Archive for September, 2018

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –229/230/231/232/233/234/–

September 30, 2018

சூரணை-229 –

இனிமேல் இவர் பிரதமத்தில் –
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை-திரு விருத்தம்-1–என்று ஆர்த்தராய் சரணம் புக்க போதே
விரோதி நிவ்ருத்த பூர்வகையான ஸ்வ பிராப்தியை பண்ணுவியாமல்
இவ்வளவாக இவரை வைக்கைக்கு அடி எது என்னும் ஆ காங்க்ஷையிலே வைக்கைக்கு
ஹேது பல உண்டு என்னும் அத்தையும்
அவை எல்லா வற்றிலும் முக்ய ஹேது இன்னது என்னும் அத்தையும் அருளிச் செய்கிறார் –

உறாமையோடே உற்றேன் ஆக்காது ஒழிந்தது
நாடு திருந்த –
நச்சுப் பொய்கை யாகாமைக்கு –
பிரபந்தம் தலைக் கட்ட –
வேர் சூடுவார் மண் பற்றுப் போலே –
என்னும் அவற்றிலும்
இனி இனி என்று இருபதின் கால் கூப்ப்பிடும்
ஆர்த்த் யதிகார பூர்த்திக்கு என்னுமது முக்யம் .–

அதாவது –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந் நின்ற நீர்மை
இனி யாம் உறாமை -திரு விருத்தம் -1-என்று
அவித்யா கர்ம வாசன ருசி பிரகிருதி சம்பந்தங்கள் ஆகிற
பிராப்தி பிரதிபந்தங்களை விடுவிக்க வேணும் என்று -ஆர்த்தராய்
திரு அடிகளில் விழுந்து அபேஷித்த போதே அவற்றைப் போக்கி –
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன்-10-8-10–என்று திரு அடிகளைக் கிட்டி –
ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்யப் பெற்றேன் என்னும்படி ஆக்காமல் -இவரை வைத்து –

தன்னுடைய சிருஷ்டி அவதாராதிகளாலும் திருந்தாத ஜகத்து –இவருடைய உபதேசத்தால் –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்னும்படி திருந்துகைக்காகவும் —

பிரபதன அநந்தரம் முக்தராம் படி பண்ணில் -பிரபத்தியை நச்சு பொய்கையோ பாதி நினைத்து
பீதராய் -இழிவார் இல்லை என்று -அது அப்படி ஆகாமைக்காகவும் –

தானும் தன் விபூதியும் வாழும்படி இவரைக் கொண்டு கவி பாடுவிக்க தொடங்கின பிரபந்தம்
பரிசமாப்தம் ஆகைக்காகவும் –

வேர் சூடுமவர்கள் பரிமளத்திலே லோபத்தாலே மண் பற்று கழற்றாதாப் போலே –

ஞானிகளை சரம சரீரதோடே வைத்து அனுபவிக்குமவன் ஆகையாலே –
இவருடைய ஞான பிரேம பரிமளம் எல்லாம் தோற்றும்படி இருக்கிற விக்கிரகத்தில் -தனக்கு உண்டான
விருப்பத்தாலேயும் என்று -சொல்லும் அவற்றில் காட்டிலும்-

1-இனி யாம் உறாமை -திருவிருத்தம் -1–என்று தொடங்கி –
2-இனி வளை காப்பவர் யார் –திருவிருத்தம் -13-என்றும்-
3-இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால்-திருவிருத்தம் -62-என்றும்

4-இனி அவர் கண் தங்காது –திருவாய்-1-4-4-
5-இனி உனது வாய் அலகில்–இன் அடிசில் வைப்பாரை நாடாயே –திருவாய்-1-4-8-

6-இனி எம்மைச் சோரேலே –திருவாய்-2-1-10-

7-எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே –திருவாய்-3-2-1-
8-எங்கு இனி தலைப் பெய்வேனே –திருவாய்-3-2-9-

9-இனி என் ஆரமுதே கூய் அருளாயே –திருவாய்-4-9-6-

10-ஆவி காப்பார் இனி யார் –திருவாய்-5-4-2-
11-நெஞ்சிடர் தீர்ப்பார் இனி யார்-திருவாய்-5-4-9-
12-இனி உன்னை விட்டு ஓன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் –திருவாய்-5-7-1-
13-தரியேன் இனி –திருவாய்-5-8-7-

14-இனி யாரைக் கொண்டு என் உசாகோ –திருவாய்-7-3-4-

15-அத்தனை யாம் இனி என் உயிர் அவன் கையதே-9-5-2-
16-நாரை குழாங்காள் பயின்று என் இனி –9-5-10-
17-இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் –9-9-2-

18-இனி நான் போகல் ஒட்டேன் –10-10-1-
19-உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –10-10-6-
20-உன்னைப் பெற்று இனி போக்குவனோ -10-10-7-–என்றும்

(ஆறாம் பத்திலும் எட்டாம் பத்திலும் இல்லை
இனி -வேறே இடங்களில் –9-10-10-ஹர்ஷத்தால் பாடியவை போல்வன இங்கு எடுக்கப்பட வில்லை -)

இப்படி இருபதின் கால் கூப்பிடும் படியான ஆர்த்தி பரம்பரையை விளைத்து –
பரம பக்தி பர்யந்தமான அதிகார பூர்த்தியை உண்டாகுகைக்காக என்னும் அதுவே – பிரதானம் என்கை ..

ஆர்த்தி அதிகார பூர்த்திக்கு என்றது -ஆர்த்தியால் வரும் அதிகார பூர்த்திக்கு என்ற படி —
பரம ஆர்த்தியாலே -இறே -பிரபத்தி அதிகாரம் பூரணமாவது –
ஆகையாலே ஹேத்வந்தரங்கள் எல்லாம் அப்ரதானங்கள் –
இவரை வைத்ததுக்கு பிரதான ஹேது இது என்றது ஆய்த்து –

————————————

சூரணை -230-

அதில் இவ் ஆர்த்திக்கு அடியான -பர பக்தி -பர ஞான -பரம பக்திகளின் தசைகள்
எந்த திரு வாய் மொழிகள் என்னும் அபேஷையிலே அவற்றை அருளிச் செய்கிறார்
மேல் மூன்று வாக்யத்தாலே –
அது தன்னில் பரபக்த்ய வஸ்தை இன்னது என்கிறார் இதில் –

கமலக் கண்ணன் என்று தொடங்கி
கண்ணுள் நின்று இறுதி கண்டேன்
என்ற பத்தும் உட் கண்ணலேயாய்

காண்பன வாவுதல் அதிலிரட்டி யாகையாலே
கண்டு களிப்ப வளவும் பரஞான கர்ப்ப
9பரபக்தி —

அதாவது –
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் -1-9-9–என்று
புண்டரீகாஷனானவன் என் கண்ணுக்கு விஷயமானான் என்று தொடங்கி –
கண்ணுள் நின்று அகலான்-10-8-8- -என்று என் கண் வட்டத்திலே நின்றும் கால் வாங்கு கிறிலன்
என்னுமதளவாக –
என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு –3-2-10-
நறும் துழாய் என் கண்ணி யம்மா நான் உன்னைக் கண்டு கொண்டே –4-7-7-
கை தொழ இருந்தாயது நானும் கண்டேனே –-5-7-5-
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் அம்மானே –5–8-1
திரு விண்ணகர் கண்டேனே –6-3-1-
தேவர்கட்க்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே –-9-4-8-
கண்டேன் கமல மலர் பாதம் –10-4-9-

என்று இப்பத்து சந்தையாலும் சொன்ன சாஷாத்காரம் –
நெஞ்சு என்னும் உட் கண் -பெரிய திருவந்தாதி -28-என்கிற ஆந்தர சஷுசான மனசாலே உண்டானதாய் –

கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பான் அவாவுவன் நான் –திருவிருத்தம் -84-
அடியேன் காண்பான் அலற்றுவன் –1-5-7-
உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் –2-4-2-
கூவுகின்றேன் காண்பான்-3-2-8-
மெய் கொள்ளக் காண விரும்பும் என் கண்களே –3-8-4-
கூவியும் காணப் பெறேன் உன் கோலமே –3-8-7-
உன்னை எந்நாள் கண்டு கொள்வேனே –3-8-8-
கோல மேனி காண வாராய் –4-7-1-
தடவுகின்றேன் எங்குக் காண்பன் –4-7-9-
பாவியேன் காண்கின்றிலேன் –4-7-10-
உன்னைக் காண்பான் நான் அலப்பாய் –5-8-4-
உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே –5-8-9-
என்று கொல் கண்கள் காண்பதுவே –5-9-5-
விளங்க ஒருநாள் காண வாராய் –6-9-4-
உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும் –6-9-6-
அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் –8-1-1-
ஒரு நாள் காண வாராய் –8-5-1-
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே –8-5-6-
உன்னை எங்கே காண்கேனே-8-5-10-
உன்னைக் காணக் கருதும் என் கண்ணே –9-4-1-
என்று பாஹ்ய சஷுசாலே அவனைக் காண ஆசைப் பட்டு கூப்பிட்ட -20-சந்தைகள் –அதில் இரட்டி உண்டாகையாலே –

கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலான் -10-8-7–என்று
திருமால் இரும் சோலை அளவாக ஆந்த்ர அனுபவம் செல்லா நிற்க –
பெற்று அன்று தரியாத -பாஹ்ய அனுபவ அபேஷை -நடக்கையாலே –
பர ஞானத்தை கர்ப்பித்து கொண்டு இருக்கிற பர பக்தி என்கை —

————————————————-

சூரணை -231
அநந்தரம் பரஞான அவஸ்தை ஆகிறது இன்னது என்கிறார்–

இருந்தமை என்றது
பூர்ண பர ஞானம்–

(கீழே பர ஞான கர்ப்ப பர பக்தி தசை இது பூர்ணம் என்றபடி )

அதாவது-
அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -10-9-11—என்று –
அடியார்கள் குழாங்களைக் கூடுவது என்று கொலோ -2-3-10—என்று ஆசைப் பட்ட படி –
அர்ச்சிராதி கதியாலே -தேச விசேஷத்திலே -போய் -பகவத் ஸ்வரூபாதிகளை
பரி பூர்ண அனுபவம் பண்ணுகிற நித்ய ஸூரிகளின் திரளிலே கூடி இருந்தாராக தரிசித்துப் பேசின –
சூழ் விசும்பணி முகில் -10-9- -பூரணமான பர ஞானம் என்கை —

——————————————-

சூரணை -232-

அநந்தரம் பரம பக்தத்யவஸ்தை இன்னது என்கிறார் —

முடிந்த அவா என்றது பரம பக்தி-

அதாவது
அப்படி தர்சித்த அது தான் மானச அனுபவமாய் -பாஹ்ய அனுபவ யோக்யம் அல்லாமையாலே –
பெரு விடாய் பிறந்து கூப்பிட்டுத் தரிக்க மாட்டாமல் –
திரு வாணை இட்டுத் தடுத்து -பெறா ஆணை அல்லாமை சாதித்து -பேற்றோடு தலைக் கட்டின –
முடிந்த அவாவில் அந்தாதி இப் பத்து–10-10-11 -என்கிற
முனியே நான் முகன் -10-10–பக்தியினுடைய சரம அவதியான பரம பக்தி என்கை —

——————————

சூரணை-233-

இந்த பர பக்தியாதிகளின் வேஷத்தை பகவத் வசனத்தாலே தர்சிப்பிக்கிறார் –

இவை
ஞான
தர்சன
ப்ராப்த்ய
அவஸ்தைகள் –

அதாவது
இந்த
பரபக்தி -பரஞான -பரம பக்தி தசைகள் –
பக்த்யா த்வய அந்ய யா சக்ய அஹமேவம் விதோர்ஜுனா
ஜ்ஞாதும் த்ருஷ்டுஞ்ச தத்வேன ப்ரேவேஷ்டுஞ்ச பரந்தப – ஸ்ரீ கீதை-11-54-என்று
அர்ஜுனனைக் குறித்து திருத் தேர் தட்டிலும் —

பர பக்தி பர ஞான பரம பக்தி ஏக ஸ்வாபம் மாம் குருஷ்வ -ஸ்ரீ கத்ய த்ரயம் -என்று
பிரார்த்தித்த ஸ்ரீ பாஷ்யகாரரைக் குறித்து-
மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷு நிச்சம்சயஸ் ஸூகமாஸ்வ -ஸ்ரீ கத்ய த்ரயம் -என்று
சேர பாண்டியனிலும் அவன் அருளிச் செய்த ஞான தர்சன பிராப்த்ய அவஸ்தைகள் என்கை —

இத்தால் -பகவத் சம்ஸ்லேஷ விஸ்லேஷ ஏக ஸூக துக்கராம் படியான
பரபக்தி -ஞான அவஸ்தையாகவும் –
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை -விசத தமமாக சாஷாத் கரிக்கிற
பர ஞானம் -தர்சன அவஸ்தையாகவும் –
அப்படி சாஷாத் கரித்த வஸ்துவை அப்போதே கிட்டி அனுபவிக்க பெறா விடில்
முடியும் படியான பரம பக்தி -ப்ராப்ய அவஸ்தையாகவும் -சொல்லப் படும் என்ற படி —

———————————–

சூரணை -234-

நூறே சொன்ன பத்து நூறு ஓர் ஆயிரம் என்றதும் சாபிப்ராயம் –( 215 )-என்றதில் –
நூறே சொன்ன பத்து நூறு என்றதில் –கருத்தை பத்து நிகமநத்திலே விஸ்த்ரேண பிரதிபாதித்து –
ப்ராசங்கிகமாக அருளிச் செய்ய வேண்டுமவையும் அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –
இனி ஓர் ஆயிரம் என்றதின் கருத்தை விசதமாக்கா நின்று கொண்டு –பிரபந்தத்தை நிகமித்து அருளுகிறார் —

(மயர்வற-அஞ்ஞாதிகள் போக்கி
மதிநலம்-ஞானாதிகள் அருளி –மதி நலம் -ஞானாதி பூர்ணம் -பக்தி ரூபாபன்ன ஞானம்
அருளினன் -பிராப்தி-பகவத் பிரசாதம் –
அதனாலேயே மோக்ஷ லாபம் -வீடு பெற்ற – – மூன்றையும் மூன்று சொற்களால் கீழே சொல்லி -ஐக அர்த்தம் –
இரக்கம் உபாயம் இனிமை ப்ராப்யம்
நிர்ஹேதுக ப்ரஸாதத்தாலே அஞ்ஞானம் போகும் படி ஞானாதி பூர்த்தி பெற்று வீடு பெறுவோம் )

அவித்யா நிவர்த்தக
ஞான பூர்த்தி ப்ரத
பகவத் பிரசாதாத்
மோஷ லாபம் என்கை
மயர்வற -வீடு பெற்ற
என்ற பிரபந்த ஏக
அர்த்யம் –

அதாவது

சம்சார காரணமான அஞ்ஞானத்துக்கு நிவர்த்தகமான ஞான பூர்த்தியை உபகரித்த
ஞானாதி குண பூர்ணனான பகவானுடைய நிர்ஹேதுகமான பிரசாதத்தாலே –
சம்சார நிவ்ருத்தி பூர்வக-பகவத் பிராப்தி ரூப மோஷத்தினுடைய – லாபம் என்று பிரதிபாதிக்கை –
மயர்வற மதி நலம் அருளினன் -என்று தொடங்கி -அவா அற்று வீடு பெற்ற -என்று தலைக் கட்டின
இப் பிரபந்தத்துக்கு ஒன்றான தாத்பர்யம் என்கை –

இத்தால் ஞான பிரதான -பகவத் பிரசாதமே மோஷ பிரதமும் -என்னுமிது இப் பிரபந்தத்துக்கு தாத்பர்யமாய்
இருப்பதோர் அர்த்தம் என்றது ஆய்த்து –

ஆக
இப்பிரபந்தத்தால் –
சர்வேஸ்வரன் தன் கிருபையாலே –
அஞ்ஞான சேதனர்-தத்வஞ்ஞராய் -சார அசர விவேகம் பண்ணுகைக்கு சாஸ்திர பிரதானம் பண்ணின படியையும்-(1-15)

அந்த சாஸ்திர முகேன தத்வ ஞானம் பிறக்கும் அளவில் உண்டான அருமையை நினைத்து –
தாத்பர்யமான திரு மந்த்ரத்தை-தன் பரம கிருபையால் வெளி இட்ட படியையும் -( 16)-

அந்த சாஸ்திர தாத்பர்யங்களின் விஷய பேதாதிகளையும்-
தத் உபய நிஷ்டரான அதிகாரிகளுடைய பிரகாரங்களும் –(17-38-)

அந்த வியாஜத்தாலே
பிரஸ்துதமான திருவாய் மொழியினுடைய வைபவத்தையும் –( 39-74)-

அதுக்கு வக்தாக்களான ஆழ்வார்களுடைய பிரபாவத்தையும் –( 75-93-)

அந்த பிரபாவத்துக்கு மூலமான பகவத் நிர்ஹேதுக கடாஷத்தையும் –(94-117)

அதடியாக இவர்க்கு உண்டான ஞான பக்திகளும் – அந்த ஞான பக்தி தசைகளில் இவர் பேசும் பேச்சுகளையும் –( 118-121 )

அந்த பக்தி தசையில் பகவத் பிரேம யுக்தர் எல்லோரோடும் இவர்க்கு உண்டான சாம்யத்தையும் –(122-132-)

அந்த பக்தி தசையில் பேசும் அந்ய உபதேசங்களுக்கு ஸ்வாபதேசங்களையும் – ( 133-158 )

அந்த பக்தி விஷயமான திவ்ய தேசங்களில் நிற்கிற ஈஸ்வரனுடைய குண விசேஷங்களையும் –(159-186 )

அந்த குண விசிஷ்ட வஸ்துவில் உண்டான -அனுபவ ஜனித ப்ரீதி ப்ரேரிதமாய் கொண்டு இப்பிரபந்தங்கள் அவதரித்த படியும் –(187-188 )

பிரதிபாத்யார்த்த சாம்யத்தாலே ஸ்ரீ கீதையோடு திருவாய்மொழிக்கு உண்டான சாம்யத்தையும் –(189 )
தத் வ்யாவிருத்தியையும்-(190-194 )

இதில் இவர் உபதேசிக்கிற விஷய பேதத்தையும்-
அவ்வோ விஷயங்கள் தோறும் உபதேசிக்கிற அர்த்த விசேஷங்களையும் –
அந்த வியாஜத்தாலே உபதேச விஷயமான சிஷ்ய லஷணதையும் –
அந்த லஷணம் இல்லாதவருக்கும் இவர் உபதேசிகைக்கு ஹேதுக்களையும் –
க்யாதி லாபாதி நிரபேஷராய் பகவத் கைங்கர்ய புத்த்ய உபதேசிக்கையாலே -உபதேசம் சபலமான படியையும் –(195-207 )

உபதேசிக்கிற இப் பிரபந்தங்கள் தாம் ரகஸ்ய த்ரய அர்த்தம் என்னுமத்தையும் –( 208-212 )

அந்த ரகஸ்ய த்ரயத்திலும் பிரதிபாதிக்க படுகிற அர்த்த பஞ்சகமும் இப் பிரபந்தங்களிலே
சங்கரக விபரண ரூபேண சொல்லப் படுகிற பிரகாரத்தையும் – ( )

பிரபந்த ஆரம்பங்களில் அபேஷிதமான மங்களா சரணங்கள் இப்பிரபந்தத்தில் உண்டான படியையும் –

சாது பரித்ராணாதிகளிலே – ஜகத் ரஷண அர்த்தமான சர்வேஸ்வர அவதாரம் போலே இப் பிரபந்த அவதாரம் என்னுமத்தையும் –( 217)-
இதில் பத்து பத்தாலும் பிரதிபாதிக்கப் பட்ட ஈஸ்வரனுடைய பரத்வாதி குணங்களையும் –( 218 )

அக்குண விசிஷ்டனானவன் -இப்பத்து பத்தாலும் இவ் ஆழ்வாருக்கு தத்வ ஞானம் முதலாக ப்ராப்தி பர்யந்தமாக பிறப்பித்த தசா விசேஷங்களையும் –
பத்து தோறும் இவர் தாம் பிறருக்கு உபதேசித்த பிரகாரங்களையும் –( 219-228 )

இவருக்கு பிரதமத்திலே ஆர்த்தி பிறந்திருக்கச் செய்தே -ஈஸ்வரன் இவரை வைக்கைக்கு பிரதான அப்ரதான ஹேதுக்களையும் –(229 )

இவருக்கு பிறப்பித்த பரபக்தி பரஞான பரம பக்திகளாகிற தசா விசேஷ ஸ்தலங்களையும் (230-233 )

அஞ்ஞான நிவர்த்தக ஞான பூர்த்தி ப்ரத பகவத் பிரசாதமே அநிஷ்டமான சம்சாரத்தை அறுத்து
அபீஷ்டமான மோஷ லாபத்தை உண்டாக்கும் என்கை- இப்பிரபந்ததுக்கு ஒன்றான தாத்பர்யம் என்னும் அத்தையும்-(234 )

ஆஸ்திகராய் ஸ்ரீ ஆழ்வார் அபிமானத்தில் ஒதுங்கி –
அவருடைய ஸ்ரீ திவ்ய ஸூக்திகளில் பிரவணராய்-
அநந்ய பரராய் இருப்பார் -எல்லோரும் அனுசந்தித்து வாழும்படி –
அதி ஸ்புடமாக அருளிச் செய்து தலைக் கட்டினார் —

நான்காம் பிரகரணம் முற்றிற்று-

ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதய வியாக்யானம் முற்றிற்று –

————————————————–

தந்து அருள வேணும் தவத்தோர் தவப் பயனாய் வந்த முடும்பை மணவாளா
சிந்தையினால் நீ உரைத்த மாறன் நினைவின் பொருள் அனைத்து என் வாய் உரைத்து வாழும் வகை-

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வதுமில் குரவர் தாம் வாழி
ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து

அடியார்கள் வாழ அரங்கன் நகர் வாழச் சடகோபன் தண் தமிழ் நூல் வாழக்
கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –228–

September 30, 2018

ஆர்த்தி ஹரத்வம் -காலம் முடிந்ததும் அர்ச்சிராதி கதிக்கு துணை-
காலாசத்தி பலகதிக்குத் துணை கூட்டின தம் பேற்றைப் பிறர் அறிய பத்து தோறும் வெளி இடுகிறார்-218 –

பிரதம உபதேச பாத்ரமான தம் திரு உள்ளத்துக்கு கிருத்திய அக்ருத்யங்களை விதித்து –நெஞ்சுக்கு மருள் ஒழி-10-6
அப்படி பவ்யரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கர்தவ்யாதிகளை வெளி இட்டு –சார்வே தவ நெறி -10-4-
முதலிலே உபக்ரமித்த பக்தி யோகத்தையும் நியமித்து –
ஆச்ரயணம் உபதேசம் கண்ணன் கழல் இணை -10-5-

சங்கதி –
நாள் இட்டுப் பெற்றுக் கொண்டார் -மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்று –
வழித் துணை ப் பெருமாள் -காளமேகத்தை அன்றி மற்று ஓன்று இலம் கதியே -திரு மோகூர் ஆத்தன்–தாபத்ரயம் தீர்க்கும் –
மார்க்க பந்து சைத்யம் மோஹநத்தே மடு விடும் -தயரதன் பெற்ற மரகத மணித்தடம் –
பிறந்தவீடு –ஒரு நல் சுற்றும் போலே -கெடும் இடராய எல்லாம் -10-2-
ச ஸைன்ய புத்ர சிஷ்ய சாதிய சித்த பூ ஸூரர் அர்ச்சனத்துக்கு முக நாபி பாதங்களை த்வார த்ரயத்தாலே காட்டும்
சாம்யம் அனந்த சயனத்தில் வியக்தம் –
பர உபதேசமாகவும் இந்த பதிகம் -சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாம்- நடமினோ –
பாஹ்ய சம்ச்லேஷம் கிடைக்கப் பெறாமல் மகள் பாசுரம் 10-3-காலைப் பூசல் -கூட இருக்கும் பொழுதே உடம்பு மெலிய –
ஆ நிரை மேய்க்கப் போனான் என்ற நினைவில் –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே –உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -அதுவே புருஷார்த்தம்–
என்னைக் கொள்ள வேண்டும் அதுக்கு மேலே உகக்கும் நல்லவரோடும் என் கண் முகப்பே -என்கிறார் –

சார்வே தவ நெறி -10-4-பக்தி மார்க்கம் -முற்ற சரணாகதிக்குக் கொண்டு செல்லும்
உயர்வற -பரத்வம் –வீடு முன் பஜனீயத்வம் பத்துடை ஸுவ்லப்யம்–மூன்றிலும் சொன்னதை முற்று வரிகளால் சொல்லி
இது வரை ஆழ்வார் த்வரை -மேலே ஈஸ்வர த்வரை —கிளம்பும் பொழுது சுருக்கமான சார உபதேசம் கண்ணன் கழலிணை -10-5-
எளிமையான பதிகம் உபநிஷத் அர்த்தம் -நாரணம் -சுருக்கி சொன்னாலும் பலன் –
மனம் உடையீர் என்கிற ஸ்ரத்தையே அமையும் -16-சூரணை-பார்த்தோம் –
பழுதிலா ஒழுகல் ஆறு வேதம் பற்றுவாருக்கு வேணும்
மாதவன் என்று ஓத வல்லீரேல் -தீது ஒன்றும் சாரா ஏதம் சாராவே -த்வயார்த்தம் –
காரணந்து த்யேயா –காரணம் நாரணம் –

பெருமாள் ஆழ்வாரை தொடர்ந்து இனி –ஏகாந்த தேசம் ஸ்ரீ வைகுண்டமா திரு வாட்டாறா -பிரணவ பாரதந்தர்யம் காட்ட
அருள் தருவான் அமைகின்றன -அது நமது விதி வகையே -ஆழ்வார் விருப்பம் படி
சொல்லிக் கொள்ள யாரும் இல்லை -நெஞ்சுக்கு -பர உபதேசம் இல்லை -இது மருள் ஒழி நீ மட நெஞ்சே —
முந்துற்ற நெஞ்சுக்கு பேற்றின் கனத்தை சொல்லி ஆதரவு -தரிக்கிறார்-
பாகவத தொண்டர் -அடியாருக்கு அடியார் என்ற நிலை வந்ததும் அவன் பின் தொடர்ந்து பிடித்துக் கொள்வான்
ஆழ்வார் திருமேனியில் அத்யந்த ஆசை கொண்டு -வ்யாமோஹம் -விபரீத ஆசை –
மங்க ஒட்டு உன் மா மாயை -செஞ்சொற் கவிகாள் –திருமாலிருஞ்சோலை –10-7-
சீலம் -ஆழ்வார் சொன்னபடி செய்வதாக ஒத்துக் கொண்டு -ஆழங்கால் அறிவித்து -உபதேசம் –

அப்பால ரெங்கன்–10-8- -ஸ்வாமித்வம் காட்டி -திருமாலிருஞ்சோலை மழை என்றேன் என்ன -மனஸ் சகாயம் இல்லாமல்-
திருமால் வந்து நெஞ்சு நிறைய புகுந்தான் –
இன்று வந்து இருப்பேன் என்று நெஞ்சு நிறைய புகுந்தான்
திருப்பேர் நகரான்- திரு மாலிருஞ்சோலை பொருப்பே மலையில் உறைகின்ற பிரான் –
அயோத்யா நகர் -சித்ரகூடம் -பஞ்சவடி ஜடாயு மனஸ் -ஸ்தான த்ரயம்
இன்று என்னைப் பொருளாக்கி –அன்று புறம்-அமந்த்ரக உத்சவ கோஷம் போலே -அடுத்த பதிகம் 10-9-

அர்ச்சிராதி மார்க்கம் –அனைத்தையும் காட்டி –12-லோகங்கள் –சதம் மாலா ஹஸ்தா –ப்ரஹ்ம அலங்காரம் –
அவன் காட்டக் கண்டவர் –அந்யாப தேசம் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் -வாயில் வைத்து இந்த பதிகம் –
நமக்கும் ஆழ்வார் பேறு தப்பாது -மானஸ அனுபவம் மாத்திரம் அல்லாமல் ப்ரத்யக்ஷ அனுபவம் கிட்டும் பலம்
முனியே -10-10–இனி இனி பலகாலமும் -இனி நான் போல் ஓட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல்-
ஆர்த்த த்வனி -நின் ஆணை திருவாணை–தத்வ த்ரயம் விழுங்கும் பேர் அவா -அவா அறச் சூழ்ந்து கூட்டிப் போக –
பிறந்தார் உயர்ந்தே –அந்தமில் பேரின்பத்து அடியாரோடும் சேர்ந்தார்
பிரமாணம் அவாவில் அந்தாதி
பிரமேயம் சர்வேஸ்வரன்
பிரமாதா ஆழ்வார்
காலாசத்தி பலகதிக்குத் துணை கூட்டின தம் பேற்றைப் பிறர் அறிய பத்து தோறும் வெளி இடுகிறார்-218 –

பத்தாம் பத்தில் –

இப்படி ஆபத் சகன் ஆகையாலே –
அவ் ஆபத் ரஷண அனுரூபமாக -பரிக்ரஹிக்கும் விக்கிரகங்களுக்கு எல்லாம் மூல பூதமாய் –
நிரதிசய வைலஷ்ணய யுக்தமான –திவ்ய விக்ரகத்தோடே வந்து தோன்றி -தன் பக்கல் ந்யஸ்த பரரானவர்கள்
சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும் –
தன் திருவடிகளைக் கிட்டி அனுபவிக்கப் பெறாமையாலும்
படும் ஆர்த்தியை ஹரிக்கும் ஸ்வாபம் ஆனவன் –
கீழில் பத்தில் –
தம்முடைய த்வரை அனுகுணமாக நாள் இட்டுக் கொடுத்ததுக்குப் பலம் –
அர்ச்சிராதி கதியாலே-தேச விசேஷத்தில் ஏறப் போகையாலே –
அதுக்கு ஆப்த தமனானவன் தன்னை வழித் துணையாக பற்றி –
இனி பிராப்தியில் கண் அழிவு இல்லை என்று தமக்கு ஏற நிச்சயித்த இவர் –
மறைத்து வைத்த அர்த்தம் உள்ளதும் வெளி இட வேண்டும் தசை யானவாறே –
பிரதம உபதேச பாத்ரமான தம் திரு உள்ளத்துக்கு கிருத்திய அக்ருத்யங்களை விதித்து –
அப்படி பவ்யரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கர்தவ்யாதிகளை வெளி இட்டு –
முதலிலே உபக்ரமித்த பக்தி யோகத்தையும் நியமித்து –
(முதலில் -பிணக்கற அறுவகைச் சமயமும் -என்ற திருப்பாசுரத்தில் தொடங்கின பக்தி யோகத்தை –
சார்வே தவ நெறி -திருவாய்மொழியிலே முடித்தார் -என்றவாறு )
சம்சாரிகளுக்கு ஸூகரமான ஆஸ்ரயணத்தை உபதேசித்து –
அனுபவ கைங்கர்யங்களிலே நிற்கிறவர்களுக்கு சீல குணமாகிற ஆழம் காலையும் காட்டி –10-7-
தம் பக்கல் விருப்பத்தாலே -தம் திரு மேனியிலே -அதி வியாமோகம் பண்ணுகிற ஈஸ்வரனுக்கு-அதின் தோஷத்தை உணர்த்தி –
இப்போது தமக்கு பரதந்தரனாய் -தம்மை பரம பதத்தில் கொண்டு போவதாக அத்யாதரம் பண்ணுகிறவனை
அநாதி காலம் தம்மை சம்சரிக்க விட்டு -உபேஷித்து இருந்ததற்கு ஹேது என்ன என்று கேட்க –
அவனும் இந்திரிய அவஸ்தை முதலான ஹேது பரம்பரையை எண்ணி –
அதுவும் மதா யத்தம் என்று அறியும் சர்வஜ்ஞ்ஞரான இவருக்கு போக்கடி சொல்லுகை அரிது என்று நிருத்தரனாய் –
அர்ச்சிராதி மார்க்கத்தையும்
அங்கு உள்ளாருடைய சத்காரத்தையும்
அவ் வழியாலே போய் பெரும் -ஸ்வ சரண கமல ப்ராப்தி பர்யந்தமாகக் காட்டிக் கொடுக்க
அத்தை சாஷாத் கரித்து-அது மானச அனுபவ மாத்ரமாய் -பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே
அத்தை எதாவாகப் பிராபிக்க வேணும் என்று பதறி
அவனுக்கு மறுக்க ஒண்ணாத திரு ஆணை இட்டுத் தடுத்து
அது பெறா ஆணை அல்லாமைக்கு ஹேதுகளையும் சொல்லும் படியான
தம்முடைய பரம பக்தியெல்லாம் –குளப் படியாம் படியான -அபிநிவேசத்தோடே-வந்து
தம்முடைய தாபங்களைப் போக்கின பிரகாரத்தை வெளி இடுகிறார் என்கிறார்–

—————————————————

1- சுரி குழல் அஞ்சனப் புனல் மைந் நின்ற
பொல்லாக் புனக்காயா வென்னும் ஆபத்திற்
கொள்ளும் காம ரூப கந்த ரூபத்தாலே
பிரபன்ன ஆர்த்தி ஹரனானவன்

2-அருள் பெறும் போது அணுக விட்டதுக்கு
பலமான வானேறும் கதிக்கு அண்ட மூ உலகும்
முன்னோடி கால் விழுந்திடத்தே நிழல் தடங்களாக்கி
அமுதம் அளித்த தயரதன் பெற்ற கோவலன் ஆகையாலே
வேடன் வேடுவிச்சி பஷி குரங்கு சராசரம் இடைச்சி இடையர்
தயிர் தாழி கூனி மாலாகாரர் பிணவிருந்து வேண்டடிசில் இட்டவர்
அவன் மகன் அவன்தம்பி ஆனை அரவம் மறையாளன் பெற்ற மைந்தன்
ஆகிற பதினெட்டு நாடன் பெரும் கூட்டம் நடத்தும் ஆத்தனை வழித் துணையாக்கி

3-அறியச் சொன்ன சுப்ரபாதத்தே துணை புரியாமல்
போக்கு ஒழித்து மீள்கின்றது இல்லை என்று
நிச்சித்திருந்தவர் சஞ்சிதம் காட்டும் தசை யானவாறே

4 -முந்துற்ற நெஞ்சுக்கு பணி மறவாதே மருள் ஒழி நகு
கைவிடேல் என்று க்ருத்யா க்ருத்யங்களை விதித்து
நெஞ்சு போல்வாரைத் தொண்டீர் என்று அழைத்து

5-வலம் செய்து எண்ணுமின் பேசுமின் கேண்மின்
காண்மின் நடமின் புகுதும் என்று கர்த்தவ்யம்
ஸ்மர்தவ்யம் வக்தவ்யம் த்ரஷ்டவ்யம் கந்தவ்யம்
வஸ்தவ்யம் எல்லாம் வெளி இட்டு

6-பிணக்கறவை சார்வாக நிகமித்து

7-எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின்
சப்தார்தங்களை சுருக்கி மாதவன் என்று த்வயமாக்கி
கரண த்ரய பிரயோக வ்ருத்தி சம்சாரிகளுக்கு
கையோலை செய்து கொடுத்து செஞ் சொல்
கவிகளுக்கு கள்ள விழி காவல் இட்டு

8-மனம் திருத்தி வீடு திருத்தப் போய்
நாடு திருந்தினவாறே வந்து விண்ணுலகம் தர
விரைந்து அத்தை மறந்து குடி கொண்டு தாம்
புறப் பட்ட வாக்கையிலே புக்கு தான நகர்களை
அதிலே வகுத்து குரவை துவரைகளிலே வடிவு கொண்ட
சபலனுக்கு தேக தோஷம் அறிவித்து

9-மாயையை மடித்து வானே தரக் கருதி கருத்தின்
கண் பெரியனாவனை இன்று அஹேதுகமாக வாதரித்த நீ
அநாதய நாதார ஹேது சொல் என்று மடியைப் பிடிக்க

10-இந்திரிய கிங்கரராய் குழி தூர்த்து சுவைத்து
அகன்றீர் என்னில் – அவை யாவரையும் அகற்ற நீ
வைத்தவை என்பர் –அது தேக யோகத்தாலே என்னில் –
அந்நாள் நீ தந்த சுமடு என்பர் –முன் செய்த முழு வினை யாலே
என்னில் அது துயரமே உற்ற விருவினை உன் கோவமும் அருளும் என்பர்

11-ஈவிலாத மதியிலேன் என்னும் உம்மதன்றோ
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் என்னில் ஆங்காரமாய் புக்கு
செய்கைப் பயன் உண்பேனும் கருமமும் கரும பலனுமாகிய
நீ கர்த்தா போக்தா என்பர்

12-யானே எஞ்ஞான்றும் என்றத்தாலே என்னில்
அயர்ப்பாய் சமய மதி கொடுத்து உள்ளம் பேதஞ் செய்கை
உன் தொழில் என்பர் –ஜீவ பிரகிருதி சைதன்யம் நீங்கும்
வ்ரத ஹேது அக மேனியில் அழுக்கை அறுக்கை அபிமானி க்ருத்யம்

13-தான் நல்கும் பந்தம் நிருபாதிகம் ஸௌ ஹார்தம்
எஞ்ஞான்றும் நிற்கும் ,பிணக்கி பேதியாதே ஜ்ஞானாதி
வைகல்யமில்லை –ஏக மூர்த்தியில் அல்லல் மாய்த்த யத்ன
பலித்வங்கள் நம்மது

14-நாம் தனி நிற்ற ஸ்வதந்த்ரர் என்று அவனே அறிந்தனமே
என்னும் சர்வஜ்ஞர் இவர்

15-நெறி காட்டி அருகும் சுவடும் போலே இதுவும்
நிருத்தரம் என்று கவிழ்ந்து நிற்க

16-அமந்த்ர ஜ்ஞா உத்சவ கோஷம் ஏறப் பெறுகிற
எழுச்சியை ஸூசிப்பிகிற மேக சமுத்திர பேரீ கீத
காஹள சங்கா சீச்ஸ்துதி கோலாகலம் செவிப் பட்டவாறே
சாஷாத் கருத்த பர பிராப்திக்கு

17-தலை மிசையாய் வந்த தாள்களை பூண்டு போகாமல்
தடுத்து திருவாணை இட்டு கூசம் செய்யாதே செய்திப் பிழை

18-பற்றுக் கொம்பற்ற கதி கேடு -போர விட்ட பெரும் பழி

19-புறம் போனால் வரும் இழவு

20-உண்டிட்ட முற்றீம்பு -அன்பு வளர்ந்த அடி வுரம் உயிர் உறவு

21-முதல் அளவு துரக் கைகளாலே பெறா வாணை யல்ல
வாக்கின பேரவா குளப் படியாம் படி கடல் போன்ற ஆதாரத்தோடு
சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளி இடுகிறார்
பத்தாம் பத்தில் ..

——————————————————

1- சுரி குழல் அஞ்சனப் புனல் மைந் நின்ற பொல்லாக் புனக்காயா வென்னும் ஆபத்திற்
கொள்ளும் காம ரூப கந்த ரூபத்தாலே பிரபன்ன ஆர்த்தி ஹரனானவன்-
அதாவது –
சுரி குழல் கமலக் கண் கனி வாய் –10-1-1-
அஞ்சன மேனி-10-3-3-
புனல் மைந் நின்ற வரை போலும் திரு உருவம் –10-6-8-
பொல்லாக் கனி வாய் தாமரைக் கண் கரு மாணிக்கம்-10-10-1-
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய் -10-10-6–என்று-

அந்யோந்ய விலஷணமாய்–அதி மனோகரமாய் -அனுபவித்தாக்களைத் தனித் தனியே
ஆழம் கால் படுத்த வல்ல அவயவ சோபையும் – –அதுக்கு பரபாகமாய் -அத் உஜ்ஜ்வலமாய் –
விடாயர் முகத்திலே நீர் வெள்ளத்தை திறந்து விட்டாப் போல் -சகல ஸ்ரமங்களும் மாறும் படி இருக்கும்
திரு நிறத்தை உடைத்தாய் சொல்லப் படுமதாய் –

காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் -10-1-10–என்று
ஆஸ்ரிதருடைய ஆபத் ரஷண அனுரூபமாக வேண்டினபடி பரிக்ரஹிக்கும் விக்கிரகங்களுக்கு
எல்லாம் கந்தமாய் இருக்கும் திவ்ய விக்ரகத்தை கொண்டு -தன் பக்கல் -நிஷிப்த பரர் ஆனவர்கள்
அநிஷ்டமான சம்சாரத்தில் இருப்பாலும் –
அபீஷ்டமான தன் திருவடிகளை கிட்டாமையாலும்
படும் ஆர்த்தியை தீர்க்கும் ஸ்வபாவனானவன்–

————————————————

2-அருள் பெறும் போது அணுக விட்டதுக்கு
பலமான வானேறும் கதிக்கு அண்ட மூ உலகும்
முன்னோடி கால் விழுந்திடத்தே நிழல் தடங்களாக்கி
அமுதம் அளித்த தயரதன் பெற்ற கோவலன் ஆகையாலே
வேடன் வேடுவிச்சி பஷி குரங்கு சராசரம் இடைச்சி இடையர்
தயிர் தாழி கூனி மாலாகாரர் பிணவிருந்து வேண்டடிசில் இட்டவர்
அவன் மகன் அவன்தம்பி ஆணை அரவம் மறையாளன் பெற்ற மைந்தன்
ஆகிற பதினெட்டு நாடன் பெரும் கூட்டம் நடத்தும் ஆத்தனை வழி துணையாக்கி-
அதாவது —
அவனுடைய அருள் பெறும் போது அரிதால்–9-9-6–என்றும்
அவன் அருள் பெறும் அளவு ஆவி நில்லாது -9-9-6–என்றும்
கீழில் பத்தில் ஷண காலம் விளம்பம் பொறாத படி ஆர்த்தரான தமக்கு –

மரணமானால்–9-10-5-என்று
ஆரப்த சரீர அவசானத்திலே மோஷம் தருகிறோம் என்று அணித்தாக
நாள் இட்டு கொடுத்ததுக்கு பலம் –

வானேற வழி தந்த வாட்டாற்றான் -10-6-5–என்று
பிராப்ய பூமியான பரம பதத்தில் சென்று புகுருகைக்கு வழியாக அவன் காட்டிக்
கொடுத்த அர்ச்சிராதி கதியில் போகப் பெறுகையாலே –

அவ் அர்ச்சிராதி கதிக்கு -ராஜ குமாரன் வழி போம் போது வழிக்கு கடவார் –
முன்னோடி நிலம் சோதித்து -நிழலும் தடாகமும் பண்ணி -பின்னைக் கொண்டு போம் போலே –
அண்ட மூ உலகு அளந்தவன் -10-1-5–என்று
திரு உலகு அளக்க என்ற ஒரு வியாஜத்தாலே முன்னோடி நிலம் சோதித்து –

அவனடி நிழல் தடம்-10-1-2- -என்று
காள மேகமான தன் கால் விழுந்த இடத்தே -நிழலும் தடாகமாகவும் படி பண்ணி –

அமுதம் அளித்த பெருமான் ஆகையாலே –
அதாவது-
பாதேயம் புண்டரீகாஷர் நாம சங்கீர்த்தன அமிர்தம்-காருடம்–என்கிறபடியே
பாதேயமாக தன் திவ்ய குண அம்ருதத்தை வர்ஷிக்குமவனாய் —

தயரதன் பெற்றவன் ஆகையாலே-
அதாவது-
தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -10-1-8–என்றும்

கோவலன் ஆகையாலே
அதாவது-
கூத்தன் கோவலன் -10-1-6–என்றும் –
சக்கரவர்த்தி திருமகனாயும் கிருஷ்ணனாயும் வந்து அவதரித்தவன் ஆகையாலே –

வேடன்
அதாவது
குஹமாசாத்ய தர்மாத்மா நிஷாதாதிபதிம் ப்ரியம் -பால-1-29–என்னும்படி
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி–பெரிய திருமொழி-5-8-1- -என்று
பிராட்டியையும் இளைய பெருமாளையும் முன்னிட்டு –
உகந்த தோழன் நீ -என்று விஷயீ கரிக்க பெற்ற -ஸ்ரீ குகப் பெருமாள் —

வேடுவிச்சி-
அதாவது-
சோப்ய கச்சன் மகா தேஜஸ் சபரீம்–பால-1-58–என்கிறபடி
தானே சென்று -கிட்டி -விருந்துண்டு –
சஷூஷா தவ ஸௌ மயேன பூதாஸ்மி ரகுநந்தன-ஆரண்ய -74-14 -என்னும்படி
தன் விசேஷ கடாஷத்தாலே பூதை ஆக்கின சபரி —

பஷி-
அதாவது-
ஸ்ரீ கார்யார்த்தமாக தேஹத்தை அழிய மாறினவர் என்னும் உகப்பாலே –
யா கதிர் யஜ்ஞ சீலானாம் ஆஹிதாக் நேஸ்ச யா கதி -என்றும்
அபாரவர்த்தினாம் யாச யாச பூமி பிரதாயினாம்
மயா த்வம் சமநுஞ்சாதோ கச்ச லோகன் அனுத்தமான்-ஆரண்ய-68-29/30 -என்று
விஷயீகரிக்க பட்ட ஸ்ரீ ஜடாயு மகா ராஜர்

குரங்கு-
அதாவது-
குரங்கு என்ற இது -ஜாத்ய ஏக வசனம் ஆகையாலே -சுக்ரீவம் நாதமிச்சதி-கிஷ்கிந்தா-4-18 -என்று
அத்தலை இத்தலையாய் சென்று அங்கீகரிக்கப் பெற்ற வானர அதிபதியான மகா ராஜரும் –
பரிகரமான வானர வர்க்கமும் –

சராசரம் –
அதாவது-
ஓன்று இன்றியே நற் பாலுக்கு உய்த்தனன்–7-5-1- -என்று
ஒரு ஹேதுவும் இன்றிக்கே இருக்க செய்தே – ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஏக
சுக துக்க ராம்படியாக விஷயீ கரிக்க பெற்ற -அயோத்தியில் வாழும் -சராசரம்-

(ஆவும் பயமும் அமுதும் ஒப்பான அரங்கருக்கு மேவும் புகழ் இன்னும் மேவும் கொலோ
அவர் மெய் அருளால் தாவும் தரங்கத் தடம் சூழ் அயோத்திச் சராசரங்கள் யாவும்
கிளையுடன் வைகுண்ட லோகத்தில் ஆர்ந்திட்டவே –திருவரங்கத்து மாலை- )

இடைச்சி-
அதாவது-
சிந்தயந்தி ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம் நிருச்ச்வாசதயா முக்திம்
கதான்யா கோப கன்யகா -ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-10-22-– என்று
விக்ரக வைலஷண்யமே உபாயமாக வீடு கொடுக்கப் பெற்ற சிந்தயந்தி –

(உபேயத்துக்கு இளைய பெருமாளையும் -பெரிய உடையாரையும் –
பிள்ளை திரு நறையூர் அரையரையும்-சிந்தையந்தியும் போலே இருக்க வேண்டும்-
பெரிய வுடையாரும் பிள்ளை திரு நறையூர் அரையரும் உடம்பை உபேக்ஷித்தார்கள் -சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போய்த்து-
மதியிலேன் வல்வினையே மாளாதோ-1-4-3-என்பதால் மதியினை யுடைய ஒருத்தியின் வல்வினை மாண்டதே —
அதாவது சிந்தயந்தி என்பாள் சதுரப்பாட்டினை யுடையாளாய் மாமியார் முதலாயினருடைய முன்னிலையிலேயே
இரு வினைகளையும் நீக்கி மோக்ஷம் அடைந்தாள்-ஈட்டு ஸ்ரீ ஸூக்தி )

இடையர்
அதாவது-
வெண்ணெய் களவு காண புக்க விடத்தே தொடுப்புண்டு வந்து தம்மகத்தே புகப் படலைத் திருகி வைத்து
மோஷம் தராவிடில் காட்டிக் கொடுப்பேன் என்று மோஷம் பெற்ற ததிபாண்டர்

தயிர் தாழி
அதாவது-
நாம ரூபங்கள் உள்ளவற்றுக்கு எல்லாம் ஒரு சேதன அதிஷ்டானம் உண்டாகையாலே
இதுக்கு மோஷம் கொடுக்க வேண்டும் என்கிறவன் நிர்பந்தத்துக்காக மோஷம் கொடுக்கப் பெற்ற- தயிர்த் தாழி –

(சிந்திக்க நெஞ்சு இல்லை நா இல்லை நாமங்கள் செப்ப
நின்னை வந்திக்க மெய்யில்லை வந்திருபோதும் மொய்ம் மா மலர்ப் பூம்
பந்தித் தடம் புடை சூழ் அரங்கா ததி பாண்டன் உன்னைச்
சந்தித்த நாள் முக்தி பெற்றது என்னோ தயிர்த் தாழியுமே–திருவரங்கத்து மாலை )

கூனி
அதாவது-
ஸுகந்த மேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிரானனே
ஆவயோர் காத்ர சத்ரு சம் தீயதா மனுலேபனம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-20-6–என்று
பூசும் சாந்து அபேஷிக்க-அநந்ய பிரயோஜனமமாக கொடுத்த ப்ரீதியாலே
விசேஷ கடாஷ விஷய பூதையான கூனி

மாலாகாரர்-
அதாவது-
பிரசாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் தன்யோஹம் அர்ச்ச இஷ்யாமி இத்யாஹ
மால்ய உப ஜீவன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-21- -என்று
அநந்ய பிரயோஜனமாக பூவைக் கொடுத்த உகப்பாலே
தர்மே மனச்ச தே பத்ரே சர்வ காலம் பவிஷ்யதி -யுஷ்மத் சந்ததி ஜாதானாம்
தீர்க்க மாயுர்ப்பவிஷ்யதி –ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-9-26-என்று விசேஷ கடாஷம் பெற்ற ஸ்ரீ மாலா காரர்-

பிணவிருந்து இட்டவர்-
அதாவது-
நவம் சவமிதம் புண்யம் வேத பார கமச்யுத -யஜ்ச சீல மகா பிராஞ்ஜா ப்ரஹ்மணம் ஸ்வ உத்தமம் -ஹரி வம்சம் -என்று
எதன்ன புருஷ பவதிப்படியே-அயோத்யா-102-30- பிண விருந்திட்ட கண்டா கர்ணன்-

(ஞானக் கண் தா கனவு ஒக்கும் பவம் துடை–
நஞ்சிருக்கும் தானக் கண்டா கனற்ஜோதி என்று ஏத்தும்
வன் தாலமுடன் வானக் கண் தா கன வண்ணா என்று ஒது வலி வந்தடையா
ஈனக் கண்டா கனற்கும் ஈந்தான் பரகதி என்னப்பனே–திரு வேங்கடத்தந்தாதி )

வேண்டடிசில் இட்டவர்-
அதாவது-
வேண்டு அடிசில் உண்ணும்போது ஈது என்று பார்த்து இருந்து நெடு நோக்கு கொள்ளும்
பக்த விலோசனத்தில் பக்தி புரசஸ்சரமாக அடிசில் கொண்டு வந்து இட்ட ருஷி பத்னிகள் –நாச்சியார்-12-6-

அவன் மகன்-
அதாவது-
மீள அவன் மகனை -பெரியாழ்வார்-1-5-2–என்று ஹிரண்ய புத்ரனாய் வைத்து –
தன் அருளுக்கு விஷயமாம் படி பக்தனான ஸ்ரீ பிரகலாதன்

அவன் தம்பி-
அதாவது
அவன் தம்பிக்கு –பெருமாள் திருமொழி -10-6-என்னும்படி ராவண அனுஜனாய் –
அனுஜோ ராவணஸ்யாஹம் தேனஸா அஸ்மி அவமானித–யுத்த-19-4- -இத்யாதிபடியே
ஸ்வ நிகர்ஷத்தை முன்னிட்டு -ராகவம் சரணம் கத -யுத்த-17-14–என்று
திரு அடிகளை அடைந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வான் –

ஆனை
அதாவது
பரமாபதமா பன்னோ மனசா சிந்த யத்தரிம் -சது நாகவர -ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம்-என்று
ஸ்வ யத்னத்தை விட்டு -பிரபன்னனாய் -ஸ்வாபிலஷித கைங்கர்யம் பெற்ற ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான்-

அரவம்
அதாவது
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் வெறுவி வந்து நின் சரண் என-பெரிய திருமொழி-5-8-4- -என்கிறபடியே
பெரிய திருவடிக்கு அஞ்சி வந்து திருவடிகளை சரணாக அடைந்த சுமுகன் –

மறையாளன்
அதாவது
மாக மாநிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக் கண்ட மா மறையாளன் -பெரிய திருமொழி-5-8-5-என்று
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் தன் பால்ய சேஷ்டாதிகளை சாஷாத் கரித்து காமனாய்
தபஸூ பண்ணி-அப்படியே காட்டி அருளக் கண்டு -அனுபவித்த அநந்தரம் -நித்ய
அனுபவத்தை அபேஷித்த கோவிந்த ஸ்வாமி-

பெற்ற மைந்தன்-
அதாவது
மா முனி பெற்ற மைந்தன் -பெரிய திருமொழி-5-8-6-என்று மிருகண்டு புத்ரனாய் -மோஷார்தமாக தன்னை வந்து
அடைந்த மார்கண்டேயன் –

ஆகிற பதினெட்டு நாடன் பெரும் கூட்டம் நடத்தும் ஆத்தனை வழித் துணையாக்கி
அதாவது-
இவர்கள் ஆகிற நாநா ஜாதிதையாலும் -இப்படி பதினெட்டாக எண்ணலாம் படி இருக்கையாலும் –
பதினெட்டு நாடன் பெரும் கூட்டம் போலே இருந்துள்ள இத் திரளை -அர்ச்சிராதி மார்க்கத்தாலே –
தானே துணையாகக் கொண்டு நடத்துமவனாய் –

திருமோகூர் ஆத்தன் தாமரை அடி இன்றி மற்று இலம் அரண்-10-1-6–என்றும் –
காள மேகத்தை அன்றி மற்று ஓன்று இலம் கதி -10-1-1–என்னும்படி
திரு மோகூரிலே நின்று அருளின பரம ஆப்தனான காள மேகத்தை வழித் துணையாக கொண்டு –

( இவர்களுக்கு -க்ரமேண-அர்ச்சிராதி கதிக்குக் கூட்டிப் போகிறவன் என்றவாறு
சக்கரவர்த்தி திருமகன் விஷயம் ஐந்தும் -கோவலன் விஷயமாக எழும் -தனியாக ஆறும் -சொல்லி -18-நாடான் –
அவன் தம்பி -விபீஷணன் -தனியாக அருளிச் செய்தது-அவன் மகன் சொல்லிய பின்பு -பந்தி பேதம் வந்ததே -அதனால் –
ஸாந்தானிக லோகம் -சராசரங்கள் -தங்கி பின்பு ஸ்ரீ வைகுண்டம் –
கோவிந்த ஸ்வாமி -பால கிருஷ்ண சேஷ்டிதங்களைக் கேட்டு இங்கு இருந்து அனுபவித்து பின்பு ஸ்ரீ வைகுண்டம் சென்ற ஐதிக்யம் -)

————————————————-

3-அறியச் சொன்ன சுப்ரபாதத்தே துணை புரியாமல் போக்கு ஒழித்து மீள்கின்றது இல்லை என்று நிச்சித்திருந்தவர்-
அதாவது-
நாமுமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணியவான -10-2-9–என்றும் –
நாளேல் அறியேன் -9-8-4–என்றும் –
மரணமானால்-9-10-5- என்றும் –
நான் உங்களுக்குச் சொன்ன நாள் ஆசன்னமாய்த்து என்று பிறர்க்கும் பேசும்படியாய் –
ஸூப்ரபாதாச மே நிசா-ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-17-3- -என்றும் –
ஸூப்ரபாதாத்ய ராஜநீ மதுரவாசா யோஷிதாம்-ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-18-24 -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் பிராப்தி அணித்தான வாறே நல் விடிவான நாளிலே –

துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை-10-3-4-
பசு மேய்க்க போகல் –10-3-9-
என் கை கழி யேல் –10-3-8-
அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன –10-3-11-என்று
தமக்கு துணையான அவனை பசு மேய்க்கையாகிற அபிமதத்தை பற்றவும் போகாதபடி பண்ணி –

மீள்கின்றது இல்லை பிறவித் துயர் கடிந்தோம்–10-4-3-
நிலை பேர்க்கலாகாமை நிச்சித்து இருந்தேன்-10-4-4- -என்று
சம்சார துரிதம் மருவல் இடாது என்று -நபிபேதி குதச்சநேதி -என்கிற படி
ஒன்றுக்கும் அஞ்சாதபடி நிச்சயித்து இருந்தவர்-

சஞ்சிதம் காட்டும் தசை யானவாறே-
அதாவது-
மரண தசையான அளவிலே சஞ்சிதமாக புதைத்து கிடக்கும் மகா நிதிகளை
புத்ராதிகளுக்குக் காட்டுவாரைப் போலே -தமக்கு பகவத் பிராப்தி அணித்தானவாறே –
ஒருவரும் இழக்க ஒண்ணாது -எல்லாருக்கும் ஹித அஹிதங்கள் அறிவிக்க வேணும் என்று பார்த்து-

——————————————–

4 -முந்துற்ற நெஞ்சுக்கு பணி மறவாதே மருள் ஒழி நகு கைவிடேல் என்று க்ருத்யா க்ருத்யங்களை விதித்து-
அதாவது-
தொழுது எழு என் மனனே-1-1-1- -என்று பிரதமத்தில் உபதேசிக்கும் படி –
முந்துற்ற நெஞ்சே -பெரிய திருவந்தாதி-1–என்கிற படி தம்மிலும் பகவத் விஷயத்தில் முற்பட்டு நிற்கும் தம் திரு உள்ளத்துக்கு –
பணி நெஞ்சே நாளும் பரம பரம் பரனை–10-4-7–என்றும் –
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8- -என்றும் –
மருள் ஒழி நீ மட நெஞ்சே-10-6-1- -என்றும் –
நரகத்தை நகு நெஞ்சே-10-6-5- -என்றும் –
வாழி மனமே கை விடேல்-10-7-9- -என்று நம் பிரதி பந்தங்களை எல்லாம் தானே போக்கி அடிமை
கொள்ளும் சர்வ ஸ்மாத் பரனை அனுபவிக்க பார் –உனக்கு இஸ் சம்ருதி மாறாதே சென்றிடுக –
கை புகுந்தது என்னா இதர விஷயங்களில் செய்யும் அத்தை இவ் விஷயத்திலும் செய்யாதே கொள் –

திரு வாறன் விளை யதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல்–7-10-9- -என்று –
பிராப்ய வஸ்து கிட்டிற்று ஆகில் -இங்கு அடிமை செய்ய அமையாதோ என்று -உகந்து அருளின நிலங்களில் நசையாலே
பிரமிப்பது ஓன்று உண்டு உனக்கு -அத்தை தவிரப் பார் –

உத்தேச்ய வஸ்து சந்நிஹிதமாய்த்து என்று இத்தையே – பார்க்கும் இத்தனையோ –நம்மையும் பார்க்க வேண்டாவோ –
நான் பரமபதத்து ஏறப் போகா நின்றேன் –
நெடு நாள் நம்மைக் குடி மக்கள் ஆக்கி எளிவரவு படுத்தின சம்சாரத்தை புரிந்து பார்த்து சிரித்துப் போரு கிடாய் –
நமக்கு இச் சம்பத்து எல்லாம் திரு மலையால் வந்தது ஆய்த்து -அத் திரு மலையை கை விடாதே கொள் –
என்று கிருத்தய அக்ருத்யங்களை அவஸ்ய கரணியமாம்படி விதித்து-

நெஞ்சு போல்வாரை தொண்டீர் என்று அழைத்து-
அதாவது-
தம் திரு உள்ளம் போலே அந்தரங்கரான ஸ்ரீ வைஷ்ணவர்களை
தொண்டீர் வம்மின்-10-1-4-/5–என்று பகவத் விஷயத்தில் சபலரானார் வாருங்கோள் என்று அழைத்து –

(ஒரு தனி முதல்வன்-10-1 5-சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் -வேர் முதல் வித்து)

———————————————–

5-வலம் செய்து எண்ணுமின் பேசுமின் கேண்மின் காண்மின் நடமின் புகுதும் என்று கர்த்தவ்யம்
ஸ்மர்தவ்யம் வக்தவ்யம் த்ரஷ்டவ்யம் கந்தவ்யம் வஸ்தவ்யம் எல்லாம் வெளி இட்டு-
அதாவது-
கொண்ட கோவிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே -10-1-5–என்று
அவன் எழுந்து அருளி நிற்கும் தேசத்தை குறித்து அனுகூல வ்ருத்தியை பண்ணி –
ஹ்ருஷ்டராவோம் வாருங்கோள் என்கையாலே கர்த்தவ்யமும் –

எண்ணுமின் எந்தை நாமம் 10-2-5–என்று ஸ்வாமி உடைய திரு நாமத்தை
அனுசந்தியுங்கோள் என்கையாலே -ஸ்மர்த்தவ்யமும் –

பேசுமின் கூசமின்றி -10-2-4–என்று உங்கள் யோக்யதை பார்த்து கூசாதே திருவனந்த புரத்திலே
சிநேகத்தை பண்ணி வர்த்திக்கிறவனை பேசுங்கோள் என்கையாலே –வக்தவ்யமும் –
( திரு நாம சங்கீர்த்தனமே யோக்கியதையைப் பண்ணிக் கொடுக்கும் )

நமர்களோ சொல்லக் கேண்மின் -10-2-8–என்று நம்மோடு சம்பந்தம் உடையீர் நாம்
சொல்லுகிறதை கேளுங்கோள் என்கையாலே – ஸ்ரோதவ்யமும் –

படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ -10-2-1–என்று திரு வனந்த புரத்திலே
கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளை காணப் போருங்கோள்
என்கையாலே -த்ரஷ்டவ்ய கந்தவ்யங்களும்

அனந்த புர நகர் புகுதும் இன்றே -10-2-1–என்று இச்சை பிறந்த இன்றே திருவனந்த புரத்திலே
போய்ப் புக வாருங்கோள் என்கையாலே -வஸ்தவ்யமும் –
ஆகிய இவைகள் எல்லாம் அவர்களுக்கு வெளி இட்டு–

(த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாசிதத்வ –நான்கும் உபநிஷத்
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரமம் தன்னால் –திருக் கூறும் தாண்டகம் -4-)

———————————————–

6-பிணக்கறவை சார்வாக நிகமித்து-
அதாவது
உபக்ரமித்த அர்த்தத்தை -உப சம்ஹரிக்கை-சாஸ்திர க்ரமம் ஆகையால் –
பிணக்கற -1-3-5–என்ற பாட்டில்-வணக்குடை தவ நெறி -என்று உபக்ரமித்த பக்தி யோகத்தை –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள்-10-4-1- -என்ற ஸ்வ சாத்யத்தோடே பொருந்தின படியை சொல்லி நிகமித்து –

இதின் பட்டோலையான க்ரந்தத்தில் (ஈட்டில் )-வீடுமுன் முற்றவும் -1-2–பத்துடை அடியவரிலே-1-3-
உபதேசிக்கத் தொடங்கின -சாத்திய ஸித்த ரூபமான சாதன த்வயதையும் –
தவ நெறிக்கு பரமன் பணித்த -10-4–என்று நிகமித்து என்றவர் இதில் இப்படி அருளிச் செய்வான் என் என்னில் –
அது வீடுமுன் முற்றவும் -பிரபத்தி பரமாகவும்
பத்துடை அடியவர் -பக்தி பரமாகவும் – பூர்வர்கள் நிர்வகித்த கட்டளையைப் பிடித்து அருளிச் செய்தார் –

இது -வீடுமுன் முற்றத்தையும் பக்தி பரமாக்கி யோசித்து அருளின எம்பெருமானார் நிர்வாக
கட்டளையைப் பிடித்து அருளிச் செய்தார்
இதிறே சகல வியாக்யான சித்தமுமாய் -ஈட்டிலும்-பிரதான யோஜனையுமாய் -இருக்குமது .
இந்த க்ரமத்திலே இறே இவர் தாம் முதல் பத்தில் பக்தியை உபதேசிக்கிறார் என்று அருளிச் செய்ததும் –
(பரத்வம் பஜனீயத்வம் ஸுலப்யம் –இரண்டாவதும் மூன்றாவதும் பக்தி பரமாகவே
முன்பு வீடு முன் முற்றவும் பிரபத்தி பத்துடை பக்தி -அ முக்யமான யோஜனை )

ஆகையால் அது முன்புள்ளார் அருளிச் செய்த படியை பற்றி அருளிச் செய்தார்-
இது எம்பெருமானார் யோஜனையாய் பின்பு உள்ளார் எல்லாரும் அருளிச் செய்து கொண்டு போந்த
மரியாதையை பற்ற அருளிச் செய்தார் என்று கொள்ளும் இத்தனை –

வணக்குடை தவ நெறி -என்கிற இது பிரபத்தி பரமாகவும் ஈட்டில் ஒரு யோஜனை தோன்றி இருக்கையாலே
பிணக்கறவை-என்கிற இதிலே –
பக்தி பிரபத்தி -இரண்டையும் கூட்டிக் கொண்டு –
சார்வே தவ நெறியிலே –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்றும் –
பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர் பாதம் -என்றும்
இரண்டையும் நியமிக்கிறார் என்றாலோ என்னில் -அதுக்கும் அனுபபத்தி உண்டு –

பிணக்கற -என்ற பாட்டிலே -பிரபத்தி பரமான யோஜனை உண்டானாலும் -விகல்பம் ஒழிய –சமுச்சயம் கூடாமையாலே –
ஆகையால் சகல வியாக்யானங்களுக்கும் சேர -பிணக்கற வில் -உபக்ரமித்த பக்தியை நியமிக்கிறார் -என்ன அமையும் –

ஆனால் பக்தி உபதேச உபக்கிரமம் -வீடுமின் முற்றத்திலே -யாயிருக்க -பிணக்கறவை-என்பான் என் என்னில் –
வீடுமின் -என்று த்யாஜ்ய உபாதேய -தோஷ குண -பரித்யாக -சமர்பண க்ரமத்தை-சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து –
அத்தையும் இதுக்கு சேஷமாக ஒருங்க விட்டுக் கொண்டு வந்து –
அவன் உரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற வுணர்வு கொண்டு நலம் செய்வது (முதல் பத்து சாரத்தில் )-என்று
தாம் யோஜித்த க்ரமத்தை பிடித்து முதல் பத்திலே தொடங்கின பக்தி யோகத்தை என்றபடி —

பிணக்கற தொடங்கி வேத புனித இறுதி சொன்ன -என்று இறே கீழும் ( ஆறாம் பத்து சாரத்தில் ) அருளிச் செய்தது –
ஆக இப்படி முதல் பத்தில் உபக்ரமித்த பக்தியை நிகமித்துக் கொண்டு –

——————————————

7-எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி-
அதாவது-
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -1-2-10–என்று
முதல் பத்தில் பஜன ஆலம்பனமாக சொல்லப் பட்டதாய்-
எண்ணும் திரு நாமம் -10-5-1–என்று பஜன தசையில் அனுசந்திக்க படும் திருநாமமான திரு மந்த்ரத்தினுடைய
சப்தத்தையும் -அர்த்தத்தையும் –
நாரணம் -10-5-1–என்றும் –
நாரணன் எம்மான் ( பார் அணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே )-10-5-2–என்றும் -இத்யாதியாலும்
ஸூக்ரஹமாம் படி சுருங்க உபதேசித்தும்-

மாதவன் என்று த்வயமாக்கி-
அதாவது-
பூர்வ உத்தர வாக்யங்களில் -ஸ்ரீ மத் -பத அர்த்தங்களை திரு உள்ளத்தில் கொண்டு –
மாதவன் என்று என்றே ஓத வல்லீரேல் -10-5-7–என்று
கீழ் சொன்ன நாராயண சப்தத்தோடு -மாதவன் -என்கிற இத்தை இரண்டு பர்யாயம் சேர்த்து சொல்லீர்கள் என்கையாலே –
அந்த திரு மந்த்ரத்தை அதனுடைய விசத அனுசந்தானமான த்வய ரூபேண வெளி இட்டு –

கரண த்ரய பிரயோக வ்ருத்தி சம்சாரிகளுக்கு கையோலை செய்து கொடுத்து
அதாவது-
ஈஸ்வரன் தம்மைக் கொண்டு போகையிலே த்வரிக்கிற படியாலும் –
கேட்கிறவர்களுக்கு பிரபத்தி விஷயமாம்படி யாகவும் சுருங்கக் கொண்டு –
தாள் வாய் மலரிட்டு நாள் வாய் நாடீர் -10-5-4–என்றும்
பாடீர் அவன் நாமம்–10-5-5- -என்றும்
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே-10-5-10-–என்று
இப்படி கரண த்ரயத்தாலும் பிரயோகிக்கப் படும் பகவத் ஆச்ரயண வ்ருத்தியை –
பரந்த சடங்குகளை சுருங்க அனுஷ்டேயார்த்த பிரகாசமான பிரயோக வ்ருத்தியாக்கி
கையோலை செய்து கொடுக்குமா போலே -சம்சாரிகளுக்கு தர்சிப்பித்து-

செஞ் சொல் கவிகளுக்கு கள்ள விழி காவல் இட்டு-
அதாவது-
செஞ் சொற் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின்-10-7-1- -என்று
அவனுக்கு அடிமை செய்வீர் ! அவனுடைய சீலாதிகளிலே அகப்பட்டு அழுந்திப் போகாமல்
உங்கள் உயிரை நோக்கிக் கொண்டு அடிமை செய்யப் பாருங்கோள் என்று -உபதேசிக்கையாலே –
அனுபவ கைங்கர்யங்களோடு நடக்கிற ச கோத்ரிகளுக்கு-அரண் அழியாமல் -கள்ள வழி காவல் இடுவாரைப் போலே –
சீல குணமாகிற ஆழம் காலில் இழியாதே கொள்ளுங்கோள் என்று –
வஞ்சக் கள்வன் உள் கலந்து அழிக்கும் வழிக்குக் காவல் இட்டு–

————————————————–

8-மனம் திருத்தி வீடு திருத்தப் போய் நாடு திருந்தினவாறே வந்து விண்ணுலகம் தர
விரைந்து அத்தை மறந்து குடி கொண்டு தாம் புறப் பட்ட வாக்கையிலே புக்கு தான நகர்களை
அதிலே வகுத்து குரவை துவரைகளிலே வடிவு கொண்ட சபலனுக்கு தேக தோஷம் அறிவித்து
அதாவது
தன் பால் மனம் வைக்கத் திருத்தி -1-5-10–என்று
வள ஏழ் உலகிலே -1-5-1–அயோக்யர் என்று அகன்ற தம்மை தன் சீலவத்யைக் காட்டி
மனசைத் திருத்தி சேர்த்துக் கொண்டு –

இன்னமும் இவர் இங்கே இருக்கில் அயோக்யர் என்று அகல்வர் –
அகல ஒண்ணாத தேசத்து ஏறக் கொண்டு போக வேணும் -என்று –
வீடு திருத்துவான் -1-5-10–என்கிறபடியே -பரமபதத்தை கோடிப்பதாய் போய் –

அது செய்து மீளுவதற்கு முன்பே –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே-6-7-2- -என்கிறபடியே
தன் உபதேசத்தாலே நாடெல்லாம் திருந்தி –தான் இங்கே தம்மை வைத்துக் கொள்ள
நினைத்த காரியமும் தலைக் கட்டின வாறே –

இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்-10-6-3- -என்று
மீள வந்து பரம பதத்தில் ஏறக் கொண்டு போகையிலே -த்வரித்து-

சரம சரீரம் ஆகையாலே
தம்முடைய திருமேனியில் தனக்கு உண்டான வ்யாமோகத்தாலே கொண்டு போக
விரைந்து -அத்தையும் கூட மறந்து –

கோவிந்தன் குடி கொண்டான் -10-6-7–என்கிறபடியே சபரிகரனாய் கொண்டு –
எண் மாய ஆக்கை இதனுள் புக்கு -10-7-3–என்று
த்யாஜ்யம் என்று குந்தி யடி இட்டு தாம் சரக்கு கட்டிப் புறப் பட்டு நிற்கிற தேஹத்துக்கு உள்ளே தான் புகுந்து-

திரு மால் இரும் சோலை மலையே -10-7-8–என்கிற பாட்டின் படியே -தான நகர்கள் -என்று
தனக்கு வாசஸ்தானமான திவ்ய நகரங்களில் பண்ணும் விருப்பத்தை எல்லாம் -ஓரோர் அவயவங்களிலே பண்ணி
எல்லாம் இதுக்கு உள்ளேயாக வகுத்து –

அங்கனாம் அங்கனாம் அந்த்தரே மாதவோ மாதரஞ்ச அந்தரேன் அங்கனா–கர்ணாம்ருதம்-என்கிறபடியே
திருக் குரவையிலே பெண்களோடே அநேக விக்ரக பரிக்ரஹம் பண்ணி அனுபவித்தாப் போலேயும் –

ஏகஸ்மின்னேவ கோவிந்த காலே தாசாம் மகா முனே
ஜக்ரகா விதிவத் பாணீன் ப்ருதக் கேஹெஷூ தர்மத–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-31-17-என்றும்
உவாச விப்ர சர்வாசாம் விச்வரூப தரோ ஹரி-ஸ்ரீ விஷ்ணு புராணம்-3-31-20- -என்கிறபடியே
ஸ்ரீமத் த்வாரகையில் தேவிமாருடனே பதினாறாயிரம் விக்ரகம் கொண்டு அனுபவித்தாப் போலேயும் –

அநேக விக்ரகம் கொண்டு தம்முடைய அவயவங்கள் தோறும்
அனுபவிக்கும் படி தம் திருமேனியிலே அதி சபலன் ஆனவனுக்கு –

பொங் ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம் இங்கு இவ் உயிரேய்
பிரகிருதி மானாங்கார மனங்களான உன் மா மாயை மங்க ஒட்டு-10-7-10–என்று
ஸ்வ தேக தோஷத்தை அறிவித்து -இத்தை விடுவிக்க வேணும் என்று கால் கட்டி –

—————————————

9-மாயையை மடித்து-
அதாவது –
அவனும் இத்தை விடுவிப்பதாக அனுமதி பண்ண -ப்ரீதராய் –
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை -10-8-3–என்று சம்சாரத்தில் நிற்கைக்கு
அடியான மாயை யுண்டு மூலப் பிரகிருதி -அத்தை திரிய விடுவித்தேன் என்று செருக்கி –

வானே தரக் கருதி கருத்தின் கண் பெரியனாவனை-
அதாவது –
வானே தருவான் எனக்காய்-10-8-5- -என்று
தனக்குப் பரம பதத்தைத் தருவானாய் ஒருப்பட்டு –

கருத்தின் கண் பெரியவன்-10-8-8–என்று
உபய விபூதி யோகத்தால் வரும் அந்ய பரதையை அடையத் தீர்ந்து -தம்மை அவ் அருகே கொடு போகையாலும்–
ஆதி வாஹிகரை நியமிக்கையாலும் -தான் முற்பாடனாகக் கொண்டு போகையாலும் –
பெருக்க பாரியா நிற்கிறவனை –

அன்றிக்கே
மாயையை மடித்து-என்கிறதை மேலோடு சேர்த்து –
மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை மடித்தேன் -என்று
தாம் பேசும் படி அசித் சம்பத்ததை அறுத்து –

வானே தருவான் -என்று தமக்கு பரம பதத்தைத் தருவானாக உத்யோகித்த –
கருத்தின் கண் பெரியன் -என்று
தம்மால் எண்ணி முடிக்க ஒண்ணாதபடி -தம் கார்யத்தில் த்வரிகிறவனை என்றுமாம் –

ஆக இப்படி தாம் சொன்னபடி செய்யக் கடவனாய் -தம்மை கொண்டு போகையிலே மிகவும் பாரிக்கிறவனை-

இன்று அஹேதுகமாக வாதரித்த நீ அநாதயநாதார ஹேது சொல் என்று மடியைப் பிடிக்க
அதாவது –
இன்று என்னை பொருளாக்கி-10-8-9- -என்று தொடங்கி இன்று இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரித்த நீ
அநாதி காலம் என்னை உபேஷித்து இருந்ததற்கு ஹேதுவை அருளிச் செய்ய வேணும் என்று
மடியைப் பிடித்து கேட்க –
இதுக்கு சொல்லலாம் உத்தரம் என்ன என்று தன்னிலே நிரூபித்து –
இவை ஒன்றும் இவர்க்கு சொல்லத் தகாதன என்று அவன் நிருத்தரனாய் நின்றமையை நெடுக உபபாதிகிறார் மேல் –
ஈஸ்வரன் நிரூபித்த க்ரமம் தான் இருக்கும் படி–

(ஸ்வாமித்வம் -காட்டும் அப்பக்குடத்தான்
ஆழ்வாரை கூட்டிச் செல்ல வந்த கார்யம் மறந்து த்யாஜ்ய தேக வ்யாமோஹம் -காட்டும் திருமாலிருஞ்சோலைப் பெருமாள் )

———————————————

(ஐந்து விஷயம் உரையாடல் போலவே இருக்கும் -ஒவ் ஒன்றுக்கும் ஆழ்வார் சமாதானம்
இன்னும் வேறே ஐந்தும் -அவன் திரு உள்ள நினைவை அறிந்து ஆழ்வார் நமக்கு சஞ்சிதம் காட்ட –
சேர்த்து வைத்த சொத்தை -பரிமாற்றத்தையும் பாசுரமாக நமக்காக வெளியிட்டு அருளுகிறார்
தன்னுடைய பொறுப்புக்களை கடமைகளை தானே சொல்லிக் கொள்கிறான் சர்வேஸ்வரன்
அவன் நினைவையும் அறிந்து பாடுகிறார் ஆழ்வார் -யானும் தானாய் ஒழிந்தானே-அன்றோ
ஆக மொத்தம் –பத்து விஷயங்கள் -இதில் உண்டே )

10-இந்திரிய கிங்கரராய் குழி தூர்த்து சுவைத்து அகன்றீர் என்னில் –
அவை யாவரையும் அகற்ற நீவைத்தவை என்பர் –
அதாவது –
யூயம் இந்திரிய கிங்கரா -வில்லிபுத்தூர் பகவர் வார்த்தை–என்கிறபடி -அநாதி காலம் இந்திரிய வச்யராய் –
தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்று இருப்பன்-5-8-6- -என்றும் –
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்-3-2-6- -என்று துஷ்பூரமான இந்திரியங்களுக்கு இரை இட்டு
எத்தனை காலம் உன்னை அகன்று இருக்கக் கடவேன் –
அல்ப ரசங்களாய் -அநேக விதங்களாய் இருக்கிற –
சப்தாதி விஷயங்களைப் பசை உண்டதாக பிரமித்து -எதிர் பசை கொடுத்து புசித்து -சர்வ சக்தியான உனக்கு எட்டாதபடி –
சம்சாரத்தில் கை கழியப் போனேன் என்று நீர் தானே பேசும்படியான சப்தாதி விஷய பிராவண்யம் அன்றோ -நீர்
அநேக காலம் சம்சரிக்கைக்கு ஹேது என்னில் –

ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த -7-1-8–என்றும்
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள்-5-7-8- -என்று -விஷயங்களும்–அவற்றில் பிராவண்ய
ஹேதுவான இந்திரியங்களும் -எத்தனை ஏலும் அளவுடையாரே ஆகிலும் -கலங்கப் பண்ணி நீ
வேண்டாதாரை அகற்றுகைக்கு வைத்தவை அன்றோ என்பர்-

அது தேக யோகத்தாலே என்னில் –அந்நாள் நீ தந்த சுமடு என்பர் —
அதாவது –
அந்த இந்திரிய வஸ்தைக்கு அடி -குண த்ரையாத் மகமான சரீர சம்பந்தம் அன்றோ என்னில்-

அந்நாள் நீ தந்த ஆக்கை –3-2-1-
அது நிற்கச் சுமடு தந்தாய் -7-1-10–என்று
அதுவும் தந்தாய் நீ என்பர்-

முன் செய்த முழு வினை யாலே
என்னில் அது துயரமே உற்ற விருவினை உன் கோவமும் அருளும் என்பர்
அதாவது-
அந்த தேக சம்பந்தத்துக்கு அடி -முன் செய்த முழு வினை-1-4-2- -என்று
நீர் சொன்ன அநாதிகால ஆர்ஜித புண்ய பாப ரூப கர்மம் அன்றோ -என்று சொல்லுவோம் ஆகில்

துயரமே தரு துன்ப இன்ப விளைகளாய்–3-6-8-என்றும்
உற்ற விறு வினையாய் –10-10-8- என்று அசேதனுமாய் -அசக்தமுமாய் -நச்வரமுமாய் இருந்துள்ள
புண்ய பாப ரூப கர்மங்கள் -உன்னுடைய நிக்ரஹ அனுக்ரஹ ரூபேண பலிக்கும் அவை ஆகையாலே
கர்மமும் நீ இட்ட வழக்கு என்பர்-

——————————————————

11-ஈவிலாத மதியிலேன் என்னும் உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் என்னில்-
ஆங்காரமாய் புக்கு செய்கைப் பயன் உண்பேனும் கருமமும் கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்-
அதாவது-
ஈவிலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்-4-7-3- -என்று
முடிவு இன்றிக்கே இருக்கிற கொடிய பாபங்களிலே எத்தனை பண்ணினேன் என்றும் –
மதியிலேன் வல்வினையே மாளாதோ –1-4-3- என்று
நான் பண்ணின பாபமேயோ அனுபவித்தாலும் மாளாது என்றும் -நீரே சொல்லுகையாலே –
கர்த்ருத்வமும் போக்த்ருத்வமும் உம்மதன்றோ என்று சொல்லுவோம் ஆகில் –

தானாங்காரமாய்ப் புக்குத் தானே தானே யானான் -10-7-11-என்று
தான் அபிமானியாய்ப் புக்கு ஆத்மாத்மீயங்களில் எனக்கு உண்டான அபிமானத்தைத் தவிர்த்து
தானே அபிமானி ஆனான் என்றும் –
செய்கை பயன் உண்பேனும் யானே -5-6-4–என்று
நம்முடைய படியை அனுகரித்து சொல்லுகிற இடத்தில் –சகல கர்மங்களுடைய பல போக்தாவும் நானே என்றும் –
கருமமும் கரும பலனுமாகிய-3-5-10- என்று
புண்ய பாப ரூபமான கர்மங்களுக்கும் கர்ம பலன்களுக்கும் நியாமகனாய் -என்றும் சொன்னவர் ஆகையாலே –
கர்ம கர்த்தாவும் -தத் பல போக்தாவும் -நீ இட்ட வழக்கு ஆகையாலே- கர்த்தாவும் போக்தாவும் நீயே என்பர்-

கருமமும் கரும பலனுமாகிய -இத்தால் – கர்ம கர்த்தரு -தத் பல போக்த்ரு -ததநீயம்
விவஷிதம் ஆகையாலே யாய்த்து இவ் இடத்தில் இவர் இச் சந்தையை எடுத்தது–

———————————————-

12-யானே எஞ்ஞான்றும் என்றத்தாலே என்னில்
அயர்ப்பாய் சமய மதி கொடுத்து உள்ளம் பேதஞ் செய்கை உன் தொழில் என்பர்
அதாவது-
யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன்-2-9-9- -என்றும் –
எஞ்ஞான்று நாம் -என்று தொடங்கி-மெய் ஞானமின்றி வினை இயல் பிறப்பு அழுந்தி -3-2-7–என்றும் நீர் சொன்ன –
அஞ்ஞான அந்யதா ஞானாதிகளாலே காணும் உமக்கு அந்த கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள்
உண்டாய்த்து என்று சொன்னோம் ஆகில் –

அயர்ப்பாய் தேற்றமுமாய் –7-8-6-
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் –3-1-4-
உள்ளம் பேதம் செய்திட்டு ஒர் உண்ட உபாயங்களும் -5-10-4–என்று
ஞான அஞ்ஞானங்கள் இரண்டும் நீ இட்ட வழக்கு ஆகையாலே –
அஞ்ஞான அந்யதா ஞானாதிகளை விளைக்கையும் உன் கிருத்யம் என்பர்-

(அஞ்ஞானம் -தொடங்கி-பொல்லா ஒழுக்கம் -அழுக்கு உடம்பு -கர்த்ருத்வம் போக்த்ருத்வம் கர்த்தா -இந்திரிய வசியத்தை இப்படி ஐந்தும்-
மெய் ஞானமின்றி வினை இயல் பிறப்பு அழுந்தி-மூன்று பதங்களால் மூன்றையும் சுருக்கமாக காட்டி அருளுகிறார்-
இந்திரிய வஸ்யத்தை முதலில்–தேக யோகம் -அடுத்து -கர்மத்தால் அடுத்து –கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் -அடுத்து-
அஞ்ஞானம் அந்யதா ஞானங்கள் இறுதியில் –
மேலே ஐந்து விஷயங்கள்-அவன் தனது கடமையை -பொறுப்பை நினைக்க -அத்தை அறிந்து ஆழ்வார் நமக்காக காட்டி அருளுகிறார் )

ஜீவ பிரகிருதி சைதன்யம் நீங்கும் வ்ரத ஹேது- அக மேனியில் அழுக்கை அறுக்கை அபிமானி க்ருத்யம்
அதாவது
யாதேனும் ஓர் ஆக்கையில் புக்கு -திருவிருத்தம்-95–இத்யாதிபடியே –
ஸூஷ்ம பிரகிருதி விசிஷ்டனாய்க் கொண்டு ஸ்வ கர்ம அனுகுணமாக நானா வித சரீரங்களிலே ஒன்றுபட்டு
ஒன்றைப் பற்றி தடுமாறி திரியும் -ஜீவனுக்கு -தேக இந்த்ரியத்வேன-போக்யத்வேன -அவஸ்தையான
பிரக்ருதியைப் பற்றி கிடக்கிற சைதன்யம் –
யாதேனும் பற்றி நீங்கும் விரதம்-திருவிருத்தம்-95 -என்கிறபடியே
பிரகிருதி பிராக்ருதங்களிலே-ஏதேனும் ஒன்றை அவலம்பித்து -நம்மை
விட்டு அகலும் விரதத்துக்கு ஹேதுவாய் இருப்பது ஓன்று –

அகமேனி ஒழியாமே -9-7-10–என்று
நமக்கு அந்தரங்க சரீரமான -இவ் ஆத்மாவை பற்றிக் கிடக்கிற பிரகிருதி
சம்பந்த ரூப மாலின்யத்தைப் போக்குகை –
இவ் ஆத்மாவுக்கு அபிமானியான நம்முடைய க்ருத்யமாய் இருந்தது
(அகமேனி- ஆத்மா– ப்ரஹ்ம சரீரம் தானே )

(ஜீவன் சரீரத்தில் இருக்கிற -முதல் அர்த்தம்
ஜீவனாகிய ப்ரக்ருதி -பராக் பிரகிருதி ஜீவாத்மா -இது உயர்ந்த ப்ரக்ருதி -இப்படி இரண்டு நிர்வாகங்கள் )

அன்றிக்கே –
ஜீவ பிரகிருதி சைதன்யம் நீங்கும் வ்ரத ஹேது அக மேனியில் அழுக்கை அறுக்கை அபிமானி க்ருத்யம்-
அதாவது-
இதஸ் த்வன்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ஜீவ பூதாம்-ஸ்ரீ கீதை-7-5-என்று சொல்லப் பட்ட
ஜீவனாகிய பிரக்ருதியில் கிடக்கிற சைதன்யம் -ஏதேனும் பற்றி நீங்கும் -என்கிறபடியே –
பிரகிருதி பிராக்ருதங்களில் ஏதேனும் ஒன்றை பற்றி -நம்மை விட்டு அகலும் விரத ஹேதுவாய் இருப்ப தொன்று –
அசித் சரீரமாய் இருக்க செய்தே –
அப்படி அன்றிக்கே –
அக மேனி -என்று நமக்கு அந்தரங்க சரீரமாய் இருக்கிற இவ் ஆத்ம வஸ்துவில்
கிடக்கிற பிரகிருதி சம்பந்தமான மாலின்யத்தை போக்குகை இதுக்கு அபிமானியான
நம்முடைய க்ருத்யமாய் இருந்தது என்னவுமாம்–

————————————————————-

13-தான் நல்கும் பந்தம் நிருபாதிகம்-
அதாவது
நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினை யேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால் -1-4-5- -என்னும்படி (நல்கும் -ரஷிக்கும்)
நாம் ஸ்நேஹ பூர்வகமாக ரஷிக்கைக்கு அடியான நாராயணத்வ பிரயுக்தமான சம்பந்தம் நிருபாதிகமாய் இருந்தது-

ஸௌஹார்தம் எஞ்ஞான்றும் நிற்கும்-
அதாவது
தனிமாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாகத் தான் தோன்றி-8-10-7- -என்று
நாம ரூபங்களை இழந்து -தமோ பூதமான சமயத்திலே –
இவற்றை உண்டாக்க நினைத்த அத்வீதியமான மகா குணம் என்கிற சௌஹார்த்தம்-
கால தத்வம் உள்ளதனையும் ஒருவன் பண்ணும் உபகாரமே என்று -அத்தையே அனுசந்திப்பார் -ஹ்ருதயத்தில்
நிற்கும் படியாக என்கையாலே —
அந்த சம்பந்தம் அடியாக – சர்வருக்கும் நன்மையை -ஆசாசிக்கைக்கு அடியான –
சௌஹார்த்த குணத்திலும் கண் அழிவு சொல்லப் போகாது-

பிணக்கிப் பேதியாதே ஜ்ஞானாதி வைகல்யமில்லை-(வைகல்யம் -வேறுபாடு )
அதாவது
பிணக்கி யாவையும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய் -6-2-8- -என்னும்படி
சம்ஹ்ருதி சமயத்திலே -சகல சேதன அசேதனங்களையும் நாம ரூப விவேக ரஹிதமாம்படி கலசி–
சிருஷ்டி தசையிலே ஒருவர் கர்மம் ஒருவருக்கு தட்டாதபடி பிரித்து ஸ்ருஷ்டித்தும் –
தனக்கு ஒரு பேதம் இன்றிக்கே இருக்கும் ஜ்ஞானாதிகளை உடைய
நமக்கு ஞானாதி சக்திகளில் குறைவு சொல்ல இடம் இல்லை-

ஏக மூர்த்தியில் அல்லல் மாய்த்த யத்ன பலித்வங்கள் நம்மது-
அதாவது
ஏக மூர்த்தி-4-3-3- -என்கிற பாட்டில் காரணங்களோடு கார்யங்களோடு வாசியற சகலத்தையும் சிருஷ்டித்து –
அவற்றினுடைய தாரண அர்த்தமாக அந்தராத்மாவாய் ஸ்ருஷ்டமான பதார்தங்களுடைய
ரஷணத்துக்காக ஷீரார்ணவத்திலே கண் வளர்ந்து அருளி –
இப்படி சர்வ காலமும் ஒருபடிப் பட்ட அனுக்ரஹ சீலனாகைக்கு அடியான பிராப்தியை உடையையான நீ உன் திருமேனிக்கு வேண்டும்
போக உபகரணங்கள் எல்லாம் -பூசும் சாந்திர் -படியே -என் பக்கலிலே உண்டாக்கி -நிர் துக்கனானாய் என்று –
இவர் பேசினபடியே இவரைப் பெருகைக்கு எத்தனம் பண்ணுகையும் – பெற்றால் உகக்கும் பலித்வமும் –
நமக்கே உள்ளது ஒன்றாய் இருந்தது —

——————————————–

14-நாம் தனி நிற்ற ஸ்வதந்த்ரர் என்று அவனே அறிந்தனமே என்னும் சர்வஜ்ஞர் இவர்-
அதாவது
தனி நின்ற சார்விலா மூர்த்தி -என்று
கார்ய வர்க்கம் அழிந்த அன்று -சச் சப்த வாச்யனாய் -நின்று
ருத்ரோ ப்ராஹ்மணம் ஆஸ்ரித ப்ரஹ்மா மமாஸ்ரிதோ ராஜன் நாஹம் கம்சிது பாஸ்ரித -பாரதம்
இத்யாதி பிரக்ரியையாலே -உனக்கோர் அபாஸ்ரயமில்லாதபடி இருக்கிறவனே -என்கையாலே
நாம் வேண்டிற்றை செய்யும் படி
நிரந்குச ஸ்வதந்த்ரன் என்று அறுதி இட்டு –
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்-9-3-2- -என்று தொடங்கி –
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே -என்று சகல கார்யங்களிலும் சஹகாரி
நிரபேஷனாய் -ஸ்வாதீன சகல சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதிகனாய் இருக்கும்
அவன் என்று அறிந்தோம் என்று சொல்லும்படியான சர்வஜ்ஞராய் இருப்பார் ஒருவர் இவர்-

——————————-

15-நெறி காட்டி அருகும் சுவடும் போலே இதுவும் நிருத்தரம் என்று கவிழ்ந்து நிற்க-
அதாவது-
நெறிகாட்டி நீக்குதியோ -பெரிய திருவந்தாதி-6 -என்கிற பாட்டிலும் –
அருகும் சுவடும் தெரி உணரோம்–பெரிய திருவந்தாதி-8- –என்கிற பாட்டிலும்
உபாயாந்தரத்தை காட்டி அகற்றப் பார்க்கிறாயோ –
பழையதாக அஜ்ஞனாய்ப் போருகிற என்னை என் செய்வதாக நினைத்தாய் –
இத்தை அருளிச் செய்ய வேணும் என்றும் –
உம்முடைய அருகு வருதல்- உம்முடைய சுவடு அறிதல்-செய்யாது இருக்க -உம்மளவிலே ஸ்நேஹம் ஆனது
அறமிக்கு வாரா நின்றது -இதுக்கடி அருளச் செய்ய வேணும் என்றும்-
முன்பு இவர் கேட்டவை நிருத்தரம் ஆனால் போலே –
இப்பொழுது கேட்டதும் நிருத்தரம் என்று –
நிலத்தை கீறாக் கவிழ்ந்து நிற்க –

—————————————————

16-அமந்த்ரஜ்ஞா உத்சவ கோஷம் ஏறப் பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிகிற மேக சமுத்திர பேரீ கீத
காஹள சங்கா சீச்ஸ்துதி கோலாகலம் செவிப் பட்டவாறே சாஷாத்க்ருத பர பிராப்திக்கு-
அதாவது-
உத்சவங்களில் சடங்கு காட்டும் உபாத்யாயர் மந்த்ரம் தோன்றாவிடில் –
கொட்டச் சொல்லி வாத்திய கோஷத்தாலே -அத்தை மறைத்து விடுமா போலே –
தான் நிருத்தரானமை தோற்றாதபடி மறைக்கைக்காக –
இவனாலே பிரவ்ர்த்திதமாய் –
நான் ஏறப் பெறுகின்றேன் -10-6-5–என்று தாம் கீழே சொன்னபடியே பரம பதத்தில் ஏறப் பெறுகிற
எழுச்சியை ஸூசிப்பியா நின்றுள்ள –

சூழ் விசும்பணி முகில் தூரியம் முழக்கின ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின-10-9-1- -என்று
ராஜ குமாரர் போம் போது -தூர்யாதி மங்கள கோஷம் பண்ணுவாரைப் போலே –
பரம பதத்துக்கு போமவர்களைக் கண்ட ப்ரீதியால் முழங்குவது -கோஷிப்பதாக நிற்கும் –
மேக சமுத்ரங்கள் ஆகிற பேரிகள் உடையவும் –
கீதங்கள் பாடினர் கின்னரர் கருடர்கள்–10-9-5–என்கிற கீதங்களினுடையவும் –
காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர் -10-9-6–என்கிற காஹள சங்கங்களினுடையவும் –
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர்–10-9-6-என்கிற ஆசீசினுடையவும் –
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர்-10-9-7- -என்று
ஸ்தோத்ரிதனுடைய சம்மிசர கோஷமாகிற கோலாகலம் செவிப் பட்டவாறே –
அர்ச்சிராதி கதியையும் – ஆதி வாஹிக சத்காரத்தையும் -திவ்ய தேச பிராப்தியையும் –
அங்கு உள்ளாருடைய பஹுமானத்தையும் -ஆனந்த மயமான ஆஸ்த்தானத்தில் இருப்பையும் –
ஸ்வ சரண கமல பிராப்தியையும் -பெற்றாராகப் பேசும்படி சாஷாத் கரித்த பர பிராப்திக்கு –

————————————————-

17-தலை மிசையாய் வந்த தாள்களைப் பூண்டு போகாமல் தடுத்து திருவாணை இட்டு-
அதாவது-
அப்படி சாஷாத் கரித்த பர பிராப்தி -மானச அனுபவ மாத்ரமாய் -பாக்ய
சம்ச்லேஷ யோக்யை அல்லாமையாலே -அத்தைப் பெறுகைக்காக –
தலை மிசையாய் வந்திட்டு இனி நான் போகல் ஒட்டேன்-10-10-1- -என்றும் –
தலை மேல் புனைந்தேன் சரணங்கள் 10-4-4-– என்றும் –
தலை மேல் தாள் இணைகள்-10-6-6–என்றும் –
என்கிறபடி மானச அனுபவ வைசத்யத்தாலே -தம் தலைமேல் ஆகும்படி வந்த
திரு வடிகளைக் கட்டிக் கொண்டு -போகாமல் தடுத்து –

திரு ஆணை நின் ஆணை கண்டாய் -10-10-2–என்று
அவனுக்கு மறுக்க ஒண்ணாதபடி ஆணை இட்டு -இப்படி ஆணை இட்டவாறே
சேஷ பூதரான நீர் சேஷியான நாம் செய்தபடி கண்டு இருக்கும் அத்தனை ஒழிய –
நம்மை ஆணை இட்டுத் தடுக்கை உம்முடைய ஸ்வரூபத்தோடு விருத்த மாகையால்
இது பெறா ஆணை காணும் என-

(இது பெறா ஆணை இல்லை — பெறும் ஆணை தான் என்பதுக்கு மேலே எட்டு விஷயங்கள் )

கூசம் செய்யாதே செய்திப் பிழை
அதாவது
கூசும் செய்யாது கொண்டாய் -10-10-2–என்று
சர்வஜ்ஞ்ஞானான நீ என் பூர்வ விருத்தத்தால் வந்த அயோக்யதை பார்த்து
கூசி வாசி வையாதே -உன்னோடு ஆத்ம பேதம் இல்லாதபடி -என்னை
பரிகிரஹித்தாய் -ஆன பின்பு உன்னதன்றோ செய்திப் பிழை என்றும்

———————————————

18-பற்றுக் கொம்பற்ற கதி கேடு
அதாவது
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்-10-10-3–என்று
கொடி கொள் கொம்பை ஒழிய தரிக்க மாட்டாதாப் போலே -என் ஆத்மாவுக்கு ஜீவன
ஹேதுவாய் இருப்பது -உன்னை ஒழிய வேறு காண்கிறிலேன் -ஆதலால் நான்-அநந்ய கதி -என்றும் –

போர விட்ட பெரும் பழி
அதாவது
எம் பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாய்–10-10-4- -என்று
என் கார்யம் நீ செய்ததாக ஏறிட்டுக் கொண்டு-உன் பக்கல் நின்றும் பிரித்து –
உன் குணங்கள் நடையாடாத சம்சாரத்திலே தள்ளி உபேஷித்தாய் -இது
உனக்கு பரிகிரஹிக்க ஒண்ணாத பெரும் பழி அன்றோ என்றும் –

—————————————-

19-புறம் போனால் வரும் இழவு
அதாவது
போர விட்டு இட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின் யான்
யாரைக் கொண்டு எத்தை யந்தோ எனது என்பது என் யான் எனபது என் -10-10-5-என்று
உன் பக்கல் நின்றும் பிரித்து -அநந்ய கதி யான என்னை -சிருஷ்டியே தொடங்கி –
இவ்வளவும் புகுர நிறுத்தின நீ என் கார்யம் நான் செய்வானாகப் பார்த்து என்னை உபேஷித்தால்-
சர்வ சக்தியான நீ அநாதாரித்த பின்பு -அசக்தனான நான் -எந்த உபாயத்தைக் கொண்டு
என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது –
எனக்கு பரிகிரமாய் இருப்பது உண்டு என்பதோர் அர்த்தமுண்டோ –
பிருதக் ஸ்திதி யோக்யமாய் இருப்பதொரு நானுண்டோ -ஐயோ -என்னை என் கையிலே காட்டித் தந்தால்
இழவே அன்றோ உள்ளது என்றும்-

————————————————-

20-உண்டிட்ட முற்றீம்பு
அதாவது
எனது ஆவியை இன் உயிரை மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –10-10-6-
என்னுடைய ஹேயமான சரீரத்தையும் ஆத்மாவையும்
மனசுக்கு பர்யாப்தி பிறவாமல் நிரந்தரமாக புஜித்த நீ தொடங்கினதை குறை
கிடக்க விடாதே -விஷயீ கரித்து விடாய் – புக்த சேஷமான உன்னதன்றோ முதல் தீம்பு என்றும்

அன்பு வளர்ந்த அடி வுரம்
அதாவது
கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7-என்று
பெரிய பிராட்டியார் பக்கல் -ஸ்நேஹ அதிசயத்தால் -அவள் பரிக்ரமான –
என் பக்கல் அதி பிரவணன் ஆனவனே -நான் அந்தப் புர பரிக்ரம் அன்றோ –
என் பக்கல் உனக்கு உண்டான அன்புக்கு அடி இல்லையோ -ஆகையால்
அவள் பரிக்ரகம் என்கிற -அடி உரம்-என்றும்

உயிர் உறவு
அதாவது
பெற்று இனிப் போக்குவனோ -உன்னை என் தனி பேர் உயிரை-10-10-8- -என்று
அத்யந்த விசஜாதீயனாய் இருந்து வைத்து -எனக்கு தாரகனான உன்னைப்
பெற்று வைத்து இனி விடுவேனோ -உயிரை விட்டு உடல் தரிக்க வற்றோ என்கிற
சரீர சரீர பாவ சம்பந்தம் என்றும் —

—————————————–

21-முதல் அளவு துரக் கைகளாலே பெறா வாணை யல்ல வாக்கின பேரவா குளப் படியாம் படி
அதாவது
இப்படி -முதல் தனி வித்து -10-10-9-என்கிற பாட்டு அளவாக உத்தரோத்தரம் புகலற –
துரக் கைகளினால் தாம் இட்ட ஆணை பெறா ஆணை அல்லாமையை சாதித்த –
அதனில் பெரிய என் அவா 10-10-10-–என்ற தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொண்டு –
அவை குளப் படியாம் படி பெரிதான தம்முடைய பரம பக்தி குளப் படி யாம் படி

கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளி இடுகிறார் பத்தாம் பத்தில் ..
அதாவது –
என் அவா அறச் சூழ்ந்தாயே -10-10-10-என்று கீழ் சொன்ன அபரிசேத்யமான தம்முடைய அபிநிவேசத்தையும்
தன் அபிநிவேசத்தையும் பார்த்தால் இது ஒரு குளப் படியும் -அது ஒரு சமுத்ரம் என்னும் படியான
அபிநிவேவேசத்தோடே வந்து சம்ச்லேஷித்து –
அங்கே பரதம் ஆரோப்யம் உதித பரிஷச்வஜே -யுத்த-134-39-என்று மீண்டு எழுந்து அருளி ஸ்ரீ பரத ஆழ்வானை
மடியிலே வைத்து அணைத்து உச்சி மோந்து முகந்தாப் போலே தம்முடைய விடாய் கெடும் படி
அனுபவித்து -அலாப நிபந்தன பரிதாபத்தாலே கூப்ப்பிட்ட வாயாலே –
அவா அற்று வீடு பெற்ற  குருகூர் சடகோபன் -10-10-11-என்று பேசும்படி –
அவா அற சூழ் அரியை -10-10-11–என்று ஹரி என்கிற திரு நாமத்துக்கு அனுகுணமாக
தம்முடைய சகல தாபங்களையும் ஹரித்தமையை சர்வரும் அறியும்படி
பிரகாசிப்பிக்கிறார்  பத்தாம் பத்தில் என்கை –

(அவா அற–ஆர்த்தி ஹரத்வம் -அவா தானே ஆர்த்தி -இதுவே பத்தாம் பத்தில் ஆழ்வாருக்குக் காட்டி அருளிய கல்யாண குணம் )

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –227–

September 30, 2018

ஒன்பதாம் பத்தால்
சாதன பல உபகாரம் கைம்மாறு இன்றி
க்ருதஞ்ஞதா பல க்ருதமானம் -ஆத்மாவை உணர்ந்தார் எட்டாம் பத்தில்
ஆத்ம தரிசன பல பிராப்தி மரணாவதியாகப் பெற்று —
சரணமாகும் தனது தாள் அடைந்ததற்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –

சர்வ சக்தித்வம் -கீழே -ஆபத் ஸகத்வம் இதில் –
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ப்ராப்யம் –
சஞ்சித கர்மா மூட்டை பிராரப்த கர்மா -வர்த்தமான சரீரம் -வரும் சரீரம் இரண்டிலும் அனுபவிக்கும் ஆரப்தம்-
வர்த்தமான ஆரப்தம் முடிந்தால் பேறு-சரீரம் விழும் பொழுது -நாள் அவதி இட்டுகே கொடுக்கும் திருக்கண்ண புரம்-
கிருபையால் சிலருக்கும் -பரம கிருபையால் – பலருக்கும் சர்வ உபாயங்கள்
பக்தி -பிரபத்தி -வாயால் திவ்ய தேசம் சொல்வது -இவற்றை நினைப்பது -இப்படி பல படிகள்

சங்கதி –
நெடுமாற்கு அடிமையில் பாகவத பிரபாவம் காட்டி அருளிய நிருபாதிக பந்து –
கிருபை அடியாக பந்து-கர்மம் அடியாக மற்ற பந்துக்கள் –
கிருபை பொது -சாதாரணம் -அனைவருக்கும் -நிஷ் காரணம் நிருபாதிகம்–
வால்மீகி -திருட -ரிஷி -திருடிய பயனை பகிர்ந்து கொள்ள பத்னி இடம் கேட்கச் சொல்ல -அவள் மறுக்க உணர்ந்த ஐதிக்யம்
சம்சாரிகள் சோபாதிக பந்துக்களுடன் இருக்கக் கண்டவர் அவர்களைத் திருத்த –
கை விட்ட அனைவரையும் ரக்ஷித்து அருளுபவர் சகலவித பந்து -பிராப்தி -9-1-சொல்லி
அதுக்கு பலம் -கைங்கர்யம் -பந்து க்ருத்யம் -9-2-பண்டை நாளாலே -கொடுவினையேனும் பிடிக்க கூவுதல் வருதல் செய்யாயே
என் ஆர்த்தியும் உம் ஆர்த்தியும் தீர்க்காமல் இருக்கவோ -இவர் ஆர்த்தி மட்டும் ஆராவமுதே -5-8-
சஞ்சயனை பள்ளிக் கட்டுக்குள்ளே வரச் சொல்லி -அந்த அந்தரங்க கைங்கர்யம் -பிரார்த்தனை த்வரை-
செய்கிறேன் -வார்த்தை கேட்டதும் ஸமாஹிதரானார் -கௌசல்யை மங்களம் பெருமாளுக்கு -அனுக்ரஹம் செய்தால் போலே-
ஒரு வார்த்தை கேட்டது போலே துடித்து இருந்தாலும் –நாராயணன் அர்த்தம் கேட்டதும் -9-3-
வியாபக மந்த்ர ப்ரீதி–ஓங்கார அர்த்தம் -8-8-/ நமஸ் சப்தார்த்தம் -8-9-அநந்யார்ஹத்வம் /–நெடுமாற்கு அடிமை ஆர்த்தமான அர்த்தம் -8-10-
அவனே பந்து ஆபாச பந்துக்கள் அல்லர் -9-1-/ பந்து இடம் கைங்கர்யம் ஆய அர்த்தம் -9-2-/
சார தம காயத்ரியின் முன் ஓதிய நாராயணன் அர்த்தம் விருப்பம் –
திருமந்திர நாராயணனுக்கு மேலே ஸ்ரீ யபதி–அணியார் மலர் மங்கை தோள் கீழே வந்ததே -சேர்த்து வைக்க வேண்டுமே
முடியானே ஆசை திரும்ப -9-4-மையார் கரும் கண்ணி காண விரும்பும் கண்ணே -த்வய நாராயணன் -அர்த்தம் –
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டே -மானஸ அனுபவம் -பாஹ்ய சம்ச்லேஷம் கிட்டாமல்
இன்னுயிர்ச் சேவலும் -எம்பெருமானார் உகந்த -9-5-லௌகிக பதார்த்தம் பார்த்து ஆசுவாசப்படாமல் இவை சேர்ந்து ஆழ்வாரை நலிய
கூடி இருக்கும் பொழுது ஸந்தோஷம்-விஸ்லேஷத்தில் நலிவு -இவர்களை குற்றம் சொல்லக் கூடாதே
குண அனுபவம் செய்து தரிக்க
மகள் பதிகம் இது 9-5–
இருத்தும் வியந்து 8-7-உடன் –9 -6-உருகுமால் சங்கதி -போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில் கரை அழிக்கும்-
ஆத்ம தத்வம் -சரீரம் -மனஸ் அனைத்தும் உருக —
குணம் -என்றாலே சீலம் -ஸ்ரீ ராமாயணம் பார்த்தோம் -குணவான் —
சீல குணம் அனுபவித்து -அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானம் இது –
தன்னிலைமை இழந்து தூது -9-7-எம் கானல் -திரு மூழிக் களத்து –தாம் தம்மைக் கொண்டு அகல்வது தகுதியோ –
அழகை நினைவு படுத்தி -ஸுவ்ந்தர்யம் பற்றாசாக தூது–
இது நான்காம் தூது -கடைசி தூது -தூது விட்டு அவன் வருவதற்குள் நிலை -திரு நாவாய் -9-8-கிட்டே போவேனோ –
சீதா நிலைமை போலே -பெருமாள் கடலை தாண்டி வருவாரா பாரிப்பு போலே
அடியேன் அணுகப் பெறு நாள் என்றோ –
ஆளவந்தார் மிகவும் உகந்த பதிகம்–
மல்லிகை –மகள் பாசுரம் -9-9-நலிய -ப்ராப்ய வஸ்து அடைய ஆசைப்பட்டார் திரு நாவாய் –
கோபிகள் ஒரு இரவில் பட்ட வருத்தம் ஆளவந்தார் –நான்கு பதிகமாக பட்ட வருத்தம் — –
ராமானுஜர் ஒரு இரவு -இல்லை முற் கூறு இல்லாமல் பிற கூறு வரும் வரை பட்ட வியசனம்-
மங்கைமார் சாலக வாசல் பற்றி நிற்பார்கள் -பெரியாழ்வார் –
ஆயிரம் பிள்ளைகள் பின் வருவதால் பட்ட பாடு –மாலைப்பூசல் –
உமது வருத்தம் என்னது அன்றோ -நியத பிரகாரம் சொன்னோமே எட்டாம் பத்திலே -நாள் குறித்து -அருளிச் செய்ய ஸமாஹிதரானார்
மரண அவதி யாக அருளிச் செய்த பதிகம் -9-10-
நீல மேக பெருமாள் -மூலவர் -ஸுவ்ரி ராஜ பெருமாள் உத்சவர் -கலங்கா பெருநகரம் காட்டுவான் -பர உபதேசம் -9-1-போலே -9-10-
சரண முகுந்தத்வம் –குணம் காட்டி -ஆபத் ஸகத்வம்

ஒன்பதாம் பத்தால்-

இப்படி அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே –
இத்தலையில் ஒன்றும் அபேஷிக்காமல் -பிரளயாதி ஆபத்துகளிலே உதவி ரஷிக்கும் ஆபத் சகனான சர்வேஸ்வரன் –
கீழ் பிரகாசிப்பித்த ஆத்ம தர்சனதுக்கு பலம்-
ஸ்வரூப அனுரூபமான பிராப்த்யத்தை அனுபவிக்கை ஆகையாலே –
அவ் அனுபவத்தில் உண்டான த்வரையாலே -ஷண காலம் விளம்பம் பொறுக்க மாட்டாமல் –
ஆர்த்தரான தமக்கு -ஆரப்த சரீர அவசானத்திலே -பேறாகக் கடவது -என்று
நாள் அவதி இட்டு கொடுக்கப் பெற்றவர் –
கீழ் தாம் உபதேசித்துத் திருந்தினவர்கள் ஒழிய -அல்லாதாரையும் விட மாட்டாத
பரம கிருபையாலே -யதா அதிகாரம் சர்வ உபாயங்களையும் அருளிச் செய்கிறார் -என்கிறார்-

———————————————–

1-எண் திசையும் அகல் ஞாலம் எங்கும் அளிக்கின்ற
ஆலின் மேல் என்னும் படி நித்ய போக பாத
லீலா உபகரணத்தின் லயாதிகளை போக்கும் ஆபத் சகன்
2-ஆர் உயிர் என்னப் படுத்தின ஆத்ம தர்சன பல அனுபவ
பரம்பரையைக் கூவுதல் வருதல் என்று முடுக விட்டு
3-ஏகம் எண்ணிக் காணக் கருதி எழ நண்ணி நினைதொறும்
உருகி அலற்றி கவையில் மனம் இன்றி பதினாலாண்டு
பத்து மாசம் ஒரு பகல் பொறுத்தவர்கள் ஒரு மாச தின
சந்த்யையில் படுமது ஷணத்திலே யாக விரங்குகிற த்வரைக்கு ஈடாக
4-இனிப் பத்தில் ஓன்று தசம தசையிலே பேறு என்று
நாட் கடலாக தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவை
போலே நாள் இடப் பெற்றவர்
5-இம்மட உலகர் கண்ட தோடு பட்ட
அபாந்தவ அரஷக அபோக்ய அஸூக அனுபாய
பிரதி சம்பத்தியைக் காட்டி
6-மற்று ஓன்று கண்ணன் அல்லால் என்கிற
வைகல் வாழ்தலான சித்தோபாயம்
7-அதில் துர் பல புத்திகளுக்கு மாலை
நண்ணி காலை மாலை விண்டு தேனை
வாடா மலர் இட்டு அன்பராம் சாங்க பக்தி –
அதில் அசக்தருக்கு தாள் அடையும் பக்தி
8-அதில் அசக்தருக்கு உச்சாரண மாத்ரம்
சர்வ உபாய சூன்யருக்கு இப் பத்தும்
பாடி யிடும் தண்டன் என்று
கீதாச்சர்யனைப் போலே அதிகார
அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் ஒன்பதாம் பத்தில் ..

———————————————–

1-எண் திசையும் அகல் ஞாலம் எங்கும் அளிக்கின்ற ஆலின் மேல் என்னும் படி நித்ய போக பாத
லீலா உபகரணத்தின் லயாதிகளை போக்கும் ஆபத் சகன்-
(பாத லீலா உபகரணம் -நித்ய போகமான பரம பதத்தை நோக்காக கால் கூறாக இருக்கும் லீலா விபூதி -என்றவாறு)
அதாவது-
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்-9-1-1- -என்றும் ,
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்-அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான்-9-3-2- -என்றும்
அகலிடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன்-9-9-2- -என்றும்
ஆலின் மேலால் அமர்ந்தான்-9-10-1- -என்றும்

சகல லோகங்களையும் பிரளயம் கொள்ளாமல் ஏற்கவே -திரு வயிற்றில் வைத்து நோக்கி
அழிந்தவற்றை மீண்டும் உண்டாக்கியும் –
ஹிரண்யாஷனாலே தள்ளுண்டு அண்ட பித்தியிலே சேர்ந்த பூமியை ஒட்டு விடுவித்து எடுத்தும்-
மகா பலி பலாத்கரித்து ஆளுகிற தசையிலே -எல்லை நடந்து மீட்டும் –
இப்படி பிரளயாதி ஆபத்துகளில் உதவி ரஷித்தவன் என்னும் படி —
கீழ் சொன்ன சத்ய காமத்வத்தால் வந்த நைரபேஷ்யம் தோற்ற -இத் தலையில் அபேஷம் அற –
பிரதுபகாரம் நினையாமல் -வரையாதே -தன் பேறாக நோவு படும் அளவுகளிலே உதவி –

பாதோஸ்ய விஸ்வா பூதானி த்ரிபாதாஸ் யாம்ருதம் திவி -புருஷ ஸூக்தம்–என்கிறபடியே
அம்ருத சப்தத்தால் சொல்லும்படி -நித்ய போகமான-த்ரிபாத் விபூதியைப் பற்ற அல்பம்
ஆகையாலே பாத சப்தத்தால் சொல்ல பட்ட லீலா உபகரணமான இவ் விபூதியில்
லயாதிகளை போக்கும் ஆபத் சகனானவன்–

———————————————————-

2-ஆர் உயிர் என்னப் படுத்தின ஆத்ம தர்சன பல அனுபவ பரம்பரையை கூவுதல் வருதல் என்று முடுக விட்டு
அதாவது
இ6ருந்தும் வியந்தில் -8-7–தம்மோடு கலந்த கலவியை ஸ்மரிப்பிக்க
வித்தராய் –பேசுகிற அளவிலே –
அவன் தட்டு மாறி -நின்று பரிமாறின சீலத்தில் ஈடுபட்டு –
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -9-6-9–என்று என் ஆத்மா பட்டது –
நித்ய அனுபவம் பண்ணுகிற நித்ய சூரிகள் ஸ்வரூபம் தான் பட்டதோ என்னும் படியாக –
தாம் மேல் விழுந்து அனுபவித்த -ஆத்ம வைலஷண்யத்தை
கீழில் பத்தில் (கண்கள் சிவந்து-8-8-) யாதாவாகக் காட்டக் கண்டு -அதுக்கு பலம்-ஸ்வரூப அனுரூபமான
பிராப்யத்தை அனுபவிக்கை ஆகையாலே –

சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்-9-2-1–என்றும் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய்–9-2-2-என்றும் –
உன் தாமரை மங்கையும் நீயும் இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய் -9-2-3–என்றும் –
கனி வாய் சிவப்ப நீ காண வாராய் -9-2-4–என்றும் –
நின் பன்னிலா முத்தம் தவழ கதிர் முறுவல் செய்து நின் திரு கண் தாமரை தயங்க நின்று அருளாய் -9-2-5-என்றும்-

திருப் பவளத்தை திறந்து -ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் –
திரு கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும் –
திரு அடிகளை என் தலை மேல் வைத்து அருள வேண்டும் –
தேவரீரும் பிராட்டியும் சேர்ந்து கூட எழுந்து அருளி இருக்கிற இருப்பை எனக்கு காட்டி அருள வேண்டும் –
என் முன்னே நாலடி உலாவி அருள வேண்டும்
அனுகூல தர்சனத்திலே பிறக்கும் ஸ்மிதம் காண வேண்டும் -என்று இப்படி
அனுபவ பரம்பரையை ஆசைப் பட்டு -க்ரம பிராப்தி பற்றாமையாலே –

கூவுதல் வருதல் செய்யாய் -9-2-10–என்று7-
நிரதிசய போக்யமான உன் திரு அடிகளில் நான் வந்து அடிமை செய்யும் படி
என்னை அங்கே அழைத்தல்- நீ இங்கே வருதல்-செய்து அருள வேணும் என்று –
இப்படி முடுக விட்டு–

(தனது உயிரை ஆர் உயிர் என்று சொல்ல வைத்தார் -ஆத்ம ஸ்வரூபம் உள்ளபடி அறிந்து –
அதன் பலமாக கைங்கர்யம் விருத்திக்கு பிரார்த்திக்க வேண்டுமே )
————————————————-

3-ஏகம் எண்ணிக் காணக் கருதி எழ நண்ணி நினைதொறும் உருகி அலற்றி கவையில் மனம் இன்றி
அதாவது
(ஓராயிரமாய்-9-3- -திருவாய்மொழியில்)
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே –9-3-7-
என்று அவன் நித்ய வாசம் பண்ணுகிற பரமபதத்தைக் காண்கையிலே சர்வ காலமும் ஏக ரூபமாய் மனோரதித்து –

(மையார் கருங்கண்ணி-9-4- திருவாய்மொழியில்)காணக் கருதும் என் கண்ணே -9-4-1-– என்று
பெரிய பிராட்டியா1-ரோடும் -திவ்ய ஆயுதங்களோடும் -திவ்ய விக்ரகத்தோடும் –
கூடி இருக்கிறவனைக் காண வேண்டும் என்று ஆசை பட்டு –

(இன்னுயிர்ச் சேவலும்-9-5- திருவாய்மொழியில் )எழ நண்ணி நாமும் நம் வான நாடோடு ஒன்றினோம் -9-5-10–என்று
ஸ்மாரக பதார்த்த தர்சனத்தில் நோவு படுகையாலே -முடிந்து போகையிலே ஒருப் பட்டு –

(உருகுமால் நெஞ்1-சம்-9-6- திருவாய்மொழியில் )
திரு காட்கரை மருவிய மாயன் தன் மாய9-99-ம் நினை தொறு-நெஞ்சம் உருகுமால்-9-6-1- -என்று
அவன் அனுபவ தசையில் பரிமாறின சீலாதிகளை நினைக்கும் தோறும்
அனுபவ உபகரணமான நெஞ்சு சிதிலமாய் கரைந்து –

(எம் கானல் அகம் கழிவாய் திருவாய்மொழியில்-9-7- )தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே கேளீரே -9-7-2-என்று
தூத பிரேஷண முகத்தாலே – கிளி மொழியாள் அலற்றிய சொல் – 9-7-11-என்று
ஆற்றாமையாலே அக்ரமமாகக் கூப்பிட்டு –

(அறுக்கும் வினையாயின -9-8-திருவாய்மொழியில்)கவையில் மனமின்றி கண்ணீர்கள் கலுழ்வன் -9-8-3–என்று
இரு தலைத்த நெஞ்சு இன்றிக்கே -ஏகாக்ர சித்தராய்-
1-1-
பதினாலாண்டு பத்து மாசம் ஒரு பகல் பொறுத்தவர்கள்
ஒரு மாச தின சந்த்யையில் படுமது ஷணத்திலே யாக விரங்குகிற த்வரைக்கு ஈடாக
அதாவது-
(மல்லிகை கமழ் தென்றல்-9-9- திருவாய்மொழியில்)
பெருமாளைப் பிரிந்து பதினாலாண்டு பொறுத்து இருந்த ஸ்ரீ பரதாழ்வான் –
பூர்ணே சதுர்தச வர்ஷே பஞ்சம்யாம் லஷ்மணாக்ரஜ –யுத்த -127-1—என்று அவதி கழிந்த ஒரு நாளில் பட்ட கிலேசமும் —

பத்து மாசம் பொறுத்து இருந்த பிராட்டி -மாஸாத் ஊர்த்தவம் ந ஜீவிஷ்யே –ஸூந்தர –40 -10–
(இன்னம் ஈண்டொரு திங்கள் இருப்பல் யான் நின்னை நோக்கிப் பகர்ந்து நீதியோய்-
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அனந்த மன்னன் ஆணை இதனை மனக்கொள் நீ –ஸ்ரீ கம்பநாட்டாழ்வார் )-என்று
திருவடி இடம் சொல்லி விட்ட அநந்தரம் -அவ்வொரு மாசத்தில் பட்ட கிலேசமும் –

கிருஷ்ணன் பசு மேய்க்கப் போக ஒரு பகல் எல்லாம் பொறுத்து இருந்த ஸ்ரீ கோபிமார்-
அவன் பசுக்களின் பின் குழையிலே வாரா நிற்க – முற் கொழுந்தில் காணாமையால்
ஒரு சந்த்யையில் பட்ட கி2-லேசம் எல்லாம் –

ஒரு ஷணத்திலே யாம் படி –
அவனை விட்டு அகல்வதற்க்கே இரங்கி-9-9-11-என்று ஈடு படுகிற த்வரைக்கு ஈடாக-

——————————————————-

4-இனிப் பத்தில் ஓன்று தசம தசையிலே பேறு என்று
அதாவது-
நயன பிரீதி பிரதமம் சிந்தா போகஸ் ததோனு சங்கல்ப
நித்ராஸ் சேதஸ் தநுதா விஷய விரக்திஸ் த்ரபாநாச
உந்மாதோ மூர்ச்சா ம்ருதி ரித்யேதா ச்மரதசா தசைவ ஸ்யு-என்றும்-( த்ராபா -வெட்கம்)

பி9-ரதமஸ் தவபிலாஷ ஸ்யாத் த்விதீயம் சிந்தனம் பவேத்
அநு ஸ்ம்ருதிஸ் த்ருதீயந்து சதுர்த்தம் குண கீர்த்தனம்
உத்யோக பஞ்சமம் ப்ரோக்த பிரலாப ஷஷ்ட உச்யதே
உ-ன்மாதஸ் சப்தமோ ஞேய அஷ்டமோ வ்யாதிருச்யதே
நவமே ஜடாத சைவ தசமம் மரணம் ததா -என்றும்-

காட்சி முதலாச் சாக்காடு ஈறாக் காட்டிய பத்தும் கை வரும் எனினே
மெய்யுறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே –நம்பியகப்பொருள் -என்றும்

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல் நோக்குவம் எல்லாம்
அவையே போறல் மறத்தல் மயக்கம் சாக்காடு என்றச் சிறப்புடை மரபினவை கழவென மொழிப–தொல்காப்பியம்-என்றும்
சொல்லுகிறபடி -9-1

காமுகராய் இருப்பார்க்கு தசம அவஸ்தையிலே மரணமாம் போலே –
நம் பக்கல் பரபக்தி உக்தரான உமக்கும் நம்மை பெறாவிடில் முடியும் படியான பரம பக்தி தசை –
பத்தாம் பத்திலே -பிறக்கத் தேடுகிறது –
ஆகையால் கீழ் சொன்ன விளம்பம் இல்லை –இனி உள்ளது பத்தில் ஓன்று தசம தசையான
மரண அவஸ்9-தையிலே பேறு என்று-

நாட் கடலாக தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவை போலே நாள் இடப் பெற்றவர்
அதாவது
நாட் கடலை கழிமின்-1-6-7- –என்கிறபடியே -விரஹ வ்யசனத்தாலே ஒருநாள் கடல் போலே துச்தரமாம் படி –
பூர்ணே சதுர்தசே வர்ஷே -யுத்த -127-1–என்று தம்பியான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நெடுக நாள் இட்டு
கொடுத்தால் போல் ஆகாமே –

நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு -நாச்சியார்-6-2-– என்று
இன்று எனில் வெள்ளக் கேடாம்-சில நாள் கழித்து எனில் வறட்கேடாம் என்று நினைத்து –
நாளை என்று நாச்சியாருக்கு நாள் இட்டால் போலே –

மரணமானால் -9-10-5–என்று ஆரப்த சரீர அவசானத்திலே -பேறாக -அவன் தானே
நாள் இட்டு கொடுக்கப் பெற்று ஹ்ருஷ்டர் ஆனவர் –

——————————————

5-இம் மட உலகர் கண்ட தோடு பட்ட அபாந்தவ அரஷக அபோக்ய அஸூக அனுபாய பிரதி சம்பத்தியைக் காட்டி
அதாவது-
சரம உபாய உபேய பர்யந்தமாக -தாம் அருளிச் செய்த ஹித வசனம் கேட்டு –(சரம உபேயம் -அர்ச்சாவதாரம்)
திருந்தினவர்களை ஒழிய -அல்லாதாரையும் விட மாட்டாத தம்முடைய கிருபையால் –
இம் மட உலகீர் -9-2-7–என்று சம்சாரத்தில் அறிவு கேடர் ஆனவர்களுக்கு –
கொண்ட பெண்டிர் –9-1-1-என்று தொடங்கி -சந்நிதியிலே ஸ்நேகிக்கும் அது ஒழிய காணாத போது
ஸ்நேகம் ஓன்று இன்றிக்கே இருக்கிற பார்யா புத்ராதிகள் பந்துக்கள் அன்று —
பிரளய ஆபத் சகனானவனே பரம பந்து என்றும் —

துணையும் சார்வும் –9-1-2-
பொருள் கை உண்டாய் –9-1-3-
அரணமாவர்- 9-1-4-என்ற பாட்டுகளாலே –
அவனை ஒழிந்தார் தாங்கள் உபகாரரைப் போலே -பிரயோஜனம் உள்ள போது பந்துக்களாய் கொண்டாடி –
ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேஷிப்பார்கள்–ஆகையால் அவர்கள் ரஷகர் அல்லர் –
தன்னுடைய ரஷணத்தில் அதி சங்கை பண்ணினாரையும் விஸ்வசிப்பித்து ரஷிக்கும் அவனே–அவதார முகத்தால்
ஸூலபனாய் -ரஷண அனுரூபமான குணங்களை உடையவனாய் – -அவனை ஒழிய வேறு ரஷகன் இல்லை –

சதிரம் என்று தம்மைத் தாமே சம்மதித்து-9-1-5 –என்று தொடங்கி -தங்களுக்கு போக்யைகளாக சம்பாதித்த
ஸ்திரீகள் ஆபத்து வந்த வாறே உபேஷிப்பர்கள் —
ஏக பிரகாரமாக சந்நிக்தனாய் இருப்பவன் அவனே- ஆன பின்பு -அவர்கள் போக்யர் அல்லர் —
அவனே நிரதிசய போக்யன் என்றும் –

இல்லை கண்டீர் இன்பம்-9-1-6-என்று தொடங்கி
துக்கங்களிலே சில வற்றை ஸூகம் என்று பிரமிக்கும் இத்தனை போக்கி அவனை ஒழிய
ஸூக ரூபமாய் இருப்பது ஓன்று இல்லை என்றும் –

யாதும் இல்லை மிக்கு அதனில்-9-1-9-என்று தொடங்கி
அவனை ஒழிய வேறு ஒன்றை ரஷகம் என்று பற்றினவர்கள் பண்டை நிலையும் கெட்டு
அனர்த்தப் பட்டு போவர்கள் –ஆன பின்பு அவனை ஒழிய உபாயம் இல்லை என்றும் –

இப்படி-அவனை ஒழிந்தாருடைய அபந்துவத்தையும் -அரஷகத்வத்தையும் –அபோக்யத்வத்தையும் —
அஸூகத்வத்தையும் –அனுபாயத்வத்தையும் –

அதுக்கு பிரதி கோடியான -அவனுடைய –
பரம பந்துத்வத்தையும் –நிருபாதிக ரஷகத்வத்தையும் –நிரதிசய போக்யதையும் –
ஸூக ரூபத்தையும் –நிரபேஷ உபாயத்வத்தையும் –தர்சிப்பித்து-
(விசேஷணங்கள் அவனுக்கு ஒவ் ஒன்றிலும் காட்டி அருளி )
இம் மட உலகருடைய அபாந்தவாதிகள் பிரதி சம்பந்தியை அவர்களுக்குக் காட்டி என்று
வாக்ய யோஜன க்ரமம்–

—————————————————-

6-மற்று ஓன்று கண்ணன் அல்லால் என்கிற வைகல் வாழ்தலான சித்தோபாயம்
அதாவது-
மற்று ஓன்று இல்லை சுருங்க சொன்னோம்- மா நிலத்து எவ் உயிர்க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள்-9-1-7-என்று இதுக்கு மேல் சொல்லல் ஆவது ஓன்று இல்லை –
இது தன்னை ஸூக்ரகமாக சொன்னோம் –மகா பிருத்வியில் சகல ஆத்மாக்களுக்கும் இது தனக்கு பரக்க
ஆயாசிக்க வேண்டா – சிந்தா மாத்ரமே அமையும் –கேளி கோள் -என்கையாலே –
தனக்கு மேல் ஓன்று இன்றியே இருப்பதாய்
ஸங்க்ரஹேன உபதேசிக்கலாய் –
சர்வாதிகாரமாய் –
வரண ஸூகரமுமாய் -இருக்குமதாய் –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்–9-1-10–என்று
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று
கிருஷ்ணனை ஒழிய வேறு உபாயம் இல்லை என்கையால்-
சித்தமாய்
பரம சேதனமாய்
சர்வ சக்தியாய்
நிர் பயமாய்
ப்ரப்தமாய்
சகாயாந்தர நிர பேஷமாய்
இருக்குமதாகவும் சொல்லப் படுமதாய்
வட மதுரை பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல்–9-1-7-என்கிற
யாவதாத்மபாவியான -குண அனுபவத்துக்கு உடலான -சித்தோ உபாயத்தை உபதேசித்தும் –

————————————————

7-அதில் துர் பல புத்திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை
வாடா மலர் இட்டு அன்பராம் சாங்க பக்தி –
அதாவது-
சக்ருதேவ ஹி சாஸ்தார்த்த க்ருதோயம் தார என்னரம்
நராணாம் புத்தி தெவ்பல்யா துபாயாந்தர மிஷ்யதே -என்கிறபடியே
அந்த சித்தோ உபாயத்தில் மகா விசுவாசம் பிறக்கைக்கு அடியான
பாக்கியம் இல்லாமையாலே -இதர உபாய பரித்யாக பூர்வகமாக
அதில் இழிகையில் விசுவாசம் இல்லாமை யாகிற புத்தி துர் பல்யம் உடையவர்களுக்கு –

(குண அனுபவம் சிந்திப்பது -அதுவே சித்த உபாயம் -என்ற நினைவே போதும் -முதல் நிலை
சித்த உபாயம் சுலபமானாலும் மஹா விசுவாசம் வேண்டுமே -எனவே இத்தை உபதேசித்து
அதில் துர்லபரானவர்களுக்கு அங்கங்கள் உடன் கூடிய உபாசனை பக்தி யோகம் -)

மாலை நண்ணி தொழுது எழுமினோ –காலை மாலை கமல மலர் இட்டு நீர் –9-10-1-
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் –9-10-3-
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் –9-10-4-
தனதன்பர்க்கு -9-10-5–என்று
பக்தி யுக்தராய் கொண்டு சர்வ காலமும் புஷ்ப்யாதி உபகரணங்களாலே -அவனை சமாராதனம் பண்ணி
அவன் பக்கலிலே பக்தி நிஷ்டர் ஆகுங்கோள் -என்று
அங்க சகிதையான பக்தியை உபதேசித்தும்

அதில் அசக்தருக்கு தாள் அடையும் பக்தி
அதில் துஷ்கரத்வம் -விளம்ப பயம் -ஆகிய வற்றால் அனுஷ்டிக சக்தர் அல்லாதவருக்கு –
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் -9-10-5–என்று
நிவ்ருத்தி சாத்தியம் ஆகையாலே
ஸூகரமாய்
சர்வாதிகாரமுமாய்
சரீர அவசானத்திலே பல பிரதமுமான பிரபத்தியை வெளி இட்டும்–

——————————————————–

8-அதில் அசக்தருக்கு உச்சாரண மாத்ரம்-
அதாவது
உபாய பல்குத்வ பல கௌரவ விரோதி பூய ஸ்தவங்களாகிற சங்காத்ரயத்தாலே
அதில் வ்யவசாயதுக்கு உடலான சக்தி இல்லாதார்க்கு –
திரு கண்ண புரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே-9-10-10- -என்று
வசனத்தை பற்றாசாகப் பிடித்து அவன் திருத்திக் கொள்ளும் படியான
உச்சாரண மாத்ரத்தை வெளி இட்டும்

சர்வ உபாய சூன்யருக்கு இப் பத்தும் பாடி யிடும் தண்டன் என்று
அதாவது
உச்சாரணம் தனக்கும் தாமாக ஒரு பாசுரம் இட்டு சொல்ல ஷமர் அன்றிக்கே –
கீழ் சொன்ன உபாயங்கள் எல்லா வற்றிலும் -அயோக்யராய் இருப்பார்க்கு –
இப்பத்தும் பாடி யாடி பணிமின் அவன் தாள்களையே -9-10-11-என்று இத் திரு வாய் மொழியை
பிரீதி பிரேரராய் கொண்டு பாடி அவன் திருவடிகளில் விழுங்கோள் என்று

ஸ்ரீ கீதாச்சர்யனைப் போலே அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் ஒன்பதாம் பத்தில் ..
அதாவது
ஸ்ரீ கீதோ உபநிஷதாச்சர்யன் தன்னுடைய பரம கிருபையால்-
நெறி எல்லாம் எடுத்து உரைத்த –4-8-6-என்கிறபடியே சேதனருடைய ருசி அனுகுணமான உபாயங்கள்
எல்லாவற்றையும் உபதேசித்தாப் போலே
இவரும்
பிராப்தி அணித்தவாறே சம்சாரிகள் ஒருவரும் இழக்க ஒண்ணாது என்கிற கிருபையால் எல்லாம் எடுத்து உரைத்து –
அவ்வவருடைய அதிகார அனுகுணமாக உபாயங்கள் எல்லாம் உபதேசித்து அருளுகிறார்
ஒன்பதாம் பத்தில் என்கை-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –226–

September 29, 2018

க்ருதஞ்ஞதா பல ப்ரதி க்ருதமானத்தை யுணர்ந்து -அங்கும் இங்கும் இல்லை என்று ஆறி இருக்காமல் –
செய் நன்றி பண்ண உந்தி-பிரதி க்ருதமானம் -ஆத்மாவை உணர்ந்து -தோள்களை ஆரத்தழுவி –
நியத பிரகாரம் -சரீரம் -நாமே நீர் -தன்மையை அவன் காட்ட உணர்ந்து -பிரகாரம் -அபிருத்தக் சித்தம் –
சீதா பிராட்டியை ஜனகர் சமர்ப்பித்தது போலே அஹந்தா அவளே – -அனைத்தும் அவனது சரீரம் என்று உணர்ந்து –
சமர்ப்பிக்க ஒன்றும் இல்லை என்று ஸமாஹிதரானார் –

ப்ராப்ய ப்ராபக ஆபாசகங்கள் ஒழிந்து முதல் படி
ப்ராப்யம் -திருவேங்கடம் நடுவில்
ப்ராப்யம் அவதி -திருவாறன் விளை -கீழே பார்த்தோம்
ப்ராப்யம் ஏக பரர் ஆக்குகிறார்
பயிலும் சேஷிகள் -நெடுமாற்கு அடிமை-அவர்களே போக்யம் -ததீய சேஷத்வம் -பாகவதர்கள் சேஷிகள் –
அவனுக்கே சேஷபூதன் -8-8-/-8–9-உகாரம் நமஸ் அர்த்தம்
ஆந்திர அபிப்ராயம் –பாகவத சேஷத்வம் பாரதந்தர்யம் -8-10-கொடு மா வினையேன்
அடியார் உடன் கூடும் இது அல்லாமல் பழுதே பலகாலம் போயின என்று அழுகிறார்
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
செல்வச் சிறுமீர்காள் -முதலிலே ஆண்டாள்

சத்ய காமத்வம்-எட்டாம் பத்தில்

பதிகங்கள் சங்கதி –
திருவாறன் விளை–ஆனந்தமாக பாட -தன்னைப் பார்த்து -பாஹ்ய சம்ச்லேஷம் இல்லாமல் வியசனப்பட்டார் –
ஆஸ்ரித பாரதந்த்ரம் குணத்தில் சங்கை -அசேஷ பிரகாரத்வம் -ஸ்வரூபத்திலும் சங்கை–இரண்டும் தஞ்சமாக நினைத்து இருந்தாரே –
அதி சங்கை பண்ணக் கூடாது ஆழ்வீர்-உபகார பரம்பரைகளை காட்ட – ப்ராபக பிரதான பதிகம் –8-1-ஸமாஹிதரானார் –
தனது பாக்ய குறைவு –சீதாப் பிராட்டி போலே -முகம் காட்ட வில்லை –
தமக்கு அந்ய ருசி தவிர்ந்ததை அறிவித்து -அத்தனையும் விட்டேன் -8-2-ப்ராப்ய விரோதிகளும் ப்ராபக விரோதி களும் இல்லை
-8-2-4-பெருங்குளத்துக்கு ஒரு பாசுரம் -குடபால் நின்ற மாயக் கூத்தன்–மங்களா சாசனம் –
கோல நீல நல் நெடும் குன்றம் வருவது ஓப்பான் -8-2-10–பாசுரம் வந்ததும்
பரிவர் இல்லையே கலங்கி -8-3-இதில் வருவார் செல்வார் திரு வாழ் மார்பன் –
அமர்ந்த திருக்கோலம் -ஒரே திவ்ய தேசம் மலையாள திவ்ய தேசங்களில் இது –
நீர் இருக்க சர்வரும் இருந்தது போலே என்று காட்டி அருள –
சுக்ரீவன் கலங்க வீர ஸுர்ய பராக்கிரமம் காட்டியது போலே -மஹா மதிகள் அச்சம் கெட -திருச் சிற்றாறு பதிகம் -8-4-
திகழ என் சிந்தையுள் இருந்தான் -பாசுரம் -அணைக்க முடியாமல் -மாயக்கூத்தா -ஒரு நாள் காண வாராய் -வாசத் தடாகம் போல் -8-5-
இது வரை ஆழ்வார் விடாய்–
மேலே-8-6- பெருமாளுக்கு ஆழ்வார் மேல் உள்ள விடாய் -இப்படி ஆழ்வாரை உருவாக்க எத்தனை ஜென்மங்கள் –
தண்டகாரண்ய ரிஷிகளைக் கண்டு வெட்கி பெருமாள் –
வந்து திருக் கடித்தானாம் நின்றார் -தங்குவீடாக –நாளை வதுவை மனம் -பரதனை ஆசுவாசப்படுத்தி பெருமாள் –
பாண்டவ தூதன் -விதுரர் போல்வார் ஆசுவாசப்படுத்த -குசஸ்தலம் தங்கி -வந்தது போலே
எல்லியும் காலையும் –8-6-திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் –
பேற்றுக்கு கிருஷி பண்ணினது இது வரை -பக்தி உழவன்
கிருஷி பலித்தது வேலி போட்டு பாதுகாக்க -8-7–இருத்தும் வியந்து –மூன்று தத்துக்கு பிழைத்து வந்த குழந்தையை
தாய் பார்த்துக் கொண்டே இருப்பது போலே வியந்து இருத்தும் –
கண்டு கொண்டு எனது ஏழை நெஞ்சை ஆளும் –
பிராதி கூல்யம் போக்கி –அனைத்தையும் அவனே பண்ணி -ஆழ்வார் கிடைப்பாரா தவித்தார் –
சுக்ரீவன் நாதம் இச்சதி -விபீஷணன் கிடைப்பானா -போலே –
கண்களால் பருகுமா போலே பார்த்தார் –
மெய்யே ஆஸ்ரித பாரதந்தர்யம் உடையவர் என்று தெளிந்தார் இத்தால்
இவர் அகலப் பார்க்கும் பிரகிருதி -ஆத்மாவின் வை லக்ஷண்யம் புரிய வைக்க -8-8–கண்கள் சிவந்து –
கரிய வாய் வாயும் சிவந்து -ஆழ்வாரைப் பெற்ற பின்பே சோகம் தீர்ந்து -தலை அசைய குண்டலங்கள் ஒளி வீச
அடியேன் உள்ளான் -இயத்தா ராஹித்யம்-படியே இது என்று குறைக்கலாம் படி அல்லன்-பராத்பரன் –
உணர்வில் உள்ளே இருத்தினேன் -அதுவும் அவனது இன்னருளே- பரமாத்மா ஸ்வரூபம் உணர்ந்தீரே ஆழ்வீர்
நியத பிரகாரம்–ஸ்ரீ கௌஸ்துபம் போலே அன்றோ பகவத் சரீரம் -நீர் பிரிந்து போக முடியாதே –
யானும் தானாய் ஒழிந்தானே–
இவ்வளவு நெருக்கம் இருக்க -சேஷ ரசம் அறிந்து -அடியேன் உள்ளான் -அடிமை தன்னை அனுபவிக்க
அநந்யார்ஹ சேஷத்வம் -பர்யந்தம் –வளர -தோழி பதிகம் -மண விலக்கு -குட்ட நாட்டுத் திருப்புலியூர் –இவர் நேர் பட்டாள்-
உகாரம் நமஸ் சப்தார்த்தம் -அநந்யார்ஹத்வம் சம்பந்தம் -அவனுக்கே -நான் எனக்கு உரியன் அல்லேன் -பாரதந்தர்யம் –
அதன் யாதாத்ம்யம் -ஆழ்ந்த பொருள் -ததீய சேஷத்வம் பர்யந்தம் -நெடுமாற்கு அடிமை -8-10-
பிரியா அடிமை -சயமே அடிமை தலை நின்றார் -கோதிலா அடிமை –
அம்மணி ஆழ்வான் கோசல சாம்ராஜ்யம் வந்தவருக்கு இந்த பதிகம் கால ஷேபம் பட்டர் சாதித்த ஐதிக்யம்

எட்டாம் பத்தால்-

கீழ் சொன்ன சர்வ சக்தி யோகத்தாலே நித்யமாக கல்பிதமான –
போக்ய – போக உபகரண -போக ஸ்தானங்களை உடையவன் ஆகையாலே –
சத்ய காமனான சர்வேஸ்வரன் -கீழ்
தமக்கு உண்டான வாசிகமான அடிமையையும் விஸ்வமரித்து -தன் அனுபவ அலாபத்தாலே
கலங்கி -தன்னுடைய குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ணி –
சம்சார தோஷ அனுசந் தானத்தாலே -அஞ்சின இவரைத் தரிப்பிக்கைக்காக –
பூர்வோக்த உபகாரத்தை ஸ்மரிப்பிக்க –
அத்தாலே க்ருதஜ்ஞராய் -அதுக்கு பலமாக –
இவர் ஆத்ம சமர்ப்பணம் பண்ண –
(பேர் உதவிக் கைம்மாறா தோள்களை ஆரத்தழுவி என்னுயிரை அற விலை செய்தனன் சோதீ – 8-1-10)
அத்தாலே தான் பெறாப் பேறு பெற்றானாய்-
இவருக்கு உண்டான ஆத்ம குணங்களாலே அதி ப்ரீதனாய் –
இவர் திரு உள்ளத்திலே இருந்து நிரதிசயமாக அனுபவிப்பித்து –( 8-6-8-7-)இனி
அயோக்யர் என்று அகலாதபடி ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தைப் பிரகாசிப்பிக்க –(8-8)
அதனுடைய யாதாத்ம்யத்தை அனுசந்தித்தவர்
கீழ் தம்முடைய பிராப்ய பிராபகங்களை கேட்டு உகந்தவர்கள் –
பிராப்யம் ஒன்றும் -பிராபகம் ஒன்றுமாய் -இரு கரையர் ஆகாதபடி –
பிராப்யமாக சொன்ன விஷயம் ஒன்றிலுமே அவர்களை தத் பரர் ஆக்குகிறார் என்கிறார் ..

(உப பத்தேச ச பொருந்துகிறபடியால் ப்ராபகமான ப்ரஹ்மமே ப்ராப்யம் -வேத வியாசர் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்
இங்கு பிராப் யமான அர்ச்சா திவ்ய தேசமே பிராபகம் –
பாகவதர்களே ப்ராபகம்–அவதியையும் தாண்டி ஒன்றாக -திவ்ய தேசமே இருக்குமானால்
பாகவதர்கள் இருக்கச் சொல்ல வேணுமோ – கிம் புன நியாயம் )

——————————————-

1-தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு
என்னும்படி சக்தியாலே நித்யமாக கல்பித்த
பத்னி பரிஜனாதிகளை உடைய சத்ய காமன்
கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும்
கலக்கமும் சங்கையும் அச்சமும் தீரத்
2-தலைச் சிறப்ப தந்தவதில் க்ருதஜ்ஞதா பல
பிரத்யு உபகாரமாக வேந்தர் தலைவன்
கன்யகா தானம் போலே ஆரத் தழுவி
அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே
அதீவ விளங்கிப் பணைத்து
3-ஜன்ம பாசம் விட்டு ஆத்வாரம் ஆளும் ஆளார்
என்று பரிந்து அனுரூபனோடே அமர்ந்து பிரிவில்
க்ருபண தசையாகத் துவரும் சீதா குணங்களாலே
ப்ரீதி வர்த்தித்து
4-தித்திக்க உள்ளே உறைந்தது கண்டு கொண்டு இருந்து
அமானுஷ போகம் ஆக்கினவன்
5-மூன்று தத்துக்குப் பிழைத்த அருவினை நோய்
மறுவலிடாமல் சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
6-தேஹாதிகளில் பரமாய் ,நின்று நினைக்கில் லஷ்மீ துல்யமாய் –
அவர்க்கே குடிகளாம் பர தந்திர ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்
7-ஸ்வ சாதன சாத்யஸ்தர் இருகரையர் ஆகாமல்
மண்ணவரும் வானவரும் நண்ணும் அத்தையே
குறிக் கொண்மின் உள்ளத்து என்று
பிராப்ய ஏக பரர் ஆக்குகிறார்
எட்டாம் பத்தில் ..

(சத்யகாமன் -ஆத்ம லாபத்தாலே அதீவ விளங்கி -பணைத்து -ப்ரீதி வர்த்தித்து -உறைந்து -கண்டு கொண்டு இருந்து –
அமானுஷ போகம் ஆக்கினான் -அங்கனம் ஆக்கினவனாகி நோய் மறுவலிடாமல் சிறியேன் என்றதன் பெருமையைக் காட்டினேன் –
காட்டக் கண்டு அனுசந்தித்த ஆழ்வார் ஸ்வ சாதன சாத்யஸ்தர் -இருகரையராகாமல் -அவர்களை ப்ராப்ய ஏக பரராக்குகிறார் -என்றபடி-

வேந்தர் தலைவன் -ஜனக மகாராஜன் / ஜென்ம பாசம் விட்டு-முதல் – சீதா குணங்களால் -வரை
ப்ரீதி வர்த்திக்க காரணங்கள் -சீதா பிராட்டி -ஆழ்வார் சாம்யம் சொல்லிற்று இத்தால் )

————————————–

1-தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு
என்னும்படி சக்தியாலே நித்யமாக கல்பித்த
பத்னி பரிஜனாதிகளை உடைய சத்ய காமன்-
அதாவது-
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார் மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி-8-1-1- -என்றும் –
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே யாம்–8-3-6-என்றும் –
நேர்பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன்–8-9-11-என்றும் –
நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த-8-10-11 -என்றும்
லஷ்மீ பிரப்ருதி திவ்ய மகிஷிகளுக்கு வல்லபனாய் -நித்ய ஸூரிகள் ஏவிற்றுச் செய்ய –
அவர்கள் சேஷ வ்ருத்திக்கும் -ஜ்ஞானாதிகளுக்கும் தானே விஷயமாய் –
தன்னோடு பொருந்தி பூர்ணமாய் கட்டளைப் பட்டு இருக்கிற லோக
த்ரயத்துக்கும் நிர்வாஹனாய் இருக்கும் என்னும் படி —
கீழ் சொன்ன சக்தி தன்னாலே நித்யமாக கல்பிக்க பட்ட -பத்னி பரிஜன ஸ்தான –
போக்ய போக உபகரணங்களை உடையவன் ஆகையாலே
சத்ய காமனாய் இருக்கிறவன்-

கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும் கலக்கமும் சங்கையும் அச்சமும் தீரத்
அதாவது
உம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ள வைத்தோம் -என்று
தான் இவரைக் கொண்டு வாசிகமான அடிமையும் விஸ்மரிக்கும் படி ஆக்கின –
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி -8-1-2–என்று
தன்னைக் கண்டால் கண்டு அனுபவிக்கப் பெறாமையால் வந்த கலக்கமும் –
அவ்வளவு இன்றிக்கே –
உமர் உகந்து உகந்து -8-1-4–என்று தொடங்கி –அறிவொன்றும் சங்கிப்பன்—8-1-4-என்று
தன்னுடைய ஆஸ்ரித பாரதந்த்ரமாகிய குணத்திலும் –
இறந்ததும் நீயே -8-1-7–என்று தொடங்கி –அறிவொன்றும் சங்கிப்பன்–8-1-7-என்று
தன்னுடைய சர்வ பிரகாரித்வம் ஆகிய ஸ்வரூபத்திலும் -பண்ணிய சங்கையும் –
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல்-8-1-9–என்று
சம்சார தோஷ அனுசந்தானத்தால் வந்த அச்சமும் நிவ்ருதம் ஆகும் படியாக
( கலக்கம் -குண சங்கை -ஸ்வரூப சங்கை -அச்சம் -நான்கும் தீரும் படி )

————————————-

2-தலை சிறப்ப தந்தவதில் க்ருதஜ்ஞதா பல பிரத்யு உபகாரமாக-
அதாவது-
தாள்களை எனக்கே தலை தலை சிறப்பத் தந்த-8-1-10- -என்னும்படி-
மலரடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க பல அடியார் முன் அருளிய –7-10-5-
என்று பராசராதிகள் -முதல் ஆழ்வார்கள்- உண்டாய் இருக்க -தம்மைக் கொண்டு வாசிகமான அடிமையைக் கொண்ட
பூர்வோ உபகாரத்தை ஸ்மரிப்பிக்க –
(மலர் அடிப் போதுகளை பிரார்த்திக்க தாள்களை எனக்கே தலை சிறப்பத் தந்தானே )
அப்படி மிக சிறக்கும்படி உபகரித்ததில் தமக்கு உண்டான
க்ருதஜ்ஞ்தைக்கு பலம் சத்ருச பிரதுபகாரம் ஆக-

வேந்தர் தலைவன் கன்யகா தானம் போலே ஆரத் தழுவி அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே-
அதாவது
உதவிக் கைம்மாறு என் ஆர் உயிர் என்ன -உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -7-9-10–என்று
கீழ் பிரதுபகாரமாக ஆத்மாவை சமர்ப்பிக்கத் தேடி அதின் பகவதீயத் அனுசந்தானத்தாலே
நிவ்ருத்தர் ஆனபடியும் அறியாதபடி -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தால் கலங்கி –

வேந்தர் தலைவன் சனகராசன்-என்கிறபடி
ஷத்ரிய அக்ரேசனராய் -ஜ்ஞானாதிகனான ஜனக ராஜன் -மகோஸ்வரமான தனுர் பங்கம் பண்ணின
பெருமாள் ஆண் பிள்ளைத் தனைத்தை கண்ட ஹர்ஷத்தால் கலங்கி –
விஷ்ணோஸ் ஸ்ரீரீர அனபாயிநீ – ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-8-17–என்கிறபடியே -தத் அப்ருதக் சித்தையாய் –
ராகவத்வே பவத் சீதா – ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-9-144–என்று தத் அவதார அனுகூலமாக அவதரித்த பிராட்டியை –

இயம் சீதா மம ஸூதா சஹ தர்ம சரீதவ -பிரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணிம்
க்ருஹ்னீஷ்வ பாணிநா-பால–73-26 -என்று சமர்ப்பித்தாப் போலே-( மமகாரம் விட்டவன் மமகாரம் )
பேர் உதவிக் கைம்மாறத் தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன்-8-1-10–என்று
அமூர்தமாய் இருக்க செய்தே -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தாலே –

தாளும் தோளுமாய் பணைத்துத் தோற்ற -பாவன பிரகர்ஷத்தாலே அணைத்துக் கொண்டு அத்ர ஆதரத்தோடு
அனந்யார்ஹமாக சமர்ப்பித்த ஆத்ம வஸ்துவைப் பெருகையாலே
அதீவ விளங்கிப் பணைத்து
அதீவ ராமச் சுசுபே –பால-77-30-என்றும்
அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய சா ஜனகத்மஜா -ஆரண்ய-37-18–என்றும்
அவளைப் பெற்று விளங்கினாப் போலே –
சோதி-8-1-10- -என்று
இவர் பேசும் படி இவர் தம்மது அல்லாத ஒன்றைத் தம்மதாகப் பிரமித்து கொடுத்தாப் போலே –
அவனும் தன்னது அல்லாத ஒன்றைப் பெற்றாப் போலே பிரமித்து அத்யுஜ்வல்லனாய் –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்-8-1-10- -என்னும்படி
சதசாகமாகப் பணைத்து-

————————————

3-ஜன்ம பாசம் விட்டு ஆத்வாரம் ஆளும் ஆளார் என்று பரிந்து அனுரூபனோடே அமர்ந்து பிரிவில்
க்ருபண தசையாகத் துவரும் சீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து-
அதாவது –
ஸ்ரீ ஜனக மகா ராஜன் திருமகள் பெருமாளைக் கைப் பிடித்த பின்பு அவர் அளவில்
பிரேமத்தால் ஜன்ம பூமியான ஸ்ரீ மிதிலையை நினையாதாப் போலே –இவரும் –
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு -8-2-11-என்று
திருவடிகளைக் கிட்டுகையில் சங்கத்தாலே -புறம்புண்டான வழிய சங்கங்களை நிச் சேஷமாக விட்டு –

ஆத்வாரம் அனுவவ்ராஜ மங்களான்யா பிதத்யுஷீ -அயோத்யா-16-21-(ஆத்வாரம் -வாசல் அளவும் )-என்று
அவள் பெருமாள் உடைய வடிவழகைக் கண்டு மங்களா சாசனம் பண்ணினாப் போலே -இவரும் –
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்-8-3-3-என்று
தமக்கு பரிகைக்கு ஒரு ஆளும் ஆளுகிறிலீர்–மலை சுமந்தார் போலே திரு ஆழியையும்
திரு பாஞ்ச சந்யத்தையும் தரிப்பார் தாமாய் இரா நின்றது என்று -அவன் சௌ குமார்யத்தைக் கண்டு பரிந்து –

அவள் பெருமாளுடைய சௌர்யாதிகளை நினைத்து பயம் கெட்டு -துல்ய சீல-ஸூந்தர-16-5 -இத்யாதிப் படியே
தனக்கு அனுரூபரான இவரோடு பொருந்து அனுபவித்தாப் போலே -இவரும் –
வார் கடா வருவி–8-4-1-என்று தொடங்கி -அவன் சௌர்யாதிகளை அனுசந்தித்து -நிர்பரராய் –
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான் முகனை யமர்ந்தேனே-8-4-10 -என்று
அவனோடு பொருந்தி அனுபவித்து –

விஸ்லேஷ தசையிலே -அவள் –
ஹி மகத நலிநீவ நஷ்ட சோபா வ்யசன பரம்பர யாதி பீட்ய மானா
சஹ சர ரஹீதேவ சக்ர வாகி ஜனக சுதா க்ருபாணாம் தசாம் பிரபன்னா -ஸூந்தர-16-30-என்று
நிர்க்க்ருணரும் இரங்க வேண்டும்படியான தசையைப் பிராப்தையானாப் போலே -இவரும் –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -8-5-2–என்று
அவனைக் காண ஆசைப்பட்டு -திக்குகள் தோறும் பார்ப்பது -கூப்பிடுவது ஆகையாலே –
கண்ணும் வாயும் நீர் பசை அறும்படி ஆகையால் –

ஜனக குல சுந்தரியின் குணங்கள் எல்லாம் இவர் பக்கலிலே காண்கையாலே –
ப்ரியாது சீதா ராமஸ்ய தாரா பித்ரு க்ருதா இதி குணாத் ரூப குணச் சாபி ப்ரீதிர்ப் பூயோப் ப்யவர்த்தத–பால -77-25-என்று
குண தர்சனத்தாலே அவள் பக்கல் ப்ரீதி வர்த்தித்தால் போலே
இவர் அளவில் ப்ரீதி வர்தித்தது —

————————————————–

4-தித்திக்க உள்ளே உறைந்தது-
அதாவது –
மனஸ்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித -பால -77-25 -என்று
எப்பொழுதும் அவள் நெஞ்சுக்கு இனிதாம்படி -இருந்தாப் போலே –
உள்ளும் தோறும் தித்திப்பான்–8-6-3–என்றும் ,
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் -8-6-2–என்று
அனுசந்திக்கும் தோறும் நிரதிசய போக்யனாய்க் கொண்டு
இவர் திரு உள்ளத்தில் நித்ய வாசம் பண்ணி –

கண்டு கொண்டு இருந்து அமானுஷ போகம் ஆக்கினவன்
அதாவது –
இருந்தான் கண்டு கொண்டு -8-7-2-என்று
தரித்திரன் தன லாபம் உண்டானால் பார்த்துக் கொண்டே இருக்குமா போலே
இவரைப் பெற்ற ப்ரீதியாலே -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருந்து –
சமா த்வாதச தத்ராஹம் ராகவச்ய நிவேசன
புஞ்சானா அமானுஷான் போகான் சர்வ காம சம்ருத்திநீ –ஸூ ந்தர-33-17-
(திரு அயோத்தியில் -12-வர்ஷங்கள் பெருமாளுடன் அமானுஷ போகம் அனுபவித்து அவாப்த ஸமஸ்த காமாளக இருந்தேன் )-என்று
விஸ்லேஷ தசையிலும் வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிக்கலாம் படி -அவளை –
மானுஷம் அன்றிக்கே -திவ்யமாய் இருந்துள்ள போகங்களைப் புஜிப்பித்தாப் போலே -இவரையும் –
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேன்-8-7-2–என்றும் –
செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் அன்றி நான் அறியேன் மற்று அருளே –8-7-7-
என்று வித்தராய்ப் பேசும்படி -அப்ராக்ருத போகங்களைப் புஜிப்பித்தவன்-

——————————————

5-மூன்று தத்துக்கு பிழைத்த -அருவினை நோய் மறுவலிடாமல் – சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
அதாவது –
அருவினை நோய் மறுவலிடாமல்-
மருள் தானீதோ—8-7-3–என்றும்
பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் -8-7-6–என்றும்
அருள் தான் இனி யான் அறியேன் -8-7-3-என்றும்-
உகப்பு செல்லா நிற்கச் செய்தே –

மூன்று தத்துக்கு பிழைத்த — சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
அதாவது
சிறியேனுடை சிந்தையுள் நின்று ஒழிந்தார் -என்று
தம் சிறுமையை அனுசந்தித்தவாறே –
1-வள வேழ் உலகிலே -1-5-
களவேழ் வெண்ணெய் தொட உண்ட கள்வா என்பேன் -அரு வினையேன் -என்றும் –
வணங்கினால் உன் பெருமை மாசுணாதோ-என்றும் –
அடியேன் காண்பான் அலற்றுவன் இதினால் மிக்கு ஓர் அயர்ப்பு உண்டே -என்றும்-

2-பொரு மா நீள் படையிலே –1-10-
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் -என்றும் –

3-அம் தாமத்து அன்பிலே –2-5-
அல்லாவி உள் கலந்த -என்றும் –
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை -என்றும் –

இப்படி மூன்று இடத்தில் வந்து பரிஹ்ருதம் ஆகையாலே -மூன்று தத்துக்கு இவர் பிழைத்த
அயோக்யதா அனுசந்தான வியாதி -மறுவலிட்டு இன்னும் இவர் அகலில் செய்வது என் என்று அஞ்சி –
இனி இவர் தாம் அகலுகிறது -வந்தேறியான அசித் சம்பந்தத்தை இட்டு -இது நமக்கு அனர்ஹம் என்று இறே –
இதனிடைய யதாவஸ்தித வேஷத்தைக் கண்டால் அகல ஒண்ணாதே என்று பார்த்து –

அது மறுவல் இடாதபடியாக –சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட-
அதாவது –
நமக்கு கௌஸ்துபம் போலவும்
ஸ்ரீ ஸ்தனம் போலவும்
தேஜஸ் கரமுமாய் போக்யமுமாய் இருக்கும் –
அப்ருக்து ஸித்த விசேஷணமாய்க் காணும் உம்முடைய ஆத்ம ஸ்வரூபம் இருப்பது என்று –
சிறிதாக இவர் அனுசந்தித்த ஆத்ம வஸ்துவின் வைலஷண்யத்தை –
யானும் தானாய் ஒழிந்தான்-8-8-4 -என்றும் –
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாக தித்தித்து -8-8-4–என்று தனக்கு அப்ருதக் ஸித்த பிரகாரமாகவும்
நிரதிசய போக்யமுமாகவும் அனுசந்திக்கும் படி காட்டிக் கொடுக்க

(பிரகலாதன் -திரௌபதி -கஜேந்திரன்–மூன்று தப்புதல் பகவானுக்கு
விந்த்யாவாடம் -ஸ்ரீ ரெங்க விஷ விபத்து- கிருமி கண்ட சோழ ஆபத்து -மூன்றும் எம்பெருமானுக்கு )

——————————————————-

6-தேஹாதிகளில் பரமாய் ,நின்று நினைக்கில் ஸ்ரீ மஹா லஷ்மீ துல்யமாய் –
அவர்க்கே குடிகளாம் பர தந்திர ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்
அதாவது –
சென்று சென்று பரம் பரமாய் -8-8-5–என்கிறபடியே
தேக இந்திரியங்களில் வ்யாவிருத்தமாய் -ஞான ஆனந்த மயமாய் –

நினையும் நீர்மை யதன்றி வட்கிது நின்று நினைக்கப் புக்கால் -8-9-5-என்றும் –
அருமாயன் பேச்சின்றி பேச்சு இலள் -8-9-1–என்றும் –
அன்று மற்றோர் உபாயம் என் -8-9-10–என்றும் –
யதா நிரூபணம் பண்ணில் பிராட்டியோபாதி -அனந்யார்ஹமாய் –

அவ்வளவும் அன்றிக்கே –
மாகாயம் பூக் கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்கமிலா அடியார் அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட் பாடே —ஊழி தொரு ஊழி வாய்க்க தமியேற்கு –8-10-10-
என்று விலஷண விக்ரக யுக்தனான சர்வேஸ்வரனை விஸ்லேஷிக்க ஷமர் அல்லாத பாகவதர்களுடைய
சேஷத்வத்தின் எல்லையில் நிற்கிறவர்கள் எனக்கு சேஷிகள்-
இரு கரையர் -அன்றிக்கே அவர்களுக்கே ச பரிகரமாக அனந்யார்ஹனாய்ச் செல்லும்
நல்ல கோட் பாடு கால தத்துவமுள்ள அனையும் எனக்கு சித்திக்க வேண்டும் என்று –
இப்படி ததீய சேஷத்வ காஷ்டை அளவும் செல்ல நிற்கும் படி பரதந்த்ரமான
ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்-

(தேகாதி இந்திரியங்கள் -காட்டில் விலக்ஷணமான ஞான ஆனந்த மயம்-8-8 -திருவாய் மொழி அர்த்தம்
அதுக்கும் மேலே அநந்யார்ஹ சேஷத்வம் ஸ்வரூபம்
ஸ்ரீ மஹா லஷ்மீ துல்யம் –நினையும் நீர்மை யது அன்று –
இந்த அளவு என்ற தன்மை நினைக்கவும் முடியாதே -8-9-திருவாய் மொழி அர்த்தம்
அதுக்கும் மேலே -அத்யந்த பாரதந்தர்யம் –
அவருக்கே குடிகளாம்–ததீய சேஷத்வ பரதந்த்ர ஸ்வரூபம் -8-10-நெடுமாற்கு அடிமை திருவாய் மொழி அர்த்தம்
இனிப் பிறவி யான் வேண்டேன் என்று உபக்ரமித்தவர் ஊழி ஊழி தோறும் பிறந்து
அவர்களுக்கே குடிகளாக செல்ல பிரார்த்தனை -இதுவே நல்ல கோட்ப்பாடு )

—————————————–

7-ஸ்வ சாதன சாத்யஸ்தர் இரு கரையர் ஆகாமல்
மண்ணவரும் வானவரும் நண்ணும் அத்தையே
குறிக் கொண்மின் உள்ளத்து என்று
பிராப்யை ஏக பரர் ஆக்குகிறார்
எட்டாம் பத்தில்
அதாவது
தம்முடைய சாதன சாத்தியங்களே தங்களுக்கு என்று இருக்கிறவர்கள்-
தத் விஷயம் பிராபகமும் ததீய விஷயம் பிராப்யமுமாய் -இரு கரையர் -ஆகாதபடி-
(அவன் உபாயம் -திவ்ய தேசம் உபேயம் -என்று உபாய உபேயங்களை வெவ்வேறாகக் கொள்ளாமல் -என்றபடி-
வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் -ஸ்ரீ வசன பூஷணம் -411-)
திருக் கடித் தானத்தை ஏத்த நில்லா குறிக் கொள் மினிடரே -8-6-6–என்றும்-
கோவிந்தன் மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை மண்ணவர் தாம் தொழ –
வானவர் தாம் வந்து நண்ணு திருக் கடித் தான நகரே இடர் கெட உள்ளத்து கொள்மின்-8-6-7–என்றும்-
திருக் கடித் தானத்தை ஸ்தோத்ரம் பண்ணின அளவில் -துக்கங்கள் எல்லாம் நிலை குலைந்து போம் –
இத்தை குறிக் கொள்ளுங்கோள் –சர்வேஸ்வரனுடைய சர்வ சுலபமான திரு அடிகளை
உபய விபூதியில் உள்ளார் எல்லாரும் அனுபவிக்கும் படியான திருக் கடித் தான நகரை
உங்கள் சமஸ்த துக்கங்களும் போம்படி நெஞ்சில் கொண்டு அனுசந்தியுங்கோள் என்று
கீழில் பத்தில்- பிராப்யமாக உபதேசித்த அர்ச்சாவதார பூமியே -துக்க நிவர்தகம் என்கையாலே –
பிராப்யமான விஷயமே பிராபகம் என்று தர்சிப்பித்து -பிராப்ய விஷயம் ஒன்றிலுமே –
தத் பரர் ஆக்குகிறார் எட்டாம் பத்தில் என்கை —

(நமஸ் சப்தம் -அவனுக்கே -ஆர்த்த -அடியாருக்கு அடியார் –திவ்ய தேசமே ப்ராப்யம் –
அடியாருக்கு அடியார் சரம காஷ்டை-இதில் அந்தர் கதம்-
கிம் புந நியாயம் -திவ்ய தேசமே என்பதால் அடியார் அடியார் எல்லை வரை வருமே
உபாதானமே நிமித்தம்-ஏக மேவ அத்விதீயம் சாந்தோக்யம் -உபபத்தேச்ச–ஸ்ரீ ப்ரஹ்ம சூத்ரம்
பிராப்யமும் பிராபகமும் ஒன்றே -இங்கு
ததீய விஷயம் -திவ்ய தேசம் -8-6-திருக்கடித்தானம் -ஏத்த இடர் நில்லா என்பதால் ப்ராபகம்-மண்ணவரும் விண்ணவரும் அடையும் இடம் –
திருவாறன் விளை கீழே -ஆகவே திவ்ய தேசங்கள் எல்லாம் என்றதாயிற்று –
அதன் காஷ்டை-எல்லை நிலம் -8-10- )

( அகாராரத்தம் -8-8-பிரணவம்
நமஸ் சப்தம் -8-9-
நமஸ் அர்த்தம் -8-10-
நாராயண ஆய அர்த்தம் -9-1-/9-2-/9-3-இப்படி ஆறுக்கும் சங்கதி ஈட்டில் உண்டே )

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –225–

September 29, 2018

திருவரங்க பதிகம் -பத்து குணங்களும் இதில் அமைத்து பாடியுள்ள –
பரத்வம் -காரணத்வம் -வியாபகத்வம் -நியந்த்ருத்வம் -காருணிகத்தவம் -சரண்யத்வம்
சக்தித்வம்-சத்யகாமத்வம்-ஆபத் ஸகத்வம்-ஆர்த்தி ஹரத்வம்
வடிவுடை வானோர் தலைவன் -பரத்வம்
முன் செய்து இவ்வுலகம் படைத்தாய் -காரணத்வம்
கட்கிலி–வியாபகத்வம்
கால சக்கரத்தாய் –7-நியந்த்ருத்வம்
காருணிகத்தவம்
பற்றிலார் பற்ற நின்றான் சரண்யத்வம்
கடல் கடைந்தாய் -சக்தித்வம்
என் திருமகள் சேர் மார்பனே என்னும் சத்யகாமத்வம்
இவ்வுலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் -ஆபத் ஸகத்வம்
முகில் வண்ண அடியை அருள் சூடி உயந்த ஆர்த்தி ஹரத்வம் –

தத்வ வேதனம் மறப்பற்று
முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து
மோக்ஷபல விருத்தி செய்ய அர்த்தித்து
புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்து
விரக்தி பல ராகம் கழிய மிக்கு
பிரேம பல உபாயத்தே புகுந்து–
த்வயார்த்தம் இவற்றால் சாதித்து
சாதன பல உபகார கைம்மாறு இன்றி -ஏழாம் பத்து
சாதனம் -பகவானைச் சொல்லி–சாதனம் பலமாகக் கொடுத்து அருளிய உபகாரம்
திருவாறன் விளையில்–பாடுவித்துக் கொண்ட உபகாரம் -மிதுனத்தில் கேட்டு அருளி –
இதுக்கு கைம்மாறு -பிரதியுபகாரம் இல்லாமல் –

திருவரங்கம் -திருவாறன் விளை–இரண்டு திவ்ய தேச பதிகங்கள்
மூன்று நாயகி பாவம் -தாய் ஓன்று -மகள் இரண்டு பதிகம்
சரணாகதி -அமர்ந்து புகுந்தேனே என்றவர் -புகுரக்கண்டிலர்–ப்ரஹ்மாஸ்திரமே வாய் மாய்ந்து போக –
ததாமி புத்தி யோகம் சொல்லாமல் ஷிபாமி -சம்சாரத்தில் தள்ளி வைக்கக் கண்டவர் –
இந்திரியங்கள் அவன் மேலே ஈடு பட்டு -முடியானே -பாடியவர் -லோகத்தார் இந்திரிய வருத்தம் கண்டவர்
தமக்கும் வருமே என்று பயப்பட்டு –
நமஸ் சப்தார்த்தம்-கிராமபிராப்தி பொறுக்காமல் தளர்ந்து
இட்டகால் இட்ட கையாகக் கிடக்க–தாயார் -திரு மணத் தூண்களின் நடுவில் பொகட்டு
பேற்றுக்கு அவன் நினைவு -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்
கலியனும் திருவிடவெந்தை இதே போலே –
தெய்வ சங்கல்பத்தால் -பற்றிலார் பற்ற நின்றவன் கேட்டு கால்நடையாக தென் திருப்பேரை –
வேத ஒலி பிள்ளைகள் விளையாட்டு ஒலி -நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் –
நிகரில் முகில் வண்ணன் -மகர நெடும் குழைக்காதர்
நாண் எனக்கு இல்லை தோழிமார்–
விஜய பரம்பரைகளை காட்டி தரிப்பிக்க-ஆழி எழ பதிகம்-7-4-
ராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் -ஆஸ்ரித அர்த்தம் -கற்பார் பதிகம் -7-5-பத்தும் ராமாவதாரம் கூரத்தாழ்வான் நிர்வாஹம்-
பழைய ஏக்கம் -நீராய் கூப்பாடு -6-9-நினைவுக்கு வர -பா மாரு மூவுலகும் படைத்த -7-6-பதிகம் –
உன்னை என்று கொல் சேர்வதுவே -கல்யாண குணங்களுக்கு தோற்று அனுபவிக்க கூப்பாடு இதில் –
குணங்கள் திரு மேனியில் கூட்டி விட -ரூபத்தில் -உருவ வெளிப்பாடு -அப்ரீதி அதிகம் -7-7-
5-5-எங்கனேயோ நம்பி உரு வெளிப்பாடு-ப்ரீதி அப்ரீதி சமம் அங்கு
இணைக் கூற்றங்கள்-அப்ரீதி தோற்ற அருளிச் செய்கிறார் இதில் –
இவரை சமாதானப்படுத்த -ஜெகதாகாரம் காட்டி போக்குக் காட்ட–மாயா வாமனன் -7-8- ப்ரீதி உடன்-மது சூதா நீ அருளாய் –
எதற்கு என்னை வைத்து
காரணம் –ஆ முதல்வன் -வாய் முதல் அப்பன் யானாய் தன்னைத் தான் பாடி -இதுக்காக வைத்தேன் -8-9-என்ன பாக்யம்
ஆளவந்தார் ராமானுஜரை கடாக்ஷித்து இந்த பாசுரத்தால் ஆ முதல்வன் இவன் என்று -தேவாதிராஜன் இடம் சரணாகதி –
யத் பதாம்போஜம் -தனியன்
பாடுவித்த உபகாரம் -கை தொழக் கூடும் கொலோ –மிதுன கேள்வி -வலம் செய்து கூடும் கொலோ –
ஸ்ரீ வைகுந்தமும் வேண்டாம் -ஸமாஹிதராக தலைக்கட்டுகிறார்
ப்ராப்ய ப்ராபக ஆபாசங்களைச் சொல்லி -திருவேங்கடமுடையான் -ப்ராபகம்-ப்ராப்யம் -நடு நிலை –
அவதி -இங்கு திருவாறன் விளை –எல்லையாக -இங்கு -நடுவில் திருவரங்கம் இருந்தும் –

ஏழாம் பத்தால்

உபாய க்ருத்யதுக்கு அபேஷிதமான விசித்ர சக்தி யோகத்தாலே –
யதாஜ்ஞானம் பிறந்தவர்களுக்கு கொடுக்கக் கடவதான பரம பதத்தைத் தானே உபாயமாக கொடுக்கும் இடத்தில் –
திர்யக் ஸ்தாவரங்களுக்கும் சத்ருவுக்கும் உள் படக் கொடுக்க வல்ல சர்வேஸ்வரன் திரு அடிகளை
( புற்பா முதலா புல் எறும்பாதி ஓன்று இன்றியே நற் பாலுக்கு உய்த்தனன் -7-5-1–என்றும்
சேட் பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட் பால் அடைந்த-7-5-3 )
ஷண காலமும் பிரிய ஷமரும் இன்றிக்கே –( திருவடி பிரஸ்தாபம் பாசுரம் தோறும் உண்டே எப்போது கூடுவேனோ )
சாங்க பிரபதனம் பண்ணின -( த்யஜிக்க வேண்டியவை விட்டு பண்ணிய பிரபத்தி) -தம்மை-விஷயங்களிலே மூட்டி –
தன் பக்கலிலே சேராதபடி -அகற்றுமவையான -இந்திரியங்கள் நடையாடுகிற சம்சாரத்தில் -வைக்கக் கண்டு –
விஷண்ணராய்க் கூப்பிட்டு -(-6-10-இருந்து -என் உன் பாத பங்கயம் நண்ணிலா வகை 7-1-சங்கதி இதுவே )
தம் தசை தாம் பேசமாட்டாதபடி -தளர்ந்து-( 7-2-)
பிறரால்- மீட்க ஒண்ணாதபடி -அபருஹ் சித்தராய் —( 7-3-)
அவன் தன் விஜயங்களைக் காட்டி இவரைத் தரிப்பிக்க -( 7-4-)
அந்த தரிப்பும் சம்சாரிகள் இழவைப் பார்த்து நினைத்து சுவறி ( 7-5-)
பழைய வார்த்தியே தலை எடுத்து -( 7-6-)
அனுபாவ்ய விஷயம் -ஸ்ம்ருதி விஷயமாய் ஒரு முகம் செய்து -நலிய நோவு பட்டு-( 7-7-)
இப்படி எடுப்பும் சாய்ப்புமாக கிலேசம் செல்லச் செய்தே-

உபாய பூதனான உனக்கு ஞான சக்திகளிலே குறைவற்று இருக்க –
எனக்கு ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களிலும் ஆர்த்தியிலும் குறை வற்று இருக்க –
என்னை சம்சாரத்திலே வைக்கைக்கு அடி என் என்று கேட்க –( 7-8-)

அவனும்
நமக்கும் நம் உடையாருக்கும் இனிதாக திருவாய் மொழி பாடுவிக்க வைத்தோம் காணும்
என்று அருளிச் செய்ய –
வ்யாசாதிகள் முதல் ஆழ்வார்கள் கவி பாட உண்டாய் இருக்க நம்மைக் கொண்டு கவி
பாடுவித்துக் கொள்வதே என்று அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து –
அதுக்கு பிரதி உபகாரம் தேக் காணாமையாலே –

இனி இது ஒழிய செய்யலாவது ஓன்று இல்லை-என்று
திரு வாறன் விளையிலே-பெரிய பிராட்டியாரோடு எழுந்து அருளி இருக்கிற பேர் ஓலக்கத்திலே –
திரு வாய் மொழி கேட்பித்து -அடிமை செய்வதாக மனோரதித்து –
அங்கே தம் திரு உள்ளம் பிரவணம் ஆகையாலே -பரம பதத்தில் இருக்கும் இருப்பையும் உபேஷிக்கும் படி ஆனவர் –

கீழ் தம்முடைய உபாய நிஷ்டை வெளி இடும்படி புகுர நின்றவர்களுக்கு –
திரு வாறன் விளையே -பிராப்யம் –அங்கு எழுந்து அருளி நிற்கிறவனே உபாயம் -என்று
தாம் அறுதி இட்ட பிராப்ய பிராபகங்களின் முடிவை தம் முகப்பாலே வெளி இடுகிறார் என்கிறார் —

——————————————

1-எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன்
மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே
2-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
பிராபகத்வம் புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்க
வல்ல சர்வ சக்தி பாதமகலகில்லா தம்மை
3-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு நலிவான்
சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டுக்
4-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில்
திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கித்
5-தேற்ற ஒண்ணாதபடி தோற்று ஒன்றி நிற்கப்
பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி
6-பழைய தனிமைக் கூப்பீடு தலை எடுத்து -சூழவும்
பகை முகம் செய்ய -எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க
உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த
வைசித்திரியைக் கேட்க
7-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை
அருளிச் செய்ய -என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர்
எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே
8-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த
நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக
கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர்
9-சரமோ உபாய பரர் ஆனார்க்கு நீள் நகரமது -துணித்தான்
சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று
பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் —

——————————————-

1-எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன்
மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே-
அதாவது-
எண்ணிலா பெரு மாயனே-7-1-1–என்று
எண்ணிறந்த ஆச்சர்ய குணங்களை உடையவனே என்றும் –

குணங்கள் கொண்ட மூர்த்தி யோர் மூவராய் படைத்து அளித்து கெடுக்கும் –7-1-11-
என்று சத்வாதி குண அனுகுணமான மூர்த்திகளைக் கொண்டு சிருஷ்டியாதிகளை பண்ணுபவன் என்றும் –

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் -7-2-7–என்று
இடமறிந்து சுக துக்கங்களை கல்பித்தவன் என்றும்-

ஊழி தோர் ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும் -7-3-11-என்று
கல்பம் தோறும் ரூப நாம சேஷ்டிதங்களை வேறாக உடையனாய்க் கொண்டு ஜகத்தை ரஷிக்கும் என்றும் –

மாய வாமனனே -7-8-1–என்று ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் என்றும் –
உள்ளப் பல் யோகு செய்து -7-8-4–என்று திரு உள்ளத்தில் பல ரஷண உபாய சிந்தைகளும் பண்ணி நிற்றி என்றும்
இப்படிப் பல விதமாகச் சொல்லப் பட்ட உபாய க்ருத்யத்துக்கு
அபேஷிதமான ஆச்சர்ய சக்தி யோகத்தாலே

———————————————–

2-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் பிராபகத்வம்
புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்க வல்ல சர்வ சக்தி-
அதாவது-
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும் – 7-5-11-என்றும்
ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் 7-6-10–என்றும்
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானே என்று அத்யவசித்து –
பின்னை நாட்டார்கள் செயல்களைக் கண்டு ஆதல்- யுத்தி ஆபாசம் கொண்டு ஆதல் –பிற்காலியாதே நின்று –
அவர்களுக்கு நிரதிசய ஆனந்த யுக்தமாய் -ஒருவராலும் ஸ்வ யத்னத்தால் ப்ராபிக்க ஒண்ணாது இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்தை
தன் அருளால் கொடுக்கிற தன் உபாயத்தை –

புற்பா முதலா புல் எறும்பாதி ஓன்று இன்றியே நற் பாலுக்கு உய்த்தனன் -7-5-1–என்றும்
நாட்டை அளித்து உய்யச் செய்து-7-5-2- -என்றும் –
சேட் பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட் பால் அடைந்த-7-5-3- -என்றும்
ஜ்ஞானம் லேசமில்லாத திர்யக் ஸ்தாவரங்களும்
பிராதி கூல்யத்தில் முதிர நின்ற சத்ருவுக்குக்குமாம் படி பண்ண வல்ல சர்வ சக்தி யானவன் –
(நற்பாலுக்கு உய்த்தனன் -7-5-1-ஸ்ரீ வைகுந்தம் அர்த்தம் இங்கு –
சூரணை-105-கோசல கோகுல சராசரங்கள்-செய்யும் குணம் ஓன்று இன்றியே அற்புதம் என்னகே கண்டோம் –
அதில் நற்பாலுக்கு -பால் -நல்ல குணம் -நல்ல பண்பு -ஸ்வ பாவம் -ஈட்டில்– பன்னீராயிரப்படி தான் ஸ்ரீ வைகுண்டம் )

பாதமகலகில்லா தம்மை-
அதாவது-
அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையும்-6-10-9- -என்று
தன் திருவடிகளை ஷண காலமும் அகல சக்தர் அன்றியே –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்—6-10-10-என்று சரணம் புக்க தம்மை-

——————————————-

3-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு-
அதாவது-
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆமவை -5-7-8–என்று
தன் திருவடிகளைக் கிட்டாதபடி அகற்றவற்றான இந்திரியங்களின் நடுவே –
இவ் உடம்பிலே இருக்கும் படி வைக்க கண்டு-

நலிவான் சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டு
அதாவது-
நலிவான் இன்னும் எண்ணுகின்றாய் -7-1-1–என்றும்
அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய்-7-1-10- -என்றும் –
விண்ணுளார் பெருமானேயோ -7-1-5–என்றும் –
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தீயோ-7-1-10- -என்று
விளம்ப ஹேது இல்லாத உபாயத்தை பரிக்ரஹித்தால் அது பல பிரதமாம் படியும்
கிடந்து கூப்பிடும் இத்தனை ஆகையாலே -கீழ் தாம் பரிக்ரஹித்த உபாயத்தின் பலமாய் வந்ததாய் –
கலங்கா பெருநகரம் கலங்கி -அவனுக்கும் அங்கு குடி இருப்பது அரிதாய் வந்து
விழ வேண்டும் படியான சம்சாரத்தில் -அடிக் கொதிப்பால் வந்த பெரிய
ஆக்ரோசத்தோடே கூடிக் கொண்டு தம் தலையால் வந்தததையும் அவன் தலையில்
ஏறிடும் படியான பிராப்தியை உணர்ந்தவர் ஆகையாலே –இந்திரியங்களை இட்டு
நலிவிக்கிறாய்-நீ என்று அவன் மேல் பழி இட்டு –

(பிரஜை தெருவிலே இடறித் தாய் முதுகிலே குத்துமா போலே –
நிருபாதிக பந்துவாய் சக்தனாய் இருக்கிறவன் விலக்காது ஒழிந்தால் அப்படிச் சொல்லலாம் அன்றோ-ஸ்ரீ வசன பூஷணம்-370-
தரு துயரம் -குலசேகர பெருமாள் -நீ கொடுக்கும் துயரம்– தடாயேல் -போக்கா விட்டால் –ப்ராப்த அபிராப்த விவேகம்
அறிந்து அருளிச் செய்வது போலே –
நானும் பரதந்த்ரன் கர்மமும் பரதந்த்ரன்
நீயோ பலப்ரதன் ஸ்வதந்த்ரன்-
துக்கத்தை விளைவிப்பான் ஒருவன் போக்குவான் மற்று ஒருவனோ -கிடாம்பி ஆச்சான் –
மம மாயா துரத்தயா மாம் ஏவ -வெளிக்கொண்டு வருபவனும் அவனே -அந்தரங்கர் பிராப்தி அறிந்து சொல்வார்களே –
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகிறேன் -கலியன் -பந்த அனுசந்தானம் -நினைத்து- )

————————————————

4-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கி-
(திரு விருத்தத்தில்–62-
(-இதுவே கங்குலும் பகலுமாக விரிந்தது-என்று கொள்ள முடியாது -முகில் வண்ணன் என்ற பதம் உள்ளதே –
8-1-ஸங்க்ரஹ பாசுரம்-சயன திருக்கோலம் இதில் தான் -7-2-கூட இல்லையே )-
இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல் -ஈங்கு இவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே -பாசுரப்படி இங்கு முறை கெட்ட -என்று அருளிச் செய்கிறார் )
அதாவது-
கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை-
அதாவது–
இப்படி கூப்பிட தானும் ஷமர் அன்றிக்கே -அவசந்னராய் கொண்டு -ஒரு பிராட்டி தசையை அடைந்து –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்–7-2-1-
இட்டகால் இட்ட கைகளாய் இருக்கும் –7-2-4-
சிந்திக்கும் திசைக்கும் -7-2-5–இத்யாதிப் படியே
திவாராத்ரா விபாகமற -அழுவது -தொழுவது -மோகிப்பது -பிரலாபிப்பது —
அடைவு கெடப் பேசுவது -நெடு மூச்சு எறிவது -அது தானும் மாட்டாது ஒழிவது –
ஸ்தப்தையாய் இருப்பது -இப்படி ஆர்த்தி விஞ்சி செல்லுகையாலே –
ஆசா சிந்தா ஸ்ம்ருதி கீர்த்திர் விலாபோன்மாத விப்ரமா
மோஹோ வியாதிர் ம்ருதிச்சேதி விகாரா காம ஜாதச -என்றார் போலே
(காமம் வளர இந்த பத்து விகாரங்களை வருமே)
அவஸ்தைகளுக்கு அடைவு பிடிக்க ஒண்ணாத படி நடக்கிற ஆர்த்தியை-
பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிற கோவில் திரு வாசலிலே
பெண் பிள்ளையைப் பொகட்டு திரு தாயார் கூச்சு முறை தவிர்ந்து -தானே இவள் தசையை அவருக்குச் சொல்லி –

திரு வரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாய் –7-2-1-
என் செய்திட்டாய் –7-2-3-
என் சிந்தித்தாய் –7-2-4
என் செய்கேன் திரு மகட்கு -7-2-8–என்று
அவர் தம்மையே கேட்கும் படி அத்யாவசாதம் பிறந்து-

அடைவற்ற அரதியை -என்ற பாடமான போது –
கங்குலும் பகலும் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே திவாராத்ரா விபாகமற
அழுவது-தொழுவது -இத்யாதிகளாலே -ஆசா சிந்தாதிகளில் போலே
அவஸ்தைகளுக்கு ஓர் அடைவு பிடிக்க ஒண்ணாதபடி நடக்கிற அரதியை
என்று யோஜிக்கவுமாம்–

———————————————

5-தேற்ற ஒண்ணாதபடி தோற்று-ஒன்றி நிற்க பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி-
அதாவது-
தேற்ற ஒண்ணாதபடி தோற்று-
அதாவது-
அன்னையர்காள் என்னை தேற்ற வேண்டா -7-3-9–என்றும் –
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்-7-3-5–என்று
பார்ஸ்வச்தராலும் தேற்றி தரிப்பிக்க ஒண்ணாதபடி அபஹ்ருத சித்தராய் கொண்டு
பாரதந்த்ர்யமும் இழந்து –(வெள்ளைச் சுரி சங்கு சாரம்)-

ஒன்றி நிற்க பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி-
அதாவது-
இப்படி விரஹ வ்யதையாலே மிகவும் தளர்ந்து இருக்கிற இவரைத் தரிப்பைக்கைகாக தன்
விஜய பரம்பரையைக் காட்டிக் கொடுக்க கண்டு ப்ரீதராய் –( 7-4-)
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடு ஒன்றி நின்ற சடகோபன்-7-4-11- -என்று
தன் விஜயத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களோடு பொருந்தி இருக்கும்
படி பண்ணின பல தானமானது –
(ஆழி எழ சங்கும் எழ சாரம்-சரித்திரங்களை அனுசந்தித்து பலம் பெற பல தானம்-பாகவதர்கள் உடன் ஒன்றி நிற்கப் பண்ணின பல தானம் )

கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ -7-5-1-என்று
அவதார பிரயுக்த சௌலப்யத்தை உடையவனாய் -ப்ரிய பரனுமாய் -ஹித பரனுமாய் –
தான் அங்கீகரிக்க நினைத்தாரை -நிர்ஹேதுகமாக -மோஷ பர்யந்தமாக -நடத்தும் அவனுமாகிய -இவனை ஒழிய –
மற்றும் ஒரு விஷயத்தை கற்பரோ -இப்படி சுலபமான இவ் விஷயத்தை
சம்சாரிகள் இழப்பதே என்று அவர்கள் இழவை அனுசந்தித்து -அதிலே சுவறி-( கற்பார் ராம பிரானை அல்லால் சாரம்)

———————————————-

6-பழைய தனிமை கூப்பீடு தலை எடுத்து –
அதாவது
பாமரு மூ உலகும் படைத்த பத்மநாபாவோ–7-6-1-என்று தொடங்கி
தனியேன் தனி யாளாவோ -7-6-1-– என்று
ஒரு துணை அன்றிக்கே இருந்து -அவனுடைய ஜகத் காரணத்வாதிகளைச் சொல்லிக்
கூப்பிடும் படி -முன்புத்தை – உண்ணிலாவியில் ( 7-1-)கூப்பீடே மீளவும் தலை எடுத்து-

சூழவும் பகை முகம் செய்ய-
அதாவது
சூழவும் தாமரை நாண் மலர்போல் வந்து தோன்றும் -7-7-1-என்றும் –
இணைக் கூற்றம்கொலோ அறியேன் -7-7-1–என்றும் –
கண்ணன் கோளிழை வாண் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றதே-7-7-8- -என்று
முன்பு அனுபவித்தவனுடைய-முக அவயவ சோபையானது – விசத ஸ்ம்ருதி விஷயமாய் –
பார்த்த பார்த்த இடம் எங்கும் தோன்றி நின்று நலிய-
(திரு முக மண்டலத்தில் திருக்கண்கள் -திரு மூக்கு -திரு வாய் – திருப்புருவம் -திருக்காது -திருநெற்றி
முதலானவை நலிவதால் சூழவும் பகை முகம் செய்ய என்கிறார்
தாமரை வாசத் தாடாகம் போல் வருவானை முன்பே அனுபவித்தவர்-இப்பொழுது இணைக் கூற்றம் கொலோ-என்கிறார் )

எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க-
அதாவது
விஜயங்களைக் காட்டித் தரிப்பித்த போது தலை சாய்ந்தும் -மீளவும் கூப்பிடும் படி தலை எடுத்தும்-
இப்படி எடுப்பும்- (7-4-/7-5-) சாய்ப்பும் (7-6/7-7-) ஆக செல்லுகிற கிலேசம் நடவா நிற்கச் செய்தே-
(கிலேசம் தலை சாய்ந்தும் தலை எடுப்பும் -எனவே விஜயங்களைக் காட்ட கிலேசம் தலை சாய்ந்து என்கிறார் )

உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க-
அதாவது
உபாய பூதனான உனக்கு அஜ்ஞான அசக்திகளாகிற தோஷம் இன்றிக்கே இருக்க –
சரண்யனான எனக்கு -ஆகிஞ்சன்யம்-அநந்ய கதித்வங்களும் ஆர்த்தியும் உண்டாகையாலே -அதிகாரி தோஷம் – இன்றிக்கே இருக்க –
பாசங்கள் நீக்கி 7-8-5-என்று தொடங்கி
மாயங்கள் செய்து வைத்தி-7-8-5- -என்று
அவித்யா கர்ம வாசன ருசிகளை -சவாசனமாகப் போக்கி -உனக்கு
அனந்யார்ஹ சேஷம் ஆக்கிக் கொண்ட பின்பு ஜன்ம மரணாத் யாச்சர்யங்களை உண்டாக்கி –
என்னை சம்சாரத்தில் வைத்த ஆச்சர்யத்தை அருளிச் செய்ய வேணும் என்று கேட்க-(மாய வாமனன் சாரம்)
( மாயா வாமனனே மது சூதா நீ அருளாய் என்றும் -இவை என்ன மயக்குகளே என்று எல்லாம் கேட்டாரே
அடியாக வைக்க வில்லை -தனது நிர்ஹேதுக சங்கல்பம் அடியாக பாடுவிக்க அன்றோ வைத்துள்ளான் )

—————————————

7-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய-
(ஐச்சமாக விருத்தி பாட பேதம்)
அதாவது
அவன் -நமக்கும் நம் உடையாருக்கும் -போது போக்காகா உம்மைக் கொண்டு திருவாய் மொழி
பாடிவித்துக் கொள்ள வைத்தோம் காணும் –என்று கர்மம் அடியாக அன்றிக்கே-
தன் இச்சையாலே இருத்தி –
(தஸ்ய தாவதேவ சிரம் -அவனுக்கு அதுவரையில் தான் -கர்மம் தொலைத்ததும் இங்கு இருக்க முடியாதே –
ஆழ்வாருக்கு பாசங்கள் நீக்கிய பின்பும் -சங்கல்பம் -ஐச்யம்-விதி வாய்க்கின்றது காப்பார் யார் -விதி -பகவத் கிருபை இச்சை -என்றபடி )

உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய
அதாவது
உறப் பல இன் கவி -7-9-9–என்கிறபடியே-(சாலப் பெரியவன் -பெருமைக்கு உற கவி என்றுமாம் )
தனக்கு தகுதியான கவிகளைப் பாடுவித்து கொண்ட ஸ்வ பிரயோஜனமும் –
பர பிரயோஜனமுமான -வித்தை -வைத்ததுக்கு ஹேதுவாக அருளிச் செய்ய-

என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே-
அதாவது
வியாச பராசர வால்மீகி பிரப்ருதிகள்-முதல் ஆழ்வார்கள் -உண்டாய் இருக்க –
தம்மைக் கொண்டு கவி பாடு வித்த உபகாரத்தை அனுசந்தித்து –
என் சொல்லி நிற்பானோ–7-9-1-என்றும் ,
எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ -7-9-7–என்றும் ,
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும் ஆர்வனோ –7-9-8-
இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ -7-9-9–என்று
அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்தால்-எங்கனே நான் தரையில் கால் பாவுவது –
அவ் உபகாரத்தை கால தத்வம் உள்ள அளவும் அனுசந்தித்தாலும் -பர்யாப்தன் ஆகிறிலேன் –
சகல ஸ்தலங்களிலும் உண்டான சகல சேதனருடையவும்-வாகாத் யுபகரணங்களை-
நான் ஒருவனே யுடையேனுமாய் — கால த்ரயத்திலும் -பேசி அனுபவித்தாலும் -த்ருப்தன் ஆவேனோ –
உதவிக் கைம்மாறு -7-9-10-என்று தொடங்கி –
எதுவும் செய்வது ஒன்றும் இல்லை இங்கும் அங்கும் -7-9-10–என்று இதுக்கு பிரத்யு உபகாரமாக
ஆத்ம சமர்ப்பணைத்தைப் பண்ணுவோம் -என்னில் -அதுவும் -ததீயமாய் -இருக்கையாலே –
உபய விபூதியிலும் செய்வது ஒன்றும் இல்லை என்னும் படியான உபகார ஸ்ம்ருதியோடு கூடிக் கொண்டு –

(சாதன பல உபகாரம் கைம்மாறு இன்றி –சூரணை -218–இது தானே ஏழாம் பத்தின் சாரம்
கலங்கி மயங்கி மீண்டும் -8-1-சமர்ப்பித்து கலங்குவார்
பொதுவாக பாடுவித்துக் கொண்டது -7-9-வரை –
பிரதியுபகாரமாக தொடர்ந்து செய்வது -7-10- முதல் இறுதி வரை
ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன் ஆண்டாள் போலே )

———————————————–

8-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த நிலத் தேவர் குழுவிலே
பாட்டுக் கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர்-
அதாவது-
செம்பவளத் திரள் வாய் தன் சரிதை கேட்டான் -பெருமாள் திருமொழி -10-8—என்கிறபடியே –
பிராட்டியை ஒழிய பெருமாள் தனி இருந்த இருப்பிலே குசலவர்கள்
ஸ்ரீ ராமாயணம் கேட்பித்தாப் போல் அன்றிக்கே –

இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் எழ உலகை
இன்பம் பயக்க இனிது உடன் வீற்று இருந்து -7-10-1–என்று
ஆனந்த மயனான தனக்கும் -ஆனந்த வர்தகையான பிராட்டியும் தானுமான சேர்த்தியில் –லோகம் அடங்க வாழும் படி –
உபய விபூதி நாதத்வத்தால் வந்த வேறு பாடு தோற்ற எழுந்து அருளி இருந்த –
நிலத் தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திரு வாறன் விளையில்–7-10-10-அந்த பூ சூரரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே –
பிரத்யு உபகாரமாக திரு வாய் மொழி கேட்விப்பித்து அடிமை செய்ய பாரித்து –

திரு வாறன் விளையில் பரத்வ விமுகமாம் படி தன் நெஞ்சு பிரவணம் ஆகையாலே –
திருவாறன் விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின் —7-10-11-
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத் தன்மை -தேவ பிரான் அறியும் -7-10-10–என்று
பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக –
ஹாவு ஹாவு -என்று சாம கானம் பண்ணும் பரம பதத்தில் கோஷ்டியையும் –
ஸ்வதஸ் சர்வஜ்ஞனாய் -நினைவுக்கு வாய்த் தலையிலே இருந்து –
எல்லோருடைய நினைவும் அறியும் அயர்வறும் அமரர்கள் அதிபதி அறிய விஸ்மரித்தவர் –

(பிரணவ சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆனந்த வ்ருத்தி நீள் நகரிலே –சூரணை -171-
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கி -10-6-2-திவ்ய தேசம் ப்ராவண்யம் ஒழி –
ஸ்வாமி கைப்பிடித்து விண்ணுலகம் கூட்டிப் போகப் போவோம் -என்பார் -நிராங்குச ஸ்வ தந்த்ரன் முடிவு )

———————————————

9-சரமோ உபாய பரர் ஆனார்க்கு
அதாவது
கீழ் தாம் அருளிச் செய்யக் கேட்ட (அகலகில்லேன் இறையும் பாசுரத்தில்) ஸித்த சாதனத்திலே- தத் பரர் ஆனவர்களுக்கு

நீள் நகரமது -துணித்தான சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று
பிராப்ய சாதன அவதியைப் ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் .
அதாவது –
நீள் நகரம் அதுவே மலர் சோலைகள் சூழ் திரு வாறன் விளை –7-10-6-
வாணனை ஆயிரம்தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம்-7-10-7–என்றும்
உள்ளித் தொழுமின் தொண்டீர்-7-10-6- -என்று
நிரதிசய போக்யமான திரு வாறன் விளை யாகிற மகா நகரமே பிராப்யம்–
அங்கு எழுந்து அருளி இருக்கிற உஷா அநிருத்த கடகன் ஆனவனே அந்த பிராப்யத்துக்கு பிராபகம் –
இவ்வர்த்ததில் மாறாட்டம் இல்லை -ஆகையால் இவ் அர்த்தத்தில் ருசி உடையார் புத்தி பண்ணுங்கோள் என்று –
பிராப்யத்தினுடைய அவதி ததீய விஷயம் என்றும் –
பிராபகத்தினுடைய அவதி அர்ச்சாவதார ஸூலபன் என்றும் –
இவ்வர்த்தத்தை தம்முடைய உகப்பாலே வெளி இட்டு அருளுகிறார்- ஏழாம் பத்தில் என்கை.

( ப்ராப்யம் -அவதி -திவ்ய தேசம் ததீய விஷயம் அவனுடையது
ப்ராபகம் -அவதி -அவன்
பெருமாளே கடகன்-ப்ராப்யம் நீள் நகரம் -அத்தைப் பெற்றுக் கொடுப்பவன் அவன் தானே –
அதற்காக உஷா அநிருத்தன் இருவரையும் சேர்த்து வைத்தது த்ருஷ்டாந்தம்
நம்மாழ்வார் வாணன் சரித்திரம் சொல்ல நாயனார் அந்தப்பாட்டை எடுத்து மா முனிகள் வியாக்யானம்
ஈஸ்வர க்ருஷி பலம் -நாம் அனுபவிப்போம் )

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –224–

September 29, 2018

ஆறு நாயகி பதிகங்கள் –
முதல் இரண்டும் மகள் -ஐந்தாம் பதிகம் தோழி -ஆறாம் பதிகம் -தாய்-ஏழாவது தாய் -எட்டாவது மகள் பதிகம் –
த்வய பூர்வ வாக்கியம் -உலகம் உண்ட பெருவாயா-பதிகம் –
முதல் மூன்று பத்தும் உத்தர வாக்ய கைங்கர்ய பிரார்த்தனை –ஒழிவில் காலம் –
இரண்டுமே திருவேங்கடத்தான் இடம்
இதுவே பலித்த சரணாகதி–ஸ்ரீ பிராட்டி முன்னிட்டுக் கொண்ட படியால் -த்வயம் படியே இங்கு –

சரண்யத்வம்–உபாயத்வம் கல் வெட்டு ஆக்குவது போலே -திரு மலை-கல்லும் வெற்பு -என்றாலே திருமலை
சமம் ஸ்தானம் வேறே எதுவும் இல்லையே –
தத்வ வேதனம் மறப்பற்று பெற்றார் முதல் பத்தில்
பக்தி தலை சேர நிஷ்கர்க்ஷித்தார் -இரண்டாம் பத்தில்
மோக்ஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து முன்றாம் பத்தில்
புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்தமை அடுத்த நான்காம் பத்தில்
விரக்தி பல -ராகம் கழிய மிக்கு பக்தி வளர்ந்தத்தை பார்த்தோம்
முதல் நான்கு பரத்வம்–பரத்வ காரணத்வ வியாபகத்வ நியந்த்ருத்வம் காட்டி
ஐந்தாம் பத்து ஸுலப்யம்
அவனே சரண்யன்
காருணிகத்தவம்-ஐந்தாம் பத்தில்
பிரேம பல உபாயத்தே புகுந்து பிரபத்தி செய்கிறார் இதில் -அடிக் கீழ் அமர்ந்து புகுந்தார் அன்றோ –

(கால் நடை தளர்ந்து கால் நடைகளின் காலில் விழுந்து தூது-6-1- -திரு வண் வண்டூர் -பம்பா நதி
வடக்கு கரையில் உள்ள ஸ்ரீ ராமனுக்கு தூது இது -ஏறு சேவகனாருக்கு என்னையும் உளள்-
வந்து மேயும் குருகினங்காள் -திருத்தி அனைவரையும் ஆக்கியதால் இவைகள் தாமே வந்து
ஞான பலமான சாபல்ய காரியத்தால் தூது -வந்தான் –
வரும் வரை கால தாமதம் பொறுக்க மாட்டாமல் -வந்த இடத்திலும் முடிந்து போகும் படி –மாசறு சோதி 5-3-மடல் கீழே
இதில் பிரணய ரோஷம் 6-2-தாம் அழிந்தால் அவனும் முடிவான் அன்றோ –
இல்லாத பொழுது வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரிக்கலாம் -முடிய பிராப்தி இல்லையே –
முகம் திருப்பி ஆத்ம ஸ்வரூபம் போகும் -அன்றோ –
வெல்லும் வ்ருத்த விபூதி யோகத்தை -6-3-காட்டி சேர்த்துக் கொள்ள பிரசங்கிகம்
5-19-/ 6-4-/ சம்பந்தம் -திடமாக கல்யாண குணங்களை அனுபவிக்க பிறந்தவாறும் பிரார்த்தித்து -அத்தை அனுபவித்தார் அன்றோ
தர்ம வீர்ய ஞானத்தால் அனைத்தையும் பெற்ற ராம அனுபவம் போலே இவருக்கு கிருஷ்ண அனுபவம்
மின்னிடை மடவார் –இறுதியில் -ஆய்ச்சியால் -குரவை ஆய்ச்சியர் அடுத்து –6-2-உடன் இப்படியும் சம்பந்தம் –
நம்மாழ்வார் வைபவம் சொல்லும் 6-5-கீழ் எல்லாம் அவன் வைபவம் ஆச்சார்யர்கள் ஈடுபட்டு இருப்பார்களே –
ஸுலப்யம் சொல்லி -பரத்வம் இங்கு என்றும் பரத்வம் சொல்லி ஸுலப்யம் -1-1-/ -1-3-என்றும்
தோழி இவள் பிரபாவம் தாய் இடம் சொல்வது -லஷ்மணன் பிரபாவம் குகன் பரதனுக்கு சொன்னானே –
தோழியும் மயங்க -ஒவ் ஒன்றாக இளந்தத்தை தாய் சொல்கிறாள் அடுத்து -4-8-எறாளும் இவள் விட்டதை சொன்னது
அங்கு தன்னடையே போனது இங்கு -6-6-
நாமங்களை சொல்ல இவளுக்கு தரிப்பு வந்து திருக்கோளூருக்கு -திண்ணம் இள மான் புகுமூர்-தாய் பாசுரம் -இதுவும் –
பெண்ணையே இழந்தது இதில் மாலுக்கு பெண்ணிடம் உள்ளவை போனமை
பெண் இருக்க அதில் பாட பெண்ணும் சென்ற பின் இது
உள்ளே போக முடியாமல் சோலையில் நின்று தூது -மகள் -பொன்னுலகு ஆளீரோ-பரத்வத்யத்தில் தூது -6-8-
எங்கு சென்றாகிலும் கண்டு -அந்தர்யாமியிலும் உண்டே இதில் –
வைகல் -தூது -6-1-முதல் பதிகம் –
ஆழ்வார் கஷ்டம் கண்டு தளர்ந்து பக்ஷிகள் இருக்க நீராகிக் கேட்டவர்கள்
நெஞ்சு அழிய மாலுக்கு அங்கு இருப்பு கொள்ளாதபடி
ஜெகதாகாரத்வம் -நீராய் -6-9-கொடியேன் பால் வாராய் –நம்மாழ்வார் சிறைப்பட திருவாய் மொழி நமக்கு கிடைத்தது –
சீதை சிறைப்பட ஸ்ரீ ராமாயணம் –
கல்யாண குணங்கள் -ஆஸ்ரய ஸுகர்ய-ஆஸ்ரய கார்ய ஆபாத -பூர்த்தி -திருவேங்கடத்தில் -6-10- )

ஆறாம் பத்தால்-

தன்னுடைய பரம கிருபையாலே சர்வரும் வந்து ஆஸ்ரயிக்கும் படி இருக்கிற
சர்வ சரண்யனான சர்வேஸ்வரன் –
பக்தி பாரவஸ்யத்தாலே அநந்ய கதிகளாம் தமக்கு தம் திரு அடிகளையே –
நிரபேஷ உபாயமாகக் காட்டிக் கொடுக்க –

அவ்வுபாயத்தில் விச்சேதம் இல்லாதபடி நடக்கிற வ்யவசாயத்தை உடையராய் –
தம்முடைய வ்யவசாயத்தை கடக முகத்தாலே -இவனுக்கு அறிவித்து –( 6-1-)
வரவு தாழ்க்கையாலே தமக்கு விளைந்த -பிரணய ரோஷத்தை-(6-2-) அவன் பரிகரிக்க –( 6-3-)

அவன் சாமர்த்தியத்தை அனுசந்தித்து -குண அனுபவத்துக்கு பண்ணின பிர பத்தியும் பலித்தவாறே –
பிராப்திக்கு பிரபத்தி பண்ணுவதாகக் கோலி –
ஸித்த உபாய வர்ணம் இதர பரித்யாக பூர்வகம் ஆகையாலே
பௌராணிக வசன பிரக்ரியையாலே -உபாய விரோதிகளான த்யாஜ்ய அம்சங்களை
சாவசனமாக தத் பிரசங்கமும் அசஹ்யமாம் படி விட்டு –

(குண அனுபவம் -6-4-பலித்து அனுபவித்தார் பிரபத்தி 6-10–விட்டது-தாய் உறவு- தன்னிடம் உள்ள சங்கு இத்யாதி —
உண்ணும் சோறு இத்யாதிகளை விட்டதை மூன்றும் -சர்வ வித பரித்யாகம் மூன்றிலும்
பிதாரம் மாதரம்–ரத்நாதி-சர்வ தர்மான் சர்வ காமான் -பவிஷ்யத் புராணம் -கத்ய த்ரயத்திலும் உண்டே
விட்டதை எல்லாம் பற்றும் கண்ணனாக -எல்லாம் கண்ணன் –
ஆர்த்தி உடன் தூது -பரம ஆர்த்தி –காதில் விழும்படி கூப்பிட்டது
லோக விக்ராந்தன் சரணம் -புராண வசனம் -உலகு அளந்தவன்
அவனது பிரதிநிதியே திருவேங்கடத்தான் )

விட்டவை எல்லாம் தமக்குப் பற்றுகை விஷயமாக நினைத்து -பரம ஆர்த்தியோடே தமக்கு
உபாயமாக நினைத்து இருக்கும் -திரு உலகு அளந்தவனுடைய சர்வ சுலபமான திரு அடிகளை –
நித்ய ஸூரிகளும் வந்து அனுபவிக்கும் படி வந்து நிற்கிற -திரு மலையிலே கண்டு கொண்டு –
பூர்வ வாக்ய பிரக்ரியையாலே சரணம் புக்கவர் –

பத்துடை அடியவரிலே 1-3–தொடங்கி ஐஞ்சாம் பத்து அளவாக உபதேசித்த பக்தி உபாயத்தின்
துஷ்கரத்வாதி தோஷ அனுசந்தானத்தாலே சோகம் ஜனிக்கும் படியான பாகம் -(பரிபக்குவம் )பிறந்தவர்களுக்கு
தம்முடைய பிரபத்தி நிஷ்டையை பிரகாசிப்பிக்கிறார் என்கிறார் .
(பக்தி பண்ணுவது ப்ராப்ய ருசி அடியாகவே -சாதனமாகப் பண்ண மாட்டாரே –
சோகம் அதிகாரம் -சோக நிவ்ருத்தி பலம் -சோகம் வந்தவர்களுக்கு தானே பரிபக்குவ நிலை உண்டாகும் –
அவர்களுக்குத் தா உபதேசம் பண்ண வேண்டும் -)

—————————–

1-என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய்
அடியீர் வாழ்மின் என்று கருணையாலே
சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும்
கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம்
கல்வெட்டாக்குகிற சரண்யன்
2-அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள்
அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான்
புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூம பலமாகவும்
அநந்ய கதித்வம் உடைய தமக்கு
3-பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு
ஏக சிந்தையராய் திர்யக்குகளை இட்டு
ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து விளம்ப ரோஷம்
உபாயத்தாலே அழிய
4-உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்க
பலித்தவாறே சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று
புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின
5-சித் அசித் பிராப்ய பிராபக ஆபாசங்களைக்
கை வலிந்து கை கழலக் கண்டும் எல்லாம் கிடக்க
நினையாத கன்றும் ஆளீர் மேவீர் ஊதீர் என்று
ததீய சேஷம் ஆக்கியும் -புறத்திட்டு காட்டி என்று
பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு
6-தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை
யாவையும் ஒன்றே ஆக்கி
7-தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ
முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே
8-திரி விக்ரமனாய்க் குறள் கோலப் பிரானாய்
அடியை மூன்றை இரந்த வன் கள்வன்
கண் முகப்பே அகல் கொள் திசை வையம்
விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை
9-இணைத் தாமரைகள் காண இமையோரும்
வரும் படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே
கண்டு அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர்
10-பிணக்கறத் தொ சசோக சஜாதீயர்க்குத் டங்கி வேத புனித விறுதி சொன்ன
சாத்ய உபாய ஸ்ரவண
11-தந்தனன் மற்றோர் களை கண் இலம் புகுந்தேன் என்று
ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை உக்த்ய அனுஷ்டானங்களாலே
காட்டுகிறார் ஆறாம் பத்தில் —

—————————————–

1-என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மின் என்று கருணையாலே
சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம்
கல் வெட்டாக்குகிற சரண்யன்-
அதாவது

ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே -6-1-10–என்று
ஆர்த்த ரஷணத்திலே தீஷித்து இருக்கிறவனுக்கு -ரஷ்ய வர்க்கத்தில் நானும்
ஒருத்தி உளள் என்று சொல்லுங்கோள் என்றும் –

திரு விண்ணகர் சேர்ந்த பிரான் வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே-6-3-7- -என்று
திரு விண்ணகரிலே நின்று அருளும் அவன் திரு அடிகள் அல்லது சர்வருக்கும் வலிய புகல் அல்லை என்றும்-

வன் சரண் சுரர்க்காய் -6-3-8–என்று தேவர்களுக்கு வலிய ரஷகனாம் என்றும் –

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும் -6-10-11–என்று
நமக்கு சேஷ பூதராய் உள்ள எல்லோரும் நமக்கு அடிகளின் கீழே -அநந்ய பிரயோஜனராய் புகுந்து
உஜ்ஜீவி யுங்கோள் என்று தன் அருளைப் பண்ணா நிற்கும் என்றும் சொல்லுகிற படி-
தன்னுடைய கிருபையாலே –

சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே
நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷண உபஸ்திதம்—யுத்த —17-14-என்று வந்து சரணாகதனான விபீஷண ஆழ்வான் –
சர்வலோக சரண்யன் என்ற உக்தி சமுத்திர கோஷம் போலே நிரார்த்தம் ஆகாதபடியாகவும் –
(நத்யஜேயம் -மித்ரா பாவேந -கடற்கரை வார்த்தை தானே –
நம்மாழ்வாரை ரக்ஷிக்கா விட்டால் கடல் ஓசை போலே வீண் தானே )

சக்ருதேவ பிரபன்னாயா தவாச்மீதச யாசதே
அதாவது
அபயம் சர்வ பூதேப்ய ததாம் ஏதத் வ்ரதம் மம –யுத்த –18-33– என்று(பூதேப்ய -சர்வராலும் வரும் பயம்)
சரணாகத ரஷணத்தில் தீஷிதனாய் சரண்யனான தான் செய்த யுக்தி ச ஹ்ருத்யமாகாதா படியும் –
(கழுத்துக்கு மேலே ஆகாமல் -வாய் வார்த்தை- உள்ளத்தில் நினைக்காமல் என்றபடி )

வானவர் கோனொடும் நமன்று எழும் திரு வேம்கடம் -3-3-7–என்றும் ,
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயனை வழுவா வகை நினைந்து வைகல்
தொழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேம்கடம் -முதல் திருவந்தாதி-26-என்றும் —
போதறிந்து வானரங்கள்–இரண்டாம் திருவந்தாதி-72–என்றும் –
கண்டு வணங்கும் களிறு-மூன்றாம் திருவந்தாதி-70 -என்றும் –
நித்ய ஸூரிகள்–நித்ய சம்சாரிகள் -பிரயோஜனாந்த பரர் -அநந்ய பிரயோஜனர் –மனுஷ்யர்-திர்யக்குகள் -என்கிற
வாசி அற ஆஸ்ரயிக்கலாம் படி சர்வ ஸமாச்ரயணீயனாய் நிற்க்கையாலே –
தன்னுடைய உபாயத்வம் சிலா லிகிதம் ஆகும் படி திரு மலையில் எழுந்து அருளி இருக்கிற
அநாலோசித அவிசேஷ அசேஷ லோக சரண்யனான சர்வேஸ்வரன் –
(அநலோசித -ஆலோசனை பண்ண வேண்டாத படி )

————————————————

2-அஜ்ஞ்ஞான அசக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள் அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான்
புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூமா பலமாகவும் அநந்ய கதித்வம் உடைய தமக்கு-
அதாவது

அவித்யாதோ தேவே பரிப்புருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர்
பூம்நாவா ஜகதி கதிமந்யா மவிதுஷாம் கதிர் கம்யச்சாஸௌ ஹரிரிதி
ஜிதந்தாஹ்வயமனோ ரஹச்யம் வியாஜக்ரே சகலு பகவான் ஸௌ நகமுனி -ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூக்தி –
(அஞ்ஞானத்தாலாவது -அளவிட்டு அறிய ஒண்ணாதாவன் என்கிற ஞானத்தாலாவது -தன் பக்தியினுடைய மேன்மையாலாவது
அவனைத்தவிர வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்களுக்கு இவன் பேறாகவும்-உபாயமாகவும் -ஆகிறான் என்று
ஸுநக மகரிஷி ஜிதந்தே மந்திரத்தின் உள் பொருளை விரித்து உரைத்தார் )-என்று –
உபாயாந்தரங்களை அறியவும்-அனுஷ்டிக்கவும் ஈடான ஜ்ஞான சக்திகள் இல்லாமையாலே -ஆதல்-
பகவத் ஏக பர தந்த்ரமான ஸ்வரூபத்துக்கு-தத் ஏக உபாயத்வம் ஒழிய-தத் வ்யத்ரிக்தோ உபாயம் அன்வயம் ஆகாது என்று –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –5-8-3–என்னும்படியான
ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞானத்தால் ஆதல்–அநந்ய கதிகளாம் அளவு அன்றிக்கே –

(அஞ்ஞானத்தாலோ ஞான ஆதிக்யத்தாலோ இல்லாமல் பக்தி பாரவசயத்தால் அன்றோ ஆழ்வாராதிகள் பிரபத்தி )
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனும் அல்லேன்-5-7-2- -என்றும்
என் நான் செய்கேன் -5-8-3–என்றும்
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய் -6-10-4–என்று
ஸாதனம் அனுஷ்டித்து முக்த பிராயனாய் இருக்கிறேன் அல்லேன் –
சாதன அனுஷ்டானம் பண்ணுபவர்களில் ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் –
மேலும் சாதன அனுஷ்டானம் பண்ண ஒண்ணாத படி உன் சௌந்தர்யாதிகளில் ஈடுபட்டு –
உன்னைக் காண வேணும் என்னும் ஆசையினால்-பலஹீனமாய் தளர்ந்து –
இனி உபாய அனுஷ்டான ஷமன் அல்லேன் –
உன் திருவடிகளை பெருகைக்கு என்னால் செய்யல் ஆவது இல்லை –
எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி உண்டு –(புணராய் –வினைச்சொல் அவன் இடம் -என்னிடம் வினைகளே உள்ளன )
முன்பு பரிகல்ப்தமான உபாயங்கள் ஒன்றும் என் பக்கல் இல்லை –
நிரதிசய போக்யமான உன் திருவடிகளை நான் கிட்டும் வழி கல்பிக்க வேண்டும் என்று சொல்லும் படி –

மெய்யமர் காதல்–6-8-2–என்று அவன் ஸ்வரூபத்தை அனுசந்திதாதல் –குண ஜ்ஞானத்தாலே ஆதல் —
தரிக்க ஒண்ணாத படி திரு மேனியிலே அணைய வேண்டும் படியான காதல்-என்னும் படி-
கீழ் பத்திலே தமக்கு பிறந்த பக்தி பூமா உண்டு –பாரவச்ய ஜனகமான பக்தி அதிசயம் –
( மெய்யமர் காதல் -பின் நின்ற காதல் கழிய மிக்கதொரு காதல் பேர் அமர் காதலுக்கும் மேம்பட்ட காதல் அன்றோ இது
பர வசப்படுதல்- பக்தி- காதலின் முற்றிய நிலை ஆக நான்கு காரணங்களால் அநந்ய கதித்வம்- )
அதனுடைய பலமாகவும் -உபாயாந்தரதுக்கு ஆள் அன்றிக்கே –
களை கண் மற்று இலேன் -5-8-8–என்னும் படி
அநந்ய கதித்வம் உடையரான தமக்கு சமாசத்தில் பக்தி பூம பலம் என்ன வேணும் –
பூமா பலம் என்கிற இது -பாடச்கலனத்தாலே வந்ததாம் இத்தனை –

———————————————–

3-பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு ஏக சிந்தையராய்
அதாவது

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -5-7-10–என்னும்படி
தன் திருவடிகளை சகாயாந்தர நிரபேஷ சாதனமாகக் காட்டிக் கொடுக்க –

கழல்கள் அவையே சரணாக கொண்ட -5-8-11-என்றும் –
அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன்–5-9-11-என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய் –5-10-11-என்றும் சொல்லுகிறபடி-
விரோதி நிரசன சீலனானவன் திரு வடிகளையே நிரபேஷ
உபாயமாகக் கொண்டு ஏக ரூப மான வ்யவசாயத்தை உடையராய்-

திர்யக்குகளை இட்டு ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து
அதாவது
வைகல் பூம் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் கனிவாய் பெருமானைக் கண்டு
வினையாட்டியேன் காதன்மை –கைகள் கூப்பிச் சொல்லீர்-6-1-1- -என்று தொடங்கி –
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்கள் -6-1-10-என்னுமதளவாக
பெற்று அன்றி தரியாத அதி மாத்ர பிராவண்யம் உண்டாய் இருக்கவும்-
ஸ்வ ரக்ஷண ஸ்வாந்வயத்தை சகியாத ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே –
ததேக ரஷத்யத்வ வ்யவசாய சகிதராய் இருக்கிற தம்முடைய கருத்தை –
உபாப்யாமேவ பஷாப்யாம் -என்கிறபடியே ஜ்ஞான அனுஷ்டான ரூப பஷ த்வய யோகத்தாலே
ப்ராப்யமான பகவத் விஷயத்தை சீக்கரமாக ப்ராபிக்கைக்கு ஈடான
யோக்யதை உடையரான கடகரை இட்டு அறிவித்து –

விளம்ப ரோஷம் உபாயத்தாலே அழிய
அதாவது
இப்படி அறிவித்த அளவிலும் அவன் வரவு தாழ்க்கையால் உண்டான
பிரணய ரோஷத்தாலே -வந்து மேல் விழுந்த அளவிலும் –
போகு நம்பீ –6-2-1-
கழக மேறேல் நம்பீ -6-2-5–என்று
உபேஷித்து அவன் முகம் பாராமல் இருப்போம் என்று –
சிற்றில் இழைப்பது –
சிறு சோறு அடுவதாக -அது தன்னுடைய போக விரோதி ஆகையாலே –
அழித்தாய் உன் திருவடியாலே -6-2-9–என்கிறபடியே அவன் அந்த அநாதர அந்நிய பரதைகளை
தனக்கும் சரம உபாயமான திரு வடிகளாலே யுப லஷிதமான விக்ரகத்தின் உடைய
வைலஷண்யத்தாலே – குலைக்க -(உபாயத்தாலே அழித்து-அவன் செயல் –திருவடியால் அவன் அழித்து )-
அவனோடு பொருந்தி –

—————————————————–

4-உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்கப் பலித்தவாறே
அதாவது
பிறந்தவாற்றிலே -5-10-அவதார அனுபவம் பெறாத இழவாலே பதற –
தத் குண சேஷ்டிதங்களை அனுபவித்தாகிலும் தரிப்போம் என்று இழிந்த அளவில்-
நிறந்தனூடு புக்கு என தாவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற –5-10-1–என்றும் –
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை வுருக்குங்கள் -5-10-3–என்றும் –
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கும் -5-10-4–என்றும் –
ஊடு புக்கு எனதாவியை வுருக்கி உண்டு இடுகின்ற -5-10-10–என்னும்படி
அவை மிகவும் சைதில்ய ஹேதுவாகையாலே -தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி
பண்ணி அருள வேண்டும் என்று அவனை உபாயமாக வரித்தித்தும்-

குரவை ஆய்ச்சியரிலே–6-4-
என்ன குறை எனக்கு-6-4-1–என்று தொடங்கி –
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கு யார் பிறர் நாயகர்–6-4-10- -என்று
ப்ரீதி பூர்வகமாக அவதார குண சேஷ்டிதங்களை சர்வ காலமும் முறையிலே கிட்டி அனுபவிக்கப் பெற்ற
எனக்கு யார் தான் நியாமகர் என்று கர்விக்கும் படி பலித்தவாறே –

சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று-புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின-
அதாவது
இதர உபாய த்யாக பூர்வ கத்வமாகிற பிரகாரத்தோடே –
சித்த உபாய வர்ணம் சக்ருதேவ -(ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் )-என்கிறபடியே –
பிராப்த்திகாகவும் ஒரு கால் பண்ண வேண்டும் என்று பார்த்து புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின
(விட்டு விட்டு பண்ணுவதால் அங்கம் ஆகாது -இது அதிகாரி ஸ்வரூபம் -பிரகாரமாகும்
அந்ய ருசி ஒழிவது நாலாம் பத்திலே பார்த்தோம் -இத்தை முக்கியமாகக் கொண்டு ஆறாம் பத்திலும்
மூன்று திருவாய் மொழி இருப்பதால் இந்த ஸ்லோக விளக்கம் இங்கு அருளிச் செய்கிறார் -)

பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகின் குருன்
ரத்னானி தான தான்யானி ஷேத்ராணி ச க்ருஹானிச
சர்வ தர்மாம்ச்ச சந்தய்ஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான்
லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ராஜம் விபோ-என்கிற வசனம்
ஆக்னேயம் அஷ்டம் அஞ்சைவ பவிஷ்யன் நவமம் ஸ்ம்ருதம்-என்கிறபடி
அஷ்டாதச புராணத்திலும் வைத்துக் கொண்டு ஒன்பதாம் புராணமாக சொல்லப் பட்ட –
பவிஷ்யத் புராண சித்தம் ஆகையாலும் –

புராண வித்தகர் -( வித்தமர் -)ஆகையாலே -பௌ ராணிகரான ஸ்ரீ பாஷ்ய காரர் கத்யத்தில் –
இவ் வசன பிரக்ரியையாலே -த்யாஜ்யங்களின் உடைய த்யாக பூர்வகமான
சரண வரணத்தை பண்ணுகையாலும் –
புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின -என்கிறது —

இங்கன் அன்றிக்கே –
இவ் அர்த்தம் புராண சித்தம் ஆகையாலும் –
அது தான் புராதான புருஷ அனுஷ்டான ரூபமாக சொல்லப் படுகையாலும் -இவை இரடையும் பற்ற –
புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின–என்று அருளிச் செய்தார் ஆகவுமாம் .

சித் அசித் பிராப்ய பிராபக உபாசங்களை
அதாவது
ஆக இப்படி புராணரும் பௌ ராணிகரும் –
பிதரம் மாதரம்-என்று தொடங்கி –
சாஷரான்-என்னும் அளவாக -சந்த்யஜ்ய -என்கிற இதுக்கு கர்மீ பவிக்கையாலே –
வஹ்ய மாண சித்த உபாய வர்ணத்துக்கு அங்கமாக த்யாஜிக்கும் படும் அம்சம் ஆக்கின
சித் வஸ்துகளும் அசித் வஸ்துக்களுமாய் உள்ள – பிராப்ய ஆபாசங்களையும் -பிராபக ஆபாசங்களையும் –
(ஆபாசம் -போலி என்றவாறு -முத்து சிப்பி -வெள்ளி இல்லையே -அதைப் போலே தோன்றுமே -)
இதில்-சர்வ தர்மாம்ச்ச -கீழ் –
(போக்கிய பாக த்வரை தெளிந்த என் சிந்தைக்கு முன்னிலை மூன்றும் பிரகடனம் சொல்வது போலே சர்வ தரமாம்ஸ்ச கீழ் இங்கு )

உபாயாந்தர சக காரியுமாய் -ஸூயம் பிரயோஜனம் ஆகையாலே -உபேயமுமாய் –
இரண்டுக்கும் பொதுவாய் இருந்துள்ளவற்றை சொல்கிறது -எங்கனே என்னில்-
மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ -என்று கொண்டு -ஈச்வரனோபாதி மாதா பிதா அனுவர்த்தனத்தையும்
உபாசன அங்கமாக சாஸ்திரம் விதிக்கையாலே -மாதா பிதாக்கள் -உபாயாந்தர சக காரிகளுமாய் –
அவ்வளவு இன்றிக்கே –
இவர்களுடைய வியோகம் அசஹ்யமாய் இருக்கையாலே – ஸூவயம் பிரயோஜனமாயும் இருப்பார்கள் —

ஸ்திரீயும் சஹா தர்ம சாரிணியாய் இருக்கையாலே -உபாயாந்தர சக காரியுமாய்-
அபிமதையும் ஆகையாலே உபேய பூதை யுமாய் இருக்கும் புத்ரனும் –
புன்நாம்னோ நரகாத் த்ராயதே இதி புத்ர – என்கிறபடி-நரக தர்சனத்துக்கு அடியான
பாப விமோசன ஹேது வாகிற முகத்தாலே -உபாயாந்தர சக காரியுமாய் –
தம்முடைய வியோகம் அசஹ்யாகும் படி இருக்கையாலே உபேயாமுமாயும் இருக்கும் பந்துகள்-
இவனைக் குடிப் பழியாக வர்த்தியாத படி நியமித்து நல் வழியே நடத்துபவர்கள் ஆகையாலே –
உபாயாந்தர சக காரிகளுமாய் –
பெரும் குடி பாட்டத்தே பிறந்தோம் என்கிற செருக்காலே – உபேய பூதருமாய் இருப்பார்கள் –

தோழனும்- இவனுக்கு ஹிதைஷயாய் -ஹிதத்தையே பிரவர்த்திப்பிக்கையாலே – உபாயாந்தர சக காரியுமாய்-
அபிமதனாய் இருக்கையாலே உபேயமுமாய் இருக்கும்-

குருக்கள் ஆகிறார்கள்- உபயாந்தரங்களை உபதேசித்துப் போந்தவர் ஆகையால்-உபயாந்தர சக காரிகளுமாய் –
உபகாரர் ஆகையாலே உபேயமுமாய் இருப்பார்கள்-

ரத்னங்கள் உபாயாந்தரங்களுக்கு இதி கர்தவ்யதா சக காரகமுமாய் -மேற் சொல்லுமவற்றை
அழிய மாறி ஸ்வீகரிக்க படுமவை ஆகையாலே உபேயமுமாய் இருக்கும்
தான தான்யங்களும் ஷேத்ரங்களும் அப்படியே-

க்ருகங்கள் வாசஸ்தான முகத்தாலே உபாயந்தரங்களுக்கு சக காரகமுமாய் –
மாட மாளிகையாய் எடுக்கும் படியான அபிமதத்வத்தாலே உபேயுமாய் இருக்கும்-

மேல் சர்வ தர்மாம்ச்ச -இத்யாதியாலே
சாஷாத் உபாயாந்தரங்களையும் -உபேயாந்தரங்களையும் சொல்கிறது –
அதில் சர்வ தர்மாம்ச்ச என்று
கர்ம யோகத் உபாயங்களை சொல்கிறது –
சர்வ காமாம்ச்ச –
ஐகிக பரலோக ஐஸ்வர்ய விசேஷங்களைச் சொல்கிறது
சாஷரான்-
அஷர சப்த வாச்யமான கைவல்யத்தையும் அவ்வோபாதி த்யாஜ்யம் என்கிறது –

ஆக இப்படி உபாயத்வேனவும் உபேயத் வேனவும் வ்யவஸ்திதங்கள் அன்றிக்கே – கீழ் சொன்ன படியே –
உபாயாந்தர சக காரித்வத்தாலும்-அபிமதத் வாதிகளாலும் உண்டான பிராப்ய பிராபகங்கள் உடைய
மாதா -பித்ராதிகளும் -ரத்ன தான தான்யாதிகளும் –ஆனவற்றை
சித் அசித் பிராப்ய பிராபக ஆபாசங்கள் என்கிறது –
அதவா –
சர்வ தர்மாம்ச்ச -இத்யாதிகள்-தானும் பரம பிராப்ய பிராபகங்கள் பற்ற ஆபாசங்கள் ஆகையாலே –
அவை தன்னையும் கூட்டிக் கொண்டு சொல்லவுமாம் –

கை வலிந்து -இத்யாதிக்கு
அனுகுணமாக ஒதுக்குகிறதே இறே உள்ளது மேல் சொல்லுகிற வர்ணத்து அங்கமான த்யாகம் –
உபாய விரோதிகள் சர்வத்தையும் – விஷயமாக உடைத்து ஆகையாலே –
கை வலிந்து -இத்யாதிகளால் சொன்னது
த்யாஜ்யமான இத்தனைக்கும் உபலக்ஷணம் –
அப்படி ஆனால் இறே சப்ரகாரமாக சத்ருத் கரணீயம் என்றதுக்கு சேருவது
ஆக இப்படி இருந்துள்ள

————————————————

5–கை வலிந்து கை கழல கண்டும் எல்லாம் கிடக்க நினையாது அகன்றும்-
அதாவது

(போலி உபாய உபேய பொருள்கள் தாமே கழன்று போவதையும் -உபேக்ஷித்துப் போவதுமாவையுமாக இருப்பதை –
துவளில் மா மணி மாடம் -மாலுக்கு வையம் -உண்ணும் சோறு -மூன்றிலும் காணலாமே
ப்ராப்யாந்தரம் ப்ரபாகாந்தரம் -இவை -கீழ் சொன்னவை ப்ராப்ய ஆபாசம் ப்ராபக ஆபாசம் -என்றும்
பரம ப்ராப்யம் பிராப்பகங்களைப் பற்ற அவையும் ஆபாசகங்கள் -என்று இரண்டு நிர்வாகங்கள்
6-5-வலிந்து விட்டது தாயை விட்டது -6-6–கை கழிந்து போனவை -6-7–இருக்கும் பொழுதே போனவை உண்ணும் சோறு –
இது எல்லாம் கிடக்க இனிப்போய்-மூன்றையும் சொன்னபடி –
இது தான் கை வலிந்து கை கழிந்து -இத்யாதி -இது எல்லாம் கிடக்க போய்-சர்வம் -வீடு முன் முற்றவும் –
ச பிரகாரமாக இவை விட்டு -சர்வ தர்ம பரித்யாகம் இவை
ஸக்ருத் கரணீயம் 6-10- )

நம்மை கை வலிந்து -6-5-7–என்றும் –
இழந்தது சங்கே -6-6-1-என்றும் –
இதெல்லாம் கிடக்க இனிப் போய் –6-7-9-
எம்மை ஒன்றும் நினைத்து இலளே –6-7-9-
இன்று எனக்கு உதாவாது அகன்ற -6-7-6–என்று
சித் அசித் வர்க்கமான இவற்றைக் கை விட்டு –
உறங்குவான் கைப் பண்டம் போலே –
பகவத் பிரேம பாரவச்யத்தாலே தன்னடையே தன் கையில் நின்றும் நெகிழ்ந்து போகக் கண்டும் –
சர்வான் போகான் பரித்யஜ்ய -சரணாகதி கத்யம்-என்கிற படியே
இவற்றை ஒன்றாக நினையாமல் உபேஷித்து அகன்று போயும் –

ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷம் ஆக்கியும்-
அதாவது-
இதில் ததீயருக்கு போக்யமாக சமர்ப்பிக்கத் தக்க வற்றை-
பொன் உலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ –6-8-1-
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ –-6-8-2-
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ–6-8-3-என்று
தமக்கு உபாதேயமான பரம பத்தோடு ஒக்க கடகருக்கு பரிசிலாக சமர்ப்பித்தும்-
( இவர் பொன்னுலகு சொல்லி அடுத்து அடிசில் -பழன மீன் கவர்ந்து -நேராக திருமங்கை ஆழ்வார் )

புறத்திட்டு காட்டி என்று பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு-
அதாவது-
என்னைப் புறத்து இட்டு இன்னும் கெடுப்பாயோ–6-9-8–என்று
உனக்கு அசலாம்படி விஷயங்களிலே என்னைத் தள்ளி இன்னம் கெடுக்கப் பார்க்கிறாயோ என்றும் –
பல நீ காட்டிப் படுப்பாயோ-6-9-9–என்றும்
நாட்டார் காணா விடில் பிழையோம் என்கிற விஷயங்கள் தமக்கு காணில் முடியும் படி அத்யந்த அசக்யமாய் இருக்கையாலே –
விஷயங்களைக் (விஷயாந்தரங்களைக் ) காட்டி என்னை முடிக்கப் பார்க்கிறாயோ என்றும் சொல்லுகையாலே –
அவற்றின் பிரசங்கத்திலே ஏங்கி- மூச்சு அடங்கும் படி -பீதராய் -அவற்றை விட்டு

————————————————————

6-தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை யாவையும் ஒன்றே ஆக்கி-
அதாவது-
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ -த்வமேவ பந்துச -குருஸ் த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் -த்வமேவ த்வமேவ சர்வம் மம தேவ-கத்ய த்ரயம் -என்கிறபடியே –
தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த -6-5-11–என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியே மாதா பித்ராதி சர்வ பந்து— என்றும் –
( தந்தை தாய் தேவ பிரான் -மாத்ரு தேவ கீழே பார்த்தோம் -இங்கு தேவபிரானே தந்தை தாய் )

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்–6-7-11–என்றும் –
தாரக போஷாக போக்யங்கள் எல்லாம் சர்வ சுலபனான கிருஷ்ணனே என்றும் –

வைத்த மா நிதியாம் மது சூதனையே –6-7-11- என்று
ஆபத் ரஷகமாக சேமித்து வைத்த அஷயமான நிதியும் அவனே என்றும் –

பூவை பைம்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் -6-7-3–என்றும்-
லீலா உபகரணங்களால் பிறக்கும் ரசம் எல்லாம் ஸ்ரீய பதி யினுடைய திரு நாமங்களை
சொல்லவே உண்டாகா நிற்கும் என்றும் –

இப்படி கீழ் இட்டவை எல்லாம் பற்றுகிற விஷயமொன்றுமாக நினைத்து

———————————————-

7-தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே-
அதாவது-
கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -6-9-3–என்றும் ,
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ -6-9-6–என்றும்
கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குருகாதோ -6-9-9–என்றும் –
புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ –6-10-5–என்றும்
ஜகத்துக்கு சர்வ பிரகார ரஷகனாய் –ஸ்ரீயா சார்த்தம்-என்கிறபடியே –
பெரிய பிராட்டி யாரோடு எழுந்தி அருளி இருக்கிற உன்னைப் பெறப் பெறாதே –
சம்சாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இப்படி அவசன்னனாகக் கடவேன் –
திரி விக்கிரம அவதார முகத்தாலே நீயே வந்து எல்லார் தலையிலும் திருவடிகள் வைத்த உன்னைக்
காண ஆசைப் பட்டு கிடையாமல் அக்நி சகாசத்தில் மெழுகுபோல-ஜீவிக்கவும் பெறாதே -முடிக்கவும் பெறாதே –
சம்சாரத்தில் இப்படி திரியக் கடவனோ –
சர்வ சுலபமாய் -நிரதிசய போக்யமான திரு அடிகளிலே
என்னை அருளப் பாடிடும் காலம் இன்னும் அணித்தாகாதோ –
விரோதிகளின் கையில் அகப்படாதே -ஜகத்துக்கு வேர் பற்றான -உன்னை நோக்கித் தந்தவனே !
மானச அனுபவம் மாத்ரம் அன்றிக்கே -உன் திரு அடிகளை பிரத்யஷமாக கிட்டுவது என்றோ என்கிற ஆர்த்தி யோடே-

——————————————

8-திரி விக்ரமனாய் குறள் கோலப் பிரானே அடியை மூன்றை இரந்த வன் கள்வன்-
அதாவது-
கண் முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை
லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ரஜம் விபோ -என்று
வசிஷ்ட சண்டாள விபாகமற வரையாதே திருவடிகளை வைக்கையாலே-சௌசீல்யமும் –
உறங்குகிற பிரஜையின் முதுகைக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
விமுகனார் தலையிலும் திரு வடிகளை வைக்கையாலே -வாத்சல்யமும் –
அவதரித்து முன்னே நின்று கார்யம் செய்கையாலே -சௌலப்யமும் –
தே -என்கையாலே -தன் பேறாக செய்கைக்கு உறுப்பான ஸ்வாமித்வமும் –
விபோ -என்கையாலே -ஞான சக்த்யாதி குண பூர்த்தியும் -சொல்லுகையாலே –
த்ரி விக்கிரம உபதானத்திலே -ஆஸ்ரயண உபயோகியாயும் -கார்ய உபயோகியாயும் –
உள்ள குணங்கள் எல்லாம் பிரகாசிக்கையாலே –
( இதே குணங்கள் அகலகில்லேன் பாசுரத்தில் உண்டே -திருவிக்ரமன் திருவேங்கடத்தான் என்று
சரண் அடைகிறார் என்று காட்ட இவற்றைச் சாதிக்கிறார் )

தெய்வ நாயகன் திரி விக்ரமன்-5-7-11-
மாண் குறள் கோலப் பிரான் –5-9-6-
அடியை மூன்றை இரந்தவாறும்-5-10-9-
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட வன் கள்வன்-6-1-11 -என்று-
சர்வேஸ்வரனாய்-
ஆஸ்ரித வத்சலனான தான் –
திரு விக்கிரம உபாதானம் பண்ணுகைக்காக பெரு விலையனான அழகை-
சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து கொண்டு
மகாபலி யஜ்ஞ வாடத்திலே சென்று – மூன்று அடி- என்று இரந்து –
தான் சொன்ன படியே அவன் செய்யும் படி விநீதமாய் ஆகர்ஷமான வடிவைக் காட்டி
வசீகரித்து நின்ற மகா வஞ்சகன்-

கண் முகப்பே அகல் கொள் திசை வையம் விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை
அதாவது-
காண் மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த -6-3-11-என்று
நோக்கு வித்யை காட்டுவாரைப் போலே -இதோர் ஆஸ்ரயம் பாரும் கோள் என்று –
லௌகிகர் எல்லோருடையவும் கண் எதிரே –
அகல் கொள் வையம் அளந்த மாயன்-6-4-6-
திசை ஞாலம் தாவி அளந்ததுவும் –6-5-3-
வையம் அளந்த மணாளன் –6-6-1-
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மான் –6-9-2-
ஓர் அடியால் எல்லா உலகும் தட வந்த –6-9-6-
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகள்-6-9-9–என்று
விஸ்த்ருதமாய் -திக்குகளோடு -கூடின பூமியையும் -உபரிதன லோகங்களையும் –
தென்றல் உலவினால் போலே -ஸூகரமாம்படி -எங்கும் ஒக்கப் பரப்பி அளந்து கொண்ட
சர்வ சுலபமாய் -நிரதிசய போக்யமான திரு அடிகளை –

————————————-

9-இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும் படி சென்று சேர்ந்த உலகத் திலதத்தே கண்டு-
அதாவது-
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு–6-10-6-என்று -இத்யாதி படியே
திரு உலகு அளந்து அருளின -சர்வ சுலபமாய்-நிரதிசய போக்யமாய்-சேர்த்தி அழகையும்
உடைத்தான திரு அடிகளை நாம் காண்பது எப்போது என்று -நித்ய ஸூரிகளும்
அனுபவிக்க ஆசைப் பட்டு வரும் படி-
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் திரு வேம்கட மா மலை-3-3-8-என்று
திரு உலகு அளந்த செயலாலே பிரகாசிக்கிற சர்வ ஸ்மாத் பரத்வத்தை உடையவன் –
அந்த ஸ்ரமம் தீர விடாயர் மடுவிலே சேருமா போலே உகந்து நிற்கிற –
திலதம் உலகுக்காய் நின்ற திருவேம்கடம் -என்று லோகத்துக்கு முக்ய ஆபரணமான
திரு மலையிலே கண்டு –
அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர்-

அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்று
புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரை முன்னிட்டு –
நிகரில் புகழாய்-என்று தொடங்கி-
திருவேம்கடத்தானே -என்னும் அது அளவாக –
வாத்சல்யம் -ஸ்வாமித்வம் -சௌசீல்யம்-சௌலப்யம் -ஆகிய குணங்களை
அடைவே அனுசந்தித்துக் கொண்டு –

புகல் ஓன்று இல்லா -என்றும்
அடியேன் -என்றும்
தம்முடைய ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வ்பம் புரஸ்சரமாக
உன் அடிக் கீழ் -என்று -சரணவ்-என்கிற திருவடிகளையும் –
அமர்ந்து புகுந்தேன் -என்று சரணம் பிரபத்யே -என்கிற அர்த்தத்தையும் அனுசந்தித்து அருளுகையாலே –
பூர்வ வாக்ய பிரக்ரியையாலே -பூர்ண பிரபதனம் பண்ணினவர்-

———————————————

10-பிணக்கற தொடங்கி வேத புனித விறுதி சொன்ன சாத்ய உபாய ஸ்ரவண சசோக சஜாதீயர்க்கு-
அதாவது-
(சாத்ய உபாய ஸ்ரவண சசோக சஜாதீயர்க்கு-சாதன பக்தியை கேட்டு துஷ்கரம் என்றும் அபிராப்தி என்றும் நினைத்தலால்
பிறந்த சோகமுடைய தன்னை ஒத்த அதிகாரிகளுக்கு என்றவாறு
பக்தி பிரபாவம் சொல்ல -சாதனா பக்தி என்று பிரமித்து துஸ்ஸகம்–ஸ்வரூப விரோதம் என்று சோகித்தவர்களுக்கு – )-
பத்துடை அடியவரிலே –1-3-
பிணக்கற அறு வகை சமயமமும்-1-3-5- -என்கிற பாட்டிலே –
வணக்குடை தவ நெறி வழி நின்று -என்று உபக்ரமித்து –
வேத புனித விருக்கை நாவில் கொண்டு-ஞான விதி பிழையாமே -அச்சுதன் தன்னை மேவித்
தொழுது உய்ம்மினீர்கள்–5-2-9- என்கிறது அளவாக கீழ் உபதேசித்த சாத்ய சாதன பக்தி ஸ்ரவணத்தாலே –

அதினுடைய துச்சகத்வ ஸ்வரூப விரோதித்வங்களை நினைத்துப் பிறந்த சோகத்தோடு கூடி
அத்தாலே
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு-5-7-5-
என்னான் செய்கேன் –5-8-3-
என்று இருக்கும் தம்மோடு சஜாதீயராம் படியான அதிகாரம் பிறந்தவர்களுக்கு-
(துஸ்ஸகம்–ஸ்வரூப விரோதம் -இரண்டுக்கும் இரண்டு பாசுரங்கள்
சோகத்தால் நாம் சஜாதிவெயர் ஆழ்வார் உடன் )

—————————————-

11-தந்தனன் மற்றோர் களை கண் இலம் புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை
உக்த அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் .
அதாவது –
திரு விண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பாரில் அப்பன் தந்தனன் தன தாள் நிழல்-6-3-9-
திரு விண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண் மின்களே –6-3-10-
என்கிற தம்முடைய உக்தியாலும் –
(களை கண் இலம் காண் மின்களே –முன்னிலை வினைமுற்று உபதேசத்தில் நோக்கு )

அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே –6-10-10-
என்கிற தம்முடைய அனுஷ்டானத்தாலும் –

தமக்கு இந்த சித்தோ உபாயத்தில் உண்டான நிஷ்டையை பிரகாசிப்பிக்கிறார் ஆறாம் பத்தில் -என்கை

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –223–

September 29, 2018

ஸ்ரீ திராவிட சுருதி தர்சகாய நம -ஆராவமுதன் —
ஐந்து பதிகம் நாயிகா பாவம் இதில் -தோழி பாசுரம் இல்லை -தாய் பாசுரம் ஓன்று மகள் பாசுரம் நான்கு
மூன்று மகள் பதிகம்–5-2-/5-3-/5-4- சேர்ந்தால் போலே -பின்பு அநுகாரம் தாய் பதிகம் 5-5-
நோற்ற நாலும் இதில் -உபாய ஸ்வரூபம்
பாண்டிய நாட்டு திவ்ய தேசம் சரணாகதி நோற்ற நோன்பு -5-7-
சோழ நாட்டு திவ்ய தேசம் சரணாகதி ஆராவமுதே -5-8-
மலையாள நாட்டு திவ்ய தேச சரணாகதி மானேய் நோக்கி-5-9- தலை மகளாகவே இதில் –
விபவத்தில் சரணாகதி பிறந்தவாறும் -5-10- தரித்து நின்று குண அனுபவத்துக்காக இதில் சரணாகதி –
கலியும் கெடும் -கண்டு கொண்மின்–ராமானுஜ திவாகரன் –
பொலிக பொலிக பொலிக –
பெண்ணாக சரணாகதி -5-9-

தத்வ வேதனம் மறப்பற்று-முதல்
முக்தி ப்ராப்யம் பக்தி தலை சேர நிஷ்கர்ஷம் அடுத்து
வ்ருத்தி செய்ய அர்த்தித்து -கைங்கர்யம்
புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்து-இங்கே வந்துள்ளோம் –
இதில் விரக்தி பல ராகம் கழிய மிக்கு -ராகம் பக்தி -இதில் பக்திக்கே சிறப்பு
பேர் அமர் காதல் -பின் நின்ற காதல் -கழிய மிக்கதொரு காதல் 5-3-/-5-4-/-5-5-மூன்றிலும் உண்டே
உபாய ஸ்வரூபம் சரணாகதி இருந்தாலும் பக்திக்கு பிரதானம் இதில் –
பிரபத்தி அடுத்த பத்துக்கே வைத்துள்ளார் –
பரத்வ காரணத்வ வியாபகத்வ நியந்த்ருத்வம் சொல்லி
இதில் காருணிகத்தவம் சொல்லி –

ஐஞ்சாம் பத்தால்-

கீழ் சொன்ன பரத்வாதிகளால் வந்த தன்னுடைய உத்கர்ஷத்தையும்
தம்தாமுடைய நிகர்ஷத்தையும் அனுசந்தித்து -அகல்வார் அளவிலும் மேல் விழுந்து –
விஷயீகரிக்கும் படி பரம காருணிகனான சர்வேஸ்வரன்
கீழ் இவருக்கு பிறப்பித்த விரக்க்திக்கு பலமான
ஸ்வ விஷய பக்தியை
பரம்பரயா அபி விருத்தமாக்கி –
அந்த பக்தியையும்
பாகவத சமாகத்தையும்
உடையரான இவர்-
(இரண்டையும் உடைய இவர் -இவர் திருத்த காண வந்த பாகவதர்கள்-5-2-
சம்சார விஷ வ்ருக்ஷம்-கேசவ பக்தி -பக்த பக்தி -அமிருத பழங்கள் இரண்டும் வாய்த்ததே ஆழ்வாருக்கு இதில் )

தாம் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களையும் -திருத்தின தம்மையும் –
காண்கைக்கு வந்த நித்ய சூரிகளையும் -ஸ்வேத தீப வாசிக்களுமான சித்தர்களையும் கண்டு
மங்களா சாசனம் பண்ணி –
திருந்தாத அசுர ராஷச பிரகிருதி களையும் –
பகவத் பாகவத வைபவத்தை உபதேசித்து -திருத்தி
பாகவத சமாஜ தர்சனம் இனிதாம் படியான ஜ்ஞானம் பிறந்தார்க்கு
( அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்-இங்கு -பெரியாழ்வார் வாழாட்பட்டு உள்ளீரேல் -என்ன மாற்றம்)

பிராப்ய த்வரைக்கு அடியான
பக்தியையும் உபதேசித்து தலைக் கட்டுகிறார் என்கிறார்-
(தாயார் -உபாயாந்தரம் தவிர்க்க ஹிதம் சொல்ல -ப்ராப்ய த்வரை-மிக்கு அவர்களையும் திருத்தி –
ப்ராப்ய த்வரைக்கு அடியும் பக்தியே என்று என் கண்ணினால் நோக்கி கண்ணீர் உபதேசம் உண்டே
5-6-அநுகாரம்–உபதேச முத்திரை -அவன் கிஞ்சித் இருக்கு என்று திரு உள்ளம் கொள்ளக்கூடாதே என்று
ஆகிஞ்சன்யம் முன்னிட்டு -5-7-நோற்ற நோன்பிலேன் –
கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார்–உபாய நிஷ்டர் -நமஸ் அர்த்தம் கை வந்தவர் -தாய்மார்
கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்சனத்தை
இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்-காணுதல் நோக்குதல் தானே -ப்ராப்ய த்வரை என்று அறிந்து நோக்கி காணுதல் )

——————————————————–

1-ஆவா வென்று தானே தன் அடியார்க்கு செய்யும்
தொல் அருள் என்று பரத்வாதிகளை உடையவன்
எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும்
அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன்
பொய் கூத்து வஞ்சக் களவு தவிர
முற்றவும் தானாய் உன்னை விட்டு என்னப்
பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம்
2-பேர் அமர் பின்னின்று கழிய மிக்கு
யானே என்ன வாய்ந்து ஆற்றகில்லாது
நீராய் மெலிய ஊடு புக்கு வளர
3-விஷ வ்ருஷ பலங்கள் கை கூடினவர்
அடிமை புக்காரையும் ஆட் செய்வாரையும் காண
லோக த்வீ பாந்தரங்களிலும் நின்றும் போந்த
தேவர் குழாங்களைக் கண்டு காப்பிட்டு –
பிரகலாதர் விபீஷணர் சொல் கேளாத
அரக்கர் அசுரர் போல்வாரை தடவி பிடித்து
4-தேச கால தோஷம் போக எங்கும் இடம்
கொண்ட வர்களை மேவித் தொழுது
உஜ்ஜீவியும் கோள் நீங்கள் நிறுத்துகிறவர்களை
தேவதைகளாக நிறுதினவனை
5-மேவிப் பரம்பும் அவரோடு ஒக்க தொழில்
யுக தோஷம் இல்லையாம் என்று விஷ்ணு பக்தி
பரராக்கி கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார்
கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்சனத்தை
இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்-

———————————————————-

1-ஆவா வென்று தானே தன் அடியார்க்கு செய்யும் தொல் அருள் என்று பரத்வாதிகளை உடையவன்
எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும் அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன்

ஆவா என்று அருள் செய்து -5-1-9–என்றும்
ஐயோ ஐயோ என்று என் பக்கல் கிருபையை பண்ணி என்றும்
தானே இன்னருள் செய்து –5-1-10-என்றும்-
தானே தன் பேறாக இன்னருள் செய்யும் என்றும்

(இன்னம் கார் வண்ணனே -எத்தனை அவதாரம் செய்தாலும் காருணிகத்தவம் மிக்கவன் அன்றோ
பரம காருணிகத்தவம் -அல்லேன் என்று அகல்வாரையும் சேர்த்துக் கொள்ளும் கருணை
நாடும் ஊரும் திருத்தும் படி ஆக்கி அருளிய கேவல கிருபை -விதி வாய்கின்றதே –
யாராலும் தடுக்க முடியாதே காப்பார் யார்
அந்த வைபவம் உணர்ந்து மகிழ்வாகப் பாடும் பதிகம் தானே கையார் சக்கரத்து திருவாய் மொழி-5-1-)

கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள் செய்யும் -5-2-11-என்று
தன் பக்கல் ந்யச்த பரர் ஆனவர்களுக்கு கலியுக தோஷம் ஒன்றும்
வாராத படி கிருபை பண்ணும் என்றும் -,
பெருமானது தொல் அருளே-5-9-9- -என்று சர்வேஸ்வரனுடைய ஸ்வாபாவிக கிருபை என்று சொல்லும்படி –

எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும் அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன்

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் -யானார் -எம்மா பாவியர்க்கும்
விதி வாய்க்கின்றது வாய்க்கும் கண்டீர் -5-1-7–என்று
கையும் திரு ஆழியுமான அழகை நித்ய சூரிகளுக்கு காட்ஷி கொடுத்து கொண்டு –
அங்கு உள்ளாருடனே பரிமாறி இருக்கிற சர்வேஸ்வரன் எவ்வளவிலே !
நித்ய சம்சாரிகளுக்கு மிவ்வருகான நான் எவ்வளவிலே !-என்று கீழ்ச் சொன்ன
பரத்வ-காரணத்வ -வியாபகத்வ -நியந்த்ருத் வாதிகளால் வந்த
உத்கர்ஷத்தையும் -தங்களுடைய நிகர்ஷத்தையும் அனுசந்தித்து-

அகலும் படி எத்தனை யேனும் மகா பாபிகள் அளவிலும் -கர்ம அனுகுண நிர்வாகத்துக்கு
உடலான -தன் நிரந்குச ஸ்வாதந்த்ரமாகிற கரையும் –
தன் அனுக்ரகம் தங்கள் பக்கல் வாராதபடி அபராதங்களே பண்ணும் இவர்கள்
ஒவ்பாதிக ஸ்வாதந்த்ரம் ஆகிய கரையும் -அழிய
பெருகா நிற்குமதான கிருபா பிரவாகத்தை உடைய சர்வேஸ்வரன்
(கையார் சக்கரம் -சாரம் )
(கர்மாதீனமாக விட்டு வைக்காமல் கிருபாதீனமாக இரு கரையும் -தன் நிரந்குச ஸ்வாதந்த்ரமாகிற கரையும் –
இவர்கள் ஒவ்பாதிக ஸ்வாதந்த்ரம் ஆகிய கரையும் அழிக்கிறார் –
கருணை வெள்ளத்தில் சிக்காமல் இருக்கவே மணத் தூணைப் பற்றி நின்று மாயோனை சேவிக்கிறோம் )

பொய் கூத்து வஞ்சக் களவு தவிர
பொய்யே கைம்மை சொல்லி –என்று என்றே சில கூத்து சொல்ல –5-1-2-
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் தவிர்ந்தே -5-1-3–என்று
மெய் கலவாத பெரும் பொய்யைச் சொல்லி -பிரேம பரவசரைப் போலே பாவித்து –
ஹிருதயம் பிராக்ருத விஷயம் பிரவணமாய் இருக்க -அநந்ய பிரயோஜனரைப் போலே –
உன் ஒவ்தாரத்தையும் வடிவழகையும் சஹ்ருதயமாய் சொல்லுகிறார் என்று
தோற்றும்படி பலகாலும் சொல்லா நின்று கொண்டு-
சர்வஜ்ஞ்ஞான உன்னையும் -பகட்டும் க்ரித்யம உக்தமான மனசை தவிர்ந்து என்று
அவற்றை இவர் தவிரும்படி –

முற்றவும் தானாய் உன்னை விட்டு என்னப் பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம்

என்னை முற்றவும் தானான்–5-1-10–என்று இவர்க்கு சர்வ வித போக்யமும் தானாய் –
இனி உன்னை விட்டென் கொள்வனே -5-1-3–என்று நான் உன்னை விட்ட வன்றும் விடமாட்டாத உன்னை
ஒழிய துராராதமாய் -வருந்தி ஆராத்தித்தாகிலும் கிடைப்பது ஓன்று இல்லாத விஷயங்களைப் பற்றவோ
என்று இவர் தாமே பேசும் படி பண்ணின
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்-4-9-10- -என்கிறபடியே அவன் போக்யதையாலே
அந்ய விஷயங்களை அடைய உபேஷிக்கும் படி -கீழில் பத்தில் பிறந்த விரக்திக்கு
பலமான -பரமாத்மினி யோ ரக்த -பார்ஹஸ்பத்ய ஸ்ம்ருதி -என்கிற பரமாத்ம விஷயத்தில் ராகமானது .–

————————————————————-

2-பேர் அமர் பின்னின்று கழிய மிக்கு யானே என்ன வாய்ந்து ஆற்றகில்லாது நீராய் மெலிய ஊடு புக்கு வளர

(5-2-இப்போது விட்டு –காதல் வளர்ந்ததையும் அநுகாராத்தையும் சொல்லி
பின்பு பார்க்க வந்தவர்களுக்கு மங்களா சாசனம் )
பேர் அமர் காதல் 5-3-4–என்று அபரிச்சேத்யமாய் பொருந்தி –
பின்நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதிடும் -5-4-6–என்று பிடரி பிடித்து நின்று
நெஞ்சை முடிக்கும்படியாய் –
கழிய மிக்கதோர் காதல் -5-5-10–என்று பார்ஸ்வச்தர்க்கு பேசும்படி மிகவும் கை கழிந்து –

கடல் ஞாலம் செய்தேனும் யானே -5-6-1–என்று தொடங்கி –
வாய்ந்த வழுதி வள நாடன் -என்று அவனுடைய ஜகத் காரணத்வாத் அத்புத கர்மங்களை
நானே செய்தேன் என்று அநுகார முகத்தாலே விஷயத்தை கிட்டி பேசும் படியாய் –

உன்னை விட்டு ஒன்றும் மாற்ற கிற்கின்றிலேன் -5-7-1-என்று அவனை ஒழிய ஒரு ஷணமும்
தரித்து இருக்க மாட்டாது படியாய் –
(ஆகிஞ்சன்யமும் க்ஷணம் காலம் தரியாமையும் உள்ள பதிகம் )
ஆரா அமுதே அடியேன் உடலம் நின் பால் அன்பாயே நீராய் -5-8-1–என்று
விஷய போக்யத அதிசயத்தால் வந்த பிராவண்யத்தாலே ஞான ஆச்ரயமான ஆத்மா ஆதல் –
ஞான பிரசரண த்வாரமான மனசாதல் அன்றிக்கே -ஆத்மாவுக்கு ஆயதனமான சரீரமும் சிதிலலாம் படியாய் –
வைகலும் வினையேன் மெலிய -5-9-1-என்று
அந்த சைலிந்த்யம் தான் காதாசித்கம் அன்றிக்கே -சர்வகாலமும் மெலியும் படியாக –
நிறந்தனூடு புக்கு என தாவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற -5-10-1–என்று
பகவத் குணங்கள் மர்மத்தில் புகுந்து ஆத்மாவை இடைவிடாமல் த்ரவ்ய த்ரவ்யமாக்கும் படி அவிவிருத்தமாக-
(மெலிவிலும் சேமம் கொள் கிருபை -இந்த திருவல்ல வாழ் திவ்ய தேச குணமே இந்த பத்துக்கும் சாரம் )

————————————————————

3-விஷ வ்ருஷ பலங்கள் கை கூடினவர்
இப்படி பகவத் ப்ரேமம் வளருகையாலும் -பாகவதர்களோடு கூடப் பெருகையாலும் –
சம்சார விஷ வ்ருஷச்ய த்வே பலே ஹ்யம்ருதோ பமே ,கதாசித் கேசவ பக்திஸ் தத் பக்தைர் வா சமாகம -என்று –
சம்சாரமாகிற விஷ விருஷத்திலே -அம்ருதோபமா பலங்களாக சொல்லப் பட்ட
பகவத் பக்தியும் – பாகவத சமாகமும் ஆகிய பல த்வயமும் கை வந்த இவர்-

அடிமை புக்காரையும் ஆட் செய்வாரையும் காண லோக த்வீ பாந்தரங்களிலும் நின்றும்
போந்த தேவர் குழாங்களைக் கண்டு காப்பிட்டு –
ஒன்றும் தேவிலே –4-10-
மற்றை தெய்வம் நாடுதீர் –
பாடி யாடி பரவிச் சென்மின்கள் –
தெய்வம் மற்று இல்லை –
நாயகன் அவனே –
ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே –
அறிந்தோடுமின் –
ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே –
மற்றைத் தெய்வம் விளம்புதீர் –
உளம் கொள் ஞானத்து வைம்மின் –
ஆட் செய்வதே -உறுவதாவது -என்று –

தேவதாந்தர அவரத்வ பூர்வகமாக பகவத் பரத்வத்தையும் –
பகவத் ஆஸ்ரயண பிரகாரத்தையும்
பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்னும் அத்தையும்
தெளிய உபதேசிக்கக் கேட்டு திருந்தி அடிமை புக்க ஸ்ரீ வைஷ்ணவர்களையும் –

ஆள் செய்து ஆழிப் பிரானை சேர்ந்தவன் -என்று இப்படி திருத்துகையாலே
அடிமை செய்தாரான தம்மையும் -காண்கைக்கு –
வைகுந்தன் பூதங்களேயாய் –5-2-5-
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடை பூதங்களேயாய் –5-2-4-
தேவர்கள் தாமும் புகுந்து -என்னும்படி –

லோகாந்தரமான ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளாரையும் –
த்வீயாந்தரமான ச்வேதத் தீபத்தில் உள்ளாரையும் –
நேமிப் பிரான் தமர் போந்தார் 5-2-6–என்கிறபடியே வந்த நித்ய சூரிகளும் –
முக்த பிராயருமான தேவர்களுடைய திரள்களை –

கண்டோம் கண்டோம்-5-2-2- -என்று
கண்ணுக்கு இனியதாய் இருக்கையாலே -கண்டோம் -என்று பல காலும் சொல்லும் படி கண்டு –
பொலிக பொலிக -5-2-1–என்று
அத் திரள் அபி விருத்தம் ஆயிடுக என்று மங்களா சாசனம் பண்ணி –
பிரகலாதர் விபீஷணர் சொல் கேளாத அரக்கர் அசுரர் போல்வாரை தடவி பிடித்து
த்வயி அஸ்தி மயி அஸ்தி ச -என்று பிரகலாதன் உபதேசிக்க கேட்டும்
திருந்தாத அசுரனான ஹிரண்யனும் –
ப்ரதீயதாம் தாசரதாய மைதலீ -யுத்த -14-34- -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் உபதேசிக்க கேட்டும்
திருந்தாத ராஷசனான ராவணனை போலேயும் –
கீழ் தாம் உபதேசத்தில் திருந்தாமல் கிடந்த ராஷச பிரக்ருதிகளும் ஆசூர பிரக்ருதிக்களுமாய்
உள்ளோரை –
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்–5-2-5–என்று தேடிப் பிடித்து-(விஷ்ணு பரராக்கி -என்றதனுடன் முடிக்க )

———————————————–

4-தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்ட வர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள்-
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார் -5-2-6–என்றும்
திரியும் கலி யுகம் நீங்கி தேவர்கள் தாமும் புகுந்து -5-2-3–என்கிறபடியே –
சரீரத்தை முடித்து -பிராண அபஹாரம் பண்ணக் கடவதான வியாதி —
அப்படி செய்யும் பகை -பசி -முதலான தேச தோஷமும் –
பவிஷ்யத் யதாரோத்தரம்-என்கிறபடியே
பதார்த்த ஸ்வபாவங்கள் வேறு படியாயான கலி பிரயுக்தமான கால தோஷமும் –
தங்கள் சஞ்சாரத்தாலே போம் படி –
( தேச தோஷத்துக்கும் – கால தோஷத்துக்கும் -இரண்டையும் போக்க இரண்டு பாசுரங்கள் )

இரியப் புகுந்து இசை பாடி எங்குமிடம் கொண்டன-5-2-3- -என்கிறபடியே –
பகவத் அனுபவ ஹர்ஷ பிரகர்ஷத்தாலே பெரிய ஆராவரத்தோடே -புகுந்து
பிரதி கூலருக்கு இடம் இல்லாதபடி -சர்வ பிரதேசத்திலும் பரம்பினவர்களை –
மேவித் தொழுது உய்மினீர்கள்-5-2-8-/ 5-2-9- -என்று
நீங்கள் அநந்ய பிரயோஜனராய் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் –

அவ்வளவு போக மாட்டாதே தேவதாந்திர பிராவண்யத்தாலே பகவத் வைபவம் அறிக்கைக்கு ஈடான
அளவிலி களாகில்
நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவனை
நிறுத்தி உம் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள்-5-2-7–என்று
அவை தமக்கு ஸ்வத உத்கர்ஷம் இல்லாமையாலே -வசன ஆபாசங்களாலும் –
யுக்தி ஆபசங்களாலும் -நீங்கள் சேமம் சாத்தி நிறுத்தி -புறம் பேசில் -அவர் அறியில்
அபஹசிப்பார்கள் என்று -உங்கள் நெஞ்சுக்குள்ளே நீங்கள் அறிந்ததாக உபாசிக்கும் -தேவதைகளை-
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே-5-2-8- -என்று
ராஜா வானவன் ஊர் தோறும் கூறு செய்வார்களை நிறுத்துமா போலே –
உங்களுக்கு ஆஸ்ரயனீராக நிறுத்திய சர்வேஸ்வரனை

——————————————–

5-மேவிப் பரம்பும் அவரோடு ஒக்க தொழில் யுக தோஷம் இல்லையாம் என்று
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
தொக்க அமரர் குழாங்கள் –கண்ணன் திரு மூர்த்தியை மேவி —
மிக்க உலகுகள் தோறும் எங்கும் பரந்தன
ஒக்க தொழுகிற்று ஆகில் கலி யுகம் ஒன்றும் இல்லை–5-2-10–என்று
ருத்ரனோடு பிரம இந்திரன் முதலாக திரண்ட தேவதா சமூகங்கள்
கிருஷ்ணனுடைய அசாதாரண விக்ரகத்தை ஸூபாஸ்ரயமாகப் பற்றி
விஸ்த்ருதமான லோகங்கள் எங்கும் ஒக்கப் பரந்து விபூதி விஸ்தாரத்தை உடையவர் ஆனார்கள் .
அவர்களைப் போலே நீங்களும் அவனை ஆஸ்ரயிக்கப் பெறில் -விபரீத பிரவர்தகமான
கலி யுக தோஷம் உங்களுக்குத் தட்டாது என்று உபதேசித்து-

விஷ்ணு பக்தி பரராக்கி
விஷ்ணு பக்தி பரோ தேவ -என்கிறபடியே –
அரக்கர் அசுரர் -என்னும் அது போய்-தேவ சப்த வாச்யராம் படி
பகவத் பக்தி பரராக திருத்தி

கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார் கண்ணிலே நோக்கிக் காணும்
பக்தி சித்தாஞ்சனத்தை இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்
அதாவது –
திருந்தாதவரை திருத்தின அளவு அன்றிக்கே -முன்பே திருந்தி –
கண்ணுக்கு இனியன கண்டோம் தொண்டீர் எல்லீரும் வாரீர் -5-2-2–என்னும்படி-
பாகவத சமாஜ தர்சனம் இனிதாம் படி -அவ்விஷயத்தில் சாபலம் உடையராய் –
உபாய அத்யாவச தசையிலே -நின்று -பிராப்ய தசையில் நிற்கிற தம்மை
பொடியும் படி யானவர்களுடைய -உபாயத்வ அத்யாவச்ய ஞ்ஞானாத்தின் மேலே –
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே -என்றும் ,
மனசி விலச தாஷ்ணா பக்தி சித்தாஞ்சநேன -ஸ்ரீ குணரத்னகோசம் –12-– என்கிறபடியே
சித்தாஞ்சனம் போலே கூடார்தத்ததை பிரகாசிப்பதாய்-
பிராப்ய வைலஷண்யத்தை விஷயீகரித்ததான பக்தியை உபதேச முகேன
உண்டாக்குகிறார் அஞ்சாம் பத்தில் என்கை-

(உபாய அத்யாவசாயத்தில் இருந்த தாய்மார் போல்வார் -முன்பே திருந்தி இருந்தவர் -இவனே ப்ராப்யம் என்று துடிக்க –
அது உபாய கோடியில் இல்லை -ப்ராப்ய த்வரையே -என்று அறியும்படி பக்தி அஞ்சனம் இடுகிறார் என்றவாறு )

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –222–

September 29, 2018

(த்வய உத்தர அர்த்தம் முதல் மூன்றால் -பூர்வ அர்த்தம் அடுத்த மென்றால் புருஷார்த்தம் –
முதல் மூன்றால் -ஹிதம் அடுத்த மூன்று பாத்தாள் -நாலாம் பத்து நியந்த்ருத்வம்
தாய் மகள் தோழி-மூன்றுமே உண்டு நான்காம் பத்தில் -பாலனாய் -மண்ணை இருந்து துழாவி -தீர்ப்பாரை யாம் இனி -இவை –
ஜீவ பர ஸ்வரூப மூன்றிலும் இதில் உண்டே -ஒன்றும் தேவும் பர ஸ்வரூபம் -ஏறாளும் -ஜீவாத்மா ஸ்வரூபம் -ஒரு நாயகமாய் விரோதி ஸ்வரூபம்
ஆழ்வார் திருக்குருகை- பொலிந்து நின்ற -பரே சப்தம் அருளிச் செய்கிறார் இதில்
ராமானுஜர் சமர்ப்பித்த ஒரு நாயகம் பாசுரம்

முதல் பதிகமும் -எட்டாம் பதிகமும் வைராக்யம் -விரக்தி பூர்வகமாக ஆச்ரயணத்தை ருசிப்பிக்கிறார் இதில்
ஒரு நாயகமாய் -ஐஸ்வர்ய கைவல்யம் விட -ஹித உபதேசம் –
இந்த உபதேசம் இவருக்கு பகவத் ப்ராவண்யம் வளர –முடியானே போலே -நடக்க முடியாததை –
ஒழிவில் காலத்தில் -கைங்கர்ய அபிநிவேசம் போலே –
தேச கால விப்ரக்ருஷ்டமான அபதானங்களை–பாலனாய் -தண்ணம் துழாய் ஆசைப்பட்டு —
மண் அளந்த தாளாளா வரை எடுத்த தோளாளா -தாளும் தோளும் காட்டினால் போதும் -திருமங்கை ஆழ்வார்–இவர் அந்த யுகத்துடன் சேவை
தேச கால விப்ரக்ருஷ்டம் என்று அறியாமல் –பாலனைப் போலே -மாலுமால் -தாய் பாசுரம் -அவனும் அப்படியே அருளிச் செய்ய –
பூசும் சாந்து என் நெஞ்சமே -அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே–ஸந்தோஷம் உன்மத்தம் -சற்றே நெகிழ நிற்க
தன்னிலை போய் -சம்பந்த சத்ருச பதார்த்தங்கள் -வெண்ணெய் காள மேகம் போல்வன –மண்ணை இருந்து துழாவி 4-4-தாய் பாசுரம் –
இவர் சத்தை பெற வைகுண்ட இருப்பை காட்ட -மங்களா சாசனம் -விடாயை வளர்க்கவும் தீர்க்கவும் கிருஷிகன் அவன் தானே –
இனி யார் நிகர் –சூழ் விசும்பு பின் இல்லாமல் போனதே -பட்டர்
தீர்ப்பாரை -அடுத்து -வெறி விலக்கு-தோழி பதிகம் -மோர் உள்ளதனையும் சோறோயோ–
சங்கதி ரேவ சங்கதி-அவன் அவருக்கு கொடுக்கும் அனுபவம் யார் அறிவார் –
மோகமே தேவலை உணர்த்தி படுத்தும் பாடு -அடுத்த பதிகம் -ஓலம் இட்டார் –நாராயணா என்று என்று
கோல மேனி காண வாராய் -கூவியும் கொள்ளாய்–
மந்திரங்களில் சுலபம் திரு மந்த்ரம் அத்யந்த சுலபம் -நாமம் -மூன்று எழுத்து உடைய பேரால் -கோவிந்தா –
திரு நாமம் வைபவம் தானே புடவை சுரந்தது
சதுரா சதுராக்ஷரி-ராமானுஜர் சாரதமம் –
அடுத்து ஏறாளும் -மகள் பாசுரம்–ஆத்ம ஆத்மீய வைராக்கிடம் -அவன் உபேக்ஷித்த எதுவும் வேண்டாம்
ந தேகம் ந பிராணன் ந ஸூ கம் –ராக்ஷஸே மத்யே -நஹி மே ஜீவிதா நஹி பூஷண –
சம்சார வெறுப்பால் –நண்ணாதார் முறுவலிப்ப –கொடு உலகம் காட்டேல்-லோக யாத்ரா வைராக்யம் -4-9-
சம்சாரிகளை திருத்த கூரத்தாழ்வான் -உபதேசிக்கிறார் என்பர் –
தவளை சர்ப்பம் வாயில் அகப்பட்டு கத்துகிறதே -ரக்ஷகர் இருக்கிறார் என்று அது அறிந்து தானே கத்துகிறது –
பரே சப்தம் காட்ட –ஒன்றும் தேவும் 4-10-அர்ச்சாவதார பரத்வம் -விஷயாந்தர ஆசை தேவதாந்த்ரத்தில் பரத்வ புத்தி தவிர்க்க -உபதேசம் –
புருஷார்த்த பல அந்ய ருசி தவிர்ப்பதே இதன் ப்ரமேயம் )

நாலாம் பத்தில் –

கீழ் சொன்ன வியாப்தி ஆகாச வியாப்தி போல் அன்றிக்கே -நிறம் பெறும்படி –
அந்த பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜனானாம் –ஆரணம் -3-20–என்றும் ,
ய ஆத்மா நமந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யம் -என்றும் –
சாஸ்தா விஷ்ணுர் அசேஷஸ்ய ஜகத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-20– -என்றும் –
சாஸ்தா சராசரஸ் யைக -இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களின் -பிரவ்ருத்தி நிவ்ருதிகள்-
ஸ்வாதீனமாம் படி -நியமித்து கொண்டு போருகையாலே –
சர்வ நியந்தாவாய் இருக்கிறவன் –

ஒழிவில் காலத்தில் -கைங்கர்ய அபிநிவேசம் போலே –
தேச கால விப்ரக்ருஷ்டமான அபதானங்களை -தத் தத் தேச கால விசிஷ்டமாக அனுபவிக்க வேண்டும் என்று –
அதி சாபலம் பண்ணின இவர்க்கு -காலோபாதியை கழித்து -சமகாலம் ஆக்கி அனுபவித்து –
இவருடைய இழவைத் தீர்த்து -இவருடைய கரண த்ரய வியாபாரத்தையும் போக்யமாகக் கொள்ள –
அந்த பிரணயித்வத்திலே தோற்று –

விரஹ தசையில்-சத்ருச பதார்த்தங்களையும் -சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகக் கருதும்படி பித்தேறி –
தேச விசேஷத்தில் அனுபவத்தை ஆசைப் பட்டு கூப்பிட –(4-4-)
அவ் இழவு தீரும்படி –
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணு அசிந்தியாத்மா பக்தைர் பாகவதஸ் ஸஹ –
இத்யாதிப் படியே –தேச விசேஷத்தில் பெரிய பிராட்டியாரும் தானுமே போக்தாக்களாய் இருக்கும் இருப்பைக் காட்டி
அனுபவித்தாப் போலே -பிரத்யஷமாம் படி -அனுபவிப்பிக்க அனுபவித்து –(4-5-)
இப்படி முக்த போக்யதை மானசமாக பிராபித்து –அதுக்குப் பலமான
தேவதாந்த்ரங்களில் வைராக்யதை உடையரான இவர் –

ஐஸ்வர்ய கைவல்யங்களின் அல்ப அஸ்திரத்வ சாவதிகத்வாதி -தோஷங்களையும் –
(அல்ப அஸ்திரத்தவாதி தோஷங்கள் -4-1-ஒன்றும் தேவும் / தேவதாந்த்ர வைராக்யம் -4-6-/
ஆத்ம ஆத்மீய வைராக்யம் -4-8-/மூன்றையும் சேர்த்து அருளிச் செய்கிறார் )
நிந்த்த்ய பதார்த்தங்களாலே சூத்திர தேவதா பஜனம் பண்ணுமத்தின் நிஹீததையும் –
ப்ரசம்சா பர வாக்யங்களாலே சொல்லப்பட்டு –
பகவத் விபூதி பூதராய் இருக்கச் செய்தே அவனோடு விகல்ப்பிக்கலாம் படி அவன்
கொடுத்த ஐஸ்வர்யத்தை உடையராய் இருக்கிற பிரம ருத்ராதிகளுடைய அஞ்ஞனாதி களையும் –
பாஹ்ய குத்ருஷ்டிகள் மதங்களின் தமோ நிஷ்டதையும் -வெளி இட்டு –(4-10-)
தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்து தத் பலமும் கை கண்டிகோள் –
ஜகன் நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலே சர்வேஸ்வரனே ரஷகன் –
அல்லாதார் அடையவம் -தத் ரஷ்ய பூதர் – என்னும் அர்த்தத்தை சாஸ்திர முகத்தால்
கண்டு வைத்தும் தேற மாட்டுகிறிலிகோள் –

இப்படி நீங்கள் தேறாமைக்கு அடி -அவன் இட்ட வழக்கான -பிரகிருதி சம்பந்தம் –
தத் விமோசன உபாயமும் -அவன் திரு அடிகளில் ஆஸ்ரயணீயம் என்று அறிந்து –
தத் ஆஸ்ரயணீயத்தைப் பண்ணி இத்தை தப்பப் பாருங்கோள் –
அவன் திரு அடிகளில் கைங்கர்யமே உங்களுக்கு சீரிய புருஷார்த்தம் என்று –
பிரயோஜனாந்தர -தேவ தாந்திர -விரக்தி -முன்னாக -பரதேவதையும் பரம பிரயோஜனமும் அவனே –
அவன் விஷயத்தில் கைங்கர்யமே -என்று உபதேசித்து
பகவத் ஆஸ்ரயணீயத்தை ருசிப்பிக்கிறார் என்கிறார்-

—————————————-

1 -ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர்கொள் வானத்தும் ஆயே
என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா –
ஒழிவில் காலத்துக்கு சேர -பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின
சாபலத்துக்கு சேர -சம காலமாக்கிப்
2-போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே
காதல் மையல் ஏறிய பித்தாய்
3-தேச தூரத்துக்குக் கூவியும் கொள்ளாய் என்றது
தீர கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட
வீவில் இன்பம் கூட்டினை என்று முக்த போக மானச
ப்ராப்தி பலமான தேவதாந்தர ஆத்ம ஆத்மீய லோக யாத்ரை
ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர்
உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன்
என்ன உடையரானவர்
4-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ
அல்ப அஸ்த்ரத்வ சாவாதிகத் வாதிகளையும்
5-ஆடு கள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற
நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும்
நிஹீநதையையும்
6-பேச நின்ற தேவாத ஞான சக்தி
சாபேஷத்வாதிகளையும்
7-இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி
மத தமோ நிஷ்டததையும் சொல்லி ஓடிக் கண்டீர்
8-கண்டும் தெளிய கில்லீர் அறிந்து ஓடுமின்
ஆட் செய்வதே உறுவது ஆவது என்று
விரக்தி பூர்வகமாக ஆச்ரயனத்தை ஆஸ்ரயணத்தை
ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில் —

————————————————-

1 -ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர் கொள் வானத்தும் ஆயே
என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா –
மருகலில் ஈசனை –4-1-10-
ஈசன் ஞாலம் உண்டுமிழ்ந்த–4-3-2-
ஈசன் பாலோரவம் பறைதல் என்னாவது இலங்கியர்க்கே -4-10-4–என்று
நியந்தரு வாசக சப்தத்தாலே சொல்லும் படி –

ஏர் கொள் ஏழு உலகமும் துன்னி முற்றுமாக நின்ற சோதி ஞான மூர்த்தியாய் -4-3-8–என்றும்
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான்-4-5-9- – என்றும்
ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே -4-9-7–என்கிற
கீழில் பத்தில் சர்வ விஷயமாகச் சொன்ன வ்யாப்தி -ஆகாச வியாப்தி போல் ஆகாமே நிறம் பெரும்படியாக –
(நியந்த்ருத்வம் உடன் கூடிய வியாபகத்வம் நாலாம் பத்தில் -கீழ் பத்தில் சர்வ விஷய வியாப்தி –
ராஜா போலே நியமனம் -ஆகாசம் போலே வியாப்தி -உண்டே இவனுக்கு )
வீற்று இருந்து எழ உலகும் தனிக் கோல் செல்ல-4-5-1- -என்கிறபடி
உபய விபூதியும் தன் நியமனத்திலே ஆம் படி -தன் ஆக்ஜை நடத்துகிற
சர்வ நியந்தாவான சர்வேஸ்வரன்

ஒழிவில் காலத்துக்கு சேர -(பாலனாய் ஏழு உலகு 4-2–திருவாய் மொழியுடைய தாத்பர்யம் இது முதல் )
பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின சாபலத்துக்கு சேர -சம காலமாக்கி
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -என்று
அடிமை செய்யப் பாரிக்கிற அளவில் சர்வ தேச சர்வ அவஸ்தைகளோபாதி
சர்வ காலத்திலும் வேணும் என்று கீழ் கழிந்த காலத்தில் அடிமையையும்
ஆசைப் பட்டதுக்குச் சேரும் படி –
பாலனாய் ஏழு உலகு உண்டு -தொடங்கி –
தேச கால விப்ரக்ருஷ்டங்களான அவனுடைய அபதானங்களை –
தத் தத் தேச கால விசிஷ்டமாக அனுபவிக்கையில் அபிநிவேசத்தாலே –
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர் பாதங்கள் மேலணி
பைம் பொற் துழாய் என்றே ஒதுமால் எய்தினள்-4-2-6–என்று
பூர்வ காலீன போகங்களையே வாய் புலற்றும் படி பிராந்தியை அடைந்த
சாபலத்துக்கு அனுரூபமாக காலத்தினுடைய பேத வ்யவஹாரத்துக்கு
உடலான உபாதியைக் கழித்து ஒரு போகி ஆக்குகையாலே -சம காலமாக்கி அனுபவிப்பித்து

—————

2-(கோவை வாயாள்-திருவாய் மொழி தாத்பர்யம் இது முதல்)
போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே(-4-3)- காதல் மையல் ஏறிய பித்தாய்(-4-4-)தீரக
பூவை வீயா நீர் தூவி போதால் வணங்கேனேலும் நின்
பூவை வீயா மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே – 4-3-1-என்று தொடங்கி –
ஏக மூர்த்திக்கே பூம் தண் மாலை கொண்டு உன்னை போதால்
வணங்கேனேலும் நின் பூம் தண் மாலை நெடு முடிக்கு புனையும் கண்ணி எனது உயிரே –4-3-4-
என்று விரோதி நிரசனம் பண்ணுகிற அவ்வவ காலங்களிலே உதவி புஷ்பாதி உபகரணங்களை
கொண்டு சிசிரோபசாரம் பண்ணப் பெற்றிலேன் ஆகிலும் -விலஷண விக்ரக யுக்தனாய் -சர்வேஸ்வரனாய்
இருக்கிறவன் -என்னுடைய கரண த்ரய வியாபாராதிகளையே தனக்கு போக்ய வஸ்துகள்
எல்லாமாகக் கொள்வதே ! என்று இவர் தாமே ஈடுபடும்படி பண்ணி –

அவ்வவோ காலங்களில்
தனக்கு உதவி அடிமை செய்யாத இழவை அவன் தீர்த்த பிரணயித்வ குணத்திலே –
காதல் மையல் ஏறினேன் -என்கிறபடியே பிரேமம் மேல் இட்டு அறிவு கலங்கினவாறே –
வெள்ளக் கேடாக ஒண்ணாது என்று அவன் அல்பம் பேர நிற்க
(மண்ணை இருந்து துழாவி -திருவாய் மொழி சாரம் இது முதல் )-அவனோடு சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகவே கருதி பேசும்படியாக
பேய்ச்சி முலை சுவைத்தார்க்கு என் பெண் கொடி ஏறிய பித்தே -4-4-6-என்னும்படி பித்தேறி –

———————————————

3-(சீலமில்லாச் சிறியேனேலும்-4-7–பொருள்)தேச தூரத்துக்கு கூவியும் கொள்ளாய் என்றது
தீரக் கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட
தேச விசேஷத்தில் அனுபவத்தை ஆசைப் பட்டு தேச தூரத்தைப் பற்ற –
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே-4-7-1–என்று
உன் வடிவு அழகை இங்கே வந்து அனுபவிப்பித்து அருளுதல்-
என்னை அங்கே அருளப் பாடு இடுதல் -செய்கிறிலை என்று -கூப்பிட்ட இழவும் தீர –

(நண்ணாதார் முறுவலிப்ப-4-9-சாரம்)
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு -4-9-10-என்று
நித்ய விபூதியிலே பெரிய பிராட்டியாரும் நீயுமே போக்த்தாக்களாய் -அவ் விபூதியில்
உள்ளார் அடைய போகோ உபகரண கோடியாம்படி கண்டு வைத்த நேர்பாட்டை நான் கண்டேன் என்னும்படி –
கீழ் காலோ உபாதியை நீக்கி சமகாலம் ஆக்கினார் போலே –
அவ் விபூதியில் அனுபவத்தையும் இங்கு
இருந்தே அனுபவிக்கலாம் படி ஒரு போகியாக பிரகாசிப்பிக்க-
(4-5-கால உபாதி கழிந்ததால் முன்னும் பின்னும் திருவாய் மொழி பதிகங்கள் இருக்குமே )

(வீற்று இருந்து ஏழு உலகம் சாரம்)-வீவில் இன்பம் கூட்டினை– என்று முக்த போக மானச ப்ராப்தி பலமான
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவியே -என்றும் ,
கூட்டரிய திருவடிகள் கூட்டினை நான் கண்டேனே –4-9-9-என்று
அவனைக் கிட்டி நிரதிசய ஆனந்தியாகப் பெற்றேன் –யாவர் சிலர்க்கும் தம் தம்மால் சேர்த்து கொள்ள அரிய
திருவடிகளை நான் சேரும்படி என்னைச் சேர்த்துக் கொண்டாய் – நான் அனுபவிக்கப் பெற்றேன் என்ற
அது மானச அனுபவம் ஆகையாலே -இப்படி முக்தருடைய போகமான-
(இதுவே -இந்த ருசியே புருஷார்த்த பிராப்தி )
அவ் அனுபவத்தில் மானசமாக உண்டான பிராப்திக்குப் பலமாக –

தேவதாந்திர ஆத்மா ஆத்மீய லோக யாத்ரை ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர்
உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன் என்ன உடையரானவர்
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள்–4-6-10–என்று தன் நெஞ்சாலே மதித்து வேறு ஒரு
தெய்வத்தை தொழுது அறியாள் என்னும் படி -தேவதாந்தரங்களில் வைராக்யத்தையும் –
உயிரினால் குறைவிலமே -4-8-10–என்றும் ,
உடம்பினால் குறைவிலமே–4-8-9- -என்னும் படி ஆத்ம ஆத்மீயங்களில் வைராக்யத்தையும் –
கொடு உலகம் காட்டேல்—4-9-7-என்னும் படி லோக யாத்ரையில் வைராக்யத்தையும் -,
வேட்கை எல்லாம் விடுத்து -4-9-9–என்று சமுதாயவேனவும்
ஐம் கருவி கண்ட இன்பம் ஒழிந்தேன் சிற்று இன்பம் ஒழிந்தேன்—4-9-10-என்று ப்ருதக்தவேனவும்
சொல்லும்படி ஐஸ் வர்யத்திலும் அஷர சப்த வாச்யமான ஆத்ம அனுபவ கை வல்யத்திலும்
உண்டான வைராக்யத்தையும் உடையரான இவர்

———————————————————-

(இது முதல் பர உபதேசம் செய்து அருளியவை )
4-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ அல்ப அஸ்த்ரத்வ சா வாதிகத்வாதிகளையும்
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் -4-1-1–என்று தொடங்கி-
ராஜ்ஜியம் நாம மகா வியாதி ரசிகி த்ச்யோ விநாசன
பிரதாரம் வா ஸூதம் வாபி த்யஜந்தி கலு பூமிபா – என்கிற ராஜ்ய ஐஸ்வர்யத்தின் அல்பத்தையும் –
குடி மன்னு மின் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் 4-1-9–என்று
தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யே
மர்த்த்ய லோகம் விசந்தி–ஸ்ரீ கீதை-9-21 -என்கிற ஸ்வர்க்க அனுபவத்தின் அஸ்த்ரத்வத்தையும் –
இருகலிறப்பு-4-1-10- -என்ற ஆத்ம அனுபவத்தின் சாவதிகத்வத்தையும் –
ஆதி சப்த்தாலே –
துக்க மிஸ்ரத்வ -துச்சாததத்வ-நிச்சாரத்வங்களை சொல்லுகிறது-

——————————————————–

(தீர்ப்பாரை 4-6–சாரம் )
5-ஆடு கள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு
இழைத்தாடும் நிஹீநதையையும்
த்ரவ்யம் நிந்த்த்ய ஸூராதி தைவத மதி சூத்ரஞ்ச பாஹ்யாகமோ
த்ருஷ்டிர் தேவலகாச்ச தேசிக ஜனா திக் திக் திகேஷாம் க்ரமம்-என்கிறபடி
அங்கோர் ஆடும் கள்ளும் –4-6-7-
அங்கோர் கள்ளும் இறைச்சியும் –4-6-3-
கரும் சோறும் மற்றை செஞ்சோறும்-4-6-4- -என்கிற
சூரா மாம்ஸாதி நிந்த்ய பதார்த்தங்களைக் கொண்டு –
நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம்-4-6-2- -என்கிற
சூத்திர தேவதைகளுக்கு
களன் இளைத்து-4-6-4- -என்று
அவ்வோ தேவதைகள் சந்நிதி பண்ணும் ஸ்தலங்களிலே பலி இட்டு –
நீர் அணங்கு ஆடுதல் கீழ்மை-4-6-8- -என்று
தைவா விஷ்டராயாடுமதின் தண்மையும்

—————————————————-

(ஒன்றும் தேவும்-4-10–சாரம் )
6-பேச நின்ற தேவதா அஜ்ஞான அசக்தி சாபேஷத்வாதிகளையும்
தத குரோத பரீ தேன சம்ரக்த்ன யநேனச வாமாம்குஷ்ட ந
காக்ரேனஸ் சின்னம் தஸ்ய சிரோ மயா –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் ,
யச்மா தன பராதச்ய சிரச் சின்னம் த்வயா மம
தச்மச் சாபா சமாயுக்த கபாலீ த்வம் பவிஷ்யசி–ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும்
தத்ர நாராயணா ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித—ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் ,
விஷ்ணு பிரசாததாத் சூஸ்ரோணி கபாலம் தத் சஹச்ரதா –
ஸ்புடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ன லப்தம் தனம் யதா –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் சொல்லுகிறபடியே –
பிரம்மா ருத்ரனால் தலை அறுப்புண்டு -சோச்யனாய் ருத்ரனை சபிக்க -ருத்ரன்
குருசிரச் சேதநத்தாலே பாதகியாய்-பிரம சாபம் தன்னால் போக்கிக் கொள்ளப் போகாமையாலே –
ஸ்ரீய பதியான சர்வேஸ்வரனை அர்த்திக்க -அவன் சாபத்தை போக்கினான் ஆகையாலே –
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே
கபால நன் மோக்கத்து கண்டு கொண்மின் -4-10-4–என்று வேதத்தில் பர சம்சா பரமான
வாக்யங்களாலும் –ராஜச தாமச புராணங்களாலும் -பரத்வேன பேசலாம் படி –
முட்டுப் பொறுத்து நின்ற -பிரம ருத்ராதிகள் ஆகிற தேவதைகள் உடைய அன்யோன்யம் –
தங்களுக்கு வருகிற கிலேசம் அறியாமையும் -அந்த கிலேசம் தங்களால் தவிர்த்துக் கொள்ள
மாட்டாமையும் -அதைத் தவிர்த்து கொடுக்கைக்கு ஈஸ்வரன் வேண்டுகையும் -ஆகிற
அஞான அசக்தி சாபேஷ்த்வங்களையும்–
ஆதி சப்ததாலே கர்ம வஸ்யதையும்

—————————————————-

7-இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டததையும் சொல்லி
இலிங்கத்திட்ட -4-10-5–என்றும் ,
விளம்புமாறு சமயமும் -4-10-9–என்கிற பாட்டுகளில் சொல்லுகிற பாஹ்ய குத்ருஷ்டி மதங்கள் ஆவன
யன்மயம் ச ஜகத் சர்வம்—ஸ்ரீ விஷ்ணு புராணம்–1-1-5- என்ற பொதுவிலே பிரசன்னம் பண்ண –
விஷ்னோஸ் சகாசாதுத்பூதம் ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-1-41–என்று கோல் விழுக்காட்டாலே-உத்தரமாகை அன்றிக்கே –
எருமையை ஆனையாக கவி பாடத் தர வேணும் என்பாரைப் போலே –
லிங்கம் என்று ஒரு வியக்தியை நிர்தேசித்து இதுக்கு உத்கர்ஷம் சொல்லித் தர வேணும் என்று –
கேட்கிறவனும் தமோ பிபூதனாய் கேட்க-சொல்லுகிறவனும் தமோ பிபூதனாய் சொல்ல –
இப்படி பிரவர்த்திகமான இலிங்க புரணாதிகள்-குத்ருஷ்டி ஸ்ம்ருதிகளும் – சிலவற்றைச் சொல்லா நின்றால்-
தாங்களும் சில தர்க்கங்களைச் சொல்லா நிற்கும் இத்தனை போக்கி -பிராமண அனுகூல தர்க்கம்
அல்லாமையாலே -கேவலம் உக்தி சாரமாய் இருக்கிற பாஹ்ய சமயங்கள் ஆறும் என்கிற –
ஷபணக பௌத்தாதிகளுடைய ஸ்ம்ருதிகளும் ஆகையாலே –
ய வேத பாஹ்யாஸ் ஸ்ம்ருதய யாச்ச காச்ச குத்ருஷ்டைய தாச் சர்வா
நிஷ்ப்பலா ப்ரேத்ய தமோநிஷ்டா ஹி தா ஸ்ம்ருதா –மனு ஸ்ம்ருதி-12-95-என்கிறபடியே
அவற்றினுடைய தமோ நிஷ்டைதையும் சொல்லி –

ஓடிக் கண்டீர்
ஓடியோடி -4-10-7–என்று தொடங்கி
வழி ஏறிக் கண்டீர் -4-10-7–என்று ,
கதாகதம் காமகாமா லபந்தே–ஸ்ரீ கீதை-9-21- -என்கிற படியே ஸ்வர்க்க நரகங்களிலே போவது –
கர்ப்பதேற வருவதாய்க் கொண்டு -அநேக ஜன்மங்களில் பிறந்து -தேவதாந்தரங்களை
திரிவித கரணங்களாலும் பல பர்யாயம் தத் ஆஸ்ரயணத்தைச் சொல்லுகிற சாஸ்திர
மார்க்கத்தாலே ஆஸ்ரயித்து -அவ் ஆஸ்ரய பலமும் கண்டீர்கள்

———————————————————

8–கண்டும் தெளிய கில்லீர்-4-10-3-
இவனுடைய ஜகன் நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களை -சாஸ்த்ரத் த்வாரா பிரத்யஷித்தும் –
இவனே ஆஸ்ரயணீயன் என்று தெளிய மாட்டுகிறீலி கோள் –

அறிந்து அறிந்து ஓடுமின்-4-10-6-
உங்களை இங்கனே வைத்தது -சதசத் -கர்மகாரிகளான ஜந்துக்கள் அவ்வோ கர்ம
அணுகுண பலங்களை அனுபவிக்கக் கடவதான சாஸ்திர மரியாதை -அழியும் என்று –
அது தான் -மம மாயா துரத்யயா –ஸ்ரீ கீதை-7-14- என்று பிரக்ருதியை இட்டு -அவன் மயக்கி வைத்தபடி காணுங்கோள்-
ஆன பின்பு அது அவன் மாயை என்று அறிந்து –
மா மேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே -என்கையாலே -மாயா தரண உபாயமும் –
அவன் திருவடிகளைப் பற்றுகை என்று அறிந்து -அவனை ஆஸ்ரயித்து இந்த மாயையை தப்பப் பாருங்கோள் –
( நாட்டினான் தெய்வம் எங்கும் அருளால் காட்டினான் திருவரங்கம் நல்லதோர் -அருள் தன்னால்–திருமாலை )

ஆட் செய்வதே உறுவது ஆவது என்று
நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே உறுவதாவது -4-10-10–என்கையாலே –
நிரதிசய போக்யமான சேஷ்டிதத்தை உடையவனுக்கு அடிமை செய்வதே
இவ் ஆத்மாவுக்கு சீரியதும் ஸூசகமும் -என்று இப்படி உபதேசித்து

விரக்தி பூர்வகமாக ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில் .
அதாவது –
பிரயோஜனாந்தர-4-1–தேவதாந்திர-4-6- -பாஹ்ய குத்ருஷ்டி மதங்களில் –4-10-
விரக்தி பூர்வகமாக –
ஜகத் காரணத்வாதிகளான பிரமாண உப பத்திகளாலே
பகவத் சமாஸ்ரயனத்தை சம்சாரிகளுக்கு ருசிப்பிக்கிறார் என்கை-

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –221–

September 29, 2018

(நாயிகா பாவம் இல்லாத ஒரே பத்து –
த்வய உத்தர வாக்கியம் உள்ள சிறப்பு இதில் -ப்ராப்ய பிரதானம் -3-3-
நாம சங்கீர்த்தனம் -3-5-
அர்ச்சா வைபவம் -3-6-
பாகவத பிரபாவம் -3-7-
கரணங்கள்-மற்றவை ஆசைப்படும் -3-8-
வாய் படைத்த பயம் அஸேவ்ய சேவை -3-9
ஆழ்வார் பெருமை அவனுக்கும் மேலே -3-10–ஆழ்வார் பிரபாவம் -தன் பாழியை அருளிச் செய்கிறார் இதில் –
முதல் பத்து-ஒன்பதும் பத்தும்–மூன்றும் மகள் பாசுரம் மட்டுமே
இரண்டாம் பத்து-ஐந்தாம் பத்து மகள் தாய்
நான்காம் பத்து ஆறு -மூன்றுமே உண்டே
எட்டாம் -மக்கள் தோழி இரண்டும் உண்டே -தாய் பாசுரம் இல்லை
வியாபகத்வம் -குணம்

அழகர் திரு மேனி காட்ட–3 -1-அதையும் அனுபவிக்க முடியாமல் -கலங்க-3-2-
ப்ராப்யம் கைங்கர்யம் பிரார்த்திக்க -வடக்கு திருமலை காட்ட 3-3-
சர்வாத்மபாவம் காட்டி அருள -3-4-என்ன சொல்லிக் கூப்பிடுவேன் -கண்ணனைக் கூவுமாறு அறிய மாட்டேன் –
அன்புள்ளவரை ஆதரித்தும் -அன்பு இல்லாதாரை நிந்தித்தும் -3-5-திரு நாம சங்கீர்தன பிரபாவம் –
இவர்களையும் ஈடுபடுத்த அர்ச்சாவதார பிரபாவம் -3-6-இதம் பூர்ணம் — சர்வம் பூர்ணம் ஸஹோம் –
ஸுலப்யம் மூன்று நிலைகள் -1-3 /-2-8-/-3-6-பத்துடை அடியவரிலும் 1-3–அணைவது அரவணை -2-8–மேலிலும்
வெளி இட்ட அவதார சௌலப்யம் பரத்வ ஸ்தாநீயனாம் படி
அன்று தேர் தடவிய பெருமான் கனை கழல் காண்பது -என்று கொல் கண்களே -பாதரேகை அடியார்கள் –
திருவடி ஸ்தாநீயர்கள் பயிலும் சுடர் -3-7-ப்ராப்யம் ஸ்வாமி புருஷார்த்தம் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -இதுக்கு அங்கம் –
சாது சமாஹம் தூண்ட அடுத்து -கரணங்கள் மற்ற கரணங்களின் கார்யம் ஆசைப்பட்டு -3-8-
வாக்கு சிலர் அஸேவ்ய சேவை –சொன்னால் விரோதம் -3-9-உபதேசம் –
சன்மம் பல பல செய்து -குறைவிலனே -முட்டிலேனே -பரிவிலனே -இடரிலனே-துயரிலனே -துக்கமிலனே -தளர்விலனே -கேடிலனே–3-10-

ஞானம் முதல் பத்தில் -அடுத்து -இரண்டாம் பத்தில் -காரணந்து த் யேய -அந்தர் கத குண உபாசனம் —
மூன்றாம் பத்தில் கைங்கர்யம் ஸ்வ வ்ருத்தி இதில் –
ஞப்த்தி-பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து –மோக்ஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து – )

சூர்ணிகை -221..

மூன்றாம் பத்தால்-
தத் த்ருஷ்ட்வா ததேவ அனுப்ராவிசத் -தைத்ரியம்-என்கிறபடியே –
கார்ய பூத சேதன அசேதனங்களை அடைய வியாபித்து -தத் கத தோஷை ரசம் அஸ்ப்ருஷ்டனாக இருக்கையாலே
சர்வ வியாபனான சர்வேஸ்வரன்
கீழில் பத்தில் –
இவர் உபாய அனுகுணமாக நிஷ்கர்ஷித்த மோஷத்துக்கு பலமான
ஸ்வ விக்ரக அனுபவத்தை இவரைப் பண்ணுவிக்க –
இவர் அனுபவித்து தரித்து –

( முந்நீர் 3-2-தரிக்காமல் பட்ட வியசனம் –நிலைபெற்றது என் நெஞ்சம்-3-2-10–என்றதை இங்கு தரித்து -என்கிறார் )

அவ் அனுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷத்தால்
சர்வ வித கைங்கர்யங்களும் செய்ய வேண்டும்படியான அபிநிவேசத்தை உடையராய்
தம் அபிநிவேச அனுகுணமாக -அவன் காட்டிக் கொடுத்த
அவனுடைய சர்வாத்ம பாவத்தைப் பேசி –
(சர்வவித ஸமஸ்த கைங்கர்யம் பெற்றுக் கொள்ளவே – சர்வாத்மா பாவம்-என்று காட்ட)
அத்தால் வந்த ப்ரீதியின் உகளிப்பை உடையராய்-

அந்த பிரீதி அவன் அளவில் பர்யவசியாதே –
பாகவத சேஷத்வத்தில் -எல்லை அளவும் சென்று –
அந்த பாகவதர்களுக்கு நிரூபகமான -பகவத் வைலஷண்ய அனுசந்தானத்தாலே –
ஒன்றின் வ்ருத்தியை ஓன்று ஆசைப் படும் படி -சேதன சமாதியை அடைந்த –
கரண க்ராமமும் தாமும் தனி தனியே அனுபவிக்கும் வேண்டும் பெரு விடாயை உடையராய் –
இதர ஸ்தோத்ரத்துக்கு அனர்ஹா கரணராய்-அவ்வளவும் அன்றிக்கே –
பகவத் ஸ்தோத்தரத்துக்கு அர்ஹா கரணருமாய்
பகவத் அனுபவத்துக்கு தமக்கு ஒரு பிரதி கதி தொடக்க மானவையும் அற்று
நிரதிசய ஆனந்த யுக்தரானவர் –

புண்டரீ காஷனாய் -ஸூரி சேவ்யனானவனை நம்மால் ஆஸ்ரயிக்கப் போமோ -என்று
சம்சாரிகள் அஞ்சி கை வாங்காமல் -மேல் விழுந்து ஆஸ்ரயிக்கும் படி –
கீழ் இரண்டு பத்தாலும் உபதேசித்த -அவதார சௌலப்யம் –
பரத்வ ஸ்தாநீயமாம் படி அர்ச்சாவதார சௌலப்யத்தை உபதேசித்து –
அர்ச்சிராதி கதியாலே பரமபதத்தை ப்ராபிக்கும் அவனை ஒழிய
இதர ஸ்தோத்ரத்திலே தாழ இழிகை நிஷ் பிரயோஜனம் –
ஆன பின்பு நீங்கள் – சகல பல பிரதனுமாய் -சாம்யா பத்தி பிரதனுமான –
அவன் விஷயத்திலே வாசிகமான அடிமை செய்யுங்கோள் என்று
நிஹீன வ்ருத்தியான இதர சேவையை நிவர்ப்பித்து –
தம்முடைய விருத்தியான வாசிக கைங்கர்யத்தில் மூட்டுகிறார் என்கிறார் ..

1-முழுதுமாய் எங்கணும் ஒழிவற அருவாகி நின்று
தோய்விலனாம் சர்வ வியாபகன் தீர்ந்த அடியார்களை
தாளிணைக் கீழ் கொள்ளும் தன் படிக்கும்
2-நீ தந்த மா மாயப் புணர்வினை
பிறப்பு அழுந்தி அலமருகின்றேன்
வேரற வரிந்து எந்நாள் எங்கு வந்து
தலைப் பெய்வன் என்று கழித்து
புகும் தம் காதலுக்கும் சத்ருசமாக
கண்டு கொள் என்னும்
3-ஊனமில் மோஷ பலமான முடிச் சோதியில்
அனுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று
அவச்சேதம் அற்ற அடிமை செய்ய வேண்டும் படி
சர்வ ஆத்ம பாவத்தைப் புகழ்ந்து
4-சொல்லிப் பாடி ஏத்திப் பிதற்றி
எழுந்தும் பரந்தும் துள்ளிக் குனித்து
தடு குட்டக் கும்பிடு நட்டமிட்டு
சிரிக்கக் குழைந்து நையும் ப்ரீதி
உகள தம் அடியார் என்ன உடன்
கூடும் சாத்யம் வளர
5-பை கொள் பாம்பு போலே
இந்திரிய வ்ருத்தி நியம மற
பாடவந்த கவி அன்றிக்கே
படைத்தான் ஸ்லோக க்ருத்தாய்
6-குறை முட்டுப் பரிவு இடர் துயர்
துன்பம் அல்லல் துக்கம் தளர்வு
கேடுகள் இன்றி அம்ருத ஆனந்த மக்நரானவர்
செய்ய தாமரைக் கண்ணன்
அமரர் குல முதல் என்று அஞ்சாதபடி
எளிவரும் இணைவனாம் என்றவை
பரத்வமாம் படி
7-அவனாகும் சௌலப்ய காஷ்டையை காட்டி
வழியைத் தருமவன் நிற்க இழிய
கருதுவது என்னாவது வேண்டிற்று
எல்லாம் தரும் –தன்னாகவே கொள்ளும்
கவி சொல்ல வம்மின் என்று
8 -முக்த ஐஸ் வர்யத்தை முன்னிட்டு
ஸ்வ விருத்தியை மாற்றி
ஸ்வ விருத்தியில் மூட்டுகிறார்
மூன்றாம் பத்தில் ..

1-முழுதுமாய் எங்கணும் ஒழிவற அருவாகி நின்று தோய்விலனாம் சர்வ வியாபகன்-
அதாவது
முழுதுமாய் முழுதி யன்றாய்–3-1-8-என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய் -3-2-4–என்றும் ,
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற -3-2-7–என்றும் ,
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும் –3-10-10-என்றும்-
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன் உணர்வின் மூர்த்தி-3-4-10- -என்றும்
தேச கால வஸ்துக்களால் பர்ச்சேதிக்க ஒண்ணாதபடி கார்யபூத சகல சேதன அசேதனங்களையும் வியாபித்து –
அநஸ்நன் அந்யோ அபிசாக சீதி-(இவற்றில் வேறான பர ப்ரஹ்மம் கர்மபலன்களை அனுபவிக்காமல்
அதிகமாகப் பிரகாசிக்கிறான் )கடோபநிஷத் -என்கிறபடியே
(பிரவேச வைலஷண்ய ஹேது -கிருபையால் அவன் பிரவேசம் -கர்மத்தால் ஆத்மா
சிறைக்குள் கைதியும் அரையனும் இருப்பது போலே )
தத்கத தோஷை ரச அஸ்ம்ப்ருஷ்டனாய் இருக்கையாலே வியாபகனான சர்வேஸ்வரன்

தீர்ந்த அடியார்களைத் தாளிணைக் கீழ் கொள்ளும் தன் படிக்கும் –
அதாவது
தீர்த்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல-3-5-11 -என்று
பிராப்ய பிராககங்கள் இரண்டும் தானேயாக ஆஸ்ரயித்த-( அத்யவசித்த-)ஆஸ்ரிதரை –
சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்
தன்மை பெறுத்தி தன் தாளிணைக் கீழ் கொள்ளும் அப்பன் -3-7-7–என்று
ஜன்ம பரம்பரைகளில் புகாதபடி ரஷித்து ஆரப்த சரீர அவசானத்திலே –
அர்ச்சிராதி மார்க்கத்தில் -தேச விசேஷத்தில் கொண்டு போய் –
ஸ்வ ஸ்வரூப ப்ராப்தியைப் பண்ணிக் கொடுத்து -பாத உபதானத்தோபாதி –
தன் திருவடிகளின் கீழ் இட்டுக் கொள்ளும் சேஷியான தன்னுடைய ஒவ்தார்யத்துக்கும்

2-நீ தந்த மா மாயப் புணர்வினைப் பிறப்பு அழுந்தி அலமருகின்றேன்
வேரற வரிந்து எந்நாள் எங்கு வந்து தலைப் பெய்வன் என்று கழித்து புகும் தம் காதலுக்கும்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வன் –3-2-1-
பல்மாயப் பல்பிறவியில் படிகின்ற யான் –3-2-2-
பொல்லா ஆக்கையின் புணர்வினை –3-2-3-
வினை யியல் பிறப்பு அழுந்தி –3-2-7-
கொடுவினை தூற்றுள் நின்று பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமருகின்றேன்-3-2-9- என்று
சிருஷ்டி காலத்தில் உன்னைப் பெறுகைக்கு உடலாக நீ தந்த சரீரத்தைக் கொண்டு உன்னை நான் பெறப் பெறாதே –
நான் அதன் வழியே போய் அனர்த்தத்தை சூழ்த்துக் கொண்டு -குண த்ரய பேதத்தால் -பலவகைப் பட்டு –
துரத்யயையான பிரகிருதி கார்யமான தேவாதி தேஹங்களில் அவஹாகித்து –
(நின் பல் மா மாயம் -மம மாயா துரத்யயா ஸ்ரீ கீதை–மாயை குண மயீ -சேர்த்து இருப்பதால் வியாக்யானம் -)
ஹேயமான சரீரத்துக்கு அடியாய் ஒன்றோடு ஓன்று பிணைந்து இருக்கிற கர்மம் அடியாக மீண்டும்
பாபத்திலே கொண்டு போய் மூட்டக் கடவதான ஜன்ம பரம்பரைகளில் அழுந்தி –
என்னால் அடி அறுக்கவும் அடி காணவும் ஒண்ணாதே –புகுர வழியும் தெரியும் ஒழிய –
புறப்பட வழி தெரியாத -பாபம் ஆகிற மிடைந்த தூற்றிலே அகப்பட்டு நின்று –
உன்னை பிராபிக்கைக்கு ஈடான வழி காணாதே -கூப்பிட்டு அலமாவா நின்றேன் –

வேரற வரிந்து எந்நாள் எங்கு வந்து தலைப் பெய்வன் என்று கழித்து புகும் தம் காதலுக்கும்
வினைகளை வேரறப் பாய்ந்து –3-2-1-
தொன் மா வல் வினைத் தொடர்களை முதலரிந்து -3-2-2–என்று –
அநாதியாய் -அபரிச்சேதமாய் -ஸ்வ யத்னம் நிவர்த்யம் அல்லாதபடி -அதி பிரபலமான
பாபங்களினுடைய அனுபந்தங்களை மறு கிளை வாராமல் வேரற்று போம் படி ஊசி
வேரோடே அறுத்து பொகட்டு –

எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவன் –3-2-1-
எங்கு வந்து அனுகிற்பன் –3-2-5-
எங்கு இனி தலைப் பெய்வன் -3-2-9–என்று
நான் உன்னை கிட்டுவதற்கு நாள் அறுதி இட்டு தரவேணும் –
நான் உன்னை எங்கே வந்து கிட்டக் கடவேன் –
இனிக் கிட்டுகை என்ற பொருள் உண்டோ -என்று சரீர சம்பந்தத்துக்கு நொந்து –
அதிலுண்டான அருசியோடே –

(வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை ஆய பெரும் புகழ் எல்லையிலாதன பாடிப் போய்)
காயம் கழித்து அவன் தாளிணைக் கீழ் புகும் காதல் 3-9-8–என்று
பகவத் குண அனுபவத்தோடு -கால ஷேபத்தைப் பண்ணி -சரீரத்தை விட்டு –
அவன் திருவடிகளின் கீழ் புக வேணும் என்னும்படியான சேஷ பூதரான தம்முடைய ஆசைக்கும் –

சத்ருசமாக கண்டு கொள் என்னும் இப்படியான இருவர் படிக்கும் தகுதியாக –
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே-3-9-9- -என்று ஈஸ்வரன் காட்டிக் கொடுக்கிற

3-ஊனமில் மோஷ பலமான முடிச் சோதியில் அனுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று
ஊனமில் மோக்கம் என்கோ-3-4-7- -என்று பிரகாரமான ஆத்ம அனுபவ மாத்ரத்தில்
அன்றிக்கே -ப்ரகாரி அளவும் செல்ல அனுபவிக்கையாலே -குறைவில்லததாய் –
ஸ்வரூப அனுரூபமாக -கீழில் பத்தில்–( 2-9-)அறுதி இட்ட -பரம புருஷார்த்த லஷண மோஷத்துக்கு
பலம் -பகவத் அனுபவ கைங்கர்யங்கள் ஆகையாலே –
( அனுபவமும் கைங்கர்யங்களும் இரண்டும் வேண்டுமே -அனுபவ காரித ப்ரீதி–ப்ரீதி காரித கைங்கர்யம் )
முடிச் சோதி -3-1–என்கிற திரு வாய் மொழியிலே அவன் வடி வழகையும் ஆபரண சேர்தியையும் அனுபவித்து –
அவை பரிசேதித்து அனுபவிக்க ஒண்ணாமையாலே -இது கரண சங்கோச நிபந்தனம் என்று நினைத்து –
இவர் படுகிற கிலேசத்தை – விஷய வைலஷண்ய நிபந்தனம் -என்று அறிவித்து -ஈஸ்வரன் நிவ்ருத்தமாக –
அவ் அனுபவத்தாலே –(கலை பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு )
நிலை பெற்றது என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே -3-2-10-என்று நித்ய வஸ்து சத்தை பெற்று

அவச்சேதம் அற்ற அடிமை செய்ய வேண்டும் படி
சத்தா கார்யமும் பலிக்க வேண்டுகையாலே –
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1-என்று –
தேச கால அவஸ்தா பிரகாரங்களை இட்டு -அவச்சேதியாபடி –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களும்
செய்ய வேண்டும் படியான அபிநிவேசத்தாலே –

சர்வ ஆத்ம பாவத்தை (நான்காம் பத்தின் பொருள் சர்வ வியாபகத்வம் ) புகழ்ந்து
தம்முடைய பாரிப்புக்கு ஈடாக தம்மை அடிமை கொள்ளும் படி கோலி –
அவன் காட்டிக் கொடுத்த -சர்வாத்ம பாவத்தை –
புகழில் நல் ஒருவனிலே –3-4-
பூதங்கள்- பௌதிகங்கள் -உஜ்ஜ்வலமான மாணிக்யாதிகள் -ரசவத் பதார்த்தங்கள் –
காநாதி சப்தராசிகள் -மோஷாதி புருஷார்த்தங்கள் -ஜகத் பிரதானரான பிரம ருத்ராதிகள் –
இவற்றுக்கு அடைய காரணமான பிரகிருதி புருஷர்கள் –
இவற்றை அடைய விபூதியாக உடையவனாய் –
இவற்றுக்கு அந்தராத்மாதயா வியாபித்து -தத்கத தோஷ -ரச அஸ்ம்ஸ்ப்ருஷ்டனாய்-
இருக்கிற படியைப் பேசி அவ் அனுபவத்தால் பிரீதராய்-
(புகழு நல் ஒருவன் குணம்–பொருவில் சீர் பூமி – விபூதி -பத்தாவது அத்யாயம் -கல்யாண குணம் -ஸ்வ அதீனம்–ஆளவந்தார் )

4-சொல்லிப் பாடி ஏத்தி பிதற்றி எழுந்தும் பரந்தும் துள்ளிக் குனித்துதடு குட்டக் கும்பிடு
நட்டமிட்டு சிரிக்க குழைந்து நையும் ப்ரீதி உகள
எம்மானைச் சொல்லிப் பாடி –3-5-1-
பண்கள் தலைக் கொள்ளப் பாடி –3-5-2-
முனிவின்றி ஏத்தி –3-5-6-
பேர் பல சொல்லிப் பிதற்றி –3-5-8-
எழுந்தும் பறந்தும் துள்ளாதார் –3-5-1-
ஏத்தி குனிப்பார்
தடு குட்டமாய்
கும்பிடு நட்டமிட்டு ஆடி –
உலோகர் சிரிக்க நின்றாடி –
நெஞ்சம் குலைந்து நையாதே
என்று வாசிக காயிக மானச வியாபாரங்களாலே களிக்கும் படி –
அந்த ப்ரீதி தலை மண்டி இட்டு செல்ல –

(அடுத்த செய்ய தாமரைக்கண்ணன்-3-6- -திருவாய் மொழியும் பர உபதேசம் என்பதால் இதன் பொருளையும்
சொன்னால் விரோதம் திருவாயமொழியின் பொருளுடன் மேலே அருளிச் செய்வார் –
ஆகையால் பயிலும் சுடர் ஒளி 3-7–தாத்பர்யம் இங்கே )

தம் அடியார் என்ன உடன் கூடும் சாத்யம் வளர
இப்படி உண்டான ப்ரீதி அவன் அளவில் பர்யவசியாதே –
தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியார் அடியோங்களே –3-7-10-
என்று ததீய சேஷத்வத்தின் எல்லையிலே நிற்கிறவர்கள் -நமக்கு உத்தேச்யர் என்னும் படி –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
கீழ் பத்தில் பிரார்த்தித்த சாத்தியம் -அவர்களோடு கூடி அவனை அனுபவிக்கும் அளவு அன்றிக்கே –
அவன் அடியார் உடைய சேஷத்தின் எல்லை அளவும் செல்ல வளர —
(மூன்றாவது படி இது -அவன் அடியார் உடன் அவனை பாடுமத்துக்கும் மேல் இது )

5-பை கொள் பாம்பு போலே இந்திரிய வ்ருத்தி நியம மற
பை கொள் பாம்பேறி உறை பரனே 3-8-4–என்று (முடியானே -எட்டாம் திருவாயமொழியின் தாத்பர்யம் )
அவனுடைய சர்வாதிகத்வ பிரகாசமான படுக்கையாய் இருக்கும் –திரு அனந்தாழ்வான் –
சஷுஸ் ஸ்ரவா -என்கிறபடியே – ஒரு கரணத்தாலே கர்ணாந்தர விருத்தியும் கொள்ளுமா போலே –
நெஞ்சம் நீள் நகராக இருந்த என் தஞ்சனே-3-8-2- -என்றும் ,
வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நாயகனே -3-8-3–என்றும் ,
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை–3-8-4-என்றும் ,
கண்களால் காண வரும் கொல் -3-8-5–இத்யாதிகளாலே –
வாக் பாணி சஷூர் ஸ்ரோத்ரம்
மனோ வாக் பாணி சஷுஸ் விருத்திகளை -ஆசைப் படும்படி ஆகையாலே –
இந்திரிய விருத்தி நியமமின்றிக்கே -அவனை அனுபவிக்க
வேண்டும் படியான பெரு விடாயை உடையராய்-

(வாக் மனோ விருத்தியையும்
பாணி வாக் விருத்தியையும்
சஷுஸ் பாணியின் விருத்தியையும்
ஸ்ரோத்ரம் சஷுஸ் விருத்தியையும்
கண்ணும் நீ காட்சிப்பொருளும் நீ காண்பவனும் நீ -ஆகவே கொடுப்பதில் என்ன குறை )

பாடவந்த கவி அன்றிக்கே படைத்தான்
(சொன்னால் விரோதம் 3-9–திருவாய் மொழி தாத்பர்யம் )
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் 3-9-9—என்றும்
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு -3-9-10–என்றும்

அஹம் ஸ்லோக க்ருத் அஹம் ஸ்லோக க்ருத் -என்கிற
உபநிஷத்தின் படி கவி பாடுமவருமாய்

6 -குறை முட்டுப் பரி விடர் துயர் துன்பம் அல்லல் துக்கம் தளர்வு கேடுகள் இன்றி அம்ருத ஆனந்த மக்நரானவர்
(சன்பம் பல பல -பத்தாம் திருவாய்மொழியின் தாத்பர்யம் )
தேச விஷயத்தில் போய் அனுபவிக்க பெற்றிலேன் என்கிற குறை இல்லை –
இவ் அனுபவத்துக்கு எனக்கு ஒரு பிரதிஹதி இல்லை –
அவன் விஷயத்தில் ஆன பின்பு -ஏக தேசமும் என் மனசில் துக்கம் இல்லை –
வகுத்த சேஷி என்று பற்றுகையாலே எனக்கு ஒரு துக்கம் இல்லை –
ருசி முன்னாக தேச விசேஷ பிராப்தி பண்ணுகிற எனக்கு -வைதிக புத்ரர்களைப் போலே –
மீளில் செய்வது என் என்கிற துக்கம் இல்லை –
இங்கே அவன் குணங்களை நெருங்கே புஜித்த எனக்கு -பூர்ண அனுபவம்
பண்ணலாம் தேசத்தில் போகப் பெற்றிலேன் என்கிற துக்கம் இல்லை –
இது அவனுடைய லீலா விபூதி என்று அறிந்த எனக்கு -இனி லீலா விபூத் அன்வயமாகிற துக்கம் இல்லை –
(இது அவன் லீலா விபூதி விளையாட்டுக் களம் -அதுவே நமக்கு -விண்ணாட்டர் நாடு -அறிந்தால் கேடு இல்லையே )
ஸ்வ சங்கல்ப்பத்தாலே -சிருஷ்டியாதிகளை பண்ணவல்ல ஆசர்ய சக்தி யுக்தனானவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை ..
அகடி தகடனா சமர்த்தனானவனை பற்றின எனக்கு ஒரு தளர்ச்சி இல்லை –
விமுக தசையில் வியாப்தி யாலும் -அபிமுக தசையில் அவதாரத்தாலும் –
ரஷிக்கும் அவனைப் பற்றின எனக்கு ஒரு கேடு இல்லை -என்றபடி –
சன்மம் பல பலவில் -பத்துப் பாட்டாலும் அடைவே-(குறைவிலனே –முட்டிலனே –பரிவிலனே -இடரிலனே-
துயரிலனே -துன்பமிலனே -அல்லலிலனே -துக்கமிலனே-தளர்விலனே -கேடிலனே-என்று ) தாம் பேசும்படி –
நிரஸ்த சமஸ்த கிலேசராய் -அம்ருதரான முக்தர் -பகவத் அனுபவத்தாலே ஆனந்திக்குமா போலே –

அவ் ஆனந்த சாகர மக்நரானவர் –
செய்ய தாமரைக் கண்ணன் அமரர் குல முதல் என்று அஞ்சாதபடி
செய்ய தாமரை கண்ணனாய் 3-6-1–என்று தொடங்கி –
எஞ்சலில் அமரர் குல முதல் மூவர் தம் உள்ளும் ஆதியை அஞ்சி நீர் உலகத்து உள்ளீர்கள்–3-6-9-என்று –
புண்டரீகாஷத்வாதி பரத்வ சிஹ்னங்களை உடையனாவன் – ஞான சங்கோச
ரஹீதரான நித்ய ஸூரிகள் திரளுக்கு நிர்வாஹன் அன்றோ –
சம்சாரிகளான நம்மால் அவனை ஆஸ்ரயிக்கப் போமோ என்று அஞ்சாதபடி

எளிவரும் இணைவனாம்-என்றவை பரத்வமாம் படி
எளிவரும் இயல்வினன்-1-3-2-
இணைவனாம் எப்பொருட்கும் 2-8-1- என்று
பத்துடை அடியவரிலும் 1-3–அணைவது அரவணை -2-8–மேலிலும்
வெளி இட்ட அவதார சௌலப்யம் பரத்வ ஸ்தாநீயனாம் படி

7-அவனாகும் சௌலப்ய காஷ்டையைக் காட்டி
நெஞ்சினால் நினைப்பவன் எவன் அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே-3-6-9–என்று
மனசால் யாதொன்றை திரு மேனியாக கோலினி கோள்-அபரிசேத்ய மஹிமனான
சர்வேஸ்வரன் அத்தையே தனக்கே அசாதாரமான விக்கிரகமாக விரும்பும் என்று –
யேய தாமாம் பிரபத்யந்தே தாம்ஸததைவ பஜாம் யஹம் –ஸ்ரீ கீதை -4-11 -என்றும்
அர்ச்சயஸ் சர்வ சஹிஷ்ணுர் அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் -74–என்கிற
அர்ச்சாவதார சௌலப்ய காஷ்ட்டையைக் காட்டி-
(எதா ததா–4-11-கீதை ஸ்லோகமே அவன் இவன்
ஆச்சார்ய ஸுவ்லப்யம் -அர்ச்சா ஸுவ்லப்யம் விட சிறந்தது )

வழியை தருமவன் நிற்க இழிய கருதுவது என்னாவது-
ஒழிவு ஓன்று இல்லாத -3-9-3-என்று தொடங்கி –
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே -என்று
யாவதாத்மபாவி பகவத் அனுபவம் தான் ஒரு சிறாங்கை என்னும் படியான
அர்ச்சிராதி மார்க்கமும் தருகிறவன் -தன்னை ஒரு சொல் சொல்லுவார் யாரோ –
என்று அவசர பிரதீஷனாய் நிற்க -அவனை விட்டு புறம்பே கவிபாடுகைக்கு விஷயம்
தேடித் போய் -ஒரு சொல்லுக்கு பாத்தம் போராத-சூத்ர மனுஷ்யரைக் கவி பாடி முன்பு
நின்ற நிலையிலும் காட்டில் தாழ இழிய நினைக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு ?
அத்தால் ஸ்வரூபம் பெற்றிலிகோள்-
(கருட வாகனனும் நிற்க சேட்டை –திருமாலை பாசுரம் போலவே இங்கும் )

வேண்டிற்று எல்லாம் தரும் –3-9-5-
சகல பல ப்ரதோஹி விஷ்ணு -என்கிறபடியே
சர்வ அபேஷிதங்களையும் தரும்

தன்னாகவே கொள்ளும்-3-9-4-
பரம் சாம்யம் உபைதி -என்கிறபடி –
தன்னோடு சாம்யா பத்தியை கொடுக்கும் .
கவி சொல்ல வம்மின்-3-9-5-என்று
இதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை —
இதர ஸ்தோத்ரம் பண்ணி உங்கள் கரணங்களை பாழே போக்காதே -வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி –
இவ் விஷயத்திலே கவி சொல்ல வாருங்கோள் என்று –

8 -முக்த ஐஸ் வர்யத்தை முன்னிட்டு
வழியை தரும் நங்கள் வானவர் ஈசன் நிற்க -3-9-3–என்றும் ,
தன்னாகவே கொண்டு -3-9-4-என்றும்
சொல்லுகையாலே -இவ் விஷயத்தை கவி பாடினால் சித்திப்பது பகவத் அனுபவ
பரம சாம்யா பத்தி யாதிகள் என்று -முக்த ஐஸ் வர்யமான பேற்றை முன்னிட்டு

ஸ்வ விருத்தியை மாற்றி ஸ்வ விருத்தியில் மூட்டுகிறார் மூன்றாம் பத்தில் ..
அதாவது –
இப்படி தம்முடைய உபதேசத்தாலே –
சேவா ஸ்வ விருத்தி ராக்யயாதா -என்று-( மனு ஸ்ம்ருதி -சேவா நாய் தொழில் )
நிஹீநதரர் ஆகையாலே -ஸ்வ விருத்தியாக சொல்லப் பட்ட அப்ப்ராப்த விஷய சேவையை மாற்றி –
சாயாவா சத்வமனுகச்சேத் – சா கிமர்த்தம் ந சேவ்யதே – விஹகேஸ்வர சம்ஹிதை -என்று
( சாயை போல் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே போலே )
இவ் விஷயத்தை சேவிப்பான் என்றும் -எத்தைப் பற்ற இவ் விஷயம் சேவிக்கப் படாது
ஒழிகிறது என்றும் -விதிக்கும் படி ப்ராப்தமான இவ் விஷயத்திலே –
புகழு நல் ஒருவனில் -படியே தம்முடைய வாசிக விருத்தியிலே மூட்டுகிறார்
மூன்றாம் பத்தில் என்கை-

(ஆக -மூன்றாம் பத்தில் -சர்வ வியாபகத்வம் -வெளியிட்டு அருளி
அவன் வண்மைக்கும் இவர் நிஷ்கர்ஷித்த ப்ராப்யத்துக்கும் அனுரூபமான மோக்ஷத்தைக் காட்டிக் கொடுக்க
அதன் பலமாக ப்ரீதி காரித கைங்கர்யங்களையும் ஒருவாறு பெற்றமையையும்
அதனால் பெற்ற ப்ரீதி உள்ளடங்காமல் தலைமண்டியிட்டுச் சென்றமையையும்
அவன் அளவோடு நில்லாமல் அடியார் அடியார் அடியார்கள் அளவும் செல்ல வளர்ந்தமையையும்
மீண்டும் பகவத் அனுபவத்தில் விடாயைப் பெற்றமையையும்
அவனை ஸ்தோத்ரம் பண்ணி நிரதிசய ஆனந்தம் பெற்றமையையும்
பரோபதேசம் செய்தமையும் அருளிச் செய்கிறார்-என்றவாறு )

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –220–

September 29, 2018

சூரணை–220-

இரண்டாம் பத்தால்
சர்வ காரண பூதனான சர்வேஸ்வரன் கீழில் பத்திலே தமக்கு அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ண –
அவனாலே தத்வ ஞானரான இவர் -அந்த ஞானத்துக்கு பலமான மோஷத்தை-அப்போதே பெற வேண்டும் என்று
ஆசைப் பட்டுப் பெறாமையாலே –
( அந்தமில் பேர் இன்பத்துக்கு அடியாரோடு இருந்தமையை இவருக்கு ப்ராப்யம் ) அவசன்னராக (2-4-)
இவருடைய அவஸாதம் எல்லாம் தீரும் படி –
அவன் வந்து சம்ஸ்லேஷித்து -(2-5 -அந்தாமத்து அன்பு )–அந்த சம்ஸ்லேஷத்தினால் வந்த ப்ரீதியை உடையவனாய் –
(உடையவராய் என்று ஆழ்வாரைச் சொல்ல வில்லை -உடையவனாய் -என்று இவர் சிக்கெனப் பிடித்தேன் -என்று
சொல்ல அதனால் அவனும் ப்ரீதனாய் )
அந்த ப்ரீதி இவர் ஒருவர் அளவிலே பர்யவசியாதே -இவரோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் வெள்ளம் இட்டு –
அந்த ப்ரீதியாலே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை -இவர்க்கு அவன் கொடுக்கத் தேட –(அணைவது அரவணை மேல் -2-8-)
அந்த மோஷத்தை -அவனுடைய சேஷித்வத்துக்கும் தம்முடைய சேஷத்வத்துக்கும் அனுகுணமாம் படி நிஷ்கரிஷித்தவர் –

ஆஸ்ரயணீயான அவனுக்கு கீழ் உக்தமான பரத்வத்தை நிலை பெறுத்துவனான லக்ஷணங்களை வெளி இட்டு –
தத் அனுகுணமான வசன பிரத்யஷங்களையும் தர்சிப்பித்து –ஆஸ்ரயிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக-
த்யாஜ்யமான சம்சாரத்தின் துக்கமும்
பிராப்யமான மோஷத்தின் ஆனந்ததமும்
சம்சார நிவ்ருத்தி பூர்வக-மோஷ பிராப்திக்கு உறுப்பான -சாதனத்தின் உடைய ரசமும் –
முன்னாக விதிக்கிற ச குண ப்ரஹ்ம உபாசனத்தை –
நிஷித்த அனுஷ்டானங்களினுடைய த்யாக பூர்வகமாக ஷேத்திர வாஸாத் யங்கங்களோடே கூட்டுகிறார் -என்கிறார் —

(உபாசனத்தை -அங்க யுக்தம் ஆக்குகிறார்
கீழே அவனுடைய சேவைக்கு பக்திக்கு -எளிமையும் இனிமையும் உண்டு –பஜனத்தில் சேர்க்கிறார் -என்றார் –
இங்கு குண உபாசனம் -பக்தி சேவை -பர்யாயம் -சேவை -கைங்கர்யம் -பக்தியை கைங்கர்யம் நமக்கு –
கண்ணன் சொல்லும் கர்மயோகம் போல இல்லாமல் -ஷேத்ரவாச சங்கீர்த்தன அஞ்சலி ப்ரதக்ஷிண கதி சிந்தனாதி –
ரசமான -காலைப்பிடிக்க பாலைக் கொடுப்பது போலே அருளிச் செய்கிறார்
குண அனுபவ கைங்கர்யமே பொழுது போக்காக கொள்ளுகை-பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்வது போலவே இங்கும் -)

(முகம் காட்டாமல் இருக்க -சிதிலமாகி – -காற்றும் கழியும் கட்டி அழுது -2-1-பெருமாள் பரத்வத்தை காட்ட –
கொஞ்சம் ஸைதில்யம் நீங்கி- ப்ராசங்கிகமாக-அடுத்த பத்து -2-2-விபவ அவதாரத்தில் பரத்வம் -திண்ணன் வீடு –
எல்லாம் தன்னுள்ளே கலந்து தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஒத்து-ஸந்தோஷம்-
அடியார்கள் உடன் கூட ஆசைப் பிறந்து கிடைக்காமல் வியசனம் மிக்கு ஆடி ஆடி –துடிக்க –
அடுத்து -தன் பக்தர் உடன் ஆழ்வார் உடன் சேர -அந்தாமத்து அன்பு-2-5-இது தான் மா முனிகள் கலந்தான் என்கிறார் –
2-3-கலந்தாலும் -எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தான்– இந்த சம்ச்லேஷத்தாலும் ஆழ்வாருக்கு திருப்தி பிறக்க வில்லையே
மேலே ஆனந்தம் -ஆழ்வாருக்கு -2-6-உன்னைப் பிடித்தேன் சிக்கனவே -பின்பு கேசவன் தமர்–2 7–
இவன் தானே மோக்ஷ பிரதன் உபதேசம் -அணைவது அரவணை மேல் -2-8–
அவன் கொடுக்க வர புருஷார்த்த நிர்தேசம்-எம்மா வீட்டு -ப்ராப்ய நிஷ்கர்ஷம்–2-9-கைங்கர்யம் தெற்குத் திருமலையில் -2-10-
பராங்குச பயோதி-கடல் அன்றோ -வியாக்யானம் மூலம் கடல் கரையில் இருந்து அனுபவிக்கத் தான் முடியும் )

1-சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவன் என்கிற
சித் அசித் த்ரய திரிவித காரணமானவன் அறியாதன அறிவிக்க
உள்ளம் தேறித் தூ மனம் மருளில் என்னும் ஜ்ஞான பலமான
ஒளிக் கொண்ட மோஷம் தேடி வாட
2-உலராமல் ஆவி சேர்ந்து சிக்கெனப் புகுந்து
சம்பந்திகளும் சேர்தல் மாறினர் என்ன
வாழ்வித்து உபகரிக்கிற நீந்தும் கெடலில்
எம்மா வீட்டை உபய (சேஷ சேஷி இருவருக்கும் ) அனுகுணம் ஆக்கினவர்
3-ஆச்ரயணீயனுக்கு பூர்வோக்த பரத்வத்தை
ஸ்தாபிக்கிற சகல பல ப்ரதத்வ காரணத்வ
சேஷ சாயித்வ ஸ்ரீ யபதித்வ சௌலப் யாதிகளை
திண்ணன் அணைவது என்று வெளி இட்டு
4-கள்வா தீர்த்தன் என்று வசன
பிரத்யஷங்களும் காட்டிப்
5-புலன் ஐந்து என்று சம்சார மோஷ
சாதன துக்க ஆனந்த ரசம் முன்னாக விதிக்கிற
அந்தர் கத குண உபாசனத்தை
6-மதித்துப் பெருக்கி மூழ்கி அழுந்திக்
கீழ்மை வலம் சூதும் செய்து
இளமை கெடாமல் செய்யும்
ஷேத்திர வாஸ சங்கீர்த்தன அஞ்சலி
பிரதஷிணகதி சிந்தநாத் அங்க
உக்தம் ஆக்குகிறார்
இரண்டாம் பத்தில்-
( 2-10-பாசுரங்களில் விவரித்தவை )

1-சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவன் என்கிற சித் அசித் த்ரய திரிவித காரணமானவன்
அதாவது
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி-2-1-11 -என்றும் ,
மூவாத் தனி முதலாய் -2-8-5–என்றும் ,
எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய் -2-8-10–என்றும் ,
பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் -2-10-11-என்றும்–
லீலா விபூதியில்
சங்கல்ப விசிஷ்ட வேஷத்தால் நிமித்தமாயும் –
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட வேஷத்தால் உபாதானமாயும் —
ஞான சக்தி யாதி குண விசிஷ்ட வேஷத்தாலே சஹ காரியாயும் —

நித்ய விபூதியில் -அப்ராக்ருதம் -கார்யத்வம் இல்லாமல் ஸூஷ்மம் நாம ரூபம் இல்லாமல் இருக்காதே -அங்கு
சர்வ காரணம் அவன் -லீலா விபூதிக்கும் நித்ய விபூதிக்கும் –
இச்சா விசிஷ்ட ரூப (சங்கல்ப-இங்கு -அங்கு இச்சையால் ) வேஷத்தால் நிமித்தமாயும் –
அப்ராக்ருத அசித் ஜீவ விசிஷ்ட வேஷத்தால் உபாதானம் -லீலா விபூதியில் இங்கும் ஜீவன் அப்ராக்ருதம் தானே –
உபாதானம் -மாறுவது -ச ஏகதா பவதி-இத்யாதி -இமான் லோகான் காமான் நீ காம ரூப்யான் ஸஞ்சரன்-அங்கும் உண்டு –
அதுவே ஸ்ருஷ்ட்டி அங்கு -கைங்கர்யத்துக்கு அனுரூபமான திரு மேனி
விநியோக உபயோகி ஞானாதி வேஷத்தாலே சஹகாரி அங்கு –

இப்படி பக்த -முக்த -நித்ய ரூபமான சித் த்ரயத்துக்கும்
ப்ராக்ருத அப்ராக்ருத கால ரூபமான அசித் த்ரயத்துக்கும்
திரிவித காரணமும் தானே யான சர்வேஸ்வரன்

(நித்ய இச்சையால் அது நித்ய விபூதி -அவர்கள் நித்யர்கள் –
நியதி பூர்வ க்ஷண வ்ருத்தித்வமே காரணம்–அது இங்கு -மாறக்கூடிய அசித் –
எது சத்வே-முதல் வினாடியில் இது இருந்ததால் அது இருக்கும் – சங்கல்பம் காரணம் –
அங்கு -இவை நித்தியமாக இருக்கட்டும் என்பதால் அவை நித்யம் -இதுவே நியாயம் –
சங்கல்பம் மாற்ற மாட்டான் -ஸ்வதந்த்ரன்
அப்ரக்ருத அசித் ஜீவ சரீரம் அங்கும் உண்டே அவனுக்கு -ப்ரதிஜ்ஜைக்கு ஹானி வராது
ப்ரஹ்மத்தை விட வேறு இல்லையே -2-3-5-ப்ரஹ்ம ஸூத்ரம்-
ப்ரஹ்ம கார்யத்வேன-ஆகாசம் -ப்ரஹ்மாத்மகம் –
நித்ய விபூதியில் -நித்ய சித்த -ப்ரஹ்ம சரீரத்வேன-கார்ய காரண அபாவம் –
சரீரமாக இருப்பதால் ப்ரஹ்மாத்மகம் அங்கு சுருதி பிரகாசர் -விளக்கம் –
இத்தை மா முனிகள் திரு உள்ளத்தில் கொண்டு -இப்படி பிரித்து அருளுகிறார் இரண்டையும் –
காலத்துக்கு குணத்ரயம் இல்லை -அபிமானி தேவதைக்கு குணத்ரய வஸ்யம் இருப்பதால் -கலியுகம் படுத்துகிறது என்பர் –
த்ரிவித சேதன த்ரிவித அசேதன-இதனாலே -)
(ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்-ஓன்று விடாமல்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்- மூவா -கலங்காமல் – -காரணந்து த்யேயா
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-
காரணத்வம் நியந்த்ருத்வம் வியாபகத்வம் காருணிக்கத்வம்
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் 2-10-11–மீண்டும் மேம்படும் -படைக்கிறான் –
கீழே மூவா வருத்தப்படாமல் இருப்பதை சொல்லி -)

அறியாதன அறிவிக்க உள்ளம் தேறி
அறியாதன அறிவித்த அத்தா-2-3-2- -என்று இவருக்கு அஜ்ஞாதமான தத்வ ஹித புருஷார்த்தங்களை
விசத தமமாக அறிவிக்க —
அடியை அடைந்து உள்ளம் தேறி -2-6-8–என்று அத்தாலே இவரும் அவனைக் கிட்டி
நெஞ்ளில் தெளிவை உடையவராய்-(மனோ பூர்வ வாக் உத்தர க்ரமம் இல்லையே அவன் மூலம் பெற்றதால் )

தூ மனம் மருளில் என்னும் ஜ்ஞான பலமான ஒளிக் கொண்ட மோஷம் தேடி வாட
தூ மனத்தனனாய் –2-7-8-
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்-2-10-11 -என்று
மோஷ ஏக ஹேது தயா பரிசுத்தமான அந்த கரணத்தை உடையராய் –
அவனுடைய கல்யாண குண விஷயமான அஞ்ஞான கந்தம் இல்லாதபடி –
கீழில் பத்தில் பிறந்த தம்முடைய ஞானத்துக்கு (தத்வ வேதன மறப்பற்று ) பலம் மோஷம் ஆகையாலே –
களிப்பும் கவர்வும் அற்று பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று ஒளிக் கொண்ட சோதி மயமாய் –
அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –2-3-10–என்று
பிராக்ருத விஷய லாப அலாபங்களால் வரும் கர்வ க்லேசங்களும் -ஷட் பாவ விகாரங்களும் போய் –
சுத்த சத்வம் ஆகையாலே –நிரவதிக தேஜோ ரூபமான விக்ரகத்தை உடையோமாய் –
நித்ய சூரிகள் திரளிலே கூடப் பெறுவது எப்போதோ என்று
அந்த மோஷத்தை பெறுகையில் ஆசையாலே தேடி
அப்போதே கிடையாமல்
வாடி விடும் -2-4-1-என்று
ஆஸ்ரயித்தை இழந்த தளிர் போல் வாடி

2-உலராமல் ஆவி சேர்ந்து
உள்ளுள் ஆவி உலர்ந்து உலர்ந்து-2-4-7- -என்கிற தாபம் ஆறும் படி
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு-2-5-1- -என்கிறபடியே
பரம பதத்தில் பண்ணுகிற வியாமோகத்தை இவர் பக்கலிலே செய்து —
கமர் பிளந்த தரையிலே நீர் பாய்ச்சுவாரைப் போலே -இவரோடு நிரவதிக சம்ஸ்லேஷத்தைப் பண்ணி –

சிக்கெனப் புகுந்து-
சிறிதோர் இடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கி சிக்கனே புகுந்தான்-2-6-2- -என்று
அத் அல்பமாய் இருப்பதோர் பதார்த்தமும் தன் பக்கல் நின்று பிரி கதிர் பட்டு நோவு படாதபடி
தன் சங்கல்ப சஹஸ்ரைக தேசத்தில் சர்வ லோகங்களையும் ஒருக் காலே வைத்து இனி போராதபடி புகுந்து

சம்பந்திகளும் சேர்தல் மாறினர் என்ன வாழ்வித்து
எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வென் நரகத்து என்றும் சேர்த்தல் மாறினர்-2-6-7- -என்று
இவருடைய சம்பந்த சம்பந்திகளும் -சம்சாரான் முக்தராம் படி பண்ணி -அத்தாலே –
எமர் ஏழு பிறப்பும் –கேசவன் தமர் –மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா -2-7-1–என்று
என்னோடு பரம்பரயா சம்பந்தம் உடையாரும் என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக பகவத் அதீயரானார்கள் –
நிர்ஹேதுக பகவத் கிருபையாகிற பெரும் சதிரைப் பெற்று
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்தானது ஊற்று மாறாமல் பெருகிகிற படியே ! என்றிவர்
தாமே ஆச்சர்யம் படும் படி இவரை வாழ்வித்து –
(இளிம்பு-பகவத் கிருபை பெறாமல் / சதிர்-கிருபையை உபாஸனாதிகளால் பெற்று / மா சதிர் -நிர்ஹேதுகமாக பெற்று )

உபகரிக்கிற நீந்தும் கெடலில் எம்மா வீட்டை உபய அனுகுணம் ஆக்கினவர்
இப்படி தம்முடைய ( சம்பந்தி ) பரம்பரை அளவும் வெள்ளம் இடுகிற தன் ப்ரீதியாலே
தமக்கு அவனுபகரித்து இடுகிற
நீந்தும் துயர் இல்லா வீடு –2-8-2-
கெடலில் வீடு-2-9-11-
எம்மா வீட்டுத் திறமும் -2-9-1–என்றும்
துக்க கந்த ரஹிதமாய்–அநர்த்த கந்தம் இல்லாததாய் -எவ் வகையிலும் விலஷணமான மோஷத்தை எனக்கு என்று தரில் –
(மூன்று வீட்டு சப்த அர்த்தங்கள் இத்தால் -துயர் இல்லா வீடு -ஸ்வார்த்ததா-அநர்த்தம் இல்லா வீடு – கெடலில் வீடு–எம்மா வீடு – )
அந்த மோஷம் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே ஐஸ்வர்யகளோபாதி ஸ்வரூப விருத்தம் ஆகையாலே –
அதனுடைய பிரசங்கமும் எனக்கு அசஹ்யமான பின்பு எனக்கு மோஷம் தரப் பார்த்தது ஆகில் –
நின் செம்மா பாத பற்ப்பு தலை சேர் தொல்லை –அம்மா அடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-
என்று சேஷியான உன்னுடைய அகவாய் சிவந்து புறவாய் ஸ்யாமமாய் -பரம பூஜ்யமாய் –
பரம போக்யமான திரு அடிகளை -சேஷ பூதனான என் தலையிலே –
கொக்கு வாயும் படி கண்ணியும் போலே சடக்கென சேர்க்க வேணும் —
சேஷியான உன் பக்கல் சேஷ பூதனான நான் அபேஷித்து பெறுவது இதுவே என்றும் –
தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4–என்று
உபய ( சேஷ சேஷி இருவருக்கும் ) ஸ்வரூபத்துக்கும் அனுகுணமாக நிஷ்கரிஷித்தார்-

3-ஆச்ரயணீயனுக்குப் பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற
ஆஸ்ரயணீயான அவனுக்கு -முதல் பத்தில் சொல்லப் பட்ட -சர்வ ஸ்மாத் பரத்வத்தை –நிலை பெருத்துவனான

சகல பல ப்ரதத்வ காரணத்வ சேஷ சாயித்வ ஸ்ரீ யபதித்வ சௌலப் யாதிகளை திண்ணன் அணைவது என்று வெளி இட்டு
வீடு முதல் முழுதுமாய் -2-2-1-–என்று சகல பல பரதத்வம் –
தேவும் எல்லா பொருளும் 2-2-8-—கருத்தில் –வருத்தித்த மாயப் பிரான் -என்றும் –
(வர்த்தித்து -வளர்த்து என்ற அர்த்தம் )
ஆக்கினான் தெய்வ வுலகுகள்-2-2-9- -என்று சர்வ காரணத்வம் –
ஆழி அம் பள்ளியாரே -2-2-6–என்ற லக்ஷணையாலே சேஷ சாயித்வம் –
(பாற் கடலில் -ஆதி சேஷன் மேல் படுத்த -என்று கூட்டி லக்ஷணை-என்றவாறு -அஸ்வாரஸ்யம் )
பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து -2-2-3-– என்று ஸ்ரீயபதித்வம் –
கண்ணன் கண் –2-2-1- கோபால கோள் அரி ஏறு-2-2-2- -என்று அவதார சௌலப்யம் –
(ஸுவ்லப்யமும் பரத்வத்தை விளக்க வந்தது தானே
ஐந்தும் இரண்டு திருவாய் மொழியிலும் –என்றும்
இரண்டு மட்டும் திண்ணன் -மீதி மூன்றும் அணைவது -என்று இரண்டு நிர்வாகங்கள் )

ஆதி -சப்தத்தாலே
தகும் கோலத் தாமரைக் கண்ணன் -2-2-5–என்று புண்டரீகாஷத்வம் –
ஏழு உலகும் கொள்ளும் – வள்ளல் வல் வயிற்று பெருமான் -2-2-7–என்று அகடி தகடனா சாமர்த்தியம் –
என்கிறவற்றை – திண்ணன் வீட்டிலும் —பிரகாசிப்பித்தது
(இவை இரண்டும் பரத்வத்தை விளக்கும்)

அணைவது அரவணை மேல்-2-8-என்று சேஷ சாயித்வம் –
பூம் பாவை ஆகம் புணர்வது -என்று ஸ்ரீ யபதி த்வம் –
இருவர் அவர் முதலும் தானே -என்று காரணத்வம் –
இணைவனாம் எப்பொருட்கும் -என்று அவதார பிர யுக்த சௌலப்யம் –
வீடு முதலாம் -சகல பல ப்ரதத்வம்-
(மோக்ஷத்துக்கு காரணம் –ஈட்டில் -மோக்ஷம் தொடக்கமான-என்று கொண்டு அஸ்வாரஸ்யம் –
கீழே திண்ணன் வீடு முதல் முழுதுமாய் -)

ஆதி -சப்தத்தாலே
பிறவி கடல் நீந்துவார்க்கு புணைவன் – என்று மோஷ உபாயத்வம் –
ஆனை இடர் கடிந்த -என்று ஆபத்ஸஹத்வம் –
மூ உலகும் காவலோன் -சர்வ ரஷகத்வம்
ஆகியவற்றை -அணைவது அரவணையிலும் -பிரகாசிப்பித்தது –

அன்றிக்கே –
வீடு முதல் முழுவதுமாய் -என்று மோஷ ப்ரப்ருதய அசேஷ புருஷார்த்த
பிரதன் என்கையாலே சகல பல பிரதத்வத்தையும் –
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க –
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும் வருத்தித்த –
தன் உந்தி உள்ளே வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் ஆக்கினான் -என்று
காரணத்வத்தையும் – திண்ணன் வீட்டிலும் –

அணைவது அரவணை மேலிலும் -என்றும் –
பூம் பாவை யாகம் புணர்வது- என்றும் –
இணைவனாம் எப்பொருட்கும் -என்றும்
அடைவே சேஷ சாயித்வ ஸ்ரீ ய பதித்தவ சௌலப்யங்களையும் —

ஆதி சப்ததாலே -வீடு முதலாம் -என்று மோஷ பிரதத்வத்தையும் –
நலம் அந்தமிலதோர் நாடு புகுவீர் -பலமுந்து சீரில் படிமின் -என்று
முமுஷ பாஷ்யத்வத்தையும்
அணைவது அரவணை -யிலும் வெளி இட்டு என்னவுமாம் —

இந்த யோஜனை இதன் பட்டோலையான க்ரந்தத்தில் இவர் அருளிச் செய்ததுவுக்கு சேருவது ..
முற்பட்ட யோஜனையில் –
ஆழி அம் பள்ளியாரே -என்று சேஷ சாயித்வம் லக்ஷணை யாலே கொள்ள வேண்டுகையும் –
வீடு முதலாம் -என்று மோஷத்துக்கு ஹேதுவாம் என்கிறதை பிரகரண விருத்தமாம் படி –
மோஷாதி புருஷார்த்த பிரதத்வமாக சொல்லுகையும் –
சகல பல பரதத்வம் என்று தொடங்கி இவர் எண்ணின அடைவுக்குச் சேர இரண்டு திருவாய் மொழியிலும்
சொல்லப் போகாமையும் ஆகிற அஸ்வாரஸ்யங்களும் உண்டு

4-கள்வா தீர்த்தன் என்று வசன பிரத்யஷங்களும் காட்டி
கள்வா-2-2-10–என்கிற பாட்டிலே –
அவதரித்து உன் பரத்வம் தெரியாதபடி நின்றாயே ஆகிலும்
எங்களுக்கு காரண பூதனான சேஷி நீயே -என்று தேவதாந்த்ரங்களில் தலைவரான
பிரம ருத்ராதிகளே தங்களுக்கு காட்சி கொடுக்கைக்கு -பெரிய திரு வடியை மேல் கொண்டு புறப்பட்டால் –
அவனுடைய திருவடிகளில் விழுந்து கூப்பிடா நிற்ப்பார்கள் என்று
அவனே சர்வ ஸ்மாத் பரன் என்னும் இவ் அர்த்தத்துக்கு தேவதாந்த்ரங்கள் வசனத்தையும் –

தீர்த்தனுலகு அளந்த -2-8-6-–என்கிற பாட்டிலே –
ஓர் அஸ்த்ர லாபத்துக்காக புஷ்பாதிகளும் கொண்டு ருத்ர சமாராதானம் பண்ணப் புகுகிற அர்ஜுனனைப் பார்த்து –
அந்த புஷ்பங்களை நம் காலிலே பொகடு – என்று கிருஷ்ணன் அருளிச் செய்ய –
அவனும் தீர்த்த பூதனான அவனுடைய -திரு உலகு அளந்த திரு அடிகளிலே -அப்பூவை பரிமாற —
பார்த்தோ விஜேதா மதுசூதனச்ய பாதாரா விந்தார்ப்பித்த சித்ர புஷ்பம்
ததர்ச கங்காதர மௌலி மத்யே பபூவ வீர க்ருத நிச்சி தார்த்த – என்கிறபடி
தன் திருவடிகளிலே சாத்தின புஷ்பங்களோடு –
சஜாதீயமான வற்றை அன்றிக்கே – அவை தன்னையே
பாடே பக்கே அன்றிக்கே -ருத்ரன் தலை மேலே -ஆப்த வாக்யத்தால் அன்றிக்கே –
தானே பிரத்யஷித்து -சது பார்த்தோ மகாமனா-ஸ்ரீ கீதா பாஷ்யம் -என்கிறபடியே –
பேரளவு உடையவனான அவன் நிர்ணயித்த பரத்வம் மந்த மதிகளால் இன்று ஆராயும் படி இருந்ததோ என்று
பிரத்யஷைத்தையும் காட்டி-
(மிலேச்சனும் பக்தன் ஆனால் சூத்ரம் -வசன அனுஷ்டானங்கள் முன்பு -பார்த்தோம் இங்கு வசன ப்ரத்யக்ஷங்கள் )

5-புலன் ஐந்து என்று சம்சார மோஷ சாதன துக்க ஆனந்த ரசம் முன்னாக விதிக்கிற அந்தர் கத குண உபாசனத்தை
(சம்சார துக்கம் மோக்ஷ ஆனந்தம் சாதன ரசம்-என்று பிரித்து )
புலன் ஐந்து -2-8-4-என்கிற பாட்டில் –
ஆஸ்ரயணத்தில் இழிகிறவர்களுக்கு
த்யாஜ்யத்தில் -ஜிகாசையும் –
பிராப்யத்தில் பிராவண்யமும் –
சாதனத்தில் ருசியும் -விளையும் படி –
புலன் ஐந்து மேவும் பொறி ஐந்து நீங்கி- என்று
பரிச்சின வஸ்துக் க்ராஹமான -இந்த்ரிய வஸ்யராகை தவிர்ந்தது என்கையாலே –
அல்ப அஸ்திரஸ்வாதி தோஷ துஷ்டமான சப்தாதி போகங்களை
அனுபவித்து இருக்கும் சம்சாராத்தினுடைய துக்கமும் –

நலம் அந்தமிலதோர் நாடு புகுவீர் –2-8-4-என்று
நன்மைக்கு முடிவு இல்லாத திரு நாட்டிலே புகுவீர் என்கையாலே -மோஷத்தினுடைய ஆனந்தமும்

பலமுந்து சீரில் படிமின் ஓவாதே -2-8-4-என்று -ஸூசகம் கர்த்தும் -என்கிறபடி ( சீரில் படிமின் குண உபாசனம் )
ஸ்மர்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே-பல தசையில் போல சாதன தசையிலும் இனிதாய் இருக்கையாலே –
பலம் முற்பட்டு இருக்கிற கல்யாண குணங்களில் பிரவணர் ஆகுங்கோள் என்கையாலே –
சாதனத்தினுடைய ரசம் முன்னாக -சம்சார நிவ்ருத்தி பூர்வகமான -மோஷ பிராப்தி வேண்டி இருப்பார் –
(அலமந்து அசுரரை வீயச் செற்றவன் )அசூர வர்க்கத்தை தடுமாறி முடிந்து போம் படி செற்றவன் ஆகையாலே –
பிரபல பிரதி பந்தகங்களை அனாயசேன போக வல்லவனுடைய குணங்களிலே பிரவணர் ஆகுங்கோள் என்று விதிக்கிற –
தஸ்மின் யதந்தஸ் ததுபாசிதவ்யம் -என்று ப்ரஹ்ம ஸ்வரூப அந்தர்கதமான -அபஹத பாப்மத்வாதி
குண உபாசனத்தை

(அந்தர் கத குண உபாசனம் -அங்கி இவை அங்கங்கள்
தஹர வித்யை -உபாசனம் ப்ரஹ்ம புர-தஸ்மிந் யத் அந்த அன்வேஷ்டவ்யம் -தேடத்தக்கது -விசாரிக்கத்தக்கது –
ப்ரஹ்மத்துக்குள் காமம் -கல்யாண குணங்கள் இருக்கும் -தேடி உபாசிப்பாய்
என்ன குணங்கள் -அபஹத பாப்மாதி அஷ்ட குணங்கள் –
இந்திரன் மாம் ஏவ உபாஸ்வ–மாம் என்னை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை -உபேந்த்ரன் -உலகமாய் தோட்ட அவதாரம் –
கண்ணன் – மாம் சரணம் -இவனுக்குள்ளே என்று கொள்ளாமல் -அவனையே –
தஹர ஆகாசம் ஹ்ருதயத்துக்குள்ளே -நிறைந்த சோதி வெள்ளம் ஆகாசம் -அதற்குள் உள்ளதைத் தேடச் சொல்லி -சாந்தோக்யம் –
ஆழ்வார் அங்கங்கள் உடன் கூடிய உபாசனத்தை விதிப்பாரா -உபாயாந்தரங்கள் அன்றோ –
அஷ்டாங்க யோகம் -பக்தி –ஹிதம் ஷட்விதா சரணாகதி -பிரபத்தி நியாஸ பஞ்ச அங்கங்கள் கூடிய -ஹித தரம் –
சரணாகதி -அங்கங்கள் இல்லாமல் ஹித தமமாய் இருக்குமே –
தன்னடையே ஏற்கும் சம்பாவித ஸ்வ பாவம் -உத்தர க்ருத்யம் -அங்கங்கள் ஆகாதே –
அவகாத ஸ்வேதம் போலே ஆகுமே -பின் அங்கங்கள் என்று எதற்க்காக சொல்ல வேண்டும் –
நமக்கு சங்கை -போகும் இடம் உயர்ந்தது -பாபங்கள் பிரபலம் -செய்வது வெறும் சரணாகதி -உபாய பல்குத்வம்-
மூன்றாலும் விசுவாசம் குறையுமே
அந்தர் கத குண உபாசனம் சின்னதும் ஆசையுடன் கேட்க வருவோம் –கல்யாண குண அனுசந்தானம் -சொல்வது நம் சம்ப்ரதாயம்
அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் –
அங்கங்கள் எதற்கு -உபாசனத்துக்கு அங்கங்கள் இருப்பது போலே இதுக்கும் இவை உண்டே
அங்கங்கள் என்ற புத்தியோ அனுஷ்டானமோ இல்லை ஆழ்வாருக்கு -இங்கும் உண்டு -சம்பாவித ஸ்வ பாபம் –
குண உபாசனை பலன் குண அனுசந்தானத்துக்கும் உண்டு -அங்கங்களாக இல்லை சம்பாவிதம் என்றவாறு – )

6-மதித்து பெருக்கி மூழ்கி அழுந்தி கீழ்மை வலம் சூதும் செய்து இளமை கெடாமல்
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதித்து –
திறமுடை வலத்தால் தீவினை பெருக்கி –
வல்வினை மூழ்கி
நரகழுந்தி
கீழ்மை செய்து
வலம் கழித்து
சூது என்று களவும் சூதும் செய்து
கிளர் ஒளி இளைமை கெடுவதன் முன்னம் -என்று
உபாசன விரோதியான -இதர விஷய பிராவண்யத்தைப் பண்ணி –
அத்தாலே பாபங்களை கூடு பூரித்து -அவற்றிலே மறு நனைய மூழ்கி தரைப் பட்டு
தண்மையை செய்து– பலத்தை பாழ் போக்கி -பஸ்யதோகரனாய்-க்ரித்ரிமனாய்
பால்யத்தை பாழ் போக்காதே –
(க்ருத்யம் அக்ருத்ய விபாகம் பண்ணி-மதியாது -என்ற பாசுரத்தை மதித்து –
பெருக்காது -என்றதை பெருக்கி —
மூழ்காது -மூழ்கி / அழுந்தாதே -அழுந்தி இத்யாதி
கைங்கர்யம் பண்ணும் நாம் கிளர் ஒளி -கைங்கர்யம் கொள்ளும் அவன் ஒளி வளர் ஒளி மாயோன் –
திவ்ய தேசம் வளர் இளம் பொழில் சூழ் -ஆகவே நாம் தளர்விலராகிச் சார்வது சதிர்
இங்கு அக்ருத்யங்களைச் சொல்லி மேலே க்ருத்யங்களை விவரிக்கிறார் –
செய்யாதன செய்யோம் -செய்யும் கிரிசைகள் -திருப்பாவை போலே )

செய்யும் ஷேத்திர வாஸ சங்கீர்த்தன அஞ்சலி பிரதஷிண கதி சிந்தநாத் அங்க உக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில்
அதாவது
பால்ய ஏவ சரேத் தர்மம் -என்றும் ,
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரயசே சதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-75–என்றும்
சொல்லுகிறபடியே
பால்யத்தில் கர்தவ்யமான –
மாலிரும் சோலை சார்வது சதிரே –2-1-
போது அவிழ் மலையே புகுவது பொருளே-2-10–என்கிற ஷேத்திர வாசம் –
பதியது ஏத்தி 2-10-2-என்கிற சங்கீர்த்தனம்
தொழக் கருதுவதே -2-10-9-என்கிற அஞ்சலி
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே-2-10-8- -என்கிற பிரதஷணம்
நெறிபட அதுவே நினைவது நலமே -2-10-6–என்கிற கதி சிந்தனை
ஆகிற இவை முதலான உபாசன அங்கத்தோடு சேர்க்கிறார்
இரண்டாம் பத்தில் என்கை–
(உபநிஷத் விதிக்கும் அங்கங்களை சம்பாவித ஸ்வ பாவங்களாக -தானே ஏற்படுவதைக் காட்டி அருளுகிறார் -என்றவாறு -)

(ஆக இரண்டாம் பத்தால்
காரணத்வத்தை வெளியிட்டு –
அவனாலே அறியாதது அறிவிக்கப் பெற்று உள்ளம் தேறினமையும்
ஞானத்தின் பலமாக மோக்ஷத்தைத் தேடி வாடினமையையும்
அந்த வாட்டம் தீர விசேஷ அனுக்ரஹம் செய்து அருளி மோக்ஷத்தைக் கொடுப்பதாக இருந்தமையையும்
அந்த மோக்ஷத்தின் தன்மையை ஆழ்வார் அறுதியிட்டு பேசினமையையும்
உலோகோருக்கு உபதேசிக்க ஒறுப்பட்டு ச குண ப்ரஹ்ம உபாசனத்தை அங்கத்தோடே விதித்தமையையும் தெரிவித்தபடி – )

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-