பக்தாம்ருதம் –நமாம்யஹம் திராவிட வேத சாகரம் -திருவாய்மொழியைக் கடலாக –
வேதார்த்த ரத்ன நிதி -நம்மாழ்வார் என்பர் கூரத் தாழ்வான்-ஜீயாத் பராங்குச பயோதி -ஆழ்வாரைக் கடலாக –
வேதார்த்த ரத்னங்களுக்கு ஆகரம் –
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் -என்பர் மா முனிகள்
வண்டு -ராமானுஜர் ஸூ சகம் -/ விதானம் -பிரார்த்தித்து இவர் அவதாரம்
—————————-
கீதா உபநிஷத் -கோதா உபநிஷத் -அர்ஜுனன் ஒருவனுக்கு நமக்கு
வாஸூ தேவ தருச் சாயா –தாபா த்ரயம் -நீராடி போக்க
நெய்க்குடம் எறும்பு -போலே உடம்பு பிரகிருதி -அனீசன் செய்யாமல் இருக்கவும் செய்யவும் பிரயாசம்
அருவி -த்ருஷ்ட்டி அம்ருத வ்ருஷடியால் நனைக்க-
கண்ணன் இருக்க சந்திரன் நிறைந்து நித்ய வாசம் மதி நிறைந்த நன்னாள்
செங்கண்ணில் உபக்ரமம் உப சம்ஹாரம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி -கண்ணனையும் பெரியாழ்வாரையும் காட்டிக் கொடுத்தாள்
முதல் தானம் அவன் ஸ்ருஷ்ட்டி இத்யாதி -சாத்விக ராஜஸ தாமஸ தானங்கள்
தானம் சித்தி இல்லையே மஹா பாலி இடம்
நாராயணனே பரமன் உத்தமன் பத்ம நாபன்-தாமோதரன் -நாபி இடுப்பு அருகில்
பற்ப நாதம் உயர்வற உயரும் பெரும் திறலோன் -எத்தை உயர்ந்ததும் மேலே –
பத்ம நாதம் பத்ம பாதன் -பத்மத்தை நாபியில் கொண்டவன் -தாமரை போன்ற திருப் பாதம் -இரண்டு சமாசம் -அழகும் பரத்வம் பறை சாற்றும்
கொப்பூழிலில் எழு கமல பூ அழகர் -முக்காலம் -சுழி -கொப்பூழ் -கூரத் தாழ்வான் -காந்தி லஷ்மீ ஸ்தானம்
-மாயன் மன்னு வட மதுரை மைந்தன் திருமந்திரம் திரு விக்ரமன் பத சாம்யம்
மாயன் -பரதவ ஸுலப்யம் இரண்டுக்கும் -சூட்டு நன் மாலைகள் —
பேர் அரவம் –ததீய சேஷத்வம் -அரவம் -மாயன் -பேர் அரவம் மாயன் தமர் -பேர் அரவம் -அறியாத -பிள்ளாய்
பேர் அரவம் -அரவம் -/ஆற்ற அனந்தல் -அனந்தல் / நெடுமாலே -மாலே /மாயன் -மா மாயன் /பெரும் துயில் -பேர் உறக்கம் /
கீசு கீசு -பிரணயி பேச்சு-வேய் மறு தோளிணை–தொடு குழி –இத்யாதி -ஓன்று பணித்ததுண்டு -ஓராண் வழி அறிவோம்
தன்னை நைவிகின்றிலன் –கொங்குண் வண்டே கரியாக வந்தான் – நமக்கே நலம் ஆதலால் -புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே
த்வயா -உன்னுடன் எப்பொழுது கூடுவேனோ -முன் நின்ற லஷ்மணன் இடமே பரதனை விட்டு பிரிந்த விரஹ
அழகிய பாற் கடல் -பயங்காசனம் -பொழுது அனுசந்தேயாம் -நெஞ்சமே நீல் நகராக இருக்க அடம் பிடிப்பவனை
கோயில் ஆழ்வாரில் எழுந்து அருளி வைக்க -கீசு கீசு -விரஹம் சகியாமல்-மஹாத்மாக்கள் விஸ்லேஷம் சஹியாத மார்த்வம் உண்டே –
நின் முற்றம் -குலசேகரன் படி -மனத்தூண்கள் -கோவலூர் இடை கழி போலே பிரசித்தம் அன்றோ
நாற்றத் துழாய் முடி நாராயணன் போற்றப் பறை தரும் புண்ணியன்-உபாயமும் -முகில் வண்ணன் பேர் பாடுவதே புருஷார்த்தம் -புண்ணியம் யாம் யுடையோம்
நாராயண -பர ப்ரஹ்மம் – பரம தத்வம் -பரஞ்சோதி -பரமாத்மா -பரம பாராயணம் –
த்வந்த சமாசம் -இரண்டுக்கும் முக்கியம் -/ ராம கிருஷ்ணவ் ஆகதவ்
அவ்யயயம் -விபக்தி வசனம் லிங்கம் இல்லாமல் –பர ப்ரஹ்மம் -முன் பாத பிராதாந்யம் -உப கங்கம் -கங்கை அருகில் உள்ள இடம் –
நாரங்களுக்கு அயனம் -இருப்பிடம் முக்கியத்துவம் தத் புருஷ சமாசம்
ராஜ சேவகன் -கூப்பிட வந்துள்ளான் சேவகன் முக்கியம் -இதுவும் தத் புருஷ சமாசம் -உத்தர பதார்த்த போதகம் -செயல் இங்கே அன்வயம்
பஹு வ்ரீஹி சமாசம் -நாரங்களை இருப்பிடமாக கொண்டவர் -இரண்டு சொல்லுக்கும் பிரதானம் இல்லை –
நாரங்களுக்கும் அயனத்வத்துக்கும் முக்கியம் இல்லை -திருமால் -நித்ய வஸ்துக்களை இருப்பிடமாக கொண்ட
பீதாம்பரம் -பீதம் அம்பரம் யஸ்ய யாருக்கோ -இரண்டுக்கும் முக்கியம் இல்லை -அந்நிய பதார்த்தம் பிரதானம் -தரிக்கும் அவனுக்கு
ரூடி -பிரசித்தம் –யவ்கிகம் -யோகம் -சேர்க்கையால் வந்த பொருள் –
போதரிக்கண்ணினாய் -பாகவத கடாக்ஷம் -கண் -ஞானம்-பங்கயக் கண்ணினாய் -பகவத் கடாக்ஷம் -நா உடையாய் -வாக் வன்மை –
——————————-
விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் –
ஸ்ரீ கீதை -அருளிச் செய்யும் பொழுது -ஸ்ரீ கருடன் குதிரை கருட அம்சம் -ரூபேண -கேட்டு அனுஷ்ட்டித்தாரே —
திருவடி கொடி ரூபேண -இருந்ததால் -சபரி மோக்ஷ சாஷிபூதரே பெருமாள் -ஜடாயுவை கச்ச லோக –
இதனால் -10-ஆழ்வார்கள் நேராக பகவானையும் -2-ஆழ்வார்கள் ஆச்சார்யர் மூலம் பகவானையும் பற்ற -/
நம்மாழ்வார் ஆச்சார்யர் கோஷ்டி /
ராமானுஜ நூற்றந்தாந்தி -நாலாயிரம் சேர்த்தால் போலே-ஆச்சார்யரான ராமானுஜரும் ஆழ்வார் கோஷ்டியில் கொள்ள வேண்டும் –
—————–
திவ்ய பிரபந்தங்களில் திருவடி பிரஸ்தாபங்கள்
பொய்கையாழ்வார் –செய்ய சுடர் ஆழியான் அடிக்கே என்று உபக்ரமித்து
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் ஏன் நெஞ்சே -ஓர் அடியில் தாயவனை கேசவனை -என்று திருவடிமயமாகவே தலைக்கட்டினார் –
பூதத்தாழ்வார் -அறை கழல் சேவடியான் செங்கண் நெடியான் என்று தலைக்கட்டினார்
பேயாழ்வார் இன்றே கழல் கண்டேன் என்று உபக்ரமித்து சக்கரத்தால் தாள் முதலே நங்கட்குச் சார்வு -என்று தலைக்கட்டினார்
திருமழிசை ஆழ்வார் -உன்ன பாதமென்ன நின்ற ஒண் சுடர்கே கொழு மலர் -என்று திருச்சந்த விருத்தம் தலைக்கட்டி அருளுகிறார்
திருவிருத்தத்திலும் தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய என்று உபக்ரமித்து அடிக்கண்ணி சூடிய மாறன் என்று தலைக்கட்டுகிறார்
பெரிய திருவந்தாதியிலும் – மொய் கழலே ஏத்த முயல் என்று தலைக்கட்டுகிறார்-
திருவாய்மொழியிலும்-துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே
திருவாசிரியத்திலும் மூ வுலகு அளந்த சேவடியோயே என்றும்
பெருமாள் திருமொழியிலும் திரைக்கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும் என்று உபக்ரமித்து
நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே -என்று தலைக்கட்டுகிறார் –
பெரியாழ்வாரும் உன் சேவடி செவ்வித் திருக்காப்பு என்று உபக்ரமித்து
திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்-என்று தலைக்கட்டுகிறார்
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திரு நாமமே அடி பட்டுக் கிடக்கிறது
திருப்பாண் ஆழ்வார் -திருக் கமலபாதம் வந்து என் கண்ணினுள் ஒக்கின்றவே -என்று அருளிச் செய்கிறார்
திருமங்கை ஆழ்வார் வயலாலி மணவாளன் திருவடியில் வாயை வைத்தே பிரபந்தம் தொடங்குகிறார்
தலைக்கட்டும் பொழுதும் நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –என்று அருளிச் செய்கிறார்
மதுரகவிகளும் முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே
திருப்பாவையில் உன் பொற்றாமரை படியே கேளாய் என்றும்
நாச்சியார் திருமொழியிலும் பெரும் தாளுடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே
அமுதானாரும் மாறன் அடி பணிந்து உயந்த –ராமானுஜன் அடிப் பூ மன்னவே
——————————————————-
ஒரு நாயகமாய் -4-1-திருவாய் மொழியில் –
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ -1-என்றும் –
செம்மின் முடித்திருமாளை விரைந்து அடி சேர்மினோ -2-என்றும்
கடிசேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ -3-என்றும்
பனைத்தாள் மத களிறு அட்டவணை பாதம் பணிமினோ -4-என்றும்
கடல் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினா-6-என்றும்
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ -9-என்றும்
அஃதே உய்யப்புகுமாறு என்று கண்ணன் கழல்கள் மேல் -11-என்றும் உண்டே
உய்யப் புகுமாறு அஃதே என்று –
‘திருநாரணன்தாள்’ என்று நான் சொன்ன அதுவே உய்வதற்கு உரிய வழியும் பலமும் என்று.
உபாயாந்தரம் வேறே இல்லை -பிரயோஜ நாந்தரம் இல்லை -அதுவே உய்வு -அதுவே ஆறு -அதுவே உய்யப் புகும் ஆறு –
கண்ணன் கழல்கள் மேல் –
‘கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி, கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே?
அது தன்னையே அருளிச்செய்கிறார். ‘இப்படி அடியுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ்வடிகளைத் தாம் பற்றியது?
‘துயர் அறு சுடர்அடி தொழுது எழு’ என்று தம் திருவுள்ளத்திற்கு அருளிச்செய்தார்;
‘வண் புகழ் நாரணன் திண்கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார் அங்கு.
இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்;
‘கண்ணன் கழல்கள் நினைமினோ,’ என்று பரோபதேசம் செய்தார்.
இது என்ன அடிப்பாடுதான்! ‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’
என்றே அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?
திருவடியில் என்ன ப்ராவண்யம் –
————————-
பாலகனாய் -4-2-திருவாய் மொழியில்
ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார் தாளிணை மேல் அணி தண்ணம் துழாய் என்றே மாலுமால் –1-என்றும்
குறைவை பிணைந்தவர் நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே சொல்லுமால் -2-என்றும்
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால் -3-என்றும்
சமயிகள் பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் பரண் பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதுமால் -4-
குடக்கூத்தனார் தாளிணை மேல் அணி தண்ணம் துழாய் என்றே நாளு நாள் நைகின்றதால் -5-என்றும்
ஆதியம் காலத்து ஆட்களிடம் கீண்டவர் பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதுமால் -6-என்றும்
மடந்தையை வண் கமலத்திரு மாதினை தடம் கொள் மார்பினில் வைத்தவர் தாளிணை மேல்
வடம் கொள் பூம் தண்ணம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால் -7-என்றும்
கொம்பு போல் சீதை பொருட்டு இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் தாளிணை மேல் அணி
வம்பவிழ் தண்ணம் துழாய் மலர்க்கே இவள் நம்புமால் -8-என்றும்
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென்முலைக்கு என்று மெலியும் -10-என்றும்
மெலிவு நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல் மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் -11-என்றும் -உண்டே –
——————————————————-
உலகமுண்டா பெருவாயா-6-10–பதினோரு பாசுரங்களில் திருவடி பிரஸ்தாபம்
திருவேங்கடத்து எம்பெருமானே குல தொல்லடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே -1-என்றும்
திருவேங்கடத்தானே ஆறாவன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே -2-என்றும்
திருவேங்கடத்தானே அண்ணலே யுண்ணாடி சேர அடியேற்கு ஆவா வென்னாயே -3-என்றும்
திருவேங்கடத்தானே பூவார் கழல்கள் அருவினையென் பொருந்துமாறு புணராயே -4-என்றும்
திருவேங்கடத்தானே திணரார் சாரங்கத்துன பாதம் சேர்வது அடியேன் என்னாளே-5-என்றும்
திருவேங்கடத்தானே மெய் நான் எய்தி எந்நாள் உன்னடிக்கண் அடியேன் மேவுவதே -6-என்றும்
திருவேங்கடத்து எம்பெருமானே நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலாது ஆற்றேனே-7-என்றும்
திருவேங்கடத்தானே மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே -8-என்றும்
திருவேங்கடத்தானே அந்தோ வடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே -9-என்றும்
திருவேங்கடத்தானே புகல் ஒன்றில்லா வடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -10-என்றும்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியார் வாழ்மின் என்று அருள் கொடுக்கும் படிக்கேழில்லாப் பெருமானை -11-என்றும் உண்டே
————————————–
பெரிய திருமொழி -3-4- பதிகம் பாசுரங்கள் தோறும் திருவடி பிரஸ்தாபம் –
மா வலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் –3-4-1-
நக்கநூன்முகமார் தலையோட்டூண் ஒழித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் -3-4-2-
வாணன் திண் தோள் நேர்ந்தவன் தாள் அணைகிற்பீர் -3-4-3-
குருதியுக உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் -3-4-4-
மா கீண்டு வெள்ளம் அட்டா விண்ணவர் கொண் தாள் அணைகிற்பீர் -3-4-5-
விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைகிற்பீர் -3-4-6-
வலம்புரி சிலைக்கை கமலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் -3-4-7-
மட்டவிழ் அம் குலைக்கா வானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் -3-4-8-
திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் -3-4-9-
பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே -3-4-10-
——————————————————-
பெரிய திருமொழி -6-9-பாசுரங்கள் தோறும் திருவடி பிரஸ்தாபம் –
இடர் கெடுத்த திருவாளர் இணையடியே யடை நெஞ்சே–
அழலாரும் சரம் துரந்தான் அடியிணையே யடை நெஞ்சே —
அளை வெண்ணெய் யுண்டான் தன அடியிணையே யடை நெஞ்சே –
குன்றாரும் திறல் தோளன் யடை நெஞ்சே —
உலகு ஏழும் புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே யடை நெஞ்சே-
மெல்லியலை திரு மார்பில் மன்னித்தான் வைத்து உகந்தான் மலரடியே யடை நெஞ்சே —
தார் தழைத்த துழாய் முடியின் தளிர் அடியே யடை நெஞ்சே –
மணி மாடம் மிக மன்னி நிலையாற நின்றான் தன் நீள் கழலே யடை நெஞ்சே –
பிறையாரும் சடையானும் பிரமனும் தொழுது ஏத்த இறையாகி நின்றான் தன் இணை படியே யடை நெஞ்சே –
——————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply