Archive for April, 2019

அமுத துளிகள் –உபன்யாசங்களில் இருந்து தொகுத்தவை

April 29, 2019

ஸ்ரீ திருக்குடந்தை -ஸ்ரீ ஆழ்வார்கள் மிகவும் அனுபவித்த ஸ்ரீ திவ்ய தேசம் –
முதலிலும் முடிவிலும் ஸ்ரீ நம்மாழ்வாரும் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும் மங்களா சாசனம்

பன்றியாய் -ஆழியான் அருளே -ஸ்ரீ வராஹ நாயனார் இடம் முதலிலே
ஈடுபாடு -ஞானப்பிரானை அல்லால் இல்லை போலவே
குடந்தை மேய குறு மணித்திரளே இன்ப பாவினை -ஞான த்ருஷ்டியால் அருளிய அருளிச் செயல்
திருமலை -பேயாழ்வாரும் -கலியனும் திருக் குறும் தாண்டகத்திலும்
————————–

ஓட்டைக்கைக்கும் யானைக்கும் இடையே ஓர் ஆயிரம் மைல் தூரம் ஆனால் இடையே நடக்கும் புடவை வியாபாரம் –
ஒட்டகை த்வாரகைக்கும் யானை ஹஸ்தி -ஹஸ்தினா புரத்துக்கும்

————————–

விஸ்வ மித்ரர் -லோக பார்த்தா விஸ்வம் லோகம் என்றும் பர ப்ரஹ்மம் என்றும் –
சீதா ராமரை இருவரையும் லோகத்துக்கு கொடுத்தவர் என்றும் சீதையை பெருமாளுக்கு கொடுத்தவர் என்றுமாம் –
பட்டர் பிரான் -பட்டர்களுக்கும் –வேதம் அனைத்தும் அன்று ஓதிய பட்டன் அவனுக்கும் உபகாரகர்

பரத்வம் -ஸ்ரீ யபதித்வம் பால காண்டம் –
சிற்றவை பணியால் முடி துரந்த தேவை திருவல்லிக்கேணி கண்டேன் -ஸுலப்யம் ஆரண்ய காண்டம் –
முடிவிலும் பரத்வ காண்டம் தேவர்கள் தொழுத வ்ருத்தாந்தம்
பத்ரம் தே -இருவருக்கும் சொல்லாமல் இவருக்கு மங்களா சாசனம் -இவர் வாழ அனைவரும் வாழலாம்
பாணி கிரஹணம் -ஸ்ரீ சீதா திருக்கையை முன் சொல்லி-செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
அணி மிகு தாமரைக் கை அடிச்சியோம் நம் தலை மிசையே அவன் திருக்கை

————————-
யாதிருச்சியா -மூன்று இடங்கள் ஸ்ரீ ராமாயணத்தால் –
ஸஹ பத்நயா விசாலாக்ஷி-கூனியை மாடியிலே ஏத்தினான் கோலாகலம் பார்க்க
சூர்ணபாகா வந்தது /அவன் சங்கல்பம் படி நடந்தவை
ஸ்ரீ ராமானுஜன் -லஷ்மண பூர்வஜா -இருவரையும் ஒருவரைக் கொண்டே நிரூபணம் –
ஸ்ரீயபதி விஷ்ணு பத்னி என்று இருவரையும் சொல்லுமா போலே –
பிரவ்ருத்தி மார்க்க கைங்கர்யம் -ஸ்ரீ இளைய பெருமாள் -நிவ்ருத்தி மார்க்க கைங்கர்யம் ஸ்ரீ பாதுகை -இவை இரண்டையுமே ஆய -சொல்லுமே
ஒருவர் தபஸ் இருந்து நான்கு ரத்தினங்கள் இங்கே -நால்வர் தபஸ் இருந்து ஸ்ரீ கோபால ரத்னம் அங்கே -இரண்டும் விலக்ஷணம்
ஆத்ம சஹா -உகந்த தோழன் -ஸ்ரீ ஆழ்வார் / ஒரு நாள் முகத்திலும் விழித்தாரைப் படுத்தும் பாடு -சதா பஸ்யந்தி அங்கே –
—————————-

maiden attempt -தாடகை பெருமாள் -பூதனை கண்ணன் –முதலில் கன்னிப் போர்-
ஸ்ரீ அகிலிகை ரஜஸால்-ரஜஸ் குணத்தால் – பெண்மை இழந்து ரஜஸ்ஸாலே ஸ்ரீ பெருமாள் திருவடி துகளாலே -மீண்டு எழுந்தாள்
நந்தலாலா -கண்ணன் திருவடி எண்ணுக மனமே -திண்ணம் அழியா வண்ணம் தருமே
அன்னை உலகத்தை மறந்தாள் ஒருமை உற்றாள்-ஹரி ஹரி ஹரி என்றாள்-பாரதியார்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே –
அன்னை துகிலை மன்றிடை உரிதல் உற்றான் -உள் ஜோதியில் கலந்தாள் தஹர வித்யை -பாஞ்சாலி சபதம்
ஹ்ருத் கமல வாசா -சமஸ்க்ருதம் அறிந்தவர்
திரௌபதி -அன்னை என்கிறார் -அனைத்தும் செய்தது இவளது மங்கள ஸூத்ரத்துக்காகவே என்பதை அறிந்தவர்
கரியினுக்கு அருள் புரிந்து அன்று கயத்தின் இடை –பெரியதோர் பொருள் ஆனாய் -பேச யாரும் பல மறை பொருள் ஆவாய்
ஸ்ரீ சக்கரம் ஏந்தி -அக்ஷர பொருள் ஆவாய் கண்ணா அக்கார அமுது உண்ணும் பசும் குழந்தை –
சதுர் முக வேதனைப் படைத்தாய் –முனிவர் அகத்தினில் இருப்பாய் –
கருடன் மிசை சோதிக்குள் ஒன்றிடுவாய் -வேத புருஷன் –
பாரதம் -பா அறிவு ஜோதிகளில் ஈடுபடும் தேசம்-

———————————-

நல்லான் சக்கரவர்த்தி வம்சம் ராஜாஜி /
குப்புசாமி என்பவன் -சாவே வராத வரம் -வாங்கி -குப்புமி என்றே பெயரை சொன்னான் /
சாகாத வரம் கொடுப்பார்கள் இவர்கள் இல்லையே
குமாரா தாரா -குமரன் தபஸ் -வேல் வாங்கிய -வ்ருத்தாந்தம் -திருவேங்கடமுடையான் /
வேல் நெடும் கண்ணி பார்வதி -கொடுத்து வாங்கி கொண்டான் / சூரா சம்ஹாரம் /
அழகர் கோயிலில் ஒய்வு எடுக்க பலம் தரும் சோலை -கள் அழகர் இடம் கொடுக்க -அழகர் பக்தன் இடம் கொடுக்க சொல்லி –

கோ செங்கண் சோழன் –நாயனாரை பாடிய திரு மங்கை ஆழ்வார் –ஒன்பது தடவை பாடி அருளி -எண் தோள் யீசர்க்கு எழுபது செய்தவன் –
முருகன் கார்த்திகை -வேல் –படைத்தளபதி ஆறு முகம் போலே ஆறு பிரபந்தங்கள் -முருகன் -இளைமை மிடுக்கு -ஞான சம்பந்தர் -முருகன் –
சாமசமாதானம் மாணிக்க வாசகர் /தானம் ஞானப்பால் /பேதம்-சுந்தரர் /தண்டம் -திரு
ஆளுடைய பிள்ளை ஞானப்பால் -சேக்கிழார் -தோடுடைய செவியன் -விடை ஏறி -என் உள்ளம் கவர் கள்வன் -சிவ பாத ஹ்ருதயர் தந்தை –
முதல் -20-குரங்கி –காளை மாடு / மூன்றாவது -20-பக்தி ஆன்மிகம் / நாய் போலே காவல் அடுத்து /வவ்வால் போலே கடைசி இருப்பது
வேய்ஞாயிறு தீக்கனல் சகுனம் கவலை இல்லை -தசாவதாரம் -வியந்தை காந்தாரம் பண் -/
திரு ஏழு கூற்று இருக்கை -57-வரிகள் இருவரும் பாடி -ஆழ்வார் -46-அடி / அதிசயங்கள்
இருவரும் சந்தித்து -சீர்காழி

——————-

மடியிலா மன்னவன் எய்தும் உலகு அளந்தான் தாய் அதுவும் ஒருங்கு -திருக்குறள் –
குறள் பாடும் குறள் சிறப்பை பாட சொல்லி பாடி -நாலுகவிப்பெருமாள் பட்டம் பொருந்தும் –
அகத்துறை பாட்டுப்பாடி பாராட்டினார் ஞான சம்பந்தர்
மண்ணுண்ணி மாப்பிள்ளை காக் இறையே கூ இறையே உங்கள் அப்பன் கோயில் பெருச்சாளியே
கன்னா பின்னா மன்னா தென்னை சோழ அரங்க
நாராயணன் உண்டு உமிழ்ந்த -மா பிள்ளை மண் மணம் தான் போலே கா தேவ லோக இறை கூ பூ லோக சக்கரவர்த்தி –
கோ சக்கரவர்த்தி -இல் -அரண்மனையில் ஆளி சிங்காசனத்தில் -பெரிய ஆளி
கன்ன கர்ணன் -போன்ற கொடை வள்ளல் பின் பிறந்தான்-தம் பின் தன் விந்தை தந்தவன் தந்தை –
தன் கை போலே -தங்கை தாங்குபவள் தாய் ஆக்குபவள் அக்கா -கர்ணன் தம்பி என்று பாராட்டு
பெண் பாவத்தால் பாடி –
கடி உண்ட நெடு
ஆலி நாடா படி உண்ட பெருமானை வழிப்பறி பாடி பதம் பெற்ற –
ஆழ்வாரும் பாட -வேலை தந்த வ்ருத்தாந்தம் -ஆறாயிரப்படி குரு பரம்பரையில் உள்ள வ்ருத்தாந்தம் தளபதி ஆரம்பம்
சனத்குமாரர் -குமாரர் -தளபதி இடம் முடிந்து கனவில் தொடங்கி கவிதைகளில் முடிந்த கதை
இரண்டு நல்ல கவிகள் கர்வம் இல்லாமல் வாயாரப் பாடி –

படி -மேலே ஏறி -நடை பாதை -ரேழி -கூடம் -சத்சங்கம் -சமையல் பக்கம் -பூஜை -த்யானம் -முற்றம் முக்தி நிலை –

——————————

பெரிய திருமொழி அந்தாதி பதிகம் -11-3-
தசாராவதாரம் -11–4-ஹம்ஸாவதாரம் சேர்த்து -துள்ளல் ஓசையுடன் உள்ள பாடல்கள் –

———————————–

காயா வேங்கை / பாயா வேங்கை –
கார் கொள் வேங்கை /போர் கொள் வேங்கை /
பிண்டி அசோகா மரம் பூ -தழல் -வண்டுகள் நெருப்பு என்று நினைத்து -பயமும் பய நிவர்த்தகமும் நித்யம்

———————————–

ஸ்ரீ ஆழ்வார்கள் கண்டு அனுபவித்த பஞ்சாம்ருதம் –
1-சீரார் செந்நெல் கவரி வீசும் செலு நீர்த்த திருக் குடந்தையில் ஆராவமுதே –ஆராவமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
2-கொண்டல் வண்ணன் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தான் அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுது
3–அடியேன் மேவி அமர்கின்ற அமுதே –திருவேங்கடத்து எம்பருமானே —
4–எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே திரு மாலிரும் சோலைக் கோனே
5–மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ் சோலை மலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே —

—————————————

ஸ்ரீ விஷ்ணு புராண மஹிமை
அக்னி சிவன் -தாமஸ / தன்னை -ரஜஸ / விஷ்ணு -சாத்விக -நான்முகன் -செய்ய வேத வியாசர் –4-லக்ஷம் ஸ்லோகங்கள்
ராஜஸ -சுவர்க்கம் / மோக்ஷம் -சாத்விக / தாமச -சம்சாரம் நரகம் –
சர்க்கம் பிரதி சர்க்கம் -வம்சம் வம்சா நுசரிதம் -மன்வந்தரம் —ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் வம்சாதிகள் -சரிதம் காலம் புராண லக்ஷணம்
புரா அபி நவ புராணம் –கேட்க கேட்க துஷ்யந்த ச ரமயா ச –
ஸ்ரீ பராசரர் -ஸ்ரீ மைத்ரேயர் உபதேசம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-அம்சங்கள்-/
சாத்விக புராணம் –ஸ்ரீ மத் -பாகவதம் -புராண ரத்னம் -அந்யத் உபலபத்ய -அர்த்த பஞ்சகம் ஸ்பஷ்டம் -/
கடைசி ஜென்மத்தில் தான் ஸ்ரீ விஷ்ணு புராணம் கேட்க்கும் பாக்யம் கிட்டும் -கேட்டு அதன் படி இருந்தால் -இதுவே –
சேது கயா கங்கா காஞ்சி புஷ்கரம்-இதில் ஒரு கலா பாகத்துக்கு ஒவ்வாது
வேத சாரம் -காட்டிக் கொடுக்கும் புராணம் –
வேதம் -புருஷ சூக்தம் சாரம் / தர்ம சாஸ்திரம் -மனு சாஸ்திரம் சாரம் / மஹா பாரதம் –ஸ்ரீ கீதை சாரம் /

ஸ்ரீ ராமாயணம் -சிறை இருந்தவள் ஏற்றம் சொல்ல -ஸ்ரீ மஹா பாரதம் தூது போனவன் ஈரம் சொல்ல
ஸ்ரீ விஷ்ணு புராணம் -தத்வ த்ரய விளக்கம் -ஞானம் -பக்தி பிரபத்தி மார்க்கம் -ஸ்ரீ ஆளவந்தார்

ஸ்லோகம் -4- அவதாரிகை –

ஸ்ரீ பெரிய முதலியார் ஜ்ஞானத்துக்கு –
லோக பரிக்ரஹம் மாத்ரம் அன்றிக்கே
வேதவிதக்ரேசர பராசரானுமதியாலே
ப்ராமாணிகத்வம் உண்டு என்று
இவ்வர்த்தத்தின் உடைய ப்ராமாணிகத்வம் சொல்லுகிறது
கிஞ்ச
இவர்க்கும் ஸ்ரீ பராசர பகவானுக்கும் ஸ்வபாவ ஐக்கியம் உண்டு
ஸ்ரீ கிருஷ்ண ப்ராவணயமும்
லோகத்துக்கு பண்ணின ஔதார்யமும்
இருவருக்கும் உண்டு
அத்தாலும் அவரை நமஸ்கரிக்கிறார் –

தத்த்வேன யஸ் சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வபாவ
போக அபவர்க்க தத் உபாய கதீ உதார
ஸ்ந்தர்ஸ்யன் நிரமிமீத புராண ரத்னம்
தஸ்மை நமோ முநிவராய பராசராய –4-

தத்த்வேன –
ஜ்ஞாதவ் யார்த்தங்களை உள்ள படியே காட்டுகை –
ச ஹோவாச வியாச பாராசர்ய -என்கிற பிரமாண பிரசித்தியை பிரகாசிப்பிக்கிறது –

சித் –
ஆத்மா ஸூ ததோ அஷரஸ் சாந்தோ நிர்க்குண ப்ரக்ருதே பர
ப்ரவ்ருத்த்ய பசயௌ நாச்ய சைகஸ் யாகில ஜந்துஷூ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-13-71-இத்யாதி –
இதில் நிர்க்குண த்வம் ஆவது –சத்வாதி குணா ராஹித்யம் .
ஏக ச்யாகில ஜந்துஷூ -தேவ திர்யக் மனுஷ்யாக்ய சர்வ ப்ரானிஷூ ஏகச்ய -ஜ்ஞானைக ஆகாரத யாசம இத்யர்த்த -என்றும்
நிர்தோஷம் ஹி சமம் ப்ரஹ்ம -என்றும்
பண்டிதாச் சம தர்சின -இதி பகவதைவோக்தம்-

அசித் –
அசம்ஜ்ஞா வத்தான அசேதனம் –
விகார ஜநநீம் அஜ்ஞாம்-இத் யுபநிஷத்
தத்ராபி பராசர –
த்ரிகுணம் தஜ்ஜகத் யோனி அநாதி ப்ரபவாப்யயம் அஷய்யம் -இத்யாதி

ஈஸ்வர
உபயோர் நியந்தாவான ஸ்வாமி –
தத்ராபி பராசர –
பரமாத்மா ச சர்வேஷா மாதார பரமேஸ்வர
விஷ்ணு நாமா ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே -என்றும்
பர பராணாம் பரம பரமாத்மாத்ம சம்ஸ்தித
ரூப வரணாதி நிர்தேச விசேஷண விவர்ஜித
சர்வத்ரா சௌ சமஸ்தஞ்ச வசத்யத்ரேதி வை யத
ததஸ் ச வாசு தேவாதி வித்வத்பி பரிபட்யதே -இத்யாதி –

தத் ஸ்வபாவ-
தேஷாம் ஸ்வ பாவ தத்ர ஸ ச –
ப்ரதாநஞ்ச புமாம்ச்சைவ சர்வ பூதாத்மா பூதா
விஷ்ணு சக்த்யா மகா புத்தே வருதௌ சம்ச்ரய தரமிநௌ-இத்யாதி

போக –
ப்ரஹ்மாதி பிபீலி காந்தமான பத்த சேதன வர்க்கத்துக்குக்
கர்ம அனுகுணமாக தாரதம் யேன அனுபாவ்யமான சப்தாதிகள் –

அபவர்க்க –
சப்தாதிகள் உடைய அல்ப அஸ்திரத்வாதி தோஷ தர்சனத்தாலே பீதரான சேதனருக்கு துக்க நிவ்ருத்தி ரூபமான
ஆத்மபிராப்தியும் -ஸூகைகதமான பகவத் பிராப்தியும் .-

தத்ராபி ஸ –
யோகி நாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம சந்தோஷ காரிணாம் –
ததச்ய த்ரிவித ஸ்யாபி துக்க ஜாதஸ்ய -இத்யாரப்ய –
நிரஸ்தாதிசய ஆஹ்லாத ஸூ காபாவைக லஷ்ணா
பேஷஜம் பகவத் ப்ராப்தி ஏகாந்தாத் யந்திகீ மதா -இத்யாதி –

தத் உபாய கதீ –
போக மோஷங்கள் உடைய சாதன பேதங்களை
நித்ய நைமித்திக காம்ய கர்ம அனுஷ்டானம் போகச்ய-
சாங்கா நுஷ்டித கர்மசாத் யஜ்ஞானயோகாதி ஆத்மப்ராப்தே
ஜ்ஞான கர்மானுக்ருஹீத பக்தி பிரபதிஸ்ஸ பகவத் பிராதே

உதார-
சம்சாரிகள் பக்கல் அர்தித்வம் ஆதல் -பிரயோஜனம் ஆதல் -நினையாதே
இவர்கள் அனர்த்த பரிஹாரமே பிரயோஜனமாக உபகரித்து அல்லது நிற்க மாட்டாத மேகம் போலே உபகரித்தவர் –

ஸ்ந்தர்ஸ்யன் –
சம்சய -விபர்யய -ரஹிதமாக -பிரத்யஷிப்பியா நின்று கொண்டு –
நிரமிமீத –
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ பொருளை -நான் முகன் திருவந்தாதி -1- என்கிறபடியே
துரவகாஹமான வேதார்த்தத்தை அல்ப க்ரந்தாத்தாலே பண்ணினான் -என்கை –

ஸ்ரீ புராண ரத்னம்-
புராணம் ஆவது -சர்க்கச்ச பிரதி சர்க்கச்ச -இத்யாரப்ய
புராணம் பஞ்ச லஷணம் -என்கிற படியே பஞ்ச லஷனோபேதமான கிரந்த சாதம்
புராபி நவம் புராணம் -என்றுமாம் –
அதாவது -ஸ்வ ரசத்தை என்றும் ஒக்க ஒருவரால் அழிக்க ஒண்ணாது இருக்கை –

ரத்னம் –
அர்த்த பிரகாசகமாய் இருக்கையும் –
சங்க்ரஹமாய் இருக்கையும் –
ஆபத் ரஷகமாய் இருக்கையும் –
இந்தப் புராணாதிகாரிக்கு லோக பரிக்ரஹம் சித்திக்கையும் –

தஸ்மை நமோ –
முநிவராய –
தனக்கு வரம் கொடுத்த வசிஷ்ட புலஸ்த்யர்களுக்கு
முத்ரிதா முத்ரித பிரதி முத்ரிதராய்
அத்தாலே அவர்கள் படியை உடையவன் -என்னுதல் –
முநிநாம் வரணீயாய் – என்கிறபடியே -அவர்களுக்கு ஆதரணீயன் -என்னுதல்

பராசராய —
பரராகிரார் -பாஹ்ய குத்ருஷ்டிகள்
அவரை பிரமாண சரங்களாலே ஹிம்சித்து
வைதிக மரியாதையை ஸ்தாபித்தான் -என்னுதல் –
இந்திரிய ஜயத்தாலே ரஜஸ் தமஸ் ஸூக்களை ஜெயித்தான் -என்னுதல்

யா உதார சித் அசித் ஈஸ்வர
தத் ஸ்வ பாவ போக அபவர்க்க தத் உபாய கதீ
தத்த்வேன சந்தர்சயன்
புராண ரத்னம் நிரமிமீத
முநிவராய பராசராய நம -என்று அந்வயம்–

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜர் தர்சனம் – முக்கிய தாத்பர்யங்கள்/ஸ்ரீ இராமானுச திருநாமம் விளக்கம் / ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரங்கள் விளக்கும் –

April 29, 2019

ஸ்ரீ யபதியே பரத்வம் -அர்ச்சையே / ஆழ்வார்கள் / ஆச்சார்யர்கள் /
குருபரம்பரை -விசிஷ்டாத்வைத சித்தாந்தம் -ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி –

ஸ்ரீ ராமானுஜர் தர்சனம் ஏழு முக்கிய தாத்பர்யங்கள்
1-சரீராத்மா பாவம்
2-ஸ்ரீ மன் நாராயணன் பாராம்யம்
3-ஸமஸ்த வாஸ்ய -சர்வாத்ம பாவம் -சர்வ காரணத்வம்-
4-சர்வ கர்ம சமாராதத்வம்
5-பக்தி பிரபத்தி வசீகரத்வம்-இதயம் நல்ல எண்ணம் இதய எண்ணெய் ஒழுக்கு போலே இடைவிடாமல் தியானமே பக்தி
6-சரணாகதி எளிமை கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து கொக்கு பிடிக்கும் கதை
7-போக சாம்யம் –நான் உன்னை அன்றி இலேன் –
அவள் இல்லாமல் நான் இல்லை சினிமா பாடல் இதைப் பின்பற்றியே என்று வாலியே சொல்லிக் கொண்டார்
திரு மழிசை ஆழ்வார் பாடலை பின் பற்றி எழுதினேன் /நித்ய விபூதி அனைவருக்கும் -கிட்டும் /
நரை கமழ் பால் குடிக்கும் கலவுக்கு பிள்ளைப் பெருமாள் –ஏலக்காய் பால் கறக்கும் பசு —

———————————

1–ஸ்ரீ யபதித்தவம்

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -1-
கோவிலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன் -10-
அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் -16-
வெறி தரு பூ மகள் நாதனும் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே-19-
நாங்கள் பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் -28-
அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் -33-
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காண கில்லா உலகோர்கள்-41-
மா மலராள் நாயகன் எல்லா யுயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் -42-
மா மலராள் புணர்ந்த பொன் மார்வன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும் குணம் திகழ் கொண்டல் இராமானுசன் -60-
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு வானம் கொடுப்பது மாதவன் -66-
மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் -78-
அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாகம் மன்னும் பங்கய மா மலர்ப்பாவையைப் போற்றுதும் -108-

————————————

2–சரீராத்மா பாவம் —

வந்து நீ என்னை யுற்ற பின் உன் சீரே யுயிர்க்கு யுயிராய் அடியேற்கு இன்று தித்திக்கும் -25-
கொழுந்து விட்டு ஓங்கிய யுன் வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் -27-
மா மலராள் நாயகன் எல்லா யுயிர்கட்கும் நாதன் அரங்கன் -42-
பற்பல் உயிர்களும் பல்லுலகு யாவும் பரனது என்னும் நற்பொருள் தன்னை இந் நாநிலத்தே வந்து நாட்டினனே -53-
உயிர்கள் மெய்விட்டு ஆதிப்பரனோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ் வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம்மிராமாநுசன் மெய்ம் மதிக்கடலே -58-
உயிரை யுடையவன் நாரணன் -59-
எல்லா உயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் எம்மிராமாநுசன் மிக்க புண்ணியனே -91-
உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே பண்ணும் பரனும் -95-
அவை தன்னோடும் வந்து இருப்பிடம் மாயன் இராமானுசன் -106-

————————————————————————————–

3–ஸமஸ்த வாஸ்ய -சர்வாத்ம பாவம் -சர்வ காரணத்வம்-

ஊழி முதல்வனையே பன்னப் பணித்த இராமானுசன் -4 –
மூவுலகும் பூத்தவனே என்று போற்றிட -22-
மன் பல்லுயிர்கட்க்கு இறைவன் மாயன் என மொழிந்த அன்பன் அனகன் இராமானுசன் -30-
இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து அறம் செப்பும் அண்ணல் இராமானுசன் -47-
பற் பல்லுயிர்களும் பல்லுளுக்கு யாவும் பரனது என்னும் நற் பொருள் -53-
யாவும் சிதைந்து முன்னாள் அந்தமுற்று ஆழ்ந்தது கண்டு அவை என் தனக்கு அன்று அருளால் தந்த வரங்கன் -69-
எல்லா யுயிர்கட்க்கும் நாதன் அரங்கன் -91-

—————————-

4-சர்வ கர்ம சமாராதத்வம்
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற் காமமும் என்று இவை நான்கு என்பர்
நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் -40-
உன் தன் குணங்களுக்கே தீர்ந்தது என் செய்கை-71-

———————————————-

5-பக்தி பிரபத்தி வசீகரத்வம்-
தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள் சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே -10-
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன் -29-
தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ்ப் பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே -31-
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் -37-
மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள் உற்றவர் தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன் -57-
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தோறும் நாய்பாவர்க்கு வானம் கொடுப்பது மாதவன்
வல்வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினர்க்கு அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே -66-

———————

6-சரணாகதி எளிமை –
வல்வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினர்க்கு அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே -66-
அரங்கனுக்கு தன் சரண் தந்திலன் தான் அது தந்து எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே -69-
உன் பத யுகமாம் ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய கார் கொண்ட வன்மை இராமானுச இது கண்டு கொள்ளே -83-
பத்தி எல்லாம் தங்கியது என்னத்த தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ மன்னவே -108-

————————

7-போக சாம்யம் —
வந்து நீ என்னை உற்ற பின் உன் சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே-25-
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரும் ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே -41-
இரவும் பகலும் விடாது என் தன் சிந்தையுள்ளே நிறைந்து ஒப்பற இருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே -47-
இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்தான் இவை எம் இராமானுசன் செய்யும் அற்புதமே -52-
அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன் இன்னம் உற்றன ஓதில் உலப்பில்லையே -84-
தவம் தரும் செல்வம் தகவும் தரும் சலியாப்பிறவிப் பவம் தரும் தீ வினை பாற்றித் தரும்
பரந்தாபம் என்னும் திவம் தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்க்கு -94-

——————————-

ஸ்ரீ இராமானுச திருநாமம் விளக்கம்

மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன்
பொருவரும் சீர் ஆரியன்
திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன்
பூதத்திருவடி தாள்கள் நெஞ்சத்துறைய வைத்து ஆளும் இராமானுசன்
தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் இராமானுசன்

பாண் பெருமாள் சரணாம் பதுமத்தாரியல் சென்னி இராமானுசன்
மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது அடங்கும் இதயத்து இராமானுசன்
சீர் அரங்கத்து ஐயன் கழற்கு அணியும் பரன்
கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன்
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையான் தாள் பேராத உள்ளத்து இராமானுசன்

சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல்
நீலன் தனக்கு உலகில் இனியான்
சடகோபனை சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் உய்வதற்கு உதவும் இராமானுசன்

மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே இராமானுசன் எனக்கு ஆரமுதே
நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன் என் தன் மா நிதியே
யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்றுடைய இராமானுசன்
வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமானுசன்
நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமானுசன்

புறச்சமயங்கள் நிலத்து அவியக் கைத்த மெய்ஞ் ஞானத்து இராமாநுசன் என்னும் கார்
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன்
பல்லுயிர்கட்க்கு இறைவன் மாயன் என மொழிந்த அன்பன் அநகன்
தென் அத்தி யூரர் கழலிணைக் கீழ்ப் பூண்ட அன்பாளன்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த அரும் தவன்

பொன்னரங்கம் என்னில் மயிலே பெருகும் இராமானுசன்
இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில்
புண்ணியர் தம் வாக்கில் பிரியா இராமானுசன்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே
அண்ணல் இராமானுசன்

தீதில் இராமானுசன்
நல்லார் பரவும் இராமானுசன்
தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத் தான் அதில் மன்னும் இராமானுசன்
தொல் சீர் எதித் தலை நாதன்
தேர் விடும் கோனை முழுது உணர்ந்த அடியவர்க்கு அமுதம்

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை ஆளவந்த கற்பகம்
தென்னரங்கன் தொண்டர் குலாவும் இராமானுசன்
பண் தரு வேதங்கள் பார் மேல் நிலவிடப்பார்த்து அருளும் கொண்டல்
கோக்குல மன்னரை மூ வெழு கால் ஓர் கூர் மழுவால் போக்கிய தேவனைப் போற்றும் புனிதன்
மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள் உற்றவரே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன்

எம் இராமானுசன் மெய்ம்மதிக் கடலே–சத்யம் ஞானம் அநந்தம் -நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்
அரு முனிவர் தொழும் தவத்தோன்
இராமானுசன் மிக்க பண்டிதனே
பண் தரும் மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்
இராமானுச எம் பெரும் தகையே

இராமானுசன் என்னும் சீர் முகிலே
கலைப் பெருமாள் ஒலி மிக்க பாடலை யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன்
போற்ற அரும் சீலத்து இராமானுச
இந் நீணிலத்தே என்னை ஆள வந்த இராமானுசன்
எம் இராமானுசன் மிக்க புண்ணியனே

இராமானுசன் என்னும் மெய்த் தவனே
இந் நீணிலத்தே பொற் கற்பகம் எம் இராமானுசன்
இராமானுச என் செழும் கொண்டலே
நல் வேதியர்கள் தொழும் திருப் பாதன்

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவரங்கச் சோலை -ஸ்ரீ கோயில் வித்வான் ஸ்ரீ நரசிம்ஹ ஆச்சார்யர் ஸ்வாமிகள் /வண்டு-மயில் -குயில் -கொண்டல்-ஸ்வாபதேசம் ஸ்ரீ ஆச்சர்ய ஹ்ருதய வியாக்யானம் —

April 28, 2019

ஸ்ரீ திருமாலை -14-வண்டினம் முரலும் சோலை -மயிலினம் ஆலும் சோலை –
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை –

———-

மயில் பிறை வில் அம்பு
முத்துப் பவளம் செப்பு மின்
தேர் அன்னம் தெய்வ உரு
விகாஸ சுத்தி தாந்தி
ஞான ஆனந்த அனுராக
பக்த்ய அணுத்வ போக்யதா கதிகளை உடைய
அக மேனியின் வகுப்பு —ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் –சூர்ணிகை -137-

(மயில் -விகாசம் /பிறை -சுத்தி /வில் -தாந்தி /அம்பு -ஞானம் /முத்து -ஆனந்தம் /பவளம் -அநு ராகம் /
செப்பு -பக்தி /மின் -அணுத்துவம் /தேர் -போக்யதை/அன்னம் -கதி/அகமேனி -ஆன்ம ஸ்வரூபம்-என்றவாறு )

மயில் விகாசம்
அதாவது
தோகை மா மயிலார்கள் –6-2-2–என்று ஸ்திரீகளை மயிலாக சொல்கிறது –
அகல பாரா விஸ்த்ருதியை இட்டாகையாலே -அத்தால் இங்கு ஆத்மாவினுடைய ஞான விகாசத்தைச் சொல்லுகிறது —

————–

சூரணை-152-

வண்டு தும்பிகள் என்கிறது யாரை என்று அருளி செய்கிறார் மேல்–

என் பெறுதி என்ன பிரமியாது
உள்ளத்துளூறிய மது வ்ரதமாய்
தூமது வாய்கள் கொண்டு
குழல் வாய் வகுளத்தின் சாரம் க்ரஹித்துத்
தே தென வென்று ஆளம் வைத்துச்
சிறு கால் எல்லியம் போது
குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம்
தலைக் கொள்ளப் பாடித் துன்னிட்டு
நெருக்க நீக்கென்று கடந்து புகும்
தகைவறப் புக்கு வண்டு ஒத்து இருண்ட குழலிலே
சங்கை அற மருவி அருளாத யாம் என்று ஓடி வந்து
வாசமே ஊதி வண்டே கரியான
தெய்வ வண்டோடே சேர்விக்கும்
சேமமுடை நாரதர் முனி வாஹனர் தம்பிரான்மார்
போல்வாரை வண்டு தும்பி என்னும்-

அதாவது
என் பெறுதி என்ன பிரமியாது
கோல் தும்பீ ஏரார் மலர் எல்லாமூதி நீ என் பெறுதி–பெரியாழ்வார் -8-4-5 – என்று
நிவர்திப்பிக்க வேண்டும் படி- அப்ராக்ருத விஷயங்களை போக்கியம் என்று பிரமியாதே-
(இது ஒன்றே வண்டுகளும் தும்பிகளுக்கும் இவருக்கும் உண்டான வாசி -மேல் எல்லாம் ஒற்றுமைகள் _
உள்ளத்துளூறிய மது வ்ரதமாய் –
உளம் கனிந்து இருக்கும் அடியவர் உள்ளத்துளூறிய தேனை -பெரிய திருமொழி -4-3-9-என்று
தன்னுடைய சௌந்தர்ய சீலாதிகளை நினைத்து ஹிருதயம் பக்குவமாய் இருக்கும்
சேஷ பூதருடைய ஹிருதயத்தில் ஊறிய தேனை -என்கிற பகவத் விஷயம் ஆகிற மதுவை விரும்பி –
த்வாம் ருதஸ்யந்தினி பாத பங்கஜே நிவேசிதாத்மா கதமன்யதிச்சதி –
ஸ்திதேரேவிந்தே மகரந்த நிர்ப்பரே மது வ்ரதோ நேஷூரகம் ஹி வீஷதே – ஸ்தோத்ர ரத்னம் -27-என்கிறபடி-
மற்று ஒன்றை புரிந்து பாராதே இத்தை புஜிக்கையே வ்ரதமாக உடையவராய் —

தூ மது வாய்கள் கொண்டு —
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டு -என்று
பகவத் போக்யதா அனுபவத்தாலே பரிசுத்தமான இனியதான வாயைக் கொண்டு ..
குழல் வாய் வகுளத்தின் சாரம் க்ரஹித்து என் குழல் மேல் ஒளி மா மலரூதீரோ -திருவாய் -6-8-3–என்கிறபடியே
நாள் கமழ் மகிழ் மாலை மார்பர் –4-10-11–ஆகையாலே வகுள தாரரான ஆழ்வார் உடைய
வைகுந்த மன்னாள் குழல் வாய் விரை போல் விண்டுகள் வாரும் மலருளவோ நும் வியலிடத்தே–திருவிருத்தம் –55 -என்று
பரத்வாதிகள் போக்யதையும் பரிச்சின்னம் என்னும் படியான திருக் குழலிலே வைத்த –
ஒளி மா மலரான-வகுளத்தின் சாரத்தை கிரஹித்து அவ்வழியாலே
இத் தலையில் போக்யத்தை அனுபவித்து –

தே தெனவென்று ஆளம் வைத்து –
வரி வண்டு தே தென வென்று இசை பாடும் –பெரிய திருமொழி -4-1-1-
யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் –பெரியாழ்வார் -4-8-6–என்கிற படியே
இப்படி பகவத் பாகவத போக்யதைகளை அனுபவித்து -செருக்குக்குப் போக்கு வீடாக ஆளத்தி வைத்து-
(இத்தால் யாழில் இசை வேதத்து இயல்களை வாயாரப் பாடிக் கொண்டு இருக்கும்படியைச் சொன்னவாறு )

சிறு கால் எல்லியம் போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ள பாடித் —
(இத்தால் -எம்மானைச் சொல்லிப் பாடி -பண்கள் தலைக் கொள்ளப் பாடி –
வேத முதல்வனைப் பாடி -கொண்டு இருத்தலைச் சொன்னவாறு )
அறுகால் வரி வண்டுகள் ஆயிரம் நாமம் சொல்லி சிறு காலை பாடும் –பெரியாழ்வார் -4-2-8–என்றும் –
எல்லியம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி –பெரியாழ்வார் -4-8-8–என்றும்
வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் -பெரிய திருமொழி -2-1-2-என்றும் –
வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் -பெருமாள் -8-4-என்றும் –
கந்தார மன் தேனிசை பாட-பெரிய திருமொழி -3-8-1 -என்றும் –
என்கிறபடியே காலோசிதமான பண்களை –
பண்கள் தலைக் கொள்ளப் பாடி-திருவாய் -3-5 2–என்கிற படி தலைமை பெறும் படி பாடி —

துன்னிட்டு நெருக்க நீக்கு என்று கடந்து புகும் தகைவற புக்கு –
(இத்தால் வண்டுகள் மிக நெருக்கமான இடங்களிலும் தடை இன்றி செல்லும் -தன் இனமான பொருள்களோடு நட்பு கொள்ளும் –
இறைவன் சந்நிதியில் அச்சம் சிறிதும் இன்றி நிற்கும் –
அவ்வாறே இவர்களும் நேச நிலைக்கதம் நீக்கு என்று சொல்லி -பொன்னியியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு-
அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களோடே சேர்ந்து -அஞ்ச வேண்டிய அபராதம் சிறிதும் இல்லாமையால் சங்கை இல்லாமல்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி நிற்பார்கள் -என்கிறது )
பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் துன்னிட்டு புகலரிய –பெருமாள் -4-3-என்றும் –
சுந்தரர் நெருக்க –திருப்பள்ளி எழுச்சி –7-என்றும் –
சொல்லுகிறபடியே திரு வாசலிலே சேவாபரர்கள் நிறைந்து -தலை நுழைக்க ஒண்ணாத படி நெருக்க –
நேச நிலை கதவம் நீக்கு–திருப்பாவை –16 -என்று
திரு வாசல் காப்பானை திருக் கதவு திறக்க வேணும் என்று அபேஷித்து ,
பொன்னியியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -பெரிய திருமடல் –73-என்கிறபடி-
திருஷ்ட்டி சித்த அபஹாரம் பண்ணும் திரு வாசல் அழகிலே துவக்கு ஒண்ணாதே –
அத்தை கடந்து புக வேண்டுகையாகிற தகைவு அற –
பாடுவாரான அந்தரங்கதை யாலும் ஏகாக்ர சித்ததையாலும் போய்ப் புக்கு
வண்டு ஒத்த இருண்ட குழலில் சங்கை அற மருவி –
வண்டு ஒத்த இருண்ட குழல்-பெரியாழ்வார் -2-5-7-என்கிறபடியே -ஸ்வசமான விஷயம் உள்ள இடத்தில் சேர்ந்து –
நீ மருவி அஞ்சாதே நின்று–திரு நெடும் தாண்டகம் -26- என்கிறபடி நிச்சங்கமாக அவனுக்கு சமீப வர்திகளாய்–

அருளாத யாம் என்று ஓடி வந்து வாசமே ஊதி- –
அருளாத நீ அருளி–திருவாய் -1-4-6 -என்றும் ,
யாமிதுவோ தக்கவாறு–திருவாய் –6-8-4-என்றும் ,
இத்தலையில் ஆர்த்தியை அவனுக்கு அறிவித்து –
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ-திருவாய் -6-8-3 -என்று
அவனோடு கூட வர இராதே முந்துறவே ஓடி வர வேண்டும் என்று அபேஷித்து விட்ட படியே –
இத்தலையில் ஆர்த்திக்கு ஈடாக அவன் வரவை அறிவிக்க விரைந்து வந்து —
தங்கள் வரவாலே -இத்தலையில் வந்த செவ்வியை அனுபவித்து –
பூம் துளவ வாசமே வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் –பெரிய திருமொழி -11-1-9-என்கிற படியே
அத் தலையில் தாங்கள் அனுபவித்த போக்யதையை –தங்கள்
வாக்காலே -வரவாலே இத் தலைக்கு பிரகாசிப்பியா நின்று கொண்டு ஆஸ்வசிப்பித்து-

வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்-இத்யாதி –
கொங்குண வண்டே கரியாக வந்தான் -பெரிய திருமொழி -9-3-4-என்கிறபடி
சாகாக்ர சார க்ராஹியாய்-ஷட்பத நிஷ்டராய்–பஷ த்வய யோகத்தாலே –
அப்ரதிஹத கதியானவரை முன்னிட்டு அங்கீகரிக்குமவனாய் —
தூவியம் புள்ளுடை தெய்வ வண்டு -திருவாய் -9-9-4-என்று
வேதாந்த்ய வேத்யன் என்று தோற்றும் படி –
கருட வாஹனாய் ,சார க்ராஹியாய் இருக்கிற சர்வேஸ்வரனுடன் சேர்விக்கும் —
சேமமுடை நாரதன் -பெரியாழ்வார் -4-9-5-என்று
ப்ரஹ்ம பாவனை ஏக நிஷ்டதையாய் ஆகிற ரஷையை உடையவனாய் –
பகவத் குண அனுபவ ஹர்ஷ பிரகர்ஷத்தாலே நிருத்த கீத பரனாய் இருக்கும் ஸ்ரீ நாரத ப்ரஹ்ம ரிஷி —
லோக சாரங்க மகா முநிகளால் வஹிக்க படுகையாலே முனிவாஹனர் என்று நிரூபிதரான திருப் பாண் ஆழ்வார் ,
திரு வாய் மொழி இசையே தங்களுக்கு போக்யமாய் இருக்கிற தம்பிரான்மார் போல்வாரை –
இக் குண சாம்யத்தாலே ,வண்டு என்றும் தும்பி என்றும் சொல்லும் என்கை–
தும்பி ஆவது ப்ருங்க ஜாதியிலே .. ஓர் அவாந்தர பேதம் —
ஆகையால் இறே -வண்டினங்காள் தும்பிகாள் -என்று ஏக ஸ்தலத்திலே இரண்டையும்
பிரிய அருளிச் செய்தது-

—————-

சூரணை -153-

கிளி பூவை முதலானவகையாக சொல்வது -யாரை என்னும் அபேஷையிலே
அருளிச் செய்கிறார் மேலே —

கண்வலைப் படாதே அகவலைப்பட்டு
வளர்த்து எடுப்பார் கை இருந்து
தயிர் நெய்யமர் பாலமுதுண்டு
ஒரு மிடறாய்ப் போற்றி
ஒரு வண்ணத்து இருந்த
நுவலாததுக்கு என் பிழைக்கும் நீ அலையே
நல் வளம் துரப்பன் என்னும் அவற்றுக்கு முகந்து
சொல் எடுத்து சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றம்
கை கூப்பி வணங்கப் பாடி
ஆலியா அழையா பர அபிமாநத்திலே
ஒதுங்கின நம்பிக்கு அன்பர்
தலை மீது அடிப் பொடி உடையவர் உடையார்
போல்வாரைக் கிளி பூவை குயில் மயில் என்னும்-

அதாவது –
கண் வலைப் படாதே அக வலைப் பட்டு –
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு -திருமாலை -16–என்று
ஸ்திரீகளுடைய த்ருஷ்டியாகிற வலையுள் அகப் பட்டு அனர்த்தப் படாதே –
தாமரை தடம் கண் விழிகளின் அகவலை படுவான் –திருவாய்மொழி–6–2–9–என்கிற படியே-
தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளும் சர்வேஸ்வரனுடைய தாமரை போன்ற திரு கண்களின்
நோக்காகிற வலைக்குள்ளே அகப்பட்டு –

வளர்த்து எடுப்பார் கை இருந்த –
(கிளி வளர்க்கிறவர்கள் கையில் இருப்பது போலே ஞானமூட்டிய ஆச்சார்யர் ஆதீனத்தில் இருப்பவர்கள் என்றபடி )
வளர்த்ததனால் பயன் பெற்றேன் -திரு நெடும் தாண்டகம் -14-என்றும் ,
எடுத்த என் கோலக் கிளியை –நாச்சியார் திருமொழி -5–5–என்றும் ,
மங்கைமார் முன்பு என் கை இருந்து –திருவாய்மொழி-6-8-2—என்றும்
சொல்லுகிறபடியே ஸ்வரூப வர்த்தகராய் உபலாலித்து நோக்கிக் கொண்டு –
இட்டமாக வளர்த்து எடுத்துப் போருமவர்கள் கைவசமாய்

தயிர் நெய்யமர் பாலமுதுண்டு –
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து -திருவாய்மொழி–9-5-8–என்றும் –
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ –-திருவாய்மொழி–6-8-2-என்றும் –
இன்னடிசிலோடு பாலமுதம் ஊட்டி –நாச்சியார் திருமொழி -5–5-என்றும்-
சொல்லுகிறபடி -அவர்கள் காலோசிதமாகவும் -பாக அனுகுணமாகவும் –
உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் –ஸ்ரீ கீதை –4–34–என்கிறபடியே
உபதேச முகேன தாரக போக்யங்களான பகவத் குணாதிகளை அனுபவிக்க அனுபவித்து-
ஒரு மிடறாய் –ஆச்சர்யர்களோடு ஏக கண்டராய்-

போற்றி ஒரு வண்ணம் திருந்த –
போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூம் குயில்காள் -திருவாய்மொழி–6-1-6–என்றும் –
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கு ஓன்று உரை ஒண் கிளியே –திருவாய்மொழி–6-1-7–என்றும் –
திருந்தக் கண்டு எனக்கு ஓன்று உரையாய் ஒண் சிறு பூவாய் -திருவாய்மொழி–6-1-8-என்றும்
கடக புத்தி பண்ணி ஆதரித்த தசையிலும் –

நுவலாததுக்கு என் பிழைக்கும் நீ அலையே நல் வளம் –
நோய் எனது நுவல்–திருவாய்மொழி–1-4-8–என்று
என் ஆர்த்தியை சீக்கிரமாக போய் அவனுக்கு அருவி என்ன செய்தே செய்யாததற்கு –
என் பிழைக்கும் இளம் கிளியே நான் வளர்த்த நீ அலையே –திருவாய்மொழி-1-4-7–என்றும் –
நீ அலையே சிறு பூவாய் –நுவலாதே இருந்து ஒழிந்தாய் -திருவாய்மொழி-1-4-8–என்றும் –
ஸ்மாரக பதார்த்தங்கள் பாதகமாகிற அளவில் -அருகு இருந்து திரு நாமத்தைச் சொன்னது பொறாமல்-
சொல் பயற்றிய நல் வளமூட்டினீர் பண்புடையீரே -திருவாய்மொழி–9-5-8—என்றும் –
இன்னானதான தசையிலும்-

துரப்பன் என்னும் அவற்றுக்கும் உகந்து –
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன்—நாச்சியார் திருமொழி-5-10–என்று
அநாராதித்த தசையிலும் -சொன்ன இன் சொற்களும் வெம் சொற்களும் ஆகிறவற்றுக்கும்-
வகுத்த விஷயத்தில் நிக்ரஹ அனுக்ரஹங்கள் இரண்டும் அங்குத்தைக்கு விநியோக பிரகாரம் –
என்னும் நினைவாலே உகந்து —

சொல்லெடுத்து சோர்ந்தவாறே
சொல்லெடுத்து தன் கிளியை சொல்லே என்று துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே–-திரு நெடும் தாண்டகம் –13-
என்று திருநாமத்தைச் சொல்ல-உபக்ரமித்து பல ஹானியாலே ஒரு சொல் சொல்லும் போது மலை எடுக்கும் போலேயாய்-
அதுவும் மாட்டாதே -பரவசகாத்ரனரவர் ஆனவாறே —

கற்பியா வைத்த மாற்றம்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்–திருவாய்மொழி-6-8-6–என்கிறபடியே ,
முன்பே கற்பித்து வைத்த சொல்லான திரு நாமத்தைச் சொல் என்ன –

கை கூப்பி வணங்கப் பாடி-
திரு மாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியை
கை கூப்பி வணங்கினாளே –திரு நெடும் தாண்டகம் –14–என்று
கற்பித்தவர் தாங்கள் உபகார ஸ்ம்ருத்தி பண்ணி-அனுவர்த்திக்கும் படி ப்ரீதி பிரேரிதராய் சொல்லி –

ஆலியா அழையா —
ஆலியா அழையா அரங்கா என்று –பெருமாள் திருமொழி –3–2–என்கிற படியே
ஆனந்தத்தோடு திரு நாமத்தைக் கொண்டு -போது போக்குமவர்களாய்–
(மயில்கள் மேகத்தைக் கண்டவாறே தோகையை விரித்து ஆனந்தமாக விளையாடுவது போலே
இவர்களும் கார்முகில் போல் வண்ணன் கண்ணன் யெம்மானைக் கண்டு கூத்தாடுமவர்கள் என்றபடி )

பர அபிமானத்தில் ஒதுங்கின –
தேவு மற்று அறியேன்–கண்ணி நுண் சிறுத் தாம்பு -2–என்கிற படி –
ஆச்சார்யா அபிமானம் ஆதல் – பாகவத் அபிமானம் ஆதல்-ஆகிய பர அபிமானத்தில் ஒதுங்கினவரான –
(குயில்களுக்கு பரப்ருதம்-பிறரால் வளர்க்கப்படுகிறது – என்ற பெயர் வடமொழியில் உண்டே
அதே போலே ஆச்சார்யர் பாகவதர்கள் அபிமானத்தில் ஒதுங்கி அவர்களால் வளர்க்கப்படுபவர்கள் என்றபடி )

நம்பிக்கு அன்பர் –தலை மீது அடிப் பொடி –உடையவர் உடையார் -போல்வாரை –
தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பன் –கண்ணி நுண் சிறுத் தாம்பு-11-என்று
ஆசார்யரான ஆழ்வார் விஷயத்திலே பிரேமமே நிரூபகமாம் படி இருக்கும் ஸ்ரீ மதுர கவிகள் —
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே –திருமாலை –1–என்று
திரு நாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே யமாதிகள் தலையிலே
அடி இடும் படி செருக்கை உடையவராய் –பாகவதர்களுக்கு பாத தூளி போல
பரதந்த்ரராய் -இதுவே நிரூபகமான தொண்டர் அடி பொடி ஆழ்வார் —
இராமானுசன் உடையார் -என்றே
நிரூபகம் ஆகும் படி உடையவருக்கு பரதந்தரரான
ஆழ்வான் -ஆண்டான் -எம்பார் -அருளாள பெருமாள் எம்பெருமானார் -முதலானவரைகளை போல்வாரை –

கிளி பூவை குயில் மயில் -என்னும் –
குண சாம்ய நிபந்தனமாக கிளி என்றும் பூவை என்றும் –
குயில் என்றும் -மயில் என்றும் சொல்லும் என்ற படி —
பூவையாவது -நாகண வாய்ப்புள் –
மயிலை தூது விட்டமை இன்றிக்கே இருக்க -அத்தை சஹ படித்தது –
யான் வளர்த்த கிளிகாள் பூவைகாள் குயில்காள் மயில்காள்–திருவாய்மொழி–8-2-8–என்று
ஸ்தலாந்தரத்திலே அருளிச் செய்கையாலே அதுக்கும் இதுவே ஸ்வாபதேசம் என்று அறிவிக்கைக்காக —

————————————————-

சூரணை-155-

இனி மேல் இப் பிரகரணத்தில் மேகமாக அருளிச் செய்தது யாரை என்னும்
ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் —

பூண்ட நாள் சீர்க் கடலை உள் கொண்டு
திரு மேனி நல் நிறம் ஒத்து உயிர் அளிப்பான்
தீர்த்தகரராய் எங்கும் திரிந்து
ஜ்ஞான ஹ்ரதத்தைப் பூரித்து
தீங்கின்றி வாழ நிதி சொரிந்து
கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து
வெளுத்து ஒளித்து கண்டு உகந்து
பர சம்ருத்தியே பேறான
அன்பு கூறும் அடியவர்
உறையில் இடாதவர்
புயற்கை அருள்மாரி
குணம் திகழ் கொண்டல்
போல்வாரை மேகம் என்னும் —

அதாவது
பூண்ட நாள் சீர் கடலை உள் கொண்டு —
வர்ஷிக்கைக்கு உடலான காலங்களிலே கடலிலே புக்கு அதில் நீரைப் பருகி
கொண்டு இருக்கும் -மேகம் போலே –
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் -மூன்றாம் திருவந்தாதி -69-என்றும் –
திரு மால் சீர்க் கடலை உள் பொதிந்த சிந்தனையேன் –பெரிய திருவந்தாதி -69–என்றும் –
சொல்லுகிறபடி -விடிந்த நாள் எல்லாம் அவன் கண் வளர்ந்து அருளுகிற கடலிலே
புகுந்து ஸ்ரீ யபதியான அவனுடைய கல்யாண சாகரத்தை
மன வுள் கொண்டு –பெரிய திருமொழி –7–3–1–என்கிற படியே
உள்ளே அடக்கி கொண்டு —

திரு மேனி நன்னிறம் ஒத்து –
திரு மால் திரு மேனி ஒக்கும் –திரு விருத்தம் –32–என்றும் –
கண்ணன் பால் நன்னிறம் கொள் கார் –பெரிய திருவந்தாதி -85–என்றும் –
சொல்லுகிறபடியே மேகமானது அவன் திரு மேனி ஒத்ததாய் இருக்கும் நிறத்தை உடைத்தாய் இருக்குமா போலே
விக்ரக வர்ணத்தால் அவனோடு சாம்யாபன்னராய் –

உயிர் அளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து –
உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து -திரு விருத்தம் –32-என்று
மேகமானது வர்ஷ முகேன -பிராணி ரஷணம் பண்ணுகைக்காக –
விஸ்த்ருமான ஆகாசப் பரப்பு எங்கும் சஞ்சரிக்குமா போலே – சம்சாரிகளான ஆத்மாக்களை ரஷிக்கைகாக
தீர்த்தகரராமின் திரிந்து –இரண்டாம் திருவந்தாதி –14–என்றும் ,
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து –பெருமாள் திருமொழி –2–6–என்றும்-
சொல்லுகிறபடியே -லோக பாவனராய் -உஜ்ஜீவன மார்க்க பிரதர்சகராய் கொண்டு-சர்வத்ர சஞ்சாரம் பண்ணி

ஜ்ஞானஹ்ரதத்தை பூரித்து –
மேகம் வர்ஷித்தாலே தடாகாதிகள் நிறைக்குமா போலே –
ஜ்ஞானஹ்ரதே த்யான ஜலே ராக த்வேஷ மலாபஹே
ய ஸ்நாதி மானசே தீர்த்தே ஸ யாதி பரமாம் கதிம் -என்று
மானஸ தீர்த்த வர்ணனத்திலே , சொன்ன ஜ்ஞானம் ஆகிற
வர்ணனத்தை -தாங்கள் வர்ஷிக்கிற பகவத் குண ஜலங்களாலே நிறைத்து —

தீங்கின்றி வாழ நிதி சொரிந்து –
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து –திருப்பாவை -3–என்றும் –
வாழ உலகினில் பெய்திடாய் -திருப்பாவை -3–என்றும் ,
மாமுத்த நிதி சொரியும் –நாச்சியார் திருமொழி –8–2–என்றும்
சொல்லுகிற படியே -அநர்த்த கந்தம் இன்றிக்கே –அகிலரும் உஜ்ஜீவிக்கும் படி-
பகவத் குண ரத்னங்களை வர்ஷித்து-

கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து —
ஒவ்தார்ய அதிசயத்தாலே உபகரித்ததை நினையாதே –
இன்னமும் உபகரிக்க பெற்றிலோம் ! நாம் செய்தது போருமோ ? என்று லஜ்ஜித்து-

வெளுத்து ஒளித்து –
உபகரிக்கப் பெறாத போது – உடம்பு வெளுத்து ஒளித்து
(அர்த்த விசேஷங்களை உபதேசிக்கப் பெறாத பொழுது உடம்பு வெளுத்து மறைந்து வெளியே முகம் காட்டாமல்
ஸூவ அனுபவ பரர்களாய் ஏகாந்த சீலர்களாய் இருப்பதைத் தெரிவித்த படி – )
கண்டு உகந்து பர சம்ருத்தியே பேறான –
உபகரிக்கும் தசையில் எதிர் தலையில் சம்ருத்தி கண்டு உகந்து –
அந்த பர சம்ருத்தி தங்களுக்கு பேறாக நினைத்து இருக்கிற-

அன்பு கூறும் அடியவர் –
ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும்
அடியவரான- பெரிய திருமொழி -2–10–4––முதல் ஆழ்வார்கள்-
(ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் –
அடியவர் என்று பொய்கையார் -பர பக்தி நிலை -ஞான பிரதம நிலை —
அன்பு கூறும் அடியவர் என்று பூதத்தாழ்வார் பர ஞான நிலை -தர்சன-சாஷாத்காரம் பெற்றவர்கள் –
அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் -பேயாழ்வார் -பரம பக்தி நிலை -பிராப்தி தசை -என்றவாறு )

உறையில் இடாதவர் –
உருவின வாள் உறையில் இடாதே -ஆதி மத்திய அந்தம் தேவதாந்திர வரத்வ –பிரதிபாதன -பூர்வகமாக
பகவத் பரத்வத்தை வுபபாதிக்கும் திரு மழிசைப் பிரான்

புயற்கை அருள் மாரி –
காரார் புயற்கை கலி கன்றி –பெரிய திருமொழி–3-2-10-என்றும் ,
அருள் மாரி –பெரிய திருமொழி–3-4-10–என்றும் ,
ஒவ்தார்யத்தில் மேக சத்ருசராய் கொண்டு கிருபையை வர்ஷிக்கும் திரு மங்கை ஆழ்வார்-

குணம் திகழ் கொண்டல்–இராமானுச நூற்றந்தாதி -60—என்று
குண உஜ்ஜ்வலமான மேகமாகச் சொல்லப் பட்ட எம்பெருமானார் —போல்வாரை மேகம் என்னும் –
இந்த குண சாம்யத்தை இட்டு மேகம் என்று சொல்லும் என்ற படி —

————————————————————

வண்டினம் முரலும் சோலை –

வண்டு-மயில் -மேகம் குயில் -பதங்கள்–ஸ்ரீ மா முனிகளையும் ஸ்ரீ அரங்கனையும் குறிக்கும்

தூவியம் புள்ளுடை தெய்வ வண்டு அன்றோ இவன்-
மலர்கள் வண்டுகள் வரவை எதிர்பார்த்து பரிமளத்தை திசைகள் எங்கும் வீசி நிற்கும் –
அதே போலே ஆழ்வார் ஆர்வுற்று இருக்க அவரின் முன்னம் பாரித்து இவன் அன்றோ அவரை வாரிப் பருகினான் –
வண்டு-ஷட் பதம்-இவனுக்கும் ஞானம் -பலம் -ஐஸ்வர்யம் -வீர்யம் -சக்தி -தேஜஸ்-கொண்ட பகவான் அன்றோ – –

ஸ்ரீ லஷ்மீ கல்பல தோத்துங்க ஸ்தநஸ் தபக சஞ்சல
ஸ்ரீ ரெங்கராஜ ப்ருங்கோ மே ரமதாம் மாநசாம்புஜே-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் –1-10
திருமகளாம் கற்பகக் கோடியில் வாராலும் இளம் கொங்கையாம் பூம் கொத்தில் சுழன்று வரும்
அணி அரங்கன் என்னும் மணி வண்டு அடியேன் உள்ளக்கமலத்து அமர்ந்து களித்திடுக –

—————

வண்டுகள் -த்வி ரேப -வடமொழியில் சொல் உண்டே -இரண்டு ரகாரங்கள்-ப்ரமர-
அதே போலே ஸ்ரீ வர வர முனி -இரண்டு ரகாரங்கள்

ஸ்ரீ ராமாநுஜார்ய சரணம் புஜ சஞ்சாரகம் ரம்யோ பயந்த்ருயமிநம் சரணம் பிரபத்யே –
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமி -ஸ்ரீ வர வர முனி சதகம் 1-
ஸ்ரீ எம்பருமானார் திருவடித் தாமரைகளில் படிந்த வண்டு ஸ்ரீ மா முனிகள்

மஹதாஹ்வய பாத பத்மயோ மஹதுத்தம் சிதயோர் மது வ்ரதம்-43-
மஹான்களின் ஸீரோ பூஷணமான ஸ்ரீ பேயாழ்வார் திருவடித்தாமரைகளில் படிந்த வண்டு ஸ்ரீ மா முனிகள்

ஸ்ரீ சடாராதி ஸ்ரீ மத் வதன ஸரஸீ ஜாதமிஹர ததீய ஸ்ரீ பாதாம் புஜ மதுகர தஸ்ய வசசாம் -53-
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடித்தாமரைகளில் படிந்த வண்டு ஸ்ரீ மா முனிகள்

தமநுதிநம் யதீந்த்ர பத பங்கஜ ப்ருங்க வரம் வர முனிம் ஆஸ்ரயாயசய விஹாய தத் அந்ய ருசிம் -85-

என் பெறுதி என்ன பிரமியாது உள்ளத்து ஊறிய மது வ்ரதமாய் தூ மதுவாய்கள் கொண்டு
குழல்வாய் வகுளத்தின் சாரம் கிரஹித்து -ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -152-
ஸ்ரீ திருவாய்மொழி நூற்றந்தாதி சாரம் அருளியவர் அன்றோ –
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம்-என்று தாமே அருளிச் செய்கிறாரே –

—————————-

மயிலினம் ஆலும் சோலை –

பிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம்
வரத சித் அசிதாக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருண ந
கசித் இதமிவ கலாபம் சித்ரமா தத்ய தூன்வன்
அநுசிகிநி சிகீவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-44-
மழுங்காத ஞானத்தால் பல்வகைப் பெரு விறல் உலகமாய்ப் பரப்பி திரு மடந்தை முன்பு நீ விளையாடுதீ-
அரங்கமேய ஆயனே தோகை மா மயில் –

மா முனிகளும் முகில் வண்ணனைக் கண்ணாரக் கண்டு -தம் திரு உள்ளத்தில் கிடந்த கலைகளை
வியாக்கியான முகேந விரித்து -ஆட்டமேவி அலந்து அழைத்து அயர்வு எய்திய மெய் யடியார் அன்றோ

அந்தஸ் வாந்தம் கமபி மதுரம் மந்த்ரமா வர்தயந்தீம்
உத்யத் பாஷ்பஸ் திமித நயனாம் உஜ்ஜிதா சேஷ வ்ருத்திம்
வ்யாக்யா கர்ப்பம் வர வர முநே தவான் முகம் வீக்ஷமானாம்
கோணே லீன க்வசித் அணுரசவ் சம்சதம் தாம் உபாஸ்தம்-ஸ்ரீ எறும்பு அப்பா ஸ்ரீ வர வர சதகம் -46-

————-

கொண்டல் மீது அணவும் சோலை

சிஞ்சேதி மஞ்ச ஜனம் இந்திரயா தடிதவான்
பூஷா மணித் யுதிபர் இந்த்ரத நுர்ததான
ஸ்ரீ ரெங்க தாமநி தயாரச நிர் பரத்வாத்
அத்ரவ் சாயலுரிவ சீதள காளமேக –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் -1-82-

அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி பள்ளி கொண்டு அருளும்
கார்முகில் அடியேனையும் நனைத்து அருளட்டும் –

காவேரி வாய்ப் பாம்பணை மேல் கரு முகில் போல் கண் வளரும் கருணை வள்ளல்
பூ விரியும் துழாய் அரங்கர் பொன்னடியே தஞ்சம் எனப் பொருந்தி வாழ்வார்
யாவரினும் இழி குலத்தார் ஆனாலும் அவர் கண்டீர் இமையா நாட்டத்
தேவரினும் முனிவரினும் சிவன் அயன் என்ற இருவரினும் சீரியோரே –ஸ்ரீ திருவரங்கக் கலம்பகம் -100-

தம் ப்ரபந்ந ஜன சாதக அம்புதாம் -என்று அன்றோ ஸ்ரீ மா மானிகளை கொண்டாடுகிறோம்

——————-

குயிலினம் கூவும் சோலை
கயல் துளு காவேரி சூழ் அரங்கனை குயில் என்றது நிற ஒற்றுமை ஒன்றினால் அன்று —
குயிலுக்கு வன பிரிய வடமொழி -போலே ஸ்ரீ அரங்கனுக்கு வனப்பிரியன் -ஆராமம் சூழ்ந்த அரங்கம் –
குயில் மா மரம் ஏறி மிழற்றுவதால் மா வினிடத்தில் பெரு விருப்பம் போலே –
ஸ்ரீ அரங்கனுக்கு அல்லிமலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் –
குயில் பஞ்சம ஸ்வரத்தில் கூவும் -பாரத பஞ்சமோ வேதா -ஸ்ரீ மஹா பாரதம் அருளிச் செய்த மா முனிகளும் குயிலினை ஒப்பர்
மேலும் ஸ்ரீ மா முனிகள் பஞ்சம உபாயத்தை உபதேசித்து அனுஷ்ட்டித்து காட்டி அருளினார் -யதீந்த்ர பிரவணர் அன்றோ –
ஸ்வர ஆலாபை ஸூலப யசி தத் பஞ்சம உபாய தத்வம் –ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்ரீ வர வர முனி சதகம் -11-
குயில் பரப்ருதம்-அதே போலே ஸ்ரீ மா முனிகளும் ஸ்ரீ எம்பெருமானார் அபிமானத்தில் ஒதுங்கினவர் அன்றோ-

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோயில் வித்வான் ஸ்ரீ நரசிம்ஹ ஆச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஸூந்தர காண்டம் சாரம் -ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் —

April 27, 2019

ஸ்ரீ ஸூந்தரே ஸூந்தரோ ராம
ஸூந்தரே ஸூந்தரீ கதா
ஸூந்தரே ஸூந்தரீ ஸீதா
ஸூந்தரே ஸூந்தரம் வனம்
ஸூந்தரே ஸூந்தரம் காவ்யம்
ஸூந்தரே ஸூந்தரோ கவி
ஸூந்தரே ஸூந்தரம் மந்த்ரம்
ஸூந்தரே கிம் ந ஸூந்தரம் —

தர்போதக்ர தச இந்த்ரியனான மநோ நக்தம் சராதி ஷ்டிதே
தேஹேஸ்மின் பாவ சிந்து நா பரிகதே தீ நாம் தஸாம் ஆஸ்தித
அத்யத்வே ஹனுமத் சமேந குருணா ப்ரக்யாபிதார்த்த புமான்
லங்காருத்த விதேஹ ராஜ தனயா ந்யாயேந லா லப்யதே —ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள்

ஸ்ரீ ஸீதா பிராட்டி அசோகா வனத்தில் சிறைப்பட்டால் போலே ஜீவாத்மா உடலில் சிறைப் பட்டு இருக்க –
அசோகவனத்தை உப்புக்கடல் சூழ்ந்தது போலே சம்சாரக்கடல் -பத்து தலைகள் போலே பத்து இந்திரியங்கள் –
ஆத்மா பகவானைப் பற்றி அறியாமல் துன்புற -திருவடி ஆச்சார்யர் ஸ்தானீயம் –
கணையாழி -பஞ்ச சம்ஸ்காரம்-திருச் சங்கு திருச் சக்கரப்பொறி-
ஆச்சார்யர் மூலம் நம் நாவில் ஸ்ரீ ராம திரு நாமம் திகழ்ந்து ஸ்ரீ ராம பக்தி வளர்வது திண்ணம் –
— ——————
முதல் சர்க்கம் -கடலைத் தாண்டினார்
ஸ்ரீ மஹேந்திர கிரியில் நின்று பெரிய திரு உருவம் கொண்டு நூறு யோஜனை தூரம் கொண்ட தென்கடலைக் கடக்க
கால்களை மண்ணிலே அழுத்தி ஸ்ரீ ராம பானம் போலே பறக்க –
மூன்று தடைகள் -மைனாகன் மலை -சுரஸா–ஸிம்ஹிகா அரக்கி -மூன்றையும் கடந்து வேகமாக முன்னேறி
இலம்பம் மலையிலே இறங்கினார் –

நம் விடா முயற்சியும் இறைவனின் அருளும் இருந்தால் தடைகளை விளக்கி இலக்கை எட்டலாமே
——————
சர்க்கம் -2-இலங்கையைக் கண்டார்
களைப்பே இல்லாத வாயு குமாரர் மதித்த இலங்கை ஐஸ்வர்யம் –
இரவுப் பொழுதில் தன்னை சுருக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார் –
நகரின் செழிப்பைப் புறக்கணித்து ஸ்ரீ ஸீதா தேவியைத் தேடாத தொடங்கினார் –

புற அழகிலே மயங்காமல் இலக்கை நோக்கி ஒரு முகப்படுத்தி முன்னேறும் புத்தியை ஸ்ரீ திருவடி நமக்கு அருளட்டும்
—————————————
சர்க்கம் -3- என்றோ கிடைத்த அனுமதி
சிலம்பம் மலையில் இருந்து நகரில் நுழைந்து கோட்டை மதிள் சுவரில் ஏற முயன்றார் –
இலங்கிணி தடுக்க நகரைச் சுற்றிப்பார்க்க வந்ததாக சொன்னார் –
அவள் மீண்டும் தடுக்க நிஜ ரூபத்துடன் ஓங்கிக் குத்த அவள் அலறி சாய்ந்தாள் -அவளும் ப்ரம்மா தனக்கு கொடுத்த வரம் பலித்தது –
இலங்கைக்கு நாசா காலம் ஆரம்பம் என்று நீர் விரும்பிய படி உள்ளே செல்லும் என்ன ஸ்ரீ பிராட்டியைத் தேட உள்ளே நுழைந்தார்

நாம் எடுத்த கார்யம் பலருக்கும் பயன்படும் தர்மமாக இருக்குமானால் அந்தக்காரியம் நிறைவேற
தேவையான மங்களங்களை தெய்வமே அருளுவார்
———————–
சர்க்கம் -4-வியக்க வைத்த ஊர் –ஆனால்
ஸ்ரீ திருவடி மதிக்கும் படி ஐஸ்வர்யம் -பல அஷவ்ஹிணிகள் அளவிலான ராணுவ வீரர்கள்
45-காலாள்/ -27-குதிரை வீரர் / -9-யானை வீரர் / 9-தேர் வீரர் சேர்ந்தால் ஒரு குல்மம் —
இதே போலே -2430-குல்மான்கள் சேர்ந்தால் ஒரு அஷவ் ஹிணீ–அதாவது -218700-துருப்புக்கள்

அமைப்பு அழகாக இருக்கலாம் -ஆனால் தர்மம் இல்லாத படியால் ஸ்ரீ பெருமாளாது அருள் கிட்டாதே —
—————————————-
சர்க்கம் -5-நிலா உதவியது -கலையைக் காணோம் -கலை -கற்கும் கல்வியையும் நிலவின் அழகையும் குறிக்கும் –
இயற்கை எழிலுடன் இருக்கலாம் -அதில் களி க்கலாம் -ஆனால் அதில் கடவுளின் தன்மை இல்லா விட்டால் என்ன பயன்
—————–
சர்க்கம் 6-சொந்த சொத்தும் வந்த சொத்தும்
ஒவ்வொரு ஜீவனும் பரமாத்மாவின் சொத்து -பிறக்கும் போதும் இறக்கும் போதும் எந்த சொத்தும் இல்லையே –
பின் நான் -எனது -என்ற அஹங்காரம் மமகாரங்கள் எதற்கு –
——————
சர்க்கம் -7-வன வாசமா விமான வாசமா -புஷ்பக விமானத்திலா-அசோக வனத்திலா
அன்பும் அறனும் இல்லாத இல் வாழ்க்கையில் செல்வம் சிறைப்பட்டுத்தான் இருக்கும்
———————-
சர்க்கம் -8-போகமும் யோகமும்
புஷ்பக விமான வர்ணனை

ஆசைகளை வளர்த்துக் கொண்டு நிறைவேற்றப் பதறுவது தானே போகம் –
ஆசைகளைக் கட்டுப் படுத்தி திருப்தி அடைவது யோகம்
———————–
சர்க்கம் -9-தன்னிலை மறைந்தவர் –
பத்து மைல் நீளமான இராவணன் அரண்மனையில் ஸ்ரீ சீதாபிராட்டியை காண வில்லை

ஸ்தூலமான உடல் இன்பத்தில் மயங்கினாள் ஸூஷ்மாமா ஆத்மாவும் அதின் உள்ளுறையும் பரமாத்மாவும் புலப்பட மாட்டார்கள் –
——————
சர்க்கம் -10-தீயதில் சிக்கிய நல்லவர் -மண்டோதரி
மண்டோதரியைக் கண்டு இவள் ஸ்ரீ சீதாபிராட்டி தானோ என்று பரபரப்படைந்தார்

நல்லவனைத் தொடர்ந்த அனைவருக்கும் வாழ்ச்சி -தீயவனைத் தொடர்ந்த நல்லவனுக்கு தாழ்ச்சி
—————–
சர்க்கம் -11-தேடிய கண்ணும் மயங்காத மனமும்
ப்ரஹ்மச்சாரியான நான் பல பெண்களை பார்க்கிறேன் இது தகுமோ என்று கவலை உற்றார் –
கண்கள் பார்த்தாலும் தன் மனம் ஸ்ரீ பெருமாளைத் தவிர யார் இடமும் ஈடுபடவில்லை என்று நிம்மதி அடைந்து
மீண்டும் ஊக்கத்தோடே ஸ்ரீ சீதாப் பிராட்டியைத் தேடினார்

ஆத்மாவின் அறிவு மனத்தின் மூலம் புலன்களை அடைந்து பின் பொருளைக் காணும் –
ஆகவே மனம் கட்டுப்பட்டால் புலன்கள் சிதறாது -இறைவனிடம் ஈடுபட்ட மனம் கட்டுப்படும்
———————————–
சர்க்கம் -12-சோர்வு சோறு போடாது -ஊக்கம் உயர்வு அளிக்கும் –
மனமே நம் தாழ்ச்சிக்கும் வாழ்ச்சிக்கும் காரணம் -பற்றற்ற மனம் நண்பன் -எதிலும் பற்றுள்ள மனம் பகைவன்
———————-
சர்க்கம் -13-சோகம் தீர்த்த அசோக வனம்
செயல் நிறைவேறும் என்னும் சிறிது அளவு நம்பிக்கை ஊக்கத்தையும் -அந்த ஊக்கம் வெற்றியையும் கொடுக்கும்
—————————
சர்க்கம் -14-நீரைத்தேடி பூமி வருவாளா
பல வண்ணப் பூக்களால் மூடப்பட்ட ஸ்ரீ மாருதி மலர் மலை போல் காட்சி அளித்தார் –
குயில் கூவ மான் துள்ள மயில் ஆடும் வனத்தின் நடுவில் அழகிய குலத்தைக் கண்டார் –
அதன் கரையின் பொன்மயமான சிம்சுபா மரத்தைக் கண்டு அதன் மேல் ஏறி தன்னை மறைத்துக் கொண்டு
ஸ்ரீ ஸீதா பிராட்டி கண்டிப்பாக வருவாள் எனும் நம்பிக்கையோடு காத்து இருந்தார்

அதிக சக்தியே சில நேரத்தில் சோர்வு கொடுக்கும் -ஆனால் பக்தி எப்போதும் ஊக்கத்தை அளிக்கும் –
———————–
சர்க்கம் -15-கண்டது மகிழ்ச்சி தான் -ஆனால் காணாததே மேல்
ஸ்ரீ மாருதியின் நம்பிக்கை வீண் போகாமல் ஸ்ரீ சீதாப் பிராட்டியைக் கண்டார்
ஒரு பெண் என்ற அருள் -தன்னைச் சார்ந்தவள் என்ற அன்பு -மனைவியை இழந்தேன் என்ற துக்கம் இவற்றால்
ஸ்ரீ பெருமாள் வருந்துகிறார் -இவளைப் பிரிந்து ஸ்ரீ பெருமாள் உயிரோடே இருப்பதே அரிய செயல் என்று எண்ணி வியந்தார் –
இவளது துயரக் கோலத்தைக் காண இயலாமல் வருந்தினார்

கண்ணால் கண்ட ஸ்ரீ ஸீதாப் பிராட்டியைத் தம் மனம் என்னும் மேடையில்
ஸ்ரீ பெருமாளோடே சேர்த்துப் பார்த்த ஸ்ரீ திருவடியே நமக்குத் தஞ்சம் –
———————
சர்க்கம் -16-அவனுக்கு இவள் நிகர் -ஆனால் -அஸி தேக்ஷிணை-அன்றோ –
ஸ்ரீ நாச்சியார் விழி அவனால் விழிக்க ஒண்ணாதே
ஒழுக்கம் பண்பு உருவம் பிறப்பு -துல்ய சீல வயோ வ்ருத்தம் இருந்தாலும் –
எப்பொழுதும் கருணையே பொழியும் திருக்கண்கள் அன்றோ

பிறரின் துன்பம் கண்டு கலங்கி அத்தைப் போக்குபவனே பக்தன் -ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் அன்றோ -ஆச்சார்ய ஸ்தானீயம் –
——————-
சர்க்கம் -17-மதிளா காவல்-மனமே காவல்
எழுநூறு அரக்கிகள் நடுவில் இருந்த ஸ்ரீ ஸீதாப் பிராட்டி பெருமாள் மேல் வைத்த அன்பு ஒன்றே அணிகலனாக
அவனுடைய வில்லின் ஆற்றலில் வைத்த நம்பிக்கையே காவலாக மனா உறுதியோடு இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார்

பெரும் ஆபத்து சூழும் போது தளர்ந்து போகாத பொறுமையும் தாண்டி விடுவோம் என்ற நம்பிக்கையும் நம்மைக் காக்கும்
—————————————–
சர்க்கம் -18-ஒருத்தரின் காமமே ஊருக்கே சாபம்
பிறர் பொருள் பிறர் மனைவி ஆகியவற்றை தனது என்று நினைத்தால் மஹா பாதகம் தானே
——————–
சர்க்கம் -19-நடுக்கம் தீர்ப்பவளின் நடுக்கம்
நமக்கு ஏற்காத ஒரு பொருளை பற்றியோ அல்லது ஒருவரைப் பற்றியோ நாம் அறிந்து கொள்வது முதல் தவறு –
அதை ஆசைப்படுவது இரண்டாவது தவறு –
அதை அடைய முயற்சிப்பது மூன்றாவது பெரும் தவறு –
முதல் இரண்டு நிலைகளைத் தவிர்க்க முடியா விட்டாலும் மூன்றாவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் –
————————–
சர்க்கம் -20-ஆக்கையின் வழி சென்றால் அழிவு -அறிவின் வழி சென்றால் ஆக்கம் –
உடல் ஆசைக்கு வசப்பட்டு பெண்களை போகப் பொருளாக நினைப்பது குற்றம் –
அறிவின் வழி சென்று ஸ்ரீ மஹா லஷ்மியின் அம்சமாக மதிக்க வேண்டும்
————————-
சர்க்கம் -21-கயவனுக்கும் நல்ல உபதேசம்
துரும்பைக் கிள்ளி நடுவில் இட்டு -சரணாகத வத்சலன் -மித்ர பாவனையுடன் ஆஸ்ரயிக்க உய்யலாம் –

ஸ்ரீ மஹா லஷ்மி ஒவ்வொரு ஜீவனையும் திருத்தி ஸ்ரீ பெருமாள் இடம் சேர வாய்ப்பை ஏற்படுத்தி அருளுகிறாள் –
பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே –
———————-
சர்க்கம் -22-இரண்டு மாதம் கெடு யாருக்கு-
நல்லவர்களைத் துன்புறுத்திக் கெடு வைத்தால் அது நமக்கு நாமே வைத்துக் கொண்ட கெடுவாகிவிடுமே
——————–
சர்க்கம் -23-புலஸ்திய மஹரிஷியின் குலத்தில் பிறந்தால் போதாது -தகுந்த நடத்தை வேண்டுமே
குலப் பிறப்பும் அறிவும் ஆற்றலும் தர்மத்துக்குத் துணை நின்றால் தானே சிறக்கும்
———————–
சர்க்கம் -24-விரக்தி அடைந்தவனுக்கு உயிர் புல்லுக்கு சமம்
ஸ்ரீ வசிஷ்டருக்கு ஸ்ரீ அருந்ததி போலேயும் ஸ்ரீ அகஸ்தியருக்கு ஸ்ரீ லோக முத்திரை போலேயும்
ஸ்ரீ பெருமாளை இறையும் அகலகில்லேன் என்றே இருப்பேன்

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் போன்றோர் சான்றோர் –
—————————————
சர்க்கம் -25-மானிடராய்ப் பிறத்தல் இனிதா கசப்பா –
இறைவன் வசப்பட்டால் மானிடப்பிறவி இனியது -பிறர் வசப்பட்டால் கசப்பானது
——————
சர்க்கம் -26-ஸ்ரீ பெருமாள் வேண்டாம் அளிக்க -ஒழுக்கக் கேட அழித்து விடும்
தன் குற்றங்களை நினைத்து பயப்படுத்தலும் மாறாக இறைவனின் ரக்ஷகத்வ தீக்ஷை -காருண்யத்தை
நினைத்துப் பயம் நீங்குதலுமே பக்தியின் அடையாளங்கள்
——————————
சர்க்கம் -27-கனவு நிஜமாகப் போகிறதே –
திரிஜடை கனவும் -ஸ்ரீ ஸீதாப் பிராட்டிக்கு இடது கண் துடிப்பதும்
இனிய குரலோடு பறவைகள் கூவும் நல்ல சகுனங்களும் தரிக்க ஹேதுக்கள் ஆயின

குறைவான புண்ணியம் கனவில் இன்பத்தையும் நிறைவான புண்ணியம் நிஜத்தில் இன்பத்தையும்
குறைவான பாவம் கனவில் துன்பத்தையும் நிறைவான பாவம் நிஜத்தில் துன்பத்தையும் கொடுக்கும்
——————
சர்க்கம் -28-காகுத்தன் வாரா விட்டால் யார் இனி உயிர் காப்பார் –
தீமையே செய்யும் மனத் தளர்ச்சியால் எந்தப் புகழும் கிட்டாதபடியால் சான்றோர் இதை ஏற்க மாட்டார்கள்
——————
சர்க்கம் -29-நல்ல சகுன ஸூசகங்கள் -உலகம் வாழ்ந்தது
நம்பிக்கைக் கீறு கீற்று தோன்றினாலும் மனத்தளர்ச்சி ஓடி விடும்
——————
சர்க்கம் -30-ஸ்ரீ ராம தூதரின் கூர்மையான புத்தியும் பக்தியும்
அப்போது ஒரு சிந்தை செய்து -லோக நாதனான ஸ்ரீ பெருமாளின் புகழ் மிக்க வரலாற்றை மதுர சொற்களால் பாட
அத்தைக் கேட்டு ஸ்ரீ ஸீதாப் பிராட்டி அச்சம் தீர்வாள் என்று முடிவு செய்தார்
———————–
சர்க்கம் -31-உயிரை மீட்க்கும் அழுத்தமான ஸ்ரீ ராம நாமமும் வரலாறும்
தான் நூறு யோஜனை அகலம் உள்ள கடலைக் கடந்து வந்ததையும் ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்த அடையாளமுடைய
திருவுடையாளான உம்மைக் கண்டேன் -என்று அருளிச் செய்ய கேட்ட ஸ்ரீ ஸீதாப் பிராட்டி
ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அடைந்து எல்லா திக்குகளிலும் தேடி சிம்சுபா மரத்தின் மேல் கண்டாள்

அனைத்து ஆபத்துக்களையும் போக்கி நன்மைகளை அளிக்கும் ஸ்ரீ ராம நாமத்தையும்
ஸ்ரீ ராம கதையையும் தினமும் சொல்வோம்
————————
சர்க்கம் -32-அருவம் அல்ல உருவ வெளிப்பாடு –
மின்னல் போன்ற பொன் நிறத்தோடு இனிய ஸ்ரீ ராம நாமத்தைச் சொன்ன திருவடியைக் கண்டாள் –

முதலில் ஸ்ரீ பெருமானின் திரு உருவை நினைத்து மெது மெதுவே ஆழமாக இடைவிடாது தியானித்தால்
நேர காண்கிறாப் போலே அவர் உருவம் நம்மனசில் வெளிப்படும் –
இதையே பக்தியின் முதிர்ந்த நிலையான கண்ணால் காண்பதற்கு நிகரான சாஷாத் காரம் என்று சாஸ்திரங்கள் கூறும் –
——————————-
சர்க்கம் -33-திரு முகம் கண்டான் -அறிமுகம் கிடைத்தது –
ஸ்ரீ ஸீதாப் பிராட்டி அருளிச் செய்த அறிமுகத்தில் இருந்து ஒரு பெண்ணிற்குப் புகுந்த வீட்டின் பெருமையும்
பிறந்த வீட்டின் அருமையும் கணவனின் அன்பும் இன்றியமையாதவை என்று அறியலாம்
———————–
சர்க்கம் -34-உண்மையை நம்ப வைப்பது எப்படி –
தான் ஸ்ரீ ராம தூதர் -விரைவில் ஸ்ரீ பெருமாள் உம்மை வந்து மீட்பர் -என்றார்

உண்மையை நம்ப வைக்க வெகு நேரம் ஆகலாம் -அதை எடுத்துச் சொல்வதில் இருக்கும்
நேர்மையும் விடா முயற்சியும் தான் கேட்பவருக்குப் புரிய வைக்கும் –
———————
சர்க்கம் -35-சொல்லுக்கு எட்டாத அழகு –
ஸ்ரீ ராமபிரானின் திருமேனி அழகை தியானித்தால் நம் புலன்களும் மனமும் கட்டுப்படும்
————————
சர்க்கம் -36-ஸ்ரீ கணையாழியைப் பெற்றாள்-ஸ்ரீ பெருமாளையே கண்டாள்
ஸ்ரீ கணையாழி மூலம் ஸ்ரீ ராம நாமத்தை நமக்கு உபதேசிக்கும் குருவாகிய திருவடி திருவடிகளே நமக்குத் தஞ்சம் –
————————–
சர்க்கம் -37-ஸ்ரீ ஆஞ்சநேயரின் விஸ்வரூபம் –
தன்னைக் காத்துக் கொள்ள ஸ்ரீ ஸீதாப் பிராட்டி தன் சொல்லை நம்பாமல் ஸ்ரீ பெருமாளின் வில்லையே நம்பினாள்-
ஸ்ரீ பெருமாளே நம்மை ரஷிக்கும் பிராப்தியும் சக்தியும் உள்ளவர் –
———————————
சர்க்கம் -38-காகாசூர வ்ருத்தாந்தம் சொன்னால் -ஸ்ரீ சூடாமணியைக் கொடுத்து அனுப்பினாள்-
காகாசூரன் சரணம் என்று சொல்லா விட்டாலும் விழுந்த அவனை ஸ்ரீ பெருமாள் திருவடிகளில் வைத்து
ரஷிக்கும் படி அருளினாள்-ஸ்ரீ மஹா லஷ்மியின் அருள் முன்னதாகவே சரணாகதி பலிக்கும் –
————————————————-
சர்க்கம் -39-எளிமையின் சக்தியே ஸ்ரீ ஆஞ்சநேயர் –
தானே ஸ்ரீ வானர முதலிகளில் கடையானவன் என்று சொல்லிக் கொண்டார் –

நல்லதே நடக்க வேண்டும் என்று நினைத்தால் மன தர்மம் –
நல்லதையையே செய்தல் உடல் தர்மம் –
நல்லதையையே விடாமல் எடுத்துக் கூறுதல் வாக்கு தர்மம்
———————–
சர்க்கம் -40-விடை பெற்றார் -தடை இன்றிப் புறப்பட்டார் –
ஸ்ரீ கணையாழி முன்பு இருவரையும் சேர்த்து வைத்த கதையையும் அருளிச் செய்தாள்
சம்சாரம் ஆகிற பெரும் கடலில் இருந்து நம்மை ஆச்சார்யர்கள் தங்கள் உபதேசத்தால் கடாக்ஷத்தாலும் மீட்டு
ஸ்ரீ பெருமாள் இடம் சேர்ப்பிக்கிறார்கள் –
—————————–
சர்க்கம் -41-ஸ்ரீ ஸீதாப் பிராட்டி இடம் பணிவு -அரக்கர்கள் இடம் துணிவு –
சாம -இன் சொல் கூறி / தான -பொருள் கொடுத்து/ பேத -வேறுபடுத்தி – வெல்வது முடியாதே அரக்கர்களை –
ஆகவே தண்டம் -அடி ஒன்றே வழி -என்று உணர்ந்து செயல் பட்டார்-

நாம் அவசர வேளையிலும் தீர்க்கமாக சிந்தித்து விரைந்து செயலாற்ற ஸ்ரீ வாயு குமாரன் நமக்கு அருளட்டும்
—————————
சர்க்கம் -42-விளக்கில் விழுந்த வீட்டில் பூச்சிகள்
ஏவப்பட்ட செயலை மீறாமல் துணிவோடு செய்வதே அடியவனுக்கு அடையாளம் –
———————-
சர்க்கம் -43-வல்லவனுக்கு புள்ளும் ஆயுதம் –
மண்டபம் அழித்தால் மீண்டும் கட்டலாம் -பண்பும் ஒழுக்கமும் இழந்தால் மீட்பது எளிது அல்லவே
———————-
சர்க்கம் -44-வம்புக்கு வந்த ப்ரஹஸ்தன் மகனான ஜம்பு மாலி –
அஸ்திர சஸ்திரங்களின் வலிமையை விட தர்மத்துக்கும் பக்திக்கும் பெரிய ஆற்றல் உண்டே –
———————–
சர்க்கம் -45-தந்திரமாக வந்த மந்திரி குமாரர்கள் எழுவரையும் அழித்தமை-
ஆற்றல் இல்லாதவர்க்கு விளையாட்டே வினையாகும் –
ஆற்றல் மிக்க திருவடிக்கு யுத்தம் கூட ஒரு விளையாட்டே தான் –
—————————–
சர்க்கம் -46-ராவணன் சிந்திக்காத தொடங்கினான் -ஆனால் சிந்தனையைத் தொடர வில்லை –

விரூபாக்ஷன் -யூபாக்ஷன் -துர்தரன்-ப்ரஹஸ்தன் -பாலகர்ணன் -பஞ்ச சேனாபதிகளையும் அழித்தமை

ஆபத்துக்கு காலத்தில் காரணங்களை ஆராயும் சிந்தனை உதிக்கும் -ஆனால் ஆணவத்தாலும் பதற்றத்தாலும்
சிந்தனையைச் சரியான பாதையில் தொடராமல் தவறான பாதையைத் தேர்ந்து எடுப்போம் –
ஸ்ரீ திருவடியே நமக்கு சரியான மார்க்கத்தைக் காட்டி அருளட்டும்
—————————-
சர்க்கம் -47-தந்தைக்காகப் போரிட்ட அஷ குமாரனை அழித்தமை –
முதியவர்கள் செய்யும் குற்றத்துக்கு இளையவர்கள் பலியாவது வியப்பாக உள்ளது
——————-
சர்க்கம் -48-இந்திரஜித் கட்டிய ப்ரஹ்மாஸ்திரத்தை சணல் கயிறு விடுவித்தது
மற்றறொரு கயிற்றுக் கட்டை ப்ரஹ்மாஸ்திரம் சகிக்காது –
அதே போலே சரணாகதியும் வேறு எந்த முயற்சியையும் எதிர்பார்க்காது
——————————–
சர்க்கம் -49-அதர்மம் இல்லாமல் இருந்தால் இந்திரனையும் வேற்று இருப்பானே –
இராவணனும் இந்திரனை வென்றவன் தான் -ஆனால் அதர்ம வழியில் என்பதால் நிலைக்காதே –
—————–
சர்க்கம் -50-திருவடியின் அறிமுகம் -ஸ்ரீ ராம தாசன்-ஸ்ரீ ராம தூதன்
நாம் முன் செய்த பாபங்கள் இப்போது வேறு உருவில் நம்மைத் துன்புறுத்தும் –
அதை அடையாளம் கண்டு திருத்திக் கொண்டால் துன்பம் விலகி விடும் –
—————————
சர்க்கம் -51-கருத்தில் தர்மம் -பேச்சில் இனிமை -நெஞ்சில் துணிவு –
இவற்றுடன் ஸ்ரீ திருவடி ராவணனுக்கு உபதேசம்

ஸ்ரீ இராமபிரான் இடம் தஞ்சம் அடைந்தால் வேறு யார் உதவியும் தேவை இல்லை –
அவர் இடம் இருந்து விலகினால் வேறு யார் உதவிக்கு வந்தும் பயன் இல்லை –
———————
சர்க்கம் -52-கோபத்தில் தவறான முடிவு எடுத்தால் கற்றது வீணாகும்

நேரத்திற்குத் தக்க தர்மத்தை எடுத்துக் கூற அறிவும் தைரியமும் வேண்டும் -தூதரைக் கொல்லக் கூடாது –
இவரை ஏவினவர்களை இங்கே வரவழைக்கும் படி தண்டிக்க ஸ்ரீ விபீஷண ஆழ்வான் அறிவுரை
——————-
சர்க்கம் -53-நெருப்பை குளிர வைத்த ஸ்ரீ லஷ்மீ கடாக்ஷம் –
அக்னி பகவான் ஸ்ரீ ஸீதாபி பிராட்டிக்குத் தொண்டு செய்வதை ஸ்ரீ திருவடி உணர்ந்தார் –
தந்தையான வாயு பகவானும் குளிர்ந்து வீசினார்

கிடைத்த சந்தர்ப்பத்தை சாதகமாக மாற்றி எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் –
—————–
சர்க்கம் -54-ஸ்ரீ ஸீதாப் பிராட்டி உடைய சோக அக்னியே இலங்கையைச் சுட்டது –
ஸ்ரீ ஸீதாப் பிராட்டியுடைய கற்பு எனும் கனல் ஸ்ரீ திருவடியைக் கருவியாகக் கொண்டு ஊரையே கொளுத்தியது
————————————-
சர்க்கம் -55-நெருப்பு எரிக்குமா –
கற்பு என்னும் நெருப்பை அக்னியால் சுட முடியாதே -சாரணர்கள் புகழ்ந்து பேச கேட்டு மகிழ்ந்தார் ஸ்ரீ திருவடி

அதர்மத்தின் நடுவே தர்மம் இருந்தாலும் அதற்கு ஒரு தீங்கும் வாராது –
————————
சர்க்கம் -56-ஸ்ரீ ஸீதா ராம தாசன் -ஸ்ரீ பிராட்டி இடம் விடை பெற்று திரும்புதல்

அரிஷ்டம் என்னும் நெடிய மலையில் ஏறி கடலைத் தாண்டினார்
ஸ்ரீ பெருமாள் அனுப்பிய போது ஸ்ரீ ராம தூதன் என்னும் பட்டத்தோடு வந்தவர்
ஸ்ரீ ஸீதாப் பிராட்டி திரும்ப அனுப்பிய போது ஸ்ரீ ஸீதா ராம தாசன் என்று
ஸ்வரூப அனுரூப பெருமையுடன் புறப்பட்டார் –
——————-
சர்க்கம் -57-கேட்டது கர்ஜனை -முடிந்தது கார்யம்
கண்டேன் சீதையை -சொல்லவே வேண்டாமே -பட்டினியிடு கரையில் காத்து இருந்த ஸ்ரீ வானர முதலிகள்
ஸ்ரீ திருவடியின் முழக்கத்தையும் காற்று வேகத்தின் ஒளியையும் கேட்டு ஆரவாரித்தனர்

கார்ய சித்திக்காக முழு உபவாசமோ அல்லது ஒரு வேலை உபவாசமோ இருந்தால் சிறந்த பயன் தரும் –
—————–
சர்க்கம் -58-தானே சொன்ன தன் வரலாறு –
ஸ்ரீ பகவானுடைய திரு விளையாடல்களைக் கேட்டு இருக்கிறோம் -பக்தனின் திருவிளையாடல் அன்றோ இது
——————–
சர்க்கம் -59-புறப்படட்டும் ஐவர் படை
ஸ்ரீ ஜாம்பவான் -ஸ்ரீ அங்கதன் -அஸ்வினி தேவர்களின் மகன்களான
ஸ்ரீ பனஸன் ஸ்ரீ நீலன் -ஸ்ரீ திருவடி ஐவரும் சேர்ந்து ஆலோசனை –

தனக்கே ஆற்றல் இருப்பினும் மூத்தவர்களின் அனுமதி கேட்பது ஸ்ரீ திருவடியின் பணிவுக்கு அடையாளம்
———————————
சர்க்கம் -60-ஸ்ரீ பெருமாளே முடிவு எடுக்கட்டும் -அவர் திரு உள்ளத்தை அறிந்தே செயல் படுவோம்-

நம்மை ரஷித்து அருளும் பரம் ஸ்ரீ பெருமாளதே –
அவருக்கு ப்ரீதி கார்ய கைங்கர்யம் செய்து உகக்கச் செய்வது நம் கடைமை
——————–
சர்க்கம் -61-ஸ்ரீ வானர முதலிகள் கொண்டாட்டம் -மது வனம் அழிந்தது -ஸ்ரீ பெருமாள் முதுகு தப்பிற்று
நரர்களுக்கு மகிழ்ச்சி வந்தாலே தங்க முடியாது -வானரங்கள் மகிழ்ந்தாள் கேட்க வேணுமோ
——————
சர்க்கம் -62-தப்பி வந்த ததிமுகன் ஒப்பித்தான் –
ஸ்ரீ அங்கத ஆழ்வான் தத்தி முகனை அடித்து விரட்ட அவன் ஆகாயத்தில் தாவி வந்து
ஸ்ரீ ஸூ க்ரீவன் காலில் விழுந்து புலம்பினான்

நிதானம் தவறினாலும் அளவோடு தவறினால் ஸ்ரீ அங்கத ஆழ்வான்
—————-
சர்க்கம் -63-வெற்றியை ஊகித்த ஸ்ரீ ஸூக்ரீவன்
ஒரு காரியத்தை முடிக்கச் சென்றவர் திரும்ப நடந்து வரும் தோரணையைப் பார்த்தாலே வெற்றியை ஊகித்து விடலாம்
———————————-
சர்க்கம் -64-மது வனம் அழிந்ததோ ஸ்ரீ பெருமாள் முதுகு தப்பித்தது
நடுவில் மது வனம் இருக்கவே ஸ்ரீ வானர முதலிகளின் மகிழ்ச்சி மட்டுப்பட்டது –
இல்லை என்றால் ஒவ்வொரு முதலியும் இருந்த உத்ஸாகத்தில் ஸ்ரீ பெருமாள் திரு முதுகில் அறைந்து
கண்டேன் சீதையை -என்று சொல்லி இருப்பாரே
———————–
சர்க்கம் -65-துன்பத்தைத் தவிர்க்க சுருக்கமாக நடந்தத்தை ஸ்ரீ திருவடி அருளிச் செய்து
ஸ்ரீ சூடாமணியை சமர்ப்பித்தார் –
இனி நாம் கடலின் மேல் அணை கட்டி தாண்டிச் செல்வதே வழி -என்றும் அருளிச் செய்தார்

நாம் சொல்லும் செய்தி துன்பம் அளிக்குமாகில் நடந்தத்தை சுருங்கச் சொல்லி
நடக்க வேண்டியதை விளக்க வேண்டும்
—————————–
சர்க்கம்-66-யார் அதிகம் அன்புடையவர் –
ஸ்ரீ ஜனகர் இந்திரன் மூலம் பெற்ற ஸ்ரீ சூடாமணியை ஸ்த்ரீ தனமாக கொடுத்தார் –
அத்தைக் கண்ட ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ ஸீதாப் பிராட்டியையே கண்டது போலே திரு உள்ளம் பற்றி
இனி ஒரு க்ஷணம் கூட பிரிந்து இருக்க மாட்டேன் என்று அருளிச் செய்தார் –
ஸ்ரீ ஸீதாப் பிராட்டி ஒரு மாதம் -என்று அருளிச் செய்தார் –
பேர் அன்புடையவர் ஸ்ரீ பெருமாளே என்று நினைக்காத தோன்றும் –
பெருமையின் அளவை நினைத்து வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் ஸ்ரீ ஸீதாப் பிராட்டிக்கே புகழ் பாட வைக்கும்
——————–
சர்க்கம் -67-நடந்தத்தைச் சொன்னார் -நடக்க முடியாமல் போயிற்று
ஜீவாத்மாக்களின் குற்றங்களைக் காணாமல் அவர்களை நல் வெளிப்படுத்தும் ஒரே நோக்கத்தோடு
ஸ்ரீ மஹா லஷ்மீ ஸ்ரீ பெருமாள் இடம் இவர்களுக்காக புருஷகாரம் செய்து வேண்டுகிறாள் –
——————-
சர்க்கம் -68-யாம் பெரும் ஸம்மானம் நாடு புகழும் பரிசு
ஸ்ரீ திருவடி தன்னை ஸ்ரீ வானர முதலிகளின் கடைநிலை நீசன் என்றும் விரைவில் வந்து உம்மை மீட்டு
ராவணனை அழிப்பார் என்று அருளிச் செய்ய –
ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ திருவடியைத் திருத் தோள்கள் ஆரத் தழுவ-
இதுவே தாம் பெற்ற ஸம்மானம் -பாவோ நான்யத்ர கச்சதி -என்று சொல்ல வைத்ததே
இப் பூ உலகிலே ஸ்ரீ ராம கதையை இசைத்துக் கொண்டு -எங்கு ஸ்ரீ ராம கதையைப் பாடும் போதும் இருந்து மகிழ்கிறார்
கை கூப்பி ஆனந்தக் கண்ணீர் உடன் ஸ்ரீ ராம பக்தியை நமக்கும் அருளி நம்மோடே சேர்ந்து பாடுவார்
—————–

ஜெய் ஸ்ரீ ஸீதா ராம் -ஜெய் ஸ்ரீ திருவடி –

——————–

ஸ்ரீ ஆஞ்சநேய அஷ்டோத்தர சதா நாமாவளி

ஓம் ஆஞ்சநேயாய நம
ஓம் மஹா வீராய நம
ஓம் ஹனுமதே நம
ஓம் மாருதாத் மஜாய நம
ஓம் தத்வ ஞான ப்ரதாய நம

ஓம் ஸீதா தேவீ முத்ரா ப்ரதாயகாய நம
ஓம் அசோக வனி காச்சேத்ரே நம
ஓம் சர்வ மாயாவி பஞ்சநாய நம
ஓம் சர்வ பந்த விமோக்த்ரே நம
ஓம் ரஷோ வித்வம்ச காரகாய நம -10-

ஓம் பர வித்யா பரீஹாராய நம
ஓம் பர ஸுர்ய விநாசநயா நம
ஓம் பர மந்த்ர நிரா கர்த்ரே நம
ஓம் பர யந்த்ர ப்ரபேதகாய நம
ஓம் சர்வ க்ரஹ விநாசகாய நம

ஓம் பீம சேன ஸஹாய க்ருதே நம
ஓம் சர்வ துக்க ஹராய நம
ஓம் சர்வ லோக ஸாரீணே நம
ஓம் மநோ ஜவாய நம
ஓம் பாரீ ஜாதத்ரூம மூலஸ்தாய நம –20-

ஓம் சர்வ மந்த்ர ஸ்வரூபவதே நம
ஓம் சர்வ தந்த்ர ஸ்வரூபிணே நம
ஓம் சர்வ யந்த்ராத்மகாய நம
ஓம் கபீஸ்வராய நம
ஓம் மஹா காயாய நம

ஓம் சர்வ ரோக ஹராய நம
ஓம் ப்ரபவே நம
ஓம் பல சித்தி கராய நம
ஓம் சர்வ வித்யா சம்பத் ப்ரதாயகாய நம
ஓம் கபிசேநா நாயகாய நம –30-

ஓம் பவிஷ்யச் சதுராந நாயா நம
ஓம் குமார ப்ரஹ்ம சாரிணே நம
ஓம் ரத்ன குண்டல தீப்திமதே நம
ஓம் சஞ்சலத் வால சன்னத்த லம்ப மானசிகோ ஜ்வலாய நம
ஓம் கந்தர்வ வித்யா தத்தவஞ்ஞாய நம

ஓம் மஹா பல பராக்ரமாய நம
ஓம் காராக்ருஹ விமோக்த்ரே நம
ஓம் ஸ்ருங்கலா பந்த மோசகாய நம
ஓம் சாக ரோத்தாரகாய நம
ஓம் ப்ராஞ்ஞாய நம –40-

ஓம் ராம தூதாய நம
ஓம் ப்ரதா பவதே நம
ஓம் வாநராய நம
ஓம் கேசரீ ஸூநவே நம
ஓம் ஸீதா சோக நிவாரணாய நம

ஓம் அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய நம
ஓம் பாலார்க்க சத்ருஸாநநாய நம
ஓம் விபீஷண ப்ரியகராய நம
ஓம் தசக்ரீவ குலாந்தகாய நம
ஓம் லஷ்மண பிராண தாத்ரே நம–50-

ஓம் வஜ்ரகாயாய நம
ஓம் மஹாத்யுதயே நம
ஓம் சிரஞ்சீவிநே நம
ஓம் ராம பக்தாய நம
ஓம் தைத்ய கார்ய விகாதகாய நம

ஓம் அஷ ஹந்த்ரே நம
ஓம் காஞ்ச நாபாய நம
ஓம் பஞ்ச வக்த்ராய நம
ஓம் மஹா தபசே நம
ஓம் லங்கிணீநி பஞ்சநாய நம –60-

ஓம் ஸ் ரீமதே நம
ஓம் சிம்ஹிகா பிராண பஞ்சநாய நம
ஓம் கந்த மாதந சைலஸ்தாய நம
ஓம் லங்கா புர விதாஹகாய நம
ஓம் ஸூக்ரீவ ச சிவாய நம

ஓம் தீராய நம
ஓம் ஸூராய நம
ஓம் தைத்ய குலாந்தகாய நம
ஓம் ஸூரார்ச்சிதாய நம
ஓம் மஹா தேஜஸே நம –70-

ஓம் ராம சூடாமணி ப்ரதாய நம
ஓம் காம ரூபிணே நம
ஓம் பிங்களாஷாய நம
ஓம் வார்தி மைனாக பூஜிதாயை நம
ஓம் கபாலீக்ருத மார்த்தாண்ட மண்டலாய நம

ஓம் விஜிதேந்த்ரியாய நம
ஓம் ராம ஸூக்ரீவ சந்தாத்ரே நம
ஓம் மஹா ராவண மர்தநாய நம
ஓம் ஸ்படி காபாய நம
ஓம் வாகதீசாய –80-

ஓம் நவ வ்யாக்ருதி பண்டிதாய நம
ஓம் சதுர் பாஹவே நம
ஓம் தீன பந்தவே நம
ஓம் மஹாத்மனே நம
ஓம் பக்த வத்சலாய நம

ஓம் சஞ்சீவன நகா ஹர்த்ரே நம
ஓம் ஸூசயே நம
ஓம் வாக்மிநே நம
ஓம் த்ருட வ்ரதாய நம
ஓம் கால நேமி ப்ரமதாய நம –90-

ஓம் ஹரி மர்கட மர்கடாய நம
ஓம் தாந்தாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் ப்ரசன்னாத்மநே நம
ஓம் தச கண்ட மதாபஹ்ருதே நம

ஓம் யோகிநே நம
ஓம் ராம கதா லோலாய நம
ஓம் சீதான்வேஷண பண்டிதாய நம
ஓம் வஜ்ரதம்ஷ்ட்ராய நம
ஓம் வஜ்ரநகாய நம–100-

ஓம் ருத்ர வீர்ய ஸமுத்பவாய நம
ஓம் இந்திரஜித் ப்ராஹிதாமோக ப்ரஹ்மஸ்த்ர விநிவாரகாய நம
ஓம் பார்த்த த்வஜாத்ரஸ் வசாய நம
ஓம் சர பஞ்சர பேதகாய நம
ஓம் தச பாஹவே நம
ஓம் லோக பூஜ்யாய நம
ஓம் ஜாம்பவப்ரீதி வர்த்தனாய நம
ஓம் ஸீதா சமேத ஸ்ரீ ராம பாத சேவா துரந்தராய நம –108-

—————

இதி ஸ்ரீ ஆஞ்சநேய அஷ்டோத்தர சதா நாமாவளி சம்பூர்ணம்

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸீதா ராம தாச திருவடி திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸீதா ராம பர ப்ரஹ்ம பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கோமளா தண்டகம் –

April 26, 2019

ஸ்ரீ கோமளா தண்டகம் –

சகல புவந மாதா சாகராதீச ஜாதா ப்ரணமத் அவந காமா பாஸ்கர க்ஷேத்ர தாமா
சகலித பய மூலா சார்ங்க தன்வானுகூலா ப்ரவிமல முக பிம்பா பாது மாம் கோமளாம்பா–

ஸ்ரீ கோமளவல்லி நாச்சியார் -சகல லோக மாதா -சமுத்ரராஜ திருப் புத்ரி -ஆஸ்ரித ரக்ஷண ஏக சங்கல்பம் கொண்டு
ஸ்ரீ பாஸ்கர ஷேத்ரத்தில் ஸ்ரீ சாரங்கபாணி ஆராவமுதாழ்வானுக்கு பிரியையாய் –
மாசற்ற திருமுக மண்டலத்துடன் எழுந்து அருளி -நம்மை ரஷித்து அருளுகிறாள் –

நான்கு ஸ்லோகங்கள் —
1 -ஸ்ரீ திருக்குடந்தை திவ்ய தேச வைலக்ஷண்யத்தையும் —
சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக்குடந்தை –சூழ் புனல் குடந்தை -அன்றோ —
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியாரை நமக்கு கொடுத்த மஹா உபகாரகத்துக்கு ஸ்ரீ திவ்ய தேசத்தை கொண்டாடுகிறார்
2–அடுத்த தண்டகத்தால் ஸ்ரீ கோமள வள்ளி நாச்சியாரின் மஹிமையையும்
3/4–பின் இரண்டு தண்டகங்களால் நாச்சியாரின் திவ்ய மங்கள விக்ரஹமும் வர்ணிக்கப்படுகின்றன

புவந தல லலாம பூதாம் நிமஜ் ஜத்-வ்யதா தாப ஹ்ருத் பூர ஜாதாம் புஜாந்தர் நிபீதாசவ
ஸ்த்ரீ ஸமேதா -அலி ஜங்கார கீதா பிராமாதி ஸீதாம்பு சஹ்யாத்ரி ஜாதா தரங்கோத்த வரத அங்குராஸ்ராந்த-
தூதாதி கூல-ஸ்த சூதாதி புஷ்பா ப்யுதீதா துலா மோத ஜாதா திரேக ப்ரீணீதா-
தநூத்ரேக வாதாயநா சன்மித ஸீதாம் ஸூ முக்யாஸ்ய லீலோத்பவத் சர்வ காலோன்மிஷ துங்க ஸை லோலாசன்
நிர்மலா லோக ஸூப்ராம்ஸூ -ஜாலோத்கட ப்ராந்திம் அஸ்ராந்த சத் த்ரவ்யவி ஸ்ராணநா சக்த விஸ்ராந்தி பூமி ஷமா பால
வர்யை சதா பாலிதாம் த்வஸ்த பாபா ப்ரமாத்யத் கஜாளீ–கநத் -கண்ட -பாளீ -மதா சவாத -கேளீ ஸமுத்யத் ரவளீந்த்ர-
ஸோபி-ப்ரதோளீ -ஸமுத்யன் -நிஷத்யா-லசன்-பண்ய-ஹ்ருத்யாம்-உதாரம் அவத்யா
நபிஞ்ஞாம் ச வித்யா – வதூ -விப்ரமோத்யாந -வேதாந்த -வித்யா ஸ்ரிதாம் -சாந்த தேஜ்யா வ்ரதாரப்த-
யாஜ்யந்த-வேலா -ஹூ தாஜ்யாதி–ஹவ்யாம்-ச போஜ்யா திதேயா
க்ர்ய- ராஜ்யாத்ருத-ஸ்தோத்ர -கோஷா ஹதா-சேஷ -தோஷாம்-க்வசின்னிர் நிமேஷா ங்கநா-நிர்விசேஷா –
க்ருதி-ஸ் பூர்ஜத் -ஏணாஷ்யுபா-ஸ்லிஷ்ட வீணா -ராவோஜ்ஜீவிதை-ணாங்க சூடா ஷி கோணா-க்நிஸாத்-
பஞ்ச பாணம் புரீம் கும்ப கோணாஹ்வயாம்-பூஷயந்தீ–ஸூரான் தோஷ யந்தீ நதான் போஷயந்தீ-பயம் சோஷ யந்தீ -மராளீ –
கருத்-வாதவேகா -வாமக்நா-ப்ஜ கர்ப்போத் பதத் -புஷ்பலிட்–ஸூசித-ஸ் வாம்பு-மஜ்ஜஜ்-ஜநாம்ஹோ -விமுக்தே –
ஸூ வர்ணாம் புஜின்யா-தடாந்தே -நமஸ்யார்த்தம் -அப்யாகதை-விஸ்மயான்-நிஸ் சலாங்கைர்-
இவா லங்க்ருதே புத்ரிகா ரூப தேவைர் -விமாநே சமாநே ஸ்திதா கோமளாம்ப-தவம் அஸ்மான் அவே -1-

தாயே ஸ்ரீ கோமள வல்லி -ஸ்ரீ திருக்குடந்தை என்னும் திவ்ய தேசத்தில் பொற்றாமரைக் கரையில்
இணையற்ற விமானத்தில் எழுந்து அருளி இருக்கிற நீ அடியோங்களை ரஷித்து அருள வேண்டும் –
இந்த திவ்ய தேசம் பூ மண்டலத்துக்கே திலகம் போன்றது -ஸஹ்யம் என்ற பர்வதத்தில் இருந்து உண்டான
திருக் காவேரி நதி சமீபத்தில் ஓடுகிறது -அதின் பிரவாகத்தில் முழுகுகின்றவர்களுடைய துன்பமும் தாபமும் நீங்குகின்றன –
அதில் உள்ள தாமரைகளில் வண்டுகள் தன் பேடைகளோடு மதுவைப் பருகிப் பாடிக் கொண்டு மநோ ஹரமாய் இருக்கின்றன –
அதின் அலைகளில் இருந்து எழும் குளிர்ந்த காற்று கரைகளில் வளர்ந்து இருக்கும் மா முதலிய மரங்களின் புஷ்பங்களில் இருந்து
வாசனையை ஏறிட்டுக் கொண்டு வீசுகிறது -இந்தக் காற்று பட்ட மாத்ரத்திலே நகரத்தில் உள்ள மதி முக மடந்தையர்களுக்கு
மன்மத தாபம் உண்டாகிறது -அதை ஆற்றிக் கொள்ளும் பொருட்டு அவர்கள் எப்போதும் தங்கள் மாளிகைகளின் மேல் மெத்தையின்
ஜன்னல்களில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள் -இவர்களுடைய லாகிய முக சோபையைப் பார்த்தால்
பர்வத சிகரம் போன்ற மாளிகைகளில் சர்வ காலமும் மாசு மறுவற்ற பூர்ண சந்திரர்கள் தான் இவ்வூரில் இருந்து
வெளிச்சம் கொடுக்கிறார்களோ என்று பிரமிக்கும் படியாக இருக்கிறது

இத்தை ஆளும் அரசர்கள் நல்ல த்ரவ்யங்களை எப்போதும் கொடுத்துக் கொண்டு இருப்பதிலேயே
ருசி யுடையவர்களாய் இருப்பதால் அவர்களை தானத்திற்கு எல்லை நிலம் என்னலாம்-
வீதிகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக கன்னங்களில் மத ஜலம் பெருக சஞ்சரிக்கின்றன –
அத்தைப் பருகி வண்டுகள் கழித்து ரீங்காரம் செய்து கொண்டு இருக்கின்றன –
வீதிகளில் இரு புறமும் உயர்ந்த கடைகளில் வியாபாரத்திற்காக சாமான்கள் ஒழுங்காக வைக்கப்பட்டு வெகு அழகாக இருக்கின்றன –
நகரம் விசாலமாயும் தோஷம் என்பதே தெரியாததாயும் சகல பாபங்களையும் போக்குகிறதாயும் இருக்கிறது

சரஸ்வதி தேவிக்கு விளையாடும் உத்யான வானம் போன்றவர்களும் வேதாந்த ஞானம் நிரம்பியவர்களுமான
ஞானிகள் பலர் இங்கே இருக்கிறார்கள் -எப்போதும் பகவத் ஆராதனத்தையே செய்து கொண்டு யாகங்களையும் செய்கிறார்கள் –
யாகத்தின் முடிவில் செய்யப்படும் ஆஹூதிகளை தேவ ஸ்ரேஷ்டர்கள் உன்ன வருகிறார்கள் -அவர்களும் ஆராதிக்கும்படியாக
அப்போதும் ஓதப்படும் வேத மந்திரங்களின் கோஷம் சகல தோஷங்களையும் போக்க வல்லதாய் இருக்கிறது –
ஓர் இடத்தில் தேவ ஸ்த்ரீகள் தானோ என்று சந்தேகிக்கத்தக்க ஸூ லோசனைகளான ஸூந்தரிகள் வீணையை
அணைத்துப் பாடிக் கொண்டு இருக்கிறார்கள் -அந்த வீணா கானம் சந்த்ர சேகரனான ருத்ரனால் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட
மன்மதனனையும் உயிர்ப்பிக்கும்படி சிருங்கார ரசம் பொருத்தியதாய் இருக்கிறது

இவ்வாறு மஹிமையுள்ள ஸ்ரீ கும்பகோணத்தை அலங்கரித்துக் கொண்டு தேவதைகளை சந்தோஷிப்பித்து
ஆஸ்ரிதர்களை வாழ்வித்து அனைவரின் பயத்தையும் போக்கிக் கொண்டு நீ எழுந்து அருளி இருக்கிறாய் –
நீ திரு அவதரித்து அருளிய பொற்றாமரையில் விளையாடும் ஹம்ஸங்கள் சிறகுகளை அடித்துக் கொள்ளும் போது
அந்த வேகத்தினால் பக்கத்தில் உள்ள தாமரைப் புஷ்பங்கள் ஜலத்தில் அமிலவும் -அவற்றுள் வசிக்கும் கருத்த வண்டுகள்
திடீர் என்று மேலே கிளம்புவதை பார்த்தால் பொற்றாமரையில் நீராடும் பாக்யவான்களுடைய பாபங்கள்
அவர்களை விட்டு விலகி ஓடுவது இவ்விதமே என்று காட்டுவதாக உள்ளது –
இந்தக் கரையில் நீ கோயில் கொண்டு இருக்கும் திவ்ய ஒப்பற்ற விமானம் விளங்குகிறது –
அதை அலங்கரிக்கும் பிரதிமைகளைக் கண்டால் உன்னை சேவிக்க வந்த தேவதைகள்
இந்த திவ்ய தேச சீர்மையையும் உன் நீர்மையையும் கண்டு ஆச்சர்யத்தால் திகைத்து நிற்கிறார்களோ என்று நினைக்கும்படி இருக்கிறது

இப்படிப் பட்ட ஸ்ரீ திருக் குடந்தையில் பொற்றாமரைக் கரையில் அழகிய விமானத்தில் கோயில் கொண்டு இருக்கும்
ஸ்ரீ கோமள வள்ளித் தாயே நீ எங்களை ராஷ்ட்டித்து அருள்வாய்

————————

இவ்விதம் அழகும் செல்வமும் புண்யமும் நிரம்பிய திவ்ய தேசத்தில் தனது ஸுலப்ய குணத்தால்
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார் எழுந்து அருளி இருந்த போதிலும் அவருடைய மேன்மைக்கு எல்லையில்லை என்று
சகல பல ப்ரதத்வம் முதலான குணங்களை சொல்லி அவள் மஹிமையைக் கொண்டாடுகிறார்கள் இரண்டாவது தண்டகத்தில்

அகில ஜனனி –
சார்ங்க பாணி ப்ரியே
கீர வாணி
ப்ரசர்ப்பத் க்ருபாணி ப்ரபா பந்துராணி வ்யதா
மோஷாணா நிஸ்துவத்-ரக்ஷணாநி ஸ்புடாநீ-ஈஷணாநி பிரகாமம் நிதேஹி ப்ரமோதம் விதேஹி
பிரணம்ரே மயி ப்ரோல்லஸத் பத்ம வாடீ க்ருஹே
ஸ்வர்ண சாடி யுதே-ஸ்வர் வதூடீ கரோத் ஷிப்த வீடி தல ஸ்வாத தாடீ-ஸூ சோனோஷ்டி
சேடீ பவத் -தேவ கோடீ-சிரஸ் -ஸ்தாஸ்னு -கோடீர ஜுஷ்டாங்க்ரி -யுக்மே
பிரியோரோ விஹாரே-ப்ரக்ருஷடாம் ஸூ ஹாரே -மராளீ ப்ரஸாரே மஹிஷ்டோ பஸாரே
க்ருதா கவ்யு தாஸே க்ருபா குப்தா தாஸ் பவத் த்ருஷ்ட்டி லேசோ பவேச் சேத் அதீஸோ
விசாம் வாதிசாம் வா ஜானோ ஜாயதே அல்போபி மூடோ அப்யஹோ
கல்ப வல்லீ ஸூமா நல்ப-மாத்வீ-ஜரீ -கல்ப -பூயோ -பவஜ்-
ஜல்ப -பாக்கம்சஜித் – தல்ப-பங்கம் -கிராகல்பயத்-யந்திகே-சார்ங்க தன்வா –
ஹ்வயம் பாஸேந யன் மஹஸ் தத் -பிரியாயாம் ரமாயாம் மஹோ தாரதா நித்ய –
சித்தா த்விதா அபீதி சர்வே புதாஸ் த்வாம் ரமே சவ்ரி-ராமே அரவிந்தாலயே-மே கதிர் -நத்வத் -அந்யே-ஸூரா
சிந்து -கன்யே -அம்பா லஷ்மீந்திரே
மந்திரேஷ் வஷி நிஷிப்யதாம்-நஸ் த்வயேத் -யாமந்தி -பிரகாமம் ஜகந்தி பிரமோ
தோல்ல சந்தி த்வயா அமூனி சந்தி-ஸ்புரச்–சந்த்ர -ரஸ்மிச்-சடா
மிஸ்ரிதே நேவ மேக வ்ரஜேந ஸ்வ-வக்த்ராத்மநா பூர்ண சந்த்ரேண பாச சாத்ய தேசே சீதை ரஜ்ஜூ ஜாலைர் –
நிபத் தாத்ம நேவா -அந்தகாரேண-கங்கா ஜரீ -சங்க -பாஜேவ–ஸூர்யாத்மஜா –
ஸ்ரோதசா மல்லிகா மாலிகா ஸோபிநா கேச பாசேன நீல பிரகாசேந சம்சோபிதே –
ஹேமா பாஅபித்வம் அத்யத்புதம்-
க்ருஷ்ண காந்தே ப்ரஸீதேதி ஸம்ப்ரார்த்யசே சாதுபி-2-

ஹே ஸ்ரீ கோமளாம்பா -நீயே சகல லோகங்களுக்கும் மாதா -ஸ்ரீ சார்ங்கபாணியின் பிரியை -கிளி போன்ற இனிய மொழியாள்
உன்னுடைய கடாக்ஷங்களில் கருணை ததும்புகிறது -அவை உன்னை ஸ்துதிப்பார் ஆபத்தைப் போக்கி அவர்களை ரஷித்து அருளும் –
அந்த கருணை கடாக்ஷங்கள் அடியேன் இடத்திலும் பரிபூர்ணமாக அருளத்தட்டும்
மலர்ந்த தாமரைகளோடு விளங்கும் பொய்கையையே உனது வாசஸ்தானம் -அழகிய பொன்னொத்த பட்டே உனது ஆடை –
தேவ ஸ்த்ரீகள் பக்தியுடன் வெற்றிலை ஏந்திக் கொடுக்க அத்தை அமுது செய்து உன் ஆதாரங்கள் சிவந்து இருக்கின்றன –
சகல தேவர்கள் க்ரீடங்களும் உன் திருவடிகளில் -ஸ்ரீ ஆராவமுத ஆழ்வானது திரு மார்பே உனக்கு விளையாடும் இடம்-
உனது நடை ராஜ ஹம்சம் போன்றது

உன்னுடைய திரு ஹாரமோ தேஜஸ்ஸால் வீசுகிறது–உன்னை அனைவரும் உபசரித்து பூஜிக்கிறார்கள் –
அனைவருடைய பாபங்களையும் நீக்கி கருணையால் திருத்தி ரஷித்து அருள்கிறாய் –
உன்னுடைய கடாக்ஷ லேசத்தாலே அல்பரும் சகல தேசாதிபதியாகிறார்கள் –
உனது கடாக்ஷ லேசத்தினால் மூடன்கூட கற்பக வருஷத்தில் புஷபங்களில் பெருகும் மது தாரை போலே
இனிமையான சொற்களால் ஆயிரம் நாவுடைய ஆதிசேஷனையும் ஜெயித்து விடுகிறான்
உன்னருகில் ஸ்ரீ சாரங்க பாணி -மஹ-பரஞ்சோதி மிளிர்கிறது -அதன் தாரமான -பத்னியான உன்னிடத்தில்
மஹோ தாரதை-மஹா உதாரமாய் -இருப்பதாலே உன் மூலமே அவனை ஆஸ்ரயிப்பது–
மல்லிகைப் பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு கறுத்து நீண்டு அடர்ந்து இருக்கும் உன் கூந்தல்கள் பிரகாசம் –
பூர்ண சந்த்ர காந்தி மேகக் கூட்டங்கள் உடன் கலசி-கங்கா பிரவாஹமும் யமுனைப் பிரவாஹமும் கலந்தால் போலேயும் அழகாக உள்ளதே –
நீ ஹிரண்ய வர்ணமாய் இருந்தாலும் ஸ்ரீ கிருஷ்ண காந்தே -விரோதம் இல்லையே –

———————–

ஸ்ரீ கோமளவல்லி நாச்சியாரின் பரத்வம் ஸுலப்யம் முதலான ஆத்ம குணங்களை அனுபவிக்க இறங்கினர்
பள்ளமடையான திவ்ய மங்கள விக்ரஹ குணத்தின் அனுபவத்தில் வந்து சேர்ந்தார் –
இனி மேல் இரண்டு தண்டகங்களால் அந்த திவ்ய மங்கள விக்ரஹத்தையே அனுபவிக்கிறார் –
அவற்றுள் முதல் தண்டகத்தால் எல்லா விதத்தாலும் மநோ ஹரமான
திரு முக மண்டலத்தின் ஸுந்தர்யத்தில் ஈடுபட்டு அத்தை வர்ணிக்கிறார்

ஸூம -சர-லலாத -பிராமே க்ருதா பத்விராமே-ரமே சார்ங்கி -ராமே
சதா சாதரா மே மநோ வ்ருத்திர் ஆஸ்தாம் த்வயி ஸ்ரீ ஸ்புடம் மூர்த்த ஜாநாம் த்விதா சம் விபக்தாத்ம நாம்
அந்தரே பாஸ்வதா பவ்ய சிந்தூர ரேகான் விதேநாம்-
புதாந்தர் லசச் சஞ்சலா வல்லி சந்தேக சந்தாயிநா-தீர்க்க சீமந்த மார்கேண சாம் பூஷிதம் குங்குமை ரூஷிதம்
ஸூஷ்ம லஷ்மான்விதார்த் தேந்து துல்யேச கஸ்தூரிகா சித்ர கோத்பாஸிநா பால -பாகேந சோத் பாசிதம்
ரோசநா வாசிதும் மஞ்சிமா த்யாசிதம் மந்த ஹாலைஸ் சிதம்-வக்த்ர காந்தி ப்ரவாஹோத்த வீசி ப்ரமாதயிநா ருத்ர
நேத்ராக்நி நா அஸ்யாபி சார்த்தம் மாயா மா ஸ்ம பூத்தாஹ கர்மேதி நிச்சித்ய மாத்ருத்வ சம்பந்தத
ஸூந சாபா ஹிதே நேவ சாபோத்த மேந ப்ருவோர் த்வந்த்வத சோபமாநம் ஸ்ரியா நிஸ் சமானம் நிரஸ் தேந்து மாநம்
ஸ்ரவ-பூரா நீலோத்பல த்வந்த்வ மாத்வீக-பாநார்த்தம் அப்யாக தாப்யாம் புரோ விஷ்ய நா சாத்மகம் சமபகம் தத்-
பயே நேவ பாரி ப்லவாப்யாம் இவேந்திந்திராப்யாம் மணீ கர்ணா தாடங்க-ரஸ்மி ப்ரவாஹ ஸ்புரன் மீந சங்கா
வஹாப்யாம் முகே ஸ்வீய-பந்து -பிரமாத்-ஆகதாப்யாம் -இவேனத்தீ வராப்யாம் லசல லோசா நாப்யாம்–
ஜ்வலத் குண்டல த்வந்த்வ ரத்னா பிரபா சித்ரிதாப்யாம் முராராதி லீலா மணீ தரப்பணாப்யாம் கபோல-
ஸ்தலாப்யாம் ஸ்ரிதம் லோச நேந்தீவா -த்விட்-ப்ரமா-தாயி நீலோத்பலா -லங்க்ருத -ஸ்ரோத்ர யுக்தம் –
ஸூ கோத்பாத-சக்தம் -ப்ரஸாதாது-ஷக்தம்-ஸ்வ -பர்வோத்தித-ப்ராந்தி-சந்தாயி முக்தா –
ல சந்தஸிகா வம்ச-வல்ல யுஜ்ஜ்வலம் வக்த்ர சந்த்ராந்தர்-உத்பாஸி -பியூஷ பிந்து –
பிரமாதாயி -தந்தா ஸ்ரிதம் சந்த தத்யாம் முகம் -3-

ஹே ஸ்ரீ லஷ்மீ –ஸ்ரீ சாரங்க பாணி ப்ரியே -உன் திரு முக மண்டலத்தில் கேசங்களை சமமாகப் பிரித்து நீளமாக வகிடு எடுத்து
மங்களமான சிந்தூரத்தை இட்டு அலங்கரித்து இருப்பது மேக மண்டலத்தில் மின்னல் கொடி போன்று உள்ளதே –
ஸ்ரீ கஸ்தூரி திலகம் கூடிய திரு நெற்றி அர்த்த சந்திரன் போலே திரு முக மண்டலம் புன் முறுவல் பூத்து-
சோதி வெள்ளத்தில் எழுந்த அலை போன்று திருப் புருவங்கள் இருக்க –
மன்மதனை ருத்ரன் எரிக்கும் பொழுது தனது சீரிய வில் எரிந்து போகாது இருக்க தனது தாயான
உன்னிடத்தில் இருக்கும்படி அன்றோ திருப்புருவங்கள் –
திருக் காதில் அணிந்த நீலோத்பலங்களில் இருந்து பாயும் மதுவைப் பருக வந்து எதிரில் தோன்றிய திரு மூக்கு என்னும்
செண்பகப் பூவைக் கண்டு என் செய்வோம் என்று திகைத்து நடுங்கும் இரண்டு வண்டுகளைப் போலே திருக் கண்கள்-
திருக் காது அணிகலன்கள் தேஜோ ப்ரவாஹத்தில் நீந்தும் மீன்கள் போலே -திருமுகமும் தாமரையாய் இருப்பதால்
தங்கள் இனம் என்று எண்ணி பிரமிக்கும் திருக் கண்கள் -திருக் கபோலங்கள் ரத்னக் கண்ணாடிகள் போலே —
திருக் கண்கள் ஆகிற நீலோத்பல காந்தியே திருக்காதுகளில் அணியப்பட்ட நீலோத்பலம் –
திரு மூக்கின் நுனியில் தொங்கும் முத்து தானாகவே தோன்றியது போலே -திருப் பற்கள் அம்ருத பிந்துக்கள் போலே –
பர அனுக்ரஹ ஏக ஹேது வான திரு முக மண்டலத்தை கொண்ட உன்னிடம் என்னுடைய மனஸ்
பக்தி உள்ளதாகும் படி நீயே அருள வேண்டும் –

———————————————–

திரு முக மண்டல அனுபவம் படிப்படியாக திவ்ய அவயவ சோபையைக் காட்டி அவற்றை அனுபவித்து
திருவடிகள் அளவும் செல்லக் கொண்டு போயிற்று –
இனி வர்ணிக்க இயலாது என்று அறிந்து நீயும் உன் பதியுமே பர தத்வம் –
அடியேன் உங்கள் இருவருக்கும் தாஸபூதன்-என்று ஸ்வரூபத்தை உணர்ந்து
அடியேனுடைய ரக்ஷண பரம் உன் பொறுப்பு என்று சரணம் புகுகிறார் நிகமத்தில் –

கலித-நமதபீஷ்ட-பூர்த்தே-விதூ தாமரார்த்தே -ஸூரீ கீத கீர்த்தே -ஸ்புரந் -பவ்ய மூர்த்தே
த்வதீ யஸ்ய கண்ட ஸ்யபாச ஜிதஸ்ய ஸ்வகீய -ப்ரபோ சந்நிதவ் பங்க ஆஸீன் மமே திஸ்வ
வாசா விசிஷ்டா பிதாநே ஹ்ரியா பம்பம் இத்யே கதே சம்ப்ருவாணஸ்ய சங்கே சிது-
பாஞ்ச ஜன்யஸ்ய கோஷேண யுத்தாங்கணே சர்வ சங்காபிமான பராஹங்ப தேகிம் –
விதூத்யத் -கர ஸ்பர்ச-ஜாதா தரா-சக்ர வாகாயதி ஸ்யு பவேயுஸ்
ததைதத் -சமானா இதி ப்ராஞ்ஞ வர்யை ஸ்துதா ப்யாம்லசன்
நாபி-கூபாந்த -சமரோட ரோமாளி -வல்லீ-குளூச்ச பிரமாதா யகாப்யாம்
அமர்த்யாபகா-சோபித -ப்ராந்த-நீலாம் புதா ஸ்லே பவ ஸ்ருங்க
மேரு த்வய ப்ராந்த சந்தாய காப்யாம் சமுக்தா சராப்யாம் குசாப் யாம் லசத்-
க்ரோட -பாகே -நமத் தேவ பூகே ஹரவ் சானுராகே -ஸ்தநோர் வீதர-ப்ராந்தே
சஞ்சாத -வல்லீ -பிரமாதாயி-பாஹாக்ர தேசோல் லசத் -பல்லவ -ப்ராந்த சந்தாயி -பாண்யங்குலீ
பங்க்த்யுபர்யுத் பவ த் கோரக ஸ்ரேணி சந்தேக க்ருத்பிர் நகை ராஜிதே
யோகிபி–பூஜிதே -மத்திய சம்யோஜிதே மேகலா தாம்நி ஸர்பத்வம்-ஆ சங்க மாநேந லோகேந வல்மீக மேவேதி
சம்பா விதாயாம் ஸ்வகீ யாங்க பூஷாம் ஸூ பூரேசதாஸ் வர்த-சோபாம் வஹந்யாம் ஸ்வ நாப்யாம்
ப்ரமச் -சார்ங்கி -சித்தே ப்ரசஸ்த பிரபத்தே தவோரு ஸூ சாரூ ஜி தா தர்ச பாநூ ஜகத் தாத்ரி
ஜாநூ க்ருதாம் போஜ கேதவ்-க்ருபா வாபி பாதவ் -சமஸ்தே அபி லோகே சமாநாஸ் -த்வயா கே
த்வமேவாசி மாதா -ச சார்ங்க்யேவ நேதா தவை வாஸ்மி நித்யத் ததா வஸ்மி சத்யம் ரமே
பாஹி மாம் பாஹிமாம் தேவி துப்யம் நம-4-

ஹே ஸ்ரீ கோமளாம்பா ஆசிரித்தார்கள் மநோ ரதங்களை நிறைவேற்று அருளுகிறாய் –
தேவதைகளின் துன்பங்களைப் போக்கி அருளுகிறாய் -தேவ ஸ்த்ரீகள் உன்னை ஸ்துதிக்கிறார்கள் –
உன் திவ்ய மங்கள விக்ரஹ தேஜஸ் எங்கும் பரந்துள்ளது-
உனது திருக்கழுத்தின் அழகு ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை தோற்கடிக்க -இப்படி கர்வ பங்கம் ஏற்பட்டத்தை
ஸ்ரீ சார்ங்க பாணி எதிரில் இருக்கும் போது பங்கம் என்று முழுதாக சொல்ல முடியாமல் –
பம் பம் என்று மாத்திரம் சொல்லி முடிக்கிறது -இப்படி பம் பம் ஒலியால் மற்ற சங்கங்களை அழைத்து
நானே தோற்ற பின்பு உங்கள் தோல்வியைச் சொல்ல வேண்டுமோ என்று அறிவிப்பது போலே இருக்கிறது –

சக்ரவாகங்கள் சந்திரனுடைய கர ஸ்பர்சத்தை ஸஹித்துக் கொண்டு இருக்குமாகில்-
அவைகளை முத்து மாலையுடன் கூடிய உனது ஸ்தனங்களுக்கு உபமானமாகச் சொல்லலாம் -என்பர்
இவை கொப்பூழ் என்னும் கிணற்றில் முளைத்த ரோமவரிசை என்னும் கொடியினால் தரிக்கப்பட்ட
இரண்டு பூம் கொத்துக்கள் போலே இருக்கின்றன –
ஸ்வச்சமான முத்து மாலைகளோடு உன் திரு மார்பில் விளங்கும் இரு ஸ்தனங்களும் இரண்டு சிறிய கார் மேகங்கள்
சிகரங்களில் வீற்று இருக்க -நாலா பக்கமும் வெண்மையான கங்கா ப்ரவாஹத்தின் காந்தி வீச உயர்ந்து நிற்கும்
இரண்டு மேரு பர்வதங்களோ என்று சந்தேகிக்கும் படியாய் இருக்கிறது –

உனது இரு திருப் புஜங்களும் ஸ்தனங்கள் ஆகிற மலைகளின் சாரலில் தோன்றிய இரண்டு அழகிய கொடிகள் போன்று உள்ளன –
திரு விரல்கள் கொடிகள் தளிர்த்த தளிர்களோ-என்றும் –
திரு நகங்கள் கொடிகள் புஷ்பித்த மொட்டுக்கள் வரிசைகளோ என்று சந்தேகிக்கும் படியாய் உள்ளன –
திரு ஒட்டியாணம் சலங்கை முதலான திவ்ய ஆபரணங்களின் கயிற்றை சர்ப்பம் என்று சந்தேகிக்கும் ஜனங்கள்
திரு நாபியை சர்ப்பம் வசிக்கும் புற்று என்று சந்திக்கும்படி இருக்கிறது –
தேஜஸ் வெள்ளத்தில் தோன்றிய சூழல் போலவும் உள்ளது –
ஸ்ரீ சார்ங்கபாணியின் மனஸ் அந்த சுழலில் அகப்பட்டுச் சுழன்று கொண்டே இருக்கிறது –
ஸ்ரீ சர்வ லோகேஸ்வரீ உனது திருவடிகளில் செய்யப்படும் பிரதிபத்தி சர்வ அபீஷ்டங்களையும் அருளும் –
ஓத்தார் மிக்கார் இலாயா மா தேவீ -அடியேன் தாஸபூதன் —
அடியேன் ஆத்மாவை உன்னிடம் சமர்ப்பித்து உன்னையே சரணம் அடைகிறேன் –

————————————-

நிகமத்தில் இந்த ஸ்தோத்ரம் ஸ்ரீ கோமளவல்லி பிராட்டியின் பொருட்டு ஆகட்டும் என்று சொல்லித் தலைக் கட்டுகிறார் –

அதி மிருதுல வசன குமீபமீ -வரமேதத் வராத விஷ்ணு -கவி கதி தமீ
தண்டக ரூபமீ ஸ்தோத்ரம் கோமளவல்லீ மநோ முததே பவது–

மிகவும் மிருதுவான இந்த தண்டக ஸ்தோத்ரம் -ஸ்ரீ வரத விஷ்ணு என்ற கவியினால் இயற்றப்பட்டது –
இத்தை அப்யசிப்பார் ஸ்ரீ கோமள வல்லீ நாச்சியாருடைய திரு உள்ளத்திற்கு உகப்பு ஏற்பட்டு
சகல ஸ்ரேயஸ்ஸூக்களும் பெற்று ப்ரீதி காரித நித்ய கைங்கர்யமும் பெறுவார்

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வரத விஷ்ணு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோமள வல்லீ சமேத ஸ்ரீ சாரங்க பாணி பெருமாள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவல்லிக்கேணி – ஸ்ரீ ப்ரஹ்மோத்ஸவ விவரணம் –ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள்

April 25, 2019

ஸ்ரீ திருவல்லிக்கேணி -ஸ்ரீ ப்ரஹ்மோத்ஸவ விவரணம்

முதல் நாள் காலை -தர்மாதி பீடம் -ஸ்ரீ உபய விபூதி நாத ஸூசகம் – -ஸ்ரீ முதல் திருவந்தாதி -திரு வீதியில்

மாலை புன்னை மர வாஹனம் -ஸ்ரீ கண்ணன் திருப் புல்லாங்குழல் ஊதும் திருக்கோலம்
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் புத்தூர் பெறாத அன்று
பாரதம் கை செய்த அத்தூதன் -ஸ்ரீ பெரியாழ்வார் -2-1-1-

இரண்டாம் நாள் காலை -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி சேவை –
விடங்காலும் தீவாய் அரவணை மேல் தோன்றல் -71-என்றும் பொங்கு பட மூக்கில் ஆயிரவாய்
பாம்பணை மேல் சேர்ந்தாய் -97-என்பதற்கு ஏற்ப சேஷ வாஹனம்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -81-என்பதற்கு ஏற்ப ஸ்ரீ பரமபத நாதன் திருக்கோலம்

இரண்டாம் நாள் மாலை -பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போர் ஏறே
என் சிற்றாயர் சிங்கமே -ஸ்ரீ பெரியாழ்வார் –3-3-5-என்பதற்கு ஏற்ப ஸிம்ஹ வாஹனம்

மூன்றாம் நாள் காலை -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி சேவை -பொலிந்த கருடன் மேல் கொண்ட கரியான் கழலே
தெருள் தன் மேல் கண்டாய் தெளி –57-என்பதற்கு ஏற்ப ஸ்ரீ கருட வாஹனம் சேவை

ஏகாந்த சேவையில் திருக்கண்டேன் — என் ஆளி வண்ணன் பால் இன்று -1-சேவை

மூன்றாம் நாள் மாலை –உரக மெல்லணையான் கையில் உரை சங்கம் போலே மட அன்னங்கள் –ஸ்ரீ பெரியாழ்வார் –4-4-4-
என்பதற்கு ஏற்ப ஹம்சா வாகனத்தில் பறவை ஏறு பரம் புருடனாக-5-4-2-சேவை
இவன் தானே உலகினில் பேர் இருள் நீங்க அன்று அன்னமதாய்-1-8-10-பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வன் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில் பாத இலச்சினை வைத்தார் -5-2-8-

நான்காம் நாள் காலை -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி சேவை -நீயே எரி சுடரும் -20-என்பதற்கு ஏற்ப –
நான்முகனை படைத்த நாராயணன் -1-என்பதால் பரத்வம் பொலிய ஸூர்ய மண்டல மத்யவர்த்தி -ஸூர்ய பிரபையில் சேவை

நான்காம் நாள் மாலை -ஸ்ரீ திருப்பாவை ஸ்ரீ நாச்சியார் திருமொழி சேவை –
கதிர் மதியம் போல் முகத்தான் -1-என்றும்
சந்த்ர மண்டலம் போலே தாமோதரன் கையில் -7-4-என்பதற்கு ஏற்ப சந்த்ர பிரபை சேவை –

ஐந்தாம் நாள் காலை -ஸ்ரீ திருவிருத்தம் சேவை -நாயகா பாவனையில் பூர்ணமாக அருளிச்செய்த
ஸ்ரீ திவ்ய பிரபந்தம் அன்றோ ஆகவே நாச்சியார் திருக்கோலம்

ஐந்தாம் நாள் மாலை -ஸ்ரீ பெருமாள் திருமொழி சேவை –
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை -10-11-என்பதற்கு ஏற்ப ஸ்ரீ ஹனுமந்த வாஹனம்

ஆறாம் நாள் காலை -திருச்சந்த விருத்தம் சேவை -ஆதியான வானவர்க்கும் ஆதியான ஆதி நீ -8-என்பதற்கு ஏற்ப
திரு அபிஷேகம் அணிந்து பரத்வம் பொலிய ஆனந்த விமானத்தில் எழுந்து அருளுகிறார் –

ஆறாம் நாள் மாலை ஸ்ரீ முதல் ஆயிரம் நிகமித்து-
உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகிச் செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி -28-என்றும்
விண்ணுளார் வியப்ப வந்த ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறா -44 -என்பதற்கு என்ற ஆனை வாஹனம்

ஏழாம் நாள் காலை ஸ்ரீ திருவெழு கூற்று இருக்கை சேவிக்கப் பெற்று ஸ்ரீ பெரிய திருமொழி சேவை -என்பதற்கு ஏற்ப திருத்தேரில்
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை -2-3-1-என்றும்
பார்த்தன் தன் செல்வத் தேர் ஏறி சாரதி -2-10-8-என்பதற்கு ஏற்பவும் திருத்தேரில் சேவை –

எட்டாம் நாள் காலை முதலில் ஸ்ரீ சிறிய மடல் சேவிக்கப் பெற்று பின்பு ஸ்ரீ பெரிய திருமொழி தொடர்ந்து சேவை
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி ஆராத வெண்ணெய் விழுங்கி-என்றும்
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப-3-3-3-என்றும்
ஆய்ச்சியர் வைத்த தயிர் வெண்ணெய் உளம் குளிர அமுது செய்து -3-9-7-என்றும்
பாடல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமார –4-4-3-என்பதற்கும் ஏற்ப
வெண்ணெய்த் தாழிக் கண்ணனாக சேவை

எட்டாம் நாள் மாலை -ஆடல் மா வலவன் கலிகன்றி பாசுரங்கள் சேவைக்கு ஏற்ப குதிரை வாஹனம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திரு ஆபரணங்கள் கொள்ளை அடிக்க எழுந்து அருளுவதும் –
ஸ்ரீ திருமந்திர உபதேசம் செய்து திருத்திப் பணி கொள்வதும் –
மீண்டும் வாடினேன் வாடி வருந்தினேன் -முதல் பதிகம் அனுசந்திப்பதும் -முக்கிய நிகழ்வுகள்

ஒன்பதாம் நாள் காலை -மட்டை அடி உதவும் -எட்டாம் நாள் மாலை சேர்த்தியில் எழுந்து அருளி –
வேடு பறியின் போது தொலைத்த திரு மோதிரத்தை தேடிக்கொண்டு தனியாக எழுந்து அருளி –
ஸ்ரீ நம்மாழ்வார் -பெரியவருக்காக பொறுத்தோம் என்பதும் -மின்னிடை மடவார் –திருவாய் மொழி -7-2-சேவித்து

அன்று இரவில் காதில் கடிப்பிட்டு -10-8-பதிகம் சேவை -உத்சவத்தில் பூர்த்தியாலும்
ஸ்ரீ பெரிய திருமொழி பூர்த்தியை முன்னிட்டும் தங்க சப்பரத்தில் எழுந்து அருளி சேவை

பத்தாம் நாள் -துவாதச ஆராதனம் -பூர்ணமாக ஸ்ரீ திருவாய் மொழி திருச்செவி சாத்தி அருளுகிறார்

அன்று இரவில் குளிர்ச்சியாக வெட்டிவேர் திருத்தேரில் புறப்பாடு –
ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் குளிரும்படி ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி சேவை

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தென் புதுவைப் பிராட்டி –திவ்ய தேச பிராட்டிமார் பதின்மரையும் திருப்பள்ளி எழுச்சி உணர்த்துவது -ஸ்ரீ உ .வே -குமாண்டூர் இளையவல்லி பாஷ்யம் ரெங்கராஜன் ஸ்வாமிகள் —

April 24, 2019

ஸ்ரீ தேவஸ்ய மஹிஷீம் திவ்யாம் ஆதவ் கோதாம் உபாஸ்மஹே
யன் மவ்லி மாலிகாம் ப்ரீத்யா ஸ்வீ கரோதி ஸ்வயம் பிரபு –

மத் தர்சனார்த்தம் தே பாலா ஹ்ருதாஸ்தேந மஹாத்மநா விப்ரார்த மா கதே கிருஷ்னே
மா கச்சே தன்ய தே திஹ–ஸ்ரீ ஹரிவம்சம் –ஸ்லோகம் -8-
வைதிகன் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே –திருவாய் -3-10-5 —
வேத வாய் மொழி அந்தணன் -ஸ்ரீ பெரிய திருமொழி -5-8-8-
இத்தால் ஸ்ரீ பரமபதத்திலும் திரு௭த்தேவிமார் -ஸ்ரீ கண்ணன் திவ்ய மங்கள விக்ரஹ சேவை காணப் பாரித்து இருந்தமை அறிவோம் –

ஸ்ரீ நாச்சியார் திருமொழியில் மங்களா சாசனம் செய்யப்பட -ஸ்ரீ திரு ஆய்ப்பாடி –ஸ்ரீ வடமதுரை -ஸ்ரீ துவாரகை —
ஸ்ரீ திருப்பாற் கடல் -ஸ்ரீ திருக்கண்ண புரம் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திருவேங்கடம் -ஸ்ரீ திருக்குடந்தை –
ஸ்ரீ பரமபதம் -ஸ்ரீ திருமாலிருஞ்சோலை-

புள்ளும் சிலம்பின் காண்-

திருவாய்ப்பாடி பிராட்டி -துயில் எழுப்பப்படுகிறாள் -பேய் முலை நஞ்சுண்ட -சகடம் உத்தரித்த -வ்ருத்தாந்தங்கள் -உண்டே
புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறின-ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ ஸூக் திகள் அடி ஒற்றி இதிலும் – -புள்ளும் சிலம்பின
கிளிக்கும் -ஸ்ரீ ஆண்டாளுக்கு சாம்யம் -த்விஜாதிப ஸூதாம்-ஸ்ரீ பெரிய திருவடி பெண்ணாக மதிக்கப்படும் ஸ்ரீ பைம் கிளி –
ஸ்ரீ பெரியாழ்வார் பெண் பிள்ளை ஸ்ரீ ஆண்டாள்
முட்டை வடிவில் தோன்றி குஞ்சு வருவதால் பறவைகள் த்விஜம்-
பிள்ளாய் -அஸ்மத் குருப்யோ நம-வாசகம் –
ஸ்ரீ பெரியாழ்வாரை திருப்பள்ளி உணர்த்தி அவருடன் ஸ்ரீ திருவாய்ப்பாடி பிராட்டியை திருப்பள்ளி உணர்த்தி அருளுகிறாள்
புள்ளரையரனை புருஷகாரமாகப் பற்றி பிள்ளாய் -என்று கொண்டாடுகிறாள்-
புள்ளரையன் கோ -இல் -தாச ச சஹா வாஹனம் -எம்பெருமானின் இன் துணை –
கோ இல் இல் -பிராட்டியின் இல்லமாகத் திகழும் திருவாய்ப்பாடி –
இந்தப் புள்ளரையன் கோயிலில் ஒலிக்கும் ஸ்ரீ திருச்சங்கம்-ஆ நிரை மீளக் குறித்த சங்கம்
மற்றை நாள் ஸ்ரீ ருக்மிணி பிராட்டியை திருமணம் முடிக்க வந்து இருப்பதை -பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கு ஒலி
இங்கோ அத்தாணிச் சேவகத்துக்கு அழைக்கும் சங்கு ஒலி -மங்கள தீப ரேகை கொண்டு அவனையும் நம்மையும் சேர்ப்பிக்கிறாள்

———————————-

கீசு கீசு என்று

ஸ்ரீ திரு வடமதுரை திவ்ய தேசப்பிராட்டி-ஸ்ரீ ஹரி -ஸ்ரீ கோவர்த்தன கிரி தாரிபிராட்டியை திருப்பள்ளி உணர்த்தி –
அனைவரும் சேர்ந்து இங்கே ஸ்ரீ திரு வடமதுரை கேசவனை திருப் பள்ளி உணர்த்துகிறார்கள் –
இவளே பேய்ப்பெண் -நாயகப்பெண் பிள்ளாய் –
நெடுமால் அழகு தன்னில் நீள் குணத்தில் ஈடுபடுமா நிலையுடைய பக்தியால் -ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி -80-
கம்சனுக்கு அறிய முடியாதபடி ஸ்ரீ கிருஷ்ண கிருஷ்ண என்னாமல் கீசு கீசு என்னுமாம் ஆனைச்சாத்தன்
ஆச்ரித வாத்சல்ய திவ்ய மூர்த்தியாய் ஸ்ரீ ஹரி -ஸ்ரீ கேசவன்-அர்ச்சா சேவை இங்கு
ஓஜஸ் -தேஜஸ் -த்யுதிதர -பலம் -பராபி பவன சாமர்த்தியம் -உஜ்ஜ்வல்யம் –
ஒளி மணி வண்ணன் -ப்ரகாசாத்மா -தேஜோ வ்ருஷ-
யஸ்ய விஷ்ய முகம் தத் இங்கித பராதீனோ விதத்தே அகிலம் -என்றபடி –

——————————

கீழ்வானம்

திருத் துவாரகை திவ்ய தேசப் பிராட்டிமார்
ஸ்ரீ ருக்மிணி பிராட்டியை கோதுகலமுடைய பாவாய் –
இவனோ கோதுகலமுடைய தேவாதி தேவன் -தேவ ஸ்ரீ கர்ப்ப -இன்புறும் அலகிலா விளையாட்டுடையவன்
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே–மிதுனமாய் எழுந்து அருளுவதால்
நாம் சென்று சேவித்தால் ஆ ஆ என்று அருளும்

—————–

தூ மணி மாடம்

திருப் பாற்கடல் திவ்ய தேசப் பிராட்டி
ஸ்ரீ வண் த்வாராபதி -ஸ்ரீ தக்ஷிண த்வாராபதி -ஸ்ரீ கோபால சமுத்திரம் –
ஸ்ரீ திருப் பாற் கடல் வீதியும் புஷ்கரணியும் உண்டே இங்கும்
திருப் பாற் கடல் அரசனும் ஸ்ரீ பெரியாழ்வாரும் மாமனார்கள் அன்றோ-எனவே மாமீர் -மாமான் மக்களே என்ற விளிச் சொற்கள்
யோக நித்திரை -மாதவ -மா -மவ்னம்-தா -த்யானம் -வ -யோகம் -ஸ்ரீ வ்யூஹ வாஸு தேவன் சேவை –
ஸூ முக -மநோ ஹர -ஸ்வாபன-ஏமப் பெரும் துயில்-ஸ்ரீ சஹஸ்ரநாமம் நவின்று திருப்பள்ளி உணர்த்த பிரார்த்திக்கிறாள்

———————————-

நோற்றுச் சுவர்க்கம்

திருக் கண்ண புர நாயகி-அம்மனாய் -அருங்கலமே –
ஸ்தலம் -வனம் -நதி -கடல் -நகரம் -தீர்த்தம் விமானம் -சப்த புண்ய க்ஷேத்ரம் –
ஸ்ரீ நீல மேகப்பெருமாள் -ஸ்ரீ சவுரி ராஜன் -நாற்றத்துழாய் முடி நாராயணன் அன்றோ
ஸ்ரீ ரெங்கம் -ஸ்ரீ திருவேங்கடம் -ஸ்ரீ முஷ்ணம் -ஸ்ரீ வான மா மலை -ஸ்ரீ சாளக்கிராமம் -ஸ்ரீ புஷ்கரம் –
ஸ்ரீ பத்ரிகாஸ்ரமம் -ஸ்ரீ நமிசாரண்யம் -ஆகிய அஷ்ட திவ்ய ஷேத்ரங்களும் திரு அஷ்டாக்ஷரம் ஒவ் ஒரு அக்ஷரம் –
இங்கோ பரிபூர்ணம் -கைங்கர்ய சித்தி அருளவே சேவை –

—————————-

கற்றுக் கறவை

ஸ்ரீ பெரிய பிராட்டியார் –ஸ்ரீ திருவரங்கம் –பொற் கொடி– புன மயில் -ஸ்ரீ லஷ்மீ கல்ப லதா –ஸ்ரீ லஷ்மீ கல்ப வல்லீ —
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியான் –திருவாய் -9-3-9–குற்றம் ஒன்றும் இல்லாத கோவலன்
சிகீ யான ஸ்ரீ அரங்கன் ஆண் மயில் இந்த புனமயிலை மகிழ்விக்க தோகை விரித்து-
இவளைத் திருப்பள்ளி உணர்த்துவது முகில் வண்ணனைப் பேர் பாட அன்றோ –
இவளது இங்கித பராதீனன் -ஆகையால் இவளே செல்வப் பெண்டாட்டி -ஸ்ரீ செல்வ நாராயணனின் இணை பிரியா இன் துணை அன்றோ
ஆராமம் சூழ்ந்த அரங்கம் என்பதால் பகல் வேட்டைக்கு சென்று தங்கும் திவ்ய தேச பிராட்டிமார்களே சுற்றத்து தோழிமார் ஆவார்கள்

———————————

கனைத்து இளம் கற்று எருமை

ஸ்ரீ பத்மாவதி தாயார் -ஸ்ரீ திருவேங்கடம் -முகிலிடை மின்னே போலே திகழ்கின்ற திருமார்பில்
அகலகில்லேன் இறையும் என்று நித்ய வாசம் –
குளிர் அருவி வேங்கடம் என்பதால் -பனிவரையின் உச்சி அன்றோ -பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி-
நற்செல்வன் -சர்வ யோக விநிஸ்ருத–கைங்கர்ய செல்வம் அருளவே இங்கே சந்நிதி –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -வேங்கடத்து உறைவாருக்கு நம என்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே –
வேடார் திருவேங்கடம் மேய விளக்கு / வேங்கடம் மேவிய வேத நல் விளக்கு /மின்னார் முகில் சேர் வேங்கடம் –
அனைத்து இல்லத்தாரும் அறிந்து கொண்டாட எழுந்து அருள வேண்டுகிறாள் –

———————————-

புள்ளின் வாய்

திருக் குடந்தை திவ்ய மஹிஷி ஸ்ரீ கோமள வல்லித் தாயார்–போதரிக் கண்ணினாய் –பாவாய்
காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல வென்று –தூவியம் பேடை அன்னாள் கண்களாய் துணை மலரே –திருவிருத்தம் -67-
அஸி தேஷ்ணை அன்றோ
மரகத மணித்தடத்தே எம்மையும் சேர்த்துக் கொண்டு குள்ளக் குளிர நீராட்ட வேண்டும்-
உத்யோக சயனம் -திருவடிவாரத்தில் சப்த நதிகளும் ஸ்ரீ பூமிப்பிராட்டியும் ஸ்ரீ த்வயம் முற்கூற்று அனுசந்தானம் –
திருமுடியின் வலப்பக்கம் ஸ்ரீ பெரிய பிராட்டி பிற்கூற்று அனுசந்தானம் –
இருவருமாக சேர்த்தியில் கைங்கர்ய ரசம்

———————————

உங்கள் புழக்கடை —

ஸ்ரீ பரம பத திவ்ய தேசப் பிராட்டி –

ஸ்ரீ மாக வைகுந்தத்தே -குடந்தை எம் கோவலன் குடி குடியார் என்று வைகுந்தத்து அமரரும் முனிவரும் வாழ்த்தி வரவேற்பது
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திரு உள்ளத்தே நிழலாட இதில் நங்காய்-என்று விளிச்சொல் –
ஸ்ரீ பர வாஸூ தேவ நம்பிக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை அன்றோ –
லீலா விபூதி ஸ்ரீ பரமபதத்துக்கு புழக்கடைத் தோட்டம்
நாணாதாய் -பர்யங்க வித்யை படி அபிமத பிள்ளைகள் திருப் பள்ளிப் படுக்கையில் துகைக்கவும் நாணாதவள் அன்றோ –
நாவுடையாய் -ஸ்ரீ சேனை முதலியாருக்கு ஸ்ரீ த்வய மந்த்ரம் உபதேசித்த திரு நா அன்றோ
பங்கயப்பூவில் பிறந்த உன்னையே நாளும் பார்த்து அனுபவிக்கும் பங்கயக் கண்ணன் அன்றோ –
அவனைப் பாட திருப்பள்ளி உணர்த்துகிறாள்

————————————–

எல்லே இளம் கிளியே —

ஸ்ரீ கல்யாண சுந்தர வல்லித்தாயார் -ஸ்ரீ திருமாலிருஞ்சோலை -தென் ஆனை-ஸ்ரீ சுந்தர ராஜன் -ஸ்ரீ கள்ளழகர் -ஸ்ரீ பரம ஸ்வாமி –
எழுப்பும் பெண் பிள்ளை -ஸ்ரீ ஆண்டாள் -மதிப்புடைய சோலைக்கிளி
எழுப்பப்படும் பெண் பிள்ளையோ பெரு மதிப்புடைய திருமாலிருஞ்சோலை திருமலையில் துயிலும் இளங்கிளி
வாக்ய குருபரம்பரை படியே ஸ்வாப தேசத்தில் -ஸ்ரீ மதே சடகோபாயா நம -அர்த்தம் அன்றோ
தனிச்சிறையில் விளப்புற்ற கிளி மொழியாளான சுந்தர காண்டத்து சுடர்க் கொடியும்
அணி மழலைக் கிளி மொழியாளான ஸ்ரீ பராங்குச நாயகியும் ஒரு சேர வைத்து திருப்பள்ளி உணர்த்துகிறாள்–
ஸ்ரீ சடகோபரை எழுந்து அருளப்பண்ணி எங்கள் சிரம் தொட்டு எண்ணிப் பார்க்க பிரார்த்திக்கிறாள் –

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே -குமாண்டூர் இளையவல்லி பாஷ்யம் ரெங்கராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும்–

April 24, 2019

பிரவேசம் –

ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஆகிறார் –
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி-
வேல் கணார் கல்வியே கருதி –என்று
ஸ்ரீ சர்வேஸ்வரன் விபூதி அடைய இவர் துடைக்கு கீழே கிடக்கிறதோ வென்று
சங்கிக்க வேண்டும்படி -அதிசய அஹங்காரராய் –
அதுக்கடியான தேகாத்ம அபிமானத்தை உடையவராய் –
அத்தாலே -சாந்தேய்ந்த மென்முலையார் தடம் தோள் இன்ப வெள்ளம் தாழ்ந்தேன் -என்கிறபடியே
ஆத்மவிஷயம் ஆதல்-ஸ்ரீ ஈஸ்வர விஷயம் ஆதல்
ஜ்ஞானம் பிறக்கைக்கு யோக்யதை இல்லாதபடி விஷய ப்ரவணராய் போந்தார் ஒருவர்

ஸ்ரீ சர்வேஸ்வரன் இவருக்கு இப்படி உண்டான விஷயாந்தர பிரசித்தியைக் கண்டு
இவரை இதில் நின்றும் மீட்கும் விரகு தேடித் பார்த்து –
விஷயாந்தர பிரவணராய் போந்த இவரை
சாஸ்த்ரத்தைக் காட்டி மீட்க ஒண்ணாது
நம் அழகைக் காட்டி மீட்க வேணும் என்று பார்த்து
இவருக்கு விஷயங்களில் உண்டான ரசிகத்வத்தையே பற்றாசாகக் கொண்டு
தன் அழகைக் காட்டிக் கொடுக்கக் கண்டு –
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது –
அடியேன் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் -என்று
தமக்கு ஈஸ்வர விஷயத்தில் உண்டான போக்யதை
தத் விஷய வை லஷ்ண்ய பிரயுக்தமோ-என்னும்படி இவ் விஷயத்தில் அவஹாஹித்தார் –

ஸ்ரீ ஆழ்வார் தம் பக்கலில் ஆழம் கால் படக் கண்ட ஸ்ரீ ஈஸ்வரன் –
இவருக்கு நம் பக்கல் உண்டான ப்ரேமம் விஷய சாமான்யத்தில் போல் அன்றியே
சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக வேணும் -என்று
கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே –
சர்வார்த்த பிரகாசமான ஸ்ரீ திரு மந்தரத்தையும் –
சௌசீல்யாதி குணாதிக்யத்தையும்
ஸ்ரீ திருமந்த்ரார்த்ததுக்கு எல்லை நிலமான ஸ்ரீ திருப்பதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –
வாடினேன் வாடி -தொடங்கி
ஒரு நல் சுற்றம் -அளவும்
உகந்து அருளின இடமே
ஆஸ்ரயணீயமும் -சாதனமும் -போக்யமும் –
என்று அனுபவித்தார் –

இப்படியே இவர் ஸ்ரீ திருப்பதிகளிலே மண்டி அனுபவிக்கிறபடியைக் கண்டு –
இவ்வனுபவம் அவிச்சின்னமாம் படி -ஒரு தேச விசேஷத்தே கொடு போக வேணும்
அதுக்காக சம்சாரத்தின் உடைய தண்மை அறிவிப்போம் என்று பார்த்து -அத்தை அறிவிப்பிக்க
பீத பீதராய் –
மாற்றமுளவிலே
இருபாடு உறு கொள்ளி யினுள்ளே எறும்பே போலே- என்றும்
ஆற்றங்கரை வாழ் மரம் போலே அஞ்சுகிறேன் -என்றும்
பாம்போடு ஒரே கூரையிலே பயின்றால் போல் -என்றும்
இப்படி தம்முடைய பயத்துக்கு அநேகம் த்ருஷ்டாந்தங்களைச் சொல்லிக் -கூப்பிட்டார்-

இவர் கூப்பிடச் செய்தேயும்
பிரஜை கூப்பிடா நிற்கச் செய்தேயும் ஆமம் அற்று பசிக்கும் தனையும் சோறு இடாத தாயைப் போலே
தன்னை அனுபவிக்கு ஈடான விடாய் வளருவதற்கு ஈடாக-ஸ்ரீ ஈஸ்வரன் முகம் காட்டாது ஒழிய
ஒரு ஷணமும் தரிக்க மாட்டாது -பெரு விடாய் பட்டார் –
நீரிலே விழுந்து நீரைக் குடிப்பது
நீரையே ஏறிட்டுக் கொள்ளுவதாப் போலே
அவனை வாயாலே பேசியும்
தலையாலே வணங்கியும்-
நெஞ்சாலே நினைத்தும்-
தரிப்போம் என்று பார்த்து
அதிலே உபக்ரமித்தார் -ஸ்ரீ திருக் குறும் தாண்டகத்தில்-

பெரு விடாயர் குடித்த தண்ணீர் ஆறாதே மேலும் விடாயைப் பிறப்பிக்குமா போலே
அது பழைய அபிநிவேசத்துக்கு உத்தம்பகமாய்
ஸ்ரீ திரு வெழு கூற்று இருக்கையிலே -நின் அடி இணை பணிவன்
வரும் இடர் அகலமாற்றோ வினையே -என்று-ஆர்த்தராய் சரணம் புக்கார்

அநந்தரம் அபேஷிதம் பெறாமையாலே கண்ணாம் சுழலை இட்டு
ஸ்ரீ பெருமாள் முந்துற கடலை சரணம் புக்கு அவன் முகம் காட்டா விட்டவாறே
சாபமாநய சௌமித்ரே -என்று
கொண்டு வா தக்கானை -என்னுமா போலே
வழி அல்லா வழியே மடலூர்ந்து –
இரண்டு தலையும் அழித்தாகிலும் முகம் காட்டு வித்துக் கொள்ளுவோம் -என்று மடல் எடுக்கையில் உபக்ரமித்தார் –

அதில் -ஸ்ரீ சிறிய திருமடலில்
அவன் ஐஸ்வர்யத்தையும் -தேவும் தன்னையும் –என்று
தானான தன்மையாய் அபிமானித்து இருக்கும்
அவதாரங்களில் உண்டான நீர்மையையும் அழிக்கிறேன் -என்றார் –

அதுக்கும் முகம் காட்டிற்று இலன் –
அதுதான் பர தசை என்னும்படி நீர்மைக்கு எல்லை நிலமான கோயில்களும் உண்டு இறே
என்று இருந்தான் -என்று கொண்டு
அவனுக்கும் தமக்கும் வைப்பான ஸ்ரீ கோயில்களில் உண்டான நீர்மையையும்
அழிக்கிறேன் -என்றார் ஸ்ரீ பெரிய திருமடலிலே –

இனி முகம் காட்டாது ஒழியில் ஜகத்து அநீச்வரமாம் என்று பார்த்து –
ஸ்ரீ ப்ரஹ்லாதிகளுக்கு முகம் காட்டுமா போலே இவருக்கு முகம் காட்டி
தானும் இவரும் ஜகத்தும் உண்டாம்படி பண்ணினான்-

ஸ்ரீ சுகாதிகளும் ஸ்ரீ முதல் ஆழ்வார்களும் பரத்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ சனகாதிகளும் ஸ்ரீ திரு மழிசைப் பிரானும் அந்தர்யாமித்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ வால்மிகீகாதிகளும் ஸ்ரீ குலசேகரப் பெருமாளும் ஸ்ரீ ராமாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ பராசர ஸ்ரீ பாராசாராதிகளும் -ஸ்ரீ நம் ஆழ்வாரும் ஸ்ரீ பெரியாழ்வாரும் ஸ்ரீ ஆண்டாளும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ நாரதாதிகளும் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் ஸ்ரீ திருப் பாண் ஆழ்வாரும் கோயிலிலே ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ சௌநக பகவானும் இவரும் அர்ச்சாவதாரத்திலே ஊன்றி இருப்பார்கள் –

அல்லாத ஸ்ரீ ஆழ்வார்களைப் போலேயும் ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளைப் போலேயும் அன்றிக்கே
சம்ச்லேஷாசஹமான சௌகுமார்யத்தை உடையராய் இருப்பார் –
அதாவது – விச்லேஷித்த போது -உம் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை -என்று
மலையாளர் ஊட்டுப் போலே அனுபவிக்கவும் வல்லராய் –
பிரிந்தாலும் சில நாள் தரிக்கவும் வல்லர்களான ஸ்ரீ ஆழ்வார்களோடும்
பத்து மாசம் பிரிந்து இருந்த ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளோடும்
ஷண காலம் விஸ்லேஷ அசஹனான என்னை கூட நினைக்கலாமோ -என்னும்படி இருக்கையும் –
சம்ச்லேஷ தசையிலே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
சம்ச்லேஷ ரச அனுபவத்தால் கண்ணாம் சுழலை இட்டு முன்னடி தோற்றாதே
அசாதாராண லஷணத்தை காணச் செய்தேயும் அறுதி இட மாட்டாது இருக்கையும் –

ஆக
ஸ்ரீ எம்பெருமான் இவருக்கு நிர்ஹேதுகமாக -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –
அனுபவத்து -அதனில் பெரிய என் அவா -என்று
தம்முடைய அபிநிவேசத்துக்கு இறை போராமையாலே
அலமந்து கூப்பிட்டு பின்பு தாம்
அவா அற்று வீடு பெற்று த்ருப்தரான தசையைப் பேசித் தலைக் கட்டுகிறார் -இப் பிரபந்தத்தில்-

——————————————————————-

அவதாரிகை –
முதல் பாட்டில் –
தேகாத்ம அபிமான நிவ்ருத்தி தொடக்கமாக ஸ்ரீ திருவடிகளோட்டை சம்பந்தம் பர்யந்தமாக
சாஷாத் கரிப்பித்த உபகார பரம்பரைகளைப் பேசுகிறார் –

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1-

மின்னுருவாய் முன்னுருவில் –
முன்னுருவில் மின்னுருவாய் –
பிரத்யஷ -பரித்ர்ஷ்டமான பதார்த்தங்களில் –
மின்னின் உடைய ஸ்வபாவத்தை பிரகாசிப்பித்தான் –
அதாவது –
பிரத்யஷ பரித்ர்ஷ்டமான -பிரகிருதி ப்ராக்ருதங்களின் அஸ்த்ரையத்தை பிரகாசிப்பித்தான் -என்கை –
இப்பிரக்ருதி சேதனனோட்டை சம்பந்தத்துக்கு ஹேது பேதம் உண்டான போது –
இதுக்கு ஸ்வபாவ பேதம் உண்டாகக் கடவது –
ஹேது பேதம் -ஆவன –
1-கர்மத்தால் பந்திக்கையும் –
2-கிருபையால் பந்திக்கையும்
3-இவர்களுக்கு மயர்வற மதிநலம் அருளுகையும்
4-மற்று உள்ளார்க்கு ஜாயமான கடாஷம் பண்ணுகையும் –

அதாவது –
கர்மத்தால் பந்தித்த போது -ஆத்ம பரமாத்மா ஸ்வரூபங்களுக்கு திரோதாயகமாய் இருக்கையும் –
தன் பக்கல் -அஸ்த்ர்யத்தையும் அபோக்யதையும் மறைத்து
ஸ்த்ர்யத்தையும் போக்ய புத்தியையும் பிறப்பிக்க கடவதுமாய் இருக்கும்-

ஸ்ரீ பகவத் பிரசாதத்தாலே பந்தித்த போது
ஸ்வ விஷயத்திலும் ஸ்வ கீயங்களிலும் கிடக்கிற
அஸ்த்ரையத்தையும் அபோக்யதையையும் பிரகாசிக்கக்கடவதாய்
ஆத்ம பரமாத்மா ஸ்வரூபங்களையும் பிரகாசிப்பிக்க கடவதாய் இருக்கும் –
இப்போது
ஸ்ரீ பகவத் பிரசாதம் அடியாகையாலே-பிரகிருதி பிராக்ருதங்களில் அஸ்தைர்யம் பிரகாசிப்பித்தது
த்யாஜ்யதா பிரதிபத்தி உண்டாய்த்து -என்கை –
விசித்ரா தேக சம்பத்தி ஈச்வராய நிவேதிதும் -பூர்வமேவ க்ர்தா -என்றும்
சரீரமாத்ரம் கலு தர்ம சாதனம் -என்றும் –
புருஷார்த்த சாதனம் என்றும்-
தர்மத்துக்கு பிரதான உபகரணமான பிரக்ருதியாதிகளை த்யாஜ்யம் என்னக் கடவதோ -என்னில் –
போஜநார்த்தமாக அங்கீ கரித்த கலமும்
போஜன அநந்தரம் அஸ்பர்சமாப் போலேயும் –
அவப்ர்த ஸ்நான அநந்தரம் யூபாதிகள் அஸ்பர்சமாப் போலேயும்
இதுவும் கார்ய அநந்தரம்-ஜ்ஞானம் பிறந்த பின்பு – த்யாஜ்யமாகக் கடவது –

மின்னுருவாய் -என்ற
சாமாநாதி கரண்யம் -உபகார்யா உபகார பாவ சம்பந்த நிபந்தனம் –
இப்படி இவை அஸ்தரம் ஆனால் அநந்தரம் ஸ்திரமான ஆத்மவஸ்துவே-ஜ்ஞாதவ்யமாகக் கடவது –
அஹம் -என்று பிரத்யஷிக்கிற ஆத்ம வஸ்துவை
தேஹம் என்பார்
இந்த்ரியம் என்பார்
மனஸ் என்பார்
பிராணன் என்பார்
புத்தி என்பார்
இப்படி பண்ணுகிற விப்ரதிபத்தி -சமித்து யதாஜ்ஞானம் பிறக்கைக்கு
சாஸ்திர அபேஷை உண்டாகையாலே
சாஸ்திர பிரதானம் பண்ணினார் -என்கிறார் மேல் –

வேத நான்காய் –
ஆத்மாவின் உடைய யாதாம்ய பிரதிபாதன பரமான வேதங்கள் நான்குமாய் –
வெறும் ஆத்மா பரமயோ வேதங்கள் என்னில் -தத்வ த்ரயத்தையும் பிரதி பாதியா நிற்க –
அல்லாத தத்வ த்யவமும் இவனுக்கு இன்னது த்யாஜ்யம்-இன்னது உபாதேயம்
என்கைக்காக பிரதிபாதிக்கப் படுகிறது இத்தனை ஒழிய ஆத்ம பரமேயாகக் கடவது –
ஆனால் த்யாஜ்ய உபாதேயங்களைச் சொல்ல அமையாதோ –
ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகிறது என் என்னில் –
த்யாஜ்ய உபாதேயங்களுக்கு நிர்ணாயக பிரமாணம் ஸ்வரூபம் ஆகையாலே
ஸ்வரூப அனுரூபமான த்யாஜ்யம் இன்னது
ஸ்வரூப அனுரூபமான உபாதேயமின்னது -என்று அறியும் போது ஸ்வரூபத்தை அறிய வேணும் இறே –
ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் இல்லாத போது-சரீர மாத்ரம் த்யாஜ்யமாய்
புத்திர பசு அந்நாதி மாத்ரம் உத்தேச்யம் ஆதல் –
சரீர வியதிரிக்தம் ஆத்மாவான போது
புத்திர பசு அந்நாதிகள் த்யாஜ்யமாய்-ஸ்வர்க்கம் உத்தேச்ய மாதல் செய்யும் இறே-
சாஸ்திர அபேஷை சேதனனுக்கே ஆகையாலே சேதன பரமாகக் கடவது –
ஸ்ரீ ஈஸ்வரன் ஸ்வதஸ் சர்வஞ்ஞன் ஆகையாலும்
அசித் தத்வம் ஜடம் ஆகையாலும் சாஸ்திர அபேஷை இல்லை –

இனி சாஸ்திர வச்யனுமாய் -ஜ்ஞாதாவுமான சேதனனைப் பற்றி -சாஸ்திரம் உதிக்கக் கடவது –
வேதம் பிரதிபாக்கிற மாத்ரம் அன்றிக்கே வேதம் உண்டாக்கினதும் இவனுக்கே –
இவ்விடத்தில் ஸ்வார்த்த பிரகாசத்வத்தைப் பற்ற -ஸ்ருதி மறை -என்னாமல் –வேதம் -என்கிறது –
பிரகாசம் உண்டோ என்னில்
மறையாய நால் வேதம் -என்கிறபடியே
தன்னை அதிலங்கித்தார்கு ஸ்வார்த்த திரோதாயகமாயும்
தன் பக்கலிலே புபுத்ஷூக்களுக்கு -ஸ்வார்த்த பிரகாசமாயும் இருக்கும் –
போத்தும் இச்சு புபுத்ஷூ -அறிய வேணும் என்கிற இச்சை உடையவன் -என்றபடி –
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறர்க்கு அரிய வித்தகன் -என்கிறபடியே
பிரமேய ஸ்வ பாவம் பிரமாணத்துக்கும் உண்டாய் இருக்கும் -என்கை –
இங்கு வேதம் நான்கு -என்கிற சாமாநாதி கரண்யம் –
வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய – என்று
பிரதிபாத்ய பிரதிபாதிக பாவ சம்பந்த நிபந்தனம் அன்று –
மாநம் பிரதீபமிவ காருணிகோ ததாதி -என்கிறபடியே
பிரதார்த் பிரத்தேய பாவ சம்பந்த நிபந்தனம் –

அநந்தரம் இந்த சாஸ்திர ஜன்யமான ஜ்ஞானத்தையும்
எனக்கு உண்டாக்கினான் -என்கிறார் –
விளக்கொளியாய் –
விளக்கு ஒளியின் ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –
விளக்கொளி -என்றது சாஸ்திர ஜன்ய ஜ்ஞானத்தைச் சொல்கிறது –
அதாகிறது -தீபமாகிறது அந்தகாரத்தைப் போக்கி பதார்த்தங்களைப் பிரகாசிப்பிக்குமா போலே
அஞ்ஞானத்தைப் போக்கி ஸ்வரூபத்தை பிரகாசிப்பிக்கக் கடவதாய் இருக்கை –
அந்தம் தம இவா ஜ்ஞானம் தீபவ ஸ்சேந்த்ரி யோத்பவம் – என்று
ஸ்ரவண ஜ்ஞானத்தை தீபமாகச் சொல்லக் கடவது இறே –

ஹர்த்தும் தமஸ் சதஸ தீவ விவேகத்து மீசோ மாநம் பிரதீபமிவ காருணிகோ ததாதி-என்னக் கடவது இறே-
இத்தால் -ஸ்ரோதவ்ய -என்று சொல்லுகிற ஸ்ரவணத்தை சொல்லிற்றாய் யாய்த்து –

முளைத்து எழுந்த திங்கள் தானாய் –
என்று -மந்தவ்ய நிதித்த்யாசிதவ்ய த்ரஷட்வய -என்கிற
மனந நிதித்யாசன தர்சனங்களைச் சொல்லுகிறது –

முளைத்து –
பர்வதாக்ரத்திலே தோன்றின சந்தரனைப் போலே
தீப த்ர்ஷ்டாந்தத்தால் சொன்ன ஸ்ரவண ஜ்ஞானத்தில் காட்டிலும்
பிரகாச ரூபமான மனந தசையைச் சொன்னபடி –

எழுந்து –
பர்வதாக்ரத்தை விட்டு ஆகாசத்தில் எழுந்த சந்தரனைப் போலே
மனந அவஸ்தையில் காட்டிலும் அதி பிரகாசமான அநவரத பாவனையைச் சொல்லிற்றாயிற்று

திங்கள் தானாய் –
சாஷாத் காரத்தைச் சொல்லுகிறது –
எங்கனே என்னில் –
தானான திங்கள் -என்று –
ஆகந்துகமான களங்கம்- இன்றியே இருக்கிற சந்த்ரனைச் சொல்லுகையாலே
ஆகந்துகமான களங்கம் -பூமியினுடைய சாயை பிரதிபலிக்கையாலே –
சந்த்ர பிரபா ஸ்தானத்திலே ஆத்மாவுக்கு பிரபா ரூபமான தர்ம பூத ஜ்ஞானம் –
பிரகிருதி சம்சர்க்கம் நேராக அற்று
நிஷ்க்ர்ஷ்டமான ஆத்ம வஸ்துவைச் சொன்னபடி –
நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபத்தைக் கண்டால் இறே-
சாஷாத்காரம் சித்தித்ததாவது –
சாஷாத்கார விசிசிஷ்ட ஆத்மா -சாஷாத்காரம் தந்தவன் -என்று -பரமாத்மா சாஷாத்காரம் –
சந்திர த்ர்ஷ்டாந்தத்தாலே –
சதி ஆஹ்லாதே -என்கிறபடியே
ஆஹ்லாத ரூபம் தோற்றுகைக்காகவும்
பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே
அனாயாச சித்தியால் வந்த அம்லானதை தோற்றுகைக்காவும்-சந்திரனை த்ருஷ்டாந்திக்கிறார் –
யதா ஸூர்யஸ் ததா ஞானம் -என்று
ஸூர்யனை தருஷ்டாந்திதது சந்திரனுக்கு ஸ்வ யத்னத்தால் வந்த க்லிஷ்டதை தோற்றுக்கைக்காக –

பின்னுருவாய் –
பின்னான தத்வமாய் –
பஞ்ச விம்சோயம் புருஷ பஞ்ச விம்ச ஆத்மாபவதி –
இருபத்தஞ்சாவது தத்வமான ஆத்மா சாஷாத்க்ர்த்யன் ஆகையாலே
சதுர்விம்சதி தத்வாத்மிகையான பிரகிருதிக்கு அவ்வருகாய் பிரிந்து தோற்றுகிறபடி –
தேகேந்த்ரிய மன பிராண தீப்யோன்ய அநந்ய சாதன
நித்யோவா பீப்ரதி ஷேத்ர மாத்மாபின்னஸ் ஸ்வதஸ் ஸூகி –என்னக் கடவது இறே –

அநந்தரம் -இப்படிப் பட்ட ஆத்ம வஸ்து
வ்யாப்தகதமான தோஷங்களால் ஸ்பர்சிக்கப் படான் -என்கிறார் –
முன்னுருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் –
முன்னுருவாகிறது -கீழே மின்னுரு -என்று கொண்டு சொன்ன ப்ரத்யக்ஷ பர்த்ர்ஷ்டமான பிரகிருதி பிராக்ருதங்களை –
அதில் உண்டான பிணி மூப்பு பிறவிகளோடு ஸ்பர்சம் இல்லாத ஆத்மவஸ்து –
பிணி -துக்கம் –

இத்தால் அஞ்ஞாநாதிகளை உப லஷிக்கிறது –
மூப்பு பிறப்பு -என்கையாலே ஷட் பாவ விகாரங்களை உப லஷிக்கிறது –
நிர்வாண மய ஏவாய மாத்மா ஜ்ஞான மயோமலா -என்று-துக்காதிகள் பிரகிருதி தர்மமாய்
ஆத்மாவோடு சம்பந்தம் இல்லை -என்னக் கடவது இறே –
ஸவதஸ் ஸூகியாய் இருக்கிற ஆத்மாவுக்கு துக்க அஜ்ஞாநாதிகள் கூடாதோவோபாதி
ஜடமான பிரக்ருதிக்கும் துக்க அஜ்ஞாநாதிகள் கூடாதே யாகிலும்
ஊமத் தங்காய் உடைய சம்சர்க்கத்தாலே ப்ரமம் வருகிறாப் போலே
பிரகிருதி சம்சர்க்கத்தாலே ஆத்மாவுக்கு துக்காதிகள் வருகையாலே துக்காதிகள் பிரகிருதி தர்மமாகவே கடவது

இறப்பதற்கே எண்ணாது –
இறக்கை யாவது -மரிக்கை
மரணத்தை எண்ணாதே
கீழ் -ஷட் பாவ விகாரங்களிலே தேக அனுபந்தியான மரணத்தைச் சொல்லிற்று
இங்கே ஸ்வரூப அனுபந்தியான மரணத்தைச் சொல்லுகிறது -அதாகிறது
கைவல்யம் –
ஸ்வதஸ் ஸூகியான ஆத்மாவினுடைய அனுபவ ஸ்வரூபமாய்-தனியே ஒரு புருஷார்தமாய்
புனராவர்த்தி இல்லாத கைவல்யத்தை மரணம் என்னக் கடவதோ -என்னில்
மரணம் ஆகிறது
ஆத்மவியோகமாக லோகத்திலே பிரத்யஷியா நின்றது இறே –
இதுவும் அப்படியே
சாஷாத் ஆத்ம பூதனான ஸ்ரீ பரமாத்மா வியோகத்தாலே மரணம் ஆகக் கடவது –
பிரத்யஷமாக ம்ர்தமான சரீரம் நஷ்டம் ஆகை போலே
இது நசியாமையாலே இத்தை மரணம் என்னலாமோ -வென்னில்
ஸ்வரூப அனுரூபமான போகம் இல்லாமையாலே
பர ஹ்ர்தயத்தால் மரணமாகக் கடவது –
ம்ர்தோ தரித்ர புருஷ -என்று
போக்தாவானவன் தரித்ரனை ம்ர்தன் என்னுமா போலே
இந்த கைவல்யம் அந் நாதனுக்கு மரணமாகத் தோற்றுகையாலே-மரணம் –என்கிறது –

எண்ணாது –
இத்தை தருகைக்கு எண்ணாதே போந்தான் –
ஜரா மரண மோஷாயா மாமாச்ரித்ய தந்தியே -என்று இத்தை புருஷார்தமாகக் கொடுக்கக் கடவன் –
அவன் இப்போது இப்படி படு குழியில் விழாதபடி இத்தை எனக்கு எண்ணாதே போந்தான் –
அவனது எண்ணம் கொண்டே நமக்கு ஜீவனம் ஆகையாலே எண்ணாது -என்கிறார் –

இவ் வாபன் நிவ்ருத்தியை பண்ணினது மேலே
தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களை பிரகாசிப்பித்தான் -என்கிறார் மேல்
எண்ணும் பொன்னுருவாய் -என்று
திவ்யாத்ம ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்தான் -என்கிறார் –
எண்ணும் –
போக்யாதிசயத்தாலே
நேதி நேதி -என்கிறபடியே
அது அது -எண்ணும் இத்தனை போக்கி
இதம் -என்று பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –
ஏகைக குணாவதீப்சயா சதா ஸ்திதா -என்று
ஒரோ குணம் தான் அபரிச்சின்னமாய் இருக்க
ஈத்ர்சமாய் அசங்கயாதமான குணங்களுக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை
பரிச்சேதிக்க ஒண்ணாது எண்ணும் இடம் சொல்ல வேணுமோ –

பொன்னுருவாய் –
பொன்னின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –அதாகிறது-
1- -ஸ்பர்ஹணீயமாய் இருக்கையும் –
2-உண்டு என்ன உயிர் நிற்கையும் –
3-இத்தைக் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் சாதித்துக் கொள்ளலாய் இருக்கையும் –
4-இத்தை உடையவன் காலில் லோகம் அடங்க விழும்படியாய் இருக்கையும்-

மணி வுருவில் பூதம் ஐந்தாய் –
உபாதான பூதங்கள் ஐந்தாய் –
மணிவுருவில் –
மணியின் ஸ்வ பாவாத்தை உடைத்தான வடிவில்
1-தேஜோமயமாய் இருக்கையும்
2-மாணிக்கச் செப்பிலே பொன் போலே தனக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்துக்கும்
ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும்-தான் சுத்த சத்வம் ஆகையாலே பிரகாசமாய் இருக்கையும் –
3-தான் ஸ்வரூப குணங்களில் காட்டில் போக்யமாய் இருக்கையும் –
இதுக்கு உபாதான பூதமான பூத பஞ்சகம் ஆகிறது –பஞ்ச உபநிஷத்
ஒரு தேச விசேஷமாக பஞ்ச உபநிஷண் மயமாய் இறே இருப்பது –
பரமேஷ்டீ புமான் விச்வோ நிவ்ர்த்தஸ் சர்வ ஏவஸ-

மணி வுருவில் பூதம் ஐந்தாய் –என்று
திரோதாயகமாய் இருந்துள்ள சரீரத்துக்கு உபாதான பூதமான பூதங்களை வ்யாவர்த்திக்கிறது
அதவா
மணி வுருவிலும் வர்த்திக்க கடவதாய்
ப்ராக்ர்தமான பூதங்களிலும் வர்த்திக்கக் கடவனாய் இருக்கை –
இத்தால்
அசாதாரண மான விஹ்ரகதோபாதி இவையும் விதேயம் -என்கை –
பத்தனோடு பந்தகத்தொடு வாசி அற-இரண்டும் விதேயமாக வேணும் இறே விமோசகனுக்கு –
பிரதான புருஷேச்வர -என்னக் கடவது இறே-

இப்படி விலஷணமாய் இருக்குமவன் துர்லபமாய் இருக்குமோ வென்னில் –
புனல்வுருவாய் –
வசிஷ்ட சண்டாள விபாகம் அற-ஒரு துறையிலே விநியோகம் கொள்ளலாய் இருக்கும் ஜலம் போலே -என்க-

இப்படி சர்வ ஸூலபன் ஆனால் என் வருகிறதோ என்று வயிறு பிடிக்க வேண்டாதபடி
ஆஸ்ரித சுலபனானோபாதி
பிரதிகூலர்க்கு அக்னி போலே அநபிபவனாய் இருக்கும் என்கிறார் -மேல் –
அனலுருவில் திகழும் –
அபிதபாவ கோப மம் -என்று
நினையாத போது அந்தரங்கருக்கும் அநபிபவனாய் இருக்கும் அவன்
உகவாதார்க்கு அநபிபவனாய் இருக்கும் என்னும் இடம் சொல்ல வேண்டா விறே –

சோதி தன்னுருவாய் –
கீழே ஸ்பர்ஹணீ யதையாலே பொன்னுருவாய் -என்று
ஸ்வரூபம் சுவயம் பிரகாசமாய் இருக்கும் என்றது –

நாட்டில் ஜ்யோதிஸ் பதார்த்தங்களுக்கு ஜ்யோதிஸூ உண்டாகிறது
தன்னோட்டை சம்பந்தத்தால் யாம்படி இருக்கை –
தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி -என்னக் கடவது இறே —

என்னுருவில் நின்ற —
என்னுடைய ஆத்மாவில் நிற்கிலும் தனக்கு அவத்யவஹமாய் இருக்க
எனக்கு த்யாஜ்யமான வடிவில் வந்து நின்றான் என்க –

நின்ற –
இவர் மடல் எடுக்கையாலே -தன்னுடைய சாத்தா ஹாநி பிறக்கும்படியான-கலக்கம் சமித்து -தரித்து நின்றபடி –

எந்தை –
சத்தையோபாதி சேஷித்வமும் உறுதிப் படுத்திய படி –

தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே –
என் தலை மேலவே –தளிர் புரையும் அடி –
அமரர் சென்னிப் பூவான -திருவடிகளே கிடீர் எனக்கு சிரோ பூஷணம் ஆய்த்து –
ஆருடைய கால் இருந்த தலையிலே ஆருடைய திருவடிகள் இருக்கிறது –
இவர் தலையிலே திருவடிகளை வைத்த பின்பு
அவன்
சத்தையும்
சேஷித்வமும்
விக்ரஹமும்
பெற்றானே -இருக்கிறபடி –
ஆக
1-பிரகிருதி ப்ராக்ருதங்களில் அஸ்த்ரத்தையை பிரகாசிப்பித்த அவ் அளவு போராதோ –
2-ஸ்வ ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்த அவ் அளவு போராதோ –
3-கைவல்யத்தில் போகாதபடி நோக்கின அவ் அளவு போராதோ –
அதுக்கு மேலே
4-தன்னுடைய ஸ்வ ரூபத்தையும்
5-ஸ்வரூப பிரகாசமான விக்ரஹத்தையும் காட்டித் தந்தது போராதோ –
6-அதுக்குமேலே த்யாஜ்யமான என் சரீரத்தில் புகுந்து நிற்பதே –
அதுக்கு மேலே
7-தன்னுடைய திருவடிகளை என் தலை மேல் பொருந்த வைப்பதே –
என்று தமக்கு அவன் பண்ணின உபகார பரம்பரைகளை கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

ஆக
இப்பாட்டால்
1-தத்வ த்ரயங்களின் உடைய நிஷ்க்ர்ஷ்டமான ஸ்வ ரூபமும்
2-அவை மூன்றும் புருஷார்த்தம் என்னும் இடமும்
3-அவற்றில் ஒன்றே ஸ்வரூப பிரயுக்தமான முக்ய புருஷார்த்தம் –
4-அல்லாதவை நிஹீன புருஷார்த்தம் என்னும் இடமும் –
5-அந்த முக்ய புருஷார்த்த பூதனான ஈஸ்வரன் உடைய-ஸ்வரூப ரூப குணங்களின் உடைய வை லஷண்யமும்-
6-அவற்றை ஸ்ரீ ஈஸ்வரன் தன ஆஸ்ரிதர்க்குக் காட்டும் போது தன் பேறாக காட்டும் படியையும்-சொல்லுகிறது –

—————-

நிகமத்தில் –
ஸ்வ லாபத்தை சொல்லா நின்று கொண்டு இப் பிரபந்தத்தை அத்யவசித்தவர்கள் உடைய
சாம்சாரிகமான சகல துக்கங்களையும் தாங்களே முதலரிய வல்லார் –என்கிறார் –

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப்
பழ வினையை முதலரிய வல்லார் தாமே -30-

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா –
மின்னி முழங்கி வில் விட்டு-தர்ச நீயமாய் – வர்ஷியாது இருப்பதொரு வர்ஷூக வலாஹகம் போலே
இருந்துள்ள வடிவை உடையவனே –
ஒரு நீர்ச்சாவியிலே ஒரு காளமேகம் வர்ஷித்தால் போலே
அடி நாயேன் நினைந்திட்டேனே -என்று
இவருடைய ஆர்த்த நாதத்தை கேட்டு -இவருடைய தாபம் எல்லாம் நீங்கும்படியாக
குளிர நோக்கிக் கொண்டு -காளமேக நிபஸ்யாமமான வடிவோடு வந்து முகம் காட்டின படியைச் சொல்கிறது –

கீழில் பாட்டிலே –(29)
பரோஷ நிர்த்தேசம் பண்ணி இருக்க
இங்கே அபரோஷித்துச் சொல்லுகையாலே -வந்து முகம் காட்டினமை தோற்றுகிறது –
பிரணய ரோஷம் அகிஞ்சித்கரமான தசையிலும்-ஸ்வ தோஷ ஞாபநம் கார்யகரமான படி –

ஸ்ரீ நம் ஆழ்வார் ஜகத் காரணத்வத்திலே உபக்ரமித்து –
அவா வறச் சூழ் அரியை அயனை அரனை -என்று ஜகத் காரணத்தோடு தலைக் கட்டினார்
இவர் வடிவிலே -மணிவுருவில் பூதம் ஐந்தாய் -என்று -உபக்ரமித்து
மின்னு மா மழை தவழும் -என்று வடிவோடு தலைக் கட்டுகிறார் –

விண்ணவர் தம் பெருமானே –
இவ் வடிவைப் படியிட ஜீவித்து இருக்குமவர்களைச் சொல்லுகிறது –
அயர்வறும் அமரர்களுக்கு உன்னை அனுபவிக்க கொடுத்துக் கொண்டு இருக்கிறவனே –
கடலிலே வர்ஷித்தால் போலே அவர்களுக்கு உன்னைக் கொடுக்குமது ஒரு ஏற்றமோ –
அவர்கள் உன்னை சதா தர்சனம் பண்ணுமா போலே
நானும் உன்னை-சரீர சம்பந்தம் அற்று-சதா தர்சனம் பண்ணும்படி கிருபை பண்ணி அருள வேண்டும்

அருளாய் என்று
பரமபக்தி பர்யந்தமான விடாய் – பிறந்த இடத்திலும் இரக்கமே சாதனம் என்று இருக்கிறார் –
ஆழியான் அருளே -என்று விஷயாந்தர நிவ்ருத்திக்கும்
இரக்கமே சாதனம் -என்கிறார் –
ஸ்ரீ பகவத் அனுபவத்துக்கும் இரக்கமே சாதனம் -என்கிறார்-

அன்னமாய் –
தமக்கு அவன் வந்து தன்னைக் கொடுத்தபடிக்கு த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார் –
ப்ரஹ்மாவுக்கு பிரமாணத்தை வெளி யிட்டால் போலே யாய்த்து
தமக்கு பிரேமேய பூதனான தன்னை வெளி இட்ட படியும் –

முனிவரோடு அமரர் ஏத்த
ரிஷிகளோடே கூட ப்ரஹ்மாதிகள் வேத சஷூஸ்சை இழந்தோம் என்று தன்னை ஆஸ்ரயித்து ஏத்த –
ரிஷிகளுக்கு ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக பிரமாண அபேஷை உண்டு
ப்ரஹ்மாதிகளுக்கு ஸ்ர்ஷ்டாதி வியாபாரத்துக்கு பிரமாண அபேஷை உண்டு –

அன்னமாய் –
அபௌருஷேயத்வம் குலையாத படி ஸ்ரீ ஹம்ஸ ரூபியாய் –

அரு மறையை –
பெறுதற்கு அரிய வேதம் –
பெறுதற்கு அரியது பிரமேயம் அன்று –
பிரமாணம் ஆய்த்து –

வெளிப்படுத்த –
பிரமாணத்துக்கு உத்பத்தி விநாசம் ஆவது
பிரகாச -அப்ரகாசங்கள் -என்கை –

அம்மான் தன்னை –
ஸ்ரீ சர்வேஸ்வரன் இவர்களுக்கு வேத பிரதானம் பண்ணுகைக்கு அடி
உடையவன் ஆகையாலே -என்கை –

மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
இவர் தரித்த வாறே
ஊரும் ஸ்திரமான படி –
கல்பாவசாநத்து அளவும் அழிவு இன்றிக்கே
ஸ்லாக்கியங்களான ரத்னங்களாலே
செய்யப்பட மாடங்களை உடைத்தான ஸ்ரீ திருமங்கை –

மங்கை வேந்தன் –
பஷியின் காலில் விழுந்தவர் ஸ்ரீ திரு மங்கைக்கு நிர்வாஹகர் ஆனார்

மான வேல் பரகாலன் –
கிஞ்சித் கரிக்கவும் பெற்றார் -என்கை –
அத்தலையிலே பரிவாலே எடுத்த வேல் -இறே –

மான வேல்
கா புருஷன் எடுக்கிலும் ஸ்ரீ திரு மங்கை மன்னன் ஆக்க வல்ல வேல் –
மான வேல் பரகாலன் -என்னுதல்-

பர காலன் –
கையில் வாளாலும்
பிரதிபாதனத்தாலும்
பிரதிபஷத்தை வென்று
வைதிக மரியாதையை ஸ்தாபித்தவர் –

கலியன் –
உபயத்துக்கும் அடியான மிடுக்கை சொல்கிறது
கலி -மிடுக்கு
அங்கன் இன்றியே
கலி காலத்தை கடிந்தவர் -என்னுதல் –

பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் –
பன்னுதல் -பரம்புதல்
ஸ்வரூப ரூப குண விபூதிகள் இத்தனையும்
விளாக்கொலை கொண்டு இருக்கை –
நூல் -சர்வ லஷணோபேதமாய் இருக்கை –
பின்பு லஷணம் கட்டுவாருக்கும் இது கொண்டு செய்ய வேண்டும்படி இருக்கை –
தமிழ் -சர்வாதிகாரமாய் இருக்கை –

மாலை
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு சிரஸா தார்யமாய் இருக்கை –

தொல்லை இத்யாதி
கார்ய காரண ரூபத்தாலே அநாதியாய் வருகிற -அவித்யா கர்ம வாசனா ருசி ப்ரக்ருதி
சம்பந்தங்களை தாங்களே சவாசனமாக போக்க வல்லவர்கள்

வினை
அதாகிறது -புண்ய பாப ரூபமான கர்ம த்வயம்
இது தான் பூர்வோத்தர ராக பிராரப்த ரூபமாய் இருக்கும்
இது தான் அல்லாத
ஜ்ஞான அநுதயம்
அந்யதா ஜ்ஞானம்
விபரீத ஜ்ஞானம்
ஸ்தூல சூஷ்ம ரூபமான அசித் சம்பந்தம்
வாசனா ருசிகளுமாகிற -விரோதி வர்க்கத்துக்கும் உப லஷணம் –

தொல்லைப் பழ வினை –
இவைதான் பழையதாய் இருக்கையும்
அடி காண ஒண்ணாதாய் இருக்கையும் -அதிசயத்தைப் பற்றி சொல்லுதல்
அறவும் பழையதான வினை -என்னுதல் –

தாமே –
இப் பிரதிபந்தங்களை எல்லாம் தாங்களே சவாசனமாக போக்க வல்லார் –
ஸ்ரீ ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டாம் -என்கை –

அருளாய் என்று முனிவரோடு அமரர் ஏத்த -என்று
அவர்களுக்கு விசேஷணம் ஆன போது –
ஸ்ரீ எம்பெருமானைக் கண்ட போதே -என் அவா அறச் சூழ்ந்தாயே –
என்ன சக்தர் அல்லாமையாலும்
கீழில் பாட்டில் போலே இப்பாட்டில் இயலின் பல
ஹானி தோற்றி இராமையாலும்
ஸ்ரீ எம்பெருமான் திரு மேனி வர்ஷூக வலாஹம் போலே இருக்கையாலும்
அயர்வறும் அமரர்களுக்குத் தன்னை புஜிக்க கொடுத்துக் கொண்டு இருக்கும்படியைச் சொல்லுகையாலும்
தாமே வேல் எடுக்க சக்தராகையாலும்
பிரதி பஷத்தை நிரசித்தபடியை அருளுகையாலும்
இப்படிப்பட்ட பேச்சுக்கள் எல்லாவற்றாலும்
தம்முடைய பல ஹானி போய்
தம்முடைய அபேஷிதம் பெற்று
திருப்தரானார் என்னும் இடம்
இப்பாட்டிலே வ்யக்தம் –

முனிவரோடு அமரர் ஏத்த –
அன்னமாய் அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை –
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மானவேல் பரகாலன் கலியன்
மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே அருளாய் -என்று -சொன்ன –
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே -என்று அந்வயம் –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் –– அருளிச் செயலில்– பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி –

April 24, 2019

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –
பிரவேசம் –

ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஆகிறார் –
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி-வேல் கணார் கல்வியே கருதி –என்று
ஸ்ரீ சர்வேஸ்வரன் விபூதி அடைய இவர் துடைக்கு கீழே கிடக்கிறதோ வென்று சங்கிக்க வேண்டும்படி -அதிசய அஹங்காரராய் –
அதுக்கடியான தேகாத்ம அபிமானத்தை உடையவராய் –
அத்தாலே -சாந்தேய்ந்த மென்முலையார் தடம் தோள் இன்ப வெள்ளம் தாழ்ந்தேன் -என்கிறபடியே
ஆத்ம விஷயம் ஆதல் ஈஸ்வர விஷயம் ஆதல் ஜ்ஞானம் பிறக்கைக்கு யோக்யதை இல்லாதபடி விஷய ப்ரவணராய் போந்தார் ஒருவர்

ஸ்ரீ சர்வேஸ்வரன் இவருக்கு இப்படி உண்டான விஷயாந்தர பிரசித்தியைக் கண்டு
இவரை இதில் நின்றும் மீட்கும் விரகு தேடித் பார்த்து –
விஷயாந்தர பிரவணராய் போந்த இவரை-சாஸ்த்ரத்தைக் காட்டி மீட்க ஒண்ணாது
நம் அழகைக் காட்டி மீட்க வேணும் என்று பார்த்து
இவருக்கு விஷயங்களில் உண்டான ரசிகத்வத்தையே பற்றாசாகக் கொண்டு தன் அழகைக் காட்டிக் கொடுக்கக் கண்டு –
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது –
அடியேன் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் -என்று
தமக்கு ஈஸ்வர விஷயத்தில் உண்டான போக்யதை
தத் விஷய வை லஷ்ண்ய பிரயுக்தமோ-என்னும்படி இவ் விஷயத்தில் அவஹாஹித்தார் –

ஸ்ரீ ஆழ்வார் தம் பக்கலில் ஆழம் கால் படக் கண்ட ஸ்ரீ ஈஸ்வரன் –
இவருக்கு நம் பக்கல் உண்டான ப்ரேமம் விஷய சாமான்யத்தில் போல் அன்றியே
சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக வேணும் -என்று
கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே –
சர்வார்த்த பிரகாசமான ஸ்ரீ திரு மந்தரத்தையும் –சௌசீல்யாதி குணாதிக்யத்தையும்
ஸ்ரீ திருமந்த்ரார்த்ததுக்கு எல்லை நிலமான ஸ்ரீ திருப் பதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –
வாடினேன் வாடி -தொடங்கி–ஒரு நல் சுற்றம் -அளவும்-ஸ்ரீ உகந்து அருளின இடமே
ஆஸ்ரயணீயமும் -சாதனமும் -போக்யமும் – என்று அனுபவித்தார் –

இப்படியே இவர் திருப்பதிகளிலே மண்டி அனுபவிக்கிறபடியைக் கண்டு –
இவ்வனுபவம் அவிச்சின்னமாம் படி -ஒரு தேச விசேஷத்தே கொடு போக வேணும்
அதுக்காக சம்சாரத்தின் உடைய தண்மை அறிவிப்போம் என்று பார்த்து -அத்தை அறிவிப்பிக்க
பீத பீதராய் –
மாற்றமுளவிலே
இருபாடு உறு கொள்ளி யினுள்ளே எறும்பே போலே- என்றும்
ஆற்றங்கரை வாழ் மரம் போலே அஞ்சுகிறேன் -என்றும்
பாம்போடு ஒரே கூரையிலே பயின்றால் போல் -என்றும்
இப்படி தம்முடைய பயத்துக்கு அநேகம் த்ருஷ்டாந்தங்களைச் சொல்லிக் -கூப்பிட்டார்-

இவர் கூப்பிடச் செய்தேயும்
பிரஜை கூப்பிடா நிற்கச் செய்தேயும் ஆமம் அற்று பசிக்கும் தனையும் சோறு இடாத தாயைப் போலே
தன்னை அனுபவிக்கு ஈடான விடாய் வளருவதற்கு ஈடாக-ஈஸ்வரன் முகம் காட்டாது ஒழிய
ஒரு ஷணமும் தரிக்க மாட்டாது -பெரு விடாய் பட்டார் –நீரிலே விழுந்து நீரைக் குடிப்பது -நீரையே ஏறிட்டுக் கொள்ளுவதாப் போலே
அவனை வாயாலே பேசியும்-தலையாலே வணங்கியும்- நெஞ்சாலே நினைத்தும்- தரிப்போம் என்று பார்த்து
அதிலே உபக்ரமித்தார் -திருக் குறும் தாண்டகத்தில்-

பெரு விடாயர் குடித்த தண்ணீர் ஆறாதே மேலும் விடாயைப் பிறப்பிக்குமா போலே அது பழைய அபிநிவேசத்துக்கு உத்தம்பகமாய்
ஸ்ரீ திரு வெழு கூற்று இருக்கையிலே -நின் அடி இணை பணிவன்-வரும் இடர் அகலமாற்றோ வினையே -என்று
ஆர்த்தராய் சரணம் புக்கார்

அநந்தரம் அபேஷிதம் பெறாமையாலே கண்ணாம் சுழலை இட்டு ஸ்ரீ பெருமாள் முந்துற கடலை சரணம் புக்கு அவன் முகம் காட்டா விட்டவாறே
சாபமாநய சௌமித்ரே -என்று கொண்டு வா தக்கானை -என்னுமா போலே
வழி அல்லா வழியே மடலூர்ந்து –
இரண்டு தலையும் அழித்தாகிலும் முகம் காட்டு வித்துக் கொள்ளுவோம் -என்று மடல் எடுக்கையில் உபக்ரமித்தார் –

அதில் -ஸ்ரீ சிறிய திருமடலில்-அவன் ஐஸ்வர்யத்தையும் -தேவும் தன்னையும் –என்று
தானான தன்மையாய் அபிமானித்து இருக்கும் அவதாரங்களில் உண்டான நீர்மையையும் அழிக்கிறேன் -என்றார் –

அதுக்கும் முகம் காட்டிற்று இலன் –
அதுதான் பர தசை என்னும்படி நீர்மைக்கு எல்லை நிலமான கோயில்களும் உண்டு இறே
என்று இருந்தான் -என்று கொண்டு
அவனுக்கும் தமக்கும் வைப்பான ஸ்ரீ கோயில்களில் உண்டான நீர்மையையும் அழிக்கிறேன் -என்றார் ஸ்ரீ பெரிய திருமடலிலே –

இனி முகம் காட்டாது ஒழியில்-ஜகத்து அநீச்வரமாம் என்று பார்த்து –ஸ்ரீ ப்ரஹ்லாதிகளுக்கு முகம் காட்டுமா போலே
இவருக்கு முகம் காட்டி தானும் இவரும் ஜகத்தும் உண்டாம்படி பண்ணினான்-

ஸ்ரீ சுகாதிகளும் ஸ்ரீ முதல் ஆழ்வார்களும் பரத்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ சனகாதிகளும் ஸ்ரீ திரு மழிசைப் பிரானும் அந்தர்யாமித்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ வால்மிகீகாதிகளும் ஸ்ரீ குலசேகரப் பெருமாளும் ஸ்ரீ ராமாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ பராசர பாராசாராதிகளும் -ஸ்ரீ நம் ஆழ்வாரும் ஸ்ரீ பெரியாழ்வாரும் ஸ்ரீ ஆண்டாளும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ நாரதாதிகளும் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் ஸ்ரீ திருப் பாண் ஆழ்வாரும் ஸ்ரீ கோயிலிலே ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ சௌநக பகவானும் இவரும் அர்ச்சாவதாரத்திலே ஊன்றி இருப்பார்கள் –

அல்லாத ஆழ்வார்களைப் போலேயும் ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளைப் போலேயும் அன்றிக்கே
சம்ச்லேஷாசஹமான சௌகுமார்யத்தை உடையராய் இருப்பார் –
அதாவது –
விச்லேஷித்த போது -உம் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை -என்று
மலையாளர் ஊட்டுப் போலே அனுபவிக்கவும் வல்லராய் –
பிரிந்தாலும் சில நாள் தரிக்கவும் வல்லர்களான ஸ்ரீ ஆழ்வார்களோடும்
பத்து மாசம் பிரிந்து இருந்த ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளோடும்
ஷண காலம் விஸ்லேஷ அசஹனான என்னை கூட நினைக்கலாமோ -என்னும்படி இருக்கையும் –
சம்ச்லேஷ தசையிலே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
சம்ச்லேஷ ரச அனுபவத்தால் கண்ணாம் சுழலை இட்டு முன்னடி தோற்றாதே
அசாதாராண லஷணத்தை காணச் செய்தேயும் அறுதி இட மாட்டாது இருக்கையும் –

ஆக
எம்பெருமான் இவருக்கு நிர்ஹேதுகமாக -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –அனுபவத்து –
அதனில் பெரிய என் அவா -என்று தம்முடைய அபிநிவேசத்துக்கு இறை போராமையாலே அலமந்து கூப்பிட்டு பின்பு தாம்
அவா அற்று வீடு பெற்று த்ருப்தரான தசையைப் பேசித் தலைக் கட்டுகிறார் -இப் பிரபந்தத்தில்-

——————————————————————-

அவதாரிகை –
முதல் பாட்டில் –
தேகாத்ம அபிமான நிவ்ருத்தி தொடக்கமாக-திருவடிகளோட்டை சம்பந்தம் பர்யந்தமாக
சாஷாத் கரிப்பித்த உபகார பரம்பரைகளைப் பேசுகிறார் –

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1-

—————————

முதல் பாட்டில் –
தேகாத்ம அபிமான ராஹித்யம் தொடக்கமாக
பிராப்தி பர்யந்தமாக ஈஸ்வரன் தமக்கு பண்ணின உபகார பரம்பரைகளை அருளிச் செய்தார் –
இதில் – தமக்கு த்ரிமூர்த்தி சாம்ய ப்ரமத்தை அறுத்து தந்தபடியை அருளிச் செய்கிறார் –
எண்ணும் பொன்னுருவாய் -என்று ஸ்வரூப வைலஷண்யத்தை சொன்ன போதே
இதுவும் அதிலே அர்த்ததா உக்தம் அன்றோ -என்னில் –
சிம்ஹாவ லோக ந்யாயத்தாலே -கீழ்ச் சொன்ன உபகாரங்களை மறித்துப் பார்த்து அல்லாத உபகாரங்களை உண்டு அறுக்கிலும்
இந்த த்ரிமூர்த்தி சாம்ய கூழ்ப்பை அறுத்துத் தந்த உபகாரத்தை உண்டறுக்கப் போமோ -என்று –
அவற்றின் உடைய ஆதிக்யத்தாலே திரியட்டும் சொல்லுகிறார் –
கூழ்ப்பு -சம்சயம்
விஷயாந்தர ப்ராவண்யத்தில் நின்றும் மீட்ட உபகாரம் போலேயோ –
கைவல்யம் ஆகிற ஆபத்தில் நின்றும் மீட்ட உபகாரம் போலேயோ –இந்த உபகாரம் -என்கிறார்-

1-இருவர் சேஷமாய் -ஒருவன் சேஷியாய்
2-இருவர் உத்பாதகராய் -ஒருவன் உத்பாதகனாய் –
3-இருவர் சரீரமாய் -ஒருவன் சரீரியாய் –இருக்கிறபடியை எனக்குக் காட்டித் தந்தான் –என்கிறார் –

பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி
பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற
விமையவர் தம் திரு வுரு வேறு எண்ணும் போது
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ
யொன்று மா கடலுருவம் ஒத்து நின்ற
மூ வுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி
முகிலுருவம் எம் அடிகள் உருவம் தானே-–2-

————————

முதல் பாட்டிலே -விஷயாந்தர ப்ராவண்யா நிவ்ருத்தி தொடக்கமாக ஸ்வரூப பிராப்தமான சேஷ சேஷித்வ பர்யந்தமாக
ஸ்ரீ ஈஸ்வரன் தன் பேறாக சாஷாத்கரிப்பித்த உபகாரத்தைக் கண்டு விஸ்மிதர் ஆனார் –
தான் அபேஷிக்க அவன் செய்யுமது இறே பிராப்தமாய் இருப்பது –
தாம் விமுகராய் இருக்க அவன் தானே மேல் விழுந்து கார்யம் செய்கையாலே விஸ்மயமாய் இருக்கும் இறே –
இரண்டாம் பாட்டிலே –அந்ய சேஷத்வத்தை அறுத்துத் தந்தான் -என்கிறார் –
த்ரிமூர்த்தி சாம்ய பிரமத்தாலே பிரமித்தது அந்ய சேஷத்வம் இறே –
இப்பாட்டில் –
மணி வுருவில் பூதம் ஐந்தும் -என்றும் –
முகில் உருவம் -என்றும் –
ஸ்வரூபத்துக்கும் ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும் பிரகாசகமாய் –
நிரதிசய போக்யமாய் காள மேக நிபச்யாமமாய் -இருக்கிற வடிவை ஆசா லேசம் உடையாருக்கு
ருசி அனுகுணமாக அழிய மாறி -உபகரிக்கும் படியையும் –
தமக்கு ஸ்வாபாவிகமான வடிவு தன்னையே நிர்ஹேதுக கிருபையாலே காட்டித் தந்த படியையும் கண்டு
நான் கண்டாப் போலே யார் காண வல்லார் -என்கிறார் –
பதிவ்ரதையானால் பர்த்தா சம்ச்லேஷத்தில் இழியுமா போலே-சேஷத்வ சித்தி உண்டாய் –
அனன்யார்ஹதை உண்டானால் –பின்னை அனுபவத்தில் இழியும் இத்தனை -இறே –
ஸ்வரூபத்தை கால் கடைக் கொண்டு பற்ற வேண்டும் படி இருக்கும் குணங்கள் –
உபயத்தையும் கால் கடைக் கொண்டு பற்ற வேண்டும்படி இறே -வடிவின் போக்யதை இருப்பது –

இத்தால் –வடிவை -அனுபவிக்கிறார் –

திரு வடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
த்ரேதைக் கண் வளை யுருவேத் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தோர் உருவன் என்று உணரலாகாது
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக்
கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே–3-

———————

கீழ் மூன்று பாட்டாலும் ஸ்ரீ திருமந்த்ரார்தம் ஆய்த்து –
முதல் பாட்டில் –சேஷ சேஷித்வம் சாஷாத்க்ர்தம் ஆய்த்து –
இரண்டாம் பாட்டில் –அந்ய சேஷத்வம் நிவர்த்தம் ஆய்த்து –
மூன்றாம் பாட்டில் -போக்யதை குறைவற்றது –
இனி அனுபவத்துக்கு சஹகாரிகளைத் தேடும் இத்தனை இறே –
அதில் -நித்ய ஸூரிகள் தேச விப்ரக்ர்ஷ்டர் ஆகையாலும்-சம்சாரிகள் விஷய பிராவணர் ஆகையாலும் –
துணையாக மாட்டார்கள் –
இனி தமக்கு அவர்ஜநீயமாய் இருந்துள்ள திரு உள்ளம் இறே சஹகாரி யாவது –
ஆகையால் -நெஞ்சே -நாம் இவ் விஷயத்தை அனுபவிக்கப் பாராய் – என்கிறார் –
கீழ்ச் சொன்ன விலஷண விக்ரஹ விசிஷ்டன் உடைய ஜகத் காரண பிரயுக்தமான
வைபவத்தை ஸ்வரூப பிரகாசமான திருமந்திர முகத்தாலே அனுபவிக்கப் பாராய் -என்கிறார் –
இவர் தாம் ஸ்ரீ திரு மந்திர முகத்தாலே அனுபவிக்கிறார் ஆகில்-அதுக்கு
உபயவிபூதி நாதத்வமும் சமஸ்த கல்யாண குணாத்மகத்வத்மமும் அன்றோ அர்த்தம் -என்னில்
அதுவும் பிரமாண ப்ராசுர்யத்தாலே காரணத்வத்திலே ஒதுங்கி இருக்கக் கடவது –
ஏகோஹவை நாராயணா ஆஸீத் -என்றும்
நராஜ்ஜாதானி தத்வானி-என்றும்
ஆபோ நாரா இதி ப்ரோக்தா -என்றும் இத்யாதிகளாலே
ஜகத் காரணத்வத்தை ஸ்ரீ நாராயண சப்தார்த்தமாக சொல்லக் கடவது இறே –
அது தனக்கு கருத்து என் என்னில் -முறை அழிந்து கிடக்கிறது இத் தேசம் ஆகையாலே
பிரமாண அபேஷை உள்ளது இத் தேசத்துக்கு இறே –
தம் காணியைப் பிறர் ஆளும் போது இறே பிரமாணம் காட்ட வேண்டுவது –ஆகையால் சொல்லுகிறது
ஆகையால் –நெஞ்சே ஸ்ரீ ஜனகனை அனுபவிக்கப் பாராய் -என்கிறார் –

இந்த்ரற்கும் பிரமனுக்கும் முதல்வன் தன்னை
யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித்
திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா
வந்தணனை வந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்
வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே–4-

—————————-

ஜகத் காரண பூதனாய்-ஜகத் சரீரியாய் இருக்கிற படியை அனுசந்தித்தார் –
அநந்தரம்
ஸ்ரீ நாராயண சப்தார்த்தத்தை-ஸ்ரீ நாராயண அனுவாகம் ஆகிற ஓலைப் புறத்தே கேட்டுப் போகாதே –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி ஸ்ரீ வாமனனாய் அவதரித்து திரு உலகு அளந்த படியை அனுபவிக்கிறார் —
சேஷ சேஷித்வ சம்பந்தம் இறே – ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் ஆகிறது –
ஜகத் காரணத்வத்தால் -ஸ்ரீ ஈஸ்வரனோடு இவ் வாத்மாவுக்கு உள்ள சம்பந்தத்தை இறே சொல்லுகிறது – –
காண்மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த -என்று
சர்வ லோகமும் இவ்வர்தத்தைக் கண்ணாலே காணும்படி இறே -திரு உலகு அளந்து அருளினது –
ஆகையாலே -ஸ்ரீ நாராயண சப்தார்த்தமான -திரிவிக்கிரம அபதானத்தை அனுபவிக்கிறார் –
யஞ்ஞ வாடத்தே சென்றபடியையும் –அர்த்தித்த படியையும் சொல்லாதே –
எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்த இவ் வம்சத்தைச் சொல்லுகையாலே –
சேஷ சேஷித்வ பாவ சம்பந்தத்தை அனுபவிக்கிறார் என்று தோற்றுகிறது இறே –

ஸ்ரீ வாமன அவதாரத்தால் சீலம் காட்டி-ஸ்ரீ திரு விக்கிரம அவதானத்தாலே சம்பந்தம் உணர்த்தி அருளினானே
ஸ்ரீ வாமனன் -உபாயம் /ஸ்ரீ திரிவிக்ரமன்-உபேயம் –ஸ்ரீ ஆழ்வார்கள் ஈடுபாடும் அத்தாலே

ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப
ஒரு காலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்ட மீது போகி
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர்ந்து ஓடித்
தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை
மலர் புரையும் திருவடியே வணங்கினேனே–5-

—————————–

மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் -என்று
ஸ்ரீ திருமந்த்ரத்தை பிரமாணத்தாலே கண்டு போகை அன்றிக்கே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
வந்து அவதரித்து எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து முறையால் உணர்த்தின சம்பந்தத்தையும்
தத் காலத்தில் செவ்வியையும்-அதுக்கு பிற்பாடர் ஆகையாலே அனுபவிக்கப் பெற்றிலோம் என்று – விஷண்ணராக–
அவதாரத்துக்கு பிற்பட்டாரை அனுபவிப்பைக்கு உறுப்பாக அன்றோ நாம் செவ்வியோடு ஸ்ரீ திருக் கோவலூரிலே
வந்து நின்றோம் என்று உகந்து அருளின தேசத்தைக் காட்டிக் கொடுக்க
நெஞ்சே -நமக்கு வாய்த்தது -அனுபவிக்கப் பாராய் -என்கிறார் –

ஸ்ரீ திருமந்த்ரார்தத்துக்கு எல்லை உகந்து அருளின நிலங்கள் இறே –
ஸ்ரீ திரு மந்த்ரத்தை பிரதம பிரபந்தத்திலே லபித்தது-அதின் அர்த்தத்தை அனுபவிக்கிற இடத்தில்
சூழ் புனல் குடந்தையே தொழுது -என்று அன்றே அனுபவித்தது –
ஆனால் –புலம் புரந்து பொன் விளைக்கும் பொய்கை வெளி பூம் கோவலூர் தொழுதும் -என்ன அமையாதோ
கீழ் எல்லாம் சொல்ல வேண்டுவான் என் என்னில்
உகந்து அருளின நிலங்கள் உடைய அடிப்பாடு சொல்லுகிறது –
மேன்மையும் நீர்மையும் போலே காணும் ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் ஆகிறது –

அலம் புரிந்த நெடும் தடக்கை யமரர் வேந்தன்
அஞ்சிறைப் புள் தனிப்பாகன் அவுணர்க்கு என்றும்
சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன்
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை யீர்த்த
நெடு வேய்கள் படு முத்தம் உந்த வுந்திப்
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –6-

———————————-

தாம் இருந்த இடம் ஸ்ரீ திருக் கோவலூராகப் பெறாமையாலும்-
அவன் தாம் இருந்த இடம் வந்து முகம் காட்டாமையாலும் –
அவன் வந்து முகம் காட்டுகைக்கு ஹேதுவான ஸ்வ பாவங்களை பற்றிக் கூப்பிட்டாராய் நின்றார் கீழ் –
இதில் –
திரு உலகு அளந்து அருளின போதை செவ்வியை அனுபவிக்க வேணும் என்று
ஆசைப்பட்டவருக்கு அச் செவ்வியோடு ஸ்ரீ திருக் கோவலூரிலே வந்து நின்ற படியைக் காட்டிக் கொடுத்தோம் ஆகில்
சாபேஷரான தாம் நம் பக்கலிலே வந்து அனுபவிக்கும் அத்தனை அன்றோ-என்று நினைத்து இருந்தானோ வென்றும்
நாம் அயோக்யர் என்று முகம் தாராது இருந்தானோ என்றும் சங்கித்து – அவன் படியைப் பார்த்தால்
ஆசாலேசம் உடையார் இடத்தே சென்று முகம் கொடுக்குமவன்-யோக்யதை அயோக்யதை பாராதே முகம் கொடுக்குமவன்
ஆகையால் அக்குறை அவனுக்கு உண்டாக மாட்டாது –
இனி இழைக்கைக்கு அடி என் பாபம் இறே-ஆகையால் யாதனா சரீரம் போலே முடியவும் பெறாதே தரிக்கவும் பெறாதே
கிடந்தது உழையா நிற்கும் இதுவே யாய்விட்டது என் கார்யம் என்று தம் அவஸ்தையை அனுசந்தித்து விஷண்ண்ர் ஆகிறார் –

வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர்
மல்லையாய் மதிட்கச்சி யூராய் பேராய்
கொங்குத்தார் வளம் கொன்றை யலங்கல் மார்வன்
குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்
பங்கயத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
பனி வரையின் உச்சியாய் பவளவண்ணா
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி
ஏழையேன் இனி இங்கனே உழி தருகிறேனே–9-

——————————-

ஆஸ்ரிதர் இருந்த இடத்தே சென்று முகம் கொடுக்குமவனாய் யோக்யதை அயோக்யதை பாராதே முகம்
கொடுக்குமவனாய் இருக்க சர்வதா நமக்கு முகம் காட்டாது ஒழிந்தது – அடியிலே –
மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் –என்று சொன்னவர் –
சாதனத்தில் அந்வயித்து வந்து முகம் காட்டாது ஒழிந்தானாக வேணும் என்று சங்கித்து
சம்பந்த ஜ்ஞாபகமான ஸ்ரீ திரு மந்த்ரத்தை உபகரணமாகக் கொண்டு –இங்கே அனுபவிப்பார்க்கு
அங்கே யாவதாத்மபாவி அனுபவிக்கலாம் என்று கால ஷேப அர்த்தமாக சொன்ன இத்தனை ஒழிய
பிராப்யம் உன்னை ஒழிய வேறு ஓன்று உண்டு என்று அறியில் அன்றோ –
பிராபகம் உன்னை ஒழிய வேறு ஓன்று உண்டு என்று அறிவது –நான் என் அறிவன் -என்கிறார்-

மந்தரத்தால் -என்கையாலே -ஒரு சாதன பாவமும்
மறவாது வாழ்தியேல் -என்கையாலே -ஒரு கர்த்தவ்யமும் –
வாழலாம் -என்கையாலே -ஒரு பலமுமாய்த் தோற்றும் இறே –
இவருடைய நோற்ற நோன்பு இருக்கிறபடி –
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -என்று ஆகிஞ்சன்யத்தைச் சொல்லி யாகிலும்
இனி உன்னை விட்டு ஓன்று மாற்ற கிற்கின்றிலேன் -என்று ருசியில் குறைவற்று இருக்கிறபடியையும்
அருளிச் செய்தார் இறே –

பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபாலனாய்
குணபால மதயானாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே–10-

—————————-

ஆற்றாமையோடு –முதலானாய் -என்றார் –அந்த வெக்காயத்தோடே –ஆண் பெண்ணாய் –
அது தன்னிலும் தன் வாயாலே சொல்லுகைக்கு யோக்யதை இல்லாதபடி – மோஹங்கதையாய் –
வைத்து வாயாலே கூப்பிடும்படியாய்ச் செல்கிறது மேல் –
அதாகிறது-
இயற்கையிலே புணர்ந்து பிரிந்து பிரிவு ஆற்றாதாள் ஒரு ஸ்ரீபிராட்டி மோஹம் உணர்த்தியும் –
இவை முதலான தசா விசேஷங்களும் ஒருகால் பிறக்கையும் அது தானும் அக்ரமாக பிறக்கையுமாக செல்லா நிற்க
பந்து வர்க்கத்தில் உள்ளாறும் யுக்த அயுக்த நிரூபணம் பண்ண மாட்டாதே இருக்க-இந் நோவுக்கு நிதானம் அறியாதே
பேஷஜ குசலரும் மந்திர வாத குசலரும் புகுந்து பிரவர்த்தியா நிற்கும் அளவிலே
பகவத் பரையாய் இருக்குமவள் ஒரு கட்டுவிச்சி-இவளுடைய நோவுக்கு நிதானம் அறிகிலிகோள்-
இவளுக்கு ஸ்ரீ எம்பெருமான் அடியாக வந்த நோவு –இது அவனாலே பரிஹ்ர்தமாக வேணும் என்று
அவள் சொன்ன வார்த்தையைக் கேட்ட திருத் தாயார் –வினவ வந்தார்க்கு இப் பெண் பிள்ளை உடைய பிரவ்ர்த்தியையும்
கட்டுவிச்சி சொல்லுகிற வார்த்தையையும் சொல்லுகிற பாசுரத்தாலே தம் தசையை அருளிச் செய்கிறார் –

இவர் பிராட்டி தசையை பிராபிக்கை யாகிறது -அனுபபன்னம் அன்றோ -என்னில் –உபபன்னம் –
பிராட்டிமார்க்கும் இவருக்கும் அனன்யாரஹ சேஷத்வம் ஆகிற சம்பந்தம் ஒத்து இருக்கையாலும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை -என்கிறபடிபோகம் சமானமாய் இருக்கை யாலும் –
முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யாவிவோத்ர்தௌ -என்று
ஸ்ரீ இளைய பெருமாள் ஸ்ரீ பிராட்டியோடு ஏக பிரக்ருதியாய் தம்மைச் சொல்லுகையாலே –
வியதிரேகத்தில் ஆற்றாமை ஒத்து இருக்கையாலும் ஸ்ரீ பிராட்டி தசையைப் பிராபிக்க தட்டில்லை –

ஆனாலும் தான் ஸ்திரீ என்கிற புத்தி பிறக்கக் கூடுமோ என்னில் –
ஸ்வாமித்வாத்மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத் யாஸ் ஸ்வாமி நோ குணா
ஸ்வேப்யோதாசத்வ தேஹத்வ சேஷித்வ ஸ்த்ரீத் வதாயின -என்கிறபடியே
ஸ்ரீ புருஷோத்தமன் உடைய பும்ஸ்த்வம் ஆவது எதிர்தலைக்கு ஸ்த்ரீத்வதயாய் இருக்கையாலே-
நான் ஸ்திரீ என்று புத்தி பிறக்க தட்டில்லை –
ஸ்திரீ என்ற புத்தி பிறக்கை யாவது -தான் ஸ்திரீகளோடே ஆகார சாம்யத்தாலே பிறக்கும் புத்தி யல்ல-
புருஷ விஷயத்தில் ஸ்திரீகளுக்குப் பிறக்கும் அனுராக விசேஷ புத்தி பிறக்கை-–

சஜாதீய விஷயத்தில் விஜாதிய புத்தி பிறக்க எங்கே கண்டோம் என்னில்
பாஞ்சால்யா பத்ம பத்ராஷாயா ச் ஸ்னாயந்த்யா ஜகனம் கனம்
யாஸ்த்ரியோ த்ரஷ்ட வத்யஸ்தா பும்பாவம் மானசா யயு – என்று எதிர் தலையில் வைலஷண்யத்தாலே
சஜாதிகளான ஸ்திரீகளுக்கு ஸ்திரீகளைக் கண்டால் புருஷர்க்கு பிறக்கும் அனுராக புத்தி பிறந்தது இறே
அப்படியே -புருஷோத்தம விஷயமாக இவருக்கு பிறக்கும் அனுராக விஷயம் பிறக்க தட்டில்லை –
எதிர் தலையில் வைலஷண்யம் இறே விஜாதீய புத்திக்கு உத்பாதகம் –ஆகையாலே ஒரு பிராட்டி தசையை பிராபிக்கிறார் –

இன்னமும் இயற்கையில் புணர்ச்சி என்கிற இதுவுக்கு நினைவு என் என்னில்
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சேதன விஷயத்திலே ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக விஷயீ கரிக்கும்
நிர்ஹேதுக விஷயீ காரத்தை சொல்லுகை –எங்கனே என்னில்
பாஹ்ய உபவனத்தில் ஒரு ஸ்ரீ பிராட்டி புறப்பட்டு புஷ்பாபசம் பண்ணுகிற சமயத்தில்
அபிமதனான காந்தனும் ம்ர்க வியாஜத்தாலே வர
தோழிமார்களும் அந்ய பரைகளாய் இருக்கிற தசையிலே தர்மி பிரயுக்தமான ஸ்த்ரீத்வ பும்ஸ்த்வங்களே ஹேதுவாக
ஜ்ஞாபகரும் இன்றிக்கே-கடகரும் இன்றிக்கேஇருக்க –சம்ச்லேஷிக்கை இறே -இயற்க்கை புணர்ச்சி ஆகிறது-

ஆசார்ய க்ர்த்ய்த்தையும் புருஷகார க்ர்த்யத்தையும் தானே ஏறிட்டுக் கொண்டான் –

ஸ்த்ரீத்வம் ஆகிறது ஒரு விஷயத்துக்கு அனன்யார்க சேஷமாய் இருக்கை இறே –
எதிர்தலையில் பும்ஸ்த்வம் ஆவது -வகுத்த விஷயமுமே -சர்வ வித ரஷகமுமாய் -இருக்கை இறே –
ஆகையால் நிர்ஹேதுக விஷயீகாரத்தை சொல்லுகிறது –

ஆனால் ஜ்ஞாபகராய் இருப்பார் சில ஆச்சார்யர்களும்-
பொறுப்பித்து சேர்ப்பிக்கைக்கு சில புருஷகார பூதரும் வேண்டி அன்றோ இருப்பது
ஈஸ்வர விஷயீ காரம் இருப்பது என் என்னில் –
அப்போதும் ஆசார்யன் ஜ்ஞாபகன் ஆகிறதும் -இந்த சேஷ சேஷித்வத்தை பிரகாசிப்பிக்கைக்காக –
தேகத்தில் ஆத்மபுத்தியையும் -தத் சம்பந்த நிபந்தனமான ஸ்வாதந்த்ர்யத்தையும் நிவர்த்திப்பிக்கை இறே –
புருஷகார பூதையான ஸ்ரீ பிராட்டியும் பூர்வ வர்த்தத்தை ஷமிப்பிபதும் இஸ் சம்பந்தத்தையும்
இதன் அடியாக வரும் வாத்சல்யத்தையும் முன்னிட்டு இறே –

இன்னமும் ஸ்ரீ பிராட்டியினுடைய நோவுக்கு நிதானம் அறியாதே-மந்திர ஔஷாதிகளால் வியாபிக்கிறார் சிலரும்
அத்தை நிஷேதிக்கிறாள் ஒரு கட்டு விச்சி வார்த்தையும் ஆக செல்லுகிற இதுக்கு கருத்து யாது என்னில் –
விஷயாந்தர பிராவண்யம் அடியாக வந்த அவசாதம் –சாதநாந்தர நிவ்ர்த்த்யம் –
பகவத் பிராவண்யம் அடியாக வந்த அவசாதம் –
அதுக்கு ஹேது பூதனாய் இருந்துள்ள ஈஸ்வரன் தானே வந்து முகம் காட்டிப் போக்க வேணும் –

தத் சம்ச்லேஷம் யாவதாத்மபாவி யாகையாலும்
இந்த பிரேமாதிசயம் ஸ்வரூப பிராப்தம் ஆகையாலும் -அநிவர்த்யம் –
ஸ்வ வாக்யத்தோபாதி-திருத் தாயார் வார்த்தையாலும் பேசுகிறார் தாமாய் இரா நின்றது –
இது சங்கதம் ஆகிறபடி எங்கனே என்னில் –
ஒரு ஆறு பெருகிப் போகா நின்றால் கரையைப் பற்றி போம் அளவு அன்றிக்கே –
பெருக்கு மிக்கு இருந்தால் கைவாய்க்கால்களாப் போம் போக்கும் நிரம்பிப் போகா நிற்க –
தானும் குறையாதே சென்று கடலிலே புகுமாறு போலே –
இவருடைய பிரேமாதிசயத்தாலே –
திருத் தாயார் வார்த்தையும் குறைவற்று செல்லா நிற்க செய்தே
தம் வார்த்தையும் குறைவற்று செல்லுகை யாகிறது -இது சங்கிதம் –

இன்னமும் பெண் பிள்ளை மோஹங்கதையாய் இருக்க-
பர்ச்வம் பவதி துக்கித -என்று அவளிலும் தான் அவ சன்னையாய் இருக்க –
பிராப்தமாய் இருக்க தெளிந்து வார்த்தை சொல்லுகிற இது யுக்தாமோ வென்னில்
ஸ்ரீ பிராட்டியைப் பிரிந்த சமயத்தில் ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனாருக்கு பிறந்த அவசாதத்தில் காட்டில்
ஸ்ரீ இளைய பெருமாளும் அவருடைய அவசாதால் வந்ததும் தம்முடைய காவல் சோர்வால் வந்த அவசாததுமாய்க் கொண்டு
அவசாதம் இரட்டித்து இருக்க –அவற்றைப் பொறுத்து தெளிந்து வார்த்தை சொல்ல வேண்டும் சமயம் அறிந்து
ஸ்ரீ பெருமாளைத் தேற்றினாப் போலே இவளும் இப் பெண் பிள்ளையினுடைய உஜ்ஜீவன அர்த்தமாக தெளிந்து இருக்கையும் உக்தமே-

ரஷய பூதர் அவசன்னராய் இருக்க வமையும் –
அவசாதம் ஒத்து இருக்கச் செய்தேயும் அத்தை அறிந்து பொறுத்து தெளிந்து இருந்து வார்த்தை
சொல்ல வேண்டும் அருமை உண்டு இறே -ரஷகருக்கு
இவளுடைய வார்த்தை இவளுக்கு ஜீவன ஹேது ஆனபடி என் என்னில்
கட்டுவிச்சி வார்த்தை ஸ்ரீ பகவத் பரமாய் இருக்கையாலும்
இவள் தன்னுடைய வியாபாரம் விரக்தி பரமாய் இருக்கையாலும்
இவள் அழகில் அவன் படும் பாட்டை இவள் படுவதே -என்று அவனை பிரசங்கிக்கை யாலும் –
தீர்ப்பாரை யாமினியில் கட்டுவிச்சி போல் அன்றியே –ஸ்ரீ திருமடலில் கட்டுவிச்சி போலே-
மகா பாகவதையாள் இருப்பாள் ஒருத்தி – யாகையாலே
நோவு தீர்க்கை அன்றியே –வர்த்திக்கிலும் அவள் ஸ்பர்சமம் அமையும் என்னும்படி இருக்கிறவனை
பிரசங்கிக்கையாலும்-ஆசுவாச ஹேதுவாகத் தட்டு இல்லை –

இன்னமும் முதல் பத்து -இவர் தம்முடைய வார்த்தை –
இரண்டாம் பத்து -திருத் தாயார் வார்த்தை –
மூன்றாம் பத்து -ஸ்ரீ பிராட்டியார் வார்த்தை –
மச் சித்தா -மத் கத ப்ராணா – போதயந்த பரஸ்பரம் -என்றபடியே மூன்று பத்துக்கும் மூன்று வாக்யார்த்தம் –
மச் சித்தா –
விஷயாந்தரம் கலசாத படி -அனந்யார்கராய் அநந்ய போக்யராய் -இருக்கிறபடியை பேசுகையாலே முதல் பத்து -ஜ்ஞான பரம் –
இரண்டாம் பத்து -அந்த ஜ்ஞான கார்யமான –வைராக்ய பூர்வகமாக பகவத் பிராவண்ய அதிசயத்தைச் சொல்கிறது –
பிரேம பூர்வகமானால் பிராப்தி அளவும் செல்ல நிலவரோடே கால ஷேபம் பண்ணும்படியைச் சொல்லுகிறது -மூன்றாம் பத்து –

இரண்டாம் பத்து –மத் கத ப்ராணா -என்றது இறே –
தன் மூச்சடங்க தாயார் வார்த்தையாகச் செல்லுகையாலே
போத யந்த பரஸ்பரம் -என்றது இறே தோழி யோடு வ்ர்த்த கீர்த்தனம் பண்ணுகையாலே-

இதில் -முதல் பாட்டில் –
திருத் தாயார் இவளுடைய விரக்தியையும் கட்டுவிச்சி சொன்ன வார்த்தையையும் வினவ வந்தார்க்கு சொல்லுகிறாள் –
அவர்களுக்கு சொல்லுகிற வார்த்தை ஒன்றும் –தன்னுடைய பாவ வ்ர்த்தி என்றும் ஆய்த்து இருக்கிறது –
விச்லேஷத்தில் இப்படி அவசன்னையாம்படி –பிரணயத்தில் தேசிகை யாவதே –
என்கிற உகப்பு ஆய்த்து உள் வாயில் தனக்குச் செல்லுகிறது –

தனக்கு அபிமதமாய் இருந்தால் அது தன்னை இவர்களுக்கு சொல்ல குறை என் என்னில் –
இயற்கையில் புணர்ச்சி யாகையாலே அவர்களுக்கு சொல்ல மாட்டுகிறிலள் –
கடகர் அடியாக பிறந்த சம்பந்தம் ஆகில் இறே சொல்வது –
ஸ்ரீ ஆசார்ய உபதேச பூர்வகமாக ஸ்ரீ பகவத் சம்பந்தம் உக்தனாகில் இறே -நமக்கு கொண்டாடல் ஆவது –
ஜ்ஞான கார்யமான கலக்கம் யதா ஜ்ஞானத்தாலே நிவர்த்த்யம்
யதா அஞ்ஞான கார்யமான கலக்கம் -யாவதாத்மபாவி அநிவிர்த்யம்-என்னும் அது இறே
இப் பாட்டில் பிரகாசிக்கிறது –

பட்டுடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள்
பனி நெடும் கண்ணீர் ததும்ப பள்ளி கொள்ளாள்
எட்டுணைப் போது என் குடங்காலில் இருக்க கில்லாள்
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
மட்டுவிக்கி மணி வண்டு முரலும் கூந்தல்
மடமானை இது செய்தார் தம்மை மெய்யே
கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்
கடல் வண்ணர் இது செய்தார் காப்பாராரே –11-

————————-

கடல்வண்ணர் -என்று கட்டுவிச்சி திரு நாமம் சொல்லுகையாலும்
அத்தை திருத் தாயார் அனுபாஷித்தும்-வினவ வந்தார்க்கு சொல்லியும்
இவள் தான் வாய் வெருவினாள் போலே –
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் -என்று தன் வாயாலே திரு நாமத்தை சொல்லுகையாலும்
பூர்வ அவஸ்தையில் காட்டிலும் சிறிது உணர்த்தி பிறந்து-அவ்வளவிலும் அபிமதன் வந்து முகம் காட்டாமையாலே
அதுவும் ஆற்றாமைக்கு உடலாய் -இடைவிடாமல் கூப்பிடத் தொடங்கினாள்-
அத்தை வினவ வந்தார்க்கு சொல்லி இன்னாதாகிறாள் –
இவளுடைய கிலேசம் நின்ற நிலை இது –
ஸ்வரூப ஹானி நின்ற நிலை இது –
எனக்கு அபவ்யையான படி இது –
இத்தனைக்கு அடி என் பாபம் இறே என்று -அவர்களுக்குச் சொல்லி இன்னாதாகிறாள் –
லோக அபவாதம் பரிஹரிக்க சொல்லுகிறாள் இத்தனை போக்கி
அகவாயில் இவ்விஷயத்தில் இவளுடைய அவகாஹனம்
தனக்கு அநிஷ்டமாய் இருக்கிறது அன்று இறே –

நெஞ்சுருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்
நெடிதுயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்
நஞ்சரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்
வம்பார் பூம் வயலாலி மைந்தா வென்னும்
அஞ்சிறைய புட்கொடியே ஆடும் பாடும்
அணியரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
என் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்
இரு நிலத்தோர் பழி படைத்தேன் ஏ பாவமே-12-

———————————

திருத் தாயார் -இவள் திரு நாமத்தை தன் வாயால் சொல்லா நின்றாள் –
திருநாமம் சாத்மிக்கும் தசை போலே இருந்தது என்று பார்த்து -இவள் வார்த்தை கேளாதே –
உறாவிக் கிடக்கிற கிளியை இவள் கண் முகப்பே வைத்து திரு நாமத்தை சொல்லுவிக்க –
இவளுக்கு ஆஸ்வாசம் பிறக்கும் என்று நினைத்து –
இவள் முன்பே கிளியைக் கொண்டு விட்ட இடத்திலும் அது பேசாதே இருக்க-இவள் திரு நாமத்தை சொல்லீர் -என்றாள் –
இவள் தசையைக் கண்டு உறாவி இருக்கையாலும்
சேஷ பூதரான நாம் இவள் கற்பித்தவையே யாகிலும்
இவள் சந்நிதியில் சொல்லக் கடவோம் அல்லோம் -என்னும் நினைவாலும் பேசாமல் இருந்தது –
ஆச்சார்யன் போதித்தனவையே யாகிலும் தத் சந்நிதியில் சொல்லக் கடவது அல்ல என்கிற சாஸ்திர
அர்த்தம் இவ்விடத்தில் வெளிப்படுத்தப் படுகிறது –
நான் உச்சரிக்க-அநந்தரம்-உனக்கு உச்சரிக்கலாமே -என்ன-அடியிலும் கற்பித்த பிரகாரம் அது வாகையாலே அதுக்கு இசைய
தான் ஆதி க்ரஹணம் பண்ண -அநந்தரம் -சொன்னவாறே
இது ஒரு முகத்தாலே -ஆபத்சகம் முதலான வ்ர்த்த முகத்தாலே -சாத்மிகாமையாலே தளர்ந்தாள் -என்கிறாள் –

திருநாமம் சாத்மிக்கும் தசை என்றும் சாத்மியாத தசை என்றும் ஓன்று உண்டோ -என்னில் –திருநாமம் தான்–
1- ஓர் அவஸ்தையிலே பாவனமுமாய்
2-ஓர் அவஸ்தையிலே போக்யமுமாய்-
3-ஓர் அவஸ்தையிலே சம்சார பய நிவர்தகமுமாய் –
4-ஓர் அவஸ்தையிலே சாதனமுமாய் –
5-ஓர் அவஸ்தையில் தாரகமுமாய்-
6-ஓர் அவஸ்தையில் நஞ்சுமுமாய் –இருக்கும் –
தேக ஆத்மா அபிமானிகளுக்கு அன்னம் -இத்தனையும் -ஆகா நின்றது இறே –
ஆகார சுத்தௌ சத்வ சுத்தி -என்கிறபடியே
1-அன்னம் பாவனமாயும் இருக்கும் –
2-தாரகமாயும் இருக்கும்
3-போக்யமுமாயும் இருக்கும்
4-தாநாதி முகத்தாலே –புருஷார்த்த சாதனமாயுமாய் இருக்கும் –
5-அதிசயித்தவாறே நஞ்சுமுமாயும் இருக்கும் -இறே –
அப்படியே பரசேஷம் ஆத்மா என்று இருக்கிறவனுக்கு –
பவித்ரானாம் ஹி கோவிந்த பவித்ரம் பரமுச்யதே -என்கிறபடியே பிரதமத்தில் பாவனமாய் இருக்கும்
அநந்தரம்
புண்யா நாமபி புண்யோ சௌ-என்கிறபடியே உஜ்ஜீவன சாதனமாயும் இருக்கும் –
மங்களாநாஞ்ச மங்களம் -என்கிறபடியே பிராப்யமுமாய் இருக்கும் –
யன் நாம சந்கீர்தனதோ மகா பயாத் விமோஷ மாப்நோதி -என்கிறபடியே
சம்சார பய நிவர்த்தகமுமாய் இருக்கும்-இது ரிஷிகள் கோஷ்டியில் பரிமாற்றம்

ஆழ்வார்கள் கோஷ்டியில் ஒன்றாய்த்து –
திருநாமம் போக்கியம் என்றும்
தாரகம் என்றும்
பாவனம் என்றும்
நஞ்சு என்றும் சொல்லுகிற இது –
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே -என்று திரு நாமம் போக்யமாம் இருக்கிற படியை சொன்னார்கள்
நின்நாமம் கற்ற ஆவலிப்பு -என்று பாவனம் என்னும் இடம் சொன்னார்கள் –
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேன் -என்று தாரகம் என்னும் இடம் சொன்னார்கள்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்றும்
பிழைப்பில் பெரும் பெயர் -என்றும்-நஞ்சு என்னும் இடத்தைச் சொன்னார்கள்

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்
காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல்லடர்த்து மல்லரையன் அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-13-

————————-

திருநாமம் சாத்மியாத தசையும்-சாத்மிக்குமோ என்று சங்கிக்கிகும் தசையும்
சாத்மிக்கும் தசையுமாய் இருக்கிற படியை -இறே
இம் மூன்று பாட்டிலும் சொல்கிறது –
ஆபத் சகங்களான திரு நாமங்களை தான் ஆதிக்ரஹணம் பண்ணித் தந்து சொல்லச் சொல்லுகையாலே சொன்னோம்
அது மோஹ ஹேதுவாய்த்து என்று பார்த்து
கிளி தன்னுடைய விவேகத்தாலே முன்பு தெளிந்த காலத்திலே தான் உஜ்ஜீவித்த பிரகாரத்தாலே கற்பித்த திரு நாமங்களை
அடைவே சொல்லக் கேட்டு தரித்து –வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக -என்று கிளியைக் கொண்டாடுகிறாள் –

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –14-

————————————–

கீழ் பாட்டில் –
கிளி திரு நாமத்தை சொல்லக் கேட்டு ஆச்வஸ்தையாய்
அதின் பக்கல் உபகார ஸ்ம்ர்த்தியும் கொண்டாடினாளாய் நின்றது –
இதில் –
அத்தசை போய் –தன் வாயாலே திரு நாமத்தை சொல்லி-அது தன்னை வீணையிலே ஏறிட்டு நுணுக்கினாள்-
அந்த வீணையோடு ஸ்பர்சம் பிரத்யபிஞ்ஞா பிரத்யஷத்தாலே
சம்ஸ்லேஷ தசையில் தன் படிகளையும் அவன் படிகளையும் வீணையிலே ஏறிட்டு வாசிக்கும் படிக்கு
ஸ்மாரகமாக-அந்த வீணை முகத்தாலே அவன் வடிவை சாஷாத் கரித்து
அந்த வீணையை அவனாகக் கொண்டு அவனோட்டை சம்ஸ்லேஷ தசையில் பண்ணும் வியாபாரங்களை
இவ் வீணையிலே பண்ணா நின்றாள்
இவள் உணர்ந்தால் என்னாய் விழப் புகுகிறதோ என்று இன்னாதாகிறாள்

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு என்றும் கடல் கிடந்த கனி என்றும்
அல்லியம்பூ மலர்ப் பொய்கை பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்
தூ முறுவல் நகை யிறையே தோன்றநக்கு
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவியாங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே–15-

—————————-

மென் கிளி போல் மிக மிழற்றும் -என்று சம்ஸ்லேஷ தசையில் தன்னுடைய ஜெயமும் அவனுடைய அபஜயமும்
தோற்ற மேலிட்டு வார்த்தை சொன்ன இடத்தில் அவனும் அப்படியே மேலிட்டு வார்த்தை சொல்லக் கேட்டிலள் –
அத்தாலே நின்ற நிலை குலைந்து –தன் கர்வமும் -தானும் -வீணையுமாய் -விட்டது – கூப்பிடத் தொடங்கினாள் –
பர்த்தாரம் இவ சம்ப்ராப்தா ஜாநகீ முதிதா பவத் -என்று உகந்த சமனந்தரம் –
ஹா ராம ஹா லஷ்மணா ஹா ஸூ மித்ரே -என்று ஸ்ரீ பிராட்டி கூப்பிட்டாப் போலே
ஹா ராமா -என்று போக்ய வஸ்துவை நினையா
ஹா லஷ்மணா -என்று புஜிப்பாரை நினையா –
ஹா ஸூ மித்ரா –என்று நிமித்த பூதரை நினையா கூப்பிட்டாள்
அப்படியே – இறே –
வரையாதே ரஷிக்கும் படியையும்-முகம் கொடுக்கும் படியையும் சொல்லிக் கூப்பிட்டு தரைப் படா நின்றாள்
என்கிறாள் –

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே–16-

——————————–

இவள் முழு மிடறு செய்து கூப்பிட்டு அத்தோடு தரைப் பட்ட படியைக் கண்ட கிளியும் வீணையும் ஆஸ்வாச ஹேதுவாம் என்று
அவற்றை முன்னே வைத்துப் பார்த்தோம் –
அவையும் அகிஞ்சித்கரமாய்த்து என்று அவற்றை ஒருங்க விட்டு நாம் ஹிதம் சொன்னால் அது ஜீவிக்கை யாமோ என்று பார்த்து –
நீ இங்கனே வாய் விட்டுக் கூப்பிடுகையும் மோகிக்கிகையும் ஆகிற இது
உன்னுடைய ஸ்த்ரீத்வத்துக்கு போராது -இக்குடிக்கும் அவத்யம் என்ன
அவற்றையோ நான் இப்போது பார்த்து இருக்கிறதோ என்ன-அது தான் கிடக்க –
நீ தான் ஆதரிக்கிற விஷயம் தன்னைப் பேண வேண்டாவோ
ஆசாலேசம் உடையார்க்கு முகம் காட்ட கடவ வஸ்து தன்னை ஒழிய செல்லாமையாலே நோவு பட்டு கூப்பிடுகிற
பிரணயிநிக்கு முகம் காட்டாது ஒழிவதே-என்று நாட்டார் சொல்லும் அவத்யத்தை பரிஹரிக்க வேண்டாவோ என்ன
எனக்கு ஓடுகிற தசையை அறியாதே ஹிதம் சொல்லுகிற இவள் முகத்தில் விழியாதே
பிரிந்தார் படும் நோவை அறியும் அவன் முகத்தில் விழிக்க வல்லளே என்று அவனைப் பற்றிக் கூப்பிடுகிறாள் –

பொங்கார் மென் இளம் கொங்கை பொன்னே பூப்பப்
பொரு கயல் கண்ணீர் அரும்பப் போந்து நின்று
செங்கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்
சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து ஆங்கே
தண் காலும் தண் குடந்தை நகரும் பாடித்
தண் கோவலூர் பாடி யாடக் கேட்டு
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே–17-

——————————–

நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே –என்று தான் சொன்ன-ஹிததத்தைக் கடந்த படியாலே
இனி இவளை ஹிதம் சொல்லி மீட்கை என்று நமக்கு ஓன்று இல்லை என்று கூடி உடன்பட்டு -இவள் கருத்தை கேட்போம் பார்த்து
உனக்கு ஓடுகிற கருத்து என் என்ன –
இங்கு இருந்து கூப்பிடக் கடவேன் அல்லேன் –அவன் இருந்த தேசம் ஏறப் போகக் கடவேன் என்ன –
அளவுடையாரும் குமுழி நீர் உண்ணும் விஷயத்தில் தான் மேல் விழுந்து அனுபவியா நின்றாள் –
இது அன்றோ ஸ்த்ரீத்வத்தை பாராதே விஷய வைலஷண்யத்தை பார்த்தார் படி இருக்கும் படி-வினவ வந்தாருக்கு சொல்கிறாள்
நிறை வழிந்தார் நிற்குமாறு -இது வன்றோ -என்று இவளுக்கு பிரணயத்வத்தில் உண்டான தேசிகத்வம்
தனக்கு இஷ்டம் என்னும் இடம் ஹார்த்தமாக போந்தது –அத்தை இங்கே பிரகாசிப்பிகிறாள்

இவ்விடத்தில் ஓர் அர்த்தத்தை தாயார் வார்த்தையால் பூர்வ பஷித்து-மகள் வார்த்தையாலே சித்தாந்திக்கிறது –

பிரதமத்திலே ஸ்வரூபத்தை அனுசந்தித்து
பின்னை ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தில் இழிய வேண்டாவோ என்று யாய்த்து தாயார் சித்தாந்தம்
அது வேண்டுகிறது என் என்னில்
சாஸ்த்ரங்களில் ஸ்வர்க்காதிகளையும் புருஷார்த்தமாக சொல்லுகையாலே
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் இது என்னும் நிர்ணயிக்கும் போது-ஸ்வரூபம் முன்னாக வேணும் என்கை –

அது ஓர் ஆர்த்தம் அன்று காண்-போக அனுரூபம் ஸ்வரூபமாம் இத்தனை ஒழிய
ஸ்வரூப அனுரூபமாயோ போகம் இருப்பது என்று ஆய்த்து மகள் சித்தாந்தம் –

———————————————————————————————–

கார் வண்ணம் திரு மேனி கண்ணும் வாயும்
கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம்
பார்வண்ண மட மங்கை பத்தர் பித்தர்
பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
ஏர் வண்ணம் என் பேதை என் சொல் கேளாள்
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்
இது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறே–18-

———————————

தான் சொன்ன ஹிதம் கேளாமையாலேஇது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறு – என்று தானும்
அதிலே உடன்பட்டமை தோன்ற வார்த்தை சொன்னாள் –
அவ்வளவிலே வினவ வந்தவர்கள்-ஸ்த்ரீத்வத்தை பார்த்திலளே ஆகையாலும்
ஆதரிக்கிறவன் தான் ஒரு விஷயத்திலே அந்ய பரன்-உனக்கு முகம் தர மாட்டான் என்று சொல்லா விட்டது என் -என்ன
அதுவும் சொன்னேன் -அது விபரீத பலமாய்-அதுவே ஹேதுவாக -அவன் இருந்த தேசத்து ஏறப் போனாள் -என்கிறாள் –

முற்றாரா வன முலையாள் பாவை மாயன்
மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு இழந்தாள் ஆவிக்கின்றாள்
அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள்
பேர்பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்
பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே –19-

—————————–

பொருவற்றாள் -என்று – ஊர் தடைகள் விட்டால் -ஊர்க்கதிர் காவல் விட்டால் –
அறுப்பது -கிடா விடுவதாய் கொண்டு -ஆழி மூழையாய்ச் செல்லுமா போலே
இவளும் தாய்க்காவல் விட்டவாறே
அவனுடைய சர்வ ரஷகத்வத்தை வாய் விட்டுப் பேசி கால ஷேபம் பண்ணா நின்றாள் –
இவளை மகா பாக்யவதி -என்னுமது ஒழிய உவமை இட்டுச் சொல்லப் போமோ -என்கிறாள் –
மகிஷிக்கு உதவினபடியையும்-
பேரனுக்கு உதவினபடியையும் –
ரஷக அபேஷை உடையாரை ரஷித்த படியையும் –
அதுவும் இல்லாரை தன் கிருபையால் ரஷித்த படியையும் –
தன் பக்கல் விமுகராய் இருப்பார்க்கும் அகப்பட தூளிதானம் பண்ணின படியையும் வாய் விட்டுப் பேசா நின்றாள் -என்கிறாள் –

முதல் பத்தில் தாமான நிலையில் நின்று ஸ்ரீ திருக் கோவலூரை அனுபவிக்கப் பார்த்து –
தாம் இருந்த இடம் திருக் கோவலூராக பெறாமையால் வந்த ஆற்றாமையாலே
கூப்பிட்ட விடத்திலும் அவன் வந்து முகம் காட்ட காணாமையாலே
மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் –வாழலாம் -என்று தாம் கால ஷேப அர்த்தமாக அனுபவிக்க இழிந்து
அது கிட்டாமையால் வந்த ஆற்றாமையாலே சாதன புத்தி பண்ணி வந்து முகம் காட்டாது ஒழிந்தானோ என்று சங்கித்து
பொன்னானாய் -என்கிற பாட்டிலே ஸ்ரீ ஈஸ்வரனுடைய புத்தி சமாதானம் பண்ணினார்
இவ்விடத்க்தில் வினவ வந்தவர்கள் இவளுடைய ஆற்றாமையாலே சாதன புத்தி பண்ண
ஸ்ரீ தாயார் நிலையில் நின்றவர்கள் உடைய ஹ்ர்தயத்தை சமாதானம் பண்ணி தலைக் கட்டுகிறார் –

இத்தால் –
சித்த சாதனம் பரிக்ரஹம் பண்ணினவர்களுக்கு
யாவதாயுஷம் பகவத் குண சேஷ்டிதங்கள் கால ஷேபத்துக்கு விஷயம் என்றது -ஆய்த்து –

தேராளும் வாளரக்கன் செல்வம் மாளத்
தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ யொல்கிப்
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாளப்
பொரு கடலை யரண் கடந்து புக்கு மிக்க
பாராளன் பாரிடந்து பாரையுண்டு
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல்
பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே –20-

——————————-

மச்சிதா மத்கதப்ராணா போதயந்த பரஸ்பரம் -என்ற இத்தை ஸூக்ரஹமாக மூன்று பத்துக்கும்
வாக்யார்த்தமாக அருளிச் செய்வர் –பட்டர் –

மச் சித்தா
மத் ஏக சித்தாக – விஷயாந்தரம் கலசாமே அவனையே ஜ்ஞானத்துக்கு விஷயமாக்குகை –
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்று
ஒரு மிதுனைத்தை விஷயீகரித்து இருக்கும் அதுவே வேஷம்-என்று அருளிச் செய்தார்கள் இறே ஆழ்வார்கள் –
இத்தை ஒழிந்தவை எல்லாம் வியபிசாரமே -என்கை –
தேவதாந்தரங்களைப் பற்றிய ஜ்ஞானம் வ்யபிசாரம் –
பிரகிருதி பிராக்ருதங்களைப் பற்றிய ஜ்ஞானம் வியபிசாரம் –
இவ் விஷயம் தன்னை பிரிய பிரிதிபத்தி பண்ணும் ஜ்ஞானமும் வியபிசாரம் -என்கை –

மத்கத பிராணா —
ஆவியை அரங்கமாலை –என்கிறபடியே-தத்கத பிராணனை வுடையராய் இருக்கை –
பிராணன் தத்கதையாய் இருக்கை யாவது –
அவனோடு கூடின போது சத்தை உண்டாய் -பிரிந்த போது –மோஹம் கதையாய் இருக்கை –

போதயந்த பரஸ்பரம் –
புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே –என்று கேட்டு தரித்தல்
கோவிந்தன் குணம் பாடி –ஆவி காத்து இருப்பேனே -என்று சொல்லி தரித்தலாம்படியாய் இருக்கை-

தன்னுடைய வ்ருத்த கதனம் பண்ணி தரித்தும்
தோழிமார் வார்த்தை கேட்டும் தரித்தும் -இறே இப்பத்து செல்கிறது –

முதல் பத்து -ஸ்ரீ பராசர ஸ்ரீ பராசர்யாதிகளான ரிஷிகளுடைய ரீதியாய் இருக்கும் –
ஜ்ஞானப் பிரதானராய் இறே அவர்கள் இருப்பது –
நடுவில் பத்து –ஸ்ரீ ஆழ்வார்கள் உடைய ரீதியாய் இருக்கும்
தத் சம்ஸ்லேஷ விஸ்லேஷ ஏக சுக துக்கராய் இறே இவர்கள் இருப்பது –
மூன்றாம் பத்து –ஸ்ரீ பிராட்டிமார்கள் உடைய ரீதியாய் இருக்கும்
வ்ருத்த கீர்த்தன ரூபமாய் இறே இருக்கும்-

இதுக்கு கீழ் பாட்டோடு சங்கதி என் என்னில்
தான் ஹிதம் கேட்கும் அவஸ்தை அல்லாமையாலே
மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசலாமே -என்று கொண்டாடி கடக்க நின்றாள் திருத் தாயார் –
அவன் இவ் வாற்றாமை ஸ்வ க்ர்ஷியின் பலம் ஆகையாலே-அதிலே திருப்தனாய் கடக்க நின்றான் –
இவள் தன் ஆற்றாமையாலே அவசன்னையாய் கிடந்தாள் –
இவளுடைய தசையைக் கண்ட தோழி –
ஏவம் பஹூவிதாம் சிந்தாம் சிந்தயித்வா -என்று-ஸ்ரீ திருவடி விசாரித்தாப் போலேயும்
இவளும்-ஹிதம் சொல்லுகை அசஹ்யமாய் இருந்தது –

இனி இவளை தரிப்பிக்கும் விரகு ஏதோ என்று பல முகங்களையும் சிந்தித்து –
வ்ருத்தமான சம்ஸ்லேஷத்தை ஸ்மரிப்பிக்கவே இவள் தரிக்குமோ என்று பார்த்து –
இயற்கையால் புணர்சியாகையாலே நானும் சந்நிஹிதை –
அவன் வந்தபடி என் –
உன்னோடு கலந்தபடி என் –
பின்பு பிரிகிற போது -உனக்கு ஆஸ்வாசமாக சொல்லிப் போன வார்த்தை தான் என்ன
வ்ருத்த கீர்த்தனம் ஆகையால் தரித்து அவற்றை இவளுக்கு சொல்லுகிறாளாய் செல்லுகிறது –

முதல் பாட்டில் –
அவனுடைய அழகையும் சீலத்தையும் கண்டு வைத்து-
கைப்பட்ட வஸ்துவை கடலிலே பொகட்டாப் போலே –
அந்யதா பிரதிபத்தி பண்ணி இழந்தோம் கண்டாயே -தோழி -என்கிறாள் –
அவன் வந்தபடி என் என்று தோழி கேட்க -பிரதமத்திலே வந்தபடியைச் சொல்கிறாள் –

இப்பாட்டு –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் தலைமகனாய்-ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் தலைமகளாக ப்ரவர்த்தம் ஆகிறது –

—————

கஜ்ஜௌகார சௌகந்த்ய வஹாளக நிகும்பனம்
விவ்ர்ணோதி குரோ ப்ராப்தம் கலிவித் வேஷி கிங்கர –

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்யும் அவதாரிகை –
நாயகனோடு கலந்து பிரிந்து பிரிவாற்றாமல் நோவு படுகிறாள் ஒரு நாயகி உபாயத்தாலே உபவனத்திலே பூக் கொய்ய என்று புறப்பட
நாயகனும் வேட்டைக்கு என்று வர-அங்கே உபாயம் பலித்து சம்ஸ்லேஷம் ப்ரவர்த்தமாய்
நாயகனும் போன அளவிலே இத்தைக் கடிப்பித்து தலைக் காவலாக நின்ற தோழி வந்து கிட்டி அவன் செய்தபடி என் என்று கேட்க
அவளுக்கு பிரவர்த்தமான படியை நாயகி சொல்கிறாள் –இப்பாட்டால் –

1-முதல் பத்து -ஸ்ரீ ஆழ்வார் தாமான பாசுரம்-/ இரண்டாம் பத்து -திருத் தாயார் பாசுரம்/மூன்றாம் பத்து -பெண் பிள்ளை பாசுரம்
2-முதல் பத்து மச்சிதா என்கிறது / இரண்டாம் பத்து மத்கதபிராணா என்கிறது /மூன்றாம்பத்து -போதயந்த பரஸ்பரம் -என்கிறது –
3-முதல் பத்தாலே திருமந்தார்த்தம் சொல்லிற்று -/இரண்டாம் பத்தாலே த்வயார்த்தம் -/ மூன்றாம் பத்தாலே சரம ச்லோகார்த்தம் –
4-முதல் பத்தாலே –பக்தி / இரண்டாம் பத்தாலே -பிரபத்தி / மூன்றாம் பத்தாலே –புருஷாகாரம்/
5-முதல் பத்தாலே –பிரண வார்த்தம் / இரண்டாம் பத்தாலே –நமஸ் சப்தார்த்தம் -/மூன்றாம் பத்தாலே –நாராயண சப்தார்த்தம்-
6-முதல்பத்திலே –அகாரார்தம்-/ இரண்டாம்பத்திலே – உகாரார்தம்-/மூன்றாம் பத்திலே –மகாரார்தம் –
7-முதல் பத்தாலே –அதர்சனே தர்சன மாத்ரகாமா -என்னும் அர்த்தம் /இரண்டாம் பத்தாலே –த்ரஷ்டா பரிஷ்வங்க ரசைக லோலா -என்னும் அர்த்தம் /
மூன்றாம் பத்தாலே –ஆலிங்கதாயம் புநராய தாஷ்யா மாசாஸ் மஹே விக்ரஹ யோர பேதம் –என்னும் அர்த்தம் சொல்லிற்று –

முதல் பத்து ஸ்ரீ ஆழ்வார் பாசுரமான படி என் என்னில் –
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே –என்னும் பாசுரம் ஆகையாலே
இரண்டாம் பத்து –திருத்தாயார் பாசுரமான படி எங்கனே என்னில் –
என் குடங்கால் இருக்க கில்லாள் -என்றும்-பெற்றேன் வாய்ச்சொல் இறையும் பேசக் கேளாள் -என்றும் சொல்லுகையாலே –
மூன்றாம் பத்து பெண் பிள்ளை பாசுரமானபடி என் என்னில் –
என் முன்னே நின்றார் -என்றும் –தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம் -என்றும்-
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு -என்றும் -சொல்லுகையாலே

மச் சித்தா -என்றபடி என் என்னில் –
இமையவர் தம் திரு வுருவே எண்ணும் போது -என்றும்
அந்தணனை அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல்
வாழலாம் மட நெஞ்சமே -என்றும் சொல்லுகையாலே
மத்கத பிராணா-என்றபடி என் என்னில் –
நெஞ்சுருகி கண் பணிப்ப நிற்கும் சோரும் -என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-என்றும் சொல்லுகையாலே
போதயந்த பரஸ்பரம் -என்றபடி என் என்னில்
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி -என்றும்
வரை வுருவில் மா களிற்றைத் தோழி என் தன பொன் இலங்கு
முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு -என்றும் சொல்லுகையாலே –

ஸ்ரீ திருமந்த்ரார்த்தம் சொன்னபடி என் என்னில் –
என்னுருவில் நின்ற வெந்தை -என்று சொல்லுகையாலே ஸ்ரீ பிரணாவார்த்தம் சொல்லிற்று-
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே -என்று சொல்லுகையாலே நமஸ் சப்தார்த்தம் சொல்லிற்று –
மின்னுருவாய் முன்னுருவில் தொடங்கி அனலுரு வறுதியாக–ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் சொல்லிற்று –

ஸ்ரீ த்வயார்த்தம் சொன்னபடி என் என்னில் –
வில்லிறுத்து மெல்லியள் தோள் தோய்ந்தாய் -என்றும் –
திருமாலைப் பாடக் கேட்டு -என்றும் –ஸ்ரீ மத் பதார்த்தம் சொல்லுகையாலும் –
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் – என்று தொடங்கி-
துன்று குழல் கரு நிறத்து என் துணையே –என்கிற அளவாக ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் சொல்லுகையாலும் –
அடி இணையும் கமலவண்ணம் –என்று சரண சப்தார்தம் சொல்லுகையாலும் –
இது செய்தார் -என்றும்
பேர்பாடி -என்றும் சரண சப்தார்த்தம் சொல்லுகையாலும் –
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் -என்றும்
நீராடப் போனாள் -என்றும் பிரபத்யே சப்தார்த்தம் சொல்லுகையாலும்
பாவை மாயன் மொய்யகத்து இருப்பாள் -என்றும்
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்றும்
உத்தர கண்டத்தில் ஸ்ரீ மச் சப்தார்த்தம் சொல்லுகையாலும்
பாரையுண்டு -இத்யாதியாலே உத்தர கண்டத்தில் ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் சொல்லுகையாலும்
பேர்பாடி தண் குடந்தை நகரும் பாடி -என்று நமஸ் சப்தார்த்தம் சொல்லுகையாலும்-

ஸ்ரீ சரம ச்லோகாரார்த்தம் சொன்னபடி என் என்னில் –
கை வளையும் மேகலையும் காணேன் -என்றும்
இரு கையில் சங்கு இவை நில்லா -என்றும் -சொல்லுகையாலே
சர்வ தர்ம பரித்யஜ்ய -த்தின் அர்த்தம் சொல்லுகையாலும்
கரு முகிலே ஒப்பர் வண்ணம் -என்றும்-
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி இங்கே வந்து -என்றும்
கையும் சங்குமாய் கொண்டு சந்நிஹிதம் ஆகையாலே
மாம் ஏகம் பதார்த்தம் சொல்லுகையாலும்

என் தன் பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு -என்றும்
அன்றாயர் குலமகளுக்கு அரையன் தன்னை –அடி நாயேன் நினைந்திட்டேன் –என்றும்-
சரணம் -வ்ரஜ -என்கிற பதங்களின் உக்தமான அர்த்தத்தை அனுஷ்டான பர்யந்தமாக சொல்லுகையாலும்
மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே -என்றும்
அஹம் சப்தார்த்தம் சொல்லுகையாலும்
அருளாய் -என்கிற இடத்தில் என்னை அருளாய் என்ன வேண்டுகையாலும்
த்வா -என்கிற பதார்த்தம் சொல்லுகையாலும்
தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே -என்று
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்கிற பதங்களின் அர்த்தம் சொல்லுகையாலும்
அருளாய் -என்கிற இத்தால் மாசுச -வினர்த்தம் சொல்லுகையாலும்

பக்தி சொன்னபடி –
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் -என்றும் –
காரணந்துத்யேய-என்றும்
தஜ்ஜலா நீதி சாந்த உபாசீத -என்றும்
காரண வஸ்து உபாஸ்யம் என்னும் இடம் சொல்லுகையாலும்
மந்தரத்தால் என்றும் வாழ்த்தியேல் -என்றும் த்ருவ அனு ஸ்ம்ருதி சொல்லுகையாலும் –

பிரபத்தி சொன்னபடி –
அணி யரங்கம் ஆடுதுமோ தோழி -என்று நாயக சம்ச்லேஷத்துக்கு உபாயம் சிந்தித்தாலோ என்று தோழியை கேட்கையாலும்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் – என்று சிந்தித்த உபாயாத்தை அனுஷ்டிக்கையாலும்–புருஷகாரம் சொன்னபடி
பெரும்தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து புலவி தந்து –
என்று ததீயர் புருஷகாரமாக சம்ச்லேஷித்தபடி சொல்லுகையாலே –பிரணாவார்த்தம் சொன்னபடி –
என்னுருவில் நின்ற வெந்தை -என்றும்
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி -என்று
சேஷி சேஷ சீஷத்வம் மூன்றும் ஓர் அஷரமாய் நின்ற படியும் –
அகார உகார மகார இதி -என்று அஷர த்ரயமும் ஒன்றானபடி சொல்லுகையாலே –
நமஸ் சப்தார்தம் சொன்னபடி –
என் குடங்கால் இருக்க கில்லாள் -என்றும்
என் சிறகின் கீழே அடங்கா பெண் பெற்றேன் -என்றும் -இப்புடைகளிலே சொல்லுகையாலே
மமகார நிவர்த்தி சொல்லிற்று –ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் சொன்ன படி –
வண்ண -என்கிற பாட்டும்-
பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி -என்று
இப்புடைகளிலே ஆயுத ஆபரண விக்ரஹம் ஸ்ரீ நாராயண சப்தார்த்தமான
பரத்வ சௌலப்யாதிகள்-சொல்லுகையாலே-அகார்தார்தம் சொன்னபடி –
வற்புடைய -என்கிற பாட்டில் அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக
அவ ரஷணே-என்கிற தாத்வர்த்தமான ரஷகத்வம் சொல்லுகையாலே-உகார்த்தம் சொன்னபடி –
நெஞ்சுருகி -என்கிற பாட்டாலே
அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமாக -பகவத் ஏக காந்தத்வம் சொல்லுகையாலே மகாரார்த்தம் சொன்னபடி –
அவர் நிலைமை கண்டும் -என்றும்
தேவர் என்று அஞ்சினோம் -என்றும்
கண்டேன் கன மகரக் குழை இரண்டும் -இத்யாதிகளாலே
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வாதிகள் -சொல்லுகையாலே

அதர்சனே தர்சன மாத்திர காமா -என்கிறபடி என் என்னில்
எங்குற்றாய் எம்பெருமான் -என்று அவனை காண வேண்டும் என்று ஆசைப் படுகையாலே

த்ர்ஷ்டே பரிஷ்வங்கர சைகலோலா -என்றபடி என் என்னில் –
முற்றாரா வன முலையாள் -என்று துடங்கி ஸ்ரீ நாச்சியார் திரு மார்பிலே அணைத்துக் கொண்டு இருக்கிறது கண்டு
தானும் அப்படி இருக்க வேணும் என்று அறுதி இட்டாள் என்கையாலே –
ஆஸாஸ் மஹே விக்ரஹே யோர பேதம் – என்கிறபடி என் என்னில் –
யான் காண்பான் கண்ட போது புள்ளூரும் கள்வாநீ போகல் என்பன்-என்று –
என்னை விட்டு நீ போகாதே கொள் என்று அபேஷிக்கையாலே –

8-முதல் பத்திலே –ஸ்வரூப ரூப குண விபூதிகளைச் சொன்ன படி –
முதல் பாட்டு துடங்கி ஸ்பஷ்டம் –
இரண்டாம் பத்தில் –விஸ்லேஷித்து கலங்கின படி –
பட்டுடுக்கும் என்று துடங்கி -பெண் பிள்ளையினுடைய கிலேசம் சொன்ன -தாயார் பாசுரத்தாலே கண்டு கொள்வது –
மூன்றாம் பத்தில் கிலேசம் தீர்ந்து சம்ஸ்லேஷ வியாபாரம் பண்ணினபடி –

மை வண்ண நறும் குஞ்சி துடங்கி –
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு —எழில் ஆலி என்றார் தாமே –என்றும்
புனல் அரங்கமூர் என்று போயினர் -என்றும் இத்யாதிகளாலே சொல்லுகையாலே –
காந்தர்வேண விவா ஹேன பாஹ்வோ ராஜர்ஷி கன்யகா
ஸ்ருயந்தே பரிணிதாஸ்தா பித்ர்ப்ச்சாபி நந்திதா -என்கிறபடியே
உபய அனுராக நிபந்தனமாக நாயக நாயகிகளுக்கு சம்ச்லேஷம் பிரவர்த்தமாக
இத்தைக் கேட்ட தாய் மார்
நங்காய் நம் குடிக்கு இது நன்மையோ என்ன -என்றும்
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் -என்றும்
அன்னை என்னோக்கும் என்று அஞ்சுகின்றேன் -என்றும் பயப்பட்டு –
நாயகன் பக்கல் செல்லாது ஒழிய
அவனும் சாசங்கனாய் –
இவள் பக்கல் நேர் -கொடு நேரே வரக் கூசி -இவள் அபிப்ராயம் அறிய வேணும் என்று
ஸ்வயந்தூத்யம் என்றும் பரதூத்யம் என்றும் இரண்டாகையாலே –
முதல் கலவி கலந்த படியாலே பர தூத்ய அபேஷை இல்லை –ஸ்வயந்தௌத்யம் பண்ணத் தேடி –
குசூமாந்யவசின்வந்தி சசார மதி ரேஷண -என்றும்
சத்யம் புரீபரி சரெபி – என்றும் ஊரைச் சூழ்ந்த உபவனத்தே புறப்பட்டு
இவள் பூ கொய்யப் போகிறாள் என்று கேட்டு –
தத ஸ்தவ வநதம் சாப மாதா யாத்ம விபூஷணம் ஆபத் த்யசகலா பௌ த்வௌ ஜகா மோதக்ர விக்கிரம – என்று
வேட்டை வித்யாதரனாக எடுத்துக் கட்டின மயிரும்
பிடரியிலே தழைந்தலைகிற குழலும் -இறுக்கின சாணமும் -கட்டின கச்சும்-
முன்னே உடுத்த உடைத் தோலும் -இடக்கையிலே கட்டின கச்சும்
வலத் தோளில் இட்ட மெத்தையும் -பெரு விரலிலே சாடின சரடும்
இடக்கையிலே நடுக்கொடத்தப் பிடித்த வில்லும் -வலக்கையில் தெரிந்து பெருக்கின வம்பும் –
முதுகிலே கட்டின அம்புறா துணியுமாய்க் கொண்டு – –
வேட்டைக்கு என்று புறப்பட்டு –இவள் பூ கொய்கிற உபவனத்திலே செல்ல
அவளும்-
காமஸ் சாஷ்ட குணம் பவேத் -என்கிறபடியே புருஷனில் அதிசயித்த ஆசை உடையவள் ஆகையாலே
எங்கனயோ அன்னைமீர்காள் -என்கிற பாட்டை அனுசந்தித்து –
செல்கின்றது என் நெஞ்சமே -என்றும்
அன்னை என் செய்கிலென் ஊர் என் செய்கிலென் விடுமினோ –என்று கலக்கம் அற்று மன்றாடி –
அணி அரங்கம் ஆடுதுமோ தோழி -என்று தோழியைப் பார்த்து
சுனையாடல் என்றும் –புனல் ஆடல் என்றும் -சம்போகத்துக்கு பேராகையாலே –
பயலான பேச்சாலே கேட்க
அவளும் இவள் அபிப்ராயஜ்ஞள் ஆகையாலே
பூ கொய்ய என்று கொண்டு போக விட்ட தாய் மாரும் ஊரவரும்
வடும்பிடுகிறார் களோ என்று தலைக் காவலாக வழியிலே போய் நிற்க
போக உபோத்காதமாக உபய அபிப்ராயஜ்ஞ்ஞானம் பிறந்து-சம்ஸ்லேஷமும் பிரவர்த்தமாய்
புனல் அரங்கம் ஊரென்று போயினர் – என்று நாயகனும் போய்
இவளும் மீண்டு -உயிர் தோழியானவள் செய்த படி என் என்று கேட்க –
பிறந்த வ்ருத்தாந்தத்தை தோழிக்கு சொல்கிறாள்–இப்பாட்டில்

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–21-

——————————

கீழ் பாட்டில் –அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே -என்று
அதஸ்மின் ஸ்த்த புத்தி பண்ணினோம் கண்டாயே தோழி -என்றாள்-
நீ அகன்றாய் ஆகில் -அவன் உன்னோடு சம்ச்ச்லேஷித்த படி என் என்ன –
அவன் வசீகரித்த படியும் -சம்ஸ்லேஷித்த படியும் இது தான் -என்கிறாள் –

தன்னுடைய சௌந்த்ர்யத்தையும் சீலத்தையும் காட்டின இடத்திலும் கார்யகரம் இல்லாமையாலே –
போம் இத்தனையோ என்று நினைத்தான் –
ஸ்ரீ பாதம் பேர்ந்தது இல்லை –
நித்ய சாபேஷ்யமான விஷயத்தை குறித்து -நித்ய நிரபேஷன் ஆனவன் -கால் வாங்க மாட்டாது நிற்கையாவது என் என்ன –
சேஷி யாகையாலே சேஷ வஸ்து அகன்றால் இழவு தன்னதாய் –அத்தால் பெரும் பேறும் தன்னதாய் இருக்கையாலும்
இவளை ஒழிய செல்லாத கரமுகத்வத்தாலும்
நம் அழகு இங்கே ஜீவிக்கை யாய்த்து இல்லை என்று மீளுவோம் ஆகில்
புறம்பு நமக்கே சர்வ ஸ்வம்மாய் இருந்துள்ள அழகை தயாரிப்பார் இல்லை என்கிற அபிமானத்தாலும்
கால் வாங்க மாட்டிற்று இலன் –
உத்தம ராஜ கன்யை பக்கல் உத்தம ராஜ புத்திரன் சென்று -அழகு ஜீவிக்கை யாகாதே மீண்டான் என்றால்
புறம்பு ஜீவிக்கை யாகாது இறே –
ருசியே தொடங்கி பிறரை வசீகரிக்கும் பரிகரமாக தான் நினைத்து இருப்பது அழகை இறே –
அது நிஷ்ப்ரயோஜனம் ஆனால் அபிமானம் கால் கட்டும் இறே
சக்தி கொண்டு கார்யம் கொள்ளிலும் விஷயம் இல்லாமையாலே மேல் விழுந்து அணைக்க மாட்டிற்று இலள் –
எதிர்தசையில் இசைவின்றிகே மேல் விழுந்தால் ரசம் இல்லை இறே –
அழகும் சீலமும் கார்யகரம் ஆய்த்தில்லை –
சக்தி கொண்டு கார்யம் கொள்ளும் நிலம் அன்றியிலே இருந்தது –
இனி இவளை வசீகரிக்கும்படி என் என்று பார்த்தார்
முன்பு ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே பெண்கள் தன் குழல் ஓசையில் வசீக்ர்தரான படியைக் கண்டபடியாலே
தம்முடைய மிடற்று ஓசையாலே வசீகரிப்போம் என்று பார்த்து ஒரு பண்ணை நுணுக்கினான் –

இவனுடைய –ஏவம் பஹூவிதாம் சிந்தாம் -இருக்கிறபடி –
ம்ர்கயார்த்தமாக வந்தோம் ஆகையாலே பாடுகிறவன் ஆர் என்று கேட்பார் இல்லை
இவளை வசீகரிக்கும் பரிகரம் இது வென்று ஒரு பண்ணை நுணுக்கினான் –
அதிலே ஈடுபட்டு மேல் விழுந்து கலந்தேன் -இது காண் செய்தபடி என்கிறாள் –
ம்க்ர்கையைக் குறித்து வந்தவர்கள் ஸ்ரமம் தீர ஒரு மரத்தின் நிழலிலே ஒதுங்குகையும் –
முகத்திலே நீரை இட்டுக் கொள்ளுகையும்-
கர்ப்பூர நிகரத்தை வாயிலே இடுகையும்-
ஒரு பண்ணை நுணுக்குகையும் -பிராப்தம் இறே-

நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வளவில் என் மனமும் கண்ணும் ஓடி
எம்பெருமான் திருவடிக் கீழ் அணையை இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
கனமகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு
இது வன்றோ எழில் ஆலி என்றார் தாமே–22-

—————————————————————————————————

தானே கிருஷி பண்ணி வந்து கலந்தவன் பிரிகிற போது
போகாதே கொள் -என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டிற்று இல்லையோ -என்ன –
அதுவும் சொன்னேன் –அது அகார்யமாய்த்து -என்கிறாள் –
உனக்கு பவ்யனாய் இருக்கிறவன் உன் வார்த்தை கேளாது ஒழியுமோ -என்ன –
நிலமல்லாத நிலத்தில் நீ இருக்கக் கடவதோ என்று ஸ்ரீ பெரிய திருவடி கொண்டு போக போனான் -என்கிறாள் –
ரஷகனுடைய வியாபாரம் ஆகையாலே கூடுகையும் –
ரஷகமாய் பிரிகையும் –
ரஷகமாய் இறே இருப்பது –
போகம் உன்மஸ்தகம் ஆனால் -சாத்மிப்பிவித்து அனுபவிப்பிக்க வேணும் என்று இருக்கும் இறே அவன் –
ஸ்வ ரஷணத்திலே சிந்தை இல்லாமையாலே கூடு பூரிக்கிறாள் இறே இவள் –

உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து –
என்னொளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள்ளூரும் இளம் தெங்கின் தேறல் மாந்திச்
சேலுகளும் திருவரங்கம் நம்மூர் என்ன
கள்ளூறும் பைம் துழாய் மாலையானைக்
கனவிடத்தில் யான் காண்பது கண்டபோது
புள்ளூரும் கள்வா நீ போகல் என்பன்
என்றாலும் இது நமக்கோர் புலவி தானே–23-

—————————

ஸ்ரீ பெரிய திருவடி கொண்டு போனான் ஆகில் – யச்யை தே தஸ்ய தத்தனம் -என்கிறபடியே
அவன் தான் உனக்கு பவ்யனாய் இருந்தானாகில் –
அவனுக்கு சேஷபூதனான ஸ்ரீ பெரிய திருவடி உனக்கும் சேஷமாய் அன்றோ இருப்பது
அது கிடக்க-மகிஷி வர்க்கத்துக்கு ஸ்வரூபேண தாஸ பூதனாய் அன்றோ அவன் இருப்பது –
இரண்டாலும் அவனை நீ போகல் என்று நீ நியமிக்க குறை என்ன -என்ன
அவன் ஒருவனுமே ஆகில் அன்றோ அது செய்யலாவது
நித்ய விபூதியில் உள்ளார் அடங்க வந்து சூழ்ந்து கொண்டார்கள்
அவர் தாம் பண்டு போல் அன்றியே
வடிவில் பௌஷ்கல்யத்தாலும் -மேன்மையினாலும் –அநபிபவ நீயராய் இருந்தார் –
அத்தாலே –
சென்று கிட்டவும்
வார்த்தை சொல்லவுமாய்
இருந்தது இல்லை காண் -என்கிறாள் –

இரு கையில் சங்கிவை நில்லா வெல்லே பாவம்
இலங்கொலி நீர்ப் பெரும் பௌவம் மண்டியுண்ட
பெரு வயிற்ற கரு முகிலே யொப்பர் வண்ணம்
பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி
உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து என்
பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து
புனலரங்க மூரென்று போயினாரே –24–

————————-

அத்தலையில் உள்ளதை நேராகக் காட்டி-இத்தலையில் உள்ளதை நேராகக் கொண்டு போனான் என்கிறாள் –

மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும்
கரி முனிந்த கைத்தலமும் கையும் வாயும்
தன்னலர்ந்த நறுந்துழாயின் மலரின் கீழே
தாழ்ந்திலங்கு மகரம் சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறைவும் என் சிந்தையும்
என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு
பொன்னலர்ந்த நறும் செருந்திப் பொழிலினூடே
புனலரங்க மூரென்று போயினாரே–25-

—————————

அவன் இவளுடைய ஆற்றாமை ஸ்வ கிருஷியின் பலம் ஆகையாலே-அதிலே முகம் மலர்ந்து கடக்க நிற்கையாலும்
தாயும் ஹிதம் சொல்லும் அளவு அல்லாமையாலே ஸ்லாகித்துக் கடக்க நிற்க்கையாலும்
தோழி -இவ்வளவில் இவளை ஆஸ்வசிப்பிக்கும் விரகு ஏதோ –என்று பூர்வ வ்ருத்தத்தைக் கேட்க
வ்ருத்த கீர்த்தனம் ஆகையாலே தரித்து –
அத்தை இரண்டு பாட்டாலே இவளுக்கு சொன்னாள் –
பின்பும் அங்கே ஓர் அவகாசம் கண்டு இப்படி அவன் உனக்கு பவ்யனாய் இருந்தால் –
பிரிகிற போது போகாதே கொள் -என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டிற்று இல்லையோ என்ன -அதுவும் சொன்னேன் –
அவன் பர ப்ரேரிதனாய் போகையாலே இது கார்யகர மாய்த்து இல்லை என்கிறாள் -மூன்றாம் பாட்டிலே –
கொண்டு போனவன் தன்னை நியமிக்க மாட்டிற்று இல்லையோ என்ன
ஒருவர் இருவரோ பரிகரம் எல்லாம் வந்து சூழ்ந்து கொண்டது -என்றாள் –
நாலாம் பாட்டிலே –அது தன்னை நியமித்து விட்டாள் –
ஐஞ்சாம் பாட்டிலே – சர்வ ஸ்வதானம் பண்ணுவாரைப் போலே வந்து-அத் தலையில் உள்ளதை நேராகக் காட்டி
இத் தலையில் உள்ளத்தை நேராக அபஹரித்துக் கொண்டு போகிறவர்
என் சத்தை கிடக்க வேணும் என்று ஊரின் பேரைச் சொல்லிப் போந்தான் -என்றாள் –

ஆறாம் பாட்டிலே
ப்ரஸ்னம் இல்லாமையாலே -பிரதிவசனம் இல்லையே-பழைய ஆற்றாமை தலையெடுத்து
நம்முடைய ஆற்றாமை அறியாமையாலே வாராது ஒழிகிறான் -இத்தனை
அத்தை அறிவிக்கவே சர்வதா வரும் என்று பார்த்து-சில வண்டுகளைத் தூது விடுகிறாள் –
தன்னுடைய பந்து வர்க்கம் தனக்கு முன்னே தரைப்பட்டு கிடைக்கையாலும்
சேதனர் தூது போன இடத்தில் அது கார்யகரமாகக் காணாமையாலும்
ஸ்ரீ ராமாவதாரத்தில் திர்யக்குகள் தூது போன விடத்தில் அது கார்யகரமாக காண்கையாலும்-
திர்யக்குகளைத் தூது போக விடுகிறாள் –
பரம சேதனன் ஸ்ரீ கிருஷ்ணன் தூது போன விடத்தில் ஊர்ப்பூசல் வந்தான் இத்தனை இறே செய்தது –
ஆனால் குரங்கைத் தூது விடாதே வண்டைத் தூது விடுவான் என் என்னில்
அங்கே பெண் தூதன் ஆகையாலே –
விரக்தனுமாய்
சமர்த்தனுமாய்
இருப்பான் ஒருவன் தூது போக வேண்டிற்று –
விஸ்லேஷத்தில் ஆற்றாமை அறிவாராய் போக விட வேண்டுகையாலும்
இவை தன்னுடைய சந்நிதியிலேயே கலந்து சுகித்து இருக்கக் காண்கையாலும்-இவற்றைத் தூது விடுகிறாள்

ஆனால் கலவியிலே பிரவணமாய் இருக்கிற இவை போகக் கூடுமோ என்னில் –ஆத்ம சாம்யத்தாலே சொல்லுகிறாள் –
தானும் அவனும் சம்ஸ்லேஷிக்கும் அளவில் சில துக்கிகள் கூடினால்
அவர்கள் கார்யத்தை முடித்த பின்பு இறே தங்கள் போகத்தில் இழிவது –
பிரதமத்தில் வண்டுகளைக் கொண்டாடுகிறாள் -தனக்கு இரங்கி கார்யம் செய்கைக்காக –
கடகரை ஸ்துத்யராகச் சொல்லக் கடவது இறே –

தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்
தேனதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி யினிதமர்ந்து பொறியிலார்ந்த
அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த யமரர் கோமான்
அணியழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்றோர் மாது
நின்னயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே -26-

——————————

கீழ் பாட்டில்-வண்டுகளைத் தூது விட்டாள் –
அது சென்று சொல்லி மறு மாற்றம் கொண்டு வரும் அளவும் தரித்து இருக்க சக்தி இல்லாமையாலே
ஒரு நாரையைத் தூது விடுகிறாள் –
திஷூ சர்வா ஸூ மார்க்கம் தே -என்றும் பிராட்டியைத் தேடுகைக்காக
ஸ்ரீ வானர வீரரை அடைய ஏவினால் போலே இவரும் கண்டவற்றை அடைய ஏவுகிறாள்
ஸ்ரீ ராமாவதாரத்தில் வானர ஜாதி ஸ்லாக்கியமானால் போலே
காணும் ஸ்ரீ ஆழ்வார்களைத் தோற்றி பஷி ஜாதி ஸ்லாக்கியமானபடி –

செங்கால மட நாராய் இன்றே சென்று
திருக் கண்ணபுரம் புக்கு என் செங்கண் மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தி யாகில்
இது வொப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும்
பைம் கானம் ஈதெல்லாம் உனதே யாகப்
பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்
இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே–27-

————————

ஸ்ரீ நம் ஆழ்வார் -வைகல் பூம் கழிவாயில் -தூத ப்ரேஷணம் பண்ணி
அநந்தரம்-அவன் முகம் காட்டக் காணாமையாலே-பிரணய ரோஷம் தலை எடுத்து ஊடினால் போலே
இவளும் தூது விட்டு-இதிலே ஊடுகிறாள் –
தூத ப்ரேஷணம் பண்ணும்படியான ஆற்றாமைக்கு அவ்வருகே ஒரு தசா விசேஷம் இறே பிரணய ரோஷம் ஆகிறது –
அப்படியே அத் தசையிலே வெள்ளிடி விழுந்தால் போலே-மன பிரசாதம் பிறந்து தெளிந்து –
நம் ஆற்றாமை இருந்தபடியாலும்
தூத ப்ரேஷணம் பண்ணுகையாலும் –
ஸூப நிமித்தங்கள் செய்கையாலும் –
அவன் வரவு தப்பாது என்று நிர்ணயித்து –
அவன் வந்தால் முகம் கொடுக்கக் கடவோம் அல்லோம் –என்று அத்யவசித்தாள்-
அதுக்கு ஹேது என் என்னில் –
அவனுடைய சம்ஸ்லேஷம் விஸ்லேஷாந்தமாய் இல்லாது இராமையாலே
இன்னும் ஒரு விஸ்லேஷத்துக்கு இலக்காய் இருந்து கிலேசப்படுமதில் காட்டில்
அவன் வந்தால் முகம் கொடாதே-அவன் சந்நிதியிலே முடிந்து பிழைக்க கடவோம் -என்று பார்த்தாள் –
தாம் தாம் முடிய நினைப்பார்-வெற்றிலை தின்பது பூ சூடுவது சிரிப்பதாமா போலே
அகவாய் அழியா நிற்கச் செய்தே -இவள் தெளிந்து இருக்க
அத்தைக் கண்ட தோழி யானவள் –
பிரணய ரோஷம் தலை எடுக்கும் படியான ஆற்றாமை செல்லா நிற்கச் செய்தே
நிஸ் சங்ககமாக இவள் தெளிந்து இருந்தாள் –
இதுக்கு ஹேது என் என்று பார்த்து –நெஞ்சில் ஓடுகிறது என் என்று கேட்க –
அவன் வந்தால் பண்டு போலே முகம் கொடுக்க கடவேன் அல்லேன் –
அவன் சந்நிதியிலே முடியக் கடவதாக அத்யவசித்தேன் -என்ன
கெடுவாய் -மலையோடு மலை பொராத மல்லர் உண்டோ –
உபய விபூதி நாயகனாய்
சர்வ சக்தியாய் இருக்கிறவர் உடன்
அபலையான நீ எதிர் இடுகை யாவது என் என்று –
தோழிக்கு இவள் தன்னிலும் காட்டில் ரோஷம் கனத்து இருக்கையாலே
பிரணயிநிகள் உடன் செய்யும் அத்தை பிரபுக்களோடு செய்யக் கடவையோ -என்ன
அவர் பிரபுத்வமும் நாடாளும்படி என் கையில் படும் பாடு பாராய் –என்ன

இவள் அத்வாசாயம் இருந்தபடியால் முடியும் போல் இருந்தது –
பிரணய ரோஷத்தின் அளவிலேயாவது முடியாதபடி நோக்க வேணும் என்று பார்த்து
ஆஸ்ரிதர்க்கு அவன் முகம் கொடுக்கும் படி இது காண் என்று சொல்ல அமையும் -எல்லாம் பகட்டு காண் –
நான் முடிகை தவிரேன் -என்கிறாள் –
பிரணியிநியான இவளை ஒழிய தோழிக்கு ரோஷம் தலை எடுக்க கூடுமோ என்னில்
வீத ராகனாய் சருகு இல்லை தின்று போந்த ஸ்ரீ வால்மீகி பகவான் பிராட்டியைக் கண்டு
ஹீநோயாத நயா பிரபு -என்று
ஸ்ரீ பெருமாள் நாடாளவும் ஆனை குதிரை கட்டவும் கற்றார் இத்தனை போக்கி
பிரணயித்வத்தில் புதியதுண்டிலர் ஆகாதே -என்றான் இறே –
முற்படத் தோழி-அவன் ஆஸ்ரிதர்க்கு முகம் கொடுத்த பிரகாரத்தை சொல்ல
அத்தை அனுபாஷித்து அவை எல்லாம் பகட்டுக் காண் என்கிறாள்

தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச்
சென்றுலகம் மூன்றினையும் திரிந்தோர் தேரால்
மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த
வரைவுருவின் மா களிற்றைத் தோழீ எந்தன்
பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு
போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி
என்னிலங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த
எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே–28–

———————————-

முதல் பத்தில் –
ஸ்வ ஸ்வரூப -பர ஸ்வரூபங்களை நிர்ணயித்து –
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தை நிர்ணயித்து –
தத் விரோதியையும் நிர்ணயித்து –
விரோதி நிவ்ருத்திக்கும் -புருஷார்த்த சித்திக்கும் அனுரூபமான உபாயத்தையும் நிர்ணயித்து –
இத்தனைக்கும் வாசகமான -ஸ்ரீ திரு மந்த்ரத்தை -வாக் இந்த்ரியத்துக்கு விஷயமாக்கி —
இவ் வர்த்தத்தை நெஞ்சுக்கு விஷயமாக்கி –தெளிந்து கால ஷேபம் பண்ணினார் –

நடுவில் பத்தில் —
கால ஷேப அர்த்தமாக அனுசந்தித்த அனுசந்தானத்து அளவிலே பர்யவசியாதே
கண்ணான் சுழலை இட்டு-கண்ணாலே கண்டு அனுபவிக்கும் படியான ஆற்றாமை விளைந்து –
தான் நினைத்தபடி அனுபவிக்கப் பெறாமையாலே-அப்ரக்ர்திங்கராய் -பிறர் வாயாலே வார்த்தை
சொல்ல வேண்டும்படியான மோஹமாயச் சென்றது –

மூன்றம் பத்திலே –
இவள் தசையைக் கண்ட தோழி இவளை ஆஸ்வசிப்பிக்க வேணும் என்று பூர்வ சம்ஸ்லேஷத்தை முன்னிட
வ்ர்த்த கீர்த்தனம் ஆகையாலே தரித்து நின்று பேசினாள்-

பின்னை
ப்ரஸ்ன பிரதி வசனங்கள் இல்லாமையாலே-பழைய ஆற்றாமையே மேலிட்டு தூத ப்ரேஷணத்தில் அன்வயித்தாள் –

அநந்தரம்
அவன் வந்து முகம் காட்டாமையாலே ப்ரணய ரோஷம் தலை எடுத்தது –
ஸ்ரீ நம் ஆழ்வாரைப் போலே ப்ரணய ரோஷம் நிலை நிற்கில் இறே -அவன் வந்து முகம் காட்டுவது –
அது செய்யாதே நடுவே எளிமைப் பட்டு பழைய ப்ரக்ருதியிலே இழிந்தார் –
விழுந்த இடத்திலும் தரித்து இருக்கலாவது அவன் முகம் காட்டினால் இறே –
அது இல்லாமையாலே
ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு -முனியே நான்முகனில் -பிறந்த பரம பக்தி -இவருக்கு பிறந்து –
தம்முடைய அநந்ய கதித்வத்தையும் –
ஸ்வ தோஷ பூயஸ்வத்தையும்-முன்னிட்டு
பிரணயியான நீ -எனக்கு முகம் காட்டாது ஒழிவதே -என்று கூப்பிடுகிறார் –

ஸ்ரீ நம் ஆழ்வார் பரத்வத்தையும் அவதாரத்தையும் பற்றிக் கூப்பிட்டார் –
இவருக்கு பராவஸ்தையும் அவதாரம் ஆகையாலே
அவதாரத்தையும் அர்ச்சாவதாரத்தையும் பற்றிக் கூப்பிடுகிறார் –

அன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை
அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னைக்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக்
கொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து குலங்களைந்து
வென்றானைக் குன்றெடுத்த தோளினானை
விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானைத் தண் குடந்தை கிடந்த மாலை
நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-

—————————–

நிகமத்தில் –
ஸ்வ லாபத்தை சொல்லா நின்று கொண்டு-இப் பிரபந்தத்தை அத்யவசித்தவர்கள் உடைய
சாம்சாரிகமான சகல துக்கங்களையும் தாங்களே முதலரிய வல்லார் – என்கிறார் –

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப்
பழ வினையை முதலரிய வல்லார் தாமே -30-

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் – அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

April 23, 2019

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்
அவதாரிகை-

கிழிச் சீரையோடே தனத்தைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே-தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை
திரு மந்திர முகத்தாலே காட்டிக் கொடுக்கக் கண்டு
தம்முடைய பூர்வ வ்ருத்தத்தையும்-பேற்றின் கனத்தையும்-அனுசந்தித்துத் தலை சீய்க்கிறார் –

ஸ்ரீ பெரிய திருமொழியில்–-ஸ்ரீ திருப் பிரிதி -தொடங்கி-ஒரு சுற்றம் -அளவும்
உகந்து அருளின தேசங்களை அனுசந்தித்தார் –
ஒரு சுற்றத்துக்கு மேல் -மாற்றம் உள்ள அளவும் -செல்ல
அவதாரங்களின் குண சேஷ்டிதங்களை அனுபவித்து
சம்சார -பரமபத -விபாகம் இன்றிக்கே இவர் ஹ்ருஷ்டராய் இருக்கிறபடியை ஸ்ரீ சர்வேஸ்வரன் கண்டு
சம்சாரத்தில் இருக்கிற படியை அறிவித்தால் த்வரித்து இருந்தார் ஆகில் கொடு போகிறோம்
இல்லையாகில் க்ரமத்தில் கொடு போகிறோம் என்று சம்சாரத்தில் இருக்கும் இருப்பை அறிவிக்க-

ஆற்றங்கரை வாழ் மரம் போல் -என்றும்
காற்றைத் திடைப்பட்ட கலவர் மனம் போல் -என்றும்
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல் -என்றும்
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் -என்றும்
வெள்ளத்திடைப் பட்ட நரி இனம் போல் -என்றும்
இடையன் எறிந்த மரமே ஒத்திராமே -என்றும்
கூப்பிட்டு – பெரிய விடாயர் உடம்பிலும் முகத்திலும் நீரை இரட்டிக் கொள்ளுமா போலே பேசி அனுபவித்து
இது தான் இனிதாய் இவை எல்லாம் உகந்து அருளின நிலங்களை அனுபவிக்கையால் வந்தது-
உகந்து அருளின நிலங்களிலே மண்டினவர்கள் பாக்யாதிகர் என்று தலைக் கட்டுகிறார்

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே–1-

நிதியினை –
எய்ப்பினில் வைப்பாய் –
இந் நிதி உடையவனுக்கு இடி பட வேண்டாது இருக்கையும் –
உடையவன் காலிலே எல்லாரும் வந்து விழுகையும் –
உண்டு என்ன உயிர் நிற்கையும் –
ஆபத்துக்கு உதவுகையும் –
உடையவன் பெரு மதிப்பன் ஆகையும் –
விற்றும்
ஒத்தி வைத்தும் –
ஜீவிக்கலாய் இருக்கையும் –
இப்படிச் செய்தது என் என்று ஏசாது இருக்கையும் –
ஏவமாதி குணங்களைப் பற்ற –
நிதி -என்கிறார் –
வைத்த மா நிதி -இ றே –
குஹாயாம் நிஹிதம் -என்று பேசப் படுகிற வஸ்து –
குஹை -ஹிருதய கமலம்

நிதியினை-
நாட்டில் காண்கிற நிதி போல் அல்ல –எல்லா வற்றுக்கும் மேலான நிதி யாயிற்று இந் நிதி
இந் நிதி புதைத்து வைத்து ஆள வேண்டா –நெஞ்சிலே வைத்து ஆளலாம் –
ஓர் இடத்திலே புதைத்து வைத்து-தேசாந்த்ரத்திலே நிற்கச் செய்தே விநியோகம் கொள்ள வேண்டினால் உதவாது -அந் நிதி
இந் நிதி -நினைத்த இடத்தே விநியோகம் கொள்ளலாம்
பறித்துக் கொள்வார் இல்லை-பறிக்கத் தான் ஒண்ணாது
அந் நிதி உடையவனை அவசரம் பார்த்து கொன்று பறித்து கொண்டு போவார்கள் –
இந் நிதி உடையவனுக்கு அப்படிப்பட்ட பிரமாத சம்பாவனைகள் இல்லை –

பவளத் தூணை
சர்வத்துக்கும் தான் தாரகனாய் இருக்குமதைப் பற்ற –தூண் -என்கிறார் –
பவளம் -என்றத்தால்-ஸ்ப்ருஹணீயதயைச் சொல்லுகிறது –
தூண் ஆவது -தான் அநேகத்தைத் தரித்து –
தன் கீழே ஒதுங்குவாருக்கு நிழல் கொடுத்து நிற்பது ஓன்று இறே
அப்படியே -தான் எல்லாருக்கும் தாரகனாய்-தன்னை அடைந்தார்க்கு நிழல் கொடுக்கையாலே -தூண் -என்கிறார் –

நெறிமையால் நினைய வல்லார் கதியினை –
நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -என்கிறபடியே-அடைவு பட நினைக்க மாட்டார்களே -இவர்கள்-
ஆகையால் -நெறிமையால் நினைய வல்லார்-என்கிறார் –
நினைக்க வல்லார்க்கும் நெற்றிக் காக்கும் -அவனுடைய ஸ்வரூபாதிகள் நினைக்க ஒண்ணாத படி தகையும் -என்றபடி –
கதியினை –
நினைப்பார்க்கு பரம கதியாம் –பிராப்யனாம் -என்றபடி –
பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே -என்னக் கடவது இறே-

நிதியினை -என்று பிராப்யம் சொல்லிற்று –
கதியினை -என்று பிராபகம் -சொல்லிற்று
நினைக்க வல்லார் -என்கையாலே அதிகாரி ஸ்வரூபம் சொல்லிற்று —

இப்படி உபாய உபேயங்கள் தானே இருக்குமவன் ஆருக்கு உதவக் கண்டோம் -என்னில் –
கஞ்சன் மாளக் கண்டு –
தந்தை காலில் பெரு விலங்கு தாள வீழ -என்றும்
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய -என்றும் –
ஒருத்தி மகனாய் பிறந்து -இத்யாதிப் படியே –
தன்னைப் பிள்ளையாகப் பெற்றவர்கள் கால் கட்டு அறுத்து –அவர்களை வாழ்வித்தான் -என்கிறார் –

கஞ்சன் மாளக் கண்டு –
கம்சனுடைய ஆயுஸ்ஸூ மாளும்படி பார்த்து –

முன் –
அவன் நினைவை அவனுக்கு முன்னே செய்து முடிக்கை –

அண்டம் ஆளும் –
ஜகத்து ஸ நாதம் ஆய்த்து-

அண்டம் ஆளும் –
ராமோ ராஜ்யம் உபாஸித்யா – என்னுமா போலே-நாட்டை ஈரக் கையாலே தடவி
கம்சன் காலத்தில் பட்ட நோவு தீர ரஷித்து –

மதியினை-
கம்சனைக் கொண்டு நாட்டுக்கு களை பிடுங்கின பின்பும்-ஆச்சியும் ஐயரும் என் செய்தார்கள் என்று
ருணம் ப்ரவர்த்தமிவ -என்று படுகிறபடி –

மதியினை –
நம் மதி கேட்டை நினைந்து அஞ்ச வேண்டா –
அஹம் ஸ்மராமி -என்று தான் அவ் விழவு தீர நினைக்கும்-

மாலை –
மாலாய் பிறந்த நம்பி -இறே –
ஆசா லேசம் உடையார் பக்கல் முக்தனாய் இருக்குமவனை –

வாழ்த்தி வணங்கி –
வாய் படைத்த பிரயோஜனம் பெற வாழ்த்தி-அவன் திருவடிகளிலே வணங்கி

என் மனத்து வந்த விதியினை-
ஈழம் கனாக் காண்பர் இல்லை இறே –கண்டது ஒழிய காணாதவற்றை ஸ்வப்னம் காணார் -என்றபடி –
எல்லா அவஸ்தையிலும் வருவான் அவன் இறே –
அதுக்கடி
விதியினை
அவன் ஸ்வாதந்த்ர்யத்தாலும்
என் கருமத்தாலும்
தவிர்க்க ஒண்ணாத கிருபை –
விதி வாய்க்கின்று காப்பார் யார்
விதி சூழ்ந்ததால்
இவ்வளவான பேற்றுக்கு அடியான தம்முடைய ஸூஹ்ருதத்தைச் சொல்லுகிறார் –

கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே –
சுவடு அறிவிக்கும் தனையும் இறே வருத்தம் உள்ளது –பின்னை அத்தலை -இத்தலையாம் -இத்தனை –

கண்டு கொண்ட –
நான் கண்டு கொண்டேன் -என்று திரு அரசடியிலே காட்டிக் கொடுத்த காட்சி
ஏது செய்தால் மறக்கேன் -என்று-மறந்து விட ஒண்ணாதபடி இறே மனசிலே புகுந்து காட்டிக் கொடுத்தது –

கண்டு கொண்ட –
கேட்டது கண்டால் போலே இருக்கிறது காணும்
ஸ்வரூப ஞானம் பிறந்தவர் ஆகையாலே -பண்டே வுண்டாய் –இழந்தது கண்டால் போலே இருக்கிறது –

அவன் மால்
நான் தொண்டன்
இனி விட உபாயம் உண்டோ –
அவனுக்கு என் பக்கல் ஸ்நேஹம் இல்லை என்ன ஒண்ணாது –
நான் அதிலே ஈடு பட்டிலேன் -என்ன ஒண்ணாது –
ஆனபின்பு -எத்தைச் சொல்லி விடுவது –

——————————————————————————————————-

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20-

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை –
இந்த்ரனும் ப்ரஹ்மாவும்-எப்போதும் செவ்வியையும் தேனையும் உடைத்தான
புஷ்பங்களைப் பணிமாறி ஏத்தும் அழகிய திருவடித் தாமரைகளை உடைய ஸ்ரீ புண்டரீகாஷனை –

மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே –
பெரும் தன்மையை உடைய -வேலை உடைய -ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பரமோதாரமான
தமிழ் மாலை-நாலைந்து -இருபதையும்-அநந்ய பிரயோஜனராய்-கற்க வல்லார்கள் –
தெளி விசும்பான ஸ்ரீ பரம பதத்தை ஆளப் பெறுவார்கள்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –