ஸ்ரீ பாஷ்யத்தில் -கர்த்தரதிகரணம் முன்பும் அடுத்தும் பராயத்தாதிகரணம் —
முந்தின அதிகரணம்–ஜீவாத்மா கர்த்தா என்று அறுதியிட்டும்
பிந்தின அதிகரணம்-அந்த கர்த்ருத்வம் -பரமாத்மா யத்தம் என்று அறுதியிட்டது
ய ஆத்மனி திஷ்டன் ஆத்ம நோந்தர–ஆத்மாநம் அந்தரோ யமயதி-அந்த ப்ரவிஷ்ட சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா -இத்யாதி
ஸ்ருதிகளால் கர்மங்கங்களில் பிரேரிப்பவன் என்று தெரிய வருமே –
விதி நிஷேத சாஸ்திரங்கள் வ்யர்த்தமாக வேண்டி வருமே
நிக்ரஹ அனுக்ரஹ பாத்ரத்வம் ஜீவாத்மாவுக்கு இல்லை யாகுமே என்கிற சங்கையைப் பரிக்ரஹிக்க
க்ருத ப்ரயத்ன அபேக்ஷஸ்து-விஹித ப்ரதிஷித்த அவையர்த்தாதிப்ய-என்ற அடுத்த சூத்ரம் –
பிரதம பிரவ்ருத்தியில்-ஜீவாத்மாவுக்கு ஸ்வாதந்தர்யமும் -த்விதீயாதி பிரவர்த்திகளில் மட்டுமே பரமாத்ம பாரதந்தர்யமும்
கொள்ளப்படுகையாலே விதி நிஷேத சாஸ்திரங்களை வையர்த்தம் இல்லை என்று சங்கா பரிக்ரஹம்
பரமாத்மாவுக்கு -சாஷித்வம் -அநுமந்த்ருத்வம் -ப்ரேரகத்வம் –மூன்று ஆகாரங்கள் உண்டு
பிரதம பிறவிருத்தியிலே -சாஷித்வம் -உதாசீனத்தவம் மாத்திரமே –
த்விதீயாதி பிரவ்ருத்திகளில் அநு மந்த்ருத்வம்
ப்ரேரகத்வம் -நந்வேவம் ஏஷஹ்யேவா சாது கர்ம காரயதி-இத்யாதி ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகளாலே
ஸ்ரீ பாஷ்யகாரர் ஒருங்க விட்டு அருளினார்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் தத்வ சாரத்தில் -ஆதாவீஸ்வர தத்தயைவ புருஷ ஸ்வா தந்தர்ய சக்த்யா ஸ்வயம் —
தத்ர உபேஷ்ய–தத் அநு மத்ய–இத்யாதி ஸ்லோகத்தால் அருளிச் செய்தார்
அதிகரண சாராவளியில் -ஸ்லோகம் -242-க்ஷேத்ர ஞானம் சாமான்யம் இத்யாதியில் சேதனனுடைய சகல பிரவ்ருத்திகளிலும்
ஈஸ்வரனுக்கு ப்ரேரகத்வம் தாராளமாக உண்டு -என்று அருளிச் செய்து –
இது ஸ்ரீ பாஷ்ய தீப தத்வ சாரங்களோடே விரோதிக்கும் என்று அறிந்து –
ஸ்ரீ பாஷ்யாதி கிரந்த லேசோபி அவஹித மனஸாம் ஜதமர்தத்யம் பஜேதே -என்று முடித்தார்
தத்வத்ரயத்தில் -35-கர்த்ருத்வம் தான் ஈஸ்வர அதீனம் -என்பதற்கு விசதவாக் சிரோமணி ஸ்ரீ ஸூக்திகள்-
பராத்து தத் ஸ்ருதே-என்னும் வேதாந்த ஸூத்ரத்தாலே ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் பராயத்தம் என்று சித்தமாகச் சொல்லப்பட்டது இறே
சாஸ்த்ர அர்த்தவத்வத்துக்காக கர்த்ருத்வம் ஆத்மதர்மம் என்று கொள்ள வேண்டும் –
அந்த கர்த்தாவுக்கு தர்மமான ஞான இச்சா பிரயத்தனங்கள் பகவத் அதீனங்களாய் இருக்கை யாகையாலும்
அந்த ஞானாதிகள் பகவத் அனுமதி ஒழிய கிரியா ஹேது வாக மாட்டாமையாலும்
இவனுடைய புத்தி மூலமான ப்ரயத்னத்தை அபேக்ஷித்து ஈஸ்வரன் அனுமதி தானம் பண்ணுகையாலே
அந்த கிரியா நிபந்தமான புண்ய பாபங்களும் சேதனனுக்கே ஆகிறது –இப்படி கர்த்ருத்வம்
பரமாத்மா யத்தமானாலும் விதி நிஷேத வாக்யங்களுக்கு வையர்த்தம் வாராது –
கிரியா ப்ரயத்ன அபேக்ஷஸ்து விஹித ப்ரதிஷித்த அவையார்த்திப்ய–என்று பரிஹரிக்கப்படுகையாலே –
அதாவது விஹித ப்ரதிஷிப்தங்களுக்கு வையர்த்தாதிகள் வாராமைக்காக-இச்சேதனன் பண்ணின பிரதம பிரவ்ருத்திக்கு
அபேக்ஷித்துக் கொண்டு ஈஸ்வரன் ப்ரவர்த்திப்பிக்கும் என்றபடி -எங்கனே என்னில்
எல்லாச் சேதனருக்கும் ஞாத்ருத்வம் ஸ்வ பாவம் ஆகையால் சாமானையென பிரவ்ருத்தி நிவ்ருத்தி
யோக்யம் யுண்டாயாயே இருக்கும் –
இப்படியான ஸ்வரூபத்தை நிர்வஹிக்கைக்காக ஈஸ்வரன் அந்தராத்மாவாய்க் கொண்டு நில்லா நிற்கும்-
அவனாலே உண்டாக்கப்பட்ட ஸ்வரூப சக்தியை யுடையனான சேதனன் அவ்வோ பதார்த்தங்களில் உத்பன்ன
ஞான சிகீர்ஷா ப்ரயத்னனாய்க் கொண்டு வர்த்தியா நிற்கும்
அவ்விடத்தில் மத்யஸ்தன் ஆகையால் உதாசீனனைப் போலே இருக்கிற பரமாத்வானானவன்
அந்த சேதனனுடைய பூர்வ வாசனா அநு ரூபமான விதி நிஷேத ப்ரவ்ருத்தியில்
அனுமதியையும் அநாதாரத்தையும் யுடையவனாய்க் கொண்டு –
விகிதங்களிலே அநுஹ்ரகத்தையும் நிஷேதங்களிலே நிஹ்ரகத்தையும்
பண்ணா நிற்பானாய் அநுஹ்ரகாத்மகமான புண்யத்துக்கு பலமான ஸூகத்தையும் நிக்ரஹாத்மகமான பாபத்துக்கு பலமான துக்கத்தையும்
அவ்வோ சேதனருக்குக் கோடா நிற்கும்
இத்தை அபியுக்தரும் சொன்னார்
ஆதாவிஸ்வர தத்தயைவ புருஷஸ் ஸ்வா தந்தர்ய சக்த்யா ஸ்வயம் தத் தத் ஞானா சிகீர்ஷண ப்ரயதநாத் உத்பாதயன் வர்த்ததே
தத்ர அபேஷ்ய தத் அனுமத்ய விதயத் தத் நிக்ரஹ அனுக்ரஹவ தத் தத் கர்ம பலம் பிரயச்சத்தி ததஸ் ஸர்வஸ்ய பும்சோ ஹரி -என்று
அடியிலே -சர்வ நியாந்தாவாய் சர்வ அந்தராத்மாவான சர்வேஸ்வரன் தனக்கு உண்டாக்கிக் கொடுத்த ஞாத்ருத்வ ரூபமான
ஸ்வாதந்த்ர சக்தியாலே இப்புருஷன் தானே அவ்வோ விஷயங்களில் ஞான சிகீர்ஷா பிரயத்தனங்களை யுண்டாக்கிக் கொண்டு வர்த்தியா நிற்கும்
அவ்விடங்களில் அசாஸ்த்ரீயங்களிலே உபேக்ஷித்தும் சாஸ்த்ரீயங்களிலே அனுமதி பண்ணியும்
அவ்வோ விஷயங்களில் நிக்ரஹ அனுக்ரஹங்களைப் பண்ணா நின்று கொண்டு
அவ்வோ கர்ம பலத்தையும் சர்வேஸ்வரன் கொடா நிற்கும் என்றார்கள்
இப்படி சர்வ ப்ரவ்ருத்திகளிலும் சேதனனுடைய பிரதம ப்ரயத்னத்தை அபேக்ஷித்துக் கொண்டு
பரமாத்மா ப்ரவர்த்திப்பியா நிற்கும் என்றதாயிற்று –
ஆனால் ஏஷ ஹ்யேவ சாது கர்ம காரயதி தம் யமேப்யோ லோகேப்ய உன்னிநீஷதி ஏஷ ஏவா சாது கர்ம காரயதி
தம் யமதோ நிநீஷதி என்று உன்னிநீஷதையாலும் அதோநி நீஷதையாலும் சர்வேஸ்வரன் தானே
ஸாத்வசாது கர்மங்களை பண்ணுவியா நிற்கும் என்கிற இது சேரும்படி என் என்னில் –
இது சர்வ சாதாரணம் அன்று –
யாவன் ஒருவன் பகவத் விஷயத்தில் அதிமாத்ரமான ஆனுகூல்யத்திலே வியவஸ்திதனாயக் கொண்டு ப்ரவர்த்தியா நிற்கும்
அவனை அனுக்ரஹியா நின்று கொண்டு பகவான் தானே பிராப்தி யுபாயங்களாய் அதி கல்யாணமான கர்மங்களிலே ருசியை ஜெநிப்பிக்கும் –
யாவன் ஒருவன் அதி மாத்ர ப்ராதிகூல்யத்திலே வ்யவஸ்திதனாயக் கொண்டு ப்ரவர்த்திப்பியா நிற்கும் –
அவனை ஸ்வ பிராப்தி விரோதிகளாய் அதோகதி சாதனங்களாக கர்மங்களிலே சங்கிப்பிக்கும் என்று
இந்த சுருதி வாக்யங்களுக்கு அர்த்தம் ஆகையால் –
இது தன்னை சர்வேஸ்வரன் தானே அருளிச் செய்தான் இறே -காம் ஸர்வஸ்ய ப்ரபவோ-மத்தஸ் சர்வம் ப்ரவர்த்ததே
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவ சமன்விதா –என்று தொடங்கி
தேஷாம் சதத யுக்தானாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபாயந்ததே –
தேஷாம் அவானுகம்பார்த்தம் காம் அஞ்ஞானஜம் தம னாசையாம் ஆத்மபாவஸ்தோ ஞான தீபேன பாஸ்வதா -என்றும்
அஸத்யமபிரதிஷ்டம் தே ஜெகதாஹுரா நீஸ்வரம்-என்று தொடங்கி –
மாமாத்ம பர தேஹேஷு பிரத்விஷந்தோப்ய ஸூயகா -என்னுமது அளவாக அவர்களுடைய ப்ராதிகூல்யத்தைச் சொல்லி –
தா நஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷு நரதாமான் ஷிபாம் யஜஸ்ரமசுபா நா ஸூரீஷ்வேவ யோநிஷு -என்றும் அருளிச் செய்கையாலே –
ஆகையால் அநு மந்த்ருத்வமே சர்வ சாதாரணம் -பிரயோஜகத்வம் விசேஷ விஷயம் என்று கொள்ள வேணும் –
க்ருத ப்ரயத்ன அபேக்ஷஸ்து -என்கிற ஸூத்ரத்திலே ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்தார் இறே
இவை எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி இ றே -கர்த்ருத்வம் தான் ஈஸ்வராதீனம் என்று அருளிச் செய்தது
ஆக -கீழ்ச் செய்தது ஆயிற்று –
ஞான ஆஸ்ரயம் ஆகையாவது -ஞானத்துக்கு இருப்பிடமாய் இருக்கை -என்று பிரதமத்திலே ஆத்மாவினுடைய ஞாத்ருத்வத்தைச் சொல்லி –
ஞானம் மாத்திரம் என்பாரை நிராகரித்துக் கொண்டு –
ஞாத்ருத்வ கதன அநந்தரம் கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சொல்ல வேண்டுகையாலே அவை இரண்டும்
ஞாத்ருத்வ பலத்தால் தன்னடையே வரும் என்னும் இடத்தைத் தர்சிப்பித்து
குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது -ஆத்மாவுக்கு இல்லை என்பாரை நிராகரித்துக் கொண்டு –
ஆத்மாவினுடைய கர்த்ருத்வத்தை ஸ்தாபித்து
அந்த கர்த்ருத்வத்தில் ஸ்வரூப ப்ரயுக்தம் இல்லாத அம்சத்தையும்
அது தான் இவனுக்கு வருகைக்கு அடியையும் சொல்லி
இப்படி ஆத்மாவுக்கு உண்டான கர்த்ருத்வம் தான் சர்வ அவஸ்தையிலும் ஈஸ்வர அதீனமாய் இருக்கும் என்று நிகமித்தார் ஆயிற்று –
ஆக இவ்வளவும் தத்வத்ரய வியாக்யானத்தில் மணவாள மானுக்கிளை ஸ்ரீ ஸூக்திகள்
——————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply