Archive for February, 2019

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -சரம உபதேச அர்த்த -சரம விமல கைங்கர்ய விசேஷங்கள் –

February 28, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ மன் நாதமுனிகள் தொடக்கமான ஆச்சார்யர்களில் காட்டில் ஸ்ரீ எம்பெருமானார்க்கு ப்ராதான்யம் கொள்ளும்படி எங்கனே என்னில்
ஸ்ரீ பகவத் அவதாரங்கள் எல்லாம் ஒத்து இருக்கச் செய்தே ஸ்ரீ ராம கிருஷ்ண அவதாரங்களுக்கு ப்ராதான்யம் உண்டானால் போலேயும்
திவ்ய தேசங்கள் எல்லாம் ஒத்து இருக்கச் செய்தே ஸ்ரீ கோயில் திருமலை பெருமாள் கோயில்
திரு நாராயண புரங்களுக்கு பிரதான்யம் உண்டானால் போலேயும்
ரிஷிகள் எல்லாரிலும் வைத்துக் கொண்டு ஸ்ரீ வ்யாஸ பராசர ஸூக ஸுவ்நக நாரதாதிகளுக்கு பிரதான்யம் உண்டானால் போலேயும்
ஆழ்வார்கள் எல்லாரும் ஒத்து இருக்க ஸ்ரீ நம்மாழ்வாருக்கு பிரதான்யம் உண்டானால் போலேயும்
ஆச்சார்யர்களில் எல்லாரையும் வைத்துக் கொண்டு ஸ்ரீ உடையவருக்கு ப்ராதான்யம் கொள்ளத் தட்டில்லை இறே-

ஸ்ரீ ராமாவதாரத்துக்கு ப்ராதான்யம் எத்தாலே என்னில்
ஸ்ரீ பெருமாள் அபயப்பிரதானம் அருளிச் செய்தும்
ஸ்ரீ குஹப் பெருமாளுடன் சீரணிந்த தோழமை கொண்டும்
ஸ்ரீ பெரிய உடையாரை ப்ரஹ்ம மேதத்தால் சமஸ்கரித்து பள்ளிப் படுத்தியும்
ஸ்ரீ சபரி திருக் கையால் சம்யக் போஜனம் செய்தும்
ஸ்ரீ திருவடியுடன் -உண்பன் நான் என்ற ஒண் பொருள் – என்கிறபடியே ஸஹ போஜனம் பண்ணியும் போருகையாலே –

ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு ப்ராதான்யம் எத்தாலே என்னில்
ஸ்ரீ கீதோபநிஷத்தை வெளியிட்டு ஸ்ரீ சரம ஸ்லோகத்தை அருளிச் செய்கையாலும்
ஸ்ரீ பீஷ்ம த்ரோணாதிகளுடைய க்ருஹங்களை விட்டு ஸ்ரீ விதுரர் திரு மாளிகையில் -ஸூசீநி குண வந்திச -என்கிற
பாவனத்வ போக்யத்வங்களை யுடைத்தாய் இருந்தது என்று அமுது செய்து -த்விஷத் அன்னம் ந போக்தவ்யம் -என்று
முறை கூறுகிற சோற்றை நிராகரித்து இது தன்னையே சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தம் ஆக்குகையாலும் –

ஸ்ரீ கோயிலுக்கு பிரதான்யம் எத்தாலே என்னில் -ஸ்ரீ திருப் பாணாழ்வாரோடு கலந்து பரிமாறுகையாலே

ஸ்ரீ திருமலைக்கு பிரதான்யம் எத்தாலே என்னில் ஸ்ரீ குறும்பு அறுத்த நம்பிக்கும் ஸ்ரீ தொண்டைமான் சக்கரவர்த்திக்கும்
வார்த்தை அருளிச் செய்து பரிமாறுகையாலும்

ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு பிரதான்யம் எத்தாலே என்னில் ஸ்ரீ திருக் கச்சி நம்பியோடே ஸ்மித பூர்வகமாக
சம்பாஷணம் பண்ணி மிகவும் கலந்து பரிமாறுகையாலும்

ஸ்ரீ திரு நாராயண புரத்துக்கு ப்ராதான்யம் எத்தாலே என்னில் ஸூசரிதத நயன் பக்கல் ஆதராதி அதிசயத்தாலே
தன் நிவேதித அன்னத்தை சம்யக் போஜனம் பண்ணி அவனை வாழ்விக்கையாலும்
ஸ்ரீ யதிராஜ புத்ரரான ஸுசீல்யத்தாலும்

ஸ்ரீ வேத வ்யாஸ பகவானுக்கு -வேதங்களை விஸ்தரிப்பித்து -அதில் கர்ம காண்டத்தை விட்டு
ப்ரஹ்ம பாகத்தில் புருஷ ஸூக்த சாந்தோக்ய வாஜசநேய தைத்ரீயக ஸ்வேதாஸ்வதர மஹா உபநிஷதாதி களிலும்
தத் உப ப்ரும்ஹணங்களான புராண இதிஹாசாதிகளிலும்
சத்யம் சத்யம் என்று தொடங்கி –நதைவம் கேஸவாத் பரம் -என்று ஸத்ய புரஸ்சரமாக பரதத்வ நிர்ணயம் பண்ணுகையாலே –

ஸ்ரீ பராசர மஹ ரிஷிக்கு ப்ராதான்யம் -புராணேஷு ச வைஷ்ணவம் -என்னும்படியான ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே
சித் அசித் ஈஸ்வர தத்வங்களை விசத தமமாகப் ப்ரதிபாதித்த உதாரன் என்று ஸ்ரீ ஆளவந்தார் நமஸ்கரித்து அருளுகையாலே

ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம ரிஷிக்கு பிரதான்யம் -ஸ்ரீ பரீக்ஷித்து ராஜாவுக்கு ஸ்ரீ மத பாகவதத்தில் தத்வ நிர்ணயத்தைப் பண்ணி –
ஸூகோமுக்த-என்னும்படியான வைபவத்தை யுடையவர் ஆகையால் –

ஸ்ரீ ஸுவ்நக பகவானுக்கு ப்ராதான்யம் -ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் பல இடங்களிலும் தத்வ நிர்ணயம் பண்ணுகையாலே –

ஸ்ரீ நாரத பகவானுக்கு பிரதான்யம் -புஜயுகமபி சிஹ்னை ரங்கிதம் யஸ்ய விஷ்ணோ பரம புருஷாநாம் நாம் கீர்த்தனம் யஸ்ய வாசி –
ருஜு தரமபி புண்ட்ரம் மஸ்தகே யஸ்ய கண்டே சரஸிஜ மணி மாலா யஸ்ய தஸ்யாஸ்மி தாசா -என்று இப்படிப்பட்ட
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தாசன் என்று சொல்லுகையாலும் –
ஸ்ரீ பெரியாழ்வாரும் சேமமுடை நாரதனார்-என்னும்படியான வைபவத்தாலும்

ஸ்ரீ நம்மாழ்வாருக்கு பிரதான்யம் எத்தாலே என்னில் -சஹஸ்ர சாகையான நாலு வேதத்தினுடைய பொருளையும்
நாலு திவ்ய பிரபந்த முகத்தால் சர்வாதிகாரம் ஆக்குகையாலும் –
ஸ்ரீ நாதமுனிகளுக்கு ப்ரசன்னராய் அருளிச் செயல் நாலாயிரத்தையும் ப்ரசாதித்து மற்றும் உண்டான தர்சன தாத்பர்யங்களை
எல்லாம் அருளிச் செய்து தர்சனத்தை நிலை நிறுத்துகையாலும்
பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -முதலான இடங்களிலே வாரநாத் யுத்கர்ஷங்களை நிராகரித்து
வேத பிராமண முக்ய தாத்பர்யமான ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் எல்லாருக்கும் தெரியும்படி அருளிச் செய்கையாலும்

ஸ்ரீ உடையவர் கீழ்ச் சொன்னவர்களைப் போல் அன்றிக்கே ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்த
அபய பிரதானத்தை விசதமாக்குகையாலும்
ஸ்ரீ கீதாச்சார்யன் அருளிச் செய்த ஸ்ரீ சரம ஸ்லோகார்த்தத்தை பிரகாசிப்பிக்கையாலும்
ரிஷி ப்ரோக்தமான ப்ரமாணங்களுக்கு அர்த்தம் அருளிச் செய்கையாலும்
மற்றைய ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்களை அங்க உபாங்கமாக யுடைய திருவாய் மொழி திவ்ய பிரபந்தத்தை
அர்த்தவத்தாக விசதமாகப் பிரகாசிப்பிக்கையாலும்
ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்களையும் ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்களையும் கொண்டு
ஸூத்ர வாக்கியங்களை ஒருங்க விட்டும்
ஸ்ரீ பாஷ்யம் கத்யத்ரயம் முதலான திவ்ய பிரபந்தங்களை அருளிச் செய்து –
நிகில குமதி சமயங்களையும் நிராகரித்து ஸ்வ மத ஸ்தாபனம் பண்ணி ஸ்ரீ எம்பெருமானார் தர்சனம் -என்னும்படி
பண்ணுகையாலும் இவர் எல்லாரிலும் பிரதானர் இறே
இனி சிஷ்யர்களான ஸ்ரீ கூரத்தாழ்வான் முதலியாண்டான் தொடக்கமானவர்களில் பிரதானர் என்னும்
இடம் சொல்ல வேண்டா இறே

ஆக இவரது பிரதான்யம் சொல்லிற்று ஆயிற்று –

——————————–

ஆச்சார்யவான் புருஷோ வேத -என்றும்
பாபிஷ்ட க்ஷத்ர பந்துஸ் ச புண்டரீகஸ் ச புண்ய க்ருத்–ஆச்சார்யவத் தயா முக்த தஸ்மாத் ஆச்சார்யவான் பவேத் -என்றும்
ஆச்சார்யஸ் ச ஹரிஸ் சாஷாச் சர ரூபி ந சம்சய -என்றும்
ஆசிநோதி ஹீ சாஸ்த்ரார்த்தா நாசா ரேஸ்தா பயத்யபி -ஸ்வயம் ஆசரதே யஸ்து ஆச்சார்யஸ் ஸோ அபிதீயதே -என்றும்
குரு ரேவ பரம் ப்ரஹ்ம குரு ரேவ பராம் கதி குரு ரேவ பரா வித்யா குரு ரேவ பரந்தனம் குரு ரேவ பரம் காமோ
குரு ரேவ பாராயணம் யஸ்மாத் தத் உபதேஷ்டா அசவ் தஸ்மாத் குரு தரோ குரு -என்றும்
பீதாக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து என்றும்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி என்றும்
ஈஸ்வரன் தானாகச் சொல்லப்பட்ட ஆச்சார்யனே சிஷ்யனுக்கு -தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச -என்று
திருப் பாற் கடல் முதல் நூற்று எட்டு திருப்பதிகளும் அன்னையாய் அத்தனாய் என்னும்படியான சர்வ வித உத்தாரக பந்துவும்
மாடும் மனையும் தேடும் பொருளும் பூமியும் எல்லாம் ஆககே கடவன் –

ஸ்ரீ ஆழ்வான்-ஸ்ரீ ஆண்டான் -ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் -ஸ்ரீ எம்பார் -ஸ்ரீ பராசர பட்டர் –
முதலானோர் தம் தம் சிஷ்யர்களுக்கு
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் – என்கைக்கு ஹேது என் என்னில்
ஸ்வாச்சார்ய ப்ரீதி நிபந்தனமாகவும்
ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்று சொல்லுகையாலும்
ஸ்ரீ ஆழ்வாருக்கும் ஸ்ரீ உடையவருக்கும் நடுவுள்ள ஆச்சார்யர்கள் ஸ்ரீ நம்மாழ்வாருக்குக் கரண பூதர் ஆகையாலே
இவருக்கு நேரே ஆச்சார்யர் ஸ்ரீ திருக் குருகூர் நம்பி ஆகையாலும்
அவர் கலியும் கெடும் என்று இவர் திரு அவதாரத்தைக் குறித்து அருளிச் செய்கையாலே
ஸ்ரீ ஆழ்வாராலே பிரவர்த்திதமான தர்சனத்தை நிலை நிறுத்தி அவர் வைபவத்தை
குரும் பிரகாசயேத் தீமான் -என்று பிரகாசிப்பிக்கையாலும் ஸ்ரீ ஆழ்வாருக்கு நேரே சிஷ்யர் ஸ்ரீ உடையவராகக் கடவர்
ஸ்ரீ பெரிய நம்பி முதலான பூர்வாச்சார்யர்கள் இவருக்கு ஆச்சார்யர்களாக வீறு பெற்றார்கள் –
ஸ்ரீ ஆழ்வான் முதலான சிஷ்யர்கள் இவருக்கு சிஷ்யராய் பேறு பெற்றார்கள் –
ஆகையாலே சர்வ ஆச்சார்யத்வ பூர்த்தி உள்ளது ஸ்ரீ உடையவர்க்கே யாகையாலே அருளிச் செய்து அருளினார்கள் இறே-

ஸ்ரீ ஆளவந்தாரும் இவ்வர்த்தத்தை அனுஷ்டித்துக் காட்டி அருளினார் -எங்கனே என்னில்
ஸ்ரீ மணக்கால் நம்பி ஸ்ரீ உய்யக் கொண்டார் இவர்கள் உகப்பை பின் சென்று
பிதாமஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத -என்றும்
நாதாய நாத முனையே அத்ர பரத்ர சாபி நித்யம் -என்றும்
அங்கும் இங்கும் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் -ஆச்சார்ய விஷயத்தில் க்ருதஜ்ஞதை யாவதாத்மபாவி -என்று அருளினார் –
ஆகையால் ஸ்வரூப உஜ்ஜீவனத்துக்கு ஆச்சார்யனே தஞ்சம் என்று பற்றுதல் ஒழிய வேறே
இவ்வாத்மாவுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை இறே
இவ்வர்த்தத்தை அனுஷ்ட்டித்தார் ஆர் என்னில் ஸ்ரீ மதுரகவி ப்ரப்ருதி சஜ் ஜனங்கள் இறே

ஸ்ரீ உடையவர் புழுவன் வ்யாஜேந மேல் நாட்டுக்கு எழுந்து அருளினை போது உபந்யஸித்த கட்டளையைக் கேட்டு
ஆச்சார்யர்கள் எல்லாம் ஆச்சர்யப் பட
ஸ்ரீ உடையவரும் -என் பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார் வார்த்தை கொண்டு சொன்னேன் இது –
ஸ்ரீ ஆளவந்தார் கோஷ்டியில் ஒரு நாளாகிலும் சேவிக்கப் பெற்றேன் ஆகில் ஸ்ரீ பரமபதத்துக்கும் இங்கும் சுருளும் படியும்
கட்டி விடேனோ-என்று அருளிச் செய்தார் இறே

ஸ்ரீ உடையவர் அபயப்ரதானம் அருளிச் செய்யா நிற்க ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் கோஷ்டியின் நின்றும் எழுந்து நிற்க
இது என் பிள்ளாய் -என்று ஸ்ரீ உடையவர் கேட்டு அருள
பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநிச -பவத் கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநிச -என்றும்
த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ஸ் ச ராகவம் சரணங்கத -என்றும்
பகவத் ஸமாச்ரயணத்துக்கு விலக்கடி யானவைகளை அடைய விட்டு ஸ்ரீ பெருமாள் திருவடிகளே தஞ்சம் என்று வந்து –
கஸ்ய ஏவ வ்யதிஷ்டித -என்று நிலத்திலே கால் பாவாதே ககநஸ்தனாய்-நிராலம்பநனாய் நின்று ஸ்ரீ விபீஷண ஆழ்வானையும் அகப்பட –
வத்யதாம் -என்று கல்லும் தடியும் கொண்ட ஸ்ரீ ராம கோஷ்டிக்குப் பஸூ பத்நியாதிகளோடே கூடின அடியேன் ஆளாகப் புகுகிறேனோ -என்றார்
ஸ்ரீ உடையவரும் -கேளாய் பிள்ளாய் -அஞ்சாதே கொள்ளும் -நான் பெற்றேனாகில் நீர் பெறுகிறீர்-
ஸ்ரீ பெரிய நம்பி பெற்றாராகில் அடியேன் பெறுகிறேன் -ஸ்ரீ ஆளவந்தார் பெற்றார் ஆகில் ஸ்ரீ பெரிய நம்பி பெறுகிறார் –
மற்றும் மேல் உள்ளோர் பெற்றார்கள் ஆகில் இவர்களும் பெறுகிறார்கள்
நம் ஸ்ரீ சடகோபர் அவா அற்று வீடு பெற்ற-என்று தம் வாக்காலே அருளிச் செய்கையாலே அவர் பெற்றது சித்தம் –
ஆனபின்பு நமக்கும் சித்தம் என்று இரும் -எல்லார்க்கும் நாச்சியார் புருஷகாரம் உண்டாம் போது அச்சம் வேண்டா –
ஆகை இறே நித்ய யோகம் -ஆனபின்பு நித்ய சம்சாரிகளும் ஸ்ரீ எம்பெருமானும் ஒரு சங்கிலி துவக்கிலே காணும் இருப்பது –
ஆகையால் நம்முடைய ஒழுக்குக் கூட்டம் நம்மை விட்டு அகலாது என்று இரீர்-கமுகு உண்ணில் வாளையும் உண்ணும் என்று இரும் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானோடு வந்த நால்வரையும் அருளப்பாடிட்ட போது தனித்து அருளப் பாடிட்டது இல்லையே –
தகை என்ற போதும் தனித்துத் தகை என்றது இல்லையே –
ஆனபின்பு நான் பெற்றேன் ஆகில் நீர் பெறுகிறீர் -அஞ்சாதே ஸூகமே இரும் என்று அருளிச் செய்து அருளினார் –

ஏத்தி இருப்பாரே வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்-
ஏத்தி இருந்தார் -ஸ்ரீ பரதாழ்வான்-அவரைச் சார்த்திஇருந்தார் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான்
ஏத்தி இருந்தார் ஸ்ரீ நம்மாழ்வார் -அவரைச் சார்த்தி இருந்தார் ஸ்ரீ மதுர கவி ஆழ்வார்
ஏத்தி இருந்தார் ஸ்ரீ பெரியாழ்வார் -அவரைச் சார்த்தி இருந்தார் ஸ்ரீ நாச்சியார்
இனி ஸ்வ ஆச்சார்ய பரமாச்சார்யார்களைப் பற்றும் அவ்வளவே -இதுவே ஸ்ரீ எம்பெருமானாரை பற்றுமதுவே
ஸ்வரூபம் ஆகில் திவ்ய தேசங்களைக் கை விட்டான் ஆகானோ -என்னில் -கை விட்டா ன் ஆகான் -அது எங்கனே என்னில்
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை என்னும் பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தன்னோடும் வந்து
இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து -என்கையாலே –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளைத் தொழவே திவ்ய தேசங்கள் எல்லாம் திருவடி தொழுதானாகக் கடவன் –
ஸ்ரீ உடையவராய் ஆராதித்து அமுது செய்யப் பண்ணவே -எல்லா திவ்ய தேசங்களில் ஸ்ரீ எம்பெருமான்களை எல்லாரையும்
ஆராதித்து அமுது செய்யப் பண்ணினாகக் கடவன் –

நின்ற வண் கீர்த்தியும்-என்கிற பாட்டிலும் -பேறு ஓன்று மற்று இல்லை -என்கிற பாட்டிலும்
கர்மமும் உபாயம் அன்று -ஞானமும் உபாயம் அன்று -பக்தியும் உபாயம் அன்று -பிரபத்தியும் உபாயம் அன்று –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே உபாய உபேயம் என்கையாலே -ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றுகையே பிரபத்தி –
ஸ்ரீ ராமானுஜன் என்கிற சதுரஷரியே திரு மந்த்ரம் -அவர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –
இதுவே நிச்சயித்த அர்த்தமான என் சித்தாந்தம் என்று ஸ்ரீ நடாதூர் அம்மாள் அருளிச் செய்து அருளுவார்

ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ நாராயண ஸ்ரீ ராமானுஜ என்கிற திரு மந்திரங்களுக்கு வாசி
பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் பொதுவாகையும் -மோக்ஷ ஏக ஹேதுவாகையும் ஆகிற இது தோன்ற
ராமானுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ -என்றார் இறே
கையில் கனி -என்கிற பாட்டில் -ஸ்ரீ சர்வேஸ்வரனை கர தலாமலகமாகக் காட்டித் தந்தாலும்
உன் திவ்ய விக்ரஹ ஸுந்தர்ய அனுபவமே பரம ப்ராப்யம் என்றும்
இராமானுசனைத் தொழும் பெரியோர் எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடம் -என்று
ஸ்ரீ ராமானுசனைத் தொழும் பெரியோர் நித்ய வாசம் பண்ணும் இடமே அடியேனுக்கு ப்ராப்ய பூமி என்றும்
உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே -என்று
ஸ்ரீ ராமானுசா உன் அடியார் திறத்தில் ஊற்றம் மாறாத பக்தியை உண்டாக்கி அவர்களுக்கே என்னை ஆட் படுத்தாய் -என்று
ஸ்ரீ உடையவர் திரு முக மண்டலத்தைப் பார்த்து விண்ணப்பம் செய்ய இசைந்து எழுந்து அருளி இருந்தார் இறே
இதுவே இவ்வர்த்த நிர்ணயத்துக்கு த்ருட தர முக்ய பிரமாணம் என்று நமக்கு எல்லாம் புத்தி பண்ணக் குறையில்லை –
எங்கனே என்னில்
அங்கயல் பாய் வயல் -என்கிற பாட்டில் படியே -சர்வ ஸ்மாத் பரனாய் சர்வ நியாந்தாவான ஸ்ரீ எம்பெருமானையும் ஸ்ரீ நாச்சியாரையும்
புருஷகாரமாகக் கொண்டு ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளை பெற வேணும் என்று
தம் திவ்ய பிரபந்தத்தைத் தலைக் கட்டி அருளினார் இறே ஸ்ரீ அமுதனாரும் –

இங்கன் அன்றிக்கே-
வேதாந்தான் சங்கராத்யை குமதி பிரச தர்த்தான் ஹி நீதரம்ஸ் ச பூயஸ் ஸ்வார்த்தே தாத்பர்ய யுக்தான்
கல யிதுமபிச ஸ்ரீ சடார்யாத்ய பக்தை ப்ரோக்தான் திவ்ய பிரபந்தான் ஸ்ரண வரண யோகாத் மகான் ப்ரஸ் புடார்த்தான்
க்ருத்வோத்தர்த்தும் பவாப்தே ரகில ஜென்ம பூத்யோ மஹா பூத தாம்நி -என்றும்
வேதாந்தா நாம ஸீம் நாங் குரு தரகஹ நார்த்தைக வாக்யத்வ பூர்வம் வ்யாக்யா த்ருத் வாச்ச சேஷங் குரு பரவஹநா தீசி துஸ்
ஸைன்ய நாதம் -சாது த்ராணாத் ததன்ய ப்ரமதந கரணாச்சாபி தத் பஞ்ச ஹேதீ நா சார்யத் வஸ்ய
பூர்த்யா யமுரு தரக்ருபம் ஸ்ரீ பதிஞ்சா ஹுரார்ய -என்றும்
ஸ்ருத் யர்த்தான் ப்ராப்ய தத்வேந சவரதமுகா தாஜ்ஞயா தஸ்ய சர்வம் ஸ்ங் கந்த யக்த்வா த்ரிதண்டாஞ்சி தமஹி தகரோ
ரங்க தாம் ந்யாஸ் தபஸ் சாத்-ஆர்யைஸ் சா கஞ்ச லஷ்மீ ரமண க்ருதப தாந்தி வ்யதேசாந்த ராயாம் சேவம்சே வம்ப்ர
கல்ப்யாத சமஹித சமாராதனம் தத்ர தத்ர -என்றும்
யாதோயஸ் சார தாயாஸ் ஸவிதமத தயாஸத் க்ருத ஸ்வ பிரபந்தோ பாஹ்யான் வேதாத் குத்ருஷ்டீ நபிக பட படூன்
வாததோ நிர்ஜிகாய -ப்ராதக்ஷிண்யே ந கச்சன் புவமகிலஜனம் வைஷ்ணவாக்ர் யஞ்ச குர்வன் ந்யாஸாக் யந்தேவ குஹ்யம்
பரமஹிதமபி த்ராக் ப்ரகாசஞ்ச க்ருத்வா -என்றும்
ரங்கே வேதாந்த பாஷ்யம் வ்யத நுத சதத -கீட கண்டஸ்ய ஹேதோர்கத்வா யோஹோசலாக்யம் ஜனபத மமலே யாதவாத்ரவ் நிவேஸ்ய –
பஸ் சாதா கத்ய ரங்கங் குரு வர முகதோ வைதிகாக்ர்யம் விசிஷ்டா த்வைதம் சித்தாந்த மஸ்மின்
ஜகதி பஹு முகம் விஸ்த்ருதங்கார யித்வா -என்றும்
அத்யாப்யாஸ் தேய துஷ் மாப்ருதி மஹித உயஸ் சாஷுஷீம்ஸ் வீய மூர்த்திங் குர்வாணஸ் தம்யதீந்த் ரங்குரு குல
நிரூபதிம் நவ்மி ராமாநுஜார்யம் -என்றும் –
கீதா பாஷ்யம் பூஷ்ய வேதாந்த பாஷ்யம் சாரந்தீ பங்கிஞ்ச கத்ய த்ரயஞ்ச -வேதார்த்தானாம் ஸங்க்ரஹம் நித்ய யாகம்
பிராஹை தான்யஸ் தம்யதீந்த்ரம் பஜே அஹம் -என்றும்
ஹஸ்த்ய த்ரீச பிரசாதா ததிகத நிகமாந்தார்த்த கோ யோஹி ஜித்வா பாஹ்யாந் வேதாத் குத்ருஷ்டீ நபி நிகில ஜனம்
வைஷ்ணவாக்ர் யஞ்ச க்ருத்வா -ரங்கே வேதாந்த பாஷ்யம் வ்யத நுததமஹம் நவ்மி ராமாநுஜார்யம்
ஸ்ரீ ரெங்காத் யாலயேஷு பிரகட குண கணம் ஸ்ரீ பதிம் சேவமானம்-என்றும்
இப்படி ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானோர் பஹு முகமாக பேசி வெளியிட்டார்கள் –

இப்படி சத்துக்களால் பராக் யுக்த வைபவம் ஸங்க்ரஹேன யுக்தமாய்த்து

—————————–

ஏவம் வித வைபவ யுக்தரான ஸ்ரீ எம்பெருமானாரைத் தத் பாகி நேய ஸூனுவாய்த் தன் நாமத்தை யுடையராய்த்
தன் நாம குண ஹர்ஷிதரான ஸ்ரீ கந்தாடை ஆண்டான் கனக்க அனுவர்த்தித்து-பரித்ராணாயா -இத்யாதிப்படியே -தேவரீர்
புண்யாம் போஜ விகாசாய பாபத்வாந்த ஷயாயச -ஸ்ரீ மான் ஆவீரபூத் பூமவ் ராமானுஜ திவாகர -என்னும்படி அவதரித்து அருளின
ஸ்ரீ பெரும் பூதூரிலே சர்வ காலத்திலும் சர்வ சேதனர்க்கும் ஸேவ்யமாம் படி தேவரீருடைய
அர்ச்சா விக்ரஹத்தை ஏறி அருளப் பண்ண வேணும் என்று விண்ணப்பம் செய்ய -ஸ்வாமியும் அப்படியே செய்யும் என்று
அனுமதி பண்ணி அருள அப்பொழுதே ஸ்ரீ ஆண்டானும் அனுகூலனான சில்பியை அழைப்பித்து
புண்ட்ரைர் துவாதச பிர்யுதம் விலஸிதன் த ண்டை ச த்ரிபிர் மண்டிதங் காஷாயேண சிகோபவீதருசி ரந்தோர் மூல சக்ராம்புஜம்
ஆஸீ நஞ்சல ஜரச நேச துளஸீ பத்மஜா மாலாஞ்சிதம் யுக்தஞ்ச அஞ்சலி முத்ரயார வி நிபம் ஸ்ரீ பாஷ்யகாரம் பஜே -என்கிற
பரார்த்யமான வார்த்தக விக்ரஹ ஆகாரத்தை சேவிக்கப் பண்ண
அவனும் ஆதி யஞ்சோதி யுருவை யங்கு வைத்து இங்கு பிறந்த -என்கிறபடியே அர்ச்சா விக்ரஹமாக எழுந்து அருளப் பண்ணி
சந்நிதியில் கொண்டு வந்து வைக்க -திருக்கண் சாத்தி உகந்து அருளி அந்த விக்ரஹத்திலே தம்முடைய சர்வ சக்தியும்
பிரகாசிக்கும் படி காடா லிங்கனம் பண்ணி -இவ்விக்ரஹத்தை புஷ்ப மாசத்தில் குரு புஷ்யத்திலே ப்ரதிஷ்டிப்பியும் என்று
திருமுகம் எழுதி தினம் குறித்து அனுப்பி அருள –
ஸ்ரீ ஆண்டானும் அப்படியே திருவடிகளில் சேவித்து அந்த விக்ரஹத்தை எழுந்து அருளிவித்துக் கொண்டு வந்து
மூல விக்ரஹத்தையும் ஏறி அருளப் பண்ணுவித்துத் திரு முகப்படியே திரு பிரதிஷ்டையும் செய்வித்து அருளினார்-

இங்கே ப்ரதிஷ்டிப்பிக்கிற அற்றைத் திவசத்திலே திரு மேனியில் மிகவும் தளர்ச்சியாய்ப் பல ஹானி யுண்டாக
ஸ்ரீ இராமானுசனும் இது என் என்று பராமர்சித்து -ஸ்ரீ ஆண்டானுக்கு எழுதிக் கொடுத்த திவசம் எது என்று கேட்டு அருள –
அந்த திவசம் அந்த தானாய் இருக்கக் கண்டு விஸ்மயப்பட்டு-சீக்ரம் வருவது -என்று ஆண்டானுக்குத் திருமுகம் போக விட்டு அருள –
அவரும் திரு முகத்தை சிரஸா வகித்து அப்படியே மீண்டு எனது அருளித் திருவடிகளை சேவித்துக் கொண்டு இருந்தார் –

அநந்தரம் அங்குத்தைக்கு அத்யந்தம் அந்தரங்கரான ஸ்ரீ ஆண்டான் முதலான முதலிகள் எல்லாம் பழுத்து இருக்கிற தேமாவைக்
கிளித் திரள்கள் காத்துக் கொண்டு இருக்குமா போலே-தத் துல்யரான இவர்களும் விமல சரம விக்ரஹத்தை கையில் கனி இத்யாதிப்படியே
மெய்யில் பிறங்கிய சீரைப் பழுக்க சேவித்துக் கொண்டு
அடையார் கமலத்து அலர் மலர் கேள்வன் கையாழி என்னும் படையோடு நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும்
புடையார் புரி சங்கமும் இந்த பூதலம் காப்பதற்கு என்று இடையே இராமானுச முனி யாயின இந்நிலத்தே -என்றும்
சேஷோ வா ஸைன்ய நாதோ வா ஸ்ரீ பதிர் வேதி சாத்விகை விதர்க்யாய மஹா பிராஜ்ஜைர் யதிராஜாய -என்றும்
தத்ரோதஞ்சதி மண்டபே யதிவர கஷ்யாந் தரஸ் தேவசன் பூர்வம் ராவண கம்ச முக்ய தனுஜான் ராமாநுஜாப்யாம்ஹதான்
மத்வா சங்கர யாதவாதி முகதோ பூயோ அவதீர்ணாம் புவன் தத் பங்காய க்ருதோ தயஸ் ததுசிதாம் ராமாநுஜாக்யாம் வஹன்-என்றும்
வ்யாசோவா பகவான் பராசர முனிஸ் ஸ்ரீ ஸுவ்நகோ வா அதவா சாஷான் நாரத ஏவ வா சடாரிபுர் வாகீஸ்வரோ வா
ஸ்வயம் லோகேச புருஷோத்தம பணிபதிஸ் சேஷீ ஜகச் சேஷிணீ த்யாக்யாதும் ஜெகதாம் ஹிதாய சமபூத் ராமாநுஜார்யோ முனி -என்றும்
சொல்லுகிறபடியே அநேக அவதார விசேஷம் என்று ஆதரித்துக் கொண்டு இருந்தார்கள் –

இத்தால் ஏவம் வித மஹாத்ம்ய யுக்தரான இவருடைய வைபவமும் -சரிதம் ரகுநாதஸ்ய சத கோடிப் ப்ரவிஸ்தரம்-என்கிற
சக்கரவர்த்தி திருமகன் வைபவம் போலே அவாங் மனச கோசாரம் இறே
சாகரத்தை கை நீச்சாலே கடந்து அக்கரை ஏறினாலும் -உததியைச் சிறாங்கித்தாலும்
ஸ்ரீ உடையவர் வைபவம் அடையச் சொல்லப் போகாது இறே
யதா மதி யதா ஸ்ருதமாகச் சொன்னது அத்தனை –
பஹு ஸ்ருதராய்ப் புத்தி பாஹுள்யம் உடைய பெரியோர்கள் விசதமாகக் கண்டு கொள்ளக் கடவர் இறே

இப்படி அவதார விசேஷமான இவருக்கு சரச் சதம் வ்யதீயாய ச விம்சமதிகம் ப்ரபோ -என்கிறபடியே
நூற்று இருப்பத்தஞ்சிலே நூற்று இருபது திரு நக்ஷத்ரம் பூர்ணம் ஆய்த்து-
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே -என்னும்படியான இவர்
தம்முடைய அவதார ரஹஸ்ய ஞானத்தாலும் -தம்முடைய விக்ரஹ சேவையாலும் -தத் ப்ரதக்ஷிண நமஸ்காராதிகளாலும் –
சதுரஷரியாய்ச் சதுரமான தம்முடைய திரு நாம வைபவத்தாலும் -ஸ்வ திவ்ய மங்கள விக்ரஹ த்யானத்தாலும் –
தத் ஏக நிஷ்டையாலும் தத் கைங்கர்ய ஏக பரதையாலும் -ஸ்ரீ பாஷ்யாம்ருத ப்ரதானாதிகளாலும்-
ஸ்ரீ மந்த்ர ரத்ன ப்ரதானாதிகளாலும்-ததர்த்த ப்ரதிபாதனத்தாலும் -ஸ்வ பாதுகா பிரதானத்தாலும் -ஸ்வ பாத தீர்த்த ஸ்வீ காரத்தாலும் –
ஸூ பாவனமான பிரசாத ஸ்வீ காரத்தாலும் -ஸ்ரீ பாத ஸ்பர்ச பவித்ரதையாலும் -சஞ்சார பூதமான பாத சஞ்சரணத்தாலும்-
ஸ்வ பாவன கர ஸ்பர்சத்தாலும் -அப்படியேயான கடாக்ஷ விசேஷத்தாலும் -பஞ்ச ஸம்ஸ்காராதிகளால் உண்டான சம்பந்த விசேஷத்தாலும்
புநந்தி புவனம் யஸ்ய பாதாஸ் ரித பதாஸ்ரித கடாஷாதி பிரே வாத்ர-என்ற ஸ்வ கீ ய சம்பந்தத்தாலும்
பால மூக ஜடாந்தாஸ் ச பங்கவோ பதி ராஸ்ததா -ஸதாசார்யேண சந்த்ருஷ்டா ப்ராப்னுவந்தி பாரங்கதிம்-என்றும்
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வாமர்த்ய மயீந்தனும் மக்நானுத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா -என்றும்
அன்வயதாபிசை கஸ்ய சம்யங் ந்யஸ்தாத்மநோ ஹரவ் -சர்வ ஏவ ப்ரமுஸ்யே ரன்னரா பூர்வே அபரே ததா-என்றும்
பஸூர் மனுஷ்ய பஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஸரயா தேனவைதே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ பரமம் பரம் -என்றும்
சொல்லுகிறபடியே ஏதேனுமாய் உள்ளதொரு ஸ்வ சம்பந்த விசேஷத்தாலும்
ஞாத்ர ஞாத்ரு விபாகமற ஜகாத்தை எல்லாம் உஜ்ஜீவிப்பித்தும்
இனி மேலும் ஸ்வ சம்பந்திகளாய் உள்ளவர்களை -ஆரியர்காள் கூறும் -என்று நியமித்தும்
இப்படி அவதார கார்யம் தலைக் கட்டினவாறே

அங்கே-அயர்வறும் அமரர்களோடே கூடி அடிமை செய்யத் திரு உள்ளமாய் -சேணுயர் வானத்து இருக்கும் தேவ பிரானாய் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -பாம்பணை மேலார்க்கு -பல பலவே யாபரணம் -என்னும்படி
பன் மணிப் பூண் ஆரத்தை யுமுடையவனாய் -உடையார்ந்த ஆடையன்-இத்யாதிப்படியே -நடையா உடைத் திரு நாரணனாய்-
அரவின் அணை அம்மானாய் -எழில் மலர் மாதரும் தானும் இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து அமர்ந்து –
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கேள்வனாய் -ஏழு உலகும் தனிக் கோல் செல்ல இப்படி
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் என்னும்படி -தத் ஏக போகமாய் உள்ள போக விபூதியில் –
அம் மிதுனச் சேர்த்தியாய் எழுந்து அருளி இருக்கிற அவ்விருப்பிலே

தேவிமாராவார் திரு மகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்ய -கருளப் புட் கொடிச் சக்கரப் படை வான நாட
எம் கார் முகில் வண்ணனாய் -வைகுந்தம் கோயில் கொண்டு எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு –
சென்றால் -ஊரும் நிவாஸ தாச பேதம் கொண்டு வழுவிலா அடிமை செய்ய வேண்டும் -என்று
அபி வ்ருத்த மநோ ரதத்தை யுடையராய் -அது செய்யும் இடத்து முகப்பே கூவிப் பணி கொள்ள வேணும் –
செம்மா பாத பற்பை தலை சேர்க்க வேணும் -ஈறில் இன்பத்து இரு வெள்ளத்தில் முழுக வேணும் –
தாமரைக் கண்களால் குளிர நோக்க வேணும் -என்றால் போலே சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு

வானார் சோதி மணி வண்ணா -மது சூதா -நீ அருளாய் -உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே-என்றும் –
இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செ ய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும்
உண்டோ கண்கள் துஞ்சுதலே -என்றும் சொல்லுகிறபடியே கண்ணழிவு அற்ற ப்ராப்ய த்வரையை யுடையராய் –
அத்தை ஆராத காதலை யுடைய ஸ்ரீ ஆழ்வார் அர்த்தித்த படியே இவரும் அத்தை அடி ஒற்றிக் கொண்டு
ஸ்ரீ மதி வைகுண்டே திவ்ய லோகே என்று தொட ங்கி-ஆத்ம அனுரூபயா ஸ்ரீயா சஹாஸீநம் -என்றும்
ப்ரத்யக்ரோன் மீலித ஸரஸிஜ சத்ருச நயன யுகளம்-என்று தொடங்கி –
தத ஷனோன் மீலித புண்டரீக சத்ருச சரண யுகளம் -என்னும் அளவும் –
இணைப்பாதங்களின் இடையில் உண்டான வற்றின் வடிவு அழகுகளையும் –

அநந்தரம் -அதி மநோ ஹர கிரீட மகுட நூபுராந்தமாக -முடிச் சோதி தொடங்கி
அடிச் சோதி அளவும் சாத்தின திரு அணிகலன்களின் அழகையும்
ஸ்ரீ மத்யா வைஜயந்த்யா வனமாலையா விராஜிதம்-என்று கீழில் ஆபரண சோபைக்குப் பிரபை போலவும்
அதன் காந்தி பூரம் நிறம் பெற வெள்ளம் இட்டால் போலே இருக்கிற மங்கல நல் வன மாலையையும் –
கீழில் ஆபரணத்தோபாதியாய் இருக்கிற அணியார் ஆழியும் சங்கும்-என்னும்படியான
சங்க சக்கர கதா அஸி ஸார்ங்காதிகளாய் உள்ள அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல் படைகளையும்
ஸ்ரீ மத் விஷ்வக்ஸேன -என்று தொடங்கி பகவத் பரிசார்ய ஏக போகைர் நித்ய சித்தியைர் அனந்தை-என்னும் அளவும்
அமரர் கோன் அர்ச்சிக்கின்ற அங்குப் பணி செய்வார் விண்ணோர்களையும் -அதுக்கு மேலே –

திவ்ய அமல கோமல அவலோக நேந விஸ்வம் ஆஹ்லாத யந்தம் -என்று தொடங்கி
வானாட மருங்குளிர் விழிகளால் குளிர நோக்கும் படியையும்
பன்னிலா முத்தம் தவழ் கதிர் முறுவல் செய்து -சோதி வாய் திறந்து திவ்ய லீலா ஆலாப அம்ருதங்களாலே
அகில ஜனங்களையும் ஆனந்திப்பித்து தளிர்ப்பிக்கும் படியையும் –
பகவந்தம் நாராயணம் த்யான யோகேந த்ருஷ்ட்வா -என்று ப்ராப்ய பக்தி யோக ரீதியாலே –
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்று காணும் படியையும்
நித்ய தாஸ்யஞ்சயா தாவத் ஸ்திதம் அனுசந்தாயா -என்று அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே -என்கிற
ஸ்வ பாவிக சம்பந்தத்தை அநுஸந்திக்கும் படியையும்
கதா அஹம் பகவந்தம் நாராயணம் –சாஷாத் கரவாணி சஷுஷா -என்று
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரை பாதங்கள் காண்பது எஞ்ஞான்று கொலோ -என்றும்
பை கொள் பாம்பேறி யுறை பரனே -உன்னை மெய் கொள் காண விரும்பும் என் கண்களே என்றும் சஷுஸ்ஸூக்களாலே
ப்ரத்யக்ஷ சாஷாத் காரம் பண்ணும் படியையும்
கதாவா பகவத் பாதாம் புஜ த்வயம் சிரஸா சங்க்ரஹீஷ்யாமி-என்று திரு வல்ல வாழ் நகரில் நின்ற பிரான் அடி நீறு
அடியோம் கொண்டு சூடுவது என்று கொலோ -என்றும்
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் சுடர்ப் பூம் தாமரை சூடுதற்கு அவா -என்றும் சொல்லுகிறபடியே
பாதாரவிந்தங்களை ஸீரோ பூஷணமாக தரிக்கும் படியையும்
கதா அஹம் பகவத் பாதாம் புஜத்வய பரிசர்யா சயா என்று தொடங்கி -தத் பாதாம் புஜ த்வயம் பிரவேஷ்யாமி -என்னும் அளவாக
பாதம் அடைவதன் பாசத்தால் மற்ற வன் பாசங்கள் முற்ற விடும் படியையும்

திருவடிக் கீழ் குற்றேவல் செய்யும் படியையும்
கதா மாம் பகவான் அதி சீதலயா ஸ்வகீய யாத்ருசா அவலோக்ய -என்று தொடங்கி மேல் எல்லாவற்றாலும் பக்கம் நோக்கு அறியாதே
அமலங்களாக விழுங்கும் படியையும்
முகப்பே கூவிப் பணி கொள்ளும்படியையும் அனுசந்தித்து திருவடிக் கீழ் குற்றேவல் செய்யப் பெரிய காதலை யுடையராய் –
அத்தாலே-அடியேன் அடைந்தேன் -என்னும்படி மாநஸமாகக் கிட்டி
தூராதேவ -என்று தொடங்கி அப் பேர் ஓலக்கத்தைத் தூரக் கண்டு சேவிக்கும் படியையும்
அணைவது அரவணை மேல் பூம் பாவை ஆகம் புணருமவனான இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செய்
தொல்லை மாலைக் கண்ணாரக் காணும் படியையும்
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் இதே இன்னம் வேண்டுவது எந்தாய் என்று மீளவும்
பஹு மநோ ரதங்களைப் பண்ணா நின்று கொண்டு
வாசலில் வானவர் அனுமதியுடன் உள்ளே புகும்படியையும் மநோ ரதித்து

அடைந்தேன் உன் திருவடியே-என்று அவனைக் கிட்டி -நாராயணாய நம -என்று வழுவிலா அடிமையை அர்த்தித்து-
தத் சித்திக்கு -அடியேனுடைய ஆவி அடைக்கலமே என்று ஆத்மாவை நிவேதிக்க -அவனும் குளிர் விழிகளாலே
கரை அழியும் படி கடாக்ஷிக்க -எது ஏது என் பணி என்னாது -எல்லா அடிமைகளையும் செய்ய ஒருப்பட்டு-
கைகளால் ஆரத் தொழுது தொழுது என்றும் -இரங்கி நீர் தொழுது -என்னும்படி ப்ரஹ்வ அஞ்சலி புடராய் அனுபவியா நின்று கொண்டு –
அத்யந்தம் ப்ரீதி யுக்தனாய் ப்ரீதி பிரகர்க்ஷத்தாலே கோவை வாய் துடிப்ப மழைக் கண்ணுடன் நிற்கும் படியையும்
ததோ பகவதா-என்று தொடங்கி -அம்ருத சாகராந்தர் நிமக்ந சர்வ அவயவஸ் ஸூகமா ஸீத-என்று மீளவும் தாமரைக் கண்களால்
அவலோகநதானம் பண்ணும் படியையும் அபேக்ஷித்து-சோதிச் செவ்வாய் முகுளம் அவலோகியா அலரா இருந்தது –
இப்போது ச விலாச ஸ்மிதத்தாலே அலர்ந்து-ஆநயைநம் -என்று ஆளிட்டு அழையாதே தானே வா என்று அழைத்து –
துயர் அறு சுடர் அடி என்றும் -பாத பங்கயமே தலைக்கு அணியாய் என்றும் சொல்லும்படியான கமலம் அன்ன குரை கழல்களை –
தலை சேர்த்து -தன் தாளிணைக் கீழ் சேர்த்து என்னும்படியே பாத உபதானம் போலே சேர்த்து அருள வேணும்

மாயன் கோல மலரடிக் கீழ்ச் சுழி பட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளமான அமுத வெள்ளத்து -இன்பத்து இரு வெள்ளத்திலே –
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா என்னும்படி அவகாஹித்து –
இங்கே சோகாபி கர்சிதமான சாஸ்த்ரங்களாலே தாப த்ரயங்கள் போல் அன்றிக்கே அங்கே நிரதிசய ஸூகத்தை அனுபவிக்க வேணும் –
என்று ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே அர்த்தியா நின்று கொண்டு –
பரம பக்தி தலை எடுத்துப் பெரிய அபிநிவேசத்துடனே ஸ்ரீ பெரிய பெருமாள் சந்நிதியில் எழுந்து அருளி
ஸ்ரீ பெரிய பிராட்டியாரை புருஷகாரமாக முன்னிட்டுக் கொண்டு பெரிய கத்யமான ஸ்ரீ சரணாகதி கத்யத்தை பெரிய ஆற்றாமையோடே
திரு உள்ளத்திலே படும்படி விண்ணப்பம் செய்து சரணம் புக்கு அநந்தரம்
ஸ்ரீ ரெங்க கத்யத்தையும் விண்ணப்பம் செய்து அத்தலையில் உண்டான சர்வ சக்தித்வாதி கல்யாண குணங்களையும் ஆவிஷ்கரித்து
ஆகிஞ்சன்யத்தையும் அறிவியா நின்று கொண்டு சரணம் புக்கு
ஸ்ரீ பெரிய பெருமாளும் இவர் அபிப்பிராயம் அறிந்து உமக்கு வேண்டுவது என் என்று வினவி அருள
இவ்வாறு ஸ்ரீ உடையவர் திரு உள்ளத்திலே பெரிய ஆர்த்தியோடே விசாரித்து அருளி ஸ்ரீ நம்பெருமாளைத் திருவடி தொழுது
சம்சாரத்திலே அருசி பிறந்து வய பரிணாம காலாதி க்ரமணம் பிறந்தது என்று விண்ணப்பம் செய்து அத்யார்த்தராய் நிற்க

காலத்துக்கு நாம் அன்றோ கடவோம்-இன்னும் சிறிது காலம் உம்மைக் கொண்டு இவ் வுலகம் திருத்தப் பார்த்தோம் –
அறப் பதறினீரே-என்று திரு உள்ளம் உடை குலைப் பட்டு -இனி உமக்குச் செய்ய வேண்டுவது என் என்று கேட்டு அருள –
அதுக்கு ஸ்ரீ உடையவரும் அடியேனைக் காலக் கழிவு செய்யாமல் -உன் பொன்னடி சேர்த்து ஒல்லை வேறே போக
எஞ்ஞான்றும் விடாது ஒழிய வேணும் என்ன -ஸ்ரீ பெரிய பெருமாளும் உகந்து -சதுர்த்தசே அஹ்நி சம்பூர்ணே-என்று
நாள் கடலாகத் தம்பிக்கு இட்டது ஆகாமல் -சப்தாஹம் ஜீவிதாவதி -என்கிறபடியே கர்ம ஆபாச ப்ரக்ரிதித-என்று
இவருக்கு இற்றைக்கு ஏழாம் நாள் அப்படியே செய்கிறோம் என்ன –
ஸ்ரீ உடையவரும் நம்முடைய வாழ்வு வாய்க்கின்றவா -என்ற ஹர்ஷ பிரகர்ஷத்துடன் -என்னுடைய சம்பந்தி சம்பந்திகள் எல்லாரும்
நான் பெற்ற லோகம் பெற வேணும் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பெருமாளும் அப்படியே பெறக் கடவர்கள் என்று திருவாய் மலர்ந்து அருளி

ஸ்ரீ உடையவருக்குத் தீர்த்தம் திருமாலை திருப் பரியட்டம் பூவார் கழல் பிரசாதம் பிரசாதித்து அருளி விடை கொடுத்து அருள –
இவரும் மஹா பிரசாதம் என்று ஸார்வ பவ்மரான ராஜாக்கள் பக்கல் நின்றும் நாடு பெற்றவர்கள் பெரிய ப்ரீதியோடே
ராஜ பவனத்தில் நின்றும் புறப்படுமா போலே -பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்கு ஏதும் சோராமே ஆள்கின்ற
எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனாரான ஸ்ரீ ரெங்கராஜர் பக்கல் நின்றும் ஸ்ரீ திருநாடு ஆகிற மஹா ராஜ்யத்தைப் பெற்று
அந்த ராஜ குல மஹாத்ம்யத்தாலே வந்த ப்ரீதியுத்ருதி தோன்ற ஸ்ரீ ரெங்க ராஜதானியிலும் புறப்பட்டு திரு மடமே எழுந்து அருளி
அனைத்துக் கொத்தில் உண்டானவர்களும் சித்த மகிழ்ச்சியுடன் அனுப்பி அருளி -சிஷ்ய வர்க்கங்களாய் யுள்ளவர் எல்லாருக்கும்
ஒரு காலும் அருளிச் செய்யாத அர்த்த விசேஷங்களை எல்லாம் மூன்று நாளாக பிரசாதித்து அருளி –
இவ்வர்த்த விசேஷங்களை எல்லாம் நீங்களும் விஸ்வசித்து உங்களை பற்றினாருக்கும் பரம்பரையாய் உபதேசித்துப் போருங்கோள் என்று
அருளிச் செய்ய முதலிகள் எல்லாரும் அதி சங்கை பண்ணி இது என் என்று விண்ணப்பம் செய்ய –
இனி ஒளிக்க ஒண்ணாது என்று திரு உள்ளம் பற்றி -இற்றைக்கு நாலாம் நாள் ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகள் ஏறப் போக
நினையா நின்றோம் -என்று அருளிச் செய்து அருள -இத்தைக் கேட்டு

முதலிகள் எல்லாரும் கடல் கலங்கினால் போலே கலங்கி ஸ்ரீ உடையவர் வ்யோகத்திலே ஆத்ம தியாகம் பண்ணக் கடவோம் என்று
தேறி இருந்தமையைத் திரு உள்ளம் பற்றி அருளி (அவர்கள் போர விஷண்ணராய்-இனி அடியோங்களுக்குச் செய்ய அடுப்பது என்
என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் )-ஸ்ரீ உடையவரும் -வாரி கோள் முதலிகாள்-நம்முடைய வ்யோகத்தில்
ஆத்ம தியாகம் பண்ணினார் உண்டாகில் -ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதமே -நம்மோடு அவர்களுக்கு சம்பந்தம் இல்லையாய்-
நித்ய ஸூரிகள் ஓலக்கத்திலும் புகுரப் பெறாதே நம் ஸ்ரீ சடகோபர் திரு உள்ளத்தையும் மறுத்தவர்களாய் அதிபதிக்கக் கடவீர்கள் என்று
அருளிச் செய்து -அவர்களைத் தேற்றித் தரிக்கப் பண்ணினார் –

அநந்தரம் -அத்யை வாஹங்க மிஷ்யாமி லஷ்மணே நகதரங்கதிம்-என்கிறபடியே தாமும் ஸ்ரீ ஆழ்வான் வழியே பின் சென்று
இத்தம் ராப்தே சபதி பரம வ்யோம சிஷ்டாக்ர கண்யே கூராதிஸே நிகம சிகர வியாக்ரியாலம் படத்வம் -சிஷ்யஸ் தோமான் சுருதி
குரு முகோங்கி கார்யேண சாகம் வின்யஸ் யோச்சை பரமகமதரோடு மைச்சத் யதீந்த்ர -என்றும்
காசாராதிம திவ்யஸூரி க்ருதி சத் சோபான பத்தாம் த்வய ஸ்ரீ மன் த்ரோபய பார்ஸ்வ தண்ட கடிதாம் ஸ்ரீ பாஷ்ய கீலஸ்திராம் –
நிஸ்ரேணிம் நிகிலோ ஜனஸ் ச பரம வ்யோமஸ் தலீ பிராபிகாம் ஸ்வ ஸ்வாசார்யா நிரூபிதார்த் தவசத ப்ராப்யாதி ரோஹேத் சதா -என்றும்
இத்யாசாஸ்ய சரஸ் சடாந்தகமுக ஸ்ரீ திவ்ய ஸூர் யாக்ருதீ ராசார்யஸ்ய சதத் பிரபந்த நிவ ஹைஸ் சார்த்தம் ப்ரதிஷ்டாப்யச-
ஸ்ரீ ரெங்காதி மதாமஸூ சவயம பூச்ச்ரீ திவ்ய ஸூரி வ்ரஜைஸ் சாகன் தத் பரமம் பதம் ஜிக்மி ஷுஸ் ஸ்ரீ மான் ச ராமானுஜ -என்கிறபடியே
இங்குச் செய்ய வேண்டும் கார்யங்கள் எல்லாம் செய்து தலைக் கட்டி க்ருதக்ருத்யராய் நாலாம் நாள்
அங்கே ஸ்ரீ திருநாடு ஏற எழுந்து அருளத் திரு உள்ளமாய் இருக்க

அவ்வளவில் பெரிய பெருமாளைத் திரு வாராதனம் பண்ணிப் போரும் ஸ்ரீ ரெங்கராஜ பட்டர் ஸ்ரீ பெரிய பெருமாள் பட்டர் முதலானோர்
ஸ்ரீ பெரிய பெருமாள் உடுத்துக் களைந்த பீதக வாடை சூடிக் களைந்த திவ்ய மால்யப்படி-சாத்துப்படிகள் அவர் பிரசாதம் தொடக்கமான
பிரசாத விசேஷங்களையும் போரத் தளிகையிலே எடுப்பித்துக் கொண்டு சர்வ வாத்ய கோஷத்துடன் கொண்டு வந்து பிரசாதித்தவற்றை
சிரஸா ஆதரித்து சேவித்து ஸ்வீ கரித்த அநந்தரம் அவர்களுக்கு உகப்பான பாஞ்ச ராத்ர சம்ஹிதைகளில் ஞான காண்டங்களை அனுசந்தித்து
சேவித்துக் கொண்டு இருந்து ஏவம் விதமான தூர்ய கோஷத்தைக் கேட்டு ஹ்ருஷ்டராய்
வைகுண்ட நிர்யாண நிரதராய்-அதுக்கு பிரயாண பாதேயமான த்வயத்தை ஆவ்ருத்தி பண்ணா நிற்கிறவர்

தடஸ்தரைக் கடாக்ஷித்து அருளித்
தாம்ரஸ்தமான கூடஸ்த ஸ்ரீ ஸூக்தியையும் ஸ்ரீ பாஷ்யத்தையும் ஷேமமான நிக்ஷேபமாக ஸ்தாபிக்கும் படி ஆஜ்ஜாபித்து –
ஸ்ரீ பாஷ்யத்தை வர்த்தித்து நடத்திக் கொண்டு போரும்படி ஸ்ரீ நடாதூர் ஆழ்வானைக் கடாக்ஷித்து அவருக்கு
சத் குர்வதாசம் சதி சிஷ்ய வர்க்கா நநன்யலப்யை ரதிகைஸ் ச சிஹ்னை ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாஸனமாத்ம கீயம் யஸ்மை
சதத் தம்யதி சேகரேண-என்னும்படி ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனத்தை பிரசாதித்து
அநந்தரம் முந்துற ப்ரசாதித்த வேதாந்தாசார்ய பதத்துக்கு மேலே -கிந்து பிரபத்தி பலதாரித விஷ்ணுமாய மத்வம்ஸ்ய ராஜ குல –
என்னும்படியான ராஜ குல மஹாத்ம்யத்தை யுடையராகையாலே பிரபத்தி அர்த்த பிரதிபாதகமாய் பிராமண சரமமான
ஸ்ரீ ஸூக்தி சிம்ஹாசனத்தையும் அந்தப் பெரிய பரிஷத்திலே பெரிய பட்டருக்கு இட்டு அருளி
ஸ்ரீ கந்தாடை ஆண்டானைக் கடாக்ஷித்து ப்ரமாத்ரு சரமமான தம்முடைய சரம விக்ரஹ கைங்கர்யத்தை கல்பித்து அருளி
திருக் குருகைப் பிரான் பிள்ளான் முதலான முதலிகளைப் பார்த்து ஸ்ரீ பட்டருக்கு இஷ்டமாய் இருங்கோள் என்று அருளிச் செய்து
ஸ்ரீ கோயில் அனைத்துக் கொத்தையும் அழைப்பித்து அபராத ஸாதனம் பண்ணிக் கொண்டு வேண்டிக் கொள்ள
அவர்களும் -தேவரீருக்கு ஒரு அபராதம் உண்டோ -உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரான தேவரீரை இழந்து
எங்கனே தரிப்போம் என்று கண் பனி சோர நிற்க
ஸ்ரீ உடையவரும் அன்போடு தென் திசை நோக்கிப் பள்ளி கொள்ளும் அணி அரங்கன் இருக்க உங்களுக்கு ஒரு தாழ்வு இல்லை –
ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ கார்யம் ஆராயும் இடத்து ஸ்ரீ பட்டரை முன்னிட்டு ஆராய்ந்து போருங்கோள்-
ஸ்ரீ நம்பெருமாள் கைங்கர்யத்தைக் குறைவற நடத்திக் கொண்டு ஸ்ரீ வைஷ்ணவர்களையும் அரவணைத்துக் கொண்டு போருங்கோள்
என்று கல்பித்து அருளி அவர்களை ஸ்ரீ பட்டர் திருக் கையிலே காட்டிக் கொடுத்து அருளி ஸ்ரீ பட்டரைப் பார்த்து அருளி –
உமக்குத் தந்தையும் தாயுமாவாராய் ப்ரமேய சரமமான ஸ்ரீ பெரிய பெருமாள் திரு ஆராதனத்தைப் பெருக்க நடத்திக் கொண்டு
நம்முடைய தரிசனத்தையும் நன்றாக பராமர்சித்து நடத்திக் கொண்டு போரும் என்று நியமித்து அருளினார் –

அனந்தரம் சமூகத்தில் உண்டான ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பார்த்து பின்னையும் அவர்களுக்கு அருளிச் செய்த படி –
ஒருவன் பிரபன்னன் ஆனால் அவனுடைய ஆத்ம யாத்திரை ஈஸ்வர அதீனம் ஆகையாலே அதுக்குக் கரைய வேண்டா –
கரைந்தான் ஆகில் ஆத்ம சமர்ப்பணம் பொய்யாம் அத்தனை –
இனி இவனுடைய தேஹ யாத்திரை கர்ம அதீனம் ஆகையாலே அதுக்குக் கரைய வேண்டா -கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் அத்தனை –
ஆகையால் உபய யாத்திரையிலும் இவனுக்கு அன்வயம் இல்லை என்று அருளிச் செய்ய

முதலிகளும்-ஆகில் எங்களுக்கு இருக்கும் நாளைக்கு கால ஷேபம் இருக்கும் படி எங்கனே என்ன –
ஸ்ரீ உடையவரும் உபாய அம்சத்தில் அந்வயியாதே ப்ராப்யமான பகவத் பாகவத கைங்கர்யத்தில் அந்வயியுங்கோள்-
ப்ரபந்ந அதிகாரிக்கு முன்னடி பார்த்து வர்த்திக்க வேண்டுவன மூன்று விஷயம் உண்டு –
அவை யாவன -அனுகூலர் என்றும் பிரதிகூலர் என்றும் அநுபயர் என்றும்-
அனுகூலராவார் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் / பிரதிகூலராவார் -பகவத் த்வேஷிகள் / அநுபயர் ஆவார் -சம்சாரிகள்
இதில் அனுகூலரைக் கண்டால் -சந்தன குஸூம தாம்பூலாதிகளைக் கண்டால் போலேயும்-நிலா தென்றல்களைக் கண்டால் போலேயும்
அபிமத விஷயத்தை கண்டால் போலேயும் உகந்து போரக் கடவன் –
பிரதிகூலரைக் கண்டால் சர்ப்ப அக்னிகளைக் கண்டால் போலே வெருவி வர்த்திக்கக் கடவன்
அனுபயரைக் கண்டால் காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டால் போலே த்ருணீ கரித்து வர்த்திக்கக் கடவன் –
அவர்கள் அநு கூலித்தார்கள் ஆகில் ஆத்ம ஞானத்தை உபதேசிக்கவும் –
அநு கூலியார்கள் ஆகில் ஐயோ என்று கிருபை பண்ணிப் போரவும்-

இப்படிச் செய்ய ஒட்டாது ஒழிகிறது அர்த்த காம பிராவண்யம்-
அர்த்த காமம் அடியாக ஸ்ரீ வைஷ்ணவர்களை அநாதரிக்குமாகில் ஸார்வ பவ்மனான ராஜ புத்ரனை ராஜ சந்நிதியில் பரிபவித்தால்
ராஜா வெறுத்து இருக்குமா போலே ஸ்ரீ எம்பெருமான் திரு உள்ளம் வெறுக்கும்
அர்த்த காமம் அடியாக பிரதி கூலரை ஆதரிக்குமாகில் ஸார்வ பவ்மனான ராஜாவின் மஹிஷீ ஷூத்ர ஜந்துக்கள் பக்கல் மடிப்பிச்சை
புக்கால் ராஜாவுக்கு அவத்யம் ஆகையால் ராஜா வெறுக்குமா போலே ஸ்ரீ எம்பெருமான் இவனை வெறுத்து இருக்கிறோம்
அர்த்த காமம் அடியாக அனுபயரை ஆதரிக்குமாகில் ரத்னத்துக்கும் பலகறைக்கும் வாசி அறியாதாப் போலே பிறந்த ஞானம்
கார்யகரம் ஆய்த்து இல்லை என்று ஸ்ரீ எம்பெருமான் இவனை அநாதரிக்கும் -என்று அருளிச் செய்து அருளினார் –
பின்பு ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ நம் பெருமாள் சந்நிதிக்கு ஸ்ரீ பட்டரைக் கூட்டிக் கொண்டு எழுந்து அருளிப் பெருமாளை சேவித்து
ஸ்ரீ பட்டருக்கு முன்னாகத் தீர்த்த பிரசாதங்களை ப்ரசாதிப்பித்து பின்பு தாமும் தீர்த்த பிரசாதம் பெற்று முதலிகளைக் குறித்து –
முன்னுக்குத் தர்சன ப்ரவர்த்தகர் ஆவார் இவர் என்று ஸ்ரீ பட்டரைக் காட்டி அருளி –
வாரீர் ஸ்ரீ பட்டரே-மேல் நாட்டிலே வேதாந்தி என்று பெரிய வித்வான் இருக்கிறான் என்று கேட்டோம் -நீர் அங்கேறப் போய் அவனை
நம் தர்சன ப்ரவர்த்தகனாம் படி திருத்தும் என்று அருளிச் செய்து ஸ்ரீ பட்டரையும் கூட்டிக் கொண்டு திரு மடமே எழுந்து அருளி –
ஸ்ரீ பாதத்து முதலிகள் எல்லாரையும் அழைத்து -நம்முடைய விஸ்லேஷத்தில் அவிவேகம் பண்ணினீர்கள் ஆகில் நம் ஆணை
என்று ஆஜ்ஜாபித்து எல்லார் கையாலும் தம் திருவடிகளைத் தொழுவித்து சூளூருவு கொண்டு
முதலிகளைத் தீர்த்தம் கொண்டு அமுது செய்யப் பண்ணி

ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்-ஸ்ரீ உக்கல் ஆழ்வான் -ஸ்ரீ கோமடத்து ஆழ்வான் -ஸ்ரீ சேட்டலூர் சிறியாழ்வான்-
ஸ்ரீ வேதாந்தி ஆழ்வான் முதலானவர்களை ஸ்ரீ கந்தாடை ஆண்டான் திருக் கையிலே காட்டிக் கொடுத்து அருளியும்
ஸ்ரீ எச்சான் -ஸ்ரீ அனந்தாழ்வான் -ஸ்ரீ தொண்டனூர் நம்பி -ஸ்ரீ மருதூர் நம்பி -முதலானவர்களை
ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருக் கையிலே காட்டிக் கொடுத்து அருளியும்
ஸ்ரீ பட்டர் -ஸ்ரீ கணியனூர் சிறி யாச்சான்-ஸ்ரீ சட்டம் பள்ளிச் சீயர் பெரியாண்டான் -சிறி யாண்டான் -முதலானவர்களை
ஸ்ரீ எம்பார் திருக் கையில் காட்டிக் கொடுத்து அருளியும்
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் -ஸ்ரீ கிடாம்பிப் பெருமாள் -ஸ்ரீ எங்கள் ஆழ்வான் -ஸ்ரீ நடாதூர் ஆழ்வான் -முதலானவர்களை
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருக் கையில் காட்டிக் கொடுத்து அருளியும்
ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான் -ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறி யாண்டான் -ஸ்ரீ அரணபுரத் தாழ்வான் -ஸ்ரீ ஆ ஸூரிப் பெருமாள் –
ஸ்ரீ முனிப் பெருமாள் -ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள் முதலானவர்களை ஸ்ரீ நடுவில் ஆழ்வான் திருக் கையில் காட்டிக் கொடுத்து அருளியும்
இன்னும் இருந்தவர்களை இருந்தவர்கள் திருக் கையில் காட்டிக் கொடுத்து அருளியும்

பின்பு ஸ்ரீ பட்டரைப் பார்த்து அருளி ஸ்ரீ கூரத்தில் ஸ்ரீ ஆழ்வானையும் ஸ்ரீ கந்தாடை ஆண்டானையும் போலேயும்-
ஸ்ரீ கூர குல திலகரான நீரும் ஸ்ரீ வாதூல குல திலகரான ஸ்ரீ கந்தாடை ஆண்டானும் நம்மடியாக உண்டான சவ்ப் ராத்ரத்தை யுடையராய் –
மச்சித்தா மத் கத பிராணா போதயந்த பரஸ்பரம் -என்னும்படியாய் இருங்கோள்-என்று அருளிச் செய்து -ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பார்த்து –
படித்வா பாஷ்யம் தத் பிரவசனம் அசக்தவ் ஸ்டரி போர் கிரி ஸ்ரத்தா வாச பிரபு பரிசித ஸ்தாந நிவேஹ ப்ரபோ கைங்கர்யம் வா
பிரபதன மநோ ரர்த்த மனனம் ப்ரபந்ந நாம் மே பவது பரிசர்யா பரிசய குடீங்க்ருத்வா தஸ்மிந் யதுகிரி தடே நித்ய வசதிஷ்
ஷஷ்டர்த்தஸ் ஸ்ரீ ஸஸ்ய பிரபதன நவிதவ் சாதகமா -என்று இருக்கும் நாள் பண்ணலாம் கைங்கர்யங்கள் ஆறு உண்டு
அவை ஆவன-ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருகை-
அதற்கு யோக்யதை இல்லாவிடில் அருளிச் செயலை ஓதியும் ஓதுவித்தும் போருகை-
அதுக்கும் யோக்யதை இல்லாவிடில் உகந்து அருளின நிலங்களில் அமுது படி சாத்துப் படி முதலானவற்றை
உண்டாக்கி நடத்திக் கொண்டு போருகை –
அதற்கும் யோக்யதை இல்லையாகில் ஸ்ரீ திரு நாராயண புரத்தில் ஒரு குடில் கட்டிக் கொண்டு இருக்கை-
அதற்கும் யோக்யதை இல்லையாகில் ஸ்ரீ த்வயத்தை அர்த்த அனுசந்தானம் பண்ணிப் போருகை-
அதற்கும் யோக்யதை இல்லையாகில் என்னுடையவன் என்று அபிமானிப்பவன் யாவன் ஒருவன் பரம பாகவதன்-அவனுடைய
அபிமானத்திலே ஒதுங்கிப் போருகை
என்றும் -இவற்றின் பிரிய -பிரியதர -பிரிய தர்மங்கள் இன்னது என்றும் -பிராப்தி பிரதிபந்தகமான –
பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களில் வருந்தியும் பரிஹரித்துப் போருங்கோள் -என்றும் இவை முதலானவைகளாய் உள்ள
அநேக ஹிதங்களைப் ப்ரசாதித்து அவற்றை உப சம்ஹரித்து அருளினார் –

அநந்தரம் சகல மங்கள வாத்தியங்களும் ஆரவாரிக்க -அநேக திவ்ய பிரபந்த அனுசந்தான த்வனி எங்கும் பூரிதமாக
அலங்காரத் திரு மஞ்சனம் கண்டு அருளித் திரு ஒற்றாடை சாத்தி -திருப் பரி யட்டம் சாத்தி ஸூத்த ஆசமான பூர்வகமாக
நித்ய அனுஷ்டானங்கள் நடத்தி அருளுகையில் அசக்தி பாராமல் மார்க்கத்தையும் உத்திஷ்டமானராய் நின்றே செய்து அருளி
தத் சேஷத்யத்தையும் தலைக் கட்டி அருளி திருத் துவாதச நாமங்களையும் தரித்து அருளி -திரு மணி வடம் -திருப் பவித்ரம் –
திருமாலை பிரசாதம் -பரி யட்ட பிரசாதங்களை ஸ்வீ கரித்து-குரு பரம்பரா பூர்வகமாக ரஹஸ்யத்ரயத்தையும் சார்த்தமாக அனுசந்தித்து
ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளை உத்தேசித்து தண்டனை சமர்ப்பித்து -முதலி களையும் அனுவர்த்தித்து அனுமதி கொண்டு
ஸ்ரீ ஆளவந்தார் திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானித்துக் கொண்டு பத்மானஸ்தராய் எழுந்து அருளி இருந்து
ஸ்ரீ பர வாஸூ தேவர் இடத்தில் பரம பக்தி நடந்து செல்ல

அநந்தரம் யோகத்தில் பரம யோகியான தம்மை பரம யோகி கம்ய விஷயமான தத் விஷயத்தில் விநியோகித்து பின்பு –
பத்ம நேத்ரேந்ய மீலயத்–என்கிறபடியே திருகே கண்களைச் செம்பளித்து அருளி பரவச காத்ரராய் –
ஸ்ரீ எம்பார் திருமடியிலே திரு முடியும் -ஸ்ரீ வடுக நம்பி திருமடியிலே திருவடிகளுமாக கண் வளர்ந்து அருளி –
மாக ஸூத்த தசம் யாந்து மத்யாஹனே மந்த வாஸரே -யோகி ராஜஸ் ஸ்வ போகீச பாவம் ஸ்வேபே சமப்யபாத்-என்னும்படியான திவசத்திலே
தம்முடைய பூர்வ அவதாரமான ஆயிரம் சுடர் வாய் அரவணையோடே நம்பி மூத்த பிரானைப் போலே ஸ்ரீ எம்பெருமானாரான இவரும்
ஸ்ரீ பாதித்து முதலிகள் ப்ரஹ்ம வல்லி பிருகு வல்லி சூழ் விசும்பு அணி முகில் முதலானவற்றை சேவித்து அருள
சிரஸ் கபாலம் பேதித்து ப்ரஹ்ம ரந்தரத்தாலே ஸ்ரீ உடையவர் திருநாட்டில் கூடி அருளினார்

இவ்விருத்தாந்தத்தை பின்னும்
பின்பும் அன்பருடன் களித்த சீர் பெரும்பூதூர் எதிராசன் இன்பமுடனும் இசைந்து ஒருநூற்று இருப்பது ஆண்டு இங்கு இருந்ததன் பின்
அன்பான ஆழ்வான் ஆண்டான் நல் குமரற்கு அடியா முடி புனைந்து மன்பதையை வாழ்வித்தாங் கமருமென வாழ்வித்து அருளா -என்றும்
ஆராமம் சூழ் அரங்கர் தமை அலர் மா மகளை அடி இறைஞ்சி தாரீர் சரணம் எனத் தந்தோம் எனலும் எதிராசன் பாரோர் பரவும் பாகவதர்
பிரிவால் பரிவில் படர் கூரச் சீரார் திரு நாடு அடைந்து இருந்த சீடனுடன் சேர்ந்தனனால்-இப்படி சொல்லப்படுமாதான வைபவத்தை யுடைய இவரும் –
யதா பாதோ தரஸ் த்வசா நிர்முக்த -என்றும் -யாவஜ்ஜிஹா மிகாத்ராணி ஜீர்ணான் த்வசமி வோரக-என்றும் சொல்லுகிறபடியே
ஜீர்ணமிவ வஸ்த்ரம் ஸூகே நேமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸூஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய -என்று
ஸூகமாகவே திரு மேனியை உபேக்ஷையோடே விட

அநந்தரம் ஸ்ரீ கந்தாடை ஆண்டான் -ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் -ஸ்ரீ எம்பார் -ஸ்ரீ வடுக நம்பி முதலான முதலிகள்
எல்லாரும் கோஷித்துகே கொண்டு வேர் அற்ற மரம் போலே விழுந்து கிடந்தது துடித்து -திரு மிடறு தழு தழுப்ப திரு மூக்கு வெப்படிக்க
அவசராய்க் கிடந்தது -இட்ட கால் இட்ட கைகளாய்ச் சிந்தித்துத் திகைத்து -இணை மலர்கே கண்ணீர் ததும்ப தாரா வர்ஷகமாக திரு முத்து
உதிர்த்து பிரலாபித்து -இவர் அவதாரத்தில் தீர் லப்தா -இவர் அந்திம தசையில் தர்மோ நஷ்டா என்றும் இப்படி வருவதே என்று
ஆச்சர்யப்பட்டு விஷண்ணாராய் நிற்க

அவ்வளவில் பெருமாளும் நம் உடையவரை இழந்தோமே -என்று திரு உள்ளம் நொந்து -நமக்கு செவ்வாய் வக்ரமாய்த்து -என்று
சுருள் அமுதும் அமுது செய்யாமல் ஸ்ரீ நாச்சிமாருடனே புறப்பட்டு அருள -அவ்வளவில் ஸ்ரீ பராங்குசன் பரகாலன் முதலான ஆழ்வார்கள்
பதின்மர்களும் சேவித்துச் செல்ல ஆயிரக்கால் திரு மண்டபத்திலே எழுந்து அருளி இருந்து திரு முத்தின் பணி காளாஞ்சி திரு வெண் சாமரம்
திரு வாலவட்டம் திரு வெண் கொற்றக் குடை வெண் முத்தின் கலசம் திரு மேல் கட்டு முத்துத் தாமம் தொடக்கமானவற்றையும்
உடுத்துக் களைந்த பீதகவாடை -சூடிக் களைந்த தொடுத்த துழாய் மலர் -எண்ணம் சுண்ணம் எல்லாம் பொன் தளிகையிலே
கொண்டு போம்படி ஸ்ரீ உத்தம நம்பிக்கு விடை கொடுத்து அருள

ஸ்ரீ நம்பியும் அப்படியே தரித்துக் கொண்டு ஸ்ரீ பெருமாள் பரிகரம் அனைத்துக் கொத்துடன் சகல வாத்யத்துடனே திரு மடத்து வாசலிலே செல்ல –
அது கண்டு முதலிகள் எல்லாம் தேறி நின்று -இனிச் செய்ய வேண்டிய க்ருத்யத்தை செய்ய வேணும் -என்று
ஸ்ரீ எம்பெருமானாருடைய விமல சரம விக்ரஹத்தை தூயதாக நீராடப் பண்ணிவைத்து அலங்கரித்து கேசவாதி துவாதச ஊர்த்வ புண்டரங்களையும் சாத்தி
ஸ்ரீ பெருமாள் சாத்திக் களைந்து வரவிட்டு அருளின ஸ்ரீ பெருமாள் அரையில் பீதக வண்ண வாடை கொண்டு திரு முடியில் சாத்தி –
அவர் மார்வு அணிந்த ஸ்ரீ வனமாலையையும் சாத்தி அலங்கரித்து ஸ்ரீ உடையவர் திருவடிகளைத் தங்கள் கண்ணிலும் மார்பிலும் நெஞ்சிலும்
ஒற்றிக் கொன்டு ஆச்சார்ய விஸ்லேஷ அஸஹிஷ்ணுக்களாய்
ஐயோ கண்ணபிரான் அறையோ முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே என்று கை எடுத்து
போர பெரு மிடறு செய்து கூப்பிட்டு மூர்ச்சித்துக் கிடக்க-அருகு இருந்த முதலிகள் வந்து எடுத்துத் தேற்ற தேறி நின்று
ஸ்ரீ உடையவருக்குச் சாத்திக் களைந்து தத் சேஷமாய் இருந்துள்ள எண்ணெய் சுண்ணம் திரு மண் ஸ்ரீ சூர்ணங்கள் எல்லாரும் பிரசாதப்பட்டு
தீர்த்தம் கொண்டு -ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருக் கையாலே ஸ்ரீ ஆளவந்தாருக்குப் போலே ஸ்ரீ உடையவருக்கு
ப்ரஹ்ம மேதத்தாலே சமஸ்கரித்து பீடயாநமான திவ்ய விமானத்தில் ஏறி அருளப் பண்ணி சகல வாத்தியங்களும் முழங்க
ஸ்ரீ பெருமாள் பரிகரமடைய சத்ர சாமர தால வ்ருந்தாதிகளைத் தரித்து சேவிக்க –
அவ்வளவில் ஸ்ரீ ஆட்கொண்ட வில்லிசீயர் யதிவர சீயர் உள்ளிட்ட ஏழு நூறு சீயர்களும் ப்ரஹ்ம வல்லி பிருகு வல்லி நாராயண அநுவாகம்
முதலான உபநிஷத்துக்களை ஓத –
ஸ்ரீ பட்டர் -ஸ்ரீ கந்தாடை யாண்டான் -ஸ்ரீ நடாதூர் ஆழ்வான் உள்ளிட்ட முதலிகளும் தத் தத் பரிசர்ய சாதனங்களை தரித்துக் கொண்டு
பரிவுடன் பரிவ்ருத்தராய் சேவித்துக் கொண்டு வர
மற்றும் உண்டான உபவீத தாரிகளான ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஒன்பதினாயிரம் பேரும் தத் பாவரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் பன்னீராயிரம் பேரும்
ஸ்ரீ அருளிச் செயல் மூவாயிரமும் முன்னடி பின்னடியாகச் சேவிக்க
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் பரிகரமான திருவாய் மொழி அரையர் ஸ்ரீ திரு நறையூர் அரையர் -ஸ்ரீ அழகிய மணவாள அரையர் –
முதலான எழுநூறு திருவாய் மொழி விண்ணப்பம் செய்யும் தம்பிரான்மார் பண்ணிசை தாளத்துடன் திருவாய் மொழி பாட
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் -ஸ்ரீ பெரிய கோயில் வள்ளலார் -ஸ்ரீ பொய்யில் வள்ளலார் தொடக்கமானவர்கள் ஸ்ரீ உடையவர் நூற்றந்தாதி சேவிக்க
ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பிள்ளான் உள்ளிட்டவர்கள் ததிக ப்ரீதி ஹேதுவான ஸ்ரீ ஸ்தோத்ர ஸ்ரீ கத்யங்களை சேவிக்க –
ஸ்ரீ வடுக நம்பியும் ஸ்ரீ ராமானுஜ தாசரான ஸ்ரீ கோமடத்து சிறி யாழ்வானும் ஸ்ரீ உடையவர் பிரபத்தியை அனுசந்தித்துக் கொண்டு வர
திரு வீதி எங்கும் கோடித்துப் பொரியும் புஷ்பமும் சிதற -நடை பாவாடை இட்டு கரும்பும் குடமும் ஏந்த

திருப்பதியில் ஸூ மங்கலிகள் மங்கள தீபம் ஏந்தி முன்னே செல்ல இருபக்கமும் சாமரம் இரட்டிப்பிக்க -வெள்ளை வட்டம் இட-
தரிசனத்தில் நம் ஸ்ரீ எம்பெருமானார் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் என்று ஒற்றைத் திருச் சின்னம் பரிமாற
திரு வீதிகள் தோறும் எழுந்து அருளுவித்துக் கொண்டு போய் -ஸ்ரீ பெரிய பெருமாளும் அந்தத் திருமேனியில் அபிமத விஷயத்தில்
அழுக்கு உகக்குமா போலே அதி சபலராய் -மங்க ஒட்டு -என்னும்படி இவர் விக்ரஹத்தை ஆதரித்து புறம்பே கொண்டு போக ஒட்டாமல் –
அந்தப்புர மஹிஷிகளை தத் பரிசாரத்திலே ஆராமத்திலே அடக்கி வைக்குமா போலேயும்-நிதியை உள்ளே இட்டு வைக்குமா போலேயும்
ஸ்ரீ லஷ்மீ துல்யராம்படியான ஸ்ரீ லஷ்ம்யங்களை யுடையராய் விலக்ஷண நிதி போலே-ஸ்ரீ இராமானுசன் என் தன் மா நிதி —
ஸ்ரீ இராமானுசன் என் தன் சேம வைப்பு-என்னும்படியான இவர் திருமேனியையும் ஸ்ரீ ஆழ்வார் திருமேனியை ஆவரணத்துக்கு உள்ளே
திருப் பள்ளி படுத்தால் போலே ஆவரணத்துள்ளில் உட்கோப்பில் அந்தரங்கமாக கௌந்தேயனான அர்ஜுனனைப் போலே
ஸ்ரீ கந்தாடை ஆண்டான் திருமுடி காத்து நோக்க -தத் அனுகுணமாக யதி ஸம்ஸ்கார விதி அடங்கச் செய்து
கனித்துத் திருப் பள்ளி படுத்தினார்கள்

இப்படி நிதியை நிஷேபித்த அநந்தரம் ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சிமாருடன் கூடத் திரு மஞ்சனம் கண்டு அருளித்
திரு முத்து உதிர்த்துத் திரு முகம் கன்றிச் சுருள் அமுதும் அமுது செய்யாமல் அலப்புப் பட விடத் திரு உள்ளமாய் –
ஸ்ரீ கந்தாடை ஆண்டான் ஸ்ரீ பட்டர் முதலானோரைப் பார்த்து நம்முடைய அவப்ருத உத்சவம் கொண்டாடுமா போலே
நம் ஸ்ரீ உடையவருக்கும் அவப்ருத உத்சவம் கொண்டாடுங்கோள்-என்று திரு உள்ளம் பற்றிச் சேர்த்தியிலே ஏறி அருளி
ஸ்ரீ உடையவருக்கு அக்கார வடிசில் தளிகை அனுப்பி அருளினார்
இவ்வாறு செய்ய வேண்டிய க்ருத்யங்களை எல்லாம் செய்து பெருக்கத் திரு அத்யயனமும் நடத்தி அருளினார்கள்
அநந்தரம் ஸ்ரீ கந்தாடை ஆண்டான் தொடக்கமான அனைவரும் புத்ர சிஷ்யர் செய்யும் கார்யங்களை எல்லாம் செய்து கொண்டு
அவப்ருத ஸ்நானமாக எல்லாரும் நீராடி அருளித் தத்விஸ்லேஷ அசஹராய்ப் பரிதபித்துக் கொண்டு இருக்க –
பின்பு ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ நம்பெருமாள் அனுமதியுடன் ஸ்ரீ எம்பெருமானாரை எல்லாரும் சேவித்து உஜ்ஜீவிக்கும் படி மீளவும்
அவ்விடத்திலே ஆவிர்ப்பவித்தால் போலே இருக்க அர்ச்சாவதாரமாக ஏறி அருளப் பண்ணி பிரதிஷ்டிப்பித்து அருளினார்
ஸ்வ அவதார ஸ்தலே அர்ச்சா அபூத் ஸ்ரீ ரெங்கேசய தீஸ்வர -யன்முதே தங்குணா வாசம் ராமானுஜ குரும் பஜே-என்றார்கள் –

அநந்தரம் சாஸ்த்ரார்த்தமான கைங்கர்யங்களையும் ஆப்தரான தங்கள் ஸமாப்தமாக நடத்தி-ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ கந்தாடை ஆண்டானும்
மிகவும் ஸுப்ராத்ரத்தை யுடையராய் -ஸ்ரீ உடையவர் காலத்தில் அர்த்த விசேஷங்களையும் ஒருவருக்கு ஒருவர் உசாவிக் கொண்டு –
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதிகளுடைய திரு புனர்வசாதி திரு நக்ஷத்ரங்களோ பாதியும் -ஸ்ரீ ஆழ்வாராதிகளுடைய ஸ்ரீ சரவணாதிகளோ பாதியும்
இவருடைய சித்திரையில் திருவாதிரையையும் மற்றும் மாசம் தோறும் வருவதாக அந்தத் திரு நக்ஷத்ரத்தையும்
மஹா உத்சவமாக நடத்திக் கொண்டு வாசா மகோசரமான தத் வைபவங்களையும் பிரகாசிப்பித்துக் கொண்டு
ஸ்ரீ கிடாம்பி யாச்சான் தொடக்கமானவரோடே பாடாற்றிக் கொண்டு இருந்தார்கள் –

அநந்தரம் ஸ்ரீ திருவேங்கட நாட்டின் நின்றும் ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ குஹ தாசர் முதலான முதலிகளையும் கூட்டிக் கொண்டு
ஸ்ரீ அனந்த அம்சமான இவர் திரு அவதார சமாதியை ஆராய்ந்து அறியும் படி எழுந்து அருளி திருக் காவேரி அருகே பரந்து இருக்கிற
தத் ஸூசகங்களைக் கண்டு எழுந்து அருளினபடி அறிந்து சோகாவிஷ்டராய் -அநந்தரம் ஸ்ரீ பட்டரையும் ஸ்ரீ ஆண்டானையும் கண்டு
ஆஸ்வசித்து உடனே ஊர் ஏற மீண்டு எழுந்து அருளினார்
அநந்தரம் அப்படியே கீழைத் திக்கில் சோழ வளநாட்டுத் திருக் கண்ணபுரம் முதலான திருப்பதிகளில் ஸ்ரீ எச்சான் முதலானவர்களும்
தெற்குத் திக்கான பாண்டி நாட்டு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி திருக் குமாரரான ஸ்ரீ யமுனாச்சார்யர் சொக்கத்தேவர்-
ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக் குமாரரான ஸ்ரீ சுந்தரத் தோளுடையார் முதலானவர்களும்
மேல் நாட்டிலும் ஸ்ரீ சோமாசி ஆண்டான் ஸ்ரீ மருதூர் நம்பி -ஸ்ரீ தொண்டனூர் நம்பி முதலானோரும் –
மற்றும் அங்கே ஸ்ரீ எம்பெருமானாராலே திருத்தப்பட்ட ஸ்ரீ திரு நாராயண புரம் முதலான ஸ்தலங்களில் ஸ்ரீ வைஷ்ணவர்களும் –
மற்றும் உண்டான தேசாந்திரஸ்தர் எல்லாரும் திரண்டு பெரும் கூட்டமாக ஸ்ரீ கோயிலிலே வந்து
ஸ்ரீ எம்பெருமானாருடைய விஸ்லேஷத்தாலே மிகவும் கிலேசித்து

அநந்தரம் ஸ்ரீ பட்டரை சேவித்து தங்கள் வியசனம் எல்லாம் தீர்ந்து ஸ்ரீ பட்டரையே இஷ்ட தேவதையான
ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே கண்டு -தாமதாமுக்கு வேண்டும் இஷ்டார்த்தங்களையும் கேட்டுக் கொண்டு தத் லாபத்தாலே
ஸ்ரீ பராசார்ய பட்டார்யா சரணவ் ஸம்ஸ்ரயே மஹி யத் வக்த்ர ரங்கே ரங்கேச கோஷ்ட்யாம் ப்ராஹ்மீ ப்ரந்ருத்யதி -என்றும்
பிரமாண நக நிரப்பிண்ண வாதி மத்தேப மஸ்தக ராஜதே நிகமாங்கர்ஜன் ஸ்ரீ பராசர கேஸரீ -என்றும்
ஸ்ரீ பராசார்ய பட்டார்யாம் பூயோ பூயோ நமாம்யஹம் யதாத்மநாசவயம் ரங்கீ பேஜே கூரேச புத்ரதாம்-என்றும்
இத்யேவமாதி ஸூக்திகளையும்-தத் விஷயத்தில் அனுசந்தித்துக் கொண்டு தத் அநுஜ்ஜையோடே தம்தாமூர்களிலே சேர்ந்தார்கள்

சம்சார ஸ்திதிய ருசி நிவேதனமும் -தத் அநு குணமான பகவ துக்தாந்தி மதின நிச்சயமும் -சரம காலத்து அளவும் ஸ்வ அபிமான
அந்தர்பூதரான வர்களுக்கு உபகார அநு குணமாக வ்ருத்தி விசேஷ உபதேசமும் -பரிஹரணீய வ்ருத்தி விசேஷ உபதேசமும் –
சரம காலத்தில் ஸ்வ அபிமத சரம அதிகாரி ஸ்பர்ச விசேஷமும் -திரு முடியைப் பற்றி பூர்வாச்சார்யர்கள் விளங்கத்
திருவடிகளைப் பற்றி அபராச்சார்யர்கள் விளங்கப் பூர்வா பராசர்ய ரூப ஹார நாயக ரத்னமான ஸ்ரீ உடையவர்க்கே உள்ளது ஓன்று இறே
இத்தால் ஸ்ரீ ராம கிருஷ்ண சரிதங்கள் போலே ஸ்ரீ ராமாநுஜாய சரிதமும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சதா அனுசந்தேயாம் என்றதாய்த்து

ஸ்ரீ எம்பெருமானார் திரு நக்ஷத்ரம் சித்திரையில் திருவாதிரை

இவர் தனியன் -யோ நித்யம் அச்யுத- இத்யாதி -பிரசித்தம் இறே

——————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -ஸ்ரீ திரு நாராயண புரம் விருத்தாந்தம் –ஸ்ரீ எம்பெருமான்கள் ஆச்சார்யர்கள் சிஷ்யர்கள் பிரகாசிப்பித்த பிரபாவங்கள்–

February 25, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ வடுக நம்பி வைபவம்-

இவர்களில் ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே உபாயம் உபேயம் என்று விஸ்வசித்து அவர் திருவடி நிலைகளையே
திரு ஆராதனம் பண்ணிப் போருவர் -இப்படி இருக்கிற ஸ்ரீ வடுக நம்பி ஒரு பயண கதியில் ஸ்ரீ உடையவர் திரு ஆராதனத்தையும்
தம்முடைய திரு ஆராதனத்தையும் சேர எழுந்து அருளிப் பண்ணுவித்துக் கொண்டு வர -ஸ்ரீ உடையவர் கண்டு –
ஸ்ரீ வடுகா இது என் செய்தாய் என்ன -இவரும்-உங்கள் தேவரில் எங்கள் தேவருக்கு வந்த குறை என் என்று விண்ணப்பம் செய்தார் –
ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ உடையவருடன் ஸ்ரீ பெருமாளை சேவிக்கப் போனாலும் ஸ்ரீ உடையவர் விக்ரஹத்தையே சேவித்துக் கொண்டு போருவர் –
ஒரு நாள் எம்பெருமானார் இத்தைக் கண்டு ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருக் கண் அழகைப் பாராய் என்ன –
இவரும் ஸ்ரீ பெருமாள் திருக் கண் அழகையும் ஸ்ரீ உடையவர் கண் அழகையும் பார்த்து -என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று
ஒன்றினைக் காணாவே என்ன -ஸ்ரீ உடையவரும் இது ஓன்று இருந்தபடி என் -என்று உகந்து
ஸ்ரீ வடுக நம்பியை பூர்ண கடாக்ஷம் செய்து அருளினார் –

ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ எம்பெருமானார் அமுது செய்து அருளி தளிகைப் பிரசாதம் பிரசாதித்தால்-இரண்டு திருக் கைகளாலும் ஏற்றுக் கொண்டு
பிரசாத ஸ்வீ காரம் பண்ணித் தம் திரு முடியில் திருக் கைகளைத் தடவிக் கொண்டு போருவர் –
இத்தை ஒரு நாள் ஸ்ரீ உடையவர் கண்டு கனக்கக் கோபித்து -ஸ்ரீ வடுகா கையைக் கழுவிக் கொள் என்ன -கழுவிக் கொண்டு –
மற்றை நாள் ஸ்ரீ நம்பெருமாள் அமுது செய்து அருளுகிற காலத்தில் ஸ்ரீ உடையவருடன் சென்ற அளவிலே ஸ்ரீ உடையவரும்
தமக்கு பிரசாதித்த ஸ்ரீ பெருமாள் பிரசாதத்தை தாமும் ஸ்வீ கரித்து அருளி – வடுகா இதோ -என்று இவரும் ப்ரசாதிக்க
இவரும் இரண்டு திருக் கைகளாலும் ஏற்றுக் கொண்டு பிரசாதப்பட்டு-ஸ்ரீ வைஷ்ணவர் திருக் கை விளக்க ப்ரசாதிக்கத்
திருக் கை விளக்கிக் கொண்டார் -ஸ்ரீ உடையவர் இது கண்டு இது என் செய்தாய் வடுகா என்ன –
நேற்று அருளிச் செய்தபடி செய்தேன் என்றார் –
ஸ்ரீ உடையவரும் இது கேட்டு உமக்குத் தோற்றோம் -என்று அருளினார் –

ஸ்ரீ வடுக நம்பி ஒரு நாள் ஸ்ரீ உடையவருக்குப் பங்காக பால் அமுது காய்ச்சா நிற்க ஸ்ரீ பெருமாள் பெரிய திருநாளில்
உடுத்து முடித்துப் பூண்டு புறப்பட்டு அருள ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ பெருமாளை சேவிக்கப் புறப்பட்டு –
ஸ்ரீ வடுகா பெருமாளை சேவிக்க வா என்ன -ஸ்ரீ நம்பியும் உம்முடைய பெருமாளை சேவிக்க வந்தால் –
என்னுடைய பெருமாளுக்குக் காயா நிற்கிற பால் அமுது பொங்கிப் போம் -வரக் கூடாது என்று அருளினார்
ஸ்ரீ வடுக நம்பி அகத்தே பூர்வ சம்பந்திகளாய் இருப்பார் சிலர் வந்து தங்கிப் போக -அகத்தை எல்லாம் சுற்றிச் சோதித்து
தத் ஸ்ப்ருஷ்ட பாண்டங்களையும் உடைத்துப் பொகட்டுப் பூசி -இதற்கு பிராயச்சித்தம் என் என்று விசாரித்து –
ஸ்ரீ முதலியாண்டான் புழக்கடையில் கழித்துக் கிடந்த பாண்டங்களைக் கொண்டு போய் விநியோகம் கொண்டார்
ஆகையால் ஆச்சர்ய சம்பந்தம் உடையார் எல்லைக்கு உட்பட்டதில் அபாவநத்வ புத்தி இன்றியே ஸூபாவநத்வ புத்தி முற்றின படி
ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதம் அல்லது மாற்று ஒருவர் ஸ்ரீ பாதம் கொள்ளார் -ஸ்ரீ தீர்த்த நியதியும் இவருக்கே உள்ளது ஓன்று இறே-
இப்படி தீர்த்த நியதி உடையராய் அவர் ஸ்ரீ பாத தீர்த்தத்தை ஸ்ரீ சாளக்ராமத்தில் தாம் சேர்த்த தனமாக சேர்த்து வைத்துப் பேணிக் கொண்டு
ஸ்ரீ உடையவர் திருவடி நிலைகளையே திருவாராதனமாக உடையராய் அவை தன்னையே அங்கே ப்ரதிஷ்டிப்பித்து நோக்கிக் கொண்டு போந்து
தம் சரம திசையிலும் தமக்கு அந்தரங்கரான சரம அதிகாரிகளுக்கும் தஞ்சமாகக் காட்டிக் கொடுத்து –
சீர்த்த தனம் இது வருந்தியும் பேணிக் கொண்டு போருங்கோள் என்று அடைக்கலம் காட்டிக் கொடுத்து அருளினார் –

————————————-

ஸ்ரீ அனந்தாழ்வான் வைபவம்

ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ ராமாநுசப்புத் தேரி கட்டி வைக்கும் போது மண் சுமாவா நிற்க -பிள்ளைகளில் ஒருவர் சென்று கூடையை வாங்கப் புக –
நான் அத்தை விடில் இளைப்பன்–நீ இத்தை தொட்டில் இளைப்புதி என்று அருளிச் செய்ய –
இளைப்பாகாது என்று பிள்ளை பின்னையும் கூடையை வாங்கப் புக -ஆகில் நான் ஜீவிக்கிற ஜீவனத்தையும் வாங்க வேணுமோ –
நீயும் வேணுமாகில் ஒரு கூடையை வாங்கிக் கொண்டு சுமக்க மாட்டாயோ என்று அருளினார்
பின்னையும் ஒரு நாள் கர்ப்பவதியான தம் தேவிகள் மேலே மண் சுமத்தா நிற்க இது ஸ்ரீ திருவேங்கடமுடையான் ஒரு பிள்ளையாய்
எதிரே வந்து கூடையை வாங்கிக் கொண்டு போக தேவிகள் கடுக வருமது கண்டு – இது என் கடுக வருகிறாய் -என்ன –
அவளும் ஒரு பிள்ளை எதிரே வந்து கூடையை வாங்கிக் கொண்டு போகிறான் -என்று சொல்ல -கேட்டு உடனே சென்று கண்டு –
கைங்கர்ய விக்ந காரீ -நீ கூடையைத் தொடாதே கொள்-என்று கொட்டு எடுத்து அடிக்கப் புக
ஸ்ரீ திருவேங்கடச் செல்வன் ஓடிச் சென்று ஸ்ரீ கோயிலிலே புகுந்தான் என்பர்கள் –

ஸ்ரீ அனந்தாழ்வான் திரு நந்தவனத்தில் போகி சந்தஷ்டமாக-பின்னையும் போய் நீராடிக் கைங்கர்யத்தில் போர-
ஸ்ரீ பாதத்துக்கு பரிவராய் இருப்பார் -விஷம் தீர்க்கப் பார்க்க வேண்டாவோ என்ன -வேண்டா என்று அத்தை நிவர்த்திப்பித்து அருளினார் –
பின்பு ஸ்ரீ கோயில் எழுந்து அருளினவாறே ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவாய் மலர்ந்து விஷம் தீர்க்க வேண்டா என்று என் நினைத்துச் சொன்னீர்
என்று கேட்டருள இவரும் கடியுண்ட பாம்பு வலிதாகில் திருக்கோணேறியிலே தீர்த்தமாடித் திருவேங்கடமுடையானை சேவிக்கிறேன் –
கடித்த பாம்பு வலிதாகில் விரஜையில் தீர்த்தமாடி ஸ்ரீ வைகுண்ட நாதனை சேவிக்கிறேன் என்று இருந்தேன் என்று விண்ணப்பம் செய்தார் –
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ கோசல ராஜ்யத்துக்கு எழுந்து அருளுகிற போது கட்டுத் திரு போனகம் கட்டிக் கொண்டு போய் அமுது செய்யப்
புக்கவாறே பட்டை அடங்களும் சிற்று எறும்பாய் கிடக்க அத்தைக் கண்டு துணுக் என்று தம் முதலிகளைப் பார்த்து
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -என்னுமவர்களிலே சிலராய்த்து இவர்கள் -இப்படியே கொண்டு போய்
ஸ்ரீ திருமலையில் வைத்து வாருங்கோள் என்று அருளிச் செய்தார் –

ஸ்ரீ அனந்தாழ்வான் யமுனைத் துறைவனிலே திருமாலை கட்டா நிற்க ஸ்ரீ திருவேங்கடமுடையான் அருள்பாடிடப் பேசாதே இருந்து
திருமாலை சேர்த்துக் கொண்டு உள்ளே புக்கவாறே ஸ்ரீ திருவேங்கடமுடையானும் -நாம் அழைக்க ஸ்ரீ அனந்தாழ்வான் நீர் வாராது இருந்தது என் –
என்று திரு உள்ளமாக-இவரும் கருமுகை மொட்டு வெடியா நிற்க எனக்குத் தேசரீரைக் கொண்டு கார்யம் என் என்றார் –
ஸ்ரீ திருவேங்கடமுடையானும் -ஆகில் நாம் உம்மை இங்கு நின்றும் போகச் சொன்னோமாகில் நீர் செய்தவது என் என்று திரு உள்ளமாக
இவரும் பரன் சென்று சேர் திருவேங்கடம் என்கிறபடியே தேவரீர் அன்றோ வந்தேறிகள் –இவ்விடம் தேவரீரை ஆஸ்ரயித்தவர்களது அன்றோ –
தேவரீர் ஒரு கிழமை முற்பட்டார் அத்தனை -இவரும் திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயித்தோம் அத்தனை அன்றோ என்று விண்ணப்பம் செய்தார்

—————————————————

ஸ்ரீ கூரத்தாழ்வான் வைபவம் –

இப்படிப்பட்ட சிஷ்ய சம்பத்துடன் ஸ்ரீ உடையவர் வாழ்ந்து வரும் காலத்திலே ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ எம்பெருமானாருக்கு விண்ணப்பம் செய்யாதே
ஸ்ரீ நம்பெருமாள் சந்நிதியில் சென்று சேவித்து இரா நிற்க ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ ஆழ்வான் நீ ஓன்று சொல்லுவான் போல் இருந்தாயீ -என்று
திரு உள்ளமாய் அருள -இவருமொரு ஸ்லோகத்தை விண்ணப்பம் செய்து உபந்யஸிக்க –
உமக்கு வேண்டியது எல்லாம் தருகிறோம் -வேண்டிக் கொள்ளும் -என்று உகப்பின் மிகுதியால் திருவாய் மலர்ந்து அருளிச் செய்ய –
ஸ்ரீ ஆழ்வானும் -நாயந்தே-அடியேனுக்கு பண்டே எல்லாம் தந்து அருளிற்றே என்ன
ஸ்ரீ பெருமாளும் -அப்படி அன்று -இப்போதே வேண்டிக் கொள்ளும் -நம் பெண்கள் ஆணை -நம் இராமானுசன் ஆணையே தருகிறோம் –
என்று திரு உள்ளமாக -ஸ்ரீ ஆழ்வானும் த்வத் அனுபவ விரோதியான இச் சரீரத்தை விடுவித்து த்வத் அனுபவத்தை தந்து அருள வேணும் –
என்று அபேக்ஷிக்க -ஸ்ரீ பெருமாளும் -அத்தை ஒழியச் சொல்லும் என்ன -இவரும் தாம் வேண்டும் காமமே காடடும் கடிது-என்கிறபடியே
அடியேன் அபேக்ஷித்தத்தை பிரசாதிக்க வேணும் -என்று விண்ணப்பம் செய்ய –
ஆகில் உமக்கும் உம்முடைய சம்பந்தம் உடையாருக்கும் ஸ்ரீ பரமபதம் தந்தோம் -என்று அருளிச் செய்து அருளி
திருப் பரியட்டமும் தளிகைப் பிரசாதமும் பூம் தண் மாலைத் தண் துழாயும் திருக் கைச் சிறப்பும் ப்ரசாதித்து விடை கொடுத்து அருளினார் –
ஸ்ரீ ஆழ்வான் அர்ச்சிராதி கதி மார்க்கத்துக்கு பிரதம அலங்காரம் போலே இருக்கப் புறப்பட்டுத் தம் திரு மாளிகையிலும் புகுராதே
ஸ்ரீ ஆழ்வார் திருமாளிகையிலே புற வீடு விட்டு எழுந்து அருளி இருந்தார் –

ஸ்ரீ உடையவரும் இத்தைக் கேட்டு உடுத்த காஷாயத்தை வாங்கி ஆகாசத்தே ஏற எறிந்து ஏற்றுக் கொள்ள –
ஸ்ரீ பாதத்து முதலிகள் -இது என் சீயா என்று கேட்க –
உடையவரும் நமக்கும் ஸ்ரீ ஆழ்வான் சம்பந்தம் உண்டே -ஸ்ரீ பரமபதம் பெறலாம் அன்றோ என்று அருளிச் செய்தார் –
ஆகையால் சதாச்சார்ய சம்பத்தோடே சச் சிஷ்ய சம்பத்தோடு வாசி இல்லை இறே –
ஸ்ரீ உடையவரும் சோகாவிஷ்டராய் ஸ்ரீ பாதித்து முதலைகளை எல்லாம் கூட்டிக் கொண்டு ஸ்ரீ ஆழ்வான் இருந்த இடத்தே ஏறச் சென்று –
ஸ்ரீ ஆழ்வான் நீர் இப்படிச் செய்து அருளலாமோ -என்ன ஸ்ரீ ஆழ்வானும் பேசாதே இருந்தார் –
ஸ்ரீ உடையவரும் -ஸ்ரீ ஆழ்வான் உமக்கு முற்பட வேண்டும் அபிப்பிராயம் என் -பேசாது இருக்கிறது என் என்று கேட்டருள –
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ பரமபதத்தில் நடக்கும் அடைவு கேட்டுக்கு அஞ்சி என்ன -ஸ்ரீ உடையவரும் அது சொல்லிக் காணீர் என்ன –
ஸ்ரீ ஆழ்வானும் -முடிவுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள என்று முற்பட்டவர்கள் நித்ய ஸூரி களுடன் பிற்பட்டவர்களை
எதிர் கொள்ள வருவார்கள் -அது அடியேன் பிற்படில் அடைவு கேடாம் என்ன

ஸ்ரீ உடையவர் அது கேட்டு -ந சாஸ்திரம் நைவ ச க்ரம-என்று அடைவு கெட்டு இருக்கும் போக விபூதியில்
நீ அடைவு தேடுவதே -இது ஒரு சேஷத்வம் இருந்தபடியே -என்று போர வித்தராய் திரு முத்து உதிர்த்து இவருக்கு ஓடுகிற
நினைவை அறிந்து இவர் திருச் செவியில் திரு த்வயத்தை அருளிச் செய்ய -முதலிகளும் இப்போதாக இது என் என்ன –
நீங்கள் அறியீர்களோ -ராஜ குமாரனுக்குக் கற்பூர நிகரம் இல்லாத போது நாக்கு வறளுமா போலே இவருக்கு த்வயம் இல்லாத போது
நாக்கு வறளும் -என்று அருளிச் செய்து ஸ்ரீ ஆழ்வானை அணைத்துக் கொண்டு விம்மல் பொருமலாய்த் திரு உள்ளம் உடை குலைப்பட்டு –
ஸ்ரீ ஆழ்வான் என் உயிர்நிலையான உம்மை இழந்து எங்கனம் தரிப்பேன் -என்னையும் உடன் கொண்டு போகத் திரு உள்ளம் பெற்றிலீர் –
விட்டுப் போக உமக்கு ருசிப்பதே – ஸ்ரீ பரமபத நிலையான பக்கல் சங்கம் பும்ஸாம் த்ருஷ்ட்டி அபஹாரியான ஸ்ரீ பெருமாள் பக்கல்
சங்கத்தை அறுத்து உம்மை முந்துறப் பண்ணுவதே -ஸ்ரீ பரமபத நாதனும் அங்குள்ள நித்ய முக்தரும் என்ன பாக்யம் பண்ணினார்களோ –
இங்கு உறங்குகின்ற ஸ்ரீ பெருமாளும் இங்கு உள்ள நாங்களும் என்ன பாபம் பண்ணினோமோ -உம் திரு உள்ளம் கலங்கச் சொல்லி
என்ன பிரயோஜனம் உண்டு -உம் பேற்றுக்கு நாம் விலக்கடி ஆகலாமோ -ஸூ கமே நித்ய விபூதி ஏற எழுந்து அருளீர் என்று
ஸ்ரீ ஆழ்வான் திரு முகத்தைத் தடவி அஞ்சலித்து விடை கொடுத்து அருள -ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் வேர் அற்ற மரம்
போலே விழுந்து கிடக்க ஸ்ரீ உடையவரும் இரண்டு திருக்கைகளாலும் வாரி எடுக்க எழுந்து இருந்து ஸ்ரீ உடையவர் திருவடிகளை
தம் திருக்கண்களாலும் திருக்கைகளாலும் ஒற்றிக் கொண்டு ஸ்வ ஸீரோ பூஷணமாக்கிக் கொண்டு தீர்த்தம் கொள்ள
ஸ்ரீ உடையவரும் திருக்கைகளால் பிரசாதிக்க பிரசாதிக்கப்பட்டு –

யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹாதஸ் தத் இதராணி த்ருணாய மேந -அஸ்மத் குரோர் பகவதோ அஸ்ய
தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் பிரபத்யே -என்று அனுசந்தித்திக் கொண்டு க்ருதாஞ்சலி புடராய் –
இனி திரு மடமே எழுந்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்து வட ஆற்றங்கரை அளவாக ஸ்ரீ உடையவர் பின்னே செல்ல –
ஸ்ரீ ஆழ்வான் இனி நில்லும் என்ன -தண்டனை சமர்ப்பித்து மீண்டு ஸ்ரீ ஆழ்வார் திருமாளிகைக்கு அருகிலிட்ட திருக் காவணத்தின் நடுவே
எழுந்து அருளி இருந்து ஸ்ரீ ஆண்டாளை பார்த்து என் நினைத்து இருக்கிறாய் என்ன –
ஸ்ரீ ஆண்டாளும் தேவரீர் திரு உள்ளத்தை பின் செல்லுகை ஒழிய அடியேனுக்கு வேறு ஒரு நினைவுண்டோ என்று
திருவடிகளில் தெண்டன் இட்டு அஞ்சலித்து நிற்க
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ பட்டரையும் ஸ்ரீ ராமப் பிள்ளையும் அழைத்து அருளி ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சியாரும் எழுந்து அருளி இருக்க
உங்களுக்கு ஒரு தாழ்வு இல்லை -ஸ்ரீ நம்பெருமாள் பெற்று வளர்த்தார் என்று அதுவே தஞ்சம் என்று இராதே ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே
தஞ்சம் என்று இருங்கோள் -ஸ்ரீ ஆண்டாள் சொன்னபடியே வர்த்தியுங்கோள்-பாகவத விஷயத்திலே த்ரிவிதகரணங்களாலும் அபராதம் பண்ணாதே
அவர்களை அனுவர்த்தித்துக் கொண்டு போருங்கோள் என்று அருளிச் செய்து தம் திருவடிகளில் விழுந்து கிடக்கிற ஸ்ரீ பட்டரையும் ஸ்ரீ ராம பிள்ளையையும்
எடுத்துத் திருக்கையாலே கண்ணநீரைத் துடைத்து –
நீங்கள் பிராகிருத சம்பந்தத்தை நினைத்து க்லேசித்தீர்கள் ஆகில் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் சம்பந்தத்தை தூஷித்தீர் ஆவுதீர்கோள் —
ஆத்ம சம்பந்தத்தை நினைத்து கிலேசித்தீர்கள் ஆகில் ஒழிக்க ஒழியாத உறைவை அறிந்திலீர் ஆவுதீர்கோள் என்று அவர்களைத் தேற்றி
ஸ்ரீ கோயிலுக்கு நேரே ஸ்ரீ பிள்ளைப் பிள்ளான் திருமுடியில் திரு முடியையும் ஸ்ரீ ஆண்டாள் திருமுடியில் திருவடிகளையும் த்யானித்துக் கொண்டு
அன்றே ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்

ஸ்ரீ உடையவரும் இது கேட்டு அங்கு ஏற எழுந்து அருளி ஸ்ரீ ஆழ்வான் திருக் குமாரரான ஸ்ரீ பட்டரைப் பார்த்து கிலேசியாதே என்று அருளிச் செய்து –
ஸ்ரீ ஆழ்வானுக்கு சரம கைங்கர்யம் செய்யும் என்ன ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ பெருமாள் பரிகரத்தையும் அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு –
சர்வ கர்மணி ஸூக்தேன காயத்ர்யா வைஷ்ணவேநச -நாராயண அனுவாகேன ஸ்நாபயேத் பிதரம் ஸூத-என்கிறபடியே
ஸ்ரீ ஆழ்வானை நீராடப் பண்ணி கேசவாதி திரு நாமங்களைச் சாத்தி
அலங்கரித்து ஸ்ரீ சூர்ண பரிபாலனம் பண்ணி எழுந்து அருளுவித்துக் கொண்டு போய்
கேசவார்ப்பித சர்வாங்கம் சரீரம் மங்களாவஹம் நவ்ருதா தாஹயேத் விப்ரோ ப்ரஹ்ம மேத விதிம் விநா -என்றும்
ப்ரஹ்ம மேத வ்ரதம் ப்ரோக்தம் முநிபிர் ப்ரஹ்ம தத் பரை-மஹா பாகவதாநாம் ஹி கர்த்தவ்யம் இதம் உத்தமம் -என்றும்
கேசவன் தமரான முமுஷுக்கள் திருமேனி விட்டால் அத்திரு மேனியை ப்ரஹ்ம மேத சம்ஸ்காரம் ஒழிய வேறு ஒன்றால் சமஸ்கரிக்க ஒண்ணாது
என்கையாலே மஹா பாகவத உத்தமரான ஸ்ரீ கூரத்தாழ்வானை ஸ்ரீ பட்டர் ப்ரஹ்ம மேதம் விதிப்படி சமஸ்கரித்துப் பள்ளிப் படுத்தி அருளி
பன்னிரண்டு நாளும் செய்யும் க்ருத்யங்களை சாஸ்த்ர யுக்த பிரகாரமாகச் செய்து அருளி ஸ்ரீ உடையவரையும் முதலிகளையும்
எழுந்து அருளுவித்துக் கொண்டு போய்

நாத பரந்தரம் தீர்த்தம் வைஷ்ணவ அங்க்ரி யுஜலாச் சுபம் -தேஷாம் பாதோ தகம் புண்யம் கங்காம் அபி புநாதி ஹி –
என்னும் வைபவம் உடைய பாகவத ஸ்ரீ பாத தீர்த்தத்தையும் ஸ்வீகரித்து அருளி
ஸூபாதவ் த்விஜ வைரஸ்ய சர்வ சம்பவச் சுபா வஹம்-சஹஸ்ர சாகா அத்யயனம் காரயேத் வைதிக உத்தம -அஸூபாந் தேவி சேஷேண
த்ராமிடீ ப்ரஹ்ம சம்ஹிதா அத்யேத வ்யாத் விஜவரைராசவ் சாக விநாசிநீ -என்றும்
வ்ருத்தா வாதவ் ஷயே சாந்தே த்ராமிடீ ப்ரஹ்ம சம்ஹிதா அத்யேத வ்யாத் விஜ ஸ்ரேஷ்டைராத்யா கீத சஹஸ்ரகீ -என்று
ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணத்தில் சொல்லுகிறபடியே திருவாய் மொழி திவ்ய பிரபந்தத்தை அனுசந்தித்து –
அநந்தரம் புஷ்பாஞ்சாலி பண்ணி சாத்தி அருளி
யதா துஷ்யதி தேவேஸோ மஹா பாகவத அர்ச்சனாத் -ததாக துஷ்யதே விஷ்ணுர் விதி வத் ஸ்வார்ச்ச நாதபி -என்று சொல்லுகையாலே
ஸ்ரீ வைஷ்ணவர்களையும் அமுது செய்யப் பண்ணி சத்கரித்து அருளினார்

ஸ்ரீ கூரத்தாழ்வான் திரு நக்ஷத்ரம் -தையில் ஹஸ்தம்

இவர் தனியன் –
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நாம யுக்தி மதீ மஹே யத் யுக்த்யஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரம்
ஸ்ரீ மத் கூர குலாதீசம் ஸ்ரீ வத்சாங்க முபாசமஹே அக்ர்யம் யதீந்த்ர சிஷ்யாணாம் ஆத்யம் வேதாந்த வேதானாம்

———————————–

அதின் மற்றை நாள் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பட்டரை அழைத்துக் கொண்டு ஸ்ரீ நம்பெருமாளை சேவிக்க எழுந்து அருளி
ஸ்ரீ அழகிய மணவாளன் திரு மண்டபத்திலே தண்டன் சமர்ப்பித்து -ஸ்ரீ பட்டரை கையைப் பிடித்துக் கொண்டு போய்
ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளைக் காட்டிக் கொடுக்க ஸ்ரீ பெருமாளும் மீளவும் மஞ்சள் நீர் குடித்து ஸ்ரீ பட்டரை விசேஷித்துப்
புத்ர ஸ்வீ காரம் பண்ணி அருளி அர்ச்சக முகேன திருவாய் மலர்ந்து ஸ்ரீ ஆழ்வானை இழந்தோமே -என்று வியாகுலப் படாதே
நம்மை ஸ்ரீ ஆழ்வானாகவே நினைத்து இரும் என்று அருளிச் செய்ய ஸ்ரீ உடையவரும் இத்தைக் கண்டு சந்தோஷித்து
ஸ்ரீ பெருமாளைக் குறித்து தேவர்ர்ர் இவருக்கு ஆயுஸ்ஸை ப்ரசாதித்து அருளும் -அடியேன் வித்யைகளை அப்யசிக்கிறேன் என்று
விண்ணப்பம் செய்ய ஸ்ரீ பெருமாளும் திருவாய் திறவாதே தீர்த்த பிரசாதமும் பிரசாதித்து விடை கொடுத்து அருள
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ பட்டரை அழைத்துக் கொண்டு மீண்டு தம் திரு மடமே எழுந்து அருளி ஸ்ரீ எம்பாரைப் பார்த்து –
இவரை நம் தர்சன பிரவர்த்தகராம் படி சாஸ்த்ர அப்பியாசம் பண்ணுவியும் என்று அவர் கையிலே காட்டிக் கொடுத்து
முதலிகளுக்கு பகவத் விஷயம் அருளிச் செய்யா நின்று கொண்டு எழுந்து அருளி இருந்தார் –

இப்படி இருக்கிற ஸ்ரீ உடையவர் பிரபாவத்தை- ஸ்ரீ பெரிய பெருமாளும் -ஸ்ரீ திரு வேங்கடமுடையானும் -ஸ்ரீ பேர் அருளாளரும் –
ஸ்ரீ திரு நாராயணப் பெருமாளும் -ஸ்ரீ அழகருக்கு -ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பியும் -ஸ்ரீ நம்மாழ்வாரும் -ஸ்ரீ மன் நாத முனிகளும் –
ஸ்ரீ ஆளவந்தாரும் -ஸ்ரீ பெரிய நம்பியும்-ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பியும் -ஸ்ரீ திருமலை நம்பியும் -ஸ்ரீ திருமாலை ஆண்டானும் –
ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையரும் -மற்றும் ஸ்ரீ பாதத்து முதலிகளும் -ப்ரஹ்ம ரக்ஷஸ்ஸும்-ஊமையும்-வெளியிட்டார்கள் –

ஸ்ரீ பெரிய பெருமாள் வெளியிட்டு அருளிய படி எங்கனே என்னில்
திருப்பவளச் செவ்வாய் திறந்து –
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் உமக்கும் உம்முடையார்க்கும் தந்தோம் என்று அருளிச் செய்கையாலும்

ஸ்ரீ அப்பன் வெளியிட்டபடி எங்கனே என்னில் –
உமக்கும் உம்முடையார்க்கும் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் தந்தோம் என்று
நம் தெற்கு வீட்டிலே சொன்னோமே என்று திருப்பவள வாய் திறந்து அருளிச் செய்கையாலும் –
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளும் போது ததிவிக்கிரயம் பண்ணுமவளுமான தும்பையூர் கொண்டி என்பாள்
ஒரு கோபாங்கை வந்து க்ரயத்ரவ்யர்த்தமாக ஸ்ரீ உடையவரையும் முதலிகளையும் சேவித்து நிற்க
ஸ்ரீ உடையவர் அவளுக்கு தளிகை பிரசாதம் ப்ரசாதிக்கச் சொல்லி ஸ்ரீ கிடாம்பி ஆச்சானை நியமித்து அருள –
அவரும் அப்படியே செய்து அருள அவர் பிரசாதித்த ஸ்ரீ பாத தீர்த்த தளிகை பிரசாதங்களாலே சம்யக் ஞான உதயம் உண்டாய்
அடியேனுக்கு ததி மூல்யம் தர வேண்டா மோக்ஷம் தர வேணும் என்று பிரார்த்திக்க –
ஸ்ரீ உடையவர் அதற்கு ஸ்ரீ திருவேங்கடமுடையான் கடவர் என்ன —
அவளும் அதற்கு தேவரீர் ஒரு சிறு முறி தர வேணும் என்ன
ஸ்ரீ உடையவரும் உகந்து தரப்பெற்று ஸ்ரீ திருமலை ஏறித் த்வரித்து வரக் கண்டு ஸ்ரீ திருவேங்கடவர் எதிரே சென்று
அச் சிறு முறியை வாங்கி வாசித்துக் கொண்டு ஸ்ரீ திரு நாடு தந்து அருளுகையாலும்

ஸ்ரீ பேர் அருளாளர் வெளியிட்ட படி எங்கனே என்னில் –
ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாருடன் தர்க்கித்த போது உத்தரம் சொல்ல மாட்டாமல் ஸ்ரீ பேர் அருளாளருக்கு விண்ணப்பம் செய்ய
அப்போது இன்னபடி உத்தரம் சொல்லும் என்று செங்கனி வாய் முறுவல் தோன்ற அருளிச் செய்கையாலும்
ஸ்ரீ யாதவ ப்ரகாசனுக்கு ஸ்வப்ன முகேன நம் இராமானுஜனை ஒரு ப்ரதக்ஷிணம் பண்ணி த்ரிதண்டி சந்நியாசி ஆவாய் –
என்று அருளிச் செய்கையாலும்

ஸ்ரீ திரு நாராயணப் பெருமாள் வெளியிட்ட படி எங்கனே என்னில் –
ஸ்ரீ தொண்டனூரிலே ஸ்வப்னம் காட்டி அருளி அழைத்துக் கொண்டு போய் அவருக்கு ப்ரசன்னரராய் அருளுகையாலும் –
என்னுடைய ஸ்ரீ செல்வப்பிள்ளை அன்றோ என்று எடுத்து அணைக்கும் படி ஸ்ரீ யதிராஜகுமாரரான சௌசீல்யத்தாலும்-

ஸ்ரீ அழகர் வெளியிட்டு அருளியபடி எங்கனே என்னில்
நம் இராமானுசன் அடியாருக்கு அருளப் பாடு என்று திரு உள்ளமாய் அருள -நாயந்தே -என்று எல்லா ஆச்சார்யர்களும் எழுந்து அருளித்
திருவடிகளில் சேவித்து நிற்க -ஸ்ரீ பெரிய நம்பி வழியில் சிலர் வராமல் இருக்க –
ஸ்ரீ அழகரும்-அது என் நீங்கள் நாம் அழைக்க வாராது இருப்பது என் -என்று கேட்டருள –
அவர்களும் -ராமானுஜன் அடியார்க்கு அருள்பாடு என்று தேவரீர் திரு உள்ளமாய் அருளுகையாலே -அவர் எங்களுக்கு சிஷ்யர் என்று
வாராது இருந்தோம் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ அழகரும் -ஸ்ரீ தசரத ஸ்ரீ வஸூதேவாதிகள் நம்மைப் புத்ரப் பிரதிபத்தி பண்ணினால் போலே இருந்தது நீங்கள் ஸ்ரீ இராமானுஜனை
சிஷ்ய பிரதிபத்தி பண்ணினது என்றும்
பின்பு ஒரு நாள் ஸ்ரீ கிடாம்பி ஆச்சானை அருளப் பாடிட்டு ஓன்று சொல்லாய் என்று திரு உள்ளமாய் அருள
அவரும் அபராத சஹஸ்ர பாஜனம் என்று தொடங்கி-அகதிம் -என்று சொல்ல –
ஸ்ரீ அழகரும் நம் ஸ்ரீ ராமானுசனை யுடையனாய் இருந்து அகதிம் என்று சொல்லப் பெறாய் என்றும் திரு உள்ளமாய் அருளுகையாலும்

ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பி வெளியிட்டு அருளியபடி எங்கனே என்னில்
ஸ்ரீ உடையவரும் முதலிகளும் ஸ்ரீ நம்பியை சேவிக்க எழுந்து அருளின அளவிலே ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பியும் திரு ஓலக்கமாக
எழுந்து அருளி இருந்து ஸ்ரீ உடையவராய் அருளப்பாடிட்டு –
பஹுநி மேவ்யதீதாநி ஜன்மா நிதவசார்ஜூந-என்கிறபடியே இத்தனை ஜென்மம் பிறந்தோம் என்று தெரியாது –
அஜ் ஜென்மங்களில் ஒருவரும் நமக்கு அகப்படாமல் -ஆஸூரீம் யோநிம் ஆபன்னா மூடா ஜென்மநி ஜென்ம மாம் அப்ராப்யைவ
கௌந்தேய ததோ யாந்த்யத மாங்கதிம் -என்கிற படியே ஆஸூர பிரப்ருதிகளாய் பிறந்து
பிறந்த ஜென்மங்கள் தோறும் மூடராய் நம்மை வந்து கிட்டாதே அதமமான கதியை அடைந்தார்கள் -இவ்வாத்மாக்கள் எல்லாரும்
உமக்கு அகப்பட்ட விரகை நமக்குச் சொல்ல வேணும் என்று திரு உள்ளமாக –
ஸ்ரீ உடையவரும் தேவரீர் கேட்கும் க்ரமத்தில் கேட்கில் சொல்லுகிறேன் என்ன ஸ்ரீ நம்பியும் திவ்ய சிம்ஹாசனத்தில் நின்றும் இறங்கி அருளி
நிலத்தில் ஒரு ரத்ன கம்பளத்தில் எழுந்து அருளி இருந்து இவருக்கு ஒரு திவ்ய சிம்ஹாசனத்தை இட்டு -இனிச் சொல்லும் -என்ன –
ஸ்ரீ உடையவரும் அவ்வாசனத்திலே ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ ஆளவந்தார் எழுந்து அருளி இருக்கிறார்களாக பாவித்துக் கொண்டு
அவர் திருச் செவியிலே ஹிதத்தை விண்ணப்பம் செய்ய அன்று தொடங்கி
ஸ்ரீ நம்பியும் -நம் இராமானுஜம் உடையோம் -என்று அருளிச் செய்கையாலும்

ஸ்ரீ நம்மாழ்வார் வெளியிட்ட படி எங்கனே என்னில் –
லோகத்தைத் திருத்துவதாக எம்பெருமானோடே மார் தட்டி -நின் கண் வேட்கை எழுவிப்பேனே-என்றவர் தாமே -ஏ பாவம் பரமே -என்று
க்லேசித்து அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே -ஸ்ரீ சர்வேஸ்வரன் திரு அவதரித்து திருத்த ஒண்ணாத லோகத்தை நாமோ
திருத்தக் கடவோம் என்று கை வாங்கி -யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம்-என்று தாமும் தம் திரு உள்ளமுமேயாய்
த்ரிகாலஞ்ஞர் ஆகையால் -கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று ஸ்ரீ உடையவர் திரு அவதாரத்தைக் குறித்து அருளிச் செய்கையாலும்

ஸ்ரீ மன் நாதமுனிகள் வெளியிட்ட படி எங்கனே என்னில்
குளப்படியில் தேங்கினால் குருவி குடித்துப் போம் -ஸ்ரீ வீர நாராயண புரத்து ஏரியில் தேங்கினால் நாடு விளையும் -என்று
அருளிச் செய்தது ஸ்ரீ உடையவர் திரு அவதாரத்தைக் குறித்து என்னும் இடம் –
ஸ்ரீ எம்பார் -ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும் கடலிலே ஸ்ரீ ஆழ்வார் ஆகிற காள மேகம் படிந்து
தத் கல்யாண குண அம்ருதத்தைப் பருகி வந்து -ஸ்ரீ நாதமுனிகள் ஆகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ உய்யக் கொண்டார் ஸ்ரீ மணக்கால் நம்பி ஆகிற அருவிகளாலே இறங்கி -ஸ்ரீ ஆளவந்தார் ஆகிற பேர் ஆற்றிலே கூடி
ஸ்ரீ பெரிய நம்பி யாகிற வாய்க்காலாலே புறப்பட்டு ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற பெரிய ஏரியில் வந்து தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு இஸ் சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறிப் பாய்கிறது -என்று
அருளிச் செய்த இடத்தில் ஒத்து இருக்கையாலும்

ஸ்ரீ ஆளவந்தார் வெளியிட்ட படி எங்கனே என்னில்
இம்மஹா நுபாவன் இத் தர்சனத்திலே புகுந்தான் ஆகிலோ என்றும் -இவன் முதல்வன் ஆம் -என்று அருளிச் செய்கையாலும்
சரம தசையில் -சரம விக்ரஹ சேவையில் குஞ்சிதஸ் வாங்குளி த்ரய மோசநத்தாலும்

ஸ்ரீ பெரிய நம்பி வெளியிட்ட படி எங்கனே என்னில்
ஸ்ரீ அத்துழாயும் தாமுமாக எழுந்து அருளி இருக்கச் செய்தே ஸ்ரீ உடையவரும் முதலிகளுமாக எழுந்து அருள –
ஸ்ரீ பெரிய நம்பி எழுந்து இருந்து தண்டன் இட-இது என் -ஸ்ரீ உடையவர் உமக்கு சிஷ்யர் அன்றோ -இப்படிச் செய்யலாமோ -என்று
ஸ்ரீ அத்துழாய் விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ நம்பியும் அத்தாளுக்குக் தக்க தலை காண் இது என்றும்
ஒரு நாள் ஸ்ரீ உடையவரும் முதலிகளுமாக நீராடி எழுந்து அருளும் போது ஸ்ரீ பெரிய நம்பி எதிரே கண்டு தாளும் தடக்கையும் கூப்பித்
தண்டன் இட ஸ்ரீ உடையவரும் அஞ்சலித்து கிருபை செய்து எழுந்து அருள -இத்தை முதலிகள் கண்டு இது என் சீயா -என்ன
ஸ்ரீ உடையவரும் இப்போது அவர் இஷ்டம் அனுவர்த்திக்கை அன்றோ நமக்கு உள்ளது என்ன –
முதலிகளும் ஸ்ரீ பெரிய நம்பி சந்நிதியில் சென்று -ஸ்ரீ உடையவராய் நீர் சாஷ்டாங்க ப்ராணாமம் பண்ணுகைக்கு அடி என் என்று கேட்க
ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ ஆளவந்தாரும் முதலிகளும் என்று இருந்தேன் என்ன -அவர்களும் இதுக்கு நிதானம் என் என்ன –
ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ ஆளவந்தார்க்கு பின்பு அகிலார்த்த ஸ்திதி பூர்த்தி உள்ளது இவருக்கே ஆகையால் சதாச்சார்ய சந்நிதியோடு
சச்சிஷ்ய சந்நிதியோடே வாசி இல்லாதாமையாலே சேவித்தேன் என்று அருளிச் செய்து
தம் திருக் குமாரர் புண்டரீகாக்ஷரையும் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் ஆஸ்ரயிப்பிக்கையாலும்

ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி வெளியிட்ட படி எங் கனே என்னில்
தாம் திருமந்த்ரார்த்தம் ப்ரசாதிக்கும் போது -ஆறுக்கும் சொல்லாதே கொள்ளும் -என்று ஆஜ்ஜாபித்து அருளிச் செய்ய –
இவரும் அதை தெற்கு ஆழ்வார் திரு ஓலக்கத்திலே தூளி தானமாக சார்வார்க்கும் அருளிச் செய்ய –
ஸ்ரீ நம்பியும் அத்தைக்கு கேட்டு குபிதராய் – ஸ்ரீ உடையவரை அழைத்து -ஆச்சார்ய ஆஜ்ஜாதி லங்கனத்துக்கு பலம் எது என்ன –
ஸ்ரீ உடையவரும் நரகமே பலம் என்ன –ஸ்ரீ நம்பியும் ஆகிலும் அறிந்தும் செய்வான் என் என்ன –
இவரும் -அடியேன் ஒருவனும் அன்றோ நரகம் புகுவது -தேவரீர் சம்பந்தத்தால் இவ்வாத்மாக்கள் எல்லாம் உஜ்ஜீவிக்கும்
என்று சொன்னேன் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ நம்பியும் போர ப்ரீதராய் -ஸ்ரீ எம்பெருமானாரே வாரும் -என்று எடுத்து அணைத்துக் கொண்டு இந்த பர ஸம்ருத்தி நமக்கு
இல்லையாய் விட்டதே -அவரோ நீர் -என்று அருளிச் செய்து -இன்று முதல் எம்பெருமானார் தர்சனம் என்னுங்கோள் என்று சொல்லி
தம் திருக் குமாரர் ஸ்ரீ தெற்கு ஆழ்வாரையும் அவர் திருவடிகளில் ஆஸ்ரயிப்பிக்கையாலும் –

ஸ்ரீ திருமலை நம்பி வெளியிட்ட படி எங்கனே என்னில்
ஸ்ரீ உடையவர் திருமலைக்கு எழுந்து அருளும் போது திருப் பரியட்ட பாறை அளவாக எதிரே சென்று தீர்த்த பிரசாதம் ப்ரசாதிக்க –
ஸ்ரீ உடையவரும் ஸ்வீ கரித்து அருளி ஸ்ரீ நம்பியைப் பார்த்து தேவரீர் எழுந்து அருள வேணுமோ -வேறே சிறியவர்கள் இல்லையோ என்ன –
ஸ்ரீ நம்பியும் நாலு திரு வீதியிலும் ஆராய்ந்த இடத்திலும் என்னிலும் சிறியோரைக் கண்டிலேன் என்கையாலும்
ஸ்ரீ எம்பாரை ஸ்ரீ உடையவருக்கு உதக பூர்வகமாகக் கொடுக்கையாலும்
தம் திருக் குமாரர்கள் ஸ்ரீ ராமானுசனையும் ஸ்ரீ பிள்ளை திருமலை நம்பியையும் அவர் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பிக்கையாலும்

ஸ்ரீ திருமாலை ஆண்டான் வெளியிட்ட படி எங்கனே என்னில்
அவர் தம் பக்கல் திருவாய் மொழி கேளா நிற்க -அறியாக் காலத்துள்ளே-என்கிற பாட்டுக்கு இவர் உபகார ஸ்ம்ருதி பாரமாக
விசேஷ அர்த்தம் அருளிச் செய்ய -ஸ்ரீ ஆண்டானும் இது விச்வாமித்ர ஸ்ருஷ்ட்டி என்று அருளிச் செய்கை தவிர்ந்து இருக்க –
பின்பு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி எழுந்து அருளி ஸ்ரீ ஆண்டானை அழைத்து ஸ்ரீ சாந்தீபினி பக்கலிலே ஸ்ரீ கிருஷ்ணன்
அத்யயனம் பண்ணினால் போலே காணும் இவர் உம்முடைய பக்கல் திருவாய் மொழி கேட்கிறது-
இவ்விரண்டு அர்த்தமும் ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார் காணும் -என்ன –
ஸ்ரீ உடையவரும் ஒரு அர்த்த பிரஸ்தாவத்திலே-ஸ்ரீ ஆளவந்தார் இப்படி அருளிச் செய்யார் என்ன –
ஸ்ரீ ஆண்டானும் நீர் ஸ்ரீ ஆளவந்தாரைக் கண்ணாலும் காணாது இருக்க இப்படி அருளிச் செய்யார் என்கைக்கு ஹேது என் என்ன –
இவரும் நான் ஸ்ரீ ஆளவந்தாருக்கு ஏகலவ்யன் அன்றோ என்ன –
ஸ்ரீ ஆண்டான் தண்டன் இட்டு இதுவும் ஒரு திரு அவதாரமோ என்று அருளிச் செய்து
தம் திருக் குமாரர் சுந்தரத் தோலுடையாரை ஸ்ரீ உடையவர் திருவடிகளில் ஆஸ்ரயிப்பிக்கையாலும்

ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் வெளியிட்ட படி எங்கனே என்னில்
தம் பக்கல் ஸ்ரீ உடையவர் ஆறு மாசம் சேவித்து இருந்து பங்காக மஞ்சள் காப்பு அரைத்துச் சாத்தி நீராடப் பண்ணுவித்து அருள
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரும் ப்ரீதராய் -என்னுடைய சர்வஸ்வத்தையும் கொள்ளை கொள்ளவோ நீர் இப்படிச் செய்தது
என்று அருளிச் செய்து பஞ்சம உபாய நிஷ்டையையும் அருளிச் செய்து
தம் திருக் குமாரர் திருவாய் மொழி அரையரையும் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் ஆஸ்ரயிப்பிக்கையாலும்

ஸ்ரீ வடுக நம்பி – ஆச்சார்ய பதம் என்று தனிஸ்ரீயே ஒரு பதம் உண்டு -அது உள்ளத்து ஸ்ரீ எம்பெருமானாருக்கே யாகையாலே
எல்லாருக்கும் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகள் ஒழிய வேறு உபாய உபேயம் இல்லை –
அவர் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் -என்று அருளிச் செய்து அருளுவர் –

ஸ்ரீ கணியனூர் சிறிய ஆச்சான் ச சேலஸ் நாந பூர்வகமாக ஆர்த்தியோடே உபசன்னராய்த் திவ்ய ஆஜ்ஜை இட்டு
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகள் ஒழிய வேறே தஞ்சம் இல்லை என்று அருளினார்
எங்கனே என்னில் -சத்யம் சத்யம் புநஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரோ ச ஏவ சர்வ லோகாநம் உத்தர்த்தா நாத்ர சம்சய -என்று
இவர் தாமே ஸ்ரீ பெரிய பெருமாள் திரு ஓலக்கத்திலே ஸ்ரீ சடகோபனை தம் திருமுடியில் நிறுத்திக் கொண்டு அருளிச் செய்து அருளினார்

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் தம் திருவடிகளில் ஆஸ்ரயித்த ஸ்ரீ எச்சான் -ஸ்ரீ அனந்தாழ்வான் -ஸ்ரீ தொண்டனூர் நம்பி –
ஸ்ரீ மருதூர் நம்பி இவர்களுக்கு ஹித உபதேசம் செய்து ஸ்ரீ உடையவர் குருவியின் கழுத்திலே பனங்காயைக் கட்டினால் போலே
செய்து அருளினர் -நீங்கள் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் என்று அருளிச் செய்து அருளினார்

ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான் ஸ்ரீ ஆழ்வான் திருவடிகளில் ஆஸ்ரயித்த அளவிலே ஸ்ரீ ஆழ்வான் ஆச்சார்ய தக்ஷிணையாக
த்ரிவித கரணங்களையும் பரிஹரித்துக் கொண்டு பாகவதர்கள் இடத்தே ஆனுகூல்ய ஏக ரசராய்ப் போரும் என்று அருளிச் செய்ய –
அவரும் இது பரிஹரித்து முடியாது என்று பயப்பட்டு முசித்துக் கிடக்க ஸ்ரீ ஆழ்வான் அவரை அழைத்து –
எதிரியைக் குத்தினால் எதிரி கூடக் குத்தும் -ராஜ தண்டமும் வரும் -ஆகையால் காயிக அபராதம் செய்யக் கூடாது
யதீச்ச சிவசீ கர்த்தும் ஜெகதே கேந கர்மணா பரா பவாத சஸ் யேப்யோ காஸ்ச ரந்தீர் நிவாரய -என்கிறபடியே
பர அபவாதம் சொல்லுகிற வாக்கு ஒன்றையும் பரிஹரித்துக் கொள்ளும் என்று அருளிச் செய்து
இனி மனஸ்ஸாலே நினைத்தீராகில் அனுதபித்து-இது ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளத்தே படாதபடி
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார் –

ஸ்ரீ மிளகு ஆழ்வான் ஸ்ரீ முதலியாண்டானை என்னோடே தர்க்கிக்க வாரும் என்ன –
ஸ்ரீ முதலியாண்டானும் நீர் தோற்றீர் ஆகில் செய்வது என் என்ன ஸ்ரீ மிளகு ஆழ்வானும் நான் தோற்றேன் ஆகில்
உம்மை என் தோளிலே சுமந்து கொண்டு போகிறேன் என்ன -அநந்தரம் உபயரும் தர்க்கிக்க ஸ்ரீ மிளகு ஆழ்வான் தோற்று
ஸ்ரீ முதலியாண்டானை ஸ்ரீ பாதம் தாங்கிக் கொண்டு சுற்றிடம் போய் -இனி அடியேனை இரங்கி அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ ஆண்டானும் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் காட்டிக் கொடுத்து ஆஸ்ரயிப்பித்து அருளி
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார் –

ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பட்டரைப் பார்த்து ஸ்ரீ நம்பெருமாள் நம்மை புத்ர ஸ்வீ காரம் பண்ணி அருளினார் -நாம் ஸ்ரீ ஆழ்வானுடைய பிள்ளை –
அகில சாஸ்திரங்களையும் அதிகரித்தோம் -என்கிற மேன்மையை நினைத்து இறுமாந்து இராதே
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார்

ஸ்ரீ பட்டர் ஸ்ரீ நஞ்சீயரைப் பார்த்து வேதாந்தி என்கிற பேரை உடையோம் -நம்முடைய பக்கல் ஆஸ்ரயித்தோம் –
நமக்கு பஹு த்ரவ்யத்தை ஆசார்ய தக்ஷிணையாகத் தந்தோம் என்று இறுமாந்து இராதே
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார்

ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ நம்பிள்ளையைப் பார்த்து லோகாச்சார்யார் என்கிற பேரை யுடையோம் –
திருவாய் மொழிக்கு பொருள் சொல்ல வல்லோம் -என்று இறுமாந்து இராதே
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ சிவக்கரைப் (சிவிக்கரை )பிள்ளையைத் திருக்கையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அருளா நிற்க
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ நம்பிள்ளை திருமாளிகை திரு இடை கழியிலே கண் வளரா நிற்க
ஸ்ரீ சிவக்கரைப் பிள்ளை அவர் காலை முடக்கும் என்ன -ஸ்ரீ நம்பிள்ளையும் -மயர்வற மதி நலம் அருளப்பெற்ற ஆழ்வார் -திருத் தாள் -என்று
அருளிச் செய்ய -நீரோ கால் என்பீர் -என்ன என்று அவர் கையை விட்டு அருள அவரும் சிவக்கரையிலே போய் இருந்து
பின்பு சோகார்த்தராய் இரண்டு ஆற்றுக்கு நடுவு நின்று கவணிலே கல்லை வைத்து வீசினால் போலே தள்ளி விட்டு அருளிற்றே
இனி அடியேனுக்கு கதி என் என்று ஸ்ரீ நம்பிள்ளைக்கு விண்ணப்பம் செய்து வரக் காட்டி அருள
ஸ்ரீ நம்பிள்ளையும் உமக்கு ஒரு குறையும் இல்லை -ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருப்பது என்று அருளிச் செய்து
போக விட்டு அழைத்து கிருபை செய்து அருளினார் –

ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்ரீ சிறுப் புத்தூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே ஸ்ரீ சோமாசி ஆண்டான்
ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ பாதத்தில் மூன்று உரு ஸ்ரீ பாஷ்யம் வாசித்து அருளி மீண்டு எழுந்து அருளும் போது
ஸ்ரீ சோமாசி ஆண்டான் அனுவர்த்தித்து -அடியேன் இருக்கிற தேசம் இதுவாய் இருந்தது –
அடியேனுக்கு தஞ்சமாய் இருப்பது ஓன்று அருளிச் செய்ய வேணும் என்ன –
ஸ்ரீ பிள்ளானும் ஸ்ரீ ஆண்டானைக் குறித்து நீர் பாட்ட பிரபாகர் மீமாம்சை இவை இத்தனைக்கும் பொருள் சொல்ல வல்ல கர்த்தா –
ஸ்ரீ பாஷ்யத்துக்கு பிரவர்த்தகர் -என்று மேன்மை பாராட்டித் திரியாதே
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று இரும் என்று அருளினார் –

ஸ்ரீ கோமடத்துப் பிள்ளான் தம் ஸ்ரீ பாதத்தில் ஸ்ரீ காக்கைப் பாடி (காக்கையாடி)ஆச்சான் பிள்ளை மூன்று உரு ஸ்ரீ பாஷ்யம் வாசித்து
அத்தால் மிகவும் மேன்மையை யுடையராய் இருக்குமது கண்டு இவருக்கு இம்முகத்தாலே அபசாரம் வரும் என்று அஞ்சி
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார்

ஸ்ரீ எங்கள் ஆழ்வான் ஸ்ரீ காக்கைப் பாடி ஆச்சான் பிள்ளையைப் பார்த்து உம்மைப் பெருமாள் முனிந்து அருளும் போது
என் நினைந்து இருந்தீர் என்று கேட்டு அருள
அவரும் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருந்தேன் -என்று விண்ணப்பம் செய்தார் –

ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்ரீ பாதத்தில் பத்து பன்னிரண்டு திரு நாமம் ஸ்ரீ பாஷ்யம் வாசிக்கிற போது ஸ்ரீ அம்மாள் அவர்களுக்கு
ஸ்ரீ பாஷ்யத்தை உபந்யஸித்துக் காட்டி அருள -அவர்களும் பக்தி குரு உபாயமாக இருந்தது என்ன –
பின்பு அவரும் பிரபத்தி உபாயத்தை அருளிச் செய்து காட்டி அருள பக்தியிலும் பிரபத்தி தான் அரிதாய் இருந்தது
என்று அவர்கள் விண்ணப்பம் செய்ய
ஆகில் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று விஸ்வசித்து உஜ்ஜீவியுங்கோள் என்று அருளினார்

ஸ்ரீ வேத வ்யாஸ பட்டர் ஸ்ரீ திரு நாராயண புரத்திலே ஸ்ரீ எம்பெருமானார் திரு முன்பே கோஷ்டி பண்ணி ஸ்ரீ பாஷ்யத்தை உபந்யஸிக்க
இது கங்கா பிரவாஹமாய் இருந்து -எங்களால் அவகாஹிக்கப் போகாது என்று ஐம்பத்து இருவர் விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பட்டரும் ஆகில் உங்கள் குல தெய்வமான ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று உஜ்ஜீவியுங்கோள் என்று அருளினார் –

ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை ஸ்ரீ வெள்ளைக் குளத்து ஆனை காத்த சிங்கர் முன்பே கோஷ்டி பண்ணி ஸ்ரீ பாஷ்யம் உபந்யஸிக்க
தம் சிஷ்யரான ஸ்ரீ இளைய அழகியார் எழுந்து இருந்து இது கங்கா ப்ரவாஹமாய் இருந்தது –
என்னால் அவகாஹிக்கப் போகாது என்று விண்ணப்பம் செய்ய
ஆகில் ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே சரணம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார்

ஸ்ரீ வடுக நம்பி -ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் -ஸ்ரீ நம் பெருமாள் திருவடிகளே சரணம் என்று இரண்டையும் சேர
அநுஸந்திக்கும் ஸ்ரீ ஆழ்வானையும் ஸ்ரீ ஆண்டானையும் இரு கரையர் என்பர் –
ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்னுமா போலேயும்
ஸ்ரீ பட்டர் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகளே சரணம் என்னுமா போலேயும்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளே சரணம் என்னுமா போலேயும்
ஸ்ரீ திருக் கச்சி நம்பி ஸ்ரீ பேர் அருளாளர் திருவடிகளே சரணம் என்னுமா போலேயும்
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ செல்வப்பிள்ளை திருவடிகளே சரணம் என்னுமா போலேயும்
ஒருவருக்கும் இசைந்து இராது –

ப்ரஹ்ம ரஜஸ் ஸூ வெளியிட்ட படி எங்கனே என்னில் ஸ்ரீ யாதவ பிரகாசனுக்கு ஸ்ரீ உடையவரைக் காட்டி
இவர் நித்ய ஸூரி களில் தலைவர் என்று சொல்லுகையாலே

ஊமை வெளியிட்ட படி எங்கனே என்னில்
ஸ்ரீ பெருமாள் கோயிலிலே பாகவத ஜென்மத்தில் பிறந்தான் ஒரு பிள்ளை ஐந்தாறு வயஸ்ஸூ அளவாக ஊமையாய் இருந்து –
பின்பு இரண்டு சம்வத்சரம் காணாது இருந்து -பின்பு எல்லாரும் காண வந்து வார்த்தை சொல்ல வல்லனாக –
இவ் வாச்சர்யத்தைக் கண்டு எல்லாரும் திரளாக இருந்து ஊமையைப் பார்த்து -நீ இத்தனை நாளும் எங்கே ஏறப் போனாய் -என்று கேட்க –
அவனும் நான் ஷீராப்திக்குப் போனேன் என்ன -இவர்களும் -அங்கே விசேஷம் என் -என்று கேட்க –
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் ஸ்ரீ உடையவராய் வந்து அவதரித்து வந்து அருளினார் என்று ஒரு விசேஷம் -என்ற அநந்தரம்
அவனைக் கண்டது இல்லை என்று ஸ்ரீ பகவத் சேனாபதி சீயர் அருளிச் செய்கையாலே
இப்படி ஸ்ரீ எம்பெருமானார் பிரபாவத்தை அனைவரும் பிரகாசிப்பித்தார்கள் –

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -ஸ்ரீ திரு நாராயண புரம் விருத்தாந்தம் –/ஸ்ரீ முதலிகள் திரு நாமங்கள் –

February 20, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ திருநாராயண புரத்தில் நின்றும் ஸ்ரீ கோயில் ஏற பயண கதியில் எழுந்து அருளிப் புகுந்து திரு முகத்துறையிலே நீராடி
கேசவாதி துவாதச ஊர்த்வ புண்டரராய் எழுந்து அருள அங்கு உள்ளார் எல்லாம் எதிர் கொண்டு சேவிக்க அவர்களையும் கிருபை பண்ணி
எழுந்து அருளிப் புகுந்து சேவா க்ரமம் தப்பாமல் சேவித்து ஸ்ரீ அழகிய மணவாளன் திரு மண்டபத்தில் சென்று தண்டன் சமர்ப்பித்து
உரை கோயிலின் உள்ளே புகுந்து ஸ்ரீ பெரிய பெருமாளையும் ஸ்ரீ நம்பெருமாளையும் திருவடி தொழுது மனம் உருகி மலர்க்கண்கள்
துளிக்கக் கண்ணாலே பருகி வாயார வாழ்த்தி நிற்க
ஸ்ரீ பெருமாளும் திருப்பவளச் செவ்வாய் திறந்து ஸ்ரீ உடையவரை நோக்கி நெடு நாள் தேசாந்தரம் சென்று போர மெலிந்தீரே என்று வினவி அருள –
ஸ்ரீ எம்பெருமானாரும் ஸ்ரீ பெரிய பெருமாளைக் குறித்து -அகம் மகிழும் தொண்டர் வாழ அன்போடு தென் திசை நோக்கி தேவரீர் பள்ளி கொண்டு
அருளுகையாலே வன்பெரு வானகத்தில் சொல்லும்படியே உபய விபூதியில் உள்ளார்க்கும் என்ன கிலேசம் உண்டு -என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பெருமாளும் உகந்து தீர்த்தம் திருமாலை திருப் பரியட்டம் தளிகை பிரசாதங்களும் பிரசாதிக்க ஸ்வீ கரித்து க்ருதார்த்தராய் நிற்க
ஸ்ரீ பெருமாளும் திரு மடமே போம் என்று விடை கொடுத்து அருள இவரும் புறப்பட்டு திவ்ய உத்சவம் கொண்டாடும்
திரு மண்டபங்கள் திருக் கோபுரங்கள் திரு மதிள்கள் தொடக்கமான திவ்ய நகர ஸ்ரீ யை எல்லாம் சுற்றி சேவித்து

முதலிகளும் தாமுமாக ஸ்ரீ ஆழ்வான் திருமாளிகை ஏற எழுந்து அருள ஸ்ரீ ஆழ்வானும் எதிரே எழுந்து அருளி
ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே விழுந்து சேவித்து உகப்பின் மிகுதியால் திருவடிகளை பூண்டு கொண்டு கிடக்க
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ ஆழ்வானை வாரி எடுத்து அணைத்துக் கொண்டு கிலேச அதிசயேநே சோக அஸ்ருவானது தாரா வர்ஷகமாக வர்ஷிக்க
நெடும் போது ஒரு வார்த்தையும் அருளிச் செய்ய மாட்டாதே விம்மல் பொருமலாய் துக்க ஆர்ணவ மக்நராய் தழுதழுத்த திரு மிடற்று ஒலியுடன்
ஸ்ரீ ஆழ்வான் இத்தர்சனத்துக்காக த்ருஷ்ட்டி பூதரான உமக்கு இப்படி கண் போவதே என்ன –
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ வைஷ்ணவர் திரு நாமம் கோணிற்று என்றாகிலும் நினைத்திரேனோ என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ உடையவரும் அது உமக்கு உண்டோ -அடியேன் துஷ்கர்மம் அன்றோ உமக்கு இப்படி வருகைக்கு அடி என்று திரு உள்ளம் புண்பட்டு
துக்க உபநோதனம் பண்ணி அருள ஸ்ரீ ஆழ்வானும் தேறி நிற்க
மற்றும் உண்டான ஸ்ரீ வைஷ்ணவ சமூகத்துடன் கூட திரு மடமே எழுந்து அருளி இருந்தார் –

பின்பு அந்நாட்டில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்து ஏறச் சென்று தண்டன் சமர்ப்பித்து –
ஸ்ரீ பெரிய நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளினாரே-ஸ்ரீ ஆழ்வானுக்கும் திருக் கண் மலர் போயிற்றே என்று துக்க உபநோதநம் பண்ணி –
தேவரீரை யாகிலும் சேவிக்கப் பெற்றோமே என்று சொல்லி எல்லாரும் ப்ரீதரராய் இருக்கும் காலத்திலே
ஸ்ரீ திருச் சித்ர கூடம் அழிந்தது என்று சிலர் வந்து ஸ்ரீ உடையவருக்கு விண்ணப்பம் செய்ய –
அது கேட்டு துக்க ஆகுலராய் சோகித்து திரு முத்து உதிர்த்து அருளி -அங்குத்தையில் உத்சவ பேரம் திருப்பதிக்கு
எழுந்து அருளினார் என்று கேட்டு அருளி அந்த இழவு எல்லாம் ஆறும்படி திருப்பதிக்கு எழுந்து அருளி
ஸ்ரீ கோவிந்த ராஜனை மூல பேர ஸஹிதமாக திரு பிரதிஷ்டையும் பண்ணி வைத்து –
தென் தில்லைத் திருச் சித்ர கூடத்து என் செல்வனை மின்னி மழை தவழும் வேங்கடத்து என் வித்தகனை -என்றதுவே
பொய்ம் மொழி ஓன்று இல்லாத மெய்ம் மொழியாக இப்படிப் பலிப்பதே -என்று அருளிச் செய்து இழவு தீர்ந்து அருளி
திருமலை ஏறி திருவேங்கட மா முகிலையும் திருவடி தொழுது அப்போதே மீண்டு திருமலை இறங்கித் திருத் தாழ்வரையிலே
ஆழ்வார்களையும் சேவித்துப் புறப்பட்டு ஸ்ரீ பெருமாள் கோயில் ஏற எழுந்து அருளிப் பேர் அருளாளரையும் திருவடி தொழுது மீண்டு
பயண கதியில் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளிப் புகுந்து ஸ்ரீ நம்பெருமாளை சேவித்து தம் திருமடம் எழுந்து அருளி
ஸ்வ அபிமான அந்தர்பூதர்க்குத் தென்றலும் சிறு துளியும் போலே தர்சன தாத்பர்யம் அருளிச் செய்யா நின்று கொண்டு
ஸூகமே எழுந்து அருளி இருந்தார் –

அதின் மற்றை நாள் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ ஆழ்வானை அழைத்து -ஸ்ரீ பேர் அருளாளர் அர்த்திதார்த்த பரிதான தீஷிதராய் இருப்பர் –
நீர் அவரை கண் தந்து அருள வேணும் -என்று ஒரு ஸ்தோத்ரம் விண்ணப்பம் செய்யும் என்று அருளிச் செய்ய —
ஸ்ரீ ஆழ்வானும் அடியேனுக்கு இக்கண் வேண்டா -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ எம்பெருமானாரும் அப்படி அன்று -சொல்ல வேணும் -என்று பல நாளும் நிர்பந்தித்து அருளிச் செய்து அருள –
ஸ்ரீ ஆழ்வானும் கண் அழியாமல் ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தை அருளிச் செய்ய உபக்ரமித்து –
ஸ்வஸ்தி ஹஸ்திகிரி மஸ்த சேகரஸ் சந்தநோது மயி சந்ததம் ஹரி -நிஸ் சாமாப்யதிகம் அப்யதத்தயன் தேவம்
ஒவ்பநிஷதீ ஸரஸ்வதீ -என்று சொல்லி
நீல மேக நிபஞ்சந புஞ்சஸ்யாம குந்தலம் அனந்த சயந்த்வாம்–அப்ஜ பாணி பதம் அம்புஜ நேத்ரம் நேத்ர ஸாத் குரு கரீச ஸதாமே-என்ற
இஸ் ஸ்லோகத்தாலே சதா தர்சனம் பண்ண யோக்கியமான அப்ராக்ருத திவ்ய நேத்ரம் அடியேனுக்கு தந்து அருள வேணும் -என்று
விஞ்ஞாபிக்க -அன்று இரவே ஸ்ரீ பேர் அருளாளரும் தந்தோம் என்று ஸ்வப்ன முகேன அருளிச் செய்ய

ஸ்ரீ ஆழ்வானும் பிரத்யூஷ காலத்திலே பெரிய ப்ரீதியோடே எழுந்து அருளி இருந்து அனுஷ்டானத்தைச் செய்து
ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தை நிறைவேற அருளிச் செய்து -ஸ்ரீ உடையவர் சந்நிதிக்குச் சென்று தண்டன் இட்டு –
தேவரீர் நியமனப்படி ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தை விண்ணப்பம் செய்தேன் என்று ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தை முற்றவும்
விண்ணப்பம் செய்து காட்ட -ஸ்ரீ உடையவரும் கேட்டு உகந்து அருளின அளவிலே ஸ்ரீ ஆழ்வானும் –
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் ஸ்ரீ பேர் அருளாளன் ஆகையால் அடியேன் கேட்டபடியே
ஸ்ரீ வைகுண்டேது பரே லோகே நித்யத்வேந வ்யவஸ்திதம் பஸ்யந்தி ச சதா தேவம் நேத்ரைர் ஞானேந சாமர என்று
சொல்லப்படுகிற ஸ்ரீ வைகுண்ட நாதனை சதா தர்சனம் பண்ணுகிற அப்ராக்ருத திவ்ய சஷூஸ்ஸை ப்ரசாதித்து அருளினார் என்ன –
ஸ்ரீ உடையவரும் அங்கன் அன்று அங்கு ஏறப் போவோம் வாரும் என்று ஸ்ரீ ஆழ்வானைக் கையைப் பிடித்துக் கொண்டு
ஸ்ரீ பெருமாள் கோயில் ஏற எழுந்து அருளி ஸ்ரீ ஆழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தைப் பேர் அருளாளர் சந்நிதியில்
விண்ணப்பம் செய்து தலைக் காட்டுகிற போது ஸ்ரீ உடையவர் காலாந்தரத்திலே தாழ்க்க-ஸ்ரீ ஸ்தவம் திருச் செவி சாத்தி
ஸ்ரீ பேர் அருளாளரும் ப்ரசன்னராய் ஸ்ரீ உடையவர் வருவதற்கு முன்னே -ஸ்ரீ ஆழ்வான் உமக்கு அபேக்ஷிதம் என் என்று கேட்டருள –
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ உடையவர் திரு உள்ளம் பற்றினத்தை வேண்டிக் கொள்ளாதே –
நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும் -என்று விண்ணப்பம் செய்ய -அப்படியே பெறக் கடவன் என்று
ஸ்ரீ பெருமாளும் திருவாய் மலர்ந்த அளவிலே

ஸ்ரீ உடையவர் கேட்டுப் பதறி ஓடி வந்து திரு உள்ளம் உளைந்து ஸ்ரீ பெருமாளைக் குறித்து சர்வஞ்ஞரான தேவரீர்
இப்போது என் நினைவினைத் தலைக் கட்டிற்று இலீரே –
ஸ்ரீ ஆழ்வான் நீ ஸ்வ தந்திரனாய் என் நினைவைத் தலைக் கட்டாதே அதி லங்கித்து நான் வருவதற்கு முன்னே இப்படிச் செய்தாயே
என்று இருவரையும் வெறுத்து -இனி என் -என்று திகைத்து நிற்க-
ஸ்ரீ பேர் அருளாளப் பெருமாளும் நம்மையும் உம்மையும் காணும் இடத்து கட் கண்ணாலே காணக் கடவர்-என்று வர பிரதானம் பண்ணி அருள –
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ பெருமாளைத் தம் கட் கண்ணாலே சேவித்துச் சாத்தின திவ்யாபரண திவ்ய விக்ரஹ அவயாதிகளை
இவை இவை என்று குறித்துக் காட்டி அருளி ஸ்ரீ உடையவர் விக்ரஹத்தையும் சேவித்துக் காட்டி அருள
இவரும் க்ருதார்த்தராய் ஸ்ரீ ஆழ்வானுடன் ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளி பூர்வம் போலே வ்யாக்யானித்துக் கொண்டு இருக்கச் செய்தே –

ஸ்ரீ நாச்சியார் திருமொழி வ்யாக்யானத்தில் -நாறு நறும் பொழில் -என்கிற பாட்டு ப்ரஸ்துதமாக-
ஸ்ரீ ஆண்டாள் பிரார்த்தனையை நாம் தலைக்கட்ட வேணும் -என்று அப்போதே புறப்பட்டு ஸ்ரீ திருமால் இருஞ்சோலை திருமலைக்கு
எழுந்து அருளி ஸ்ரீ கோதை பிரார்த்தித்த படியே நூறு தடா நிறைந்த வெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்கார வடிசிலும் பரிவுடன்
ஸ்ரீ நம்பிக்கு அமுது செய்வித்து அருளி ஸ்ரீ வில்லிபுத்தூர் ஏற எழுந்து அருளி ஸ்ரீ வட பெரும் கோயிலுடையானையும் சேவித்து
ஸ்ரீ நாச்சியார் திருமாளிகைக்கு எழுந்து அருளி ஸ்ரீ ஆழ்வார் திருமகளாரை அடி வணங்கி நிற்க
ஸ்ரீ கோதையும் ஸ்ரீ குல முனிவனைக் குறித்து தம் பிரார்த்தனையைத் தலைக் கட்டினத்துக்கு மிகவும் உகந்து –
நம் கோயில் அண்ணர் – என்று அர்ச்சக முகேன திரு நாமம் பிரசாதித்து தீர்த்த பிரசாதங்களை பிரசாதித்து விடை கொடுத்து அருள –
அங்கு இருந்து புறப்பட்டு ஸ்ரீ திரு நகரிக்கு எழுந்து அருளி ஸ்ரீ ஆழ்வாரையும் சேவித்து தீர்த்த பிரசாதமும் பெற்று மீண்டு
பயண கதியில் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி ஸ்ரீ பாதத்து முதலிகளுக்கு தர்சனார்த்தம் பிரசாதித்துக் கொண்டு எழுந்து அருளி இருந்தார்

————————-

இப்படி எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ பாஷ்யகாரருடைய ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த
முதலிகளுடைய திருமுடி யடைவு எங்கனே என்னில்

ஸ்ரீ கூரத்தாழ்வான்
ஸ்ரீ மாட பூசி ஆழ்வான்
ஸ்ரீ சேட்டலூர் சிறியாழ்வான்
ஸ்ரீ அனந்தாழ்வான்
ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்
ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
ஸ்ரீ அரணபுரத்து ஆழ்வான்
ஸ்ரீ அளங்க நாட்டாழ்வான்
ஸ்ரீ நெய்யுண்டான் ஆழ்வான்
ஸ்ரீ உக்கலாழ்வான்
ஸ்ரீ கோமடத்தாழ்வான்
ஸ்ரீ வேதாந்தி யாழ்வான்
ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
ஸ்ரீ பிள்ளை ஆழ்வான்
ஸ்ரீ மிளகு ஆழ்வான்
ஸ்ரீ காராஞ்சி ஆழ்வான்
ஸ்ரீ ஈயுண்ணி ஆழ்வான்
ஸ்ரீ கோயில் ஆழ்வான்
ஸ்ரீ திருக் கோவலூர் ஆழ்வான்
ஸ்ரீ திரு மோகூர் ஆழ்வான்

ஸ்ரீ முதலியாண்டான்
ஸ்ரீ பெரியாண்டான்
ஸ்ரீ சிறியாண்டான்
ஸ்ரீ அம்மங்கி யாண்டான்
ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்
ஸ்ரீ சோமாசி யாண்டான்
ஸ்ரீ கந்தாடை ஆண்டான்
ஸ்ரீ ஈஸ்வர ஆண்டான்
ஸ்ரீ ஈயுண்ணி யாண்டான்
ஸ்ரீ பிள்ளை யாண்டான்
ஸ்ரீ குறிஞ்சியூர்ச் சிறியாண்டான்
ஸ்ரீ ஆளவந்தார் ஆண்டான்
ஸ்ரீ சீயராண்டான்

ஸ்ரீ கிடாம்பி யாச்சான்
ஸ்ரீ சிறியாச்சான்
ஸ்ரீ கணியனூர் சிறியாச்சான்
ஸ்ரீ கொங்கில் யாச்சான்
ஸ்ரீ ஈச்சம்பாடி யாச்சான்
ஸ்ரீ என்னாச்சான்
ஸ்ரீ ஐயம்பிள்ளை யாச்சான்
ஸ்ரீ தூயபிள்ளை யாச்சான்
ஸ்ரீ ஆச்சி யாச்சான்

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

ஸ்ரீ தொண்டனூர் நம்பி
ஸ்ரீ மருதூர் நம்பி
ஸ்ரீ மழுவூர் (மளூர் )நம்பி
ஸ்ரீ சொட்டை நம்பி
ஸ்ரீ குரவை நம்பி
ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பி
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி
ஸ்ரீ முடும்பை நம்பி
ஸ்ரீ பராங்குச நம்பி
ஸ்ரீ வில்லிபுத்தூர் நம்பி
ஸ்ரீ வடுக நம்பி
ஸ்ரீ திருக் குருகூர் நம்பி
ஸ்ரீ கொமாண்டூர் பிள்ளை நம்பி

ஸ்ரீ பராசர பட்டர்
ஸ்ரீ பராங்குச பட்டர்
ஸ்ரீ வரம் தரும் பெரிய பெருமாள் பட்டர்
ஸ்ரீ அழகிய மணவாள பட்டர்
ஸ்ரீ வேத வ்யாஸ பட்டர்
ஸ்ரீ சிறுப்பள்ளி தேவ ராஜ பட்டர்
ஸ்ரீ கோவிந்த பட்டர்
ஸ்ரீ திருவரங்க பட்டர்
ஸ்ரீ நம்பியாரில் ஸ்ரீ ரெங்கராஜ பட்டர்
ஸ்ரீ உள்ளூரில் பெரிய பெருமாள் பட்டர்

ஸ்ரீ சட்டம் பள்ளிச் சீயர்
ஸ்ரீ ஈச்சம்பாடிச் சீயர்
ஸ்ரீ குலசேகர சீயர்
ஸ்ரீ திரு வெள்ளறைச் சீயர்
ஸ்ரீ ஆட் கொண்ட வில்லி சீயர்
ஸ்ரீ திரு மழிசைச் சீயர்
ஸ்ரீ திருவாய் மொழிச் சீயர்
ஸ்ரீ திரு நாராயண புரச் சீயர்
ஸ்ரீ சாளக்ராமச் சீயர்
ஸ்ரீ கோவிந்த சீயர்
ஸ்ரீ திருமாலிருஞ்சோலைச் சீயர்
ஸ்ரீ திருப் புட் குழிச் சீயர்
ஸ்ரீ திருக் குடந்தைச் சீயர்
ஸ்ரீ திரு முட்டஞ் சீயர்
ஸ்ரீ திருநின்றவூர்ச் சீயர்

ஸ்ரீ திரு நாராயண புரத்து அரையர்
ஸ்ரீ பெருமாள் கோயில் பெருமாள் அரையர்
ஸ்ரீ ராஜ நாராயண பெருமாள் அரையர்
ஸ்ரீ திருவரங்க மாளிகை அரையர்
ஸ்ரீ திருவாய் மொழி அரையர்
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர்
ஸ்ரீ திருக் குறுங்குடி அரையர்
ஸ்ரீ திரு நகரி அரையர்
ஸ்ரீ திருக் கண்ணபுரத்து அரையர்
ஸ்ரீ திரு மாலிருஞ்சோலை அரையர்
ஸ்ரீ திரு வனந்த புரத்தரையர்
ஸ்ரீ ராஜ மகேந்திர பெருமாள் அரையர்
ஸ்ரீ பிள்ளை விழுப்பத்தூர் அரையர்
ஸ்ரீ திருவேங்கடத்து அரையர்

ஸ்ரீ ஆட் கொண்ட அம்மாள்
ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
ஸ்ரீ முடும்பை அம்மாள்
ஸ்ரீ பருத்திக் கொல்லை அம்மாள்
ஸ்ரீ உக்கல் அம்மாள்
ஸ்ரீ சொட்டை அம்மாள்

ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள்
ஸ்ரீ கிடாம்பிப் பெருமாள்
ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள்
ஸ்ரீ முனிப் பெருமாள்
ஸ்ரீ பட்டினப் பெருமாள்

ஸ்ரீ திருமலை நல்லான்

ஸ்ரீ எம்பார்

ஸ்ரீ காராஞ்சி சோமயாஜியார்

ஸ்ரீ பெரிய கோயில் வள்ளலார்

ஸ்ரீ அலங்கார வேங்கடவர்

ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
ஸ்ரீ ஆர்க்காட்டுப் பிள்ளான்
ஸ்ரீ இராமானுசப் பிள்ளான்
ஸ்ரீ திரு நகரிப் பிள்ளான்

ஸ்ரீ கோமடத்து ஐயன்
ஸ்ரீ வைத்த மா நிதிச் சிறியப்பன்
ஸ்ரீ பெரியப்பன்

ஸ்ரீ அணி அரங்கத்து அமுதனார்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார்

ஸ்ரீ கொமாண்டூர் இளைய வல்லி

ஸ்ரீ கரும் தேவர்

ஸ்ரீ ஐம்பத்து இருவர்

ஸ்ரீ எம்பெருமானார் செல்வப்பிள்ளை

——————————–

ஸ்ரீ சாத்தாத முதலிகள்

ஸ்ரீ குணசேகரப் பெருமாள்
ஸ்ரீ பட்டர் பிரான் தாசர்
ஸ்ரீ பகை வில்லி தாசர்
ஸ்ரீ வில்லிபுத்தூர் தாசர்
ஸ்ரீ நாராயண தாசர்
ஸ்ரீ கோவர்த்தன தாசர்
ஸ்ரீ திருவழுதி வளநாடு தாசர்
ஸ்ரீ ராமானுஜ தாசர்
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர்
ஸ்ரீ வண்டர்
ஸ்ரீ சுண்டர்
ஸ்ரீ ராமானுஜ வேளைக்காரர்

———————————-

ஸ்ரீ நத்தத்து முதலிகள் மூவர் திரு நாமம்

ஸ்ரீ திருவரங்க தாசர்
ஸ்ரீ திருமாலிருஞ்சோலை தாசர்
ஸ்ரீ வானமாமலை தாசர்

——————————–

ஸ்ரீ கொங்கில் முதலிகள் மூவர் திரு நாமம்

ஸ்ரீ அழகிய மணவாள தாசர்
ஸ்ரீ திரு வேங்கட தாசர்
ஸ்ரீ பேர் அருளாள தாசர்

————————————

ஸ்ரீ மழலைக் கூர்நத்தில் முதலிகள் மூவர் திரு நாமம்

ஸ்ரீ யதிவர சூடாமணி தாசர் –
ஸ்ரீ யதிராஜ தாசர்
ஸ்ரீ இளையாழ்வார் தாசர்

—————————————–

ஸ்ரீ பாண்டிய நாட்டு முதலிகள் மூவர் திரு நாமம்

ஸ்ரீ மகிழ் அலங்கார தாசர்
ஸ்ரீ சடகோப தாசர்
ஸ்ரீ பிள்ளை திருவாய் மொழி தாசர்

——————————-

ஸ்ரீ ஸ்தானத்தாரில்

ஸ்ரீ சேநா நாத ப்ரஹ்ம ராயர்
ஸ்ரீ வீர ஸூந்தர ப்ரஹ்ம ராயர்
ஸ்ரீ ஜெகந்நாத ப்ரஹ்ம ராயர்
ஸ்ரீ வீர ராகவ ப்ரஹ்ம ராயர்
ஸ்ரீ பிள்ளை யுறைந்தை யுடையார்
ஸ்ரீ திரு மஞ்சனம் எடுக்கும் தூய முனி வேழம்
ஸ்ரீ பண்டாரம் காவல் திருவரங்கத்து மாளிகையார்
ஸ்ரீ ஆண்டவர்
ஸ்ரீ அரியவர்

——————————-

ஸ்ரீ அம்மைமார்கள்

ஸ்ரீ திருவனந்த புரத்து அம்மை
ஸ்ரீ திரு வாட்டாற்று அம்மை
ஸ்ரீ திரு வண் பரிசாரத்து அம்மை
ஸ்ரீ மன்னனார் கோயில் போர் ஏற்று அம்மை
ஸ்ரீ திருநறையூர் அம்மை
ஸ்ரீ திருக் கண்ணபுரத்து அம்மை
ஸ்ரீ திருப்பதி ஸ்ரீ கார்யம் செய்யும் அம்மை
ஸ்ரீ ஆண்டாள் அம்மை
ஸ்ரீ நாயகத்தேவியார்
ஸ்ரீ துய்ய பெருந்தேவியார்
ஸ்ரீ பெரிய பெரும் தேவியார்
ஸ்ரீ சிறிய பெரும் தேவியார்
ஸ்ரீ பெரும் புதூர் திருவரங்கம் திருக் குடந்தை துய்ய வாயிரம்
ஸ்ரீ கொங்கில் பிராட்டியார்
ஸ்ரீ அத்துழாய் அம்மை
ஸ்ரீ அம்மங்கி அம்மை
ஸ்ரீ கூரத்தாண்டாள்
ஸ்ரீ தேவகிப் பிராட்டியார்
ஸ்ரீ யதிராஜ வல்லியார்
ஸ்ரீ பங்கயச் செல்வியார்
ஸ்ரீ பொன்னாச்சியார்
ஸ்ரீ இன்னிள வஞ்சியார்
ஸ்ரீ சூடிக் கொடுத்தாள்
ஸ்ரீ திருப் பாவை பாடினாள்

————————————-

ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் ஆஸ்ரயித்த முதலிகள் எழுபத்து நான்கு ஆச்சார்யர்கள் யார் என்னில்

ஸ்ரீ ஆளவந்தார் திருக் குமாரர் ஸ்ரீ சொட்டை நம்பி திருக் குமாரர் ஸ்ரீ என்னாச்சான் திருக் குமாரர் ஸ்ரீ பிள்ளை அப்பன்
ஸ்ரீ பெரிய நம்பி திருக் குமாரர் ஸ்ரீ புண்டரீகர்
ஸ்ரீ திருக் கோஷ்டியூர் நம்பி திருக் குமாரர் ஸ்ரீ தெற்கு ஆழ்வான்
ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக் குமாரர் ஸ்ரீ சுந்தரத் தோளுடையார்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி திருக் குமாரர் ஸ்ரீ ராமானுஜம் பிள்ளையும் ஸ்ரீ திருமலை நம்பியும்
ஸ்ரீ கூரத்தாழ்வான் திருக் குமாரர் ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ சீராமப் பிள்ளையும்
ஸ்ரீ முதலியாண்டானும் அவர் திருக் குமாரரும் ஸ்ரீ கந்தாடை ஆண்டானும்
ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
ஸ்ரீ கோமடத்தாழ்வான்
ஸ்ரீ திருக் கோவலூர் ஆழ்வான்

ஸ்ரீ திரு மோகூர் ஆழ்வான்
ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்
ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்
ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
ஸ்ரீ அனந்தாழ்வான்
ஸ்ரீ மிளகு ஆழ்வான்
ஸ்ரீ நெய் யுண்ட ஆழ்வான்
ஸ்ரீ சேட்டலூர்ச் சிறியாழ்வான்
ஸ்ரீ வேதாந்தி ஆழ்வான்
ஸ்ரீ கோயில் ஆழ்வான்

ஸ்ரீ உக்கல் ஆழ்வான்
ஸ்ரீ அரண புரத்து ஆழ்வான்
ஸ்ரீ எம்பார்
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான்
ஸ்ரீ கணியனூர் சிறியாச்சான்
ஸ்ரீ ஈச்சம்பாடி யாச்சான்
ஸ்ரீ கொங்கில் ஆச்சான்
ஸ்ரீ ஈச்சம் பாடி சீயர்
ஸ்ரீ திருமலை நல்லான்
ஸ்ரீ சட்டம் பள்ளிச் சீயர்

ஸ்ரீ திரு வெள்ளறை சீயர்
ஸ்ரீ ஆட் கொண்ட வில்லி சீயர்
ஸ்ரீ திரு நகரிப் பிள்ளான்
ஸ்ரீ காராஞ்சி சோமயாஜியார்
ஸ்ரீ அலங்கார வேங்கடவர்
ஸ்ரீ நம்பி கருந்தேவர்
ஸ்ரீ சிறுப்பள்ளி தேவ ராஜ பட்டர்
ஸ்ரீ பிள்ளை யுறந்தை யுடையார்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
ஸ்ரீ பெரிய கோயில் வள்ளலார்

ஸ்ரீ திருக் கண்ணபுரத்து அரையர்
ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள்
ஸ்ரீ முனிப் பெருமாள்
ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள்
ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்
ஸ்ரீ சோமாசி ஆண்டான்
ஸ்ரீ சீயர் ஆண்டான்
ஸ்ரீ ஈஸ்வர ஆண்டான்
ஸ்ரீ ஈயுண்ணிப் பிள்ளை யாண்டான்

ஸ்ரீ பெரியாண்டான்
ஸ்ரீ சிறியாண்டான்
ஸ்ரீ குறிஞ்சியூர்ச் சிறியாண்டான்
ஸ்ரீ அம்மங்கி ஆண்டான்
ஸ்ரீ ஆளவந்தார் ஆண்டான்
ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
ஸ்ரீ தொண்டனூர் நம்பி
ஸ்ரீ மருதூர் நம்பி
ஸ்ரீ மழுவூர் நம்பி
ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பி

ஸ்ரீ குரவை நம்பி
ஸ்ரீ முடும்பை நம்பி
ஸ்ரீ வடுக நம்பி
ஸ்ரீ வங்கிப்புரத்து நம்பி
ஸ்ரீ பராங்குச நம்பி
ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
ஸ்ரீ பருத்திக் கொல்லை அம்மாள்
ஸ்ரீ உக்கல் அம்மாள்
ஸ்ரீ சொட்டை அம்மாள்
ஸ்ரீ முடும்பை அம்மாள்

ஸ்ரீ கொமாண்டூர்ப் பிள்ளை
ஸ்ரீ கொமாண்டூர் இளைய வல்லி
ஸ்ரீ கிடாம்பிப் பெருமாள்
ஸ்ரீ ஆர்க்காட்டுப் பிள்ளான்

———————————————

சம்சேவிதஸ் சம்யமி சப்த சத்யா பீடைஸ் சதுஸ் சப்ததி பிஸ்ஸமேதை -அந்யைரநந்தைரபி விஷ்ணு பக்தை ராஸ்தே அதி ரங்கம்
யதி ஸார்வ பவ்ம–என்கிறபடியே எழுநூறு உத்தம ஆஸ்ரமிகளாலும்-எழுபத்து நாலு ஸிம்ஹாஸனஸ்த்ரான ஆச்சார்ய புருஷர்களாலும் –
அசங்க்யாதரான சாற்றின -சாத்தாத -முதலிகளாலும் -பன்னீராயிரம் ஏகாங்கிகளாலும்-முன்னூறு கொற்றி அம்மைமார்களாலும் –
எண்ணிறந்த ராஜாக்களாலும் -இப்படி அகிலராலும் ஸேவ்யமானராய் இவ்வைஸ்வர்யத்துடனே –
ஸ்ரீ ரெங்க நாதோ ஜெயது ஸ்ரீஸ் ச வர்த்ததாம் -என்று ஸ்ரீ நம்பெருமாளை மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு சேவித்து இருந்தார் –

இப்படி இருக்கிற ஸ்ரீ உடையவர் திருவடிகளில் நித்ய கைங்கர்யம் பண்ணும் முதலிகள்
ஸ்ரீ கூரத்தாழ்வானும் -ஸ்ரீ முதலியாண்டானும் -ஸ்ரீ நடாதூர் ஆழ்வானும் -ஸ்ரீ பட்ட வர்க்கமும் ஸ்ரீ பாஷ்யத்துக்கு உசாத் துணையாக இருப்பார்கள் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திருவாராதனம் செய்து அருளுவார்
ஸ்ரீ கிடாம்பி பெருமாளும் ஸ்ரீ கிடாம்பி ஆச்சானும் திரு மடைப்பள்ளிக்கு கடவராய் இருப்பார்கள்
ஸ்ரீ வடுக நம்பி எண்ணெய் காப்பு சாத்தி அருளுவார்
ஸ்ரீ கோமடத்து சிறி யாழ்வான் கலப்பானையையும் ஸ்ரீ பாத ரக்ஷையையும் எடுப்பர்
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் கருவூலம் நோக்குவர்
அம்மங்கி அம்மாள் பால் அமுது காய்ச்சுவர்
ஸ்ரீ உக்கல் ஆழ்வான் பிரசாத காலம் எடுப்பர்
ஸ்ரீ உக்கல் அம்மாள் திருவால வட்டம் பரிமாறுவர்
ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான் திருக் கைச் செம்பு பிடிப்பர்
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறி யாண்டான் திரு மடத்துக்கு அமுதுபடி கறியமுது நெய்யமுது முதலானவை நடத்திப் போருவர்
ஸ்ரீ தூய முனி வேழம் திரு மஞ்சனம் எடுப்பர்
ஸ்ரீ திருவரங்க மாளிகையார் ஸ்ரீ பண்டாரம் நோக்குவார் –
ஸ்ரீ வண்டரும் சுண்டரும் கைக்காயிரம் பொன்னுக்கு ராஜ சேவை பண்ணி திரு மடத்துக்கு திருக்கை வழக்காக்கி அருள்வார்கள்
ஸ்ரீ ராமானுஜ வேளைக்காரர் திரு மேனிக் காவலாய்ப் போருவர்
ஸ்ரீ அளங்க நாட்டாழ்வான் பிரதிபக்ஷ நிராசனம் பண்ணிப் போருவர் —

—————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -ஸ்ரீ திரு நாராயண புரம் விருத்தாந்தம் —

February 19, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ திரு நாராயண புரம் விருத்தாந்தம் —

மற்றை நாள் மேற்கே வஹ்நி புஷ்கரணியாகிற கிராமத்து ஏற எழுந்து அருளி அங்கே சிறிது காலம் எழுந்து அருளி இருந்து –
அங்கு நின்றும் ஸ்ரீ மிரிளா புரி சாளக்கிராமத்துக்கு ஏற எழுந்து அருள ஊர் அடைய ப்ரசன்ன விரோதிகள் ஆகையால்
ஸ்ரீ உடையவரை அநாதரித்து இருக்க ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ முதலியாண்டானை அழைத்து இவ்வூரார் நீர் முகக்கும் துறையிலே
நீர் உமது ஸ்ரீ பாதத்தை நீட்டிக் கொண்டு இரும் என்று நியமித்து அருள ஸ்ரீ ஆண்டானும் அப்படியே செய்து அருள
அவ்வூரார் இவர் ஸ்ரீ பாத வைபவத்தாலே நிவ்ருத்த அஹங்காரராய் மற்றை நாளே தெளிந்து வந்து ஸ்ரீ உடையவர்
திருவடிகளிலே ஆஸ்ரயிக்க அத்தீர்த்த பிரபாவத்தை இட்டு இன்று முதல் இவ்வூர் ஸ்ரீ சாளக்கிராமம் -என்று அருளிச் செய்தார் –
அங்கே ஸ்ரீ வடுக நம்பியை ஸ்வ பாதாச்சாயா பன்னராம் படி விசேஷ கடாக்ஷம் செய்து அருளி
அவருக்கு தர்சன அர்த்தங்கள் பிரசாதித்துக் கொண்டு ஸ்ரீ சிங்கர் கோயிலிலே சிறிது நாள் எழுந்து இருந்து
ஸ்ரீ விஷ்ணு வைஷ்ணவ த்வேஷியான சோழன் கிருமி கண்டனாய் நசிக்கும்படியாக அபிசாரம் பண்ணி
அங்கு நின்றும் ஸ்ரீ தொண்டனூர் ஏற எழுந்து அருளினார் –

அங்கே அத்தேசத்துக்கு அதிபதியான விட்டல தேவ ராயன் மகள் பிசாசாவிஷ்டையாய் இருக்க –
அவனும் மந்திரவாதிகள் பலரையும் கொண்டு தீர்க்கத் தேடின இடத்திலும் தீராத படியால் துக்கிதனாய் இருக்க
தத் பத்னியும் நிர்வாணமாக ஓடித்திரிகிற தன் பெண்ணைக் கண்டு மிகவும் வ்யாகுலப்பட்டு இருக்கும் அளவில்
ஸ்ரீ தொண்டனூர் நம்பி உபாதான அர்த்தமாக ராஜ க்ருஹத்து ஏற எழுந்து அருளினவர் துக்கிதையான ராஜ பத்னியைக் கண்டு
துக்க ஹேது என்ன என்று கேட்டு அருள -அவளும் தத் காரணத்தைச் சொல்ல -ஸ்ரீ நம்பியும் கேட்டு அருளி –
நம் ஆச்சார்யர் ஸ்ரீ எம்பெருமானார் எழுந்து அருளினார் அவர் கடாக்ஷத்தால் இப்பேய் காடு ஏறிப்போம் -என்று
ப்ரஹ்ம ரஜஸ்ஸின் கதையை ச விஸ்தாரமாக அவளுக்கு அருளிச் செய்ய -அவளும் கேட்டு ஆச்சர்யப்பட்டு தன் பர்த்தாவுக்கு அறிவிக்க –
அவனும் ஸ்ரீ உடையவர் இப்பேயை விடுவிக்கில் அவரே நமக்கு ஆச்சார்யர் -அவர் திருவடிகளில் ஆஸ்ரயிக்கக் கடவேன் -என்ன

அவ்வளவில் அவன் ஸ்வ குருக்களுக்கு விருந்து இடத் தேடி -இவளும் தன் பர்த்தாவைக் குறித்து
நீர் அங்க ஹீனர் என்று அவர்கள் இங்கே வாரார்கள் -சொல்லாதே கொள்ளும் என்ன -அவனும் அவர்கள் வாராது இருப்பார்களோ என்று
இவள் வார்த்தையை அதிக்ரமித்துச் சொல்லிப் போக விட -அவர்களும் முன்பு டில்லீஸ்வரனான துருஷ்கன் இவனை ஆக்ரமித்துப்
பிடித்துக் கொண்டு போய்ப் பட்டார்ஹன் அன்றிக்கே போம்படி ஒரு அங்குலிச்சேதம் பண்ண –
அத்தாலே விட்டலதேவராயன் ப்ரஸித்தமாகையாலே ஹீனாங்கன் அகத்தே புஜிக்க ஒண்ணாது என்று தவிர்ந்து விட்டார்கள் –

அது கண்டு அவன் அவர்கள் இடத்தே அதி குபிதனாய் அவர்களை திரஸ்கரித்து இருக்கும் அளவில்
அவனுடைய ஸ்திரீயும் அவனைக் குறித்து ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கலாகாதோ –
இவர்களால் என்ன பிரயோஜனம் உண்டு என்ன -அவனும் இசைந்து ஸ்ரீ உடையவரை ஸ்வ க்ருஹத்தே ஏற எழுந்து அருள வேணும்
என்று பிரார்த்திக்க ஸ்ரீ ராமானுசனும் நாம் ராஜதானியை மிதிக்கக் கடவோம் அல்லோம் -என்று அருளிச் செய்ய –
அவ்வளவில் ஸ்ரீ தொண்டனூர் நம்பி முதலான முதலிகள் இவனை விசேஷ கடாக்ஷம் செய்து அருளினால் தரிசனத்துக்கு
பஹு உபகாரம் உண்டு என்று பஹுஸா வேண்டிக் கொள்ள –
ஸ்ரீ உடையவரும் சம்மதித்து அவன் அகத்து ஏற எழுந்து அருளின அளவிலே -அவனும் அதி ஸந்துஷ்டனாய்த் திருவடிகளில்
சாஷ்டாங்க பிரணாமம் பண்ணி ச விநயனாய் நிற்க முதலிகளும் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாத தீர்த்தத்தை அவன் புத்ரிக்குப் பிரசாதித்து
தத் தீர்த்தாலே ப்ரோக்ஷிக்க அவளுடைய சித்தப்ரமம் போய்த் தெளிந்து வந்து சேலையும் உடுத்து ஸ்ரீ உடையவரையும் சேவிக்க –
இத்தை விட்டல தேவராயன் கண்டு அத்தியாச்சார்யப் பட்டுத் தத் க்ஷணமே ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயிக்க அவனையும் இரங்கி அருளித்
திருவடிகளுக்கு அந்தரங்கனாம் படி கடாக்ஷித்து அருளினார்

இப்படி அவனையும் ஸ்வ வைபவத்தால் சிஷ்யனாக்கிக் கொண்டு அவனுக்கு விஷ்ணு வர்த்தன ராயன் என்று திரு நாமம் பிரசாதித்து அருளி
அதி ஸந்துஷ்டராய் நிற்க -அவ்வளவில் -எங்கள் சிஷ்யனை இங்கனே மயக்கி நீர் சிஷ்யன் ஆக்கிக் கொள்ளும் போது எங்களை ஜெயித்து
அன்றோ செய்யலாவது -என்று பன்னீராயிரம் ஷபனர் ஏக காலத்திலே வந்து தர்க்கிக்கக் தொடங்க –
ஸ்ரீ உடையவரும் மின்னலுக்கு அஞ்சுமவர்கள் இந்தியன் கையில் அகப்பட்டால் போலேயும் -தேளுக்கு அஞ்சி பாம்பின் வாயில் அகப்பட்டால்
போலேயும் ஆச்சுதே இனி என் செய்யக் கடவோம் என்று விசாரக் ராந்தராய் இருக்க –
ஸ்ரீ தொண்டனூர் நம்பி முதலான முதலிகள் எல்லாரும் தேவரீருடைய ப்ரபாவத்தை எல்லாரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி வெளியிட வேணும்
என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் இனி நம்மை வெளிடாது இருக்க ஒண்ணாது என்று பார்த்து
ஒரு திரு மண்டபத்திலே திருத் திரையை வளைத்துக் கொண்டு உள்ளே எழுந்து அருளி இருந்து சஹஸ்ர பணா மண்டலமுடைய
திரு அனந்த ஆழ்வானாய் ஓர் ஒருத்தருக்கும் அநேக பிரகாரமாக ப்ரத்யுத்தரம் அருளிச் செய்து அவர்களை வாய் மூடுவித்து ஜெயிக்க
அவர்களிலே சிலர் அதி விஸ்மிதராய் வந்து திருவடிகளிலே ஆஸ்ரயிக்கத் தேட அவர்களை அடிமை கொண்டு
ஸ்ரீ வைஷ்ணவர்களாம் படி பண்ணி விசேஷ கடாக்ஷம் செய்து அருளித் தம் திவ்ய சக்தியைப் ப்ரகடிப்பிக்க-
இத்தைக் கண்டு போய் சிலர் ராஜ்யாதிபனான விஷ்ணு வர்த்தன ராயனுக்குச் சொல்ல -அத்தைக் கேட்டு விஷ்ணு வர்த்தனனும்
ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே அதி பிரவணனாய் இரா நிற்க அங்குத்தையில் ஸ்ரீ எம்பெருமானை ஸ்ரீ தொண்டனூர் நம்பி அபிமானித்து
இருக்கையாலே அவருக்கு ஸ்ரீ நம்பி தம்பிரான் -என்ற திரு நாமம் சாத்தி உகந்து அருளி ஸ்ரீ சிங்கர் கோயிலிலே எழுந்து அருளி
வேதாந்த வ்யாக்யானம் செய்து கொண்டு இருக்கும் காலத்திலே

திருக்கையில் திருமண் மாண்டு -சாத்துகைக்கு திருமண் பெற்றிலோமே என்று சிந்தித்துக் கொண்டு கண் வளர்ந்து வளர
அன்று ராத்ரி ஸ்ரீ திரு நாராயணப் பெருமாளும் அணித்தாக ஸ்ரீ யதுகிரியிலே உம்முடைய வரவு பார்த்துக் கொண்டு நில்லா நின்றோம்
உம் திரு உள்ளம் போன்ற திரு மண்ணும் இங்கே உண்டு -சடக்கெனப் புறப்பட்டு வாரீர் என்று ஸ்வப்னம் காட்டி அருள
ஸ்ரீ உடையவர் விடிவோரை ப்ரீதராய் எழுந்து இருந்து இத்தை முதலிகளுக்கு அருளிச் செய்து விஷ்ணு வர்த்தன ராயரையும்
அழைப்பித்துத் தாம் ஸ்வப்னம் கண்டபடியை அருளிச் செய்ய அவனும் கேட்டு ப்ரசன்னனாய் சம்மதித்துக் காடு வெட்டுவித்துக் கொண்டு
ஸ்ரீ உடையவர் பின்னே சேவித்துக் கொண்டு செல்ல -பஹு தான்ய சம்வத்சரம் -தை மாசத்தில் -ஸ்ரீ எம்பெருமானாரும் –
செம் பொன் யது கிரி ஏறி வேத புஷ்கரணி கரையிலே எழுந்து அருளி -பரிதான சிலாந் த்ருஷ்ட்வா பிரணமந்தி த்விஜோத்தமா -என்கிறபடியே
பரிதான சிலையும் சேவித்து அங்கே நீராடி
வேத புஷ்கரணீ தீரே விசாலே சசிலா தலே பரிதாநம் ச ஜக்ராஹ காஷாயம் பரம புமான் -என்கிற தத்தாத்ரேயரைத் போலே
தாமும் மீளவும் காஷாயம் தரித்து அருளி முன்னே நடந்து திரு நாராயணப் பெருமாள் எழுந்து அருளி இருக்கிற இடத்தை தேடிக் காணாமல் –
பகவத் பிரபாவத்துக்குக் குறைவாக என் செய்தோம் என்று திரு உள்ளம் கலங்கி அயர்ந்து கண் வளர்ந்து அருள அவ்வளவில்

திரு நாராயணப் பெருமாளும் இவர் கனவில் எழுந்து அருளி ஸ்ரீ கல்யாண சரஸ்ஸிலே தென்மேலை மூலையிலே செண்பகச் சோலைக்கு அருகே
திரு மகிழுக்குத் தேன் பார்ஸ்வத்திலே வளர்ந்த திருத் துழாயின் கீழே பெரிய புற்றுக்குள்ளே இரா நின்றோம்
திருமணும் அந்தக் கல்யாண சரஸ்ஸூக்கு வடமேலை மூலையிலே –
ஸ்வேத த்வீபாத் ககேசேந ஸூத்தம் ருத் த்ரவ்ய மாஹ்ருதம் –யாதவாதரவ் விநிஷிப்தம் அஷ யந்தன்ம மாஜ்ஞாயா -என்கிறபடியே
பெரிய திருவடியாலே ஸ்வேத த்வீபத்தின் நின்றும் கொணர்ந்து ஸ்ரீ யது கிரியிலே நிக்ஷேபிக்கப் பட்டு மத் ப்ரபாவத்தால் அக்ஷயமாக
சேமிப்பது இரா நின்றது -நீர் கிலேசிப்பான் என் -நாம் உமக்கு அடையாளமாக இவ்விடம் தொடங்கி நாம் இருக்கும் புற்று அளவாக முறித்திட்ட
திருத் துழாய்க் கொழுந்தே குறியாக வாரீர் என்று ப்ரத்யக்ஷ சாமானகாரமாக ஸ்வப்ன முகேன அருளிச் செய்ய –
ஸ்ரீ உடையவரும் உகந்து உணர்ந்து எழுந்து இருந்து முறித்திட்ட திருத் துழாய் கொழுந்தே குறியாக ஸ்ரீ கல்யாண சரஸ் கரை யிலே
எழுந்து அருளி திரு முகப்படியே சம்பகவன சமீபத்தில் கப்பும் கவருமாய்ப் பணைத்துக் கொழுந்து விட்ட திருத் துழாய் மரத்தைக் கண்டு
களித்து ஆனந்தத்துடன் பலகாலும் தண்டன் இட்டு அத்திருத் துழாய் மரத்தின் மண் காப்பு நீக்கின அளவிலே –
கமபியது கிரிஸ் தங்காந்தி சிந்துந் ததர்ச -என்கிறபடியே புற்றினுள்ளே ஸ்ரீ பொற் கோயில் தோன்றிய பின்பு

மற்று அங்கு இனிது அமர்ந்த மாயவனுடைய நீல சிகா மணி தோன்ற சக வருஷம் ஆயிரத்துக்கும் மேல்
பன்னிரண்டு சென்ற வர்த்தமான பஹு தான்ய வர்ஷம் தை மாசம் ஸூக்ல பக்ஷ சதுர்த்தசியும் வியாழக் கிழமையும் கூடின
புனர்பூச நக்ஷத்ரத்திலே திரு நாரணன் உருவம் கண்டு நலம் மிகுத்துக் கொந்தளித்து எல்லாரும் குணாலக் கூத்தடித்து
மங்கள சங்க மிருதங்க பட ஹாத்யகில வாத்ய ஜய சப்த கோஷம் பண்ணி ராஜாவையும் அழைத்துக் காட்டி அருளிப்
பாலாலே திருமஞ்சனம் பண்ணி -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில் மிகக் கண்டேன் மீண்டு அவனை
மெய்யே மிகக் கண்டேன் -என்கிறபடியே திரு நாராயணப் பெருமாளைத் திருவடி முதல் திருமுடி அளவும் -கண்ணாரக் கண்டு
அனுபவித்துத் தம் திருக்கையாலே மூன்று நாள் திரு ஆராதனம் செய்து அருளி மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்று
பரமாச்சார்யரான ஸ்ரீ பராங்குசர் தமக்குத் தாம் அத்யந்த அபிமத சிஷ்யர் ஆகையாலும் –
தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் ஆகையாலும்
பித்ரு தனத்தைப் புத்ரன் விநியோகம் கொள்ளுமா போலே ஐஸ்வர்ய கைவல்யங்கள் ஆகிற ஸூத்ர புருஷார்த்தங்களை இகழ்ந்து
காற் கடைக் கொண்டு திரு நாரணன் தாளே உபாய உபேயம் என்று நிஷ்கர்ஷிக்கிற
ஒரு நாயகத் திருவாய் மொழியைத் திருநாராணனுக்கு சமர்ப்பித்து அருளினார் –

பின்பு ஸ்ரீ கல்யாண சரஸ்ஸின் வடமேலை மூலையிலே தம் த்ரிதண்டாலே கீற பாலாறு போலே பொங்கிக் கிளம்புகிற
திருமண் குவைகளைக் கண்டு மண்டுகிற ஆனந்த அதிசயேந அத்திருமண் கொண்டு பன்னிரண்டு திரு நாமம் சாத்தி அருளி
த்ரிதண்ட மண்டித கர புண்டரீகராய் விளங்கி அருளி -காடு வெட்டி -ஊரும் கோயிலும் சமைப்பித்துத் திரு நாராயணப் பெருமாளுக்கு
ஸ்ரீ பாஞ்சராத்ர சாத்விக சம்ஹிதையாலே ப்ரோஷணாதிகளை ஸ்ரீ ரெங்கராஜ பட்டர் திருக்கையால் செய்வித்து அருளி –
திரு நாரணற்கு நித்ய உத்சவ பக்ஷ உத்சவ மாச உத்சவ சம்வஸ்த்ர உத்சவங்கள் எல்லாம் மஹோத்ஸவமாக நடத்துகைக்கு
உத்சவ பேரம் இல்லையே என்று மிகவும் வ்யாகுலித சித்தராய் திருக் கண் வளர்ந்து அருள –
அப்போது இவர் ஸ்வப்னத்திலே திரு நாரணப் பெருமாள் எழுந்து அருளி -நம் உத்சவ பேரமான ஸ்ரீ ராம பிரியர்
இப்போது டில்லி ஏற எழுந்து அருளி துருஷ்க ராஜ க்ருஹத்திலே லீலை கொண்டாடி எழுந்து அருளி இருக்கிறார் –
அங்கு ஏறப் போய் எழுந்து அருளுவித்துக் கொண்டு வாரீர் என்று திரு உள்ளமாய் அருள –

ஸ்ரீ உடையவரும் பிராத காலமானவாறே எழுந்து இருந்து ஸ்வப்னத்தை முதலிகளுடன் ஆலோசித்துக் கொண்டு பயணகதியில் த்வரித்து
டில்லி ஏற எழுந்து அருளினவாறே டில்லி புரீந்தரரான ராஜாவும் இவரைக் கண்டு ப்ரத்யுத்தான ப்ரணதி பூர்வகமாக பஹு உபகாரம் செய்து
எழுந்து அருளின கார்யம் அருளிச் செய்ய வேணும் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவரும் எங்கள் குல தெய்வமான ஸ்ரீ ராமபிரியர் இங்கே எழுந்து அருளி இருக்கிறார் -அவரைத்தர வேணும் என்று அபேக்ஷிக்க
ராஜாவும் அப்படியே செய்கிறோம் என்று கொள்ளை கொண்டு சிறை வைத்த எம்பெருமான்கள் சிறைச் சாலையை சோதித்துக் கொள்ளீர்
என்று அப்பணை இட்டு விட இவரும் அங்கு ஏற எழுந்து அருளி சோதித்து -திரு நாரணர் வடிவுக்கு ஒத்து இராமையாலே
இத்தேவர்கள் ஒருவரும் அன்று என்று ஸ்ரீ ராம பிரியரை அவர்கள் காணாமையாலே முசித்துக் கிடக்க அன்று இரவில்
ஸ்ரீ ராம பிரியர் இவர் ஸ்வப்னத்திலே எழுந்து அருளி நீர் முசிப்பான் என் -நாம் அவன் மகளாலே பூஜை கொண்டு
அவள் சஜ்ஜா க்ருஹத்திலே இரா நின்றோம் -நம்மைக் கொண்டு போகும்படியாக அங்கே வாரீர் என்று அருளிச் செய்ய

ஸ்ரீ உடையவரும் இச் செய்தியை ராஜாவுக்கு அறிவிக்க அவனும் இப்படி உம்முடைய பக்கல் வ்யாமுக்தராகிறவர் தாமே வரக் கடவர் என்ன –
இவரும் அவரைக் கண்டு திருவடி தொழுதல் ஆகாதோ என்ன -அப்படியே ஆகிறது என்று இவரை அவனும் தன் மகள் சஜ்ஜா க்ருஹத்து ஏற
எழுந்து அருளுவித்துக் கொண்டு போக அங்கே ஸ்ரீ ராமபிரியரும் ஸ்ரீ உடையவரைக் கண்டு ஆஸ்ரித வாத்சல்யம் தோற்ற –
இட்ட சட்டையும் கட்டின சிறுச் சதங்கையும் இட்ட கஸ்தூரி திரு நாமமும் முடித்த மை வண்ண நறும் குஞ்சியும் –
செம் பொற் சதங்கைகள் சல சல என்று ஒலிக்க அகிலரும் காணும்படி வந்து ஸ்ரீ உடையவர் திருமடியிலே இருக்க
ஸ்ரீ உடையவரும் ஆனந்த அஸ்ருக்கள் பனிப்ப ஆனந்த ஏக ஆர்ணவ அந்தர் நிமக்நராய் புளகித நிகில அங்கராய் மார்பும் தோளும் பூரித்து –
என்னுடைய செல்வப் பிள்ளையோ என்று எடுத்து அணைத்துக் கொண்டு அருளினார் –
அன்று முதல் ஸ்ரீ ராம பிரியர்க்கு ஸ்ரீ செல்வப்பிள்ளை என்று திருநாமம் ஆய்த்து –
இத்தைக் கண்ட ராஜாவும் அத்யாச்சார்ய யுக்தனாய் அவர் திருவடிகளிலே விழுந்து சேவித்து அநேக விதமாக சத்கரித்து
பஹு உபசார ஸஹிதமாக சம்பத் குமாரரை யதி ஸார்வ பவ்மர்க்கு எழுந்து அருளுவித்துக் கொடுத்து அனுப்பினான்

ஸ்ரீ உடையவரும் அங்கு நின்றும் புறப்பட்டு இவரை எழுந்து அருளுவித்துக் கொண்டு த்வரித்து பயணகதியிலே
ஸ்ரீ யாதவாத்ரிக்கு எழுந்து அருளி சர்வரும் ஸ்ரீ யதிராஜகுமாரர் என்னும்படி விசேஷித்து புத்ர வாத்சல்யம் பண்ணி அபிமானித்து அருளி
ப்ரோஷணாதி பிரதிஷ்டா புரஸ் ஸரமாகத் திரு நாரணருடன் சேர்த்துத் திரு நாராயணப் பெருமாளுடைய திவ்ய உத்சவ கர்த்தாவாக்கி
நித்ய பக்ஷ மாச அயன சம்வஸ்த்ர உத்ஸவாதி மஹோத்சவத் திரு நாள்களும் நடத்தி அருளித் தீர்த்த பிரசாதமும் பெற்று
ஸ்ரீ யதிராஜ மடமும் கட்டி வைத்து ஐம்பத்து இருவர்கட்க்கு அன்பான ஊழிய கைங்கர்யத்தையும் கல்பித்து அருளி
ஐம்பத்து இருவர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று சமுதாயத் திரு நாமமும் பிரத்யேகமாகத் தாஸ்ய நாமமும் ப்ரசாதித்து
அங்கே அவர்களை பிரதிஷ்டிப்பித்து குறைவறத் திரு ஆராதனமும் நடத்திக் கொண்டு இருக்க ஒரு நாள் வரையிலே
ஸ்ரீ பாஷ்யகாரர் தம்முடைய ஸ்ரீ பாதத்தில் உள்ள ஆச்சார்யர்கள் உடனேயும் சீயர்கள் உடனேயும் ஐம்பத்து இவர்கள் உடனேயும்
சாற்றாத சாற்றின முதலிகள் உடனேயும் கொற்றி அம்மை மார்கள் உடனேயும் திருமேனிக் காவல் திரு வேணைக்காரர் உடனேயும்
பெரும் கூட்டத் திரு ஓலக்கமாக ஸ்ரீ ராமானுசனில் எழுந்து அருளி இருந்து –
திரு நாராயண புரம் என்று அந்நகரத்துக்கு திரு நாமம் சாத்தி அருளி
இத்திரு நாராயண புரத்திலே நித்ய வாசம் பண்ணுமவர்களுக்குப் பெரியோர்க்கும் நமக்கும் உண்டான
ஸ்ரீ பரமபதமும் ஆச்சார்ய கைங்கர்யமும் உண்டாம் -என்று அருளிச் செய்து அருளினார் –

இத் திரு மலை க்ருத யுகத்தில் சனத் குமாரர் ஸத்ய லோகத்தில் நின்றும் ஆனந்த மய திவ்ய விமானத்தோடே எழுந்து
அருளுவித்துக் கொண்டு வந்து ஸ்ரீ திரு நாராயணனை இங்கே பிரதிஷ்டிப்பிக்கையாலே ஸ்ரீ நாராயணாத்ரி என்றும்
த்ரேதா யுகத்தில் தத்தாத்ரேயர் நாலு வேத புருஷர்களையும் சிஷ்யராக்கிக் கொண்டு வந்து வேத புஷ்கரணி கரையிலே
சதா வேத அத்யயன நிரதராய் இருக்கையாலே வேதாத்ரி என்றும் –
த்வாபர யுகத்திலே நம்பி மூத்த பிரானாலும் ஸ்ரீ கிருஷ்ணனாலும் ஆராதிக்கப் படுக்கையாலே யாதவாத்ரி என்றும் –
யுகே கலவ் து ஸம்ப்ராப்தே யதி ராஜேந பூஜநாத் -யதிசைல இதி ப்ரோக்தம் நாமதே யாந்த ரங்கிரே –என்கிறபடியே
கலி யுகத்திலே ஸ்ரீ எம்பெருமானார் எழுந்து அருளி ஜீர்ண உத்தாரணம் பண்ணி அபிமானிக்கையாலே –
யதி சைலம் -என்று ப்ரஸித்தமாய்த்து –

அநந்தரம் பத்ம கிரியில் சென்று புத்த சமயங்களை வென்று என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் எங்கனம் ஆவர்களே-
என்னும்படி -அவர்களைக் கற் காணந் தன்னில் அரைப்பித்து நிஸ் சேஷமாக நிரசித்து நிஷ் கண்டகம் ஆக்கி அருளி
ஸ்ரீ பாஷ்யமும் வ்யாக்யானித்துக் கொண்டு ஸ்ரீ திரு நாராயணப் பெருமாள் திருவடிகளில் பன்னிரண்டு சம்வத்சரம்
வாழ்ந்து அருளுகிற காலத்தில் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ கோயிலில் நின்றும் எழுந்து அருளி
ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே சேவித்து இருக்க –
இவரும் ஸ்ரீ பெரிய பெருமாளும் பெரும் திருச் செல்வமும் செய்கிறபடி என் என்று கேட்டு அருள
அவரும் தேவரீர் இல்லாத குறை ஓன்று ஒழிய மற்று ஒரு குறையும் இல்லை -என்ன
இவரும் சோழன் பக்கல் எழுந்து அருளின ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ பெரிய நம்பியும் செய்தபடி என் என்று கேட்டு அருள –

ஸ்ரீ வைஷ்ணவரும் -ஸ்ரீ கோயிலில் நின்றும் ஸ்ரீ கூரத்தாழ்வானையும் ஸ்ரீ பெரிய நம்பியையும் ராஜ மனுஷ்யர் அழைத்துக் கொண்டு
போய்ச் சோழன் முன்னே விட அவனும் இவர்களைப் பார்த்து -சிவாத் பரதரம் நாஸ்தி -என்று ஓலைக்கு
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணாதிகளாலே பஹு பிரகாரமாக ஸ்ரீ மன் நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் -ஜகத் காரண பூதன் –
த்யேயனானவனும் அவனே -சர்க்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவும் அவனே -ப்ரஹ்ம ருத்ராதிகள் அவனுக்குப் புத்ர பவ்த்ராதிகளாய்
நியமனத்தில் இருக்குமவர்கள் -அவ்வளவும் அன்றியே
ஏக ப்ராஸீ சரத்பாத மந்ய பிராஷாள யந்முதா -அபரோஅதீ தரந் மூர்த்நா கோ அதிகஸ் தேஷு புண்யதாம் -என்று
திருவடிகளை நீட்டினவன் ஒருவன் -கமண்ட லூதகத்தாலே பக்தி புரஸ்சரமாகத் திருவடிகளை விளக்கினவன் ஒருவன் –
தத் தீர்த்தத்தை ப்ரீதியோடே சிரஸா வஹித்தவன் ஒருவன் -இவர்களில் பெரியவன் ஆர் என்று நீயே விசாரித்துக் காணாய் என்ன –
அவனும் இசையாது இருக்க -இவரும் இம் மாத்திரமேயோ –

யச்சவ் ச நிஸ் ஸ்ருத சரித் ப்ரவரோதகேந தீர்த்தேந மூர்த்நி வித்ருதேந சிவஸ் சிவோ அபூத்-என்று ஸ்ரீ த்ரிவிக்ரம பாத ஜல சங்கத்தால்
கபாலித்தவம் போய் சிவத்தவம் உண்டானவன் இறே இவன் என்று அருளிச் செய்ய –
சோழனும் அது கேட்டு அதி க்ருத்தனாய்-நீர் பெரிய வித்வான் ஆகையால் உமக்கு வேண்டியபடி எல்லாம் சொல்ல வல்லீர் -அங்கன் அன்று
நான் சொன்னபடி -சிவாத் பரதரம் நாஸ்தி -என்று ஓலைக்கு எழுத்திடும் என்று ஓலையைக் கையில் கொடுத்து கனக்க நிர்பந்திக்க
ஸ்ரீ கூரத்தாழ்வானும் தம்முடைய த்ருட அத்யவசாயமாம் படியே -சிவாத் பரதரம் நாஸ்தி த்ரோணம் அஸ்தித பரம் – என்று ஓலைக்கு
எழுதிட்டு அருளினார் -சோழனும் இவர் இப்படி பரிஹஸித்து ஓலைக்கு ஒப்பம் இட்டபடி கண்டு அத்யந்த கோபாக்ர சித்தனாய் –
ஸ்ரீ பெரிய நம்பியை அழைத்து நீர் எழுத்திடும் என்ன -அவரும் ஸ்ரீ மன் நாராயணனே பரன் -என்று பஹு முகமாக அருளிச் செய்ய –
ஸ்ரீ ஆழ்வானையும் ஸ்ரீ நம்பியையும் நேத்ர உத்பாடனம் பண்ணச் சொல்ல -அவ்வளவில் ஸ்ரீ கூரத்தாழ்வானும் சோழனைக் குறித்து –
நீ மஹா வீர சைவன் ஆகையால் உன்னைப் பார்த்த கண்கள் எனக்கு ஆகாது என்று தம்முடைய திவ்ய நகங்களால் கீறிக்
கண்ணை வாங்கிப் பொகட –

ராஜ மநுஷ்யர்களும் ஸ்ரீ பெரிய நம்பியைப் பிடித்துக் கொண்டு போய் அவன் சொன்னால் போலே செய்து படை வீட்டில் நின்றும்
புறப்பட விட -ஸ்ரீ ஆழ்வானும் தரிசனத்துக்கு தர்சனம் கொடுக்கப் பெற்றோமே என்று ப்ரீதராய் இருக்க –
ஸ்ரீ பெரிய நம்பியும் வ்ருத்தராகையாலே -அவ்வேதனை பொறுக்க மாட்டாமல் அங்கே ஒரு கொல்லைத் தலை மாட்டிலே
ஸ்ரீ ஆழ்வான் திருமடியில் திரு முடியும் -ஸ்ரீ அத்துழாய் திரு மடியிலே திருவடிகளுமாய் -இளைத்துக் கண் வளர்ந்து அருள –
ஸ்ரீ நம்பியை ஆபத் தசையில் ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ அத்துழாயும் -அங்கு நின்றும் ஸ்ரீ கோயில் ஏறப் போனாலோ -என்ன
ஸ்ரீ நம்பியும் -நாம் அங்கே போய் பிரக்ருதியை விடில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ நம்பிக்கும் உட்படத் திருவடி சாரும் போது
ஸ்ரீ கோயில் ஏறப் போக வேண்டிற்று இல்லையோ என்று சங்கிப்பர்கள் என்று அருளிச் செய்து –
அடியிலே ஆச்சார்யர் கிருபை பண்ணினத்துக்கு ஸ்ரீ பரமபதம் சித்தம் என்று ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளை த்யானித்துக் கொண்டு
அங்கே ஸ்ரீ திருநாட்டுக்கு எழுந்து அருளினார் -ஆகையால் பிரபன்னனுக்கு அந்திம தேச நியதி இல்லை என்றபடி –

பின்பு அங்கே அநாத பிரேத சம்ஸ்காரம் பண்ணிக் கொண்டு திரிவார் சிலர் வந்து -இவருக்கும் அப்படி பண்ணக் கடவோம் என்று
தங்கள் சம்ஸ்காரம் செய்வதாக உத்யோகிக்க ஸ்ரீ ஆழ்வானும் அத்யாவசாயம் குலையாமல் -வாருங்கோள் மாணிகாள்-
ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் ஸ்ரீ வைஷ்ணவனுக்கு கிஞ்சித் கரிக்க இருக்க ஸ்ரீ வைஷ்ணவனுமாய் அறவையுமாய் இருப்பவனை
நீங்கள் எங்கே தேடுவுதிகோள்-என்று அவர்களை உபேக்ஷித்து விட்டார் -பின்பு சில ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஸ்ரீ பெரிய நம்பியை சமஸ்கரித்துப் பள்ளிப் படுத்தி ஸ்ரீ ஆழ்வானை ஒரு கட்டணத்தில் எழுந்து அருளுவித்துக் கொண்டு
ராத்திரியிலே ஒருவரும் காணாமல் ஸ்ரீ கோயிலிலே வந்து புகுந்தார்கள் -ஸ்ரீ கூரத்தாழ்வானும் ஸ்ரீ பெரிய நம்பியைப் போலே
அடியேனுக்கும் இச் சரீரம் போய்த்தில்லையே- என்று கொண்டு -முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே
என்று போர கிலேசித்து அருளினார் -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ உடையவரும் கேட்பார் செவி சுடு வார்த்தை கேட்டு ஐயோ கண்ணபிரான் அறையோ என்று கோஷித்துக் கொண்டு
வேர் அற்ற மரம் போலே விழுந்து கிடந்து துடித்துத் திரு மிடறு தழு தழுப்ப அத்யந்தம் அவசன்னராய் திரு முத்து உதிர்த்து –
கண்ண நீர் கைகளால் இறைத்து க்லேசிக்கும்படி கண்டு அருகு இருந்த முதலிகள் தேற்ற -தேறி
ஸ்ரீ ஆழ்வான் ஆகிலும் திருமேனி உடன் இருக்கப் பெற்றோமே -என்று அருளிச் செய்து
ஸ்ரீ பெரிய நம்பிக்கு சூர்ண பரிபாலனம் செய்து பெருக்கத் திரு அத்யயனம் நடத்தி அருளி –
ஸ்ரீ ஆழ்வானுக்குத் திருக்கண் போச்சுதே -என்று வியாகுல ஹ்ருதராய் மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டானை-
ஸ்ரீ ஆழ்வானையும் ஆராய்ந்து அங்குள்ள விசேஷங்களையும் அறிந்து வாரும் என்று ஸ்ரீ கோயிலுக்குப் போக விட்டு
பூர்வம் போலே வ்யாக்யானித்துக் கொண்டு எழுந்து அருளி இருந்தார் –

—————————————

ஸ்ரீ உடையவரின் ஆச்சார்யர்களுடைய திரு நக்ஷத்ரமும் தனியன்களும்

பெரிய நம்பி திரு நக்ஷத்ரம் -திரு மார்கழிக் கேட்டை

அவர் தனியன் –
கமலா பதி கல்யாண குண அம்ருத நிஷே வயாபூர்ண காமாய சததம் பூர்ணா யமஹதே நம

ஆச்சார்யாத் யாமுனேயாததிபத நிகமாந்தார்த்த ஜாதம் பிரபத்திஞ் சோபாதி க்ஷத்ர ஹஸ்யாந்ய பியதி பதயே
கிஞ்சதத் ரக்ஷணார்த்தம் -சோழேந்திரம் ப்ராப்ய சோக்த்வாச தசி பர புமான் ஸ்ரீ பதிர் ஹேதி பீடாம் சாரீராம்
தத் க்ருதாஞ் சாப்ய ஸஹ தமந வைதம் மஹா பூர்ணமார்யம்

—————–

ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூர் நம்பியை அந்திம தசையில் தேவரீர் திரு உள்ளத்திலே நினைத்து இருக்கிற நினைவு என் என்று
ஸ்ரீ பாதத்து முதலிகள் கேட்க ஸ்ரீ நம்பியும் -ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் திரு உள்ளத்தை ஒரு பஷி புண் படுத்திற்று என்று
சொல்லி நிர்ப்பரராய் ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளை த்யானித்துக் கொண்டு ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் –

அதாவது சரணாகத பரித்ராணமும் போராது என்று இருக்குமவன் இருக்க நமக்கு இனி வேறே ஒரு நினைவு உண்டோ என்று கருத்து –
இது கண்டு ஸ்ரீ பாதத்து முதலிகள் பிராயேண துக்கித்துத் தேறி ஸ்ரீ தெற்காழ்வாரைக் கொண்டு
ஸ்ரீ நம்பிக்குத் தீர்த்தம் கொண்டாடித் திரு அத்யயனமும் நடத்தி அருளினார்கள்

அவர் திரு நக்ஷத்ரம் திரு வைகாசி ரோஹிணி

அவர் தனியன்
சம தம குண பூர்ணம் யாமுனார்ய ப்ரஸாதாத் அதிகத பரமார்த்தம் ஞான பக்த்யாதி சிந்தும் –
யதிபதிநத பாதம் ஸ்லோக தத்வார்த்த நிஷ்டம் ஸ்ரித துரித தரம் ஸ்ரீ கோஷ்டி பூர்ணம் நமாமி

ஸ்ரீ வல்ல பதாம் போஜ -(யாமுனார்ய பதாம் போஜ -பாட பேதம்-)தீ பக்த்யாம்ருத சாகரம் –
ஸ்ரீ மத் கோஷ்டீ புரீ பூர்ணன் தேசிகேந்த்ரம் பஜாமஹே

—————————————

திருமாலை ஆண்டான் திரு நக்ஷத்ரம் மாசியில் மகம்

அவர் தனியன்
ராமாநுஜாய முனீந்ராயா த்ராமிடீ ஸம்ஹிதார்த்தம் -மாலாதர குரும் வந்தே வாவ தூகம் விபஸ்சிதம்

—————–

திருவரங்கப் பெருமாள் அரையர் திரு நக்ஷத்ரம் வைகாசி கேட்டை

அவர் தனியன்
அத்யாபயத் யதீந்த்ராய பராங்குச சஹஸ்ரிகாம் –தந் நாத வம்ஸயம் வந்தே அஹம் ஸ்ரீ ரெங்காப தேசிகம்

————————-

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி திரு நக்ஷத்ரம் -சித்திரையில் ஸ்வாதி

அவர் தனியன்
பிதா மஹஸ்யாபி பிதா மஹாயா ப்ராசேத சாதேச பல ப்ரதாய ஸ்ரீ பாஷ்யகார உத்தம தேசிகாய
ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்தாத்

—————————————

ஸ்ரீ திருக் கச்சி நம்பி திரு நக்ஷத்ரம் -மாசியில் ம்ருக சீர்ஷம்

அவர் தனியன்
கருணாகர பாதாப்ஜ சரணாய மஹாத்மனே ஸ்ரீ மத் கஜேந்திர தாஸாயா காஞ்சீ பூர்ணாய தே நம

———————-

அநந்தரம் ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான் தவரித்துப் பயண கதியில் ஸ்ரீ கோயிலிலே சென்று
ஸ்ரீ கூரத்தாழ்வானை சேவித்து நிற்க ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ சிறியாண்டானைக் கண்டு ஸ்ரீ உடையவரை சேவித்தால் போலே ஸந்துஷ்டராய் –
ஸ்ரீ உடையவர் செய்து அருளுகிறபடி என் என்று வினவி அருள இங்குத்தை விசேஷம் எல்லாம் ச விஸ்தரமாக
விவரித்துச் சொல்லக் கேட்டு ஆனந்தத்தை இரா நிற்க ஸ்ரீ ஆண்டானும் ஸ்ரீ உடையவர் ஆச்சார்ய விஸ்லேஷ அஸஹிஷ்ணுவாய்
தேவரீருக்கும் திருக்கண் போச்சுதே -என்று மிகவும் ஆர்த்தராய் அடியேனை ஆராய்ந்து வா என்று விட்டு அருளினார் என்ன –
ஸ்ரீ ஆழ்வானும் உலகங்களுக்கு எல்லாம் ஒரு உயிரான தாம் ஸூகமே இருக்கப் பெறில் இவ்விபத்து அடியேன் கண் அழிவு மாத்திரமே
கொண்டு போகப் பெற்றதே -என்று ஹ்ருஷ்டராய் இருக்கிறார் என்று விண்ணப்பம் செய்யும் என்று விட –
அவ்வளவில் சோழனுக்கு கழுத்தில் புண்ணாகி புழுத்துப் புரண்டான் என்று கேட்டு ஸ்ரீ கங்கை கொண்ட சோழ புரத்து ஏற
ஸ்ரீ ஆண்டானும் சென்று அச்செவிக்கு இனிய செஞ்சொல்லை நிச்சயித்து கொண்டு எழுந்து அருள வழியிலே சந்தித்த
ஸ்ரீ அம்மங்கி அம்மாளையும் கூட்டிக் கொண்டு தவரித்துப் எழுந்து அருளி ஒரு நாள் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்து முதலிகளுடன்
அனுஷ்டான அர்த்தமாக திருக்கல்யாண கரையிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே ஸ்ரீ கோயிலில் நின்றும் எழுந்து அருளின
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டானும் ஸ்ரீ அம்மங்கி அம்மாளும் ஸ்ரீ உடையவர் திருவடிகளைத் தங்கள்
ஆனந்த அஸ்ருக்களால் நனைத்து தண்டன் சமர்ப்பித்து ஸ்ரீ ஆழ்வானுக்கும் ஸ்ரீ பெரிய நம்பிக்கும் அபராதம் பண்ணின சோழன்
கழுத்திலே புண்ணாய்ப் புழுத்து புரண்டு போனான் -என்று விண்ணப்பம் செய்ய

ஸ்ரீ உடையவரும் கர்ணாம்ருதமான கட்டுரையைக் கேட்டு திரு மார்பும் திருத் தோளும் பூரித்து
சந்தோஷ அதிசயத்துடன் இவர்களை வாரி அணைத்துக் கொண்டு ஆனந்த அஸ்ருக்கள் கொண்டு அவர்களை வழிய வார்த்து
இவ்வளவு தூரம் இவ்விசேஷம் கொண்டு எழுந்து அருளின இவர்களுக்கு சிறக்க கனக்க கொடுக்கலாவது த்வயம் அல்லது இல்லை என்று
நிச்சயித்து மீளவும் த்வயத்தையே அவர்களுக்குப் பரிசிலாக இரங்கி அருளி தம் சந்நிதியில் முதலிகளைப் பார்த்து
இது கல்யாண சரஸ் ஸூ என்னுமது அந்வர்த்தமாகக் கண்டோம் என்ன முதலிகளும் அப்படியே யாம் என்று அத்தைக் கொண்டாட
அவர்களையும் கூட்டிக் கொண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத வரதரான அழகிய ஸிம்ஹர் திருமலை ஏறி அவரையும் திருவடி வணங்கி
பகவத் பாகவத விஷயம் என்றால் அசஹமானனாய் போந்த ஹிரண்யனை முன்பு நிரசித்து அருளினால் போலே
இப்போது பரதத்வமான தேவரீரை இல்லை என்று ஸாதூநாமுபமான பூதரான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஒப்பான
ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கும் ஸ்ரீ பெரிய நம்பிக்கும் அபராதம் பண்ணின இவனையும் கிருமி கண்டனாக்கி நசிப்பித்து அருளிற்றே-என்று
விண்ணப்பம் செய்து தீர்த்த பிரசாத ஸ்வீ காரம் பெற்று விடை கொண்டு அப்போதே புறப்பட்டு

ஸ்ரீ உடையவரும் முதலிகளுமாக பெரிய ப்ரீதியோடே ஸ்ரீ திரு நாராயணப் பெருமாள் திரு முன்பே சென்று திருவடி தொழுது
திருப்பல்லாண்டை அனுசந்தித்து மங்களா சாசனம் பண்ணி நமோ நாராயணாயா என்று க்ருதாஞ்சலி புடராய்த் திருவடிகளை
நோக்கிக் கொண்டு -இனி அடியேன் ஸ்ரீ கோயில் ஏறப் போய் வருகிறேன் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ திரு நாராயணனும் நெடும் போது வாய் விட மாட்டாதபடி நிற்க ஸ்ரீ உடையவரும் நீர் உள்ளதனையும் இங்கேயே இரும் என்று
நியமித்து அருளிற்றே என்ன -ஆகில் அப்படியே செய்யும் என்று அர்ச்சக முகேன திரு உள்ளமாய் அருள

ஸ்ரீ எம்பெருமானாரும் புறப்பட்டு அருளி ஐம்பத்து இருவரைப் பார்த்து ஸ்ரீ திருநாரணனையும் ஸ்ரீ செல்வப்பிள்ளையையும்
மங்களா சாசனத்துடனே சதா தர்சனம் பண்ணிக் கொண்டு காலே காலே திருப்பணி திரு ஆராதனமும் நடத்திக் கொண்டு
சேவித்து இருங்கள் என்று நியமித்து அருள ஐம்பத்து இருவரும் ஸ்ரீ பாதத்தில் விழுந்து சேவித்து தேவரீர் திருவடிகளைப் பிரியில்
தரிக்க மாட்டோம் என்று ஆர்த்தராய் தலை இறக்கிட்டு நிற்க ஸ்ரீ உடையவரும் அப்போதே ஒரு சிந்தை செய்து
தம் விக்ரஹத்துக்குப் படி எடுத்தால் போலே விளங்குகிற தம்முடைய அர்ச்சா ரூப விக்ரஹத்தை அவதரிப்பித்து அதிலே
தம் திவ்ய சக்தியையும் பிரதிஷ்டிப்பித்து ஐம்பத்து இருவரை அழைத்து நாம் உங்களுக்காக இங்கே இரா நின்றோம் -என்று
ஸ்வ திவ்ய சக்தி பரிபூர்ணமான அவ்விக்ரகத்தை அவர்களுக்கு திரு ஆராதனமாக இரங்கி அருளி அவர்களைக் குறித்து –
ஸ்ரீ செல்வப்பிள்ளை கிணற்றின் கரையில் பிள்ளையாய் இருக்கும் -பேணிக் கொண்டு போருங்கோள் என்று நியமித்து அருளி –
அவர்கள் கையிலே ஸ்ரீ செல்வப்பிள்ளையை அடைக்கலமாகக் காட்டிக் கொடுத்து அருளி -திரு விளக்கு திருமாலை அமுதுபடி சாத்துப்படி
முதலான உபசாரங்கள் எல்லாம் நன்றாகப் பேணிச் செய்து கொண்டு துரோக புத்தியால் ஒரு காலும் தீங்கு நினையாதே
அன்யோன்யம் சஹ்ருதராய் ஊழிய கைங்கர்யங்களையும் மறவாதே புத்தி புரஸ்சரமாக பண்ணிப் போருங்கோள் என்று
தம் திருவடிகளைத் தொடுவித்துக் கொண்டு நியமித்து அருளி ஸ்ரீ செல்வப்பிள்ளையை பிரிய மாட்டாமல்
திருவடிகளை முகந்து விழுவது எழுவது தொழுவ தாய்த் திரு உள்ளம் உருகித் திருக் கண்கள் துளிக்கத் திவ்ய விமானத்தையும்
திருப்பதியையும் திருச் சோலை எழில்களையும் திருமண் குவைகளையும் புரிந்து புரிந்து பார்த்து பார்த்து அஞ்சலித்து
மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு புத்ர வாத்சல்யம் பின்னே தள்ள ஸ்ரீ நம்பெருமாள் அருள் முன்னே நடத்த –
ஒரு நடையிலே ஒன்பது நடை நடந்து ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளினார் –

—————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் -/ஸ்ரீ பட்டர் வைபவம்-/வெள்ளை சாத்துதல்–ஸ்ரீ கொங்கு பிராட்டி வ்ருத்தாந்தம் —

February 18, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ பட்டர் வைபவம்-

ஸ்ரீ உடையவரும் இப்படி ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்கி வாழ்ந்து அருளுகிற காலத்திலே இவரை ஆஸ்ரயித்த முதலிகளில்
ஸ்ரீ கூரத்தாழ்வான் சகல ஸாஸ்த்ர வித்தமராய் -ஆச்சார்ய பத ஏக நிஷ்டராய் -அபிகமந உபாதான இஜ்யா ஸ்வாத்யாய யோகங்கள் ஆகிற
பஞ்சகால பராயணராய் -விகித விஷய விரக்தராய் இரா நிற்க -ஒரு வர்ஷா காலத்திலே மத்யாஹ்ந காலம் அளவாக வர்ஷம் வர்ஷிக்க
சங்கவ காலம் தவறி மத்யாஹந காலம் ஆனவாறே உபாதான காலம் தவறி அஹந்யஹநி சிஷ்டாக்ர புண்ய ஜன க்ருஹங்களில்
உபாதானம் பண்ணி வந்தே திருமேனி யாத்ரை நடக்க வேண்டுகையாலும் அற்றைக்குத் திரு மாளிகையில் சஞ்சித பதார்த்தம் ஒன்றும்
இல்லாமையாலும் நீராடி எழுந்து அருளி திருவடி விளக்கி ஒரு பலத்தை அமுது செய்யப் பண்ணி தீர்த்த ஸ்வீ காரம் பண்ணி இருக்க
சாயம் காலமானவாறே தத் காலிக கர்மத்தைச் செய்து அருளி ஸ்ரீ நம்பெருமாளை சேவித்து திருவாய் மொழி அனுசந்தானமே தாரகமாக
பட்டினியே கண் வளர்ந்து அருள அவ்வளவில் நம்பெருமாள் பெரிய அவசரம் அமுது செய்து அருளி திருச் சின்னம் பணிமாற

ஸ்ரீ ஆண்டாள் காஹள நாதம் கேட்டு -உம்முடைய பக்தர் பட்டினியே இருக்க நீர் என்ன குலாவி குலாவி அமுது செய்து அருளுகிறீர் என்ன
அவ்வாக்கியம் பெரிய பெருமாள் திருச் செவியில் உறுத்தி திண்ணையிலே நித்திரை பண்ணிக் கொண்டு இருந்த ஸ்ரீ உத்தம நம்பி கனவிலே
ஸ்ரீ பெருமாள் எழுந்து அருளி -நம்பீ ஆழ்வான் இன்றைக்கு உபவசித்து இருக்கிறார் -நம் அக்கார அடிசில் தளிகையை உபய சத்ர சாமர சகல வாத்ய
ஸஹிதமாக சிரஸா வஹித்துக் கொண்டு போய்க் கொடும் என்று அருளிச் செய்ய
ஸ்ரீ உத்தம நம்பியும் ஸ்வப்னம் தெளிந்து கண்களை விழித்துப் பார்த்து த்வரித்து எழுந்து இருந்து ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்த படியே
தளிகையை தாமே சிரஸா வஹித்துக் கொண்டு அகில வாத்யத்துடன் ஸ்ரீ ஆழ்வான் திரு மாளிகை செல்ல
ஸ்ரீ ஆழ்வானும் பதறி எழுந்து இது என் என்று திகைத்து எதிரே செல்ல ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ நம்பெருமாள் உமக்கு அக்கார வடிசில் தளிகை
அனுப்பி உள்ளார் அங்கீ கரியும் என்ன ஸ்ரீ ஆழ்வானும் தளிகையை மஹா பிரசாதம் என்று சிரஸா வஹித்துக் கொண்டு
அடியேனுக்கு அடியிலே சர்வ அபீஷ்டமும் தந்து அருளினார் -இது கிரயத்தளிகையாய் இருக்கும் -என்று தமக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்குமாக
இரண்டு திரளை அங்கீ கரித்து சேஷித்ததை போக விட்டு அருளி ஸ்ரீ ஆண்டாளை பார்த்து நீ என்ன நினைத்தாய் என்ன –
அவளும் அடியேன் ஒன்றும் நினைக்கவில்லை -ஸ்ரீ பெருமாள் அவசரம் அமுது செய்து அருளி திருச் சின்னம் பணி மாறினவாறே-
உம்முடைய பக்தர் இப்படி பட்டினியாய் இருக்க நீர் என்ன குலாவி குலாவி அமுது செய்கிறீர் என்றேன் அத்தனை என்று விண்ணப்பம் செய்ய
நீ இப்படிச் சொல்லலாமோ என்று ஸ்ரீ ஆண்டாளை வெறுத்து பிரசாதத்தை தாமும் ஸ்வீ கரித்து அவளுக்கும் பிரசாதித்து அருளினார் –
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ சீராமப் பிள்ளையும் அவதரிக்கைக்கு ஹேது இத்திரள்கள் இறே

இப்படி ஸ்ரீ நம்பெருமாள் அனுக்ரஹத்தால் ஸ்ரீ ஆழ்வானுக்கு ஒரு குமாரர் வைகாசி அனுராதத்தில் திருவவதரித்து அருள
திரு நாமம் சாத்துகைக்கு முதலான உஜ்ஜீவன அம்சத்துக்கு ஸ்ரீ உடையவரே கடவர் என்று ஸ்ரீ ஆழ்வான் தமக்கு அதில்
அந்வயம் அற்று இருக்க ஸூத்யாசவ்ச நிவ்ருத்தி யானவுடனே பத்து நாளும் கடந்த இரண்டா நாள் ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்ரீ ஆழ்வான் திரு மாளிகை ஏற எழுந்து அருளி ஸ்ரீ எம்பாரைப் பார்த்து ஸ்ரீ ஆழ்வான் திருக் குமாரரை எடுத்துக் கொண்டு
வாரும் என்ன அவரும் உள்ளே ஸ்ரீ ஆண்டாள் பக்கலிலே சென்று குலக் கொழுந்தான குமாரரை தம் மார்பிலே அணைத்துக் கொண்டு
த்ருஷ்ட்டி தோஷாதிகள் வாராத படி பந்தணை தீரக் குழந்தைக்கு ரக்ஷணார்த்தமாக த்வய அனுசந்தானத்துடன் மங்களா சாசனம்
பண்ணிக் கொண்டு வந்து ஸ்ரீ எம்பெருமானார் தண் தாமரைக் கண்களால் குளிரக் கடாக்ஷித்து அருளும்படி திருக்கைத்தலத்தே
பிடித்து அருள ஸ்ரீ உடையவரும் ஹர்ஷ பிரகர்ஷத்துடன் ஆனந்த அஸ்ருக்கள் பனிப்பக் கடாஷிக்கும் அளவில் சிஸூவினுடைய
பசுகு பசுகு என்கிற தேஜோ விசேஷத்தையும் திருமுக ஒளியையும் கண்டு ஸ்ரீ எம்பாரே த்வயம் பரிமளியா நின்றது என் செய்தீர் என்ன
அவரும் சிஸூவுக்கு காப்பாக திவ்ய அனுசந்தானம் பண்ணிக் கொண்டு எடுத்து விடை கொண்டேன் என்ன
ஸ்ரீ உடையவரும் கர்த்தவ்ய அம்சத்துக்கு முற்பட்டீரே என்று திருமேனி பேணுதலுக்கு உகந்து அருளி
இவர் உஜ்ஜீவன அம்சத்துக்கும் நீரே கடவீர் என்று நியமித்து அருளி பசும் குழந்தைக்கு பஞ்சாயுதத் திரு ஆபரணமும் தம் திருக்கையாலே சாத்தி அருள
நாம கரணத்திலே ஸ்ரீ எம்பார் திருக்கையாலே திரு இலச்சினையும் சாத்துவித்து ஸ்ரீ பராசர பகவான் திரு நாமமாக ஸ்ரீ பராசர பட்டர் என்ற
திரு நாமத்தையும் சாத்தி ஸ்ரீ ஆளவந்தாருடைய இரண்டாம் இழவையும் தீர்த்து அருளினார் –
புத்ரீ க்ருதோ ரங்க துரந்த ரேண பராசர கூர குல ப்ரதீப-கோவிந்த சிஷ்யஸ் ச து யாமுநார்ய மநோ ரதம் பூரித வாந்த்விதீயம் -என்று
இவ்வர்த்தம் ஸ்ரீ லஷ்மீ காவ்யத்திலே ஸ்ரீ உத்தம நம்பியாலும் சொல்லப்பட்டது இறே

அநந்தரம் ஸ்ரீ எம்பார் திருத் தம்பியார் ஸ்ரீ சிறிய கோவிந்தப் பெருமாளுக்கு ஒரு குமாரர் அவதரித்து அருள அத்தைக்கு கேட்டு உகந்து
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ ஆளவந்தார் கிருஷி பலிக்கப் பெற்றதே என்று அவர் திருமாளிகை ஏற எழுந்து அருளி அவர் குமாரரையும் கிருபையாலே
கடாக்ஷித்து அருளி அக்குமாரருக்கு ஸ்ரீ பராங்குச நம்பி என்று ஸ்ரீ நம்மாழ்வார் திரு நாமம் சாத்தி அருளி
ஸ்ரீ ஆளவந்தாருடைய மூன்றாம் இழவையும் தீர்த்து அருளினார் —
கோவிந்த ராஜாந்வயஜோ மநீஷீ பரங்குசோ யமுனவை மநஸ்யம் அபா சகார பிரசபன் த்ருதீயம் விராஜதே வ்ருத்தமணி ப்ரதீப -என்று
இதுவும் ஸ்ரீ லஷ்மீ காவ்யத்திலே சொல்லப் பட்டது இறே

பின்பு ஸ்ரீ பெருமாள் மஞ்சள் நீர் குடிப்பித்து ஸ்ரீ பட்டரை புத்ர ஸ்வீ காரம் பண்ணி அருளி திரு மணத் தூண் அருகே
தொட்டில் இட்டு ஸ்ரீ நாச்சியார் சீராட்டி வளர்க்க வளர்ந்து அருளுகிறவர் ஸ்ரீ பெருமாள் அமுது செய்வதற்கு முன்னே தவழ்ந்து சென்று
படைத்து இருந்த தளிகையில் அள்ளி அமுது செய்யும் படி யாயிற்று வளர்ந்து அருளினது
ஸ்ரீ பட்டர் ஐந்து திரு நக்ஷத்ரத்திலே நெடுமாற்கு அடிமை அனுசந்திக்கிற ஸ்ரீ ஆழ்வானை ஐயா சிறுமை பெருமை ஆகிற பரஸ்பர வ்ருத்த
தர்ம த்வயம் ஒரு வஸ்துவில் கிடக்குமோ -ஸ்ரீ ஆழ்வார் சிறு மா மனுசர் என்று இரண்டையும் சேர அருளிச் செய்வான் என் என்று கேட்க –
ஸ்ரீ ஆழ்வானும் நல்லீர் கேட்டபடி அழகு ஈது -நீர் அநுபநீதர் ஆகையால் உமக்கு இப்போது சாஸ்திரம் கொண்டு இசைவிக்க ஒண்ணாது –
ப்ரத்யக்ஷத்தில் உமக்கு காட்டுகிறோம் -கேளீர் திருமேனி சிறுத்து ஞானம் பெருத்து இருக்கிற
ஸ்ரீ சிறியாச்சான் ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் போல்வாரைக் காணும் சிறு மா மனுசர்-என்கிறது
என்று இசைவித்து அருளிச் செய்தார்

ஸ்ரீ பட்டர் பின்னையும் ஒரு நாள் திரு வீதியிலே புழுதி அளைந்து விளையாடா நிற்க ஒருவன் சர்வஞ்ஞன் பட்டன் வந்தான் -என்று
அதி சம்பிரமத்துடன் காளமூதி வர இவரும் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
முதலான பெரியோர்கள் இருக்கும் இடத்தில் இவன் யாரடா சர்வஞ்ஞ பட்டன் என்று விருதூதி வருகிறான் என்று இரண்டு திருக்கையாலும்
புழுதியை அள்ளிக் கொண்டு அவனைப் பார்த்து நீ சர்வஞ்ஞன் அன்றோ இது எத்தனை சொல் என்ன –
அவன் அதுக்கு ஒன்றும் சொல்ல மாட்டாதே லஜ்ஜித்து வாய் அடைத்து கவிழ் தலையிட்டு நிற்க ஸ்ரீ பட்டரும் அவனைப்பார்த்து –
கெடுவாய் இது ஒரு கைப்புழுதி என்று சொல்லி சர்வஞ்ஞன் என்று விருதூதித் திரிய மாட்டாதே அஞ்ஞனாய் விட்டாயே –
இனி உன்னுடைய சர்வஞ்ஞன் என்கிற விருதையும் ஸம்ப்ரமத்தையும் பொகடு என்று காளத்தையும் பறியுங்கோள்-என்கிற மழலைச் சொல்லக் சொல்ல
அது கேட்டு இவர் ஆருடைய குமாரர் என்ன ஸ்ரீ ஆழ்வான் குமாரர் -என்று அங்குள்ளார் சொல்ல கேட்டு அவன் புறப்பதன் குட்டி தவழுமோ என்று
ஆச்சர்யப்பட்டு ஸ்ரீ பட்டரை தன் தண்டிகையிலே வைத்துக் கொண்டு ஸ்ரீ ஆழ்வான் திருமாளிகை வாசலிலே சென்றவாறே
ஸ்ரீ பொன்னாச்சியார் கண்டு இவர் செய்த சிறுச் சேவகத்தைக் காட்டி வாரி எடுத்துக் கொண்டு த்வய அனுசந்தானத்தாலே ரக்ஷை இட்டு
தம்பரமல்லன ஆண்மைகளைத் தனியே நின்று தான் செய்வாரோ எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன் என்று
முந்தானையால் இவரை முட்டாக்கியிட்டு உள்ளே கொண்டு புகுந்து கண் எச்சில் உண்டாக இவரைத் திரு வீதியிலே போக விடுவார்களோ -என்று வெறுத்து
ஸ்ரீ ஆண்டாள் திருக்கையிலே கொடுத்து ஸ்ரீ பாத தீரத்தத்தைத் தெளித்து இவ்விபூதியில் இவர் நெடுநாள் தங்குமவரோ -என்று வயிறு பிடித்து அருளினார்

ஸ்ரீ பட்டரை உபநீதரான பின்பு வேத அத்யயனம் பண்ணுவிக்க இவர் மேதை இருக்கும்படி -ஒரு நாள் சந்தை இட ஓதி அதின் மற்றை நாள்
ஓதுகைக்கு எழுந்து அருள மறித்துச் சந்தையிடப் புக்கவாறே ஓதுகிற கடையிலே நின்றும் போந்து விளையாடிக் கொண்டு எழுந்து அருளி இருக்க
எல்லாரும் ஓதா நிற்க இவர் புறப்பட்டு வந்தார் என்று ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டாளும் கேட்டு
அப்பரே எல்லாரும் ஓதா நிற்க நீர் ஓதாமல் வருவானேன் என்ன
இவரும் அவர்கள் ஓதின இடத்தையே ஓதா நின்றார்கள் என்ன -ஆகில் நீர் நேற்றைச் சந்தை இட்ட ப்ரஸ்னத்தைச் சொல்லிக் காணீர் என்ன
சந்தை விட்டபடியே உச்சரித்துக் காட்டி அருள ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டாளும் பயப்பட்டு
இன்னம் சிறிது நாள் இவரை ஓத விட ஒண்ணாது -என்று தங்களிலே சங்கித்து இருந்தார்கள் –

பின்பு ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ எம்பாரும் ஸ்ரீ பட்டருக்கு அர்த்த சிஷைகளும் தத்வ சிஷைகளும் பண்ணி வைத்தார்கள்
ஸ்ரீ பெருமாள் ஒரு கால் திருத் திரையை வளைத்துக் கொண்டு ஏகாந்தமாக எழுந்து அருளி இருக்க ஸ்ரீ பட்டர் திருவடி தொழப் புக
ஸ்ரீ பெருமாள் முனிந்து புறப்பட விடத் திரு உள்ளமாக அவர் புறப்பட அளவிலே அவனை அழையுங்கோள்-நம் ஸ்ரீ பட்டருக்கு அருளப்பாடு என்ன –
இவரும் உள்ளே புகுந்து தண்டன் இட்டு நின்ற அளவில் ஸ்ரீ பெருமாளும் நாம் புறப்பட விட்ட போது என் நினைந்து இருந்தாய் என்ன –
ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சியாருமாக நினைத்து இருந்தேன் -என்ன -முன்பு நம்மை நினைத்து இருந்தபடி எங்கனே என்று கேட்டு அருள –
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டாளுமாக நினைத்து இருந்தேன் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பெருமாளும் நம் ஆணை நம்மை முன்பு போலே நினைத்து இரும் -என்று திரு உள்ளமாய் அருளினார் –

ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ பட்டருடைய விவாஹோசி தவய பரிணாமத்தைக் கண்டு ஸ்ரீ உடையவருடன் பிள்ளைக்கு விவாஹம் பண்ணி வைக்கும்படி
எங்கனே -நம் உறவு முறையார் ப்ராக்ருதராய் இரா நின்றார்கள் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ பெரிய நம்பி திருமேனி சம்பந்திகளான ஸ்ரீ வைஷ்ணவர் சந்தானிகர் இடத்திலே றே என்ன
ஸ்ரீ ஆழ்வானும் சம்மதித்து ஸ்ரீ ஆண்டாளுடன் ஆலோசித்து ஸ்ரீ உடையவரை முன்னிட்டுக் கொண்டு அவர்கள் இடத்தே பெண் கேட்க
அவர்களும் ஸ்ரீ பட்டருடைய ஆபிஜாத்யம் கண்டு கொடுக்கத் தேட புது சம்பந்தம் என்று ஒரு கால் இசையாது இருந்தார்கள்
ஸ்ரீ ஆண்டாள் ஒருநாள் ஸ்ரீ ஆழ்வானைப் பார்த்து பிள்ளைகள் பெருத்தார்கள் -ஒரு கார்யம் செய்விக்க வேண்டாவோ என்ன
ஸ்ரீ ஆழ்வானும் ஈஸ்வர குடும்பத்துக்கு என்னைக் கரையச் சொல்லுகிறாயோ என்று அருளிச் செய்து
ஸ்ரீ பெரிய பெருமாளைத் திருவடி தொழுது மடங்குகிற போது -பிள்ளைகள் பெருத்தார்கள் -ஒரு கார்யம் செய்விக்க வேண்டாவோ
என்று சொல்லுகிறார்கள் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ பெருமாளும் திரு உள்ளம் பற்றி -நீரோ அதற்க்கு கடவீர் – நாம் அன்றோ –
தகுதியாகச் செய்விக்கிறோம் நீர் போம் என்று திரு உள்ளமாய் அருளிப் பெண் கொடுக்கும் படி அவர்களுக்கு ஸ்வப்னம் காட்டி அருள
மற்றை நாள் தாங்களே கொடுக்கிறோம் என்று வந்து

—————————————–

ஸ்ரீ உடையவர் சந்நியசித்து அருளுகிற போது சரீர சம்பந்தியை விட வேண்டுகிறதோ என்ன –
நம் ஸ்ரீ முதலி ஆண்டானை ஒழிய சன்னியசித்தோம் என்று அருளிச் செய்ய –
இப்படி அருளிச் செய்யலாமோ என்று ஸ்ரீ பாதத்து முதலிகள் கேட்க
இவரும் கையில் த்ரி தண்டத்தை விடில் அன்றோ நம் ஸ்ரீ முதலி ஆண்டானை விடுவது என்று அருளினார்

ஸ்ரீ முதலியாண்டான் திருவாய் மொழி ஓதினபடி -ஒரு நாள் ஸ்ரீ எம்பெருமானார் திருப் பள்ளிக் கட்டிலிலே ஏறி அருளி
ஒரு பாட்டுச் சந்தை இட்டவாறே -ஸ்ரீ முதலியாண்டான் பரவசராய் அருள இத்தைக்கண்ட ஸ்ரீ எம்பெருமானாரும் –
வேத வேத்யே பரே பும்சி ஜாதே தசாரதாத்மஜே வேத ப்ராசேதசாதா சாஷாத் ராமாயணாத்மநோ -என்னுமா போலே
வேதங்களும் ஸ்ரீ ஆழ்வார் முகேன திருவாய் மொழியாக வந்து அவதரித்தது ஓன்று அன்றோ என்று அருளிச் செய்தார் –

ஸ்ரீ பெருமாள் பெரிய திருநாள் கண்டு அருளித் திருக் காவேரியில் தீர்த்தம் பிரசாதிக்க எழுந்து அருளுகிற போது
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ முதலியாண்டான் திருக்கைத்தலம் பற்றி எழுந்து அருளி நீராடி மீண்டு எழுந்து அருளும் போது
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் திருக்கைத்தலம் பற்றி எழுந்து அருள சேவித்து இருந்த முதலிகள் இதுக்கு அடி என் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவரும் ஜென்மம் உயர்ந்து இருக்கச் செய்தே தாழ நில்லா நின்றோமே என்கிற அபிமானம் உண்டே அல்லாதார்க்கு –
அக்கொத்தையும் இல்லாதவர் இறே இவர் என்று அருளினார்

ஸ்ரீ பெரிய நம்பி திருமகளாரான ஸ்ரீ அத்துழாய் புக்கத்திலே வாழும் காலத்திலே ஒரு நாள் தீர்த்த மாடத் துணை வர வேணும் -என்று
மாமியாரை அபேக்ஷிக்க அவளும் உன் சீதன வெள்ளாட்டியைக் கொண்டு போ என்று கடுத்துச் சொல்ல ஸ்ரீ நம்பி பக்கலிலே வந்து
ஐயா என்னை இப்படிச் சொன்னாள் என்ன -ஸ்ரீ நம்பியும் நாம் அறியோம் உங்கள் சீயருக்கு சொல் என்ன
இவரும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் அருகில் இருந்த ஸ்ரீ முதலியாண்டானை -உமக்கு இந்தாரும் சீதன வெள்ளாட்டி –
என்று கொடுத்து போம் என்ன -ஸ்ரீ ஆண்டானும் கூட எழுந்து அருளி நீராடக் பண்ணுவித்துக் கொண்டு வந்து அவருடைய புக்ககத்திலே நின்று
தாச வ்ருத்திகளைச் செய்யத் தொடங்க -அவருடைய புக்ககத்தார் ஸ்ரீ ஆண்டான் இது என் என்ன -என்னை வரவிட்ட ஸ்ரீ உடையவரைக் கேளுங்கோள்-
ஆச்சார்யர் சொன்னது செய்ய வேணுமே -என்ன அவர்களும் ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்து ஏறப் போய் ஸ்ரீ நம்பீ ஸ்ரீ முதலியாண்டானை வரவிட்டு
எங்களை இப்படி நசிப்பிக்க வேணுமோ என்ன ஸ்ரீ நம்பியும் நாம் அறிந்தோமோ ஸ்ரீ உடையவரைக் கேளுங்கோள் என்ன
அவர்களும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ ஆண்டானை ஸ்ரீ அத்துழாயுக்கு சீதன அடிமையாகத் தந்தோம் –
அவர் அங்கு நிற்கை உங்களுக்கு அநிஷ்டமாகில் இங்கு இருந்து அடிமை செய்கிறார் என்று அழைப்பித்துக் கொண்டு அருளினார் –

ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ மாறனேர் நம்பியை ப்ரஹ்மேதத்தால் சமஸ்கரித்துப் பள்ளிப் படுத்து அருள இது கேட்டு ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்து ஏறச் சென்று தண்டன் சமர்ப்பித்து -சீயா சம்சாரம் சிலுகிடாத படி அடியேன் ஒரு வழியாலே வேலியிட்டு வர
தேவரீர் ஒரு வழியாலே பிரித்து அருளா நின்றதே என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்பியும் வாரீர் ஸ்ரீ உடையவரே இஷுவாகு வம்சத்தில் அவதரித்து சாமான்ய தர்மத்தை வெளியிட்டு அருளின ஸ்ரீ பெருமாளைக்
காட்டில் நான் பெரியவனோ-பெரிய உடையாரைக் காட்டில் இவர் தண்ணியரோ
சாமான்ய தர்மநிஷ்டரான தர்மபுத்திரரைக் காட்டில் நான் பெரியவனோ ஸ்ரீ விதுரைக் காட்டில் இவர் தண்ணியரோ
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை கடல் ஓசையோ என்று அருளிச் செய்ய ஸ்ரீ உடையவரும் உகந்து சம்மதித்து இருக்கச் செய்தே
ஸ்ரீ மாறனேர் நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளும் போது ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளே சரணம் என்னுதல்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் என்னுதல் செய்யக் கண்டிலோமே இது என் என்று ஸ்ரீ உடையவருடனே ஸ்ரீ பெரிய நம்பி அருளிச் செய்து அருள
ஸ்ரீ உடையவரும் அப்போது அவருக்கு ஸ்லோஹ த்வய அனுசந்தானமாய் இருந்ததாய் கொள்ளீர் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்பியும் அது பெண் கண்ட பிச்சன் வார்த்தை அன்றோ என்று அருளிச் செய்து அருள
ஸ்ரீ உடையவரும் பெண்ணினுடைய நித்ய யோகத்தை திரு உள்ளம் பற்றாது ஒழிகிறது என் என்று விண்ணப்பம் செய்தார்

ஸ்ரீ உடையவர் ஒரு நாள் ஒருமையை அழைத்துக் கொண்டு உள்ளே எழுந்து அருளி கதவை அடைத்து ஏகாந்தத்தில் சஞ்ஜையாலே
தம் திருவடிகளைத் தொட்டிக் காட்டி அருள -அவனும் அதுவே தஞ்சம் என்று புத்தி பண்ணி இருக்க-
ஸ்ரீ ஆழ்வான் இத்தை கதவின் புரையிலே கண்டு ஐயோ ஸ்ரீ கூரத்தாழ்வானாகப் பிறந்து பறக்க சாஸ்திரங்களைக் கற்றுக் கெட்டேன்-
ஒன்றும் அறியாத ஊமையாகப் பிறந்தால் அடியேனுக்கும் ஸ்ரீ உடையவர் இரங்கி அருளுவாரே என்று மோஹித்தார் என்பது பிரசித்தம் இறே

ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி திருக் கோட்டியூரிலே மேல் தளத்தின் மேலே படிக்கதவை விழ விட்டு த்யானித்துக் கொண்டு இருக்க
ஸ்ரீ உடையவர் அங்கே எழுந்து அருளி ஸ்ரீ நம்பியைக் குறித்து -த்யானம் எது -மந்த்ரம் எது -என்று கேட்டு அருள –
ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ ஆளவந்தார் வடவாற்றிலே நீராடி அருளும் போது அகமர்ஷணம் பண்ணி முழுகி இருந்தால்
அவர் திரு முதுகு வல்லான் கடாரம் கடாரம் கவிழ்த்தால் போலே இருக்கும் அதுவே த்யானம் –
யமுனைத்துறைவர் என்கிற இதுவே மந்த்ரம் என்று அருளிச் செய்து அருளினார்
ஆகையால் ஆச்சார்ய விக்ரஹமே சதா த்யேயம் என்றும் தன் நாமமே சதா ஜப்யம் என்றும் ஸ்ரீ உடையவருக்கு உபதேசித்தார் ஆய்த்து

——————————————–

வெள்ளை சாத்துதல்–ஸ்ரீ கொங்கு பிராட்டி வ்ருத்தாந்தம் –

பாலமூக ஜடாந்தாஸ் ச பங்கவோ பதிராஸ் ததா -சதா சார்யேண சந்த்ருஷ்டா ப்ராப்நு வந்தி பராங்கதிம் -என்கிறபடியே
பெண்ணும் பேதையும் எல்லாரும் சம்சார உத்தீர்ணமாம் படி சர்வரையும் இப்படி விசேஷ கடாக்ஷம் செய்து கொண்டும்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ முதலியாண்டான் ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் முதலான முதலிகளுக்கு
ஸ்ரீ பாஷ்யம் பிரசாதியா நின்று கொண்டும் ஸூகமே வாழ்ந்து அருளுகிற காலத்தில்
ராஜ்யம் பண்ணுகிற சோழ ராஜா துஸ் சைவன் ஆகையால் வேத வருத்தமான கள்ளப் பொய் நூலாகிய சைவ ஆகமத்தை
த்ருடதர ப்ரமாணமான மெய்ந்நூல் என்று அத்யவசித்துத் தானும் தன் புரோஹிதனுமாய் கூட இருந்து தன்னுடைய நாட்டில் உள்ள
வித்வான்களை எல்லாம் திரட்டி -சிவாத் பரதரம் நாஸ்தி -என்று ஓலைக்கு எழுத்திடச் சொல்லித் தண்டிக்க
சிலர் அவனுடைய ஆஜ்ஜைக்கு அஞ்சியும் சிலர் அர்த்த ஷேத்ராதிகளையும் ஆசைப்பட்டு எழுத்திட்டார்கள் –
இத்தைக் கண்ட நாலூரான் இந்த ஆபாசர் திட்டத்தால் என்ன பிரயோஜனம் உண்டு -ஸ்ரீ ராமானுசனும் ஸ்ரீ கூரத்தாழ்வானும் இட்டால் அன்றோ
இட்டாவது என்ன சோழனும் அப்பொழுதே சில மனுஷ்யரைப் பார்த்து ஸ்ரீ ராமானுசனை அழைத்துக் கொண்டு வாருங்கோள் என்று
ஸ்ரீ கோயிலுக்கு வரக் காட்ட அந்த ராஜ மனுஷ்யர் ஸ்ரீ உடையவர் திரு மடத்து வாசலிலே வந்து இராமானுசன் எங்கே என்று கேட்க
இச் செய்தியை ஸ்ரீ உடையவருக்கு நீராட்டத் திரு மஞ்சனம் முகந்து கொடுக்கிற ஸ்ரீ கூரத்தாழ்வான் திருச்செவியிலே ஒரு வைஷ்ணவர் வந்து
ரஹஸ்யமாக விண்ணப்பம் செய்ய ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ உடையவருடைய த்ரிதண்ட காஷாயாதிகளைத் தரித்துக் கொண்டு
ஸ்ரீ உடையவருக்கும் விண்ணப்பம் செய்யாதே ராஜ மனுஷ்யருடன் போகத்தேட அவ்விசேஷம் கேட்டு
ஸ்ரீ ஆழ்வானுடன் ஸ்ரீ பெரிய நம்பியும் புறப்பட்டு எழுந்து அருள அவர்களை அழைத்துக் கொண்டு போனார்கள் –

அநந்தரம் ஸ்ரீ உடையவரும் த்ரிதண்ட காஷாயாதிகளைத் தாருங்கோள் என்ன ஸ்ரீ கூரத்தாழ்வான் தரித்துக் கொண்டு
ராஜ மனுஷ்யருடன் எழுந்து அருளினார் என்று ஸ்ரீ முதலியாண்டான் விண்ணப்பம் செய்ய -ஆகில் அவருடைய வெள்ளையைத் தாருங்கோள்
என்று வாங்கித் தாம் சாத்திக் கொண்டு ஸ்ரீ ஆழ்வானுக்கும் ஸ்ரீ பெரிய நம்பிக்கும் என்ன தீங்கு வரப் புகுகிறதோ என்று போரக் கிலேசித்து இருக்க
ஸ்ரீ முதலியாண்டான் உள்ளிட்ட முதலிகள் எல்லாம் தேவரீர் இங்கு இருக்க ஒண்ணாது என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவரும் இனிச் செய்ய அடுப்பது என் என்று வியாகுல அந்தக்கரணராய் ஸ்ரீ பெரிய பெருமாள் திரு முன்பே சென்று திருவடிகளிலே சரணம் புக்கு
வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியனகள் பேசில் என்று தொடங்கி -தலையை ஆங்கே அறுப்பதே
கருமம் கண்டாய் அரங்க மா நகருளானே-என்று ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தபடி இப்போது சடக்கென அவன் தலையை அறுக்கக் கூடாது –
அவன் பரிகரவானாகையாலே முகாந்தரேண செய்து வாரா நின்றேன் -என்று விண்ணப்பம் செய்து முதலிகளும் தாமுமாக எழுந்து அருளா நிற்க
பின்னையும் ராஜ மனுஷ்யர் பின் தொடர -பின்னே ஆள் தவரித்து வருகிறது என்று முதலிகள் விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ உடையவரும் வழியில் மணலை அள்ளி -கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா தடவரைத்தோள் சக்ரபாணீ
சார்ங்க வில் சேவகனே -என்று இத்தை ஓதி அவர்கள் வருகிற வழியிலே ஒழுக்கி வாருங்கோள் என்ன
முதலிகளும் அப்படியே செய்ய ராஜ மனுஷ்யர் அந்த மணலை மிதித்து அப்பால் அடியிடப் போகாமல் போகிற பார்ப்பார் மந்த்ர வாதம்
பண்ணிப் போனார்கள் என்று மீண்டு போக -ஸ்ரீ உடையவரும் முதலிகளுமாக அரங்கத்து உறையும் இந்த துணைவனே
வழித் துணையாக எழுந்து அருளினார்கள்

ஒரு மலை அடியிலே ஸ்ரீ திருமலை நல்லான் சிஷ்யர்களான சில வேட முதலிகள் புலம்பாவா நிற்க அங்கே
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ எம்பெருமானாரை தேடித் கொண்டு எழுந்து அருள அவர்கள் இவரை திரு நாமமே குறியாக –
நீர் எங்கிருந்து எழுந்து அருளுகிறீர் என்று கேட்க -ஸ்ரீ கோயிலில் நின்றும் வருகிறோம் என்ன –
அவர்களும் எம்பெருமானாருக்கு ஒரு குறையும் இல்லையே -ஸ்ரீ பெரிய பெருமாள் திருச் செல்வத்துக்கு ஒரு குறையும் இல்லையே என்ன –
என்று கேட்க -இவரும் என்ன பெரிய பெருமாள் -என்ன திருச் செல்வம் -ஸ்ரீ எம்பெருமானார் சோழன் வ்யாஜேன வெண் பரிதானம் தரித்து
எழுந்து அருளினார் -இன்ன இடத்தே எழுந்து அருளினார் என்று தெரியாது என்று அருளிச் செய்ய –
அவர்களும் அவ்வார்த்தை கேட்டு வ்யாகுலப்பட்டு புலம்பாவுகை தவிர்ந்து அன்று முதல் ஆறு நாள் பட்டினியே கிடக்க
ஆறாம் நாள் ராத்ரி அம்மலை அடியிலே ஸ்ரீ எம்பெருமானாரும் முதலிகளும் மழையிலே நனைந்து குளிரில் ஈடுபட்டு இவர்கள் புனத்தில்
நெருப்பு ஒளி கண்டு ஸ்ரீ உடையவரும் நம்மை அங்கே ஏறக் கொண்டு போங்கள் என்று அருளிச் செய்ய முதலிகளும் அங்கே ஏற எழுத்து எழுந்து
அருளுவித்துக் கொண்டு போய் வழி எங்கே பிள்ளைகாள் என்ன அவர்களும் ப்ராஹ்மணர் குரலாய் இருந்தது பெரு விடாயோடே
ஒரு குரலாய் இரா நின்றது என்று ஓடி வந்து வேலியைப் பிரித்து இங்கே வாருங்கோள் என்று அழைத்துக் கொண்டு போய்
சாத்துகைக்கு திருப் பரியட்டங்களும் கொடுத்து சாத்தி இருந்த திருப் பரி யட்டங்களையும் உலர விட்டுக் குளிர் போகக் காய்ச்சி ஒற்றி
எங்கு நின்றும் எழுந்து அருளுகிறீர்கள் என்று கேட்க
இவர்களும் ஸ்ரீ கோயிலில் நின்றும் வருகிறோம் என்ன
ஸ்ரீ எம்பெருமானார் செய்கிறது என் என்று கேட்க
முதலிகளும் நீங்கள் எம்பெருமானாரை அறிந்தபடி எங்கனே என்ன
நாங்கள் நல்லான் அடிமைகள் -அவர் எங்களுக்கு ஹிதம் பிரசாதிக்கும் போது -நமக்கு எல்லாம் பரமாச்சாரியார் ஸ்ரீ எம்பெருமானாராய் இருக்கும் –
ஆகையால் எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று இருங்கோள் என்று அருளிச் செய்வார் என்று விண்ணப்பம் செய்ய
முதலிகளும் ஆகில் இவரே ஸ்ரீ உடையவர் என்று காட்டி அருள அவர்களும் ஸ்ரீ பாதத்தைக் காட்டிக் கொண்டு அழுது வ்யாகுலப்பட்டுத்
திருவடிகளிலே விழுந்து சேவித்துத் தேனும் தினையும் கொண்டு வந்து சமர்ப்பித்து
இக்கதிரை வறுத்து இடித்துத் தேனில் கலந்து அமுது செய்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய
முதலிகளும் அப்படியே அமுது செய்து அருளி அற்றைக்குக் கண் வளர்ந்து அருளினார்கள் –

மற்றை நாள் விடிவோரை வேட முதலிகளில் ஒருவரையும் தம் ஸ்ரீ பாதத்து முதலிகளில் ஒருவரையுமாக ஸ்ரீ கோயிலுக்குப் போகவிட்டு
ஸ்ரீ உடையவருடனே மற்ற நாற்பத்தஞ்சு திரு நாமமும் எழுந்து அருளினார்கள் -அவ்வேட முதலிகளும் இவர்களை மலைக்கு மேலே
அறுபது காத வழி கொண்டு போய் ஒரு வேட முதலியகத்தே விட -அவ்வேட முதலி பகல் எல்லாம் வேட்டைக்குப் போய் வந்து உண்ணப் புக்கவாறே –
ப்ராஹ்மணர்கள் பட்டினியே இருக்க நாம் உண்ணலாகாது என்று அருகாக ஒரு கிராமத்தில் கட்டளை வாரி என்பான் ஒரு ப்ராஹ்மணன் அகத்திலே
இவர்களைக் கொண்டு போய் விட்டு வேண்டும் கட்டளைகளையும் பண்ணி இப்போதே அமுது செய்யப் பண்ணுவியுங்கோள் என்று சொல்லுங்கோள்
என்று ஆள் கொடுத்துப் போக விட அவர்களும் ஸ்ரீ உடையவரையும் முதலிகளையும் கூட்டிக் கொண்டு போய் அவன் அகத்தே விட்டு
இவர்களை இப்போதே அமுது செய்யப் பண்ணுவியுங்கோள் என்று சொல்லு வேண்டும் கட்டளைகளும் பண்ணுவித்து மீண்டு போனார்கள்

அவ்வகமுடையானுடைய பத்னியும் தண்டன் சமர்ப்பித்து உங்களுக்கு அமுது செய்ய வேண்டாவோ என்று விண்ணப்பம் செய்ய –
முதலிகளும் வேண்டா என்று அருளிச் செய்து அருள -அவளும் உங்களுக்கு சந்தேகிக்க வேண்டா –
அடியேனும் ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை உடையேன் -என்றாள் –
முதலிகளும் நீ ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தபடி எங்கனே என்று கேட்க
அவளும் -நாங்கள் இவ்விடம் வர்ஷம் இன்றியே இருந்தவாறே ஸ்ரீ கோயிலிலே வந்து இருந்தோம் -அங்கே என் அகமுடையாரும் நானும்
ஒரு மச்சு மேலே இருக்கையாய் இருக்கும் -அப்போது ஸ்ரீ எம்பெருமானார் ஏழு திருமாளிகைகளிலே மாதுகரம் பண்ணி அமுது செய்து அருளுவர் –
அவர் திரு வீதியிலே எழுந்து அருளும் போது அகளங்க நாட்டாழ்வான் உள்ளிட்ட முதலிகளும் எல்லாரும் அவர் திருவடிகளிலே சேவிப்பார்கள் –
அவர் ஒரு நாள் மாதுகரத்துக்கு அந்தத் திருமாளிகை ஏற எழுந்து அருள அடியேனும் மச்சில் நின்றும் இறங்கி வந்து இடை கழியிலே தகைந்து நின்றேன் –
அவர் இது என்ன பெண்ணே என்று கேட்டு அருள -நீர் மாதுகரம் பண்ணா நின்றீர் -உம்மை ராஜாக்களும் பட்டணத்து முதலிகளும் தண்டன் இடா நின்றார்கள்
இதுக்கு அடி என் என்றவாறே -ஸ்ரீ உடையவரும் நாம் அவர்களுக்கு பகவத் விஷயத்தில் சில நல்ல வார்த்தை சொல்லுகையாலே
காண் என்று அருளிச் செய்து அருள அந்த நல் வார்த்தையை அடியேனுக்கும் பிரசாதித்து அருளல் ஆகாதோ -என்றேன் –
அப்போது ஹிதம் அருளிச் செய்து எழுந்து அருளினார் -பின்பு எங்கள் நாட்டில் வர்ஷம் உண்டாய் நாங்கள் எங்கள் நாடு ஏறப் போகும் போது
அவர் அருளிச் செய்த நல் வார்த்தையை மறந்தேன் -ஸ்ரீ உடையவரை சேவிக்கப் பெற்றிலேன் என்ற இழவோடே நினைத்து இருக்க –
அற்றைக்கும் அங்கு ஏற எழுந்து அருள அடியேனும் மச்சில் நின்றும் இறங்கி வந்து தண்டன் இட்டு நின்று நாங்கள் எங்கள் நாடு ஏறப் போகா நின்றோம் –
தேவரீர் முன்பு அருளிச் செய்த நல் வார்த்தையை மறந்தேன் என்ன இப்போது ஸ்ரீ உடையவரும் மீளவும் த்வயத்தை நெஞ்சிலே நிலை நிற்கும்படி
குரு பரம்பரா பூர்வகமாக உபதேசித்து மீண்டு எழுந்து அருளத் தேட -அடியேனுக்கு ஆத்ம ரஷையாக ஏதேனும் ஓன்று தந்து அருள வேணும்
என்று விண்ணப்பம் செய்தேன் -அப்போது சாத்தி இருந்த ஸ்ரீ பாதுகைகளை ப்ரசாதித்து அருளினார் –

அடியோங்களும் அன்றே போந்தோம் -பின்னை சேவிக்கப் பெற்றிலோம் -என்றவாறே -ஸ்ரீ உடையவரும் தம் திரு உள்ளத்திலே விசாரித்து அருளி
திருப் போனகம் சமைக்க அருளிச் செய்து -இவள் செய்யுமது பார்த்து இரும் -என்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை வைக்க –
அவரும் பார்த்து இருக்க அவளும் அடைவாகச் சமைத்து உடுத்துப் புடைவையை அவிழ்த்து ஸூத்தமான புடைவையை உடுத்து உள்ளே புகுந்து
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று உச்சரித்து அவர் ஸ்ரீ பாதுகைகளை ஏறி அருளப் பண்ணித் திருவடி விளக்கி
அமுது செய்யப் பண்ணப் புறப்பட்டு முதலிகளுக்கு தெண்டன் சமர்ப்பித்து ஸ்ரீ பாதம் விளக்கி -அமுது செய்ய எழுந்து அருள வேணும் -என்று
விண்ணப்பம் செய்ய முன்பு பார்த்து இருக்கச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவரை அழைத்து -இவள் செய்தபடி என் -என்று கேட்டு அருள –
அவரும் இவள் திருப் போனகம் அடைவாகச் சமைத்து முன்பு உடுத்த புடவையையும் விடுத்து ஸூத்தமான புடைவையையும் உடுத்துத்
திருப் போனகத்தை எடுத்துக் கொண்டு போய் உள்ளே புகுந்து கதவை அடைத்து த்யானம் பண்ணி இருந்து அமுது செய்யப் பண்ணினாள்-

அது கறுத்து நீண்டு இருந்தது – எம்பெருமானாய் இருந்தது இல்லை -என்றவாறே அவளை அழைத்து நீ உள்ளே செய்தது என் என்று கேட்டு அருள
அவளும் முன்பு அடியேனுக்கு தஞ்சமாக பிரசாதித்து அருளின ஸ்ரீ பாதுகைகளை திருவடி விளக்கி அமுது செய்து அருளப் பண்ணி யாய்த்து பிரசாதம் சூடுவது –
இப்போதும் அப்படியே செய்தேன் -என்று விண்ணப்பம் செய்ய -ஆகில் அவை தன்னை இங்கே கொண்டு வந்து காட்டு என்ன –
அவளும் கொண்டு வந்து காட்ட-அவை அங்குத்தைக்கு எதித் தலை நாதன் இராமானுசன் தன் இணை அடிகளுக்கு ஒத்து இருந்தது –
அப்பொழுது ஆகில் இந்தக் கோஷ்டியில் ஸ்ரீ எம்பெருமானார் உண்டோ பார்த்துக் காணாய் என்ன அவளும் திரு விளக்கை ஏற்றிக் கொண்டு வந்து
அடைவே பார்த்து ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளைப் போலே இரா நின்றது -காஷாயம் இல்லாமையால் தெரிகிறது இல்லை என்றவாறே
நான் காண் என்று அருளிச் செய்ய -அவளும் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு அழப் புக்கவாறே கண்ணைத் துடைத்து
ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த வார்த்தை ஒத்து இருந்தது இல்லையாகில் முதலிகள் அமுது செய்யார்கள்-
அத்தை என் செவியில் சொல்லிக் காணாய் என்ன அவளும் விண்ணப்பம் செய்ய -அந்த வார்த்தையும் ஒத்து இருந்தது –
ஆகில் விதுர அந்நாநி புபுஜே ஸூஸீ நிகுண வந்திச-என்கிற பாவனத்வ போக்யத்வங்களை உடைத்தாய் இருந்தது –
இனி முதலிகள் அமுது செய்யக் குறையில்லை என்று அருளிச் செய்து நமக்கு மாத்திரம் கூடாது -ஒரு பகவத் விக்ரஹம் அமுது செய்ய வில்லை -என்ன
அவளும் ஆகில் பாலும் பழமும் சக்கரையும் கொண்டு வந்து சமர்ப்பிக்கிறேன் என்று சமர்ப்பிக்க
இவரும் தம்முடைய எம்பெருமானுக்கு அமுது செய்யப் பண்ணித் தாமும் அமுது செய்து அருள –
முதலிகளும் அமுது செய்து கண் வளர்ந்து அருள –

அப் பெண்பிள்ளை முதலிகள் தளிகை பிரசாதத்தையும் கூட்டிக் கலந்து மச்சிலே இருக்கிற தன் பார்த்தாவை எழுப்பி பிரசாதம் இட்டு
ப்ரஸாதப்படப் பண்ணித் தான் ப்ரஸாதப்படாமல் இருக்க -அவனும் இது என் என்று கேட்க -அவளும் ஸ்ரீ கோயிலில் நின்றும்
ஸ்ரீ எம்பெருமானாரும் முதலிகளும் எழுந்து அருளி இருந்து அமுது செய்ய மாட்டோம் என்று கண் வளர்ந்து அருளினார்கள் என்றவாறே –
அவனும் அதற்கு நான் என்ன செய்ய வேணும் என்ன -நீர் ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயிக்க வல்லீரோ என்ன –
அவனும் இசைந்து பிரத்யயயம் பண்ணிக் கொடுக்க அவளும் உகப்புடன் பிரஸாதப்பட்டு நித்திரை பண்ணினாள் –
மற்றை நாள் பொழுது விடிந்தவாறே எழுந்து இருந்து வந்து ஸ்ரீ உடையவர் திருவடிகளில் தண்டன் சமர்ப்பித்து -இற்றைக்கு எழுந்து அருளி
இருந்து இவரை கிருபை செய்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ எம்பெருமானாரும் அற்றைக்கு அங்கே அவசரித்து அருளி அவளுக்காக அவனுக்கு ஹித உபதேசம் பண்ணி விசேஷ கடாக்ஷம் செய்து அருளி
அங்கே நாலு ஐந்து நாள் எழுந்து அருளி இருந்து த்ரிதண்ட காஷாயாதிகளையும் சம்பாதித்துத் தம் திரு ஆராதனமான
ஸ்ரீ பேர் அருளாளர் சந்நிதியில் வைத்துத் தண்டன் சமர்ப்பித்து முன்பு போலே அவற்றைத் தரித்து அருளினார் –

—————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் சுருக்கம் -ஆறாயிரப்படி-

February 17, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –
நம்பிள்ளை காலம் வரை -ஆறாயிரப்படி –
823-ஸ்ரீ நாதமுனிகள் -5116 முன்பு நம்மாழ்வார் -இவருக்கு பின்பு -400 வருஷம் -கழித்து -திருமங்கை ஆழ்வார்
-3500 வருஷங்கள் -அருளிச் செயல்கள் இல்லாத இருந்த காலம் –
பராங்குச நம்பி தாசர் -வைத்த மா நிதி -கண்ணி நுண் சிறுத் தாம்பு -தானே வைத்த மா நிதி நமக்கு –
நாத முனிகள் கஜானனர் அம்சம் -விஷ்வக்சேனர் கணங்களுக்கு பிரதான உப சேனாபதி -ஸிம்ஹாஸனர் -இப்படி 8 பேர்
93 திரு நக்ஷத்ரம் -இருந்தவர் -காட்டு மன்னார் கோயில் திரு அவதாரம் –
சம்ப்ரதாயம் காட்டும் மன்னார்–917 வரை -கங்கை கொண்ட சோழ புரம் -திருவரசு
ஈஸ்வர பட்டாழ்வார்-திருக் குமாரர் -ஸ்ரீ ரெங்க நாத முனி முழு பெயர் –
-சகோதரி குமாரர்கள் -வரதாச்சார்யார் கிருஷ்ணமாச்சார்யார் மேலை அகத்து ஆழ்வார்-கீழை அகத்து ஆழ்வார் கொண்டு இசையூட்டி
-மதுரையார் மன்னன் -பிடித்த திரு நாமம் அன்றோ -கோகுலம் -நந்தகிராமம் -பிருந்தாவனம் காம்யவனம் —
கோவர்த்தனம் -வடமதுரை -கைங்கர்யம் -செய்து வர –
ஸ்ரீ கோவர்த்தன புரம் நித்ய வாசம் -யமுனைத்துறைவன் -காட்டு மன்னார் கோயில் வீர நாராயணன் -புரத்துக்கு வர சொல்லி ஸ்வப்னம்
-கிருஷ்ண பக்தி வளர்த்து கூட்டி வந்தான் -குடும்ப சகாயம் -வரும் வழி திவ்ய தேசங்களை சேவித்து
-பிந்து மாதவன் வேணி மாதவன் வித்யா ஸ்தலம் -வாரணாசி -புருஷோத்தமன் –
ஸிம்ஹாஸலம் -ஸ்ரீ வராஹ நரசிம்ம க்ஷேத்ரம் -அக்ஷய கிருத்திகை சேவை
-அஹோபிலம் -திரு வேங்கடம் -திருக் கடிகை அக்கார கனி -திருப் புட் குழி -ஹஸ்திகிரி
-திருவஹீந்திர புரம் அடியார்க்கு மெய்யன்-தாச சஹ்யன் தேவநாதன் -ஹயக்ரீவர் -அச்சித்த சதகம் பெண் தன்மையில் தேசிகன்
-திருக் கோவலூர் -திருவாளர் திருப்பதி திரு அரங்கம் -பரிமள ரெங்கன் -ஆராவமுதன் -சேவித்து -பக்தி ரூபாபன்ன ஞானம் வளர்ந்து
-மேல் நாட்டில்மேல் கோட்டையில் இருந்து வந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆரா வமுதே –5-10 திருவாய்மொழி-பாசுரம் சாதிக்க –
குருகூர்ச் சடகோபன் –குழலில் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்தில் இப்பத்து -விண்ணப்பம் செய்ய
12000 உரு -பராங்குச நம்பி தாசர் கண்ணி நுண் சிறுத் தாம்பு -மதுரகவி ஆழ்வார் சிஷ்யர் பரம்பரை –
4000 வருஷங்களாக -ஒரு யோகி இருந்து இருக்க வேண்டும் –
பிரதம பர்வம் 18 அத்யாயம் -சரம பார்வை -18 நக்ஷத்திரங்கள் கழித்து -திருவாதிரையில் -விசாகத்தில் இருந்து
-உம்முடைய வம்சத்தில் ஒருவர் அவரை பிரத்யக்ஷமாக கண்டு கடாஷிப்பார் என்று ஸ்வப்னத்தில் அருளிச் செய்தார்
-ராமானுஜ சதுர்வேதி மங்களம் -திருவாய் மொழிப பிள்ளை பிரதிஷ்டை செய்து அருளி –
குளம்பு நீர் -குளப்படி நீர் குருவி க்கு -ஆற்று நீர் -ஏரி நீர் -74 சிம்ஹாசனாதிபதிகள் மூலம் நமக்கு –
பெரிய முதலியார் -விசேஷ திரு நாமம் நாத முனிகளுக்கு
திருக் கண்ண மங்கை ஆண்டான் -குருகை காவல் அப்பன் —வரதாச்சார்யர் கொள்ளு பேரின் -நிர்மல தாசர் –
வராகாச்சார்யார் பிள்ளை -இவர் தை விசாகம் –
உலகம் ஏத்தும் தென்னானாய் -வடவானாய் குடபாலானாய்–குண பாலனாய் -கிழக்கு திருக் கண்ண புரம்-
காட்டு மன்னார் கோயிலுக்கும் கொள்ளலாம் – ஆளவந்தார்
பெரிய திரு நாள் உத்சவம் ஏற்படுத்தி அருளி சோழ ராஜர் முன்னர் தேவ கானம் மனுஷ்ய கானம்
-4000 பேர் தாளம் தட்ட -இசை கேட்டு -தாளம் இடை நாத ஓசை வைத்து கணிசித்து அருளி –
எண்மர் சிஷ்யர் –உய்யக் கொண்டார் -முதலானோர் திரு வெள்ளறை -திருவவதாரம் உய்யக் கொண்டார் -புண்டரீகாக்ஷர்
-ராம மிஸ்ரர் சிஷ்யர் -மணக்கால் நம்பி -அஷ்டாங்க யோகம் குருகை காவல் அப்பனுக்கு -அருளி -இவரோ
பிணம் கிடைக்கும் பொது திரு மணம் பேச்சு எடுப்பது உண்டோ -என்று சொல்ல -உய்யக் கொண்டார் -திரு நாமம் சாத்தி அருளி
ஈஸ்வர முனி திருக் குமாரர் -உமக்கு ஒரு குமாரர் பிறப்பார் -யமுனைத் துறைவன் பெயர் வைக்க
-யோகமும் அருளிச் செயலும் அவருக்கு அருளிச் செய்ய இவர்களுக்கு சொல்லி –போகிற வில்லிகள்
-பின்னே சென்று மோஹித்து-ஸ்ரீ வைகுண்ட நாதன் சேவை சாதித்து -93 வருஷம் இங்கே இருந்து அருளி –
நாத முனி ஜீமூத்தம் மேகம் ஞான பக்தி மழை-பட்டர்
நாதன் உடையவனாய் ஆனேன் -தேசிகன் -பர ப்ரஹ்மம் உள்ளம் கை நெல்லிக் கனி போலே வைத்தவர் –
வகுள பூஷண பாஸ்கரர் –நாதமுனி அருளிச் செய்த முக்த ஸ்லோகம் –பானு தெற்கில் கண்டவன் தன சொல் உரைத்தான் வாழியே
-மதுர கவி ஆழ்வார் சொல் கண்ணி நுண் சிறுத் தாம்பு சொன்னவர் அன்றோ –
நானிலத்தில் குரு பரம்பரை நாட்டிய நாத முனிகள் திருப்பாதங்கள் வாழியே
886 வருஷம் –உய்யக் கொண்டார் -929 வரை -இருந்தவர் -அதனால் தான் -மணக்கால் நம்பி -நாலாவது ராமர் -லால்குடி அருகில் –
976 -ஆடி பவுர்ணமி உத்தாரடம் -ஆளவந்தார் -திருவவதாரம் -மணக்கால் நம்பி -ஜாத கர்மா -16 சம்ஸ்காரங்கள் -ஆண்பிள்ளைக்கு உண்டே –
யமுனை துறைவன் திருநாமம் சாத்தி ப்ரீதரானார் அஷ்டாக்ஷரம் -துவாதச அக்ஷரம் -சங்கு சக்கரம் லாஞ்சனம் காப்பு –
மஹா பாஷ்ய பட்டர் -சாஸ்திரம் அப்பியாசம் பண்ணும் பொழுது -ஆக்கி ஆழ்வான் செருக்கை அடக்கி
8 நூல்கள் -அருளிச் செய்துகில்லார் ஆளவந்தார் -சித்தி த்ரயம் -சதுஸ் ஸ்லோகி ஸ்தோத்ர ரத்னம் கீதா சங்க்ரஹம் போல்வன
-1017 ஸ்வாமி திருவவதாரம் -16 வயசில் திருக் கல்யாணம் ஸ்வாமிக்கு –
50 பட்டம் இன்று உள்ள திருவரங்க நாராயண ஜீயர்-ஆளவந்தார் படித்துறை –தவராசன் படித்துறை –
மணவாள மா முனி திருவரசு -கிழக்கே கிழக்கே
பன்றி மேட்டு ஆழ்வான் கலகம் -ஆதி கேசவ பெருமாள் ஸ்ரீ வராஹ பெருமாள் -ஸ்ரீ வைஷ்ணவர்களை –
முடித்த ஸ்தலம் தவராசன் படித்த துறை அருகில்
ஸ்ரீ பாஷ்யம் சாதிப்பது போலே பராசர வேத வியாசர் திருக் குருகை பிரான் பிள்ளான் -இன்பம் மிகு ஆறாயிரம் –
திரு நாமம் வைப்பதும் ஸ்ரேஷ்டம் என்ற திரு உள்ளம்
ராமானுஜர் என்னும் ஏரி காத்த ராமர் -கருணைக் கடல் நிரம்பிய ஏரி அன்றோ ஸ்வாமி -நம்மாழ்வார் மேகம் -எம்பார் அருளிச் செய்த
-நாத முனி மலை -பொழிய -இரண்டு அருவிகள் -ஆளவந்தார் -பெருக்காரு –
ஐந்து கிளை நதிகள் மூலம் ஏரி நிறைய -74 தேசிகர் மூலம் நம்மை அடைய
ராம சேஷன் -ராம மிஸ்ரர் -ஆளவந்தார் -ஸ்ரீ பாதுகை பெரிய நம்பி வைத்து நித்ய ஸூ ரிகளை ஆனந்திப்பிக்க திரு நாட்டுக்கு எழுந்து அருள
-யதிகட்க்கு இறைவன் இணையடி -என்ன கடவது இ றே-த்வயம் பிரமாணம் தேவ பெருமாள் பிரமாதா ஸ்வாமியே பிரமேயம்-
ஆறு மாதம் கால ஷேபம் ஆனபின்பு தஞ்சம்மா -இடம் -ஈஸ்வர சங்கல்பம்
2009 ஸவ்மய வர்ஷம் ஸ்ரீ கூரத் தாழ்வான் திருவவதாரம் -ஹாரீத குலா திலகர் -திரு மறு ஸ்ரீ வத்சம் அம்சம் –
முதலி யாண்டான் போலே நடாதூர் ஆழ்வான் மருமகன் –பேரனார் நடாதூர் அம்மாள் -பிரபவ வருஷம் திருவவதாரம் -முதலியாண்டான்
யாதவ பிரகாசர் -பூ பிரதக்ஷிணம் பிராயச்சித்தம் -ராமானுஜரை பண்ணி அதற்கு ஸாம்யம்- யதி தர்ம சமுச்சயம் -கிரந்தம் பண்ணி அருளினார்
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் -ஆளவந்தார் திருக் குமாரர் மூலம் நம் ராமானுசனை
பெரிய பெருமாள் ஆணை படி பேர் அருளாளன் இடம் கேட்டு பெற்றார்
திருவாராதன பெருமாளை எழுந்து அருள பண்ணி -தேவஸ்தானத்தில் இருந்தே உடையவர் திருவரங்கம் எழுந்து அருளினார்
கூரத் தாழ்வான் முதலி யாண்டான் உடன் –
செங்கோல் வைபவம் உம் முக்கோலுக்கு அருளுகிறோம் தந்தோம் தந்தோம் தந்தோம் -உடையவர் பட்டம் சாத்தி அருளினான் அரங்கன் –
பெரியாருக்கு ஆட்பட்டக்கால் கிடையாதது என்ன -கலியும் கெடும் -பிரத்யக்ஷம் ஆனதே பெரிய நம்பி போர மகிழ்ந்து-
அவன் செய்யும் ஷேமங்களை எண்ணி -திருமலை நம்பி மூன்று தடவை எம்பாரை திருத்த யத்னம் செய்து அருளி-
கொன்றை சடையானுக்கு -ஆராதனம் பண்ணி என்ன பயன் -ஸ்தோத்ர ரத்னம் அடுத்த தடவை – உன்னை பூஜிக்கத்த வைதிகம் உண்டோ
-மாது வாழ் மார்பினாய் -போது வாழ் பூனம் துழாய் முடியினாய் –நின் புகழின் தகவு அல்லால் பிறிது இல்லை
-ஸ்வபாவிக அனவதிக அதிசய நியமனம் -ஸ்லோகம் எழுதி வரும் வழியில் போட்டு –படித்து அனுசந்தித்து —
வால்மீகி சோகம் ஸ்லோகம் ஆனது –
எங்கள் பொருள் நழுவாதே -அச்சுதன் அன்றோ / மார்க்கம் கலக்கம் இல்லை சித்த உபாய நிஷ்டர் ஒன்றாக உள்ளோம் /
பொருள் கை உண்டாய் செல்பவன் பகவானே பொருள் அவனை தொடர்ந்து போகிறோம் –
-திருமந்த்ரார்த்தம் சரம ஸ்லோகார்த்தம் உடையவருக்கு அருளிச் செய்ய திருக் கோஸ்ட்டியூர் நம்பிக்கு நம் பெருமாள்
அருளப்பாடு இட்டு அருளிய பின்பே 18 தடவை எழுந்து அருளி திட அத்யாவசிய பரிக்ஷை செய்த பின்பே அருளிச் செய்தார் –
ஸ்ரீ வைஷ்ணவர் மூலம் தூது விட்ட பின்பு ஆர்த்தி மிக்கு இருந்ததே என்று மகிழ்ந்து அருளினார் -தண்டும் பவித்தருமாய் வரச் சொல்லி –
திருமந்த்ரார்த்தம் அருளிச் செய்த பின்பு
சரம ஸ்லோகார்த்தம் ஏகாந்தமாக திருவடி மேல் ஆணை கொண்டு அருளி -மாயன் அன்றோ ஓதிய வாக்கு —
தாம் பணித்த மெய்மை பெரு வார்த்தை
சம்வத்சரம் சிஷுரூஷை -சமம் மாச உபவாசம் செய்து கூரத் ஆழ்வான் -பெற -முதலி யாண்டான் –
திருக் கோஷ்ட்டியூர் இடம் கைங்கர்யம் -6 மாசம் -செய்த பின்பு –
வித்யை -குடிப்பிறப்பு செல்வம் முக்குறும்பு அறுத்ததால் உடையவரே சாதிப்பார்
இப்பொழுது தான் தண்டும் பவித்ரமும் கை புகுந்தது -திருக் கோஷ்ட்டியூர் நம்பி கடாக்ஷம் பெற்று புகர் மிக்கு இருந்தவாறு –
சரம ஸ்லோகார்த்தம் வெளியிட்டு அருளி எம்பெருமானார் ஆனார் –
திருமாலை ஆண்டான் திருவாய்மொழி அர்த்தம் -அடுத்து –

————————————

ஸ்ரீ வேங்கடத்தை பதியாக வாழ்ந்த திருமலை நம்பி -அவருடன் பிறந்த ஸ்ரீ பூமிப் பிராட்டியாரை-ஸ்ரீ பெரும்பூதூரில்
-ஆ ஸூ ரி கேசவ பெருமாள் -சரவக்ரது தீக்ஷிதருக்கும் -இளைய ஸ்ரீ பெரிய பிராட்டியாரை ஸ்ரீ மழலை மங்கலத்தில்
வட்ட மணிக் குலத்தில் கமல நயன பட்டருக்கு திருமணம் செய்வித்தார் –
இவர்கள் வாழும் காலத்தில் அநந்தம் பிரமம் ரூபம் லஷ்மணஸ் சததபர பலபத்ரஸ் த்ருதீயஸ் து கலவ் கஸ்ஸித் பவிஷ்யதி
என்கிறபடியே அகில ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக -தம் அவதாரத்துக்கு இடம் பார்த்து ராம திவாகர அச்யுத பானுக்கள் போலே
இருள் தருமா ஞாலத்தில் -கலியும் கெடும் கண்டு கொண்மின் -பெரிய கிதயுகம் பற்றி பேரின்ப வெள்ளம் பெருகும் படி
சக வர்ஷம் -931-சென்ற வர்த்தமான பிங்கள பிங்கள சம்வத்சரத்திலே ஸ்ரீ மத்தான சைத்ர மாசம் ஸூக்ல பக்ஷம் பஞ்சமி
குருவாசரஸஹிதமான திருவாதிரை நக்ஷத்ரத்திலே ஸூப முகூர்த்தத்தில் பார் எல்லாம் உய்யும் படி ப்ராதுர்ப்பவித்து அருள
முக ஓளி திகழுவதை கடாக்ஷித்து அருளி -இவன் சர்வ லஷ்மி ஸம்பன்னன்-12-திவசத்தில் -இளைய பெருமாள் திரு நாமம் சாத்தி –
பெரிய பிராட்டியார் -கமல நயன பட்டருக்கு -க்ரோதந சம்வத்சரம் -தை மாசம் -பவ்வ்ர்ணமி சோமவாரம் -புனர் பூசம் திரு நக்ஷத்ரம்
–தாமரைக் கண்களால் கடாக்ஷித்து அருளி -கோவிந்தன் -திரு நாமம் சாத்தி அருளினார்
யாதவ பிரகாசர் இடம் வித்யாப்யாஸம் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -கண்ட முண்ட பூர்ண ஸ்ருங்கத்வம் -அபார்த்த ப்ரதிபாதனம் பண்ண
சத்யம் -க்ஷணிகம் வியாவ்ருத்தி / ஞானம் அசித் வியாவ்ருத்தியையும் /அநந்தம் பரிச்சின்ன வியாவ்ருத்தி –
காட்டி சேதன அசேதன விலக்ஷணமாய் நித்தியமாய் இருக்கும் ப்ரஹ்மம் –
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அக்ஷிணீ-சுருதி அடுத்து –
விந்தியாடாவியில் –ஆவாரார் துணை என்று -பக்கம் நோக்கி வழி திகைத்து அலமந்து திக்பிரமம் பிறந்து மதி எல்லாம் உள்கலங்கி
அடியிடத் திமிர்த்துக் கொண்டு திகைத்து நிற்க சர்வேஸ்வரன் இடர் கெட பத்நீ ஸஹிதனாய் வில்லியாய் வந்து இவர் முன்னே தோன்ற
கலக்கம் தீர்ந்து உள்ளம் தேறி –
சித்தாஸ்ரமத்தில் இருந்து வருகிறோம் -சத்யவ்ரத க்ஷேத்ரம் ஏறப் போகிறோம் -புண்ய கோடி விமானம் நோக்கி அவர்கள் முன்னாடி இட
இவரும் பின்னே செல்ல-வல்லிரவாய் நள்ளிரவானவாறே ராஜ வ்ருஷத்தடி இருக்க -வியாத பத்னியும் தண்ணீர் மடுக்க ஆசைப்பட
பரம உதாரரான அவர்களை லப்த மநோ ரத்த ஆக்குகைக்கு—- புண்ய கோடி விமானம் முன்னே நிற்க தெரியவில்லையா -என்றதும் –
த்ருஷ்டா சீதா -கேட்ட பெருமாள் போலேயும் மதுவனத்தில் புக்க முதலிகள் போலேயும்-கிருஷ்ணாவதார ஸுலப்யம் நினைத்து எத்திறம்எ
ன்று மோஹித்த ஆழ்வாரை போலேயும் மோஹித்து கிடந்தார் –
நீர்மையால் என்னையும் வஞ்சித்து புகுந்து -உருக்காட்டாதே ஒளிப்பதே-தென்னத்தியூர் கழலிணைக் கீழ்ப் பூண்ட அன்பாளன் –
ஆளவந்தார் கடாக்ஷம் -சிவந்து நெடுகி வலியராய்-ஆயதாஸ ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவ-பிரசன்ன மதுர கம்பீர நயனங்களாலே
பூயோபூய செவ்வரியோடே கடாக்ஷித்து அருளி -ஆ முதல்வன் இவன் -தரிசன ப்ரவர்த்தகராம் படி விசேஷ கடாக்ஷம் செய்து அருள
தேவ பெருமாளை சரணம் புக்கு –கோயிலுக்கு எழுந்து அருளினார்
ப்ரஹ்ம ரஜஸ்ஸூம் -நித்ய ஸூ ரிகளில் தலைவராய் இருப்பவர் இவர் என்று காட்ட –
ஆளவந்தார் முதலிகளுக்கு அருளிச் செய்த -உங்களுக்கு தஞ்சமாய் இருபத்தொரு அர்த்தம் –
கோயில் ஆழ்வாரே உங்களுக்கு உயிர் நிலை தஞ்சம் –
பெரிய பெருமாள் திருவடிகளின் கீழே வீணையும் கையுமாய் சேவித்து இருக்கும்
திருப்பாண் ஆழ்வார் விக்ரஹத்தை பாதாதி கேசமாக சேவித்துக் கொண்டு போருங்கோள்-
குறும்பறுத்த நம்பி / திருக் கச்சி நம்பி / திருப் பாண் ஆழ்வார் / பர ஸம்ருத்திக்கு உகந்து அத்யாவசித்து இருக்க வேண்டும்
ஒருவன் பிரபன்னன் ஆனால் -பகவத் அதீனமான ஆத்ம யாத்திரையிலும் கர்மா அதீனமான தேக யாத்திரையிலும் அந்வயம் உண்டு என்று
இருந்தான் ஆகில் ஆத்ம சமர்ப்பணம் குலைந்து நாஸ்திகனாய் விடும் –
ஆகையால் த்ரிவித கரணங்களாலும்உபய யாத்திரையிலும் அந்வயம் இல்லை –
நாராயணனுக்கு நைரந்தர்ய வேஷம் –தம் பக்கல் பேற்றுக்கு நம எண்ணாதவர்களை –
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள்-என்பது ஒரு ஒவ் தார்ய விஷயம் உண்டு –
நாரங்களுக்கு நைரந்தர்ய வேஷம் -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கிறபடியே
நிர்ப்பரங்களாய் இருக்கை என்று இராதே தம் பேற்றுக்கு தவறிக்கையும் ஸ்வரூப ஹானி –
எம்பெருமான் ரஷ்யன் என்று இருக்கையும் ஸ்வரூப ஹானி
-இப்படி இருந்தானாகில் அநந்யார்ஹ சேஷத்வத்துக்கும் ஸ்வ ஸ்வாமி பாவ சம்பந்தத்துக்கும் சேராது –
நீங்கள் அடியேனை உபாய உபேயமாக புத்தி பண்ணி போருங்கள் என்று நான் சொல்வது அடியேனுக்கு ஸ்வரூப ஹானி
-எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே-என்கிற
இதுவே உபாய உபேயம் என்று புத்தி பண்ணி போருங்கோள்
உங்களுக்கு திருமந்த்ரார்த்தம் போக மண்டபம் –சரம ஸ்லோகார்த்தம் புஷப மண்டபம் -மந்த்ர ரத்நார்த்தம் தியாக மண்டபம் –
இதற்கு பிரமாதாக்கள் திருப்பாணாழ்வார் போல்வார் –
நம் பேற்றுக்கு சஹியாதவர்கள் பெரிய பெருமாள் இரண்டு ஆற்றுக்கு நடுவே திருவாராதனம் கண்டு அருள சஹியாதவர்கள்
ஆளவந்தார் -வைகாசி சிரவணம் -திருகி சங்கு பணிமார ப்ரஹ்ம ரந்தரத்தாலே திரு நாட்டுக்கு எழுந்து அருள
அவர் திருக் குமாரர் பிள்ளைக்கு அரசு நம்பி -மேலே -கார்யங்கள் செய்து அருள
மூன்று திரு விரல்கள் முடங்கி இருக்க –வியாச பராசரர் இடத்தில் உபகார ஸ்ம்ருதியும் -நம்மாழ்வார் பக்கம் பிரேமாதிசயமும்
-வியாச ஸூ த்ரத்துக்கு விசிஷ்டாத்வைத பரமாக வ்யாக்யான லாஞ்சையும்–
பெருமாள் நாட்டுக்காக ஸ்ரீ பரத்தாழ்வான் தலையிலே திருவடி நிலைகளை வைத்து காட்டுக்கு எழுந்து அருளினால் போலே
ஆளவந்தாரும் உமக்காக தம்முடைய திருவடித் தாமரைகளை என் தலை மேலே வைத்து திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்
ஆளவந்தார்க்கு கரணபூதர் பெரிய நம்பி -இளைய ஆழ்வார்க்கு நேரே ஆளவந்தார் –
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -பிரமாணம் த்வயமே -இத்தால் பிரதிபாத்யனாய் கையில் திரு வாழியுமாய்
ஹஸ்திகிரியில் நிற்கும் பெருமாளே பிரமேயம் -பிரமாதா நீர் தான் -பிரமாணம் கொண்டு பிரமேயத்தை அனுபவிக்க கூட்டிச் செல்ல –
திருவரங்க பெருமாள் அரையர் –உலகம் ஏத்தும் ஆழியான் அத்தியூரான் என்றும் —
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேரருளாளர் என்றும்
தொழுது எழும் தொண்டர்கள் தமக்கு பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் –

—————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் -/ஸ்ரீ எம்பார் பிரபாவம்-/திவ்ய தேச யாத்ரை-

February 17, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ எம்பார் பிரபாவம்-

ஸ்ரீ கோவிந்தப் பெருமாள் ஸ்ரீ திருமலை நம்பி திருமாளிகையிலே சர்வவித கைங்கர்யங்களையும் பண்ணிக் கொண்டு
இருக்கும் படியைக் கண்டு ஸ்ரீ உடையவர் ப்ரீதராய் இருக்கிற அளவிலே ஒரு நாள் ஸ்ரீ நம்பிக்கு திருப் படுக்கை படுத்து
முந்துறத் தாம் அதிலே கண் வளர்ந்து பார்க்க இத்தை ஸ்ரீ எம்பெருமானார் கண்டு அருளி –
இப் பரிமாற்றம் இருந்த பொல்லாங்கு என் என்று அத்தை ஸ்ரீ பெரிய திருமலை நம்பிக்கு விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்பியும் அவரை அழைத்து ஸ்ரீ கோவிந்த பெருமாளே நீர் நமக்குப் படுத்த படுக்கையிலே படுத்துக் கொண்டீர் -என்று கேட்டோம்
இப்படி செய்யலாமோ இதற்குப் பலம் என் என்று கேட்டு அருள ஸ்ரீ கோவிந்த பெருமாளும் நமக்கு நரகமே பலன் என்ன –
ஸ்ரீ நம்பியும் இத்தை அறிந்தும் செய்வான் என் -என்ன
இவரும் தேவரீர் திரு மேனியில் ஓன்று உறுத்துதல் ஊர்தல் கடித்தல் செய்யாமல் கண் வளரப் பெற்றால் அடியேனுக்கு
நரகமே அமையும் என்று விண்ணப்பம் செய்ய –
இத்தை ஸ்ரீ உடையவர் கேட்டு அருளி ஈது ஒரு பிரதிபத்தி விசேஷம் இருந்த படி என் என்று உகந்து அருளினார்

ஒரு நாள் ஸ்ரீ நம்பியினுடைய திரு நந்தவனத்தை நோக்கிக் கொண்டு ஸ்ரீ உடையவர் எழுந்து அருளா நிற்க ஓர் இடத்திலே
ஸ்ரீ கோவிந்தப்பெருமாள் ஒரு பாம்பின் வாயிலே கையிட்டு மீளவும் நீராடிக் கைங்கர்யத்தில் போக ஸ்ரீ உடையவரும் இது கண்டு
என் செய்தீர் என்று கேட்க அவரும் பாம்பு நாக்கை நீட்டிக் கொண்டு நோவுபடும்படியைக் கண்டு அதன் நாக்கிலே
முள் இருக்க வாங்கினேன் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் இவருடைய பூத தயை இருந்தபடி என் -என்று உகந்து அருளினார் –

அநந்தரம் ஸ்ரீ எம்பெருமானாரும் ஸ்ரீ ராமாயணம் சாத்தினவாறே ஸ்ரீ பெரிய திருமலை நம்பி ஸ்ரீ பாதத்தில் தண்டன் சமர்ப்பித்து
அடியேன் திருவரங்க பெரு நகரை நோக்கி விடை கொள்ளுகிறேன் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்பியும் இத்தனை தூரம் எழுந்து அருளின உமக்கு நாம் ஒன்றுமே தரப் பெற்றிலோமே என்ன –
இவரும் அப்படித் தந்து அருள திரு உள்ளமாகில் சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து
தன் பால் மனம் வைக்காத திருத்தி என்கிறபடியே இவருடைய துர்வாசனையை சேதித்து பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும்
அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்னும்படி பண்ணி அருளி -உடன் கூடுவது என்று கொலோ என்று இருந்த அடியேன்
நினைவைத் தலைக்கட்டி அருளின தேவரீர் அடியேனுக்கு இந்தக் கோவிந்தப் பெருமாளை தந்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பெரிய திருமலை நம்பிய அவரை அழைத்து வாரீர் கோவிந்தப் பெருமாளே ஸ்ரீ எம்பெருமானாரை நம்மைக் கண்டால் போலே
சேவித்து இரும் என்று உதக தாரா பூர்வகமாக கொடுத்து அருளினார்

ஸ்ரீ உடையவரும் அவரைக் கூட்டிக் கொண்டு ஸ்ரீ நம்பிக்கு தெண்டன் சமர்ப்பித்து புறப்பட்டு
வண்டு வளம் கிளரும் நீர் சோலை வண் பூம் கடிகையிலே சென்று ஸ்ரீ கடிகாசலம் ஏறி மிக்கார் வேத விமலர் விழுங்கும்
அக்காரக் கனியையும் கண்டு சேவித்து களித்து அங்கு நின்றும் புறப்பட்டு திருப் புட் குழியிலே எழுந்து அருளி
ஸ்ரீ க்ருத்ர புஷ்கரணியிலே தீர்த்தம் பிரசாதித்து பெரிய உடையாரையும் திருவடி தொழுது சண்ட ப்ரசண்டர்களையும் சரணம் அடைந்து
உள்ளே புகுந்து ஸ்ரீ மரகத வல்லி நாச்சியாரையும் திருவனந்த ஆழ்வானையும் சேவித்து மற்றும் சேவாக்ரமம் தப்பாமல் சேவித்து
ப்ரதக்ஷிணமாக எழுந்து அருளி புகுந்து சேனை முதலியாரையும் திருவடி தொழுது
பொன் முடி யம் பொற் ஏற்றை எம்மானை நால் தடம் தோள் தன் முடிவு ஓன்று இல்லாத தண் துழாய் மாலையனையும் சேவித்து நின்று
ஸூ வர்ண மகுடா நந்த துளஸீ மால்ய சோபித ஸமஸ்த ஜெகதாதார சங்க சக்ர கதா தர தாமோதர ஹ்ருஷீகேச த்ரயீ மய ஜநார்த்தன
தானவாரே ஜெகந்நாத சார்ங்க பாணே நமோஸ்துதே -என்று அனுசந்தித்து நிற்க
தீர்த்த பிரசாதமும் பிரசாதிக்க ஸ்வீ கரித்து தெண்டன் இட்டு புறப்பட்டு திரு வெக்கா முதலான திருப்பதிகளையும் சேவித்து மீண்டு
ஸ்ரீ திருக் கச்சி நம்பி சந்நிதியில் எழுந்து அருளினார் –

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா -என்னுமா போலே ஸ்ரீ கோவிந்தப் பெருமாள் திருமேனியில் வைவர்ணயம் பிறந்து
முகம் உறாவின இருப்பைக் கண்டு ஸ்ரீ உடையவரும் இவர் அகவாயில் எண்ணம் அறிந்து
ஸ்ரீ கோவிந்தப்பெருமாளே ஸ்ரீ நம்பியை சேவித்து வாரும் என்று இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கூட்டி அனுப்பி ஸ்ரீ திருக் கச்சி நம்பி யுடன்
ஸ்ரீ பேர் அருளாளரை சேவித்து இருந்தார் -ஸ்ரீ கோவிந்தப் பெருமாளும் திருப்பதியில் எழுந்து அருளி ஸ்ரீ நம்பி திருமாளிகையில்
தண்டன் சமர்ப்பித்து நிற்க அங்குள்ளார் அவரைக் கண்டு உள்ளே சென்று ஸ்ரீ பெரிய திருமலை நம்பிக்கு விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்பியும் திரு உள்ளம் கலங்கி பித்தனைப் போகச் சொல்லுங்கோள் என்ன தேவிகளும் இத்தனை தூரம் இளைத்து வந்தவரை அழைத்து
சேவையும் ஸ்ரீ பாத தீர்த்தமும் தளிகைப் பிரசாதமும் ப்ரசாதிக்க வேண்டாவோ என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ நம்பியும் விற்ற பசுவுக்கு புல் இடுவார் உண்டோ என்று நைஷ் டூர்யத்தையே பிரகாசிப்பித்து முகம் கொடாமல் தள்ளி விட
ஸ்ரீ கோவிந்தப்பெருமாளும் அங்கு நிராசரராய் திரு வாசலிலே தண்டன் சமர்ப்பித்து ஸ்ரீ வைஷ்ணவர்களுடனே மீண்டு
ஸ்ரீ பெருமாள் கோயில் ஏற எழுந்து அருளி ஸ்ரீ உடையவரை சேவித்து நிற்க ஸ்ரீ வைஷ்ணவர்கள் இந்த வ்ருத்தாந்தத்தை
விண்ணப்பம் செய்யக் கேட்டருளி ஸ்ரீ நம்பியுடைய சர்வஞ்ஞதையை ஸ்லாகித்து ஸ்ரீ கோவிந்தப் பெருமாளையும் பிற்காலியாதபடி
தம் ஸுலப்ய ஸுஸீல்யாதி குணங்களால் ஆழங்கால் படுத்திக் கொண்டு ஸ்ரீ திருக்கச்சி நம்பிக்கு தண்டன் சமர்ப்பித்து
விண்ணப்பம் செய்து புறப்பட்டுத் திருவரங்கன் திருப்பதியை நோக்கி எழுந்து அருள அங்குள்ள முதலிகள் எல்லாரும் எதிர்கொள்ள
எழுந்து அருளி அங்குள்ள முதலிகள் எல்லாரும் எதிர் கொள்ள எழுந்து சேவா க்ரமத்தில் ஸ்ரீ நம்பெருமாளை சேவித்து நிற்க
ஸ்ரீ பெருமாளும் சோதி வாய் திறந்து நம் வடமலைக்குப் போய் வந்தீரோ என்று வினவி அருளித் தீர்த்த பிரசாதமும் ஸ்ரீ சடகோபனும் ப்ரசாதிக்க
ஸ்வீ கரித்துப் புறப்பட்டு திரு மடமே எழுந்து அருளி ஸ்வ அபிமான அந்தர்பூதரான முதலிகளையும்
கிருபை பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருந்தார்

ஸ்ரீ கோவிந்தப்பெருமாளுக்கு ஸ்ரீ எம்பெருமானார் கோஷ்ட்டியில் அனுபவமும் அவர் விக்ரஹ அனுபவமும் அவர் சல்லாபங்களும்
அவர் திருவடிகளிலே கைங்கர்யங்களுமே கால க்ஷேபமுமாய் நித்ரா ஆலஸ்யங்களும் இன்றிக்கே ப்ரயத்யஹம் நடவா நிற்க ஒரு நாள்
ஸ்ரீ உடையவரும் முதலிகளும் பெரிய திரு ஓலக்கமாக எழுந்து அருளி இருக்க முதலிகள் எல்லாரும் ஸ்ரீ கோவிந்தப் பெருமாளுடைய
ஞான பக்தி வைராக்யங்களையும் ஸ்வ ஆச்சார்ய பத ஏக நிஷ்டையையும் சொல்லித் தலை துலுக்கிக் கொண்டாட
ஸ்ரீ கோவிந்தப்பெருமாள் தாமும் அது ஒக்கும் ஒக்கும் என்று அவர்களைக் காட்டில் தம்மைத் தாமே மிகவும் ஸ்லாகித்துக் கொள்ள
ஸ்ரீ உடையவரும் அது கண்டு அவரைக் குறித்து எல்லாரும் உம்மை ஸ்லாகித்தால் நீரின் நைச்ய அனுசந்தானம் பண்ண வேண்டி இருக்க
அது செய்யாதே நீர் தாமே உம்மை ஸ்துதித்துக் கொள்ளா நின்றீர் -இப்படிச் செய்யுமது ஸ்வரூபத்துக்குச் சேருமோ என்று அருளிச் செய்ய
ஸ்ரீ கோவிந்த பெருமாள் ஸ்ரீ உடையவரைப் பார்த்து ஐயோ முதலிகள் அடியேனைக் கொண்டாடில் காளஹஸ்தியில் கையும் குடமும்
கழுத்தில் இலந்தைக் கொட்டை வடமுமாய் கொண்டு எளிவரவு பட்டு நின்ற அந்நிலையைக் கொண்டாடும் அத்தனை அன்றோ
அடியேனுக்கு உள்ளது -இப்படியான பின்பு பீதகவாடைப்பிரானார் பிரம குருவாகி வந்து என்கிறபடியே தேவரீர்
இவ்வாத்மாவை எடுக்கைக்காக ஒரு திரு அவதாரம் செய்து அருளின க்ருஷி பரம்பரைகளை அனுசந்தித்தால்
நம் முதலிகள் எல்லாரையும் போல் அன்றிக்கே நித்ய சம்சாரிகளிலும் கடை கெட்டுக் கிடந்த அடியேன் கால தத்வம் உள்ளதனையும்
எனக்கு இனி யார் நிகர் அகல் நீள் நிலத்தே என்றும் இனி யாவர் நிகர் அகல் வானத்தே என்றும்
நெஞ்சே நல்லை நல்லை என்றும் சொல்லுகிறபடியே
அடியேனையே ஸ்லாகித்துக் கொள்ள பிராப்தி உண்டே -ஆகையால் அடியோங்கள் எல்லாரும் தேவரீராலே இவ்வாத்மாவுக்கு உண்டான
நன்மைகளை ஸ்லாகித்தால் தேவரீரைக் கொண்டாடிற்றாம் அத்தனை அன்றோ -என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ எம்பெருமானாரும் ஸ்ரீ கோவிந்தப்பெருமாளை நல்லீர் நல்லீர் என்று போர உகந்து அருளி உம்முடைய குணங்கள் நமக்கும் உண்டாம் படி
அழகிய நெஞ்சால் நம்மை அணைத்துக் கொள்ளீர் என்று வாரி எடுத்து அணைத்துக் கொண்டு அருளினார் –

ஒரு நாள் ஸ்ரீ கோவிந்தப்பெருமாள் ஸ்ரீ எம்பெருமான் -எம்பெருமானார் -அடியாள் வாசலிலே கால்ய கர்மங்களையும் இழந்து நிற்கக் கண்டு
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ உடையவர் கோஷ்டியில் அத்தை வெளியிட ஸ்ரீ உடையவரும் -ஸ்ரீ கோவிந்தப் பெருமாளே –
நீர் அங்கே நிற்பான் என் என்ன -இவரும் தேவரீர் தாலாட்டு மதுரமாய் இசை ஏறி செவிக்கு இனிய செஞ்சொல்லாய் இருக்க
தேவரீர் குண அனுபவமும் முன்னடி வலையகக் கட்ட போக்கடி அற்று நின்றேன் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ வைஷ்ணவரும் தாலாட்டு நடந்தது உள்ளது என்ன ஸ்ரீ உடையவரும் இவர் ப்ராவண்யம் இருந்தபடி என் என்று உகந்து அருளினார்

பின்பு இவருக்கு இருளும் ஏகாந்தமும் இன்றிக்கே த்ரிவித கரணத்தாலும் -இராமானுசன் மிக்க சீலம் அல்லால் உள்ளது என் நெஞ்சு –
என்கிறபடியே இராமானுசன் மெய்யில் பிறங்கிய சீரும் அவர் குண அனுபவமுமே கால ஷேபமாகச் செல்லா நிற்க
ஸ்ரீ கோவிந்தப் பெருமாள் திருத் தாயார் வந்து ஸ்ரீ கோவிந்த பெருமாளே உம்முடைய தேவிகள் பக்வமானாள்-என்ன
இவரும் ஆகில் இருட்டும் தனியாய் இருக்கும் அவகாசம் பார்த்து அவளை வரக்காட்டும் என்ன அவரும் பஹு நாள் அவகாசம் பார்த்து
ஒரு நாளும் அவகாசம் காணாதே ஸ்ரீ உடையவருக்கு விண்ணப்பம் செய்ய அவரும் இவரை அழைத்து –
கோவிந்தப் பெருமாளே நம் ஆணை ஒரு ருத்தி காலத்திலே நீர் போம் என்று அருளிச் செய்து போக விட்டருள
ஸ்ரீ கோவிந்தப் பெருமாளும் தேவிகளுக்கு இரா முற்ற அந்தர்யாமியை அனுபவிப்பித்து தத் குண சேஷ்டிதங்களை கீர்த்தித்து அருளிப் போக விட
இவர் திருத் தாயார் விடிவோரை வந்து இங்கன் செய்யலாமோ என்ன இவரும் அந்தர்யாமி பிரகாசித்து இருக்க அழிச்சாட்டம் கூடுமோ என்ன
இச் செய்தியை அருகில் இருந்தவர்கள் ஸ்ரீ எம்பெருமானாருடனே விண்ணப்பமும் செய்ய இவரும் திருவடிகளிலே சேவித்து நின்ற அளவிலே
அவரும் இரா முற்றும் என் செய்தீர் என்று மந்த ஸ்மிதம் செய்து கேட்டருள -இவரும் அந்தர்யாமி பிரகாசிகையாலே இதுக்கு
ஏகாந்தம் கண்டிலேன் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் வாரீர் ஸ்ரீ கோவிந்தப் பெருமாளே உமக்கு விஷயாந்தர விரக்தி
இத்தனை உண்டாகில் அநாஸ்ரமீந சந்திஷ்டேத் -என்கிற ஸாஸ்த்ர வசனம் நீர் அறியீரோ என்ன
இவரும் அடியேனுக்கு சந்யாச ஆஸ்ரமம் பிரசாதித்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் த்ரிதண்ட காஷாயாதிகளை
பிரசாதித்து தம் திரு நாமத்தையே பிரசாதித்து அருள இவரும் ஸ்ரீ பாதாச்சாயா பன்னனாய் இருக்குமவனுக்கு பொறுக்கும்படி பிரசாதித்து
அருள வேணும் என்று விண்ணப்பம் செய்து திருவடிகளிலே தண்டன் இட்டுக் கிடக்க
ஸ்ரீ உடையவரும் அத் திருநாமத்தை ப்ரத்யாஹரித்து -எம்பார் -என்ற திரு நாமம் சாத்தி முடி பிடித்து எடுத்து கிருபை செய்து அருளினார் –

————————————

அநந்தரம் தேசாந்தரத்தின் நின்றும் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி திருவீதியில் நின்றவர்கள்
சிலரைப் பார்த்து ஸ்ரீ எம்பெருமானார் மடம் எது என்று கேட்க -அவர்களும் எந்த ஸ்ரீ எம்பெருமானார் மடம் -என்ன
புதுக்க எழுந்து அருளின ஸ்ரீ வைஷ்ணவர்கள் நெஞ்சு உளைந்து-நீங்கள் இரண்டிட்டுச் சொல்லுவான் என் –
நம் தரிசனத்துக்கு இரண்டு எம்பெருமானார் உண்டோ என்ன
அவர்களும் உண்டு அருளாள பெருமாள் எம்பெருமானாரும் எழுந்து அருளி இருக்கிறார் ஆகையால் சொன்னோம் என்ன –
நாங்கள் அவரை அறியோம் -ஸ்ரீ உடையவர் மடத்தைக் கேட்டோம் என்ன -ஆனால் ஸ்ரீ ராமானுஜன் மடம் ஈது என்று அவர்கள் காட்ட
அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் உடையவர் திரு மடம் சென்று புக்கார்கள்
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் இப்பிரசங்கத்தை யாதிருச்சிகமாக கேட்டு ஐயோ நாம் ஸ்ரீ உடையவரைப் பிரிந்து
ஸ்தாலாந்தரத்தில் இருக்கையால் அன்றோ லோகத்தார் நம்மை ஸ்ரீ எம்பெருமானாருக்கு எதிர்த்தட்டாகச் சொன்னார்கள் –
ஆகையால் நாம் அநர்த்தப் பட்டோம் என்று மிகவும் வ்யாகுலப்பட்டு அப்போதே தம்முடைய மடத்தை இடித்துப் பொகட்டு வந்து
ஸ்ரீ உடையவர் திருவடிகளைக் கட்டிக் கொண்டு அநாதி காலம் இவ்வாத்மா தேவரீர் திருவடிகளை அகன்று அநர்த்தப் பட்டுப் போந்தது
போராமல் இப்படி அகற்றி விடாத திரு உள்ளமாய் விட்டதோ -என்று மிகவும் கிலேஸிக்க ஸ்ரீ உடையவரும் இதற்கு காரணம் என் என்ன –
அவரும் இங்குப் பிறந்த வ்ருத்தாந்தத்தை விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் அச் செய்திகளை அடையக் கேட்டு ஆனால்
இனி உமக்கு நாம் செய்ய அடுப்பது என் என்ன ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் அடியேனை இன்று தொடங்கி
நிழலும் அடிதாறும் போலே -நின் தாழ் இணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் என்கிறபடியே
தேவரீர் திருவடிகளின் கீழே வைத்துக் கொண்டு நித்ய கைங்கர்யம் கொண்டு அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய-
ஸ்ரீ உடையவரும் ஆனால் இனி இங்கே வாரும் என்று அவரை தம் சந்நிதியில் அரை க்ஷணமும் பிரியாமல் வைத்துக் கொண்டு
அகில அர்த்தங்களையும் பிரசாதித்து அருள அவரும் க்ருதார்த்தராய் ஸ்ரீ உடையவரை ஒழிய வேறு ஒரு தெய்வம் அறியாதவர் ஆகையால்
சகல வேதாந்த சாரார்த்தங்களையும் பெண்ணுக்கும் பேதைக்கும் ஸூ க்ரஹமாகக் கற்று உஜ்ஜீவிக்கலாம் படி
ஸ்ரீ ஞான சாரம்- ஸ்ரீ ப்ரமேய சாரம் என்கிற திவ்ய பிரபந்தங்களையும் இட்டு அருளி –
அதிலே ஸச் சிஷ்யன் என்பானுக்கு சதாசார்யனே பர தேவதை – அவன் திருவடிகளில் கைங்கர்யமே பரம ப்ராப்யம் –
அவன் தான் பகவத் அவதார விசேஷம் என்னும் அத்தையும் அருளிச் செய்து அருளினார் –

———————————-

அநந்தரம் ஸ்ரீ கூரத்தாழ்வானையும் -ஸ்ரீ முதலியாண்டானையும் -ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாரையும் -மற்றும் உள்ள
முதலிகளையும் கூட்டிக் கொண்டு எழுந்து அருளி இருந்து -இலங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் மலிந்து வாத்து செய்வீர்களும்
என்று அருளிச் செய்து இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைகைக்காகவும் –
தத் தவம் அசி -இத்யாதி வாக்ய ஜன்ய ஞானமே மோக்ஷம் -என்கிற மாயாவாதிகளையும் –
ஞான கர்ம சமுச்சயமே மோக்ஷ சாதனம் என்கிற குத்ருஷ்டிகளையும் நிரசித்து –
வேத மார்க்கமாய் -வேத கர்ம அங்கமாய் -வேதனத்துக்கு கர்மம் அங்கமாய் -வேதன த்யான உபாசனாதி சப்த வாஸ்யமாய் –
பக்தி ரூபா பன்னமான உபாசனை ஆத்மக ஞானமே வேதாந்த ப்ரதிபாத்யமான மோக்ஷ சாதனம் என்கைக்காகவும்
நாம் வேதாந்தம் நடத்த வேணும் என்று அருளிச் செய்ய -அப்படியே செய்து அருள என்று முதலிகள் விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ ஆழ்வானைப் பார்த்து நான் சொன்ன ஸ்ரீ பாஷ்ய வாக்கியம் உம்முடைய திரு உள்ளத்துக்கு ஒத்து இருந்தால் ஒழிய
நீர் திரு எழுத்துச் சாத்த வேண்டா என்று நியமித்து அருள ஸ்ரீ ஆழ்வானும் அப்படியே திரு எழுத்து சாத்தி வரும் அளவில்
ஆத்மாவுக்கு சேஷத்வ விதுரமான ஞாத்ருத்வம் ப்ரதிபாதித்து ஒரு வாக்கியம் அருளிச் செய்து அருள
ஜீவாத்மாவுக்கு பகவச் சேஷத்வ விதுரமான ஞாத்ருத்வத்தோடு தேக ஆத்ம அபிமானத்தோடு ஒரு வாசி இல்லாமையால்
ஸ்ரீ ஆழ்வானும் திரு எழுத்து சாத்தாமல் இருக்க ஸ்ரீ உடையவரும் அத்தை நிரூபித்துப் பாராமல் எழுதும் என்ன

இவரும் எழுதாது இருக்க அது கண்டு குபிதராய் -ஆகில் நீரே ஸ்ரீ பாஷ்யம் செய்யும் -என்று அருளிச் செய்கை தவிர்ந்து
ஸ்ரீ ஆழ்வானை உதைத்துப் போக விட முதலிகள் ஸ்ரீ ஆழ்வானை ஆச்சார்யர் கோபித்துத் தள்ளி விட்டாரே
இப்போது நீர் என்ன நினைத்து இருக்கிறீர் என்று கேட்க -ஸ்ரீ ஆழ்வானும் உடைமை உடையவன் இட்ட வழக்காய் இருக்கும் –
அடியேனுக்கு இதில் அந்வயம் இல்லை என்று அருளினார் -பின்பு ஸ்ரீ உடையவரும் வாக்யார்த்தை நன்றாக ஆலோசித்துக் கொண்டு
ஸ்ரீ ஆழ்வானை அழைத்து கோபித்ததற்கு அனுதபித்து பகவச் சேஷத்வத்தோடே கூடின ஞாத்ருத்வ ப்ரதிபாதகமான வாக்கியம்
அருளிச் செய்து அருள ஸ்ரீ ஆழ்வானும் அதி ஸீக்ரமாகத் திரு எழுத்துச் சாத்த இப்படி
ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ வேதாந்த தீபம் ஸ்ரீ வேதாந்த சாரம் ஸ்ரீ வேதாந்த ஸங்க்ரஹம் ஸ்ரீ கீதா பாஷ்யம் இவற்றை அருளிச் செய்து
ஸ்ரீ ஆளவந்தாருடைய பிரதமமான இழவைத் தீர்த்து அருளினார் –

ஸ்ரீ உடையவரை முதலிகள் எல்லாரும் தண்டன் இட்டு -தேவரீர் இதர சமய நிராகரண பூர்வகமாகத் தர்சன ஸ்தாபனம் பண்ணி அருளிற்று –
இதில் தீதில் நன்னெறி காட்டித் தேசம் எங்கும் திரிந்து திக் விஜயம் பண்ணி அங்குள்ள திவ்ய தேசங்களையும் சேவித்து எழுந்து அருள
வேணும் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் முதலிகளுமாக ஸ்ரீ நம்பெருமாள் திரு முன்பே சென்று தண்டன் சமர்ப்பித்து
இச் செய்தியை விண்ணப்பம் செய்ய ஸ்ரீ பெருமாளும் அப்படியே செய்யீர் என்று திரு உள்ளமாக அங்கு நின்றும் புறப்பட்டு அருளி
சோழ மண்டலத்தில் எழுந்து அருளி திருக்குடந்தை முதலான திருப்பதிகளையும் சேவித்து அங்கு உண்டான இதர சித்தாந்த
வித்வான்களையும் தர்க்கித்து ஜெயித்து அங்கு நின்றும் புறப்பட்டு தெற்கு ஏற எழுந்து அருளி
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை முதலான திருப்பதிகளையும் சேவித்து
பாண்டி மண்டலத்தில் உண்டான பரவாதிகளையும் ஜெயித்து
திருப்புல்லாணியையும் சேவித்து ஸ்ரீ சேது தர்சனம் பண்ணி
திரு நகரி ஏறச் சென்று கண்ணி நுண் சிறுத் தாம்பை அனுசந்தித்து ஸ்ரீ நம்மாழ்வாரை சேவித்து நிற்க –
ஆழ்வாரும் மிக கிருபை பண்ணி அருளி தம் தீர்த்த பிரசாதமும் திருமாலை பிரசாதமும் ஸ்ரீ சடகோப பத த்வயமான
ஸ்ரீ மதுரகவிகளையும் பிரசாதிக்க

ஸ்ரீ ராமானுசனும் வகுள தவள மாலா வக்ஷஸம் வேத பாஹ்ய பிரபல வாதச் சேதனம் ( வேதா பாஹ்யா வர சமய விவாத -பாட பேதம் )–
பூஜ நீயம் விபுல குருக நாதங்காரி ஸூ நுங்க வீசம் சரண முகதோ அஹம் சக்ர ஹஸ்தேப சக்ரம் (சக்ர ஹஸ்தாக்ரதஸ் சகம் -பாட பேதம் ) என்று
அனுசந்தித்து தண்டன் சமர்ப்பித்து புறப்பட்டு திருப்புளி ஆழ்வாரையும் ஸ்ரீ பொலிந்து நின்ற பிரானையும் திருவடி தொழுது புறப்பட்டு
மற்றும் சுற்றிலும் உள்ள திருப்பதிகளையும் சேவித்து அங்குள்ள பாஹ்ய குத்ருஷ்டிகளையும் ஜெயித்துப் புறப்பட்டு
திருக்குறுங்குடிக்கு எழுந்து அருளி கோலத் திருக்குறுங்குடி நம்பியை சேவித்து தீர்த்த பிரசாதமும் ஸ்வீகரித்து நிற்கிற அளவிலே
ஸ்ரீ நம்பியும் அர்ச்சக முகேன -நாம் ஸ்ரீ ராம கிருஷ்ணாதி அவதார முகேன ஜன்மம் பல பல செய்து வந்து பிறந்து சேதனரை திருத்தப் பார்த்த இடத்தில்
அவர்கள் அஸூர பிரக்ருதிகளாய் ஒருவரும் நம்மை வந்து சேர்ந்தார்கள் இல்லை -நீர் இத்தனை பேரையும் எங்கனம் திருத்தினீர் என்று கேட்டருள
ஸ்ரீ உடையவரும் தேவரீர் கேட்க்கும் கிரமத்தில் கேட்டால் சொல்லும் அடைவிலே சொல்லுகிறோம் என்ன
ஸ்ரீ நம்பியும் திவ்ய சிம்ஹாசத்தின் நின்றும் இறங்கி அருளி ரத்ன கம்பளத்தில் இருந்து இவருக்கு ஒரு திவ்ய சிம்ஹாசனத்தை இட்டு அருள
அதிலே ஸ்வ ஆச்சார்யரான பெரிய நம்பி எழுந்து அருளி இருக்கிறாராகப் பாவித்துக் கொண்டு தாம் நிலத்திலே இருந்து
ஸ்ரீ நம்பி திருச் செவியில் -ஸர்வேஷா மேவ மந்த்ராணாம் மந்த்ர ரத்னம் ஸூபாவஹம் -ஸக்ருத் ஸ்மரேண மாத்ரேண ததாதி பரமம் பதம்
மந்த்ர ரத்ன த்வயம் ந்யாஸ பிரபத்திஸ் சரணாகதி ஸ்ரீ லஷ்மீ நாராயணாயேதி ஹிதம் சர்வ பல ப்ரதம் -என்கிற மஹாத்ம்யத்தை உடைய
த்வயத்தை உபதேசிக்க ஸ்ரீ நம்பியும் போர உகந்து ஸ்ரீ ராமானுசனை உடையோம் என்று அருளிச் செய்ய
ஸ்ரீ உடையவரும் அவருக்கு ஸ்ரீ வைஷ்ணவ நம்பி என்ற தாஸ்ய நாமம் பிரசாதித்து அருள ஸ்ரீ நம்பியும் இவரை
ப்ரஹ்ம ரதம் ஏற்றி உபலாளித்து அருளினார் -ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ நம்பியை சேவித்து நின்று –
அபசாரா நிமான் சர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம -என்று விண்ணப்பம் செய்து அங்கு நின்றும் புறப்பட்டு

திரு வண் பரிசாரத்தையும் திரு வாட்டாற்றையும் திருவடி தொழுது திருவனந்த புரத்திலே எழுந்து அருளி
படமுடை அரவில் பள்ளி பயின்ற ஸ்ரீ பத்ம நாபப் பெருமாளையும் த்வார த்ரயத்தாலும் பாதாதி கேசாந்தமாக சேவித்து அருளி
அங்குள்ள பிரதிவாதிகளையும் ஜெயித்து ஸ்ரீ ராமானுஜ மடத்தையும் உண்டாக்கி புறப்பட்டு மலையாள தேசத்தில் உண்டான
திருப்பதிகளையும் சேவித்து அத்தேசத்தில் அந்நிய சித்தாந்திகளையும் ஜெயித்து மேலை சமுத்திரக் கரை வழியே
உத்தர தேசத்தில் எழுந்து எழுந்து அருளி வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுண்ட ஸ்தான த்வாரவதீ அயோத்தி உத்தர பத்ரிகாஸ்ரமம்
நைமிசாரண்யம் புஷ்கரம் என்று சொல்லப்பட்ட திவ்ய தேசங்களையும் மற்றும் உண்டான திருவாய்ப்பாடி ஸ்ரீ கோவர்த்தன கிரி
ஸ்ரீ பிருந்தாவனம் முதலான திருப்பதிகள் எல்லாவற்றையும் சேவித்துக் கொண்டு அவ்வவ் இடங்களில் உள்ள குத்ருஷ்ட்டி ஜனங்களையும் ஜெயித்து

பட்டி மண்டபத்தைக் கிட்டி ஸ்ரீ சரஸ்வதி பண்டாரத்து ஏற எழுந்து அருளின அளவிலே சரஸ்வதி தானே வாசல் திறந்து கொண்டு வந்து
எதிரே புறப்பட்டு நின்று ஸ்ரீ உடையவரைப் பார்த்து தஸ்யயதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ -என்கிற ஸ்ருதிக்குப் பொருள் சொல்லிக் காணீர் -என்ன
இவரும் கபிஸ் த்வாதித்ய கம் பிபதி கிரணைரித்யபி கபிர் பிபஸ்தீத்யாம் நாதஸ் சகபிரமுநா ஸ்தம்யதி ஹதத் ப்ரதீம கப்யாசந்திவச கர தேஜோ
விகசிதம் ஸூ பத்மம் ஸ்ரீ மத் த்வாத அணி பகவச் சஷுருபமா –என்று கம் என்று ஜலமாய்-கிரணங்களால் அத்தைப் பானம் பண்ணுகையாலே
கபி சப்த வாச்யனான ஆதித்யனாலே அஸூ ஷேபணே -என்று விகாச வாசகமாய் –
அலர்த்தப் பட்ட தாமரைப் பூப் போலே இருக்கும் பரம புருஷன் திருக் கண்கள் என்று கப்யாஸத்துக்குப் பொருள் அருளிச் செய்ய
ஸ்ரீ சரஸ்வதியும் கேட்டு சந்துஷ்டையாய் இவர் இட்டு அருளின ஸ்ரீ பாஷ்ய க்ரந்தத்தையும் சிரஸா வஹித்துத் தன் கையை நீட்டி
ஸ்ரீ உடையவர் திருக் கையைப் பிடித்துக் கொண்டு போய் இது ப்ரஷிப்தம் அன்று ஸூத்தமாய் இருந்தது என்று அங்கீகரித்து
இவருக்கு ஸ்ரீ பாஷ்ய காரர் என்று திரு நாமம் சாத்தி ஸ்ரீ ஹயக்ரீவரையும் எழுந்து அருளுவித்துக் கொடுத்து மிகவும் ஸ்லாகிக்க –
ஸ்ரீ பாஷ்யகாரரும் நம்மை இத்தனை ஆதரிக்கைக்கு அடி என் என்று கேட்டு அருள அவளும் முன்பு இங்கு வந்த சங்கரனை
இஸ் ஸ்ருதிக்கு அர்த்தம் கேட்ட அளவிலே அவனும் குரங்கு ப்ருஷ்டம் போலே இருக்கும் என்று அபஹாஸ்யமான அர்த்தம் சொன்னான் –
நீர் என் கருத்து அறிந்து பொருள் சொல்லுகையாலே ஆதரித்தேன் என்றாள் –

இத்தை அத்தேசத்தில் உள்ள பிரதிபக்ஷ சித்தாந்திகள் கேட்டு வந்து ஸ்ரீ உடையவருடன் தர்க்கிக்க அவர்கள் எல்லாரையும் ஜெயித்து
தம் சித்தாந்தத்தை ஸ்தாபித்த படியை அத்தேசத்தின் ராஜா கேட்டு இது ஒரு ஆச்சர்யம் இருந்தபடி என் என்று வந்து
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயிக்க அவனையும் கிருபை பண்ணி எழுந்து அருளி இருக்கும் அளவிலே அங்குள்ள அஸூயாளுக்களான
வித்வான்கள் இவரை அபசரிக்கத் தேட ஸ்ரீ உடையவரும் கேட்டு அருளி இத்தைக் காணக் கடவோம் என்று திரு உள்ளம் பற்றி இருக்க
அவ்வளவில் வித்வான்கள் பித்தேறித் தங்களைத் தாங்களே மோதிக் கொண்டு பேய்களாய் ஒடித் திரிய ராஜாவும் இத்தைக் கண்டு
ஸ்ரீ உடையவரைத் தண்டன் இட்டு -தேவரீர் இப்படி செய்து அருளலாமோ என்று வேண்டிக் கொண்டு அவர்களையும் ஸ்வஸ்தராம் படி
பண்ணுவித்து அவருடைய திருவடிகளிலே ஆஸ்ரயிப்பித்து தன் சர்வ பரிகரத்துடன் இருகாத வழி
சேவித்துக் கொண்டு வந்து வழி விட்டு மீண்டு போக

ஸ்ரீ உடையவரும் வாரணாசீ வழியாக எழுந்து அருளி கங்கையைக் கிட்டி கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் எல்லாம்
இறைப் பொழுது அளவினில் கழுவிடும் பெருமையை யுடைய கங்கையில் திருமால் கழல் இணைக் கீழே குளித்து என்கிறபடியே நீராடி –
கபாலி ஸ்பர்ச தோஷத்தையும் கழித்து கேசவாதி துவாதச ஊர்த்வ புண்டரங்களையும் தரித்துக் கொண்டு ஸ்ரீ கண்டம் என்னும் கடி நகரிலே
எம்பெருமானையும் கை தொழுது கழல் இணை பணிந்து புறப்பட்டு ஸ்ரீ புருஷோத்தமத்து ஏற எழுந்து அருளி ஸ்ரீ ஜெகந்நாதனையும்
திருவடி தொழுது அங்குள்ள ப்ரசன்ன பவ்த்த வித்வான்களையும் ஜெயித்து அங்கே ஸ்ரீ ராமானுஜ மடம் ஓன்று உண்டாக்கி
அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீ கூர்மத்து ஏற எழுந்து அருளி ஸ்ரீ கூர்ம நாதனையும் சேவித்து ஸ்ரீ ஸிம்ஹாத்ரி ஏற எழுந்து அருளி
ஸ்ரீ ஸிம்ஹ கிரி அப்பனையும் சேவித்து அவ்விடத்தில் அந்நிய சமயங்களையும் தர்க்கித்து ஜெயித்து
அங்கு இருந்து புறப்பட்டு ஸ்ரீ அஹோபிலத்து ஏற நின்று ஸ்ரீ அஹோபில நரஸிம்ஹனையும் சேவித்துப் புறப்பட்டு

தெழி குரல் அருவித் திருவேங்கட மலை ஏறித் திருவேங்கடமுடையானையும் சேவித்து நிற்க அவ்வளவில் –
தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும் திரண்டு அருவி பாயும்
திருமலை மேல் எந்தைக்கு இரண்டு உருவும் ஒன்றாம் இசைந்து -என்று ஆழ்வார் அனுபவித்த ஹரிஹர ஆகாரம் ஒத்து இருக்கையாலே
சைவர் கண்டு எங்கள் நாயனார் என்று பிணங்கி வர ஸ்ரீ உடையவரும் உங்கள் தம்பிரானுக்கு அசாதாரண சிஹ்னமான
த்ரி ஸூல டமருகத்தையும் எங்கள் பெருமாளுக்கு அசாதாரண சிஹ்னமான திருவாழி திருச் சங்கு ஆழ்வார்களையும் பண்ணித்
திருவேங்கடமுடையான் திரு முன்பே வைப்போம் -அவர் எத்தை எடுத்துத் தரித்துக் கொள்வாரோ அத்தை இட்டு
அவர் ஸ்வரூப நிரூபணம் பண்ணக் கடவது என்று அவ்வாயுதங்களைப் பண்ணி அவர் சந்நிதியில் வைத்து கர்ப்ப க்ருஹத்திலே
ஒருத்தரும் இல்லாதபடி சோதித்து திருக் காப்பைச் சேர்த்துக் கொண்டு புறப்பட்டு வந்து ப்ராதக்காலம் ஆனவாறே
திருக்காப்பை நீக்கி சேவிக்கிற அளவிலே கூராழி வெண் சங்கு ஏந்தி த்ரி ஸூல டமருகங்களைக் காற்கடைக் கொண்டு இருக்கக் கண்டு
ஆனந்த அஸ்ருக்கள் பனிப்பக் கொந்தளித்துக் குணாலைக் கூத்தடித்துக் கொண்டு சைவரை அடித்தோட்டி விட்டு
பொன்னை மா மணியை அணி ஆர்ந்ததோர் மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு என்கிறபடியே வர்ஷுக வலாஹகம் போலே
அகிலர்க்கும் அகில தாபத்தையும் போக்கி அகில அபேக்ஷித பிரதரான திருவேங்கடத்து எந்தையைத் திருவடி தொழுது
அப்போதே திருமலையில் இறங்கித் திருத் தாழ்வரையில் ஆழ்வார்களையும் திருவடி தொழுது புறப்பட்டு

ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளி ஸ்ரீ பேர் அருளாளரையும் சேவித்து புறப்பட்டுத் திருவல்லிக்கேணி திரு நீர்மலை முதலான
கிழக்கில் திருப்பதிகளையும் சேவித்து ஸ்ரீ மதுராந்தகத்து ஏற எழுந்து அருளி ஸ்ரீ ஏரி காத்த பெருமாளையும் சேவித்து
ஸ்ரீ பெரிய நம்பி தம்மை கிருபை பண்ணி அருளின திரு மகிழ் அடியைத் தண்டன் இட்டு தொண்டை மண்டலத்தில் உள்ள
மாயாவாதிகளையும் ஜெயித்து ஸ்ரீ திருவயிந்த்ர புரத்தில் ஸ்ரீ தெய்வ நாயகனையும் திருவடி வணங்கி புறப்பட்டு
ஸ்ரீ வீர நாராயண புரத்தே சென்று ஸ்ரீ நாதமுனி ஸ்ரீ மன்னனாரையும் சேவித்து ஸ்ரீ நாதமுனிகள் யோகத்தில் எழுந்து அருளி இருந்த
இடத்தையும் சேவித்து இப்படி பூ பிரதக்ஷிணம் பண்ணி மடங்கித் திருவணை ஆடி திருவரங்கம் பெரிய கோயிலிலே எழுந்து அருளி
ஸ்ரீ பெரிய பெருமாளை அமலானாதி பிரானில் படியே திருவடி முதல் திருமுடி அளவாக முடிவு இல்லாதோர் எழில் நீல மேனியையும் அனுபவித்து
அஞ்சலித்துக் கொண்டு ஜெய ஸ்ரீ உடன் நிற்க ஸ்ரீ பெருமாளும் பவள வாய் திறந்து உமக்கு ஒரு குறையும் இல்லையே என்ன
ஸ்ரீ பாஷ்யகாரரும் திருமால் உருவொடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர் திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே
என்கிறபடியே அங்கும் தேவரீரையே சிந்தித்து எங்கும் திரிந்து வந்த அடியேனுக்கும் ஒரு குறை உண்டோ என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பெருமாளும் உகந்து தீர்த்த பிரசாதம் ப்ரசாதிப்பிக்க ஸ்வீ கரித்து புறப்பட்டு திரு மடமே எழுந்து அருளி
அணி யரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்ப மிகு பெரும் குழுவு கண்டு உகந்து
அவர்களை கிருபை பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருந்தார்

—————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் -ஸ்ரீ எம்பாரை திருத்தி அருளிய வ்ருத்தாந்தம்-/ஸ்ரீ திருக் கோஷ்டியூர் நம்பியிடம் விசேஷ அர்த்தம் கேட்டு அருளுதல்-/திருமாலை ஆண்டான் இடம் திருவாய் மொழி கேட்டல் – /ஸ்ரீ திருமலை நம்பியின் இடத்து ஸ்ரீ உடையவர் ஸ்ரீ ராமாயணம் கேட்டல் —

February 16, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ எம்பாரை திருத்தி அருளிய வ்ருத்தாந்தம் –

முன்பு ஸ்ரீ திருமலை நம்பி சந்நிதிக்குப் போக விட்டு இருந்த ஸ்ரீ வைஷ்ணவர் ஹர்ஷ பிரகர்ஷத்துடன் மீண்டு எழுந்து அருளி
ஸ்ரீ உடையவர் திருவடிகளில் சேவிக்க ஸ்ரீ உடையவரும் அவரது முக விலாசத்தைக் கண்டு கார்ய சித்தியை நிச்சயித்து ப்ரீதியுடனே –
அந்த வ்ருத்தாந்தத்தை விவரமாக சொல்லும் என்ன –
ஸ்ரீ வைஷ்ணவர் -தேவரீர் விடை பிரசாதித்து அருளிய பின்பு திருமலைக்குப் போய் திருமலை நம்பியை சேவித்து
தேவரீர் நியமனப்படியே விண்ணப்பம் செய்தென் -ஸ்ரீ நம்பியும் கேட்டருளி -இது நாமே செய்யக் கடவதாக இருக்க
நம் இராமானுசனும் எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதாகப் பெற்றதே என்று தேவரீர் ஆனுகூல்யத்துக்கு உகந்த திரு உள்ளத்தராய் –
தத் க்ஷணமே ஸ்ரீ பாதத்து முதலிகள் உடனே அடியேனையும் கூட்டிக் கொண்டு காள ஹஸ்தி குளக்கரையில் ஒரு மரத்தடியில்
எழுந்து அருளி இருக்க உள்ளங்கை நாயனாரும் அங்கே ருத்ர அபிஷேக அர்த்தமாக குடம் கொண்டு ருத்ர பரமான பாட்டுக்களையும்
கதறிக் கொண்டு வர ஸ்ரீ நம்பியும் -கொன்றைச் (சடை முடியானை-)சடையானை குளிர நீராட்டினால் என் உனக்கு உண்டாம் பயன் -என்று
அருளிச் செய்ய நாயனாரும் இப்பாசுரம் கேட்டு ஸ்ரீ நம்பியை ஸ்மயமாந முகனாய் ஏறப் பாரா நின்று கொண்டு போக
இவரும் அவன் செய்யும் சேமத்தை எண்ணி தெளிவுற்ற சிந்தையராய் மீண்டு திருமலையில் போய் வ்யாக்யானித்துக் கொண்டு
எழுந்து அருளி இருந்தார் –

பின்னையும் ஒரு நாள் முன்பு போலே அக்குளக் கரையிலே வட வருஷ சாயையிலே எழுந்து அருளி இருக்க
அங்கே நாயனாரும் அபிஷேக ஜல ஹரண அர்த்தமாக குடம் எடுத்து வருமது கண்டு ஸ்ரீ நம்பியும் அப்போது ஒரு சிந்தை செய்து –
என் மனம் சூழ வருவானாய் -உறங்குவான் போல் யோகு செய்வான் தானே -உணர்வைப் பெற ஊர்ந்தவன் உறங்குகிறானோ -என்று
தம்முடைய ஆச்சார்ய திவ்ய ஸூக்தி யிலே -ஸ்வ பாவிக அனவதிக அதிசய ஈஸீத்ருத்வம் -என்கிற ஸ்லோகத்தை
ஒரு ஓலைப் புறத்திலே எழுதி அவன் வருகிற வழியிலே போக விடுத்து இருக்க -அவனும் அவ்வழியில் வந்து
அவ் ஓலையைக் கண்டு எடுத்து வாசித்துக் கொண்டு கடுகப் பொகட்டு ஜலத்தை ஆஹரித்துக் கொண்டு
மீண்டு போகிறவன் ஜலத்தையும் இறக்கி முன்பு எறிந்து ஏட்டைத் தேடி எடுத்து மீண்டு குடம் எடுத்துக் கொண்டு வருகிறவன்
எங்களைக் கண்டு -சோகஸ் ஸ்லோஹத்வம் ஆகத -என்று ஸ்ரீ வாலமீகி பகவான் அர்த்த சிந்தனை பண்ணினால் போலே
இவனும் ஸ்லோக அர்த்த பர்ய ஆலோசனை பண்ணா நின்று கொண்டு கிட்ட வந்து நின்று –

உங்கள் கையில் நழுவின பொருள் இதுவோ -என்ன ஸ்ரீ நம்பியும் -வேறே சிலர் பொருள் நழுவுமது ஒழிய
எங்கள் பொருள் நழுவதுமது அல்ல என்ன -அவனும் அது கிடக்கிடீர் –
நீங்கள் எல்லாரும் ஓர் இடத்தில் நடக்கிறது என் என்ன -ஸ்ரீ நம்பியும் மார்க்கம் கலக்கம் அற்று இருக்கையாலே என்ன –
அவனும் கேவலருக்கு மார்க்கங்கள் உண்டோ என்ன – இவரும் பொருள் கை உண்டாய் செல்லுமவனுக்கு அடுப்பது இதுவன்றோ என்ன –
அவனும் இப்போது நீங்கள் உற்றாரை விட வந்தீர்களோ -என்ன இவரும் -அது அல்ல கறைவைகள் கொள்ள வந்தோம் என்ன –
அவனும் அனுஷ்டாதாக்களுக்கும் பஹு பாத தூளி பவித்ரம் அன்றோ என்ன -இவரும் அது இடம் அறிந்து நேர் படில் நல்லது என்ன –
அவனும் குறுக்கு நெடுக்காகில் பேதம் என் என்ன -இவரும் செவ்வை இருக்க திர்யக்காகையே பேதம் என்ன –
அவனும் இது புது வார்த்தைக் கட்டுகளோ என்ன இவரும் பழைய வார்த்தைக் கட்டுக்களும் இப்படியே என்ன –
அவனும் இதில் பூர்வ விசாரம் வேண்டாவோ என்ன நம்பியும் பரத்வத்திலே காண் விசாரம் இருப்பது என்ன
நாயனாரும் நிருத்தரனாய் ஸ்ரீ நம்பியை ஏறப் பாரா நின்று கொண்டு யதா ஸ்தானமே போம் போது
தலை துலுக்கி அடைவு கேடு காணலாம் படி போனான்

ஸ்ரீ நம்பியும் அது கண்டு — பிரசாதம் அஹமச்சித்தம்-என்னுமா போலே நெஞ்சம் உருகா நின்றதே -அவரே இனி யாவாரே-என்று
அனுசந்தித்து ஸாத்ய கோடியில் ஏறிட்டு முதலிகளுடன் சல்லாபித்துக் கொண்டு திருமலையே மீண்டு எழுந்து அருளினார் -என்றவாறே
ஸ்ரீ உடையவரும் மிகவும் ஆனந்தித்து ஸ்ரீ கூரத்தாழ்வானையும் ஸ்ரீ முதலியாண்டானையும் இருந்த முதலிகளையும் பார்த்து அருளி –
கேட்டீர்களா கோவிந்தனுக்கு ஸ்ரீ ஆளவந்தார் திவ்ய ஸூக்தி நெஞ்சில் உற்று அதற்கு வாங் மாத்திரத்தாலே வைதண்டிகச் சாயையைக் காட்ட
அதற்கு ஸ்ரீ நம்பி சாயா மாத்திரத்தாலே சதுத்தரங்களை வாக் சாதுர்யங்களாலே ரசிக்க கோவிந்தனும் ஸாஸ்த்ர விதக்தனாகையாலே
ஸ்ரீ நம்பியினுடைய ஸ்ரீ ஸூக்தி வைசாரத்ய க்ரமங்களிலே ஈடுபட்டு நிருத்தரானான் இறே -எங்கனே என்னில்

கூடஸ்தோ அக்ஷர உச்யதே –அமரர்கள் ஆதி முதல்வன்
தேஹீ சன்மார்க்க வர்த்தந -நெறி வாசல் தானேயாய் நின்றான்
கச்சிந் மாம் வேத்தி தத்வத – யானே நீ என் உடைமையும் நீயே
ஞாநேந ஹீந பஸூபிஸ் ஸமான – என் நினைந்து போக்குவார் இப்போது
யேவா லலாட பலகேலச தூர்த்வ புண்ட்ரா -நீறு செவ்வே இடக் காணில்
வேத மூல ப்ரமாணாத்-மிக்க வேதியர் வேதம்
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் –தர்மே சர்வம் ப்ரதிஷ்டிதம் -அவித்யயாம்ருத் யுந் தீர்த்வா வித்யயா அம்ருதம் அஸ்நுதே –
பிரணவோதா நுஸ்சரோஹ்யாத் மா ப்ரஹ்ம தல்லஷ்யம் உச்யதே -அப்ரமத்தேந வேத்தவ்யம் சரவத் தன்மயோ பவத் —
(போத்தவ்யம்-என்றும் சரவத் தத்வயோவித் -பாட பேதம் )
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணா த்ருத்ரோ ஜாயதே
என்று இப்படிப்பட்ட ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணாதிகளிலே ப்ரதிபாதிக்கிற அர்த்தங்களை எல்லாம் தத் காலத்திலே
மனஸ்ஸானது அவகாஹிக்க கோவிந்தனும் நிருத்தரனாய் டோலாயமான சித்தனாய்ப் போகையாலும் இவரும் அவனை
ஸாத்ய கோடியிலே ஏறிட்டுத் திரும்பி அருளுகையாலும் ஸ்ரீ நம்பிக்கு அவனுடன்
ஓடின சாமர்த்தியம் இருந்தபடி என் -என்று விஸ்மிதராய் ஸ்ரீ வைஷ்ணவரை உபலாளித்து அருளி பின்னை என் என்று கேட்டருள

அவரும் –யம்யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் -யம்யம் பச்யதி சஷுஷா ஸ்தாவராண் அபி முச்யந்தே கிம்புநர் பாந்தவாஜநா -என்கிறபடியே
தேவரீருடைய உபயவித சம்பந்தம் பழுது போமோ -மூன்றாம் கதியில் கார்ய சித்தியைக் கேட்டருள வேணும் என்று விண்ணப்பம் செய்தார் –
எங்கனே என்னில்
ஸ்ரீ திருமலை நம்பியும் திருமலையில் சிந்தாமணியைத் திருவடி தொழுது புறப்பட்டு காளஹஸ்தி எல்லை நிலத்தோப்பில்
எழுந்து அருளி இருந்து ஸ்ரீ பாதத்து முதலிகளுக்கு திருவாய் மொழி வியாக்யானம் ப்ரசாதித்து அருளா நிற்க நாயனாரும்
ஒரு பாதிரி மரம் ஏறி புஷ்பாபசயம் பண்ணா நிற்க அவ்வளவில் -திண்ணன் வீடு -என்கிற திருவாய் மொழிக்கு அர்த்தம்
அருளிச் செய்யா நிற்க நாயனாரும் மூன்றாம் பாட்டு அளவும் பூ பறிக்கை தவிர்ந்து கேட்டுக் கொண்டு இருந்து நாலாம் பாட்டில் –
எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே என்று வர நாயனாரும் அம்மரத்தின் நின்றும் திடுக்கென குதித்து
கையில் இருந்த பூப் படலிகையும் சுழற்றி எறிந்து தரித்து இருந்த ருத்ராஷத்தையும் அலங்கல் அழிய வாங்கி வீசிப் பொகட்டு –
தகாது தகாது -என்று ஸ்ரீ நம்பி திருவடிகளிலே அடைவுகெட விழுந்து கிடந்து –
அஞ்ஞஸ் சா சா ரஹீ நஸ்ச மலிநோ துக்க சாகோ நிமக்நா–என்றும் நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என்றும் சொல்லுகிறபடியே
தம் வர்த்தமானத்தைச் சொல்லி அதி விஷண்ணராகிறார்-எங்கனே என்னில்
உபய விபூதி நிர்வாகத்துக்கு முடி சூடியவன் இருக்க விரி தலை யாண்டியை விரும்பினேன் -என்றும்
புதுக் கணிப்புடைய புண்டரீகாக்ஷன் இருக்க புகைக் கண்ணனை-பொறி பறக்கும் கண்ணனைப் பூசித்தேனே -என்றும்
கடல் மண்ணுண்ட கண்ணன் இருக்க கறை கொண்ட கண்டத்தனை காமித்தேனே -என்றும்
கல் எடுத்த கன் மாரி காத்த கற்பகம் இருக்க கையார் கபாலியைக் கண்டு வணங்கினேன் -என்றும்
திருவிருந்து மார்பன் இருக்க திருவில்லாத தேவரைத் தொழுதேன் -என்றும்
பீதகவாடைப் பிரான் இருக்க புலியுரி உடையானை பின் தொடர்ந்தேனே என்றும்
சதிரான கங்கை யடியான் இருக்கச் சுடுகாடு காவலனைச் சுற்றி வலம் வந்தேனே -என்றும்
பெரு மலராகிற பெரும் துழாய் வனம் இருக்க பெரும் கையால் குடம் எடுத்து பேய்ச் சுரைக்கு நீர் வார்த்தேனே -என்றும்

இப்படி பலவகையாகப் புலம்பி இவ்வாத்மாவை உஜ்ஜீவிப்பிக்க வேணும் என்று தண்டன் இட்டு எழுந்திராமல் இருக்க
ஸ்ரீ நம்பியும் முதலிகளை முகம் பார்த்து ஸூத்தி யோகம் உண்டாய் இருந்தது -ஸ்ரீ ஆளவந்தார் கிருபை பண்ணும் படிக்கு
குறை இல்லை என்று அருளிச் செய்து இவரையும் முடி பிடித்து எடுத்து உடம்பையும் தடவி பலபடியாக சாந்த்வ வாதனம் பண்ணி –
ஆபபந்நிவ சஷுர்ப்யாம் -என்கிறபடியே குளிர நோக்கி விஸ்ரம்ப கதனம் நடவா நிற்க இச் செய்தியை அடையக் கேட்டு
தத் ஸ்தானத்தார் அனைவரும் வந்து ஸ்ரீ நம்பியுடனே -எங்கள் ஸ்தானத்துக்கு கடவரான இவரை நீங்கள்
எங்கனே அம்மான் பொடி இட அடுக்கும் என்ன ஸ்ரீ நம்பியும் அம்மான் பொடிக்கு ஈடுபட்ட இவரையே கேட்டுக் கொள்ளுங்கோள்-
எங்கள் வழி அந்யாத்ருசம் -அசல் வழி வருகிறோம் அல்லோம் என்ன -அவர்கள் நாயனாரை வாரும் என்று கையைப் பிடிக்க
இவரும் கையை உதறி நம் கையைப் பிடிக்கக் கூடுமோ என்று கருவூலத்தின் திறவு கோல் இலச்சினை மோதிரம் முதலானவற்றையும் பொகட்டு –
இனி உங்களுக்கும் நமக்கும் பணி இல்லை என்று கை தட்டி முகம் திருப்பி நிற்க அவர்களும் நிராசராய்
ஸ்ரீ நம்பியுடனே நாங்கள் இச்செய்திகள் எல்லாம் நேற்றே கேட்டோம் -நாங்கள் பிரான் நம் வழி வருவார் என்று
உங்களுடனே சண்டைக்கு நிற்பதாக எண்ணி இருந்தோம் -காளஹஸ்தி உடையாரும் எங்கள் கனவிலே

பாஷண்ட பவ்த்த சார்வாகைஸ் த்ரயீ தர்மோ விலோபித -என்கிறபடியே வேத பாஹ்யரான பவ்த்தாதிகளாலே
வேத சாஸ்திரங்கள் ப்ரமுஷிதங்கள் ஆகா நிற்க –
த்ரிதண்ட தாரினாபூர்வம் விஷ்ணு நார ஷிதா த்ரயீ -என்று சொல்லுகிறபடியே நாஸ்திக நிரசன அர்த்தமாக த்ரிதண்ட சன்யாசியான
தத்தாத்ரேயரைப் போலே சேஷாசன அனந்த வைநதேயர்கள் யமுனைத் துறைவர் இளையாழ்வார் கோவிந்த பட்டராகவும்
இவர்கள் சேர்த்திக்கு சங்கு சக்ராம்சங்கள் முதலியாண்டான் கூரத்தாழ்வானாகவும் மற்றும் உள்ள விஷ்ணு பார்ஷதங்களும்
இப்படியே வந்து அவதரித்தார்கள்-இது நமக்கு பிரியம் ஆகையால் கோவிந்த பட்டருக்கு முன்பு காசி வாச அபேக்ஷை இருக்கையாலே
அந்தப் புத்தியைத் தவிர்க்கைக்காக நாமே உள்ளங்கை கொணர்ந்த வியாஜ்யம் இட்டு அழைத்து வைத்துக் கொண்டது ஒழிய மற்று இல்லை –
ஆகையால் அவர்கள் ஸ்வ இச்சா விஹாரிகள் என்று சொன்னார் என்று சொல்லி மீண்டு போக
ஸ்ரீ நம்பியும் இவரைக் கூட்டிக் கொண்டு திருப்பதி ஏற எழுந்து அருளி தத் க்ஷணமே உபநய நாதிகளையும் செய்வித்து
ஸம்ஸ்கார பஞ்ச கர்த்தவ்ய -என்று நெடுமால் அருவியாகிய ஸ்வாமி புஷ்கரணிக் கரையிலே பஞ்ச ஸம்ஸ்காரங்களையும்
பிரசாதித்து அருளி திருப்பல்லாண்டு முதலாக ஆழ்வார்களுடைய திவ்ய பிரபந்தங்களையும் ஓதுவித்து அர்த்த பஞ்சக ஞானத்தையும் உண்டாக்கி
விசேஷித்து கிருபை பண்ணி அருளினார் –
இவரும் தேவு மற்று அறியாதே ஆச்சார்ய பத ஏக நிஷ்டராய் -அஹம் சர்வம் கரிஷ்யாமி என்று இருக்குமவரைப் போலே
ஒழிவில் காலத்தில் படியே அவர் திருவடிகளிலே சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் சர்வ வித கைங்கர்யங்களையும்
செய்து கொண்டு இரா நின்றார்
இந்நாள் சேவித்து இருந்து விடை கொண்டேன் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் அந்த
ஸ்ரீ வைஷ்ணவரை மிகவும் கிருபை செய்து அருளினார் –

அநந்தரம் ஸ்ரீ ராமானுசனும் ஸ்ரீ பெரிய நம்பி திரு மாளிகைக்கு எழுந்து அருளி அவர் திருவடிகளிலே தாளும் தடக்கையும்
கூப்பித் தண்டன் சமர்ப்பித்து -ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தில் சேவியாத இழவு தீரத் தேவரீர் திருவடிகளிலே ஆஸ்ரயிக்கப் பெற்றேன் –
தேவரீர் திரு உள்ளத்தில் உண்டான அர்த்த விசேஷங்களை அடியேனுக்கு ப்ரசாதித்து அருள வேணும் என்று
விண்ணப்பம் செய்ய ஸ்ரீ நம்பியும் அப்படியே ஆகிறது என்று –
அஹோ த்வயஸ்ய மஹாத்ம்ய மஹோ வீர்ய மஹோ பலம் -மந்த்ர ரத்னம் ஸூப கரம் வேத சாரம் சனாதனம் சர்வ பாப க்ஷய கரம்
சர்வ புண்ய விவர்த்தநம் -ஸ்ரீ கரம் லோகவஸ் யஞ்ச சத்யம் சம்சார தாரணம் -( சத்யஸ் சம்சார தாரகம் பாட பேதம் ) என்கிறபடியே
பாப ஹரமுமாய் புண்ய வர்த்தகமுமாய் சம்சார பந்தத்தை அறுக்க வற்றதாய் மிகவும் ஸ்லாகிக்கப் பட்டு வேத சார தமமாய்
மாங்கள்யகரமாய் மந்த்ர ரத்னம் ஆகிற த்வயார்த்தத்தை ச விசேஷமாக பிரசாதித்து அருளி இன்னமும் சில அர்த்த விசேஷங்கள் உண்டு –
அவற்றை ஸ்ரீ ஆளவந்தாருடைய அபிமான அந்தர்பூதரான ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் சென்று கேளும் -என்று அருளிச் செய்தார்

பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த முதலிகள் -ஸ்ரீ இளையாழ்வார் -ஸ்ரீ மலை குனிய நின்ற பெருமாள் –
ஸ்ரீ பிள்ளை திருக்குல முடையார் -ஸ்ரீ பட்டாரியரில் சடகோபர் தாசர் ஆகிய நான்கு முதலிகளும்

—————————————

ஸ்ரீ திருக் கோஷ்டியூர் நம்பியிடம் விசேஷ அர்த்தம் கேட்டு அருளுதல்-

ஸ்ரீ ராமானுசனும் அங்கே ஏற எழுந்து அருளி திருக் கோஷ்டியூர் வாசிகளான மாற்றிலி சோறிட்டுத் தேச வார்த்தை படைக்குமவர்களை
ஸ்ரீ நம்பி திருமாளிகை எங்கே என்று கேட்டருளி -அவர்களும் அப்பாலே தோன்றுகிற கூரை என்று காட்ட –
அவ்விடம் தொடங்க ஸ்ரீ நம்பி திருமாளிகை அளவும் தண்டன் இட்டுக் கொண்டு எழுந்து அருள
அப்போது அவ் வூரில் குற்றம் இன்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கு அனுகூலரான சத்துக்கள் நம்பி பிரபாவம் அறிந்தார்கள் –
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்தில் சென்று சாஷ்டாங்க பிரணாமாம் பண்ணி -தேவரீர் அடியேனுக்கு ரஹஸ்யார்த்த விசேஷங்களை
எல்லாம் ப்ரசாதித்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய –
அவரும் இவருடைய அத்யாவசிய பாஹுள்யத்தை அறிய வேணும் என்று ஆருக்கு என் சொல்லுகேன் என்று முகம் கொடுக்காமல்
எழுந்து அருளி இருக்க ஸ்ரீ உடையவரும் மீண்டு ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளினார் –
பின்பு ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ கோயிலுக்கு திருநாள் சேவிக்க எழுந்து அருளித் தம்மூரே திரும்பி எழுந்து அருளுகிறவரை
ஸ்ரீ நம்பெருமாள் அருள்பாடிட்டுத் திருமாலை திருப்பரியட்டம் தீர்த்தம் ஸ்ரீ சடகோபனும் பிரசாதித்து நம் ராமானுஜனுக்கு
ரஹஸ்யார்த்தங்களை உபதேசியும் என்று அர்ச்சக முகேன நியமித்து அருள
ஸ்ரீ நம்பியும் -ந சம்வத்சர வாசிநே ப்ரப்ரூயாத் என்றும்
இதம் தே நாத பஸ்காய-என்று தொடங்கி நசாஸூஷ் ரூஷவே வாஸ்யம் -என்றும்
தேவரீர் நியமித்து அருளிற்று இ றே என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பெருமாளும் அப்படி அன்று -சரீரம் வஸூ விஞ்ஞானம் என்று தொடங்கி சொல்லப்பட்ட சிஷ்ய லக்ஷண பூர்த்தி யுள்ள
ஸ்ரீ உடையவருக்குச் சொல்லக் குறையில்லை என்று அருளிச் செய்ய
ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ உடையவரைக் குறித்து ஊரேறே வாரும் என்று அருளிச் செய்து எழுந்து அருள
ஸ்ரீ ராமானுஜரும் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி சந்நிதிக்குச் செல்ல அவரும் இற்றைக்குப் போய் வாரும் என்ன
இவரும் மீண்டு ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளினார் -இப்படி பதினெட்டு பர்யாயம் எழுந்து அருளி ஸ்ரீ பாதத்தில் சேவித்து நின்ற அளவிலும்
ஸ்ரீ நம்பியும் இவருடைய த்ருட அத்யாவசிய பரீஷார்த்தமாக ஒன்றும் அருளிச் செய்யாமல் இருக்க
ஸ்ரீ ராமானுசனும் பெரிய ஆர்த்தியோடே மீண்டு -இணை மலர்க் கண் ததும்ப ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளினார் –

அவ்வளவில் ஸ்ரீ திருக் கோஷ்டியூர் நம்பி சிஷ்யரான ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் வந்து ஸ்ரீ நம்பெருமாளை சேவித்து மீண்டு எழுந்து அருளுகிறவர்
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்தில் சேவித்து நிற்க அவரும் தம்முடைய ஆர்த்தி எல்லாம் தோன்றும்படி பூந்துழாய் முடியார்க்குத் தகவல்ல-
பொன்னாழிக் கையாருக்குத் தகவில்லை-என்று விண்ணப்பம் செய்து போக விட்டு அருள அந்த ஸ்ரீ வைஷ்ணவரும்
ஸ்ரீ நம்பி திருவடிகளிலே சென்று தண்டன் இட்டு அச் செய்தியை விண்ணப்பம் செய்ய ஸ்ரீ நம்பியும் இத்தனை ஆர்த்தி உண்டாவதே
என்று உகந்து அருளி தண்டும் பவித்ரமுமாக தாம் ஒருவரே வருவது என்று அவரையே மீண்டும் இராமானுசன் பக்கல் போக விட்டு அருள
ஸ்ரீ வைஷ்ணவரும் ஸ்ரீ உடையவர் திருவடி ஏறச் சென்று தண்டன் இட்டு ஸ்ரீ நம்பி அருளிச் செய்ததை விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவரும் கேட்டு அருளி மிகவும் உகப்போடு அவரைத் தண்டன் இட்டு ஸ்ரீ கூரத்தாழ்வானையும் ஸ்ரீ முதலியாண்டானையும் கூட்டிக் கொண்டு
அதி த்வரையோடே திருக் கோட்டியூர் ஏறச் சென்று ஸ்ரீ நம்பி திருவடிகளில் தண்டன் சமர்ப்பித்து நிற்க
ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ உடையவரைப் பார்த்து உம்மை ஒருவரையும் அன்றோ வரச் சொன்னோம் -இவர்களைக் கொண்டு வருவான் என் என்று கேட்டு அருள
ஸ்ரீ உடையவரும் தேவரீர் தண்டும் பவித்ரமும் ஆகவன்றோ வரச் சொல்லி அருளிற்று –
இவர்களை தண்டும் பவித்ரமுமாகவே கூட்டிக் கொண்டு வந்தேன் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்பியும் தண்டு யார் பவித்ரம் யார் -என்று கேட்டு அருள ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ முதலியாண்டானைக் காட்டி
இவர் த்ரிதண்டம் -ஸ்ரீ கூரத்தாழ்வானைக் காட்டி இவர் பவித்ரம் என்று அருளிச் செய்ய
ஸ்ரீ நம்பியும் ஆகில் இவ்வர்த்தத்தை இவர்களுக்கு ஒழிய மற்று ஒருவருக்கும் சொல்லாதே கொள்ளும் என்று நியமித்து அருளி
தம் திருவடிகளைத் தொடுவித்து சூளுறவு கொண்டு பரம கிருபையால்

ப்ரணவாத்யம் நமோ மத்யம் நாராயண பதாந்திமம் -மந்த்ரம் அஷ்டாக்ஷரம் வித்யாத் சர்வ சித்திகரம் சதா ந்ருணாம் முமுஷுணாம்
சதா ஜப்யம் புக்தி முக்தி பல ப்ரதம் வைஷ்ணவானாம் சதா ஜப்யம் பக்தி ஞான ப்ரவர்த்த நம் —
என்கிறபடியே எட்டுத் திரு அக்ஷரமாய் பத த்ரயாத்மகமாய் -ஞான பக்தி வைராக்ய ஜனகம் ஆகையால் முமுஷுக்களான
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நாத் தழும்பு எழ சதா அனுசந்தேயமாய் நலம் தரும் சொல்லான பெரிய திருமந்திரத்தை பிரசாதித்து அருளினார் –
ஸ்ரீ ராமானுசனும் க்ருதார்த்தராய் அதின் மற்றை நாள் அவ் வூரில் எம்பெருமானான தெற்கு ஆழ்வார் திரு ஓலக்கத்தில்
அநேகம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அப்பரம ரஹஸ்யார்த்தத்தை அருளிச் செய்து அருளினார்

இச்செய்தியை ஸ்ரீ நம்பி கேட்டு அருளி ஸ்ரீ உடையவரை அழைத்து இந்த பரம ரஹஸ்யத்தை வேறு ஒருவருக்கும் சொல்லாதே கொள்ளும்
என்று அன்றோ நாம் உமக்குச் சொன்னோம் -அத்தை மறுத்து நீர் அநேகம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சொன்னீர் என்று கேட்டோம் என்று கேட்டு அருள
ஸ்ரீ உடையவரும் உள்ளது தேவரீர் திருவடிகளை முன்னிட்டு சொன்னேன் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ நம்பியும் ஒருவருக்கும்
சொல்ல வேண்டா என்று நியமித்து அன்றோ சொன்னோம் -அத்தை மறுத்துச் சொன்ன உமக்கு பலம் ஏது என்று கேட்டு அருள
ஸ்ரீ உடையவரும் ஆச்சார்ய நியமனத்தை மறுத்த எனக்கு நரகமே பலம் என்று அருளிச் செய்ய -இத்தை அறிந்து சொல்லுவான் என் என்று கேட்டு அருள
ஸ்ரீ ராமானுசனும் அடியேன் ஒருவனே அன்றோ நரகம் புகுவது -தேவரீர் திருவடிகளை முன்னிட்டுக் கொண்டு சொல்லுகையாலே
இவ்வாத்மா கோடிகள் எல்லாம் தேவரீர் திருவடி சம்பந்தத்தால் உஜ்ஜீவிப்பர்கள் என்று சொன்னேன் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்பியும் இந்த பர ஸம்ருத்தி நமக்கு கூடிற்று இல்லையே என்று இவர் பர ஸம்ருத்திக்கு போர உகந்து அருளி
எம்பெருமானாரே வாரும் என்று எடுத்து அணைத்துக் கொண்டு அவரோ நீர் என்று அருளிச் செய்து –
இது வரையில் இத்தர்சனம் பரம வைதிக சித்தாந்தம் என்று இருந்தது –
இன்று முதல் எம்பெருமானார் தர்சனம் என்னுங்கோள் என்று எல்லாருக்கும் அருளிச் செய்து அந்த உகப்பின் மிகுதியால்
வாரீர் எம்பெருமானாரே இன்னும் ஒரு சரம ஸ்லோகார்த்த விசேஷம் சொல்லுவதாக இரா நின்றோம் –
இவ்வளவிலே நீர் த்ருபதராய் இரா நின்றீர்-உம்முடைய அத்யாவசாயத்தை சொல்லிக் கண்ணீர் என்ன

ஸ்ரீ எம்பெருமானாரும் தேவரீர் அருளிச் செய்த அர்த்தத்துக்கு மேலே ஓர் அர்த்தம் உண்டு என்று இருந்தேன் ஆகில் அவிசுவசி யாவேன் –
கேளாது இருந்தேன் ஆகில் அருளிச் செய்த அர்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாம் -என்று விண்ணப்பம் செய்ய
விரகு அறியாமல் ஸ்ரோதவ்ய சாபேஷனாய் வியாகுல அந்தக்கரணனாய் இரா நின்றேன் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்பியும் இப்போது போய் ஏகாந்தமாக நீர் ஒருவருமே வாரும் என்று அருளிச் செய்ய இவரும் ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளினார்
பின்பு ஸ்ரீ எம்பெருமானார் ஒருவருமே ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்து ஏறச் சென்று தண்டன் சமர்ப்பித்து நிற்க
ஸ்ரீ நம்பி இவர் திருக்கையைப் பிடித்துக் கொண்டு போய் ஏகாந்தமாக மேல் தளத்தில் ஏறிப் படிக்கதவை விழ விட்டு எழுந்து அருளி இருந்து
ஒருவருக்கும் சொல்லாதபடி தம் திருவடிகளை தொடுவித்து சூளூருவு கொண்டு தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே –
சர்வ குஹ்ய தமம் பூய ஸ்ருணுமே பரமம் வச இஷ்டோ அசி மே த்ருட இதி ததோ வஹ்யாமி தேஹிதம்-என்று ஸ்ரீ கீதாச்சார்யன் அருளிச் செய்தது போலே
ஸ்ரீ நம்பியும் சர்வ குஹ்ய தமமாக பரம ரஹஸ்யமான சரம ஸ்லோகார்த்தத்தையும் அருளிச் செய்து அத்தாலே ப்ரதிபாதிக்கப் படுகிற
இதர உபாய தியாக பூர்வகமான சித்த உபாய வைலக்ஷண்யத்தையும் பிரசாதித்து இந்த பரம ரஹஸ்யார்த்தத்தை
இதந்தே நாத பஸ்காய நா பக்தாய கதாசன நசாஸூஸ் ரூஷவே வாஸ்யம் நசமாம் யோ அப்யஸூயதி –என்று சொல்லுகிறபடியே
பகவத் விமுகர் முதலான நாஸ்திகர் செவிப்படாத படி பேணிக் கொண்டு போரும் என்று நியமித்து அருள
இவரும் அடியேன் அப்படிப்பட்ட பேருக்கு சொல்லக் கடவேன் அல்லேன் -பகவத் ப்ரவணரான ஸ்ரீ கூரத்தாழ்வான் ஒருவருக்கும் சொல்லாது
இருக்க ஒண்ணாதே என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ நம்பியும் இவ்வர்த்தம் கேட்க்கைக்கு அதிகாரம் உண்டே யாகிலும் –
சம்வஸ்த்ர ந்ததர்த்தம் வா மாச த்ரய மதாபிவா பரீஷ்ய விவிதோபாயை க்ருபயா நிஸ்ப்ருஹோ வதேத் -என்கிறபடியே
பஹு பிரகாரத்தாலும் அவருடைய அத்யாவசாயத்தை அறிந்து ஒரு சம்வத்சரம் ஸூஷ்ருஷை கொண்டு சொல்லும் என்று நியமித்து அருள
எம்பெருமானாரும் மாயன் அன்று ஓதிய வாக்கு அதனைக் கற்று யதார்த்த ஞானம் உடையராய் அர்ஜுனன் ஷட்க த்ரயத்தாலும்
எடுப்பும் சாய்ப்புமாக போந்து இவ்வர்த்தம் கேட்டு தரித்தால் போல் அன்றிக்கே மெய்ம்மைப் பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர்
என்கிறபடியே நிர்ப்பரராய் நிர்பரத்வ அனுசந்தானத்தாலே வந்த ப்ரீதி யுத்ருதியால் உண்டான ராஜ குல மஹாத்ம்யத்தோடே புறப்பட்டு
ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளினார்

அநந்தரம் ஸ்ரீ கூரத்தாழ்வானும் ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தில் தண்டன் இட்டு நிற்க அவரைப்பார்த்து அருளி
ஸ்ரீ ஆளவந்தார் நம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணி ஸ்ரீ பேர் அருளாளரை நோக்கி பிரபத்தி அருளினது சபலமாம் படி
ஸ்ரீ நம்பி நம்மை வாழ்வித்து அருளினார் கண்டீரோ என்று அருளிச் செய்து ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ ஆழ்வானைக் குறித்து உமக்கு
உட்பட ஒரு சம்வத்சரம் ஸூஷ்ருஷை கொண்டு அத்யாவசிய பாஹுல்யத்தை அறிந்து சொல் என்று நியமித்து அருளினார் என்ன –
ஸ்ரீ ஆழ்வானும் ஒரு சம்வத்சரம் இஸ் சரீரத்துக்கு நிலை உண்டோ இல்லையோ என்று வியாகுல அந்தக்கரணராய் விசாரித்து அருளி பெற்றால்
அல்லது தரியாத பேராசையால் சம்வத்சர ஸூஷ்ரூஷா சமம் -ஆச்சார்யர் திரு மாளிகை வாசலில் மாச உபவாசம் பண்ணுகை என்று
சாஸ்திரம் உண்டாகையாலே அப்படிச் செய்ய ஸ்ரீ உடையவரும் இரங்கி ப்ரசாதித்து அருளினார்

ஸ்ரீ முதலியாண்டானும் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே தெண்டன் சமர்ப்பித்து அடியேனுக்கும் இவ்வர்த்தம் பிரசாதித்து அருள வேணும்
என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ ஆழ்வான் ஒருவருக்கும் ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்தில் விண்ணப்பம் செய்து கொண்டது –
நீர் நம்பி ஸ்ரீ பாதத்து ஏறப் போய்க் கேளும் என்று அருளிச் செய்ய ஸ்ரீ முதலியாண்டானும் திருக் கோட்டியூர் ஏற எழுந்து அருளி
ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்தில் தண்டன் சமர்ப்பித்துக் கொண்டு ஆறு மாசம் நின்ற இடத்திலும் அவர் முகம் கொடாமல் இருக்க பின்பு
ஸ்ரீ ஆண்டானும் ஸ்ரீ நம்பி திருவடிகளில் சேவித்து நிற்க அவரும் ராமானுஜ பரிக்ருஹீதனைப் போலே இருந்தாயீ என்ன –
அடியேன் தாசாரதி என்ன ஆகில் என் என்று கேட்டு அருள இவரும் சரம ரஹஸ்யார்த்தம் அடியேனுக்கும் பிரசாதித்து அருள வேணும்
என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ நம்பியும்
வித்யா மதோ தன மதஸ் த்ருதீயோ அபி ஜநாந் மத -ஏதே மதா வலிப்தா நா மேத ஏவச தாந்தமா -என்கிற
இம் மூன்று குறும்பும் போனால் ஸ்ரீ எம்பெருமானார் தாமே கிருபை பண்ணி பிரசாதித்து அருளுவார் அஞ்சாதே போம் என்று
தம் திருவடித் தாமரைகளாலே இவர் உத்தம அங்கத்தைப் பூஷிக்கும் படி ப்ரசாதித்து விடை கொடுத்து அருளினார் –
ஸ்ரீ முதலியாண்டானும் மிகவும் சம தம ஆத்ம குணங்களை உடையராய் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்தில்
தண்டன் சமர்ப்பித்து தன்னுடைய ஆர்த்தி எல்லாம் தோற்ற ஸ்ரீ நம்பி அருளிச் செய்த படியை விண்ணப்பம் செய்து
ச விநயராய் நிற்க ஸ்ரீ உடையவரும் தம் சந்நிதி முதலிகளையும் பார்த்து அருளி ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ நம்பி சந்நிதியில்
ஸ்வரூப சிஷை பெற்று வந்த வேஷம் இருந்தபடி பாருங்கோள் என்று அருளிச் செய்து மிகவும் உகப்போடே
ஸ்ரீ ஆண்டானுக்கும் சர்வ குஹ்ய தமமான சரம ஸ்லோஹார்தத்தை உபதேசித்து அருளி அதி ஸந்துஷ்டராய்-
இப்போது அன்றோ நமக்குத் தண்டும் பவித்ரமும் கை புகுந்தது என்று அருளிச் செய்தார் –

—————————–

திருமாலை ஆண்டான் இடம் திருவாய் மொழி கேட்டல் – –

அநந்தரம் சில நாளைக்குப் பின்பு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி ஸ்ரீ நம்பெருமாளை சேவித்து புறப்பட்டு
ஸ்ரீ திருமாலை ஆண்டானையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீ எம்பெருமானார் திரு மடம் எழுந்து அருளினவாறே
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்தில் சேவித்து நிற்க அவரைக் கடாக்ஷித்து –
நீர் ஸ்ரீ திருமாலை ஆண்டான் பக்கலில் திருவாய் மொழிக்கு அர்த்தம் கேளும் என்று ஸ்ரீ உடையவரை அவர் திருக் கையிலே காட்டிக்
கொடுத்து அருளித் தாம் மீண்டு ஸ்ரீ திருக் கோட்டியூர் ஏற எழுந்து அருளினார்
ஸ்ரீ திருமாலை ஆண்டானும் ஸ்ரீ நம்பி அருளிச் செய்ய படி திருவாய் மொழி தொடங்கி நடத்தா நிற்க ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த படி
ஸ்ரீ ஆண்டான் நிர்வஹித்தது ஒழிய பாட்டுக்கள் தோறும் சில அர்த்த விசேஷங்களை ப்ரதிபாதித்து ஸ்ரீ உடையவர் அருளிச் செய்ய –
இது ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டிலோம் என்று அருளிச் செய்து அருளி
அறியாக் காலத்துள்ளே-என்கிற பாட்டுக்கு அறிவு நடையாடாத தசையில் சம்பந்த ஞானத்தை பிறப்பித்து பிறந்த ஞானத்தை
அழிக்கக் கடவதான தேக சம்பந்தத்தோடே பின்னையும் வைத்தாய் என்கிற இழவால் அருளிச் செய்கிறார் -என்று
ஸ்ரீ திருமாலை ஆண்டான் அருளிச் செய்ய
ஸ்ரீ உடையவரும் கேட்டருளி முன்னில் பாட்டுக்களிலும் பின்னில் பாட்டுக்களிலும் பெரிய ப்ரீதியோடே நடவா நிற்க
நடுவே அப்ரீதி தோற்ற சொல்லுமது சேராது -ஆகையால் இங்கனேயாம் அத்தனை –
அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து -என்று அருளிச் செய்கிறார் என்று
இத்தையும் ஒரு உபகார ஸ்ம்ருதி பரமாக்கி அருளிச் செய்தவாறே இது விச்வாமித்ர ஸ்ருஷ்ட்டி ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டிலோம் –
என்று திருவாய் மொழிக்கு அர்த்தம் அருளிச் செயகை தவிர்ந்து இருக்க ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி இத்தைக் கேட்டருளி

ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ திருமாலை ஆண்டான் பக்கல் எழுந்து அருளி திருவாய் மொழி நடக்கிறதோ என்று கேட்டு அருள –
ஸ்ரீ ஆண்டானும் அடியேன் ஸ்ரீ ஆளவந்தார் பக்கல் கேட்ட அர்த்தம் ஒழிய இவர் வேறே சில அர்த்தங்களை ஸ்வ கல்பிதமாக
சொல்லுகையாலே தவிர்ந்தேன் என்ன ஸ்ரீ நம்பியும் அவர் சொன்ன அர்த்தம் ஏது என்ன
ஸ்ரீ ஆண்டானும் அறியாக் காலத்துள்ளே -என்கிற பாட்டுக்கு உபகார ஸ்ம்ருதியாக வேணும் என்கிறார் என்ன
இவ்வர்த்தமும் ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்ய நாம் கேட்டு இருக்கிறோம் என்று ஸ்ரீ நம்பி அருளிச் செய்து
சாந்தீபினி பக்கலிலே ஸ்ரீ கிருஷ்ணன் வேத அத்யயனம் பண்ணினால் போலே காணும் உம்முடைய பக்கல் ஸ்ரீ எம்பெருமானாரும்
திருவாய்மொழி கேட்க்கிறதும் -ஸ்ரீ ஆளவந்தார் திரு உள்ளத்தில் உள்ள அர்த்தம் ஒழிய இவருக்கு வேறே ஒன்றும் பிரகாசியாது –
இவருக்கு நாம் அஞ்ஞாத ஞாபநம் பண்ணுகிறோம் என்று இராதே கொள்ளும் என்று அருளிச் செய்து
ஸ்ரீ திருமாலை ஆண்டானையும் ஸ்ரீ பெரிய நம்பியையும் கூட்டிக் கொண்டு ஸ்ரீ எம்பெருமானார் திரு மடம் எழுந்து அருள
ஸ்ரீ உடையவரும் அதி ப்ரீதியுடன் தாளும் தடக்கையும் கூப்பி இவர்கள் திருவடிகளில் சேவித்து நிற்க இவர்களும் திருவாய் மொழி
விட்ட தறுவாய் தொடங்கி நீரே பலகால் அனுவர்த்தித்து ஆகிலும் பிரபந்தத்தைத் தலைக்கட்டும் என்று ஸ்ரீ ஆண்டானுக்கு அருளிச் செய்தார்கள்

பின்னையும் திருவாய் மொழி தொடங்கி நடவா நிற்கச் செய்தே மீண்டும் ஒரு அர்த்த பிரஸ்தாபத்தில் ஸ்ரீ ஆண்டான் ப்ரதிபாதித்த
அர்த்தம் கேட்டு ஸ்ரீ ஆளவந்தார் இப்படி அருளிச் செய்யார் என்று ஸ்ரீ உடையவர் விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ ஆண்டானும் நீர் ஸ்ரீ ஆளவந்தாரை கண்ணிலும் காணாது இருக்க இப்படி அருளிச் செய்யார் என்கைக்கு நிதானம் என் என்று கேட்டருள
ஸ்ரீ உடையவரும் நான் ஸ்ரீ ஆளவந்தாருக்கு ஏகலவ்யன் அன்றோ என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ ஆண்டானும் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி நமக்கு உரைத்தது ஒத்து இருந்தது -இதுவும் ஒரு திரு அவதாரம் –
ஸ்ரீ ஆளவந்தார் பக்கல் கேளாத அர்த்தம் எல்லாம் இங்கே கேட்டோம் என்று இவரைத் தண்டன் இட்டு அருளினார்

——————————————

ஸ்ரீ திருவரங்க பெருமாள் அரையர் இடத்தில் சரம உபாயத்தை உணர்தல் –

பின்பு ஸ்ரீ எம்பெருமானாரும் திருவாய் மொழி சாத்தி போர ப்ரீதராய் இருக்க அவரைப் பார்த்து ஸ்ரீ பெரிய நம்பியும்
ஸ்ரீ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் பக்கல் இன்னம் ஒரு அர்த்த விசேஷம் உண்டு அத்தை அவர் பக்கலிலே கேளும்
என்று அருளிச் செய்ய ஸ்ரீ உடையவரும் அது லபிக்கைக்காக அன்று முதல் ஆறு மாசம் அரையருக்கு உகப்பாக பால் அமுது காய்ச்சி
ஸமர்ப்பித்தும் திரு அத்யயன காலங்களில் ஸ்ரீ அரையர் திருமேனிக்கு அனுரூபமாக மஞ்சள் காப்பு அரைத்து ஸமர்ப்பித்தும்
அனுவர்த்தித்துப் போரும் காலத்தில் ஒரு நாள் மஞ்சள் காப்பு அரைத்து நீராடப் பண்ணுகிற காலத்தில்
அவருடைய திருமேனிக்கு அனுரூபம் இல்லாது இருக்கிறபடியை அவர் திருமுக மண்டல விகாரத்திலே கண்டு மஞ்சள் பாத்ரத்தை கடக்க வைத்து
வேறே பங்காக மஞ்சள் காப்பை அரைத்து சாத்தி நீராடப் பண்ணி அருள ஸ்ரீ அரையரும் அத்தைக் கண்டு மிகவும் திரு உள்ளம் உகந்து அருளி
ஸ்ரீ உடையவரைக் குறித்து என்னுடைய சர்வத்தையும் கொள்ளை கொள்ளவோ நீர் இப்படிச் செய்தது என்று அருளிச் செய்து

வாரீர் எம்பெருமானாரே உமக்கு ஒரு சரம புருஷார்த்தம் சொல்லுகிறோம் கேளீர் என்று தேவு மற்று அறியாத ஸ்ரீ மதுரகவிகளைப் போலே நீரும் –
குருரேவ பரம் ப்ரஹ்ம குரு ரேவ பரந்தனம் குரு ரேவ பர காமோ குரு ரேவ பாராயணம் குரு ரேவ பரா வித்யா குரு ரேவ பாரங்கதி
யஸ்மாத் தத் உபதேஷ்டா அசவ் தஸ்மாத் குருதரோ குரு -என்று சொல்லுகிறபடியே –
தீ மனம் கெடுத்தும் -மருவித் தொழும் மனமே தந்தும் -அறியாத அறிவித்த ஆச்சார்யனே உபாய உபேயம் -என்று விஸ்வசித்து –
ஆச்சார்யஸ் ஸஹ ஹரிஸ் சாஷாத் சர ரூபி ந சம்சய -என்றும் பீதக வாடைப்பிரானார் பிரம குருவாகி வந்து என்றும் சொல்லுகிறபடியே
உறங்கும் பெருமாள் தானே உலாவும் பெருமாளாய் வந்தார் என்று இரும் என்று பஞ்சம உபாய நிஷ்டையான
சரம பார்வார்த்த விசேஷத்தை பிரசாதித்து அருளினார்

ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த போது ஸ்வரூப சித்தி யுண்டாய் இருக்க இவர் பலர் ஸ்ரீ பாதத்தாலும் உபதேசம் கேட்க்கைக்கு அடி என் –
அவர்கள் தாம் மேல் விழுந்து அர்த்தங்களை உபதேசிகைக்கு அடி என் -என்னில்
ஒரு ராஜா ஸ்வ குமார அர்த்தமாகப் பல மந்திரிகள் இடத்தே நிதிகளை வைத்துத் தன் குமாரன் பிரபுத்தனானவாறே கொடுக்கச் சொல்லிப் போமா போலே
ஸ்ரீ ஆளவந்தாரும் இவர்கள் இடத்தே ஒவ் ஒரு அர்த்த விசேஷத்தை உபதேசித்து வைக்கையாலே ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தில் சேவித்து
அவ்வர்த்தங்களைப் பெறாது இழவு தீர இவர்கள் பக்கல் அவ்வர்த்தங்களைப் பெற்று இழவு தீர்ந்தார் அத்தனை –
இனி இவ்வாச்சார்யார்களுக்கு ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ இளையாழ்வாரை ஆம் முதல்வன் என்று கடாக்ஷித்து நாம் உங்களுக்குத் சொல்லும்
பரம ரஹஸ்யத்தை ஸ்ரீ இளையாழ்வாருக்குச் சொல்லுங்கோள் என்று நியமித்து அருளுகையாலே –
சிஷ்யனும் ஆகிலுமாம்-ஆச்சார்யர் ஆகிலுமாம் -விலக்ஷண சம்பந்தமே வேண்டுவது – என்று மேல் விழுந்து உபதேசித்தார்கள்-
ஆகையால் முன்புள்ள ஆச்சார்யர்கள் இவருக்கு ஆச்சார்யராக வீறு பெற்றார்கள் -பின்புள்ளவர்கள் இவருக்கு சிஷ்யர்களாக ஸ்வரூபம் பெற்றார்கள் –
ஒரு ஹாரத்தின் நடுவே மாணிக்கம் கிடந்து அந்த ஹாரத்தை சோபிதம் ஆகுமா போலே இடையே இராமானுச முனியாய் விளங்கினார் இறே

——————-

ஸ்ரீ உடையவர் கத்ய த்ரயமும் -நித்ய திருவாராதனைப்படியும் அருளிச் செய்து -பர ப்ரஹ்மம் ஸ்ரீ மன் நாராயணனே -என்று அறுதியிட்டு
தர்சன ப்ரவர்த்தனம் பண்ணிக் கொண்டு போருகிற காலத்திலே இவர் ஏழு அகம் மாதுகரம் பண்ணும் போது -ஸ்தானத் துறையை -ஸ்தானத்தாரை –
நெருக்கிக் கொண்டு போருகையாலே அவர்களில் ஒருவர் இவர் மாதுகரம் பண்ணுகிற இடத்தில்
விஷ மிஸ்ர அன்னத்தை பிரயோகிக்கும் படி நியமித்து வைக்க அந்த க்ருஹஸ்தரும் ஸ்வ ஸ்திரீயைப் ப்ரேரிக்க அவளும் கூடாது என்ன
அவனும் நிர்பந்திக்க அவளும் விஷ மிஸ்ர அன்னத்தை மறித்து சமர்ப்பித்து தண்டன் இட்டுப் போக
இவரும் இது என் என்று திகைத்து பாவம் அறிந்து ச கர அன்னத்தை ச கர காமினியான திருக் காவேரியில் கரைத்து விட்டு உபவசித்து இருக்க
இச் செய்தியை ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி கேட்டு அருளி ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளா நிற்கச் செய்தே
மத்யாஹன காலத்திலே திருக் காவேரியில் எழுந்து அருளா நிற்க ஸ்ரீ உடையவரும் முதலிகளுமாக எழுந்து அருளி
ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்தில் தண்டன் இட்டுக் கொண்டு கிடக்க ஸ்ரீ நம்பியும் அவரை எழுந்து இருக்கச் சொல்லாமல் இருக்க
ஸ்ரீ கிடாம்பி ஆச்சாணும் இது என்ன சிஷ்ய ஆச்சார்ய க்ரமம் தான் -கருமுகை மாலையை வெய்யிலில் பொகடுவார்களோ என்று பரிந்து எடுக்க –
ஸ்ரீ நம்பியும் உம்மைக் காணும் தேடுகிறோம் -திருமேனிக்குப் பரிவர் நீர் தாம் -இன்று முதல் தளிகைக்கு பண்ணி இவருக்கு
ஏக மாது கரமாக பிரசாதியும் என்று நியமித்து அருள ஸ்ரீ கிடாம்பி ஆச்சானும் அப்படியே பண்ணி சாதித்துக் கொண்டு எழுந்து அருளி இருந்தார்

————————

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ உடையவரை ஆஸ்ரயித்தல் –

பின்பு யஞ்ஞ மூர்த்தி என்கிற மஹா வித்வானான ஒரு ப்ராஹ்மணன் கங்கா ஸ்நானத்துக்குப் போய் ஒரு ஸ்நானம் பண்ணி
அங்குள்ள வித்வான்களை ஜெயித்து அங்கே மாயாவாத சந்யாச ஆஸ்ரமத்தையும் பரிக்ரஹித்து வித்யையாலும் சிஷ்ய சம்பத்தாலும்
மிகுந்தவனாய் இரா நிற்க -அவனும் அங்கே ஸ்ரீ உடையவருடைய வைபவத்தைக் கேட்டு நாம் அங்கே ஏறப் போய்
அவருடன் தர்க்கிக்க வேணும் என்று அநேக சாஸ்திரங்களை எழுதி கிரந்தங்களையும் சுமை சுமையாகக் கட்டி எடுத்துக் கொண்டு
தன் வித்யா கர்வம் எல்லாம் தோற்ற பெரிய மதிப்புடன் அதி த்வரையிலே ஸ்ரீ கோயில் ஏற வந்து ஸ்ரீ உடையவரைப் பார்த்து
என்னுடன் தர்க்கிக்க வேணும் என்ன
இவரும் அப்படியே செய்கிறோம் நீ தோற்றால் என்ன செய்கிறாய் -என்ன
அவனும் நான் தோற்றேன் ஆகில் உம்முடைய பாத ரக்ஷையை சுமந்து உம்முடைய பேரையும் இட்டுக் கொண்டு
உம்முடைய சித்தாந்தத்தில் புகுரக் கடவேன் என்ன –
ஸ்ரீ உடையவரும் நாம் தோற்றோம் ஆகில் கிரந்த சன்யாசம் பண்ணி தோற்றோம் என்கிறோம் அத்தனை என்ன
அவனும் சம்மதித்து இப்படி அந்யோந்யம் ப்ரதிஜ்ஜை பண்ணிக் கொண்டு பதினெட்டு நாள் அவதியும் இட்டு இருவரும் ஒருவருக்கு
ஒருவர் தோலாமல் மத்த கஜங்கள் பொருமா போலே தர்க்கிக்க இப்படி பதினாறு நாள் ஒருவருக்கு ஒருவர் தோலாமல் தர்க்கித்து
அவனை ஜெயிக்கப் போகாமல் பதினேழாம் நாள் அவனுடைய யுக்தி பிரபலமாக இவரும் அதுக்கு மேல் ஒன்றும் தோன்றாமல் நிற்க
அவ்வளவில் அவனும் தன் வெற்றி தோற்ற எழுந்து இருந்து அற்றைக்குப் போக ஸ்ரீ ராமானுசனும் வியாகுல அந்தக்கரணனாய்

திரு மடமே எழுந்து அருளி தன் திருவாராதனமான ஸ்ரீ பேர் அருளாளரையும் திருவடி விளக்கி அமுது செய்யப் பண்ணி
ஸ்ரீ பெருமாளுடன் வெறுத்து ஸ்ரீ பெருமாளே ஆழ்வார் தொடங்கி ஸ்ரீ ஆளவந்தார் அளவாக இத்தனை காலம் ஓர் ஆண் வழியாய்
ப்ரதிஷ்டிதமாய் வந்த இத் தர்சனம் அடியேனை தொற்றித் தோற்கக் கடவதோ -இந்நாள் வரையில் தேவரீர் ஸ்வரூப ரூப குண விபூதிகள் சத்யம்
என்று பிரமாணத்தை நடத்திக் கொண்டு போந்தீர்-இப்போது ஒரு ம்ருஷாவாதியைக் கொண்டு வந்து என்னுடைய காலத்தில்
எல்லா ப்ரமாணங்களையும் அழித்துப் பொகட்டு லீலை கொண்டாட திரு உள்ளமாகில் அப்படியே செய்து அருள என்று விண்ணப்பம் செய்து
தாமும் அமுது செய்யாமல் கண் வளர்ந்து அருள ஸ்ரீ பேர் அருளாளரும் அன்று இராத்திரி இவர் ஸ்வப்னத்தில் எழுந்து அருளி
ஸ்ரீ இளையாழ்வீர் நீர் முசிப்பான் என் என் -உமக்கு சமர்த்தனாய் இருப்பான் ஒரு சிஷ்யனை உண்டாக்கித் தந்தோம் காணும் –
உம்முடைய பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த மாயாவாத கண்டனத்தைச் சொல்லி அவனை ஜெயியும் என்று அருளிச் செய்து அருள
ஸ்ரீ உடையவரும் விடிவோரை திரு நாம உச்சாரணம் பண்ணி எழுந்து இருந்து திருக் கண்களை விழித்து
இது ஒரு ஸ்வப்னம் இருந்தபடி என் என்று மிகவும் திரு உள்ளம் உகந்து ஸ்வப்னத்தில் அருளிச் செய்த யுக்தியை தம் திரு உள்ளத்தில் கொண்டு
எழுந்து அருளி இருந்து சந்தோஷத்துடன் நித்ய கர்ம அனுஷ்டானம் செய்து அருளி தம் திருவாராதனமான ஸ்ரீ பேர் அருளாளரையும்
சேவித்துப் புறப்பட்டு ப்ரசன்ன கம்பீரமாய்க் கொண்டு தர்க்க கோஷ்டியிலே எழுந்து அருள –

அவ்வளவில் அந்த வித்வானும் பாவஞ்ஞன் ஆகையால் ஸ்ரீ உடையவர் எழுந்து அருளுகிற காம்பீர்யத்தையும் சந்தோஷத்தையும் கண்டு –
இவர் நேற்று இங்கு நின்றும் எழுந்து அருளும் போது சோம்பிக் கொண்டு போனார் -இப்போது மத்தகஜம் போலே இங்கே வாரா நின்றார் –
ஆகையால் இது மானுஷம் அன்று அதி மானுஷ சேஷ்டிதமாய் இரா நின்றது என்று நிச்சயித்து சடக்கென எழுந்து இருந்து எதிரே சென்று
ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே சேவித்து தேவரீருக்குத் தோற்றேன் என்று ஸ்ரீ பாத ரக்ஷைகளை சிரஸா வஹித்துக் கொண்டு
அடியேனை இரங்கி அருள வேணும் என்ன

அநந்தரம் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ ஆழ்வானையும் ஸ்ரீ ஆண்டானையும் ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாரையும் கிருபை பண்ணிக் கொண்டு
வித்வத் கோஷ்டியாக நடக்கும் காலத்திலே ஆச்சார்யர்கள் எல்லாரும் வந்து ஸ்ரீ உடையவர் திருவடிகளில் ஆஸ்ரயித்ததைக் கேட்டு
ஸ்ரீ அனந்தாழ்வானும் ஸ்ரீ எச்சானும் ஸ்ரீ தொண்டனூர் நம்பியும் ஸ்ரீ மருதூர் நம்பியும் -ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே ஆஸ்ரயிக்க வேணும் என்று
எழுந்து அருள அவர்களை ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயிப்பித்து அருளினார் –
அப்போது அவரும் பீதராய் அவர்களைக் குறித்து குருவியின் கழுத்தில் பனங்காயைக் கட்டினால் போலே ஸ்ரீ உடையவர் செய்தார் –
நீங்கள் ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் என்று அருளிச் செய்து அருளினார்

————————-

பின்பு ஸ்ரீ உடையவரும் அமர் சுவை ஆயிரமான திருவாய் மொழிக்கு அர்த்தம் அருளிச் செய்து கொண்டு திவ்ய கோஷ்டியாக
எழுந்து அருளி இருக்கிற அளவிலே ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -என்கிற திருவாய் மொழி நடவா நிற்க
சிந்து பூ மகிழும் திருவேங்கடம் என்கிற இடத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறவர் முதலிகளைப் பார்த்து அருளி –
புஷ்ப மண்டபமான பெரிய திருமலையில் திருவேங்கடமுடையானுக்கு உகப்பாக திரு நந்தவனம் செய்து திருமாலை கட்டி சாத்துவார்
யாரேனும் உண்டா -என்று அருளிச் செய்ய -அவ்வளவில் ஸ்ரீ அனந்தாழ்வான் எழுந்து இருந்து அடியேன் விடை கொள்ளுகிறேன் என்று
விண்ணப்பம் செய்து தண்டன் சமர்ப்பித்து திருமலைக்கு எழுந்து அருளி திருவேங்கடமுடையானையும் திருவடி தொழுது
திரு நந்தவனம் செய்து அத் திரு நந்தவனத்துக்கு ராமானுஜன் என்று திரு நாமம் சாத்தி திருமாலை கட்டி திருவேங்கடமுடையானுக்கு
சமர்ப்பித்துக் கொண்டு எழுந்து அருளி இருக்க அத்தை ஸ்ரீ உடையவர் கேட்டு உகந்து அருளி
திருவாய் மொழி பிரபந்த அர்த்தத்தை தீவிரமாக நடத்திச் சாத்தி அருளினார்

பின்பு ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ நம்பெருமாளையும் சேவித்து அடியேன் ஸ்ரீ பேர் அருளாளரையும் ஸ்ரீ திருவேங்கடமுடையானையும்
திருவடி தொழுது மீண்டு விடை கொள்ளுகிறேன் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ பெருமாளும் போய் கடுக வருவது என்று
திரு உள்ளமாய் அருள ஸ்ரீ உடையவரும் முதலிகளுடனே புறப்பட்டு திருக் கோவலூரிலே ஆழ்வார்கள் நாயனாரையும்
திருவடி தொழுது ஸ்ரீ பெருமாள் கோயில் ஏற எழுந்து அருளி ஸ்ரீ திருக் கச்சி மடம் ஏறி சென்று
ஸ்ரீ மத் காஞ்சீ முனிம் வந்தே கமலா பதி நந்தனம் வர தாங்க்ரி சதா சங்கர சாயன பராயணம் -என்று விண்ணப்பம் செய்து கொண்டு
ஸ்ரீ நம்பி திருவடிகளிலே தண்டன் சமர்ப்பித்து நிற்க அவரும் கிருபை பண்ணி அருள அவருடனே கூட எழுந்து அருளி
அவர் புருஷகாரமாக ஸ்ரீ கோபுர ராஜனையும் ஆனை காத்த பெருமாளையும் சேவித்து உள்ளே புகுந்து
மஹா வராஹந்தேவேசம் த்ரஷ்டுகாமோர சாதலாத் நிர்யயவ் யத்ர பகவாந நந்த பன்னகேஸ்வர தீர்த்தே தஸ்மின்
மஹா புண்யே சித்த சங்க நிஷேவிதே -சமாஹ்ருதாநி தீர்த்தானி ஸர்வாணி முநிபிஸ் ததா –என்று சொல்லப்பட்ட
மஹாத்ம்யத்தை உடைய திருவனந்த சரஸ்ஸிலே நீராடி கேசவாதி துவாதச நாமங்களையும் சாத்தி அருளி எறி திரை வையம் முற்றும்
ஏனத் துருவாய் இடிந்த ஞானப் பிரானையும் சேவித்து -ஸ்ரீ பலி பீடத்தையும் தண்டனிட்டு ஜய விஜயர்களையும் சேவித்து
ப்ரதக்ஷிணமாக எழுந்து அருளி திருவனந்த ஆழ்வானையும் சேவித்து திருப் புற்று அடியிலேயும் தண்டன் இட்டு
அதற்கு கிழக்காக தம்மை விசேஷ கடாக்ஷம் செய்து அருளின ஸ்ரீ யமுனைத் துறைவர் திரு முற்றத்திலே
நமோ நமோ யாமு நாய யாமு நாய நமோ நமோ -என்று அனுசந்தித்து தண்டன் சமர்ப்பித்து

ஸ்ரீ கரிய மாணிக்கத்து எம்பெருமானையும் திருவடி தொழுது -ஸ்ரீ புண்ய கோடி விமானத்தையும் சேவித்து திரு மடைப் பள்ளியையும்
திரு மடைப் பள்ளி நாச்சியாரையும் சேவித்து உள்ளே புகுந்து ஸ்ரீ பேர் அருளாளன் ஸ்ரீ பெரும் தேவியாரையும் திருவடி தொழுது
ஆகார த்ரய சம்பன்னாம் அரவிந்த நிவாஸ நீம் அசேஷ ஜெகதீஸி த்ரீம் வந்தே வரத வல்லபாம் -என்று
அனுசந்தித்து தீர்த்த பிரசாதமும் ஸ்வீ கரித்து சேண் தலத்து அமரர் தமையாளும் ஸ்ரீ சேனை நாதன் கழல் வணங்கி எழுந்து அருளி
அசேஷ கிரி ராஜாய ஸ்ரீ ஹஸ்தி கிரயே நம -என்று தண்டன் சமர்ப்பித்து வையமாளிகையிலே ஏறி சேவா கிராமத்திலே
ஸ்ரீ நம்பியை முன்னிட்டுக் கொண்டு உள்ளே புகுந்து உலகம் ஏத்தும் ஆழியான் அத்தியூரான ஸ்ரீ பேர் அருளாளரையும் சேவித்து நின்று
திருப்பல்லாண்டு ஸ்ரீ வரதராஜ அஷ்டகத்தையும் அனுசந்தித்து தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளராய் நிற்க
ஸ்ரீ திருக் கச்சி நம்பியும் இவருக்கு தீர்த்த பிரசாதமும் துயரறு சுடரடியான ஸ்ரீ சடகோபனும் பிரசாதிப்பித்து அருள ஸ்வீ கரித்து
க்ருதார்த்தராய் புறப்பட்டு ஸ்ரீ திருக் கச்சி நம்பியுடனே அடியேன் பெரிய திருமலைக்கு விடை கொள்ளுகிறேன் என்று
விண்ணப்பம் செய்ய -அவரும் சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை என்று அருளிச் செய்து விடை கொடுத்து அருளினார்

————————————

ஸ்ரீ திருமலை நம்பியின் இடத்து ஸ்ரீ உடையவர் ஸ்ரீ ராமாயணம் கேட்டல்

ஸ்ரீ உடையவரும் அதி ப்ரீதியோடே திருப்பதிக்கு எழுந்து அருளும் அளவிலே மார்க்க மத்யத்திலே -வழி திகைத்து அலமருகின்றேன் –
என்கிறபடியே வழி தப்பித் திகைத்து நிற்க -முதலிகளும் அங்கே ஒரு ஏற்றம் இறைப்பானைக் கண்டு –
திருமலைக்கு வழி எங்கனே என்று கேட்ட அளவிலே அவனும் செவ்வையான வழியைக் காட்ட ஸ்ரீ உடையவரும் இது
ஒரு அமானவன் புருஷகாரம் இருந்தபடி என் என்று அவனைத் தண்டன் இட முதலிகளும் இப் பரம ஆஸ்திகத்வத்தையும் கண்டு களித்து
அவர்களும் தண்டன் இட இவரும் முன் நடந்து எழுந்து அருளி ஸ்ரீ திருமலை ஆழ்வாரையும் திருத் தாழ்வரையிலே எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ பராங்குச ஸ்ரீ பரகால ப்ரப்ருதிகளான ஆழ்வார் பதின்மரையும் சேவித்து திருப்பதியில் எழுந்து அருளி இருந்து
விடல தேவனையும் சிஷ்யனாக்கிக் கொண்டு திருப்பதியில் ஸ்வ சிஷ்யர்கள் முப்பது திரு நாமங்களை குடி ஏற்றி
இள மண்டியத்தையும் கைப்பற்றாக விடுவித்து அங்கே எழுந்து அருளி இருக்க இச் செய்தியை

ஸ்ரீ அனந்தாழ்வான் தொடக்கமான ஸ்ரீ வைஷ்ணவர்கள் கேட்டருளி
திருமலையின் நின்றும் இறங்கி வந்து ஸ்ரீ எம்பெருமானாரை சேவித்து தேவரீர் அப்பனை சேவிக்க எழுந்து அருள வேணும் என்று
விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் ஆழ்வார்கள் திருமலை மிதியாமையாலே நாமும் ஏறக் கடவோம் அல்லோம் –
திருத் தாழ்வரையிலே எழுந்து அருளி இருக்கிற ஆழ்வார்களை சேவித்து இருக்கிறோம் என்று அருளிச் செய்ய
ஸ்ரீ அனந்தாழ்வானும் தேவரீர் ஏறாது போது அடியோங்களும் ஏறோம்-மற்றும் உள்ளார் ஒருவரும் ஏறுவது இல்லை என்று
விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் அப்படியே செய்கிறோம் என்று தத் அனுகுணமாக திரு மேனியை சோதித்துக் கொண்டு
எழுந்து அருளி அடிப்புளி ஆழ்வார் அடியிலே திருமலை ஆழ்வாரையும் சேவித்து -பாதே நாத்யா ரோஹதி -என்கிறபடியே
ஸ்ரீ வைகுண்ட நாத நியோகாத் முக்த சேதனன் பாத பீடத்தில் அடியிட்டு ஏறுமா போலே பிரதிபத்தி பண்ணிக் கொண்டு
திருவேங்கடமுடையான் அருள்பாடிட திருமலை ஏறி

செப்பார் திண் வரையையும் -பன் மணி நீரோடு பொருதுருளும் கானாற்றையும் -அன்னனைய பொற் குவடுகளையும் –
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரியும் -கானமும் வானரமும் வேடும் உடைய வேங்கடத்தைக் கண்டு களித்துக் கொண்டு
திருப் பரியட்டப் பாறை அளவிலே எழுந்து அருளா நிற்க திருவேங்கடமுடையான் தீர்த்த பிரசாதம் கொண்டு
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி எதிரே எழுந்து அருளி ப்ரசாதித்து அருள ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ பெரிய நம்பி திருவடிகளில்
சாஷ்டாங்க பிரணாமாம் பண்ணி தீர்த்த பிரசாதம் ஸ்வீ கரித்து அருளி -தேவரீர் எழுந்து அருள வேணுமோ -ஒரு சிறியார் இல்லையோ என்று
விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ நம்பியும் நாலு திருவீதியிலும் ஆராய்ந்து பார்த்த இடத்தில் என்னில் காட்டிலும் சிறியாரைக் கண்டிலேன் என்ன
ஸ்ரீ உடையவரும் முதலிகளும் இத்தைக் கேட்டருளி அத்தியாச்சர்யப் பட்டு கல்வேலி அளவிலே எழுந்து அருளா நிற்க
சீயர்கள் ஏகாங்கிகள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமலையில் உள்ள ஸ்தானத்துறை ஸ்ரீ பாதம் தாங்குவார் முதலான அனைத்துக் கொத்தில்
உள்ளவர்களும் வந்து எதிர் கொண்டு சத்கரிக்க ஸ்ரீ உடையவரும் முதலிகளுமாக எழுந்து அருளி வைகுந்தன் திரு வாசலிலே
தண்டன் சமர்ப்பித்து திருக் கோனேரியிலே நீராடி கேசவாதி துவாதச நாமங்களையும் சாத்தி அருளி
நாலு வீதியையும் ப்ரதக்ஷிணமாக எழுந்து அருளி சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல் செய் -என்கிறபடியே

கசித அநர்க்க ரத்ன த்யுதி ரஞ்சிதமான மாட கூட பிரசாத தோரண கோபுர பிரகாரங்களையும் அனுபவித்து அங்கே தம் கைங்கர்யமான
இராமானுசன் என்கிற திரு நந்தவனத்தில் எழுந்து அருளி திருக் கண் சாத்தி உகந்து அருளி ஸ்ரீ அனந்தாழ்வானைப் பார்த்து
அணைத்துக் கொண்டு வளர்த்தனால் பயன் பெற்றேன் என்று மிகவும் கிருபை பண்ணி அருளி மற்றும் அங்கு உண்டான –
தேனேய் பூம் பொழில் -என்றும் விரையார் பொழில் -என்றும் -கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை -என்றும் சொல்லுகிற
மொய்த்த சோலைகளையும்-அச் சோலைக்கு அலங்காரமாக செண்பகமாய் இருக்கும் திருவுடைய செண்பகம் சேர்ந்து திரு மகிழ் பாடலம்
சுர புன்னை புன்னாகம் முதலான மதுஸ் ரவகுஸூம பிரகர்ஷத்தை யுடைய திருப் பூ மரங்களின் எழிலையும் –
செவ்வந்தி பிச்சி இருவாட்சி மல்லிகை முல்லை தொடக்கமான கொடி மலர் அழகையும் -மொய்ப் பூம் தடம் தாழ்வரே -என்று சொல்லுகிற
செந்தீ மலரும் -சேறார் சுனைகளில் மத்தப்ரமர நாதித மநோ ஹாரி செந்தாமரை ஸ்ரீ யையும் –
திரு வேங்கடத் தெண்ணீர் சுனைகளில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையாரையும்
கோனேரி வாழும் குருகு கொக்கு நாரை தாரா முதலான பஷி சங்கங்களையும்
வ்ருஷ சாகா ரூடாபிக கூஜித காஹளீ நாதங்களையும்
கொண்டல் அதிரத் தோகை விரித்து நடமாடுகிற மயூர கேகாரவத்தையும் வண்டினங்கள் தென்னா தெனா வென்று பண் பாடுகிற

பாடலையும் கண்டு கேட்டு ஆனந்தித்து நிலம் கோட்டிடை கொண்ட ஞானப்பிரானையும் சேவித்து
அவா வறச் சூழ்ந்தான் திருவாசலிலே தண்டன் இட்டு அத்தாணிப் புளியையும் சேவித்து
ஸ்ரீ பலி பீடத்து அடியிலே தண்டன் இட்டு யமுனைத்துறைவர் என்கிற திருப் பூ மண்டபத்தையும் சேவித்து
ப்ரதக்ஷிணமாக எழுந்து அருளி –
தனுர் மாஸே சிதே பக்ஷே த்வாதஸ்யே மருணோதய -ஆயாந்தி சர்வ தீர்த்தாநி ஸ்வாமி புஷ்கரணீ ஜலே–என்று சொல்லப்படுகிற
மஹாத்ம்யத்தை உடைத்தான ஸ்வாமி புஷ்கரணியிலே தீர்த்த ஸ்வீ காரம் செய்து செண்பகத் திரு வாசலுக்குள்ளே புகுந்து தண்டன் சமர்ப்பித்து
திருமடைப்பள்ளி யாக சாலை திரு மா மணி மண்டபத்தையும் சேவித்து சேனை முதலியாரையும் சேவித்து –
வேங்கடத்து அரியையும் திருவடி தொழுது ஸ்ரீ ஆனந்த நிலையம் என்னும் திவ்ய விமானத்தையும் கண்ணாலே பருகுவாரைப் போலே அனுபவித்து
உள்ளே எழுந்து அருளி -அடியாரும் வானவரும் அரம்பரையும் கிடந்து இயங்கும் குலசேகரன் படியைக் கடந்து உள்ளே புகுந்து

திலதம் உலகுக்காய் நின்ற -தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனான-
எண்ணம் புகுந்து தித்திக்கும் செந்தாமரைக் கண் செங்கனிவாய் நால் தோள் அமுதையும் செங்கமல கழலில் படியும்
சீதக்கடல் என்கிற திரு மொழிப்படியும்
மணி நூபுராதி கிரீடாந்த சர்வ திவ்ய ஆபரண திவ்ய மால்யாம் பர திவ்ய அங்க ராக சோபிதமான அவ்வடிவு அழகைப்
பாதாதி கேசாந்தமாக அனுபவித்து
அலர்மேல் மங்கை யுறை மார்பா –புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் என்று அடிக் கீழ் அமர்ந்து புகுந்து
பூவார் கழல்களைக் கிட்டி க்ருதாஞ்சலி புடராய் அனுபவித்து நிற்க இவருக்கு தீர்த்த பிரசாதமும் ப்ரசாதிக்க ஸ்வீ கரித்து க்ருதார்த்தராய் அருளி
இது பூ லோக வைகுண்டமாய் இருந்தது என்று ஆச்சர்யப்பட்டு திருமஞ்சனம் சேவித்து அருளி அழகப்பிரானுடைய ஸ்ரீ பலித் திரு நாளையும் சேவித்து அருளி –
விண்ணோர் வெற்பு ஆகையால் நிகரில் அமரர் முனிக் கணங்கள் -என்று அருளிச் செய்த நித்ய ஸூரிகள் அன்றோ இங்கு வர்த்திப்பார் –
நாம் இங்கே வர்த்திக்க ஒண்ணாது என்று அப்போதே திருமலையினின்றும் இறங்க வேணும் என்று உத்யோகிக்க
ஸ்ரீ பெரிய திருமலை நம்பியும் திவ்ய தேசத்தில் மூன்று நாள் இருக்க வேணும் காணும் என்று அருளிச் செய்து அருள
ஸ்ரீ உடையவரும் சம்மதித்து மூன்று நாளும் அமுது செய்யாமல் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமான அப்பனை அனுபவித்து
அதுவே தாரகமாக எழுந்து அருளி இருந்து இப்படியே மூன்று நாள் சென்றவாறே ஸ்ரீ நம்பியுடன் ஸ்ரீ அப்பன் சந்நிதிக்கு சென்று
திருப்பல்லாண்டை அனுசந்தித்து அஞ்சலித்து நிற்க ஸ்ரீ அப்பனும் மிகவும் உகப்புடனே இவருக்கு தீர்த்த பிரசாதமும் பிரசாதித்து
தம் பூவார் கழல்களை ஸீரோ பூஷணமாக்கி உமக்கும் உம்முடையாருக்கும் உபய விபூதி ஐஸ்வர்யமும் தந்தோம் என்று
நம் தெற்கு வீட்டில் சொன்னோமே என்று தம் திருப் பவளச் சோதி வாய் திறந்து அருளிச் செய்து அருள
ஸ்ரீ உடையவரும் மகா பிரசாதம் என்று அங்கீ கரித்து நிற்க ஸ்ரீ அப்பனும் விடை கொடுத்து அருள ஸ்ரீ நம்பியுடன் புறப்பட்டு
அப்பொழுதே இறங்கி அருளி திருப்பதியில் ஸ்ரீ பெரிய திருமலை நம்பி திரு மாளிகை ஏறச் சென்று
அங்கே அமுது செய்து அவர் சந்நிதியில் இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ராமாயணத்துக்கு அர்த்தம் கேட்டுக் கொண்டு
ஒரு சம்வத்சரம் எழுந்து அருளி இருந்தார் –

—————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் –

February 15, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் –

ஸ்ரீ இளையாழ்வாரும் தைர்யா வலம்பியாய் ஸ்ரீ பேர் அருளாளரை சேவித்துப் பூர்வம் போலே
திருமஞ்சன கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தார்
பின்பு ஸ்ரீ திருக் கச்சி நம்பி பக்கல் இளையாழ்வாருக்கு ப்ரேமம் முதிர்ந்து வர ஸ்ரீ நம்பிக்கும் இவர் பக்கல் கிருபை மிகுந்து வர
ஸ்ரீ நம்பியுடைய பிரபாவம் எல்லாம் அறிந்து அவர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயிக்க வேணும் என்று சென்று தண்டன் சமர்ப்பித்து
இவ்வாத்மாவைத் தேவரீர் உஜ்ஜீவிப்பித்து அருள வேணும் என்ன
ஸ்ரீ நம்பியும் வாரீர் ஸ்ரீ இளையாழ்வார்
ஸ்ரீ பேர் அருளாளர் பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டது கண்டு நீர் விரும்பினீர்
கிமப்யத்ர அபி ஜாயந்தே யோகிநஸ் சர்வயோ நிஷு ப்ரத்யஷி தாத்மநா தாநம் நைஷாம் சிந்த்யங்குலாதிகம்-என்கிறபடியே
ஆத்ம குணத்துக்கு சேர்ந்து இருந்துள்ள பரம வைதிக நிஷ்டையை யுடையராய் ஆஸ்ரயிக்க நினைத்தீர் –
ஆகிலும் வர்ணாஸ்ரமத்துக்கு அடுத்த வைதிக மரியாதைக்கு போந்து இராது என்று விலக்கி அருளினார் –

அதின் மற்றை நாள் ஸ்ரீ இளையாழ்வாருக்கு ஸ்ரீ திருக் கச்சி நம்பியின் இடத்தில் பிரசாத பிரதிபத்தி பிறந்து
தத் அந்வய புத்யா ஸ்ரீ நம்பியை-அடியேன் குடிசையில் அமுது செய்ய வேணும் -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ நம்பியும் சம்மதித்து அருள -ஸ்ரீ இளையாழ்வாரும் அதி ப்ரீதியோடே தம் திருமாளிகையிலே எழுந்து அருளி
இச் செய்தியை தேவியாருடன் அருளிச் செய்து -தளிகைக்குப் பங்காகப் பண்ணி நன்றாக ஸவ்யஞ்ஞ அன்னம் செய் என்று
நியமித்து அருளித் தாமும் நீராடி நித்ய கர்ம அனுஷ்டானங்களையும் செய்து அருளி திரு மஞ்சனமும் சடக்கெனக் கொண்டு வந்து
ஸ்ரீ பேர் அருளாளர்க்கு சமர்ப்பித்துத் தம்முடைய க்ருஹ அர்ச்சனையான ஸ்ரீ பேர் அருளாளரையும் அமுது செய்து அருளப் பண்ணி
ஸ்ரீ நம்பியை அழைக்க தெற்குத் திருவீதியாலே ஸ்ரீ நம்பி மடத்தை நோக்கி மேற்கே எழுந்து அருளினார் -அதற்கு முன்பே ஸ்ரீ நம்பியும்
திரு மடத்தின் நின்றும் புறப்பட்டு பெருமாளையும் சேவித்து மற்றொரு திருவீதியாலே ஸ்ரீ இளையாழ்வார் திரு மாளிகையில் எழுந்து அருளி
திருவால வட்ட கைங்கர்யத்துக்கு உதவப் போக வேணும் என்று சடக்கென அமுது செய்து எழுந்து அருளினார் –
அநந்தரம் இளையாழ்வார் தேவிகளும் அவர் அமுது செய்து அருளின தளிகையை கோலால் தள்ளி அவ்விடத்தை கோமயத்தாலே
ஸ்தல ஸூத்தி பண்ணித் தெளித்துத் தாமும் நீராடி நிற்கிற அளவிலே ஸ்ரீ இளையாழ்வாரும் திரு மடத்தே தேடிக் காணாமையால்
மீண்டும் எழுந்து அருளி தேவிகள் நீராடின படியைக் கண்டு இது என் என்று கேட்டு அருள தேவிகளும் அந்த ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருளி
அமுது செய்து திருவாலவட்ட கைங்கர்யம் செய்ய வேணும் என்று மீண்டு எழுந்து அருளினார் -அவர் சாத்தாதவர் ஆகையால்
அவர் அமுது செய்த இலைத்தளிகையை கோலால் தள்ளி கோமயத்தாலே ஸ்தல ஸூத்தி பண்ணினேன் -அத்தாலே சரீரம் அலம்ப வேண்டிற்று என்ன
இவரும் அவளைப் பார்த்து நீராடினத்துக்கு மிகவும் கோபித்து தம் அபீஷ்டம் சித்தியாத படியால் போர கிலேசித்து

இனி நமக்குச் செய்ய அடுப்பது என் என்று எண்ணாதனகள் எண்ணும் என்னும்படி தம் திரு உள்ளத்திலே விசாரித்து அருளி
ஸ்ரீ நம்பி திரு மடத்தே ஏற எழுந்து அருளி ஸ்ரீ நம்பி பாடே சென்று அடியேன் சில நினைவுகள் நினைத்து இருந்தேன்
அவை எவை என்று தேவரீர் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்து அவர் அருளிச் செய்ததைத் தேவரீர் அடியேனுக்கு அருளிச் செய்ய வேணும்
என்று ஸ்ரீ இளையாழ்வார் விண்ணப்பம் செய்ய ஸ்ரீ நம்பியும் அன்று ராத்ரி ஸ்ரீ பெருமாளை அனுபவித்து ஏகாந்தமான அளவிலே –
நம்பீ நம்முடன் சில வார்த்தை சொல்லுவான் போலே இருந்தாயீ -என்று ஸ்ரீ பெருமாள் திரு உள்ளமாய் அருள
ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ பெருமாளுடன் -ஸ்ரீ இளையாழ்வார் சில நினைவுகள் -அவை எவை என்று தேவரீரைக் கேட்டு வந்து சொல்ல வேணும்
என்று மிகவும் ஆதரவாய் இரா நின்றார் -அவற்றை அருளிச் செய்ய வேணும் -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பெருமாளும் சஹஜ தாஸ்யத்தை உடையனாய் சந்த அனுவர்த்தனம் பண்ணி இருப்பான் ஒருத்தன்
நான் சாந்தீபன் உடனே வித்யா அப்யாஸம் பண்ணினால் போலே பல இடங்களில் சகல சாஸ்திரங்களையும் அலகலகாக அறிந்து இருப்பான்
ஒருவன் நம்மைக் கேடப்பிக்கிறான் அத்தனை
பரதத்வம் நாமே -பேதமே தர்சனம் -உபாயமும் பிரபத்தியே -அந்திம ஸ்ம்ருதியும் வேண்டா -சரீர அவசானத்திலே மோக்ஷம் –
பெரிய நம்பி திருவடிகளிலே ஆஸ்ரயிப்பது -என்று இவ்வாறு வார்த்தையும் பேர் அருளாளர் திரு உள்ளமாய் அருள
ஸ்ரீ நம்பியும் இவற்றைக் கேட்டு வந்து விடிவோரை இவரை அழைத்து இளையாழ்வீர் ஸ்ரீ பேர் அருளாளர் திரு உள்ளம் பற்றி அருளின
வார்த்தைகளைக் கேளீர் என்று அவற்றை அருளிச் செய்து இவையே உமக்கு நினைவு என்ன
ஆம் என்று ஸ்ரீ இளையாழ்வார் போர ப்ரீதராய் ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்தில் தண்டன் சமர்ப்பிக்க
ஸ்ரீ நம்பியும் இவர் நினைவும் ஸ்ரீ பெருமாள் திரு உள்ளமும் ஒன்றாய் இருந்த படி என் என்று மிகவும் உகந்து அருளினார்-

ஸ்ரீ இளையாழ்வார் ஸ்ரீ பெரிய நம்பிகள் இடத்து ஆஸ்ரயித்த வைபவம் –
அக்காலத்திலே ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்து முதலிகள் எல்லாரும் திரளாக இருந்து ஸ்ரீ பெரிய நம்பியுடன்
இந்த தரிசனத்துக்குக் கடவர் யார் என்ன ஸ்ரீ பெரிய நம்பியும் முதலிகளைக் குறித்து -ஸ்ரீ ஆளவந்தார் முன்பு நினைவிட்டு
விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளினதும் திரு விரல்கள் நிமிர்ந்த ஏற்றமும் உங்கள் திரு உள்ளங்களில் நிலையிட வில்லையோ –
ஸர்வதா ஸ்ரீ ஆளவந்தார் அபிமானம் பொய்யாக மாட்டாது என்ன -முதலிகள் எல்லாரும் கூடி சம்மதித்து இன்னமும் தேவரீர் எழுந்து அருளி
ஸ்ரீ இளையாழ்வாரை விசேஷ கடாக்ஷம் செய்து அருளி நம் தர்சன பிரவர்த்தகராம் படி திருத்தி அழைத்துக் கொண்டு வர வேணும் -என்று
ஸ்ரீ பெரிய நம்பிக்கு விண்ணப்பம் செய்ய ஸ்ரீ பெரிய நம்பியும் அப்போதே குடும்ப ஸஹிதமாகப் புறப்பட்டு ஸ்ரீ நம் பெருமாள் சந்நிதியில்
சென்று சேவித்து விண்ணப்பம் செய்து அவர் அனுமதி கொண்டு த்வரித்துப் புறப்பட்டு ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளா நிற்கச் செய்தே
ஸ்ரீ மதுராந்தகத்திலே ஸ்ரீ ஏரி காத்த கோயிலிலே அவசரித்து எழுந்து அருளி இருந்த அளவிலே

ஸ்ரீ இளையாழ்வாரும் தமக்கு ஸ்ரீ பேர் அருளாளர் ஸ்ரீ திருக் கச்சி நம்பி முகேன நியமித்து அருளின படியே
ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயிப்பதாகப் புறப்பட்டு ஸ்ரீ திருக் கச்சி நம்பியையும் ஸ்ரீ பேர் அருளாளப் பெருமாளையும் சேவித்து
அவர்கள் அனுமதி கொண்டு ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளா நிற்க ஸ்ரீ மதுராந்தகம் வழி யாகையாலே இவரும் அங்கே
ஸ்ரீ ஏரி காத்த பெருமாளை சேவிப்பதாக எழுந்து அருள -ஸ்ரீ ஏரி காத்த பெருமாள் கோயிலிலே ஸ்ரீ பெரிய நம்பி எழுந்து அருளி இருக்க
ஸ்ரீ இளையாழ்வாரும் தூரத்திலே கண்டு அத்யாச்சர்யப்பட்டு -எண்ணின் பலம் எதிரே வந்து வாய்த்தது போலே ஸ்ரீ நம்பி நமக்கு எதிரே
எழுந்து அருளி கிருபை செய்ய வந்தபடி -கண்டாயே நெஞ்சே -என்று நிர்ப்பர ஆனந்த பாஷ்பங்களை உடையராய்
ஸ்ரீ பெரிய நம்பி திருவடிகளிலே ஹர்ஷ சம்பிரமத்துடனே தண்டன் சமர்ப்பித்து நிற்க -ஸ்ரீ நம்பியும் தம் அபிலாஷை அதி சீக்கிரமாய்
எதிரே வந்து சித்திக்காக கண்டு ஆனந்த நிர்ப்பரராய் ஸ்ரீ இளையாழ்வாரை வாரி எடுத்து அணைத்துக் கொள்ள
ஸ்ரீ இளையாழ்வாரும் அடியேனுக்கு இப்போதே தேவரீர் ஹித உபதேசம் செய்து அருளி ரக்ஷித்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய

ஸ்ரீ நம்பியும் -அஸ்தி ஹஸ்தி கிரிர் நாம தத்ர சைலவ ரோமஹான் விதாத்ராப் யர்ச்சிதோ விஷ்ணுஸ் தஸ்ய சைலஸ்ய மூர்த்தநி
புண்ய கோடீதி விக்யாதம் விமானம் புண்ய வர்த்தனம்–என்று சொல்லப்படுகிற ஸ்ரீ ஹஸ்த கிரியிலே
ஸ்ரீ புண்ய கோடி விமான மத்யத்திலே ப்ரஹ்மாதி சகல சேதனராலும் ஸேவ்யமானரான ஸ்ரீ பேர் அருளாளர் சந்நிதியில் செய்கிறோம்
என்று அருளிச் செய்ய -ஸ்ரீ இளையாழ்வாரும் கால ஷேபம் பண்ண ஒண்ணாமைக்கு ஸ்ரீ ஆளவந்தார் பக்கல் கண்டது அமையாதோ-
மின்னின் நிலையில்லாத அடியேனுடைய இஸ் சரீரம் இருக்கிற போதே கிருபை பண்ணி அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய
திருவடிகளிலே விழுந்து கிடக்க ஸ்ரீ பெரிய நம்பியும் இவரை முடி பிடித்து எடுத்து இவருடைய ஆர்த்தி இருந்த படி என் என்று மிகவும்
உகந்த திரு உள்ளத்தராய் ஸ்ரீ இளையாழ்வாரைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய்
ஸ்ரீ ஏரி காத்த பெருமாள் கோயில் திரு மகிழ் அடியிலே எழுந்து அருளி இருந்து

மந்த்ர ஸம்ஸ்கார சித்யர்த்தம் மந்த்ர தீஷா விதவ் ததா -சக்ரஸ்ய தாரணம் ப்ரோக்தம் மந்தரை பஞ்சாயுத நிவா என்றும்
சக்ராதி தாரணம் பும்ஸாம் பர சம்பந்த வேதனம் -பதி வ்ரதா நிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் -என்றும்
சொல்லுகிறபடியே திரு இலச்சினை பிரசாதித்து
நிவேஸ்ய தஷிணே ஸ்வஸ்ய விநீ தாஞ்சலி சம்யுக்தம் மூர்திநி ஹஸ்தம் விநிஷிப்ய தக்ஷிணம் ஞான தக்ஷிணம் ஸ்வ யந்து ஹ்ருதி
விந் யஸ்ய க்ருபயா வீக்ஷ யேத்குரு ஸ்வாசார்யம் ஹ்ருதயே த்யாத்வா ஜப்த்வா குரு பரம்பராம் ஏவம் ப்ரபத்ய தேவேச மாசார்ய
க்ருபயா ஸ்வயம் அத்யாபயேந் மந்த்ர ரத்னம் சர்ஷிச் சந்தோதி தைவதம் -என்று சொல்லுகிற கிரமத்தில்
ஸ்ரீ பெரிய நம்பியும் ச விநயரான ஸ்ரீ இளையாழ்வாரைத் தம்முடைய வலப்புறத்தில் வைத்துத் தம் திருக்கைகளாலே அவர் சிரசை
ஸ்பர்சித்துக் கொண்டு சதாசார்யரான ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளை ஸ்மரித்துக் கொண்டு குருபரம்பரா பூர்வகமாக
மந்த்ர ரத்ன த்வயத்தை சாங்க உபாங்கமாக ஸ்ரீ இளையாழ்வாருடைய வலது திருச் செவியில் உபதேசித்து அருளி
ஸ்ரீ பெருமாள் நாட்டுக்காக ஸ்ரீ பரத்தாழ்வான் தலையிலே திருவடி நிலைகளை வைத்துக் காட்டுக்கு எழுந்து அருளினால் போலே
ஸ்ரீ ஆளவந்தாரும் உமக்காகத் தம்முடைய திருவடித் தாமரைகளை என் தலை மேலே வைத்துத் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் என்று இரும் கிடீர் –
என்று ஸ்ரீ இளையாழ்வாருக்கு அருளிச் செய்து அருளினார் -ஸ்ரீ ஆளவந்தாருக்கு கரண பூதர் இறே ஸ்ரீ பெரிய நம்பி –
ஸ்ரீ இளையாழ்வாருக்கு நேரே ஆச்சாரியார் ஸ்ரீ யமுனைத் துறைவரே யாம் ஆகையால் இறே
யதிகட்க்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்றுடைய ராமானுஜன் -என்று
ஸ்ரீ பிள்ளை அமுதனார் அருளிச் செய்ததும் –

ஸ்ரீ இளையாழ்வாரும் -பிரமாணம் ஏது -ப்ரமேயம் ஏது -பிரமாதாக்கள் யார் -என்று ஸ்ரீ பெரிய நம்பியைக் கேட்க –
அவரும் -மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு என்கிறபடியே பிரமாணமும் த்வயமே -ப்ரமேயமும் இத்தால் பிரதிபாத்யனாய்
ஸ்ரீ ஹஸ்திகிரியின் மேலே கையும் திருவாழியுமாய் நிற்கிற பெருமாளே –
பிரமாதா நீர் தாம் -இந்த ப்ரமாணத்தாலே ப்ரமேயத்தை அனுபவிக்க வாரும் என்று அருளிச் செய்து –
அதின் மற்றை நாள் புறப்பட்டு ஸ்ரீ ஏரி காத்த பெருமாளை திருவடி தொழுது -ச ராமோ லோக ரஞ்சந -என்னுமா போலே
தேவரீர் திரு நாமத்துக்குத் தகுதியாக இத்தர்சனம் பின்ன தடாகம் ஆகாதபடி செய்து அருளிட்டீரே என்று மங்களா சாசனம் பண்ணி அருளி
ஸ்ரீ பெருமாள் கோயில் எழுந்து அருள ஸ்ரீ திருக் கச்சி நம்பியும் எதிரே வந்து ஸ்ரீ பெரிய நம்பியை சேவிக்க அவரையும் கிருபை பண்ணி
அவர் புருஷகாரமாக உலகம் ஏத்தும் ஆழியான் அத்தியூரான் ஸ்ரீ பேர் அருளாளனையும் சேவித்து
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்ரீ உய்யக் கொண்டாருக்கு அருளிச் செய்தபடியை ஸ்ரீ உய்யக்கொண்டார் நியோகத்தால் ஸ்ரீ மணக்கால் நம்பி
ஸ்ரீ ஆளவந்தாருக்கு பச்சையிட்டு உபதேசித்து ஸ்ரீ கோயிலிலே கொண்டு போய் ஸ்ரீ பெரிய பெருமாளை சாஷாத்கரிப்பித்து
அனுபவிப்பித்தால் போலே ஸ்ரீ பெரிய நம்பியும் ஸ்ரீ ஆளவந்தார் நியோகத்தால் பலகால் தட்டி உபதேசித்து
ஸ்ரீ பேர் அருளாளப் பெருமாளை சாஷாத்கரிப்பித்து அனுபவிப்பித்து அருளினார் –

அநந்தரம் ஸ்ரீ இளையாழ்வார் திருமாளிகையிலே எழுந்து அருளி தம் திரு மாளிகையில் மேல் பாதியிலே ஸ்ரீ பெரிய நம்பி
குடும்ப ஸஹிதமாக எழுந்து அருளி இருக்கத் தக்கதாக இடம் சமர்ப்பித்து தளிக்கைக்கு வேண்டும் பதார்த்தங்களும் சமர்ப்பிக்க
ஸ்ரீ நம்பியும் ஆறு மாசம் அங்கேயே எழுந்து அருளி இருந்து ஸ்ரீ இளையாழ்வாருக்கு திராவிட வேத பிரபந்தங்களையும்
தர்சன விஷய ரஹஸ்ய விசேஷங்களையும் ப்ரசாதிக்க ஸ்ரீ இளையாழ்வாரும் ப்ரீதியுடனே செவிக்கு இனிய செஞ்சொல் கேட்டு
க்ருதார்த்தராய் இருக்கும் காலத்தில்

ஒரு நாள் திருமஞ்சன முறையில் எண்ணெய் காப்புச் சாத்த வந்த ஸ்ரீ வைஷ்ணவர் ஷூத்து நலியா நின்றது என்றவாறே
ஸ்ரீ இளையாழ்வாரும் தம் தேவிகளை அழைத்து -ஸ்ரீ வைஷ்ணவர் விடாய்த்து இருக்கிறார் -பர்யுஷித அன்னம் இல்லையோ என்ன –
தேவிகளும் அல்பமும் ஆகிலும் இல்லை -என்ன இவரும் தேவிகளை ஒரு காரியத்தில் ஏவ விட்டு உள்ளே புகுந்து சோதித்து
அருளிப் பாத்ரத்திலே பழைய பிரசாதம் சம்ருத்தமாய் இருக்கக் கண்டு எடுத்துத் தேவியாரை அழைத்து ஸ்ரீ வைஷ்ணவர் இளைத்து இருக்க
இப்படிச் செய்தாயீ இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று நெடும் சொல்லால்
மறுத்த நீசை இறே நீ என்று கனக்கக் கோபித்து விட்டார் –

பின்னையும் ஒரு நாள் கிணற்றின் கரையில் ஸ்ரீ இளையாழ்வார் தேவிகளுக்கும் ஸ்ரீ பெரிய நம்பி தேவிகளுக்கும் ஒரு தோண்டி
வியாஜமாக சண்டையான வளவிலே இத்தை ஸ்ரீ பெரிய நம்பி கேட்டருளித் தம்முடைய தேவிகளை மிகவும் கோபித்து
ஸ்ரீ இளையாழ்வாருக்கும் அறிவியாதே தேவிகளை அழைத்துக் கொண்டு மீண்டு ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளினார் –
ஸ்ரீ இளையாழ்வாரும் அனுஷ்டானம் பண்ணி எழுந்து அருளி ஸ்ரீ பெரிய நம்பியை சேவிக்கப் பெறாமல் திருமாளிகையில்
வர்த்திக்கிறவர்களை பெரிய நம்பி எங்கே என்று கேட்டருள -மீண்டு கோயிலுக்கு எழுந்து அருளினார் என்று அவர்கள் விண்ணப்பம் செய்ய –
இவரும் அது என் -அவர் அருளிச் செய்யாமல் எழுந்து அருளுகைக்கு ஹேது என் என்ன -ஒரு தோண்டி அடியாக மதினியாருக்கும் மதினியாருக்கும்
சண்டையானவாறே தம் தேவிகளைக் கோபித்து பாகவத அபசாரத்துக்கு இறாயத்து அப்போதே ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளினார் -என்றார்கள் –

இளையாழ்வாரும் அச்செய்தியைக் கேட்டு திரு உள்ளம் கலங்கி தேவிகளை பார்த்து அதி குபிதராய் –
பாபா நாமா கரஸ் ஸ்த்ரிய–என்னும்படி ஸ்பஷ்டம் ஆக்கினாயே -முன்பே ஸ்ரீ திருக்கச்சி நம்பி விஷயமாகவும்
ஸ்ரீ வைஷ்ணவர் விஷயமாகவும் பாகவத அபசாரம் பட்டாய் –
இப்போது ஸ்ரீ பெரிய நம்பி தேவிகளுடன் பிணங்கி அஸஹ்ய அபசாரம் பட்டாய் -இப்படி செய்கிற நீ இப்பொழுதே புறப்பட்டுப் போ என்று
தத் அனுபந்தியான தனங்களையும் கொடுத்து பயணமாகி பிறந்தகம் போகவிட்டு இல்லறம் அல்லேல் துறவறம் என்கிறபடியே
அதிதி ஸத்கார யோக்யை இன்றிக்கே பிரதிகூலையாய் இருக்கிற பார்யையை சவாசனமாக த்யஜித்து சன்யசிக்கக் கடவேன் -என்கையாலே
ஸ்ரீ இளையாழ்வாரும் நமக்கு இஸ் சம்சாரம் த்யாஜ்யம் என்று அத்யவசித்து —
அனந்த சரஸ்ஸிஸ் நாத்வா விமானச் சாயாஞ்சிதே -சாயையா அன்விதே- விமுக்தஸ் சர்வ பாபேப்யோ விஷ்ணு லோகம் ச கச்சதி -என்னும்
மஹாத்ம்யத்தை உடைய -திருவனந்த சரஸூக்கு எழுந்து அருளி

சம்யங் நாபாஹ்வயே தீர்த்தே விபாஹ்யத கில்பிஷ நிரஸ்தே தரபோபாசோ வரதம் சரணம் கத -என்கிறபடியே –
திருவனந்த சரஸ்ஸிலே நீராடி -யதோக்தகாரிணம்பி ஷும் பகவந்தம்வா குருத்வே நாங்கீ க்ருத்ய சந்யாஸாஸ்ரமம் ஆஸ்ரயிஷ்யாமி –
என்கிறபடியே ஸன்யஸிக்க சங்கல்பித்துக் கொண்டு -தொழுது எழு தொண்டர்கள் தமக்குப் பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும்
ஸ்ரீ பேர் அருளார் சந்நிதியில் எழுந்து அருளி சேவித்து தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் -என்றும்
என்கிறபடியே பகவத் பாகவத ஆச்சார்ய அனுவர்த்தனத்துக்கு விலக்கடியான இஸ் சம்சார சம்பந்தம் வேண்டுவது இல்லை –
அடியேனுக்குத் தேவரீர் திருவடித் தாமரைகளின் சேவையே வேண்டுவது – ஆகையால்
த்ரிதண்டம் வைஷ்ணவம் லிங்கம் விப்ராணாம் முக்தி சாதனம் -நிர்மாணம் சர்வ தர்மாணாம் இதி வேத அநு சாதனம் -என்று
இப்படிச் சொல்லப்பட்ட த்ரிதண்ட காஷாயாதிகளைத் தேவரீர் அடியேனுக்குப் பிரசாதித்து அருள வேணும் என்று ஸ்ரீ இளையாழ்வார்
ஸ்ரீ பேர் அருளாளரை ஆச்சார்யத்வேன அங்கீ கரித்து விண்ணப்பம் செய்ய ஸ்ரீ தேவப் பெருமாளும் திரு உள்ளம் உகந்து அருளி –
த்ரிதண்டம் உபவீதஞ்ச வாச கௌபீன வேஷ்டநம் -சிக்யங்கவசமித் யேதத் பிப்ருயாத்யாவதாயுஷம் -என்கிறபடியே
த்ரிதண்ட காஷாயாதிகளை நீருள்ள தனையும் தரிக்கக் கடவீர் என்று அர்ச்சக முகேன நியமித்து பிரசாதித்து அருளி –
இராமானுச முனி -என்று திரு நாமம் சாத்தி உகந்து அருளி -நம் இராமானுஜனை திரு மடத்தில் வைத்து வாரும் -என்று
ஸ்ரீ திருக்கச்சி நம்பிக்கு அருளிச் செய்து அருள அவரும் அப்படியே உபலாளித்துக் கொண்டு போய் திரு மடத்தில் வைத்து எழுந்து அருளினார் –

பின்பு ஸ்ரீ ராமானுசனும் ஆஸ்ரம தர்மங்களைக் குறையற நடத்திக் கொண்டு நமக்கு ஸ்ரீ ஆளவந்தார் விசேஷ கடாக்ஷம் பண்ணினதற்கு ஈடாக
விரோதிகளும் கழிந்து ஆனுகூல்யமும் கூடா நின்றது இ றே –ஸ்ரீ ஆளவந்தார் திரு உள்ளக கருத்து நிறைவேறும்படி நமக்கு
ஒரு சகாயம் உண்டாக வேணும் என்று விசாரம் உண்டாய்த் தத் அனுரோதேந ஸ்ரீ கோவிந்த பட்டரை நினைத்து –
அவன் நமக்கு ஹித ப்ரவர்த்தகன் -சர்வ விஷய விரக்தன் -ஸாஸ்த்ர வைதக்யம் உள்ளவன் – இனி அவனை நம்மோடே சேர்ப்பார் உண்டாகில் நல்லது –
இப்போது அவன் தேவதாந்த்ர பரனாய் இரா நின்றான் அவ்வுள்ளங்கை கொணர்ந்த இடத்தே சுருள் நாற்றம் எழுப்பி
சர்வ கந்த சர்வ ரஸ-என்னுமவனுடைய ஸுகந்தயத்தைக் காட்டி மீட்க்கும் விரகர் யாரோ என்ற நினைவிட
விசேஷ ஆத்ம குணங்களை உடையராய் வேத வேதாந்த அக்ரேஸராய் வகுளாபரண பிரபந்த முகிளா மோதித சித்தராய் –
திலதம் உலகுக்காய் நின்ற தகிருவேங்கடத்து எம்பெருமானை அநவரதம் பாவனை பண்ணி பிரியா அடிமை செய்யா நின்றுள்ள
தேசிக அக்ரேஸரான ஸ்ரீ பெரிய திருமலை நம்பி கடவர் என்று நிச்சயித்து ஒரு அனுகூல ஸ்ரீ வைஷ்ணவரை அவர் சந்நிதிக்குப்
போகச் சொல்லி -தேவரீருடைய மருமகனான வட்டமணி கோவிந்த பட்டன் அடியேனுடன் ஸஹ அத்யாயியாய் அனுகூலித்து இருந்தவன்
துர்வாச அதிசயத்தால் அந்நிய பரனாய் கால ஹஸ்தி யாகிற நடும் காட்டில் நில்லா நின்றான் -தேவரீர் அடியேனுக்காக அவன் இடத்தே
நிர்ஹேதுக கிருபை பண்ணி தேவரீர் திருவடிகளுக்கு அவனை ஆட் கொண்டு அருள வேணும் என்று விண்ணப்பம் செய்து போக விட்டு அருளினார் –

ஸ்ரீ கூரத்தாழ்வானும் ஸ்ரீ முதலியாண்டானும் ஸ்ரீ இளையாழ்வார் இடம் ஆஸ்ரயித்தல்

அநந்தரம் இப்படி ஆஸ்ரம பிராப்தி பண்ணி அருளின செய்தியை ஸ்ரீ கந்தாடை முதலியாண்டானும் ஹாரீத குல திலகரான
திரு மறு மார்பன் என்கிற திருநாமத்தை யுடைய ஸ்ரீ கூரத்தாழ்வானும் கேட்டருளி அதி ப்ரீதியோடே ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு
எழுந்து அருளி ஸ்ரீ ராமானுசனை சேவித்து அடியோங்களுக்கு பஞ்ச ஸம்ஸ்காராதிகளை ப்ரசாதித்து அருள வேணும் என்று
விண்ணப்பம் செய்ய ஸ்ரீ ராமானுஜனுக்கு திரு உள்ளம் உகந்து அருளி அவர்கள் பிரார்த்தித்த படியே செய்து அருள
அவர்களும் பஞ்ச ஸம்ஸ்காராதிகளை லாபித்து க்ருதார்த்தரார்களாய்-
அதீத்ய மந்த்ரம் ஆஸ்ரயம் பூஜையேச் சக்தி தோத் விஜ ஆச்சார்யா தீந வ்ருத்திஸ் து யாவஜ்ஜீவம் சதா ஸூசி -என்கிறபடியே
ஸ்வ ஆச்சார்யரான ஸ்ரீ ராமானுஜனை ஒரு காலும் பிரியாமல் தத் கைங்கர்ய ஏக ரசராய் சேவித்துக் கொண்டு இருந்தார்கள்

யாதவ ப்ரகாசன் ஸ்ரீ இளையாழ்வாரை ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தல்

பின்பு யாதவப்பிரகாசனுடைய மாதாவுக்கு பலகாலும் ஸ்ரீ பேர் அருளாளர் சேவையும் ஸ்ரீ திருக்கச்சி நம்பி பார்வையும்
ஸ்ரீ ராமானுஜன் இடத்தே ப்ரேம சம்பாஷணமும் நடக்கையாலே அதுவே நிதானமாக அவளுக்கும் நம் தர்சனத்திலே ஊற்றம் பிறந்து
இத் தரிசனத்தில் நம் யாதவனும் இறங்கினாலோ -என்று நினைத்து வையமாளிகைப்படி ஏறா நிற்க நல்லது நல்லது என்று
கிம்வதந்தி உண்டாக அது கேட்டு சந்தோஷத்துடன் யாதவ பிரகாசன் பக்கலிலே சென்று இச் செய்தியைச் சொல்லி நீயும் நம்
ஸ்ரீ ராமானுஜனைப் போலே சிகா யஜ்ஜோபவீத பூர்வகமாக த்ரிதண்டத்தைத் தரியாய் என்ன
யாதவ பிரகாசனும் ஸ்வ மத அபிமானத்தாலே அர்த்தம் சொல்லுகை ஒழிந்து பாரமார்த்திகதயா ஸ்வ அபிமத அர்த்தத்தில்
அருசி தோன்றா நிற்கையாலும் ஸ்ரீ இளையாழ்வார் அந்நாள்களில் பிரதியோகித்வேன சொன்ன அர்த்தங்கள் நெஞ்சிலே
புண் படுத்தா நிற்கையாலும் அவர் மஹாத்ம்யங்களை ப்ரஹ்ம ரஜஸ்ஸூ சொல்லி இருக்கையாலும்
அவருக்கு கங்கா யாத்திரையில் வியாத ரூபேண வந்த ராம சாஷாத்கார ஸஹாயத்தாலும் -மாத்ரு வாக்யத்தாலும் சம்மதித்து
ஸ்வ மாதா உடனே த்ரி தண்ட தாரணம் பண்ணும் இடத்தில் நான் சிகா யஜ்ஜோ பவீத தியாகம் பண்ணுகையாலே
அதுக்கு பிராயச்சித்தமாக பூ ப்ரதக்ஷிணம் பண்ண வேண்டி இருந்தது -அது வாயோ வ்ருத்தனான என்னால் செய்ய முடியாது –
இனி அசக்தனான நான் செய்ய அடுப்பது என் என்ன என்று சொல்லி முசித்துக் கிடக்க அவ்விரவிலே
ஸ்ரீ பேர் அருளாளர் அவன் ஸ்வப்னத்திலே எழுந்து அருளி -நம் இராமானுஜனை ஒரு ப்ரதக்ஷிணம் பண்ணி
அவர் தர த்ரிதண்ட காஷாயாதிகளைத் தரித்து சன்யசியாய் -என்ன யாதவனும்

அத்தை விஸ்வசியாமல் ஸ்ரீ திருக் கச்சி நம்பியுடனே -நான் ஒரு நினைவு நினைத்து இரா நின்றேன் –
அத்தை ஸ்ரீ பேர் அருளாளர்க்கு விண்ணப்பம் செய்து அவர் திரு உள்ளமான படியை எனக்கு அருளிச் செய்ய வேணும் -என்ன –
ஸ்ரீ நம்பியும் அன்று இராத்திரி பெருமாளை சேவித்து விடை கொள்ளும் அளவில் -யாதவ பிரகாசன் ஒரு நினைவு நினைத்து இருந்தேன் என்றான் –
என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ பேர் அருளாளரும் அவன் தாயார் இராமானுசனைப் போலே நீயும் த்ரிதாண்டி சந்நியாசி ஆகா என்றாள்-
தான் பூ ப்ரதக்ஷிணம் பண்ண வேண்டும் என்று முசித்துக் கிடந்தான் -நாம் நம் இராமானுஜனை ஒரு ப்ரதக்ஷிணம் பண்ணி சன்யசியாய்
என்று சொன்னோம் நாம் ஸ்வப்ன முகேன சொன்ன வார்த்தையை விஸ்வசியாமல் உம்மை இடுவித்துக் கிடக்கிறான் அத்தனை -என்று
அருளிச் செய்ய ஸ்ரீ நம்பியும் இச்செய்தியை விடிவோரை யாதவ பிரகாசனுக்கு அருளிச் செய்ய -அவனும் விசுவாசித்து வந்து
ஸ்ரீ ராமானுஜன் திருவடிகளிலே தண்டன் சமர்ப்பித்து -அடியேனுக்கு த்ரிதண்ட தாரணம் பண்ணுவித்து அருள வேணும் என்ன
இவரும் அவனுடைய உசித நிர்வேதத்தைக் கண்டு அது செய்யும் இடத்தே பிராயச்சித்த அபேக்ஷை உண்டு என்ன
அவனும் பகவத் யுக்தி பிரகாரத்தை விண்ணப்பம் செய்து அவர் தம்மையே வலம் வந்து ச விநயனாய் நிற்க
அவ்வளவில் ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டானும் பகவத் ஆனுகூல்யமும் இவருடைய நினைவும் ஒத்து இருந்தபடியே என்று விஸ்மிதராய் –
த்வேஷாச் சைத்யா தயா -என்கிறபடி தேவரீருக்கு பண்ணா நின்ற த்வேஷம் தானே இவருக்கு உஜ்ஜீவன ஹேது வாய்த்து
என்று சொல்லி ஆச்சர்யப்பட்டு

அஸ்மாபிஸ் துல்யோ பவது -என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ ராமானுசனும் போர உகந்து அருளி
ஸாஸ்த்ர யுக்த பிரகாரேண பிராயச்சித்த பூர்வகமாக சவ்ள உப நயனாதிகளையும் பண்ணுவித்து த்ரிதண்ட காஷாயாதிகளையும்
பிரசாதித்து அருளி கோவிந்த ஜீயர் -என்ற திரு நாமமும் பிரசாதித்து அருளி இப்படி பஞ்ச ஸம்ஸ்கார உக்தராக்கி குரு பரம்பரா பூர்வகமாக
மந்த்ர ரத்ன அர்த்தத்தையும் ப்ரசாதித்து அருளி சாஸ்திரங்களில் இதரேதர வசன வையர்த்த்யம் வாராத படி யதி தர்ம சமுச்சயம் -என்கிற
பிரபந்தத்தைப் பண்ணும் என்ன கோவிந்த சீயரும் விதி கர்த்ருத சா லிங்கம் பிரயோ போ முக்கிய கர்மச அஹோ ராத்ர க்ரியா
ஆஸாரோ லிங்க தர்மோ கதிஸ்தி தி ப்ராயச்சித்தாநி ஸம்ஸ்கார இத்யேகாதச பர்வக என்று ஏவம் பிரகாரேண ஸங்க்ரஹ
பிரபந்தத்தைச் செய்து சந்நிதியில் வைத்து தண்டன் சமர்ப்பிக்க ஸ்ரீ ராமானுசனும் ஆதி அந்தமாக திருக்கண் சாத்தி சந்தோஷித்து அருள
இவரும் ஆச்சார்ய பரதந்த்ரராய் சில காலம் எழுந்து அருளி இருந்து அசிரேண பரம பதத்தை பிராபித்து அருளினார் –

அநந்தரம் ஸ்ரீ ராமானுசனும் ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கும் ஸ்ரீ முதலியாண்டானுக்கும் மீமாம்ச ஸாஸ்த்ர யுக்ம ஸ்ரமம் பண்ணுவித்துக் கொண்டு
இரா நிற்க இவருடைய ஆஸ்ரம பிராப்தி முதலான இச் செய்திகளை ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ ஆளவந்தார் முதலிகள் எல்லாரும் கேட்டுப்
போர யுகந்து தங்களிலே விசாரித்துக் கொண்டு ஸ்ரீ நம் பெருமாள் சந்நிதியில் சென்று -ஸ்ரீ இளையாழ்வாரை நித்ய வாசம் பண்ணும்படி
இங்கே அழைப்பித்துக் கொண்டு அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ பெரிய பெருமாளும் ஸ்ரீ பேர் அருளாளருக்கு அப்போதே
திரு முகம் போக விட்டருள ஸ்ரீ பேர் அருளாளரும் கேட்டருளி தம் தாம் அபிமானத்தை புறம்பே போக விடில் அன்றோ
நம் இராமானுஜனை விடுவது -என்று அருளிச் செய்து விட -இச் செய்தியை ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ பெரிய நம்பி முதலான முதலிகள்
எல்லாரும் கேட்டு இனி செய்ய அடுப்பது என் என்று தங்களில் விசாரித்து அருளி ஸ்ரீ தேவப்பெருமாள் பரம உதாரராய் இருப்பர் –
பாட்டுக்குப் போர நல்லராய் இருப்பர் -என்று ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையரைக் குறித்து –
வேகவத் யுத்தரே தீரே க்ஷேத்ரே ஸத்ய வ்ரதாக்யே அஸ்தி காஞ்சீதி விக்யாதா புரீ புண்ய விவர்த்தி நீ -என்று
புண்ய வர்த்தகமாகச் சொல்லப்பட்ட ஸ்ரீ காஞ்சீ மா நகரியிலே தேவரீர் எழுந்து அருளி புண்ய கோடி விமான மத்யஸ்ராய்
அகிலார்க்கும் சர்வ அபேக்ஷித பிரதராய் இருக்கிற ஸ்ரீ பேர் அருளாளரைப் பாடி உகப்பித்து -நமக்கு ஸ்ரீ ராமானுசனைத் தர வேணும் -என்று
கேட்டு வாங்கி அழைத்துக் கொண்டு எழுந்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய –

அவரும் அப்பொழுதே புறப்பட்டு ஸ்ரீ நம்பெருமாளுக்கு விண்ணப்பம் செய்து ஸ்ரீ பெருமாள் கோயிலை நோக்கி எழுந்து அருள இவர் இப்படி
எழுந்து அருளுகிற செய்தியைக் கேட்டு ஸ்வ ஜனமான ஸ்ரீ வரம் தரும் பெருமாள் அரையர் எதிரே வந்து தம்முடைய திரு மாளிகைக்கு எழுந்து
அருளுவித்துக் கொண்டு போய் சத்கரித்து அமுது செய்விக்க -இவரும் அதி ப்ரீதராய் எழுந்து அருளி இருக்க அதின் மற்றை நாள் விடிவோரை
ஸ்ரீ பேர் அருளாளர் வையமாளிகையில் ஸ்ரீ கச்சிக்கு வாய்த்தான் திரு மண்டபத்திலே ஏறி அருளி அனைத்துத் கொத்தில் உள்ள பரிகரமும்
சேவித்து இரா நிற்க ஸ்ரீ திருக் கச்சி நம்பியும் திருவாலவட்டம் பரிமாற அருகே ஸ்ரீ ராமானுசனும் அவர் அருளிச் செய்த
ஸ்ரீ வரதராஜ அஷ்டகத்தை அனுசந்தித்துக் கொண்டு சேவித்து நிற்கச் செய்தே ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் எழுந்து அருளின செய்தியை
ஸ்ரீ திருக் கச்சி நம்பி கேட்டருளி எதிர் கொண்டு அரையரை சேவிக்க அவரும் கிருபை பண்ணி அந்யோந்யம் குசல ப்ரச்னம் பண்ணிக் கொண்டு
இருக்கச் செய்தே ஸ்ரீ அரையரும் ஸ்ரீ நம்பியுடனே ஸ்ரீ பேர் அருளாளரை சேவிக்க வேணும் என்று விண்ணப்பம் செய்ய

ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ பெருமாளுடைய திரு ஒலக்கத்திலே அழைத்துக் கொண்டு போக -அரையரும் ஸ்ரீ வரத ராஜனை சேவித்து –
கதாபுநஸ் சங்க ரதாங்க கற்பக த்வஜ அரவிந்த அங்குச வஜ்ர லாஞ்சனம் -த்ரிவிக்ரம த்வத் சரணாம் புஜ த்வயம் மதீய மூர்த்தனாம்
அலங்கரிஷ்யதே-என்று அனுசந்தித்துக் கொண்டு தண்டன் சமர்ப்பித்து நிற்க -ஸ்ரீ பெருமாளும் தீர்த்த பிரசாதங்களை ஸ்ரீ சடகோபனையும்
பிரசாதித்து அருள இவரும் திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் என்று ப்ரீதராய் நிற்கிற அளவிலே
ஸ்ரீ பெருமாளும் இவரை அருளப்பாடிட்டு அருள ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரும் பக்தி புரஸ்சரமாக –
என் நெஞ்சமேயான் -என்று தொடங்கி உலகம் ஏத்தும் ஆழியான் அத்தியூரான் -என்றும்
பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேர் அருளாளர் -என்றும்
தொழுது எழு தொண்டர்கள் தமக்கு பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் என்றும்
இப்படி ஆழ்வார் திவ்ய ஸூக்தியான பாலேய் தமிழன பண்ணார் பாடலான கவிகளைத் தேவ கானத்திலே இயலும் இசையுமாக நாடகத்துடனே பாட –
தென்னா என்னும் என் அம்மான் -என்கிறபடியே ஸ்ரீ பேர் அருளாளரும் போர உகந்து அருளி
தாம் சாத்தி இருந்த திரு முத்தின் தாழ் வடம் திருப் பரிவட்டம் சத்ர சாமராதி மற்றும் உண்டான வரிசைகள் எல்லாம் பிரசாதித்து அருள –

இவரும் நாயந்தே -அடியேனுக்கு இவை ஒன்றிலும் அபேக்ஷை இல்லை -தேவரீர் அர்த்திதார்த்த பரிதாந தீக்ஷிதர் ஆகையால் அடியேன்
அரித்தித்தத்தைத் தந்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்து பின்னையும் கனக்கப் பாடி அருள
ஸ்ரீ பெருமாளும் அத்தைக் கேட்டு அருளி ப்ரீதராய் நாமும் நம் பெண்டுகளும் ஒழிய நீர் வேண்டினத்தைத் தருகிறோம் –
அத்தைச் சொல்லிக் கண்ணீர் என்ன ஸ்ரீ அரையரும் ஸ்ரீ ராமானுசனைக் காட்டி இவரை அடியேனுக்குத் தந்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பெருமாளும் அப்போதே அறியப் பெற்றிலோமே -இவரை ஒழிய நீர் வேண்டினது எல்லாம் தருகிறோம் கேளீர் என்று அருளிச் செய்ய –
ஸ்ரீ அரையரும் ராமோ த்விர் நாபி பாஷதே -என்கிற தேவரீர் இரண்டு வார்த்தை அருளிச் செய்யலாமோ என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பேர் அருளாளரும் இன்னாப்புடன் தந்தோம் கொண்டு போகலாகாதோ என்று அருளிச் செய்ய –
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரும் ஸ்ரீ உடையவரைக் கைப்பற்றி வாரும் என்ன ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ பேர் அருளாளருக்குத் தெண்டன் சமர்ப்பித்து
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையருடனே ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளப் புறப்பட ஸ்ரீ பெருமாளும் இவருக்கு விடை கொடுத்து அருளினார் –
பின்பு ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ கூரத்தாழ்வானையும் ஸ்ரீ முதலியாண்டானையும் பார்த்து அருளி திரு மடமே போய் நம்முடைய திருவாராதனமான
ஸ்ரீ பேர் அருளாளரையும் மற்றும் உண்டான சம்பந்தங்களையும் கொண்டு வாருங்கோள் என்று அருளிச் செய்து
திரு மடமும் புகுராமல் எழுந்து அருள அவர்களும் அப்படியே எழுந்து அருளுவித்துக் கொண்டு கூடின அளவிலே
ஸ்ரீ திருக்கச்சி நம்பியும் அவர்களை வழி விட்டு மீண்டு எழுந்து அருளினார்

ஸ்ரீ உடையவரும் -யத் கத்வாந நரோயாதி நர கஞ்சாப்ய தோகதிம் -என்று சொல்லுகிற பெருமையை யுடைய
ஸ்ரீ ரெங்க தாமமாகிற திருவரங்கத் திருப்பதியை நோக்கிப் பயண கதியில் எழுந்து அருளி வடவாற்றிலே நீராடி
கேசவாதி துவாதச ஊர்த்வ புண்டரங்களைச் சாத்திக் கொண்டு இருந்த அளவிலே இவர் எழுந்து அருளின செய்தியை
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்து ஸ்ரீ பெரிய நம்பி முதலான முதலிகளும் சீயர்களும் ஏகாங்கிகளும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் கேட்டருளி
ஸ்ரீ பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய ஸ்ரீ பெருமாளும் சேனை முதலியாருக்கு அருள்பாடிட்டு அருளி நம் இராமானுஜனை எதிர் கொண்டு
அழைத்து வாரும் -என்று திரு உள்ளமாய் அருள அவர் ஸ்ரீ பெரிய நம்பி உள்ளிட்ட முதலிகள் சீயர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுடனே
ஸ்ரீ பெருமாள் பரிகரமான அனைத்துத் கொத்தில் உள்ளவர்களும் சேவிக்க அகில ந்ருத்த கீத வாத்யத்துடனே முக்தராய் போருமவர்களை
நித்ய ஸூரிகள் விரஜைக்கரை அளவாக வந்து எதிர் கொள்ளுமா போலே திருக் காவேரி வட ஆற்றின் கரை அளவாக வந்து எதிர் கொள்ள
ஸ்ரீ ராமானுஜனும் ஸ்ரீ சேனை முதலியார் ஸ்ரீ பெரிய நம்பி முதலானோரையும் சேவித்து அவர்களை பின் சென்று கொண்டு போய் –
கொடி யணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் என்கிறபடியே திண் கொடி மதிளையும் தாமோதரன் திருக் கோபுரத்தையும் கிட்டி சாஷ்டாங்க பிரணாமம்
பண்ணி திருமாலை தந்த பெருமாள் திருவீதி முன்னாகப் புகுந்து ப்ரதக்ஷிணமாக எழுந்து அருளி த்ரிவிக்ரமன் திரு வீதியையும் பிரதக்ஷிணமாக
எழுந்து அருளி புகுந்து பெரிய பலி பீடத்து அடியிலே சென்று தண்டன் சமர்ப்பித்து சேவா க்ரமத்தில் ஆளரியையும் திருவடி தொழுது
ஸ்ரீ ரெங்க நாயகியாரையும் சேவித்து ஸ்ரீ சந்த்ர புஷ்கரணியிலே தீர்த்த பிரசாதம் பண்ணி அருளி திருக் கோபுரத்து நாயன்மார்களும்
சேவித்து புகுந்து கடைத்தலை இருந்து வாழும் சோம்பரான நம்மாழ்வார் முதலான ஆழ்வார்களையும் சேவித்து மற்றும் சுற்றும் உள்ள
எம்பெருமான்களையும் சேவித்து -அணியனார் செம்பொனாய அருவரை யனைய கோயிலாகிற அணி அரங்கன் திரு முற்றத்தே புகுந்து
தண்டன் சமர்ப்பித்து உள்ளே சென்று ப்ரதக்ஷிணமாக எழுந்து அருளி ப்ரணவாகாரமான திவ்ய விமானத்தையும் சேவித்து
ஸ்ரீ சேனை முதலியாரையும் திருவடி தொழுது அழகிய மணவாளன் திரு மண்டபத்து ஏற எழுந்து அருளின அளவிலே

வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து என்கிறபடியே முக்தனாய் போருமவனை ஸ்ரீ வைகுண்ட நாதன் எதிர் கொள்ளுமா போலே
ஸ்ரீ நம்பெருமாள் திருக்கைத் தலத்திலே எழுந்து அருளிப் புறப்பட்டு அழகிய மணவாளன் திரு மண்டபத்து அளவாக எழுந்து அருளி
எதிர் கொண்டு உள்ளே புகுந்து அருள ஸ்ரீ உடையவரும் விழுவது எழுவது தொழுவதாய் சேவித்து திருப் பள்ளி அறையிலே புகுந்து –
அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கருமேனி அம்மான் தன்னைக் கண்ணாரக் கண்டு உகந்து –
மணத்தூணே பற்றி நின்று -வாயார வாழ்த்தி ப்ரேம பரவசராய் -அமலனாதிபிரான் படியே பாதாதி கேசாந்தமாக
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே என்னும்படி ஸ்ரீ பெரிய பெருமாளை அனுபவித்து திருப்பல்லாண்டையும் அனுசந்தித்து –
நமோ நமோ வாங் மனசாதி பூமயே நமோ நமோ வாங் மனஸைக பூமயே நமோ நமோ அனந்த மஹா விபூதயே நமோ நமோ அனந்த தயைக சிந்தவே
ந தர்ம நிஷ்டோஸ்மி ந ச ஆத்மவேதீ ந பக்திமாம்ஸ் த்வத் சரணாரவிந்தே அகிஞ்சன அநந்ய கதிஸ் சரண்ய த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்று
தம் பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தியை அனுசந்தித்து சேவித்து நிற்க

ஸ்ரீ பெரிய பெருமாளும் ஸ்ரீ ராமானுசனை கிருபை பண்ணி அருளி
தீர்த்த ப்ரசாதங்களும் ப்ரசாதித்து -நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்கிறபடியே-
தேனே மலரும் திருக் கமல பாதமான துயரறு சுடர் அடிகளாலே இவருடைய உத்தம அங்கத்தை அலங்கரிக்க இவரும்
தாளிணைக் கீழ் வாழ்ச்சியைப் பெற்று நிரதிசய ஆனந்த நிர்ப்பரராய் சேவித்துக் கொண்டு நிற்க ஸ்ரீ பெரிய பெருமாளும் ஸ்ரீ உடையவரை
தம் தாமரைக் கண்களால் நோக்கி -சோதிவாய் திறந்து -பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் -என்கிற உபய விபூதி ஐஸ்வர்யத்தையும்
உமக்கும் உம் உடையார்க்கும் தந்தோம் -நம்முடைய வீட்டின் கார்யம் எல்லாம் ஆராய்ந்து நடத்தும் என்று திரு உள்ளமாய் அருளி
ஸ்ரீ உடையவர் என்ற திரு நாமமும் பிரசாதித்து அருளி – ஸ்ரீ உடையவரும் தீர்த்த பிரசாதமும் சூடிக் களைந்த தண் துழாய்
விரை நாறு கண்ணித் திரு மாலை பிரசாதமும் -பொது நின்ற பொன் அம் கழலான ஸ்ரீ சடகோபனும் வானவர் நாட்டையும் நீ கண்டு கொள்
என்கிற உபய விபூதி ஐஸ்வர்யமும் கரதலாமலமாக ப்ரசாதிக்கப் பெற்று
ஸ்ரீ பெரிய திரு நம்பி திரு முக மண்டலத்தைப் பார்த்து அருளி பெரியாருக்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு என்று
தேவரீர் திருவடிகள் சம்பந்தத்தை இட்டு ஸ்ரீ பெருமாள் இப்படி அடியேனை வாழ்வித்து அருளினார் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பெரிய நம்பியும் கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பவிஷ்யத்தர்த்தம் ப்ரத்யக்ஷமாச்சது -என்று
அருளிச் செய்து ஸ்ரீ பெருமாள் நியமித்து அருளின கார்யம் செய்து அருளலாகாதோ என்ன

ஸ்ரீ உடையவரும் பெரிய திரு மண்டபத்தே எல்லாருடனே எழுந்து அருளி இருந்து கருவூலங்களை எல்லாம் ஆராய்ந்து
அமுதுபடி சாத்துப்படி திருமாலை திரு விளக்குகள் எல்லாம் ஆராய்ந்து நடத்தி மற்றும் திருவாராதனத்துக்கு வேண்டியவை எல்லாம்
குறைவற நடத்தி கோயில் அனைத்துத் கொத்தில் உள்ளவர்களுடையவும் ஏற்றத் தாழ்வுகளும் ஆராய்ந்து திரு மதிள்கள் முதலான இடங்களில்
திருப்பணி களும் நடத்தி அருளி –
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை கொண்டல் மீது அணவும் சோலை குயில் இனம் கூவும் சோலை –
கடியார் பொழில்களில் திருச் செண்பகம் தொடக்கமான திருப் பூ மரங்களும் திரு நந்தவனங்களும் ஆராய்ந்து அருளி
மற்றும் உண்டான திரு விளையாட்டு சீமைகள் எல்லாம் ஆராய்ந்து கொண்டு போருகிற அளவிலே
அகளங்க நாட்டாழ்வானை சிஷ்யனாக்கி ஸ்ரீ கோயிலுக்கு மேல் காவலாக வைத்து அருளி –
திங்களும் நாளும் விழா வறாத-என்கிறபடியே நித்ய உத்சவ பக்ஷ உத்சவ மஹா உத்சவ சம்வஸ்தர உத்சவங்கள் எல்லாம்
தாழ்வு அற நடத்திக் கொண்டு போந்து அருளினார்–

—————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ யமுனைத் துறைவர் /ஸ்ரீ இளையாழ்வார் வைபவங்கள் –

February 14, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ இளையாழ்வார் வைபவம்

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த முதலிகளில் ஸ்ரீ பெரிய திருமலை நம்பி –
வேங்கடத்தைப் பாதியாக வாழ்வீர்காள் என்கிறபடியே திருவேங்கடமுடையானை திருவடிக் கீழ் அமர்ந்து புகுந்து சேவித்துக் கொண்டு
எழுந்து அருளி இரா நிற்க -அவருடன் பிறந்த பெண் பிள்ளையாய் ஸ்ரீ பூமிப் பிராட்டியார் என்றும் ஸ்ரீ பெரிய பிராட்டியார் என்றும்
பெயரை உடைய இருவரில்
மூத்த ஸ்ரீ பூமிப் பிராட்டியார் ஸ்ரீ பெரும்பூதூரிலே ஸ்ரீ ஆஸூரி கேசவப் பெருமாள் என்ற சர்வ க்ரது தீஷிதர்க்கு வாழ்க்கைப் பட்டாள்-
இளைய ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸ்ரீ மழலை மங்கலத்தில் வட்ட மணிக் குலத்திலே ஸ்ரீ கமல நயன பட்டரைத் திரு மணம் புணர்ந்தாள்-
அவர்களும் தம் தம் புக்கங்களிலே வாழும் காலத்தில்

அனந்தம் பிரமம் ரூபம் லஷ்மணஸ் ச தத பர பலபத்ரஸ் த்ருதீயஸ் து கலவ் கச்சித் பவிஷ்யதி -என்கிற வசனத்தின் படியே
திருவனந்த ஆழ்வானும் கலியுகத்தில் அகில ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக தம் திரு அவதாரத்துக்கு இடம் பார்த்து
ராம திவாகர அச்யுதா பானுக்கள் கௌசல்யா தேவகீ தேவிகளுடைய கர்ப்பங்களை விரும்பினால் போலே
ராமானுஜ திவாகரராய் ஸ்ரீ பெரும் புதூரில் ஸ்ரீ பூமிப் பிராட்டியார் கர்ப்பத்தைப் பிராபித்து அருளி
ஸ்ருதிர் நஷ்டா ஸ்ம்ருதிர் லுப்தா ப்ராயேண பதிதாத்விஜா அங்கா நிசவிஸீர்ணாநி ஹா வ்ருத்தோ வர்த்ததே கலி -என்கிறபடியே
கலி சாம்ராஜ்யம் பண்ணுகிற -இருள் தரு மா ஞாலத்தில் -கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்கிறபடியே
கலி இருள் நீங்கிப் பெரிய கிருத யுகம் பற்றிப் பேர் இன்ப வெள்ளம் பெருகும்படி -தீர் லப்தா –என்கிற கணக்கின் படியே
சக வருஷம் -939- சென்ற வர்த்தமான பிங்கள சம்வத்சரத்தில் ஸ்ரீ மத்தான சைத்ர மாசத்தில் ஸூக்ல பக்ஷத்தில்
பஞ்சமி குரு வாஸர ஸஹிதமான திருவாதிரை நஷத்ரத்தில் ஸூப முஹூர்த்தத்திலே பார் எல்லாம் உய்யலாம் படி
ப்ராதுர்ப்பவித்து அருள ஆஸூரி கேசவாப் பெருமாள் இவர்க்கு ஜாத கர்மம் செய்து அருளினார்

இச் செய்தியை ஸ்ரீ பெரிய திருமலை நம்பி கேட்டருளி ஸ்ரீ பெரும்பூதூர் ஏறச் சென்று
சர்வ க்ரது ஸ்ரீ கேசவ சோமயாஜியாரைக் கண்டு சத்கரித்து -அவர் புத்ரனையும் முக ஓளி திகழக் கடாக்ஷித்து அருளி –
இவன் சர்வ லஷ்மீ ஸம்பன்னன்-சகல சாஸ்திரங்களையும் அதிகரிப்பன்- ஆகையால் லஷ்மனோ லஷ்மீ ஸம்பன்ன -என்கிற
இளைய பெருமாள் திரு நாமம் சாத்துகைக்குத் தகுதியாய் இருந்தான் என்று பன்னிரண்டாம் திவசத்தில் –
தஷிணந்து புஜம் பூர்வம் சக்ரேண பிரதி பேச்சிசோ வாமாம் ஸம்ப்ரதபேத் பஸ்ஸாத் சங்கே நைவ த்விஜோத்தம –என்கிறபடி
இவருக்கு நாம கரணத்தில் திரு இலச்சினை முன்னாக இளைய ஆழ்வார் என்ற திரு நாமம் சாத்தி அருளிப் பின்பு
அன்ன ப்ராசன சவ்ள உபநய நாதிகளையும் தத் தத் காலங்களிலே ஸாஸ்த்ர யுக்த பிரகாரத்தில் செய்விக்க
இளைய ஆழ்வாரும் அங்க உபாங்கங்களோடே கூடப் பத க்ரம ஸஹிதமாக வேத அத்யயனத்தையும் பண்ணிச்
சதுர்வித வித்யா பாரங்கதராய் ஷோடச கலா பூர்ணனான சந்திரனைப் போலே ஷோடச வார்ஷிகரான வாறே
சர்வ உபகார சமமான க்ருஹஸ்தாச்ரமத்தை அங்கீ கரித்து அருளி ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு யாருக்கான
ஸ்ரீ திருப்புட் குழியிலே யாதவ பிரகாசன் என்பான் ஒருவன் ஏக தண்டி மாயா ஸந்நியாசி பூர்வ பக்ஷ வேதாந்தம் வாசிப்பிக்கிறான்
என்று கேட்டருளி அங்கே எழுந்தருளி அவன் பக்கல் ஸ்ரோத்தாக்களோடே தாமும் ஸஹ ஸ்ரோதாவாய் வேதாந்தம் வாசித்து அருளா நிற்க

அவ்வளவில் மழலை மங்கலத்துக் கமல நயன பட்டருக்கு ஒரு புத்ரன் அவர் பத்னி பெரிய பிராட்டியார் இடத்திலே
க்ரோதந சம்வத்சரத்திலே தை மாசமும் பவ்ர்ணமியும் சோமா வாரமும் கூடின புனர்பூச நக்ஷத்திரத்தில் அவதரித்து அருள
ஜாத கர்ம அநந்தரம் -ஸ்ரீ திருமலை நம்பியும் அங்கு ஏற எழுந்து அருளி ஸ்ரீ கமல நயன பட்டரையும் கண்டு சத்கரித்து
பெரிய பிராட்டியார் புத்ரனையும் தம் தாமரைக் கண்களால் நோக்கி இவன் சத் ஆத்ம குணங்களையும் உடையனாய்
சர்வ வித்யைகளையும் அதிகரித்து வைதிக பக்ஷவானாம் என்று திரு உள்ளம் உகந்து அருளி
ஸ்ரீ கமல நயன பட்டரைக் கொண்டு கோவிந்தன் என்ற திரு நாமம் சாத்துவித்து அருளினார்
இவரும் சவ்ள உபநயநாதி ஸம்ஸ்கார விசிஷ்டராய் க்ருஹஸ்த ஆஸ்ரமத்தை பிராபித்து அருளி சர்வ சாஸ்திரங்களையும் அப்யஸித்து
ஸ்ரீ திருப் புட் குழியிலே யாதவ பிரகாசன் இடத்திலே இளையாழ்வார் வாசிக்கிறார் என்று கேட்டுப் போர ஆசையோடு
அங்கே வந்து தாமும் வேதாந்தம் வாசிக்கத் தொடங்கினார்

யாதவ பிரகாசனும் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்கிற ஸ்ருதி வாக்யத்துக்கு
கண்டத்வ முண்டத்வ பூர்ண ஸ்ருங்கத்வங்கள் ஒரு கோ வ்யக்தியிலே கடிக்கும் போது இறே ப்ரஹ்மத்துக்கு இந்த விசேஷணம் கூடுவது –
என்று அபார்த்த ப்ரதிபாதனம் பண்ண -இளையாழ்வார் அத்தை நிஷேதித்து –
ஸத்ய சப்தத்தால் க்ஷணிக வ்யாவ்ருத்தியையும் -ஞான சப்தத்தால் அசித் வ்யாவ்ருத்தியையும் –
அனந்த சப்தத்தால் பரிச்சின்ன -சேதன வ்யாவ்ருத்தியையும் பண்ணி சேதன அசேதன விலக்ஷணமாய் நித்தியமாய் இருக்கும்
ப்ரஹ்மம் என்ன அவனும் ஹூங்காரம் பண்ணினான் –

பின்பு ஒரு நாள் இளையாழ்வார் யாதவப்ரகாசனுக்கு அப்யஞ்சனத் தொழில் செய்யா நிற்க அவ்வளவில்
தஸ்யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ-என்கிற ஸ்ருதிக்கு அவன் அநுசித அர்த்தம் சொல்ல அது கேட்டு இவருக்கு
சோகம் உண்டாய் அந்த சோகாஸ்ரு அவன் தொடையில் விழ அது நெருப்பு பட்டால் போலே அவன் தொடையைச் சுட –
அவனும் பதறி இவர் முகத்தைப் பார்த்து உமக்குத் துக்கம் ஆவான் என் -என்ன இவரும் கம்பிபதீ திகபீ என்று ஸூர்யனாய்
ஆச உபவேசநே -என்று உபவேசனமாய் ஸூர்ய ஆஸ்ரயணத்தை யுடைத்தான கமலம் போலே -என்று இத்யாதி யோஜனை இருக்க
அயதார்த்தம் கேட்டவாறே துக்கமாயிற்று என்ன யாதவப்ரகாசனும் அது கேட்டுக் குபிதனாய் –
நான் சொன்ன படி கேட்க்கில் வாசித்து இரும் -இல்லாவிடில் விட்டுப் போம் -என்ன இவரும் அப்படியே சிந்தை கலங்கித் தவிர்ந்து இருக்க

அவனும் ஏகாந்தத்தில் தன்னுடைய சிஷ்யர்களில் அனுகூலரை அழைத்து நீங்கள் நான் சொன்ன அர்த்தத்தை சம்மதித்து இருக்க
இளையாழ்வான் ஒருவனுமே எதிர்த்தட்டாக வாதியா நின்றான் -இவனால் நம்முடைய அத்வைத ரீதி சிறுக்கும் –
இவன் முடியும் விரகு என் என்று கேட்க அவர்களும் பலபடி படும் வகை சொல்ல அவனும் அவ்வோ வகைகளுக்குப் பழி பாவங்கள் உண்டாம் –
அவை வராமல் நினைத்தபடி கூடுகைக்கு மணி கர்ணிகையிலே ம்ருதி யுண்டாக்குகையே என் அகவாயில் உள்ளது என்ன –
அழகு இது என்று சர்வரும் ஐக மத்யம் பண்ணிக் கொண்டு துரியோதனன் தர்ம புத்திரர் விஷயத்தில் ஜது க்ருஹத்தில்
விசஸனம் எண்ணினாப் போலே அந்தரங்கித்து இளையாழ்வாரை அழைத்து நீர் இல்லாவிடில் எங்களுக்கு ஒரு சாயலாய் இருக்கிறது –
கோபியாமல் கிரந்தத்தை அவிச்சின்னமாக நடத்தும் என்று நன்மை யுரைத்து உள்ளிட்டுக் கொண்டு ஒரு நாள் கங்கா யாத்திரையை
உத்யோகித்துப் புறப்பட்டு போம் போது நின்ற நின்ற இடங்களிலே இளையாழ்வாரும் கோவிந்த பட்டரும் கூட்டரவு படாத படி பண்ணிக் கொண்டு
ஸாத்ர கோடி கணித சிஷ்யர்கள் ஸுஸ்ரூஷிக்க வழி செல்லா நிற்க விந்திய பிரதேசத்தில் ஒரு பள்ளக் கரையிலே ஜல ஸ்பர்ச அர்த்தமாக
இளையாழ்வாரும் கோவிந்த பட்டரும் கூடி நின்றவாறே கோவிந்த பட்டரும் விஜனமான சமயம் அறிந்து இவர்களுடைய
கங்கா யாத்ரா நிமித்தத்தை இளையாழ்வாருக்கு ஸூசிப்பித்து அகன்று போகச் சொல்லித் தாம் ஒருவரே போந்தார்

இளையாழ்வாரும் வ்யாகுலப்பட்டு அவ்வழியை விட்டு குறுக்கறுத்துப் போய் ஒரு மரத்தடியில் நின்று பார்க்க அவ்விடம்
வெம்பி எரி கானகமாய் நிர்ஜல பிரதேசமுமாய் ஸூஷ்க கண்டகா வ்ருதமாய்-
பொருந்தார் கை வேல் நிதி போல் பரல் பாய மெல்லடிக்கள் குருதி சோர விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம் பசி நோய் கூர-என்கிறபடியே -ஊன்று வெம் பரற்களை யுடைத்தாய் தீக்ஷண தாப கர ரவி கிரணங்களை யுடைத்தான
விந்தியாட வீஷ்வ அதோ யா ஸூ -என்று சொல்லுகிற விந்தியாடவியாய் இருக்க சிந்த அக்காட்டில் தனியாக நின்று
ஆவாரார் துணை என்று –பக்கம் நோக்கி –வழி திகைத்து அலமருகின்றேன் –என்னும்படி திக் பிரமம் பிறந்து –
மதி எல்லாம் உள் கலங்கி அடி இடத் திமிர்த்துக் கொண்டு திகைத்து நிற்க

சர்வேஸ்வரனும்
நாஹமாத்மா நமாசாசே மத் பக்தைஸ் சாது பிர்விநா-என்று இருக்குமவன் ஆகையால்
சாதாரஸ் சர்வ ஸூலப -என்கிறபடியே வாளும் வில்லும் கொண்டு இடர் கெட பத்நீ ஸஹிதனாய்
ஒரு வில்லியாய் வந்து இவர் முன்னே தோன்ற இவரும் அவர்களைக் கண்டு கலக்கம் தீர்ந்து உள்ளம் தேறி நின்று
நீங்கள் எங்கு நின்றும் வந்தி கோள்-எங்கு ஏறப் போகிறீர்கள் என்று கேட்க அவர்களும் உத்தர தேசத்தில்
சித்தாஸ்ரமத்தின் நின்றும் வருகிறோம் சத்யவ்ரத க்ஷேத்ரம் ஏறப் போகிறோம் என்ன இவரும்
நானும் உங்களுடனே புண்ய கோடி ஏற வருவானாக நினைத்து இரா நின்றேன் -என்ன
நல்லது வாரும் என்று அவர்கள் முன்னடி இட இவரும் அவர்கள் பின்னே செல்ல அவர்களும் ஸ்வ அதீனமாக வழி நடத்த
விந்த்யம் பிற்காலித்து சந்த்யா காலமான அளவிலே கால உசித கர்ம அனுஷ்டானங்களையும் செய்து அவர்களுடன்
ஓர் இடத்தே உபவசித்து இருக்க வல்லிரவாய் முன்னடி தோன்றாமல் காடாந்தகார பூயிஷ்டமாய் நள்ளிரவானவாறே
கண் புதைய மூடி ராஜ வ்ருக்ஷத்தின் அடி இருந்தார்கள் –

அப்போது வியாத பத்னியும் நல்ல தண்ணீர் மடுக்க ஆசைப்பட வியாத புருஷனும் -விடிவோரை சமீபத்தில்
பான அர்ஹமான கிணற்றில் மதுர நிர்மல சீதள கந்த யுத பாத நீயம் காட்டுகிறேன் என்ன இளையாழ்வாரும் அது கேட்டு –
ஐயோ பரம உபகாரிகளான இவர்களை லப்த மநோ ரதர் ஆக்குகைக்கு இது நமக்கு அநபிஜ்ஞதேசமாய் விட்டதே என்று
நிர்விண்ணராய் இருக்க -கனவிருள் அகன்று -கீழ் வானம் வெள்ளென்றவாறே -கொழு மலர் அணவிக் கூர்ந்தது குணதிசை மாருதம் வீச –
அரி என்ற பேர் அரவம் கேட்டு எழுந்து இருந்து சடக்கென காலிக கர்மத்தைச் செய்து வழி நடத்துமவர்களைத் தேடித் காணாமையால்
சர்வோ திக்கமாக நோக்கிக் கூப்பிட்டு நாலடி தோன்றின வழியே நடந்து வர கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைய
ஜன பதங்கள் ஸ்பஷ்டங்களாகத் தோற்றக் கண்டு நேற்று நின்ற நிலைக்கு இப்படியும் ஒரு நல் விடிவு -வெளி நாடு -காணப் பெற்றதே
என்று போர ஆச்சர்ய உக்தராய் -அங்கே ஒரு தோப்பும் கிணறும் நாலிரண்டு பேருமாய் நிற்கக் கண்டு இவரும்
எத்தேசம் எவ்வூர் என்று அவர்களைக் கேட்க -அவர்களும் இது என்ன ப்ராஹ்மணா -புண்ய கோடி விமானம் முன்னே நிற்கத் தெரியாதோ என்ன
இவரும் அது கேட்டு ஸந்துஷ்டாராய் ராவணவதம் கேட்ட பிராட்டியைப் போலவும்
த்ருஷ்டா சீதா என்ற வார்த்தையைக் கேட்ட பெருமாளையும் போலேயும் –
மது வனத்தில் புகுந்த திருவடியைப் போலவும் –
தத் க்ஷணத்தில் கர்த்தவ்யதா மூடராய் அவர்களை பெருமாளும் பிராட்டியாகவுமாய் நினைத்து
கிருஷ்ணாவதார ஸுலப்யத்தை நினைத்து எத்திறம் என்ற ஆழ்வாரைப் போலே மோஹித்துக் கிடந்தார் –

பின்பு -சநைராஸ் வாசிதஸ் ஸ்வயம் -என்னும்படியே தன்னிலே வ்யாமோஹம் தெளிந்தவாறே –
ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே சகே -என்னும்படியே கூடத்திரிந்த அர்ஜுனனைப் பிரமிப்பித்தால் போலவும்
என்னையும் நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து -உருக்காட்டாதே ஒழிப்பதே -என்று பலவகை சொல்லிப் புலம்பித்
தம்மிலே உள்ளம் தேறி ஆனந்த நிர்ப்பரராய் பெரிய ராஜ மார்க்கத்தாலே சென்று வையமாளிகை ஏறி-
தென்னத்தியூர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன் -என்னும்படி -திருப் பொலிந்த சேவடிகளைச் சேவித்து
எழுவது தொழுவதாய் ஆனந்தாஸ்ருக்கள் பனிப்ப புளகீக்ருத காத்ரராய் ஆனந்தித்து அவன்
அந்தரத்தானம் பண்ணினதின் கருத்து அறிந்து அச் சாலைக் கிணற்றில் பேர் அருளாளர் திரு ஆராதனத்துக்கு உதவத்
திரு மஞ்சனம் கொண்டு வந்து சமர்ப்பித்துப் போரா நின்றார் –

அங்கே யாதவ பிரகாசனும் திரளுமாக இவர்கள் வரும் அளவும் நிற்க அவ்வளவில்
ஸ்ரீ கோவிந்த பட்டர் வர வந்தீரோ இளையாழ்வார் எங்கே என்று கேட்க அவரை நான் கண்டிலேன் என்ன
அவரும் தன் சமீப வர்த்திகளைப் பார்க்க விட அவர்களும் தேடித் பார்த்துக் காணாமையாலே –
ஐயோ காட்டிலே என்ன தீங்கு வந்ததோ -என்று சர்வரும் துக்காகுலராய் முன்னே நடந்து பிரயாண கதியில் போய்
கங்கா தீரத்தை அடைய கங்கையிலே மாக ஸ்நானம் பண்ணா நிற்க –
ஒரு நாள் கோவிந்த பட்டர் அகர்மஷண ஸ்நானம் பண்ணுகிற போதிலே ஒரு லிங்கம் கையிலே வந்து சேர விஸ்மிதராய்
இது என் என்று யாதவ பிரகாசனுக்குக் காட்ட போர ப்ரீதனாய் நீர் தெய்வஞ்ஞர் ஆகையால் கங்கா ஸ்நான பலம் கை வந்தால்
போலே கங்கா தரனே கை புகுந்தான் என்று யாதவ பிரகாசனும் இவர் இடத்தே விசேஷ பிரதிபத்தி உக்தனாக எல்லாரும்
லிங்கம் கை சேர்ந்ததுவே நிரூபகமாக இவருக்கு உள்ளங்கை கொணர்ந்த நாயனார் என்று பேரிட்டு அழைக்கத் தொடங்கினார்கள் –
யாதவ பிரகாசனும் கங்கா ஸ்நானம் பண்ணி மீண்டு ஜெகந்நாதம் அஹோபிலம் வழியாக வர
உள்ளங்கை கொணர்ந்த நாயனாரும் இந்த லிங்கத்தை ஒரு உசித ஸ்தலத்தில் ப்ரதிஷ்டிப்பித்து வருகிறேன் என்ன
யாதவ பிரகாசனும் அப்படியே செய்யும் என்று இவரை மார்க்க மத்யே அனுப்பி விட்டுப் பெருமாள் கோயில் ஏறப் போந்தான் –

பின்பு உள்ளங்கை கொணர்ந்த நாயனாரும் தம் ஜென்ம பூமியான மழலை மங்கலத்தில் சென்று அங்குள்ள அசேஷ வித்வன்
மஹா ஜனங்களையும் திரட்டி ஸ்வ கரஸ்த லிங்கத்தை அங்கே ப்ரதிஷ்டிப்பித்து தத் பக்தராய் இருக்கிற அளவிலே
காளஹஸ்தி நாதன் இவர் இருப்புக்கு விரும்பி நீர் நம் பக்கல் வந்து இருக்க வேணும் என்று நாயனாருக்கு ஸ்வப்னம் காட்டித்
தன் ஸ்தானத்தார் ஸ்வப்னத்திலும் -உள்ளங்கை கொணர்ந்த நாயனாரை அழைத்துக் கொண்டு வாருங்கோள் என்று ப்ரேரிக்க-
அப்படியே அனைத்துக் கொத்தில் உள்ளாரும் மழலை மங்கலத்தில் வந்து இவரைப் பலவகை பஹு மானம் பண்ணி
அழைத்துக் கொண்டு போய் ஸ்தான நிர்வாஹத்துக்கு வேண்டின இலச்சினை மோதிரமும் கொடுத்து
இவரைத் தங்களுக்கு முக்யராக இவரும் தத் பக்தி உக்தராக அங்கே இருந்தார் –

அநந்தரம் யாதவ பிரகாசனும் பெருமாள் கோயிலிலே வந்து இளையாழ்வாரைக் கண்டு ஆச்சர்யப்பட்டு மிகவும் சந்தோஷித்து
விந்திய பிரதேசத்தில் உம்மைக் காணாமையாலே அந்யதா சங்கை பண்ணி கனக்க நிர்வேதப் பட்டு இருந்தோம் –
இவ்வளவு காணப் பெற்றதே என்ன -இவரும் வழி தப்பிக் காணாமல் அகன்று போய் வில்லி வ்யாஜேன போந்த விருத்தாந்தத்தை
ச விஸ்தாரமாகச் சொல்ல அவனும் கேட்டு இவர் நடை லோகாதீதமாய் இருந்தது என்று நினைத்து ஸூ ப்ரீதனாய்
ஸ்வ கோஷ்ட்டியில் கூட்டிக் கொண்டு கிரந்தத்தை நடத்தா நிற்க

அவ்வளவில் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பேர் அருளாளர் சந்நிதியின் நின்றும் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி
ஸ்ரீ நம்பெருமாளைத் திருவடி தொழுது ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளிலே சேவித்து நிற்க ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ பெருமாள் கோயில்
விசேஷம் கேட்டு அருளும் போது ப்ராசங்கிகமாக யாதவ பிரகாசன் என்பான் ஒரு ஏக தண்டி சந்நியாசி பக்கல்
ஸ்ரீ பெரும் பூதூர் இளையாழ்வார் என்று ஒருவர் வேதாந்தம் வாசியா நிற்க
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் – என்கிற ஸ்ருதி வர அவன் அதுக்கு வ்யாவ்ருத்தி தோன்ற அர்த்தம் சொல்ல
இளையாழ்வாரும் குண யோகம் சொல்லலாய் இருக்க வ்யாவ்ருத்தி சொல்லல் சேராது என்ன அவனும் ஹூங்காரம் பண்ணினான் –
பின்னையும் ஒரு நாள் இளையாழ்வார் அவனுக்கு அப்யஞ்சனம் இடும் போது தஸ்யயதா கப்யாசம் புண்டரீக மேவ அக்ஷிணீ-
என்கிறதுக்கு அநுசித அர்த்தம் சொல்லக் கேட்டு கிலேசிக்கும் போது சோக அஸ்ரு அவன் தொடையில் விழ
அது நெருப்புப் பொறி பட்டால் போலே வேக அவனும் பதறி இவர் முகத்தைப் பார்த்து கிலேச ஹேது ஏது என்ன இவனும்
ஸூர்யனைக் கண்டு அப்போது அலர்ந்த கமலம் போலே இருக்கும் பரம புருஷன் திருக் கண்கள் என்று இங்கனே யோஜனை இருக்க
அபார்த்தம் கேட்டவாறே கிலேசமாயிற்று என்றார் -என்ற இந்த வ்ருத்தாந்தங்களை ச விஸ்தாரமாக விண்ணப்பம் செய்ய

ஸ்ரீ ஆளவந்தார் கேட்டருளி
அசந்த ஏவாத்ரஹி சம்பவந்தி தத்ரை வலாபஸ் ஸரஸீரு ஹாணாம் -என்கிறபடியே இந்தளத்தில் தாமரைப் பூத்தால் போலே
இவ்விபூதியிலே இப்படி ஒரு மஹாநுபாவன் உண்டாக்கப் பெற்றதே என்று போர ப்ரீதராய் அப்பொழுதே அவரைக் காண வேணும்
என்ற பேராசையோடே முதலிகளும் தாமுமாகப் புறப்பட்டு ஸ்ரீ நம்பெருமாளுக்கு விண்ணப்பம் செய்து அவர் அனுமதி கொண்டு
எழுந்து அருளி பயண கதியில் ஸ்ரீ திருக் கோவலூர் வழியாக வந்து ஆழ்வார் நாயனாரையும் திருவடி தொழுது
புரீணாம் அபி ஸர்வாசாம்ஸ்ரேஷ்டா பாப ஹராஹிசா –நாம்நா காஞ்சீதி விக்யாதா புரீ புண்ய விவர்தநி –என்று சொல்லப்படுகிற
மஹாத்ம்யத்தை உடைத்தான ஸ்ரீ பெருமாள் கோயில் ஏற எழுந்து அருள -ஸ்ரீ திருக் கச்சி நம்பியும் ஸ்வ ஆச்சார்யரான
ஸ்ரீ ஆளவந்தார் எழுந்து அருளினார் என்று கேட்டு மிகவும் சந்தோஷத்துடன் எதிர் கொள்ள எழுந்து அருள அங்குள்ள
ஸ்ரீ வைஷ்ணவர்களும் வரம் தரும் பெருமாள் அரையரும் ஸ்ரீ சடகோபனும் தீர்த்த பிரசாதங்களும் கொண்டு
அதி சம்பிரமத்துடன் எதிர் கொள்ள ஸ்ரீ ஆளவந்தாரும் மிகவும் ஸந்துஷ்டராய் சாஷ்டாங்க பிரணாமம் பண்ணித்
தீர்த்த பிரசாதங்களை ஸ்வீகரித்து அருள

திருக் கச்சி நம்பியும் மிகவும் உகப்போடே திருவடிகளிலே அடைவு கெட விழுந்து சேவிக்க ஸ்ரீ ஆளவந்தாரும் அதி ப்ரீதியுடனே
அவரை முடி பிடித்து எடுத்து -ஸ்ரீ கஜேந்திர தாஸரே-ஸ்ரீ பேர் அருளாளருக்கு அந்தரங்கமான திரு ஆலவட்ட கைங்கர்யம்
அவிச்சின்னமாக நடந்து வருகிறதோ -என்ன அவரும் வாய் புதைத்து -தேவரீருடைய கிருபையாலே ஸ்ரீ பேர் அருளாளர் கண்டு அருளுகிறார் –
என்று விண்ணப்பம் செய்ய பின்பு ஸ்ரீ நம்பியும் கூட்டிக் கொண்டு -உலகு ஏத்தும் ஆழியான் அத்தி யூரான்-என்கிற
அர்த்தி தார்த்த பரிதான தீஷிதரான ஸ்ரீ பேர் அருளாளரை சேவிப்பதாகப் புகுந்து ப்ரதமம்
ஸ்ரீ பேர் அருளாளன் ஸ்ரீ பெரும் தேவியாரைத் திருவடி தொழுது ப்ரதக்ஷிணமாக எழுந்து அருளா நிற்க
உதக் பஸ்சிம பாகஸ்தவம் வல்மீகம் மஹதோகிர பூஜ நீயஸ் சதத் ராஸ்தே சேஷ பண ப்ருதாம் வர -என்று சொல்லுகிற
திருப் புற்றின் சமீபத்திலே திருவனந்த ஆழ்வானையும் அதுக்குக் கிழக்காகக் கரிய மாணிக்கத்து ஆழ்வாரையும் சேவித்து
ஸ்ரீ ஆளவந்தாரும் முதலிகளும் எழுந்து அருளி இருக்கிற அளவிலே

யாதவ பிரகாசனும் திரளுமாக ஸ்ரீ பேர் அருளாளரை சேவித்து ப்ரதக்ஷிணம் பண்ணிக் கொண்டு வாரா நிற்க
ஸ்ரீ ஆளவந்தாரும் இவர்களில் இளையாழ்வார் யார் என்று ஸ்ரீ நம்பியைக் கேட்டு அருள அவரும்
சிவந்து நெருக்கி வலியராய்-ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவா -என்கிறபடியே ஆஜானுபாஹுவாய் நடுவே வருகிறவர்
என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ ஆளவந்தாரும் சந்தோஷத்தால் ப்ரசன்ன மதுர கம்பீர நயனங்களாலே
பூயோ பூயோ செவ்வரியோடே அவரைப் பார்த்து அருளி -ஆம் முதல்வன் -இவன் என்று விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளி

பெருமாளை நோக்கி -யஸ்ய பிரசாத கலயாபதிரஸ் ஸ்ரருனோதி பங்கு ப்ரதாவதி ஜவேநச வக்திமூகே —
அந்த பிரபஸ்யதி ஸூதம் லபதேச வந்த்யா தந்தேவ மேவ வரதம் ஸ்ரணங்கதோ அஸ்மி -என்றும்
தாம் வேண்டும் காமமே காட்டும் கடிது -என்றும் சொல்லுகிறபடியே அவ்வவருடைய இஷ்ட காமங்களைத் தந்து
அருளுகிறவராகையாலே அடியேனுக்கும் இளையாழ்வார் ஆகிற மஹாநுபாவர் நம் தர்சன ப்ரவர்த்தரகராம் பண்ணி
விசேஷ கடாக்ஷம் செய்து அருள வேணும் என்று தேவரீரைச் சரணம் புகுந்தேன் என்று விண்ணப்பம் செய்து
பின்பு ஹஸ்தி கிரியின் மேலே எழுந்து அருளி ஸ்ரீ பேர் அருளாளரையும் சேவித்துத் தீர்த்த பிரசாதமும் ஸ்வீ கரித்து அருளி
ஸ்ரீ திருக் கச்சி நம்பியையும் நிறுத்தி அப்போது இவருக்கு ஒரு நல் வார்த்தை சொல்ல அவசரம் காணாமையாலே
மீண்டு முதலிகளும் தாமுமாக ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளினார்

அநந்தரம் யாதவ ப்ரகாசனும் தம் பக்கல் ஸ்ரோதாக்களுடன் வேதாந்த வ்யாக்யானம் பண்ணிக் கொண்டு இருக்கச் செய்தே
அந்த ராஜ்யத்தில் ராஜாவின் பெண் பிள்ளையை ப்ரஹ்ம ரஜஸ்ஸூ பிடிக்க இவ்விடங்களில் இத்தைப் பரிஹரிக்கத் தக்க
மந்திரவாதிகள் உண்டோ என்று ஆராய யாதவ பிரகாசன் போர மந்திரவாதியாய் இருக்கும் என்று சிலர் சொல்லக் கேட்டு
ராஜாவும் அவனுக்கு இச் செய்தியை அறிவியுங்கோள் என்று ஆள் போக விட ராஜ மனுஷ்யர் வந்து இவனுடன்
ராஜாவின் பெண் பிள்ளையை ப்ரஹ்ம ரஜஸ் ஸூ பிடித்தது என்று ராஜா உமக்கு அறிவிக்கச் சொன்னார் என்று சொல்ல
இவனும் யாதவ பிரகாசன் உன்னைப் போகச் சொன்னான் என்று ப்ரஹ்ம ரஜஸ் ஸூ க்குச் சொல்லுங்கோள் என்று
வந்தர்வர்களுடன் சொல்லிப் போக விட அவர்களும் போய் யாதவ பிரகாசன் உன்னைப் போகச் சொன்னான் என்று சொன்னவாறே –

அவன் தன்னை அங்கு நின்றும் போகச் சொன்னேன் என்று சொல்லுங்கோள் என்று அந்த ப்ரஹ்ம ரஜஸ் ஸூ சொல்ல
ராஜ மனுஷ்யர் இச் செய்தியை யாதவ பிரகாசனுக்கு அறிவிக்க அவனும் மிகவும் குபிதனாய்த் தானும் திரளுமாகப் போய்
ராஜ கோஷ்டியிலே மஹா மந்த்ரத்தை ஜபித்துக் கொண்டு ப்ரஹ்ம ராஜஸ்ஸின் அருகில் நின்று முஷ்டி பிடிக்க
அதுவும் முடக்கின காலை நீட்டி -அடா யாதவ பிரகாசா நீ ஜெபிக்கிற மந்த்ரம் நான் அறியேனோ -என்று அந்த மந்திரத்தையும் சொல்லி –
நான் இந்த மந்த்ரத்துக்கும் உனக்கும் போவேனோ –நீ உன் ஜென்மமும் அறியாய்-என் ஜென்மமும் அறியாய் -என்ன
யாதவ பிரகாசனும் ஆகில் நீ பிரானுமாய் சர்வஞ்ஞனுமாய் இருந்தாய் -என்னுடைய ஜென்மம் ஏது உன்னுடைய ஜென்மம் ஏது என்று கேட்க –
அதுவும் உன்னுடைய ஜென்மம் ஸ்ரீ மதுராந்தகத்தில் எரிக் கரையில் இருப்பதோர் புற்றில் ஒரு உடும்பாய் இருப்புதி-
ஸ்ரீ கோயில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ திரு மலைக்கு எழுந்து அருளும் போது அங்கே நீராடி அமுது செய்கிற இடத்தில் சிந்தின
பிரசாதத்தையும் தீர்த்தத்தையும் ஸ்வீகரித்தாய்-அத்தாலே உனக்கு இந்த வித்வத் ஜென்மம் உண்டாய்த்து –
நான் ப்ராஹ்மண வர்ணத்தில் பிறந்து யாகம் பண்ண அதிலே மந்த்ர லோபம் கிரியா லாபங்கள் பிறந்து அத்தாலே ப்ரஹ்ம ரஜஸ் ஸூ ஆனேன் –
என்று சொல்ல -ஆகில் நீ யாருக்குப் போவுதி- என்ன –
ரஜஸ் ஸூவும் உன் பக்கலிலே வாசிக்கிறவர்கள் ஒருவர் நித்யஸூரிகளில் தலைவராய் இருப்பார் கான் -என்ன
அவர் யார் -என்று கேட்க அதுவும் இவர் என்று இளையாழ்வாரைக் காட்டி அவரைத் தண்டன் இட்டு
இவர் போகச் சொன்னால் போகிறேன் என்ன
ஆகில் இளையாழ்வீர் நீர் இத்தைப் போகச் சொல்லும் என்று அவன் சொல்ல இவரும் நீ இவளை விட்டுப் போ என்ன
அதுவும் உம்முடைய திருவடித் தாமரைகளை என் தலை மேலே வைத்தால் ஒழியப் போகேன் என்ன
இவரும் உகந்து அப்படியே செய்து அருள அதுவும் ஸந்துஷ்டமாய்ச் சிரித்துக் கும்பிட்டு எழுந்திருந்து போகிறேன் என்ன
இளையாழ்வாரும் ஆகில் நீ போகிறதற்கு அடையாளம் காட்டிப் போ என்ன
அதுவும் இவ்வரசில் நான் இருப்பேன் இப்போது இவ்வரசை முறித்துக் கொண்டு போகிறேன் என்று சொல்லி
அவ்வரசை முறித்துக் கொண்டு போய்த்து-
யாதவ பிரகாசனும் இளையாழ்வாரை மிகவும் ஸ்லாகித்து மீண்டு தன்னுடைய மட்டுமே வந்து புகுந்தான்

அநந்தரம் ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ கோயிலிலே ஒரு நாள் வியாக்கியான சமயத்திலே -\
இலங்கத்திட்ட புராணத்தீரும் -என்கிற பாட்டு பிரஸ்த்துதமாக -அப்போது நமக்குத் பின்பு இத்தரசனம் நிர்வஹிப்பார் ஒருவரையும்
காணப் பெற்றிலோமே என்கிற விசாரத்தில் இளையாழ்வார் பக்கல் திரு உள்ளமாய் –
இப்போது இளையாழ்வாரை யாதவ பிரகாசனோடு உறவு அறுத்து நம் பக்கல் சேர்க்கும் விரகு உண்டோ என்று அருளிச் செய்து
பின்னையும் ஸ்ரீ பேர் அருளாளரைக் குறித்து நம் பிரபத்தியை சபலமாக்கி அருள வேணும் என்று மிகவும் பிரார்த்தித்து அருளினார்
பின்பு யாதவ பிரகாசனும் மீளவும் ஒரு நாளும் கிரந்தம் நடத்தா நிற்கச் செய்தே –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -நேஹா நாஸ்தி கிஞ்சன -இத்யாதி வாக்கியங்களை அத்வைத பரமாக யோஜித்து
ஜீவ ப்ரஹ்மண ஐக்கியம் ப்ரதிபாதிக்க இவரும் அத்தை நிராகரித்து அவ்வாக்கியங்களை விசிஷ்டாத்வைத பரமாக யோஜித்து
அர்த்தம் சொல்ல அவனும் அதி குபிதனாய்-இன்று தொடங்கி என்னிடம் வாசிக்க வேண்டாம் –
உம்முடைய புத்திக்குத் தகுதியான இடத்தே போய் கிரந்தம் கேளும் என்று போகச் சொன்னான்

இவரும் அதி ப்ரீதியோடே மீண்டு தம் திருமாளிகையிலே வந்து திருத் தாயாருக்கு இச் செய்தியைச் சொல்ல
அவரும் வாரீர் பிள்ளாய் -இதி வரைக்கும் நீர் படித்தது போதும் -ஸ்ரீ திருக் கச்சி நம்பி ஸ்ரீ பேர் அருளாளருக்கு அந்தரங்கராய இருக்கிறார் –
நீர் அவரை சேவித்து அவர் அருளிச் செய்வதைச் செய்து கொண்டு இரும் என்று சொல்ல –
அப்படியே இளையாழ்வாரும் திருக் கச்சி நம்பியை சேவித்து க்ருதார்த்தராய் -க்ரியதாம் இதி மாம் வத -என்றால் போலே
அடியேன் செய்யும் கைங்கர்யத்தை நியமித்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ பேர் அருளாளருக்கு சாலைக்கு கிணற்று தண்ணீர் உகப்பாய் இருக்கும் -திரு ஆராதன காலத்துக்கு உதவும்படி
முன்பு போலே பிரதி தினம் ஒரு குடம் திரு மஞ்சனம் கொண்டு வந்து சமர்ப்பியும் என்று அருளிச் செய்ய
ஸ்ரீ இளையாழ்வாரும் அப்படியே தப்பாமல் அந்தக் கைங்கர்யம் செய்து கொண்டு இரா நிற்க

அவ்வளவில் ஸ்ரீ ஆளவந்தார் திருமேனியில் நோவு சாத்தி எழுந்து அருளி இருக்கச் செய்தே
திருவரங்கப் பெருமாள் அரையரைப் புருஷகாரமாகக் கொண்டு ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூர் நம்பியும் ஸ்ரீ பெரிய நம்பியும்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தில் தண்டனிட்டு -அடியோங்களுக்குத் தஞ்சமாய் இருபத்தொரு அர்த்தம் ப்ரசாதித்து
அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ ஆளவந்தாரும் முதலிகள் இருவரையும் திரு உள்ளம் பற்றி உங்களுக்குத் தஞ்சமாய் இருபத்தொரு அர்த்தம் இது –
ஸ்ரீ கோயில் ஆழ்வாரே உங்களுக்கு உயிர் நிலை -உங்களுக்குத் தஞ்சம் என்று புத்தி பண்ணிப் போருங்கோள்-என்றும் –
ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளின் கீழே வீணையும் கையுமாக சேவித்து இருக்கும் ஸ்ரீ திருப் பாணாழ்வார் விக்ரஹத்தைப்
பாதாதி கேசாந்தமாக சேவித்துக் கொண்டு போருங்கோள் -என்றும் திரு உள்ளமதாக –
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் முதலான முதலிகள் மூவரையும் குறித்து இதுக்கு பிரமாணமாக
திருவேங்கடமுடையான் உயிர் நிலை அறிந்து போரும் குறும்பு அறுத்த நம்பியையும்
ஸ்ரீ பேர் அருளாளப் பெருமாள் உயிர் நிலை அறிந்து ஸ்ரீ திருக் கச்சி நம்பியையும்
ஸ்ரீ பெரிய பெருமாள் உயிர் நிலை அறிந்து போரும் ஸ்ரீ திருப் பாணாழ்வாரையும் –
ஸ்ரீ திருப் பாணாழ்வார் உயிர் நிலை அறிந்து போரும் ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரும் காட்டி அருளி
ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையரைப் பார்த்து அருளி
நீர் ஸ்ரீ பெரிய பெருமாள் உயிர் நிலை அறிந்து சேவித்துப் போருகிற விக்ரஹமே அடியேனுக்கு
உபாய உபேயம் என்று புத்தி பண்ணிப் போருவன் -என்று அருளிச் செய்ய –

ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரும் ஸ்ரீ ஆளவந்தார் திருப்பாதத்தில் தண்டன் சமர்ப்பித்து
தேவரீர் நித்ய விபூதியில் சென்று ஸ்ரீ பரமபத நாதனை சேவித்து இமையாத கண்ணராய்க் கொண்டு
போரத் திரு உள்ளம் பற்றி அருளிற்றோ என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ ஆளவந்தாரும் அவரைக் குறித்து நீர் பர ஸம்ருத்திக்கு உகந்து அத்யவசித்து இரும் என்று அருளிச் செய்து –
பின்னையும் ஸ்ரீ ஆளவந்தார் இம்முதலிகள் மூவரையும் திரு உள்ளம் பற்றி -ஒருவன் பிரபன்னனால் பகவத் அதீனமான
ஆத்ம யாத்திரையிலும் கர்ம அதீனமான தேஹ யாத்திரையிலும் அந்வயம் உண்டு என்று இருந்தான் ஆகில்
ஆத்ம சமர்ப்பணம் குலைந்து நாஸ்திகனாய் விடும் –
ஆகையால் த்ரிவித கரணங்களாலும் உபய யாத்ரையிலும் அந்வயம் இல்லை –
நாராயணனுக்கு நைரந்தர்ய வேஷம் -தம் பக்கல் பேற்றுக்கு நம என்னாதவர்களை-
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் -என்பது ஒரு ஓவ்தார்ய விசேஷம் உண்டு –
நாரங்களுக்கு நைரந்தர்ய வேஷம் -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கிறபடியே
நிர்ப்பரங்களாய் இருக்கை என்று இராதே
தம் பேற்றுக்கு த்வரிக்கையும் ஸ்வரூப ஹானி –
எம்பெருமானே ரக்ஷகன் என்று இருக்கையும் ஸ்வரூப ஹானி –
எம்பெருமான் ரஷ்யன் என்று இருக்கையும் ஸ்வரூப ஹானி –
இப்படி இருந்தானாகில் அநந்யார்ஹ சேஷத்வத்துக்கும் ஸ்வ ஸ்வாமி பாவ சம்பந்தத்துக்கும் சேராது என்று அருளிச் செய்ய –

மீளவும் இவர்கள் ஸ்ரீ பாதத்தில் தண்டன் இட்டு அடியோங்களுக்குப் பற்றும் உபாயம் ஏது என்று கேட்க –
ஸ்ரீ ஆளவந்தாரும் நீங்கள் அடியேனை உபாய உபேயம் என்று புத்தி பண்ணிப் போருங்கோள் என்கை அடியேனுக்கு ஸ்வரூப ஹானி –
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே-என்கிற அதுவே
உங்களுக்கு உபாய உபேயம் என்று புத்தி பண்ணிப் போருங்கோள் -என்று அருளிச் செய்ய
முதலிகளும் திரு உள்ளத்தில் முசித்து இருக்க ஸ்ரீ ஆளவந்தாரும் இவர்களைக் கண்டு நீங்கள் முசிக்க வேண்டா –
உங்களுக்கு திருமந்த்ரார்த்தம் போக மண்டபம் –
சரம ஸ்லோகார்த்தம் புஷ்ப மண்டபம் –
மந்த்ர ரத்நார்த்தம் தியாக மண்டபம் -இதற்கு பிரமாதாக்கள் திருப்பாணாழ்வார் முதலானார்கள் என்று அருளிச் செய்தார்

இத்தை ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் திரு உள்ளம் பற்றி -தேவரீர் அவதாரம் தீர்த்தம் ப்ரசாதித்து போம் அளவில்
கிருமி கீடாதிகளுக்கு ஓர் அழிவு வந்தால் சேதம் இல்லை என்று அருளிச் செய்ய
ஸ்ரீ ஆளவந்தாரும் அவ்வார்த்தையைக் கேட்டுப் பராக்கடித்து ப்ரத்யுத்தரம் அருளிச் செய்யாமல் இருக்க
இவ் வார்த்தையை முதலிகள் இருவரும் திரு உள்ளம் பற்றி ஸ்ரீ ஆளவந்தார் வியோகத்தில்
நாம் பிராண தியாகம் பண்ணக் கடவோம் -என்று நிச்சயித்து இருக்கிற அளவில்

பெரிய பெருமாள் திரு ஓலக்கத்திலே இவ் விசேஷம் பிறக்க ஸ்ரீ பெரிய பெருமாளும்
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூர் நம்பி முதலாக அருளப் பாடிட்டு –
ஸ்ரீ ஆளவந்தார் வியோகத்திலே நீங்கள் அவிவேகம் பண்ணினீர்கள் ஆகில் நம் ஆணை என்று ஆஞ்ஞாபித்து
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் திருக் கையிலே அவர்களைக் காட்டிக் கொடுத்து அருள அவரும் முதலிகள் இருவரையும்
கையைப் பிடித்துக் கொண்டு ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தில் சென்று இவ் விசேஷத்தை விண்ணப்பம் செய்ய
அவரும் இதைக் கேட்டு நம் பேற்றுக்கு சஹியாதவர்கள் ஸ்ரீ பெரிய பெருமாள் இரண்டு ஆற்றுக்கும் நடுவே
திரு ஆராதனம் கண்டு அருள சஹியாதவர்கள் என்று அருளிச் செய்து நம்முடைய வியோகத்தில் அவிவேகம் பண்ணினீர்கள் ஆகில்
ஸ்ரீ உய்யக் கொண்டார் ஸ்ரீ மணக்கால் நம்பி முதலான ஸ்ரீ பெரிய பெருமாள் உகந்த முதலிகளுடைய திரு உள்ளத்தை
மறுத்தவர்கள் ஆவுதிகோள் என்று தம்முடைய திவ்ய ஆஜ்ஜை இட
இவர்களும் திரு உள்ளத்திலே நொந்து இருக்கும் அளவிலே ஸ்ரீ ஆளவந்தாரும் –

பகவத் பாகவத விஷயங்களிலே தரமிடாதே பாகவத விஷயத்திலே பகவன் நோக்கானவனாய்ப் பகவானைக் குரு பரம்பராதியாகத்
திருவடி விளக்குமா போலே பாகவத விஷயத்திலும் தன் சத்தை மாண்டு ஆச்சார்ய விக்ரஹத்தை அனுசந்தித்து தீர்த்தம் கொண்டு போருகையும்
அவர்களுக்குத் தீர்த்தம் கொடுக்கும் இடத்தில் அர்த்த காம பரவசர் இன்றிக்கே தாங்களும் நேரே ஆச்சார்யனை நோக்கி
குரு பரம்பரா பூர்வகமாக த்வயத்தை அனுசந்தித்துக் கொடுக்கையும் இருவருக்கும் உபாதேயம் –
ஞானாதிக விஷயமுமாய் சமூகமுமாய் சென்ற அளவிலே இருவரும் அர்த்த காம பரவசராய் பிராகிருத சரீரத்தில் நோக்காய்
சமூகத்தில் சென்ற முதலிகளை இகழ்ந்து திரு உள்ளம் கன்றுமாகில் ஆச்சார்யனே யாகிலும் இவர்களுக்கு
அத்தீர்த்தம் உபாதேயம் அன்று என்று அருளிச் செய்ய

இம் முதலிகளும் அவ்வார்த்தையைத் திரு உள்ளம் பற்றி இருக்கிற அளவிலே
ஸ்ரீ ஆளவந்தாரும் முதலிகளைப் பார்த்து உங்களுக்கு சரமார்த்தம் ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளிலே
ஒரு கருமுகை முகிழ் வெடிக்க வைக்கையும்
ஆச்சார்ய விஷயத்தில் பிரதம தசை மத்யம தசைகளைச் சரம தசையாக அனுசந்தித்துப் போருகையும்
உத்தாரக பிரதிபக்தி என்று அருளிச் செய்து
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரைத் தண்டன் இட்டு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பியையும் ஸ்ரீ பெரிய நம்பியையும்
அவர் கையிலே காட்டிக் கொடுக்க ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரும் அவர்களைக் கைக் கொண்டு நீங்கள் ஆச்சார்ய விஸ்லேஷத்தில்
அவிவேகம் பண்ணினீர்கள் ஆகில் உங்களுக்கு ஒரு தேச விசேஷமும் இன்றிக்கே நித்ய ஸூரிகள் திரளிலும் புகுரப் பெறாதே இழப்புதிகோள்
என்று அருளிச் செய்ய ஸ்ரீ ஆளவந்தாரும் இதைக் கேட்டு திரு உள்ளம் உகந்து
உங்களுக்கு ஸ்ரீ திருவரங்க பெருமாள் அரையருடைய விக்ரஹமே உபாதேயம் என்று புத்தி பண்ணிப் போருங்கோள் -என்று அருளிச் செய்ய
அவர்களும் அப்படியே புத்தி பண்ணி இருந்த அளவில் ஸ்ரீ ஆளவந்தார் திரு மேனியில் நோவு ஆறி ஆரோக்யம் உண்டாய் நீராடி
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கும் உத்சவமாய்ப் பெரிய திரு மஞ்சனம் கண்டருளி உடுத்து முடித்துச் சாத்துப்படி சாத்தி
அங்குள்ள ஸ்ரீ ரெங்க மா மறையோர் சேவிக்க அமுது செய்து அருளித் திருத் திரை நீக்கி இருக்கிற அளவில்

ஸ்ரீ ஆளவந்தார் திரு ஒலக்கத்து ஏற எழுந்து அருளி க்ருதாஞ்சலி புடராய் சேவித்து நிற்க -ஸ்ரீ பெரிய பெருமாளும் நினைவு அறிந்து
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரை அருள் பாடிட்டு அருள அவரும் சேவிக்கும் அடைவு ஒழிய
சூழ் விசும்பு அணி முகில் சேவிக்க -திரு ஓலக்கம் அடைய இது என் என்று விஸ்மயப்பட ஸ்ரீ பெரிய பெருமாள் நெற்றி மாலை நழுவி விழ
ஸ்ரீ நம்பியார் எடுத்து ப்ரசாதிக்கிறோம் என்று இருக்கிற அளவில் ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் சடக்கென எடுத்து
ஸ்ரீ ஆளவந்தாருக்கு ப்ரசாதித்து அருள -ஸ்ரீ ஆளவந்தாரும் திரு உள்ளம் உகந்து நிற்க –
ஸ்ரீ அரையரும் உம்முடைய நினைவு சித்தித்ததே என்ன -ஸ்ரீ பெருமாளும் தீர்த்தம் பிரசாதம் ஸ்ரீ சடகோபன் ப்ரசாதித்து விடை கொடுத்து அருள
ஸ்ரீ ஆளவந்தாரும் திரு மடத்து ஏறச் சென்று ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீ பெரிய நம்பி முதலான
முதலிகள் எல்லாரையும் தீர்த்தம் கொண்டு அமுது செய்யப் பண்ணி தண்டன் இட்டு சர்வ அபராதங்களையும் பொறுத்துக் கொள்ள வேணும்
என்று ஷமை கொண்டு எழுந்து இராமல் நிற்க ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரும் உமக்கு ஒரு அபசாரம் உண்டோ என்று
திருமுடி பிடித்து எடுக்க எழுந்து இருந்து பின்பு அமுது செய்து இவர்களுக்கு பூர்வம் போலே நல் வார்த்தை அருளிச் செய்து கொண்டு இருக்க

அவ்வளவில் ஸ்ரீ ஆளவந்தார் திரு மேனியில் நோவு சாத்தினார் என்று கேட்டு இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஸ்ரீ பேர் அருளாளர் சந்நிதியில் நின்றும் ஸ்ரீ கோயில் ஏறச் சென்று ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளிலே சேவித்து இருக்க
ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ பெருமாள் கோயில் விசேஷம் கேட்டு ஸ்ரீ இளையாழ்வார் செய்கிறது என் என்று கேட்டருள
அவர்களும் இப்போது ஸ்ரீ இளையாழ்வார் யாதவ பிரகாசன் இடத்தில் சீற்றம் பிறந்து அவனைத் துறந்து ஸ்ரீ பேர் அருளாளர் பக்கல்
ப்ரவணராய் நில்லா நின்றார் என்று விண்ணப்பம் செய்ய அத்தை ஸ்ரீ ஆளவந்தார் கேட்டருளி உகந்து
ஸ்ரீ பேர் அருளாளர் நம்முடைய ப்ரபத்தியை சபலமாக்கி அருளினார் என்ற பெரிய ப்ரீதியோடே ஸ்ரீ பேர் அருளாளன் பெருமையை பேச
வல்லவராய்க் கொண்டு ஸ்தோத்ரத்தை விண்ணப்பம் செய்து ஸ்வ அபிமான அந்தர்பூதரான ஸ்ரீ பெரிய நம்பி திருக் கையிலே கொடுத்து
அவரைப் பார்த்து ஸ்ரீ இளையாழ்வார் இப்போது யாதவ பிரகாசன் இடத்தே சேராதே அவனை விட்டு ஸ்ரீ தேவ பெருமாள் பக்கலிலே
ப்ரவணராய் இரா நின்றார் என்று கேட்டோம் இக்காலத்தில் நீர் அங்கு ஏறப் போய் அவரை நம்மோடே சேர்க்க வேணும் என்று
நியமித்து அருள அவரும் அப்படியே சடக்கெனப் புறப்பட்டு ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளினார் –

அநந்தரம் ஆளவந்தார் பின்னையும் நோவு சாத்தி மிகவும் தளர்ந்து கண் வளர்ந்து அருள அருகில் இருந்த முதலிகளும்
ஸ்ரீ பெரிய பெருமாள் திரு உள்ளம் ஏதோ என்று தங்களில் சிந்தித்து இருக்கிற அளவில்
ஸ்ரீ பேர் அருளாள பெருமாளுடைய அயன் கண்ட திரு வைகாசித் திரு நாளில் அவப்ருதத்தின் அன்று ஸ்ரீ ஆளவந்தாரும் நீராடி
ஸ்ரீ பெரிய பெருமாளைத் திருவடி தொழச் சென்று உத்தம சந்தி அமுது செய்து திருத் திரை நீக்கின அளவிலே தண்டம் சமர்ப்பித்து
திருப் பாதாதி திருக் கேசாந்தமாகவும் திருக் கேசாந்த திருப் பாத்தாந்தமாகவும் ஸ்ரீ பெரிய பெருமாளை சேவித்து
திருவடிக் கீழ் திருப் பாணாழ்வாரையும் அனுபவித்து நம்பியார் ஸ்ரீ சடகோபன் தீர்த்தம் பிரசாதம் பிரசாதிக்கப் பெற்று
திருப்பதியாரும் திருத் தளிகை பிரசாதம் ப்ரசாதித்து விடை கொடுத்து அருள

ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ பாதத்து முதலிகளுடனே திருமடம் ஏற சென்று மீண்டு முதலிகளைத் தீர்த்தம் கொண்டு அமுது செய்து அருளப் பண்ணி
முஹூர்த்தம் இட்டு வைகாசி மாசம் ஆறாம் தேதி சரவண நக்ஷத்ரத்தின் அன்று அபிஜின் முஹூர்த்தத்திலே முதலிகள் சேஷமும் அங்கீ கரித்து
ஆழ்வார்களைச் சரணம் புகுந்து ஆச்சார்யர்கள் முதலிகள் ஸ்தானத்தார் முதலாக எல்லாரையும் அழைப்பித்து ஷமை கொண்டு வேண்டிக் கொள்ள
அவர்களும் ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு ஒரு அபராதம் உண்டாகில் அன்றோ உமக்கு அபராதம் உண்டாவது என்ன
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் முதலான முதலிகளை அங்குள்ள முதலிகள் திருக்கையிலே காட்டிக் கொடுத்து அருளி
ஸ்தானத்தாரைப் பார்த்து ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு ஆராதனம் திருமந்த்ர புஷ்பம் காலா காலத்தில் நடத்திக் கொண்டு போருங்கோள் –
ஆச்சார்யர்கள் முதலிகள் தேசாந்திரிகள் முதலானோரை அரவணைத்துக் கொண்டு போருங்கோள் என்று காட்டிக் கொடுத்து அருள
அவர்களும் அப்படியே ஆகிறது என்று அங்கீ கரித்து– இது புதுமையாய் இருந்தது என்று எல்லாரும் விடை கொடுத்துப் போக
அநந்தரம் ஸ்ரீ மணக்கால் நம்பியைத் த்யானித்துக் கொண்டு பத்ம ஆசனத்தில் யோகமாய் எழுந்து அருளி இருந்து
அவர் திருவடிகளை தம்முடைய நெஞ்சிலும் கண்ணிலும் திரு முடியிலும் ஒற்றிக் கொண்டு அவர் திருவடிகளைத் தம் முன்னே வைத்துக் கொண்டு
ப்ரஹ்ம வல்லி பிருகு வல்லி புருஷ ஸூ க்தம் அர்ச்சிராதி சூழ் விசும்பு அணி முகில் முதலாக முதலிகள் சேவிக்க
திருச் சங்கு பணிமாற சகல வாத்தியங்களும் முழங்க ஸ்ரீ ஆளவந்தார் ப்ரஹ்ம ரந்தரத்தாலே திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் –

ஸ்ரீ யமுனைத் துறைவரைத் திருப்பள்ளி படுத்த பிரகாரம்

ஸ்ரீ திருவரங்க பெருமாள் அரையர் முதலான எல்லாரும் வேர் அற்ற மரம் போலே கோஷித்துக் கொண்டு விழுந்து சோகிக்க-
அங்கு உள்ளார் இவர்களைத் தேற்றி ஸ்ரீ ஆளவந்தார் திருக் குமாரரான ஸ்ரீ பிள்ளைக்கு அரசு நம்பியைக் குறித்து
இனி முன்பு நடக்கும் க்ரமத்தை செய்து அருள வேணும் -என்ன தாசிகள் வந்து திருவாசல் திரு அலகு இட்டுத் திரு நீர் பரிமாறி
ஸ்தல சுத்தி பண்ணித் திருக் காவணம் இட்டுக் கோடித்து தர்ப்பை மாலை கட்டிச் செங்கழு நீர் மாலை கட்டி பல பட்டுக்களாலும்
ஸூப்ர சாமரங்களாலும் குச்சிக்கட்டி அலங்கரித்து -திருக் காவணத்தின் நாலு வாசலிலும் கதளித் தாறு நாற்றி இளம் கமுகு கரும்பு நாட்டி
பல பலங்கள் நாற்றி நாலு வாசலிலும் கொடியாடை கட்டி சித்ர பத்ரங்களை வைத்து பூர்வ தக்ஷிண பஸ்ஸிம உத்தர த்வாரங்களிலே
பலாச அஸ்வத்த கதிர உதும்பர தோரணங்கள் நாற்றி அலங்கரித்து திருக் காவணத்தில் த்ரோண வ்ரீஹீ சொரிந்து பரப்பி –
நடுவே பூர்ண கும்பம் வைத்து நாலு கோணங்களிலும் பூர்ண கும்பங்களை வைத்து கேசவாதி துவாதச நாம உச்சாரணம்
பண்ணிக் கொண்டு துவாதச கலசங்களை பராக் ஆதியாக ஸ்தாபித்து கலசங்களுக்கு குச தூர்வா தர்ப்ப விஷ்ணு க்ராந்தி
முதலான புஷ்பங்களை இட்டு குரு பரம்பரா பூர்வகமாக த்வய அனுசந்தானத்துடன் கும்ப அர்ச்சனை பண்ணி
துவாதச நாமத்தால் கலச ஸ்தாபனம் பண்ணுவித்து பின்பு பஞ்சாம்ருத ஸ்நானம் பண்ணுவித்து ஈசான பாகத்தில் சங்கர்ஷண கும்பம் ஒழிந்த
நாலு கும்பங்களையும் கொண்டு ஸ்ரீ புருஷ ஸூக்தத்தாலே திரு மஞ்சனம் பண்ணுவித்து முதலிகள் தீர்த்தம் கொண்டு
சுருள் அமுது திருத்தி வேண்டிக் கொண்டு அவர்களை வலம் வந்து வாசல் முன்னிலை கோமயக்ருத ஸ்தலத்தின் –
ஸ்தண்டிலத்தின் -மேலே த்ரோண வரீஹி பரப்பி உலூகலமுஸலன்களை மந்த்ர பூத ஸ்நானம் பண்ணுவித்து நவ வஸ்திர
வேஷ்டனம் பண்ணி அவ்வுலூகலத்தை ஸ்தண்டிலோ பரிக்ருத வரீஹியின் மேலே வைத்து அதிலே ஹரித்ரா நிஷேபணம் பண்ணி
ஸூத்த வஸ்திர ஸூக்ல மாலா அலங்க்ருதைகளாய் சக்ர முத்ரா முத்ரிதைகளாய் வைஷ்ணவிகளான தாசிகள்
த்ரிவிக்ரமன் திரு வீதியை வலம் வந்து திரு வாசலில் ஸ்ரீ வைஷ்ணவ சமூகத்துக்குத் தண்டன் இட்டு ஸ்ரீ வைஷ்ணவ அநுஜ்ஜை கொண்டு
நடுவே வந்து நவ வஸ்திர வேஷ்ட்டித மேரு தைவத்யமான அம்முஸலத்தைக் கைக் கொண்டு துவாதச நாம உச்சாரணம் பண்ணி

திருச் சூர்ணமிடிக்க ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் முதலானோர் ஸ்தண்டில மத்யஸ்தமாய்
நவகண்ட ப்ருதிவ்யாகாரமாக உல்லேகநம் பண்ணி வரீஹி யுபரி ஸ்தாபிதமாய் பூமி தைவத்யமான உல்லேகநத்தில் அஷ்ட திக்குகளிலும்
திவ்ய சூர்ண திவ்ய தைல திவ்ய அநு லேபந திவ்ய மால்ய திவ்ய லாஜ திவ்ய துக்த திவ்ய ததி திவ்ய சுத்த ஜல பூர்ணங்களாய்
தர்ப்ப பவித்ராஸ் வத்த பத்ர பவித்ரிதங்களான கலசங்களை த்வய அனுசந்தானத்துடன் ஸ்தாபித்து பரமாகாச தைவத்யமான
நவ சூர்ப்பத்திலே திவ்ய நக்ஷத்ர தைவத்யமான நிஸ் துஷநவலாஜத்தை நிறைத்து பூர்வ திக்கில் வைத்து ஸ்ரீ வைஷ்ணவர்களைத் தீர்த்தம் கொண்ட
ஸ்ரீ பாத தீர்த்தம் நிறைந்த கும்பத்தை மேற்கே வைத்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சமர்ப்பணீயமான த்ரவ்யக் கிழியை வடக்கே வைத்து
பெருமாள் சாத்திக் களைந்து வர விட்டு அருளிய திருமாலை திருப் பரியட்ட ப்ரசாதங்களையும் பொற்றளிகையிலே தன்னருகே வைத்து
ஸ்ரீ ஆளவந்தாரை தண்டன் இட்டு விமல சரம விக்ரஹத்தை நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் தேக்கிக் கொண்டு சூழ எழுந்து அருளி இருந்து
திருப்பல்லாண்டு கண்ணி நுண் சிறுத் தாம்பு சூழ் விசும்பு அணி முகில் இவைகளை ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் இசையுடன்
இயலாக அனுசந்தித்து திவ்ய ந்ருத்த கீத வாத்யத்துடனே திரு வீதியிலே திரு விருத்தத்தை இயலாக அனுசந்தித்துக் கொண்டு
வலம் வந்து திரு மடத்து வாசலிலே இயல் சாத்தி திவ்ய தைல திவ்ய சூரணங்களை சாத்தி நீராடி

பெருமாள் சாத்திக் களைந்து வர விட்டு அருளின திவ்ய அநு லேபன திவ்ய மால்ய திவ்ய பீதாம்பரங்களையும்
ஸ்ரீ ஆளவந்தாருக்கு சாத்தி அலங்கரித்து ஸ்ரீ ஆளவந்தார் திருமேனியில் சாத்திக் களைந்ததாய் தத் ப்ரசாதமாய் சேஷித்த எண்ணெய்
பிரசாதம் ஸ்ரீ சூர்ண பிரசாதங்கள் எல்லாம் ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் முதலானோர் எல்லாரும் பிரசாத்தப்பட்டு
அப்போதையில் இருப்பை நெஞ்சிலே ஸூபாஸ்ரயமாகத் தேக்கிக் கொண்டு ஸ்ரீ திருப் பாதத்தில் விழுந்து திருவடிகளைத்
திருக்கங்களிலும் திரு மார்பிலும் திரு முடியிலும் தரித்து அவர் ப்ரபத்தியை அனுசந்தித்துத் திரு மிடறு தழு தழுப்பத் திருமேனிகள் வாடத்
திரு முத்து உதிர்த்துத் திரு மூக்கு வெப்படிக்க ஆச்சார்ய விஸ்லேஷ அஸஹிஷ்ணுக்களாய் ஆர்த்தராய் பரவசராய் கொண்டு சோகிக்க
அங்குள்ள முதலிகள் வந்து இவர்கள் திருக் கண்களைத் துடைத்து ஆஸ்வசிப்பிக்கத் தேற்ற தேறி நின்று மென்மையில் மெள்ள நடையிட்டு வந்து
பீடயா நத்திலே ஸ்ரீ ஆளவந்தாரை ஏறி அருளப் பண்ணி அனுசந்தானத்துடனே ஸ்ரீ பாதம் தாங்கிக் கொண்டு திருச் சங்கு பணியாற
ந்ருத்த கீத வாத்தியங்கள் எங்கும் முழங்க வேத பாராயணம் பண்ண அருளிச் செயல் இயல் நடக்க நடை பாவாடை இட்டு
கரும்பும் குடமும் ஏந்தி பொரியும் புஷ்ப புஞ்சமும் எங்கும் சிதற திருப்பதியில் ஸூ மங்கலிகள் மங்கள தீபம் ஏந்தி முன்னே செல்ல
இரு பக்கமும் சாமரம் இரட்ட வெள்ளை வட்டமிட தரிசனத்தில் ஸ்ரீ ஆளவந்தார் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் -என்று திருச்சின்னம் பணிமாற
திருவீதிகள் தோறும் வலம் வந்து திருக் கரம்பன் துறையிலே எழுந்து அருள்வித்துக் கொண்டு போய் ஒழிந்த சங்கர்ஷண
கும்ப பூர்ண ஜலம் கொண்டு அனுசந்தானத்துடன் திவ்ய ஸ்தல ஸூத்தி பண்ணி யதி ஸம்ஸ்கார விதி யுக்தமான படிகள்
அடங்கச் செய்து கநித்து திருப்பள்ளி படுத்துகிற அளவிலே

அங்கே பெரிய நம்பி பயணகதியிலே போய்ப் பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளி இச் செய்தியை ஸ்ரீ திருக் கச்சி நம்பிக்கு அருளிச் செய்து –
அவர் புருஷகாரமாக ஸ்ரீ பேர் அருளாளர் சந்நிதிக்குச் சென்று அவர் முன்பே ஸ்தோத்ரத்தை அனுசந்தித்துத் தீர்த்த பிரசாதமும் ஸ்வீ கரித்து
சந்நிதியின் நின்றும் புறப்பட்டு ஸ்ரீ இளையாழ்வார் திருமஞ்சனம் கொண்டு வருகிற சாலைக்கு கிணற்று வழியிலே
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரத்தை அனுசந்தித்துக் கொண்டு இருக்க
ப்ரஹ்மா சிவஸ் சதமக பரம ஸ்வராட் இத்யேத அபி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே -என்கிற ஸ்லோகத்தை இளையாழ்வாரும் கேட்டருளி –
இது அருளிச் செய்தார் யார் -என்று ஸ்ரீ பெரிய நம்பியைக் கேட்க ஸ்ரீ ஆளவந்தார் திவ்ய ஸ்ரீ ஸூக்தி என்று ஸ்ரீ பெரிய நம்பி அருளிச் செய்ய
இவரும் அவரை அடியேன் சேவிக்க வேணும் என்ன நம்பியும் ஆகில் நீர் நம்மோடு சேர வாரீர் என்று அருளிச் செய்ய
இவரும் திரு மஞ்சனத்தை பெருமாள் திரு முன்பே சமர்ப்பித்து பெருமாளை சேவித்து விடை கொண்டு ஸ்ரீ திருக் கச்சி நம்பியையும் சேவித்து
அவருக்கு இச்செய்தியை விண்ணப்பம் செய்து ஸ்ரீ பெரிய நம்பியுடன் புறப்பட்டு ஸ்ரீ கோயிலுக்கு ஆசன்னமாக எழுந்து அருளி வாரா நிற்க
திருக் கரம்பன் துறையிலே பெரிய திரளைக் கண்டு இத்திரள் ஏது என்று எதிரே வருவர்களைக் கேட்க அவர்களும்
ஸ்ரீ ஆளவந்தார் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் என்ன இத்தைக் கேட்டு இவரும் ஏங்கி மோஹித்து விழுந்து
சோகார்ணவ நிமக்நராய்க் கிடந்து துடிக்க அவ்வளவில்

இளையாழ்வாரும் -பஹுதா விலலாப ஹா -என்னுமா போலே பலவகையாகப் புலம்பி அஸ்மித அந்நிய பாவராய் நிவர்த்தன உன்முகராய்
கண் பனி சோர நிற்க -ஸ்ரீ பெரிய நம்பியும் வாளேறு காணத் தேளேறு மாயுமா போலே தம்முடைய வ்யசனத்தை மறந்து –
ஸ்ரேயாம்சி பஹு விக்நாநி பவந்தி மஹதாம் அபி -என்கிறபடியே ஸ்ரேயஸ்ஸூக்களுக்கு அநேக விக்னங்கள் பெரியோர்களுக்கும் உண்டாம் –
ஆகையால் நீர் சோகிக்க வேண்டா -என்று ஸ்ரீ இளையாழ்வாரைத் தேற்றி அவரைக் கையைப் பிடித்துக் கொண்டு போய்
ஸ்ரீ ஆளவந்தாருடைய விமல சரம விக்ரஹத்தை சேவிக்கப் பண்ண ஸ்ரீ இளையாழ்வாரும் அவரைத் தண்டன் இட்டு
இது அலாப்ய லாபம் இருக்கும் படி என் என்று விஸ்மிதராய் ஆபாத சூடமாக சேவிக்கும் அளவில்
மூன்று திரு விரல்கள் முடங்கி இருக்க இவரும் அது கண்டு முன்னும் இவருக்கு இப்படி உண்டோ என்று முதலிகளைக் கேட்க
அவர்களும் முன்பு இல்லை இப்போது கண்டது இத்தனை என்ன இளையாழ்வாரும்

இவர் திரு உள்ளத்திலே ஏதேனும் ஒரு கருத்து உண்டாக வேணும் என்று விசாரித்து அருளி முதலிகளைப் பார்த்து –
முன்பு வியாக்கியான சமயங்களில் அபிமத சல்லாபங்களைக் கேட்டு இருந்தவர்கள் உண்டோ என்ன ஸ்ரீ பாதத்து முதலிகள் எல்லாரும் கூடி –
வேறு ஒன்றும் அறியோம் வ்யாஸ பராசரர் இடத்தில் உபகார ஸ்ம்ருதியும் நம்மாழ்வார் பக்கல் ப்ரேம அதிசயமும் வ்யாஸ ஸூத்ரத்துக்கு
விசிஷ்டாத்வைத பரமாக வ்யாக்யான லாஞ்சையும் பலகாலும் அருளிச் செய்யக் கேட்டு இருக்கையாய் இருக்கும் என்ன
இவரும் அகவாயில் எண்ணம் அறிந்து இஸ் ஸரீரம் த்ருடமாய் இவ்வாச்சார்யார் கிருபையும் அடியேன் இடத்தில் பரிபூர்ணமாய்
சர்வேஸ்வரன் அடியேன் நினைத்தபடி கூட்டுவானாகில் இம்மூன்று இழவுகளையும் தீர்க்கக் கடவேன் என்ன
உடனே திரு விரல்கள் நிமிர இத்தை அகிலரும் கண்டு ஆச்சர்யப்பட்டு -இவ்வாச்சார்யார் கிருபையும் உம்மிடத்தே உண்டு
இவருடைய திவ்ய ஸக்தியும் உம்மிடத்தில் கூடும் -நீரே இத் தரிசனத்துக்கு நிர்வாஹர் ஆவீர் என்று இவரை
மங்களா சாசனம் பண்ண இளையாழ்வாரும்

கண்ணுள் நீங்கா என் நெஞ்சுள்ளும் நீங்காவே -என்கிறபடியே அவ்விக்ரஹத்தை சேவித்துக் கண்ணிலும் நெஞ்சிலும் தேக்கிக் கொண்டு
ஸ்ரீ நம்பெருமான் நமக்குச் செய்தபடி என் -என்று போரக் கிலேசித்து அவப்ருத ஸ்நானம் செய்து அருளி
ஸ்ரீ பெரிய நம்பியை தண்டம் சமர்ப்பித்து ஸ்ரீ நம்பெருமாளையும் திருவடி தொழாதே அவரை வெறுத்து மீண்டு
ஸ்ரீ பெருமாள் கோயில் ஏற எழுந்து அருளினார்
பின்பு ஸ்ரீ ஆளவந்தாரை கநித்துத் திருப் பள்ளி படுத்துச் செய்ய வேண்டும் க்ருத்யங்களை எல்லாம் செய்து அருளினார்கள்
அநந்தரம் ஸ்ரீ இளையாழ்வாரும் பயணகதியில் ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளி ஸ்ரீ திருக் கச்சி நம்பி ஸ்ரீ பாதத்தில் தண்டன் இட்டு
இச் செய்தியை விண்ணப்பம் செய்ய அவரும் போர கிலேசிக்க இவரும் எண்ணினவாறு ஆகாமையாலே அத்யந்தம் அவசன்னராய் க்லேஸிக்க
ஸ்ரீ திருக் கச்சி நம்பியும் ஸ்ரீ பேர் அருளாளர் சர்வஞ்ஞரும் சர்வசக்தரும் அன்றோ -உம்முடைய நினைவின் படியே தலைக்கட்டி அருளுவர் –
அஞ்ச வேண்டா என்ற தேற்றமிட்டு பின்பு ஸ்ரீ ஆளவந்தாருக்கு ஸ்ரீ சூர்ண பரிபாலனம் செய்து பெருக்கத் திரு அத்யயனம் நடத்தி அருளினார்

ஸ்ரீ ஆளவந்தார் திரு நக்ஷத்ரம் –திரு ஆடி -திரு உத்தராடம்

அவர் தனியன் –

ஸ்ரீ ராம மிஸ்ர ஸச் ஸிஷ்யம் வந்தே தத்வார்த்த கோவிதம்–வாதாத வாப்த ராஜ் யாத்யோ விரக்தோயா முனோ அபவத்
(ராஜ்யஸ்து விரக்தோயோ பவந் முனி -பாட பேதம் )

யத்பதாம் போரு ஹத்யான வித்வஸ்தா சேஷ கல்மஷ வஸ்து தாம் உபயாதோஹம் யாமு நேயம் நமாம் இதம்

சிம்ஹாந நாம் சபவமீஸ்வர யோகி சிந்து முக்தாமணிம் மஹித நாத முனீத்ர பவ்த்ரம் –
பிரஞ்ஞா விசேஷ ஜலதிம் பிரதிவாதி தூல ஜஜ்ஞாநிலம் ஹ்ருதய சிந்தயயா முநார்யம்

—————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-