Archive for March, 2019

ஸ்ரீ நாச்சியார் திருமொழி அருளிச் செயலில் – பல ஸ்ருதிகள் தொகுப்பு –

March 27, 2019

ஸ்ரீ நாதமுனிகள் சிஷ்யர் திருக்கண்ண மங்கை ஆண்டான் அருளிச் செய்த தனியன் –

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி
மல்லி நாடாண்ட மடமயில் -மெல்லியலாள்
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை
வேயர் பயந்த விளக்கு—

அல்லி நாள் தாமரை மேல் என்று தொடங்கி-இவளுடைய ஐந்து ஆகாரத்தையும் –
1-புருஷகாரத்வம் -2-ஐஸ்வர்யம் -3–சௌந்தர்யம் -4-பிரிவாற்றாமை -5-நல் குடிப் பிறப்பு -சொல்லுகையாலே
இவளுடைய சத்ருச வைபவம் அனுசந்திக்கப் பட்ட்டதாயிற்று
முன்னவள் -1-தென் புதுவை தெரிவை திருமகள் –2-தாரணி என்பவள் -3-நாரணன் தன் உருவுக்கு இனியவள் –
4-ஊர் அரங்கம் என்னும் சீர்மையவள் -5-பருவப் பணி மொழி -என்னைப் பணிந்து அருளே-
என்ற முன்னோர் சந்தை இங்கே அனுசந்திக்கத் தக்கது-

கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் -தென் திரு மல்லி நாடி -செழும் குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் -மதிப்புடைய
சோலைக் கிளி அவள் தூய நற் பாதம் துணை நமக்கே-

————————-

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லப ஸ்ரீ தரஸ் சதா-

—————————-

விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே–1-10-

விருப்பம் அடியாகப் பிறந்த -பிராப்ய த்வரை விஞ்சி -அருளிச் செய்த இனிய தமிழ் தொடை வல்லார்கள்-
சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து வைத்து பகவல் லாபத்துக்காக மடல் எடுப்பரோபாதி-
காமன் காலில் விழ வேண்டும் படியான இவரைப் போல் அன்றிக்கே –
இப் பிரபந்தம் கற்றார்கள் -சம்சாரத்தை விட்டு நித்ய அநுபவம் பண்ணுகிற
நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாக -வானவர்க்காவர் நற் கோவையே -4-2-11–திருவாய் மொழி -அனுபவிக்கப் பெறுவார்கள் –

———————————-

கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே-2-10-

திரு மகளுடைய -பகவத் அனுபவம் -வாச க்ரம வர்த்தித்வாத் -வழிந்து புறப்பட்ட சொல்லை அப்யசிக்க வல்லவர்கள் –
அணைத்த அநந்தரம்-இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –என்னுதல் –
அன்றிக்கே -காமன் காலிலே விழுதல் -செய்ய வேண்டாதே -அணைத்த அநந்தரம் –
அருகு நிற்பாரும் எல்லாம் பணியா அமரரான-திருவாய்மொழி -8-3-6- நித்ய சித்தராயாம் படியான தேசத்திலே போய்ப்
புகப் பெறுவார்கள் –

————————————————

இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய் மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–3-10-

பாட்யே கேயே ச மதுரம் -பால -4-8-
எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்குமே –திருவாய் -7-9-11-
நித்தியமான ஸ்ரீ வைகுண்டத்திலே போய் ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடன் கூட நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

—————————————-

குழல் கோதை முன் கூறிய பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–4-10-

இவள் மயிர் முடியாலே அவனை கூடல் இழைப்பிக்க வல்லவள் –
பாவம் இல்லை –
இவளைப் போலே இப்படி பட வேண்டா –
சொன்ன இத்தை அப்யசிக்க வல்லார்க்கு கூடல் இழைக்க வேண்டா –

—————————————————

நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே——5-10-

யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றிக்கே
விஷயத்தை மாறுபாடுருவும் படி அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லவர்கள்
நமோ நாராயணாய வென்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே -என்று இறே தமப்பனார் வார்த்தை
இக் குடிக்காக உள்ளதோர் ஆசை இ றே இது –மங்களா சாசனம் -அதுவே பலமாகப் பெறுவர்-
நல்லாண்டு என்று நவின்று பல்லாண்டு என்று உரைப்பார் நமோ நாராயணா வென்று -பல்லாண்டும் ஏத்துவர் இறே-
தத் க்ரது நியாயத்தாலே பேறாகையாலே-க்ரது -சங்கல்பம் -இங்கே சங்கல்ப்பித்த பேற்றை அங்கே பெற்று அனுபவிக்கப் பெறுவர்
யதா க்ரதுரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி -சாந்தோக்யம் -3-1-14-உபாசனம் போலே பேறு
காதாசித்கமாகை தவிருகையே உள்ளது
பிராப்ய பூமியிலே புக்கிருந்து இப்பாசுரம் சொல்லி அனுபவிக்கப் பெறுவர் –

——————————————–

தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர் வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—6-11-

அனுபவத்துக்கு பாசுரமிட்ட அத்தனை அல்லது நெஞ்சோடு கூட கவி பாடிற்று அல்லவாய்த்து –
இவளோடு ஒத்த தரத்திலே பெண்கள் இத்தை அப்யசித்தார்கள் ஆகில் கிருஷ்ணனைப் போலே இருக்கும் வரனைப் பெறுவர்கள்
புருஷர்கள் அப்யசித்தார்கள் ஆகில் பெரியாழ்வாரைப் போலே பகவத் பிரவணரான புத்ரர்களைப் பெற்று ஹ்ருஷ்டராவார்கள் –
ஆண்டாளுக்கும் உப லஷணம் -பகவத் பிரவணரான புத்ரர்கள் என்றது
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே –பெரியாழ்வார் -1-7-11-என்றார் இறே
தாம் கை கண்டவர் ஆகையாலே –

——————————————————-

ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே—7-10-

ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடே சிறு பாறு என்றாள்-என்றால்-தகாதோ
ஸ்ரீ பெரியாழ்வார் பெண் பிள்ளை அன்றோ -பெறும் -என்னும் புகழ் யாய்த்து
அனுசந்தித்துக் கொண்டு சொல்ல வல்லார்கள்
அவரும் அணுக்கரே—
அவர்களும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடே சிறு பாறு என்ன உரியர் ஆவார்
நாய்ச்சியாரைப் போலே அவரும் அண்ணியர் ஆவார்
ஒண் புதுவை ஏய்ந்த புகழ் –
விசேஷணங்கள் பட்டர் பிரானுக்கும் கோதைக்கும் சேரும் –
வாய்ந்த பெறும் சுற்றம் –
கிட்டின பேருறவு
ஆய்கை –
சோதிக்கை மனசாலே ஆராய்கை-அனுசந்தித்து -என்றபடி-

——————————————————-

ஆகத்து வைத்து உரைப்பாரவர் அவர் அடியார் ஆகுவரே–-8-10-

ஒருத்தி ஒரு விஷயத்தை ஆசைப் பட்டு படும் பாடு என் என்று அனுசந்தித்து சொல்ல வல்லவர்கள் –
மேகங்களை தூது விட வேண்டாதே –
இவள் தான் மேகங்களை தூது விட்டதுவே ஹேதுவாக
இவள் ஆசைப் பட்ட கைங்கர்யத்தைப் பெற்று வாழப் பெறுவார்
சேஷத்வம் த்யாஜ்யம் -என்று இறே புறம்பு உள்ளார் நினைத்து இருப்பது
சேஷத்வம் புருஷார்த்தம் என்று கேட்கலாவது இவ் வாழ்வார்கள் பக்கலிலே இறே
அபிமத விஷயத்தில் தாஸ்யம் போகமாய் இருக்கும் இறே
இதர விஷயங்களில் சேஷத்வம் இறே கழிகிறது வகுத்த விஷயத்தில் சேஷத்வம் உத்தேச்யமாகக் கடவது
அந்ய சேஷத்வமாய்த்து தவிர்க்கிறது –

————————————————————–

செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –9-10-

பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்ய வேணும் என்று யாய்த்து இவள் ஆசைப் பட்டது –
அப் பேறு பெறுவார்கள்
அஹம் சிஷ்யா ச தாஸீ ச பக்தா ச புருஷோத்தம -ஸ்ரீ வராஹ புராணம் –
ஜ்ஞாதயங்கள் அடங்கக் கேட்டதும் உம்மோடே-
தாஸீ ச -பெரிய பிராட்டியாரும் நீரும் சேர இருந்து -இன்னத்தை எடு -இன்னத்தை வை – என்றால் அப்படியே செய்ய உரியேன்
பக்தா ச –
உம்முடைய அடியாரோடு கூடிக் கவி பாட உரியேன்
ஒரு வ்யக்திக்கே இப்படி அநேக ஆகாரமாக பிரிய ஒண்ணுமோ -இப்படிக் கூடுமோ -என்னில்
புருஷோத்தம –
நீர் புருஷோத்தமர் –
நீர் எவ்வளவு அழிக்க வல்லீர் அவ்வளவும் அழியும் அத்தனை யன்றோ எதிர் தலை –
ஆறு பெருகி ஓடா நின்றால்– வாய்த் தலைகளாலும்-கை வாய்க் கால்களாலும் பிரியுண்டு போகா நின்றாலும்
கடலில் புகும் அம்சம் குறைவற்றுப் புகும் இறே -அப்படியே எல்லா வகையாலும் அனுபவியா நின்றாலும்
அபிநிவேசம் குறையாது இருக்குமாய்த்து இவர்க்கு —

————————————————–

வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-

வல்ல பரிசு –ஆசார்ய பரம்பரையை முன்னிட்டு -என்றபடி
அது காண்டுமே
அவ் வழியாலே பெறக் கடவோம்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே
த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று சரணம் புக்கு வைத்து பிரபத்தி பண்ணினோம்
நாம் ஆகையாலே அதுவும் போட்கனாகக் கூடும் என்று அக்குறை தீர
ஸ்ரீ நாத முனிகளை முன்னிட்டால் போலே ஸ்ரீ பெரியாழ்வாரை முன்னிடுகிறாள் –

———————————-

தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல் தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —11-10-
நாட்டு வார்த்தை –
நீ ஆர்க்கு நல்லை என்றால்-நல்லார்க்கு நல்லான் -என்ற ஒரு வழக்குச் சொல் உண்டு –
நல்லாருக்கு தீயார் உண்டோ என்றும் உண்டு-இவை இரண்டும்
தாமே இத்தை அந்யதா கரிக்கப் புக்கால்
இங்கனே செய்யக் கடவது அல்ல -என்று தம்மை நியமிக்க வல்லார் உண்டோ
உண்டானால் தான் செய்வது என்
உம்மை உகந்தவளை நீரும் உகக்க வேணும் -என்று கட்டி அடித்து உகப்பிக்கவோ –

————————————————

புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –12-10-
இனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல் என்று தோற்றி இருக்கிற வற்றை அப்யசிக்க வல்லார்கள் –
தனக்கு கால் நடை தாராத தசையிலே- தேசிகரைப் பார்த்து- நீங்கள் என்னை கொடு போங்கோள்- என்ன வேண்டாதே –
அவன் அனுமதிப்படியே- ஆதி வாஹிக குணம் நடத்த – அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்- ஸ்ரீ வைகுண்டத்திலே-அனுபவிக்கப் பெறுவர்-

———————————————-

துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே–13-10-

இவன் இப்போதாக இவளுடைய விருப்பத்தை சம்பாதிக்க வென்றால் செய்யப் போகாதே –
அப்படி பாவ பந்தம் உடையவளாய்ச் சொன்ன அவளுடைய பாசுரத்தைச் சொல்ல அமையும்
சம்சாரம் ஆகிற துக்க சாகரத்திலே
மிருதுவாய் இருப்பதொரு கொழுந்தை அக்னியில் இட்டால் போலே துவண்டு நோவு படாதே
இவள் பட்ட கிலேசமே கிலேசமாக
இவள் பாசுர மாத்ரத்தைச் சொன்னவர்கள் ஆசைப் பட்ட பொருள் பெறுவார்கள் –

——————————————

விட்டு சித்தன் கோதை சொல் மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

விட்டு சித்தன் கோதை சொல்-
காட்சிக்கு கைம் முதல் இருந்தபடி –
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -10-10- என்று
முன்னனே அருளிச் செய்தாள் அன்றோ –

மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்-
இது தான் சம்சார பேஷஜம் என்று தம்தாமுடைய ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு-

பெருந்தாள் உடைய பிரான் அடிக் கீழ் பிரியாது என்றும் இருப்பரே–
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குத்ஸ் சன -தை ஆ -9-என்கிறபடியே -இருக்குமவர்கள்
பரம பிராப்யமாய் -நிரதிசய போக்யமாய்- இருந்துள்ள திருவடிகளை -உடையவன் திருவடிகளிலே
உனக்கே நாம் ஆட் செய்வோம் என்று
பிரியாது என்றும் இருப்பரே––
சிலரை கண்டீரே -என்று கேட்க வேண்டாதே
என்றும் ஒக்க தங்கள் கண்ணாலே கண்டு நித்ய அனுபவம் பண்ணுமதுவே யாத்ரையாகப் பெறுவர்
தாள் -என்கையாலே பிராப்யாதிக்யமும் போக்யதையும் சொல்லுகிறது –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திருமொழி அருளிச் செயலில் –பிரவேசங்கள் தொகுப்பு –

March 27, 2019

ஸ்ரீ நாதமுனிகள் சிஷ்யர் திருக்கண்ண மங்கை ஆண்டான் அருளிச் செய்த தனியன் –

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி
மல்லி நாடாண்ட மடமயில் -மெல்லியலாள்
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை
வேயர் பயந்த விளக்கு—

அல்லி நாள் தாமரை மேல் என்று தொடங்கி-இவளுடைய ஐந்து ஆகாரத்தையும் –
1-புருஷகாரத்வம் -2-ஐஸ்வர்யம் -3–சௌந்தர்யம் -4-பிரிவாற்றாமை -5-நல் குடிப் பிறப்பு -சொல்லுகையாலே
இவளுடைய சத்ருச வைபவம் அனுசந்திக்கப் பட்ட்டதாயிற்று
முன்னவள் -1-தென் புதுவை தெரிவை திருமகள் –2-தாரணி என்பவள் -3-நாரணன் தன் உருவுக்கு இனியவள் –
4-ஊர் அரங்கம் என்னும் சீர்மையவள் -5-பருவப் பணி மொழி -என்னைப் பணிந்து அருளே-
என்ற முன்னோர் சந்தை இங்கே அனுசந்திக்கத் தக்கது-

கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் -தென் திரு மல்லி நாடி -செழும் குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் -மதிப்புடைய
சோலைக் கிளி அவள் தூய நற் பாதம் துணை நமக்கே-

————————-

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா

———————————

அவதாரிகை –

பிராப்ய ஸ்வீகாரமும் பண்ணி -உன் தன்னைப் பிறவி பெரும் தனைப் புண்ணியம் யாமுடையோம் -28-என்று
உபாயமாக எம்பெருமானைப் பற்றி ப்ராப்யத்தையும் -நிஷ்கர்ஷித்தாராய் -நின்றார் கீழ் –
உனக்கே நாம் ஆட செய்வோம் -29- என்று அவன் உகப்புக்காக கைங்கர்யம் -இப் பிரதிபத்தி இறே இத் தலைக்கு வேண்டுவது-
இத் தலையிலே கண்ணழிவு அற்று இருந்தது –
அவன் பக்கலிலே அபி நிவேசம் கரை புரண்டு இருந்தது
அநந்தரம்-அபி நிவேச அநு ரூபமாக பெற்றுக் கொடு நிற்கக் கண்டது இல்லை
இத் தலையிலே ஒரு ஹேதுவை கொள்ளில் இறே -அது பக்வமாய் பெறுகிறோம் என்று ஆறி இருக்கலாவது-
அதுக்கு அங்கன் ஓன்று இன்றிக்கே இருந்தது –
இனி பரிக்ரஹித்த சாதனம் –பலத்தோடு வ்யபிசாரம் இல்லாத படி சித்தமாய் இருந்தது –
இங்கனே இருக்கச் செய்தே பலிக்கக் காணாமையாலே யுக்த அயுக்த நிரூபண ஷமம் அல்லாதபடி கலங்கி –
அபிமத விஷயத்தை பிரிந்தார் திரியட்டும் கூடுகைக்கு மடல் எடுக்குமா போலே
பிரிந்தாரைக் கூட்டிப் போருகையே- ஸ்வ பாவமாக உடையான் ஒருவன் என்னும் இதுவே பற்றாசாக
காம சமாஸ்ரயணம் பண்ணிப் பெறுகையிலே உபக்ரமிக்கிறாள் –

பெருமாளை அல்லது அறியாத திரு அயோத்யையில் உள்ளார் அவருக்கு நன்மையை எண்ணி
ஸ்த்ரியோ வ்ருத்தாஸ் தருண் யஸ்ய சாயம் ப்ராதா சமாஹிதா -சர்வான் தேவான் நமஸயந்தி-
ராமச்யார்த்தே யசஸ் விந -அயோத்யா -2-52–என்று தேவதைகள் காலிலே விழுந்தார்கள் இறே
இவ் வஸ்துவை தன்னை -பாவோ நான்யத்ர கச்சதி பர தசையிலும் வேண்டேன் என்ற திருவடி-
நமோஸ்ஸ்து வாஸஸ் பதயே -சுந்த -32-14-என்றான் இறே
கீழ் நாம் செய்து நின்ற நிலை இது -தவிர்ந்தது இது -என்று அறியாதபடி கலங்கினார் உடைய வியாபாரம் இருக்கும் படி இறே இது-

யயௌ ச காசித் ப்ரேமாந்தா தத் பார்ஸ்வம விலம்பிதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-19–என்கிற
பிரேமத்தால் வந்த மருட்சி படுத்துகிற பாடு இறே இது —
ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணா சங்க சமுத்பவம் -ஸ்ரீ கீதை -14-7-என்கிறபடியே
சத்வ நிஷ்டரான சாத்விகரோடே சேர்ந்து பகவத் சமாஸ்ரயணம் பண்ணக் கடவதாய் இருக்க
சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்தவள் ரஜோ குண பிரசுரரான தேவதைகள் காலிலே விழும்படி என்-என்னில் –

அநபாயிநியான பிராட்டி-தத் தஸ்ய சத்ருசம் பவேத் – பெருமாள் அளவில் உண்டான நித்ய சம்ச்லேஷ அர்த்தமாக
சர்வான் தேவான் நமஸ்யந்தி -என்று -எல்லா தேவதைகள் காலில் விழுந்தால் போலேயும்-
இவளுடைய திருத் தமப்பனாரான நம்மாழ்வார் அஞ்சு குடிக்கு ஒரு சந்ததி -உபதேசரத்ன மாலை -24–அபிமான புத்ரி தானே –
தெய்வங்காள் -என் செய்கேன் ஓர் இரவு ஏழு ஊழியாய் மெய் வந்து நின்று என தாவி மெலிவிக்கும்-
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் தை வந்த தண் தென்றல் வெஞ்சுடரில் தான் அடுமே -5-4-8- என்று
தேவதைகளை முன்னிட்டால் போலேயும் -இவளும் அயர்த்துக் கலங்கின படி –
இப்படிப் பட்ட கலக்கத்தாலே பிரிந்தாரைக் கூட்டும் என்னும் இதுவே கொண்டு காம சமாஸ்ரயணம் பண்ணுகிறாள்-
தன் உடலை அழிய மாறி நின்று இறே இவன் தான் பிரிந்தாரைச் சேர்ப்பது-

இது தான் இவளுடைய ப்ராப்ய த்வரை இருக்கிற படி –
அதாவது ஸ்ரீ பெரியாழ்வார் ப்ராப்ய ருசியாலே ஒரு கருமுகை மொட்டாகிலும் வட பெரும் கோயில் உடையானுடைய
திருக் குழலிலே வெடிக்க வேணும் என்று கருமுகையை ஸூஸ்ருஷையா நிற்பர் –
மத்த நன் நறு மலர் முருக்க மலர் கொண்டு -1-3-இவளுடைய பிராப்ய த்வரை இருக்கும் படி –
காமன் காலிலே ஒரு மத்த மலராகிலும் முருக்கம் மொட்டாகிலும் வெடிக்க வேணும் என்று
மத மத்தம் முருக்கு இவற்றை ஸூஸ்ரூஷியா நிற்கும் –
கடகர் உகந்ததே தேடி இட வேணும் இறே-

—————————–

இரண்டாம் திருமொழி —
அவதாரிகை –

இப்படி இவர்கள் பண்ணின ஆஸ்ரயணத்தை அனுசந்தித்து –
தங்களைப் பெறுகைக்கு நாம் வருந்த வேண்டும்படி இருக்குமவர்களை நம்மைப் பெறுகைக்கு தாங்கள் வருந்துகை யாவது என் –
அது தன்னிலும் நம் காலில் விழுகை அன்றிக்கே
நம்மைப் பெறுகைக்கு ஒரு தேவதாந்தரத்தின் காலிலே துவளும் படி நாம் பிற்பாடர் ஆனோமே –
அழகியதாகக் கார்யம் பார்த்தோமே -என்று தன் பிற்பாட்டை அநு சந்தித்து –
திரு உள்ளம் நொந்து –

திருவாய்ப்பாடியிலே பொதுவானார் வருஷார்த்தமாக இந்தரனுக்கு கொடு போய் இடுகிற சோற்றைக் கண்டு
நாம் பிறந்து வளருகிற ஊரிலே சிலர் ஒன்றை தேவதாந்தரத்துக்கு ஆக்குகை யாவது என் -என்று அதுவும் பொறுக்க மாட்டாதே
மலையின் முன்னே கொடு போய் குவியுங்கோள் -என்று சொல்லி
தான் மலையாய் இருந்து ஜீவிக்குமவன் –தனக்கு அசாதாரணைகளான இவர்கள் –
தன்னைப் பெறுகைக்கு காம சமாஸ்ரயணம் பண்ணும் போது பொறுக்க மாட்டான் இறே –

ஒரு சாதன அனுஷ்டானத்தாலே யாதல் -அன்றிக்கே -இதர சமாஸ்ரயண முகத்தாலே யாதல் –
தன்னைப் பெற வருந்தும் அதுவும் பொறுக்க மாட்டாதவன் –
நேர் கொடு நேர் காமன் காலிலே விழுந்தால் பொறுக்க மாட்டான் இறே –
அத்தாலே திரு உள்ளம் தளும்பி ஆனைக்கு உதவினால் போலே கடுக வந்து முகம் காட்ட
அவர்களும் இருந்து -அந்ய பரத்தை பாவித்து சிற்றில் இழைக்க-அது தான் ஆகிறது -காம சமாஸ்ரயணத்தில் ஒரு வகை இறே –
அத்தை அழிப்பதாக உத்யோகிக்க -இவர்களும் பல வகையாலும் -வேண்டா -என்ன -நடுவே இவனும் வேணும் -என்ன
இப்படிகளாலே நடுவே ஒரு மஹா பாரதம் பிரவ்ருத்தமாய் -அநந்தரம் –
சம்ச்லேஷம் பிரவ்ருத்தமாய்- எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கு இட்டக்கால் -2-9–
விஸ்லேஷ அந்தமான படியை –கோழி அழைப்பதன் முன்னம் -மேலில் திருமொழி -சொல்லிற்று ஆயிற்று –

—————————————————————————–

மூன்றாம் திருமொழி —அவதாரிகை –

தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் -என்னும் படியாக வந்து ஸ்பர்சித்து -அநந்தரம் –
எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கு இட்டக்கால் -என்னும்படி இருவரும் இரண்டு உடம்பாய் இருக்கை அன்றிக்கே
ஓர் உடம்பு என்று பிரதிபத்தி பண்ணலாம் படி சம்ச்லேஷம் பிரவ்ருத்தமாய் –
அப்படி வ்ருத்தமான சம்ச்லேஷம் தான் -காய்ந்து பொருந்துமா போலே –பிரிந்து கூடா விடில் இரண்டு தர்மியும் அழியும்
அளவாக -இத்தை அனுசந்தித்து -அதாவது –
பிரிந்து கூடினால் நன்றாக கூடி தரிப்பார்கள் என்று -அனுசந்தித்து
இவர்களுடைய பந்து வர்க்கமானது சிறு பெண்களை இழக்க ஒண்ணாது -இப்படி பிறந்து நின்ற பின்பு இனி போக்கடி என் என்று
பார்த்து இவர்களைக் கொண்டு போய் நிலவறைகளிலே அடைக்க –

அவர்களும் பிரிவாற்றாமே –உபவாச க்ருசாம் தீ நாம் -சுந்தர -15-19–என்று சொல்லுகிறபடியே ஆற்றாமை எல்லாம் உடையராய்
இவனும் –ந மாம்சம் ராகவோ புங்க்தே -சுந்தர -36-41-என்றும்
நைவ தம்சான் நமசகான் -என்றும் பெருமாள் கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதே இருந்தால் போலே இருந்தது –
அதுக்கு அடி என் என்னில் –

த்வத்கதே நாந்தராத்மநா–சுந்தர -36-42- என்று பரகாய பிரவேசம் பண்ணி இருப்பாருக்கும் ஓன்று தெரியுமோ –
தமக்கு உணர்த்தி உண்டாகில் அன்றோ அவை அறிய வல்லராவது என்னும் படியாய் –
இவர்கள் ஒரு கால் உறங்காது இருக்கில் –அநித்ரஸ் சத்தம் –சுந்தர -36-44-என்னும் படியாய்
இத் தலை –ஊர்த்வம் மாசாந்த ஜீவேயம் சத்யே நாஹம் ப்ரவீமி தே-சுந்தர -38-67-என்னில்
ந ஜீவேயம் ஷணம் அபி -சுந்தர 66-10-என்கிறபடியே ஒரு ஷணமும் ஜீவிக்க மாட்டாத படி இறே அவன் படி-

இப்படி இரண்டு தலைக்கும் ஆற்றாமை கரை புரண்டு இருக்க –
பெண்களுடைய தசையை அனுசந்தித்த பித்ராதிகள் -இவர்களை நாம் முடிய நிரோதிக்கில் இழக்கும் அத்தனையாய் இருந்தது –
நாமே சேர்த்து விட்டோம் ஆக ஒண்ணாது -இனி இங்கனே ஒரு வழி இடுவோம் –
பெண்கள் வர லாபத்திற்காக- பனி நீராட -என்று ஓன்று உண்டு செய்து போருவது -அத்தை இவர்கள் செய்வார்கள் –
தங்கள் நினைவிலே அதுவும் பலிக்கிறது -நாம் இது தன்னை அறிந்தோம் ஆகாது ஒழிகிறோம் -என்று
இவர்கள் தாங்கள் தங்களிலே சமயம் பண்ணி இருக்க –

அவனும் பிரிந்த போது தொடங்கி –இவர்கள் இடையாட்டாம் ஆராயும் அதுவே இறே அவனுக்குப் பணி-
ஆகையால் தான் பிரிந்த பின்பு பிறந்தவை அடைய பஞ்ச லஷம் குடிக் காட்டில் –தனித் தனியே ஆளிட்டு ஆராய்ந்து ஊரில்
பிறந்த விசேஷங்களும் -பிறக்கிறவையும் -பிறக்க புகுகிறவையும் -அறிந்து
பிறக்கிறவை-பித்ராதிகள் -நீராடப் போகச் சொன்னவை / பிறக்கப் போகிறவை பெண்கள் நீராடப் போகிறவை –
இப்படி பனி நீராட போவதாக அத்யவசித்து இருந்தார்கள் என்று கேட்டு தானும் ஒக்கப் போவதாக கணிசித்து இருக்க

அவர்களும் –
இவனோட்டை சம்ச்லேஷம் தான் பொறுக்கப் போகாது
அதுக்கு மேலே விஸ்லேஷ வ்யசனம் தான் பாடாற்றப் போகாது –
சம்ச்லேஷமோ விச்லேஷந்தமாய் அல்லாது இராது
ஆன பின்பு அவனோடு சம்ச்லேஷித்து பின்னைப் பிரிந்து படும் வ்யசனத்தில்
முன்புற்றை விரஹ ஜ்வரத்துக்கு பரிகாரமாக நீரிலே போய் முழுகி அத்தால் வந்த ஆச்வாசத்தைப் பெற்று இருக்க அமையும்
அது செய்யும் இடத்தில் நாமும் அவனுமாய் முன்பு குளித்துப் போகும் பொய்கையில் போகில் அவன் அறிந்து வரும்
ஆன பின்பு அவன் அறியாத தொரு பொய்கை தேடித் போக வேணும் –
அது செய்யும் இடத்தில் திரளாகப் போகில் அவன் அறியும்
ஆன பின்பு ஒருவர் ஒருவராகப் போவோம்–
போம் இடத்திலும் வழி தெரியாத படி இட்ட அடியை அழித்துக் கொண்டு போவோம் -என்று எல்லாரும் போனார்கள் –

அவ்வளவிலே
இவனும் அவர்களைப் பெறுகைக்கு-எதிர் சூழல் புக்கு திரிவான் ஒருவன் -திருவாய்மொழி -2-7-6–இறே
இவர்கள் நினைவை அறிந்து
இனித் தான் திருவயோத்யையில் உள்ளாரைப் போலே வழி மாறிப் போனால் அறிந்திலோம் என்று மீளும் இளிம்பன் அன்று இறே –
இயேஷ பதமன்வேஷ்டும் சாரணா சரிதே பதி -சுந்தர -1-1-என்கிறபடியே அடி ஒற்றினான்
இவன் தான் இருள் அன்ன மா மேனி –பெரிய திருவந்தாதி -26-என்கிறபடியே இருளோடு விகல்பிக்கலாய் இறே திரு மேனி இருப்பது –
ஆகையால் சாயாவானை சாயை பின் செல்லுமா போலே இவர்கள் நிழலிலே ஒதுங்கிப் போய் முற்பட்டுக் கரையைப் பற்றினான்-
இவர்களும் இடைப் பெண்கள் ஆகையாலே பரியட்டங்களையும் ஆபரணங்களையும் அடையக் கரையிலே இட்டு வைத்துப் போய்
ஜலத்திலே அவகாஹித்தார்கள் –

அவ்வளவிலே
இவற்றை அடைய வாரிக் கொண்டு பெரிய வேகத்தோடு போய் குருந்தின் மேலே ஏறித் தன்னைத் தெரியாத படி மறைய நின்றான் –
இவர்களும் கரையிலே ஏறிப் பார்த்த இடத்திலே அவை காணாமையாலே -இருந்த படி என் –
என்று துணுக்கென்று நம்மோடு கூட வந்தார் ஒருவரும் உண்டோ –இது ஆகாசம் கொண்டதோ -திக்குகள் கொண்டதோ –
இக்குளம் கொண்டதோ -கிருஷ்ணன் கொண்டானோ –என்று இங்கனே கலங்கி
கின்னுச்யாத் சித்த மோஹோச்யம்–சுந்தர -34-23-என்கிறபடியே
திருவடி முன்னே இருந்து வார்த்தை சொல்லா நிற்கச் செய்தேயும்
இது இந்நிலத்தில் சம்பவிப்பது ஓன்று அல்ல -என்று இருந்த படியாலே -இது சித்தஸ்கலனம் பிறந்ததோ -என்றும்
உன்மாதஜோ விகாரோ வா ச்யாதியம் ம்ருக த்ருஷ்ணிகா –என்கிறபடியே
இது உன்மாதாமோ -பிரகிருதி விகாரம் பிறந்ததோ-இது இருந்தபடி என் -என்று சங்கித்து பின்பு தெளிந்தால் போலே
இவர்களும் அநேகத்தை சங்கித்து –

இவர்களும்
எங்கும் பரகு பரகு-என்னப் பார்த்துக் கொண்டு வாரா நிற்க -இவனைக் குருந்தின் மேலே கண்டார்கள்
கண்ட அநந்தரம் –இவன் நம்மை மடி பிடித்து வந்தான் –புடவைக்காக வந்தான் -சாடு –
நாமும் இவனை மடி பிடித்து வாங்கினோமாம் விரகு ஏதோ -என்று பார்த்து
இவனை –இரப்பார்–தொழுதோம் -3-1–
ஏத்துவார் –மதுவின் துழாய் முடி மாலே -3-2–
வாழ்த்துவார் –கூத்தாட வல்ல எங்கோவே –3-6–
சீறுவாராய்-குரக்கரசு –3-4 -என்றும் –
மசுமையிலீ -3-9-என்றும் சீறி
இவனை இப்படி தீம்பு செய்யப் பெற்று விட்ட தாயும் ஒருத்தியே -என்று –
அஞ்ச உரப்பாள் –3-9-என்று அவளை வெறுப்பார்
தங்கள் ஆற்றாமையை அறிவிப்பாராய் -தடத்தவிழ் தாமரை -3-6–
இப்படி பஹூ பிரகாரங்களாலும் அனுவர்த்திக்க
அவனும் பரியட்டங்களையும் கொடுத்து சம்ஸ்லேஷித்தானாய்த் தலைக் கட்டுகிறது –
மேலில் திருமொழி விஸ்லேஷித்து-கூடல் இழைக்கையாலே இங்கே சம்ச்லேஷம் அர்த்தாத் -சித்தம்-

—————————————–

நான்காம் திருமொழி —-அவதாரிகை –

இவனும் பெண்களுடைய பரியட்டங்கள் எல்லாம் வாரிக் கொண்டு போய் குருந்தின் மேலே ஏறி இருக்க
இவர்களும் -அநு வர்த்தித்தும் -வைதும்-இப்படி பஹூ பிரகாரங்களாலே அவனுக்கு கொடுத்து அல்லது நிற்க ஒண்ணாத படி
சிலவற்றைச் செய்து -அவனும் கொடுக்க -இவர்களும் பெற்றார்களாய் நின்றது –
இவனும் இவை கொடுத்து அவர்களும் அவை பெற்று சம்ஸ்லேஷம் வ்ருத்தமானாலும்
அது தானும் விஸ்லேஷ அந்தமாய் அல்லாது இராது இறே
சம்யோகா விபர யோகாந்தா -அயோத்யா -105-16-
சம்சாரத்தில் போகங்கள் நிலை நில்லாதாகையாலே -அவனும் பேர நிற்க –
இவர்களும் இன்னமும் ஒரு கால் பரியட்டம் உரிய வல்லேனே –
என்று அதுக்கு கூடல் இழைக்கிறார்கள் இத்தனை-

இங்குத்தைப் பரிமாற்றம் பேறும் இழவுமாய்ச் செல்லும் அத்தனை இறே –
இது தான் இதர விஷய லாபத்தில் காட்டில் நன்றாய் இருக்கும் இறே
பேறு இழவுகள் இவ் விஷயத்தில் ஆகப் பெறுவதே –
பரம சேதனனை விட்டு அசேதன க்ரியா கலாபங்களைக் கொண்டு பெறப் பார்ப்பாரைப் போலே ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பெறுகைக்கு
அசேதனமான கூடலின் காலிலே விழுகிறாள்
வ்ருத்த ஹீனனான ஸ்ரீ கிருஷ்ணனை -ஆசாரம் இல்லாத -கைம்முதல் எதிர்பாராத ஸ்ரீ கிருஷ்ணனை –
வ்ருத்தவதியாய்ப் பெறப் பார்க்கிறாள் காணும்
இத்தனை கலங்காத வன்று பிரிந்த விஷய வைலஷண்யத்துக்கு நமஸ்காரமாம் இத்தனை இறே –

—————————————————-

ஐந்தாம் திருமொழி —அவதாரிகை –

நீ கூடிடு கூடலே -என்ற இடத்தில் கூடேன் என்னுதல் கூடுவன் என்னுதல்-ஒரு மறுமாற்றம் சொல்லக் கேட்டிலள்-
முன்பு தானும் அவனுமாய் இருந்த போது வார்த்தை கேட்டால் பிரதி வசனம் பண்ணிப் போந்த வாசனையாலும்-
சைதன்யத்தில் உறைப்பாலுமாக-குயில் பொருந்த விடவற்று -என்று பார்த்து –
என்னையும் அவனையும் நீ சேர விட வல்லையே -என்று குயிலின் காலிலே விழுகிறாள்-

சொன்ன வார்த்தைக்கு பிரதி வசனம் பண்ணும் என்னும் இதுவே யாய்த்து அதன் பக்கல் பற்றாசாக நினைக்கிறது –
ராவணனைப் பார்த்து -நீ என்னையும் அவனையும் சேர்க்க வல்லையே -என்னுமவர்கள் இத்தைப் பெற்றால் விடார்கள் இறே-
மித்ர மௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா-வதம் சா அநிச்சாதா கோரம் த்வயா அசௌ புருஷர்ஷப -சுந்தர -21-19-
விதிதஸ் ச ஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல -தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சசி -சுந்தர -21-20-

———————————————————————

ஆறாம் திருமொழி அவதாரிகை–

குயிலைப் பார்த்து நீ அழைத்துத் தர வேணும் என்ற இடத்தில் அது அப்படி செய்யக் கண்டிலள் –
அவனைக் கடுகக் கிட்டிக் கொடு நிற்கக் கண்டிலள் –
கடுக கிட்ட வேண்டும்படி யாய்த்து -இவளுக்கு பிறந்த தசை —
அப்போதே கிட்டப் பெறாமையாலே மிகவும் அவசன்னையானாள் –
அவன் தான் இவள் தசைக்கு ஈடாக வந்து முகம் காட்டிற்று இலன் –
இத் தலையில் அவஸ்தை அறியாத ஒருவன் அல்லன் இறே-
இன்னமும் ஓர் அளவைப் பிறப்பித்து -பரம பக்தி பர்யந்தமாக ஆக்கி -முகம் காட்டுகிறோம் என்று இருந்தான் –
மயர்வற மதி நலம் அருளின போதே -முனியே நான்முகனாய் இராதே
மயர்வற்ற போதே பெற வேண்டும்படியான ஆற்றாமை உண்டாய் இருக்கச் செய்தேயும் –பரம பக்தி பர்யந்தமாக
நடுவு உண்டான அவஸ்தைகளைப் பிறப்பித்து இறே கொடுத்தது ஆழ்வாருக்கு –

வெளுத்த புடவைக்கு வாசம் கொளுத்துவாரோபாதியாக இவ்வருகே பரமபக்தி பர்யந்தமாக பிறந்தால் இறே
அங்குப் போய் அனுபவிக்கும் அனுபவம் சாத்மிப்பது –
முதல் அடியிலே இது உண்டானாலும் காலம் சென்றவாறே பிறப்பிப்பதும் ஒரு பாகம் உண்டு இறே –
பிராட்டிக்கு பெருமாளைப் பிரிந்த போதே கூட வேணும் என்னும் ஆசை உண்டாய் இருக்கச் செய்தே இறே
ஊர்த்வம் மாசன்ன ஜீவிஷ்யே -என்பது -அவர் தாம் ந ஜீவேயம் ஷணம் அபி -என்பது யாய்த்து –
ஸ்வப்னே அபி யத்யஹம் வீரம் –ஸ்வப்னத்தில் கண்டாலும் துக்க நிவர்த்தகராக வல்லராய்த்து –
ராகவம் சஹ லஷ்மணம் -சுந்தர -34-21-
பிரிகிற போது இருவரும் கூடப் பிரிகையாலே காணும் இடத்திலும் இருவரையும் கூடக் காண வேணும் என்று இறே ஆசைப் படுவது
அப்போது இருவரும் பிரிகையாலே -தங்களில் கூடினார்களோ இல்லையோ -என்றும் அதி சங்கை பண்ணி இருக்குமே –

பச்யேயம் யதி ஜீவேயம் ஸ்வப்னோ அபி மம மத்சரீ –என் அவஸ்தை அறிந்து முகம் காட்டாமைக்கு அவரே அன்றிக்கே
இதுவும் என்னை நலிய வேணுமோ என்றாள் இறே –
தான் காணப் பெறாத போதும் பிறர் கண்டு சொல்லக் கேட்டு தரித்து இருந்தாள் இறே அவள் –
த்ரிஜடாதிகள் சொல்லக் கேட்டு தரித்து இருந்தால் போலே இருக்க வல்லவள் அல்லள் ஆயத்து இவள் –
இவள் தன்னை உண்டாக்கி அனுபவிக்க வேணும் என்று இருக்குமே
ஸ்வப்னத்திலே யாகிலும் அனுபவிப்பித்து தரிப்போம் என்று பார்த்தான்
இஜ் ஜந்துக்கள் கிடந்தது உறங்கா நிற்கச் செய்தே சர்வேஸ்வரன் தான் உணர்ந்து இருந்து
கர்ம அனுகுணமாக சில பதார்த்தங்களை சிருஷ்டித்து
ஸ்வப்னத்திலே அனுபவிப்பிக்கும் என்று சொல்லா நின்றது இ றே
ஏஷ ஸூ ப்தேஷூ ஜாகர்த்தி காமம் -காமம் புருஷோ நிர்மிமாண -கடக -2-5-8-
அப் பொதுவான நிலை அன்றிக்கே -தன்னை அனுபவிக்க வேணும் என்று இருக்கிறாள் ஆகையாலே
இவள் அனுபவிக்க வேணும் என்று பாரித்து இருந்த படிகளிலே ஒன்றும் குறையாதபடி
பாணி க்ரஹண பர்யந்தமாக ஸ்வப்னத்திலே அனுபவிப்பிக்க அனுபவித்து –
தான் அனுபவித்த படியைத் தோழிக்கு சொல்லி தரிக்கிறாளாய் இருக்கிறது –

ஸ்வப்னே அபி கேசவத அநயம் ந பஸ்யதி மஹாமதி -ஸ்வப்னே அபி தஸ்ய நாயாதி
புருஷார்த்த விரோதி நீ -இதிஹாச சமுச்சயம் -32-128-
சாமான்யர் விஷயத்தில் கர்ம அனுகுணமாகவும்
ஆசீதர் விஷயத்தில் ருசி அனுகுணமாகவும் ஸ்வப்ன அனுபவம் பலிக்கிறது என்று அருளிச் செய்வர்

—————————————————-

ஏழாம் திருமொழி —அவதாரிகை –

ஸ்ரீ ஆண்டாளுடைய பாக்யம் இருந்தபடி -புதியதொரு குரங்கைப் பார்த்து –கதமூரூ கதம் பாஹூ-சுந்தர -35-4-என்னாதே
தேசிகரைக் கேட்கப் பெற்றாள் இறே-
ஒரு ஸ்வப்ன அனுபவத்தை சொன்ன அளவன்றிக்கே சம்ஸ்லேஷமும் வ்ருத்தமாய்த்துப் போலே-
இல்லையாகில் –வாகம்ருதம் இருக்கும் படி என் -என்று கேட்கக் கூடாது இறே –
ஸ்வப்ன அனுபவம் ஆகையாலே மின் மினி பறந்தால் போலே இருக்கும் அத்தனை அல்லது நெஞ்சில் பட்டிராது –
சம்ஸ்லேஷத்தில் உபக்ரமத்திலே தான் இழந்தாள்-
தனக்கு அமைத்த அம்சத்தை ஸ்ரீ பாஞ்சஜன்யத்தைக் கேட்கிறாள் –

அவனைக் கேட்பான் என் என்னில்
1-திரை வளைத்தால் அதுக்குள்ளே வர்த்திக்கும் கூனர் குறளரைப் போலே அவனைக் கை விடாதே அந்தரங்கனாய் இருக்கையாலும்
2-தாங்கள் அனுபவிக்கும் துறையிலே இழிந்து அனுபவிக்கும் நிலயனாய் இருக்கையாலும்
3-தங்களைப் போலே காதாசித்கம் அன்றிக்கே நித்ய சம்ச்லேஷம் பண்ணி வர்த்திக்கும் ஒருவனாகையாலும்
4-இனி வினை யுண்டானால் திருவாழி யாழ்வான் திருக் கையை விட்டுப் போய் வியாபாரிக்கும்
கருதுமிடம் பொருது கைந்நின்ற சக்கரத்தன் -திருவாய் -10-6-8–
இவன் வினை முடுக முடுக திருப் பவளத்திலே அணையும் அத்தனை
5-இனி உகவாத கம்சாதிகள் காணாமைக்கு இறே –உபசம்ஹர -என்றது
6- உகந்த பெண்களுக்கு காட்சி கொடுப்பதும் இவற்றோடு கூடவே இருக்கும் இறே
வாய்க்கரையிலே போய் இருந்து ஆர்ப்பரவம் பண்ணி அவார்ப்பரத்திலேயே எதிரிகள் கெடும்படி இருப்பானுமாய்-
இவனை உகவாத கம்சாதிகள் காணாத படி
உபசம்ஹர சர்வாத்மன் ரூபமே தச்சதுர்புஜம் ஜானாது மா அவதாரம் தி கம்சோசயம் திதி ஜன்மஜ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-11-
என்றால் அப்போதே கை கரந்து நிற்பானுமாய் –
உகந்த பெண்களுக்கு காட்சி கொடுப்பதும் இவற்றோடு கூட வாய் இருக்கும் இறே
7- இவர்கள் தான் ஸ்யாமமான திருமேனியை அனுபவித்தால் அதுக்கு பரபாகமான வெண்மையை உடையவன்-
ஆகையாலே சேர அனுசந்திக்க வேண்டி இருக்கும் இறே-
இவன் தான் அதிக வளனுமாய் இருக்கும் இறே –
தாமுகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ -11-1–என்றும்
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் -5-2-என்றும் –
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் -திருப்பாவை -26-என்றும்-
இவள் தான் பாவித்து இருப்பதும் இத்தை இறே
8- இனி இவன் வார்த்தை கேட்டால் அவன் வார்த்தை கேட்டால் போலே இனியதாயும் இருக்கும் இறே –

————————————————————-

எட்டாவது திருமொழி —அவதாரிகை –

ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வார்த்தை கேட்டாள் –
இவனை வார்த்தை கேட்டவாறே பாவனா பிரகர்ஷத்தாலே அவன் அளவும் செல்லும் இறே
நித்ய ததாஸ்ரயத்வ தச் சேஷத்வங்கள் உண்டாகையாலே தர்மியை ஒழிய தர்ம மாத்ரத்துக்கு
பிரித்து ஸ்தித்யுபலம்பாதிகள் இல்லையே –
பிரகார மாத்ரமாய் -இருப்பு காட்சி பிரித்து இல்லை யன்றோ –
இவனை வார்த்தை கேட்டாள் –மேகங்களானவை வாரா முழங்கிற்று
கார்க்கோடு பற்றியான் கை -முதல் திரு -27-என்று இங்கனேயும் ஒரு சேர்த்தி உண்டு இறே –
காரின் ஸ்வ பாவத்தை உடைத்தான சங்கம் –
கார்காலத்தில் வரவைக் குறித்துப் போனான்
அக்காலம் வந்தவாறே அவன் வடிவுக்கு போலியான மேகங்கள் வரத் தோன்றின
அவன் தானும் கூட வந்தானாகக் கொண்டு பிரமித்தாள்-

அவையேயாய் -அவன் தன்னைக் கண்டிலள் -அவற்றைப் பார்த்து வார்த்தை கேட்டு
அவை மறு மாற்றம் சொல்லக் காணாமையாலே நோவு பட்டு
மீளவும் –ஏக தேச வாசிஸ்வத்தாலே உங்களுக்கும் அவனுக்கும் ஒரு சேர்த்தி உண்டு இறே
ஆன பின்பு என் தசையை அங்கே சென்று அறிவிக்க வேணும் என்று அவற்றைத் தூதாக விடுகிறாள்
ஸ்ரீ ராமாவதாரத்தில் ஐந்தர வியாகரண பண்டிதனைத் தூதாக விட்டால் போலே
ஸ்ரீ அர்ச்சாவதாரத்தில் இவை வார்த்தை சொல்ல மாட்டா என்று அறிய மாட்டாதே கலங்கி —
காமார்த்தா ஹி பிரகிருதி கிருபணாஸ் சேதன அசேதன ஏஷூ-மேக தூதம் -1-5-இவற்றைத் தூதாக விடுகிறாள்-
அர்ச்சாவதாரத்தில் காட்சிக்கு மேற்பட வார்த்தை சொல்லுதல் பரிமாறுதல் செய்கை இல்லை
அவதாரத்தில் இது உள்ளது -என்னும் தெளிவும் இல்லை –
இனி காமமாவது தான் பக்தி -அதாவது அந்வயத்தில் தரிக்கையும் வ்யதிரேகத்தில் தரியாமையும் இறே
இவை இரண்டும் உள்ளது பிராட்டிமார்க்கு
ஆகையாலே ஆழ்வார்களும் பிராட்டிமார் பாசுரத்தாலே தங்கள் ஆசையைப் பேசக் கடவராய் இருப்பர்கள் –
அது இருக்கிறபடி யாய்த்து –பள்ளமடையாய் இயல்பாகவே இருந்தது இங்கு –

————————————————

ஒன்பதாவது திருமொழி —அவதாரிகை –

பிராணாநாம்பி சந்தேஹோ மம ஸ்யாத்–சுந்தர -39-22-என்னும் தசையாய்த்து -கீழ் -நின்றது –
அத்தசை தன்னை அங்குச் சென்று அறிவைக்கு ஆள் பெற்றது இறே -அங்கு
அங்கன் போய் அறிவிக்கைக்கும் ஒருவரும் இன்றிக்கே -போய் அறிவிக்க வேணும் -என்று சொன்ன மேகங்களும் போகாதே
நின்ற இடத்திலே நின்று வர்ஷித்தன –
அத்தாலே அக்காலத்துக்கு அடைத்த பதார்த்தங்கள் அடங்கலும் அரும்பிற்று
அலர உபக்ரமிப்பனவும் -கழிய அலர்வனவுமாய்-அவை தான் செவ்வி பெற்று –திருமேனிக்கும் அவயவ சோபைக்கும்
ஸ்மாரகமாகக் கொண்டு -கண்டது அடங்கலும் பாதகம் ஆகிறதாய்-சில பாதிக்கைக்கு ஒருப்பட்ட படி யாய்த்து இத் திருமொழி-

அது தான் போய் முறுகி பிராணன்கள் கொண்டு ஜீவிக்க அரிதாம் படியான அளவாய்த்து மேலில் -பத்தாம் –திருமொழி
ஆக -இரண்டும் கூட -இன்னுயிர்ச் சேவலினுடைய -திருவாய்மொழி -9-5-அவஸ்தையாய்ச் செல்லுகிறது –

——————————————–

பத்தாவது திருமொழி —அவதாரிகை –

கீழ்த் திருமொழியில் தனது ஜீவனத்தில் உண்டான நசையாலே புறம்பே சிலவற்றின் காலிலே விழுந்தாள்-
எனக்கோர் சரண் சாற்றுமினே -9-5-என்றாள்-முன்பு மேகங்களின் காலில் விழுந்தாள்
அது கார்யகரமாகப் பெற்றது இல்லை
அவன் தான் வந்து முகம் காட்டுதல் -அவன் வரவுக்கு ஸூசகமாய் இருப்பன சில உண்டாதல் செய்யப் பெற்று
அத்தாலே தரிக்க வேண்டும்படி ஆற்றாமை கரை புரண்டது
இவளைத் தரிப்பிக்கைக்கு உடலாய் இருப்பது ஓன்று அன்றிக்கே அவன் வரவு குறித்துப் போன பருவமும் வந்தது
அப்பருவதுக்கு அடைத்த பதார்த்தங்களும் ஒரு முகம் செய்து -அவனுடைய திரு மேனிக்கும் திவ்ய அவயவங்களுக்கும்
அவயவ சோபைக்கும் -பேச்சுக்கும் ஸ்மாரகமாய்க் கொண்டு -எடுப்பும் சாய்ப்புமாய் மேல் விழுந்து நலிய –
அவற்றாலே நலிவு பட்டு ஜீவிக்கை என்ற ஒரு பொருள் இன்றிக்கே இருந்தது
இவற்றின் ஒருமைப்பாடு இருந்த படியால் நமக்கு இனி நாம் ஜீவிக்கைக்கு முதலாக நினைத்து இருப்பது -இரண்டு
அவன் -ந த்யஜேயம்–யுத்த -18-3-என்றும் –
ஏதத் வ்ரதம் மம -யுத்த -18-33-என்றும்
நமே மோகம் வாசோ பவேத் –பார -உத்த -70-48-என்றும் சொல்லும் வார்த்தைகளும்
ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பும் யாய்த்து –
அவன் சொல்லும் வார்த்தைகளைக் கொண்டு ஜீவிக்க நினைத்து இருந்தாலும்
ஸ்வ தந்த்ரனை இவை கொண்டு வளைக்க ஒண்ணாது இறே
அவன் ஒரோ வ்யக்திகளை உபேஷித்தால்-அதுக்கு நிவாரகர் இல்லை இறே -ஸ்வ தந்த்ரன் ஆகையாலே-

இனி அது தப்பிற்று ஆகிலும் தப்பாது என்று இருக்கலாவது ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு –
அது தானும் தமக்கு பலிக்க புகா நின்றதோ -அதுக்குத் தான் விஷய பூதர் நாம் அல்லோமோ -என்று அதிலேயும்
அதி சங்கை பண்ணி -பின்னையும்
அல்லாதவை எல்லாம் தப்பிற்று யாகிலும் ஸ்ரீ பெரியாழ்வார் உடன் உண்டான சம்பந்தம் தப்பாது –
அவன் ஸ்வ தந்த்ரத்தையும் மாற்றி நம்மையும் அவன் திருவடிகளில் சேர்த்து அல்லது விடாது -என்று
அத்யவசித்து -அத்தாலே தரித்தாளாய்த் தலைக் கட்டுகிறது –

அவன் ந த்யேஜ்யம் -என்றாலும் –ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட -என்பர் வேணும் இறே
ஸ்ரீ பட்டர் வாணவதரையனை காண எழுந்து அருளி -ஸ்ரீ தேவி மங்க லத்திலே இருக்கச் செய்தே –
அங்குத்தை ஸ்ரீ வைஷ்ணவர்கள் சம்ப்ரமம் கண்டு அருளிச் செய்த வார்த்தை
ஸ்ரீ பெருமாள் இருக்க உம்மிடத்தே ஈடுபடக் காரணம் என்ன என்று கேட்டான்-
ஸ்ரீ எம்பெருமானை பெற அவன் அடியாரே கடவர் —
ஸ்ரீ ஆழ்வான் சம்பந்தத்தாலே -என்னைப் பற்றுகிறார்கள் என்று அருளிச் செய்தாரே –

—————————————————–

பதினொன்றாவது திருமொழி —அவதாரிகை –

அவர் இரண்டு வார்த்தை சொல்லார் என்றும் -அது தான் தப்பிற்று ஆகிலும் தப்பாத ஓன்று உண்டு –
ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பானது -நம்மை பலத்தோடு சந்திப்பித்து அல்லது விடாது என்று
அத்யவசித்து இருக்கச் செய்தேயும்-அவன் தான் வந்து உதவக் கண்டிலள் –
அர்ஜூனன் கையில் அம்புகளால் உளைய ஏவுண்டு சரதல்ப்பத்தில் கிடந்த ஸ்ரீ பீஷ்மரைப் போலே
சமாராக பதார்த்தங்களால் போர நோவு பட்டுக் கிடக்கிற தசையைக் கண்டு –
இவளுக்கு ஓடுகிறது இன்னது என்று அறிய வேண்டும் -என்று தாய்மார் -தோழிமார் -அந்ய பரைகளாய்-இருப்பார்
அடையப் புகுந்து திரண்டு கிடக்க –
அவர்களைப் பார்த்து நான் அத்யவசித்து இருந்த படி கண்டி கோளே-
என் தசை இருந்தபடி கண்டி கோளே
இவ்வளவிலே அவன் வந்து உதவின படி கண்டி கோளே
அவன் ஸ்வ பாவம் இருந்தபடி கண்டி கோளே –என்று இன்னாதாய்
பின்னையும் தன் திறத்தில் பெண்களில் சிலருக்கு –
ஸ்ரீ ருக்மிணி பிராட்டிக்கு உதவினவன் நமக்கு உதவாது ஒழிகிறான் அல்லன்
என்று வருந்தி ஒருபடி தரித்தாளாய்த் தலைக் கட்டுகிறாள் –

———————————————

பன்னிரண்டாவது திருமொழி —அவதாரிகை –

மேல் சொல்லி என் –
பகவத் விச்லேஷத்தால் நொந்து -இவள் தனக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது இரண்டாய் –
இவ் விரண்டிலும் தான் அதி சங்கை பண்ணி —
அத் தலையாலே பேறு -என்று அறுதியிட்டு -அது பார்த்து இருக்க ஒண்ணாது -அத்தலையில் ஸ்வாதந்த்ர்யத்தாலே –
ஆனாலும் கேவலம் ஸ்வா தந்த்ர்யமே அன்றிக்கே -ஆஸ்ரித பாரதந்த்ர்யம் என்றும் ஓன்று உண்டு அவனுக்கு –
ஆன பின்பு ஸ்ரீ பெரியாழ்வார் அளவிலும் அவனுக்கு அந்த ஸ்வா தந்த்ர்யம் ஜீவியாது –
அவர் சம்பந்தம் கொண்டு நமக்குப் பெறுகைக்கு ஒரு தட்டில்லை -என்று அத்யவசித்து இருந்த இவள்
பின்னையும் -அவன் தான் குணாதிகனுமாய்-ச விபூதிகனுமாய் இருப்பான் ஒருவன் ஆகையாலே
ஆஸ்ரீத விஷயத்தில் தன் ஸ்வா தந்த்ர்யம் நடத்துகையாவது இவற்றை இழைக்கை
இவற்றை இழக்க கார்யம் செய்யான் –

இனித் தான் அவன் ஸ்வா தந்த்ர்யம் நமக்குப் பேற்றுக்கு உடல் அத்தனை போக்கி இழவுக்கு உடலோ –
கார்யம் செய்வானாக நினைத்த போது அவனுக்கு நிவாரகர் இல்லை அத்தனை அன்றோ –என்று
அத்தையும் ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்போபாதி பேற்றுக்கு உடலாக அத்யவசித்தாள்-
விடுகைக்கு ஹேதுவான ஸ்வா தந்த்ர்யம் தானே –
அவஸ்தா பேதத்தாலே பற்றுகைக்கு உடலாகத் தோற்ற பற்றினாள் -என்றவாறு –
இப்படி அத்யவசித்து இருக்கச் செய்தேயும் -அவன் சடக்கென வந்து தன் ஆற்றாமை பரிஹரிக்க கண்டிலள் –
ஆனாலும் அவன் வரும் அளவும் க்ரம பிராப்தி பார்த்து ஆறி இருக்க வல்ல பிரகிருதி அன்றே –
கடுக பெற்றுக் கொடு நிற்க வேண்டும்படி இறே இவளுடைய த்வரை-
தன் ஸ்வரூபத்தோடு சேர்ந்த செயலாகிறது அவன் வரப் பார்த்து இருக்கையே-அவ்வளவு அல்லவே இவளுக்கு இப்போது ஓடுகிறது –

ஸ்வரூப ஹானி வரப் பொறுத்ததே -தன் ஸ்வரூபத்தோடு சேராதாகிலும்-அத்தை பொறுத்து
அவன் முகத்திலே விழிக்க வேணும் –என்று பார்த்து
அதுக்கு கால் நடை தாராத படி பல ஹானி மிக்கது -இனி தன் தசையை அனுசந்தித்தார்க்கு ஈஸ்வரனோ பாதியும்-
ஸ்ரீ பெரியாழ்வாரோ பாதியும் தன் கார்யம் செய்ய வேண்டும் என்றாய்த்து தான் நினைத்து இருப்பது
தனக்குக் கால் நடை தாராதாய்த்து –
அவன் தன் தசை அறிந்து வந்து முகம் காட்டுவான் ஒருவன் அன்றிக்கே இருந்தான்-
இனி தன் கண் வட்டத்தில் நின்று தன் தசையை அறிந்து கால் நடை தருவார்க்கு தன் கார்யம் செய்கை பரம் இறே
அவன் வர்த்திக்கையாலே ப்ராப்யமான தேச பரிசரத்தில் என்னைக் கொடு போய் நீங்கள் பொகடப் பாருங்கோள் -என்கிறாள் —

———————————————————

பதிமூன்றாவது திருமொழி —அவதாரிகை –

இவள் தசையை அனுசந்தித்தார்க்கு -கால் நடந்து போகலாம் படி இராது இறே –
வருந்திப் போனார்களே யாகிலும் இவளை ஒரு கட்டணத்திலே -strecharil-கிடக்கலாம்படி பண்ணிக் கொடு போகவும் வேணுமே –
என் தசையை அறிந்து பரிஹரிக்கப் பார்த்திகோள் ஆகில் அங்கே ஸ்பர்சம் உள்ளது ஒன்றைக் கொடு வந்து என்னை ஸ்பர்சிப்பித்து-
என் சத்தையை நோக்கப் பாருங்கோள் -என்கிறாள் –

நீ தான் மெய்யே நோவு பட்டாயோ-இப்படி நோவு படக் கடவதோ -உன் குடியை நோக்க வேண்டாவோ –
அவனுக்கு வரும் பழியை பரிஹரிக்க வேண்டாவோ -என்ன
நீங்கள் ஓர் பிரயோஜனத்துக்காகச் சொல்லும் வார்த்தை -என் தசைக்குச் சேரும் வார்த்தை ஓன்று அல்ல-
என்னை உண்டாக்க வேணும் என்னும் நினைவு உங்களுக்கு உண்டாகில் அவன் பக்கல் உள்ளதொன்றைக் கொடு வந்து
என்னை ஸ்பர்சிப்பித்து நோக்கப் பாருங்கோள் -என்கிறாள் –

————————————————–

பதினான்காவது திருமொழி —அவதாரிகை –

பிராப்ய பிராபகங்களை நிஷ்கரித்து
நாராயணனே நமக்கே பறை தருவான் என்று அடியிலேயே -அருளி
நடுவிலே பாகவதர்களை சிறப்பாக அனுபவித்து
இறுதியில் –-கறைவைகளில் பிராபகத்தையும் சிற்றம் சிறு காலையில் -பிராப்யத்தையும் அறுதியிட்டு -என்றபடி –

அந்த பிராப்யத்தை அப்போதே லபிக்கப் பெறாமையாலே
கண்ணாஞ்சுழலையிட்டு காமன் காலிலே விழுந்து –
அநந்தரம் சிற்றில் இழைத்து
பனி நீராடி
கூடல் இழைத்து
குயில் வார்த்தை கேட்டு
சாஷாத் கரிக்க வேணும் என்னும் ஆசை பிறந்து –
அப்போதே கிடையாமையாலே –ஸ்வப்ன அனுபவத்தாலே தரித்து
அது தான் விசதமாய் இராமையாலே அவ்வனுபவத்துக்கு தேசிகரான ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானை வார்த்தை கேட்டு
மேக தர்சனத்தாலே நொந்து -அம்மேகங்களை வார்த்தை கேட்டு –
ஸ்ரீ ராமாவதாரத்துக்கு அங்கு நின்றும் வந்த திருவடி தன்னையே
தூது விட்டால் போலே அம் மேகங்கள் தன்னையே தூதுவிட்டு
அவ் வர்ஷாவில் பதார்த்தங்கள் அவனுக்கு ஸ்மாரகமாய் பாதிக்க ஒருப்பட்டத்தைச் சொல்லி
அவை தான் முருக நின்று நலிந்தமை சொல்லி
ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பிலும் அவன் ந த்யஜேயம் என்று அருளிச் செய்த வார்த்தையிலும் அதிசங்கை பண்ணி-
குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே –-10-4-
அவன் வார்த்தை பொய்யானாலும் ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு நமக்குத் தப்பாது பலிக்கும் என்று அத்யவசித்து -10-10-
அவன் படியாலும் இழக்க வேண்டாம் என்று தெளிந்து-
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை நல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே 11-10-
பின்னையும் இழவோடே தலைக் கட்டி –சாதிப்பார் யார் இனியே -11-10-
அதுவும் பலியாமையாலே தானே போக ஒருப்பட்டு
தனக்குக் கால் நடை தாராத படி பல ஹானி மிக்கு
கால் நடை தருவாரை என்னை அத்தேசத்திலே கொடு போய் பொகடுங்கோள்-என்றும்
அது மாட்டிகோள் ஆகில் அவனோடு ஸ்பர்சம் உள்ள ஒரு பதார்த்தத்தைக் கொடு வந்து என்னை
ஸ்பரசிப்பித்து ஆஸ்வசிப்பியுங்கோள்– என்றும் நின்றது கீழ் –

முதல் தன்னிலே -அவனே ரஷகன் என்று அத்யவசித்து இருக்கும் குடியிலே பிறக்கச் செய்தேயும்
தானே நோற்றுப் பெற வேண்டும் படி இறே இவளுக்கு பிறந்த விடாய்-
இப்படிப் பட்ட விடாயை உடையளாய்-இவள் தான் பிராப்ய பிராபகங்கள் அவனே தான் என்னுமிடம் நிஷ்கர்ஷித்து
அநந்தரம் பெற்று அல்லது நிற்க ஒண்ணாத படி யாய்த்து பிறந்த தசை –

இவ்வளவு ஆற்றாமை பிறக்கச் செய்தேயும் அவ்வருகில் பேறு சாத்மிக்கும் போது
இன்னம் இதுக்கு அவ்வருகே ஒரு பாகம் பிறக்க வேணுமே –
ஆமத்தில் சோறு போலே ஆக ஒண்ணாது –
பரமபக்தி பர்யந்தமாக பிறப்பித்து முகம் காட்ட வேணும் -என்று அவன் தாழ்க்க
அநந்தரம் ஆற்றாமை கரை புரண்டு -பெறில் ஜீவித்தும் பெறா விடில் முடியும் படியாய்
நிர்பந்தித்தாகிலும் பெற வேண்டும் படியாய் –என் அவா அறச் சூழ்ந்தாயே –என்கிற படி வந்து முகம் காட்டி விஷயீ கரிக்க
பிறந்த விடாயும் அதுக்கு அனுரூபமாக பெற்ற பேறும்
ஓர் ஆஸ்ரயத்தில் இட்டு பேச ஒண்ணாத படி அளவிறந்து இருக்கையாலே
கண்டீரே -என்று கேட்கிறவர்கள் பாசுரத்தாலும் –
கண்டோம் -என்று உத்தரம் சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும்
தனக்குப் பிறந்த விடாயையும் பெற்ற பேற்றையும் அன்யாபதேசத்தாலே தலைக் கட்டுகிறாள் –

இங்குப் பிறந்த பக்தியில் சாதனா வ்யபதேசத்தைத் தவிர்த்த இத்தனை போக்கி ஆசையையும் குறைக்க ஒண்ணாதே
ஆசை குறைந்ததாகில் முதலிலே பிராபக ஸ்வீகாரம் தான் பிறவாதே
இனி இதினுடைய அருமையாலே செய்து தலைக்கட்ட அரிது என்னுமதைப் பற்றவும் ஸ்வரூப ஜ்ஞானம் உடையவனுக்கு
ஸ்வரூபத்துக்கு அநனரூபம் என்னுமதைப் பற்றவும் தவிர்த்தது அத்தனை போக்கி
வஸ்துவினுடைய குணாதிக்தையும் தவிர்த்தது அன்றே –
சமஸ்த கல்யாண குணாத் மகமாய் இருந்துள்ள விஷயமே உபாயம் ஆகிறது
அக் குணங்கள் தான் பிராப்யம் ஆகையும் தவிராதே –
சோஸ்நுதே -என்கிறபடியே -அவ்வருகு போனாலும் அனுபாவ்யம் ஆகிறது இக் குணங்களே இறே-

பிறந்த பக்தியும் -அந்த பக்திக்கு அனுரூபமாகப் பெற்ற பேறும் ஓர் ஆஸ்ரயத்தில் கிடக்கும் அளவு அல்லாமையாலே
கண்டீரே -என்று -பரம பக்தி தசையை -கேட்கிறவர்கள் பாசுரத்தாலும்
கண்டோம் -என்று-தான் பெற்ற பேற்றை – சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும் –
ஆக தான் பெற்ற பேற்றைச் சொல்லித் தலைக் கட்டுகிறது
திருவாய்ப்பாடி விருத்தாந்தத்தைச் சொல்லுகையாலே -அன்யாபதேசமாகையும் தவிராதே
ஆனாலும் விட்டு சித்தன் கோதை சொல் -என்கிறதும் தவிர்க்க ஒண்ணாதே

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திருமொழி அருளிச் செயலில் உபக்ரமும் உப சம்ஹாரமும் —

March 27, 2019

ஸ்ரீ நாதமுனிகள் சிஷ்யர் திருக்கண்ண மங்கை ஆண்டான் அருளிச் செய்த தனியன் –

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி
மல்லி நாடாண்ட மடமயில் -மெல்லியலாள்
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை
வேயர் பயந்த விளக்கு—

அல்லி நாள் தாமரை மேல் என்று தொடங்கி-இவளுடைய ஐந்து ஆகாரத்தையும் –
1-புருஷகாரத்வம் -2-ஐஸ்வர்யம் -3–சௌந்தர்யம் -4-பிரிவாற்றாமை -5-நல் குடிப் பிறப்பு -சொல்லுகையாலே
இவளுடைய சத்ருச வைபவம் அனுசந்திக்கப் பட்ட்டதாயிற்று
முன்னவள் -1-தென் புதுவை தெரிவை திருமகள் –2-தாரணி என்பவள் -3-நாரணன் தன் உருவுக்கு இனியவள் –
4-ஊர் அரங்கம் என்னும் சீர்மையவள் -5-பருவப் பணி மொழி -என்னைப் பணிந்து அருளே-
என்ற முன்னோர் சந்தை இங்கே அனுசந்திக்கத் தக்கது-

கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் -தென் திரு மல்லி நாடி -செழும் குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் -மதிப்புடைய
சோலைக் கிளி அவள் தூய நற் பாதம் துணை நமக்கே-

————————-

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லப ஸ்ரீ தரஸ் சதா

————————

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –1-1-

மண்டலம் -மண்டலாகாரமான கோலத்தை
மாசி முன்னாள் -மாசி மாதத்தில்
ஐய -அழகிய -நுண் -நுண்ணிய முதல் பஷத்தில்
அழகுக்கு -கேவலம் அழகுக்காகவே
விதிக்கிற்றியே -அந்தரங்கம் கைங்கர்யம் பண்ணும் படி விதிக்க வேணும் –

தையொரு திங்களும் –
மார்கழி மாசம் ஒரு மாசமும் நோன்பு நோற்றார்களாய் நின்றது இறே –
இனி தை ஒரு மாசமும் அவன் வரும் ஸ்தலத்தை அலங்கரித்து –
தையொரு திங்களும் —
செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும் -மூன்றாம் திரு -17-என்று
சர்வேஸ்வரன் நம் பக்கலிலே ஆபிமுக்யம் பண்ணினான் என்று
அறிவது ஒரு நாள் உண்டாகில் கால த்ரயமும் அடிக் கழஞ்சு பெற்று செல்லா நிற்கும் இறே
இப்படி ஒரு நாளை யானுகூல்யம் மிகை -என்று இருக்கும் விஷயத்தை பற்றி வைத்து இறே
இவன் காலிலே ஒரு மாசமாக துவளப் பார்க்கிறது –

தரை விளக்கித்
திருக் கண்ணமங்கை ஆண்டானைப் போலே இது தானே பிரயோஜனமாகச் செல்லுகிற படி –
சர்வேஸ்வரனுக்கு அசாதாரணமான ஸ்தலங்களில் புக்கு பரிசர்யை பண்ணிப் போரும் குடியிலே பிறந்தவள் இறே –
பகவத் கைங்கர்யம் பண்ணுகைக்கு ஸ்தல ஸூத்தி பண்ணுகிற படி இறே இது

தண் மண்டலமிட்டு –
குளிர்ந்து தர்ச நீயமான மண்டலத்தை இட்டு
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னும் இது மிகை -திருவாய் -9-3-9–யான விஷயத்தைப் பற்றி வைத்து
இங்கே மண்டல பூஜை பண்ணுகிறாள் இறே ஆற்றாமை –
மண்டலமிட்டு –
வ்ருத்த ஹானியை அனுஷ்டியா நிற்கச் செய்தே இவள் செய்கையாலே அது சத் வ்ருத்தமாய் இருக்கிறபடி –
ஞானம் கனிந்த நலமாகிய பக்தியாலே செய்கையாலே –

தண் மண்டலமிட்டு -மாசி முன்னாள்-
ஒரு பிரயோகம் பண்ணும் போது ஒரு மண்டலம் சேவிக்க வேணும் றே -அதுக்கு பல வ்யாப்தி உண்டாம் போது –
அதுக்காக மண்டல சேவை பண்ணுகிறாள்
தண் மண்டலமிட்டு –
இம் மண்டலத்திலே செய்து அறியாதது ஓன்று இ றே இவள் செய்கிறது –
மாசி முன்னாள் –
மாசி முற்கூறு -முதல் பதினைந்து -ஒரு பஷத்திலே நின்று அனுஷ்டிக்க வேணும்

ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து-அழகினுக்கு அலங்கரித்த –
ஐய தாய் -அவன் சௌகுமார்யத்துக்கு சேரும் படி நுண்ணியதான மணலைக் கொண்டு
அவன் வரும் தெருவை அலங்கரித்து –
வேறு ஒரு பிரயோஜனதுக்காக அன்றிக்கே இது தானே பிரயோஜனமாக அலங்கரிப்பாரைப் போலே அலங்கரித்து

இப்படி சாதாரமாக ஆஸ்ரயிக்கிறது நீ என் பக்கலில் என் கொண்டு என்ன –
அனங்க தேவா-
உன்னை அழிய மாறியும் பிரிந்தாரை நீ சேர்க்கும் ஸ்வ பாவத்தைக் கண்டு –

உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
பேறு தப்பாது என்று அத்யவசித்து இருக்கலாவது ஒரு விஷயம் அன்றே பற்றிற்று –
விநாசத்தை விளைப்பதான செயலை இறே செய்தது
உஜ்ஜீவிக்கலாம் -என்று பார்க்கிறது –ஆம் கொலோ -சங்கை –
பலத்துக்கு வ்யபிசாரம் இல்லாத சாதனத்தை பரிஹரித்து வைத்து இறே பலம் –
பாஷிகமான விஷயத்தில் விழுகிறது –
என்று ஆசையாலே சொல்லி -உஜ்ஜீவிக்கலாம் என்னும் ஆசையாலே சொல்லி

உன்னையும் உம்பியையும் தொழுதேன்
ததீயரோடு கூட அவனை உபாசித்துப் போந்த வாசனையாலே
ச ப்ராதுஸ் சரனௌ காடம் நிபீட்ய ரகு நந்தன -சீதா முவாசாதி யசா ராகவஞ்ச மகாவ்ரதம் -அயோத்யா -31-2-என்னுமா போலே
தம்பி முன்னாகப் பற்றுகிறாள்–காமன் -தம்பி சாமான் -சாமானையும் உன்னையும் தொழுதேன் என்கிறாள்
நமோஸ் அஸ்து ராமாயா ச லஷ்மணாயா –தேவ்யை ச தசை ஜனகாத்மஜாயை சுந்தர -13-60-என்னுமா போலே
தொழுதேன் –
தோள் அவனை அல்லால் தொழா-முதல் திரு -60- என்னும் குடியிலே பிறந்து இருக்கச் செய்தே இறே இப்படி இவள் கை இழந்தது-
க்ருதாபராதச்ய ஹி தே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் -அந்தரேண அஞ்சலிம் பத்த்வா லஷ்மணச்ய பிரசாத நாத் -கிஷ்கிந்தா -32-17-
தீரக் கழிய அபராதம் பண்ணின பின்பு ஓர் அஞ்சலி நேராமல் போகாது என்றான் இறே திருவடி
க்ருதாபராதர்க்கும் கூட கார்யகரம் ஆவது ஓன்று இறே அஞ்சலி

ஏதுக்குத் தான் இப்படி தொழுகிறதோ என்ன –
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –
ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து தன் செருக்கு தோற்ற இருக்கக் கடவன்-
சம்சாரிகளும் இப் பேற்றை பெற்று வாழ வேணும் -என்று அங்கு நின்றும் போந்து முதல் பயணம் எடுத்து விட்டு-
ஆஸரீத விரோதி நிரசன சீலனான திரு வாழி யாழ்வானைக் கையிலே உடையனாய்க் கொண்டு திருமலையிலே வந்து நிற்கிறவனுக்கு-
அக் கையும் திரு வாழியுமான சேர்த்தி அழகை காண வேணும் என்று ஆசைப் படுகிற என்னை அவனுடனே சேர்த்து விடச் வல்லையே-
அவனோ அண்ணியனாய் வந்து நின்றான்-
எனக்கு அவனை ஒழியச் செல்லாமை உண்டாய் இருந்தது -இனி சேர்த்து விட வல்லையே-
இப்போது –வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை -என்றதற்கு கருத்து
உகவாதவரை அழியச் செய்கைக்கும்-
உகப்பாருக்கு கண்டு கொண்டு இருக்கைக்கும் இது தானே பரிகரமாய் இருக்கை –
கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய் -6-9-1–என்று இறே இருப்பது –
ஏந்தி –
திரு ஆபரணம் –இதுவே உத்தேச்யம் என்று காட்டுகிறாள் –

——————————————-

கருப்பு வில் மலர்க் கணைக் காம வேளைக் கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை
விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே-1-10-

கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து-
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்றும்
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது -பெரிய திரு -7-3-4-என்றும்
இது எல்லாம் இவனுடைய வில்லையும் அம்பையும் சொல்லி இவன் காலிலே விழும்படியாய் வந்து விழுந்தது-
இவளுடைய பிராப்ய த்வரை படுத்தும் பாடு இது –

அங்கு ஓர் கரி அலற மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று-
குவலயா பீடமானது பிளிறி எழும்படியாக அதன் கொம்பை அநாயாசேன முறித்து
பகாசூரனை வாயைக் கிழித்து-
வைத்த கண் மாறாதே கண்டு கொண்டு இருக்க வேண்டும்படியான வடிவு அழகை உடையவனோடே என்னைச் சேர்த்து விடு -என்று
உன் காலில் விழுந்தாவது அவனைப் பெற வேண்டும் படியான வடிவு அழகு –
அநிஷ்ட நிவர்த்தகன் -ப்ராபகன் -மணி வண்ணன் -பிராப்யன்

பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை-
மலைகளைக் கொடு வந்து சேர வைத்தால் போலே இருக்கிற மாடங்கள்
ஸூ சம்ருத்தமாய்க் கொண்டு தோன்றா நின்றுள்ள ஸ்ரீ வில்லி புத்தூரில் உள்ளாருக்கு நிர்வாஹரான பெரியாழ்வார் திருமகளாருடைய-

விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே–
விருப்பம் அடியாகப் பிறந்த -பிராப்ய த்வரை விஞ்சி -அருளிச் செய்த இனிய தமிழ் தொடை வல்லார்கள்-
சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து வைத்து பகவல் லாபத்துக்காக மடல் எடுப்பரோபாதி-
காமன் காலில் விழ வேண்டும் படியான இவரைப் போல் அன்றிக்கே –
இப் பிரபந்தம் கற்றார்கள் -சம்சாரத்தை விட்டு நித்ய அநுபவம் பண்ணுகிற
நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாக -வானவர்க்காவர் நற் கோவையே -4-2-11–திருவாய் மொழி –
அனுபவிக்கப் பெறுவார்கள் –

———————————————————————

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை
மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே
காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-1-

கடை பாரித்தோம் -அவன் வரும் வழியை கோடித்தோம்-

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை-
ஸ்தனனன்ய பிரஜை நோவு கொண்டால் அதுக்காக தான் குடி நீர் குடிக்கும் தாயைப் போலே
நர நாராயண ரூபத்தாலே வந்து இச் சேதனருககாக தான் தபஸ் ஸூ பண்ணின இத்தை அனுசந்தித்த தேவ ஜாதி-
தேவரீர் என்ன கார்யம் செய்து தலைக் கட்டுகைக்காக இப்படி தபஸ் ஸூ பண்ணி அருளுகிறது -என்று ஸ்தோத்ரம்
பண்ணும் படியாக நின்ற நிலையைச் சொல்லிற்று ஆகவுமாம்
அன்றிக்கே –
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா –என்று பிரித்து
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ரய-திவீவ சஷூராரததம் –
தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே விஷ்ணோர்யத் பரமம் பதம் -என்கிறபடியே
அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகள் ஸ்தோத்ரம் பண்ண உபய விபூதி உக்தனாய்க் கொண்டு
நித்ய விபூதியிலே இருக்கும் இருப்பைச் சொல்லிற்று ஆகவுமாம் –
நரனே –
ஏதத் இச்சாம் யஹம் ஸ்ரோதும் பரம் குதூஹலம் ஹி மே-மஹர்ஷே தவம் ஸ்மர்த்தோஸ் அஸி ஜ்ஞாது-
மேவம் விதம் நரம் -பால -1-5-என்கிறபடியே –அங்கு நின்றும் போந்து சக்கரவர்த்தி திரு மகனாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது –

உன்னை மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே-
அளவுடையரான நித்ய ஸூரிகள் தன்னை உள்ளபடி எல்லாம் அறிந்து ஸ்தோத்ரம் பண்ண –
தன் ஐஸ்வர்யம் எல்லாம் தோற்றும்படி பரம பதத்திலே இருக்கும் இருப்பைச் சொல்லிற்று –
அங்கு நின்றும் போந்து -அறிவுடையார் அறிவில்லாதார் -என்ற வாசி இன்றிக்கே இருந்ததே குடியாக எல்லாரும் ஒக்கத்
தன்னுடைய சீலாதி குணங்களுக்குத் தோற்று நெஞ்சு உளுக்கி
ராமோ ராமோ ராம பிரஜா நாம பவன்கதா -ராமபூதம் ஜகத்பூத் ராமே ராஜ்யம்பிரசாசதி –யுத்த -131-102-என்றும்
பால அபி க்ரீடா மாநா க்ருஹத் வாரேஷூ சங்கச -ராமாபிஷ்டவ சம்யுக்தா சக்ருரேவ மித கதா -அயோத் -6-16-என்றும்
சொல்லுகிறபடியே ஏத்தும் படியாக வந்து திரு வவதரித்து நிற்கும் படியைச் சொல்லிற்று –

அவை போலே அன்றிக்கே –
அவற்றின் கார்யமான தீம்பாலே பெண்களை ஓடி எறிந்து-தான் செய்தது விலக்காத படியாகப் பண்ணி
செய்தது அடையப் பொறுக்கும் படியான பிராப்தியையும் முன்னிட்டுக் கொண்டு வர்த்திக்கிற படியை சொல்லுகிறது –
முன்பே தீம்பனாய் இருக்கிற நீ -அதுக்கு மேலே ஒரு மைத்துனமை ஏறிட்டுக் கொண்டு
நலியப் புக்கால் எங்களால் நலிவு படாது இருக்கப் போமோ –நாங்கள் இங்கனே நலிவு பட்டு போம் இத்தனை யன்றோ முடிய –
எமக்கு –
ரூப ஔதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-என்கிறபடியே வன் நெஞ்சைரையும் கூட அழிக்குமது
பிறப்பே அபலைகளாய் இருக்கிற வர்களால் பொறுக்கப் போமோ -என்று
அவன் தீம்புகளுக்கு பொறுக்க ஒண்ணாமை தோற்ற சொன்னார்கள் இவர்கள் –
நானோ நீங்கள் அன்றோ முன் தீம்பு செய்திகொள்-நான் நினைவு அற்று இருக்க என் வரவைக் கடாஷித்து
சிற்றில் இளைத்து வைத்தி கோள்-என்றான்
அதுவோ -அது வாகில் உன்னுடைய வரவை உத்தேசித்துச் செய்தோம் அல்லோம் காண்-

காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்-சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே––
காமன் வரும் காலம் என்று –அவன் வரும் மாசத்திலே எங்கள் வாசல்களை அலங்கரித்தோம்
நாங்கள் உன் வரவைக் கடாஷித்து செய்யுமவர்கள் அல்லோம் –
உன்னைச் சேர்ப்பார் வரவைக் கடாஷித்து செய்யுமவர்கள் காண் நாங்கள்
ஆன பின்பு அது அன்யார்த்தம் -என்றார்கள் –

ஆகிலும் என்னதும் அன்யார்த்தம் என்னா- சிற்றிலை அழிக்கப் புக்கான் –
எங்களை ஆராக நினைத்து இருந்தாய் –பிராட்டி பரிகரமான எங்கள் பக்கல் அவை செய்யப் போமோ -என்றார்கள்
அவள் புருஷகாரம் ஆனால் தங்களை நலிய ஒண்ணாது என்னுமத்தை பற்றச் சொன்னார்கள் –
அத்தனையோ –அவளோடு ஒரு சம்பந்தம் நீங்களே சொன்னி கோளே-நான் ஸ்ரீ யபதி அல்லேனோ-
நான் செய்ததுக்கு நிவாரகர் உண்டோ -என்று அது தன்னையே- வழியாகக் கொண்டு அழிக்கப் புக்கான் –

தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே-
பிராட்டியோட்டை சம்பந்தம் எங்கள் பேற்றுக்கு உடல் என்று நினைத்து இருந்தோம் நாங்கள் –
அது அங்கன் அன்றிக்கே எங்கள் இழவுக்கு உடலாம்படி சிஷித்து விட்டாள் ஆகில்
எங்கள் சிற்றிலை அழியாதே –அவள் தன்னுடைய சிற்றிலைப் போய் அழி-என்கிறார்கள்

————————————————————————————-

சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதி வாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே–2-10-

சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று-
கதா நு சாறு பிம்போஷ்டம் தஸ்யா பத்ம மிவாநனம்-ஈஷதுன் நம்ய பாஸ்யாமி ரசாய நமிவோத்தமம் -யுத்த -5-13-என்கிறபடியே
பருவம் நிரம்பினவளோடே இத் தீம்புகள் செய்தால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது –
உன் நினைவு அறிந்து பரிமாறுகைக்கு அளவில்லாத எங்கள் சிற்றிலை வந்து சிதையாதே கொள -என்று

வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை-
எல்லாரும் திரளும் இடத்தில்
மறைக்க வேண்டுமவை மறைக்கை அறியாதே பரியட்டங்களை இட்டு வைத்து -ஸ்வைரமாக விளையாடுகிற பருவம்
நிரம்பாத இடைப் பெண்கள் உடைய நிரம்பா மென் சொல்லை –

வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
வாயால் உச்சரிப்பது அடங்கலும் வேத சப்தம் ஆகையாலே செய்வது அடங்கலும் வைதிக கிரியையாய் இருக்கிற
பிராமணர் வர்த்திக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு பிரதானரான பெரியாழ்வார் –

கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே-
திரு மகளுடைய -பகவத் அனுபவம் -வாச க்ரம வர்த்தித்வாத் -வழிந்து புறப்பட்ட சொல்லை அப்யசிக்க வல்லவர்கள் –
அணைத்த அநந்தரம்-இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –என்னுதல் –
அன்றிக்கே -காமன் காலிலே விழுதல் -செய்ய வேண்டாதே -அணைத்த அநந்தரம் -அருகு நிற்பாரும் எல்லாம்
பணியா அமரரான-திருவாய்மொழி -8-3-6- நித்ய சித்தராயாம் படியான தேசத்திலே போய்ப் புகப் பெறுவார்கள் –

———————————————————————

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே—3-1-

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
நாங்கள் ஒன்றை நினைத்து வர –அது ஒன்றாய் பலித்த படி கண்டாயே
கிருஷ்ணன் தான் ராத்ரி முற் கூற்று எல்லாம் பெண்களுடைய முலைகளோடும் தோள்களோடும் பொருது
உறங்குவது பிற்கூற்றிலே யாகையாலே
இக்காலத்தில் இவன் உணரான் என்று -அது பற்றாசாக வாய்த்து -இவர்கள் போந்தது –
இவர்கள் நினைவு இதுவானாலும் கோழி கூவினவாறே உணர்வான் ஒருவன் ஆயத்து
தாங்கள் உறக்க உறங்கி கோழி உணர்த்த உணர்ந்து போரும்படியை கண்டு
அந்வய வ்யதிரேகங்கள் இரண்டும் அறிந்து யாய்த்து போந்தது –

அழைப்பதன் முன்னம்-
இவன் தன்னை துடை தட்டி எழுப்புவாரைப் போலே கோழி கூவி எழுப்ப வேண்டும்படி யாய்த்து நித்ராபரவசனாய்க் கிடக்கும் படி-
இப்படி நம்மை மறைத்து நாம் உணருவதற்கு முன்னே நீங்கள் போந்தது என்ன காரியத்துக்குத் தான் -என்றான் –
குடைந்து நீராடுவான் போந்தோம்-
சரயூம் அவகாஹதே –ஆரண்ய -16-30-என்னுமா போலே உன்னோட்டை விரஹ தாபம் எல்லாம் ஆறும்படி குளிக்கப் போந்தோம் –
உன் வரவை நினைந்து போந்தோம் அல்லோம் -நீ வருவதற்கு முன்னே குளித்து மீள வேணும் என்னும் மநோ ரதத்தோடு போந்தோம்-
ஆனால் அதுக்கு வந்தது என் -செய்யலாகாதோ என்று அவனும் ஒன்றை நினைத்தான்
அதாவது தமிழர் கலவியை –சுனை நீராடல் -என்று ஒரு பேரை இட்டுப் போருவார்கள் –
அத்தைப் பற்ற தன் அபிமத சித்திக்கு உடலாக சொன்னான் அவன்

உனக்கு அது செய்ய ஒண்ணாது காண்-
உன் நினைவை எண்ணி வந்து தோற்றினான் காண் ஸ்ரீ மான் ஆதித்யன் -என்கிறார்கள்
ஆழியம் செல்வன் எழுந்தான் –
கடலிலே முழுகி எழுவாரைப் போலே தோற்றினான் -என்னுதல் –ஆழி -கடல் என்று கொண்டு
அன்றிக்கே -மண்டலத்தைச் சொல்லுதல் -வட்டம் -ஆதித்ய ரதத்தைச் சொல்லுதல் -தேர் சக்கரம் ஆழி –தனி ஆழித் தேர் -சிறிய திருமடல்
செல்வன் -ஸ்ரீ யபதியான நாராயணன் தன் பக்கலிலே பிராட்டியோடே சந்நிதி பண்ணும் படியான சம்பத்தை உடையவன்

அது பின்னே ஆர்க்கு அழகு -உங்களுடைய அங்க பிரத்யங்கங்களை அழகிதாகக் கண்டு அனுபவிக்கைக்கு உடலாகிறது –
நீங்கள் தான் ஒரு கார்யத்திலே உபக்ரமிக்கும் போது அது செய்து தலைக் கட்டுகைக்கு வேண்டும்
போது அறிந்து அன்றோ புறப்படுவது
நீங்கள் ஆரை நினைத்துப் போனது கோள்-என்ன-

அரவணை மேல் பள்ளி கொண்டாய்-
உன் உறக்கத்தை மெய் என்று போந்தோம்
வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை -14-3–என்கிறபடியே
இவ் வவதாரம் தான் இருபுரியூட்டி இருக்கையாலே -மனுஷ்யத்வமும் பரத்வமும் சேர்ந்து –
திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின படியையும் தங்களுக்கு விசதமாகச் சொல்லிற்று ஆகவுமாம்
அங்கன் அன்றிக்கே
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியை நினைத்து சொல்லிற்று ஆகவுமாம் –
பாற் கடலில் பையத் துயின்ற பரமன் என்றபடி
அங்கு கண் வளர்ந்து அருளின படியாகில் உன்னுடைய ரஷணத்தை விச்வசித்துப் போந்தோம் -என்றார்கள் ஆகிறது –
இங்கே பள்ளி கொண்டு அருளின படியால் -படுக்கை வாய்ப்பாலே நீ உணராதே உறங்குவுதி -என்னுமத்தை பற்றப் போந்தோம் என்கிறது —
அவன் உறங்கினானாகில் -அவ்வுறக்கத்தை அனுசந்திப்பார்கள் -உணர்ந்தானாகில் அத்தை அனுசந்திப்பார்கள் -வேறு ஓன்று அறியார்கள் இறே

நம் உறக்கத்தை விஸ்வசித்துப் போந்த உங்களுக்கு இப்போது வந்தது என் என்ன –

அழகிதாக இளிம்பு பட்டோம் -ஆகில் இனி இதுக்கு மேல் வருவது என் –
ஆற்றவும் பட்டோம் -மிகவும் பட்டோம் –
நீ நெடுநாள் எங்கள் கையில்-பிரணய ரோஷத்தாலே – பட்டது எல்லாம் ஒரு ஷணத்திலே நாங்கள் உன் கையில் பட்டோம் -என்கிறார்கள் –
ஆகில் இனி இதுக்கு பரிஹாரம் உண்டோ -அவசியம் அனுபோக்தவ்யம் அன்றோ -அத்தைத் தப்பப் போமோ இனி –
நீங்கள் தான் இதுக்கு போக்கடியாக நினைத்து இருந்தது என் -என்றான் –

இதுக்கு போக்கடி அற்றுப் போக வேணுமோ –
இனி என்றும் பொய்கைக்கு வாரோம்-
ஊரில் தான் பெண்கள் கிடாய் -கிருஷ்ணன் கிடாய் -என்று நியமிக்கையாலே உனக்குத் தோற்றிற்று செய்ய ஒண்ணாது –
பொய்கையில் தானே வாரோம் -இத்தனை யன்றோ என்கிறார்கள் –
வாரோம் என்று சொல்லி யன்றோ நீங்கள் வருவது -என்றான் –
அத்தைக் கேட்டு என்றும் வாரோம் -என்கிறார்கள் –

என்றும் வாரோம் என்று சொல்லி யன்றோ என்றும் வருவது -என்றான் –
இனி –என்றும் பொய்கைக்கு வாரோம் –
இவர்கள் வாரோம் இனி -என்றவாறே –தப்ப விழுந்தாகாதே -என்று அஞ்சி –
நம்மையும் இவர்களையும் சேர விடுவார் யாரோ -என்று பார்த்தான் –
இரண்டு தலையையும் சேர விடுகைக்கு பரிகரம் கை கண்டு வைத்தோம் –
இனி நம்மையும் இவர்களையும் சேர விடுகைக்கு அஞ்சலி அல்லது இல்லை என்று அறியுமே –
அது பார்த்துக் கொள்ளுகிறோம் -நீங்கள் என்னை அறியாமல் போந்ததுக்கு பரிகாரமாக கும்பிடுங்கோள் என்றான் –
என்றவாறே ஒரு கையாலே கும்பிட்டார்கள் –
அது ஒண்ணாது இரண்டு கையாலும் கும்பிடுங்கோள் என்றான் -ஆனால் –

தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே-–
அது போராது-நாலு கைகளாலும் தொழ வேணும் -என்றான்
தோழியும் நானும் தொழுதோம் —
இவர்கள் தொழச் செய்தேயும் கொடாதே -ஆன்ரு சம்சயம் கொண்டாடி இருப்பார் பக்கல் அன்றோ இது பலிப்பது –
பிரணயிநீ விஷயத்தில் வந்தால் நம் அபிமதம் பெற்று அன்றோ கொடுப்பது –என்று பின்னையும் ஒரு நிலை நிற்கிறான்
அந்த பிரணயித்வத்தை விடாய்-அஞ்சலிக்கு பல சித்தி உண்டு காண்-எங்கள் துகிலைத் தந்து அருள் –
உன் நினைவு ஒழியவும் பலிப்பது ஓன்று அன்றோ அது –திரு நாமத்துக்கு புடவை சுரந்து அருளியதே –
அஞ்சலி பரமா முத்ரா -என்னக் கடவது இறே –

——————————————————————

கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை
பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–3-10-

இத்தால் சொல்லிற்று யாய்த்து –
இவன் செய்யுமவற்றை அறியாதே சொன்னவற்றை மெய் என்று இருக்கைக்கும்
கால தத்வம் உள்ளது அனையும் அனுபவியா நின்றாலும் புதுமை மாறாதே இருக்கைக்கும் –
இவன் பண்ணும் தீம்புக்கு பாடாற்ற மாட்டாதே இருக்கைக்கும்
கன்னியர் என்கிறது

எங்கள் நம்பி –
பஞ்ச லஷம் குடியில் பெண்களை நலிகைக்கு ஈடான தீம்பாலே பூர்ணன் –

கரிய பிரான் விளையாட்டை-
அக வாயில்-தீம்பில்லை யாகிலும் -மேல் விழ வேண்டும்படி யாய்த்து வடிவு அழகு இருப்பது –

பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை-
இவ் விஷயத்தில் இவ்வளவான அவகாஹாநத்துக்கு அடி ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு யாய்த்து –

இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்-
பாட்யே கேயே ச மதுரம் -பால -4-8-எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்குமே –திருவாய் -7-9-11-

மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–
நித்தியமான ஸ்ரீ வைகுண்டத்திலே போய் ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடன் கூட நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

———————————

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-

காதாசித்க சம்ச்லேஷத்துக்கு தான் இன்று இருந்து கூடல் இழைக்கப் புக்கவாறே
நித்ய அனுபவம் பண்ணுகிறவர்களை நினைத்தாள்
தெள்ளியார் –
அவர்களும் சிலரே –
அலாபத்தோடே இருந்து கூடல் இழையாதே-லாபத்தோடு இருந்து -போது போக்குகிற வர்களும் சிலரே –
பிரியில் சர்வதா கூடல் இழைக்க வேணும் என்று அறிந்து-
பிரியாதே நித்ய அனுபவம் பண்ணும் அத்தனை -அளவுடையவர்கள் ஆயத்து –

பலர் –
த்ரிபாத் விபூதியாக அனுபவத்தோடு காலம் செல்லுகிறது இறே
இங்கு தான் ஒருத்தியுமாய் -கூடல் இழையா நின்றாள்
இங்கு வ்ருத்த கீரத்த நத்துக்கும் ஆளில்லை -அங்கு வ்ருத்த கீர்த்தனம் பண்ண வேண்டா –
பெற்ற அனுபவத்தை பேசிப் போது போக்காமல் நித்தியமாய் அனுபவம் செல்லுமே-

கைந்தொழும்-
நித்ய அஞ்சலிபுடா -என்கிறபடியே தொழுகையே யாத்ரையாய் இருக்குமவர்கள்

தேவனார்-
இவர்கள் தொழுது உளரானார் போலே இவர்களைத் தொழுவித்துக் கொண்டு உஜ்ஜ்வலனாகா நிற்குமவன்

வள்ளல் -மாலிரும் சோலை-
லுப்தனாய் இருக்குமவன் –கையிலே குவாலாக உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஓன்று கழியிலும் அத்தைக் குறைவாக நினைத்து இருக்குமா போலே
நித்ய விபூதியும் -நித்ய அனுபவம் பண்ணுவாரும் உண்டாய் இருக்கச் செய்தேயும் அவ்விருப்பு உண்டது உருக்காட்டாதே
சம்சாரிகள் இழவை அனுசந்தித்து
உடம்பு வெளுத்து அவ்விருப்பை இங்கு உள்ளாறும் பெற வேணும் என்னும் கிருபையாலே திருமலை அளவும் வந்து –
தன்னை அனுபவிப்பைக்கு அவசர ப்ரதீஷனாய் நிற்கும் நிலையைச் சொல்கிறது
நித்ய விபூதியும் தானுமாய் இருக்கச் செய்தே இறே இவை அழிந்தது கொண்டு ச ஏகாகி ந ரமேத – -என்கிறது
தன்னை சர்வ ஸ்வதானம் பண்ணி கொண்டாய்த்து நிற்கிறது –

மணாளனார்-
தன்னைக் கைக் கொள்ளுகைக்காக வந்து நிற்கும் இடமாய்த்து –
மணாளனார் –
ஸ்ரீ கோபீமாரைப் போலே யமுனா தீரங்களிலே பிருந்தா வனத்திலே இரவும் இருட்டும் தேடி ஒளி களவிலே யாக ஒண்ணாதே
ஸ்ரீ பெரியாழ்வார் பெண் பிள்ளையை –வேதப் பயன் கொள்ள வல்ல விட்டுச்சித்தர் –பெரியாழ்வார் -2-8-10-ஆகையாலே
ஒரு கோத்ர ஸூத்ரப்பட செய்ய வேணும் என்று வந்து நிற்கிறான் திருமலையிலே –கோத்ரம் -சாடு பர்வதம் –

மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து –
பிரணயிநி முகம் காட்டுவது ஓலக்கத்திலே அன்றே –படுக்கையிலே இறே -அதாகிறது –கோயிலாய்த்து –
பள்ளி கொள்ளும் இடமாகிறது கோயில் என்று பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று
பிள்ளை அழகிய மணவாள அரையர் பணிப்பர்
பள்ளி கொள்ளும் இடம் -ஏகாந்தம் –

அடி கொட்டிட
உணர்ந்து இருக்கும் போது அடிமை செய்து போகை அன்றிக்கே
பள்ளி கொள்ளும் போதும் அதுக்கு வர்த்தகமான அடிமை செய்து வர்த்திக்க வாய்த்து சொல்லுகிறது
ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே அன்வயிக்க வாய்த்து கணிசிக்கிறது
இது வாய்த்து பிராப்தி பலம் –நிலமகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10-

கொள்ளுமாகில் –
அதில் உபாய அம்சம் இருக்கும் படி-
அவன் நினைவாலே பேறாக வாய்த்து நினைத்து இருப்பது
முமுஷூக்களுடைய யாத்ரை இருக்கும் படி

நீ கூடிடு கூடிலே–
அவனாலே பேறு என்று இருக்கச் செய்தேயும்
அசேதனமான கூடலின் காலிலே விழும்படி இருக்கிறதே பிராப்ய த்வரை-

—————————————————————————

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–4-11-

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
ஊடலொடு கூடுகை -ஊடல் கூடல் –ஊடி இருப்பார்கள் இறே பெண்கள் –
இவன் தன குறைகளை அவர்கள் உணர்த்தும் படியும் –எங்களை பிரிந்து நலிந்தாய் போல – உணர்த்தி –
அவன் பின்பு ஷாமணம் பண்ணி புணரும் படியும் –
உங்கள் ஆசை அன்பு காதல் வேட்கை அவா வளர்க்கத் தான் பிரிந்தேன் -என்றன போல்வன சொல்லி -புணர்வான் இறே

முன் -நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்-கூடலைக்-
இவனோடு ஊடுவதும் கூடுவதும் -இதுவே யாத்ரையாய் புகழை உடைய திருவாய்ப்பாடியில் பெண்கள்
இத்தனையவருடையவும் பாசுரத்தையும்
நிறை புகழ் ஆய்ச்சியர் -என்கிறதுக்கு எம்பார் –
இவர்களுக்கு நிறை புகழாவது –கிருஷ்ணனை இன்னாள் நாலு பட்டினி கொண்டாள்-இன்னாள் பத்து பட்டினி கொண்டாள்
-என்னும் புகழ் காண்-என்று அருளிச் செய்வர் –

குழல் கோதை முன் கூறிய பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–
இவள் மயிர் முடியாலே அவனை கூடல் இழைப்பிக்க வல்லவள் –
பாவம் இல்லை –
இவளைப் போலே இப்படி பட வேண்டா –
சொன்ன இத்தை அப்யசிக்க வல்லார்க்கு கூடல் இழைக்க வேண்டா

———————————————–

மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்குண்டே
புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வரக் கூவாய்–5-1-

எல்லா பதார்த்தங்களையும் முறையிலே நிறுத்தக் கடவ அவன் –மணி முடி மைந்தன் அன்றோ –
முறை செய்யாவிடில் பொருந்த விடுகை உனக்கு பரம் அன்றோ -என்கிறாள்-

மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன் தன்னை உகந்தது காரணமாக -என் சங்கு இழக்கும்-
இத் தலையிலே குறை உண்டாய் இழக்கிறேனோ –
தன் பக்கல் குறை உண்டாய் இழக்கிறேனோ
மன்னு –
தர்மி உண்டாய் -குணங்கள் -நடையாடாத ஒரு போது உண்டாய் -நான் இழக்கிறேனோ –
பெரும் புகழ் –
குணங்களுக்கு அவதி உண்டு என்றும் -அது என் பக்கல் ஏறிப் பாயாது என்றும் நான் இழக்கிறேனோ –
புகழ் –
கல்யாண குணங்களே -கொண்டவன் அன்றோ -ஹேய குணங்களும் கலசித்தான் நான் இழக்கிறேனோ
உயர்வற உயர் நலம் உடையவன்–நிஸ் சீமம் – -நிஸ் சங்க்யம் -ஸ்லாக்யதை மூன்றுமே உண்டே
ஸ்வ பாவிக அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண-என்றால் போலே இருக்கிறது யாய்த்து –

மாதவன் –
இப்போது இக் குணங்கள் இன்றிக்கே ஒழிக –
அருகே இருந்து ந கச்சின் ந அபராத்யதி –யுத்த -116-44-என்று சேர்ப்பார் இல்லாமையால் தான் இழக்கிறேனோ
ஸ்ரீ வல்லப -என்றால் போலே இருக்கிறது
மாதவன் -மணி வண்ணன் –
தனக்காக வடிவு படைத்து இருப்பான் ஒருவனாய்த் தான் இழக்கிறேனோ
இழக்கலாம் வடிவாய்த் தான் இழக்கிறேனோ
ந தே ரூபம் ந சாகாரோ நாயுதா நி ந சாஸ்பதம்-ததா அபி புருஷாகாரோ பக்தா நாம் தவம் பிரகாசசே -ஜிதந்தே -1-5-
மணி முடி மைந்தன் –
இத்தனையும் உண்டானாலும் என்னைப் போலே பிறர் கை பார்த்து இருப்பான் ஒருவனாய்த் தான் இழக்கிறேனோ –
ஸ்வ தந்த்ரனாவது -ரஷணத்திலே தீஷித்து இருப்பான் ஒருவனாய்த்து –
மைந்தன் –
ரஷணத்தை ஏறிட்டுக் கொண்டாலும் பிரயோஜனம் இல்லை இறே -அசக்தனாய் இருக்குமாகில்
மைந்து -என்று வலியாய்-வலியை உடையவன் -என்றபடி –

தன்னை உகந்தது காரணமாக –
அப்ராப்த விஷயத்தை ஆசைப்பட்டேனா -இழப்பேன் நானோ
தன் திருவடிகளிலே சிலர் சாய்ந்தால் அநு பாவ்யங்கள் பின்னை அவர்கள் அநு பவிப்பார்களோ –
தான் அநு பாவித்தல் பரிஹரித்தல் -செய்யும் அத்தனை அன்றோ —சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்பவன் அன்றோ –
விஸ்ருஷ்டம் பகதத்தேன ததஸ்த்ரம் சர்வகாதுகம் -உறசா தாரயாமாசா பார்த்தம் சஞ்சாத்ய மாதவ -துரோண பர்வம் -29-18-
வழக்குண்டே
என் ஆர்த்தியைக் கண்டே ஓரம் பண்ணச் சொல்லுகிறேன் அல்லேன் –
மத்யஸ்த புத்தியாலே பார்க்கச் சொல்லுகிறேன் அத்தனை
ந வாஸூ தேவ பக்தா நாம ஸூ பம் வித்யதே கவசித் -என்றும்
ந மே பக்த ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -9-31-என்றும் சொல்லக் கடவது இறே
கௌந்தேய பிரதீஜா நீஹி –அர்ஜுனா இவ்வர்த்தத்தில் நின்றும் நம்மை விச்வசித்து பிரதிஜ்ஞை பண்ணு
ந மே பக்த ப்ரணச்யதி -நம்மைப் பற்றினார்க்கு ஒரு காலும் அநர்த்தம் வாராது காண்-

புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே-
என்னுடைய சோகத்து அடியான அக்குணப் பரப்போபாதியும் போந்து இருந்ததீ உன் களிப்புக்கு அடியான படுக்கை வாய்ப்பும்
நான் தரைக் கிடை கிடக்க நீ படுக்கையிலே பொருந்துவதே
எனக்கு மென் மலர்ப்பள்ளி வெம் பள்ளியாய் இருக்க நீ படுத்த படுக்கை பரப்பு இருந்த படியே-
இத்தை விட்டு உனக்கு செய்ய வேண்டுமத்தை சொல்லலாகாதோ என்ன –

பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வரக் கூவாய்–
ஒரு கால் சொல்லி விடுகை அன்றிக்கே பலகாலும் இருந்து ஆனை இடர்பட்ட மடுவின் கரையிலே
அரை குலைய தலை குலைய வந்து விழுந்தால் போலே விரைந்து வந்து
என்னோடு கலந்து போகிற சமயத்தில் அணைத்து ஸ்மிதம் பண்ணி வரும் அளவும் ஜீவித்து இருக்கும்படி
விளை நீர் அடைத்து போன போதை செவ்வியோடும்
அதரத்தில் பழுப்போடும் வந்து அணைக்கும் படியாக கூவப் பாராய் -என்கிறாள்

——————————————–

விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி
கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்
பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே–——————5-11-

நிகமத்தில்
இத் திருமொழியை அப்யசித்தவர்கள் ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தத்தை பெறுவார் –என்கிறாள்-

விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை –
ஒருவர் பக்கலிலே ஒன்றைக் கொள்ள நினைத்தால் அவர்களுக்கு பின்னை ஒன்றும் சேஷியாதபடி கொள்ளுகிறவனை-

வேல் கண் மடந்தை விரும்பி-
அவனை இப்பாடு படுத்தும் இப் பரிகரம் உடையவள் தான் ஆதரித்து –
வேல்கள் ஒரு முகம் -ஓன்று கூடி -ஒரு முகத்திலே அமைந்து –செய்து நிற்கச் செய்தே கிடீர் தான் ஈடுபட்டது அவனுக்கு –

கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்-
கண்ணுற –
அவன் தன்னை வேலுக்கு இரையாக்கத் தேடுகிறாள் –
என் கண்ணுக்கு விஷயமாம்படி ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் வரும்படி –
கூவு கரும் குயிலே என்ற மாற்றம்–
உன் வடிவைக் காட்டி அவன் வடிவுக்கு ஸ்மாகரமான நீ என்னையும் அவனையும் சேர்க்க வேணும் –
என்று சொன்ன பாசுரமாய்த்து –

பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன-
ஸ்வர பிரதானமான நாலு வேதங்களும் வைத்து இருப்பவர்கள் –
ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான பெரியாழ்வார் திருமகள் சொன்ன –

நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே——
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றிக்கே
விஷயத்தை மாறுபாடுருவும் படி அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லவர்கள்
நமோ நாராயணாய வென்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே -என்று இறே தமப்பனார் வார்த்தை
இக் குடிக்காக உள்ளதோர் ஆசை இறே இது –மங்களா சாசனம் -அதுவே பலமாகப் பெறுவர்-
நல்லாண்டு என்று நவின்று பல்லாண்டு என்று உரைப்பார் நமோ நாராயணா வென்று -பல்லாண்டும் ஏத்துவர் இ றே
தத் க்ரது நியாயத்தாலே பேறாகையாலே-க்ரது -சங்கல்பம் -இங்கே சங்கல்ப்பித்த பேற்றை அங்கே பெற்று அனுபவிக்கப் பெறுவர்
யதா க்ரதுரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி -சாந்தோக்யம் -3-1-14-உபாசனம் போலே பேறு
காதாசித்கமாகை தவிருகையே உள்ளது
பிராப்ய பூமியிலே புக்கிருந்து இப் பாசுரம் சொல்லி அனுபவிக்கப் பெறுவர் –

————————————————-

வாரண மாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-1-

வந்து புகுந்தால் அனுபவிக்கை அன்றிக்கே -வாரா நின்றான் -என்று ஊரிலே வார்த்தை யானவாறே தொடங்கி
அனுபவிக்க வேணும் என்றால் போலே காணும் இவள் தான் ஆசைப் பட்டு இருப்பது –
அவனுடைய கதி சிந்தனை பண்ணுகிறாள் யாய்த்து –

வாரண மாயிரம் சூழ வலம் செய்து
உந்து மத களிற்றன் பிள்ளை இறே
ஸ்ரீ நந்தகோபரும் ஆனை ஏறி இறே திரிவது
ஸ்ரீ வஸூ தேவரும் ஸ்ரீ நந்தகோபரும் தங்களில் மித்ரராய் –
ஏகம் துக்கம் ஸூ கஞ்ச நௌ-கிஷ்கிந்தா -5-18-என்று இருக்கிறபடியால்-
இங்குத்தை கோ சம்ருத்தி அவரதாய்-அங்குத்தை யானை குதிரை இவரதாய் -ஒன்றாய் பரிமாறி இறே போருவது-
இனி தத்த புத்ரர்களுக்கு இரண்டிடத்திலும் அம்சம் உண்டாய் இறே இருப்பது
ஆகையால் யானைக்கு குறை இல்லை இறே
ஆயிரம் –என்ற நிர்பந்தத்துக்கு கருத்து என் என்னில்
தன்னேராயிரம் பிள்ளைகளும் –தளர் நடை இட்டு வருவான் –பெரியாழ்வார் திருமொழி -3-1-1-தானுமாக வரும் போது
அவர்களைத் தன்னில் தாழ்வாக ஒட்டானே –ஆகையாலே ஆயிரம் -என்கிறது
தம்மையே நாளும் வணங்கித் தொழுவாருக்கு தம்மையே ஒக்க அருள் செய்து இறே வைப்பது –

நாரண நம்பி –
நாரண –
உபய விபூதி யுக்தன் வருமா போலே இருக்கும் போலே காணும்
ஸ்ரீ மதுரைக்கும் திருவாய்ப்பாடிக்கும் கடவராய் வரும் போது –
நம்பி –
உபய விபூதி யோகத்தால் வந்த குணங்கள் சொல்லக் கேட்டு போம் அத்தனை இறே
அக்குணங்கள் பூரணமாக அனுபவிக்கலாவது அவதாரங்களிலே இறே
குறைவாளருக்கு முகம் கொடுத்த இடத்தில் இறே சௌலப்யம் அனுபவிக்கலாவது
தாழ்ந்தாருக்கு முகம் கொடுத்த இடத்திலே இறே இக்குணங்கள் ஸ்புடமாவது
செவ்வைக் கேடர் பக்கலிலே இறே அவனுடைய ஆர்ஜ்வாதி குணங்கள் காணலாம்

நடக்கின்றான் என்று –
குசஸ்தலே நிவசதி ச ச ப்ராதரி ஹேஷ்யதி-இன்ன இடத்திலே வந்து விட்டான் -அணித்தாக வந்துவிட்டான் என்னும்
அது தானும் தரிப்புக்கு உடலாக இருக்கும் இறே –
சாபாத் அபி சராத் அபி -என்னும் விச்வாமித்ராதிகளை கொடு வரவும் வேண்டா விறே இங்கு –
இரண்டாலும் சம்ஹரிக்கிறேன் என்று ஸ்ரீ பரசுராம ஆழ்வான் வார்த்தை
கடகரும் வேண்டாவோ என்ன -சாபம் -விஸ்வாமித்ரர் -சரம் –பெருமாள்
அஸ்த்ர சிஷை பண்ணுவிப்பவர் என்பதால் இரண்டும் விச்வாமித்ரருக்கு என்னவுமாம் –

எதிர் பூரண பொற் குடம் வைத்து –
எதிரே பூர்ண கும்பங்களை வைத்து

புரம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்-
தோரணம் நிறைந்து எங்கும் தொழுதனர் –திருவாய்மொழி -10-9-2-என்னக் கடவது இறே-
இங்குள்ளார் அங்குப் போம் போது-
அதுக்கும் அடியானவர்கள் வரவுக்கு உடலாக அலங்கரிக்கும் படி சொல்லுகிறது இங்கு –
புரம் –
பட்டணம் –புறம்-ஊர்ப் புறம் -புறச் சோலைகள் என்றுமாம் –

கனாக் கண்டேன் தோழீ நான்–
கதிரில்லி போலே -ஜன்னல்கள் போலே –இல்லயில் கதிர் -ஜால கரந்தரத்தில் கதிர் -ஸூ சம த்வாரம் – இருக்கிற
பாஹ்ய இந்த்ரியங்களாலே அனுபவிக்கிற ஜ்ஞானம் கொண்டு அனுபவிக்கை அன்றிக்கே
நேரே ஹிருதயத்தாலே ஒரு முகம் செய்து அனுபவிக்கப் பெற்றேன் காண்-
ஆனுகூல்யம் உடையார் சொல்லுதல் -தாய்மார் போல்வார் -சொல்லுதல் -நீ சொல்லுதல் செய்யக் கேட்கை -அன்றிக்கே
நான் உனக்குச் சொல்லலாம்படி அனுபவித்தேன் காண்

–—————————————————————

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—6-11-

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
அவனுக்கு அனந்யார்ஹையாக தான் கண்ட கனாவினை -என்னுதல்-
அவன் பேற்றுக்கு -உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்ற பேற்றுக்கு உறுப்பாக தான் கண்ட கனா என்னுதல்
ந ஜீவேயம் -என்பாரது இறே பேறு-ஒரு ஷணமும் உயிர் வாழாத எம்பெருமான்
திங்கள் புக்கு இருப்பாரதன்றே —மாசாதூர்த்த்வம் -ஒரு மாசம் ஜீவிப்பேன் என்ற பிராட்டி யுடையது அல்லவே-

வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
ஆப்திக்கு ப்ராஹ்மணராலே ஸ்துதிக்கப் பட்டு இருக்கிற ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான
ஸ்ரீ பெரியாழ்வார் திருமகள் ஸ்ரீ ஸூக்தியான

தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர் வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—
அனுபவத்துக்கு பாசுரமிட்ட அத்தனை அல்லது நெஞ்சோடு கூட கவி பாடிற்று அல்லவாய்த்து –
இவளோடு ஒத்த தரத்திலே பெண்கள் இத்தை அப்யசித்தார்கள் ஆகில்
ஸ்ரீ கிருஷ்ணனைப் போலே இருக்கும் வரனைப் பெறுவர்கள்
புருஷர்கள் அப்யசித்தார்கள் ஆகில் ஸ்ரீ பெரியாழ்வாரைப் போலே
பகவத் பிரவணரான புத்ரர்களைப் பெற்று ஹ்ருஷ்டராவார்கள் –
ஆண்டாளுக்கும் உப லஷணம் -பகவத் பிரவணரான புத்ரர்கள் என்றது
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே –பெரியாழ்வார் -1-7-11-என்றார் இறே
தாம் கை கண்டவர் ஆகையாலே –

———————————————–

கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ
திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே –7-1-

அத்தை நித்ய அனுபவம் பண்ணுகையாலே உனக்குத் தெரியும் இறே –
அவனுடைய வாக் அம்ருதம் இருக்கும் படி என் -நீ சொல்ல வல்லையே -என்று அவனைக் கேட்கிறாள் ஆய்த்து –
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ-
எறிச்சு வெட்டியதாய் இருக்கும் கற்பூர நாற்றம் -பிரகாசிக்கையும் உறைப்பும் உண்டே
ஆறிக் குளிர்ந்து நிலை நின்று இருக்கும் கமலப் பூவினுடைய நாற்றம்
இரண்டுமேயாய் இராது இறே
சர்வ கந்த -என்கிற வஸ்து வாகையாலே -எல்லாம் அனுபவ விஷயமாய் இருக்கச் செய்தே-
ஒன்றை இரண்டை- கேட்கிறாள் அத்தனை -யாய்த்து
எல்லாம் -நீச்சு நீரும் நிலை நீரும் போலே அனைத்தும் உண்டே
இதில் உனக்குத் தான் ஏதேனும் தெரிந்து இருக்குமாகில் நீ தான் சொல்ல வல்லையே -என்கிறாள்-

திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ-
அத்தைத் தப்பி உள்ளே இழிந்தால் அனுபவிக்கும் படி கேட்கிறாள் –
சர்வ கந்த -என்கிற இது போலே –சர்வ ரச -என்கிற இது விகல்ப விஷயமாய் இருக்கிறது இல்லை போலே காணும்-
தேன் போலே கன்னல் போலே போலே இருக்குமோ என்று விகல்ப்பித்து கேட்க மாட்டுகிறிலள்-ஆய்த்து –
வாய்ப்புக்கு நீராய் ஆழம் காலாய் இருக்கையாலே –
வாய்ச்சுவையாய் திகைக்க வைக்கையாலே இரண்டாவதை கேட்க மாட்டாதவள் ஆனாள்
வாயிலே புகுகிற ரசம் -சாடு
திருப் பவளச் செவ்வாய் –
கண்ணுக்கு இலக்கான போதே பிடித்து அவ்வருகு ஒன்றில் இழிய ஒட்டுகிறது இல்லை யாய்த்து –
சர்வ இந்த்ரியங்களுக்கும் விஷயம் உண்டாய் இருக்கிறபடி –

மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்-
அளவுடையார் இழிந்து ஆழம் கால் படும் துறை யாய்த்து
சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்கள் உண்டாய் இருக்கையாலே -எல்லா இந்த்ரியங்களுக்கும் இரை போடுவது அன்றோ இது –
பர்த்தாரம் பரிஷச்வஜே -ஆரண்ய –30-40-என்கிறபடியே குவலயா பீடத்தை தள்ளின அநந்தரம் அணைத்து அனுபவிக்கும் யாய்த்து
வாய்ச் சுவையும் நாற்றமும் –
அனுபவ சமயத்திலே நாற்றம் முற்பட்டதே யாகிலும் அநு பாஷிக்கிற இடத்தில் ரசம் முற்பட்டு கந்தம் பிற்பட்டு இருக்கிறது காணும் –

விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே —
அநஸூயவே–ஸ்ரீ கீதை -9-1-என்னும் விளம்பமும் இல்லை
ந ச மாம் யோ அப்ய ஸூ யதி -ஸ்ரீ கீதை -18-67-என்ன வேண்டா விறே இவளுக்கு
அடியானாகையாலே நியமித்து கேட்கலாமே
அவனுக்கு சேஷ பூதனாகையாலே இவளுக்கும் அடியானாய் இருக்கும் இறே –
பர்த்ரு பார்யைகள் இருவருக்கும் பொதுவாய் இறே தாச தாசிகள் இருப்பது
ஆழி –
உன் அளவுடமை போலே இருக்க வேண்டாவோ பரிமாற்றம் –
கடல் போன்ற விசாலமான மனப்பரப்பைச் சொல்லுதல்
அன்றிக்கே பிறப்பைச் சொல்லுதல் -கடலிலே பிறந்தவன் என்றுமாம்
கடல் அனைத்துக்கும் தாரகமானால் போலே என்னையும் நீ பதில் சொல்லி தரிக்கப் பண்ண வேணும்
வெண் சங்கே –
உன் நிறத்தில் வெண்மை நெஞ்சிலே பட்டால் போலே உன் வார்த்தையும் நெஞ்சிலே படும்படி சொல்ல வேணும்
வெண் சங்கே
கைவிடாதே அனுபவியா நிற்கச் செய்தே உடம்பு வெளுக்கும் படி இறே இவனுடைய ஆற்றாமை
நீ எனது ஆற்றாமையையும் அறிவாயே அதனால் பதில் சொல்ல வேணும் –

———————————————————

பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும்
வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே-–7-10-

பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும் வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கேட்டாள்
தன்னோடு உண்டான உறவு அறுத்து அவனோடு சேர்த்து விடுகிறாள்
அநந்ய கதிகளான எங்கள் ஜீவனத்தை கைக் கொண்டாயாகில்
மற்றும் இத்துறையில் இழிந்தவர்களுடைய ஜீவனத்தையும் நீயே கொள்-

ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே—
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடே சிறு பாறு என்றாள்-என்றால்-தகாதோ
ஸ்ரீ பெரியாழ்வார் பெண் பிள்ளை அன்றோ -பெறும் -என்னும் புகழ் யாய்த்து
அனுசந்தித்துக் கொண்டு சொல்ல வல்லார்கள்
அவரும் அணுக்கரே—
அவர்களும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடே சிறு பாறு என்ன உரியர் ஆவார்
நாய்ச்சியாரைப் போலே அவரும் அண்ணியர் ஆவார்
ஒண் புதுவை ஏய்ந்த புகழ் –
விசேஷணங்கள் பட்டர் பிரானுக்கும் கோதைக்கும் சேரும் –
வாய்ந்த பெறும் சுற்றம் –
கிட்டின பேருறவு
ஆய்கை –
சோதிக்கை மனசாலே ஆராய்கை-அனுசந்தித்து -என்றபடி-

—————————————————–

விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திரு மாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே –8-1-

விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்-
ஆகாச அவகாசம் அடங்கலும் வெளியடையும்படி நீலமாய்
இருப்பதொரு மேற்கட்டி கட்டினால் போலே யாய்த்து இருக்கிறது –
மேகங்கள் வந்து பறம்பின போது நாயகனும் தானுமாக வெளி ஓலக்கம் இருக்கைக்கு வெளியிலே ஒரு ஈத்தொற்றி
கட்டிற்றாக வாய்த்து நினைத்து இருக்கிறாள் –
உபய விபூதியும் இருவருக்கும் சேஷமாய் இறே இருப்பது
ஜகத் சிருஷ்டிக்கு பிரயோஜனம் இது வென்று இருந்தாள் யாய்த்து
மேகங்காள் –
திருவடி ஒருவனுக்கே வார்த்தை சொன்னால் போலே சொல்ல வேணும் என்னும் நிர்பந்தம் இல்லையே இவளுக்கு
சேயமாசாதி தா மயா-சுந்தர -30-3–என்று குறைப்பட்டு இருக்குமவையும் அன்றே இவை
மயா -எல்லாரும் காண வேணும் என்று தேடுகிற விஷயம் நான் ஒருவனுமே காண்பதே -என்றான் இறே
யாம் கபீ நாம் சகஸ்ராணி இ றே
ராஜாக்கள் வரும் இடத்துக்கு ஜலக்ரீடைக்கு பரிகரமான -மேகம் -என்கிற ஜாதி முன்னே வரக் கடவதாய் இருக்கும் இறே –
அவனோடு ஜலக்ரீடை பண்ணி அவன் நனைக்க நனைந்த உடம்போடு வந்தன -என்று இருந்தாள்

தெண்ணீர் பாய் வேங்கடத்து –
தெளிந்த அருவிகள் ஒழுக்கு அறாதே பாய்கிற திருமலையிலே –
அவன் இருக்கிற தேசத்தில் உள்ளவை எல்லாம் தெளிந்து இருக்கும் இறே
உபதத்தோதகா நத்ய பலவலாநி சராம்சி ச -அயோத்யா -59-5-என்று இறே இவ்விடம் கிடக்கிறது-

என் திரு மாலும் போந்தானே-
அக்ர தஸ்தே கமிஷ்யாமி –அயோத்யா -27-6-என்று அவள் முன் நடக்க காணும் வந்தது
என் திருமால் -என்று தன்னோடு சேர்த்து சொல்லுகிறாள் இறே
போந்தானே -என்றால் -ஓம் போந்தான் என்ன வல்லார்க்கு இறே வாய் உள்ளது
அவை பேசாதே இருந்தன
அசேதனம் ஆகையாலே வார்த்தை சொல்ல மாட்டா என்று அறிய மாட்டாதே
அவன் வாராமையால் இறே இவை இவை பேசாது இருக்கின்றன என்று
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
கண்ணா நீர் வெள்ளம் இடத் தொடங்கிற்று
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் -சுத்தர -33-4-என்று வேறு சிலர் சொல்ல வேண்டாதே தானே சொல்லு கிறாள்
கிமர்த்தம்
ஆர் குடி வேர் பறியத் தான் இக்கண்கள் சோக ஸ்ரு பிரவகிக்கிறது -அன்றிக்கே
பிராட்டியைக் கண்ட பின்பு இங்கு படை யற்று ஆரைச் சேதனராகக் கொண்டு தான் என்னுதல்

முலைக் குவட்டில் துளி சோர
மேகங்கள் நித்ய வாஸம் பண்ணுகையாலே இறே அவன் திருமலையை விடாது ஒழிகிறது
திருமலையை தன் உடம்பில் படைத்துக் காட்டுகிறாள்
மேகங்கள் வர்ஷித்தவாறே அருவிகள் சிதறி வந்து சிகரங்களிலே விழுந்தால் போலே யாய்த்து
கண்ண நீர்கள் முலைக் குவட்டிலே விழுகிறபடி-
துளியும் சோர- நானும் சோருகிறேன்-என்கிறாள் அல்லள்-
அக்னி கணங்கள் பட்டால் போலே துளி சோர தானும் சோருகிறாள் அத்தனை
அதுவே ஹேதுவாக சோருகிற என்னை-

பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே —
எல்லா அவஸ்தையிலும் –தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்கிறபடியே
அத்தலையாலே பேறாக நினைத்து இருக்கும் அதுவே ஸ்த்ரீத்வம் ஆவது
அத்தை அழியா நின்றான் ஆய்த்து –
நானயோர்வித்யதே பரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-85-என்னக் கடவது இறே
அன்றியே ஸ்த்ரீத்வ பும்ச்வத்வங்கள் இரண்டும் தங்கள் பக்கலிலே பர்யவசிதம் என்று போலே காணும் இருப்பது
மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -என்று இறே இவள் படி
வரத சகலமேதத் சம் ஸ்ரீ தார்த்தம் சகரத்த -ஸ்ரீ வரதராஜ சத்வம் -63-என்று இறே அவன் படி
இப்படி இருக்கை இறே ஸ்த்ரீத்வ பும்ச்த்வங்களுக்கு எல்லை யாவது-

பெண்ணீர்மை ஈடழிக்கை யாவது என் என்றால் –போந்தானே -என்று இவள் வார்த்தை கேட்க இருக்கை-
தன் பேற்றுக்கு தான் பிரவர்த்திக்க வேண்டும் படி இருக்கை
தமக்கோர் பெருமையே –
ஸ்ரீ யபதித்வத்தால் வந்த உத்கர்ஷத்தை உடையராய் இருக்கிற தமக்கு
அவளோடு அனந்யராய் இருப்பார் நோவு பட முகம் கொடுத்திலர்-என்றால் அத்தால் வரும் அவத்யம் தம்மது அன்றோ
அவள் அவயவ கோடியில் உள்ளார் நோவு பட விட்டு இருந்தான் என்றால் அத்தால் வரும் ஸ்வரூப ஹானி தம்மதன்றோ
தமக்கு வரும் ஸ்வரூப ஹானி வேறு சிலரோ பரிஹரிப்பார்
தமக்கே பரிஹரிக்கை பரம் அன்றோ
அன்றிக்கே –
யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் ஹி தத் தேஜ-என்கிறபடியே
தனக்கு ஏற்றமாம் படி இருக்கிற ஸ்ரீ பெரியாழ்வார் திரு மகள் தம்மை ஆசைப் பட்டு பேராதே நோவு படா நின்றாள் என்றால்
இது தமக்கு போருமோ -நோவு படாத படி பரிஹரிக்க வேண்டாவோ -என்னுதல் –

—————————————-

நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே–8-10-

நாகத்தின் அணையானை நன்னுதலாள்
நீங்கள் செய்து அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது –
அத்தலையில் ஒரு குறையும் இல்லை
நம் வரவுக்கு உறுப்பாக படுக்கை படுத்து சாய்ந்து கிடந்தான்-வேங்கடக் கோன் என்கையாலே
நன்னுதலாள்
அப்படுக்கையிலே துகைத்து ஏறத் தகும் அவயவ சோபை உடையவள்

நயந்து உரை செய்-
ஆசைப் பட்டுச் சொன்ன விண்ணப்பம்

மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
ஸ்ரீ ராமாவதாரத்தில் ஐந்தர வியாகரண பண்டிதனைத் தூதாக விட்டது
இங்கே திருமலையிலே மேகங்களை தூதாக விடா நின்றாள்
இதுவே வாசி
அங்கு நின்று வந்தாரையே விடுகை இரண்டு இடத்திலும் ஒக்கும்
அவ்வதாரத்தில் பிற் பாடர்க்கு இழக்க வேண்டாத படி -திருமலையிலே வந்து தூது விடுவார் ஆரோ என்று
அவசரம் பார்த்து இரா நின்றான் யாய்த்து –

போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ் ஆகத்து வைத்துரைப்பார்
பகவத் போகத்தில் ஒன்றும் தப்பாத படி எல்லா வகையாலும் அனுபவித்த
ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பாய்த்து இவ்வாசைக்கு ஊற்று
விபவம் உண்டான வன்று தொடக்கி போகத்தில் அன்வயித்தவர் இறே ஸ்ரீ பெரியாழ்வார்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – என்று தொடங்கி அனுபவித்தவர் இறே

இது அப்யசிக்கைக்கு எவ்வளவு அதிகாரம் வேணும் எனில்
ஆகத்து வைத்து உரைப்பாரவர்-
ஒருத்தி ஒரு விஷயத்தை ஆசைப் பட்டு படும் பாடு என் என்று அனுசந்தித்து சொல்ல வல்லவர்கள் –

அவர் அடியார் ஆகுவரே–
மேகங்களை தூது விட வேண்டாதே –
இவள் தான் மேகங்களை தூது விட்டதுவே ஹேதுவாக
இவள் ஆசைப் பட்ட கைங்கர்யத்தைப் பெற்று வாழப் பெறுவார்
சேஷத்வம் த்யாஜ்யம் -என்று இறே புறம்பு உள்ளார் நினைத்து இருப்பது
சேஷத்வம் புருஷார்த்தம் என்று கேட்கலாவது இவ் வாழ்வார்கள் பக்கலிலே இறே
அபிமத விஷயத்தில் தாஸ்யம் போகமாய் இருக்கும் இறே
இதர விஷயங்களில் சேஷத்வம் இறே கழிகிறது -வகுத்த விஷயத்தில் சேஷத்வம் உத்தேச்யமாகக் கடவது
அந்ய சேஷத்வமாய்த்து தவிர்க்கிறது –

——————————————————-

சிந்துரச் செம்பொடிப் போல் திரு மால் இருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்றுய்தும் கொலோ–9-1-

திருமலையைக் கண்ணாலே கண்டாகிலும் தரிப்போம் என்றால் அதுவும் கூட அரிதாம்படி யாவதே –
நம் தசை இருந்த படி -என் என்கிறாள் –
அவன் நாட்டில் குன்றும் கொடியவோ ஒன்றும் தோன்றா -என்பார்கள் இறே
அவன் தன்னைக் காணப் பெறாவிடில் நாட்டில் மலைகளும் தோன்றாது ஒழிய வேணுமோ -என்னா நிற்பார்கள் ஆயத்து –
அவன் வடிவுக்கு போலியான திருமலையைக் கண்டாகிலும் தரிப்போம் என்று பார்த்தால் அதுவும் அரிதாம் படி யாவதே
இந்திர கோபங்கள் மறைக்கையாலே –

சிந்துரச் செம்பொடிப் போல்-
சிந்துரம் -சாதி லிங்கம் —செம்மை
ஒரு மத்த கஜம் போலே யாய்த்து திருமலை –
அது சிந்துரிதமானாப் போலே இரா நின்றதாய்த்து இவை வந்து பரம்பின போது –
மத்த கஜத்துக்கு துவரூட்டினால் போல் இரா நின்றதாய்த்து –சிந்துரம் -சிவப்பு நிறம் -செம் -அழகு
சிந்துரம் இலங்கத் தன் திரு நெற்றி மேல் -பெரியாழ்வார் -3-4-6-

திரு மால் இருஞ்சோலை எங்கும்
ஜகத் எல்லாம் -என்றபடி
ஜகத்தாவது -கண்ணுக்கு விஷயமாய் இருப்பது ஓன்று இறே
இவள் கண்ணுக்கு விஷயம் திருமலையை ஒழிய இல்லை யாய்த்து –

இந்திர கோபங்களே –
பிரகாரம் வானரீக்ருதம்-யுத்த -41-99–என்னப் பெற்றது இல்லை –
இலங்கை அடங்க ராஷசரேயாய் இருக்குமா போலே யாய்த்து –

எழுந்தும் பரந்திட்டனவால்-
ஏஷை வாசம் –சதே லங்காம் -யுத்த 26–20/22-என்னுமா போலே
பூமியிலே தோன்றுவன சிலவும் –
ஆகாசத்திலே எழும்புவன சிலவும் –
நாலடி யிட்டு மேலே விழுந்தால் போலே இருப்பன சிலவுமாய் இரா நின்றன வாய்த்து –
இந்திர கோபங்கள் எம்பெருமான் கனிவாய் ஒப்பான் சிந்தும் புறவில் –பெரியாழ்வார் -4-2-9-என்கிறபடியே
திரு வதரத்தில் பழுப்புக்கு ஸ்மாரகமாய் நின்றது யாய்த்து –

மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
ஒருவர் பக்கலிலே ஓன்று கொள்ளப் புக்கால் பின்பு அவர்களுக்கு ஒன்றும் தொங்காத படி கொள்வான் ஒருவன் யாய்த்து
மந்திர பர்வத்தைக் கொடு வந்து -கடலின் நடு நெஞ்சிலே நட்டு நெருக்கி –
தானே அகவாயில் உள்ளது காட்டிக் கொடுக்கும் படி கடைந்தாய்த்து வாங்கிற்று –
மந்திர மூட வாத -இத்யாதி
ஒருவரால் கலக்க ஒண்ணாத பெரிய தத்வங்களையும் கலக்கி அவர்கள் பக்கல் உள்ளது கொள்வான் ஒருவன்
ஸ்த்ரீத்வ அபிமானத்தாலே -நம்மை வந்து மேலிட்டு அழிக்கை யாவது என் -என்று இருந்தாள் போலே காணும் இவள் தானும் –

மதுரக் கொழுஞ்சாறு கொண்ட-
தான் கொண்ட பிரயோஜனத்தைக் குறித்து –
அல்லாதார் கொண்ட பிரயோஜனமாக நினைத்த உப்புச் சாறு கடலில் ஜலத்தோபாதி இறே –
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது உண்டவனாய்த்து –பெரிய திருமொழி -6-1-2–

சுந்தரத் தோளுடையான் –
நெருக்கினானே யாகிலும் கை விட ஒண்ணாதாய் யாய்த்து தோள் அழகு இருப்பது

சுழலையில் நின்றுய்தும் கொலோ–
அவன் நம்மைத் தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளப் பார்த்த சுழலை யாய்த்து இம் மேக சிருஷ்டி –
அத்தைத் தப்பி உஜ்ஜீவிக்க வல்லோம் ஆவோமோ –
மேகோதா யஸ் சாகர சந்நிவ்ருத்தி -என்னக் கடவது இறே -எல்லாம் அவனது விசித்ரமான மாயைகள் தானே –
ஒரு மஹா பாஹூ நம்மை அகப்படுத்துக்கைக்கு பார்த்து வைத்த வலையைத் தப்பி நாம் உஜ்ஜ்ஜீவிக்கை என்று ஒரு பொருள் உண்டோ
இனி முடிந்தே போம் அத்தனையே அன்றோ –
சுழலை -சூழ் வலை –

————————————————–

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –9-10-

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
பிறந்தகத்தில் நின்றும் புக்ககத்துக்கு போம் ஸ்திரீகள் தனம் கொண்டு போம் போலே யாய்த்து
தடங்கள் பொருது –
ஒரு மத்த கஜம் கரை பொருது வருமா போலே
சிலம்பாறுடை –
பரமபததுக்கு விரஜை போலே யாய்த்து திருமலைக்கு -திருச் சிலம்பாறு

சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –
சுந்தரனை -சர்வாங்க ஸூ ந்தரனை யாய்த்து கவி பாடிற்று
சுரும்பார் குழல் கோதை-
தன்னுடைய ஏகாங்க சௌந்தர்யத்தாலே -இவை அடையக் குமிழ் நீர் உண்ணும் படி பண்ண வல்லவள் யாய்த்து இப்பாடு பட்டாள்
தொகுத்து உரைத்த –
ரத்னங்களைச் சேரத் திரட்டினால் போலே கல்யாண குணங்களை சேர்த்துச் சொன்ன
செந்தமிழ்
செவ்விய தமிழ் -பாவ பந்தம் வழிந்து சொல்லாய்ப் புறப்பட்ட இத்தனை –
திருமாலடி சேர்வர்களே –
பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்ய வேணும் என்று யாய்த்து இவள் ஆசைப் பட்டது –
அப் பேறு பெறுவார்கள்
அஹம் சிஷ்யா ச தாஸீ ச பக்தா ச புருஷோத்தம -ஸ்ரீ வராஹ புராணம் -ஜ்ஞாதயங்கள் அடங்கக் கேட்டதும் உம்மோடே-
தாஸீ ச -பெரிய பிராட்டியாரும் நீரும் சேர இருந்து -இன்னத்தை எடு -இன்னத்தை வை – என்றால் அப்படியே செய்ய உரியேன்
பக்தா ச –
உம்முடைய அடியாரோடு கூடிக் கவி பாட உரியேன்
ஒரு வ்யக்திக்கே இப்படி அநேக ஆகாரமாக பிரிய ஒண்ணுமோ -இப்படிக் கூடுமோ -என்னில்
புருஷோத்தம –
நீர் புருஷோத்தமர் –
நீர் எவ்வளவு அழிக்க வல்லீர் அவ்வளவும் அழியும் அத்தனை யன்றோ எதிர் தலை –
ஆறு பெருகி ஓடா நின்றால்– வாய்த் தலைகளாலும்-கை வாய்க் கால்களாலும் பிரியுண்டு போகா நின்றாலும்
கடலில் புகும் அம்சம் குறைவற்றுப் புகும் இறே -அப்படியே எல்லா வகையாலும் அனுபவியா நின்றாலும்
அபிநிவேசம் குறையாது இருக்குமாய்த்து இவர்க்கு —

——————————————————

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்
ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது அணி துழாய்த்
தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ–10-1-

கார்க்கோடல் பூக்காள் –
கார் காலத்தில் கோடல் பூக்காள் பூத்த பூக்களே -என்னுதல்
கார் -பெருமை -பெருத்த கோடல் பூக்காள் – என்னுதல்
அன்றிக்கே –
அவை தான் நாநா வர்ணமாய் இருக்கும் இறே -அத்தாலே கறுத்த நிறத்தை உடைத்தன என்னுதல் –
கால பரமான போது -அவன் குறித்துப் போன காலத்துக்கு ஸ்மாரகமாகா நின்றன -என்றாகிறது –
மற்றைப் போது -அவன் வடிவுக்கு ஸ்மாரகமாக நலிகிற படியாகிறது-

கார்க்கோடல் பூக்காள் –போர விடுத்து
முதலிலே தன்னோடு கலந்து பிரியக் கடவனாக நினைத்த அளவிலே தன்னை நலியக் கடவதாக-
இப் பதார்த்தங்களை அவன் அடியிலே சிருஷ்டித்து விட்டான் என்று இருக்கிறாள்
ஜகத் சிருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷம் -என்று இருக்கை தவிர்ந்து –
தன்னை நலிகைக்கு உடலாக உண்டாக்கினான் என்று இருக்கிறாள்
ஒரு விஷயத்தை பிரிந்து நோவு படுவார்க்கு இத்தனை பதார்த்தங்கள் பகையாவதே –
பிராட்டியை பிரிந்த அநந்தரம்-ராஷச ஜாதியாக பகையானால் போலே
மூல பலத்தின் அன்று ராஷச ஜாதியாக சூழப் போந்தால் போலே பார்த்த பார்த்த இடம் எங்கும்
இவையேயாய்க் கிடவா நின்றன
விண்ணீல மேலாப்பு விரித்தால் போலே -என்ற இடத்தில்
வாயு ப்ரேரிதமாக கொண்டாகிலும் சஞ்சரிக்கைக்கு யோக்யதை யுண்டு இறே மேகங்களுக்கு –
அங்கன் கால் வாங்க மாட்டாதே நிற்கிறவற்றுக்கு வார்த்தை சொல்லுகிறாள் இறே கலங்கின படியாலே
பூக்காள்
உங்களுடைய ஸ்வாபாவிகமான மென்மையைப் பொகட்டு
ஓர் அபலையை நலிகைக்கு இவ்வன்மையை எரித்துக் கொண்டு வருவதே –

கார்க் கடல் வண்ணன் –
கறுத்த நிறத்தை யுதைத்தான கடல் போன்ற நிறத்தை யுடையவன்
இதர பதார்த்தங்களினுடைய சத்பாவம் ஸ்வ இச்சாதீனமாய் இருக்குமா போலே இவ் விக்ரஹ பரிக்ரஹமும்
ஸ்வ இச்சாதீனமாய் இருக்கும் இறே
இவ் விக்ரஹத்தை ஏறிட்டுக் கொண்டதும் தன்னை நலிகைக்கு என்று இருக்கிறாள்

எம் மேல் –
கலக்கையும் கூட மிகையாம்படி -ஆஸ்ரயமும் கூட இன்றிக்கே இருக்கிற என் மேல்
உம்மைப்-
நலிகைக்கு ஏகாந்தமான நிறத்தை ஏறிட்டுக் கொண்டு வந்து நிற்கிற உங்களை
விரஹத்தால் முன்பு தொட்டார் மேல் தோஷமாம் படி சென்று அற்று இருக்கிற என் மேல் –
உம்மை
மென்மை இன்றிக்கே வன்மை உடையாரையும் முடிக்க வல்ல உங்களை
நிர்ஜீவ சரீரத்திலேயும் உயிரைக் கொடுத்து நலிய வல்லவை என்று இருக்கிறாள் –
அவன் நிறத்தைக் காட்டி உயிரை உண்டு பண்ணி நலியவற்றவை -என்றபடி –

போர்க் கோலம் செய்து –
இந்த்ரஜித் வதத்துக்கு இளைய பெருமாளை பெருமாள் அலங்கரித்து புறப்பட விட்டால் போலே
தன்னை முடிக்கைக்கு இவற்றை ஒப்பித்துப் போர விட்டான் என்று இறே இருக்கிறாள்
அங்கு பிரணயிநியைப் பிரித்தாரை முடிக்கைக்காக புறப்பட விட்டான் -சக்கரவர்த்தி திரு மகன்
இங்கு பிரணயிநியை முடிக்கைக்கு கிருஷ்ணன் தனது தீம்பாலே இவற்றை வர விட்டான் என்றாய்த்து நினைத்து இருக்கிறது
செய்து –
இவற்றுக்கு நிறம் கொடுத்தான் அவன் இறே
கிருஷ்ண ஏவ ஹிலோகா நாம் உத்பத்திரபி சாப்யய -பார -சபா -38-23-

போர விடுத்து அவன்
இவற்றுக்கு த்வரை போராது என்று பார்த்து -நீங்கள் போங்கோள் -என்று அவன் தானே பின்னே நின்று
த்வரிப்பிக்கிறான் என்று இறே இருக்கிறாள்
ராஜாக்கள் எதிரிகள் அரண் அழியா விட்டால் தாங்கள் முகம் தோற்றாமே நின்று
தங்களுக்கு அசாதாரண சிஹ்னமான சத்ர சாமராதிகளை போக விடுமா போலே
இவற்றுக்குத் தன் நிறத்தைக் கொடுத்து போக விட்டான் அவன் என்று இறே இருக்கிறாள்
நம்மை நலிகைக்கு உடலாக இவற்றை உண்டாக்கினான் அன்றாகில் நம் கண் வட்டம் ஒழிய நிறுத்தவுமாமே-

எங்குற்றான்-
தேன நாதேன ந மஹதா நிர்ஜகாம ஹரீச்வர -பால -1-68-
மஹா ராஜ ருடைய மிடற்று ஓசையின் தசைப்பைக் கேட்டு முன்பு போலே கோழைத் தனமாய் இருந்ததில்லை
ஓரடி இவனுக்கு உண்டாக வேணும் நமக்கு இரை போருமாகில் பார்ப்போம் -என்று புறப்பட்டான் இறே
அப்படியே இவற்றினுடைய உத்தியோகம் இருந்த படியையும் பாதகத்வம் இருந்தபடியும் கண்டோமுக்கு
இவற்றின் அளவல்ல -அவன் பின்னே வந்து நின்றான் -என்று எங்குற்றான் -என்கிறாள்
தன்னை முடிக்க நிற்கிற இவற்றை -எங்குற்றான் -என்கிறது என் என்னில்
இவை முடிக்கை தவிராதாகில் அவ்வடிவை ஒரு கால் கண்டு முடியலாம் என்னும் அத்தாலே
நம் அபிமதமும் பெற்றோமாகில் பெறுகிறோம்
அவன் நினைவும் தலைக் கட்டிற்று ஆகிறது
இவளுக்கு அபிமதம் அவன் வடிவைக் காண்கை-அவனுக்கு அபிமதம் இவளை முடிக்கை
எங்குற்றான் என்றாள் இங்குற்றான் என்று அவற்றுக்கு மறுமாற்றம் சொல்ல வேண்டும்படி இறே தன் அவஸ்தை தான்
ஷிப்ரம் ராமாய சம்சத்வம் –ஆரண்ய -49-32-
அவற்றுக்கு –கோதாவரிக்கு -அபிமானியான தேவதா முகத்தாலே யாகிலும் வார்த்தை சொல்லுகைக்கு யோக்யதை உண்டு இறே அங்கு
அதுவும் இல்லை இறே இவற்றுக்கு
இவை ஒரு வார்த்தை சொல்லக் கேட்டிலள்
இவை ஒரு வார்த்தை சொல்ல மாட்டா என்று அறியாதே
அவன் வாராமையாலே இறே இவை பேசாதே நிற்கிறது -என்று பார்த்து –

ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது –என்கிறாள் –
அவனோ வந்திலன் –
அவன் விபூதியோ நமக்கு பகையாய்த்து
வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிப்போம் என்றால் போத யந்த பரஸ்பரம் –பண்ணுகைக்கும் ஆள் இல்லை யாய்த்து
இனி நாம் ஆர் வாசலிலே கூப்பிடுவோம்
அவன் நமக்கு பாதகனான அன்றும் அவன் விபூதி ஓர் அகத்தடியாராய் நம் கருத்திலே நிற்கும் என்று இருந்தோம்
அதுவும் அவன் கருத்திலே நின்ற பின்பு நாம் இனி யார் வாசலிலே கூப்பிடுவோம் –

அணி துழாய்த் தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ–
அவனும் அவன் விபூதியும் ஒரு மிடறானால்-நானும் என் விபூதியும் ஒரு மிடறாகப் பெற்றேனோ
அதுவும் -அவன் திருமேனியில் சாத்தின திருத் துழாய் மாலை என்றவாறே உடை குலைப் படா நின்றது
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-என்னக் கடவது இறே
அதுவும் இப்போது பந்தகமாய்விட்டது அத்தனை –
நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் –
நெஞ்சு எனக்கு இல்லாவிட்டால் நானோ தான் எனக்கு உளனாய் இருக்கிறேன்
நெஞ்சுக்கு ஆஸ்ரயமான தேக பரிக்ரஹத்துக்கு அடியான கர்மம் பண்ணினேன் நானே அன்றோ –
அந்தோ –
அவன் இல்லை யாய்த்து
அவன் விபூதி இல்லை யாய்த்து
தான் இல்லை யாய்த்து -ஸ்த்ரீத்வ ஸ்வரூபம் இல்லையே
தன் விபூதி இல்லை யாய்த்து
இத் தசை கண்டு இரங்கி கிருபை பண்ணுகைக்கு புறம்பு ஒருவரும் இல்லை யாய்த்து
தன் தசைக்கு தானே இரங்கி ஐயோ என்கிறாள் –

—————————————————-

நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-

தோழியானவள் இவள் தன்னிலும் காட்டிலும் இழவு பட்டு –
இவள் தனக்கு பேற்றுக்கு உடலாக நினைத்து இருப்பது இரண்டை
பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பையும்
அவன் -அனுகூல்யம் உடையாரை விடேன் -என்ற வார்த்தையும் யாய்த்து –
அது தன்னிலும் அதி சங்கை பண்ணா நின்றாள் –
இவள் ஜீவித்தாளாய்த் தலைக் கட்டுகைக்கு ஒரு வழியும் கண்டிலோம் –
எவ்வழியாலே இவளை தரிப்பிப்போம் -என்று இருந்தாள்
அவளைப் பார்த்து -நீ அஞ்ச வேண்டா காண் -நமக்கு ஜீவிக்கைக்கு ஒரு விரகு கண்டேன் -என்கிறாள் –

நல்ல வென் தோழீ –
என்னிலும் என் இழவுக்கு நொந்து இருப்பாய் நீயே இறே
நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
அநந்த சாயியாய் -ஸ்ரீ யபதியுமாய் -உயர்ந்தார் ஒருத்தரை இருக்கிறவரை
அதி ஷூத்ரராய் இருக்கிற நம்மால்-செய்யலாவது உண்டோ –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று சரணம் புக ஒருப்பட்டவர்
அதுக்கு உறுப்பாக –அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்றும்
தன் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தவை தன்னையும் இழவுக்கு உடலாகச் சொல்லி
கை வாங்கும் படி காணும் கண்ணாஞ்சுழலை இட்ட படி –

நாகணை மிசை நம் பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
நாகணை மிசை-
அநந்த சாயியாய் இருக்கைக்கு மேற்பட இல்லை இ றே ஒருவனுக்கு ஏற்றத்துக்கு
நம் பரர் –
அநந்ய பரமான வாக்யங்களாலே பிரசித்தமான பரத்வத்தை உடையவர்
நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர -நாராயண பரம் ஜ்யோதிர்
ஆத்மா நாராயண பர –இத்யாதிகளில் -படியே
செல்வர் –
ஸ்ரீ யபதிகள்
அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -திருவாய் -2-8-1-
ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்கிறபடியே ஆகையாலே
பெரியர் –
நமக்கும் அவனுக்கும் பர்வத பரம அணுக்களோட்டை வாசி போரும்
சிறு மானிடவர் –
தேவ யோநியிலே பிறந்து சிறிது அணைய நிற்கையும் அன்றிக்கே
ப்ராஜ்ஞராய் அவனோடு அணைய நிற்கவும் அன்றிக்கே
அதி ஷூத்ரரான மனுஷ்யர்
நாம் செய்வது என்
முன்பே ஒரு வார்த்தை சொல்லி வைத்தார் என்பதையே கொண்டு நம்மாலே அவரை வளைக்கப் போமோ-

ஆனால் நாம் இழந்தே போம் அத்தனையோ -என்ன -நமக்கு இழக்க வேண்டா காண்
த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம் கார்யம் சீதயா மம-பரதேன மஹா பாஹோ லஷ்மணேன யவீயஸா -யுத்த -41-4-
என்றவனுக்குச் சொல்ல வேண்டுவதும் ஒரு விஷயம் உண்டு காண்
நீ பின்னையும் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தது என் என்ன-

வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–
சர்வ சாதாரணமாக இருக்கும் வஸ்து என்று பற்றக் கடவது அன்று
ஆச்சார்யனுக்கு விதயம் அவ்வஸ்து –விஷ்ணு சித்தே யஸ்ய -அனந்தன் பாலும் -5-4-8–
அவன் வழியாலே நமக்குக் கிடைக்கும் என்று இருக்க அடுக்கும்
சம்பந்தம் நமக்கும் அவனுக்கும் ஒக்கும் என்று நினைக்கலாகாது
சம்பந்தம் நித்தியமாய் இருக்கச் செய்தே இறே இந்நாள் வரை கிடந்தது
தங்கள் தேவரை -என்று தன்னோடு உறவு அறுத்து
ஸ்ரீ பெரியாழ்வார் உடன் சேர்த்து சொல்லுகிறாள்
ஸ்ரீ பெரியாழ்வார் உகந்தது என்றாய்த்து உகந்தது
திரிபுரா தேவியார் வார்த்தையை நினைப்பது –

வல்ல பரிசு வருவிப்பரேல்
ஒரு பூவை இட்டு வரப் பண்ணவுமாம்-2-7-பூ சூட்டு பதிகம்
ஒரு இசையைச் சொல்லி இசைவிக்கவுமாம் -திருப்பல்லாண்டு –
கிழியை அறுத்து வரப் பண்ணவுமாம்-வேண்டிய வேதங்கள் ஓதி கிழி அறுத்து
திருமஞ்சனத்தைச் சேர்த்து அழைக்கையுமாம்-2-4- நீராட்ட பதிகம்
திருக் குழல் பணியைச் சேர்த்து வைத்து அழைக்கவுமாம்
அன்றிக்கே திருவந்திக் காப்பிட்டு அழைக்கவுமாம் -2-8- காப்பிட்டு பதிகம்
வெண்ணெய் அளைந்த குணுங்கும் –ஆ நிரை மேய்க்க நீ போதி–இந்திரனோடு பிரமன் -இத்யாதிகள் அநேகம் இறே
அன்றிக்கே
நான் தம்மை முன்னிட்டால் போலே -தமக்கு புருஷகாரமாவாரை முன்னிட்டு வரப் பண்ணவுமாம்
வல்ல பரிசு –ஆசார்ய பரம்பரையை முன்னிட்டு -என்றபடி
அது காண்டுமே
அவ வழியாலே பெறக் கடவோம்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே
த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று சரணம் புக்கு வைத்து பிரபத்தி பண்ணினோம்
நாம் ஆகையாலே அதுவும் போட்கனாகக் கூடும் என்று
அக்குறை தீர ஸ்ரீ நாத முனிகளை முன்னிட்டால் போலே ஸ்ரீ பெரியாழ்வாரை முன்னிடுகிறாள் –

——————————————————————-

தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கும் என் கையில் சங்கமும் ஏந்திழையீர்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே–11-1-

இவ் வவசாதத்தில் வந்து நீர் உதவாது ஒழிந்தது என் -என்று கேட்டால்
இன்னத்தாலே என்று தமக்கு மறுமாற்றமாக சொல்லலாவது ஓன்று உண்டு என்று நினைத்து இருக்கிறாரோ கேளி கோள்-
என் உகப்பில் குறை உண்டாயோ -வளை இழந்து அவன் வளையை ஆசைப்படுகை -என் உகப்பு –
தம் உகப்பில் குறை உண்டாயோ -தம் உகப்பு -என் வளையைக் கைக் கொள்ளுகை
தம்முடைய ரஷணத்தில் குறை உண்டாயோ -கோயிலிலே சேருகையே ரஷணம்-
என்னுடைய ரஷ்ய ரஷண பாவத்தில் குறை உண்டாயோ -முகத்தை நோக்காரால்-என்று இருக்கை-
எத்தாலே நான் உதவிற்றிலன் -என்று சொல்ல இருக்கிறார்
தம் கையில் குறை இல்லை
என் கையில் குறை இல்லை
இனி என் சொல்லுவதாக இருக்கிறார் –
ஸ்வ தந்த்ரராய் இருப்பார் தாம் நினைத்தது செய்து தலைக் கட்டும் இத்தனை யன்றோ -என்று
சொல்ல நினைத்து இருக்குமதுவும் வார்த்தை அல்ல –
பரம பிரணயி அன்றோ-
பர தந்த்ரராய் இருப்பார் செய்த படி கண்டு இருக்கும் அத்தனை அல்லது நிர்பந்திக்கக் கடவர்களோ என்று
நினைத்து இருக்குமத்தும் வார்த்தை யல்ல
எனது ஆற்றாமையை அறிவாரே
நம் கையில் உள்ளது ஒன்றும் கொடோம் –பிறர் கையில் உள்ளது கொள்ளக் கடவோம் -என்று
நினைத்து இருக்குமதுவும் வார்த்தை யல்ல
வன்மையுடையார் செய்தபடி கண்டிருக்கும் அத்தனை அன்றோ மென்மையுடையார் என்று நினைத்து இருக்கக் கடவர் அல்லர்

உம்முடைய கையில் வளை நீர் கொடாது ஒழிகிறது என் என்று கேட்டால் –
நான் உகந்து இருக்கையாலே -என்று சொல்ல நினைத்து இருக்கிறாரோ -அது பின்னை பிறர்க்கு இல்லையோ
கையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமுமான அழகை போலே காணும் இவள் தானும் கனாக் கண்டு -ஆசைப்பட்டு கிடக்கிறது –
நாமும் கனாக் கண்டு -ஆசைப்பட்டு -கிடப்பது இத்தை அன்றோ என்று சொல்ல இறே அவரும் நினைத்து இருப்பது
அது தமக்காகக் கண்டதோ —ந தே ரூபம் நா யுதா நி —பக்தாநாம் -என்று அன்றோ இருப்பது
தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ-யாமுகக்கும் என் கையில் சங்கமும் -என்று சேர்த்து
தாம் உகந்தது நம் கையில் கிடக்கும் அத்தனை
பிறர் உகந்ததும் நம் கையில் கிடக்கும் இத்தனை
நாம் உகந்ததும் கொடோம் -பிறர் உகந்ததும் கொடோம் -என்று நினைத்து இருக்குமது அழகோ
உகந்தார் உகந்தது பெறுதல் -உடையார் உடையது பெறுதல் செய்ய வேண்டாவோ
உகந்தார் உகந்தது பெறும் போது-தன் கையில் உள்ளவை என் கையில் வர வேணும்
உடையார் உடையது பெறில் என் கையிலவை என் கையில் கிடக்க வேணும்
இரண்டும் சம்ச்லேஷத்தை ஒழியக் கூடாது இறே-

வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் -5-2-என்று ஒரு சங்கு பெற ஆசைப் பட்ட என்னை
தான் கொண்ட சரி வளைகள்-8-5-என்று ஒரு ஜாதியாக இழக்கும் படி பண்ணுவதே
ஈஸ்வர ஜாதி -என்ற ஒரு ஜாதி உண்டாகில் இறே தம் கையில் வளையோடு சஜாதீயம் உண்டு என்று சொல்லலாவது –
தம் கையில் வளை ஆபரணமாகத் தோற்றுகையாலே-அவன் கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் ஆபரணமாக தோற்றுகிறது
அத்தனை அல்லது ஆயுதமாகத் தோற்றுகிறது இல்லை காணும் இவளுக்கு
நாரீணாம் உத்தமையாய் வளை இட்டால் போலே அவன் புருஷோமத்வத்துக்கும் வளை இட்டான் என்று இருக்கிறாள் யாய்த்து –

ஏந்திழையீர்
ஏந்தப் பட்ட இழையை உடையீர் -தரிக்கப் பட்ட ஆபரணத்தை உடையீர்
பிரளயத்திலும் தப்பிக் கிடப்பாரைப் போலே நீங்கள் எங்கே தப்பிக் கிடத்தி கோள்
மயூரச்ய வநே நூநம் ரஷசா ந ஹ்ருதா ப்ரியா -கிஷ்கிந்தா -1-40-என்று இருவராய் இருப்பாரை எல்லாம்
பிரித்தான் என்று இருந்தார் இறே பெருமாள் –
அப்படியே வளை கையில் தொங்கினார் ஒருவரும் இல்லை என்று இருந்தாள் போலே காணும்
நீங்கள் தப்பிக் கிடந்தபடி எங்கனே -என்கிறாள்
அவனோடு கலந்து பிரிந்த படியால் ப்ராதேசிகம் ஆகமாட்டாது என்று தோற்றி இருந்தது ஆய்த்து –
ஆபரணம் இழந்தார் வழக்கு ஆபரணம் பூண்டு இருந்தார் பக்கலிலே கேட்கும் அத்தனை இறே
குறையாளர் வழக்கு குறைவற்றார் பக்கலிலே இறே கேட்பது
யுவாக்கள் வழக்கு சன்யாசிகள் பக்கலிலே அன்றே கேட்பது -யுவாக்கள் பக்கலிலே இறே கேட்பதுவும்
நீயும் சில நாள் வைத்துக் கொண்டு இரு -என்பார் பக்கல் அன்றே கேட்பது
ஆண்களோ பாதி இறே இவளுக்கு ஓடுகிற தசை அறியாமைக்கு இவர்களும் –

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
இவர்களை விடீர்
நம் தசையை அறிவான் ஒருவனாய் வைத்து அவனுக்கு உடம்பு கொடுக்கிறவனைச் சொல்லீர் -ஆதி சேஷனை –
விச்லேஷத்தால் வரும் வ்யசனம் அறியான் இத்தனை போக்கி சம்ச்லேஷ ரசம் அறியான் இல்லையே –
சம்ச்லேஷம் தான் நித்தியமாய் இருக்கச் செய்தேயும் பிரிந்தார் படுமது படுமவன் யாய்த்து
இப்படிப் பட்டவன் தான் அவனுக்கு முகம் கொடுக்கக் கடவனோ
என்னை ஒழிய அவன் போகத்தில் அனுபவிக்கப் புக்கால் –போகம் -சர்ப்ப சரீரம் -அனுபவம் –
போகியான தான் உடம்பு கொடுக்கக் கடவனோ
ஸ்ரீ பெரியாழ்வாரோ பாதியாக விறே நினைத்து இருப்பது
தான் வெறுத்து இருக்க பிறந்தகத்து உற்றார் புக்ககத்து உற்றாரோடு கை வைத்தால்
சொல்லுமா போலே சொல்லுகிறாள் இறே
தங்கள் தேவரை என்றாள் இறே
பிதுர் நிதேசம் நியமேன க்ருத்வா -சுந்தர -28-84–இவ்விடத்தில் வார்த்தையை சொல்லிக் கொள்வது –

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
நொந்தாரை ஐயோ என்று தண்ணளி பண்ண வேண்டி இருக்க
எதிர் விழிக்க ஒண்ணாத படி நெருப்பை உமிழ்ந்தால் போலே இரா நின்றதாய்த்து
அவர் தமக்கும் இவனோடு ஒரு குருகுல வாசம் பண்ண வேண்டி இருந்தது வெட்டிமைக்கு
அன்றிக்கே
தான் படுக்கையிலே சாயப் புக்கால் விரோதி போக்குகைக்கு வேறு ஒரு ஆயுதம் தேட வேண்டாத படி இருப்பான் ஒருவன் ஆய்த்து
உகவாதார்க்கு வந்து கிட்ட ஒண்ணாத படியாய் இருக்கை
கிட்டினார் உண்டாகில் –வாய்த்த மதுகைடவரும் வயிறுருகி மாண்டார் –மூன்றாம் திரு -66-என்று
முடிந்து போம் படி இருக்குமவன் -என்னுதல்
சேரும்
அவர் படி விசஜாதீயமாய் இரா நின்றது
இருவருக்கு படுத்த படுக்கையில் தனியே சாய வல்லவராவதே
திருவரங்கர்
ஆர்த்த ரஷணம் பண்ணப் போந்தவர்
அத்தை மறந்து
படுக்கை வாய்ப்புக் கொண்டாடி -சாய்ந்து கிடந்தது -உறங்கா நின்றார்
இவ்வளவில் பரம பதத்தில் இருந்தார் என்று தான் ஆறி இருக்கிறேனோ –

ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே–
ஆ -கெட்டேன்
முகத்து நோக்காரால்
பிரிந்தால் கழற்ற வேண்டுவது பிரணயித்வம் அன்றோ
கண் நோக்கமும் தவிர வேணுமோ -கண்ணால் நோக்குவதையும் கருணையையும் விட வேணுமோ
அம்மனே அம்மனே
பிரிந்து ஆற்றாத சமயத்திலே -அனுசந்தித்தால் நா நீர் வரும்படி இருக்குமவர்
புலி சர்ப்பம் என்றால் போலே நினைக்கவும் பயாவஹமாம் படி யாவதே
இவர் படி இருந்தபடி என்
இவர் ஸ்வ பாவம் போய் வேறுபட்ட படி என்
ப்ராப்த பலோ ஹி பீஷ்ம -சாந்தி -46-139-என்று முடியும் அளவில்
முகத்திலே விழிக்கலாவதும் ஆண்களுக்காய்க் கொள்ளீர் –

——————————————-

செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —11-10-

நிகமத்தில் –
செம்மை யுடைய திருவரங்கர் –
மநோ வாக் காயங்கள் மூன்றும் மூன்று படியாய் இருப்பாரை ஒருங்க விடுகைக்கு –
தாம் மநோ வாக் காயங்கள் மூன்றும் ஒருபடிப் பட்டு இருக்குமவர் –
ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -ஸ்ரீ கீதை -5-29-என்கிறபடியே -சோபனமான ஹ்ருதயத்தை உடையராய் இருப்பார்
குற்றம் செய்தாரையும் விட மாட்டாதே –ந த்யேஜ்யம்-என்று வார்த்தை சொல்லுமவர்
அது தன்னை அர்த்த க்ரியாகாரியாக்கிக் கொண்டு கோயிலிலே சாய்ந்து அருளினார் –

தாம் பணித்த-
நினைவும் சொலவும் செயலும் ஒருபடிப் பட்டவர் தாம் அருளிச் செய்த –

மெய்ம்மைப் பெரு வார்த்தை –
யதார்த்தமுமாய் –-மெய்மை –சீரியதுமாய் —பெரு —ஸூ லபமுமான –வார்த்தை என்பதால் -மூன்றும் சேர்ந்த வார்த்தை யாய்த்து –
அதாவது –
உன் கார்யத்துக்குனான் உளேன் -நீ ஒன்றுக்கும் கரையாதே -உன் சர்வ பரத்தையும் என் தலையிலே சமர்ப்பித்து நிர்ப்பரனாய் இரு -என்று
திருத் தேர் தட்டிலே அருளிச் செய்த வார்த்தை
பிள்ளை அர்ஜுனனுக்கு அன்றோ சொல்லிற்று இவர்க்கு என் என்னில் அவன் சர்வ சமனாகையாலே-
என் கார்யம் என்னால் செய்ய ஒண்ணாது -என்று இருப்பார் எல்லாருக்குமாக அடியிலே சொன்ன வார்த்தை இறே
ஆகையாலே இவர் கேட்டிருக்கக் குறை இல்லை –

விட்டு சித்தர் கேட்டிருப்பார்
அவ்வார்த்தையை கேட்ட பின்பு
உபாயத்வேன விலங்கின துரும்பு நறுக்கி அறியார்
பிராப்யத்வேன வேண்டிற்று எல்லாம் செய்வர் –

தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்-நாட்டு வார்த்தை –
நீ ஆர்க்கு நல்லை என்றால்-நல்லார்க்கு நல்லான் -என்ற ஒரு வழக்குச் சொல் உண்டு –
நல்லாருக்கு தீயார் உண்டோ என்றும் உண்டு
இவை இரண்டும்

தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —
தாமே இத்தை அந்யதா கரிக்கப் புக்கால்
இங்கனே செய்யக் கடவது அல்ல -என்று தம்மை நியமிக்க வல்லார் உண்டோ
உண்டானால் தான் செய்வது என்
உம்மை உகந்தவளை நீரும் உகக்க வேணும் -என்று கட்டி அடித்து உகப்பிக்கவோ –

————————————————-

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–12-1-

அத்தலையாலே பேறு என்று அறுதியிட்டால் அவன் வரும் அளவும் க்ரம பிராப்தி பார்த்து ஆறி இருக்க வேணும் காண்-
நீ இங்கனே பதறலாகாது காண் -என்ன
என் தசையை அறியாதே சில சொல்லுகிற உங்களுக்கும் எனக்கு வார்த்தை சொல்ல பிராப்தி இல்லை —
உங்கள் வார்த்தையைச் செவி தாழ்த்துக் கேட்கைக்கும் எனக்கு பிராப்தி இல்லை என்கிறாள் –

மற்று –
வேறாய் இருந்தீர்கட்கு -என்னுதல் –
மற்று –உரைப்பது எல்லாம் -என்று மேலே கொடு போய்-அந்வயித்தல்-
இருந்தீர்கட்கு அறியலாகா –
ஏக தேச வாசமே போராது காணும் கோள்-
எனக்கு ஓடுகிற தசை அறிகைக்கு-இருந்தீர்கட்கு-நான் இருந்த தேசத்திலே நீங்களும் இருந்தி கோள் என்னா-
எனக்கு ஓடுகிற தசை உங்களால் என்னை அறியப் போகாதே –
பக்த்யா சாஸ்த்ராத் வேதமி ஜனார்த்தனம் -உத்த -68-5- சஞ்சயன் வார்த்தை -என்னக் கடவது இறே
மாயம் ந சேவே -இத்யாதி –
சாஸ்த்ரத்தில் வாசனை உனக்கும் எனக்கும் ஒக்கும் -புத்தி யோகத்திலும் எனக்கு குறையில்லை
இங்கனே இருக்கச் செய்தே உனக்கு அர்த்தம் உள்ளபடி பிரகாசியா நின்றது –
எனக்கு நீ சொல்ல கேட்க வேண்டி இரா நின்றது -இதுக்கடி என் -என்ன
நான் வஞ்சன பரன் அல்லேன் –சல தர்மங்கள் அனுஷ்டித்து அறியேன் -ஸூத்த ஸ்வ பாவனாய் இருப்பவன்
நீ கற்ற வரியடைவு கொண்டு அறிய விரும்புதி -நான் அங்கன் இன்றிக்கே பக்தி சஹக்ருத சாஸ்திரம் கொண்டு அறிய இருப்பவன் –
சித்தாஞ்சனம் இட்டு பதார்த்த தர்சனம் பண்ணுவாரைப் போலே காண் என் படி –என்றான் இறே –

மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்று இருந்தேனுக்கு –
ப்ரஹ்மசாரி எம்பெருமானை ஆசைப் பட்டேன் ஆகில் தான் ஆறி இரேனோ-
மாதவன் விஷயமான அன்பு -என்னுதல் –
மாதவன் ஆகிற அன்பு -என்னுதல்
அன்பு -என்றும் -அன்புக்கு ஆஸ்ரயம் என்றும் தோன்றாதே –அன்பு தான் என்னலாய்த்து இருப்பது
தேந தே தமநுவ்ரதா-அயோத்யா -17-16- என்கிறபடியே தான் முந்துற இத்தலையிலே அன்பைப் பண்ணி –
பின்னை யாய்த்து இத்தலையில் அன்பை விளைத்தது –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -திருவாய் -10-10-7-என்னுமா போலே –
சர்வ பிரகாரத்தாலும் விலஷணமான விஷயத்தை இறே இவள் தான் ஆசைப் பட்டது –
அப்படிப் பட்ட வைலஷண்யம் உள்ளது ஸ்ரீ யபதிக்கு இறே -அவன் பக்கலிலே யாய்த்து இவள் அன்பைப் பண்ணிற்று –
அன்பு தன்னை உற்று –
அவனைக் கிட்டி -என்னுதல்
அவன் விஷயமான பக்தியை மாறுபாடுருவ உடையேனாய் -என்னுதல்
நிறந்தானூடு புக்கு -எனதாவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற –திருவாய் -5-10-1-என்னுமா போலே

இருந்தேனுக்கு –
இப்படி அவனை ஒழிய செல்லாமை உண்டானால் அவன் இருந்த இடத்தில் சென்று கிட்ட இறே அடுப்பது –
அதுக்கு கால்நடை தாராத படி இருக்கிற எனக்கு –

உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
உரைப்பது எல்லாம் –
அங்கே சென்று கிட்ட ஆசை உடைய எனக்கு -நான் சென்று சேராமைக்கு உறுப்பாகச் சொல்லும் வார்த்தை எல்லாம்
மற்று –உரைப்பது எல்லாம் –
அவனோடு கிட்டாமைக்குச் சொல்லும் வார்த்தை எல்லாம்
ஊமையரோடு செவிடர் வார்த்தை-
என் தசையை அறியாத உங்களுக்கு தோற்றினபடி சொல்லுகைக்கு பரிகரம் இல்லை
எனக்குக் கேட்கைக்கு பரிகரம் இல்லை
ஊமைக்கு வ்யவஹார யோக்யதை இல்லை
செவிடர்க்கு கேட்கைக்கு யோக்யதை இல்லை
செவிடரோடு ஊமையர் வார்த்தை என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்

உனக்கு ஓடுகிற தசை ஒருவருக்கும் அறிய ஒண்ணாது என்று சொல்லுவான் என் –
உனக்கு இத் தசையை விளைத்தவன் தனக்குத் தெரியாதோ -என்ன –
தாய் செல்லாமை அறியாதவனோ கலந்தார் செல்லாமை அறியப் புகுகிறான்
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
அநந்த வ்ரதம் -அனந்தனை குறித்து -வ்ரதம் அளவற்ற வ்ரதம் -அனுஷ்டித்து பின்னைப் பிள்ளை முகத்தில் விழிக்க வேண்டும்
என்று கிலேசப் பட்டு பெற்று பின்னை -போக விட்டு இழந்து இருந்தாள் ஆய்த்து–
போய்ப்பேர்த்து –
இவள் இரக்கத்தாலே இழவு பொறுக்க மாட்டாமே கண்ணும் கண்ண நீருமாய் இருந்தாள்
அவன் முலைச் சுவடி அறியாமையாலே கால் தாழவும் மாட்டாதே போனான் –
பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி-
வேறு ஒரு தாய் க்ரஹத்திலே வளர்ந்தான் ஆய்த்து
பெற்றவள் இழவுடன் இருக்க -அவளுக்கு கட்டவும் அடிக்கவுமாம் படி தாயானமையில் ஒரு வாசி தோற்றாத படி யாய்த்து வளர்ந்தது
அவள் தானும்-திருவிலேன் ஒ ன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே–பெருமாள் திருமொழி -7-5-என்றாள்-இறே
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-பெருமாள் திருமொழி -7-8 என்னக் கடவது இ றே –

பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி-
தன்னை ஒழியச் செல்லாமை உடையாரை நலிகையே அவனுக்கு சத்தா பிரயுக்தமாய்த்து
தாய் முலை –பெருமாள் திரு-6-4-இத்யாதி -இது இறே -ஊடினார் வார்த்தை
முலை கொடுத்து அல்லது தரியாதாள் ஆய்த்து-
தனக்கு ஜீவன ஹேதுவாய் தான் வந்து முலை உண்ணாமையாலே-முலைக் கண் நெறித்து அவள் இருக்க
தன் மௌக்த்யம் தோற்ற தனக்கு விநாசத்தைப் பலிக்குமதான விஷத்தை உண்டு -அத்தாலே
பாவ பந்தம் உடையாருக்கும் பாவ தோஷம் உடையாருக்கும் வாசி அறியாதான் ஒருவன் காண் இவன் -என்று
கண்டார் இகழும்படி நின்றான்
நம்பி
சாலப் பூர்ணன் ஆய்த்து –

மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–
தன் உடம்போடு அனைய வேணும் என்னும் ஆசை உடைய நான் இருக்க
இத்தனை போது புறப்பட்டு முரட்டு மல்லரோடே அணைகைக்கு போகா நிற்கும்
மல்லரானவர்கள் மல் பொருகைக்கு யுத்த பூமியிலே சென்று கிட்டும் காட்டில் தான் யுத்த பூமியில் சென்று கிட்டுமாய்த்து
அவன் மல்லர் உடம்போடு அணைவதற்கு முன்னே இடையிலே நான் சென்று கிட்டிக் கொள்ளும் படி
என்னை மதுரையின் பரிசரத்திலே கொடு போய் பொகடுங்கோள்
மல் பொருந்தா மல் களம் –அவர்கள் கிட்டுவதற்கு முன்னே என்னுதல்
என்னிடத்தில் பொருந்தாமல் மல்லர் யுத்த பூமியை அடைந்தவன் என்னுதல் –

——————————————————-

மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –12-10-

மன்னு மதுரை –
பகவத் சம்பந்தம் மாறாத -என்றபடி தொடக்கமாக –வண் துவாராபதி தன்னளவும்
அவ்வளவு போலே பூமி உள்ளது –
அவன் உகந்து அருளின தேசங்களே பூமி –வாசஸ் ஸ்தவயமான தேசம் – என்று இருக்கிறாள் போலும்-

தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித்
மதுரைப் புறத்து -என்று தொடங்கி–துவராபதிக்கு உய்த்திடுமின் -என்கிறாள் இறே
தன்னை உறவு முறையார் உய்த்து பெய்து கொடு போய் விட வேண்டி
தாழ் குழலாள் துணிந்த துணிவை-
தன் மயிர் முடியை பேணாமையிலே தோற்று அவன் தன் வழி வரும்படி இருக்கிற இவள் தான் துணிந்த துணிவை –

பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும்
ஸ்ரீ மத் த்வாரகையிலே மாளிகையோடு ஒக்குமாய்த்து இவ் ஊரும்

புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –
இனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல் என்று தோற்றி இருக்கிற வற்றை அப்யசிக்க வல்லார்கள் –
தனக்கு கால் நடை தாராத தசையிலே- தேசிகரைப் பார்த்து- நீங்கள் என்னை கொடு போங்கோள்- என்ன வேண்டாதே –
அவன் அனுமதிப்படியே- ஆதி வாஹிக குணம் நடத்த – அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்- ஸ்ரீ வைகுண்டத்திலே-அனுபவிக்கப் பெறுவர்

—————————————————————–

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புறநின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் என்னை வாட்டம் தணிய வீசீரே –13-1-

கண்ணன் என்னும் கரும் தெய்வம்
ஸ்ரீ கிருஷ்ணன் என்றால் தன்னை உகப்பார்க்கு இஷ்ட விநியோஹ அர்ஹமாக்கி வைக்கும் என்று இறே பிரசித்தி –
இப்போது அது தவிர்ந்து –மனுஷ்யத்வே பரத்வமே சித்தித்து விட்டது
ஸ்ரீ கிருஷ்ணன் என்றால் நாம் நினைத்து இருந்தவை எல்லாம் போய் -தான் பிறரைக் கும்பிடு கொள்ளத் தொடங்கினான்-
பிரணயித்வம் போயிற்றே –
நம்மைப் பெறுகைக்கு தான் நம் வாசலிலே அவசர ப்ரதீஷனாய் துவளுகை எல்லாம் போய் -முகம் தோற்றாமே நின்று-
வயிறு வளர்த்து போவாரோபாதி யானான்
கால் தரையிலே பாவாத படி நின்று முகத்தை மாற வைத்து ஹவிஸ்ஸை கொண்டு போம் தேவதைகளோ பாதி யானான்
ஸ்ரீ கிருஷ்ணன் என்றால் உகப்பாருக்கு பவ்யன் என்று சொல்லுவது ஒரு சப்த மாத்ரமாய் –
முன்புத்தை நிலையே -(பரத்வமே )அர்த்தமாய் விட்டது
ஸ்வரூபம் மாறாடினால் -ஆஸ்ரித பார தந்தர்யம் -ஸ்வ பாவமும் -கருமை நிறமும் மாறாடினால் ஆகாதோ
இந்நிறம் எப்போதும் ஒக்க படுகுலை அடிக்குமது தவிருகிறது இல்லை
ஸ்ரீ கிருஷ்ண சப்தார்த்தம் -கரியவன் -மெய்யாகி விட்டது -புறம்பு போலும் உள்ளும் கரியனாய் இருக்கிறான்
இவன் பவ்யன் என்னுமது வடயஷ பிரசித்தி போலே -ஆல மரத்தில் பிசாசு -போலே யாய்த்து-
உகப்பார்க்கு எளியன் என்னுமது விக்ருதியாய் -வெளி வேஷமாய் -பிரக்ருதிவத் பாவித்தே விட்டான் –
இயற்கைத் தன்மை போலே நடித்துக் காட்டி விட்டான் –

காட்சிப் பழகிக் கிடப்பேனை-
முன்பு கண்ட காட்சியை ஸ்மரித்து-அது கைம் முதலாக ஜீவித்துக் கிடப்போம் என்றால்
அதுவும் ஒண்ணாத படி அவ் வழி புல் எழுந்து போய்த்து-
கிடப்பேனை-
கிடந்த கிடையிலே பாடோடிக் கிடந்தாள் ஆகாதே –புரள முடியாத படி -ஒரு பக்கமாகவே படுத்துக் கிடக்கும் என்னை –
என்று அகளங்க நாட்டாழ்வான் வார்த்தை -என்று அருளிச் செய்வர்
இப்போது அவனை அணைக்க வல்ல இவளுக்குத் தேட்டம் -இடம் வலம் கொள்ளுகை யாய்த்து –
யேது ராமஸ்ய ஸூ ஹ்ருதஸ் சர்வே தே மூட சேதச-சோக பாரேண சாக்ராந்தா சயனம் ந ஜஹூஸ்ததா-அயோத்யா -41-20-என்று
சக்கரவர்த்தி போக்கை அனுமதி பண்ணினான் –ஸ்ரீ கௌசல்யார் மங்களா சாசனம் பண்ணி விட்டார் -அவ்வளவு இன்றிக்கே
பத்தொன்பதாம் பாஷையாய்த்து தோழன்மார் படி
ராமஸ்ய ஸூ ஹ்ருதஸ்-அந்தரங்கர் -நல்ல நெஞ்சுடையார் –
தாய் தமப்பனுக்கு மறைத்தவையும் வெளியிடும்படி உட்புக்கவர்கள் இறே-தோழன்மார் ஆகிறான்
தங்களைப் பேணாதே அவனுக்கு நன்மை எண்ணிப் போந்தவர்கள்
சர்வே தே –
ஒரு விபூதியாக சாம்யா பத்தி பெற்று இருக்குமா போலே
மூட சேதச –
ஸூஹ்ருத்துக்கள் ஆகில் எழுந்து இருந்து காலைக் கட்டி மீளாது ஒழிவான் என் என்னில் –
அறிவு கலந்தால் செய்யுமத்தை நெஞ்சில் வெளிச் சிறப்பு இல்லாத போதும் செய்யப் போகாது இறே
அறிவு கெடுகைக்கு ஹேது என் என்னில்
சோக பாரேண சாக்ராந்தா –
மலை அமுக்கினால் போலே சோகம் அமுக்கா நிற்கச் செய்வது என் –
சயனம் ந ஜஹூஸ்ததா-
படுக்கையை விட்டு எழுந்தார்கள் ஆகில் மீட்டுக் கொடு புகுந்த வாசி அன்றோ
தாம் தாமே படுக்கையில் கிடந்தது போந்தவர்கள் அன்றே
இவர்கள் வார்த்தையை ராமன் தட்ட மாட்டான் -திரும்பிக் கொண்டு வந்தது போலே ஆகுமே –
அதனால் எழுந்து இருக்க வில்லை -என்றபடி
சோக வசத்தால் ஸ்வ ஸ்வ வசம் இல்லாதபடி கிடந்தார்கள் -என்றபடி –

புண்ணில் புளிப் பெய்தால் போலப் புற நின்று அழகு பேசாதே
புண்ணின் விவரத்திலே துளையிலே -புளியைப் பிரவேசிப்பித்தால் போலே
புறம் நின்று -வாசலுக்கு புறம்பு ஓன்று சொல்லாதே கொள்ளுங்கோள்-என்கிறாள் அல்லள்
என்னையும் அவனையும் சேர்க்கும் கூற்றிலே –இதுவே அகம் –-நின்று வார்த்தை சொல்லுமது ஒழிய
மீட்கும் கூற்றிலே நின்று –புறம் நின்று -வார்த்தை சொல்லாதே
என்னையும் அவனோடு சேர்க்கைக்கு ஈடான வார்த்தை சொல்லுகை அன்றிக்கே
எனக்கு அவன் பக்கல் பிராவண்யத்தை குலைக்கு ஈடான வார்த்தை சொல்லாதே
அழகு சொல்லாதே –
இப்போது மீட்கப் பார்க்கிறவர்கள் அவனுடைய சௌந்தர்யத்தைச் சொல்லுகிறார்கள் அன்றே-
அவனிடம் ஈடுபாட்டைத் தவிர்ந்து மேல் வரும் நன்மைகளைப் பாராய் -என்று சொல்லாதீர்கள் -என்ற படி
இப்போது இவாற்றாமையைப் பரிஹரித்தால் -மேல் வரும் நன்மைகளைப் பாராய் என்று
அவற்றைச் சொல்லா நில்லாதே –அழகு -நன்மை பேசாதே
இது சப்த மாத்ரமாய் அர்த்த ஸ்பர்சி அன்று -காதிலே தான் விழும் நெஞ்சில் படாது என்றபடி –
நீங்கள் இதில் படும் நேர்த்தியை -ஸ்ரமத்தை -செயலிலே நேரப் பாருங்கோள்-

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –
உங்கள் இரண்டு தலைக்கும் ஒத்த உகப்புக்கு நாங்கள் சில யத்னம் பண்ணும் படி இருந்ததோ -என்ன
உகப்பு ஒத்தாலும் ஆணும் பெண்ணும் என்கிற வாசி இல்லையோ –
முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்குத் தெரியாது இறே -என்று பட்டர் –அருளிச் செய்தாராக பிரசித்தம் இறே
சாந்தீபிநி சிஷ்யனை இறே -பிறர் மிடி -அறியான் என்கிறது பிராப்ய த்வரையால்
பெருமாள் —துஷ்கரம் க்ருதவான் ஹீ நோ யத நயா பிரபு -சுந்தர -15-53-என்கிறபடியே
பிரிந்த போது கண்ணன் பெருமானே இருந்தான் -என்றபடி –

பெருமாள் அரையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே-
அவனுக்கு நம்மை ஒழியச் செல்வதானாலும் நமக்கு அவனை ஒழியச் செல்லாதே –
நம் சத்தை அவன் அதீநம்
நம் சத்தை நோக்க வேணுமே –போகத்துக்காகில் இறே அவர் வேண்டுவது
சத்தை நோக்குகைக்கு அங்குத்தை சம்பந்தம் உள்ளது ஓன்று அமையுமே
அத்தைக் கொண்டு வந்து என்னை ஆஸ்வசிப்பியுங்கோள்
அவன் தான் இத்தனை போது பசுக்களையும் விட்டுக் கொண்டு போகா நிற்குமே
பிறரை நலிகைக்காக தான் காட்டுக்குப் போகைக்கு உடைத்தோல் உடுத்து இறே போவது
கறையினார் துவருடுக்கை கடையாவின் கழி கோல் கைச் சறையினார் -திருவாய் -4-8-4-என்கிறபடியே
திருப் பீதாம்பரத்தை இட்டு வைத்துப் போம்
அந்த திருப் பீதாம்பரத்தைக் கொண்டு என் வாட்டம் தணிய வீசுங்கள் -என்கிறாள்

அரையில் பீதக வண்ண வாடை கொண்டு –
மேலிட்ட உத்தரியமானால் ஆகாதோ -என்று நஞ்சீயர் கேட்க –
ஸ்வேத கந்த லுப்தை -போலே காண்-என்று அருளிச் செய்தாராம் –

என்னை வாட்டம் தணிய வீசீரே-
என்னையும் அவனையும் சேர்த்து போகத்தில் நிறுத்துங்கோள் என்றால் -அது இப்போது உங்களால் செய்யப் போகாது இறே
ஆனாலும் வாட்டத்தை அகஞ்சுரிப்படுத்தலாமே -அத்தைச் செய்யப் பாருங்கோள் –
அவனுடைய திருப் பீதாம்பரத்தைக் கொடு வந்து என் மேலே பொகட்டு என் சத்தையை நோக்கப் பாருங்கோள் –

——————————————————–

அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே–13-10-

அல்லல் விளைத்த பெருமானை –
பஹவோ ந்ருப கல்யாண குணகணா புத்ரச்ய சந்தி தே–அயோத்யா -2-26-என்று
திரு அயோத்யை ஸ்ரீ ராம குணங்களிலே கையடியுண்டு -ஈடுபட்டு –
மற்று ஓன்று அறியாது இருக்குமா போலே யாய்த்து
திரு வாய்ப்பாடியில் உள்ளார் ஸ்ரீ கிருஷ்ணன் தீம்பிலே கையடி யுண்டார்களாய் இருக்கும் படி
ஊரை மூலையடியே நடந்து -வெண்ணெய் பெண்கள் இவை களவு போய்த்து-என்றும்
பாலும் பதின் குடம் கண்டிலேன் –பெரிய திரு -10-7-2-என்று சொல்லும் படி
பெரிய ஆரவாரத்தைப் பண்ணி யாய்த்து வார்த்திப்பது –

ஆயர் பாடிக்கு அணி விளக்கை
இவன் தீம்புக்கு இலக்காகாத போது ஊராக இருண்டாய்த்து கிடப்பது
ஸ்ரீ ராம குணங்கள் வேம்பாய்
இவன் தீம்புகள் கரும்பாய் -பிரகாசத்தையும் பண்ண யாய்த்து திரிவது

வில்லி புதுவை நகர் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை
இவளுடைய விருப்பத்தில் ஊற்றமாய்த்துச் சொல்லித் தலைக் கட்டப் பார்க்கிறது
இவ்வளவான பிராவண்ய அதிசயத்துக்கு எல்லாம் வாய்த்தலை ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பாய்த்து-

வில்லைத் தொலைத்த புருவத்தாள்
தன்னோடு சாம்யம் கொண்டாடி இருக்குமவை எல்லாம் அழிக்கும் படி யாய்த்து அவயவ சோபை இருக்கும் படி
வில் தான் ஒப்பாக போராத படியான புருவத்தை உடையவள்

வேட்கை யுற்று மிக விரும்பும் சொல்லைத்-
அபி நிவேசமானது விஞ்சி
அது தான் –என்னளவன்றால் யானுடைய அன்பு –இரண்டாம் திரு -100-என்கிறபடியே
ஆஸ்ரயத்தின் அளவில்லாத படி அபி நிவேசத்தை உடையவாளாய்ச் சொன்ன அவளுடைய பாசுரத்தை
பகவத் அனுபவம் வழிந்து புறப்பட்ட சொல் -என்று தோற்றும் படி இருக்கை –

துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே–
இவன் இப்போதாக இவளுடைய விருப்பத்தை சம்பாதிக்க வென்றால் செய்யப் போகாதே –
அப்படி பாவ பந்தம் உடையவளாய்ச் சொன்ன அவளுடைய பாசுரத்தைச் சொல்ல அமையும்
சம்சாரம் ஆகிற துக்க சாகரத்திலே
மிருதுவாய் இருப்பதொரு கொழுந்தை அக்னியில் இட்டால் போலே துவண்டு நோவு படாதே
இவள் பட்ட கிலேசமே கிலேசமாக
இவள் பாசுர மாத்ரத்தைச் சொன்னவர்கள் ஆசைப் பட்ட பொருள் பெறுவார்கள் –

——————————————————-

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –-14-1-

விண்ணாட்டவர் மூதுவர் -திருவிருத்தம் -2-என்று சொல்லுகிறவர்கள் நியமிக்க
வானிளவரசு-பெரியாழ்வார் -3-6-3–அவர்களால் நியாம்யனாய் –
அவர் சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -திரு விருத்தம் -21-தங்கள் ஸ்வரூபத்துக்கு அனுரூபமாம் படி
போது போக்கி இருக்கிற அளவிலே
திருவாய்ப்பாடியிலே வெண்ணெய் திரளா நின்றது -என்றும்
ஸ்ரீ நப்பின்னை பிராட்டி பிராப்த யௌவனை யானாள் என்றும் -கேட்டு
அவ்விருப்பு உண்டது உருக்காட்டாதே –இங்கே வந்து திருவவதரித்து –
ஸ்ரீ பிருந்தா வனத்திலே ஸ்வரைசஞ்சாரம் பண்ணி-அத்தாலே தன்னிறம் பெற்றுத் திரிகிற படி –

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
பரம பதத்தில் கட்டுண்டு இருப்பரோபாதி யாய் -கட்டுண்ட காளையாய் –
ஸ்வைர சஞ்சாரம் பண்ணுவது திருவவதரித்து போந்த இடத்தே யாய்த்து
வானிளவரசு என்கிறபடியே திரு வநந்த ஆழ்வான் மடியிலும்
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழிலும் –
ஸ்ரீ பெரிய திருவடியின் சிறகின் கீழிலும் யாய்த்து இத்தத்வம் வளருவது என்றாய்த்து ஸ்ரீ பட்டர் அருளிச் செய்வது – –
ஆனை கருப்பம் தோட்டத்தைப் புக்கால் திரியுமா போலே யாய்த்து இவனும் ஊரை மூலையடியே திரியும் படி
பரம பதத்தில் நூல் பிடித்து பரிமாறுவது போல் அன்றிக்கே
வெண்ணெய் களவு போய்த்து பெண்கள் களவு போய்த்து-என்னும்படியாக வாய்த்து
மரியாதைகளை அழித்துக் கொண்டு திரியும்படி

ஓர் காரேறு –
அபிமத லாபத்தினால் அத்விதீயனாய்
தன்னிறம் பெற்று
மேணானித்து இருக்கும் இருப்பு –
பரம பதத்தில் உடம்பு வெளுத்து போலே காணும் இருப்பது-

பல தேவேற்கோர் கீழ்க் கன்றாய் –
வாசனை இருக்கிறபடி -திருவநந்த ஆழ்வான் மடியில் இருந்த வாசனை போக்க முடியாதே –
பெண்கள் அளவில் தீம்பு செய்து திரியுமவன் -இவன் அளவிலே பவ்யமாய் இருக்கும்
தனக்கு அபிமத விஷயங்களை சேர விடுகைக்கு கடகன் ஆகையாலே அவன் நினைவின் படியே யாய்த்து திரிகிற படி
பெருமாளும் பிராட்டியுமாக பள்ளி கொண்டு அருளும் போது இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து நின்று நோக்கி –
ரமமாணா-வ நே த்ரய –பால -1-31–என்கிறபடியே இருவருமான கலவியிலே பிறக்கும் ஹர்ஷத்தில் மூவராகச் சொல்லலாம் படி
அந்வயித்து அவர்களுடைய சம்ச்லேஷத்துக்கு வர்த்தகராய் இருக்குமா போலே
ஸ்ரீ கிருஷ்ணன் தீம்பாலே ஏறுண்ட பெண்கள் நெஞ்சில் மறத்தை தன் இன் சொல்லாலே பரிஹரித்து
ராமேணாஸ் வாசிதா கோப்யோ ஹரிணா ஹ்ருத சேதச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-24-20–என்கிறபடியே –
அவர்களை ஆச்வசிப்பித்துப் பொருந்த விடுகையாலே இவனளவில் பவ்யனாய்த்து இருப்பது –
இவன் தானே அவன் நினைவின் படியே திரியுமவனாய் -ஓர் அளவில் நியமிக்கவும் கடவனாய் யாய்த்து இருப்பது
பலதேவன் என்னும் தன் நம்பியோடப் பின் கூடச் செல்வான் -பெரியாழ்வார் -1-7-5-என்னக் கடவது இ றே-
இவன் தான் ஓரடி பிற்பட விறே பாம்பின் வாயிலே விழுந்தது –

இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இச் சேதனன் முக்தனானால் பகவத் அனுபவத்தால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்குவிட்டு
ஏதத் சாம காயன் நாஸ்தே –என்று சாம கானம் பண்ணுமா போலே அவன் தான் இங்கே வந்து திருவவதரித்து
இப் பரிமாற்றத்தைப் பெறுகையாலே வந்த ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு பண்ணும் வியாபாரம் இருக்கிற படி
கீழே ஏறு -என்று ஜாதி உசிதமாக பண்ணும் வியாபாரம் இருக்கிறபடி
அவாக்ய அநாதர-தத்வம் இட்டீறிட்டு-என்னும் படி இருப்பதே என்று ஸ்ரீ சிறியாத்தான் போர வித்தராய் இருக்கும் -என்று அருளிச் செய்வர்
விளையாடி –
அச் செருக்குக்கு போக்குவிட்டுப் பண்ணும் லீலையைச் சொல்லுகிறது -இது தானே இறே பிரயோஜனம்
இங்கே போத –
அங்கே போனாலும் பெறவரிய பரிமாற்றத்தை அவன் இங்கே பரிமாறக் காணப் பெற்றார் உண்டோ –

கண்டவர்கள் பாசுரமாய் இருக்கிறது மேல் –
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
யுவாககளானவர் அபிமத விஷயத்திலும் கடகரை விரும்பி இருக்குமா போலே இவனும் பசுக்களை யாய்த்து விரும்புவது
ஆகள் போக விட்டு குழலூத வேணுமே
நீ தாழ்த்தது என் என்று மாதா பிதாக்கள் கேட்டால் பசுக்களின் பின்னே போனேன் என்று சொல்லலாம் படி
தனக்கு ஒதுங்க நிழலாய் இருக்கும் இறே அவை –
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே -திருவாய் -6-2-2-
இட்டமான பசுக்களை –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவே –திருவாய் -10-3-10-என்கிறபடியே
பரம பதத்தில் காட்டிலும் பசுக்களை மேய்க்குமத்தை யாய்த்து விரும்பி இருப்பது
அவ் விருப்பிலும் -வாய் வெருவிக் கிடப்பதுவும் கனாக் காண்பதுவும் இப் பசுக்களை வாய்த்து –
இனிது மறித்து –
இருவராக கலந்து பரிமாறா நின்றால்-எதிர்த்தலையினுடைய நாம க்ரஹணம் பண்ணினால்
அது ப்ரீதியாய் இருக்குமா போலே யாய்த்து
இவற்றின் பேரைச் சொல்லி அழைத்தால் அவற்றுக்கு பிரியமாய் இருக்கும் படி
லோகத்தில் சேதனர் அசங்கேயரராய் இருக்கச் செய்தேயும் எல்லாருடையவும் நாம ரூப வியாகரணம் பண்ணுமா போலே-
நீரூட்டி
அவற்றுக்குத் தண்ணீர் பருகுகை அபேஷிதமானால் தான் அரை மட்ட நீரிலே இழிந்து பின்னே கையைக் கட்டிக் குனிந்து
நின்று தண்ணீர் பருகிக் காட்டுமாய்த்து –இவன் பின்னை அவையும் கூடக் குடிக்கும்
தடம் பருகு கரு முகில் -பெரிய திருமொழி -2-5-3–இவன் கரு முகில் இறே
ச யத் பிரமாணம் குருதே லோகஸ் தத் அனுவர்த்ததே -ஸ்ரீ கீதை -3-21—காரயித்ருத்வம் இருக்கிற படி
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16—
தடாகத்திலே ஒரு மேகம் படிந்தால் போலே இறே இருப்பது –

விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
அபிமத சித்தியாலே தன் மேன்மை பாராதே -திருக் குழல் பேணாதே ஸ்வரை சஞ்சாரம் பண்ணா நிற்கும் –
அவை மேய்த்துத் தண்ணீரும் பருகுகையாலே பின்னைத் தனக்கு ஒரு கர்த்தவ்யம்சம் இல்லையே
நிரபேஷனுக்கு இறே லீலையில் அந்வயம் உள்ளது -இந்த லீலை தானே இறே பிரயோஜனம் –
விருந்தாவனத்தே கண்டோமே
ஸ்ரீ வைகுண்டத்திலே கண்டால் போலவே இருப்பது ஓன்று இறே திருவாய்ப்பாடியிலே காணும் காட்சி –
செருக்கராய் இருக்கும் ராஜாக்கள் போகத்துக்கு ஏகாந்தமான ஸ்தலங்களிலே மாளிகை சமைத்து அபிமத விஷயங்களும்
தாங்களுமாய் புஜித்தால் போலே இருப்பது ஓன்று இறே ஸ்ரீ பிருந்தா வனத்தில் பரிமாற்றம் –

———————————————

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக் கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

நிகமத்தில்
பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப்
பருத்து பெரிய காலை உடைத்தாய்
சரீரம் பெருத்ததனையும் பாடாற்ற அரிதாய் இருக்கும் இறே
அப்படிப்பட்ட ஆனையானது-தன்னிலம் அல்லாத வேற்று நிலத்திலே புக்கு
முதலையின் வாயில் அகப்பட்டு இடர்ப் பட -அதனுடைய ஆர்த்த த்வனி செவிப்பட்ட அநந்தரம்
ஆயுத ஆபரணங்களை அக்ரமாகத் தரித்துக் கொண்டு மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து
அது பட்ட புண் ஆறும் படி முகம் கொடுத்து ரஷகத்வத்தில் தன்னை எண்ணினால் பின்னை ஒருவர் இல்லாதபடி இருக்கிறவனை-
(ஆனையின் நெஞ்சு இடம் தீர்த்த –தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே –
ஆ –கத்தினால் அகார ரக்ஷகன் ஆதி மூலமே -நாராயணா மணி வண்ணா நாகணையாய் –ஆ ஆ என்று கத்திற்று –
ஆர்த்த த்வனி ஒன்றுமே போதுமே – முதலை முதலை -சொன்னாலும் முதலே ஆதி மூலமே -என்று கூப்பிட்டால் போலவே –
த்வாராய நம–ஆரோகதா -வாகனம் ஓடும் பொழுதே ஓடி -இறக்கையை தொங்கி போனானே –
பாதம் பாராமசு -வேது கூட கொடுத்தானே –பரமன் –ஆர்த்த ரக்ஷணத்தில் ஓத்தார் மிக்கார் இல்லாதவன் -)
பரமபத ஆபன்நோ மநஸா அசிந்தயத் ஹரிம் ச து நாகவர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47–என்னுமா போலே-
(இவனுக்கு வந்த ஆபத்து -எம்பார் -பிரகலாதன் திரௌபதி கஜேந்திரன் மூன்றும் -எம்பார் -அதனாலே பரமா பாதம் ஆபன்ன)-
இதினுடைய விடாயடைய தனக்கு பூர்வ ஷணத்தில் உண்டான படியும்
அதின் இடரைப் பரிஹரித்தால் போலே தன்னிடரைப் பரிஹரித்த படியும் சொல்லுகிறது –
(கைம்மா துன்பம் கடிந்த பிரானே -அம்மா அடியேன் வேண்டுவது இதே -ஐந்து முதலைகள் / சம்சார சாகரம் -/ அநாதி -)

பாரின் மேல் -விருந்தா வனத்தே கண்டமை –
ஸ்ரீ வைகுண்டத்தில் அன்றிக்கே பூமியிலேயாய்
அது தன்னிலும் திருவாய்ப்பாடியில் அன்றிக்கே
ஸ்ரீ பிருந்தா வனத்தே கண்டமை -(இவளுக்கும் சூடிக் கொடுத்த மாலையை மாலுக்கு சூடும் படி அருள் புரிந்தான் )

விட்டு சித்தன் கோதை சொல்-
காட்சிக்கு கைம்முதல் இருந்தபடி –
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -10-10- என்று முன்னனே அருளிச் செய்தாள் அன்றோ –

மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்-
இது தான் சம்சார பேஷஜம் என்று தம்தாமுடைய ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு-

பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குத்ஸ் சன -தை ஆ -9-என்கிறபடியே -இருக்குமவர்கள்
பரம பிராப்யமாய் -நிரதிசய போக்யமாய்- இருந்துள்ள திருவடிகளை -உடையவன் திருவடிகளிலே
உனக்கே நாம் ஆட் செய்வோம் என்று
பிரியாது என்றும் இருப்பரே––
சிலரை கண்டீரே -என்று கேட்க வேண்டாதே
என்றும் ஒக்க தங்கள் கண்ணாலே கண்டு நித்ய அனுபவம் பண்ணுமதுவே யாத்ரையாகப் பெறுவர்
தாள் -என்கையாலே பிராப்யாதிக்யமும் போக்யதையும் சொல்லுகிறது –

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம உரை -ஸ்ரீ பட்டர் பாஷ்யம் -பிரவேசம் –

March 26, 2019

ஸ்ரீ பராசர பட்டார்ய ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீவத் ஸாங்க ஸூதா ஸ்ரீமான் ஸ்ரேயசே மே அஸ்து பூயஸே

ஸ்ரீ ரெங்க நாதனுக்குப் ப்ரோஹிதரும்
ஸ்ரீ வத்சாங்கர் எனப்படும் கூரத்தாழ்வானுடைய திருக்குமாரரும்
ஞான லஷ்மீ பொருந்தியவருமான
ஸ்ரீ பராசர பட்டர் எனப்படும் ஸ்வாமி
எனக்கு மேன்மேலும் ஸ்ரேயஸ்ஸைக் கொடுத்து அருளட்டும்

——–

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

——————-

மானா மேய -பிரமாணங்கள் மூலமே ப்ரமேயம் அறிய முடியும்
பெருமாளைக் காட்டிக் கொடுக்கும் பிரமாணங்கள்
அதைக் காட்டிக்கொடுக்கும் பிரமாதாக்கள்
பல காலம் வாழ வேண்டும்
வேதம் -உப ப்ரஹ்மணம் -இதிஹாசம் புராணங்கள் –
மஹா பாரதம் 125000 ஸ்லோகங்கள் –
பூசல் பட்டோலை-மஹத் -பாரதம் -பெரியதாயும் மஹிமை யுடையதாயும் உண்டே
இதில் இல்லாதது ஒன்றும் இல்லையே
கடைந்து -சாரம் -ஸ்ரீ கீதையும் -ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமமும்
ஆனுசாசன பர்வதத்தில் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் உள்ளது
இரண்டிலும் -கீதையை விட இதுக்கு ஏற்றம்
எப்படி பக்தி பண்ண வேண்டும் -கீதை சொல்லும் –
வாயினால் பாடி -மனத்தினால் சிந்தித்து -தூ மலர் தூவித் தொழுது
மாயனைப் பாட –பலகாலும் திருப் பாவையில் உண்டே
எத்தை பாட -திரு நாம சங்கீர்த்தனம்
நானும் சொன்னேன் நமரும் சொல்மின் –
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே
திருநாமங்களைக் கோத்து அருளப்பட்டது
தத்வமான அவன் வார்த்தை விட தத்வ தர்சன வார்த்தை ஸ்ரேஷ்டம் -அவனே கீதையில் உண்டே
யுதிஷ்டர் -பீஷ்மர் இடம் ஆறு கேள்விகள் கேட்க
பல வியாக்கியானங்கள் உண்டு
பேர்கள் ஆயிரத்தாய் –தாள்கள் ஆயிரத்தாய்
ஸஹஸ்ர சீர்ஷா– தேவோ நாமம் சஹஸ்ரவான்
பேர் ஆயிரம் கொண்ட பீடுடையான்
ஆயிரம் ஆயிரமான திரு நாமங்கள் உண்டே
நவரத்தினம் அறிந்தவன் கோப்பது போல் –
கேசவா- ஓம் கேசவாய நம -ஆவளியாய் அர்ச்சனைக்கு ஏற்றபடி –

திருநாம சங்கீர்த்தன மஹிமை -திருப்பாவையில்
பேர் பாடி -பல இடங்களிலும் உண்டே

பாடி- 18-பிரயோகங்கள் –

வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி –
மாயனை –தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
கீசு கீசு என்று –நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
கீழ் வானம் —பாடிப் பறை கொண்டு
தூ மணி –மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று
நோற்றுச் –நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்
கற்றுக் கறிவை –முகில் வண்ணன் பேர் பாட
கனைத்து இளம் —மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
உங்கள் –பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
எல்லே –மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்
நாயகனாய் –துயில் எழப் பாடுவான்
உந்து –உன் மைத்துனன் பேர் பாட
ஏற்ற –போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
அன்று –என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
ஒருத்தி –திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
கூடாரை –உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு
கறைவைகள் –உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும்
சிற்றம் –உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய் –

கட்டிப் பொன் போல் அவன் -பணிப் பொன் போல் திரு நாமம்
மாது காதுகனுக்கும் இது சொல்ல அதிகாரம் உண்டே -அம்மே என்று சொல்ல பிராப்தி உண்டே
திருநாமம் சொல்ல சர்வரும் அதிகாரிகள்
அவன் தூரஸ்தானாலும் இது கிட்டி நின்று உதவும்
திரௌபதிக்கு ஆடை சுரந்ததே
வாழ்த்தவும் திருநாமங்கள் வேண்டும்
வசவு செய்யவும் திரு நாமங்கள் வேணுமே
நாமம் சொல்ல யோக்யதை சம்பாதிக்க வேண்டாம் -இதுவே பண்ணிக் கொடுக்குமே

திருநாமங்கள் ஒன்றுக்கு ஓன்று சங்கதியும் உண்டு
பர வ்யூஹ விபவ –
அந்தர்யாமிக்கும் அர்ச்சைக்கும் ஸ்பஷ்டமாக இல்லை
அந்தர்யாமி பரத்வத்திலும்
அர்ச்சை விபவத்திலும்
பெருக்காறு போல் விபவங்கள் -அதில் தேங்கின மடுக்கள்
ஐந்தைச் சுருக்கி மூன்றாக்கி
முக்தி அளவும் சேர்த்து -மோக்ஷ பிரதனாக நிகமித்து அருளுகிறார்
கைங்கர்யமாகவும் திரு நாம சங்கீர்த்தனம் –

82- திருநாமங்கள் இரண்டு முறையும்
12 திரு நாமங்கள் மூன்று முறையும்
2 திரு நாமங்கள் நான்கு முறையும் வரும்–(நிவ்ருத் தாத்மா–பிராணத)

பிரகரணம் படி இவற்றுக்கு அர்த்தங்களை சாதிக்கிறார்

நான்கு தடவை வரும் திரு நாமங்கள்

நிவ்ருத் தாத்மா–231–453–604–780

231-புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப திரு நாமம்
453-நிவ்ருத்தி தர்ம ப்ரவர்தக திரு நாமம்
604-தர்மம் படி பலன் அழிப்பவன் திரு நாமம்
780-ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்

————————-

பிராணத : -66-322-409-956-

66-பரத்வம்-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திரு நாமம்
322-ஸ்ரீ கூர்மாவதாரம் திரு நாமம்
409-ஸ்ரீ ராம அவதார திரு நாமம்
956-ஸ்ரீ பகவான் செய்து அருளும் செயல்களின் பிரயோஜனம் சொல்லும் திரு நாமம்

————–

மூன்று தடவை வரும் திரு நாமங்கள்..

1-அச்யுத–101–319-557

101-ஆஸ்ரித வத்சலன் திருநாமம்
319-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் திருநாமம்
557-சுத்த ஸ்வரூபி திருநாமம்

———

2-அஜ : 96-206-524

96-பரத்வம்-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி
206-அஜ – ஸ்ரீ நரசிம்ஹ அவதார திருநாமம்
524-அஜ –பிரணவ ஸ்வரூபி திருநாமம்

————-

3-பிராண : 67 -321-408

67-பிராண –பரத்வம்-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திருநாமம்
321-பிராண-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் திருநாமம்
408-பிராண –-ஸ்ரீ ராம அவதார திருநாமம்

——————–

4-பத்ம நாப : 48–198-347-

48-பத்ம நாப –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
198-பத்ம நாபன் – ஸ்ரீ பத்மநாபாவதாரம் திருநாமம்
347-பத்ம நாப –பர வாசுதேவன் ரூப குண வாசகம் -திருநாமம்

————–

5-மாதவ : 73-169-741-

73-மாதவ-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திருநாமம்
169-மாதவ –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -திருநாமம்
741-மாதவ-ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்

————-

6-வீரஹா 168-747-927-

168-வீரஹா –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் திருநாமம்
747-வீரஹா-கிருஷ்ணாவதார திருநாமம்
927-வீரஹா –ஸ்ரீ கஜேந்திர மோஷ பரமான திருநாமம்

—————

7-ஸ்ரீமான் 22-180-222..

22-ஸ்ரீ மான் –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
180- ஸ்ரீ மான் –ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் திருநாமம்
222–ஸ்ரீ மான் –ஸ்ரீ மத்ஸ்ய அவதார திருநாமம்

—————-

8-வாசுதேவ 333-700-714

333-வாஸூ தேவ- ஸ்ரீ பர வாசுதேவன் குண வாசகம் திருநாமம்
700- வாஸூ தேவ -ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்
714-வாஸூதேவ –ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்

———-

9–விஷ்ணு –2-259-663-

2-விஷ்ணு –பரத்வம் – வ்யாப்தி –ஸர்வேஸ்வரத்வம்-திருநாமம்
259-விஷ்ணு–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி-திருநாமம்
663-விஷ்ணு –சக்தீசம் அவதார திரு நாமம்

————-

10-வீர: 168-464-664-

168-வீரஹா –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் திரு நாமம்
464-வீர பாஹூ-அலை கடல் கடைந்து அமுதம் கொண்டவன்-திரு நாமம்
664-வீர–சக்தீசம் அவதார திரு நாமம்

—————-

11-சௌரி : 341-649-650

341- சௌரி –பர வாசுதேவன் குண வாசகம்-திருநாமம்
649-சௌரி-அர்ச்சாவதாரம் பரமான திருநாமம்
650-அர்ச்சாவதாரம் பரமான திருநாமம்

——————

12-பாவந : 32-293-817-

32-பாவந –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
293-பாவநா–விஸ்வ ரூபம்-திருநாமம் –
817-பவன –தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திருநாமம் –

—————

13.போக்தா -145-502-889-

145-போக்தா-ஸ்ரீ வ்யூஹ நிலை திருநாமம்
502-போக்தா–தர்ம ஸ்வரூபி -திருநாமம்
889-அநந்த ஹூத புக் போக்தா –அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திருநாமம் –

———–

14-வஸூ : -105-271-701

105-வஸூ-ஆஸ்ரித வத்சலன் திருநாமம்
271-வஸூ –சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி-திருநாமம்
701-வஸூ–ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம் –

————–

15-சத்ய :- -107-213-873-

107 ஸத்ய –பரத்வம்-ஆஸ்ரித வத்சலன்-திருநாமம்
213-சத்ய-ஸ்ரீ மத்ஸ்ய அவதார திருநாமம்
873-சத்ய –சத்வ குணம் வளர்க்கும் -சாத்விகர் தலைவன் பரமான திருநாமம்

———————————

இரண்டு தடவை வரும் திரு நாமங்கள்..

1-அசோக :    -337/537

2-அநக :         -148 /835

3.அநந்த:     -665/889

4..அநல :   -294/716

5- அநிர்தேச்யவபு : -179/662

6.அநிர்விண்ண :   -436/893

7.அநிருத்த:      -187/644

8.அநில:    -236/818

9-அபராஜித :    -721/866

10-அமித விக்ரம :   -519/647

11-அமேயாத்மா:      -103/481

12-அமோக :              -111/156

13-அவ்யய :            -13/900

14-அஸ்த :             -479/481

15-அஷோப்ய :      -807/999

16-ஆதித்ய :           -39/568

17-ஆதி தேவ  :      -335/491

18-ஈஸ்வர:            -36/75

19-உத்பவ :         -374/796

20-க்ருதஜ்ச :     -83/536

21-க்ருதாகம :    -661/795

22-கிருஷ்ண :      -58/554

23-  கர்த்தா            -316/381

24-கஹந:           -383/548

25- காந்த:           -296/760

26-குமுத ;         -595/813

27-குரு :              -211/495

28-கேசவ:         -23/654

29-கோப்தா      -498/600

30-கோபதி        -487/699

31-கோவிந்த ;  -189/543

32-சக்ரீ                -908/885

33-சதுர்வ்யூஹ :  -140/773

34-  சதுராத்மா        -139/775

35-சிவ :                    -27/607

36-சுசி :                    -157/252

37-சுபாங்க :          -593/788

38-சூர :                 -340/650

39-த்யுதிதர:       -276/764

40-த்ருவ :          -55/389

41-தஷ :               -424/917

42-தாதா             -43/951

50- தார:               -339/968

51-துர்த்தர:       -267/720

52-நியம :        -163/869

53-பிரணவ :   -410/957

54-  பிரபு :         -35/300

55-பிரமாணம் -429/959

56-  பிரஜாபதி     -70/199

57-பவந :              -292/817

58-பாநு :             -126/284

59-பீம :              -358/948

60-புண்ய :        -692/925

61-புருஷ :        -14/407

62-புஷகராஷ :   -40/561

63-பூ:              -438/943

64-பூதாத்மா  -8/10

65- மஹா கர்மா–677/793

66-மஹீதர :           -318/370

67-மார்க்க :           -366/398

68-யம :                   -164/870

69-யஜ்ச :                -446/971

70-ருத்த :                -279/352

71-வசுபிரத :         -698/699

72-வசுமநா :        -106/702

73  வாசஸ்பதி :    -218/579

74-வாயு வாஹந :   -332/860

75-விக்ரமீ  :           -76/909

76-விதாதா  :           -44/485

77-விபு:                      -241/883

78-விஸ்வ யோநி    -118/151

79-வேதவித  :          -130/133

80-ஸ்ரீநிவாஸ :         -185/614

81-ஸ்தவிஷ்ட :       -53/437

82-ஸ்ரஷ்டா  :         -595/990

83-ஸதாம் கதி :        -186/451

84-ஸ்ம்வச்தர:         -92/423

85-ஸ்ர்வத்ருக்          -201/577

86-ஸ்ர்வஜ்ஜ :         -454/821

87-  ஸ்வ :                 -732/733

88-ஸ்விதா              -887/969

89-ஸ்ஹிஷ்ணு  :   -146/570

90-ஸாஷி :                 -15/517

91-ஸித்த :              -98/825

92-ஸிம்ம :             -202/489

93-ஸு கத :             -460/890

94-ஸுபர்ண :         -194/859

95-ஸுவர்த :         -456/824

96-ஹரி :                 -360/656

97-ஹவி :               -360/703

98-ஹிரண்ய கர்ப்ப :  -71/412

99-ஹுதபுக் :             -883/889

100-க்ஷாம :             -444/758

———-

நிர்வசனம் விக்ரஹ வாசகம் வியாகரணம் படி -காட்டி
அர்த்தமும் சொல்லி
பொருள் சொல்லும் பொழுது சங்கதி சொல்லி
இவற்றுப் ப்ரமாணங்களையும் காட்டி -சொல்லும் அர்த்தத்துக்குத் தக்க பிரமாணங்கள் காட்டி அருளி –

960 திரு நாமங்கள் ஒரே சொல்
ஏகம் -முக்தானாம் பரமாம் கதிம் -மூன்று பதங்கள் சேர்ந்து ஒரே
குரு குரூ தம
ஆபாச தேஜஸ் ஸ்துதி தர போல் 30 திரு நாமங்கள்
இரண்டாகவும் பிரித்தும் சொல்லலாம் படியும் உண்டு -இது போல் ஆறு திரு நாமங்கள்
ஹரீர் ஹரி –த்ரிபத் தாம போல்

பகவத் குண தர்ப்பணம் -காட்டும் கண்ணாடி -இது
அனந்தாழ்வான் பட்டரை -ராமானுஜரே திரும்பி
ஸ்ரீ ரெங்கராஜன் பெரிய பிராட்டியார்
சுகக்ருத் வருஷம் -இவரும் திரு அவதாரம்
தொட்டாச்சார்யார் -480-வருஷம் முன்பு
கூரத்தாழ்வானுக்கு 90 திரு நக்ஷத்ரங்களுக்கு மேல் இவர் திரு அவதாரம்
பெரிய பெருமாள் ப்ரஸாதம் மூலம் திரு அவதாரம்-இவரும் வேத வியாஸ பட்டரும்

எம்பார் த்வயம் ரக்ஷையாக -சொல்லி வர -வாஸனை வீசுவதை உடையவர் அறிந்து நீரே இவருக்கு ஆச்சார்யராக இருந்து அருளும் விதித்தார்

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

பறப்பதின் குட்டி தவழுமோ
சிறு பிராயத்திலேயே பாண்டித்யம்
பட்டர் நிர்வாஹம் திருவாய் மொழியில் விலக்ஷணமாக இருக்குமே
மாதவாச்சார்யரை திருத்தி நஞ்சீயர் ஆக்கி -திருநெடும் தாண்டகத்தில் ஈடுபாடு

அஷ்ட ஸ்லோஹி –முதலில் ரஹஸ்ய த்ரயத்துக்கு இவர் அருளி
ரெங்கநாத அஷ்டகம் அருளி
ஸ்ரீ ரெங்கஜராஜ ஸ்தவம் பூர்வ உத்தர
ஸ்ரீ குணரத்ன கோசம்
மேல் நான்கு கிரந்தங்கள் லுப்தம்
தத்வ ரத்நாகரம்
நித்ய கிரந்தம்
அத்யாத்ம -கண்ட த்வய விவரணம்
லஷ்மீ திருக் கல்யாணம்

மேல் வராஹ புராணம் அந்தரகதமான கைசிக புராணம்
இன்றும் விண்ணப்பம் செய்து பஹு மானம் பட்டர் வம்சத்துக்கு

மை வண்ண -நைவளம் -இரண்டு பாசுரங்களுக்கு இவர் சாதித்த வியாக்யானம்

திருவாய்மொழி தனியன்கள் சாதித்து அருளின் உள்ளார்
திருப்பாவை தனியன் -திருக்கோஷ்டியூரில் இருக்கும் பொழுது சாதித்தார்

திருமஞ்சன கட்டியங்கள் பலவும் மசாதித்து அருளி உள்ளார்

இப்படி 16 கிரந்தங்கள் இவர் அருளிச் செய்துள்ளார்

————-

ஸ்ரீ குரு பரம்பரா வணக்கம்

வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம்
த்யாயேயம் யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை ராமமேவாபியாயாம்
பத்மாஷம் ப்ரேஷிஷீய ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம்
ஸ்தௌமி ப்ரேஷேய லஷ்மீம் சரணம் சரண ஸ்ரீ தரம் சம்ஸ்ரயேயம்

வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம் த்யாயேயம் –
ஆச்சார்யரான ஸ்ரீ கோவிந்தர் என்னும் ஸ்ரீ எம்பார் -தந்தையான ஸ்ரீ கூரத்தாழ்வான் –
த்வந்த ஸமாஸம் -சம பிரதானம் இல்லை -அர்த்த கௌரவத்தால் கோவிந்த முதலில்
இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -பிரபலம் போல் இங்கும்

ஸ்ரீ லஷ்மண முனியான ஸ்ரீ எம்பெருமானார் –இவர்களைத் த்யானிக்கிறேன்

யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை
என் மனம் ஸ்ரீ யாமுனாச்சார்யர் எனப்படும் ஸ்ரீ ஆளவந்தாரால் நிறைந்து இருக்கட்டும் –

ராமமேவாபியாயாம் பத்மாஷம் ப்ரேஷிஷீய —
ஸ்ரீராம மிஸ்ரர் என்னும் ஸ்ரீ மணக்கால் நம்பியையும் ஸ்ரீ புண்டரீகாக்ஷர் எனும் ஸ்ரீ உய்யக் கொண்டாரையும்
நான் பணிவுடன் அணுகுகிறேன்

ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம் ஸ்தௌமி -ப்ரேஷேய-லஷ்மீம் சரணம் சரண ஸ்ரீ தரம் சாம்ச்ரயேயம்-
நமது பிரதம ஆச்சார்யரான ஸ்ரீ மந் நாதமுனிகளை வணங்குகிறேன் –
ஸ்ரீ எம்பெருமானின் ஸ்ரீ சடாரி எனப்படும் ஸ்ரீ நம்மாழ்வாரை போற்றுகிறேன்
ஸ்ரீ பெரிய பிராட்டியாரின் திருக்கண் கடாக்ஷம் எனக்குக் கிட்ட வேணும்
அநந்ய கதியான அடியேன் ஸ்ரீதரனான ஸ்ரீ பெரிய பெருமாள் இடம் சரண் அடைகிறேன்

ஸ்ரீ கோவிந்த பட்டரையும்
என் பிதாவான ஸ்ரீ வத்ஸாங்க மிஸ்ரரையும்
வந்தனம் செய்கிறேன்
அதன் பிறகு ஸ்ரீ மத் ராமானுஜ முனிவரை எப்போதும் சிந்திக்கக் கடவேன்
பெரிய நம்பியை த்யானம் செய்வேன்
யாமுனாச்சார்யரை ஹ்ருதயத்தில் வைக்கக் கட வேன்
ராம மிஸ்ரரை அடையக் கடவேன்
புண்டரீகாக்ஷரைப் பார்க்கக் கடவேன்
சம்பிரதாயத்துக்கு பிரதம ஆச்சார்யரான ஸ்ரீ மன் நாதமுனிகளை ஸ்துதிக்கிறேன்
நம்மாழ்வாரைப் புகழ்கிறேன்
ஸ்ரீ மஹா லஷ்மியைத் தர்சிக்கக் கடவேன்
வேறு சரணம் இல்லாதவனாய் ஸ்ரீ யபதியை சரணம் அடைகிறேன் –

அஸ்மத் குரு ஸமாரம்பாம் -தொடங்கி -ஸ்ரீயப்பதி பர்யந்தம் சொல்லி
ஸ்ரீ விஷ்வக் சேனருக்குத் தனியாக எடுத்து அருளிச் செய்கிறார்

———–

ஸ்ரீ விஷ்வக் சேனர் ஸ்துதி

ஓம் நமோ கஜவக்த்ராத்யை பாரிஷத்யை ப்ரசாஸதே
ஸ்ரீ ரங்கராஜ ஸேநான்யே ஸூத்ரவத்யா ஸமே யுஷே

கஜானன்
ஜயத்ஸேனன்
ஹரி வக்த்ரன்
கால ப்ரக்ருதி ஸம் ஜ்ஞகன்
என்னும் நான்கு பரிவாரங்களோடு கூடி ஆஜ்ஜையை செலுத்துபவரும்
ஸூத்ரவதி என்னும் பத்னியுடன் கூடியவரும்
ஸ்ரீ ரெங்கராஜருடைய சேனாபதியுமான-சேஷாசனர் -சேஷ அசனர் இவரே –
விஷ்வக் சேனருக்கு ஓம் என்று சொல்லி நமஸ்கரிக்கிறேன்

——–

ஸ்ரீ வேத வ்யாஸர் நமஸ்காரம்

நமோ நாராயணாயேதம் கிருஷ்ண த்வைபாய நாத்மகே
யதாமுஷ்யாயணா வேதா மகா பாரத பஞ்சமா

ஸ்ரீ மஹா பாரதம் ஐந்தாவது வேதமாகச் சேர்ந்த நான்கு வேதங்களும்
எவரால் வெளிப்பட்டனவோ -எவருடைய வம்சத்தில் பிறந்தனவோ –
அந்த கிருஷ்ண த்வைபாயன ரூபமாக அவதரித்த
நாராயணற்கு என்னுடைய நமஸ்காரங்கள்

———–

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யம் செய்து அருளியவர்

ஜாதோ லஷ்மண மிஸ்ர ஸம்ஸ்ரய தநாத் ஸ்ரீ வத்ஸ சிஹ்நாத் ருஷே
பூயோ பட்ட பராசரேதி பணித ஸ்ரீரங்க பர்த்ரா ஸ்வயம்
ஸ்ரீ ஸ்ரீரங்கபதி ப்ரஸாத த்ருஷயா ஸ்ரீ ரங்க நாதாஹ்வய
ஸ்ரீ ரங்கேஸ்வர காரிதோ விவ்ருணுதே நாம் நாம் ஸஹஸ்ரம் ஹரே

ஸ்ரீ மத் ராமானுஜ முனிவர் எனப்படும் யதிராஜரை அடுத்து இருப்பதே தனமாகப் பெற்ற
ஸ்ரீ வத்சாங்க மிஸ்ரர் என்னும் ரிஷியிடம் ஜெனித்தவரும்
ஸாஷாத் பெரிய பெருமாளாலேயே பராசர பட்டர் என்று திருநாமம் சாத்தப்பட்டவரும்
ஸ்ரீ ரெங்கநாதன் என்றும் பெயர் பெற்றவருமான இந்த பட்டர் (படர்கையாக தம்மையே சொல்லிக் கொள்கிறார் )
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தை
ஸ்ரீ ரெங்கநாதனாலேயே செய்யப் பெற்று
ஸ்ரீ ரெங்கநாதனுடைய அனுக்ரஹத்தில் உள்ள பெரு அபி நிவேசத்தினால் செய்து அருளுகிறார் –

————

அவை யடக்கம் -விநய யுக்தி

சம்சாரோ அயம் அபண்டிதோ பகவதி ப்ராகேவ பூய கலௌ
பூர்ணம் மன்யதமே ஜானே ஸ்ருதி சிரோ குஹ்யம் ப்ருவே சாஹசாத்
தத்ர ஸ்தோத்ர மிதம் பிரகாசயதி யஸ் துத்யஸ்ஸ யஸ்தா வுபௌ
வியாச காருணிகோ ஹரிஸ்ஸ ததிதம் மௌர்க்யம் சஹேதாம் மம

இந்த ஸம்ஸாரம் -பிறவியின் தொடர்ச்சி பகவத் ஸ்வரூப விஷயத்தில் முன்னமே அறிவில்லாதது –
கலியில் இன்னும் அதிகம்
எல்லாம் தெரிந்து நிரம்பினதாக நினைத்துக் கொண்டு இருக்கும் ஜனங்கள் இடத்தில்
வேதாந்த ரஹஸ்யத்தை நான் சொல்லுவது ஸாஹஸம்
இந்த விஷயத்தில் இந்த ஸ்தோத்ரத்தை வெளியிட்டவரும்
இதனால் ஸ்துதி செய்யப்படுபவருமாகிய
தயாளுக்களான ஸ்ரீ வியாஸ பகவானும் ஸ்ரீ மன் நாராயணனும்
இப்படிப்பட்ட என்னுடைய அறியாமையைப் பொறுக்கக் கடவர்

பாடின கண்ணனும் பாடப்பட்ட கண்ணனும் பொறுத்து அருளட்டும்

———–

அர்த்தே ஹரௌ ததபிதாயிநி நாம வர்கே
தத் வ்யஞ்ஜகே மயி ச பந்த விசேஷ மேத்ய
ஸேவதவமேத தம்ருதம் ப்ரணிபத்ய யாசே
மத்யஸ்த மத் ஸரிஜநா இஹ மாச பூவன் –

ஸஹஸ்ர நாமத்தின் பொருளாகிய ஸ்ரீ யபதியினிடத்திலும்
அவரைச் சொல்லும் ஸஹஸ்ர நாமங்களினிடத்திலும்
அவற்றுக்கு உரை செய்யும் என்னிடத்தில்
ஒரு வகையாக அன்பு வைத்து
இந்த அமுதத்தை உட்க் கொள்ளுங்கோள்
நமஸ்கரித்துப் பிரார்த்திக்கிறேன்

யாரும் இந்த விஷயத்தில்
உதாசீனர்களாயும்
விரோதம் உள்ளவர்களாயும்
ஆக வேண்டாம்

————————-

த்யானம் -அதை விட எளிதான -யாகங்கள்-அதை விட எளிதான அர்ச்சனை முன் யுகங்களில்
கலியுகத்தில் இவை செய்ய இயலாதே
இவற்றிலும் எளிதான நாம சங்கீர்த்தனம்
புருஷார்த்தத்தில் வாசி இல்லை -உபாயங்கள் எளிதாக இருந்தாலும் -யத ஆப்நோதி -தத் ஆப்நோதி –
த்வாபரன் அர்ச்சயன் கலவ் கேசவ கீர்த்தனம்
கெடும் இடராயின வெல்லாம் -கேசவா என்ன –

பெருமாள் போல் திரு நாமங்களுக்கும் ரக்ஷகத்வமும் போக்யத்வமும் உண்டே –
துன்பினைத் துடைத்து -தென் புலன் -தவிர்த்து மீளா அர்ச்சிராதி மார்க்கம் தரும் பெருமாளே ரக்ஷகம்
ஸர்வ பூஷண பூஷணார்த்தம் கிமர்த்தம் ந பூஷணாய -ஆபரணங்களால் மறைக்காமல் -நீண்ட உருண்ட திருக்கைகளைக் காட்டி த்ருஷ்ட்டி
நாம பலம் நாமி பலம் -நின் நாமம் கற்ற ஆவலிப்பு -நாமங்களும் ரக்ஷிக்கும்
இச்சுவை தவிர –அச்சுவையும் வேண்டேன் -போக்யத்வமும் உண்டே

நாமங்களுக்கு சாம்யம் மட்டும் இல்லை –ஏற்றமும் உண்டு
உத்தமனை பாடுவது விட உத்தமன் பேர் பாடுவது அன்றோ –

கட்டிப் பொன் போல் அவன் பணிப் பொன் போல் திரு நாமம் -இதுவே யோக்கியதையும் பண்ணிக் கொள்ள வல்லது

—-

அவதாரிகை

இஹ கலு நிகில அபி சேதயமாந பிரமாணத ப்ரமேயம் பரிச்சிந்தன்
தச்சேத ப்ரமேயம் அநு கூலம் தத் உபாதீத
யதா ஸ்ரக் சந்தன கநகாதிகம்
தச் சேத் விபரீதம் அபோஹேத ஷுர கண்ட காதிகம் தத் சேத் அநுபயரூபம் உபேஷேத யதா காஷ்ட லோஷ்டாதிகம்

உலகத்தில் அறிவுள்ளவர்கள் அனைவரும் ப்ரமாணங்களினால் (பிரமாணம் -பிரமை அறிவுக்கு காரணம் )
அது ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம்
ப்ரத்யக்ஷம் நேரில் அறியும் -மெய் வாய் கண் மூக்கு செவி மூலம் அறிபவை
அனுமானம் ஒரு குறியைக் கொண்டு மற்ற ஒன்றை ஊகித்தல்
சப்தமாவது ஸாஸ்த்ரம்-ஆத்மா பரமாத்மாவைப் பற்றி வேதம் ஒன்றாலே அறியலாம் –
அனுமானம் கருதல் அளவை என்றும்
சப்தம் ஆகம அளவை என்றும் சொல்லப்படும்
உவமான பிரமாணம் என்றும் ஓன்று உண்டு

ப்ரமேயங்களை விஷயங்களை கண்டு அறிந்த பிறகு
ப்ரமேயம் என்பது -தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என்று நான்கு வகைப்படும் –
இவற்றில் அர்த்தமும் காமமும் பிரத்யக்ஷம் அனுமானம் கொண்டு அறியலாம்
தர்மம் மோக்ஷம் இரண்டும் ஸாஸ்த்ரத்தினாலேயே அறியப்படுபவை –
இவற்றை அறிந்த பிறகு
அனுகூல விஷயங்களை -புஷ்பம் சந்தனம் பொன் மணி போன்றவற்றை எடுத்துக் கொள்வதும்
பிரதிகூல -கத்தி முள் -போன்ற விஷயங்களைத் தள்ளுவதும்
இரண்டும் இல்லாத கல் கட்டை மண் போன்றவற்றை உதாசீனம் பண்ணுவதும்
அனுபவத்தில் காணப்படுகின்றன

தத்ர ப்ரத்யஷாதி ப்ரமாணாந்தர கோசரயோ அர்த்த காமயோ
அத்யல்பத்வ அநர்த்த கரத்வ- பீபத்ஸ் யத்வ –பங்கு ரத்வ -துக்க மிஸ்ரத்வ –துஸ் ஸ்தானத்வாத்ய
அநந்த தோஷ அநு ஷங்கேண த்யாஜ்யத்வாத்
ஸாஸ்த்ர ப்ரமேயயோ தர்ம பர தத்வயோ
தத் வைபவரீத்யாத் அநந்த மங்கள ஸம் கதத்வாச் ச
ஸாஸ்த்ர ததர்த்தயோர் உபாதேயத்வம் ப்ரக்ருஷ்யதே

இவற்றில் அர்த்தம் காமம்
மிக அல்பமாயும் -தீங்கை விளைவிப்பதாயும் -அஸ்திரமாகவும்
துன்பம் மிக்கதாயும் -கஷ்ட ஸாத்யங்களாயும் எண்ணிறந்த குற்றங்கள் உள்ளனவாயும் இருக்கும்
ஆகையால் விடத்தக்கவை –
தர்மமும் மோக்ஷமும் -ஸாஸ்த்ரம் ஒன்றாலே அறியத் தக்கவை -அளவற்ற மங்களங்களைத் தருமவையாதலால் மிக ஸ்ரேஷ்டமாகும்

அன்றாடம் பாபங்களை சம்பாதித்திக் கொண்டே இருந்தும் பிரத்யக்ஷம் கொண்டு அறிய முடியாதே

————

யதா ஹுர் இதிஹாஸிகா பவ்ராணிகாஸ் ச ஏக கண்டா

ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்த் ருத்ய புஜமுச்யதே
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேஸவாத் பரம் இதி
தத்ர சதுர் தச வித்யா ஸ்தான ப்ரதான பூதஸ்ய வேதஸ்ய 

இதி பிரகாரேண இதிஹாஸ புராணாப் யாமர்தே நிர்ணே தவ்யே புராணேப்ய
இதிஹாஸ உத்கர்ஷே ச விவஷிதே ஸ்ரீ மத் இராமாயண வத் மஹா பாரதம் அபி சரணம்

இவ் விஷயத்தில் இதிஹாசம் அறிந்தவர்களும் புராணம் அறிந்தவர்களும்
ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம்
கை தூக்கி உத்கோஷிக்கிறேன்
வேத சாஸ்திரத்துக்கு மேலான சாஸ்திரமும் இல்லை
கேசவனுக்கு மேற்பட்ட தெய்வமும் இல்லை
என்று ஒற்றுமையாகச் சொல்வர்

பதினான்கு வித்யா ஸ்தானங்களாகப் பகுக்கப்பட்ட ஸாஸ்த்ரங்களில் தலைமையாய் உள்ள வேதத்தைப் பற்றி
இதிஹாசத்தாலும் புராணத்தாலும் வேதத்தைப் பூரித்துக் கொள்ள வேண்டும் -அதாவது
வேதத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்
இவையே உப ப்ரஹ்மணங்கள் என்று சொல்லப்படுபவை

வேதங்களுக்கு உப ப்ரஹ்மணம் -ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்கள்
வேதங்களை ஸ்ம்ருதிகள் கொண்டு அறியலாம்
வேதாந்தங்களை இதிஹாஸ புராணங்களாலே அறியலாம்

இதிகாசத்தை முதலில் சொல்லி புராணங்களை பின் சொல்லி இருப்பது அதன் பிரபல்யத்தாலே
அத்தாலே அது முற்பட்டது
ஆகவே ஸ்ரீ மஹா பாரதமானது ஸ்ரீ மத் ராமாயணம் போல்
தத்வ ஞானத்துக்கு இன்றியமையாத ஆதாரமாகும் -சரணம் -தஞ்சமாவது -என்கிறார்

————-

ஸ்ரீ ஸஹஸ்ர நாம அத்தியாயத்தின் சிறப்பு

தத்ர

மஹா பாரத ஸாரத்வாத் ரிஷிபி பரிகாநன
வேதாசார்ய ஸமா ஹாராத் பீஷ்மோத்க்ருஷ்ட மதத்வத
பரிக்ரஹாதிசயதோ கீதாதியைகார்த்தஸ்ஸ ந
ஸஹஸ்ர நாமாத்யாய உபாதேய தமோ மத

1-மகா பாரத சாரத்துவாத்–சாரமானது..

2-ரிஷிபி : பரிகாநதா:பரிகானன=வக்த்ரு வைலக்ஷண்யம்
சநகர்,சனநந்தர் சனத் குமாரர் ,சனத் சுஜாதர், நாரதர் போன்றோர் பாடிய திரு நாமங்களை வியாசர் தொகுத்து அளிக்கிறார்

3-வேதாச்சர்யா சமா ஹாராத்–பரம ஆப்த தமர் வியாசர்..

4-பீஷ்ம உத் க்ருஷ்ட மதத்வத:-அனைத்திலும் சிறந்த தர்மம் என்று பீஷ்மர் நினைத்து இருந்த சிறப்பு

5-பரிகிரஹா திசயதோ-விலக்ஷணமான அங்கீ காரம் பெற்றது

6-கீதாத்யை கார்த்தஸ்ஸ ந:-பகவத் கீதை போன்ற பல நூல்கள் உடன் பொருள் பொருத்தம் உடைய சிறப்பு

இந்த ஆறு காரணங்களால் –சஹஸ்ர நாம அத்யாய உபாதேய தமோ மத :

——————

1- ஸஹஸ்ர நாம அத்யாயம் மஹா பாரதத்தில் சாரமானது

மஹா பாரதம் ஹி பரிக்ரஹ விசேஷ அவஸித அவிப்லவ வசந ஸௌஷ்ட வாத்யாத் மகத்வாத்
இதிஹாஸத்வ க்ருதாத் ப்ராபல்யாத், புராணேஷு தாவத் வாயு ப்ரோக்த ஸைவயோ :

மதி மந்தாநம் ஆவித்ய யேநாஸௌ ஶ்ருதி ஸாகராத்| ஜகத்திதாய ஜநிதோ மஹா பாரத சந்த்ரமா: ||”

ஸ்ரீ மஹா பாரதம்
பெரியோர்களால் சிறந்த பிரமாணமாக அங்கீ கரிக்கப் பெற்று
அர்த்தங்களில் மாறுபாடு இன்றி அழகான சொல்லாய் அமைந்து இருப்பதாலும்
இதிஹாசமாய் இருப்பதாலும்
பிரபலமான பிரமாணம் என்று நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது

வ்யாஸ பகவான் தமது புத்தி என்னும் மத்தை வேதம் என்னும் கடலிலே செலுத்திக் கடைந்து
உலகோர் நன்மைக்காக மஹா பாரதம் என்னும் சந்திரனை எடுத்து அளித்தார்
என்று வாயு புராணம் சைவ புராணம் சொல்லும்

கிருஷ்ணனும் -கிருஷ்ண த்வைபாயனார் –கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -மூவரும் கடைந்து
அம்ருதம் -ப்ரஹ்ம ஸூத்ரம் -திருவாய் மொழி அருளினார்கள் அன்றோ

மறைப்பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பு அணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றி சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே –

பவிஷ்யத் புராணே
“பிபேதி கஹநாத் சாஸ்த்ராத் நரஸ் தீவ்ராதி வௌஷதாத் |
பாரத: ஶாஸ்த்ர ஸாரோ அயமத: காவ்யாத்மநா க்ருத:||“

மனிதன் கடினமான ஸாஸ்த்ரத்தைக் கண்டு கடுமையான மருந்தைக் கண்டது
போல் பயப்படுகிறான் -ஆதலால் எல்லா ஸாஸ்த்ரங்களின் ஸாரமாகிய இம் மஹா பாரதம் காவ்யா ரூபமாகச் செய்யப்பட்டுள்ளது -என்று பவிஷ்யத் புராணத்திலும்

———

மாத்ஸ்யே
“யஸ்ய த்வை பாயந: புத்ர: ஸ்வயம் விஷ்ணு ரஜாயத |
ப்ரகாஸோ ஜநிதோ யேந மஹா பாரத சந்த்ரமா:||

மஹா பாரதம் என்னும் சந்த்ரனால் உலகத்துக்கு வெளிச்சம் கொடுத்தவராகிய த்வைபாயனர்-த்வீபத்தில் பிறந்தவர் என்னும்
புத்ரராக ஸாஷாத் விஷ்ணுவே பராசரருக்குப் பிறந்தார் என்று மத்ஸ்ய புராணத்திலும்-

———

“வைஷ்ணவே “
க்ருஷ்ண த்வை பாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் | கோ ஹ்யந்யோ புவி மைத்ரேய மஹா பாரத க்ருத் பகவத் ||“;மூன்றாம் அம்சம் 

மைத்ரேயர் கிருஷ்ண த்வை பாயனர் என்னப்படும் வியாஸரைப் பிரபுவான நாராயணர் என்றே அறி
பூமியில் வேறு எவன் மஹா பாரத்தத்தைச் செய்வான் ஆவான் -என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்-பாரசார்யர்-பராசரர் பிள்ளை -பராசரரே கொண்டாடிப் பேசுகிறார்

——–

மார்கண்டேய
“வ்யாஸ வாக்ய ஜலௌகேந குதர்ம தரு ஹாரிணா |
வேத ஸைல அவதீர்ணேந நீரஜஸ்கா மஹீ க்ருதா||“ இத்யாதிபி:;

கெட்ட தர்மங்கள் ஆகிய மரங்களைக் களைவதும் வேதம் என்னும் மலையின் நின்றும் இறங்கியதுமாகிய
வ்யாஸர் வாக்யம் என்னும் ஜல ப்ரவாஹத்தால் பூமியானது
பாவம் இல்லாதாகச் செய்யப்பட்டது என்று மார்க்கண்டேய புராணத்திலும் சொல்லப்பட்டு இருப்பதாலும்

———-

ஸ்வஸ்மிம்ஶ்ச“யோ வித்யாச் சதுரோ வேதாந் ஸாங்கே உபநிஷதாந் த்விஜ:|
ந சாக்யாநமிதம் வித்யாந் நைவ ஸ ஸ்யாத் விசக்ஷண:||“

நாலு வேதங்களையும்-வேதாந்தங்களையும் -உபநிஷத்துக்களையும் அறிந்தும் இம் மஹா பாரதத்தை அறியாத பிராமணன் எவனோ அவன் அறிவித்த தேற்றம் உள்ளவன் ஆகான் என்று ஸ்ரீ மஹா பாரதத்திலும் சொல்லப்படுவதாலும்

—–

இத்யாதி பிஸ் ச
பரஸ் ஸஹஸ்ரைர் வசநை : ப்ரஶஸ்ய மாநத்வாத்,
ஸாங்க ஶ்ருதி ஸ்ம்ருதீ திஹாஸ புராண ஸம்வாதாத்,
“யதி ஹாஸ்தி ததந் யத்ர யந் நேஹாஸ்தி ந தத் க்வசித்“
இதி லௌகிக வைதிக ஸகலார்த நிர்ணய அதி க்ருதத்வேந க்வசித்  அப்ய பக்ஷபாதித் வாச்ச
புராணேப்யோ பல வத்தரம் பஹவோ புத்தி ஶாலி நோ அத்ய வஸஸு: |

மற்றும் உள்ள ஆயிரக்கணக்கான ப்ரமாணங்களால் ஸ்லாகிக்கப் படுவதாலும்

எல்லா அங்கங்களோடே கூடிய ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் முதலிய எல்லா பிரமாணங்களை ஒத்து இருப்பதாலும்

இதில் உள்ளவை தான் மற்று எல்லாவற்றிலும் உள்ளன
இதில் எது இல்லையோ அது வேறு எதிலும் இல்லை என்றும் சொல்லி இருப்பதால்
லௌகிகங்களும் வைதிகங்களுமான எல்லா விஷயங்களையும் ஐயம் திரிபு இன்றி
தெரிவிக்கப் பிரவிருத்திப்பதனாலும்
ஒரு விஷயத்திலும் பக்ஷ பாதம் இல்லாமையாலும்
புராணங்களைக் காட்டிலும் இது சிறந்த பிரமாணம் என்று அநேகம் அறிஞர் நிச்சயித்து இருக்கின்றனர் –

———

இதுவரை மஹா பாரத ஏற்றம் சாத்தி அருளி
அதில் சாரமான ஸஹஸ்ர நாம அத்யாயம் அருளிச் செய்கிறார்

தத்ராபி ஸ்வ ஹ்ருதய பூதே ஆநு ஶாஸநிகே பர்வணி தாந தர்மேஷு
ஸமஸ்த ஶாஸ்த்ரார்த்தே நிஷ் க்ருஷ்ய நிகம்யமாநே, ஸார ஸங்க்ரஹ  ரூபேண
கல்வயம் ஸஹஸ்ர நாம்நாமத்யாயோ அவதாரித: |

இம் மஹா பார்த்ததுக்கு உள்ளம் போன்றதாகிய சாந்தி பர்வத்தில்
தான தர்ம முதலிய எல்லா சாஸ்திரங்களின் பொருள்களையும் சாரமாக எடுத்து முடிக்கும் இடத்தில்
இந்த சஹஸ்ர நாம அத்யாயம் எல்லாவற்றினுடைய சார அம்சங்களின் ஸங்க்ரஹமாக அன்றோ நிச்சயிக்கப் பட்டு இருக்கிறது

———–

தஸ்மாத் ப்ராமாண்ய காரண ப்ரகர்ஷேண தத்த்வார்த தாத்பர்ய லிங்கைஶ் ச
அப்ராமாண்ய ப்ர ஶம்ஸாத் யந்ய பரத்வ ஶங்கயோ : ஸுதூர நிரஸ்தத்வேந
பரம ப்ரக்ருஷ்டார்த ப்ரதி பாதகத்வாச் ச அப்யுதய நிஶ்ரேயஸ அர்திநாம் அயமேவ உபாதேய தம:||

இப்படி இது பிரதானமாய் இருப்பதற்கு சிறந்த காரணம் இருப்பதனாலும்
தத்வார்த்தத்தில் இதன் தாத்பர்யத்தை அறிவதற்கு லக்ஷணங்களான
உபக்ரமம் உப சம்ஹாரம் அப்பியாசம் அபூர்வதா பலம் அர்த்தவாதம் உபபத்தி

உபக்ரமம் உப சம்ஹாரம் -தொடக்கம் முடிவு
அப்பியாசம் -மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு
அபூர்வதா -புதிதாக சொல்லப்பட்டு
பலம் -சொல்லப்பட்டு
அர்த்தவாதம் -ஸ்துதித்தும் சொல்லப்பட்டு
உபபத்தி-நியாயங்களைக் கொண்டு சாதித்து

முதலிய ஆறு வகைத் தாத்பர்ய லிங்கங்களும் -அடையாளங்களும் நிரம்பி இருப்பதாலும்
ப்ரமாணமா அல்லவா என்றும்
இந்த விஷயத்துக்காக இது வந்ததா -ஸ்தோத்ரம் முதலிய வேறே விஷயத்துக்காக வந்ததா என்றும்
சங்கிப்பதற்கு சிறிதும் இடம் இல்லை
எல்லாவற்றிலும் சிறந்த விஷயத்தைத் தெரிவிப்பதனால் –அப்யுதய-இம்மையில் எல்லாவித நன்மைகளுக்கும்
நிஶ்ரேயஸ-மோக்ஷத்திற்கும் இதுவே சிறந்த உபாயமாக எடுத்துக் கொள்ளத் தக்கது –

———————————————————

2- ததா ருஷிபி: பரிகாநத: —
ருஷிபி: பரிகீதாநி இத்யேதத் விவரண அவஸர
ஏவைஷ ஹேது ருப உபாதயிஷ்யதே ||

ரிஷிகளினால் ஓதப்பட்டமை
வேதார்த்த தமங்கள் எல்லாவற்றையும் நேராகக் கண்டு அறிந்த சனகர் சனத்குமாரர் நாரதர்
முதலான மஹரிஷிகளினால் இவ் வாயிர நாமங்கள் சொல் பொருள்களின் தத்துவங்களை அறிந்து கீர்த்தனம் செய்யப்பட்டவையே
இந்த நாமங்கள் வேத வ்யாஸ பகவானால் ஸ்தோத்ர ரூபமாகத் தொகுத்துக் கூறப்பட்டு
ஸம்ப்ரதாய வரிசையில் நமக்குக் கிடைத்து இருக்கின்றன –

————

3-கிஞ்ச, வேதாசார்ய ஸமாஹாராத்- பகவாந் ஹி வேதாசார்ய: க்ருஷ்ண த்வைபாயந: பரம ஆப்த தம:,
பகவந் நாராயண அவதாரத்வேந
நிரதிஶய ஜ்ஞாந ஐஶ்வர்யாதி கல்யாண குண கண தயா
நிரஸ்த ஸமஸ்த விப்ரலம்பாதி தோஷ ஸம்பாவநத்வாத்,

கலி பல மந்த அதிகாரி மநுஷ்ய அநு க்ரஹாய
வ்யஸ்த ஸமஸ்த வேதத்வாத்,

வேதார்தயோ :தத்த்வ அநுஷ்டாநயோ :
அஜ்ஞாந ஸம்ஶய விபர்யய பரிஜி ஹீர்ஷயா
ப்ரணீத பஞ்சம வேதத்வாத்,

வியாசர் பகவன் நாமங்களைத் தொகுத்தமை-(ஏழு பெருமைகள் அருளிச் செய்கிறார் )
ஸ்ரீ வேத வ்யாஸ பகவான் வேதாச்சார்யராக அவதரித்த மஹரிஷி யாதலின்
அவரது ஞானம் சக்தி முதலிய கல்யாண குணங்கள் எல்லாவற்றிலும் சிறந்தவை
மயக்கம் பிறரை மயங்கச் செய்வது ஊக்கம் இன்மை சொல்லும் திறமை இல்லாமை ஆகிய குற்றங்கள்
ஒரு சிறிதும் அவர் இடத்தில் இருக்கக் கூடும் என்று நினைப்பதற்கே இடம் இல்லாமையால்
அவர் சொல்வன எல்லாமே ப்ரமாணமே
கலி காலத்தில் சக்தி குறைந்த மனிதர்களின் மேல் அனுக்ரஹம் வைத்து வேதங்களை வகுத்து வேதங்களின் முக்கிய விஷயங்களாகிய
தத்வ ஞானம் அனுஷ்டானம் இவை இரண்டிலும் அஞ்ஞானம் சம்சயம் விபரீத ஞானம் இவற்றைப்
பரிகரிப்பதற்காக ஐந்தாம் வேதமாகிய மஹா பாரதத்தை அவர் இயற்றி அருளினார்

ஸ்வ வசநேந க்ஷத்த்ரியம் விஶ்வாமித்ரம்
ப்ராஹ்மணீ க்ருத வதோ பகவகதோ வஸிஷ்டஸ்ய நப்த்ருத்வாத்,

வஸிஷ்ட புலஸ்த்ய வர ப்ரதாந லப்த தேவதா பாரமார்த்ய ஜ்ஞாந புராண 
ஸம்ஹிதா கர்த்ருத்வாதி விஷய வர அதிஶயவத்தயா லைங்காதிஷ்வபி
புராணேஷு ப்ரஸித்தஸ்ய பகவத: பராஶரஸ்ய ச அப யத்வாத்,
அநந்ய ஸாதாரண தபஸ் ஸமாதி விஸேஷஶ்ச அஸேஷ பரமர்ஷி பரிஷத் பூஜிதத் வாச்ச| 

மேலும் அவர் ஷத்ரிய ஜாதியில் பிறந்த விச்வாமித்ரரை தமது சொல்லினால் ப்ராமணராகச் செய்த
வஸிஷ்ட பகவானது பிரபவ்வ்த்ரர் -பேரரின் குமாரர் -(வஸிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் )
வசிஷ்டரும் புலஸ்தியரும் வரம் அளித்ததனால் பர தேவதையின் உண்மை ஸ்வரூபத்தை அறிந்து
புராண ஸம்ஹிதை செய்வது முதலிய மகிமைகளை அடைந்தவர் என்று லிங்க புராணத்தில் சிறப்பித்துக் கூறப்பட்ட பராசரருடைய புதல்வர்–மற்றவர்களுக்கு இல்லாத தவம் தியானங்கள் சிறப்பால் மற்ற மஹ ரிஷி சபைகளால் பூஜிக்கப் பெற்றவர்

ஏவம் விதேந அநேந ருஷிபி: பரி கீதாநாமேவ
பகவந் நாம் நாம் அத்ர ஏதத் ஸ்தோத்ர ரூபேண ஸமாஹ்ருதத்வாச் ச அயம் உபாதேய தம:||

மேற்கூறிய ஸநகாதி மஹரிஷிகளால் ஓதப்பட்ட பகவத் திரு நாமங்களையே கொண்டு
ஸ்தோத்ர ரூபமாக இவர் தொகுத்து அருளி இருப்பதாலும் இந்த ஸஹஸ்ர நாம அத்யாயம்
அனுகூலமாகக் கொள்வதில் அனைத்திலும் மிகவும் -ஸ்ரேஷ்டம்

ஜனமேயன் பரீக்ஷித் திருக் குமாரர் -வைசம்பாயனர் இடம் கேட்டு அறிகிறார் -வேத வியாஸர் அருளிச் செய்தவற்றை உபதேசம்
பாகவதம் வேத வியாசர் அருளி -பரிக்ஷித்துக்கு ஸூகாச்சார்யார் உபதேசம்
அதையே மீண்டும் ஸூத பவ்ராணிகர் சனகாதிகளுக்கு உபதேசம் நைமிசாரண்யத்தில்-இப்படி ஒன்றுக்குள் ஓன்று சம்வாதம்

————

4- அபி ச பீஷ்ம உத் க்ருஷ்ட மதத்வத:- பீஷ்மோ அபி ஹி (ப்ரத்யாயித) ப்ரதீத தம: |
ததா ஹி, ராஜ தர்மேஷு தர்ம ராஜாய பகவதா வ்யாஸேந

பீஷ்மர் தமது மதமாக ஒப்புக் கொண்டமை(பீஷ்ம வைபவத்துக்கு 10 பிரமாணங்கள் காட்டி அருளுகிறார் )
பீஷ்மாச்சார்யரும் மிகவும் ஆப்த தமர் -மிகவும் நம்பத் தக்கவர்
வேத வ்யாஸ பகவானே தர்ம புத்ரரை நோக்கி(ஆளவந்தார் பராசர மஹரிஷியைக் கொண்டாடினார்
-பராசரர் வ்யாசரைக் கொண்டாடினார் -அந்த வ்யாஸர் பீஷ்மரைக் கொண்டாடுகிறார் )

ஶ்ரோதும் இச்சஸி சேத் தர்மாந் நிகிலேந நராதிப |
ப்ரைஹி பீஷ்மம் மஹா பாஹோ வ்ருத்தம் குரு பிதா மஹம் ||
ஸ தே ஸர்வ ரஹஸ்யேஷு ஸம்ஶயாந் மநஸி ஸ்திதாந் |
சேத்தா பாகீரதீ புத்ர: ஸர்வஜ்ஞ: ஸர்வ தத்த்வ வித் ||
ஸாக்ஷாத் ததர்ஶ யோ தேவாந் ஸர்வாந் ஶக்ர புராேக மாந் ||“இத்யாததௌ,

சிறந்த பராக்ரமசாலியான அரசனே- தர்மங்கள் எல்லாவற்றையும் கேட்க விருப்பம் இருந்தால்
கௌரவர்களின் பிதாமஹரும் பெரியவருமான பீஷ்மரிடம் செல்
ஸர்வஞ்ஞரும் -எல்லாவற்றிலும் உண்மை தெரிந்த கங்கா புத்திரர் -ஸூஷ்ம விஷயங்கள்
எல்லாவற்றிலும் உனது மனத்தில் உள்ள சந்தேகங்களை எல்லாம் அறுத்து விடுவர்
அவர் இந்திராதி தேவர்களை நேராகவே கண்டவர்-
அவர் சபையில் பரிசுத்தரான ப்ரஹ்ம ரிஷிகள் எக் காலத்திலும் ச பிரியர்களாக இருந்தனர்

யஸ்ய ப்ரஹ்ம ர்ஷய: புண்யா நித்யமாஸந் ஸபாஸத:|
யஸ்ய ந அவிதிதம் கிம்சித் ஜ்ஞாநம் ஜ்ஜேயேஷு வித்யதே ||
ஸ தே வக்ஷ்யதி தர்மஜ்ஜோ தர்மாந் ஸூக்ஷ்மார்த்த தத்த்வ வித் ||இத்யாததௌ ச, “(சாந்தி பர்வம் )

ஸ்வயம் ச பேவதா
ஶர தல்பகதோ பீஷ்ம: ஶாம்யந்நிவ ஹுதாஶந:|
மாம் த்யாதி புருஷ வ்யாக்ர: ததோ மே தத் கதம் மந:||
திவ்யாஸ்த்ராணி மஹா தேஜா யோ தாரயதி புத்திமாந் |
ஸாங்காம்ஶ்ச சதுரோ வேதாம்ஸ் தமஸ்மி மநஸா கதா 😐
ஸ ஹி பூதம் பவிஷ்யச்ச பவச்ச பரதர்ஷப |
வேத்தி தர்ம ப்ருதாம் ஶ்ரேஷ்ட: ததோ மே தத்கதம் மந:||
தஸ்மிந் நஸ்தமிதே பீஷ்மே கௌரவாணாம் துரம்தரே |
ஜ்ஞாநாந்யல்பீ பவிஷ்யந்தி தஸ்மாத் த்வாம் சோதயாம் யஹம் ||“இத்யாததௌ ச,

கிருஷ்ண பகவானும்
பீஷ்மர் சர தல்பத்தில் படுத்து அக்னி ஆறுவது போல் இருக்கிறார்
புருஷ ஸ்ரேஷ்டரான இவர் இப்போது என்னையே த்யானம் செய்கிறார்
ஆதலால் என் மனம் அவர் இடம் சென்றது
சிறந்த சக்தி புத்தி உள்ளவரான அவர் நான்கு வேதங்களையும் வேதாந்தங்களை தம் மனத்தில் வைத்து இருக்கிறார்
நானும் என் மனத்தினால் அவரைச் சேர்ந்து இருக்கிறேன்
பரத ஸ்ரேஷ்டரே -தர்ம அனுஷ்டானம் செய்பவர்களில் சிறந்தவராகிய அவர்
முக்காலமும் அறிந்தவர் என்பதாலேயே அவர் இடம் எனது மனமும் சென்றது
குரு வம்ஸ தலைவராகிய அவர் அஸ்தனமாகி விட்டால் ஞானங்கள் குறைந்து போகும்
ஆதலால் நான் உம்மைத் தூண்டுகிறேன் -என்றும்

“யச்ச த்வம் வக்ஷ்யஸே பீஷ்ம பாண்டவாய அநுப்ருச்சதே |
வேத ப்ரலாபா இவ தே ஸ்தாஸ்யந்தி வஸுதாதலே || “ இத்யாததௌ,

பீஷ்மரைப் பார்த்து
ஓ பீஷ்மரே- அறிய வேண்டும் என்று கேட்க்கும் தர்மராஜருக்கு நீர் என்ன சொல்லப் போகிறீரோ
அவை எல்லாம் வேத வாக்கியங்களை போலவே பூமியிலே நிலை நிற்கப் போகின்றன -என்றும்

“யத்தி பூதம் பவிஷ்யச்ச பவச்ச பரதர்ஷப|
ஸர்வம் தத் ஜ்ஞாந வ்ருத்தஸ்ய தவ பாணாவிவாஹிதம் ||
அஹம் ச த்வா அபிஜாநாமி ஸ்வயம் புருஷ ஸத்தம ||
தபஸாஹி பவாந் ஶக்த: ஸ்ரஷ்டும் லாேகாம்ஶ் சராசராந்-“ இத்யாததௌ ச,

ஓ பரத ஸ்ரேஷ்டரே -பூத பவிஷ்யத் வர்த்தமானங்களை எல்லாம் அறிவில் முதிர்ந்தவராகிய உமக்கு
உள்ளங்கையில் வைக்கப்பட்ட நெல்லிக்கனி போல் இருக்கின்றன
புருஷர்களின் சிறந்தவரே -நானும் நேராகவே உம்மை அறிந்து இருக்கிறேன்
நீர் தவத்தினால் சராசரங்கள் அடங்கி இருக்கும் உலகங்களை படைக்கவும் வல்லீர்

“ந கத க்லாநிர் ந தே மூர்ச்சா” இத் யுபக்ரம்ய “ஸத்த்வஸ்தம் ச மநோ நித்யம் தவ பீஷ்ம பவிஷ்யதி |
ரஜஸ் தமோப்யாம் அஸ்ப்ருஷ்டம் கநைர் முக்த இவோடுராட் ||“இத்யாததௌ ச,

உமக்கு களைப்பும் இல்லை மூப்பும் இல்லை மூர்ச்சையும் இல்லை
உமது மனம் எப்போதும் ஸத்வ குணத்திலேயே நிலை பெற்று ரஜோ குணம் தமோ குணம் அற்று
மேகங்களால் விடுபட்ட சந்திரன் போல் இருக்கிறீர் என்றும் சொல்லி இருக்கிறார்

பகவதா நாரதேந ச “க்ருத்ஸ்நாந் ஹி விவிதாந்
தர்மாம்ஶ் சாதுர் வர்ண்யஸ்ய வேத்த்யயம் ||
தச் சீக்ர மநு யுஞ்ஜீத்வம் ஸம்ஶயாந் மநஸி ஸ்திதாந் ||“ இத்யாததௌ ச ப்ரபஞ்ச்ய,

நாரத பகவானும்-நான்கு வர்ணங்களுக்கும் உள்ள பல வகைத் தர்மங்களை எல்லாம் இவர் நன்கு அறிந்தவர்
ஆதலால் உள்ளத்தில் உள்ள சம்சயங்களை விரைவில் இவர் இடம் வினவுங்கோள் என்று தொடங்கி விரிவாகச் சொல்லி

ஏநம் பஹு மஹர்ஷி வ்ருத்த ஸேவா -தீர்க ப்ரஹ்ம சர்ய தபஸ் -ஸமாதி லப்த -ஸர்வ ஸாக்ஷாத் காராதி ப்ரபாவ விஸேஷவத்தயா ப்ரஶஸ்ய,
பர தத்த்வ தர்ம ப்ரவர்த கதயா வராந் விதீர்ய நியுக்தத்வாத், மாதா பித்ரு ஶுஶ்ரூஷண தத் ப்ரஸாத வர லாப ஸௌபாக்யாத், 

பர தத்துவத்தையும்
பர தத்வ ஞானத்தையும்
தர்ம அனுஷ்டானத்தையும்
வெளியிடும்படி வரம் அளித்தார்

பீஷ்மர் மாதா பிதாக்களுக்குப் பணிவிடை செய்து அவர்கள் மனம் மகிழ்ந்து அளித்த வரத்தையும் பெற்று இருக்கிறார்

ஸ்வயம் ச-தாஹோ மோஹ: ஶ்ரமஶ் ஸைவ க்லமோ க்லாநிஸ் ததா ருஜ:|
தவ ப்ரஸாதாத் கோவிந்த ஸத்யோ வ்யப கதாநி மே ||
யச்ச பூதம் பவிஷ்யச்ச பவஶ்ச்ச பரமச்யுத |
தத் ஸர்வம் அநு பஶ்யாமி பாணௌ பலமிவாஹிதம் ||
வேதா உக்தாஶ் ஸைவ யே தர்மா: வேதாந்த நியதாஶ்ச யே |
தாந் ஸர்வாந் ஸம் ப்ரபஶ்யாமி வரதாநாத் தவாச்யுத ||“ இத்யாததௌ,

அவர் -ஓ கோவிந்தரே உமது அனுக்ரஹத்தினாலே எனக்குத் தாபமும் மயக்கமும் மனச் சோர்வும் ஓய்வும் வாட்டமும் நோய்களுமாகிய எல்லாம் உடனே போய் விட்டன
அச்யுதரே -பூத பவிஷ்ய வர்த்தமானங்களை எல்லாம் அவற்றுக்கு மேம்பட்ட பரம் பொருளையும்
உள்ளங்கை நெல்லிக்கனி போல் பார்க்கிறேன்-இது தான் ஏக விஞ்ஞானம் ஸர்வ விஞ்ஞானம் ஆழ்வாரைப் போல் ப்ரஹ்மம் சாஷாத்கரித்த பலன்
வேதங்களில் சொல்லப்பட்ட ப்ரவ்ருத்தி தர்மங்களையும் வேதாந்தங்களில் மட்டும் உள்ள விஷயங்களையும்
உமது ப்ரஸாதத்தால் எனது கண் முன் இருக்கின்றன என்றும்
ஜனார்தனாரே -உம்மையே இடைவிடாது த்யானம் செய்ததன் பலனாக எப்போதுமே இளமைப் பருவத்திலேயே இருப்பவனாகி உள்ளேன்
என்றும் தாமே கூறி இருக்கிறார்

“யுவேவ சாஸ்மி ஸம் வ்ருத்த: த்வத் அநுத்யாந ப்ரும்ஹித:|
வக்தும் ஶ்ரேய: ஸமர்தோ அஸ்மி த்வத் ப்ரஸாதாஜ் ஜநார்தந ||“
இத்யாததௌ ச, ப்ரதி ஸம்ஹித யதோக்த ஸ்வ பரமார்த கத்வாச்ச |
ஏவம் விதஸ்ய பீஷ்மஸ்ய “ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ அதி கதமோ மத:” இத்யாதிநா
அதிக தேய தம:||

இப்படி தத்வ ஞானத்தை யதாவாக அறிந்த பீஷ்மர்
இது தான் எல்லாத் தர்மங்களிலும் சிறந்த தர்மமாக யான் நினைப்பது என்று தொடங்கி
இந்த ஸஹஸ்ர நாம கீர்த்தனம் தமது மிகவும் சிறந்த தர்மமாகச் சொல்வதானால்
இந்த அத்யாயம் அனுகூலமாக கொள்ளும் அனைத்திலும் சாலச் சிறந்தது என்றதாயிற்று –

———

5-பரிக்ரஹ அதிஶைத :-
பரிக்ரகஹோ ஹி ஸார்வ பௌமோ பகவந் நாம ஸஹஸ்ரஸ்ய |
ஶாஸ்த்ரேஷு தாவத் ஸபா பர்வணி-“தேவோ நாம ஸஹஸ்ரவாந்” இதி பகவாநபி நாம ஸஹஸ்ர ஸம்பந்தேந பூஷ்யதே |

பெரியோர் பலராலும் அங்கீ கரிக்கப் பட்டமை
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் எல்லாரும் அங்கீ கரிக்கப் பட்டுள்ளது
அன்றியும் ஸபா பர்வத்தில் -பகவான் ஆயிரம் நாமங்களை யுடையவர் -என்றும்

ஶ்ரீவிஷ்ணுதர்மே ச
ஸ்ரீ கஜேந்த்ர மோஷேண
“ஸஹஸ்ர ஶுப நாமா நம் ஆதி தேவம் அஜம் விபும்” இதி |

விஷ்ணு தர்மத்தில் கஜேந்திர மோக்ஷ ப்ரகரணத்தில்
ஆயிரம் மங்களகரமான நாமங்களை யுடையவரும் -ஆதி தேவரும் -ஜனநம் இல்லாதவருமான பிரபுவை என்றும்
ஆயிரம் நாமங்களை பற்றிய சிறப்பு கூறப்பட்டுள்ளது –

அத்ர ச உபோத்காத பல ஶ்ருத்யோ : குண ப்ரபஞ்சோ த்ருஶ்யதே |
ஆயுர் வேதாதிஷு ச த்ருஷ்டாத்ருஷ்ட ஶாஸ்த்ரேஷு, யதா சரக ஸம் ஹிதாயாம்
“விஷ்ணும் ஸஹஸ்ர மூர்தாநம் சராசர பதிம் விபும் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண ஜ்வராந் ஸர்வாந் வ்யபோஹதி ||

இந்த ஸ்தோத்ரத்தில் ஆரம்பம் முடிவிலும் பலன் சொல்லும் இடத்திலும் இதன் குணங்கள் மிக விரிவாக வெளியிடப்பட்டுள்ளன
வைத்திய ஸாஸ்த்ரம் முதலியவற்றிலும் இதன் விசேஷம் சொல்லப்பட்டுள்ளது –
வைத்திய சாஸ்திரமாகிய சரக ஸம்ஹிதையில்
ஆயிரம் தலைகளை யுடையவரும் -சராசரங்களுக்கு ஸ்வாமியும் ஸர்வ வ்யாபியான விஷ்ணுவை
இந்த ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் கொண்டு ஸ்துதிப்பதால் எல்லா வித ஜ்வரங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்று கூறப் பட்டுள்ளது

இதி| அத்யதேந ச நாநா விப்ர கீர்ண மூலே  மேஹஸ்ய ப்ராயஶ் சித்தே ,
“ஜப்யம் புருஷ ஸூக்தகம்” இத்யாரப்ய “ததைவ பகவந் நாம ஸஹஸ்ரம்
பாரதோதிதம்”, 

அவ்வாறே நவீனமான ஒரு வைத்திய நூலும் மேக ரோகத்துக்குப் பிராயச் சித்தம் செல்லுகையில்
புருஷ ஸூக்தம் ஜபிக்க வேண்டும் என்றும் சொல்லி மேல்
ஸஹஸ்ர நாமத்தையும் ஜபிக்க வேண்டும் என்றும் கூறுகிறது

யக்ஷ்மண:“ததைவ பகவந் நாம ஸஹஸ்ரம் பரிகீர்தயேத்”,
ஜ்வர விஸேஷஸ்ய,
“ஹோமஸ்து பூர்வ வஜ் ஜப்யம் விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்”,
க்ரஹாதே : “ஆஸத் மதம் மருத் ஸூக்தம் விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்
அந்யத்ர ஸ ஏ வம்விதம் அந்வேஷ்டவ்யம் | ப்ராக்ருதா:கவயோ அபீதம்
ஸர்வ ஜீவ ரக்ஷாத்வேந வர்ணயந்தி | யதாஸ் ஸஹ

க்ஷய ரோகத்துக்கு சிகித்சை சொல்லுவதிலும் ஸஹஸ்ர நாம கீர்த்தனம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறது
கிரஹ சாந்தி சொல்லும் இடத்திலும் வாயு ஸூக்தமும் ஸஹஸ்ர நாம கீர்த்தனமும் செய்ய வேண்டும் என்றும்
இப்படி அநேக இடங்களில் சொல்லப்பட்டு இருப்பதைக் காணலாம்

பட்டபாண: ஸூதிகா க்ருஹ வர்ணநே அவிச்சிந்ந பட்ய மாந நாராயண நாம ஸஹஸ்ரம்” இதி |
லோகே ச க்ரஹண தாரண ஶ்ரவண ஜப ஸம் கீர்தந லேகந வ்யாக்யாந தந் நிஷ்ட பூஜந ப்ரப்ருதிபி:
விஷ-பிஶாச-வ்யாதி-க்ரஹ -து:ஸ்வப்ந-துர் நிமித்தாத் யஶிய உப ஶமநாய,
மஹா பாதகாதி ப்ராயஶ் சித்தாய,

ஐஹிக ஆமுஷ்மிக அப்யுதய ஸித்தயே , ஸம்ஸார॒ க்ரந்தி விஸ்ரம் ஸநாய,
வைஷ்ணவ பரமபத அவாப்தயே , தாதாத் விக பகவத்
குண ஸுதாஸ்வாத ஸுகாய ஆபால மூக மூர்க ஸ்த்ரீ நாஸ்திகைக பேஷஜம்

நிரதிஶய ஶ்ரத்தா பக்தி விஶ்வாஸ பூர்வகம் பரி க்ருஹ்யதே |
ந ஸ ஏவம் வித: பரிக்ரகஹோ வேதாநாமபி; தேஷாம் மூர்காதிபி: அபரிக்ரஹாத்,
குல சரண கோத்ராதி வ்யவஸ்தயா ப்ரதி ஶாகம் பரிக்ரஹ விபாகாச்ச |
ஏவம் பரிக்ரஹ அதிஶயாதப்யஸ்ய உபாதேய தமத்வம் ||

லௌகிகர்களான கவிகளிலும் பட்ட பாண கவி ப்ரஸவ க்ரஹத்தை வர்ணிக்கும் போது
நாராயணனுடைய ஸஹஸ்ர நாம கீர்த்தனம் இடைவிடாமல் செய்கிறார்கள் என்கிறார்

இப்போதும் உலகத்தில் அவ்விதமாக அநேகம் வியாதிகளுக்கும் பாபங்களும் பரிகாரமாக
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் பண்ணுவதைக் காண்கிறோம்
விஷம் பிசாசம் வியாதி க்ரஹம் தீய கனவு அப சகுனம் முதலான வற்றுக்கு சாந்தி செய்வதற்கும்
மஹா பாதகம் முதலான பாதங்களுக்கு ப்ராயச்சித்திக்கும்
இம்மையிலும் மறுமையிலும் மேன்மைகள் கிடைப்பதற்கும்
ஜனனம் மரணம் என்னும் சம்சார விலங்கை விடுவதற்கும்
அவ் விலங்கை விட்டுப் பரம பதம் அடைவதற்கும்
தத் காலத்தில் பகவத் குணங்கள் என்னும் அமுதை உண்டு ஸூகம் பெறுவதற்கும்
குழந்தைகள் ஊமைகள் பித்தர் பெண்கள் நாஸ்திகர் முதலியோரும் மிக்க சிரத்தை பக்தி நம்பிக்கைகளுடன் இத்தை அனுஷ்டிப்பதைக் காண்கிறோம்
இப்படி அங்கீ கரிப்பதற்கு வேதங்களும் இல்லை-மூர்க்கர் வேதங்களை எடுத்துக் கொள்வதும் இல்லை
அந்த அந்த குலம் கோத்ரம் முதலியவற்றுக்கு அந்த அந்த வேத சாகைகள் என்று பிரிக்கப்பட்டு இருப்பதினாலும்
ஒரு சாகையையும் யாவரும் இப்படி கிரகிப்பது இல்லையே

வாஸ்ய பிரபாவம் போல் அல்லவே வாசக பிரபாவம்-

இன்றும் சர்வாதிகாரமாக ஸஹஸ்ர நாம பாராயணம் அனைத்துக்கும் பரிகாரமாக செய்வதைக் கண் கூடாகவே காண்கிறோம்
வேத அத்யயனம் செய்யாதவர்களுக்கு இதுவே கை வந்த மருந்தாகக் காண்கிறோம்

———

6- கீதாத்யைகார்த்தைஶ்ச –
பாரத ஸித்தாந்த பூத பகவத் கீதா நாராயணீய
யாந ஸந்தி அக்ர பூஜ உத்தம அநுஶாஸந ப்ரப்ருதி ப்ரதேஶாந்தர தாத்பர்ய
நிஷ்கர்ஷ ரூபத்வேந தத் ஏகத அர்தத்வாச்ச|

ஸ்ரீ மத் பகவத் கீதை முதலியவற்றுடன் பொருள் ஒற்றுமை
பகவத் கீதை
நாராயணீயம்
யான சந்தி பர்வம்
அக்ர பூஜை
உத்தம தர்ம அநு ஸாஸனம்
முதலான அநேக இடங்களிலும் தாத்பர்யத்தை இது சுருங்கக் கோருவதால் அவற்றோடு பொருள் ஒற்றுமை இதுக்கு உண்டு

—–

ஏவமேபி: ஷட்பிர் ஹேதுபி: ப்ரேக்ஷா பூர்வ காரிணாம்
பரம உபாதேய தயா நிர்ணீதம்,
வ்யாஸ தேவஶ்ரவோ தேவ ஸ்தாந நாரத
வாத்ஸ்ய அஶ்ம ஸுமந்து ப்ரப்ருதிபி:
ஸகல வித்யா தேஶிகை : ப்ரஹ்ம த்ருஶ்வபி: தேவ ப்ரஹ்ம ரிஷிபி:

ஸ்வயம் ச பகவதா ஸர்வேஶ்வரேண கீத உபநிஷதாசார்யேண பூர்வேஷாமபி குருணா
புண்டரீக விலோசநேந ஶ்ரோத்ரு கோடி நிவிஷ்டேந
பீஷ்மாத் ஸ்ருத்வா அநு மோதிதம் ஶ்ரீமந் நாம ஸஹஸ்ராத்யாயம் பகவத் குண தத்த்வ
ப்ரதி பத்தய வ்யாகுர்மஹே ||

இவ்விதம் ஆறு காரணங்களாலும்
விவேகத்தோடு கார்யங்களை அனுஷ்டிப்பார்களுக்கு இது எல்லாவற்றிலும் சிறந்ததாகவே நிச்சயிக்கப் பட்டு இருக்கிறது
எல்லா வித்யைகளுக்கும் ஆச்சார்யர்களும் ப்ரஹ்ம சாஷாத்காரம் பெற்றவருமான
வ்யாஸர் -தேவ வியாஸரஸ் -தேவ ஸ்தானர் -நாரதர் வாத்ஸ்யர் -அஸ்மர்-ஸூமந்து முதலான
தேவ ரிஷிகளாலும் -ப்ரஹ்ம ரிஷிகளாலும் சொல்லப்பட்டதும்-

பைலர் –வைசம்பாயனர் யஜ்ஜா வர்க்யர்- ஜைமினி போல்வாரைக் கொண்டே வேத பிரிவுகளை பிரசாரம் )

இனி ஏழாவது பெருமை -ஸர்வேஸ்வரனான கீதாச்சார்யனும் முன்னோரான குருக்களுக்கும் குருவான தாமரைக் கண்ணனுமான ஸாஷாத் பகவானே கேட்பவரோடே கூட உட்கார்ந்து கேட்டு அருளி-அங்கீ கரித்து அருளிய இந்த ஸஹஸ்ர நாம அத்யாயத்துக்கு
பகவத் குணங்களின் தத்வ ஞானம் உண்டாவதற்காக வியாக்யானம் செய்கிறோம்

மிதிலைச் செல்வி –தன் சரிதை கேட்டான் பெருமாள்
இன்பம் பயக்க எழில் மாதரும் தாமும் -மிதுனமாக திருவாறண் விளையிலே கேட்டு அருளினார்கள் அன்றோ

பகவத் குண தத்த்வ–பகவத் குண தர்ப்பணம் இதனாலே திரு நாமம்
தொண்டைமான் சக்கரவர்த்திக்கு அங்கு ஏழு நாழிகையில் ஏழு அர்த்தங்கள்
அஷ்ட ஸ்லோஹி யில் -ஆறு சொல்லி -ஏழாவது தனியாக
தேஹாத்ம பிரமம் நிவ்ருத்தி
ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி
அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி –மூன்றும் ஓங்காரம்
ஸ்வ யத்ன நிவ்ருத்தி -நமஸ்
அபந்து -ஆபாச பந்துக்கள் நிவ்ருத்தி நாராயண
விஷய நிவ்ருத்தி ஆய -கைங்கர்ய பிராத்தனை
இப்படி ஆறையும் சொல்லி
நமஸ்ஸில் ஆந்திர அர்த்தமான பாகவத சேஷத்வம் ஏழாவது
அதே போல் இங்கும் பிரதானமாக கண்ணன் தானே அமர்ந்து கேட்டது –

————

ஸூக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே–1-

யஸ்ய த்விரத வக்த்ராயா பாரி ஷத்யா பரச் சதம்
விக்நம் நிக் நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தாமாஸ்ரயே–2-

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ர மகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்–3-

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம-4

அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே-5

யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்த நாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணவே ப்ரப விஷ்ணவே-6-

ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே

————

தத்ர ப்ராகேவ பௌந:புந்யேந தத்ர தத்ர பர தத்த்வ பரேஷு
ப்ரதேஸேஷு அஸேஷார்த- நிர்ணய ஶ்ரவணாத் துஷ்டம் மந்ய தயா
ஸ்வயமப்ருச்சதே ஜநமேஜயாய பரம ஸௌஹார்தாத் அந்யத் குஹ்ய தமம் க்ராஹயந் ஸ்வயமேவ,

ஶ்ரீவைஶம்பாயந உவாச-

ஶ்ருத்வாதர்மாந ஸேஷேண பாவநாநி ச ஸர்வஶ:| யுதிஷ்டிர: ஶாந்தநவம் புநரே வாப்ய பாஷத || 1 ||

அதில் முதலிலேயே பலமுறை பரதத்வத்தைச் சொல்லுகிற பல இடங்களிலே விசேஷ அர்த்தங்களை
நிச்சயித்துக் கேட்டுத் திருப்தி யானதாக நினைத்துக் கொண்டு இருப்பதனால் வினவாமல் இருக்கும் ஜனமேஜயருக்கு
அவர் இடம் உள்ள பேர் அன்பினால் மற்றொரு மிக்க ரஹஸ்யத்தைத் தெரிவிப்பதற்காக வைசம்பாயனர் தாமாகவே சொல்லாத தொடங்குகிறார்
ஜனமேஜர் வினவினார் என்று இல்லாமல் வைசம்பாயனர் தானே சொல்லாத தொடங்கினார் என்று தொடங்கி இருப்பதைக் காணலாம்

பூமா வித்யை சனத்குமாரர் நாரதருக்கு உபதேசம் -இதே போல்
கண்ணன் -ஆறு அத்யாயம் சொல்லி பக்தி யோகம் பற்றி அர்ஜுனன் கேட்க்காமலேயே 7 அத்யாயம் சொல்லி
மீண்டும் 10 அத்யாயம் சொல்லத் தொடங்கியது போல்
மூவர் அனுபவம்

ஶ்ருத்வேத்யாதி|தர்மாந் ஶ்ருதி ஸ்ம்ருத்யாதி சோதநா லக்ஷணாப்யுதயநி:
ஶ்ரேயஸ பலாந் ராஜ மோஷ தாந தர்ம ரூபேண பஹூந் |
அஸேஷேண- கார்த்ஸ்ந்யேந,
யே ச யாவந்த: தாவதஶ்ச இத்யர்த:|
பாவ நாநிச தபஸ் தீர்த ஸேவாதீநி ஶுத்தி கராணி ச |
ஸர்வஶ:—–— ஸர்வ ப்ரகாரம்; பலத:அங்கத: ஸ்வரூபத: அதிகார தஶ்ச |ஶ்ருத்வா யுதிஷ்டிர:-
ஸாக்ஷாத் தர்ம ஸூநு:|ஶாந்தநவம் ஶந்தநோர் கங்காயாம் ஜாதத்வேந அபிஜாத தமம்|

ஸ்ரீ வைசம்பாயனர் உவாஸ –சொல்லலானார்
ஸ்ருத்வா தர்மான் –அப்ய பாஷத
யுதிஷ்ட்ரர் -ராஜ தர்மம் -மோக்ஷ தர்மம் -தான தர்மம் போன்ற ஸாஸ்த்ர விஹிதமான தர்மங்களையும்
தவம் தீர்த்த யாத்திரை முதலிய பாவனார்த்தமானவற்றையும்
அவற்றின் அங்கங்கள் செய்யும் முறை -அதிகாரி ஸ்வரூபம் எல்லாவற்றையும் கேட்டபிறகு
பீஷ்மரை நோக்கித் திரும்பவும் வினவலானார்
கேட்டவர் சாஷாத் தர்ம தேவதையின் புதல்வர்
சொன்னவர் சந்தனுவுக்கு கங்கையிடம் பிறந்தவர்
இருவரும் உத்தம குலத்தில் பிறந்தவர்கள்

புநரே வாப்ய பாஷத –
புநஶ்ச பப்ரச்ச | புந:ப்ருச்சா ச பீஷ்மேண
ஆத்மநீநதயா ஸ்வீக்ருதமதம் ஜ்ஞாதும்;
‘ கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:’ இத்யநந்தரோக்தே 😐
தச்ச ஸதாசார ப்ராவண்யாத் |
ஸந்தோ ஹ்யாசார்யநிஷ்டாம் அந்விஷ்ய தத் ருசி பரிக்ருஹீத மேவ
தத்த்வம் ஹிதம் ச ரோசயந்தே ; ந து ப்ராமாணிகத்வ மாத்கரண ||1 ||

சாதுக்கள் தம் ஆச்சார்யர் உகந்து அனுஷ்டிப்பதையே அனுஷ்டிப்பார்களே யல்லாமல் பிரமாணத்தை மாத்திரம் ஆதாரமாகக் கொள்வதை விரும்ப மாட்டார்கள்
ஆகையால் பீஷ்மர் தமக்கு ஹிதமாகக் கொண்டு இருக்கும் ஆசாரத்தை தெரிந்து கொள்ளும் விருப்பத்தினால் திரும்பவும் வினவலானார்-என்றார்-

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமாய் இருக்க வேண்டுமே
பவத பரமோ மத என்று மேலே வருவதால் இது நன்கு விளங்கும்
யுதிஷ்ட்ரர் சதாசார்யத்தில் ஈடுபட்டவர் ஆதலால் இங்கனம் கேட்கலானார் –

வைசம்பாயனோ ஜனமேஜயமுவாச:

ஶ்ருத்வா தர்மானஷேஷேன பாவனானி ச ஸர்வஶ: |

யுதிஷ்டிர: ஷாந்தனவம் புனரேவாப்யபாஷத||

பயிலும் சுடர் ஒளி மூர்த்தி- நெடுமாற்கு அடிமை கேட்டு- மதுரகவி நிஷ்டை
திரிபுரா தேவி -உடையவர் காட்டும் பரம் பொருளையே ஆஸ்ரயிப்போம்

தத்ரேதம் ஆதாமேவ உதைரிராம—ப்ரேக்ஷாவத்பிஸ் : ப்ரமாணேந பரிச்ச்த்ய
அநுகூலம் ப்ரமேயம் உபாதேயமிதி | தச்ச த்வைதம் வர்ததே உபாயா உபேயாத்மநா |

விவேகிகள் ப்ரமாணத்தைக் கொண்டு -ப்ரமேயத்தை -விஷயத்தை பகுத்து அறிந்து அதில்
அனுகூலமான ப்ரமேயத்தை ஆதரிப்பார்கள் என்று முன்னமே அவதாரிகையில் சொல்லப் பட்டது

தத்வம் ஹிதம் புருஷார்த்தம் மூன்றுமே அறிய வேண்டுவது-அதுவே உபாயம் உபேயம் இரண்டாகும்
அப்படிப்பட்ட ப்ரமேயம் உபாயம் உபேயம் என்று இரண்டு வகைப்படும்
உபாயம் -சாதனம் -காரியத்துக்கு இன்றியமையாதது
உபேயமாவது ஸாத்யம் -பயன் –

உபேயம் ச ப்ரிய ப்ரிய தர ப்ரிய தம ரூபேண த்ரைதம்|
உபாயஶ்ச ஹித ஹித தர ஹித தம ரூபேண|
தத்ர உபேயஸ்ய ஜந்ம ருத்தி பரிணாமா நித்யத்வாதய:, சேதந தர்மா: க்லேஶ கர்ம விபாகா ஆஶயாஶ்ச கதோஷா:;
குணாஶ்ச தோஷ அஸம்பேத ருசிரத்வ ஸ்தாவரத்வ பூயஸ்த்வ விஶிஷ்டா:
ஸம்வித ஆநந்வ ஐஶ்வர்ய விபூதி விஸேஷாதய:|
உபாயஸ்ய து வ்ய யாயாஸ பூயஸ்த்வ வ்யபிசாரித்வ பல்கு பலத்வாதகயா தோஷா:|
குணாஶ்ச நியத நிரபாய லகு தர பஹு பலேத்வாதய:|

உபாயம் -ஹிதம் ஹித தரம் ஹித தமம்-என்று மூன்று வகைப்படும்
உபேயம் -பிரியம் பிரிய தரம் பிரிய தமம்-என்று மூன்று வகைப்படும்
உபேயத்துக்கு பிறப்பு வளர்ச்சி மாறுபாடு அழிவு போன்ற தர்மங்களும்
கிலேசம் கர்மம் -விபாகம் -அதாவது கர்ம பலங்களான -ஜென்மம் ஆயுள் போகம் முதலியவையும்
ஆசயம் -மனத்தின் கண் உள்ள ஸம்ஸ்காரம் முதலிய சேதனர்களுக்கு உரிய தர்மங்களும் தோஷங்களாகும் –

குணங்களோ -தோஷம் கலவாமல் -ருசிரத்வ -அதாவது அழகு அமைந்து அழிவில்லாது மேம்பாடுடைய-பேர் அறிவு ஆனந்தம் ஐஸ்வர்யம் முதலிய விபூதி விசேஷங்களாம்

உபாயத்துக்கு -பெரும் செலவு செய்வதற்கு அருமை கருதிய பயனைப் பயவாமை- சிறு பயனுடைமை ஆகியவை தோஷங்களாகும்

குணங்களோ பயணித்த தவறாது அளித்தல் -அபாயம் இல்லாமை -செய்வதற்கு எளிமை -மிகு பயன் அளித்தல் போன்றவையும்

ஏவம் வித தோஷ ஹாந குணவத்த்வ தார தம்யேந உபாக உபேயயயோ : தர தம பாவ: உபயத்ராபி ஸம் பவதி |
உத்க்ருஷ்ட தமே உத்க்ருஷ்ட உத்க்ருஷ்ட தரயோ : நிக்ருஷ்டவத் வர்ஜநீயத்வமேவ |

உபாய உபேயங்களில் இப்படிப்பட்ட குண தோஷங்கள் ஏறக்குறைய இருப்பதால் தாரதம்யம் உண்டாகக் கூடும்
குணங்களைக் கொள்ளுதலில் மேல் உள்ளத்தை நோக்க கீழ் உள்ளவை குறைந்தவையாகத் தோன்றும்
ஆதலால் உத்க்ருஷ்ட தமத்தை நோக்க உத்க்ருஷ்ட தரமும் உத்க்ருஷ்டமும் நிஷ்க்ருஷ்டங்கள் போலவே விடத் தக்கவையே யாகும்

அசாரம் -அல்ப சாரஞ்ச -சாரம் -சார தரம்- தள்ளி -சார தமம் கொள்ள வேண்டுமே

தத்ர அநிஷ்டேப்ய: இஷ்டேப்யோ அபி நிக்ருஷ்டேப்ய: நிஷ் க்ருஷ்ய உத் க்ருடதமமுபாதாதும் உபாய உபேயௌ ஹை தாரதம்யேந ப்ரஷ்டவ்யௌ |
தௌ ச விவக்ஷாவஸேந ஷோடா விபஜ்ய ப்ருச்சந் யுதிஷ்டிர உவாச, கிமேகமிதி ஶ்லாேக த்வயேந |

ஆகையால் யுதிஷ்ட்ரர்
அநிஷ்டத்தையும்
இஷ்டத்தில் தாழ்ந்தவையையும் -விலக்கி
மிகச் சிறந்த இஷ்டத்தைக் கைக் கொள்ள விரும்பி
உபாய உபேயங்களைத் தாரதம்யப்படி நன்றாகக் கேட்டுத் தெளிய வேண்டும் என்னும் கருத்துடன்
அவற்றை ஆறு விதமாகப் பிரித்து
இரண்டு ஸ்லோகங்களாலே கேட்க்கிறார் –

கிமேகம் தைவதம் லோகே கிம் வாப் யேகம் பராயணம்
ஸ்துவந்த கம் கமர்ச்சந்த ப்ராப்யுனுயுர் மாநவா ஸூபம்

கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்ம ஸம்ஸார பந்தனாத் ||

இங்கு இரண்டு ஸ்லோகங்களில் ஆறு கேள்விகள்
நாலு ஸ்லோகங்களில் ஆறு அவதார ரஹஸ்யங்கள் கண்ணன் கீதையில்

ரஹஸ்ய சிகாமணி -வராஹ சரம ஸ்லோகம் -இரண்டு ஸ்லோகங்களில் ஐந்து அர்த்தங்கள் -மூவர் அனுபவம் இங்கும்

ஸ்வ ஞானம் -ப்ராப்ய ஞானம் -ப்ராபக ஞானம் -மூன்றுமே முமுஷுவுக்கு வேண்டுமே
ஆத்மாவைத் தெரிந்து கொள்வது என்றாலே தேகத்தை விட வேறுபட்டு -அவனுக்கு சேஷம் –
மற்ற இரண்டு தத்வங்களைக் காட்டிலும் வேறுபட்டு
அவனுக்கு பிரகாரமாய் -சரீரமாய் -சேஷமாய் இருப்பவன் என்று அறிய வேண்டுமே
இவற்றையே தத்வ ஹித புருஷார்த்த ஞானங்கள் என்பர் –

முமுஷுக்கு அறிய வேண்டும் ரஹஸ்யங்கள் மூன்று-அவற்றில் சொல்ல வந்ததும் இந்த மூன்றுக்கே
இவை ஒன்றுக்கு ஓன்று தொடர்பு கொண்டவை தானே
ஏதத் அந்யத -ஞானம் உதவாதே
தத்வம் பற்றி ஒரு கேள்வி–முதலில்
ப்ராப்யம் பற்றி ஒரு கேள்வி-அடுத்து –
உபாயம் பற்றி நான்கு கேள்விகள் -இதில் தானே பல வழிகளும் -சங்கைகளும் உண்டு -ஆகவே அநேகம்

ஸித்த ஸாத்ய ஸா ஆலம்பன மூன்று வகை உபாயங்கள் உண்டே -இவை பற்றி நான்கு கேள்விகள்

பவத: பரமோ மத: |லோகே-இவற்றை அனைத்திலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

கிமேகம் தைவதம் லோகே பவத: பரமோ மத: | –லோகே ஸாஸ்த்ரத்தில் தத்வம் பற்றிய கேள்வி -ஏகம் ஒப்பற்ற ஒப்பில்லா அப்பன் –
ஒத்தால் மிக்கார் இலையாய மா மாயன் -ஏக தைவதம்

லோகே -கிம் வாப் யேகம் பராயணம்-பவத: பரமோ மத: |-பரமமான உபேயம் -லோகே இங்கும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

லோகே-ஸ்துவந்த கம் -பவத: பரமோ மத: |-மூன்றாவது கேள்வி
லோகே-கம் அர்ச்சந்த-பவத: பரமோ மத: | -நான்காவது கேள்வி
ப்ராப்யுனுயுர் மாநவா ஸூபம்
கோ தர்ம: ஸர்வ தர்மானாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்ம ஸம்ஸார பந்தனாத் ||

இந்த ஆறு கேள்விகளுக்கும் -6-4-3-5-2-1–இந்த முறையில் பதில்கள்

———

அவதாரிகை

தத்ர உபாயஸ்ய உபேய அர்தத்வாத், ப்ரதாந பூதம் உபேயம் ப்ருச்சந்
தஸ்ய ச தத்த்வ ஶாஸ்த்ரேஷு பர தத்த்வ பரம ப்ராப்யாத்மநா த்வேதா உபதேஶ தர்ஶநாத்,
பர தத்த்வ ரூபம் ப்ருச்சதி –
யுதிஷ்டிர உவாச
கிமேகம் தைவதம் லோகே கிம் வாऽப்யேகம் பராயணம் |

உபாயத்தை அறிவது உபேயத்தை அடைவதற்கு ஆதலின்
காரணமான உபாயத்தை விட்டு
பிரதானமான உபேயத்தை முதலிலே கேட்கத் தொடங்குகிறார்
அது தத்வ சாஸ்திரங்களில்
பர தத்வம் என்றும்
பரம ப்ராப்யம் என்றும்
இரண்டு வகை யாகக் கூறப்படும்
அவற்றில் பர தத்வ ரூபமான உபேயத்தை முதலில் வினவுகிறார்
கிமேகம் தைவதம் லோகே

கிமேகமிதி|
லோகே இதி ப்ரதி ப்ரஶ்ந மநுஷஜ்யதே ;
பவத: பரமோ மத:
இதி ச ஸிம்ஹ அவலாேகந ந்யாயேந |
யதார்ஹம் ச விபக்தி: விபரிணமநீயா|
லோக்யதே அநேநேதி லாேகே :,
ஶ்ருதி ஸ்ம்ருத்யாதி ஶரீரம் ஶாஸ்த்ரம்|
ஏகம் –ப்ரதாநம் -ஸமாதிக ரஹிதம்,
’பரமம் யோ மஹத் தேஜ:’,
’தஸ்ய லாேக ப்ரதாநஸ்ய’ இதி ப்ரதி வசந அநு குண்யாத் |
ந ச அயம் ஸ்வரூப மாத்ர பர:
ஏகத்வ ஸம்க்யாபரோ வா ஏக ஶப்த:;
தைவதம் இதி ப்ராதிபதிகைக வசநாப்யாம் ஸித்தத்வாத், –தயோர் வ்யாவர்த்ய  அபாவாச்ச;

முதலாவது வினா -கிமேகம் தைவதம் லோகே -சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட ஒப்புயர் வற்ற கடவுள் யார்
லோகே -என்பது ஸாஸ்த்ரம்
இதனை எல்லாக் கேள்விகளிலும் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்
தைவதம் என்பது பிரகாசித்தல் முதலிய வேறே மற்று ஒன்றுக்கு இல்லாத பரமேஸ்வரத் தன்மையுடன் கூடியதும்
தத்வ சாஸ்த்ரங்களால் பிரதிபாதிக்கப்படுவதும்
உமக்கு மிக்க அபிமதமுமானது -என்பது கருத்து-பர தத்வம் பரஞ்சோதி பரமாத்மா பராயணம் -எல்லாமே நாராயணனே –
மேலே வரும் பவத பரமோ மத -என்பதையும் எல்லா வினாக்களில் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்
இது ஸிம்ஹ அவ லோகநம்-சிங்கத்தின் நோக்கு –
இடத்துக்கு ஏற்ப வேற்றுமை உருபை மாற்றிக் கொள்ள வேண்டும் –

ஏகம் -என்றது -எண்ணிக்கையும் தனித் தன்மையும் சொல்ல வரவில்லை -தைவதம் சொல்லவே இவை சித்தம்
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -தன்னிகர் அற்றவன் -தைவதம் -ஒளி- விளையாட்டு -பரம ஐஸ்வர்யம் -பல அர்த்தங்கள்
இத்தையே-ஏகத்வ ஸம்க்யாபரோ வா ஏக ஶப்த:;
தைவதம் இதி ப்ராதிபதிகைக வசநாப்யாம் ஸித்தத்வாத், –தயோர் வ்யாவர்த்ய அபாவாச்ச;–

மாம் ஏகம் -இங்கு ஸ்வீ காரத்தில் உபாய பாவம் தவிர்க்கிறது போல் இங்கும்-

ந ஹி கிம்சித் தைவதம் அஸ்வ ரூபம் அநேகம் வாஅஸ்தி, யேந கஸ்யசித் தைவ ஏகத்வம் விஸேஷ:; ததநுகுண ப்ரதி வசந அபாவாச்ச |
தைவதம்– த்யோதநாதி பரம ஐஶ்வர்ய அஸாதாரண குண சிஹ்நிதம் ,
தத்த்வ ஶாஸ்த்ரேஷு ப்ரதி பாத்யம் பவத:கிம் பரமம் மத மித்யர்த:|
அயம் ச ஶாஸ்த்ரேஷு ஸமயேஷு ச ஸர்வாதிகம் தத்த்வம் அப்யுபேயுஷாம் அபி மாயாத்த யௌபாதிக விவர்த பரிணாம விஸேஷ
நிர்வாஹ்ய ஜ்ஞாந ஶத்யாத்ய ஐஶ்வர்யத்வ ஸ்வாபாவிக ஸர்வ ஐஶ்வர்யத் வாததௌ ஸாமாந்யதோ விஸேஷ தஶ்ச
ஹரி ஹர ஹிரண்ய கர்பாதி தத்த்வ பராவர பாவேந விப்ரதிபத்தி தர்ஶநேந

ஸாஸ்த்ரங்களிலும்-ஸமயேஷு-சம்ப்ரதாயம் -அந்த அந்த மதங்களிலும்
அப்யுபேயுஷாம் அபி –பரதத்வம் ஓன்று உண்டு என்று ஒத்துக் கொள்பவர்களும்
ஸர்வேஸ்வரனுக்கு ஞான சக்தி முதலிய ஐஸ்வர்யங்கள்
மாயையின் சம்பந்தத்தால் என்றும்
இயற்கையால் என்றும்
சந்தேகப்படுவதோடு -விசேஷமாக
ஹரி
ஹர
ஹிரண்ய கர்ப்பாதி
தத்துவங்களில் ஏற்றத் தாழ்வு கருதப்படுதலாகிய சந்தேகமும் இருத்தலால்
இவ்விதம் வினவுதற்குக் காரணமும் ஏற்படுகிறது

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-பற்றிய நமஸ்கார ரூப மங்கள ஸ்லோகம் -வேதார்த்த ஸங்க்ரஹம்

இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.

அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும் பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தி த்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.

சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்

அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.

“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.

ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.

ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.

மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.

முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.

“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக் கொள்கிறது.

மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.

அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.

அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.

வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்-அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.

ஆனால், யாதவ ப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம் மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லா வகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவ ப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.

“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?

விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சி யுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?

விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.

வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.

ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.

ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!

தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.

தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.

தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.

————————–

2- மோஷே தாவத்
ஸ்வரூப -அவித்யா விஸேஷ -வைஸேஷிேக குணாச்சேத -பரமாத்ம ஸாதர்ம்ய – தத் குண ஸம்க்ராந்தி -தச் சாயா பத்த்தி

ஆநந்தாதி ஸ்வரூப ஆவிர்பாவ மாத்ர –தத் கைஙகர்ய ஆவிர் பாவாதி லக்ஷண
விப்ரதி பத்தி தர்ஶநாத் ஸம்திஹாந: பரமம் உபேயம் ப்ருச்சதி– கிம் வாऽப்யேகம் பராயணமிதி|

பரம ப்ராப்யம் என்னும் உபேயத்தைப் பற்றிய வினா
அவதாரிகை
பலனைச் சொல்லும் சாஸ்திரங்களில் மோக்ஷ விஷயமாக பல சந்தேகங்கள் உண்டாகிற படியால்
எட்டுவித வேறுபாடுகள் -அந்த சந்தேகம் தெளிதல் பொருட்டு -பரம புருஷார்த்தம் எது என்று வினவுகிறார்
கிம் வா அபி ஏகம் பராயணம் -என்று

தைவதம் பராயணமித்யாதி கிம் அந்யதந்யத் உபதிஶ்ய கத,
உத தத்தத வஸ்தா மாத்ர பேதேந ஏகமேவேதி விவேக்தும் வா அபீதி நிபாத த்வயம்
ஏகம் இதி பூர்வ வத் |

பரம் நிர்தோஷ நிரதிஶய மங்கல ஸ்வபாவதயா உத்க்ருஷ்ட தமம் |
அயநம் ப்ராப்யம் |
ஐஹிக ஆமுஷ்மிகேஷு புருஷ அபி லஷணீ யேஷு கஸ்
பரம புருஷார்தோ பவதோ அபிமத இதி | ஏவமுபேயம் த்விதா ப்ருஷ்டம் |

குற்றம் அற்றுத் தன்னிலும் உயர்ந்தது இல்லாத மங்கள ஸ்வபாவமாய் இருப்பதால்
எல்லாவற்றுக்கும் மேலான பரம புருஷார்த்தம் எது
மனிதர்களால் விரும்பப்படுகிற ஐஹிகம் ஆமுஷ்மிகம் என்கிற இவற்றுள் மேலான பரம புருஷார்த்தம்
இன்னது தான் என்று நீர் கொண்டது எது என்பது கருத்து –

வா-விகற்பம் -இதுவோ அதுவோ
அபி -உம்மைத் தொகை இதுவும் அதுவும்-தத்துவமும் ப்ராப்யமும் ஒன்றா வேறா –

நின் கண் வேட்கை எழுவிப்பேன் -எளிமையாக்கி ஆழ்வார்கள் நமக்கு அருளிச் செய்துள்ளார்

இப்படி உபேயம்
பர தத்வம் என்றும்
பரம ப்ராப்யம் என்றும்
இரண்டு விதமாகப் பிரித்துக் கேட்கப்பட்டது

———–

ஸ்துவந்த: கம் இத்யர்தேந
கம் அர்சந்த:
ப்ராப்நுயு: மாநவாஶ் ஶுபம்
யாரை -ஸித்த உபாயத்தைப் பற்றிய கேள்வி
லகு உபாய -அலகு உபாய ஸித்த உபாயம் -இரண்டு வகை-ஸ்தோத்ரம் லகு -அர்ச்சனை அலகு உபாயம்
யாரை ஸ்தோத்ரம் பண்ணி-கீர்த்திமை பாடிப் போய் போல் –
ஸாத்ய பத பிரயோகம் இருந்தாலும் இது ஸித்த உபாயம் பற்றியே
ஸாத்ய உபாயம் -இரண்டு வகை -இதில் தர்மம் பற்றிக் கேள்வி -யார் இடத்தில் என்ற வினா இல்லையே
பரம ஸாத்ய உபாயம் என்றும்
வாசிக ஜப ஆலம்பனம் என்றும்–இரண்டு வகை

அதோபாய: தத் தச் சாஸ்த்ரேஷு கர்ம ஜ்ஞாந பக்தி யாேகா நாம்
விகல்ப ஸமுச்சய அங்காங்கி பாவாதி விவாதாத் ஸம்ஶயாநேந ப்ரஷ்டவ்ய:|
ஸ ச ஸித்த: ஸாத்ய: ஸாலம்பந ரூபஶ்ச | 
ஸித்தஸ்து–ஆராத்ய மாநதயா பல ப்ரதா தேவதா |
தாம் ச லகு அலகு உபாய ஸாத்ய தயா-த்வேதா விபஜ்ய ப்ருச்சதி–
ஸ்துவந்த: கம் இத்யர்தேந ஸ்துவந்த:கம்- கம் அர்சந்த: ப்ராப்நுயு: மாநவாஶ் ஶுபம் ||2||

உபாயத்தைப் பற்றிய வினா
அவதாரிகை
உபாயமாவது
அந்த அந்த சாஸ்திரங்களில் கர்ம யோகம் ஞான யோகம் பக்தி யோகம் என்று சொல்லப் பட்டு
அவை தனித் தனி உபாயம் என்றும்
சேர்ந்து உபாயம் என்றும்
ஒன்றுக்கு ஓன்று அங்க அங்கி முறையில் உபாயம் என்றும்
விவாதம் இருப்பதனால் பின்வரும் வினாக்கள் எழுவது அவஸ்யமாகிறது

உபாயம்

ஸித்த உபாயம்
ஸாத்ய உபாயம்
ஸ ஆலம்பன உபாயம் -என்று மூன்று வகைப்படும் –

அவற்றுள் ஸித்த உபாயமாவது -ஆராதனத்தால் பலனை அளிக்கும் தேவதை
அந்தத் தேவதையை லகு உபாயத்தாலும் குரு உபாயத்தாலும் சாதிக்க வேண்டும்
ஆகையால் ஸித்த உபாயம் லகு உபாய ஸாத்ய ஸித்த உபாயம் என்றும் (குண ஸங்கீர்த்தனம் லகு உபாயம் )
அலகு உபாய ஸாத்ய ஸித்த உபாயம் என்றும்(உபாஸன ரூபமான பக்தி அலகு உபாயம் ) இரு வகைப்படும் –
அந்தப்படி இரண்டு வகையாகப் பிரித்து வினவுகிறார் –

கம் ஸ்துவந்த: – குண ஸம்கீர்தந மாத்ரேண ஆராதயந்த:, கமர்சந்த:- உபாஸந ரூபயா பக்த்யா பரமம் பூஜநம் குர்வந்த:|
மாநவா:-மநுஷ்யத்வ மாத்ர பரிகரா:|ஶுபம் – த்விவிதம், அப்யுதயநி:ஶ்ரேயஸ ரூபம் |ப்ராப்நுயு:||

3- லகு உபாய ஸாத்ய ஸித்த உபாயத்தைப் பற்றிய வினா
(ஸ்துவந்த கம் –)
மூன்றாவது வினா
மனிதர்கள் யாரைத் ஸ்துதித்து -ஐஸ்வர்யம் -முக்தி -என்னும் இரு வகை நன்மைகளையும் பெறுவர்
ப்ராப்நுயர் மானவா ஸூபம் -என்பதை இங்கும் கூட்டுக

4- அலகு உபாய ஸாத்ய ஸித்த உபாயத்தைப் பற்றிய வினா
கமர்ச்சந்த –ஸூபம்
நான்காவது வினா
மனிதர்கள் யாரை அர்ச்சித்து ஐஸ்வர்யம் முக்தி என்னும் இரு வகை நன்மைகளையும் பெறுவர்
மானவா -மனிதத் தன்மையை யுடையவர் என்று பொருள்
பகவானை ஸ்துதிக்க மனிதத் தன்மையை போதுமானது என்று கருத்து
ஸூபம் என்பது இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும் குறிக்கும் –

————–

5- ஸாத்ய உபாயத்தைப் பற்றிய வினா
பரம ஸாத்ய உபாயம் -மிகச் சிறந்த உபாயம் என்றவாறு
அவதாரிகை
வாக்கினாலும் மனத்தினாலும் சரீரத்தாலும் முறையே செய்யப்படுகிற
ஜபம் த்யானம் அர்ச்சனை முதலியவற்றால் தேவதையை வசப்படுத்தும் முறை ஸாத்ய தர்மம் எனப்படும்
அவற்றுள் சிறந்தது எது என்று வினவுகிறார்
கோ தர்ம —பரமோ மத

அத ஸாத்ய: வாங் மந:காய நிஷ்பாத்ய ஜபத்யா நார்சந ப்ரப்ருதி:
தேவதா வர்ஜநாத்மகோ தர்ம: ; தத்ர பரமம் ப்ருச்சதி –
கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:|
கோ தர்ம இதி |
உக்த லக்ஷணாநாம் ஸர்வ தர்மாணாம் மத்யே பரம: –
நிஸ் துல்யாதிக :,
கோ பவத: அபிமத: – ஸுநிஶ்சித்ய ஆபத் தநவத் ஸ்வீக்ருத: ?

ஐந்தாவது வினா
எல்லாத் தர்மங்களிலும் சிறந்த தர்மமாக நீர் -நன்கு நிச்சயித்து -ஆபத்து தனம் போலே கொண்டு இருப்பது எது

———-

6- வாசிக ஜப ஆலம்பனத்தைப் பற்றிய வினா
அவதாரிகை ஸ ஆலம்பனம் -ஆலம்பனத்தோடே கூடியது –
ஆலம்பனம் -பற்றுக் கொம்பு -ஆதாரம் -பிடிப்பு
ஸ்தோத்ரம் -மந்த்ரம் -ஸூப ஆஸ்ரயம் -பகவத் திவ்ய மங்கள விக்ரஹம் போல்வன
கந்தம் புஷ்பம் முதலிய உபகரணங்களைக் கொண்டு செய்யப்படும் உபாயமாம்
அவற்றுள் வாசிகமான ஜபம் என்னும் ஸாலம்பன உபாயத்தைப் பற்றி வினவுகிறார்
ஜெபமாவது மந்த்ரம் முதலியவற்றை அதற்கு உரிய நியமங்களுடன் ஆவ்ருத்தி செய்வது

அத ஸாலம்பநேஷு
ஸ்தோத்ர மந்த்ர ஶுபாஶ்ரய கந்த புஷ்பாத் யுபகரணேஷு
வாசிக ஜப ஆலம்பநம் ப்ருச்சதி-
கிம் ஜபந் முச்யதே ஜந்து: ஜந்ம ஸம்ஸார பந்தநாத் ||3||

கிம் ஜபந்நிதி| நியம விஸேஷவந் மந்த்ராத் யாவர்தநம் ஜப:|
“ஜப்யே நைவது ஸம் ஸித்யேத் ப்ராஹ்மணோ நாத்ர ஸம்ஶய:|
குர்யாத் அந்யத் ந வா குர்யாத் மைத்ரோ ப்ராஹ்மண உச்யதே ||”,

பிராமணன் மற்றக் கர்மங்களை செய்தாலும் செய்யா விட்டாலும் ஜபம் செய்வதினாலேயே ஸித்தியை அடைகிறான்
இதில் சந்தேகம் இல்லை
இப்படிச் செய்பவன் மைத்ர பிராமணன் என்றும் சொல்லப்படுகிறான் -என்றும்

“த்ரவ்ய யஜ்ஞாத் ஜபோ யஜ்ஜோ விஶிஷ்டோ தஶபிர் குணை :|”,
“யஜ்ஞாநாம் ஜப யஜ்ஜோ அஸ்மி”(10-25)
இதி ஜப ஶ்ரைஷ்ட்யாத் மாநஸ காயிக விஷயௌ ந ப்ருச்ச்கயதே |

த்ரவ்ய யஜ்ஜத்தைக் காட்டிலும் ஜெப யஜ்ஜம் பத்து மடங்கு சிறந்தது என்றும்
மநு வசனம் இருத்தலாலும்-

யஜ்ஜங்களுக்குள் நான் ஜெப யஜ்ஜமாக இருக்கிறேன் -என்று பகவத் வசனம் இருத்தலாலும்
மானஸ
காயிகங்களான
மற்ற இரண்டையும் கேளாமல் வாசிகமான ஜெப யஜ்ஜத்தைப் பற்றிக் கேட்க்கிறார்
கிம் ஜபன்–பந்தநாத்

ஜந்து: – ஜநந தர்மா |
ஜந்ம ஸம்ஸார பந்தநாத்–ஜந்மேதி ஜரா மரண கர்ப நிரய யாதநாதி: ஸம்ஸாரஸ்ய கார்ய வர்க : ப்ரதர்ஶ்யதே |
ஸம்ஸார இதி ச அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி பந்த ரூப: காரண வர்க 😐
தாப்யாம் பந்தநம் பரம பத ப்ராப்தி ப்ரதிபந்த:, தஸ்மாத் முச்யதே த|
இதம் ச ஸர்வ பல உப லக்ஷணம், ஜபாதே : ஸகல பல ஸாதநத்வஸ்ய வக்ஷ்ய மாணத்வாத் |

ஆறாவது வினா
மனிதன் எதை ஜபம் செய்வதினால் ஜென்மம் சம்சாரம் ஆகிய இவற்றால் உண்டான
பந்தத்தில் நின்றும் விடுபடுவான்
ஜென்மம் -என்றதனால் –
ஜரை மரணம் கர்ப்ப வாஸம் நரக வாஸம் முதலிய கார்ய வர்க்கங்களும் கொள்ளப்படும்
சம்சாரம் என்றதனால்
அவித்யை பூர்வ கர்மம் அதனால் உண்டான வாஸனை அது பற்றி வரும் அவா
அதன் அடியாக வரும் பிரகிருதி சம்பந்தம் ஆகிய காரண வர்க்கங்களும் கொள்ளப்படும் –

அனந்த கிலேச பாஜனம் -நிரதிசய ஆனந்த ரூபத்துக்கு எதிர் தட்டு
இவை பரமபதம் அடைவதற்குத் தடையாக இருப்பது பற்றி பந்தனம் என்று சொல்லப்பட்டன
முஸ்யதே -என்பதனால்
மோக்ஷம் வரையில் உள்ள இதர பலன்களும் கொள்ளப்படும் –

தத்ர ‘அஸேஷேண, ஸர்வஶ:’ இத் யுபக்ரமேண
‘லோகே மாநவா: ஶுபம்’ இத்யாதி விஸேஷணைஶ்ச கால அதிகாரி
அங்க பல ப்ரகார விஸேஷா அபி ப்ரக்ருஷ்டா: ப்ரஷ்டவ்யதயா ஸூசிதா:||3||

அசேஷேண -எல்லாவற்றோடும் என்றும்
ஸர்வஸ -முழுவதும் -என்றும்
தொடங்கி இருப்பதாலும்
லோகே –ஸாஸ்த்ரங்களில் என்றும்
மானவா ஸூபம் -மனிதர்கள் நன்மைகளைப் பெறுவர் என்றும்
விசேஷித்து கூறி இருப்பதாலும்
காலம்
அங்கம்
பயன்
அதிகாரி –ஆகிய இவற்றுள் உத்தமமானவை எவை என்று கேட்டதாகவும் குறிப்பிக்கப் படுகிறது

இமாம் ஷட் ப்ரஸ்நீம் ப்ரதி ப்ருவாணோ பீஷ்ம உவாச |
அத்ர ப்ராயேண வ்யுத் க்ரமேண ப்ரதி வசநம் க்ரமி கோப நிபந்தநம் ச ப்ரதி வசநம் வக்ஷ்யதே |
தத்ர உபாய த்வார கத்வாத் உபேயஸ்ய ப்ரதமம் தம் ப்ரதி விவக்ஷந்
ஆநந்தர்யாத் தத்ரைவ ஆதராதிஶயாச்ச ஜபாலம்பநம் ப்ரதி வக்தி-

இப்படி உபாயம்
லகு உபாய ஸித்த உபாயம் என்றும்
குரு உபாய ஸித்த உபாயம் என்றும்
பரம ஸாத்ய உபாயம் என்றும்
வாசிக ஜப ஆலம்பனம் என்றும்
நான்கு வகையாகப் பிரித்து வினவப்பட்டமை காண்க

மேலே கூறிய ஆறு வினாக்களுக்கும் பீஷ்மர் விடை அளிக்கலானார்
கேட்ட முறை இல்லாமல் மாறி விடை அளிக்கப் படுகிறது –

இந்த ஆறு கேள்விகளுக்கும் -6-4-3-5-2-1–இந்த முறையில் பதில்கள்

நாராயணனே நமக்கே பறை தருவான் -உபதேசத்துக்காய் ஆசை வளர்க்க உபேயம் முன்னாக
அனுஷ்டானம் கறைவைகள் சொல்லி சரண் அடைந்து சிற்றம் சிறு காலை –
தருவான் பறை -இறைவா நீ தாராய் பறை போல் இங்கும்

ஸ்ரீபீஷ்ம உவாச:

ஜகத் ப்ரபும் தேவதேவம் அனந்தம் புருஶோத்தமம் |
ஸ்துவன் நாம ஸஹஸ்ரேணே புருஶ: ஸததோத்தித: ||–4-

தமேவ சார்ச்சயன் நித்யம் பக்த்யா புருஶமவ்யயம் |
த்யாயம் ஸ்துவன்னமஸ்யம்ச்ச யஜமானஸ்தமேவ ச ||-5-

ஸ்துவன்-ஜெபத்துக்கு அங்கமாக நாம சங்கீர்த்தனம்
ஸ்துவன் மேலும் வரும் அங்கே வேறே அர்த்தங்கள்

புருஶ:-புண்டரீகாக்ஷன் என்று பாஷ்யம் -தன்னையே நமக்கு நல்கும் கற்பகம் -உதார ஸ்வ பாவன்

———

கிமேகம் தைவதம் லோகே -பவத பரமோ மத –ஒப்பற்ற தெய்வம் யார்
கிம்வாபி ஏகம் பராயணம் -பவத பரமோ மத –அடையத் தக்க பிராப்யம் எது
ஆக பிராப்யம் பற்றி முதல் இரண்டு கேள்விகள் –

ஸ்துவந்த கம் -பவத பரமோ மத -யாரை குண சங்கீர்த்தனம் பண்ணி பூஜித்து
கம் அர்ச்சந்த மாநவா சுபம் ப்ராப்நுயு -பவத பரமோ மத -யாரை பக்தியுடன் உபாசித்து இஹ பர இன்பங்கள் அடைகிறார்கள் –
கோ தர்மஸ் சர்வ தர்மாணாம் -பவத பரமோ மத -தேவரீர் ஸ்வீகரித்த மேலான தர்மம் எது –

கிம் ஜபன் முச்யதே ஜந்து ஜன சம்சார பந்தநாத் -பவத பரமோ மத -எந்த மந்திர ஜபத்தால் பந்தம் அறும்
இவை உபாயம் பற்றிய நான்கு கேள்விகள்

பவத பரமோ மத -உமது அபிப்ராயத்தால் –ப்ரிய தமமான பலனையும் ஹித தமமான உபாயத்தையும் கேட்கிறார்

——————

1- வாசிக ஜப ஆலம்பந வினாவுக்கு விடை
உபாயத்தைக் கொண்டு உபேயத்தை அடைய வேண்டுமாகையாலே முதலில் உபாய விஷயமான கேள்விக்கு விடை அளிக்கிறார்
அந்த வினாக்களுக்குள் கடைசியில் கேட்ட ஜப ஆலம்பந வினா சமீபத்தில் இருக்கையாலும்
தமக்கும் அதில் மிக விருப்பம் இருக்கையாலும்
அதற்கு முதலில் விடை அளிக்கிறார்
பீஷ்மர் சொல்லலானார் –ஜகத் பிரபும் —-சததோத்தித–

பீஷ்ம உவாச –
ஜகத் ப்ரபும் தேவ தேவம் அநந்தம் புருஷோத்தமம் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ : ஸததோத்தித:||4||

ஜகத் ப்ரபுமிதி|
ஜகதோ ஜங்கம அஜங்கமஸ்ய ப்ரபும் ஸ்வாமிநம் |
யதா மநுஷ்யேப்யோ தேவா: ஐஶ்வர்ய பரிசர்யாப்யாம் அதிகா :
ஏவம் ஏதேஷாம் அபீதி தேவ தேவம் |
அநந்தம்—ஸர்வதோ அநவச்சேத்ய வைபவம் –புருஷோத்தமம்- பரம உதாரம், (அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் )
நாம ஸஹஸ்ரேண- ஜப ஆலம்பநீ க்ருதேந;

ஸ்துவந் ஸ்துவந்நிதி
“லக்ஷண ஹேத்வோ :” இதி ஹேதௌ ஶத்ரு ப்ரத்யய:|ஸர்வ து:காதிகோ பவேத் இத்யநேந ஸம்பந்த:|
ஸ்தவநம் ஸர்வ துக்க நிவர்தகம் இத்யர்த:|

க ஏவம் ஸ்யாத் ? புருஷ சேதந:|கதம் பூத:?ஸததோத்தித: – நிரந்தரம் உத்யுஞ்ஜாந:|
பகவத் ஸ்துதி சிந்தாத் யவிச்சே தஸ்ய பரம ப்ரிய ஹிதத்வாத்
தத் விச்சேதஸ்ய வைஶ ஸத்வாச்ச ஶ்ரூயதே ஹி –(பிரியமாயும் ஹிதமாயும் இருப்பதால் இடையூறு வந்தால் பெரும் துன்பம் வருமே -குதூகலமாக சொல்ல வேண்டுமே )

“யதா ஹ்யேவைஷ ஏதஸ்மிந் அத்ருஶ்யே
அநாத்ம்யே அநிருக்தே அநிலயநே அபயம் ப்ரதிஷ்டாம் விந்ததே |
அத ஸோ அபயம் கதோ பவதி |யதா ஹ்யே வைஷ ஏதஸ்மிந் உதர மந்தரம் குருகத |
அத தஸ்ய பயம் பவதி” இத்யாதி |

(அருகில் போக போக பயம் நீங்கி விலக விலக பயம் மிக்கு வருமே
ஆர்வம் தொழ குனிப்பார் அமரரால் தொழப்படுவாரே )

உபப்ருஹ்ம்பதே ச “யந் முஹூர்த க்ஷணம் வா அபி வாஸு தேவோ ந சிந்த்யதே |
ஸாஹாநி: தந் மஹச் சித்ரம் ஸா ப்ராந்தி: ஸா ச விக்ரியா ||”,

“வரம் ஹுதவஹ ஜ்வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி:|
ந ஶௌரி சிந்தா விமுக ஜந ஸம்வாஸ வைஶஸம் ||”,

(அக்னி கூண்டுக்குள் இருந்தாலும் தேவலை -சவுரி நினைப்பார் உடன் கூட இருப்பது கடினம்)

“ஏகஸ்மிந் நப் யதி க்ராந்தே முஹூர்தே த்யாந வர்ஜிதே | தஸ் யுபிர் முஷி தேநேவ யுக்த மாக்ரந்தி தும் ப்ருஶம் ||” இதி ச | ஏவம் ஸாத்யேஷு
ஜபஸ் யாலம்பந முக்தம் ||


ஆறாவது கேள்வி ஜெபத்தைப் பற்றியதாகையாலும்
இது அதற்கு விடை யாகையாலும்
ஸ்துவன் என்பதற்கு -ஸா ஆலம்பந உபாயத்துக்கு அங்கமான ஸ்தோத்ரம் -ஜபம் -என்றே பொருள் கொள்ள வேண்டும்
ஸ்துவன் நாம ஸஹஸ்ரேண –என்று சேர்த்துச் சொன்னமையும்
நாம ஸஹஸ்ரேண என்பதற்கு ஜெபத்திற்கு ஆலம்பனமாக ச் செய்யப்பட்டவை என்று
பாஷ்யத்தில் விளக்கம் கூறி இருப்பதும்
ஸ்துவன் என்னும் சொற்களுக்கும் வேறு பொருள் கூறி இருப்பதும் இதனை நன்கு விளக்கும்
ஜபம் என்பது மந்த்ரம் முதலியவற்றை பலமுறை நியமத்துடன் சொல்லுவதாகையாலும்
பொதுவாகையால் ஸ்துதி செய்வது என்று இல்லாமல் இங்கே ஆயிரம் நாமங்களினால் ஸ்துதி செய்வது என்று இருப்பதாலும்
ஜப பரமாகவே பொருள் கொள்ள வேண்டும்

சங்கர பாஷ்யத்திலும் இதனை ஆறாவது வினாவிற்கு விடையாக
ஆயிரம் நாமங்களினால் ஸ்துதித்து என்றே கூறி இருப்பதும் காண்க –

மற்ற விடைகளில் கேள்விகளில் உள்ள சொற்களையே வைத்துக் கூறி இருத்தலாலும்
ஆறாவது கேள்வியில் உள்ள ஜபம் என்ற சொல்லை வைத்து விடை கூறப்படாமையாலும்
விடைகளில் முதலில் உள்ளது இன்ன கேள்விக்கு விடை என்று மூலத்தில் கூறப்படாமையாலும்
பாரிசேஷ நியாயமாக இதனை ஆறாவது கேள்விக்கு விடையாகக் கொண்டனர் போலும் –

எம்பெருமானைத் த்யானித்தலும் ஸ்துதி செய்தலும் இடையூறு இன்றி நடக்குமாகில்
அவை மிக்க பிரியமாகும் ஹிதமாயும் இருக்கும் என்றும்
நடுவில் இடையூறு நேர்ந்து தடைப்படுமாகில் மிக்க வருத்தத்தைத் தரும் என்றும் ஸாஸ்திரங்கள் சொல்லுகின்றன –

இவ்விதம் ஸாத்யமான உபாயங்களுள் ஜபம் என்னும் ஸா ஆலம்பன உபாயம் சொல்லப்பட்டது –

———-

4-சித்த உபாயத்தைப் பற்றிய விடை
அவதாரிகை

அர்சந ஸ்தவ நயோரேவ பரம தர்மத்வேந விவக்ஷி தத்வாத் தர்ம விஷயம்
பஞ்சமம் ப்ரஶ்ந முல்லங்கய ப்ரதமம் அர்சநீய ஸ்தோதவ்ய விஷயௌ
சதுர்த த்ருதீயௌ ப்ரதி வதந் அர்ச்ய தமம் தாவத் ஸ அர்சநா ப்ரகாரம் ஆஹ–

அர்ச்சனையும் ஸ்தோத்ரமுமே பரம தர்மம் என்று சொல்வது பீஷ்மருக்கு விருப்பமாகையாலே
தர்ம விஷயமான ஐந்தாவது கேள்விக்கு விடை கூறாமல்
அர்ச்சனை விஷயமாகவும் ஸ்தோத்ர விஷயமாகவும் உள்ள
நான்காது மூன்றாவது கேள்விகளுக்கு விடை கூறத் தொடங்கி
அர்ச்சிப்பதற்கு மிக்க தகுதி யுடையவன் எவனோ அவனை அர்ச்சிக்கும் முறையோடு சொல்கிறார்

தமேவ ச அர்சயந் நித்யம் பக்த்யா புருஷம் அவ்யயம் |
த்யாயம் ஸ்துவந் நமஸ் யம்ஶ்ச யஜமாநஸ்த மேவ ச ||5||

அலகு உபாய -ஸாத்ய ஸித்த வினாவிற்கு விடை
அவதாரிகை
கீழ்ச் சொன்ன ஜெபத்துக்கு எவன் விஷயமோ அவனே அர்ச்சிக்கத் தகுந்தவர்களுக்குள் சிறந்தவன்
என்பதை பல பிரமாணங்கள் காட்டி உறுதி செய்கிறார்
தமேவ அர்ச்சயன் –யஜமான -கிம் அர்ச்சயன் கேள்விக்குப் பதில்

யஜமாநஸ்-மதன் யாஜி -யஜிப்பவன் -என்ற அர்த்தம்
மன் மநா பவ மத் பக்தா மத் யாஜி மாம் நமஸ்குரு -அதே நாலும்
அலகு உபாய ஸாத்ய ஸித்த உபாயம் இங்கு –

தமேவேதி யஜமாந இத்யந்தேந | உக்த ஜப ஆலம்பந விஷய ஏவ
அர்ச்ய தமோ அபி இத்ய வதாரயதி – தமேவ சேதி|
யதாஹு: — “தமிமம் ஸர்வ ஸம்பந்நம் ஆசார்யம் பிதரம் குரும் |
அர்ச்யம் அர்சிதும் இச்சாம: ஸர்வே ஸம்மந்து மர்ஹத ||”,

(அக்ர பூஜை கண்ணனே அனைத்தும் நிரம்பியவர் -அர்ச்சிக்கத் தக்கவன் -ஸபா பர்வம்
சஹா தேவன் -இவனைத் தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லை)

“தஸ்மாத் பூஜ்ய தமம் நாந்யம் அஹம் மந்யே ஜநார்தநாத்”,
“ப்ரஹ்மாணம் ஶிதி கண்டம் ச யாஶ்சாந்யா தேவதா:ஸ்ம்ருதா:|
ப்ரதி புத்தாந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் ||” இத்யாதி;

(அல்ப அஸ்த்ர பலம் மற்றவர்)
“அந்தவத்து பலம் தேஷாம்” (7-23)இதி ச |

புருஷம் – புண்டரீகாக்ஷம்|
அவ்யயம் – ஸதா அநுபவேதி அபி அநுரூப அக்ஷய உத்தர உத்தர குண ஸம்ஸ்தவம் ;
அர்சயந்—தத் பரி சரண ரூபம் பக்தி யோகம் உபாததாந:அதிகாரீ
நித்யம் “மச் சித்தா மத் கத ப்ராணா:போதயந்த பரஸ்பரம் ”(10-9)(திருநெடும் தாண்டகம் மூன்று பத்துக்களும் இவற்றையே சொல்லும் )
இதி ப்ரக்ரியயா அந்யதா க்ஷணமபி ஸ்தாதுமஶக்நுவந் |

கதமர்சயந் ? பக்த்யா – ஸ்வாமிநி தாஸஸ்ய அநுராக மயீ ஸ்திதி: பக்தி:; தயா இத்தம் பூத:|
புநஶ் ச கதம் ?

த்யாயந்-மாநஸம்-அவிச்சிந்ந அம்ருத தாரா காரம் நிஸ் சேஷ ஸம்ஸார தாப த்ரய நிர்வாபண-பகவத் குண சிந்தநம் குர்வந் |

நான்காவது வினாவுக்கு விடை
செந்தாமரைக் கண்ணரும்-(புருஷன் என்பது மூலம் -புண்டரீகாக்ஷம் என்பது பாஷ்யம் -)
இடை விடாது அனுபவித்தாலும் குறைவு படாதவைகளும்
அவருக்கே உரியவைகளும்
மேன்மேலும் வளருகின்றவைகளுமான திருக் கல்யாண குணங்களை யுடையவருமான பரம புருஷரையே
எக்காலமும் அடிமை பூண்டு
தனக்கு ஸ்வாமி என்னும் ப்ரேமையுடன் பக்தி யோகத்தால் அர்ச்சயன் -உபாஸனை செய்தும்

மனத்தில் இடைவிடாமல் பெருகுகின்ற அம்ருத தாரை போலே ஸூகமாய் இருப்பதும்
சம்சாரத்தினால் யுண்டான ஆத்யாத்மீகம் முதலிய தாப த்ரயங்களையும் அடியோடு போக்குவதுமான பகவத் குணத்தை
த்யாயன் –த்யானம் செய்தும்-

மேலும் வாயாலும் ஸ்துவன் -மனத்தினால் சிந்திக்க -வாயினால் பாடி இங்கு

புநஶ்ச கதம் ? ஸ்துவந்– வாசிகம் ச தாத்ருஶம் ததநுபவ ஜந்ய ஹர்ஷ ப்ரகர்ஷ புலகித ஶரீரம்
பாஷ்ப கத்கத கண்டம் தத் குண ஸம்கீர்தநம் ஸமீம்ஹமாந:|

அந்த தியானத்தினால் யுண்டான சந்தோஷ மிகுதியால் சரீரத்தில் புளகம் அடைந்து
ஆனந்த பாஷ்பத்தால் சொல் எழாமல் தொண்டை தழு தழுத்து அந்தக் குணங்களையே
ஸ்துவன் -ஸங்கீர்த்தனம் செய்தும்

புநஶ்ச கதம்? நமஸ்யந் -அத்யந்தம் ப்ரஹ்வீ பவந் |
பக்தி பராதீநதயா பாஹ்யாந்தர ஸகல கரணை :
நிர் மமத்வாவ நம்ரை : ஆத்மீயை : ஶரீரேண வசஸா ச ஸஹ ஸர்வம் மதீயம்
த்வதீயம் த்வமேவ க்ருஹாணேதி பகவத் பாத பத்மயோ : ஆத்மாநம் அஹம் மாந மலீமஸம் ஸமர்பயந் இத்யர்த:|

ப்ரஹ்வீ பவந்-வணக்குடை தவநெறி -உள்ளே வணக்கம் எண்ணம் வேண்டுமே

பக்தி மேற் கொண்டு -வணக்கமுற்று -மமகாரத்தை ஒழித்து —
தேகம் இந்திரியங்கள் மனம் வாக்கு ஆத்மா ஆகிய என்னுடையவை எல்லாம் உம்முடையவையே தாம்
நீரே அங்கீ கரித்து அருளுக என்று
அஹங்காரத்தால் தோஷப்பட்டு இருந்த தன்னைப் பகவான் திருவடிகளிலே
நமஸ்யன் -சமர்ப்பணம் -செய்தும்

மாம் மதீயம் நிகிலம் சேதன அசேதனாத்மகம் -தேசிகன்
யானும் நீயே என்னுடைமையும் நீயே

புநஶ்ச கதம்? யஜமாந:- தேவ பூஜநமாசரந்;
ஸ்வ விஷயீகார மஹா உபகாரா அநுரூப ப்ரத் யுபகாரா தர்ஶந புவா ஸம்ப்ரமேண
அக்ருத்ரிம பக்த் யுபஹ்ருத ப்ரயத மநோஹர அர்க்ய புஷ்ப
மதுபர்க ப்ரபத்த யௌபசாரிக – ஸாம்ஸ்பர்ஶிக
ஆப்யவஹாரிக ரூப பாேக அநுரூப போக அநு பூர்வ்யா தேவ ஸமாராதநம்

அஸாதாரணம் அத்யந்தம் ஆதரேண குர்வாண இத்யர்த:|

ஏவம் வத்த:ஸர்வ து:காதிகோ பவேதிதி||5||

அவர் தன்னை அங்கீ கரித்த மஹா உபகாரத்துக்குத் தக்கபடி ப்ரத்யுபகாரம் ஒன்றும் காணாமையாலே உண்டான பரபரப்போடும்
பேர் உதவிக் கைம்மாறு செய்ய ஒன்றும் இல்லையே இங்கும் அங்கும் -முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –

உண்மையான பக்தியோடும்
சேகரிக்கப் பட்டனவும்
பரிசுத்தமும் ரம்யமுமான அர்க்யம் புஷ்ம் மது பர்க்கம் முதலிய
ஓவ்பசாரிகம் –உபசாரத்துக்கு ஆகவும் –
ஸாம் ஸ்பர்ஸிகம் -தொடுவதற்கு இனிமையான சந்தனம் புஷ் பாதிகள்
அப்யவஹாரிகம் –உள் கொள்ளத் தக்க உணவுப் பொருள்கள்
என்று சொல்லப் பட்டனவும் -அவருடைய போகத்துக்கு ஏற்றனவுமான போக உபகரணங்களைக் கொண்டு
முறைப்படி மிக்க ஆதரவோடு அவருக்குத் திரு வாராதனம் செய்பவன்
எல்லாத் துன்பங்களையும் கடந்தவன் ஆவான்

அயமேவ பக்தி யோக : முக்தி மஹாபத: த்ரய்யந்தேஷு சிந்த்யமாந: ப்ரத்யபிஜ்ஞாயதே |
ததா ஹி வர்ணாஶ்ரம தர்மை : ஆராதுபகாரகை :
ஶமதமாதிபி: ஆத்ம குணை : ஸந்நி பத்ய உபகாரகைஶ் ச அங்க ஜாதை :
அபிநிஷ்பாத்யம் வேதந த்யாந த்ருவாநுஸ்ம்ருதி
விகவே ஜாதி பத பர்யாய கோசர ஆந்தர ப்ரதீதி ஸந்ததிபி: சித்த வ்ருத்திபி:
அவ்யவஹித அநவரத ப்ரவாஹ அஸக்ருத் ஆவ்ருத்த ஸ ஆதர ப்ரத்யய ஸம்ஸ்கார ப்ரசய கடித படுதர ப்ரத்யக்ஷ
ஶிரஸ்கம், தத் தத் ஸதாநந்த புருஷ உபகோஸலாதி ஸம்ஜ்ஞக பர வித்யா வ்யவஸ்தித குண உப ஸம்ஹார மர்யாதம்
ப்ரஹ்ம உபாஸநம் பகவாந் பாதராயண:“

இந்த பக்தி யோகமே முக்திக்கு –மஹாபத-ராஜ மார்க்கம் என்று வேதாந்தங்களில் கூறப்படுவதாக் காணப்படுகிறது என்று கூறி
அதற்கு ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களில் இருந்தும் ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன
பக்தி உபாஸனை ஸேவை -ஒரே பொருள் சொற்கள் -ஸேவா பக்தி உபாஸ்த்தி -நிகண்டு

வர்ணாஸ்ரம தர்மம்
அதனால் ஷாந்தி தமம் சமம் வர வர
அதனால் த்யானம் கிட்டும்
அதனால் மேலே உபாஸனம் -பக்தி -படிக்கட்டு

இந்த உபாஸனம் அடிமையை ருசி யுள்ளதாய் இருக்கும் என்பதும்
பக்திக்கு நாம ஸங்கீர்த்தநாதிகள் சரீர ஸ்தானம் என்பதும்
இந்த பக்தியே சர்வ சாஸ்திர அர்த்தங்களிலும் ஸாரமானதாலும்
பரம ரஹஸ்யம் என்று விளக்கப் பட்டுள்ளன –

தமேவம் வித்வாந்”,“ப்ரஹ்ம விதாப்நோதி பரம்”,
“யஜ்ஜேந தாநேந தபஸா அநாஶகேந”,
“ஶாந்தோ தாந்த:”, இத்யாதி த்ரய்யந்த வசநாநி,

“ஸர்வ அபேக்ஷா யஜ்ஞாதி ஶ்ருதே : அஶ்வவத்”,
“ஶம தமாத்யுபேத: ஸ்யாத்”,
“ஆவ்ருத்திர் அஸக்ரு துபதேஶாத்”(ப்ரஹ்ம ஸூத்ர-4-1)
இத்யேவம் ப்ரகார ப்ரஹ்ம ஸூத்ர ந்யாயை : மதித்வா மோக்ஷ ஸாதநம் நிரணைஷீத் ||

வாக்ய காரஶ்ச “வேதநம் உபாஸநம் ஸ்யாத் தத் விஷயே ஶ்ரவணாத்” இதி |
இதமேவ உபாஸநம் விபக்த்ரிமம் பக்தி: இத்யுச்யதே ,நாந்யத் |

உபாஸனமும் பக்தியும் ஒன்றே -மூன்று காரணங்கள் மேல் காட்டுகிறார்

பலமும் -செய்யும் வடிவம் ரூபமும் -விதி வாக்கியம் சோதன வாக்கியம் ஒன்றாக இருப்பதால்

குத:?ஸம்யாேக ரூப சோதநாக்யா விஸேஷாத் | ஜ்ஞாப்யதே
ஹ்யுபாஸநஸ் யேவ பக்தேரபி மோக்ஷ லக்ஷணேந பலேந ஸம்யாேக:|

யதா– “ந ஸம் த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஶ்யதி கஶ்சநைநம்|
ஹ்ருதா மநீஷா மநஸா அபிக்லுப்தோ ய ஏநம் விதுரம் ருதாஸ்தே பவந்தி ||”
இதி |ஹ்ருத் இதி பக்தி:; ஶ்ருத் யந்தரேண ஸ்ம்ருதி பிஶ்ச “ந ஸம்த்ருஸே திஷ்டதி” இத்யுபக்ரம்ய
“பக்தயா ச த்ருத்யா ச ஸமாஹிதாத்மா ஜ்ஞாந ஸ்வரூபம் பரிபஶ்ய தீஹ” இதி ஹ்ருச் சப்த ஸ்தாநே பக்தி பத ப்ரயாேகாத் |

(கண்ணால் பார்க்க முடியாது -மனிதர் ஹ்ருதயத்தால் -பார்த்தவன் அம்ருதத் தன்மை அடைகிறான்
ஹ்ருதயம் -பக்தி உபாசனம் வேறே இடத்திலும் உண்டே)

யதா ச “புருஷஸ் ஸ பர: பார்த பக்தயா லப்யஸ் த்வநந்யயா”,(8-22)
“பக்தயா த்வநந்யயா ஶக்ய:”,
“பக்த்யா மாமபிஜாநாதி”,
“பக்த்யா அவிசிந்நயா முக்தி:” இதி ஆங்கிரஸ ஸ்ம்ருததௌ|

வைஷ்ணவே தர்ம“பரமாத்மநி கோவிந்தே பக்திரவ்யபி சாரிணீ |
ப்ரயச்சதி ந்ருணாம் முக்தி॒ம் மாதே அபூத்–அத்ர ஸம்ஶய:||”,

“யே த்வாம் தேவம் த்ருவம் பக்தா: புராணம் புருஷோத்தமம் |
ப்ராப்நுவந்தி ஸதா காமாநிஹ லோகே பரத்ர ச ||

அமாேகாஸ்தே பவிஷ்யந்தி பக்தி மந்தஶ்ச யே நரா:||” இதி ஶ்ரீமதி ராமாயணே |

ஶ்ரீவாமநே , “யேஷாம் விஷ்ணு: ப்ரியோ நித்யம் யே விஷ்ணோ : ஸததம் ப்ரியா:|
ந தே புந:ஸம்பவந்தி தத் பக்தாஸ் தத் பராயணா:||” இதி |

ரூபம் ஸ உபயத்ர புண்டரீகாக்ஷம் ப்ரஹ்மைவ|

ஸோதநா ச உபாஸ்ஸ்வ பஜஸ்வேதி |
உபாஸ்தி பஜதீ ஹி ஸேவா விஸேஷ விஷயௌ|
அத ஏவ நைகண்டுகா :“ஸேவா பக்தி: உபாஸ்தி:” இதி |

லைங்கமார் கண்டே யயோ
“பஜ இத்யேஷ தாதுர்வை ஸேவாயாம் பரிகீர்தித:|
தஸ்மாத் ஸேவா புதை : ப்ரோக்தா பக்தி ஶப்தேந பூயஸீ ||” இதி|

உபாஸ்யஸ்ய பகவதோ நிரவத்ய மஹா குணத்வாத் நிஸ் ஸீம ப்ரீதி ரூபம்
நிர் வ்யாஜ ஸ்வாம்யாத் தாஸ்ய ஏக ருசி கர்பம் ச இதமேவ உபாஸநம் விவிச்யத இதி பக்தித்வ வ்யபதேஶ:|

ஏவம் விதம் ப்ரியத்வம் ஆஶ்ரித்ய ஹி
“ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ அத் யர்தம்”,(7)
“பஜதாம் ப்ரீதி பூர்வகம்”,
“துஷ்யந்தி ச ரமந்தி ச”,
“நாத யோநி ஸஹஸ்ரேஷு”,(விஷ்ணு புராணம் -என்நின்ற யோனியில் பிறந்தாலும் இடைவிடாத பக்தி வேண்டும் )
“யா ப்ரீதி: அவி வேகநாம்”-(விஷயாந்தர பிராவண்யம் லோகம் வைப்பது போல் _-இதி ஶ்லாேக த்வயம்,(முதல் அம்சம் -18-19)

“தத் ஸ்ம்ருத்ய ஆஹ்லாத ஸம்ஸ்தித:”,
“தந் நாம ஸ்மரணோத் பூத புலகோ திதி புங்கவ:”(ப்ரஹ்லாதன் பிரார்த்தனை )

இதி ஶ்ரீவிஷ்ணுதத்த்வே
“ஸேவா பக்திஸ் ஸமாக்யாதா ஜ்ஞாந வாஸந யாக்ருதா | உத்பந்நாயாம் ததஸ் தஸ்யாம் ஸ்நேஹ பாவ: ஸ்வயம் பவேத் ||” இதி |
“பரமாத்மநி யோ ரக்கதா விரக்தோ அபரமாத்மநி |
ஸர்வேஷணா விநிர்முக்: ஸ்ஸ பைக்ஷம் போக்தும் அர்ஹதி” இதி |
“ஸ நோ தேவ: ஶுபயா ஸ்ம்ருத்யா ஸம்யுநக்து” (தைத்ரியம் )இத்யாத் யுபாஸந விதிஷு வசநாநி ப்ரவ்ருத்தாநி ||

தாஸ்யைக ருசி கர்ப ஜ்ஞாபகாநி ச “மாமநுஸ்மரந்”, “பார்த அநுசிந்தயந்”,
“க்ருஷ்ண அநுஸ்மரணம் பரம்” இத்யாதீநி |
அநுரித்யயம் நிஹீந அர்தோ ஹி ஜ்ஞாப்யதே தஜ்ஜ்ஜை 😐
நிஹீநத்வம் சாஸ்ய ஸ்வாபாவிகம் தாஸ்யம்,
தத் அநுஸந்தாந கர்பம் உபாஸநம் அநு ஸ்மரணம் |

ப்ரீதி சேவா அநு ஸ்ம்ருதி வர வர பிராயச்சித்தம் ஆகும்
அநு ஸ்மரணம் -தொடர்ந்து என்றும் -தாஸ பாவத்துடன் என்றும் இரண்டு அர்த்தங்கள்

பக்தேஶ்ச கீர்தநாதி ஶரீரத்வம்
“ஸததம் கீர்தயந்த:”,
“மந்மநா பவ” இத்யாதௌ வ்யக்தம் |

அஸ்யா ஏவ ஸகல ஶாஸ்த்ரார்த ஸாரத்வேந பரம குஹ்ய தமத்வம் ச
“இதம் து தே குஹ்ய தமம்”,(9)
“யஜ் ஜ்ஞாத்வா நேஹ பூயோ அந்யத்”,
“ஸர்வ குஹ்ய தமம் பூய:” இத்யாததௌ தர்ஶிதம் |
அலம் ப்ரஸஜ்ய ||

மேல் சொன்னால் விரிவடையும் என்று பிரமாணங்களை அருளிச் செய்வதை நிறுத்துகிறார்

————

அஞ்சாவது -அஞ்சும் படி உள்ளதே -மேல் எளிதான உபாயம்
லகு உபாய சித்த ஸாத்ய உபாயம் மேல் பார்ப்போம்

அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -கீதாச்சார்யன் அருளாலே ஆழ்வார்கள் சரணாகதி சொன்னது போல்
கீதையில் அங்க பிரபத்தி மாம் ஏகம் –இத்யாதி அருளிச் செய்தானே

3- லகு உபாய –ஸாத்ய ஸித்த உபாய வினாவிற்கு விடை
இந்த பக்தியானது பல ஜென்மங்களுக்குப் பிறகு ஞானவானாகி என்னை அடைகிறான் என்பது முதலாக
ஸாஸ்த்ரங்களில் சொல்லியபடி அநேகம் ஆயிரம் ஜென்மங்களில் சம்பாதித்த புண்ய பரிபாகத்தால்
எல்லாப் பாபங்களையும் போக்கிக் கொண்டவர்களுக்கும்
நெடுநாள் இடைவிடாமல் உபாஸிப்பதால் மாத்திரம் உறுதிப்படுகிறது
அப்படியானால் ஸாஸ்த்ரத்தில் சொன்ன எந்த உபாயத்தையும் அனுஷ்ட்டிக்கத் திறமை இல்லாத பிராணிகளுக்கு என்ன கதி
என்கிற பயத்தைப் போக்குவதற்காக லகு உபாயத்தைக் காட்டக் கருதி
மூன்றாவது கேள்விக்கு விடை கூறுகிறார்
எல்லா விதத்தாலும் புருஷோத்தமனே ஸ்தோத்ரத்துக்குத் தகுந்தவன் என்கிற அபிப்ராயத்தால்
இதர தேவதைகளைக் காட்டிலும் இவனுக்கு உண்டான ஏற்றத்தை
அநாதி நிதனம்
விஷ்ணும்
ஸர்வ லோக மஹேஸ்வரம்
லோகாத்யக்ஷம்
ப்ரஹ்மண்யம்
ஸர்வ தர்மஞ்ஞம்
லோகாநாம் கீர்த்தி வர்த்தனம்
லோக நாதம்
மஹத் பூதம்
ஸர்வ பூத பவோத் பவம்
என்கிற பத்து குணங்களால் காட்டுகிறார்
தமேவச –அநாதி நிதனம் — –ஸர்வ துக்காதிகோ பவத்

ஹந்த! இயம் பக்தி:
“பஹூநாம் ஜந்ம நாம் அந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்யே ”,
“ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு” இத்யாதி ப்ரகாரேண(தபோ ஞான சதாப்தி நராணாம் ஷீண பாபேந-பக்தி ஆரம்ப விரோதி பாபங்கள் போகும் விஷ்ணு தர்மம் -பல்லாயிரம் பிறவிகளுக்குப் பின் )
பஹு தர ஜந்ம ஆர்ஜித ஸுக்ருத் பரிபக்வ ஷயாணாம்
தீர்க கால நைரந்தர்ய ஸேவிதா த்ருட பூமி:பவதீதி,
ஶாஸ்த்ரீய ஸர்வ உபாய தரித்ராணாம் ப்ராணிநாம் கா கதிர் இதி பயம் அபநேதும் லகூபாயம் தர்ஶயந்(இதில் இருந்து கீழ் அலகு உபாயத்துக்குப் பதில் -இது மூன்றாம் கேள்வியான லகு உபாயத்துப் பதில்-இயன்றவரை ஸ்தோத்ரம் போதுமே )

ஸ்துவந்ந: கம்’ இதி ததீயம் ப்ரஶ்நம் ப்ரதி வக்தி
தமேவ இத்யாதி ஸர்வ பூத பவோத் பவம் இத்யந்தேந|(ஆறாவது ஸ்லோகம் தொடங்கி ஏழாவது ஸ்லோகம் வரை )

அஸ்யைவ ஸர்வதோ முகம் ஸ்துதி யோக்யத்வம்
அபிப்ரயம் ஸ்தத் அபேக்ஷயாஸ்
அபேக்ஷிக க்ஷுத்ர தேவதாந்தராதி வ்யாவர்தகை : அநாதி நிதநத்வாதிபி: தஶபி: விஶிநஷ்டி –

——–

அநாதி நிதனம் விஶ்ணும் ஸர்வலோக மஹேஶ்வரம் |
லோகாத்யக்ஷம் ஸ்துவன் நித்யம் ஸர்வது:காதிகோபவேத் ||–6-

ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஞ்யம் லோகானாம் கீர்த்தி வர்த்தனம் |
லோக நாதம் மஹத் பூதம் ஸர்வபூத பவோத்பவம்||–7-(பத்து பெருமைகளைக் கொண்டவனை நித்தியமாக ஸ்தோத்ரம் பண்ணி )

அநாதி நிதநம் —தஸ்மாத் அகலா உபாதிகம் உபகாரிணம் |(முதல் முடிவும் இல்லாமல் காலத்தால் அபரிச்சேதம் )
விஷ்ணும்-அதேஸ உபாதிகம் |(தேசத்தால் பரிச்சேதம் இல்லாதவன்-கரந்து எங்கும் பரந்துளன் )
ஸர்வ லோக மஹேஶ்வரம் — ஸ்தோத்ரு-மநோரத பூரண பர்யாப்த மஹா விபூதிகம்|(நியமன ஸாமர்த்ய-அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் )
லோக அத் யக்ஷம்-தத் உசித நிருபாதிக அநு ஸந்தாநம் |(உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி )
ப்ரஹ்மண்யம் —-ப்ரஹ்மணோ அநந்த ஶாகாய வேதாய ப்ரபிபாத்ய தயா ஹிதம் ;அத ஏவ உத்காடித ஸ்துதி விஷயம்|(எளிமையாக ஸ்தோத்ரம் பண்ண விஷயம் ஆகிறான் )

ஸர்வ தர்மஜ்ஞம் —அத ஏவ ஸ்வ ஸ்துதி பரம தர்மஜ்ஞம்|
லோகாநாம் கீர்தி வர்தநம் —ஸர்வ லாேக ஆஶ்ரயிணாம் ஸ்தோத்ரு ப்ரப்ருதீநாம் ஆத்மந இவ “யம் ஸ்துவந் ஸ்தவ்ய தாமேதி”
இதி ப்ரகாரேண அஸேஷ லோக வேத ப்ரஶஸ்ய கீர்தி காரணம்|(தனக்கு நிகராக ஸ்தோத்ரம் பண்ணத் தகுதியாக்கி அருளுகிறார் )
லோக நாதம் —-லாேகா நாம் ஸ்வாமிநம்;-அத: ஸ்துத்யாதி ஸர்வ பரிசரண அர்ஹம் |
மஹத் பூதம் –-ஐஶ்வரேண பரம மஹத்த்வேந ஸ்வரூப அநுபந்திநா யுக்தம் ; அத: அக்லேஸேந ஸ்தோத்ர மாத்ரேண ஸ்வாராத்யம் |
மஹாந்தோ ஹி ஸ்வ அநுக்ரஹ ஸம்வாத ஸூசந மாத்ரேண ஹ்ருஷ்டா:, ந பஹு வாஞ்சந்தி |

மூன்றாவது வினாவிற்கு விடை
ஆதியும் அந்தமும் இல்லாதவரும்
எங்கும் வியாபித்து இருப்பவரும்
எல்லா உலகங்களுக்கும் முதல் கடவுளும்
எல்லா உலகங்களையும் பிரத்யக்ஷமாகப் பார்ப்பவரும்
வேதங்களால் உரைக்கப் படுபவரும்
எல்லாத் தர்மங்களையும் அறிந்தவரும்
தம்மை ஸ்துதிக்கும் உலகோருக்கு புகழைப் பெருகச் செய்பவரும்
உலகங்களுக்கு ஸ்வாமியும்
சிறந்த பொருளும்
எல்லாப் பொருள்களின் இருப்புக்கும் காரணமான
அந்தப் பகவானை எப்போதும் ஸ்துதிப்பதனால் எல்லாத் துன்பங்களையும் கடந்தவன் ஆவான்

ஆதியந்தம் இல்லாதவர் என்றதனால் -காலத்தால் அளவிடக் கூடாதவர் என்பதும்
எங்கும் வியாபித்தவர் என்பதனால் -தேசத்தால் அளவிடக் கூடாதவர் என்பதும்
எல்லா உலகங்களுக்கும் முதல் கடவுள் என்பதனால்
ஸ்துதிப்பவருக்கு வேண்டியவற்றை வேண்டியபடி அளிக்கும் ஐஸ்வர்யம் உடையவர் என்றும்
எல்லா உலகங்களையும் ப்ரத்யக்ஷமாகப் பார்ப்பவர் என்றதனால் ஸ்துதிப்பிவனுக்குத் தக்கது இன்னது என்று தாமாகவே சிந்திப்பவர் என்பதும்
வேதங்களால் உரைக்கப் படுபவர் என்பதால் ஸ்தோத்ரம் செய்ய வேண்டிய விஷயம் உள்ளவர் என்றும்
எல்லாத் தர்மங்களையும் அறிந்தவர் என்பதால் தம்மைத் ஸ்துதிப்பது பரம தர்மம் என்று அறிந்தவர் என்பதும்
தம்மை ஸ்துதிக்கும் உலகோருக்கு புகழைப் பெருகச் செய்பவர் என்பதால் எந்தப் பிராணியும் தன்னை ஸ்தோத்ரம் செய்வதால்
தன்னைப் போலவே இருக்க அருளி புகழச் செய்பவர் என்றும்
உலகங்களுக்கு ஸ்வாமி என்பதால் ஸகல பரிசரணைகளுக்கும் உரியவர் என்றும்
சிறந்த பொருளாக இருப்பவர் என்பதால் ஆராதனைக்கு எளியவர் என்றும்
எல்லாப் பொருள்களின் இருப்புக்கும் காரணமாக இருப்பவர் என்பதால் அவர்களை அனுக்ரஹிப்பவர் என்றும்
அந்தப் பகவானை எப்போதும் ஸ்துதிப்பதனால் எல்லாத் துன்பங்களையும் கடந்தவன் ஆவான் என்பதால் பரிபூர்ண பக்தி யோகம்
அனுஷ்ட்டிக்க இயலாமல் இயன்ற வரை குண சங்கீர்த்தனம் செய்பவன் தாப த்ரயங்கள் நீங்கப் பெற்று

சீதள மடுவைப் போல் இருக்கும் அவன் இடம் நீராடப் பெறுவார் என்பதும் சொல்லிற்று ஆயிற்று –

யத உத்யோகே
“அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவநே ஜநாத்|
அந்யத் குஶல ஸம் ப்ரஶ்நாத் ந சேச்சதி ஜநார்தந:||” இதி|

(தூய நீர் கொண்ட சொம்பு தீர்த்தத்துக்கு மேல் எதிர்பார்க்காமல்
மாலா காரர் –
ஜனங்கள் ஜனியையைப் போக்கும் ஜனார்த்தனன்)

ஸர்வ பூத பவ உத்பவம் – அஸத் வ்யாவ்ருத்தாநாம் ஸத்தா ஹேதும் ;
அத அவர்ஜநீயத்வாத் தேஷாம் அவஶ்யம் அநுக்ரஹீதாரம் ;

ஏவம் பூதம் ஸ்துவந் –(இப்படி பத்து பெருமைகளை யுடைய )
பரிபூர்ண பக்தி யாேகா ஸம்பவே அபி:யதா ததா வா அபி குண ஸம்கீர்தநம் குர்வந் |–

ஸர்வ து:காதிகோ பவேத்–
தாப த்ரய தவ தஹநம்-அதீத்ய நிரதிஶய அநந்த ஶீதல ஹருதம் பகவந்தம் கச்சேத்|(தயரதன் பெற்ற மரகத மணித்தடம் )

அஸ்ய ச யுக்தம் லகு தர ஸ்துதி மாத்ர விஷயத்வம்,(இது பழைய ஸ்துவன் அல்ல -கீழ் ஜபம் -பக்தி யோகம் இங்கு ஸ்துவன் மாத்திரம் )
“த்யாயம் ஸ்துவந் நமஸ்யந்” இத் யநந்த ரோக்த த்யாநாதி ஸஹ சர குரு தர ஸ்தவந வைலக்ஷண்ய ப்ரதீதே :,
அந்யதா புநருக்தி ப்ரஸங்காத், “ஸ்துவந்த: கம்” இதி
ஸ்வதந்த்ர ப்ரஶ்நாந்தர ப்ரயுக்தத்வாத், அநேக
ஶாஸ்த்ராந்தர ஸங்க தத் வாச்ச அவகம்யதே ||6, 7||

(ஸூத்த சத்வம் வேறே =மிஸ்ர தத்துவத்தில் இரண்டைக் கழித்து பெரும் ஸுத்த சத்வத்துக்கு நிகர் சொல்ல முடியாதே
அதே போல் ஸ்தவனம் -கீழ் இரண்டிலும் வேறே -இங்கு லகு ஸ்தோத்ரம் மாத்திரமே

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம் நாரணமே
இந்த நாராயணன் -நாராயணன் பரஞ்சோதி இத்யாதி நாராயணன் போல் அல்லவே )

கோ தர்ம இதி பஞ்சமம் ப்ரஶ்நம் பரிஹரதி-

ஸ்துவன் என்பதற்கு இங்கு இயன்றவரை ஸ்தோத்ரம் செய்வதே தகுதியான பொருள் -ஏன் எனில்
இதற்கு முன் ஸ்துவன் என்பது த்யானம் முதலியவற்றுடன் சேர்ந்தே கூறப்பட்டு இருப்பதால்
அத்தை பெரிய ஸ்தோத்ரம் என்றும்
இதனை லகுவான ஸ்தோத்ரம் என்றும் கொள்ள வேண்டும்
இல்லாவிடில் புனர் யுக்தி தோஷமாகும்
மேலும்
ஸ்துவந்த கம் என்பது தனித்த வினாவாகையாலும்
மற்றும் அநேக சாஸ்த்ரங்களோடே ஒத்து இருக்கையாலும் இதுவே பொருத்தமானது –

—————-

4- பரம ஸாத்ய உபாய வினாவிற்கு விடை
அவதாரிகை
தியானித்தல்
ஸ்துதித்தல்
நமஸ்கரித்தல்
முதலிய கைங்கர்யங்களே சிறந்த தர்மம் என்கிறார் –

ஏஶ மே ஸர்வ தர்மாம் தர்மோ அதி கதமோ மத: |
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைர் அர்சன நர: ஸதா||–8-(இதில் நாலாவது ஸ்தவன் )

ஏஷ மே இதி |ஏஷ-அநந்த ரோக்தோ பகவ தர்சந ஸ்தவநாதி ரூபோ
யதாதிகாரம் குரு லகு பாவேந வ்யவஸ்தித:|

ஸர்வ தர்மாணாம் மத்யே அதிகதமோ மத:| தர்மா: ஹி
1-ஐஹிகா : பஶு புத்ராத் யர்தா:,
2-ஆமுஷ்மிகா :–ஸ்வர்காத் யர்தா:, 3-அஸங்கை : பகவத் ஆராதந போத அநுஷ்டித
இஷ்டா பூர்த பரி கர்மித தத்த்வ ஜ்ஞாந ஸமாதி ஶரீரோ மோக்ஷார்த:,
4-ஸ அநுராக பகவத் ஸ்மரண கீர்தந ப்ரணாமாதி:, தத் அஸாதாரண பரி சரணாத்மா சேதி சதுர்விதா:|
தத்ர அதிக தம இதி தமபா த்ரிப்ய: சதுர்தம் உத்கர்ஷயதி |(அர்த்த பத பிரயோகம் இதில் மட்டும் இல்லையே-ஸ்வயம் பிரயோஜனம் -கைங்கர்ய ரூபமாக ஸ்தோத்ரம்-எனக்கே யாட் செய் -எக்காலத்தும் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே   )

ஐந்தாவது வினாவிற்கு விடை
செந்தாமரைக் கண்ணரை ஒரு மனிதன் பக்தியுடன் எக் காலமும் ஸ்தோத்ரங்களால் அர்ச்சிப்பதே
எல்லாத் தர்மங்களிலும் மிகச் சிறந்த தர்மம் என்று நான் நினைத்து இருக்கிறேன்

1-தர்மங்கள் பசு புத்ரன் முதலான இம்மைப் பயனை அளிப்பதாகவும்
2-ஸ்வர்க்காதிகளான மறுமைப் பயன் அளிப்பதாகவும்
3-பயனையே எதிர்பாராமல் பகவத் ஆராதனம் என்னும் நினைப்புடன் அனுஷ்ட்டிக்கப் படும்
இஷ்டா பூர்த்தாதி -இஷ்டம் -யாகம் முதலியன செய்தல் -பூர்த்தம் -குளம் வெட்டுதல் -தோட்டம் வைத்தல் முதலியன
இவற்றைச் செய்வதால் பரிஷ்கரிக்கப்பட்ட ஸமாதி ரூபமாகிய மோக்ஷத்தை அளிப்பனவாயும்
4-எம்பெருமானை ப்ரீதியோடே நினைப்பது -அவன் குணங்களை ஸ்தோத்ரம் செய்வது -அவனை வணங்குவது
முதலிய ஏகாந்தமாக அவனுக்கு அடிமை செய்வதும்
ஆக நான்கு வகைப்பட்டு இருக்கும்
முதல் மூன்றைக் காட்டிலும் நான்காவதே மிகச் சிறந்தது –

இங்கே எல்லாத் தர்மங்களிலும் மிகச் சிறந்த தர்மம் என்று கூறுவதால் மற்ற மூன்றைக் காட்டிலும்
எம்பெருமானுக்கு ஏகாந்தமாக அடிமை செய்வதே மிகச் சிறந்தது என்று கூறப்பட்டதாகும் –

ததுப பாதயதி – யத் பக்த்யேதி| யஸ்மாத் பக்த்யாதி குணவாந் தஸ்மா ததிகதம இதி |
பக்த்யா இதி அநுஷ்டாந ஸமயே அபி ப்ரீதி கர்பத்வேந ஸுக உபாதாநத்வ பரம் |
கீதம் ஹி “ஸு ஸுகம் கர்தும்” (9-2)இதி | யுக்தம் ஸைதத் ப்ரிய தம பதிஸ்மரணம் ப்ரியமதி ஸ்மரணம் பிரியம் கரமதி

பக்தியுடன் என்றதால் ஸூ ஸூகம் கர்த்தும் -செய்வதற்கு இனியது -என்று கீதையில் அருளிச் செய்தபடி
அனுஷ்டான சமயத்திலும் பிரீதியுடன் இருத்தலால் இனிதாக அனுஷ்ட்டிக்கத்தக்கது என்கிறது
இதனால் இதற்கும் இதர தேவதைகளின் உபாசனத்துக்கும் வாஸி தெரிவிக்கப்படுகிறது –

ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷ அவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம் –9-2-

இந்த பக்தி யோகம் வித்யைகளுக்குள் சிறந்ததாய் ரஹஸ்யங்களுக்குள் சிறந்ததாய் –
பாபங்களைப் போக்கடிப்பவற்றுள் உயர்ந்ததாய் -என்னை -நேரில் காட்டுவதாய்
என்னை அடைவிக்கும் சாதனமாயும் இருப்பதாய் -அனுஷ்டிப்பதற்கு மிகவும் இனியதாய் –
பலத்தைக் கொடுத்த பின்பும் அழியாததாய் இருப்பது –

அநேந அஸ்வாமிஷு தேவதாந்தரேஷு
கஷாய பாநவத் விரஸத்வே அபி ஹித புத்த்யா அநுஷ்டீய மாநேப்யோ வ்யாவ்ருத்தி: க்ரியதே |

புண்டரீகாக்ஷம் இதி விஷய அபி ரூப்யேண விகத பயங்கர தத்த்வாந்தர பஜநேப்யோ வ்யாவ்ருத்தி:|
ஸ்வைவரிதி வாங் மாத்ர ஸாத்யத்வேந விஶ்வஜிச் சாந்த்ராயணாதிப்யோ வ்யய ஆயாஸ
பஹுலேப்கயோ வ்யாவ்ருத்தி:|(திருமாலிருஞ்சோலை என்ன–திருமால் வந்து நெஞ்சு நிறையப் புகுவானே )

புண்டரீகாக்ஷன் -செந்தாமரைக் கண்ணன் என்பதனால் சேவிக்கப்படுபவன் மிக அழகாக இருப்பவன் என்றும்
பயங்கர ரூபத்தை யுடைய தேவதாந்த்ரங்களை உபாசிப்பதை விட இங்கு உள்ள ஏற்றம் சொல்லிற்று
ஸ்தோத்ரங்களினால் -என்றதாலும்
ஸ்தோத்ரம் என்பது வாக்கினால் மாத்திரம் செய்யப்படுவது ஆகையால்
விஸ்வ ஜித் சந்த்ராயணம் முதலியவைகளை போல் பொருள் செலவும் மிக மெய் வருத்தமும் இதற்கு வேண்டுவது இல்லை என்பதும்
அர்ச்சிப்பது -என்றதால் ஒரு புருஷ விசேஷத்தை நேராக ஆராதனம் பண்ணுவதே போல் இருப்பதால்
கண்ணுக்கு விஷயமாகாமையால் உண்டாகும் வருத்தமும் இதில் இராது என்றும் தெரிவிக்கப்பட்டது

ததா ஹி பகவாந் வ்யாஸ:
“ஆர்தா விஷண்ணா: ஶிதிலாஶ்ச பீதா:
கோரேஷு ச வ்யாதிஷு வர்தமாநா:|
ஸம்கீர்த்ய நாராயண ஶப்த மாத்ரம்
விமுக து:க்காஸ் ஸுகிநோ பவந்தி||” இதி |

ஶ்ரீவிஷ்ணுபுராணே “அவஸே நாபி யந்நாம்நி” இத்யாதி |(6-8)

வைஷ்ணவே தர்மே “அஜ்ஞாநதோ ஜ்ஞாநதோ வா வாஸுதேவஸ்ய கீர்தநாத் | தத் ஸர்வம் விலயம் யாதி தோயஸ்தம் லவணம் யதா||”,

“ஶமாய அலம் ஜலம் வஹ்நே : தமஸோ பாஸ்கர உதய:|
ஶாந்தி: கலே : அகௌ கஸ்ய நாம ஸம்கீர்தநம் ஹரே :||”,

“யந் நாம ஸம்கீர்தந கதா விமுச்யதே ”,

“யந் நாம ஸம்கீர்தந கதா மஹா பயாத் விமோக்ஷமாப்நோதி”,

“ஸக்ருதுச் சரிதம் யேந ஹரிரித்ய க்ஷர த்வயம் |
பத்த: பரி கரஸ்தேந மோக்ஷாய கமநம் ப்ரதி ||”,

“யஸ்ய நாம்நி ஸ்ம்ருதே மர்த்ய: ஸமுத் க்ராந்தே : அநந்தரம் |
ப்ராப்நோதி வைஷ்ணவம் ஸ்தாநம் புநரா வ்ருத்தி வர்ஜிதம் ||”,

“அச்யுத அநந்த கோவிந்த நாமோச் சாரண பேஷஜாத் |
நஶ்யந்தி ஸகலா ரோகா : ஸத்யம் ஸத்யம் வதாம் யஹம் ||” இத்யாதி |

அந்யத்ர ச “ஸம்கீர்தயேத் ஜகந் நாதம் வேதம் வா அபி ஸமீரயேத்” இதி ச|

வைஷ்ணவே ஸூக்தே ”ஆஸ்ய ஜாநந்தோ நாம சித் விவக்தந”,

“த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜநாஸ:”|
அஸ்ய கீரய: – கீர்தயிதார:, த்ருவாஸ: – அபுநராவர்திநோ பவந்தி |

அர்சேதிதி- அஸ்ய தர்மஸ்ய புருஷ விஸேஷ ஸமாராதந ரூபாம் அநதி பரோக்ஷாம் ஹி ஸூசயதி |

கீதம் ச “ப்ரத்யக்ஷாவகமம்” இதி|
ந ஹ்யஸ்ய தபஸ் தீர்தாதிவத் புருஷ ப்ரீணநத்வம் ஶாஸ்த்ர ஆஸ்திக்யைக ஸாத்யம் |(ஸாஸ்த்ர ஆஸ்திக புத்தியால் தாபம் தீர்த்தம் பாவனம் இது அப்படி இல்லையே )

நர இதி ப்ராயேண
ஸர்வ சேதநா நாம் யதா ஸம்பவம் அதிகாரம் ஸூசயதி |

ஏக வசநம் ச மஹா யாேகாதி பஹு ஸஹகாரி நைரபேக்ஷ்ய பரம்

நிந்த்ய குண வ்ருத்த ஜந்ம நாமபி
பக்த்யபி ருசி மாத்ர மஹா குணேந அகுதோ பயம் பஜநீயோ ஹி பகவாந்–(நீசராலும் பக்தியில் விருப்ப மாத்திரத்தாலே பயமோ இல்லாமல் பஜனம் பண்ணலாம் என்று தானே அருளிச் செய்தானே
இந்த ஒரு குணமே போதுமே ஸ்தோத்ரம் பண்ண )

———–

உபநிஷத் -கீதை -அங்க பிரபத்தி -பக்தி ஆரம்ப விரோதியைப் போக்க
ஸ்வ தந்த்ர பிரபத்தி -கத்ய த்ரயம் -ராமானுஜர் அனுஷ்டானம் –
விஷ்ணு ஸஹஸ்ர நாமம் ஸாத்ய உபாயம் ஒன்றே
ஸித்த உபாயம் பற்றி முதல் இரண்டு கேள்விகள் -சொன்னாலும் நாலுமே ஸாத்ய உபாயத்தைப் பற்றியது தான்
ஓன்று நாம் பண்ணும் கிரியை
அதுக்குப் பலம் தரும் பகவான் -கிரியை பலம் தரட்டும் என்று சங்கல்பித்து
த்யானம் அர்ச்சனம் ஸ்தோத்ரம் இவை –
ஸங்கல்பம் பண்ணிய அவனுக்கு முக்யத்வம் கொடுத்து ஸித்த உபாயம்
எந்த செயல்களை செய்து முக்தி -அவற்றுக்கு முக்யத்வம் கொடுத்தால் ஸாத்ய உபாயம் ஆகும்
இந்த வாசியை உணர வேண்டும் –

ஜபம் ஒரு கிரியை
ஸ்தவனம் கிரியை
நான்கு இடங்களிலும் ஸ்துவன் –
ஆலம்பன உபாயம் ஜெபத்துக்கு அங்கம்
த்யாயன் ஸ்துவன் நமஸ்யந்த -இது பக்தி- சார்வே தவநெறி பக்தி யோகம் -மன் மநா பவ இத்யாதி
இவை இரண்டும் பகவானைப் பற்றியவை
அடுத்து
லகு உபாயம் த்யாயனம் நமஸ்காரம் -இல்லாமல் ஸ்தோத்ரம் மாத்திரம் -மூன்றாவது பதில்
அடுத்து நீர் அறிந்த தர்மங்களில்-உபாயங்களில் சிறந்த உபாயம் எது -கேள்வி -கோ தர்ம ஸர்வ தர்மாணாம் -பவத பரமோ மத
சொல்லப்பட்ட மூன்று தர்மங்களில் இல்லை
வேற்றுமை உறுப்புக்கு அர்த்தம் இங்கு -தர்மங்களுக்குள் என்பது இல்லை -தர்மங்களை விட என்று அர்த்தம் கொள்ள வேண்டும் –
கேள்வி ஆறாம் வேற்றுமை உருபில் இருந்தாலும் ஏஷாம் தர்ம -பதில் இருப்பதால் -இப்படியே கொள்ள வேண்டும் –
ப்ரீதி கர்ப்பத்த்வம் இதில் பூர்த்தியாக இருப்பதால் இது சிறப்பு
பக்தி என்றாலே ப்ரீதி தானே என்றால் -யமம் நியமம் தொடங்கி தாரணம் அப்புறம் தான் ப்ரீதி
இங்கு தொடக்கத்திலே ப்ரீதி
கீழ் எல்லாம் எந்தப் பலத்தைக் குறித்தும் பண்ணலாம்
பலம் இங்கு அவனைப் பற்றிய -ஸ்வயம் பிரயோஜனம் -கைங்கர்யமே பலம் -மிகச் சிறப்பு அதனால் தான் –

கதி த்ரய மூலத்வாத் –ஆர்த்தோ இத்யாதி –தேஷாம் பக்தி விசிஷ்யதே -அவர்களுக்குள் ஞானி நித்ய யுக்தாம் ஏக பக்தி விசிஷ்யதே போல்

—————

அத க்ஷிப்ரமேவ பாகீரதீ ப்ரவாஹ நேவ நிர்ணிக்த கல்மஷ ருசி:
பரம தார்மிகோ பவதீதி கீயதே |
குண விஷயே தாவத்
“ஸமோ அஹம் ஸர்வ பூதேஷு”;
வ்ருத்த விஷயேஷு ச “அபி சேத் ஸு துராசார:”;
ஜந்ம விஷயே அபி “மாம் ஹி பார்த வ்யபாஶ்ரித்ய யே அபி ஸ்யு: பாபயாேநய:” இத்யாதி |
ந சை தாவதா துராசாராதே : தர்மத்வம் |
“நா விரதோ துஶ் சரிதாத் நா ஶாந்தோ நா ஸமாஹித:”(கட உபநிஷத் ), “அப்ராப்ய: கேஶவோ
ராஜந் இந்த்ரியை : அஜிதை ந்ருணாம்” இத்யேவம் ப்ரகார வசநேப்ய: தஸ்ய
பகவத் அநிஷ்டத்வேந அதர்மத்வா வகமாத் |(இந்திரியங்களை ஜெயிக்காதவர்களால் கேசவனை அடைய முடியாது )

அத ஏவ அநந்தர மாஹ “க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ” இதி |
ஸர்வ ஆஶ்ரமிணாம் அநாஶ்ரமிணஶ்ச விதுராதே :-(3-4-27-மனைவியை இறந்தவனுக்கு அக்னி கார்ய யோக்யதை இல்லையே சங்கை -இருவருக்கும் உண்டே )
“ஶம தமாத் யுபேதஸ் ஸ்யாத்”,
“அந்தரா சாபி து தத் த்ருஷ்டே :” இத்யாதீநி ப்ரஹ்ம ஸூத்ராணி அதிகாரம் நிரணஷத

ஸமோஹம் ஸர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய–
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் —৷৷9.29৷৷

நான் பலவகைப் பட்டு இருக்கும் ஜீவ ராசிகள் விஷயத்திலும் -என்னை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில் சமமாய் இருப்பவன்
எனக்குத் தாழ்ந்தவன் என்னும் காரணத்தால் ஆஸ்ரயிக்கத் தகாதவன் எவனும் இல்லை
எவர்களோயெனில் -என்னிடம் பக்தியையே பலனாகக் கொண்டு அன்பு செய்கிறார்களோ
என்னிடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள் –
அவர்கள் இடத்தில் நானும் வாழ்கிறேன் -என்னிலும் உயர்ந்தவர்கள் இடத்தில் போல் பரிமாறுகிறேன்
தேவ மனுஷ திரியக் ஜங்கமங்கள் சர்வருக்கும் சமம் -யாரையும் த்வேஷிக்காதவன் –

அபி சேத் ஸு துராசாரோ பஜதே மாமநந்யபாக்.–
ஸாதுரேவ ஸ மந்தவ்யஸ் ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ—৷৷9.30৷৷

மிகவும் தாழ்ந்த ஒழுக்கைத்தை உடையவனாய் இருந்தாலும் -என்னிடம் வேறு பயனை விரும்பாதவனாய்
பக்தி செய்தானாகில் அவன் தலை சிறந்த ஞானிகளோடு சமமானவன் ஆவான் -கொண்டாடத் தக்கவனும் ஆவான் –
ஏன் எனில் அவன் அவன் நன்கு என்னிடத்தில் உறுதியான ஈடுபாடு உடையவன் அன்றோ –

க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச் சாந்திம் நிகச்சதி.–
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த ப்ரணஸ்யதி—৷৷9.31৷৷

என் விஷயமான ஸ்வயம் பிரயோஜன பக்தியைச் செய்பவன் துராசாரம் உள்ளவனாயினும் விரைவிலேயே
தடை நீங்கப் பெற்ற பக்தி யோகத்திலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவன் ஆகிறான் –
நிலையான துராசார நிவ்ருத்தியை நன்கு அடைகிறான் –
குந்தீ புத்திரனே -என்னுடைய பக்தன் அழிய மாட்டான் என்னும் இந்த அர்த்தத்தை நீயே ப்ரதிஜ்ஜை செய்வாய் –

மனிதன் என்றதால் ஸகல சேதனரும் அதிகாரிகளே என்றும்
ஒரு மனிதன் -ஒருமையாகச் சொல்லுவதால் ஸஹ காரிகள் பலரும் தேவை உண்டோ என்னும் வருத்தமும் இராது என்பதும்
எக் காலமும் என்பதால் கால நிர்பந்தமும் இல்லை என்பதும் காட்டப்பட்டன
இதனால் அயனம் ருது மாசம் பக்ஷம் நக்ஷத்ரம் முஹூர்த்தம் என்னும் கால விசேஷத்தை அபேக்ஷிக்கும்
மற்றவற்றைக் காட்டிலும் இதுக்கு உண்டான வாசி தெரிவிக்கப்பட்டது

இனி ஜெபிப்பவனுடைய பரிசுத்தியைப் பற்றியும்
அதிகாரியினுடைய தாரதம்யத்தைப் பற்றியும்
ஸங்கீர்த்தனம் முதலிய லகுவாகச் செய்யக்கூடிய உபாயத்தைப் பற்றியும் விசாரித்து இருக்கிறது –

யுக்தஶ்ஸைஷ: ஸர்வ அவஸ்தேநாபி புருஷேண மாதுர் இவ புத்ரேண பரம வத்ஸலஸ்ய ஸர்வ பந்தோ :
நிஸ் ஸர்க ஸுஹ்ருதஶ்ச பகவதோ நாம க்ரஹணாதௌ அப்ரதிஷேத:;
த்ருஷ்டஶ்ச கஜேந்த்ர-க்ருத்ரராஜ வாயஸ-ராவணா வரஜ(ராவணனுக்குத் தம்பி )-கௌஸலே நாகர ஜாந பத(கோசல தேச சராசரங்கள் )-வல்லவீ- மாலாகார ப்ரமுகேஷு |(இப்படி அதிகாரம் இல்லாதவர்களுக்கு த்ருஷ்டாந்தங்கள் -முன் ஜென்ம புண்ய கர்ம வாசனை பதிவுகள் இவர்களுக்கு )
அப ஶூத்ராதி கரணே து அத்ரை வர்ணிகாநாம்
அநக்நி வித்யத்வாத் அக்நி வித்யாங்கேஷு குரூபஸதநாத்(அக்னி வித்யை அங்கமாகக் கொண்ட மஹா உபாசனம் )
யௌபநிஷத ஸம்ஸ்காரா பாவேந வேதாந்த வேத்ய பர வித்யோபார்ஜநே ச அநுபாயத்வாத் அநதிகாரோ ராத்தாந்தித: |
ததீயா பகவத் ஸமாஶ்ரயண அதிகார வ்யவஸ்தா அத்ரை வர்ணிகாநாம்
ஸமுத் ரிக்த ஸத்த்வ தயா முமுக்ஷூணாம அப்ரதிபத்தி ஶ்ரவண மநநாத் யௌபநிஷத ப்ரஹ்ம வித்யாே மஹா பதே ந ப்ரஸித்த அதிகார: |

(நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அனைத்தும் உபதேசம்
பேயாழ்வார் திருமழிசை ஆழ்வாருக்கு உபதேசம்
இந்த இருவரும் மற்றவரை விட ஸ்ரேஷ்டம்)

தேஷ்வேவ  ரஜஸ் தமஸ் ஸம் பேத ஸிதாஸித ஸத்த்வ தயா பலகாம தயா விப்ர லப்தாநாம்
தாத்ருஸோ யதா யோக முபாஸநேஷு ஸ்த்ரீ ஶூத்ர திரஶ்சாம் ச ப்ராசீந
பவ பரம்பரா ப்ரசித ஸம்ஸ்கார படிம்நா ஸுப்த ப்ரபுத்த ந்யாயேந(தூங்கி எழுந்தவன் உணர்வது போல் முன் ஜென்ம புண்ய பலனால் )
ப்ரத் யுத் பந்ந ஜ்ஞாநாம் விதுர தர்ம வ்யாத ப்ரப்ருதீநாம்
ப்ராரப்த கர்ம அநுஶய லேஶ-(ப்ராரப்த கர்மத்தால் இப்பிறவி -பிறவி எடுத்ததுமே அது தொலைந்து போனதே முன் ஜென்ம பதிவால் இப்பொழுது கஜேந்திரன் ஜடாயு இவர்களுக்கு )அந்ருண்யா அநுஜ்ஞாத ஜுகுப்ஸித ஜாதி ஸம்ஸர்காணாம் அபி தத் தஜ் ஜாத்ய ப்ரதிஷித்த ஸாமாந்ய தர்மாங்கேஷு
உபாஸநேஷு துர்வாரோ அதிகார:, அநுத்பாத்ய வித்யத்வாத் |
ந்ய தர்ஶி ச பகவதா சவ்நகேந ”தர்ம வ்யாதா தயோ அப் யந்யே பூர்வாப் யாஸாஜ் ஜுகுப்ஸிதே |
வர்ண அவரத்வே ஸம் ப்ராப்தா: ஸம் ஸித்திம் ஶ்ரமணீ யதா” (சபரியைப் போல் )இதி ||

அநுத் பந்தஜ் ஞாநாநாமபி க்ரம பாவிந்யா முக்ய பக்தே :
உபக்ரம பூத ஸ்மரண-ஸம்கீர்தந -ஶ்ரவணாதி: அப்ரதிஷித்த: |
தர்ம ஸ்மர்தாரோ அபி ஹி அஹிம்ஸா-ஸத்ய-ஶௌச-பரோபகார-
மாதா பித்ரு ஶுஶ்ரூஷண-ஶ்ரேஷ்ட தேவத அநுகூல்யாதிகம் -ஸாமாந்ய தர்மம் ஆசண்டாலம் அநுமந் யந்தே |
ஸ்வயம் ஸம்கீர்தந நிஷதே அபி கீர்தயித்ரு புருஷ அநுவர்தந -அநுமோதந – அமர்ஷண-அவிரோத மாத்ரேண
ஸுதூரோ அபி ஸம்பந்த ஸம்பவ: |(கீர்த்தனம் பண்ணுபவரை அனுவர்த்தித்து-விரோதம் பண்ணாமல் இருந்தாலே -பலன் பெறலாமே )
ஸ்மர்யதே ஹி -”தர்ம : ஶ்ருதோ வா த்ருஷ்டோ வா கதிதோ வா க்ருதோ அபி வா | அநுமோதிதோ வா ராஜேந்த்ர! புநாதி புருஷம் ஸதா ||” இதி |
“ப்ரயோஜயிதா அநுமந்தா கர்தா இதி ச விஸேஷதோ பகவத் தர்மஸ்ய ஸ்பர்ஶ வேதித்வம் |
உத்கோஷித: பூஜிதோ வா த்ருஷ்டோ வா நமிதோ அபி வா | ப்ரஸஹ்ய ஹரதே நரமத பாபம் கோ ந ஸேவேத் ஹரிம் தத: ||”

“கீர்தித: ஸம்ஸ்ம்ருதோ த்யாத: பூஜித: ஸம்ஸ்க்ருதஸ் ததா |
ஐஹிக ஆமுஷ்மிகீம் ரக்ஷாம் கரோதி பகவாந் ஹரி: ||”,
“ஶ்ருண்வந்தி யே வை படதஸ் ததா அந்யே பஶ்யந்தி யே மாமீரயந்தி” இத்யாதி |(விஷ்ணு தர்மம் )
அபி ச இதிஹாஸ புராணாதிஷு ஶ்வபாகாதேரபி பகவத் பஜநாநுமதி: |
வைஷ்ணவே தர்மே – — “நம இத்யேவ யோ ப்ரூயாத் மத் பக்த: ஶ்ரத்தயா அந்வித: |
தஸ்ய அக்ஷயோ பவேல்லோக: ஶ்வபாகஸ்யாபி நாரத ||”
இத்யாதி வசநாநி தத் பஹு மந்தவ்யத்வ நிஶ் ஸ்ரேயஸ ப்ராப்த்யாதி-வ்ருத்தாந்தாஶ்ச ஸாலம்பநா : |
ஏவம் ந கிம்சிதபி ஶாஸ்த்ரம் குப்யேத், வ்யவஸ்தித விஷயத்வாத் |(அதிகாரிகள் வேறே வேறே -சாஸ்திரம் வீணாகாதே )

இனி தேச கால வாசி இல்லாமல் பலன் கிட்டும் என்பதற்கு பிரமாணங்கள் காட்டி அருளுகிறார்

நரன் ஸதா -அனைவருக்கும் அதிகாரம் -எப்பொழுதும் நாமங்களை சொல்லிக் கூப்பிட கால தேச அபேக்ஷை இல்லையே
ஸதா -தேசத்துக்கும் காலத்துக்கும் -உப லக்ஷணம்

ஸதேதி கால விஸேஷாந் அபேக்ஷத்வம் ;
தேச ஶௌசாதி விஸேஷாந் அபேக்ஷாயா அபி ப்ரதர்ஶந மேதத் |
தேந அயந ர்து மாஸ பஷ நக்ஷத்ர முஹுர்த விஸேஷஸவ்ய பேஷேப்ய: ப்ரகர்ஷ: |

அத்ர ச “சக்ராயுதஸ்ய நாமாநி ஸதா ஸர்வத்ர கீர்தயேத் |
நா ஶௌசம் கீர்தநே தஸ்ய பவித்ரம் பகவாந் ஹரி:||”,(விஷ்ணு தர்மம்)

“ப்ராதர் தேவேதி க்ருஷ்ணேதி கோவிந்தேதி ச ஜல்பதாம் |
மத்யாஹ்மே சாபராஹ்ணே ச யோ அவஸாத: ஸ உச்யதாம் ||(பிரகலாதன் ஜல்பிக்க உபதேசம் )
” இத்யேதாநி ருஷி வசநாநி த்ரஷ்டவ்யாநி |

ந ஹி பகவத: ப்ரயத அப்ரயத அதிகாரி ஸம்ஸர்காத் உபகாத:,
தச் சௌசாதி ஸஹ காரி விரஹாத் தத் அநுக்ரஹா ஸாமர்த்யம் வா;(தூய்மை சஹகரிக்காது -அழுக்கு பாதிக்காது )
ப்ரத்யுத ஸ்வ ஸம்பந்த அயோக்யமபி புநாந: ஸ்வோசிதம் விதாய ஸ்வீகரோதி, பரம பாவநத்வாத் |(தனக்குத் தகுதியாக்கி அழைத்துச் செல்வான் )

அதோ ஹீத முதீர்யதே “நா ஶௌசம் கீர்தநே ” இத்யாதி|(கீர்த்தனம் பண்ணுவதே சுத்தியைக் கொடுக்கும்)

ஸதஸததிகாரி தாரதம்ய ஶாஸ்த்ராணி து உச்சா வசநாம் அதிகாரிணாம் பரஸ்பர ஸங்கரேண தர்ம ஸம் ப்லவோ மா ப்ரஸாங்க்ஷீதிதி |
ஸ்வரூபதோ அல்பீய நாபி ஸங்கீர்தநாதி: பலதோ மஹீயாந் |
யதாஹ — ”ஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்” (2-40)இதி |
ந சாஸ்ய தர்மாந்தர வத் அபிக்ரம நாஶ: “நேஹா அபி க்ரம நாஸோ அஸ்தி” இதி வசநாத் |(நாம சங்கீர்த்தனம் தொடங்கி வீணாகப் போகாதே -தப்பாக பண்ணும் பாபமும் இல்லையே )
“ந மே பக்த: ப்ரணஶ்யதி”,
“யம் ப்ரணம்ய ந ஸீததி”,
“ந வாஸு தேவம் ப்ரணிபத்ய ஸீததி”,
“ஜநார்தநம் ப்ரணிபதிதோ ந ஸீததி” |
ந ச அயதா வித்யநுஷ்டாநாத் ப்ரபல ப்ரதிபக்ஷாத் வா ப்ரத்யவாய:”,
“ப்ரத்யவாயோ ந வித்யதே ” இதி |(நானும் சொன்னேன் -நமரும் உரைமின் -நாராயணா -நாரண -திண்ணம் நாரணனே -சுருக்கிச் சொன்னாலும் பாபங்கள் கிட்டாவே )
ந ச ஏதேஷாம் அர்த வாதத்வம் ஶக்ய ஶங்கம்; அநதி வாதித்வாத் ||(புகழ்ந்து பேசினது இல்லை உண்மையே )

இஹ பகவத் தத்த்வஜ் ஞாந பக்தி ப்ரதிபந்தக பாப நிர்ஹரண ஸத்த்வ ஸம்ருத்த் யாதி க்ரமேண தத் ப்ராப்த் யுபக்ரே உச்யதே |(பக்தி ஆரம்ப விரோதிகளை ஸத்வ குணம் வளர இருக்கும் விரோதிகளை நாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொடுக்குமே )
“பத்த: பரிகரஸ்தேந மோக்ஷாய கமநம் ப்ரதி”,(விஷ்ணு தர்மம் -நாராயணா மணி வண்ணா சொன்னாலே மோக்ஷம் என்றது பகவத் பிரபாவம் சொல்ல வந்ததே )
“யஸ்மிந் ந்யஸ்த மதிர் நயாதி நரகம் ஸ்வர்கோ அபி யச் சிந்தநே விக்நோ யத்ர நிவேஶித தாத்ம மநஸோ
ப்ராஹ்மோ அபி லோகோ அல்பக: |(சத்ய லோகமும் இவனுக்கு அல்பமே )
முக்திம் சேதஸி யஸ் : ஸ்திதோ அமதியாம் பும்ஸாம் ததாதி அவ்யய: கிம் சித்ரம் யதகம் ப்ரயாதி விலயம் தத்ராச்யுதே கீர்திதே ||
” இத்யாததௌ ச |

ந ஸைஷ: பூர்ணாஹுதி ந்யாயஸ்ய விஷய:, தஸ்ய அதிவாத விஷயத்வாத்; ஸம்கீர்தநாதி ப்ரகரணேஷு
ப்ராயேண வாக்ய ஸேஷத்வ- ப்ரார்தநாத் யர்தவாத லிங்க அதர்ஶநாச்ச |
கிஞ்ச ப்ரபல ப்ரமாண விரோதா பாவே அர்தவாத பதாநாம் அபி ஸ்வத: ப்ராமாண்யத: ஸ்வார்த பரித்யாகஶ்ச ஸாஹஸம், அந்யாய்யத்வாத் |

(பூர்ணாஹுதியே பலம் கொடுக்கும்-என்றாலே முன் பலவும் செய்ய வேண்டும் போல் நாம சங்கீர்த்தனமே பலன் கொடுக்கும்
என்றாலும் வேறே ஒன்றும் வேண்டாம் -தொடக்கத்துக்கு வேறே வேண்டாம் –
உடனே முத்தி என்பது இல்லை–மேலே மேலே பக்தி வளர்ந்து முக்தி)

(மேல் பக்தியை விதிக்கும் வலிய உபாயங்களை விதிக்கும் ஸாஸ்த்ரம் வீணாகாது என்பதையும் விளக்குகிறார்)

நநு, குரு தீர்க துஷ்கர தபஸ் ஸமாதி விஸேஷ ரூப மஹா தர்ம ஸாத்ய தத்த்வ ஜ்ஞாந உபக்ரமஸ்ய
வாங்மாத்ர ஸாத்யத்வ வாதோ அப்யதிவாத:, குரு ஶாஸ்த்ர
வையர்த்ய ப்ரஸங்கேந ப்ரமாண விருத்தம் ச |

ததிதம் அவிதித பகவத் ப்ரபாவஸ்யச் சாந்தஸஸ்ய பைஶாசம் |(பகவத் பிரபாவம் அறியாதவன் பேச்சாகும்)
லகீயோ அபி பகவத் ஸங்கீர்தநம் துர் வஹாமபி துரம் தாரயத்யேவ |
குரு ஶாஸ்த்ர அநர்தக்யம், தஸ்ய ஸமர்த அதி காரத்வாத் |
அஸ்ய து ஸத்யஸதி வா ஸாமர்த்யே பகவத ஸாதாரண ருசி ஸமுசித பாக்யவத்  அதிகாரத் வாச்ச |

கரீயஸோ அபி பகவத் ப்ரஸாத ஏவ பலஹேது: லகீயஸி கிம் தண்டவாரித: ?(பலம் கொடுப்பவன் இவனே விதி வாய்க்கின்று காப்பார் யார் )
யதா ச கரீயஸி ப்ரயோக வைபுல்யாத் தேவ: ப்ரஸீததி, ததா லகீயஸ்யபி பாவ ஶுத்தி விஸேஷாத் ப்ரஸீதேத் |(உள்ளத்திலே பாவ ஸூத்தி – அன்பு -ஆசை உடையார்க்கும் உண்டே)

யதோக்தம் – “ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ:”,(9)
“பத்ரம் புஷ்பம் பலம் தோயம்”,
“யோ ந வித்தை : ந விபவை : ந வா ஸோபி: ந பூஷணை : |
தோஷ்யதே ஹ்ருதயேநைவ கஸ்தமீஶம் ந பூஜயேத்||”,

வ்யாஸ ஸ்ம்ருதௌ —“தத்யாத் புருஷ ஸூக்தேந ய: புஷ்பாண்யப ஏவ வா | அர்சிதம் ஸ்யாஜ் ஜகதிதம் தேந ஸர்வம் சராசரம் ||”,
வைஷ்ணவை தர்ம் “ப்ருதிவீம் ரத்ந ஸ பூர்ணாம் ய: க்ருஷ்ணாய ப்ரயச்சதி|
தஸ்யாப் யந்ய மநஸ் கஸ்ய ஸுலபோ ந ஜநார்தந : ||” இத்யாதி |

(எண்ணாயிரத்து எச்சன் -பணக்காரன் -அடியார்களை மதியாமல் இழந்தானே)

பாவ பேத ஏக ஹி தர்ம அதர்ம நிதாநம், ந க்ரியா விஸேஷ: |(எண்ணமே முக்கியம் -செயல்களின் பஹுத்வம் இல்லையே )
யதா ஶ்ரீவிஷ்ணு தத்த்வே “பாவ ஶுத்திர் மநுஷ்யாணாம் ப்ரமாணம் ஸர்வ வஸ்துஷு |
அந்யதாஸ் அலிங்க்யதே காந்தா ஸ்நேஹேநே துஹிதா அந்யதா||”.

ததா, “தபோ ந கல்கோ அத்யயேம் ந கல்க: ஸ்வாபாவிகோ வேத விதிர் ந கல்க: |
ப்ரஸஹ்ய சித்தாஹரணம் ந கல்க: தாந்யேவ பாவோ பஹிதாநி கல்க:||”.(ஆதி பர்வம்)
அந்யத்ர “கங்காதி தீர்தேஷு வஸந்தி
மத்ஸ்யா தேவாலயே பக்ஷி ஸங்காஶ்ச நித்யம் | பாவோஜ் ஜிதாஸ்தே ந பலம் லபந்தே தீர்தாநி புண்யாயதநாஶ் ச முக்யா:||” இதி |(மீன்கள் கங்கையில் -பறவைகள் கோயிலில் இருந்தாலும் பலன் இல்லையே )

உபபந்நம் ஸைதத் ஸர்வஜ்ஞஸ்ய அவாப்த ஸமஸ்த காமஸ்ய
அந பேக்ஷஸ்ய பகவதோ பாவ ஶுத்த்ய ஆராத்யத்வம், ந த்ரவிணகண அர்பணாதிநா ,
“யாதாதத்யேந பண்டித: (தம்)” இதி ந்யாயாத் |
தேஶ கால ஸஹ கார்யாதி வைகல்மய அபி ஸ்வல்பாதபி ஸமக்ராதிவ தேவ: ப்ரஸீதேத் |

ததுக்தம் – “த்யாயந் க்ருதே யஜந் யஜ்ஜை : த்ரேதாயாம்
த்வாபரே அர்சயந் | யதாப்நோதி ததாப்நோதி கலௌ ஸம்கீர்த்ய கேஶவம் ||” இதி |(விஷ்ணு புராணம்)

ததா- “விநிந்தாம் ப்ரதமே பாதே கரிஷ்யந்தி ஹரேர் நரா: (கலியுகத்தில் முதல் பாதத்தில்-90000 வருஷங்களில் ஹரியை நிந்திப்பார்கள்) | யுகாந்தே ச ஹரே நாம நைவ கஶ்சித் க்ரஹீஷ்யதி ||(இறுதியில் சொல்ல முயன்றால் -ஆசைப்பட்டால் -ஆசைப்பட முயன்றால் திருப்தி ஆவான்)
தந்யாஸ்தே புருஷ வ்யாக்ர பவாம் போதாவ மாயிந : |
யத்நே நாபி கலௌ விஷ்ணோ : க்ரஹீஷ்யந்தி
அக்ஷயாத்மந:”. யுஜ்யதே ஸைதத் |

ஸுஶீலோ ஹி ந்ருபதி: பிதராவிவ
க்ருச்ச்ரேஷு கிஞ்சிந் நயாய வ்ருத்தமபி பஹுபகாரிணமிவ அநுக்ருஹ்ணீதே |

அத ஏவ தைவ பித்ர்ய ப்ராயஶ் சித்தாதிஷு
தேஶ காலோபபத்த்யாதிவஶேந அதிநிம் நோந் நதாநாம் அபி ப்ரயோகாணாம்
துல்ய கக்ஷ்யத் வேந மவே விதிஸ் :, ஶிஷ்டைஸ் ததா அநுஷ்டாநம் ச |

(எட்டு வித ஸ்ரார்த்தம் சாஸ்திரத்தில் உண்டே-ஒரே பலன்-ஆபத்துக் காலத்தில்
கையைத் தூக்கி ஒன்றும் பண்ண முடியவில்லை என்று சொன்னாலே போதுமே)

அத ஏவ யதா ஸர்வ ஸ்வ ஸாத்ய ப்ரயோக விஸ்தாரஸ்ய ஸ்தாநே
ஸ்வ அநுபபத்தி க்யாபந மேவ ஆபதி ஶ்ராத்த ப்ரத்யாம் நாநம்,
யதா வா தத் தத் கர்ம தௌஷ் கர்யே தத் தந் மந்த்ர ஜப: இத்யாதி |

எட்டு காரணங்கள் –தர்மே அதிகமத: பீஷ்ம மத-நாம சங்கீர்தன மஹிமை மேல்

ததேவம் ப்ரிய தம விஷய தயா -1-ஸுக க்ரியத்வாத் -2-வ்யய ஆயாஸ ரஹித தயா ஸுகரத்வாத்,
3-அநதி பரோக்ஷ ஆத்ம நாத ப்ரீணந பாவேந ஆகர்ஷகத்வாத்,
4-அதி லாகவே அபி அதி குரு-துர்வஹ -பவ பயோந் மூல நமஹா பலத்வாத்,
5-அப்ரத்யவாய வத்த்வாத், 6-ஸுபிக்ஷாதிகாரி தயா விஶ்வ ஜநீநத்வாத்,
7-தேஶ கால தஶா விஸேஷாதி விஷேப வர்ஜநேந நிர் வ்யாஜத்வாத்,
8-விஷய (பகவத் )ப்ரபாவேந நிஷ் ப்ரத்யூஹத் வாச்ச இத்யேவம் ப்ரகாரேப்யோ ஹேதுப்ய:
பகவத் அஸாதாரண ஸம் கீர்தநாதி தர்மே அதிகமத: பீஷ்ம மத: |

அந்யேஷாம் அபி பரமர்ஷீணாம் “ஸர்வேஷாேம் அபி தர்மாணாம் உத்தமோ வைஷ்ணவோ விதி: |
ரக்ஷதே பகவாந் விஷ்ணு: பக்தாந் ஆத்ம ஶரீரவத்||”,
“கோவிந்த பக்த்யப்யதிகம் ஶ்ரேயஶ் ச அந்யத் ந வித்யதே ” இத்யாதி:தாஹார்ய: || 8 ||

சா ஆலம்பன -6-கேள்வி
அலகு உபாயம்-ஸாத்ய ஸித்த உபாயம் பற்றிய -பக்தி யோகம் பற்றிய -4-கேள்வி
லகு உபாயம் 3-கேள்வி-பத்து பெருமைகளை சொல்லி அவனை ஸ்தோத்ரம் பண்ண –
ஸித்த  உபாயம் -5-கேள்வி-நரன் -அனைவர்க்கும் யோக்யதை உண்டே
இதுவரை உபாய பரமான நான்கு கேள்விகளுக்கும் பதில் பார்த்தோம்

———–

5- பரம ப்ராப்யம் என்னும் உபேய விஷயமான வினாவிற்கு விடை
அவதாரிகை
இதற்கு விடை அளிக்கத் தொடங்கிப் பரம ப்ராப்யம் இன்னது என்பதை விளக்குகிறார்
இதில் சொல்லப்படும் விசேஷணங்கள் ஆறும் பகவத் ஸ்வரூபம் மிகவும் ஆசைப்படும்படி இருக்கும்
என்பதைக் காட்டுவதால் அதுவே பரம புருஷார்த்தம் என்பது விளங்குகின்றது

பரமம் யோ மஹத் தேஜ: பரமம் யோ மஹத் தப: |
பரமம் யோ மஹத் ப்ரஹ்ம பரமம் ய: பராயணம் ||–9-

பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாணாம் ச மங்களம் |

இரண்டாவது வினாவிற்கு விடை
எவர் ஒப்புயர் அற்ற பேர் ஒளியாய் இருப்பாரோ
எவர் தேவர்களையும் ஆள்வதால் சிறந்த பெரும் தவமோ –
தபஸ் -கட்டளை இடுதல் -மஹேஸ்வரன் -என்று பொருள் கூறி இதற்கு ஸ்ருதி ப்ரமாணங்களைக் காட்டி அருள்கிறார்
ஆஜ்ஜா பயதி-என்று கட்டளை இடுகிறார் ஸ்ருதி வாக்கியம் உண்டே –
எவர் அளவற்ற கல்யாண குணங்களாலும் எங்கும் வியாபித்து இருப்பதனாலும்
தம்மைச் சேர்ந்தவரைப் பெருகும்படி செய்வதாலும்
எல்லாவற்றுக்கும் சிறந்த பர ப்ரஹ்மமோ
எவர் பரிசுத்தம் செய்யும் அனைத்தையும் பரிசுத்தப்படுத்து கின்றாரோ
எவர் சிறந்த மங்களுக்கு எல்லாம் மங்களமோ
அவரே எல்லாவற்றுக்கும் முடிவான பரம புருஷார்த்தம்

அத உபேய ப்ரஶ்நம் ப்ரதிவதந் ஸ்ரீ மந் நாம ஸஹஸ்ர ஶ்ரவணாய தர்ம ராஜோ நியுஜ்யதே பரமம் ய: இதி சதுர்பி: |

நான்கு இடத்தில் பரமம் -உயர்வற உயர் நலம் உடையவன் –எவன் –எவன் எவன் -அவன் -துயர் அடி தொழ வேண்டும் போல் இங்கும் நான்கும் பிரஸித்தம்

யார் பேர் ஒளியோ -மிகச் சிறந்த -தன்னைக்காட்டிலும் மேம்பட்டது இல்லாத
தபஸ் -ஈஸ்வர சாமர்த்தியம் –
ப்ரஹ்ம -எங்கும் வியாபித்து பெரிய -தன்னை அண்டியவர்களையும் ப்ரஹ்மம் ஆக்கும்
சஹா பராயணம் -இருக்க ய பராயணம் -பிரசித்தம் அன்றோ

தர்ப்பம் கங்கா தீர்த்தம் பவித்ரம் -மஞ்சள் போல்வன மங்களப் பொருள்கள்

தத்ர ப்ரதமேந ஸார்தேந கிம் வா அப்யேகம் பராயணம் இதி த்விதீயம் ப்ரத்யாஹ |(இரண்டாம் கேள்விக்குப் பதில் )

தேஜ ஆதிபி: ந பும்ஸக லிங்கை : ய: இதி ஸமபி வ்யாஹாரேண லிங்க வைரூப்யம் ந ஶக்யம் |(பலர் வந்தனர் லிங்கம் -தேஜஸ் -நபும்ஸக லிங்கம் -சொல் -ய புல்லிங்க சொல் -தப்போ என்று நினைக்க வேண்டாம் -வியாகரணம் படி சரியே )
லிங்க ஸம்க்யாப்யாம் பூர்வம் விஸேஷி தஸ்ய பதஸ்ய
பதாந்தர ஸமபி வ்யாஹாராத், தல் லிங்க ஸம்க்யா விஸேஷேண
அவிஸேஷ்யத் வாச்ச விஸேஷ் யஸ்ய, “வேதா: ப்ரமாணம்“, “தத்த்வம் நாராயண: பர:” இதிவத் |

பரமம் அடைமொழி தேஜஸ்ஸுக்கு உண்டே -வேதா புல்லிங்க பஹு வசனம் பிரமாணம் நபுஸிம்ஹ ஏக வசனம் போல் இங்கும்

ஸர்வதா ஸ்ப்ருஹணீய தமத்வேந பரம புருஷார்த க்யாபகாநி பரம தேஜஸ் த்வாதீநி ஷட் விஸேஷணாநி |(ஆறு விசேஷணங்கள்)
தேஜ: – ஸ்வபாவத ஏவ பாஸ்வரம், அந்ய அவ பாஸகஞ்ச | (இவனுக்கே இயற்கையில் தேஜஸ் மற்ற தேஜஸ் பதார்த்தங்களை ஒளி உடையவையாய் ஆக்குகிறார் )“பரம் ஜ்யோதி ருப ஸம்பத்ய”,(சாந்தோக்யம் )
“தஸ்ய ஆதித்யோ பாம் உபயுஜ்ய பாதி” (ஒளியை இரவல் வாங்கிக் கொண்டு மினுக்கிக் கொண்டு இருக்கிறான் )இதி பாஸ்வரத்வஸ்ய நிஸ் ஸீமத்வம்

மஹதிதி |
பரம் இதி ச ஸம அதி ஶாய்ய ஸம்பவ: |(பரமம் மஹத்–மிகப் பெரியது என்றும் தன்னை விட பெரியது இல்லை என்றும் என்பதால் இரண்டு பத பிரயோகம் )
ஏவம் உத்தரத்ராபி யதா விஸேஷ்யம்  | (தபஸ் ப்ரஹ்மம் பராயணம் என்கிற இடங்களிலும் இதே அர்த்தம் கொள்ள வேண்டும் )

ஈஷ்டே ஸர்வஸ்யேதி தப: | யதா“யோ தேவேப்ய ஆதபதி”,
“தமீஶ்வராணாம் பரமம் மஹேஶ்வரம்”,-ஸ்வேதாஸ்வரம்
“ஏஷ ஸர்வேஶ்வர:” (ப்ரஹ்ம தாரண்யம் )இத்யாதி |

அநவச் சிந்ந கல்யாண ஸ்வரூப குணத்வேந -ப்ருஹத்த்வாத், ஸர்வ ஶக்தித்வேந -ஸர்வ ப்ரும்ஹணத்த்வாச்ச ப்ரஹ்ம |(தானும் ப்ரஹ்மம் அண்டினவர்களையும் ப்ரஹ்மம் ஆக்கி அருளுகிறவன் )

பவித்ராணாம் மத்யே பரமம் மஹத் பவித்ரம்;
பவித்ரம் –ஶுத்தி விஸேஷ ஹேது: |
ஶுத்திஶ்ச –தோஷ விஸேஷ நிர்மோக: |
தோஷஶ்ச–ரஜஸ் தமஸ் :ப்ராய பரிணாம பேத ஆஸ்பதத்வம் அசேதநஸ்ய;
சேதநஸ்ய து-தத் பரிரம்ப ஸம்பவ: அவித்யா பகவத் அபராத ராக த்வேஷாதி: |
தம் பகவாநேவ ஸமூலகாஷம் கஷதி (வேரோடு பிரதிபந்தகங்களைப் போக்கி அருளுபவர் இவனே )| தஸ்யைவ ஸர்வதா தத் விரோதி ஸ்வபாவத்வாத்|(அகில ஹேய ப்ரத்ய நீகன் இவனே )

பவித்ரமாவது சுத்திக்கு காரணம்
சுத்தி -தோஷ நிவ்ருத்தி
தோஷம் இரண்டு வகைப்படும் –
அவை ரஜோ தமோ குணங்களால் விகாரப்படும் அசேதனத்தின் தோஷமும்
அசேதன சேர்க்கையால் உண்டாகும் அஞ்ஞானம் பகவத் அபராதம் ராக த்வேஷம் முதலிய சேதன தோஷங்கள் ஆக இரண்டும்

ஏவம் பூத துக்கமும் சுகமும் இவனுக்கு உண்டாக ஹேது என்ன சொல்லுகிறது மேல்-அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது
மறந்தேன் அறியகிலாத உணர்விலேன் ஏணிலேன் அயர்த்து என்றும்
உய்யும் வகை நின்ற ஒன்றை நன்கு அறிந்தனன்
உணர்வினுள்ளே ஆம் பரிசு என்றும்
சொல்லுகிற ஞாதவ்ய பஞ்சக ஞான -அஞ்ஞானங்கள் –ஆதித்ய ஹ்ருதயம் -சூரணை-5-

க்ரோஶந்தி ச ஶாஸ்த்ராணி—”ஏதம் ஹ வா வந தபதி”,(தைத்ரியம் ஆனந்த வல்லி-அறிந்தவன் மோக்ஷம் பற்றி தபிக்க மாட்டான்)
“தத்யதா புஷ்கர பலாச ஆபோ ந ஶ்லிஷ்யந்தே (சாந்தோக்யம் )”“தத் யதா இஷீக தூலம் அக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத”,,(மெய் மேல் வினை முற்றவும் சாரா -தீயில் இட்ட பஞ்சு -தாமரை இலைத் தண்ணீர் போல் போய பிழையும் புகுதருவான் நின்றனவும்- பூர்வாகம் உத்தராகம் -)

“தத் ஸுக்ருத துஷ்க்ருதே தூநுதே ”,(கௌஷீகதம்)
“ததா வித்வாந் புண்ய பாபே விதூய”,(முண்டகம்)
“ஷேத்ரஜ்ஞஸ்ய ஈஶ்வரஜ்ஞாநாத் விஶுத்தி: பரமா மதா”,(வியாக்யவல்க ஸ்ம்ருதி)

“த்யாயேத் நாராயணம் தேவம் ஸ்நாநாதிஷு ச கர்மஸு |
ப்ராயஶ் சித்திர் ஹி ஸர்வஸ்ய துஷ் க்ருதஸ்யேதி வை ஶ்ருதி: ||”,(த்யானித்தே குளிக்க உள் அழுக்கு போகும்)

“யோ மாம் அஜம் அநாதிம் ச”,(10-3)
“பாவந : ஸர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தந ”,(சபரி வார்த்தை )
“ப்ராயஶ் சித்தாநி அஸேஷாணி” இத்யாதி ப்ராயஶ் சித்த ப்ரகரணம் கார்த்ஸ்ந்யேந |(விஷ்ணு புராணம்-முழுவதுமான இடங்களில் பகவத் சம்பந்தமே பராயணம் )
“யதா அக்நி ருத்த தஶிக: கஷம் தஹதி ஸாநில: | ததா
சித்தஸ்திதோ விஷ்ணு: யோகி நாம் ஸர்வகில்பிஷம்||” இதி |(நெருப்புடன் காற்று சம்பந்தம் போல் சித்தத்தில் பெருமாள் உடன் யோகி சேர அனைத்தும் போகுமே )

அந்யஸ்யாபி தீர்தாதே : பவித்ரத்வம் தத் ஸம்ஶ்லேஷ ஆயத்தம் தர்ஶயதி பரமம் மஹத் இதி விஸேஷணாப்யாம் |(இவன் சம்பந்தத்தால் கங்கா தீர்த்தாதிகள்; பாவனத்வம் -ஆகவே இவனே பரமமும் மஹத்தும் )
ந கலு ஸ்வபாவ மலிநா நாம்
(அ)சேதநா நாம் ததுபஹ தாநாம் வா தேவாதீநாம்
ஸ்வ ஸத்ருஶ வஸ்த்வந்தர ஸோதகத்வம் யுக்திமத் |
அத ஏவ பராஶர ஶௌந காதிபி: ஶுபாஶ்ரய ப்ரகரணாதிஷு தத் ஸம்ஶீலநம் நிஷித்யதே ,(பாபம் போக்குவது சுபம் -தியானத்துக்கு இருப்பிடம் ஆஸ்ரயம் -இவனது திருமேனியே ஸூபாஸ்ரயம் )

தத் அர்ச்சனம் பாத சேவா பாவனத்வம் பிரசித்தம்-மற்ற தேவதாந்த்ரங்கள் தள்ளுபடி ஆகுமே

“அஶுத்தாஸ்மத ஸமஸ்தாஸ்து தேவாத்யா: கர்ம யாேநய:”,க்மராஶந்தி ச ஶாஸ்த்ராணி—(விஷ்ணு புராணம் ஆறாம் அம்சம் -மற்றவர்களுக்கு கர்ம வஸ்யத்வம் உண்டே )

“ஆப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா: ஜகதந்தர் வ்யவஸ்திதா: | ப்ராணிநா : கர்ம ஜநித ஸம்ஸார வஶவர்திந : ||” இத்யாதிஷு |
தத்ர தேவதாநாம் பாவநத்வம் ததுபாஸந அர்ச்சன பாதோதக ஸேவாதிநா ப்ரஸித்தம்;(விஷ்ணு தர்மம் -தத் அர்ச்சனம் பாத சேவா பாவானத்வம் பிரசித்தம்-சரீர ஆத்ம மனஸ் சுத்திக்கு மூன்று தரம் அவன் சம்பந்த தீர்த்தம் )
தீர்த ஆய தநாத: தத் ஸாமீப்யாத்; யதா கங்காயா: வைஷ்ணவே
“விஷ்ணு வாம பதாங்குஷ்ட விநிஸ் ஸ்ருதஸ்ய ஜலஸ்ய எதந் மஹாத்ம்யம்”இதி;(விஷ்ணு புராணம் கங்கை கங்கை என்னும் வாசகத்தாலே பரம பாவனத்வம்-இடது திருவடிக்கட்டை விரல் சம்பந்த தீர்த்தமே கங்கை -)

விஷ்ணோர் ஆயதநம் ஹ் யாப: ஸ ஹ்யபாம் பதிருச்யதே “ இத”ஜல மாத்ரஸ்ய ச |(ஆப முதலில் ஸ்ருஷ்ட்டி பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து தீர்த்தம் -அபாம் பதி அவனுக்கு திரு நாமம் -மனத்துள்ளான் மா கடல் நீர் உள்ளான்)

காலஸ்ய ச ததவதார தத் தைவத்ய தச் சயநோத் தாநவத்த்வாத் த்வாதஶீ ஜயந்தீ ஶ்ரவணாதிவத் தத் ஸம்பந்தாத்|(ஏகாதசி திருவோணம்-நவமி -அஷ்டமி அவன் சம்பந்தத்தால் ஏற்றம் )
ஆத்ம குணாநாம் ஶமாதீநாம் தஜ் ஜ்ஞாந அநு குண்யாத் க்ரியாணாம் ச(சமதமாதி குணங்கள் அவனை அறிய உதவுவதால் ஏற்றம்)
யஜ்ஞ தாந தபஸ் :ஶ்ராத்த ப்ரப்ருதீ நாம ததாராதேத்வாத் |

ப்ராஹ்மணாதி ஜாதே :
தத் பரவேதாத் யயநாதௌ ஸாக்ஷாததிகாராத் ; யதா
“விஷ்ணும் காந்தம் வாஸு தேவம் விஜாநந் விப்ரோ விப்ரத்வ மாயாத் தத்த்வ தர்ஶீ” இதி |(ப்ராஹ்மணனுக்கு நேராக ஸாஷாத் அதிகாரம் -வேதம் கற்று கற்பிக்க வேண்டுமே )

ஶ்ருதி ஸ்ம்ருத்யாதே : தத் பரத்வாத் தச் சாஸநத் வாச்ச,
“நாராயண பரா வேதா:”,
“ஶ்ருதிஸ் மதீ மமை வாஜ்ஞா” இதி |(விஷ்ணு தர்மம்)
ஆரண்யகே தீர்த யாத்ராயாம், “புண்யா த்வாரவதீ” இத் யுபக்ரம்ய,
“ஆஸ்தே ஹரிர சிந்த்யாத்மா தத்ரைவ மது ஸூதந : | தத் புண்யம் தத் பரம் ப்ரஹ்ம தத் தீர்தம் தத் தபோவநம் ||(வன பர்வம் அவன் சம்பந்தத்தால் துவாரகைக்கு ஏற்றம் )

இதி தத் ஸம்பந்த ஹேதுகம் தேஶஸ்ய பாவநத்வ மபிதாய
“பவித்ரணாம் ஹி கோவிந்த: பவித்ரம் பரமுச்யமத |
புண்யாநாமபி புண்யோ அஸௌ” இத்யேவமேவ ஸ்பஷடம் நிகம்யதே ||

பவித்ராணாம் பவித்ரம் என்பதால் இந்த தோஷங்களை வேரோடு களைந்து எறியும் பரம பாவனன் என்கிறது
பரிசுத்தி செய்பவர் என்றதனால் பகவத் சம்பந்தத்தினாலேயே கங்காதி தீர்த்தங்களும் இதர தேவதைகளும் க்ஷேத்ர விசேஷங்கசளும்
கால விசேஷங்களும் பரிசுத்தி கரங்கள் ஆகின்றன
ஆதலால் அவனே பரம பாவனன் என்று பல ஸாஸ்த்ரங்களின் ஆதாரங்களால் விளங்கும்

பவித்ரம் விளக்கி இனி மங்கள விளக்கம்

ஸுரபிஸ் ரகங்கராக ஸுர ஸுந்தரீ ஸுதார ஸாதிப்யோ
நிரஸ்த ஸமஸ்த ஸம்ஸார நிர்மல நிர் மர்யாத ஸ்வ ரஸ
ஸம்வித ஆநந்த ஸாந்த்ராத் ப்ரத்ய காத்ம நஶ்ச அத்யந்தம்
அபிலஷணீ யத்வாத் மங்கலாநாம் ச மங்கலம் |

அத: பரமம் ய: பராயணம்- ப்ராப்யம் | ப்ரபஞ்சயிஷ்யதே சைதத் ||(பின்னால் மேலும் விளக்குவோம் )

ய: ஏவம் ஸ: பரமம் பராயணமிதி விதாய ப்ரதி வக்தவ்யே ய:
பராயணமிதி ஸித்தவதநுவாத: ஶாஸ்த்ர ப்ரஸித்த யதிஶய ப்ரதர்ஶ நார்த: || 9 ||

வாசனை மிகுந்த பூ மாலை சந்தனம் தேவ ஸ்த்ரீ அம்ருத ரசம் முதலியவைகளும்
சம்சார பந்தம் முழுவதும் நீங்கி அதி பரிசுத்தனாகி இயற்கையில் அளவற்ற ஞான ஆனந்த ரூபனாக விளங்கும்
ஜீவாத்மாவைக் காட்டிலும் பரமாத்மா மிகவும் ஆசைப்படும் படி இருத்தலால் அவனே மங்களங்களுக்கு எல்லாம்
சிறந்த மங்களம் என்கிறார்

பரமம் யஸ் பராயணம் என்பது மூலம்
ஸ பராயணம் என்று இல்லாமல் யஸ் பராயணம் என்றது
ஸகல ஸாஸ்த்ரங்களிலும் அவனே பரன் என்பது ப்ரஸித்தம் என்று தோற்றுதற்காகவே –

———————

யார் முழு முதல் கடவுள் கேள்விக்குப் பதில்-ஜகத் காரணத்வம் -அகில காரணம் அத்புத காரணம் நிஷ் காரணம் -ஆதியுகாகமே-ஆதி யுக ஆகமே முதல் யுக தொடக்கத்தில் -நிமித்தம் ஸ்ருஷ்ட்டி லயம் உபாதானம் -ச காரம் ஸஹ காரி-தானோர் வித்து தனி வித்து ஓர் வித்து சதேவ ஆஸீத் ஏக மேவ ஆஸீத் அத்விதீயம் ஆஸீத் -வேர் முதலாய் வித்தாய் -முதல் தனி வித்தேயோ –

பர தத்வ ரூபமான உபேய விஷயமான வினாவிற்கு விடை
(தைவதம் –பாப பயாபஹம் )

தைவதம் தேவதானாம் ச பூதானாம் ய அவ்யய: பிதா ||–10-

யத:, ஸர்வாணி, பூதானி, பவந்தி, ஆதியுகாகமே |
யஸ்மின், ச, ப்ரளயம், யாந்தி, புன:, ஏவ, யுகக்ஷயே ||–11-

தஸ்ய, லோக ப்ரதானஸ்ய, ஜகன்னாதஸ்ய, பூபதே |
விஶ்ணோ:, நாம ஸஹஸ்ரம், மே, ஶ்ருணு, பாபபயாபஹம் ||–12-

அத “கிமேகம் தைவதம்” இதி ப்ரதமம் ப்ரஶ்நம் ப்ரதி ப்ரூதே – தைவதமிதி ஸார்தேந |(10 ஸ்லோகம் 11 ஸ்லோகம் முதல் பாதியால்)

ஸ ஏவ தேவதாநாம் விதி ஶிவ ஶத மகாதீநாம் மஹா தைவதம் தத்த்வம் |

குத:? தேஷாமேவ பூதாநாம் ஸத்பாவ பாஜாம் பிதா,
யதஸ் தஸ்யா அர்வாசீந பித்ருப்யோ விஸேஷ: அவ்யய: இதி |(இவனே அழிவில்லா பிதா–பூதா இருப்பை உடையவை ஸத்பாவமே இவனாலேயே-கண்ண நீர் பாய்ச்ச வேண்டாதா தாய் தந்தை -எவ் உயிர்க்கும் தாய் தந்தை )

ந ஹி தேந ஸநாதநேந பித்ருமந்த: கதாசிதநாதா:|

பித்ருத்வம் உபபாதயதி யதஸ் ஸர்வாணீதி | யத: நிமித்த காரணாத்| ஸர்வாணி த்ருஹிண த்ருமாவதீநி |
பூதாநி பவந்தி – ஜாயந்தே | யத்யபி ப்ரஹ்ம ஸர்காதுபரி அவாந்தர ஸர்கே
ச ப்ரஹ்மாதி முகேந ஸ்ருஜதி, அதாபி ப்ரதம ஸ்ருஷ்டௌ ந ததேதி ஸூசயதி ஆதியுகாகம இதி |

உபாதான -சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம்
நிமித்த -ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம்
ஸஹ காரி- ஞான சக்தியாதி விஸிஷ்ட ப்ரஹ்மம் –

உபாதாந காரண அபி தமேவாஹ | அந்திமே (கடைசி யுகம் -இல்லாதவற்றைத் தருவித்துக் கொள்ள வேண்டும்) யுக க்ஷயே புந: யஸ்மிந் நேவ தாநி ப்ரலயம் யாந்தி – ப்ரலீயந்தே |
லய: கலு உபாதாநே ஏவ கார்யஸ்ய, யத ஊர்ண அபிதந்த்வாதே : லாலாதௌ |(கடல் அலை சிலந்தி மயில் தோகை –மூன்றும் ப்ரஹ்மம் ஸ்ருஷ்டிக்கு த்ருஷ்டாந்தங்கள்)
ஸ்திதி ப்ரவ்ருத்த்யாதி ஹேதுத்வம் ஸஹ காரி காரணத்வம் ச சகாரேண த்யோத்யதே |(ச காரம் -ரக்ஷணம் அர்த்தமும் -ஸஹ காரி காரணம் -இரண்டும் கொள்ள வேண்டும் -அகில ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே)

ஏவம் லக்ஷணகம் ஹி பர தத்த்வம் ஶ்ரூயதே
“யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே ” இத்யாததௌ |(தைத்ரியம் ப்ருகு வல்லி)
ஸூத்ர்யதே ச “ஜந்மாத் யஸ்ய யத:” இதி |

அஸ்ய ஸைவ த்ரிவித காரணத்வம் ச “ப்ரஹ்ம வநம் ப்ரஹ்ம ஸ வ்ருக்ஷ ஆஸீத்” இத்யுதாஹ்ருத்ய(அஷ்டகம்-காடாகவும் மரமாகவும் ப்ரஹ்மமே )
“ப்ரக்ருதிஶ் ச ப்ரதிஜ்ஞா த்ருஷ்டாந்தாநுபமராதாத்”(ப்ரஹ்ம ஸூத்ரம்-1-4-23-ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் -ப்ரதிஜ்ஜைக்கு திருஷ்டாந்தம் இதுவே -ஸமஸ்த ஜகத்துக்கும் ப்ரஹ்மமே காரணம் )இத் யதிகரமண நிரணாயி |

ஏதேந “உபாதாநம் து பகவாந் நிமித்தம் து மஹேஶ்வர:” இதி காரண பேதேந அநபிமத மஹேஶ்வர வாதோ ந வைதிக: |(வேதத்துக்கு ஒத்துக்கொள்ளாத வாதம் )

ந ச ஜகதுபாதாநத்வாத் பகவதி விகாராதி தோஷ ப்ரஸக்தி: |
ஸ்வ ஶரீரதயா பரிக்ருஹீத ப்ரக்ருத் யாத் யேகதேஶ த்வாரகத்வம் பரிணாமாதே :
ஊர்ணநாபி த்ருஷ்டாந்த அவஷ்டம்பேந உபபாதயந்தீ தத்ர பவதீ ஶ்ருதிரேவ பர்யஹா ர்ஷீத் |

(உபாதானம் -மண் மாறி குடம் -இவனோ அவிகாராய -ஸ்வரூபம் மாறாது -பிரகிருதி சரீரம் மாறலாம்
சரீராத்மா பாவம் கொண்டே சமன்வயப் படுத்த வேண்டும்-சிலந்தி சிலந்தி கூடு த்ருஷ்டாந்தம் போல் )

அத்ராபி விதாதவ்யே யோ தைவதமித் யநுவாத: ஶாஸ்த்ர ப்ரஸித்தி ப்ரதர்ஶந பர: |(ஸஹ வர வேண்டும் இடத்தில் யஸ் எவன் என்று சொல்லி இருப்பது பிரஸித்தம் என்பதால்
இப்படி இருப்பவர் யாரோ -இருப்பது ஸாஸ்த்ர ப்ரஸித்தம் என்றவாறு)

ததா ஹி உபநிஷதாதிஷு பரதத்வஸ்ய லக்ஷண தத்வஸ்தித் யுபாஸந ப்ராப்தி
ப்ரதிபாதந இனம் பர்ய அபர்யவஸாயிஷு ஸதஸத் ப்ரஹ்ம அக்ஷர அதிபதை : நிருபபதை :(ஸத அஸத் ப்ரஹ்ம அக்ஷர அதிபதை–சொற்கள் பர்யவஸான பர்யந்தம் அர்த்தம் கொள்ள வேண்டுமே-உப பதம் கையில் வஜ்ராயுதம் பிடித்த இந்திரன் என்றாலும் ஸ்ரீ மன் நாராயணனே -இவன் அந்தர்யாமியாய் இருந்தால் தானே இவனுக்கு சத்தை -முக்கியமான வேதாந்த அர்த்தம் -)
பரமாத் யுபபத ஸநாதைஶ்ச ஸாமாந்ய வாசிபி:
நிர்திஶ்ய மாநஸ்ய விதி ஹரி ஶிவாதி விஸேஷ பர்யவஸித ஆ காங்க்ஷாயாம்

“நாராயண பரம் ப்ரஹ்ம தத்த்வம் நாராயண: பர:”,(தத்வம் ஆத்மா ப்ரஹ்மம் தேஜஸ் நான்குக்கும் நாராயண -வேறே யாருக்கும் இல்லை என்பதால் பரம் பத பிரயோகம்)
“த விஷ்ணோ : பரமம் பதம்”,(பிராப்தியும் அவனே)
“யஸ்மாத் பரம் நா பரம் அஸ்தி கிம்சித்”,(கட உபநிஷத் -இன்றும் என்றும் நேற்றும் நாளையும் இவனை விட மேம்பட்டது இல்லை)
“புருஷாந்த பரம் கிம்சித்”,(7-7)
“உத்தம : புருஷஸ் த்வந்ய:” (15)இத்யாதிபி: கண்டோக்திபி:,(சேநா தூளித –சாரத்ய வேஷமே மாம் ) ஸ்ருஷ்டி வாக்ய கதி ஸாமாந்யாத்,(வார்த்தைகளின் போக்கே -கதி சாமான்யம்)

(யன் மூல காரணம் –ஸ்ருஷ்டி வாக்கியம் -ப்ரஹ்மம் சத் ஆத்மா -நாராயண ஸ்திதி மஹா உபநிஷத்
ஸூ பால உபநிஷத்துக்கும் அத்தையே தொடர்ந்து சொல்லும்
திவ்யம் தேவன் ஏகம் நாராயணன்)

தத்த்வ பர புருஷ ஸூக்த- உத்தர நாராயண-ப்ரப்ருதி ப்ரபல ப்ரதேஶாந்தர தாத்பர்யாத்,
ஸுபால மைத்ராயணீய மஹா உபநிஷச் சாந்தோக்ய தைத்திரீய ஐதரேய கடவல்லீ ப்ரப்ருதி
பஹு உபநிஷதுத் கோஷோண

ஸாத்விக இதிஹாஸ  புராண ப்ராசுர்யேண தேவதா பாரமார்த்யஜ்ஞ பராஶர பாராஶர்ய ப்ராசேதஸாதி (வால்மீகி போன்றவர்களும்) பரமர்ஷிமதை :

அஸ்யைவ
வேத ஸித்தாந்தத்வே ஸ்வ பரம ஆகம ஸம் ப்ரதிபத்த்யா ரூப ஆயுத வாஹந சாரித்ர விஸேஷாதி ஸாமர்த்யதஶ்ச
கலு பகவதோ நிரங்குச ஐஶ்வர்யம் ததிதர நிகர்ஷஶ்ச புத்திமதாம் ஸ்வத்யவஸாநம் |
தஹர வைஶ்வாந ராத்யதிகரணை : ஸமந்வயாத்யாய ஏவ ஸைவம் அத்யவஸஸு: அஸ்மதாசார்யா இதி ந அதி விஸ்த்ருணீமஹே ||(நம் முன்னோர் ஆச்சார்யர்கள் பலவாறு விளக்கி உள்ளார்கள் -நான் விரிவுக்கு அஞ்சி நிற்கிறேன் )

ததா ச ஸம்சிக்ஷிபு: யாமுநா சார்யா:, “த்வாம் ஶீல ரூப சரிதை :”(15)இத்யாதிநா |

த்வாம் ஶீல ரூப சரிதை: பரம ப்ரக்ருஷ்ட
ஸத்வேந ஸாத்த்விகதயா ப்ரபலைஶ்ச ஶாஸ்த்ரை: |
ப்ரக்யாததைவ பரமார்த்த விதாம் மதைஶ்ச
நைவாஸுர ப்ரக்ருதய: ப்ரபவந்தி போத்தும் ||ஶ்லோகம் 15 –

[ஐயோ!] எல்லோரையும் விட உயர்ந்தவனான உன்னை அஸுரர்கள் அறிந்து கொள்ள முடியாது.
உன்னை அறிந்து கொள்ளும் வகைகள்:
உன்னுடைய சீல (எளிமை) குணம், வேதத்தில் கொண்டாடப்பட்ட ரூபங்கள் மற்றும் திவ்யமான லீலைகள்
சுத்த ஸத்வத்தால் நிறைந்திருக்கும் உன்னுடைய பரம பதம்
தன்னிடம் இருக்கும் நன்மையினால் திடமாக இருக்கும் சாஸ்த்ரம்
உன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களின் அபிப்ராயத்தின் மூலம்

தாத பாதாஶ்ச (கூரத்தாழ்வானும்- )“தத்த்வார்த தத் பர பரஶ் ஶத வேத வாக்யை :ஸாமர்த்யத:ஸ்ம்ருதி பிரப்யத தாத்ருஶீபி: |
த்வாமேவ தத்த்வ பர ஸாத்விக ஸத் புராணை :  தைவஜ்ஞதீ பிரபி நிஶ்சிநும: பரேஶம்||”,
“ரூபஶ்ரியா பரமயா பரமேண தாம்நா சித்ரைஶ் ச கைஶ்சிதுசிசத: பவதஶ் சரித்ரை : |
சிஹ்நை : அநிஹ்நவபதை : அபரைஶ்ச கைஶ்சித் நிஶ்சிந்வதே த்வயி விபஶ்சித ஈஶித்ருத்வம் ||” இதி ||(ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -23)

சர்வ ஸ்ருதிஷு அநுகதம் ஸ்திரம் அப்ரகம்ப்யம்
நாராயணாஹ்வயதரம் த்வாம் இவ அந வத்யம்
ஸூக்தம் து பவ்ருஷம் அசேஷ ஜகத் பவித்ரம்
த்வாம் உத்தமம் புருஷம் ஈசம் உதா ஜஹார–23-

எம்பெருமானே -தேவரீர் போலவே சர்வ வேதங்களிலும் ஓதப்பட்டும் -ஸ்திரமானதும் –
குதர்க்கங்களால் அசைக்க ஒண்ணாததும்
நாராயண திரு நாமத்தை உடையதும் நிர் துஷ்டமானதும் சர்வ லோக பாவனமுமான புருஷ ஸூக்தமோ என்றால்
தேவரீரை புருஷோத்தமராகவும் சர்வேஸ்வரராகவும் ஓதி வைத்தது

யந் மூல காரணம் அபுத்த்யத ஸ்ருஷ்ட்டி வாக்யை
ப்ரஹ்ம இதி வா சதிதிவ ஆத்மகிரா தவ தத்
நாராயணஸ் த்விதி மஹா உபநிஷத் பிரவீதி
ஸுவ்பாலிகீ ப்ரப்ருதயோபி அநு ஜக்முர் ஏநாம் –25-

ஸ்ருஷ்ட்டி பிரகரணத்தில் உள்ள காரண வாக்யங்களாலே -சத் என்றோ -ப்ரஹ்ம -என்றோ -ஆத்மா -என்றோ
எந்த வஸ்துவானது மூல காரணமாக அறியப்பட்டு இருக்கின்றதோ –
அந்த வ்யக்தி நாராயணனே என்று மஹா உபநிஷத்து ஓதுகின்றது–
இந்த மஹா உபநிஷத்தை ஸூபால உபநிஷத் முதலானவைகளும் பின் செல்லுகின்றன –

—————

அடுத்த ஸ்லோகத்துக்கு அவதாரிகை

ஏவம் ஸுநிர்ணீதயோ : ஸர்வ பரயோ : தத்த்வ ஹிதயோ : ஸர்வ யோக்யம் ஹித விஸேஷம் அவதாரயந் ஶ்ரோதாரம் நிமந்த்ரயதே தஸ்யேதி –

தஸ்ய, லோக ப்ரதானஸ்ய, ஜகன்னாதஸ்ய, பூபதே |
விஶ்ணோ:, நாம ஸஹஸ்ரம், மே, ஶ்ருணு, பாபபயாபஹம் ||–12-

தஸ்ய யதோக்த மஹா மஹிம்ந: (கீழ் பரமமான தத்வம் மஹிமையை யுடைய )| லோக ப்ரதாநஸ்ய அஸேஷ ஸேஷிண: |
ஜகந் நாதஸ்ய ஸர்வ நியந்து: |
விஷ்ணோ : (நீக்கமில்லா நிறைந்து )ஸம்பந்திஷு ஸத் ஸ்வபி பஹுஷு ததா வர்ஜந உபாயாந்தரேஷு,
நாம ஸஹஸ்ர மேவ
ஸர்வ பாப பயாபஹம் ஸர்வ ப்ரகாரம் பாபம் தத்தேதுகம் பயம் ச ஸ மூலகாதம் ஹந்யயாத்  இத் ஶம்ஸநார்ஹம் யத்தத் மே மத்த: மதர்தம் வா ஶ்ருணு |(என்னிடத்தில் கேள் -என்றும் எனக்காக கேள் என்றும்-பாலைக் குடிக்கக் காலைப் பிடிக்கிறார் )
ஸ்வயமேத்ர ஶ்ருண்வத: புநஸ் : ஶ்ரவண நிமிந்த்ரணம் பூபதே இதி ஸம்போதநம் ச வக்து:
ஶ்ரோத்ரு லாபம் அஸ்மிந் விஷயே ஶ்லாக்யம் ஸூசயத: || 12 ||(ராஜா கேள் -ஸஹஸ்ர நாமம் பெருமை அறிந்து -கிடைக்கும் பாக்யம் சொல்ல ஒண்ணாதே) 

முதலாவது வினாவிற்கு விடை
எவர் ப்ரஹ்மாதி தேவர்களுக்கு எல்லாம் மகத்தான தேவதையோ
எவர் பிரம்மாதி பீபிலி வரை எல்லாப் பிராணிகளுக்கும் அழிவற்ற பிதாவோ
எவரிடம் இருந்து எல்லாப் பொருள்களும் யுக ஆரம்பத்தில் ஸ்ருஷ்டி காலத்தில் பிரம்மாவை முதலில் படைத்து அவரைக் கொண்டு
மற்றப் படைப்புகளை நடத்துகிற படியால் நான்முகனையும் நாராயணன் தானே படைக்கிறார் என்று தெரிவிக்கிறார்

இதனால் எம்பெருமான் நிமித்த காரணம் -பிதாவானமை விளக்கப்பட்டது
இவரிடத்தில் இருந்து திரும்பவும் பிரளய காலத்தில் லயம் ஆகின்றதோ
கார்யங்கள் எல்லாம் லயித்து உபாதான காரணத்திலே யாகையாலே இவனே உபாதான காரணம் என்கிறது

மூலத்தில் சகாரம் ஸஹ காரி காரணமும் அவனே என்கிறது –

இப்படிப்பட்ட லக்ஷணம் பொருந்தியவரையே பர தத்வமாக ஸ்ருதிகளும் ஸூத்ரங்களும் சொல்லுகின்றன
அப்படிப்பட்ட உலகங்களுக்கு எல்லாம் ஸ்வாமியும் உலகங்களை நடத்துபவருமாகிய விஷ்ணுவினுடைய ஆயிரம் நாமங்களும் பாவங்களையும் அவற்றினால் வரும் பயத்தையும் வேரோடு களைகின்றவை
அரசனே அவற்றை என்னிடம் அடுத்து கேள்

என் நன்மைக்காகக் கேள் என்னவுமாம்

இங்கே இந்தக் கொள்கைக்கும்
இதற்கு விரோதமான கொள்கைகளுக்கும் உள்ள வித்தியாசத்தையும்
பரத்வ நிர்ணயத்தைப் பற்றி விசாரித்து
பல ஆதாரங்கள் காட்டி நிச்சயம் செய்யப்பட்டு இருக்கிறது

இப்படி ஆறு வினாக்களுக்கும் விடை கூறப்பட்டமை காண்க –

————

தாமே விரும்பிக் கேட்டுக் கொண்டு இருக்கும் அரசரை நோக்கி பீஷ்மர்
அரசனே கேள் என்று மீண்டும் அழைத்தல்
இந்தப் பகவத் விஷயத்தைச் சொல்லுபவருக்கு கேட்பவர் கிடைத்த சிறப்பைச் சொல்கிறது

அத வக்தும் ப்ரதிஜாநீதே யாநீதி –

யாநி நாமானி கௌணானி விக்யாதானி மஹாத்மன: |
ரிஶிபி: பரிகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே || 13 ||(பூ பதே ஸ்ரு ணு -காது கொடுத்தால் போதும் -ஆசை ஒன்றே வேண்டும் -யானி –தானி )

இஹ சதுஷ்டயீ ஹி ஶப்தாநாம் ப்ரவத்தி: 1-த்ரவ்ய2-ஜாதி3- குண4-க்ரியா விஷய பேதேந (நான்கையும் குறிக்கும்) |
தத்ர [அ]த்ரவ்யோபாதித்வேந [அ]ஸாதாரண்யேந ச [அ]த்ரவ்ய ஜாதி நிமிதத்வாத் 
ப்ரக்ருஷ்ட குண கர்ம நிமித்தத்வமேவ பகவந் நாம்நாம் ப்ரவீதி கௌணாநி இதி |(த்ரவ்யம் ஜாதி இவற்றை விட குணம் கர்மம் இவற்றால் சிறப்பு)

குணேப்ய: கர்மப் யஶ்ச நிமித்த பூதேப்ய: ஆகதாநி; யௌகிகாநீத்யர்த:|
குண ஶப்த: கர்மணோ அபி ப்ரதர்ஶக: |

பதச் சேர்க்கையால் வந்த அர்த்தம் -யவ்விகிதம்
பங்கஜம் சேற்றில் பிறந்த செந்தாமரை
காளான் நாய் குடையையும் சொல்லலாமே
ரூடி அர்த்தம் -தாமரை பிரஸித்த அர்த்தம்

“[ப்ரஸந்நாத் மாத்மநோ ] ப்ரவதந் நாத்மநோ நாம்நாம் நிருக்தம் குண கர்மணாம்”;
பகவாந் “கௌணாநி மம நாமாநி கீர்திதாநி ச காநிசித்”,பாரதம் 
“நாம கர்மார் தவித் தாத”,பாரதம்-உத்யோக பர்வம் 
“நிருக்தம் கர்மஜாநாம் ச ஶ்ருணுஷ்வ ப்ரயதோ அநக” இத்யாதி வசநாத் |பாரதம்-சாந்தி பர்வம் 

ந ஸைஷாம் யத்ருச்சா ஶப்தத்வம்; விவக்ஷித அவயவ அர்தத்வாத் (அவயவங்கள் அர்த்தம் )ஸாங்கேதிகத்வாச்ச-(அடையாள அர்த்தம் )||(நமக்கு அவன் பெயர் சேஷத்வம் அடியாக கொண்டுள்ளோம் )
விக்யாதாநி(ப்ரஸித்தம் )சந்தோ பாஷயோ : ப்ரவ்ருத்த் யாதீநாம் ப்ரயோக பூயஸ்த்வாத்
தத் அஸாதாரண்யேந ப்ரஸித்தாநி; ரூடாநீத்யர்த: |

யோகாதிநா அர்தாந்தர வ்ருத்தி ஸம்பவே அபி ஏகத்ர நியதத்வம் ஹி நாமத்வம் |(கேசவன் ப்ரஸஸ்த கேஸ பாஸம் கொண்டவன் -சேராமல் திருமால் ஒருவன் இடமே சேரும் ரூடியாக பிரசித்தமாக இருப்பதால்)

ருஷிபிர் : அஸேஷ வேதார்த தர்ஶிபி: ஸநக ஸநத்குமார நாரத ப்ரப்ருதிபி:|

பரிகீதாநி ஏவம் ரூபாணி ஏவம் நிமித்தாநி ஏதத் வாசகாநீதி

பரித: துக்த தேநுவத் அபிநிவிஶ மாநை :(பால் கொடுக்கும் பசு காம்புகள் வழியாக பாலைக் கொடுக்குமா போல்)
ப்ரீத்யா ப்ரயுக்தாநி யாநி நாமாநி தேப்ய: ஏகைக ஸ்மாத் ஏகைகம் மது கரக்ரமேண (தேன் வண்டு போல் சேமித்து )ஸமா ஹ்ருத்ய பகவதா வ்யாஸேந
ஸ்தோத்ர ரூபேண கீர்திதாநி ஸம்ப்ரதாய பாரம்பர்யேண அஸ்மத் பர்யந்தம் ஸம் ப்ராப்தாநி துப்யம் வக்ஷ்யாமி |(ஸம்ப்ரதாய பரம்பரையாக வந்து உணர்ந்து- உனக்கு அறிய கூறுகிறேன்)

கிமர்தம்? பூதயே , பூதி: பவநம் ஸத்தா; அநாதி ஸம்ஸார த்ருஷ்டி விநாஷ்டாத்மந புநருஜ் ஜீவநா யேத்யர்த: ||

சத்தைக்காகவும் உஜ்ஜஜீவனத்துக்காகவும் -இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே உழன்று இருக்கும் நமக்காக

ஶ்ரூயதே ஹி ஏவம் ஆத்மந : ஸதஸத்பாவௌ

“அஸந்நேவ ஸ பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத், அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத ஸந்தமேநம் ததோ விது:” இதி |
அபரிமித மஹாத்ம்ய தயா அபரிமித அபிஜ்ஞத்வாத் பகவதோ யத்யபி க்ருத்ஸ்ந நாம க்ரஹண அஸம்பவ:;

பிரபாவம் மஹாத்ம்யம் -அவனைச் சொல்லி முடிக்க முடியாதே -முழுமையாக சொல்லா விட்டாலும் முடிந்த அளவு சொல்கிறேன்

“ஶ்ருதம் ஏதஸ்ய தேவஸ்ய நாம நிர்வசநம் ஶுபம்|
யாவத் தத்ர அபிஜாநேஹம் அப்ரமேயோ ஹி கேஶவ:||”(புரிந்து கொள்ள முடியாமல் -புத்திக்கு அப்பால் பட்டவன் என்று அறியவே சொல்கிறோம் கேட்க்கிறோம்)
இதி ப்ரகாரேண புபூஷதாம் (அறிய ஆசை ஒன்றே வேண்டும் )து விஷ்ணு நாம ஸஹஸ்ரேண ஆத்ம லாபோ பவதீதி த்வந யதி மஹாத்மந இதி |

ஏவ மேஷாம் குண[கர்ம ]நிமித்தத்வாத் ஏதததிகாரிபி: பகவத் குண தஸ்கரா ந வ்யவஹார்யா: |
“அஸ்த்வியம் ஸ குண ப்ரஹ்ம வித்யா அர்வாசீந பலாதிகாரிணாம், நிர்குண வித்யா து முமுக்ஷூணாமேவ ஹி” இதிசேத்,(தாழ்ந்த பலத்துக்கு ச குணம் சொல்லும் பக்ஷவாதிகள் வாதம் பலம் சொல்வதிலேயே நிரஸனம் )
திக் தவாம் பதிரம் ய: அஸ்யா ஏவ “முச்யதே ஜந்து:ஜந்ம ஸம்ஸார பந்தநாத்”,
“யாதி ப்ரஹ்ம ஸநாதநம்” இத்யுபாயத்வம் குஷ்யமாணம் ந ஶ்ருணோஷி |

கிம் ச ஸ குண நிர் குணே த்வே ப்ரஹ்மணீ ப்ரஸஜ்யே யாதாம் இத்யத்வைதம் விபத்யதே |(இரண்டு ப்ரஹ்மம் சொல்வதாலேயே அத்வைதம் நிரஸனம் -பொய்யான ச குண உபாஸனம் செய்வதால் பலன் கிட்டுமோ)

“பரமோ மத” இதி,
“அதிகதமோ மத” இதி ஸர்வ ஶாஸ்த்ரார்தாதிக தர ஸார ஸமுத்தார ஏக ப்ரயோஜநாதா அதிக்ருதஸ்ய
அர்வாசீந விஷய த்வோக்தௌ க்வ அந்யத்ர அநர்வாசீந ஸித்தி: அநயோ : வித்யயோ :?(|ச குண உபாசனம் தாழ்ந்த பலனைக் கொடுக்கும் என்றால் பீஷ்மர் அறிந்த வற்றில் இதுவே உயர்ந்தது -வேறே எந்த வித்யை கொடுக்கும் )

ஸ குணா நிர் குணார் தேதி மாச வாசால வோசதா: |
ந விருத்தார்தயோ : யஸ்மாத் உபாய உபேய தயா த்வயோ : ||(வார்த்தைப்பாடு பண்ணாதே -விருத்தமான இரண்டும் உபாயம் உபேயம் ஆகாதே )

மஹாத்மாவான பகவானுக்கு எந்த நாமங்கள் குணங்களாலும் செய்கைகளாலும்
குணம் என்றதால் செயகைகளையும் கொள்ள வேண்டுமே –
வந்தனவாகப் பிரஸித்தி பெற்றனவோ
ரிஷிகளால் நன்றாகக் கீர்த்தனம் செய்யப்பட்டவையோ
ப்ரஸித்தி -இந்த நாமங்கள் வேதங்களிலும் லோகத்திலும் மிகுதியாக வழங்கப் பெற்று பகவானையே குறிப்பன என்ற பிரசித்தி –
வேதார்த்தங்களை உள்ளபடி தரிசிக்க வல்ல ஸநக ஸனத் குமார நாரதாதி ரிஷிகள்
இன்ன திரு நாமம் இன்ன காரணத்தால் வந்தன-இன்ன அர்த்தங்களை சொல்லுகின்றன என்று
கறவைப் பசுக்கள் தம் கன்றுகளுக்கு பாலைத் தாமே விரும்பிக் கொடுப்பது போலே
மனம் உவந்து ஆங்காங்கு திரு நாமங்களை ஸங்கீர்த்தனம் செய்தார்கள்
அவற்றை ஒவ்வோர் இடங்களில் இருந்து ஒவ்வொன்றாக மதுரகர நியாயமாகச் சேர்த்து
ஸ்ரீ வ்யாஸ பகவான் இந்த ஸ்தோத்ர ரூபமாகச் செய்து அருள
அவரிடம் இருந்து பீஷ்மருக்கு கிடைக்கப் பெற்றன –

ஆத்ம உஜ்ஜீவனத்துக்காக என்றமையால்
அநாதி காலமாக ஸம்ஸாரத்தில் அகப்பட்டு அறிவு அழிந்து கிடக்கும் ஆத்மாக்கள் சத்தை பெற்று உஜ்ஜீவிப்பதற்காக உனக்குச் சொல்லுகிறேன் என்றும்
மஹாத்மா என்றதனால்
இப்படிப்பட்ட பரம புருஷனை அறிவதால் ஸத் பாவமும் அறியாமையினால் அஸத் பாவமும் உண்டாவதாக ஸ்ருதிகள் சொல்லுகின்றன
எம்பெருமான் அளவற்ற அறிவுடைய -ஸர்வஞ்ஞன் -யாகையாலும்
அளவற்ற மஹாத்ம்யம் யுடையவராகையாலும்
அவருக்குத் தக்கபடி அவனுடைய திரு நாமங்களை அளவற்ற மஹாத்ம்யம் யுடையவையாய் இருக்குமே
அவற்றை எல்லாம் அறிவது முடியாதாயினும் கேட்ட வரையிலும் தெரிந்து கொண்டு இருக்கிறேன்
அவனுடைய திரு நாமங்களைக் கேட்ட வரையில் ஆத்ம லாபம் யுண்டு -என்றும் கூறினார் என்க

மனஸில் அழுக்கு இருந்தால் -கலக்கம் உண்டாகி -பாதிப்பு ஏற்பட அறிகிறோம் –
உடம்புக்கு கவசம் போல் மனஸ்ஸுக்கு திரு நாம சங்கீர்த்தனம்-

தாய்க்கும் மகனுக்கும் இவருக்கும் –இவர் அடி பணிந்தாருக்கும்-பரம காருண்யத்தால் –
திருநாமங்களை பற்றிக் கேள்வி கேட்க்காமலேயே திரு நாமங்களையும் அருளிச் செய்கிறார்-

பிறகு ஸ குண நிர்க் குண வாதத்தைப் பற்றி விரிவாக விசாரித்து இருக்கிறது –

அபி ச நிர் குணஸ்ய கிம் மூலம் குண ப்ரதீதே:?(ஓன்று மற்று ஒன்றாகத் தோற்றுமா போல் -வெள்ளி முத்துச் சிப்பி -போல் நிர்குண ச குண ப்ரஹ்மம் )
ஸா அவித்யேதி சேத், ஜநி ம்ருதித மோஹாதி பவ தோஷ விஷ மூர்ச்சி தஸ்ய முமூர்ஷோ :
பரம பேஷஜம் ப்ரஹ்மைவ அவித்யா- ப்ர மாத்யதேஷ தோஷ ஆஸ்பதம் (ப்ரஹ்மத்துக்கே அவித்யாதி தோஷம் உண்டு என்பாய் ஆனால் )
அநாக்ராத குண கணிகம் சேதி மநோ ஹரம் இதம் வேத ரஹஸ்யம் |

ப்ரஹ்ம தோஷா ம்ருஷா சேத் (ப்ரஹ்ம தோஷம் பொய்யானால் )தே நைர் குண்யம் ச ம்ருஷா மதம் |
நைர் தோஷ்ய ஸ குணத்வே தே ஸத்யே ஸ்யாதாம் ந சேச்சஸி ||(ப்ரஹ்மத்துக்கு நிர் குணத்வம் என்றாலே நிர்குணத்வமும் பொய்யாகும் அன்றோ-ஸ குணத்வம் சித்தமாகுமே )

(ப்ரஹ்மம் மட்டுமே சத்யம் ஜகத் மித்யா- ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்றே- ஞானமே ஓன்று- ஞானம் உடையவன் இல்லை என்பாய் ஆனால்
ப்ரஹ்மமே அவித்யா என்றால் ஸ்வரூபமே -போக்கவே முடியாதே
ப்ரஹ்மத்துக்கு அவித்யா என்றால் அத்வைதம் போகுமே)

கோ வா ப்ரஹ்ம அவித்யாம் இமம் உபஹந்யாத்?
அத்வைத வித்யா நிஷ்ட இதி சேத் , இதம் ததோ அபி மநோ ஹரம் யத் பரம் ப்ரஹ்ம பம் ப்ரமீதி
ஸம்ஸாரீ ததுத்தாரயதீதி |
ப்ரஹ்மத்துக்கு அவித்யை யார் போக்குவார் என்றால் அத்வைதம் அறிந்த ஜீவன் போக்குவான் என்பாய் என்றால் -இந்த வாதமும் மநோ ஹராமாய இருக்கும் ப்ரஹ்மம் உழன்று இருக்க ஜீவன் மீட்ப்பார் என்கிறாயே

அபி ச ஸ குண வாக்யம் கஸ்ய ஹேதோ: நிரர்தகம்?
நிர் குண வாக்ய பாத் யத்வாத் இதி சேத், விபரீதம் கஸ்மாந்ந ஸ்யாத்?
ஸம மேவ ஹ்யுபயோ : ப்ராமாண்யம் விராேதஶ்ச |

ஒன்றுக்கு மற்ற ஓன்று விரோதம் என்றால் இரண்டு வாதிகளும் சமமாகும்

அந்யச்ச குணாஶ்சேத் நிஷேத்தவ்யா:, கிம் தபஸ்விந்யா குண ஶ்ருத்யா?
ப்ரதிஷேத்ய குண ப்ரஸஞ்ஜிகா ஸேதி சேத், மா ச பூத் ப்ரதிஷேத்யம் |

குணம் உண்டு என்று ப்ரஸக்தி இருந்தால் தானே இல்லை என்று நிஷேதிக்க
பின்னால் சொன்னதே பிரபலம் -ஆகவே குணம் இல்லை என்பாய் ஆனால்

ந ஹ்ய ப்ரஸக்தம் ப்ரஸஜ்ய ததேவ ப்ரதிஷேதது ஸாஸ்த்ரமிதி காசித் லலாட பட்டே லிபி: |
ப்ரக்ஷால நாத்தி பங்கஸ்ய தூர தஸ் பர்ஸநம் வரம் |

சேறு இருந்தால் தானே நீரால் அலம்ப முடியும்
அதனால் சேற்றைப் பூசிக்கொள்வார் உண்டோ
தூரமாக தள்ளிப் போவதே உசிதம் அன்றோ

நச “பௌர்வாபர்யே பூர்வ தவ்ர்பல்யம் ப்ரக்ருதிவத்” இதி ஸார்வத்ரிகோ ந்யாய: |
ந ஹி ப்ராக்தநம் இஹ அஸ்தீதி ஜ்ஞாநம் ந அஸ்தீதி பரஸ்தாத்த ந ஸப்தோ ஹி நஸ்தி |

ப்ரக்ருதி ஷட்கம் விக்ருதி ஷட்கம் -ஆக 12 அத்தியாயங்கள் பூர்வ மீமாம்ஸை

இல்லை என்றால் இப்போது இல்லை -என்பதே தேறும் முன்பு இருந்தது என்பதை நிஷேதிக்காதே

பவமா நா அபச்சேதே ப்ராக்ருத தர்ம ப்ராப்தவ் ச பூர்வ தவ்ர்பல்ய, பூர்வம் அநுப ம்ருத்ய பரஸ்ய உத்பத்த்ய அஸம்பவாத் |
இஹ து ஸம்பவோ வக்ஷ்யதே |

கச்சம் விட்டால் பிராயச்சித்தம் சொல்லும்
உத்காதா விட்டால் கர்மாவை நிறுத்த வேண்டும் -முதலில் இருந்து பண்ண வேண்டும்
ப்ரதிஹத்தா விட்டால் யாகத்துக்கு உண்டான தக்ஷிணை முழுவதுமே கொடுக்க வேண்டும் –
இருவரும் விட்டால் -இரண்டும் பண்ண முடியாதே
எந்த விதி வாக்கியம் பிரபலம் -பின் சொன்ன வாக்யமே பிரபலம்
இந்த விதியை அத்வைதி கொள்கிறார் இங்கு
இது பொருந்தாது -அநியதம் -நியதம்-இரண்டும் உண்டே-வேதம் அநாதி -அனைத்து வாக்கியங்களும் நித்யம் -முன் பின் என்பதே வராதே

இங்கு விரோதமே இல்லை -ச குண வாக்கியமும் நிர் குண வாக்கியமும் விரோதம் இல்லாதவையே

யதி பரத்வாத் நிர் குண வசநம் குண அம்சம் நிஹ்நுதே, ப்ரஹ்ம ஸ்வரூப அம்சம் அபி
“ஸூந்ய மேவ தத்வம்” இதி வாக்யம் பாததாம், பரத்வாத் |
தத் புத்த ப்ர மூலத்வாத் ந வைதிகம் வஸ்து பாததே இதி சேத், ந, வேதோ அபி
ஹி தே ப்ரஹ்ம ப்ரமூல ஏவேதி கோ விசேஷோ அநயோ : ?

தத்வம் ப்ரஹ்மம் வேதம் முன் சொல்ல புத்தர் பின் சொல்ல -இது அத்தை அளிக்குமோ
ப்ரஹ்மத்தின் பிரமத்தால் வந்தது என்று நீ சொல்வதற்கும் இதுக்கும் வாசி இல்லையே

கிம் ச ப்ரத்யுதே குண ஸாஸ்த்ர மேவ பரம் த்ருஷ்டம்; தேஹாத்ம துர் குண நிதேஷே பர நிர் குண வசந பூர்வம் பகவதி ஹேய குணாந் ப்ரதிஷித்ய
கல்யாண குண விதி பரத்வஸ்ய “அபஹத பாப்மா விஜர:” இத்யாத வுபலம்பாத்|
அபி ச தத்ய- மித்யா விஷய வ்யவஸ்தயா ஸ குண நிர் குண ஶ்ருத்தயோ : பரித்ராணமிதி விப்ரலம்ப: |
பங்க ஏவ ஹி மித்யா விஷயத்வே ப்ரமாணஸ்ய, யதா அலீக கலதவ்க க்ரஹஸ்ய |
ஸ குண நிஷேதோ அபி மித்யா விஷய ஏவ த்வந் மதே இதி, தஸ்ய வா கதம் தத்த்வ விஷயத்வம் இத் யலம் அஸம்பாஷ்ய ஸம்பாஷணேந ||

நல்ல குணங்கள் உண்டு கெட்ட குணங்கள் இல்லை இரண்டுமே உண்மையாகும்-தேக குணம் ஆத்மாவைப் பாதிக்காதது போல் –

அத்ரேயம் தத்த்வ விதாம் வ்யவஸ்தா | ஜ்ஞாந சக்த்யாதி ஶ்ருதி: கல்யாண குண விஷயா, நிர் குண ஶ்ருதி: ராக த்வேஷாதி விஷயேதி;
“ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப:”(சாந்தோக்யம் )இத்யாதே: மங்கல விஷயத்வ தர்ஸநாத்,
நிர் குணமிதி ஸாமாந்ய நிஷேதஸ்ய ததந்ய விஷயத்வேந கார்தார்த்ய ஸம்பவாச்ச | (கெட்ட பண்புகள் இல்லை -என்று சுருக்கியே அர்த்தம் கொள்ள வேண்டும் )

ஏவமேவ பதாஹவநீய-ப்ராஹ்மண பரி வ்ராஜக – ப்ராஹ் மண கௌண்டிந்ய-கோபலீ வர்த -ப்ரப்ருதி ந்யாயோ நிரங்குஸ : |
ததா கலே பாதிகயா தோஷ விஷயோ நிஷேத : குண விஷயோ விதிஶ்வ ஏகஸ்மிந் வாக்யே “அபஹத பாப்மா ” இத்யாதி:,
“ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப:”இத்யந்த :;(ஒரே வாக்கியத்தில் ஆறு விஷயங்கள்-கெட்ட குணங்கள் இல்லை என்றும்- இரண்டு குணங்கள் உண்டு என்றும் சொல்லும்)

“யத் ததத் ரேஶ்யம்” இத்யாரப்ய “நித்யம் விபும் ஸர்வகதம்
ஸு ஸூக்ஷ்மம் ததவ்யயம் யத் பூதயோம் பரிபஶ்யந்தி தீரா:” இத்யந்தஶ்ச|(கோத்ரம் இல்லாதவர் அனைவரும் அவரே -எல்லாம் நிறைந்தவர்)

ந சைவம் விதே ந்யாய அபேக்ஷயா விஷய வ்யவஸ்தா , ஸ்தம்போ அஸ்தி கும்போ நாஸ்தீதிவத் |(ஸ்தம்பம் -தூண் இருக்கு -கும்பம் குடம் இல்லை -விருத்தம் இல்லையே-வாக்யங்களுக்கு விஷயங்களே வேறே வேறே தானே )

த்ருஶ்யத்வாதி நிஷேதம் தத் விருத்த மங்கல குண பரம் ஸூத்ர காரோ விவவ்ரே
“அத்ருஶ்யத்வாதி குணகக தர்மோக்தே:” இதி (1-2-22)|

குண உப ஸம்ஹார பாதே ச
சாண்டில்ய- உபகோஸல -தஹர-புருஷ-பர்யங்க வித்யா வேத்யாநாம்
குண ப்ரபந்தாநாம் புத்தி மாத்ர ஸாரத்வம் ஆசங்கய ச பர்ய ஹார்ஷீத்“ஆதராதலோப:” இதி |(ஒரு குணமும் விடக் கூடாது என்பதற்காகவே சொல்லிற்று)

ஸ்பஷ்டம் ச பகவாந் பராஸர: “ஸத்த்வாதயோ ந ஸந்தீஸே யத்ர ச ப்ராக்ரு தா குணா:”,
“ஸமஸ்த கல்யாண குணாத் மகோ அஸௌ”   இத் யாதவ் இமா மேவ ச வ்யவஸ்தாம் ஆதஸ்தே |(விஷ்ணு புராணம் )

அகில ஹேய ப்ரத்ய நீக
கல்யாணை ஏக குண தானத்வம்
உபய லிங்கமும் உபய விபூதியும் இவனுக்கு உண்டே

——————–

ததா ச
தோஷா வத்யுபதா ஸம்க்யா விருத்தை மங்கலை : குணை : |
பரிபூர்ணம் பரம் ப்ரஹ்ம சாஸ்த்ரை : ஜோகுஷ்ய தேதராம் ||

மங்களமான கல்யாண குணங்களால் நிறைந்து -தோஷங்கள் இல்லாமை -அளவு இல்லாமல் எண்ணிக்கை இல்லாமல் -கோஷிக்கும் இல்லை வாக்கியங்களும் உண்டே

“ஏதம் ஹி ஸர்வாணி வாமாநி அபி ஸம்விஸந்தி”,(வாமாநி-வாமனன் ஸூ கம் நல்ல குணங்கள்)

சீறி அருளாதே -அவன் இடம் எது இருந்தாலும் நல்ல குணமே -அவனை அடைந்து குணங்கள் நல்ல பண்பை அடைகின்றன

“ஸர்வஸ்ய வஶீ ஸர்வஸ் யேஸாந:”(ப்ரஹதாரண்யம் -அடக்கி ஆள்கிறான்)
“ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப:”,
“யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வ வித்”,(சாந்தோக்யம் -அனைத்தையும் அறிந்து புரிந்தவன்)
“பரா அஸ்ய ஸக்திர் விவிதைவ ஶ்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச”,(ஸ்வேதாஸ்ரம்)
“ மாதா பிதா ப்ராதா நிவாஸஶ் ஸரணம் ஸுஹ்ருத் கதி: நாராயண:”,(ஸூபால)
“ஸர்வ கர்மா ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ:”;(நின்றனர் இருந்தனர் –பிரவிருத்தி நிவ்ருத்தி இவன் அதீனம் )
ஆநந்த வல்லயாம் ச “ஜ்ஞாந பல யௌவநாதீநாம் இயத்தா ராஹித்யேந
தத் விஷய ஆநந்தாத் வாங் மநஸ நிவ்ருத்தி: மீமாம்ஸிதா ;

(மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி மேல் மேல் -உபரி உபரி -பிரம்மா ஆனந்தம் வரை சென்று -அவரை கீழே மனுஷ்ய ஆனந்தத்தில் வைத்து
மேல் மேல் சென்றாலும் எட்ட முடியாத ஆனந்தம் அவனது அன்றோ
உயர்வற உயர் நலம் உடையவன் அவன்)

வைஷ்ணவே ச–பகவச் சப்த நிர் வசந ப்ரகரணே “ஸூத்தே மஹா விபூத் யாக்தய” இத்யாதி ச ஸாகல்யேந;(விஷ்ணு புராணம் -ப க வ அன் -குணவான் -இயற்கையில் இவனுக்கே -சாகல்யேந முழுமை இவனுக்கே)
ஸபா பர்வணி பீஷ்ம : “ஜ்ஞாந வ்ருத்தா மயா ராஜந் பஹவ: பர்யுபாஸிதா 😐
தேஷாம் குண வதாம் ஸுவ்ரே : அஹம் குண வதோ குணாந் ||
ஸமா கதாநாம் அஶ் ரௌஷம் பஹூந் பஹு மதாந் ஸதாம்| குணைரந்யாந் அதிக்ரம்ய ஹரி: அர்ச்ய தமோ மத ||”;(அர்ச்சய தமம் இவனே )

கர்ண பர்வணி ஸ:
“வர்ஷாயுதைர் யஸ்ய குணா ந சக்யா வக்தும் ஸமேதைரபி ஸர்வ லோகை :|(ஏத்த ஏத்த எங்கு எய்தும் )
மஹாத்மந: சங்க சக்ர அஸி பாணே : விஷ்ணோர் ஜிஷ்ணோர் வஸுதேவாத்மஜஸ்ய||”;

ஶ்ரீவாராஹே
“சதுர்முகாயுர் யதி கோடி வக்த்ரோ பவேந்நர: காபி விஸூத்த சேசதா : |
ஸ தே குணா நாம யுதைகமம்ஸம் வதேந்ந வா தேவ வர ப்ரஸீத |”;(பெருமை சொல்ல முடியாது என்பதுக்கு கோடி வாய் சதுர்முகன் ஆயுஸ் ஸூத்த மனஸும் வேண்டும்-நீயே ப்ரசாதீத்து அருள வேண்டும் )

மாத்ஸ்யே
“யதா ரத்நாநி ஜலதேர ஸம்க்யேயாநி புத்ரக |
ததா குணா ஹ்யநந்தஸ்ய அஸம்க்யேயா மஹாத்மந: ||”;

வைஷ்ணவே தர்மே “ந ஹி தஸ்ய குணாஸ் ஸர்வே ஸர்வைர் முநி கணைரபி |
வக்தும் ஸக்யா வியுக்தஸ்ய ஸத்த்வாத்யை : அகிலைர் குணை : ||” இத்யாதிபி: |
ப்ராயேண ஶ்ரீமத் ராமாயண பாரதாப்யாம் ச |குப்யேயு: |(சங்கரர் பாஸ்கரர் இவரைப் பார்த்து கோபித்துக் கொள்ளும் )

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி —ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத் –பர ப்ரஹ்மம் அஞ்ஞானம் அந்தகாரத்தால் சூழப்பட்டு சம்சாரத்தில்
ஆழ்கின்றது என்கிற சங்கர மத அத்வைதிகளையும்
பரோபாத்ய லீடம் விவசம் -பர ப்ரஹ்மம் அசக்தன் -வேறே ஒருவரால் ஆட்டிப் படைக்கப் படுகிறது என்னும் பாசக்கார மதம்
அசுபஸ் யாஸ் பதமிதி -சித் அசித் போலே அசுபங்களால் வருந்து -யாதவ பிரகாசர் மதம் –
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம் -ஸ்ருதிகளில் இல்லாத வற்றையும் -நியாய சாஸ்திரங்களை ஒவ்வாத படியும்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி –தமஸ் -குணத்தால் வந்த அஞ்ஞானங்களை போக்கி அருளி
விசிஷ்டாத்வைத ஸ்தாபனம் பண்ணி அருளி வெற்றி கொண்ட ஸ்ரீ யாமுன முனிக்கு மங்களம் –

ந ச “யதோ வாசோ நிவர்தந்தே” இத்யாதி
ப்ரஹ்மணோ அப்ராமாணிகத்வ பரம்; தஸ்ய துச்சத்வ ப்ரஸங்காத்,
“யதோ வாச:”,
ஆநந்தம் ப்ரஹ்மண:” இத்யாதி தர்ம நிர்தேஸ விராேதாத், ததா வாங் மநஸ நிவ்ருத்தி வசநஸ்ய அநுபபத்தே:,
ப்ரஹ்ம ப்ரமாபக ஸாஸ்த்ர வையர்த்ய ப்ரஸக்தே:,

“அதாபதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா” இதி
ப்ரஹ்ம மீமாம்ஸ அந ஆரம்பணீயத்வ ப்ரஸங்காத்,

“வசஸாம் வாச்ய முத்தமம்”,
“ந அவேதவித் மநுதே தம் ப்ருஹந்தம்”,
“ஸாஸ்த்ர யோநித்வாத்” -(1-1-3 )இத்யாதி வாக்ய ந்யாய வ்யாத கோப ப்ரஸங்காத்,

“ஸைஷா அநந்தஸ்ய மீமாம்ஸா பவதி” இத் யுபக்ரமேண “தே தய சதம்” இத்யாதிநா
சதுர்முக ஆநந்த அநுக்ரம ஸம்ரம்ப விராேதாச்ச |

அத : “ப்ரக்ருதை தாவத்த்வம் ஹி” (3-2-21 )இதி ஸூத்ர ந்யாயேந
ஆநந்தே யத்தா ராஹித் பரமேவ மதம் ||(இருக்கும் ஆனந்தம் அளவிட முடியாது என்றே சொல்கிறது)

வ்யாஜஹ்நிரே ஸைவம் ஏதத் தாதபாத(தந்தை கூரத்தாழ்வானும் )“ஶ்ருதிஸ் தவாநந்த முகாந் ஹரேர் குணாநியத்தயா மாதுமிவோத்யதா ஸதீ |

உவாச வாஸோ மநஸா ஸஹோசிதாம் நிவ்ருத்தி மேவ த்வவதே: அஸம்பவாத்||” இதி |

அத : “ந யத்ர நாத வித்யந்தே நாம ஜாத்யாதி கல்பநா:” இத்யபி வ்யாக்யாநம் |(கல்பிக்க வேண்டாம் நாதனே -சொன்ன பின்பு நாமம் ஜாதி நிஜம் என்பதையே சொல்லிற்று)

கிம் ச, நாம ஜாத்யாதீநாம் கல்பநா நிஷேதே அகால்பநிக பாரமார்திக நாம ரூபம் ச
பகவத : ப்ரதிபாதிநம் ஸ்யாதிதி த்வம் நிகலபாஸம் த்வமேவ ப்ரயச்சஸி |

நிகலபாஸம்-காலுக்கு நீயே பாசக் கயிற்றை தேடிக்கொள்ளாதே

கதம் ச நாதேதி நாம க்ரஹணம் நாம ப்ரூயாத்| “அஸப்த கோசரஸ்யாபி”இத்யேதேந கதா |
அதோ விஶ்வ விலக்ஷண ஸ்வ அநுரூப நாம கதயா பரிமித வாச்ய வாசக ப்ரதி ஷேத பரம் |
ஸ்பஷ்டம் ப்ரதேஸாந்தரே
“நாம கர்ம ஸ்வரூபாணி ந பரிச்சேத கோசரே | யஸ்யாகில ப்ரமாணாநி ஸ விஷ்ணு: கர்பக: தவ||” இதி |(5 அம்சம்-அளவிட முடியாத அவன் உனது கர்ப்பத்தில் உள்ளான் )

ஆஹ — “நாம ஸு அவயவார்தாநாம் ந ப்ரவத்தி நிமித்தத்வம்,
நிமித்தத்வே அபி ந தத்ர ப்ராமாண்யம் தாத்பர்யாபாவாதிதி |
தததிஸ் தவீய:,ததர்த ப்ரதீதே: ஸ்வதஸ் : ப்ராமாண்யாத், அநபவாதத்வாத்,
“யாநி நாமாநி கௌணாநி”,
“ஆஸ்ய ஜாநந்தோ நாம சித்விவக்தந” இத்யாதிநா பகவத் குண ஜ்ஞாபந தாத்பர்யாவகமாச்ச

மந்த்ரவத் ஸாஸ்த்ராந்ர ப்ரமிதி பகவத் குண ஸ்மாரகத்தவ அபி ந குணாபஹார:, ஸுத்ருட ப்ரமாண ஸித்தத்வாத் |
அத ஏவஹ் யத்ர உபோத்கத நிமநயோ : குணாதி ப்ரகர்ஷம் ப்ரதிபாத்ய- ஸுத்ரடய்ய ச மத்யே தத் ஸ்மரணாய நாமாநி விதீயந்தே |
அமீஷு நாம ஸு அந்யதமமபி ஸர்வஸ்மை பலாய கல்பதே |

அவதாரிகையிலே குணங்களை சொல்லி –
மத்யத்தில் நாமங்களை பட்டியல் இட்டு
ஒவ்வொரு நாம சங்கீர்த்தனத்துக்கும் சர்வ பலனும் உண்டு என்று சொல்லி அமைத்துள்ளார்

ஏக தரஸ்ய பகவச் சாஸ்த்ராதிஷு த்வாதச அஷ்ட ஷட க்ஷராதிஷு மூலமூலி மந்த்ர ரூபேண பரிண மய்ய
ஸ்வாதந்த்ர்யேண ஸர்வார்தேஷு விநியோகாத் “நாம சித் விவக்தந” இத்யே கவசந ஸாஞ்ஜஸ்யாச்ச |
உச்சாரண மாத்ரேண உபகாரிணா மபி(சொன்னாலே -கேசவா என்ன இடர் ஆயன எல்லாம் போகுமே )
நிர்வசநேந குண ப்ரகாஸநே ஜடிதி மந:ப்ரஸாத நத்வம் பாவநத்வம் ச,(அர்த்தம் அறிந்து மனஸ்ஸு தூய்மை அடைந்து சாந்தியும் அடையும் )

நாம நிர் வசநாத் யாயேஷு “அஸ்தவ் ஷீத் நாமபி: வ்யாஸ: ஸைஶிஷ்யோ மதுஸூதநம் |
ஏஷாம் நிருக்தம் பகவந் பரமம் வக்து மர்ஹஸி ||
ஸூஶ்ரூஷோ : ஶ்ரத்ததா நஸ்ய ப்ரஜாபதிபதே: ஹரே : |
ஶ்ருத்வா பவேயம் யத் பூத : ஸ்ரச் சந்த்ர இவா மல: ||”.(சாந்தி பர்வம்)

த்ருத ராஷ்ட்ர: – “பூயோ மே புண்டரீகாக்ஷம் ஸம்ஜய ஆசக்ஷ்வ ப்ருச்சதே | நாம கர்மார்த வித்தாத
ப்ராப்நுயாம் புருஷோத்தமம் ||” இத்யாதவ் த்ரஷ்டவ்யம் |
விநியோகஶ்ச ஏஷாம் லிங்கத : உத்யோக- மோக்ஷ தர்மத வைஷ்ணவ தர்ம நிர் வசநாத் யாயேஷு தத் தந் மந்த்ர கல்பேஷு வசநேப்யஶ்ச அகவந்தவ்ய:|| 13 ||

————

உச்சாரண மாத்ரத்தாலேயே உபகரிப்பவைகளாகிலும் அவற்றின் அர்த்தங்களை ஆராய்ந்து குணங்களை வெளியிடுவதனால்
சீக்கிரம் மனம் தெளிவடைந்து பரம பரிசுத்தமாகும் என்பது
நாம நிர்வசன அத்தியாயங்களில் கண்டு கொள்க
இவற்றை உபயோகிக்கும் முறையை
ஸ்ரீ மஹா பாரதம்
உத்யோக பர்வத்திலும்
மோக்ஷ தர்மத்திலும்
வைஷ்ணவ தர்மத்திலும் உள்ள நிர்வசன அத்யாயங்களிலும்
அந்த அந்த மந்த்ர கல்பங்களிலும் உள்ள வசனங்களினால் தெரிந்து கொள்க

————

விஷ்ணோர் நாம ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹான் ரிஷி
ஸந்தோ அனுஷ்டுப் ததா தேவோ பகவான் தேவகீ ஸூத-14-

அம்ருதாம் ஸூத் பவோ பீஜம் சக்திர் தேவகி நந்தன
த்ரி ஸாமா ஹ்ருதயம் தஸ்ய சாந்த்யர்த்தே விநி யுஜ்யதே–15-

இத் யுபோத்தாத ப்ரகரணம்
அத பஞ்ச ஸித்தாந்த நிஷ்டா நிர்ணயேந, பர வ்யூஹ விவிஸேஷேஷு ஸ்வ நாம -பவ அர்த ப்ரகரண ஒவ்சித்ய-அபௌந ருக்த்ய-ப்ரப்ருதிபி:
ந்யாயைஸ் : வ்யவஸ்தாப்ய, வ்யாகரண-நிருக்த -ஆர்ஷ நிர்வசந ப்ரஸ்தா நேந நாமாநி நிருச்யந்தே |

விஷ்ணும் ஜிஷ்ணும் மஹா விஷ்ணும் பிரப விஷ்ணும் மஹேஸ்வரம்
அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புருஷோத்தமம் —

ரிஷிர் நாம் நாம் –விநி யுஜ்யதே

வேத வ்யாஸர் ஸஹஸ்ர நாமத்தைக் கண்டு அறிந்த ரிஷி
பாதம் ஒன்றுக்கு எட்டு உயிர் எழுத்துக்கள் கொண்ட அனுஷ்டுப் சந்தஸ்ஸில் இது உள்ளது
இதுக்கு பகவான் விஷ்ணு தேவதை -உத்தேசியமான விசேஷம்
அம்ருதாம் ஸூத் பவ -என்பது இம்மந்திரத்துக்கு பீஜம் -ஆதாரம்
தேவகீ நந்தன -என்பது சக்தி –வன்மை
த்ரி ஸாமா -என்பது ஹ்ருதடம் -மையம்
ஸர்வ தோஷ நிவாரணம் என்னும் ப்ரயோஜனத்தில் இம்மந்திரத்துக்கு உபயோகம்

ஆயுதத்துக்கு எக்கு போன்றவை பீஜம்
முனை சக்தி
மையம் ஹ்ருதயம்
சத்ரு வாதம் போன்றவற்றுக்குப் ப்ரயோகம்
இதே போல் மந்திரங்களுக்கும் உண்டே

அஸ்ய  ஸ்ரீ விஷ்ணோர் திவ்ய ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ஸ்ரீ வேத வ்யாஸோ பகவான் ரிஷி அனுஷ்டுப் சந்த

ஸ்ரீ மஹா விஷ்ணு பரமாத்மா ஸ்ரீ மன் நாராயணோ தேவதா

அம்ருதம் ஸூத்பவோ பாநுரிதி பீஜம்
தேவகீ நந்தனஸ் ஸ்ரஷ்டேதி சக்தி
உத்பவ ஷோபணோ தேவ இதி பரமோ மந்த்ர
சங்க ப்ருந் நந்தகீ சக்ரீதி கீலகம்
சார்ங்க தந்வா கதா தர இத்யஸ்த்ரம்
ரதாங்க பாணி ரஷோப்ய இதி நேத்ரம்
த்ரி ஸாமா ஸாமக ஸாமீதி கவசம்
ஆனந்தம் பர ப்ரஹ்மேதி யோநி
ருது ஸூ தர்சநஸ் கால இதி திக் பந்த
ஸ்ரீ விஸ்வரூப இதி த்யானம்
ஸ்ரீ மஹா விஷ்ணு கைங்கர்ய ரூபே ஸ்ரீ சஹஸ்ர நாம ஜபே விநியோக –

———

ஸூக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ந உப ஸாந்தயே –1-
யஸ்ய த்விரத வக்த்ராய பாரி ஷத்யா பரச்சதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தமாஸ்ரயே –2
வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ரம் அகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்-3
வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம-4
அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே-5
யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணவே ப்ரப விஷ்ணவே-6

ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே

ஸூக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ந உப ஸாந்தயே –1

ஸர்வ விக்னம் உபசாந்தி அர்த்தத்துக்கு
வெண் பட்டாடை அணிந்து
எங்கும் நிறைந்து
சந்த்ர வர்ணன் -ஆஹ்லாத கரத்வம்
நான்கு திருத்தோள்கள் உடன் விளங்கி
பிரஸன்ன வதனம் -மதுர வீக்ஷணம் -பேசத் துடிக்கும் அதரம் –
த்யாயேத் -த்யானிப்பாய்
அதுக்கு ஏற்ற ஸூபாஸ்ரய திரு மேனியை வர்ணித்து –
வேப்பன்குடி நீரையோ குடிக்கச் சொல்கிறது
பாலைக் குடிக்கக் காலைப் பிடிக்கிறார்

——–

யஸ்ய த்விரத வக்த்ராய பாரி ஷத்யா பரச்சதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தமாஸ்ரயே –2

யஸ்ய விரத -யானை முகம் -கஜேந்திர -மங்கள ஸ்லோகம் -விஷ்வக் சேனர் –
நூறு நூறு பிரதானர்கள் கொண்டவர்
வாசல் காப்பார் உடன் கூடிய விஷ்வக் சேனரை ஆஸ்ரயிப்போம்
விக்னங்கள் தொலையவே விஷ்வக் சேனர் ஆராதனம் தொடங்குகிறோம்
முதல் ஸ்ரீ வைஷ்ணவர் இவரே
நம்மாழ்வார் தொண்டர் தொண்டர் சடகோபன் பெருமை கொண்டவர்

———

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ரம் அகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்

வ்யாஸம் -கிரந்த கர்த்தா பரம்பரை -வந்தே கிரியா பதம்
வசிஷ்ட நப்தாரம் -பேரனுக்குப் பிள்ளை
ப்ரஹ்மா வசிஷ்டர் தொடங்கி -சக்திக்கு பேரன்-அகல்மஷம் குற்றம் அற்ற -பராசர மகரிஷிக்கு பிள்ளை

———

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம

வ்யாஸாய –நமோ நம -மீண்டும் நமஸ்காரம்
வசிஷ்டர் குலம் -விஷ்ணு அவதாரம் -விஷ்ணு ரூபாயா நம
முக்ய அவதாரம் –
ஸ்வரூப ஆவேச -சக்தி ஆவேச அவதாரங்கள்
வ்யாஸ ரூபாய விஷ்ணுவே நம
ப்ரஹ்ம ஞானம் நிதி இவரே

———

அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே

அவிகாராய -ஸ்வரூபத்தாலும் ஸ்வ பாவத்தாலும் -ரூபத்தாலும் விகாரம் இல்லையே
ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரம் இல்லை –
தளிர் புரையும் -ஸ ஏகாகி ந ரமேத -கர்மாதீனம் இல்லை கிருபாதீனம் இவை
ஸூத்தாயா
நித்யாய –
பத்த முக்த நித்ய இதர ஸமஸ்த விலக்ஷணன்
பரமாத்மனே -இவன் ஒருவனே
நம
ஸதா ஏக ரூப ரூபாய -ஸ்வரூபம் உருவான -அந்தாம –கண்கள் சிவந்து -விஜூர ப்ரமோத -பக்தர் அதீனம்
விஷ்ணவே -சர்வ ஜிஷ்ணவே -எங்கும் வியாபித்து வெற்றி அளிப்பவன்

——–

யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணவே ப்ரப விஷ்ணவே

யஸ்ய ஸ்மரணம் மாத்ரத்தால் ஜென்ம ஸம்ஸார பந்தம் விமுச்யதே
நமஸ் தஸ்மை விஷ்ணவே நம

இங்கும் ஆறு ஸ்லோகங்கள்
ஆறு பத்துக்களில் திருவாய் மொழியில் எல்லாம் உண்டே

——–

த்யானம்

ஷீரோ தந்வத் பிரதேச சுசி மணி விலஸத் ஸைகதே மௌக்தி நாம்
மாலா க்லுப்தாஸ நஸ்த ஸ்படிக மணி நிபைர் மௌக்திகைர் மண்டிதாங்க

சுப்ரை ரதப்ரை ருபரி விரசிதைர் முக்த பீயூஷ வர்ஷை
ஆனந்தீ நஸ் புநீயாதரி நளின கதா சங்க பாணிர் முகுந்த–

1-ஷீரோ தந்வத் பிரதேச —முகுந்த-

பரிசுத்தமான ரத்னங்களாலே பிரகாசிக்கிற மணல் குன்றுகளை யுடைய திருப்பாற் கடலில்
முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட திவ்ய ஆஸனத்தில் எழுந்து அருளி இருப்பவரும்
ஸ்படிக மணி போல் விளங்குகிற முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட திரு மேனியை யுடையவரும்
மேலே ஸஞ்சரிக்கிற வெண்மையான அநேக மேகங்களால் வர்ஷிக்கப் பட்ட –பீயூஷ வர்ஷை-அம்ருத தாரைகளாலே ஸந்தோஷிப்பவரும்
சக்ரம் பத்மம் கதை சங்கம் ஆகிய இவைகளைத் திருக் கரங்களில் யுடையவரும்
பக்தர்களுக்கு முகுந்த-போக மோக்ஷங்களை அளிப்பவருமான
ஸ்ரீ மன் நாராயணன் நம்மைப் பரிசுத்தம் ஆக்க வேண்டும்

———

2-பூ பாதவ் யஸ்ய நாபிர் வியத ஸூரா நிலஸ் சந்த்ர ஸூர்யவ் ச நேத்ரே
கர்ணா வாஸாஸ் சிரோ த்யவ்ர் முகமபி தஹநோ யஸ்ய வாஸ்தேயமப்தி

அந்தஸ்தம் யஸ்ய விஸ்வம் ஸூர நரகககோ போகி கந்தர்வ தைத்யை
சித்ரம் ரம் ரம்யதே தம் த்ரி புவந வபுஷம் விஷ்ணும் ஈசம் நமாமி-

பூ பாதவ் யஸ்ய —விஷ்ணும் ஈஸம் நமாமி

யாருக்கு பூமி திருவடிகளோ
ஆகாசம் நாபியோ
வாயு பிராணனோ
சந்த்ர ஸூர்யர்கள் கண்களோ
திசைகள் காதுகளோ
ஸ்வர்க்கம் திருமுடியோ
அக்னி திரு முக மண்டலமோ
கடல் நாபியின் கீழ் பாகமோ –வாஸோயம் என்பது பதம் -இந்தக்கடல் யாருக்கு ஆடையோ
தேவர்கள் மனிதர்கள் பக்ஷிகள் பசுக்கள் பாம்புகள் கந்தர்வர்கள் அஸூரர்கள் இவர்களால்
பலதரப்பட்ட இந்த உலகு எவருடைய உதரத்தில் களிப்புடன் இருக்கின்றதோ
மூன்று புவனங்களையும் திருமேனியாக யுடையவரும்
ஸர்வ ரக்ஷகரான ஸ்ரீ விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

விராட் ஸ்வரூப வர்ணனை -தியானிக்க விஸ்வ ரூபம் -தெரியாத 14 லோகங்களைக் கொண்டு தியானிக்க முடியாதே
கோல மேனி -திவ்ய மங்கள விக்ரஹம் தியானிக்க -பரிக்ஷித்துக்கு ஸூகர்-

பவ்வ நீருடை யாடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா
செவ்வி மாதிரமெட்டும்  தோளா வண்டம் திரு முடியா நின்றான் பால் செல்ல கிற்பீர்
கவ்வை மா களிருந்தி விண்ணி ஏற்றிக் கழல்  மன்னர் மணி முடி மேல் காகமேறத்
தெய்வ வாள் வலங்கொண்ட சோழன்  சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே –6-6-3-திருநறையூர் எம்பெருமானை மங்களாசாசனம்

திருமுடியா நின்றான் (6. 6: 3) (பவ்வம் – கடல்: உடை ஆடை – அரையில் உடுத்தும் பீதாம்பரம்; பார் அகலம்-பூமிப்பரப்பு; பவனம்-வாயு மெய்-திருமேனி, செவ்வி-அழகிய, மாதிரம்-திசை; தோள்-புயம்; அண்டம்-அண்ட பித்தி; திருமுடி-திருஅபிஷேகம்! என்று அவன் ஜகத்ஸ்வரூபியாய் இருக்கும் தன்மையை அழகிய உருவகத்தால் அநுபவித்து மகிழ்கின்றார். எங்கும் பரவி (விபு) நிற்கும் எம்பெருமானுக்குக் கடல் நீர் அரையில் உடுக்கும் பீதாம்பரமாகின்றது; பூமிப் பரப் பெல்லாம் திருவடியாகின்றது; வாயுவெல்லாம் திருமேனி யாகின்றது; எட்டுத் திசைகளும் திருத்தோள்களாகின் றன; அண்டகடாகம் திருமுடியாகின்றது. ஆக இவ் வகைகளினால் ஜகத்ரூபியாயிருக்கின்ற எம்பெருமான்

—————–

3-சாந்தாகாரம் புஜக சயனம் பத்ம நாபம் ஸூரேசம்
விஸ்வா தாரம் ககந ஸத்ருசம் மேக வர்ணம் ஸூப அங்கம்

லஷ்மீ காந்தம் கமல நயனம் யோகி ஹ்ருத் த்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவ பய ஹரம் ஸர்வ லோக ஏக நாதம்

சாந்தாகாரம் —–ஸர்வ லோக ஏக நாதம்
சாந்தமான ஆகாரத்தை யுடையவரும்
ஆதி சேஷன் மீது பள்ளி கொண்டவரும்
தாமரை பூத்த திரு நாபியை யுடையவரும்
தேவர்களுக்குத் தலைவரும்
விச்வா தாரம் -விஸ்வத்துக்கு ஆதாரமாக -விஸ்வமே வடிவாக யுடையவரும்
ஆகாசத்தைப் போல் எங்கும் நிரம்பி இருப்பவரும்
நீல மேகம் போன்ற வடிவம் யுடையவரும்
உத்தம லக்ஷணங்கள் பொருந்திய அங்கங்கள் யுடையவரும்
லஷ்மீ பதியும்
செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவரும்
யோகிபிர் த்யான கம்யம் -யோகிகளால் தியானத்தால் அடையப்படுபவரும் என்றும்
யோகிகளுடைய ஹ்ருதயத்தில் தியானத்தினால் அறியப்படுபவரும்
பிறவியின் பயத்தைப் போக்குபவரும்
ஸகல லோகங்களுக்கும் தலைவருமான
விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன்

———-

4– மேகஸ்யாமம் பீத கௌஸேயா வாஸம் ஸ்ரீ வத் சாங்கம் கௌஸ்துப உத்பாஸி தாங்கம்
புண்யோபேதம் புண்டரீகாய தாக்ஷம் விஷ்ணும் வந்தே ஸர்வ லோக ஏக நாதம் —

மேகஸ்யாமம் –ஸர்வ லோக ஏக நாதம்
நீல மேகம் போன்ற கரிய திரு மேனியை யுடையவரும்
பீதாம்பரத்தைத் தரித்தவரும்
ஸ்ரீ வத்ஸம் என்னும் மறுவை அடையாளமாக யுடையவரும்
கௌஸ்துபம் என்னும் மணியினால் பிரகாசிக்கின்ற அங்கத்தை யுடையவரும்
புண்ய புருஷர்களால் சூழப் பட்டவரும்
தாமரை மலர் போன்ற விசாலமான திருக் கண்களை யுடையவரும்
ஸர்வ லோகங்களுக்கும் ஒப்பற்ற தலைவருமான
ஸ்ரீ யபதியை நமஸ்கரிக்கிறேன் –

———–

ஸ சங்க சக்ரம் ஸ கிரீட குண்டலம் ஸ பீத வஸ்த்ரம் ஸராஸீ ருஹ ஈஷணம்
ஸ ஹார வக்ஷஸ்தல ஸோபி கௌஸ்துபம் நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்ப்புஜம்

திவ்ய ஆயுதங்கள்
திவ்ய ஆபரணங்கள்
மஞ்சள் பட்டாடை சாத்தி
ஸ்ரீ கௌஸ்துபம் சாத்தி
விஷ்ணுவை வணங்குவோம்

சாயாயாம் பாரி ஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸ நோபரி
ஆஸீ நமம் புதஸ் யாமம் ஆயாதாஷாம் அலங்க்ருதம்

சந்த்ராநநம் சதுர் பாஹும் ஸ்ரீ வத் ஸாங்கித வக்ஷஸம்
ருக்மிணீ ஸத்ய பாமாப்யம் ஸஹிதம் கிருஷ்ணம் ஆஸ்ரயே –

தங்க ஸிம்ஹாஸனம்
பாரிஜாத கொடிக்கு கீழே
மேக ஸ்யா மளன்
ஆயாதாஷா -நீண்ட அப் பெரிய வாய திருக் கண்கள்
நான்கு திருத்தோள்கள்
ஸ்ரீ வத்ஸவம் திரு மார்பில்
ருக்மிணி சத்ய பாமை பிராட்டிமார் ஸஹிதம்

————

ஆறாவது கேள்விக்கு பீஷ்மர் பதில் முதலில்
ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸ்ஹஸ்ரேண புருஷ ஸததோத்தித
பழுதே பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
அசந்நேவ ஸ் பவதி –

அடுத்து 3/4 கேள்விகளுக்கு பதில்
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –சர்வ துக்காதி கோ பவேத்
ஜப ஆலம்பனம்-ஸஹஸ்ர நாமம்
பக்த்யா அர்ச்சயன்
பக்த்யா த்யாயன்
பக்த்யா ஸ்துவன்
பக்த்யா நமஸ்யன்
அச்சுதா அமரர் ஏறே –என்னும் இச்சுவை
பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -திருவாய் -10-4-1-
வணக்குடை தவ நெறி -1-3-5-
ஸ்ததம் கீர்த்தயந்தோமாம் நமஸ் யந்தஸ் சமாம் பக்த்யா -ஸ்ரீ கீதை -9-14
மன்மநாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு -ஸ்ரீ கீதை -9-4
காரணந்து த்யேய
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே —
நாரணன் எம்மான் பாரணங்காளன் வாரணம் தொலைத்த காரணன் தானே –
தானே யுலகெல்லாம் -தானே படைத்திடந்து தானே யுண்டுமிழ்ந்து தானே யாள்வானே
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
ப்ரஹ்ம வித் ஆப்நோதி பரம்
யஜ்ஞென தானேன தபஸா நோசகேன-
வியாசரும் -ஆலோத்யா சர்வ சாஸ்த்ராணி விசார்யச புன புன
இதமேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயோ நாராயணஸ் சதா –
ஆலம்பனம் -கூராழி வெண் சங்கேந்தி
வேர் சூடுமவர் மண் பற்று கழற்றாதாப் போலே
ஜ்ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் –

தர்மரின் மூன்றாவது கேள்விக்கு -கம் ஸ்துவந்த –
பீஷ்மர் –
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –
அநாதிநிதனம் விஷ்ணும் சர்வலோக மகேஸ்வரம்
லோகாத் யஷம் ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் –
ப்ரஹ்மணயம் சர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்தநம்
லோகநாதம் மஹத் பூதம் சர்வ பூத பவோத் பவம் –
10 அடை மொழிகள்
1-அநாதிநிதனம் -ஆதி அந்தம் இல்லாதவன் -தேச கால வஸ்து பரிச்சேதன்
2-விஷ்ணும் -வ்யாப்தி
3-சர்வலோக மகேஸ்வரம்
4-லோகாத் யஷம் -அனைத்தையும் கண்களால் காண்பவன்

5-ப்ரஹ்மணயம் -வேத பிரதிபாத்யன்
6-சர்வ தர்மஜ்ஞம் –
7-லோகாநாதம்
8-மஹத் பூத்
9-கீர்த்தி வர்த்தநம்
10- சர்வ பூத பவோத் பவம் -ஆதி காரணன் –
ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் -ஸ்துவந்த கம் கேள்விக்கு இப்படி பீஷ்மர் பதில் அருளுகிறார்
யதாததாவபி குண சங்கீர்த்த்தனம் குர்வன்-ஏதோ ஒரு முறையில் திவ்ய நாம திருக் குணங்களைப் பாடுதல் –

இனி ஐந்தாம் கேள்விக்கு -கோ தர்ம சர்வ தர்மாணாம் -பதில்
ஏஷ மே சர்வ தர்மாணாம் தர்மோதி கதமோ மத ‘
யத் பக்த்யா புண்டரீ காஷம் ஸ்தவைரச் சேன்நரஸ் ஸதா –
ஏஷ -மேலே சொல்லப்பட்ட அர்ச்சன ஸ்தவ நாதிகளால்-அன்புடன் பூஜிக்கை –
அதிகதம -மிகச் சிறந்த தர்மம்
யத் பக்த்யா -ப்ரீதி உட் கொண்ட -ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் –
அர்ச்சேத் -ஆராதிப்பவன்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
சதா -கால தேச சுத்தி வேண்டா
அபஹத பாப்மா -அமலன் -விமலன் -நிமலன் -நின்மலன் –
அவன் திரு உள்ளம் உகந்து -விதி வாய்க்கின்று காப்பாரார் –
ஸ்வாராதன் –
கலௌ சங்கீர்த்ய கேசவம் –

அடுத்து கிம் வாப்யேகம் பராயணம் –உபேயம் பற்றி கேள்விக்கு பதில் –
1-பரமம் யோ மஹத் தேஜ–பரம் -மஹத் இரண்டு விசேஷணங்கள்-கோடி சூர்ய சம ப்ரப-
2- பரமம் மஹத் தப -தப -நியந்தா பொருளில்
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
3-பரமம் மஹத் ப்ரஹ்ம -ஸ்வரூப ப்ருஹத்வம் குண ப்ருஹத்வம் –
ப்ரஹ்மணத்வம் -தன்னை கிட்டியவரை தன்னைப் போலே பெரிதாக்க வல்லவன் –
4-பரமம் பராயணம்
5-பவித்ரானாம் பவித்ரம்
மாதவன் என்று ஓத வல்லீரேல் தீதொன்றும் சாரா
வாயினால் பாடி -..போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்

ஹரிர் ஹரதி பாபானி
தத்யதா இஷீக தூல மக்நௌ ப்ரோதம் ப்ரதூயதே -சாந்தோக்யம்
பவித்ரங்களுக்கும் பவித்ரம் அவனே
6- மங்களா நாஞ்ச மங்களம் –

இனி கிமேகம் தைவதம் லோகே -முதல் கேள்விக்கு பதில் –

தைவதம் தேவதா நாம் ஸ -என்று தொடங்கி
மனிதர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ -திருவாய் -8-1-5-
லோக ப்ரதானச்ய – ஜகன்நாதச்ய
சர்வ பாபபயாபஹம் நாம சஹச்ரம்

ஸ்ருணுமே-கேள் -தர்மா -தட்டி எழுப்பி சொல்கிறார் பீஷ்மர்
கௌணாநி -குண சேஷ்டிதங்கள்
விக்யாதாநி -பிரசித்தமானவை
ரிஷிபி -சநகர் நாரதர் போல்வார்
பரிகதாநி -எல்லா திக்குகளிலும் அத்யந்த சிநேக பக்திகளுடன் பாடப்பட்டவை
பூதயே -வாழ்ச்சியின் பொருட்டு
பூ சத்தாயாம்
கடல் வண்ணன் பூதங்கள் -திருவாய் -5-2-1-
மஹாத்மநா-தனக்கும் தன் தன்மை அறிவரியான் –
அஹம் வேத்மி மகாத்மா
அப்ரமேயம் ஹி தத்தேஜ –

கிம் ஜபன் முச்ச்யதே உபோத்காதம்

பத்தோ முச்யேத பந்த நாத்யாதி ப்ரஹ்ம ஸநாதநம் -என்று
சம்சார பந்தம் நிவ்ருதியும்
ப்ரஹ்ம பிராப்தியும்
பலமாக சொல்லி முடிகிறது

யதோபாசனம் பலம்
சூழ்ந்து இருத்து ஏத்துவர் பல்லாண்டு -பல்லாண்டு இங்கே -அதே பலன் அங்கும்


ஸூபாஸ்ரியமான பகவத் விக்ரகம் தான் —
குக்ய தமம் ரஹச்யங்களில் உயர்ந்தது திரு நாம சங்கீர்த்தனம்

தேவோ நாம ஸஹஸ்ரவான் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –

தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய வப்பனே –திருவாய் 8-1-10-

தமர் உகந்தது எப்பேர் அப்பேர் –

அமரர் நன்னாட்டு அரசு ஆள பேர் ஆயிரமும் ஓதுமின்கள் -ஸ்ரீ பெரிய திருமொழி -1-5-10–

இனமலர் எட்டும் இட்டு இமையோர்கள் பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும்
பிரிதி சென்று அடை நெஞ்சே –ஸ்ரீ பெரிய திருமொழி –1-2-7-

ஓதி ஆயிர நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல் ஏதமின்றி நின்று அருளும்
நம் பெரும் தகை இருந்த நல் இமயத்து -1-2-9-

பேர் ஆயிரமுடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே -1-5-4-

பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவையாயினான் பேருமோர் ஆயிரம்
பேச நின்ற பிறப்பிலி பெருக்குமிடம் –திருவேங்கடம் -1-9-7–

வென்றி கொள் வாள் அவுணன் பகராத அவன் ஆயிர நாமம்-2-4-7-

வருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான்
திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர் -3-2-4-

அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடே திண் திறல் பாட வருவான் சித்திர கூடத்துள்ளானே -3-3-3–

ஓதி ஆயிர நாமமும் பணிந்து ஏத்தி நின்னடைந்தேற்கு -3-5-9-

எண்ணில் பேராளன் பேர் அல்லால் பேசாள் -5-5-7-

ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலை கடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தான் -5-7-6–

தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளார் ஏத்த நின்ற பேராளன்
ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கும் மணவாளன் பெருமை -6-6-9-

அமுதம் கொண்ட பெருமான் திரு மார்பன் –நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-3–

தேனும் பாலும் அமுதமாய் திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே -6-10-6-

பேர் ஆயிரமுடைய பேராளன் பேராளன் என்கின்றாளால் -8-1-6-

திருக் கண்ணபுரத்து உறையும் பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே -8-3-9–

ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து –11-3-8-

பெற்றாரார் ஆயிரம் பேரானை பேர் பாடப் பெற்றான் கலியன் ஒலி செய் தமிழ் மாலை -11-3-10-

உலகு அளந்த யும்பர் கோமான் பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே -11-6-5-

————————–

திருக் கோட்டியூர் கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா வென்று பேசுவார் அடியார்கள்
எந்தம்மை விற்கவும் பெறுவார்களே-பெரியாழ்வார் திருமொழி-4-4-19-

கேசவா புருடோத்தமா வென்றும் கேழலாகிய கேடிலீ என்றும் பேசுவார் எய்தும்
பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே -பெரியாழ்வார் திருமொழி-4-5-1–

—————————-

பேரும் ஓர் ஆயிரம் பிற பலவுடைய எம்பெருமான் பேரும் ஓர் உருவமும்
உளதில்லை இலதில்லை பிணக்கே -ஸ்ரீ திருவாய்மொழி-1-3-4-

பலபலவே யாபரணம் பேரும் பலபலவே பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில் பல பல -2-5-6–

நாமங்கள் ஆயிரமுடைய நம் பெருமான் -5-8-11-

ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற–6 -7 -2 –

ஓர் ஆயிரமாய் உலகு ஏழு அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையன் காராயின
காள நன்மேனியினன் நாராயணன் நங்கள் பிரானே -9-3-1-

ஆயிரம் பேருடை யம்மான் நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி அறியோமே-10-1-2–

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே -10-5-8–

——————–

நின்றதுவும் வேங்கடமே பேர் ஓத வண்ணர் பெரிது-ஸ்ரீ முதல் திருவந்தாதி -39-

நினைத்தற்கு அரியானைச் சேயானை ஆயிரம் பேர் செங்கண் கரியானைக் கை தொழுதக்கால் -65-

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர்– ஸ்ரீ இரண்டாம்-73-

நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே –ஸ்ரீ மூன்றாம் -8-

தேசம் திறலும் திருவும் உருவமும் மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத நலம் புரிந்து சென்று அடையும் நன்கு -10-

தான் ஒரு கை பற்றி அலையாமல் பீறக்கடைந்த பெருமான் திரு நாமம் கூறுவதே யாவர்க்கும் கூற்று–ஸ்ரீ நான்முகன் -49-

பேர் பாடி செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் -88-

—————–

திரைக் கண் வளரும் பேராளன் பேரோதச் சிந்திக்க -ஸ்ரீ பெரிய திருவந்தாதி–59-

—————

பேர் ஆயிரமுடையான் என்றாள்—பேர் ஆயிரமுடையான் பேய்ப்பெண்டீர் நும் மகளை தீரா நோய் செய்தான் என உரைத்தாள் —
செங்கண் நெடியானைத் தேன் துழாய்த் தாரானை தாமரை போல் கண்ணானை எண்ணரும் சீர்ப் பேர் ஆயிரமும் பிதற்றி
பெரும் தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல் –ஸ்ரீ சிறிய திருமடல்

—————————————————————————————————————————

திரு நாமத் தொகுப்பு
1—பரத்வ பரமான திரு நாமங்கள் -1-122-

1-1-வ்யாப்தி -சர்வேஸ்வரத்வம்-1-4-குணத்தால் நிறைந்தவன் -எங்கும் பரந்து ஆள்பவன் –

1-2-சர்வ சேஷித்வம் -5-9-தானே உலகு எல்லாம் –தானே படைத்து அழித்துக் காப்பவன்

1-3-தோஷம் தட்டாத பரமாத்மா -10-11-குற்றம் அற்றவன் -ஒப்பிலி அப்பன் –

1-4-முக்தர்களுக்கு பரம கதி -12-17-முக்தர்களால் அடையத் தக்கவன் –

1-5-முக்திக்கு உபாயம்-18-19-முக்திக்கு வழி –

1-6-சேதன அசேதன நியாமகன் -20-முக்திக்கு வழி –

1-7-சமஸ்த இதர விலஷணன் -21-65-அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –

1-8-த்ரிவித சேதன வ்யதிரிக்தனும் நியாமகனும் 66-88-அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –

1-9-உபாய உபேய ஸ்வரூபி -89-100-ஆறும் பேறும் அவனே -மருந்தும் விருந்தும் அவனே –

1-10-ஆஸ்ரித வத்சலன் -101-122-ஆறும் பேறும் அவனே -மருந்தும் விருந்தும் அவனே –

————————

2—வ்யூஹ நிலை பரமான திரு நாமங்கள் -123-146-
123-128 -ஆறு குணங்கள் –129-138-மூவரின் முத் தொழில்கள் – 139-146-நால்வரின் நான்கு தன்மைகள் –

சங்கர்ஷணன் ——–123-124——–2 திரு நாமங்கள்
பிரத்யும்னன் ———125-126———2 திரு நாமங்கள்
அநிருத்தன் ———-127-146———20 திரு நாமங்கள்

—————————–

விஷ்ணு —————-147-170——–24 திரு நாமங்கள்
ஷாட்குண்யம் ———–171-187———17 திரு நாமங்கள்
ஹம்சாவதாரம் ———-188-194———-7 திரு நாமங்கள்
பத்ம நாபன் ————195-199———-5 திரு நாமங்கள் –
நரசிம்ஹ அவதாரம் ——200-210———11 திரு நாமங்கள்
மத்ஸ்யாவதாரம் ———–211-225——15 திரு நாமங்கள்
உபநிஷத் திரு நாமங்கள் —226–246—–21 திரு நாமங்கள்
நாராயணன் ————–247–271—–25 திரு நாமங்கள் –
விஸ்வரூபன் ———————272–300—–29 திரு நாமங்கள் –
வடபத்ரசாயீ —————301–313—–13 திரு நாமங்கள் –
பரசுராமாவதாரம் ———-314-321——-8 திரு நாமங்கள் –
கூர்மாவதாரம் ————-322–332—–11 திரு நாமங்கள் –
வாஸூ தேவன் ————333–344—–12 திரு நாமங்கள் –
திவ்ய மங்கள விக்ரஹம் —-345–350——6 திரு நாமங்கள் –
பகவானின் ஐஸ்வர்யம் ———-351–360——10 திரு நாமங்கள்
ஸ்ரீ லஷ்மீபதி ——————361–384——-24 திரு நாமங்கள்
த்ருவ நாராயணன் ————-385–389——–5 திரு நாமங்கள்
ஸ்ரீ ராமாவதாரம் —————380–421——-32 திரு நாமங்கள் –

———————————————————————-

3-1–விஷ்ணு அவதாரம் -147-152-ஸ்ரீ மஹா விஷ்ணு -முதல் அவதாரம் -முதலாம் திரு உருவம் –முதலாவான் ஒருவனே –

3-2- வாமன அவதாரம் -153-164-

3-3-துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் -165-170-அவதரித்துக் காப்பவன் -இனியவன் –

3-4-பர வ்யூஹ விபவ மூன்றுக்கும் பொதுவான ஞான பலாதி ஆறு குணங்கள் உள்ளமை சொல்வது -171-181-

3-5-குணங்களுக்கு ஏற்ற செயல்களைச் சொல்வது -182-186-குணங்களுக்கு ஏற்ற அவதாரச் செயல்கள் –

3-6- ஹம்சா அவதாரம் -187-194-

3-7- பத்ம நாப அவதாரம் -195-199- -உந்தித் தாமரை யான் –

3-8-ஸ்ரீ நரசிம்ம அவதாரம் -200-210-

3-9-ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம் -211-225-

3-10- உபநிஷத் பிரதிபாத்ய விராட் ஸ்வரூபம் -226-247-புருஷ சூக்தத்தில் விளக்கப்பட்ட திரு நாமங்கள் –

3-11-சித் அசித் இவைகளாலான ஐஸ்வர்ய பூர்த்தி -248-271-யானே நீ என்னுடைமையும் நீயே —

3-12-விஸ்வரூபம் -272-300-பெருமைகளை வெளிப்படுத்தும் விஸ்வரூபம் –

3-13-ஸ்ரீ வடபத்ர சாயி -301-313-ஆலமா மரத்தின் இல்லை மேல் ஒரு பாலகன் –

3-14-ஸ்ரீ பரசுராம ஆவேச சக்தி அவதாரம் -314-321-பரசுராமரா -அல்லது கோபத்தின் உருவமா –

3-15-ஸ்ரீ கூர்ம அவதாரம் -322-327-அனைத்தையும் தாங்கும் ஆமை –

3-16-ஸ்ரீ பர வாசுதேவன் -குண வாசகம் -333-344-ஸ்ரீ பர வாசூதேவனின் குணங்கள் –

3-17–ஸ்ரீ பர வாசுதேவன் -ரூப வாசகம் -345-350-ஸ்ரீ பர வாசூதேவனின் திருமேனி –

3-18-ஸ்ரீ பர வாசுதேவன் -விபூதி -351-360-ஸ்ரீ பர வாசூதேவனின் – செல்வம் –

3-19-ஸ்ரீ பர வாசுதேவன் -ஸ்ரீ லஷ்மி பதித்வம் -361-379-ஸ்ரீ பர வாசூதேவன் -ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் –

3-20-சேதனர் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை -380-384-கருவியும் காரணமும் இயக்குமவனும் செய்பவனும் அவனே-

3-22-ஸ்ரீ த்ருவ -385-389-ஸ்ரீ த்ருவனும் நஷத்ர மண்டலமும் –

3-23-ஸ்ரீ ராம அவதார -390-421-மாண்டவரையும் உயிர்ப்பிக்கும் ஸ்ரீ இராமன் –

————————–
ஸ்ரீ கல்கி அவதார——-422-435–13 திரு நாமங்கள்
ஸ்ரீ பகவானின் முயற்சி —-436–452—–17 திரு நாமங்கள் –
ஸ்ரீ நரன் —————–453-456——-4 திரு நாமங்கள் –
அம்ருத மதனம்———457–470—–14 திரு நாமங்கள் –
தர்ம ஸ்வரூபி ———471-528——58 திரு நாமங்கள் –

—————————–

3-24-ஸ்ரீ கல்கி -422-436-

3-25-ஜ்யோதிர் மண்டல பிரவ்ருத்தி தர்ம ப்ரவர்தகன் -437-445-நஷத்ரங்களும் சிம்சூமார சக்கரமும் –

3-26-யஞ்ஞ ஸ்வரூபன் 446-450-

3-27-ஸ்ரீ நர ஸ்ரீ நாராயண -451-457-

3-28- அலை கடல் கடைந்த -458-470-அலைகடல் கடைந்த ஆரமுதம் –

3-29-தர்ம சாஸ்திர -471-502-தர்மத்தின் வடிவம்

3-30-ஸ்ரீ ராம தர்ம ரஷகன் -503-513-தர்மத்தைக் காக்கும் ஸ்ரீ இராமன் –

3-31-பாகவத சாத்வத ரஷகன் -514-519-பாகவதர்களைக் காப்பவன் –

3-32-ஸ்ரீ கூர்ம -520-521-ஸ்ரீ ஆதி சேஷமும் ஸ்ரீ கூர்மமும் –

3-33-ஸ்ரீ அநந்த சாயி -522-523-

3-34-ஸ்ரீ பிரணவ ஸ்வரூபி -524-528-ஸ்ரீ பிரணவ ஓங்கார வடிவினன் –

——————————–

ஸ்ரீ கபில மூர்த்தி -529-543————————–15 திரு நாமங்கள்
சுத்த சத்வம் -544-562————————––19 திரு நாமங்கள்
மஹ நீய கல்யாண குணங்கள் -563-574—————————12 திரு நாமங்கள்
ஸ்ரீ வியாசர் -575-607——————————————————— 33 திரு நாமங்கள்
சுபத் தன்மை -608-625—————————— 18 திரு நாமங்கள்
ஸ்ரீ அர்ச்சாவதாரம் -626-643————————-18 திரு நாமங்கள்
புண்ய ஷேத்ரங்கள் -644-660——————17 திரு நாமங்கள்
சக்திபரம் -661-696—————————————–36 திரு நாமங்கள்

——————

3-35-ஸ்ரீ கபில -அம்ச அவதாரம் -529-538-

3-36- ஸ்ரீ வராஹ -539-543-

3-37-சுத்த சத்வ ஸ்வரூபி -544-568-மேன்மை சொல்லும் ரஹஸ்யமான திரு நாமங்கள் –

3-38-ஸ்ரீ நாராயண -569-574-

3-39-ஸ்ரீ வியாச -575-589-

3-40-தர்மப்படி பலன் அளிப்பவன் -590-606-

3-41-ஸ்ரீ சம்பந்த மங்கள ப்ரதன் -607-629-ஸ்ரீ யபதியே ஸ்ரீ பர ப்ரஹ்மம்-

3-42-ஸ்ரீ அர்ச்சாவதார -630-696–ஸ்ரீ அர்ச்சாவதாரம் -கண்களுக்கு புலப்படும் சௌலப்யம் /சகதீச அவதாரம்
ஸ்ரீ பர ப்ரஹ்மம் பூஜிக்கத் தக்க நற் பண்புகளை உடையவர் –
ஸ்தோத்ரத்தை ஏற்கும் தகுதி உடையவன் –

——————————————-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -697-786———————90 திரு நாமங்கள்
ஸ்ரீ புத்தாவதாரம் -787-810———————————-24 திரு நாமங்கள்
சாஸ்திர வச்யர்களை அனுக்ரஹித்தல் -811-827——————17 திரு நாமங்கள்
பிற விபவங்கள் ————————————828-837—————–10 திரு நாமங்கள்
அஷ்ட சித்திகள்————————————-838-870—————33 திரு நாமங்கள்

————————————–

4-1-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் -697-786-( 770-786-அவதாரத்துக்கு காரணமான ஸ்ரீ வ்யூஹம் -)

4-2-ஸ்ரீ புத்த அவதாரம் -787-810-ஸ்ரீ புத்த அவதாரம் -அசூர நிக்ரஹம் –

4-3-சிஷ்ட பரிபாலனம் -811-825-சாத்விகர்களுக்கு அருளுபவன் –

4-4-அனு பிரவேச ரஷணம் -826-838-எண்ணும் எழுத்தும் –

4-5-அஷ்ட ஐஸ்வர்யங்களை உடையவன் -839-848-ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்யங்களை அருளுபவன் –

——————————

அஷ்ட சித்திகள்———-838-870———33 திரு நாமங்கள்
மோஷ ப்ரதத்வம்——-871-911——–41 திரு நாமங்கள்
ஸ்ரீ கஜேந்திர வரதன் ——912-945——–34 திரு நாமங்கள்

———————————–

5-1-இமையோர் தலைவன் -849-850-

5-2-யோகியர் தலைவன் -851-854-

5-3-யோகத்தில் இருந்து நழுவியவரை உத்தரிப்பவன்–855-861-ஜீவர்களை ஆளுபவன் –

5-4-துஷ்டர்களை நிக்ரஹிப்பவன் -862-870–தீயவர்களுக்கு யமன்

5-5-சாத்விகர் தலைவன் -871-880–சத்வ குணத்தை வளர்ப்பவன் –

5-6-அர்ச்சிராதி -881-891-நெடும் கால ஆசை அர்ச்சிராதி மார்க்கம் –

5-7-மோஷ ஆநந்தம் தருபவன் -892-911-நலம் அந்தமில்லாத நாடு –

5-8-ஸ்ரீ கஜேந்திர மோஷம் -912-945-

———————————

ஜகத் வியாபாரம் ———————–946-992—————47 திரு நாமங்கள்
திவ்யாயூத தாரீ -993-1000———8- திரு நாமங்கள்

——————————–

6- பகவான் செய்யும் செயல்களின் பிரயோஜனம் -946-992-ஸ்ரீ அவதாரத்துக்கும் திரு விளையாடல்களுக்கும் பயன் –
( 971-982-வேள்வியும் பயனும் /983-9920ஸ்ரீ தேவகீ நந்தன் -)

7-திவ்ய ஆயுதங்கள் ஏந்திய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தன் -993-1000-திவ்ய ஆயுதமே திவ்ய ஆபரணம் -கண்ணுள் நின்று அகலாத திரு உருவம் –

——————————————————————————

1-பரத்வ நிலை–1-122

2–வியூக நிலை–123-144

3-விபவ நிலை-

3-1..ஸ்ரீ விஷ்ணு அவதாரம்–145- 152

3-2..ஸ்ரீ வாமன அவதாரம்–153-164

3-3..துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்–165-170

3-4–பகவத் குணங்கள் பேசும் திரு நாமங்கள்..

3-5..பரம் வியூகம் விபவம் மூன்றுக்கும் பொதுவான ஆறு குணங்கள் உள்ளமை சொல்வது–171-181

3-6– குணங்களுக்கு ஏற்ப அவதார செயல்களை சொல்வது–182-186

3-7 –ஸ்ரீ ஹம்ச அவதாரம்–187-194

3-8..ஸ்ரீ பத்ம நாப –ஸ்ரீ விஷ்ணு அவதாரம்-195-199

3-9. ஸ்ரீ நரசிம்ஹ அவதாரம்–200-210

3-10 -ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம்–211-225

3-11—புருஷ சுத்த உபநிஷத் பிரதி பாதித விராட் ஸ்வரூபம்–226-247

3-12.-சித் அசித் இவைகளால் ஆன ஐஸ்வர்ய பூர்த்தி–.248-271

3-13- எல்லை அற்ற பெருமை காட்டும் விஸ்வ ரூபம்-272-300

3-14–ஸ்ரீ வட பத்ர சாயி பிரளய ஆர்ணவத்தில் ஆல் இலை மேல் துயின்றவன்-301-313

3-15- ஸ்ரீ பரசு ராம -ஆவேச சக்த்ய -அவதாரம்–314-321

3-16—ஸ்ரீ கூர்ம அவதாரம்–322-332

3-17–ஸ்ரீ பர வாசுதேவன் -குண வாசகம்–333-344

3-18–ஸ்ரீ பர வாசுதேவன்-ரூப வாசகம்–345 -350

3-19–ஸ்ரீ பர வாசுதேவன்-விபூதி ( செல்வம் ) வாசகம்–351-360

3-20— ஸ்ரீ பர வாசுதேவன்- லக்ஷ்மி பதித்வம்–361 -379

3-21—சேதனர்கள் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை–380-384

3-22— நட்சத்திர மண்டலத்துக்கு ஆதாரமான துருவ மூர்த்தி-385-389

3-23— மிருத சஞ்சீவனமான ஸ்ரீ ராம அவதாரம்-390-405

3-24— மேலும் ஸ்ரீ ராம அவதாரம்–406-421-

3-25-1—தர்ம சொரூபி வேத விகித தர்மங்களை தானும் அனுஷ்டித்து பிறரையும் அனுஷ்டிக்க பண்ணுபவன்–423-502

3-25-2- ஸ்ரீ ராமனாய் தர்ம ரக்ஷகன்—503-513

3-25-3—பாகவத (சாத்வத ) ரட்சகன்-514-519-

3-25-4—ஸ்ரீ கூர்ம ரூபி–520-521

3-25-5– ஸ்ரீ அநந்த சாயி–522-523

3-25-6.-ஸ்ரீ பிரணவ ஸ்வரூபி–524-528

3-25-7—ஸ்ரீ கபில அவதாரமாய் ரட்ஷணம் ( அம்ச அவதாரம்)–529-538

3-25-8– ஸ்ரீ வராஹ அவதாரம்—539-543-

3-25-9- -சுத்த சத்வ சொரூபி பெரு மேன்மை–544 -568

3-25-10– ஸ்ரீ நாராயண விஷயம் அவதாரம்–569-574

3-26– -ஸ்ரீ வியாச அவதாரம் ( வேத சாஸ்திர பிரதாதா )–575-589

3-27- -தருமம் படி பலன் அளிப்பவன்–590-606

3-28-1 -மங்கள பிரதன்- ஸ்ரீ சம்பத்தால் வரும் பரத்வம்-607-625

3-28-2 –மங்கள பிரதன்- ஸ்ரீ சம்பத்தால் வரும் குண யோகம்-626-629

3-29-1-ஸ்ரீ அர்ச்சா அவதாரம் சேதனருக்கு தன்னை காட்டுவது-630-660

3-29-2.-சகதீசன் -.661-664

3-29-3 -எல்லை அற்ற குண விபூதிமான் -மனசினாலும் செய்கை யாலும் ஆராதிக்க படுகை -665-683

3-29-4- -வாத்சல்ய குண பெருக்கு வாக்காலே ஆராதிக்க படுகை–684-696

4-துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்

4-1–ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்-684-786

4-2..ஸ்ரீ புத்த அவதாரம் அசூர நிக்ரகம்-787-810

4-3–தைவ சம்பதுள்ள சிஷ்ட பரி பாலனம் 811-825

4-4–ஜீவன்களை அனுபிரவேசித்து சத் ரட்ஷனம்–826-838

4-5– அஷ்ட ஐஸ்வர்யங்களை உடையவன்/ அவற்றை தருபவன்–839-848

5–ஜீவாத்மாக்களை நிர்வகிக்கும் மேம்பாடு சொல்பவை

5-1-நல்லோர்களை வாழ்ச்சி பெரும் படி செய்யும் திரு நாமங்கள்

5-1-1..நித்யர்களை ஆளும் இமையோர் தலைவன் 849-850

5-1-2–யோகியர் தலைவன்–851-854

5-1-3–யோகத்தில் இருந்து நழுவியவரை உத்தரிப்பவன் 855-861

5-1-4-துஷ்டர்களை நிக்ரகிப்பவன் 862-870

5-2–சத்வ குணத்தை வளர்ப்பவன் -சாத்விகர் தலைவன்–871-880

5-3–ஸ்ரீஅர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் 881-891

5-4-முக்தருக்கு மோட்ஷா நந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் 892-911

5-5-ஆனைக்கு அன்று அருள் ஈந்தவன்- கஜேந்திர மோட்ஷம்-912-945

6-பகவான் செய்யும் செயல்களின் பிரயோஜனம் சொல்பவை -946-992

7-திவ்ய ஆயதங்கள் ஏந்திய திவ்ய மங்கள விக்ரக யுக்தன் -993 -1000

தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள்ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய்
பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய அப்பனே– திருவாய் மொழி -8-1-10-

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் என்னை ஆளுடை அப்பன் எம்பிரான் இத்யாதி -போன்ற பாசுரங்கள் —

March 21, 2019

என்னை ஆளுடை அப்பன் -மன்னாதன் —

என்னை ஆளுடை எம்பிரான் -9-10-6- -திருக்குறுங்குடி எம்பெருமான் -திருமங்கை ஆழ்வார்

———————————–

எந்தை தந்தை தந்தை தம் முத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி வந்து வழி வழி ஆள் செய்கின்றோம் –திருப்பல்லாண்டு -6-

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் நாடுவார் நம்பிரான் எனக்குத்தான் என்பார் –பெரியாழ்வார் திருமொழி -1-1-2–

எந்தம் பிரானார் எழில் திரு மார்வற்கு -1-3-3–

ஆள் கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை-1-6-11–

எம்பெருமான் வாராவச்சோ வச்சோ -1-8-1-/4-

எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் -1-9-2-/8-

ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம் புல்கிய –1-9-10-

எண்ணற்க்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு விடுவன் -2-3-2–

சோத்தம்பிரான் இங்கே வாராய் -2-3-4-

சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் -2-3-5-

சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திருவாயர் பாடிப்பிரானே -2-3-7–

துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே 2-3-8–

நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2-4-1-

இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2-4-2 —

சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் இங்கே வாராய் -2-4-5–

தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா –2-6-3 -/5-

கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா -2-6-6-

தேனில் இனிய பிரானே செண்பகப் பூச் சூட்ட வாராய் -2-7-1-

ஆமாறு அறியும் பிரானே அணி யரங்கத்தே கிடந்தாய் ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச் சூட்ட வாராய் -2-7-8-

எம்பிரான் காப்பிட வாராய் -2-8-3–

வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடையிட்டு அதனோசை கேட்கும் கண்ணபிரான் கற்ற கல்வி –2-9-1-

வஞ்சமகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே –3-1-1-

பொருட்டாயமிலேன் எம்பெருமான் உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் -3-1-7-

ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகலந்தான் என் மகளை பண்ணறையாய் பணி கொண்டு பரிசற வாண்டிடும் கொலோ -3-8-10–

எம்பிரான் வன்மையைப் பாடிப்பற-3-9-1-

நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -3-10-7–

ஆயிரம் பைந்தலையை அனந்த சயனன் ஆளும் மலை -4-3-10-

நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் எம்பிரான் தன சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வனே–4-4-9-

பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே நச்சுமின் நாரணன் தம்மண்ணை நரகம் புகாள்-4-6-4-

என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே–4-9-2-

இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு
அடியவரை ஆள் கொள்வான் அமருமூர் அணி அரங்கமே -4-9-3-

புது நாண் மலர்க்கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் பொது நாயகம் -4-9-4-

செருவாளும் புள்ளாளன் மண்ணாளன் செருச் செய்யும் நாந்தகம் என்னும் ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் விழுக்கையாளன்
இரவாளன் பகலாளன் என்னையாளன் ஏழு உலகப் பெரும் புரவாளன் திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே –4-9-10-

என்னுடைய இன்னமுதே ஏழு உலகும் உடையாய் என்னப்பா –4-10-7-

அடிமை என்னும் அக்கோயின்மையாலே அங்கு அங்கே யவை போதரும் கண்டாய்-5-1-4-

இருக்கு எச்சுச் சாம வேத நாண் மலர் கொண்டுன பாதம் நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே -5-1-6-

எம்பிரான் என்னை ஆளுடைத்தேனே ஏழையேன் இடரைக் களையாயே-5-1-9-

மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார் -5-2-1-

எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டு அன்று பண்ணினோம் காப்பே -5-2-3–

சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் -5-2-4-

பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர் -5-2-6-

பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து போதில் கமல வன் நெஞ்சம் புகுந்து என் சென்னித் தொடரில் பாத இலச்சினை வைத்தார் -5-2-8-

உனக்குப் பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க வென்று
இனக்குறவர் புதியது உண்ணும் எழில் மாலிருஞ்சோலை எந்தாய் 5-3-3-

அன்று வயிற்றில் கிடந்து இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன் இன்று வந்து இங்கு
உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே -5-3-9-

திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்ற பிரான் அடி மேல் அடிமைத்திறம் நேர்பட விண்ணப்பம் செய் –5-3-10-

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் பிறவி என்னும் கடலும் வெற்றி பெரும் பதம் ஆகின்றதால் -5-4-2-

எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்வுலகினில் ஆர் பெறுவார் -5-4-3-

என்னப்பா என்னிருடீ கேசா என்னுயிர்க் காவலனே –5-4-5-

என்னிடை வந்து எம்பெருமான் இனி எங்குப் போகின்றதே -5-4-5-

உன் வாசகமே உருப் பொலிந்த நாவினேனை உனக்கு உரித்து ஆக்கினையே -5-4-7-

தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை யுனக்கு யுரித்து ஆக்கினையே -5-4-9-

வடதடமும் வைகுந்தமும் மதில் துவராவதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5-4-10-

———————————————

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப் பாதிப் பறை கொண்டு ஈம பெரும் சம்மணம் –திருப்பாவை -27-

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது –திருப்பாவை -28-

நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும்
ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -29-

சென்று இறைஞ்சி அங்கு அப் பறை கொண்ட வாற்றை -30-

————————-

அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் துவரைப் பிரானுக்கே
சங்கற்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே –நாச்சியார் திருமொழி -1-3-

ஆழி சங்குத்தமற்கு என்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள் மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -1-5-

பேசுவது ஓன்று உண்டு இங்கு எம்பெருமான் பெண்மையைத் தலையுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருள் கண்டாய் -1-8-

தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூ மலர் தூய்த்து தொழுது ஏத்துகின்றேன் பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே
பணி செய்து வாழப் பெறா விடில் நான் அழுது அழுது அலமந்தம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் -1-9-

புள் வாய் பிளந்த மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று -1-10-

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய -5-10-

இம்மைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் பற்றாவான் நம்மையுடையவன் நாராயணன் நம்பி -6-8-

என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே -8-6-

வேங்கடத்துச் செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் -8-7-

இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் -9-7-

பண மாடு அரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் நம்மை வைத்த பரிசு இது காண்மினே -10-6-

குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை யுடைமாடு கொண்டான் -10-7-

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் -11-3-

கொங்கைத் தலமிவை நோக்கிக் கண்ணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -12-4-

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தர்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என் -13-9-

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை பாரின் மேல் விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் பெரும் தாளுடைப் பிரான் அடிக் கீழ்ப் பிரியாது என்றும் இருப்பாரே -14-10-

———————————————–

அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் அம்மான் தன் அடி இணைக் கீழ் அலர்கள் இட்டு
அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகு நாளே –பெருமாள் திருமொழி -1-3-

என் அரங்கனுக்கு அடியார்களாய் நாத்தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே -2-4-

அரங்கன் எம்மானுக்கே மாலையுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலையுற்றது என் நெஞ்சமே -2-8-

அரங்க நகர் எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே -3-6-

பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே 3-7-

பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே -3-8 –

எம்பெருமான் ஈசன் எழில் வேங்கடமலை மேல் தம்பக்கமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே -4-5-

செம்பவள வாயான் திருவேங்கடம் என்னும் எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே -4-10-

வித்துவக் கோட்டம்மா நீ கொண்டு ஆளாயாகிலும் உன் குரை கழலே கூறுவேனே -5-2-

வித்துவக் கோட்டம்மா நீ ஆளாவுனதருளே பார்ப்பன் அடியேனே-5-4-

எந்தையே என் தன் குலப் பெரும் சுடரே எழு முகில் கனத்து எழில் கவர் ஏறே -7-3-

எண்டிசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ -8-2-

எங்கள் குலத்தின் இன்னமுதே இராகவனே தாலேலோ-8-3-

யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர்த் துயின்றவனே-8-10-

எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ கண் குளிரக் காணு நாளே -10-1-

தில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேன் மற்ற அரசு தானே -10-7-

தில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் அன்றே -10-8-

————————————-

என் ஆவியுள் புகுந்தது என் கொலோ எம்மீசனே –திருச்சந்த -4-

ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ எம்மீசனே -35-

சரந்துரந்த உம்பராளி எம்பிரான்-73-

ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லார் வானம் ஆளவே -78-

வேங்கடம் அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ-81-

ஆழியான் தன் திறத்தோர் அன்பிலா அறிவிலா நாயினேன் என் திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்தே -84-

நின் கழற்கு அலால் நேச பாசம் எத்திறத்தும் வைத்திடேன் எம்மீசனே -107-

அத்தனாகி யன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆள் கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

————————————————–

அறம் சுவராகி நின்ற அரங்கனார்க்கு ஆள் செய்யாதே புறம் சுவர் கோலம் செய்து புள் கவ்வக் கிடக்கின்றீரே –திருமாலை -6-

தண் பரவை மீதே தனி கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண் என் அம்மான் -18-

மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால் அரங்கனார்க்கு ஆள் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே -27-

எம்பிராற்கு ஆள் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே -28-

எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே -30-

எம்பிரானார் அளியன் நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே-37-

—————————————————-

தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும் அடியனை
அளியன் என்று அருளி யுன் அடியார்க்கு ஆள் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே –திருப் பள்ளி எழுச்சி -11-

————————————–

அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆள் படுத்த விமலன் –அமலனாதி -1-

திரு ஆர மார்வதன்றோ அடியேனை ஆள் கொண்டதே -5-

—————————-

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள்—பெரிய திருமொழி -1-1-6-

எந்தை எம்மடிகள் எம்பெருமான் –வதரி யாச்சிரமத்துள்ளானே -1-4-7–

சிங்க வேள் குன்றுடைய எங்கள் ஈசன் எம்பிரானை -1-2-10-

இடவெந்தை மேவிய எம்பிரான் தீர்த்த நீர்த் தடஞ்சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே -1-8-4-

திரு வேங்கடவா நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டு அருளே -1-9-1-
திருவேங்கட மா மலை என் ஆனாய் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-2-
குளிர் மா மலை வேங்கடவா அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-3-
திருவேங்கடவா அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-4-
திரு வேங்கட மா மலை என் அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-5-
திரு வேங்கடவா அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-6-
பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-7-
குளிர் சோலை சூழ் வேங்கடவா ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-8-
கமலச் சுனை வேங்கடவா அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-9-

திருவேங்கடம் மேய என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உள்ளானே-1-10-6-

வேங்கடம் மேவி மாண் குறளான அந்தணர்க்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-1-
வேங்கடத்து அறவன் ஆயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-2-
வேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமீசை அண்டம் ஆண்டு இருப்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-3-
வேங்கட மலை யாண்டு வானவர் ஆவியாய் இருப்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-4-
வேங்கடம் மேவி நின்று அருள் அங்கண் ஆயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-5-
வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-6-
வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும் வானிடை அருக்கன் மேவி நிற்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே 2-1-7-
வேங்கட மலை கோயில் மேவிய ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-8-
தாமரையோனும் ஈசனும் அமரர் காணும் நின்றேதும் வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-9-

எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே-2-2-1-
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-2-4-
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது ஏத்தும் நம்பி எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-2-6-
எங்கள் அப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-2-7-

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக்
குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை அமுதை என்னை ஆளுடை யப்பனை ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்
மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே –2-3-2-

பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும் என் துணை எந்தை தந்தை தம்மானைத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-5-

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய் எம் மாயனே அருளாய் என்னும் இன் தொண்டர்க்கு
இன்னருள் புரியும் இட வெந்தை பிரானை -2-7-10-

மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால் –அணி யாலி யம்மானே -3-5-4-

நிலையாளா நின் வணங்க வேண்டாயேயாயினும் என் முலையாள வொருநாள் உன்னகலத்து ஆளாயே
சிலையாளா மரம் எய்த திரு மெய்யா மலையாளா நீ யாள வலையாள மாட்டோமே-3-6-9-

முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து அங்கு அனையவர்க்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே -4-6-4-

தேவா திரு வெள்ளக்குளத்துள் உறைவானே ஆவா வடியான் இவன் என்று அருளாயே 4-7-9-

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும்மடியோம் -4-9-1-
தேசம் அரிய உமக்கே யாளாய்த் திரிகின்றோமுக்கு -4-9-4-
எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் எழு அளவும் வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரேல் -4-9-9-

குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த அடியவர்க்கு அருளி அரவணைத் துயின்ற ஆழியான் -4-10-9-

அறிவது அரியான் அனைத்துலகும் உடையான் என்னை யாளுடையான் குறிய மாணி யுருவாய
கூத்தன் மன்னி யமரும் இடம் –புள்ளம் பூதங்குடி தானே -5-1-1-
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம் –புள்ளம் பூதங்குடி தானே -5-1-2-

கூற்று ஏருருவின் குறளாய் நில நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் –கூடலூரே-5-2-4-
கலை வாழ் பிணையோடு அணையும் திரு நீர் மலை வாழ் எந்தை மருவுமூர் –கூடலூரே -5-2-8-

நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே–திரு வெள்ளறை நின்றானே -5-3-1-
திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே -5-3-4-
பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள் புரியே –திரு வெள்ளறை நின்றானே -5-3-9-

வானவர் தம் உயிர் ஆளன் ஒலி திரை நீர்ப் பவ்வம் கொண்ட திருவாளன் -5-5-1-
மெய்ய மலை யாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் எழு எய்த வென்றிச் சிலையாளன் -5-5-2-
பூ மேல் மாது ஆளன் குடமாடி மது சூதன் மன்னார்க்காய் முன்னம் சென்ற தூது ஆளன் -5-5-6-
பேர் ஆளன் பேர் அல்லால் பேசாள் இப்பெண் பெற்றேன் என் செய்கேன் நான் தார் ஆளன்
தண் குடந்தை நகராளன் ஐவர்க்காய் அமரில் உய்த்த தேராளன்-5-5-7-
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள் அறவாளன்-5-5-8-

தன்னடைந்த எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம்மனைக்கும் அமரர்க்கு பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே -5-6-8-

அடியேற்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும் ஆயன் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் -5-7-9-

நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -5-8-1/2/3/4/5/6/7/8–
உலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -5-8-9-

தன் தாள் அடைவரேல் அடிமை யாக்கும் செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர்
பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே -5-9-1-
செறி பொழில் தென் திருப்பேர் எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே -5-9-2-
அரவணை மேல் கருவரை வண்ணன் தென் பேர் கருதி நான் உய்ந்தவாறே -5-9-3-
தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர் வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே -5-9-4-
நக்க அரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே -5-9-5-
நலம் கொள் நான் மறை வல்லார்கள் ஒத்து ஒலி ஏத்தக் கேட்டு மலங்கு பாய் வயல் திருப் பேர் மருவி நான் வாழ்ந்தவாறே -5-9-6-
தென் திருப் பேருள் வேலை வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே -5-9-7-
தென் திருப் பேருள் மேவும் எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே -5-9-8-
திருப் பேர்ச் செங்கண் மாலொடும் வாழ்வார் சீல மா தவத்தார் சிந்தை யாளி என் சிந்தையானே -5-9-9-

தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-1-
விண்ணவர் அமுதுண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-2-
நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிற வம்பது வானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-3-
அலை கடல் ஆலிலை வளர்ந்தவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-4-
ஓர் எழுத்துரு வானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-5-
சீர் கெழு நான்மறை யானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-6-
இருக்கினில் இன்னிசை யானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-7-
உனது அடி அணுகுவன் நான் போது அலர் நெடு முடிப் புண்ணியனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-8-
உன் கழல் அடைந்தேன் ஓதல் செய் நான் மறையாகி உம்பராதல் செய் மூவுரு வானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-9-

சிறந்தேன் நின்னடிக்கே அடிமை திருமாலே அறந்தானாய்த் திரிவாய் உன்னை என் மனத்தகத்தே
திரும்பாமல் கொண்டேன் திரு விண்ணகரானே -6-3-2-
சொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ
மல்லா குடமாடீ மது சூதனே உலகில் சொல்லா நல்லிசையாய் திரு விண்ணகரானே -6-3-9-

நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே -6-4-ஒன்பது பாசுரங்களிலும்-கலிகன்றி சொல் மறவாது உரைப்பவர்
வானவர்க்கு இன்னரசர் ஆவரே-6-4-10-

ஆலிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்–திரு நறையூர் மணி மாடம் -6-6-1-
ஈசன் எந்தை இணை அடிக்கீழ் இனிது இருப்பீர் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2-
பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திரு முடியா நின்றான் பால்
செல்லகிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-3-
துகில் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-4-
தன்னுருவில் மூர்த்தி மூன்றாய்த் தான் ஆயனாயினான் சரண் என்று உய்வீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-6-
இலைத்தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக்கீழ் எய்த கிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-7-
வென்றிச் செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் திணித்தான் திருவடி நும்
சென்னி வைப்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-8-
தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன்–திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-9-

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-1-

திருமாலை எம்மானை நன்னீர் வயல் சூழ் நறையூரில் கண்டேனே 6-8-2-

திரு நறையூர்– திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே 6-9-1-/ அடி இணையே அடை நெஞ்சே 6-9-2-/3-/
குரை கழலே அடை நெஞ்சே 6-9-4-
இவ்வுலகு ஏழும் புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே அடை நெஞ்சே 6-9-5-
மின் ஒத்த நுண் மருங்குல் மெல்லியலை திரு மார்வில் மன்னத்தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே 6-9-6-
திரு நறையூர் –தார் தழைத்த துழாய் முடியின் தளிர் அடியே அடை நெஞ்சே 6-9-7-
திரு நறையூர் மலை யார்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி நிலையாரே நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே 6-9-8-
திரு நறையூர் பிறையாரும் சடையானும் பிரமனும் தொழுது ஏத்த இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே 6-9-9-

எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன்
நமரும் உரைமின் நமோ நாராயணமே -6-10-6-
நறையூர் நெடுமாலை நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை –கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10-

நறையூர் நின்ற நம்பி பிறவாமை எனைப் பணி எந்தை பிரானே -7-1-1-
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன் பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே -7-1-2-
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே -7-1-5-
இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -7-1–6-
கதியேலில்லை நின்னருள் அல்லது எனக்கு நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே பதியே பரவித் தொழும் தொண்டர்
தமக்கு கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -7-1-7-
வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும் தொண்டாய்க் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட உண்டே விசும்பு உத்தமம் இல்லை துயரே -7-1-10-

உள்ளே நின்றுருகி நெஞ்சம் உன்னை யுள்ளியக்கால் நள்ளேன் உன்னை யல்லால் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-1-
நாடேன்உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-2-
நன்மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன் மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே -7-2-3-
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப்
போகல் ஓட்டேன் நாண் தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-5-
என்தாதை தாதை அப்பால் எழுவர் பழ வடிமை வந்தார் என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஓட்டேன்
அந்தோ என்னாருயிரே அரசே அருள் எனக்கு நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-6-
யானாய் என் தனக்காய் அடியேன் மனம் புகுந்த தேனே தீங்கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்
நானே எய்தப்ப பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-9-

எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே -7-3-3-
அரங்கம் ஆளி என்னாளி விண்ணாளி-7-3-4-
காதல் செய்து என்னுள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே -7-3-8-

தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும் பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -7-4-4-
தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாரே -7-4-9-

நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை கடியார் காளையர் ஐவர் புகுந்து
காவல் செய்த வக்காவலைப் பிழைத்து குடி போந்து உன்னடிக்கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே -7-7-8-

உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறு புலியூர்ச் சல சயனத்து ஐவார்
அரவணை மேல் உறையமலா வருளாயே -7-9-8 —
கரு மா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா பெருமால் வரை யுருவா பிற உருவா நினதுருவா
திரு மா மகள் மருவும் சிறு புலியூர் சலசயனத்து அருமா கடலமுதே உனதடியே சரணாமே -7-9-9-

கண புரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-

வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே-8-3-1-
கரி வெருவ மருப்பு ஓசித்தார்க்கு இழந்தேன் என் கன வளையே-2-
செங்கண் மால் அம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே -3-
புனர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன் என் பொன் வளையே -4-
தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே -5-
யுகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -6-
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -7-
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே -8-
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே -9-
கண்ண புரத்து எம்மடிகளை திரு மா மகளால் அருள் மாரி செழு நீர் ஆலி வள நாடன்
மருவார் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் -8-6-10-

எம்மானை எம்பிரானை ஈசனை என் மனத்துள் அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே-8-9-1-
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -3-
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடம் குன்றின் மிசை இருந்த அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே -4-
அஞ்சேல் என்று அடியேனை ஆள் கொள்ள வல்லானை –வயலாலி மைந்தனையே -6-

உன்னை உகந்து உகந்து உன் தனக்கே தொண்டனேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால்வேதம் கண்ட கண்ண புரத்துறை அம்மானே -8-10-1-
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன்னடியார்க்கு அடிமை மற்று எல்லாம்
பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே -3-
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல் வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்ண புரத்துறை அம்மானே -9-
கண்ட சீர்க் கண்ண புரத்துறை அம்மானை கொண்ட சீர்த்த தொண்டன் கலியன் ஒலி மாலை -10-

அண்டத்து அமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா -9-2-9–

என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் –அழகாய புல்லாணியே -9-3-1-
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் –புல்லாணியே -2-
ஏது செய்தால் மறக்கேன் –புல்லாணியே -3-
மங்கை நல்லாய் தொழுதும் எழு –புல்லாணியே -4-
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு –புல்லாணியே -5-
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு மா மலர் பாத நாளும் பணிவோம் என் தொழுதும் எழு –புல்லாணியே -6-
பரவி நெஞ்சே தொழுதும் எழு –புல்லாணியே -7-
நாம் தொழுதும் எழு –புல்லாணியே -8-
ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஒளி நமக்கே நலமாதலில்–புல்லாணியே -9-

பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன் -9-4-

முற்று உலகு ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் -9-5-10-

அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -9-10-1-
தெள்ளியார் கை தொழும் தேவனார் மா முந்நீர் அமுது தந்த வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -9-

இண்டையும் புனலும் கொண்டு இடையின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர் அண்டரும் பரவ அரவணைத் துயின்ற
சுடர் குடிக் கடவுள் தம் கோயில் –மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -9-8-2-
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் –மாலிருஞ்சோலை -9-8-9-

வட மா மதுரைப் பிறந்தான் தேசம் எல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற கேசவ நம்பி
தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணுங்கொலோ -9-9-6-
திருமாலிருஞ்சோலை நின்ற வள்ளலை வாழ் நுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ -7-
திருமாலிருஞ்சோலை நின்ற மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே -8-
திருமாலிருஞ்சோலை நின்ற நலம் திகழ் நாரணனை நணுகும் கொலோ என் நன்னுதலே -9-

எங்கள் எம்மிறை எம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர் தங்கள் தம் மனத்துப் பிரியாத
அருள் புரிவான் –திருக் கோட்டியூரானே-9-10-1–
என்னை ஆளுடை எம்பிரான் -நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு என
தேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே -6-
அடியேனை ஆள் உகந்து ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்–திருக் கோட்டியூரானே -8-

பொன்னை மா மணியை அணியார்ந்ததோர் மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய் என்னை ஆளுடை ஈசனை
எம்பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே -10-1-2-
பத்தராவியைப் பால் மதியை அணித் தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய் முத்தினை மணியை
மணி மாணிக்க வித்தினை சென்று விண்ணகர்கே காண்டுமே -8-
பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனை -10-

நம் பெண்மை சிந்தித்து இராது போய் தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில் வண்ணரைக் கண்களால் காணலாம் கொலோ -11-2-9-

தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு இது காணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1-
இமையோர் தொழுது இறைஞ்சி கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே -6-
முகில் வண்ணன் பொன்னம் சேர் சேவடி மேல் போது அணியப் பெற்றோமே -9-

ஆதி முன் ஏனமாகி யரணாய மூர்த்தி யது நம்மை ஆளும் அரசே-11-4-3-
அந்தரம் ஏழு னூடு செல யுய்த்த பாதமது நம்மை ஆளும் அரசே –5-
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயாராகியவர் நம்மை யாள்வர் பெரிதே -6-
அன்னமதாய் இருந்து அங்கு அற நூலுரைத்தவது நம்மை யாளும் அரசே -8-

திரு வயிற்றில் வைத்து உம்மை உய்யக் கொண்ட கனிக்களவத் திரு வுருவத்து ஒருவனையே கழல் தொழுமா கல்லீர்களே-11-6-4-
உலகு அளந்த உம்பர் கோமான் பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களை பேசீர்களே –5-
உலகம் ஏழும் உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட கொண்டல்
கைம் மணி வண்ணன் தன் குடந்தை நகர் பாடி ஆடீர்களே -11-6-9-

தேனோடு வண்டாலும் திருமாலிருஞ்சோலை தான் இடமாகக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய் ஆன் விடை ஏழு
அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -11-7-9-

அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு மணியே மணி மாணிக்கமே
மது சூதா பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -11-8-8-

———————-

இரும்பு அகன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு என் தன் அரும் பெறல் அன்பு புக்கிட்டு
அடிமை பூண்டு உய்ந்து போனேன் –திருக் குறும் தாண்டகம் -4-
பத்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய் முத்து ஒளி மரகதம் முழங்கு ஒளி முகில் வண்ணா
என் அத்த நின்னடிமை யல்லால் யாதும் ஒன்றும் இலேனே -10-
தொண்டு எல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு கண்டு தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய் -11-
ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால் தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம் -12-
வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும் தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை -20-

————————————–

எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே –திரு நெடும் தாண்டகம் -1-
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேன் -5-
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே -6-/-7 –
தண் காலும் தண் குடந்தை நகரும் பாடித் தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு நங்காய் நம் குடிக்கு
இதுவோ நன்மை எண்ண நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே -17-
பார் இடந்து பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட பேராளன் பேரோதும்
பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசலாமே -20-
என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய இப்பால் கை வளையும் மேகலையும் காணேன்
கண்டேன் கன மகரக் குலை இரண்டும் நான்கு தோளும்-22-
என் பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கமூர் என்று போயினாரே -24-
என் நலனும் என் நிறைவும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு —
புனல் அரங்கமூர் என்று போயினாரே -25-
தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -29-

———————————————–

உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன் மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடர் அடி தொழுது எழு என் மனனே –திருவாய் மொழி -1-1-1-

உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கி -1-2-8-
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறிலா வண் புகழ் நாரணன் திண் கழல் சென்றே -10-

நும் இரு பசை அறுத்து நன்று என நலம் செய்வது அவனுடை நம்முடை நாளே -1-3-7-
மனனகமல மறக் கழுவி நாளும் நம் திருவுடை யடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வளமே -8-

முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே -1-4-2-
நாடாத மலர் நாடி நாடொறும் நாரணன் தன் வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று –9-

பரிவதில் யீசனைப் பாடி விரிவது மேவலுறுவீர் பிரிவகை இன்றி நன்னீர் தூய் புரிவதுவும் புகை பூவே -1-6-1-
மதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வனுக்கு எதுவேது என் பணி என்னாது அதுவே ஆள் செய்யுமீடே -2-
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே -7-
கழிமின் தொண்டீர்கள் கழித்து தொழுமின் அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே -8-

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே -1-8-10-

நெற்றியில் நின்று என்னை ஆளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடி கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ணபிரானைத் தொழுவார்-1-9-10-

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை தண் தாமரைக் கண்ணனை கொம்பராவு
நுண்ணேர் இடை மார்வனை எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே-1-10-3-
எந்தையே என்றும் எம்பெருமான் என்றும் சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் –7–

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம் ஆற்றாமை சொல்லி -2-1-7-

என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதது அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -2-3-2-
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் -3-
பரமன் பவித்ரன் சீர் செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே-9-

தன் முடிவு ஓன்று இல்லாத தண் துழாய் மாலையனை என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீர் -2-5-8-

எம்பிரானைப் பொன் மலையை நா மருவி நன்கு ஏத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட
நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே -2-6-3-
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் கழித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –4-
உனது அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ -5-
உன்னைத் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை பாடி யாடி என் முன்னைத் தீ வினைகள் முழு வேர் அரிந்தனன் யான்-6-

வேத மயன் காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை -2-7-2-
தேவும் தன்னையும் பாடி யாடத்திருத்தி என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் காய்த்து
எமர் எழு எழு பிறப்பும் மேவும் தன்மையமாக்கினான் வல்லன் எம்பிரான் வீட்டுவே -4-
ஊழி ஊழி தொறும் எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்ரமனையே -6-
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே -7-
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே -8-

மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே-2-9-6-
யானே நீ என்னுடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே -2-9-9-

மாலிருஞ்சோலை பதியது வேத்தி எழுவது பயனே -2-10-2-
மாலிருஞ்சோலை வல முறை எய்தி மருவுதல் வலமே-7-
மாலிருஞ்சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -8-

சொல்லாய் யான் உன்னைத் சார்வதோர் சூழ்ச்சியே -3-2-3-

ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே -3-3-1-
பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே -8-

ஆதுமில் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே -3-4-4-

எம்மானைச் சொல்லிப்பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் தண் கடல் வட்டத்துள்ளீரே -3-5-1 –
வட திருவேங்கடத்து எந்தை பேர் பல சொல்லிப் பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற -8-
தேவபிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே -10-

அன்று தேர் தடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொள் கண்களே -3-6-10–

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை தோளுமோர் நன்குடைத் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை -3-7-2-
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ் கொள்ளும் அப்பனை -7-

ஆவியே ஆரமுதே என்னை யாளுடை தூவியம் புள்ளுடையாய் சுடர் நேமியாய் -3-8-7-

திரு வேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே -3-9-1-
ஓர் ஆயிரம் பேருமுடைய பிரானை அல்லால் மற்று யான்கிலேன்-7 –

எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யானோர் துக்கமிலனே-3-10-8-

தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே -4-3-2-
நின் பூம் தண் மாலை நெடும் முடிக்குப் புனையும் கண்ணி எனது உயிரே -6-
கோல மாம் என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழலே -6-
உன் உரை கொள் சோதித் திரு உருவம் என்னதாவி மேலதே–7-

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை -4-5-1-
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொல்மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினான் என்ன குறை நமக்கே -4-5-7-
தண் தாமரை சுமக்கும் பாத்தப்பெருமாள்ச சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே -8-
குடமாடியை வானைக்கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-9-
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே -10-
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே-11-

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆள் செய்து நோய் தீர்ந்த வழுவாத தோள் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-4-6-11-

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தன்னை குழுவு மாடத் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல் -4-7-11-

ஏறு ஆளும் இறையோனும் திசைமுகனும் திரு மகளும் கூறு ஆளும் தனியுடம்பன் -4-8-1–
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட மணி மாயன்- 4-8-2-

கடல் வண்ணா அடியேனை பாண்டே போல் கருதாது உன்னடிக்கே கூய்ப் பணி கொள்ளே -4-9-3-
வெறித் துளப முடியானே வினையேனை யுனக்கு அடிமை அறக் கொண்டாய் இனி என் ஆரமுதே கூய் அருளாயே -4-9-6-

கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூர் அதனுள் ஆடு புட் கொடி யாதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே -4-10-7-
உறுவது ஆவது –திருக் குருகூர் அதனுள் கூறிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே -10-
ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர் நகரான் நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன் -11-

என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி யருளாய் கண்ணனே -5-1-4-
தேவார் கோலத்தோடும் திருகி சக்கரம் சங்கினொடும் ஆவா என்று அருள் செய்து அடியேனோடும் ஆனான் -9-
ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான் -10-

பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே -5-3-4-
பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால் முன் நின்று இரா ஊழிக் கண் புரைய மூடிற்றால் -5-4-6-
கழிய மிக்கதோர் காதல் இவள் என்று அன்னை காண கொடாள் வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் -5-5-10–

எம் கார் முகில் வண்ணா பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -5-7-3-
என்றும் என்னை ஆளுடை வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே –6-

எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே -5-8-2-
நால் தோள் எந்தாய் யுனது அருளே பிரியா வடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே -5-8-7-
இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே –9-

திரு வல்ல வாழ் கன்னலங்கட்டி தன்னைக் கனியின் இன்னமுதம் தன்னை
என் நலம் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே -5-9-5–

அது விது வுது என்னாலாவன வல்ல என்னை யுன் செய்கை நைவிக்கும் -5-10-2-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய்க்
குருகூர்ச் சடகோபன் மாறன் ஆக நூற்ற வந்தாதி -5-10-11-

திரு வண் வண்டூர் உறையும் கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு கைகள் கூப்பிச் சொல்லீர் -6-1-1-
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு பாதம் கை தொழுது பனியீர் அடியேன் திறமே -6-1-2-
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எலக் சேற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே–10-

இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்-6-2-10–

பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை செல்வம் மல்குடித் திரு விண்ணகர்க் கண்டேனே -6-3-1-
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர் தெண் திரைப் புனல் சூழ் திரு விண்ணகர் நன்னகரே -2-
திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை யாளுடை என்னப்பனே -8-
திரு விண்ணகர்ச் சேர்ந்த வைப்பான் தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே -9-
திரு விண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண்மின்களே -10-

மாயக் கோலப்பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு இவ்வுலகம் நிகரே -6-4-2-

வடகரை வண் தொலை வில்லி மங்கலம் கரும் தடம் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்து இருந்து அரவிந்த லோசன என்று என்றே நைந்து இரங்குமே -6-5-8-
தொலை வில்லி மங்கலம் என்று தன் கரங்கள் கூப்பித் தொழும் அவ்வூர்த் திரு நாமம் கற்றதற் பின்னையே –6-6-9-
பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்-10-
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன் –11-

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர்கள் மல்கி -6-7-1-
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனனை தினைத்தனையும் விடாள் அவள் சேர் திருக் கோளூருக்கே-6-7-10-

முன்னுலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை யுரைத்தே 6-8-1-

கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -6-9-3-
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -9-
அளவில் இன்பம் சேர்ந்தாலும் மறுகால் இன்றி மாயோன் உனக்கே யாளாகும் சிறு காலத்தை யுறுமோ அந்தோ தெரியிலே -10-

திலதம் உலக்குக்காய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே குல தொல்லடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே -6-10-1-
திரு வேங்கடத்தானே பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே -4-
திருவேங்கடத்தானே புகல் ஓன்று இல்லா வடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -10-

எண்ணிலாப் பெரு மாயனே இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்றுடை அண்ணலே யமுதே யப்பனே என்னை ஆள்வானே -7-1-1-

கட்கிலீ யுன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே என்னும் திட் கொடி மதிள் சூழ்
திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே -7-2-3-
முடிவிலள் தனக்கு ஓன்று அறிகிலேன் என்னும் மூ வுலகு ஆளியே என்னும் -10-

கொண்ட என் காதலுக்கு உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்-7-3-8-

வார்த்தை அறிபவர் மாயவர்க்கு ஆள் அன்றி ஆவரோ -7-5-10-

என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே -7-6-5-

என்னை ஆளும் கண்ணா இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை -7-8-8-

என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை உறப் பல வின் கவி சொன்ன உதவிக்கே -7-9-9-

இன்பம் பயக்க எழில் மாதர் மாதரும் தானும் இவ்வேழு உலகை இன்பம் பயக்க வினிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் –7-10-1-
திரு வாறன் விளை மா கந்த நீர் கொண்டு தூவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொலோ -2-
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான் நின்ற வணி திருவாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -6-
அன்றி மற்று ஓன்று இலன் சரண் என்று அகலிரும் பொய்கையின் வாய் நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான் -8-
திருவாறன் விளையதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொல் என்னும் என் சிந்தனையே -9-
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திரு வாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே -10-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆள் செய்வார் -8-1-1-
எங்கு வந்துறுகோ என்னை ஆள்வானே ஏழு உலகங்களும் நீயே -8-1-6-
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே –8-
பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனி அப்பன் தன்னை -11-

கரணப் பல் படை பற்றறவோடும் கனலாழி அரணத்தின் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே -8-3-2-
ஆளும் ஆளார் அலையும் சங்கும் சுமப்பார் தாம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை -3-
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை ஆளுடை கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே -9-

முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை ஆள்கின்ற எம்பெருமான் தென்திசைக்கு அணி கொள்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரை மீ பால் நின்ற எம்பெருமான் -8-4-3-

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா என் அண்ட வாணா என்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால் -8-5-6-
உன் வையம் தாய மலரடிக்கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -7-

எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-

இருந்தான் கண்டு கொண்டு எனது ஏழை நெஞ்சு ஆளும் திருந்தாதவோர் ஐவரைத் தேய்ந்தற மன்னி பெரும் தாள் களிற்றுக்கு
அருள் செய்த பெருமான் தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே -8-7-2-
அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் வெறிதே அருள் செய்வார் செய்வார்கட்க்கு உகந்து -8-

எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே -9-1-1-

பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல் படி கால் குடி குடி
வழி வந்து ஆள் செய்யும் தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -9-2-1-
குடிக்கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் செய்து உன் பொன்னடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி -2-
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி -3-
புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி -4-
எம்மிடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே -7-
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே -10-

தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னும் இது மிகை யாதலில் பழுதில் தொல் புகழ்ப்
பாம்பணைப் புள்ளியாய் தழுவுமாறு அறியேன் உன தாள்களே -9-3-9-

அடியான் இவன் என்று எனக்கு ஆரருள் செய்யும் நெடியானை நிறை புகழ் அஞ்சிறைப் புள்ளின் கொடியானை
குன்றாமல் உலகம் அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே -9-4-10-

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவெல்லாம் காவி கமழ் திருக் காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே -9-6-1-
தென் காட்கரை என்னப்பா நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே -2-
ஆள் கொள்வான் ஒத்து என்னாருயிர் உண்ட மாயனால் கோள் குறைபட்டது என்னாருயிர் கோள் உண்டே -7-
தென் காட்கரை என் அப்பருக்கு ஆள் அன்றே பட்டது என்னாருயிர் பட்டதே -8-

நாளேல் அறியேன் எனக்குள்ளன நானும் மீளா வடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -9-8-4-
நாவாய் யுறைகின்ற என் நாரண நம்பீ ஆவா வடியான் இவன் என்று அருளாயே -7–
அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ்ப் புக வைப்பாய் மருளே இன்றி உன்னை
என் நெஞ்சகத்து இருத்தும் தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே -8-
மூவர் முதல்வன் ஒரு மூவுலகு ஆளி தேவன் விரும்பி யுறையும் திரு நாவாய் -9-

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினைகெட காலை மாலை கமல மலரிட்டு நீர் வேலை மோதும்
மதிள் சூழ் திருக் கண்ண புரத்து ஆலின் மேல் அமர்ந்தான் அடி இணைகளே-9-10-1-
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி –9-
குருகூர்ச் சடகோபன் சொல் பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் பாடியாடி பணிமின் அவன் தாள்களே -11-

படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர் இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் வம்மினே -10-1-4-
திருமோகூர் சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே -7-
குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே -11-

அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்த புரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அப்பணி செய்வார் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும் குமாரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே -10-2-6–
வயல் அணி யனந்த புரம் கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாமே -7-
எழில் அணி அனந்த புரம் படமுடை இரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம் -8-
செறி பொழில் அனந்த புரம் தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அரும் வினைகள் தாமே -9-
அனந்த புர நகர் எந்தைக்கு என்று சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள்
நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே -10-

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா யுன் கோலப் பாதம் -10-3-6–

என்றும் திரு மெய்யம் யுறைகின்ற செங்கண்மால் நாளும் இருவினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே -10-4-2-
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம் மீள்கின்றது இல்லை பிறவித்துயர் கடிந்தோம் -3-
பணி நெஞ்சே நாளும் பரமபரம்பரனை பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் மணி நின்ற சோதி
மது சூதன் என் அம்மான் அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே -7-

ஆள்வான் ஆழி நீர் கோள்வாய் அரவணையான் தாள் வாய் மலர் இட்டு நாள் வாய் நாடீரே -10-5-4–
நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -5-
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாராவே -7-

தேன் ஏறு மலர்த்துளவம் திகழ் பாதன் செழும் பறவை தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே -10-6-5–
பிரியாது ஆள் செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அறக் கொண்டான் அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியாருக்கு ஆள் பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு வரி வாள் வாய் அரவணை மேல் வாட்டாற்றான் காட்டினானே -10-

செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்ம்மின் திரு மாலிருஞ்சோலை வஞ்சக கள்வன் மா மாயன் மாயாக் கவியாய் வந்து
என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் நெஞ்சும் உயிரும் அவை யுண்டு தானே யாகி நிறைந்தானே -10-7-1-
திருமாலிருஞ்சோலை யானேயாகித் செழு மூ உலகும் தன் ஒரு மா வயிற்றினுள்ளே வைத்து
ஊழி யூழி தலை யளிக்கும் திருமால் என்னை ஆளுமால் -6-

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் மடித்தேன் மனை வாழ்க்கையில் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான் அடிச் சேர்வது எனக்கு எளிதாயினவாறே -10-8-3-
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத் தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான் கண்டு களிப்பக் கண்ணுள் நின்று அகலானே -7-
உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் இதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-
குருகூர்ச் சடகோபன் சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே -11-

ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று -10-9-6-

எனக்கு ஆராவமுதாய எனதாவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்-10-10-6-
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழாயோ சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதியோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே -10-
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை யாயிரமும் முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே -11-

—————————————————

அரி வுருவும் ஆளுருவுமாகி –முதல் திருவந்தாதி -31-

திருமாலை செங்கண் நெடியானை எங்கள் பெருமானை –இரண்டாம் திருவந்தாதி -90-

முத்தீ மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும் இரையாவான் எங்கள் பிரான்–96-

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ -97-

எந்தை இணை அடிக்கே ஆளாய் மறவாது வாழ்த்துக என் வாய் –மூன்றாம் திருவந்தாதி -17-

திருமாலே செங்கண் நெடியானே எங்கள் பெருமானே -20-

திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள் பெருமான் அடி சேரப் பெற்று -59-

திருமலை மேல் எந்தைக்கு -63-

வேறு ஒருவர் இல்லாமை நின்றானை எம்மானை –நான்முகன் -4-

நாராயணன் என்னை ஆளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் -14-

அவன் என்னை ஆளி -30-

எம்பிரான் மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -58-

பொன் பாவை கேள்வா கிளர் ஒளி என் கேசவன் கேடு இன்றி ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

என்றும் திருவிருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கருவிருந்த நாள் முதலாக் காப்பு -92-

இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை நாரணன் நீ கன்கறிந்தேன் நான் -96-

பொங்கு முந்நீர் ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் கோலம் கரிய பிரான் எம் பிரான் –திருவிருத்தம் -39-

எப்பால் யவர்க்கும் எண்ணும் இடத்ததுவோ எம்பிரான் எழில் நிறமே -43-

எம்மீசர் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே-54-

இரண்டே அடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே -61-

வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே -86-

அன்று உலகு ஈரடியால் தாவின வேற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப்பெய்வனே -89-

ஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே –திருவாசிரியம் -7-

கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப் பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆள் பெற்று–பெரிய திருவந்தாதி -3-

உண்ணாட்டுத் தேசு அன்றே உள் வினையை அஞ்சுமே விண்ணாட்டை ஒன்றாக மெச்சுமே
மண்ணாட்டில் ஆராகி எவ்விழிவு உற்றானாலும் ஆளி யம் கைப் பேராயற்கு ஆளாம் பிறப்பு -79-

தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறாக ஈரா வதனை இடர் கடித்தான் எம்பெருமான் –சிறிய திருமடல்

அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் முன்னவனை மூழிக் காலத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை –இந்நிலைமை எல்லாம் அறிவித்தால்
எம்பெருமான் தன்னருளும் ஆகமும் தாரானேல் -பெரிய திருமடல்-

அடியார்க்கு அமுதம் இராமானுசன் என்னை ஆள வந்து இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே–இராமானுச நூற்றந்தாதி -51-

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை ஆள வந்த கற்பகம் -53-

ஒள்ளிய நூல் கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் யாவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே -86-

நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந் நீணிலத்தே என்னை ஆள வந்த இராமானுசனை -90-

உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே -107-

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பாவை அருளிச் செயல்களில் உபக்ரமும் உப சம்ஹாரமும் -மார்கழி -என்று தொடங்கி -இன்புறுவர் -என்று முடித்து இருக்கும் அழகு பெரு விருந்து –

March 16, 2019

இன்றோ திருஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

—————————————

இந் நோன்புக்கு ஒரு காலம் நேர் படுவதே -என்று காலத்தை கொண்டாடுகிறார்கள்
மார்கழி திங்கள் -என்று தொடங்கி-சிறுமீர்காள் -என்னும் அளவும் பிராப்யம்–
மேல் பிராபகம் –
பிராப்ய பிராபக சங்கரஹம்-என்றுமாம்-
இப்பாட்டில்–அதிகாரி ஸ்வரூபத்தையும்–உபாய ஸ்வரூபத்தையும்–உபேய ஸ்வரூபத்தையும் ஸங்க்ரஹித்து-
இந் நோன்புக்கு காலம் நேர்பட்ட படியைக் கொண்டாடுகிறார்கள் –

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர எம்பாவாய்–1-

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்-
பாவநஸ் சர்வ லோகாநாம் த்வமேவ -என்றும்-
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிண்ம் – இரண்டு ஆகாரம் உண்டானாப் போலே-
இக்காலமும் பாவனமாயும் போக்யமுமாயும் இருக்கை-
தனுர் ராசி –சூர்யன் -ராசிக்குள் புகுவதை பொறுத்தே மாசங்களின் பெயர் –

ஒரு நல் விடிவு உண்டாகப் பெறுவதே -என்றான் இறே அக்ரூரன்
மாசத்தை கொண்டாடுகிறது–பஷத்தை கொண்டாடுகிறது–நாளை கொண்டாடுகிறது
தங்களுக்கு பகவத் கைங்கர்யத்தில் ருசி பிறந்த இன்று–மங்கள கார்யம் செய்யுமவர்களுக்கு தேட்டமான காலம்-

மதி நிறைந்த நன்னாளால்-
ஒருவரை ஒருவர் முகம் கண்டு அனுபவிக்கைக்கும்-
எல்லாரும் கூடிச் சென்று கிருஷ்ணனை எழுப்புக்கைக்கும்-நிலா உண்டாகப் பெற்றதே-
நள் இருள் கண் -என்ன வேண்டா விறே இவர்களுக்கு-
விரோதிக்கக் கடவ அவ் ஊராரே இசைந்து மேல் எழுத்து இடப் பற்றது இறே-
தன்னடையே நேர்பட்ட படியைக் கண்டு ஆச்சர்யப் படுகிறார்கள் –
த்வதீய கம்பீர மனோ அனுசாரீன–வைதிக விதிகளும் அடியார் மனம் பின் செல்லும்-
விமுகன் -பகவத் லாபம் உண்டானதே நல்ல நாள்–
அன்று நான் பிறந்திலேன்–பிறந்த பின் மறந்திலேன் –பிராணன் இல்லாதவர் பிராணன் பெற்ற படி–
சென்ற நாள் செல்லாத செங்கண் மால் எங்கள் மால் என்ற நாளும் நாளாகும் என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே யாளாய் மறவாது வாழ்த்துக என் வாய் -பேயாழ்வார் -17-
சென்ற நாள் செல்லாத –கழிந்த நாள்–மூன்றுமே நல்ல நாள் -என்றார்

எம்பெருமானார் விலஷண சந்தரன் –யதிராஜ சந்தரன் -என்றபடி-
மார்கழி மார்க்க சீர்ஷ–தலையான மார்க்கம் –ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே –
சரம உபாயம் உயிர் நிலை ஆண்டாள் கருதியது –

மார்க்கம் சீர்ஷம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -என்கிற மதி நிறைந்த நன்னாள் –
ஆழ்வாராதிகள் -ஆச்சார்யாதிகள் -திருவதரித்த நக்ஷத்ரம் –

நீராட
கிருஷ்ண விரஹத்தால் பிறந்த தாபம் ஆறும்படி குளிக்கை
இத்தால் இவர்கள் நினைக்கிறது கிருஷ்ண சம்ச்லேஷம்
தமிழரும் கலவியை -சுனையாடல் -என்றார்கள்
மாசி பவுர்ணமி -கடல் நீராட்டம் – மாசி மகம் உத்சவம் உண்டே இன்றும்
மார்கழி பவுர்ணமி தொடங்கி தை பவுர்ணமி சுனை யாடல் -தமிழர்கள் –

ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ்மே சஸீதே மிவ ஹ்ருதம் -பாரதம் மோஷ தர்மம் -4-50-
நான் வெயில் காலத்தில் குளிர்ந்த மடுவில் படிவது போலே
பர ப்ரஹ்மத்தை அடைந்தவன் ஆகின்றேன் -என்கிறபடியே
க்ரீஷ்மே சீதமிவிஹ்ர்தம் –க்ரீஷ்ம காலத்தில் -வேனிற் பருவத்தில் மடுவிலே முழுகிக் கிடப்பாரைப் போலே-
என்று பகவத் சம்ஸ்லேஷத்துக்கு கிரீஷ்ம காலத்தில் குளிர்ந்த மடுவை திருஷ்டாந்தமாக சொல்லிற்று இறே

தாங்கள் நினைத்த படி சொல்லுகைக்கு ஈடான முறை உண்டாய் இருக்கச் செய்தேயும்
அத்தை தவிர்ந்து பகவத் சம்பந்தத்தையே பார்த்து கௌரவித்து-நீராட என்கிறார்கள்
புத்ரர்கள் ஆகவுமாம்-சிஷ்யர்கள் ஆகவுமாம்-பகவத் சம்பந்தம் உடையாரை கௌரவ்யர் என்கிறது-
பொற்றாமரை கயம நீராடப் போனாள்-என்னக் கடவது இறே
இத்தால் பிராப்யத்தை சொல்லுகிறது–வாசத் தடம் போல் வருவானே
மறை பாற்கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து–துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பணை பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்தருத்த–நிறைப்பான் கழல் அன்றி சன்மம் விடாய்க்கு நிழல் இல்லையே-

போதுவீர் போதுமினோ
அல்ப பலமான ஸ்வர்க்க அனுபவத்துக்கு அதிகார அர்த்தமாக வேண்டும் தேவதைகளுக்கு ஓர் எல்லை இல்லை
இந்த நிரவதிக சம்பத்தை பெறுகைக்கு எவ்வளவு யோக்யதை வேணும் -என்னில்––இச்சையே அதிகாரம்–
அது அப்ராப்த விஷயம் ஆகையாலே அதிகாரி சம்பத்தி உண்டாக்கிக் கொண்டு இழிய வேணும்
இது வகுத்த விஷயம் ஆகையாலே இச்சைக்கு மேற்பட வேண்டுவது இல்லை –
நெடும் காலம் இழந்ததும் இவன் பக்கல் இச்சை இல்லாமையே —ஆகையால் இந்த இச்சையே வேண்டுவது –
சக்தியும் பிராப்தியும் அத்தலையில் பூர்ணம் ஆகையாலே–இச்சைக்கு மேற்பட வேண்டுவது இல்லை –
பகவத் கைங்கர்யம் பண்ணப் போருகையிலே-ருசி உடையவர்களாய்–கூடும் மனம் உடையீர் -மர்ம ஸ்பர்சி –
போதுமினோ –
அவர்கள் முன்னே போக-அந்நடை அழகு கண்டு நாங்கள் பின்னே போக இறே நினைக்கிறது —
சூத்திர விஷயத்துக்கு தனித் தேட்டம் ஆனால் போலே
அபரிச்சின்ன விஷயத்துக்கு துணைத் தேட்டம் ஆகையாலே சஹ காரிகளை -சொல்லுகிறார்கள்-போதுமினோ –
பிரதி கூலரையும் அகப்பட தேன மைத்ரீபவதுதே யதிஜீவிது மிச்சசி -என்னுமவர்கள் அபிமுகரைப் பெற்றால் விடுவார்களோ
ஏவ மற்றமரர் ஆட் செய்வார்–காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் ஸ்தப்தராய் கிடக்கும் பாகவதர்களை எழுப்ப வேண்டுமே

நேரிழையீர்
விலஷணமான ஆபரணத்தை யுடையீர்–
இவர்கள் போதுமினோ -என்ற பின்பு அவர்கள் வடிவிலே பிறந்த புதுக் கணிப்பு இருந்தபடி –
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய -என்கிறபடியே–
கிருஷ்ணனுடைய வரவை கடாஷித்து–அவன் எப்பொழுது வந்து மேல் விழும்
என்று அறியாத படியாலே–தங்களை எப்போதும் அலங்கரித்த படியே இருப்பார்கள் என்றுமாம்-
இதுக்குத் தகுதியான–ஜ்ஞான பக்தி வைராக்யங்களை உடையராய் –

திங்கள் திரு முகத்து சேயிழையார்—தாப த்ரயங்கள் கழிந்து அழகிய திருமுகம்- ஆத்ம குணங்கள் பூஷணம்-

சீர் மல்கு ஆய்ப் பாடி –
இவ்வூரில் ஐஸ்வர்யம் வழிந்து போய் வேறு ஊருக்கு வெள்ளமிடப் போந்து இருக்கை –
அதாவது கிருஷ்ணன் உடைய இங்குத்தை நீர்மை பரம பதத்திலும் சென்று அலை எறியும் படியாய் இருக்கை –
வஸ்துவுக்கு குணத்தால் இறே உத்கர்ஷம்
அந்தகாரத்திலே தீபம் போலே பிரகாசிப்பதும் இங்கே யாகையாலே ஐஸ்வர்யம் பூர்ணம் ஆய்த்து இங்கே இறே
த்ரிபாத் விபூதியில் அடங்காத வஸ்து தன்னை நியாம்யம் ஆக்கி வர்த்திக்கிற ஊர் இறே
பண்டே கோ சம்ருத்தி உண்டாய் இருக்கச் செய்தே
பிள்ளைகள் கால் நலத்தாலே கறப்பன கடைவன வற்றால் குறைவற்று இருக்கை
நாழிப் பால் நாழி நெய் போருகை என்றுமாம் –
கிருஷ்ணன் தீம்பு செய்து மூலை படியே நடக்கிலும்-அதுவே அமையும் என்று இருக்குமூர் –

ஆய்ப் பாடி
பரம பதம் போலே தேஹாந்தர பரிக்ரகம் பண்ணிச் சென்று–அனுபவிக்க வேண்டாத ஊர்-
ஆசார பிரதானரான வசிஷ்டாதிகள் வர்த்திக்கிற திரு அயோதியை போல் அன்றிக்கே–
இடக்கையும் வலக்கையும் அறியாத இடையர் வர்த்திக்கிற ஊர்
பெருமாள் குணம் கண்டு உகக்கும் ஊர் போல் அன்றியே–கிருஷ்ணன் தீம்பு கண்டு உகக்கும் ஊர்

செல்வச் சிறுமீர் காள்
இவ் வாத்மாவுக்கு நிலை நின்ற ஐஸ்வர்யம் ஆவது–பகவத் பிரத்யாசத்தி இறே
ராஜ்யத்தை விட்டு வெறும் கையோடு பெருமாள் பின்னே போன-இளைய பெருமாளை
லஷ்மனோ லஷ்மி சம்பன்ன –என்றது இறே
ராவண பவனத்தின் நின்றும் கால் வாங்கி பெருமாள் இருந்த தேசத்தைக் குறித்து-வருவதாக –
பரித்யக்தா மயா லங்கா மித்ரா நிசதநா நிச -என்று
சர்வத்தையும் விட்டு ஆகாஸ் ஸ்தானனான–விபீஷண ஆழ்வானை-அந்தரி ஷக்த ஸ்ரீ மான் – என்றது இறே
அவனை ரஷகனாக அத்யவசித்து தன் பக்கல் முதல் அற்று–கை வாங்கின ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை —
சாது நாகவர ஸ்ரீ மான் -என்றது இறே

முக்த ஐஸ்வர்யம் -செல்வம் -பகவத் ஞான விசேஷமும் ப்ரீதி காரித கைங்கர்யம் –
பரிபூர்ண ஞானமும் அனுபவமும் –
அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனனை -சர்வ சரீரத்வம் அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹம் –
சாஸ்திரம் கொண்டு அறிய வேண்டாத படி சாஷாத்காரம் –
தினைத்தளவும் விடாதவள் -அல்பமும் விடாமல் அனுபவித்து -கைங்கர்யம் அன்றோ
நித்ய கிங்கரோ பவ-அனுபவ கைங்கர்யங்கள் இரண்டும் உள்ள செல்வம் –
நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் -என்றபடி –

அப்படியே இவர்களும்
இங்கு ஐஸ்வர்யமாக சொல்லுகிறது கிருஷ்ண ப்ரத்யாசத்தியை–
ஆயர்
என்னும் காட்டில் ஜ்ஞான ஜன்மாக்களைக் காட்டுமோ -என்னில்-
லோகத்தில் பகவத் ஏக பரராய் இருக்குமா போலே-ஜ்ஞான ஜன்மம் உடையவர்களும் பகவத் ஏக பரராகையாலே

சிறுமீர்காள்
கிருஷ்ணனோடு ஒத்த பருவமாய் இருக்கை-துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்கிற படியே
எல்லாவற்றிலும் அவனுக்கு ஈடாய் இருக்கை
பருவம் நிரம்பின ஸ்திரீகளையும் புருஷர்களையும் கண்டால்–தேவதாந்தர பஜனம் பண்ணினாரையும்–
தம் தமுக்காக நினைத்து இருப்பாரைப் போலே நினைத்து இருக்கும்
தனக்கு அனன்யார்ஹைகளாக நினைத்து இருப்பது இவர்களை–இத்தால் அவனுக்கேயாய் இருக்கிற
யோக்யதைச் சொன்ன படி
அதாவது–கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகாது இருக்கை-

சீர் மல்கும் -இத்யாதி –எம்பெருமானுடைய க்ருபா ஷமாதி கல்யாண குணங்கள்
தம் தம் விஷயங்களிலே சேர்ந்து பொங்கி-பரம பதத்தளவும் சென்று அலை எறியும்படி

கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் –
ஸ்ரீ நந்த கோபர் முன்பு பசும்புல் சாவ மிதியாவராய் ஆய்த்து -நம் சிறியாத்தானைப் போலே
ஆன்ரு சம்சய பிரதானராய் போருவது –
பிள்ளைகள் பிறந்த பின்பு அவர்கள் மேல் உண்டான வாத்சல்யத்தாலே —அவர்களுக்கு என்ன வருகிறதோ -என்று அஞ்சி
வேலைப் புகர் எழ கடைந்து பிடிக்கத் தொடங்கினார் –
அதிசயித மங்களா சாசனை பரராய்–பகவ லாபத்தாலே களித்து–பகவத் விஷயத்தை அசல் அறியாதபடி
ரஷித்துக் கொண்டு போருகிற ஆசார்ய விஷயத்தில்–தன்னுடைய நியாம்யத்தை தோற்றும்படி இருக்குமவனாய்

கொடும் தொழிலன் –
தொட்டில் கீழே எறும்பு புகுரிலும் சிம்ஹத்தின் மேல் விழுமா போலே–சீற்றத்தின் மிகுதியால் உதிரக் கையரானார்-
ந ஹிம்ச்யாத் சர்வா பூதானி -என்கிற சாமான்ய விதி–அக்னீ ஷோமீயம் பஸூ மாலபதே -என்கிற விசேஷத்தில் வாராது இறே-
ஸ்வார்த்தமாக செய்யும் அன்று இறே நிஷித்தமாவது–
அத்தலைக்கு என் வருகிறதோ என்று அஞ்சிச் செய்யுமன்று தர்மமாகக் கடவது –
மன் நிமித்தம் க்ருதம் பாபம் -இத்யாதி–
நின்பால் பொறுப்பு அரியனகள் பேசில் –ஆங்கே தலையை அறுப்பதே கருமம் கண்டாய் -என்றது இறே

நந்த கோபன் –
பிள்ளையைக் கண்ட ப்ரீதியாலே ஆனந்தத்தை உடையவர் என்னுதல்—நாமதேயமாதல் –
இப்போது இவரைச் சொல்லுவான் என் என்னில்–உத்தேச்ய வஸ்துவை நோக்கித் தருபவர் என்னும் பிரீதியாலே –
நந்த கோபாலா -எழுந்திராய் என்று
எழுப்பிக் கார்யம் கொள்ளலாம்படி இறே–இவர்களுக்கு அவர் விதேயமாய் இருப்பது –

தசரதன் மகனுக்கு அன்றி தஞ்சம் இல்லேன் -சக்கரவர்த்தி திரு மகன் வீர தீர ஏக தேசம்
பெருமாளுக்கு நஞ்சீயர் சொல்ல
அங்காளராயன் அரசன் ஆபேஷிக்க
இவன் பெருமாள் திரு உள்ளம் அறியாதவன்
எல்லாம் நம் ஐயர் -என்று பெருமாள் அபிப்ராயம் –
பிராட்டியும் திருவடிக்கு முதலில் சக்கரவர்த்தி மருமகள் என்று தம்மை அறிமுகம்

குமரன் –
வெண்ணெய் களவு கண்டான்–பெண்களை களவு கண்டான்–ஊரை மூலையடி ஆக்கினான்–
என்று எல்லாரும் வந்து முறைப்பட்டால்
என் கண் வட்டத்திலே வந்து தோற்றினான் ஆகில் நியமிக்கக் கடவேன் -என்று
பெரிய உத்யோகத்தோடு இருந்தால் அவர் முன்னே தோற்றும் போது–ச விநயமாக தோற்றுகையாலே
கெட்டேன் இவனையோ எங்கனே பழி இட்டது -என்று–அவர்களையே பொடியும் படியாய் இருக்கை-
யசோதை பிராட்டி பொடியும் போதும் -உந்தம் அடிகள் முனிவர் -என்று அன்றே பொடிவது —
படிறு பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே –கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் –
என்று இறே இவள் இருப்பது

நந்த கோபன்
கூர் வேல் நுண்ணிய மதி -நந்த கோபன்-ப்ரஹ்மானந்தம் அனுபவிக்கும் -ஆச்சார்ய பதம் –
குமரன் –
பவ்யதை -சிஷ்யன் -லக்ஷணம் -தானே அனுஷ்ட்டித்து காட்டுவான் –

ஏரார்ந்த கண்ணி யசோதை-
யசோதை பிராட்டி கண்ணிலே அழகு குடி கொண்டாய்த்து இருப்பது –
பிள்ளையை மாறாதே பார்த்துக் கொண்டு இருக்கையாலே–அவ் வாசி யடைய கண்ணிலே தோற்றும்படியாய் இருக்கை –
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் தொழுகையும் -இவை கண்ட கண் இறே–அம்பன்ன கண்ணாள் யசோதை –
விலாசாட்சி -சஹ பத்ன்யா -கிண்ணகம்-அனுபவிக்க தேசிகர் சீதா பிராட்டி -அர்ச்சாவதார அழகு விபவம் விட ஏற்றம் –

யசோதை
யசோதா அறிவுறாய்-என்று எழுப்பிக் கார்யம் கொள்ளலாம்படி–இறே இவர்கள் திறத்தில் அவள் அனுகூலித்து இருக்கும்படி

இளஞ் சிங்கம்
ஸ்ரீ நந்தகோபர் ஹித காமர் ஆகையாலே அங்கு விநயம் தோற்ற நின்ற படியைச் சொல்லிற்று –
இவள் பிரியமே நடத்துபவள் ஆகையாலே செருக்கும் மேணானிப்பும் தோற்ற நின்ற நிலையைச் சொல்லுகிறது –
அஞ்ச உரைப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -என்று–இவன் செய்தது எல்லாம் உத்தேச்யமாக விறே இவள் நினைத்து இருப்பது
ஆரேனும் வந்து முறைப்பட்டால் -அஞ்ச உரப்பாள்—இவன் தீம்பிலே தகண் ஏறும்படியாக வாய்த்து உரப்பது –
இளஞ் சிங்கம் —சிறுமியருக்கு ஒத்த பருவமாய் இருக்கை–சிங்கக் குருகு என்று பட்டர் அருளிச் செய்வர்-

யாதவ ஸிம்ஹம் -ராகவ ஸிம்ஹம் – நர ஸிம்ஹம் -ஸ்ரீ ரெங்கேந்திர ஸிம்ஹம் –

கார்மேனி –
நம்முடைய சகல தாபங்களும் ஆறும்படியான வடிவு–
தூ நீர் முகில் போல் தோன்றாய் -என்று பிரார்த்தித்த வஸ்து இறே-
இவர்களுக்கு பிரத்யஷித்து நிற்கிறது–மாதா பிதாக்கள் தங்களை மறைத்து வைத்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகு

செங்கண்
அத் திருமேனிக்கு பரபாகமான சிவப்பை உடைய திருக் கண்கள் –
அகவாயில் வாத்சல்யம் அடைய திருக் கண்களில் தோற்றும்படியாய் இருக்கை –
ஐஸ்வர்யத்தாலும் குதறி இருக்கும் இறே-வடிவாலே அணைத்து–கண்ணாலே குளிர நோக்குகையிலே இறே கருத்து-
கண்
என்று ஜ்ஞானமாய் -அதுக்கு அழகாவது வஸ்துவை உள்ளபடி கிரஹிக்கை –
அத்தாலே பூரணமான ஞானத்துக்கு பிரகாசமாய்
தன்னை அனுசந்திப்பார்க்கு ஆபிஜ்யாதி சகல அதிசயப்ரதமான–திரு மந்த்ரத்திலே
தன்னுடைய சகல காரண்த்வாத்ய அதிசயங்கள் எல்லாம் பிரகாசிக்குமவனாய் —மந்த்ரோ மாதா -என்னக் கடவது இறே
இம் மந்த்ரம் தானும் சமஸ்த கல்யாண குணாத்மகனான–எம்பெருமானைத் தன்னுடைய கர்ப்பத்திலே
வைத்துக் கொண்டு எல்லாரும் அறியலாம்படி பிரகாசிப்பிக்கையாலே இம்மந்த்ரத்தை மாதா என்னக் குறை இல்லை–
ஆஸ்ரித சகல தாப நிவர்த்தகமாய்–பரம உதாரமான திரு மேனியை உடையனாய்
இத்தால் உபாய க்ருத்யம் சொல்லுகிறது–
அன்றிக்கே கார்மேனி -என்று மேகம் போலே-தர்சநீயமான திருமேனியை உடையவன் என்று
அழகை சொல்லுகையாலே-உபேயத்வம் சொல்லிற்று ஆகவுமாம்

கதிர் மதியம் போல் முகத்தான் –
பிரதாபத்துக்கும் குளிர்ச்சிக்கும் ஆதித்யன் உடைய புகரை-ஊட்டின சந்தரனைப் போல் ஆய்த்து–திரு முகம் இருக்கும் படி
பிரதிகூலருக்கு அநபிபவ நீயானாய்–அனுகூலருக்கு கிட்டி நின்று–அனுபவிக்கலாம்படி இருக்கை –
கதிர் மதியம் போல் -ஆஸ்ரியர் அணுகும் படியும் நாஸ்திகர் ஒழியும் படியும் –

கதிர் மதியம் போல் முகத்தான் –
அபூத உவமை -குளிர்ந்த பிரகாசமுடைய ஆதித்யன் போலேயும் தேய்த்தால் வருதல் இல்லாத சந்திரன் போன்ற தன்றோ

முகத்தான் –
அவ் வளவிலும் உபமானம் நேர் நிற்க மாட்டாமையாலே–உபமேயம் தன்னையே சொல்லுகிறது-
அத் திரு மேனிக்கு பரபாக சோப அவஹமாய் அகவாயில்–வாத்சல்ய பிரகாசகமாயும்–பரத்வ பிரகாசகமாயும்-இருந்துள்ள
சிவந்த திருக் கண் மலர்களை உடையனாய்-
கார் மேனி என்கையாலே -சௌலப்ய சௌசீல்யங்களையும்–
செங்கண் என்கையாலே -வாத்சல்ய ஸ்வாமித்வங்களும்-தோற்றுகையாலே
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குண சதுஷ்ட்யமும் சொல்லிற்று ஆய்த்து
அநபிபவநீயதவம் சக்தி கார்யம் ஆகையாலே–ஆஸ்ரித கார்ய ஆபாதாக சதுஷ்டயமும் சொல்லிற்று ஆய்த்து-
இப்படி குணங்களை உடையனான நாராயணனே

நாராயணனே
கோவர்த்தன உத்தரணாதி அதிமாநுஷ சேஷ்டிதங்களாலே–சர்வேஸ்வரத்வம் பெண்களுக்கு தெரியும் படியாய்
இறே இவ் வவதாரம் தான் இருப்பது –
தேவ தாந்தரங்கள் அறியாத கோப வ்ருத்தர்கள் நோன்புக்கு அங்கமாக ஜெபிக்கும்–மந்த்ரமாக உபதேசிக்கையாலே
சொல்லுகிறார்கள் என்னவுமாம் –
இன்னவும் தன்னுடைய தமப்பன் மார் சொல்லவும் கேட்டு இருக்கும் இறே –
வடிவு அழகைக் கண்டு -வேறு ஒரு விஷயத்தை பற்றிற்றாக வேண்டாதே ப்ராப்த விஷயமாய் இருக்கை –
அவனாலும் தன்னை அனுபவிக்கத் தாரேன் என்ன ஒண்ணாது காணும் –
இத் தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபி முக்யம் பண்ணிப் போருமவன்-
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் -என்றும்
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்றும்
திண்ணம் நாரணம் -என்றும்
நாரணனை நன்கு அறிந்தேன்-என்றும்
இவ்வர்த்தத்தில் ரிஷிகளும்
நாராயண சப்தார்த்தம் -என்றும்–ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -என்றும்
ஸ்ருதியும்-நாராயண பரம் பரமம் -என்றும்–பல விடத்திலும் சொல்லிற்று

நாராயணனே நமக்கே பறை தருவான்
சர்வ ஸ்வாமி யானவனே–நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் —
இத்தலை இசையாத வன்றும் தான் விட மாட்டாத வாத்சல்யம்
அவதாரணத்துக்கு கருத்து
சமிதை பாதி சாவித்திரி பாதி அன்றிக்கே–
தானே சென்று தலைக் கட்ட வல்லவன் என்கிற–சாதன நைரபேஷ்யம் சொல்லுகையிலே நோக்கு –
நாரயணத்வம் சர்வ சாதாரணம் அன்றோ என்னில் –

நமக்கே –
அத் தலையாலே பேறு என்று இருக்கிற நமக்கு -என்றபடி —அகிஞ்சநராய்–அவன் கை பார்த்து இருக்கிற நமக்கே -என்றுமாம் —
சஹாயாந்தர நிரபேஷமாக அவனாலே புருஷார்த்தம் என்று இருக்கிற நமக்கே-
நமக்கே -என்கிற இடத்தில் ஏவகாரத்தால்–உபாயாந்தரங்களையும்–தன்னையே உபாயமாக பற்றினவர்களுக்கு-
அவதாரணம் -அகிஞ்சனமான நமக்கே —ஸ்வரூபம் அந்தர்கதம் உபாய பாவம்
அத் தலையால் நிறைவாலும் அவனே உபாயம்–இத்தலையால் குறையாலும் அவனே உபாயம்–
உள்ளபடி உணர்வில் நமக்கு ஓன்று உண்டு என்ன உள்ள விரகு இல்லை–
கொள்ளக் குறை இல்லை-அறிவொன்றும் இல்லாத ஆய குலம்–
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா-இவர்கள் தாங்களே இறே –
இற்றைப் பறை கொள்வான் அன்று காண – என்று -மேலே சொன்னார்கள் –

பறை தருவான் –
நாட்டுக்கு பறை என்று ஒரு வ்யாஜமாய்–தங்களுக்கு அபிமதமான அடிமையை யாய்த்து நினைக்கிறது–
இத்தை சாதித்துத் தருவர் ஆர் என்னில் –

நாராயணனே நமக்கே பறை தருவான் -இதுவே ஸ்ரீ பாஷ்யம் –
சமன்வய அதிகாரம் –சர்வ காரணத்வன்-நாராயணன் -சர்வ பூத அந்தராத்மா –ஏகோ -யஸ்ய பிருத்வி சரீரம் –
நாராயணனே ஏவ காரம் -இரண்டாம் அத்யாயம் -விரோதம் பரிக்ரஹித்து -அவிரோத அத்யாயம்
தருவான் -மூன்றாவது -உபாய பூதன்-பக்தியால் ப்ரீதனான அவனே உபாயம்
பறை -புருஷார்த்தம் -நான்காவது -பலாத்யாயம்
நமக்கே -சாத்திய உபாயத்தால் வசீகரித்த நமக்கே –

மார்கழித் திங்கள் -நாராயணன் -பரமபத நாதன் -ஸ்ரீ பரமபத அனுபவம் -ஸூ சகம்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர –ஜாதோசி தேவதேவேச சங்க சக்ர கதாதர –

நாராயணனே நமக்கே பறை தருவான் -திருப்பாவை -1
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட -திருவாய்மொழி -9-4-2-
நமக்கே -அதிகாரி ஸ்வரூபம் -எண்ணே கொண்ட
பறை -பிராப்யததை -காண
தருவான் -உபாயத்தை -கண்ணே
பிராப்ய பிராபக அதிகாரி ஸ்வரூபம் இறே சாஸ்திர அர்த்த தமம் ஆவது –
பிராப்ய பிராபக அதிகாரி ஸங்க்ரஹம்-இரண்டிலும் –

நாராயணனே நமக்கே பறை தருவான் –
ப்ரபத்திக்கு வாசகம்
வசனம் -வாசகம் -வாஸ்யம் மூன்றும் உண்டே -சொல்லும் பொருளும் சொல்லப்படுபவனும் என்றவாறு
ரஹஸ்ய த்ரயம் –
சரணாகதன் -சரண்யன் -சரணாகதி மூன்றும் -சரணம் புகல் என்று பற்ற –
போதுமினோ -படிந்து -இரண்டும் வினை சொற்கள் -மட்டுமே உண்டு –
யமுனையில் படிந்து நீராடுவதே -நம் கர்தவ்யம்
அவனது கர்தவ்யம் தருவான் -ஒரே வினைச் சொல்
பரித்யஜ்ய -விட்டு -வ்ரஜ -பற்று -இரண்டு உண்டே / மோக்ஷயிஷ்யாமி -ஒரே வினைச் சொல் அங்கும் –
மாஸூச -சோகப்படாதே -வினைச் சொல்லும் உண்டே -செய்யாதன செய்வதும் செயலே
உய்யுமாறு எண்ணி உகந்து-அடுத்த பாசுரம் -ஆனந்தப்பட்டு பகவதீ கீதை -ஆனந்த மயன்-தானே
வெறும் துக்கப்படாதே பகவத் கீதை
ப்ரக்ருதி சம்பந்தம் நினைக்க துக்கம் / ப்ரஹ்ம சம்பந்தம் அனுசந்திக்க ஆனந்தம் –
அது வந்தேறி இது ஸ்வாபாவிகம்-கர்மம் தொலைந்தால் சரீரம் கழியும் -கர்மத்தால் சரீரம் –
மாஸூச -விதி / எண்ணி உகந்து ராக பிராப்தம் –
நாராயணனே பறை –ப்ராப்யம்
நாராயணனே தருவான் -ப்ராபகம்
நமக்கே பறை /நமக்கே தருவான்—அதிகார விசேஷணம் -அநந்யார்ஹத்வம் –
பிரயோஜனாந்தர / உபாயாந்தர பரர்கள் இல்லையே
அன்வய வ்யதிரேக இரண்டையும் அருளிச் செய்ய வேண்டுமே –
சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள் -நமக்கே விளக்கம் -ருசி விஸ்வாசங்களே செல்வம் –
நீராடி போதுவீர் -படிந்து இரண்டாலும் இத்தை சொல்லி –
சரணாகதிக்கு காலம் -சரணாகதி எப்படி -சரணாகதி யார் இடம் -சரணாகதி பண்ணுவார் யார் –
சரணாகதி -அனைத்தையும் அருளிச் செய்து –
விபீஷணன் -வந்த காலமும் இடமும் வகுத்த காலமும் வகுத்த தேசமும் -ஹனுமான் -வாதம் அபயப்ரதானத்தில் –
சீதை இருந்த இடம் அறிந்த பின்பே பெருமாள் இலங்கைக்கு –
அதே போலே ராமர் இருக்கும் இடம் அறிந்த பின்பே விபீஷணன் வர முடியும் –
ராம தூதன் அருளிச் செய்த செய்திக்கு விஷயமானானே இவன் –
சம்சாரி வெட்டி விட செய்யும் காலத்துக்கு நாள் பார்க்க வேண்டாம்
சம்சாரம் வளர்க்கும் கர்தவ்யம் கல்யாணாதிகள் இதுக்கு நாள் பார்க்க வேண்டுமே –
நந்த கோபன் குமரன் தருவான் –
ஆச்சார்யர்க்கு வசப்பட்ட சர்வேஸ்வரனே பிராப்யம் பிராபகம் என்றவாறு

நாராயணனே நமக்கே பறை தருவான்
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந் தண்ணந் துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-
நல்ல வருள்கள் –
என் குற்றத்தை யாதல்
தன்னுடைய சர்வஞ்ஞதவம் ஆதல் பாராமல்
தன பேறாக பண்ணின அருள் –
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியிலே
விடாய்க்கு அருளினான் என்று இருக்கின்றிலர்-
நமக்கே தந்தருள் செய்வான் –
பலர் அடியார் முன்பு அருளிய -திருவாய்மொழி -7-10-5–என்கிறபடியே
நித்ய ஸூரிகளும் தாம் பெற்ற பேறு பெற்றிலர் என்றாயிற்று நினைத்து இருப்பது –

எம்பெருமானார் விஷயமாகவே –
ஸ்ரீ பாஷ்யாதிகள் சாதிக்கும் பொழுது கதிர் போலேயும்
பகவத் விஷயாதிகள் சாதிக்கும் பொழுது ஆஹ்லாத சீதா நேத்ராம்பு -மதியம் போலேயும் இருப்பாரே
நாராயணனே நமக்கே பறை தருவான் – சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்த மயீம்
தநூம் மக் நான் உத்தரதே லோகான் –உத்தாராக ஆச்சார்யர் அன்றோ

பாரோர் புகழ –
கிருஷ்ணனையும் நம்மையும் சேர ஒட்டாதவர்கள்–தாங்களே கொண்டாடும்படி
கிருஷ்ணன் வேண்டும் உபகரணங்களைக் கொடுக்க
பெண்கள் நோன்பிலே உபக்ரமித்தார்கள்–
பாருக்கு எல்லாம் அநாவ்ருஷ்டி இல்லாமையால்–வர்ஷித்தால் பார் எல்லாம் கொண்டாட ப்ரசக்தி இல்லாமையாலும்
சேர ஒட்டாதவர்கள் புகழ்கையே இவர்களுக்கு பரம உத்தேச்யமாய் இருக்கையாலும்
பாரோர் –
என்றதுக்கு கோப வ்ருத்தர் பரமாக அர்த்தம்-நாடு அடங்க அநாவ்ருஷ்டி தீர்ந்து சக்ருத்தமாய்த்து
என்று கொண்டாடும்படி-

பறை தருவான் -இத்யாதி
புருஷார்த்தத்தைக் கொடுப்பான் -ஆகையால் பூமிப் பரப்பில் உள்ள லௌகிக வைதிக பரம வைதிகர்
எல்லாரும் கொண்டாடும்படி
இந் நோன்பிலே அவஹாகித்து நீராடப் போதுமினோ என்று அந்வயம்-
காமனாதிகாரிகளுக்கு சாதனமாயும்
நிஷ்காமருக்கு நித்யமாயும்
பகவத் பிரபன்னர்க்கு கைங்கர்யமாயும்
போருகிற இந் நோன்பிலே-பகவத் அனுபவ ஏகாந்தம் என்று அத்யவசித்து
ஸ்ரத்தா பூர்வகமாதயதா விதானம் அனுஷ்டித்தால்-லௌகிக வைதிக பரம வைதிகர்கள் உடைய கொண்டாட்டம்-
தன்னடையே சித்திக்கும் இறே
யத்தாஷ்டாஷர சம்சித்தோ மஹா பாஹோ மஹீயதே-என்னக் கடவது இறே-

சமஸ்த கல்யாண குணாத் மகனான ஸ்ரீ மன் நாராயணனை
அவனை ஒழிய ப்ருதுக் ஸ்திதி யுபலபதி இல்லாதபடி-பிரவேசித்து-ஸ்வ சத்தையை லபித்தேன் -என்று
ப்ரஹ்ம அனுபவத்துக்கு-நீராட்டத்தை திருஷ்டாந்தமாக சொல்லுகையாலே-
நீராட -என்று பிராப்யத்தை ஸங்க்ரஹித்தார்கள்-
நீராடப் போதுவீர் என்று -இப் புருஷார்த்தத்துக்கு இதில் இச்சையை உடையவர்களே
அதிகாரிகள் என்று அதிகாரியை ஸங்க்ரஹித்தார்கள்-
நாராயணனே என்று ப்ராபகத்தை ஸங்க்ரஹித்தார்கள்-
நமக்கே என்று உபாய அதிகாரிகளை ஸங்க்ரஹித்தார்கள்-
இத்தால்-
உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக-அவனையே உபாயமாக பற்றுகை-அதிகாரம் என்றது-ஆய்த்து-

நாம் விதித்த படி செய்வானாக -சொல் படி என்னாமல்-விதி அதிகிரமத்தில் பிரத்யவாயத்துக்கு
அஞ்சுவாரைப் போலே
நிரந்குச ஸ்வ தந்த்ரன் -இப்படி வித்தித்த படி செய்வதே -சௌலப்ய குணம் பாரோர் புகழ -என்றபடி-

படிந்து–இந் நோன்பிலே அவஹாகித்து–நீராடப் போதுவீர் போதுமினோ -என்று அந்வயம்

ஏல் ஓர்
பாதத்தை பூரித்துக் கிடக்கிறது–
எம் பாவாய்–
எங்கள் நோன்பு -என்னுதல்–
எங்கள் சந்தஸ் -என்னுதல்
ஏல் –
இப்படி ஆகில்–சம்போதனம் ஆகவுமாம்–
ஓர் -புத்தி பண்ணுங்கோள் -என்னவுமாம்-
அத்விதீயம்
ஏலோரெம்பாவாய்–
சொல் தொடர் என்றே கொள்ள வேண்டும் தடம் பொங்கத் தம் போங்கோ போலே
ஏல் — இயலுமா –ஆகுமா
ஏல் –
எமது கிரிசைகளை ஏற்றுக் கொள்–
ஓர் –
பேறு பெருவிக்கும் வகையை ஆராய்வாக
எம் பாவாய் –
எங்கள் விரதமே -நோன்பே –
பாவாய்
என்று ரதியைச் சொல்லிற்று ஆகவுமாம்-நாயனார்–
காம சமாஸ்ரயணம் அடுத்து செய்வதால்

நந்தகோபன் இளம் குமரன் நாராயணனே தருவான் -சுலபனானவன் —நாராயணனே –
ஒவ் ஒன்றிலும் சேர்த்து அன்வயித்து-இளம் சிங்கம்-ஐஸ்வர்யம் மேனானிப்பு சிங்க குருகு-

இப்பாட்டில் -ஏஷ ப்ரஹ்மபிரவிஷ்டோ ச்ம்க்ரீஷ் மே சீதமிவ ஹ்ருதம் -என்கிறபடியே
கிரீஷ்ம காலத்தில் சூர்ய கிரண தப்தனானவன் தன தாபம் ஆறும்படி குளிர்ந்த மடுவிலே
நாம ரூப விபாக அர்ஹனாம் படி-பிரவேசிக்குமா போலே
சம்சார தாபார்த்தனான தான் அந்த தாபம் ஆறும்படி
சமஸ்த கல்யாண குணாத்மகனான ஸ்ரீ மன் நாராயணனை
அவனை ஒழிய ப்ருதுக் ஸ்திதி யுபலபதி இல்லாதபடி-பிரவேசித்து
ஸ்வ சத்தையை லபித்தேன் -என்று ப்ரஹ்ம அனுபவத்துக்கு
நீராட்டத்தை திருஷ்டாந்தமாக சொல்லுகையாலே
நீராட -என்று பிராப்யத்தை ஸங்க்ரஹித்தார்கள்-

நீராடப் போதுவீர் என்று -இப் புருஷார்த்தத்துக்கு இதில் இச்சையை உடையவர்களே
அதிகாரிகள் என்று அதிகாரியை ஸங்க்ரஹித்தார்கள்-

நாராயணனே என்று ப்ராபகத்தை ஸங்க்ரஹித்தார்கள்-
நமக்கே என்று உபாய அதிகாரிகளை ஸங்க்ரஹித்தார்கள்-
இத்தால்
உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக–அவனையே உபாயமாக பற்றுகை-அதிகாரம் என்றது-ஆய்த்து–

திருப்பாவை முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு ஸங்க்ரஹமாய் இருக்கும் -எங்கனே என்னில்
ஸ்ரீ பாஷ்யம் ஒன்பதினாயிர க்ரந்தத்துக்கும் முதல் ஸ்லோஹம் ஸங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ ராமாயணம் இருபத்து நாலாயிரம் கிரந்தத்துக்கும் முதல் சர்க்கம் ஸங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ மஹா பாரதம் நூறாயிரத்து இருபத்தையாயிரம் க்ரந்தத்துக்கும் முதல் அத்யாயம் ஸங்க்ரஹமானால் போலேயும்
திருவாய் மொழிக்கு முதல் திருவாய்மொழி ஸங்க்ரஹமானால் போலேயும்
முதல் திருவாய் மொழிக்கு முதல் பாட்டு ஸங்க்ரஹமானால் போலேயும்
மந்த்ர சேஷத்துக்கு பிரணவம் ஸங்க்ரஹமானால் போலேயும்
முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு ஸங்க்ரஹமாய் இருக்கும் -ஸங்க்ரஹமான படி எங்கனே என்னில்-

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் –
என்கிற இடத்தில் முதலிட்டு அஞ்சு பாட்டுக்கும் ஸங்க்ரஹம் சொல்லிற்று –
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் –
என்கிற இடத்திலே பத்துப் பெண்களை எழுப்புகிற இடத்துக்கு ஸங்க்ரஹம் சொல்லிற்று
கூர்வேல் கொடுந்தொழிலன் -என்கிற இடத்தில்
கோவில் காப்பானே -என்கிற இடத்துக்கு ஸங்க்ரஹமாகச் சொல்லுகிறது
நந்த கோபன் -என்கிற இடத்தாலே –
நாயகனாய் நின்ற நந்தகோபன் என்றும் ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்
குமரன் -என்றத்தால்
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே -என்கிற இடத்துக்கு ஸங்க்ரஹம்
கதிர் மதியம் போல் முகத்தான் -என்கிற இடத்தால் –
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் -என்றும் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே என்றும் இத்யாதிகளுக்கு ஸங்க்ரஹம்
நாராயணன் -என்கிற இடத்தாலே-
நாராயணன் மூர்த்தி கேசவன் என்றும் நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்றும் ஓங்கி உலகளந்த உத்தமன் -என்றும்
மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றும்
முகில் வண்ணன் பேர் பாட -என்றும்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே என்றும்
வங்கக் கடல் கடைந்த மாதவன் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்
நமக்கே பறை தருவான் -என்கிற இடத்தாலே –
பாடிப் பறை கொண்டு என்றும் நம்மால் போற்றப் பறை தரும் -என்றும்
இற்றைப் பறை கொள்வான் என்றும்
அறை பறை என்றும் சாலப் பெரும் பறை என்றும்