே அருளிச் செய்தார்?
பேற்றில் இனி, ‘இதற்கு இவ்வருகு ஏற்றமாகச் செய்து கொடுக்கலாவது ஒன்றும் இன்று;
இனி, இதனுடைய-அவிச்சேதத்தை – பிரிவின்மையைச்- செய்து கொடுக்கையே உள்ளது;
பேறு கனத்து இருந்தது இது வந்த வழி என்னை?’ என்று ஆராய்ந்தார்;
இப் பேற்றின் கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில் இல்லாது இருந்தது;
‘ஏன் இல்லையோ?’ எனின், இத்தலையில் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும்,
அத்வேஷம் -வெறுப்பின்மை-ஆபிமுக்யம் – எதிர் முகமாதல் என்னும் இவையே உள்ளனவாம்;
இவற்றைத் தாம் பெற்ற பேற்றிற்கு ஒரு சாதனமாகச் சொல்லப்போகா; ‘என்னை?’ எனில்,
இத் தலையில் பரம பத்தி அளவாகப் பிறந்தாலும் பேற்றின் கனத்துக்கு இதனை ஒரு சாதனமாகச் சொல்லுதற்கு இல்லையே;
என் போல!’ எனில், ஒருவன் ஓர் எலுமிச்சம் பழம் கொடுத்து இராச்சியத்தைப் பெற்றால் அதற்கு அது விலையாய் இராதே;
மற்றும், ஸ்ரீ சர்வேஸ்வரன் அடியாக வரும் பேற்றுக்கு இத் தலையால் ஒரு காரணத்தை நிரூபிப்பதற்கும் இல்லையே?
‘வரலாறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால்’ என்னும் படியன்றே இருப்பது?
மற்றும், இவனை முதலிலே படைக்கிற போது ‘இவன் தீய வழியைத் தப்பி நல்ல வழி போக வேண்டும்’ என்று –
உபகரணங்களை -உறுப்புகளைக் கொடுத்து விடுகையாலே,
இவன் தலையால் பிறந்த நன்மைக்கும் காரணம் அவனாக இருப்பான்;
இனி, புத்தி முதலான எல்லாப் பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆகையாலே,
அத்வேஷம் -வெறுப்பின்மை தொடக்கமாகப் பரிகணனை நடுவாக, பரம பத்தி முடிவாகப் பிறப்பிப்பான்
ஒருவனும் ஸ்ரீ இறைவனே யாவன்;
ஆதலால், ‘நித்திய ஸூரிகள் பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான்,
அவன்-விஷயீகாரம் – திருவருள் இருக்கும்படி என்?’ என்று,
கீழ் திருவாய்மொழியில்-உன்மஸ்தமாக- தலைமுடிவாகப் பிறந்த -சம்ஸ்லேஷ ரசத்தை -சேர்க்கையாலாய சுவையை –
அனுசந்தித்து -நினைத்து-நிர்வ்ருதராகிறார் – இன்புறுகிறார் என்பது.

கருமாணிக்கம் என் கண்ணுளதாகுமே-என்ற பதங்களை நிதானமாக விவஷித்துக் கீழ்த் திருவாய் மொழியோடு இதுக்கு சங்கதி –
அனுசந்தித்து -ஆராய்ந்து பார்த்து -நிர் வ்ருத்தராகிறார் –
கண்ணுளதாகும்-கண்டாயே நெஞ்சே -இத்யாதிகளை பற்ற நிர் வ்ருத்தராகிறார் –
பேற்றுக்கு சத்ருச சாதனம் இல்லை என்று அருளிச் செய்து பலத்தினுடைய அநந்ய சாத்தியத்தை அருளிச் செய்கிறார் –
வெறிதே அருள் செய்வர் –
புத்திர் ஞான சம்மோஹ -இத்யாதிகளை போலே புத்த்யாதிகள் எல்லாம் அவன் இட்ட வழக்கே –
ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு -என்றதை பற்ற ஸ்ரீ பட்டர் நிரூபணம்
சர்வாங்க சம்ஸ்லேஷ அனுசந்தானத்தாலே நிர் வ்ருத்தராகிறார் -முந்தைய ஸ்ரீ பூர்வர் நிர்வாகம்
நிர்ஹேதுகத்வ அனுசந்தானமும் நிர்வ்ருத்தி ஹேது என்பது ஸ்ரீ பட்டர் யோஜனை –

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –பத்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

May 28, 2019

இத் திருவாய்மொழியில் அருளிச் செய்கிற -அர்த்தத்தை -பொருள்களை எல்லாம்-திரள – தொகுத்து
அருளிச் செய்கிறார் இப் பாசுரத்தில்-
மஹா பலி, தன் வரவை நினையாதே இருக்க, அவன் பக்கலிலே இரப்பாளனாய்ச் சென்று
தன்னுடைமையைத் தனது ஆக்கியது போன்று,
நான் நினைவு இன்றிக்கே இருக்கத் தானே வந்து தன் வடிவழகை என் கண்ணுக்கு இலக்கு ஆக்கினான் என்று
அவன் தன்மையை அனுசந்தித்து – நினைந்து இனியர் ஆகிறார்.

இத்திருவாய் மொழியில் சொல்லுகிற அர்த்தம் -நிர்ஹேதுக விஷயீ காரம் –
ஸங்க்ரஹமாக திரள அருளிச் செய்யும் படியைக் காட்டுகிறார் –
அக்கருமாணிக்கம் என்கையாலே வடிவு அழகை -என்றபடி

பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
திரு மா நீள் கழல் ஏழுலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கருமாணிக்கம் என் கண்ணுள தாகுமே–1-10-1-

———————

பரம பத்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க முகங்காட்டுவான்’ என்கிறார்.

காதன்மையால் எண்ணிலும் வரும்-என்கிற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே–1-10-2-

———————

‘இறைவன் ஸ்வரூபம் இருந்தபடி கண்டாயே!
நீயும் உன் ஸ்வரூபத்துக்குச் சேர நிற்கப் பாராய்’ என்கிறார்.

அவன் குணாதிக்யத்தைச் சொன்ன அனந்தரம்
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே -என்றதால் பலித்தத்தை அருளிச் செய்கிறார் –
அவன் -ஸ்வாமி -பரம பக்திக்கும் பரி கணனைக்கும் ஓக்க வந்து முகம் காட்டும் ஸ்வரூபம் –
மட நெஞ்சே -என்கையாலே எனக்கு பவ்யமாகை அன்றோ உன் ஸ்வரூபம்-
ஆகையால் உன்னுடைய பாரதந்தர்யத்துக்கு ஈடாக தொழாய் என்கிறார்-

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்குந்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனைக்
கொம்பு அராவு நுண் நேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே!–1-10-3-

—————–

தாம் கூறிய போதே மேல் விழுந்து தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடி,
நிகர்ஷ அனுசந்தானம் பண்ணி -என் தாழ்மையை நினைந்து நான் பிரிகின்ற காலத்திலும்
நீ விடாதே கொள் என்கிறார்.

நெஞ்சைக் கொண்டாடி -நல்லை நல்லை -என்றதின் தாத்பர்யம் –
நிகர்ஷ அனுசந்தானம் இத்யாதி -துஞ்சும் போது இத்யாதிக்குக் கருத்து-

நெஞ்சமே! நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்–1-10-4-

——————

கீழே ‘எண்ணிலும் வரும்’ என்ற எண் தானும் மிகையாம்படி கண்டாயே!’ என்று
அவன் படியை நெஞ்சுக்கு மூதலிக்கிறார்.

பரி கணனைக்கு வரும் என்றார் கீழ் –
தம் பக்கலிலே பார்த்தவாறே -அந்தப் பரிகணனை தானும் இன்றிக்கே தான் இருந்தது –
ஆகையால் எண்ணிலும் வரும் என்ற எண் தான் மிகை என்கிறது –
எண் என்று சங்க்யா பரமான பக்ஷத்தைப் பற்ற அவதாரிகை –

கண்டாயே நெஞ்சே! கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே–1-10-5-

———————-

இப்படிச் ஸூலபன் ஆனவன் நம்மை விடான் அன்றே?’ என்ன,
‘நம் -அயோக்யதையை -தாழ்மையை நினைத்து அகலா தொழியில் நம்மை ஒரு நாளும் விடான்’ என்று
திரு வுள்ளத்துக்கு அருளிச் செய்கிறார்.

இந் நேர் நிற்கில் மற்றோர் நோயும் சார் கொடான்-என்றதுக்கு ஈடாக அருளிச் செய்கிறார் –
நாம் அகன்று முடியில் முடியும் அத்தனை போக்கி அவன் நம்மை விடான் என்று தாத்பர்யம் –

நீயும் நானும் இந் நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே! சொன்னேன்
தாயுந் தந்தையுமாய் இவ் வுலகினில்
வாயும் ஈசன் மணி வண்ணன் எந்தையே–1-10-6-

——————–

கீழ் -‘துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்’ -இவர் அஞ்சியது போன்றே முடிந்தது;
அயோக்யன்-‘தாழ்ந்தவன்’ என்று அகலுகிறார்-

இவர் அஞ்சினால் போலே ப்ராப்தமாயிற்று -பலித்தது –

எந்தையே என்றும் எம் பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே–1-10-7-

—————–

நாம் இதற்கு முன்பு நினைத்தும் பேசியும் தப்பச் செய்தோம், இனித் தவிருமித்தனை’ என்று
‘அவன் குணங்கள் நடையாடாதது ஓரிடத்தில் கிடக்க வேண்டும்’ என்று போய்,
ஒரு குட்டிச் சுவரின் அருகில் முட்டாக்கு இட்டுக் கொண்டு கிடந்தார்;
அங்கே, வழியே செல்கின்றான் ஒருவன் சுமை கனத்து ‘ஸ்ரீமந் நாராயணன்’ என்றான்;
அச் சொல்லைக் கேட்டுத் தம்முடைய கரணங்கள் அங்கே -ப்ரவணம்- அன்புடைமை யாகிற படியைக் கண்டு –
விஸ்மிதராகிறார் -ஆச்சரியப்படுகிறார்.
கேட்டலும்’ என் கையாலே, அசம்பாவிதமான இடத்தில் இருத்தல் சித்தம்
என்று திருவுள்ளம் பற்றி அவதாரிகை அருளிச் செய்கிறார்.

கேட்டலும் -என்கையாலே அசம்பாவித ஸ்தலத்தில் இருப்பு என்று சித்தம் என்று திரு உள்ளம் பற்றி அவதாரிகை –
குட்டிச் சுவர் -ஏகாந்த ஸ்தலம் பாஹ்ய இந்திரிய வியாபாரம் இல்லாத தசையில் என்றுமாம் -ஸ்வாபதேசம் -கைவல்யம்
முட்டாக்கு -பகவத் பர்யந்தாயா அந்தர் இந்திரிய கதேர் நிரோதனம் –
சுமை -சம்சார பாரம்
மாயமே -என்றதை பற்றி விஸ்மிதராகிறார் –
இப்படி அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகலுகையிலே அத்யவசித்து இருக்கவும் சாபல அதிசயத்தாலே
கரணங்கள் ஸ்ரீ பகவத் விஷயத்திலே ப்ரவணங்கள் ஆகின்றன -என்று கருத்து –

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே–1-10-8-

———————

‘நீர்தாம் இங்ஙனே கிடந்து வருந்தி உழலாமல், அவ் விஷயத்தை மறந்து சம்சாரிகளைப் போன்று உண்டு
உடுத்துத் திரிய மாட்டீரோ?’ என்ன, ‘நான் எத்தைச் சொல்லி அவனை மறப்பது?’ என்கிறார்-

என் சொல்லி மறப்பனோ -என்றத்தைக் கடாக்ஷித்து சங்கா பரிஹார முகேன சங்கதி –

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம் பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பனோ–1-10-9-

——————–

ஆனாலும் வருந்தி யாகிலும் மறந்தாலோ என்னில் –
நெஞ்சில் இருளை அறுத்துக் கொண்டு நிறைந்த வாசம் பண்ணுகிறவனை
மறக்க விரகுண்டோ -என்கிறார-

புநஸ் ச இனி மறப்பனோ -என்றதுக்கு அனுகுணமாக அவதாரிகை-

மறுப்பும் ஞானமும் நான் ஓன்று உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியை –1-10-10–

—————-

நிகமத்தில் , ‘இப்பத்தைக் கற்றவர்கள் -நிரதிசய – தன்னின் மேம் பட்டது இல்லாத
புருஷார்த்தமான பகவத் கைங்கரியத்தைப் பெறுவர்,’ என்கிறார்-

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
கல்வி என்றதுக்கு கைங்கர்யத்தை விவஷித்து அவதாரிகை –

——————–

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியைத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே–1-10-11-

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –ஒன்பதாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

May 28, 2019

ஸ்ருஷ்ட்யாதி -‘படைத்தல் முதலான முத் தொழில்கட்கும்-ஹேது பூதனாய் – காரணனாய்-சர்வ அந்தராத்மாவான –
எல்லா உயிர்கட்கும் உள் உயிராய் இருக்கின்ற ஸ்ரீ கிருஷ்ணனானவன் என்னுடைய-பர்யந்தத்தை – எல்லையை விட்டுப்
போக மாட்டாதபடி ஆனான்,’ என்கிறார்.
‘ஆயின், இறைவனுடைய மேன்மை உருவம் குணம் இவற்றை அனுபவிக்கின்ற இவர்,
‘இவையும் அவையும்’ என்பது முதலாக அவனுடைய செல்வங்களைப் பேசி அனுபவிப்பதற்குக் காரணம் என்னை?’ எனின்,
இவர்க்கு அவனுடைய குணங்களை அனுபவிப்பதோடு விபூதியை அனுபவிப்பதோடு ஒரு வேற்றுமை இல்லை.
முதல் திருவாய்மொழியிலே பரக்க அனுபவித்த இவை-விசதமாய் – வெளிப்படையாய் இருக்கையாலே
இங்குத் திரள அனுபவிக்கிறார்.
‘அவையுள் தனி முதல், கண்ணபிரான்’ என்பவற்றை நோக்கி அவதாரிகை அருளிச் செய்கிறார்-

அவையுள் தனி முதல் -கண்ணபிரான் -என்னுடைச் சூழல் உளான் -என்கிற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
சாத்ம்ய போக பிரதத்வ ரூப குண அனுபவம் பண்ணுகிற இவர் விபூதி அனுபவம் பண்ணுகிறது என் என்ன –
குண அனுபவ பிரகரணத்தில் ஹேயமான விபூதியைச் சொல்லுகிறது
ததீயத்வ ஆகாரத்தாலே அவன் குணங்களோபாதி அனுபாவ்யமாகையாலே –
ஆயின் நாம் அவன் -1-1-4-என்கிற பாட்டில் போலே பரக்க அனுபவியாது ஒழிகிறது புனருக்திக்கு பரிஹாரமாதல்

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளானே–1-9-1-

———————

‘என் பரிசரத்தில் சுற்றுப் புறத்தில் வசித்தவன், அது சாத்மித்தவாறே பொறுத்தவாறே
என் அருகே வந்து நின்றான்,’ என்கிறார்.

சாத்மிக்க சாத்மிக்கப் பரிமாறும் என்றதையும் இங்கேயும் ஸூசிப்பியா நின்று கொண்டு –
என் அருகிலான் -என்ற பாதத்தை கடாக்ஷித்து சங்கதி அருளிச் செய்கிறார் –

சூழல் பல பல வல்லான் தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவன் என் அருகலிலானே–1-9-2-

————

ஸ்ரீ திருவடி ஸ்ரீ திருவானந்தாழ்வான் ஸ்ரீ பிராட்டிமார் தொடக்கமானவரோடு ஒரோ வகையாலே பரிமாறுமவன்
என்னளவில் ஒரோ வகையிலே பரிமாறி விட மாட்டுகிறிலன் -என்கிறார் –

பொரு சிறைப் புள்ளு வந்து ஏறும் பூ மகளார் தனிக்கேள்வன் -இத்யாதிகளைக் கடாக்ஷித்து அவதாரிகை –
இவர்களைச் சொன்னது ஸ்ரீ திருவனந்த ஆழ்வானுக்கும் உப லக்ஷணம்-

அருகிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நல் மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள்ளு வந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-

————-

மேன்மை அது -அகடிகடநா சாமர்த்தியம் அது -இப்படி இருக்கிறவன் ஸ்ரீ யசோதைப்பிராட்டி மருங்கிலே
இருக்குமா போலே என் மருங்கிலே வந்து இருக்கை
தனக்குப் பெறாப் பேறாக நினைத்து இரா நின்றான் என்கிறார் –

பெருமையையும் அகடி தகடநா சாமர்த்யத்தையும் சொல்லி -என் ஓக்கலையான் -என்றது –
சர்வ பிரகாரத்தாலும் விலக்ஷணனாய் இருக்கிறவன் என் ஓக்கலையான் என்னும் பாவத்தால்
விவஷித்து அருளிச் செய்கிறார் –
ஓக்கலையானே -ஏவகாரத்தாலே -அலப்ய லாபமாக -என்பது சித்தம் –

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மட மகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஓக்க விழுங்கி ஆலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஓக்கலையானே –1-9-4-

—————–

விரோதி நிரசன சீலனாய் ‘மாற்றாரை மாறு அழிக்க வல்லவனாய்,-
சர்வ ஸ்ரஷ்டாவானவன் – எல்லாப் பொருளின் தோற்றத்திற்குங்காரணனாய் உள்ளவன்
என் ஹ்ருதயஸ்தன்- மனத்தினன் ஆனான்,’ என்கிறார்.

உயிர் செக உண்ட பெருமான் நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஒக்கவும் தோன்றிய ஈசன் மாயன் என் நெஞ்சி னுளானே-பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை-

ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கிச்
செக்கஞ் செக அன்று அவள் பால் உயிர் செக உண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஒக்கவும் தோன்றிய ஈசன் மாயன் என் நெஞ்சி னுளானே–1-9-5-

——————–

சர்வாந்தராத்மாவானவன் ‘எல்லாப் பொருள்கட்கும் அந்தராத்துமாவாக இருப்பவன்
என் தோளைப் பற்றி வர்த்தியா நின்றான் – வாழ்கின்றான்’ என்கிறார்.

காயமும் சீவனும் தானே -என்னுடைத் தோளிணையானே -என்ற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –

மாயன் என் நெஞ்சின் உள்ளான் மற்றும் எவர்க்கும் அதுவே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் எவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணையானே–1-9-6-

—————–

‘நான் உகந்தபடியே அலங்கரித்துக் கொண்டு வந்து என் நாவிலே கலந்தான்’ என்கிறார்.

இப் பாட்டுக்கு வாக்யார்த்தமாவது -நான் உகந்தபடியே அலங்கரித்துக் கொண்டு வந்து
என் நாவிலே கலந்தான் என்கிறார் -என்று –

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண் அம் துழாயுடை அம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாளணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவினுளானே–1-9-7-

————–

சகல வித்யா வேத்யனான ‘எல்லாக் கலைகளாலும் அறியப் படுகின்ற சர்வேஸ்வரன்,
பிரமாணங்களாலே காணக் கூடிய வடிவை என் கண்ணுக்கு விஷயமாக்கினான்,’ என்கிறார்.-

சகல வித்யா வேத்யனான என்றது கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே -என்றதைப் பற்ற –
இஸ் சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தநம்-ப்ரதிபாத்ய ப்ரதிபாதக பாவம் –
ஆவியோடே கூடின ஆக்கையினாலே ப்ரதிபாத்யன் -என்றபடி –
ஆதித்ய வர்ணம் -கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ-இத்யாதிகள் பிரமாணங்கள்-

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியல் நால் தடந் தோளன் பொரு படை ஆழி சங்கு ஏந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணி னுளானே–1-9-8-

————

கண்ணிலே நின்ற நிலை சாத்மித்தவாறே -பொறுத்தவாறே என் நெற்றியிலே வந்து நில்லா நின்றான்,’ என்கிறார்.

———-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

நெற்றியிலே -லலாடத்திலே

———————-

கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் மவன் மூர்த்தி
கமலத்து அயன் நம்பி தன்னைக் கண்ணுதலானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகம் ஆக்கி என் நெற்றி யுளானே–1-9-9-

————–

ப்ரஹ்மாதிகள் தன்னைப் பெறுகைக்குக் காலம் பார்த்துத் தடுமாறும்படி இருக்கிறவன் தான்
என்னைப் பெறுகைக்கு-அவசரம் – காலம் பார்த்து வந்து என் உச்சியுள் ஆனான்,’ என்கிறார்.

ப்ரஹ்மாதிகள் தொழும்படி இருக்கிறவன் உச்சியுளான் -என்பதற்குத் தாத்பர்யம்
அருளிச் செய்யா நின்று கொண்டு-இப்பாட்டுக்கு சங்கதி –
தொழுவார் -என்று அவர்கள் தடுமாற்றம் –
வந்து -என்றதை பற்ற என்னைப் பெறுகைக்கு அவசரம் பார்த்து -என்றது –
வந்து -என்றது இவன் தடுமாற்றம் –

நெற்றியுள் நின்று எனை ஆளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை அணிந் தானும் நான்முகனும் மிந்திரனும்
மற்றை அமரரும் எல்லாம் வந்து எனது உச்சி யுளானே–1-9-10-

—————-

நிகமத்தில் -இத் திருவாய் மொழியை ஸ்ரீ எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய –
அவர்கள் தலையிலே ஸ்ரீ எம்பெருமான் திருவடிகள் நாள் தோறும் சேரும் என்கிறார் –

ஒரு கால் விண்ணப்பம் செய்ய நிச்சலும் நீள் கழல் சென்னி பொரும் என்று அன்வயித்து
அவதாரிகை அருளிச் செய்கிறார்-

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக் கண்ண பிராற்கு
இச்சையில் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே–1-9-11–

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –எட்டாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

May 28, 2019

நித்திய விபூதியில் உள்ளாரோடு செவ்வியனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறார் இப் பாசுரத்தில்.
‘ஆயின், அங்குள்ள அவர்களுக்குச் செவ்வைக் கேடு இல்லையே?
அங்ஙனம் இருக்க, அங்கு ஆர்ஜவ குணம் எற்றிற்கு?’ என்னில்,
அவர்கள் பலராய் இருத்தலானும்,
அவர்கட்கும் ருசி பேதம் உண்டு ஆதலானும்,
அவர்கள் நினைவு அறிந்து பரிமாறுதற்கு அங்கும் ஆர்ஜவ குணம் வேண்டும்.

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஓடும் புள்ளேறிச் சூடும் தண் துழாய் -என்றத்தைக் கடாக்ஷித்து அவதாரிகை –
சந்தா அனுவர்த்திகளாய் இருக்கிறவர்களுக்குச் செவ்வைக்கேடு இல்லையே –
அவர்களுடன் ருஜுவாய் பரிமாறுகை யாவது என் -சங்கைகளுக்கு உத்தரம் –
வ்ருத்தி பேதம் -கைங்கர்ய பேதம் -இதனால் உண்டான செவ்வைக் கேடு-அநார்ஜவம் –

————————-

ஓடும் புள் ஏறிச், சூடும் தண் துழாய்
நீடு நின்று அவை, ஆடும் அம்மானே–1-8-1-

————-

நித்திய விபூதியில் நின்றும் வந்து அவதரித்து விரோதிகளைப் போக்கிச் சம்சாரிகளுடன்
செவ்வையனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறது.

தைத்ய பீடிதரான தேவர்கள் வந்து தாங்களும் கடக்க நின்று சர்தி பண்ணிப் போம் பூமியிலே பிறக்க வேணும் என்ன
அப்படியே பிறக்கை ஆர்ஜவம் இறே
திரு வவதரித்த பின்பு சம்சாரிகளுடைய சந்தா அனுவ்ருத்தி பண்ணினத்துக்கு ஒரு எல்லை இல்லை இறே–

அம்மானாய்ப் பின்னும், எம் மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட, செம்மா கண்ணனே–1-8-2-

————–

இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாயானவள் இருவர்க்கும் பால் கொடுக்கத் தகுதியாக நடுவே கிடக்குமாறு போன்று,
நித்திய ஸூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகங்கொடுக்கைக்காகத் திருமலையில் நிற்கின்ற நீர்மையை அருளிச் செய்கிறார்-
( திருவாய் மொழியில் முதல் ஸ்பஷ்டமாக திவ்ய தேச மங்களா சாசனப் பாசுரம் -)

மண்ணோர் விண்ணோர்க்கு என்றும் கண்ணாவான் -என்றதுக்கு த்ருஷ்டாந்தம் இரட்டை பிரஜை இத்யாதி-

கண்ணாவான் என்றும், மண்ணோர் விண்ணோர்க்குத்
தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே–1-8-3-

——————-

அவனுடைய ஆர்ஜவ குணம் தம் அளவிலே பலித்த படியை அருளிச் செய்கிறார்.

சீர் கற்பன் -இத்யத்ர ஹிருதயம் -அப்யாஸஸ்ய குண ப்ரேரிதத்வம் விவஷிதம் –
தாம் குண லுப்தராகையாலே தம்முடைய சந்தத்தை அனுவர்த்தித்திக் கொண்டு
தாம் கற்கைக்காக வெற்பு எடுத்தது என்று இவ் வழியாலே இங்கு ஆர்ஜவம் சொல்லிற்று ஆகிறது –

வெற்பை ஒன்று எடுத்து, ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர், கற்பன் வைகலே.–1-8-4-

————

‘நீர் அவன் நற்குணங்களைக் கற்றீராகில்,-அப்யஸியா நின்றீர் ஆகில்
அவன் தான் செய்கிறது என்?’ என்னில்,
‘நான் அவனை விட்டு அவன் குணங்களை விரும்புவது போன்று,
அவனும் என்னை விட்டு எனது தேகத்தை விரும்புகிறான்,’ என்கிறார்.

என் மெய் கலந்தானே என்ற பதங்களைக் கடாக்ஷித்து சங்கா பூர்வகமாக சங்கதி அருளிச் செய்கிறார் –

வைகலும் வெண்ணெய், கை கலந்து உண்டான்
பொய் கலவாது என், மெய் கலந்தானே–1-8-5-

—————-

‘இப்படிக் கலந்து செய்தது என்?’ என்ன, தேஹத்து அளவிலே விரும்பி விட்டிலன்;
என் ஆவி நலத்தையும் கொண்டான்,’ என்கிறார்.

என் ஆவி நலம் கொள் நாதன்’ என்ற பதங்களைக் கடாக்ஷித்து சங்கா பூர்வகமாக சங்கதி
அவதாரிகை அருளிச் செய்கிறார்.

கலந்து என் ஆவி, நலம்கொள் நாதன்
புலன் கொள் மாணாய், நிலம் கொண்டானே–1-8-6-

—————-

ஆவி நலம் கொண்ட அளவேயோ? நித்ய விபூதியில் -பரம பதத்தில் செய்யும்
ஆதாரத்தை -அன்பையும் என் பக்கலிலே செய்தான்,’ என்கிறார்.

தண் தாமம் செய்து -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச் செய்கிறார் –

கொண்டான் ஏழ் விடை, உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என், எண் தான் ஆனானே–1-8-7-

———————

‘என்னைக் கருதி அவன் பிறந்த பிறவிகளுக்கு ஒரு முடிவு இல்லை,’ என்கிறார்.

என்னில் தானாய் சங்கே -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை –

ஆனான் ஆன் ஆயன், மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில், தானாய சங்கே–1-8-8-

——————

இப்படி அவதரிக்குமிடத்து ஐஸ்வர்யமான சிஹ்னங்களோடே அடையாளங்களோடே
வந்து அவதரிப்பான்,’ என்கிறார்.

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் எங்கும் தானாய-என்கிற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –

சங்கு சக்கரம், அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய, நங்கள் நாதனே–1-8-9-

——————

அவன் நீர்மையைப் பேசப்புக்கு -நம்மால் பேசப்போமோ –
கடல் கிளர்ந்தாள் போலே வேதமே பேச வேண்டாவோ -என்கிறார்

நீர் என்று நீர்மையாய் -ஆர்ஜவத்தைச் சொல்லி -வேதத்தால் பிரதிபாதிக்கப்பட்ட
ஆர்ஜவ குணத்தை உடையவன் என்றபடி –

நாதன் ஞாலம் கொள் பாதன் என் அம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரனே -1-8-10–

—————-

நிகமத்தில் ‘இத்திருவாய்மொழி, எல்லாத் திருவாய்மொழிகளிலும் அவனுடைய
ஆர்ஜவ குணத்தை ஆராய்ந்து சொன்ன பத்து’ என்கிறார்.

எல்லாத் திருவாய் மொழியிலும் ஆராய்ந்து -என்று அன்வயம் –
எல்லாத் திருவாய் மொழியில் காட்டிலும் ஆராய்ந்து சொன்ன என்றபடி-

நீர் புரை வண்ணன், சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து, ஓர்தல் இவையே–1-8-11-

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –ஏழாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

May 28, 2019

இப்படி நிரதிசய போக்யனானவனை -எல்லை இல்லாத இனியனான இறைவனை விட்டு, –
பிரயோஜனாந்தரத்தை -வேறு பயன்களைக்-கொண்டு அகலுவதே!’
என்று கேவலரை நிந்திக்கிறார்.

‘அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால், பிற ஆழி நீந்தல் அரிது’ திருக் குறள்

பாவா வலம்பநேந -ஆழிப் படை அந்தணனை -என்ற பதத்தையும் -மனத்து வைப்பாரே-என்ற
பதத்தையும் கடாக்ஷித்து அவதாரிகை –
ஸம்ஸாரிணாம் காலாந்தரே பகவத் ஸமாச்ரயண யோக்யதா அஸ்தி –
கேவலா நாம் ஸாபி நாஸ்தீதி தான் ப்ரதமம் நிந்ததி-

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை
மறவியை இன்றி மனத்து வைப்பாரே–1-7-1-

————————

ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து ஷூத்ர – சிறிய பயனைக் கொண்டு போவதே!’ என்று கேவலனை நிந்தித்தார்;
அவன் தன்னையே பற்றி இருக்குமவர்களுக்கு அவன் தான் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் இப் பாசுரத்தில்-

கீழில் பாட்டில் பிரமேயத்தை அனுவதித்துக் கொண்டு -வைப்பாம் மருந்தாம் அடியவரை வல்வினைத் துப்பாம்
புலன் ஐந்தும் துஞ்சக் கொடான்-என்கிற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –

வைப்பாம் மருந்தாம் அடியரை வல் வினைத்
துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் அவன்
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து
அப்பா லவன் எங்கள் ஆயர் கொழுந்தே–1-7-2-

——————-

ப்ரயோஜனாந்தர பரரான கேவலரை நிந்தித்தார் முதற்பாசுரத்தில்;
இரண்டாம் பாசுரத்தில், அநந்ய பிரயோஜனர் திறத்தில் அவன் இருக்கும் படியை அருளிச் செய்தார்.
‘இவ் விரு திறத்தாரில் நீவிர் யாவிர்?’ என்ன,
‘நான் ப்ரயோஜனாந்தர பரன் அல்லேன்; அநந்ய பிரயோஜனனாய் அவனைப் பற்றினேன்,’ என்று
நேர் கொடு நேரே சொல்லவும் மாட்டாரே; ஆதலால்,
‘அவனை அனுபவியா நிற்க,விரோதி தன்னடையே போய்க் கொண்டு நின்றவன் நான்,’ என்கிறார் இப் பாசுரத்தில்.

இரண்டு பாட்டில் பிரமேயத்தை அனுபாஷியா நின்று கொண்டு உத்தரார்த்தத்தைக் கடாக்ஷித்து
சங்கா பரிகார ரூப சங்கதி –
நேர் கொடு நேர் -சாஷாத் – சொல்லவும் மாட்டாரே -நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
ஆத்ம பிரசம்ஸையாம் என்று சொல்லவும் மாட்டாரே என்றபடி –

ஆயர் கொழுந்தாய் அவரால் புடை உண்ணும்
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியைத்
தூய அமுதைப் பருகிப் பருகி என்
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-

————————-

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று அடியிலே நீர் அபேக்ஷித்தபடியே இறைவன் திருவருள் செய்ய,
‘மாயப் பிறவி மயர்வு அறுத்தேன்’ என்று பிறவி அற்ற தன்மையினை நீரே கூறினீரே!
இனி, இறைவனை விட்டுப் பிடித்தல் பொருத்தம் உடைத்து அன்றோ?’ என்ன,
‘நான் என்ன ஹேதுவால் – காரணத்தால் விடுவேன்?’ என்கிறார்.

விடுவேனோ -என்றதும் பிரசங்கம் அருளிச் செய்யா நின்று கொண்டு –
என் இசைவினை ஏஎன் சொல்லி யான் விடுவேனோ -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை –
அபேக்ஷிதம் தலைக்கட்டிற்றே என்றது -மாயப்பிறவி மயர்வறுத்தேன் -என்றதை பற்ற

மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர் வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடு வேனோ?–1-7-4-

——————————–

திருவாய்ப்பாடியில் பெண்கள் ஸ்ரீ கிருஷ்ணனை விட்டுப் பரமபதத்தை விரும்பும் அன்று அன்றோ
நான் இவனை விட்டுப் புறம்பே போவேன்?’ என்கிறார்

கீழில் பாட்டுக்கு சேஷம் இது -ஆனாலும் வள வேழ் உலகில் ஆழ்வார் அன்றோ நீர் –
அவ் விஷயத்தைக் கண்டவாறே அகல்வீரே என்ன -அவதாரிகை சாதிக்கிறார் –

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனைத்
தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே–1-7-5-

————————–

இப்போது ‘விடோம்’ என்கிறீர் இத்தனை போக்கிப் பின்னையும் நீர் அல்லீரோ?
உம்முடைய வார்த்தையை-விஸ்வசிக்கப் போமோ நம்புதற்கு உளதோ?’ என்ன,
‘அவனாலே அங்கீகரிக்கப்பட்ட நான் அவனை விடுவேனோ?’ என்றார் மேல் பாசுரத்தில்:
‘உம்மை அவன் தான் விடில் செய்வது என்?’ என்ன,
‘தன் குணங்களாலும் -சேஷ்டிதங்களாலும் -செயல்களாலும் என்னைத் தோற்பித்து என்னோடே கலந்தவனை விட
நான் -சம்வதிப்பேனோ – உடன் படுவேனோ?’ என்கிறார் இப் பாசுரத்தில்.

கீழில் பாட்டில் அர்த்தத்தை அனுவதிக்கிறார்-
வள வேழ் உலகில் ஆழ்வார் அன்றோ என்பதாலே பின்னையும் நீர் அல்லீரோ -என்று அருளிச் செய்வார் –

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்
மரா மரம் எய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ?–1-7-6-

———————-

குண த்ரய வஸ்யராய் -‘முக் குணத்தின் வசப் பட்டவராய்ப் போந்தீர்;
காதாசித்கமாக- ஒரு சமயத்தில் ‘அவனை விடேன்’, என்கிறீர்;
உம்முடைய வார்த்தையை விஸ்வசிக்க நம்பப் போமோ?’ என்ன,
‘நான் அவனை விட்டாலும், அவன் தான் என்னை விடான்’ என்கிறார்.

ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே -என்ற பதங்களைக் கடாக்ஷித்து சங்கா பரிஹார ரூபேண
சங்கதி அருளிச் செய்கிறார் –
காதாசித்கமாக என்றது சத்வம் தலை எடுத்த காலத்திலே -என்றபடி –

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன்
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊன் ஒட்டி நின்று என் உயிரிற் கலந்து இயல்
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே?–1-7-7-

—————————-

‘நான் விடேன், அவன் விடான்’ என்பன போன்று கூறுதல் எற்றிற்கு?
இனி, அவன் தான் ‘பிரிப்பன்’ என்னிலும் அவனுடைய கல்யாண குணங்களிலே அகப்பட்ட
என் நெஞ்சை அவனாலும் பிரிக்கப் போகாது’ என்கிறார்.

என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் -என்ற பதங்களைக் கடாக்ஷித்து
சங்கதி அருளிச் செய்கிறார்-

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நல் நெஞ்சம்
தன்னை அகல்விக்கத் தானும் இங்கு இல்லான் இனிப்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை
முன்னை அமரர் முழு முதலானே–1-7-8-

————————–

‘தானும் கில்லான்’ என்ற -பிரசங்கம் – கூறுதல் தான் என்? –
ஏக த்ரவ்யம் -ஒரே பொருள்- என்னலாம்படியான இவ்வுயிரைப் பிரிக்கும்படி எங்ஙனே?’ என்கிறார்.

அமரத் தழுவிற்று இனி அகலுமோ -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச் செய்கிறார் –

அமரர் முழு முதல் ஆகிய ஆதியை
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை
அமர அழும்பத் துழாவி என் ஆவி
அமரத் தழுவிற்று இனி அகலுமோ?–1-7-9-

—————————

என்னோடு கலந்த ஸ்ரீ எம்பெருமானுடைய குணங்களைக் கால தத்வம் உள்ளதனையும்
அனுபவியா நின்றாலும் திருப்தன் ஆகிறிலேன் என்கிறார்

நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை –

அகலில் அகலும் அணுகில் அணுகும்
புகலும் அரியன் பொரு வல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே -1-7-10—

———————–

நிகமத்தில் ‘இத்திருவாய்மொழி தானே இதனைக் கற்றவர்களுடைய -பிராப்தி பிரதிபந்தகங்களை –
பலத்திற்குத் தடையாக உள்ளவற்றை உன்மீலிதமாக்கும்- வேரோடு அழித்து விடும், என்கிறார்.

உன்மூலிதம் ஆக்கும் என்றது வேரோடு போக்கும் என்றபடி –

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப்பத்து
உடைந்து நோய்களை ஓடு விக்குமே–1-7-11-

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –ஆறாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

May 27, 2019

எம்பெருமான் பரிபூர்ணன் ஆகையாலே-ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத் தக்கவன்,’ என்கிறார்-

ஈசனை -பரமபதத்தில் இருக்கும் இருப்பை முந்துறச் சொல்லி அனந்தரம் –
புரிவதுவும் புகை பூவே -அவனுடைய ஸ்வாராததையைச் சொல்லுகையாலே
அவனுடைய பூர்த்தி என்று விவஷித்து பரிபூர்ணன் ஆகையால் என்கிறார்
புரிவதுவும் புகை பூவே -என்று த்ரவ்ய நியதி இல்லாமையைச் சொல்லுகிறது-

பரிவது இல் ஈசனைப் பாடி விரிவது மேவல் உறுவீர்!
பிரிவகை இன்றி நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகை பூவே–1-6-1-

———————–

ஆஸ்ரயிக்குமவனுக்கு த்ரவ்யத்தில் குறை பார்த்து அகல வேண்டா -என்றார் முதல் பாட்டில் –
நான் அதிகாரி அல்லேன் -என்று அகல வேண்டா -என்கிறார் இதில்-

கீழ்ப் பாட்டில் ப்ரமேயத்தை அனுபாஷியா நின்று கொண்டு
எது வேது என் பனி என்னாது -என்றதைக் காடாக்ஷித்து சங்கதி அருளிச் செய்கிறார்

மதுவார் தண் அம் துழாயான் முது வேத முதல்வனுக்கு
எது ஏது என் பணி என்னாததுவே ஆட் செய்யும் ஈடே–1-6-2-

———————–

அவனுடைய இஸ் ஸ்வபாவத்தை அனுசந்தித்து -நினைந்து, தாம் அதிகரித்த காரியத்தை மறக்கும்படி
தம்முடைய மனம் வாக்குக் காயங்களுக்கு அவன் பக்கல் உண்டான -ப்ராவண்யத்தை -காதற் பெருக்கினை
அருளிச் செய்கிறார்-

கீழும் மேலும் பரோபதேசமாய் இருக்க இப்பாட்டும் மேற்பாட்டும் ஸ்வ அனுபவமாய் இருக்கிறதுக்கு சங்கதி –
இஸ் ஸ்வபாவம் -என்றது கீழ் இரண்டு பாட்டிலும் சொன்ன ஸ்வாராதந ஸ்வ பாவத்தை என்றபடி
தாம் அதிகரித்த கார்யம் -பரோபதேசம் –

ஈடும் எடுப்பும் இல் ஈசன் மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே–1-6-3-

——————–

தம்முடைய மனம் வாக்குக் காயங்கட்கு அவன் பக்கல் உண்டான-ப்ராவண்யம் – காதற்பெருக்கு-
காதாசித்கமாய் விடுகை இன்றிக்கே – ஒரு காலத்தில் தோன்றி மறைதல் இன்றி,
நித்திய ஸூரிகளைப் போலே யாத்திரையான படியைச் சொல்லுகிறார்.

ஆடும் என் அங்கம் அணங்கே-என்றதை விவரிக்கிறதாய் அன்றோ இருக்கிறது –
இப் பாட்டுக்கு ஓரு வைஷம்யம் கண்டிலோமே என்கிற சங்கையிலே பிணங்கி அமரர் பிதற்றும் -என்கிற
விசேஷணத்தை கடாக்ஷித்து இது தானே யாத்திரையாக -என்று அருளிச் செய்கிறார்

அணங்கு என ஆடும் என் அங்கம் வணங்கி வழிபடும் ஈசன்
பிணங்கி அமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையினானே–1-6-4-

—————————–

திரியட்டும் -மீண்டும்- தாம் அதிகரித்த – மேற்கொண்ட காரியத்திலே போந்து,
ஸ்ரீ சர்வேஸ்வரன், தன் பக்கல் சிலர் வந்து கிட்டினால்
‘இவர்கள்-ப்ரயோஜனாந்தரத்தை – வேறு பலன்களைக் கொண்டு அகலுவர்களோ,
நம்மையே-பிரயோஜனமாக – பலமாகப் பற்றுவார்களோ?’ என்று ஆராய்ந்து,
தன்னையே-பிரயோஜனமாக – பலமாகப் பற்றினவர்களுக்குத்
தானும் -நிரதிசய போக்யனாய் -எல்லையற்ற இனியனாக இருப்பான் என்கிறார்-

விள்கை விள்ளாமை விரும்பி உள் கலந்தார்க்கு ஓர் அமுதே -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை
அம்பரீஷனைப் பரீஷித்த பிரகாரத்தை அனுசந்திப்பது
ஆராய்ந்து -விரும்பி என்றதிலே நோக்கு –

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான்
விள்கல் விளாமை விரும்பி உள் கலந்தார்க்கு ஓர் அமுதே–1-6-5-

————————

‘அவன் படி இதுவாக இருக்க, அவனை விட்டு-பிரயோஜனாந்தரத்தை – வேறு பலன்களைக் கொண்டு அகலுவதே!’ என்று-
ப்ரயோஜனாந்தர பரரான – வேறு பலன்களை விரும்பிய தேவர்களை நிந்திக்கிறார்.

கௌபீ நாச்சாத ந பிராயவாஞ்சா கல்பத்ருமாதபி-ஜாயதே யாத புண்யானாம் சோ அபராத ஸ்வ தோஷஜ-என்றது அனுசந்தேயம்
தேவராய மஹா ராயனை ஆஸ்ரயித்தவன் படிக்கல்லுக்கு ராயசம் கேட்க
கிராமத்துக்கும் படிக்கல்லுக்கும் ராயசம் கொடுத்த கதையையும் நினைப்பது-

அமுதம் அமரர்கட்கு ஈந்த நிமிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே–1-6-6-

——————–

அவன்-நிரதிசய போக்யன் – எல்லை அற்ற இனியன் என்றீர்;
அவனை பிராபிக்கும்- அடைகின்ற வரையில் -நடுவு கால ஷேபம் -இடையிலே உள்ள காலத்தைப்
போக்கும் விதம் எப்படி?’ என்ன,
அதற்கு அன்றே, ‘மனத்துக்கு இனியானுடைய குணங்களிருக்கின்றன’ என்கிறார்?

நாள் கடலைக் கழிமின்-என்றதைக் கடாக்ஷித்து ப்ரஸ்ன உத்தர ரூபேண சங்கதி அருளிச் செய்கிறார் –

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே–1-6-7-

——————-

ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய வீர சரித்திரத்தை அனுசந்தித்து – நினைத்து, –
இதர விஷய ப்ராவண்யத்தை தவிரவே -மற்றைப் பொருள்களின் ஆசையை நீக்கவே,
அவன் தானே பிரதிபந்தகங்களை- தடைகளை எல்லாம் போக்கி
நித்தியமான கைங்கரியத்தைத் தந்தருளும் -என்கிறார் –

கழித்து வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவிற்று ஆக்கம் தரும் -என்ற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
இரு வ்யக்தியை நிர்த்தேசியாமலே கீழில் பாட்டில் சொன்ன ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனே
இப் பாட்டுக்கும் பிரதிபாத்யன் -என்கிறார் –

கழிமின் தொண்டீர்கள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல் வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே–1-6-8-

————————-

தன்னைப் பற்றின் அளவில் இப்படி விரோதிகளைப் போக்கி இப் பேற்றினைத் தரக் கூடுமோ?’ என்னில்,
‘வெறும் அவன் படியையோ பார்ப்பது!
அருகே இருக்கிறார் படியையும் பார்க்க வேண்டாவோ?
ந கச்சின் ந அபராத்யதி ‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்,’ என்பவர் அன்றோ
அருகில் இருக்கிறார்?’ என்கிறார்

ஸ்ரீ திருமகளார் -என்றதைக் கடாக்ஷித்து -அருகே இருக்கிறார் படியையும் என்கிறது –
பாபாநாம் வா ஸூபா நாம் வா வாதாரஹானாம் பிலவங்கம் கார்யம் கருணமார்யேண
ந கஸ்சின் ந அபராத்யதி -யுத்த காண்டம் –

தரும அரும் பயனாய திரு மகளார் தனிக் கேள்வன்
பெருமை யுடைய பிரானார் இருமை வினை கடிவாரே–1-6-9-

——————–

இப்படி அவனும் அவளும் குற்றங்களைப் போக்குவது எத்தனை காலம் கூடி?’ என்னில்,
‘தன் திருவடிகளிலே தலை சாய்த்த அளவிலே’ என்கிறார்.

நொடியாரும் அளவைக்கண் என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை

கடிவார் தீய வினைகள் நொடி யாரு மளவைக் கண்
கொடியா அடு புள் உயர்த்த வடிவார் மாதவனாரே–1-6-10-

——————-

நிகமத்தில் ‘இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர் -அப்யஸிக்க வல்லார்கள் –
சம்சாரத்தில் வந்து பிறவார்,’ என்கிறார்.

மாதவன் பால் சட கோபன் தீ தவம் இன்றி உரைத்த
ஏதமில் ஆயிரத்து இப் பத்து ஓத வல்லார் பிறவாரே–1-6-11-

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –ஐந்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

May 27, 2019

‘நித்திய ஸூரிகட்கு -அனுபாவ்யனானவனை -அனுபவிக்கப்படும் பொருளானவனை,
மனம் வாக்குக் காயங்களால் தூஷித்தேன் ’ என்கிறார்.

வானோர் இறையை-நினைந்து நைந்து என்பான் -என்ற பத த்ரயங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –

வளவேழ் உலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா!’ என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய்
இளவேறு ஏழும் தழுவிய எந்தாய்!’ என்பன் நினைந்து நைந்தே–1-5-1-

——————–

‘நெஞ்சால் நினைந்தும், வாயால் பேசியும், உடலால் நைந்தும், -தப்பச் செய்தேன் ’ என்றார் கீழ் பாசுரத்தில்;
தப்பச் செய்தேன் ‘ என்ற இடம் தப்பச் செய்தேன் என்கிறார் இப் பாசுரத்தில்;
‘யாங்ஙனம்?’ எனின்,
சண்டாளன் ‘ஒத்து -வேதம் போகாது’ என்று தான் சொல்லப் பெறுவனோ?
அவ்வாறே அன்றோ நான் அயோக்கியன் என்று அகலுகையும்?
ப்ரேமார்த்த சித்தரான -அன்பினால் நனைந்த மனத்தையுடைய ப்ரஹ்மாதிகள் அன்றோ அதுதான் சொல்லப் பெறுவர்!
‘நான் தப்பச் செய்தேன்- என்று அகலுமதில், கிட்டி நின்று பரிமாறுதல் நன்று அன்றோ?’ என்று,
கீழ் நின்ற நிலையையும் நிந்தித்துக் கொண்டு அகலுகிறார்.

முதல் பாட்டில் ப்ரமேயத்தை அனுபாஷியா நின்று கொண்டு வறுத்த அணுவாக பூர்வகமாக அவதாரிகை –
ப்ரஹ்மாதிகள் வணங்கினால் உன் பெருமைக்கு அவத்யமாகாதோ-என்னுமத்தைப்
பாட்டிலே பிரயோகிக்கிறவருடைய ஹார்த்த பாவத்தை அருளிச் செய்கிறார் -வாக்ய த்வயத்தாலே –

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலிற் சிதையாமே
மனஞ்செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே–1-5-2-

———————

‘நினைந்தும் பேசியும் நைந்தும் தப்பச் செய்தேன்,’ என்றார் முதற்பாட்டில்;
தப்பச் செய்தேன் என்ற இடம் தப்பச் செய்தேன் என்றார் இரண்டாம் பாட்டில்;
‘நீர் நம்முடைய மேன்மையைப் பார்த்து அங்ஙனம் நெகிழப் போகாதே, நாம் தாழ நின்று எல்லாரோடும் பொருந்தும்
சீல குணத்தையும் ஒரு கால் பாரீர்,’ என்று திரு உலகு அளந்தருளின சீல குணத்தை காட்டிக் கொடுக்க,
அதனை நினைந்து அகல மாட்டாதே, அணுகவுமாட்டாதே, நடுவே நின்று,அணாவாய்த்துக் காலம் கழிக்கிறார்.
‘அவனை ஒழிய அப்படிக் காலம் கழிக்க வல்லரோ?’ என்னில்,
சீர் கலந்த சொல் நினைந்து போக்கும் போது போக்க வல்லரே;
சீல குண அநுசந்தானத்தால் போக்கலாமன்றே?

கீழ் இரண்டு பாட்டில் பிரமேயத்தையும் அனுபாஷியா நின்று கொண்டு –
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் தான் ஒருவன் -என்ற பதங்களைக் கடாக்ஷித்து சங்கதி –
இப் பாட்டிலும் மேல் பாட்டில் போலே தம்மோடு அவனுக்கு விசேஷ சம்பந்தம் தோற்றாமையைப் பற்ற
தான் ஒருவனே என்ற ஈடுபாட்டைப் பற்ற அகல மாட்டாதே அணுகவும் மாட்டாதே -என்றது
அணாவாய்த்து -வினோதம் பண்ணிக்க கொண்டு என்றபடி -சம்சயித்து என்றுமாம் –
அவன் நீர்மையைக் காட்டுகையாலே அகல மாட்டாதே –
அடியேன் சிறிய ஞானத்தன் என்கையாலே அணுகவும் மாட்டாதே அணாவாய்த்து -என்கிறார்
ஆழ்வார் தம்மோடு சேர வேணும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு இருக்கிற ஈஸ்வரனைப் பற்ற இப்போது இவருடைய
அவஸ்தை ஏமாற்றம் போலே இருக்கையாலே அணாவாய்த்து -என்றது –
ஸுந்தர்ய சீலாதி குண சேஷ்டிதங்களோடே பரஸ்பர சாரஸ்யாவஹமாம் படி சேர்ந்து இருக்கிற திரு நாமங்களை சார்த்தமாக அனுசந்தித்து
அனுபவித்து அல்லது தப்ப ஒண்ணாத படி போக்கற வளைந்து கிடக்கிற பாப பலமான தரை காண ஒண்ணாத துக்கத்தைப்
போக்கிக் கொள்ளார்களாமாகில் இந்தக் காலம் தன்னை எத்தை அனுசந்தித்துப் போக்குவார்கள் -என்றபடி –
அது எப்படி என்ன சீல குண இத்யாதி-

மா யோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன் தானோர் உருவனே–1-5-3-

———————–

‘அவன் படி இதுவாய் இருந்தது; இனி நீர் செய்யப் பார்த்தது என்?’ என்ன,
‘நாம் அகலப் பார்த்தால் உடையவர்கள் விடுவார்களோ?’ என்கிறார்.
அத்யந்த நிரபேஷனாய் இருந்து வைத்து – (‘வேண்டுதல் என்பது மிகச் சிறிதும் இல்லாதவனாய் இருந்தும்,) –
ஸ்ருஷ்ட்டி யாதி அநேக யத்னங்களைப் பண்ணி (படைத்தல் முதலிய அநேக முயற்சிகளைச் செய்து )
என்னைத் தனக்கு ஆக்கிக் கொண்ட குணங்களாலே என்னை-விஷயீகரித்தவன் – அடிமை கொண்டவன்,
இனி, ‘நான் அல்லேன்’ என்னிலும், தன்னுடைய சௌசீல்ய குணத்தால் என்னை விடான்,’ என்று –
ஸமாஹிதராகிறார்- சமாதானத்தை அடைந்தவர் ஆகிறார்-

எம்பெருமான் என்றது சம்பந்த அபிப்ராயம் என்னும் கருத்தால் –
உடையவனாகையாலே ஸுசீல்யாதிகளைக் காட்டிச் சேர்த்துக் கொண்டான் என்றபடி
த்விதீய அவதாரிகை -எம்பெருமான் ஸுசீல்ய அபிப்ராயம் -ஸுசீல்யத்தாலே சேர்த்துக் கொண்டு
அத்தாலே பெறாப் பேறு பெற்றவனாக இருக்கிறான்
வானோர் பெருமான் என்றதை பற்ற அத்யந்த நிரபேஷனாய் -என்றது
அவன் படி இதுவாய் இருந்தது -ஸூ சீலனாகையாய் இருந்தது –
நீர் செய்யப் பார்த்தது என் -என்றது அகலப் பார்த்தீரோ -என்றபடி –

தானோர் உருவே தனி வித்தாய்த் தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்த்
தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம் பெருமானே–1-5-4-

——————-

ஆபிமுக்யம் பண்ணின அநந்தரம் – விரும்பி அநுகூலரான பின்னர்,
கிரியாதாமிதி மாம் வத ( ‘இவ்விடத்தில் பர்ண சாலையைக் கட்டு என்று எனக்குக் கட்டளை யிடல் வேண்டும்,’ )என்று
இளைய பெருமாள் பிரார்த்தித்தது போன்று, ஏவி அடிமை கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.
அன்றி,
இவர் அநுகூலரான பின்பும் அவன் முகங்காட்டாமல்-அல்பம் விளம்பிக்க – சிறிது நேரந் தாழ்க்க,
அது பற்றாமல், அருளாய்’ என்கிறார் எனலுமாம்.

‘அருளாய்’ என்றது கைங்கரியப் பிரார்த்தனை.-என்றும்
புருஷார்த்த மாகைக்காக பிரார்த்திக்கின்றார் என்றபடி-

‘கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன், உண்டை கொண்டு
அரங்க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன்’ (திருச்சந். 49.)

கீழ் இரண்டு பாட்டிலும் ஸமாஹிதரானவர் இப் பாட்டில் சேருமாறு அருளாய் என்று பிரார்த்திக்கிறது எது என்ன
த்விதா பரிஹரிக்கிறார்
வினையேன் உன் திருப்பாதம் சேருமாறு அருளாய் -முந்தின அர்த்தத்தில் கைங்கர்ய பிரார்த்தனை
இரண்டாவதில் புருஷார்த்தம் ஆகைக்காக -இவருடைய ஸ்தைர்ய நிமித்தமாக -அவன் தாழ்க்க பிரார்த்திக்கிறார் என்றபடி –
வினை என்கிறது பிரதான அவதாரிகையில் அகலுகையில் உண்டான அபிசந்தியை-தீ வினை
முந்துற கிட்டுகை பாபம் என்று இருந்தார் -இப்போது அகலுகையில் உண்டான அபிசந்தி பாபம் என்கிறார்
இங்கும் அநிஷ்டாவஹத்வமே ஹேது
த்வதீய அவதாரிகையில் பிராப்தி பிரதிபந்தக பாபம் –
ஆபிமுக்யம் பண்ணின அனந்தரம் என்றது கீழில் பாட்டில் எம்பெருமான் -என்றதைப் பற்ற

மானேய் நோக்கி மடவாளை மார்பிற் கொண்டாய் மாதவா!
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!
வானார் சோதி மணி வண்ணா! மது சூதா! நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே–1-5-5-

——————

இவர்-ஆபிமுக்யம் – எதிர்முகம் செய்தவாறே, இறைவன் அல்பம் சிறிது தாழ்த்தான்;
இவர் ‘என்னை’ இழந்தாய்? கிடாய் ’ என்கிறார்.

கீழில் பாட்டில் கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கிறார் என்ற பஷத்தை அவலம்பித்துக் கொண்டு –
நைவன்-என்ற பதத்தைக் கடாக்ஷித்து சங்கதி
இரண்டாம் அவதாரிகையான பக்ஷத்தில் கீழில் பாட்டுக்கு சேஷம் இப்பாட்டு –
நைவன் என்றதைக் கடாக்ஷித்து -என்னை இழந்தாய் -கிடாய் என்கிறார்

வினையேன் வினை தீர் மருந்தானாய்! விண்ணோர் தலைவா! கேசவா!
மனை சேர் ஆயர் குல முதலே! மா மாயவனே! மாதவா!
சினை ஏய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய்! சிரீதரா!
இனையாய்! இனைய பெயரினாய்! என்று நைவன் அடியேனே–1-5-6-

——————

நைவன்’ என்றார்; இவரை நைவிக்க மனம் இல்லாமையாலே வந்து முகங்காட்டினான்;
அவனைப் பார்த்து ‘நம்மால் வரும் குணாதிக்யமும் -குணத்தின் மேன்மையும் -இவனுக்கு வேண்டா,’ என்று அகலுகிறார்.

இதனின் மிக்கோர் அயர்வுண்டே -என்ற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
அடியேன் சிறிய ஞானத்தன் -என்று அகலும் போது இப்பாட்டில் அவன் முகம் காட்டினான் ஆக வேணும் என்றபடி –
நம்மால் வரும் குணாதிக்யம் என்றது அயோக்யரான தம்மை விஷயீ கரிக்கையாலே வரும் சர்வாதிகாரத்வ ரூப குணாதிக்யம் என்றபடி

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானைக்
கடிசேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனைச்
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கோர் அயர்வுண்டே!–1-5-7-

——————-

இவர் இப்படி அகலப் புக்கவாறே, ‘இவர் துணிவு பொல்லாததாய் இருந்தது; இவரைப் பொருந்த விடவேண்டும்,’ என்று பார்த்து,
‘வாரீர் ஆழ்வீர், திருவாய்ப் பாடியில் நிகழ்ச்சிகளைக் கேட்டு அறியீரோ!’ என்ன,
கேட்கையில் ஊன்றிய கருத்தாலும் அவன் தான் அருளிச் செய்யக் கேட்க வேண்டும் என்னும் மனவெழுச்சியாலும்
‘அடியேன் அறியேன்’ என்றார்.
‘முன்பு ஒரு காலத்தில் பூமியை எடுத்து வயிற்றிலே வைத்தோம்;
பின்பு அதனை வெளி நாடு காண உமிழ்ந்தோம்;
அதில் ஏதேனும் சிறிது வயிற்றில் தங்கி இருக்கக் கூடும் என்று கருதித் திருவாய்ப்பாடியில் வெண்ணெயை விழுங்கினோம் காணும்,’ என்ன,
‘அதற்கு இதனைப் பரிகாரமாகச் செய்தாயோ!
அது ஒரு காலவிசேடத்திலே; இது ஒரு கால விசேடத்திலே’ என்ன,
ஆஸ்ரிதர்கள் ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் – ‘அடியார்கள் தொட்ட பொருள் உனக்குத் தாரகமாகையாலே செய்தாய் அத்தனை,’ என்ன, ‘
ஆயின், அவ் வெண்ணையினைப் போன்று உம்முடைய சம்ச்லேஷமும் சேர்க்கையும் நமக்குத் தாரகங்காணும்;
ஆன பின்னர், நீர் உம்மைக் கொண்டு அகலுவீராகில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினால் புக்க உலகம் புகுவீர்,’ என்றான்.
அவன் கருத்தைத் தாம் அறிந்தமை தோற்ற அநுபாஷிக்கிறார் இப் பாசுரத்தில்-

நெய் யூண் மருந்தோ -என்கையாலே அவன் நெய் யூண் மருந்து -என்றான் என்று தோற்றுகையாலே
தத் அனுகுணமான அருளிச் செய்கிறார் –
விஷய வைலக்ஷண்யத்தாலும் யுக்தி வைலக்ஷண்யத்தாலும் அது கேட்க்கையில் உண்டான சிரத்தை என்கிறார் –
முன்னம் என்ற பதத்தைக் கடாக்ஷித்து சம காலத்தில் அமுது செய்யில் அன்றோ மருந்தாவது –
அவன் சொன்ன ஹேதுவை தூஷித்தால் அவன் ஹேத்வந்தரம் சொல்ல வேணும் இறே என்றது மாயோனிலே சித்தம் –
வெண்ணெய் விலக்கினார் போலே அநபிமதம் செய்தவர் ஆவீர்-

உண்டாய் உலகு ஏழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண்டான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய் ஊண் மருந்தோ மாயோனே?–1-5-8-

————————-

நீர் தண்ணிதாக நினைத்திருக்கிற உம்முடைய உடம்பு, திருவாய்ப்பாடியில் யசோதை முதலாயினாருடைய
வெண்ணெயைப் போன்று தாரகங்காணும்’ என்றான்;
‘பாவ பந்தமுள்ளவர்களுடைய வெண்ணெய் உனக்குத் தாரகம்; அஃது இல்லாத என்னுடைய ஸ்பரிசம் உனக்கு நஞ்சு’ என்றார்;
‘நஞ்சோ தான், நஞ்சானமை குறை இல்லையே?’ என்றான் இறைவன்;
இவரும் ‘இது நஞ்சே; இதற்கு ஒரு குறை இன்று,’ என்றார்;
‘ஆயின், பூதனையினுடைய நஞ்சு தாரகமான நமக்கு ஆகாதது இல்லை காணும்,’ என்றான்;
என்ன, பொருந்துகிறார்.
இனி, ‘பூதனையை முடித்தது போன்று ‘நான் அல்லேன்’ என்று அகலப் புக்க
என் நிர்ப்பந்தத்தைப் போக்கினான்,’ என்பாரும் உண்டு –

அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகலுகிறதுக்கு ஈஸ்வரன் சமாதானம் பண்ணுகிற பிரகரணத்திலே
பூதநா நிராசனம் சொல்லுகிறதுக்கு பாவம் இரண்டு வகையாக அருளிச் செய்கிறார் –
கீழ்ப் பாட்டோடு சங்கா சமாதான ரூபேண முந்தின அவதாரிகை –விடப்பால் அமுதாவில் நோக்கு
இரண்டாவது -கீழில் பாட்டில் சேர விட்டமையை சித்தவத்கரித்து த்ருஷ்டாந்த பரம் –
இதில் தீய வஞ்சப் பேய் என்கிறதில் நோக்கு
தம்மான் என்னச் செய்தே என்னம்மான் என்றதின் தாத்பர்யம் –
தண்ணிதாக நினைத்து இருக்கிற உடம்பு என்றான் கீழில் பாட்டிலே -என்றபடி –
விடப்பால் அமுதா என்றதின் தாத்பர்யம்-நமக்கு ஆகாதது இல்லை காணும் என்றான் என்னப்
பொருந்துகிறார் இதில் என்கிறார்

மாயோம் தீய அல வலைப் பெருமா வஞ்சப் பேய் வீயத்
தூய குழவியாய் விடப்பால் அமுதா அமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித் தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என் அம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே–1-5-9-

—————————-

இவரை இப்படி இசைவித்து வைத்து, ஒரு புதுமை செய்ய வேண்டாதபடியான பரம பதத்தை
கோடிக்க-அலங்கரிக்கத் தொடங்கினான்.

தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்-என்ற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
புதுமை -நூதனத்வம் அதிசயம் / கோடிக்க -அலங்கரிக்க

சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்துத்
தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ் மேல் அளவு இறந்து
நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே–1-5-10-

——————————

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியைக் கற்று உணர வல்லார்கட்கு,-அப்யஸிக்க வல்லாருக்கு –
இறைவன் வரக் கொள்ளத் தம் தாழ்மையை நினைத்து அகன்று -அயோக்ய அநுஸந்தானம் பண்ணி அகன்று –
இவர் பட்ட கிலேசம் பட வேண்டா,’ என்கிறார்.

பிரகரண அனுகுணமாக அவதாரிகை –

மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே–1-5-11-

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்