ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்-
லஷ்மீ நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அசமத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் –
யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹத தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோ பகவத தயைக சிந்தோ
ராமானுஜச்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –
மாதா பிதா யுவதய தநயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மத் அன்வயானாம்
ஆத்யஸ்ய ந குலபதே வகுளாபிராமம்
ஸ்ரீ மத் ததன்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா
பூதம் சரச்ச மகாதாஹ்வய பட்ட நாத
ஸ்ரீ பக்திசார குலசேகர யோகிவாஹான்
பக்தான்க்ரி ரேணு பரகால யதீந்திர மிஸ்ரான்
ஸ்ரீ மத் பராங்குச முநிம் பிரண தோச்மி நித்யம்-
———————-
லோக குரும் குருபிஸ் சஹா பூர்வை கூர குலோத்தம தாசம் உதாரம்
ஸ்ரீ நக பதி அபிராம வரே ஸௌ தீப்ரசயம் வரயோகி ந மீடே–ரஹஸ்யரார்த்த பரம்பரை பற்றிய தனியன் -மா முனிகள்-
பூர்வர்கள் அனைவரையும் லோக குருவையும் சொல்லி கூர குலோத்தமை தாசர் அருள் பெற்ற இவர்களையும் சொல்லி அருளுகிறார் –
நகபதி திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை –
அபிராம வர சவ்–அழகிய மணவாள பெருமாள் பிள்ளை -மாப்பிள்ளை-தீப்ரசயம் வரயோகி-
திகழக் கிடந்தான் திரு நாவீறுடையான் தாதர் -மா முனிகளின் திருத் தகப்பனார் –
லோகாச்சார்ய குரவே கிருஷ்ண பாதச்ய சூனவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம –அமுத மயமான அஷ்டாதச ரஹஸ்யங்கள் அருளிய கிருஷ்ண பாதஸ்ய சோனு திருக் குமாரர்
லோகாச்சார்ய க்ருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
சமஸ்தாத்ம குண வாஸம் வந்தே கூர குலோத்தமம்–திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்த தனியன்
ஸமஸ்த ஆத்ம குண வாசம் உள்ள கூர குலோத்தம தாசர்
நம ஸ்ரீ சைல நாதாயா குந்தீ நகர ஜன்மனே
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே–மா முனிகள் அருளிச் செய்தது -தம் ஆச்சார்யர் மேல் –
லோகாச்சார்ய பதாம் போஜ ராஜ ஹம்சாயித அந்தரம்
ஞான வைராக்ய ஜலதிம் வந்தே ஸௌம்ய வரம் குரும்-கோட்டூர் தாய் வழி பாட்டனார் -அழகிய மணவாள பிள்ளை –ராஜ ஹம்சம் –
ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாசம் அமலம் அசேஷ சாஸ்திர விதம்
சுந்தர வரகுரு கர்ணா கந்தளித ஞான மந்த்ரம் கலையே–திரு நாவீறுடைய பிரான் –மா முனிகள் தம் தகப்பனார் மேல் அருளிச் செய்த தனியன்
-திகழ்க் கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் -அமலம் – குற்றம் அற்ற /ஞான மந்த்ரம் -ஞான கோயில் போலே –
கோதில் உலகாசிரியன் கூர குலோத்தம தாசர்
தீதில் திருமலை யாழ்வார் செழுங்குரவை மணவாளர்
ஒதரிய புகழ் நா வீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாள முனி பொன்னடிகள் போற்றுவனே
முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்தவரே சீர் வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின்
ஆறு பிரகரணமாக வகுக்கும் ஸ்லோகம் –
1–புருஷகார வைபவஞ்ச–
2– சாதனச்ய கௌ ரவம்–
3–தத் அதிகாரி க்ருத்யம் –
4–அஸ்ய சத்குரு உபசேவனம்-
5–ஹரிதயாம் அஹேதுகீம்–
6–குரோர் உபாயதாஞ்ச யோ–
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே
1–புருஷகார வைபவஞ்ச—அவதாரிகை முதல் -4—ஸூ த்ரங்கள் -5-முதல் -22-ஸூ த்ரங்கள்/ மேல்- -18-ஸூ த்ரங்கள் புருஷகார வைபவம்
2– சாதனச்ய கௌ ரவம்—உபாயமான பெருமான் மேன்மை -57-ஸூ த்ரங்கள் –23- முதல் -70/ -ஸூ த்ரங்கள் -வரை / 71-79-ஸூ த்ரங்கள்-பிராசங்கிகம்
3–தத் அதிகாரி க்ருத்யம்-பிரபன்னன் செய்ய வேண்டியவை -நிஷ்டை –228– –ஸூ த்ரங்கள் -80-முதல் –307 ஸூ த்ரங்கள்-வரை
இதுவரை -பூர்வ பாகம் – த்வயார்த்தம் -இவை அனைத்தும்
இந்த -307-ஸூ த்ரங்களில் /பூர்வ த்வய வார்த்தார்த்தம் -155-உத்தர த்வய வார்த்தை அர்த்தம் -148-/
மேலே உத்தர பாகம் ஆச்சார்யர் பிரபாவம் –
4–அஸ்ய சத்குரு உபசேவனம்–58–ஸூ த்ரங்கள் –308-முதல் -365-ஸூ த்ரங்கள் வரை
5–ஹரிதயாம் அஹேதுகீம்–வரவாறு ஒன்றும் இல்லை -ஹேது இல்லாமல் தானே அவன் தயை —41 –ஸூ த்ரங்கள் –366–முதல் -406 –வரை
6–குரோர் உபாயதாஞ்ச யோ–ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் —57-ஸூ த்ரங்கள் -407-முதல் -463-ஸூ த்ரங்கள் வரை –
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே
சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸந்க்ரஹ மஹாரசா வாக்ய ஜாதம்
சர்வஞ்ஞ லோககுரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
ஆகண்ட உத்கண்ட வைகுண்ட பிரியானாம் கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்—முமுஷுக்களுக்கு கண்ட பூஷணம் –
ஆறு பிரகரணமாக வகுக்கும் பாட்டு –
1–பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை
2–ஆறு
3–பெறுவான் முறை
4–அவன் கூறு குருவை பனுவல்
5–கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
6–மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே –
ஒன்பது பிரகரணமாக வகுக்கும் பாட்டு –
1–திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்
2–திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்
3–அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்
4–மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்
5–ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்
6–நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்
7–சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர்தன்மையும்
8–தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்
9–மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன்
எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்
–திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்-
2–திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்—உபாய பிரகரணம் -23-முதல் –
3–அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்–இதுவும் உபாய பிரகரணம்
4–மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்–சித்த உபாய நிஷ்டர்
5–ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்–பிரபன்ன தின சரியை –
6–நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்–ஆச்சார்ய உபசேவனம் பிரகரணம் -ஆச்சார்ய லக்ஷணம்
7–சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர்தன்மையும்–சிஷ்யர் லக்ஷணம் –
8–தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்–ஹேது இல்லாமல் –
9–மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்–ஆச்சார்ய உபாய உபேய வைபவம் –
லோகாச்சார்ய க்ருதே லோகஹிதே வசன பூஷண
தத்வார்த்த தர்சி நோ லோகே தந் நிஷ்டாச்ச சூதுர்லபா-
ஜகதாச்சார்யா ரசிதே ஸ்ரீ மத் வசன பூஷணே
தத்வ ஞாநஞ்ச தந் நிஷ்டாஞ்ச தேஹி நாத யதீந்திர மே–இந்த நிஷ்டைக்கும் யதீந்த்ரர் கிருபையே உதவ வேண்டும் –
———————————
ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -முதல் படி –
தஸ்ய பிரகிருதி லீனஸ்ய -சலித்து -வேத தாத்பர்யமான –திருமந்திரம் -பிரணவம் -அகாரம் -சாரதமம் -யாதாம்யா ஞானம் –
பிரகர்ஷேன-ஸ்தோத்ரம் பண்ணப்படுகிறான் பிரணவத்தால் -பிரணவம் சொல்லிக் கொண்டே ஆத்ம தன்னை ஸமர்ப்பிக்கக் கடவன் –
ரஹஸ்ய த்ரயம் -20-சப்தங்கள் -65-எழுத்துக்கள் -/
அஷ்ட ஸ்லோகி ஸ்ரீ பராசர பட்டர் /
ஐப்பசி திருவோணம் -பிள்ளை லோகாச்சார்யார் -திருவவதாரம் -முடும்பை -வடக்குத் திரு வீதிப்பிள்ளை -திருக் குமாரர் –
தத்வ த்ரயம் விளக்கம் -5-/ ரகசிய த்ரய விளக்கம் -8-/ சம்ப்ரதாய விளக்கம் -5-
=1323-நம்பெருமாளை ரக்ஷணம் -பிரமாணம் பிரமேயம் இரண்டையும் ரக்ஷணம் –
-1205-/-1325-/ -1323-புறப்பட்டார் ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து /-1207-நாயனார் அவதாரம் -1323-/
ராமர் இலஷ்மணர் -2-நாள் பின் பிறந்து 2-நாள் முன் போனால் போலே இங்கும்
காட்டு அழகிய சிங்கர் சன்னியிலே காலஷேபம் -/ மனப்பாக்கத்து நம்பி -அவரோ நீர் -பேர் பெருமாள் நியமனப்படி கிரந்தப்படுத்தி –
-1370 —1371-மா முனிகள் திருவவதாரம் -ரஹஸ்யம் விளைந்த மண் -/விசத வாக் சிகாமணி /-1343–73-திரு நக்ஷத்திரங்கள் மா முனிகள் இங்கு –
திருவாயமொழிப் பிள்ளை வியாக்யானம் உண்டு -ஆயி ஜநன்யார்ச்சார்யார் ஜனனி ஆய் -தாய் -போன்ற பரிவால் –அவன் இடமும் அடியார் இடமும் /
நாலூர் ஆச்சான் பிள்ளை மூலம் ஈடு திருவாய்மொழிப் பிள்ளைக்கும் -ஆய் ஸ்வாமிக்கும் -அருளினார் –
தேவ பெருமாளே பிள்ளை லோகாச்சார்யாராக திருவவதாரம் –
ஆச்சார்ய ஹிருதயம் -ஸ்ரீ வசன பூஷணம் -தொடர்பு –
பாகவத பெருமை பேசப்பட்ட கிரந்தங்கள் -கொந்தளிப்பு -ஸ்ரீ ரங்கத்தில்
நம் பிள்ளை அனுக்ரஹத்தால் பிள்ளை லோகாச்சார்யார் -நம் பெருமாள் அனுக்ரஹத்தால் நாயனார் -திருவவதாரம் -அதனாலே இவர்கள் திருநாமங்கள் —
நான்கு வீதி புறப்பாடு நான்கு பிரகரணங்கள் த்ராவிட நாம் ஹ்ருதயம் ஆச்சார்ய ஹிருதயம் /
அரும் பதத்துக்கு உரைகளும் உண்டே –திருமழிசை அண்ணா அப்பா அய்யங்கார் –எம்பார் ஜீயர் ஸ்வாமி இருவரும் -அருளி உள்ளார்கள் –
குன்றத்தூய ஐயன் ஸ்வாமி மீமாம்ஸா பாஷ்யம் ஸ்ரீ வசன பூஷணத்துக்கு சமஸ்க்ருத வியாக்யானம் -பூர்வ பக்ஷம் சொல்லி சித்தாந்தித்து அருளி உள்ளார் –
தத்வ த்ரயம் -அர்த்த பஞ்சகம்–அறுத்த பஞ்சகம் தீமைகளை அறுக்கும் -அர்ச்சிராதி -ப்ரமேய சேகரம் -தத்வ சேகரம் -ஆகிய ஐந்தும் தத்வ த்ரய விவரணம்
முமுஷுப்படி –பரந்த படி யாதிருச்சிக்க படி ஸ்ரீ யப்படி-தனி பிரணவம் -தனி த்வயம் -தனி சரமம் —சார ஸங்க்ரஹம் -ஆகிய எட்டும் -ரஹஸ்ய த்ரய விவரணம்
சம்சார சாம்ராஜ்யம் -(அடவி படாவி -காடு-பிரமித்து சாம்ராஜ்யம் என்று எண்ணுகிறோம் )-நவரத்ன மாலை -நவ வித சம்பந்தம் –
பிரபன்ன பரித்ராணம் -ஸ்ரீ வசன பூஷணம் -ஆகிய ஐந்தும் -ஸம்ப்ரதாயார்த்த விவரணம் –
ஸ்ரீ சானு தாசர் –தேவ ராஜர் –ஆயி ஸ்வாமிகள் –மா முனிகள் -இருவரும் நடுவில் -சந்தித்து -/
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ—ஆழ்வாரோ கிருஷ்ணனோ –எந்தை அவர் மூவரில் யார் –
-விஷமிகள் சொத்தை -அனுக்ரஹிக்க ஆசைப்படுபவர் பொருளை களவாடுகிறேன் பிரமாணம் -ஞானப்பிரான் விக்ரஹம் மட்டும் திரும்பி வாங்கி வாழ்ந்தார் –
நம் ஆயி இவர் -மா முனிகள் –
அவதாரிகை -ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் அருளிச் செய்தது –
சரம அர்த்தம் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -பிராமண சாரம்
-சரம சேஷி பிரமேய சாரம் சதாச்சார்யன் -/
தத் சேஷ பூதரே பிரமாத்ரூ சார பூதர் –
தத் சேஷத்வமே சரம ஸ்வரூபம் /
தத் திருவடிகளே சரம உபாயம்
தத் கைங்கர்யமே சரம புருஷார்த்தம்
இதில் விசுவசித்து நிஷ்டை -சரம அர்த்த அபிலாஷைகள் -ஸ்ரீ மதுர கவிகள் தொடக்கி
திரு தகப்பனார் பிள்ளை அளவாக திரு -நா வீறுடையார் -குரு பரம்பரை மூலம் லப்தமான
சரமார்த்த விசேஷத்தை -சர்வ சாரஞ்ஞரும் -உஜ்ஜீவிக்கும் படி லோகாச்சார்யார் பிள்ளை –
நம்பிள்ளை அனுக்ரஹத்தால் பிறந்த பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்கிறார்
பிரபல பிரதானமான வேதம் -கர்ம பாகத்தை விட ப்ரஹ்ம பாவம் பிரபலம் -சாரம் –
அத்தை பற்ற ப்ரஹ்ம நிஷ்டை பிரதிபாத்யமான வசனம் சாரம்
சர்வ விசேஷண விசிஷ்ட ப்ரஹ்மம் விட விசேஷயமான ப்ரஹ்மம் பிரமேய சாரம்
அத்தைப்பற்ற சுலப ப்ரஹ்மம் விசேஷம் பிரமேய சாரம்
சித்த ஸாத்ய நிஷ்டர் -சாத்தனாந்தர நிஷ்டரை விட –
சரம உபாய நிஷ்டர் பிரமாத்ரூ சார பூதர்
ஒன்பது பிரகரணங்கள்
சாரார்த்த பிரபந்த அதிஷ்டித்தை -முதல் நான்கு ஸூ த்ரங்கள் /ஐந்து முதல் -22-வரை –முதல் பிரகாரணம் -புருஷகார வைபவம்
அடுத்து இரண்டாவது உபாய பிரகரணம் –23-முதல் -114-ஸூ த்ரங்கள் வரை
-115–141-ஸூத்ரங்கள் மூன்றாவது – உபாயாந்தர தியாக ஹேது பிரகாரணம் தோஷங்களை சொல்லும்
நான்காவது -142 -242 -அளவாக சித்த சாதன நிஷ்ட வைபவம் பிரகரணம் –
-243–307-ஸூ த்ரங்கள் பிரபன்ன தினசரியா பிரகரணம் ஐந்தாவது -கீழே உறுதியை சொல்லி நடக்கும் முறை இதில்
-308–320-ஸூ த்ரங்கள் -சதாசார்ய லக்ஷணம் பிரகரணம் -ஆறாவது
-321–365-ஸூ த்ரங்கள் ஸச் சிஷ்யர் லக்ஷண பிரகரணம் -ஏழாவது
-366–406-ஸூ த்ரங்கள் நிர்ஹேதுக தயா பிரகரணம்-எட்டாவது -சம்பந்தம் பொது –
இறுதியில் -407–463-சரம ப்ராப்ய ப்ராபக பிரகரணம் –
————-
மா முனிகள் அருளிச் செய்த – அவதாரிகை
சகல வேத சந்க்ரஹமான திரு மந்த்ரத்தில் -பத த்ரயத்தாலும் -பிரதிபாதிக்க படுகிற
ஆகாரத்ரயமும் –சர்வாத்ம சாதாரணம் ஆகையாலே -யத்ரர்ஷய பிரதம ஜாயே புராண -என்கிற
நித்ய சூரிகளோபாதி-சுத்த சத்வமான பரம பதத்தில் -நித்ய அசங்குசித ஞானராய் கொண்டு –
நிரந்தர பகவத அனுபவ ஜனித-நிரதிசய-அநந்த த்ருப்தராய் இருக்கைக்கு யோக்யதை உண்டாய் இருக்க செய்தேயும் –
சகல -ச கலா -மஹா லஷ்மி உடன் கூடி உள்ள திருமால் -/ க ப்ரஹ்மம் -ல வாங்கிக் கொடுக்கிறாள் ஜீவர்களுக்கு -ஸ்வஸ்தி வாசகம்
கலைகள் உடன் சேர்ந்த வேதம் என்றுமாம் -விடப்பட்ட அனைத்தும் வேதத்தில் திருமந்திரத்தில் உண்டே –
கலையுடன் கூடிய திருமந்திரம் வேத சாரம் ‘
சரம ஸ்லோகம் கலை /ச த்வயம் கூடி உள்ளதால்/ வேத ஸங்க்ரஹம் திரு மந்த்ரம் -ரஹஸ்ய த்ரயம் என்றுமாம் –
சரம ஸ்லோக ஸங்க்ரஹம் த்வயம் அதின் ஸங்க்ரஹம் திருமந்திரம் –
அநந்யார்ஹ சேஷத்வம் அநந்ய சரண்யத்வம் அநந்ய போக்யத்வம் -ஆகார த்ரயம் -அனைவருக்கும் பொது
சகலாத்ம சாதாரணம் -என்று சொல்லாமல் சர்வாத்ம சாதாரணம் என்றது பிரமாணங்கள் சப்தத்தின் படி –அனைவரும் ஸ்வா பாவிக தாச புதர்கள் –
யத்ரர்ஷய பிரதம ஜாயே புராண-மந்த்ர த்ரஷ்டாக்கள் நித்யர்கள் -போலே யோக்யதை யுடைய கனம் சொல்லி –
முக்தர்களை த்ருஷ்டாந்தம் சொல்லாமல் -அவன் திரு உள்ளம் இப்படியே நினைக்கும் -இதுவே பிராப்தம் நமக்கு –
நித்யம் -கால பரிச்சேத ராஹித்யம் -நிரங்குச விஷய பரிச்சேத ராஹித்யம்-
அநாதி மாயயா சூப்த–அஜம் அனித்ரம் அஸ்வப்னம் அத்வைதம் — -என்கிறபடி– தில தைலவத் தாருவஹ்நிவத் துர்விவேச த்ரிகுணத் துரத்யய அநாதி
பகவன் மாயா திரோஹித ஸ்வ பிரகாசராய்-அநாத்ய அவித்யா சஞ்சித அநந்த புண்ய அபுண்ய கர்ம அநு குணமாக –
கத்ய த்ரய ஸ்ரீ ஸூ க்திகளை எடுத்துக் காட்டி -ஸ்ரீ -வசன பிரசுர பூஷணம் –தானே –
மறைக்கப்பட்ட ஆத்மஞானம் -தேஹாதி விலக்ஷணன் என்கிற -அறிவும் இல்லாமல் தர்ம பூத ஞானமும் மறைக்கப் பட்டு
சூரா நர திர்யக் ஸ்தாவர யோநிகள் தோறும் –மாறி மாறி பல பிறப்பும் பிறந்து –திருவாய்மொழி -2-6-9-
பிறந்த பிறந்த ஜன்மங்கள் தோறும் –தேக ஆத்மா அபிமானமும் -ச்வாதந்த்ர்யமும் -அந்ய சேஷத்வமும்-ஆகிற
படு குழிகளில் விழுந்து -தத் அநு குண சாத்திய சாதனங்களிலே மண்டி –
அசித் அவிசேஷ -அசித்துக்கு அருகில் ஒட்டிக் கொண்டு அசித்தே சங்கை கொண்டு -அசித்து தான் என்று எண்ணி -தேவோஹம் –
தேஹாத்ம அபிமானம் -வந்து -ஸ்த்ரீ அன்னம் போன்றவை சாத்தியம் என்று எண்ணி -அர்த்தம் சாதனம்
ஸ்வா தந்தர்யம் -ஸ்வர்க்காதிகள் சாத்தியம் -அதுக்கு சாதனம் யாகாதிகள் -ஜ்யோதிஷ்டம் போல்வன
அந்நிய சேஷத்வம் -தேவதாந்த்ர உபாசித்து தத் சாயுஜ்யம் அடைய நினைக்க /–ஆகிய மூன்று படு குழிகள்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை –திரு விருத்தம் -95-ஏறிட்டுக் -கொண்டு – –
ப்ராப்த சேஷியாய் -பரம ப்ராப்ய பிராபக பூதனாவன் பக்கல் அத்யந்த விமுகராய் –
கர்ப்ப ஜன்ம பால்ய யௌவன வர்த்தக மரண நரகங்கள் ஆகிற அவஸ்தா சப்தகத்திலே நிரந்தர
விதத விவித நிரவதிக துக்கங்களை அநு பவித்து திரிகிற இஸ் சம்சாரி சேதனரிலே-
ஆரேனும் சிலர்க்கு -ஜாயமான கால பகவத் கடாஷ விசேஷத்தாலே–
மது சூதனன் –கடாக்ஷத்துக்கு உபயோகியான ஞானாதி ஷட் குணங்கள் -பகவத் -/விசேஷ கடாக்ஷம் -நிர்ஹேதுகம் –
ரஜஸ் தமஸ்கள் தலை மடிந்து -சத்வம் தலை எடுத்து -மோஷ ருசி உண்டானாலும்–உம்மைத் தொகை-இது –
ஆழ்வான் பள்ளியில் ஓதின ப்ராஹ்மணர் ஜயமான கடாக்ஷம் இல்லாமல் -சர்வசக்தரான தேவரீருக்கு முடியாதோ என்ன –
பிள்ளைக்கு ஜயமான கடாக்ஷம் செய்து அருளி அவ்வழியால் இவனுக்கு செய்து அருளினார் என்கிற ஐதிக்யம் –
பிரார்த்தித்து பெறுவதே புருஷார்த்தம் -என்பதால் -/ருசி வளர்ந்து பக்குவம் ஆக வேண்டுமே –
ஸ்ரீ வசன பூஷண பிரபந்தம் அறிந்து பக்குவம் பட வேண்டுமே -என்றவாறு
தத்வ ஹித புருஷார்த்தங்களை உள்ளபடி அறிந்தே உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும் –
அவை தம்மை சாஸ்திர முகத்தாலே அறிய பார்க்கும் அளவில் -சாஸ்த்ரங்களில்
தலையான வேதமானது –அநந்தா வை வேதா -என்கிறபடி –
அனந்தமாய்-ஸ்வார்த்த நிர்ணயித்தில் -சர்வசாகா ப்ரத்யய நியாயாதி சாபேஷமாய் இருக்கையாலே –
அல்ப மதிகளுக்கு அவஹாகித்து அர்த்த நிச்சயம் பண்ண அரிதாகையாலும்-
அனந்த வேத பாரகராய் -ஸ்வ யோக மகிம சாஷாத்க்ருத பராவர தத்வ விபாகரான –
வ்யாசாதி பரமரிஷிகளாலே -ப்ரணீதங்க ளாய்-வேத உப ப்ருஹ்மணங்களான-ஸ்ம்ருதி இதிகாச புராணங்களிலும்
சார அசார விவேக சதுரர்க்கு ஒழிய -தாத்பர்யாம்சம் தெரியாமையாலும் –
சாரம் பகவத் வைபவம் தத் ஆராதனாம் -அசாரம் அந்நிய வைபவம் –
தத் ஆராதனா –சர்வ நமஸ்காரம் கேசவ கச்சதி எங்கும் கும்பீடு கொள்ளலாம் என்பார் –
பாஷாண்டிகளாக கலியுகத்தில் என்றதே ஸ்ரீ மத பாகவதம் –
அவை போல் அன்றிக்கே சம்சார சேதனோ உஜ்ஜீவன காமனான சர்வேஸ்வரன்-தானே ஆச்சார்யனாய் –-சத்வாரமாக இல்லாமல் –
வெளிப்படுத்தின சகல வேத சாரமான ரஹச்ய த்ரயமும் -அதி சங்கரக தயா அதி கூட அர்த்தங்கள் ஆகையாலும் –
மறைந்துள்ள அர்த்தங்கள் உண்டே –
பகவதாகச்மிக கடாஷ விசேஷத்தாலே–அகஸ்மாத் யாதிருச்சிக்கமாக நிர்ஹேதுக -விசேஷ கடாக்ஷத்தால் –மயர்வற மதி நலம் அருளப் பெற்று –
சகல வேத சாஸ்திர தாத்பர்யங்களையும் –கரதலாமலகமாக சாஷாத்கரித்த பராங்குச பரகாலாதிகளான ஆழ்வார்கள் அருளி செய்த
திராவிட வேத– தத் அங்க –உபாங்களான திவ்ய பிரபந்தங்களும்–
திவ்ய ஞான மூலமாக கொண்டு பிறந்த பிரபந்தங்கள் -திவ்ய ஞானம் -நிர்ஹேதுக கிருபையால் பெற்றது அன்றோ –
வேதம் அங்கம் உப அங்கம் போலே அன்றோ இவையும் –
அளவிலிகளால் அர்த்த தர்சனம் பண்ண போகாமையாலும் –
ருசி பிறந்த சேதனர் இழந்து போம்படி இருக்கையாலே –ஆழ்வாருடைய நிர்கேதுக–பகவத் கடாக்ஷத்தில் வியாவருத்தி –
கடாஷ லப்த திவ்யஞானரான நாதமுனிகள் தொடக்கமாக-
பன்னீராயிரம் உரு -பராங்குச நம்பி -கண்ணி நுண் சிறுத் தாம்பு- இருக்க நிர்ஹேதுகம் என்பான் என் என்னில் –
ஆயிரம் மட்டும் இல்லாமல் அகில தர்சன விசேஷமும் -திவ்ய சஷூஸ் அருளி –
ரஹஸ்ய த்ரய அர்த்தம் -எம்பெருமானார் பவிஷ்யாச்சார்யா விக்ரஹமும் அருளி
சத் சம்ராதாய சித்தராய்-சகல சாஸ்திர நிபுணராய் -பரம தயாளுக்களான–ஸ்வார்த்த நிரபேஷ பர துக்க அஸஹிஷ்ணுக்கள் —
பூர்வாச்சார்யர்கள் அந்த வேதாதிகளில் அர்த்தங்களை சங்க்ரகித்து மந்த மதிகளுக்கும் சூக்ரகமாம் படி
பிரபந்தீகரித்தும் -அதுக்கு மேலே – உபதேசித்தும் போந்தார்கள் –
அப்படியே சம்சாரி சேதனர் இழவு சஹிக்க மாட்டாத பரம கிருபையாலே –
தத் உஜ்ஜீவன அர்த்தமாக தாமும் பல பிரபந்தங்கள் அருளி செய்த பிள்ளை லோகாச்சார்யர் ஆச்சர்ய பரம்பரா
ப்ராரப்தங்களான வர்த்தங்களில் -அவர்கள் தாங்கள் கௌரவ அதிசயத்தாலே -ரஹச்யமாய் உபதேசித்து போந்தமையாய் –
அருமை பெருமைகளை பற்ற-அருமை சூஷ்மம் பெருமை மஹத்வம் – இதுக்கு முன்பு தாமும் பிரகாசிப்பியாமல் அடக்கி கொண்டு போந்தவையுமான அர்த்த
விசேஷங்கள் எல்லாத்தையும் –பின்பு உள்ளாறும் இழக்க ஒண்ணாது என்கிற தம்முடைய க்ருபா அதிசயத்துக்கு மேலே –
பெருமாளும் ஸ்வப்பனத்திலே திரு உள்ளமாய் அருளுகையாலே –ஸ்ரீ வசன பூஷணம் ஆகிற இப் பிரபந்த முகேன
வெளி இட்டு அருளுகிறார் –
முன்பே பேர் அருளாள பெருமாள்-கிருபா மாத்திரை ப்ரசன்னாசார்யர்களையும் அனுக்ரஹிப்பதால் பேர் அருளாளர் -என்ற திரு நாமம் –
தம்முடைய நிர்ஹேதுக கிருபையால் மணர்பாக்கத்தில் இருப்பார் ஒரு நம்பியாரை -இவரும் ஒரு அர்ச்சகர் ஸ்வாமி -திருச்சானூர் கைங்கர்யம் –
பிராட்டிக்கு செய்யும் கைங்கர்யம் காரணமாக விசேஷ கடாக்ஷம் – விசேஷ கடாஷம் பண்ணி அருளி
-தஞ்சமாய் இருப்பன சில அர்த்த விசேஷங்களை
தாமே அவர்க்கு ஸ்வப்பன முகேன அருளி செய்து -நீர் போய் இரண்டு ஆற்றுக்கு நடுவே வர்த்தியும் -இன்னமும் உமக்கு
இவ் அர்த்தங்கள் எல்லாம் விசதமாக நாம் அங்கே
சொல்லுவோம் என்று திரு உள்ளமாய் அருளுகையாலே –
அவர் இங்கே வந்து-ஸ்ரீ ரெங்கம் வந்து – பெரிய பெருமாளை சேவித்து கொண்டு -தமக்கு முன்பே அங்கு அருளி செய்த அர்த்தங்களையும்
அசல் அறியாதபடி அனுசந்த்தித்து கொண்டு -ஏகாந்தமான தொரு கோவிலிலே வர்த்தியா நிற்க செய்தே –
பல மண்டலப் பெருமாள் என்ற காட்டு அழகிய சிங்கர் கோயிலிலே –
தம்முடைய ஸ்ரீ பாதத்துக்கு அந்தரங்கமான முதலிகளும் தாமுமாக பிள்ளை–பிள்ளை லோகாச்சார்யார் – ஒருநாள் அந்த கோவிலிலே
யாத்ருச்சிகமாக எழுந்து அருளி -அவ்விடம் ஏகாந்தமாய் இருக்கையாலே -ரஹச்யார்த்தங்களை
அவர்களுக்கு அருளி செய்து கொண்டு எழுந்து அருளி இரா நிற்க -அவை தமக்கு பேர் அருளாள பெருமாள்
அருளி செய்த அர்த்த விசேஷங்களாய் இருக்கையாலே -அவர் போரவித்தராய் உள்ளின்றும் புறப்பட்டு வந்து
பிள்ளை ஸ்ரீ பாதத்தில் விழுந்து –அவரோ நீர் -என்ன -ஆவது என் -என்று பிள்ளை கேட்டு அருள -பேர் அருளாள பெருமாள்
தமக்கு இவ் அர்த்தங்களை பிரசாதித்து அருளின படியையும் -இத் தேசத்தில் போர விட்டு அருளின படியையும் –
விண்ணப்பம் செய்ய கேட்டு -மிகவும் ஹ்ருஷ்டராய் அவரையுமபிமாநித்து அருள -அவரும் அங்குத்தைக்கு அந்தரங்கராய்
வர்த்திக்கிற நாளிலே -பெருமாள்–அரும் பதத்தில் பெரிய பெருமாள் என்பர் – அவருக்கு ஸ்வப்பனத்திலே இவ் அர்த்தங்கள் மறந்து போகாதபடி
அவற்றை ஒரு ப்ரபந்தம் ஆக்க சொன்னோம் என்று நீர் பிள்ளைக்கு சொல்லும் என்று திரு உள்ளமாக –
அவர் இப்படி பெருமாள் திரு உள்ளமாய் அருளினார் என்று விண்ணப்பம் செய்ய -ஆனால் அப்படி செய்வோம் என்று
திரு உள்ளம் பற்றி அநந்தரம் இப் ப்ரபந்தம் இட்டு அருளினார் என்று பிரசித்தம் இறே-
ரத்ன பிரசுரமான பூஷணத்துக்கு ரத்ன பூஷணம் என்று பேராமாப் போலே –
பூர்வாச்சார்யர்கள் உடைய வசன பிரசுரமாய் அநு சந்தாதாக்களுக்கு ஔஜ்வல்யகரமாய் இருக்கையாலே
இதுக்கு வசன பூஷணம் என்று திருநாமம் ஆயிற்று-
—————–
இதுக்கு திருமழிசை அண்ணாவாப்பங்கார் ஸ்வாமிகளின் அரும்பத விளக்கம்
இங்கே சமாக்யையை விவரிக்கிறார் -ரத்ன பிரசுரமான -என்று தொடங்கி -திருநாமம் ஆயத்தகு -என்னும் அளவாக –
ரத்னம் ச தத் பூஷணம் ச ரத்ன பூஷணம் என்று கர்ம தாரயனை ஆஸ்ரயிக்கும் அளவில் கனக -கந்தலே நைவ ரத்னம் உன்மீல்யதே -என்கிறபடியே
பொன் சேராத ரத்னம் ஒளி யுடைத்தல்லாமையாலே அது பூஷணமாகா மாட்டாது -என்று
கர்ம தாரயனை விட்டு -ரத்னை ப்ரசுரம் ரத்ன ப்ரசுரம் ரத்ன பிரசரம் ச தத் பூஷணம் ச ரத்ன ப்ரசுர பூஷணம் -என்றாய்
சாக பிரிய பார்த்திவ சாக பார்த்திவ -என்றுமா போலே உத்தர பத லோபத்தாலே ப்ரசுர பதம் லுப்தமாய் ரத்ன பூஷணம் என்கிறது –
அதில் பிராஸுர்யத்துக்கு ஸ்வ ஆஸ்ரயம் பிரதி விசேஷ்ய தயா பான ஸ்தானத்தில் ஸ்வ ஆஸ்ரய ஸாமாநாதி கரண தத் விஜாதீய நிஷ்ட அல்பத்வ ப்ரதியோகித்வம் பிராஸுர்யத்திலே தோற்றும் என்னும் நியமத்தாலே
இங்கும் பிராஸுர்ய ஆஸ்ரய ரத்ன சாமானாதிகரண தத் விஜாதீய நிஷ்ட அல்பத்வ ப்ரதியோகித்வம் பிராஸுர்யத்திலே தோற்றக் கடவது –
ரத்ன பிரசுர பூஷணத்தில் ரத்ன விஜாதீயம் தான் பொன்னே யாகை யுசிதம் என்று திரு உள்ளம் பற்றி
-ரத்ன பிரசுரமான பூஷணத்துக்கு ரத்ன பூஷணம் என்று பேராமாப்போலே -என்று அருளிச் செய்கிறார்
சப்தத்துக்கு விஜாதீயமாவது அர்த்தமாய் -அர்த்தம் அற்பமாய் -சப்தம் பிரசுரம் என்று சித்தித்ததாக பிரசங்கிக்கும் ஆகையாலே
வசன பூஷணம் என்ற திரு நாமத்தில் வசன சப்தம் பூர்வாச்சார்ய வசனமாய் –
பிராஸுர்யம் தத் அபேக்ஷயா விசேஷ்யமாய்த் தோற்றும் அளவிலே
பூர்வாச்சார்ய வசன சாமானாதிகரண தத் விஜாதீய நிஷ்ட அல்பத்வ பிரதி யோகிகமாய்த் தோற்றக் கடவது
அதில் பூர்வாச்சார்ய வசன விஜாதீயமாவது ஸ்வ வசனம்
ஸ்வ வசனம் ஸ்வல்பமாய் ஓர்வாச்சார்ய வசனம் பிரசுரமாய் இருக்கை
ஸ்வ கபோல கல்பிதத்வ சங்கா வ்யுதசன த்வாரா ப்ராமாண்யத்துக்கு அத்யந்த அவஸ்யகம் என்று திரு உள்ளம் பற்றி அருளுகிறார் -பூர்வாச்சார்யர்களுடைய வசன பிரசுரமாய் -என்று
————–
கர்த்ரு வைலக்ஷண்யம் -பிரபந்த வைலக்ஷண்யம் -அனுசந்தாக்களுக்கு பூஷணம்
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் விசதமாக சொல்லுவதால் விஷய வைலக்ஷண்யம் /
முக்கிய பிரயோஜனம் உஜ்ஜீவனம் -பிரதான பலன் -தத்வ ஹித பிரயோஜன விசதமான ஞானம் அவாந்தர பலம் –
ஆகார த்ரய ஞானம் அவாந்தர பலம் -உஜ்ஜீவனம் அடைய காமம் வளர்க்கும் –
அனைத்தும் த்வயார்த்தம் -ஆறாகவும் எட்டாகவும்- ரஹஸ்ய த்ரயம்-ஒன்பதாகவும் த்வயத்தை பிரிப்பார்கள் –
அகண்ட நமஸ் சகண்ட நமஸ் -வைத்து -8 -/9-
நான் எனக்கு அறியேன் அல்லேன்-கைங்கர்யம் ஆனந்தம் என்னுடையது அல்ல – -தொழுகை –
அஷ்ட ஸ்லோகி -த்வயம் ஆறு பதமாயும் பத்து அர்த்தம் பட்டர் -கைங்கர்ய பிரார்த்தனை -அடியேன் ஆக வேணும் –
பிரார்த்தனை சப்தம் தருவித்து கொள்ள வேண்டும் –
இப் பிரபந்தத்தில் —சூரணை- 1- வேதார்த்தம் அறுதி இடுவது -என்று தொடங்கி-சூரணை – 4-
அத்தாலே அது முற்பட்டது -என்னும் அளவாக வஷ்யமநார்த்த நிர்ணயக பரமான நிர்த்தேசம்
பண்ணுகிறது ஆகையாலே –பிரபந்த உபோத்காதம் –
இதிஹாச ஸ்ரேஷ்டம் -5–என்று தொடங்கி
பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக -22–என்னும் அளவும் சாபராத சேதனருடைய
சர்வ அபராதங்களையும் சர்வேஸ்வரனை சஹிப்பித்து ரஷிப்பிக்கையே ஸ்வரூபமான புருஷகார வைபவமும்
அந்த புருஷகாரமும் மிகை யாம் படி யான உபாய வைபவமும் சொல்கிறது –
ஞான பாலாதி கொண்டே யாரும் தூண்டாமல் ஸ்ருஷ்டித்து அருளினான் -நிராங்குச ஸ்வாதந்த்ரன் இச்சைப்படி செய்வான்
-இத்தையே புருஷகாரம் மிகை என்னும் படி சித்த உபாய வைலக்ஷண்யம் —
அபராத அனுகுண-தண்ட அபாய விசேஷம் பகவதீய சங்கல்பம் ஏற்படுத்துவதே சஹிப்பிப்பது–பெருமையை சொல்லி -ஷமையின் ஏற்றம் சொல்லி –
அதுக்கும் மேலே -அழகை காட்டி – க்ஷமை வாத்சல்யம் தூண்டி விட்டு / தேவ்யா காருண்ய ரூப்யா -/புருஷனை புருஷனாக ஆக்கி -/
பூர்ணன் ஆக்கி ஷமையால்-/கொடுப்பவனாக ஆக்கி -அலம் புரிந்த நெடும் தடக்கை – / ஜீவனையும் புருஷனாக்கி -/
ஆபீமுக்கியத்துடன் போக வைக்கிறாள் /பரஸ்பர லாபமாக்கி சத்தா லாபம் /பிராட்டி உபாயத்துக்கு உபாயம் என்றவாறு –
ப்ரபத்திக்கு –23-என்று தொடங்கி ஏகாந்தீவ்ய பதேஷ்டவ்ய –79-என்னும் அளவு இவ் உபாய வரண ரூப
பிரபத்தியினுடைய தேச காலாதி நியம அபாவம் -விஷய நியமம் -ஆஸ்ரய விசேஷம் –
இத்தை சாதனமாக்கில் வரும் அவத்யம் -இதன் ஸ்வரூப அங்கங்கள் -முதலானவற்றை சேர சொல்லி
பிரபத்யவனே உபாயம் என்று சாதிக்கையாலே –பூர்வோக்த உபாய சேஷம் ஆகையாலே -உபாய பிரகரணம் –
உபாய வைபவ பிரகரணம் -இதில் -71-முதல் -79 -பிராசங்கிகம் –
உபாயமாக இருக்க வேண்டும் பிரார்த்தனா ரூபமே -/
பிரபத்தி இரண்டு வகை கீதையில் ஸ்வ தந்த்ர பிரபத்தி -அங்க பிரபத்தி -பிராயச்சித்த ஸ்தானத்தில் /
இங்கு உபாய வரணம் -வரித்தல் -இசைத்தல் பிரார்த்தித்தல்–/பல பிரபத்தி ஓன்று -உபாய பிரபத்தி வேறே -/
பக்தி பிரபத்தியே பலமாக இருக்குமே -ருசி வளர பக்தி -சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாழ்கள் சார்வு/ சர்வேஸ்வரன் உபாயம் -/
பலம் அனுபவம் செய்ய யோக்யதை கொடுக்க வேண்டும் -போஜனத்துக்கு சுத்து போலே –
இதில் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்னும் அளவும் பிரதான பிரமேயம் –
மேல் என்னுமளவு-இவ் உபாயத்தை கொண்டு உபேயத்தை பெருவானொரு சேதனனுக்கு உபாய உபேய
அதிகார பிரதான அபேஷிதங்களையும்-(சக்தி-பிராட்டி சக்தியை விட்டாள்
லஜ்ஜை இரு கையும் விட்டேனோ திரௌபதியை போலே ஸ்வ வியாபாரம் தொலைத்து )-(ப்ரேம்ம் அவா ) )
உபாயாந்தர த்யாக ஹேதுக்களையும்—மற்றும் த்யாஜ்ய உபா தேயங்களாய்
உள்ளவற்றையும் விஸ்தரேண சொல்லுகையாலே அதிகாரி நிஷ்டாக்ரமம் சொல்லுகிறது –-80-தொடக்கி -307-வரை –
தான் ஹித உபதேசம் பண்ணும் போது–308-என்று தொடங்கி உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும் –365-வரை
என்னும் அளவாக ஹித உபதேச சமயத்தில் -ஸ்வ ஆச்சார்ய பாரதந்த்ர்யாதிகளான-சதாசார்யா லஷணம்-
( தன் ஆச்சார்யருக்கு திருவடி ஸ்தானமாக நினைக்க வேண்டுமே )
சச்சிஷ்ய லஷணம் -தத் உபயர் பரிமாற்றம் -தீ மனம் கெடுத்த ச்வாச்சார்ய விஷயத்தில் சிஷ்யன் உபகார
ஸ்ம்ருதி க்ரமம்- இவற்றை சொல்லுகையாலே சித்த உபாய நிஷ்டனான அதிகாரி யினுடைய ச்வாச்சார்ய
அநு வர்த்தன க்ரமம் சொல்லுகிறது ( பிரசாத ஜனக வியாபாரங்கள் )
-ஸ்வ தோஷ அநு சந்தானம் பய ஹேது-366- -என்று தொடங்கி
நிவர்தக ஞானம் அபய ஹேது -406–என்னும் அளவாக இவ் அதிகாரிக்கு அத்வேஷம் தொடங்கி –
ப்ராப்தி பலமான கைங்கர்ய பர்யந்தமாக உண்டான பேறுகளுக்கு எல்லாம் ஹேதுவாய்-
ஸ்வ கர்ம பய நிவர்தகமான –பகவன் நிர்கேதுக க்ருபா பிரபாவம் சொல்லுகிறது –
ச்வதந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே -407–என்று தொடங்கி மேல் எல்லாம் மிக்க வேதியர்
வேதத்தின் உள் பொருளான சரமபர்வ நிஷ்டையை வெள்ளியதாக சொல்லுகிறது
(ஆச்சார்ய விசிஷ்ட வேஷமான பெருமாளை பற்றுவதே சரம பர்வ நிஷ்டை–
பரதந்த்ரனாக இருந்து மோக்ஷ பிரதானம் -பரதந்த்ர உபாயம் வேண்டும் -உபாயமும் அவனே -இதுக்குத் தானே ஆச்சார்ய அவதாரம் –
யசோதா பரதந்த்ரன் போலே இதுவும் இச்சையால் ஸ்வா தந்த்ரத்துக்கு குறை இல்லாமல் அவதாரம் – )
-வேதார்த்தம் அறுதி இடுவது என்றுதொடங்கி இவ் அர்த்தத்திலே–ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் – தலைக் கட்டுகையாலே
இப் பிரபந்தத்தில் சரம பிரகரண ப்ரதிபாத்யமான அர்த்தம் வேத தாத்பர்யம் என்னும் இடம்
சம்ப்ரதிபன்னம் –
ஸ்ரீ கீதைக்கு சரம ஸ்லோகம் போலே இறே இப் பிரபந்தத்துக்கு சரம பிரகரணம் –
அங்கு சாத்திய உபாயங்களை உபதேசித்து கொண்டு போந்து -ச்வாதந்த்ர்ய பீதனான அவனுக்கு
அவற்றை தள்ளி சித்தோ உபாயம் காட்டப் பட்டது –
இங்கு சித்த உபாயத்தை சொல்லி கொண்டு போந்து ஈஸ்வர ச்வாதந்த்ரத்துக்கு அஞ்சினவனுக்கு
பிரதமபர்வத்தை தள்ளி சரம பர்வம் காட்டப் பட்டது –(ஸ்வா தந்திரம் அடியாக ஏறிட்டுக் கொண்ட பரதந்தர்ய ஆச்சார்ய விசிஷ்ட ப்ரஹ்மம்-
புருஷகாரம் இருக்கும் பொழுது இதுக்கு அஞ்சுவான் என் என்னில் -அரவிந்த மன காந்தை அன்றோ இவள் –அவன் லீலையை தடுக்க மாட்டாள்-
சம்சாரியை திருத்தி வேண்டுமானால் என்னையும் திருத்தி மோக்ஷம் பிரதானதுக்கத்தானே ஆச்சார்ய அவதாரம் -ப்ரீதிபரமான தாய் சேதனன்
தப்பாக ஐஸ்வர்யாதிகளைக் கேட்டாலும் கொடுப்பாள் -ஆச்சார்யர் தெளிவாக இது அல்பம் அஸ்திரம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லலாமே –
ஹித பரர் அன்றோ-அத்யந்தம் பிரிய தமர் -கொடு உலகம் காட்டேல் -லீலா விபூதி பிரசங்கமே பொறுக்காத ஆச்சார்யர் அன்றோ /
நின் கண் வேட்கை எழுவிப்பன் என்று -பராங்குச பரகால நாத யமுனா யதிவராதிகள்–திருவாய்ப்படியில் வெண்ணெய் போலே ப்ரியதமராய் இருப்பார் —
ந சம்சய அஸ்தி சாஸ்திரம் பக்த பரிசர்யா-சொல்லுமே -தூது விடும் பறவைகள் ஆழ்வாருக்கு முன்னே அவனை காணுமே –
உடையவர் -இடம் அனைத்தையும் சோதி வாய் திறந்து உபய விபூதி சாம்ராஜ்யம் அருளினான் )
ஆக இப்படி ஆறு பிரகரணமாய் ஆறு அர்த்த பிரதிபாதகமாய் இருக்கும் –
ஒன்பது பிரகரணமுமாய்-ஒன்பது அர்த்த பிரதிபாதகமாயுமாய் இருக்கும் என்னவுமாம் –
அந்த பஷத்திலும் பிரதம பிரகரணம் பூர்வவத் –முன்பு போலே இங்கும் -புருஷகார வைபவம் –
மேல் -பிரதிபத்திக்கு -23–என்று தொடங்கி -பகவத் விஷய பிரவ்ருத்தி சேரும்-114- -என்னும் அளவும் –
பூர்வ பிரகரண உக்தோபாய சேஷம் ஆகையால் உபாய பிரகரணம் –புருஷகார உபாய வைபவம் இது என்றவாறு
ப்ரபாந்தர பரித்யாகத்துக்கு-115- -என்று தொடங்கி -ஆகையாலே சுக ரூபமாய் இருக்கும் –141-
என்னும் அளவும் உபாயாந்தர தோஷ பிரகரணம் –
இப் பிரகரணத்தில் -பிரபத்தி உபாய வைலஷ்ண்ய கதனம் ப்ராசங்கிகம்-
இவன் அவனை பெற நினைக்கும் போது -142–என்று தொடங்கி
இடைச்சியாய் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும் –242-என்னும் அளவும்
சித்தோ உபாய நிஷ்டருடைய வைபவ பிரகரணம் –
இப்படி சர்வ பிரகாரத்திலும்-243- -என்று தொடங்கி –
உபேய விரோதிகளாய் இருக்கும் -307–என்னும் அளவும் பிரபன்ன தினசரியா பிரகரணம் –
தான் ஹித உபதேசம் பண்ணும் போது -308–என்று தொடங்கி –
சேதநனுடைய ருசியாலே வருகையாலே-320- -என்னும் அளவும் சதாச்சார்ய லஷண பிரகரணம் –
சிஷ்யன் எனபது -321–என்று தொடங்கி -உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும் -365-என்னும் அளவும்
சச் சிஷ்ய லஷண ப்ரகரணம் –
ஸ்வ தோஷ அநு சந்தானம் -366–என்று தொடங்கி -நிவர்த்தாக ஞானம் அபய ஹேது –406-
என்னும் அளவும் பகவத் நிர்கேதுக விஷயீகார பிரகரணம் –
ச்வதந்த்ரனை -என்று தொடங்கி-407- மேலடங்க-463-வரை – சரம ப்ராப்ய பிராபக பிரகரணம் –
இவ் இரண்டையும் பற்ற இறே -பேறு தருவிக்குமவள் தன்பெருமை -திரு மகள் தன் –
என்கிற தனியன்கள் இரண்டும் அவதரித்தது –
ஆகையால் இரண்டு பிரகாரமும் அனுசந்திக்க குறை இல்லை-
——————————
ஆய் ஸ்வாமிகள் –
1–சித்த உபாயத்தை -பெருமாளை – வளைப்பிக்கும் புருஷகார வேஷமும் –
2–தத் உந்மிஷித உபாய வேஷமும் –
3–தத் இதர உபாய தியாக புத்தி விசேஷமும் –
4–உபாய சங்க –அஸஹ-சித்த உபாயம் தானே பெருமாள் –நிஷ்டா ஸ்வ பாவம்
5–தன் நிஷ்ட அனுசந்தான நியதி விசேஷம்
6–தத் பிரேத ஆச்சார்ய லக்ஷணம்
7–தன் நிஷ்ட ஸச் சிஷ்ய லக்ஷண
8–தத் பாவ உதய நிர்ஹேதுகத்வ நிரூபண விசேஷமும்
9–தத் ஸ்வரூப அனுகுண சரம ப்ராப்ய ப்ராபக பிரகரணங்கள்
அர்த்த விசேஷ சம்பந்தம் -மந்த்ர த்ரயார்த்தமான -ஸ்வரூப சாதன புருஷார்த்தமான
ஸ்வரூபம் திருமந்திரம் -புருஷார்த்தம் த்வயம் /சாதனம் சரம ஸ்லோகம் -/
சப்தத்ரயம் என்று திருமந்திரம் பிரணவம் -ஸ்வரூபம் /நமஸ் சாதனம் /-நாராயணாயா புருஷார்த்தம் -என்றுமாம் –
இதில் –
ஸ்வரூபம் –நாலாவதும் ஏழாவதும் -அதிகாரி நிஷ்டை ஸ்வரூபம் சொல்லும் நாலாவதில் -ஸச் சிஷ்ய லக்ஷணம் ஏழாவது -சொல்லுமே –
இரண்டு மூன்று ஓன்று- எட்டு சாதனம் –உபாயம் இரண்டாவதில் –தத் அங்கம் -மூன்றாவதில் –
உபாயாந்தரங்களில் தோஷம் அங்கம் என்றவாறு -சர்வ தரமான பரித்யஜ்ய போலே /
தத் சுவீகார அபேக்ஷிதம் -புருஷகார வைபவம் முதல் பிரகரணம் /எட்டாவதில் ஹேது இல்லாத தயை இதுவும் சாதனம் அம்சம்
பிரதம கிருதி ஆச்சார்யனை பற்றி பிராட்டியைப் பற்றி இதர உபாயங்களை விட்டு அவனைப் பற்றுகை – –
ஐந்து ஆறு ஒன்பது புருஷார்த்தம் -விசேஷணம் –சரம பிரபன்ன சரித -தன் நிஷ்டா தினசரி -ஐந்தாவதில் -இதுவும் ப்ராப்யத்தில் அந்தர்கதம்-
ஆறாவதில் ஆச்சார்ய லக்ஷணம் இதுவும் ப்ராப்யத்தில் சேர்த்து -/ஒன்பதில் சரம -ஆச்சார்ய கைங்கர்யம் செய்ய வேண்டுமே –
த்வயார்த்தம் –
ஸ்ரீ மன் நாராயண சரணவ் ஸமஸ்த பதம் முதல் இரண்டும் –
உத்தம பதம் கிரியா பதம்- பிரபத்யே -மூன்றாவது பிரகரணம்-விட்டே பற்ற வேண்டும் –
சரம ஸ்லோகத்தில் வியக்தமாக சொன்னதை வருவித்து கொள்ள வேண்டும்
ஸ்வீ கார பூர்வ பாவி -பற்றுவதற்கு முன் உள்ள தியாக நிரூபணம் -மூன்றாவதில் –
சதுர்த்த பிரகரணம் –அதிகாரி நிஷ்டை -மற்றவை உபாயமாகாது- இவன் சித்த உபாயம் இரண்டும் வேண்டுமே –
பிரபத்யே -புத்தியால் உறுதி கொள்ளுதல் -புத்யர்த்தம் கத்யர்த்தம் -பிரார்த்தனா கரப்ப விசுவாசம் -/
பஞ்சம சரம பிரகரணங்களால் -சரம சதுர்த்யர்த்தமும் / நிஷ்டா அனுஷ்டான நியதி விசேஷம் -ஐந்தாவதில் -ஆச்சார்யர் பிராப்யம் என்பதே சரம பிரகரணம்
ஆறாவது -சரம நாராயண பதார்த்தம் -சதாச்சார்ய லக்ஷணம் / பிரதம நாராயண திருமந்திரம் / த்வதீய நாராயண பூர்வ வாக்கியம் /
ஏழாவது சரம நார சப்தார்த்தம் -சிஷ்ய லக்ஷணம்
எட்டாவது -ஹேது இல்லாமல் -சம்பந்தத்தால் ஸ்பஷ்டமாகுமே -பஹு வ்ரீஹி சித்தம் -சம்பந்த அனுரூப ரஷக நிரூபகத்வம் –
தத் புருஷன் சொல்லாதது -அது இயற்க்கை -நாமே சென்று ஒட்டிக் கொண்டால் ரஷிக்க வேண்டிய அவசியம் இல்லையே –
அயனம் நாரங்களுக்குள் வந்தால் தான் ரக்ஷணம் சித்தம் –
தன் வஸ்துவை கொடுக்க கடவன் அல்லன் -சரம நமஸ் அர்த்தம்–தன்னது என்று அபிமானம் கூடாதே –
உடல் பொருள் ஆவி எல்லாம் சரீரம் அர்த்தம் பிராணஸ்ஞ்ச சத் குருவிடம் நிவேதியத -ஸ்வர்த்ததா கந்தமும் கூடாதே -பிரபலதர விரோதி
த்வய சரம பிரகாசமாய் இருக்கும் -ஆச்சார்ய பர்யந்தம் த்வயம் என்றவாறு –
சரம ஸ்லோகார்த்தம்
ப்ரபாகாந்த்ர பரித்யஜ்யம் –ச வாசனமாக விட்டு –/ எல்லாம் ஆச்சார்யனே அவதாரண அர்த்தம் /மாம் ஏகம் போலே /ஆச்சர்ய விசிஷ்ட வேஷத்தையே /
மோக்ஷத்துக்கே ஹேது -நிச்சயம் ..இச் -இஷ்யாமி அர்த்தம் தன்னடையே விட்டுப்போம் –
சரண்ய அபிமத தம -சரம சரம ஸ்லோகார்த்தம் -பிரகாசகமாய் இருக்கும் –
வெளித திரு முற்றத்தில் பிள்ளை சரமார்த்தம் அருளிச் செய்யா நிற்க -திருச்சானூர் நம்பியார் –மணப்பாக்கத்து நம்பி —
பிரபந்தீ கரித்த பரம சரம ரஹஸ்யமாயிற்று
சரம பிரபன்ன ஜன சரவண மனன ரசனை போக்ய பூஷணம் ஆயிற்று -யுக்த அர்த்த விஷத்தீகரணம்-யுக்த அர்த்த போதனம்-இது –
——————
இப் ப்ரபந்தம் தான் தீர்க்க சரணாகதியான திரு வாய் மொழி போலே த்வய விவரணமாயிருக்கும்-எங்கனே என்னில்
-திரு வாய் மொழியாலே முதல் மூன்று பத்தாலே உத்தர கண்ட அர்த்தத்தையும் –
(தொழுது எழு-தனக்கே யாக என்னைக் கொள்ளும் ஈதே -ஒழி வில் காலம் எல்லாம்-முதல் மூன்று பத்தாலே உத்தர கண்ட அர்த்தம் )
மேல் மூன்று பத்தாலே பூர்வ கண்ட அர்த்தத்தையும் சொல்லி –
(திரு நாரணன் தாள் -ஆறு எனக்கு -அகலகில்லேன் -இத்யாதி )
மேல் நான்கு பத்தாலும் (கடல் ஞாலம் காக்கின்ற -மணிமாமை குறையில்லை / / உங்களோடு எங்களுக்கு இடை இல்லை /
நங்கள் பிரான் நாரணன் / / அவா அற்று வீடு பெற்ற -) அவ உபாய உபேயோகியான குணங்களையும் –
ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசை அற்ற படியையும் –
அவனோடு தமக்கு உண்டான நிருபாதிக பந்தத்தையும் – தாம்
பிரார்த்தித்த படியே பெற்ற படியையும் பிரதிபாதிக்கையாலே –
தத் அநு ரூப அர்த்தங்களை சொல்லி தலை கட்டினாப் போலே –
இதிலும் –
பிரதமத்தில் புருஷகாரத்தையும்
அநந்தரம் உபாயத்தையும்
அநந்தரம் ஏதத் உபாய அதிகாரி நிஷ்டையையும் சொல்லுகையாலே–
பூர்வ கண்ட அர்த்தத்தையும் –
அவ் அதிகாரி நிஷ்டை சொல்லுகிற அளவில்
உபேய அதிகாரி அபேஷிதங்களை சொல்லுகிற இதுக்குள்
உத்தர கண்ட அர்த்தைத்தையும் சொல்லி –
மேல் பிரபந்த சேஷத்தாலும்-தத் உபதேஷ்டாவான ஆச்சார்யன் அளவில்
இவனுக்கு உண்டாக வேணும் பிரதிபத்திய அநு வர்த்தன பிரகாரங்களையும் ––(ஆச்சார்ய ஸேவனம் )
இவனுக்கு மகா விசுவாச ஹேதுவான பகவன் நிர்ஹேதுக க்ருபா பிரபாவத்தையும் ––
( மஹா விசுவாசம் -மயக்கம் -உபாய லகுத்தவம் -அநாதி கால பாப கூட்டங்கள் -பிராப்யமோ மிக ஸீரியது- மூன்றும் காரணம் –
நீக்க அவன் நிர்ஹேதுக கிருபை மட்டுமே )
வாக்ய த்வய உக்தி உபாய உபேய சரமாவதியையும் சொல்லி தலை கட்டுகையாலே-
ஒன்பதர்த்த பிரதிபாதகமான பஷத்திலும் -பூர்வ வாக்யத்தில் -க்ரியாபத உக்தமான
ச்வீகார உபாயாந்தர பரித்யாக பூர்வகமாய் அல்லது இல்லாமையாலும்-(பிரபத்யே பரித்யாஜ்ய பூர்வகமாகவே இருக்குமே )
திநசர்யையும் அப்பதத்தில் சொல்லப் படுகிற அதிகாரிக்கே உள்ளது ஆகையாலும்-
சதாச்சார்ய லஷணம் த்வய உபதேஷ்டாவான ஆச்சார்யன் படி சொல்லுகிறது-ஆகையாலும் த்வய விவரணமாக நிர்வஹிக்க குறை இல்லை —
இப்படி த்வய விவரணமான இதினிலே த்வயம் -தன்னில் போலே மற்றை ரஹச்யத்வ்ய அர்த்தங்களும் (திருமந்திரமும் சரம ஸ்லோகம் )
ஸங்க்ரஹ ணோத்தங்களாய்-( ஸங்க்ரஹேன – சுருக்கமாக உக்தங்கள் ) இருக்கும் -எங்கனே என்னில் –
அஹம் அர்த்தத்துக்கு என்று தொடங்கி அடியான் -77-என்று இறே -என்னுமளவாகவும்
ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் இறே பிரதானம் என்றும் –111-பிரணவ அர்த்தம் சொல்லப் பட்டது –
ஸ்வ யத்ன நிவ்ருத்தி-71- -இத்யாதியாலும் -தன்னை தானே முடிக்கை யாவது -180–என்று தொடங்கி
இப்படி சர்வ பிரகாரத்தாலும் -என்கிறதுக்கு கீழ் உள்ளதாலும் -நம-சப்த அர்த்தம் சொல்லப் பட்டது –
பர பிரயோஜன பிரவ்ருத்தி –இத்யாதியாலும் உபேயத்துக்கு இளைய பெருமாளையும் -291-இத்யாதியாலும்
கைங்கர்யம் தான் பக்தி மூலம் அல்லாத போது -இத்யாதியாலும் த்ருதீய பத அர்த்தம் சொல்லப் பட்டது –
அஞ்ஞானத்தாலே -இத்யாதியாலும் ப்ராபகந்தர பரித்யாகத்துக்கு -115–இத்யாதியாலும்
உபாயாந்தர த்யாகத்தை சஹேதுகமாக சொல்லுகையாலே -தத் த்யாஜ்யதையும் –
த்யாக பிரகாரத்தையும் சொல்லுகிற பத த்வய அர்த்தமும் சொல்லப் பட்டது –(சர்வ தர்மான் பரிதிஜ்ய )
இது தனக்கு ஸ்வரூபம்-இத்யாதியாலும்
ப்ராப்திக்கு உபாயம் அவன் நினைவு -இத்யாதியாலும் –மாம் ஏகம் சரணம் -என்கிற
பதங்களின் அர்த்தம் சொல்லப் பட்டது –(பிராப்திக்கு உபாயம் அவன் நினைவு )
பிரபத்தி உபாயத்துக்கு-134- -இத்யாதியாலே வ்ரஜ -என்கிற ச்வீகார வைலஷண்யம் சொல்லப் பட்டது –
அவன் இவனை –என்று தொடங்கி ச்வதந்த்ர்யத்தாலே வரும் பாரதந்த்ர்யம் பிரபலம் -என்னும் அளவும் –( அவன் தானே ஏறிட்டுக் கொண்டது அன்றோ )
சர்வ பாபங்களையும் தள்ளி அங்கீகரிக்கும் ஈஸ்வர ச்வாதந்த்ர்யத்தையும்
க்ருபா பலம் அனுபவித்தே அற வேணும் -என்று பல சித்தியில்
கண் அழிவு இல்லாமையும் சொல்லுகையாலே உத்தர அர்த்தத்தில் அர்த்தம் சொல்லப் பட்டது-
———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-
Leave a Reply