Archive for November, 2018

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-11–

November 28, 2018

இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பரமபதம் ஸூலபம் -எளிது,’ என்கிறார்.

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே–4-10-11-

ஆள் செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன் –
அடிமை செய்து சர்வேஸ்வரனைக் கிட்டினவர்.
முறையிலே சர்வேஸ்வரனைப் பற்றினவர் ஆயிற்று இவர். என்றது,
விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் –வியக்கத்தக்க உடலின் சேர்க்கை ஈசுவரனுக்கு
அடிமை செய்யும்பொருட்டு’ என்கிறபடியே, அவன் கொடுத்த உபகரணங்களை -உறுப்புகளைக் கொண்டு-
அப்ராப்த – உலக விஷயங்களிலே போகாமல்,‘தந்த நீ கொண்டாக்கினையே’ என்கிறபடியே,
வகுத்த விஷயத்துக்கே சேஷமாக்கி -உரியதாக்கிக்கொண்டு கிட்டினமையைத் தெரிவித்தபடி.
ஆட்கொள்ளுகைக்கு உபாயம் அவன் கையிலே உண்டு போலே காணும்,
தான் விருத்தவானாய்க் காணும் இவரை விருத்தியிலே சேர்ப்பித்தது.
கையில் திருவாழி சேர்ந்தால் போலே ஆயிற்று இவரும் சேர்ந்தபடி.
கெடு மரக்கலம் கரை சேர்ந்தாற்போலே இருத்தலின் ‘சேர்ந்த’ என்கிறார்.

ஆட்செய்கையாவது, அடிமை செய்கை. மனத்தால் செய்தல், வாக்கால் செய்தல், காயிக- சரீரத்தால் செய்தல் என
அவ்வடிமைதான் மூன்று வகைப்படும்.
இவற்றுள், மனத்தாலும் சரீரத்தாலும் செய்யும் அடிமைகட்கு இவர் ஆள் அல்லர். ‘என்?’ என்னில்,
பாலாழி நீகிடக்கும் பண்பையாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும் – நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தொல்வினை எம் பால் கடியும் நீதியாய்! நிற்சார்ந்து நின்று.’ பெரிய திருவந். 34’
என்கையாலே. இனி, ‘வாக்கால் செய்யும் அடிமை ஒன்றுமே யானால்.
(நெஞ்சு அழிந்தால் வாசிகமானதுதான் செய்யக்கூடுமோ?’ எனின், ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில்
சொல்லப்பட்ட காரணங்களையுடையவராகையாலே ‘மனம் முன்னே, வாக்குப் பின்னே’ என்னும் நியமம் இல்லை இவர்க்கு)
வாசிகமாகத் திருவாய்மொழி பாடி அடிமை செய்தார் என்கிறதோ?’ என்னில், அன்று;
அப்படியாமன்று இப்பாசுரம்; ‘முனியே நான்முகனே’ என்ற திருவாய்மொழியிலே ஆக வேண்டும்;
இல்லையாகில், சர்வ ஸங்க்ரஹமான -எல்லாவற்றிற்கும் சுருக்கமான முதல் திருவாய்மொழியிலே யாகிலும் ஆக வேண்டும்;
இல்லையாகில், இவர் வாசிகமாக அடிமை செய்த ‘புகழும் நல்லொருவன்’ என்ற திருவாய்மொழியிலே ஆகப்பெறில் சிறப்புடையதாம்.
ஆனால்,தேவதாந்த்ர பரத்வ நிரசன பூர்வகமாக –மற்றைத் தேவர்கள் பரம்பொருள் அல்லர் என்று
மறுத்து அறுதியிட்டுப் பேசுதல் மூலமாகச் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை அருளிச்செய்கையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், முதல் திருவாய்மொழியிலேயாக அமையும்.
ஆனால், பரத்வ நிர்ணயத்திலே பரோபதேசமும் ஆகையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியிலே யாதல்,
அணைவதரவணை’ என்ற திருவாய்மொழியிலே யாதல் அமையும்.
ஆனால், அர்ச்சாவதாரத்திலே பரத்துவம் அருளிச்செய்கையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், ‘செய்ய தாமரைக் கண்ணன்’ என்ற திருவாய்மொழியிலே யாதல் அமையும்.
ஆனால், பரோபதேசம் பண்ணுகையாலே சொல்லிற்று ஆனாலோ?’ என்னில், அதுவும் ஒண்ணாது. ‘என்னை?’ எனின்,
வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழி தொடங்கிப் பலவிடங்களிலும் பரோபதேசம் செய்தார்;
அவற்றிலும் ஆகப் பெற்றதில்லை.

ஆனால், யாது ஆவது!’ என்னில், இந்த ‘ஒன்றும் தேவும்’ என்ற திருவாய்மொழியிலே,
திருக் குருகூரதனுள் பரன் திறமன்றிப் பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே,’ என்று,
பொலிந்து நின்ற பிரானே எல்லாப் பொருள்கட்கும் அறப் பெரியவன் என்று இவர் அருளிச் செய்யக் கேட்டு,
கபால நன்மோக்கத்துக் கண்டு கொண்மின்’ என்ன, கண்டு, உலகம் எல்லாம் திருந்தி ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆனார்கள்.
இவர்தாம் அவர்களுக்கு மங்களாசாசனம் பண்ணும்படி அன்றோ அவர்கள் தாம் திருந்தினபடி?
பொலிக பொலிக’ என்று இதற்கென்ன ஒரு திருவாய்மொழி நேருகிறாரே அன்றோ?
சர்வேஸ்வரன் திரு அவதரித்துத் திருத்தப் பார்த்த இடத்தும் திருந்தாத சம்சாரத்திலே இவர் திருத்தத் திருந்தினபடி.
இனி, இவர்க்குத் தத்வ நிர்ணயம் பண்ண வேண்டாதபடி இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலத்
தடங்கடற்பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே’ ஆம்படி திருத்துகையாலே,
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்’ என்கிறார்.

வண் குருகூர் நகரான் –
இந்த நன்மைக்குக் காரணம் அவ்வூரில் பிறப்பு ஆயிற்று.

நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் –
நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய்மொழியிலே சம்சாரிகள் -இம் மக்கள் படுகிற துன்பத்தை நினைத்து,
சாத்தின மாலையும் வாடி இருந்தது முன்பு;
இப்போது, பகவானுடைய பரத்வத்தை உபபாதித்து -விரித்து அருளிச் செய்து,
இனி இவர்களுக்கு ஒரு குறை இல்லை,’ என்று தேறின பின்பு,
இட்ட மாலையும் செவ்வி பெற்றதாயிற்று; ஆதலின், ‘நாள் கமழ் மகிழ் மாலை’ என்கிறது.
(திரு குருகூர் பாசுரம் மட்டும் தான் மகிழ் மாலை–மொய்ம் மகிழான்
வகுளாபரணன் இவரே சொல்லி அருளி- தம்முடைய பெருமை அருளி / கலியன் -சீர்காழி)

மாறன் சடகோபன் –
பகவானை அடைவதற்குத் தடையாக -பகவத் பிராப்தி பிரதிபந்தகமான -உள்ளனவற்றிற்கு எல்லாம் யமன் ஆனவர்.

வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார் –
தம்முடைய அபிநிவேச அதிசயத்தாலே -ஆசையின் மிகுதியாலே அருளிச்செய்த பாடல் ஆயிரத்திலும்
இப் பத்தையும் வல்லார்.
சிலர் தாந்தராய் -ஐம்பொறிகளையும் அடக்கினவர்களாய் வந்து நின்று கேட்கச் சொல்லுகிறார் அல்லர்;
தம்முடைய வேட்கையால் சொல்லுகிறாராதலின், ‘வேட்கையால் சொன்ன’ என்கிறார்.

மீட்சி இன்றி வைகுந்த மாநகர் வல்லார் கையது –
இரண்டும் இவர்கள் கையது.
மீண்டு வருதல் இல்லாத பரமபதமானது இவர்கள் கையது.
இந்தப் பத்தும் பத்தாக இவர்கள் கையது பரமபதம்.
இப்பொருளில் ‘மற்றது’ என்பது அவ்யயமாய் -இடைச்சொல்.
அன்றிக்கே, ‘மற்றது’ என்பதனை வைகுந்த மா நகருக்கு அடைமொழியாக்கி, ‘
மற்றையதான – அதாவது, சம்சாரத்துக்கு -இவ்வுலக வாழ்க்கைக்கு எதிர்த்தட்டான
வைகுந்த மாநகரமானது இவர்கள் கையது,’ என்னலுமாம்.
அன்றிக்கே, ‘பகவானுடைய பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்;
அதற்குமேல், ஞான பல ரூபமான கைங்கரியத்திற்கு ஏகாந்த தேசமான பரமபதமும்
இவர்களுக்கு எளிதாம்,’ என்னலுமாம்.

ஒன்று மிலைத் தேவிவ் வுலகம் படைத்த மால்
அன்றி என ஆரும் அறியவே – நன்றாக
மூதலித்துப் பேசி யருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை—திருவாய்மொழி நூற்றந்தாதி–40–

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-10–

November 28, 2018

தன் ஐஸ்வரியத்தில் ஒன்றும் குறையாமல் வந்து திருநகரியிலே நின்றருளுகின்ற
பொலிந்து நின்ற பிரானுக்கு அடிமை செய்கையே தக்கது,’ என்கிறார்.

உறுவது ஆவது எத் தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத் தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூர தனுள்
குறிய மாண் உரு வாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே–4-10-10-

நீள் குடக்கூத்தனுக்கு ஆட்செய்வதே உறுவது ஆவது,’ என்க.
உறுவதும் இது –
சீரியதும் இது; ஸூ சகமும் -ஆவதும் இது – செய்யத்தக்கதும் இது,’ என்னுதல்.
அன்றிக்கே, ‘உறுவதாவது இதுவே’ என்னுதல்.

எத்தேவும் எவ்வுலகங்களும் –
எல்லாத் தேவர்களும், தேவர்களுக்கு போக ஸ்தானமான -இன்பத்தை அனுபவிப்பதற்குரிய இடங்களான எல்லா உலகங்களும்.

மற்றும் –
மற்றும் உண்டான சேதன -உயிர்ப்பொருள்களும் -அசேதனங்களும் -உயிரல்பொருள்களும்.

தன்பால் மறு இல் மூர்த்தியோடு ஒத்து –
தன்னிடத்து வந்தால் மறு இல்லாதபடி மூர்த்தியோடு ஒத்து. என்றது,
இவை மூர்த்தியாமிடத்தில்-அப்ராக்ருத – பிரகிருதி சம்பந்தம் இல்லாத விக்ரஹத்தைப் போன்று
குறைவு இன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.
மறு ஆகிறது – குற்றம்; அதாவது, குறைவு; இது இன்றிக்கே இருக்கை.
ப்ருதக் ஸ்தித்யாதிகள் – பிரிந்து நிலைத்திருக்கையும் தோன்றுதலும் முதலானவைகள் இன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தவாறு.
அன்றிக்கே, மறுவையுடைத்தான விக்ரஹம் – ஸ்ரீவத்ஸத்தையுடைத்தான விக்ரஹம்;
அதனோடு ஒத்து என்னுதல்; மறு – ஸ்ரீவத்சம்; இல் – வீடு; இருப்பிடம்.
அன்றிக்கே, மறு இல்லாத மூர்த்தி உண்டு – ஹேய ப்ரத்யநீகமான குற்றங்கட்கு எதிர்த்தட்டான விக்கிரகம்;
அதனோடு ஒத்து’ என்னுதல்;
மறு – குற்றம். இவை சரீரத்தோடு ஒத்திருத்தலாவது என்?’ என்னில்,
ப்ருத ஸ்தித்ய நர்ஹா – பிரிந்து நிலைத்திருத்தலுக்குத் தகுதியில்லாத
ஆதார ஆதேய பாவ –
நியந்த்ரு நியாம்ய ஏவுகின்ற ஏவப்படுகின்ற பாவ –
சேஷி சேஷ பாவமான சரீர லக்ஷணங்கள்
இவற்றிற்கு உண்டு ஆகையாலே.
மரத்திலே தேவதத்தன் நின்றால் அது அவனுக்குச் சரீரமாகாதே அன்றோ?
இங்கு அங்ஙன் அன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.
(அந்தராத்மா -சரீர -சரீரி பாவம்-ஒன்றும் தேவும் இருந்ததோ ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் பிழைத்ததோ -எம்பார்
யஸ்ய சேதனச்ய த்ரவ்யம் —யதால் காக்கக்படுகிறதோ -ஆத்மா -தாரயித்வம்
நியந்தும் தரித்தால் மட்டும் போதாதே
மரத்தின் மேலே தேவ தத்தன் நின்றான் -தாங்கும் இங்கு சேஷ -நியமிக்காதே
சேஷ தைக -ஸ்வாபவம் -மூன்றாவது-யாரும் யாரையும் நியமிக்கலாமே லோகத்தில் –)

இத்தனையும் நின்ற வண்ணம் தன்பால் நிற்க –
இவை யடங்கலும் இருந்தபடியே தன் பக்கலிலே நிற்க.
தன்னை ஒழிந்த எல்லாப் பொருள்களும் தனக்குச் சரீரமாகையாலே அடிமையாம்படி –
சரீரதயா சேஷமாய் -இருக்கிற இந்த ஐஸ்வரியத்தில் ஒன்றும் குறையாதபடி வந்து நிற்கை. என்றது,
உபய விபூதி யுக்தன் ஆகையால் – -இரு வகையான உலகங்களையும் உடையவனாகையாலே வந்த ஐஸ்வரியம்
அடையத் தோற்றும்படிக்கு ஈடாக ஆயிற்று இங்கு வந்து நிற்கிறது,’ என்றபடி.
நன்று; தாழ நிற்கிற இடத்தில் ஐஸ்வரியம் தோற்றுமோ?’ எனின்,
ராஜபுத்திரன் ஓர் ஒலியலை உடுத்துத் தாழ இருந்தாலும் சேஷித் தன்மையில்-ஐஸ்வர்யத்தில் – குறைந்து தோன்றாதே அன்றோ?

செறுவில் செந்நெல் கரும்போடு ஓங்கு திருக்குருகூர் அதனுள் –
வயல்களில் செந்நெற்பயிர்களானவை கரும்போடு ஒக்க ஓங்காநின்றுள்ள திருக்குருகூரதனுள்;
தேச விசேஷத்திலே -பரமபதத்திலே எல்லாரும் ஒருபடிப்பட்டு இருக்குமாறு
போலே, அவ்வூரில் பொருள்களில் ஒன்றில் ஒன்று குறைந்திருப்பதில்லை;

குறிய –
கோடியைக் காணியாக்கினாற்போலே, கண்களால் முகக்கலாய் இருக்கும்படி வடிவை அமைத்தபடி.

மாண் உருவாகிய –
இட்ட போதொடு இடாத போதொடு வாசியற முகமலர்ந்து போகும் படியாக இரப்பிலே தழும்பு ஏறினபடி.

நீள் குடக் கூத்தனுக்கு –
குடக்கூத்து ஆடிவிட்ட பின்பும்,மநோ ஹாரி -சேஷ்டிதத்தை – மனத்தைக் கவர்கின்ற அச்செயலைப்
பிற்பட்டகாலத்தில் கேட்டார்க்கும் சம காலத்திலே கண்டாற்போலே பிரீதி பிறக்கும்படியாயிற்றுக் குடக்கூத்து ஆடிற்று.

ஆள் செய்வதே –
அச் சேஷ்டிதம் -செயல் தானே அடிமையிலே மூட்டும்; நீங்கள் இசையுமத்தனையே வேண்டுவது.
சேஷ்டிதமே அடிமையிலே மூட்டும் -அதற்காக அன்றோ திருவவதாரம் -இசைவே வேண்டுவது

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-9–

November 28, 2018

நீங்கள் உஜ்ஜீவனத்துக்கு -உய்வு பெறுவதற்கு அவ்வளவும் செல்ல வேண்டுமோ?
அவன் தங்கியிருக்கிற திருநகரியை உங்கள் ஞானத்துக்கு விஷயமாக்க அமையும்,’ என்கிறார்.

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப் பிரான் அமரும்
வளங்கொள் தண்பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக் கொண்டு போகுறிலே–4-10-9-

விளம்பும் ஆறு சமயமும் –
சிலவற்றைச் சொல்லா நின்றால், தாங்களும் சில தர்க்கங்களைச் சொல்லா நிற்பர்களத்தனை போக்கி,
பிரமாணத்திற்கு அநுகூலமான தர்க்கம் அல்லாமையாலே கேவலம் உத்தி சாரமே யாயிருக்கிற புறச் சமயங்கள் ஆறும்.
புறச் சமயங்கள் ஆறாவன: சாக்கிய உலூக்கிய அக்ஷபாத க்ஷபண கபில பதஞ்சலி மதங்கள்.
இது பாஷ்யகாரர் அருளிச்செய்தது.
சாக்கியமதம் – பௌத்த மதம். உலூக்கியமதம் -சார்வாக மதம்.
அக்ஷபாதமதம் – கௌதம மதம். க்ஷபணமதம் – ஜைந மதம்.

மற்றும் அவை ஆகியும் –
மற்றும் அவற்றோடு ஒத்த குத்ருஷ்டிகளும். புற மதத்தில் உள்ளவர்களும் குத்ருஷ்டிகளும்
மோக்ஷ பலனைப் பெறாதவர்கள். அவர்கள் தாமஸ குணமுடையவர்கள் என்று எண்ணப் படுகின்றார்கள்.
தமோ நிஷ்டாஹிதாஸ் ஸ்ம்ருதா

தன்பால் அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப் பிரான் அமரும் –
பிரமாணத்திற்கு மாறுபட்ட தர்க்கங்களால் ‘இவ்வளவு’ என்று அளவிட்டு அறிய ஒண்ணாதபடி இருக்கிற
உலக காரணன் விரும்பித் தங்கியிருக்கிற;
தன்னளவில் வந்தால் ‘இல்லை’ என்கைக்கும் ‘இவ்வளவு’ என்று பரிச்சேதிக்க – அளவிட அரிதாய் இருக்கும்;
இல்லை’ என்னும் போதும்,வஸ்துவை ‘இது’ என்று அளவிட வேண்டுமே?
அதாவது, ‘இவனுடைய சொரூப ரூப குண விபூதிகள் புறம்பான குத்ருஷ்டிகளால்
அசைக்க முடியாதனவாய் இருக்கும்,’ என்றபடி. அதற்கு அடி என்?’ என்றால்,

ஆதிப் பிரான்’
என்கிறார். என்றது,
மே மாதா வந்த்யா–என்னுடைய தாய் மலடி என்ன ஒண்ணாதே அன்றோ?’ என்றபடி.

வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனை –
செல்வத்தை யுடைத்தாய்ச் சிரமத்தைப் போக்கக் கூடியதான-ஸ்ரமஹரமான – நீர் நிலங்களாலே சூழப்பட்டு,
கண்டார்க்கு வைத்த கண் வாங்க ஒண்ணாதபடி காட்சிக்கு இனியதான திருநகரியை.

உளம்கொள் ஞானத்து வைம்மின் –
ஞானம் உதித்து, புறத்தேயுள்ள இந்திரியங்களாலே புறப் பொருள்களில் செல்வதற்கு முன்னே,
மனக் கண்ணுக்குத் திருநகரியை விஷயம் ஆக்குங்கோள்.
உளம் கொள் ஞானம் – மானச ஞானம். என்றது,
பஹிர் விஷயம் -புறத்திலே செல்லாதபடி ஞானத்தை-ப்ரதயக்கர்த்த – உள் விஷயத்தில் (திருநகரியில்)
ஈடுபடும்படியாகச் செய்யப் பாருங்கோள்,’ என்றபடி.

உம்மை உய்யக் கொண்டு போகுறிலே –
சந்த மேநம்- இவனை இருக்கின்றவனாக அறிகிறார்கள்’ என்கிறபடியே,
உம்முடைய சத்தை – இருப்பைப் பெற்றுப் போகவேண்டியிருக்கில்.
அசந்நேவா இல்லாதவனாக ஆகிறான்’ என்கிறபடியே, ‘சென்றற்றது’ என்றே இருக்கிறார் ஆயிற்று இவர். –
மஹாத்மநா – தன்னில் தான் வாசி சொல்லுமத்தனை போக்கிப் புறம்பு ஒரு ஒப்புச் சொல்ல ஒண்ணாத படியான
பெருமாளோடே விரோதம் உண்டு;
ஆகையாலே, நேயமஸ்தி–ஸ்ரீராமா சுந். 43 : 25. ‘தன்னில் தான் வாசி
சொல்லுமத்தனை போக்கி’ என்றது, ‘அவதார வேடத்தோடே நின்ற
ஸ்ரீராமபிரானாகிய தனக்கு, பரத்துவ ஆகாரமே ஒப்பு என்று சொல்லுமத்தனை
போக்கி, ஒப்பாகச் சொல்லத்தக்க வேறு பொருள் இல்லை,-
இலங்கையும் இல்லை; இராவணனும் இல்லை; நீங்களும் இல்லை,’ என்று திருவடி கூறினால் போலே.

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-8–

November 27, 2018

இங்ஙனே இருக்கச்செய்தேயும், இதர தேவதா ஸமாச்ரயணம் பண்ணி –
மற்றைத் தேவனாகிய சிவபிரானை வணங்கி – அன்றோ மார்க்கண்டேயன் தான் விரும்பிய பயனைப் பெற்றது?’ என்ன,
ஆகில், இருந்தபடி கேட்கலாதோ?’ என்கிறார்.

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

புக்கு அடிமையினால் –
அடிமையினால் புக்கு; என்றது, ‘சர்வேஸ்வரனுக்கு அடிமை என்று புக்கான் அல்லன்;
உருத்திரனுக்கு அடிமை’ என்று புக்கான்,’ என்றபடி.

தன்னைக் கண்ட –
காணப் பெறாமையாலே தான் இழந்தான் அல்லன்.
ஆக, ‘போற்றி வணங்கிய தன்மையில் குறையினாலே இழந்தான் அல்லன்;
காணப் பெறாமையாலே இழந்தான் அல்லன்,’ என்றபடி.

மார்க்கண்டேயன் அவனை –
மார்க்கண்டேயனானவனை

நக்கபிரான் –
நக்கன் – நக்நன். ‘பிரான்’ என்கிறார், தன்னுடைய கோஷ்டிக்கு உபகாரகனாய் இருக்கையாலே.
அன்றிக்கே, ஞானத்தினைக் கொடுக்கக் கூடியவன் ஆதலாலே ‘பிரான்’ என்கிறார் என்னுதல்.
மேல், ‘நாராயணன்’ என்கையாலே, ‘அவனுக்கு அடிமையாமிடத்தில் உன்னோடு என்னோடு வாசியில்லை’ என்று
ஞானோபதேசத்தைச் செய்து அவன் திருவடிகளிலே காட்டிக் கொடுத்தான் என்கை.

அன்று உய்யக் கொண்டது –
ஆபத்துக் காலத்திலே பாதுகாத்தது.

நாராயணன் அருளே –
நாராயணனுடைய திருவருளாலேயாம். என்றது, நீ நெடுநாள் பச்சையிட்டு என்னை வணங்கினாய்;
அவ்வணக்கம் பயன் அற்றுப் போயிற்றதாக ஒண்ணாது,’ என்று அவனை அழைத்து,
நானும் உன்னைப்போன்று ஒருவனை ஆஸ்ரயித்துக் காண் இப்பதம் பெற்றது;
ஆதலால், இனி உன்னுடைய விருப்பத்தை நம்மால் செய்து முடிக்க இயலாது;
இனி ஊண் கொடுத்தல் உபதேசங் கொடுத்தலே அன்றோ?’ என்று அவனைக் கொண்டுபோய்ச் சர்வேஸ்வரன்
பக்கலிலே காட்டிக் கொடுத்தமையைத் தெரிவித்தபடி.
அருள்’ என்ற பெயர்ச் சொல் எல்லா வேற்றுமையோடும் சேரத் தக்கதாகையாலே,
அருளாலே’ என்று மூன்றாம் வேற்றுமையாக விரித்துக்கொள்க.
அன்றிக்கே, ‘சிவபிரான் இவனைக் காப்பாற்றிக்கொண்டது சர்வேஸ்வரன் திருவருளைப் பண்ணிக் கொடுத்து’ என்று
இரண்டாம் வேற்றுமையாக விரித்துப் பொருள் கோடலுமாம்.
இவன் புருஷகாரமாய் நின்று திருவருள் புரியச் செய்தான்,’ என்றபடி.

கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூரதனுள் –
கொக்குப் போன்று வெளுத்த நிறத்தை யுடைய மலர்களை உடைத்தா யிருப்பதாய்ப் பெருத்திருந்துள்ள
தாழைகளை வேலியாக உடைத்தாயிருக்கின்ற திருநகரியாயிற்று;
இதனால், நிலத்தியல்பு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.

மிக்க ஆதிப்பிரான் நிற்க –
அறப் பெரிய உலகத்திற்கெல்லாம் காரணமாயுள்ளவன் நிற்க;
மிக்க’
என்றதனால், சொல்லும் போது கனக்கச் சொல்லி, கிட்டினவாறே குறைந்திராதொழிகையைத் தெரிவிக்கிறார்.
என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், நெடுநாள் தன்னை வணங்கும்படி செய்துகொண்டு பின்பு
காரிய காலத்தில் வந்தவாறே வேறே ஒருவன் வாசல் ஏறக் கொண்டு போக வேண்டா திருக்கையைத் தெரிவித்தபடி.

மற்றைத் தெய்வம் விளம்புதிரே
பிரகாரங்களில் –‘சரீரங்களிலே ஒன்றை ஈஸ்வரனாகச் சொல்லுகின்றீர்கோளே!’ என்றது,
அவனுக்குச் சரீரமாய் அல்லது ஒன்றற்கும் பொருளாகும் தன்மை இன்றிக்கே யிருக்க,
விளம்புதிரே’ என்ற ஏகாரத்தால்,வியவஹரிக்கைக்கும் – எடுத்துப் பேசுவதற்கும் தகுதி இல்லை’
என்று இருக்கிறார் காணும் இவர்.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-7–

November 27, 2018

அது செய்கிறோம்; ‘மற்றைத் தேவர்கட்கும் உயர்வுகள் சில உண்டு,’ என்று நெடுநாள்
அவர்கட்குப் பச்சை இட்டுப் போந்தோம்; அப் பச்சையின் பயன் அற்றுப் போகாமல் இன்னம் சிலநாள்
அவை பலிக்கும்படி கண்டு பின்பு பகவானை அடைகிறோம்,’ என்ன,
அவையும் எல்லாம் செய்து கண்டீர்கோள் அன்றோ?’ இனி அமையும் காணுங்கோள்,’ என்கிறார்.

ஓடி ஓடிப் பலபிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட் கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே–4-10-7-

ஓடிஓடி –
கதா கதாம் காம காமா லபந்தே-ஸ்ரீ கீதை, 9 : 21. -ஸ்வர்க்கம் முதலான உலகங்களில் விருப்பம் உள்ளவர்கள்,
போவதையும் வருவதையும் அடைகிறார்கள்,’ என்கிறபடியே,
போவது, பிறவிகளோடே வருவதாய்த் திரிந்தது இத்தனை அன்றோ?

பல பிறப்பும் பிறந்து –
ஆத்மா என்றும் உள்ளவன்; அசித்தும் அப்படியே; அசித்னுடைய சேர்க்கையும்-சம்சர்க்கமும் – என்றும் உள்ளதாய்,
கர்மப் பிரவாஹத்தாலே பரம்பரையாய் வருகிற பிறவிகளும் உருவப் போருகிறது;
நீங்கள் முன்னும் பின்னும் அறியாமலே அன்றோ ‘இது ஒரு பிறவியே உண்டாயிற்று,’ என்று இருக்கிறது?

மற்றும் ஓர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து –
வேறு ஒரு தெய்வத்தை அடைந்து பிரீதியினாலே தூண்டப்பட்டவராய்ச் சொல்லி,
அவ்வளவில் முடிவு பெறாமல் வேறுபட்டவராய், மாம் நமஸ்குரு -‘என்னை நமஸ்காரம் செய்’ என்கிறபடியே,
பகவத் விஷயத்தில் உட்புகுமளவும் உட்புகுந்து. என்றது,
இப்படி அநாதியாகத் தொடர்ந்து போதருகிற பிறவிகளிலே ஒரு பிறவி ஒழியாமல் மற்றைத் தேவர்களை
அடைக்கலமாக அடைந்து போந்தீர்கள்; அது செய்கிறவிடத்தில் முக்கரணங்களாலும் செய்தீர்கள்;
ஆதலால், பற்றுகிற தன்மையில் குறையால் பலியாது இருந்தது அன்று; அதில் குறை இல்லை,’ என்றபடி.

பல்படிகால் –
ஒருவகையாகப் பற்றி-ஆஸ்ரயித்து – விட்டீர்களோ?
தர்ப்பண ஜப ஹோம பிராஹ்மண போஜனாதிகளைக் குறித்தபடி.
பல வகைகளால் -பிரகாரங்களால் -பற்றினீர்கள்.

வழி ஏறிக் கண்டீர் –
அவ்வத் தேவர்களைப் பற்றும்படி சொன்ன சாஸ்திர மரியாதை தப்பாமல் பற்றி
அதன் பலமும் கண்டீர்கோள் அன்றோ? ‘நன்று;
பல் படி கால் வழி ஏறிக் கண்டீர்’
என்கைக்கு, ‘இவர்கள் ஒரு பிறவியிலும் பகவானிடத்தில் அடைக்கலம் -ஸமாச்ரயணம் -புகுந்திலர்கள்’ என்று
இவர் அறிந்தபடி எங்ஙனே?’ என்னில், இப்போது தாம் இந்தப் பொருளை உபதேசிக்க வேண்டும்படி
இவர்கள் இருக்கக் காண்கையாலே, ‘இதற்கு முன்னர் இவர்கள் பகவானிடத்தில் அடைக்கலம் புகுந்திலர்கள்,’
என்று அறியத் தட்டு இல்லையே அன்றோ?

ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் தனம் இச்சேத் உதாஸநாத்
ஈஸ்வராத் ஞானம் அந்விச்சேத் மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தநாத்’–என்பது பிரம்மாண்ட புராணம்.
சூரியனிடமிருந்து ஆரோக்கியத்தை விரும்பக்கடவன்;
அக்னியிடமிருந்து செல்வத்தை விரும்பக்கடவன்; சிவனிடமிருந்து ஞானத்தை விரும்பக்கடவன்’ என்கிறபடியே,
பகவானிடத்தில் அடைக்கலம் புகுந்திருப்பார்களேயானால் முத்தர்கள் ஆவார்கள்-
மற்றைத் தேவர்களைப் பற்றிய காரணத்தினாலேயே இவ்வளவும் வர இறந்தும் பிறந்தும் போந்தார்கள்;
பிரஹ்மாணம் ஸிதிகண்டம் ச யாச்ச அந்யா: தேவதா: ஸ்மிருதா:
பிரதிபுத்தா ந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம்’–என்பது, பாரதம், மோக்ஷ தர்மம், 169 : 35.
பிரமனையும் சிவனையும் மற்றும் ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கும் தேவர்களையும்
மோக்ஷத்தில் இச்சையுடையவர்கள் சேவிக்கமாட்டார்கள்; ‘என்னை?’ எனின்,
அந்தத் தேவர்களிடமிருந்து கிடைக்கும் பலம் மிகச் சிறியது,’ என்கிறபடியே
மோக்ஷபலம் சித்திக்க வேணும்’ என்று இருக்கிறவர்கள், புன் சிறு தெய்வங்களைப் பின் செல்லார்களே அன்றோ?
அதற்குக் காரணம், அவர்களால் கொடுக்கப்படுமவை அழியக்கூடிய பலன்களாகையாலே.
ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா- முருகன் சிவன் இந்திரன் முதலான தேவர்கள் ஆராதிக்கும் விஷயத்தில்
விலக்கப்பட்டிருக்கிறார்கள்,’ என்றதே அன்றோ சாஸ்திரமும்?
ப்ரதிஷித்தாஸ்து பூஜநே-என்றது இறே -த்வயாபி பிராப்தம் இத்யாதி –

(அங்காக்கைக்கே மங்கைக் கீந்தான் அரங்கன் அவனிக்குவாய்
அங்காக்கைக்கே பசித்தானிற்கவே முத்தியாக்கித் துய
ரங்காக்கைக்கே சிலர் வேறே தொழுவர் அருந்திரவி
யங்காக்கைக்கே தனத் தாள் தருமோ திரு அன்றியிலே?

சித்திக்கு வித்ததுவோ இதுவோ என்று தேடிப் பொய்ந்நூல்
கத்திக் குவித்த பல் புத்தகத்தீர்!கட்டுரைக்க வம்மின்;
அத்திக்கு வித்தனையும் உண்ட வேங்கடத் தச்சுதனே
முத்திக்கு வித்தகன் என்றே சுருதி முறையிடுமே.’ என்ற திவ்விய கவியின் திருவாக்குகள்)

ஒருவன் பகவானைத் தியானம் செய்துகொண்டிருக்கச்செய்தே, ‘இவன் சமாதியிலே நின்ற நிலையை அறியவேண்டும்’ என்று
பார்த்துச் சர்வேஸ்வரன் இந்திரன் வேடத்தை பரிக்ரஹம் பண்ணி – மேற்கொண்டு ஐராவதத்திலே ஏறி வந்து முன்னே நின்று,
உனக்கு வேண்டுவது என்?’ என்ன,
ஒரு புழுவும் தானுமாய் வந்து நிற்கிறவன் யார்?’ என்றான்;
சர்வேஸ்வரன் பெரிய திருவடியை மேற்கொண்டு வந்தான்’ என்னுமிடம் அறியானே,
கொண்டு வந்த வேடம் இதுவாகையாலே?’ வந்தவனைப் பார்த்து,
நீ யாவன் ஒருவனை அடைந்து இந்தச் செல்வம் முழுதும் பெற்றாய்? அப்படிப்பட்டவனைக் காண் நான் பற்றுகிறது;
இப்படி வழியிலே போவார்க்கு எல்லாம் பச்சை யிட்டுத் திரியுமவன் அல்லேன் காண்;
இப்போது முகம் காட்டாதே போக வல்லையே பிரானே! உன்னைக் கும்பிடுகிறேன்,’ என்றானே அன்றோ?

பகவானிடத்தில் அடைக்கலம் புகுந்து ஞானாதிகராய் இருப்பார் ஒருவர், இருந்து தம்முடைய வஸ்திரத்தைப் புரையா நின்றாராய்,
அவ்வளவிலே தேவியும் தேவனுமாகப் போகா நிற்க, இவர் அநாதரித்திருந்தாராய்,
தேவியானவள், ‘நீர் எல்லார்க்கும் பெரியராய் இருக்க, உம்மைக் கண்ட இடத்தில் இவன் அநாதரித்துக்
காலை நீட்டிக் கொண்டிருந்தானே!’ என்ன,
தேவனும், ‘அவன் பகவத் பத்தன் போலே காண்,’ என்ன,
தேவியும், ‘அதுதான் இருக்கிறபடி அறிவோம்,’ என்ன,
இருவரும் இவர் பக்கலிலே வந்து, ‘நீ என்? தேவர்களை மனிதர்கள் கண்டால் அவர்களிடம் சென்று வேண்டும்
வரங்களும் வேண்டிக்கொள்ளக் கடவர்களாய் இருப்பார்கள்;
நீ நம்மைக் கண்ட இடத்தில் நீட்டின காலை முடக்குதல், சில உபசாரங்களைச் செய்தல்,
சிலவற்றை வேண்டிக்கோடல் செய்யாமல் இருந்தாயே?’ என்ன,
அழகிது! அவை யெல்லாம் செய்யக்கடவன், மோக்ஷம் தரலாமோ?’ என்ன
அது நம்மாலே செய்யலாமதன்று; பகவானிடத்தில் சரணாகதி செய்து அவன் திருவருளாலே பெற வேண்டும்,’ என்ன,
ஆகில், இன்று சாவாரை நாளை இறக்கும்படி பண்ணலாமோ?’ என்ன,
அதுவும் கர்மங்களுக்குத் தகுதியாக அன்றோ இருப்பது? நம்மால் செய்யப் போகாது,’ என்ன,
ஆகில், நீ செய்யுமது, இந்த ஊசி போகும் வழியே நூலும் போகும்படி திருவருள் புரிந்து நடக்குமித்தனை,’ என்ன,
தேவனும் கோபத்தாலே நெற்றியில் கண்ணைக் காட்ட,
இவரும் காலிலே பல கண்களை உண்டாக்கிக் காட்டினார்,’ என்ற சரிதம் இங்கு நினைக்கத் தகும்.

கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூர் அதனுள் –
உங்களால் அடையப்படுகின்ற தேவர்கள் இவ்வளவும் உங்களைக் கும்பீடு கொண்டு, இத்தனை போது சென்று
அங்கே ஆஸ்ரயியா- வணங்கா நிற்பர்கள்; அவர்கள் செய்கின்ற வற்றைக் கண்டாகிலும் நீங்களும் அவனை வணங்கப் பாருங்கோள்-
தலை யறுப்பாரும் தலை யறுப்புண்பாருமாய், கிராமணிகளைப் போலே ஒருவரை ஒருவர் வேரோடே அலம்பிப்
பொகட வேண்டும் படியான விரோதம் செல்லா நிற்கச் செய்தேயும்,
ஆபத்து எல்லார்க்கும் ஒத்திருக்கையாலே எல்லாரும் ஒரு மிடறாய் ஏத்தா நிற்பர்கள்,
ஒருவர்க்கு ஒருவர் விரோதமும் கிடக்கச் செய்தே, ‘ஊராகக் கூடி வந்தது’ என்பார்களே அன்றோ?

ஆடு புட்கொடி மூர்த்தி –
வெற்றிப் புள்ளைக் கொடியாக வுடையவன்;
அடியார்களுடைய விரோதிகளை அழிக்கும் விஷயத்தில் சர்வேஸ்வரன் செய்ய வேண்டுவது ஒன்றும் இன்று;
திருவடி திருத் தோளிலே சலியாமல் இருக்கு மத்தனையே வேண்டுவது,’ என்பார், ‘ஆடு புள்’ என்கிறார்.
ஆடு புள் -வெற்றிப் புள்; ஆடு – வெற்றி. புள் – பறவை. -கொற்றப் புள் ஓன்று ஏறி-கலியன்-
அன்றிக்கே, ‘சர்வேஸ்வரன் வாஹனம் என்கிற மகிழ்ச்சியின் மிகுதியாலே மதித்து ஆடா நின்ற புள்’ என்றுமாம்.
கருடக் கொடியன், கருட வாஹநன்’ என்று சொல்லப் படுமவனாயிற்று மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவன் ஆவான்.

ஆதி மூர்த்திக்கு –
காரணந்து த்யேய– காரணப் பொருளாக உள்ளவனே தியானிப்பதற்கு உரியன்,’ என்கிறபடியே,
உலக காரண வஸ்துவே யன்றோ உபாசிக்கத் தக்கதாவது?
ஆக, மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவனுமாய்-மோக்ஷ ப்ரதனுமாய் –
சர்வ நியாந்தாவுமாய் -எல்லாரையும் நியமிக்கின்றவனுமான சர்வேஸ்வரனுக்கு’ என்றபடி.

அடிமை புகுவதுவே –
அடிமை புகுவதுவே செய்யத் தக்க காரியம்.
உங்களுக்குச் செய்ய வேண்டுவது ஒன்று இல்லை;
அவன் உடைமையை அவனுக்காக இசைய அமையும்’ என்பார், ‘புகுவதுவே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகிறார்.
அவன் இதனை ‘என்னுடைமை’ என்றிருக்க,
நீங்களும் ‘என்னுடைமை’ என்றிராமல், ‘அவனது’ என்று இசைய அமையும்,’ என்றபடி.
அடிமை புகுவது’ என்ற இடம், விதியாய், ‘கண்டீர்’ என்கிற இடம், அதுவும் செய்து பார்த்தீர்கோள் அன்றோ?
இனி, அவன் திருவடிகளில் அடிமை புகப் பாருங்கோள்,’ என்கிறார்.

யயாதி சரிதத்தைப் பட்டர் வாசித்துப் போந்திருக்கச் செய்தே, பிள்ளை விழுப்பரையரும் ஆப்பான் திருவழுந்தூர் அரையரும்,
வேதத்தின் பொருளை அறிதற்குக் கருவியாய் வெளிப் போந்த பிரபந்தங்களில்
இது எந்தப் பொருளை விரித்துப் பேசுகிறது?’ என்று கேட்க,
புன் சிறு தெய்வங்களை அடைந்து ஒரு பயனைப் பெற்றாலும், பிறர் பக்கல் ஓர் உயர்வு கண்டால்,
அதனை அவர்கள் பொறுக்க மாட்டார்கள்’ என்றும்,
சர்வேஸ்வரனே ‘பிறர் வாழ்வு நம் வாழ்வு’ என்று நினைத்திருப்பான்’ என்றும் சொல்லி,
ஆன பின்பு, மற்றைத் தேவர்கள் ஆஸ்ரயணீயர்- வணங்கத் தக்கவர் அல்லர்; அவன் ஒருவனுமே
ஆஸ்ரயணீயன் – வணங்கத் தக்கவன் என்னும் பொருளைச் சொல்லுகிறது,’ என்று அருளிச் செய்தார்.

இமவ்ஸ்ம -முனி புங்கவரே! இதற்கு முன் ஏவிய காரியங்களை எல்லாம் செய்து முடித்தவர்களாய்
வந்து உம்மைச் சார்ந்திருக்கிறோம்,’ என்கிறபடியே, தாழ நிற்க வல்லான் இவனேயன்றோ?

யாதவர்கள் முடிவிலே வந்தவாறே வாட்கோரையை இட்டு ஒருவரை ஒருவர் எறிந்து முடிந்து போனார்கள்,’ என்று கேட்டவாறே,
கிருஷ்ணன் இவர்கள் விஷயமாகச் சங்க நிதி பத்ம நிதி தொடக்கமானவற்றைக் கொடு வந்து கொடுத்துச் செய்யாதன இல்லை;
பின்னையும் முடிவிலே வந்தவாறே இப்படியே யாய் இருந்தது;
நாம் பகவானை வணங்குகிற வணக்கத்துக்கும் பலம் அங்ஙனே ஆகிறதோ?’ என்று அஞ்சி யிருந்தோம்,’ என்ன,
அங்ஙன் ஆகாது; அஞ்ச வேண்டா;
அவர்கள் ‘இவன் என் தோழன், மைத்துனன்’ என்று சரீர சம்பந்தத்தைக் கொண்டு விரும்புகையாலே
அவர்களுக்குத் தேகம் எல்லையாய் விட்டது;
நாம் சொரூப ஞானத்தாலே, என்றும் உள்ள ஆத்மாவுக்கு வகுத்த பேறு பெற வேண்டும் என்று பற்றுகையாலே
பேறும்-யாவதாத்ம பாவியாய் -உயிர் உள்ள வரையிலும் இருக்கும்,’ என்று அருளிச் செய்தார்.

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-6–

November 27, 2018

பகவானுடைய பரத்வத்தை நீர் அருளிச் செய்யக் கேட்ட போது வெளிச் சிறத்து அல்லாத போது
தேவதாந்த்ர ப்ராவண்யம் உண்டாகாநின்றது; இதற்கு அடி என்?’ என்ன,
உங்கள் பாபம்’ என்கிறார்.
எம்பெருமானே சர்வேஸ்வரனாகில் எங்களை தேவதாந்த்ர ப்ரவணராக்கி வைப்பான் என்?’ என்ன,
உங்களை இங்ஙனே வைத்தது, ‘புண்ணிய பாவங்களைச் செய்த ஆத்மாக்கள் அவ்வவற்றிற்குத் தகுதியான
பலன்களை அனுபவிக்க வேண்டும்,’ என்று கூறுகின்ற சாஸ்திர மரியாதை அழியும் என்று;
ஆன பின்னர், அதனையறிந்து எம்பெருமானையே ஆஸ்ரயித்து அவன் வஞ்சனத்தைத் தப்புங்கோள்,’ என்கிறார்.

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக் குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே–4-10-6-

போற்றி –
நான் பகவத் விஷயத்தில் செய்வன முழுதும் நீங்கள் இதர தேவர்கள் பக்கலிலே செய்து போருகின்றீர்கோள்;
உங்கள் பக்கல் ஒரு குறை இல்லை; அப்ராப்தம் -அடையத்தகாதனவாய் இருத்தல் ஒன்றே குறை.

மற்றோர் தெய்வம் –
யேப் யான்ய தேவதா பக்தா – அர்ஜூனா! எவர்கள் வேறு தேவர்களிடத்தில் பத்தி யுடையவர்களாய்க் கொண்டு
சிரத்தையோடு பூஜிக்கின்றார்களோ, அவர்களும் என்னையே விதி முன்னாக அன்றியே பூஜிக்கின்றார்கள்,’ என்னுமாறு போலே.

பேண –
அவை தமக்கு என்ன ஒன்று இல்லாமையாலே, அவற்றிற்கு ஓர் உயர்வினைச் சாதித்தல்
அவர்களை அடைகின்ற உங்களுக்கே பரம்’ என்பார், ‘பேண’ என்கிறார்.

புறத்திட்டு –
ஈஸ்வரனாகிய தனக்குப் புறம்பு ஆம்படி செய்து.

உம்மை இன்னே தேற்றி வைத்தது –
உங்களை இப்படியே தெளியும்படி செய்து வைத்தது. என்றது,
நபிபேதி குதஸ்ஸ ந -ஓர் இடத்தில் நின்றும் அஞ்சுகிறான் இல்லை,’ என்கிறபடியே,
நான் மேல் வரும் கேட்டிற்கு அஞ்சாதே-நிர்ப்பரனாய் – பரம் அற்றவனாய் இருக்கின்றால் போலே,
ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமான இதர தேவதைகளைப்பற்றி உங்களுக்கு அவர்கள் பக்கலிலே
ருசி விசுவாசங்கள் உண்டாம்படி செய்து பாரம் அற்றவர்களாய் இருக்கும்படி வைத்தது,’ என்றபடி.

எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே –
எல்லீரும் இருந்ததே குடியாக மோக்ஷத்தைப் பெற்றால், லீலைக்கு அடியான சாஸ்திரம்
நிரர்த்தமாய் -பயன் அற்றதாய் விடும். என்றது,
புண்ணியங்களைச் செய்வாரும் பாவங்களைச் செய்வாருமாய் அன்றோ நாடுதான் இருப்பது?
பாவம் செய்தவர்களும் புண்ணியம் செய்தவர்களுடைய பலத்தை அனுபவிக்குமன்று,
புண்ய புண்யேந கர்மணா பப பாபேந — புண்ணியத்தினாலே புண்ணியனாகவும் பாவத்தாலே பாவியாகவும் ஆகின்றான்’
என்கிற சாஸ்திர மரியாதை குலையும்,’ என்றபடி.
ஆக, பாவம் செய்தவர்கள் அதன் பலத்தினை அனுபவித்தலும், புண்ணியம் செய்தவர்கள் அதன் பலத்தினை அனுபவித்தலும்
ஆகிற சாஸ்திர மரியாதை குலையாதபடியாகச் செய்து வைத்தான் என்றவாறு.
ஆதலால், அதோஸ்மி லோகே வேதேச பிரதித புருஷோத்தம – உலகத்திலும் ( சாஸ்திரங்களிலும் ) வேதங்களிலும்
புருஷோத்தமன் என்று பிரசித்தனாய் இருக்கிறேன்’ என்றவிடத்தில் ‘லோக’ சப்தத்தால்,
பிரமாணத்தைச் சொல்லிற்று என்று கொண்டதைப் போன்று, இங்கும் ‘உலகம்’ என்ற சொல் சாஸ்திரத்தைச் சொல்லுகிறது.

சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு –
அவ்வூரில் உள்ள பொருள்கள் முழுதும் ஒன்றற்கு ஒன்று இசலி வளரா நிற்கும்.
இதனால், ‘உரம் பெற்ற மலர்க்கமலம்’ என்பது போன்று, அவ்வூரிலே உள்ள பொருள்களில்
ஒன்றில் ஒன்று குறைந்திருப்பது இல்லையாயிற்று என்பதனைத் தெரிவித்தபடி.

ஆற்ற வல்லவன் –
அதிசயித சக்தன் -மிகவும் வல்லவன். என்றது, ‘சம்பந்தம் ஒத்திருக்கச்செய்தே,
புண்ணியம் செய்தார் அதன் பலத்தினை அனுபவிக்கவும், பாவம் செய்தார் அதன் பலத்தினை
அனுபவிக்கவும் செய்ய வல்லவன்’ என்றபடி.

மாயம் கண்டீர் –
மம மாயா துரத்யயா -என்னுடைய மாயையானது ஒருவராலும் தாண்டக்கூடாதது,’ என்கிறபடியே,
தான் அகற்ற நினைத்தாரைத் தன் பக்கல் வந்து கிட்டாதபடி பிரகிருதியை இட்டு வஞ்சித்து வைத்தபடி கண்டீர்கோள்.

அது அறிந்து –
இது அவனுடைய மாயம்,’ என்னுமதனை அறிந்து.

அறிந்து ஓடுமின் –
மாமேவ யே பிரபத்யந்தே மாயா மே தாந்தரந்தி -சத்ய சங்கல்பம் முதலான குணங்களையுடைய என்னையே
எவர்கள் சரணம் அடைகின்றார்களோ, அவர்கள் இந்த மாயையினைத் தாண்டுகிறார்கள்,’ என்கிறபடியே,
மாயையினைத் தாண்டுதற்கு உபாயமான பிரபத்தியையும் தானே அருளிச் செய்து வைத்தான்;
அதனை அறிந்து, அவ்வழியாலே அவனைப்பற்றி, இந்த மாயையினைத் தப்பப் பாருங்கோள். என்றது,
இது அவன் செய்து வைத்ததான பின்பு, அவனை வெல்ல வேண்டில்,
அவனோடு பிரிய நின்று வெல்லப் பாராமல், அவனையே காற்கட்டி இதனைத் தப்பப் பாருங்கோள்,’

இடராக வந்தென்னைப் புன் சிறு தெய்வங்கள் என்செயும்? மான்
இடராக வன் பிணி மாநாக மென்செயும்? யான் வெருவி
இடராக வன்னி புனலிடி கோள் மற்று மென்செயும்?வில்
இடராக வன் னரங்கன் திருத் தாள் என் இதயத்ததே- திவ்வியகவியின் திருவாக்கு

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-5–

November 27, 2018

லிங்கபுராணம் தொடக்கமான குத்ருஷ்டி ஸ்மிருதிகளையும், வேதத்திற்குப் புறம்பான ஸ்மிருதிகளையும்
பிரமாணமாகக் கொண்டு வந்தவர்களை நிஷேதிக்கிறார் -விலக்குகிறார்.

இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய்வீர் களும்மற்று நும்தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குரு கூர்அதனுள்
பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே–4-10-5-

இலிங்கத்திட்ட புராணத்தீரும் –
இலிங்க விஷயமாக இடப்பட்ட புராணத்தையுடைய நீங்களும்.
சாத்விக புராணங்களைக் காட்டிலும் ராஜஸமாயும் தாமஸமாயும் உள்ள புராணங்களுக்கு வேற்றுமை இதுவாயிற்று.
அவற்றை நிச்சயம் பண்ணுதல்-நிஷ்கர்ஷம் – அந்த அந்தப் புராணங்களினுடைய தொடக்கத்திலே காணலாய் இருக்கும்;
(யந்மயஞ்ச ஜகத் பிரஹ்மன் யதஸ்சை தச் சராசரம் லீநம் ஆஸீத்
யதா யத்ர லயமேஷ்யதி யத்ரச’ – ஸ்ரீ விஷ்ணு புராணம், 1. 1 : 6.)
யந் மயஞ்ச ஜகத் ப்ரஹ்மன் -ஓ பிராமணோத்தமரே! இந்த உலகமானது எதனை ஆத்மாவாகவுடையது?
இந்தச் சராசரங்கள் எங்கிருந்து உண்டாயின? எப்படி எங்கே லயத்தை அடைந்தன?
எங்கு லயத்தை அடையப் போகின்றன?’ என்று பொதுவிலே வினவ,
(விஷ்ணோ: ஸகாஸாத் உத்பூதம் ஜகத் தத்ரைவச ஸ்திதம்
ஸ்திதிஸம்யம கர்த்தாஸௌ ஜகதோஸ்ய ஜகத்சஸ:-ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 1 : 32.)
விஷ்ணோஸ் சஹாஸாத் உத்திபூதம் -உலகமெல்லாம் விஷ்ணுவின் சமீபத்தினின்றும் உண்டாயின.
அந்த விஷ்ணுவினிடத்திலேயே லயப்படுகின்றன. அந்த விஷ்ணுவே இந்த உலகங்கட்கெல்லாம் வாழ்வையும் சாவையும் கொடுப்பவர்,
அந்த விஷ்ணுவே அந்தர்யாமியாகவும் உலகமே உருவமாயும் காணப்படுகின்றார்,’ என்று கொண்டு
கோல் விழுக்காட்டாலே விடையாக இருத்தல் அன்றிக்கே.
ஒரு பொருளைக் குறித்துச் சொல்லி, ‘அதற்கு உயர்வினைப் பண்ணித் தரவேண்டும்,’ என்று கேட்டவனும்
தமோ குணத்தால் மறைக்கப்பட்டவனாகிக் கேட்க, சொன்னவனும் தமோ குணத்தால் மறைக்கப்பட்டவனாய்ச் சொல்ல,
ஓர் லிங்க விஷயமாக இடப்பட்ட புராணமாகும் அது.
(தஸ்மாத் பவந்தம் பிருச்சாம : சூதபௌராணி காத்யது புராண சம்ஹிதாம் புண்யாம் லிங்க மகாத்மிய சம்யுதாம்’
என்ற சுலோகம் இங்கு அநுசந்தேயம். ‘இலிங்க மகாத்மியத்தோடு கூடிய ஒரு
புராண சம்ஹிதையை இப்பொழுது செய்து தரும்படி, சூதபௌராணிகர்களாகிய நாங்கள் உங்களைக் கேட்கிறோம்,)
இளி கண்ணனைப் புண்டரீகாக்ஷனாகக் கவிபாடித் தரவேண்டும்’ என்றும்,
எருமையை யானையாகக் கவிபாடித் தரவேண்டும்’ என்றும் சொல்ல, அப்படியே,
கவி பாடுவாரைப் போலே இருப்பது ஒன்றே அன்றோ,
அவர்களுக்கு இல்லாத உயர்வுகளை இட்டுச் சொல்லுமது?’
தான் சொல்லப் புக்க பொருளுக்கு உயர்வினைச் சாதிக்க மாட்டாமல்,
மற்றுள்ளவற்றினுடைய உயர்வினைக் கழிக்க மாட்டாதே இருப்பது ஒன்றாயிற்று அது.

சமணரும் –
ஆர்ஹதரும் -சைனர்களும்.

சாக்கியரும் –
பௌத்தர்களும்.

மற்றும் வலிந்து வாது செய்வீர்களும் –
உத்க்ருஷ்டதமமான -மிக உயர்ந்ததான பிரமாணத்தை அங்கீகரித்துக்கொண்டு நின்று
பிரமாணங்களுக்கு அநுகூலமான தர்க்கங்களை ஒழியக் கேவல தர்க்கங்களைக் கொண்டு
அர்த்தத்தைச் சாதிக்கப் பார்க்கும் புறச் சமயத்தாரில் எஞ்சியவர்களும்.
யா வேத பாஹ்யாஸ் ஸ்ம்ருதய -எவை, வேதத்திற்குப் புறம்பான ஸ்ம்ருதிகள்? யாவை சில, குத்ருஷ்டி ஸ்ம்ருதிகள்?
அவை யாவும் மறுமை இம்மைகட்குப் பயனற்றவை; அவை தமோ குணமுடையவைகள்,’ என்கிறபடியே,
தமோ குணமுடையராய் இருக்கை எல்லார்க்கும் ஒத்ததே அன்றோ?
ஆகையாலே, பாஹ்ய -புறச்சமயத்தாரையும் குத்ருஷ்டிகளையும் ஒரு சேரச் சொல்லுகிறார்.

நும் தெய்வமும் ஆகி நின்றான் –
உங்களோடு நீங்கள் ஆஸ்ரயிக்கிற -பற்றுகின்ற தேவர்களோடு வேற்றுமை அற ஆத்மாவாய் நின்றான். என்றது,
நீங்கள் அவ்வத் தெய்வங்கட்கு உயர்வுகளைச் சொல்லும் போது பகவானுடைய பரத்வத்தை அங்கீகரித்துக்கொண்டு
நின்று சொல்ல வேண்டும். ‘அதற்கு அடி என்?’ என்னில்,
அவ்வத் தெய்வங்களினுடைய சொரூபம் ஸ்திதி -நிலைபெறுதல் முதலானவைகள்
அவன் அதீனமாய் இருக்கையாலே,’ என்பதனைத் தெரிவித்தபடி.

இனித்தான் மதங்கள்தோறும், சர்வஞ்ஞன் -முற்றறிவினன், ‘ஈஸ்வரன்’ என்றாற்போலே
ஒவ்வொரு தெய்வமும் கொள்ளக் கூடியதாய் இருக்குமே அன்றோ?
அவ்வத் தெய்வங்களுடைய சொரூபம், நிலைபேறு முதலானவைகள் அவன் அதீனம்,’ என்ற இது,
ஸூவ பஷத்தாலே சொல்லுகிறதோ, பர பஷத்தாலே சொல்லுகிறதோ?’ என்னில்,
இரண்டும் ஒழியப் பிரமாணங்களின் போக்கினாலே சொல்லுகிறது. ‘எங்ஙனே?’ என்னில்,
ஒரு தேவன் பக்கலிலே-அதி மானுஷமாய் – மக்கள் செயலுக்கு அப்பாற்பட்டதாய் இருப்பதொரு செயலைக் கண்டு,
இதற்கு அடி என்?’ என்ன,
சோந்த்ராதந்திரம் ப்ராவிஸத் ‘அளவிடற்கு அரிய ஒளியையுடையவனும் பூஜிக்கத் தக்கவனுமான சிவனுக்கு
விஷ்ணு அந்தராத்மாவாய் இருக்கின்றார்.’ என்கிறபடியே,
சர்வேஸ்வரன் அந்தராத்மாவாய் நிற்கையாலே என்றதே அன்றோ?
சர்வேஸ்வரன் தன் சர்வாத்ம பாவத்தைச் சொல்லுமாறு போன்று, சிவன், அதர்வ சிரஸ்ஸிலே நின்று,
தன்படிகளைச் சொல்லி, ‘அவன் தானே இங்ஙனம் சொல்லுகைக்கு அடி என்?’ என்று ஐயங்கொண்டு,
ஸ: அந்தராத் அந்தரம் பிராவிசத்’ என்கிறபடியே, ‘பரமாத்ம பிரவேசத்தாலே சொன்னேன்,’ என்றானே.
மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் ஸ்ரீ விஷ்ணு புராணம், 1. 19 : 95. -‘என்னிடத்திலிருந்து எல்லா உலகங்களும் உண்டாகின்றன;
அநாதியான என்னிடத்தில் எல்லாம் லயம் அடைகின்றன. யானே எல்லாப் பொருள்களுமாய் இருக்கிறேன்;
யானே அழிவில்லாதவனும் முடிவில்லாதவனும் ஆகிறேன்; பரமாத்மாவை ஆத்மாவாகப் பெற்றுள்ளேன்,’
என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்.
ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் பக்கல் பரத்வம் உண்டாமன்று ஆயிற்று, இவர்கள் பக்கல் பரத்வம் உள்ளது.
(‘கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்’ என்ற திருவாய்மொழி இங்கு அநுசந்தேயம்)

(அஹம் ஏக: பிரதமம் ஆஸம் வர்த்தாமிச பவிஷ்யாமிச நாந்ய: கச்சின் மத்தோ வியதிரிக்த இதி’ (அதர்வசிகை) என்ற
வாக்கியங்களைத் திருவுள்ளம் பற்றி.
ஸ: அந்தராத் அந்தரம் பிராவிசத்,’ இது, அதர்வசிகை.
ஸ :- அந்தச் சிவபிரான், அந்தராத் – தேக இந்திரியங்களைக் காட்டிலும்உள்ளே இருக்கிற ஜீவாத்துமாவாகிற தன்னினின்றும்.
அந்தரம் –பரமாத்துமாவை, பிராவிசத் – அடைந்தார். என்றது,
சிவபிரான் பரமாத்தும பாவத்தை அடைந்தார்’ என்பது கருத்து.
அன்றிக்கே, ஸ :- அந்தப் பரமாத்துமா, அந்தராத் – தேக இந்திரியங்களைக்காட்டிலும் உள்ளே
இருக்கின்ற ஜீவாத்துமாவின்,
அந்தரம் – உள்ளே, பிராவிசத் – பிரவேசித்தார்,’ என்னலுமாம். என்றது ‘பரமாத்துமா சிவபிரான் உள்ளே
பிரவேசித்தார்; ஆதலால், பரமாத்தும பாவத்தைச் சிவன் அடைந்தார்,’ என்பது கருத்து.
விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய அமித தேஜஸ:
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம் ஸ விஷேஹே மஹேஸ்வர:’ கர்ணபர்வம்.

பணிவில் சீர்ச் செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித் தொல்புகழ் தந்தாரும் தாம்.பரிபாடல்.)

மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூரதனுள் –
செந்நெல் பயிர்கள் கதிர்களின் கனத்தாலே அவ்வருகுக்கு இவ்வருகு அசைகிற போது சாமரை வீசினால் போலே
ஆயிற்று இருப்பது. என்றது, ‘இப்படி எல்லாப் பொருள்கட்கும் அந்தராத் மாவாய் இருக்கிற சர்வேஸ்வரன் –
அஸந்நிஹிதன் -‘தூரத்தில் உள்ளான்’ என்ற கண்ணழிவும் இல்லாதபடி திருநகரியிலே வந்து
அண்மையில் இருப்பவன் ஆனான்;
சர்வ சமாஸ்ரயணீயன்- எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடாய் இருக்கிற அவன் இங்கே வந்து நிற்கையாலே, –
சேதன -அறிவுடைப் பொருள் -அசேதன -அறிவில்லாப் பொருள் என்ற விபாகம் -வேறுபாடு இல்லாமல்,
ஸ்ருஷ்டஸ் த்வம் வன வாஸாயா ‘நீ வனத்தில் வசிப்பதற்காகவே படைக்கப்பட்டாய்,’ என்று சொல்லப்பட்ட
இளைய பெருமாளைப் போன்று அநுகூலமான வ்ருத்திகளை -தொழில்களைச் செய்கிறபடியைத் தெரிவித்தவாறு.

பொலிந்து நின்ற பிரான் கண்டீர் –
பரமபதத்தை விட்டு இம்மக்கள் நடுவே வந்து புகுந்த இடத்து அவர்கள் படுகின்ற கிலேசத்தைத்
தானும் ஒக்கப்படுகை அன்றிக்கே,
இவ்வருகே போதரப் போதரச் சொரூப ரூப குண விபூதிகள் மேன்மேலென விஞ்சி வாரா நின்றன ஆயின.
அன்றிக்கே, ‘சொன்னார் சொன்னவற்றுக்கும் எல்லாம் அவ்வருகாயிருக்கும்,’ என்னுதல்.

ஒன்றும் பொய் இல்லை –
மற்றைத் தேவர்கட்குச் சொல்லுகிற உயர்வுகள் ஒன்று ஒழியாமல் பொய்யாய் இருக்குமாறு போலே,
பகவான் சம்பந்தமாகச் சொல்லுமவற்றில் ஒன்றும் பொய்யில்லை.
அவ்வத் தேவர்கட்கு இயல்பிலே உயர்வு இல்லாமையாலே மெய் ஒன்றும் இல்லை;
பகவானுடைய உயர்வுக்கு எல்லை இல்லாமையாலே, பொய் சொல்லுகைக்கு இடம் இல்லை.

போற்றுமினே –
நீங்கள் விரும்பாதிருக்க, நானே இப்படிச் சொல்லுகிறது,
எனக்கு உங்கள் பக்கல் உண்டான ‘அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே,’ என்கிறபடியே,
மிக்க அருளாலே அன்றோ? அனுக்ரஹ அதிசயம் -அவ்வருளின் காரியம் பிறக்க வேண்டுமே.
கிரமத்திலே செய்கிறோம்’ என்று ஆறி யிராமல், சடக்கென
அவன் திருவடிகளிலே ஆஸ்ரயிக்க -அடைவதற்குப் பாருங்கோள்.

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-4–

November 27, 2018

வியோமாதீத நையாயிக வைசேஷி காதிகள்-ப்ரத்யவஸ்தித்தராய் வந்து கிட்டினவர்களாய்,
உலகம்-ச அவயத்வாதி- உறுப்புகளோடு கூடியிருக்கையால் காரிய ரூபமாய் இரா நின்றது;
ஆகையாலே, இதற்கு ஒரு கர்த்தா வேண்டும்;
இந்த உலகந்தான் விசித்திரமான அமைப்பை உடைத்தாய்-ஸந்நிவேசமாய்- இருக்கையாலே
இதற்குத் தக்க ‘உபாதாந உபகரண சம்பிரதாந பிரயோஜன அபிஜ்ஞ கர்த்தா’ – – உபாதானமும் உபகரணமும் சம்பிரதாநமும்
பிரயோஜனமும் அறிகைக்குத் தகுதியான விசித்திரமான ஞான சத்தி முதலியவைகளையுடையனாய்
இருப்பான் ஒருவன் கர்த்தாவாக வேண்டும்,’ என்கிறபடியே,
இங்ஙனே அநுமானத்தாலே ஒருவனைக் கற்பித்து, வேதத்தை ஆப்த வசனமாக்கி இதற்குத் துணை செய்வதாகக் கொண்டு,
அநுமானப் பிராதான்யத்தாலே ஈஸ்வரனைச் சாதித்து, அவனாகிறான், ‘ஈசன், ஈசானன்’ என்று இங்ஙனே
வேதத்திலே பிரசித்தமாகப் பெயர்கள் உண்டாயிரா நின்றன. இந்தப் பெயர்களாலே அவற்றால் சொல்லப்படுகிற
அவனே ஈஸ்வரன் ஆகிறான்’ என்று அநுமானத்தாலும் சமாக்யைகளாலும்
ஆகப் பகவானுக்கு வேறுபட்டவன்-வ்யதிரிக்தவன் – ஒருவனுக்கு உதகர்ஷத்தை -உயர்வினைச் சாதித்தார்கள்.
அவர்களைப் பார்த்து,
நீங்கள் சொல்லுகிற அநுமானம் சுருதியின் முன்பு நேர் நில்லாது;
இலிங்கத்தின் முன்பு சமாக்யை நேர் நில்லாது,’ என்று சுருதி இலிங்கங்களாலே அநுமானத்தையும் சமாக்யையும் தள்ளிப்
பகவானுடைய பரத்துவத்தைச் சாதிக்கிறார்.
அது செய்கிற வழிதான் என்?’ என்னில்.
யத் வேதா தவ் –வேதத்தின் முதலிலும் வேதத்தின் முடிவிலும்-வேதாந்தத்திலும் – சொல்லப்படுகிற ஸ்வரமாகிறது பிரணவம்;
உலகத்திலுள்ள வாசக ஜாதம் – எல்லாச் சொற்களும் அதிலே லயம் அடைகின்றன;
அந்தப் பிரணவம்-ஸ்வ ப்ரக்ருதி – தான் இயல்பிலே அமைந்த அகாரத்திலே லயம் அடைகின்றது;
அந்த அகாரத்துக்குப் பொருளாய் இருப்பதனாலே பரனாய் இருக்கிறான் யாவன் ஒருவன்? அவன் மஹேஸ்வரன்
என்று கூறுகின்ற சுருதியாலும்,
ஈசன், ஈசானன்’ என்கிற-சாமாக்யைகளால் – பெயர்களால் தோற்றுகிறவர்களும்
தலையறுப்புண்பாரும் தலையறுத்துப் பாவமுடையராய் நிற்பாருமாய் இராநின்றார்கள்;
இவன் அவர்களுக்குத் துக்கத்தைப் போக்குமவனாய் -நிவர்த்தகனாய் -இராநின்றான்;
ஆனால், ‘அவர்களைப் ‘பரன்’ என்னவோ, இவனைப் ‘பரன்’ என்னவோ?’ என்ற
லிங்கத்தாலுமாக அநுமானத்தையும் சமாக்யையையும் தள்ளிப் பகவானுடைய பரத்வத்தை நிலையிடுகிறார்.

ஆக, இப்படிகளாலே, ‘எல்லா உபநிஷதங்களாலும் பிரசித்தமாகச் சொல்லப்படுகின்றவனான நாராயணனே பரம்பொருள்’ என்று
நிஷ்கர்ஷித்து -அறுதியிட்டு, காலாத்யயாபதிஷ்டமாகிற தூஷணத்தாலே அவர்களை மறுக்கிறார்-

(வியோமாதீதர்’ என்பது. பாசுபத மதத்தினராய சைவர்களைச் சொல்லுகிறது. வியோம சப்த வாஸ்யனான சர்வேஸ்வரனைக் காட்டிலும்
மேம்பட்டதொரு பொருள் உண்டு என்று சொல்லுகின்றவர்கள் ஆகையாலே, இவர்களே ‘வியோமாதீதர்’ என்கிறார். வியோமம் – ஆகாசம்.)

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மா மதிள் சூழ்ந்து அழகாய திருக் குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கி யர்க்கே?–4-10-4-

பேச நின்ற சிவனுக்கும் –
நீர் சுருதி சொன்னீராகில் நாங்களும் ஒரு சுருதி சொல்லுகிறோம்,’ என்று
அநந்ய பரமான நாராயண அநுவாக சித்தன்’ என்று நான் சொன்னால், அதற்கு மாறாக,
புறம்பே விநியுக்தமாய் -உபயோகிக்கப்பட்டதாய், கர்ம விதி சேஷமாயிருப்பன சில -அர்த்த வாதங்களாலும் -புனைந்துரைகளாலும்
தாமச புராணங்களாலும் சொல்லலாம்படி முட்டுப் பொறுத்து நின்ற ருத்ரனுக்கும் –
அன்றிக்கே, ‘நீங்கள் ‘பரன்’ என்று பேசும்படி நின்ற சிவனுக்கும்’ என்னவுமாம்.
நின்ற-
சொற்களின் பொருட்டு முட்டுப் பொறாது; பேசுகைக்குப் பற்றுக்கோடு-ஆலம்பனம் – மாத்திரமே உள்ளது’ என்பார், ‘நின்ற’ என்கிறார்.
மற்றையோரை ‘ஈஸ்வரர்கள்’ என்னாதே இவனைச் சொல்லலாம்படி இருக்கிறது ஓர் ஏற்றம் உண்டே அன்றோ இவனுக்கு-

பிரமன் தனக்கும் –
அவனுக்கும் தமப்பனான பிரமனுக்கும்.
ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய – பிரமனுக்கு ஜேஷ்டபுத்திரனாகிச் சிறப்பை அடைந்த’ என்றும்,
ப்ரஹ்மணஸ் சாபி ஸம்பூதச்சிவ- பிரமனுக்குப் புத்திரனாகச் சிவன் தோன்றினான்’ என்றும் சொல்லப்படுதல் காண்க.
மஹா தேவஸ் சர்வமேத மஹாத்மா ஹுத்வாத்மாநம் தேவ தேவோ பபூவ – மஹாத்மாவான சிவன் சர்வமேதம் என்னும் யாகத்தில்
ஆத்மாவை ஹோமம் செய்து தேவ தேவனாக ஆனார்,’ என்கிறபடியே, சிவனுடைய ஈஸ்வரத்துவம் பகவானுடைய திருவருளாலே வந்தது.

பிறர்க்கும் –
இவர்தம் திருவுள்ளத்தால் அவர்களோடு இவர்களோடு வாசி அற்று இருக்கிறபடி.
அவர்கள் தங்கள் தங்கள் நினைவாலும் அப்படியே அன்றோ?’
தவாந்தராத்மா மம ச யே சாந்யே தேஹி சம்ஜிதா– பிரமன் சிவனை நோக்கி, ‘உனக்கும் எனக்கும் அந்த விஷ்ணு
அந்தர்யாமியாய் இருக்கிறார்; மற்றும் எவர்கள் சரீரம் படைத்தவர்கள் என்று பெயர் பெற்றிருக்கிறார்களோ,
அவர்கள் எல்லாருக்கும் அந்த விஷ்ணுவானவர் சாக்ஷியாய் இருக்கிறார்,’ என்றான்.

நாயகன் அவனே –
இக்காரியத்திற்குத் தகுதியான -அனுரூபமான -காரணத்தைக் கற்பிக்கிலும் அவனையே கொள்ள வேண்டும்.
சுருதிப் பிரசித்தியை நினைத்து ‘அவனே’ என்கிறார்.
அநந்ய பரமான நாராயண அநுவாகப் பிரசித்தியையும்,
ய: பரஸ்ஸ மஹேஸ்ர:’ என்கிற அகரத்தின் பொருளாய் உள்ள பிரசித்தியையும் நினைக்கிறார்.
இவனையும் ஒக்கச் சொல்லாநிற்க ‘அவனே’ என்பான் என்?’ என்னில்,

கபால நன்மோக்கத்துக் கண்டு கொண்மின்’
என்று கையோடே காட்டிக்கொடுக்கிறார்.
நீங்கள் இப்படிச் சொன்னால் மறுமாற்றம் சொல்லுகைக்கு இது ஒன்று உண்டாகப் பெற்றோமே!’

(தத்ர நாராயண: ஸ்ரீமான் மயாபிக்ஷாம் பிரயாசித: ததஸ்தேந ஸ்வநம் பார்ஸ்வம் நகாக்ரேண விதாரிதம்]
மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தஸ்ய நிஸ்ஸிருதா விஷ்ணு பிரஸாதாத் ஸூஸ்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ரதா
ஸபுடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ந லப்தம் தனம்யதா’- என்பது மாத்ஸ புராணம்.)

தத்ர நாராயண: ஸ்ரீமாந் –மாயா பிஷாம் பிரயாசித ‘தாம் தாம் செய்த கர்மத்தின் பலத்தைத் தாம் தாம் அனுபவிக்கிறார்களாகில்,
நாம் என்?’ என்றிருக்கும் ஈஸ்வர ஸ்வாதந்தரியம் -ஜீவியாதபடி -தலை தூக்காதபடி
ந கச்சின் ந அபராத்யதி -குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்,’ என்பாரும் அருகே உண்டு என்கிறான்.
விஷ்ணு ப்ரஸாஸாத் ஸூஸ்ரோணி கபாலம் தத் சஹஸ்ரதா –ஸ்புடிதம் பஹு தாயா தம் ஸ்வப்ன லப்தம் தநம் யதா –
ஸூஸ்ரோணி – உன் வடிவழகாலே வந்த சௌபாக்கியம், நான் சர்வஸ்சுவரன் பக்கலிலே சென்ற அளவிலே உதவிற்றுக் காண்.
ஸ்வப்ந லப்தம் – அனுபவம் செல்லா நிற்கச் செய்தே விழித்துப் பார்க்குங்காட்டில் இல்லையாய் இருந்தது;
ஆகையாலே, ‘நன்மோக்கம்’ என்கிறது.
உங்களுக்கு இப்போது மறுமாற்றம் சொல்லலாம்படியாக இது ஒன்று உண்டாயிற்று’ என்கிறாராதல்;
ஸ்வப்நலப்த தநம் யதா – ‘கனவில் கிடைத்த தனம் போலே போன வழி தெரியாமலே போயிற்று,’ என்கிறாராதல்.
நீங்கள் ஈஸ்வரர்களாகச் சந்தேகப்படுவதற்குரியவர்கள் இருவரும் நின்ற நிலை கண்டீர்களே!
ஒருவன் தலை கெட்டு நின்றான்;
ஒருவன் ஓடு கொண்டு பிராயஸ்சித்தம் செய்ய வேண்டியவனாய் நின்றான்.
ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய் உங்கள் குறை தீரப் பற்றுகிற நீங்கள் உங்களிலும் பெரும் குறைவாளரையோ பற்றுவது!
பாதகியாய் -பாவமுடையவனாய்ப் பிச்சை புக்குத் திரிந்தான்,’ என்று நீங்களே சொல்லி வைத்து, அவனுக்கே பரத்வத்தைச் சொல்லவோ?’
ஒருவனுடைய ஈஸ்வரத்துவம் அவன் தலையோடே போயிற்று.
மற்றவனுடைய ஈஸ்வரத்துவம் அவன் கையோடே காட்டிக் கொடுக்கிறார்;

கண்டு கொண்மின் –
முன்னே நின்று பிதற்றாமல், உந்தம் ஆகமங்களிலே நீங்கள் எழுதியிட்டு வைத்த
கிரந்தங்களைப் பார்த்துக் கொள்ள மாட்டீர்களோ?’ என்கிறார்.

தேச மா மதிள் சூழ்ந்து அழகாய –
பகைவர்களுக்குக் கிட்டுதற்கும் முடியாத -அநபபி நீயமான தேஜஸ் –ஒளியையுடைத்தாய்,
அரணாகப் போரும்படியான மதிளையுடைத்தாய், தர்ச நீயமான -காட்சிக்கு இனியதாய் இருக்கிற.

திருக் குருகூரதனுள் ஈசன் பால் –
அஜஹத் ஸ்வபாவன் -விட்டுப் பிரியாத தன்மையை உடையவனாகையாலே, சௌலப்யத்திலே அந்த மேன்மை குலையாதிருக்கிற
ஈசன் பால்
‘யத்வேதாதௌ ஸ்வர: ப்ரோக்தோ வேதாந்தேச பிரதிஷ்டித:
தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய ய: பரஸ்ஸ மஹேஸ்வர:’ என்பது, தைத்திரீய நாராயண உப. 6 : 10.
‘ய : பரஸ்ஸமஹேஸ்வர:’ என்கிற சர்வேஸ்வரன் பக்கலிலே.
கீழே நாராயண சப்தார்த்தத்தைச் சொல்லி-பிரஸ்தாவித்து – வைத்து, அகாரத்தின் பொருளாய்ப் பரனானவனையே
மஹேஸ்வரன் என்கையாலே, மஹேஸ்வரன் என்ற சொல்லால் சொல்லப்படுகின்ற பொருளானவன் நாராயணனே என்பது
சுருதியாலே அறுதியிடப்பட்டிருக்கையாலே இந்தச் சுருதியாலே உன்னுடைய அநுமானம் தள்ளப்பட்ட விஷயமாகும்.
கண்டுகொண்மின்’ என்கிற சொற்பொருள்களின் ஆற்றலோடு (லிங்கம்) முரண்பட்ட சமாக்யை நேர் நில்லாது;
ஆகையாலே ‘இவனே பரன்,’ என்கிறார்.
(அக்ஷராணாம் அகாரோஸ்மி’ என்றும், ‘அகாரோ விஷ்ணு வாசக:’ என்றும், ‘அ இதி பிரஹ்ம’ என்றும், அகார வாஸ்யன்
விஷ்ணுவாகச் சொல்லப்படுகையாலே, இங்கு அகார வாஸ்யனான மஹேஸ்வரன் சர்வேஸ்வரனே யாவன் என்பது சித்தம்.
நாராயண உபநிடதத்தில் ‘யத்வேதாதௌ’ என்று தொடங்கும் வாக்கியத்திற்கு மேலே, ‘யத: பிரஸூதா ஜகத: பிரஸூதீ’ என்றும்,
சர்வேநிமேஷா ஜஜ்ஞிரே வித்யுத: புருஷாததி’ என்றும், ‘யமந்தஸ் ஸமுத்ரே கவயோவயந்தி’ என்றும்,
‘நதஸ்ய ஈஸேகச்சந’ என்றும் வருகின்ற வாக்கியங்களாலே ‘காரணனாயிருத்தல், கடலில் சயனித்திருத்தல்,
நியமிக்கின்றவனாயிருத்தல் ஆகிற நாராயண சப்தார்த்தத்தைச் சொல்லி வைத்து)

ஓர் அவம் பறைதல் –
மற்றுள்ள க்ஷேத்ரஜ்ஞரோடு ஒக்க ஸ்ரீமந் நாராயணனுக்கு ஈஸ்வரத் தன்மை இல்லை என்பதற்குச் சாதகமாக ஏதேனும் –
ஆபாச யுக்திகளை -போலி வார்த்தைகளைச் சொல்லுமது. அவற்றைத் தம் வாயால் சொல்ல மாட்டாமையாலே, ‘அவம்’ என்கிறார்.
தங்கள் கூட்டத்தில் மறைவாகச் சொல்லுமது ஒழிய எல்லாரும் அறியச் சொல்லுதல் இல்லையாதலின், ‘பறைதல்’ என்கிறார்.
மஹாபலி, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் பக்கலிலே வந்து,
யதா மே சிரசஸ் சேதாதிதம் குரு தரம் வச – ராஜ்யமடைய ஒளி மழுங்கி வாராநின்றது;
என் பலமும் குறைந்து வாராநின்றது; இதற்கு அடி என்?’ என்ன,
நீ சர்வேஸ்வரன் பக்கல் பண்ணின அபராதத்தாலே காண்,’ என்ன,
கோயம் விஷ்ணு -‘இந்த விஷ்ணு எவன்?’ என்பது போன்று-அநாதர யுக்திகள் – விருப்பு இல்லாத வார்த்தைகள்
சிலவற்றை அவன் பேச,
எனது தலையை அறுப்பதைக்காட்டிலும் பெரிது இந்த வார்த்தை’ என்கிறபடியே,
என் முன்பே பகவானை நிந்தை செய்தாய், நீ ராஜ்யப் பிரஷ்டன் ஆவாய்’ என்று சபித்து விட்டான்;
இதனை இப்படியே பட்டர் அருளிச் செய்தவாறே, ‘பிரகிருதி புருஷ விவேகம் பண்ணியிருக்கிற இவன் ஆத்மாவுக்கு
நாயைத் தண்டிக்கையாவது, அமேத்யத்தை -மலத்தை விலக்குகையே அன்றோ?
சாந்தை விலக்குகை அதற்கு விருப்பம் இல்லாதது அன்றே?
ஆகையால், இவனுக்கு அநிஷ்டம் செய்கையாவது இதுவே அன்றோ?’ என்று அருளிச்செய்தார்.

இலிங்கியர்க்கு என் ஆவது –
அநுமானத்தைப் பிரமாணமாகக் கொண்டவர்க்கு என்ன பிரயோஜனம் உண்டு? என்றது,
அந்தத் தேவிற்கு ஓர் உத்கர்ஷம் -உயர்வு பெற்றிகோள் அன்று;
அத் தேவினைப் பற்றியதற்கு ஒரு பலம் பெற்றிகோள் அன்று;
இதனால், உங்களுக்கு ஓர் உயர்வு பெற்றிகோள் அன்று;
என்றியப் பட்டிகோள்’ என்கிறார்

(இலிங்கியரை ஆநுமாநிகர் என்றும், சமாக்யைப் பிரதாநர் என்றும் இரண்டு வகையாகப் பிரித்து, இவர்களில் சமாக்யைப் பிரதாநராகிறார்,
ஆகாச சப்த வாச்சியனான விஷ்ணுவுக்குப் புறம்பே உருத்திர தத்துவம் உண்டு’ என்று சொல்லுகிற பாசுபதர் என்றும்,
அநுமானப் பிரதாநராகிறார், நையாயிக வைசேடிகர்கள்’ என்றும் பிரதிஜ்ஞை செய்து, இவர்கள் இருவரும் அநுமான
சமாக்யையாலே உருத்திர காரணத்துவத்தைச் சாதிக்கும் பிரகாரத்தைக் காட்டுகிறார்,
ஆதி யந்தம் அரியென யாவையும்
ஓதி னாரல கில்லன உள்ளன
வேத மென்பன மெய்ந்நெறி நன்மையன்
பாத மல்லது பற்றிலர் பற்றிலார்.’

ஓமெனும் ஓரெழுத் ததனி னுள்ளுயிர்
ஆமவன் அறிவினுக் கறிவு மாயினான்;
தாமமூ வுலகமும் தழுவிச் சார்தலால்
தூமமுங் கனலும் போல் தொடர்ந்த தோற்றத்தான்.– என்றார் கம்பநாட்டாழ்வார்.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-3–

November 27, 2018

ஜெகன் நிகரணாதி- உலகத்தை விழுங்குதல் முதலிய-திவ்ய சேஷ்டிதங்களாலும் –
தெய்வத்தன்மை வாய்ந்த செயல்களாலும் இவனே பரன்; இதனை இசையாதார் –
உடன்படாதார் என்னோடு வந்து கலந்து பேசிக் காணுங்கோள்,’ என்கிறார்.

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக் குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே–4-10-3-

பரந்த தெய்வமும் –
கொள் கொம்பு மூடப் படர்ந்து -நியாமகரோடு – ஒக்க எடுத்துக் கழிக்க வேண்டும்படி கை விஞ்சின தேவஜாதியும்.

பல் உலகும் –
அவர்கள் பரப்புக்கெல்லாம் போரும்படியான உலகங்களும்.
அன்றிக்கே, ‘அவர்கள் நியமிக்கின்றவர்கள் ஆகைக்குக் காரணமாக நியமிக்கப்படுகின்றவர்களான
மற்றைய ஆத்மாக்களையும்’ என்னலுமாம்.

படைத்து –
ஸ்ருஷ்டித்து -உண்டாக்கி. இவர் தமக்கு அந்தத் தேவர்களோடு அல்லாதாரோடு வாசி அற்று இருக்கிறபடி.

அன்று உடனே விழுங்கி –
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் -அந்தப் பரமாத்துமா முன்னே பிரமனைப் படைத்தார்,’ என்கிறபடியே,
படைக்கிறபோது முறையாகப் படைத்தான்;
ஆபத்து வந்தால், அங்ஙனம் முறை பார்க்க ஒண்ணாதே, பிரளயாபத்திலே ஒருகாலே வயிற்றில் வைத்து.
கரந்து –
பிரளயம் வந்தாலும் இங்கு உண்டோ?’ என்று இளைத்துக் காட்டலாம்படி மறைத்து.
உமிழ்ந்து –
உள்ளே இருந்து நோவு படுகின்றனவோ?’ என்று வெளி நாடு காண உமிழ்ந்து.
கடந்து –
நடுவே மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற்போலே பறித்துக்கொள்ள, எல்லை நடந்து மீட்டுக்கொண்டு.
இடந்தது –
பிரளயத்திலே அழுந்தி அண்ட பித்தியிலே சேர்ந்த இந்த உலகத்தை மஹா வராஹமாய்ப் புக்கு
ஒட்டு விடுவித்து எடுத்து. இப்படிச் செய்த இவற்றை,
கண்டும் –
இவர்க்குப் பிரத்யக்ஷத்திலும் சாஸ்திரம் விளக்கமாகக் காணப்படுகிறது காணும்.
தெளியகில்லீர் –
அதி மானுஷ சேஷ்டிதங்களை -மக்கள் செயலுக்கு அப்பாற்பட்ட இத்தகைய செயல்களைக் கொண்டே
அவனே ஆஸ்ரயணீயன் -அடையத்தக்கவன்’ என்று அறியலாய் இருக்க, அறிய மாட்டுகின்றிலீர்கோள்.
இவர்கள் தெளிவும் தெளியாமையும் ஒழிய, உண்மை நிலையில் மாறாட்டம் அற்று இருக்கிறது ஆதலின்,
கண்டும் தெளியகில்லீர்’ என்கிறார். ‘உங்கள் கலக்கமும் தெளிவும் ஒழிய,
அவனை ஈஸ்வரன் அல்லனாகச் செய்தல், இவர்களை ஈஸ்வரர்கள் ஆக்குதல் செய்ய ஒண்ணாதே அன்றோ?’ என்றபடி.

அமரர் சிரங்களால் வணங்கும் –
எல்லாப் பொருள்களையும் படைத்தவனும் அல்லன்; ஆபத்திற்குத் துணைவனும் அல்லன்’ என்று இருந்தீர்கோளேயாகிலும்,
நீங்கள் அடைகிற தேவர்கள் செய்கிறது முன்னம் நீங்கள் கண்டால் தெளியலாமே!
அவர்கள், ‘தலை படைத்த பிரயோஜனம் பெற்றோம்’ என்று வணங்குகிறபடியைக் கண்டாகிலும்
நீங்கள் அவனைப் பற்றப் பாருங்கோள்.
பாதேந கமலா பேந ப்ரஹ்ம ருத்ர அர்ச்சிதே நச — தாமரை போன்று ஒளியுள்ளதும், பிரமன் சிவன் இவர்களால்
அருச்சிக்கப்பட்டதுமான திருவடிகளால் தடவினார்,’ என்றும்,
பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும், துன்னிட்டுப் புகலரிய’ என்றும்,
நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய முறையால் ஏத்த’ என்றும் உள்ள பிரமாணங்களை கண்டும் –

திருக்குருகூர் அதனுள் பரன் –
மனுஷ் யத்வே பரத்வம் -மனித வடிவத்தில் பரத்வத்துக்கும் அவ்வருகே ஒரு பரத்துவமே அன்றோ இது?
இவ்வருகே போரப் போர உயர்வு மிகுமத்தனை. குணத்தாலே அன்றோ பொருளுக்கு உயர்வு?
குணங்களுக்குப் பெருமை உள்ளது இங்கேயே யன்றோ?
அநஸ்நந் நந்யே –அவர்கள் இருவரில் சேதனன் கருமபலத்தை இனிமையாக அனுபவிக்கிறான்;
மற்றவனான ஈஸ்வரன் கர்மபலத்தை அனுபவியாமல் மிகவும் பிரகாசிக்கிறான்!’ என்கிறபடியே,
இவ்வுயிர்கள் சரீரத்தோடே கலசக் கலச ஒளி மழுங்கி வாரா நிற்கச் செய்தே,
அவனுக்கு நியமிக்கும் தன்மையால் வந்த புகர் அற விஞ்சி வருமாறு போன்று,
இம்மக்கள் நடுவே போரப்போர ஆயிற்று, முதன்மை – மேன்மை பிரகாசிப்பது.

திறம் அன்றி –
அவனுக்குச் சரீரமாய் -பிரகாரம் -அல்லாது. திறம் –பிரகாரம் – சரீரம்.

தெய்வம் மற்று இல்லை –
ஸூ வதந்தரமாய்த் தனக்கு உரித்தாய் இருப்பது ஒரு தெய்வம் இல்லை.
தேவர்களுடைய சொரூபத்தை விலக்குகிறார் அன்று-
அவனுக்கு விபூதி வேண்டும்’ என்று இருக்கிறவர் ஆகையாலே; அவர்களுடைய ஸ்வாதந்தரியத்தை விலக்குகிறார்.
மற்றைத் தேவர்களை அவனுக்குச் சரீரமாகப் புத்தி பண்ணி அடைந்தீர்கோளாகில்,
அவனுடைய ஆஸ்ரயணத்திலே புகும்;
அவர்கள் ஸ்வதந்தரர்கள் என்று புத்தி பண்ணிப் பற்றினீர் கோளாகில்,
ஸ்வதந்தரமாய் இருப்பதொரு வேறு தெய்வம் இல்லை;
நே ஹா நா நா அஸ்தி -‘ஸ்வதந்தரப் பொருள் இங்குப் பல இல்லை’ என்றும்,
யே யஜந்தி -எவர்கள் பித்ருக்களையும் தேவர்களையும் அக்னியோடு கூடிய பிராமணர்களையும் பூஜிக்கிறார்களோ,
அவர்கள் எல்லா ஆத்மாக்களுக்கும் அந்தரியாமியாயிருக்கிற விஷ்ணுவையே பூஜிக்கிறார்கள்,’ என்றும் வருவன காண்க.

பேசுமின் –
நான் ‘அவனுக்குச் சரீரமாய் அல்லது ஸ்வதந்தரமாயிருப்பது ஒரு தேவதை இல்லை,’ என்றேன்;
இப்படி அநந்யதீனமாய் – வேறு ஒருவருக்கும் வசப்பட்டிராத நியமிக்குந் தன்மையையுடைய இவனைத்
தனக்குச் சரீரமாகவுடையது ஒரு தெய்வம் உண்டு,’ என்று சொல்ல வல்லார் உண்டாகில்,
வாய் படைத்தார் என் முன்னே நின்று சொல்லிக் காணுங்கோள்,’ என்கிறார்.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-2–

November 27, 2018

ஆஸ்ரயிக்கிற- அடைகின்ற உங்களோடு, ஆஸ்ரயணீயரான- அடையப்படுகின்ற அந்தத் தேவர்களோடு வாசி அற
எல்லாரையும் உண்டாக்கினவன் நின்றருளுகையாலே
ப்ராப்யமான -அடையத்தக்கதான திருநகரியை ஆஸ்ரயியுங்கோள் -அடையுங்கோள்,’ என்கிறார்.

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே–4-10-2-

நீர் நாடி வணங்கும் தெய்வமும் –
இயல்பாகவே அமைந்தது ஓர் உயர்வு இல்லாமையாலே அவை தாம் இறாயா நிற்கச்செய்தே.
வசன ஆபாசங்களாலும் யுக்தி ஆபாசங்களாலும் நீங்கள் பொரி புறந்தடவி வருந்திச் சேமம் சாத்தி வைத்து-
ஆஸ்ரயிக்கிற – அடைகின்ற தேவர்களையும்.

நாடி –
கள்ளரைத் தேடிப் பிடிக்குமாறு போலே தேடிப் பிடிக்க வேண்டி இருப்பவர்களாதலின், ‘நாடி’ என்கிறார்.
ஆடு திருடின கள்ளர்களே அன்றோ இவர்கள்தாம்?
அணங்குக்கு அரு மருந்து என்று அங்கே ஆடு கட்டினவர்கள் ஆகையாலே, தேடிப் பிடிக்க வேண்டுமே?
கள்ளர் அச்சம் காடு கொள்ளாது,’ என்று தன்னை அடைய ஆஸ்ரயிக்க -வருகிறவர்களையும்
தன்னைக் கட்ட வந்தார்களாகக் கொண்டு போகிறபடி

நீர் –
ராஜஸராயும் தாமஸராயும் உள்ள நீர்.
அன்றிக்கே, ‘நீர்’ என்று, அவர்களோடு தமக்கு ஒட்டு அறச் சொல்லுகிறார் என்னலுமாம்.
ஆக, ‘நீர் நாடி வணங்கும்’ என்றதனால்,
உங்கள் நினைவு ஒழிய அவர்கள் பக்கல் ஓர் உயிர் இல்லை’ என்பதனைத் தெரிவித்தபடி.

நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் –
நீங்கள் ஆஸ்ரயிக்கிற -வணங்குகின்ற ராஜசராயும் தாமசராயும் உள்ள தேவர்களையும்
உங்களையும்.

முன் படைத்தான் –
படைக்கிற இடத்தில் முற்பட அவர்களைப் படைத்துப் பின்னர் உங்களைப் படைத்தான்.
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் -உலகங்களைப் படைப்பதற்கு முன்னே பிரமனைப் படைத்தார்’ என்கிறபடியே,
பிரமனைப் படைத்துப் பின்பே அன்றோ இவ்வருகு உள்ளாரைப் படைத்தது?
அவன் படைத்திலனாகில், நீங்கள் மற்றைத் தேவர்களை ஆஸ்ரயிக்கும்படி -அடையும்படி எங்ஙனே?’ என்பார், ‘படைத்தான்’ என்கிறார்.
அவன் படைத்திலனாகில் எங்ஙனே உண்ண இருப்பீர்கோள்?’ என்றபடி.
உங்களுக்கு ஆஸ்ரயணீயத்வம் உண்டாகும் அன்றே அன்றோ, அவர்களும் ஆஸ்ரயணீயர் ஆவது என்பார்,
உம்மையும் படைத்தான்’ என்கிறார்.

வீடு இல் சீர் –
1-இயல்பாகவே அமைந்துள்ளதான செல்வத்தையுடையவன். என்றது,
நீங்கள் தேடி ஆஸ்ரயிக்கிற -அடைகின்ற தேவர்களுடைய ஐஸ்வரியம் போலே ஒருவனுடைய புத்திக்கு-
அதீனமாய் – வசப்பட்டதாய், அவன் நினைத்திலனாகில் இல்லையாய்,
அது தனக்கு அடி கர்மமாய், அந்தக் கர்மம் ஷயம் பிறந்தவாறே -குறைந்தவாறே -நசிக்கை – அழியக் கூடியது அன்று-
ஸ்வ ஸித்தமான சம்பத்தை யுடையவன் -ஆதலின், ‘வீடு இல் சீர்’ என்கிறது.
வீடு – அழிவு. சீர் – செல்வம்.
2-அன்றிக்கே, நீங்கள் அடைகின்ற தேவர்களுடைய செல்வம் போலே அவதியுடன் கூடியிருப்பது அன்று. என்றது,
கர்மம் அடியாய் அதிலே ஒன்று குறையக் குறைதல்,
பலத்தைக் கொடுக்கின்றவனுடைய திருவருள் குறையக் குறைதல் இல்லாதது.’ என்றபடி.
பலமத-‘எல்லாப் பலன்களும் அந்தப் பரம்பொருளிடத்திலிருந்துதான் பெறப்படுகின்றன,’ என்றதே அன்றோ?
3-அன்றிக்கே, ‘வீடு இல் சீர்’ என்பதற்கு,
அழிவில்லாத கல்யாண குணங்களையுடையவன்’ என்னுதல்.
தஸ்மிந் யதன் தஸ்தாதுபாசி த்வயம் –அவனிடத்தில் எந்தக் குணம் உள்ளதோ, அதுவும் தியானிக்கத் தக்கதே,’ என்கிறபடியே,
அவனைப் போன்றே அவன் குணங்களும் உபாசிக்கத் தக்கவை என்னுமிடம் சொல்லுகிறது.

புகழ் –
எல்லாரையும் பாதுகாத்து, அவ்வாறு பாதுகாத்தலால் வந்த புகழையுடையவன்.
பாதுகாப்பதால் வந்த புகழையுடையவன் அன்றோ அடையத் தக்கவன் ஆவான்?
யச சஸ்சைக பாஜநம்– கீர்த்திக்குத் தானே இருப்பிடமாக இருப்பவர்,’ என்னக் கடவதன்றோ?

ஆதிப்பிரான் –
பாதுகாத்துப் புகழைப் படையாமல் பழி படைத்தாலும் விட ஒண்ணாத –
ப்ராப்தியை -சம்பந்தத்தை ‘ஆதி’ என்கிற பதத்தால் சொல்லுகிறது.
பிரான்
கேவலம் சம்பந்தமே அன்று, உபகாரகன்’ என்பதனைச் சொல்லுகிறது ‘பிரான்’ என்ற சொல்.
உபகாரகனுமாய்–ப்ராப்தனுமாய் -யஸஸ்வியுமாய் -ஐஸ்வர்யம் சம்பந்தத்தையுடையனுமாய், கீர்த்தியாளனுமாய்.
ஐஸ்வர்யம் என்ன, -நித்ய ஸித்தமான -அழியாத கல்யாண குணங்கள் என்ன, இவற்றையுடையவனை ஒழிய,
இவை இல்லாதாரை அடையத் தகுதி இல்லை. காரண வஸ்துவே அன்றோ உபாசிக்கத் தக்கது?
காரணந்து த்யேய — காரண வஸ்துவே தியானிக்கத் தகுந்தது’ என்னாநின்றதே அன்றோ?

அவன் மேவி உறை கோயில் –
அவன் பரமபதத்திலே உள் வெதுப்போடே காணும் இருப்பது.
சம்சாரிகள் -இம் மக்கள் படுகிற துக்கத்தை நினைந்து, ‘இவை என் படுகின்றனவோ?’ என்கிற
திருவுள்ளத்தில் வெறுப்போடே ஆயிற்று அங்கு இருப்பது.
நோ பஜனம் ஸ்மரன் -முத்தன் ஜனங்களின் மத்தியில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினையாமலே
நாலு பக்கமும் சஞ்சரிக்கின்றான்,’ என்கிறபடியே,
இங்குத்தைத் துக்கத்தை நினையாது ஒழிய வேண்டுவது,
பண்டு துக்கத்தை யுடையவனாய் இருந்து இவ்வுலகத்தினின்றும் போனவனுக்கே அன்றோ?’
இங்குத்தைத் துக்கத்தை நினைக்குமாகில், அனுபவிக்கின்ற சுகத்துக்குக் கண்ணழிவு ஆகாதோ?’
என்னும் கண்ணழிவு இல்லையே அவனுக்கு?
பரமபதத்திலும் சம்சாரிகள் படுகிற துக்கத்தை நினைத்துத் திருவுள்ளத்தில் வெதுப்போடே யாயிற்று
எழுந்தருளியிருப்பது,’ என்று பட்டர் அருளிச்செய்ய,
ஆச்சானும், பிள்ளையாழ்வானும் இத்தைக் கேட்டுப் பரம பதத்திலே ஆனந்தத்தால் நிறைந்தவனாய் இருக்கிற இருப்பிலே
திருவுள்ளத்திலே ஒரு வியசனத்தோடே இருந்தான் என்கை உசிதமோ என்கிறார்கள்,’ என்று வந்து விண்ணப்பம் செய்ய,
வியசனேஷு மனுஷ்யானாம் ப்ருசம் பவதி துக்கித -‘மனிதர்களுக்குத் துக்கம் வருகின்ற காலத்தில்
தானும் மிகவும் துக்கிக்கின்றான்’ என்றது, ‘குணப் பிரகரணத்திலேயோ, துக்கப் பிரகரணத்திலேயோ?’
என்று கேட்கமாட்டிற்றிலீரோ? இது குணமாகில், ‘குணம்’ என்று பேர் பெற்றவற்றில்
அங்கு இல்லாதது ஒன்று உண்டோ?’ என்று அருளிச்செய்தார்.
ஸமஸ்த கல்யாண குணத் மகோசவ் — எல்லாக் கல்யாண குணங்களையும் இயல்பாகவேயுடையவன்–என்னக் கடவதன்றோ?
தன் இச்சை ஒழியக் கர்மம் காரணமாக வருபவை இல்லை என்னுமத்தனை போக்கி,
அனுக்ரஹ -திருவருளின் காரியமாய் வருமவை இல்லை எனில், முதலிலே சேதனன் அன்றிக்கே ஒழியும்.
ச ஏகாகீ ந ரமேத -அந்தப் பரம்பொருள் உயிர்க்கூட்டம் எல்லாம் பிரகிருதியில் லயப் பட்டிருக்கும் காலத்தில்
தான் தனியாய் இருந்துகொண்டு துக்கத்தை அடைந்தான்,’ என்றது, நித்ய விபூதியும் குணங்களும் உண்டாயிருக்கச்செய்தே அன்றோ?

ஆதிப்பிரான் அவன் மேவி உறைகோயில் –
பரமபதத்தில் தன்னில் குறைந்தார் இல்லாமையாலே, அவ்விடத்தை விட்டு,
நல்ல படுக்கையையும் போகத்துக்கு ஏகாந்தமானவற்றையும் காற்கடைக்கொண்டு,
குழந்தையினுடைய தொட்டில் காற்கடையிலே கிடக்கும் தாயைப் போலே,
காப்பாற்றுவாரை விரும்புமவர்களான இம் மக்கள் இருக்கிற இடமாகையாலே விரும்பி வசிக்கும் இடம் இவ்விடம் ஆயிற்று.

மாட மாளிகை சூழ்ந்து அழகாய திருக்குருகூர் –
மாடங்களாலும் மாளிகைகளாலும் சூழ்ந்து-தர்ச நீயமாக – காட்சிக்கு இனியதாய் இருக்கும் திருக்குருகூர்.
உங்களுக்குதான் நல்ல தேசம் தேட்டமே;
முக்த ப்ராப்ய தேசம் -‘முத்தனாகிற பேற்றினைக் கொடுக்கும் தேசம், என்று தோற்றுகிறதில்லையோ?’ என்றபடி.

அதனைப் பாடி ஆடி –
பிரீதியினாலே -பிரேரிதராய் -தூண்டப்பட்டவராய்க்கொண்டு பாடி,
உடம்பு இருந்த இடத்தில் இராமல் ஆடி,
கிரமமின்றியே கூப்பிட்டுக் கொண்டு.
இதனால், ‘அதனுள் நின்ற ஆதிப்பிரான்’ என்ற இடம் மிகை என்கிறார். என்றது,
விஷ்ணோர் ஆராயதநே வசேத் ‘பகவான் எழுந்தருளியிருக்கும் ஊரில் வசிக்கக்கடவன்,
தேசோயம் சர்வ காம துக் ‘இந்தத் தேசமானது, புண்ணியத்தைக் கொடுக்கக் கூடியது;
விரும்பியனவற்றை எல்லாம் கொடுக்கக் கூடியது. என்கிறபடியே, இதுதானே பேறு,’ என்றபடி.
அந்தத் தேசம் என்றால் தம் திருவுள்ளம் இருக்குமாறு போலே இருக்கும் என்று இருக்கிறார் காணும் எல்லார்க்கும்.

பல் உலகீர் –
ஒருவன் சமித் பாணியாய் சமித்தைக் கையிலே உடையவனாய்-தாந்தனாய் -ஐம்பொறிகளையும் அடக்கியவனாய் வர,
அவனுக்கு நலத்தை உபதேசம் செய்கிறார் அல்லர்;
இவை என்ன உலகியற்கை!’ என்று, உலகம் கிலேசப் படுகிறபடியைக் கண்டு எல்லார்க்கும் சொல்லுகிறாரே அன்றோ?
ஆதலால், ‘உலகீர்’ எனப் பொதுவில் அழைக்கிறார்.

பரந்தே –
பெரிய திருநாளுக்கு எல்லாத் திக்குகளினின்றும் வந்து ஏறுமாறு போன்று,
பல திக்குகளினின்றும் பாடி ஆடிப் பரவிச் சென்மின்கள்.

‘விரும்பினவை எய்தும்; வினை யனைத்தும் தீரும்;
அரும் பரம வீடும் அடைவீர் பெரும் பொறி கொள்
கள்ளம் பூதங்குடி கொன் காயமுடை யீரடிகள்
புள்ளம் பூதங்குடியிற் போம்.– திவ்விய கவி-

வளந்தழைக்க உண்டால் என்? வாசம் மணந்தால் என்?
தெளிந்த கலை கற்றால் என்? சீசீ! – குளிர்ந்தபொழில்
தண் குருகூர் வாவிச் சடகோபன் ஊர் எங்கள்
வண் குருகூர் என்னாத வாய்.’

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்