இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –
——————————————–
அவதாரிகை –
நிகமத்தில் –
இப் பிரபந்தம் கற்றாருக்கு உண்டாகும்-பலத்தை சொல்கிறார்கள்-
இப் பிரபந்தம் கற்றார் —பிராட்டியாலும் எம்பெருமானாலும்–சர்வ காலமும்–
விஷயீ கரிக்கப் படுவார்கள் -என்கிறார்கள் –
கற்றாருக்கு–அனுஷ்டித்தாரோபாதியும்–அனுகரித்தாரோபாதியும்–பலம் சித்திக்கும் -என்கை
கன்று இழந்த தலை நாகு–தோற்கன்றுக்கும் இரங்குமா போலே–
இப்பாசுரம் கொண்டு புக நமக்கும் பலிக்கும் –என்று பட்டர் அருளிச் செய்வர்-
வேதம் அனைத்துக்கும் வித்து –
சகல வேதார்தங்களும் அடங்கிய வித்து —
நட்டு பரிஷ்காரம் செய்தால் சாகை சாகையாக பணைக்கும்-
சகல அர்த்தங்களும் உண்டே
வட பெரும் கோயில் உடையானை கண்ணன் சம காலம் போலே நினைத்து-ஆண்டாள் –
நம்முடைய பாவ விருத்தி இல்லை யாகிலும்
இப்பிரபந்தம் அனுசந்தானம் செய்தால் அதே பலன்-
சம காலம் அநுஷ்டித்தார்-அனுகரிதவர் அனு சந்திப்பார் மூவரும் பெறுவார்
பட்டர் -கன்று இழந்த தலை நாகு தோல் கன்றுக்கு இரங்குமா போலே –
ஆண்டாள் பாவம் இல்லா விடிலும் திருப்பாவை சொல்லி அதே பலன் பெறுவோம்-
கோபிமார் விஷயம் ஆச்ரயநீய விஷயம் கிருஷ்ணன் –
ஆஸ்ரயணீயம் பல பர்யந்தம் ஆவது பிராட்டி-அவளை பெற அவன் செய்த வியாபாரம்
அமுதம் கடைந்த-அத்தை சொல்லுகிறார்கள் -இதில்
தயிர் கடைய வ்யாஜ்யமாய் கன்னிகை அடைவான்–செவ்வாய் துடிப்ப ஒல்லை நானும் கடையவன் என்று
அமரர்க்கு அமுது ஈன்ற ஆயர் கொழுந்தே–கண்ணன் தானே அமுதம்–
ஷீராப்தி நாதன் கடைந்தால் அமுதம் வாராதே–கடைகிற குலம்-ஆய்க்குலம் தானே
பாற்கடலில் பைய துயின்றான் ஆரம்பித்து நிகமிக்கிறார்
கடல் கிடந்தது கடைந்த —கடல் கிடைந்த மாதவனை–அமுதம் கொண்ட பெருமான் திரு மார்பன்–அமுதினில் வரும் பெண் அமுது
ஆஸ்ரயணீயம் ஸ்ரீ–கைங்கர்யம் மாதா–ஆஸ்ரிதர் குற்றம் பொறுப்பித்து–மாதா முன்பு பிரஜைகள் குற்றம்
ஓங்கி உலகு அளந்த–வங்க கடல் -இரண்டும் பல சுருதி பாசுரங்கள்–
நோன்புக்கு பலம் ஓங்கி -அருளி–உரைப்பார் பலம் இதில் -அருளி –
தேவதை -கோவிந்தன்- நாராயணன் இல்லை–ஆசமனம் -அச்சுதா அனந்த கோவிந்தா நம
கேவவாதி -கோவிந்தா மீண்டும் –
நாராயணன் -சௌலப்யம் பரத்வம் -நாரங்களுக்கு அயனம் நாரங்களில் உள்ளே —
கோவிந்தா -பட்டாபிஷேகம் -இந்த்ரன் –
நாராயணன் சிறு பெயர் —கோவிந்தா கேட்டு ஆனந்தம் —சமுத்திர விருத்தாந்தம் இதில் தான் ஆண்டாள் –
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
வியாக்யானம் –
வங்கக் கடல் கடைந்த
கடல் கடையா நிற்க–மரக்கலம் அலையாதபடி-கடைந்த நொய்ப்பம் —
கடைந்த போது சுழன்று வருகையாலே-கடலடைய மரக் கலமாய் நின்றபடி -என்றுமாம் –
பிரயோஜனாந்த பரருக்கும் உடம்பு நோவ கடல் கடைந்து–அபேஷித சம்விதானம் பண்ணும் சீலவான் என்கை –
கிருஷ்ணனை யாகில் கவி பாடிற்று–
ஷீராப்தி மதனம் பண்ணினவனை சொல்லுகை பின்னம் சேருமோ என்னில் –
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட எம்பெருமானே -என்று-
தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
பெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக-கடல் கடைந்தபடி –
ஊரார் கார்யத்தை ஒரு வ்யாஜ்யமாக்கி-பெண்களைப் பெறுகைக்காக நோன்பிலே அன்வயிப்பித்த-
கிருஷ்ணன் உடைய-ஸ்வ பாவத்தோடு சத்ருசமாய் இருக்கையாலே
சொல்லுகிறார்கள் –
மாதவனை –
ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம்–லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் –என்கை –
ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து–அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு -என்கை –
கடல் கடைந்த மாதவனை –
கடல் கடைந்து பிராட்டியை லபித்தவனை –
வங்கம் -இத்யாதி –
மரக்கலத்துக்கு ஒரு சலனம் பிறவாதபடி–பாற்கடலை–மந்தரத்தை மத்தாக நாட்டி–
வாசுகியால் சுற்றி–தன் கையாலே கடைந்து
பிராட்டியை லபித்தால் போலே–சேதனர் பரிக்ரகித்த சரீரத்துக்கு ஒரு வாட்டம் வாராமல்–சம்சாரம் ஆகிற மகா சமுத்ரத்தை
தன் சங்கல்பம் ஆகிற மந்த்ரத்தை நாட்டி–கிருபையாகிற கயிற்றாலே சுற்றி–கடாஷம் ஆகிற கைகளால் கடைந்து
பிராட்டியிலும் பிரேம விஷயமான ஆத்ம வஸ்துவை லபித்தவன் –
கிருஷ்ணனே ப்ரயோஜனாந்தர பரர்க்கும் கார்யம் செய்யும் ஸீலவான் என்கை
ஆஸ்ரயணீய தத்வம் ஸ்ரீ லஷ்மீ நாதமாய் இருக்கும் -என்கை –
தாய் முன்பு பிதாவுக்கு பிரஜை குற்றம் பொறுக்க வேண்டுமா போலே
ஆத்மாவின் குற்றம் பொறுக்கைக்குப் புருஷகாரம் என்கை
அவள் சந்நிதியில் குற்றம் மிக்க காகம் பிழைத்தது
அவள் சந்நிதி இல்லாமை அத்தனை குற்றம் இன்றிக்கே இருக்கச் செய்தே ராவணன் தலை அறுப்புண்டான்
வங்கக் கடல் கடைந்த மாதவனை –
மலர் மகள் விரும்பும் மத்துறு -திருவாய் மொழி-1-3-1-
கடல் கடைந்தது விண்ணவர்க்கு அமுது ஈந்து -அமுதினில் வரும் பெண்ணமுது தான் கொண்டான் –
கடல் கடைந்ததுக்கு தோள் தீண்டியான தயிர் கடைவதை ஆழ்வார் ஸ்ரீய பதித்வத்தை அருளிய பின்பு அனுசந்திக்கிறார் –
கேசவனை –
விரோதி நிரசன ஸ்வ பாவனை —ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும்–அந்ய சேஷத்வத்தையும்
போக்கினவனை —
கேசியை நிரசித்தாப் போலே–ஆத்ம வஸ்துவை அனுபவிக்கும் போது-அவ் வனுபவ விரோதியாய்
இச் சேதனனுக்கு பிறக்கும் போக்ருத்வாதிகளுக்கு நிவர்தகனாவனை-
மாதவனை கேசவனை –
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே
தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் –என்று பட்டர் அருளிச் செய்வர் –
ஆயிரம் தோளால் அலை கடல் கடைவன்–பூம் குழல் தாழ்ந்து உலாவா -அவளுக்கும் இது போலே தயிர் கடையவே
ஆமையாகிய கேசவா சுமக்கும் பொழுதும் கேசம் ஆசிய–கேசி ஹந்தா–விரோதி போக்க வல்லவன்
மா மாயன் மாதவன்–கேசவனை பாடவும்–சொல்லியது போலே தலை கட்ட–
கோதை ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு கொடுத்து
கேசவா -இருவரையும் தாங்கும் -பட்டம் ருத்ரன் கொடுத்து –
க ஈசன் இருவரையும் உண்டாக்கி —தான் பிராட்டி பெற்று மாதவன் ஆனான்
மாதவனை கேசவனை
முதலில் அருளிய -நாராயணன் பரவஸ்துவை -இறுதியில் மாதவன் கேசவன் என்று விசேஷிக்கிறாள் –
முதலில் நாராயணன் -காரணத்வம் -அருளி- இறுதியில்
கேசவன் -பிரம ருத்ராதிகளுக்கும் ஈசன் நிர்வாகத்வன் -உதபாதகத்வன் -என்று அருளுகிறாள் –
திங்கள் திருமுகத்து-
கிருஷ்ண சம்ச்லேஷத்தாலே குளிர்ந்து -மலர்ந்த முகம் –
கதிர் மதியம் போல் முகத்தான் -என்று அநபிபவ நீயத்வமும் உண்டு அங்கு –
அனுகூலர்க்கே ஆன முகம் ஆகையாலே -திங்கள் திரு முகம் -என்கிறார்கள் –
இங்கு-இவனை அனுபவிப்பார் முகமும் இப்படி இறே இருப்பது
மதி முக மடந்தையர் இறே –
சேயிழையார் –
சூடகமே -இத்யாதியில்-தாங்கள் அபேஷித்த படியே –அவனும் அவளும் கூட இருந்து பூட்டின ஆபரணத்தை உடையவர்கள் –
கிருஷ்ண விஷயீகார யோக்யதை ஆகிற ஆபரணத்தை உடையவர்கள் —
கிருஷ்ண விஷயீகாரத்தாலே புகுந்த புகராலே ஒரு படி ஆபரணம் பூண்டால் போலே இருப்பவர்கள் –
சென்று-
இவ் ஒப்பனை உடன் வரப் பார்த்து இருக்கும் அளவு அல்லாத த்வரையைச் சொல்லுகிறது –
இறைஞ்சி –
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி -என்கிறபடியே-அவனுக்கு மங்களா சாசனம் பண்ணி –
அங்கு –
திருவாய்ப்பாடியிலே –
அப்பறை கொண்டவாற்றை-
நாட்டுக்கு பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு-அடிமை கொண்ட படியை –
யணி புதுவை –
சம்சாரத்துக்கு நாயகக் கல்லான ஸ்ரீ வில்லி புத்தூர் –
திருவாய்ப்பாடியிலே
ஸ்ரீ நந்தகோபர் கோயிலிலே
நப்பின்னை பிராட்டி கட்டிலிலே
திவ்ய ஸ்தானத்திலே
திவ்ய சிம்ஹாசனத்திலே
இருந்த இருப்பிலே
ஆண்டாள் பெரியாழ்வார் வடபெரும் கோயிலுடையான் உள்ளதால் அணி புதுவை
பொன்னும் முத்தும் மாணிக்கமும் இட்டுச் செய்த ஆபரணம் போலே
பைங்கமலத் தண் தெரியல் –
பிராமணருக்கு–தாமரைத் தாரகையாலே சொல்லுகிறது –
தண் தெரியல் –
நளிர்ந்த சீலன் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8-
தண் அம் துழாய அழல் போலே -வட பெரும் கோயில் உடையானுடைய மாலை போலே
கொதித்து கிடவாது -பெரியாழ்வார் -கழுத்து மாலை –
பிரித்தவன் மாலை போலே அன்றே சேர்த்தவர் மாலை
குளிர்ந்த சீலத்தை உடைய செல்வ நம்பி -ஈஸ்வரன் சீலம் கொதித்து இருக்கும் –
அவன் நிரந்குச ஸ்வா தந்த்ரன் இறே
பட்டர் பிரான் கோதை சொன்ன –
ஆண்டாள் அநுகார பிரகரத்தாலே அனுபவித்துச் சொன்ன —பராசர புத்திரன் -என்று ஆப்திக்கு சொன்னால் போலே
பெரியாழ்வார் மகள் ஆகையாலே–சொன்ன அர்த்தத்தில் அர்த்த வாதம் இல்லை –
தமிழ் -நிகண்டு இனிமையும் நீர்மையும் தமிழ் யென்னலுமாம்
முதலில் நந்தகோபன் குமரன் -கண்ணன் பித்ரு பரதந்த்ரன்
இறுதியில் தன்னை -பட்டர் பிரான் கோதை -பித்ரு பரதந்த்ரையாக அருளுகிறாள்
திவ்ய தம்பதிகளுக்கு பகவத் பாகவத பாரதந்த்ர்யத்தில் ஈடுபாடு இத்தால் தெரிவிக்க படுகிறது –
சங்கத் தமிழ் மாலை –
குழாங்களாய்-என்னுமா போலே–திரள் திரளாக அனுபவிக்க வேண்டும் பிரபந்தம் –
பஞ்ச லஷம் குடியில் பெண்கள் திரள் திரளாக அனுபவித்த பிரபந்தம் இறே
தமிழ் மாலை –
பிராட்டி ஆண்டாள் ஆனால் போலே–உபநிஷத் தமிழ் ஆன படி –
மாலை –
பாவனமான அளவன்றிக்கே–போக்யமுமாய் இருக்கையும்–தலையாலே சுமக்க வேண்டி இருக்கையும் –
மாலை–பாவனம் போக்யத்வம்–தலையால் சுமக்க வேண்டும் சிரோ பூஷணம்
கோதை மாலை–மாலை கட்டின மாலை–மாலைக்கட்டின மாலை
செவிப்பூ – இவள் செவிக்கு பூ அவன் கொடுக்க-கர்ண புஷ்பம் ஓன்று
இவள் மாலையே கொடுத்து-ஸ்லாக்கியமான மாலை-குழலில் மல்லிகை மாலை விலங்கிட்டு ஓதுவித்த மாலை
முப்பதும் தப்பாமே –
இதில் ஒரு பாட்டும் குறையாமே–விலை இல்லாத ரத்னங்களாலே செய்த ஏகா வளியிலே
ஒரு ரத்னம் குறைந்தாலும் -நெடும் பாழாய்-இருக்கும் இறே –அப்படியே ஒரு பாட்டு குறையிலும் பேர் இழவாய் இருக்கும் –
இங்கு –
பிற்பட்ட காலத்திலே -என்னுதல்
சம்சாரத்திலே -என்னுதல்
இப்பரிசு உரைப்பார்-
இப்பாசுரம் மாத்ரத்தைச் சொல்லுவார்–
திருவாய்ப்பாடியிலே பெண்கள் கிருஷ்ண அனுபவம் பண்ணிப் பெற்றார்கள்
ஆண்டாள் அனுகாரத்தாலே பெற்றாள்–
ஆகையால் இந்த பிரபந்தம் கற்றார்க்கு இந்தப் பலம் கிடைக்கும் –
ஈரிரண்டு மால் வரைத் தோள்-
இவர்கள் அளவு பாராதே பண்டு பாடினவர்கள் சொல் வழியாலே–அனுசந்திக்கையாலே தோள்கள் பணைக்கும்-
உகவாதார்க்கு தோள்கள் இரண்டாய்த் தோற்றும்–இவர்களுக்கு தோள்கள் நாலாய்த் தோற்றும் இறே –
ஈர் இரண்டு மால் வரைத் தோள்–அணைத்த பின்பு பணைத்த–
உகவாதார் இரண்டாய் தோற்றும்–ஆசைப்பாட்டர் நாலையும் சேவிப்பார்
திருவடி-தோள்கள் நாலையும் கண்டிடப் பெற்றார்-
சுந்தர தோள்-அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோள் உடையான்
செங்கண் திரு முகத்து –
அலாப்ய பலத்தாலே சிவந்த கண்கள் -பிரிந்தால் ஜலம் இல்லா தாமரை செங்கண் திரு முகம்
நீரார் கமலம் போல் செங்கண்–கதிர் மதியம்
திங்கள் திருமுகத்து –
கிருஷ்ண ஸம்ஸ்லேஷத்தால் குளிர்ந்து மலர்ந்த முகம்
அங்கு கதிர் மதியம் போல் முகம்
ஜகத் வியாபார வர்ஜம் என்று இது ஒழிய அல்லாதது எல்லாம் கொடுக்கையாலே
இவர்களுக்கு குளிர்த்தி வேண்டுகையாலே
திங்கள் திரு முகம் -என்கிறது -மதி முக மடந்தையர் இறே
முதலில் கார் மேனி -செங்கண் -என்று அருளி
இறுதியில் -செங்கண் -என்று அருளி ஆண்டாளுக்கு கண்ணன் திருக்கண்கள் மேல்
ஈடுபாடு தோன்றியதை தெளிவாக அருளுகிறாள் –
செல்வத் திருமாலால் –
உபய விபூதி உக்தனான ஸ்ரீயபதியாலே —இப்பாட்டில் உபக்ரமத்திலே பிராட்டி சம்பந்தம் சொல்லி
முடிவிலும் சொல்லுகையாலே–த்வயத்தில் சொன்ன படியில் இங்கும் சொல்லிற்று என்கை –
மாதவனை திருமாலால் –
மாதவன் என்று என்று -திருவாய் மொழி -10-5-7-
த்வயத்தில் உள்ள இரண்டு ஸ்ரீயபதித்வதையும் -ஆச்ரயண வேளை போக வேளை இரண்டிலும் –
எண் பெருக்கில் எண்ணும் திருநாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி
மாதவன் என்று த்வ்யமாக்கி -ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி
எங்கும் திருவருள் பெற்று –
த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும்–பிராட்டியும் தானும் சந்நிஹிதமாம் படி–பிரசாதத்தைப் பெற்று
இன்புறுவர் எம்பாவாய் –
பகவத் சம்ச்லேஷத்தால் வந்த ஆனந்தம் பெறுவார் —விடிவோரை எழுந்திருந்து முப்பது பாட்டையும் அனுசந்தித்தல்
மாட்டிற்று இலனாகில் -சிற்றம் சிறுகாலே -என்ற பாட்டை அனுசந்தித்தல் —
அதுவும் மாட்டிற்று இலனாகில் -நாம் இருந்த இருப்பை நினைப்பது –
என்று பட்டர் அருளிச் செய்வர் –
மார்கழி -என்று தொடங்கி -இன்புறுவர் -என்று முடித்து இருக்கும் அழகு பெரு விருந்து –
அனுஷ்டித்தது-காகிகம் கோபிகள் – – -அநுகரித்தது -மானஸம்-ஆண்டாள் -அப்யசித்தது வாசிகம் —
பலன் இப்படி நான்கு பகுதிகள் இந்த பாசுரம் –மூவருக்கும் ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் -அனுக்ரஹம் -துல்யம் –
அப்பறை கொண்டது -எங்கும் -எல்லாருக்கும் எப்பொழுதும் -திருமால் திருவருள் பெற்று இன்புறுவர்
சொல் பணி செய் ஆயிரம் -சொற்கள் ஆழ்வாருக்கு பணி செய்ததே –
முதல் ஆழ்வார் திரு மழிசை -மானஸ / நம்மாழ்வார் -வாசிக / மற்றவர் -காயிகம் பிரதானம் /
பஃதாஞ்சலி ஸ்புட- ஹ்ருஷ்டா-நம இத்யேன வாயிக -மூன்றும் உண்டே /
சந்தரனைப் போலே ஆஹ்லாத கரமான–திருமுக மண்டலம் உடையவர்களாய்–
தத் ஏக விஷயமான ஞான பக்தி வைராக்ய பூஷிதராய்
அனந்யார்ஹரான பாகவதர்கள்-ஆற்றாமை யாலே அவனிருந்த இடத்தே சென்று–பூஜித்து
த்வாபர யுகத்திலே நாட்டாருக்கு -பறை -என்ற வ்யாஜ மாத்ரமாய்-
தங்களுக்கு உத்தேச்யமான கைங்கர்யத்தை பரிக்ரஹித்த பிரகாரத்தை –
பூமிக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூரிலே எழுந்து அருளி இருக்கிற–
விஸ்த்ருதமாய் குளிர்ந்துள்ள தாமரை மணிகளாலே
செய்யப் பட்ட மாலைகளை உடைய–பெரியாழ்வார் திரு மகளாரான சூடிக் கொடுத்த நாச்சியார் அருளிச் செய்த-
சங்காநுபாவ்யமாய் -கூட்டம் கூட்டமாய் இருக்கிறதாய் —தமிழாலே செய்யப் பட்ட–மாலை போலே போக்யமாய்
சிரசாவாஹ்யமாய்–ஸ்லாக்கியமான இப்பிரபந்தத்தை–ஒரு பாட்டு குறையாதே–பிற்பட்ட காலத்திலே
இப்பிரபந்த ரூபமான பாசுரத்தை அனுசந்திக்கும் அவர்கள்–இப்பாசுர ஸ்ரவணத்தாலே
பணைத்து-பலிஷ்டமான-பெரிய மலை போலே இருக்கிற நாலு திருத் தோள்களை உடையவனாய்
வாத்சல்யத்தாலே சிவந்த திருக் கண்களை உடையவனாய்–விகசிதமான திரு முக மண்டலத்தை உடையனாய்
உபய விபூதி ஐஸ்வர்ய சம்பன்னனான–ஸ்ரீயபதியாலே
த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும்–பிறந்த ஞானத்துக்கு விச்சேதம் வாராதபடி–
கிருபையை லபித்து–ஆனந்த நிர்பரராய் இருப்பார்கள்-
த்வயார்தம்
பூர்வ கண்டம் ஆச்ரயநீய வஸ்து ஸ்ரீ மன நாராயண சரனௌ சரணம் பிரபத்யே
மாதவன்
கடல் கடைந்த வாத்சல்யம் -–அண்ணல் செய்து ஸ்வாமித்வம்–அசுரர் தானும் சௌசீல்யம்
பெண்ணாகிய அமுதூட்டி சௌலப்யம்–ஆழ கடல் கடைந்த துப்பன் சாமர்த்தியம்
உபகரணங்கள் தேடி -ஞான சக்திகள்–நாராயண சப்தார்தம் சூசகம்–
கேசவனை
பிரசச்த கேசம் திரு மேனி திருவடி பர்யந்தம் விக்ரக யோகம்
சரணம் கேசவம் பிரணியி குடுமி பிடிக்கலாம் அடியையும் பிடிக்கலாம்–
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் இவள் திரு நாமம்
பரமன் அடி பாடி தொடங்கி கேசவன்–பாதாதி கேசாந்தம் கிருஷ்ணன்–
திருப் பாத கேசத்தை தாய பிராப்தம் பரம்பரை சொத்து
திங்கள் திரு முகத்து –
அதிகாரி ஸ்வரூபம் வை லஷண்யம்–குளிர்ந்து மலர்ந்து–கதிர்மதியம் அவன் முகம்
இவர்கள் குளிர்த்தியே அமையும்–ஸ்வா தந்த்ர்யம் காருண்யம் கலந்த–நித்யம் அஞ்ஞானம் நிக்ரகம் பிராட்டி
திவளும் வெண் முகத்து போலே திரு முகத்து அரிவை–மதி முக மடந்தையர்–
சகல கலா பூர்த்தி இவர்கள் திரு முகம்–குழையும் வான் முகம்
ஆசார்யர் சிஷ்யர் அக்னி ஆராதிக்க சொல்லி போனார் கதை–
ப்ரஹ்ம உபதேசம் செய்யாமல் போக அக்னி ஆராதிக்க
ஸ்ரத்தை பார்த்து அக்னி தேவனே உபதேசம் செய்ய–தேஜஸ் ப்ரஹ்ம வித்து ஆனதே–பிரகாசிக்க–
அது போலே திங்கள் திரு முகத்து சேய் இழையார்
கிருஷ்ண விஷயீகார யோக்யதையால் தேஜஸ் மிக்கு–
தூ மலர் தூவி–அடி போற்று–சென்று சேவித்து–செய்வது எல்லாம்–அங்கு
திருவாராதனீய ஸ்தலம்–திவ்ய ஆஸ்தானம்–நப்பின்னை பிராட்டி கட்டிலே–திவ்ய சிம்ஹாசனத்திலே
அப்பறை-
நாட்டுக்கு சொன்ன பறை இல்லை –நீ தாராய்–அவன் தர இவர்கள் கொண்டவாற்றை-
தப்புக்கு பொறை வளைப்பித்து–ஆஸ்ரணீய க்ரமம் தப்பாமல் பலம் பெற்ற–
பட்டர் பிரான் கோதை–
அணி புதுவை-சீர் மல்கும் ஆய்ப்பாடி நந்த கோபர் -கண்ணன் பற்றி
தனக்கு பெரியாழ்வார் உத்தேச்யம்-அவர் அபிமானம் ஸ்ரீ வில்லிபுத்தூர்-நந்த கோபன் கிருஷ்ணன் மட்டும்
இங்கு வடபெரும் கோயில் உடையான் -பெரியாழ்வார்-பிராட்டிக்கு மிதலை அயோதியை-
பிறவியும் புக்க இடம் ஒரே இடம்
மதுரையார் மன்னனார் -அடி தொட்டு மன்னார் -ரெங்க மன்னர்-
துவாராபதி மன்னனார் மன்னர்-அர்ச்சை ரெங்கன் விபவம் மன்னார் ஆசை பட்டாள்
கலந்து
சேவை —அரங்கர்க்கு -இன்னிசையால் பாடி கொடுத்தாள்–பொன்னும் முத்தும் மணியும் மாணிக்கமும் ஆபரணம் போலே
அணி புதுவை —
பிரணவம் போலே–அகாரவாச்யன் உகாரவாச்யன் பிராட்டி மகார வாச்யன் பெரியாழ்வார் திருவடி –
மூவரும் ஒரே சிம்காசனம்
மூவருக்கும் பிரதான்யம்–முப்புரி ஊட்டிய திவ்ய தேசம் அணி புதுவை
தண் அம் துழாய் அழல் போல் சக்கரத்து அண்ணல் -பராங்குச நாயகிக்கு கொதிக்கும்–
திருத் துழாய் சூடு -தாமச குணம் பஸ்மம் ஆக்கும்
தாமரை குளிர்ச்சி–ஸ்வாதந்த்ர்யம் இல்லை–பிரிந்தவன் மாலை போலே இல்லையே சேர்ப்பவர் மாலை–
பட்டர் பிரான் பிராமணருக்கு உபகாரகன்
வேதப்பயன்-தாத்பர்யம் அருளி-மறை நான்கும் முன் ஓதிய பட்டனுக்கு
அரங்கமேய அந்தணன் -உபகாரம் -பட்டர் பிரான்
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–-நான்முகன் திருவந்தாதி-18-
பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-
நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும் அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –
ஈஸ்வரன் என்று பாராதே-தனக்கு எதிரியான ஹிரண்யனை-கூரிய உகிராலே மார்விரண்டு பிளவாகக் கீண்ட-நரசிம்ஹத்தை
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு
பாடும் பெரியாழ்வார் போல்வார்–சாத்தி இருப்பார் ஆகிறார் – வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-
பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய் இருக்கும் ஆண்டாள் போல்வார் –தவம் -ஸூ க்ருதம்-
வங்க கடல் -ஸ்ரீ வில்லிபுத்தூர் அனுபவம் -ஸூ சகம்-அணி புதுவை –
மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லி புத்தூர்
ஆண்டாளுடைய குழலிலே -தூவி யம் புள்ளுடைத் தெய்வ வண்டு நுழைந்து அபி நிவேசம் கொண்டது பிரசித்தம் –
மென்னடைய அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் -வேண்டிய வேதங்களோதி –
அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் –
பராசாரய வசிஷ்ட நப்தாரம் -வியாசர் சொல்லுமா போலே–பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு உத்கர்ஷ ஹேது
நந்தகோபன் மகன்–ஆழ்வார் சம்பந்தம் இவளுக்கு ஏற்றம்–விட்டு சித்தர் தங்கள் தேவர் –
இவருக்கு தேவராய் நிறம் பெற்றான் அவனும்
இவர் மகளாய் ஒரு மகள் தன்னை உடையேன் -தமக்கு உத்கர்ஷம்–அவளை இட்டு இவருக்கு பெருமை –
சொன்ன–அனுகாரத்தால் அனுபவம் புற வெள்ளம் இட்டு–கோபிமார்–பாவனை ஆழ்வார்–பும்ச்த்வம் பெண்ணாக ஏறிட்டு
சுருதி சதசிரஸ்–மேகம் பருகின சமுத்ராம்பு போலே இவர் வாயினவால் திருந்தி-வேதம் தான் தோன்றி
பிறப்பால் பெற்ற ஏற்றம்–ஷீராப்தி நாதன் விட ஒருத்தி மகனாய் வந்தவன் ஏற்றம்
பெரியாழ்வார்–ஆசார்ய சம்பந்தமே பிரதானம்
குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே–ஆசார்யர் சம்பந்தம் ஒன்றே ஏற்றம்
ராமானுஜ தாசன் –
சரம ஸ்லோகங்களை சொல் – பேச்சு -வார்த்தை என்று சொல்லி அருளி தள்ளி –
ஆசார்ய அபிமானமே உத்தாரகம் -மெய்ம்மைப் பெரு வார்த்தை -என்பதை காட்டி அருளினாள்
பந்த மோஷ ஹேது அவன்–ஆசார்யர்-நீ விட்டாலும் உன்னை நாம் விடோம் –
அச்சுத சேவிதாம் கிணற்றின் மேல் பூனை போலே-
ஆசார்யர் -மோஷ ஏக ஹேதுவானவர்-ஆசார்ய அபிமானமே உத்தாராகம்
நல்ல என் தோழி –வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே –விஷ்ணு சித்தன் கோதை -என்றே
தண் தெறியல் பட்டர் பிரான் கோதை சொன்ன –
ஆழ்வார் பிராட்டி பெருமாள் -வட பெரும் கோயில் ஆழ்வார் நாச்சியார் ஆழ்வார் -மூவரையும் சேவிக்கும் படி அணி புதுவை
ஹம்சம் போலே -வேத -அன்னமாய் அங்கு அருமறை பயந்தான் —
மென்னடைய அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் தனது திருத் தகப்பனாரை –ஆண்டாள் அருளி
விளையாட்டாகிய க்ரீடார்த்தம் சாஸ்திரமே தரமோ பரமோ மதக
மின்னனைய நுண் இடையாள் விரிகுழல் –மேல் நுழைந்த வண்டு -பெரியாழ்வார் ஆண்டாள் பற்றி அருளி ––
கமல தண் தெரியல் –
துளசி மாலை -ஊர்த்த்வ புண்டர -ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்—
திருஅருள்
லஷ்மி கடாஷம் பெற்று இன்புறுவர்
இன்பக்கடலில் அழுந்துவார்–அம்ருத சாகரம் -கதய த்ரயம் கடைசியில் –
சங்கத் தமிழ் மாலை முப்பத்தையும் நிகமித்து அருளுகிறாள்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்
ஸ்ரேயோ நஹ்ய ரவிந்த லோசன மன காந்தா பிரசாதத்ருதே சமஸ்ருத்யஷர வைஷ்ணவாத்
வஸூ நருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித் -ஸ்தோத்ர ரத்னம்
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு-
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் -அமுதனார்
ஓங்கி -நோன்பு அனுஷ்டிப்பதால் பலன் சொல்லும்
இது -திருப்பாவை கற்றாருக்கு பலம் சொல்லும்
நாமாக பலனை விரும்பினால் சூத்திர பலன் விரும்புவோம்
நித்ய தம்பதி உடைய கிருபா லாபம் பிராட்டியே அருளிச் செய்த பிரபந்தம் –
அந்தமில் பேர் இன்பம் நிஸ் சந்தேஹம் -தேறி இருக்கலாம்
திருவின் அருள்
திரு -சிறந்த அருள் என்றுமாம்
செல்வத் திருமாலால் -பிராட்டி சம்பந்தம் அங்கேயே அனுசந்தேயம்
இன்புறுவர் எம்பாவாய்-
பிராட்டியும் தாமும் ஸந்நிஹிதமாம் படி பிரசாதத்தைப் பெற்று -பகவத் சம்ச்லேஷத்தால் வந்த ஆனந்தம் பெறுவர் –
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் / திருமாலால் அருளப் பட்ட சடகோபன் / திரு மா மகளால் அருள் மாரி/
நிரூபக தர்மம் / இசலி இசலி இருவரும் பரியக் கடவர் –
கடல் கடைந்த
ஸ்ருதி சாகரம் -திராவிட வேத சாகரம் கடைந்து –
மறைப் பாற் கடலைத் திரு நாவின் மந்த்ரத்தால் கடைந்து
துறைப் பால் படுத்தித் தமிழ் ஆயிரத்தில் சுவை அமிழ்தம்
கறைப் பாம்பணை பள்ளி யன்பன் ஈட்டம் களித்து இருந்த
நிறைப் பான் கழல் அன்றி ஜன்மம் விடாய்க்கு நிழல் இல்லையே –பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
மாதவன் -மஹா தபஸ்வீ
கேசவன் இந்த்ரியங்களாகிற பல குதிரைகளை நிரசித்த ஜிதேந்த்ரியர்
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பத ஆஸ்ரிதாம் ராமானுஜம்
திங்கள் திரு முகத்து சேயிழையார் –தாபத்ரயங்கள் நீங்கிய ஆத்ம குணங்கள் நிறைந்த ஸும்ய-சவ்ம்ய- திருமுக மண்டலங்கள்
கோபிகள் கண்ணைப் பெற்றால் போலே சிஷ்யர்கள் ஆச்சார்யர் சந்நிதியாலே பேறு பெற்று –
அத்ர பரத்ர சாபி -ஆச்சார்யர் திருவடிகளை அடைந்து மகிழ்வர் என்றவாறு
சர்வ ஸ்வாமிநியாய்-சர்வேஸ்வரனுக்கு சேஷமாய் -சஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார்
இத்தலையில் வாத்சல்யாதி அதிசயத்தாலும்
அத்தலையில் வாலப்தி அதிசயத்தாலும்
புருஷகாரமாய் கொண்டு இஜ் ஜீவர்களுக்கு தஞ்சம் ஆகிறாள் –
புருஷகாரத்வமும் உபாயத்வமும் ஏக ஆஸ்ரயத்தில் கூடி இருக்க முடியாதே
திருவருளின் பிரஸ்தாவத்தினால் தலைக் கட்டி அருளுகிறோம் –
இப்பிரபந்தம் கற்றார் நாய்ச்சியாராலும் சர்வேஸ்வரனாலும் சர்வ காலமும் உண்டான
விசேஷ கடாக்ஷத்தைப் பெற்று நித்ய ஸூகிகளாகப் பெறுவர்
இத்தால் யுக்தமான அனுஷ்டானம் இல்லாதார்க்கும் அவர்களுடைய பாசுரமே அவர்கள் பேற்றைத் தரும் -என்று
இப்பாசுரத்தின் ஏற்றத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –
பகவன் நாமங்கள் –
முதலில் நாராயணன் -2-பரமன் -3-உத்தமன் -4-பத்ம நாபன் 5-மாயன் –
6-தாமோதரன் -7-புள்ளரையன் கோ -8-கேசவன் -9-தேவாதிதேவன் -10-மாதவன் –11-வைகுந்தன் -13-புண்ணியன் –
14-மனத்து இனியான் -15-புள்ளின் வாய் கீண்டான் –16-பங்கயக் கண்ணான் -17-மாற்றாரை மாற்று அழிக்க வல்லான் –
18-மணி வண்ணன்19-உம்பர் கோமான் -20-கலி -21-விமலன் -22-மகன் -23-ஊற்றம் உடையான் 24–பெரியான்
25-சுடர் -26-பூவைப் பூ வண்ணன் -27-நெடுமால் -28-கோவிந்தன் -29-மாதவன்-30-கேசவன் -31-திருமால் –
முதலில் கூறிய நாராயண சப்த திரு நாமத்தை மற்றவைகள் உடன் சாமாநாதி கரண மாக்கிப்
பொருள் கூறுவது சாலப் பொருந்தும் –
அதாவது நாராயணனே பரமன் -உத்தமன் -பத்ம நாபன் -மாயன் -தாமோதரன் -மாதவன் –
கேசவன் -திருமால் -என்று கொள்க –
நாராயணனே பரமன் -பரோ மா யஸ்மாத் ஸ பரம -என்று வ்யத்புத்தி இவனில் மேம்பட்டவன் இல்லை –
என்று நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் -என்று பொருள் படும் –
நாராயணனே தாமோதரன் -மேன்மைக்கும் எளிமைக்கும்-பரதவ சௌலப் யங்களுக்கு எல்லை நிலம் அவனே
நாராயணனே மகன் -நாராயண பதம் -ஜகத் காரணத்வம்
அவனே மகன் -பிதா புத்ரேண பிதருமான யோநி யோனவ் -தன் புத்திரன்
ஒருவனை பிதாவாக அபிமானித்து பிறக்கிறான் -இது இறே பிறந்து படைத்த ஐஸ்வர்யம் –
அவன் அவதரித்து ஏற்றம் படைத்தது அவனே –
நாராயணனே திருமால் -அவன் பிரமச்சாரி நாராயணன் இல்லை -ஸ்ரீ மன் நாராயணன் -தேவதாந்தர வ்யாவ்ருத்தி –
இவன் பரமனாயும் மற்றையவர் அபாரமாகளாயும் இருக்க காரணம் இதுவே -மற்றையோர்க்கு ரமா சம்பந்தம்
அபகதம் இறே -இவனே ஸ்ரீயபதி என்றபடி –
ஆக –திருப்பாவையால் சொல்லிற்று ஆயிற்று
வேதார்த்தம் -அதாவது
1-திரு அவதாரமே சர்வ ஸமாச்ரயணீயம் -என்றும்
2-அவ தீர்ணனானவனுடைய வடிவழகே ருசி ஜனகம் -என்றும்
3-ருசியுடையார் ப்ராப்ய த்வரையாலே அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
4-இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் அடங்க உத்தேசியர் -என்றும்
5-ப்ராப்யமாகிறது -அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் -என்றும்
6-தத் சாதனமும் அவன் திருவருளே -என்றும் சொல்லிற்று ஆயிற்று –
அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம்-இதற்கு நம் ஸ்வாமி
சம்சார மக்நான் -உத்தாரண அர்த்தமாக சஸ்த்ரா பாணிநா -தசம அவதாரம்-குரு பரம்பரையில் –
பத்தாவது திரு அவதாரம் -நம் உடையவர் -கத்யத்தில் –
பரபக்தி பரஞ்ஞான பரம பக்தி க்ருத பரி பூர்ண -அனவரத -நித்ய -விசத தம -அநந்ய ப்ரயோஜன –
அனவதிக அதிசய ப்ரிய பகவத் அனுபவஹோஹம்
தாதாவித பகவத் அனுபவ ஜெனித அனவதிக அதிசய ப்ரீதி காரித
அசேஷ அவஸ்த உசித அசேஷ சேஷதைக ரதி ரூப நித்ய கிங்கரோ பவானி –
என்று அன்றோ அருளிச் செய்கிறார் -பரம பக்தி பரமபதத்தில் தானே சித்திக்கும் –
இருந்தாலும் அதனால் விளையும் அனுபவ பிரீதி கார்ய கைங்கர்யம் இங்கேயே அவன் அருளக் குறை இல்லையே –
இத்தை அன்றோ ஸ்வாமி நமக்காக பிரார்த்தித்து பெற்றுக் கொடுத்து அருளுகிறார் –
பர பக்தி -வர பக்தியில் -தொடங்கி -மூன்று அவஸ்தைகள் –
1-அவனுக்கு பிரியமாகவும் -2-அவனுக்கு தாரகமாகவும் –
3–நமக்கு உண்ணும் சோறு சர்வமும் வாஸூ தேவம் என்ற அவஸ்தை -மூன்றும் முதலில் வர வேண்டுமே –
இத்தை ஸ்தான த்ரய பக்தி என்று ஸ்ரீ கீதையிலும் கத்யத்திலும் உண்டே –
இவை வந்த பின்பு நம் காதலையும் ஆழ்வார் அபிநிவேசம் போலே ஆயிரம் குணங்களையும் காட்டி வளர்த்து
பர பக்தி பர ஞானம் பரம பக்தி அவஸ்தைகளை விளைவிப்பானே –
ஸ்வாமி திரு வருளால் இந்த நிலைகளை நாமும் பெற்று -அதனால்
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
——————————————————–
இங்கே “வங்கக் கடல் கடைந்த”வனை ‘மாதவன்’ என்று ஆண்டாள் அழைக்கக் காரணம்,
அவரது ஆச்சார்யனும், தந்தையும் ஆன பெரியாழ்வாரின் உபதேசத்தை மனதில் வைத்தே என்று ஒரு கருத்துண்டு,
அதாவது, பெரியாழ்வார் பாடியது போல,
“மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்பதோர் தெய்வத்தை நாட்டி” !
மேலும், மாதவன் என்பதற்கு பிராட்டியோடு கூடி இருப்பவன் என்று பொருள் இருப்பதால்,
திருப்பாற்கடலைக் கடைந்து அப்போது தோன்றிய திருமகளை தன் திருமார்பில் தரித்துக் கொண்ட
அம்மாயப்பிரானை ‘மாதவன்’ என்றழைப்பது பொருத்தமாகிறது !
‘கேசவன்’ என்ற திருநாமம் பரமனது பரத்துவத்தை உணர்த்துகிறது.
கேசவனில் உள்ள ‘க’ சப்தம் பிரம்மனையும், ‘சவன்’ ஈஸ்வரனையும் குறிக்கின்றன.
அதாவது, பிரம்மனும், சிவனும் திருமாலுக்குள் அடக்கம் என்பதைச் சொல்கிறது.
“வங்கக்கடல் கடைந்த” என்ற திருச்செயல், அடியார் மேல் பரமனுக்குள்ள வாத்சல்யத்தையும்,
பரமனது எங்கும் வியாபித்திருக்கும் நிலையையும் உள்ளர்த்தமாக கொண்டிருப்பதாக பெரியோர் கூறுவர்.
‘பட்டர்பிரான் கோதை சொன்ன’ என்று அறிவிப்பதன் மூலம், தன் தந்தையே தன் ஆச்சார்யன் என்பதை உணர்த்துகிறார்,
சூடிக் கொடுத்த நாச்சியார் ! மதுரகவியாழ்வாரும், “தென்குருகூர் நம்பிக்கு அன்பானை மதுரகவி சொன்ன சொல்” என்று பாடியே,
கண்ணிநுண் சிறுத்தாம்பை நிறைவு செய்துள்ளார்.
ஆகையால், ஆண்டாளின் திருப்பாவையும், மதுரகவியின் கண்ணிநுண் சிறுத்தாம்பும் ஆச்சார்யனை
முன்னிறுத்தியதால், தனிச்சிறப்பு பெற்ற பிரபந்தங்களாகக் கருதப்படுகின்றன.
செங்கண் – பரமனின் திருக்கண்களானது, திவ்யப்பிரபந்தத்தில் பல இடங்களில் சுட்டப்பட்டுள்ளன !
அவை அழகும் வசீகரமும் கொண்டதோடன்றி, பரமனின் அருட் கடாட்சத்தை அடியார்களிடம் செலுத்தும்
திரு அவயங்களாக அறியப்படுகின்றன ! ஆழ்வார்கள் பரந்தாமனின் திருக்கண்கள் மேல் பெருங்காதல் கொண்டவர்கள் !!!
ஆண்டாளும், கண்ணனது கருணை பொழியும் கண்களை, திருப்பாவையில்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்* பங்கயக் கண்ணானை
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்* அங்கண் இரண்டும்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்–என்று 5 இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
“கோவிந்தா” என்ற திருநாமம் திருப்பாவையில் மூன்று முறை
(கூடாரை வெல்லும், கறவைகள் பின்சென்று, சிற்றஞ்சிறுகாலே வந்துன்னை என்று 3 பாசுரங்களில்) குறிப்பிடப்பட்டிருப்பது போல,
“நாராயணா” என்ற திருநாமமும்
மார்கழித் திங்கள் மதி நிறைந்த – “நாராயணனே நமக்கு பறை தருவான்” என்றும்
கீசுகீசென்று ஆனைச்சாத்தன் கலந்து – “நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்” என்றும்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் – “நாற்றத் துழாய் முடி நாராயணன்” என்றும்–மூன்று முறை வருகின்றன !
செல்வத் திருமால் – பரமன் ஆன ஸ்ரீநிவாசன், அளவிட முடியாத ஐசுவர்யங்களையும், அடியார்கள் பால்
பேரன்பும், கருணையும் உடையவன், த்வய மந்த்ரத்தின் பூர்வப் பகுதியின் ‘ஸ்ரீமத்’ சப்தம்
‘மாதவன்’ என்று வரும் பாசுரத்தின் முதலடியிலும்,
உத்தரப் பகுதியினுடையது ‘செல்வத் திருமால்’ என்று வரும் கடைசி அடியிலும் வெளிப்படுவது சிறப்பு !
‘எங்கும் திருவருள் பெற்று” என்பது இம்மையிலும், மறுமையிலும் அவன் திருவருளை வேண்டுவதைக் குறிக்கிறது.
பரமன் வங்கக்கடலை கடைந்தது தேவர்களுக்கு அமுதம் எடுத்துத் தர மட்டுமல்ல,
தனக்குரியவளான திருமகளையும் மீட்டெடுத்து தன் திருமார்பில் தரித்துக் கொள்ளவும் தான் 🙂
கருணை மாதாவான திருவை பரமன் தன் இதயத்திற்கு அருகில் வைத்துக் கொண்டதால், அடியவர்க்கும் நல்லது தான்.
பிராட்டியின் நெருக்கத்தால், பரமன் நமது குறைகளையும், பாவங்களையும் எளிதில் மன்னித்து விடுகிறான் !
தனக்குரிய அடியவரையும் (அவர் சிறியரோ பெரியரோ!) தனதாக்கிக் கொள்ளும் வல்லமை மிக்கவன் அம்மாயன்.
ஆண்டாள் அன்றே, “விஷ்ணுசித்தரின் மகள் பாடிய திருப்பாவைப் பாசுரங்களைப் பாடி, நோன்பு அனுசரிப்பவர்களுக்கு,
செல்வத் திருமாலின் திருவருள் கிடைத்து, பேரின்ப நிலையைப் பெறுவர்” என்று சொல்லித் தான் திருப்பாவையை நிறைவு செய்தாள்!
அவளுக்குக் கிட்டிய பேறு அவள் காலத்திற்குப் பின் வரும் மாந்தர்க்கும் கிட்ட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம்
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையிடம் இருந்தது!
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று ஆண்டாள் சொல்லிச் சென்று விட்டாள்,
திருப்பாவையை ஒரு சிறுமியாக தான் இயற்றியபோதே!
“ஈரிரண்டு மால்வரைத்தோள்” என்று ஆண்டாள் சொன்னதில் ஒரு சுவை இருக்கிறது! அதாவது,
திருப்பாவையைத் தப்பாமல் உரைக்கும் அடியவரை, இரு கைகள் போதாது என்று பரந்தாமன்
தனது நான்கு கைகளால் அரவணைப்பானாம்!
அது போலவே, “திருமுகத்துச் செல்வத்திருமாலால்” என்று சொல்லும்போது,
திரு(மகளின்) சம்பந்தத்தாலேயே பரமன் செல்வத் திருமால் ஆகிறான் என்பதை உணர்க!
ஆக, திருப்பாவை ஓதும் அடியவர் லட்சுமி கடாட்சம் பெற்று இன்புறுவர்.
வருடாவருடம் நடக்கும் திருவில்லிபுத்தூர் உத்சவமும், தைலக்காப்பும், பிரியாவிடை சேவையும் விளங்குகின்றன என்றால் அது மிகையில்லை!
வேதப்பிரான் பட்டர் அருளியவை
கோதை பிறந்தவூர் கோவிந்தன வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர் – நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான்மறைகளோ துமூர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ்
ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.
ஸ்ரீ மணவாளமாமுனிகள் தன்னுடைய உபதேச ரத்தினமாலையில் ஆண்டாளை இவ்வாறு புகழ்கிறார்
இன்றோ திருவாடிப்பூர மெமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் – குன்றாத
வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய். (22)
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்
குண்டோமனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு (23)
அஞ்சு குடிக்கொரு(*) சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து (24)
தேசிகன் பிரபந்தம் – ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளியவை
வேயர்புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம்
மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்
தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்
தூழாய்மாலை முடிசூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும்
நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை
ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும்
அன்புடனே யடியேனுக்குகருள் செய்நீயே
வாழி திருநாமம்:
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே.
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply