Archive for July, 2018

ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண /ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ வாமன / ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ நரசிம்ஹ/ தச அவதாரங்கள் -ஒரே பாசுரத்தில்

July 31, 2018

ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்கள் -ஒரே பாசுரத்தில்-

பெரியாழ்வார் திருமொழி –

குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கிய அணை கட்டி நீள் நீர் இலங்கை அரக்கர் அவிய
அடு கணையாலே நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி யங்கையாலே சப்பாணி –1-6-8-

மின்னிடச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்துமுடன் வீழ
தன்னிகர் ஒன்றில்லச் சிலை கால் வளைத்திட்ட மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா
வேலை யடைத்தார்க்கு ஒர் கோல் கொண்டு வா -2-6-8-

தென்னிலங்கை மன்னன் சிரந்தோள் துணி செய்து மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற மின்னளங்காரர்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேங்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டு வா –2-6-9-

வருக வருக வருக விங்கே வாமன நம்பி வருக விங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்துக் காகுத்த நம்பி வருக விங்கே -2-9-2-

நந்தன் முதலையைக் காகுத்தனை நவின்று உந்தி பரந்த ஒளியிழையார்கள் சொல்
செந்தமிழ்த் தென் புதுவை விட்டு சித்தன் சொல் ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லலில்லையே –3-9-11-

கொலையானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருதழிய
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டடைப்ப
அலையார் கடற்கரை வீற்று இருந்தானை அங்குத்தைக் கண்டாருளர் –4-1-3-

தேவுடை மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவில் இராமனாய்
கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் –புனலரங்கமே —4-9-9-

——-

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்—-திருப்பாவை 13

———————-

நாச்சியார் திருமொழி

சீதை வாயமுதமுண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று — –2-10-

——————————-

பெருமாள் திருமொழி –

தோடுலா மலர் மங்கை தோளிணை தோய்ந்ததும் சுடர் வாளியால் நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து -2-2-

ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னிராமனாய் மாறடர்த்தத்தும் மண் அளந்ததும் சொல்லிப் பாடி —-2-3-

மன்னு புகழ் பதிகம் —கண புரத்தென் கரு மணியே –இராகவனே தாலேலோ -8

வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே காலின் மணி கரையலைக்கும் கண புரத்து என் கருமணியே -8-7-

தயரதன் தன் குலமதலாய் வளையவொரு சிலையதனால் மதிள் இலங்கை அழித்தவன் –கண புரத்து என் கரு மணியே -8-9-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன் -8-11-

——————————————————

திருச் சந்த விருத்தம் –

கால நேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய் ஞாலம் எழும் உண்டு பண்டோர் பாலனாய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்தவிர நின் பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே –31-

மின்னிறத்த எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய்
நன்நிறத் தொரின் சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர் பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன் அல்லையே –33-

வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே –39-

கடைந்து பாற் கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து உடைந்த வாலி தன தனக்கு உதவவந்திராமனாய்
மிடைந்த வேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம் அடைந்த மாலை பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ –81-

விடைக் குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேற் கண் மாதரார் கடிக் கலந்த தோள் புணர்ந்த காலி ஆய வேலை நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்த முன் கடைந்து நின் தனக்கு அடைக்கலம் புகுந்த வென்னை அஞ்சல் என்ன வேண்டுமே –92-

கடும் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரம்மவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே –104-

கறுத்து எதிர்ந்த கால நேமி காளனோடு கூட அன்று –வில்லும் வாளும் ஏந்தினாய் –
-குன்ற முன் பொறுத்த நின் புகழ்க்கலால் ஓர் நேசம் இல்லை நெஞ்சமே –106-

காய்சினத்த காசி மன்னன் வக்கரன் பவுந்திரன் மா சினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன் நாசமுற்று வீழ –107-

———————–

பெரிய திருமொழி

கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி கனை ஒன்றினால் மடிய விலங்கை தன்னுள்
பிறை எயிற்று வாளரக்கர் சேனை எல்லாம் பெரும் தகையோடுடன் துணித்த பெம்மான் தன்னை -2-10-5-

கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் கதிர் முலை சுவைத்து இலங்கை வவ்விய விடும்பை கூரக் கடும் கணை துரந்த வெந்தை -4-5-2-

ஆநிரை மேய்த்து அன்று கடலை அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டி கார் நிறை மேகம்
கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில் –திருவெள்ளியங்குடி யதுவே -4-10-2-

மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம் துரந்து மாவாய் பிளந்து மல்லடர்த்து
மருதம் சாய்த்த மாலதிடம் –புள்ளம் பூதம் குடி தானே -5-1-3–

வெற்பால் மாரி பழுதாகி விறல் வாள் அரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐந்நான்கும்
துணித்த வல் வில்லி ராமனிடம் –புள்ளம் பூதம் குடித்தான் -5-1-4-

குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத விடை தான் ஏழும் வென்றான் கோவில் நின்றான்
தென்னிலங்கை அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெம் கூற்றம் நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே -6-10-5-

பேய்மகள் துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலைத் தோன்றல் வாள் அரக்கன் கெடத்தோன்றிய நஞ்சினை —
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-8-

முன் திருந்தா வரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச் சிவந்து ஒரு நாள்
பெரும் தோள் வாணர்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி
முன் கரும் தாள் களிறு ஓன்று ஓசித்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே -8-6-6-

சூரிமையிலாய பேய்முலை சுவைத்துச் சுடு சரமடு சிலைத்துரந்து நீர்மையில்லாத தாடகை மாள நினைத்தவர்
மனம் கொண்ட கோயில் –திருமாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -9-8-4-

குரங்கைப் படையா விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம கடலை அடைத்திட்டவன் காண்மின் இன்று
ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே -10-6-7-

புள் யுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை ஒள் எரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ -10-9-1-

மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப் பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு இது கண்ணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1-

—————————–

திருவாய் மொழி –

மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா -1-5-6-

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி யமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்கா ஏறு உடன் ஏழ் செற்றதுவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே -2-5-7-

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பு ஓசித்தாய்-4-3-1-

புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ -6-10-5-

—————————

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா
மங்கை தழும்பு இருந்த தாள் சகடம் சாடி
தழும்பு இருந்த பூம் கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல்–முதல்திருவந்தாதி -23-

மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று
கொலையானை போர்க்கோடு ஒசித்தனவும் பூம் குருந்தம் சாய்ந்தனவும்
கார்க்கோடு பற்றியான கை–முதல் திருவந்தாதி -27-

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் தடவி அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய்–இரண்டாம் திருவந்தாதி -15-

——————————————————————————————————————–

ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ வாமன அவதாரங்கள் -ஒரே பாசுரத்தில்-

பெரியாழ்வார் திருமொழி –

சிறியன் என்று என் இளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை மாவலிடைச் சென்று கேள் –1-4-8-

அன்னமும் மீனுருவும் ஆளரியும் குரலும் அமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே –1-5-11-

மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில் தக்கதிதன்னென்று தானம் விலக்கிய சுக்கிரன்
கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே அச்சோவச்சோ சங்கமிடத்தானே அச்சோவச்சோ –1-8-7-

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியனே அச்சோவச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ –1-8-8-

வருக வருக வருக விங்கே வாமன நம்பி வருக விங்கே கரிய குழல் செய்ய வாய் முகத்துக் காகுத்த நம்பி வருக விங்கே -2-9-2-

மா வலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று மூ வடி தா வென்று இரந்த விம் மண்ணினை ஓரடியிட்டு
இரண்டாம் அடி தன்னிலே தாவடியிட்டானால் இன்று முற்றும் –2-10-7-

தேவுடை மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவில் இராமனாய்
கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் –புனலரங்கமே —4-9-9-

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் யுண்டு ஒருகால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்
பேய்ச்சியை முலை யுண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில் –திருவெள்ளியங்குடி யதுவே -4-10-1-

——————

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று யறக் கூவும் –நாச்சியார் -12-9-

—————

பெரிய திருமொழி

தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான்
தூய அரி யுருவில் குறளாய்ச் சென்று மா வலியை ஏயானிரப்ப-1-5-5-

வண் கையான அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்-1-8-5-

கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே படர்ந்தானை -படு மத்த களிற்றின் கொம்பு பறித்தானைப்
பாரிடத்தை எயிறுகீற விடந்தானை -வளை மருப்பின் எனமாகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் கடந்தானை —
எம்மானைக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தலை சயனத்தே -2-5-6-

ஆங்கு மா வலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து
ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் –திருவயிந்த்ரபுரமே -3-1-5-

ஏனாகி யுலகிடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும் தானாய் பெருமானை —
ஆனாயனானானைக் கண்டது தென்னரங்கத்தே -5-6-3-

திரிசகடம் தளர்ந்து உதிர உதைத்தவனைத் தரியாது அன்று இரணியனைப் பிளந்தவனை –
பெரு நிலம் ஈரடி நீட்டிப் பண்டு ஒரு நாள் அளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-4-

துள்ளா வருமான வீழ வாளி துரந்தான் இரந்தான் மா வலி மண் -6-7-3-

விடம் தானுடைய வரவும் வெருவச் செருவில் முனை நாள் முன் தடம் தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்
கிடந்தான் வையம் கேழலகி உலகை ஈரடியால் நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-2-

மாணாகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன் பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைத்து இருந்தேன் —
கண்ணபுரத்துறை அம்மானே -8-10-8-

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரோடும் கொண்டு பின்னும் ஏழு உலகும் ஈரடியாகப்
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் –திருக் கண்ணங்குடியுள் நின்றானே -9-1-5-

உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் திருமால்
விரி நீர் உலகை வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே -10-6-4-

மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப் பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு இது கண்ணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1-

வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் உய்த்தார் ஓளி விசும்பில் ஓரடி வைத்து ஓர் அடிக்கும் எய்தாது
மண் என்று இமையோர் தொழுது இறைஞ்சி கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே –11-3-8-

———————————-

திருவாய் மொழி

குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் -3-3-8-

கொள்வன் நான் மாவலி மூவடி தா வென்ற கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே -3-8-9-

தாவி வையம் கொண்ட வெந்தாய் தாமோதரா வென்று வென்று கூவிக் கூவி நெஞ்சு உருகிக் கண் பனி சோர நின்றால்-4-7-3-

——————–

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து அதவிப் போர் யானை ஓசித்து
பதவியாய்ப் பாணியால் நீர் ஏற்றுப் பண்டு ஒரு கால் மா வலியை
மாணி யாய்க் கொண்டிலையே மண் –இரண்டாம் திருவந்தாதி -89-

செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம்
பின்னைக்காய் முற்றல் மூரி ஏற்றின் முன்னின்று மொய்ம்பொழித்தாய்
மூரிச் சுரி ஏறு சங்கினாய் சூழ்ந்து –மூன்றாம் திருவந்தாதி -49-

——————————————————

ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ நரசிம்ஹ அவதாரங்கள் -ஒரே பாசுரத்தில்-

பெரியாழ்வார் திருமொழி –

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்ததுண்டு உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறங்கொள் இரணியன் மார்பை முன் கீண்டான் –1-2-5-

கோளரியின் இன்னுருவம் கொண்ட அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூறுகிறாள்
குடை வாய் மீளவவன் மகளை மெய்ம்மை கொளக் கருதி
மேலை யமரர் பதி மிக்கு வெகுண்டு வர காள நன்மேகமவை
கல்லோடு கால் பொழியக் கருதி வரைக் குடையாக் காலிகள் காப்பவனே –1-5-2-

அன்னமும் மீனுருவும் ஆளரியும் குரலும் அமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே –1-5-11-

அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க வுருவாய் உளம் தொட்டு
இரணியன் ஒண் மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி –1-6-9-

குடங்கள் எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல வெம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல வென் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்
குடந்தைக் கிடந்த வெங்கோவே குருக்கத்திப் பூச்சூட்ட வாராய் –2-7-7-

முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூவுலகில்
மன்னரஞ்சும் மது சூதனன் வாயில் குழலினோசை செவியைப் பற்றி வாங்க -3-6-5-

கொம்பினார் பொழில் வாய்க் குயிலினம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதில் சூழ் செழும் கழனி யுடைத் திருக் கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று யேத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வனே –4-4-9-

தேவுடை மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவில் இராமனாய்
கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் –புனலரங்கமே —4-9-9-

நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய்
உம்பர் கோன் உலகேழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை யாளுடைத் தேனே ஏழையேன் இடரைக் களையாயே –5-1-9-

பெரிய திருமொழி

மான் முனிந்து ஒரு கால் வரிசிலை வளைத்த மன்னவன் பொன்னிறத் துரவோன்
உன் முனிந்தவனது உடல் இரு பிளவா உகிர் நிதி மடுத்து -1-4-8-

தங்காததோர் ஆளறியாட் அவுணன் தன்னை வீட முனிந்தவனால் –சமரில் பங்காக முனைவரோடு அன்பளவிப்
பதிற்றைந்து திரட்டிப் படை வேந்தர் பட நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே -2-4-4-

பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய்விடைகள் ஏழு அடர்த்துப்
பொன்னம் பைம் பூண் நெஞ்சு இடந்து குருதி யுக யுகிர் வேலாண்ட நின்மலன்–காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே -3-4-4-

உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும் வெஞ்சினத்த அரி
பரி கீறிய அப்பன் வந்துறை கோயில் -வண் புருடோத்தமமே-4-2-7-

திரிசகடம் தளர்ந்து உதிர உதைத்தவனைத் தரியாது அன்று இரணியனைப் பிளந்தவனை –
பெரு நிலம் ஈரடி நீட்டிப் பண்டு ஒரு நாள் அளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-4-

வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர் புக்கு அரண் தந்து அருளாய் என்னப்
பொன்னாகத்தானை நக்க அரியுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த
சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் -5-9-5-

அரியைப் பரி கீறிய அப்பனை –கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-7-

பேய்மகள் துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலைத் தோன்றல் வாள் அரக்கன் கெடத்தோன்றிய நஞ்சினை —
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-8-

மாணாகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன் பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைத்து இருந்தேன் —
கண்ணபுரத்துறை அம்மானே -8-10-8-

வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள்ளுகிரால் அளைந்திட்டவன் காண்மின் இன்று
ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் ஆப்புண்டு இருந்தவனே–10-6-3-

உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் திருமால்
விரி நீர் உலகை வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே -10-6-4-

———————–

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா
மங்கை தழும்பு இருந்த தாள் சகடம் சாடி
தழும்பு இருந்த பூம் கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல்–முதல்திருவந்தாதி -23-

கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன்
மேவி அரியுருவமாகி இரணியானதாகம் தெரி யுகிரால் கீண்டான் சினம் –மூன்றாம் திருவந்தாதி -42-

செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம்
பின்னைக்காய் முற்றல் மூரி ஏற்றின் முன்னின்று மொய்ம்பொழித்தாய்
மூரிச் சுரி ஏறு சங்கினாய் சூழ்ந்து –மூன்றாம் திருவந்தாதி -49-

——————————————————

பல / தசாவதார பாசுரங்கள் –

தேவுடை மீனாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் –பெரியாழ்வார் -4-9-9-

அம்புலாவும் மீனுமாகி ஆமையாகி ஆழியார் தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்கதன்றியும்
கொம்பராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ எம்மீசனே – திருச்சந்த விருத்தம் -35-

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்–பெரிய திருமொழி -2-7-10-

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் அண்டமும் சுடரும்
அல்லாவற்றாலுமாய வெந்தை –திரு மணிக் கூடத்தான் -4-5-6-

ஏன மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய் தானுமாய தரணித் தலைவன் இடம் –தென்னரங்கமே -5-4-8-

பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை -7-8-10-

நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய் சீர் மலிகின்றதோர் சிங்க யுருவாய்
கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான் -8-4-4-

வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் தார் மன்னு தாசரதியாய தட மார்வன்
காமன் தாதை கண்ணபுரத்து எம்பெருமான் -8-4-7-

ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம் ஓமமாகி யூழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரி சேம மதிள் சூழ்
இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன் காமன் பயந்தான் கருதுமூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே -8–6-5-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த் தானாய் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்
கற்கியுமானான் தன்னை கண்ணபுரத்து அடியான்
கலியன் ஓலி செய்த தேனாரின் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாவே -8-8-10-

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை அழகியாரை -9-2-10-

—————————–

திருவாய் மொழி –

ஆனானானாயன் மீனோடு ஏனமும் தானானான் எண்ணில் தானாய சங்கே -1-8-8-

ஓவாத் துயர்ப் பிறவி உட்பட மற்று எவ்வெவையும் மூவாத தனி முதலாய் மூ உலகும் காவலோன்
மாவாகிய யாமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

சன்மம் பல பல செய்து வெளிப்பட்டுச் சங்கோடு சக்கரம் வில்
ஒண்மையுடைய யுலகை ஒள் வாள் தண்டு கொண்டு புள்ளூர்ந்து
உலகில் வண்மையுடைய வரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மையுடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவிலனே -3-10-1-

மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தான சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்கள் நினைக்கும் நெஞ்சுடையேன் -6-4-7-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திவ்ய பிரபந்தங்களில் திருவடி பிரஸ்தாபங்கள் –பதிகம் பாசுரங்கள் தோறும் திருவடி பிரஸ்தாபம் –

July 30, 2018

பக்தாம்ருதம் –நமாம்யஹம் திராவிட வேத சாகரம் -திருவாய்மொழியைக் கடலாக –
வேதார்த்த ரத்ன நிதி -நம்மாழ்வார் என்பர் கூரத் தாழ்வான்-ஜீயாத் பராங்குச பயோதி -ஆழ்வாரைக் கடலாக –
வேதார்த்த ரத்னங்களுக்கு ஆகரம் –
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் -என்பர் மா முனிகள்

வண்டு -ராமானுஜர் ஸூ சகம் -/ விதானம் -பிரார்த்தித்து இவர் அவதாரம்

—————————-

கீதா உபநிஷத் -கோதா உபநிஷத் -அர்ஜுனன் ஒருவனுக்கு நமக்கு
வாஸூ தேவ தருச் சாயா –தாபா த்ரயம் -நீராடி போக்க
நெய்க்குடம் எறும்பு -போலே உடம்பு பிரகிருதி -அனீசன் செய்யாமல் இருக்கவும் செய்யவும் பிரயாசம்
அருவி -த்ருஷ்ட்டி அம்ருத வ்ருஷடியால் நனைக்க-
கண்ணன் இருக்க சந்திரன் நிறைந்து நித்ய வாசம் மதி நிறைந்த நன்னாள்
செங்கண்ணில் உபக்ரமம் உப சம்ஹாரம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி -கண்ணனையும் பெரியாழ்வாரையும் காட்டிக் கொடுத்தாள்
முதல் தானம் அவன் ஸ்ருஷ்ட்டி இத்யாதி -சாத்விக ராஜஸ தாமஸ தானங்கள்
தானம் சித்தி இல்லையே மஹா பாலி இடம்

நாராயணனே பரமன் உத்தமன் பத்ம நாபன்-தாமோதரன் -நாபி இடுப்பு அருகில்
பற்ப நாதம் உயர்வற உயரும் பெரும் திறலோன் -எத்தை உயர்ந்ததும் மேலே –
பத்ம நாதம் பத்ம பாதன் -பத்மத்தை நாபியில் கொண்டவன் -தாமரை போன்ற திருப் பாதம் -இரண்டு சமாசம் -அழகும் பரத்வம் பறை சாற்றும்
கொப்பூழிலில் எழு கமல பூ அழகர் -முக்காலம் -சுழி -கொப்பூழ் -கூரத் தாழ்வான் -காந்தி லஷ்மீ ஸ்தானம்
-மாயன் மன்னு வட மதுரை மைந்தன் திருமந்திரம் திரு விக்ரமன் பத சாம்யம்
மாயன் -பரதவ ஸுலப்யம் இரண்டுக்கும் -சூட்டு நன் மாலைகள் —
பேர் அரவம் –ததீய சேஷத்வம் -அரவம் -மாயன் -பேர் அரவம் மாயன் தமர் -பேர் அரவம் -அறியாத -பிள்ளாய்
பேர் அரவம் -அரவம் -/ஆற்ற அனந்தல் -அனந்தல் / நெடுமாலே -மாலே /மாயன் -மா மாயன் /பெரும் துயில் -பேர் உறக்கம் /
கீசு கீசு -பிரணயி பேச்சு-வேய் மறு தோளிணை–தொடு குழி –இத்யாதி -ஓன்று பணித்ததுண்டு -ஓராண் வழி அறிவோம்
தன்னை நைவிகின்றிலன் –கொங்குண் வண்டே கரியாக வந்தான் – நமக்கே நலம் ஆதலால் -புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே
த்வயா -உன்னுடன் எப்பொழுது கூடுவேனோ -முன் நின்ற லஷ்மணன் இடமே பரதனை விட்டு பிரிந்த விரஹ
அழகிய பாற் கடல் -பயங்காசனம் -பொழுது அனுசந்தேயாம் -நெஞ்சமே நீல் நகராக இருக்க அடம் பிடிப்பவனை
கோயில் ஆழ்வாரில் எழுந்து அருளி வைக்க -கீசு கீசு -விரஹம் சகியாமல்-மஹாத்மாக்கள் விஸ்லேஷம் சஹியாத மார்த்வம் உண்டே –
நின் முற்றம் -குலசேகரன் படி -மனத்தூண்கள் -கோவலூர் இடை கழி போலே பிரசித்தம் அன்றோ
நாற்றத் துழாய் முடி நாராயணன் போற்றப் பறை தரும் புண்ணியன்-உபாயமும் -முகில் வண்ணன் பேர் பாடுவதே புருஷார்த்தம் -புண்ணியம் யாம் யுடையோம்
நாராயண -பர ப்ரஹ்மம் – பரம தத்வம் -பரஞ்சோதி -பரமாத்மா -பரம பாராயணம் –

த்வந்த சமாசம் -இரண்டுக்கும் முக்கியம் -/ ராம கிருஷ்ணவ் ஆகதவ்
அவ்யயயம் -விபக்தி வசனம் லிங்கம் இல்லாமல் –பர ப்ரஹ்மம் -முன் பாத பிராதாந்யம் -உப கங்கம் -கங்கை அருகில் உள்ள இடம் –
நாரங்களுக்கு அயனம் -இருப்பிடம் முக்கியத்துவம் தத் புருஷ சமாசம்
ராஜ சேவகன் -கூப்பிட வந்துள்ளான் சேவகன் முக்கியம் -இதுவும் தத் புருஷ சமாசம் -உத்தர பதார்த்த போதகம் -செயல் இங்கே அன்வயம்
பஹு வ்ரீஹி சமாசம் -நாரங்களை இருப்பிடமாக கொண்டவர் -இரண்டு சொல்லுக்கும் பிரதானம் இல்லை –
நாரங்களுக்கும் அயனத்வத்துக்கும் முக்கியம் இல்லை -திருமால் -நித்ய வஸ்துக்களை இருப்பிடமாக கொண்ட
பீதாம்பரம் -பீதம் அம்பரம் யஸ்ய யாருக்கோ -இரண்டுக்கும் முக்கியம் இல்லை -அந்நிய பதார்த்தம் பிரதானம் -தரிக்கும் அவனுக்கு
ரூடி -பிரசித்தம் –யவ்கிகம் -யோகம் -சேர்க்கையால் வந்த பொருள் –
போதரிக்கண்ணினாய் -பாகவத கடாக்ஷம் -கண் -ஞானம்-பங்கயக் கண்ணினாய் -பகவத் கடாக்ஷம் -நா உடையாய் -வாக் வன்மை –

——————————-

விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் –
ஸ்ரீ கீதை -அருளிச் செய்யும் பொழுது -ஸ்ரீ கருடன் குதிரை கருட அம்சம் -ரூபேண -கேட்டு அனுஷ்ட்டித்தாரே —
திருவடி கொடி ரூபேண -இருந்ததால் -சபரி மோக்ஷ சாஷிபூதரே பெருமாள் -ஜடாயுவை கச்ச லோக –
இதனால் -10-ஆழ்வார்கள் நேராக பகவானையும் -2-ஆழ்வார்கள் ஆச்சார்யர் மூலம் பகவானையும் பற்ற -/
நம்மாழ்வார் ஆச்சார்யர் கோஷ்டி /
ராமானுஜ நூற்றந்தாந்தி -நாலாயிரம் சேர்த்தால் போலே-ஆச்சார்யரான ராமானுஜரும் ஆழ்வார் கோஷ்டியில் கொள்ள வேண்டும் –

—————–

திவ்ய பிரபந்தங்களில் திருவடி பிரஸ்தாபங்கள்

பொய்கையாழ்வார் –செய்ய சுடர் ஆழியான் அடிக்கே என்று உபக்ரமித்து
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் ஏன் நெஞ்சே -ஓர் அடியில் தாயவனை கேசவனை -என்று திருவடிமயமாகவே தலைக்கட்டினார் –
பூதத்தாழ்வார் -அறை கழல் சேவடியான் செங்கண் நெடியான் என்று தலைக்கட்டினார்
பேயாழ்வார் இன்றே கழல் கண்டேன் என்று உபக்ரமித்து சக்கரத்தால் தாள் முதலே நங்கட்குச் சார்வு -என்று தலைக்கட்டினார்
திருமழிசை ஆழ்வார் -உன்ன பாதமென்ன நின்ற ஒண் சுடர்கே கொழு மலர் -என்று திருச்சந்த விருத்தம் தலைக்கட்டி அருளுகிறார்
திருவிருத்தத்திலும் தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய என்று உபக்ரமித்து அடிக்கண்ணி சூடிய மாறன் என்று தலைக்கட்டுகிறார்
பெரிய திருவந்தாதியிலும் – மொய் கழலே ஏத்த முயல் என்று தலைக்கட்டுகிறார்-
திருவாய்மொழியிலும்-துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே
திருவாசிரியத்திலும் மூ வுலகு அளந்த சேவடியோயே என்றும்
பெருமாள் திருமொழியிலும் திரைக்கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும் என்று உபக்ரமித்து
நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே -என்று தலைக்கட்டுகிறார் –
பெரியாழ்வாரும் உன் சேவடி செவ்வித் திருக்காப்பு என்று உபக்ரமித்து
திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்-என்று தலைக்கட்டுகிறார்
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திரு நாமமே அடி பட்டுக் கிடக்கிறது
திருப்பாண் ஆழ்வார் -திருக் கமலபாதம் வந்து என் கண்ணினுள் ஒக்கின்றவே -என்று அருளிச் செய்கிறார்
திருமங்கை ஆழ்வார் வயலாலி மணவாளன் திருவடியில் வாயை வைத்தே பிரபந்தம் தொடங்குகிறார்
தலைக்கட்டும் பொழுதும் நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –என்று அருளிச் செய்கிறார்
மதுரகவிகளும் முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே
திருப்பாவையில் உன் பொற்றாமரை படியே கேளாய் என்றும்
நாச்சியார் திருமொழியிலும் பெரும் தாளுடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே
அமுதானாரும் மாறன் அடி பணிந்து உயந்த –ராமானுஜன் அடிப் பூ மன்னவே

——————————————————-

ஒரு நாயகமாய் -4-1-திருவாய் மொழியில் –

திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ -1-என்றும் –
செம்மின் முடித்திருமாளை விரைந்து அடி சேர்மினோ -2-என்றும்
கடிசேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ -3-என்றும்
பனைத்தாள் மத களிறு அட்டவணை பாதம் பணிமினோ -4-என்றும்
கடல் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினா-6-என்றும்
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ -9-என்றும்
அஃதே உய்யப்புகுமாறு என்று கண்ணன் கழல்கள் மேல் -11-என்றும் உண்டே

உய்யப் புகுமாறு அஃதே என்று –
‘திருநாரணன்தாள்’ என்று நான் சொன்ன அதுவே உய்வதற்கு உரிய வழியும் பலமும் என்று.
உபாயாந்தரம் வேறே இல்லை -பிரயோஜ நாந்தரம் இல்லை -அதுவே உய்வு -அதுவே ஆறு -அதுவே உய்யப் புகும் ஆறு –
கண்ணன் கழல்கள் மேல் –
‘கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி, கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே?
அது தன்னையே அருளிச்செய்கிறார். ‘இப்படி அடியுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ்வடிகளைத் தாம் பற்றியது?
‘துயர் அறு சுடர்அடி தொழுது எழு’ என்று தம் திருவுள்ளத்திற்கு அருளிச்செய்தார்;
‘வண் புகழ் நாரணன் திண்கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார் அங்கு.
இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்;
‘கண்ணன் கழல்கள் நினைமினோ,’ என்று பரோபதேசம் செய்தார்.
இது என்ன அடிப்பாடுதான்! ‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’
என்றே அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?
திருவடியில் என்ன ப்ராவண்யம் –

————————-

பாலகனாய் -4-2-திருவாய் மொழியில்

ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார் தாளிணை மேல் அணி தண்ணம் துழாய் என்றே மாலுமால் –1-என்றும்
குறைவை பிணைந்தவர் நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே சொல்லுமால் -2-என்றும்
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால் -3-என்றும்
சமயிகள் பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் பரண் பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதுமால் -4-
குடக்கூத்தனார் தாளிணை மேல் அணி தண்ணம் துழாய் என்றே நாளு நாள் நைகின்றதால் -5-என்றும்
ஆதியம் காலத்து ஆட்களிடம் கீண்டவர் பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதுமால் -6-என்றும்
மடந்தையை வண் கமலத்திரு மாதினை தடம் கொள் மார்பினில் வைத்தவர் தாளிணை மேல்
வடம் கொள் பூம் தண்ணம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால் -7-என்றும்
கொம்பு போல் சீதை பொருட்டு இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் தாளிணை மேல் அணி
வம்பவிழ் தண்ணம் துழாய் மலர்க்கே இவள் நம்புமால் -8-என்றும்
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென்முலைக்கு என்று மெலியும் -10-என்றும்
மெலிவு நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல் மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் -11-என்றும் -உண்டே –

——————————————————-

உலகமுண்டா பெருவாயா-6-10–பதினோரு பாசுரங்களில் திருவடி பிரஸ்தாபம்

திருவேங்கடத்து எம்பெருமானே குல தொல்லடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே -1-என்றும்
திருவேங்கடத்தானே ஆறாவன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே -2-என்றும்
திருவேங்கடத்தானே அண்ணலே யுண்ணாடி சேர அடியேற்கு ஆவா வென்னாயே -3-என்றும்
திருவேங்கடத்தானே பூவார் கழல்கள் அருவினையென் பொருந்துமாறு புணராயே -4-என்றும்
திருவேங்கடத்தானே திணரார் சாரங்கத்துன பாதம் சேர்வது அடியேன் என்னாளே-5-என்றும்
திருவேங்கடத்தானே மெய் நான் எய்தி எந்நாள் உன்னடிக்கண் அடியேன் மேவுவதே -6-என்றும்
திருவேங்கடத்து எம்பெருமானே நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலாது ஆற்றேனே-7-என்றும்
திருவேங்கடத்தானே மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே -8-என்றும்
திருவேங்கடத்தானே அந்தோ வடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே -9-என்றும்
திருவேங்கடத்தானே புகல் ஒன்றில்லா வடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -10-என்றும்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியார் வாழ்மின் என்று அருள் கொடுக்கும் படிக்கேழில்லாப் பெருமானை -11-என்றும் உண்டே

————————————–

பெரிய திருமொழி -3-4- பதிகம் பாசுரங்கள் தோறும் திருவடி பிரஸ்தாபம் –

மா வலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் –3-4-1-
நக்கநூன்முகமார் தலையோட்டூண் ஒழித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் -3-4-2-
வாணன் திண் தோள் நேர்ந்தவன் தாள் அணைகிற்பீர் -3-4-3-
குருதியுக உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் -3-4-4-
மா கீண்டு வெள்ளம் அட்டா விண்ணவர் கொண் தாள் அணைகிற்பீர் -3-4-5-
விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைகிற்பீர் -3-4-6-
வலம்புரி சிலைக்கை கமலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் -3-4-7-
மட்டவிழ் அம் குலைக்கா வானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் -3-4-8-
திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் -3-4-9-
பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே -3-4-10-

——————————————————-

பெரிய திருமொழி -6-9-பாசுரங்கள் தோறும் திருவடி பிரஸ்தாபம் –

இடர் கெடுத்த திருவாளர் இணையடியே யடை நெஞ்சே–
அழலாரும் சரம் துரந்தான் அடியிணையே யடை நெஞ்சே —
அளை வெண்ணெய் யுண்டான் தன அடியிணையே யடை நெஞ்சே –
குன்றாரும் திறல் தோளன் யடை நெஞ்சே —
உலகு ஏழும் புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே யடை நெஞ்சே-
மெல்லியலை திரு மார்பில் மன்னித்தான் வைத்து உகந்தான் மலரடியே யடை நெஞ்சே —
தார் தழைத்த துழாய் முடியின் தளிர் அடியே யடை நெஞ்சே –
மணி மாடம் மிக மன்னி நிலையாற நின்றான் தன் நீள் கழலே யடை நெஞ்சே –
பிறையாரும் சடையானும் பிரமனும் தொழுது ஏத்த இறையாகி நின்றான் தன் இணை படியே யடை நெஞ்சே –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு அரங்கனே திருவேங்கடத்தான் -அருளிச் செயல்களில் ஸ்ரீ ஸூக்திகள் –

July 30, 2018

திரு வேங்கட மா மலை …அரவின் அணையான் -3
பைத்த பாம்பணையான் திருவேம்கடம் -திருவாய் மொழி -3-3-10-
அரவின் அணையான் தான் திரு வேம்கடத்தான் என்று ஆழ்வார்கள் அனுபவித்த படி –

உலகம் அளந்த பொன்னடியே அடைந்து –திரு வரங்கத்து அம்மானே -5-8-9-
வேங்கட மா மலை நின்றான் அரங்கத்து அரவின் அணையான் -அமலனாதி பிரான் -3
உலகம் அளந்து –அரங்கத்தம்மான் -என்கிறார் –
அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திருவேங்கடம் –திருவேங்கடமுடையான் திருவடிகளை அடைய பாரிக்கும் ஸூரிகளும்
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு-என்று பிரார்த்திக்க –
தாள் பரப்பி மண் தாவிய ஈசன் -பூமியை அடைய தன் திருவடிகளால் ஆக்கிரமித்து
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -என்று தனது திருக்கையாலே
உலகம் அளந்த பொன்னடியைக் காட்டி -தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடம் –
அவன் தானும் இங்கே கண் வளர்ந்து அருளும் பெரிய பெருமாள் -நீள் மதிள் அரங்கம்
என்று திருப் பாண் ஆழ்வார் அருளிச் செய்ததை கேட்டு திரு மங்கை ஆழ்வார் திரு மதிள் செய்து அருளியது –
திருப் பாண் ஆழ்வார் பாசுரம் ஒட்டியே துளங்கு பாசுரத்தில் திரு வேங்கடமுடையான் சரித்ரத்தை கூறி
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே -என்று
திருவரங்கன் திருவடிகளை சரணாக பற்றுகிறார் -இருவரும் கார்த்திகை மாதத்தில் அவதரித்த சேர்த்தியும் உண்டு இ றே –
திரு நஷத்ரங்களும் அடுத்து அடுத்து நஷத்ரங்கள் இ றே-

கட்டு எழில் சோலை நல் வேங்கட வாணனை -கட்டு எழில் தென் குருகூர் சடகோபன் சொல்
கட்டு எழில் ஆயிரம் -என்றும் -முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம் -என்றும் -இ றே நம் ஆழ்வாரும் அருளிச் செய்கிறார் –
திரு வேங்கடத்து என்னானை –உளனாகவே என்னாவில் இன் கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் -என்றார் ஆழ்வார் –
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் -என்றார் ஸ்ரீ பராசர பட்டர் –
திருவேங்கடவன் வடவானை -திருவரங்கன் குடபாலானை -இருவரும் ஒருவரே –

பள்ளியாவது பாற்கடல் அரங்கம் –நாடொறும் தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே -1-8-2-

திருவோணத் திரு விழாவில் காந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை–தர்மி ஐக்கியம்

திருவோணத் திரு விழவில் படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –தர்மி ஐக்கியம்

திருவுடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் -2-7-2-/நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கத்து எந்தாய் -2-7-3-

குலமுடைக் கோவிந்தா கோவிந்தா -இவனே திருவேங்கடத்தான் -என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் -இவனே ஜகந்நாதன் -பெரிய பெருமாளானார்-நம்மன்னை நரகம் புகாள்-4-6-5-

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உரை மார்பன் அன்றோ திருவேங்கடமுடையான் –
திருவாளர் திருப்பதியே திருவரங்கம் – 4-8-10-

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா -5–4–1-/
கொண்டல் வண்ணன் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி யரங்கன் ஏன் அமுது அன்றோ – அமலனாதி -10-

நல் வேங்கடத்துள் நின்ற அழகப்பிரானார் -11-8-/ நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர்-11-10-/

விரையார் பொழில் வேங்கடவன் -நிமலன் நின்மலன் -நீதி வானவன் -நீள் மதிள் அரங்கத்தம்மான் -அமலனாதி -1-

மந்தி பாய் வட வேங்கட மா மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்-அமலனாதி –3-

பள்ளியாவது பாற்கடல் அரங்கம் –நாடொறும் தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே –பெரிய திருமொழி -1-8-2 —

வெருவதாள் வாய் வேறுவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால் –என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே -5-5-1-/
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும்-9-/
சேலுகளும் வயல்புடை சூழ் திருவரங்கத்தம்மானைச் சிந்தை செய்த -10-/

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை பிரியாது வந்து எனது மனத்து இருந்த வடமலையை
வருவண்டார் கொந்தணைந்த பொழில் கோவில் உலகளப்பான் நிமிர்த்த அந்தணனை
யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-7-

துளங்கு நீண்முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழுடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்தவாறு அடியேன் அறிந்து
உலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-9-

வம்பார் புனல் காவிரி அரங்கமாளி என்னாளி விண்ணாளி–தாமரைக் கண்ணனுக்கு அன்றி
என் மனம் தாழ்ந்து நில்லாதே -7-3-4- /
உம்பர்க்கு அணியாய் நின்ற வேங்கடத்து அரியை –தீம் கரும்பினை தேனை
நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே -5-

புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகரில் முனிவனை–
கனை கழல் காணும் கொலோ கயல் கண் எம் காரிகையே -9-9-2-/
பொழில் வேங்கட வேதியனை நணுகும் கொல் என் நன்னுதலே -9-9-9-

—————————–

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற மெய்ம்மையை விரிந்த சோலை
வியன் திருவரங்கம் மேய செம்மையைக் கருமை தன்னைத்
திருமலை ஒருவனையானை தன்மையை நினைவார் என் தன் தலை மிசை மன்னுவாரே–திருக் குறும் தாண்டகம் -7-

உலகம் ஏத்தும் தென்னானாய் வடவானாய் குடபாலனாய் குண பாலமதயானாய்–திரு நெடும் தாண்டகம் -9-

உலகமுண்டா பெருவாயா–திருவேங்கடத்தானே –உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து
என் பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கமூர் என்று போயினாரே-24-

—————————————————-

என் அமுதம் கார்முகில் போலும் வேங்கட நல் வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரன் -திருவாய்மொழி -2-7-11-

—————————————————-

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும் நினைப்பரிய நீள் அரங்கத்துள்ளான் -இரண்டாம் திருவந்தாதி -28-

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள் பயின்றதுவும் வேங்கடமே -46

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம் மாநகரம் மா மாட வேளுக்கை
மண்ணகத்த தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி தென் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு –மூன்றாம் திருவந்தாதி -62-

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

நீராட்டம்–அருளிச் செயல்களில் -பிரயோகங்கள்

July 29, 2018

திருப்பாவையில் – நீராட்டம்–6-பிரயோகங்கள்

மார்கழி —நீராடப் போதுவீர் போதுமினோ
ஓங்கி –நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
ஆழி –நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
புள்ளின் வாய் –குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
முப்பத்து மூவர் –இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்
மாலே –மார்கழி நீராடுவான்-

நாச்சியார் திரு மொழி –

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம் –3–1 –

பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்து ஆடும் சுனையில் அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய் —3-4-

அஞ்ச யுரப்பாள் யசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -3-9-

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் –6–10-

செங்கண் மால் தன்னுடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம் புரியே – -7–6-

——————–
பெரியாழ்வார்

அஞ்சன வண்ணனோடு ஆடலாட யுறுதியேல்-மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா – 1–4–2-

ஆடுக செங்கீரை ஆடுக ஆடுகவே -1–5 –

நீராட்டு பதிகம் -2-

பேடை மயில் சாயல் பிணை மணாளா நீராட்டமைத்து வைத்தேன் —3-3-3-

அரும் தவ முனிவர் அவபிரதம் அங்கு குடைந்தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடிநகரே –4-7-6-

பொங்கு ஒலி கங்கைக் கறை மலி கண்டத்து உரை புருடோத்தமன் அடி மேல்
வெம் கலி நலியா வில்லி புத்தூர்க் கோன் விட்டு சித்தன் விருப்புற்று தங்கி அவன் பால் செய் தமிழ் மாலை
தங்கிய நாவுடையார்க்கு கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே –4-7-11-

—————————–

பெருமாள் திருமொழி

ஆடிப்பாடி அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் அடிப்பொடி யாட நாம் பெறில் கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே -2-2-

கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கரு மணியே -8-3-

————————————————–

பெரிய திரு மொழி –

ஆயர் மட மக்களை பங்கய நீர் குடைந்தாடுகின்றார்கள் பின்னே சென்று ஒளித்திருந்து அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு -10-7–11-

——————————

திரு நெடும் தாண்டகம்

அணியரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் என் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன் -12-

அணியரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் பெற்றேன் வாய்ச சொல் இறையும் பேசக் கேளாள் -19-

———————————————————-

திருவாய்மொழி

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன் நேர்தல்யாயிரத்து ஓர்தல் இவையே -1-8-11-

வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே-2-6-4 –

தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே ஒருநாள் காண வாராயே -8-5-1-

அவன் கையதே எனதாருயிர் அன்றில் பேடைகாள் எவம் சொல்லி நீர் குடைந்தாடுதிர் புடை சூழவே -9-5-3-

பெயர்கள் ஆயிரமுடைய வல்லரக்கர் புக்கழுந்த தயரதன் பெற்ற மரகத மணித்தடத்தினையே -10-1-8-

—————————————————

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா –மூன்றாம் திருவந்தாதி -76-

மால் தான் புகுந்த மடநெஞ்சம் மற்றதுவும் பேறாகக் கொள்வேனோ பேதைகாள்
நீராடி தான் காண மாட்டாத தாரகல சேவடியை யான் காண வல்லேற்கிது –நான்முகன் -27-

சூட்டு நன்மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீர் ஆட்டி அந்தூபம் தாரா நிற்கவே –திருவிருத்தம் –21 —

அழைத்துப் புலம்பி முலை மேல் நின்றும் ஆறுகளாய் மழைகே கண்ணநீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே -52-

ஓ ஓ உலகின் இயல்வே ஈன்றோள் இருக்க மணை நீராட்டி –திருவாசிரியம் -6-

———————————————-

பெருமாள் வீர கல்யாண குணத்தில் ஆழ்ந்தார் திருவடி –பாவோ நான்யத்ர கச்சதி வீர –
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்மின் -நம்மாழ்வார் -ஸுலப்ய ஸுசீல்ய குணங்களில் ஆழ்ந்தார் நம்மாழ்வார் –
குணவான் –என்றாலே சீல குணத்தை சொல்லுமே –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ ஸ்தவம் –ஸ்ரீ உ வே மையூர் கந்தாடை ஸ்ரீ நிவாஸாசார்ய ஸ்வாமிகள் –

July 28, 2018

ஸ்ரீ வந்தே தம் கடிகாசலம் சலதியாம் சைதன்ய சிந்தாமணிம்
சத்வ உன்மேஷ விநஷ்ட காம கலுஷன்யூநாதி கத்வைர்முதா
நம்ரைர் பக்த யுபஹாரகை ஸூர நரைரா பத்த ஸு ஜன்யகை
முக்த்யை ய கமலா ந்ருஸிம்ஹ ஸததா வாச சமா ஸேவ்யதே-1-

சத்வகுணம் தலை எடுக்கையாலே -காமம் கோபம் ஏற்றது தாழ்வுகள் ஆகியவை நீங்கப் பெற்றவர்களும்
ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமை நிலவாய் பெற்றவர்களும்
உகப்பாலே வணங்கி இருப்பவர்களும்
பக்தியைக் காணிக்கையாக உடையவர்களுமான தேவர்களாலும் மநுஷ்யர்களாலும் முக்தியின் பொருட்டு யாதொரு
திருக்கடிகை திரு மலை ஆஸ்ரயிக்கப்படுகிறதோ-
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹனுக்கு நித்ய வாச ஸ்தானமாய் இருப்பதும்
சஞ்சலமான மனத்தை யுடையாரின் அறிவுக்கு விரும்பியது எல்லாம் கொடுக்கும் சிந்தாமணியாய் இருப்பதுமான
அத் திருக் கடிகை திருமலையை அடியேன் வணங்குகிறேன் –

————————————————-

தி நோதி கண்டீரவ தேவ தம்ஷ்ட்ரா
த்யுதி பிரசாரை கடிகாசலோ ந
ததத் வி ஸூத்த ஸ்படிகாத்ரி சோபாம்
திவவ்கசாம் திவ்ய திருச்சாம் ச திஷ்ண்யம்-2-

பரிசுத்தமான பளிங்கு மலையின் ஒளியையுடையதாய்
தேவர்களுக்கும் ஆழ்வார்களும் இருப்பிடமானதான திருக் கடிகை மலை
சிங்கப்பிரான் பற்களின் ஒளிப் பெருக்கால் நம்மை உகப்பிக்கிறது –

———————————————-

கடிகாசல துங்க ஸ்ருங்க தீபம்
த்ரிஜகத் க்ருத்ஸன தமோ நிராச தக்ஷம்
ப்ரலயோத் கதவாத துஷ் பிரதர்ஷம்
சரணம் யாமி சரண்ய மிந்திரேசம் -3-

ஊழிக் காற்றாலும் அணையாததும் –
மூ உலக இருளையும் போக்க வல்லதும்
திருக் கடிகை உயர் குன்றத்து உச்சியிட்ட விளக்காய் இருப்பதும்
அகல உலகத்துக்கும் புகலாய் இருப்பதுமான ஸ்ரீ யபதியை சரணம் அடைகிறேன் –

—————————————–

வியத்து நீ ஹேம ம்ருணாளி நீபி
சமர்ச்சி தாங்க்ரிம் ஸூ ரா ராஜ முக்யை
ஸூ பம்யு யோகாசன ஸூ ந்தராங்கம்
ஹரிம் பிரபத்யே கடிகாத்ரி நாதம் -4-

ப்ரஹ்மாதிகள் ஆகாச கங்கையில் பூத்த பொற்றாமரை மலர்களைக் கொண்டு பூஜிக்கப்பெற்ற திருவடிகளை யுடையவனும்
மங்களகரமான யோகாசனத்தால் அழகிய திருமேனியை யுடையவனுமான திருக் கடிகை மலைப் பெருமானை சரணம் அடைகிறேன் –

————————————–

தேவோ ந ஸூப மாத நோது பகவான் கண்ட கண்டீரவா
யோ வைகுண்ட மகுண்ட வைபவமஸவ் ஹித்வா ப்ரபந்நார்த்தித
தாம ஸ்ரீ கடிகாசலம் ஸூமந சாமா நந்த
தூதாகம் ஸமபத் யதா அம்ருத லதா திவ்யா ச நாத ஸ்ரீ யா -5-

சரணாகதர்களால் யாசிக்கப் பெற்று –
ஸ்ரீ அம்ருத வல்லித் தாயார் சமேதராய் –
தடையற்ற பரமபதத்தை விட்டு நல்லோர்களுக்கு பேரின்பத்தை விளைப்பதும்
தோஷம் அற்றதுமான திருக்கடிகைக் குன்றத்தை வந்து நித்ய வாசம் செய்து அருளும்
ஸ்ரீ நரஸிம்ஹன் நமக்கு நன்மையை அளிப்பானாகா –

———————————————–

கயாது ஸூதசார சத்யுமணி ரார்த்த ஸத்பாந்தவ
சடாபடல பீஷனோ தநுஜவம் சதாவாநல
திவாகர நிசாகரா நல விலோசநோ விஸ்ருத
வி நம்ர விபுந த்ருமோ விஜயதே நர கேஸரீ-6-

ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் ஆகிற தாமரைக்கு சூரியனும்
வருந்தினவர்களுக்கு நல்ல உறவினனனும்
பிடரி மயிராலே பயங்கரனானவனும்
அசுரவம்சமாகிற மூங்கிலுக்கு காட்டுத்தீ போன்றவனும்
சூரியன் சந்திரன் அக்னி மூன்று தேஜஸ் ஸூக் களையும் திருக் கண்களாக யுடையவனும்
புகழ் பெற்றவனும்
வணங்குவார்களுக்கு கற்பகமுமான ஸ்ரீ நரசிம்மன் வெற்றி வீரனாக விளங்குகிறான் –

———————————————-

திர்யங் மானுஷதாம் உபேத்ய சபதி ப்ராதுர்பவன் ஸ்தாவரத்
அத்யந்த அகடித க்ரியாஸூ கடநா ஸாமர்த்யம் உத்யோதயன்
துர்ஜ்ஜேய அத்புத சக்திமத்வம் அகிலைர் வேதை சமுத்கோஷிதம்
ஸூ வ் யக்தம் ப்ரகடீகரோதி பகவான் ப்ரஹ்லாதம் ஆஹ்லாதயன் -7-

ஸ்தாவரமான திருத் தூணில் இருந்து விரைவிலே நரம் கலந்த சிங்க உருவை யடைந்து தோன்றி
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானை உகப்பித்துக் கொண்டு
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ -இத்யாதியாலே எல்லா வேதங்களாலும் உத்கோஷிக்கப்பட்ட
அறிவரிய அத்புத சக்தியை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி அருளுகிறார் பகவான் –

————————————————-

தேவ ப்ரார்த்தநயா ஹிரண்யகசிபும் ஸம்ஹ்ருதய தேவாந்தகம்
ஸ்வஸ்தா நேஷூ திவவ் கஸாம் நியம நாத் தேவாதிபம் ப்ரீனயன்
அவ்யர்த்தான் கலயன் வராநபி ததா விஸ்ராணிதான் வேதஸா
ஸம்ஹ்ருஷ்டா க்ருதக்ருத்யகோ கிரிவரே விஸ்ராம்யதி ஸ்ரீ பதி-8-

தேவர்கள் பிரார்த்தனையால் ஹிரண்யகசிபுவை அழித்து
தேவர்களுக்கு குடியிருப்பை அளித்ததன் மூலம் தேவேந்திரனை உகப்பித்து
பிரமனால் அளிக்கப்பட வரங்களையும் பழுது ஆகாமல் நோக்கி
தன கார்யம் முடிந்ததால் உகந்தவனாய்
திருக் கடிகை மலையிலே ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹன் களைப்பு ஆற்றுகிறான்-

————————————————

அநந்ய சாத்யை ரபிதைஸ் தபோபி ஆராத்யா வாணீ ரமணம் சிரேண
வராந மோகான் சமவாப்ய தைத்யோ வித்ராவ யாமாச யதா திகீசான் -9-

செயற்கு அரிய தவங்களால் நெடும் காலம் பிரமானைப் பூஜித்து வீணாக்காதே வரங்களைப் பெற்று
ஹிரண்யன் என்னும் அரசன் எப்போது திக்பாலர்களை விக்டரி அடித்தானோ –

ஆஸ்தே ச ஸர்வத்ர சராசரேஷூ ஸ்தூலேஷு ஸூஷ் மேஷ் வபி சர்வ சம்ஸ்த
ப்ருவந்தமேவம் தனுஜஸ்த நூஜம் நிர்பர்த்சயாமாச யதாச்யுதோத்கம்-10-

அசைவனவற்றிலும்-அசையாத வற்றிலும் -பெரியவற்றிலும் சிறியவற்றிலும் எல்லா இடத்திலும்
எங்கும் உளன் கண்ணன் என்று உரைத்தவனும்
அச்சுதனிடம் ஆராத காதல் கொண்டவனுமான மகனை எப்போது ஹிரண்யன் பயமுறுத்தினானோ –

குர்வன்நாபி குசேசயோத்பவ கிரோ அமோகா ககேச த்வஜ
சத்யம் கர்த்துமநா ஸ்வ பக்த பணிதம் வ்யாப்திம் ச சர்வேஷ்வபி
க்ரோதோத்யன் நயனா ஸூ ஸூ க்ஷணிகணை தைத்யாதிபம் நிர்தஹன்
ஸ்தம்பாதாவிரபூத்த தைவ பகவான் கண்ட பஞ்சாநத-11-

அப்போதே கருடக் கொடி யுடையவனான பகவான் ஸிம்ஹ உருக்கொண்டு
பிரமன் வரங்களை வீணாக்காமல் நோக்கிக் கொண்டு
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் வார்த்தையையும் -வியாப்தி குணத்தையும் உண்மையாக்க விரும்பி
கோபத்தால் எரி விழிக்கும் திருக் கண்களில் இருந்து பறக்கும் நெருப்புப் பொறிகளாலே
ஹிரண்யனைப் பொசுக்கிக் கொண்டு திருத் தூணில் இருந்து தோன்றி அருளினான் –

—————————————————

தனுஜா அத காந்தி ஸீகதாம் அகமன் நஸ்த ப்ருஷத்க கார்முகா
உதிதே தநுஜேந்த்ர தாரனே நரசிம்ஹே நவநிஸ் துலா க்ருதவ் -12

ஹிரண்யனைப் பிளக்கும் புதிய ஒப்பற்ற உருவையுடைய ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாள் தோன்றியவுடன்
அசுரர் அனைவரும் வில்லையும் அம்பையும் எரிந்து விட்டு திசைகள் தோறும் ஓடினர் –

———————————–

மித்வா நைஜ கரேண நிர்மிதசரம் ஸ்தம்பம் யதா சோஸ்ப்ருசத்
சாவஞ்ஞாம் கதையா ததய்வ பகவான் பூத்வா நர கேஸரீ
சக்ரோதம் ததுரோ விதார்ய க்ருபயா ப்ரஹ்லாத மன்வக்ரஹீத்
சாது த்ராண ந்ருசம்ச நிக்ரஹ பலோ ஹ்ய ஆவிர்பவ ஸ்ரீ பதே -13-

அளந்திட்ட தூணை அவன் தட்ட -அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றி கோபத்துடன்
அவன் மார்பை பிளந்து கருணையுடன் ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானை அனுக்ரஹித்து அருளினான் –
பரித்ராணாயா சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் -துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் அவதார காரணம் –

————————————————

ஆவிர்பாவம் இதே நரஸிம்ஹ வபுஷா தேவேதி நாந்தே ஸூ பே
ஸ்ரோணாயாம் ஹரித ப்ரசேது அநிலோ வாதிஸ்ம கந்தம் வஹன்
நேதுர் துந்துபயோ திவி க்ரதுபு ஜோ வர்ஷன் ப்ரஸூநான்யத
சர்வம் மங்கள ஸம்ஸி ஸுரி ஜனனம் க்ஷேமாய ஹி ஷ்மாதலே -14-

திருவோணத் திரு விழவில் அந்தியம்போதில் அரியுருவாகிப் பெருமாள் திருவவதரித்த வுடன்
திக்குகள் பொலிந்து -மந்தமாருதம் மனம் கொண்டு வீச -சுவர்க்கத்தில் துந்துபிகள் முழங்க –
தேவர்கள் பூமியின் மேல் பூ மழை பொழிய–எல்லா அறிகுறிகளும் மங்களத்தை உணர்த்த –

—————————————————

பித்வா ஸ்தம்பம் அரிந்தமே நரஹரா வாக்ரோசதி க்ரோதநே
பஸ்பந்தே ந சதாகாதி சசிரவீ சாஸ்தம்கதவ் ஸாத்வசாத்
ப்ருத்வீ பிரத்னகுலாசலை சமசலத் பாதோதி ருத்வேலித
பாதாளத்ரித சாலயவ் கதலயவ் ஆசா தசை ஷ்வேளிதா –15-

தூணை பிளந்து வந்து கர்ஜித்த பின்பு காற்று அசையவில்லை –
சூர்ய சந்திரர்கள் பயந்து அஸ்தமிக்க –
குலமலைகளோடே பூமி அசைய -கடல் கரையைக் கடக்க -பாதாளமும் சுவர்க்கமும் அழிய –
பத்து திக்குகளும் ஆர்த்த கோஷமே மிக்கு இருந்தது –

———————————————-

பாவோ மே ராகு புங்கவம் ஜனக ஜாஜாநிம் விநான்யத்ர நோ
கச்ச த்யேவமுவாச தத்கதமநா வாதாத்மஜோ ய புரா
தம் பத்தாஞ்சலி மந்தி கஸ்தம நகம் ப்ரேமணா நுக்ருஹ்ணந் க்ருபா
பாதோதிர் கடிகாதராதரபதி கோபாயது பிராணிந –16-

பாவோ நான்யத்ர கச்சதி என்று யாவனொரு வாய் புத்ரன் முன்பு உரைத்தானோ
கை கூப்பியவனாய் அருகே சின்ன திருமலையில் இருப்பவனாய் –
அவ்வனுமனை அன்புடன் அனுக்ரஹித்துக் கொண்டு இருக்கும் கருணைக்கடல்
திருக் கடிகை மலைப்பெருமாள் உயிர்களை உய்விப்பானாகா —

——————————————-

சாகேத பூஜ நிஜூ ஷாம் பவதா விதீர்ணாம்
முக்திம் விதன்னபி தவா நக திவ்ய சேவாம்
வாஞ்சன் நி ஹைவ ஹனுமான் பவத புரஸ்தாத்
பத்தாஞ்சலிர் பஜதி போ ந்ருஹரே த்ரிதாமன் -17-

பரமபதாதி நிலயனான நரஸிம்ஹனே அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அருளிய வற்றை
அறிந்து இருந்தும் உனது திவ்ய சேவையையே விரும்பி உன் திரு முன்பே அனுமன் கை கூப்பி நிற்கிறான் –

—————————————–

ஹித்வா தாம் அஸி தேஷணம் ந ச புனர் ஜீவேய மித்யாஹ ய
சோயம் மர்த்ய ம்ருகாதி போ அம்ருத லதா தேவ்யா ச நாத ஸ்ரீ யா
நிம்நே பூதாமஸ் தகே நிருபமே ஸ்வாத்மா நமன்தஸ் சதா
த்யாயந்தம் பவநாத் மஜம் கருணயா பஸ்யன் சகாஸ்தி ஸ்வயம் –18-

ந ஜீவேயம் க்ஷணம் அபி வினாதாம் அஸி தேஷனாம்-என்று அருளிச் செய்த பெருமாளே
ஸ்ரீ நரஸிம்ஹ பிரானாகி ஸ்ரீ அம்ருத வல்லித் தாயாராகிய ஸ்ரீ தேவியோடு கூடி –
ஒப்பற்ற திருக்கடிகை மலையுச்சியில் தன்னை நெஞ்சத்து இருத்தி எப்பொழுதும் தியானிக்கும்
ஸ்ரீ வாயு புத்ரனை கடாஷித்திக் கொண்டு ஒளி பெற்று விளங்குகிறான் –

———————————————

பரகால பராங்குசாதிபி பணிதோ பாதி நவோ நவோ ஹரி
மணி ராகர சம்பவோ யதா நிகஷோத்தேஜித நிஸ்துலத்யுதி-19-

பரகாலன் பராங்குசன் போன்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பற்று
ஒப்பற்ற ஒளியையுடைய மாணிக்கம் போலெ புதிது புதிதானவனாய் ஒளி விடுகிறான் சிங்கப்பெருமான் –

—————————————————-

பக்திசார மஹதாஹ்வயபூ தை பட்ட நாத முநிதல்லஜமுக்யை
நாத யமுனா யதீஸ்வரமிஸ்ரை வர்ணிதோ விஜயதே வநமாலீ -20-

ஆழ்வார்கள் ஆச்சார்யர்களால் மங்களா சாசனம் செய்யப்பெற்று வனமாலையை தரித்து உஜ்ஜவலமாக விளங்குகிறான்

——————————————–

ஸ்ரீ வைகுண்ட நிகேத வாச ரசிக நித்யோல்ல சத் யவ்வன
துக்தாம்போ நிதி வேங்கடஷிதரவ் க்ருத்வா நிகாய்யே புரா
சங்கீபூத மதத் விரேபமுக ராராமை ப்ரஸூநாநதை
அத்யாஸ்தே கடிகாசலம் பரிவ்ருத்தம் பூத்வாத்ய ரம்யோ ஹரி -21-

பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டு அங்கு உறைவார்க்குக் கோயில் போல்
வந்து வலம் கிளறும் நீள் சோலை வ கண் பூம் கடிகை இளங்குமரன் தன விண்ணகர் —
மூன்றாம் திருவந்தாதி -61-பாசுரம் அடியானை ஸ்லோகம் –

——————————————————

திவ்யம் பதம் ஸவித்ரு மண்டல மத்ய தேசம்
துக்கதாம் புத்தம் முனி மநோ நிகமோத்த மாங்கம்
லஷ்மீ ந்ருஸிம்ஹ கடிகாசல மவ்ளிமக்ர்யம்
நித்யாநுஸந்தி வசதிக்கு தவ யோகிவர்யா -22-

பரமபதம் -சூர்ய மண்டல மத்யம்– திருப்பாற் கடல் –முனிவர் ஹிருதயம் –வேதாந்தம்–
திருக்கடிகை மலையுச்சி இவை எல்லாம் உனக்கு நித்யவாஸம் என்பர் ரிஷி ஸ்ரேஷ்டர்கள் –

————————————————————

சைலே த்வதீய பாத பத்மபராக
வாஞ்சந்தி ஜென்ம முனிபுங்கவ ஸூறி வர்யா
நிஸ்ரேணிஷூ ஷிதி ருஹேஷூ விஹங்க மேஷூ
வ்யாளேஷூ கோஷூ ஹரிணேஷூ தரிஷூ சாப்ஸூ -23-

உன் திருவடித்தாமரை மகரந்த துகளால் புனிதமான திருக்கடிகை மலையிலே-
படிகளிடையேயும் -மரங்களினுடையேயும் -பறைவைகள் யானைகள் மாடுகள் மான்கள் இடையேயும்–
குகைகளிலும் நீர் நிலைகளிலும் முனிவர் தலைவர்களும் நித்ய ஸூரிகளும் பிறக்க விரும்புகின்றனர்

————————————————————

அகாத பாதோதி நிகேதன வசன்
சிரம் சயா ன சயனே புஜங்கமே
அநாஸ் தயா தத்ர நனு ஸ்ரீ தோ பவான்
அதித்ய காமாசன பந்த லோலுப -24-

ஷீராப்தி நாதனே திருக்கடிகை மலை மேலே வீற்று இருந்து சேவை சாதிக்க விருப்புற்று எழுந்து அருளி உள்ளார் –

———————————————————————

யாமாஸ்ரித்ய ஸூ ரஷித க்ருதயுகே தைத்யேந்திர ஸூனுர் மயா
நைவா லஷ்யத அந்த சா மம புநர் திவ்யா க்ருதிர் தேஹிபி
மத்வைவம் சமுபேயி வான் சமுதயம் பூதாத்ம பூஜ்யே கிரவ்
புண்யை சர்ம த்ருஸாம் பிரதர்சயசி தாம் திவ்யாக்ருதிம் மாத்ருஸாம் -25-

கிருத யுகத்தில் ஆவிர்பவித்த திருமேனி பின்புள்ளவரும் வணங்கி வழிபட அன்றோ
புனித திருக்கடிகை மலையிலே சேவை சாதித்து அருளுகிறாய் –

——————————————–

புஜைஸ் சதுர்பி ஸ்வபதாஸ்ரி தேப்ய விஸ்ரானயம் ஸ்த்வம் சதுர புமர்த்தாந்
துரீய ஸூ நோரவ நாய நூநம் ஜனிம் துரீயாம் ப்ரத யஸ்ய பூர்வாம்-26-

நான்கு திருக்கரங்களால் அறம் பொருள் இன்பம் வீடு நான்கு புருஷார்த்தங்களையும் –
ஹிரண்யன் பிள்ளைகளான ஸம்ஹ்லாதன் -அநுஹ்லாதன் -ஹ்லாதன் -ப்ரஹ்லாதன் -என்னும் நால்வரில்
நான்காவனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானை ரக்ஷிப்பதற்காக அன்றோ
நான்காவது அவதாரமான ஸ்ரீ நரசிம்ஹ திருவவதாரம் வெளிப்பட்டு அருளினீர் –

—————————————————————

ப்ரதிஷ்டதே யோ கடிகாசலாய நிபத்த சித்தோ நரகே சரீந்த்ரே
நிபத்த மூலோபி சிரேண தஸ்ய மஹா ந கௌகோ கடிகாசல ஸ்யாத் -27-

ஈடுபட்டு திருக்கடிகை தடம் குன்றை நோக்கி புறப்படும் மனிதனுடைய
நெடும் காலம் வேரூன்றி இருக்கும் பெரு வினைக்கூட்டங்கள் அனைத்தும்
ஒரு கடிகை -நாழிகை -போதிலே அகன்று போம்

தஸ்மிந் தத்ர அம்ருத ஸரஸீ புஸ்கரே பாத கக்நே
ஸ்நாத்வாஸ் அ ஸீநம் நரஹரி வரம் ஹேமா கோட்யாம் விமாநே
சேவந்தே யே ப்ரணிஹித திய தே பரஸ்தாத் ப்ராயணே
ஸ்தாநம் ஸுரே ஸூப க கடிகா கால மாத்ராத்ச் ச லந்தி-28-

அம்ருத புஷ்கரணியிலே நீராடி ஹேம கோடி விமானத்தில் வீற்று இருந்து சேவை சாதித்து அருளும்
ஸ்ரீ யோக நரஸிம்ஹ பெருமாளை சேவிக்க
மரண காலத்தில் ஸ்ரீ வைகுந்தத்தை ஒரு கடிகை போதிலே அடைகின்றனர் –

———————————————————

ப்ரதிஷ்டதே யோ கடிகாசலாய நிபத்த சித்தோ நரகே சரீந்த்ரே
நிபத்த மூலோபி சிரேண தஸ்ய மஹா ந கௌகோ கடிகாசல ஸ்யாத் -27-

ஈடுபட்டு திருக்கடிகை தடம் குன்றை நோக்கி புறப்படும் மனிதனுடைய நெடும் காலம் வேரூன்றி இருக்கும்
பெரு வினைக்கூட்டங்கள் அனைத்தும் ஒரு கடிகை -நாழிகை -போதிலே அகன்று போம்

—————————————————————-

தஸ்மிந் தத்ர அம்ருத ஸரஸீ புஸ்கரே பாத கக்நே
ஸ்நாத்வாஸ் அ ஸீநம் நரஹரி வரம் ஹேமா கோட்யாம் விமாநே
சேவந்தே யே ப்ரணிஹித திய தே பரஸ்தாத் ப்ராயணே
ஸ்தாநம் ஸுரே ஸூப க கடிகா கால மாத்ராத்ச் ச லந்தி-28-

அம்ருத புஷ்கரணியிலே நீராடி ஹேம கோடி விமானத்தில் வீற்று இருந்து சேவை சாதித்து அருளும்
ஸ்ரீ யோக நரஸிம்ஹ பெருமாளை சேவிக்க
மரண காலத்தில் ஸ்ரீ வைகுந்தத்தை ஒரு கடிகை போதிலே அடைகின்றனர் –

—————————————–

சாந்நித்ய பூம்நா ந்ருஹரேர் நகேந்த்ரேம் மஹீருஹா பிராஜ்ய பல ப்ரஸூ நா
ஸூ கந்த வாஹாஸ்ச ததா நளின்ய வலாஹகா வர்ஜித வாரி பூர்ணா -29-

இவனுடைய சாநித்யத்தாலே மரங்களில் இனிய பழங்கள்-பூக்களில் நறுமணம் விஞ்சி –
மேகங்கள் பரிசுத்த நீரை பொழிகின்றன –

———————————————–

நிர்மர்யாத நிசர்க்க வைர நிப்ருதா பஷீச பஞ்சா தந
வ்யாக்ரா பன்நாக வாரேணந்த்ர ஹரினைர் யுக்தா யசஸ்யே கிரவ்
யத் சாந்நித்ய வசாத் சமுஜ்ஜித மிதோ வைரா ஸூஹ் ருத் தர்மின
ச ஸ்ரீ மான் ஸூரா நாயகோ விஜயதே விஸ்தாரயன் வாஞ்சி தம் -30-

பாம்பு யானை மான் -இவற்றோடு இயற்கையிலே த்வேஷம் கொண்ட கருடன் சிங்கம் புலி ஆகியவை
இவன் சாந்நித்யத்தாலே விரோதம் விட்டு நடிப்புடன் வாழுகின்றன
இந்த ஸ்ரீ யபதி அபீஷ்டங்கள் அனைத்தையும் அருளுகிறார்

——————————————————————————-

அத்ருஷ்ட பூர்வம் தநுஜேந்த்ர தாரணம் ரமாசகம் வாங் மனசாதி தூரகம்
அனுஸ்ரவைர் ம்ருக்ய குணம் மஹோ அத்புதம்
சகாசத்தி சித்தரே கடிகாத ராதரே -31-

வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத -முறைகளாலும் தேடப்படும் கல்யாணகுணங்களுடன்
நாட்டில் நடைஓடாத அத்புத தேஜஸ் அன்றோ -பிரதிகூல நிரசனம் செய்து அருளியதும்
திருக்கடிகை குன்றின் மேல் சேவை சாதித்து அருளுகிறார் –

—————————————————-

சிரந்த நாக்ராந்த மஹா ருஜார்திதா பயா நகைர் பூத கணைஸ்ச பர்த்சிதா
பவன் நிகாய்யாத் ர்யவலோக நாத ஹோ நிரா மயா நிர்ஜாதேஸ்ய விக்ரஹா -32-

பெரும் வியாதியால் பீடிக்கப்பட்டவர்களும் -பூதகனங்களால் பயமுறுத்தப் பெற்றவர்களும்
தேவரீர் நித்யவாஸம் செய்யும் திருகே கடிகை மலையைக் கண்டதுமே
அனைத்து பயமும் துன்பங்களும் நீங்கப் பெற்று தேவரீருடன் சாம்யா பத்தி பெற்று விடுகிறார்களே –

———————————————————

ரமா வபுஸ் தேஸ்ருத த்ருஷ்ட பூர்வம் வி சங்கிதா பூச்சகிதா சத்ருஷ்ட்வா
வியோக பீதா அம்ருத வல்லயபிக்யா
ததா விரா ஸீரசலே கிலாஸ் மின் -33-

அம்ருதவல்லி தாயாருடன் நித்யயுக்தனாய் இருப்பதற்காகவே இந்த திருக்கடிகை மலையிலே நித்யவாஸம் பண்ணி அருளுகிறீர் –

——————————————–

கந்தர்வ கின்னர ஸூராஸ்ச சஹா வரோதா
வீணா மிருதங்க லய சம்விதா நகேஸ்மின்
காயந்தி யாவதாம்ருதம் தவ சச் சரிதரம்
தாவணி ந்ருஸிம்ஹ கடிநா த்ருஷ தோத்ரவந்தி -34-

கந்தருவர் கின்னரர் தேவர்கள் ஆகியோர் தம் அந்தப்புரத்தோடு கூடி நின்று வீணை மிருதங்கம் தாளம் ஆகியவற்றோடு கூடியவர்களாய்
இந்த திருக் கடிகை மலையிலே அணுத்தில் இனிய உன் திவ்ய சரித்திரத்தை பாட கற்களும் கரைகின்றனவே –

————————————————

வநவ் கசோ ஹ் யத்ர நிசர்க்க வைரிணை த்வி பேந்த்ர பஞ்சாஸ்ய ம்ருகீ தரஷவ
பிபாசிதா நிர்ஜர நீர மேகத
பிபந்தி மைத்ரீ முபகம்ய பூதரே -35-

இயற்கையில் விரோதிகளான கட்டு மிருகங்கள் யானையும் சிங்கமும் மானும் மான் தின்னியும்
இந்த திருமலையில் நட்ப்புக் கொண்டு தாகம் தீர்க்க நீரைக் குடிக்கின்றனவோ —

———————————

ஸ்வ குலய கபிராஜ பூஜிதாய
ப்லவக கணா பிரணிபத்ய யோக தாம்நே
ஸ்திமிதா ஹ்ருதய நேத்ர பாணி பாதம்
தத நுக்ருதிம் விதத த்யஹோ மஹீத்ரே -36-

வானர கணங்களும் சிறியதிருவடியால் தியானிக்கப்படும் ஸ்ரீ யோக நரசிம்மனை வணங்கி
அசையாத கண் காய் கால்களையும் சஞ்சலம் இல்லா மனங்களையும் யுடையவையாய் நிற்கின்றனவோ –

———————————

வஜ்ர அங்குச த்வஜ ஸரோருஹ சங்க சக்ர
கல்பத்ரு தோரண ஸூதா கலசாதா பத்ரை
நித்யாங்கிதேந நரசிம்ஹ பத த்வயேந
பூதம் பவிஷ்யதி கதாநும மோத்த மாங்கம்-37-

வஜ்ரம் -அங்குசம் -கொடி-தாமரை -சங்கம் -சக்ரம் -கற்பக மரம் -தோரணம் -மிருத கலசம் -குடை ஆகியவற்றால்
எப்போதும் அடையாளம் செய்யப்பெற்ற ஸ்ரீ நரசிம்ம பெருமானின் திருவடி இணையால் என்று தான் என் தலை பரிசுத்தி அடையும் –

—————————————————

லஷ்மீ ந்ருஸிம்ஹ கடிகா தரணீத ரேச
ந்யஸ்தாத்மனாய் ரக்ஷண பரம் தவ பாத பத்மே
ஆர்த்ராபராத சத பாஜன மாதி தூதம்
அவ்யா சரணம் க்ருபயா ஸ்வயம் மாம் -38-

உன் திருவடித்தாமரையில் பரந்யாசம் செய்தவனாய் -நூற்றுக்கணக்கான புதிது புதிதான குற்றங்களுக்கு கொள்கலனாய்
மநோ வியாதிகளால் கலங்கியவனாய் -வேறு புகலற்ற அடியேனை தேவரீர் கருணையால் காத்து அருள வேணும் –

——————————————-

த்வயி ஸ்தி தேக்ரே ஜெகதாம் சரண்யே சரண்ய மன்யம் ஹாய் கதம் வ்ரஜாமி
தாடக மா ஸாத்ய பயஸ் சமக்ரம்
வலாஹகம் வாஞ்சதி கஸ்த்ருஷார்த்த-39-

அகில லோக சரண்யனான நீ முன்னால் நிற்கையில் வேறொரு சரண்யனை எப்படி அடைவேன்
தாகம் மிக்க ஒருவன் நீர் கிறைந்த குளம் இருக்க மேக நீரை வேண்டுவானோ –

——————————-

காயா தவ த்ருபதஜா த்விப புங்க வாத்யா
த்ராதாஸ் த்வயா நனு விபத்திஷூ தாத்ருசீஷூ
ஸ்வாமின் அநந்ய சரணஸ்ய மம த்ரிதாமன்
சம்ரக்ஷணம் நர ஹரே தவ கிம் கரீய–40 —

காயாது புத்திரனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான்–திரௌபதி –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் -போன்றோர்
ஆபத்துக்களில் உன்னாலே ரக்ஷிக்கப்பட்டார்கள் அன்றோ
த்ரிபாத் விபூதி -லீலா விபூதி நாயகனான உனக்கு வேறு கதியற்ற அடியேனை ரஷித்து அருளுவது ஒரு பரமோ –

——————————————-

த்வயா விநான்யா நாகே சரின் ந மே கதீ ருஜாயா விபதோ விதூதயே
தவார்சிஷா தாபமுபேயுஷோ வநே வலாஹகாத் கோ ஹரிணஸ்ய ரக்ஷிதா -41-

ஆதி வியாதிகளில் இருந்து அடியேனை விடுவிக்க உன்னை ஒழிய வேறு கத்தி இல்லை
காட்டுத்தீயினால் தபிக்கப் பெறும் மானுக்கு மழை பொழியும் மேகத்தைக் காட்டில் வேறு ரஷகம் ஏது-

———————————————————-

ரோஷா தாம்ர விலாசன சரப சப்ரூ பங்க பீமா க்ருதி பீநம் தாநவபூ பதேர் ப்ருஹதுரோ
பிந்தன் நபி ஸ்வைர் ந கை ப்ரஹ்லாதம் ஸ்வ ஜனம் தயா சிசிரயா
யத் வீக்ஷயா ந்வக்ராஹீ
வாத்சல்யம் ஹி விராஜதே தவ ஹரே சேதோ வசோ தூரகம்-42-

கோபத்தால் சிவந்த திருக்கண்கள் -பரபரப்பாய் நெறித்த திருப் புருவங்கள் -பயங்கர திருமேனி
ஹிரண்யனை திரு நகங்களால் மார்பை பிளந்த போதும் உன் அடியானான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானை
குளிர்ந்த திருக் கண்களால் கடாக்ஷித்து அருள் அனுக்ரஹித்த வாத்சல்யம் நெஞ்சுக்கும் வாக்குக்கும் எட்டாதாய் விளங்குகிறது

———————————————————————————-

சாமாப்யதி கவர்ஜித த்ரித சப்ருந்த வந்த்ய ப்ரபோ
த்வமேவ நிருபாதி கஸ் த்ரி ஜெகதாம் பிதா ப்ராணத
நிதர்ச நமி ஹேஷிதம் நரம் ருகேந்திர ஸம்ரக்ஷித

ஹிரண்ய தனு சம்பவோ நிரவாதி வ்யதா விஹவ்ல -43-

ஓத்தார் மிக்கார் இலா மா மாயனே -வடிவுடை வானோர் தலைவனே –எம்பிரானே-
மூ உலகுக்கும் ஸ்வாபாவிக தந்தை தாய் நீயே யாவாய் -ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானே ப்ரத்யக்ஷ உதாஹரணம் –

———————————————————

ஸ்வாமின் அவாப்யம் அநாவாப்தமிஹ த்ரிலோக்யாம்
நைவாஸ்தி தே நர ஹரே கடிகாத்ரி நாத
மன்யே ததாபி ஜன நஸ்ய ஹி வன்ய ஜாதவ்
த்வச் சித்த பக்த ஜன வத்சலா நிதானம் -44-

அவாப்த ஸமஸ்த காமநோய் இருந்து வைத்தும் அடியான் இடம் கொண்ட
வாத்சல்யம் அடியாகவே ஸ்ரீ நரஸிம்ஹனாக திரு அவரதாரம் செய்து அருளினாய் –

————————————————

ஸ்ரீ லஷ்மீ ந்ருஸிம்ஹ பகவஸ் சரணாரவிந்த கைங்கர்ய நிர்வ்ருத்தி ரஸோஸ் கலித ப்ரவாஹ
நிர்வாபயிஷ்யதி கதா கடிகாசலேச ப்ராக் ஜென்ம சங்கலித பாதக தீப்த தாவம்-45-

தேவரீருடைய திருவடித்தாமரையிலே தடையற்ற பெருக்கையுடைய கைங்கர்ய ஆனந்த ரசம்
முற்பிறப்புக்களிலே ஈட்டப்பெற்ற என் பாவக்கட்டுத்தீயை எப்போது அணைக்கப் போகிறது —

—————————————————

அஸ்தித்வே கமலா பதேஸ் திரிபுவனே ப்ராத்யஷிகீ கா ப்ரமே
த்யாக்ருஷ்டோ தனுஜோ யதா ஸ்வகதயா ஸ்தம்பம் ருஷாதாடயத்
நாஸ்தாஸ்யோ யதி தத்ர தேவ ந்ருஹரே நைவாப விஷ்யத்சதாம்
விஸ்ரம்பஸ் த்வபிநைகமேபி வசநே த்வத் வ்யாப்தி வாதோஜ்ஜ்வலே -46-

ஸ்ரீயப்பதியின் ஸத்பாவத்தில் மூவுலகிலும் ப்ரத்யக்ஷ பிரமாணம் என்ன உள்ளது
என்று கோபம் கொண்ட அசுரன் தூணைகே கோபத்தோடு கதையால் எப்போது புடைத்தானோ
அப்போதே நீ அங்கு தோன்றி இராவிடில் நீ எங்கும் நிறைந்தவன் என்று கோஷிக்கும்
வேத வசனங்கள் இடம் நல்லோர்க்கு நம்பிக்கை அற்றுப் போயிருக்கும் –

————————————————————

ஷோதீயச கர்க்க சதாரு தேசாத்
நாவா தரிஷ்யத் ச பாவம்ஸ் ததா சேத்
ச ஹைவ வாக்பி ஸ்வ ஜனஸ்ய சர்வா
மித்யார்த்தி கா வேத கிரோஸ் பவிஷ்யன் -47-

தூணில் இருந்து அப்பொழுதே நீ தோன்ற வில்லையாகில் உன் அடியார்கள் வார்த்தைகளோடு
வேத வாக்கியங்களும் பொய்யுரைகளாய் இருந்து இருக்குமே –

—————————————————–

தாபத்த்ரயீத வஹுதாச நதஹ்யமாநம்
மோஹாகுலம் கமபி நாதம நாப் நு வந்தம்
ஆர்த்ராபராத மயமாம் கருணாம்பு பாதை
ஆப்லாவயஸ்வ கடிகா சல வாரிவாஹ-48-

திருக் கடிகை குன்ற காளமேகமே–ஆதியாத்மிக ஆதிபவ்திக ஆதி தைவிகங்கள் ஆகிற மூவகைத் தாபங்கள்
ஆகிற காட்டுத்தீ யாலே எரிக்கப்படுமவனும் மோஹ இருட்டால் திசை தெரியாமல் மயங்குமவனும்
வழிகாட்டும் தலைவன் ஒருவனை அடையாதவனும்
கொள்கலமுமான என்னைக் கருணை மழையைப் பொழிந்து நீராடி அருளுவாயாக –

——————————————-

நிரா யுதோ அபி த்விஷதோ நிபர்ஹணே
பஜஜ்ஜநா நுக்ரஹ தத்பரோ பவான்
ரங்க சங்க அஸி கதா தநுர்த்தர
ப்ரகாஸதே சைல இஹ ஸ்ரீயா ஸஹ-49-

பிரதிகூலனான ஹிரண்யாசூரனை நிரசிக்க திவ்யாயுதங்கள் ஒன்றுமே தேவை அற்றவனாயும்
அடியார்களுக்காக சங்க சக்ர வாள் கதை வில் ஆகியவற்றை தரித்தவராயும்
திருக் கடிகை மலையிலே பிராட்டியோடு விளங்குகிறீர் –

——————————————-

ஸூர த்விஷ பீவாபா ஹூ மத்யம்
சலீலம் உர்வாருக நிர்விசேஷம்
விதாரயத்பிர் கமிதம் நகைஸ்தே
பிரசாத நத்வம் ஹி வராயுதா நாம் -50-

ஹிரண்யாசூரனை திரு உகிராலே விளையாட்டாக வெள்ளரிப்பழம் கிழிப்பது போலே கிழித்து
உனது திவ்யாயுதங்கள் அலங்காராரார்த்தமாகவே யுள்ளன என்னுமத்தை காட்டி அருளினீர் –

—————————————————-

ம்ருகோ நபீம குசரோ கிரிஷ்டா
ஸ்ருதிம் யதார்த்தாம் ஹி விதாது காம
ம்ருக ஸ்வ கண்டோபரி மாரகல்ப
விராஜதே விஸ்வபதிர் வநாத்ரவ்–51

ம்ருகோ நபீம குசரோ கிரிஷ்டா-என்று ருக்வேதம் விஷ்ணு ஸூ க்தம் -பூமியில் சஞ்சரிப்பவனும்
நிற்பவனும் அழகியவனான ஸிம்ஹம்-என்கிற வேத வாக்கியத்தை மெய்ப்பிக்க விரும்பி
மன்மதனை ஒத்து கழுத்துக்கு மேலே ஸிம்ஹ ரூபனாய் திருகே கடிகை குன்றின் மேல்
அகில ஜகத் ஸ்வாமி ஸ்ரீ விஷ்ணு சேவை சாதித்து அருளுகிறார் –

————————————————–

த்ருணாய மத்வா நரகேசரின் ஹரே
விநாச நத்தாநி பதாநி ஸர்வஸ
புனஸ் ஸமாவ்ருத்தி விவர்ஜிதம் பரம்
த்வாபி வாஞ்சந்தி பதம் முமுஷவ-62-

அனைத்தையும் துரும்பாக நினைத்து உனது பரமபதத்தை மோக்ஷத்தில் இச்சை யுடையோர் விரும்புகிறார்கள் –

—————————————–
ந்ருஹரே ஸ்மரணேந கேவலம்
புருஷன் பாதகிநம் புநாஸ்யபி
புஜத்தை சரணார்த்தி நோ அனகான்
நுதி நிஷ்டான் கிமுத தவத்தை ஆஸ்ரிதான் -63-

உன் சங்கல்ப லேசத்தாலே பெரும் பாவியையும் புனிதப்படுத்துகின்றாயே
உன்னை பஜிப்பவர்களையும் உன்னையே உபாயமாக விரும்புமவர்களையும் குற்றம் அற்றவர்களுமாக
உன்னையே ஸ்துதிப்பவர்களுமான உன் அடியார்களை நீ ரஷித்து அருளுகிறாய் என்று சொல்லவும் வேண்டுமோ —

————————————————————————-

வ்யஸன அர்ணவ மக்நம் உன்முகம்
யதி மாம் நோத தரசே தயா நிதே
வ்யஸனேஷூ ந்ருணாம் பாவத்தசாம்
வததோ வாக் விததா முநேர் பவேத் -64-

கருணைக்கடலே துன்பக்கடலில் மூழ்கிக் கரை சேர விரும்பும் அடியேனைக் கை தூக்கி விடாவிடில்
வ்யசனேஷூ மனுஷ்யானாம் ப்ருசம் பவதி துக்கித்த –மனிதர்கள் துன்புறும் போது அவர்களிலும்
ஸ்ரீ ராமபிரான் அதிகம் துன்புறுகிறான் என்கிற ஸ்ரீ வாலமீகி பகவான் ஸ்ரீ ஸூக்தி வீணாகுமே —

—————————————————-

அஹமஸ்மி தவேதி யாசதே
யதி சத்யோ ந ததாஸி மே அபயம்
சரணாகதம் ரக்ஷண விரதம்
பவிதா தே விததம் த்ருட வ்ரத-65-

அடியேன் உனக்கே உரியேனாவேன் என்று யாசிக்கும் அடியேனை அபயம் அளித்து அருள வில்லை யாகில்
சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதி ச யாசதே அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம-என்ற
தேவரீருடைய சரணாகத ரக்ஷண விரதம் வீணாகுமே –

——————————————–

அபி நாம நிசாமயிஷ்யதி-ஸ்வத் ருசா சந்நிஹிதம் க்ருதாகசம்
சகிதம் கடிகாசலேஸ்வர கருணாம்போதி தரங்க கல்பயா -66-

அருகில் இருப்பவனும் -பாவமே செய்பவனும் -அதனாலே நடுங்கி இருக்குமவனான அடியேனை
திருக் கடிகை மலைப் பெருமாள் கருணைக்கடல் போன்ற திருக் கண்களாலே கடாக்ஷித்து அருளுவானோ –

—————————–

துரதிக்ரம துஷ்க்ருதாகரம் த்ரபயா வாங்முக மந்திகா கதம்
கருணா வருணாலய ப்ரபோ பிரதிக்ருணீஷ்வ ஹரே ரமா சக -67-

கருணைக்கடலான ஸ்ரீ லஷ்மீ நரசிம்ஹப்பிரானே -கடக்கமுடியாத பாவங்களுக்கு கொள்கலமாய் இருப்பவனும்
வெட்க்கி தலை கவிந்து உன் திரு முன்பே நிற்பவனுமான அடியேனை ஸ்வீ கரித்து அருள வேணும்–

————————————————–

அநஹங்க்ருத நித்ய ஸுஹ்ருதை அகதங்கார நிபைரவேஷணை
அநக ஸ்மித முக்த சீதளை அகாதமி மாமசிராத் குரு ப்ரபோ -68-

ஸ்வாமி -அகங்கார லேசமும் இல்லாமல் எப்போதும் அன்பு மட்டுமே செலுத்துமவனாய்
பிறவி என்னும் பெரும் நோய்க்கு வைத்தியன் போன்ற திருக் கண் கடாக்ஷத்தாலும்
குளிர்ந்த அழகிய குற்றம் அற்ற புன்சிரிப்புகளாலும் அடியேனை ஆக்கி அருளுவாய்

—————————————————–

கல்பத்ருமோ திசைதி காங்ஷிதமேவ காமம்
சிந்தாமணிஸ் சணதி சிந்திதமேவ சார்த்தம்
அப்ரார்த்தி தேப்சி தசயம் விகிரன வதான்ய
திவ்யாவுபாவபி பவான் ப்ரதயா அதிசேதே -69-

கற்பகமரம் விரும்பியவற்றையே தரும் -சிந்தாமணி சிந்தையில் கொண்ட விஷயத்தையே அளிக்கும்
வேண்டாத பொருள்களையும் வாரி வாரி வழங்கி இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் தேவரீர்
தேவலோகத்தில் உள்ள அவ்விரண்டையும் விட புகழ் விஞ்சி இருக்கிறீர் அன்றோ –

—————————————————-

தாதோ தைத்ய பதிஸ் தவாக்ருதி கலாம் திவ்யா மநா லோகயன்
வவ்ரே பத்ம பவோ வரான் கில முத்தா சங்க்யாதிகா நஸ்திரான்
தத் ஸூநுஸ்து நிசாமயன் வபுரஹோ பாலோப்ய மோகம் ஸ்திரம்
த்வத் பாதாம்புஜ நித்யபக்தி மசலாம் வவ்ரே வரந்த் வேககம் -70-

தந்தை ஹிரண்யன் தேவரீர் மூர்த்தி பல் கூற்றில் ஒன்றுமே காணமாட்டாமல் நிலையற்ற வரங்கள்
பிரமனிடம் இடம் இருந்து வீணாக வேண்ட
அவன் பிள்ளையோ சிறுவனாய் இருந்த போதிலும் உன் திரு உருவாக் கண்டவுடன்
நிலையானதாய் சஞ்சலம் அற்ற உன் திருவடித்தாமரை இணைகளிலே அன்பாகிறா வரம் ஒன்றையே வேண்டினான் –
என்ன ஆச்சர்யம் –

———————————————

மன்னாத அம்ருத வல்லரீசஹசரே ப்ரத்யக்ர பஞ்சாநந
த்வன் நாமான்ய நிசம் க்ருணன் குண கணான் கீர்வாண கம்யே கிரவ்
திவ்யே தாம்நி புநாநிவ்ருத்தி ரஹிதே அப்யபிராக்ருதே நிஸ்ப்ருஹ
த்வத் பாதாம் புஜ கிங்கரத்வ நிரதோ பக்தோ பவான் யன்வஹம் -71-

எம்பிரானே-ஸ்ரீ அம்ருதவல்லி நாயகனே -தேவரீருடைய திருநாமங்களை திருக் கல்யாண குணங்களையும்
எப்போதும் சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டு
பரமபதத்திலும் விருப்பம் இல்லாமல் உன் திருவடித்தாமரைகளிலே இங்கேயே கைங்கர்யம் செய்வதில் ஈடுபட்டு
எப்போதும் உன் பக்தனாகவே அடியேனை ஆக்கி அருள வேண்டும் –

———————————————————

ஆப் யா யயந்த மவநிம் கருணாம்பு பாதை
விதயுத் ரமா விலஸிதம் த்ருத சார்ங்க சாபம்
தா பக்ன மார்த்த ஜன மானஸ சாதகா நாம்
ஜீவாது மேமி சரணம் கடிகாத்ரி மேகம் -72-

கருணை மழையினால் உலகை தளிர்ப்பித்து -மின்னல் கொடி போலெ பிராட்டியுடன் கூடி இருப்பதும்
இந்திர தநுஸ் சார்ங்கம் தரித்துக் கொண்டு சம்சார வெம்மையைப் போக்கி
வருந்தும் மாந்தர் மனங்களாம் சாதகப்பறவைகளுக்கு உயிரூட்டும்
திருக் கடிகைக்குன்ற கார்மேகத்தை சரணம் அடைகிறேன் –

———————————————————-

ந்ருத்யன் ந்ருத்யன் சிதில ஹ்ருதயோ பங்குரோ பக்தி பூம்நா
காயன் காயன் தவ ஸூ சரிதம் கத்கதா முக்த பாஷ்ப
ஆசாதே சேஷ்வகி லந்தி ஷூ த்வாம் விசின்வன் விசின்வன்
க்லாநோக்லா யாம்ய நிதர கதி நாரஸிம்ஹேதி நர்த்தன்-73-

ஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப்பாடி கண்ணீர் மல்கி நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும்–என்கிறபடியே
பக்திப் பெருக்கால் நைந்து அந்தக் கண்ணீர் பெருகப் பெற்று
அநந்ய கதியாக கதறிக் கொண்டு வாடல் மாலை போலே வாடி வதங்குகிறேன் –

———————————————

ரங்கே தாமனி திவ்ய ஸூரி வி நுதே சேஷ சயாநோ அநகே
திஷ்டன் வேங்கட பூதரே பவபயம் வியாபாதயன் தேஹினாம்
ஆஸீநோ கடிகாத்ரி துங்க சிகரே த்வம் நாரஸிம்ஹா க்ருதி
சர்வ அபீஷ்ட பல ப்ரதோ விஜயசே வாத்சல்யவாராம் நிதி -74-

பதின்மரால் பாடப்பெற்ற திருவரங்கம் பெரிய கோயிலிலே திருவனந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுபவராயும்
சம்சார பயத்தை நிரசித்துக் கொண்டு திருவேங்கட திருமலையில் நின்று சேவை சாதிப்பவராயும்
தேவரீர் திருகே கடிகை குன்றின் மேல் ஸ்ரீ நரேஸிம்ஹ ரூபியாய் எழுந்து அருளி இருந்து வாத்சல்ய கடலாயும்
அபீஷ்டங்களை எல்லாம் வழங்கும் வள்ளலாயும் இருந்து அருளுகிறீர் –

————————————————-

பிரபுல்ல ராஜீவ தளாய தேஷண
ரமா சமாஸ் லஷ்ட ப்ருஹத் பூஜாந்த்ர
தித்ருஷிதோ யோக த்ருஸா ஜிதாத்மபி
விராஜதாம் மே ஹ்ருதி ரம்ய கேஸரீ-75-

மிக அலர்ந்த தாமரை இதழ் போன்ற நீண்ட திருக் கண்கள் /
பெரிய பிராட்டியார் நித்யவாஸம் செய்யும் திரு மார்பு /
இந்திரிய கிங்கரர்கள் யோகக் கண்ணால் காண விரும்பும் அழகிய சிங்கர் அடியேன் மனசிலும் விளங்குவாராக –

————————————————

ஹேத் யங்கை பரிகர்மிதம் த்ரி நயனம் பாருங்க பந்த உஜ்ஜ்வலம்
பிப்ராணம் வனமாலிகாம் ச துளஸீம் பீதாம்பரம் கௌஸ்துபம்
பாஸ்வத் ரத்ன கிரீட ஹாரா கடக ஸ்ரக் ஹேம காஞ்ச் யஞ்சிதம்
மந்நாதம் கடிகாத்ரி மௌலி முதிரம் லஷ்மீ ந்ருஸிம்ஹம் பஜே -76

திவ்யாயுத தழும்பால் அலங்கரிக்கப் பெற்றவரும்
முக்கண்கள் படைத்தவரும்
பர்யங்க பந்தத்தால் விளங்குபவரும்
திருத் துளசி உடன் கூடிய திரு வனமாலை-திருப் பீதாம்பரம் -திருக் கௌஸ்துபம் இவற்றை தரித்தவரும்
ஹாரம் தோள்வளை மாலை பொன்னரை நாண் ஆகியவற்றால் அலங்கரிக்கப் பெற்றவரும்
எம்பிரானும் திருக் கடிகைக் குன்றின் உச்சியில் மேகமுமான ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹனை பஜிக்கிறேன் –

——————————————–

ஜய ஜய நிசர்க்க பந்தோ
ஜய ஜய லஷ்மீ பதே தயா ஸிந்தோ
ஜய ஜய ஜகத் த்ர யேந்தோ
ஜய ஜய கடிகாத்ரி சேகரானந்த-77-

இயற்க்கை யுறவினனே போற்றி போற்றி
இலக்குமி மணாளனே போற்றி போற்றி
கருணைகே கடலனையாய் போற்றி போற்றி
காணுலகச் சந்திரனே போற்றி போற்றி
கடிகை மலை யுச்சியனே போற்றி போற்றி
காலம் எல்லாம் உள்ளவனே போற்றி போற்றி
எங்கும் நிறைந்தவன் போற்றி போற்றி
எல்லாமுமானவனே போற்றி போற்றி –

—————————————————

ஸூப வ்யவ்ருத்தவ் த்வயி லோக நாதே
அநுராக நிக்நேந மயா க்ருதேயம்
விதாது மர்ஹாதிசயம் ந கஞ்சித்
ஸ்துதிர் யதாஜ்ஜேந க்ருதா ஸூரத்னே -78-

அதி மங்கள சேஷ்டிதங்களை யுடைய ஜெகந்நாதனான தேவரீர் இடத்தில் அன்பு நிறைந்த அடியேனால் இயற்றப்பட்ட இந்த ஸ்துதி
ரத்னத்தின் வாசி அறியாதவனால் செய்யப்பட நல்ல ரத்னத்தைப் பற்றிய ஸ்துதி போல
உன்னிடத்தில் ஒரு பெருமையையும் விளைக்காதே-

———————————————————-

சர்வாப்யர்த்தித ஸித்திதம் பகவதோ பக்தைக சிந்தாமனே
கல்யாணம் ஸ்தவம் இந்திரா நரஹரோ தேவஸ்ய திவ்யாஜ்ஞயா
ஸ்ரீ வாசேந வதூல ஜேந ரசிதம் ப்ரேம்ணா படந்தீஹயே
தி விந்தந்தி அசலாம் ஸ்ரீயம் நவ நவாம ஆரோக்ய பூர்ணாம் புவி -79-

ஷாட் குண பரிபூர்ணனும் அடியார்க்கு அபீஷ்டங்களை எல்லாம் அளிக்கும் சிந்தாமணியுமான
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹனுடைய திரு ஆணையால் வாதூல குலத்தவரான ஸ்ரீநிவாஸாச்சார்யரால் இயற்றப் பெற்றதும்
வேண்டுவார்க்கு வேண்டியவற்றை எல்லாம் தருவதும் -பரம மங்களமுமான இந்த ஸ்துதியை
எவர்கள் அன்புடன் படிக்கின்றார்களோ அவர்கள் நிலை பெற்றதாய் ஆரோக்யம் நிறைந்ததாய்
புதிது புதிதான செல்வத்தை அடைகின்றனர் -அந்தமில் பேரின்பமே பலன் என்று நிகமிக்கிறார் –

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வாதூல குல -ஸ்ரீ உ வே மையூர் கந்தாடை ஸ்ரீ நிவாஸாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல்களில் பிராட்டி / பெருமாள் திருக்கண்கள் விசேஷணங்கள்-ஸ்ரீ ஸூக்திகள் —

July 27, 2018

முதலாயிரம் –

பெரியாழ்வார் திருமொழி –

செய்ய தடம் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்தூரமும் -1-3-9-

மைத்தடம் கண்ணி யசோதை தன மகனுக்கு -1-5-10-

அம் கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு மங்கை நல்லோர்கள் தாம் வந்து முறைப்பட்ட -2-10-10-

மையார்கண் மடவாய்ச்சியார் -3-1-4-

கோலச் செந்தாமரைக் கண் மிளிரக் குழலூதி இசை பாடிக் குனித்து -3-4-7-

அம்மைத் தடம் கண் மடவாய்ச்சியரும்-3-5-3-

செம் பெரும் தடம் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் -3-6-6-

கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து –3-6-10-

செழும் கயல் கண்ணும் –இம்மகளைப் பெற்ற தாயார் இனித் தரியார் -3-8-5-

ஒண் நிறத்தத் தாமரைச் செங்கண் உலகு அளந்தான் என் மகனை -3-9 -9-

சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க்கண் மடமானே -3-10-2-

மானமரும் மென்னொக்கி வைதேவீ விண்ணப்பம் -3-10-5-

செம் பெரும் தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக்கால் நம்மன்னை நரகம் புகாள்–4-6-8-

————————–

திருப்பாவை –

ஏரார்ந்த கண்ணி யசோதை —1-

போதரிக்கண்ணினாய் -13-

பங்கயக்கண்ணானை -14-

மைத்தடம் கண்ணினாய் -19-

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ -22-

செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று –30

————————————————–

பெருமாள் திருமொழி

அரங்கத்துரகம் ஏறிக் கண் வளரும் கடல் வண்ணர் கமலக் கண்ணும் ஓளி மதி சேர் திரு முகமும்
கண்டுகொண்டு என்னுள்ளம் மிக வென்று கொலோ உருகு நாளே -1-6-

ஆராத மனக்களிப்போடு அழுத்த கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி -1-7-

மெய்யடியார்கள் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது காணும் கண் பயனாவதே -2-1-

ஒல்லை நாணும் கடைவன் என்று கள்ள விழியை விழித்துப் புக்கு -6-2–

கரு மலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக்கணித்து –6-3

கண்ணுற்று அவளை நீ கண்ணாலிட்டுக் கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன் -6-5-

நீ உகக்கும் மயிரை ஒண் கண்ணினாரும் அல்லோம் -6-7-

அம்புயத்தடம் கண்ணினன் தாலோ -7-1-

தண்ணம் தாமரைக் கண்ணனே கண்ணா -7–6-

அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் -7–8-

வெவ்வாய வேல் நெடும் கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை-9-2-

வெவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி -10-3-

——————————————————

திருச்சந்த விருத்தம் –

விடத்தவாய் ஓர் ஆயிரம் இராயிரம் கண் வெந்தழல் விடுத்து -20-

நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல் நல் தவத்த நாதனோடு
மற்றுமுள்ள வானவர் கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத -87-

பண்ணை வென்ற இன்சொல் மங்கை கொங்கை தனக்கு பங்கயக் கண்ண-105-

————————————————–

திருமாலை —

மாதரார் கயல் கண் என்னும் வலையில் பட்டு அழுந்துவேனை போதரே என்று
சொல்லிப் புந்தியில் புகுந்து தன்பால் ஆதாரம் பெறுக வைத்த அழகனூர் அரங்கம் அன்றே -16-

தாமரைக் கண் என்னம்மான் கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள் பனி அரும்புதிருமாலோ-18-

தூய தாமரைக் கண்களும் துவர் இதழ்ப்
பவள வாயும் ஆயசீர் முடியும் தேசம் அடியரோர்க்கு அகலலாமே -20-

———————-

கடி மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையே –திருப்பள்ளி எழுச்சி -11-

—————————

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு அரிய வாதிப் பிரான் அரங்கத் தமலன் முகத்து
காரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய கண்கள்
என்னைப் பேதைமை செய்தனவே –அமலனாதி பிரான் -8-

அண்டர் கோன் அணியரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றிணைக்க காணாவே -10-

—————————

தேவபிரானுடை கரிய கோலத் திருவுருக் காண்பன் நான் — கண்ணி நுண் சிறுத்தாம்பு -3-

கண்டுகொண்டு என்னைக் காரி மாறப் பிரான் பண்டை வல்வினை பற்றி அருளினான் -7-

———————————————

பெரிய திருமொழி –

தாமரைக்கண்ணினன்-1-8-1-/எழுதிய தாமரை அன்ன கண்ணும் -2-8-7-/பல இடங்களிலும் உண்டே /

பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய் தெள்ளிய சிங்கமாகிய தேவை -2-3-8-

இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை -2-5-8-

குவளை யம் கண்ணி கொல்லி யம் பாவை -2-7-1-

பொரு கயல் கண் -2-7-9-பரகால நாயகி

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்க்கு ஆரமுதமானான் -2-10-4-

தடம் கண்கள் பனி மல்கும் தன்மையான்-2-10-6-

அழகாய காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான் -3–3–7-

கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் -3-4-9-

வேல் நெடும் கண் ஆய்ச்சியர் வைத்த தயிர் வெண்ணெய் உளம் குளிர அமுது செய்து இவ்வுலகுண்ட காளை-3-9–7-

வாள் நெடும் கண் மலர்க்கூந்தல் மைதிலிக்கா -3-10-6-

வாள் நெடும் கண்ணீர் மல்கும் வளையும் சோரும் -5-5-3 / நீல மலர்க் கண் மடவாள் -5-5-10-பரகால நாயகி திருத்தாயார் –

மாழை மான் மட நோக்கி யுன் தோழி -5-8-1-

பைங்கண் யுருவாய் வெருவ நோக்கி -6-6-4-

அம்பன்ன அசோதை தன் சிங்கம் -6-8-5-

நெல்லில் குவளை கண் காட்ட -7-5-10-

வடித்தடம் கண் மலரவளோ வரையாகத்துள் இருப்பாள் என்கின்றாளால் -8-1–5-

கேழல் செங்கண் மா முகில் வண்ணர்-9-6-3-

பங்கய மா மலர்க்கண் பரனை எம் பரஞ்சுடரை -9-9-4-

மாழை மான் மட நோக்கியை விட்டு –10-2-7-

மண்டோதரி முதலா அம் கயல் கண்ணினார்கள் இருப்ப-10-2-8-

அல்லிக் கமலக் கண்ணனை அங்கு ஓர் ஆய்ச்சி எல்லிப் பொழுதூடிய ஊடல் திறம் –10-8-10-

மானமரு மென்னோக்கி வைதேவியின் துணையா -11-5-1-

——————————————–

கண்ணிணையும் அரவிந்தம் –திரு நெடும் தாண்டகம் -21-

——————————–

வண் தாமரை நெடும் கண் மாயவனை -மூன்றாம் திருவந்தாதி –84 —

வண் தாமரை நெடும் கண் தேன் அமரும் பூ மேல் திரு -100-

——————————–

எரி கான்ற இவையா வெரி வட்டக் கண்கள் –நான்முகன் -21-

கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த பண்டைத்தானத்தின் பதி -73-

—————————

திருவிருத்தம் –

செழு நீர்த் தடுத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண் அழு நீர் துளும்ப அலமருகின்றன -2-

பனிப்பியல் சோரும் தடம் கண்ணி-5-

வெண் முத்தரும்பி வண் பூங்குவளை மடமான் விழிக்கின்றமா யிதழே-9-

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர் -15-

கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே -18

புண்டரீகத்து அம் கேழ் வனமோர் அனைய கண்ணான் -23-

ஒரோ குடங்கைக் கயல் பாய்வன பெரு நீர்க் கண்கள் தம்மொடும்-24-

நீலத்தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போல பொலிந்து –எம்பிரான் கண்ணின் கோலங்களே –39-

வன் காற்றறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த மென்கால் கமலத்தடம் போல் பொலிந்தன –எம்பிரான் தடம் கண்களே -42-

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -45-

புலக்குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வள்ளி ஒன்றால் விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன–57-

அழறலர் தாமரைகே கண்ணன் -58-

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ கண்ணன் திருமால் திரு முகம் -63-

பிரானார் திருவடிக்கீழ் உற்றும் உறாதும் மிளிர்ந்த கண்ணாய் எம்மை யுண்கின்றவே-65-

காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல வென்று ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு –தூவியும் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே -67-

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே யுதயமலைவாய் விரிகின்ற வண்ணத்த வெம்பெருமான் கண்கள் -82-

————————————–

தாமரைக்காடு மலர்க்கண்ணொடு–திருவாசிரியம் -5-

———————————-

வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து சீரார் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் –சிறிய திரு மடல் —

கூரார் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகேனோ–சிறிய திருமடல்

போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம்–சிறிய திருமடல்

—————————————-

கரு நெடும் கண் செவ்வாய்ப் பிணை நோக்கின் மின்னனைய நுண் மருங்குல் வேகவதி என்று –பெரிய திருமடல்

கரதலமும் கண்களும் பங்கயத்தின் பொன்னியல் காடோர் மணி வரை மேல் பூத்தது போல் –பெரிய திருமடல்

————————————————–

திருவாய் மொழி –

செந்தாமரைக் கண்ணன் /தண் தாமரைக் கண்ணன்/ பெரும் தண் தாமரைக் கண்ணன்/ செந்தாமரைத் தடம் கண் /
கமலக் கண்ணன் / தகும் கோலத் தாமரைக் கண்ணன்/ பைந்தாமரைக் கண்ணன் / கமலத் தடம் பெரும் கண்ணன் /
செங்கோலக் கண்ணன் / செய்ய தாமரைக் கண்ணன் /அணி கொள் செந்தாமரைக் கண்
பங்கயக்கண்ணன் /மலர்க் கண்ணன் / செய்ய கண் / கோலச் செந்தாமரைக் கண்ணன் –பல இடங்களில் –

கமலக் கண்ணன் என் கண்ணினுளானே -1-9-8-/ கமலக் கண்ணன் என் கண்ணினுள்ளான் காண்பான் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண் நுதலானோடும் தோற்றி அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே -1-9-9-

கட்டுரைக்கில் தாமரை நின் கண் –ஒவ்வா–3-1-2-

பாவு சீர்க் கண்ணன்–3-4-2-

மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள்-4-5-2-

செஞ்சுடர்த் தாமரைக் கண் –5-4-9-

குவளை ஒண் கண் -2-4-2-/

கேழில் ஒண் கண் -2-4-10-/

குவளைத் தடம் கண் -4-6-5-/

குவளை ஒண் மலர்க் கண்-6-5-1–
நெடுங்கண் இளமான் -6-7-10 /

கரும் கண்ணி -திருமேனி மைப்பு ஏறி -கரும் தடம் கண்ணி-6-5-8- -பராங்குச நாயகி -கை தொழுத —
இருந்து அரவிந்தலோசன என்று நைந்து -திருமா மகளும் தாமும் சேர்த்தி சேவித்த கண் அன்றோ –

கெண்டை ஒண் கண் வாசப் பூங்குழல் பின்னை -6-4-2-

ஏழையர் ஆவி யுண்ணும் இணைக் கூற்றங்களோ அறியேன் ஆழி யம் கண்ணபிரான் திருக்கண்கள் கொலோ அறியேன் -7-7-1-

கள் அவிழ் தாமரைக் கண் -7-8-4-

கண்கள் சிவந்து பெரியவாய் -8-8-1-

மணித் தடம் தாமரைக் காடுகள் போல் திரு மார்பு வாய் கண் கை-8-9-1-

அல்லிக் கமலக் கண்ணன் -8-10-11-

மையார் கருங்கண்ணி கமல மலர் மேல் செய்யாள் -9-4-1-

அல்லி யம் தாமரைக் கண்ணன் -9-9-1-

தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -9-9-9-

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல்களில் -கரணத்ரய அனுபவம்-

July 26, 2018

திருப்பல்லாண்டு –

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் -வந்து –கூடும் மனம் உடையீர்கள்–வந்து பல்லாண்டு கூறுமினோ -4-

————————————

பெரியாழ்வார் திருமொழி –

காறை பூணும் –ஆயிரம் பேர்த்தேவன் திறம் பிதற்றும் —
மாறில் மா மணி வண்ணன் மேல் இவள் மால் உறுகின்றாளே –3-7-8-

குருந்தம் ஓன்று ஓசித்தானோடும் சென்று கூடியாடி விழாச் செய்து –
திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கரும் தட முகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள் -4-4-7-

ஆசை வாய்ச சென்ற சிந்தையராகி –அன்னை யத்தன் ஏன் புத்திரர் –என்று மயங்கி வாய் திறவாதே —
கேசவா புருடோத்தமா வென்றும் –பேசுவார் எய்தும் பெருமை -4-5-1-

மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு –உய்யலும் ஆமே -4-5-3-

சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே -4-5-10-

————————————————————————————–

திருப்பாவை –

தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -5-

வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து
அரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் –6-

நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் -25-

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைத் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் —
உன் தன்னோடு உற்றோமே யாவோம்
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் -29-

——————————————

நாச்சியார் திருமொழி
தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூ மலர் தூய்த்து தொழுது ஏத்துகின்றேன் –
-பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெற -1-9-

——————————————————————————————–

பெருமாள் திருமொழி –

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற -1-3-

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப் புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி -1-9-

திருமாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்டம் மேவி அலந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -2-1-

நிரை மேய்த்ததும் இவையே நினைந்து ஆடிப்பாடி அரங்கவோ என்று அழைக்கும் தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் -2-2-

என் அரங்கனுக்கு அடியார்களாய் நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என்நெஞ்சமே -2-4-

மாலை உற்று எழுந்து ஆடிப் பாடித் திரிந்து அரங்கன் எம்மானுக்கே மாலை உற்று இடும் தொண்டர் வாழ்வுக்கு
மாலை உற்றது என் நெஞ்சமே -2-8-

மொய்த்துக் கண் பணி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடிப்பாடி இறைஞ்சி
என் அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையோர் முற்றும் பித்தரே -2-9-

——————————————————————————————-

திருச் சந்த விருத்தம் –

சோர்வில்லாத காதலால் தொடக்கறா மனத்தராய் நீர் அரவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லார் வானம் ஆளவே –78-

———————————————————————————–

திருமாலை
போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன் -தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே –26-

—————————————————————————-

பெரிய திருமொழி –
சிக்கெனைத் திருவருள் பெற்றேன் உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் -1-1-5-

ஓதிலும் உன் பேர் அன்றி மற்றோதாள் -உருகும் நின் திருவுரு நினைந்து காதன்மை பெரிது கையறவுடையள்
-கயல் நெடும் கண் துயில் மறந்தாள்–என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே –2-7-5-

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை -2-10-4-

நீடு பன்மலர் மாலையிட்டு -நின் இணை அடி தொழுது ஏத்தும் -என் மனம் –3-5-5-

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும் புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் -3-5-6-

ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின்னடைந்தேற்கு -3-5-9-

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர் பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாதலில் –9-3-9-

—————————————————————————————

திருவாய் மொழி –

உள்ளம் உரை செயல் -உள்ள இம் மூன்றையும் -இறை உள்ளில் ஒடுங்கே-1-2-8-

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே –1-3-6-

ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து நன்று என நலம் செய்வது -1-3-7-

எந்தாய் என்பன் நினைந்து நைந்தே -1-5-1-

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் -1-5-2-

கள்வா வெம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவன் என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்த்தி கழல் பணிந்து ஏத்துவரே -2-2-10-

குழாங்கள் ஆயிரத்துள் இவை பத்துமுடன் பாடி குழாங்களாய் அடியீருடன் கூடி நின்று ஆடுமினே -2-3-11-

ஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி
எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடி வாடும் இவ்வாணுதலே -2-4-1-

எம்பிரானைப் பொன் மலையை நா மருவி நன்கெத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட -2-6-3-

நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே -2-6-4-

உன்னைத் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை பாடி யாடி
என் முன்னைத் தீ வினைகள் முழு வேர் அரிந்தனன் யான் -2-6-6-

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினான் காமனைப் பயந்தாய் என்று என்று
உன் கழல் பாடியே பணிந்து தூ மனத்தனனாய்ப் பிறவித் துழதி நீங்க
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

சிரீஇதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப் பகல்வாய் வெரீஇ
ஆழமானது கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீஇயதீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே -2-7-9-

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம் மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராய் -2-9-6-

கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் -3-5-1-

வார் புனல் அம் தண் அருவி வட திருவேங்கடத்து எந்தை பேர் பல சொல்லிப் பிதற்றி பித்தர் என்றே
பிறர் கூற ஊர் பல புக்கும் புகாதும் உலகர் சிரிக்க நின்றாடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே -3-5-8-

தேவபிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே -3-5-10-

கறை யணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த வம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டிலனே -3-10-2-

திருக்குருகூர் அதனை பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர் பரந்தே-4-10-2-

மாதவன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே -5-2-2-

இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே -5-2-4-

நேமிப்பிரான் தமர் போந்தார் நன்று இசை பாடியும் துள்ளி யாடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர் சிந்தையைச் செந்நிறுத்தியே–5-2-6-

திரு வண் வண்டூர் புணர்த்த பூந்தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே -6-1-5-

புகர்கொள் சோதிப்பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர
வைகல் வைகப் பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே -6-4-3-

தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமிறுமே -6-5-1-

தொலைவில்லி மங்கலம் கரும் தடம் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்து இருந்து அரவிந்த லோசனை என்று என்றே நைந்து இரங்குமே -6-5-8-

பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்
என்ன மாயம் கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே -6-5-10-

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன் –6-6-11-

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே
கண்கள் நீர்கள் மல்கி மண்ணினுளவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் எண்ணிலமான் புகுமோர் திருக்கோளூரே– 6-7-1-

என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது நிற்க -7-1-10-

சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே –7-10-10-

தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே -7-10-11-

பணங்கள் ஆயிரமுடைய பைந்நாகப் பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானு நீ தானே -8-1-8-

வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே — 9-5-4-

நினைதொறும் சொல்லும்தோறும் நெஞ்சு இடிந்து உகும் வினைகொள் சீர் பாடிலும் வேம் எனதாருயிர்
சுனை பூஞ்சோலைத் தென்காட்கரை என்னப்பா நினைக்கிலென் நாண் உனக்கு ஆட் செய்யும் நீர்மையே –9-6-2-

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தகையான் சரணம் தமர்கட்கோர் பற்றே -10-4-10-

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -10-5-5-

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அரு மா மாயத்து எனதுயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என்னூழி முதல்வன் ஒருவனே -10-7-8-

——————————————

முதல் திருவந்தாதி –

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால்
நற்றாமரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று –20 –

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி யுரலோடு அறப்பிணித்த நான்று
குரல் ஓவாது ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே ஓங்கோத வண்ணா உரை -24-

நகரமருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல் பகர மறை பயந்த பண்பன்
பெயரினையே புத்தியால் சிந்தியாது ஓதி யுரு வெ ண்ணும் அந்தியாலாம் பயன் அங்கு என் –33-

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும் புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி
திசை திசையின் வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் -37-

மனமாசு தீரும் அருவினையும் சாரா தனமாய் தானே கை கூடும்
புனமேய பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி தாம் தொழா நிற்பார் தமர் –43-

அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி உய நின் திருவடியே சேர்வான்
நயநின்ற நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும் சொல்மாலை கற்றேன் தொழுது -57-

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி எழுதும் ஏழு வாழி நெஞ்சே
பழுதின்றி மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான் அந்தரம் ஒன்றில்லை யடை -58-

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம் தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த
படமுடைய பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும் கொய்ந்நாகப் பூம்போது கொண்டு -78-

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும் பாடிலும் நின் புகழே பாடுவன்
சூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு என்னாகில் என்னே எனக்கு -88-

நா வாயிலுண்டே நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே
மூவாத மாக் கதிக் கண் செல்லும் வகை யுண்டே இன்னொருவர் தீக்கதிக் கண் செல்லும் திறம் -95-

——————————————————

இரண்டாம் திருவந்தாதி –

நகர் இழைத்து நித்திலத்து நாண் மலர் கொண்டு அங்கே திகழு மணி வயிரம் சேர்த்து
நிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி -4-

அறிந்து ஐந்தும் உள்ளடக்கி ஆய்மலர் கொண்டு ஆர்வம் செறிந்த மனத்தராய்ச் செவ்வே
அறிந்தவன் தன் பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே காரோத வண்ணன் கழல் -6-

பழிபாவம் கையகற்றிப் பல் காலும் நின்னை வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ
வழுவின்றி நாரணன் தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும் காரணங்கள் தாமுடையார் தாம் -20-

தா முளரே தம்முள்ளம் உளதே தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே
வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நரகம் சேர்வது அரிது -21-

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் புகையால் நறு மலாரால் முன்னே
மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப்பட்டேனுக்கு என் பாக்கியத்தால் இனி -34-

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே தமக்கு என்றும் சார்வம் அறிந்து
நமக்கு என்றும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் ஒத்து -38-

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன்
அறம் தாங்கும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் உள்ளு -44-

திருமங்கை நின்று அருளும் தெய்வம் நா வாழ்த்தும் கருமம் கடைப்பிடிமின் கண்டீர்
உரிமையால் ஏத்தினோம் பாதம் இருந்த தடக்கை எந்தை பேர் நால் திசையும் கேட்டீரே நாம் -57-

பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்
துணிந்தேன் புரிந்து ஏத்தி உன்னைப் புகலிடம் பார்த்து அங்கே இருந்து ஏத்தி வாழும் இது -65-

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு வந்திவாய் வாய்ந்த மலர் தூவி வைகலும்
ஏய்ந்த பிறைக் கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான் இறைக்கு ஆட்படத் துணிந்த யான் -73-

அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும் அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும்
அமுதன்ன சொல்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட நன்மாலை ஏத்தி நவின்று -85-

——————————————-

மூன்றாம் திருவந்தாதி –

நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே வா
மருவி மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய் கண்ணனையே காண்க நம் கண் -8-

அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி
மறை என்றும் நன்கு ஓதி நன்கு உணர்வார் காண்பரே நாடோறும் பைங்கோத வண்ணன் படி -12-

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான்
இலாத சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூய்க் கை தொழுது முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

வடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும் கடியார் மலர் தூவிக் காணும்
படியானை செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே மெய்ம்மையே காண விரும்பு -22-

காண் காண் என விரும்பும் கண்கள் -கதிர் இலகு பூண்தார் அகலத்தான் பொன்மேனி
பாண் கண் தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம் பொற் கழல் பாடி யாம் தொழுதும் கை -35-

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம் தாழ்த்தி வணங்கத் தழும்பாமே
கேழ்த்த அடித்தாமரை மலர் மேல் மங்கை மணாளன் அடித்தாமரையாமலர் -96-

———————————————————–

நான்முகன் திருவந்தாதி –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு -9-

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால்
சூழ்த்த துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை வழா வண் கை கூப்பி மதித்து -11-

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் மலர் ஏற விட்டு இறைஞ்சி வாழ்த்த
வலராகில் மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீற் கண்டன் கண்ட நிலை -15-

தரித்து இருந்தேனாகவே தாரா கணப்போர் விரித்துரைத்த வெந்நாகத்து உன்னை
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது -63-

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத் தீக்கொண்ட செஞ்சடையான் சென்று
என்றும் பூக்கொண்டு வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச் செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-

—————————————————————-

திருவாசிரியம்

உலகு படைத்து உண்ட வெந்தை அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கு அவாவாருயிருகி யுக்க
நேரிய காதல் அன்பிலின்பீன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருட்க்கு அசைவோர் அசைக-2-

————————

பெரிய திருவந்தாதி –

வாழ்த்தி அவன் அடியைப் பூப் புனைந்து நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத
பாழ்த்த விதி எங்குற்றாய் என்றவனை ஏத்தாது என் நெஞ்சமே தங்கத்தானாமேலும் தங்கி -84-

——————————————————

இராமானுச நூற்றந்தாதி –

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71-

நையும் மனம் உன் குணங்களை யுன்னி என் நா இருந்து எம் ஐயன் ராமானுசன் என்று அழைக்கும்
அருவினையேன் கையும் தொழும் கண் கருத்திடும் காணக்
கடல் புடை சூழ் வையம் இதினில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே -102-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பரகால நாயகி பாசுரங்கள் —

July 24, 2018

1-திருவிடவெந்தை — திருத் தாயார் பாசுரப் பதிகம் -2-7
2-அட்ட புயகரத்தான் –திரு மகள் பாசுரப் பதிகம் -2-8-
3-திருவாலி -திரு மகள் பாசுரப் பதிகம் -3-6-
4-திருவாலி –திருத் தாயார் பாசுரப் பதிகம் -3-7-
5-பார்த்தன் பள்ளி — திருத் தாயார் பாசுரப் பதிகம் -4-8-
6-திருவரங்கம் –திருத் தாயார் பாசுரப் பதிகம் -5-5-
7-திருக் கண்ணபுரம் –திருத் தாயார் பாசுரப் பதிகம் -8-1-
8-திருக் கண்ணபுரம் -திருத் தாயார் பாசுரப் பதிகம்-8-2-
9-திருக் கண்ணபுரம் திரு மகள் பாசுரப் பதிகம்–8-3-
10-திருக் கண்ணபுரம் -திரு மகள் பாசுரப் பதிகம் –8-4-
11-திருக் கண்ணபுரம் திரு மகள் பாசுரப் பதிகம் –8-5-
12–திரு நாகை அழகியார் -திரு மகள் பாசுரப் பதிகம் -9-2-
13–திருக் குறுங்குடிப் பாசுரப் பதிகம் -9-5-
14–திருமாலிரும் சோலை பாசுரப் பதிகம் -9-9-
15–திரு யசோதா பிராட்டியார் பாவ திரு மகள் பாசுரப் பதிகம் -10-4-
16–திரு யசோதா பிராட்டியார் பாவ திரு மகள் பாசுரப் பதிகம் -10-5-
17–திரு யசோதா பிராட்டியார் பாவ திரு மகள் பாசுரப் பதிகம் -10-7-
18–பிரணய கலகம் -திரு மகள் பாசுரப் பதிகம் -10-8-
19–பழ மொழிகள் சேர்த்து அருளிய திருத் தாயார் பாசுரப் பதிகம் –10-9-
20–திரு மகள் பாசுரப் பதிகம் -10-10-
21–திரு மகள் பாசுரப் பதிகம் -11-1-
22–திரு மகள் பாசுரப் பதிகம் -11-2-
23–திரு மகள் பாசுரப் பதிகம் -11-3-
24–காணேடீ -சாழலே-பாசுரப் பதிகம் -11-5-
25–திரு நெடும் தாண்டகம் -11-20 -திருத் தாயார் பாசுரங்கள்
26—திரு நெடும் தாண்டகம் -25-28-திரு மகள் பாசுரங்கள் –
27–சிறிய திருமடல் -திரு மகள் பாசுரங்கள் –
28–பெரிய திருமடல் -திரு மகள் பாசுரங்கள் –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல்களில் ஷட் ரசங்கள் —

July 23, 2018

அன்று இவ் உலகம் போற்றி -திருப்பாவை -24
அடி போற்றி -திறல்  போற்றி -புகழ் போற்றி -கழல் போற்றி -குணம் போற்றி -வேல் போற்றி -ஆகிய ஷட் ரசங்கள்-

அருகலியா பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நென்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே -1-9-3-
உபயலிங்கத்வம் -நித்ய விபூதி நிர்வாகத்வம் -திவ்ய விக்ரஹ யோகம் -புண்டரீகாஷத்வம் –
கருட வாகனத்வம் -ஸ்ரீ ய பதித்வம் -ஆகிய ஷட் ரசங்கள்-

———————————————
பெரியாழ்வார் திருமொழி –
நம்முடை நாயகனே —
நான் மறையின் பொருளே —
நாபியில் நல் கமல நான் முகனுக்கு ஒருகால் தம்மனை யானவனே –
தரணி தல முழுதும் தாரையின்னுலகும் தடவிய தன்புறமும் விம்ம வளர்ந்தவனே –
வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலைதனுள் வென்று வருமவனே –
ஆயர்கள் போரேறே -1-5-3-
——————————————
சகடமுருள –
வஞ்ச முலைப் பேயின் நஞ்சமுது உண்டவனே –
கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டு எறியும் –
கரு நிற –
என் கன்றே –
தேனுகனும் முரனும் திண் திரள் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செருவதிரச் செல்லும் ஆனை-
ஆயர்கள் போரேறே –1-5-4-
————————————-
உன் வாயில் விரும்பியதனை நான் நோக்கி மண் எல்லாம் கண்டேன்
மனத்துள்ளே அஞ்சி மது ஸூதனனே என்று அறிந்தேன்
கண்ணா
என் கார் முகிலே
கடல் வண்ணா
காவலனே –2-3-6-
——————————————-
பெரிய திருமொழி —

ஊரான்
குடந்தை உத்தமன்
ஒரு கால் இருகால் சிலை வளைய தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான்
வற்றா வரு புனல் சூழ் பேரான்
பேர் ஆயிரமுடையான்
பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான் –1-5-4-
————————–
கொங்கு அலர்ந்த மலர்க குருந்தம் ஒசித்த கோவலன்
எம்பிரான்
சங்கு தடம் கடல் துயில் கொண்ட
தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம்
பொங்கு நீர்ச் செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேங்கடம் அடை நெஞ்சே –1-8 -1-
—————————————
நின்ற மா மருது இற்று வீழ நடந்த
நின்மலன்
நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத்தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதானிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன்
திருவேங்கடம் அடை நெஞ்சமே -1-8-3-
—————————————–
சோத்த நம்பிஎன்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
ஆத்தன் நம்பி
செங்கண் நம்பி
ஆகிலும் தேவர்க்கு எல்லாம் மூத்த நம்பி
முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது ஏத்தும் நம்பி
எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-6-
—————————————————
முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்து உரைத்த புனிதன்
பூவை வண்ணன்
அண்ணல் புண்ணியன்
விண்ணவர் கோன்
தனியன் சேயன் தான் ஒருவனாகிலும் தன்னடியார்க்கு இனியன்
எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-3-8-
——————————————
வேதத்தை
வேதத்தின் சுவைப் பயனை
விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை
நந்தனார் களிற்றைக்
குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை
அமுதை என்னை யாளுடை யப்பனை–திருவல்லிக்கேணிக் கண்டேனே -2-3-2-
————————————-
அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழி வயலே
அண்டமுறு முழ ஒலியும்
வண்டினங்கள் ஒலியும்
அருமறையின் ஒலியும்
வார் சிலம்பின் ஒலியும்
அண்டமுறு மலை கடலின் ஒலி திகழு நாங்கூர் அரிமேய விண்ணகரம் -3-10-5-
——————————————-
சந்தமாய்ச்
சமயமாகிச்
சமய ஐம்பூதமாகி
அந்தமாய்
ஆதியாகி
அருமறையவையுமாய் —
நாங்கை கந்தமார் காவளந்தண் பாடியாய்-களை கண் நீயே -4-6-9-
——————————————–
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே
மருவினிய மைந்தா
அந்தணாலி மாலே
சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே
நறையூர் நின்ற நம்பீ என் எந்தாய் –இந்தளூராய் -அடியேற்கு இறையும் இரங்காயே –4-9-2-
————————————————
தீ எம்பெருமான்
நீர் எம்பெருமான்
திசையும் இரு நிலனுமாய் எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான்
தந்தை தந்தை யாவீர்
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே –4-9-5-
——————————–
மாயவனே
மாதவனே என்கின்றாளால்
பிறவாத பேராளன்
பெண்ணாளன்
மண்ணாலான
விண்ணோர் தங்கள் அறவாளன்-என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே–5-5-8-
——————————————
கைம்மான மழ களிற்றைக்
கடல் கிடந்த கருமணியை
மைம்மான மரதகத்தை
மறையுரைத்த திருமாலை
எம்மானை எனக்கு என்று இனியானைப்
பனி காத்த அம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னகரத்தே –5-6-1-
———————————-
தாராளன்
தண்ணரங்க வாளன்
பூ மேல் தணியாளன்
முனியாளார் ஏத்த நின்ற பேராளன்
ஆயிரம் பேருடைய வாளன்
பின்னைக்கு மணாளன் பெருமை கேட்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-9-
———————————
கிடந்த நம்பி
குடந்தை மேவிக்
கேழலாய் யுலகை கிடந்த நம்பி
எங்கள் நம்பி
எறிஞர் அரண் அழிய கடந்த நம்பி
கடியார் இலங்கை உலகை யீரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-1-
——————————————–
திருவுக்கும் திருவாகிய செல்வா
தெய்வத்துக்கு அரசே
செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே
உலகுண்டவொருவா
திரு மார்பா –ஒருவர்க்கு ஆற்றி உய்யும் வகை யன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து —
ஒழியாது அருவித்தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல்திசை நின்ற வம்மானே -7-7-1-
——————————————
கரு மா முகிலுருவா
கனலுருவா
புனலுருவா
பெருமாள் வரையுருவா
பிறவுருவா நினதுருவா
திரு மா மகள் மருவும் சிறு புலியூர் சல சயனத்து அருமா கடல் அமுதே உனதடியே சரணாமே -7-9-9-
————————————————-
பெரும் புறக்கடலை
அடல் ஏற்றினைப்
பெண்ணை
யாணை
எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை
முத்தின் திரள் கோவையைப்
பத்தராவியை
நித்திலத் தொத்தினை
அரும்பினை
அலரை
அடியேன் மனத்தாசையை
அமுதம் பொதியின் சுவை கரும்பினைக்
கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-1-
—————————————-
கைம்மான மதயானை இடர் தீர்த்த கரு முகிலை
கைம்மான மணியை
அணி கொள் மரகதத்தை
எம்மானை எம்பிரானை
ஈசனை
என் மனத்து அம்மானை அடியேன் அடைந்து உந்து போனேனே –8-9-1-
—————————–
மிக்கானை
மறையாய் விரிந்த விளக்கை
என்னுள் புக்கானைப்
புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக்
கடிகைத் தடம் குன்றின் மிசை இருந்த அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே -8-9-4-
——————————————-
வலம்புரி யாழியானை
வரையார் திறல் தோளன் தன்னை
புலம் பூரி நூலவனைப்
பொழில் வேங்கட வேதியனை
சிலம்பியலாறுடைய திருமாலிருஞ்சோலை நின்ற
நலம் திகழ் நாரணனை நானுக்கும் கொல் என் நன்னுதலே -9-9-9-
—————————————–
வெள்ளியான் கரியான்
மணி நிற வண்ணன்
விண்ணவர் தமக்கு இறை
எமக்கு ஒள்ளியான்
உயர்ந்தான்
உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்–திருக் கோட்டியூரானே -9-10-3-
——————————
வங்க மா கடல் வண்ணன்
மா மணி வண்ணன்
விண்ணவர் கோன்
மது மலர்த் தொங்கல் நீண் முடியான்
நெடியான்
படி கடந்தான் –திருக் கோட்டியூரானே -9-10-5-
———————————-
பொன்னை
மா மணியை
அணி யார்ந்ததோர் மின்னை
வேங்கடத்து உச்சியில் கண்டு போய்
என்னை யாளுடைய ஈசனை
எம்பிரான் தன்னை –யாம் சென்று காண்டும் தண் காவிலே -10-1-2-
———————————–
பத்தராவியைப்
பால் மதியை
அணித் தொத்தை-மாலிருஞ்சோலைத் தொழுது போய்
முத்தினை
மணியை
மணி மாணிக்க வித்தினை –சென்று விண்ணகர் காண்டுமே -10-1-8-
—————————–

திருக் குறுந்தாண்டகம்

நிதியினைப்
பவளத்தூணை
நெறிமையால் நினைய வல்லார் கதியினைக்
கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டமாளும் மதியினை
மாலை
வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த நிதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே –1-
——————————————
காற்றினைப் புனலைத் தீயைக்
கடி மதிள் இலங்கை செற்ற ஏற்றினை
இமயமேய எழில் மணித் திரளை
இன்ப ஆற்றினை
அமுதம் தன்னை
அவுணன் ஆருயிரை யுண்ட கூற்றினை -குணம் கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே –2-
——————————————————-
மூவரில் முதல்வனாய் ஒருவனை
யுலகம் கொண்ட கோவினைக்
குடந்தை மேய குரு மணித் திரளை
இன்பப் பாவினைப்
பச்சைத் தேனைப்
பைம் பொன்னை
அமரர் சென்னிப் பூவினை புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே -6-
——————————–
இம்மையை
மறுமை தன்னை
எமக்கு வீடாகி நின்ற மெய்ம்மையை
விரிந்த சோலை வியன் திருவரங்க மேய செம்மையைக்
கருமை தன்னைத்
திருமலை ஒருமையானை -தன்மையை நினைவார் என் தன தலை மீசை மன்னுவாரே -7-
——————————

நெடும் தாண்டகம்

மின்னுருவாய் முன்னுருவில்
வேத நான்காய்
விளக்கு ஒளியாய்
முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய்
முன்னுருவில் பிணி மூப்பில்லாப் பிறப்பிலியாய் -பிறப்பதற்கே எண்ணாது

எண்ணும் பொன்னுருவாய்
மணி யுருவில் பூதம் ஐந்தாய்
புனலுருவாய்
அனலருவில் திகழும் சோதி
தன்னுருவாய்
என்னுருவில் நின்ற வெந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே– 1-
———————————————
நீரகத்தாய்
நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய்
நிறைந்த கச்சி யூரகத்தாய்
ஒண் துறை நீர் வெக்கா உள்ளாய்
உள்ளுவாருள்ளத்தாய்

உலகமேத்தும் காரகத்தாய்
கார் வானத்துள்ளாய்
கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்
பெறாது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே–8-

——————————–

வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர் மல்லையாய்
மதிட்கச்சி யூராய்
பேராய்
கொங்கத்தார் வளம் கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான் பங்கத்தாய்
பாற்கடலாய்
பாரின் மேலாய் பனி வரையில் உச்சியாய்
பவள வண்ணா
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே யுழி தருகேனே–9-
——————————————–

பொன்னானாய்
பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய்
இகழ்வாய தொண்டனேன் நான் என்னானாய் என்னானாய் என்னலல்லால் என்னறிவேன் ஏழையேனே
உலகமேத்தும் தென்னானாய்
வடவானாய்
குட பாலானாய்
குண பால மதயானாய்
இமையோர்க்கு என்றும் முன்னானாய்
பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களத்தானாய்
முதலானாயே -10-
—————————————————-

கல் எடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும்
காமரு பூங்கச்சி யூரகத்தாய் என்றும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும்
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்றும்
மல்லடர்த்து மல்லரை என்று அட்டாய் என்றும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்றும் சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே –13-
———————————————

திருவாய்மொழி-

வினையேன் வினை தீர் மருந்தானாய்
விண்ணோர் தலைவா
கேசவா
மாமை சேர் ஆயர் குல முதலே
மா மாயனே
மாதவா
சினையெய் தலையை மாறாமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாயினைய பெயரினாய் -என்று னைவன் அடியேனே–1-5-6-

—————————————-

மாயோன் தீய வளவாளைப் பெரு மா வஞ்சப் பேய் வீய தூய குழவியாய் விடைப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன்
வானோர் தனித் தலைவன்
மலராள் மைந்தன்
எவ்வுயிர்க்கும் தாயோன்
தம்மான்
என்னம்மான் -அம்மா மூர்த்தியைச் சார்ந்தே -1-5-9-
———————————–
சூழல் பழ வல்லான்
தொல்லை யம் காலத்துலகை கேழல் ஒன்றாகி கிடந்த கேசவன்
என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஓசித்தான்
விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே-1-9-2-
—————————————–

நம்பியைத்
தென் குறுங்குடி நின்ற
அச்செம் பொனே திகழும்
திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதியம் சோதியை
எம்பிரானை -என் சொல்லி மறப்பேனோ -1-10-9-
——————————-
முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே
பவித்ரனே
கன்னலே
யமுதே
கார் முகிலே
என் கண்ணா -நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக் கொள்ளே -2-3-7-
—————————————–

வைகுந்தா
மணி வண்ணனே
என் பொல்லாத் திருக் குறளா
என்னுள் மன்னி வைகும் வைகல் தோறும் அமுதாய
வானேறே
செய்குந்தா
வரும் தீமை யுண்ணாடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா -உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே -2-6-1-
—————————————–
எந்தாய்
தண் திருவேங்கடத்துள் நின்றாய்
இலங்கை செற்றாய்
மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாயமுதே
உன்னை என்னுள்ளே குழைத்த எம் மைந்தா
வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-
———————————–
நாரணன்
முழு ஏழு உலகுக்கும் நாதன்
வேத மயன்
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன்
எந்தை
சீரணங்கமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான்
என் மாதவனே –2-7-2-
————————————
பற்பநாபன்
உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன்
என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
என்னமுதம்
கார் முகில் போலும் வேங்கட நல் வெற்பன்
விசும்போர் பிரான்
எந்தை
தாமோதரனே–2-7-11-
————————————————–
பங்கயக் கண்ணன் என்கோ
பவளச் செவ்வாயன் என்கோ
அங்கதிரடியன் என்கோ
அஞ்சன வண்ணன் என்கோ
செங்கதிர் முடியின் என்கோ
திரு மறு மார்வன் என்கோ
சங்கு சக்கரத்தன் என்கோ
சாதி மாணிக்கத்தையே -3-4-3-
——————————————-
வானவர் ஆதி என்கோ
வானவர் தெய்வம் என்கோ
வானவர் போகம் என்கோ
வானவர் முற்றும் என்கோ
ஊனமில் செல்வம் என்கோ
ஊனமில் சுவர்க்கம் என்கோ
ஊனமில் மோக்கம் என்கோ
ஓளி மணி வண்ணனையே -3-4-7-
———————————————–
மூவராகிய மூர்த்தியை
முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
சாவமுள்ளன நீக்குவானைத்
தடம் கடல் கிடந்தான் தன்னை
தேவதேவனைத்
தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியை
பாவ நாசனைப்
பங்கயத் தடம் கண்ணனைப் பரவுமினோ –3-6-2-
—————————————-
பரவி வானவர் ஏத்த நின்ற பரமனைப்
பரஞ்சோதியை
குரவை கோத்த குழகனை
மணி வண்ணனைக்
குடக் கூத்தனை
அரவமேறி யலை கடல் அமரும் துயில் கொண்ட வண்ணலை –
இரவு நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ -3-6-3-
———————————————
உடையார்ந்த வாடையன்
கண்டிகையன்
உடை நாணினன்
பொன் முடியன்
மற்றும் பல்கலன்
நடையாவுடைத் திரு நாரணன் -தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே -3-7-4-
————————————
ஏக மூர்த்தி
இரு மூர்த்தி
மூன்று மூர்த்தி
பல மூர்த்தியாகி
ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே -உன் ஆகமுற்றும் அகத்தடக்கி ஆவி யல்லால் மாய்த்ததே -4-3-3-
———————————————-
அரி
என் அம் பொற் சுடரே
செங்கண் கரு முகிலே
எரியே
பவளக்குன்றே
நால் தோள் எந்தாய் யுனதருளே-பிரியா வடிமை என்னைக் கொண்டாய்
குடந்தைத் திருமாலே தறியேன் இனி யூன் சரணம் தந்து என் சன்மம் களையாயே-5-8-7-
———————————————-
என்னப்பன்
எனக்காயிகுளாய்
என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன்
மணியப்பன்
முத்தப்பன்
என்னப்பனுமாய்
மின்னப் பொன் மதிள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த வப்பன்
தன் ஒப்பார் இல்லப்பன் தந்தான் தனதாள் நிழலே -6-3-9-
——————————————–
உலகமுண்ட பெரு வாயா
உலப்பில் கீர்த்தி யம்மானே
நிலவும் சுடர் சூழ் ஓளி மூர்த்தி
நெடியாய்
அடியேன் ஆர் உயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத்தெம்பெருமானே
குல தொல்லடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே -6-10-1-
——————————————
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்
பற்றிலார் பற்ற நின்றானே
கால சக்கரத்தாய்
கடலிடம் கொண்ட கடல் வண்ணா
கண்ணனே என்னும்
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும்
என் தீர்த்தனே என்னும்
கோலா மா மழைக் கண் பனி மல்க விருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே -7-2-7-
——————————————
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ இன்னே யானால் சிறந்த நின் தன்மை
யது விது வுது என்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே
நெய்யின் சுவையே
கடலினுள் அமுதமே
அமுதில் பிறந்த இன் சுவையே
சுவையது பயனே
பின்னை தோள் மணந்த பேராயா -8-1-7-
—————————————–
பெரிய வப்பனைப்
பிரமன் அப்பனை
உருத்திரன் அப்பனை
முனிவர்க்கு உரிய வப்பனை
யமரர் யப்பனை
உலகுக்கோர் தனியப்பன் தன்னை –8-1-11-
—————————————
மாலரி
கேசவன்
நாரணன்
சி மாதவன்
கோவிந்தன்
வைகுந்தன் –என்று என்று ஓலமிட்டு வென்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் -8-2-7-
—————————–
கண்கள் சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்து
உள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன்
சுடர் முடியன்
நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே -8-8-1-
——————————
தானேயாகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானேயாய்
தானே யான் என்பானாகித்
தன்னைத்தானே துதித்து
எனக்குத் தேனே
பாலே
கன்னலே
அமுதே
திருமாலிருஞ்சோலை கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே -10-7-2-
——————————————–
முனியே
நான்முகன்
முக்கண்ணப்பா
என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண்
கரு மாணிக்கமே
என் கள்வா
தனியேன் ஆர் உயிரே
என் தலைமிசையாய் வந்திட்டு இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே –10-10-1-
———————————————

முதல் திருவந்தாதி –

இடந்தது பூமி
எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனை முன்னஞ்ச
கிடந்ததுவும் நீரோத மா கடலே
நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது –1-
—————————————-
சென்றால் குடையாம்
இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம்
நீள் கடலுள் என்றும் புணையா மணி விளக்காம்
பூம் பட்டாம்
புல்கும் அணையாம்–திருமாற்கு அரவு -53-
————————–
இரண்டாம் அந்தாதி –

மனத்துள்ளான்
வேங்கடத்தான்
மா கடலான்
மற்றும் நினைப்பரிய நீள் அரங்கத்துள்ளான்
எனப்பலரும் தேவாதி தேவன் எனப்படுவான்
முன்னொரு நாள் மாவாய் பிளந்த மகன் –28-
————————————-
பயின்றது அரங்கம்
திருக்கோட்டி
பன்னாள் பயின்றதுவும் வேங்கடமே
பன்னாள் பயின்றது அணி திகழும் சோலை
அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் — 46-
——————————
அத்தியூரான்
புள்ளையூர்வான்
அணி மணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான்
முத்தீ மறையாவான்
மா கடல் நஞ்சுண்டான் தனக்கும் இறையாவான்
எங்கள் பிரான் –96-
————————————
எங்கள் பெருமான்
இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால்
திரு மார்பா
பொங்கு பட மூக்கில் ஆயிரவாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
கூட மூக்கில் கோயிலாகக் கொண்டு -97-
———————————————
மாலே
நெடியோனே
கண்ணனே
விண்ணவர்க்கு மேலா
வியன் துழாய்க் கண்ணியனே
மேலால் விழாவின் காய் குன்றினால் வீழ்த்தவனே –என்தன் அளவன்றால் யானுடைய வன்பு -100-
————————————–

மூன்றாம் திருவந்தாதி –

நன்கோதும் நால் வேதத்துள்ளான்
நறவிரியும் பொங்கோத அறிவிப் புனல் வண்ணன்
சங்கோதப் பாற்கடலான்
பாம்பணையின் மேலான்
பயின்றுரைப்பார் நூல் கடலான்
நுண்ணறிவினான் — 11-
————————————
சேர்ந்த திருமால் கடல்
குடந்தை
வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை
நிறை விசும்பும்
வாய்ந்த மறை
பாடகம்
அனந்தன்
வண் துழாய்க் கண்ணி இறை பாடியாய விவை -30-
——————————
பாற்கடலும்
வேங்கடமும்
பாம்பும்
பனி விசும்பும்
நூல் கடலும்
நுண்ணூல தாமரை மேல் பாற்பட்டு இருந்தார் மனமும்
இடமாகக் கொண்டான் குருந்து யோசித்த கோபாலகன் -32-
————————————
கைய கனல் ஆழி
கார்க்கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம்
வெஞ்சுடர் வாள் செய்ய படை
பரவை பாழி பனி நீர் உலகம்
அடி அளந்த மாயர் அவர்க்கு –36-
——————————————
விண்ணகரம்
வெக்கா
விரி திரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை
மண்ணகத்த தென் குடந்தை
தேனார் திருவரங்கம் தென் கோட்டி தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு -62-
——————————————-

நான்முகன் திருவந்தாதி

நாகத்தணைக் குடந்தை
வெக்கா
திருவெவ்வுள்
நாகத்தனை யரங்கம்
பேர்
அன்பில்
நாகத்தணைப் பாற்கடல் கிடைக்கும் ஆதி நெடுமால் அணைப்பார் கருத்தனாவான் -36-
——————————————
அன்பாவாய்
ஆரமுதமாவாய்
அடியேனுக்கு இன்பாவாய்
எல்லாமும் நீ யாவாய்
பொன் பாவை கேள்வா
கிளர் ஓளி என் கேசவனே-கேடின்றி ஆள்வாய்க்கு அடியேன் நானாள் -59-
—————————————–

திருவிருத்தம்

தீவினைக்கு அரு நஞ்சை
நல்வினைக்கு இன்னமுதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை
புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் வல்லாயனை
அன்று உலகு யீரடியால் தாவின வேற்றை
எம்மானை எஞ்ஞான்று தலைப் பெய்வனே –89-
————————-

பெரிய திருவந்தாதி –

பாருண்டான்
பாருமிழ்ந்தான்
பாரிடந்தான்
பாராளந்தான்
பாரிடம் முன் படைத்தான் என்பரால்
பாரிடம் ஆவானும் தானானால் ஆரிடமே மற்றொருவருக்கு ஆவான் புகாவால் அவை –42-

————————————–

சிறிய திருமடல்

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது
மாற்று யாராலே கல்மாரி காத்தது தான்
ஆழி நீர் ஆரால் கடைந்திடப்பட்டது
அவன் காண்மின் ஊரா நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டும் உமிழ்ந்து ஆராத தன்மையான்
ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி –ஆராத வெண்ணெய் விழுங்கி —

———————————————
சீரார் திருவேங்கடமே
திருக் கோவலூரே
மதிட் கச்சி யூரகமே
பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே
வெக்காவே
போராலி
தண் கால்
நறையூர்
திருப் புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம்
கண மங்கை
காரார் மணி நிறக் கண்ணனூர்
விண்ணகரம்
சீரார் கணபுரம்
சேரை
திருவழுந்தூர்
காரார் குடந்தை
கடிகை
கடல் மல்லை
ஏரார் பொழில் சூழ் இடவெந்தை
நீர்மலை
சீராரும் மாலிருஞ்சோலை
திரு மோகூர்
பாரோர் புகழும் வதரி
வடமதுரை ஊராய வெல்லாம் ஒழியாமே-
—————————————-

பெரிய திருமடல் –

தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியில் செம்பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை
மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி என்னுடைய இன்னமுதை
எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை
வெள்ளறையுள் கல்லறை மேல் பொன்னை
மரகதத்தைப் புட்குழி எம் போரேற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை
வல்லவாழ்ப் பின்னை மணாளனைப்
பேரில் பிறப்பிலியை
தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை
இடவெந்தை ஈசனை
மன்னும் கடல் மல்லை மாயவனை
வானவர் தம் சென்னி மணிச் சுடரைத்
தண் கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத தத்துவத்தை
முத்தினை
அன்னத்தை
மீனை
அரியை
அருமறையை
முன் இவ்வுலகுண்ட மூர்த்தியை
கோவலூர் மன்னும் இடை கழி எம்மாயவனை
பேய் அலறப் பின்னும் முலையுண்ட பிள்ளையை
அள்ளல் வாய் அன்னம் இறை தேர் அழுந்தூர் எழுஞ்சுடரை
தென் தில்லைச் சித்திர கூடத்து என் செல்வனை
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை
மாலிருஞ்சோலை மணாளனை
கொன்னவிலும் ஆழிப் படையணி
கோட்டியூர் அன்னவுருவின் அரியை
திரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை
இந்தளூர் அந்தணனை
மன்னு மதிட் கச்சி வேளுக்கை ஆளரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை
வெஃகாவில் உன்னிய யோகத்துறக்கத்தை
ஊரகத்துள் அன்னவனை
பட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை
வானவர் தம் முன்னவனை
மூழிக் களத்து விளக்கினை
அன்னவனை
ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை
நீர் மலை மேல் மன்னு நான்கும் ஆனவனை
புல்லாணித் தென்னன் தமிழை
வடமொழியை
நாங்கூரில் மன்னு மணி மாடக் கோயில் மணாளனை
நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை
நான் வணங்கும் கண்ணனைக்
கண்ணபுரத்தானை
தென்னரையூர் மன்னு மணி மாடாக கோயில் மணாளனை
கன்னவில் தோள் காளையை கண்டு ஆங்கு கை தொழுது
————————————–

இராமானுச நூற்றந்தாதி

தவம் தரும்
செல்வம்
தகவும் தரும்
சலியாப் பிறவிப் பயன்தரும்
தீ வினை பாற்றித்தரும்
பரந்தாமம் எண்ணும் திவம் தரும் –தீதில் ராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்க்கு
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே -94-

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செயல்களில் –திவ்ய நாமங்கள்-

July 20, 2018

அம்மான்
அமுதம் உண்டாய்
அரி
அரி முகன்
அரும் கலம்
அநங்க தேவன்
அச்சுதன்
அழக பிரான் .
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் –
அன்று உலகம் அளந்தான்-
அரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் –
அண்ணாந்து இருக்கவே அவளைக் கைப் பிடித்த பெண்ணாளன் –
அல்லல் விளைத்த பெருமான் –
அளி நன்குடைய திருமால்

ஆற்றல் அனந்தல் உடையாய்
ஆலின் இலையாய்
ஆரா அமுதம்
ஆழி மழை கண்ணா  
ஆயர் கொழந்து
ஆயர்பாடி அணி விளக்கு
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு-
ஆயன்
ஆழியம் செல்வன்-
ஆழியும் சங்கும் ஒண் தாண்டும் தங்கிய கையவன் –
ஆலின் இலைப் பெருமான்-
ஆயர்பாடிக் கவர்ந்துண்ணும் காரேறு –

இலங்கை அழித்தாய்
இலங்கை அழ்த்த பிரான்
இறைவா
இருடிகேசன்
ஈசன் .

எம்பெருமான்
எம் ஆதியாய்
எங்கள் அமுது
எம் அழகனார் –
என் தத்துவன்-
எம்மானார் –

ஏறு திருவுடையான் –
ஏலாப் பொய்கள் உரைப்பான் –

உம்பர் கோமான் –
உலகம் அளந்தாய் –
உதரம் யுடையாய் –
உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்

ஊழி முதல்வன் –
ஊழியான் –
ஊற்றமுடையாய்

ஓங்கி உலகளந்த உத்தமன் – – –
ஓங்கி உலகளந்த உம்பர் கோமான்
ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன் –

கா மகான்
காயா வண்ணன்
கடல் வண்ணன்
கடல் பள்ளியாய்
கள்ள மாதவன் —
கமல வாணன்–
கமல வண்ணன்-
கண் அழகர் .
கன்று குணிலா எறிந்தாய்
கன்று மேய்த்து விளையாடும் கோவலன்
கப்பம் தவிர்க்கும் கலி
கரிய பிரான்
கரு மாணிக்கம்
கரு மா முகில்
கருட கொடி உடையான் –
கருளக் குடியுடைப் புண்ணியன்
கண்ணபிரான் –
கண்ணன் என்னும் கரும் தெய்வம் –
கஞ்சைக் காய்ந்த கரு வில்லி –

காய்ச்சின மா களிறு அன்னான் –
கார்க் கடல் வண்ணன் –

குடமாடு கூத்தன்
குடந்தைக் கிடந்தான் –
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன்
குல விளக்கு
குன்று குடையாய் எடுத்தாய்
குறும்பன்
குழல் அழகர்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல எம் கோ –
குறும்பு செய்வானோர் மகன் –
குடந்தைக் கிடந்த குடமாடி –
குணுங்கு நாறிக் குட்டேறு

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் –
கூத்தனார்

கேசவன்
கேசவ நம்பி

கொடிய கடிய திருமால்
கொழந்து
கொல்லை யரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் –
கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் –

கோமகன் –
கோளரி மாதவன்
கோலால் நிரை மேய்த்தவன்
கோலம் கரிய பிரான்
கோமள ஆயர் கொழுந்து
கோவிந்தா
கோவர்தனன் –

சகடம் உதைத்தாய் –
சங்கொடு சக்கரத்தான்-
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் —
சரமாரி தொடுத்த தலைவன் –
சங்க மா கடல் கடைந்தான் –

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் –

சுடர் –
சுந்தரன் –
சுந்தர தோளுடையான்-

சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற சுந்தரன் –

சீரிய சிங்கம் –
ஸ்ரீ தரன்

செங்கண் மால் —
செம்மை யுடைய திருமால் –
செப்பம் யுடையாய் –
செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமால் –
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்
சோலை மலைப் பெருமான்-
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் –

தருமம் அறியாக் குறும்பன்
தத்துவன்–

தாமோதரன்
தாமரைக் கண்ணன் –
தாடாளன் –

த்வராபதி எம்பெருமான்
த்வாராபதி காவலன்

திறல் யுடையாய் –
திரு –
திருமால்-
திருமால் இருஞ்சோலை தன்னுள் நின்ற பிரான்
திரு மால் இரும் சோலை நம்பி –
திருவரங்கச் செல்வனார் –
திரு விக்ரமன் –
திரி விக்ரமன் –
திருமங்கை தங்கிய சீர் மார்வர் –

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் –

துழாய் முடி மால்
துவரைப் பிரான்-

தென் இலங்கைக் கோமான் –
தென் இலங்கை செற்றாய் –

தேவாதி தேவன்
தேச முன் அளந்தவன்
தேசுடைய தேவர்
தேவனார் வள்ளல்
தேவகி மா மகன்

பத்ம நாபன்
பங்கயக் கண்ணன் –
பெரியாய் –
பக்த விலோசனன் –
பச்சை பசும் தேவர்-
பந்தார் விரலி உன் மைத்துனன்
பட்டி மேய்ந்தோர் காரேறு
பலதேவர்கோர் கீழ்க் கன்று

பாம்பணையான் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன்
பாலகன் –
பாழி யம் தோளுடைப் பற்ப நாபன்
பால் ஆலிலையில் துயில் கொண்ட பரமன் –

பிள்ளாய் –

புள் அரையன் –
புள்ளின் வாய் கீண்டான் –
புள் வாய் பிளந்தான் –
புண்ணியன் –
புராணன்-
புருவம் வட்டம் அழகிய பொருத்தமிலி
புறம் போல் உள்ளும் கரியான் –
பருந்தாள் களிற்று அருள் செய்த பரமன்

பூப்புனைக் கண்ணிப் புனிதன் –
பூ மகன் –
பூவை பூ வண்ணன் –

பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் –
பொருத்தமுடையவன் –
பொல்லா குறளுரு –
பொருத்தமுடைய நம்பி –

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –

பீதக வாடை யுடையான் –
பெரியாய்-
பெரும் தாளுடைய பிரான்

மகான்
மால்
மாயன் –
மா மாயன் –
மா வாயைப் பிளந்தான் –
மா மஹன்-
மா மத யானை யுதைத்தவன் —
மாதவன் –
மதிள் அரங்கர்-
மது ஸூதனன்
மலர் மார்பன் –
மணவாளர் –
மணி வண்ணன் –
மருதம் முறிய நடை கற்றவன் –
மருப்பினை ஒசித்தவன்–
மல்லரை மாட்டியவன்-
மால் இரும் சோலை மணாளனார் –
மனத்துக்கு இனியான் –
முகில் வண்ணன்
மசுமையிலீ —
மன்னிய மாதவன் –
மதுரைப்பதிக் கொற்றவன் –
மா மணி வண்ணன்
மணி முடி மைந்தன் –
மதுரையார் மன்னன் –
மைத்துனன் நம்பி மதுசூதனன் –
மா வலியை நிலம் கொண்டான் –
மாணியுருவாய் யுலகளந்த மாயன் –
மாலாய்ப் பிறந்த நம்பி –
மாலே செய்யும் மணாளன் –

நாராயணன் –
நாராயணன் மூர்த்தி –
நாகணையான் –
நாரண நம்பி –
நாற்றத் துழாய் முடி நாராயணன்
நந்த கோபன் குமரன் –
நந்த கோபன் மகன் –
நரன் –
நெடுமால் –
நீர் வண்ணன் –
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் –
நம்மையுடைய நாராயணன் நம்பி –
நலம் கொண்ட நாரணன் –
நல் வேங்கட நாடர் –
நாகணை மிசை நம் பரர்-
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் –

யமுனைத் துறைவன் –
யசோதை இளம் சிங்கம் –
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து

வாய் அழகர் –
வட மதுரை மைந்தன் –
வட மதுரையார் மன்னன் –
வாஸூ தேவன் –
வேங்கடவன் –
வேங்கட வாணன் –
வைகுந்தன் –
வல்லான் –
வாமனன் –
வேட்டை ஆடி வருவான் –
விமலன் –
வித்தகன் –
வில்லிபுத்தூர் உறைவான் –
விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தன் –
வள்ளுகிரால் இரணியனை உடல் கிடந்தான் –
வேங்கடத்துச் செங்கண்மால் –
வேங்கடக்கோன் –
வேத முதல்வர் –
வெற்றிக் கருளக் கொடியான் –
வில்லி புதுவை நகர் நம்பி –
வினைதை சிறுவன் மேலாப்பின் கீழ் வருவான் –
வீதியார வருவான் –
வெளிய சங்கு ஓன்று யுடையான்-
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
வேட்டையாடி வருவான்

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –