கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று
வெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று
அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ–3-7-1-
கள்வன் கொல்– பிரவேசம் –
தூது விட்டு தூதுவருக்கு சொன்ன பாசுரம்
நெஞ்சிலே ஊற்று இருந்து
அத்தை பாவித்து பாவநா பிரகர்ஷத்தாலே
அவன் தான் முன் நின்றானாகக் கொண்டு
அவனுக்கு வார்த்தை சொல்லும்படி பிறந்த தசா விசேஷம்
அவன் திரு உள்ளத்திலே பட்டு –
அது பொறுக்க மாட்டாதவன் ஆகையாலே
தானே வந்து முகம் காட்டி -இவளைக் கூட கொண்டு போக –
ஆதி வாஹிகரை வர காட்டிக் கொண்டு போம் சிலரை –
பெரிய திருவடியை வரக் காட்டிக் கொண்டு போம் சிலரை –
நயாமி -என்று தானே கொடு போம் சிலரை –
அப்படியே தானே வந்து-
அத்தவாளத் தலையாலே மறைத்துக் கொண்டு போக-
அந்தரமாக காத்துக் கொடு போந்த திருத் தாயார் வந்து
படுக்கையில் இவளைக் காணாமையாலே
போன அவள் படிகளையும்
தனக்கு அவளை ஒழியச் செல்லாமையும்
எதிர்தலை இப்படி பட வேண்டி இருக்கிற இவள் உடைய
வை லஷண்யத்தையும்
தன் இழவையும் சொல்லி கூப்பிடுகிறாளாய்ச் செல்லுகிறது –
அவன் இவளைக் கொடு போகையாவது என் –
ஸ்வாபதேசத்தில் ஓடுகிறது என் என்னில் –
மானச அனுபவமாய் இருக்கச் செய்தே
பாஹ்ய சம்ச்லேஷம் போலே இருக்கப் பண்ணி கொடுத்த
தொரு வைச்யத்தைச் சொன்னபடி இறே-
ஸ்த்திதே மனஸி
நின்றவா நில்லா மனதும்
ஓர் இடத்திலே நிற்கப் பெற்று
அபசயாத்மகமான சரீரமும் அங்கே இங்கே சிதிலமாகாதே ஒருபடிப்பட்டு
தாதுக்களும் ஓன்று முடங்கி ஓன்று நிமிருகை அன்றிக்கே
சாம்யாவஸ்தையை பஜித்து
இப்படி சரீரத்திலே ஒரு லாகவம் பிறந்து
சத்வம் உத்ரிக்தமான சமயத்தில் ஆரேனும் ஒருவன் ஆகவுமாம்
தான் கீழ் சம்சாரியாய் நின்ற நிலையையும்
இத்தைக் கழித்துக் கொள்ளுகைக்கு ஈடாக இருப்பதொரு கைம்முதல்
தன் பக்கலில் இன்றிக்கே இருக்கிற படியையும்
அவனைப் பற்றியே கழிக்க வேண்டும்படி இருக்கிற படியையும்
இதில் நின்றும் கரை ஏற்றுக்கைக்கு ஈடான சக்தியும் பிராப்தியும்
அவன் பக்கலிலே உண்டாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து
அவன் பக்கலிலே பர ந்யாசத்தைப் பண்ணுவது
பின்னை பேற்றுக்கு இவ்வளவுமேயோ என்னில்
சரீரத்தை பற்றி இருக்குமவற்றுக்கு ஆத்மா சுக துக்கம் அனுபவம் பண்ணுமா போலே
இவற்றுக்கு வருவது தனதாம்படி விசேஷ சரீரனுமாய்
இவன் தன்னை ஒரு கால் அனுசந்தித்தால்
பின்பு இவ்னைப் போலே மறைக்கக்கு அடியான கர்ம
நிபந்தனமான கலக்கம் இன்றிக்கே இருக்குமவன்
ஆகையாலே அவ்வளவே அமையும்
இப்படி ஒரு நாள் அனுசந்தித்தவன்
பிரகிருதி வச்யனாய் -பின்பு தன் தேக யாத்ரையிலே அந்ய
பரனாய் திரிந்து பின்பு ஸ்ம்ரிக்கைக்கு கூட யோக்யதை இல்லாதபடி
காஷ்டாபாஷா சந்நிபனாய் கிடக்கும் அன்று
இவனைப் போல் ஒரு கால் ஸ்மரித்தால் பின்பு விஸ்வமரிக்குமவன்
அன்றிக்கே நான் ஸ்மரித்த படியே இருப்பன்
மத்பக்தம்
ஸ்மரிக்கைக்கு யோக்யதை இல்லாத வன்று
ஸ்மரித்திலன் என்று விடும் அத்தனை துராராதனையோ
அவன் பற்றிற்று –
அஹம் ஸ்மராமி –
ஐஸ்வர்ய காமனுக்கும் -ஆத்மப்ராப்தி காமனுக்கும் -பக்தி காமனுக்கும் அந்திம ஸ்ம்ருதி உண்டு
இவன் முதலிலே துடங்கி சர்வ பர ந்யாசம் பண்ணினவன் ஆகையாலே இவனுக்காக நான் நினைப்பன் –
நயாமி பரமம் கதம் –
இப்படி நினைத்து நானே கை தொடனாய் வந்து கொடு போவேன்
த்வயம் -எம்பெருமானுடைய சர்வ ஸ்வமும் இறே இவை –
ஆளவந்தார் ஸ்ரீ பாதத்திலே வர்த்தித்த வைஷ்ணவன் அந்திம சமயத்தில்
பட்ட கிலேசத்தைக் கண்டு
பெரிய நம்பிக்கும் எம்பெருமானாருக்கும் நடந்த சம்வாதத்தை நினைப்பது
மத்பக்தம் என்கிற இடமும்
பக்திமானையே சொல்லிற்று ஆனாலோ பிரபன்னனை சொல்லிற்று ஆனாலோ
என்கைக்கு நியாமகர் யார் என்ன
அவனுக்கு அந்திம ஸ்ம்ருதி விதிக்கிற சாஸ்திரம்-
—————————————————–
வள்ளி மருங்குல் என்தன் மடமான் –
அவனைக் கொண்டு வந்த விச்வாமித்ரனை சொல்லுகிறது –
இவளுடைய அழகாயிற்று அவனை அழைப்பித்தது-
அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ -3-7-1-
இருவரும் இரண்டு முக்தர் ஆயிற்று –
மாயா மிருகத்தை பிடித்து தா என்பாரும்
அதைப் பிடிப்பதாக அதன் பின்னே போவாரும் –
லங்கத்வாரத்திலே சென்று நிற்கலாகாதோ என்று நில்லாதே
உத்தேச்ய பூமியிலே புக்கார்களோ அல்லர்களோ
இருவரும் ஒருவருக்கு ஒருவராய் ஆழல் ஆயிற்று-
வண்டமர் கானல் மல்கும் வயலாலி புகுவர் கொலோ-3-7-2
ந சபுன ஆவர்த்ததே என்று புகுந்து
திர்யக்குகளும் கூட மீளாத ஊரிலே புகுவர் கொலோ
வஞ்சி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-3-
தனக்கு உபமானம் உள்ள தேசத்து ஏறப் புகுமோ- வஞ்சி கொம்பும் மூங்கிலும்
தடம் சூழ் புறவில் போது வண்டாடு செம்மல் புனலாளி புகுவர் கொலோ ?–3-7-4-
அவ் ஊரில் பூக்கள் அலர்ந்த போது தேன் வெள்ளத்தாலே வண்டுகளுக்கு இழிந்து பானம் பண்ணப் போகாது
கழிய அலர்ந்து மது வெள்ளம் அரையாறு பட்டால் ஆயிற்று- வண்டுகளுக்கு பானம் பண்ணல ஆவது
கழிய அலர்ந்த பூக்கள் தேடி வண்டுகள் மது பானம் பண்ணும் திரு வாலியிலே புகுவர் கொலோ
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் கொலோ ?–3-7-5-
இருவரும் கூட ஜல கிரீடை பண்ணி வர்த்திக்கலாம் தேசத்தில் புகுவர் கொலோ-
அரங்கத்து உறையும் இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ ?–3-7-6-
நிரதிசய போக்யனுமாய்- சுலபனுமாய்- ரஷகனுமானவன் உடன் கூட ராவண வதம் பண்ணி மீண்டு எழுந்து அருளுகிற போது
திரு அயோத்யை கோடித்தாற் போலே- திரு வாலியையும் கோடிக்கப் பண்ணி புகுகிறார்கள் இறே
புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ ?–3-7-7-
சம்போ ஸ்தானங்கள் ஆளும் தன்னிடம் உள்ள ஊரிலே புகுவர் கொலோ-
பிறப்பிலி பின்னே நடந்து மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-8-
தாயான குற்றத்தாலே எனக்கு ஒருத்திக்கும் இறே தொழ ஒண்ணாதது
அல்லாதார்க்கு எல்லாம் தொழுது பின்னே போகலாம் இறே-
தன்னை காண்பார்க்கு காட்சிக்கு கொடுக்க இடம் உள்ள தேசத்தில் புகுமோ
அங்கன் அன்றிக்கே
எல்லா போகங்களும் உண்டாம் படியான தேசம் என்னவுமாம்-
காவியங்கண்ணி எண்ணில் கடி மா மலர்ப்பாவை யொப்பாள்–3-7-9-
ஈஸ்வரனைக் காட்டில் பிராட்டி- அஸி தேஷணை-என்னும் ஏற்றத்தை உடையாள் ஆனாப் போலே
பிராட்டியில் ஏற்றம் இவளுக்கு -காவியங்கண்ணி -என்று
இருவரையும் சேர அனுபவிக்கிற கண் இறே இவளுடைய கண்கள் –
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-9-
நடையாலே பிச்சேற்ற வல்லள்-நடைக்கு பிச்சேறி வ்யாமோஹிக்குமவள்
ஸூநா ஸூநி கரியைப் பண்ணி விளையாடலாம் தேசத்திலே புகுவர் கொலோ-
——————————————–
தூ விரிய -பிரவேசம் –
நஞ்சீயர் உடைய நோவிலே
பெற்றி அறியப் புகுந்து
இங்கு தமக்கு வேண்டி இருக்கிறது என்-என்று கேட்டு
தூ விரிய மலர் உழுக்கிப் பாட்டு கேட்கவும்
பெருமாள் எழுந்து அருள பின்னும் முன்னும் சுற்றும் வந்து
திருவடி தொழவும் வேண்டி இரா நின்றேன் -என்று
அருளிச் செய்து அருளினார் –
அப்போதே
வரம் தரும் பெருமாள் அரையரை அழைத்து விட்டு
பாட்டுக் கேட்டு அருளா நிற்க
மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ -3-6-4-
என்னும் அளவிலே வந்தவாறே
காம சரங்களால் ஏவுண்பதற்கு முன்பே வாராவிட்டால்
பட்ட புண் பரிஹரிக்க வாகிலும்-வந்தால் ஆகாதோ
என்று அருளிச் செய்து அருளினார் –
துயிலாத கண் இணையேன் –3-6-8-
உறங்காமைக்கு இரண்டு லஷ்மணர்களைப் போலே யாயிற்று கண்கள் இரண்டும் –
இளைய பெருமாள் பிறந்த முகூர்த்ததில் ஆயிற்று இவள் கண்களும் பிறந்தது –
நிலையாளா ! நின் வணங்க வேண்டாயே யாகிலும் என்
முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ?
சிலையாளா ! மரம் எய்த திறலாளா ! திரு மெய்ய
மலையாளா ! நீ யாள வளையாள மாட்டோமே–3-6-9-
அம்மங்கி அம்மாள் உடைய சரம தசையில் நஞ்சீயர் அறிய
எழுந்து அருளினவர்
அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு
இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும்
பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -என்றவாறே
பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்
புறப்பட்ட பின்பு நஞ்சீயர் பிள்ளையை பார்த்து
முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது
விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே
என்று அருளிச் செய்தார்-
ஆக இப்பாட்டால்
பிராப்ய நிஷ்கர்ஷமும்
ருசி உடையார் படியையும்
சரண்யன் படியையும்
அவனுக்கு ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும் –
இத்தலையில் அபேஷை குறைவற்று இருக்கிறபடியையும் –
இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது –
நிலையாளா -என்கையாலே நித்ய கைங்கர்யம் பெறுகையே பிராப்யம் என்னும் இடம் சொல்லுகிறது –
வேண்டாயே யாகிலும் -என்கையாலே உபாய பாவமும் அவன் பக்கலிலே என்னும் இடம் சொல்லுகிறது
என் முலையாள ஒரு நாள் -என்கையாலே ருசி உடையார் படி சொல்லுகிறது
சிலையாளா -என்கையாலே சரண்யதை சொல்லிற்று
மரம் எய்த -என்கையாலே ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும்
இத்தலையில் அபேஷை குறை வற்று இருக்கிறபடியையும்
இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது-
——————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply