ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
ஸ்ரீ கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
ஸ்ரீ ராமானுஜ தயா பாத்ரம் ஞான வைராக்ய பூஷணம்
ஸ்ரீ மத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்
சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு
விகாஹே நிகமாந்தார்ய விஷ்ணு பாத சமுத்பாவம்
ரஹஸ்ய த்ரய சாராக்யாம் த்ரிஸ் ரோதசம் அகல்மஷாம்
அவ்விஞ்ஞாதம் விஜாநதாம் விஞ்ஞாதம் அவிஜாநதாம்
ரஹத்ய த்ரய சாராக்யம் பரம் ப்ரஹ்மாஸ்து மே ஹ்ருதி
நமோ ராமாநுஜார்யாய சவும்ய மூர்த்தி ஸூஸூநவே
விசித்ர சித்ர சாரோயம் யஸ்ய அனுக்ரஹ வாரிஜா
வேதே சஞ்ஜாத கேதே முநிஜன வசனே ப்ராப்த நித்யாவமானே
சங்கீர்ணே சர்வ வர்ணே சதிததநுகுணே நிஷ் பிரமாணே புராணே
மாயாவாதே சமோதே கலி கலுஷ வசாத் சூன்ய வாதே விவாதே
தர்ம த்ராணாய யோபூத் ச ஜயதி பகவான் விஷ்ணு கண்டாவதார
———————————-
32–அதிகாரங்கள் -4-பாகங்கள் உண்டு
முதல் பாகம் -அர்த்த அநு சாசனம் -22-அதிகாரங்கள் -தத்வ ஹித புருஷார்த்த -சித் அசித் ஈஸ்வர விவரணம்
இரண்டாம் பாகம் -ஸ்திரீகரணம் –4-அதிகாரங்கள் -சங்கா பரிஹாரமும் -விவரத்தை நிலை நாட்டலும்
மூன்றாம் பாதம் -பாத வாக்ய யோஜனை -3-அதிகாரங்கள் –ரஹஸ்ய த்ரய விளக்கம்
நான்காம் பாதம் –ஸம்ப்ரதாய ப்ரக்ரியா -3-அதிகாரங்கள் -ஆச்சார்ய சிஷ்ய கடைமைகள் -கிரந்த பல ஸ்ருதி அருளி தலைக் கட்டுகிறார்
ஒவ் ஒரு அதிகாரமும் -முதலில் ஸ்லோக ரூபமாக -கீழே சொன்ன விஷயமும் -மேலே சொல்லப் போகும் விஷயமும் –
அந்த அந்த அதிகாரத்தின் விஷயமும் –
அதுக்கு ப்ரமாணங்களாக -ஸ்ம்ருதி இதிஹாச சம்ஸ்க்ருத திவ்ய ஸூக்திகள் -அருளிச் செயல்கள் -சுருக்கமான தமிழ் பாட்டு –
இறுதியில் சுருக்கமான ஸ்லோகம் -இப்படி க்ரமமாக அமைந்துள்ளது –
———————————–
ஸ்ரீ குரு பரம்பரா சார சாரம் -நன்றும் தீதும் நமக்கு உரைப்பாறை நாடிப் பெறுதல்
அர்த்த அநு சாசன பாகம்
1-உபோத்காத அதிகாரம் -க்ரந்தத்தின் தலை வாசல் திறப்பு
2-சார நிஷ்கர்ஷ அதிகாரம் -எட்டு இரண்டு எண்ணிய சதிர்க்கும் தனி நிலை
3-பிரதான பிரதிதந்தர அதிகாரம் -துழாய் முடியான் உடம்பாய் நாம் அடியோம் -என்ற முக்கிய அடிப்படைக் கொள்கை
4-அர்த்த பஞ்சக அதிகாரம் -அடிப்படையில் அலர்ந்த ஐந்தறிவு
5-தத்வத்ரய சிந்தனை அதிகாரம் -அரு -உருவானவை பற்றி ஆய்வு
6-பர தேவதா பாரமார்த்யதிகாரம் -திரு மாதுடன் நின்ற புராணம்
7-முமுஷூத்வ அதிகாரம் -வீடினை வேண்டும் பெரும் பயன்
8-அதிகாரி விபாக அதிகாரம் –நீண்டும் குறுகியும் நிற்கும் நிலைகளை ஏற்பவர்
9-உபாய விபாக அதிகாரம் -பல மறையின் பரம நெறி
10-பிரபத்தி யோக்ய அதிகாரம் -அநந்யராய் வந்து அடையும் வகை –
11-பரிகர விபாக அதிகாரம் -துணையாம் பரனை வரிக்கும் வகை
12-சாங்க பிரபதன அதிகாரம் -அறமே பரம் என்று அடைக்கலம் வைத்தமை –
13-க்ருதக்ருத்யாதிகாரம்-வேள்வி அனைத்தும் முடித்தமை
14-ஸ்வநிஷ்ட அபிஜ்ஞாந அதிகாரம் -மூன்றில் நிலையுடைமை –
15-உத்தர க்ருத்ய அதிகாரம் -கடன்கள் கழற்றிய அடிமை
16-புருஷார்த்த காஷ்ட அதிகாரம் -நல்லடியார்க்கு ஆதரம் மிக்க அடிமை
17-சாஸ்த்ரீய நியமன அதிகாரம் -மேதினியில் இருப்பது விதியினாலே
18-அபராத பரிஹார அதிகாரம் -மாளாத வினை அனைத்தும் மாளும் வகை
19-ஸ்தான விசேஷ அதிகாரம் -வானாடுகந்தவர் வையத்து இருப்பிடம் நன் நிலம்
20-நிர்ணய அதிகாரம் -உடலைச் சிறை வெட்டி விட்டு வழிப் படுத்தும் வகை
21-கதி சிந்தனை அதிகாரம் -வானேறும் வழி கண்டோம்
22-பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் -அந்தமிலா பேரின்பம் அருந்துதல் –
குருக்கள் குரை கழல் கீழ் மகிழ்ந்து எழும் போகத்து மன்னுதல்
ஸ்திரீகரண பாகம்
23-சித்த உபாய சோதன அதிகாரம் -திரு நாரணன் மன்னிய வன் சரண்
24-ஸாத்ய உபாய சோதன அதிகாரம் -வரிக்கின்றனன் குறி ஒன்றால்
25-ப்ரபாவ வ்யவஸ்தித அதிகாரம் -அடியார் ஆதரத்தில் ஆரண நீதி நெறி குலையாமை
26-ப்ரபாவ ரக்ஷ அதிகாரம் -தண்மை கிடக்க தரம் உள்ளமை
பத வாக்ய யோஜனா பாகம்
27-மூல மந்த்ர அதிகாரம் -நன் மனு ஓதினம்
28-த்வய அதிகாரம் -திருமால் பாதம் இரண்டும் சரண் எனப் பற்றி அடிமை கொள்ளுதல்
29-சரம ஸ்லோகார்த்தம் -மன்னருள் வாசகத்தால் மருள் அற்றமை
சம்பிரதாய ப்ரக்ரியா பாகம் –
30-ஆச்சார்ய க்ருத்ய அதிகாரம் -அருளுற்ற சிந்தையினால் அழியா விளக்கு ஏற்றினார்
31-சிஷ்ய க்ருத்ய அதிகாரம் -இருள் அனைத்தும் மாற்றினவர்க்கு ஒரு கைம்மாறு
32-நிகமன அதிகாரம் -நிலைகள் தான் உளனாய் உகக்கும் தரம்
————————————–
ஆச்சார்யரை அணுக -அவர் கடாக்ஷத்தால் கற்கும் மூல மந்த்ரம் -ஐந்தறிவு புகட்டி –
இவ்வைந்தில் முத் தத்வத்தை விளக்கி
இத் தத்துவம் மூன்றில் புராணனே புகல் பயன் என்கிறது
வீடினை வேண்டுபவர் செய்யும் பக்தி அல்லது பிரபத்தி தான் மோக்ஷ உபாயங்கள்
பிரபத்தி செய்ய அனைத்து உலகும் உரியது என அங்கங்களை விளக்கி
அங்கி பரமனுக்கு அடிமை என்ற நினைப்பே என்கிறது
இப்படி வேள்வி முடித்து நிஷ்டையுடன் மேதினியில் இருக்கும் அளவும் கைங்கர்யங்களை
பாகவதர்கள் வரையில் சாஸ்த்ரப்படியே செய்து காலத்தைக் கழிக்கும் ப்ரபன்னனுக்கு பாபங்கள் கழியும்
காலத்தைக் கழிக்க பாகவதர்கள் வசிப்பதாய் உள்ள இடமே ஏற்றது
சரீரம் விழ எம்பெருமான் ஜீவனை அர்ச்சிராதி மார்க்கத்தில் புறப்படச் செய்கிறான்
புறப்பட்ட ஜீவனை விரஜா நதியைக் கடத்துவித்து அழகு ஓலக்கத்திலே நித்ய முக்தர்களோடு
புரையப் பரிமாறும் படி செய்விக்கிறான்
ஜீவன் தேச விசேஷத்தை அடைந்து எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து கொண்டு
முழுமையான பேர் இன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பான்
மேலே சித்த உபாயமான எம்பெருமானைப் பற்றியும் ஸாத்ய உபாயங்களை பற்றியும்
அறிந்த ஞானத்தை ஸ்திரப்படுத்துகிறது
ஸாத்ய உபாய ப்ரபாவத்தை வரை அறுத்து ரஷிக்கிறது
அடுத்து அஷ்டாக்ஷர த்வய சரம ஸ்லோகத்தின் பத வாக்ய யோஜனைகளை விவரிக்கிறது
கடைசியாக ஆச்சார்ய சிஷ்யர்களின் கடமைகளை குறிப்பிட்டு கிரந்தத்தை
பல ஸ்ருதியுடன் தலைக் கட்டுகிறது –
————————-
பிரயோகிக்கப்பட்ட பதங்களின் லக்ஷணம்–
பிரதான பிரதிதந்தர அதிகாரம் —
த்ரவ்யம் -சேதனம் அசேதனம் ஈஸ்வரன் என்ற பிரிவை யுடைய அந்த வஸ்துவே
அத்ரவ்யம் -அந்த த்ரவ்யத்தின் குணம் போன்ற தன்மை குணங்கள்
சத்தா -ஸ்வரூபம் -வஸ்துவின் முதல் க்ஷண சம்பந்தத்தைச் சொல்வது
ஸ்திதி -வஸ்துவின் மேன் மேலான க்ஷண சம்பந்தத்தைச் சொல்வது
ப்ரவ்ருத்தி -த்ரவ்யத்தின் செயல்
தர்மம் -த்ரவ்யத்தின் அடையாளம் -லக்ஷணம்
தர்மி -தர்மத்தை உடைய த்ரவ்யம்
ஸ்வரூப நிரூபக தர்மம் -எந்த தர்மம் அறியப் படா விட்டால் தர்மி ஸ்வரூபமே அறிய முடியாதோ அது
நிரூபித ஸ்வரூப விசேஷணம் -எந்த தர்மம் தர்ம ஸ்வரூபத்தை மற்றவைகளை விட வேறாகத் தெரிவிக்கிறதோ
ஆத்மா -ஒரு த்ரவ்யத்துக்கு எக்கால -எந்த நிலையிலும் -தாரகனாய் -நியாந்தாவாய் -சேஷியாய் -இருக்கை
சரீரம் -சேதனனுக்கு எக்கால -எந்த நிலையிலும் -ஆதேயமாய் -விதேயமாய் -சேஷமாய் இருக்கை
தத்வ த்ரய சிந்தனா அதிகாரம்
அசேதன தத்வம் -ஞானத்துக்கு ஆஸ்ரயமாய் பிறருக்கே தோன்றுவதாய் இருப்பது
சேதனத்வம் -ஞானத்தை உடையதாய் இருக்கை
ஞானத்தவம் -தன்னுடையவோ வேறு ஒன்றினுடையவோ இருக்கையை அறியச் செய்கை
ஜடத்வம் -ஸ்வயம் பிரகாசத்வம் அற்று இருக்கை
ஸ்வயம் பிரகாசத்வம் -தான் தெரியும்படிக்கு வேறு ஒரு ஞானத்தின் உதவி இன்றியும் பிரகாசிப்பது
ப்ரத்யக்த்வம் -தனக்குத் தான் குணங்களோடு தோன்றுகை
விஷயத்வம் -தன்னை ஒழிந்த ஒன்றைக் காட்டுதல்
ஆத்ம வர்க்க லக்ஷணம் -சேதனத்வமும் ப்ரத்யக்த்வமும்
ஈஸ்வர லக்ஷணம் -விபுத்வ -ஸ்வாமித்வத்தோடு சேதனனாய் இருக்கை
ஜீவ லக்ஷணம் -அணுவாயும் சேஷனாயும் இருக்கை
அசேதன லக்ஷணம் -ஞான ஆஸ்ரயம் இன்றிக்கே மற்றவர்க்கே தோன்றக் கடவனாய் இருக்கை
பிரபத்தி யோக்ய அதிகாரம்
அதிகாரம் -பல உபாயத்தில் இழிபவனுக்கு பலத்தில் அர்த்தித்வமும் உபாயத்தில் சாமர்த்யமும்
பலம் -அதிகாரம் உடையவனும் ப்ரயோஜனமாய் அடையப்படுவதாக இருப்பது
அர்த்தித்வம்-அடைய வேண்டும் என்ற ஆசை
உபாயம் -பலத்தை அடையச் செய்ய வேண்டியதாக விதிக்கப் பட்டது –
சாமர்த்யம் – சாஸ்திரத்தை அறிகை / அறிந்தபடி அனுஷ்ட்டிக்க வல்லனாகை /
சாஸ்திரம் சொன்ன ஜாதி குணாதிகள் உடைமை
ஆகிஞ்சன்யம் -வேறே ஒரு உபாயத்தை -உபாசனத்தை -செய்வதில் சாமர்த்தியம் இல்லாமை
அநந்ய கதித்வம் -மோக்ஷத்தை தவிர்த்து வேறே பலனை நாடாமை /
தான் விரும்பும் பலனை அடைய வேறே ஒரு தெய்வத்தை நாடாமை
———————————————-
ஸ்ரீ குரு பரம்பரா சார சாரம் -நன்றும் தீதும் நமக்கு உரைப்பாறை நாடிப் பெறுதல்
யஸ் ஸ்ரேயஸ்யாந் நிச்சிதம் ப்ரூஹி தாமே சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம் -என்று
அர்ஜுனன் வேண்டிய கணக்கில் பயனை விழைவோர் ஆச்சார்யரை அணுக வேண்டியதின் அவஸ்யத்தை விளக்குவது
குருப்ய தத் குருப்யச்ச நமோ வாக மதீ மஹே
வ்ருணீ மஹே ச தத்ராத்யவ் தம்பதீ ஜகதாம் பதீ
நன்றும் தீதும் உரைப்பார் யார் -எம்பெருமானும் -அவன் தண் அவதாரமேயான நம் ஸம்ப்ரதாய ஆச்சார்யர்களும்
ஏன் நாட வேணும் -ஏன் எனில் ஆச்சார்யன் உபதேசித்த வித்யை தான் நிலைக்கும்
நாடிப் பெற பிரமாணம் -என்ன –
விதி உள்ளது -ஆகவே நித்யம் / பிராயச்சித்தம் -ஆகவே நைமித்திகம் /ஞான சாதனம் ஆகவே காம்யம் ஆகிறது
எவர்க்குத் தேவை -பாபியான க்ஷத்ர பந்து வாகிலும்-புண்யனான புண்டரீகனே யாகிலும்
எதற்குத் தேவை -மோக்ஷ உபாயம் அறிய -செய்து எல்லையில்லா ப்ரஹ்ம ஆனந்தம் அனுபவிக்க
பெற்று இனிச் செய்வது -ஆச்சார்யர்களைப் போற்றுவது -உபதேசித்த மந்த்ரங்களை மறைத்து ரஷிப்பது
எம்பெருமான் பரம ஆச்சார்யனாவது எப்படி என்னில்
ஹம்ஸ -மத்ஸ்ய -ஹயக்ரவ -நாராயண -கீதாச்சார்யனாக திரு அவதரித்து
வ்யாஸாதிகள் -ஆழ்வார்களை அநு பிரவேசித்து -ப்ரஹ்ம ஸூ த்ரம் -மஹா பாரதம் -அருளிச் செயல்கள்
சனகாதி ஜீவர்களை நியமித்து நாரதர் பராசரர் சனத் குமாராதிகளுக்கு ஞானம் கொடுத்து பிரவசனம் செய்வித்து அருளி
ஆழ்வாராதிகளுக்கு அருளால் உபதேசித்து –
பாஷாண்டிகளை நிரசிக்க ஸம்ப்ரதாய ரக்ஷணத்துக்கு ஆச்சார்யர்களாக அவதரித்ததும் இத்யாதி
சிஷ்யருக்குள் ஞானத்தில் தாரதம்யம் குரு பக்தியில் வாசியே ஹேது
———————————
அர்த்த அநு சாசன பாகம்
1-உபோத்காத அதிகாரம் -க்ரந்தத்தின் தலை வாசல் திறப்பு
அவர் கடாக்ஷத்தால் மூன்றினுள்ளும் நாளும் உகக்கப் பெறுவதே இக்கிரந்தத்தின் பயன் என்று விளக்குகிறது
ஆபகவத்த பிரதிதாம் அநகாம் ஆச்சார்ய சந்ததிம் வந்தே மனசை மம யத் ப்ரஸாதாத் வசதி ரஹஸ்ய த்ரயஸ்ய சாரோயம்
ஆச்சார்யர் அனுக்ரஹத்தால் ரஹஸ்ய த்ரய சாரம் மனசில் நிலை பெற்று இருக்கும்
—————————————————-
2-சார நிஷ்கர்ஷ அதிகாரம் –
எட்டு இரண்டு எண்ணிய சதிர்க்கும் தனி நிலை
ஆச்சார்யர் இடம் கற்கும் கல்விகள் பலவாயினும் எட்டு இரண்டு எண்ணுவதே சதிர்க்கும் தனி நிலை என்கிறது
பல கற்ற மெய்யடியார் –
வேதங்களில் -பாஹ்ய குத்ருஷ்ட்டி சாஸ்திரம் -விஷ சாம்ய அத்யந்த அ சாரம்/ கர்ம காண்ட விஷயங்கள் -அல்ப சாரம் /
ஸ்வர்க்காதி புருஷார்த்துக்கு சாரம் சார தமம் / தகவல் லாபம் -உபநிஷத் சார தமம் –ரஹஸ்ய த்ரயம் -அத்யந்த சார தமம் –
—————————————————-
3-பிரதான பிரதிதந்தர அதிகாரம் –
துழாய் முடியான் உடம்பாய் நாம் அடியோம் -என்ற முக்கிய அடிப்படைக் கொள்கை
இம்மூன்றில் முக்கியமாம் மூல மந்த்ரம் -முதல்வனுக்கு இவ்வுலகு உடல் -எனத் தெளிவிக்கும் என்கிறது
நிருபாதிக -ஆதாரத்வ -சேஷித்வ -நியந்த்ருத்வ –
பிரணவம் -அ -எம்பெருமான் -/ அ ஆய -எம்பெருமானுக்கு / ஆ ஆய உ -எம்பெருமானுக்கே /
அ ஆய உ ம -எம்பெருமானுக்கே ஜீவன் சேஷன்
உ பிராட்டி -மிதுனத்துக்கே சேஷன் என்றுமாம் அர்ஜுனன் ரதம் போலே –
பெருமாள் சீதா பிராட்டி இளைய பெருமாள் நடந்து காட்டியது போலே
————————————–
4-அர்த்த பஞ்சக அதிகாரம் –
அடிப்படையில் அலர்ந்த ஐந்தறிவு
இம் முக்கியத்தைச் சார்ந்ததான ஐந்தறிவு புகட்டி நிற்கிறது
பர ஸ்வரூபம்-ஸ்ரீ யபதி – -சத்யம் ஞானம் -அநந்தம் -ஆனந்தம் -அமலம் –
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை ஏக -/ உபய விபூதி உக்தன் /
ப்ராப்ய ப்ராபக உபயுக்த குணங்கள் / அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம்
அர்த்த பஞ்சகத்தில் உள்ள –
எம்பெருமான் -நான் -அஹங்காரம் -இவையே தத்வ த்ரயங்கள்
பகவத் நிக்ரஹ விரோதி நீக்கும் பரிஹாரம் பிரபத்தி -தஸ்ய ச வசீ கரணம் தச் சரணாகதி ரேவா -ஸ்ரீ பாஷ்யகாரர்
———————————————
5-தத்வ த்ரய சிந்தனை அதிகாரம் –
அரு -உருவானவை பற்றி ஆய்வு
இவ் வைந்தில் உடம்பு கொடு மோஹம் கெட உதவும் முத் தத்வத்தை விலக்கி நிற்கிறது
கேவல ப்ரக்ருதி -மூல பிரகிருதி மறு ஸ்ரீ வத்ஸம் /
ப்ரக்ருதி -விக்ருதி -மஹான் -அஹங்காரம் தன்மாத்ரை ஆகிய -3-
கேவல விக்ருதி -மனஸ் இந்திரியங்கள் பஞ்ச பூதங்கள் ஆகிய -21-
மஹான் -தண்டு /அஹங்காரம் -சாத்விக ரஜஸ் தாமச -சங்கு சார்ங்கம் / மனஸ் -திகிரி
கர்ம இந்திரியங்கள் -வாக்கு பாணி பாதம் பாயு உபஸ்தம் –
ஞான இந்திரியங்கள் -கண் காது மூக்கு நாக்கு த்வக் -இவை சரங்கள்
தன் மாத்திரைகள் -சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரசம் கந்தம் -பஞ்ச பூதங்கள் -இவை வனமாலை
பிருத்வி -கந்தம்/ தண்ணீர் -ரசம் / அக்னி -ரூபம் / காற்று -ஸ்பர்சம் /ஆகாசம் -சப்தம்
———————————–
6-பர தேவதா பாரமார்த்யதிகாரம் –
திரு மாதுடன் நின்ற புராணம்
இத் தத்துவம் மூன்றில் திரு மாதுடன் நின்ற புராணனே புகல் -பயன் -என்கிறது –
————————–
7-முமுஷூத்வ அதிகாரம் –
வீடினை வேண்டும் பெரும் பயன்
இவ் வளவான அறிவால்-எனக்கு உரியன்-எனது பரம் -எனது பேறு என்னாது
அஞ்சிறைக்கு அஞ்சி பெரும் பயன் வீடினை வேண்டுபவர் முமுஷூ என விளக்கம் அளிக்கிறது
முதல் ஆறு அதிகாரங்களால் தத்வ விளக்கம் –
அடுத்து ஆறு அதிகாரங்களால் ஹித விளக்கம் அருளிச் செய்வதற்கு முன்பு
முமுஷூத்வ அதிகாரம் வளரும் ஏழு படிகள்
1-ப்ரதிபாதன பிரதிதந்தர சரீராத்மா பாவம் அறிவது
2-தேஹ இந்திரியங்களை விட உண்டான ஆத்ம வைலக்ஷண்யம் அறிதல் -உபோத்காதாதிகாரம்
3-க்ருத்ய கரணம் -அக்ருத்ய அகரணம்
4-தான் சேஷ -ஆதேய விதேய-அநு -அல்ப சக்தன்-அறிந்து –
5-ரஹஸ்ய த்ரய ஞானம் -அர்த்த பஞ்சக ஞானம் பெற்று அஹங்கார மமகாரங்களை ஒழித்து
6-சுவர்க்கம் கைவல்யம் அல்பம் அஸ்த்ரம் அறிந்து- சார தம அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் அடைய பாரிப்பு
7-ஸூவ பிரவ்ருத்தி நிவ்ருத்தராய் ஈஸ்வர பிரவ்ருத்திக்கு ஹேதுவான சரண் அடைய முமுஷுக்கு அதிகாரம் கிட்டும் –
—————————————-
8-அதிகாரி விபாக அதிகாரம் —
நீண்டும் குறுகியும் நிற்கும் நிலைகளை ஏற்பவர்
இவ்விதம் வீடு வேண்டும் தகுதி உடையோர் செய்யும் பக்தி அல்லது பிரபத்தி தான்
இருவகையாய் நின்ற போதிலும் அவர்கள் உடலை விட்ட பின் பெரும் பேறு ஒரே வகை தான் என்று விவரிக்கிறது
சத்வாரக பிரபத்தி நிஷ்டன் -பிரபத்தியை அங்கமாகக் கொண்டு -31-ப்ரஹ்ம வித்யா மூலம் பக்தியை சாதன ரூபமாக
அத்வாரக பிரபத்தி நிஷ்டன் -பக்தியை பல ரூபமாக
இதில் யுக்தி நிஷ்டன் -ஆச்சார்ய உபதேசம் பெற்று தானே பிரபத்தி
ஆச்சார்ய நிஷ்டை -ஆச்சார்யன் அனுஷ்ட்டிக்கும் சமர்ப்பணத்தில் அடங்குதல்
—————————————————————————-
9-உபாய விபாக அதிகாரம் –
பல மறையின் பரம நெறி
இவ்வதிகாரிகள் அனுஷ்ட்டிக்க வேண்டிய மோக்ஷ உபாயங்கள் பக்தி ப்ரபத்தியாய் இருவகை என விளக்கும்
———————————————-
10-பிரபத்தி யோக்ய அதிகாரம் –
அநந்யராய் வந்து அடையும் வகை –
இவ்விரு உபாயங்களுக்குள் பிரபத்தி செய்யும் தகுதியை -15-வகையாக எடுத்து இத் தகுதி ஒழிய
ஜாதி ஆஸ்ரமம் போன்ற வேறே தகுதி ஏதும் வேண்டாது அனைத்து உலகும் வந்து அடைய உரியது
என்று தேர்ந்து அளிக்கிறது
—————————————
11-பரிகர விபாக அதிகாரம் –
துணையாம் பரனை வரிக்கும் வகை
செய்ய விழையும் ப்ரபத்தியின் அங்கங்களை விளக்கி நிற்கிறது
சர்வஞ்ஞன்–நம் அபராத பாஹுல்யம்-சங்கை -புருஷகாரத்வம் -அந்தப்புர வாசிக்கு அஞ்ஞாதன் ஆவான்
சர்வசக்தன் -பிரதிபந்தகங்களை போக்கும் சாமர்த்தியம்
கர்ம பலன் அளிக்க வேண்டி வருமே -சம்பந்தம் ப்ராப்தான் -திரு உள்ள நினைவே பாப புண்யங்கள்
ஸ்வயம் பிரயோஜனமாக கொள்ளும் அவாப்த ஸமஸ்த காமன்
———————————————
12-சாங்க பிரபதன அதிகாரம் –
அறமே பரம் என்று அடைக்கலம் வைத்தமை –
இப் பிரபத்திக்கு அங்கி பரம் அறுத்து பரமனுக்கு மிக்க அடிமை என்ற நினைப்பே என்கிறது –
குரு பரம்பரா பூர்வகமாக -ரஹஸ்ய த்ரயார்த்தம் அனுசந்தானம் –
த்ரிவித தியாக புத்தி -ஸ்வரூப -ரஷா பர-ரஷா பல சமர்ப்பணம்
இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் சேர்விக்கும் -அதுவும் அவனது இன்னருளே
———————————–
13-க்ருதக்ருத்யாதிகாரம்-
வேள்வி அனைத்தும் முடித்தமை
இப்படி பிரபத்தி செய்வதற்கு முன்பு சோகம் உற்றவனாய்
செய்த பின்பு சோகம் அற்றவனாய்
வேள்வி அனைத்தும் முடித்து நிற்கும் நிலையை அறிவிக்கிறது
நித்ய நைமித்திகங்களும் பகவத் ஆராதன ரூபமே இவர்களுக்கு
—————————–
14-ஸ்வநிஷ்ட அபிஜ்ஞாந அதிகாரம் –
மூன்றில் நிலையுடைமை –
இந் நிலையில் நிஷ்டை யுடன் இருப்பதை அறியும் படியையும்
அப்படிப்பட்டவர்கள் மேதினியில் மேவிய விண்ணவர் எனவும் விவரிக்கிறது
பிறர் தூஷித்தாலும் -பாபம் சம்பாதிக்கிறார்கள் என்று அவர் பால் பொறை கிருபை –
உபகார ஸ்ம்ருதி உகப்பு இத்யாதி
ஈஸ்வரன் தூண்ட செய்வதால் அனைத்தும் ஹிதமர்த்தமாகவே கொள்ளுபவர் ஸூக துக்கங்கள் கர்மாதீனம்
என்று தேக யாத்திரைக்கு விசாரம் இல்லாமல் பிராரப்த கர்மங்கள் அனுபவித்து கடன் கழிகிறது என்று இருத்தல் –
————————————-
15-உத்தர க்ருத்ய அதிகாரம் –
கடன்கள் கழற்றிய அடிமை
மேதினியில் இருக்கும் அளவும் பகவத் ஆஜ்ஞா அநுஜ்ஞா கைங்கர்யங்களை
சங்கிலி துவக்கு போலே உகந்து செய்து வர வேண்டும் என்கிறது –
சாத்விக ஆகாரம் -சேவை -ஸாஸ்த்ர பரிசீலனம் இவற்றிலே மூண்டு
ருசி வாசனைகளை அறவே போக்கிக் கொள்ளுபவர்
த்வயம் நித்ய அனுசந்தானம்
————————————
16-புருஷார்த்த காஷ்ட அதிகாரம் –
நல்லடியார்க்கு ஆதரம் மிக்க அடிமை
இக் கைங்கர்யங்களை பாகவதர்கள் வரையில் செய்யப் பிராப்தம் என்கிறது
கோது அற்ற புருஷார்த்த காஷ்டை -பாகவதர் உகப்பே போக ரசமே உத்தேச்யம் –
——————————–
17-சாஸ்த்ரீய நியமன அதிகாரம் –
மேதினியில் இருப்பது விதியினாலே
இப்படி பகவத் பாகவத கைங்கர்யங்களை சாஸ்த்ரப்படியே செய்து வரச் சொல்கிறது
தேக யாத்ரை கர்மாதீனம் ஆகையால் அதுக்கு கரைய வேண்டாம் கரைந்தால் மரணம் வரை
தான் கர்மம் அனுபவிக்க ஒத்துக்க கொண்டது பொய்யாகி நாஸ்திகனாம்
ஆத்மயாத்ரை பகவத் அதீனம் ஆகையால் அதுக்குக் கரைய வேண்டா –
கரைந்தால் ஆத்மாவைக் காக்கும் பரத்தை சமர்ப்பித்தது பொய்யாகுமே
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் ஆதரித்து சந்தனம் பூ நிலா தென்றல் கண்டது போல் மகிழ வேண்டும்
செய்யும் கிரிசைகள் எல்லாம் பகவத் ப்ரீதிக்கு பாத்திரமாகவே இருக்க வேண்டுமே
————————————–
18-அபராத பரிஹார அதிகாரம் –
மாளாத வினை அனைத்தும் மாளும் வகை
இப்படி எஞ்சிய காலத்தை கழிக்கும் பிரபன்னனுக்கு பிராரப்த கர்ம விசேஷத்தினால் அறியாமலோ
ஆபத்தில் அறிந்தோ செய்யும் பாபங்கள் ஒட்டாது –
அநாபத்தில் அறிந்து செய்பவை பிராயச்சித்தம் செய்வதாலோ சிறு தண்டனை அனுபவித்தோ
கழியும் என்பதைக் கூறுகிறது
——————————————
19-ஸ்தான விசேஷ அதிகாரம் –
வானாடுகந்தவர் வையத்து இருப்பிடம் நன் நிலம்
இப்படி எஞ்சிய காலத்தைக் கழிக்க-வர்ண தர்மங்கள் நிலைத்து இருப்பதாய் –
பாகவதர்கள் வசிப்பதாய் உள்ள இடமே ஏற்றம் என்கிறது
உகந்து அருளின திவ்ய தேசங்களும் நதிக் கரையில் உள்ள தேசங்களும் உசிதம் என்றதாயிற்று
—————————————
20-நிர்ணய அதிகாரம் –
உடலைச் சிறை வெட்டி விட்டு வழிப் படுத்தும் வகை
இப்படி வர்த்திக்கும் பிரபன்னனுக்கு சரீரம் விழக் குறித்த சமயம் வந்தவாறே
எம்பெருமான் தன்னைப் பற்றிய அந்திம ஸ்ம்ருதி உண்டாக்கி
ஜீவனை ஸ்தூல சரீரத்தை விட்டு ப்ரஹ்ம நாடி வழியாக அர்ச்சிராதி மார்க்கத்தில்
புறப்படச் செய்கிறான் என்கிறது –
—————————————–
21-கதி சிந்தனை அதிகாரம் –
வானேறும் வழி கண்டோம்
இப்படி புறப்பட்ட ஜீவனை எம்பெருமான் போகங்கள் பல அனுபவிக்கச் செய்து விரஜா நதியை கடத்துவித்து
அப்ராக்ருதமான ராஜ உபசாரங்களை பண்ணுவித்து அழகு ஓலக்கத்திலே நித்ய முக்தர்களோடு
புரையப் பரிமாறும்படி செய்விக்கிறான் என்கிறது
———————————-
22-பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் –
அந்தமிலா பேரின்பம் அருந்துதல் –
குருக்கள் குரை கழல் கீழ் மகிழ்ந்து எழும் போகத்து மன்னுதல்
இவ்விதம் இந்த ஜீவன் தேச விசேஷத்தை
அடைந்து எல்லா தேச கால நிலைகளிலும் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து கொண்டு
முழுமையான பேர் இன்பத்தை மாறுதல் இன்றி அனுபவித்துக் கொண்டே இருப்பான் என்கிறது
சாயுஜ்யாதிகள் -ஜீவ ப்ரஹ்ம ஐக்கியம் இல்லை -ஜகத் காரணத்வ -மோக்ஷ பிரதத்வ -சர்வ ஆதாரத்வ -சர்வ நியந்த்ருத்வ
சர்வ சேஷித்வ -சர்வ சரீரத்வ -சர்வ சப்த வாஸ்யத்வ -சர்வ வேத வேத்யத்வ -சர்வ லோக சரண்யத்வ
சர்வ முமுஷூ உபாஸ்யத்வ -சர்வ பல பிரதத்வ -சர்வ வியாபித்த ஞான ஆனந்த ஸ்வரூபத்வ
ஸ்ரீ லஷ்மீ ஸஹாயத்வாதிகள் பிரதி நியதங்கள்
————————————–
அநாதி காலம் ஸம்ஸரித்துப் போந்த ஷேத்ரஞ்ஞன் அவசர பிரதீக்ஷையான பகவத் கிருபையால் புரிந்து
சமீஸீன ஸாஸ்த்ர முகத்தால்
தத்வ ஹித புருஷார்த்தங்களைத் தெளிந்து
முமுஷுவாய்
ஸ்வ அதிகார அனுரூபமாய் இருப்பதொரு உபாய விசேஷத்தைப் பரிக்ரஹித்து க்ருதக்ருத்யனாய்
தன் நிஷ்டையைத் தெளிந்து அதுக்கு அனுரூபமாக இங்கு இருந்த நாள்
யதா சாஸ்திரம் நிர் அபராதமாய்ப் பண்ணும் கைங்கர்ய ரூப புருஷார்த்தம் இருக்கும் படியும்
சரீர அநந்தரம்
அர்ச்சிராதி கதியாலே அப்ராக்ருத தேச விசேஷத்திலே சென்றால் இவனுக்கு அநவிச்சின்னமான
பகவத் அனுபவ பரிவாஹமாக வரும் பரிபூர்ண கைங்கர்ய ரூப பரம புருஷார்த்த சித்தி இருக்கும் படியும்
அர்த்த அநு சாசன பாதத்தில் சொல்லப்பட்டன –
சந்த்ருஷ்ட சார வாக் வித் ஸ்வ பர நிசிததீ சங்கஜித் நைகசம்ஸ்த
ஸ்பஷ்ட உபாய அதிகின்ந ச பரிகர பர ந்யாஸ நிஷ் பன்ன க்ருத்ய
ஸ்வாவஸ்தார்ஹம் சபர்யா விதிம் இஹ நியதம் வ்யாகசம் க்வாபி பிப்ரத்
நிர் முக்த ஸ்தூல ஸூஷ்ம ப்ரக்ருதி அநுபவதி அச்யுதம் நித்யம் எக
——————————————-
ஸ்திரீகரண பாகம் –ஸூஷ்ம தம அர்த்தங்களை விளக்குவதற்காக –
23-சித்த உபாய சோதன அதிகாரம் –
திரு நாரணன் மன்னிய வன் சரண்
மேலே இது வரை விவரித்த விஷயங்களில் -குறிப்பாக சித்தோ உபாயமான எம்பெருமான்
ஸ்வா தந்தர்யம் -கருணை -சேஷித்வம் -ஸ்ரீ லஷ்மீ சஹத்வம் -ஆகிய குணங்கள் பற்றிய
கலக்கங்களுக்கு சமாதானம் சொல்லி அறிந்த ஞானத்தை ஸ்த்திரப் படுத்துகிறது
அஸ்து தே தயைவ சர்வம் சம்பத்ஸ்யதே -என்பவள் இருக்க அவன் ஸ்வதந்திரம் கண்டு கலக்கம் வேண்டாமே
சஹஜ காருண்யம் -பர துக்க துக்கித்தவம் -பர துக்க நிராச சிகீர்ஷை
சரணம் வ்ரஜ என்று விதித்து இருப்பதால் ஆத்ம சமர்ப்பணம் ஸ்வரூப விருத்தம் அன்று
பண்ணவும் வேண்டும் பண்ணியதுக்கு பரிதவிக்கவும் வேண்டுமே
அநாதி கர்ம ப்ரவாஹ விபாக விசேஷத்தாலே ஏற்பட்ட யாதிருச்சிக்க ஸூஹ்ருத்தாதிகளை முன்னிட்டு
ஆத்ம சமர்ப்பணத்திலே மூட்டுவித்து அதனால் ப்ரீதனாய் ரஷிக்கிறான் –
வைஷம்ய தோஷம் தட்டாமல் இருக்க வியாஜ்யமாக ரஷா அபேஷையோடு ஆத்ம சமர்ப்பணம்
———————————————-
24-ஸாத்ய உபாய சோதன அதிகாரம் –
வரிக்கின்றனன் குறி ஒன்றால்
பக்தி பிரபத்தி ஆகிற ஸாத்ய உபாயங்களை பற்றிய அதிகாரம் -ஸ்வரூபம் -பரிஹாரங்கள் பற்றிய
கலக்கங்களுக்கு சமாதானம் சொல்லி அறிந்த ஞானத்தை ஸ்த்திரப் படுத்துகிறது
பிரபத்தி யாக விசேஷமாக ந்யாஸ வித்யையில் விதிக்கப்பட்ட வைதிக தர்மம் என்பதால் த்ரைவர்ணிகர் மட்டுமே என்னில்
சாமான்ய தர்மம் -காகாதிகளும் சரண் அடைந்து உஜ்ஜீவிக்கக் கண்டோமே
ஸ்வரூப ஞானமும் அப்ரதிஷேதமுமே வேண்டியவை
சர்வ தர்மான் பரித்யஜ்ய என்று ஸ்வ ரக்ஷண அர்த்த ஸ்வ வியாபார நிவ்ருத்தியை சொன்னவாறு
பிரபத்தி தர்மம் என்றாலும் சர்வ தர்மங்களை விடச் சொன்ன போது இத்தையும் விட வேண்டுமே என்னில்
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -அவனையும் விடச் சொன்னதாக வில்லையே
அதே போலே அவனைத் தவிர என்பது போலே பிரபத்தி தவிர என்றுமாம்
—————————————————-
25-ப்ரபாவ வ்யவஸ்தித அதிகாரம் –
அடியார் ஆதரத்தில் ஆரண நீதி நெறி குலையாமை
ஸாத்ய உபாயங்களின் ப்ரபாவத்தை வரை அறுத்துக் கூறுகிறது
ப்ரபத்தியால் ஜாதியை மாற்ற முடியாது -ஜாதி சரீர நிபந்தம் –
பகவத் பக்தர்கள் சமம் என்றது பரம புருஷார்த்த சாம்யாதிகளாலே
இப் பக்தர்களில் தேவதாந்தர ஸ்பர்சம் இல்லாதவர் -ஏகாந்திகள்
ப்ரயோஜனாந்தர ஸ்பர்சம் இல்லாதவர் -பரமை காந்திகள்
கைங்கர்ய ஏக பிரயோஜனராய் இருப்பவர்–ஷோடச வர்ண ஸ்வர்ண பரமை காந்தி
————————————-
26-ப்ரபாவ ரக்ஷ அதிகாரம் –
தண்மை கிடக்க தரம் உள்ளமை
ஸாத்ய உபாயங்களின் ப்ரபாவத்தை ரஷிக்கிறது
ப்ரபத்தியால் எல்லா சோகங்களும் கழியும் என்றாலும் -பிராரப்த கர்ம பலனை சரீர அவசானம் வரை
இருந்து கழிக்க இசைவதால் அவற்றால் வரும் சோகங்கள் இருக்குமே
ஹிதைஷி யாகையால் துக்கம் இல்லாமல் இங்கே வைத்தால் நசை மாளாதே-
ஆகவே சிஷையும் அனுக்ரஹ விசஷம் தானே
பாகவத அபசாரம் சிறிதும் இல்லாமல்
அங்கே சென்று அனுபவிக்கப் போகும் கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு இங்கேயே
முடி சூடி நிற்பதாய் அனுசந்தித்து இருக்க வேண்டும் –
—————————————————————
பத வாக்ய யோஜனா பாகம்
27-மூல மந்த்ர அதிகாரம் –
நன் மனு ஓதினம்
திரு அஷ்டாக்ஷரத்தின் பத வாக்ய யோஜனைகளை விவரிக்கிறது
பரம புருஷார்த்தத்தில் ருசியும் -உபாயத்தில் அதிகாரமும் யோக்கியதையும் -உண்டாக்கி தாரகம் ஆகும் மூல மந்த்ரம்
உபாயத்தைச் செய் என்று விதித்து சத்தா ஞானத்தை வளர்த்து -போஷகமாகும் சரம ஸ்லோகம்
உபாயத்தை ஸக்ருத் அனுஷ்ட்டிக்கும் விதம் சொல்லி சதா அனுசந்தானம் போக்யமாய் இருக்கும் த்வயம்
பிரணவம் -அ உ ம -ஸ்ரீ லஷ்மீ ஸஹிதன் -ஸ்ரீ மன் நாராயண -த்வயம்
நம–சரணவ் சரணம் ப்ரபத்யே -சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி –ஸ்திதா –
அகிஞ்சன்யன் -அநந்ய கதித்வம் -அநந்ய சரண்யன் – உபாயாந்தர நிரபேஷன் –
நாராயணாய -ஸ்ரீ மத் நாராயணாய நம -உபேயம் -நம -பலத்தில் ஸ்வாதீன ஸ்வார்த்த கர்த்ருத்வ போக்த்ருத்வ விரோதி நிவ்ருத்தி
அகாரம் -அவ ரக்ஷனே-சர்வ ரக்ஷகன்
உ காரம் -அயோக அந்நிய யோக விவச்சேதம்
ம காரம் -மன ஞானே -அவ போதநே -மாச பரிமானே -ஞான ஸ்வரூபத்வ ஞான குணகத்வ
அஸ் ம அத் -பிரதானம் நீய மானம் ஹி தத்ர அங்கானி அபகர்ஷதி -பிரதானமான ஜீவனைச் சொல்லி
சேக்ஷத்வாதி குணங்களையும் சொல்லும்
நம-உகார விவரணம்
நர-ர-ரீங்க்ஷயே -ஸ்வரூப விகாரம் அசித் -அதன் வ்யாவ்ருத்தி ந ர -ஜீவ சமூகம் -நாரா -நரர்கள் கூட்டம்
ந்ரு நயே -நல் வழியில் நடத்திச் செல்லும் பரமாத்மாவை காட்டி நர சம்பந்தி -நராத் ஜாயதே -சேதன சேதனங்கள்
நாரம் -ஜலம் -சொல்லி ஸ்ருஷ்டித்தவன் -என்றுமாம்
அயனம் -அய பய கதவ் -ஈ யதே அநேந -இவன் மூலம் அடைய படுகிறது என்று உபாயத்தையும்
ஈயதே அஸ்மின் -இவன் இடத்தில் லயம் -ஆதாரம் / ஈயதே அசவ் -இவன் அடையப் படுகிறான் உபேயம்
பஹு வ்ரிஹீ சமாசம் -நாரா அயனம் யஸ்ய -நாற்றங்கால் எவனுக்கு இருப்பிடமோ
உபய விபூதி யோகம் -அகில ஹேயப்ரத்ய நீகன் கல்யாணை ஏக
ஜகத் காரணத்வம் –
தத் புருஷ சமாசம் -நாரங்களுக்கு இருப்பிடம் –
திருமந்த்ரார்த்தம்
1–ஒரே வாக்ய -உபாய பரம் -நம-சமர்ப்பண பரம் -சேஷத்வ ஸ்வரூப ஞானம் புருஷார்த்தம் இன்றி உபாயம் சித்திக்காதே
2-ஒரே வாக்ய -உபேய பரம் -நாம ப்ரஹவீ பாவ அஞ்சலி பத்த நமஸ் சப்த உச்சாரணாதி ரூப சேஷ வ்ருத்தி பரம்
சேஷ வ்ருத்தி செய்து ஹ்ருஷ்டா பவந்தி -சேஷத்வ ஸ்வரூப ஞான உபாயம் இல்லாமல் சேஷ வ்ருத்தி சித்திக்காதே
3–இரண்டு வாக்கியங்கள் -ஸ்வரூப பரம் -ஆய நாராயணாய உம்-
அகார நாராயண சப்தார்த்த -சர்வ ரஷக- சர்வ ஆதார -சர்வ சேஷிக்கே – நான் -நிருபாதிக அநந்யார்ஹ சேஷன் –
புருஷார்த்தம் ஆர்த்திகம்
நம -எனக்கு உரியேன் அல்லேன் -மற்று வேறே ஒன்றுக்கும் உரியேன் அல்லேன் –
நிருபாதிக ஸ்வாமிக்கே -என்று ஸ்வரூப பரம் –
உபாயம் ஆர்த்திகம்
4–இரண்டு வாக்கியங்கள் -சமர்ப்பண பரம் -ஆய நாராயணாய உம்-ஆத்ம சமர்ப்பண யாகத்தில் ஹவிஸ் ஆகிற நான்
அகார வாச்யனான நாராயணனுக்கே பாரமாக சமர்ப்பிக்கப் படுகிறேன்
நம -என்னுடைய ரக்ஷண பரம் என்னுடையது அல்ல எம்பெருமானுடையதே
5–இரண்டு வாக்யம் -புருஷார்த்த பிரார்த்தனா பரம் -ஆய நாராயணாய உம் -அகார வாஸ்யனான நாராயணனுக்கே
கைங்கர்யம் செய்பவனாக ஆவேன் -இஷ்ட பிராப்தி பிரார்த்தனா பாரம்
நம -எனக்காக அல்லேன் -ஸ்வார்த்த -ஸ்வாதீந -கர்த்ருத்வாதி -அ நிஷ்ட நிவ்ருத்தி பிரார்த்தனா பரம்
6–மூன்று வாக்கியங்கள் -ஸ்வரூப புருஷார்த்த பரம்
ஸ்வரூப பரம் –பிரணவம் -அகார வாஸ்யனான நாராயணனுக்கே நான் உரியேன் ஆவேன்
நம -நான் எனக்கு உரியேன் அல்லேன் –உபாயம் ஆர்த்திகம்
புருஷார்த்த பரம் -நாராயணாய -பவேயம்-பகவானுக்கே -சர்வ தேச சர்வ கால சர்வ உசித சர்வ வித கைங்கர்யம் எழ வேணும்
7–மூன்று வாக்கியங்கள் -ஸ்வரூப புருஷார்த்த பரம் –
பிரணவம் -ஸ்வரூப பரம் -அகார வாஸ்யனான நாராயணனுக்கே உரியேன் ஆவேன்
நம -ஸ்யாம் -ஸ்யாத் -அநிஷ்ட நிவ்ருத்தி பிரார்த்தனா பரம் -நானும் எனதும் எனக்கு உரியேன் அல்லேன்
நாராயணாய -ஸ்யாம் -இஷ்ட பிராப்தி பிரார்த்தனா பாரம் -நாராயணன் பொருட்டு ஆவேன்
8–மூன்று வாக்கியங்கள் -ஸ்வரூப உபாய பரம் –
பிரணவம் -ஸ்வரூப பரம் -அகார வாஸ்யனான நாராயணனுக்கே நான் சேஷ பூதன்
நம -ரக்ஷணத்தில் எனக்கு ஸ்வாதந்தர்யம் இல்லை -நீயே ரக்ஷகன் -கோப்த்ருத்வ வர்ணத்தால் உபாய பரம்
நாராயணாய -நாரங்களின் ரக்ஷணத்தில் உபாயமானவன் -கோப்த்ருத்வ வர்ணத்தால் உபாய பரம்
9–மூன்று வாக்கியங்கள் -சமர்ப்பண புருஷார்த்த பரம் –
பிரணவம் -ரக்ஷகனுக்கே ஜீவன் சமர்ப்பணம்
நம -ஸ்யாம் -எனக்கு நான் அல்லேன் -அநிஷ்ட நிவ்ருத்தி பிரார்த்தனா பரம்
நாராயணாய – ஸ்யாம் -நாராயணனின் சரண கைங்கர்யத்துக்கே ஆவேன் -இஷ்ட பிராப்தி பரம்
10–மூன்று வாக்கியங்கள் -ஸ்வரூப உபாய புருஷார்த்த பரம் –
பிரணவம் -ஸ்வரூப பரம் -அகார வாஸ்யனான நாராயணனுக்கே நான் சேஷன்
நம-ஸ்யாம் -ஸ்யாத் – உபாய பரம் -அவனை முக்கரணங்களாலும் சரணம் அடைகிறேன்
நாராயணாய -ஸ்யாம் –புருஷார்த்த பரம் –ஸ்வாமித்வ -பரத்வ –ஆகாரமுடைய நாராயணனுக்கே ஆவேன்
அ -நாராயண -நர -அயன -இவற்றால் ரக்ஷகத்வ காரணத்வமும் -நியந்த்ருத்வ நேத்ருத்வமும் -உபாயத்வ உபேயாதவமும்
ம நார–இவற்றால் ஞான ஸ்வரூப ஞான குணகன் -அநு -நித்யன் -ஜீவ பரஸ்பர பேதமும் சித்திக்கும் –
நாராயண சப்தத்தை ஸ்வர வ்யஞ்ஜனமாக பிரித்து ந் +அ +ர் +ஆ +ய் +அ + ண் + அ -என்று அஷ்ட அக்ஷரங்கள்
பிரணவம் ஒழிந்த மந்த்ர சேஷத்துக்கு
ந –க்ஷேமம் கொடுக்கும் -புருஷார்த்த த்வரை உண்டாக்கும் -பிரதிபந்தக நாசம்
ம -மங்களம் -ஞான விகாசம் -பிறர் வணங்கும்படி செய்தலும்
நா -ஆச்சார்யத்வம் -கைங்கர்ய த்வரை -நாஸ்திக தன்மை நிரசனம்
ரா -பகவத் பிரீதி -இதர விரக்தி -லோக ரக்ஷணம்
ய பகவத் விஷய ஊற்றமும் ஸ்வயம் பிரயோஜனமும்
ணா–பகவத் ஸ்தோத்ரம் -வாக் ஸூ த்தி
ய -யஷ ராக்ஷஸ வேதாள பூதங்கள் பயந்து ஓடும்
திரு மந்திரத்தில் யதார்த்த ஞானமும் நிஷ்டையும் உடையவராய் ஆதரிக்கும் தேசத்தில்
பிரதான வ்யாதிகளாக எடுத்த ராகாதிகளும்
சத்துக்களுக்கு ஸ்ரீ ஞான சம்பத்தில் குறைவும்
ஆத்ம அபஹாராதிகளைப் பண்ணும் மஹா தஸ்கரரான அஹந்காராதிகளும் நடையாடாது
————————————————
28-த்வய அதிகாரம் –
திருமால் பாதம் இரண்டும் சரண் எனப் பற்றி அடிமை கொள்ளுதல்
திரு த்வய மந்திரத்தின் பத வாக்ய யோஜனைகளை விவரிக்கிறது
த்வயம் -உபாய உபேய ப்ரதிபாதனம் –
சரண வரணாதி அங்கங்களையும் -ஸ்வரூப -ரக்ஷண பர -ரக்ஷண பல -சமர்ப்பனமான அங்கியையும் சொல்லுவதால்
ஸ்ரீ -ஸ்ருட் -தாது -ஸ்ருனோதி-ஸ்ராயவதி
ஸ்ருனோதி—
கேட்கிறாள்-ஆஸ்ரிதரின் ஆர்த்த த்வனியைக் கேட்கிறாள்
எம்பெருமானிடம் உபதேசம்-லோக ஹிதம் -கேட்கிறாள்- பெறுகிறாள்
ஸ்ராயவதி-
நமக்காக பகவானிடம் பிரார்த்திக்கிறாள் -அவனிடம் பெற்ற உபதேசத்தை தக்க தருணத்தில் அவனிடம் விண்ணப்பிக்கிறாள்
விபரீதமான ஜீவனுக்கு உபதேசிக்கிறாள்
ஸ்ரீ-ஸ்ரிண் சேவாயாம் -ஸ்ரீ யதே -ஸ்ரயதே –
ஸ்ரீ யதே -மாத்ருத்வ ப்ரயுக்த வாத்சல்யத்தாலே புருஷகார பூதை -நம்மால் ஆஸ்ரயிக்கப் படுகிறாள்
ஸ்ரயதே -பகவத் வாலப்யம் தோற்ற அதிசய காரிணியாய் பகவானை ஆஸ்ரயிக்கிறாள்-
எல்லா வஸ்துக்களையும் ஆஸ்ரயித்து இருக்கிறாள் என்றுமாம் –
ஸ்ரீ–
ஸ்ரூ -ஹிம்சாயாம் -ஸ்ருணாதி-உபாய கைங்கர்ய பிரதிபந்தகங்களைக் கழிக்கிறாள்
ஸ்ரீங் பாகே -ஸ்ரீ ணாதி-கைங்கர்ய பர்யந்தமான குண பரிபாகத்தை உண்டாக்குகிறாள்
மது நித்ய யோகம்
நாராயண -பூர்வ கண்டத்தில் ஆஸ்ரயண உபயோக கல்யாண குணங்கள் –
வாத்சல்யம் -ஸ்வாமித்வம் -ஸுசீல்யம் -ஸுலப்யம் -ஞான -சர்வஞ்ஞத்வம் -பல -சர்வ சக்தித்வம்-
ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் – -பரம காருணிகத்வ -க்ருதஜ்ஞ்ஞத்வ -பரம உதாரத்வ -ஸ்திரத்தவ பரிபூர்ணத்வ இத்யாதிகள்
சரணவ் -திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு உப லக்ஷணம்
உத்தர கண்டம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -சேஷி நிரதிசய போக்யத்வம் பிரதானம்
சரணவ் -திவ்ய மங்கள விக்ரஹத்துக்கும் உப லக்ஷணம் -குண விபூதிகள் அறியாதாருக்கு இதுவே இலக்கு
பகவானுக்கும் போக்யம் ஜென்ம கர்ம மே திவ்யம் -சகல மனுஷ நயன விஷயம் -ஆஸ்ரயத்வம் பாவனத்வம் –
சரணம் ப்ரபத்யே -பத்ல் -கதி -ரஷிஷ்ய தீதி விச்வாஸம் –ப்ரகர்ஷ விச்வாஸம்
——————————————–
29-சரம ஸ்லோகார்த்தம் –
மன்னருள் வாசகத்தால் மருள் அற்றமை
திரு சரம ஸ்லோகத்தின் பத வாக்ய யோஜனைகளை விவரிக்கிறது
ரஹஸ்ய தம உபாயம் -முடிவாய் உபதேசித்த -சரம உபாயம் –
அதிகார பக்ஷம் -முமுஷுவின் ஆகிஞ்சன்ய அதிகாரம் நினைத்து சர்வ தர்மான் பரித்யஜ்ய –மாஸூச
அனுவாத பக்ஷம் -மாம் ஏகம்
விதி பக்ஷம் -நைரபேஷ்யத்தில் நோக்கு
மாம் ஏகம் -ஸுலப்ய -சர்வ ரக்ஷகத்வ -சர்வ சேஷித்வ -ஸ்ரீ யபதித்வ -நாராயணத்வ -சர்வஞ்ஞத்வ —
சர்வ சக்திதவ -பரம காருணிகத்வ -ஸுசீல்ய வாத்சல்ய -திவ்ய மங்கள விக்ரஹ விசேஷத்வங்கள் விவஷிதம்
அவசர பிரதீஷாபனாய் ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு அபிமுகனாய் நிற்கும் நிலை ஸூசிதம்
ஒரு காரியத்தில் ஜீவனை ப்ரவர்த்திப்பிக்கும் காரயிதா- பல ப்ரதானாதிகளில் பிரவர்த்திக்கும் கர்த்தா –
ஜீவனின் பிரதம பிரவ்ருத்தியை விளக்காத உபேக்ஷகன் – இசைந்து இருக்கும் அனுமந்தா –
இளந்தலை சுமப்பவனுக்கு பெருந்தலை சுமப்பவனாய் ப்ரவர்த்திக்கும் சஹகாரி
அஹம் உல்லசித காருண்யன் -சர்வ விரோதி நிராகாரனார்த்தம் -நிரங்குச ஸ்வாதந்த்ரன் -மோக்ஷ பரதன்
த்வா -ஆச்சார்ய உபதேச பலத்தால் தத்வத்ரய ஞானம் பிறந்து
இதர புருஷார்த்தங்களின் அல்ப அஸ்திரத்தவாதி தோஷங்களையும் அறிந்து
உபாயாந்தரங்களிலே துவக்கு அற்று பர ந்யாஸம் பண்ணி க்ருதக்ருத்யனாய்
இனி வேறே கர்தவ்யஅந்தரத்தில் பிராப்தி இல்லாத உன்னை
அஹம் -மோக்ஷ ப்ரதன்
த்வா முமுஷூ
சர்வ பாபேப்யோ -பந்தங்கள் -விரோதி வர்க்கம் சரணாகதி கத்யத்தில் மூன்று சூர்ணிகைகள் –
ஸ்தூல ஸூஷ் ம ரூப பிரகிருதி சம்பந்தம்
மாஸூச
உபாய அனுஷ்டானத்துக்கு முன் அதிகாரத்தைப் பற்றியதும் -மதியத்தில் பிரபத்தி உபாயத்தைப் பற்றியதும் –
யுத்த க்ருத்யத்தில் பல சித்தியைப் பற்றியதும் உண்டாகும் சோகங்கள் கழிந்து பகவத் அனுக்ரஹ பாத்ரமான ஜீவன்
ப்ரபத்தியால் வசீகரிக்கப்பட்ட பகவான் சர்வ ஸூலபன்-விஸ்வசநீயன்-பரம காருண்யன் -நிரங்குச ஸ்வாதந்த்ரன் –
அநந்ய ப்ரயோஜனான அத்யந்த ப்ரீதி தமனான இவனுக்கு சர்வ பிரதிபந்தங்களுக்கும் நிச்சேஷமாக கழிவதால் சோகிக்க வேண்டாமே
——————————————-
சம்பிரதாய ப்ரக்ரியா பாகம் –
30-ஆச்சார்ய க்ருத்ய அதிகாரம் –
அருளுற்ற சிந்தையினால் அழியா விளக்கு ஏற்றினார்
ஆச்சார்யர்களுடைய செயல்பாட்டை விவரிக்கிறது
வேதாந்த ஸாஸ்த்ர ரஹஸ்யார்த்தங்களை அனுசந்தித்து ஸத்பாத்ர சிஷ்யர்களுக்கு
அஷட் கர்ணமாக மூன்றாது நபர் கேளா வண்ணம் -ஸம்ப்ரதாய ப்ரவர்த்தனமே –
தத்வ -ஹித -புருஷார்த்தங்களை விசத்தை தாமாக உபதேசித்து அருளுவதே -பிரதான க்ருத்யம்
——————————————
31-சிஷ்ய க்ருத்ய அதிகாரம் –
இருள் அனைத்தும் மாற்றினவர்க்கு ஒரு கைம்மாறு
சிஷ்யர்களின் கடமைகளை குறிப்பிட்டு விவரிக்கிறது
ஆச்சார்யர் பக்கல் க்ருத்தஞ்ஞானாய் -பக்தி ஸ்ரத்தாதிகள் கொண்டு –
ஸ்வயம் பிரயோஜனமாக கற்று ரஹஸ்யார்த்தங்களை ரக்ஷித்து வர்த்தித்தல்
——————————-
32-நிகமன அதிகாரம் –
நிலைகள் தான் உளனாய் உகக்கும் தரம்
கிரந்தத்தை பல ஸ்ருதியுடன் தலைக் கட்டுகிறது
இவ்வர்த்தங்களை கற்றவர் நித்ய ஸூரிகளுடன் ஒரு கோவையாக இருந்து –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களையும் பெற்று உஜ்ஜீவனம் அடைவார்கள்
——————————
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரோயம் வேங்கடேச விபச்சிதா
சரண்ய தம்பதி விதாம் சம்மத சமக்ருஹ்யத
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலின
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குறைவே நம
ஸ்ரீ ரஸ்து-
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply