ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
——————————
நித்ரா விச்சேதகத்வாத்/ நித்ராதி சேதகத்வாத்-2-1-1-
அரதி ஜன நதா -2-1-2-
அஜஸ்ரா சம் ஷோபாகத்வாத்–2-1-3-
அன்வேஷ்டும் பிரேரகத்வாத்-2-1-4
விலய விதாரணாத்–2-1-5-
கார்ஷிய தைனயாதி க்ருதவாத –2-1-6-
சித்த ஷேபாத்—2-1-7-
வி சம்ஞானி கரணாத்-2-1-8-
உப சம் ஷோபணாத்–2-1-9-
அவர்ஜனாப்யம்-2-1-10-
த்ருஷ்டாஸ் வாதஸ்ய சவ்ரே க்ஷண விரஹ தச துஸ் சஹத்வம் ஜகத–2-1-
நித்ரா விச்சேதகத்வாத்/ நித்ராதி சேதகத்வாத்–ஆயும் அமர் உலகும் நீயும் துஞ்சிலும் நீ துஞ்சாயால் / நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே
அரதி ஜனதா –சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்-ஒருக்காலும் தரியாதபடி ஸைதிலியத்தை உண்டாக்கி
அஜஸ்ரா சம் ஷோபாகத்வாத்–நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி ஏங்கு தியால் –கடல் கம்பீரம் இழந்து –
அன்வேஷ்டும் பிரேரகத்வாத்–சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அம்பஸ்ய பாரே புவனஸ்ய மத்யே நாகஸ்ய ப்ரிஷ்டே மஹதோ மஹீயான் -கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
காணும் நீர் மலை ஆகாசம் எல்லாம் – ஷீராப்தி திருவேங்கடம் ஸ்ரீ வைகுண்டம் -என்று நினைத்தே துழாவுமே
விலய விதாரணாத்–தோழியரும் யாமும் போலே நீராய் நெகிழ்கின்ற வானமே
கார்ஷிய தைனயாதி க்ருதவாத –நாண் மதியே –மை வான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
சித்த ஷேபாத்—கணை இருளே -நீ நடுவே வேற்றோர் வகையிலே கொடிதாய் எனை யூழி மாற்றாண்மை நிற்றியோ –
மனதைக் கொண்டு போது போக்க ஒண்ணாத படி அபஹரிக்கையும் –
வி சம்ஞானி கரணாத்–மா நீர் கழியே -மருளுற்று இராப் பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயேல்-ஒன்றும் தெரியாதபடி மதி மயக்கத்தை யுண்டாக்குகையாலும்
உப சம் ஷோபணாத்–நந்தா விளக்கமே காதல் மொய் மெல்லாவி யுள் யுலர்த்த
அவர்ஜனாப்யம்-அவர்ஜனம் -மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா -இனி எம்மை சோரேலே –
மறந்து பிழைக்க ஒண்ணாத படி விரோதி நிரசனாதி வசீகரண சேஷ்டிதங்களை யுடையவன் ஆகையாலும்
த்ருஷ்டாஸ் வாதஸ்ய சவ்ரே க்ஷண விரஹ தச துஸ் சஹத்வம் ஜகத-
——————
பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் –2-2-1-
பவ துரித ஹரம்–2-2-2-
வாமனத்வே மஹாந்தம் -2-2-3-
நாபி பத்மோத்த விஸ்வம் –2-2-4-
தத் அநு குணா த்ரிஷம் –2-2-5-
கல்ப தல்பி க்ரிதாபிம் –2- 2–6-
சுப்தம் ந்யகுரோத பத்ரே–2-2-7-
ஜகத் -அவனை -த்யாம்–2-2-8-
ரக்ஷணாய அவதிர்ணாம்–2-2-9-
ருத்ராதி ஸ்துத்ய அயம் –2-2-10-
வ்யவ்ருணித லலித உத்துங்க பாவேந நாதம் –2-2-
பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் –நம் கண்ணன் அல்லது இல்லையோர் கண்ணே -கண் -நிர்வாஹகன்
பவ துரித ஹரம்-மா பாவம் விட அரனுக்கு பிச்சை பெய்த கோபால கோளரி
வாமனத்வே மஹாந்தம் -மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட மால் தமிழ் மிக்குமோர் தேவும் உளதே-பரத்வம் -ஸுலப்யம் -வியாமோஹத்வம் –
நாபி பத்மோத்த விஸ்வம் -பத்ம யுத்த –
தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த தேவன் எம்பெருமான் -சத்வாரமாக சகலத்தையும் படைத்திட்டவன் -திவி கிரீடா- லீலா காரியமே
யதோ வா இமானி பூதாநி ஜாயந்தே – யேந ஜாதானி ஜீவந்தி –யத் பிரயந்த்ய அபிசம் விஷாந்தி — தத் விஞ்ஞானாஸ் அஸ்வ -தத் ப்ரஹமேதி
தத் அநு குணா த்ரிஷம் –தாக்கும் கோலத் தாமரை கண்ணன் எம்மான்
சத் ஏவ சோம்யம் அக்ர ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் தத் ஐக்ஷித பஹுஸ்யாம் ப்ரஜாயேத —
ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பவனா
ஏஷா அந்தராதித்ய ஹிரண்மயே புருஷோ த்ரிஷ்யதே தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக ஏவம் அஷிணி–
நிபேஷக்ணா -347-/ அரவிந்தாஷா -349-சுபேக்க்ஷணா -395-
கல்ப தல்பி க்ரிதாபிம் -அவர் எம் ஆழி யம் பள்ளியாரே / அகடிட கடின சாமர்த்தியம் -யாவரும் யாவையும் எல்லாப் பொருளும் கவரின்றி
தன் உள்ளே ஒடுங்க நின்ற உண்டும் உமிழ்ந்த -பவர் கொள் ஞான சுடர் வெள்ள மூர்த்தி
அசம்பாதகமாக தன்னுள்ளே வைக்கப்பட்ட சர்வ ஜகத்தை யுடையவனாய் – ஸ்வா பாவிக சர்வ ஞானத்தை யுடையவனாய்
ஷீரார்ணவ நிகேதனாய் வண் துவரப் பெருமானான சர்வேஸ்வரன் என்கிறார் –
சுப்தம் ந்யகுரோத பத்ரே—பள்ளி ஆலிலை யேல் உலகும் கொள்ளும் வள்ளல் /
அகடிட கடின சாமர்த்தியம்- உள்ளுள் ஆர் அறிவார் அவன் தன் கள்ள மாய மனக் கருத்தே –
சமுத்திர இவ காம்பீர தைர்யேன ஹிமவான் இவ —
ஸர்வேச்வரத்வ சின்ன பூத திவ்ய சேஷ்டிதங்களுக்கு ஒரு முடிவு உண்டோ என்கிறார் –
ஸர்வேச்வரத்வமான வட தள சயன ரூப சேஷ்டித்ததையை சொல்லிக் கொண்டு -மனக் கருத்தை யார் ஒருவர் என்று முடிக்கையாலே
மனக் கருத்து என்கிற சப்தம் தாதிஷ சேஷ்டித்த பரமாகை உசிதம் என்று கருத்து –
அத்யந்த ஆகாதமான அபரிச்சேதயமான ஒருவருக்கும் தெரியாதே இருந்த -தெரிந்ததும் ஆச்சர்யமாய் இருந்த
மனசாலே சங்கல்ப்பிக்கப் பட்ட சேஷ்டிதங்களை ஒருவரும் அறிய மாட்டார்
ஜகத் -அவனை -த்யாம்–மூ உலகும் தம்முள் இருத்திக் காக்கும் இயல்வினரே -காப்பதில் எப்பொழுதும் சிந்தை செய்பவன் –
ரக்ஷணாய அவதிர்ணாம்-காக்கும் இயலளவினன் கண்ண பெருமான் –
பரித்ராணாயா சாதூனாம் -விநாசாய ச துஷ்க்ரியதாம் -சேர்க்கை செய்து ஆக்கினான் -சம்ஹாரம் செய்து ஸ்ருஷ்ட்டி
கீழே காப்பதையும் சொல்லி –
இவ்வளவால் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்கள் செய்யும் பெருமான் ஒருவனே என்றும் இதனாலும் ஸர்வேஸ்வரத்வம் ஆனது
எல்லா அவதாரங்களிலும் சிறிதும் குன்றாத படியே உள்ளது என்றும்
கண்ணன் முதலான அவதாரங்கள் செய்வதும் திருமாலே என்றும் -தெளிவாக அருளப் பெற்றது
ருத்ராதி ஸ்துத்ய அயம் –வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே
வ்யவ்ருணித லலித உத்துங்க பாவேந நாதம் –ஸர்வேச்வரத்வம் -பரத்வம் –
———————–
சித்ர ஆஸ்வாத அனுபூதிம் –2-3-1-
பிரியம் உபக்ருத்ரிபி –2-3-2–
தாஸ்ய சாரஸ்ய ஹேதும் –2-3-3-
ஸ்வ ஆத்ம ந்யாஸ யர்ஹ க்ருத்யம் –2-3-4-
பஜத் அம்ருத ரசம் –2-3-5-
பக்த சித்தைக போக்யம் –2-3-6-
சர்வாக்ஷ ப்ரிணாமர்ஹம்–2-3-7-
ச படி பஹு பல சிநேகம்–2-3-8-
ஆஸ்வாத்ய ஷீலம்–2-3-9-
சபைபைஹ் சாத்யைஹ் ஸமேதம்–2-3-10-
நிர்விஷத் அநக அசேஷ நிர்வேஷாம் இஷாம் –2-3-
சித்ர ஆஸ்வாத அனுபூதிம் –பல பல விசித்திரமான ருசிகளின் அனுபவம் -தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
பிரியம் உபக்ருத்ரிபி –பெற்ற தாயாய் தந்தையாய் அறியாதது அறிவித்த அத்தா –
சமமில்லா சர்வ சத்ரிஷ்ட ரஸத்தை அனுபவித்தவர் இப்பாட்டில் சமமில்லா சர்வ பிரிய ஜன சம்பந்த ரசத்தை அனுபவிக்கிறார்
அனைவருக்கும் அந்தர்யாமி அன்றோ
தாஸ்ய சாரஸ்ய ஹேதும் -அறியாக் காலத்துள்ளே-அறியா மா மாயத்து அடியேனை – அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாய் –
தத்த தாஸ்ய இச்சாம் அதவ் – -மகாபலியை வஞ்சித்த படியே அடியேனையும் வஞ்சித்து -இசைவித்து நின் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்
ஸ்வ ஆத்ம ந்யாஸ யர்ஹ க்ருத்யம் -எனது ஆவி தந்து ஒழிந்தாய்–சேஷத்வ ஞானம் இல்லாமல் இருந்தாலே சத்தையே இருக்காதே —
அறிவித்து சத்தையையே உண்டாக்கினாயே –சேஷ சேஷி பாவம் -அறிவித்து நித்ய கைங்கர்யம் அபேக்ஷிக்கும் படி பண்ணி அருளினாய்
எனது ஆவி தந்து ஒழிந்தேன் -பர ந்யாஸம் / பெரு நல் உதவிக் கைம்மாறு –
ஆத்ம சமர்ப்பணம் செய்து ஆத்ம என்னுடையது அல்ல -அவனுடைய வஸ்துவை -அவன் கொடுத்திட்ட புத்தியால் –அவனே கொடுக்கும் படி செய்து –
அவனே ஸ்வீ கரித்துக் கொண்டான் என்று நினைக்க வேண்டும் -இது தான் செய்ய அடுப்பது
பாண்டே உனக்கு சேஷமாய் இருக்கிற ஆத்மாவை நீ கொண்டு அருளினாய் அத்தனை
பஜத் அம்ருத ரசம் -கணிவார் வீட்டு இன்பமே -என் கடல் படா அமுதே -சம்சார ஆர்ணவத்தில் இருந்து எடுத்து அளித்த தனியேன் வாழ் முதலே –
தொல்லை இன்பத்து இறுதி காண வைத்தானே –
பக்த சித்தைக போக்யம் -ஏக போக்யம் -தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாத அரு உயிரை அடியேன் அடைந்தேன் -முதல் முன்னமே –
பக்தர்கள் சித்தத்தில் ஒரே போகமாய்-வேறு ஒன்றும் -வேறு சமயத்தில் -இதற்கு முன் அனுபவித்தது -தோன்றாத படி அனுபவிக்கப் படுகிறவன்
ப்ராசீன துக்கம் அபி மே சுக அன்வய த்வத் பாதாரவிந்த பரிச்சார ரஸ ப்ரபாவகம் –
திண்மையான மதி -சோர்ந்தே போக்கால் கொடாச் சுடரை அடைந்தேன் / அரக்கியை மூக்கு அரிந்தது போலே சம்சார நிவ்ருத்தி -அருளினாய்
சர்வாக்ஷ ப்ரிணாமர்ஹம்–அஷ-இந்திரியங்கள் –பரம போக்யம்-சர்வ கரணங்களுக்கும் நிரவதிக போக்ய பூதன்
பவித்ரனே -கன்னலே -அமுதே -கார் முகிலே -பன்னலார் பயிலும் பரன் -யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே –என் கண்ணா –
ச படி பஹு பல சிநேகம் –குறிக் கொள் ஞானங்களால் –கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாலில் எய்தினன் யான் –
ச படி -உடனே என்றவாறு / பக்தி யோகத்தால் பல்லாயிர பிறப்பில் செய்த தபப் பயனை பிரபத்தி செய்விப்பித்து பிறவித துயர் கடிந்தானே
ஆஸ்வாத்ய ஷீலம்–செடியார் நோய்கள் கெட -பவித்ரன் அவனே -/
ஸுலப்யம் -ஸுசீல்யம் -வாத்சல்யம் -காருண்யம் -படிந்து குடைந்து ஆடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேன் –
குணைர் தாஸ்யம் உபாகத–
சபைபைஹ் சாத்யைஹ் ஸமேதம் — சபை -கூட்டம் / ஸாத்ய -நித்ய ஸூ ரிகள் –/ ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ –
———————————
ப்ரகலார்த்தே நரஸிம்ஹம்–2-4-1-
ஷபித விபத் உஷா வல்லபம் –2-4-2-
ஷிப்த லங்காம் –2-4-3-
ஷ்வேத ப்ரத்யர்த்தி கேடம்–2-4-4-
ஸ்ரம ஹர துளஸீ மாலினம் –2-4-5-
தைர்ய ஹேதும் –2-4-6-
த்ராணே தத்த வதனம் –2-4-7-
ஸ்வ ரிபு ஹதி க்ருதாஷ் வசனம் -2-4-8-
தீப்த ஹேதும்-2-4-9-
சத் ப்ரேஷ ரஷிதாரம்–2-4-10-
வியஸன நிரசன வியக்த க்ர்த்திம் ஜகத-வாட்டமில் புகழ் வாமனன் -2-4-
ப்ரகலார்த்தே நரஸிம்ஹம்–நாடி நாடி நரசிங்கா – என்று -வியக்த க்ர்த்திம்–
ஆடி ஆடி பாடிப் பாடி -அகம் கரைந்து -கண்ணீர் மல்கி –வாடி வாடும் –
ஷபித விபத் உஷா வல்லபம் -வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்—
வாணன் அசுரனுடைய மகளான உஷைக்கு வல்லபனான அநிருத்த ஆழ்வானுடைய ஆபத்தைப் போக்கினவன் –
அனுகூலர்களுக்கு சுலபாராக பிரசித்தமான நீர் -உம்மை காண நீர் இரக்கம் இலீரே –
ஷிப்த லங்காம்-அரக்கன் இலங்கை செற்றீர் / ராவணனை மட்டும் இல்லையே -ரக்ஷணத்தின் பாரிப்பு –பொல்லா அரக்கர்களை பூண்டோடு நிரசித்தாயே
ஷ்வேத ப்ரத்யர்த்தி கேடம்—ஷ்வேதம் -விஷம் –வலம் கொள் புள்ளுயர்த்தாய்
நாகாஸ்திரம் -இந்திரஜித் விட -பெரிய திருவடி போக்கிய விருத்தாந்தம் –
ஸ்ரீ கஜேந்திர மோக்ஷமும் / நரகாசுர வாதம் -இங்கு எல்லாம் கருட வாஹனத்துடனே வந்து அருளியதும் உண்டே
கருட த்வஜ அனு ஸ்மரணாத் விஷ வீர்யம் ப்ரஷாம்யதி
வெஞ்சிறைப் புள் உயர்த்தார்க்கு –வலம் கொள் புள் உயர்த்தது பிரதிபந்தக நிவ்ருத்திக்காகவே
ஸ்ரம ஹர துளஸீ மாலினம் –வந்து திவளும் தண்ணம் துழாய் கொடீர்
தைர்ய ஹேதும் –எனது அக உயிர்க்கு அமுதே -என்றும் / தகவுடையவன் என்றும் மிக விரும்பும் பிரான் என்றும்
அனுசந்தித்து உள்ளம் உக உருகி நின்று உள்ளுளே
த்ராணே தத்த வதனம் -வெள்ள நீராய் கிடந்தாய் என்னும் -/ வள்ளல் -தன்னையே தரும் –
ஸ்வ ரிபு ஹதி க்ருத ஆஸ்வாஸனம்–பிரதிபங்தக ங்களை சவாசனமாக போக்கி அனுகூலர்களை ஆஸ்வாஸம் செய்து அருளுபவர்
தன்னைக் கொல்ல நினைத்த கம்சனை கொன்று ஒழித்து இப்படியே ஆஸ்ரித விரோதிகளை போக்க வல்லவன் என்று அடியார்க்கு ஆஸ்வாச ஜனகம் ஆனவன் –
மிடுக்கனான கம்சனை அழியச் செய்து தன் நிமித்தமான பயத்தை தீர்த்து ஆச்வாஸனம் பண்ணி அருளினான்
தீப்த ஹேதும்–சுடர் வட்ட வாய் நிதி நேமியீர் -தீப்த ஹேதி ராஜன் –
எப்போதும் கையை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
ப்ரணத ரஷாயாம் விளம்பம் அஸஹன்னிவ சதா பஞ்சாயுதிம் ப்ஹருத் ச ந ஸ்ரீ ரெங்க நாயகா —
சத் ப்ரேஷ ரஷிதாரம்-பிரதிபந்தங்களையும் நீரே போக்கிக் கொண்டு –இந்தேனே வந்து ரஷித்து அருள வேண்டும் –
சாஸ்த்ராதி மூலமாய்ப் பெற்ற வாழ்வு -சத்துக்களது —
————————————–
ஸ்வ ப்ராப்ய சித்த காந்திம்
சுக தித தயிதம்
விஸ்ப்ருத துங்க மூர்த்திம்
ப்ரதி உன்மேஷ அதி போக்யம் –
நவ குண சரசம்
நைக பூஷாதி த்ரிஷ்யம்
ப்ரக்யாத ப்ரீதி அயம்
துரபி லப ரசம்
சத் குண ஆமோத ஹ்ருதயம்
விஸ்வ வ்யாவ்ருத்தி சித்தம்
வ்ரஜ யுவதி கணாக்யாத நித்ய அனவ புங்க்த —
ஸ்வ ப்ராப்ய சித்த காந்திம்–அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான்
விடாயர் மடுவிலே சேர்வது போலே சேர்ந்தான் –புணர்ச்சி மகிழ்தல் -அவனது நீராட்டம் தானே அடியவர்கள் உடன் ஸம்ஸ்லேஷிப்பது –
சுக தித தயிதம்–ஒரு இடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே–பிராட்டிக்கு மார்பகம் -பிரமனுக்கு நாபி கமலம் ஏக தேசம் மட்டும் கொடுத்து -முற்றூட்டாக என்னுள் கலந்தானே
விஸ்ப்ருத துங்க மூர்த்திம்–என்னுள் கலந்தவன் -திருநாமம் கேசவ நாராயணன் போலே –
சம்சாரிகள் அவனை இழந்து தவிப்பது போலே என்னை இழந்து விடாய்த்த இலவு தீர கலந்த பின்பு மின்னும் சுடர் மலை ஆனான்
ப்ரதி உன்மேஷ அதி போக்யம் -எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதுக்கு அப்பொழுது என் ஆராவமுதே –
உன்மேஷம் க்ஷணம் என்றும் பிரதி க்ஷணம் தோறும் ஆராவமுதம் என்றவாறு
நவ குண சரசம் –காரார் கரு முகில் போலே கலந்த என் அம்மான் -செம்பவள வாய்க்கு நேராகாதே –
கண் பாதம் கை இவற்றுக்கு கமலம் நேராகாதே –
நைக பூஷாதி த்ரிஷ்யம் -பரி பூர்ணன் –
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் -அரையில் தங்கிய பொன் வடமும்
தாள நன் மாதுளையின் பூவோடு பொன் மணியும் மோதிரமும் கிறியும் மங்கள ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும்
வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக எங்கள் குடிக்கு அரசே –பெரியாழ்வார் -1–6–10-
கிரீட மகுட சூடாவதாம்ச மகர குண்டல க்ரைவேயக ஹாரா கேயூர கடக ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப முக்தாதாம
உதர பந்தன பீதாம்பர காஞ்சீகுண நூபுராதி அபரிமித திவ்ய பூஷண –
ப்ரக்யாத ப்ரீதி அயம் -பள்ளி அமர்ந்ததுவும் -ஏறு ஏழு செற்றதுவும் –மராமரம் ஏழு எய்ததுவும் -தண் துழாய் பொன் முடியும் –
அனைத்து லீலைகளும் அவனது ப்ரீதி காரிதமே
துரபி லப ரசம் -சொல் முடிவு காணேன் -என் முடிவு காணாதே என்னுள் கலந்தானே /
ந வித்மோ ந விஜானிமோ யதைத் தனுஷி ஷியாத் -கேனோ உபநிஷத் /
யாதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா ஸஹ -தைத்ரியம்
இப்படி தன் முடிவு ஓன்று இல்லாதவன் அன்றோ என் முடிவு காணாதே என்னுள் கலந்தான் -இந்த சௌலப்யம் சொல்லும் அளவின்றி
சத் குண ஆமோத ஹ்ருதயம் -என்னாவி –என்னை நியமித்து அருளி / என் அம்மான் -ஸ்வாமி / என் கரு மாணிக்கச் சுடர் -ஸுலப்யம் /
எல்லை இல் சீர் -சுடர் -அமுது -விரை -சொல்லீர் –
அனைத்து புலன்களுக்கும் இங்கே அமுதம் உண்டே –
விஸ்வ வ்யாவ்ருத்தி சித்தம்
நைநம் வாச ஸ்த்ரீயம் ப்ருவன்-நைநம் அஸ்திரி புமான் ப்ருவன் -புமாம்சம் ந ப்ருவன் ந இனாம் -வதான் வதாதி கச்சன-அ இதி ப்ரஹ்ம –ரிக் வேத ஆரண்யம் –2–2-
இத்தையே ஆண் அல்லன் பெண் அல்லன் இத்யாதி -வேதம் தமிழ் செய்த மாறன்
ஸ்ரீ மத் பாகவதம் -8–3–24-
வ்ரஜ யுவதி கணாக்யாத நித்ய அனவ புங்க்த -நித்ய நிர்தோஷ கல்யாண திவ்ய தாமத்தில் பண்ணும் பிரமத்தை என் பக்கலிலே பண்ணிக் கொண்டு
சர்வ திவ்ய பூஷண ஆயுத பூஷிதனாய்
நிரதிசய ஸுந்தர்யாதி கல்யாண குண விசிஷ்டனாய் சுத்த ஜம்புநத பிரபமான திவ்ய ரூபத்தோடே வந்து என்னோடு கலந்து அருளினான் -என்கிறார்
ஸ்வாப்தி முதிதத்வம்-தன் ஆஸ்ரிதரோடு ஸம்ஸலேஷிக்கப் பெற்றால் நிரதிசயமாக ஆநந்திக்கும் ஸ்வபாவம் சொல்லும் திருவாய் மொழி –
கண்ணன் ஆசைப்பட்டே ஆயர் சிறுமிகள் உடன் கழிக்கிறான் -அவன் உகப்பு கண்டு உகக்குமவர்கள் –
அதே நிலைமை தானே இங்கு ஆழ்வாருக்கும் –
—————————————————
ஸ்வாப்தி முதிதத்வம்–தன் ஆஸ்ரிதர்களோடு ஸம்ஸ்லேஷிக்கப் பெற்று -நிரதிசயமாக ஆனந்திக்கும் ஸ்வ பாவம் -2-5-
அந்தாமத்து ஆண்டு செய்து -திருவாய்மொழி கல்யாண குணம்
விராஜ யுவதி கணாக்யாத நீத்யா அந்வபூங்க்த-விராஜா ஸ்த்ரீகளுடன் கூடி -கிருஷ்ணன் உபப்பைக் கண்டு உகந்தது போலே
இந்த திருவாய் மொழியிலே அவன் உகப்பைக் கண்டு ஆழ்வாரும் உகக்கிறார்
ஸ்வ ப்ராப்த்ய சித்தி காந்திம்
ஸூக திதி தயிதம்-
விஸ்புரத் துங்க மூர்த்திம்
ப்ரீதி உன்மேஷ அதி போக்யம்
நவகன ஸூ ரசம்
நைக பூஷாதி த்ரிஷ்யம்
ப்ரக்யாத ப்ரீதி ஈயம்
துர் அபிலப ரசம்
சத் குண ஆமோத ஹிருதயம்
விஸ்வ வ்யாவ்ருத்தி சித்ரம்
விராஜ யுவதி கணாக்யாத நீத்யா அந்வ பூங்க்த
ஸ்வ ப்ராப்த்ய சித்தி காந்திம்-2-5-1– விடையார் மடுவில் சேர்ந்தால் போலே ஆழ்வாருடன் கலந்தான் —
திவ்யாயுதங்களும் திவ்ய பூஷணங்களும் ஸ்வாபாவிகமாக அவன் உடன் சேருமா போலே ஆழ்வார் சேர்ந்தார் -ஆவி சேர் அம்மான் –
புணர்ச்சி மகிழாடல் துறையில் தம் உகப்பை நெருங்கிய தோழிக்கு அருளிச் செய்யும் முகமாக அருளிச் செய்கிறார்-
ஸூக திதி தயிதம்-2-5-2-
ஒரு இடம் ஓன்று இன்றியே என்னுள் கலந்தான் –
திருவுக்கு இடம் மார்பமே -அவனுக்கு கொப்பூழ் -போல இல்லையே ஆழ்வாருக்கு
விஸ்புரத் துங்க மூர்த்திம்- (2.5.3)–
மின்னும் சுடர் மலை அன்றோ அவன் -என்னுள் கலந்தவன் -என்ற விசேஷ திருநாமம் சூட்டுகிறார் இதில்
ப்ரீதி உன்மேஷ அதி போக்யம்- (2.5.4)
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே
ப்ரீதி உன்மேஷம் -எப்பொழுதும் வளர்ந்து கொண்டே போகும் அதி போக்யம்
பிரதி உன்மேஷம் -என்றும் கொண்டு -க்ஷணம் தோறும் அதி போக்யம் -என்றுமாம்
நவகன ஸூ ரசம் (2.5.5)-
காரார் கரு முகில் போல் என் அம்மான்
செம்பவள வாய்க்கு நேரா /கமலம் -கண் பாதம் கைக்கு நேரா
கார் முகில் கொட்டித்தீர்த்து வெளுக்கும் -இவனோ காரார் கார் முகில் எப்பொழுதும்
நைக பூஷாதி த்ரிஷ்யம் (2.5.6) |
ந ஏக-ஓன்று அல்ல-பல பலவே–ஆபரணங்கள் -பல பலவே பேர்களும் -பலபலவே சோதி வடிவுகளும் –
பலபலவே பண்புகளும் – அனைத்திலும் பரிபூர்ணன்
ப்ரக்யாத ப்ரீதி ஈயம் (2.5.7)
ஸ்ரீ ராம கிருஷ்ணாதி திருவவதார சேஷ்டிதங்கள் அனைத்தும்-ஏறுகளை செற்றதுவும் –
மராமரங்கள் எய்ததுவும் அடியார் உகப்புக்காகவே
துர் அபிலப ரசம் (2.5.8)-
சொல் முடிவு காண முடியாத போரேறு -தண் துழாய் மாலையான் -என் முடிவு காணாதே என்னுள் கலந்தானே
சத் குண ஆமோத ஹிருதயம் (2.5.9)
எல்லையில் சீர் அம்மான் -ஸ்வாமித்வம் -எல்லையில் சீர் ஆவி -நியந்த்ருத்வம் –
எல்லையில் சீர் கரு மாணிக்கச் சுடர் -ஸுலப்யம் /எல்லையில் சீர் சுடர் தேஜஸ் /
எல்லையில் சீர் அமுது -வாக்குக்கும் /எல்லையில் சீர் விரை காந்தம் மூக்குக்கும் /
எல்லையில் சீர் ஆவி -மனதுக்கும் / எல்லையில் சீர் சொல்லீர் -காதுக்கும் –
விஸ்வ வ்யாவ்ருத்தி சித்ரம் (2.5.10)
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன்
ந பூத சங்க ஸமஸ்தானோ தேகோஸ்ய பரமாத்மனா –சாந்தி பர்வம் 206-60
பஞ்ச பூத பிராக்ருதி போலே இல்லாமல் அப்ராக்ருத பஞ்ச உபநிஷத் மயன்
நைநம் வாசா ஸ்த்ரீயம் ப்ரூவன் நைநம் அஸ்திரி புமான் ப்ரூவன் புமாம்ஸாம் ந ப்ரூவன்
ந ஏனாம் வதன் வதாதி கஷ்சன அ இதி ப்ரஹ்ம–ரிக் -ஆரண்யகம் – 2.2
அகாரம் என்ற சொல்லப்படுபவர் அன்றோ –
ச வை ந தேவா அசுரா மர்த்யா த்ரியஞ்ஞா ஸ்த்ரீ ந ஷண்டோ ந புமான் ந ஐந்தூ நாயம் குண கர்ம
ந சன் ந சாஸன் நிஷேத அசேஷ ஜயதாத் அசேஷா -ஸ்ரீமத் பாகவதம்-8-3-24-
——————————————
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
———————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—
Leave a Reply