Archive for April, 2018

அழகிய மணவாளச் சீயர் அன்போடு அருளிச் செய்த பன்னீராயிரப்படி –8-4-

April 30, 2018

நாலாம் திருவாய் மொழியில் -கீழ் –
அவனுடைய ஸுகுமார்யத்தாலே தனிமைக்கு அஞ்சின இவருடைய பயம் தீரும்படி பரிவரையும் சக்தியையும் காட்டி
ஆஸ்வசிப்பித்த சர்வேஸ்வரன் இவர் இப்படி அஞ்சிற்று விரோதி பூயிஷ்ட தேசம் என்றாய் இருக்கும் –
நம்முடைய விரோதி நிவர்த்தகத்வத்தையும் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி சக்தியையும் காட்டுவோம் என்று இவர் திரு உள்ளத்திலே பிரகாசிப்பிக்க
அவனுடைய அகில விரோதி நிவர்த்தகத்வத்தையும்
அசேஷ ஜகத் விஷயமான ஸ்ருஷ்ட்யாதி வியாபாரத்தையும்
ஆஸ்ரித ஆபத்சகத்வத்தையும்
ஆஸ்ரித அர்த்தமான அதிசயித வியாபாரத்தையும்
ஆஸ்ரயணீய ஸ்தலாந்தர விலக்ஷணமான தேச விசேஷ ஸ்ததிதியையும்
ஆசிரயணீயதா வை லக்ஷண்யத்துக்கு அடியான சர்வ பிரகார உபகாரகத்வத்தையும்
அநு பாவ்யமான ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஜெகஜ் ஜென்மாதி ஹேதுத்துவத்தையும்
ஸ்ரஷ்ட ருஸ் ருஜ்யாதி விபாகம் இல்லாத சர்வாத்ம பாவத்தையும்
சத்தா விபூதி ஹேதுவான நிருபாதிக சேஷித்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் பரிவரான வைதிக அக்ரேஸருடைய சம்பத்தே தனக்கு சம்பத்தாம் படி
திருச் செங்குன்றூரிலே எழுந்து அருளி நின்ற அதிசயத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டராகிறார்-

——————————————————

முதல் பாட்டில் குவலயா பீடம் அகில விரோதி நிராசகனான சீர் கொள் சிற்றாயன் வர்த்திக்கிற
திருச் செங்குன்றூர் நமக்கு ப்ராப்யமான ஆஸ்ரயணீய ஸ்தலம் என்கிறார் –

வார்கடா வருவி யானை மா மலையின்
மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட
மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-

வார்கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடிறுத்துருட்டி–பாய்கிற மதமாகிற அருவியையுடைய ஆனையாகிற
பெரிய மலையினுடைய கொம்புகளாகிற சேர்ந்த சிகரங்களை முறித்து அநாயாசேன ஆனையை உருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்–ஆனை கொம்பு முறிந்து இருக்கவும்
நடத்திக் கொண்டு வர வல்ல சிஷையிலே திண்மையை யுடையனான பாகனுடைய பிராணனை அழித்து
அனந்தரத்திலே ரங்க மத்யஸ்தரான சாணூர முஷ்டிகராகிற மல்லரைக் கொன்று ரங்கம் சூழ்ந்த மச்சுக்களிலே நிற்பாராய்
போர் கடா வரசர் புறக்கிட மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த–போரை நடத்தக் கடவ ராஜாக்கள் பிறக்கிட்டுப் போம்படியாக
உத்துங்கமான மாடத்தில் மேல் நிலத்திலே இருக்கிற கம்சனை பசளைக் குடம் யுடைத்தால் போலே தள்ளிக் குதித்து உடைத்துப் பொகட்ட
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–வீர ஸ்ரீ யை யுடையனாய் பாலனான
ஸ்ரீ கிருஷ்ணன் எழுந்து அருளி நிற்கிற திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு ஆனது எங்களுக்கு சென்று கிட்டுக்கைக்கு ஆஸ்ரயணீய ஸ்தலம்

————————————————————–

அநந்தரம் -அசேஷ ஜகத் விஷயமான ஸ்ருஷ்ட்யாதி வியாபார சமர்த்தனாய் -திருச் செங்குன்றூரில்
எழுந்து அருளி இருக்கிறவன் அல்லது எனக்கு நல் துணை இல்லை என்கிறார்

எங்கள் செல் சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்றென்னமர் துணையே–8-4-2-

எங்கள் செல் சார்வு யாமுடையமுதம் இமையவரப்பன் என்னப்பன்–எங்களுக்கு சென்று ஆஸ்ரயிக்கப்படுவதான புகலிடமாய் –
புகலிடமாம் அளவன்றியே நாம் யுடையோமான போக்யமுமாய் –
அஸ்கலித ஞானரான ஸூ ரிகளுக்கு உபகாரகனாய் அப்படியே எனக்கும் உபகாரகனாய்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம்மருவன்-சம்ருத்தமான லோக த்ரயத்தையும்
ஸ்ருஷ்டித்து ரஷித்து சம்ஹரிப்பானாய் -இதுக்குப் பொருந்தின மூர்த்தி த்ரயத்தையும் யுடையனாய் –
இவ்வாகாரங்கள் எனக்குப் பிரகாசிக்கும் படி எனக்கு அந்தராத்மாவாய் –
அப்படியே முகம் தோன்றாமை நிற்கை அன்றியே கண் கண்டு அனுபவிக்கும்படி
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ் திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு–இளமையாலே சிவந்த கயல்கள் உகளிக்கும் படி
தேன் விஞ்சின மருத நிலத்தால் சூழப்பட்ட திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறுஆகிற விலக்ஷண தேசத்திலே
பணை-நீர் நிலமுமாம் –
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்றென்னமர் துணையே–பொருந்தி வர்த்திக்கிற சகல சத்தா
ஹேது பூதனானவன் அல்லது வேறு எனக்கு அநு ரூபமான சகாயம் ஆர் தான்

————————————————————-

அநந்தரம் ஸ்ரீ வராஹ ரூபியாய் பிரளய ஆபத்தில் பூமியை இடந்து எடுத்து ரஷித்தவன்
திருவடிகள் ஒழிய வேறு உபாயம் இல்லை -என்கிறார்

என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள
என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும்
பிறிதில்லை எனக்கே–8-4-3-

என்னமர் பெருமான் இமையவர் பெருமான்–நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகனானால் போலே எனக்கு அநு ரூப நாயகனாய்
இருநிலம் இடந்த வெம்பெருமான்–மஹா பிருத்வியை பிரளய ஆபத்தில் ஈடுபடாமல் இடந்து எடுத்த என்னுடைய நாதனாய்-அப்படியே
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை யாள்கின்ற வெம்பெருமான்–அநாதியாய் பிரபலமான பாபங்கள் எல்லாம்
ஏக உத்யோகத்தில் நசிக்கும்படி என்னை அடிமை கொண்டு அருளுகிற பெருமையை யுடையனாய்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரைமீ பால்–தெற்குத் திக்குக்கு அலங்காரமாக
கொள்ளப்படுவதான திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரையின் மேல் பக்கத்திலே
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே–நின்ற நிலை அழகிலே என்னை
அடிமை யாக்கினவனுடைய திருவடிகளை ஒழிய என்னுடைய மநோ ரத திசையிலும் வேறொரு புகல் இல்லை –

—————————————-

அநந்தரம் ஆஸ்ரித அர்த்தமான த்ரை விக்ரம சமுத்திர மதகியான ரூபமான அதிசயித வியாபாரத்தை யுடையவன்
திருவடிகளை ஒழிய வேறு எனக்கு ஒரு ரக்ஷகரும் இல்லை என்கிறார் –

பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப்
பேருருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்
அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4-

பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப் பேருருவமாய் நிமிர்ந்த–மஹா அவகாசகமான த்ரை லோக்யமும்
நிறையும்படியாக பெரிய வடிவை யுடையனாய்க் கொண்டு வளர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான்-ஸ்ரீ வாமன ப்ரஹ்மசாரியான என் ஸ்வாமியாய்
அதி கோஷத்தை யுடைத்தான கடலைக் கடைந்த தர்ச நீயமான ரத்னம் போலே இருக்கிற
திரு வடிவை எனக்குப் பிரகாசிப்பித்த நாதனாய்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ் திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு–செறிந்த குலையையுடைய
வாழை கமுகு தெங்குகளின் நிரைகள் சூழ்ந்த
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு ஆகிற திருப்பதியில் வர்த்திக்கிறவர்கள்
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான் அடி இணைய யல்லதோர் அரணே-உன்னை உள்ளபடி அறியும்படியாக
யாவத் பிரகாசம் பண்ணி எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளை ஒழிய
வேறு எனக்கு ஓர் ஏகதேசமும் ஒரு ரக்ஷகர் இல்லை

———————————————————————

அநந்தரம் -அர்ச்சா ஸ்தலாந்தரங்களும் அவனை ஒழிந்து இராது இருக்கத் திருச் செங்குன்றூரில்
நிலை ஒழிய என் நெஞ்சு பொருந்துகிறது இல்லை என்கிறார் –

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை
அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5-

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை அது பொருளாகிலும் அவனை-திருச் செங்குன்றூர் ஒழிந்த அர்ச்சா ஸ்தலங்களான
புகலிடமும் அவனை ஒழிந்து வேறாய் இருப்பது இல்லை -அதுவே அர்த்த ஸ்திதிஆனாலும்
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது ஆதலால் அவனுறைகின்ற–திருச் செங்குன்றூரில் நிற்கிறவனை ஒழிய என் ஆத்மவஸ்து
பொருந்தி கிடக்கிறது இல்லை -ஆகையால் அவன் நித்ய வாசம் பண்ணும் தேமாய்
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த நறும் புகை விசும்பொளி மறைக்கும்–ப்ரேம பூயிஷ்ட்டரான சதுர்வேதிகள் யாகாதிகளிலே
முகத்தாலே சமர்ப்பித்த ஹவிர் அக்னியான தூமமானது ஆகாசத்தில் ஆதித்யாதி தேஜஸ்ஸை மறைக்கும்படியாய்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-விலக்ஷணமாய் ஓங்கின மாடங்களை யுடைத்தான
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு ஆனது எனக்கு நிர்ப்பயமான புகலிடம்
அன்றியே
கீழ் அவன் திருவடிகளை ஒழிய உபாயம் இல்லை என்றாராய் -அல்லாத கர்மாதி உபாயங்களை தத் சம்பந்திகள் அன்றோ என்கிற
சங்கையிலே அல்லாத ரக்ஷண உபாயங்களும் தத் ஆஸ்ரயண ரூபங்கள் ஆகையால் அவனை ஒழிந்து இருப்பது ஓன்று இல்லை –
அது வேதாந்த ஸித்தமான அர்த்தம் -ஆனாலும் தத் ஏக ரஷ்யமான என் ஆத்மாவானது
அவ்யவஹித உபாயமான அவனை ஒழிந்த சத்வாரா உபாயங்களில் அநு ரூப ப்ரவ்ருத்தி பண்ணிக் கிட்ட மாட்டு கிறதில்லை –
ஆதலால் அவன் வர்த்திக்கிற அர்ச்சா ஸ்த்தலமே எனக்குப் புகலிடம் என்றாராகவுமாம்

——————————————————————–

அநந்தரம் சர்வ பிரகார உபகாரகனாய் ஷீரார்ணவ சாயியான சர்வேஸ்வரனை பரிவரான
வைதிக அக்ரேஸரர் வர்த்திக்கிற திருச் செங்குன்றூரிலே காணப் பெற்றேன் என்கிறார் –

எனக்கு நல்லரணை எனதாருயிரை
இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்
தடங்கடல் பள்ளியம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-

எனக்கு நல்லரணை எனதாருயிரை இமையவர் தந்தை தாய் தன்னை–எனக்கு நிர்ப்பயமான புகலிடமாய் -அவ்வளவன்றியே –
எனக்கு சத்தா தாரகனாய் -நித்ய ஸூரிகள் சத்தைக்கும் விருத்திக்கும் ஹேது பூதன் ஆகையால்
அவர்களுக்கும் தந்தை தாயாய் இருப்பானாய்
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத் தடங்கடல் பள்ளியம்மானை–சர்வஞ்ஞனான தனக்கும் தன் பெருமை அறிய அரியனாய்
இருக்குமவனாய் -ஆஸ்ரித ரக்ஷணார்த்தமாக விஸ்தீர்ணமான கடலிலே கண் வளர்ந்து அருளுமவனான சர்வேஸ்வரனை
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்–நெஞ்சிலே கொள்ளப்பட்ட பகவத் குணங்களை யுடையரான
மூவாயிரவர் ஞானாதி சம்பத்தை யுடையரான ருத்ரனும் ப்ரஹ்மாவும் சர்வேஸ்வரனான தானும் ஓக்கும்படி –
ஓர் ஒருவரே ஜகத் ஸ்ருஷ்டியாதிகளுக்கு ஷமரானவர்கள் பகவத் அனுபவம் ஆகிற
வாழ்ச்சியை யுடையராய்க் கொண்டு வர்த்திக்கிற ஸ்தலமாய்
கனக்கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–செறிவை யுடைத்தாய்க் கொண்டு
ஸ்த்திரமான மாடங்களை யுடைத்தான திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு ஆகிற
விலக்ஷண தேசத்துக்குள்ளே காணப் பெற்றேன்

—————————————————

அநந்தரம் அதிசயிதமான திவ்ய அவயவ திவ்ய ஆபரண திவ்ய ஆயுத சோபைகளோடே திருச் செங்குன்றூரில்
எழுந்து அருளி இருக்கிற என் ஸ்வாமி யானவன் என் நெஞ்சுக்குள்ளே நித்ய ஸந்நிஹிதன் ஆகா நின்றான் என்கிறார்

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத்திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட அத்திருவடி –திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறில்
வர்த்திக்கிற நான் கண்ட ஸ்வாமியானவன்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்ய கையும் சிவந்த கமலம் போலே இருக்கிற திருக் கண்களும் –
சிவந்த திருப் பவளமும் சிவந்த திருவடிகளும் சிவந்த திருக் கைகளும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய வுடையும் திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்– சிவந்த கமலத்தை
யுடைத்தான திரு நாபியும் சிவந்த திருமேனியை யுடைய ஸ்ரீ மஹா லஷ்மீயை யுடைத்தான திரு மார்வும்
சிவந்த திரு வுடையாடையும் சிவந்த திரு முடியும் திரு ஆரமும் திவ்ய ஆயுதங்களும்
திகழ- என்றும் -வென்ன சிந்தை யுளானே–விளங்கும்படியாக என்றும் என் நெஞ்சுக்குள்ளே ஆனான் –

————————————————

அநந்தரம் -இப்படி என் நெஞ்சிலே திகழ இருக்கிற ஜெகஜ் ஜென்மாதி காரண பூதனாய்
இருக்கிறவனைப் புகழும்படி அறிகிறிலேன் என்கிறார்

திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்
செழு நிலைத் தேவர் நான்மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை
அசுரர் வன்கையர் வெங்கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8-

திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்-உஜ்ஜவலமாம்படி என் நெஞ்சுக்குள்ளே இருக்குமவனாய்
செழு நிலைத் தேவர் நான்மறையோர்–விலக்ஷணராய் பூமி தேவர்களாய் நாலு வாதங்களுக்கும் நிர்வாஹகாரணவர்கள்
திசை கை கூப்பி ஏத்தும்-திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை–திக்குகள் தோறும் கை கூப்பி ஏத்தும்படியான
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரையிலே வர்த்திக்குமவனாய் -பிறருக்கு ஆஸ்ரயணீய தயா வந்த
புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை-உஜ்ஜ்வல்யத்தை யுடைய தேவர்களுக்கு ஆஸ்ரயணீயனாம் ஸ்வ பாவத்தை யுடையனாய் –
அசுரர் வன்கையர் வெங்கூற்றை–அவர்களுக்கு விரோதிகளாய் பிரபலரான அ ஸூ ரர்க்கு குரூரமான ம்ருத்யுவாய்
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும் படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–தன்னோடு அப்ருதக் ஸித்தமான ஜகத் த்ரயத்தினுடைய
ஸ்ருஷ்ட்டியோடே பிரளய ரக்ஷணங்களை யுடையனானவனை
ஓர் ஆகாரத்தாலே வகை அறிந்து புகழும்படி அறிகிறிலேன் –
காப்பவன் -காப்பினை யுடையவன் –

—————————————————-

அநந்தரம் ஸ்ருஷ்ட்யாதி கர்த்ரு கர்ம விபாகம் இல்லாதபடி சர்வாத்ம பூதனானவன் திருச் செங்குன்றூரிலே
நின்று அருளும் சர்வ ஸ்வாமி என்கிறார் –

படைப்பொடு கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–8-4-9-

கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார் கூரிய விச்சை யோடு ஒழுக்கம்–வித்யா தானாதிகளான உதார குணத்தால்
பெரிய புகழை யுடையராய் அநேகராய் தான் என்னலாம்படி
ஞான சக்த்யாதி பூர்னரானவர்களுடைய அனுஷ்டானத்தையும்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–நித்ய யாத்ரையான பகவத் ஆராதனத்தையும்
ஸ்வ பாவமாக யுடைத்தான திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றிலே நின்ற ஸ்வாமியானவன்
படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவப் பிரானவனே–ஜகஜ் ஜென்ம ஸ்த்தேம் லயங்களுக்கு நிர்வாஹகனாய் இருக்கும் –
மனுஷ்யாத் யாபேஷயா பரரான இந்த்ராதிகளுக்கும் அவ்வருகாகையாலே
பரம் பரனாய்க் கொண்டு ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவும் ததாத் மகனாய்க் கொண்டு சம்ஹரிக்கையாலே
ஸூத்தி குண யுக்தராய்க் கொண்டு ஈஸ்வரனான ருத்ரனும்
தானே யாம்படி பிரகாரியாய் நிற்பானாய்
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே புகழ்வில்லை யாவையும் தானே–இவர்கள் இருவருக்கும் இடையிலே ரக்ஷகனாய்ப் புகுந்து
பதார்த்தத்தையும் ஒழிய விடாது இருக்குமவனாய் –
இப்படி ஸ்ருஷ்ட்டி சம்ஹார பாலான கர்த்தாவான வளவு அன்றியே ஸ்ருஷ்ய ஸம்ஹார்ய பால்யமான ஸமஸ்த பதார்த்தங்களும்
தானேயாம் படி தத் பிரகார விசிஷ்டானாய் இருக்கும் –
இதில் அர்த்தவாத ரூபமான ஸ்துதி இல்லை –

————————————————-

அநந்தரம் -நிருபாதிக சேஷியாகையாலே அவாந்தர சேஷிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளுடைய சத்தையும் தான் இட்ட வழக்காய்
தத் பிரயோஜனம் ஸ்வயம் ப்ரயோஜனமாம் படி அவர்களுக்கு விபூதி பிரதனாயக் கொண்டு
திருச் செங்குன்றூரிலே நிற்கிற ஆச்சர்ய பூதனைப் பொருந்தப் பெற்றேன் என்கிறார் –

அமர்ந்த நாதனை யவரவராகி
அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி
அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை
நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-

அமர்ந்த நாதனை -முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–சகல சேதன நிர்வாஹகன் என்றால்
தகுதியாம்படியான நிருபாதிக சேஷித்வத்தை யுடையனாய் -உபாதி காரணமாய் சேஷிகளான
மூன்று கண்ணை யுடைய ருத்ரனும் சதுர்முகனும்
தானாம்படி தத் தத் அந்தராத்மாவாய்க் கொண்டு சத்தா ஹேது பூதனாய்
யவரவராகி அவரவர்கருளும் அம்மானை—ஸ்வ விபூதிகளை அர்த்தித்து பெறுகிற அவர்கள் அவற்றைப் பெற்று உகக்குமா போலே
அவர்களோடே ஏகீ பவித்துக் கொண்டு –
அவர்களுக்கு அபீஷ்ட பத ப்ரதானாத் யுபகரணங்களை பண்ணுமவனாய்
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையானை–செறிந்து ஸ்ரமஹரமான நீர் நிலத்தை யுடைய
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரை யை வாஸ பூமியாக யுடையனாய்
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு–செறிந்து ஸ்ரமஹரமான நீர் நிலத்தை யுடைய திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையை வாஸ பூமியாக யுடையனாய் பொருந்தின ஆத்ம குணங்களை யுடையரான
மூவாயிரவராயுள்ள வைதிகருக்கு அசாதாரண தேசமாய் பூ ஸூரரான பாகவதருடைய பகவத் அனுபவ ஐஸ்வர்ய பூமியாய் யுள்ளத்தை
அமர்ந்த மாயோனை அமர்ந்தேன் -அவர்கள் ஸம்ருத்தியே தனக்கு ஸம்ருத்தியாம்படி யுகந்து பொருந்தி வர்த்திக்கிற ஆச்சர்ய பூதனானவனை –
அநந்ய பிரயோஜனனாயக் கொண்டு பொருந்தப் பெற்றேன்
வேதியர்கள் -தம்முடைய பதியாய் -அல்லாத பூ ஸூரர்க்கு வாழ்வான திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானாய் அவர்களை அனுபவிப்பிக்கத் தகுதியான ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவனை -என்றுமாம் –

—————————————————

அநந்தரம் இத்திருவாய் மொழி கற்றார்க்கு பலமாக ஜென்ம நிவ்ருத்தி விசிஷ்டமான பரம பத ப்ராப்தியை அருளிச் செய்கிறார் –

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை–சர்வ ரஸ சமவாய ரூபமான தேனாய் –
ஸ்வாபாவிக ரசமான பாலாய் -பர்வம் தோறும் ரசிக்கும் கரும்புமாய் -முடிந்த உயிரைப் பிழைப்பிக்கும் அம்ருதமாய் –
இப்படி சர்வவித போக்ய பூதனாய் விலக்ஷண மஹா லோகம் பிரளயத்தில் அழியாத படி அமுது செய்து நோக்கின ஸ்வாமியாய்
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை-ஊர்த்தவ லோக வாசியான சதுர்முகனை –
விகசிதமாய் செவ்வியை யுடைத்தான-திரு நாபீ கமலத்தில் ஸ்ருஷ்டித்த ஆச்சர்ய பூதனாய்
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்-அத்தாலே நிருபாதிக ஸ்வாமியானவனை
நிரதிசய சம்பந்தத்தை யுடைய திரு நகரிக்கு நிர்வாஹகராய் பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–பரம பதத்தில் ஏறவிட்டு கைங்கர்ய சாம்ராஜ்யமாகிற
பகவத் அங்கீ காரத்தைபண்ணி சம்சார சம்பந்த ரூப பர்யந்தமாயுள்ள ஆச்சர்ய நாடகத்தை முடித்து விடும்
இது எழு சீர் ஆசிரிய விருத்தம் –

————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –8–4-

April 30, 2018

இப்படி விரஹ தயா அபி தப்தரான ஆழ்வாருடைய விடாயைப் போக்கி அருளுகைக்காக முன்னமே
திருச் செங்குன்றூரிலே திருச் சிற்றாற்றங்கரையிலே-ஒரு தாமரைத் தடாகம் நின்றால் போலே தான் நின்று அருளினபடியைக்
காட்டக் கண்டு ப்ரீதியாலே சகல ஜன மநோ நயன ஹாரி திவ்ய சேஷ்டித்த ஸூலபத்வ ஸுந்தர்யாதி
கல்யாண குண கண ஸர்வேஸ்வரத்வங்களைப் பேசி
அந்தத் தாமரைத் தடாகம் இருந்த இடத்தே ஏறச் செல்ல வேணும் என்கிறார் –

—————————————————————

வார்கடா வருவி யானை மா மலையின்
மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட
மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-

நிஷ்யந்தமான மதஜலமாகிற சரித்தை யுடைத்தான குவலயா பீடமாகிற மஹா சலத்தினுடைய தந்த யுகளமாகிற சிகரங்களை முறித்து உருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து கஜ தந்த வராயுத தரராய் நம்பி மூத்த பிரானும் தானும் சர்வ லீலாவ லோகிதங்களை யுடைய
இரண்டு ஸிம்ஹங்கள் ஷூத்ர மிருகங்கள் நடுவே புக்கால் போலே ரங்க மத்யத்திலே போய்ப் புக்கு மல்லரைக் கொன்று –
மஞ்ச உபரிஸ்த்திதராய் இத பூர்வம் யுத்தத்தில் பராஜிதரான ராஜாக்கள் த்ரஸ்தராய்க் கெடும்படி எழப் பாய்ந்து
மஞ்ச உன்னதஸ்த்தல சத்தனான கம்சனை வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு
அதன் ஓசை கேட்டு விளையாடினால் போலே தகர்த்த சீர் கொள் சிற்றாயன் –
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு -எங்களுக்கு ப்ராப்யம் என்கிறார் –

————————————–

எங்கள் செல் சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்றென்னமர் துணையே–8-4-2-

நமக்கு ப்ராப்யமாய் நமக்கு போக்யமாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் எனக்கு ஸ்வாமியாய்
நிகில புவன நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி சீலனாய்
த்ரி மூர்த்தி ரூபனாய் பிரதிகூல ஐந்துர்த்தர்சனாய்-சர்வ காரணமாய்
மதிமுதித மீநாகுல மபூமிளி தசலில சீதள ஸ்யாமள பஹுல பலாச ஸூ ரசி குஸூம தரு நிகர பரிவ்ருத்தமான –
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு
-அங்கு அமர்கின்றவன் அல்லது மற்று எனக்கு ஒரு துணை இல்லை என்கிறார் –

————————————————————————

என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள
என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும்
பிறிதில்லை எனக்கே–8-4-3-

பரம ஸூரி சம்ச்லேஷ ஏக போக்யனாய் இருந்து வைத்து மத் சம்ச்லேஷ ஏக போகனாய் -மத் ஸ்வாமியாய் –
மஹார்ணவ மக்னையான பூமியை எடுத்து அருளினால் போலே
ஸ்வ விரஹ ஜெனித நிரதிசய வ்யஸன மஹார்ணவ நிமக்நனான என்னை
எடுத்து அருளி ஸ்வ விஷய கைங்கர்ய ஏக போக பிரதனாய் தக்ஷிண திக்குக்கு பஹு பூஷணமான திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாங்கரைமீ பால் நின்ற எம்பெருமானுடைய திருவடிகள் அல்லது மற்று
நினைப்பிலும் எனக்கு ஒரு ப்ராப்யம் இல்லை என்கிறார் –

—————————————

பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப்
பேருருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்
அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4-

நிரதிசய ரமணீயமான ரூப கிங்க்ரீக்ருத மஹாத்மனாய் ஸ்வ கீய மஹத் ரூப பரிபூர்ண விஸ்தீர்ண புவன த்ரயனாய்
மஹித மஹாரவ பயோ நிதியாய் ஸுந்தர்ய சார நீல ரத்ன சத்ருச திவ்ய ரூபனாய் மத் ஸ்வாமியாய்
பஹல பலபூஞ்ச கதலீ பூத நாளிகேர ராஜி பரிவ்ருத்தமான திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாரின் கரையில்
ஆஸ்ரிதற்கு தன்னை உள்ளபடியே அறியலாம்படி நின்று அருளின எம்பெருமான் அடியிணை அல்லது
ஓர் அரண் பிறிது இல்லை என்கிறார்

——————————————————————–

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை
அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5-

மற்றுள்ள திரு நகரிகளில் சரண்யனாய் இருக்கிறானும் திருச் செங்குன்றூரில் நின்று அருளின அவனே அல்லனோ –
ஆனபின்பு அவனே அரண் என்னும் நிர்ப்பந்தம் என் என்னில் அல்லாத திரு நகரிகளில் அரணாய் இருந்தவனுக்கு அவனில் வேறு இல்லை –
அவனுக்கு ஆயதனமாய் பக்தி யுக்த சதுர்வேத வித் அக்ரேசரரான வர்களுடைய யாகங்களில்
ஹுதா மான ஹவிர் அக்னி ஹோம தூமத்தாலே திரஸ்க்ருத பூதநதல நிகில தேஜஸ் கரமாய் தர்ச நீய அத் யுன்னத பிரசாத
அலங்க்ருதமான திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு-எனக்கு நல்ல அரண் என்கிறார் –

———————————————————

எனக்கு நல்லரணை எனதாருயிரை
இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்
தடங்கடல் பள்ளியம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-

எனக்கு நித்ய ரக்ஷகனாய் -எனக்குப் பிராணனாய் – அயர்வறும் அமரர்களுக்குப் பிதாவாய் -மாதாவாய் –
ஸ்வேநாபி துரவபோய ஸ்வ மஹிம ஸ்வபாவனாய் -ஷீரார்ணவ சாயியாய் இருந்த எம்பெருமானை-
சகல மநோ ஹர கல்யாண குண விசிஷ்டராய் தனித்தனியே ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர வஜ் ஜாஜ் ஜென்ம ஸ்த்தி சம்ஹார சமர்த்தராய்
த்ரி சஹஸ்ர சங்க்யாதரான ஜனங்களாலே அதயாஸ்யமானமாய் த்ருட தர பிராசாத பரிகர்மிதமான
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு-அதனுள் கண்டேன் என்கிறார் –

————————————————-

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத்திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட அந்த ரமணீய தாம்ரகமல சத்ருசமான திருக் கண்களும்
வித்ரும சத்ருசமான திருப் பவளமும் -கமல சத்ருசமான திருவடிகளும் கமல சத்ருசமான திருக் கைகளும்
கமல சத்ருசமான திரு நாபியும் நிஜ புஜாந்த்ர மந்திர இந்திரா திவ்ய ரூப மயூவாஹித பூதமாகையாலே
சிவந்த தாமரை போலே இருந்த திரு மார்வும் திவ்ய பீதாம்பரமும் –
தேஜோ ரூபமான திரு அபிஷேகமும் திவ்ய மௌக்திக ஹாரமும் சங்க சக்ராதி திவ்யாயுதங்களும்
திகழ என் சிந்தையுள் இருந்தான் என்கிறார் –

—————————————————————-

திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்
செழு நிலைத் தேவர் நான்மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை
அசுரர் வன்கையர் வெங்கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8-

ஸ்வ குணாநு ரக்த சகல புவன சஞ்சனந பரிபாலன ஸம்ஹ்ருதி சீலனாய் -பக்தி யுக்த சதுர்முக பஸூ பதி சதமவ ஹுதவஹ
ப்ரப்ருதி சகல ஸூர ஜன சரண்யனாய்
தத் விரோதிய அஸூர ஜன ம்ருத்யு பூதனாய்
சதுர்வேத வித்ப்ரவரராய்
பரம புருஷ சரண யுகள அநு ராக யுக்தராய் க்ருதாஞ்சலி களான பவ்ம ஸூரராலே சம்ஸ்தூயமான
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யிலே நின்று அருளி
என் நெஞ்சிலே தீப்யமானனாய் இருந்து அருளினவனை எத்தைச் சொல்லிப் புகழ்வது –
புகழுமாறு அறியேன் என்கிறார் –

———————————————————————

படைப்பொடு கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–8-4-9-

பரம உதாரராய் வ்யபதேஸ்யராய் ஸ்வ சத்ருசராய் நிரதிசய சகல வேத தத்துவார்த்தஜ்ஞராய் ஞான அணு குண சாரித்திரராய்
நித்ய மனுஷுட்டீயமான பஞ்ச மஹா யஞ்ஞாதி சகல கர்ம கலாபராய் இருந்த திவ்ய ஜனங்களால் அத்யாஸ்யமாநமான
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அமர்ந்த நாதன் ப்ரஹ்ம ருத்ர ரூபேண ஸ்வேன ரூபேண ச
நிகில ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸ்த்திதி சம்ஹார ஹேது பூதனாய் ஸமஸ்த வஸ்து ஜாத அந்தராத்மா பூதனாய்
சர்வ சப்த வாச்யனாய் இருக்கும் -இவ்வர்த்தத்தில் ஸ்துதி இல்லை –
புகழுமாறு அறியேன் என்கிறார் –

—————————————————–

அமர்ந்த நாதனை யவரவராகி
அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி
அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை
நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-

ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வ பாவனாய் மம நாதனாய் ஆஸ்ரித சமீஹித நிர்வர்த்தகனாய் -த்ரி நேத்ர சதுர்முக விபூதிகனாய்
கமல தடாக பரிவ்ருத்தமான திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையை போக்ய பூமியாக யுடையனாய்
வேத வித அக்ரேஸரான பரம புருஷ சரணாரவிந்த யுகள அநு ராக மஹிமா வதாதஹ்ருதய அரவிந்த
த்ரிதச சத திவ்ய ஸூர ஜனங்கள் வாழ்வமர்ந்த மாயோனை அமர்ந்தேன் என்கிறார் –

———————————————————————–

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

மது மய பாலை கன்னலை அம்ருதவத்தே போக்ய பூதனாய் நிஹீர்ண சகல லோகனாய் -ஸ்வ நாபீ கமல உத்பூத சதுர்முகனாய்-
ஆச்சர்ய பூதனாய் சர்வ ஸ்வாமியாய் இருந்த திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானை வண் குருகூர் சடகோபன் சொல் வாயிரத்துள் இப்பத்தும் அருள் செய்து
வானின் மீதேற்றி பின்பு சம்சார சம்பந்தத்தைப் போக்கும் என்கிறார் –

——————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அழகிய மணவாளச் சீயர் அன்போடு அருளிச் செய்த பன்னீராயிரப்படி –8-3-

April 29, 2018

மூன்றாம் திருவாய் மொழியில் -அவனுடைய நிஸ் சங்க ஸூலபதையை அனுசந்தித்து இதர சங்க நிவ்ருத்தி பூர்வகமாகத்
தாம் தத் விஷயத்திலே சக்தரான படியை அனுசந்தித்தவர் –
அவன் ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக இந்த விபூதியில் தன் போக்யதையையும் ஸுகுமார்யத்தையும் பாராதே
ஆஸூர ப்ரப்ருதிகளும் அந்நிய பரருமான திரள்களுக்கு நடுவே அஸஹாயனாய் வந்து வர்த்திக்கிற இதுக்கு அஞ்சி
அவனுடைய அதிசயித போக்யதையையும்
விரோதி நிரசன உத்தியுக்தமான ஆயுதவத்தையும்
சஹாயாந்தர ராஹித்யத்தையும்
க்ஷண காலம் காணாது ஒழியிலும் கல்பமாம்படி அச்சத்தை விலைக்கும் படி ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஆயாச சஹம் அல்லாத ஸுகுமார்யத்தையும்
ரமணீய விக்ரஹணாய் வைத்து விரோதி நிரசன அர்த்தமாக வியாபாரிக்கும் படியையும்
கிஞ்சித்க்கார அனுகுணமாக ஸ்ரீ யபதித்வத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அறியவரிய ஆகாரத்தையும்
அத்யந்த விலக்ஷண புருஷரும் சேவிக்கும் படியான அதிசயித சக்தி யோகத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனானவன் தண் அழகையும் மார்த்வத்தையும் பாராதே ப்ரதிகூல பூயிஷ்டமான சம்சாரத்திலே
அஸஹாயனாய் வர்த்திக்கிற அளவிலே அடிமை செய்யப் பெற்றிலோம் என்று தளர்ந்தவர் –
அவன் தன்னுடைய ஆஸ்ரித ஸாமக்ர்யத்தையும் அதிசயித சக்தியையும் காட்டக் கண்டு
ஸமாஹிதராய் யுகந்து தலைக் கட்டுகிறார் –

——————————————————————–

முதல் பாட்டில் -உன்னுடைய நிரதிசய போக்யதையை அறியாதே உன் சக்தி யோகத்தயே சொல்லி
அனுகூல பிரதிகூல விபாகமற அபிமத சாதனம் என்னா நிற்பார்கள் என்கிறார்

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்–ஊர்த்வ லோகங்களிலும் பூமியிலும் பாதாளதிகளான ஸமஸ்த பிரதேசங்களிலும்
அனுகூலரான தேவர்களுக்கு பிரதிகூலரான அஸூரர்களும் தாதாவிதரான மனுஷ்யாதிகளும் எல்லாம்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி–அனுபாவ்ய மஹிஷ்யாதி விசிஷ்டனான உன்னை இவ்வித போக்யன் என்று
அறிய மாட்டாதே ரக்ஷகத்வ ஏகாந்தமான சர்வ சக்தி யோகாதிகளைச் சொல்லிக் கூப்பிட்டு
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்–புஷ்ப பரிமளம் வடிவு கொண்டால் போலே இருக்கிற ஸ்ரீ மஹா லஷ்மியும் –
கந்தவதி யாகையாலே போக்யத்தையே வடிவான பூமியும் –
அவ்வளவே அன்றியே ஆபி ஜாத்ய ஆட்க்ஹ்யக்யத்தை யுடைய நீளையும்
ஸுந்தர்ய ஸுகுமார்யாதிகளிலே அகப்பட்டு திரு மேனியை பிரியாமல் பொருந்தி அனுபவிக்கும்படியாய்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-அனுபாவ்யமான ஆழ்வார்களை திருக் கையிலே யுடையவனாய் இருக்கிற இவன்
போக்ய பூதன் என்று அனுபவியாதே -புருஷகார பூர்த்தியையும் யுடையவன் ஆகையால் அபீஷ்ட பல சாதன பூதன் என்னா நிற்பர்கள்
பிரதிகூலரான அஸூர வர்க்கத்தைப் பற்றவும் சேஷித்வம் சாதாரணம் ஆகையால்
ஸ்வ அபீஷ்ட சித்த்யர்த்தமான சரண்யாத்வம் உண்டு என்று கருத்து
ப்ரயோஜனாந்தர பரரானவர்களும் இவனுடைய ஸுந்தர்ய ஸுகுமார்யாதிகளை அனுசந்தித்துப்
பரிவராகப் பெற்றது இல்லை என்று வெறுத்தார் ஆயிற்று

—————————————————

அநந்தரம் விரோதி நிரசன பரிகாரவானானவனைக் கொண்டு கேவலம் ஜரா மரணாதி நிவ்ருத்தியைப்
பண்ணிக் கொள்ளுகிற கேவலரை சேஷத்வ சாதற்மயத்தாலே உடன்பட்டு நின்று ஷேபிக்கிறார்

சரணமாகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்
கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி
அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–8-3-2-

சரணமாகிய நான்மறை நூல்களும் சாராதே–த்ரை குண்ய புருஷர்களுக்கு புகலிடமாய் -ஐஸ்வர்ய தத் சாதன ப்ரதிபாதகமான
நாலு வகைப்பட்டதாய் இருக்கிற வேதங்களாகிற சாஸ்திரங்களை சாராதே –
மேல் எழத் தோன்றுகிற அர்த்தங்களை பிரதிபத்தி பண்ணப் பற்றாதே -நிஸ் த்ரை குண்யராய்க் கொண்டு முமுஷுக்களாய்
கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி-அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–-பாதக உபகரணங்களை யுடைத்தாய்
பஹுவிதமான சத்ரு சேனைகள் பற்று அற ஓடும்படி தீப்தனாகிற திருவாழி ஆழ்வான் ஆகிற ஷேமங்கரமாய் ஸ்த்திரமான
திவ்ய ஆயுதத்தை யுடையனான சர்வேஸ்வரனுக்கு சேஷபூதராய் வைத்து-சேஷத்வ அநு ரூபமான அதிசயத்தை விளைத்துப் பரியாதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்–மரணம் ஜென்மம் பெரிய வியாதி ஜரை என்று சொல்லுகிற
ஷட்பாவ விகாரங்களை கழித்துக் கொண்டு விட்டோம் இத்தனை இறே
தத்தார்யம் ஸ்வரூபமாய் இருக்க ஸ்வார்த்த பரராகை அநு ரூபமோ என்று கருத்து

————————————————-

அநந்தரம் விரோதி பூயிஷ்டமான ஜகத்தில் ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக ப்ரவ்ருத்தனான அவனுடைய
சஹாயாந்தர ராஹித்யத்தை அனுசந்தித்து நான் அடிமை செய்யும்படி காணப் பெறு கிறிலேன் என்று வெறுக்கிறார்

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

ஞாலத்து ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்–ராவண அஸூரா சமரான பிரதிகூலர் வர்த்திக்கிற ஜகத்திலே
பரிவராய் இருப்பார் ஆளும் வேணும் என்று அங்கீ கரிக்கிறிலர்-
அடுத்துப் பார்க்கப் பொறாத ஸுகுமார்யத்தை யுடைய தாம் திருவாழி யையும் திருச் சங்கையும் மலை எடுத்தால் போலே வஹிப்பர்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-அப்படியானால் நந்தகத்தையும் ஸ்ரீ சார்ங்கத்தையும் கொண்டு
இளைய பெருமாளைப் போலே பின் செல்லுகைக்கு வேறு ஒருவர் இல்லையாய் இரா நின்றது
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்-நான் பின் செல்ல வென்று நினைக்கிலும் திருவடிகளையும்
நிழல் செய்கிற திருத் தோள்களையும் என் கைகளைக் கொண்டு பூர்ணமாக தொழுது
அடிமை செய்கைக்கு என் கண்ணாலே காணப் பெறுகிறிலேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–சேஷத்வமே ஸ்வரூபமான நான் சேஷிக்கு அதிசய ஜனகமான
சேஷ விருத்தியே ஜீவனம் ஆகையால் பசியர் சோறு தேடுமா போலே நாள் தோறும் தேடா நின்றேன்

———————————————————-

அநந்தரம் அஸஹாயனான வடதள சாயியினுடைய ஆபி ரூப்யத்துக்கு என்ன பிரமாதம்
வருகிறதோ என்று அஞ்சிக் கலங்கின பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வதோர் காரிருளூழியொத்துளதால் உன்
கோலம் காரெழில் காணலுற்றா ழும் கொடியேற்கே–8-3-4-

ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி-ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே-அத்விதீயமாய் -அதி முக்தமான வடிவை
யுடையையாய் மஹா ஜகத்தை போஜனமாக அமுது செய்து -இடம் வலம் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற ஸ்வாமியானவனே –
அந்த பிரளயத்தில் என்ன பிரமாதம் வருகிறதோ என்று
காலம் பேர்வதோர் காரிருளூழியொத்துளதால் உன் கோலம் காரெழில் காணலுற்றா ழும் கொடியேற்கே–காளமேகத்தின் எழிலை யுடைத்தான
உன் வடிவு அழகை காண வேணும் என்று நிர்ப்பந்தித்து அச்சத்தால் ஆழம் கால் படும்படியான கொடிய பாபத்தை யுடைய
எனக்கு ஒரு க்ஷணத்தில் நின்றும் க்ஷனாந்தரத்திலே பேருகிற கால அவகாசமானது
அத்விதீயமான அந்தகாரத்தை யுடைத்தான கல்பம் போலே ஆகா நின்றது
உன்னுடைய அகடிதகடநா சாமர்த்தியமான சக்தி யோகமும் சர்வ ரக்ஷகத்வ பூர்த்தியும் அச்சத்துக்கு உறுப்பாம் என்று கருத்து –

—————————————————————–

அநந்தரம் திருக் கோளூரிலும் திருப் புளிங்குடியிலும் முசியாதே கண் வளர்ந்து அருளுகிறது
ஆஸ்ரித விரோதி நிவர்த்தனத்தாலும் த்ரி விக்ரம அபதானத்தாலும் வந்த ஆயாசமோ -என்கிறார்

கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5-

கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்–விரோதிகளும் அறியலாம்படி கொடிகள் செறிந்த மாடத்தை யுடைய
திருக் கோளூர்க்கு உள்ளும் -பல இடத்தில் படுக்கை படுத்தது அலைச்சலின் மிகுதி என்று சங்கிக்கலாம் படி திருப் புளிங்குடியிலும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்–மீளாதே ஒருபடிப்பட இப்படி கண் வளர்ந்து அருளினவத்தாலே நீ
உகப்புப் பிறந்து இருக்கிற இது –
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ -ஆஸ்ரிதர் விரோதிகளான ராவணாதிகளை நிரசித்தும் –
அவர்கள் துக்கத்தைப் போக்கினை அலைச்சலாலேயோ
அன்றேலிப்படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–அது அல்லவாகில் இந்த பூமியை ஒரு நாளே வளர்ந்து அளந்து கொண்ட ஆயாசமோ –
உன் திரு மிடற்றோசையிலே வாசியால் நான் உன் ஆயாசத்தின் மிகுதி அறிகைக்காகவும்
நொந்த இடம் அறிகைக்காகவும் அருளிச் செய்ய வேணும்
அளந்த திருவடியைப் பிடித்தல் -எய்த்த திருத் தோளைப் பிடித்தல் செய்கையில் இவருக்கு கருத்து

——————————————————————

அநந்தரம் நித்ய ஸூரி களுக்கு அனுபாவ்யமான நிரதிசய போக்ய விக்ரஹத்தோடே பிரதிகூல பூயிஷ்டமான
இஜ் ஜகத்தில் என்னாகிறதோ என்று என் நெஞ்சு கலங்கும்படி வாரா நின்றார் என்கிறார்

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்-ஓர் அவஸ்தையிலும் உபாதி அடியாகவாகிலும் வேறு ஒருவர் காலில்
பணிய வேண்டாதபடி அநந்ய அதிபதிகளாக நித்ய ஸூரிகளுடைய ஸ்வரூப ப்ரயுக்தமாய்
ஸ்வாபாவிகமான பணிவுக்கும் அவர்கள் ஞான பிரேமாதி ஸ்வ பாவங்களுக்கும் தாமே விஷயமாய்க் கொண்டு
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்–திரு ஆபரண ரூபமான போக்யதையை யுடைய திருவாழியையும் திருச் சங்கையும் –
அவர்களுக்கு அநு பாவ்யமாம்படி ஏந்தி இருக்கும் அவர் கிடீர் -அப்பரிவர் இருக்கச் செய்தே லோகத்தில்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல-ஒரு காலும் தணியாமல் கடக்கக் கடவதாய் அதிசயித பரிதாப ஹேதுவான
அவித்யா கர்ம ருசி ப்ரக்ருதி சம்பந்த ரூப வியாதிகளை களைக்கைக்காக-
அந்த நித்ய ஸூ ரிகளுக்கு நித்ய அநு பாவ்யமாய் நிரதிசய ஸுந்தர்ய ஸுகுமார்யாதி சம்பத்தை யுடைத்தான நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–ரத்னம் போலே இருக்கிற திருமேனியோடே கூட
இவ்வடிவு அழகுக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று எண் மனஸ்ஸானது பிரமிக்கும்படி சம்சாரத்தில் வருவர்

—————————————————————–

அநந்தரம் கிஞ்சித் கரிக்கைக்குப் பிராட்டியோடே திருப் பரிசாரத்திலே இருக்கிறவர்க்கு உமக்குப் பரிவனாய்
இருப்பான் ஒரு கிங்கரன் உண்டு என்று ஒருவரும் சொல்லு கிறிலர் என்று வெறுக்கிறார்

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்-அங்கு நின்றும் வருவார் இங்கு நின்றும் செல்லுவாராகிற அவர்கள்
விலக்ஷண சம்பத்தை யுடைத்தான திருப் பரிசாரத்திலே என்னை அடிமை கொள்ளுகைக்கு ஈடாக எழுந்து அருளி இருக்கிற
திரு வாழ் மார்வற்கு உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு– ஸ்ரீ மானுக்கு வடிவு அழகால் பொருத்தமான
திருவாழியையும் திருச் சங்கையும் தரித்துக் கொண்டு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே -இந்த விபூதியில் உம்மோடே கூட பார்ஸ்வ வர்த்தியாய்க் கொண்டு திரிவான்
அத்விதீயனாய் இருப்பான் ஒரு அடியானும் உளன் என்று
என் திறம் சொல்லார் செய்வதென்-என் இடையாட்டம் சொல்லுகிறிலர்கள் – வருகிறவர்கள் தம்மை அழைத்து வாராமையாலும்
போகிறவர்கள் ஒரு மறு மாற்றம் கேளாமையாலும்
இவர்கள் வரத்தும் போக்கும் தமக்காக வென்று நினைத்துச் சொல்லுகிறிலீர் என்கிறார்
இவர்கள் சொல்லாத அளவில் அவர் அறிந்து அங்கீ கரிக்கைக்கு செய்யலாவது என் என்று வெறுக்கிறார் –

——————————————————–

அநந்தரம் அகில வஸ்து சம்ச்லேஷ ஸ்வ பாவனான நீ உன் திருவடிகளிலே நான்
அடிமை செய்யும்படி அங்கீ கரிப்பது என்று என்கிறார்

என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-

குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-சப்த குல பர்வதங்களையும் –
சப்த த்வீபங்களையும் சூழ்ந்த அவ்வோ சமுத்ரங்களையும் பூமியாதியான சப்த லோகங்களையும் முழுக்க
நின்ற நிலையிலே நின்று கவடடித்துக் கொண்ட நெடிய திருவடிகளை யுடையனாய் –
அந்த சேஷித்வ ஸூ சகமான திருவாழியை யுடையனாய் ஸ்ரீ யபதியானவனே
என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ் நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்–உனக்கு சேஷ பூதனாய் பரிவனாய்
இருக்கிற என்னை ஸூ குமாரனாய் போக்ய பூதனான உன்னுடைய அழகு விஞ்சின திரு ஆபரண சோபையையும் யுடைத்தாய் –
ஸ்வாபாவிக ஸுந்தர்ய விசிஷ்டமான திருவடிகளின் கீழே -ஒரு காலும் பிரியாதே நின்று
உன்னுடைய ஸ்ரீ யபதித்தவ ஸுகுமார்யாதிகளுக்கு ஈடாக மங்களா சாசனம் பண்ணி அடிமை செய்வேனாம் படி
நீ கொண்டு அருளி உன் திரு உள்ளத்தால் அங்கீ கரித்து இது முழுக்க நிர்வகிப்பதாக நினைத்து அருளுவது தான் என்றாய் இருக்கிறது –
கொண்டு அருள நினைப்பது என்றும் சொல்லுவர்
என்றெல் -என்றதில் எல் அசை

———————————————

அநந்தரம் அதிசயித ஞானரான ப்ரஹ்மாதிகளும் உன் ஸுகுமார்யம் அறியாமையால்
என் ப்ரேமம் கலக்க நான் பரிவனாய்க் கூப்பிடா நின்றேன் என்கிறார் –

திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கருமா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9-

திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் –பெரிய பிராட்டியார்க்கு வல்லவனான வை லக்ஷண்யத்தை யுடையவனே –
ஸ்ருஷ்டியில் பஹு முக வ்யாபாரனான ப்ரஹ்மாவும் -தபஸ் பேரனான ருத்ரனும் என்று ப்ரசித்தரரான இவர்கள்
எம் பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் –எனக்கு ஸ்வாமியாய் -சர்வாதிகனான உன்னுடைய ஸுந்தர்ய ஸுகுமார்யாதியான
ஸ்வா பாவிக வை லக்ஷண்யத்தை அறிய வல்லார் ஆர் தான்
என் காதல் கலக்கவே-ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை கருமா மேனியன் என்பன் -பேசியென்-என்னுடைய ப்ரேமமானது
நெஞ்சைக் கலக்க -அத்விதீயமான பரம காரண பூதனே –
ஸ்ருஷ்டமான ஆத்மாக்களுக்கு கால அநு ரூபமாக உபகாரகனானவனே
என்னை அடிமை கொண்ட ஸ்யாமளமான விலக்ஷண விக்ரஹ யுக்தனே என்று சொல்லா நிற்பன்-
உன் ஸுகுமார்யத்தைப் பாராதே -மாதுர்யமே என்று பிராட்டி அஞ்சும்படி ஜகத் பாலனத்தைப் பண்ணுவது
உத்பன்னமான சேதனர்க்கு ஆபத்துத் தோற்றும் காலம் தோறும் உபகாரகனாய் வ்யாபரிப்பது
என் போல்வாரை அங்கீ கரிக்கைக்காக அழகிய வடிவைக் கொண்டு வருவதாகப் புக்கவாறே
உன்னுடைய ஸுகுமார்யத்துக்கு அஞ்சா நின்றேன் –
அவாக் மனஸ் அகோசாரமான இந்த ஸுகுமார்யத்துக்கு என்ன பாசுரம் இட்டுச் சொல்லுவது –

—————————————————-

அநந்தரம் முமுஷுக்களோடு முக்தர்களோடு நித்ய ஸூரி களோடு வாசியற நமக்குத் பரிவராய் இருக்க
நாம் சக்திமான்களாய் இருக்க
நீர் அஞ்ச வேண்டா என்ன –
ஆஸ்ரித ஜன சாமர்த்யத்தையும் அதிசயித சக்தி யோகத்தையும் அனுசந்தித்து ஸமாஹிதர் ஆகிறார் –

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர் துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்–சதா பகவத் போக நிஷ்டராகையாலே
சாம்சாரிக ஸ்வ பாவங்கள் ஆகிற கலக்கம் அற்ற ஞான ரூப தபஸ்ஸை யுடைய சனகாதி முனிகள் –
சம்சார அத்வாவைக் கரை கண்ட முக்தர் –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராகையாலே ஒருகாலும் கலக்கம் அற்ற நித்ய ஸூரீகள்-
எல்லாரும் பரிவராய்க் கொண்டு தொழுது மங்களா சாசனம் பண்ணுவர்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை–அபரிச்சின்னமான சமுத்திரத்தை கலங்கும்படி கடைந்த சர்வ சக்தி யுக்தனை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–நாம் முடியக் கண்டு புகழ வல்லோம் ஆகை யாகிற இது
என் செய்ததாய் ஆயிற்று -சொல்லி கோள் என்று லௌகீகரைப் பார்த்துச் சொன்னார் ஆயிற்று –

————————————————————

அநந்தரம் இத்திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு பலமாக சம்சார நிவ்ருத்தியை அருளிச் செய்கிறார் –

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை–வாசா மகோசரமாம் படி ஸுகுமார்யாதிகளுக்கு என்ன வருகிறதோ என்று
அதி சங்கையைப் பிறப்பித்து பரிதாப ஹேதுவான கலக்கமாகிற நோயானது தீரும்படியாக
தன்னுடைய விபூதி பூர்த்தியையும் சக்தி பூர்த்தியையும் காட்டின சர்வாதிகா சேஷியானவனை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்-வரை செறிந்தால் போலே இருக்கிற மாடங்கள் ஸ்த்திரமாம் படியாய் இருக்கிற
திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாருடைய
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்-யுக்தி பிரகாரமாய் செறிந்த சொல் தொடையை யுடைத்தாய்
அத்விதீயமான ஆயிரத்துள் இப்பத்தையும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே-அடைவுபட சொல்ல வல்லவர்கள் விஸ்தீர்ணமாய் பகவத் விஷயத்துக்குப்
பரிவார் இல்லாத இஸ் சம்சாரத்திலே பிறவார்
இது கலித்துறை –

———————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –8–3-

April 29, 2018

இப்படி எம்பெருமானைப் பிரிந்து வ்யசனப்படுகிற தமக்கு ஒரு துணை இன்றியே இருக்கிற படியை அருளிச் செய்கிறார் –

——————————————————-

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

ஸ்வர்க்காதி லோகங்களிலும் இந்த லோகத்திலும் மற்றும் எங்கும் வர்த்திக்கிற தேவ தானவ ப்ரப்ருதி ஸமஸ்த ஆத்மாக்களும்
ஏவம் பூதன் என்று உன்னை உள்ளபடி அறியாதே ஸ்ரீ லஷ்மீ பூமி நீளா நாயகனாய்
சங்க சக்ர கதா தரனாய் பரம ப்ராப்யனாய் இருந்த உன்னைத் தங்களுக்கு ப்ராப்யமான ஷூத்ர ஐஸ்வர்யத்துக்கு உபாயம் என்பர் –
ஆதலால் எனக்கு அவர்க்க்ள் துணை அல்லர் -என்கிறார்

——————————————————-

சரணமாகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்
கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி
அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–8-3-2-

இப்படி ஐஸ்வர்யாதிகள் துணை அல்லர் என்று அருளிச் செய்து கைவல்யார்த்திகளும் தமக்குத் துணை அல்லர் என்கிறார் –
ஐஸ்வர்ய உபாய விதாயக சாஸ்திரங்களை விட்டு மோக்ஷ உபாய விதாயகசாஸ்திரத்தை அவலம்பித்த நாமும்
அப்ராக்ருத ஸ்வ அசாதாரண திவ்ய ரூப விசிஷ்டனாய் சங்கு சக்ர கதா தரனான பரம புருஷனை ஸூபாஸ்ரயமாக அநு சந்தித்து
ஜெயத்தைப் பண்ணி சம்சார நிவ்ருத்தி மாத்ரத்தை ப்ராப்யமாகப் பற்றினோம் அத்தனை இறே –
அவன் திருவடிகளை ப்ராப்யமாகப் பற்றிலோம் இறே –ஆதலால் நீங்களும் எனக்குத் துணை அல்லீர் என்கிறார் –
தம்மோடு அவர்களுக்கு யுண்டான ஐஸ்வர்ய வைராக்ய ரூப சமயத்தாலே கைவல்யார்த்திகளை அஸ்மச் சப்தத்தால் வ்யபதேசிக்கிறார் –

—————————————————

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

தன் தனிமையினுடைய பிரசங்கத்தாலே அவன் தனிமையை நினைத்து அவன் தனிமைக்கு உதவப் பெற்றிலேன்
என்று சொல்லிக் கொண்டு தம்முடைய தனிமையைச் சொல்லுகிறார் –

மாரீச நிரசன அர்த்தமாக வாதல் –கர தூஷண நிரசன அர்த்தமாக வாதல் -எழுந்து அருளும் போது துணை இன்றியே
தன்னுடைய சங்க சக்ராதி திவ்ய ஆயுதங்களைத் தானே சுமந்து கொண்டு போகா நிற்கும் –
வாளும் வில்லும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை – தானே எழுந்து அருளும் போது அவனுடைய
திவ்யாயுதங்களைச் சுமந்து கொண்டு அவன் திருவடிகளையும் திருத் தோள்களையும் என்னுடைய கைகளினுடைய
விடாய் தீரும்படி தொழக் காணப் பெறு கிறிலேன் –
அவனைக் காண வேணும் என்று ஆசைப்பட்டு நாளும் நாளும் இந்த லோகமாகிற நாட்டிலே
தனியே கிடந்தது கூப்பிடா நின்றேன் என்கிறார் –

————————————–

ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வதோர் காரிருளூழியொத்துளதால் உன்
கோலம் காரெழில் காணலுற்றா ழும் கொடியேற்கே–8-3-4-

ஒரு முற்றா உருவாய் அந்தப் பிள்ளைத் தனத்தால் சர்வ லோகங்களையும் அமுது செய்து பெரிய வெள்ளத்திலே
சிறியதோர் ஆலிலையில் யசோதை பிராட்டியைப் போலே இருப்பாள் ஒரு தாயாரும் இன்றியே
தனியே கண் வளர்ந்து அருளுகிற தசையில் துணையாய் இருக்கப் பெறாமையாலும்
வடிவு அழகைக் காண ஆசைப்பட்டுப் பெறாமையாலும்
அஹாயமான துக்க ஆர்ணவத்திலே நிமக்நனாய்க் கிடக்கிற எனக்கு ஒரு க்ஷணமானது
அந்தகாரமயமான யுகமாய்ச் செல்லுகிறது என்கிறார் –

—————————————————————————–

கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5-

அந்த இழவு தீர வேணும் என்று ஆஸ்ரிதற்கு ஆத்மாதானம் பண்ணுகைக்குக் கொடி கட்டிக் கொண்டு இருக்கிற
திருக் கோளூரிலும் திருப் புளிங்குடியிலும் போய்ப் புக்க இடத்திலே தம்மைத் திருக் கண்ணாலே பார்த்து அருளுதல் –
ஒரு வார்த்தை அருளிச் செய்தல் -ஒரு திவ்ய சேஷ்டிதத்தைப் பண்ணுதல் செய்து அருளாதே
ஒரு படியே கண் வளரக் கண்டவாறே நீ ஒரு படியே கண் வளர்ந்து அருளுகிறது
ஆஸ்ரித விரோதி நிரசன ஜெனித ஸ்ரமத்தாலேயோ -அன்றிக்கே த்ரை லோக்ய விக்ரமண ஜெனித ஸ்ரமத்தாலேயோ
என்று கொண்டு இவனுக்கு ஒரு வியஸனம் யுண்டானதாக சங்கித்து வியசனப் படுகிறார்-

—————————————————-

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-

ஸ்வ ஆஸ்ரித சதுர்முகாதி தேவர்களுக்கு ஸ்வ இதர சகல ஜன அபிவந்த்யத்வ நிரதிசய ஐஸ்வர்ய பிரதனாய்
சகல லோக துக்க நிரசன காரியமாக ஸ்வாத்ம விபூஷண சங்க சக்ராதி திவ்யாயுத தரனாய்
நிரதிசய ரமணீய நீல ரத்ன சத்ருசனாய் இருந்த அவனை
ஆசைப்பட்டுக் கிடீர் நான் இப்பாடு படுகிறது என்கிறார் –

—————————————–

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

நான் இப்பாட்டு படா நிற்கச் செய்தே அவன் எழுந்து அருளாது ஒழி கிறது என்னுடைய வ்யஸனம் அறியாமை என்று பார்த்து
ஸ்வ கார்ய அர்த்தமாகப் போகிறாரும் வருகிறாரும் திருப் பரிசாரத்து ஏறப் போகிறாராகவும் அங்கு நின்று வருகிறாராகவும் நிச்சயித்து
அவர்கள் திருப் பரிசாரத்திலே எனக்குத் தாயும் தந்தையாய் என்னைத் தேடிக் கொண்டு இருக்கிற என் திரு வாழ் மார்வற்கு
நிரதிசய தர்சநீய ஸூ தர்சன ஸங்காதி திவ்யாயுதங்களைச் சுமந்து கொண்டு இந்த லோகத்தில் தனியே எழுந்து அருளும் போது
சாயையைப் போலே திரிவான் ஓர் அடியானும் உளன் என்று என் திறம் சொல்லார் -செய்வது என் -என்கிறார் –

——————————————————–

என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-

அவன் சர்வஞ்ஞன் அல்லனோ -அறிந்து அருளாமை யுண்டோ நினையாமை யல்லது என்று பார்த்து
என்னை உன் ஏரார் கோலத் திருவடிக் கீழ் நின்றே ஆட்செய்யும்படி நீ விஷயீ கரித்து அருள நினைப்பது தான் என்று -என்று
அபேக்ஷித்து பின்னையும் அபேக்ஷிதம் செய்து அருளாது ஒழிந்தவாறே
நான் ஒரு உபாய அனுஷ்டானம் பண்ணாமையால் ஆகாதே அபேக்ஷிதம் செய்து அருளாது ஒழிகிறது -என்று பார்த்து –
உன்னுடைய கிருபையால் நிர்ஹேதுகமாக சர்வ லோகத்தையும் அளந்து அருளினால் போலே
அடியேனுடைய அபேக்ஷிதம் செய்து அருளாய் என்கிறார்-

—————————————————————

திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கருமா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9-

ஆகிலும் என்னை உள்ளபடி அறிந்து ஏத்தினால் அல்லது உம்முடைய அபேக்ஷிதம் செய்யக் கடவது என் என்னில் –
திருமால் -எம்பெருமானாய் இருந்த உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை சர்வஞ்ஞரான ப்ரஹ்மாதிகள் தாம் அறிய வல்லரோ –
இவ்வர்த்தம் உபபோதயமோ -ஆனபின்பு அதி ஷூத் ரனான நான் அறிந்து ஏத்துகை யாவது என் என்ன –
அங்கனே யாகில் அத்விதீய பரம காரண பூதனே-
சங்கல்ப மாத்ரத்தாலே க்ருதத்ரேதாதி சகல யுபப்ரவர்த்தகனே-
பிராகிருத ஷூத்ர விஷய பிராவணனான என்னையும் கூட தோற்பித்து அடிமை யாக்கவல்ல
நிரவதிக ஸுந்தர்ய ஸுகுமார்ய லாவண்ய யவ்வனாதி அனந்த குண நிதியாய் –
நீல மேக சத்ருசமான திவ்ய ரூபத்தை யுடையவனே என்று சொல்லுவான் என் என்னில்
காதலால் கலக்குண்டு சொன்னேன் -நான் அறிந்து சொன்னேன் அல்லேன் -என்கிறார் –

—————————————————————

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-

அவனை அறிந்து ஏத்தினீர் ஆனாலோ என்னில் அஸ்கலித ஞானராய் -நிரதிசய பக்தி யுக்தராய் பகவத் அனுபவ ஏக போகரான
அயர்வறும் அமரர்கள் அவனுடைய கல்யாண குண மஹா தயியினுடைய-இக்கரை கண்டார் –
பகவத் பரிசர்யை ஏக போகரான நித்ய சித்த புருஷர்கள் –
அவன் திருவடிகளிலே ஸ்துத் யாதி பரிசர்யை பண்ணுவார் –
அஷோ பயமஹோதயியை ஷூபிதமாம் படி கடைந்து அருளினவன் பரிசர்யை பண்ணப் படுகிறவன் –
இப்படி இருக்கிற அவனை நாம் உள்ளபடி அறிந்து புகழுகையாவது என் -ஆகில் நீர் புகழ்வான் என் என்னில் –
என் காதல் என்னைக் கலக்க நின்றால் நான் செய்வது என் –
ஆனபின்பு உன் கிருபையால் அடிமை கொண்டு அருள வேணும் என்கிறார் –

———————————————————————–

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-

துர்வசமாய் காலாக்னி சத்ருசமாய் இருந்த விரஹ தாபத்தால் யுள்ள ஸந்தாபம் தவிர்க்கும்படி
நிரதிசய விஷயீ கார ஸூ சகமான காருண்ய மய சிரஸ் கம்ப நத்தாலே தம்மை விஷயீ கரித்த எம்பெருமானைச் சொன்ன
இத்திருவாய் மொழியை வல்லார் சம்சார மருகாந்தரத்தில் பிராவார் என்கிறார்

———————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அழகிய மணவாளச் சீயர் அன்போடு அருளிச் செய்த பன்னீராயிரப்படி –8-2-

April 29, 2018

இரண்டாம் திருவாய் மொழியில் -தம்முடைய ஆகாங்ஷானு ரூபமாக அகவாயிலே அவன் வந்து முகம் காட்டினப்பாடியை அனுசந்தித்தவர் –
அவனுடைய பூர்த்தியைக் கண்டு பாஹ்ய சம்ச்லேஷம் பண்ண அபி நிவேசித்து அதித்வரித சித்தராய் ப்ராப்ய பூதனான ஈஸ்வரனுடைய
அபிகம்யத்வ ஸூ சகமான ஸுலப்யாதி குணாவத்தையையும்
அனுபாவ்ய ஆகாரத்தையும்
ஆகர்ஷகமான ஆபி ரூப்யத்தையும்
அநிஷ்ட நிராசகமான பரிகரவத்தையும்
அபரிச்சேதயமான உஜ்ஜ்வல்ய அதிசயத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அவபந்தும் அசக்தையையும்
அபி நிவேச ஜனகமான ஆகார விசேஷங்களையும்
அந்நிய சக்த விஷயத்தில் அஸூல பதையையும்
அநந்யார்ஹத்வ ஆபாதகத்வத்தையும்
சித்த அபஹாரியான திவ்ய விக்ரஹ உச்ச் ராயத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரனை அனுபவிக்கும் இடத்தில் இவ்வருகு யுண்டான அனுபவத்தில் சங்கம் அற்றால் அல்லது
சித்தியாது என்று அறுதி இட்டு த்வரையாலே ஆர்த்தரான தம்முடைய ஆர்த்தியை ஆற்றுகைக்காக
உன்முகரான ஸூ ஹ் ருத பிரக்ருதிகளைக் குறித்து தம்முடைய நிஸ் சங்கதையை வெளியிட்ட பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்த நாயகியானவள் தன்னுடைய அபிசரண உத்யோகத்தாலே தோழிமார் தாய்மாராடு
தான் வளர்த்த கிளி பூவை மயில் குயில்களோடு வாசியற சர்வர் பக்கலிலும் சங்கம் அற்று
தன்னுடைய ஸ்த்ரீத்வாதி குணங்களையும் அநா தரித்து அவன் வடிவு அழகிலே அபஹ்ருத சித்தையான
ஆகாரத்தைப் பேசின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

—————————————————————

முதல் பாட்டில் சர்வ ஸூலபனான திருவேங்கடமுடையானை அபி நிவேசித்து
என் ஆபரண சோபையோடு ஆபி ரூப்பியத்தோடு வாசியற இழந்தேன் என்று
தோழிமார்க்கு அறிவிக்கிறார் –

நங்கள் வரி வளை யாயங்களோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-

நங்கள் வரி வளை யாயங்களோ–வரியை யுடைத்தான வளையை யுடையராய் இருக்கிற நம்முடைய ஸமான
ஸூக துக்கைகளான உங்களைப் போல் அன்றியே
நம்முடை ஏதலர் முன்பு நாணி–ஹித வசனம் பண்ணி மீட்க்கத் தேடுகிறவர்கள் ஆகையால் ஸாத்ரவ கோடியிலே
நிற்கிற தாயார் -அயலார் -முன்பு சொல்ல நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்–அந்தரங்கதையான உங்களுக்கு யான் சொல்லலாவது ஒரு வார்த்தையானது
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்-பாரா நின்றேன் -எல்லா வழியாலும் இந்த விகார ஹேதுவைப் பாசுரமிட்டுச்
சொல்லும்படி காண மாட்டு கிறிலேன் -ஆதலால் என் விகாரம் கொண்டு அறியும் அத்தனை -அதாவது
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்யும்
வெவ்விய பார்வையுடைய பெரிய திருவடியை நடத்தும் நிர்வாஹகனாய் –
அந்த வாஹன அதிஷ்டானத்தைக் காட்டி என்னை அடிமை கொண்ட ஸ்வாமியாய் –
அனுபவிக்கைக்கு ஈடாக திருமலையில் ஸூலபனாய் வந்து நிற்கிற இவனை -இவ்வாகாரங்கள் அடியாக அபி நிவேசித்து நடந்து
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்–என்னுடைய சங்கு வளைகளானவை சரிந்து கழன்றன –
ஸ்வாபாவிதமான ஒளியும் இழந்தேன் -பெரிய முலைகள் பசுப்பால் பொன்னிறமாய் சிசில சரீரையானேன்-
நிர்த்தோஷ பிராமண ரூடனாய் நிருபாதிக சம்பந்த யுக்தனாய் நிரவதிக ஸுலப்ய விசிஷ்டானாவான் என்று கருத்து

—————————————————————

அநந்தரம் அனுபாவ்ய ஆகார விசேஷத்தை யுடையனான அவன் அபகரித்த வளை முதலானவற்றை
எத்தனை காலம் கிலேசிக்கிறேன்-உங்களுக்கு அகப்பட இது சொல்லும் விரகு அறிகிறிலேன் என்கிறாள் –

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில்–இவன் பாடே சென்று ஓன்று வேண்டி பெற வேணும் என்று இருப்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்-எனக்கு அசாதாரணை களான தோழிமாறான உங்களுக்கே யாகிலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ-காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்-இவ்விடத்தில் இந்த அவசாத ஹேதுவை
துக்காபிபூதையான நான் சொல்லி ஆற வேண்டி இருக்கச் செய்தே சொல்லும்படி ஐயோ காண்கிறிலேன்–துக்கம் ஏது என்னில்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்–எப்போதும் காண்கைக்கு தக்கு இருப்பதாய் –
விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றங்களாலே தாமரை போன்று இருக்கிற திருக் கண்ணை யுடையனாய் –
பார்வையாலே தன் பவ்யத்தையைக் காட்டி வஞ்சித்து சர்வ ஸ்வாபஹாரம் பண்ணின க்ரித்ரிமனாய் –
இக் கண் அழகாலே ஸூரி களை யடங்க அலற்றப் பண்ணுமவனாய் -அப்படி என்னையும் ஈடுபடுத்தினவனை கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–என் பக்கலில் நின்றும் அங்கே போய்க் குவிந்த
வரி வளையும் ஸ்த்ரீத்வாதி பூர்த்தியையும் வாங்கிக் கொள்ளுகைக்காக எத்தனை காலமுண்டு தளர்ந்து கிலேசிக்கிறேன்

—————————————————————–

அநந்தரம் அதிசயித ஆபி ரூபியத்தை யுடையவனைச் சென்று கிட்டி என் வளை தொடக்கமானவை வாங்கும் இடத்தில்
நீங்கள் அவன் துர்லபம் என்று விலக்கிலும்-காலம் முடிந்து போக்கிலும் நான் கிட்டி அல்லது விடேன் -என்கிறாள் –

காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான்
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் !
இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-

நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட–நீல நிறமாய் விகசிதமாய் அபரிச்சேத்யமான
தேஜஸ்ஸாலே சூழப்பட்ட மஹா மேகம் போலே இருக்கிற நிறத்தையுடைய ஸ்ரீ கிருஷ்ணன் அபஹரித்துக் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான் எத்தனை காலமும் கூடச் சென்றே–தர்ச நீயமான வளையோடே கூட என் நிறத்தை
எத்தனை காலமும் கூடச் சென்றே யாகிலும் கொள்ளுகைக்காக
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் ! இனி நாணித் தான் என் ?-லோகம் அறியும்படி துணிந்து புறப்பட்டாள் என்கிற பழியைச் சுமந்தேன் –
அழகிய நுதலை யுடைய தோழிமீர் இனி லஜ்ஜித்து என்ன பிரயோஜனம் உண்டு -ஆதலால் –
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்–காலம் இளைத்து முடிந்து போமது ஒழிய அவன் துர்பலனானாலும் விடமாட்டாத பாபத்தையுடைய நான்
இளைத்து விடுகிறேன் அல்லேன் -இது ப்ரத்யஷித்துக் கொள்ளுங்கோள்-

———————————————–

அநந்தரம் ஆஸ்ரித அநிஷ்ட நிவர்த்தகமான ஆயுத்தாதி பூர்த்தியை யுடையவனைக் கிட்ட வேணும் என்று நினைத்து
சர்வ ஸ்வாபஹாரம் பிறந்த நான் இனி எத்தைக் கொடுப்பது -என்கிறாள் –

கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்
ஆழி வலவனை யாதரித்தே–8-2-4-

மாடக் கொடி மதிள் தென் குளந்தை வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்–மாடங்களையும் கொடியோடு கூடின மதிளையும் யுடைத்தாய்
நன்றான திருக் குளைந்தையில்-அழகிய மேற் பக்கத்திலே நின்ற ஆச்சர்ய சேஷ்டித யுக்தனாய்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர் ஆழி வலவனை ஆதரித்தே –ஹர்ஷத்தாலே தர்ச நீய கதியான பெரிய திருவடியை மேற் கொண்டு
இருப்பானாய் ஆஸ்ரித நிரசனத்தில் வெற்றியை யுடைத்தான போரை யுடையனான திருவாழியை வலத்திலே யுடையனானவனை ஆதரித்து
கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன் ஆழி வலவன்-என்று வல்லவன் என்றுமாம்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்-ஸம்ஸ்லேஷிக்க வேண்டும் என்று அழகிய வளை நெஞ்சம் தொடக்கமானவை எல்லாம்
நெஞ்சத்துளக்கம் என்று நெஞ்சோடு யுண்டான துவக்கு இழந்தேன் என்றுமாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல் பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்–என் பக்கல் ஸேஷியாமல் விட்டுப் போம்படியாக இழந்து
பல வளையை யுடைய பெண்டுகள் முன்னே நெடும் காலமுண்டு என் ஸ்வ பாவம் அழிந்து போய் இனி எத்தைக் கொடுப்பேன் –

———————————————————-

அநந்தரம் -தத்வ ஞானராய் இருப்பார்க்கும் அபரிச்சேதயமான அதிசயித உஜ்ஜ்வல்யத்தை யுடையனான சர்வேஸ்வரனை
ஆசைப்படுகையும் அவன் நமக்கு முகம் காட்டுகையும் நம்முடைய அளவேயாய் இருக்கிறதோ என்கிறாள் –

ஆழி வலவனை ஆதரிப்பும்
ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?
சொல்லுவதோ ?இங்கரியது தான்
ஊழி தோறூழி யொருவனாக
நன்கு உணர்வார்க்கும் உணரலாகா
சூழலுடைய சுடர் கொளாதித்
தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே-8-2-5-

ஊழி தோறூழி யொருவனாக நன்கு உணர்வார்க்கும் உணரலாகா சூழலுடைய நினைக்கும் காலே—ஆராய்ந்து பார்க்கும் அளவில்
தத்துவத்தை நன்றாக உள்ளபடி அறிய வல்லார்க்கும் கால தத்வம் உள்ளதனையும் ஏவம் வித ஸ்வ பாவனாய் இருப்பான் ஒருவனாக
பரிச்சேதித்து அறிய ஒண்ணாத படி ஆஸ்ரிதரை அகப்படுத்திக் கொள்ளும் சூழ்ச்சியாகிற சேஷ்டிதங்களை யுடையனாய்
சுடர் கொளாதித் தொல்லை யஞ்சோதி–ஸ்வரூப பரிணாமம் வராதபடி உபாதானமாகையும் உபாதானமான தானே நிமித்தமாகையும் –
சித் அசித் பரிணாமம் தனக்குத் தட்டாதபடியுமாகிற தேஜஸ்ஸை யுடைய காரண பூதனாய்
நித்ய அசாதாரணமாய் அப்ராக்ருதமான ஜ்யோதிர்மய ரூபத்தை யுடையனாய்
ஆழி வலவனை ஆதரிப்பும் ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்–திருக் கையும் திரு வாழியுமான சர்வேஸ்வரனை ஆதரித்து ஆஸ்ரயிக்கையும்
ஆஸ்ரயண அவஸ்தையில் சர்வ ஸ்மாத் பரத்வத்தோ பாதி ஸுசீல்யத்தை யுமுடைய அவன்
ஆஸ்ரிதைகளான நம் பக்கலிலே வருகையும் அபேக்ஷிதங்கள் செய்கையும் எல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ? சொல்லுவதோ ?இங்கரியது தான்–நம் அளவிலே உடையோமானோமோ –
என்னோ பாதி இவ்விஷயத்தில் வாஸி அறியும் தோழிமீர்காள் –
சர்வ ஸுலப்ய ஸுசீல்யாதிகள் கிடக்க ஸ்வைரமான துர்லப்யம் சொல்லுகையோ இங்கு அரியதாய் இருக்கிறது-

————————————————————-

அநந்தரம் அதிசயித ஞானர்க்கும் அவபந்தும் அஸக்யமாம்படி சம்சய ஜனகனான அவன் நம்மோடே
ஸம்ஸ்லேஷித்து ஈடுபடுத்தின பின்பு வேறு ஆர்க்குக் கூப்பிடுவோம் என்கிறாள் –

தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால்
என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை
மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6-

தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால் என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்–ஆராயப் பார்த்தோம் ஆகில் அசாதாரணமாய்
அநவதிகமான அவனுடைய தேஜஸ்ஸானது என்னுடைய சொல்லில் அடங்குமது அன்று –
அதிசயித ஞானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிஷ்கர்ஷிக்க ஒண்ணாத படி
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் அத்திறம் நிற்க அபர்யந்தமான ஸம்சயத்தை விளைக்கும் அந்த மேன்மை இடையாட்டம் நிற்க
வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மாலே—பூங்கொடியும்-அழகிய வயலும் சூழ்ந்த திருக் குடந்தையில்
ஸ்லாக்யமான தாமரை போலே இருக்கிற திருக் கண்கள் வளரும்படி சாய்ந்து அருளின ஆஸ்ரித வ்யாமோஹத்தை யுடையவனாய்க் கொண்டு
எம்மாமை கொண்டான்-அல்லி மலர்த் தண் துழாயும் தாரான் ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்-என் நிறத்தை அபஹரித்தான்–
பூந்தாரினுடைய விகாசத்தை யுடைத்தானா திருத் துழாய் மாலையையும் தரு கிறிலன் –
நாம் அவனாலே நலிவு பட்ட பின்பு நலிந்த அவனை ஒழிய ஆர் இருக்கலாரிட்டு கூப்பிடுவோம்
உறவு செய்து அகப்படுத்தினவனை ஒழிய உறவில்லாதற்குக் கூப்பிட்டு பிரயோஜனம் என் -சொல்லி கோள்

—————————————————–

அநந்தரம் -அபி நிவேச ஜனகமாய் ஆஸ்ரித உபகாரகனுடைய ஆகாரங்களை அனுபவித்து ஈடுபட்ட நான்
அநேக காலம் சென்றாகிலும் கண்டு அல்லது விடேன் -விலக்குகிற உங்களோடு
என் பக்கல் ஒரு தொடக்கம் இல்லை -என்கிறாள் –

மாலரி கேசவன் நாரணன்
சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் !
என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை
உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று–ஆஸ்ரித வ்யாமுக்தனானவன் -அந்த வ்யாமோஹத்தாலே
அவர்கள் பாபங்களை அபஹரிக்கும் ஸ்வ பாவத்தை யுடையவன் –
நிவ்ருத்த பாபரானவர்க்கு நித்ய அனுபாவ்யமான துணையாம்படி பிரசஸ்த கேசனனானவன் –
கீழ்ச் சொன்ன வ்யாமோஹாதிகளுக்கு எல்லாம் தலமான நிருபாதிக சம்பந்தத்தை யுடையவன் –
இக் குணங்களை ப்ரவ்ருத்தமாக்கும் ஸ்ரீ மஹா லஷ்மீ பிராட்டிக்கு பதியானவன் –
ஸ்ரீ யபதித்தவ நாராயணத்வங்கள் நிறம் பெறும்படி பிறந்து ஆஸ்ரித பவ்யனானவன் –
பவ்யத்தையைக் கண்டு ஆச்ரயித்தார்க்குக் கொடுக்கும் பரிபூர்ண விபூதியை யுடையவன் –
என்று என்று இந்த ஸ்வ பாவங்களைப் பல காலும் சொல்லி -ஒரு கார்யார்த்தமாக அன்றிக்கே
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்–ஆர்த்தி அதிசயத்தாலே கூப்பிடும்படி -இதுவே
ஸ்வ பாவமாக என்னைப் பண்ணிக் கை விட்டு பொகட்டு ஒரு பிரகாரத்தாலும் தன் வடிவையும்
தன்னைக் கிட்டுகைக்கு ஈடாய் இருப்பதோர் அடையாளத்தையும் காட்டு கிறிலன்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?-என்னை விலக்குவதாக உத்யோகித்து
ஏலம் போலே ஸ்ரமஹரமான பரிமளத்தையும் பூவையும் யுடைத்தாயுள்ள குழலையுடைய அன்னைமீர்காள் –
ஏவம் விதைகளாய் எனக்கு அசாதாரணை களான தோழிமீர்காள் அவன் ஈடுபடுத்தி முகம் காட்டாது ஒழியில் என்னாலே செய்யலாவது என்
காலம் பல சென்றும் காண்பதாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–இப்போதைக்கு விட்டுப் பிடி எனினும்
கால தத்வம் உள்ளதனையும் சென்றாகிலும் ஆணையே காணக் கடவேன்-
இந்த வ்யவசாயத்தைக் குலைக்க நினைக்கிற உங்களோடு எனக்கு ஒரு சம்பந்தம் இல்லை
கேவலம் ஆணை என்றது அவன் நாம கிரஹணம் பண்ணாமைக்கு என்று கருத்து –
அல்லது உறவில்லாத இவர்களை ஆணை ஈடாக கூடாது இ றே

——————————————————-

அநந்தரம் நிஸ் சர்க்கர்க்கு அல்லது அவன் ஸூலபனாகாத படியால் முன்பே அந்நிய வர்க்கத்தில் சங்க ராஹித்யம் சொன்னாளாய்
தன் லீலோ உபகரணங்களான ஸூக ஸாரிகாதி விஷயமான சங்க ராஹித்யத்தைச் சொல்லுகிறாள் –

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்!
பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும்
அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவனவை காண் கொடானே–4-2-8-

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்! பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !–யான் வளர்த்துப் போந்த
கிளிகாள் பூவைகாள் குயில்கள் மயில்கள் உங்களுக்கு
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்- என் பக்கல் ஓர் அவகாசம் இல்லை –
நம்முடையதான நிறத்தையும் வளையையும் நெஞ்சையும் ஒன்றும் அவைசேஷிக்க ஒட்டாதே அபஹரித்துக் கொண்டவன்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும் அஞ்சன வெற்புமவை நணிய–எட்டாத படி போயிருக்கிற பரமபதமும் திருப் பாற் கடலும்
திருமலையுமாகிற ப்ராப்ய ஸ்தலங்களானவை கிட்டி அனுபவிக்கக் குறையில்லை
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே–இதர விஷயங்களில் சங்கங்களை ச வாசனமாக
விட்ட பின்பு அல்லது ப்ராப்ய பூதனானவன் அந்த போக ஸ்த்தானங்களை காணக் கொடான் –

———————————————————-

அநந்தரம் -வாமன வேஷத்தைக் காட்டி அநந்யார்ஹமாம் படி ஜகத்தை அளந்து கொண்ட சர்வேஸ்வரனுக்கு
என்னுடைய பூர்த்தியோடே லஜ்ஜையும் இழந்தேன் -இனி எத்தைக் கொடுப்பேன் -என்கிறாள் –

காண்கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-

காண்கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக் கை செயப் பாலதோர் மாயம் தன்னால்–எத்தனையேனும் அளவுடையார்க்கும்
ஸ்வ யத்தனத்தாலே தன்னை காணக் கொடுக்குமவன் அல்லனாய் வைத்து
ஆஸ்ரித அர்த்தமாக தன் வஞ்சகத்தால் கைத் தொழிலுக்கு அப்பாலாய் அத்விதீயமான
மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த–ஸுந்தர்யத்தையுடைய அர்த்தியான வாமன வேஷத்தை காட்டி –
அனந்தரத்திலே பூமியும் ஊர்த்வ லோகமும் நிறையும்படி விஸ்திருதனாய்
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு என் நிறைவினோடு-ஓங்கி உஜ்ஜவலமான பல தோள்களும் தழைத்து இருக்கிற
ப்ரஹ்ம ருத்ராதி பதியான அவனுக்கு என்னுடைய ஸ்த்ரீத்வ பூர்த்தியோடே கூட
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன் என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–-லஜ்ஜையையும் கொடுத்தேன் –
என்னோடே உறவு உடையீர்களாய் உஜ்ஜவலமான நெற்றியையுடைய குறைவற்றவர்களே
ஸ்வரூப ஸ்வ பாவங்கள் இரண்டும் இழந்தேன் இனி எத்தைக் கொடுப்பேன் –

——————————————

அநந்தரம் மநோ ஹாரியாய் உத்துங்கமான வடிவழகை யுடைய அவன் திருவடிகளிலே என் நெஞ்சானது என்னை விட்டு பிரவேசித்தது –
நீங்கள் நியமிக்கிறதுக்கு எந்நாள் செய்யலாவது என் என்கிறார்

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்
யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான்
நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-

என்னெஞ்சென்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி-எனக்கு பவ்யமாய்ப் போந்த நெஞ்சானது அவன் விஸ்லேஷித்துப் போன
உனக்கு கரணம் ஆவேன் அல்லேன் என்று கரணியான என்னை விட்டு அகன்று
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு–திருவாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
இரண்டு திருக் கைகளிலும் என்திக் கொண்டு பலவாய் பரந்து சூழ்ந்த சுடரை யுடைத்தானா ஆதித்யனோடே கூட
பால் மதி ஏந்தி யோர் கோல நீல நன்னெடும் குன்றம் வருவதொப்பான் நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-பால் போலே வெளுத்த நிறத்தை
யுடைய சந்திரனையும் தன் கொடு முடிகளில் ஏந்தி அத்விதீயமாய் தர்ச நீய ஆகாரமாய்
நீல நிறத்தை யுடைத்தாய் தாது வைச்சித்ர்யாதிகளால் யுண்டான வை லக்ஷண்யத்தை யுடைத்தாய் உத்துங்கமான மலை நடந்து வருவது ஒத்து –
ஆஸ்ரிதற்கு வந்து தோற்றுமவனுடைய அபி நவமான தாமரை போலே இருக்கிற திருவடிகளை அடைந்தது –
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள் யானினிச் செய்வதென் -என்னோடு உறவுடையகோளாய் வைத்து என்னீடுபாடு அறியாதபடியாலே
அவயவ சோபையாலும் ஆத்மகுணத்தாலும் பூரணைகளாய் இருக்குமவர்களே
உங்களைப் போல் அன்றியே ஈடுபட்ட நான் அசஹாயையாம் படி நெஞ்சம் இழந்த பின்பு உங்கள் நியமனத்துக்கு எத்தைச் செய்கேன்
நெஞ்சுடையார் அன்றோ தரித்து இருப்பது என்று கருத்து –

——————————————–

அநந்தரம் இத்திருவாய் மொழியை இசையோடு அப்யஸிக்க வல்லவர்கள் உபய விபூதியிலும்
பகவத் அனுபவ பரிபூர்ணராய் இருப்பர் என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

பாதமடை வதன் பாசத்தாலே
மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-

பாதமடை வதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு–திருவடியை பிராபிக்கையில் யுண்டான அபி நிவேசத்தாலே
இதர விஷயமாய் பிரபலமான பாசங்களை நேராக விட்டு -இப்படி இதர சங்கம் அறுகையாலே
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன-கோது அற்ற புகழையுடைய ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகள்
விஷயமாக தம்முடைய பாவ வ்ருத்தியைப் ப்ரபந்ததீ கரித்த பரம உதார குணத்தை யுடைய ஆழ்வார் அருளிச் செய்ததாய்
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்–கர்த்தாந்தர பிரஸ்தானம் ஆகிற தீது இன்றியே
அந்தாதியாய் அத்விதீயமான ஆயிரத்துள் கடலிலே முத்துப் பட்டால் போலே அத்விதீயமான
இவை பத்தையும் இசையோடு கூட அப்யஸிக்க வல்லவர்கள்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–அவித்யா கர்மா வாசனா ருசி பிரகிருதி சம்பந்த ரூப தோஷங்களில்
ஏதேனும் ஒரு தோஷம் இன்றியே இந்த விபூதியிலும் குண அனுபவ பூர்ணராய் அந்த விபூதியிலும்
அவாப்த ஸமஸ்த காமராய்க் கொண்டு அநந்ய அதீனராய்–சர்வ பிரகார பரிபூர்ணராவார்கள்
இது எண் சீர் ஆசிரிய விருத்தம்

—————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –8–2-

April 29, 2018

இந்த வ்யஸனம் முறுகி-எம்பெருமானோடே கலந்து பிரிந்த பிராட்டியாய் காண வேணும் என்று கூப்பிடுகிறார் –
ஸ்ரீ வைகுண்ட நாதனான சர்வேஸ்வரனும் உன்னுடைய கடாக்ஷ லஷ்யமாகப் பெறுவது காண் என்று
ஆசைப்பட வேண்டும்படியான வடிவையுடைய நீ ஆசைப்படுகைக்கு ஈடாய் இருபத்தொரு விஷயம் யுண்டோ –
நீ ஆசைப்பட்ட விஷயம் ஏது என்றும் உனக்குச் செல்லுகிற அவசாதம் ஏது என்றும் இவளுடைய தோழிமார் கேட்க –

————————————————

நங்கள் வரி வளை யாயங்களோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-

யுகாவாதார் முன்பு என்னுடைய அவசாதத்தை வ்யஞ்சிப்பிக்கையில் உள்ள லஜ்ஜையாலும் அவசாதம் தான் நிரவதிகமாய் இருக்கையாலே
அதுக்கு வாசகமாய் இருபத்தொரு சப்தம் காணாமையாலும் என்னுடைய அவசாதத்தை உங்களுக்குச் சொல்ல மாட்டு கிறிலேன்-
இப்படி அவசாதம் வருகைக்கு ஆசைப்பட்டது என் என்னில் –
தீஷ்ண நிரீக்ஷண நிர்வாஹ்ய பிரதிபஷனான பெரிய திருவடியை வாகனமாக யுடைய திருவேங்கடமுடையானை ஆசைப்பட்டு
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன் -என்கிறார் –

—————————————————-

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-

நீ ஆசைப்பட்ட விஷயம் திருவேங்கடமுடையானாகில் அது யுக்தம் -உனக்கும் கூட ஸ்ப்ருஹனீயனாவன் ஆகிலும்
நீ ஆசைப்பட்டால் கிடையாதது உண்டோ -என்னில் ஆசைப்பட்ட பொருள் பெறுவார் எல்லாரிலும் தலையாய் இருக்கச் செய்தேயும்
ஆசைப்பட்டுப் பெறாதே நான் படுகிற வ்யஸனம் வாசா மகோசரம் ஆகையால் வ்யசனப்படும் அத்தனை அல்லது
உங்களுக்குச் சொல்லுகைக்கு ஒரு சொல்லு சொல்லக் காண்கிறிலேன் –
அவனை ஆசைப்பட்டால் உத்தர க்ஷணம் பெறாது ஒழியில் தளர்ந்து கொண்டு நிற்கும் அத்தனையோ என்னில் –
சதா அனுபாயமான மானாலும் அபூர்வ தர்ச நீயமாய் புண்டரீக தள அமலாயதமான திருக் கண்களையும் யுடையனாய்
தத் ஸுந்தர்ய பரிமுஷித சகல ஜன மநோ நயனனாய்-
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து என்னை அடிமை கொண்ட பரம சீலனாய் இருந்த அவனை ஆசைப்பட்டுப் பெறாதே
என்னுடைய வலயாதி பூஷணங்களையும் ஆத்மகுணங்களையும் இழந்து
அவை கொள்கைக்கு நான் வருந்துகிறது எத்தனை காலமுண்டு -என்கிறார் –

———————————————————-

காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான்
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் !
இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-

அவனை ஆசைப்பட்டுப் பெறாதே உனக்குள்ளவையும் இழந்து அவை பெறுகைக்கு நெடும் காலம் வருந்தியும் பெறாத பின்பு
இனித்தான் வருந்தினால் கிடைக்குமோ -இனி அவை பெறுகையில் வருந்தாதே விட்டாலோ என்னில் –
நீல ஜ்யோதி பரிவ்ருத்த மஹாவலாஹக சத்ருசமான திருமேனியை யுடையனான ஸ்ரீ கிருஷ்ணனாலே அபஹ்ருதமான
கோல வளையோடு மாமை கொள்வான் உத்யுக்தையான நான் எத்தனை காலம் கூடச் சென்றாகிலும் கொள்வன் –
இக்கால தத்வம் தான் முடிந்து போம் அத்தனை அல்லது நான் கண்டு அல்லது விடேன்-இத்தைக் கண்டு கொண்மின் –
அவன் தான் ஆசைப்பட அவனுக்கும் அரியையாய் இருக்கக் கடவ நீ அவனை ஆசைப்பட்டால் உனக்குப் பழி வரும் என்று
லஜ்ஜை இல்லையோ என்னில் -ஞாலம் அறியப் பழி சுமந்தேன் -நன்னுதலீர் இனி நாணித்தான் என் என்கிறார் –

—————————————————————–

கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்
ஆழி வலவனை யாதரித்தே–8-2-4-

இதுக்கு முன்பு அவனை யாசைப்பட்டு உன்னுடைய உபகரணங்களை இழந்தால் போலே இனி யுள்ளவற்றையும் இழவாதே
அவனை யாசைப்படத் தவிர்ந்தாலோ என்னில் – ஹேம கிரி சிகர சத்ருச பிரசாத அலங்க்ருதமாய் த்வஜ விராஜித பிரகார பரிவ்ருதமாய்
தக்ஷிண திக் திலக பூதமாய் இருந்த திருக் குளந்தையில் பரம உதாரமான மேலைத் திக்கிலே
வைநதேய விஜி திரிபுர நிகர ஸூ தர்சன விஸ்ராந்த தக்ஷிண புஜனாய்க் கொண்டு ஸூ ந்ருத்தவத் தர்ச நீயனாம் படி
நின்று அருளின அவனை ஆதரித்துக் கூடச் சென்றேன் –
சென்று கோல் வளை நெஞ்சம் தொடக்கம் எல்லாம் பாடாற்ற ஒழிய இழந்து வைகல் பல் வலையர் முன்னே
என் ஸ்வ பாவம் எல்லாம் இழந்தேன் -இனி என் கொடுக்கேன் -என்கிறார் –

——————————————————————————–

ஆழி வலவனை ஆதரிப்பும்
ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?
சொல்லுவதோ ?இங்கரியது தான்
ஊழி தோறூழி யொருவனாக
நன்கு உணர்வார்க்கும் உணரலாகா
சூழலுடைய சுடர் கொளாதித்
தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே-8-2-5-

அவனை ஆசைப்பட்டால் பெற ஒண்ணாத துஷ் பிராபன்-அவனை ஆசைப்பட வேண்டா வென்னில் –
பரஞ்சோதிஸ்ஸான நினைக்கப் புக்கால் ஞான வதாம் அக்ரேஸர்களான சனகாதி முனிகளுக்கும் ஊழி தோறு ஊழி கூடினாலும்
ஒருவனாக உணர ஒண்ணாத திவ்ய சேஷ்டிதங்களையும் தேஜோ ப்ரப்ருத்ய அஸங்க்யேய கல்யாண குணத்தையும் உடையான்
ஒருவனாகிலும் அந்த சங்க சக்ர கதா தரனாய் இருந்தவனை ஆசைப்படுகையும்
ஆசைப்பட்ட நம் போல்வார் பக்கல் அவன் வருகையும் நாம் தொடங்கியோ -இப்படி அரியனாய் இருக்கச் செய்தே
ஆசைப்படுவாரும் பெறுவாரும் எத்தனைவர் –
அவன் அரியன் அவனை ஆசைப்பட வேண்டா என்று சொல்லுகை எளிது என்னாச் சொல்லும் இத்தனையோ -என்கிறார் –

———————————————————————

தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால்
என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை
மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6-

அவன் அரியன் அல்லனோ என்னில் நாம் சொல்லும் அளவோ அவனுடைய அருமை -ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் கூட
அறிய ஒண்ணாத ஸ்வரூப ஸ்வ பாவங்களை யுடையான் ஒருவன் அல்லனோ –
அத் திறம் நிற்க என்னை விஷயீ கரித்து அருளுகைக்காகத் திருக் குளை ந்தையிலே புகுந்து வைத்து
என்னுடைய சர்வஸ்வாதத்தையும் அபஹரித்துத் தன் திருவடிகளில் அல்லி மலர்த் தண் துழாயும் தருகிறிலன் –
இப்படி அநியாயம் செய்த அவனை ஒழிய மற்று ஆரைக் கூப்பிடுவோம் -சொல்லீர் -என்கிறார் –

————————————————————-

மாலரி கேசவன் நாரணன்
சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் !
என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை
உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

இப்படி கூப்பிடச் செய்தேயும் தன்னைக் காட்டாது இருக்கிற அவனை ஆசைப்படுவார் உண்டோ என்னில் –
ஆஸ்ரித வத்சலன் -ஆஸ்ரித ஆர்த்தி ஹரன் -ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவன் -சர்வ சக்தி ஸமஸ்த கல்யாண குண நிதி –
ஸ்ரீ யபதி-பரம ஸீலாவான் -ஸ்ரீ வைகுண்ட நிலயன்-என்று கூப்பிடும்படி பண்ணி விட்டிட்டு ஒன்றும் உருவும் சுவடும் காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
-வியஸனம் பொறுக்கலாய் இருக்கிறது இல்லை -காலம் பல சென்றும் உங்கள் ஆணையே கண்டு அல்லது விடேன் –
நீங்கள் இதற்கு விரோதத்தைப் பண்ணில் உங்களோடும் உறவில்லை என்கிறார்

——————————————————

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்!
பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும்
அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவனவை காண் கொடானே–4-2-8-

தன்னை பிரதிபந்திக்கிற அன்னைமாரோடும் உறவறச் செய்தேயும் அவனைக் காணாது ஒழிந்தவாறே தான் வளர்த்த
தன்னுடைய லீலோ உபகரணமான கிளிகள் பூவைகள் குயில்கள் மயில்கள் என்கிற இவற்றோடு உள்ள சம்பந்தம் ஆகாதே
அவனைக் காண்கைக்கு பிரதிபந்தகம் என்று பார்த்து அவற்றை நோக்கிச் சொல்லுகிறாள் –
அவன் நம்முடைய நிறமும் வளையும் நெஞ்சும் தொடக்கமாக யுள்ள சர்வஸ்வத்தையும் அபஹரித்துக் கொண்டு போனாலும்
பரம ப்ராப்யமான திரு நாடும் திருப் பாற் கடலும் திரு மலையும் தன்னை ஆசைப்பட்டார்க்குக் காணல் நணியவாகில்
காட்டாது ஒழிவான் என்னில் உங்கள் பக்கலுள்ள சங்கம் நிஸ்சேஷமாகப் போனால் அல்லது அவன்
அவை காண் கொடான் ஆதலால் இனி உங்களோடும் உறவில்லை என்கிறார் –

——————————————————————-

காண்கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-

உனக்குத் தன்னைக் காட்டானோ என்னில் -ஸ்வ வ்யாதிரிக்த விஷய சங்கம் விட்டால் அல்லது ஆர்க்கும் தன்னைக் காட்டான் என்று
அவற்றை நோக்கிச் சொல்லி தத் தர்சன அர்த்தமான ஸ்வ உத்யோகத்தை பிரதிபந்திக்கைக்காக –
அவனை ஆசைப்பட்டு இதுக்கு முன்பு உன்னுடைய உபகரணங்களை இழந்தால் போலே இன்னம் உள்ளவற்றை இழவாதே
இருக்கப் பார்க்கில் அத்தை விடு -என்று அந்நியராய் இருப்பார் சொல்ல –
அவர்களை நோக்கி -சர்வஞ்ஞனாய்-சர்வசக்தியாய் இருந்த சர்வேஸ்வரனாலும் இப்படி நிர்மிக்க முடியாது என்னும்படி
ஆச்சர்யமாய் நிரதிசய ஸுந்தர்ய விசிஷ்டனுமாய் சர்வ வசீ கரணமான தன்னுடைய மாண் குறள் கோல வடிவு காட்டி
மஹா பலியுடைய சர்வ இந்த்ரியங்களையும் அபஹரித்து நெய்தல் பூ வளர்ந்தால் போலே சர்வ லோகமும் நிறையும்படி மலர்ந்த
திரு மேனியையும் கற்பகச் சோலை தழைத்தால் போலே தழைத்த நிரதிசய உஜ்ஜவலமான திருத் தோள்களையும் யுடையனாய் இருந்த
கோல பிரார்க்கு என் நிறைவினோடு நாண் கொடுத்தேன் –
இனி என் கொடுக்கேன் -என்னுடைய நன்னுதல் நங்கைமீர்காள் -என்று சொல்லுகிறார் –

——————————————————————

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்
யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான்
நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-

ஆகிலும் அவனை ஆசைப்படுகை யீடல்ல என்று அவர்கள் சொல்ல நான் தோழிமாரை விட்டால் போலே என் நெஞ்சு என்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி சங்க சக்ர கதா தரனாய் நீலமான திருமேனியை யுடையனாய்
நிரதிசய தீப்தி யுக்த திவாகர நிசாகர அலங்க்ருத நிரதிசய ரமணீய வரணீய ஜங்கம நீல மஹா ஸலம் போலே இருந்த
அவனுடைய நாண் மலர்ப் பாதம் அடைந்தது -யான் இனிச் செய்வது என் என்னுடைய நன்னுதல் நங்கைமீர்காள் என்கிறார் –

——————————————

பாதமடை வதன் பாசத்தாலே
மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-

திருவடிகளைச் சேர வேணும் என்னும் ஆசையால் தத் வியதிரிக்த விஷய சங்கத்தை நிஸ் சேஷமாக விட்டு
ஸ்வ வியதிரிக்த சகல விஷய சங்க நிவர்த்தகமான கல்யாண குணங்களை யுடையனான ஸ்ரீ கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன நிரவதிக போக்யமான இத்திருவாய் மொழியை வல்லார்
நிரஸ்த ஸமஸ்த துக்கராய் அங்கும் இங்கும் எல்லாப்படியாலும் பரிபூர்ணர் -என்கிறார் –

———————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அழகிய மணவாளச் சீயர் அன்போடு அருளிச் செய்த பன்னீராயிரப்படி –8-1-

April 28, 2018

எட்டாம் பத்தில் -இப்படி -ஏழாம் பத்திலே –
உபாய நிவர்த்யமான விரோதி ப்ராபல்யத்தை அனுசந்தித்து தன் நிவ்ருத்தி பிரகாரத்தை இப்பத்திலே அனுசந்திப்பதாக –
விரோதி நிவர்த்தகனுடைய ஆஸ்ரித ஆகாங்ஷ அதீன சாந்நித்யத்தையும்
ஸ்வ விஷயத்தில் சங்கம் யுண்டே யாகிலும் இதர சங்கம் அற்றார்க்கு அல்லது ஸூலபன் அல்லன் என்னும் அத்தையும்
ஸ்வ ஆஸ்ரித ஜன விஸ்லேஷத்தில் தான் அஸஹாயன் என்னும் படியான ப்ரேம ஜனகத்வத்தையும்
ஆஸ்ரித விஷயத்தில் அத்யந்த துர் மோசமான விரோதிகளைப் போக்கி அவர்கள் சம்பத்தே சம்பத்தாய் இருக்கும் ஆகாரத்தையும்
ப்ராப்ய பூதனான தன் பக்கலிலே ப்ராவண்யம் யுண்டானால் பிரதிபந்தகம் தன்னடையே கழலும் என்னும் இடத்தையும்
ஆஸ்ரித விரோதியைப் போக்குகைக்கு ஆசன்னமாய் இருக்கும் இருப்பையும்
அந்தஸ்த்திதனாய்க் கொண்டு அசேஷ விரோதி நிவர்த்தகனாம் படியையும்
அப்ருதக் ஸித்தமான ஆத்ம ஸூத்தீயை பிரகாசிப்பித்து உபாதி அடியாக தோஷத்தினுடைய அதி பூரி கரணத்தையும்
அபாஸ்த தோஷனான அதிகாரியை அதிசயித தாஸ்ய அம்ருதத்திலே மக்நனாக்கும் படியையும்
ஸ்வ தாஸ்யத்திலும் அதிகமான ஸ்வ கீரை தாஸ்ய போகத்தை பிரகாசிக்கும் படி தத் விரோதி நிவர்த்தன பிரகாரத்தையும்
அருளிச் செய்து –
பூர்வ நிரூபிதமான விரோதியினுடைய நிவ்ருத்தி கிரமத்தை உபபாதித்து அருளுகிறார் –

இதில் -முதல் திருவாய் மொழியில்
அடிமை செய்யப் பாரித்த அர்ச்சாவதார ஸ்தலத்தில் ஆசானுரூபமான அபிமதம் சித்தியாமையாலே ஆர்த்தராய்
மிகவும் பகவத் அனுபவ ஆகாங்ஷை நடக்க -அந்த ஆகாங்ஷைக்கு ஹேதுவான
அனவதிக விபூதி பூர்த்தியையும்
அந்த விபூதி ரக்ஷண அர்த்தமா அவதாரங்களினுடைய அதிசயித போக்யதையையும்
ஆஸ்ரித பவ்யதா விசிஷ்டமான அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
ஆஸ்ரித அநாஸ் ரித விபாகேந யுண்டான அனுகூல பிரதிகூல ரூபத்தையும்
அசேஷ பிரகார ரக்ஷகத்வத்தையும்
அகிலாத்ம பாவத்தையும்
அசேஷ பிரகார போக்யதையையும்
ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான ஷீரார்ணவ ஸாயித்த்வத்தையும்
அதிசயித புருஷார்த்தமான ப்ராப்ய தேச வர்த்தித்தவத்தையும்
ஆசானுரூப உபகாரத்தால் வந்த அத்யந்த மஹத்தையையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனான சர்வேஸ்வரன் தம்முடைய ஆகாங்ஷ அநுரூபமாக முகம் காட்டி
ஆஸ்வசிப்பித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார்

—————————————————

முதல் பாட்டில் நிரவதிக விபூதி யுக்தனாய் – விஸ்லேஷத்தில் தரியாத படி பண்ணும்
போக்யதையை யுடைய உன்னை நான் காணும் படி இரங்க வேணும் -என்கிறார் –

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்–உன் அழகுக்கும் பெருமைக்கும் தகுதியான தேவிமாராவார் – –
உனக்கு நிரதிசய சம்பத் ரூபையான ஸ்ரீ லஷ்மியும் -ஸமஸ்த விபூத்ய அபிமானியான பூமியும் –
அதுக்கும் மேலே பின்னையும் இவர்களோடு கூட இருக்கிற நீ ஏவ -நியோயிக்க கைங்கர்யம் பண்ணுவார்கள் நித்ய ஸூரிகள்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்–உன்னோடு அப்ருதக் சித்தமாம்படி பொருந்திய
பிரதான புருஷ காலாத்மகமான த்ரை வித்யத்தை யுடைய லோகங்கள் ஆஜ்ஞானு விதாயிகள் –
அவற்றினுடைய ரக்ஷண அர்த்தமாக தத் தத் அவஸ்த உசிதமாயும்–ஸ்வ அபிமதமுமாயுமாய்
இருக்கிற ரூபங்கள் உனக்கு அசாதாரண ரூபங்கள்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே–இந்த உபய விபூதி நிர்வஹணத்தைக் காட்டின அளவன்றியே –
இவ்வாகாரத்தை அனுபவிக்கப் பெறாத பாபத்தை யுடைய என்னை முடிப்பாரைப் போலே நலிகிற –
நிரதிசய போக்யமான தாமரை போன்ற திருக் கண்ணும் அத்விதீயமான பவளம் போன்ற திரு அதர சோபையையும் யுடைத்தான-
நீல ரத்னம் போலே தர்ச நீயனாய்
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–வ்யதிரேகத்தில் தரிக்க ஒண்ணாத படி பிராண பூதனாய் –
அவ்வளவு அன்றியே அழிந்த சத்தியை யுண்டாக்கும் அனவரத போக்யமான அம்ருதமாய் –
அர்வாசீ நாம்ருதத்தில் அபேக்ஷை யுடையார்களுக்கும் யரும் தொழில் செய்து கொடுக்கும் அதிசயித உபகாரகனானவனே –
அப்படி ஆயாசிக்க வேண்டாத படி கண்டு அனுபவிக்கும் படியாக கிருபை பண்ணி அருள வேணும்

—————————————————

அநந்தரம் -வேண்டு வேண்டுருவம் நின்னுருவம் என்று சொன்ன திரு அவதார விக்ரஹ போக்யதையை
அனுசந்தித்து நான் கிலேசியாதபடி கண்டு அனுபவிக்கும் படி கிருபை பண்ணி அருள வேணும் என்கிறார் –

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்–காணும்படி கிருபை பண்ண வேணும் என்று
பல காலும் சொல்லி -காணப் பெறாமையாலே கலங்கி -கண்ணினுடைய நீர் பரவா நிற்க –
காணப் பெறாத பாபத்தை யுடையேனான நான்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ–உன்னை ஆசைப்பட்டு நீ ஆதரியாத அளவிலே –
ஆத்மாத்மீயங்களை இழந்தும்–பல காலம் சரணம் புக்கும் –மோஹித்தும் -இப்படி ஆதரிக்கும் பிரகாரம் எல்லாம் ஆதரித்து –
அவ்வளவிலும் கிடையாமையாலே உன் திரு நாமங்களையே சொல்லிக் கூப்பிடும்படியாக இறே எனக்குப் பண்ணின அருள் –
ஐயோ -ஆசா லேசமுடையாரும் அநவரதம் அனுபவிக்க எனக்கு இப்படி பலித்தது -ஆனபின்பு
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !-ககுத்ஸ்த்த வம்சத்தில் பிறந்து காட்டோடு நாட்டோடு
வாசியறக் காட்சி கொடுக்குமவனாய் –
ஸ்ரீ கிருஷ்ணனாய் திரு அவதரித்து பெண் பிறந்தார் எல்லாரும் கண்டு அனுபவிக்கும்படி எளியனாய் –
இவ்வளவும் அன்றிக்கே சபலனான எனக்கு நீ டீகாஙே உன்னை பிரகாசிப்பித்த உதார குணத்தை யுடையையாய் –
அப்போதே நுகர வேண்டும்படி பக்குவ பல பூதனாய்
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–ஆசையுடையாருக்கு சத்தா ஹேதுவான நித்ய போக்யமாய்
அபர்யந்தமாய் சீதளமான ஜலத்திலே அழுந்தின மஹா பிருத்வியை எடுத்த மஹா புருஷனே –
முழுகவும் மீட்க்கவும் வேண்டா -நான் கண்டு அனுபவிக்கும்படி கிருபை பண்ணி அருள வேணும் –

————————————————–

அநந்தரம் ஆஸ்ரித பவ்யனாய்க் கொண்டு அநிஷ்டத்தை நிவர்த்திப்பிக்கும் நீ என் அவஸ்தா அனுரூபமாக
வாராத அளவில் உன்னைப் பற்றினவர்கள் எங்கனே விஸ்வசிப்பர்-என்கிறார் –

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு–தரித்ரன் மஹா நிதியை எடுத்தால் போலே
உன்னை எடுத்துக் கொண்ட பெரியவனான நந்த கோபனுக்கு நிரதிசய போக்யமான பிராணனாய்க் கொண்டு
பவ்யனாய் அத்யந்த சைசைவத்தை யுடையனாய் -தேவகியார் பிரிந்து இருக்க யசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !-வந்து கிட்டின தொல்லை இன்பத்து இறுதி என்கிறபடியே
நிரதிசய ஆனந்தாவஹனாய் -அக் குலத்துக்கு ஆனைக் கன்று போலே செருக்கனாய் வர்த்திப்பானாய் –
தாயும் தமப்பனுமாக நினைத்து இராதே அடியேனான எனக்கு உன் பெருமை எல்லாம் காட்டி எட்டாது இருக்கும் ஸ்வாமியாய்
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !–பிரபலமாய் யுத்த கண்டூதி விஞ்சி இருக்கிற
ஹிரண்யாசூரனுடைய சரீரம் இரண்டு பிளப்பாம் படி கையிலே உகிரை பரிகரமாக வுடையையாய்
இப்படி ஆஸ்ரித விஷய வாத்சல்யத்துக்கு ஜலதயியானவனே
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–நீ அன்று போலே இன்றும் அனுரூபமான
வடிவைக் கொண்டு வருகிறிலை
ஒரு விஷயத்தில் உதவாது இருந்தால் உன்னைத் தஞ்சம் என்று இருப்பர் எங்கனே விஸ்வசிப்பர்
ஒன்றோடு ஓன்று எடுத்த ரூபம் என்று நரஸிம்ஹ ரூபமாகவுமாம்

———————————————————————-

அநந்தரம் ஆஸ்ரித அநாஸ்ரித விஷயங்களில் அனுகூலனுமாய் பிரதிகூலனுமாய் இருக்கையாலே
உன்னுடைய ரூப குண சேஷ்டிதங்கள் ஆஸ்ரித அதீனம் என்று நினைக்கிற அறிவு
சங்க நீயமாகா நின்றது என்கிறார் –

உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4-

அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே–தூத்யாதி முகத்தால் லோக பிரசித்தமான யுத்தத்தை
உண்டாக்கி விஸ்தீர்ணையான பூமியினுடைய பரிசரம் எங்கும் சூழ்ந்து இருப்பதாய் –
கொலையில் உத்யுக்தையான சேனையை நிஸ் சேஷமாக நசிப்பித்த ஸ்வாமியாய்
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–பூமியின் அளவன்றியே –
அனுகூலரான தேவர்களுக்கு அதிசயித போக்யமாய் –
பிரதிகூலரான அஸூரர்களுக்கு பிராண விநாச ஹேதுவான நஞ்சாய்
உபய ஆகாரத்தாலும் -எனக்கு தாரகனானவனே
உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான-இவர் –உனக்கு அசாதாரண சேஷ பூதரானவர்கள்
எப்போதும் உகந்த ரூபமே உனக்கு ரூபமாய் உன் தனக்கு அவ்வடிவிலே அன்பை யுடையரானவர்கள்
உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் –வினையேன்-ஆதரித்து அநந்ய பிரயோஜனமாக
அடிமை செய்கைக்கு ஈடாய் இருக்கிற உன்னுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை அறியும் இது
ஒன்றையும் அகப்பட சங்கியா நிற்பன்
தஞ்சமாக நினைத்து இருக்கும் அர்த்தத்தில் சங்கை பிறக்கும்படியான பாபத்தை யுடைய நான்
ஓ என்று தம் இழவு தோன்ற அருளிச் செய்கிறார் –

—————————————————–

அநந்தரம் சர்வ பிரகார ரக்ஷகனான உன்னை நான் ரத்னம் பண்ணிக் காண்பது எங்கே -என்கிறார்

ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த–தாரகமான பிராணாதிகளுக்கு தாரகனாகையாலே –
பரிபூர்ண பிராண பூதனாய் விஸ்தீர்ணமான ஜகத்தை எல்லாம் ஸ்ருஷ்டித்து -பிரளயத்தில் அழியாமல் இடந்து எடுத்து –
திரு வயிற்றிலே வைத்து நோக்கி -வெளி நாடு காட்டி உமிழ்ந்து அந்நிய அபிமானம் அறும்படி அளந்து கொண்ட
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த–சர்வாதிகா சேஷியாய் -ஜகத்தை உஜ்ஜீவிப்பிக்கைக்காக
மஹா ஜலமான ஏகார்ணவத்தை ஸ்ருஷ்டித்து அங்கே கண் வளர்ந்து அருளி –
தத் கார்யமான ஷீரார்ணவத்தை கடைந்து -தத் சஜாதீயமான கடலை அடைத்து
சம்சாரிகளுக்கு தீர்த்த ஹேது வாம்படி தனுஷ்கோடியாலே உடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !–ஆஸ்ரித ரக்ஷணத்தில் ஆத்மாவோ பாதி சீரியனாய்
மனுஷ்யாதிகளுக்கு தேவர்கள் உத்தேச்யரானவோ பாதி தேவர்களுக்கும் உத்தேச்யதயா ஆஸ்ரயணீயனாய்
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–பிராண கம்யமான சகல பதார்த்தங்களை எல்லாம்
ஏகாத்ம வானவன் -சரீரத்துக்கு ஆத்மாவைப் போலே தாரகனுமாய் சேஷியுமாய் பரிவனுமாய் -உத்தேச்யனுமாய் –
அவ்வாத்மாக்களைப் போலே ஸ்வரூப பேதம் இல்லாதபடி சகல சேதன அசேதனங்களுக்கும் ஏக ஆத்மாவான உன்னை ஒழிய
த்வத் ஏக தார்யனுமாய்-த்வத் ஏக சேஷ பூதனுமாய் த்வத் ஏக ரஷ்யனுமாய் த்வத் ஏக ஆஸ்ரயனுமாய்
த்வத் ஏக நியாம்யனுமாய் இருக்கிற நான் எங்கே வந்து கிட்டுவேன்
ஸ்வ தந்த்ரனான உன்னுடைய யத்னம் பல பர்யந்தமாம் அது ஒழிய சர்வ பிரகார பரதந்த்ரனான நான்
யத்னம் பண்ணிக் கிட்டுவது ஓன்று உண்டோ என்று
பிரதிபதம் ஓ என்றது அத்தலை இத்தலை யாவதே -என்கிற வெறுப்பைக் காட்டுகிறது –

————————————————-

அநந்தரம் கார்ய காரண அவஸ்த சகல பதார்த்தங்களும் நீ இட்ட வழக்காம் படி
சர்வாத்மகனாகையாலே எங்கே வந்து கிட்டுவது என்கிறார்

எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே—8-1-6-

என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே-இவ்வளவும் வர என்னை நிர்வஹித்தவனே –
சாதன அனுஷ்டானம் பண்ணுவாருக்கு அனுஷ்டான ஸ்தலமாயும் ப்ராப்யமாயும் உள்ள ஸமஸ்த லோகங்களும் நீ இட்ட வழக்கு –
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே-அந்த லோகங்களில் பாலார்த்திகளான ஆராதனர்க்கு
பல பிரதமாகவும் ஆராத்யமாகவும் சமைத்து வைத்த தேவர்களும் நீ இட்ட வழக்கு –
அர்த்திவான்கள் விஷயமாக ஆராதன ரூபமான அவ்வோ கர்மங்களும் நீ இட்ட வழக்கு
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்–இந்த லோகங்களில் காட்டில் விஞ்சி
புறம்பான மகாதாதி ஸமஸ்த பதார்த்தங்கள் பிராமண பிரசித்தமாய் தோன்றின யுண்டாகிலும் அவையும் நீ இட்ட வழக்கு
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே—ஸம்ஹ்ருத்ய அவஸ்தமாய் நாம ரூப ரஹிதமான
ஸூஷ்ம சித் அசித்தும் நீ இட்ட வழக்காய் இருக்கும் –
பரம ஆகாசத்தில் அதீந்திரியமான முக்தாத்ம வர்க்கமும் நீ இட்ட வழக்காய் இருக்கும்
எங்கு வந்துறுகோ -இப்படி சர்வாத்ம பூதனாகையாலே த்வத் ஏக நிர்வாஹ்யனான நான்
யத்னம் பண்ணி உன்னை எங்கே வந்து கிட்டுவேன்-

————————————————————————-

அநந்தரம் சர்வ பிரகார போக்ய பூதனான நீ கால உபாதிகமாயும் தேச உபாதிகமாயும் யுள்ள ஸமஸ்த பதார்த்தங்களையும்
பிரகாரமாக யுடையையாய் இருப்புதி என்கிற இத்தத்துவ ஞானத்தையும்
சங்கிக்கும்படி பண்ணா நின்றது -உன்னைக் கிட்டப் பெறாத இழவு என்கிறார்

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7-

கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !–கறந்த போதே ஸ்வா பாவிக ரசத்தை யுடைத்தான பாலாய்-
அதில் சாராம்ஸ்யமான நெய்யாய் -நெய்யினுடைய இனிய ரசமாய் –
இப்படி லௌகிக போக்யம் அன்றியே திவ்ய போக்யமாம் படி கடலிலே பிறந்த அம்ருதமாய்
அமுதிற் பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே –அந்த அம்ருதத்திலே உத்பன்னமாய் லோகோத்தரமான இனிமையாய் –
அவ்வினிமையால் பிறந்த பிரயோஜனமாக ஸூ கமாய் –
பின்னை தோள் மணந்த பேராயா !–இப்படி பிராகிருத போக்யமாம் அளவன்றியே அநந்ய பிரயோஜனர்க்கு
அதிசயித போக்ய பூதனாம்படி நப்பின்னைப் பிராட்டி திருத் தோளோடு ஸம்ஸ்லேஷித்த மஹா ப்ரபாவனான ஸ்ரீ கிருஷ்ணனே
வினையேன்-உன்னுடைய நிரதிசய போக்யதையை அனுபவிக்கப் பெறாத பாபத்தை யுடைய நான்
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்–பூத பவிஷ்யத்வர்த்தமாக கால உபலஷித சகல பதார்த்தங்களும்
தனித்தனியே நீ இட்ட வழக்கு -இப்படியான பின்பு
சிறந்த நின் தன்மை சங்கிப்பன் –தூரஸ்தமாயும் ஸந்நிஹிதமாயும்-அதூர விப்ரக்ருஷ்டமாயுமுள்ள தேஜோ உப லஷித
சகல பதார்த்தங்களும் விலக்ஷணமான உன்னுடைய ஸ்வ பாவங்கள் என்று அறிகிற
இத்தத்துவ ஞானம் ஒன்றையும் அகப்பட குலைய புகுகிறதோ என்று சங்கியா நிற்பன்

——————————————————

அநந்தரம் -ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமாகவும் விரோதி நிரசன அர்த்தமாகவும் திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற நீ
வழக்காம் படி என் கரணங்களும் கரணியான நானும் உனக்கு பிரகாரமான பின்பு
நான் வணங்குவன் என்ற ஒரு பிரகாரம் அறிகிறிலேன் என்கிறார் –

மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-

மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற–ஆச்சார்ய சேஷ்டிதங்களாலே அகில பதார்த்தங்களையும்
அபிமதையோடே செறிந்து உகப்பிக்கும் பெருமையை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனாய் –
அப்படி ஸம்ஸ்லேஷிக்கப் பெறாத பிரபல பாபத்தை யுடையேனான என்னை சர்வ காலமும் ஈரா நிற்கிற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !–சீல ஸுலப்ய ஸுந்தர்யாதிகளான குணங்களை
ஸ்வ பாவமாக யுடையையாய் ஆஸ்ரித விரோதிகளான பிரபல அசுரர்க்கு மிருத்யுவாய் –
அவர்கள் கண்ட போதே முடியும்படியான பெரிய திருவடியை கொடியாக யுடையையாய் இப்படி ஜகத் ரக்ஷண அர்த்தமாக
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !–ஆயிரம் பணங்களை யுடையனுமாய்
அதி விஸ்தீர்ணமான திரு வனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையை யுடையையாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனே
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–மநோ வாக் காய ரூப கரணங்களும்
கரணியான நானும் உனக்குப் பிரகாரமாகக் கொண்டு நீ தானே யாம்படியாய் இருந்தது –
ஆகையால் வணங்குகைக்கு ஒரு கர்த்தாவையும் அறிகிறிலேன் -கரணங்களையும் அறிகிறிலேன்

————————————————–

அநந்தரம் -இவ்வறிவோடு எங்கும் இருந்தாலும் குறைவற்று இருக்க துக்காத்மகமான சம்சாரத்தில் இருக்க அஞ்சா நின்றேன் –
நிரதிசய புருஷார்த்தமான ப்ராப்ய தேச வர்த்தியான உன் திருவடிகளைத் தந்து அருள வேணும் என்கிறார் –

யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-

யானும் நீ தானே -அஹம் புத்தி வ்யவஹார விஷயமான நானும் -த்வத் பிரகார பூதனாகையாலே நீ தானேயாய் இருப்பன் –
இப்படி – இவ்வர்த்தம் பிராமண பிரசித்தம் ஆகையால்
யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்-பரமார்த்தம் -துஸ்தரமாய் துக்கோத்தரமான சம்சாரத்தில்
த்வத் பிரகார பூதங்கள் -ஆனபின்பு
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்-விலக்ஷணமான உனக்கு சேஷமான ஆத்மாவுக்கு
அநு ரூபமான பரமபதத்தில் உச்ச்ரிதமான ஆனந்தத்தை பெற்று இருக்கில் என் –
அவிலக்ஷணமாய் ஸ்வா தந்தர்யாவஹமாய் துக்கோத்தரமாகையாலே அதுக்கு எதிர்த்தட்டான சம்சார நிரயத்தை பெறில் என்
என்கிற அர்த்த ஸ்திதி யானது லோகத்தில் வ்யவஹரித்துப் போரிலும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் நரகம் நானடைதல்–ஞான ஆனந்த லக்ஷணமான அஹமர்த்தம்
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதா நானான நீயாம்படி த்வத் பிரகாரமாக உணர்ந்த போது எல்லாம்
சம்சார நிரயத்தை நான் கிட்டுகையை -ஸ்ரீ கௌஸ்துபத்தைச் சேற்றிலே புதைத்தவோபாதி மிகவும் அஞ்சா நின்றேன்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–பரம வ்யோம சப்த வாஸ்யமான பரமபதத்தில்
அவாக் மனஸ் கோசரமாம் படி உச்ச்ரிதமான ஆனந்தத்தை உடையையாய்க் கொண்டு நிரந்தரமாக உன்னுடைய
சர்வ சேஷித்வ வ்யாவ்ருத்தி தோன்ற எழுந்து அருளி இருக்கிறவன்
இவ்விபூதியில் உள்ளார் அனுபவித்து அடிமை செய்கிற உன் திருவடிகளை எனக்கு தந்து அருள வேணும்

————————————————————-

அநந்தரம் -ஆசா அநு ரூப உபகாரத்துக்குத் தாம் பண்ணின பிரதியுபகாரத்தாலே அத்தலையில் பிறந்த
உஜ்ஜ்வல்யத்தையும் அதிசயித வைபவத்தையும் அருளிச் செய்கிறார்

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா–அருளு நின் தாள்களை எனக்கே என்ற ஆசைக்கு ஈடாக
அத்திருவடிகளை எனக்கு அசாதாரணமாம் படி
சேஷத்வ பிரதி சம்பந்தியாகவும் ஆஸ்ரயண பிரதி சம்பந்தியாகவும் கைங்கர்ய பிரதி சம்பந்தியாகவும்
மேன்மேல் என சிறக்கும்படி தந்து அருளின மஹா உபகாரத்துக்கு பிரதியுபகாரமாக
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ-அமூர்த்தமான என் ஆத்மவஸ்துவை உபகார ஸ்ம்ருதியால்
யுண்டான ஹர்ஷாதிசயத்தாலே தோள்கள் நிரம்பும்படி மூர்த்த வஸ்துவை ஆலிங்கனம் பண்ணுமா போலே அத்யாதரம் பண்ணி
இஷ்ட விநியோக அர்ஹமாம் படி உபகார பிரதியுபகாரங்களில் யுண்டான கிரய விக்ரய சமாதியாலே அறவிலை செய்து தந்தேன் –
அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -என்று மீளாதே உபகார ஸ்ம்ருதியால் யுண்டான கலக்கத்தாலே பண்ணின சமர்ப்பணத்தை
ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே-உன்னது பெற்றாயாய் இராதே பெறாப் பேறு பெற்றாயான உஜ்ஜ்வல்யத்தை யுடையவனே
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !–இந்த வடிவில் ஒளி அளவன்றிக்கே
பஹுமுகமாக தழைத்த -ஆயிரம் தோளால் என்கிறபடியே உபகாரமான திருத் தோள்கள் ஆயிரமும் யுடையையாய் –
திரு முடிகள் ஆயிரத்தையும் யுடையையாய் -இணையான மலர் போன்ற திருக் கண்கள் ஆயிரத்தையும் யுடையையாய்
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–திருவடிகள் ஆயிரத்தையும் யுடையையாய் –
திரு நாமங்கள் ஆயிரத்தையும் யுடையையாய் –
அறிவையும் சங்கிக்கும் படி தனிமைப்பட்டு எனக்கு உன் பெருமைக்கு ஈடாக உபகரித்த ஸ்வாமி யானவனே
இப்படி உஜ்ஜ்வல்யத்தையும் வைபவத்தையும் யுடையவனே எனக்கு மஹா உபகாரகனாய் என்றுமாம்
என்னுயிரை அறவிலை செய்தனன் என்று அந்வயம்

———————————————————–

அநந்தரம் -இத்திருவாய் மொழி ஆத்ம உஜ்ஜீவன ஹேது என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை –சர்வாதிகா ஸ்வாமியாய் -சகல ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கு உத்பாதகனாய் –
அப்படியே சம்ஹார கர்த்தாவான ருத்ரனுக்கும் உத்பாதகனாய்
முனிவர்க் குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை–ஞானாதிகாரண சனகாதி முனிவர்களுக்கும் அசாதாரண சேஷியாய் –
அவசிஷ்டரான தேவர்களுக்கு உத்பாதகனாய் இப்படி சகல லோகத்துக்கும் அத்விதீயனான பிரதான நாயகனானவனை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்–பெரிய சம்பத்தை யுடைத்தான திரு நகரிக்கு நிர்வாஹகராய்
பிரபந்த நிர்மாண முகத்தால் மஹா உதாரரான ஆழ்வார் அத்யந்த அபி நிவேசம் பண்ணி
ஆதரித்துச் சொன்ன ஆயிரம் திருவாய் மொழிக்குள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–பகவத் போக்யதாதி குண ப்ரதிபாதனத்தில்
உரிய சப்த சந்தர்ப்பத்தை யுடைத்தாய் இருக்கும் இவை பத்தையும்
இவற்றால் இதர விஷயங்களில் சபலராய்த் தொண்டரராய்த் திரிகிறவர்களே -அநாதி காலம் அந்நிய பரரான நமக்கு உஜ்ஜீவிக்கலாம்
இது ஏழு சீர் ஆசிரிய விருத்தம் –

—————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –8–1-

April 28, 2018

கீழில் திருவாய் மொழியிலே மநோ ரதித்த படி பெறாமையாலே அத்யந்தம் அவசன்னராய்
எம்பெருமானுடைய ஆஸ்ரித வாத்சல்யாதி குணங்களை
அதி சங்கை பண்ணும்படி கலங்கி காணுமாறு அருளாய் -என்று கூப்பிடுகிறார்

———————————————-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-

ஸ்ரீ லஷ்மீ பூமி நீளா நாயகனாய் –சேஷ சேஷாசன கருட ப்ரமுக நாநாவித அனந்த பரிஜன பரிசாரிகா சரண யுகளனாய்-
நிகில புவன நிர்மாண த்ராண ஸம்ஹாரதி சீலனாய்
ஆஸ்ரித பரித்ராணார்த்தமாக இச்சானு குண விக்ரஹனாய் –
ஸ்வ ஸுந்தர்யஹ்ருத அசேஷ மநோ நயன கமல தாளாயத லோசனனாய் அத்யுஜ்ஜ்வல வித்ருமசமான வதனாய்
நீல ரத்ன சத்ருச திவ்ய ரூபனாய்
எனக்குத் தாரகனாய் போக்யனாய் ப்ரணத ஜன சமீஹித நிர்வர்த்தனநைக ஸ்வ பாவனாய் இருந்த
உன்னைக் காணுமாறு அருளாய்-

——————————————————

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-

இப்படி காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன் –
இதற்கு மேலே இல்லை என்னும்படி ஆசைப்பட்டாலும்
உன் திரு நாமங்களையே சொல்லிக் கூப்பிடப் பெறும் இதுவோ எனக்கு அருளும் அருள் –
இங்கன் அன்றிக்கே காணுமாறு அருளாய் -காண ஒண்ணுமோ என்னில் –
காண வேணும் என்று அபேக்ஷித்தார்க்கு சக்கரவர்த்தி திருமகனாயும் ஸ்ரீ வஸூ தேவர் திருமகனாயும் வந்து
திரு வவதாரம் பண்ணி அன்றோ உன்னைக் காட்டிக் கொடுத்து அருளிற்று –
நெஞ்சால் அனுபவிக்கலாம்படி உன்னை எனக்கு போக்யமாகத் தந்து அருளின பரம உதாரன் அல்லையோ –
மற்றும் ஆசைப்பட்டார் எல்லார்க்கும் உன்னை போக்யமாகக் கொடுக்குமவன் அல்லையோ –
மஹார்ணவ அந்தர் நிமக்நமான ஜகத்தை எடுத்து ரஷித்து அருளினை பரம காருணிகன் அல்லையோ –
காணுமாறு அருளாய் -என்கிறார் –

————————————————————-

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-

அயத்நேந நிதி எடுத்தால் போலே எடுத்து அனுபவிக்கலாம் படி ஸ்ரீ நந்த கோபர்க்கும் யசோதைப் பிராட்டிக்கு பரம ஸூலபனாய் –
ஸ்ரீ ப்ரஹ்லாத ப்ரதிஜ்ஞா சமய ஸம்பூதனாய் தத் விரோத்யஸூர நிராசன உசித ஸ்ரீ ந்ருஸிம்ஹ ரூபனாய் –
நவ ராங்குர கோடி விபாரித தத் புஜாந்தரனாய்
தத் விபாரண ஹேது பூத நிரவதிக ஆஸ்ரித வாத்சல்ய மஹா தயியாய் இருந்து வைத்து
ஆஸ்ரிதனான எனக்கு அரியையாய் இன்று நீ வருகிறிலை-வாராது ஒழிந்தால்
உன்னுடைய ஆஸ்ரித வாத்சல்ய குண ஏக தாரகரான ஆஸ்ரித ஜனங்கள் எங்கனே தரிக்கும்படி என்கிறார் –

————————————————

உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4-

ஆஸ்ரித விரோதி நிரசன ஏக ஸ்வ பாவனாய் – ஆஸ்ரித பரம போக்யனாய் ஆஸ்ரித விரோதி நாஸகத்வ ஏக ஸ்வரூபனாய் –
எனக்கு தாரகனாய் இருந்த உன்னுடைய ஆஸ்ரித இச்சாதீன திவ்ய அவதார திவ்ய சேஷ்டிதத்வ ரூபமான
ஆஸ்ரித வாத்சல்ய குணம் ஒன்றுமே எனக்கு தாரகம் –
நீ வாராமையாலே அதுவும் என்னுடைய பாபத்தாலே பொய்யோ என்று சங்கியா நின்றேன் என்கிறார் –

——————————————————

ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

நீரே உபாயங்களை அனுஷ்ட்டித்து என்னை பிராபிக்கும் அத்தனை அன்றோ என்னில் –
எனக்கு தாரகனாய் நிகில ஜெகன் நிர்மாண மஹார்ணவ நிமக்ந ஜகத் உத்தரண உத்கிரண விக்ரமண ஹேது பூத
பரம காருண்ய விசிஷ்டனாய்
பயோனிதி சயன மந்த்தன பந்தன பேதன ஹேது பூத பிரணயித்வ குண யுக்தனுமாய் –
ஆத்ம குணங்களாலும் ரூப குணங்களாலும் மனுஷ்யரில் காட்டில் தேவர்கள் எத்தனை விலக்ஷணராய் இருப்பார் –
அப்படியே தேவர்கள் மனுஷ்யர் என்னும்படி அந்தக் குணங்களால் விலக்ஷணனாய்
சர்வ லோகங்களுக்கும் ஆத்மாவாய் இருந்த உன்னை நான்
என்னுடைய யத்னத்தாலே எங்கனே பிராபிக்கும் படி என்கிறார்

————————————————————

எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே—8-1-6-

சர்வ லோகங்களும் தத் சமாராத்யமான அக்னீ இந்திராதி தைவமும் அவற்றினுடைய கிரியைகளும்
லோகத்துக்குப் புறம்புள்ள பதார்த்தங்களும் ப்ரக்ருதி சம்யுக்தமாய் கர்ம சங்குசித ஞானமாய் ஸூஷ்மமாய் இருந்த புருஷ சமஷ்டியும்
கர்ம சம்பந்த ரஹிதமாய் ப்ரக்ருதி வி நிர்முக்தமாய் பரிசுத்தமாய் இருந்த ஆத்ம ஸ்வரூபமும் நீயே –
ஆதலால் என்னுடைய யத்னத்தால் உன்னை நான் எங்கனே பிராபிக்கும்படி –
இதற்கு முன்பு நிர்ஹேதுகமாக என்னை விஷயீ கரித்தால்போலே இன்னமும் உன் கிருபையால் விஷயீ கரித்து அருளாய் என்கிறார் –

————————————————————

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7-

பூத பவிஷ்யத்வர்த்தமாக சகல ஐந்து ஜாதத்துக்கும் ஆத்மாவாய் ரக்ஷகனாய் இருந்த உன்னுடைய இந்த நிரவதிக காருண்யத்தையும்
பொய்யோ வென்று சங்கியா நின்றேன் -இப்படி அதி சங்கை பண்ணுவான் என் -என்னில் –
நிரவதிக போக்ய பூதனாய் இருந்த உன்னைக் காணப் பெறாது ஒழிந்தால் சங்கை பிறவாதோ என்கிறார் –

—————————————————————–

மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-

உம்முடைய அபேக்ஷிதம் செய்ய வேண்டுமாகில் ஓர் அஞ்சலி மாத்திரம் ஆகிலும் பண்ண மாட்டீரோ என்னில் –
அதுக்கு உத்தரம் மேலிட்டு ப்ரவண ஸ்வ பாவனாகையாலும் முழுதும் வல்வினையேனாய் இருந்த என்னையும் கூட ஈரா நின்ற
ஸுசீல்யாதி கல்யாண குணங்களை உடையையாய் இருக்கையாலும் –
ஆஸ்ரித விரோதி நிராசன ஏக ஸ்வ பாவனாய் இருக்கையாலும்
ஆஸ்ரிதருடைய ஆபத்துக்கு உதவ வருகைக்கு ஈடான பெரிய திருவடியை திவ்ய வாகனமாக உடையவன் ஆகையாலும்-
திரு நாட்டில் நின்றும் வந்து ஆஸ்ரிதருடைய ஆபத்தைப் போக்கப் பற்றாமை அணித்தாகத்
திருப் பாற் கடலிலே வந்து திரு வனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகையாலும்
மத் ஸ்வரூப சேஷ்டிதங்கள் த்வத் சங்கல்ப ஆயத்தமாய் த்வதாத் மகமாயி த்வத் சரீரமாகையாலும்
என்னால் ஒரு செயலில்லை-ஆதலால் வணங்குமாறு அறியேன் என்கிறார்

————————————————-

யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-

உம்முடைய ஸ்வரூபம் உட்பட சர்வமும் நானே என்னும் இடம் அறிந்தீராகில் உமக்கு என் பக்கல் அல்பதாம்சம் உண்டோ என்னில் –
சர்வமும் நீயே யாதலால் இவ்விடத்தே இருத்தத்தோடே திரு நாட்டில் இருத்தத்தோடே வாசி இல்லை நிரூபிக்கில் –
அப்படியே யாகிலும் சர்வமும் நீயே என்னும் இடத்தை அறியச் செய்தேயும் திரு நாட்டிலே நீயேயாய் இருக்கும் இருப்பைக் காணாதே
இருக்கும் இவ்விருப்பாகிற நரகதத்தை மிகவும் அஞ்சா நின்றேன் –
அருளு நின் தாள்களை எனக்கே என்கிறார் –

—————————————————–

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-

சம்சாரிகள் எல்லாரும் பிராக்ருதி விஷய ஏக தாரக போஷக போக்யயராய் இருக்கச் செய்தே என்னை உன் திருவடிகளையே
தாரக போஷக போக்யமாய் இருக்கும் படி பண்ணி அருளினாய் –
இந்த மஹா உபகாரம் அமையாது -இவ்வுபகாரத்துக்குக் கைம்மாறாக என்னுடைய ஆத்மாவை உனக்கே அடிமையாகத் தந்தேன்
என்னும் ப்ரீதியாலே சம்பாதித்து தம்முடைய ஆத்மாவை ஆத்மாந்த சேஷமாகக் கொடுத்து
இந்த மஹா உபகாரத்தைப் பண்ணின உன்னை ஒரு கால் காண வேணும் -காண எளிதோ என்னில் –
காண வேணும் என்று அபேக்ஷித்த ஆஸ்ரிதற்காக வன்றோ நீ அஸங்க்யேய கல்யாண குணங்களையும் உடையையாய் இருக்கிறது –
உன்னை ஒழிய ஒரு க்ஷண மாத்ரமும் செல்லாது இருக்கிற எனக்கும் அரியையாகலாமோ பிரானே என்கிறார்

——————————————————————

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-

ப்ரஹ்மாதி சகல ஸூர கணங்களுக்கும் சர்வ லோகத்துக்கும் ஈஸ்வரனாய் இருந்த நீயே
உன் திருவடிகளைத் தந்து அருள வேணும் என்று ஆசைப்பட்டு -தத் தஸ்ய சத்ருசம் பவேத் என்று பிராட்டி சொன்னால் போலே
சொன்ன உரிய சொல் மாலையான இத்திருவாய்மொழியை வல்லார்க்கு எம்பெருமானைப் பெறலாம் –
நான் பட்ட பாடு பட வேண்டா -நீர் இப்பாடு படுவான் என் என்னில் இக்கண்ணாலே இப்போதே காண வேணும் என்று படுகிறேன் –
எம்பெருமானைப் பெறாது ஒழிகிறேன் என்று படுகிறேன் அல்லேன் -என்கிறார்-

——————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

அழகிய மணவாளச் சீயர் அன்போடு அருளிச் செய்த பன்னீராயிரப்படி –7-10-

April 26, 2018

பத்தாம் திருவாய் மொழியில்
கீழ் இப்படி தம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்ட மஹா உபகாரத்தால் தம்முடைய விரோதி அஸத் சமமாம்படி
ஹ்ருஷ்டரானவர் -அவன் உபகாரத்துக்கு ஒரு பிரதியுபகாரம் காணாமையாலே
சேஷியானவனுக்கு அதிசய ஜனகமான சேஷ வ்ருத்தி ஒழிய இல்லை என்று அறுதி இட்டு -பிரதி சம்பந்தியான அவனுடைய
அசேஷ சேஷித்வ ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்தவ பூர்த்தியையும்
அநந்யார்ஹ சேஷத்வ அபதானத்தையும்
ஆஸ்ரித ரக்ஷண ஆகாரத்தையும்
அனுபாவ்யமான விக்ரஹ யோகத்தையும்
அனுபவ அர்த்தமான அவதாரத்துக்கு மூலமாயுள்ள அனந்த சயனத்வத்தையும்
அநிஷ்ட நிவ்ருத்தி விசிஷ்டமான அபிமத சயாகத்வத்தையும்
பிரபல விரோதி பஞ்சநத்வத்தையும்
ஆந்திர துக்க நிவர்த்தகதத்தையும்
பாபம் நிவ்ருத்தமாய் ப்ராப்ய தேசம் சித்திக்கிலும் உத்தேசியமான ஆஸன்ன தேச யோகத்தையும்
நிரதிசய வ்யவசாய ஜனகத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் வித ஸ்வ பாவனான அவன் நம்மை விரோதியைக் கழித்து அடிமை கொள்ளுகைக்காக ஆசன்னமான
திரு வாறன் விளையிலே ஸந்நிஹிதனான அவன் திருவடிகளிலே அடிமை செய்யக் கடவோம் என்று மநோ ரதித்து
இப்படி நிவர்த்திய விரோதி பல நிரூபண பூர்வகமாக அதனுடைய சரண்ய நிவர்த்யத்வத்தை நிஷ்கர்ஷித்து நிகமிக்கிறார் –

——————————————————–

முதல் பாட்டில் -சேஷியானவன் ஸ்ரீ மஹா லஷ்மீ யோடே பரி பூர்ணனாய் எழுந்து அருளி இருக்கிற
திரு வாறன் விளையை அனுபவித்து அடிமை செய்யும் காலமும் ஆமோ -என்கிறார்

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் –ஸுந்தர்யாதி குண உபேதையாய் பத்ம வாஸிநீத்வத்தால் வந்த
போக்யதையை யுடைய ஸ்ரீ மஹா லஷ்மீ பிராட்டியும் -அவர்கள் தான் விரும்விபி மேல் விழும்படியான
வை லக்ஷண்யத்தை யுடைய தானும் பரஸ்பர ஆனந்த வ்ருத்தி உண்டாம்படியாக
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து–போக சாரஸ்யத்தோடே கூட சர்வ சேஷித்வ வ்யாவ்ருத்தி தோன்றும்படி இருந்து
இவ் வேழுலகை -வ்யக்த அவ்யக்த கால ஸூத்த சத்வாத்மாக-சதுர்வித அசேதன வர்க்கமும் -பத்த முக்த நித்ய ரூபமான
த்ரிவித சேதன வர்க்கமும் ஆகிற ஏழு வகைப் பட்ட இந்த லோகங்களை
இன்பம் பயக்க ஆள்கின்ற எங்கள் பிரான் -ஆனந்த கந்தளிதமாம்படி அடிமை கொள்ளா நிற்குமவனாய் –
எங்களையும்-வாசிக கைங்கர்யம் கொண்ட மஹா உபகாரகனானவன்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை–அடிமை கொள்ளுகைக்கு ஏகாந்த ஸ்தலம் என்று விரும்பி –
அல்லாத பர வ்யூஹாதி ஸ்தலங்களில் காட்டிலும் பொருத்தமுடையனாய் நிரந்தர வாசம் பண்ணுகிற
தர்ச நீயமான பொழில் சூழ்ந்த திரு வாறன் விளையை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–அடிமை செய்கைக்கு ஆஸன்ன ஸ்தலம் என்று ஸ்நேஹித்து –
பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு அகலப் போகத் தேடாதே பொருந்தி
ஸ்வரூப அனுரூபமான அனுகூல விருத்தியைப் பண்ணி ஹ்ருஷ்டராய் பக்தாஞ்சலி புடராய்
நாம் அனுபவிக்கும் நாள்கள் உண்டாமோ –

————————————————

அநந்தரம் அநந்யார்ஹத்வ ஆபாதகமான த்ரி விக்ரம அபதானத்தை யுடையவன் வர்த்திக்கிற திரு வாறன் விளையை
ஸூ கந்த்யமான ஜலங்களாலே திரு நீரிட்டு ப்ரதக்ஷிணாதி அநு விருத்திகள் பண்ணக் கூடுமோ -என்கிறார் –

ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?–7-10-2-

ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே–ஒரு சந்தேகமற உண்டாமோ -எது என்னில்-
விஸ்தீர்ணமான லோகங்களை எல்லாம் இரண்டு அடியேயாம்ப்பாடி
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்–வளர்ந்து அருளின ஸ்ரீ வாமனனான மஹா உபகாரகன்
அவதார ஸ்த்தலமான தேவ லோகங்களில் காட்டிலும் அமர்ந்து உறையக் கடவதாய்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை–பெரிய ஆகாசத்தில் விளங்கா நிற்கிற கொடிகளை யுடைய
மாடங்களையும் நெடிய மதிள்களையும் யுடைத்தான திருவாறன் விளையை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?–வி லக்ஷணமான கந்த்யத்தை யுடைத்தான நீரைக் கொண்டு
தூவி ப்ரதக்ஷிணம் பண்ணி அஞ்சலி பண்ண கூடுமோ
ஆகும் கொல் என்ற நினைவை மேலே உபபாதித்த படியாய் இருக்கிறது –
ஐயம் ஓன்று இன்றி என்று மேலே கூட்டவுமாம்
இது ஸக்யமோ என்கிற ஐயம் இன்றி அளந்தான் என்னவுமாம் –

——————————————————-

அநந்தரம் ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமான ஆகாரத்தை யுடைய கருட வாஹனனை அனுபவித்து
அவன் வர்த்திக்கிற தேசத்தை நித்யமாகத் தொழ வாய்க்கவற்றோ -என்கிறார் –

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை-என்றும் இப்படி கூடவற்றோ -கோ ரக்ஷணத்துக்கு
முடி சூடினவனாய் ரஷ்ய விரோதியான மதுவுக்கு நிராசகனாய் –
அத்யுஜ்ஜ்வல தேஜோ ரூப ஸிம்ஹம் போலே விரோதிகளுக்கு அநபிபவ நீயனானவனை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்-தர்ச நீய கதியான பெரிய திருவடி மேலே கண்டு –
அஞ்சலி பண்ணி அனுபவித்து -அவ்வளவும் அன்றியே அவன் வர்த்திக்கும் இடமாய்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்–உச்ச்ரித ஸ்வரமாம் படி பாடப்படுகிற
பெரிய பகவத் குண பிரதையை யுடைத்தான ருக் யஜுஸ் சாம அதர்வண ஸ்வரூபமான நாலு வேதங்களையும் –
தேவ பித்ரு பூத மனுஷ்ய ப்ரஹ்ம யஜ்ஞங்களையும் –
சீக்ஷை நிருக்தம் வியாகரணம் சந்தோ விஸிதி கல்ப ஸூத்ரம் ஜ்யோதிஸ் சாஸ்திரம் என்கிற அங்கங்கள் ஆறையும்
பரக்க நிரூபித்துப் போருகிற வர்கள் -பகவத் அனுபவத்தோடு வாழ்வதாய்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–பெரிய பொழிலை யுடைத்தான
திரு வாறன் விளையை தொழ நித்யமாக வாய்க்கவற்றோ –

————————————————————————-

அநந்தரம் -அனுபாவ்ய விக்ரஹ விசிஷ்டானாய்க் கொண்டு திரு வாறன் விளையில் வர்த்திக்கிறவன்
திருவடிகளை நெஞ்சால் நிரந்தரமாக அனுபவிக்கும் படி வாய்க்க வற்றோ -என்கிறார்

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-

வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை–சம்ருத்தமாய் வாய்த்து வருகிற கரும்பும் பெரும் செந்நெலுமான
வயல் சூழ்ந்த திரு வாறன் விளையிலே
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த–ஸந்நிஹிதனாகையாலே அபி வ்ருத்தமான புகழை யுடையனாய்
த்ரிவித சேதன அசேதனங்களுக்கும் ஸ்வாமியாய் வைத்து -ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக ஸ்ரீ மதுரையிலே திருவவதரித்து
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–ஆஸ்ரித அனுபாவ்யமாம் படி வாய்த்த நீல ரத்னம் போலே இருக்கிற
திரு நிறத்தையுடைய ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிற மஹா உபகாரகனுடைய விகசிதமான திருவடித் தாமரைகளை
வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற-இங்கே இருந்து மனசிலே நினைக்க
அவன் நினைவின் படியே எப்பொழுதும் ஒரு க்ஷணமும் ஒழியாமல் பெறும்படி வாய்க்க வற்றோ –

—————————————————————————–

அநந்தரம் ஆஸ்ரித அனுபவ அர்த்தமாக அனந்த சாயியானவன் வர்த்திக்கிற திரு வாறன் விளையினுடைய
சம்ருத்தமான புகழைப் பாட நம் பாபம் ஒன்றும் ஒழியாமே போம் என்கிறார்

மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–7-10-5-

மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்–நிரதிசய போக்யமாம் படி விகசிதமான திருவடித் தாமரைகளை
என் நெஞ்சத்திலே சர்வ காலமும் இருத்தி அந்த உகப்பாலே வணங்கும்படியாக
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்–ஸூரி களும் பராசராதிகளும் பக்தர்களுமான பலவகைப்பட்ட
அடியார் சந்நிதியில் நிரவதிக கிருபையைப் பண்ணி யருளின ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவனாயுள்ள
அனந்த சாயியானவன் புறம்பு ஜகத் வியாபார அந்நிய பரதை அற்று வாசம் தானே பிரயோஜனமாக வர்த்திக்குமிடமாய்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை–புஷ்ப உபஹாரங்களை யுடைத்தான மணி மயமான
ஓங்கின மாடங்களையும் நெடிய மதிளையும் யுடைத்தானா திரு வாறன் விளையினுடையதாய்
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–லோகத்தில் மிக்க புகழாய் உகப்போடே பாட நம்மை மேலிட்டு
வர்த்திக்கிற பாபங்கள் தானே நம் பக்கல் ஒன்றுமே நில்லாதே புக்க இடம் அறியாமல் போம்

———————————————————

அநந்தரம் -அநிஷ்டமான விரோதியைத் தலை அழித்து அபிமதையான ருக்மிணியை ஸம்ஸ்லேஷித்த
ஸ்ரீ கிருஷ்ணன் வர்த்திக்கிற திரு வாறன் விளையை ஆஸ்ரயிக்க ஸமஸ்த பாபங்களும் போம் என்கிறார்

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6-

அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்–சிசுபாலன் கைப் பிடிப்பதாகப் படை திரட்டின அன்று –
பின் தொடர்ந்து வந்த இடத்திலே ருக்மனை பூசலில் வென்று பரி பூர்ண அனுபவையான ருக்மிணியினுடைய
அலங்கார அலங்க்ருதமாய் அதிசயித போக்யமான திருத் தோள்களை ஸம்ஸ்லேஷித்தவனாய்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்-என்றும் ஒரு க்ஷணமும் ஒழியாமல் என் நெஞ்சமானது
அனுபவித்து ஸ்தோத்ரம் பண்ணும்படி என் அகவாயிலே இருக்கிற மஹா உபகாரகனானவன்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–எல்லாரும் கண்டு அனுபவிக்கும் படி நின்று அருளின
தர்ச நீயமான திரு வாறன் விளை என்று பிரசித்தமான அந்த மஹா நகரத்தை
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!–அனுபவ சாபலமுடைய நீங்கள் அனுசந்தித்து
தொழும்படி பாருங்கோள் -குரூரமான பாபங்கள் ஒன்றும் சேஷியாதபடி நிலை குலைந்து சர்வமும் நசித்துப் போம்

————————————————————–

அநந்தரம் அநிருத்தனுக்கு பிரதிபந்த்யகனான பாணனை அஸஹாயனாம் படி பொருது அழித்து
அவன் பாஹு வனத்தைச் சோதித்த ஸ்ரீ கிருஷ்ணனே ப்ராப்தயுபாய பூதன்-என்கிறார்

நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-

நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை–அயோத்யை அபராஜிதை-என்று ஸ்ருதி பிரசித்தமான மஹா நகரம் –
அர்ச்சாவதார ஸ்த் தலமான அதுவேயாம்படி –மலரை யுடைத்தான சோலைகள் சூழ்ந்த திரு வாறன் விளையாகிற
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்–மஹா நகரத்திலே நித்ய வாசம் பண்ணுகிற
மஹா உபகாரகனாய் ஆஸ்ரித வ்யாமுக்தனாய்க் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணனாய் திரு அவதரித்த நித்ய ஸூறி ஸேவ்யனாய்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து–அநிருத்தன் நிருத்தனான பாண புரத்திலே சென்று
சக்தி ஸூசகமான த்ரி நேத்ரத்வத்தையும் ஈஸ்வரத்வ அபிமானத்தையும் யுடைய ருத்ரனை
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணினது அமையும் என்று உபரதனாம் படியாக பிராதாபோத்தரமான பூசல்களை பண்ணி
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–பாணனுடைய ஆயிரம் தோள்களையும் துணித்தவன்
தேச ப்ராப்திக்கு உபாய பூதன் -அவனை ஒழிய வேறு ஒரு உபாயத்தை யுடையோம் அல்லோம் –

—————————————————————

அநந்தரம் -ஆஸ்ரிதருடைய ஆந்திர துக்க நிவர்த்தகன் வர்த்திக்கிற திரு வாறன் விளையை
ஆஸ்ரயிக்க நெஞ்சில் ஒரு பாபமும் நடையாடாது என்கிறார்

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8-

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்–உன் திருவடிகளை ஒழிய
மற்று ஒன்றையும் உடையோம் அல்லோம் -என்று விஸ்தீர்ணமாய்
அஹாயமான பொய்கையிடத்திலே முதலையின் கையிலே அகப்பட்டு
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்–நின்று தன் ஆபன்னர் இருந்த இடத்து அளவும் வரும்
திருவடிகளை நாராயணா என்று சம்பந்த பூர்வகமாக ஏத்தின-ஆனையினுடைய
செவ்வி மாறாமல் பூவைச் சாத்தப் பெற்றிலோம் என்கிற நெஞ்சு துக்கத்தை தீர்த்த மஹா உபகாரகன்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை–ஆஸ்ரிதற்கு உதவுக்கைக்காக சென்று
அங்கு இனிமையோடே வர்த்திக்கிற இடமாய் நிரதிசய போக்யமான பொழில் சூழ்ந்த திரு வாறன் விளையை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–கிட்டி வலம் செய்ய கூடுமோ –
கூடுமாகில் குரூரமான பாபங்கள் உள்ளத்தின் பொருத்தத்தை யுடைய அல்லவாம்
ஒன்றி வலம் செய்ய தீ வினை ஒன்றும் உள்ளத்தின் சார்வல்ல என்று யுக்தி பிரகாரமாகவுமாம்

———————————————————

அநந்தரம் பாப நிவ்ருத்தி பிறந்து ப்ராப்ய தேசம் சித்திக்குமானாலும் சர்வ அனுபாவ்யமான திரு வாறன் விளையைப்
பிராபித்து அனுபவிக்க அமையும் என்னா நின்றது என் நெஞ்சு -என்கிறார்

‘தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9-

‘தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்–அவித்யாதிகள் ஆத்மாவை ஸ்பர்சியாத படியாய்
மனஸ்ஸூ நிர்தோஷமாய்-என்றபடி இங்குள்ளார் அங்கே செல்லிலும் தெளிவைப் பிறப்பிக்கும் தேசம் –
அவனே வரிலும் சோக மோஹங்களை விளைக்கும் இது -இருள் தருமா ஞாலம் இறே இது -ஸூத்த சத்வம் அது –
போக ப்ராப்தமானால் -கிடைப்பதானால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று-யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
-மநோ வாக் காயங்களால் நித்ய ஸூரி களும் பயின்று ஆஸ்ரயிக்குமதாய்-நிரதிசய போக்யமான திரு வாறன் விளையை
தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகி -என்ன வேண்டாத நித்ய நிர்தோஷர் படுகாடு கிடக்கிற தேசம் என்கை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–கிட்டி அனுகூல விருத்தியைப் பண்ணவற்றே
என்னா நின்றது என் மனஸ்ஸூ -என் வசம் அல்ல என் மனஸ்ஸூ —

——————————————————————-

அநந்தரம் திரு வாறன் விளையிலே வர்த்திக்கிற தன் பக்கலிலே வ்யவஸ்தமான பின்பு
நெஞ்சு வேறு ஒன்றில் போகாது என்னும் இடம் அவன் தானே அறியும் என்கிறார்

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-

சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்–மநோ வாக் காயங்களாலே நிலத் தேவரான
பாகவதருடைய சங்கமானது அனுபவிக்க வணங்கும்படியாய்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே. –போக்தாக்கள் நெஞ்சை மகிழ்விக்கும்
திரு வாறன் விளையிலே வர்த்திக்கிற பரம பாவன பூதனுக்கு அநந்யார்ஹ சேஷமாம் படி அறுதி யுடைத்தான பின்பு
சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்–நெஞ்சு வேறு ஒன்றை உத்தேச்யமாக
நினைத்திராத ஸ்வ பாவத்தை ஸூரி ஸேவ்யனான-சர்வஞ்ஞன் தானே அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை–சிந்தையினால் செய்யப்பட்டு மறைந்த தொழில்களானவை
அவன் தான் அறியாதது ஒன்றும் இல்லை –

————————————————————–

அநந்தரம் இத்திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர்களை நித்ய ஸூரிகள்
ஸ்லாஹிப்பர்-என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே–உபாய உபதேஷ்டாவான அவனுக்கு
அநந்யார்ஹமான பின்பு வேறு ஒரு உபாயம் இல்லை என்று அறுதியிட்டு –
சர்வ பாப விமோசகனாய்ப் பரம பாவன பூதனான -அவனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன–அறுதியாக்கப் பட்ட நெஞ்சை யுடையராய்க் கொண்டு
தர்ச நீயமான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்ததாய்
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்–தனித்தனியே வித்யா ஸ்தானங்களான
ஆயிரம் திருவாய் மொழியிலும் இப்பத்தையும் அப்யஸிக்க வல்லவர்களை நித்ய ஸூரி களானவர் சர்வ காலமும்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–தங்கள் மஹிஷிகளுக்கு பஹுமானமாக ஸ்நேஹித்து
சம்சார தோஷ நிவர்த்தகரான பவித்ர பூதர் என்று சொல்லா நிற்பர்கள்
இது ஆறு சீர் ஆசிரிய விருத்தம் –

————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –7-10-

April 26, 2018

இப்படி என்னைத் திருவாய் மொழி பாடுவித்து அருளுகைக்காக திரு நாட்டில் நின்றும் அங்கே எழுந்து அருளி இருந்த படியே
ச பரிகரமாகத் திரு வாறன் விளையிலே வந்து புகுந்து
என்னைத் திருவாய் மொழி பாடுவித்துப் பட்டைக்கு கேட்டு அருளி
திருவடி பெருமாள் குணங்களை சொல்லக் கேட்டருளி அசோகா வனிகையிலே பிராட்டி நிர் வ்ருத்தையாய் இருந்தால் போலே
நிர் வ்ருத்தனாய் இருந்த திருவாறன் விளையை என்றோ சென்று நாம் அனுபவிக்கப் பெறுவது
என்று மநோ ரதிக்கிறார்

————————————————————-

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-

பரஸ்பர சாஹித்யத்தாலே தங்களுக்கு இன்பம் உண்டாம்படி யாகவும் அயர்வறும் அமரர்களுக்கு இனிதாம்படியாகவும்
பிராட்டியோடே கூடத் திரு மா மணி மண்டபத்திலே வீற்று இருந்து அருளி
இவ் வேழ் உலகை இன்பம் பயக்க ஆள்கின்ற எங்கள் பிரான் அன்புற்று அமர்ந்து உறைகின்ற
அணி பொழில் சூழ் திரு வாறன் விளை அன்புற்று அமர்ந்து வலம் செய்து
கை தொழு நாள்களும் ஆகவற்றேயோ-என்கிறார் –

—————————————————-

ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?–7-10-2-

ஒரு ஸந்தேஹம் இன்றிக்கே அகலிடம் முற்றவும் ஈரடியே யாகும்படி அளந்து அருளின ஸ்ரீ வாமனன் எழுந்து அருளி இருக்கிற
திருவாய் மொழி பாடுவிக்கை யாகிற மஹா உத்சவத்துக்காக கொடி கட்டி அலங்க்ருதமான
திரு வாறன் விளையை சந்தன கர்ப்பூராதி ஸூ கந்த த்ரவ்ய வாசிதமாய்
ஹிம சீதளமான நீர் கொண்டு தூவி வலம் செய்து கை தொழக் கூடுமேயோ -என்கிறார் –

——————————————–

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-

ஸுசீல்ய வாத்சல்யாதி கல்யாண குண விசிஷ்டனான எம்பெருமான் பெரிய திருவடி மேலே எழுந்து அருளி இருக்கும்படியைக் கண்டு
கை தொழுகை அன்றியே அவனுக்கும் கூட ப்ராப்யமாய் ஸாங்க சகல வேதவித் அக்ரேசரராய் –
ததர்த்த பரம புருஷ ஆராதன ரூப பஞ்ச மஹா யஜ்ஜாத் அனுஷ்டான சீலராய் இருந்த திவ்ய ஜனங்கள் வாழ்கிற
திரு வாறன் விளையை நிச்சலும் தொழக் கூடுமேயோ -என்கிறார் –

——————————————————

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-

ஸ்ரீ மதுரையிலே வந்து திருவவதாரம் பண்ணி அருளுகையாலே அத்யுஜ்ஜ்வலமான ஆத்ம குணங்களையும் ரூப குணங்களையும்
யுடையனாய் இருந்த அவன் எழுந்து அருளி இருந்த திரு வாறன் விளையிலே
அவன் திருவடி மலர்களை நெஞ்சால் என்று அனுபவிக்கக் கூடும் -என்கிறார் –

————————————————-

மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–7-10-5-

தன் திருவடி மலர்களை என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கித் திருவாய் மொழி பாடி அனுபவிக்கும் படி
திருவனந்த ஆழ்வான் முதலாக யுள்ள பலரடியார் முன்பு அருளிய பரம காருணிகன் அமர்ந்து உறையும்
திரு வாறன் விளையினுடைய உலக மலி புகழ் பாட நம்முடைய கிலேசம் எல்லாம் தீரும் –
திரு வாறன் விளையைப் பாடுங்கோள் என்று ஸ்ரீ வைஷ்ணவர்களைக் குறித்து அருளிச் செய்கிறார் –

————————————————————————

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6-

அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்து அருளிய திரு மணம் புணர்ந்து அருளின
திரு அழகை என்றும் என் நெஞ்சம் ஸ்துதிப்ப என் நெஞ்சுக்குள்ளே புகுந்து இருக்கிற பிரான் அன்றி
அணி திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே உள்ளித் தொழுமின் தொண்டீர்
உங்கள் ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –

—————————————————————–

நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-

திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே பரம ப்ராப்யம் -அது பெறுகைக்கு உபாயம் அதிலே நின்று அருளினவவன்–
அவன் ஆகிறான் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து ஆஸ்ரித வாத்சல்ய மஹோதயி ஆகையால்
ஸ்ரீ மதுரையிலே ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாக வந்து திரு அவதாரம் பண்ணி அருளின
ஆஸ்ரித விரோதி நிராசன ஏக போகனான ஸ்ரீ கிருஷ்ணன்
அவன் அல்லது உபாயம் இல்லை -அவனை சரணம் புகுங்கோள் என்கிறார் –

—————————————————————-

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8-

சரணம் புக்கால் நம் அபேக்ஷிதம் செய்து அருளுமோ என்னில் -பரம ஆபத் பன்னனாய்-சரணாகதனான
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபத்தை எல்லாம் போக்கி அவனை ரஷித்து அருளின சரணாகத வத்சலன் அல்லனோ
திரு வாறன் விளையிலே இருக்கிறான் -அவன் நம்முடைய அபேக்ஷிதம் செய்து அருளும் –
ஆதலால் உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம்படி திரு வாறன் விளையிலே போய் அனுபவியுங்கோள் என்கிறார் –

————————————————————————-

‘தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9-

திரு வாறன் விளையோ ப்ராப்யம் -திரு நாடு அன்றோ என்னில் நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகராய்த் தெளி விசும்பு ஏறலுற்றால்
திரு வாறன் விளையைக் கண்டால் திரு நாட்டை விட்டு இத்தையே ப்ராப்யமாகக் கொண்டு
சர்வ கரணங்களாலும் அனுபவிப்பார் -திரு நாட்டில் உள்ளார்க்கும் இதுவே ப்ராப்யம் –
என் நெஞ்சம் திரு வாறன் விளையை மேவி வலம் செய்து கை தொழக் கூடுமேயோ என்று மநோ ரதியா நிற்கும் –
அதுவே ப்ராப்யம் -என்கிறார்

—————————————————————-

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-

திருநாடு ப்ராப்யம் என்னும் பிரசித்தியாலே உம்மைத் திரு நாடு ஏறக் கொண்டு எழுந்து அருளில் செய்வது என் என்னில் –
திரு வாறன் விளையே ப்ராப்யம் என்று இருக்கைக்கு விரோதியான பாபத்தைப் போக்கி
என்னைத் திரு வாறன் விளையே ப்ராப்யம் என்று இருக்கப் பண்ணின பின்பு
திரு வாறன் விளை என்றால் என் நெஞ்சு தாழ்ந்து கிடக்கும்படி அறியானோ –
சர்வஞ்ஞன் அல்லனோ என்கிறார்-

————————————————-

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-

திருவாறன் விளையே பிராப்யம் என்று இருக்கைக்கு விரோதியான என்னுடைய பாபத்தைப் போக்குகையாலே பவித்ரம் –
அதில் நின்று அருளின எம்பெருமான் –
அதிலும் பவித்ரம் அவனை ப்ரதிபாதித்த திருவாய் மொழிகள்-
இவை வல்லார் அவற்றிலும் பவித்ர பூதர் என்று இந்திராதி தேவர்கள் சதிகரித்துக் கொண்டு
தங்கள் பிரணயி நிகளுக்குச் சொல்லுவர் என்கிறார்-

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–