Archive for December, 2018

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-5-8–

December 31, 2018

தேவதாந்த்ர பஜனம் பண்ணினவனை விஷயீகரித்த மஹா குணத்தைக் காட்டிலும்
நரத்வ ஸிம்ஹத்வங்கள் இரண்டனையும் ஏறிட்டுக் கொண்டு
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணின மஹா குணத்தை அருளிச் செய்கிறார்.

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரி யுருவாய்ச் செய்த மாயம் அறிந்துமே–7-5-8-

செல்ல உணர்ந்தவர் –
ஆபாசமான -போலியான ஐஸ்வர்யம் கைவல்யம் என்னும் இவற்றின் அளவிலே முடிவு பெற்று நில்லாமல்,
எல்லை நிலமான பகவத் புருஷார்த்தத்தளவும் செல்ல உணர்ந்தவர். என்றது,
அவனுடன் நித்யமான போகத்தை -இன்பத்தை வேண்டி இருக்குமவர்கள்’ என்றபடி.
வாய்க் கரையான ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் -சரீரம் சரீர சம்பந்தப்பட்ட பொருள்கள் அன்றிக்கே,
ஆத்மாவினுடைய யாதாம்ய -உண்மை ஞானம் பூர்வகமாக -முன்னாகப் பகவானை அடைதல் அளவும் செல்ல உணர்ந்தவர்கள்.

செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ –
ஸ்ரீமானுடய கல்யாண குணங்களை ஒழியக் கற்பரோ?
இன்னம் சொல்லாய் சீமானை’ என்னக் கடவது அன்றோ?

எல்லை இலாத பெருந்தவத்தால்-
அளவு இல்லாத பெரிய தவத்தாலே. வரத்தைக் கொடுத்த தேவ ஜாதிக்கும் குடியிருப்பு அரிதாம்படி அன்றோ பலித்தது?

பல மிறை செய் அல்லல் அமரரைச் செய்யும் –
தேவ ஜாதி கிடந்த இடத்தில் கிடவாதபடி பல மிறுக்குகளைச் செய்து, துக்கத்தை உண்டாக்குகிற
ஹிரணியனுடைய -தேவர்களுடைய வர பல புஜ பழங்களால் பூண் கட்டின -சரீரத்தை. மிறுக்கின் காரியம் – துக்கம்.

மல்லல் அரி உருவாய்-
மல்லல்-பெருமை. ‘மஹா விஷ்ணும்’ என்கிறபடியே,‘

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ரு ஹிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம் யஹம்’

ஹிரணியன் குளப்படி யாம்படி யாகப் பெரிய வடிவைக் கொண்டு.
அன்றிக்கே, மல்லல் என்று செல்வமாய், அதனால், லஷ்மி நர ஸிம்ஹமமாய்’ என்னலுமாம்;
நாராயணோ ந்ருஹிம்ஹஸ்து ஸக்தி ஸ்த்வம் அமரேஸ்வரி’-இங்கு, ‘ஸக்தி’ என்றது, பிராட்டியை.
நாராயணனே நரசிங்கன்’ அமரேஸ்வர்யான நீ சத்தி’ எனப் படுகின்றதே அன்றோ?
அவளை ஒழிந்திருப்பது ஒரு போதும் இல்லை அன்றோ?

செய்த மாயம் அறிந்துமே –
சிறுக்கனுடைய ப்ரதிஜ்ஜா -சூளுறுவு செய்த அக் காலத்திலே தோற்றி,
ஹிரணியனுடைய உடலை இரு பிளவு ஆக்கின இவ் வாச்சரியமான சேஷ்டிதங்களை -செயலை அறிந்தும்.

ஒருவன் புருஷகாரமாகக் கொடுவர் அவனை ரஷித்தது ஒரு குணமோ,
தமப்பன் பகையாக, முகம் ஒரு வடிவம் திரு மேனி ஒரு வடிவுமாகக் கொண்டு ரஷித்த குணத்துக்கு?’ என்கிறார்.
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றனாய் வளர்த்து’ பெரிய திருமொழி.8. 9 : 7.-
என்கிறபடியே வந்து ரஷித்த குணம் அன்றோ?

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-5-7–

December 31, 2018

ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வனான தன்னைத் தாழ விட்டு இரந்து ரஷித்தது ஒரு பெரிய ஏற்றமோ,
தேவதாந்த்ர பஜனம் பண்ணின மார்க்கண்டேயனை விஷயீ கரித்த இம் மஹா குணத்துக்கு?’ என்கிறார்.

கண்டு தெளிந்தும் கற் றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள்
இண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே–7-5-7-

கண்டும் தெளிந்தும் கற்றார் –
கற்றும் தெளிந்தும் கண்டார்
ஒருவன் பக்கலிலே ஓர் அர்த்தத்தை சிஷித்து – கேட்டு, அதிலே தெளிய வாசனை பண்ணி.
பின்பு சாஷாத்கார -நேரே அறிதல் பர்யந்தமாக்கி வைப்பார்.
ஸ்ரவண மனனங்கள் -கேட்டல் தெளிதல்கள் தாம், தர்சன சாமாநாகாரத்து -நேரே பார்ப்பதற்குச் சமானமான
ஆகாரத்தளவும் சென்று நிற்கும் அன்றோ?

கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ –
தியானிக்கின்றவர்கள். தியானிக்கப்படுகின்றபொருளை விட்டுப் புறம்பே போவாரோ?

வண்டு உண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள் –
வண்டுகள் தேனைக் குடிக்கின்ற பூ மாலையை யுடைய ஸ்ரீ மார்க்கண்டேயனுக்கு வாழ் நாள் உண்டாகைக்காக’ என்னுதல்;
அன்றிக்கே. வாழு நாள்’ என்பதனை, மேலே வருகின்ற ‘உசாச் செல்ல’ என்றதனோடு கூட்டலுமாம்.
தாய் தந்தையர்கள் மார்க்கண்டேயனை ஒப்பித்து விளையாட விட, அங்கே ஓர் அசரீரி வாக்கியம்
இவனுக்குச் சாக்காடு குறுகிற்று’ என்று சொல்ல, அதனைக் கேட்டத் தாய் தந்தையர்கள் வெறுக்க,
இதற்கு நீங்கள் அஞ்ச வேண்டா; நான் போக்கிக் கொள்ளுகிறேன்,’ என்று இவன் சென்று சிவனை அடைய,
அவனும் பச்சை இடும் நாள் எல்லாம் இடுவித்துக் கொண்டு,
ஒரு நாளிலே வந்த வாறே தலைக் கடையையும் புழைக் கடையையும் அடைத்துச் சடையை விரித்துக் காட்டி,
உன் காரியத்தைப் போன்றே ஆறல் பீறல் காண் என் காரியமும்:
அருகில் மாலையைப் பாராதே என் தலையில் ஜடையைப் புத்தி பண்ணாய்’ என்று காட்டி,
ஆனாலும் நெடுநாள் பச்சை இட்டு என்னை ஸ்துதித்த நீ பேசாதே போக ஒண்ணாதே அன்றோ?
உனக்கு ஒரு ஆஸ்ரயம் -பற்றுக்கோடு காட்டக் காணாய்!’ என்று,
சர்வேஸ்வரனுடைய சௌலப்யம் முதலிய குணங்களையும் மோஷத்தைக் கொடுத்தல் முதலான குணங்களையும்
சொல்லிக் கொண்டு சர்வேஸ்வரன் பக்கல் ஏறச் சென்றான்.

கொண்டு அங்கு
அங்குக் கொண்டு –
ஐயோ! ம்ருத்யு பீதனாய் -மரண பயத்தை யுடையனாய்க் கொண்டு வந்தாய் அன்றோ!’ என்று திரு வுள்ளத்திலே கொண்டு:
நெஞ்சில் கொண்டு’ என்னும்படியே.
அன்றிக்கே, துர்மானியான -செருக்கனான சிவன் கொண்டு வந்தான்’ என்று பாராமல்,
ஒரு பிராட்டி புருஷகாரமாக வருவாரைக் கைக் கொள்ளுமாறு போலே கைக் கொண்டு என்னுதல்.
தன்னொடும் கொண்டு-பெரிய திருமொழி, 5. 8 : 4.-இவன் வந்த காரியத்தை முடித்து,
பின்பு தன்னுடன் சாம்யா பத்தியையும் -ஒத்த தன்மையையும் கொடுத்து.

உடன் சென்றது உணர்ந்தும் –
ஒரு ‘கள்வன் கொல்’ பெரிய திருமொழி, 3 : 7.-என்ற திரு மொழியில் பிராட்டியைக் கொடு போமாறு
போலே கொடு போனான் காணும்.
பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய’ பெரிய திருமொழி. 5. 8. 6.-என்கிறபடியே –
ஒரு ப்ருதக் தர்மி -வேறுபட்ட பொருள்’ என்று தோற்றாதபடி தன்னோடு விளைகிற ரசத்தை உண்பித்த படியை நினைத்து,
கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ?

தன்னை ஆஸ்ரயித்த இந்திரனுக்காத் தன்னைத் தாழ விட்டது ஓர் ஏற்றமோ?
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே’- ஸ்ரீ கீதை, 7 : 14.
என்னையே எவர்கள் சரணம் அடைகின்றார்களோ அவர்கள் இந்த மாயையினைத் தாண்டுகின்றார்கள்’ என்னக் கடவ அவன்,‘
தேவதாந்த்ர பஜனம் பண்ணி – அதற்கு மேலே அவன் புருஷகாரமாகக் கொண்டு வந்து காட்டிக் கொடுக்க,
என் செய்வான், தன்னை அடைந்தவனை அழிய விடாதே புறம்பே யாகிலும் கொண்டு போய் ரஷிப்பித்தான்’
என்னும் குணம் சிவனுக்கு உண்டாக,

மார்க்கண்டேயனைக் காத்த நீர்மைக்கு –
தாமச புருஷர்களுடைய ஸ்னேகம் சர்வேஸ்வரன் விடுகைக்குக் காரணம்;
சத்வ நிஷ்டருடைய ஸ்னேகம்-ஸஹ வாசம் -ஸ்வீகார ஹேது -அவன் அங்கீகரி்ப்பதற்குக் காரணம்;
இங்ஙனே இருக்கச் செய்தே அன்றோ சிவன் முன்னிலையாக வந்த மார்க்கண்டேயனுக்கும் காரியம் செய்தது!

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-5-6–

December 31, 2018

கீழ்ச் சொன்ன குணங்கள் தாம் ஓர் ஏற்றமோ,
அலம் புரிந்த நெடுந் தடக் கையைக் கொண்டு திருநெடுந்தாண்டகம், 6. –
கோட்டம் கை வாமனனாய் இந்தப் பூமியை ரஷித்த மஹா குணத்துக்கு?’ என்கிறார்.

கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்ட மிலா வண் கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென் றிரந்தார்க் கிடர் நீக்கிய
கோட்டங் கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே–7-5-6-

கேட்டும் உணர்ந்தவர் –
ஓர் ஆசாரியன் ஓர் அர்த்தத்தை உபதேசித்தால் அதனைக் கேட்டு,
ஏவம் ஞாத்வா பவிதும் அர்ஹதி -அறிந்து இதன்படி ஆகக் கடவன்’ என்கிறபடியே,
பின்னை அந்த அர்த்தத்தைத் தெளிந்திருக்குமவர்கள்.

கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ –
புறம்பே ஆஸ்ரயணீயர் இல்லாதபடி தானே ஆஸ்ரயணீயனான வனுக்கு ஒழிய ஆள் ஆவரோ?
இதி ப்ரஹ்மணோநாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்’-பாரதம், ஹரிவம்ஸம், கைலாச யாத்திரை.
கேசவன்’ என்ற பெயர் பிரமனும் ஈசனுமாகிய நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;
ஆதலால், கேசவன் என்ற பெயரை யுடையரானீர்,’ என்கிறபடியே யாதல்
அடர்ந்து நீண்ட மயிர்முடியையுடையவன் என்ற காரணத்தாலாதல் வந்தது.
வெள்ளியை யாதல் விளம்பினை மேலோர்
வள்ளிய ராக வழங்குவ தல்லால்
எள்ளுவ என்சில? இன்னுயி ரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.’-கம்பராமாயணம்.

வாட்டம் இலா வண் கை-
கொடுத்து மாறக்கடவது அன்றியே, எப்போதும் கொடுக்கையிலே ஒருப் பட்ட கை.
ராவணன் முதலாயினோரைப் போன்று தலை அறுத்துப் பொகட ஒண்ணாமைக்குக் காரணம்
உண்டாகையாலே அழியச் செய்திலன்.

மாவலி வாதிக்க வாதிப்புண்டு-
இது பற்றாசாக அவன் நெருக்க நெருக்குண்டு.

ஈட்டம் கொள் தேவர்கள் –
கிராமணிகளைப் போலே, ஒருவர் உயர்வு ஒருவர் பொறாதே,
தலை அறுப்பாரும் தலை அறுப்பு உண்பாருமாய்த் திரியக் கடவ ஜாதி அன்றோ?
இப்படிச் சேராச் சேர்த்தியாய் இருக்கிறவர்கள் ஆபத்து மிக்கவாறே தங்கள் தங்கள் செருக்கினைப் பொகட்டு.
எல்லாரும் ஒரு மிடறாய் வந்து விழுந்தார்கள். ஈட்டம் – திரள்.

சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய –
கூறு செய்வானும் அம்பலத்தே இருந்தால் ‘ஈஸ்வரனும் நம்பக்கல் வரத் தட்டு என்?’ என்று இருக்குமாறு போலே,
எல்லாரும் நம் பக்கல் வர வேணும்’ என்று இருந்தவர்கள் தங்கள் ஆபத்தின் மிகுதியினால் அன்றோ
செருக்கு உற்றவர்களாய் இருக்கிறவர்கள் திரள வந்து இரந்தது?’ என்று திரு வுள்ளத்தே கொண்டு
அவர்கள் இடரைப் போக்கினபடி.
(‘பெரியவர் யார்?’ என்ற ஐயத்தினால் விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் போரை மூட்டி விட விஷ்ணு ஜயித்ததனால் )
அதிகம் மேநிரே விஷ்ணும்’ பால. 75 : 19.
விஷ்ணுவை அதிகனாக எண்ணினார்கள்’ என்கிறபடியே, ‘
ஒரு சொத்தை வில்லை முரித்த போதாக எம்பெருமான் அறப் பெரியன் என்பது;
அல்லாது போது ‘ஈஸ்வரோஹம்’ என்பதான தேவ ஜாதி பற்களைக் காட்ட,
அவர்கள் இடரை நீக்கினபடி.

கோட்டம் கை வாமனனாய் –
நீர் ஏற்கக் குவித்த அழகிய கையை யுடையவனாய்;
பொல்லாக் குறள் உருவாய்ப் பொன்கையில் நீர் ஏற்று’–நாய்ச்சியார் திருமொழி, 11 : 5.-என்கிறபடியே,
தேவர்களை நெருக்குகையாலே அழியச் செய்ய வேணும்; குண விசேஷத்தாலே அழியச் செய்ய மாட்டான்;
இனி, இரண்டற்கும் அனுரூபமாக -தக்கதாக ஒரு வழி ரஷகனான தான் பார்க்கு மித்தனை அன்றோ?
பொற்கை – பொலிவு எய்தின கை; ‘அழகிய கை’ என்றபடி.
கொடுத்து வளர்ந்த கை;
கோ ஸஹஸ்ர ப்ராதாதாரம் உபதாய புஜம் மஹத்’- யுத். 21:7.
ஆயிரக்கணக்கான பசுக்களைத் தானம் செய்ததான பருத்து நீண்ட கை’ என்றும்,
தத்யாத் ந ப்ரதிக்ருஹ்ணீயாத்’- சுந். 33 : 25.
சத்ய பராக்கிரமத்தை யுடையவரான பெருமாள் கொடுப்பார்; வாங்க மாட்டார்’ என்றும் சொல்லுகிறபடியே.
ஏற்றுக் குவிந்த கையை யுடையவனாய் -அங்கை அழகிய கை –

செய்த கூத்துகள் கண்டுமே –
அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அன்றே பிஷையிலே அதிகரித்து -இரப்பிலே மூண்டு,
மஹாபலி வேள்வி செய்யும் இடத்தளவும் செல்ல,
பூமி நெளியும்படி பதறி நடந்து சென்று புக்கு, மான் தோலும் பூணு நூலும் முஜ்ஜீயுமான -தருப்பைப் புல்லுமான –
வினீத -வணக்கமுள்ள வடிவத்தோடு நின்று ‘கொள்வன் நான்’ திருவாய். 3. 8 : 9.-என்றால் போலே சொன்ன
பிள்ளைப் பேச்சுக்களும் சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்ததும் ஆகிற
இவ்வியாபாரங்கள் -இச் செயல்கள் அடங்கலும்
இவர்க்கு வல்லார் ஆடினால் போலே இருக்கிறபடி.

ஐஸ்வர்யமும் -இறைமைத் தன்மைக்குரிய மேன்மையும் கிடக்கச் செய்தே,
ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வனான தான் இரந்து ஆஸ்ரிதரை ரஷித்த நீர்மைக்குப்
பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது ஒரு குணமாயிற்றதோ?’ என்கிறார்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-5-5–

December 31, 2018

உலகத்தைப் படைத்தது ஓர் ஏற்றமோ, படைக்கப்பட்ட உலகத்தைப் பிரளயம் கொள்ள
மஹா வராகமாய் எடுத்து ரஷித்த குணத்துக்கு?’ என்கிறார்.

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு வுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–7-5-5-

சூழல்கள் சிந்திக்கில் –
தான் தன்னோடு உறவு அற ஜீவிக்கைக்கு உறுப்பான விரகு பார்க்கில்.
தாங்கள் தாங்கள் அபிமதங்கள் -விரும்பிய பொருள்கள் சித்திப்பதற்கு விரகுகள் பார்க்கில்.

மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ –
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரக்ஷணம் -ஒரு தலையானால் தான் தன்னைப் பேணாத நோக்கும்
ஆச்சரியத்தை யுடைய இறைவனது திருவடிகளை அல்லது பற்றுவரோ?

ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை –
ஆழத்தையுடைத்தான மிக்க தண்ணீரிலே அழுந்தின பூமி’ என்னுதல்.
பெரும்புனல் தன்னுள் ஆழ -அழுந்திய பூமி’ என்னுதல்.
அழுந்திய ஞாலம் –
அண்டப்பித்தியில் சென்று ஒட்டின பூமி.

தாழப்படாமல் –
தரைப்படாமல்; மங்காமல். என்றது,
உள்ளது கரைந்து போனபின்பு இனிச் சத்தையும் கூட அழிந்து போக ஒண்ணாது என்று பார்த்து’ என்றபடி.

தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட –
மஹா பிருத்வியை -பெரிய பூமியைத் தன் எயற்றிலே நீலமணி போலே கொண்ட; –
தன் திரு எயிற்றிலே ஒரு கூற்றிலே கொண்ட.-உதாரராய் இருப்பார் நாற்பது பேருக்குச் சோறு இட நினைத்து
நூறு பேருக்குச் சோறு சமைக்குமாறு போலே,
ரஷ்யத்தின் அளவு -அன்று காணும் கொண்ட எயிற்றின் பெருமை;
முகாந்தரத்தாலே -வேறு முகத்தாலே காத்தல் அன்றியே, தன் முகத்தாலே எடுத்துக் காத்தபடி
தான் கொண்ட
கரைந்து போன பூமி அர்த்திக்க -வேண்டிக் கொள்ளச் செய்தது -அன்று ஆதலின்-தான் கொண்ட- என்கிறார்.

கேழல் திரு உரு ஆயிற்று –
அழிவுக்கு இட்ட வடிவிற்கே ஆலத்தி வழிக்க வேண்டி இருந்தபடி.
ஆஸ்ரித ரக்ஷணத்துக்காக வந்து தன்னைப் பேணாதே ஒழிய ஒழிய அது தானே
நிறம் பெறும் படியாய்க் காணும் இருப்பது;
மானம் இலாப் பன்றியாம் தேசு’நாச்சியார் திருமொழி, 11 : 8. என்னும்படியே.
மாசு உடம்பில் நீர் வாரா – எங்கேனும் உண்டான அழுக்கும் வந்து சேரும்படி இருப்பது ஒரு வடிவைக் கொண்டு.
மானம் இலாப் பன்றியாம்-ஈஸ்வரனாம் தன்மை பின்னாட்டாதபடி இருக்கை.
தன் இனங்கள் மோந்து பார்த்துத் ‘தன்னினம்’ என்று நம்பும்படி அக வாயில் புரை அற்று இருக்கை.
மாரீசனாகிய மாய மானை மோந்து பார்த்து ‘ராக்ஷஸ வாசனை உண்டு’ என்று போயின அன்றோ மற்றைய மான்கள்?
பன்றியாம் தேசுடை தேவர் – இவ்வடிவு கொண்டிலனாகில் அருமந்த ஒளியை எல்லாம் இழக்கு மத்தனை யன்றோ.
நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து அங்கே இருப்பதைக் காட்டிலும் தாழ விட்டதால் வந்த ஏற்றம்?’
கேட்டும் உணர்ந்துமே-
ஸ்ரவண மனன -கேட்டும் மனனம் செய்தும், அதனாலே தம் முயற்சியை விட்டவர்கள்
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?

தான் உலகத்திற்குக் காரணனாய் இருத்தல் முதலிய குணங்களுள் ஒன்றும் குறையாதபடி
சங்கற்பத்தாலே உலகத்தைப் படைத்தான் என்னுமது ஓர் ஏற்றமோ,
பிரளயம் கொண்ட பூமியைத் தன்னுருக் கெடுத்து வேற்றுருக் கொண்டு எடுத்த இந்த உபகாரத்துக்கு?

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-5-4–

December 31, 2018

சிசுபாலனுக்குத் தன்னைக் கொடுத்தது ஓர் ஏற்றமோ,
பிரளயத்திலே மங்கிக் கிடந்த உலகத்தை உண்டாக்கின இந்த மஹா குணத்துக்கு?’ என்கிறார்.
சிசுபாலனைக் காட்டிலும் குறைந்தார் இலர் அன்றோ சம்சாரிகளில்?

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான் முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே–7-5-4-

தன்மை அறிபவர் தாம் –
தத்த்வ ஸ்திதி -உண்மை நிலையினை அறியுமவர் தாம். என்றது,
இதனுடைய உத்பத்தி -படைப்பு அவனுக்காகக் கண்டது -என்றபடி;
அவனுடைய கைங்கரியத்துக்கு உடலாகப் படைக்கப்பட்டது’ என்று இருக்குமவர்கள்’

கோளில் பொறியிற் குணமிலவே எண் குணத்தான் தாளை வணங்காத் தலை.’திருக்குறள்.

திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே!’
நாராய ணா வென்னா நாவென்ன நாவே!’
கண்ணனைக் காணாத கண்ணென்ன கண்ணே!’- சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாஸாய’-ஸ்ரீராமா. . 40 : 5. 2‘காட்டில் வசிக்கும்பொருட்டே படைக்கப்பட்டாய்’ என்பது போலே.

தன்மை அறிபவர் தாம் –
அன்றிக்கே,
உலகத்திற்குக் காரணமாகவுள்ள பொருளே உபாசிக்கத் தக்கது என்று அறியுமவர்கள்’ என்னுதல்.
காரணம் து த்யேய:’ ஸ்ருதி.‘காரணப்பொருளே தியானம் செய்யத்தக்கது’ என்பது சுருதி. ‘
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா, ஜந்மாத் யஸ்ய யத:’ பிரஹ்ம சூத்திரம். 1. 1 : 1, 2.
வேதத்தின் பூர்வ பாகத்தின் பொருளை விசாரித்த பின்
ஞான முடையவனாய்ப் பிரஹ்மத்தை அறியக் கடவன்’ என்னா,
இந்த உலகத்திற்குப் படைப்பு அளிப்பு அழிப்பு என்னும் முத் தொழில்களும் எதனிடத்தினின்றும் உண்டாகின்றனவோ,
அது பிரஹ்மம்’ என்னா நின்றதே அன்றோ?

அவற்கு ஆள் அன்றி ஆவரோ –
கரண களேபரங்களைக் கொடுத்தது தனக்கு அடிமை செய்கைக்கு அன்றோ?

பன்மை படர் பொருள் ஆதும் இல் பாழ் நெடுங்காலத்து-
தேவர்கள் முதலான பேதத்தால் -வேற்றுமையாலே பல வகைப் பட்டுக் கர்மங்களுக்குத் தகுதியாக
விரிந்த பொருள்களுள் ஒன்றும் இல்லாத காலத்து. என்றது,
தேவர் மனிதர் திரியக்குகள் முதலான உருவங்களான உண்டாக்கக் கூடிய பொருள்களுள் ஒன்றும் இல்லாதபடி
பாழ் கூவிக் கிடக்கிற நெடுங்காலத்து’ என்றபடி.
ஈஸ்வரன் உலகத்தை அழித்து நெடுங்காலம் பாழ் கூவிக் கிடக்கும்படி இட்டு வைப்பான்.
பயிர் செய்கிறவன் விளை நிலம் உவர் கழியும்படி நீரைத் தேக்கி வைக்குமாறு போலே,
இவற்றினுடைய துர் வாசனை போகைக்காகப் படைத்ததைப் போன்ற சம்ஹரித்திட்டு -காலம் அழித்திட்டு வைப்பன்.
கண்ணுக்கு இட ஒரு துரும்பு இல்லாதபடி சத்து என்ற அவஸ்தை -நிலையுடன் கூடிய காலத்து.

நன்மைப் புனல் பண்ணி –
அழிப்பதற்குப் பரப்பின நீர் போல அன்று.
அப ஏவ ஸஸர்ஜாதௌ’ மநுஸ்மிருதி, 1 : 8.
‘தண்ணீரையே முதலில் படைத்தான்’ என்கிறபடியே,
முதன் முன்னம் தண்ணீரைப் படைத்து.

நான்முகனைப் பண்ணி –
இவ்வளவும் வர அசித்தைக் கொண்டு காரியம் கொண்டு,
இவை இரண்டும் நம் புத்தி அதீனமான பின்பு இனிச் சித்தையும் கொண்டு காரியம் கொள்ளுவோம்’ என்று
பார்த்துப் பிரமனையும் படைத்து.
யஸ்ய ஆத்மா ஸரீரம்’ ‘யஸ்ய ப்ருதிவீ ஸரீரம்’ பிருஹதாரண்ய உபநிஷத்.
எவனுக்கு ஆத்மாக்கள் எல்லாம் சரீரமோ,’ ‘எவனுக்கு மண் முதலியவை சரீரமோ’ என்கிறபடியே,
இரண்டும் இவனுக்கு உறுப்பாய்ப் பர தந்திரமாய் அன்றோ இருப்பன?
யோ ப்ரஹ்மாணப் விததாதி பூர்வம்’
எவன் பிரமனை முன்பு படைத்தானோ’ -என்பது, ஸ்வேதாஸ்வ. உபநிஷத்
ஒரு குழமணனைப் பண்ணி என்பாரைப் போலே
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்கிறார்.

தன்னுள்ளே –
தன்னுடைய -சங்கல்ப சஹஸ்ர ஏக தேசத்திலே -சங்கற்பத்தின் ஆயிரத்தில் ஒரு கூற்றிலே.

தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்து –
பழையதாக, ‘ஸதேவ – சத் ஒன்றே’ என்கிறபடியே, ‘தான்’ என்கிற சொல்லுக்குள்ளே யாம்படி பண்ணி யிட்டு வைத்து,
பின்னர், ‘பஹூஸ்யாம் – பல பொருளாக ஆகக் கடவேன்’ என்கிறபடியே,
இவற்றைத் தோற்றுவித்த விரகுகளைச் சிந்தித்து, உண்மை நிலையை அறியுமவர்கள் அவனை ஒழிய வேறே சிலர்க்கு ஆள் ஆவரோ?
தன்மை -உண்மை /புனல் என்றது மற்றவற்றுக்கும் உப லக்ஷணம் /தோற்றிய -தோற்றுவித்த /

விரோதியான சிசுபாலனுக்குத் தன் திருவடிகளைக் கொடுத்தான்’ என்றது,
இது ஓர் ஏற்றமோ விரோதிகளை உண்டாக்கித் தன்னை வைவித்துக் கொண்ட நீர்மைக்கு?’ என்கிறார்.

பன்மைப் படர் பொருள், தன்னுள்ளே தொன்மை மயக்கிய, ஆதும் இல் பாழ் நெடுங்காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி, தோற்றிய சூழல்கள் சிந்தித்து,
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்று அந்வயம் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-5-3–

December 31, 2018

சிசுபாலனையும் உட்படத் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொண்ட பரம -மேலான கிருபையை அறிந்தவர்கள்,
கேசி ஹந்தா -கேசியைக் கொன்ற கிருஷ்ணனுடைய -கீர்த்தியை ஒழிய வேறு ஒன்றனைக் கேட்பாரோ?’ என்கிறார்.

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே–7-5-3-

கேட்பார்கள் –
மேலே ‘கற்பரோ’ என்றது; அதாவது,
முதல் நடு இறுதி தன் நெஞ்சிலே ஊற்றிருக்குபடி வாசனை பண்ணுகை யாயிற்று;
இனி கேட்கையாவது, வாசனை பண்ணினான் -கற்றுக் கேட்டுத் தெளிந்திருப்பான் ஒருவன்
ஒரு அர்த்தத்தை -பொருளை -உபபாதித்தால் -விரித்துப் பேசினால், அதனைப் புத்தி பண்ணி நம்பியிருத்தல்.
நடுவிருந்த நான்கு நாள்களும் தன் நெஞ்சு தெளிவு பிறந்தது இல்லையே யாகிலும்
விழுக்காட்டில் இருவர்க்கும் பரம் ஒத்திருக்கக்கடவது.

கற்றில னாயினும் கேட்க; அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.’-திருக்குறள்

கற்றிலன் ஆகிலும் கேட்க வேண்டுவது உண்டே அன்றோ?
கற்றுத் தெளியக் கண்ட பொருளைக் கேட்டு விஸ்வஸித்து -நம்பி யிருத்தல்.
கல்வியும் அதன் பலத்தின் உருவமான கைங்கரியமும் சேரப் பெற்றிலன் ஆகிலும்,
ஆசாரியன் பக்கலிலே ஓர் அர்த்தத்தைக் கேட்ட மாத்திரமாய் இருந்தாலும் தனக்கு ஓர் ஆபத்திலே உதவுகைக்கு ஒரு குறை இல்லை.
இனி, தன்னிழவு, பர ப்ரதிபாதன -பிறர்க்குச் சொல்லச் சத்தி இல்லாமையும், தன் நெஞ்சு தெளியாமையால் வருவதுவுமே அன்றோ உள்ளது?
கேட்பார்கள் –
செவியில் தொளை யுடையவர்கள்.
பகவத் குணங்களைக் கேட்கை அன்றோ செவிக்குப் பிரயோஜனம்?
கேளாச் செவிகள் செவி அல்ல கேட்டாமே’ என்னா நின்றதே அன்றோ?

நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானைத்
தோளா மணியைத் தொண்டர்க் கினியானைத்
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே.’- பெரிய திருமொழி.

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.’-திருக்குறள்.

கேட்க்காதவர் செவி -எறும்பு வளையைப் போன்றதே அன்றோ?

தவப்பொழி மாரி காப்பத் தடவரைக் கவிகை அன்று
கவித்தவன் கோயில் செல்லாக் கால் மரத்தியன்ற காலே;
உவப்பினின் அமுத மூறி ஒழுகுமால் சரிதங் கேளாச்
செவித் தொளை நச்சு நாகம் செறிவதோர் தொளை மற் றாமல்.’-பாகவதம், சௌனகாதியர் அன்பினாலை உரைத்த அத்தியாயம்.

கேசவன் கீர்த்தி அல்லால் –
விரோதி நிரசன சீலன் -பகைவர்களை அழிக்கும் தன்மையனான ஸ்ரீ கிருஷ்ணன் கீர்த்தி அல்லது
வேறே சிலவற்றைக் கேட்பரோ?
பருவம் நிரம்பிக் கற்ற பின்பு அன்று விரோதிகளைப் போக்கியது;
பூதனை தொடக்கமான விரோதிகளைத் தொட்டில் பருவத்தே அன்றோ போக்கியது?
விரோதிகளை அழிப்பது தான் அறிந்ததனால் அன்று;
பொருளின் -சத்தயா -உண்மையாலேயே பாதகமாய் இருக்கிறபடி.
நஞ்சு கொல்லுவது அறிவு உண்டாய் அன்றே? ‘
வ்யாதிதாஸ்ய: மஹா ரௌத்ர: ஸ. அஸூர: க்ருஷ்ணபாஹூநா
நிபபாத த்விதாபூத: வைத்யுதேந யதா த்ரும:’-ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 16 : 14.
நன்றாகத் திறந்து வாயையுடைவனும் மஹா பயங்கரமானவனுமான அந்தக் கேசி என்னும் அசுரன் இடியேறு உண்ட மரம் போன்று
கிருஷ்ணனுடைய திருக் கரத்தால் இரண்டாகச் செய்யப் பட்டவனாய்க் கீழே விழுந்தான்,’ என்கிறபடியே,
இந்த ஸ்லோகத்தில், பாஹூப்யாம் என்னாமல்‘பாஹூ நா’ என்றதற்கும்,
த்விதா பூத;’ என்றதற்கும் கருத்து அருளிச் செய்கிறார்,
கேசி யானவன் வாயை அங்காந்து கொண்டு கண்டார் எல்லாரும் நடுங்கும்படி வந்து தோற்ற,
இளைஞராய் இருப்பார் துவாரம் கண்ட இடத்தே கை நீட்டக் கடவர்களாய் இருப்பார்கள் அன்றோ?
அந்த வாசனையாலே இவன் வாய்க்குள்ளே கையை நீட்ட, புதிதான அனுபவத்தால் கை விம்ம வளர்ந்து கொடுத்தது;
அப்போதோ இடியேறு உண்ட மரம் போலே இரு பிளவாய் விழுந்தான்.

மற்றும் கேட்பரோ –
கீழில் கூறிய ராமனுடைய வ்ருத்தாந்தம் -சரிதையைத்தான் கேட்பரோ?
இவர் ஸ்வபாவம் இருந்தபடி என்?
ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்றார் கீழே –
இங்கே, ‘கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ?’ என்னா நின்றார்;
இது தனக்கு அடி என்? என்னில்,
அந்த அவதாரத்தினை நினைத்த போது
தயரதற்கு மகன்தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாக’ திருவாய். 3. 6 : 8.-என்பர்;
இந்த அவதாரத்தை நினைத்தபோது ‘நம் கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே’ திருவாய். 2. 2 : 1.-என்பர்;
இப்படி இழிந்த துறைகள் தோறும் அழுந்த வல்லார் ஒருவர் அன்றோ?
ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் குணா ந்தரங்களில் -வேறு குணங்களில் கால் வாங்க மாட்டாதவாறு போலே ஆயிற்று,
ஒவ்வோர் அவதாரத்தில் இழிந்தால் மற்றை அவதாரங்களில் போக மாட்டாமையும்.

கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளை வையும் –
இங்குக் ‘கேட்பார்’ என்றார், கீழில் ‘கேட்பார்’ என்றது போன்று அன்று;
கீழ்மை வசவுகளையே கேட்பாரைக் குறித்தது இங்கு.
பகவானுடைய நிந்தைக்கு ஜீவனம் வைத்துக் கேட்கும் தண்ணியவர்களும் கூடப் பொறுக்க மாட்டாமை செவி புதைத்து,
இத்தனை அதிரச் சொன்னாய், இப்படிச் சொல்லப் பெறாய் காண்’ என்று சொல்லும் படியான வசவுகளையே வைதல்.
வசவுகளே வையும்’
அநுகூலராய் இருப்பார்க்கு உடலின் சேர்க்கையாலே தம்மை அறியாமலும் ஒரு தீச் செயல் விளையும் அன்றோ?
அப்படியே இவனுக்கும் தன்னை அறியாமலே ஒரு நல் வார்த்தையும் கலசுமோ?’ என்னில்,
அதுவும் இல்லை’ என்பார், ‘வசவுகளே வையும்’ என்கிறார்.
அதற்கு அடி சொல்லுகிறார் மேல்:

சேண் பால் பழம் பகைவன் –
மிகவும் ஜன்மப் பகைவன்’ என்றபடி;
இந்தப் பிறவியே அன்றிக்கே முற் பிறவிகளிலும் பகைவனாய்ப் போருகிறான் அன்றோ? என்றது,
இவன் ஒவ்வொரு பிறவியிலும் செய்த பகைச் செயல்களுக்கு ஓர் அளவு இல்லை அன்றோ?’ என்றபடி.
இப்படிப்பட்ட பிறவிகள் தாம் பல. அந்த அந்தப் பிறவிகளில் உண்டான காலத்தின் மிகுதியும்,
செய்த பகைச் செயலின் மிகுதியும், இவை எல்லா வற்றையும் நினைக்கிறது,
பகையினுடைய பழமையாலே. இதனால், ‘நினைவு இல்லாமலே சொல்லிலும் வாசனையாலே தப்பாது,’ என்கை.
அன்று ஈன்ற கன்று அப்போதே தாய் முலையிலே வாய் வைக்கும்:
அது அந்தப் பிறவியின் வாசனை கொண்டு அன்றே?
இவனுக்கும் இப் பிறவியிலே பகவானை நிந்தை செய்வதற்குக் காரணம் முற் பிறவிகளின் வாசனை அன்றோ?

பவ்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய் நாடிக் கோடலை;-தொல்லைப்
பழ வினையும் அன்ன தகைத்தரோ தற்செய்
கிழ வினை நாடிக் கொளற்கு.’- நாலடியார்.

திருவடி தாள் பால் அடைந்த-
எல்லாப் பொருளுக்கும் ஸ்வாமி கிருஷ்ணனுடைய பாத பர்ஸ்வத்தை -திருவடிகளின் பக்கத்தைக் கிட்டின.
சாயுஜ்ய வக்ஷண மோக்ஷமாகிறது தான் இன்னது என்கிறது. என்றது,
இடையீடு இன்றிக்கே கிட்டி நின்று நித்ய கைங்கரியம் செய்யப் பெறுதல் என்பதனைத் தெரிவித்தபடி.
பரமம் ஸாம்யம் உபைதி’ முண்டகோபநிடதம், 3. 1 : 3.பரம்பொருளை அறிந்தவன் பரம்பொருள் போன்று ஆகிறான்,’ என்றும்,
பிரஹ்மவேத ப்ரஹ்மைவபவதி’ முண்டகோபநிடதம், 3 : 2.மேலான ஒப்புமையைப் பெறுகின்றான்’-என்றும்
ப்ரஹ்மைவ’ என்றவிடத்தில் ஏவகாரம், ‘விஷ்ணுரேவ பூத்வா’ என்ற
இடத்தில் போன்று, ‘ஸாம்யம் உபைதி’ என்பது போன்ற வசனங்கட்குத் தகுதியாக,
‘இவ’ என்ற சொல்லின் பொருளைக் காட்டுகிறது.
தம்மையே ஒக்க அருள்செய்வர்’ பெரிய திருமொழி-என்றும்,
மம ஸாதர்ம்யமாகதா;’ ஸ்ரீ கீதை, 14:2.-5‘என்னுடைய ஒப்புமையை அடைந்தவர்’என்றும்,
ஸமாநோ ஜ்யோதிஷா’ போதாயன விருத்தி. பரமாத்துவோடு ஒத்தவன்’ என்றும் சொல்லுகிறவற்றால்,
வஸ்து ஐக்யம் சொல்லுகிற அன்று;
பேற்றில் வந்தால் அவனோடு இவனுக்கு எல்லா வகையாலும் ஒப்புமை உண்டு என்றது
ஜகத் வியாபார வர்ஜம்,’ ‘போகமாத்ர ஸாம்ய லிங்காச்ச’- பிரஹ்ம மீமாம்சை
உலகத்தைப் படைத்தல் முதலியன நீங்கலாக’ என்றும்,
அனுபவத்தில் பரமாத்துமாவோடு ஒப்புமை கூறுகிற காரணத்தாலும்’ என்றும் சொல்லுகையாலே.
சாயுஜ்யமாகிறது, ‘அவனோடு ஒன்றாம்’ என்கிறது அன்று; அவன் திருவடிகளிலே கைங்கரியம் செய்யும் என்கிறது;
ஸாயுஜ்யம் ப்ரதிபந்நா யே தீவ்ரபக்தா: தபஸ்விந:
கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிருபத்ரவா;’-பரமஸம்.
யாவர் மிக்க பத்தியை யுடையவர்களாய் உபாசனை செய்கிறவர்களாய்ச் சமானமான உயர்ந்த ஜீவனத்தை அடைந்தார்களோ,
அவர்கள் விரோதி கழிந்தவர்களாய் எப்பொழுதும் என்னுடைய தொண்டர்கள் ஆகிறார்கள்,’ என்றும் சொல்லுகையாலே.

ஆதிப் பரனோடு ஒன் றாம் என்று சொல்லும் அவ் வல்ல வெல்லாம்
வாதில் வென்றான் எம் மிராமா நுசன் மெய்ம் மதிக்கடலே’- ராமாநுச நூற்றந்தாதி, 58.

தன்மை அறிவாரை அறிந்துமே –
கேட்பார்க்கு விஷயம் உண்டாக்குகிறார்,
இந்தக் குண ஞானமுடையாரை அறிந்து-அவர்கள் பக்கல் செவி தாழ்த்து –

வைத்தும் கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றுக் கேட்பரோ?
இவன், திருவடிகளைக் கிட்டிற்று என் கொண்டு?’ என்னில்,
திரு நாமங்களைச் சொல்லித் துவங்கரிக்கையும்,
கையும் திருவாழியுமான அழகை அந்திம தசையில் -மரண காலத்தில் நினைக்கவும் கூடும் அன்றோ?
மேலெழ ஆராய்ந்து பார்த்தால், சில காரணங்கள் சொல்லலாம்;
இதற்கு இனி ஒரு காரணம் தேடிச் சொல்லுகையாவது,
அவன் கிருபைக்கு ஒரு கொத்தை சொல்லுகையன்றோ?

சர்வேஸ்வரன் கிருபையாலே சிசுபாலன் திருவடிகளைப் பெற்றான்’ என்று
ஆழ்வார்களும் ருஷிகளும் எல்லாரும் சொல்லிக் கொண்டு போருவார்கள் அன்றோ?
இவன் பக்கலிலே பரம பத்தி அளவாக உண்டானாலும்,
அதற்கும் கரண ஸம்பத்தி -கரணங்களன் சேர்க்கையைக் கொடுத்தான் ஈஸ்வரன் அன்றோ?’
என்று அதுவும் கழியா நிற்க, வருந்தி இல்லாதது ஒன்று உண்டாக்குகை பணி அன்று.
ஆள வந்தார், ‘சிசு பாலன் பெற்றிலன் காண்’ என்று அருளிச் செய்வர்; ‘அது என்?’ என்னில்,
இதற்கு அடியாகச் சொல்லலாவது ஒரு சாதனம் இவன் கையில் இல்லாமையாலே;
நாட்டை நலியாமைக்குக் கொற்றவன் வாசலுக்குள்ளே சுழற்றி எறிந்தான் அத்தனை காண்’ என்று அருளிச் செய்வர்.

காகம் , திரு முன்பே எய்த்து விழுகையாலும்,
இவன் திருநாமத்தைச் சொல்லித் துவங்கரிக்கையாலும்,
அவன் குணங்கள் நினைத்தபடி விரிவாகப் பெறாதே குறைந்தவகள் ஆயிற்றன’ என்றே அன்றோ சொல்லுகிறது?
பலி புஜி சிசு பாலே தாத்ருக் ஆகஸ்கரே வா
குணலவ ஸஹ வாஸாத் த்வத் க்ஷமோ ஸங்குசந்தீ’-ஸ்ரீரங்கராஜஸ்தவம், 3 : 97.
காகாசுரனிடத்திலும் சிசு பாலனிடத்திலும் சிறிது குணமாயினும் இருந்ததனால்
குறைவுபட்ட தான் தேவரீருடைய பொறுமை’ என்கையாலே.‘
பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசு பாலன் தன்னை, அலை வலைமை
தவிர்த்த அழகன்’ பெரியாழ்வார் திருமொழி,4. 3 : 5. ‘
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்’ திருச்சந்த விருத்தம், 111.

இப் பாசுரத்தில் ஏற்றமாகிறது,
தன்னால் அல்லது செல்லாமை விளைந்தாரைக் கூடக் கொடு போனான்’ என்றது ஓர் ஏற்றமோ,
தன் பக்கல் அபராதம் செய்த சிசு பாலனுக்கும் அவர்கள் பேற்றைக் கொடுத்ததற்கு?’ என்பதாம்.

வைதாரையும் முன் மலைந்தாரையும் மலர்த்தாளில் வைத்தாய்
மொய்தாரை யத்தனைத் தீங்கிழைத்தேனையும் மூ துலகில்
பெய்தாரை வானிற் புரப்பான் இடபப் பெருங்கிரியாய்!
கொய்தாரை வேய்ந்த திருவடிக் கீழ்த் தொண்டு கொண்டருளே.–அழகரந்தாதி.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-5-2–

December 31, 2018

மேல் பாசுரங்களில் சொல்லப் புகுகிற குணங்களை ப்ரக்ருத்ய -நோக்க,
கீழில் பாசுரத்தில் சொன்ன குணம் குண ஹாநி’ என்னும்படி
மேலே யுள்ள பாசுரங்கள் குணாதிக்கியம் சொல்லுகின்றன’, என்று அருளிச் செய்வர்.

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே–7-5-2-

நாட்டிற்பிறந்தவர் –
இப் பாசுரத்தில், ‘திரு வயோத்தியி லுள்ளாரை ராம குணங்களையே தாரகராம்படி செய்த அளவையோ,
நாட்டிலுள்ளாருடைய விரோதிகளைப் போக்கி ரஷிக்கும் படிக்கு – உயர்ந்தது இல்லையோ?’ என்கிறார்.
நாட்டிற்பிறந்தவர் –
நாட்டிற் பிறவாதார் இலரே அன்றோ?
ஆயின், ‘நாட்டிற்பிறந்தவர்’ என்றதற்குப் பொருள் தான் யாதோ?’ எனின்,
ராம குணங்கள் நடையாடும் இடத்திலே பிறந்தவர்கள் என்கிறது.
பெருமாளுடைய எல்லை இல்லாத இடம் இல்லை அன்றோ?
இக்ஷ்வாகூணாம் இயம்பூமி; ஸஸைலவநநாநநா
ம்ருக பக்ஷி மநுஷ்யாணாம் நிக்ரஹ ப்ரக்ரஹாவபி’-கிஷ். 18 : 6. இது வாலியைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது.
மலைகளும் வனங்களும் காடுகளும் ஆகிய இவற்றோடு கூடிய இந்தப் பூமி இஷ்வாகு குலத்து அரசர்களைச் சேர்ந்தது.’ என்கிறபடியே

விகித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல:’ சுந். 21 : 20. இஃது இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
விதிக:ஸஹி தர்மஜ்ஞ:- ‘இராவணா!! பெருமாளுடைய குணங்கள் கேட்டு அறியாயோ?’ என்றாள் அன்றோ?
அந்தக் குணங்கள் நடையாடாதது ஓரிடம் உண்டானால் அன்றோ, அவ்விடம் இவர் எல்லை அன்றிக்கே இருப்பது?
நாட்டில் பிறக்கையாவது, அவருடைய எல்லைக்குள்ளே பிறந்து, அவர் தோள் நிழலிலே ஜீவிக்கை -வாழ்தல்.

நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ –
பெருமாளுக்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்றபடி.
பவாந் நாராயணோ தேவ; ஸ்ரீமான் சக்ராயுதோ விபு:- யுத். 120 : 13.
பிரமன் முதலான தேவர்களும்,நீவிர் நாராயணரான தேவர் ஆவீர்’ என்றார்களே அன்றோ?‘
ஒருவன் சோற்றை உண்டவர்கள் அவனை ஒழிய வேறு ஒருவர்க்குக் காரியம் செய்வார்களோ?’ என்னுமாறு போலே.

நாரணற்கு –
வரையாதே எல்லாரோடும் பொருந்துகையும்,
ஆஸ்ரிதற்காக தன்னை ஓக்கி வைக்கயும்,
அவர்களுக்காத் தன் மார்பில் அம்பு ஏற்கையும்,
அவர்கள் விரோதிகளைப் போக்குவதையும்,
ஆஸ்ரித வத்சலனாய் இருக்கையும்,
அவர்கள் தோஷத்தைப் பார்த்து விட்டுப் போக மாட்டாமையும்
ஆகிய இவை எல்லாவற்றாலும் பெருமாளை‘நாராயணன்’ என்னத் தட்டு இல்லை அன்றோ?

ஆள் அன்றி ஆவரோ –
கீழில் பாசுரத்திலே ‘கற்பரோ?’ என்றது;
இங்கே,‘ஆள் இன்றி அவரோ’ என்கிறது; கல்வியினுடைய பலம் ஆள் ஆகை’ என்றபடி.
பிறந்தவர் ஆள் அன்றி ஆவரோ –
ஸ்ருஷ்ட ஸ்தவம் வநவாஸாய’ அயோத். 40 : 5.
நீ காட்டில் வசிப்பதற்காகவே தோற்று விக்கப் பட்டாய்’ என்னுமாறு போலே
பிறந்தவர் பிறவியின் பலத்தை இழப்பரோ?’ என்றபடி.
வகுத்த துறையிலே பார தந்திரிய மாகையாலே வாசி அறிந்த இவர்களுக்கு உத்தேஸ்யமாகத் தோற்றுமன்றோ?
வகுத்தது அல்லாத துறைகளில் பண்ணின வாசனையாலே ‘இது புருஷார்த்தமோ?’ என்று தோற்றுகிறது.

நாட்டிற்பிறந்து –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தனாய் -சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவனா யிருக்கிறவன்,
கர்மவஸ்யரும் -கர்மங்கட்குக் கட்டுப்பட்டுவர்களுங்கூட அருவருக்கும் தேசத்திலே பிறந்து.
ஸஹிதேவை: உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி;
அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு: ஸநாதந;’-அயோத். 1 : 7
செருக்கனான இராவணனுடைய வதத்தைப் பிரார்த்திக்கிற தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டவரும்
நித்யருமான விஷ்ணு மனித உலகத்திலே அவதரித்தார்; இது பிரசித்தம்’ என்கிறபடியே.
ஸ:-ஜஞே ஹி –
கர்மங் காரணமான பிறவி இல்லை’ என்று பிரமாண பிரசித்தனானவன் கண்டீர்
கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்கட்கும் இவ் வருகாய் வந்து பிறந்தான்’ என்றபடி.
இப்படிப் பிறப்பதற்குக் காரணம் என்?’ என்னில்,
அர்த்தித:’
என்கிறது, அவர்கள் இரந்ததற்காக என்றபடி. இரப்பு தான் இச்சையும் பிறப்பிக்குமே அன்றோ? ?
இச்சா க்ருஹீத அபிமதோருதேஹ;
ஸம்ஸாதிக அஸேஷ ஜகத்தித: ய;’-ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84.
இச்சையாலே மேற்கொள்ளப்பட்டது’ அன்றோ
தேவை:-
தங்கள் காரியத்துக்காக இரந்து பிறக்கச் செய்து காரியம் தலைக் கட்டினவாறே
எதிரிட்டு ‘ஈஸ்வரோஹம்’ என்று இருப்பார்க்ககாக் கண்டீர்,
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய்’ திருவிருத். 92.என்பார்கள். என்றது,
லங்கையை சுட்டுத் தர வேணும்,’ என்பர்கள் என்றபடி.
உதீர்ணஸ்ய ராவணஸ்ய –
அச்சத்தை உண்டாக்குகின்றவனான பையல், தானே வர பலத்தாலே அழியச் செய்ய வேண்டும்படி விஞ்சினவாறு.
வத அர்த்திபி:-
தாங்கள் பட்ட நலிவாலே திருவுள்ளத்துக்குப் பொருந்தாதனவற்றையும் விண்ணப்பம் செய்தார்கள்.
ஒருவனை அழியச் செய்ய ஒரு நாடாகப் பிழைக்குமாதில் ஆகாதோ?’ என்று அழியச் செய்தானைத்தனை.
அர்த்தித:-
தன்னுடையச் சோதிக்கு எழுந்தருளுந்தனையும் திருவுள்ளத்தில் பட்டக் கிடந்து இதுவே.
அர்த்தித:–
உபாசித்தவர் அல்லர்.
மாநுஷே லோகே விஷ்ணு: ஸநாதந;-
ஆக்கரான -உண்டு பண்ணப்பட்ட தேவர்கள்,
மனித வாசனைக்கு வாந்தி பண்ணிப் பூமியில் இழிய அருவருத்து, ஒன்றரை யோஜனைக்கு அவ் வருகே தின்று
ஹவிஸ்ஸினைக் கொள்ளுவார்கள்;
அவர்கள் மனிதத் ஸ்தானத்திலே யாம்படியான பொருள் கண்டீர் இங்கே வந்து பிறந்தது,’ என்கிறார்.
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் அன்றோ?திருவாய். 8. 1 : 5.-
ஜஜ்ஞே–
ஆவிர்ப்பூதம் -தோன்றிய மாத்திர மன்று; நாட்டார் பத்து மாதங்கள் கர்ப்ப வாசம் அனுபவிக்கில்
பன்னிரண்டு மாதங்கள் அன்றோ இவன் அனுபவித்தது?’
ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ’-. பால. 18 : 10.
பின்னர்ப் பன்னிரண்டாவது மாதமான சித்தரை மாதத்தில்’ -என்றபடி
ஜாதோஹம் யத்தவோதராத்’-ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 3 : 14.
நான் உன்னுடைய உதரத்தினின்றும் உண்டானேன்’ -என்றபடி
விஷ்ணுஸ் ச நாதன –

நாட்டிற்பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா –
கர்மங்கட்குக் கட்டுப்படாத தான் கர்மங்கட்குக் கட்டப்பட்டவர்களோடே -சஜாதீயமாய் -ஓரினனாய் நாட்டிலே வந்து பிறந்து,
அவர்கள் படும் துக்கத்துக்கு அளவன்றிக்கே, கடலுக்கு அக் கரையிலே உயிரும் இக் கரையிலே உடலுமாம் படியான
ஜனக ராஜ புத்ரீ விஸ்லேஷம் -ஜானகியின் பிரிவு என்ன,
பெரியவுடையார் நிதனம் -சாக்காடு என்ன, இந்த விதமான துக்கங்களையும் பட்டு,
அதற்கு மேலே, செய்ந் நன்றி அறியாத மனிதர்கட்காக.

நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச்செய்து –
நிரபராதமான -யாதொரு குற்றமும் இல்லாத நாட்டினை நலிகிற ராவணன் முதலான கண்டகரை,-
பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய மெல்லடிகள் குருதி சோர
விரும்பாத கான் விரும்பி,எவ்வாறு நடந்தனை எம்மிராமாவோ!-பெருமாள் திருமொழி, 9-5-2–என்கிறபடியே.
அவர்கள் இருந்த இடங்களிலே தேடிச் சென்று கொன்று, லங்கையின் வாசலிலே விஜய ஸ்ரீ பரிவ்ருத்தராய் –
வீர லக்ஷ்மியோடு கூடினவராய்க் கொண்டு எழுந்தருளி நிற்க, அவ்வளவிலே பிரமன் முதலான தேவர்கள் வந்து.
ததிதம் ந: க்ருதம் கார்யம் த்வயா தர்மப்ருதாம்வர
நிஹதோ ராவணோ ராம ப்ரஹ்ருஷ்சடா திவமாக்ரம’-யுத். 120 : 29.
தருமத்தைத் தாங்குகிறவர்களுக்குள் சிறந்தவரே! எங்களுடைய இந்தக் காரியம் தேவரீரால் செய்யப்பட்டது;
ராமரே! ராவணன் கொல்லப்பட்டான்; மகிழ்ச்சியுடையவராய் வைகுண்டத்திற்குச் செல்லும்’ என்கிறபடியே,‘
நாங்கள் வேண்டியவை அடைய எங்கள் அளவு பாராதே தேவர் செய்தருளிற்று,
இனி, தன்னுடைச் சோதி ஏற எழுந்தருள அமையும்’ என்ன, அவ்வளவிலே சிவன், ‘நாடு அடையத் தேவரீருடைய பிரிவினாலே அழிந்ததைப் போன்று கிடக்கின்றது; திருத் தாய்மாரையும் திருத் தம்பிமாரையும் திருப் படை வீட்டிலுள்ள ஜனங்களையும், மீண்டு புக்குச் சில நாள் எழுந்தருளி யிருந்து ஈரக் கையாலே தடவிப் பாதுகாத்து எழுந்தருள வேணும்,’ என்ன,
கடல் ஞாலத்து அளி மிக்கான்’ திருவாய்.. 4. 8 : 5.என்னும்படியே, பதினோராயிரம் ஆண்டு எழுந்தருளி யிருந்து பாதுகாத்தப் படியைச் சொல்லுகிறது
‘ஷடர்த்த நயந: ஸ்ரீமந் மஹாதேவோ வ்ருஷத்வஜ;’- யுத். 120 : 3.
நாட்டை அளித்து’ என்று.இதற்காக அன்றோ முக் கண்ணனை,
ஷடர்த்தநயந: ஸ்ரீமாந் – முக்கண்ணனான ஸ்ரீமாந்’ என்றது?
இல்லையாகில், பிக்ஷூகனை ‘ஸ்ரீமாந்’ என்ன விரகு இல்லை அன்றோ?
நெடு நாள் இருந்து தன்னால் அல்லது செல்லாதபடி செய்து, இட்டு வைத்துப் போகாதே கூடக் கொடு போய்
உஜ்ஜீவிப்பித்த படியைச் சொல்லுகிறது உய்யச் செய்து’ என்று.

நடந்தமை கேட்டுமே –
திர்யக்யோகிநிகதாஸ்சாபி ஸர்வே ராமம் அநுவ்ரதா:’ உத்தரகாண். 109 : 22.
விலங்கினங்கள் அனைத்தும் இராமனைப் பின் தொடர்ந்தன’ என்றும்
விவேச வைஷ்ணவம் தேஜஸ் ச சரீரஸ் சஹா நுக -என்கிறபடியே,
தன்னுடனே கூடக் கொடு போய் வைத்தான்’ என்று ஐயப்பட்ட வேண்டாதபடி அருளிச் செய்து வைத்தாரே அன்றோ ஆழ்வார்,
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி, பெருமாள் திருமொழி. 10 : 10.- என்று பரமபதத்தே கொடு போனமையை?

நடந்தமை கேட்டும் –
இந்த பிரயாண வ்ருத்தாந்தம் -கொடு சென்ற இந்தச் செயலைக் கேட்டும் என்றது,
பசித்தார் இளைத்தாரைப் பார்த்துக் கொடு போகையைத் தெரிவித்தபடி.
பாதேயம் புண்டரீகாக்ஷ நாம ஸங்கீர்த்தநாம்ருதம்’-, ஜிதந்தா.
தாமரைக் கண்ணனுடைய திரு நாம சங்கீர்த்தன அமிருதமே அன்றோ பாதேயம்?
ஜிதந்தே புண்டரீகாஷா -புண்டரீகாக்ஷனே! உனக்குத் தோற்றோம்’ என்று கொடு போலே காணும் போவது.
ராம: கமல பத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மநோஹர:
ரூப தாக்ஷிண்ய ஸம்பந்ந: ப்ரஸூதோ ஜநகாத்மஜே’சுந். 35 : 8. இது பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது.
–ராமர் தாமரை மலர் போன்ற கண்களையுடையவர்’ என்னப் படுவதன்றோ?
அண்ணல் தன் திரு முகம் கமல மாமெனின்
கண்ணினுக் கவமை வேறு யாது காட்டுகேன்!
தண் மதி யாமென வுரைக்கத் தக்கதோ!
வெண் மதி பொலிந்தது மெலிந்து தேயுமால்.’- கம்பராமாயணம்.

மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பா வகை முடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடுங் கான் போந்து
சோ வரணும் போர் மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே!
திருமால் சீர் கேளாத செவிஎன்ன செவியே!’-சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

இப்படி உஜ்ஜீவிப்பித்து நடந்தமை கேட்டும் நாரணற்கு ஆளின்றி ஆவரோ
கீழில் பாட்டில்
சப்தாதி விஷய ப்ரவணராய் -சர்வேஸ்வரன் என்று ஒரு தத்வம் உண்டு என்று கேட்டார் வாய்க் கேட்டு இருக்கிறவர்களை
தான் வந்து திருவவதரித்து தன் வடிவு அழகாலும் குணங்களாலும் வசீகரித்துத்
தன்னை அல்லது அறியாதபடி பண்ணினான் என்று சொல்லிற்று
இப்பாட்டில்
இது ஒரு ஏற்றமோ தன்னால் அல்லது செல்லாமையைப் பண்ணிப் பொகட்டுப் போகையாகிறது
படு கொலை காரரோபாதி இ றே –
அங்கன் செய்யாதே தன்னோடே கூடக் கொடு போய் ரஷித்த குணத்துக்கு என்கிறார் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-5-1–

December 31, 2018

ஏழாம் பத்து -ஐந்தாந்திருவாய்மொழி-‘கற்பார்’-பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியிலே, எம்பெருமானுடைய விஜயங்களை அனுபவித்தார்;
அவை தாம் ஆஸ்ரிதார்த்தமாகவே இருப்பன?
அவன், தன்னை இவர்களுக்கு ஆக்கி வைக்கக,
இவர்கள் பாஹ்ய -புறம்பு உண்டான விஷயங்களிலே அந்ய பரர் -வேறு நோக்குள்ளவர்களை ஆவதே!
என்று ஆச்சரியப்படுகிறார்.
யஸ்ய அஸ்மி -எவனுக்கு அடியவனாகிறேன்?’ என்கிறபடியே,
யாவன் ஒருவனுடைய சத்தையே பிடித்து அவனுக்காய் இருக்கும்? அப்படி இருக்கிறவன் தான்
உத்பத்தியே -பிறந்தது தொடங்கி இவனுக்கு ஆக்கி வைக்கிறான் அன்றோ?
ரக்ஷணத்துக்கு ஏகாந்தமான ஜென்மங்களில் வந்து பிறந்த படியையும்,
தன் ஸ்வரூபம் ரூபம் குணம் முதலானவைகளையும் பிறர்க்கு ஆக்கி வைக்கிற படியையும்,
அதற்குக் காரணமான கிருபையைத் தனக்கு வடிவாக வுடைனாய் இருக்கிற படியையும்,
கிருபையின் காரியமான செயல்களையும் அனுசந்தித்து
அபவரகே ஹிரண்ய நிதிம் நிதாய உபரி சஞ்சரந்தோ யதா ந த்ரஷ்யத்தி –
முற்றத்திலே ஹிரண்ய நிதி -பொற் குவியல் புதைந்து கிடக்க, அதனை அறியாதே மேலே சஞ்சரித்துப்
புறங்கால் வீங்குவாரைப் போலே இச் செல்வம் தங்களுக்காக இருக்கச் சம்சாரிகள்
புறம்பே போது போக்குவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.

ஆழ்வான் ஒரு கால், இத் திருவாய் மொழி பத்துப் பாசுரங்களையும் ராமாவதார விஷயமாக்கி நிர்வஹித்தாராம்.
அதற்குக் காரணம்: ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே,
பெருமாளுடைய குணத்தில் ஒரு பகுதியே அன்றோ?
அல்லாத அவதாரங்கள் எல்லாவற்றிலும் உள்ளது ஆதலின்.
பேரெயில் சூழ் கடல் தென்னலங்கை செற்ற பிரான்’ என்றும்,
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்றும்,
கீழ் ப்ரஸ்துதமான ராமாவதாரத்தினுடைய வ்ருத்தாந்தத்தை அநுசந்தித்து,
அவ்வழியாலே அன்றோ அவதாரங்களை அநுசந்திக்கிறது?

மற்றைய அவதாரங்களிலே ஈடுபட்டவர்களும் ராமாவதாரம் பிராசங்கிகமாகச் சொல்ல வேண்டி வந்தால்,
மனத்துக்கு இனியானை’ என்றே அன்றோ சொல்லுவது?
பட்டர் ராமாவதாரத்தில் போரப் பக்ஷிபதித்து இருப்பர்’ என்று,
அவர் அருளிச் செய்யுமது கேட்கைக்காகச் சிறியாத்தான் ஒருநாள்
பெருமாளுக்கு எல்லா நன்மைகளும் உளவாகிலும், கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்ன,
தூது சென்ற கிருஷ்ணன் நீர்மை இல்லையே?’ என்ன,
அது அங்ஙன் அன்று காண்; கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்பார் இல்லாமையாலே
தவிர்ந்தார் அத்தனை காண்,’ என்று அருளிச் செய்தார்.
நாடுடை மன்னர் வேறே சிலர் இலரே.
அபிஷிக்த -முடி சூடிய க்ஷத்திரிய குலத்திலே பிறக்கையாலே போக விடுவாரைப் பெற்றது இல்லை.
முடியைத் தவிர்ந்து சடையைப் புனைந்து நாட்டினை விட்டுக் காடு ஏறப் போனவர், தூது போகாமை இல்லை அன்றோ?
காடு ஏறப் போகவுமாம்; துரியோதனன் கோஷ்டியிலே போகை அன்றோ அரிது?
யத்ர ஸூக்தம் துருக்தம் வாஸமம் ஸ்யாத் மதுசூதந
ந தத்ர ப்ரல்பேத் ப்ராஜ்ஞ: பதிரேஷ்விவ நாயக:’- பாரதம், உத்யோகபர். 95.
மதுசூதனரே! எந்த இடத்திலே நல்ல வார்த்தையும் கெட்ட வார்த்தையும் வாசி இல்லாமல் ஆகின்றதோ,
அங்குத் தெரிந்தவன் ஒன்றும் பேசக்கூடாது,’ என்பதே அன்றோ பிரமாணம்?
பாண்டவர்கள் கிடக்கைக்கு ஐந்து ஊர் தர வேணும்’ என்று இவன் சொன்ன வார்த்தைக்கும்,
பந்துக்களுக்கும் ஒரு கோற் குத்தும் கொடேன்’ என்று அவன் சொன்ன வார்த்தைக்கும் வாசி அறியாத
கோஷ்டியிலே அன்றோ போய்ப் புக்கது?
ராமாவதாரத்தில் தூது சென்ற திருவடியுடைய ஏற்றம் தன் திருவுள்ளத்திலே பட்டுக் கிடந்தே அன்றோ,
அவனே பின்னோர் தூது ஆதி மன்னர்க்கு ஆகிப்
பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றது?-பெரியதிருமொழி, 2. 2 : 3.

—————————-

பிரியத்தையும் ஹிதத்தையும் அனுசந்தித்து ஒன்றைக் கற்பார்,
திரு வயோத்தியில் உண்டான எல்லாப் பொருள்களையும் நிர்ஹேதுகமாக -காரணம் ஒன்றும் இல்லாமலே
ஸ்வ சம்ச்லேஷ -தன் சேர்க்கையே- ஸூகமாகவும்
ஸ்வ விஸ்லேஷ-தன் பிரிவே- துக்கமாக வுமுடையராம்படி
செய்தருளின உபகார சீலனான சக்கரவர்த்தி திருமகனை அல்லது கற்பரோ?’ என்கிறார்.

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல் லெறும் பாதி ஒன்று இன்றியே
நற் பால் அயோத்தியில் வாழும் சரா சரம் முற்றவும்
நற் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே–7-5-1-

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
இவ் விஷயத்தை ஒழியப் புறம்பு கற்குமது கல்விக்கு உடல் அன்று,’என்று இருக்கிறார்.
ஸம்ஜ்ஞாயதே யேந தத் அஸ்த தோஷம் சுத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
ஸம்த்ருஸ்யதே வாப்யதிகம்யதே வா தத் ஜ்ஞாநம் அஜ்ஞாநம் அத: அந்யத் உக்தம்’-ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84
அந்த ஞானம் தான் ஞானம் என்று சொல்லத் தக்கது;
ஆகையால், மேற்கூறிய ஞானத்திற்கு வேறானது அஞ்ஞானம் என்று சொல்லப்பட்டது’ என்றன் அன்றோ?
பகவானை அடைவதற்கு உடலான ஞானம் ஞானமாகிறது; அல்லாதது அஞ்ஞானம் என்னக் கடவது அன்றோ?

கற்பார் –
ப்ரியவாதீச பூதாநாம் ஸத்யவாதீச ராகவ:
பஹூ ஸ்ருதாநாம் வ்ருத்தாநாம் ப்ராஹ்மணாநாம் உபாஹிதா;- அயோத். 2. 32.
எதிர் வரு மவர்களை எமையுடை இறைவன்
முதிர் தரு கருணையின் முக மலர் ஒளிரா,
எது வினை இடரிலை இளிது நும் மனையும்
மதி தரு குமரரும் வலியர் கொல்?’ எனவே’-கம்பராமாயணம், பால.

ஒருவன் ஒன்றைக் கற்பது ‘அப் போதைக்கு இனியது’ என்றாதல் ‘பின்பு ஒரு நன்மையை விளைக்கும்’ என்றாதல் ஆயிற்று; ‘
ராமபிரான்’ என்கையாலே ‘
அவை இரண்டும் இவ்விஷயத்தை ஒழிய இல்லை’ என்கிறது.
யாங்ஙனம்?’ எனின்,
ராமன்’
என்கிற இதனால், புறம்பு போகாமல் காற்கட்டும் படியான அழகைச் சொல்லுகிறது;
பிரான்’
என்கிற இதனால், அவ் வழகாலே சேதநரை அநந்யார்ஹமாக்கும் படியும்,
நிலாத் தென்றல் சந்தனம் தண்ணீர் போலே, தன்னுடைய ரமணீயத்துவமும் -ஆனந்திக்கச் செய்கிற தன்மையும்
பிறர்க்கே யாயிருக்கும் உபகாரமாம் தன்மையும் சொல்லுகிறது.
ப்ரிய வாதீச –
பெருமாள் ஒன்றை அருளிச் செய்தால் அது செவிப்படாது ஒழியில் செய்யலாவது இல்லை;
செவிப்படில் இனியதாய் அன்றி இராது. ‘யார்க்கு?’ என்றால்,
பூதா நாம் –
சத்தை யுடையனவான எல்லாப் பொருள்களுக்கும்:
அசத்துக்கு வேறுபட்ட தன்மை மாத்திரமே வேண்டுவது.
நன்று; அப்போது பிரியமாய்ப் பயன் கொடுக்குமிடத்தில் வேறு ஒரு பலனைக் கொடுக்குமோ?’ என்னில்,
ஸத்ய வாதீச –
அருளிச் செய்யுமது தான் ஆத்மாக்களுக்கு ஹிதமாய் அன்றி இராது என்கிறது.
ஒரு வார்த்தையே இரண்டு ஆகா நின்றால் அல்லாதனவற்றிற்குச் சொல்ல வேண்டா அன்றோ?

ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவந் கதா;
ராமபூதம் ஜகத்அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி’- யுத். 131 : 97
ராமோ ராமோ ராம இதி’ என்னும்படி யன்றோ நாட்டை அகப் படுத்தி யிட்டு வைக்கும்படி?
அவன் ஸத்தை இவனுடைய ஸத்தைக்குக் காரணம்;
பின்பு உண்டானவை இவனுடைய போகத்துக்குக் கண்டவை.
ஆக, ‘பிரியமும் ஹிதமும் ஆகிய இரண்டையும் வேண்டியிருப்பார் அவனை ஒழியக் கற்பரோ?’ என்றபடி.

ராம: ஸத்புருஷோ லோகே ஸத்ய தர்ம பராயண:
ஸாக்ஷாத் ராமாத் விநிர்வ்ருத்த: தர்மஸ்சாபி ஸ்ரியாஸஹ’-அயோத். 2 : 29.
நேரான ஐஸ்வரியத்தோடு கூட நேரான தர்மமும் ஸ்ரீ ராமபிரானிடத்தினின்றும் உண்டாயிற்று’ என்றது,
அவ்யவதாநேந -நேரே சாதனம் சாத்தியம் ஆகிய இரண்டும் இந்த ராமனே என்கிறது அன்றோ?’ என்றபடி.

கற்பார் இராம பிரானை –
கற்பார் என்கை அன்று இவர்க்கு உத்தேசியம்;
இதர வியவச்சேதம் -மற்றையவற்றைக் கற்கலாகாது,’ என்று விலக்குதலேயாம்,
ராக ப்ராப்தமாகில் -ஆசையாலே செய்யப்படுவதாகில் -ஸ்வயமேவ -தானாகவே-ப்ரவர்த்தம் – செல்லும் அன்றோ’
ஆகையால், வேறு ஒன்றில் போகாமையே வேண்டுவது.
மற்றும்’
என்றதனால், தேவதாந்த்ர பஜனாதிகளை -வேறு தெய்வங்களை வணங்குதல் முதலானவற்றை –
வ்யாவர்த்திக்கிறார் -வேறுபடுத்துகிறார் அல்லர்.
பஜனீய வஸ்துவில் -வணங்கக்கூடிய பொருளிலே கூறு இடுகிறார்.
தேவதாந்தரமாகில் -வேறு தெய்வங்களாகிற பதரைக் கூட்டிக் கழிக்குமவர் அல்லரே இவர்?
ஆதலால், பரத்வத்தையும் மற்றை அவதாரங்களையும் கழிக்கிறார்.

மற்றும் கற்பரோ –
ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ ந அந்யத்ர கச்சதி’- உத். 40 : 16.
என் எண்ணமானது வேறிடத்தில் போகிறது இல்லை’, என்றாற்போலே, ‘மற்றுங் கற்பரோ’ என்கிறார்.
ஸ்நேஹ: மே பரம:-
எழுந்தருளுகிற போது ‘என் வழியே போந்தாலோ?’ என்ன, ‘அவ்வளவு அன்று காணும் எனக்குச் ஸ்நேகம்’, என்கிறான்.
என்றன் அளவு அன்றால் யானுடைய அன்பு’ என்றும்,
உயிரின் பரமன்றிப் பெருகு மால் வேட்கையும்’ என்றும் சொல்லுமாறு போலே
ராஜந் த்வயி-
இதுதானும் என்னால் வந்தது அன்று.
ரஞ்ஜயதீதி ராஜா’ ஆகையாலே.
நித்யம் ப்ரிதிஷ்டித; –
இப்போது ஒண்ணாதாகில், மற்றொரு போது கொள்ளுகிறோம்’, என்றால், அது செய்ய ஒண்ணாது,
தர்மியைப் பற்றிக் கிடப்பது ஒன்று ஆகையாலே .
பக்திஸ்சநியதா –
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து பிரிவில் முடிந்த சக்கரவர்த்தியின் நிலை ஸ்னேகம்;
பத்தியாவது, ‘நில்’ என்ன, ‘குருஷ்வ – கொள்க’ என்னும்படியாய், முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை.
வீர –
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்னா, இங்கும் வெல்ல முடியாது.
தானும் அவன் ஆகையாலே தோற்பித்த துறையைப் பிடித்துச் சொல்லுகிறான்,
பாவோ ந அந்யத்ர கச்சதி –
என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சினை மீட்கப் போகாது,
என்னுடை நல் நெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி’ திருவாய். 1. 7 : 8.என்னுமாறு போலே.
சர்வ சத்தியான அவனாலும் மீட்கப் போகாது,’ என்கை.
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணோவே’ என்னுமாறு போலே,
அந்யத்ர ந கச்சதி’ என்கிறது. ‘அந்யத்ர’ என்கிறது, போகிற இடத்தின் பேரும் சொல்லுகை பொறாதபடி;
மற்று ஆரானும் உண்டு என்பார்’ என்னமாறு போலே, இவரும், ‘மற்றுங் கற்பரோ?’ என்கிறார்.

கற்பரோ –
சேதநர் அல்லரோ? உலகம் அடங்கலும் தம்முடைய படி என்று இருக்கிறார்;
இவ் வூரில் பிள்ளைகள் கண்ட சர்க்கரை ஒழிய உண்ணும்படி எங்ஙனே?’ என்பாரைப் போலே.
மற்றையவற்றை விட்டு ராம பிரானைக் கற்கைக்குக் காரணம் சொல்லுகிறார் மேல்:

புல் பா முதலா –
பா என்பது, பதார்த்த வாசகமாய் -பொருள்; புல்லாகிற பொருள் என்னுதல்.
பா’ என்பது பரப்பு; ‘பரந்திருக்கிற புல்’ என்னுதல்; என்றது, பசுவின் வாய்க்கு எட்டாதபடியாய் இருக்ககையைத் தெரிவித்தபடி.
இதனால், ‘புல் முதலாக ஸ்தாவரம் முடிவாக’ என்றபடி.

புல் எறும்பு – ஆதி
பிறிவிகளிற் கடையான எறும்பு தொடக்கமாக.
பிரமனை எண்ணினால் பின்பு முடிவில் நிற்கக் கடவது அன்றோ எறும்பு?
புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி’ என்று இவற்றுக்கு ஒரு முதன்மை சொல்லுகிறார் அல்லர்;
ஸ்ரீராமபிரானுடைய திருவுள்ளத்துக்கு -விஷயீ காரத்துக்கு -முற்பட்டன இவை,’ என்கிறார்;
வெள்ளமானது தாழ்ந்த இடத்திலே ஓடுமாறு போலே.
ஸ்தாவரங்களில் தாழ்ந்தது புல்;
ஜங்கமங்களில் தண்ணியது எறும்பு;
இவை இரண்டனையும் ஒக்க எடுக்கையாலே. ஞான பலம் மோக்ஷம் என்றதனைத் தவிர்க்கிறது.
சைதன்யம் -ஞானம் உண்டாகையும் இல்லையாகையும் காரணம் அன்று. பெருமாள் கிருபைக்கு,’ என்கிறது.
இவற்றின் கர்மங்களால் வரும் உயர்வு தாழ்வுகள் காரணம் அன்று.’ என்கிறது.
நிருபாதிக காரணம் இல்லாமலே சேஷியாக இருக்கிற சர்வேஸ்வரன் பக்கல் அப்ரதிஷேதமே விலக்காமையே பேற்றுக்கு வேண்டுவது.
ஸ்ரீ பரதாழ்வானைக் கண்டு சேதநர் எல்லாரும் கண்ண நீர் விழ விட்டு நிற்கக் கழுத்தளவு நீரிலே நிற்கிற மரங்கள் அன்றோ வாடி நின்றன,
விஷயே தே மஹாராஜ ராமவ்யஸந கர்ஸிதா;
அபிவ்ருக்ஷா; பரிம்லாநா; ஸபுஷ்பாங்குர கோரகா;- அயோத். 59 : 4.
மரங்களும் எல்லாம் வாடி நின்றன’ என்கிறபடியே-
உபதப்த உதகாநத்ய; பல்பலாநி ஸராம்ஹிச
பரிஸூஷ்க பலாஸாதி வநாநி உபவநாநிச’-அயோத். 59 : 5.
உப தப்தஉதகா நத்ய: – நீரோடு, அந்நீரில் விழுகிறாரோடு வாசி அற்றபடி.
உப தப்தமாகையாவது, கரையரும் கிட்ட ஒண்ணாதபடியாய் இருக்கை.
பல்வலாநி ஸராம்ஸிச – இதில், சிறுமை பெருமை என்று ஒரு வாசி இல்லை,
வநாநி உபவநாநிச’-‘வனம் என்ன உபவனம் என்ன’ என்பது போலே

ஒன்று இன்றியே –
எல்லாவற்றையும் என்கிறது அன்று; மேலே ‘முற்றவும்’ என்று சாகல்ய வசனம் -முழுவதும் என்ற பொருளைக் காட்டுகிற
சொல் உண்டாகையாலே. இனி, ‘ஒன்று இன்றியே’ என்கிறது,
பேற்றுக்குத் தகுந்ததாய் இருப்பது ஒரு சாதனம் இன்றிக்கே இருக்கச் செய்தே’ என்றபடி.
பெறுகிற தன் சிறுமையையும் பேற்றின் கனத்தையும் பார்த்தால். தன் பக்கல் ஒரு சாதனம் இன்றிக்கே இருக்கும் அன்றோ?
பரம பத்தியோடு அவனே உபாயமானதோடு வாசி இல்லை. பேற்றைப் பார்த்தால் இத் தலையில் ஒன்றும் சொல்ல ஒண்ணாமைக்கு.
இனி, அங்கீகாரத்துக்குக் காரணமாய் இருப்பது ஒரு சாதனம் இன்றிக்கே இருக்க.
யாது ஒன்றாலே பலம் உண்டாயிற்று, அது வன்றோ சாதனம்!
அதாவது, ‘திரு வயோத்யை யினின்றும் குடி வாங்க நினைவு இல்லை’ என்கிற இது வன்றோ?

நற்பால் அயோத்தியில் –
நல்ல இடத்தையுடைத்தான திருவயோத்தியில். பால் – இடம்.

பவித்ரம் பரமம் புண்யம் தேஸோயம் ஸர்வ காமதுக்’ கருடபுராணம், 11.

மானத்து வண்ட லுழவோர் எழுத்தின் வடிவுற்ற சீர்
மானத் துவண்ட வினையான ராயினு மால் வளர்வி
மானத் துவண்டல மாமரங்கம் வழி யாவரினும்
மானத்து வண்டமர் தாரண்ட ராம் பதம் வாய்க்குமங்கே.-திருவரங்கத்தந்தாதி.

இதனால், ‘நில மிதியே ராம பத்தியை விளைக்கும்’ என்கை.
இந்தத் தேசமானது விரும்பினவற்றை எல்லாம் தரக் கூடியது’ என்கிறபடியே அன்றோ?
கைகேசியின் உறவினர்களுக்கு வேலைக்காரியும் எங்கேயோ பிறந்தவளும்’ என்கிறது அன்றோ?
ஜ்ஞாதி தாஸீயதோ ஜாதா கைகேய்யாஸ்து ஸஹோஷிதா
ப்ரஸாதம் சுந்த்ர ஸங்நாஸம் ஆருரோஹ யத்ருச்சாயா’ அயோத். 7 : 1
இதற்குக் கருத்து என்?’ என்னில், ‘இந்த அயோத்தியிலே பிறந்தாளாகில் பெருமாளுக்கு விரோதம் செய்யாள் ஆகையாலே,
எங்கேனும் ஓரிடத்தே பிறந்த நாள் ஒரு விழுந்தான் கிடக்கை’ என்றது.
யத: குதஸ்சித்ஜாதா – யாதாம் ஓரிடத்தில் பிறந்தாள்’ என்று வியாக்கியானம் செய்தான் உடாலி.
இந்த நிலத்தில் பிறவாமை இவளுக்குக் கொடுமை விளைந்தது,’ என்கிறான் அன்றோ?
தேசம் தானே எல்லா நன்மைகளையும் பிறப்பிக்கவற்றாய் இருக்கும் காணும்.
இவ் வூரிலவர்கள் மற்றையோரைப்போலே உண்டு உடுத்துத் தடித்து வார்த்தை சொல்லித் திரிந்து.
பெருமாளுக்கு வருவது ஒரு பிரயோஜனத்தோடு மாறுபட்டவாறே,
சத்துரு சரீரம் போலே இருக்க, சரீரங்களைப் பொகட்டுக் கொடு நிற்பார்கள்.
சத்துரு சரீரம் பொகட வேண்டுவது ஒன்றோ அன்றோ?

ராகவார்த்தே பராக்ராந்தா ந ப்ராணே குருதே தயாம்’- ஸ்ரீராமா. யுத்.
ராகவனுக்காகச் சூழ்ந்து கொண்டிருக்கிற சேனையானது பிராணனிடத்தில் அருள் வைப்பது இல்லை,’ என்கிறபடியே
பிராணன்கள் பழைமையாலே பல் காட்ட,
உடையவரும் நீங்களும் ஒரு தலையானால் உங்களைக் கைக் கொள்ளப் போமோ என்றார்களே அன்றோ?’ என்றபடி,
பழைமை பார்ப்பரோ, அவன் தானும் இவனைப் பற்ற ‘பிரணான்களை விட்டு’ என்னா நிற்க?
ஆர்த்தோவா யதிவா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத;
ஹரி; ப்ரணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருகாத்மநா’. உத். 18 : 18.

அயோத்தியில் வாழும்-வசிக்கும் என்னாமல் ‘வாழும்’ என்கிறது,
அத் தேச வாசமும் வாழ்வும் என்று இரண்டு இல்லாமையாலே;
வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்!’ என்றும்,
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம்’நாய்ச்சியார் தி. 8 : 9., 11 : 5.
என்றும், சொல்லுகிறபடியே, ‘அயோத்தியில் வாழும்’ என்கிறார்,
பிராப்ய தேசத்தில் வசிப்பது தான் வாழ்ச்சியாக இருக்குமன்றோ?
நித்யப் பிராப்யமான பொருள் அன்றோ இங்கு எப்பொழுதும் அண்மையில் எழுந்தருளி யிருக்கிறது?
நமக்கு அனுபவம் காதற்சித்கம் -ஒரு காலத்தில் உண்டாகிறது சரீரத்தின் சேர்க்கையால் அன்றோ?
தர்மியில் ஐக்கியத்தாலே அங்குத்தைக்கு ஒரு குறை இல்லை அன்றோ?

நற்பாலுக்கு உய்த்தனன் –
நல்ல ஸ்வபாவத்தை யுடைத்தாம்படி செலுத்தினான். என்றது,
ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ -தன் சேர்க்கையாலே ஸூகத்தை யுடையவர்களாகவும்
தன் பிரிவாலே துக்கத்தை யுடையவர்களாகவும் செய்கையைத் தெரிவித்தபடி.
இவற்றினுடைய கர்மங்களின் தார தம்யத்தால் ஏற்றத் தாழ்வுகளால் வரில் அன்றோ அவற்றிற்குத் தக்க அளவுகளாய் இருப்பன?
அவனாலே வந்தன ஆகையாலே எல்லார்க்கும் ஒக்க நன்மை விளைந்தபடி.
அபராவர்த்திநாம் யாச யாச பூமிப்ரதாயிநாம்
மயா த்வம் ஸமநுஜ்ஞாதோ கச்ச லோகந் அநுந்தமாந்’-ஆரண். 68 : 80.
என்னால் நியமிக்கப்பட்டவராய் நீர் அந்த உத்தம உலகத்தை அடைவீர்,’ என்கிறபடியே,
இது, ஜடாயுவைப் பார்த்து ஸ்ரீராமபிரன் கூறியது.
இங்கு உண்டான பற்று அறுத்து ஒரு தேச விசேஷத்து ஏறச் சென்று அனுபவிக்கும் அனுபவத்தைக் கொடுக்க
வல்லவனுக்கு இங்குத் தன்னை ஒழியச் செல்லாமை விளைக்கை பணி யுடைத்து அன்றோ?

நான்முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் –
அரசன் தன்னுடையான் ஒருவனுக்கு ஒரு நாட்டைக் கொடுத்தால்
அவனுடைய ஆணையும் ஆஜ்ஞையுமாக அவனுடைய ஸ்வாதந்திரியமே நடக்கும்படி செய்து கொடுக்குமாறு போலே,
சம்சாரி சேதநர்க்குத் தலையான பிரமனுக்குக் கையடைப்பான நாட்டுக்குள்ளே,
அவன் ஸ்வாதந்திரியத்தையும் தவிர்த்து, இவற்றின் கர்ம பாரதந்திரியத்தையும் தன் குணத்தாலே பதம் செய்து,
தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய்ப் பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான்.
ஆன பின்பு அவனை ஒழிய வேறேயும் சிலவற்றைக் கற்பரோ?

மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பா வகை முடியத்
தாவிய சே வடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து
சோவரணும் போர் மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே!
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே!’ சிலப்பதிகாரம் (ஆய்ச்சியர் குரவை)

மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தாளை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றத்
தொடர்ந்த ரண முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தாளை ஏத்தாத நா வென்ன நாவே!
நாராயணா வென்னா நா வென்ன நாவே!’- சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-4-11–

December 31, 2018

நிகமத்தில் -இத் திருவாய் மொழியைக் அப்யசித்தவர்களுக்கு இது தானே
விஜயத்தைக் கொடுக்கும் என்கிறார்.

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-

குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல் –
கோவர்த்தனத்தை எடுத்துத் தரித்த நீர்மையிலும் அப்போதை அழகிலும் ஈடுபட்டு
இருக்குமவர்களோடே கூடி நின்று தாமும் பிரீதராய், பிரீதிக்குப் போக்கு வீடாகச் சொன்ன பாசுரமாயிற்று.

நன்றி புனைந்து ஓர் ஆயிரம் –
சர்வேஸ்வரனுடைய பரத்வ சௌலப்யங்களை வகை யிட்டுத் தொடுத்த ஆயிரம்
நன்மையாவது,
சம்சாரி சேதனுக்கு, இவனே சர்வ ஸ்மாத் பரன் என்றும்,
சர்வ ஸூலபன் என்றும்,
சர்வ சமாஸ்ரயணீயன் என்றும் சொல்லுகை அன்றோ?
அவையே அன்றோ முதல் திருவாய்மொழி தொடங்கி அருளிச்செய்தது?
அன்றிக்கே, எம்பெருமானுடைய விஜயங்களைத் தொடுத்துச் சொன்ன இப்பத்தும்’ என்னுதல்.

மேவிக் கற்பார்க்கு வென்றி தரும் –
சாதாரமாக -ஆசையோடு கற்பார் யாவர் சிலர், அவர்களுக்கு விஜயத்தைப் பண்ணிக் கொடுக்கும்.
ஐஸ்வர்யார்த்திக்கு -செல்வத்தை விரும்புகிறவனுக்குச் செல்வத்திற்குத் தடையாக வுள்ளனவற்றை வென்று கொடுக்கும்;
கேவலனுக்கு விரோதியைப் போக்கிக் கொடுக்கும்;
பகவானைச் சரணம் அடைந்தவர்களில் உபாசகனுக்கு
இந்திரிய ஜயாதிகளை -ஐம்புலன்களையும் வெல்லுதல் முதலியவற்றைச் செய்து கொடுக்கும்;
பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று கொடுக்கும்.

(இது தான் ‘குலந்தரும்’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும்-
ஐஸ்வர்ய கைவல்ய பகவல்லாபங்களை ஆசைப்பட்டவர்களுக்கு அவற்றைக்கொடுக்கும்-
கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக்கட்டிக் கொடுக்கும்-
பிரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் கால க்ஷேபத்துக்கும்
போகத்துக்கும் ஹேதுவாயிருக்கும்’ –முமுக்ஷூப்படி. திருமந்திரம். சூ. 18-21.)

ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றுங் காட்டி
வாழி தனால் என்று மகிழ்ந்து நிற்க-ஊழிலவை
தன்னை இன்று போற் கண்டு தானுரைத்த மாறன் சொல்
பன்னுவாரே நல்லது கற் பார்–திருவாய்மொழி நூற்றந்தாதி-64

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-4-10–

December 31, 2018

கோவர்த்தன உத்தாரணம் பண்ணி ரஷித்த செயலை அனுசந்திக்கிறார்

மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆ நிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே–7-4-10-

மேய் நிரை கீழ் புக –
மேய்கிற பசுக்கள் புல்லும் உமிழாதே அசை யிட்டுக்கொண்டு கீழே புகுர.

மா புரள –
மலையை எடுத்து மறிக்கையலே அங்கு வாழ்கின்ற மிருகங்கள் எல்லாம் புரண்டு விழ.

சுனை வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய-
சுனையிடத்து நிறைந்து நிற்கிற நீரானது, நிறை குடத்தைக் கவிழப் பிடித்தால் போலே
ஒலித்துக் கொண்டு சொரிய.
ஒரு மழை காக்கப் புக்கு அங்கே பல மழையை உண்டாக்கினபடி.

இன ஆநிரை பாடி அங்கே ஒடுங்க –
பசுத்திரளும் திருவாய்ப்படியும் அங்கே ஒடுங்கவும்.

அப்பன்-
ஆபத் சகனான -ஆபத்திற்குத் துணைவனான உபகாரகன்.

தீ மழை காத்து –
விநாசத்தை -கேட்டினை விளைக்க வந்த மழையாகையாலே ‘தீ மழை’ என்கிறார்.
ஆயர்களும் பசுக்களும் அன்றிக்கே அன்று தாமே அன்றோ நோவுபட்டார்?

குன்றம் எடுத்தானே –
மலையை எடுத்துக் காத்த மஹோபகாரகன்’ என்கிறார்.
பசியினால் உண்டான கோபம் ஆறும் தனையும் மழை பெய்து போவானுக்கு’ என்று
ஏழு நாள் அன்றோ மலையைத் தரித்துக் கொடு நின்று நோக்கிற்று?
ராவணன் முதலானோர்கள் ஆனால் அன்றோ அழியச் செய்யலாவது?
அநுகூலனால் வந்த பிரதிகூல்யம் -கேடு ஆகையாலே செய்யலாவது இத்தனையே அன்றோ?
இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,
ஆஸ்ரிதன் தப்பினாலும் தான் பொறுத்து ரஷிக்கும் என்பதனைத் தெரிவித்தபடி.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்