ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –227–

ஒன்பதாம் பத்தால்
சாதன பல உபகாரம் கைம்மாறு இன்றி
க்ருதஞ்ஞதா பல க்ருதமானம் -ஆத்மாவை உணர்ந்தார் எட்டாம் பத்தில்
ஆத்ம தரிசன பல பிராப்தி மரணாவதியாகப் பெற்று —
சரணமாகும் தனது தாள் அடைந்ததற்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –

சர்வ சக்தித்வம் -கீழே -ஆபத் ஸகத்வம் இதில் –
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ப்ராப்யம் –
சஞ்சித கர்மா மூட்டை பிராரப்த கர்மா -வர்த்தமான சரீரம் -வரும் சரீரம் இரண்டிலும் அனுபவிக்கும் ஆரப்தம்-
வர்த்தமான ஆரப்தம் முடிந்தால் பேறு-சரீரம் விழும் பொழுது -நாள் அவதி இட்டுகே கொடுக்கும் திருக்கண்ண புரம்-
கிருபையால் சிலருக்கும் -பரம கிருபையால் – பலருக்கும் சர்வ உபாயங்கள்
பக்தி -பிரபத்தி -வாயால் திவ்ய தேசம் சொல்வது -இவற்றை நினைப்பது -இப்படி பல படிகள்

சங்கதி –
நெடுமாற்கு அடிமையில் பாகவத பிரபாவம் காட்டி அருளிய நிருபாதிக பந்து –
கிருபை அடியாக பந்து-கர்மம் அடியாக மற்ற பந்துக்கள் –
கிருபை பொது -சாதாரணம் -அனைவருக்கும் -நிஷ் காரணம் நிருபாதிகம்–
வால்மீகி -திருட -ரிஷி -திருடிய பயனை பகிர்ந்து கொள்ள பத்னி இடம் கேட்கச் சொல்ல -அவள் மறுக்க உணர்ந்த ஐதிக்யம்
சம்சாரிகள் சோபாதிக பந்துக்களுடன் இருக்கக் கண்டவர் அவர்களைத் திருத்த –
கை விட்ட அனைவரையும் ரக்ஷித்து அருளுபவர் சகலவித பந்து -பிராப்தி -9-1-சொல்லி
அதுக்கு பலம் -கைங்கர்யம் -பந்து க்ருத்யம் -9-2-பண்டை நாளாலே -கொடுவினையேனும் பிடிக்க கூவுதல் வருதல் செய்யாயே
என் ஆர்த்தியும் உம் ஆர்த்தியும் தீர்க்காமல் இருக்கவோ -இவர் ஆர்த்தி மட்டும் ஆராவமுதே -5-8-
சஞ்சயனை பள்ளிக் கட்டுக்குள்ளே வரச் சொல்லி -அந்த அந்தரங்க கைங்கர்யம் -பிரார்த்தனை த்வரை-
செய்கிறேன் -வார்த்தை கேட்டதும் ஸமாஹிதரானார் -கௌசல்யை மங்களம் பெருமாளுக்கு -அனுக்ரஹம் செய்தால் போலே-
ஒரு வார்த்தை கேட்டது போலே துடித்து இருந்தாலும் –நாராயணன் அர்த்தம் கேட்டதும் -9-3-
வியாபக மந்த்ர ப்ரீதி–ஓங்கார அர்த்தம் -8-8-/ நமஸ் சப்தார்த்தம் -8-9-அநந்யார்ஹத்வம் /–நெடுமாற்கு அடிமை ஆர்த்தமான அர்த்தம் -8-10-
அவனே பந்து ஆபாச பந்துக்கள் அல்லர் -9-1-/ பந்து இடம் கைங்கர்யம் ஆய அர்த்தம் -9-2-/
சார தம காயத்ரியின் முன் ஓதிய நாராயணன் அர்த்தம் விருப்பம் –
திருமந்திர நாராயணனுக்கு மேலே ஸ்ரீ யபதி–அணியார் மலர் மங்கை தோள் கீழே வந்ததே -சேர்த்து வைக்க வேண்டுமே
முடியானே ஆசை திரும்ப -9-4-மையார் கரும் கண்ணி காண விரும்பும் கண்ணே -த்வய நாராயணன் -அர்த்தம் –
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டே -மானஸ அனுபவம் -பாஹ்ய சம்ச்லேஷம் கிட்டாமல்
இன்னுயிர்ச் சேவலும் -எம்பெருமானார் உகந்த -9-5-லௌகிக பதார்த்தம் பார்த்து ஆசுவாசப்படாமல் இவை சேர்ந்து ஆழ்வாரை நலிய
கூடி இருக்கும் பொழுது ஸந்தோஷம்-விஸ்லேஷத்தில் நலிவு -இவர்களை குற்றம் சொல்லக் கூடாதே
குண அனுபவம் செய்து தரிக்க
மகள் பதிகம் இது 9-5–
இருத்தும் வியந்து 8-7-உடன் –9 -6-உருகுமால் சங்கதி -போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில் கரை அழிக்கும்-
ஆத்ம தத்வம் -சரீரம் -மனஸ் அனைத்தும் உருக —
குணம் -என்றாலே சீலம் -ஸ்ரீ ராமாயணம் பார்த்தோம் -குணவான் —
சீல குணம் அனுபவித்து -அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானம் இது –
தன்னிலைமை இழந்து தூது -9-7-எம் கானல் -திரு மூழிக் களத்து –தாம் தம்மைக் கொண்டு அகல்வது தகுதியோ –
அழகை நினைவு படுத்தி -ஸுவ்ந்தர்யம் பற்றாசாக தூது–
இது நான்காம் தூது -கடைசி தூது -தூது விட்டு அவன் வருவதற்குள் நிலை -திரு நாவாய் -9-8-கிட்டே போவேனோ –
சீதா நிலைமை போலே -பெருமாள் கடலை தாண்டி வருவாரா பாரிப்பு போலே
அடியேன் அணுகப் பெறு நாள் என்றோ –
ஆளவந்தார் மிகவும் உகந்த பதிகம்–
மல்லிகை –மகள் பாசுரம் -9-9-நலிய -ப்ராப்ய வஸ்து அடைய ஆசைப்பட்டார் திரு நாவாய் –
கோபிகள் ஒரு இரவில் பட்ட வருத்தம் ஆளவந்தார் –நான்கு பதிகமாக பட்ட வருத்தம் — –
ராமானுஜர் ஒரு இரவு -இல்லை முற் கூறு இல்லாமல் பிற கூறு வரும் வரை பட்ட வியசனம்-
மங்கைமார் சாலக வாசல் பற்றி நிற்பார்கள் -பெரியாழ்வார் –
ஆயிரம் பிள்ளைகள் பின் வருவதால் பட்ட பாடு –மாலைப்பூசல் –
உமது வருத்தம் என்னது அன்றோ -நியத பிரகாரம் சொன்னோமே எட்டாம் பத்திலே -நாள் குறித்து -அருளிச் செய்ய ஸமாஹிதரானார்
மரண அவதி யாக அருளிச் செய்த பதிகம் -9-10-
நீல மேக பெருமாள் -மூலவர் -ஸுவ்ரி ராஜ பெருமாள் உத்சவர் -கலங்கா பெருநகரம் காட்டுவான் -பர உபதேசம் -9-1-போலே -9-10-
சரண முகுந்தத்வம் –குணம் காட்டி -ஆபத் ஸகத்வம்

ஒன்பதாம் பத்தால்-

இப்படி அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே –
இத்தலையில் ஒன்றும் அபேஷிக்காமல் -பிரளயாதி ஆபத்துகளிலே உதவி ரஷிக்கும் ஆபத் சகனான சர்வேஸ்வரன் –
கீழ் பிரகாசிப்பித்த ஆத்ம தர்சனதுக்கு பலம்-
ஸ்வரூப அனுரூபமான பிராப்த்யத்தை அனுபவிக்கை ஆகையாலே –
அவ் அனுபவத்தில் உண்டான த்வரையாலே -ஷண காலம் விளம்பம் பொறுக்க மாட்டாமல் –
ஆர்த்தரான தமக்கு -ஆரப்த சரீர அவசானத்திலே -பேறாகக் கடவது -என்று
நாள் அவதி இட்டு கொடுக்கப் பெற்றவர் –
கீழ் தாம் உபதேசித்துத் திருந்தினவர்கள் ஒழிய -அல்லாதாரையும் விட மாட்டாத
பரம கிருபையாலே -யதா அதிகாரம் சர்வ உபாயங்களையும் அருளிச் செய்கிறார் -என்கிறார்-

———————————————–

1-எண் திசையும் அகல் ஞாலம் எங்கும் அளிக்கின்ற
ஆலின் மேல் என்னும் படி நித்ய போக பாத
லீலா உபகரணத்தின் லயாதிகளை போக்கும் ஆபத் சகன்
2-ஆர் உயிர் என்னப் படுத்தின ஆத்ம தர்சன பல அனுபவ
பரம்பரையைக் கூவுதல் வருதல் என்று முடுக விட்டு
3-ஏகம் எண்ணிக் காணக் கருதி எழ நண்ணி நினைதொறும்
உருகி அலற்றி கவையில் மனம் இன்றி பதினாலாண்டு
பத்து மாசம் ஒரு பகல் பொறுத்தவர்கள் ஒரு மாச தின
சந்த்யையில் படுமது ஷணத்திலே யாக விரங்குகிற த்வரைக்கு ஈடாக
4-இனிப் பத்தில் ஓன்று தசம தசையிலே பேறு என்று
நாட் கடலாக தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவை
போலே நாள் இடப் பெற்றவர்
5-இம்மட உலகர் கண்ட தோடு பட்ட
அபாந்தவ அரஷக அபோக்ய அஸூக அனுபாய
பிரதி சம்பத்தியைக் காட்டி
6-மற்று ஓன்று கண்ணன் அல்லால் என்கிற
வைகல் வாழ்தலான சித்தோபாயம்
7-அதில் துர் பல புத்திகளுக்கு மாலை
நண்ணி காலை மாலை விண்டு தேனை
வாடா மலர் இட்டு அன்பராம் சாங்க பக்தி –
அதில் அசக்தருக்கு தாள் அடையும் பக்தி
8-அதில் அசக்தருக்கு உச்சாரண மாத்ரம்
சர்வ உபாய சூன்யருக்கு இப் பத்தும்
பாடி யிடும் தண்டன் என்று
கீதாச்சர்யனைப் போலே அதிகார
அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் ஒன்பதாம் பத்தில் ..

———————————————–

1-எண் திசையும் அகல் ஞாலம் எங்கும் அளிக்கின்ற ஆலின் மேல் என்னும் படி நித்ய போக பாத
லீலா உபகரணத்தின் லயாதிகளை போக்கும் ஆபத் சகன்-
(பாத லீலா உபகரணம் -நித்ய போகமான பரம பதத்தை நோக்காக கால் கூறாக இருக்கும் லீலா விபூதி -என்றவாறு)
அதாவது-
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்-9-1-1- -என்றும் ,
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்-அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான்-9-3-2- -என்றும்
அகலிடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன்-9-9-2- -என்றும்
ஆலின் மேலால் அமர்ந்தான்-9-10-1- -என்றும்

சகல லோகங்களையும் பிரளயம் கொள்ளாமல் ஏற்கவே -திரு வயிற்றில் வைத்து நோக்கி
அழிந்தவற்றை மீண்டும் உண்டாக்கியும் –
ஹிரண்யாஷனாலே தள்ளுண்டு அண்ட பித்தியிலே சேர்ந்த பூமியை ஒட்டு விடுவித்து எடுத்தும்-
மகா பலி பலாத்கரித்து ஆளுகிற தசையிலே -எல்லை நடந்து மீட்டும் –
இப்படி பிரளயாதி ஆபத்துகளில் உதவி ரஷித்தவன் என்னும் படி —
கீழ் சொன்ன சத்ய காமத்வத்தால் வந்த நைரபேஷ்யம் தோற்ற -இத் தலையில் அபேஷம் அற –
பிரதுபகாரம் நினையாமல் -வரையாதே -தன் பேறாக நோவு படும் அளவுகளிலே உதவி –

பாதோஸ்ய விஸ்வா பூதானி த்ரிபாதாஸ் யாம்ருதம் திவி -புருஷ ஸூக்தம்–என்கிறபடியே
அம்ருத சப்தத்தால் சொல்லும்படி -நித்ய போகமான-த்ரிபாத் விபூதியைப் பற்ற அல்பம்
ஆகையாலே பாத சப்தத்தால் சொல்ல பட்ட லீலா உபகரணமான இவ் விபூதியில்
லயாதிகளை போக்கும் ஆபத் சகனானவன்–

———————————————————-

2-ஆர் உயிர் என்னப் படுத்தின ஆத்ம தர்சன பல அனுபவ பரம்பரையை கூவுதல் வருதல் என்று முடுக விட்டு
அதாவது
இ6ருந்தும் வியந்தில் -8-7–தம்மோடு கலந்த கலவியை ஸ்மரிப்பிக்க
வித்தராய் –பேசுகிற அளவிலே –
அவன் தட்டு மாறி -நின்று பரிமாறின சீலத்தில் ஈடுபட்டு –
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -9-6-9–என்று என் ஆத்மா பட்டது –
நித்ய அனுபவம் பண்ணுகிற நித்ய சூரிகள் ஸ்வரூபம் தான் பட்டதோ என்னும் படியாக –
தாம் மேல் விழுந்து அனுபவித்த -ஆத்ம வைலஷண்யத்தை
கீழில் பத்தில் (கண்கள் சிவந்து-8-8-) யாதாவாகக் காட்டக் கண்டு -அதுக்கு பலம்-ஸ்வரூப அனுரூபமான
பிராப்யத்தை அனுபவிக்கை ஆகையாலே –

சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்-9-2-1–என்றும் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய்–9-2-2-என்றும் –
உன் தாமரை மங்கையும் நீயும் இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய் -9-2-3–என்றும் –
கனி வாய் சிவப்ப நீ காண வாராய் -9-2-4–என்றும் –
நின் பன்னிலா முத்தம் தவழ கதிர் முறுவல் செய்து நின் திரு கண் தாமரை தயங்க நின்று அருளாய் -9-2-5-என்றும்-

திருப் பவளத்தை திறந்து -ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் –
திரு கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும் –
திரு அடிகளை என் தலை மேல் வைத்து அருள வேண்டும் –
தேவரீரும் பிராட்டியும் சேர்ந்து கூட எழுந்து அருளி இருக்கிற இருப்பை எனக்கு காட்டி அருள வேண்டும் –
என் முன்னே நாலடி உலாவி அருள வேண்டும்
அனுகூல தர்சனத்திலே பிறக்கும் ஸ்மிதம் காண வேண்டும் -என்று இப்படி
அனுபவ பரம்பரையை ஆசைப் பட்டு -க்ரம பிராப்தி பற்றாமையாலே –

கூவுதல் வருதல் செய்யாய் -9-2-10–என்று7-
நிரதிசய போக்யமான உன் திரு அடிகளில் நான் வந்து அடிமை செய்யும் படி
என்னை அங்கே அழைத்தல்- நீ இங்கே வருதல்-செய்து அருள வேணும் என்று –
இப்படி முடுக விட்டு–

(தனது உயிரை ஆர் உயிர் என்று சொல்ல வைத்தார் -ஆத்ம ஸ்வரூபம் உள்ளபடி அறிந்து –
அதன் பலமாக கைங்கர்யம் விருத்திக்கு பிரார்த்திக்க வேண்டுமே )
————————————————-

3-ஏகம் எண்ணிக் காணக் கருதி எழ நண்ணி நினைதொறும் உருகி அலற்றி கவையில் மனம் இன்றி
அதாவது
(ஓராயிரமாய்-9-3- -திருவாய்மொழியில்)
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே –9-3-7-
என்று அவன் நித்ய வாசம் பண்ணுகிற பரமபதத்தைக் காண்கையிலே சர்வ காலமும் ஏக ரூபமாய் மனோரதித்து –

(மையார் கருங்கண்ணி-9-4- திருவாய்மொழியில்)காணக் கருதும் என் கண்ணே -9-4-1-– என்று
பெரிய பிராட்டியா1-ரோடும் -திவ்ய ஆயுதங்களோடும் -திவ்ய விக்ரகத்தோடும் –
கூடி இருக்கிறவனைக் காண வேண்டும் என்று ஆசை பட்டு –

(இன்னுயிர்ச் சேவலும்-9-5- திருவாய்மொழியில் )எழ நண்ணி நாமும் நம் வான நாடோடு ஒன்றினோம் -9-5-10–என்று
ஸ்மாரக பதார்த்த தர்சனத்தில் நோவு படுகையாலே -முடிந்து போகையிலே ஒருப் பட்டு –

(உருகுமால் நெஞ்1-சம்-9-6- திருவாய்மொழியில் )
திரு காட்கரை மருவிய மாயன் தன் மாய9-99-ம் நினை தொறு-நெஞ்சம் உருகுமால்-9-6-1- -என்று
அவன் அனுபவ தசையில் பரிமாறின சீலாதிகளை நினைக்கும் தோறும்
அனுபவ உபகரணமான நெஞ்சு சிதிலமாய் கரைந்து –

(எம் கானல் அகம் கழிவாய் திருவாய்மொழியில்-9-7- )தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே கேளீரே -9-7-2-என்று
தூத பிரேஷண முகத்தாலே – கிளி மொழியாள் அலற்றிய சொல் – 9-7-11-என்று
ஆற்றாமையாலே அக்ரமமாகக் கூப்பிட்டு –

(அறுக்கும் வினையாயின -9-8-திருவாய்மொழியில்)கவையில் மனமின்றி கண்ணீர்கள் கலுழ்வன் -9-8-3–என்று
இரு தலைத்த நெஞ்சு இன்றிக்கே -ஏகாக்ர சித்தராய்-
1-1-
பதினாலாண்டு பத்து மாசம் ஒரு பகல் பொறுத்தவர்கள்
ஒரு மாச தின சந்த்யையில் படுமது ஷணத்திலே யாக விரங்குகிற த்வரைக்கு ஈடாக
அதாவது-
(மல்லிகை கமழ் தென்றல்-9-9- திருவாய்மொழியில்)
பெருமாளைப் பிரிந்து பதினாலாண்டு பொறுத்து இருந்த ஸ்ரீ பரதாழ்வான் –
பூர்ணே சதுர்தச வர்ஷே பஞ்சம்யாம் லஷ்மணாக்ரஜ –யுத்த -127-1—என்று அவதி கழிந்த ஒரு நாளில் பட்ட கிலேசமும் —

பத்து மாசம் பொறுத்து இருந்த பிராட்டி -மாஸாத் ஊர்த்தவம் ந ஜீவிஷ்யே –ஸூந்தர –40 -10–
(இன்னம் ஈண்டொரு திங்கள் இருப்பல் யான் நின்னை நோக்கிப் பகர்ந்து நீதியோய்-
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அனந்த மன்னன் ஆணை இதனை மனக்கொள் நீ –ஸ்ரீ கம்பநாட்டாழ்வார் )-என்று
திருவடி இடம் சொல்லி விட்ட அநந்தரம் -அவ்வொரு மாசத்தில் பட்ட கிலேசமும் –

கிருஷ்ணன் பசு மேய்க்கப் போக ஒரு பகல் எல்லாம் பொறுத்து இருந்த ஸ்ரீ கோபிமார்-
அவன் பசுக்களின் பின் குழையிலே வாரா நிற்க – முற் கொழுந்தில் காணாமையால்
ஒரு சந்த்யையில் பட்ட கி2-லேசம் எல்லாம் –

ஒரு ஷணத்திலே யாம் படி –
அவனை விட்டு அகல்வதற்க்கே இரங்கி-9-9-11-என்று ஈடு படுகிற த்வரைக்கு ஈடாக-

——————————————————-

4-இனிப் பத்தில் ஓன்று தசம தசையிலே பேறு என்று
அதாவது-
நயன பிரீதி பிரதமம் சிந்தா போகஸ் ததோனு சங்கல்ப
நித்ராஸ் சேதஸ் தநுதா விஷய விரக்திஸ் த்ரபாநாச
உந்மாதோ மூர்ச்சா ம்ருதி ரித்யேதா ச்மரதசா தசைவ ஸ்யு-என்றும்-( த்ராபா -வெட்கம்)

பி9-ரதமஸ் தவபிலாஷ ஸ்யாத் த்விதீயம் சிந்தனம் பவேத்
அநு ஸ்ம்ருதிஸ் த்ருதீயந்து சதுர்த்தம் குண கீர்த்தனம்
உத்யோக பஞ்சமம் ப்ரோக்த பிரலாப ஷஷ்ட உச்யதே
உ-ன்மாதஸ் சப்தமோ ஞேய அஷ்டமோ வ்யாதிருச்யதே
நவமே ஜடாத சைவ தசமம் மரணம் ததா -என்றும்-

காட்சி முதலாச் சாக்காடு ஈறாக் காட்டிய பத்தும் கை வரும் எனினே
மெய்யுறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே –நம்பியகப்பொருள் -என்றும்

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல் நோக்குவம் எல்லாம்
அவையே போறல் மறத்தல் மயக்கம் சாக்காடு என்றச் சிறப்புடை மரபினவை கழவென மொழிப–தொல்காப்பியம்-என்றும்
சொல்லுகிறபடி -9-1

காமுகராய் இருப்பார்க்கு தசம அவஸ்தையிலே மரணமாம் போலே –
நம் பக்கல் பரபக்தி உக்தரான உமக்கும் நம்மை பெறாவிடில் முடியும் படியான பரம பக்தி தசை –
பத்தாம் பத்திலே -பிறக்கத் தேடுகிறது –
ஆகையால் கீழ் சொன்ன விளம்பம் இல்லை –இனி உள்ளது பத்தில் ஓன்று தசம தசையான
மரண அவஸ்9-தையிலே பேறு என்று-

நாட் கடலாக தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவை போலே நாள் இடப் பெற்றவர்
அதாவது
நாட் கடலை கழிமின்-1-6-7- –என்கிறபடியே -விரஹ வ்யசனத்தாலே ஒருநாள் கடல் போலே துச்தரமாம் படி –
பூர்ணே சதுர்தசே வர்ஷே -யுத்த -127-1–என்று தம்பியான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நெடுக நாள் இட்டு
கொடுத்தால் போல் ஆகாமே –

நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு -நாச்சியார்-6-2-– என்று
இன்று எனில் வெள்ளக் கேடாம்-சில நாள் கழித்து எனில் வறட்கேடாம் என்று நினைத்து –
நாளை என்று நாச்சியாருக்கு நாள் இட்டால் போலே –

மரணமானால் -9-10-5–என்று ஆரப்த சரீர அவசானத்திலே -பேறாக -அவன் தானே
நாள் இட்டு கொடுக்கப் பெற்று ஹ்ருஷ்டர் ஆனவர் –

——————————————

5-இம் மட உலகர் கண்ட தோடு பட்ட அபாந்தவ அரஷக அபோக்ய அஸூக அனுபாய பிரதி சம்பத்தியைக் காட்டி
அதாவது-
சரம உபாய உபேய பர்யந்தமாக -தாம் அருளிச் செய்த ஹித வசனம் கேட்டு –(சரம உபேயம் -அர்ச்சாவதாரம்)
திருந்தினவர்களை ஒழிய -அல்லாதாரையும் விட மாட்டாத தம்முடைய கிருபையால் –
இம் மட உலகீர் -9-2-7–என்று சம்சாரத்தில் அறிவு கேடர் ஆனவர்களுக்கு –
கொண்ட பெண்டிர் –9-1-1-என்று தொடங்கி -சந்நிதியிலே ஸ்நேகிக்கும் அது ஒழிய காணாத போது
ஸ்நேகம் ஓன்று இன்றிக்கே இருக்கிற பார்யா புத்ராதிகள் பந்துக்கள் அன்று —
பிரளய ஆபத் சகனானவனே பரம பந்து என்றும் —

துணையும் சார்வும் –9-1-2-
பொருள் கை உண்டாய் –9-1-3-
அரணமாவர்- 9-1-4-என்ற பாட்டுகளாலே –
அவனை ஒழிந்தார் தாங்கள் உபகாரரைப் போலே -பிரயோஜனம் உள்ள போது பந்துக்களாய் கொண்டாடி –
ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேஷிப்பார்கள்–ஆகையால் அவர்கள் ரஷகர் அல்லர் –
தன்னுடைய ரஷணத்தில் அதி சங்கை பண்ணினாரையும் விஸ்வசிப்பித்து ரஷிக்கும் அவனே–அவதார முகத்தால்
ஸூலபனாய் -ரஷண அனுரூபமான குணங்களை உடையவனாய் – -அவனை ஒழிய வேறு ரஷகன் இல்லை –

சதிரம் என்று தம்மைத் தாமே சம்மதித்து-9-1-5 –என்று தொடங்கி -தங்களுக்கு போக்யைகளாக சம்பாதித்த
ஸ்திரீகள் ஆபத்து வந்த வாறே உபேஷிப்பர்கள் —
ஏக பிரகாரமாக சந்நிக்தனாய் இருப்பவன் அவனே- ஆன பின்பு -அவர்கள் போக்யர் அல்லர் —
அவனே நிரதிசய போக்யன் என்றும் –

இல்லை கண்டீர் இன்பம்-9-1-6-என்று தொடங்கி
துக்கங்களிலே சில வற்றை ஸூகம் என்று பிரமிக்கும் இத்தனை போக்கி அவனை ஒழிய
ஸூக ரூபமாய் இருப்பது ஓன்று இல்லை என்றும் –

யாதும் இல்லை மிக்கு அதனில்-9-1-9-என்று தொடங்கி
அவனை ஒழிய வேறு ஒன்றை ரஷகம் என்று பற்றினவர்கள் பண்டை நிலையும் கெட்டு
அனர்த்தப் பட்டு போவர்கள் –ஆன பின்பு அவனை ஒழிய உபாயம் இல்லை என்றும் –

இப்படி-அவனை ஒழிந்தாருடைய அபந்துவத்தையும் -அரஷகத்வத்தையும் –அபோக்யத்வத்தையும் —
அஸூகத்வத்தையும் –அனுபாயத்வத்தையும் –

அதுக்கு பிரதி கோடியான -அவனுடைய –
பரம பந்துத்வத்தையும் –நிருபாதிக ரஷகத்வத்தையும் –நிரதிசய போக்யதையும் –
ஸூக ரூபத்தையும் –நிரபேஷ உபாயத்வத்தையும் –தர்சிப்பித்து-
(விசேஷணங்கள் அவனுக்கு ஒவ் ஒன்றிலும் காட்டி அருளி )
இம் மட உலகருடைய அபாந்தவாதிகள் பிரதி சம்பந்தியை அவர்களுக்குக் காட்டி என்று
வாக்ய யோஜன க்ரமம்–

—————————————————-

6-மற்று ஓன்று கண்ணன் அல்லால் என்கிற வைகல் வாழ்தலான சித்தோபாயம்
அதாவது-
மற்று ஓன்று இல்லை சுருங்க சொன்னோம்- மா நிலத்து எவ் உயிர்க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள்-9-1-7-என்று இதுக்கு மேல் சொல்லல் ஆவது ஓன்று இல்லை –
இது தன்னை ஸூக்ரகமாக சொன்னோம் –மகா பிருத்வியில் சகல ஆத்மாக்களுக்கும் இது தனக்கு பரக்க
ஆயாசிக்க வேண்டா – சிந்தா மாத்ரமே அமையும் –கேளி கோள் -என்கையாலே –
தனக்கு மேல் ஓன்று இன்றியே இருப்பதாய்
ஸங்க்ரஹேன உபதேசிக்கலாய் –
சர்வாதிகாரமாய் –
வரண ஸூகரமுமாய் -இருக்குமதாய் –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்–9-1-10–என்று
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று
கிருஷ்ணனை ஒழிய வேறு உபாயம் இல்லை என்கையால்-
சித்தமாய்
பரம சேதனமாய்
சர்வ சக்தியாய்
நிர் பயமாய்
ப்ரப்தமாய்
சகாயாந்தர நிர பேஷமாய்
இருக்குமதாகவும் சொல்லப் படுமதாய்
வட மதுரை பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல்–9-1-7-என்கிற
யாவதாத்மபாவியான -குண அனுபவத்துக்கு உடலான -சித்தோ உபாயத்தை உபதேசித்தும் –

————————————————

7-அதில் துர் பல புத்திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை
வாடா மலர் இட்டு அன்பராம் சாங்க பக்தி –
அதாவது-
சக்ருதேவ ஹி சாஸ்தார்த்த க்ருதோயம் தார என்னரம்
நராணாம் புத்தி தெவ்பல்யா துபாயாந்தர மிஷ்யதே -என்கிறபடியே
அந்த சித்தோ உபாயத்தில் மகா விசுவாசம் பிறக்கைக்கு அடியான
பாக்கியம் இல்லாமையாலே -இதர உபாய பரித்யாக பூர்வகமாக
அதில் இழிகையில் விசுவாசம் இல்லாமை யாகிற புத்தி துர் பல்யம் உடையவர்களுக்கு –

(குண அனுபவம் சிந்திப்பது -அதுவே சித்த உபாயம் -என்ற நினைவே போதும் -முதல் நிலை
சித்த உபாயம் சுலபமானாலும் மஹா விசுவாசம் வேண்டுமே -எனவே இத்தை உபதேசித்து
அதில் துர்லபரானவர்களுக்கு அங்கங்கள் உடன் கூடிய உபாசனை பக்தி யோகம் -)

மாலை நண்ணி தொழுது எழுமினோ –காலை மாலை கமல மலர் இட்டு நீர் –9-10-1-
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் –9-10-3-
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் –9-10-4-
தனதன்பர்க்கு -9-10-5–என்று
பக்தி யுக்தராய் கொண்டு சர்வ காலமும் புஷ்ப்யாதி உபகரணங்களாலே -அவனை சமாராதனம் பண்ணி
அவன் பக்கலிலே பக்தி நிஷ்டர் ஆகுங்கோள் -என்று
அங்க சகிதையான பக்தியை உபதேசித்தும்

அதில் அசக்தருக்கு தாள் அடையும் பக்தி
அதில் துஷ்கரத்வம் -விளம்ப பயம் -ஆகிய வற்றால் அனுஷ்டிக சக்தர் அல்லாதவருக்கு –
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் -9-10-5–என்று
நிவ்ருத்தி சாத்தியம் ஆகையாலே
ஸூகரமாய்
சர்வாதிகாரமுமாய்
சரீர அவசானத்திலே பல பிரதமுமான பிரபத்தியை வெளி இட்டும்–

——————————————————–

8-அதில் அசக்தருக்கு உச்சாரண மாத்ரம்-
அதாவது
உபாய பல்குத்வ பல கௌரவ விரோதி பூய ஸ்தவங்களாகிற சங்காத்ரயத்தாலே
அதில் வ்யவசாயதுக்கு உடலான சக்தி இல்லாதார்க்கு –
திரு கண்ண புரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே-9-10-10- -என்று
வசனத்தை பற்றாசாகப் பிடித்து அவன் திருத்திக் கொள்ளும் படியான
உச்சாரண மாத்ரத்தை வெளி இட்டும்

சர்வ உபாய சூன்யருக்கு இப் பத்தும் பாடி யிடும் தண்டன் என்று
அதாவது
உச்சாரணம் தனக்கும் தாமாக ஒரு பாசுரம் இட்டு சொல்ல ஷமர் அன்றிக்கே –
கீழ் சொன்ன உபாயங்கள் எல்லா வற்றிலும் -அயோக்யராய் இருப்பார்க்கு –
இப்பத்தும் பாடி யாடி பணிமின் அவன் தாள்களையே -9-10-11-என்று இத் திரு வாய் மொழியை
பிரீதி பிரேரராய் கொண்டு பாடி அவன் திருவடிகளில் விழுங்கோள் என்று

ஸ்ரீ கீதாச்சர்யனைப் போலே அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் ஒன்பதாம் பத்தில் ..
அதாவது
ஸ்ரீ கீதோ உபநிஷதாச்சர்யன் தன்னுடைய பரம கிருபையால்-
நெறி எல்லாம் எடுத்து உரைத்த –4-8-6-என்கிறபடியே சேதனருடைய ருசி அனுகுணமான உபாயங்கள்
எல்லாவற்றையும் உபதேசித்தாப் போலே
இவரும்
பிராப்தி அணித்தவாறே சம்சாரிகள் ஒருவரும் இழக்க ஒண்ணாது என்கிற கிருபையால் எல்லாம் எடுத்து உரைத்து –
அவ்வவருடைய அதிகார அனுகுணமாக உபாயங்கள் எல்லாம் உபதேசித்து அருளுகிறார்
ஒன்பதாம் பத்தில் என்கை-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: