Archive for March, 2018

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –5-6-

March 31, 2018

ஆறாம் திருவாய் மொழியிலே -கீழ் -ஆந்திர அனுபவ ப்ரீதி நடக்கச் செய்தி பாஹ்ய சம்ச்லேஷ அலாபத்தாலே அப்ரீதியும் கலந்து நடந்த இது
பாவநா ப்ரகரஷத்தாலே அலாப நிபந்தமான ஆர்த்தியே விஞ்சும்படி அதிசயித அபி நிவேசம் பிறந்து பக்வத்தாதாம்ய பிரதிபத்தி பிறக்கும்படி பாவனை முதிர-
ஸர்வ நிர்வாஹகனான சர்வேஸ்வரனுடைய ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களும்
தத் ப்ரதிபாதகமான வித்யா ஸ்த்தலங்களும்
ஜகத்துக்கு பிரதான காரண பூதமான மஹா பூதங்களும்
சகல கிரியைகளும்
ஜகத் விஷய ரக்ஷண வியாபாரங்களும்
அவதார சேஷ்டிதங்களும்
ஜகத்தில் யுண்டான ஸமஸ்த பந்து வர்க்கமும்
ப்ரஹ்மாதிகளான தேவ ரிஷி வர்க்கமும்
புண்ய பாப ரூப கர்மங்களும்
ஸ்வர்க்க நரகாதி ரூப பலங்களும்
நான் இட்ட வழக்கு என்று அநுகார ரூப உக்தியைப் பண்ணும்படி இவருக்கு அநந்ய பாவனை பிறந்தபடி கண்ட பரிவரானவர்கள்
ஜிஜ்ஞாஸூ க்களான பார்ஸ்வஸ்தர்க்கு இவர் படியை அறிவித்த பிரகாரத்தை
பிரிவாற்றாமையால் வந்த பாவனையால் ஸ்ரீ கிருஷ்ண அநு காரம் பண்ணின கோபிமாரைப் போலே
நாயகனான சர்வேஸ்வரனுடைய பாசுரங்களை அநு கரிக்கிற நாயகியுடைய ப்ரவ்ருத்தி விசேஷங்களை
நல் தாயானவள் வினவினார்க்கு யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

——————————————–

முதல் பாட்டில் ஜகத் ஸ்ருஷ்டியாதிகள் எல்லாம் நானே செய்தேன் என்று சர்வேஸ்வர
ஆவிஷ்டையானால் போலே சொல்லா நின்றாள் -என்கிறாள் –

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?
கடல்ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல்ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்–கடல் சூழ்ந்த ஜகத்தை சஹாயாந்தர நிரபேஷமாக
ஸ்ருஷ்டித்தேனும் நானே என்னா நிற்கும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்–இத்தை ஸ்ருஷ்ட்டி அனந்தரம் அநு பிரவேசித்து
தத் தச் சப்த வாச்யதயா தாதாத்மகனாய் நிற்பேனும் நானே என்னும்
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்–இத்தை மஹா பாலி அபிமானிக்க அர்த்தியாய்
இரந்து அளந்து கொண்டேனும் நானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்-அவாந்தர பிரளயத்தில் ஸ்ரீ வராஹ வேஷத்தைக் கொண்டு
இத்தை கீண்டு எடுத்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்-மஹா பிரளயத்தில் இத்தை உப சம்ஹரித்தேனும் நானே என்னும் –
உண்டேன் என்று வடதளசாயி வியாபாரமாகவுமாம்
கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?–சகல ஜெகன் நியாந்தாவான சர்வேஸ்வரன் வந்து இவளை ஆவேசிக்க கூடுமோ
கடல்ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?–கடல்ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–அவிசேஷஞ்ஞராய் சம்சார வர்த்திகளான உங்களுக்கு
இத்தேசத்திலே இருந்து வைத்து அப்ராக்ருத ஸ்வ பாவையான என் மகள்
அப்யசிக்கின்றனவாய் யுள்ள இந்த அதிசயித ஆகாரங்களை என்னாகச் சொல்லுவேன் –

—————————————

அநந்தரம்-சகல வேத வித்யைகளும் தத் ப்ரவர்த்த நாதிகளும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்கிறாள்

கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வி யீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.–5-6-2-

கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்–புஸ்தக நிரீக்ஷணாதிகளால் இன்றியே ஆச்சார்ய முகத்தால்
கற்கப்படும் வேத ரூபா வித்யைகளுக்கு எல்லையை யுடையேன் அல்லேன் என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்–அந்த வித்யைகள் எனக்கு பிரகாரமாம்படி
சப்த ப்ரஹ்மாத்மகனாய் நிற்பேனும் நானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்-அவற்றை ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே ஸ்ருஷ்ட்டி காலத்தில்
யதா பூர்வம் உண்டாக்க வேணும் நானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்–ஸம்ஹ்ருதி சமயத்திலே உப சம்ஹரித்து என் நெஞ்சிலே இட்டு வைப்பேனும் நானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்-அந்த வித்யா சாரமான மூல மந்த்ராதிகளும் நான் இட்ட வழக்கு என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?-சகல வேத ப்ரதிபாத்யனான சர்வேஸ்வரன் இவளை ஆவேசித்தானாக கூடுமோ
கற்கும் கல்வி யீர்க்கு இவைஎன் சொல்லுகேன்? கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.–இன்று என் பக்கலிலே இது கற்கும் படியான
உங்களுக்கு வார்த்தை கற்கும் பருவமான ஏன் பெண் பிள்ளை தான் கண்டு சொல்லுகிற இவற்றை என் என்று சொல்லுவேன்
கற்கும் கல்வி என்று சகல வித்யா ஸ்த்தானம் என்றும் சொல்லுவாரும் உளர் –

————————————————-

அநந்தரம் பிராமண ஸித்தமான ஜகத்துக்கு பிரதான காரணமான மஹா பூதங்கள் நான் இட்ட வழக்கு என்னும் -என்கிறாள் –

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீஎல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?
காண்கின்ற என்காரிகை செய்கின்றவே.–5-6-3-

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்–பிரமானத்தாலே காணப்படுவதாக சரம பூதமான பிருத்வி எல்லாம் நானே என்னா நிற்கும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்-அப்படிப்பட்ட பிரதம பூதமான ஆகாசமும் நானே என்னா நிற்கும்
காண்கின்ற வெம் தீஎல்லாம் யானே என்னும்–தேஜோ பன்னங்களில் பிரதானமாய் உஷ்ண ஸ்பர்சமான அக்னியும் எல்லாம் நானே என்னா நிற்கும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்-தத் பூர்வ பாவியாய் தாரகத்வாதிகளால் ஸந்நிஹிதமான வாயுக்கள் எல்லாம் நானே என்னா நிற்கும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்-தத் அனந்தரை பாவியான ஜலதத்வம் எல்லாம் நானே என்னா நிற்கும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?-தர்ச நீயமாய் அபரிச்சின்னமான கடல் போன்ற வடிவையுடைய சர்வேஸ்வரன் ஆவேசித்தானோ
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்? காண்கின்ற என்காரிகை செய்கின்றவே.–காண்கிற லோகம் ஒழிய அறியாத உங்களுக்கு
காண ஒண்ணாதவற்றையும் காணும்படியாய் அபி ரூபையான என் மகள் செய்கிறவற்றை என் என்பதாக சொல்லுவேன் –

—————————————————-

அநந்தரம் ஸர்வ கிரியைகளும் நான் இட்ட வழக்கு என்னும் என்கிறாள்

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–5-6-4-

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்–செய்யப்படா நிற்கிற வர்த்தமான கிரியையும் எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்–மேல் செய்வதாக நிற்கிற பவிஷ்யத்தை கிரியையும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்-முன்பு செய்து கழிந்த பூத கிரியையும் நான் இட்ட வழக்கு என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்-இந்த கிரியையினுடைய பலத்துக்கு போக்தாவும் நானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்-இக்கிரியைக்கு அனுஷ்டாதாக்களை உண்டாக்குவேனும் நானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?-இது சிவந்த தாமரை போலே இருக்கிற திருக் கண்ணையுடைய சர்வேஸ்வரன் ஆவேசித்த படியோ
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்? செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–செவ்வாய் ஒழிய அறியாத லோகத்தீர்க்கு
சிவந்த கனி போலே இருக்கிற அதரத்தை யுடையளாய் முக்தமான மான் போலே பேதையான இவள்
இடை யாட்டத்து இவை என்னாக சொல்லுவேன்

————————————

அநந்தரம் ஜகத் ரக்ஷணாதி வியாபாரம் எல்லாம் செய்கிறேன் நானே என்னும் என்கிறாள்

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
திறம்பாது என் திருமகள் எய்தினவே.–5-6-5-

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்-ஆஜ்ஜையை அதி லங்கியாதபடி ஜகத்தை ரஷிக்கிறேன் நானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்–கோப ரக்ஷண அர்த்தமாக சலியாதபடி மலையை எடுத்தேன் என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்–தப்பாதபடி அநிஷ்ட ஏக அநு ப்ரக்ருதிகளான அஸூ ரர்களை கொன்றேன் என்னும்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்-விஜய ஹேதுவான உபாய பிரகாரங்களை காட்டிக் கொடுத்து துரியோதனாதிகள்
எதிரிட்ட அன்று பாண்டவர்கள் ஐவரையும் ரஷித்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்-நினைவு தப்பாதபடி கடலை கடைந்தேனே என்னும்
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?–ஆஸ்ரித ரஷணத்திலே திரும்புதல் இல்லாத கடல் வண்ணனானவன் இவளை ஆவேசித்த படியோ
திறம்பாத கடல் என்று -கரை கடவாத கடல் என்றுமாம் –
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? திறம்பாது என் திருமகள் எய்தினவே.–இது -அறிய வேணும் என்கிற நினைவு தப்பாது இருக்கிற லோகத்தீர்க்கு
என்னுடைய ஸ்ரீ லஷ்மீ சமானையான பெண் பிள்ளை தப்பாதபடி பிறப்பித்த ஸ்வ பாவங்களை எதற்காக சொல்லுகேன்

——————————————–

அநந்தரம் ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களைச் செய்தேனும் நானே என்னும் என்கிறாள்

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?
இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே.–5-6-6-

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்–திரளான மூங்கிலையுடைய கோவர்த்த நத்தை எடுத்தேன் நானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்–திரள வந்த ஏழு எருத்தையும் கொன்றேனும் நானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்-ஓர் இனத்தில் கன்றுகளை மேய்த்தேனும் நானே என்னும்
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்–திரள் திரளான பசுக்களை ரஷித்தேனும் நானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்-ஒரு தரத்தில் இடைப்பிள்ளைகளுக்கு நாயகனாய் இருப்பேனும் நானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?–சங்கமான ஸூ ரிகளுக்கு நிர்வாஹகானான சர்வேஸ்வரன் ஆவேசித்த படியோ
இனத்தேவர் -என்று சாம்யம் பெற்றவர் என்றுமாம்
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்? இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே.–தன்னில் தான் செறிந்து
வேல் போலே இருக்கிற கண் அழகையுடைய உங்களுக்கு
வேலோடு ஒத்து இருக்கிற கண்ணையுடைய என்னுடைய பெண் பிள்ளை லபித்த இந்த ஸ்வ பாவங்களை ஏது என்று சொல்லுவேன்

—————————-

அநந்தரம் ஜகத்தில் பந்துக்கள் அளவில் அவன் படி எல்லாம் தன் படியாகச் சொல்லா நின்றாள் என்கிறாள்

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–5-6-7-

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்-ஓர் உபாதியாலே கிட்டுதல் -என்னை யுள்ளபடி அறிந்து கிட்டுதல் செய்து இருக்கும் பந்துக்கள் எனக்கு ஒருவரும் இல்லை -என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்-இஜ் ஜகத்தில் நிருபாதிக சம்பந்தத்தைப் பார்த்தால் -அவர்கள் தாரதம்யம்
பாராதே எல்லாரும் எனக்கு பந்துக்களாய் இருக்கும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்-அவர்களை எனக்கு உற்றாராம்படி பண்ணுவேனும் நானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்–பிரயோஜனாந்தரத்துக்கு கிட்டினவர்களை அவற்றைக்
கொடுத்து உறவு அறுத்து விடுவேனும் நானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்–அநந்ய ப்ரயோஜனராய்க் கிட்டினார்க்கு எல்லா உறவு முறையும் நானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?–எத்தனையேனும் அளவுடையார் ஆகிலும் தன்னை முட்டக் கண்டு கிட்டினார் இல்லாத
ஆச்சர்ய பூதன் ஆவேசித்த படியோ
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்? உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–பந்துக்களான உங்களுக்கு
அதி பாலையான என்னுடைய பெண் பிள்ளை உள்ளுறக் கண்டு சொல்லுகிற வார்த்தைகளை என்ன பாசுரம் சொல்லி சொல்லுவேன்

———————————————

அநந்தரம் ஜகத் பிரதானராய் ப்ரஹ்ம ருத்ராதிகளான தேவர்களும் ரிஷிகளும் நான் இட்ட வழக்கு என்னும் -என்கிறாள் –

உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக்கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே.–5-6-8-

உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்- ச சிவ-என்று பகவத் பிரகாரமாகச் சொல்லப்படுகிற
த்ரி நேத்ரனாய் ஈஸ்வரனாக ப்ரசித்தனான ருத்ரன் எனக்கு பிரகார பூதன் என்னா நிற்கும்
உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்-ச ப்ரஹ்ம என்று சொல்லப்படுகிற சதுர்முகன் எனக்கு பிரகார பூதன் என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்-அப்படியே பகவத் விபூதி தயா தச ப்ரஜாபதிகளான தேவர்களும் எனக்கு விபூதி பூதர் என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்–சேந்த்ர என்று சொல்லப்பட்ட த்ரயஸ் த்ரிம் சதகோடி தேவதை அதிபதியான
இந்திரனும் எனக்கு பிரகார பூதன் என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்டியாமல் –சனகாதி ரிஷிகளும் நான் இட்ட வழக்கு என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக்கொலோ?–வேதங்களில் கோஷிக்கப்படும் காள மேக நிபாஸ்யாமமான
திரு வடிவை யுடையவன் ஆவேசித்த படியோ வ்யதிரேகத்தில் உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?-
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்? உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே –சொல்லு சொல்லு என்று உரைக்கின்ற
லோகத்தாரான உங்களுக்கு லோக மரியாதை அல்லாத பேச்சை யுடையளாய் ஸூ குமாரமாய் தர்ச நீயமான கொடி போலே
ஆஸ்ரய வியதிரேகத்தில் தறைப்படும்படியான இவளுக்கு யுண்டான இஸ் ஸ்வ பாவங்களை ஏதாக சொல்லுகேன்

—————————————-

அநந்தரம் குரூரமான கர்ம பிரகாரங்கள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னும் என்கிறாள் –

கொடிய வினை யாதும் இலனே என்னும்
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–5-6-9-

கொடிய வினை யாதும் இலனே என்னும்–கர்ம வஸ்யரான பத்த சேதனரைக் கண்ணுற்று நலியும் கொடுமையை யுடைத்தான
கர்மம் ஒன்றும் எனக்கு இல்லை என்னா நிற்கும் –
அந்த க்ரூர கர்மமானது என் நிக்ரஹம் ஆகையால் கொடிய வினை ஆவேனும் யானே என்னும்-அது ஆகிறேனும் நானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்-பிரதி கூலரானவரை-அந்த கர்மங்களிலே மூட்டி செய்விப்பேனும் நானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்-அந்த கர்மத்தை ஆஸ்ரிதற்கு போக்குவேனும் நானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்-க்ரூர கர்மாவான ராவணனுடைய இலங்கையை அழித்தேன் என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?–ஆஸ்ரித விரோதிகளுக்கு ம்ருத்யு சமனான பெரிய திருவடியை
வாஹனமாக யுடையவன் ஆவேசித்த படியோ –
கொடிய புள் -என்று கொடியிலேயான புள் என்றுமாம்
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?- கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–நமக்கு இது நிலம் அன்று என்று இராதே
அதி நிர்ப்பந்தம் பண்ணுகிற கொடுமையையுடைய லோகத்தீர்க்கு
இவளை இப்படி விக்ருதையாகக் காண வைத்த பாபத்தை கொடுமையை யுடையேனான என்னுடைய கொடி போலே மெல்லியளான
பெண் பிள்ளையினுடைய தர்ச நீயா சேஷ்டிதங்களான இவற்றை என் என்று சொல்லுவேன்
கோலங்கள் என்று ஒருப்பாடு ஆகவுமாம் –

——————————–

அநந்தரம் ஸ்வர்க்க நரகாதிகளான சகல பலங்களும் நான் இட்ட வழக்கு என்னும் -என்கிறாள் –

கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோல மில் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனி முதல் யானே என்னும்
கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.–5-6-10-

கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்–தர்ச நீயா போக்யதையை யுடைத்தான ஸ்வர்க்கமும் யானே என்னும்
கோல மில் நரகமும் யானே என்னும்-ஒரு வை லக்ஷண்யமும் இன்றிக்கே துக்கோத்தரமான நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்-நிரதிசய ஆனந்த ரூப வை லக்ஷண்யத்தாலே விளங்குவதாக மோக்ஷமும் யானே என்னும்
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்-இவ்வோ பலங்களை பற்றுக் கோலும் ஒருப்பாட்டை யுடைய பிராணிகளும் நானே என்னும்
கோலம் கொள் தனி முதல் யானே என்னும்–இவற்றை அடையத் தன் நினைவில் நிர்வஹிக்கும் ஒருப்பாட்டை யுடைத்தாய்
சஹாயாந்தர நிரபேஷமான பரம காரண வாஸ்து நானே என்னா நிற்கும்
கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ?–பசுத்த வடிவும் ஸ்புரிக்கிற மின்னும் நாநா வர்ணமான
இந்த்ர தநுஸ்ஸூ மான கோலத்தை யுடைத்தான மேகம் போலே இருக்கிற திருவடிவை யுடையவன் ஆவேசித்த படியோ
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? கோலம் திகழ் கோதை பரம கூந்தலுக்கே ஒருப்பாட்டை யுடைத்தாய் –
கேட்டு அல்லது போகோம் என்று ஓருப்படுகிற உங்களுக்கு அழகு விளங்குகிற மாலையை யுடைய மயிர் முடியை யுடையளான
என் பெண் பிள்ளைக்கு என்ன பிரகாரமாய் இருந்தது என்று சொல்லுவேனோ –

————————————–

அநந்தரம் இத்திருவாய் மொழி கற்றார் ஸர்வ லோக சம்பவ நீயராய்க் கொண்டு
பாகவத கிஞித்காரம் பண்ண இட்டுப் பிறந்தார்கள் என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை–வாசம் செய் பூங்குழலாள் என்கிறபடியே
விலக்ஷணமான மயிர் முடியை யுடையளாய் -தாமரைப் பூவில் பிறப்பாலே நிரதிசய போக்ய பூதையாய் நித்ய யவ்வன
ஸ்வபாவையான ஸ்ரீ மஹா லஷ்மிக்கும் இவளோடு ஒத்த ரூப வைலக்ஷண்யத்தை யுடைய ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு அபி ஜாதிரான
கோபாலர்க்கு ஸீரோ பூதையான நப்பின்னைப் பிராட்டிக்கும் அபி மதனான சர்வேஸ்வரனை யுத்தேசித்து
வாய்ந்த – வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து–பாவநா ப்ரகரஷத்தாலே தத் பாவத்தை கிட்டி இருப்பாராய்
வழுதி வள நாட்டுக்கு நிர்வாஹகராய் ஸூஸ்த்திரையான திரு நகருக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அந்தரங்க விருத்தியாக அனுஷ்ட்டித்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்–ஆராய்ந்து சொன்ன தமிழ்த் தொடையான ஆயிரத்துள்
இவையும் ஒரு பத்தே என்னும்படி விலக்ஷணமான இவை பத்தையும் பாவ விருத்தியோடே அப்யஸிக்க வல்லவர்கள் லோகத்திலே
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–சிரஸா வகிக்கும் படியான ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்தை
யுடையராய்க் கொண்டு ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதரான பாகவதர்களை
ஆராதிக்கைக்கு பாக்யம் பண்ணினவர்கள் ஆவர்கள்
ஏய்ந்த என்று பாடமாய் -பொருந்தின என்றுமாம் –
இது எண் சீர் ஆசிரிய விருத்தம் –

—————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –5–6-

March 31, 2018

இப்படி எம்பெருமானைப் பிரிந்த வ்யஸனம் மிக்கு அந்த வியஸன அதிசயத்தாலே ஆத்ம தாரண ஷமை அன்றிக்கே இருந்த பிராட்டி
ஆத்ம தாரண அர்த்தமாக ஸ்ரீ கோபிகளைப் போலே வண் துவரைப் பெருமாளுடைய திவ்ய சேஷ்டிதங்களையும்
மற்றும் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வ்யாபாரங்களையும் அநு கரித்து தரிப்போம் என்று அதிலே
இவள் படியைக் கண்ட திருத் தாயார் -இவள் சொல்லுகிற பாசுரங்கள் ஆச்சர்யமாய் இரா நின்றன –
இவள் பக்கல் எம்பெருமான் ஆவேசித்தானாகாதே
இவளுடைய அதி லோகமான ப்ரவ்ருத்திகள் இன்னபடி என்று அத்யவசிக்க முடிகிறது இல்லை என்று
வினவ வந்தவர்களை நோக்கிச் சொல்லுகிறாள் –

———————————————

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?
கடல்ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல்ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-

கடலோடி கூடின ஜகத்தை சஹாயாந்தர நிரபேஷமாக ஸ்ருஷ்டித்தேனும் நான் என்னும்
இஜ் ஜகத்து மதாத்மகம் -ஸ்வ தந்திரமாய் இருபத்தொரு பதார்த்தம் இல்லை என்னும்
இத்தை மஹாபலி அபஹரிக்க நான் அளந்து கொண்டேன் என்னும்
பிரளய அர்ணவத்திலே அழுந்தின இத்தை ஸஹாய நிரபேஷமாக எடுத்தேனும் நான் என்னும்
பூமி தான் பிரளயம் வாரா நின்றது என்று அறியாது இருக்க நானே அறிந்து திரு வயிற்றிலே வைத்துப் பரிஹரித்தேன் என்னும்
இவள் பக்கல் கடல் ஞாலத்து ஈசன் வந்து ஆவேசித்தானோ
இந்த பூமியிலே இருந்து வைத்து ஏன் மகள் மேன்மேல் எனச் சொல்லுகிற இவற்றை
லௌகிகரான உங்களுக்குச் சொல்ல உபாயம் உண்டோ என்கிறாள் –

————————-

கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வி யீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.–5-6-2-

நான் கற்ற வித்யைகளுக்கு ஒரு முடிவு இல்லை என்னும்
எல்லாரும் விரும்பிக் கற்கின்ற வித்யைகள் நான் இட்ட வழக்கு என்னும்
அவற்றை யுண்டாக்கினேன் நானே என்னும்
அவற்றினுடைய தாத்பர்ய நிர்ணயம் என்னாலே என்னும்
வித்யா பலம் நானே என்னும்
அப்யஸிக்கப்படும் சகல வித்யா வேத்யனான சர்வேஸ்வரன் வந்து ஏறினானோ
அறிவில்லாத உங்களுக்கு அறியத் தொடங்கும் பருவத்தையுடைய இவள்
அனுசந்திக்கிறவற்றைச் சொல்ல விரகுண்டோ என்கிறாள் –

——————————

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீஎல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?
காண்கின்ற என்காரிகை செய்கின்றவே.–5-6-3-

அபரிச்சேதயமான பிருதிவ்யாதி பூத பஞ்சகமும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்
கடல் போலே எப்போதும் தர்ச நியாமான திரு நிறத்தை யுடையவன் வந்து ஏறினானோ
நமக்குத் தெரியாத நிலத்திலே புக்கு அவகாஹித்து என் மகள் பண்ணுகிற சேஷ்டிதங்கள் நீங்கள்
காண்கிற படிக்கு மேற்பட என்னால் சொல்லலாவது இல்லை என்கிறாள் –

———————————————

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–5-6-4-

வர்த்தமான கிரியைகளும் மேல் வருவதான கிரியைகளும் பண்டு செய்த கிரியைகளும் கிரியா பலம் புஜிப்பேனும்
கிரியா கர்த்தாக்களை அவற்றில் ப்ரவர்த்திப்பித்துப்பேனும் நான் என்னும்
இவள் கண்ணின் அழகாலும் அவன் ஆவேசித்தால் போலே இரா நின்றது
சிவந்த கனி போலே இருக்கிற வாயை யுடையவளாய் இருக்கிற சிறு பெண் பிள்ளை இடையாட்டத்தில்
ஆழம் காண மாட்டாதே படுபாடரான உங்களுக்கு எத்தைச் சொல்லுவேன் என்கிறாள் –

————————————

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
திறம்பாது என் திருமகள் எய்தினவே.–5-6-5-

ஒருவருக்கும் தப்பச் செய்ய ஒண்ணாத படி இத்தை எல்லாம் ஒரு துணை இன்ரிக்கே காக்கின்றேன்
சாலியாதபடி கோவர்த்தந உத்தரணம் பண்ணினேன்
தப்பாதபடி கோலி அஸூரரை முடித்தேன்
ஒருவருக்கும் அறிய ஒண்ணாத என் படியை லோகத்தில் ஆவிஷ்கரித்து தர்ம புத்ராதிகள் ஐவரையும் காத்தேன்
நினைத்தபடி தப்பாமல் கடலைக் கடைந்தேனே என்னும்
ஒருவருக்கும் தன சாசனத்தைத் தப்ப ஒண்ணாத படியான சர்வேஸ்வரன் ஆவேசித்தானோ
ஸ்ரீ லஷ்மீ சமையான என் மகள் பகவத் குணங்களில் தப்பாமே அகப்பட்ட படிகளை கேட்டு அல்லது போகோம் என்று
நிர்பந்திக்கிற உங்களுக்கு என் என்று சொல்லுகேன் என்கிறாள்-

————————————–

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?
இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே.–5-6-6-

திரள் திரளான மூங்கிலை யுடைத்தான கோவர்த்தந கிரி தாரணம் முதலான ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்கள் எல்லாம்
நானே பண்ணா நின்றேன் என்னா நின்றாள்
தனித்தனி அநு பவிக்க முடியாமையாலே திரண்டு இருக்கிற அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன் ஆவேசித்தானோ
வேல் போலே இருக்கிற திருக் கண்ணை யுடையீராய் அவஹிதராய் இருக்கிற உங்களுக்கு தான் படுகிற பாட்டைப்
பிறரைப் படுத்த வல்ல திருக் கண் அழகையுடைய இவளுற்ற இவற்றை என் சொல்லுகேன் -என்கிறாள் –

———————————————————-

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–5-6-7-

இஜ் ஜகத்தில் என் படியை அறிந்து எனக்கு பந்துக்களாய் இருப்பார் ஒருவரும் இல்லை
அவர்கள் அப்படி இருந்தமை அறிந்து வைத்தே எனக்கு உறவாக நினைத்து இராதார் ஒருவரும் இல்லை
சிலர் என்னை ஆஸ்ரயிக்கும் படி பண்ணுவேன்
அநாஸ்ரயிக்குமவர்களில் ப்ரயோஜனாந்தர பரர்க்கு அவர்கள் வேண்டியவற்றைக் கொடுத்து அகற்றுவேன் நான்
அநந்ய ப்ரயோஜனரானவர்களுக்கு எல்லா பந்து க்ருத்யமும் பண்ணுவேன் நான் என்னும்
எத்தனையேனும் அளவுடையார்க்கும் முட்டக் காண ஒண்ணாத அத்யாச்சர்ய பூதனானவன் ஆவேசித்தானோ
ஈடுபட்டு அத்யந்த பாலையான என் மகள் சொல்லுகிறவற்றை உறவு முறையாரான உங்களுக்கு
என்ன பாசுரத்தாலே சொல்லுவேன் நான் என்கிறாள் –

———————————————————-

உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக்கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே.–5-6-8-

ஜகத் பிரதானராக சாஸ்திரங்களில் சொல்லப்படுகிற சதுர்முக ப்ரமுவரும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்
கால தத்வம் உள்ளதனையும் பேசினாலும் பேசி முடிக்க ஒண்ணாத அழகை யுடையவன் ஆவேசித்தானோ
அதி லோகமான பேச்சைப் பேசுவதும் செய்து துக்க சைஹையும் இன்றிக்கே இருக்கிற
இவ்விலக்ஷணையான பெண் பிள்ளைக்குப் பிறந்த
அவசாதத்தை -சொல்லு சொல்லு என்று நிரந்தரமாகச் சொல்லுகிற லௌகிகரான உங்களுக்கு
ஏதென்று சொல்லுவேன் நான் -என்கிறாள் –

——————————————————

கொடிய வினை யாதும் இலனே என்னும்
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–5-6-9-

கர்ம வஸ்யரை நலியுமா போலே நலியக் கடவதாய் கொடிதான கர்மங்கள் எனக்கு ஒன்றும் இல்லை என்னும்
அவை நான் இட்ட வழக்கு என்னும்
பிரதி கூலர்க்கு கொடிதான பாபத்தை விளைப்பேன் நான் என்னும்
அநு கூலர்க்குகே கொடிதான வினையைத் தீர்ப்பெனும் நான் என்னும்
கொடியான இலங்கையை ஒரு படி அளித்தேன் என்னும்
பிரதி பஷத்துக்குகே கொடியனான பெரிய திருவடியை வாகனமாக யுடையவன் வந்து ஏறினானோ
இப்படி படுகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின என்னுடைய மகளுடைய ஒருப்பாடுகளை சொல்லு சொல்லு என்று
மிகவும் அலைக்கிற உங்களுக்கு என் என்று சொல்லுவேன் -என்கிறாள் –

——————————————

கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோல மில் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனி முதல் யானே என்னும்
கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.–5-6-10-

கலப்பற்ற ஸூக ரூபமான சுவர்க்கமும் -ஸூக காந்தம் இன்றிக்கே துக்கமேயான நரகமும் -அபரிச்சின்ன ஸூக ரூபமான மோக்ஷமும்
கர்ம அநு குணமாக தேவாதி சரீர பிரவேசம் பண்ணக் கடவ ஆத்மாக்களும் -விசித்திர கார்ய ஜனன சக்தி யுக்தையான ப்ரக்ருதியும்
நான் இட்ட வழக்கு என்று சொல்லா நின்றாள் -ஸமஸ்த குணாத்மகனாய் வில்லிட்டு மின்னி தர்ச நீயமான
மேகம் போலே இருக்கிற திரு நிறத்தை யுடையவன் வந்து ஏறினானோ
அழகிய மாலையையும் மயிர் முடியையும் யுடைய என் மகளுக்குப் பிறந்த அவஸ்தைகளை கேட்க்கையிலே
ஒருப்படா நின்றுள்ள உலகத்தீர்க்கு என் சொல்லுவேன் -என்கிறாள் –

——————————————–

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை-அநு காரத்தாலே கிட்டின
மன்னு குருகூர்ச் சடகோபன் வாசிக கைங்கர்யமாய் ஆராய்ந்து சொன்ன ஆயிரத்துள் இப் பத்தும் வல்லவர்கள்
லோகத்தில் எல்லாரும் கொண்டாடும்படியான பெரும் செல்வத்தை யுடையராய்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரியமான வ்ருத்தி பண்ணப் பெறுவர் என்கிறார் –

———————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –5-5-

March 30, 2018

அஞ்சாம் திருவாய் மொழியில் -கீழ் -உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் என்று
அவனுடைய ஆஸ்ரித சம் ரக்ஷண சிந்தா யோகத்தை அனுசந்தித்து ஆஸ்வஸ்தராய் பூர்வ அநு பூதமான –
நல்கி என்னை விடான் -என்கிறபடியே தம்மை ஒரு காலும்
கைவிடாத நம்பியுடைய வடிவழகு ஸ்ம்ருதி விஷயமாய் ஆந்தர ப்ரீதியை ஜெநிப்பிக்க
அசாதாரண சிஹ்ன அவயவ வை லக்ஷண்யத்தையும் –
அலங்கார சோபையையும்
ஆஸ்ரிதரைக் காத்தூட்டும் திவ்ய ஆயுத பூர்த்தியையும்
பரத்வ ப்ரகாசகமான பரிஷ்க்கார பிரகாரத்தையும்
அதிசயித போக்யமான திரு முக திவ்ய அவயவ சோபையையும்
திரு முக திவ்ய அவயவத்தோடு சேர்ந்த திவ்ய ரூப புஜ வை லக்ஷண்யத்தையும்
தேஜோ மாயமாய் உத்துங்கமான திவ்ய விக்ரஹ யோகத்தையும்
சர்வ அவயவ ஸுந்தர்யத்தையும்
அசங்க்யேய ஆபரண சோபா விசிஷ்டமான அதிசயித போக்யதையையும்
அநந்ய கோசாரமாம் படி ஆந்தரமாகப் பிரகாசிக்கிற அதிசயித தேஜோ விசிஷ்டமான ப்ராப்ய விஷத்தையும்
அனுசந்தித்து -இந்த ஆந்தர அனுபவ ப்ரீதியோடே அலாப நிபந்தமான அப்ரீதியும் ஓக்க நடக்கையாலே
இவரை ஆஸ்வசிப்பிப்பதாக உத்யோகித்த ஸூஹ்ருத்துக்களையும் பரிவரையும் குறித்து ஸ்வ தசையை ஆவிஷ்கரித்து பிரகாரத்தை
நாயகனைப் பிரிந்த காமிநி யானவள் தத் ஸுந்தர்யாதி ஸ்மரணத்தாலும் தத் அலாப அர்த்தியாலும் ப்ரீதி அப்ரீதிகள் சமமாய் நடக்க
இவள் ஆர்த்தியை மீட்க்கைக்காக நியமித்த தோழிமாரையும் தாய்மாரையும் குறித்து
தான் இவ்விஷயத்தில் அகப்பட்ட படியைச் சொல்லி அவர்களுக்கு மறுத்து உரைத்த படியாய் இருக்கையாலே
கழற்று எதிர்மறை என்கிற துறையாலே அருளிச் செய்கிறார்

————————————————

முதல் பாட்டில் -நம்பியுடைய அசாதாரண சிஹ்னமான ஆழ்வார்களில் பிரபாகமான திவ்ய அவயவ
சோபையிலும் என்னெஞ்சு சகிதமாய் நடவா நின்றது என்கிறாள் –

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–5-5-1-

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!–அன்னைமீர்காள் -பெற்ற நீங்கள் பிரியம் செய்யாதே நல்லது கண்டு
மேல் விழுந்த என்னை உகக்கப் பிராப்தமாய் இருக்க முனிகிறபடி எங்கனே
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-நம் குடிக்கு அசாதாரண பூதராய் தர்ச நீய வேஷரான திருக் குறுங்குடியிலே
கல்யாண பரிபூர்ணரான நம்பியை நான் அனுபவித்த பின்பு அவருடைய ப்ராப்ய பாவத்துக்கு அசாதாரண சிஹ்னமான
கோலம் -திவ்ய தேசத்துக்கு விசேஷணம் ஆகவுமாம்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடும் திருவாழியோடும் தாமரை போலே
தர்ச நீயமான திருக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–சிவந்த கனி போலே அத்விதீயமாய் இருக்கிற
திரு அதரத்தோடும் என் நெஞ்சு சகிதமாய் நடவா நின்றது –

——————————-

அநந்தரம் -நம்பியுடைய ஒப்பனை அழகும் தோளும் சர்வ தேசத்திலும் வந்து நின்று அனுபவ விஷயமாகா நின்றது -என்கிறாள் –

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2-

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே–என்னை நியமித்து வார்த்தை சொல்லாதே அனுபவித்தாலும்
குறி அழியாத உங்கள் நெஞ்சு போல் அன்றியே பாவ யுக்தமான என் நெஞ்சால் அனுபவித்து பாரிகோள்
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்–தெற்குத் திக்கில் நன்றான சோலையை யுடைத்தான
திருக் குறுங்குடியிலே நம்பியை -அவன் அருள் அடியாக நான் கண்ட பின்பு
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்–வடிவுக்கு பரபாகமாய் ப்ரஹ்ம வர்ச்சஸ ப்ரகாசகமான திரு யஜ்ஜோ பவீதமும் –
இரு பாடும் இலங்குகிற திரு மகர குண்டலங்களும் விலக்ஷணமான திரு மார்பில் கழற்றாத திரு ஆபரணமாக ஸ்ரீ வத்ஸமும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–எப்போதும் கழற்றாத திரு ஆபரண வர்க்கமும்
சதுர்வர்க்க பிரதமான நான்கு திருத் தோள்களும் நான் போன விடம் எங்கும் வந்து நில்லா நின்றன –

——————————————————————-

அநந்தரம் இவ்வழகை காத்தூட்டும் ஆயுத வர்க்கம் பஹிர் அந்த பிரகாசித்தும் போகிறது இல்லை -என்கிறாள்

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.–5-5-3-

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்-ஒரு வியாபார ஷமை இன்றியே ஸ்தப்தையாய் நில்லா நிற்கும் –
சொல்லிற்று அறியாத படி அறிவு அழியா நிற்கும் -ஆந்தர அநு சந்தானத்தாலே சிதிலை யாகா நிற்கும் என்று கொண்டு
பெற்ற தாய்மாராய் அடியிலே இப்பியத்திலே ப்ரவர்த்திப்பித்த நீங்களும் அப்ரிய வசனங்களைப் பண்ணா நின்றிகோள்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்–மலை போலே இருக்கிற மாடங்களை யுடைத்தான
திருக் குறுங்குடி நம்பியை வீர வேஷம் கண்டு உகக்கும் நான் அனுபவித்த பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்-வென்றியை யுடையவான வில்லும் கதையும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.–ஒரு படிப் பட நின்று என் கண்ணுக்குள்ளே தோன்றி போகிறனவில்லை
இப்படி புறவாய வளவன்றியே நெஞ்சுக்குள்ளே நீங்குகிறனவில்லை

———————————————

அநந்தரம் பரத்வ ப்ரகாசகமான நம்பியுடைய வேஷ வை லக்ஷண்யமானது என் பார்ஸ்வஸ்த்தமாகா நின்றது -என்கிறாள்

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–5-5-4-

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்-இவள் கண்ண நீர்கள் பேர நிற்கிறனவில்லை –
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-தேனை யுடைத்தான சோலைகளை யுடைத்தான
திருக் குறுங்குடி நம்பியை அவன் மேன்மை கண்டு உகக்கும் நான் அனுபவித்த பின்பு
தேங்கோள் சோலை என்று பாடமாகவுமாம்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்–
அநு பாவ்யமாய் ஸ்ரமஹரமான மாலா ரூபமாயுள்ள செவ்வித் திருத் துழாயும்
ஆதி ராஜ்ய ஸூ சகமாய் ஸ்ப்ருஹணீயமான திரு முடியும் -அம்மாலைக்கும் திரு முடிக்கும் தகுதியான திரு வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–திரு வரைக்குப் பாங்காய் தோன்றுகிற
பட்டுப் பரிவட்டமும் மேல் திரு ஆபரணமாக விடு நாணும்
உள்ளே பிரகாசியா நிற்க -கிட்டி அனுபவிக்கப் பெறாத பாபத்தை யுடையேனான
என்னுடைய பார்ஸ்வஸ்த்தங்களாகா நின்றன –

———————————-

அநந்தரம் நம்பியுடைய திரு முக அவயவ சோபையானது என் ஆத்மகதமாய்த் தோற்றா நின்றது -என்கிறாள் –

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–5-5-5-

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்–அவன் வருகைக்கு சம்பாவனையுள்ள பார்ஸ்வத்தை நோக்கி நிற்கும் –
வரக் காணாமையாலே சித்திலையாகா நிற்கும் என்று இப்படி ஸ்நேஹத்தைப் பிறப்பித்த நீங்களும் ஸ்நேஹம் தவிருகைக்காக
முனிந்து வார்த்தை சொல்லா நின்றி கோளே
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்–பூர்த்திக்குத் தகுதியான கீர்த்தியை யுடைய திருக்குறுங்குடி நம்பியை –
அவருடைய கீர்த்தியிலே அகப்பட்ட நான் அனுபவித்த பின்பு
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்-திரண்ட ஜோதீஸ்ஸை யுடைத்தான தொண்டைப் பழம் போலே இருக்கிற
திரு அதரமும்-நீண்ட திருப் புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–அந்த திருப் புருவத்துக்குத் தகுதியான நீட்சியை யுடைத்தாய்
தாமரை போலே தர்ச நீயமான திருக் கண்களும்
நினைத்தபடி அனுபவிக்கப் பெறாத பாபத்தை யுடையேனான என்னுடைய ஆத்மகதமாகா நின்றது-

————————————

அநந்தரம் திரு முக சோபையோடே கூடின ரூப தேஜஸ் வைலக்ஷண்யம் என் நெஞ்சிலே பூர்ணமாயிற்று என்கிறாள் –

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–5-5-6-

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்–அவன் வரக் காண விருக்கும் நம் குடிக்கு –
தான் காண த்வரிக்கிற இவள் இன்றைய அளவன்றியே காலதத்வம் உள்ளதனையும் கழிக்க அரிய
சிக்கென்ற பழி தான் ஒரு வடிவாய் இருக்கிறவளாய் இருக்கும் என்று தாயாரானவள் நம்பியைக் காண இடம் தருகிறிலள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-சோலை சூழ்ந்து ஸ்ரமஹரமான திருக் குறுங்குடியிலே
நம்பியை பழி புகலாம் படியான ப்ராவண்யத்தை யுடைய நான் கண்டா பின்பு
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்–அபி ரூபமாய் நீண்ட கற்பகக் கொடி போலே இருக்கிற திரு மூக்கும்
அதினுடைய பூ என்னலாம் படியாய்த் தாமரை போலே இருக்கிற திருக் கண்களும்
அதின் கனி என்னும்படி பழுத்த திரு அதரமும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–அதற்கு பரபாகமான நீல நிறத்தை யுடைய திரு மேனியும்
பச்சிலை மரம் பணைத்தால் போலே இருக்கிற நான்கு திருத் தோள்களும்
என் நெஞ்சிலே நிறைந்தன-

——————————————

அநந்தரம் நிரதிசய தேஜோ விசிஷ்டமாய் உத்துங்கமான ஸ்ப்ருஹனீய திவ்ய விக்ரஹத்தோடே நம்பி
என் நெஞ்சுக்குள்ளே திருக் கையும் திருவாழியுமாய் நின்றார் என்கிறாள் –

நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7-

நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்-நம்முடைய குடிக்கு இவள் பூரணமாய்
பிரபலமான பழி என்று தாயார் காண இடம் கொடுக்கிறிலள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-சிறப்பை யுடைத்தான கீர்த்தியை யுடைய திருக் குறுங்குடி நம்பியை
அக்கீர்த்தி அதிசயத்துக்கு அகப்பட்ட நான் அனுபவித்த பின்பு
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்-பூர்ணமான தேஜோ ராசியாலே சூழப்பட்டு
உத்துங்கமாய் ஸ்ப்ருஹணீயமான திரு வடிவோடே கூட
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–என் நெஞ்சுக்குள்ளே நிறைந்து நின்று விட்டான் –
அசாதாரண சிஹ்னமான திருவாழியும் அழகிய திருக் கையிலே உண்டாயிருந்தது –

————————————

அநந்தரம் – நம்பியுடைய சர்வ திவ்ய அவயவ சோபைகளும் என் முன்னே நில்லா நின்றன என்கிறாள்

கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–5-5-8-

கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்–ஆற்றாமையால் கையுள்ளே அழகிய முகத்தை வையா நிற்கும்
அதற்கு மேலே சிதிலையாகா நிற்கும் -என்று இஸ் சைத்திலயத்துக்கு கிருஷி பண்ணின நீங்களும் முனியா நின்றி கோளே
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்-நம்பியுடைய நிழலீட்டாலே கருகின நிறத்தை யுடைத்தாய்
மாடங்களை யுடைத்தான திருக் குறுங்குடி நம்பியை
நைவே ப்ரக்ருதியான நான் கண்டபின்பு
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்-சிவந்த தாமரை போலே இருக்கிற திருக் கண்களும்
அநு பாவ்யமான கடி பிரதேசமும் முஷ்டி க்ராஹ்யமாம் படி சிறுகின இடையும் -இவ்வயவ சோபைக்கு ஆஸ்ரயமான திரு வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் –செறிவை யுடைத்தாய் நீண்ட குழல்கள் தாழ்ந்த பஜ சிகரங்களும் –
மொய்கொள் நீள் -பாட பேதம்
பாவியேன் முன்னிற்குமே.–-அபி நிவேச அநு ரூபமாக அனுபவிக்கப் பெறாத பாபத்தை யுடையேனான
என்னுடைய முன்னே நில்லா நின்றன –

—————————-

அநந்தரம் நம்பி அசங்க்யேய திவ்ய ஆபரண சோபா விசிஷ்டத்வத்தாலே அதிசயித
போக்யனாய்க் கொண்டு என் நெஞ்சு விட்டுப் போகிறிலன் என்கிறாள்

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–5-5-9-

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்-அஸூர்யம் பஸ்யையாய்க் கொண்டு வளர்ந்த நீ
மனுஷ்யர் காண முன்னே நின்றாய் என்று
சம துக்கைகளான தோழிமாரும் ஹித பரைகளான தாய்மாரும் முனியா நின்றி கோளே
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்–ஸ்த்திரமான மாடங்களையுடைய திருக் குறுங்குடி நம்பியை
ஸ்த்ரீத்வம் பேணாமல் புறம்பு புறப்படும்படியான நான் கண்டபின்பு
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்–உத்தம அங்கத்தில் ஆதி ராஜ்ய ஸூ சகமாய் ஓங்கிய
திரு அபிஷேகம் முதலாய் அசங்க் யேயமாய் அணியப்பட்ட திவ்ய ஆபரணங்களை யுடையவன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–கன்னலும் பாலும் அமுதமும் போலே
நிரதிசய போக்யனாய்க் கொண்டு வந்து என் நெஞ்சம் விட்டுப் போகிறிலன் –

———————————————-
அநந்தரம் நித்ய ஸூ ரி போக்யமாய் அத்யுஜ்ஜ்வலமான ப்ராப்ய திவ்ய விக்ரஹமானது
அநந்ய கோசாரமாம் படி என் அகவாயிலே பிரகாசியா நின்றது என்கிறாள்

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்–இவள் கை கழிய விஞ்சின காதலை
யுடையவளானாள் என்று அன்னையானவள் நம்பியைக் காண இடம் தருகிறிலள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்–ஆஸ்ரிதரை அநந்யார்ஹம் ஆக்கும் அவிகலமான
கீர்த்தியையுடைய திருக் குறுங்குடி நம்பியை அபி நிவேச அதிசயத்தை யுடைய நான் கண்ட பின்பு
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே–ஸூரி சங்கங்களானவை பரஸ்பரம் சங்கீ பவித்து
சேஷ விருத்தி பண்ணி அனுபவிக்கும் படி தேஜோ ராசி மத்யத்திலே உச்சரிதமாய்த் தோற்றுகிற
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–தோற்றுகிற அத்விதீயமான ப்ராப்ய திவ்ய விக்ரஹமானது
அப்படியே என் நெஞ்சுக்குள்ளே தோன்றா நின்றது
இது எத்தனையேனும் அறிவுடையார்க்கும் ஸ்வ யத்தனத்தாலே அறிய அரிது

———————————————-

அநந்தரம் இத்திருவாய் மொழியை அப்யசித்தவர்களுக்கு பகவச் சேஷத்வம் ஆகிற
ஸ்வரூப லாபம் பலமாக அருளிச் செய்கிறார்

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி–ஸ்வ சாமர்த்தியத்தால் அறிய நினைத்து இருப்பார்க்கு
அறிய ஒண்ணாத படியான ஸ்வாமியாய்
அதுக்கு ஸூசகமான திருவாழியை அழகிய திருக் கையிலே யுடையவனை ப்ரேம பாரவஸ்யம் தோற்றும்படி அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன-பரிமள உத்தரமாய் ஸ்லாக்யமான புஷ் பங்களைப் போலே
ஆராய்ந்து அனுபவ யோக்கியமான ஞானாதி வை லக்ஷண்யத்தை யுடையராய் திரு நகருக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
நன்குருகூர் என்று திவ்ய தேச அழகாகவுமாம்
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்–ஆயிரத்தில் திவ்ய ஆயுத அவயவ ஆபரண ரூப சிஹ்னங்களை யுடைய
திருக் குறுங்குடி அதன் மேல் இவை பத்தும்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–ஞான பிரகாசம் விருத்தம் அப்யஸித்து அர்த்த அனுசந்தானம் பண்ண வல்லவர்கள்
அகாயமான கடல் சூழ்ந்த பூமிக்குள்ளே பகவத அசாதாரண சம்பந்த அனுபவ தத்பரராய்கே கொண்டு வர்த்திப்பார்கள்

——————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –5–5-

March 30, 2018

அநு பூத பரம புருஷ குண ஸ்மரணத்துக்கும் கூட ஷமை யல்லாதபடி ராத்திரியில் மதி எல்லாம் உள் கலங்கி அத்யந்தம் அவசன்னையாய்
விடிந்தவாறே லப்த சம்ஜ்ஜையாய் -பண்டு கண்டு அனுபவித்த நம்பியுடைய திரு நகரியினுடைய அழகையும்
நம்பி தம்முடைய ஸுந்தர்ய ஸுகந்த்ய ஸுகுமார்ய லாவண்யா யவ்வனாதி அனவதிக அசங்க்யேய கல்யாண குணங்களையும்
திவ்ய பூஷண திவ்ய ஆயுத ஜெனிதமான அழகையும் ஸ்மரித்து -அந்த ஸ்மரண ஜெனிதமான ப்ரீதியாலும்
தத் ஸம்ச்லேஷ அலாப நிபந்தமான அப்ரீதியாலும் விசிஷ்டையாய் -தத் ஸம்ச்லேஷ அர்த்தமாக இருந்து நோவு படுகிற பிராட்டி
பரம பிரணயியான எம்பெருமான் பக்கல் நீ உன்னுடைய அபி நிவேசம் தோற்ற இருத்தல் -அந்த விஸ்லேஷ ஜெனிதமான
அவசாதம் தோற்ற இருத்தல் -அவன் எழுந்து அருளி இருந்த திருக் குறுங்குடியிலே போக உத்யோகித்தல் செய்யல்
தன்னை யுத்திஸ்ய இவள் இப்பாடு படா நிற்கச் செய்தே வாராது ஒழிவதே -ஒருவனுடைய கொடுமை இருந்தபடி என் -என்று கொண்டு
இந்த லோகம் அவன் பக்கலிலே நைர்க்ருண்யாதி தோஷத்தை சங்கிக்கும் -இது வல்லது நம் குடிக்குப் பழி இல்லை
ஆனபின்பு அவன் தானே ஸம்ஸ்லேஷிக்கக் கண்டு இருக்கும் அத்தனை அல்லது இப்படிப் படுகை ஈடல்ல -என்று தன்னைப் பொடிந்து
தனக்கு முகம் காட்டாதே இருந்த தன்னுடைய அன்னைமாரைக் குறித்து
நம்பியுடைய ஸ்வத சித்தமாயும் அந்யோன்ய சம்சர்க்க சித்தமாயும் – சதா அனுபயமானமாய் இருக்கச் செய்தே அபூர்வவத்
விஸ்மயமாபயநமுமாய் இருந்த -நிரவதிக திவ்ய ஸுந்தர்யமும் திவ்ய அவயவ திவ்ய பூஷண திவ்ய ஆயுதங்கள் எல்லாம்-
என் நெஞ்சுள்ளும் புகுந்து நிறைந்து இருக்கிற இருப்பும்- அவற்றில் என்னெஞ்சு விழுந்து அவையல்லது அறியாதே
இருக்கிற இருப்பும்-உங்களுக்குத் தெரியாமை இறே நீங்கள் என்னைப் பொடிகிறது-என்று சொல்லுகிறாள்-

——————————————-

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–5-5-1-

என்னுடைய ப்ரக்ருதி அறிந்து இருக்கிற தாய்மாரான நீங்கள் என்னுடைய அவசாதத்துக்கு அடியான நம்பியுடைய அழகை
இன்னாதாகாதே என்னைப் பொடிகிறபடி எங்கனே -நமக்காக நிரதிசய ஸுந்தர்யத்தோடே திருக் குறுங்குடியிலே
நின்று அருளின நம்பியை நான் கண்ட பின் -சங்கு சக்கரங்களோடும் தாமரை போன்ற திருக் கண் மலர்களோடும்
சிவந்த கனி போலே இருக்கிற திருப் பவளம் ஒன்றோடும் மிகவும் பூணா நின்றது என்னுடைய அந்தக்கரணம் -என்கிறாள் –

——————————————

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2-

நம்பி திரு அழகை நாங்கள் அனுபவித்தோம் அல்லோமோ -நாங்கள் பேசாது இருக்க நீ இங்கனே படுகிறது என்
என்று அவர்கள் பொடியை -என்னை நீங்கள் பொடியாதே உங்களுக்குக் காண வேனுமாகில் என்னைப் போலே ஸ்நேஹ யுக்தமான
நெஞ்சை யுடையீராய்க் கொண்டு அநு சந்தித்து அறியுங்கோள் –
தென்னாட்டுச் சோலை சூழ்ந்த திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்னமின்னா நின்றுள்ள திரு யஜ்ஜோ பவீதமும்
திருக் குண்டலங்களை திரு மார்வில் திரு மறுவும் திரு யுதம்போதே பொருந்தின திரு அணிகலன்களும் திருத் தோள் அழகும்
சுற்றும் வந்து என்னை நெருக்கம் நின்றன என்கிறாள் –

————————————————–

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.–5-5-3-

நம்பியுடைய ஸுர்யாதிகளிலே அகப்பட்டமை அறிந்த தாய்மாரான நீங்களும் -ஸ்தப்தை யாகா நின்றாள் -அறிவு கெடா நின்றாள் –
சிதிலை யாகா நின்றாள் -என்று பொடியா நின்றிகோள் -குன்றம் போலே நெடு மாடங்களை யுடைய
திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் வெற்றியைக் கொடுக்கும் வில்லு முதலான திவ்ய ஆயுத வர்க்கம் புறம்புள்ளும் ஓக்க
நிரந்தரமாகத் தோற்றா நின்றன என்கிறாள் –

——————————————-

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–5-5-4-

நம்பியைப் பிரிந்தாள் தரிக்க மாட்டாள் என்று அறிந்த தாய்மாரான நீங்களும் கண்ண நீர்
மாறுகிறது இல்லை என்று பொடியா நின்றி கோள்
தேன்களைச் கொரியா நின்ற திருச் சோலையை யுடைய திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
தர்ச நீயமாய்க் குளிர்ந்து இருந்த திருத் தோள் மாலையும் நிரதிசய ப்ரீதி யுக்தமான திரு அபிஷேகமும் திரு உடம்பும்
திருவரைக்குத் தகுதியாகத் தோற்றுகிற பட்டும் விடு நாணும் கண்டு வைத்து அநு பாவிக்கப் பெறாத பாபத்தைப் பண்ணின
என்னுடைய பார்ஸ்வத்திலே நின்று என்னை நலியா நின்றன என்கிறாள் –

————————————————————–

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–5-5-5-

தன் தசையை அனுசந்தித்து ஸர்வபா அருகே வரக் கூடும் என்று வர சம்பாவனை யுள்ள பார்ஸ்வத்தைப் பார்த்து நில்லா நின்றாள் –
பின்னை இங்கனே நிற்க மாட்டாதே சிதிலை யாகா நின்றாள் என்று என்னோடு பழகி இருக்கிற
தாய்மாரான நீங்களும் பொடியா நின்றி கோளே
திருக் குறுங்குடிக்குக் கீர்த்தி தகுதியானாப் போலே ஒன்றுக்கு ஓன்று தகுதியாய்த் திரண்ட சோதியை யுடைத்தாய்
தொண்டை போலே சிவந்து இருக்கிற திரு வாயும் திரு புருவத்துக்குத் தகுதியாய்த் தாமரைப் போப் போலே இருக்கிற திருக் கண்களும்
அவன் அழகை நினைத்தால் நோவு படுகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின என்னை
உயிர் நிலையிலே நலியா நின்றன என்கிறாள் –

————————————-

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–5-5-6-

இப்போது அன்றிக்கே மேலும் நம் குடிக்கு நிலை நிற்கும் பழியை விளைக்கும் இவள் என்று தாயார்
நம்பியைக் காண இடம் கொடாதே நோக்கா நின்றாள்
சோலைகளாலே சூழப்பட்ட திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் கோலம் கொழுந்து விட்டதொரு கொடி போலே இருக்கிற
திரு மூக்கு முதலான திவ்ய அவயவங்களினுடைய அழகுகள் என்நெஞ்சம் நிறைய புகுந்து நலியா நின்றன என்கிறாள் –

————————————————————

நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7-

ஒருவராலும் போக்க ஒண்ணாத வன் பழியை நம் குடிக்கு விளைக்கும் இவள் என்று அன்னை காண கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்டபின் நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த
போக்யதை மிக்கு விலக்ஷணமான திரு மேனி அழகும்
அல்லாத அழகில் காட்டில் திருக்கையும் திருவாழியுமான சேர்த்தி அழகும் என் நெஞ்சிலே வேர் விழுந்தது என்கிறாள் –

———————————————–

கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–5-5-8-

கை தொடப் பொறாத ஸூ குமாரமான திரு முகத்தைக் கையிலே வைக்கும் –
மிகவும் அவசந்தனையாம் என்று அன்யரைப் போலே தாய்மாரான நீங்களும் பொடியா நின்றி கோளே
நம்பியுடைய திருமேனியில் நீல வர்ணமான தேஜஸ்ஸாலே மை கொள் மாடமான திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரைக் கண்ணும் அகன்ற நிதம்பமும் சிறுத்த இடையும் நிருபமான வடிவும் அழகிய குழல் தாழ்ந்த தோள்களும்
இவற்றை அனுபவித்துப் பிரிகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின என்னுடைய முன்னே நின்று நலியா நின்றன என்கிறாள் –

—————————————-

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–5-5-9-

ஒருவராலும் காண ஒண்ணாதபடி வார்த்தைக்கும் ஸ்த்ரீத்வத்தை யுடையளான நீ கண் காண நிற்பதே என்று
தோழிமாரும் தாய்மாரும் திரள நின்று நலியா நின்றீர்கள் -நித்யமாய்ச் செல்லுகிற மாடங்களையுடைய
திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சென்னி நீண் முடி யாதியாய் முடிவில்லாத திவ்ய பூஷண பூஷ்யங்களுடைய சேர்த்தியாலே
கண்ட சக்கரையும் பாலும் கலந்தால் போலே நிரதிசய போக்யனாய்
என் நெஞ்சில் புகுந்து எனக்கு மறக்க ஒண்ணாத படி ஒரு க்ஷணமும் என் ஹ்ருதயத்தை விட்டுப் போகிறிலன்-என்கிறாள்

————————————————–

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-

லோகத்தில் தங்களுக்கு அபிமதரைப் பிரிந்தால் நாள் செல்ல நாள் செல்ல ஸ்நேஹம் குறையாக கடவதாய் இருக்க
இவளுக்கு வர்த்தியா நின்றது என்று தாயாரானவள் நம்பியை அனுசந்திக்க ஒட்டுகிறிலள்
பூர்ணையான கீர்த்தியை யுடைய திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்பு அயர்வறும் அமரர்களுடைய சமூகங்கள்
திரண்டு அனுபவிக்க அழகு வெள்ளத்தின் நடுவே உஜ்ஜவலமாய்த் தோற்றுகிற விலக்ஷணமான
நம்பியுடைய திருமேனி என் நெஞ்சிலே பிரகாசிக்கிற படி ஒருவருக்கும் கோசாரம் அன்று என்கிறாள்

———————————————

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-

கையும் திருவாழியுமாய் இருக்கிற தன்னுடைய திரு அழகு ஒருவருக்கும் அறிய ஒண்ணாத படியாய் இருக்கிற மஹா உபகாரகனை
அவ்வுபகார ஜனித்த ப்ரீதி ப்ரகரஷத்தாலே பரவசராய் அலற்றி செவ்விப் பூவைக் கொண்டு நம்பியுடைய
திரு அழகை முட்டக் காண்கைக்கு ஈடான
ப்ரபாவத்தையுடைய ஆழ்வார் அருளிச் செய்த பகவத் திவ்ய லாஞ்சன விஷயமான ஆயிரம் திருவாய் மொழியிலும்
ஸுந்தர்ய ஸுசீல்யாதி களால் திரு நாட்டிலும் திரு அவதாரங்களிலும் காட்டிலும் பரத்வம் உள்ளது நம்பி பாக்களில் என்று
உபபாதித்த இத்திருவாய் மொழியை வ்யக்தமாக அப்யசித்தவர்கள் சம்சாரத்திலே இருந்து வைத்தே ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்கிறார் –

—————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –5-4-

March 29, 2018

நாலாம் திருவாய் மொழியில் -கீழ் -தம்முடைய அனுபவ அபி நிவேசத்தாலே ஸத்வரராய்க் கொண்டு ஸ்வரூப அநநு ரூபமான
ஸ்வ பிரவ்ருத்தியாலே யாகிலும் அவனைப் பெறுவதாக உத்யோகித்த இவர்
அனுபவ யோக்கியமான காலம் ஸந்நிஹிதமாய் இருக்கச் செய்தேயும்
அவன் அசன்னிஹிதனாய் இருக்கையாலே அத்யந்த ஆர்த்தராய் ஒரு ப்ரவ்ருத்தி ஷமர் அல்லாதபடி மிகவும் அவசன்னராய்
விளம்ப ஷமர் அல்லாமையாலே இவ்வவஸ்தையிலே அவன் முகம் காட்டி ரஷிக்கைக்கு உடலான
அகில ஜகத் ரக்ஷண அர்த்த பிரவ்ருத்தியையும்
ஆபி ரூப்ய ப்ரகாசகமான பவ்யதையையும்
அநிஷ்ட நிராசகத்வத்தையும்
அபீஷ்ட லாபத்தாலே புதுக் கணித்த அவயவ சோபாதியால் யுண்டான அத்யந்த தீப்தியையும்
உபகாரக விக்ரஹ யோகத்தையும்
ஸ்த்திரை பரிகரகண குணவத்தையும்
ஆகாங்க்ஷா ஜனகமான அசாதாரண சிஹ்னத்தையும்
ஆஸ்ரித அர்த்தமாக ஆயுதம் எடுத்துக் கார்யம் கொள்ளும் ஆகாரத்தையும்
அதிசயித ஐஸ்வர்யத்தையும்
அநந்யார்ஹம் ஆக்கும் அபதான விசேஷத்தையும்
அனுசந்தித்து -ஏவம் வித ஸ்வ பாவனான ஈஸ்வரன் இவ்வஸ்தையில் வந்து ஸம்ஸ்லேஷித்து ரஷிக்கிறலன் –
முடிகைக்கும் யோக்யதை இல்லாதபடி பராதீனமான இவ்வாத்மாவை ரஷிக்கும் விரகு என் என்று கால விளம்பம் பொறாமல்
ஆர்த்தராய்க் கூப்பிட்ட பிரகாரத்தை அபிமத நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்து ஆற்றாமையால்
இரவு நெடுமைக்கு இரங்கிக் கூப்பிட்ட நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

————————–

முதல் பாட்டில் ஜகத்தெல்லாம் இருளாம்படி ஏக ராத்ரியாய் நீண்டது -சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரன்
வந்து ரஷிக்கிறிலன் -இனி இவ்வாத்மாவை ரஷிப்பார் யார் என்கிறாள்

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே.–5-4-1-

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்–பழி சொல்லும் அயலாரோடு ஹிதம் சொல்லும் தாய்மாரோடு-
சம துக்கைகளாய் உஸாத் துணையான தோழிமாரோடு
வாசியற ஒரு முகத்தில் தரியாத படி ஊராக எல்லாரும் உறங்கி -புறம்பே ஒரு பதார்த்த தர்சனத்தாலே
தரியாத படி லோகமடைய செறிந்த இருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்–நீர் என்று பேர் பெற்றவை எல்லாம் ஜல சர சத்தவங்களினுடைய கோலாஹலம்
இல்லாமையால் அலை அடங்கித் தெளிந்து ஒரு சப்த ஸ்ரவணம் இல்லாதபடியாய் அஹோராத்ர விபாகம் அற்று ஏகாரமாய்
வளர்ந்த ராத்ரியேயாய் ஓர் அவதி காண ஒண்ணாதபடி நீண்டு விட்டது -இவ்வளவில்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்–பிரளய ஆபத் பதையான பூமியை எல்லாம் திரு வயிற்றிலே வைத்து
ரஷித்தவனாய் சேஷ பூதனான திருவனந்த ஆழ்வானை படுக்கையாகக் கொண்டு வடிவு கொடுத்து ரஷிக்கையாலே
நமக்குத் தஞ்சமானவன் வந்து முகம் காட்டி ரக்ஷிக்கிறிலன்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே.–என்னே -ரக்ஷகன் உதவாத பின்பு அனுபவ விநாஸ்யம் அல்லாத
வலிய பாபத்தை யுடையேனான என்னுடைய ஆத்மாவை ரஷிப்பார் ஆர் –
எல்லே =என்னே என்று விஷயத்தை ஸூசகம்
உறங்குகின்ற உஊரார் காக்கவோ
ஓர் இருள் விழுங்கின லோகம் காக்கவோ
ஜடமான ஜல தத்வம் காக்கவோ
பாதகமான தீர்க்க ராத்திரி காக்கவோ -என்று கருத்து –

———————————

அநந்தரம் -தன்னுடைய ஆபி ரூப்யத்தை பிரகாசிப்பித்து ஆஸ்ரித பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணனும் வருகிறிலன்
நெஞ்சே நீயும் விதேயமாய் இருக்கிறிலை-இனி பிராண ரக்ஷணம் பண்ணுவார் ஆர் என்று
நெஞ்சைக் குறித்துச் சொல்லுகிறாள் –

ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2-

ஆழ்கடல் மண் விண் மூடி–ஆழ்ந்த கடலையும் பூமியையும் ஆகாசத்தையும் மூடி -அவ்வளவில் நில்லாதே
அகில லோகத்தையும் விளாக் கொலை கொள்ளும்படி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்–பெரிய விகாரத்தை யுடைத்தாய்க் கொண்டு அநேகம் ஆதித்யர்களாலும்
பேதிக்க அரிதான சிக்கெனவை யுடைத்தான தமோ மய ராத்ரியேயாய் முடிவற வளர்ந்தது
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்-நெய்தலொடு சேர்ந்த நிறத்தை யுடையனாய் அந்நிறம் எனக்கு
ஸ்வம் மாம் படி பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணனும் இவ்வளவில் வருகிறிலன்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–பவ்யனும் அபவ்யனாம்படியான பாபத்தை யுடையேனான
என்னுடைய நெஞ்சமே -அவனைப் போலே நீயும் அநு கூலித்து இருக்கிறிலை
ஆவி காப்பார் இனியார்?-ரக்ஷகனான அவனும் உதவாதே உஸாத் துணையான நீயும் உதவாத பின்பு
பிராணனை காப்பார் ஆர் -ஒருவருமே இல்லை என்று கருத்து –

—————————————-

அநந்தரம் அநிஷ்ட நிவர்த்தன சீலனான சக்ரவர்த்தி திருமகன் வருகிறிலன் -பராதீனை யாகையாலே
முடிய விரகு அறிகிறிலேன் என்று நெஞ்சைப் பார்த்துச் சொல்லுகிறாள் –

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3-

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! -நெஞ்சமே சர்வ காரியத்துக்கும் பிரதான காரணமான நீயும் விதேயமாய் இருக்கிறிலை
நீளிரவும் ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்–பண்டே நீண்டு வருகிற ராத்திரியும் ஓயும் காலம்
இன்றியே கல்பமாய்க் கொண்டு வளர்ந்து விட்டது
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்–ஆஸ்ரித விரோதிகளைச் சுட்டுப் பொகடுவதான கடிய ஸ்ரீ சார்ங்கத்தை யுடையனான
பர உபகார சீலமான குடியிலே பிறந்த சக்ரவர்த்தி திருமகன் ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளுக்கு உதவினால் போலே வந்து உதவுகிறிலன்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–அவன் உதவாமைக்கு அடியான பிரபல பாபத்தை யுடையேனான நான்
முடியும் போதும் ஸ்வ தந்திரம் இல்லாத பெண்ணாய்ப் பிறந்து முடியும் பிரகாரம் அறிகிறிலேன்

—————————–

அநந்தரம் அபேக்ஷித்த பூமியை அளந்து கொண்ட ப்ரீதியாலே புதுக் கணித்த அவயவாதி சோபையாலே செருக்கனான
த்ரிவிக்ரமன் வருகிறிலன் -அபரிச்சின்னமான என்னுடைய சிந்தா ரோகத்தைத் தீர்ப்பார் ஆர் -என்கிறாள் –

பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4-

பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று-பர தந்த்ரைகளாய் மிருது ஸ்வ பாவைகளான பெண்ணாய் பிறந்தார் பிராபிக்கிற
துஸ் ஸஹமான மஹா துக்கத்தை காண மாட்டுகிறிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் -உதய காலத்தில் தர்ச நீயமான தேஜஸ்ஸை யுடைய ஆதித்யன் -ஈஸ்வர அநு விதானம் பண்ணி
வரும் காலத்திலும் வராதே -ஆராய்ந்தாலும் அறிய ஒண்ணாத படி ஒளித்துப் போனான்
இம் மண்ணளந்த-இந்த பூமியை தனக்கேயாம்படி அளந்து கொண்ட ப்ரீதியாலே
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்-பரந்த திருக் கண்களையும் சிவந்த திரு ஆதாரத்தையும் யுடையனாய்
அந்த பூமியைப் போலே இவ்வயவ சோபையாலே எம் போழ்வாரையும் அநந்யார்ஹம் ஆக்கி அத்தாலே காளமேகம் போலே ஸ்யாமளமான
திரு வடிவை யுடையனாய் -நினைத்தது முடித்த ப்ரீதியாலே ரிஷபம் போலே செருக்கனாய் இருக்கிற த்ரிவிக்ரமன் வருகிறிலன்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–நினைவுக்கு அவ்வருகே விஞ்சி
அவாங்மனஸ் அகோசரமான மநோ ரத வியாதியை என்னை தவிர்ப்பார் ஆர் –

——————————-

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.–5-4-5-

அன்னையரும் தோழியரும்-பரிவராய் வந்து ஆராயும் தாயமாரும் ஸுஹார்த்தத்தாலே தோழிமாரும்
நீர் என்னே என்னாதே -இவள் நீர்மை ஏதாய் இருக்கிறது என்று நிரூபியாதே என்று நிரூபியாதே
நீர் என்னே என்னாதே என்று -நீர் என் செய்தீர் என்னாதே என்றுமாம் –
நீளிரவும் துஞ்சுவரால்–தீர்க்கையான ராத்திரி முழுக்க உறங்கா நின்றார்கள்
அவர்கள் ஆராயாத அளவிலும் ஆராயக் கடவனாய்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்–அதிசயித உபகார சீலமான காளமேகம் போலே இருக்கிற திருமேனியை யுடையனாய்
நமக்கு பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணனும் வந்து ஆராய்கிறிலன்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.–ப்ராப்தராய் ஆராய்வாரும் ஆராயாமைக்கு ஈடான பிரபல பாபத்தை
யுடையேனான எனக்கு பின்பு நின்று நாம மாத்திரம் என்னை முடிய ஓட்டுகிறது இல்லை
ஆர் என்னை ஆராய்வார்? -ஆனபின்பு என்னை ஆராய்வார் ஆர் -ஒருவரும் இல்லை -என்றபடி
அத்யந்த அவசாதம் பிறந்த அளவிலும் இன்னாள் கிடந்தாள் என்கிற நாம மாத்ரமே ஸத்பாவ ஸூசகம் என்று கருத்து
வல்வினையேன் பின்னின்று –ஆர் என்னை ஆராய்வார் என்று அந்வயிக்கவுமாம் –

——————————————–

அநந்தரம் அபி நிவேசமும் ராத்திரியும் நலியா நிற்க ஸ்த்திரமான ரக்ஷண உபகரணத்தை யுடையவன் வருகிறிலன்
என்னுடைய ஆத்மாவை ரஷிப்பார் ஆர் என்கிறாள் –

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–5-4-6-

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்–பின் தொடர்ந்து விடாமல் நடக்கிற அபி நிவேசமாகிற நோயானது
தனக்குப் பிறப்பிடமான நெஞ்சை மிகவும் அழியா நின்றது
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்–முன்னே நின்று ராத்ரியாகிற கல்பமானது கண்ணானது புதையும்படி மறைத்தது
இப்படி பின்னும் முன்னும் விரோதியான அளவில்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்–ஆஸ்ரிதருடைய வினையைக் கடிகைக்கு நித்ய ஸந்நிஹிதமான திருவாழியை யுடையனாய்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களாலே தன்னை என் போல்வார்க்கு ஸ்வம் மாக்கின ஸ்ரீ கிருஷ்ணனும் வருகிறிலன்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–நிரந்தர துக்க அனுபவம் பண்ணா நின்றாலும் அதுக்கு இளையாது இருக்கிற
என்னுடைய நித்தியமான இந்த ஆத்மவஸ்துவை இவ்வஸ்தையிலே ரஷிப்பார் ஆர்
இந்நின்ற என்று பாடமாய் இந்த நித்தியமான ஆத்மவஸ்துவை என்றுமாம்
நித்யத்வமும் துக்க அனுபவத்துக்கு உறுப்பாயிற்று -என்று கருத்து –

———————————

அநந்தரம் தர்சன ஆகாங்ஷா ஜனகமான அசாதாரண சிஹ்னத்தையுடைய சர்வேஸ்வரன் வந்து தோன்றுகிறிலன்
இந்த மஹா அந்தகாரமான ராத்திரியிலே என் செய்கேன் என்று உறங்காத தைவங்களை நோக்கிக் கூப்பிடுகிறாள் –

காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?–5-4-7-

காப்பார் ஆர் இவ்விடத்து? -ரக்ஷகன் உதவாத இந்த அவஸ்தையில் ரஷிப்பார் ஆர்
கங்கிருளின் நுண் துளியாய்ச்–எல்லை நிலமாகச் செறிந்த இருளையும் நுண்ணிதான பனித்துளியையும் உடைத்தாய்
கங்கு-எல்லை நிலம்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்-அதி தூரமான பாலதுத ஸ்வ பாவத்தை யுடைய
கல்பமாய்க் கொண்டு செல்லா நிற்கிற ராத்ரியிடத்து
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்-அழுக்கற்ற ஸ்வ பாவத்தை யுடைத்தாய் வெளுத்த ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
திருவாழியையும் யுடையனானவன் – தூய்மை -அழுக்கறுதி/ பால் என்று ஸ்வ பாவம் –
பன்னெடும் சூழ் சுடர் நாயிற்றோடு பான்மதி ஏந்தி -என்கிறபடியே சந்த்ர ஆதித்யர்களைக் கொண்டு வருமா போலே வந்து தோன்றுகிறிலன்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?–அக்னி போலே தாஹந ஸ்வ பாவமாய் பிரபலமான பாபத்தை யுடையேனான நான்
என் துக்கம் கண்டு இமை கொட்டாமல் பார்த்து இருக்கிற தேவதைகாள் எத்தைச் செய்வேன்
ரஷ்யமான என்னால் ரஷீத்துக் கொள்ள ஒண்ணாது என்று கருத்து

——————————————–

அநந்தரம் ஆஸ்ரித விரோதி நிவர்த்தனத்தில் ஆயுதம் எடுத்துக் கார்யம் கொள்ளும் ஸ்ரீ கிருஷ்ணனும் வருகிறிலன் –
அதுக்கும் மேலே தென்றலும் நலியா நின்றது -என் செய்வேன் என்று அந்த தைவங்களைப் பார்த்துச் சொல்லுகிறாள் –

தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–5-4-8-

தெய்வங்காள் என் செய்கேன்? -உணர்த்தியோடே இருக்கிற தைவங்காள்-ஒரு பிரவ்ருத்தி ஷமை அல்லாத நான்
என்னுடைய ரக்ஷணத்தில் எத்தைச் செய்வது –
ஓர் இரவு ஏழ் ஊழியாய்–ஒரு ராத்திரி ஏழு கல்பமாய்க் கொண்டு
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்–புத்தி பூர்வகமாக முன்னே வந்து நின்று விரஹ க்லிஷ்டமான
என்னுடைய பிராணனை க்ருசமாக்கா நிற்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்–பகலே இரவை அழைக்க என்னிலும் நினைவு அறிந்து கார்யம் செய்யும் படி விதேயமான
திருவாழியை யுடைய என் ஸ்ரீ கிருஷ்ணனும் அத்தைக் கொண்டு ராத்திரி போம்படி வருகிறிலன் -அவன் வராதது அறிந்து
கை வருகை -நினைத்தபடி கார்யம் கொள்ளலாகை
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–நலிய வருவாரைப் போலே தடவுகிற குளிர்ந்த தென்றலானது
வெவ்விய அக்னியில் காட்டிலும் சூடா நின்றது -அக்னி போலே என்றுமாம் –
தை வருதல் -தடவுதல் –

————————————————

அநந்தரம் அதிசயித அந்தகாரமான ராத்ரியானது நலியா நின்றது -ஆதித்ய ரதம் தோன்றுகிறதில்லை –
இவ்வளவில் அத்ய பங்குர ஐஸ்வர்ய விசிஷ்டனான புண்டரீகாக்ஷன் வருகிறிலன்
சிதிலையாகிற என்னுடைய மநோ துக்கத்தைப் போக்குவார் யார் என்கிறாள் –

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்–வீங்கிச் சிதைத்த இருளை யுடைத்தாய் நுண்ணியதான பனித் துளியை
உடைத்தாய்க் கொண்டு ப்ராக்ருதமான ராத்திரி தான் வெவ்விய நெருப்பில் காட்டில் சூடா நின்றது –
இவ்வளவில் தன் தோற்றரவாலே இருளைப் போக்கும்
வீங்குதல் -தடித்தலாய் செறிதலைச் சொல்லுகிறது / நுண் துளியாய் -நுண்ணிய துளியாய்
தான் வெஞ்சுடரில் அடா நிற்கும் என்றுமாம்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்–அழகிய சுடரையுடைய உஷ்ண ஹேதுவான ஆதித்யனுடையதான
அழகிய உத்துங்கமான தேரானது தோன்றுகிறது இல்லை -இவ்வளவில்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்–அதிசயித ஐஸ்வர்ய ஸூசகமாய்ச் சிவந்த ஒளியையுடைய தாமரை போலே
இருக்கிற திருக் கண்ணை யுடையனான ஸ்ரீ மானும் வருகிறிலன் -ஆகையாலே
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–ஒருபடிப்பட நின்று உருகா நின்றேன் –
இனி என் மநோ துக்கத்தை தீர்ப்பார் யார்

——————————————

அநந்தரம் ராத்திரியிலே நான் ஈடுபட நிற்க பூமியை அநந்யார்ஹம் ஆக்கின மஹா உபகாரகன் விஷயமாக
ஒரு வார்த்தை சொல்லாதே லோகம் உறங்கா நின்றது என்று கூப்பிடுகிறாள் –

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10-

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்-ஒருகால் ஒளியாமே உருகா நிற்கிற என்னைப் போலே மஹா வகாசமான ஆகாசம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்-ஷயித்துச் சென்று உருகுகிற நுண்ணிய துளிகளை யுடைத்தாய்க் கொண்டு
இடைவிடாமல் செல்லுகிற இரவிடத்து
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று–மஹாபலி அபகரித்த அன்று ஒரு காலத்திலே பூமியை அளந்த
லோக உபகாரகன் இன்று வருகிறானோ என்றாகிலும்
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–ஒரு வார்த்தையை ஒருகால் சொல்லாதே லோகம் உறங்கா நிற்கும்
ஓ இதுவென்ன தட்டுத்தான் என்று வறுத்து உரைத்தபடி
வாராது ஒழிவதே என்று வெறுத்து உரைத்ததாகவுமாம் –

————————————————-

அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக பரமபத ப்ராப்தியை அருளிச் செய்கிறார் –

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்-படுக்கை வாய்ப்புப் பெற்று உறங்குகிறவன் போலே -ஏகாந்த ஸ்தலமான
ஷீரார்ணவத்திலே ஜகத் ரக்ஷண சிந்தா யோகத்தை பண்ணிக் கிடக்கிற சர்வேஸ்வரனைப் பற்ற
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்–சம்ருத்தமான பொழிலாலே சூழப்பட்ட திரு நகரிக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்-பண் மிஞ்சின அந்தாதியான ஆயிரத்துள் இப்பத்தால்
நிறம் -பண் -சந்தமாகவுமாம்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–சரீர விஸ்லேஷம் பிறந்து அர்ச்சிராதியாலே போய்
பரமபதத்தில் புகாது ஒழிவது எங்கனே – அத்தேசத்தில் புகுகை யறுதி என்று கருத்து –
இது கலி விருத்தம் -நாலடித் தாழிசை யாகவுமாம் –

———————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –5–4-

March 29, 2018

இப்படி மடலூருகையிலே அத்யவசித்து இருந்த பிராட்டி மடலூர ஷமை அல்லாதபடி அத்யந்தம் அவசன்னையாய்

———————————–

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே.–5-4-1-

சர்வ ஜந்துக்களும் ப்ரஸூப் தமாய் சர்வ லோகமும் அந்நிய கார பரி பூரிதமாம் படி ஒரு நீளிரவு வந்து எங்கும் முடிகிறது இல்லை
இந்த தசையில் அந்தப் பரம காருணிகனான பாம்பணையான் வாராது ஒழிந்தான்
இனி நான் எங்கனே தரிக்கும் படி என்கிறாள் –

————————————————-

ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2-

ஆழ்கடல் மண் விண் மூடி மா விகாரமாய் நீண்டது -காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வருகிறிலன்
பாவியேன் நெஞ்சமே! நீயும் எனக்குத் துணை அன்றியே போனாய் -ஆவி காப்பார் இனியார்?-என்கிறாள்

———————————-

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3-

மட நெஞ்சமே நீயும் துணை இன்றியே போனாய் -நீளிரவும் ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீளா நின்றது –
பிரதிகூல தஹன ஸ்வ பாவமான ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லையுடைய என் காகுத்தன் வருகிறிலன்
வாராது ஒழிந்தால் தான் முடியலாம் இறே –
முடிவான் என்றால் முடிய ஒண்ணாத படி பாபத்தினால் பராதீனை யாய்ப் பிறந்தேன் என்கிறாள் –

—————————————–

பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4-

நான் படுகிற இந்த மஹா துக்கத்தை காண்கையில் முடிகையே நன்று என்று பார்த்து ஆதித்யன் பாராதே தன்னைக் கொண்டு
இந்த தசையில் தன்னுடைய காருண்ய ஸுசீல்ய ஸுந்தர்யாதி குணங்களால் என்னைத் தோற்பித்து எனக்குப்
பரம போக்யனாய் இருந்தவன் வருகிறிலன் -வாராது ஒழிந்தால் அளவிறந்த சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னை -என்கிறாள் –

———————————

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.–5-4-5-

அன்னையரும் தோழியரும் நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சினார் -ஆர் என்னை ஆராய்வார் –
சர்வ அவஸ்தையிலும் எனக்குத் துணையாய் இருக்கக் கடவ கார் அன்ன மேனி நம் கண்ணனும் வருகிறிலன்
வாராது ஒழிந்தால் இவ்வியசனத்துக்கு ஆஸ்ரயமான என் பேர் முடியப் பெறலாம் இறே
நான் முடிந்த பின்பும் என்னுடைய பேரானது முடிகிறது இல்லை என்கிறாள்

——————————————————

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–5-4-6-

முடிந்த பின்பும் செல்லுகிற விஸ்லேஷ வியசனம் ஒன்றும் பொறுக்கலாய் இருக்கிறது இல்லை
இந்த ராத்திரியானா யுகமானது அவன் வரிலும் அவனைக் காண ஒண்ணாத படி என் கண்ணை மறைத்துக் கொண்டு நில்லா நின்றது
இவ்வன்யகாரம் எல்லாம் போம்படி நிரதிசய தீப்தி யுக்தமான திருவாழியை ஏந்திக் கொண்டு அவன் வருகிறிலன்
இந்த தசையில் இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் என்கிறாள்

—————————————

காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?–5-4-7-

மஹா அந்தகார வர்ஷா உபேதையாய் முடிவில்லதொரு யுகமாய்க் கொண்டு செல்லா நின்ற ராத்திரியிலே
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றாது ஒழிந்தான் -காப்பார் ஆர் இவ்விடத்து?
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ -என்று தன்னுடைய நிரவதிக வ்யாசனத்தாலே கூப்பிடுகிறாள்

———————————————

தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–5-4-8-

ஓர் இரவு ஏழூழியாய் வந்து எனதாவியை மெலிவிக்கும் -கருதுமிடம் கைந்நின்ற சக்கரத்து என் கண்ணனும் வருகிறிலன்
ஹேமந்த காலத்தில் அதி சீதளமான தென்றல் வெஞ்சுடரில் தானடும்- தெய்வங்காள் என் செய்கேன் -என்கிறாள் –

—————————————

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–

வெஞ்சுடரில் தான் அடா நின்றது வீங்கிருளின் நுண் துளியாய்-அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றுகிறதில்லை
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வருகிறிலன் -இனி
நெஞ்சிடர் தீர்ப்பார் யார்? முடியப் பெறாதே கால தத்வம் எல்லாம் நின்று உருகா நின்றேனே.–என்கிறாள் –

—————————————-

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10-

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம் சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று ஆகிலும் அவன் நிறமாக
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–என்கிறாள் –

————————————–

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-

ஸ்வ ஆத்ம அனுபவ ஜெனித நிரவதிக ஆனந்த மஹிம ப்ரஸக்தஸ் தைமித்யத்தாலே நிஸ்தரங்க மஹார்ணவ
எம்பெருமானைச் சொல்லி அழற்றின இத்திருவாய் மொழியில் சொன்ன ஆர்த்தியை அனுசந்தித்தார் எங்கனே தரிக்கும் படி என்கிறார்

———————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –5-3-

March 29, 2018

மூன்றாம் திருவாய் மொழியிலே கீழ் அநு சந்தித்த பாகவத உத்கர்ஷ ஹேதுவான
பகவத் உத்கர்ஷத்தையும் குண விக்ரஹாதி வைலக்ஷண்யத்தையும் அநு சந்தித்து
அவனுடைய ஆலோகாலாபாதி முகத்தாலே ஸம்ஸ்லேஷித்து அநு பவிக்கைக்கு ஆசைப்பட்டு அது கிடையாமையாலே
ஆசா ஜனகமான ஆபி ரூபியாதி அதிசயத்தையும்
அவயவ விசேஷ வை லக்ஷண்யத்தையும்
பிரதிபந்தக நிவர்த்தகமான பால சேஷ்டிதத்தையும்
அபி நிவேச வர்த்தகத்வத்தையும்
அநந்யார்ஹத ஆபாகத்வத்தையும்
ஆகர்ஷகத்வ ஸ்வ பாவ யோகத்தையும்
ஆசத்தி ஹேதுவான அர்ணவ ஸாயித்வாதிகளையும்
அகில விரோதி நிவர்த்தனத்தில் அநாயா சத்தையும்
உத்துங்க தேச வாஸித்வத்தையும்
அசாதாரண சிஹ்ன யோகத்தையும்
அனுசந்தித்து -ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரன் விஷயத்தில் தமக்குப் பிறந்த அபி நிவேச அதிசயத்தாலே
இரண்டு தலைக்கும் அநநு ரூபமான ஸ்வ ப்ரவ்ருத்தி விசேஷத்தாலேயாகிலும் பிராபிக்கக் கடவோம் என்கிற த்வர அதிசயத்தாலே
தமக்குப் பிறந்த விவசாய விசேஷத்தை அந்யாபதேச முகத்தாலே
நாயகனான ஈஸ்வரனோடு கலந்து பிரிந்தாள் ஒரு நாயகி தத் ப்ராப்த்ய அபி நிவேச த்வரையாலே
தன் குடிப் பிறப்புக்கும் பெண்மைக்கும் அநநு ரூபமாம் படி அவனுடைய மெய்ப்பாட்டை அழித்து மடலூர்ந்தும் பெறக் கடவோம் என்கிற
அறுதிப் பாட்டை பாங்கிக்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

—————————————

முதல் பாட்டில் இவளுடைய வ்யவசாயம் அறிந்த தோழி விலக்க உத்யோகித்து ஊரார் பழி சொல்வார் காண் -என்ன
அவனுடைய ஆபி ரூப்யாதிகளில் அகப்பட்டுக் கலங்கின என்னை ஊர்ப் பழி என் செய்யும் என்கிறாள் –

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை–அழுக்கு அற்ற தேஜஸ்ஸை யுடைத்தாய் சிவந்த வாயை யுடைத்தான
மாணிக்க மலை போலே எனக்கு போக்யனானவனாய் -பிரணயித்வத்தால் வந்த தாழ்ச்சியாலே
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே-குற்றம் அற்ற சீலத்தை யுடையவனாய் தான் முற்பாடானாய் வந்து அனுபவிப்பித்த
ஸ்வாமியானவனை நிரந்தரமாகத் தேடி
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்-மேனியில் பசுமை அழிந்து அறிவும் இழந்து எத்தனை காலத்தோம்
பாசறவு-நிறம் அழிவு / பாசென்று ஸ்நேஹமாய் அத்தை மிக எய்தி என்றுமாம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–தோழீ ஏசுதலிலே அறுதிப் பட்ட ஊரவரது ஆரவாரம் எத்தைச் செய்வது –
ஏசுதல் -பழித்தல் -/ கவ்வை -அலர்

————————————————-

அநந்தரம் -அவன் கண் அழகாலே என் சர்வஸ்வத்தையும் அபகரித்து என் வை லக்ஷண்யம் அடங்க
அழிந்து இருக்க ஊரார் என் செய்வது என்கிறாள் –

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-

என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்–சிவந்த தாமரை போன்ற திருக் கண் அழகை யுடையனாய்க் கொண்டு –
எனக்கு பவ்யனானவன் என்னை பூர்த்தி அபகாரம் பண்ணினான் -ஸ்த்ரீத்வ பூர்த்தி போனபடியாலே
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி–முன்பு தோற்றுகிற விலக்ஷணமான மாமை நிறமும் இழந்து
அதுக்கு ஆஸ்ரயமான சரீரமும் மெலிவு எய்தி
அவன் செய்ய வாயும் செய்ய தாமரைக் கண்ணும் குறி யழியாது இருக்க
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–என் செய்ய வாயும் கரும் கண்ணும் ஒரு வெளுப்பாம்படியான வைவர்ண்யம் பரந்தன
என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை–தோழீ இனி நம்மை ஊரவர் கவ்வை என் செய்யும்
நம்மை என்று சம துக்கையான தோழியையும் கூட்டிக் கொள்ளுகிறாள் –

———————————–

அநந்தரம் அவனுடைய விரோதி நிவர்த்தகமான அதி பால சேஷ்டிதத்திலே அகப்பட்ட என்னை
ஊரார் அலர் என் செய்யும் என்கிறாள் –

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை–நலிய நினைந்து ஊர்ந்து வந்த சங்கடத்தை ஸ்தந்யார்த்தியாய் அழுது நிமிர்ந்த
அந்நிய பர வியாபாரத்தால் முறிந்து விழும்படி உதைத்த திருவடிகளை யுடையவனாய் -அது பக்குவ தசையாம் படி
அதி சைஸ அவஸ்த்தையிலே பேய் முலையை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்-தாய் முலையோ பாதி நெஞ்சு பொருந்திச் செறிந்து
பிராண ஸஹிதமாகப் பசையற உண்ட சிவந்த திருப் பவளத்தை யுடையவன்
இப்பருவம் நிரம்பாச் செயலாலே என் நிரப்பத்தை அபகரித்தான் -ஆகையால்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்-மீண்டும் மீண்டும் அவனோடு சேர்ந்ததன்றி வேறொரு வார்த்தையை உடையேன் அல்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–என்னோடு ஒரு நெஞ்சாம்படி அறுதியுடைய தோழீ ஊரவருடைய அலர் எத்தைச் செய்யும் –
அவன் கொண்ட நிறையை மீள அழைக்குமோ
அவனை ஒழிய வேறே சிலரை நான் பெற்றிடாப் பண்ணுமோ -என்று கருத்து –

———————————————-

அநந்தரம் தன் பக்கலிலே அபி நிவேசத்தை வளரும்படி கிருஷி பண்ணின உபகார சீலனை அநுபகாரகரைப் போலே
குறையச் சொல்லக் கடவையோ என்று தன்னை மீட்கைக்காக அவனை இயல் பழித்த தோழியைக் குறித்து சொல்லுகிறாள் –

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து–ஊரார் அலராகிற எருவை இட்டு -தாயாருடைய
நிரந்தர ஹித வசனமாகிற நீரை நிறுத்தி
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்-ஆசையாகிற நெல்லை விரைத்து -அது முளைத்த
நெஞ்சமாகிற பெரிய விளை நிலத்துக்குள்ளே
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த–மிகவும் பெருத்து ஊர்ப் பூசலை யுடைத்தான அபி நிவேசத்தை
கடல் போலே சம்ருத்தமாக பலிக்கும் படி பண்ணின
பேரமர்-பெரிய வமர்த்தியுமாம்
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–வர்ஷூக வலாஹக ஸ்வ பாவத்தை உடைத்தான் திரு மேனியை யுடையனாய்
நமக்கு பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணன் -முன்பு அவன் குணத்தைச் சொல்லி மூட்டின தோழீ இன்று அவன் குறை சொல்லி
இயல் பழிக்கும்படி கடியனானானோ –

—————————————–

அநந்தரம் நீ இயல் பழித்த படியே குண ஹீனனாகிலும் என் நெஞ்சு என்னை
அநந்யார்ஹம் ஆக்கின அவனை ஒழிய அறியாது என்கிறாள் –

கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5-

கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட–ஸ்வ காரியத்தில் எதிர்த் தலை பாராமல் சீக்ர ப்ரவ்ருத்தி பண்ணும்
கடுமையை யுடையனாய் அக்காரியம் தலைக் கட்டினால் புரிந்து பாராமல் போம் கொடியவனாய் -போகப் புக்கால் விலக்க
வரிதாம் படி பிரியா மேன்மையை யுடையனாய்
லோகம் அடங்க தன்னதே யாம்படி எதிர்த் தலைக்கு ஒன்றும் ஒட்டாமல் அநந்யார்ஹம் ஆக்கி
மால் -பெருமையும் வ்யாமோஹமும்
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்–காற்கடைக் கொள்ளும் வஞ்சகனாய் விவேகிக்க அரிதாம் படி அழகாலே
மயக்கும் ஆச்சர்யத்தை யுடையவனே யாகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!–லோக மரியாதை அன்றியே குற்றம் சொல்லி மீட்க அரிதாம் படி
கொடிதான என் நெஞ்சமானது கீழ்ச் சொன்ன ஸ்வ பாவ விசேஷங்களை யுடைய அவனே தஞ்சம் என்று கிடவா நிற்கும்
தான் முற்பாடானாய் மேல் விழுகையாலும் புறம்புள்ள உறவில் பற்று அறுக்கையாலும் அதிசயித வ்யாமோஹத்தாலும்
அநந்யார்ஹம் ஆகும்படி தன் காற்கீழே இட்டுக் கொள்ளுகையாலும் நம் அளவில் பண்ணின உபகாரம் பரிச்சேதிக்க
அரிதான வடிவையுடைய ஆச்சர்ய பூதனாகையாலும் இக்குணங்களை யுடையவன் என்று நினைத்து இரா நின்றது –
இது ஒரு நெஞ்சின் ஸ்வ பாவம் இருந்தபடியே
எல்லே -என்பது என்னே என்றாய் ஆச்சர்யமாதல் / தோழியை எல்லே என்று ஸம்போத்தித்தல் ஆதல்
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே!–துடியின் அழகை கொள்வதான இடையையும் மடப்பத்தையும் யுடைய தோழீ –
நீ இந்த ப்ரணய தாரையில் வாசி அறியும் ஆபி ரூப்யாத்ம குணங்களை யுடையையாய் இருக்க
நிஷேதித்தது தாயார் நியமனத்துக்கு அஞ்சி இறே – அன்னையானவள் எத்தைச் செய்வது

——————————-

அநந்தரம் அவனுடைய ஆகர்ஷகமான ஸ்வ பாவங்களில் யகப்பட்டேன்-என்னை நீங்கள் ஆசையற அமையும் என்று
திரள வந்த தோழிமாரைக் குறித்துச் சொல்லுகிறாள் –

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-

தோழிமீர்!–ஸமான ஸூக துக்கைகளான தோழிமீர்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி-மன்னன் –பிரதமஜரான நித்ய ஸூரிகளுக்கு பிரதானனான மேன்மையை யுடையனாய்
நிரதிசய சம்பத்தை யுடைய ஸ்ரீ மத் துவாரகைக்கு நிர்வாஹகனான நீர்மையை யுடையவனாய் -இரண்டும் இல்லாத அன்றும் விட ஒண்ணாத
மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.-அகப்பட்டேன்–நீல ரத்னம் போலே தர்ச நீயமான ஆபி ரூப்யத்தை யுடையனாய் –
அழகு இல்லையாகிலும் விட ஒண்ணாத அநு ரூபமான ஆபி ஜாதியத்தை யுடைய வஸூ தேவத நயனானவனுடைய –
இப்படி நாலு பாடும் கண்ணியான ஆகர்ஷக சேஷ்டித ரூபமான வலைக்குள்ளே தப்ப ஒண்ணாத படி அகப்பட்டேன்
என்னை இனி உமக்கு ஆசை இல்லை –மீட்க வரிய என்னைப் பற்ற -மீட்க நினைத்து இருக்கிற உங்களுக்கு விதேயையாக
ஆசைப்பட வேண்டுவது இல்லை -ஆகையாலே
அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? –தாயார் எது செய்யில் என் -ஊரவர் எது சொல்லில் என்
அவள் செய்யும் பிரியத்தோடு அப்ரியத்தோடு வாசி இல்லை
அவர்கள் சொல்லும் குணத்தோடு தோஷத்தோடு வாசி இல்லை -என்று கருத்து –

—————————————–

அநந்தரம் ஆஸ்ரயண அர்த்தமான ஷீரார்ணவ சயனத்தை யுடைய சர்வேஸ்வரனை நாட்டார் முன்பே நாம் கண்டு
ஆதரிக்கக் கூடுமோ என்று அந்தரங்கையான தோழியைக் குறித்து உரைக்கிறாள் –

வலையுள் அகப்படுத்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
அலைகடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவு மாங்கொலோ? தையலார் முன்பே.–5-3-7-

வலையுள் அகப்படுத்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு–என்னை தன்னுடைய ஆகர்ஷக குண சேஷ்டிதங்கள் ஆகிற வலையுள்
அகப்படுத்தி என்னிலும் தன் பக்கல் நலத்தை யுடைய நெஞ்சை அடி அறுத்து அழைத்துக் கொண்டவனாய்
அந்த நெஞ்சு தன் பக்கலிலே ப்ரவணம் ஆகைக்கு அடியாக திரைக்குள்ளே கிடப்பாரைப் போலே
அலைகடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்–அலைகிற கடலுக்குள்ளே ஏகாந்தமாகப் பள்ளி கொள்வானாய் –
அக்கிடை அழகைக் காட்டி என்னை அடிமை கொண்ட ஸ்வாமியாய் –
அவ் வழகைக் காத்தூட்டும் திருவாழியை யுடைய மஹா உபகாரகன் ஆனவனை
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு–பரிவட்ட யுடை அழகை யுடைத்தாய்
விஸ்தீர்ணமான அல்குலை யுடைய தோழீ – இருவரும் ஓக்க நம் கண்களாலே கண்டு
தலையில் வணங்கவு மாங்கொலோ? தையலார் முன்பே.–பழி சொல்லுகிற தையலார் முன்பே
அவன் வந்த உபகாரம் தோன்ற தலையால் வணங்கவும் ஆகக் கூடுமோ –

———————————————

அநந்தரம் -அநாயாசேந அகில விரோதியையும் நிவர்த்திப்பிக்கும் அவனை நான் கிட்டுவது என்றோ என்கிறாள் –

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8-

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை-போய் -பேயின் முலையை உண்டு -சகடத்தை பாய்ந்து மருதின் நடுவே போய்
முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட–வேர் பறித்து விழ விட்டு பகாஸூரனாகிற பஷியின் வாயை பிளந்து
குவலயா பீடத்தை நிரசித்தவனாய்
விரோதிகளினுடைய பற்றாசறுதியாலே சர்வ ஜ்ஞாமாக ஸ்மிதம் பண்ணுகையாலே
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?–வெளுத்த முறுவல் ஒளியையும் தொண்டைப் பழம் போலே
சிவந்த அதர சோபையையும் ஆச்ரிதைகளான கோபிமாரை அநு பவித்த உபகாரகனை
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–தோழீ -அவனைக் குற்றம் சொன்ன அன்னையர்
லஜ்ஜிக்கும் படியாக நாம் கிட்டுவது என்றாய் இருக்கிறதோ
நாம் கிட்டினால் அவர்கள் நானும் அத்தனை என்று கருத்து –

——————————————-

அநந்தரம் என்னை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணி எட்டாமல் இருக்கிறவனை சர்வ லோகமும் பழிக்கும் படி
மடலூரக் கடவேன் என்று தோழிக்குத் தன் நெஞ்சை வெளியிடுகிறாள் –

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு-என்னை லஜ்ஜையையும் பூர்த்தியையும் அபஹரித்து
ஸ்நேஹ உத்தரமான நெஞ்சையும் அழைத்துக் கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை–மிகவும் உயர்ந்த பரம ஆகாச சப்த வாஸ்யமான பரம பதத்தில்
இருப்பானாய் நித்ய ஸூரி களுக்கு இங்குப் பண்ணின பிறவிருத்திகளைப் பிரகாசிப்பிக்கும் சர்வாதிகனானவனை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்–எனக்கு விதேயமான தோழீ உன் ஆணையே -சர்வ லோகங்களிலும்
பழி ப்ரஸித்தமாம்படி தூற்றி என்னால் செய்யலாம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–மிறுக்குகள் அடங்க செய்து ஒருவர்க்கு அடங்காத
நாணம் அற்ற பெண் ஆய்க் கொண்டு மடல் ஊரக் கடவேன்
குதிரி-நாணாப் பெண் / கோணை-மிறுக்கு-

———————————————–

நிரதிசய போக்யமான அசாதாரண சிஹ்னங்களை யுடையவனை எங்கும் பழி தூற்றி ஜகத் ஷோபம்
பிறக்கும்படி மடலூர்ந்தே யாகிலும் அவன் மாலையைச் சூடுவோம் என்கிறாள் –

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-

யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்–அத்யந்த அபி நிவேசத்தாலே ஏதேனும் ஒருபடி யாலும்
ஸ்த்ரீத்வ அநு ரூபமான ஒடுக்கம் இன்றியே -லோகத்து அளவில் பர்யவசியாதே
தெருவு தோறும் புக்கு அயலாரான ஸ்த்ரீகளானவர்கள்
யாமடம் என்றது ஏதேனும் ஒரு மடப்பம் என்றபடி –
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–நா ஓவாதே சொல்லும் பழியைத் தூற்றி சகல ஜகத்தும்
ஷூபிதமாய்க் கூப்பிடும்படி
யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்-மடலூரத் தகாத ஸ்த்ரீத்வத்தை யுடைய நாம் நமக்கு ஈடு அல்லாத
மடலை ஊர்ந்தே யாகிலும் –
கையும் திருவாழியுமான அழகை அனுபவிப்பித்து நம்மை வசீ கரித்த உபகாரகனுடைய
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்-செவ்வியாலே தூய்தான இதழை யுடைய ஸ்ரமஹரமாய் தர்ச நீயமான
திருத் துழாய் பூந்தாரை -கையிலே மடல் வாங்குகைக்காக அவன் தர வாங்கி நம் தலையிலே சூடக் கடவோம்
பன்மை -மடலூரத் துணிந்த பர்வ யுக்தி –

—————————

அநந்தரம் இத்திருவாய் மொழியை அனுசந்திக்க வல்லவர்கள் இருந்த தேசமே
பரம பதமாம் என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை-அலை எறிந்து இரைக்கிற கருங்கடல் போலே அபி வ்ருத்தமான
வடிவழகை யுடையனாய் அவ் வழகை ஆஸ்ரிதர்க்கு அனுபவிப்பிக்கும் ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணனை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன–பரிமள உத்தரமான பொழிலை யுடைய திரு நகரியில் உள்ளார்க்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்-எழுத்தும் அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் பாவும் இனமும் இசையும்
தாளமும் மற்றுமுள்ள சப்த அலங்காரமும் யுடையதாய் அந்தாதியாய்
அத்விதீயமான ஆயிரம் திருவாய் மொழியினுள்ளும் இவை பத்தையும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–சப்த மாத்ர உச்சாரணம் பண்ணுமவர்களுக்கு
தம் தங்கள் இருந்த ஊர் எல்லாம் பரமபதம் என்னலாம் படி ஆனந்தாவஹமாய் இருக்கும் –
இது கலித்துறை –

———————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –5–3-

March 29, 2018

இப்படி ஆஸ்ரித வாத்சல்யாதி யனவதிக கல்யாண குண விபூஷிதனாய் இருந்த எம்பெருமானோடே ஸம்ஸ்லேஷிக்க
ஆசைப்பட்டுப் பெறாதே சிரகாலம் அவசன்னையாய் இருந்தாள் ஒரு பிராட்டி தன்னுடைய வ்யாசனத்தைப் பொறுக்க மாட்டாமையாலே
மடலூர்ந்தாகிலும் அவனோடே சம்ச்லேஷிக்க வேணும் என்று மநோ ரதித்து மடலூருகையிலே வியவசிதையாய் இருந்த இடத்தில்
இவளுடைய தோழியானவள் -நீ ஆசைப்படுகைக்கு ஈடான சவுந்தர்யாதி கல்யாண குணங்கள் அவனுக்கு உண்டோ –
உண்டானால் தான் அவனை யுத்திஸ்ய மடலூருகை யுக்தமோ -இவ்வூர் எல்லாம் உன்னைப் பழி சொல்லாதோ என்ன –

—————————————

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

நிரதிசய நிர்மலா ஜ்யோதிஸ் ஸுந்தர்ய ஸுசீல்யாதி அசங்க்யேய கல்யாண குண கண மஹோததியாய்
இருந்த பரம புருஷனை ஆசைப்பட்டுப் பெறாதே அறிவழிந்து எத்தனை காலமுண்டு தோழீ
ஆனபின்பு எனக்கு ஒரு யுக்த அயுக்தத்தை யுண்டோ -என்னை ஏசுகையிலே தீர்ந்து இருக்கிற ஊரவர் கவ்வை தான்
இப்படி அறிவிழந்து இருக்கிற என்னை எத்தைச் செய்வது என்று தோழியைக் குறித்துச் சொல்லுகிறாள்

———————————————–

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-

எம்பெருமான் தன்னுடைய அதி சீதளமாய் -சர்வ சத்வ மநோ ஹரமாய் -அருண கமல சத்ருசமான அழகிய திருக் கண்களைக் காட்டி
என்னைத் தோற்பித்துப் போனான் -அவனை சம்ச்லேஷிக்கப் பெறாமையாலே தத் ஸம்ச்லேஷ ஜெனிதமான
உஜ்ஜ்வல்யமும் இழந்து மேனி மெலிவெய்தி தத் சம்ச்லேஷத்தால் புதுக் கணித்த என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப் பூர்ந்த-
இனி நம்மை என் செய்யும் உஊரவர் கவ்வை தோழீ என்கிறாள் –

—————————————–

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-

ஆகிலும் மடலூருகை நமக்குப் போராது -என்று தோழி சொல்ல -தன்னுடைய அதி தைவ அதி மானுஷ திவ்ய சேஷ்டிதங்களாலும்
அழகாலும் என்னை நிறை கொண்டான் -ஆனபின்பு பேர்ந்தும் பெயர்ந்தும் அவன் திறம் அல்லது மற்று ஏதேனும் சொல்லிலும் கேளேன் –
நான் ஏதேனும் ஒன்றைச் சொன்னால் அத்தைச் செய்கையிலே எனக்கு முற்படவே துணிந்து இருக்கக் கடவ நீ என்னை பிரதிப்பந்திக்கலாமோ
நீ பிரதிபந்திக்கிறது ஊரவர் நம்மைப் பழி சொல்லுவார் -என்று இ றே -அது தத் குண பராஜிதரான நம்மைச் செய்வது என் -என்கிறாள் –

———————————–

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-

இப்படி தன்னைப் பிரிந்து அத்யந்தம் அவசன்னையாய் இருக்கச் செய்தே தன்னுடைய லோபத்தாலே தன்னை உனக்குக் காட்டித் தராதே
இருக்கிற அவனை ஆசைப்படுகிறது தான் என் -என்று தோழி சொல்ல -பிரதிபந்தக சத ஸஹஸ் ரங்கள் உளவாய் இருக்கச் செய்தே
அவற்றையே வர்த்தகமாகக் கொண்டு தன் திருவடிகளிலே நிரவாதிகமான அபி நிவேசத்தை எனக்கு விளைவித்த
காரமார் மேனி நம் கண்ணனையே தோழீ லுப்தன் என்று சொல்லுகிறது என்கிறாள் –

———————————————

கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5-

நீ சொன்ன படியே -அவன் லுப்தன் -நிர்க்க்ருணன்-துஷ் பிராபன்-வஞ்சகன் -துரவகம ஸ்வரூப ஸ்வ பாவ சேஷ்டிதன்-
மற்றும் சத சஹஸ்ர தோஷங்களை யுடையவனாகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடைக்கும் -என்னே
ஒரு நெஞ்சினுடைய அபி நிவேசமே இது என்று பிராட்டி அருளிச் செய்ய -தோழியானவள் -இப்படி அபி நிவேசிக்கை ஈடோ
அன்னைமார் பொடியில் செய்வது என் என்ன -விரஹ அக்னியாலே தக்தராய் இருக்கிற நம்மை எத்தைச் செய்வது -என்கிறாள் –

——————————————-

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-

ஸ்வபாவத ஏவ நிரஸ்த ஸமஸ்த சாம்சாரிக ஸ்வ பாவராய் அஸ்கலித ஜ்ஞானரான சேஷ சேஷாசன வைனதேயாதி அசங்க்யேய
பரம ஸூரிகளால் அநவரத பரிசரித சரண யுகளனாய் இருந்து வைத்து அதி ஷூத்ர மனுஷ்ய சஜாதீய தயா அவதீர்ணனாய்
வண் துவராபதித் திரு நகரியிலே ஆஸ்ரித பரம ஸூலபனாய்க் கொண்டு எழுந்து அருளி இருந்த ஸ்ரீ வஸூ தேவர் திருமகனுடைய
கல்யாண குணங்களாகிற வலையுள்ளே யகப்பட்டேன்-இனியென்னை அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என்
தோழிமீர் என்னை இனி யுமக்கு ஆசை இல்லை என்கிறாள் –

———————————————–

வலையுள் அகப்படுத்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
அலைகடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவு மாங்கொலோ? தையலார் முன்பே.–5-3-7-

இப்படி தன் நிலைமையை மெய்யாகச் சொன்ன பின்பு இனி இவளால் ஒரு செயல் இல்லை என்று கொண்டு இவளுடைய அத்யாவசாயத்தைத்
தோழி இசைந்த பின்பு -அவளைக் குறித்து தன்னுடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் ஆகிற வலையுள்ளே என்னை அகப்படுத்தி
என்னுடைய நெஞ்சைக் கோவிக் கொண்டு ஆரும் செல்ல ஒண்ணாத தொரு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற
ஆழிப் பிரான் தன்னை கலை கொளகல்குல் தோழி அவனுக்குக் குண ஹானி சொல்லுகிற இந்தத் தையலார் கண் எதிரே
நம் கண்களால் கண்டு தலையில் வணங்கவுமாம் கொலோ என்கிறாள் –

————————————————–

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8-

பூதநா சகட யாமளார்ஜுன குவலயா பீட ப்ரப்ருதி ஆஸ்ரித விரோதி நிரசன ஏக ஸ்வ பாவனாய் இருந்தவனை
குண ஹீனன் என்று சொல்லுகிற அன்னையர்
இவனை யாகாதே பிரணயித்வ வாத்சல்ய காருண்யாதி குண ரஹிதன் என்று சொல்லுவது
என்று லஜ்ஜித்துத் தலை எடுக்க மாட்டாதே இருக்கும்படி -எந்நாள் கொலோ? நாம் உறுகின்றது தோழீ! -என்கிறாள்

—————————————————-

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு-ஒருவருக்கும் செல்ல ஒண்ணாத திரு நாட்டிலே
எழுந்து அருளி இருக்கிற தேவ பிரான் தன்னை–அயர்வறும் அமரர்களும் கூட தேறாததொரு படி
தோழீ! ஆணை-அவனை உலகு தோறு அலர் தூற்றி மற்றும் செய்யலாம் மிறுக்குகள் எல்லாம் செய்து
குதிரியாய் மடல் ஊர்தும் என்கிறாள் –

—————————————

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-

யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார் நாவும் கூட மடங்காதா பழிகளைத் தூற்றி நாடும் இரைக்க-
யாம் மடலூர்ந்தாகிலும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத் தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்-என்கிறாள்

———————————————-

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-

ஓதம் கிளறுகிற கடல் போலே இருந்த திருமேனியை யுடைய ஸ்ரீ கண்ணபிரான் தன்னை விரைக்கொள் பொழில்
குருகூர்ச் சடகோபன் சொல் நிரைக்கொள் அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தும் உரைக்க வல்லார்க்கு –
இத்தருவாய் மொழியைச் சொல்ல தங்கள் இருந்த தேசமே தங்களுக்குத் திரு நாடு என்கிறார் –

—————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –5-2-

March 28, 2018

இரண்டாம் திருவாய் மொழியிலே -கீழே -பகவத் கிருபா பாரவஸ்யத்தை அனுசந்தித்து ஸந்துஷ்டாரான ஆழ்வாருடைய
ப்ரீதியை அனுபவிக்கைக்கு -பகவத் குண அனுபவ வித்தராய் ஸூரி சமரான பாகவதர்கள் சம்சாரத்தில் துரிதம் எல்லாம் நீங்கும்படி
ப்ரேம பரவசராய்த் திரண்டு வந்தபடியைக் கண்டு –
ஈஸ்வரன் இவர்களை இட்டு ஜகத்தைத் திருத்த நினைத்தானாகக் கூடும் என்று திரு உள்ளம் பற்றி
அவனுடைய நிரதிசய மஹாத்ம்யத்தையும்
மஹாத்ம்ய ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்வாதி சிஹ்னத்தையும்
ஆஸ்ரித உபகாரகமான திவ்ய விக்ரஹாதி யோகத்தையும்
உபகார அர்த்தமான சமுத்திர ஸாயித்தவத்தையும்
அதுக்கும் அடியான ஸ்ரீ வைகுண்ட வாஸத்தையும்
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமான திவ்ய ஆயுதவத்தையும்
திரு அவதார தசையில் யுண்டான அதிசயித ஆதிக்யத்தையும்
ஆதிக்ய லக்ஷணமான ஸ்ரீ வத்ஸ சிஹ்னத்தையும்
ஆஸ்ரித விஷயத்தில் அப்ரச்யுத ஸ்வ பாவத்தையும்
அதிசயித சீலவத்தையும்
அனுசந்தித்து -இவ்வோ ஸ்வ பாவங்களில் வித்தரான பாகவதர் இங்கே ஸந்நிஹிதராகப் பெறுவதே என்று ஹ்ருஷ்டராய்
மங்களா சாசனம் பண்ணி இவர்களை அநு வர்த்தித்து ஸூத்த ஸ்வ பாவராய் இவர்களோடு ஓக்க நீங்களும்
பகவத் விஷயத்தை அனுபவிக்கப் பாருங்கோள் என்று லௌகிகரைக் குறித்து உபதேசித்து அருளுகிறார் –

———————————————————

முதல் பாட்டில் நிரவதிக மஹாத்ம்ய யுக்தனான சர்வேஸ்வரனாலே லப்த சத்தாகரான பாகவதருடைய
ஸம்ருத்தியைக் கண்டு மங்களா சாசனம் பண்ணுகிறார் –

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்–ரத்நாகரமாய் தர்ச நீயமான கடல் போலே குண வை லக்ஷண்யத்தாலும்
அபரிச்சின்ன மஹாத்ம்யனான சர்வேஸ்வரனாலே லப்த ஸ்வரூப சத்தாகரரான பாகவதரானவர்கள் பகவத் குணங்களுக்கு மேட்டு மடையான பூமியிலே
பூத சப்தம்–நபும்சகமாகையாலே அஃறிணை
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–சம்ருத்தமாம் படி வந்து புகுந்து பகவத் குணங்களை இசையில் பாடி –
ஹர்ஷ ப்ரகரஷத்தாலே ச சம்ப்ரம ந்ருத்தம் பண்ணி எங்கும் வியாபாரிக்கு கண்டோம் -ஆதலால்
வல்லுயிர்ச் சாபம் போயிற்று- -ஆத்மாவுக்கு வந்தேறியாய் -அனுபவ விநாஸ்யமாய் பிரபலமான அவித்யாதி ரூபமான சாபமானது நசித்துப் போயிற்று
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை-அவித்யாதிகள் புகையால் –தத் பலமாய் நலியும் நரகங்களும் சிதிலமாயிற்றன-
ஆதலால் தத் நிர்வாஹகனான யமனுக்கு இந்த விபூதியிலே நிர்வாஹ்யமாய் இருப்பது ஏதேனும் ஒரு அம்சமும் இல்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் -இதுக்கு எல்லாம் அடியான கால தோஷமும் நிசியா நிற்கும் இது கார்த்த யுக தர்ம வ்ருத்திகளான
பாகவத சந்நிதியாலே வந்தது என்னும் இடம் ப்ரத்யஷித்துக் கொள்ளுங்கோள்
பொலிக பொலிக பொலிக-இது சம்ருத்தமாக வேணும் -த்ரிரா வ்ருத்தி சாந்தி சாந்தி சாந்தி என்கிற ஸ்ருதிச் சாயையாலே

—————————————————

அநந்தரம் பரத்வ ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்தவாதிகளை யுடைய சர்வேஸ்வரன் குணங்களில் விக்தரான பாகவதரைக் கண்டு
உகந்து மங்களா சாசனம் பண்ண வாருங்கோள் என்று அநு கூல வர்க்கத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் –

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-

வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்–வண்டுகளாலே பூரணமாய் செவ்வியை யுடைத்தான
திருத் துழாய் மாலையை யுடையனாய்
அவ் வழகை யநுபவிக்கிற ஸ்ரீ மஹா லஷ்மிக்கு வல்லபனான சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதரானவர்கள்
இந்த போக்யதைக்கு நிலவர இல்லாத பூமியின் மேலே
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–அனுபவ பரவசராய்க் கொண்டு பண் மிகும்படி நின்று பாடி
ப்ரேம பாரவசயத்தாலே ஆடி எங்கும் பரந்து வியாபாரியா நின்றார்கள் –
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்-நம் கண்ணுக்கு போக்யமான ஸம்ருத்திகளை காணப் பெற்றோம் –
ஒரு கால் கண்டு விடுகை யன்றியே த்ரிரா வ்ருத்தி போலே நிரந்தர அனுபவம் பண்ணப் பெற்றோம்
தொழுது தொழுது நின்று ஆர்த்தும்-இந்த ப்ரீதி பரவசராய்க் கொண்டு நிரந்தர அநு வ்ருத்தி பண்ணி நின்று சஹர்ஷ கோலாஹலம் பண்ணுவோம் –
தொண்டீர் எல்லீரும் வாரீர்-பகவத் பாகவத விஷயத்திலே அநு கோளாறானவர்களே இப் போகத்தை இழவாதே எல்லாரும் வாருங்கோள் –

———————————————

அநந்தரம் ஆஸ்ரித அர்த்தமான வடிவை யுடையனான சர்வேஸ்வரனுடைய ஸுந்தர்யாதிகளில் வித்தரான பாகவதர்
இந்த விபூதி ஸூரிகளுக்கும் நிலமாம்படி சர்வ பிரதேசத்திலும் அவஷ்டம்பித்தார்கள்-என்கிறார் –

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3-

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து–சேதனருடைய ஸ்வ பாவங்கள் அதரோத்தரமாம் படியான கலியுகம் கடக்கப் போய்
அஸ்கலித ஜ்ஞான உஜ்ஜ்வல்யத்தை யுடைய ஸூரி களும் ஸ்வயமேவ பிரவேசித்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்–யுகாந்தர விச்சேதம் இல்லாதபடி ஏக ஆகாரமாய் வளர்ந்த க்ருத யுகமானது
கைக் கொண்டு பகவத் அனுபவ ஜெனிதமான அபரிச்சின்ன ஆனந்த சாகரம் மேன்மேலும் பெருகும்படியாக
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்-ஸ்யாமளமான மேகம் போலே அநு பாவ்யமான
திரு வடிவை யுடையனாய்க் கொண்டு எனக்கு ஸ்வாமியாய் அனவதிக குண சாகரனான சர்வேஸ்வரனுடைய
ஸ்வ பாவங்களில் வித்தரான ஸ்ரீ பாகவதர் இப்பூமியில்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–ப்ரீதி கோலாஹலம் பிறக்கும்படி பிரவேசித்து ஹர்ஷத்தாலே கீதங்களை
பாடிக் கொண்டு சர்வ பிரதேசங்களும் தங்களுக்கு இடமாம்படி கைக் கொண்டார்கள்
தொழுது தொழுது நின்று ஆர்த்தும் வாரீர் என்று அன்வயம் –

————————————

அநந்தரம் ஆஸ்ரித உபகாரகனான அர்ணவ சாயியினுடைய குணத்திலே வித்தரானவர்கள் பாஹ்ய சமயங்களை
உத்பாடனம் பண்ணுவாரைப் போலே அநேக விதமான ஹர்ஷ சேஷ்டிதங்களைச் செய்யா நின்றார்கள் என்கிறார் –

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே–வைதிக சங்கோசம் பிறக்கும்படி சர்வ பிரதேசத்திலும்
அவஷ்டம்பிக்கக் கடவதான புத்த ஆர்ஹதாதி பாஹ்ய சமயங்களை எல்லாம் ச வாசகமாக உத்பாடனம் பண்ணி போகடுவாரைப் போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்–விஸ்தீர்ணமான கடலிலே ஆஸ்ரித அர்த்தமாக
கண் வளர்ந்து அருளுகிற சர்வாதிகான் குணங்களிலே ஈடுபட்ட பாகவதர்கள் தாங்களே லோகம் எல்லாமாய் அவ்வோ பிரதேசங்களில்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி–கிடந்தும் இருந்தும் நின்றும் பகவத் குண சேஷ்டித ப்ரகாசகங்களான பலப்பல கீதங்களைப் பாடிக் கொண்டு
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே.–தர்ச நீயமாம் படி சஞ்சரித்தும் ஹர்ஷத்தாலே தரையிலே கால் படாதபடி மேல் கிளம்பியும்
ச சம்ப்ரம ந்ருத்தம் பண்ணியும் இப்படி நாடகங்கள் செய்யா நின்றார்கள் –
இப்பாட்டும் கீழோடே அன்வயம் –

——————————————

அநந்தரம் பிரதி கூளரான அஸூரா ராக்ஷஸ ப்ரக்ருதிகளைக் குறித்து ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய குண அனுசந்தான
வித்தரான பாகவதர் உங்களை நிரசித்துப் பொகடுவார்கள் -உங்களுக்கு உஜ்ஜீவிக்க விரகில்லை என்கிறார் –

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து-இவர்கள் செய்கிற வியாபாரம் என் கண்ணுக்கு
அதிசயித்தமாய் இருப்பது ஓன்று போலே இரா நின்றது -ஏது என்னில் பிரதி கூல பிரசுரமான இந்த லோகத்தில்
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி–பரமபத நிலயனுடைய குண அனுபவ வித்தரான பாகவதர் தாங்களேயாய்
ஆச்சர்ய வ்ருத்திகளாலே சர்வ பிரதேசத்திலும் நிரந்தர வாசம் பண்ணி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்–ராக்ஷசியாயும் ஆஸூரி யாயுமுள்ள ப்ரக்ருதிகளோடே பிறந்தவர்கள் உண்டாகில்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–இதர விஷய சபலரானவர்களே உங்களை நிரசித்து
கலி க்ருத யுகமாம் படி காலத்தைப் பேதிக்கும்படி யாய் இரா நின்றது –
ஆதலால் உங்களுக்கு உஜ்ஜீவிக்கும் பிரகாரம் இல்லை -இதில் சந்தேகம் ஒன்றுமில்லை-

————————————-

அநந்தரம் -சாம்சாரிக சகல கிலேசமும் தீர்க்கும்படி ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான திருவாழியை யுடைய சர்வேஸ்வரனுக்கு
அடியாரானவர்கள் ஜகத்தெங்கும் பரந்தார்கள்-அவர்களை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்று
கீழ்ச் சொன்னவர்களை நோக்கி அருளிச் செய்கிறார் –

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6-

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்-சரீரத்தை முடித்து பிராணனை க்ரசிக்கக் கடவ
வியாதியும் பகையும் பசியும் முதலான க்ரூர ஸ்வ பாவங்கள் எல்லாவற்றையும்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்–நின்று கடிகைக்காக சக்ராயுதனான சர்வேஸ்வரனுடைய
அடியாராய்க் கொண்டு போந்தவர்கள்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்-விலக்ஷணமான இசைகளைப் பாடியும் ச சம்ப்ரமமாகக்
கிளர்ந்து ஆடியும் பூமி எங்கும் பரந்தார்கள்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–தேவ தாந்தரங்களையும் விஷயாந்தரங்களையும்
உத்தேச்யமாகவும் போக்யமாகவும் நினைத்து சபலரானவர்களே உங்கள் அந்நிய பரமான நெஞ்சை
ப்ராப்தமான பாகவத விஷயத்திலே செவ்விதாக நிறுத்தி அவர்கள் பரிசரத்திலே சென்று
சேஷத்வ அனுரூப விருத்தியைப் பண்ணி பிழைக்கும்படி பாருங்கோள்

—————————————–

அநந்தரம் தேவதாந்த்ர பரரானாரைக் குறித்து -அவனை ஒழிய இவர்களுக்கு ரக்ஷண சக்தி இல்லை –
சர்வ ஸூலபனான ஸ்ரீ கிருஷ்ணனே பர தேவதை -ஆனபின்பு தேவதாந்த்ர விஷயமான நித்ய நைமித்திகாதி
தர்மங்களை அவர்களுடைய பகவச் சரீரத்வ புத்தியைப் பண்ணி அனுஷ்டிக்கும்படி பாருங்கோள் என்கிறார் –

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்–உங்கள் நெஞ்சுக்குள்ள ஸூபாஸ்ரயம் அல்லாமையாலே
வலியப் பிடித்து நிறுத்திக் கொள்ளும் தெய்வங்கள் உங்களை உஜ்ஜீவிப்பித்துக் கொள்வதும்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே–தங்களுக்கும் பல ப்ரதத்வ சக்தி கொடுத்தவன் தன்னோடே மீண்டு சென்று கிட்டிக் கிடீர்
இது மார்க்கண்டேயனும் சாக்ஷியாக கண்டி கோளே -ஆகையாலே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை–இதர தேவதா பரத்வ பிரதிபத்தி பண்ணும்படி மலினமான நெஞ்சு
ஒருபடியாலும் வேண்டுவது இல்லை
தேவதாந்தரங்களுக்கு சரீரியான ஸ்ரீ கிருஷ்ணனை ஒழிய பரதேவதை இல்லை -அனபின்பு
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–சாஸ்த்ரீயமாய்க் கர்த்தவ்யமான நித்ய நைமித்திகங்களை எல்லாம்
அந்த ஸ்ரீ கிருஷ்ணனுக்கு சரீரங்களான அந்தத் தேவதைகளை விஷயீ கரித்து
சர்வ யஞ்ஞாநாம் போக்தாவான அந்த ஸ்ரீ கிருஷ்ணன் பர்யந்தமாக சமர்ப்பியுங்கோள்
இதிலே பாகவத உத்கர்ஷ ஹேதுவான பாரம்யம் சொல்லிற்று ஆயிற்று –

———————————————–

அநந்தரம் இப்படி சர்வ தேவதா நாயகனாய் ஸ்ரீ வத்ஸ வஷாவான ஸ்ரீ கிருஷ்ணனுடைய சேஷ பூதரானவர்கள்
லோகத்தில் நிகராய் வார்த்தையா நின்றார்கள் -அவர்களை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8-

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி–நிறுத்தினான் தெய்வங்களாக- கர்த்தவ்யமான கடைமையான
நித்ய நைமித்திகங்களை சமர்ப்பித்து உஜ்ஜீவிக்கைக்காக நாநா ராசிகளான ஸமஸ்த லோகத்துக்கும் தன்னுடைய சரீர பேதங்களை –
தெய்வங்களாக தத் தத் கர்ம ஆராத்யா தேவதைகளாக நிறுத்தியவன்
அத் தெய்வ நாயகன் தானே-சர்வ தேவதா நாயகனான ஸ்ரீ கிருஷ்ணன் தானே -ஆகையால்
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி-அந்த சர்வாதிக ஸூசகமான ஸ்ரீ வத்ஸத்தை திரு மார்பில் யுடையவனான
அவனுக்கு சேஷபூதரான பாகவதர்கள் நாநா கீதங்களை பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–சாம்சாரிக தோஷத்தால் யுண்டான விஷாதம் இல்லாதபடி
சர்வ உத்க்ருஷ்டராய் வார்த்தையா நின்றார்கள்
நீங்கள் அவர்களைக் கிட்டி தொழுது உஜ்ஜீவியுங்கோள்

———————————–

அநந்தரம் ஆஸ்ரிதரைக் கைவிடாத அப்ரச்யுத ஸ்வ பாவனுடைய சகல கார்ய நிஷ்ட்டாராலும் குண நிஷ்ட்டாராலும்
லோகம் மிகுந்தது -அவர்களை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை–வேதத்தில் ஸ்வரூப ரூப குணாதி ப்ரதிபாதகம் ஆகையாலே
பரம பாவனங்களான ஸ்ரீ புருஷ ஸூக்த நாராயண அநு வாகாதி ருக் விசேஷங்களை
நாவிற் கொண்டு ஞான விதி பிழையாமே–நாவிலே உச்சரித்துக் கொண்டு பக்தி ரூப ஞான விதானம் பண்ணுகிற
சாஸ்த்ர மரியாதை தப்பாதபடி ஆராதன உபகாரணமான
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து–புஷ்பத்தோடு கூடின தூபமும் தீபமும் சாத்துப் படியும்
திரு மஞ்சனமும் பூர்ணமாக யுடையராய்க் கொண்டு
அச்சுதன் தன்னை மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–அப்ரச்யுத ஸ்வ பாவனான சர்வேஸ்வரனை
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு சேஷ வ்ருத்தி முகத்தாலே ஆஸ்ரயிக்கும் சேஷ பூதரையும்
அவனுடைய ஞான சக்த்யாதி குண அநு சந்தான வித்தரான முனிகளையும் மிக யுடைத்தாயிற்று லோகம்
ஆனபின்பு அவர்களைக் கிட்டி தொழுது நீங்கள் உஜ்ஜீவியுங்கோள்

——————————–

அநந்தரம் இப்படி சர்வாதிகனான சர்வேஸ்வரனுக்கு சேஷபூதரான பாகவதருடைய ஆஸ்ரயணீயதையை ப்ரதிபாதித்து
இப்பாட்டில் -பிரயோஜனந்தரார்த்தமாக தேவதாந்தரங்களை ஆஸ்ரயிப்பாரைக் குறித்து -அவனை ஆஸ்ரயித்து தேவதைகள்
அபி லஷித பாதங்கள் பெற்றவொபாதி நீங்களும் அவனை ஆஸ்ரயிப்புதி களாகில் உங்களுடைய புத்தி பேத ஹேது வான கால தோஷம் இல்லை -என்கிறார்

மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–5-2-10-

நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்–நக்னனான ஈஸ்வரனோடே கூட ப்ரஹ்மாவும் இந்திரனும் முதலாக திரண்ட
தொக்க அமரர் குழாங்கள் -தேவதா சமூகங்கள் ஆனவை
மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திருமூர்த்தி-சர்வ அபாஸ்ரய பூதனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய ஸ்ரீ மத்தான
விக்ரஹத்தை ஆஸ்ரயித்து போக்ய போக உபகரணாதிகளால் சம்ருத்தஸர்வத்ர விஸ்தீர்ணமான சம்பத்தை யுடையரானார்கள்
இதர புருஷார்த்த சபலரானவர்களே
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–நீங்களும் அவர்களோடே ஓக்க அவனையே தொழ வல்லி கோளாகில்
உங்களுக்குத் தேவதாந்த்ர ப்ராவண்ய ரூப புத்யபகர்ஷ ஹேதுவான கலியுக தோஷம் ஒன்றும் இல்லை –
கலியுகத்தில் பகவத் அர்ச்சனை விமுகராம்படி பாஷாண்ட உபஹதராய் இ றே ஜனங்கள் இருப்பது என்று கருத்து –

——————————————-

அநந்தரம் இத்திருவாய் மொழி அப்யசித்தவர்கள் நெஞ்சில் சகல மாலிந்யமும் அறுக்கும் என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்–தனக்கு அசாதாரண சேஷ பூதரானவர்களுக்கு
கலியுக தோஷம் ஒன்றும் தட்டாதபடி ஸ்வ விஷய ஞான ப்ரேம வ்ருத்திகளை தன்னருளாலே கொடுக்கையாலே
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்–அபி விருத்தமான பிரகாசத்தை யுடைத்தான
தேஜோ மய திவ்ய விகிரஹத்தை யுடையனாய்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை அவர்களை அனுபவிப்பிக்கும் உபகாரகனான ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்ற
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்–சம்ருத்தமான வயலையுடைத்தாய் தெற்குத் திக்குக்கு
ஸ்லாக்யமான திரு நகரிக்கு நிர்வாஹகராய்
ஜனக வைலக்ஷண்யத்தையும் குண வை லக்ஷண்யத்தையும் யுடையரான ஆழ்வாருடையதாய்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–ஸூ பிரசித்தமான பகவத் குண பிரதையை யுடைத்தான
ஆயிரம் திருவாய் மொழியிலும் இப்பத்தும் அப்யசித்தவர்கள் நெஞ்சை பகவத் சாம்ய பிரபத்தி ரூபமாயும்
அதுக்கு அடியான பகவத் உதகர்ஷாதி சங்கா ரூபமாயும் தேவதாந்த்ர பரத்வ பிரதிபத்தி ரூபமாயும்
ப்ரயோஜனாந்தர ப்ராவண்ய ரூபமாயும் உள்ள மாசு அறும்படி பண்ணும்
இது ஆறு சீர் ஆசிரிய விருத்தம்

————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –5—2

March 28, 2018

ஒன்றும் தேவில் தம்முடைய உபதேசத்தாலே ஸ்ரீ வைஷ்ணவீ க்ருதரரான ஜனங்களைக் கண்டு
நிரதிசய ஹர்ஷ யுக்தராய் -அந்த ஹர்ஷ ப்ரகரஷத்தாலே அவர்களைத் திருப் பல்லாண்டு பாடுகிறார் –

—————————-

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

சர்வாத்மாக்களுடைய சர்வ பாபங்களும் போய் தத் பல பூமியான நரகங்களும் தத்பல யாதநா ரஹிதங்களாய்
தத் பல அனுபவ ப்ரயோஜகனான யமனும் ஸ்வ கர்த்தவ்ய ரஹிதனாய் இனி மேலும் ரௌரவாதி நரக யாதநாஸ் பதமான
அவைஷ்ணவ ஜந்துக்கள் உளவாகாத படியாகவும் எம்பெருமானுடைய
அபரிமித காம்பீர்ய உதாராதி கல்யாண குண அனுபவ லப்த சத்தாகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் இந்த ஜகத்து எல்லாம்
நிறையும் படி வந்து புகுந்து எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வரூப ரூப குண விபவ சேஷ்டிதங்களைப் பாடியாடி வர்த்திக்கக் காணப் பெற்றோம்
இந்த ஸம்ருத்தி நித்ய ஸித்தையாக வேணும் என்கிறார்

——————————————–

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்-
அது என் என்னில்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல் பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றன-என்கிறார் –

———————————————

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3-

ஸ்ரீ வைஷ்ணவ தர்ம விபர்யய ஹேதுவான கலியுகம் நீங்கி சர்வ காலமும் கலியுகாத்ய வ்யவஹிதமாய்க் கொண்டு
கேவல க்ருத யுகமேயாய்ச் செல்லும்படியாகவும் -அயர்வறும் பாமரர்களும் புகுந்து பேரின்ப வெள்ளம் பெருகும் படியாகவும்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டன
இவர்களைத் தொழுது தொழுது நின்று ஆர்த்தும் தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்கிறார் –

——————————————

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-

சர்வ ஜகத்தையும் ஆக்ரமித்துக் கொண்டு இருக்கிற வேத பாஹ்ய சமயங்களை எல்லாம் எடுத்துக் களைவன போலே
ஜகத்து எல்லாம் தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய் -பரம புருஷ நிரவதிக கல்யாண குண அம்ருத பணத்தாலே
மத்தராய்க் கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி நடந்தும் பறந்தும் குனிந்தும் இங்கனே தர்ச நீயமான
சேஷ்டிதங்களைப் பண்ணா நின்றார் –
இவர்களைத் தொழுது தொழுது நின்று ஆர்த்தும் தொண்டீர் எல்லீரும் வாரீர் என்கிறார் –

————————————————

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-

என் கண்ணுக்கு ஓன்று செய்கிறாப் போலே இரா நின்றது -என் என்னில் -இந்த லோகத்தில் எங்கும் ஆச்சர்யமாம் படி
வைகுந்தன் பூதங்களேயாய் எங்கும் அவர்களே மன்னுகையாலே அவைஷ்ணவரான உங்களுக்கு உய்யும் வகை இன்றியே
அதத் விஷய ப்ரவணரான நீங்கள் எல்லாரும் உப ஸம்ஹ்ருதராய் ஸ்ருஷ்ட்டி பேருமா போலே இருந்தது –
இது நிஸ் சம்சயம் என்கிறார் –

—————————————-

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6-

சர்வாத்மாக்களுடைய சர்வ ஆபாதா பரிகார்த்தமாக சங்க சக்ர கதா ஸார்ங்காதி திவ்ய ஆயுத உபேத பரம புருஷ கைங்கர்ய ஏக
ஸ்வ ரூபரான ஸ்ரீ வைஷ்ணவ ஜனங்கள் இந்த லோகத்தில் போந்து நன்று இசை பாடும் துள்ளி யாடியும் ஞாலம் பரந்தார்-
நீங்களும் இந்த தேவதைகளை விட்டு அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு எம்பெருமானை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

——————————————-

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-

மற்று நாங்கள் ஆஸ்ரயிக்கிற ப்ரஹ்ம ருத்ராதி தேவதைகள் எங்களுக்கு ரக்ஷகராக மாட்டாரோ என்னில்
உங்களாலே ஸமாச்ரிதைகளான தேவதைகள் உங்களை எம்பெருமான் ரஷிக்கும் இடத்தில் புருஷகாரமாம் அத்தனை –
இப்பொருளில் மார்க்கண்டேயனும் சாக்ஷி
ஆகையால் நாராயணனே சர்வேஸ்வரன் -இதில் ஒன்றும் சமசயிக்க வேண்டா -ஆகையால் அவனை ஆஸ்ரயியுங்கோள்
அக்னி இந்திராதி தேவதைகளையும் ஆராத்யதயா சாஸ்திரங்கள் பிரதிபாத்தியா நின்றன இறே என்னில்
அப்படி அன்று சாஸ்திரங்களில் சொல்லுகிறது -எங்கனே என்னில்
அக்னி இந்திராதி ஸமஸ்த தேவதா அந்தர்யாமிதயா சரீரி பூதனான பரம புருஷனே சர்வ கர்ம சாமராத்யன் என்கிறது
ஆனபின்பு நித்ய நைமித்திக காம்ய ரூப சர்வ கர்மங்களாலும் அக்னி இந்திராதி ஸமஸ்த தேவதா அந்தர்யாமியான
பரம புருஷனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-

———————————–

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8-

கேவல இந்த்ராதிகளையே ஸ்வ கர்மங்களாலே சமாராதித்து ஸ்வ அபி லஷிதா புத்ர பசுவாதி பலன்களை
அவர்கள் பக்கலிலே பெற்று அன்றோ எல்லாரும் பூஜிக்கிறது என்னில் -இந்த்ராதிகளை எல்லாரும்
ஸ்வ அதிகார அநு குண கர்மங்களாலே யாராதித்து ஸ்வ அபி லஷிதங்களைப் பெற்று அநுபவிக்கும் படி அந்த சர்வேஸ்வரனான
பரம புருஷன் தானே ஸ்வ சரீர பூதரான அந்த இந்த்ராதிகளை சர்வ கர்ம சமாராத்யாராய் சமாராதாக அபி லஷிதா பல பிரதான
சமர்த்தராம்படி பண்ணி அருளினான்
ஆதலால் அவனே சர்வேஸ்வரன் -இப்படி சர்வேஸ்வரன் ஆகையாலும் பகவத் ஏக போகரான ஸ்ரீ வைஷ்ணவர்களாலே
இந்த லோகம் பூர்ணமாகையாலும் நீங்களும் எம்பெருமானையே அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு
ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

—————————————-

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-

பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி ப்ரதிபாதகமாய் பரி ஸூத்தமான ருக்குகளைச் சொல்லிக் கொண்டு பக்தி மார்க்கம் தப்பாமே
புஷ்ப தூப தீபாதுலேபந சலிலாத் உபகரணங்களாலே அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு எம்பெருமானுக்கு அடிமை செய்கிற பரிஜனங்களும்
பரம புருஷ குண சேஷ்டிதஅனுபவ ஏக போகரான திவ்ய ஜனங்களுமே யாயிற்று இந்த லோகம்
நீங்களும் அப்படியே அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு எம்பெருமானுக்கு அடிமை செய்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

————————————————

மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–5-2-10-

சதுர்முக பசுபதி சத்தமாக ப்ரப்ருதி சமாஸ்தா தேவ நிகரங்களும் பரம புருஷ ஸமாச்ரயணத்தாலே சப்த லோகாதிபத்யரானார்கள்
ஆனபின்பு நீங்களும் அவர்களை போலே எம்பெருமானை யாஸ்ரயிக்க வல்லி கோளாகில் இக்கலியுகம் ஒன்றும் இல்லை -என்கிறார்

——————————————–

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-

ஸ்வ ஆஸ்ரிதர் அபேக்ஷித்தால் கலியுகத்தையே க்ருத யுகமாக்கி யருளும் ஸ்வ பாவனாய் இருந்த எம்பெருமானைச் சொன்ன
இத்திருவாய் மொழி ஸ்ரீ வைஷ்ணவத்வ விரோதி சகல விரோதங்களையும் போக்கும் என்கிறார் –

———————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-