Archive for August, 2018

ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகார்த்தம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை /பெரிய திருமொழி வியாக்கியான அமுத துளிகள் – –

August 30, 2018

கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று
வெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று
அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ–3-7-1-

கள்வன் கொல்– பிரவேசம் –
தூது விட்டு தூதுவருக்கு சொன்ன பாசுரம்
நெஞ்சிலே ஊற்று இருந்து
அத்தை பாவித்து பாவநா பிரகர்ஷத்தாலே
அவன் தான் முன் நின்றானாகக் கொண்டு
அவனுக்கு வார்த்தை சொல்லும்படி பிறந்த தசா விசேஷம்
அவன் திரு உள்ளத்திலே பட்டு –
அது பொறுக்க மாட்டாதவன் ஆகையாலே
தானே வந்து முகம் காட்டி -இவளைக் கூட கொண்டு போக –

ஆதி வாஹிகரை வர காட்டிக் கொண்டு போம் சிலரை –
பெரிய திருவடியை வரக் காட்டிக் கொண்டு போம் சிலரை –
நயாமி -என்று தானே கொடு போம் சிலரை –
அப்படியே தானே வந்து-
அத்தவாளத் தலையாலே மறைத்துக் கொண்டு போக-

அந்தரமாக காத்துக் கொடு போந்த திருத் தாயார் வந்து
படுக்கையில் இவளைக் காணாமையாலே
போன அவள் படிகளையும்
தனக்கு அவளை ஒழியச் செல்லாமையும்
எதிர்தலை இப்படி பட வேண்டி இருக்கிற இவள் உடைய
வை லஷண்யத்தையும்
தன் இழவையும் சொல்லி கூப்பிடுகிறாளாய்ச் செல்லுகிறது –

அவன் இவளைக் கொடு போகையாவது என் –
ஸ்வாபதேசத்தில் ஓடுகிறது என் என்னில் –
மானச அனுபவமாய் இருக்கச் செய்தே
பாஹ்ய சம்ச்லேஷம் போலே இருக்கப் பண்ணி கொடுத்த
தொரு வைச்யத்தைச் சொன்னபடி இறே-

ஸ்த்திதே மனஸி
நின்றவா நில்லா மனதும்
ஓர் இடத்திலே நிற்கப் பெற்று
அபசயாத்மகமான சரீரமும் அங்கே இங்கே சிதிலமாகாதே ஒருபடிப்பட்டு
தாதுக்களும் ஓன்று முடங்கி ஓன்று நிமிருகை அன்றிக்கே
சாம்யாவஸ்தையை பஜித்து
இப்படி சரீரத்திலே ஒரு லாகவம் பிறந்து
சத்வம் உத்ரிக்தமான சமயத்தில் ஆரேனும் ஒருவன் ஆகவுமாம்
தான் கீழ் சம்சாரியாய் நின்ற நிலையையும்
இத்தைக் கழித்துக் கொள்ளுகைக்கு ஈடாக இருப்பதொரு கைம்முதல்
தன் பக்கலில் இன்றிக்கே இருக்கிற படியையும்
அவனைப் பற்றியே கழிக்க வேண்டும்படி இருக்கிற படியையும்
இதில் நின்றும் கரை ஏற்றுக்கைக்கு ஈடான சக்தியும் பிராப்தியும்
அவன் பக்கலிலே உண்டாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து
அவன் பக்கலிலே பர ந்யாசத்தைப் பண்ணுவது
பின்னை பேற்றுக்கு இவ்வளவுமேயோ என்னில்
சரீரத்தை பற்றி இருக்குமவற்றுக்கு ஆத்மா சுக துக்கம் அனுபவம் பண்ணுமா போலே
இவற்றுக்கு வருவது தனதாம்படி விசேஷ சரீரனுமாய்
இவன் தன்னை ஒரு கால் அனுசந்தித்தால்
பின்பு இவ்னைப் போலே மறைக்கக்கு அடியான கர்ம
நிபந்தனமான கலக்கம் இன்றிக்கே இருக்குமவன்
ஆகையாலே அவ்வளவே அமையும்

இப்படி ஒரு நாள் அனுசந்தித்தவன்
பிரகிருதி வச்யனாய் -பின்பு தன் தேக யாத்ரையிலே அந்ய
பரனாய் திரிந்து பின்பு ஸ்ம்ரிக்கைக்கு கூட யோக்யதை இல்லாதபடி
காஷ்டாபாஷா சந்நிபனாய் கிடக்கும் அன்று
இவனைப் போல் ஒரு கால் ஸ்மரித்தால் பின்பு விஸ்வமரிக்குமவன்
அன்றிக்கே நான் ஸ்மரித்த படியே இருப்பன்

மத்பக்தம்
ஸ்மரிக்கைக்கு யோக்யதை இல்லாத வன்று
ஸ்மரித்திலன் என்று விடும் அத்தனை துராராதனையோ
அவன் பற்றிற்று –

அஹம் ஸ்மராமி –
ஐஸ்வர்ய காமனுக்கும் -ஆத்மப்ராப்தி காமனுக்கும் -பக்தி காமனுக்கும் அந்திம ஸ்ம்ருதி உண்டு
இவன் முதலிலே துடங்கி சர்வ பர ந்யாசம் பண்ணினவன் ஆகையாலே இவனுக்காக நான் நினைப்பன் –

நயாமி பரமம் கதம் –
இப்படி நினைத்து நானே கை தொடனாய் வந்து கொடு போவேன்
த்வயம் -எம்பெருமானுடைய சர்வ ஸ்வமும் இறே இவை –
ஆளவந்தார் ஸ்ரீ பாதத்திலே வர்த்தித்த வைஷ்ணவன் அந்திம சமயத்தில்
பட்ட கிலேசத்தைக் கண்டு
பெரிய நம்பிக்கும் எம்பெருமானாருக்கும் நடந்த சம்வாதத்தை நினைப்பது
மத்பக்தம் என்கிற இடமும்
பக்திமானையே சொல்லிற்று ஆனாலோ பிரபன்னனை சொல்லிற்று ஆனாலோ
என்கைக்கு நியாமகர் யார் என்ன
அவனுக்கு அந்திம ஸ்ம்ருதி விதிக்கிற சாஸ்திரம்-

—————————————————–
வள்ளி மருங்குல் என்தன் மடமான் –
அவனைக் கொண்டு வந்த விச்வாமித்ரனை சொல்லுகிறது –
இவளுடைய அழகாயிற்று அவனை அழைப்பித்தது-

அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ -3-7-1-
இருவரும் இரண்டு முக்தர் ஆயிற்று –
மாயா மிருகத்தை பிடித்து தா என்பாரும்
அதைப் பிடிப்பதாக அதன் பின்னே போவாரும் –
லங்கத்வாரத்திலே சென்று நிற்கலாகாதோ என்று நில்லாதே
உத்தேச்ய பூமியிலே புக்கார்களோ அல்லர்களோ
இருவரும் ஒருவருக்கு ஒருவராய் ஆழல் ஆயிற்று-

வண்டமர் கானல் மல்கும் வயலாலி புகுவர் கொலோ-3-7-2
ந சபுன ஆவர்த்ததே என்று புகுந்து
திர்யக்குகளும் கூட மீளாத ஊரிலே புகுவர் கொலோ

வஞ்சி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-3-
தனக்கு உபமானம் உள்ள தேசத்து ஏறப் புகுமோ- வஞ்சி கொம்பும் மூங்கிலும்

தடம் சூழ் புறவில் போது வண்டாடு செம்மல் புனலாளி புகுவர் கொலோ ?–3-7-4-
அவ் ஊரில் பூக்கள் அலர்ந்த போது தேன் வெள்ளத்தாலே வண்டுகளுக்கு இழிந்து பானம் பண்ணப் போகாது
கழிய அலர்ந்து மது வெள்ளம் அரையாறு பட்டால் ஆயிற்று- வண்டுகளுக்கு பானம் பண்ணல ஆவது
கழிய அலர்ந்த பூக்கள் தேடி வண்டுகள் மது பானம் பண்ணும் திரு வாலியிலே புகுவர் கொலோ

போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் கொலோ ?–3-7-5-
இருவரும் கூட ஜல கிரீடை பண்ணி வர்த்திக்கலாம் தேசத்தில் புகுவர் கொலோ-

அரங்கத்து உறையும் இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ ?–3-7-6-
நிரதிசய போக்யனுமாய்- சுலபனுமாய்- ரஷகனுமானவன் உடன் கூட ராவண வதம் பண்ணி மீண்டு எழுந்து அருளுகிற போது
திரு அயோத்யை கோடித்தாற் போலே- திரு வாலியையும் கோடிக்கப் பண்ணி புகுகிறார்கள் இறே

புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ ?–3-7-7-
சம்போ ஸ்தானங்கள் ஆளும் தன்னிடம் உள்ள ஊரிலே புகுவர் கொலோ-

பிறப்பிலி பின்னே நடந்து மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-8-
தாயான குற்றத்தாலே எனக்கு ஒருத்திக்கும் இறே தொழ ஒண்ணாதது
அல்லாதார்க்கு எல்லாம் தொழுது பின்னே போகலாம் இறே-
தன்னை காண்பார்க்கு காட்சிக்கு கொடுக்க இடம் உள்ள தேசத்தில் புகுமோ
அங்கன் அன்றிக்கே
எல்லா போகங்களும் உண்டாம் படியான தேசம் என்னவுமாம்-

காவியங்கண்ணி எண்ணில் கடி மா மலர்ப்பாவை யொப்பாள்–3-7-9-
ஈஸ்வரனைக் காட்டில் பிராட்டி- அஸி தேஷணை-என்னும் ஏற்றத்தை உடையாள் ஆனாப் போலே
பிராட்டியில் ஏற்றம் இவளுக்கு -காவியங்கண்ணி -என்று
இருவரையும் சேர அனுபவிக்கிற கண் இறே இவளுடைய கண்கள் –
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-9-
நடையாலே பிச்சேற்ற வல்லள்-நடைக்கு பிச்சேறி வ்யாமோஹிக்குமவள்
ஸூநா ஸூநி கரியைப் பண்ணி விளையாடலாம் தேசத்திலே புகுவர் கொலோ-

——————————————–

தூ விரிய -பிரவேசம் –
நஞ்சீயர் உடைய நோவிலே
பெற்றி அறியப் புகுந்து
இங்கு தமக்கு வேண்டி இருக்கிறது என்-என்று கேட்டு
தூ விரிய மலர் உழுக்கிப் பாட்டு கேட்கவும்
பெருமாள் எழுந்து அருள பின்னும் முன்னும் சுற்றும் வந்து
திருவடி தொழவும் வேண்டி இரா நின்றேன் -என்று
அருளிச் செய்து அருளினார் –
அப்போதே
வரம் தரும் பெருமாள் அரையரை அழைத்து விட்டு
பாட்டுக் கேட்டு அருளா நிற்க
மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ -3-6-4-
என்னும் அளவிலே வந்தவாறே
காம சரங்களால் ஏவுண்பதற்கு முன்பே வாராவிட்டால்
பட்ட புண் பரிஹரிக்க வாகிலும்-வந்தால் ஆகாதோ
என்று அருளிச் செய்து அருளினார் –

துயிலாத கண் இணையேன் –3-6-8-
உறங்காமைக்கு இரண்டு லஷ்மணர்களைப் போலே யாயிற்று கண்கள் இரண்டும் –
இளைய பெருமாள் பிறந்த முகூர்த்ததில் ஆயிற்று இவள் கண்களும் பிறந்தது –

நிலையாளா ! நின் வணங்க வேண்டாயே யாகிலும் என்
முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ?
சிலையாளா ! மரம் எய்த திறலாளா ! திரு மெய்ய
மலையாளா ! நீ யாள வளையாள மாட்டோமே–3-6-9-

அம்மங்கி அம்மாள் உடைய சரம தசையில் நஞ்சீயர் அறிய
எழுந்து அருளினவர்
அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு
இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும்
பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -என்றவாறே
பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்
புறப்பட்ட பின்பு நஞ்சீயர் பிள்ளையை பார்த்து
முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது
விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே
என்று அருளிச் செய்தார்-

ஆக இப்பாட்டால்
பிராப்ய நிஷ்கர்ஷமும்
ருசி உடையார் படியையும்
சரண்யன் படியையும்
அவனுக்கு ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும் –
இத்தலையில் அபேஷை குறைவற்று இருக்கிறபடியையும் –
இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது –

நிலையாளா -என்கையாலே நித்ய கைங்கர்யம் பெறுகையே பிராப்யம் என்னும் இடம் சொல்லுகிறது –
வேண்டாயே யாகிலும் -என்கையாலே உபாய பாவமும் அவன் பக்கலிலே என்னும் இடம் சொல்லுகிறது
என் முலையாள ஒரு நாள் -என்கையாலே ருசி உடையார் படி சொல்லுகிறது
சிலையாளா -என்கையாலே சரண்யதை சொல்லிற்று
மரம் எய்த -என்கையாலே ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும்
இத்தலையில் அபேஷை குறை வற்று இருக்கிறபடியையும்
இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது-

——————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-முதல் இருபது பதிகங்கள் – -பலஸ்ருதி பாசுர- தாத்பர்யங்கள் —

August 29, 2018

துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் -1-1-10-

நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு -நம்முடைய பாபங்களுக்கு ஆற்ற ஒண்ணாத நஞ்சு-
நாராயணா என்னும் நாமம்-அநந்ய ப்ரயோஜனராய் இருப்பார்க்கு ஸ்வயம் பிரயோஜனம்- –
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணா -என்று நமக்கு இனிய திரு நாமமே பாபத்துக்கு நஞ்சு –
அல்லாதன எல்லாம் சம்சாரத்திலே வேர் பற்றுக்கைக்கு உடலாய் இருக்கும் –
இதினுடைய அர்த்த அனுசந்தானமே சம்சாரத்தை வேர் அறுப்பது என்னும் இவ் வர்த்தத்தை எல்லாரும் புத்தி பண்ணி -இருக்கலாகாதோ

———————————————————-

பிரிதி எம்பெருமானை வரி கொள் வண்டறை பைம் பொழில் மங்கையர் கலியனது ஒலி மாலை
அரிய வின்னிசை பாடு நல்லடியவர்க்கு அரு வினை யடையாவே —1-2-10-

நல்லடியவர்க்கு -இத்தைப் பாடுமவர்கள் ஆயிற்று சர்வேச்வரனுக்கு அந்தரங்கர் ஆகிறார்
அரு வினை-அவர்களை பாபங்கள் கிட்டாது –
சர்பங்கள் ஆனவை மேகங்களை ஆமிஷமாக  புத்தி பண்ணி மேல் விழுமா போலே
இத்தை அப்யசித்தார்கள் பக்கல் சர்வேஸ்வரன் போக்யதா புத்தி பண்ணி அவர்கள் உடைய விரோதிகளைப் போக்கி
அவனாலே விஷயீ கரிக்கப் பெறுவார்கள்
இப்பாசுரங்களைச் சொன்னவர்களை அச் சொல் வழியே சர்வேஸ்வரன் அவர்களையே எல்லா போக்யமுமாய் வந்து கிட்டும்-

——————————————————-

வதரி நெடுமாலை கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில்
நீள் விசும்பில் அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே -1-3-10-

நீள் விசும்பில்
நீள் விசும்பு -என்கிறது- உபரிதந லோகங்களின் உடைய சமுதாயத்தை
அதில் –
அண்டம் அல்லால் -பரம பதம் அல்லது அவர்க்கு ஆட்சி அறியோம் என்னுதல்
அன்றிக்கே
நீள் விசும்பு என்கிறது பரம பதமாய் அது அல்லால் மற்று ஓர் அண்டம் அவர்க்கு ஆட்சியாக அறியோம் என்னுதல் –

———————————————–

வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே —1-4-10-

வானவர்—இத்யாதி —
பெரிய கடல் சூழ்ந்த பூமியை ஏகாதபத்ரமாக நடத்தி- பின்பு- ப்ரஹ்ம பதத்தை நிர்வஹித்து
அநந்தரம் -நித்ய சூரிகளோடு ஒரு கோர்வையாக பெறுவர் –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று இவன் அபிசந்தி பண்ணின எல்லாவற்றையும் தரும் என்றபடி-

அறிவுடையார் அபுருஷார்தம் என்று காற்கடைக் கொண்ட ஐஸ்வர்யத்தை
வேண்டேன் மனை வாழ்க்கை –என்றும்
போந்தேன் -என்றும் விரக்தராய் போன இவர்
இப்போது ஐஸ்வர்யத்தை பலமாக சொல்லுவான் என் -என்று ஜீயர் பட்டரைக் -கேட்க
திருமங்கை ஆழ்வார் அவதரித்த பின்பு த்யாஜ்யமான ஐஸ்வர்யமும் பரம புருஷார்த்துக்கு உள்ளே புக்கு போயிற்று காணும் –
ஈஸ்வரனோ ஆகவுமாம்
நித்ய சூரிகளோ ஆகவுமாம்
ராஜா ஆகவுமாம்
பிறந்து பாகவத சேஷத்வம் பெறலாம் ஆகலாம் ஆகில் -என்றாம் இவர் இருப்பது என்று அருளிச் -செய்தாராம்

———————————-

சாளக்கிராமத் தடிகளை–காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆளபேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10-

அமரர் நன்னாட்டரசு ஆள -நித்ய சூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம்
அத்தை ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த –
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லப் பாருங்கோள் –
அன்றி யிவையே பிதற்றுமினே — அங்கன் இன்றிக்கே இவற்றையே அடைவு கெட சொல்லப் பாருங்கோள்-

——————————————

நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே–1-6-10-

ஓத நீர் வையகம் ஆண்டு -நித்ய சூரிகளோடு ஒரு கோவையாம் அது தானே சித்தம் இறே
அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தையும் நிர்வஹித்துப் பின்னை நித்ய சூரிகள் பதத்தை பெறுவர்-

—————————————————–

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன் செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10-

தீதிலரே -நரசிம்ஹம் விரோதியைப் போக்குகையாலே அவர்களுக்கு பொல்லாங்கு வாராது இறே-

—————————————–

திருவேம்கடத்துறை செல்வனை மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே–1-8-10-

தரித்து சொல்ல வல்லவர்கள் நிச்சிதமாகவே கடல் சூழ்ந்த பூமிக்கு ரஷகராய்
பின்பு நித்ய விபூதியும் தங்கள் இட்ட வழக்காம் படி ஆகப் பெறுவர்கள் –
இது கூடுவது ஒன்றோ என்னில் -இதில் சங்கை வேண்டா-

————————————————-

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன் பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே-1-9-10-

பகவத் ப்ராப்திக்கு பிரதிபந்தகங்கள் அடங்க ஓடிப் போம் –
பாவமே செய்து பாவி ஆனேன் -என்று இவரும் சொல்லி ஈஸ்வரனும் அத்தைப் பொறுத்த பின்பு இவருக்கு பாபம் இல்லையே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை -பெருமாள் கூட்டி வர அருளிய போதே அதுக்கு விஷயமானார் கூட வந்த நால்வரும் பின்னை அவத்யர் ஆனார்கள்
அப்படியே இவருடைய பரிகரமாய் இவருடைய பிரபந்தத்தை அதிகரிக்கவே இவர்கள் பாபங்களைப் போக்கும் ஆயிற்று –

———————————————————

வில்லார் மலி வேங்கட மா மலை மேய மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை வல்லாரவர் வானவர் ஆகுவர் தாமே—-1-10-10-

இவற்றை அப்யசிக்க வல்லார்கள் நித்ய சூரிகள் உடைய நித்ய கைங்கர்யமே தங்களுக்கு யாத்ரையாகப் பெறுவார்கள் –

———————————————————-

மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி  இன் தமிழால் உரைத்த இம் மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—2-1-10-

இடமாகும் வானுலகே -பூண்ட வடிமை நித்யமாக செல்லும் தேசத்தை இருப்பிடமாக உடையவர் ஆவர்-

—————————————————

இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார் அண்டமாள்வதாணை அன்றேலாள் வர மருலகே—2-2-10-

இது கற்றார் அண்டத்தை ஆளுகை நிச்சயம் -அவனைப் பற்றியும் இத்தைப் பெறுமத்தனையோ –
என்று விரக்தர் ஆனார்கள் ஆகில் அவர்கள் ஆளுமது பரம பதம் –

————————————————
திருவல்லிக்கேணி நின்றானை கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே—2-3-10-

நித்ய அனுபவம் பண்ணலாம் படியான நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் –

—————————————————-

நெடுமாலவன் மேவிய நீர் மலை மேல் — தமிழ் மாலை வல்லார்க்கு உடனே விடுமால் வினை
வேண்டிடில் மேல் உலகும் எளிதாயிடும் அன்றி
யிலங்கொலி சேர் கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்குடை மன்னவராய் அடி கூடுவரே–2-4-10-

ஆஸ்ரயண காலத்திலேயே கர்மங்கள் அடைய விட்டோடிப் போம் –
அதுக்கு மேலே பிராப்தியும் வேண்டி இருக்கில் அதுவும் அவர்க்கு சுலபமாம் -அன்றிக்கே
பூமிக்கு எல்லாம் தாங்களே நிர்வாஹகராய் சந்தரனைப் போலே இருக்கிற வெண் கொற்றக் குடைக் கீழே இருந்து
ஐஸ்வர்யத்தை அனுபவித்து பின்னையும் திருவடிகளிலே கூடப் பெறுவர்

————————————–

கடல் மல்லை  தல சயனத்துத் தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவர் தம்மை
–திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதலறிய வல்லார் தாமே –2-5-10-

ப்ராக்தமான கர்மங்களை தாங்களே வாசனையோடு போக்க வல்லார் ஆவார்கள்
பாபங்களை  கூடு பூரித்துக் கொள்ளும் இத்தனை போக்கி எலி எலும்பனான இவனால் இது போக்கிக் கொள்ளலாம்
என்றால் -இது கூடுமோ என்னில் -அதில் ஒரு தட்டு இல்லை இது த்ருடம் –

————————————————-

கடல் மல்லைத் தல சயனத்து அடிகளடியே நினையும் அடியவர்கள் தம்மடியான்
வடி கொள் நெடு வேல் வலவன்கலிகன்றி யொலி வல்லார் முடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே–2-6-10-

முடியை உடையராய்- நாட்டுக்கு அநந்ய பிரதானராய் இருந்துள்ள ஷத்ரியருக்கு பிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய்
நித்ய சூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்

——————————————-

இடவெந்தை யெந்தை பிரானை மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே-2-7-10-

பிராரப்த கர்மாக்களை வாசனையோடு போக்கப் பெறுவார்கள்- தாம் மோஹிப்பது- உணர்வதாக திருத்தாயார் கூப்பிடுவதாக
வேண்டாதபடி பகவத் அனுபவமே யாத்ரையான தேசத்திலே புக்கு அனுபவிக்கப் பெறுவார்கள்

—————————————–

அட்டபுயகரத்து ஆதி தன்னை கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே—2-8-10-

உருவு வெளிப்பாட்ட்டாலே அனுபவித்து பிறருக்கு இருந்து சொல்ல வேண்டாதே
நித்ய அனுபவம் பண்ணிக் களிக்கலாம் தேசத்திலே புகப் பெறுவர்-

——————————————-

பரமேச்சுர விண்ணகர் மேல்– திரு மா மகள் தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகாண்டு திகழ்வர்களே—2-9-10-

லோகத்திலே மகா ரதராய் கடல் சூழ்ந்த பூமியை அடைய ஆண்டு – உஜ்ஜ்வலர் ஆவார்கள்
இந்த ஐஸ்வர்யம் அடைய மலடாய் போகாமே இவரைப் போலே பாகவத சேஷமாக்கப் பெறுவார்
சர்வேஸ்வரன் விரும்பும் நிலம் ஆகையாலே இத்தேசம் ஆஸ்ரயணீயம் என்றும்
அது தான் சர்வ சமாஸ்ரயணீயம் என்றும் சொல்லிற்று ஆயிற்று –
சமதமாத்யுபேதர்க்கு இறே ஆஸ்ரயணீ யத்தில் அதிகாரம் உள்ளது –
அவை இல்லாதவனும் தம் தானாய் ஆஸ்ரயிக்கும படியான தேசம் இ றே-

———————————–

திருக் கோவலூர் அதனுள் கண்டேன் என்று– கலியன் ஒலி யைந்தும் யைந்தும் வல்லார்
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக் கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே–2-10-10-

ஐஸ்வர்யாத்துக்காகவும்- ஆத்ம பிராப்திக்காகவும்- பகவத் பிராப்திக்காகவும் லோகத்தில் உள்ளார் திரண்டு ஆஸ்ரயிக்க-
ஆஸ்ரயித்த போதே ஆஸ்ரயித்தார் அபேஷிதத்தை கொடுக்கைக்காக- எங்கும் புக்கு வியாபித்து அந்யைர த்ருஷ்டனாய்
நம்மை ஆஸ்ரயிப்பாரோ என்று அவசர பிரதீஷனாய் நிற்கிறவனைக் காணப் பெறுவார்-

————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட பூமியை இரந்தான் ஆயிற்று –

August 26, 2018

வண்கை யானவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே -பெரிய திருமொழி–1-8-5-

மாணியாய் மண் கையால் இரந்தான் –
அவனுடைய யஞ்ஞ வாடத்திலே இரப்பிலே தகனேறின வடிவைக் கொண்டு சென்று –
தன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட பூமியை இரந்தான் ஆயிற்று –

பருத்தி பன்னிரண்டு படுகை யாவது
1-கொட்டை வாங்கி -2-பன்னிச் சுருட்டி –3-நூலாக்கியும்
4-பாவோடி –5-நெய்து –6-மடித்து –7-விற்று -8-பொகட்டும் படியும்
9-தோய்த்து –10-உலர்த்தி –11-உடுத்து –12-கிழித்து விடும்படியும்-

ஈஸ்வரன் தன்னில்
1-விபக்தமாக்கி
2-பஞ்சீ க்ருதமாக்கி
3-அண்டமாக்கி
4-தேவாதி சரீரங்கள் ஆக்கி
5-லோக வ்யவஸ்த்திதி உண்டாக்கி
6-அவாந்தர ஸ்ருஷ்டியைப் பண்ணி
-ரஷித்து
7-ப்ரஹ்மாதிகளுக்கு ஆக்கி
8-பிரளயத்திலே எடுத்து
9-எயிற்றிலே வைத்து
10-வயிற்றிலே வைத்து
11-உமிழ்ந்து
12-பின்பு சம்ஹ்ருதம் ஆக்கியும்
செய்த படிகளைக் கண்டு கொள்வது-

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி நூற்றந்தாதி -ஸ்ரீ பிரதிவாதி பயங்கர சம்பத் ஸ்வாமிகள் –

August 20, 2018

திருமங்கை ஆழ்வார் மங்கள ஸ்லோகங்கள்

ஸ்ரீ மதாலி ஸ்ரீ நகரீ நாதாய கலிவைரிணே
சதுஷ்கவி ப்ரதானாய பரகாலாய மங்களம்
பத்மா நியுக்த குமதவல்யா ப்ரிய சிகர்ஷயா
ஆராதித விஷ்ணு பக்தாய பரகாலாய மங்களம்
கருணாகர காஞ்சீச ஸூ கந்த புரா நாதத
நிவ்ருத்த ராஜபாதாய பரகாலாய மங்களம்
சர்வஸ்வே விநியுக்தே அபி ராஜோஸ்ர்த் தைஸ் சோரிதைரபி
பூஜி தாஸ்யுத பக்தாய பரகாலாய மங்களம்
ரங்கேச ஸும்ய ஜாமாத்ரு சகலார்த்தாப ஹாரிணே
தத் பக்த பூஜ நார்த்தம் து பரகாலாய மங்களம்
பக்தாராதன ஸூ ப்ரீதாத் ரங்க தாம்ந க்ருபாகராத்
ப்ராப்த அஷ்டாக்ஷர மந்த்ராய பரகாலாய மங்களம்
ஸுவர்ண பாஹ்ய பிம்பேண ரங்கினோ கோபுராதிகம்
ஷட் கைங்கர்யம் க்ருதவதே பரகாலாய மங்களம்
ரங்காதி திவ்ய தேசான் ஷாட் ப்ரபந்தைர் மநோரமை
பக்த்யா ஸ்து தவதே பூயாத் பரகாலாய மங்களம் –

————————–

வாடி முன் வீழ் பொருட்க்கு மால் அருளால் மந்திரத்தின்
பீடு பொருள் கண்டு கலியன் தொண்டீர் நாடும் எந்தை
சீர் குடந்தை என் அமுதம் தாயில் ஏற்றம் செய் சொல்லைச்
சேர உயிர் வாலிய தாம் -1-

வாலிமை -வெளுப்பு-சத்வ குணத்தால் – பெருமை
தாயில் ஏற்றம் -குலம் தரும் இத்யாதிக்கு உப லக்ஷணம்
அமுதம் தாயில் ஏற்றம் செய் சொல் என்பது திரு மந்த்ரத்துக்கும் மங்கையர் கோன் சொல்லுக்குமாகவுமாம் –

———————————-

வால் இமயம் வானோர் வணங்கவும் பத்தர் தம்
பால் அகலத் துன்பம் இன்பம் மிகவும் மால் சேர்
பிரீத்தி எடை நெஞ்சே என்னும் கலியன் நம் பால்
அருவினை அகற்றும் முற்றும் —

வால் -வெண்மை –

——————————————

முற்ற மெய்யின் பொய் நாசமான பாசத்தின் புன்மை
உற்ற மால் ஏற்றத்தோடு உரைத்து மூப்பு -முற்று முன்
மந்த்ரம் ஈந்தோன் சேர் வதரி வணங்கு என்னு நீலன்
சிந்தையான் ஆனான் என்னும் -3-

மந்த்ரம் ஈந்தோன் -நர நாராயணனாய் சிங்காமை விரித்தவன் –
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே -4-9-2-நீலன் சிந்தையுள் எப்பொழுதும் உள்ள ஸ்ரீ வராஹாவதாரம் -ஏனம் என்றவாறு –

———————————

ஏனமானான் உய்ய நர நாராயணனாய் எட்டு எழுத்தின்
ஞானம் ஈந்து கங்கை வதரி யுள்ளானவனை
நெஞ்சை வணங்க பரகாலன் தான் பணிக்கும்
செஞ்சொல் நாம் உய்யும் கலை–4-

ஞானப் பிரான் உலகை இடந்து -/ நர நாராயணனாய் சிங்காமை விரித்தவனும் ஞானம் அளித்து -தர்மி ஐக்கியம்
விரோதி நிரசனத்வம் -ஆஸ்ரித ரக்ஷணத்வம் -கங்கை கங்கை வாசகம் என்று கங்கையின் பெருமை பாட்டுக்கள் தோறும் உள்ள பதிகம்

————————————————-

கலைப்பெருமான் அன்பர் பண்டம் கொண்டு உகப்பான்
அலைப்பான் நண்ணாரை அரன் தன் -தலை இடர்
நீக்குவான் சேர் சாளக்கிராமம் அடை என்று உரை செய்
வாக்கு இரு வினைக்கு வாள்–5-

கலைப்பெருமான் ஒலி மிக்க பாடலை யுண்டு /
இருவினை -மாளாத பெரிய -புண்ய பாபங்கள் என்றுமாம் –

———————————————

வாணுதலார் பேணி இரந்தார்க்கு ஈயாமல் பிறர்க்குக்
கோணை செய் தீ நெறியால் சேர் பயனை –
நாணி நடுங்கி நைமிசாரண்யத்து எந்தையை மா முன்
அடைந்தான் சரண் நீலன் அங்கு –6-

மா முன் -பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு
கோணை –தீங்கு–

—————————————————

அங்கம் இரணியனை ஆளரியாக் கீண்டான் சேர்
சிங்க வேள் குன்றம் செலவரிதென் -பொங்கும்
பிரிவால் பரகாலன் பா பயிலும் பத்தர்க்கு
உரிய நறவுடைக் கொங்கு -7-

வேள் –ஆசை -அபிநிவேசத்துடன் பொருந்தி உள்ள குன்றம்
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா-எளிதில் யாரும் அங்கு சென்று எம்பெருமானுக்கு
தீங்கு இளைக்க முடியாது என்று பொங்கும் பிரிவால் அருளிச் செய்த பதிகம்
கொங்குடை நறவு -வாசனையுடைய தேன்–

——————————————————

கொங்கை பூ மகள் வேங்கடத்து எட்டு எழுத்து உரைப்பார்
பொங்க மாற்றார் மங்க கரந்து எங்கும் உளன் -தங்கியுளன்
தன்நெஞ்சை அ ங்கடைய சொல்லும் கலியன் நம்
தஞ்சமாம் நல் தந்தை தாய் -8-

காரார் வரைக் கொங்கை –தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையா -என்பதற்கு ஏற்ப
திரு வேங்கடம் பூ -நில மகள் கொங்கையாகக் கொள்ளப்பட்டது –
மலராள் தனத்துள்ளான் போலே வேங்கடத்து தங்கி உளன் –

——————————————————–

தாய் தந்தை வேறுளர் என்றும் இன்பம் துன்பம் என்றும்
ஈயாது இரங்கா முன் தண்மை கூறி-ஆய நிலை
தேர்ந்து ஆட்செய மா முன் வேங்கடவன் தாளடையும்
சீர்க் கலியன் நந்தமக்குக் கண் -9-

முன் தண்மை –முன்னிருந்த புல்லிய தண்மை
முன் தன்மை-என்றாலும் ஒக்கும் -முன்னிருந்த ஸ்வ பாவம் என்றவாறு
ஆய நிலை தேர்ந்து –தனக்குற்ற நிலையை ஆராய்ந்து -ஆய பதார்த்த கைங்கர்ய பிரார்த்தனை –
அப்பதத்தை ஆராய்ந்து நேர்ந்து என்றவாறு
கைங்கர்ய ஸ்ரீ யுடைய கலியன்

————————————————-

கண்ணுலகுக்குக் கண்ணனாய் அடியார் கைப்பொருள்
நண்ணி நண்ணார் நலியும் வேங்கடத்து -அண்ணல் -அன்பு
தான் மிகத் தான் தனது நீங்க வேண்டும் நீலன் உள்ளம்
தான் புகுந்தான் அருள் செய்வான் -10-

தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பன் மண்ணோர் விண்ணோர்க்கு என்றும் கண்ணாவான் –
கண் உலகுக்கு -சஷூர் தேவானாம் உதமர்த்யாநாம் -சுருதி
அன்னவனே கண்ணனாய் -ஆஸ்ரிதர் ஸ்பர்ச வெண்ணெய் உகந்து அடைந்தான் -கைப்பொருள் நண்ணி
வேங்கடத்து அண்ணல் –திருவேங்கட மா மலை மேய பெருமான் –
தான் தனது நீங்க வேண்டும் நீலன் -யானே என் தனதே என்ற நிலை மாறி யானே நீ என்னுடைமையும் நீயே -என்ற நிலை எய்த
அருள் செய்வான் -வான் விகுதி பெற்ற வினை எச்சம் -செய்வதற்காக
எந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -என் நெஞ்சினுள்ளானே –என் மனம் குடி கொண்டு இருந்தாய் –

———————————————–

வானவர் தம் சிந்தை போல் வேங்கடவன் தனக்கு
ஆன தொண்டு செய்ய சாராமல் மற்ற -ஈன மதம்
தான் இசைந்த நெஞ்சமதைக் கொண்டாடும் ஆலி நாடன்
தான் இசைந்த பா நந்தம் காசு -11-

பாஹ்ய மதங்கள் -ஈன மதம் -இவற்றைச் சாராமல் நித்ய ஸூரிகள் போலே
கைங்கர்யம் செய்பவர் விண்ணுளாரிலும் சீரியர்களே

———————————————

காசினியின் நன்மை உன்னும் மா போல் தொண்டரை
நேசிக்கும் வானோர் வாக்குக்கு எட்டான்–ஈசன்
இனியன் இன்னார் தூதன் என எவ்வுளூரில் நின்றான்
எனும் நீலன் நாமம் நவில் -12-

பாண்டவர் தூதன் -ஆஸ்ரித பக்ஷபாதி – பரதந்த்ரன் –குணத்தைப் பிரகாசிப்பிக்கும் நாமம் பெற்ற பின்பே
திரு எவ்வுளூரிலே தான் தரித்து நின்றான் –
அவன் திருநாமம் பேசும் நீலன் நாமங்களை நாம் நவில்வோம்
நீலன் நாமம் –குறையால் பிரான் -ஆலி நாடன் -மங்கை வேந்தன் -மங்கையர் கோன்-
கலியன் -பரகாலன் -கலைப்பெருமாள் -வாட் கலியன் -வேல் கலியன் -கலி கன்றி-நாலு கவிப் பெருமாள் –
அருள் மாரி-திரு மங்கை மன்னன் -இரும் தமிழ் நூல் புலவன் -முதலிய திரு நாமங்களுக்கும் உப லக்ஷணம் –

—————————————————————————

வில் நுதல் அண்டர் கரிக்கு சார்வு பற்றாய் நீக்கியவர்
அல்லல் கிடந்தது இருந்து நின்று புள்ளூர் -செல்வனாம்
ஓர் அஞ்சுவை அமுதைக் கண்டான் கலிகன்றி
சீர் அல்லிக் கேணியுள் அன்று–13-

சார்வு -ரக்ஷகத்வம் /பற்று -சரண்யத்வம்/ஓர் -அத்விதீயம் -ஓர்தல் -என்றுமாம் -/
புள்ளூர் செல்வன் -கஜேந்திர வரத்தான் நித்ய சேவை /
கோயில் திருமலை பெருமாள் கோயில் -ஒரே திவ்யதேச சேவையால் வந்த சீர்மை –
எம்பெருமானாராக அவதரித்த சீர்மையும் உண்டே –
கண்ணனும் ராமனும் குடும்ப ஸஹித சேவையால் வந்த சீர்மையும் உண்டே
அஞ்சுவை அமுதம் -மன்னாதன் கிடந்து-தெள்ளிய சிங்கர் இருந்தும் -பார்த்த சாரதி நின்றும் –
புள்ளூர் செல்வன் வரதன் -மனத்துக்கு இணையான நின்றும் –
கலிகன்றி கண்ட அஞ்சுவை அமுதம் அன்றோ இவர்கள் –
வில் நுதல் -திரௌபதி /அண்டர் தேவர் இடையர் -இருவர் இடர் தீர்த்தமை பாசுரங்களில் உண்டே –

——————————————————

அன்றி தொண்டர் துன்பம் தவிர்த்து ஆய் பூ மங்கையொடு
நின்ற நீர் வண்ணன் மலை நீர் அடைமின் -வன் சேறாம்
வேறு மதத்துள் வீழாது என்னும் நீலன் வினையைப்
பாறு பாறாக்கும் பான்மை பார் -14-

அன்றி -சீறி
பாஹ்ய குத்ருஷ்டிகள் -சேறு
பாறு பாராக்குதல் -பொடியாக்கி –பண்டை வல்வினை பற்றி அருளினான் போலே –

——————————————

பாரமாய தூறு பாற்றிப் பத்தர்க்கு எளியனாம்
பார மல்லை ஞானத்து ஒளி யுருவை ஆறு பேறாக்
கொள்ள கள்ள நூல் தள்ளச் சொல் நீலன் சொல் வல்லார்
அள்ளல் அருவினை நண்ணார் -15-

ஞானத்து ஒளி யுருவன் -ஏனத்துருவாய் நிலமங்கை எழில் கொண்டவன் அன்றோ
அள்ளல் -கள்ள நூலே அள்ளல் -/ அள்ளல் நரகம் என்றுமாம் -விடியா வெந்நரகம் சம்சாரம்
ஆறு பேறு-உபாய உபேயம் தவ தத்வம் நது குணவ்-ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம்
பார மல்லை -புகழையுடைய மல்லை -தேசாந்திர தேகாந்தர காலாந்தரம் இல்லாமல்
இங்கேயே இப்பொழுதே இத்தேகத்துடனே -சேவை அன்றோ
தூறு பற்றி -குதிரையோட்டி-போலே பெயர்ச் சொல்லாகவுமாம் –
பக்தர் வினைகளை போக்குவதே ஸ்வ பாவமாகக் கொண்டவன் அன்றோ-

—————————————————————-

நண்ணாமல் மால் அடியார் அல்லாரை சீர் மல்லையான்
தொண்டர் தம் தொண்டரையே ஆறு பேறாய் -திண்ணிதா
எண்ணு நீலன் தொண்டர் எல்லைத் தானாய்ச் சொல் இன் தமிழை
எண்ண மதி திவளும் -16-

தொண்டரை அடையாவிடிலும் தொண்டர் அல்லாரோடு கூடாமையே முக்கியம்
அடியாரையே ஆறு பேறாகக் கொள்வதே நம பத தாத்பர்ய அர்த்தம்
வாய்த்த திரு மந்திரத்தின் மத்திமம் பாதத்தின் எல்லையான பொருளை நாம் எண்ண
நம்முடைய சேஷத்வ பாரதந்தர்யங்களாம் ஸ்வரூபம் -நன்கு பிரகாசிக்கும் –
மதி திவளும் -புத்தி சுடர் விட்டுப் பிரகாசிக்கும்
சீர் -திரு மல்லைக்கும் -மல்லையானிலும் மல்லை தொண்டரிலும் -மல்லையான் தொண்டர் தம் தொண்டரிலும் அந்வயிக்கும் –

———————————————————————

திவளும் இடவெந்தையின் சீலத்தால் எழிலால்
துவள அவன் தன் நினைவே -நவை நீங்க
பாங்கு எனத் தாய்ச் சொல்லாய்ப் பரகாலன் பேசுகின்ற
தீம் தமிழில் நெஞ்சே திரி -17-

அவன் தன் நினைவே -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்று ஒரு கால் சொன்னால் போல்
ஒன்பதில் கால் சொல்லியமைக்குச் சேரும்
நாவை -துன்பம் / தீம் -இனிய /
தாய் சொல்லாய் துணிவையும் மகள் சொல்லாய் பதற்றமும் பதிகத்தில் உண்டே –
திரி -ஆழ்வாருடைய ஈரச் சொற்களில் அவகாஹித்து -சுழன்று சுழன்று கால ஷேபம்-

———————————————————————–

திரித்து எழில் பூண் மேன்மை படை அட்டபுயன்
எரித்த சுடர் உட்கண்ணால் கண்டு -பரிவால்
உரு வெளிப்பாடா உரையாடல் நிகழ்ந்தது என்று
உரை செய் நீலன் சொல்லே சொல் -18-

அட்டபுயன் -அட்டபுய அகரத்தில் உள்ளான் ஒருவன் -அட்ட புயகரத்தான்
அவனது அழகு ஆபரணம் பரத்வம் ஆயுதங்கள் -திரிகள் -எரித்த சுடர்
இந்த அருளிச் செயலே சொல் மற்றவை சொல் அல்ல – இவற்றையே சொல் என்றுமாம்
பரிவால் எரித்த சுடர்
பரிவால் வெளிப்பாடா உரையாடல் நிகழ்ந்தது என்றுமாம் –
பரிவு -ஆர்வம் -அன்பு -ஆர்வமே நெய்யாக போலே –

——————————————–

சொல் சொல்லும் காரணன் முத்தர் பத்தர்க்கு ஈடாக
நல்ல கொடுத்து அல்ல கெடுப்பான் உறையும் பல்லவர் கோன்
வந்திக்கும் கச்சி விண்ணகர் சொல் அருள் மாரி
இந்த பாருய் வான் பொழி மஞ்சாம் -19-

கச்சி விண்ணகர் -பரமேஸ்வர விண்ணகரம்
பாருய் வான் -வான் விகுதி பெற்ற வினை எச்சம் -உய்வதற்காக என்றவாறு
அருள் மாரி என்பதால் பொழி மஞ்சாம்-ஆன்மா உயர்கதி பெற்று விளங்க அன்றோ இவருடைய அருளிச் செயல்கள்-

————————————–

மஞ்சு சேர் தீயோம்பி பலன் வேளாது நற்குணமே
விஞ்சு செஞ்சொல் வேதியர் வாழ் கோவலூருள்-விஞ்சு வலி
நீர்மை வினை நீக்கு மாலிக் கண்டு கொண்டேன் என்று நீலன்
நேர்ந்த சொல் நீக்கும் நெஞ்சு இருள் -20-

நெஞ்சு இருள் -அஞ்ஞான அந்தகாரம்
கோவலூர் –திவ்ய தேச திரு நாமமே நீர்மையை சொல்லும்பொழுது
உள்ளே உறையும் பெருமானின் நீர்மை வாய்க்கு எட்டுமோ –

—————————————————————-

இரு நிலம் இடந்து இரும் துன்பம் தொண்டர் அண்டர்க்கு
உருத்து ஆல்மேல் சேர் அடியார் மெய்யன் -பொருந்தும்
அயிந்தை சீர் உட்பொருள் உடன் சொல் கலியன்
செயரில் பா நாம் உண்னும் ஊண்–21-

உருத்து -கோபித்து -அதனால் அழித்து-/செயிர் -குற்றம் /செயரில் -குற்றம் அற்ற /
கமல நன் மலர்த் தேறல் அருந்தி இன்னிசை முயன்று எழும் அளிகுலம் பொதுளி அம் பொழில் சூடி
செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு —
தேனேமலரும் திருப்பாதத்தை தேறல் அருந்தி அவன் புகழ் பாடி பின்னர்
பரமபத நாதனின் -பத்தே பரமே மத்வ உத்ஸா -பாத மலர் நறவு அருந்தச் செல்வர்
அளிகுலம் -வண்டு–ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றவாறு–

———————————————

ஊன் ஒறுத்து உண்ணாது நீர் நெருப்பு ஊடு நின்று
வானடைய நீர் வருந்த வேண்டா நம் -கோனமரும்
சித்திர கூடம் சேர் என்னும் கலியன் தாள் அடையும்
பத்தர்க்கு இங்கு இல்லை வாடல் –22-

மூவாயிரம் மறையாளர் நாளும் வணங்கும் –தில்லை மூவாயிரம் நாங்கை நாலாயிரம் –

———————————————-

வாட வேழம் மல்லர் அரவம் மருதம் மால் விடை
பாடு அழித்துப் பிள்ளை பிள்ளைக்கு அளித்தது -ஈடா நாம்
எண்ணிய செய்யும் சித்திர கூடத்தான் என் நீலன்
ஒண் கழல்கள் உன்னும் ஒருங்கு -23-

பிள்ளை-அவன் பிள்ளை ப்ரஹ்லாதன் /பின்னை -நப்பின்னைப்பிராட்டி
மருதம் -அசுராவேச நள கூபரன் -மணிக்ரீவன் –காமம் க்ரோதாதி இரட்டைகள்
உன்னும் -உள்ளுதல் -நினைத்தால் -/ ஒருங்கு முழுவதும் /
மால் விடை ஏறு ஏழும்-காமம் க்ரோதம் -லோபம் -மோஹம்–மதம் –மாத்சர்யம் -அஸூயை /
வருவான் -என்று ஒன்பதில் கால் பதிகத்தில் அருளிச் செய்தது -வீதியில் எழுந்து அருளும் போது
மங்களா சாசனம் செய்தமை தோற்றும் –

——————————————————————

ஒருவன் அயன் வாலி வாணன் இந்திரன் பொன்னன்
அரன் பெருக்கெடுத்து மலர் மங்கைக்கு -அருளுமா
போல் அருள் சீராம விண்ணகர் உள்ளான் என்னும்
வேல் கலியன் ஏத்தும் உவந்து -24-

ஒருவன் -அத்விதீயன் /
ப்ரஹ்மாவின் செருக்கை அளிக்க உரோமசர் முனிவர் விருத்தாந்தம் -வாணன் –
கற்பகாக்காவை சத்யா பாமை பிராட்டிக்கு -இவ்வாறு அஹங்காரங்கள் அழித்து
குரு மா மணிப் பூணாய்ப் பூணுதற்கு வேடிக்கை கொண்ண்டு திவ்யதேசங்களில் உகந்து எழுந்து அருளி –
வேல் கலியன் -ஞான சம்பந்தர் செருக்கு அழித்தமை –

————————————————————-

வந்து வுவந்து சிந்தை புகும் ஆலியம்மானைத் தன்னின்
சிந்தை நீங்க ஒட்டாது தொல்லடிமை -முந்துறக்
கொள்ள அறப் பதறிக் கோரும் கலியனை
உள்ளி ஏத்தும் மலர்த்தூய்–25-

தன்னின் சிந்தை -சிந்தைக்கு இனியான் அன்றோ
வந்து வந்து -சமயம் பார்த்து என்றுமாம்
உள்ளி ஏத்தும் மலர்த்தூய் -உள்ளுதல் நினைத்தல் மானஸ வியாபாரம் -ஏத்துதல் -வாக்கின் செயல் –
மலர்தூவுதல் காயிக வியாபாரம்-முக்கரணங்களும் ஒருப்பட நின்று கைங்கர்யம் –
பதற்றம் -தலைவி கார்யம் -பேற்றுக்கு த்வரிக்கையும் வேண்டுமே –

—————————————

தூவி சேர் தும்பி ஆலியான் பால் தூது விட்டு
நோவை உரைத்து அது ஆறாத் தானே யன் நோவை
உரை செய் பரகாலன் ஒப்பில் அருளால் நம்
கரையில் வினை கொள் கள்வன் -26-

கங்குகரை இல்லாப் பாவங்களை நம்முடைய இசைவு பாராது கொள்பவர் ஆழ்வார் –
தூவி -இறகுகள் –ஞானம் அனுஷ்டானங்கள் –
கள்வன் கொல்-பிராட்டி திண்ணம் அல்லவே இவர்கள் புகுவது –
திண்ணம் திருக்கோளூர் புகும் பராங்குச நாயகி போலே அல்லவே

————————————————-

கள்ளக் குறளன் நெஞ்சுள் செல்லும் தோற்றத்தை
உள்ளத்துள் தேற்றமாக்க ஓர்ந்ததனை தெள்ளி தாத்தான்
ஆலி யம்மானுக்கு அற்ற தன்மை யுரை ஆலி நாடன்
ஞாலத்து நந்தா விளக்கு -27-

கள்ளக் குறளனாய் திரு வாமநவதாரமும் திருவாலி அம்மானும் தர்மி ஐக்யத்தால் ஒருவரே
தாய் மனம் நின்று இரங்கத் தனியே பெருமாள் துணையா புனலாலி புகுந்தாள்-பல சுருதி பாசுரத்தால்
அவனுக்கே அற்றுத் தீர்ந்தமை விவஷிதம்
அர்ச்சாவதார சேவையால் இந்த லோகத்தில் ஆழ்வார் நந்தா விளக்காக நம்முடைய
அஞ்ஞான அந்தகாரங்களை அடியோடு நீக்கி அருளுகிறார் –

—————————————————–

நந்தா இன்பம் நம்ப உம்பர் களிறு காத்து
வந்த பேய் அரக்கர் மாய்த்து ஆய்ச்சியர் -தம் துகில் கொள்
பின்னை மணாளன் மணி மாடக் கோயில் அடைமின்
என்னு நீலன் காக்கும் சலம் -28-

வானோர் -குறையாத இன்பம் எமக்கு அருளாய் -என்று வந்து இறைஞ்சுவர்
சலம் -கபடமான எண்ணம்
நம்பும் -ஆசைப்படும்
வணங்கு என் மனனே என்றாலும் பரோபதேசமாக கொள்வது நன்று –

—————————————

சலத்தால் நிலம் கொண்டான் எண்ணி நைவார் காப்பு
உலகுய்க்கும் நான்கை வைகுந்தன் -நலத்தால்
அசித்தும் அடையும் ஆனந்தம் என்னும் நீலன்
கசிந்து அருள் செய் நம் திரு -29-

சலத்தால்-மூவடி நீரொடும் கொண்டதால் ஜலம் என்றும்-கபடம் என்றுமாம்
காப்பு -நைந்து உள் கரைந்து உருகும் அடியார்க்கு அரணாய் நின்று ரக்ஷிக்குமவன்
நம் திரு -ஆழ்வாரே நம் செல்வம் என்றவாறு –

——————————————————

திருமால் அடியார் அடைய தடை தீர்த்து
வரு துயர் வீழ்த்துத் தாள் அடைய -அரிமேய
விண்ணகர் மேவி யுகந்துள்ளான் என்னும் கலியன்
பண்ணில் நெஞ்சே போக்கு போது–30-

பண்–பாட்டு -ராகம் -இசையோடு கூடிய ஒலி மிக்க பாடல்-

——————————————–

போதமர் மா வானவர் வேட்ப வழங்கித் தான்
கோது அற்று எங்கும் கரந்து பாருண்டு ஆல் மீது துயில்
நான்கை தேர்வானார் தொகையான் நல்கும் அருள் என்னு நீலன்
பால் மனமே செய் சேவகம் -31-

போதமர் மா -அலர்மேல் மங்கை
கரந்து -நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் -எல்லாப் பொருளும் தன்னுள் நின்றாலும்
கோது அற்று உறைவது -வியாப்ய கத தோஷம் தட்டாமல்

————————————-

கம்பத்தின் தோன்றல் அயன் அரனைத் தோற்றுவித்து
உம்பர் இடர் நீக்க அவர் எதிர் அம்பு கோக்க
வென்று அளிக்கும் வண் புருடோத்தமனைக் கூறு நீலன்
பன்னு தமிழ் நம் பேரணி -32-

பேரணி -ஆழ்வார் ஸ்ரீ ஸூக் திகளே நமக்கு சிறந்த ஆபரணம் –

————————————————

பேரணி சீர் பால் கார் அமுதம் தேன் பான்மையான்
பேர் அறிவன் இன்பன் மாறில் மாலை -சீர் மறையோர்
செம்பொன் செய் கோயிலுள் மாவோடு கண்டுய்ந்த நீலன்
நம் பிறவியாம் வினைக்கு மாற்று -33-

நாங்கை நன்னடுவுள் உள்ள திவ்ய தேசம்
பேர் அணி சீர் -அணி அணியாகத் திரண்ட கல்யாண குணங்கள்
அவை தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதமுமாய் தித்திக்கும் பான்மை -தன்மை அன்றோ
பேர் அறிவன்-சர்வஞ்ஞன்
மாறில் மால் -அவிகாராய ஸூத்தாய-சதைக ரூப ரூபாய
மாறில் ஒப்பில்லாத அத்விதீயன் என்றுமாம்
கண்டு உய்ந்தமை ஒவ் ஒரு பாட்டிலும் இறுதியில் உண்டே –

————————————————

மாற்றில் இடர் மாற்றி அடியர்க்கு மாகம் மா நிலம்
போற்ற அளித்துத் தடையாவும் பற்றி ஆட்கொள்
வான் தெற்றி யம்பலத்தான் என்றுரை மங்கையர் கோன்
தான் போக்கும் நம் பவத்தூறு -34-

மாகம் -பரமாகாசம் / மா நிலம் -வையம் //இட ஆகுபெயர் -அங்குள்ளாரை சொன்னபடி -/

————————————————

தூம்புகை மா துயர் தீர்த்துத் தொண்டர் காமுற்ற
சோம்பாது ஈந்து யாரையும் யாவையும் ஓம்புமவன்
நங்கை மணிக்கூடத்தான் என்னும் நீலன்
யாம் இன்பம் சேர தா வளம் -35-

தூம்புகை மா துயர் -தூம்பு துளை-தூம்பு காய் மா -விலங்கு -ஆனை-
ஸ்ரீ கஜேந்த்ரனுடைய பெரிய துயர் -யானையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்-

—————————————————

தா வளந்து தான் உழலும் ஊன் குரம்பை தான் ஒழிய
காவல் தானும் பிறரும் அன்று என்று காவளம்
பாடி கண்ணன் பாதம் அடையும் பரகாலன் பாதம்
நாடி நீர் நீங்கும் இடுக்கண் –36-

தாவளந்து –தாவி அளந்து -தட்டித்திரிந்து -பல் யோனிகள் தோறும் புகுந்து ஆக்கையில் ஆப்புண்டு தடுமாறும் உயிர்
பெருமாள் திருவடி அடையும் ஆழ்வார் திருவடி அடைவதே நமக்கு கர்த்தவ்யம் –

———————————————

கண் நா நாட்டார் புகழ் அன்பார் வேதியர் வாழும்
கண் அழிவில் வண் திரு வெள்ளக் குளத்து அண்ணனைப்
பேற்றுக்கு ஆக்கை நீக்க மா முன் சரண் அடையும்
நால் கவியார் சேர்க்க வளம் –37-

கண்ணார் புகழ் -நாவார் புகழ் -நாட்டார் புகழ் -என்று அந்வயிக்கலாம்
கண் –எண் சாண் உடம்புக்கும் தலை பிரதானம் -அதற்கு கண் பிரதானம் -கண் ஞானத்தையும் குறிக்கும்
கண் இடம் -தாம் இருக்கும் இடம் புகழ் பாடும்படி யுள்ளதாய் இருத்தல் –
கண் அழிவில் -திண்ணமாக
வண்மை-திவ்ய தேசத்துக்கும் பெருமாளுக்கும் அன்வயம் –
நால் கவியார் -சதுஷ்கவி ப்ரதானாய பரகாலாய மங்களம் –
ஆசுகவி -சித்திர கவி-மதுர கவி -விஸ்தர கவி –

—————————————————-

கவளக் களிறு அரக்கர் பேய் தம் உயிரைக்
கவர்ந்தான் மறை நால் தொடர் பவன் பார்த்தன்
பள்ளி காயா வண்ணனைக் கூடாமை கூறு நீலன்
நள்ள நலம் நல்கும் நுமக்கு –38-

மறை நால் -நான்மறை என்று மாற்றிப் பொருள் –
நான் மறைகள் தேடியோடும் செல்வன் -நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் –
வேத பாராயண கோஷ்ட்டி பின் தொடருவதையும் -வேதங்கள் அவனை சொல்லி முடிக்காமையும் குறிக்கும்
காயா வண்ணன் -காமரு சீர் குவளை மேகமென்ன மேனி -வேலையன்ன கோல மேனி வண்ணன்
பார்த்தன் பள்ளிப் பெருமாளைக் கூடாமையால் வந்த துன்பத்தை கூறும் ஆழ்வாரை –
நள்ளி -அணுகி -வாழ்பவர் நல் வாழ்வைப் பெறுவர் என்றபடி–

—————————————–

நும் அடியோமுக்கு நும்மைக் காட்டாது அடியேனை
நும் அடியாரோடு ஒப்ப எண்ணுதிர் என நம் கலியன்
இந்தளூரானுக்கு இயம்பினான் தன இன்னாமையைத்
தன்னிலை மாறாதவனாய் -39-

தன்னிலை மாறாதவனாய் –தானான தன்மையில் ஊடுகிறார் –
பக்தானாம் தவம் ப்ரகாஸஸே-என்றதின் எதிர்த்தட்டாய் இருந்தமையால் –
தம்முடைய மார்த்தவத்தையும் வெளியிட்டு அருளுகிறார் இந்த பதிகத்தில்
எம்பெருமானைப் போல் அல்லாமல் நமக்காக எப்பொழுதும் சேவை என்பதால் நம் கலியன்
தூது விடுவதும் அணுகரிப்பதும் ஊடுவதும் அர்ச்சாவதார பெருமாள் இடம் தானே நம் கலியனுக்கு –

——————————————–

ஆய்ச்சியர் அன்பர் கைப்பொருளை உகக்கும் தான் சேரா
சேர்க்கும் அழிய மாருதி தொண்டர் இடர் தீர்க்கும்
திரு வெள்ளியங்குடியான் வாழ்த்தும் கலியன்
திரு மொழி ஏத்தும் அறிந்து -40-

அகடிதகடநா சமர்த்தன் -ஆலிலை -நரஸிம்ஹம்-போன்று
பரத்வத்தை அழிய மாறி ஸ்தாவர திர்யக் மனுஷ்ய யோனிகளில் திருவவதாரம்

—————————————–

அறிவது அரியான் அடியார் தேவிமார் உய்யத்தான்
கிறி செய்வான் தேர்வார்க்கு அமுதில் அறிவினியன்
புள்ளம் பூதங்குடியான் என்னும் பரகாலன்
உள்ளூர் உம்பர் தாம் -41-

கோலா வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்டதும்
அழகைக் காட்டி தன்பால் ஆழ்வாராதிகளின் ஆதரம் பெறுக வைப்பதும் போன்ற கிறிகள்
அறிவினியன்-அறிவதற்கே இனியவன் -அறிந்த பின்பு கண்டு அனுபவிக்க இனியவன் –
அவனைப் பற்றிய அறிவே இனிக்குமே
உம்பர் -நித்ய ஸூரி கள் என்றவாறு-

———————————————-

தாம் அறியாத் தன்னுள் புகுமவன் தன் பெருமை
தான் அரியான் தொண்டர்க்கு அறியுமாறு தான் அருளும்
கூடலூரான் ஊர் எழிலுடன் சொல் கலியனைக்
கூடி வானில் விளங்கும் வென்று -42

யாதோ வாசோ நிவர்த்தந்தே என்ற வேதம் போல் அன்றிக்கே-எம்பெருமானுடைய கல்யாண குணங்களை
அருளிச் செய்வதில் விளாக்குலை கொள்வதால்
தன் பெருமை தான் அறியா விடிலும் தன் அடியார் அறியும்படி அருளுபவன் அன்றோ –
வானில் சென்று விளங்கும் -என்றும் வானை விட வாழ்ச்சி இங்கு என்றும் கொள்ளலாம் –

————————————————-

வென்று விளங்கு வினை வீயச் செய் மாலடிக்கே
என்றும் அன்பால் ஏவல் இசைந்து ஆட்செய்ய ஓன்று நீலன்
வெள்ளறையானை வேண்டும் பாடலை உள்ளத்துள்
உள்ள உகந்து நெஞ்சே உந்து -43-

ஓன்று நீலன் -ஒருமைப்பாட்டை -இசைந்த நீலன் ஏவ மற்றமரர் ஆட் செய்வார்-என்கிறபடியே
பெருமான் சோதி வாய் திறந்து பணித்தபடியே ஆட் செய்தல் உற்றதாகும் –

———————————————

உந்தி அயன் ஓங்குவித்து வையமாக்கிக் காத்து அழித்து
எங்கும் கரந்து உறையும் மாயமுடை எந்தை தன்மை
தன் நன்மைக்கு என்று எண்ணித் தென்னரங்கம் பாடு நீலன்
சொல் மறவாமல் வாய் வெருவு -44-

மாயம் -ஆச்சர்யம் -மித்யை பொய் அன்று –
எந்தை தன்மை -எம்பெருமானுக்கு நமக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத சம்பந்தம் அறிவதற்கு மேல் ஒரு ஸூஹ்ருதம் உண்டோ
பெருமாள் அடியார்க்கு அருள் செய்தமை தனது நன்மைக்கு என்று யார் ஒருவன் எண்ணுகிறானோ
அவனே உண்மையான உத்தம ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் உடையவன் –

——————————————–

வெருவித் தான் தன்னது தன்பால் அரங்கன் அன்பை
இருத்த ஆட் செய்யா கூடாத்தன்னின் வருத்தம் போம்
ஆறு அறியாது ஆற்றாமைத் தாய்க் கூற்றாய் நீலனுரை
கூறல் வாய்க்குற்ற வகை -45-

அரங்கன் அன்பைத் தன்பால் இருத்த ஆறு அறியாமலும்
தன்னின் ஆட் செய்யா வருத்தம் போம் ஆறு அறியாமலும்
தன்னின் கூடா வருத்தம் போம் ஆறு அறியாமலும் -என்று அன்வயம் –

—————————————————-

கை கழிந்த அன்பர் முன் கை கட்டித் தான் நின்றும்
கையர் நலிந்தும் வையம் நலம் எண் ஐயன்
அரங்கனைக் கைக்கனியாய்க் காண் கலியன் பாதம்
பரவ வினைப் பாறிடுமே பண்டு -46-

கை கழிந்த அன்பார் -மிக்க பெரும் சீர் தொண்டர் என்றபடி -பரத்வம் வந்தேறி அன்றோ அரங்கனுக்கு
கையர் -கயவர்
வையம் நலம் எண் -உறங்குவான் போலே யோகு செய்யும் -வ்யூஹ ஸுஹார்த்தம் –

——————————————

பண்டைய காரணன் அண்டர் அல்லல் விண்டு ஒழித்து
தொண்டர்க்காய்த் தான் தரணியில் திண்ணம் அண்டர் கோன்
வந்து இருக்கும் கோயில் எண்ணித் தான் உய்க்கும் நீலன் தாள்
வந்தியாதார் தாம் ஏழையர் -47-

காரணன் -காரணம் ஸ்து த்யேய-
தரணி -உலகம் -திண்ணம் வந்திருக்கும் -சம்சாரம் வேரோடு கிழங்கு அறுத்தால் அன்றி பேரேன்-என்று இருக்கும் சீர் –

—————————–

ஏழைமை சூழ் பிறப்பு கூற்றத்து இழிவு ஒழிய
வாழ்வாம் ஆட் செய்வு அவன் சிந்தையதாய் -ஆழியான்
ஆராமம் சூழ் அரங்கன் ஆடகத்தான் ஆறாய்ச் சேர்
சீரார் நீலன் தொழும் என் கை -48-

சரணாகதிக்கு அபேக்ஷித்தமான ஐந்து அங்கங்களையும் அருளிச் செய்து சரண் அடைகிறார் அரங்கன் திருவடிகளில் –
அடக்கம் -பொன் -உலகம் அளந்த பொன்னடியாகையாலே-
ஆழியான் -கம்பீர ஸ்வ பாவன்-ஆழி நீர் வண்ணன் -கருமை நிறமுடையவன் –

——————————————-

கை கூப்புவார் கூப்பாதார் இறை தாமாய் நினைவார்
ஐயன் அசோதை நப்பின்னைக்கு பொய்யிலானாம்
பேரான் உள்ளம் புகுந்த வாழ்த்தி உயு நீலன்
பேரே தீர்க்கும் நந்தம் தீது -49-

—————————————

தீதறத் தொண்டர் துயர் தீர்த்து அவர்க்கு மீளுதலாம்
ஏதமில் வான் ஈந்து கரந்து எங்கும் உறை ஏதமில்லா
நந்தி புர விண்ணகரான் நண்ண நீலன் தானுரை செய்
செந்தேன் பருகு வண்டாய் –50-

ஏதமில் வான் -ஸ்ரீ வைகுண்டம் -கைவல்யத்தில் வ்யாவ்ருத்தி
நீலன் உரை செந்தேன் பருகு வண்டாய் தேனிலும் இனிதான திருமொழி –

————————————–

வண்டாம் தெய்வத்தாளில் விஞ்சு விருப்பம் மிக்க
வண்டார் குழலார் பால் தான் வெறுப்பும் கொண்டமையை
விண்ணகரானுக்குச் செஞ்சொல்லால் கலியன் செய்
விண்ணப்பம் பொற்பே பொறு –51-

பொற்பு -அழகு / பொறு -தாங்கு /
எம்பெருமான் பால் ஆதாரஅதிசயமும் பிராக்ருத பதார்த்தங்களில் வெறுப்பும் வளர
ஓவுதல் இல்லாமல் ஆழ்வார் அருளிச் செயல்களை மனனம் செய்ய நெஞ்சை இரக்கிறார் –

—————————————–

பொறுக்க ஓணாச் சுற்றம் பொருள் புலன்கள் தம்மைத்
துறந்து விண்ணாட்டுச் சீர் நீலன் பெற மா முன்
ஆர்த்தனாய் விண்ணகரான் சீர்த்தாள் சரண் அடைந்தான்
சீர்த்தாள் சேர் மற்ற துறந்து -52-

பொறுக்க ஓணா–சுற்றம் பொருள் புலன்கள் மூன்றிலும் அன்வயம்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஓணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர் அறுத்துத் தின்றிட -7-7-1-

———————————————-

துறக்க அரிய சிற்றின்பம் தேவல்லாரை
இறையா நினைதல் இகந்து -மறவாமல்
விண்ணகரான் எண்ணும் தனக்கு விண் வேண்டும் நீலன்
திண்ணமதா நம் களை கண் –53-

———————————————

கண்டால் பொருள் இன்பம் கொண்டாடி அற்ற காலை
கண்ட பேசி ஏசுவாராய்க் கை விட்டு தண்ணறையூர்
பற்றாத் தொழு நெஞ்சே என்னு பரகாலன் சொல்
கற்றார்க்கு இல்லை கலக்கம் -54-

அற்ற காலை –பொருள் இல்லாத போது –

———————————————-

கலங்கச் செய் துன்பம் தீர்த்து அண்டர் மா தொண்டர்
துலங்கச் செய் நம்பி நறையூர் கலங்கா வான்
ஒக்கும் எனும் மங்கை வேந்தன் பாதம் நமக்கு அளிக்கும்
இக்கரையாம் அம்பரம் -55-

இக்கரை ஏறி இளைத்து இருந்தேனே –பெரியாழ்வார் -5-3-7-இக்கரை எனப்படும் வானாடு-அம்பரம் -பரமபதம் –
திவ்ய தேசமே பரமபதத்தில் உத்தேச்யம் –
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத தன்மை தேவபிரான் அறியும் –திருவாய் -7-10-10-

————————————————

அம்பரம் தீ தானாய் அவை விழுங்கி ஆயன் அரி
அம்மீனாயத் தோன்று நம்பி சேர் நறையூர் அம்பணி செய்
செம்பியன் சீர் ஊர் எழிலுடன் செப்பும் சீர்க் கலியன்
செம் கழல் சேர்ந்து வான் ஆளும் –56-

செஞ்சுடரும் நிலனும் பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெறுக்கிப் புகப்
பொன் மிடறு அத்தனை போது அங்காந்தவன் –10-6-1-
வான் ஆளும் -ஆண்மின்கள் வானகம் -திருவாய் -10-9-6-
கலி wயனுடைய செம் கழல் சேர்வது வான் ஆள்வதற்கு ஒப்பாகும்
வான் செம் கழல் சேர்ந்து ஆளும் -உபய விபூதி -இங்கே இருந்து கிட்டும்-

——————————————————————–

ஆளுமவன் தான் தனக்காட் செய்யும் அறிவு அருளி
ஆளறக் கொள் நம்பி புகழ் பேறாய்த் தான் -ஆள் கொள்வான்
நன்னறையூர் நின்றான் அங்காட் செய்து உயும் என்றான்
மங்கையர் மன்னன் எம்மான் -57-

புகல்-ரக்ஷகன் /பேறு-பெரும் பலன் புருஷார்த்தம் /
சேஷிக்கு உகந்த அடிமை செய்வதே உய்வதற்கு ஆறும் பேறுமாகும்–

—————————————————

மானமுடை வானவர் தொண்டர்க்கு வாசியற
தான் அழிய மாறி அருள் நம்பியிடம் நான் உகந்த
மாற்ற வூரான் பான்மை நீலன் கண்டான் நறையூரில்
உற்ற திருவாம் பெடையோடு-58-

திருவேங்கடம் திருவாலி திருநாவாய் திரு மெய்யம் திருகி குடந்தை திரு நறையூரில் கண்டதாக அருளிச் செய்கிறார்
நரசிம்மம் கண்ணன் இராமன் தன்மைகளையும் கண்டார் –
உற்ற திரு -பகவான் நாராயண அபிமத அனுரூப ஸ்வரூப ரூபம் –
நமக்கு உற்ற திரு என்றுமாம் –

——————————————–

பெடையாம் பூ மங்கையோடு பத்தர் தம் பண்டம்
அடைந்து உகந்து அண்டர் தொண்டர் தம் இடையூறு
நீக்கு நிறையூர் நம்பி தாள் சரணாய் நீலன் தான்
நோக்கும் புகலாய்க் கிடந்து -59-

புகலாய்க் கிடந்து -ஒரே சொல்லாக்க கொண்டு ரக்ஷகனாகக் கொண்டு என்றபடி
சரணாய் நோக்கும் -சரணாகதி அடைகிறார் என்றவாறு
உலகம் உண்ட பெறுவான் போலே இந்த பதிகத்தில் பாசுரம் தோறும் எம்பெருமான் அடியிணை உண்டே –
பூ மங்கை -மலர்மகள் மண் மகள் இருவரையும் குறிக்கும்
பெடையாம் பூ மங்கையோடு -பூ மங்கையாம் பெடையோடு என்று மாற்றி பொருள் –

——————————————–

கிடந்த பவ்வன் நாமமுடன் நம்பி நறையூரான்
இடர் கடிவான் விண் மண் இரண்டும் கடவன் ஈசன்
மாதவன் மாயன் காரணன் சீலன் என் நீலன்
வேத சாரம் சொல் கறவை -60-

கிடந்த பவ்வன்-ஷீராப்தி நாதன்
நாமமுடன் நம்பி நறையூரான் -திருமந்த்ரார்த்தத்தை பொருளுடன் அடைவே விவரிக்கிறார்
இடர் கடிவான் -விரோதி நிரசன சீலன்
விண் மண் இரண்டும் கடவன் -உபய விபூதி நாதன் -ப்ராப்தியை யுடையவன்
ஈசன் –நியமிப்பதை ஸ்வ பாவமாக யுடையவன்
மாதவன்–திருமால் –
மாயன்–ஆச்சர்ய சேஷிடிதங்களை யுடையவன் –
காரணன்–காரணம்ஸ்து த்யேயா –
சீலன்–ஸுசீல்யன்
என் நீலன் -என்று நாராயண நாமார்த்தை அருளிச் செய்யும் கலியன்
வேத சாரம்–ஆரண சாரம்
சொல் கறவை -ஆழ்வார் பசு -ஆச்சார்யர் ஸ்தானம் –

————————————–

கறவையாய் நம்பியைத் தான் மற்ற ஊர் சீரோடு
மறவாது அழைத்துச் சிறையாம் பிறவி அற
தாய் கரும்பு வள்ளல் கதியாய்க் கலியன் காண்
மாயன் ஆனான் புள் ஏனம் -61-

தாய் நினைந்த கன்றே ஓக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து -7-3-2-கறவை எம்பெருமானே –
தாயாய் உலகு அளித்தும் -கரும்பின் சுவை போலே போக்யனாயும் அபேக்ஷிதங்கள் அருளும் வள்ளலாயும்-
அடையும் கதியாகவும் –
ஆக உபாய உபேயமாக இருக்கும் தன்மையைக் காட்டிக் கொடுத்து அருளுகிறான்
புள் ஏனம் ஆனான் -அன்னமாய் அருமறை பயந்து –
வென்று சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள்ளெயிற்று ஒள்ளெரித்தறு கண் பன்றியாய்
யன்று பார்மகள் பயலை தீர்த்தவனாய் -இவ்வாறு பல பல திருவவதாரங்கள் மூலம் உபகரித்து அருளுபவர்
இவற்றைக்காட்டக் கண்ட கலியன் தானே நமக்கு இவை எல்லாம் –

—————————————

புள் ஏனம் ஆம் நம்பி நெஞ்சுட் புகுந்தானைத்
தள்ளேன் வையத்து வான் இன்பம் விட மெய் உள்ளத்தோடு
சிந்தையால் எய்தி இன்புற்றேன் என் சீர்க் கலியன்
சிந்திப்பார்க்கு இல்லை சினம் -62-

விட மெய் -விடத்தக்க உடல் -நஞ்சாகிய உடல் என்றுமாம்
என் சீர்க் கலியன் -என்று அருளிச் செய்யும் ஆழ்வார் –

—————————————-

சினத்துச் செரு நீர் செற்றான் உட் புகுந்து
நனி நீங்கா தீது தீர் நம்பிக்கு மனம் செயல்
வாக்கற்றுக் கைம்மாறிலாமை சொல் வாட் கலியன்
வாக்கால் மலரும் உட் கண் -63-

என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் -என்பதால் நீங்காமை சொல்லி
கண் இணைகள் க்ளிப்பைக் களித்தேன் -அன்பனை அன்று ஆதரியேன் -என் மனம் தாழ்ந்து நில்லாது
என் மனம் சிந்தை செய்யாது -பண்பலை யான்றிப் பாடல் செய்யேன் –
எம் அண்ணல் வண்ணமே அன்றி என் வாய் யுரையாதே –
மனம் செயல் வாக்கு எம்பெருமானுக்கே அற்றுத்தீர்ந்தமையை அருளிச் செய்தார் –
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும்
என் மனத்தே இருக்கும் புகழ் என்றும் கைம்மாறு இல்லாமையையும் அருளிச் செய்தார் –

———————————————————-

கண் காண் விபவவித்தாம் பாற் கடல் பள்ளியானை
எண்ணும் விண்ணில் பொலி சீர் சேறையான்-தொண்டரை நீங்காது
அவர்க்கு ஆளாய் இன்பம் முப்புலன் எய்திற்று உரை செய்
காதல் நீலன் நம் தந்தை -64-

காதல் நீலன் -அன்பர்பால் ஆராத காதல் யுடைமையை தானே திருச்சேறை பதிகத்தில் அருளிச் செய்தார்
நீலன் நம் காதல் தந்தை என்று கொண்டு-ஆழ்வார் நம் பால் ஆராத அன்பால்
நன்மை செய்யும் தஞ்சமாகிய தந்தை அன்றோ ஆழ்வார்
இங்குள்ள அடியார் விண்ணுளாரிலும் சீரியர் என்பதால் தன் மேலாராக அருளிச் செய்து
மத்திய பர்வ நிஷ்ட அக்ரேஸராக விளங்குகிறார்
பாற் கடல் பள்ளியான் விபவ வித்தாம் -வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து அன்றோ –

———————————————

தந்து கனவில் கலவி ஆல் துயில் தானாம்
அந்நிலை காட்டி ஐம்புலன் கொண்டு வந்து புகும்
மாடு அழுந்தூரானைப் பகரும் கலியன் ஒலி
பாடல் உண்பார் ஒப்பார் சிங்கம் -65-

மாடு -பக்கம் -செல்வம் -பொன்-அனைய அழுந்தூரான்
ஆழ்வார் பாடல் -பரசமயப் பஞ்சுக் கனலின் பொறி –ஒலி மிக்க பாடலை யுண்டு –வலி மிக்க சீயம் –

————————————————

சிங்கம் விண்டார்க்கு அன்பன் தொண்டர்க்கு காப்பவன்
பொங்கு வித்தாய் மூவர் வாக்கு எட்டான் பூ நங்கை சேர்
ஆராவமுதை அழுந்தைக் கண்டு இன்புறும்
சீரார் நீலன் நம் திரு -66-

விண்டார் -அடியார்களுக்கு சத்ருக்கள் -/காக்கும் இயல்பினன் கண்ணபிரான் /
பொங்கும் வித்து -த்ரிவித காரணன்
மூவர் வாக்கு எட்டான் -இந்திரன் அயன் அரன்-வாக்கு எட்டான்-
யானும் ஏத்தி ஏழு உலகும் முற்றும் ஏத்தி பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்-

———————————

திரு வழுந்தூரான் நெடியான் நல் துணையான் தூயன்
திருவன் நிறைவறிவன் என்று திருத்த ஐவர்
செய் துயரை வேறு புகலின்றி கலிகன்றி சேர்ந்தான்
உய்ய தாளாம் செங்கமலம் -67-

ஐவர் -ஐந்து புலன்கள்
நெடியான் -தேவராய நிற்கும் அத்தேவும் அத்தேவரில் மூவராய் நிற்கும் முது புணர்ப்பும்
அம்மூவரில் முதல்வனாக நிற்கும் நெடியான் -மனிசர்க்குத் தேவர் போலெ தேவர்க்கும் தேவனான தேவாதி தேவன்
நிறைவறிவன் -சர்வஞ்ஞன் –

———————————————-

செங்கண் பொன்னன் கஞ்சன் மல்லர் இலங்கையன்
மங்க மறை இந்திரன் வெள்ளம் பூ மங்கை
அளிக்கும் அழுந்தூர் அமரர் கோ அடைந்து உய்யும் என்
கலியன் கெடுக்கும் கள்ளம் -68-

—————————

கள்ள மதம் கொள்ளாச் சல சயனத்தார் தாள் நீர்
கொள்ளும் என்றும் பெண்டிர் நிரயம் தான் வெள்கி யவை
நீங்க பேறாச் சேர்ந்தான் பரகாலன் நெஞ்சே சொல்
பாங்காய் அவன் பெருமை -69-

——————————————-

பெருமான் இனியன் அழகன் தேவன் துப்பன்
திருத்தன் சேராச் சேர்ப்பன் நாதன் -விருத்தம் எனக்
கண்ணமங்கை கண்டு கலியன் சொல் அமுதப்பா
உண்ண பிறப்புக்கு நச்சிலை -70 –

தேவன் -விளங்கு சுடர்ச் சோதி/திருத்தன்-திருப்தன்-அவாப்த ஸமஸ்த காமன்
விருத்தம் -விருத்த விபூதி நாதன்-
வானவர் தன நாயகன் -மூத்தவன் –
ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவன்

———————————–

சிலை முதலா ஐந்து பூணாச் சீராகும் சேர் பல்
கலன் கலியன் கண்டு பிரியா நிலை எய்திக்
கண்ணபுரத்தான் பால் அவா மிகுதல் தான் கூறும்
தண் தமிழ் கற்பார் தெள்ளியார் -71-

ஐந்து பூண் — ஆழி சங்கு தண்டு வாள் வில் -பஞ்சாயுதங்கள் –
திவ்யாயுதங்கள் அநுகூலருக்கு திவ்ய ஆபரணங்கள் ஆகுமே
ஆக்கம் -திரு மார்பி -திரு மேனிக்கு உப லக்ஷணம்
ஒரு காலும் பிரிகின்றலேன் என்கின்றாளால் -தாய் வார்த்தையால் –
தெள்ளியார் -தெளிந்த ஞானத்தர்–

———————————

தெள்ளிதாத் தான் கண்ணபுரம் உள்ள வெம்மை நீங்க தொழில்
உள்ள அணுக்கரித்தல் ஆறு பேறாய் கொள்வது என
இன்னாமை கூறும் இரும் தமிழ் நூல் புலவன்
தன் தாள் வானாம் இக்கரை -72-

உள்ள வெம்மை -உள்ளத்தில் தோன்றும் ஆற்றாமை
நீர் மலி வையத்து நீடு நிற்பார்கள் -பல சுருதி -அங்கே தெள்ளியார் அனுபவம் இல்லையே –

——————————————-

கரை வளை மாமை இழந்தேன் கணபுரத்தான் தன்
கரையில் செயல் எண்ணி என்று உரை செய்
பரகாலன் தான் தனது விட்டமை கூறும்
வரந்தமிழால் வாய்க்குமோ விண்-73-

கரை வளை -சப்திக்கின்ற வளை /
கரையில் செயல் /-எல்லையில்லாத சேஷ்டிதங்கள் /
வரையெடுத்து -கரி வெருவ மருப்பு ஓசித்து-விடைகள் அடர்த்து -மதி கோள் விடுத்து
புனர் மருதம் இற நடந்து/ தாய் எடுத்த சிறு கோளுக்கு உழைத்து ஓடி / தயிர் வெண்ணெய் உண்டு /
இரணியனை அணி யுகிரால் முரண் அழித்து / உண்டு உமிழ்ந்து போன்றவை
/ வரந்தமிழ் -சிறந்த தமிழ்
கலை வளை -அஹம் மம க்ருதிகள்
———————————–

விண்டு ஒழியத் தன் வாட்டம் கண்ணபுரத்தான் துளவம்
வண்டான தொண்டரை வசமத்து கொண்டூத
வேண்டி உய்யும் விரகு கூறும் பரகாலன்
வேண்டினார்க்குத் தஞ்சமாம் தந்தை –74–

அடியாரை வண்டாக /
பிராகிருத தந்தையிலும் விருத்தி தஞ்சமாகிய தந்தை -ஆத்மாவின் உஜ்ஜீவனத்துக்கு –

———————————

தன் தன்மையில் மீதி வேய் ஆ மணி தென்றல் இருள்
அன்றில் அந்தி செய்ய நலிவு ஒன்றில்
ஒருவனாய்த் தான் நீலனாய் ஆய்ச்சியர் தம் அல்லல் உற்ற
உரைப்பது எவ்வாறு தொண்டீர் -75-

வேய் -மூங்கில் ஆகுபெயர் புல்லாங்குழலைக் குறிக்கும்
உற்ற -உற்றாமையின் கடைக்குறை -ஆழ்வார் ஒருவரே சாயங்காலப் பொழுதில்
ஆய்ச்சியர் அனைவரும் அனுபவித்த அல்லலை அடைந்தமை காட்டும் –
அவ்வாறு நலிவுற்ற ஆழ்வார் பிரிவாற்றாமையை தாம் கூற வாய் திறக்க வலி உண்டோ
ஆழ்வாருடைய அவா மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிது அன்றோ –

——————————————

தொண்டர்க்கு வேண்டிற்றுச் செய்யும் கணபுரத்தான்
நண்ணார் ஒழிப்பானை ஆறாக நண்ணவும்
நண்ணா நம் மேல் வினை என்றுத் தேற்றியும் கூறும்
அண்ணலை போற்றும் வியந்து -76-

வியந்து -விருப்புற்று /
வருந்தாது இரு மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா என்றும்
மாலாய் மனமே யாரும் துயரில் வருந்தாது இரு நீ -என்றும் தேற்றிய
ஆழ்வாரை விருப்பமுடன் போற்றுவதும் மேல் ஒரு நன்மை இல்லை –

———————————————–

வியன் ஞாலத்தில் மல்கு சீரால் நாள் வானில்
நயமுடைக் கண்ணபுரம் பேறாக உயவடைக்
கூறு நீலன் சித்ர கவி தேரும் அடியார் தாம்
ஏறுவர் ஏதுமின்றி வான் –77-

நாதனும் நித்ய முக்தர்களும் இங்கே ஆசையுடன் உக்காந்து வந்து நித்யவாஸம் இருப்பதால்
இத்தையே உபாயமாகக் கொண்டு உஜ்ஜீவிக்க ஆழ்வார் உபதேசித்து அருளுகிறார்
கூற்று எழுத்துக்களைக் கொண்டே அருளிச் செய்த பதிகம் -சித்ரா கவித்துவம் பொலிய உள்ளது
நல் வான் -கைவல்யத்தில் வ்யாவ்ருத்தி –

——————————————-

வான் மண் உய்வான் தான் அவதாரம் பத்து செய்யும்
வானவனைக் கண்ணபுரத்துள் கலியன் கோனாகக்
கண்டு கொண்டேன் என்னும் சொல் உய்வார் கருத்தினில்
திண்ணமதாம் ஞானக்கை -78-

ஆழ்வாருடைய ஈரச் சொற்களே உய்ய நினைப்பார்க்கு நிச்சயமான ஞானக்கை –

—————————————

கைம்முதல் இன்றித் தன்னுள்ளத்து உற்றானாய் நோக்கி
வெம் நரகை நீக்க மிக்கானாய்க் கணபுரம் நிற்பார்க்கு
அல்லால் பிறர்க்கு இன்மை தான் பகரும் சீர்க் கலியன்
சொல் தேன் பருகு வண்டாய் -79-

நிர்ஹேதுகமாக -உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்ற முதல்வன்
உற்றான் -ஒழிக்க ஒழியாத நவவித சம்பந்தம் உண்டே
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -அநந்யார்ஹத்வம் –

—————————————–

வண்டாம் தெய்வத் கண்ணபுரத்தான் பற்று ஆறு பேறாக்
கொண்டு ஏத்தி வேற்று இறை தேறுவாரை அண்டாதே
மந்திரத்தின் உட்பொருள் சொன்னான் கலியன் தான் தொண்டர்
தொண்டன் என மாலாம் வங்கர்க்கு -80-

தெய்வ வண்டு-எம்பெருமான் –
மாலாம் வங்கர்க்கு -வங்கமாம் மாலுக்கு -வங்கம்-கப்பல்
மால் -கருமை பெருமை மையல்
வைகுந்தம் என்பதோர் தோனி பெறாது உழல்கின்றேன்
மந்திரத்தின் உட்பொருள் -உற்றதும் உன்னடியார்க்கு அடிமை –

—————————————–

வங்கக் கடல் துயின்று இங்குப் பிறந்து தொண்டர் தாம்
பொங்காத் துயர் அகற்றி ஏதலரை மங்குவித்து
கண்ணங்குடியுள் நின்றான் புகலாய் என்னு நீலன்
பொன்னடியே நம் தமக்குப் பொன்-81-

பொங்க -நன்றாக வாழும்படி-

——————————————-

பொன்னுரு சங்காழி பல் பூண் நாகை அழகியாரின்
எண் கடந்த மேன்மை எழில் சிறப்புட் கண் கண்டும்
ஆட் செய்யா ஆற்றாமை நாயகியாய்ச் சொல் கலியன்
தாள் சேர்க்கும் சீர் வான் தன்னை -82-

சிறப்புட் கண்–சிறப்பு உட் கண்
பொன்னுரு -அழகிய -ஹிரண்ய வர்ணை அலர்மேல் மங்கை உறை மார்பன் அன்றோ –
ஹிரண்மயவபு -உபநிஷத் –

—————————————–

தன்னளவில் நைந்து நொந்து தன்னிலைக்கு அல்ல செய்து
பின்னும் தொழுது தான் புல்லாணி சென்று சேர
எண்ணியமை கூறி இன்னாமை உணர்த்தும் ஆலி நாடன்
பண் எண்ண வானோர்க்கு ஆவார் -83-

அக்ருத்ய க்ருத்யம் -ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால்
ஒளி மா மலர் பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாதலின் –
பண் -ராகம் -குன்றா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை –
செவிக்கினிய செஞ்சொல் கேட்டு வானவர் ஆரார் அன்றோ –

—————————————————

காவாமை தந்த உள் மெய் நோய் கூற புட் தூதும்
ஆவார் சொல் கேளாமை ஆழி மதி -ஓவாத
இன்னாமையும் கலியன் புல்லாணி மால் குரை சொல்
உன்ன உள்ளம் தவளமாம் -84-

எந்நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் -11-1-9-பண்டே போல் இருந்தால்
உள்ளத்து நோய்க்கோ உடல் நோய்க்கோ வருந்த வேண்டியது இல்லையே-
தளம் -வெண்மை -சத்வகுணம் -சமதர்மம் உண்டானால் ஆச்சார்யன் கை புகுரும் –
திரு மந்த்ரம் ஈஸ்வரன் கை புகுவார்கள்
வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே -என்றபடி ப்ராப்ய பூமியும் காய் புகுருமே –

———————————————–

தவத்தை வேள் சேமணி வேய் தென்றல் அன்றில் வாடை
அவற்றுடன் வேலை திங்கள் செய் நவை தீரும்
உற்றார் குறுங்குடிக்கு உய்த்தால் என்று உணர்த்து நீலன்
முற்ற வகற்றும் நம் மயக்கு -85-

மயக்கு -சம்சயம் -அஞ்ஞானம் -விபர்யயம் விஸ்ம்ருதி ஆகியவற்றுக்கும் உப லக்ஷணம்
தவத்தை -பிரபத்தியை -தன்மையை தெள்ளிதாக ஆழ்வார் அருளிச் செய்கிறார் –

——————————————

அக்காணி அன்பர்க்கு அகற்ற குறுங்குடியுள்
முக்காலம் முன்னிற்கும் நம்பியை தக்க தொண்டர்
தம்முடன் சென்று தொழ எண்ணும் கலிகன்றி
நம் நலம் நல்கும் தந்தை –86-

நலம் -பக்திக்கும் நல்ல வாழ்வுக்கும்
அக்கு ஆணி -எலும்பாலாகிய சரீரம் -என்பு தூண் நாட்டி
அக்காணி கழித்து –பெரிய திருமொழி -5-2-3-
தீ நீர் வண்ண மா மலர் கொண்டு தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள் -என்றும்
நாறார் இண்டை நாண் மலர் கொண்டு ஆரா வன்போடு எம்பெருமானூர் அடைமின்கள் -என்றும்
நின்ற வினையும் துயரும் கெட சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள் -என்றும்
அருளிச் செய்கிறார் அன்றோ இப்பதிகத்தில்
முக்காலம் முன் நிற்கும் -எப்பொழுதும் நமக்கு முன்னே வந்து திவ்ய தேசம் உகந்து
நித்ய வாசம் செய்வதே நமக்கு அருளுவதற்காகவே –

———————————————————–

தந்தை கிளை தன் நிலைக்கு ஆகா இன்பம் மெய்யாம் நோய்
நஞ்சு செல்வம் கள்ளச் சமயமவை தஞ்சம் அன்று
என்று கலியன் நெஞ்சை வல்ல வாழ் வல்லையாய்ச் சொல்லு
என்ற பாடல் கற்றிடவே முந்து -87-

நஞ்சு செல்வம் -நஞ்சு போன்ற செல்வம் -நஞ்சாகிய செல்வம் –
மெய்யாம் நோய் –நோய் எல்லாம் பெய்ததோர் ஆக்கை -அன்றோ

————————————————–

முந்துற ஆசை முற்ற விட்டு பற்றாய்த் தான் எவர்க்கும்
சிந்தித்தந்து துயர் சிந்துவிக்கும் எந்தை சேர்
மாலிரும் சோலை வணங்கு என்னும் மங்கை வேந்தன்
மால் ஆக்கும் மூவர் முதல் -88-

மங்கை வேந்தன் மால் -ஆழ்வார் பால் நமது பக்தியும் -நம்பால் ஆழ்வாருடைய வ்யாமோஹமும் –

————————————————–

மூவர் முதல்வன் பார் ஆக்கி உண்டும் காத்து அளந்தும்
யாவரும் வேண்டிற்று நல்கும் சோலை மலை மேயவனைக்
கூடுவனோ என்று சங்கித்துத் தெளிந்த சீராலி
நாடன் எங்கள் எம் இறை –89-

கூடுவனோ –ஒன்பது பாசுரங்களில் கொல்-என்று சங்கை –
பல சுருதி பாட்டில் ஆடல் பறைவையனை அணியாயிழை காணும் என்று -சங்கை நீங்கி
நிச்சயமாக கூடுவாள் –
ஆழ்வார் நம்முடைய கடவுள் –

—————————————————–

எங்கள் இமையோர் ஈசன் தொண்டர் எண்ணும் வண்ணத்தன்
அங்கம் அரர்க்கு உகந்து நல்கு சீலன் இங்கு அயனில்
மிக்கார் வாழ் கோட்டியூரான் என்று உரை செய் மங்கை வேந்தன்
உக்க வினை தீர்க்கும் ஒருவர் -90-

உக்க -பொடிப்பொடியாக
எண்ணும் வண்ணத்தன் -பாலின் நீர்மை இத்யாதி –
அவ்வாறான ஸ்வபாவம் யுடையவன் என்றுமாம்
தன் நிறத்தையும் ஸ்வ பாவத்தையும் அடியார் எண்ணப்படியே மாற்றி அருளுபவர்
ஆஸ்ரிதரை தன்னை அழிய மாறியும், நோக்குபவன் –

———————————————————–

ஒருத்தி வேட்டகம் புகு முன் உற்றார் சொல்வாள் போல்
திருப்பதிகள் வான் சேர் முன் கண்டு அரும் தேன் பொன்
ஆரமித்து ஆறு பேறு எம்பிரான் என்னும் கலியன்
கார் எனக் காட்டும் இரக்கம் -91-

இப்பதிகத்தில் -27-திவ்ய தேச மங்களா சாசனம் –
அரும் தேன்–சர்வ ரஸ/ பொன் -அழகும் செல்வமும் -அச்சோ ஒருவர் அழகிய வா -வைத்த மா நிதி –

————————————————

இரக்கமில் அரக்கன் சொல் கொள்ளாமல் சீதை
சிறை வைத்தும் வாயு மைந்தன் ஆற்றல் முறைப் பெண்டிர்
சேது பந்தம் பாரா பட்டான் எனத்தான் பொங்கத்தம்
ஓதும் கலியனை ஏத்து –92-

வாயு மைந்தன் ஆற்றல் பாரா -முறைப்பெண்டிர் பாரா -சேது பந்தம் பாரா -என்று அன்வயம் –

———————————————–

ஏத்து ராமன் தம்பி சுக்கிரீவன் அங்கதன் அனுமன்
கூத்தாய் குலமணி தூரமாடும் தோற்ற
அரக்கராக நீலன் இராமன் செயல் சொல் செஞ்சொல்
பொருந்தும் நம் சந்த மலர் -93-

சந்தமலர் –சந்தஸ் -ஒலி மிக்க பாடல்-அழகு வாசனை என்றும் பொருள்கள் உண்டே- கருத்து மிக்கு என்றுமாம் –

————————————————–

சந்தமலர் சேர் ஆகத்தான் கண் முன் தீம்பு செய்யும்
நந்தன் செய் வித்தகன் கண்ணனை சந்தியில் வா
அம்மம் உண்ண என்று அசோதையாய்க் கூவும் ஆலி நாடன்
செம்மலர்த்தாள் நம் சென்னிப் பூ -94-

ஆக்கம் -திரு மார்பு -ஸ்ரீ வைஜயந்தி வனமாலை திகழும்
செம்மலர்த்தாள் -செவ்வி -ஆர்ஜவம்
ஆர்ஜவமாவது -என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழல் என்றவன் தாளிணையை விட
ஆழ்வார் தம்முடைய தாளிணை -ருஜுத்வம் – மிக்கது -மோக்ஷ ஏக ஹேதுவாகையாலே –

——————————————————

பூங்குருந்து ஓசித்து சாடு உதைத்துப் பேய் நஞ்சுண்டு
தூங்குறி வெண்ணெய் கொல் தாமோதரனாம் ஆங்கு அவனை
ஆய்ச்சியாய்ச் சப்பாணி கொட்ட கூறும் ஆலி நாடன் தன்
வாய்ந்த தாள் நம் பற்று எங்கணும் -95-

இங்கும் அங்கும் நமக்கு பொருந்திய பற்று சரண் ஆழ்வார் திருவடிகளே –
சப்பாணி -ஸஹ பாணி -ஒரு கையேடு ஒரு கையைச் சேர்த்து ஒலி எழுப்புதல் –

———————————————

எங்கும் எவர்க்கும் மிக்கான் ஈசன் மிடுக்கு உடையான்
இங்கு அன்பார் பால் வேண்டற்பாடுடையான் அங்கு ஆய்ச்சி
கட்ட நீர்மையால் கட்டுண்டான் என் கலியன் நாம்
கட்கண்ணால் கான் பெருமான் -96-

மிடுக்கு -நித்ய சம்சாரிகளையும் நித்ய ஸூரி பரிஷத்தில் நிற்க வைக்கும் ஆற்றல்-

—————————————

மான வேறு ஏழ் செற்று காளியன் சகடம் பாய்ந்து உம்பர்
கோன் உண்டி கொண்டு வெண்ணெய்த் தான் விழுங்கும் கோன் செயல்
ஆய்ச்சியர் அசோதை பேச்சாய் நீலன் செய் சொல்
ஆய்வார்க்குத் துன்பம் புகாது -97-

மானம் -பெருமை -வழியிலும் உருவிலும் கோபத்திலும் பெரிதான
ஆழ்வாருடைய இன்னிசை மாலைகள் ஆராய்ந்து கற்பவர்க்கு இம்மையே இடர் இல்லை –
இறந்தால் தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் -எனவே எங்கும் இன்பமேயாம் –

————————————————

காதலால் கண்ணன் புறம்பு கூடித் தான் முன் குறித்த
போது மறித்தான் எனத்தான் ஆயர் மாதராய்
ஊடி ஆற்றாமை சொல் குறையல் பிரான் பாடல்
பாடியாட ஒப்பர் ஓடும் புள் -98-

ஆழ்வார் அருளிச் செயல்களை–மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை -3-5-படியே
பாடி ஆடுவார் பெரிய திருவடிக்கு ஒப்பாவாரே–கைங்கர்ய நிரதராவாரே –
வேதாத்மா -தம்முள் எம்பெருமானைக் கொண்டுள்ளது போலே அடியார் தம் மனத்தில்
எம்பெருமான் எழுந்து அருளி இருப்பான் என்னவுமாம் –
ஓடும் புள்ளேறி–திருவாய் -1-8-1-

——————-

புள்ளூர்தி ஆற்றல் எழில் சீர் மிடுக்கால் ஓர் பொருளாய்
உள்ளத்து ஓராமைப் பழ மொழியால் உள்ளி மால்
பால் அன்பு மிக்கது உரைத்துத் தான் அருள் வேண்டும்
நீலன் நம் திண்ணம் திரு -99-

புள்ளூர்தி-எழுவாய் –
பிள்ளை தன் கையில் கிண்ணம் ஓக்க
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா
அங்கையில் வட்டம்
தொண்டர் கைத்தண்டு
பெரு வழி நாவல் கனியிலும் எளியன்
எருக்கு இலைக்காக எழுமறி வோச்சல் கோழி வெண் முட்டைக்கு என் செய்வது குறுந்தடி
கவுள் கொண்ட நீராம்
ஆரழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் -போன்ற பழ மொழிகள்

—————————————–

திருமாலைத் தன்னுடன் கூட்டித் துன்பம் நீக்க
பரகாலன் கண்ட புட்கள் தம்மை இரந்து தான்
இன்னாமை நாயகியாய்க் கூறும் எழில் தமிழின்
இன்பமது என்றும் குன்றாது -100-

நாயகியாய் –தலைவி பாசுரமாக
செம்போத்து காக்கை குயில் கிளி கோழி இவற்றுடன் பல்லியையும் கண்டு
அவை செய்யும் நிமித்தங்களால் எம்பெருமானுடன் சேர்க்க வழி காண -மகள் பாசுரமாக –
ஆற்றாமையை வெளியிடுகிறார்
தொண்டீர் பாடுமினே -என்று இரட்டித்து -சிறு பாட்டாயும் போக்யமாகவும்
எங்கும் எப்பொழுதும் என்றும் குன்றாமல் இருப்பதில் வியப்பில்லையே –

——————————————————–

குன்றால் ஆ காத்துக் குவலயம் நோக்கும் அம்மான்
தென்றல் தொடக்கமானவை நலிகை என்று எண்ணி
ஆற்றாமைத் தான் விளைத்தான் என்னும் ஆலி நாடன் சொல்
பாற்றும் நமது பாவக் குன்று -101-

புயலுற வரை மழை பொழி தர மணி நிரை மயலுற வரை குடை எடுய்யா நெடியவர்
குவலயம் -உலகம் / நோக்கும் ஜகத் ரக்ஷண சிந்தை /
சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே என்று அன்றோ பல சுருதி –

———————————————————–

குன்றாமல் சேராதார்க்கு இன்னல் செய் வேய் மணி
அன்றில் ஆழி வாடையால் ஆற்றாது சென்று மாலைக்
காணத் தான் முற்படும் நால் கவியார் தானிணையைப்
பேணி நிலையாக மன்னும் -102-

தாளிணையை நிலையாகப் பேணி மன்னும் என்னவுமாம் -மன்னுதல் பொருந்துதல்

——————————————

மன்னு சீர் மால் தொண்டர் அன்றிச் செல்லாமை காட்ட நீலன்
தன் பதற்றம் ஆற்றாமை மால் திறத்து சென்று அமைக்கும்
வாசிகத் தொண்டுக்கு மகிழ்ந்தான் மலர்ப்பாதம்
வாசியின்றி நம் நிலையிடம் -103-

———————————–

நிலை அழியத் தான் மாறித் தொண்டரை நோக்கும்
தலைவன் தோ ற்றங்கள் எண்ணி பொலிவு எய்திக்
கூடுமின் மால் என்று கூறும் ஆலி நாடன் ஞாலத்தார்
கூடும் எளியனாம் எம்மான் -104-

தோற்றம் -விபவ அவதாரங்கள்
நிலை அழிதல்-பரத்வமான நிலையில் இருந்து மீன் ஆமை வராஹம் அன்னம் குப்ஜா மரம் போன்ற அவதாரங்கள் –

————————————

மான மேன்மை பேசி நீர்மை ஏசி இரண்டு சீரும்
ஆன தொண்டர்க்கு என்று அங்கு உகந்து எண்ணி ஊனமற
மால் உள்ளத்து உள்ளான் என்னும் கலியன் தாளிணை
பால் செய்யும் நீர் பத்திமை -105-

மான பெருமை -ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் அனைத்திலும் பெருமையை யுடையவன் அன்றோ
கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் -வியக்தமாக அருளிச் செய்கிறார்
பத்திமை -ஒரே சொல் பக்தி -பக்தி மை -பத்தி சித்தாஞ்சனம் என்றுமாம் –

————————————————–

மைப்படி மாயன் காப்பு ஈசன் உற்றான் என்றுமற்ற
தேவு என்பார் உண்டு உமிழப் பட்டாராய் கை விட்டு
ஆதியானை ஏத்தும் எனும் ஆலி நாடன் அந்தமிழை
ஓதி சேரும் மால் நீள் ஆகத்து -106-

மைப்படி -அஞ்சன மா மணி வண்ணன் -முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே
உற்றான் -பிராப்தி யுடையவன் -பிதா ரக்ஷகச் சேஷீ பார்த்தா –இத்யாதி
நீள் ஆகம் –வரைபுரை திரு மார்பு -மணி மிகு மார்பிலே குரு மா மணியாய் அணையும் வஸ்து –

————————————————-

நீள் நகர் மாற்கு உற்ற காரணத்தால் புறம்பர் நீர்
நாண் இன்றி ஆட்பட்டு வீழாதே பேணி அடி
யார்க்கு இனியன் தொண்டு பூண்டு வாழும் எனும் ஆலி நாடன்
ஆர்ந்த நம் தீ வினைக்கு மாற்று -107-

தாழ்ச்சி மாற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி
நச்சு நல் மா மருந்தும் ஆழ்வார் –

——————————————

மாற்ற வேண்டும் தம் பிறவிக்கு அஞ்சி ஒண்ணாது தன்னால்
மாற்ற மால் வல்லான் என்று அவன் அருளை பேற்றுக்கா
நாடும் ஆலி நாடன் தாள் நாடி என் தன் நெஞ்சமே
கூடி வாழ் நையாது வாடாது -108-

தாள் நாடி கூடி வாழ் -கொக்கு வாயும் படு கண்ணியும் போலே நமது சென்னி
ஆழ்வார் திருவடித் தாமரைகளில் சேரப் பெறுவதே வாழ்ச்சியாகும்
நையாது வாடாது கூடி வாழ்வோம்

—————————————————————-

வாடி முன் வீழ் பொருட்க்கு மால் அருளால் மந்திரத்தின்
பீடு பொருள் கண்டு கலியன் தொண்டீர் நாடும் எந்தை
சீர் குடந்தை என் அமுதம் தாயில் ஏற்றம் செய் சொல்லைச்
சேர உயிர் வாலிய தாம் -1-

—–

மால் நீர்மைக்கு எல்லை உகந்த ஊர் நூற்று எட்டு
சால நண்ணி யுள்ள கணக்கு இனிதாய் ஆலி நாடன்
செய்யும் திரு மொழி நூற்று எட்டும் ஓதிடுவார்
எய்துவர் வைகுந்தம் ஏய்ந்து–

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் சம்பத் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ரகுவீர கத்யம் -ஸ்ரீ மஹா வீர வைபவம் –

August 19, 2018

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

ஜயதி யாஸ்ரித ஸந்த்ரா ச த் வாந்த வித்மம் சநோதயா
பிரபாவான் சீதயா தேவ்யா பரம வ்யோம பாஸ்கர–

ஆஸ்ரிதர்களுடைய –
இருட்டு பயம் அஞ்ஞானம் -போக்கி -வித்மம்சன உதய –ஒளி விடும்படி
உதித்தான் -ஆவிர்பாவம் -பிதரம் ரோசயாமாசா -தாய் தகப்பனை தேர்ந்து எடுத்துக் கொண்டு இச்சாக்ருஹீத அவதாரம்
ஜயதி
கோல திருமா மகளோடு ஸ்ரீ வைகுண்டத்தில் பரஞ்சோதி ரூபம் -நிரவதிக தேஜஸ் உடன் விளங்கட்டும்
ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் -ஸ்ரீ சீதா பிராட்டியால் ஒளி -பிரபாவான் -பட்ட மஹிஷி தேவி –

————————————-

விகாரம் தனக்கு கொஞ்சமும் இல்லாமல் மற்றவர்க்கு -வீரம் சூரம் பராக்ரமம் -கலங்காமல் –
உள்ளே புகுந்து சின்னாபின்னம் ஆக்கி– தான் கிஞ்சித்தும் மாறாமல் -மூன்றும் உண்டே
மஹா வீரன் – பூஜிக்க தக்கவன் மஹான்-
ரகு -இஷுவாகு குலம் -சூர்ய குலம் மனுவின் பிள்ளை இஷுவாகு -ரகு குலம் என்பதால் ராகவன் –
குணம் ஒவ் ஒன்றுமே விகாரம் அடைவிக்குமே -வில் கொண்டு மட்டும் இல்லை -அது சாதாரணம்
அழகில் ஆழ்ந்து –நேர்மையில் ஆழ்ந்து –ஆர்ஜவத்தில் ஆழ்ந்து போவோமே
திருவடி கொண்டாடும் துறை -வீரம் -பக்திஸ்ஸ நியதா வீர–பாவோ நான்யத்ர கச்சதி —
வீரத்தை தவிர வேறு ஒன்றிலும் செல்லாதே –
கோன் வஸ்மி-குணவான் -கஸ்ய வீர -16-கல்யாண குணங்களில் -ஸுசீல்யத்துக்கு அடுத்து –
நேர்மையுடன் கூடிய வீரன் பெருமாள் -ஆயுதம் எடுக்காத வெறும் கை வீரன் கீதாச்சார்யன் –

—————————————————-

ஸ்ரீ பால காண்டம்

ஜய ஜய மஹா வீர
மஹா தீர தவ்ரேய
தேவாஸூர சமர சமய சமுதித
நிகில நிர்ஜர நிர்த்தாரித நிரவதிக மஹாத்ம்ய
தச வதன தமித தைவத பரிஷதப் யர்த்தித தாசரதி பாவ
தி நகர குல கமல திவாகர
திவிஷ ததிபதி ரண ஸஹ சரண சதுர தசரத சரமருண விமோசன
கோசல ஸூதா குமார பாவ கஞ்சுகித காரணாகார –7-

ஜய ஜய மஹா வீர –
பல்லாண்டு -பல்லாண்டு –
வீறு கொண்டு விளங்குகிறான் -கீழே vன் கண் முன்னே சீதா பிராட்டி உடன் வீற்று இருந்த காஷி-சேவை -கண்டு
அந்த வீறு -வயிறு பிடித்து -என் வருகிறதோ -பல்லாண்டு இங்கே –
பய நிவர்த்தங்களுக்கு பயந்து -அஸ்தாநே பய சங்கை -இவர்களுக்கு -தாய் உள்ளம் –

மஹா தீர தவ்ரேய–
லோகத்தில் உள்ள மஹா தீரர்களில் முதன்மை -முன்னோடி -முன் நின்று நடத்தி –

தேவாஸூர சமர சமய சமுதித நிகில நிர்ஜர நிர்த்தாரித நிரவதிக மஹாத்ம்ய –
அள்ள அள்ள குறையாத பெருமை -அறுதி இட்டப் பட்ட–தேசாசூர அசுரர் சண்டை –
கூட்டங்கள் -சமுதித-பெருமாளுடைய வீர கல்யாண குணத்தை அறுதி விட்டார்களே
குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் தானே பெருமாளுக்கு
அனவதிக அதிசய அஸங்க்யேய அத்புத ஆராவமுத கல்யாண குணங்கள் –
அமர -தேவ நிர்ஜர -அமரகோசம் –

தச வதன தமித தைவத பரிஷதப் யர்த்தித –
அப்யர்த்தித்த முன்னே சென்று பிரார்த்திக்கப்பட-தேவர் கூட்டங்கள்
பத்து முக -ராவணனால் துன்புறுத்தப்பட்டவர்கள் -தமித-
வேண்டித் தேவர் இரக்க

தாசரதி பாவ-
தசரத குமரன் தாசரதி பாவம் -ஏறிட்டுக் கொண்டான்

தி நகர குல கமல திவாகர –
சூர்ய குலம் என்னும் தாமரைக்கு சூர்யன் -அத்தை மலர வைக்கவே அவதாரம்
இத்தை தேர்ந்து எடுத்து -தானே பெரிய பெருமாளுக்கு திருவாராதனம் செய்வதற்க்கே –

வாள் நாள் அருளிய ருத்ரன் பிரமன் முதலான தேவர்களை நலிந்த ராவண வதார்த்தம்-அமுக்கிய காரணம் -கிள்ளிக் களைந்தான் –
மனுகுல மஹீ பால –ஸ்ரீ ரெங்க –பட்டர் -ஸஹ பதன்யா விசாலாஷீ –நாராயணா உபாஸீத —
அர்ச்சக குலத்தில் பிறந்தால் தானே ஆராதிக்க முடியும் –

திவிஷ ததிபதி ரண ஸஹ சரண சதுர தசரத சரம ருண விமோசன
ருண -கடன் -சரம ருண -கடைசி கடன் -தேவ கடன் யாகாதிகள் மூலம் தீர்க்க
போக்கடித்தவன்
ரிஷி கடன் -சாஸ்திரங்கள் அறிந்து அனுஷ்ட்டித்து
பித்ருக்கள் கடன் தீர்க்கவே பெருமாள் திரு அவதாரம்
த்விஷத் அதிபதி-
தேவர்களுக்கு அதிபதி – –
ரணம்
யுத்தம்
ஸஹ சரண –
ஒத்தாசை செய்வதில் சதுர சாமர்த்தியம் படைத்த தசரதர் –
பத்து திக்கிலும் ரதம் செலுத்தியே வென்று கொடுக்க வல்லவன் –
திருவவதார வைபவம் -மூலம் பித்ரு கடன் தீர்த்தார் –

கோசல ஸூதா குமார பாவ கஞ்சுகித காரணாகார –
மன்னு புகழ் –ஸ்ரீ கௌசல்யை மணி வயிறு வாய்த்தவனே –
காரணம் –ஆகாரம் -ஜகத்துக்கு -அத்தை மறைத்துக் கொண்டு தானே திருவவதாரம்
கஞ்சுகம் -கவசம் -அணிந்து மறைத்துக் கொண்டு கோசலை ஸூதா -பாவனை -என்கிற கவசம் –
நவமி புனர்வசு சித்திரை -எங்கள் குலத்துக்கு இன்னமுது கௌசல்யை குல மதலை-ஜனகன் திரு மருகன் –
சக்கரவர்த்தி திருமகன் என்றாலே உகப்பானே -பெற்ற வயிற்றுக்குப் பட்டம் கட்டப் பிறந்து –
தொட்டில் பருவம் தொடக்கி சேஷத்வம் – பரதன் -பாரதந்தர்யம் -சத்ருக்கனன் பாகவத பாரதந்தர்யம் –

———————————-

கௌமார கேளி கோபாயித கௌசிகாத்வர
ரணாத்வர துர்ய பவ்ய திவ்யாஸ்திர ப்ருந்த வந்தித
ப்ரணத ஜன விமத விமதன துர் லளித தோர் லளித
தனுதர விசிக விதாடன விகடித விசராரு சராரு தாடகா தாடகேய

கௌமார கேளி கோபாயித —
சிறுபிள்ளை
சேஷ்டிதங்களால் ரக்ஷிக்கப்பட்ட -குமார தனத்துக்குத் தக்க –

கௌசிகாத்வர–
கௌசிகர் -விசுவாமித்திரர் –
கைசிக ஏகாதசி -திருக்குறுங்குடி வைபவம் -விஜயரங்க சொக்க நாதர்-ஒரு வருஷம் காத்து இருந்து சேவித்த விருத்தாந்தம் –
அத்வர -யாகம் –

ரணாத்வர –
சண்டைக்களம் -ஷத்ரியனுக்கு யுத்தக்களமே ஹோம குண்டம்

துர்ய பவ்ய திவ்யாஸ்திர ப்ருந்த-
அஸ்திர கூட்டங்கள் –
வந்தித-
சேவிக்கப்பட்டவன்
பல அதிபலா மந்த்ரங்கள் சொல்லிக் கொடுக்க
துர்ய முதன்மை பெற்ற
ப்ரணத ஜன -ஆஸ்ரிதர்களுடைய
விமத-சத்ருக்களை
விமதன-முடிக்கும்

துர் லளித தோர் லளித-
விரோதி நிரசனத்தாலே அழகு பெற்ற தோள்கள்
தனுதர-
மிகச்சிறிய -கல்விச் சிலையால்
விசிக விதாடன –
அம்புக்களால்
விகடித விசராரு சராரு –
தங்கள் துன்புறுத்த -இவர்களை மற்றவர்களால் துன்புறுத்தப்படாத
தாடகா தாடகேய —
தாடகை -ஸூபாஹு மாரீசன் –

குட்டிக் கதைகள் பல சொல்லி விசுவாமித்திரர்
பின்பு சீதா பிராட்டி கதை சொல்வாள் பெருமாள் கேட்பர்
மா முனி வேள்வியைக் காத்து -1000 யானைகள் -தும்பிக்கை வால் முடிந்து தோளில் அணிந்த தாடகை –
முதல் வதம் பெண் வதமா சலனம் முதலில் –
கல்விச் சிலையால் காத்தானூர் -அரக்கர் குலப்பாவை-வாடா -முனி தன் வேள்வியை -வித்யா தனுஷ்
சார்ங்கம் கோதண்டம் மேலே பெறுவார் –
த்வாபர யுகம் -அர்ஜுனன் கண்ணன் சொன்னதை மறுக்க –சம்சாரி ஆணை இட்டதை பரமாத்மா முடித்து த்ரேதா யுகம்-
கலியுகம் பற்றி பேச வேண்டாமே
அவித்யா -தாய் -தாடகை -அகங்கார மமகாராம் -தாடகேயர்கள்
பூர்வாகம் -அழித்து/ உத்தராகம் ஒட்டி -போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் -தாமரை இலைத் தண்ணீர் போலே விலக்கி –
சித்தாஸ்ரமம் வாமனாஸ்ரமம் பூர்வாஸ்ரமம் இடத்தில்-பெருமாளுக்கு பூர்வம் வாமனன் தானே -வேள்வி நடந்த இடம் –
ஆறு நாள்கள் வேள்வி முடித்தார் –
கங்கா சரயு கலக்க-ஓசை கேட்டு பெருமாள் வினவ – -கங்கை வந்த கதை சொல்லி -குமாரசம்பவமும் சொல்லி
இனி யாம் செய்யும் பணி என்ன என்று இயம்பும் —
தூங்க கௌசல்யா சூப்ரஜா -பெற்ற வயிற்றுக்குப் பட்டம் கட்டி -மேலே சொல்ல முடியாமல் –

——————————————–

ஜட கிரண சகலதர ஜடில நட பதி மகுட தட நடநபடு
விபுத சரிததி பஹுள மதுகளந லலித பத நளின ரஜ உபம்ருதித
நிஜ வ்ருஜின ஜஹதுபல தனுருசிர பரம முனி வர யுவதி நுத
குசிக ஸூத கதித விதித நவ விவித க

ஜட கிரண சகலதர ஜடில -சந்திரனின் ஒளி கற்றைகளில் ஒரு பகுதி -தலையில் சூடிய பரமசிவன்
நட பதி -நாட்டியத்தில் கை தேர்ந்த
மகுட தட நடநபடு விபுத சரித –பெரிய மகுடத்தில் நடனமாடும் சாமர்த்தியம் தேவர்கள் ஆறு கங்கை
அதி பஹுள மதுகளந –மது பிரவஹிக்கும் -திரிவிக்ரமன் திருவடி -தாமரை தேன்-
வழியார முத்தீன்றும் காவேரி போலே
லலித பத-திருவடி தானே மூலம் –
நளின ரஜ–தாமறைத்துகள்கள் ரஜஸ் அடிப்பொடி
உபம்ருதித -துகைக்கப்பட்ட –
நிஜ வ்ருஜின -தன்னுடைய பாபங்கள்
ஜஹதுபல தனுருசிர பரம முனி வர யுவதி நுத -அழகிய -கௌதம முனிவர் கைப்பிடித்த யுவதி அகல்யையால்
ஸ்தோத்ரம் பண்ணப்பட்ட பெருமை
அங்கே-தாடகை வாதம் கண்டார் விசுவாமித்திரர் கை வண்ணம் இங்கு கால் வண்ணம்
உபலதனு -கல் /ஜகத்-போக்கி –
குசிக ஸூத கதித கௌசிகரால் -சொல்லப்பட்ட விதித நவ விவித கத-வேறு வேறு செய்திகளை கேட்டு
தனது கதையும் மேலே சொல்ல கேட்டு -ப்ராஹ்மண ஷத்ரிய -சத்யவதி -ரசிகர் –
ஜமதக்கினி பிறந்து பரசுராமர் வளர்ப்பால் க்ஷத்ரியர் /

————————-

மைதில நகர ஸூ லோசன லோசன சகோர சந்த்ர
கண்ட பரஸூ கோதண்ட பிரகாண்ட கண்டன சவ்ண்ட புஜதண்ட
சண்டகர கிரண மண்டல போதித புண்டரீக வன ருசி லுண்டாக லோசன
மோசித ஜனக ஹ்ருதய சங்காதங்க
பரிஹ் ருத நிகில நரபதி வரண ஜனகதுஹித்ரு குசதட விஹரண சமுசித கரதல
சதகோடி சதகுண கடின பரஸூதர முனிவர கரத்ருத
துரவநமதம நிஜ தனுரா கர்ஷண ப்ரகாசித பாரமேஷ்ட்ய

மிதிலை –சீதாமாரு-தர்பங்கா -பூமி பிளந்து -இன்றைய பீகார் –
மைதில நகர ஸூ லோசன லோசன சகோர சந்த்ர – ஐயனை ஒல்லை வா என்று அழைப்பன கொடிகள் –
ஆலோசன-கண் அழகு படைத்த பெண்களுக்கு -ராம சந்திரன் –
கண்கள் சகோர பக்ஷிகள் -கண்டு உண்டே வாழும்
அவளும் நோக்கினாள் -பிரிந்தவர் பேசினால் பேசவும் கூடுமோ –
எங்கும் அவனுக்கு சீதை -இவளுக்கு பெருமாள் –
சதானந்தர் –அறிமுகம் -நின் அன்னை சாபம் முடித்தனர் -என்றதுமே -எழுந்தார்
தனுர் பஸ்ய-பார்க்கச் சொல்ல -இமைக்காமல் -பார்க்க -எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர்
கண்டன -முறித்த

சண்டகர கிரண மண்டல போதித புண்டரீக வன ருசி லுண்டாக லோசன -ஸூர்ய கிரணங்களால் மலர்ந்த
தாமரைக்காடு அழகைப் பறித்தும் தாமரைக் கண்ணன் பெருமாள் –
சீதையைக் கண்டதும் அலர்ந்த திருக் கண்கள் அன்றோ –
இயம் சீதா மம ஸூதா சக தர்ம சாரிணி-சரிதவ -ப்ரதீச்ச பத்ரம் தே-

கண்ட பரஸூ கோதண்ட பிரகாண்ட கண்டன சவ்ண்ட புஜதண்ட-தோள் கண்டார் தோளே கண்டார்
அன்னலும் நோக்கினாள்-
ஸ்ரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் -பெரிய பிராட்டி அடைந்ததால் –
மோசித ஜனக ஹ்ருதய சங்காதங்க-ஆதங்க -சங்கையால் துடித்த -கல்யாணம் ஆகுமோ என்ற கவலை -ஸ்ரீ ஜனகன்
சீதா அனசூயை -சம்வாதம் –
கடலில் விழுந்த -சிந்தார்ணவ -ஜனகன் -கவலைக் கடல் -ஆறு வயசில் —
சிவ தநுஸ் முறித்து -ஆறாவது ஜனகன் -ஜனக குலத்தில்-
பரிஹ் ருத நிகில நரபதி வரண -அரசர்கள் வரணத்தை விலக்கி
ஜனகதுஹித்ரு குசதட-சீதா பிராட்டி திரு மார்பில்
விஹரண சமுசித கரதல-விளையாடும் திருக் கரங்கள் பெருமாளுடையதே
இவளைப்பார் -இயம் சீதா -எங்கும் சீதா தோற்ற -காட்டித் தர வேண்டுமே –
கலப்பை நுனி முட்டி சீதா அழகு –
மம ஸூதா –மமகாராம் விட்டவனுடைய மமகாராம் -நல்ல குடிப்பிறப்பு
சக தர்ம சரிதவ-
பாலைக்குடிக்க காலைப்பிடிப்பார் உண்டோ –
சீதை பிராட்டி கையை முன் வைத்து -பாணி கிரஹணம் -கன்னிகா தானம் செய்து கொடுப்பது தசரதர்
பிராட்டி திருக் கை -அபய ஹஸ்தம் –ஸ்வ தந்திரனைக் கண்டு பயப்படாதே -அஞ்சேல் -என்று சொல்லும் அவரைப் பார்த்து அஞ்சேல் –
செந்தாமரைக் கை -இவளது -தாமரைக்கை அவனது –

———————————————

க்ரதுஹர சிகரி கந்துக விஹ்ருத் யுன்முக ஜகதருந்ததா
ஜிதஹ்ரி -தந்தி தந்த தந்துர தசவதன தமன குசல தச சத புஜ முக
ந்ருபதி குல ருதிர ஜர பரித ப்ருதுதர தடாக தரப்பித பித்ருக ப்ருகுபதி ஸூகதி விஹிதிகர நத பருடிஷூ பரிசு -20-

சதகோடி சதகுண கடின பரஸூதர முனிவர கரத்ருத –வஜ்ராயுதம் விட நூறு மடங்கு பெருமை பரசு -கையில் பிடித்த வில்
துரவநமதம நிஜ தனுரா கர்ஷண ப்ரகாசித பாரமேஷ்ட்ய -தன்னுடைய வில்லை வாங்கி -நாண் ஏற்றி
அமோக அஸ்திரம் -தபஸின் மேல்

தக்ஷ பிரஜாபதி -யாகம் -க்ருது ஹரம் அழித்து -சிகரி கைலாசம்
கந்தக -விளையாட்டு பந்து போலே
ஜகாத்தை நலிந்த ராவணன்
ஐராவத யானை வென்றி -தந்தம் -குத்தி -தந்துர மேடு பள்ளம் நிறைந்த உடல் கொண்ட பத்து தலை ராவணன் -அவனையும்
தமனம் அடக்கி-குசல சாமர்த்தியம் கார்த்யா வீர்யார்ஜுனன்–அங்கதன் சொல்லும் விருத்தாந்தம் –
ஆயிரம் கைகள் –
கோகுல மன்னர் -21-முடித்த -ருதிர ஆற்றல்-நிறைந்த தடாகம் -தர்ப்பணம் பண்ணி
பிருகு குல பரசுராமர் நல் கதி அடையாத படி -வளைந்த -அம்புக்கூட்டங்கள்

—————–

அயோத்யா காண்டம்

அந்ருத பய முஷித ஹ்ருதய பித்ரு வசன பாலன ப்ரதிஞ்ஞா வஞ்ஞாத யவ்ராஜ்ய
நிஷாத ராஜ ஸுஹ்ருத ஸூசித ஸுசீல்ய சாகர

அந்ருத பய முஷித ஹ்ருதய பித்ரு வசன பாலன ப்ரதிஞ்ஞா வஞ்ஞாத யவ்ராஜ்ய
-தந்தை வசனம் -பாலனம் -சத்யம் ஆக்க பிரதிஞ்ஞானி யுவராஜ்யத்தில் கண் வைக்காமல்
முஷிதா -கலங்கிய / அந்ருத பயம் -அசத்திய வாக்ய பயம்
மாற்றுத்தாய் கூற்றுத்தாய் ஈற்றுத்தாய் -மூவரும் -கூறு கொண்டு பாயாசம் உண்ட தாய் –
உன்னையும் உன் அருமையையும் உன் தாயின் வருத்தத்தையும் பாராதே
என்னையும் என் மெய் வார்த்தையும் -உன்னையே மகனாக ஏழு பிறப்பும் பெற வேண்டும் –
அரும்கானம் அடைந்தவன் –காடு நாடு எது -ஸ்வர்க்கம் நரகம் எது-செல்வா ஸூந்தரி –

————————

நிஷாத ராஜ ஸுஹ்ருத ஸூசித ஸுசீல்ய சாகர
வேட தலைவ நட்பு-ஸுசீல்ய சாகரம் ஸூ சகம் –
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி –
ஸுசீல்யமே ஸ்ரீ ராமாவதார குணம் -ஆஸ்ரித பக்ஷபாதமே ஸ்ரீ கிருஷ்ணாவதார குணம்

————————-

பரத்வாஜ சாசன பரிக்ருஹீத விசித்ர சித்ரகூட கிரி கடக தட ரம்யாவசத
அநந்ய சாஸனீய

பரத்வாஜ சாசன பரிக்ருஹீத விசித்ர சித்ரகூட -அழகிய சித்ரகூடம்-பரத்வாஜர் காட்டியபடி -18-மாதங்கள் இருவரும்
கிரி கடக தட ரம்யாவசத -தாழ்வரையில் ரம்ய ஆவசத-அழகிய பர்ணசாலையில் –
அநந்ய சாஸனீய -வேறு ஒருவரால் கட்டுப்படாத -பரதன் -அயோத்யா மக்கள் வேண்டியும் திரும்ப வில்லையே
குகனும் பரதனும் பரகத ஸ்வீகாரத்துக்கும் ஸ்வகத ஸ்வீகாரத்துக்கும் உதாரணம்-
நானே தான் ஆயிடுக -பரதன் இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டு செய்தாலும் இல்லை செய்யாமல்
உண்டு என்று ஏறிட்டுக் கொள்வதே ஸ்ரீ வைஷ்ணவத்வம்
ஸ்ரீ ராம பக்தியே உரு வெடுத்த ஸ்ரீ பரதாழ்வான்

——————————–

ப்ரணத பரத மகுட தட ஸூ கடித பாதுகாக்ர்ய அபிஷேக
நிர்வர்த்தித சர்வ லோக யோக ஷேம

ப்ரணத பரத மகுட தட ஸூ கடித பாதுகாக்ர்ய அபிஷேக -பொருந்தி –
பாதுகை கொக்குவாயும் படு கண்ணியும் போலே ஸ்ரீ பரத்தாழ்வான் திரு முடியில்
நிர்வர்த்தித சர்வ லோக யோக ஷேம–லோக ஷேமத்துக்காக
மரவடியை பணயமாக வைத்து -நந்திகிராமத்தில் இருந்தே ராஜ்ஜியம் –
பாதுகையே பெண் சிங்கம் -பரதன் குட்டி சிங்கம் -ராமன் -ஆண் சிங்கம் -ராவணன் -யானை
மணி பாதுகை தானே பரதனைக் கூட்டிப் போனது –
திருவடி விட்டுப் பிரிந்தது பாதுகை -ஸ்ரீ பரதாழ்வானை வருந்த வைப்பதால் –
ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சொல்லியும் பீஷ்மர் வாக்கை உண்மையாக்கினான் அன்றோ ஸ்ரீ கீதாச்சார்யர்

———————————–

ஆரண்ய காண்டம்

பிஸித ருசி விஹித துரித வலதனா தநய பலிபுக நுகதி சரபஸ சயன த்ருண சகல பரிபதந
பய ஸஹித சகல ஸூர முனிவரா பஹுமத மஹாஸ்த்ர சாமர்த்த்ய
த்ருஹிண ஹர வலமதன துராரக்ஷ சரலக்ஷ
தண்டகா தபோவன ஜங்கம பாரிஜாத
விராத ஹரிண சார்த்தூல
விலுளித பஹு பல மக கலம ரஜ நிசர ம்ருக ம்ருக யாரம்ப சம்ப்ருத சீரப்ருதநுரோத
த்ரிசித சிரஸ் த்ரிதய திமிர நிராச வாசரகர
தூஷண ஜலநிதி சோஷண தோஷித ருஷி கண கோஷித விஜய கோஷண
கரதர கரதரு கண்டன சண்ட பவன
த்வி சப்த ரக்ஷஸ் சஹஸ்ர நளவந விலோலந மஹா கலப-
அஸகாய ஸூர
அநபாய ஸாஹஸ
மஹித மஹாம்ருத தர்சன முதித மைதிலீ த்ருட தர பரிரம்பண விபவ விரோபித விகட வீரவ்ரண

பிஸித ருசி -மாம்ச ருசி
துரித வலதனா தநய -இந்திரன் பிள்ளை
பலிபுக-பலி பூஜிக்கும் காக்கை
அ நுகதி சரபஸ -பின் தொடர்ந்து
சயன த்ருண சகல–ஒரு பாக தர்ப்பை
பரிபதந
பய ஸஹித சகல ஸூர முனிவரா -தேவர்கள் முனிவர்கள்
பஹுமத மஹாஸ்த்ர சாமர்த்த்ய-கொண்டாடும்படி
காகாசூரன் விருத்தாந்தம் -வால்மீகி இந்த விருத்தாந்தம் அடையாளம் -ஸூந் தர காண்டத்தில் வைக்க
இருவர் மட்டும் அறிந்த அடையாளம் –

த்ருஹிண ஹர வலமதன துராரக்ஷ சரலக்ஷ -பிரமன் சிவன் இந்திரன் தேவாதிகள் காக்க முடியாமல் –

தண்டகா தபோவன ஜங்கம பாரிஜாத -நடமாடும் பாரிஜாதம் போலே பெருமாள்
கேட்டதை அருளும் –
மஹரிஷிகள் பிரார்த்தனை அனைத்தும் அருளி –
விராத ஹரிண சார்த்தூல -விராதன் தும்புரு- சாபத்தால் -மானை முடிக்கும் சிங்கம் போலே

விலுளித-கெடுக்கப்பட்ட
பஹு பல-பலம் கொடுக்கும்
மக கலம -யாக யஞ்ஞங்கள்
ரஜ நிசர ம்ருக-ராக்ஷஸர்கள் மிருகங்கள்
ம்ருக யாரம்ப சம்ப்ருத சீரப்ருதநுரோத-வேட்டை யாடி மரவுரி தரித்த ரிஷிகளுக்கு அனுகூலமாக செய்து அருளி

த்ரிசித சிரஸ் த்ரிதய திமிர நிராச-மூன்று தலைகள் உள்ள திரிசார அரசனை போக்கி வாசரகர
தூஷண ஜலநிதி சோஷண -காரா தூஷணாதிகள் வென்று
தோஷித ருஷி கண கோஷித விஜய கோஷண-ரிஷிகள் கொண்டாட
கரதர கரதரு கண்டன சண்ட பவன-மரத்தை வென்ற சண்டமாருதம்
த்வி சப்த ரக்ஷஸ் சஹஸ்ர நளவந -14000-கோரை புற்கள் போல ராக்ஷசர் யானை போலே முடித்து
விலோலந மஹா கலப-ஒரே முகூர்த்த காலத்தில் முடித்து –
வீரவ்ரண—விழுப்புண்கள் -தழும்பு -வடுக்களுடன் சேவை பார்த்தசாரதி
குலசேகர ஆழ்வார் ஈடுபட்ட விருத்தாந்தம் -அநவரதம் ராமகதை அருளுமவன் வாழியே –
அஸகாய ஸூர அநபாய ஸாஹஸ-கேடு இல்லாத சாஹசம் –
சஹகாச நைரபேஷ்யம்-பர ப்ரஹ்மத்துக்கு -பிராட்டி ஆச்சார்யர் முன்னிட்டு வர சாசனம் செய்ததே அவன் தானே –
மஹித மஹாம்ருத தர்சன முதித மைதிலீ த்ருட தர பரிரம்பண விபவ விரோபித விகட வீரவ்ரண
கேடு இல்லாத சாஹசம் -பிராட்டி சந்தான கரணி விசால கரணி-சத்ரு காந்தாரம் -த்ருஷ்டா வைதேகி -ஆலிங்கனம்
நித்ய ஆலிங்கன சேவை

———————————

மாரீச மாயா ம்ருக சர்ம பரிகர்மித நிர்பர தர்பாஸ் தரண
விக்ரம யசோ லாப விக்ரீத ஜீவித க்ருத்ரராஜ தேஹ திதஷா லஷிதா பக்த ஜன தாக்ஷிண்ய
கல்பித விபுதபாவ கபந்தா பிநந்தித
அவந்த்ய மஹிம முநிஜன பஜன முஷித ஹ்ருதய கலுஷ சபரி மோக்ஷ சாக்ஷி பூத

மாரீ ச மாயா ம்ருக சர்ம பரிகர்மித நிர்பர தர்பாஸ் தரண-தர்பம் மேலே அமர்ந்து -மான் தோலாலால் ஆசனம் -வேண்டுமே –
அதற்காகவே மாரீச வத வ்ருத்தாந்தம் -சுருக்கமாக மாரீச வதம் அருளிச் செய்கிறார் இங்கே
பயந்து வ்ருஷே வ்ருஷே -ர சொற்கள் எல்லாமே பயமூட்ட
ராம பிரபாவம் அறிந்து-
சிலை வணங்கி மான் மறிய எய்தான் தன்னை –தலை வணங்கி கை கூப்பி -அடியார்களால் உலகம் வாழ்கிறது -குலசேகரர்
தில்லைச் சித்ர கூட பதிகம்
புஷ்ப காச திருவடிகள்-அன்று அவனுக்கு கைங்கர்யம் இழந்தோமே -இராமானுஜர்
மான் தொடர்ந்த அம்மானை ஏத்தாது -பெரிய திருவந்தாதி பாசுரம்

விக்ரம யசோ லாப -யசஸ் லாபம்
விக்ரீத ஜீவித க்ருத்ரராஜ தேஹ திதஷா – ஜடாயு மஹாராஜருக்கு அந்திம சடங்கு செய்ய ஆசை
லஷிதா பக்த ஜன தாக்ஷிண்ய–அன்பும் ஆதரவும் காட்டுமே –
ராஜ்ஜியம் இழந்து – வனே வாசம்–சீதா நாஷ்டா -பறவை அரசன் இழந்து -மேலே மேலே சொல்லி-
சிறகின் கீழே ஒதுங்கி இருக்க ஆசைப்பட்டோம் இழந்தோம் -ஆயுஷ்மான் பவ -சரமதசையிலும் பல்லாண்டு
கச்ச லோகான் -பரத்வம் பீறிட்டு
கோதாவரி -தூய்மை இழந்ததே -கோதா தேவியால் மீண்டும் பெற்றது என்பர்

கல்பித விபுதபாவ கபந்தா பிநந்தித –கபந்தன் -முடித்து -அவன் வழி காட்ட –
பஞ்சவடி நாசிக் பத்ராசலம் இரண்டும் உண்டே கோதாவரி கரை இரண்டு இடத்திலும் உண்டே –தண்டகாரண்யம் -கிஷ்கிந்தை –
அஹோபிலம் காட்டு பகுதியில் கபந்தன் வாதம் என்பர் –
சபரி ஆஸ்ரமம் சென்று -அவள் வழி காட்ட கிஷ்கிந்தை –
தெய்வத்தன்மை ராமனால் கொடுக்கப்பட்டவன் -கல்பித –
அபீவந்தித -சாப விமோசனம் பண்ணி ஸ்தோத்ரம் பண்ணினான்

அவந்த்ய மஹிம முநிஜன-வீணாகாப் போகாத ஆச்சார்ய கைங்கர்யம்
பஜன முஷித ஹ்ருதய கலுஷ சபரி மோக்ஷ சாக்ஷி பூத –அழுக்கு -கஷன்கள் போக்கப்பட்ட சபரி மோக்ஷத்துக்கு சாக்ஷியாக இங்கே –
மதங்க முனிவருடைய ஸச் சிஷ்யை -கைங்கர்யம் பண்ணிய பின்பு வரலாம் சொல்லிப் போந்தார்

——————————————–

கிஷ்கிந்தா காண்டம் –

பிரபஞ்சன் தநய பாவுக பாஷித ரஞ்ஜித ஹ்ருதய
தரணி ஸூத சரணாகதி பரதந்த்ரீ க்ருத ஸ்வா தந்தர்ய
த்ருட கடித கைலாச கோடி விகட துந்துபி கங்காள கூட தூர விக்ஷேப தஷ தஷிணே தர
பாதங்குஷ்ட தர சலன விஸ்வஸ்த ஸூஹ்ரு தாசயா
அதிப்ருதுல பஹு விடபி கிரி தரணி விவர யுகபதுதய விவ்ருத சித்ரபுங்க வைசித்ர்ய
விபுல புஜ சைலமூல நிபிட நிபீடித ராவண ரண ரணக ஜனக சதுருததி விஹரண சதுர
கபிகுலபதி ஹ்ருதய விசால சிலாதல தாரண தாருண சிலீமுக —

பிரபஞ்சன் தனய -வாயு குமாரன்
பேச்சைக்கேட்டு ஆனந்தம்
ய பாவுக பாcஷித ரஞ்ஜித ஹ்ருதய –வேதங்கள் கற்றவன் வார்த்தை அன்றோ –
நவ வ்யாக்ருதி பண்டிதன் -விரிஞ்சனோ –சொல்லாலே அறிந்தோமே -நா உடையாய் –
ப்ரஹ்மம் பார்ப்பதும் முன்பே சடபுத்தி -பின்பு ஆர்ஜிதம் தானே வருமே-

தரணி ஸூத-சுக்ரீவன்
சரணாகதி பரதந்த்ரீ க்ருத ஸ்வா தந்தர்ய–நிராங்குச ஸ் வா தந்த்ரன் அன்றோ நாதம் இச்சதி -பரதந்த்ரன் ஆக்கிக் கொண்டார்
அநந்ய சாசானியன் -யாராலும் சாசனம் பண்ண முடியாதவன்
இரண்டும் ஒத்துப்போகும் -அவனே ஏறிட்டுக் கொண்ட -கட்டுண்ணப் பண்ணும் பெரு மாயன் தானே-
நின்னோடும் அறுவரானோம்

த்ருட கடித கைலாச கோடி-எலும்பு மலைக்கூடு கைலாச மலைகள் போலே
விகட துந்துபி கங்காள கூட தூர விக்ஷேப தஷ-தூர வீசும் சாமர்த்தியம்
தஷிணே தர பாதங்குஷ்ட தர சலன –இடது திருவடி கட்டை விரலை கொஞ்சம் அசைத்தே செய்த கார்யம் -சக்தி விசேஷம்
விஸ்வஸ்த ஸூஹ்ருப்ரசயா -ஆசுவாசம் அடைந்த சுக்ரீவன் உடன் கூடி –
சால வ்ருஷங்கள் -மராமரம் ஏழு எய்து –
அதிப்ருதுல பஹு விடபி–பல மரங்கள்
கிரி தரணி விவர யுகபதுதய -ஒரே சமயத்தில் செய்தது போலே
விவ்ருத சித்ரபுங்க வைசித்ர்ய- அழகிய பிடிகளுடன் கூடிய அம்புகள் செயல்கள் –மலை -பூமி -எது எல்லாம் ஏழாக இருந்தவையே
சப்த ரிஷிகள் சமுத்திரங்கள் நடுங்க –
நாமி பலத்தால் சுக்ரீவன் அறை கூவ -திருநாம பலத்தால் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் –
வாலி வத வ்ருத்தாந்தம் -இளைய பெருமாள் -மூலம் மாலையைப் போட வைத்து -ஆச்சார்ய சம்பந்தம் மூலமே கார்யம் –
விபுல புஜ சைலமூல -மலைகள் போலே தோள்கள் கொண்ட ராவணனை
நிபிட நிபீடித ராவண–அர்க்ய பிரதானம் விட சமுத்திரங்கள் செல்லும் வாலி -ராவணனை இடுக்கி சென்றான் –
ரண ரணக ஜனக –பயத்தை மூட்டும்
சதுருததி விஹரண சதுர -நான்கு கடலிலும் விளையாடும் சாமர்த்தியம்
கபிகுலபதி ஹ்ருதய விசால சிலாதல-பெரும் பாறை போன்ற ஹிருதயம்
தாரண தாருண சிலீமுக –பிளப்பதில் கொடிய அம்புகள் -ராம நாமம் பார்த்து –

———————————-

ஸூந்தர காண்டம் –

அபார பாராவார பரிகா பரிவ்ருத பரபுர பரிஸ்ருத தவ தஹந ஜவந
பவநபவ கபிவர பரிஷ்வங்க பாவித சர்வஸ்வ தாந –

அபாராவார பரிகா பரிவ்ருத பரபுர – எதிரி யுடைய புரமான இலங்கை
பரிஸ்ருத தவ தஹந ஜவந
பவநபவ கபிவர பரிஷ்வங்க பாவித சர்வஸ்வ தாந -அசோகவனம் எரித்து -மாருதியால் சுடுவித்தான்
வாயுகுமாரன் –
பெருமாள் ஆலிங்கனம் -யாம் பெரும் ஸம்மானம் -நாடு புகழும் பரிசு –
பரிஷ்வ்ங்க பாவத்தால் தன்னையே முழுக்க கொடுத்து அருளி –

————————————

யுத்த காண்டம் –

அஹித ஸஹோதர ரக்ஷ பரிக்ரஹ விசம்வாதி விவித ச சிவ விஸ்ரம்பண
சமய சம்ரம்ப சமுஜ்ஜ்ரும்பித சர்வேஸ்வர பாவ
ஸக்ருத் ப்ரபந்ந ஜன சம்ரக்ஷண தீஷித
வீர
சத்யவ்ரத

அஹித-வேண்டத்தகாத
ஸஹோதர ரக்ஷ பரிக்ரஹ-ஸ்ரீ விபீஷணாழ்வானை பரிக்ரஹிக்கும் சமயத்தில்
நேராக அபயப்பிரதானத்துக்கு வந்தார் தேசிகன் இதில்
விசம்வாதி -எதிர்த்து பேசும்
விவித ச சிவ -வேறே வேறே மந்திரிகள் ஜாம்பவான் அங்கதன் போல்வார்
விஸ்ரம்பண சமய -பதில் சொல்லி
சம்ரம்ப சமுஜ்ஜ்ரும்பித சர்வேஸ்வர பாவ–ஒரு ஒரு வாதத்துக்கும் –அப்போது ஒரு சிந்தை செய்து –
வெளிப்படுத்திய சர்வேஸ்வர பாவம் –
அங்கதன் -கருத்தை அறிந்து -சரவண ஒற்றனை அனுப்பி / ஜாம்பவான் தப்பான காலம் சமயம் /
மைந்தன் ராவணன் இடம் சென்றுய் அவன் கருத்தை அறிந்து நடவடிக்கை
ஹனுமான் -பிரயோஜனம் ஆகுமா அறிய வேலை கொடுக்க வேண்டுமே –
ராம பக்ஷம் தீயவனானாலும் கைக் கொள்ள வேண்டும் –அனைவர் மனசையும் சமாதானப்படுத்தி –
குரங்குக்கதை-மனிதன் புலி குரங்கு –புறா கதை சொல்லி மிதுனம் வேடன் -அங்கீகாரம் பண்ணவே வேண்டும் –
ராம அன்பால் ரக்ஷணத்துக்காக அன்றோ சுக்ரீவாதிகள்
மூன்று ஸ்லோகங்கள் -இரண்டாவது வார்த்தை சொல்லி அறியாத பெருமாள் -வில் சொல் மனைவி ஓன்று அன்றோ –
மித்ர பாவனாக வந்தாலும் நத்யஜேயம் -தோஷத்துடன் வந்தாலும் -கைக் கொள்வேன்
பிசாசான் தனவான் யக்ஷன் ராக்ஷஸன் -அங்குள்ள அக்ரேன–முன் அவதார செயல் –இச்சன் ஹரி கணேஸ்வர
ஸக்ருத் ப்ரபந்ந ஜன சம்ரக்ஷண தீஷித
வீர
சத்ய விரதம் -தீக்ஷை

—————–

பிரதிசயன பூமிகா பூஷித பயோதி புளிந
பிரளய சிகி புருஷ விசிக சிகா சோஷிதா கூபார வாரி பூர
பிரபல ரிபு கலஹா குதுக சடுல கபிகுல கரதல தூலித ஹ்ருத
கிரி நிகர சாதித சேதுபத சீமா சீமந்தித சமுத்ர
த்ருத கதி தரும்ருக வரூதிநீ நிருத்த லங்கா வரோத வேபது
லாஸ்ய லீலோபதேச தேசிக தநுர்ஜ்யா கோஷ
ககந சர கநக கிரி கரிம தர நிகமமய நிஜ கருட கருதநில லவ களித விஜ வதந சர கதந
அக்ருதசர வநசர ரண கரண வைலஷ்ய கூணி தாஷ பஹு வித ரஷோ பலாத்யக்ஷ
வக்ஷ கவாட பாடந படிம சாடோப கோபா வலேப
கடுரட தடநி டங்க்ருதி சடுல கடோர கார்முக விநிர்க்கத விசங்கட விசிக விகடித மகுட விஹ்வல
விஸ்ரவஸ் தநய விஸ்ரம சமய விஸ்ராணந விக்யாத விக்ரம
கும்ப கர்ண குலகிரி விதளந தம்போளி பூத நிஸ் சங்க கங்கபத்ர
அபி சரண ஹூதவஹ பரி சரண விகடந சரபஸ பரி பதத் அபரிமித கபிபல ஜலதி லஹரி
கலகலரவ குபித மகவஜி தபிஹநந க்ருத நுஜ சாஷிக ராக்ஷஸ த்வந்த்வயுத்த —

பிரதிசயன பூமிகா பூஷித–அவன் அனுஷ்ட்டிக்க ஒண்ணாத சரணாகதியை -அனுஷ்ட்டித்து –
தர்ப்பசயன சேவை –சாகரம் சோக்ஷயிஷ்யாமி-பூமிகா வேஷம்
பயோதி புளிந -கடல் மணல் திட்டில் -அழகாக -மணல் திட்டை கொண்டாடுகிறார் அவன் சயனித்ததால் வந்த அழகு
பிரளய சிகி-பிரளய கால அக்னி ஓக்க
புருஷ விசிக சிகா சோஷிதா கூபார வாரி பூர -கொடிய அம்புக்கள் தீக்கொழுந்து விடும் -வற்று அடிக்கப்பட்ட கடல்
பிரபல ரிபு கலஹா -ராவணன் உடன் சண்டை போடும் ஆர்வம்
குதுக சடுல-குதுகூலம் -குதித்து
கபிகுல கரதல தூலித-கைகளில் பட்டு பஞ்சு போலே கற்கள் –
ஹ்ருத -தூக்கி வரப்பட்ட
கிரி நிகர சாதித சேதுபத -மலைகள் மூலம் கட்டப்பட்ட சேது அணை
சீமா சீமந்தித சமுத்ர-வகுடு எடுக்கப்பட்டது போலே சமுத்திரம்
குரங்குகள் மலையை நூக்க-குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடி -சலமிலா அமிலம் போலே –
கொல்லை விலங்கு பணி செய்ய —
குரை கடலை அடல் அம்பால் மருக
த்ருத கதி தரும்ருக-குரங்குகள் வேகமாக ஓட
வரூதிநீ நிருத்த லங்கா வரோத வேபது-அந்தப்புரப்பெண்கள் நடுங்க
லாஸ்ய லீலோபதேச தேசிக
தநுர்ஜ்யா கோஷ –கோஷம் – நாண் ஒலி உபதேசம் நட்டுவாங்கம் போலே இவர்கள் ஆட
சாரங்க ஒலி நாண் ஒலி ஆட்டுவிக்க ஆடினார்கள்
ககந சர-ஆகாசத்தில் சஞ்சரிக்கும்
கநக கிரி கரிம தர நிகமமய-பொன்மலையான மேரு போன்று பெருமை படைத்த வேதாத்மா விஹகேஸ்வரன்
நிஜ கருட–தனக்கு உயிர் தோழன் போலே கருடன் -காகுஸ்தன் -அஹம் சஹா -வால்மீகி உள்ளது போலே –
மனிஷா பாவம் தானே பெருமாள் -சில இடத்தில் தானே பரத்வம் பீறிட்டு -ஜடாயு மோக்ஷம் பாலைவன
கருதநில லவ-இறக்கைகளால் சிறிய காற்று
களித விஜ வதந-அழிக்கப்பட்ட விஷ நாக்கு -நாக பாசம் போக்கும்
சர கதந
அக்ருதசர-முன்பு செய்யப்படாத
வநசர ரண கரண வைலஷ்ய –குரங்குகள் உடன் போடும் யுத்தம்
கூணி தாஷ பஹு வித ரஷோ பலாத்யக்ஷ வக்-வெட்க்கி மார்பின்
கவாட பாடந படிம சாடோப-கதவு போலே உள்ள முன் பாகம் வசிக்கும் படி
கோபா வலேப-கோப வேஷம்
அரக்கர் ஆள் அழைப்பார் இல்லை -எங்கள் இராவணன் ராக்ஷசர் பாவனையில் -தடம் பொங்கோதம் பொங்கோ
கடுரட தட -அம்பு முனி
தீ கக்கி -ஒலி உடன்
நிடங்க்ருதி சடுல கடோர கார்முக-தானே அம்புகள் போகும் வில்லில் இருந்து -வில்லாண்டான் –
விநிர்க்கத விசங்கட விசிக விகடித மகுட விஹ்வல
விஸ்ரவஸ் தநய விஸ்ரம சமய விஸ்ராணந -விலக்கப்பட்ட மகுடம் -சசால சாபஞ்ச -வெறும் கை வீரன் இன்று பொய் நாளை வா –
விக்யாத விக்ரம-லோகம் பரவிய கீர்த்தி

கும்ப கர்ண குலகிரி விதளந தம்போளி பூத நிஸ் சங்க கங்கபத்ர -குலத்துக்கு மலை போன்ற கும்பகர்ணன்
பிளப்பதில் வஜ்ராயுதம் போலே வீணாகாமல் முடிக்கும் அம்புகள் -கங்க பத்ரம் -அம்புகள்
அபி சரண ஹூதவஹ -அபிசார யாகம் -இந்திரஜித் -நிக்கும்போல யாகம் மாயா சிரஸ்
பரி சரண விகடந சரபஸ பரி பதத் அபரிமித கபிபல-
ஜலதி லஹரி -கடல் அலை போலே
கலகலரவ குபித மகவஜி தபிஹநந க்ருத நுஜ சாஷிக ராக்ஷஸ த்வந்த்வயுத்த –இலட்மணனை சாக்ஷியாக கொண்டு இந்திரஜித்தை முடிக்க
த்வந்தயுத்தம் -மல்லர் போலே-கந்தர்வாஸ்திரம் ஒருவர் ஒருவர் மற்றவரை ராமன் என்று நினைத்து மடிந்து
ஒருவர் இருவர் மூவர் என்று உருவு கரந்து-

————————————-

அப்ரதி த்வந்த்வ பெவ்ருஷ
த்ர்யம்பக சமதிக கோராஸ் த்ராடம்பர
சாரதி ஹ்ருத ரத சத்ரப சாத்ரவ சத்யாபித பிரதாப

அப்ரதி த்வந்த்வ பெவ்ருஷ-நிகர் அற்ற புருஷோத்தமன்-வீரம் உடையவன் –
ஓத்தார் மிக்கார் இல்லாத குணவான் -நிஸ்ஸமாப்யதிக ரஹிதன் –தாரித்ர்யம் அவனுக்கும் இதில் –
லவண வர்ஜிதன் ஒப்பில்லா அப்பன் –
த்ர்யம்பக சமதிக கோராஸ் த்ராடம்பர-கோரமான ஆயுதங்கள் -த்ரயம்பக-சிவன் என்றவாறு

சாரதி ஹ்ருத ரத சத்ரப சாத்ரவ சத்யாபித பிரதாப -வீரன் -நிலை நிறுத்தப்பட்ட கீர்த்தி -விரோதிகளும் கொண்டாடும்
ராவணனும் -தேரில் மயங்கி -யுத்த பூமியில் இருந்து சாரதி கூட்டிப்போக
கோபம் வெட்கம் -இருந்தும் கீர்த்தியை பேசினான் ராவணன் –

——————–

சித சர க்ருத லவன தசமுக முக தசக நிபதன புநருதய தர களித ஜனித தர தரள ஹரிஹய
நயந நளினவந ருசி கசித கதல நிபதித ஸூரதரு குஸூம விததி ஸூரபித ரத பத
அகில ஜகததிக புஜ பல வர பல தச
லபந லபந தசக லவந
ஜனித கதன பரவச ரஜ நிசர யுவதி விலபன வசன சம விஷய நிகம சிகர
நிகர முகர முக முனி வர பரி பணித

லோக திவாகரன் –தாமரை கண்கள் -மலரும் -குவியும் அஸ்தமித்ததும் -ராவணன் தலை விழ -முளைக்க –
ஆகாசம் முழுவதும் நிரம்பி -கீழே கொட்டி தேரை அலங்கரித்து -கவி சாமர்த்தியம்
விசேஷயம் -பல விசேஷணங்கள்
சித சர க்ருத லவன தசமுக முக தசக நிபதன புநருதய-விழுந்து உதிக்க
தர களித ஜனித தர தரள -இந்திரன் மனஸ் குழம்ப
ஹரிஹய =இந்திரன்
நயந நளினவந தாமரைக்காடு-
ருசி-அழகான – கசித கதல-ஆகாசம்-அலங்கரிக்கப்பட்ட
நிபதித ஸூரதரு குஸூம-தேவர் மரப்பூ கொட்டுமா போலே விததி ஸூரபித ரத பத -நருமணமூட்ட
அகில ஜகததிக புஜ பல வர பல–அதிகமான பலவான்-அதுக்கும் மேலே வர பலம்
தச லபந லபந தசக லவந-வெட்டுவதால்
ஜனித கதன -பிறந்த துன்பம்
பரவச-மண்டோதரி சோகம் பிரலாபம்
ரஜ நிசர யுவதி-ராக்ஷசர் கூட்ட தலைவன் தர்ம பத்னி
விலபன வசன சம விஷய நிகம சிகர-சமமான விஷயம் -வேதாந்தம்
நிகர-கூட்டங்கள் –
முகர முக -முகத்தால் பேசுவதும் -முனி வர பரி பணித –ரிஷிகளால் போற்றப்பட்ட ராமன் –
மண்டோதரி பிரலாபம் வேதாந்த வாக்கியம் போலே இருக்க-
கோப வசமானார் பெருமாள் -உருவு கரந்து வாளி பொழிந்த வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்து –
சிலை இலங்கு -பொன்னாழி -ஆபரணமாகவே -பரகால நாயகி அனுபவம்
நேர்வழியில் நடந்தால் குரங்கு கூட உதவும் -தவறான வழியில் நடந்தால் தம்பியும் உதவான்
வ்யக்தமாக பரமாத்வை அறிந்தேன்–மண்டோதரி சதுஸ் ஸ்லோகி –

————————————-

அபிகத சதமக ஹுதவக பித்ருபதி நிர்ருதி வருண பவந தனத கிரிச முக ஸூரபதி நுதி முதித

அமித மதி விதி விதித கதித நிஜ விபவ ஜலதி ப்ருஷத லவ
விகத பய விபுத பரி ப்ருட விபோதித வீர சயன ஸாயிதா வாநர ப்ருதநவ்க
ஸ்வ சமய விகடித ஸூ கடித சஹ்ருதய ஸஹ தர்ம சாரிணீக –

அபிகத சதமக-இந்திரன் ஹுதவக-அக்னி – பித்ருபதி நிர்ருதி வருண பவந தனத குபேரன் கிரிசபரமசிவன் முக ஸூரபதி நுதி முதித-தேவர்கள் அனைவரும் ஸ்தோத்ரம் பண்ண கேட்டு ஆனந்தம் –

அமித-அளவுக்கு அடங்காத -மதி விதி விதித- கதித-பேசப்பட்ட
நிஜ விபவ ஜலதி ப்ருஷத லவ -நீர் நிறைந்த கடலில் நீர்த் திவலை போலே
நம்முடன் பிறந்து
விகத பய -பயம் போக -விபுத பரி ப்ருட விபோதித -உயிர் ஊட்டப்பட்ட
வீர சயன ஸாயிதா வாநர–கொல்லப்பட்ட வானரங்களை உயிர் இந்திரன் கொடுக்க
-ராக்ஷஸர்கள் சரீரம் கடலில் போடா ராவணன் சொல்லி -குவிந்ததால் பயம் மிகும் என்று
ப்ருதநவ்க
ஸ்வ சமய -தன்னுடைய சங்கல்பத்தால் -விகடித ஸூ கடித சஹ்ருதய ஸஹ தர்ம சாரிணீக -பிரிந்து கூடி –
சங்கல்பம் அடியாக அனைத்தும்
மித்ர பாவேனே –கைப்பிடிக்க சொல்லி -பல இடங்களில் சக தர்ம ஸாரீனீகம் ஸ்பஷ்டம்
ஹிருதயம் ஒத்து -தர்ம பத்னி –தர்மத்தையே நாடி இருவரும் -அக்னி பிரவேசமும் ஹ்ருதயம் ஒத்து –
மனஸ்தாபம் கிஞ்சித்தும் இல்லாமல் -பெருமாள் பண்ணினதும் தர்மத்துக்காகவே –

——————————————–

விபீஷண வசம் வதீக்ருத லங்கைஸ்வர்ய
நிஷ்பன்ன க்ருத்ய
க புஷ்பித ரிபு பஷ
புஷ்பக ரபச கதி கோஷ்பதீக்ருத ககநார்ணவ
ப்ரதிஞ்ஞ ஆர்ணவ தரண க்ருத க்ஷண பரத மனோரத சம்ஹித சிம்ஹாசனாதி ரூடா
ஸ்வாமின்
ராகவ ஸிம்ஹ

விபீஷண வசம் வதீக்ருத லங்கைஸ்வர்ய–பட்டாபிஷேகம் மீண்டும் -சேதுக்கரையிலே செய்து ஜுரம் நீங்கப் பெற்றான்
நிஷ்பன்ன க்ருத்ய-க்ருதக்ருத்யனானான் இத்தால் -தம்பி என்றாலே ராஜ்ஜியம் வேண்டாம் என்பார்களே
க புஷ்பித ரிபு பஷ-ஆகாசத்தில் பூக்கப்பட்ட எதிரிகள் கூட்டம் -ஆகாச தாமரை -யாரும் இல்லை என்பதை
த்ருஷ்டாந்தம் கொண்டு காட்டுகிறார் -அனைவரும் விபீஷணனுக்கு வசப்பட்டு

புஷ்பக ரபச கதி கோஷ்பதீக்ருத ககநார்ணவ -புஷ்பக விமானம் கொண்டு மேலே ஸ்ரீ பரதாழ்வானுக்கு கொடுத்த கெடு -அடுத்த வேளை ஸ்நானம் கைகேயி பிள்ளை – அவன் உடன் தானே -பாஞ்சஜன்ய அம்சம் அன்றோ இவன் -லஷ்மணன் விட்டு தூக்கம் இல்லை படுக்கை /
ஷடர்த்த ஸ்ரீ மான்-முக் கண்ணான் சிவன் -கொண்டாடி -/
சீதைக்கு காட்டி இலங்கையை -நம் பிள்ளை விபீஷணன் சொத்து -கடாக்ஷிக்க சொல்லி
ஆகாசம் கடல் மாட்டுக்குளம்பு போலே -கோஷ்பதீக்ருதம் சிறியதாகி-அவ்வளவு வேகம் பெரியது அன்றோ புஷ்பக விமானம்
ப்ரதிஞ்ஞ ஆர்ணவ தரண க்ருத க்ஷண பரத மனோரத சம்ஹித சிம்ஹாசனாதி ரூடா -பிரதிஞ் ஜை என்னும் பெரும் கடலை தாண்டி –
பாரதனுடைய ஆசை முடித்து -ஸிம்ஹாஸனம் ஏறி அமர்ந்து
ஸ்வாமின்
ராகவ ஸிம்ஹ –ரகுகுல ஸிம்ஹம்-ஒரே தலைவன் -பரத்வாஜர் ஒரு நாள் தங்க சொல்வதை எதிர்த்து பேச முடியாமல் –
ஹனுமான் -குகன் இடம் சென்று கூட்டி அயோத்தியை -குகன் பரதன் முன்பு அறிவார்கள் அன்றோ -ராஜ நீதி எங்கும் –
பரதன் அக்னி வலம் வருவதை பார்த்து -ஜடிலம் -அழுக்கு உடம்பு -ஆயிரம் ராமனை ஓப்பான் என்று திருவடியும் நினைக்க
ரஷிக்க திருவடி கை கண்ட மருந்து -எருது கெட்டாருக்கும் ஏழு கடுக்காய் -ஸ்ரீ ராமாயணம் சொல்லி –
ஆலிங்கனம் -நந்திக்ராமம் இன்றும் சேவை -ராம பக்தி தவழும் திரு முகங்கள் –
ரத்ன பீடம்-எட்டு ரிஷிகள் -எட்டு திக்கு தீர்த்தம் -சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் –

——————————-

உத்தர காண்டம் –

ஹாடக கிரி கடக லடஹ பாத பீட நிகிட தட பரி லுடித நிகில ந்ருபதி
கிரீட கோடி விவித மணி கண கிரண நிகர நீராஜித சரண ராஜீவ
திவ்ய பவ்ம அயோத்யாதி தைவத
பித்ரு வத குபித பரஸூ தர முனி விஹித ந்ருப ஹநந கதந பூர்வ கால பிரபவ சத குண ப்ரதிஷ்டாபித தார்மிக ராஜ வம்ச
ஸூப சரித ரத பரத கர்வித கர்வ யூத கீத விஜய காதா சத
சாஸித மதுஸூத சத்ருக்ந சேவித
குச லவ பரிக்ருஹீத குல காதா விசேஷ

ஹாடக கிரி கடக லடஹ பாத பீட
நிகிட தட -அருகில்-பரி லுடித-துவளும் – நிகில ந்ருபதி-அனைத்து ராஜாக்கள் -மேருமலை போலே இவன் திருவடிகள் பீடம்
கிரீட கோடி விவித மணி கண கிரண நிகர-ஒளிக்கற்றை – நீராஜித–ஆலத்தி சரண ராஜீவ-திருவடித்தாமரை –
ஹாரத்தி -ரத்னங்கள் ராஜாக்களின் மணி மகுடம் -ஹாடாகம் தங்கம் -பித்தளாட்டம்-பித்தளையை தங்கம் ஆக்குவது –
திவ்ய பவ்ம அயோத்யாதி–திவ்ய அயோத்தியை பூமி அயோத்யா இரண்டையும் –
அதி தைவத-உபய விபூதி -நாயகன் –
பித்ரு வத குபித -ஜமதக்கினியை கொன்ற கோபத்தால் -பரஸூ தர முனி விஹித ந்ருப ஹநந கதந பூர்வ கால-முற்கால –
பிரபவ சத குண ப்ரதிஷ்டாபித–நூறு மடங்கு பெருகும் படி – தார்மிக ராஜ வம்ச -புனர் நிர்மாணம்-35-ராஜாக்கள் முன்பும் -30-பின்பும்
பரசுராமன் குழைத்த ராஜ மரியாதையை புனர் நிர்மாணம்

ஸூப சரித ரத பரத கர்வித கர்வ கந்தர்வ யூத கீத விஜய காதா சத -பரதன் கந்தர்வர்களை அடக்கி –
வீர சரிதம் தானே இது அவர்களால் பாடப்பெற்ற –

சாஸித மதுஸூத சத்ருக்ந சேவித
குச லவ பரிக்ருஹீத -லவனாச்வரனை வென்ற சத்ருகன் –
சூலாயுதம் பரமசிவன் கொடுத்து -மதுவுக்கு பிள்ளை லவணாசுரன் –
வேட்டைக்கு போகும் பொழுது சூலம் இல்லாமல் போவான் அறிந்து வென்று –
மன்னு வடமதுரை -அன்றோ –
போகும் வழியில் தான் வால்மீகி ஆஸ்ரமம் சீதை இருந்த இடம் –
இத்தைப்பற்றி இங்கு ஒன்றும் சொல்ல வில்லை –
கர்ப்பிணி பெண் ஆசையை நிறைவேற்ற தானே இந்த நடவடிக்கை -வண்ணான் தலையில் போட்டு கதை –
மழைக்காலத்தில் ராஜாக்கள் வர மாட்டார்கள் என்று சூலம் விட்டு போவான்
சத்ருக்கனன் ஆஸ்ரமம் இருந்த பொழுது தான் லவகுசர்கள் அவதாரம் –

குல காதா விசேஷ-ஸ்ரீ ராமாயணம் -பாடி -ஸ்ரீ பரத்தாழ்வான் கேட்டு கூட்டி பாடச் சொல்ல -32-நாள்கள் பாடி
-30-நாள் சீதை அந்தர்கதம் -மேலே நடக்க போவதையும் -வால்மீகி எழுதி சொல்லி வைத்து
-31-கௌசல்யாதிகள் /-32-நாள் லஷ்மணன் செல்ல ராமனும் தன்னுடைச்சோதி எழுந்து அருள
தொடை தட்டி கேட்க சீதை அருகில் இல்லை -பெருமாள் கீழே இறங்கி-
தனிக்கேள்வி இது -மிதுன கேள்வி திருவாய்மொழி–இருக்கும் வியந்து

—————————————

விதிவச பரிணம தமர பணிதி கவிவர ரசித நிஜ சரித நிபந்தன நிசமந நிர்வ்ருத
சர்வ ஜன சம்மாநித
புநருப ஸ்தாபித விமான வர விஸ்ராணந ப்ரீணித வைஸ்ரவண விஸ்ராவித யசஸ் பிரபஞ்ச

பஞ்சதாபன்ன முனி குமார சஞ்சீவன அம்ருத
த்ரேதா யுக ப்ரவர்த்தித கார்த்தயுக வ்ருத்தாந்த
அவிகல பஹு ஸ்வர்ண ஹயமக சஹஸ்ர நிர்வஹண நிரவர்த்தித நிஜ வர்ணாஸ்ரம தர்ம சர்வ கர்ம சமாராத்ய
சனாதன தர்ம
சாகேத ஜனபத ஜனி தநிக ஜங்கம ததிதர ஐந்து ஜாத திவ்ய கதி தான தர்சித நித்ய நிஸ் சீம வைபவ

பவ தபந தாபித பக்த ஜன பத்ரா ராம
ஸ்ரீ ராம பத்ர
நமஸ்தே புநஸ்தே நம
சதுர்முக ஈஸ்வர முகை புத்ர பவ்த்ராதி சாலிநே
நம சீதா சமேதாய ராமாய க்ருஹமேதிநே
கவி கதக ஸிம்ஹ கதிதம் கடோர ஸூ குமார கும்ப கம்பீரம்
பவ பய பேஷஜமேதத் படத மஹா வீர வைபவம் ஸூ திய

விதிவச-விதி வசத்தால் வால்மீகி பாட –
பரிணம தமர பணிதி-அமர பணித தேவ பாஷை
கவிவர ரசித நிஜ சரித நிபந்தன நிசமந நிர்வ்ருத-கேட்டு மகிழ்ந்து
சர்வ ஜன சம்மாநித
புநருப ஸ்தாபித விமான வர விஸ்ராணந ப்ரீணித வைஸ்ரவண -ஆனந்தப்பட்டு குபேரன் –
விஸ்ராவித யசஸ் பிரபஞ்ச -திக்கு எட்டும் பரவிய கீர்த்தி -குபேரன் கொண்டாடும்

பஞ்சதாபன்ன முனி குமார சஞ்சீவன அம்ருத -செறிதவ சம்பூகன் -வர்ணாஸ்ரமம் மாறி ப்ராஹ்மணர் பிள்ளை மீட்டிய சரித்ரம் –

த்ரேதா யுக ப்ரவர்த்தித கார்த்தயுக வ்ருத்தாந்த -க்ருத யுக தர்மத்தை இரண்டாவது யுகத்தில் நடத்தி காட்டி

அவிகல-குறைவற்ற – பஹு ஸ்வர்ண-நிறைய ஸ்வர்ணன்கள் – ஹயமக சஹஸ்ர –ஆயிரம் அஸ்வமேத யாகம் நிறைவேற்றி –
நிர்வஹண நிரவர்த்தித நிஜ வர்ணாஸ்ரம தர்ம சர்வ கர்ம சமாராத்ய-கர்மங்களை செய்பவனும் நானே என்னும் –
ஆராத்யனும் ஆராதனனும் பெருமாளே
சனாதன தர்ம -தர்மமாகவே ராமோ விக்ரஹவான் தர்ம-கிருஷ்ணன் தர்மம் சனாதனம் –
தர்மம் நிலை நிறுத்த அன்றோ அவதாரம் -எல்லா தர்மமும் தானே –

சாகேத-கோசல நாட்டில் – ஜனபத ஜனி தநிக–அதுவே செல்வமாக கொண்ட –
ஜங்கம -அசைவது -ததிதர-ஸ்தாவர ஐந்து ஜாத திவ்ய கதி -அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி
தான தர்சித நித்ய நிஸ் சீம வைபவ -அழியாத எல்லைக்கு அடங்காத வைபவம் அன்றோ –
முனிவர் வேண்ட -இலக்குமணன் -பெருமாளை பிரிந்த நாள்களே இல்லையே இவனுக்கு –
புல் பா முதலா நல் பாலுக்கு உய்த்தனன் -பாவோ நான்யத்ர கச்சதி -மாற்று ஒன்றைக்காணாவே-அச்சுவை வேண்டேன்

பவ தபந தாபித-சம்சார சூரியனால் சுடப்படட்ட – பக்த ஜன பத்ரா ராம
ஸ்ரீ ராம பத்ர-அழகால் மங்களம் ஜகத்துக்கு
நமஸ்தே புநஸ்தே நம-மீண்டும் மீண்டும் வணக்கம்
சதுர்முக ஈஸ்வர முகை புத்ர பவ்த்ராதி சாலிநே-பிள்ளை பேரனாக பெற்றவனே
குமார சம்பவம்
நம சீதா சமேதாய ராமாய
க்ருஹமேதிநே-இல்லறம் நடத்தி -உலகமே குடும்பம் இவனுக்கு
கவி கதக -தார்க்கிக – ஸிம்ஹ கதிதம் கடோர ஸூ குமார கும்ப கம்பீரம் -சேர்த்தி ஆழமான பொருள்கள்-கடுமை மிருது -சொற்கள்
பவ பய -சம்சார வியாதிக்கு பேஷஜமேதத்-அரு மருந்து படத மஹா வீர வைபவம் ஸூ திய தி -இந்த கத்யம் படிக்க சம்சாரம் போகும்
நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவோமே

இதி மஹா வீர வைபவம் சம்பூர்ணம்

——————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத ஸ்ரீ தேவாதி ராஜ பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சிறிய திருமடல் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன் வியாக்யானம் –

August 13, 2018

ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்த தனியன் ..

முள்ளிச் செழு மலரோர் தாரான் முளை மதியம்
கொள்ளிக்கு என் உள்ளம் கொதியாமே – வள்ளல்
திரு வாளன் சீர்க் கலியன் கார்க் கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல் —

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வ்யாக்யானம் —

முள்ளிச் செழு மலரோர் இத்யாதி—
சப்தாதி விஷயங்களின் சன்னதியிலே -மனஸ்ஸூ பரிதபியாமல்
பகவத் பிராவண்யத்துக்கு அநு குணமாக –
திரு மடல் என்கிற திவ்ய பிரபந்தத்தை உபகரித்து அருளுவதே என்று
ஆழ்வார் திருவடிகளில் பிரேமம் வுடையாருடைய ஈடுபாடாய் இருக்கிறது-
அன்றிக்கே
ஸ்வ விஸ்லேஷத்தில் சாம்சாரிக விஷயங்களிலே – மனஸ்ஸூ பரி தபியாதபடி
ஸ்வ பிரசாதத்தை பிரசாதியாமல் -தாம் மடல் எடுக்க உபக்ரமித்த பாசுரமான
மடலையே தந்து விட்டார் என்றாகவுமாம்

முள்ளிச் செழு மலரோர் தாரான் –நமக்கு அசாதாரணமாய் அத்விதீயமாய் இருக்கிற –
முள்ளிப் பூவை தாராக உடையவர் என்னுதல் -வகுள தாரான் என்னுமாப் போல
அன்றிக்கே –
மலரோ -என்று பாடமான போது ,
நம் அபேக்ஷிதமான முள்ளிச் செழு மலர் மாலையையோ தருகிலர் என்று ஆகவுமாம் –
மலர் -என்றது மாலைக்கு உப லக்ஷணம் –
எதுக்காக தார் தர வேணும் என்றால் –

முளை மதியம் கொள்ளிக்கு என் உள்ளம் கொதியாமே – –-
முளைத்து எழுந்த திங்கள் – விரஹிகளாய் இருப்பார்க்கு தாப ஹேது இறே
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் -பெரிய திருமொழி -2-7-3- என்றார் இறே –
இவரும் நாட்டாருக்கும் அப்படியே –
சந்திர காந்த கராயதே என்று சந்தர மண்டலம் காந்த -ஸூர்ய மண்டலமாய் இருக்கை
சீதை பிரிந்த பொழுது அனைத்தும் அழகு அற்றவை ஆனது போல –
முளை மதி அங்கு கொள்ளி என்னுதல் –
முளை மதியம் ஆகிற கொள்ளி என்னுதல் –
அம் கொள்ளி –
அழகிய கொள்ளி என்னுதல் –
இது பஞ்ச விஷயத்துக்கு உப லக்ஷணம்
மல்லிகை கமழ் தென்றல் ஈறுமாலோ
வண் குறிஞ்சி இசை தவிருமாலோ- என்றும் –
வாடை தண் வாடை வெவ் வாடையாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ
மென் மலர் பள்ளி வெம் பள்ளியாலோ -என்றும் — இறே
விஸ்லேஷத்தில் விஷயங்களின் பாதக துவாரங்கள் இருப்பது –
அது தான் விஷய அநு குணமாய் இருப்பது
ஆகையால் குளிர்ந்த சந்திரனை கொள்ளி போல கண்டு என் ஹ்ருதயம் பரிதபியாதே -ஆழ்வார் பண்ணின உபகாரமே —

வள்ளல் திரு வாளன் சீர்க் கலியன் –-வள்ளல் -பரம உதாரர் ..
திரு வாளன் –
பகவத் பிரத்யா சத்தி ஆகிற ஐஸ்வர்யத்தை உடையவர் ..
வள்ளல் திரு வாளன் –
இவன் ஒவ்தார்யம் பண்ணுகைக்கு உடலான ஐஸ்வர்யம் ..
சீர்க் கலியன் –
பகவத் பக்த்தாதி குணங்களை உடையவர் ..
கார் கலியை வெட்டி –
கலிகன்றி ஆகையாலே -அஞ்ஞானவஹமான கலியைக் கடிந்து ..கலி தோஷம் இறே காம பரவசர் ஆகிறது ..
அப்படி அப்ராப்த விஷயங்களில் , காமம் வராதபடி ..
மருவாளன் தந்தான் மடல் –
திருக் கையிலே மருவி இருக்கிற வாளை உடையவர் ..
பகவத் காமத்துக்கு அநு குணமான திரு மடல் என்கிற திவ்ய பிரபந்தத்தை உபகரித்து அருளினார் ..
மருவாளன் –
பகவத் அனுபவத்தில் உண்டான போக்யதை வடிவில் தொடை கொள்ளலாம் படியானவர் ..
இவள் அம் தண் துழாய் கமழ்தல்.
மரு -பரிமளம் .
மருவு -மருவுதலாய் ..எம்பெருமானை கிட்டுகையை ஸ்வபாவமாக உடையவர் என்றுமாம் ..
அன்றிக்கே
சேதனரைக் கிட்டி ஆளுகிறவர் என்றுமாம் .

ஆகையால் -சேதனரை -தம் படி ஆக்க வேண்டி மடலை உபகரித்து அருளினார் –
மாலையைத் தாராதே மடலை தந்து விட்டார் என்றாகவுமாம் ..

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –