தத்வ த்ரயம் – ஈஸ்வர பிரகரணம்-சூர்ணிகை —–172-202– –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

சூர்ணிகை -171-

ஆக ஈச்வரனே த்ரிவித காரணமும் என்னும் இடம் சாதித்தாராய் நின்றார் கீழ் –
அஜாமேகாம -என்றும்–பிறப்பிலி ஒன்றாக உள்ள பிரகிருதி
சௌர் நாதாய நதவே தீ -என்றும்
த்ரி குணம் தஜ ஜகத யோநிர அநாதி ப்ராபவாபயயமா -என்றும்
அஜோஹயகே -என்றும்-ஜீவனும் பிறப்பிலி ஏக
ஜ்ஞாஜஜௌ தவா வஜா வீச நீ சௌ -என்றும்–இருவரும் பிறப்பிலி அறிந்தவன் அறிவிலி ஈசன் நியமிக்கப்படுபவன்
அஜோ நித்யச சாச்வதோயம் புராண–ஸ்ரீ கீதை -2–20- -இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே
நித்தியமாய் இருந்துள்ள அசித்தையும் சித்தியும் ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது தான் ஏது
என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது
அசித்தை பரிணமிப்பிக்கையும்
சேதனனுக்கு
சரீர இந்த்ரியங்களைக் கொடுத்து
ஜ்ஞான விகாசத்தைப்
பண்ணுகையும் –

கீழே ஜகத் காரண பூதனாகச் சொல்லப்பட்ட ஈஸ்வரன்
சேதன அசேதநாத்மகமான ஜகத்தை ஸ்ருஷ்டிக்கை யாவது –
தம பரே தேவே ஏகி பவதி -என்கிறபடியே தன்னோடு அவபிக்தமாய்க் கிடந்து–பிரித்து அறிய முடியாத நிலையில் கிடந்து—
தனித்து பிரகாசிக்காத நிலை முன்பு – தமஸ் சப்த வாச்யமான அசித்தை
ததஸ ஸ்வயம் பூர பகவா நவயகதோ வயஞ்ஜய நதிதம மகா பூதாதி திவ்ருத தௌஜா பராதுரா ஸீத தமோ நுத -என்கிறபடியே
கீழே முன் தன்மை லயம் சொல்லி இங்கு ஏகி பாவம் -ஒன்றாக -தாமஸ் -பாரா தேவதை இடத்து ஒற்றுமை அடைந்தது -ஒன்றாகி விட்டது என்று சொல்லாமல் -ஒன்றி கிடக்கிறது
பரிணாமம் ஆக்கும் வரை ஒன்றி இருக்கும் –
தத்வங்கள் மூன்றும் நித்யம் –சத்தா ஸ்திதி பிறவிருத்திகள் ஈஸ்வர அதீனம்
கீழே பிரளீயதே -பிரளயம் என்றாலே கீழ் நிலையை அடைந்தது -லயம் அடைந்தால் கீழே உள்ள நிலை இல்லை -வார்த்தைப்பாடு பிரளீயதே என்றும்
ஏகி பார்வதி வேதாந்தம் ஜாக்கிரதையாக சொல்லிற்று
ஸ்வ ப்ரே ரண விசேஷத்தாலே ஸ்வ சமாத விபக்தமாக்கி
அநந்தரம்
அஷர அவஸ்ததம் ஆக்கி-மூன்றாவது நிலை இது –
அது தன்னை பின்பு அவ்யவகத அவஸ்த்தம் ஆக்கி-நான்காம் நிலை இது –
அத்தை வ்யக்த சப்த வாச்யமான சமஷ்டி வ்யஷ்டி ரூப சமஸ்த கார்யங்கள் ஆம் படி பரிணமிப்பிக்கையும் –
அசித விசேஷிதான பிரளய ஸீமநி சமசரத -என்கிறபடியே
கரண களேபர விதுரனாய் -புலன்களும் சரீரமும் இல்லாமல் –
போக மோஷ சூன்யனாய்-
அசித் விசேஷிதனாய் -கிடந்த சேதனனுக்கு
போக ஸ்தானமான சரீரத்தையும்-
போக உபகரணங்களான இந்த்ரியங்களையும்
கொடுத்து
போக மோஷ பாகித்வ -அநர்ஹனாம்படி பண்ணி
முன்பு சங்குசிதமாய்க் கிடந்த ஜ்ஞானத்தின் யுடைய விகாசத்தை பண்ணுகையும் -என்கை
சேதனனுக்கு என்ற இது ஜாதி ஏக வசனம் –

————————————–

சூர்ணிகை -172-

அநந்தரம் ஸ்திதி சம்ஹாரங்களின் யுடைய பிரகாரங்களையும் அருளிச் செய்ய வேணும் என்று
திரு உள்ளம் பற்றி
பிரதமம் ஸ்திதியினுடைய பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்திதிப்பிக்கை யாவது –
ஸ்ருஷ்டமான வஸ்துக்களில்
பயிருக்கு நீர் நிலை போலே
அனுகூலமாக பிரவேசித்து நின்று
சர்வ ரஷைகளையும்
பண்ணுகை –

ஸ்திதிக்கை யாவது என்னாதே
ஸ்திதிப்பிக்கை யாவது -என்றது -ஸ்திதி யாவது சிருஷ்டி சம்ஹாரங்கள் போலே
கர்த்ரு கதம்–கர்த்தாவே செய்ய வேண்டியது – அன்றிக்கே ரஷணத்துக்கு
கர்மீபவிக்கிற வஸ்துகதமாய் இருப்பது ஓன்று ஆகையாலே –
என்னை ரஷிக்கப்போகிறார்-கர்மகதம் அன்றோ

ஆத்ம ஞானம் வளர்த்து – -வாழ வைத்தல் -வாழ்வித்தார் என்றவாறு –
நம் இசைவால் தானே வாழவைக்க முடியும் -இசைவித்துஎன்னை உன் தாளிணைக் கீழ் இருத்துமம் அம்மான் அன்றோ –
எந்தன் கருத்தை உற வீற்று இருந்தான் -இருத்திடும் வியந்து
மூன்று ஜுரம் ஆழ்வாருக்கு –பத்துடை அடியவர்க்கு எளியவன் -மூன்று தத்துக்கு பிழைத்த குழந்தை –வாழ்ந்தார் சொல்ல மாட்டோம் / படைப்பித்தார் சொல்ல வேண்டாம் –
பொன்னடிக்கீழே வியந்து இருத்தும் என்று அன்வயம் -ஆச்சர்யப்பட்டு -திமிரிக் கொண்டு நான் இருக்க
என்னை இருத்தி வைத்தது எனக்கு வியப்பு -ஆழ்வார் -இதுவே ஸ்துதிப்பிக்கை -இசைந்தால் தான் ரஷிக்க முடியும் –

ஸ்ருஷ்டமான இத்யாதி -அதாவது -தத் த்ருஷ்ட்வா -என்கிறபடியே
தன்னாலே ஸ்ருஷ்டமான வஸ்துக்களிலே
பயிருக்கு ரஷகமாய்க் கொண்டு அனுகூலமாய் நிற்கும் நீர் நிலை போலே ததேவ அனுபிராவிசத் என்கிறபடியே
தத் ரஷண அனுகூலமாக உள்ளே பிரவேசித்து நின்று
தத் தத் வஸ்து அனுகுணமான
சர்வ ரஷைகளையும் பண்ணுகை -என்கை
அனுபிரவேச சப்தத்துக்கு அனுகூலதயா பிரவேசம் இவர்க்கு இவ்விடத்தில் விவஷிதம் –
அனுபிரவேசம் -பின் தொடர்ந்து போனால் தானே அனு சப்தம்
அநந்தரம் சம்ஹார பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –
-உடம்பு ஊசி மருந்து போலே -அசேதனம் சேதனம் ப்ரஹ்மம் என்பது இல்லை -ப்ரஹ்மாத்மகம் இல்லாத ஒன்றுமே இல்லையே
அனு என்றது அனுகூலமாய் இருக்கை -பயிருக்கு தண்ணீர் போலே என்றவாறு –
சதா அனுகூலம் -கஷ்டம் கொடுப்பதும் வைராக்யம் வளர்க்க தானே –

இத்தால்
ஸ்திதிப்பிக்கை யாவது
நிலைப்பிக்கையாலே
தத் தத் ரஷணங்களைப் பண்ணுகை
என்றது ஆயிற்று -நிலைத்தார் சொல்லாமல் நிலைப்பிக்கை இங்கு மீண்டும்
சம்ஹரிக்கை யாவது

————————————————–

சூர்ணிகை -173-

அவி நீதனான புத்ரனை
பிதா விலங்கிட்டு வைக்குமா போலே
விஷயாந்தரங்களிலே கை வளருகிற
கரணங்களை
குலைத்திட்டு வைக்கை –

அதாவது
விசித்ரா தேக சம்பத்தீ ரீச்வராய நிவேதிதும் -என்கிறபடியே
ஸ்வ சமாஸ்ரயணீயத்தைப் பண்ணி
உஜ்ஜீவிப்பிகைக்கு உறுப்பாக
தான் கொடுத்த கரணங்களைக் கொண்டு
தன்னை வழி படுககை அன்றிக்கே
பாஹ்ய விஷய பிரவணனாய் போகப் புக்க வாறே
விதி நிஷேத வச்யனாய் ஒடுங்கி வர்த்தியாமல்
ஸ்வைரசாரியான புத்ரனை ஹித பரனானபிதாவானவன்
ஒரு வியாபார அர்ஹன் அல்லாத படி விலங்கை இட்டுஒடுக்கி வைக்குமா போலே
தன்னை ஒழிந்த விஷயங்களிலே அதி பிரவணனாய் நடக்கிற
கரணங்களைக் குலைத்து ஒடுக்கி இட்டு வைக்கை -என்கை –

—————————————-

சூர்ணிகை -174-

இனி இந்த ஸ்ருஷ்டியாதிகள் தான்
பிரத்யேகம் சதுர்விதமாய் இருக்கையாலே
அத்தையும் தர்சிப்பிக்கைக்காக அருளிச் செய்கிறார்

இம் மூன்றும்
தனித் தனியே
நாலு
பிரகாரமாய் இருக்கும் –

சதுர்விபாகச சம்ச்ருஷ்டௌ சதுர்ததா சம ஸ்திதிச ஸ்திதிதௌ பிரளயஞ்ச கரோதயே ந்தே சதுர்பேதா ஜநார்த்தனா-என்னக் கடவது இ றே-

———————————————–

சூர்ணிகை -176-

ஸ்திதியில்
விஷணவாதி ரூபேணஅவதரித்து
மன் வாதி முகேன சாஸ்த்ரங்களை
பிரவர்த்திப்பித்து
நல் வழி காட்டி
காலத்துக்கும்
சகல பூதங்களுக்கும் அந்தர்யாமியாய்
சத்வ குணத்தோடு கூடி
ஸ்திதிப்பிக்கும்-

அதாவது
ஸ்திதியில் வந்தால்
மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதம அவதார–ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -என்கிற விஷ்ணு அவதாரம் தொடக்கமாக
ஸூ ர நர திரசசாமவதாந -என்றும்–ஜெகதாதி ஜெ முதல் அவதாரம் விஷ்ணு –
என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்கிறபடியே அநேக அவதாரங்களைப் பண்ணி-அவதாரம் பண்ணி ரஷிப்பது மட்டும் இல்லாமல் உபதேசிக்க
தானும் சத்வாரகமாகவும் முனிவரை இடுக்கியுகம் முந்நீர் வண்ணனாய் வெளியிட்டதும் –
மந்த்ர த்ரஷ்டாவாக கொண்டு ஆழ்வாரை -இட்டு -யானாய் தன்னைத் தான் பாடி -இதுவும் அவன் அவதாரமே -யுக வர்ண க்ரம அவதாரம் –
தத்தாத்ர்யர் ராமன் கண்ணன் ஆழ்வார் நான்கு வர்ணங்கள் –பின்னை கொல் –பிறந்திட்டாள் –
யதவை கிஞ்ச மனு ரவதததத பேஷஜம் -என்று ஆபத் தமனாக
ஸ்ருதி பிரசித்தனான மனு முதலான யாஜ்ஞ்ஞாவல்க்ய பராசர வால்மீகி சௌ நகாதிகள் முகேன –
ஸ்ம்ருதி இதிஹாச புராண ரூப சாஸ்த்ரங்களை பிரவர்த்திப்பித்து–
சேதனர் அபேத பிரவ்ருத்தராகாமல் ஈடேறுகைக்கு உறுப்பான நல் வழிகளை தர்சிப்பித்து
ரஷண உபயோகியான காலத்துக்கும்-திரௌபதி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வாராதிகள் கூப்பிட்ட காலத்தில் வந்து ரக்ஷித்தானே –
லோகத்தில் ஓன்று ஓன்று ரஷகமான சர்வ பூதங்களுக்கும்
தத் தத் பிரவ்ருதிகள் தன்னதாம்படி அந்தராத்மாவாய்
கார்த்த வீர்யார்ஜுனன் ஆயிரம் கைகள் உடன் பிரஜைகளை ரக்ஷித்தானே
ஜ்ஞான பிரகாசாதி ஹேதுவான சத்வ குண விசிஷ்டனாய்க் கொண்டு
ஸ்திதிப்பிக்கும் -என்கை –
ஏகா மசேந ஸ்திதி தோ விஷ்ணோ கரோதி பரிபாலனம்
மன்வாதி ரூபீ சானயேன கால ரூபோபாரேண ஸ
சர்வ பூதேஷு சானயேன சம்ஸ்தித
சத்வம் குணம் சமா சரிதய ஜகத் புருஷோத்தம -என்னக் கடவது இ றே
புராணத்தில் ஏகா மசேன ஸ்திதோ விஷ்ணு –ஏக அம்சமான விஷ்ணு என்றவாறு –என்று விஷ்ணு அவதாரம் ஒன்றையும் சொன்னது –
அவதாராந்தரங்களுக்கும் உப லஷணம் என்று கொள்ள வேணும்
விஷ்ணு வாதி ரூபேண அவதரித்து -என்று இவர் அருளிச் செய்கையாலே –

————————————-

சூர்ணிகை –177-

சம்ஹாரத்தில்
ருத்ரனுக்கும்
அக்னி அநதகாதிகளுக்கும்-அந்தகன் -யமன் -நரகாந்தகன் -நரகாசுரனை முடித்த பரப்ரஹ்மம் –
காலத்துக்கும்–சம்ஹார உபயோகி அன்றோ காலம் –
சகல பூதங்களுக்கும்
அந்தர்யாமியாய்
தமோ குணத்தோடு கூடி
சம்ஹரிக்கும் –

அதாவது சம்ஹாரத்தில் வந்தால்
சம்ஹாரத தாதிகளில் தலைவனான ருத்ரனுக்கும்
அவாந்தர சம்ஹர்த்தாக்களான அக்னி அநதகாதிகளுக்கும்
சம்ஹார உபயோகியான காலத்துக்கும்
ஒன்றுக்கு ஓன்று நாசகமான சகல பூதங்களுக்கும்
தத் தத் பிரவ்ருதிகள் எல்லாம் தன்னதாம்படி அந்தராத்மாவாய்
கண் பாராமல் செய்கைக்கு உறுப்பான தமோ குண விசிஷ்டனாய்க் கொண்டு
சம்ஹரிக்கும் -என்கை
ஆசரிதய தமசோ வருத்தி மந்தகாலே ததா பிரபு ருத்ர ஸ்வரூபோ
பகவானே காம சேன பவத்யஜ அகனய நதகாதி ரூபேண பாகேனா நயேன வர்த்ததே கால ஸ்வரூபோ பாகோ நாய்ச சர்வ பூதானி
சாபர விநாசம குர்வதச தஸ்ய சதுர்ததைவ மகாத்மான –ஸ்ரீ விஷ்ணு புராணம் –என்னக் கடவது இ றே
ஸ்ருஷ்டியாதிகளில் சதுர்விபாகம் சொல்லுகிற இடத்தில்
அம்ச சப்தத்தாலே ப்ரஹ்மாதிகளைச் சொல்லிற்று
அவர்கள் அவனுக்கு பிரகார பூதர் ஆகையாலே என்னும் இடத்தை
அநந்தரம்
ப்ரஹ்மா தஷாதய காலச ததைவாகில ஜந்தவ விபூதயோ
ஹரே ரேதோ ஜகத் சிருஷ்டி ஹேதவ விஷ்ணுர் மனவாதய காலச சர்வ பூதானி ஸ தவிஜ ஸ்திதிதோ
நிமித்த பூதஸ்ய விஷ்ணோ ரேதா விபூதய ருத்ர காலா ந்த
காதயாச்ச சமசதாச சைவ ஜந்தவ சதுர்த்தா பிரளயே
ஹயேதா -ஜனார்த்தன விபூதய -என்று
மூன்று ஸ்லோகத்தாலே ஸ்புடமாக பிரதிபாதித்தான் இ றே ஸ்ரீ பராசர பகவான் –
இத்தை நினைத்தே இவரும்-அந்தர்யாமியாய் -என்று அருளிச் செய்தது
விஷ்ணு மனவாதய -என்கிற ஸ்லோகத்தில் விஷ்ணுவையும் விபூதியாக சொன்ன இது
அவதார பிரயுக்தமான விக்ரஹ பரமாகக் கடவது –

—————————————

சூர்ணிகை -178-

இனி விஷம சிருஷ்டி அடி யாக மந்த மதிகளுக்கு உண்டாகக் கடவ சங்கையை பறிஹரிக்கைக்காக
பிரதமம் தத் விஷய சங்கையை அனுவதிக்கிறார் –

சிலரை ஸூ கிகளாகவும்
சிலரை துக்கிகளாகவும்
ஸ்ருஷ்டித்தால்
ஈஸ்வரனுக்கு
வைஷம்ய
நைர் கருண்யங்கள்
வாராதோ -என்னில்

அதாவது -ஸ்ருஷ்டிக்கிற அளவில் சர்வ ஆத்மாக்களையும் ஏக பிரகாரமாக அன்றிக்கே
தேவ மனுஷ்யாதி விபாகேன சில ஆத்மாக்களை
ஸூ கிகளாயும்-சில ஆத்மாக்களை துக்கிகளாயும் ஸ்ருஷ்டித்தால்
சர்வ சமனாய் பரம தயாவானாய் இருக்கும் ஈஸ்வரனுக்கு
எல்லார் அளவிலும் ஒத்து இராமையாகிற
வைஷயமும்-துக்கிகளாய் ஸ்ருஷ்டிக்கையால் –
பரத்துக்க அசஹிஷ்ணுத்வ ரூபையான கிருபை இல்லாமையும் வாராதோ -என்கிறதாகில் -என்கை –
சாம்ய குணம் காட்டி அருளுகுகிறான் த்வார த்ரயத்தாலே-

——————————————–

சூர்ணிகை -179-

அத்தை பரிஹரிக்கிறார் –

கர்மம் அடியாகச்
செய்கையாலும்
மண் தின்ற பிரஜையை
நாக்கிலே குறி இட்டு
அஞ்சப் பண்ணும்
மாதாவைப் போலே
ஹித பரனாய்ச் செய்கையாலும்
வாராது –

அதாவது
சிலரை ஸூ கிகளாயும் சிலரை துக்கிகளாயும் ஸ்ருஷ்டிக்கிற இது
விஷம ஸ்ருஷ்டிக்கைக்கு உறுப்பான சேதனர் உடைய கர்மம் அடியாகச் செய்கையாலும்
துக்கிகளாக ஸ்ருஷ்டிக்கிற இது தனக்கு ரோக கரமான மண்ணை விரும்பித் தின்ற பிரஜையை
மேலே தின்னாதபடி நாக்கிலே குறி இட்டு மண் தின்ன பயப்படும்படி பண்ணும்
ஹித பரதையான மாதாவைப் போலே
இவர்கள் மேல்-பின்பு – துக்க ஹேதுவான கர்மங்களைப் பண்ண அஞ்சும்படி
ஹித பரனாய்ச் செய்கையாலும் வைஷம்ய நைர்க்கருணயங்கள் இரண்டும் இவனுக்கு வாராது -என்கை
இத்தால் -வைஷம்ய நைகருண்யே ந சாபேஷத்வாத் -2–1-34- -என்கிற வேதாந்த ஸூத்ரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று
நிமே நோ ந நதஞ்சகருணஞ்ச ஜகத் விசித்ரம் கர்ம வ்யபேஷய சருஜதச தவ ரெங்க சேஷிந
வைஷம்ய நிர்க்கருண தயோர் ந கலு பிரசக்திச தத் ப்ரஹ்ம
ஸூ த்ரச்சிவா ஸ்ருதயோ கருண நதி–உத்தர சதகம் -42- -என்று இது தன்னை பட்டரும் அருளிச் செய்தார் இ றே –
நிம்னா உன்மய ஈச ஈஸித்வய –உயர்வு தாழ்வு பேச்சுக்கு கூட இடம் இல்லையே -சசிவோத்தமன்-திருவடிக்கு இத்தை சொல்லுவோமே –
-மந்திரி -வேதாந்த வாக்கியம் -ப்ரஹ்ம ஸூ த்ரம் மந்திரி போலே ஒழுங்காக ஸ்தாபிக்குமே –

—————————————-

சூர்ணிகை -180-

ஆக
ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய் என்றத்தை உபபாதித்தாராய் நின்றார் கீழ்
அநந்தரம்
விலஷண விக்ரஹ யுக்தனாய் -என்றத்தை உபபாதிப்பதாக உபக்ரமித்தார் –

இவன் தான்
முந்நீர் ஞாலம் படைத்த
என் முகில் வண்ணன்
என்கிறபடியே
ஸ விக்ரஹனாய்க் கொண்டு
ஸ்ருஷ்டியாதிகளைப்
பண்ணும் –

நடுவு சொன்ன –
ஆர்த்தாதி சதுர்வித புருஷ சமாஸ்ரயணீயத்வமும்
தர்மாதி சதுர்வித பல பிரதத்வமும் ஆகிற
இவை இரண்டையும் உப பாதியாது ஒழிவான்-என் -என்னில்
காரணந்து தயேய-என்றும்
யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்றும் இத்யாதியில் சொல்லுகிறபடி
காரண வஸ்துவே உபாசயமும் ஆசரயணீயமும் ஆகையாலே காரணத்வம் சொன்ன போதே
சதுர்விதா பஜந்தே மாம் -என்கிற சதுர்வித சமாஸ்ரயணீயத்வமும்
பலமத உபபத்தே -3–2–37–என்கிறபடியே பல ப்ரதத்வ ஹேதுவான–தான் பலமாகவும் இருப்பார் -கேட்டதை கொடுப்பார் -தானும் பலமாக இருப்பார் –
சர்வ சக்தி யோகம் கீழே உக்தம் ஆகையாலே
தர்மாதி சதுர்வித பல பிரதத்வமும் அர்த்தாத் உக்தம் என்னும் நினைவாலும்
அவற்றில் உபபாத நீயாம்சம் மிகவும் இல்லாமையாலும்
தத் உப பாதானம் பண்ணிற்று இலர்-திரும்ப சொல்லி விளக்க வில்லை –
ஆகையால் கீழ்ச் சொன்ன காரணத்வத்தோடே விக்ரஹ யோஹத்துக்கு அந்வயத்தைச்
சொல்லிக் கொண்டு அருளுகிறார்-

இவன் தான் முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணனே -என்கிறபடியே
ஸ விக்ரஹனாய்க் கொண்டு ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும் என்று –
அதாவது
இப்படி ஜகத் சர்க்காதி கர்த்தாவாக சொல்லப் பட்ட இவன் தான்
எனக்காக–ஆழ்வாருக்காக -அவன் செய்து அருளிய எல்லா சேஷ்டிதங்களும் பிரவ்ருத்திகளும்
ஆற்று நீர் ஊற்று நீர் வர்ஷ ஜலம் என்று மூன்று வகைப் பட்ட நீரை யுடைத்தான
சமுத்ரத்தோடே கூடின ஜகத்தை ஸ்ருஷ்டித்த
வர்ஷூக வலாஹகம் போலே இருக்கிற வடிவை யுடையவனே என்று
ஆழ்வார் உடைய திவ்ய பிரபந்தத்தில் சொல்லுகிற படியே
விக்ரக ஸ ஹிதனாய்க் கொண்டு ஸ்ருஷடி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றையும் பண்ணும் -என்கை
முகில் வண்ணன் என்கிற இது ஔதார்ய குண பரமாக வ்யாக்யாதாக்கள்
பலரும் வியாக்யானம் பண்ணினார்களே ஆகிலும்
விக்ரஹ பரமாக இவர் அருளிச் செய்கையாலே
இங்கனும் ஒரு யோஜனை யுண்டு என்று கொள்ள வேணும்
ஒன்றுக்கு பல யோஜனைகள் உண்டாய் இ றே இருப்பது –
ஜகத்தை படைக்கும் பொழுது விக்ரஹ விசிஷ்டன் -முகில் வண்ணனாக படைக்கிறான்

————————————-

சூர்ணிகை -181-

இனி இந்த விக்ரஹத்தின் யுடைய வை லஷண்யத்தை ஒரு சூர்ணிகை யாலே விஸ்தரேண
உபபாதிக்கிறார் –

விக்ரஹம் தான்
ஸ்வரூப -குணங்களில் -காட்டில்
அத்யந்த அபிமதமாய்
ஸ்வ அனுரூபமாய்
நித்யமாய்
ஏக ரூபமாய்
ஸூ த்த சத்வாத்மகமாய்
சேதன தேஹம் போலே
ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை
மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தாப்போலே இருக்க
பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
சௌகுமார்யாதி கல்யாண குணகண நிதியாய்
யோகி த்யேயமாய்
சகல ஜன மோகனமாய்
சமஸ்த போக வைராக்ய ஜனகமாய்
நித்ய முக்த அனுபாவ்யமாய்
வாசத் தடம் போலே சகல தாப ஹரமாய்
அநந்த அவதார கந்தமாய்
சர்வ ரஷகமாய்
சர்வாபாஸ்ரயமாய்
அஸ்த்ர பூஷண பூஷிதமாய்
இருக்கும்-

விக்ரஹம் தான் ஸ்வரூப -குணங்களில் -காட்டில் அத்யந்த அபிமதம் யாகையாவது
-ஆனந்த மயமான ஸ்வரூபமும் ஆனந்தா வஹமான குணங்களும் போல் அன்றியே
நிரதிசய ஆனந்தாவஹமாய் இருக்கையாலே
அவற்றிலும் காட்டில் மிகவும் அபிமதமாய் இருக்கை –

ஸ்வ அனுரூபம் ஆகையாவது -அநநுரூபமாய் இருக்கச் செய்தேயும் அபிமதமாய் இருக்குமவை போல் அன்றிக்கே
தனக்கு அனுரூபமாய் இருக்கை-

நித்யமாகை -ஆவது –
ஸ்வரூப குணங்களோ பாதி அநாதி நிதனமாய் இருக்கை –ஆதி நிதனம்- முடிவு இல்லாமல் என்றபடி
லோகத்தில் அவயவிகளுக்கு அநித்யத்வம் காண்கையாலே இதுக்கும் அவயவிதவேன அநித்யத்வம் வாராதோ என்னில் வாராது
எங்கும் ஒக்க அவயவ சம்பந்த மாதரம் அல்ல அநித்யத்வ ஹேது அவயவ ஆரப்தம் –
அவயவ சம்பந்தம் மாத்ரமே அநித்யத்வ ஹேதுவாம் ஆகில் கர சரணாத அவயவ சம்பந்தம் உண்டான ஆத்மாவுக்கும் விநாசம் வர வேணுமே
இங்கு அப்படி அவயவார பதத்வத்தில் பிரமாணம் இல்லாமையாலே
இது கர சரணாத யவயவ யோகியாய் நிற்கச் செய்தேயும்
நித்யமாயே இருக்கும் என்று இப்படி விவரணத்தில் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இ றே-

ஏக ரூபமாகை யாவது –வ்ருத்தி ஷயாதி விகார ரஹிதமாய் இருக்கை
சதைக ரூப ரூபாயா -என்னக் கடவது இ றே -சுருக்குவார் இன்றியே சுருக்கினாய்-

ஸூ த்த சத்வாத்மகமாகை யாவது —
குணாந்தர சம்சர்க்கம் இல்லாத சத்வத்துக்கு ஆச்ரயமாய் இருக்கிற அப்ராக்ருத த்ரவ்யமே வடிவாய் இருக்கை –
ந தஸ்ய பராக்ருதா மூர்த்தி -என்னக் கடவது இ றே –

சேதன தேஹம் போலே ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை
மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தாப்போலே இருக்க பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய் –
சுத்த சத்வாத்மகம் ஆகையாலே குண த்ரய ஆச்ரயமான சேதன தேஹம் போலே
ஞானமயம் ஆகையாலே தேஜோரூபமான ஸ்வரூபத்தை
புறம் தோற்றாதபடி மறைக்கை அன்றிக்கே
மாணிக்கத்தை செப்பாக சமைத்து அதிலே பொன்னை இட்டு வைத்தால்
உள்ளிருக்கிற பொன்னை அது புறம்பே நிழல் எழும்படி தோற்றுவிக்குமா போலே –
எண்ணும் பொன்னுருவாய் -என்கிறபடியே ஸ்ப்ருஹணீயம் ஆகையாலே
பொன்னுக்குள் மாணிக்கம் திருமேனிக்குள் ஸ்வரூபம் இல்லாமல் -மாணிக்கத்துக்குள் பொன் போலே என்கிறார் –
திருமேனி-திவ்ய மங்கள விகிரஹம் – திவ்யாத்ம ஸ்வரூபம் வாசி உண்டே –
பொன்னுரு-ஈஸ்வரன் மின்னுரு – சரீரம் -பின்னுரு -ஆத்மா -தத்வத்ரயம் மூன்று சொற்களால் -அருளிச் செய்தார் இ றே-

பொன்னுரு என்று சொல்லப் படுமதான திவ்யாத்மா ஸ்வரூபத்துக்கு தான் பிரகாசகமாய் இருக்கை-

நிரவதிக தேஜோ ரூபமாகை யாவது –
நித்ய முக்த விக்ரஹங்களும் இதுவும் ஏக ஜாதிய த்ரவ்யமாய் இருக்கச் செய்தே-அப்ராக்ருத த்ரவ்யம் –
ஏக ஜாதீய த்ரவ்யாத்மகமான கத்யோத சரீர தேஜஸ் சில் காட்டிலும்—கத்யோதம் ஆகாசம் மினுமினி பூச்சி —
இரவிக்கு எதிர் மின்மினி ஆடுவதோ –நாய் ஆடுவதோ நாரி கேசரி முன் –
ஆதித்ய சரீரத்துக்கு உண்டான தேஜோதிசயம் போலே
இவை ச வதிக தேஜஸ சாம்படி தான் நிரவதிக தேஜஸ் சை யுடைத்தாய் இருக்கை –

சௌகுமார்யாதி கல்யாண குணகண நிதியாகை யாவது –
சௌகுமார்யம் சௌந்தர்யம் லாவண்யம் சௌகந்த்யம் யௌவனம்
முதலான கல்யாண குண சமூஹத்துக்கு கொள்கலமாய் இருக்கை –
சௌந்தர்ய சௌகந்த்ய சௌகுமார்ய லாவண்ய
யௌவன அத்யந்த குணநிதி திவ்ய ரூப-ரூப குணங்கள் சூர்ணிகை –
என்று எம்பெருமானார் அருளிச் செய்தார் இ றே —
மாயன் குழல் -கொள்கின்ற -கோள் இருளை- -அன்று –

யோகி த்யேயமாகை யாவது –
பகவத் த்யாந பரமான பரம யோகிகளுக்கு சுபாஸ்ரயமாய்க் கொண்டு
எப்போதும் த்யான விஷயமாய் இருக்கை
காசா நயா தவா மருதே தேவி சர்வ யஞ்ஞமாயம் வபு
அத்யாசதே தேவ தேவஸ்ய யோகி சிந்தயம் கதாபருத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1–9-
என்று அசாதாரண விக்ராஹமே யோகி சிந்தயமாகச் சொல்லப் பட்டது இ றே

சகல ஜன மோகனமாகை யாவது –
ஜ்ஞான அஞ்ஞான விபாகம் அற சகல ஜனங்களையும் ஸ்வ வை லஷண்யத்தாலே பிச்சேற்றுமதாய் இருக்கை –
பும்ஸாம் திருஷ்டி சிந்தா அபஹரிணம் -என்றும்
சர்வ ஸ்தவ ம்நோஹர –
கண்டவர் தம் மனம் வழங்கும் -என்னக் கடவது இ றே –சதா சர்வாங்க சுந்தரன் அன்றோ –
கீழே யோகிகளுக்கு த்யான விஷயம் -மேலே நித்ய முத்தர்களுக்கு அனுபாவ்யம் -நடுவில் நம் போன்ற சம்சாரிகளுக்கு இப்படி –
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு -இழந்தது சங்கே கட்டே -ஒவ் ஒன்றையும் இழக்கும் படி அன்றோ அழகு -இதுவே மோஹனம்
-மெய்யமர் பல் கலன் நன்கு அணிந்தான் இல்லை -மெய்யில் அமர்ந்து -சேர்த்தே -செவ்வரத்தை உடையாடை -அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்று –
மேக்க குழாங்கள் ஒக்கும் அம்மான் உருவம் -காட்டேன்மின் உம் உரு என்று சொல்லும்படி இருக்குமே -படி எடுத்து சொல்லும் படி அன்றே பெருமாள் உருவம் -திருவடி –
ராம கமல பத்ராக்ஷன் -சமுதாய சோபை அவயவ சோபை –

சமஸ்த போக வைராக்ய ஜனக-மாகையாவது –
தன வை லஷண்யத்தைக் கண்டவர்களுக்கு
ஸ்வ இதர சகல விஷய அனுபவத்திலும் ஆசை அறுதியை விளைக்குமதாய் இருக்கை-
பேரின்பம் எல்லாம் துறந்தார் தொழுது ஆராத தோள்–என்னக் கடவது இ றே -/ தோள் கண்டார் தோளே கண்டார் -/
உன்னும்ம் சோறு –எல்லாம் கண்ணன் -/ தூது செய் கண்கள் -தாயாய் அளிக்கும் தண் தாமரைக்கு கண்ணன் -/
செம் கண் திருமுகத்து /கதிர்மதியம் போல் முகத்தான் -ஜயமான கடாக்ஷம் –

நித்ய முக்த அனுபாவ்ய-மாகை யாவது –
அபரிச்சின்ன ஜ்ஞானாதி குணகரான நித்யராலும் முக்தராலும்
சதா பஸ்யந்தி சூரய-படியே அநவரதம் அனுபவிக்கப் படுமதாய் இருக்கை –

வாசத் தடம் போலே சகல தாப ஹர-மாகை யாவது –
கண் கை கால் தூய செய்ய மலர்களா -என்று தொடங்கி
ஆழ்வார் வர்ணித்த படியே திவ்ய அவயவங்களும் திரு மேனியுமான சேர்த்தியாலே
பரப்பு மாறத் தாமரை பூத்து பரிமளம் அலை எறியா நிற்பதொரு தடாகம் போலே இருக்கையாலே
தன்னைக் கிட்டினவர்களுக்கு சம்சாரிக்க விவித தாபத்தோடு விரஹ தாபத்தோடு வாசி அற
சகல தாபத்தையும் போக்குமதாய் இருக்கை –

அநந்த அவதார கந்த-மாகை யாவது –
அஜாயாமானோ பஹுவிதா விஜாயதே -என்றும்
பஹூ நிமே வயதி தானி -என்றும் சொல்லப்படுகிற
அசங்க்யாதமான அவதாரங்களும் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி கொண்டு
தீபா துதபன்ன ப்ர தீபம் போலே
வருகிறவை யாகையாலே அவை எல்லாவற்றுக்கும் மூலமாய் இருக்கை
பிரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாமி -என்றும்
கல்பே கல்பே ஜாயமானச ஸ்வ மூர்த்தாயா –என்றும்
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த -என்றும் சொல்லக் கடவது இ றே/ அழுக்கு பதிந்த உடம்பாக பரஞ்சுடர் உடம்பு -சஜாதீயமாக்கி –

சர்வ ரஷகம் -ஆகை யாவது –
ஐஸ்வர் யாதிகளோடு கேவலரோடு
பகவத் சரணாகதர்களில் உபாசகரோடு -பிரபன்னரோடு -அனுபவ கைங்கர்யரான நித்ய முக்தரோடு
வாசி அற சர்வருடைய
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி களைப் பண்ணுவது
திவ்ய மங்கள விக்ரஹ உபேதனாய்க் கொண்டே ஆகையாலே
எல்லாருக்கும் ரஷகமாய் இருக்கை –
சர்வாபாஸ்ரயம் -ஆகை யாவது –
உபய விபூதிக்கும் ஆச்ரயமாய் இருக்கை -மண்ணும் விண்ணும் தொழ-

அஸ்த்ர பூஷண பூஷிதம் -ஆகை யாவது –
கீழ்ச் சொன்ன சர்வாஸ்ரயத்வ ஸூ சகமாம் படி
அஸ்த்ர பூஷன அத்யாயத்தில் சொல்லுகிறபடியே
விபூதய அபிமானிகளான திவ்ய ஆயுதங்களாலும்
திவ்ய ஆபரணங்களாலும் அலங்க்ருதனாய் இருக்கை –
ஆத்மா நமஸ்ய ஜகதோ நிர்லேபம குணாமலம் பிபாததி கௌச்துபமணிமா ஸ்வரூபம்
பகவான் ஹரி ஸ்ரீ வத்ஸ சமஸ்த தானதர மன நதேச சமாசரிதம் பிரதானம் புத்திர பயாசதே கதா ரூபேண மாதவே
பூதாதி மிந்த்ரியா திஞ்ச த்வித அஹங்கார மீச்வர பிபாததி சங்ககரு ரூபேண
சாரங்க ரூபேண ச ஸ்திதிதம் சல ஸ்வரூப மத்யந்த ஜவே நானா தரிதா நிலம் –
சக்ர ஸ்வரூபஞ்ச மனோ தததே விஷ்ணு கரே ஸ்திதிதம்
பஞ்ச ரூபாது யாமாலா வைஜயந்தீ கதாபருத ச பூத ஹேது
சங்கா தோபூத மாலாச ச த்விஜ யாதீந்த்ரிய விசேஷாணீ
புத்தி காமா தமாக நிவி சர ரூபாணாய சேஷாணி தானி ததே ஜனார்த்தனா
பிபாததி யச்சாசிரத நமச்யுதோ தயந்த நிர்மலம் வித்யாமயந்து தத் ஜ்ஞானம் வித்தியாச மமசாம் ஸ்திதிதம் -என்னக் கடவது இ றே-
சஞ்சல மனஸ் -சக்கரம் / கௌஸ்துபம் ஆத்மதத்வம் /பிரதிநீயத்வம் உண்டே -சர்வருக்கு -சர்வத்துக்கும் -/ பிரதானம் ஸ்ரீ வத்சம்
/புத்தி கதை /தாமச சாத்விக அஹங்காரங்கள் –சங்கும் சாரங்கமும் /
தன் மாத்திரை வனமாலை / பஞ்ச பூதங்கள் -இந்திரியங்கள் இவை -சர ரூபம் / வித்யை கட்கம் உறை அவித்யா –

——————————————–

சூர்ணிகை -182-

ஆக -விலஷண விக்ரஹ யுக்தனாய் -என்றத்தை உபபாதித்தார் கீழ் –
இந்த விக்ரஹ யோக பிரயுக்தமான ஈஸ்வரனுடைய பரத்வாதி பஞ்ச பிரகாரத்தையும்
தனித் தனியே ஸூ வியக்தமாக தர்சிப்பிக்க வேணும் என்று
திரு உள்ளம் பற்றி -பிரதமம்
அது தன்னை உத்ஷேபிக்கிறார் –

ஈஸ்வர ஸ்வரூபம் தான்
பரத்வம்
வ்யூஹம்
விபவம்
அந்தர்யாமித்வம்
அர்ச்சாவதாரம்
என்று அஞ்சு பிரகாரத்தோடே
கூடி இருக்கும் –

அதாவது -இத்தை சொல்லி அருளி
ஸ்ரீ லஷ்மி பூமா நீளா நாயகனாய் -என்றதையும் உபபாதித்து விட்டு
பின்னை இது சொல்லாது ஒழிவான் என் என்னில்
அதில் உபபாதிக்க வேண்டுவது பணி இல்லாமையாலும்
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ சகாயோ ஜனார்த்தனா
உபாபயாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -என்கையாலே
மேல் சொல்லுகிற பரத்வத்திலே அர்த்ததாதுகதமாம் என்னுமதைப் பற்றவும்
தனித்து உபபாதிதிலர்-ஆகையால் விரோதம் இல்லை –

ஈஸ்வர ஸ்வரூபம் -என்கிற இடத்தில்
ஸ்வரூப சப்தத்தால் சொல்லுகிறது -ஸ்வ அசாதாரண விக்ரஹதை யாதல்
விக்ரஹ விசிஷ்டமான ஸ்வரூபம் தன்னை யாதல் –
சங்கரஹேண் இட்டு அருளின மற்றை இரண்டு தத்வ த்ரய படியிலும் ஒருபடியிலே திரு மேனியும் அஞ்சு படியாய் இருக்கும் -அதாவது
பரத்வம் -வ்யூஹம் -விபவம் -அந்தர்யாமித்வம் -அர்ச்சாவதாரம் -என்றும்
மற்றைப் படியிலே ஈஸ்வர ஸ்வரூபம் ஹேய பிரதிபடமாய் -என்று தொடங்கி
பத்நீ பரிஜன விசிஷ்டமாய் இருக்கும் -என்றத்தை உபபாதித்த அநந்தரம்
இது தான் அஞ்சு படியாய் இருக்கும் என்றும்
இதம் சப்தத்தாலே பிரக்ருதமான ஈஸ்வர ஸ்வரூபத்தை பராமர்சிதது
அது தான் பரத்வாதி ரூபேண பஞ்ச பிரகாரமாய் இருக்கும் என்று இவர் தாமே அருளிச் செய்கையாலே
இப்படி பரத்வாதி பஞ்ச பிரகார விசிஷ்டனாய் இருப்பன் என்னும் இடத்தை
மம பிரகாரா பஞ்சேதி பரா ஹூரா வேதாந்த பாரக
பரோ வ்யூஹச்ச்ச விபவோ நியந்தா சர்வ தேஹி நாம
அர்ச்சாவதார ச ச ததா தயாலு புருஷர்க்ருதி இத யேவம்
பஞ்சதா பராஹோர் மம வேதாந்த விதோ ஜனா -என்று
விஷ்வக் சேன சம்ஹிதையிலே தானே அருளிச் செய்தான் இ றே-

————————————

சூர்ணிகை -183-
ஆதி முதன்மை- அம் அழகிய- சோதி -மூன்று விசேஷணங்கள் -தீபத்தில் இருந்து கொளுத்திய தீ வெட்டி போலே -த்ருஷ்டாந்தம் -சர்வான் தேவான் நமஸ்யந்தி பெருமாள் நன்மைக்கு கோயில்களுக்கு சென்று அயோத்யா மக்கள் –

இனி இந்த அஞ்சு பிரகாரத்தையும் அடைவே உபபாதிக்கக் கோலி பிரதமம் பரத்வத்தை
உபபாதிக்கிறார் –

அதில்
பரத்வமாவது
அகால கால்யமான
நலமந்த மில்லதோர் நாட்டிலே
நித்ய முக்தர்க்கு
போக்யனாய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கும் இருப்பு –

அதாவது
அவ்வைந்திலும் வைத்துக் கொண்டு பரத்வம் ஆவது
நாகால சததரவை ப்ரபு -என்றும்
கலா முஹூர்த்ததாதி மாயச்ச கால ந யத விபூதே பரிணாம ஹேது -என்றும்–ச கண்டம் -பிரித்து -அக்கண்டம்- -பிரளயம் உணர்த்த -இரண்டு வகையான காலம்
யாவை நஜாது பரிணாம பதாஸ்பதம் சா காலாதிகா தவ பரா மஹதீ விபூதி -என்றும்–காலம் அதிக்ரமணம் தாண்டி இருக்கும் –
யத காலாத அபிசேளிமமம–ஸ்ரீ குண ரத்னா கோசம் -என்றும் சொல்லுகிறபடியே–காலத்தால் பக்குவப்படாத தேசம் –
காலக்ருத பரிணாமம் இல்லாத தேசம் ஆகையாலே
காலகாலயம் அன்றிக்கே இருப்பதாய்
நலமந்த மில்லதோர் நாடு -என்றும்
ஆனந்தம் அளவிறந்து அத்விதீயமாய் இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே
யத்ர பூர்வே ஸாத்யாச சந்திதேவா -என்றும்–பிரதம பிராப்யம் -வந்தவர் எதிர் கொள்ள -அடியவர்கள் தானே
யத்ராஷய பிரதமஜா யே புராணா -என்றும்-பிரதம ஜா -அநாதி சித்தர் என்றவாறு -புரா அபி நவ புராணம் -அன்று அன்று புதிதாக -பழமையாக இருந்தும் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் சொல்லுகிறபடியே
நித்ய அசங்குசித ஜ்ஞானராய் இருந்துள்ள
அநந்த கருட விஷ்வக்சேனர்திகளான நித்ய சூரிகளுக்கும்
சூர்ய கோடி ப்ரதீகாச பூர்ணே நதவயுத சந்நிபா யஸ்மின் பதே விரஜாந்தே முக்தாஸ சம்சார பந்ததை -என்கிறபடியே
நிவ்ருத்த சம்சாரராய்
அசங்குசித ஜ்ஞானரான முக்தருக்கும்–160000-பூர்ண சந்த்ர பிரகாசம் கொண்ட முத்தர்கள் –
அனுபவ விஷய பூதனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு -என்கை –
வைகுண்டேது பரே லோகே நித்யதவேன வ்யவஸ்திதம்
பச்யந்திச சதா தேவம் நேதரைர் ஜ்ஞாநேன வமரா -என்னக் கடவது இ றே-கண்களாலும் ஞானத்தாலும் பார்க்கிறார்கள் –

————————————————

சூர்ணிகை -184-

அநந்தரம் வ்யூஹத்தை உப பாதிக்கிறார் -123-தொடக்கி -24-திருநாமங்கள் -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தில்

வ்யூஹமாவது
ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹார அர்த்தமாகவும்
சம்சாரி சம்ரஷண அர்த்தமாகவும்
உபாசாகர் அனுக்ரஹ அர்த்தமாகவும்
சங்கர்ஷண
பிரத்யும்ன
அநிருத்த
ரூபேண
நிற்கும் நிலை –

சம்ஹாரம் -ஸ்ருஷ்ட்டி –ரக்ஷணம் / சங்கர்ஷண -ப்ரத்யும்ன -அநிருத்தன -/ஆத்மா சரீர சம்பந்தம் -ஸ்திப்பிக்கை வாழ வைக்கை- பிரார்த்திக்காமல்
வ்யூஹ வாஸூ தேவன் –பூ லோக வைகுண்டம் வ்யூஹ வாஸூ தேவன் பெரிய பெருமாள் –வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் கோயிலிலே –
பாஞ்சராத்ரம் வ்யூஹம் தொடர்பு -பூ லோக வைகுண்டம் திவ்ய தேசம் –
சம் ரக்ஷணம் -அர்த்தம் -தனியாக –அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் கொடுக்க -திரௌபதி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான்-பிரார்த்தித்து பெறுவது –
கேசவாதி துவாதச திரு நாமங்களை இந்த நால்வருக்கும் -பாஞ்ச ராத்ரம் இவற்றை விவரிக்கும் – -நான்கு கைகளிலும் ஒரே திவ்ய ஆயுதம் -வரணங்கள் வேறே –
துவாதச பிராட்டி திரு நாமங்களை உண்டே –

அதாவது -வ்யூஹத்துக்கு விநியோகம் லீலா விபூதியில் ஆகையாலே
இவ் விபூதியினுடைய ஸ்ருஷ்டி என்ன ஸ்திதி என்ன சம்ஹாரம் என்ன
இவற்றை நிர்வஹிக்கைக்காகவும்
புபுஷூக்களான சம்சாரிகளை அநிஷ்ட நிவ்ருத்யாதிகளை
பண்ணி ரஷிக்கைக்காகவும்
முமுஷூக்களாய் உபாசிக்குமவர்களுக்கு சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக
தன்னை வந்து பிராபிக்கைக்கு உடலான அனுக்ரஹத்தை பண்ணுகைக்கு உடலாகைக்காகவும்
சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்துக்களாய்க் கொண்டு
நிற்கும் நிலை வ்யூஹம் ஆவது -என்கை –
இதில் இன்ன வியூஹத்தாலே இன்னது செய்யும் என்னும் இடம் மேல் உப பாதனத்திலே கண்டு கொள்வது –
சதுர்விதச ச பகவான் முமுஷூணாம் ஹிதாயா அன்யே ஷாம் அபி லோகாநாம் ஸ்ருஷ்டி ஸ்தித்ய ந்த சித்தயே -என்றும்
ஆன நதயாத தவ சேனா நே யயூஹா ஆதயோ மயே ரித
அநாதி கர்ம வச்யா நாம சம்சாரே பததாமத
என்று தொடங்கி
உபாசகா நுக்ரஹார்த்தம் ஜகதோ ரஷணாய ச -என்றும்-முமுஷுக்கும் புகுஷுக்கும் என்றவாறு
ஆவி ராசீத பகவத பஞ்சாயுத பரி ஷக்ருதருக்மாபச சோயமே மலச
சர்வ சாஸ்த்ரேஷூ சப்தித சோயம் பிரத்யும்ன நாம நாபூத
ததோக நாதாவபுர்த்தர
சோயாம சங்கர்ஷணா ககயோபூத ததேகா ந்த வபுர்தர இந்திர நீல பிரதீகாச
எஸ சாஸ்த்ரேஷூ சப்தித ததோ நாம நா அநிர்த்ததோயம் ஸ்வயமேவ வைபவ நமுனே ததேகா ந்த வபுர்யுகதச ததா தவிககந ப்ரப-என்றும்
ருக்ம ஸ்வர்ணம் போலே காந்தி -படைத்து நிர்மலம் -பர வாஸூ தேவன் இடம் நால்வரும் ஆவிர்பவித்து -பிரத்யும்னன் –
அவர் சங்கர்ஷணன் ஆனார் -அவர் இந்திர நீல பிரகாசம் கொண்டு
-அவர் அநிருத்தன் ஆனார்-
பக வத் சாஸ்த்ரத்திலே ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஆகமத்தில் –ஸ்ருஷ்டியாதிகளும்
சம்சாரி சம் ரஷணமும்
உபாசக அனுக்ரஹமும் ஆகிற வ்யூஹ கிருத்யங்களும்
சங்கர்ஷணாதி வுயூஹங்களும் -சொல்லப் பட்டது இ றே –
சதுர்விதச ச பகவான் என்கிற இடத்தில்
சதுர்விதமாகச் சொல்லிற்று வாஸூ தேவரையும் கூட்டுகையாலே –

——————————————————————-

சூர்ணிகை -185-

இந்த பர வ்யூஹங்களுக்கு தன்னில் விசேஷம் ஏது என்ன
அருளிச் செய்கிறார் –

பரத்வத்தில்
ஜ்ஞாநாதிகள் ஆறும்
பூரணமாய் இருக்கும்
வ்யூஹத்தில் ‘
இவ்விரண்டு குணம்
ப்ரகடமாய் இருக்கும் -ப்ரா

அதாவது
சம்பூர்ண ஷட்குணச தேஷு வா ஸூ தேவோ ஜகத்பதி -என்றும்
பூர்ண சமிதி ஷாட்குண்யோ நிச தரங்கா ரண வோபம் -என்றும்-
அலை இல்லா கடல் போலே பூரணமாய் –
ஷணணாம் யுகபது நமேஷாத குணா நாம ஸ்வ ப்ரசோதிதாத
அநந்த ஏவ பகவான் வா ஸூ தேவச சனாதன -என்றும் சொல்லுகிறபடியே
வாஸூ தேவ ரூபமான பரத்வத்திலே
ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ஸூ க்கள் ஆகிற ஆறு குணங்களும் பரிபூரணமாய் இருக்கும்-
சங்கர்ஷணாதி ரூபமான வ்யூஹத்தில் -தத்ர தத்ர அவசிஷ்டமயத குணா நாம த்வியுகம் முனே அனுவிருத்தம் பஜதயேவ தத்ர தத்ர யதாத்தம் -என்கிறபடியே
அவிசிஷ்டமான குண சதுஷ்ட்யமும் தத்ர தத்ர அனுவிருத்தமாய் நிற்கச் செய்தேயும்
அதிகரித்த கார்யங்களுக்கு அனுகுணமான இவ்விரண்டு குணமே பிரகாசமாய் இருக்கும் என்கை-
சக்தி தேஜஸ் ரஷிக்க/ ஸ்ருஷ்டிக்க ஐஸ்வர்யம் வீர்யம் –படைக்கும் பொழுது விகாரம் அடையாமல் தான் இருக்க /
-சம்ஹரிக்க ஞானம் பலம் என்றவாறு /இவை பிரகாசமாக இருக்கும் மற்றவைகளும் உண்டு
குணை ஷட்பிச தவேதை பிரதமதா மூர்த்தி ச தவ பவௌ
ததஸ திசரச தேஷாம்
த்ரியுக யுகளை ஹி த்ரிபிறப்பு வ்யவஸ்ததா யா சைஷா
ந்து வரத சாவிஷ க்ருதி வசாத பவான சர்வத்ரைவ தவ கணித மகா மங்கள குணா -என்று
த்ரியுக -மூன்று இரட்டைகள் -/மூன்றான இரண்டுகளால் -பிரகாசித்தன -/ எப்பொழுதும் எண்ண முடியாத மங்கள குணங்கள் யுடையவர் அன்றோ -தேவப் பெருமாளே -என்கிறார்
இது தன்னை ஆழ்வான் அருளிச் செய்தார் இ றே-

———————————————————-

சூர்ணிகை -186-

இனி இந்த சர்கர்ஷணாதிகள் மூவர் பக்கலிலும் பிரகாசிக்கிற குண விசேஷங்களையும்
இவர்கள் தான் இன்ன கிருத்யங்களுக்கு கடவராய் இருப்பார்கள் என்னுமத்தையும்
தனித் தனியே அருளிச் செய்ய வேணும் என்று திரு உள்ளம் பற்றி
பிரதமத்தில் சங்கர்ஷணர் படியை அருளிச் செய்கிறார் –

அதில் சங்கர்ஷணர்
ஜ்ஞான பலங்கள் இரண்டோடும் கூடி
ஜீவ தத்வத்தை அதிஷ்டித்து
அத்தை பிரக்ருதியில் நின்றும் விவேகித்து
பிரத்யும்ன அவஸ்தையையும் பஜிதது–இது ஒரு செயல் -மேலும் –
சாஸ்திர பிரவர்த்தனத்தையும்
ஜகத் சம்ஹாரத்தையும்
பண்ணக் கடவராய் இருப்பார் –

அதாவது வ்யூஹ த்ரயத்திலும் வைத்துக் கொண்டு சங்கர்ஷணர்
தத்ர ஞான பல த்வந்தவாத் ரூபம் சங்கர்ஷணம் ஹரே -என்றும்
பகவான் அச்யுதோபீததம ஷட் குணேந சமேதித பல ஞாநௌ குநௌ தஸ்ய சப்புடௌ கார்ய வாசன் முனே -என்றும் சொல்லுகிறபடியே
சர்வகுணங்களும் உண்டாய் இருக்கச் செய்தேயும் கார்ய அனுகுணமாக
ஜ்ஞான பலங்கள் இரண்டும் கூடி
சோயம் சமஸ்த ஜீவானாம் அதிஷ்டாத்ருதயச ச்ததித-என்றும்
சங்கர்ஷண ச து தேவாசோ ஜகத் ஸ்ருஷ்டும் நாச தத ஜீவ தத்வம் அதிஷ்டாய பரக்ருதேச்து விவிசய தன -என்றும்
சொல்லுகிறபடியே
பிரக்ருதிக்கு உள்ளே மயங்கிக் கிடக்கிற ஜீவ தத்தவத்தை அதிஷ்டித்து-ஆதாரமாக இருந்து -அனுபிரவேசித்து என்றுமாம் –
அந்த அதிஷ்டான விசேஷத்தாலே இத்தை பிரக்ருதியில் நின்றும்
நாம ரூப விசேஷம் தோற்றும்படி விவேகித்து பிரித்து -ஸ்ருஷ்டிக்க முதல் வேலை இவர் பார்த்து தயார் நிலையில் வைப்பார் என்றவாறு
விவேகாந்தரம் தேவ பிரத்யும்ன தவ மவாப ச -என்றும்-
சோயம பிரத்யுமன நாம பூத ததேகாந்தவ புத்திர -என்றும்
சொல்லுகிறபடியே
பிரத்யும்ன அவஸ்தையும் பஜிதது –
சாஸ்திர பிரவர்த்த நஞ்சாபி சம்ஹாராஞ்சைவ தேஹி நாம -என்றும்
பலேன ஹாதீ தம ச குணென நிகிலம் முனே ஜ்ஞாநேன தநுதே சாஸ்திரம்
சர்வ சித்தாந்த கோசரம் வேத சாஸ்திரம் இதி க்யாதம் பாஞ்சராத்ரம் விசேஷத –
என்றும் சொல்லுகிறபடியே வேதாதி சாஸ்திர பிரவர்த்தனத்தையும்-ஆதி -பாஞ்சராத்ர ஆகமம் –
ஜகத் சம்ஹாரத்தையும் பண்ணக் கடவராய் இருப்பர் -என்கை –

ஆத்ம தத்வம் அதிஷ்டானம்- சாஸ்த்ர பிரவர்தனம் /மனஸ் தத்வம் அதிஷ்டானம் -தர்ம பிரவர்தனம்/
தத்வ ஞானம் ப்ரவர்த்தனம் – பல பிரதத்வம் மூன்றும் மூவரும் செய்வார் -என்றபடி –

———————————————–

சூர்ணிகை -187-

அநந்தரம் பிரத்யும்னர் படியை அருளிச் செய்கிறார் –

பிரத்யும்னர்
ஐஸ்வர்ய வீர்யங்கள் இரண்டோடும் கூடி
மனஸ் தத்தவத்தை அதிஷ்டித்து
தர்ம யுபதேசத்தையும்
மனு சதுஷ்டயம் தொடக்கமான
சுத்த வர்க்க சிருஷ்டியையும்
பண்ணக் கடவராய் இருப்பர்-

அதாவது -ஐஸ்வர்ய வீர்ய சம்போதத ரூபம் பிரத்யும்னம் உச்யதே -என்றும்
பூர்ண ஷடகுண ஏவாயம் அச்யுதோபி மகாமுனே குணா ஐஸ்வர்ய வீர்யா க்க யௌ ச்புடௌ தஸ்ய விசேஷத -என்றும்
சொல்லுகிறபடியே சகல குணங்களும் உண்டாய் இருக்கச் செய்தேயும்
கார்ய அனுகுணமான விசேஷண ஸ்ப்புடங்களாய் இருக்கிற ஐஸ்வர்ய வீர்யங்களோடே கூடி
மன சோயம் அதிஷ்டாத மநோ மய இதீரத -என்கிறபடியே
ஜ்ஞான பிரசரண த்வாரமான மனஸ் தத்தவத்தை அதிஷ்டித்து –
ஐஸ்வர் யேண குணே நாசௌ ஸ்ருஜதே தச சரா சரம வீர்யேண சர்வ தர்மாணி பிரவர்த்தயதி சர்வச –
என்கிறபடியே சாஸ்தராத்த அனுஷ்டான ரூபமான தர்மங்களின் யுடைய உபதேசத்தையும்–வேத போதித இஷ்ட சாதனத்தவமே தர்மம் –
மநு நாம சாசமக்ர்தோ முக பாஹூரு பாத்த சதுராணாம் ப்ரஹ்மணா தீ நாம
சாச்த்வாரம் ஜகத் பத்தி த்விஜ யுகமம் ஷத்ர யுகமம் விஷய யுகமம் ததைவ ச
மிதுநஞ்ச சதுர்தச்ய ஏத நமனு சதுஷ்டயம் மனுப்யோ மான வசதம்
ஸ்திரீ புமமிது ந்தோ பவேதே ஏகைகர்ம வர்ண பேதேன தேபயோ
மாநவ மாநவ சஹசா சமபபுபூ யுச்ச ஸ்திரீ புமமிது நதச ததா
மனுஷ்யாச்ச ததச தேபா பராதுஷயா வீதமதசரா ஏதே ஹி சுத்த சத்வ சதா தேஹா நதம நா நயயாஜின நிராசீ
கர்ம கரணான மாமேவ பராப நுவனதிதே த்ரயந்தேஷூ
ச நிஷணதா த்வாத் சாதயா தம சீததகா வ்யூஹ நிவ்ருத்திம்
சத்தம் குர்வதே தே ஜகத்பதே த்ருதீ யேன ஜகத்தாதர நிர்மிதா மனசா ஸ்வயம்
குண பிரதானயோகே ச நிஷ்டிதா புருஷர்ஷப இத்யேஷசுததசர்கோயம் ச னேச தவ கீர்த்தித -என்று
விஷ்வக் சேன சமிதையில் சொல்லுகிற படியே-கண நாதாயா என்று விஷ்வக்சேனரை -சொன்னவாறு –
முக பாஹூரு பாதஜராய்-முகம் கை பாதம் தொடை
மிதுனமாய் இருக்கிற ப்ரஹ்மானாதி மனு சதுஷ்டயம் தொடக்கமாக-ப்ராஹ்மண மிதுனம் ஆண் பெண் –
இந்த மனுக்கள் பக்கல் நின்றும் மிதுனங்களாய்க் கொண்டு தனித் தனியே
வர்ண பேதேன யுண்டான மாநவ சதமும்
அப்படியே ஸ்திரீ பும மிதுனங்களாய்க் கொண்டு
அந்த மாநவர் பக்கலிலே நின்றும் யுண்டான மாநவரும்
அவர்கள் பக்கலிலே நின்றும் யுண்டான மனுஷ்யருமாயக் கொண்டு
நிர்மதஸ்ரராய்-பகைமை உணர்வு இல்லாமல் – சுத்த சத்வச்தராய் தேஹானத மன யயாஜிகள் அன்றிக்கே
பல அபி ச நதி ரஹீதராய் கொண்டு
பகவத் சமாராதன ரூபமான கர்மத்தை அனுஷ்டியா நிற்பாராய் –
வேதாந்ததிலே நிஷனாதராய்
த்வாதச அஷர முகேன-ஓம் நமோ பகவத் வாசுதேவாயா -முகேன அத்யாத்ம சிந்தராய்க் கொண்டு
சர்வேஸ்வரனுடைய வ்யூஹ அனு வ்ருத்தியை எப்போதும் பண்ணா நின்று கொண்டு
பகவத் பிராப்தியைப் பண்ணா நிற்கும் சுத்த வர்க்கத்தின் யுடைய சிருஷ்டியையும்
பண்ணக் கடவராய் இருப்பர் -என்கை-

ப்ரவர்த்தன் நாபி கமலத்தில் இருந்து நான்முகன் என்றவாறு =

——————————

சூர்ணிகை -188

அநந்தரம் அநிருத்தர் படியை அருளிச் செய்கிறார் –

அநிருத்தர்
சக்தி தேஜஸ் ஸூக்கள் இரண்டோடும் கூடி
ரஷணத்துக்கும்
தத்வ ஜ்ஞான பிரதானத்துக்கும்
கால ஸ்ருஷடிக்கும்
மிஸ்ர ஸ்ருஷடிக்கும்
கடவராய் இருப்பர்-

அதாவது -அநிருத்தர் சக்தி தேஜஸ் சமுத காஷாத அனிருத்த தநூஹரே -என்றும்
புருஷோபி மகாதயஷா பூர்ண ஷட் குண உச்யதே சக்தி தேஜௌ குனௌ
தஸ்ய ஸ்புடா கார்யவசனா முனே -என்றும்
சொல்லுகிறபடியே சர்வ குணங்களும் யுண்டாய் இருக்கச் செய்தேயும் கார்ய அனுகுணமான
சக்தி தேஜஸ் ஸூ க்களோடே கூடி –
சக்த்யா ஜகதிதம் சர்வ மனனதாண்டம் நிரந்தரம் பிப்ரததி பாதி ச ஹரிர
மணிசாநுரி வாணி கம தேஜஸா நிகிலம் தத்வம் ஜ்ஞாபய தயா தமனோ முனே -என்கிறபடியே ஜகத் ரஷணத்துக்கும்
உஜ்ஜீவன ஹேதுவான தத்வ ஜ்ஞான பிரதானத்துக்கும்
த்ருடி முதலாக த்விபிரார்தன பர்யந்தமாக உண்டான கால ஸ்ருஷடிக்கும்
துரீ யோயம் ஜகந்நாதோ ப்ரஹ்மணா மசருஜத புன முக பஹூரு பஜ ஜாதோ ப்ரஹ்மண பரமேஷ்டின
சதுர்விதோ பூத சர்வாச தேன ஸ்ருஷ்டச ஸ்வயம்புவா ப்ரஹ்மணாதயாஸ்
ததா வரணா ராஜா பிரசுர்யதோ பவன
தராய் மார்சேஷூ நிஷணாத பலவாதே ரமந்திதே தேவா தீ னேவ மன வானா ந ச மாம் மே நிரே ச்வத
தம ப்ராயாச தவிமே கேசி தமமே நிதானம் பிரகுர்வதே
ஆராத யஞ்ச நியந்தாரம் ந ஜானனதே பரஸ்பரம்
சல லாபம் குர்வதோ வயகரவேதா வா தேஷு நிஷ்ட்டிதா
மாம் ஜ ஜானநதி மோகன தே ஹி சம்சார வாதமனி இத்யேஷ மிஸ்ர சஸ்து கணேச தவ கீர்த்தித –
என்று விஷ்வக் சேனை சம்ஹிதையில் சொல்லுகிறபடி
ப்ரஹ்மாவினுடைய முக பாஹூ ருபாதஜராய்
ப்ரஹ்மணாதி வர்ணராய்
ரஜ பிரசுரராய் பூர்வபாமரர் நிஷதணராய் ஷலவாசதிலே ரம்யா நிற்பரே
ஈஸ்வரனை ஒழிய தேவாதிகளை ஆராதயாரக நினைத்து
அதிலே சிலர் தம பிரசுரராய்
பகவன் நிந்தனையைப் பண்ணி ஆராதயனாய நியந்தாவாய் இருக்கிற அவனை அறியாதே
வயகரமான வேத வாக்யங்களிலே மனசை வைத்து ஒருவர்க்கு ஒருவர் சல்லாபித்துக் கொண்டு
ஆகையாலே பகவத் ஜ்ஞான பக்திகளிலே அந்வயம் இன்றிக்கே
ஸ்வ ஜாதிகளிலே ரம்யா நின்று கொண்டு
ஸ்வ கர்ம பல அவசானத்திலே அதபதித்து கர்ம விஷயமான மனசை யுடையவராய்
ஜரா மரணங்களை அடைந்து சம்சார மார்க்க கர்மிகளாய்
திரியுமவர்கள் ஆகிற மிஸ்ர வர்க்கத்தின் யுடைய சிருஷ்டியும் பண்ணக் கடவராய் இருப்பர் என்கை-

அண்டத்தையும் அண்ட காரணங்களையும் தானே யுண்டாக்கும்
அண்டத்துக்கு உட்பட்ட வஸ்துக்களை சேதனர்க்கு அந்தர்யாமியாய் நின்று யுண்டாக்கும் -என்று
சமஷ்டி ஸ்ருஷ்டி எல்லாம் அத்வாரமாகவும்
வ்யஷ்டி ஸ்ருஷ்டி எல்லாம் சத்வாரமாகவும் –
இவர் தாமே கீழே அருளிச் செய்கையாலும்
இவ்வண்டத்திலே பத்தாத்ம சமஷ்டி பூதனான ப்ரஹ்மாவுக்கும்-முக்தாத்ம சமஷ்டியோ நித்யாத்ம சமஷ்டியோ இல்லையே –
இதுக்கு கீழே ஸ்வ சங்கல்ப்பத்தாலே எம்பெருமான் தானே ஸ்ருஷ்டித்து அருளும்
இதுக்கு மேலே ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்து அருளும்
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்கையாலும்
வ்யஷ்டி ஸ்ருஷ்டி எல்லாம் சத்வாரமாகவே கொள்ள வேணும் ஆகையால்
பிரத்யும்ன கிருத்யமாகச் சொன்ன சுத்த ஆத்ம ஸ்ருஷ்டி அத்வாரகம்
அநிருத்தன் கிருத்யமாகச் சொன்ன மிஸ்ர ஆத்ம ஸ்ருஷ்டி சத்வாரகம் என்ன ஒண்ணாது
ஆகையால் சுத்தாத்மா ஸ்ருஷ்டியும் மிஸ்ராத்மா ஸ்ருஷ்டியும்
சத்வார ஸ்ருஷ்டி தன்னிலே சேதனர் உடைய கர்ம விசேஷ பிரயுக்தமான சங்கல்ப விசேஷத்தாலே யாகக் கடவது
இந்த சுத்தவாத்மா ஸ்ருஷ்டியும் மிஸ்ரவாத்மா ஸ்ருஷ்டியும் எம்பெருமான் தானே அருளிச் செய்ய கேட்ட அநந்தரம்
பகவன் தேவ தேவேச சர்வஞ்க்ன பரமேஸ்வர
கிமேஷ பவிதா ஸ்ருஷ்டோ மிஸ்ரசாமோ ஜகத் பத்தி
சுத்த ஸ்ருஷ்டிம் விஹாயை ஷாம நிர்தய புருஷோத்தமா –
என்று சேனை முதலியார் கேட்க-
தயையே இல்லாமல் சுத்த ஸ்ருஷ்ட்டியை விட்டு மிஸ்ரா ஸ்ருஷ்ட்டியை எதற்க்காக பண்ணினீர் -தேவதேவ -பரமேஸ்வர சர்வஞ்ஞனே -என்று -கொண்டாடி கேட்டார் விஷ்வக் சேனர்
விஹாய சுத்த ஸ்ரீசஞ்ச மிஸ்ரா சாசய காரணம் ஸ்ருணுஷ்வ
கண நாத
தவம் தயாலு நிர்தயோ ந ச சர்வஞ்ஞோஹம் ந சந்தேஹச
ததாபி ச சருஜா மயஹம்
அநாதய விதயா சமமுஷ்ட சேமுஷீ காண நாரா நிஹா
வீஜயாஜா ஜ்ஞான பிரசங்கம் து நிஷித்த கரணம் ததா விஹிதா கரணஞ்சாபி வீஷயை ஷாம
பராதகான மிசராத்மா கரோம யேவ ப்ரஹ்மனா பரமேஷ்டினா
ஏவம் ஸூ கருத லேசேன சுத்த சத்வாத்மா கரோமி ச
மனுபர முகசாசோ யச சுத்த சாசோ மயேரித
சுத்த சத்வ மயாசே சர்வே மதபக்தி நிரதாச சதா மமார்ச்ச்சனா ஜீதேன தரியா
பக்த்யா பரமயா சைவ பரபத்த்யாவா மகா முனே பிராப்யம் வைகுண்டம்
ஆசாதய ந நிவர்த்தந்தி தேவயயா ஏவம் சர்வேஷூ குரவத ஸூ மான வேஷூ முமுஷூ ஷூ
ஸ்ருஷடி ஷயோ மகா நாசித நாரகீ பூச தருண வருதா
இதி ஜ்ஞாத்வா மிஸ்ராத்மா கரியதே லீலயா மயா –
என்று பகவான் தானே அருளிச் செய்கையாலே —
விளையாட்டுக்காக -செய்தென் -நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும்–லோக வைத்து லீலா கைவல்யம் -கண நாதா -என்று விழித்து -சேனைக்கு முதலியார் அன்றோ –
நான் தயாளு தான் -நிர்த்தயோ இல்லை-சர்வஞ்ஞன் தான் சங்கை இல்லை – -ஆனாலும் மிஸ்ரா ஸ்ருஷ்ட்டி பண்ணுவது
அநாதி காலம் அவித்யையால் மூடப்பட்ட ஞானம் – அஞ்ஞானம் உடையவர்கள் -நிஷித்த கரணம் -விஹித அகரணமும் – கடாக்ஷித்து —
பரமேஷ்ட்டி பிரம்மன் முகமாக -நடுவில் வைத்து -ஸூ ஹ்ருதம் லேஸம்–கதாசித் -சுத்த வர்க்க ஸ்ருஷ்டியும் பண்ணுகிறேன் –
இங்கு முக்குணம் இல்லாதவர் என்பது இல்லை -அனைவரும் முக்குண சேர்க்கையால் தானே
மனுக்கள் ஸ்ருஷ்ட்டி சுத்த வர்க்க ஸ்ருஷ்ட்டி -ரஜஸ் தமஸ் -இல்லாமல் -கிட்ட தட்ட சுத்த சத்வம் -பிரகிருதி சம்பந்தம் இருக்கும் வரை முக்குண சேர்க்கை உண்டே —
அர்ச்சன பரர்கள்–பகவத் தியானமே யாத்திரை -ஜிதேந்த்ரியர்கள் -பரம பக்திமான்கள் பிரபன்னர்கள் -ஸ்ரீ வைகுண்டம் அடைந்து திரும்பாமல் உள்ளார்கள்
கர்ம ஞானங்கள் நேராக மோக்ஷம் கொடுக்காதே –
முமுஷுவாக சர்வரும் ஆனால் -ஸ்ருஷ்டிக்க வேண்டிய தேவையே இருக்காதே -நரக பூமி புல் எழுந்து ஒழியும் –
முத்கலன்-நமனும் பேச –நரகில் நின்றார்கள் கேட்க -உபதேசமும் இல்லை -இங்கு -நரகமே ஸ்வர்க்கமானதே -நாமங்கள் யுடைய நம்பி
-லீலையாக மிஸ்ர ஸ்ருஷ்ட்டி செய்யப்பட்டது என்றாரே -விபீஷணன் பிரகலாதன் மிஸ்ர ஸ்ருஷ்டியால் வந்தாலும் சுத்த வர்க்கம் ஆனார்கள்

————————————————————-

சூர்ணிகை -189-

ஆக வ்யூஹத்தின் படியை உபபாதித்தாராய் நின்றார் கீழ்
அநந்தரம்
விபவத்தின் படியை விஸ்தரேண உபபாதிக்கிறார் மேல் –

விபவம்
அனந்தமாய்
கௌண
முக்ய
பேதத்தாலே
பேதித்து இருக்கும் –

பிறப்பில் பல் பிறவி என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் -விசேஷனே பவம் இதி விபவம் –

அதாவது
விபவோபி ததா அனந்தோ தவிதைவ பரிகீரதயதே கௌண முக்கய விபாகேன சாஸ்த்ரேஷூ ச ஹரே முனே -என்றும்
ப்ரா துர்ப்பாவோ தவிதா பரோகதோ கௌண முக்கய விபேததே-என்றும்-ப்ராதுர் பாவம் -அவதாரம் —
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த -இறங்குகிறார் -அவதாரணம் -விசேஷண பவதி நமக்காக உருவாக்கிக் கொள்கிறார் –
சொல்லுகிறபடியே-இதுவும் விஷ்வக் சேனா சம்ஹிதை பிரமாணம் -அஜாயமானோ பஹுதா விஜாயதே –
விபவமானது பரி கணித்துத் தலைக் கட்டப் போகாதபடி அனந்தமாய்
கௌண முக்கியம் ஆகிற பேதத்தால் இரண்டு வகையாகப் பிரிந்து இருக்கும் -என்கை
விபவம் ஆவது -இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு ஆவிர்பவிக்கை–ஆழ்வார்கள் -பிறந்து வேண்டித் தேவர் இரக்க -வந்து பிறந்து /
இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு சாஷாத் அவதாரத்துக்குத் தான் பொருந்தும்
இதில் கௌணம் என்றது அவரம் என்றபடி–வர உயர்ந்தது அவர தாழ்ந்தது
முக்கியம் என்றது ஸ்ரேஷ்டம் என்றபடி
கௌணம் ஆவது ஆவேச அவதாரம்– -ஆத்மாவை அதிஷ்டானம் பண்ணிக் கொண்டு என்றபடி
முக்யமாவது -சாஷாத் அவதாரம் -ஆவேசம் தான் -ஸ்வரூப ஆவேசம் என்றும் சக்த்யா ஆவேசம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
அதில் ஸ்வரூப ஆவேசம் ஆவது ஸ்வமான ரூபத்தாலே ஆவேசிக்கை–ஸ்வம் ரூபம் ஸ்வரூபம் –தானான தன்மை என்றபடி -ரூபம் இல்லை – /
ப்ரஹ்மத்வமும் குணம் -இதுவே இன்றியமையாது குணம் தன்மை -/
ஆதாவது பராசுராமாதி களான சேதனர் உடைய சரிரங்களிலே
தன்னுடைய அசாதாரண விக்ரஹத்தோடே ஆவேசித்து நிற்கை–
சக்த்யா ஆவேசமாவது -கார்ய காலத்திலே விதி சிவாதிகளான சேதனர் பக்கலிலே
சக்தி மாத்ரத்திலே ஸ்புரித்து நிற்கை –ஸ்வமான ரூபத்தாலே இல்லை –அந்த நிமிஷத்து தோன்றி -என்பதே ஸ்புரித்து –
இதனால் தான் இந்திரன் கோவர்த்தனம் பாரிஜாதம் -இத்யாதிகளில் மீண்டும் மீண்டும் அபசாரம் பட்டான் –
கார்த்த வீர்யார்ஜுனன் -சக்தி ஆவேசம் / பரசுராமர் ஸ்வரூப ஆவேசம் -/பெருமாள் முக்கிய அவதாரம் -/
அங்கதப்பெருமாள் ராவணன் இடம் சொல்லி -கார்த்த வீர்யார்ஜுனன் பெருமை சொல்லி -/
பரசுராமன் பல ராமனை அவதாரத்தில் சேர்த்து இலக்குமனை சேர்க்க வில்லையே- பரசுராமன் கள்ளை குடித்தாராமே -ரோஷ ராமர் என்கிறோமே
இத்யாதி கேள்விகளுக்கு -இந்த ஆவேச விபவமே காரணம் –

————————————

சூர்ணிகை -190-

இனி முக்கிய விபத்தோடு கௌண விபவத்தோடு
சாம்ய
வைஷம்யங்களை
அருளிச் செய்கிறார் –

மனுஷ்யத்வம்
திர்யக்த்வம்
ஸ்த்தாவ்ரத்வம்–குட்டை மா மா மரம் தானான முக்கிய அவதாரம் –
போலே
கௌணத்வமும்
இச்சையாலே வந்தது
ஸ்வ ரூபேண அன்று -ஸ்வரூபேண ப்ரஹ்மத்வம் தானே -இவை இச்சையால்
சாஷாத் அவதாரம் -ஸ்வரூபேணாவும் இச்சையாலும்
கௌணத்வமும்-ஸ்வரூபேண இல்லை இச்சையால் மட்டுமே என்றவாறு

அதாவது
மதிச்சயா ஹி கௌண த்வம் மானுஷ்யம் இச்சேசயயா ஸூ க்ரதவஞ்ச மத்ச்யத்வம்
நாரசிம்ஹ தவமேவச யதாவா தண்ட கராணயே குப்ஜாமரத்வம் மச்சேயா
யதா வர்ஜி முகதவஞ்ச மம சங்கல்ப தோ பவத சேனா பதே
மமேச்சாதோ கௌ ண த்வம் ந ச கர்மணா–விஷ்வக் சேனா சம்ஹிதை – என்கிறபடியே
ராம கிருஷ்ணாத் வாதியான மனுஷ்யத்வம்
மத்ஸ்ய கூர்மத்வாதியான திர்யக்த்வம்–குதிரை முகத்தானும் நரஸிம்ஹமும் இதுவே
குப்ஜாமரத்வம் ஆகிற ஸ்தாவரத்வம்–தாண்ட காரண்யத்தில் இந்த அவதாரம் என்பர் –
ஆகிற இவை -இச்சையாலே ஆனால் போலே
ஆவேச ரூபமான கௌணத்வமும் இச்சையாலே வந்தது என்னும் ஆகாரம் ஒக்கும்
அப்ராக்ருதமாய் இருந்துள்ள ஸ்வ அசாதாரண விக்ரஹத்தோடே வந்தது அன்று என்கை –
உபாத்த வசனங்கள் இச்சையாலே வந்தது என்கிற மாத்ரத்தை சொல்லிற்றே ஆகிலும்
கௌணத்வம் ஆவது மனுஷ்யத்வாதிகள் போலே
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு
அவதரித்தது அல்லாமையாலே
ஸ்வரூபேண வந்தது அன்று என்னும் இடம் சித்தம் இ றே-

———————————-

சூர்ணிகை -191-

இன்னமும் உபாஸ்யத்வ அனுபாஸ்யத்வ கதன முகத்தாலும்
உபயத்துக்கும் யுண்டான விசேஷத்தை
தர்சிப்பிதாக திரு உள்ளம் பற்றி
பிரதம் முக்கிய விபவத்தின் உடைய உபாயஸ்த்வத்தை சஹேதுகமாக அருளிச் செய்கிறார்

அதில்
அப்ராக்ருத விக்ரஹங்களுமாய்
அஜஹத ஸ்வ பாவ விபங்களுமாய்
தீபாதுதபநந ப்ரதீபம் போலே
யிருக்கக் கடவதான
முக்ய பரா துர்ப் பாவங்கள் எல்லாம்
முமுஷூ க்களுக்கு
உபாஸ்யங்களாய் இருக்கும் –

போற்றும் புனிதன் ராமானுஜன் -உபாசித்தார் இல்லை -பூசித்தார் என்ற அர்த்தமே –

அதாவது
உபய விதமான விபவத்திலும் கொண்டு
ப்ராதுர்ப்பா வாஸ்து முக்யாய மதமசதவாத விசேஷத அஜஹத ஸ்வ பாவ விபவா திவ்ய அப்ராக்ருத விக்ரஹா
தீபாத தீபா இவோ தப நானா ஜகதோ ரஷணாய தே அர்ச்சயா
ஏவஹி சேநேச சம்ஸ்ருயூதத தரணாய முக்க்யா உபாசயாச
சேநேச அநாச்சையான இதரான் விது -என்கிறபடியே –
-குண பூர்த்தி உள்ள இடமே சரணம் -ஸுலப்யம் அர்ச்சையிலே பூர்ணம் -அமுக்கிய அவதாரங்களில் குண பூர்த்தி இருக்காதே –
ஆதி யஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தது ஆகையாலே
அப்ராக்ருத விக்ரஹகங்களுமாய்
அஜோபிசன் அவயவத்மா பூதானாம் ஈச்வரோபிசன் -என்கையாலே
விடாதே இருந்துள்ள
அவதாரம் சத்யம் -இச்சையால் சங்கல்பம் மூலம் அவதாரம் -திருமேனியை -அப்ராக்ருதம் -இயல்பான திவ்ய மங்கள விக்ரஹம்– ஸ்வாம் திஷ்டாயா -தரித்துக் கொண்டு —
அபி சன் அத்தோடு இருந்து கொண்டே –விடாமல் -பிறவாதவனாக இருந்தே பிறந்து பிறப்பிலி -கர்மத்தால் இல்லை ஸ்வ இச்சையால் /
அவயவத்மா- அழிவற்றவனாக இருந்து கொண்டே பிறக்கிறேன் -விநாசம் அடைந்தே தானே உத்பத்தி -அழிவில் ஆரம்பித்ததே ஸ்ருஷ்ட்டி -/
சங்கல்பம் முடிந்த பின்பு திரும்புவேன் -அகில ஹேயா ப்ரத்ய நீக்காதவம் சொல்லிற்று
ஈஸ்வரனாக இருந்து கொண்டே நியந்த்ருத்வம் -விடாமல் பிறக்கிறேன் -பிறப்பித்தவனுக்கு அடங்க வேண்டாமோ என்னில்
-மூன்றும் விடாமல் -ஏற்ற திருமேனி எடுத்துக் கொண்டு –
அஜத்வ அவ்யவத்வ சர்வேஸ்வரத்வ வாதியான-
ஸ்வ பாவ விபவங்களை யுடையவையுமாய்-
அத ஏவ தீபத்தில் நின்றும் உத்பன்னமான ப்ரதீபம்
ஸ்வ காரணமான தீபத்தின் யுடைய ஸ்வ பாவத்தை
உடையதாய் இருக்குமா போலே-பரம ஸ்பஷ்டம் -ஜடாயுவை மோக்ஷத்துக்கு அனுப்பியதில் பீரிட்டதே பரத்வம் –
ஸ்வ காரண துல்ய ஸ்வ பாவமாய் இருக்கிற முக்கய ப்ரதுர்ப் பாவங்கள் எல்லாம்
முமுஷூக்களுக்கு உபாசயங்களாய் இருக்கும் -என்கை —

——————————————–

சூர்ணிகை -192-

அநந்தரம்
கௌண விபவத்தின் உடைய அனுபாசயத்வத்தை
சஹேதுகமாக
அருளிச் செய்கிறார் –

விதி சிவ பாவக -அக்னி
வியாச
ஜாமதக்ன
யார்ஜூன
விததே சாதிகள் ஆகிற–குபேரன் போன்றார்
கௌண ப்ரா துர்ப்பாவங்கள் எல்லாம்
அஹங்கார யுக்த ஜீவர்களை அதிஷ்டித்து
நிற்கையாலே
முமுஷூக்களுக்கு
அனுபாஸ்யங்கள் –

அதாவது
அநர்ச்சயா நபி வஷயாமி பரா துர்ப்பவாந யதாக்ரமம் சதுர்முகச து பகவான் ஸ்ருஷ்டிகார்யே நியோஜித
சங்க ராக்க்யோ மகாருதரச சம்ஹாரே விநியோஜித
மோஹனாககயச ததா புத்தோ வியாச ச சைவ மகா த்ருஷி வேதா நாம வ்யசனே தத்ர தேவேன விநியோஜித
அர்ஜூனோ தன்வி நாம ஸ்ரேஷ்ட்டோ ஜாமதக்ன்யோ மகா நருஷி
வ ஸூ நாம பாவ கச்சாபி வித்தே ச ச ச ததைவ ச ஏவ மாதாயாச து சே நேச
ப்ரா துர்ப்பாவைர திஷ்டி நா ஜீவாத்மா நச சர்வே நோபா சதிர
வைஷ்ணவி ஹி சா ஆவிஷ்ட மாதரச தே சர்வே
கார்யார்த்த மமிததயுதே அநாசசயார்ச சர்வே
யேவைதே விருத்த வான் மகாமதே அஹங்கருதி யூதாச சேமே
ஜீவமிஸ்ரா ஹைய திஷ்டிதா -என்கிறபடியே

ஆராதிக்க தக்கவர்கள் அல்ல -பூஜ்யனாய் -ஸ்ருஷ்ட்டி செய்ய நியமிக்கப்பட்ட சதுர்முகன் -போல்வார்
ஸ்ருஷடி கர்த்தாவான ப்ரஹ்மாவும்
சம்ஹார கர்த்தாக்களான சிவ பாவகாக்களும்–சம் ஸூ கம் கொடுக்கும் சங்கரன் – ருத்ரன் ரோதானாதி பிறந்த உடன் அழுது ஓடி –/ அக்னி போல்வாரும் –
மோகம் பண்ணும் புத்தர் போல்வார் – -கைதவங்கள் செய்யும் கரு மேனி அம்மான் –
வேதங்களை வ்யசித்த வ்யாசனும்-பிரித்து கொடுத்த வேத வியாசர்
கார்த்த வீர்யார்ஜுனன் -வில்லாளி
துஷ்ட ஷத்ரிய நிரசனம் பண்ணின ஜமதக்னி புத்ரனான பரசுராமனும்
பாவகன் அஷ்ட வசுக்களில் ஒருவன் -குபேரன்
அகார்யா சிந்தா சம மேவ பர துர்ப்பவம் சாபதர புரஸ்தாத் -என்கிறபடியே
சாபரதனாய்க் கொண்டு ஜகத்தை ரஷித்துக் கொண்டு போந்த
கார்த்த வீர்ய அர்ஜூனனும்
ஔ தார்யா பரதானனான வித தேசனும்-குபேரனும்
ஆதி சப்தத்தாலே
கரோடி கருதரான ககுஸ்த முசுகுந்த பரப்ருதி களுமாகிற
கௌண ப்ராதுர்ப் பாவங்கள் எல்லாம்
ஸ்வ தந்த்ர்யா ரூபமான அஹங்கார யுக்தரான ஜீவர்களை–ஸ்வாதந்த்ர யுக்தரான அஹங்காரம் -தேஹாத்ம அபிமானம் இல்லை இவர்களுக்கு –
அத்யந்த பாரதந்தர்யம் புரியாதவர்கள் -ஆத்ம ஞானம் கை வந்த ரிஷிகள் பர்வதம் போலே நம்மை ஒப்பிட்டால் –
ஸ்வ ஸ்வா தந்தர்ய அபிமானம் உண்டே இவர்களுக்கு -அத்தை அன்றோ இங்கு சொல்லிற்று
கார்யார்த்தமாக ஆவேச முகேன அதிஷ்டித்து நிற்கையாலே-
புபுஷூக்களாய் இருப்பார்க்கு ஒழிய
முமுஷூ க்களுக்கு உபாசயங்கள் அன்று -என்கை –
ஒவ் ஒருவருக்கும் ஒரு காரியத்துக்காக முன்பே சொல்லி அந்த காரியத்துக்காக ஆவேசம் -சரீரத்தில் ஜீவன் அஹங்காரம் இருக்கிறதே –
பூஜிக்கத்-உபாஸிக்கத் தக்கவர்கள் அல்லர்கள்
வியாச ஜாமதாகன யார்ஜூன -என்கிற இடத்தில்
அர்ஜூனன் என்கிறது பாண்டு புத்ரனான அர்ஜூனனையும் ஆக்கவுமாம்
அவனையும் ஆவேச அவதாரமாக இதிஹாசாதிகளில் சொல்லுகையாலே-நர நாராயணன் அவதாரமே கண்ணன் அர்ஜுனன் என்பர் –

இந்த கௌண பரா துர்ப்பாவ அனுபாயச்த்வம் தான்
ப்ரஹ்ம ருத்ர ரார்ஜூன வியாச சஹசர கர பார்க்கவா
ககுத சதா தரேயா கபில புத்தாதய யே சஹச்ரச
சகதயா வேசாவதாராச து விஷ்ணோ சததகால விக்ரஹா
அனுபாச்யம் முமுஷாணாம் யதேநதராக நயாதி தேவதா -என்று
சம்ஹிகாந்தரத்திலும் சொல்லப் பட்டது இ றே
காகுஸ்தர் ஆத்ரேயர் கபிலர் புத்தர் -அந்த காலத்தில் உள்ள விஷ்ணு விக்ரகங்கள் -தத்கால் -சக்தி ஆவேச அவதாரங்கள் –
இந்திரன் அக்னி தேவதைகள் போலே உபாஸிக்க தக்கவர்கள் -அல்லர் –
உபதாத வசனங்களில் புத்த முனியையும் ஆவேச அவதாரங்களில் ஒன்றாக சொன்ன இது
மாயுருவில் கள்ள வேடம் -என்று ஸ்வேன ரூபேண அவதரித்ததாகச் சொன்ன-மா யுருவில் என்பதால் -சாஷாத் அவதாரம் அன்றோ என்னில் –
நம் ஆச்சார்யர்கள் வசனத்தோடு விருத்தம் அன்றோ என்னில்
கல்ப பேதத்தால் அப்படி யும் செய்யக் கூடும் ஆகையாலே விருத்தம் அன்று
ஜாமதக் நயன ஸ்வரூப ஆவேச அவதாரமாய் இருக்க
சக்தி ஆவேசங்களோடு சஹபடித்தது
ஸ்வரூபேண ஆவேசிக்கிறது சக்தி விசேஷத்தாலே ஆகையாலே -என்று நியமித்துக் கொள்வது –

—————————————————————————

சூர்ணிகை -193-

ஆக
விபவங்களின் உடைய அனநதத்தையும்
அதில் சொன்ன முக்கய விபாகத்தையும்
அந்த கௌண முக்யங்களுக்கும் உண்டான பரஸ்பர விசேஷத்தையும்
அருளிச் செய்தார் கீழ் –
அநந்தரம்
கீழ்ச் சொன்ன பர வ்யூஹங்களிலும் முக்கய விபவங்களிலும்
உண்டான அவாந்தரபிதைகளும்-இடைப்பட்ட பேதங்கள் –
அவற்றின் உடைய புஜ ஆயுத வரணாதி பேதங்களும் சொல்ல வேண்டி இருக்க
சொல்லாமைக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –

நிதயோதித
சாந்தோதாதி பேதமும்
ஜாக்ரத சமஜ்ஞ்ஞாதியான
சாதுராதமயமும்
கேசவாதி மூர்த்யந்தரமும்
ஷட் தரிமசத பேத பின்னமான
பத்ம நாபாதி விபமமும்
உபேந்திர த்ரிவிக்ரம ததிபக்த
ஹயக்ரீவ நர நாராயண ஹரி கிருஷ்ண
மத்ஸ்ய கூர்ம வராஹாதயவதார
விசேஷங்களும்
அவற்றின் உடைய புஜ ஆயுத
வர்ண க்ருத்ய ஸ்தாநாதி பேதங்களும்
துரவதரங்களுமாய்
குஹ்ய தமங்க ளுமாய்
இருக்கையாலே
சொல்லுகிறிலோம்-

நிதயோதித சாந்தோதாதி பேத-மாவது –
நித்யோதிதாத சமப்பூவ ததா சாந்தோ தித்தோ ஹரி -இத்யாதியில் சொல்லுகிறபடியே
நித்ய முக்த அனுபாவ்யராய்
நிதயோதித சமஞ்ஞகராய் இருக்கும் பர வாஸூ தேவரும்
அவர் பக்கலில் நின்றும் உத்பன்னராய் சங்கர்ஷண வ்யூஹ காரணமாய்
சாந்தோதித சமஞ்ஞகராய் இருக்கிற வ்யூஹ வாஸூ தேவரும்
முதலான வாஸூ தேவ மூர்த்தியில் பேதமும் –
வ்யூஹங்கள் நாலு என்றும் மூன்று என்றும் சாஸ்த்ரங்களிலே சொல்லும்
நாலும் யுண்டாய் இருக்க மூன்று என்கிறது
வியூஹ வாஸூ தேவ ரூபத்துக்கு பர வாஸூ தேவ ரூபத்தில் காட்டில்
அனு சந்தேய குணபேதம் இல்லாமையாலே என்று அபி யுகதர் சொல்லுகையாலே
இவர் கீழ் வியூஹ த்ரயம் என்று அருளிச் செய்ததுக்கு
இங்கு வ்யூஹ வாஸூ தேவர் யுண்டாக அருளிச் செய்ததுக்கும் விரோதம் இல்லை-

விசாக வ்யூஹ ஸ்தம்பம் -ஜாக்கிரதை தசை – ஸ்வப்ந தசை – -ஸூ ஷூ ப்தி தசை -துர்ய தசா -நான்கும் உண்டே -ப்ரஹ்மத்தின் அருகில் –

ஜாக்ரத சமஜ்ஞ்ஞாதியான சாதுராத்மயம்-ஆவது –
சாந்தோதி சோதபத்தி சொன்ன அநந்தரம்
சாதுராதமயம் அதோ பிண்டம் க்ருபயா பரமேஷ்டினா உபாச காநுக்ரஹார்த்தமய ய பரச்சேதி கீர்த்தயதே
சாந்தோதி தாத பிரவ்ருத்த தஞ்ச சாதுராத மயத்ரயம் ததா
உபாசகா நுக்ரஹார்த்தம் சேநேச மமததபுன
ஸூஷுப்தி ஸ்வப்ன சம்ஜஞம் யத ஜாகரத சம்ஜ்ஞம் ததா பரம சாதுர் மாஸ்யம் மகா பாக பஞ்சமம் பாரமேச்வரம் -என்றும்
பரம புருஷன் கிருபையால் -சாதுராத்மா த்ரயம் -நான்காக பிரித்து ஒவ் ஒன்றையும் மூன்றாக -கேசவாதி துவாதச -/பர வாசுதேவனை சேர்த்து ஐந்தாகும் என்றவாறு
ஆதயோ வ்யூஹோ மயா பரோ கதோ ஹய பரம தரிதயம் சுருணு
உபாசகா நுக்ரஹார்த்தம் ச்வப்னாதி பத சம்சதிதம ஸ்வப்ன நாதயவஸ்தா பேதச து தயாயி நாம கேதச நதயே
தத்த பதசத தேவா நாம தந்தி வருததயா தத மேவச ஸ்வப்ன நாதயவஸ்தா ஜீவா நாம அதிஷ்டாதர ஏவ நே
காமதம நாஞ்ச சேநேச ததபதசதோ மமேச்சயா உபாசயோஹம் மஹாபாக பதபேத பிரயோஜனம் -என்றும்
சொல்லுகிறபடியே-
ஸ்வப்னாதி அவஸ்தா பேதம் துக்கம் சாந்தியின் பொருட்டும் –
-உபாசகா நுக்ரஹார்த்தமாக தன கிருபையால் பண்ணினதாய்
தயாதிகளினுடைய கேதசா நதியின் பொருட்டும்
தத்தத பத சத ஜீவர்களுக்கு தனநிவ்ருத்தியின் பொருட்டுமாய்-
தத்தத் வசத ஜீவர்களுக்கு அதிஷ்டாதருதவேன தத்தத் பதச்தனாய் கொண்டு
காம வச்யரான சேதனர்க்கு உபாசயனாகையே பத பேத பிரயோஜனாய்க் கொண்டு
வ்யூஹ சதுஷ்ட்யத்திலும் பிரத்யேகம் உண்டான
ஜாக்ரத ஸ்வப்ன ஸூ ஷுப்தி துரீய சம்ஜ்ஞகனாய்க் கொண்டு நாலு வடிவை உடையனாய் இருக்கை-
கேசவாதி மூர்த்யந்தரமும்-ஆவது –
ஏதத் அந்தர்கதா தாச சர்வே மூர்த்தயந்தே ரசமாஹவயா கேசவாதய த்வாதச
ச லலாடா திஷூ நிஷ்டிதா சரீர ரஷகாச சர்வே தயாயி நாம தாபச நதயே -என்றும்
கேசவாதயம் த்ரயம் தத்ர வா ஸூ தேவதா விபாவயதே
சங்கர்ஷணா ச ச கோவிந்த பூர்வம் த்ரிதயமதபுதம்
த்ரிவிக்ரமாதயம் த்ரிதயம் பிரத்யுமநாத உதிதம் முனே
ஹருஷீ கேசாதிகம் தத்வத அநிருத்தா நமஹ முனே -என்றும் சொல்லுகிறபடி
கேசவ நாராயண மாதவ -வ்யூஹ வாசுதேவ
கோவிந்த விஷ்ணு மது சூதன சங்கர்ஷணன்
த்ரிவிக்ரமன் வாமன ஸ்ரீ தர -பிரத்யும்னன்
ரிஷிகேசன் பத்ம நாபன் தாமோதரன் அநிருத்தன் –
லலாடாதிகளிலே நின்று சரீர ரஷண்த்தைப் பண்ணா நின்றுகொண்டு
தயாயிகளின் உடைய தாபசா நதியின் பொருட்டாய் இருப்பதாய்
வ்யூஹ சதுஷ்ட்யத்திலும் ஓர் ஒன்றிலே மும் மூன்றாக உத்பன்னமாய்
மூர்த்த்யந்தர சமாஹவமாய் இருக்கிற கேசவாதி வ்யூஹாந்தரம்–
ஷட் தரிமசத பேத பின்னமான பத்ம நாபாதி விபமமும்-ஆவது –
பத்ம நாபாதிகாச சர்வே வைபவீயாச தவைச ஷட் த்ரிமசதா
சங்கயா சங்க யாத பராதான யேன கணேஸ்வர
ஷட் த்ரிமசத பேத பின நாச தே பத்ம நாபாதிகாச ஸூ ரா
அநிருததாத சமுத்த பனனா தீ பாத தீப இவேச்வரா -என்கிறபடியே
-36-/39 அவதாரங்கள் என்பர் தேசிகன் -/ பத்ம நாபன் போலே –
தீ பாத தீபான தாம போலே அநிருத்தாத உபபன்னங்களாய் பிரதானங்களாய்
ஷட் த்ரிம சத பேதத்தாலே பின்னங்களாய் இருக்கிற
பத்ம நாபாத யவதார விசேஷங்கள் –
இந்த பத்ம நாபாதிகள் தான்
விபவா பத்ம நாபாதய த்ரி ம ச ச ச நவசைவ ஹி பத்ம நாபோ தருவோ நந்த சக்த்யாத்மா
மது ஸூ தன வித்யாதிதேவ கபிலோ விச்வரூபோ விஹங்கமே கரோடாதமா
படபாவகதரோ தாமோ வாகீச்வரசததா ஏகாம்போ நிதிசாயீ
ச பகவான் கமலேஸ்வர வராஹோ நரசிம்ஹ ச
பீயூஷா ஹரணச ததா ஸ்ரீ பதிர்பகவான் தே கான தாதமா
அம்ருத தாரக ராஹூ ஜித காலனே மிக்ன
பாரிஜாத ஹர்ச ததா லோக நாதச து சாந்தாத்மா தததாதரயோ
மகா பிரபு நாயகரோ தசாயீ பகவான் ஏக ஸ்ருங்க தநுச ததா
தேவோ வாமன தேஹச து சர்வ வியாபி த்ரிவிக்ரம நரோ நாராயண ச சைவ ஹரி கிருஷ்ணச
ததைவச ஜவலதபரசுதாக ராமோ ராமாச்சா நாய்ச சதுர்க்கதி வேதவித பகவான் கல்கி–
பாதாள சயித பிரபி த்ரிம ச ச ச நவசைவைதே பத்ம நாபாதயோ மதா -என்று-
பத்ம நாபன் த்ருவன் அனந்தன் மது சூதனன் கபிலன் -விஷ்வா ரூபன் -தர்மன் -வாகீஸ்வரன் ஏக அம்போ நிதி சாயி -ஷீராப்தி சாயி
/கமலேஸ்வரன் வராஹன் நாரசிம்ஹன் அமிருதம் திருடி ஸ்ரீ பதி-மோஹினி ராகு ஜித் காலநேமி கொன்றவன் பாரிஜாத ஹாரன் தத்தாத்ரேயன்
ஆலிலை சயனம் -ஏக சுருங்க ஒத்தை கொம்பு வாமனன் த்ரி விக்ரமன் நரேன் நாராயணன் கோடாலி ராமன் பரசுராமன் சதுர்த்தி ராமன் -வேத வித் காளி பாதாள பிரபு —
முப்பத்து ஒன்பதாக அஹிர்புதனைய சம்ஹிதாதிகளில்
சொல்லிற்றே ஆகிலும்
விஷ்வக்சேன சம்ஹிதையிலே முப்பத்தாறாக சொல்லி இருக்கையாலே
இவர் ஷட் த்ரிமசத பேத பின்னம் என்றதில் குறை இல்லை
இனி அந்த முப்பத்து ஒன்பதிலே மூன்றைக் குறைத்து கொள்ளுகை இ றே உள்ளது
அவையாவன -கபில தத்தாத்ரய பரசுராம ரூபமான ஆவேச அவதாரங்கள்-குறைத்து -36-
உபேந்திர த்ரிவிக்ரம ததிபகத ஹயக்ரீவ நர நாராயண ஹரி கிருஷ்ண மத்ஸ்ய கூர்ம வராஹாதயவதார விசேஷங்களும்–ஆவன –
அவதார கந்தம் ஆகையாலே சர்வ அவதாரங்களுக்கும் அநிருத்தரே காரணமாகச் சொல்லிற்றே ஆகிலும்
முன்பு சொன்ன பத்ம நாபாதிகளிலே சஹபடிதங்கள் ஆனவற்றில்
பூர்வ உத்பன்ன விபவத்தில் நின்றும் விபவாந்தரங்களாக உத் பன்னங்கள் ஆனவையும் உண்டு
என்னும் இடத்தை தர்சிப்பிக்கை முதலான சில பிரயோஜனங்களைப் பற்ற —ஒன்றில் இருந்து அடுத்த அவதாரம் போல்வன வேறே கோஷ்ட்டி –
நர நாரணன் / உபேந்திரனே -வாமனன் த்ரிவிக்ரமன் போல்வன –
பூர்வ உத்பன்நாத வைபவீயாத பராதுர்ப்பூத மகேஸ்வரா
பராதுர்ப்பாவா நதரான விததி தான கணேஸ்வர
முக்கயத உபேன தரா ச ச யதா முக்கய த்ரிவிக்ரம தனுர்ஹரி கிருஷ்ணச ததைவச -என்று
பிரித்து எடுத்துச் சொல்லப் பட்ட இந்தரனுக்கு துணையாய் இருந்து ஜகத் ரஷணம் பண்ணுகிற உபேந்திர அவதாரமும்
எல்லை நடப்பாரைப் போலே லோகத்தை அளந்து அவன் இழந்த ஐஸ்வர் யத்தைக் கொடுத்த த்ரிவிக்ரம அவதாரமும்
அவனுக்கு-இந்திரனுக்கு அம்ருத பிரதானார்த்த மாகக் கொண்ட ததிபக்தாவதாரமும்
வேத பிரதானார்த்த மாகக் கொண்ட ஹயக்ரீவ அவதாரமும்
சிஷ்யாச்சார்யா ரூபேணநின்று திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளின நர நாராயானா அவதாரங்களும்-தர்ம தேவதை இடம் பிறந்த நர நாராயணன் –
தனியாக கோயில் உண்டு தர்ம தேவதைக்கு அங்கு கீழே
அவர்களோடு ஒக்க தர்ம தேவதை பக்கலிலே பிறந்து லோக ரஷணம் பண்ணின ஹரியும்
கிருஷ்ணனுமான அவதாரங்களும்
பிரளய ரஷணம் மந்த்ராதாரத்வம் பூமி யுத்தரணம் ஆகிற இவற்றோடு
வித்யா பரதானங்கள் பண்ணின மத்ஸ்ய கூர்ம வராஹ அவதாரங்களும்
ஆதி சப்தத்தாலே கரோடீ க்ருதங்களுமான நரசிம்ஹ கல்கி அவதாரம் தொடக்க மான வையும் –

அவற்றின் உடைய புஜ ஆயுத வர்ண க்ருத்ய ஸ்தாநாதி பேதங்கள் -ஆவன
கீழ் சொல்லப் பட்ட பர வ்யூஹ விபவங்கள் ஆகிற -அவற்றின் உடைய
புஜ ஆயுத நாம நியமச தத்ர தத்ர இச்ச்யா மம ஜாக்ரத சமஜ்ஜே சாதுராதமயே தத்த புஜச சதுஷ்டயம்
சாந்தோதி தாச து த்விபுஜா ஸ்வப்நாதயா கண நாயகா
ஆதி தேவோ ஜகந்நாதோ வா ஸூ தேவோ ஜகத்பதி
சதுர்புஜஸ் ச ச்யாமளாங்க பரமே வயோமதி நிஷ்டித நித்யோதிசச சாந்தத நுராசதே
வயோமனி நிஷ்டித நித்யோதிசச சாந்தத நுராசதே
வயோமனி ஷட் குண சந்தோதிசச சாந்தவபுர தவி புஜ புருஷாக்ருதி -என்றும்
புஜம் ஆயுத நியமங்கள் இச்சையால் உள்ளன -சாதுராத்மா -ஜாக்கிரதை நான்கு புஜங்கள் –கறுத்த திரு மேனி –வ்யூஹ வாசுதேவன் இரண்டு திருக்கைகள் –
கேசவா தயா குணாதயஷா மூர்த்யாந்தர சமாஹவையா உபாசக நாம சேநேச
புக்தி முக்தி பல ப்ரதா சர்வே சதுர புஜா ஜ்ஞேயோ பத்ம சங்காதி தாரகா
தத்த ச சாஸ்த்ரேஷூ ஜ்ஞேயோ லாஞ்ச நா பரணாதய
சதுச் சக்ர தாம மாம து சம்ருதவா
ஜாமபூ நத பரபம சதுச சங்கதரம் தேவம் நீல ஜீமுத சந்நிபம் இந்திர நீல நிபசயாமம் சதுர ஹசதைர் கதாதரம்
சதுர்புஜ தனுஷமந்தம் சந்த்ரபா சத்ருசா யுதிம்
சதுர ஹலதரம் தேவம் பத்ம கிஞ்ச ஜலக சந்நிபம்
முசலாசதரம் மகா விஷ்ணும்
அரவிந்தாபமேவ ச கடக பாணிம் சதுர ஹஸ்தம் அக்னி சந்நிபதேஜசம சதுர வஜ்ராதரம் தேவம் தருணாதிய சந்நிபம்
பட்டசாயுத ஹச்தஞ்ச புண்டரீகாப மேவ ச சதுர்பிர் முத்கரதரம் புஜைர் வித்யூத சமத்யுதிம் பஞ்சாயுத தரம் மாஞ்ச சஹாஸ்ராம்சு
சம்ப்ரபம் பாச ஹச்ததரம் தேவம் பாலார்ககச
த சந்நிபம் -என்றும்
இத்யாதிகளாலே சொல்லப் படுகிற
நான்கு திருக்கைகள் அனைவரும் –/பத்மம் சங்கம் தரித்து -அடையாளம் ஆபரணம் -மாறி -விளக்கமான சாஸ்திரங்கள் உண்டு
அனைவரும் சதுர்புஜம் /
கேசவன் -நான்கு கைகளிலும் -சக்கரம் தரித்து -பொன்னிறம்-நம் இடம் நெற்றி -கிழக்கு பக்கம் காக்கிறார் -மார்கழி மாதம் கேசவ மாதம் வடக்கே இங்கு தனுர்மாதம்
/ துவாதச ஆதித்யர் -அம்சகன் -பிராட்டி -ஸ்ரீ தேவி பிரதம நாமம் –
நாராயணன் –சங்கு -இந்திர நீலம் நிறம் -/மேற்கு / தாய் /பதன் ஆதித்யன் /அம்ருத உத்பாவில்
மாதவன் -கதை / இந்திரா நீல வர்ணம் -மார்பில் -மேல் பக்கம் காத்து -/மாசி / த்வஷ்டா -பிராட்டி கமலா
மூவரும் வாசுதேவன்
கோவிந்தன் –தனுஷ் சந்த்ர காந்தி ஒளி / வெண் மதி போலே / நடு கழுத்தில் தெற்கு பக்கம் -பங்குனி விஷ்ணு ஆதித்யன் /சந்த்ர சோபனா
விஷ்ணு -கலப்பை கையில் -தாமரை தாது வர்ணம் -வலது வயிற்றில் வடக்கு / சித்திரை தாதா ஆதித்யன் விஷ்ணு பத்னி
மது சூதனன் உலக்கை முசலம் தரித்து -அரவிந்த வர்ணம் -வலது மேல் கை / தென் கிழக்கு வைகாசி காரியமா ஆதித்யன் –
த்ரிவிக்ரமன் கட்கம் வாள் / நெருப்பு நிறம் -வலது கழுத்து -தென் மேற்கு -ஆணி மித்ரன் வராரோஹா
வாமனன் -வஜ்ரம் -இளம் சூர்யன் நிறம் -இடது வயிற்றில் வட மேற்கு வருணன் ஹரி வல்லப -ஆடி
‘ஸ்ரீ தரேன் ஈட்டி / புண்டரீகம் வண தாமரை நிறம் இடது மேல் கை ஆவணி இந்திரன் சாரங்கணி தேவி
அநிருத்தன் – ரிஷிகேசன் -பத்ம நாப-தாமோதரன்
ரிஷிகேசன் -சம்மட்டி மின்னல் நிறம் இடது கழுத்தில் கீழ் ரக்ஷகம் புரட்டாசி விவசுவான் ஆதித்யன் தேவதேசிகா
பத்ம நாபன் சங்கு சக்கரம் பஞ்ச ஆயுதம் சூர்யன் நிறம் முது இதய தாமரை ரக்ஷகம் எப்படி பூசா மஹா லஷ்மி
தாமோதரன் -பாச ஹஸ்தம் -பட்டாம்பூச்சி பின் கழுத்து உள்ளும் புறமும் வியாபித்து கார்த்திகை பர்ஜன்யன் ஆதித்யன் லோக சுந்தரி –

புஜ பேதங்களும்
வர்ண பேதங்களும்
இந்த வ்யூஹ பேத விபவ பேதங்களுக்கு எல்லாம் பிரத்யேகம் உண்டான க்ருத்ய பேதங்களும்
ஆமோதாதிகளும்–வாழும் இடங்கள்
அயோத்யா மதுராதி களுமாய்க் கொண்டு
வ்யூஹ விபவங்களுக்கு பிரத்யேகம் உண்டான ஸ்தான பேதங்களும்
ஆதி சப்தத்தாலே
கரோடீ க்ருதங்களான பூஷண வஸ்த்ராதி பேதங்களும்
துரவதரங்களுமாய் குஹ்ய தமங்க ளுமாய் இருக்கையாலே சொல்லுகிறிலோம்-என்றது
இவை எல்லாம் சொன்னாலும் ஒரு வாக்கு புத்தி பண்ணவும் அரியதாய்
அவதார ரஹச்யங்கள் ஆகையாலே மிகபும் குஹ்யமுமாய் இருக்கையாலே
சொல்லுகிறோம் இல்லை -என்கை-

பரத்வாதி பஞ்சகம் நடாதூர் அம்மாள் ஸ்தான பேதம்-அருளிச் செய்கிறார் –

———————————-

சூர்ணிகை -194-

லோகத்தில் ஜென்மங்களுக்கு ஹேது கர்மமாய் அன்றோ இருப்பது
இவனுடைய அவதாரங்களுக்கு ஹேது ஏது-என்ன அருளிச் செய்கிறார் –

அவதாரங்களுக்கு
ஹேது
இச்சை –

அதாவது
பஹூ தா விஜாயதே -என்றும்-கர்மாதீன பிறப்பு இல்லை -ஜாயதே இல்லை விஜாயதே விசேஷமாக பிறக்கிறான் -இச்சையால் பிறக்கிறான் –
பஹூ நி மே வயதீ தாநி ஜன்மானி-என்றும்
பல பிறப்பாய் -என்றும்
என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்றும்
மனிசரும் முற்றும் முற்றுமாய் மாயப் பிறவி பிறந்த -என்றும்
பஹூ விதமாக சொல்லப் படுகிற இவனுடைய அவதாரங்களுக்கு ஹேது
இப்படி அவதரிப்போம் என்னும் ஸ்வ இச்சை ஒழிய ஹேதவந்தரம் இல்லை -என்கை –
சம்பவாமி ஆத்மமாயயா -என்று தானே அருளிச் செய்தான் இ றே
ஆத்மமாயயா -என்றது ஆத்ம இச்சையா -என்றபடி
மாயா வயு நம ஜ்ஞானம் -என்று மாயா சப்தம் ஜ்ஞான வாசி ஆகையாலே
இச்சா ரூபமான ஜ்ஞானத்தைச் சொல்கிறது
இச்சா க்ருஹீத அபிமதோரு தேக -என்னக் கடவது இ றே –
இயம் வையூஹீ வை ஸ்திதி ரத கிலேச்சா விருஹதயே
விபூதி நாம மத்யே ஸூ ர நர திரச்சாமா அவதரன
சஜாதீயச தேஷா மிதிது விபவாக்கயா ம்பி பஜன
கரீச தவம்
பூர்ணோ வரகுண கணைச தான சதகயசி –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -என்றும்
ஏவம் ஸ்திதே தவதுபசம சரயணா பயுபாயோ மாநேன கேனசித அலபசயத
நோபலப்தும் நோசேத அமாதய மநுஜா தி ஷூ யோ நி ஷூ
தவம் இச்சாவிஹார விதி நாசம்வாதரிஷ்ய-அதி மானுஷ ஸ்தவம் -8- -என்றும்
அவதார ஹேது இச்சை என்னும் இடத்தை ஆழ்வான் விசதமாக அருளிச் செய்தார் இ றே-
அவதரித்து ஸுசீல்யம் ஸுலப்யம் காட்டி அனைவரையும் பக்தி மூலம் அடையலாம் என்று காட்டி அருளி -இந்திரியங்களுக்கு வசப்பட்டு -சகல மனுஷ நயன விஷயமாகி -அருளினீர் –

———————————————

சூர்ணிகை -195-

பலம்
சாது
பரித்ராணாதி
த்ரயம் –

அதாவது
பரித்ராணாய சாது நாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்ததாய சம்பவாமி யுகே யுகே -என்று
த்ராணம் ரக்ஷகம் -பரித்ராபாய நன்றாக சம்ரக்ஷணம்
சாது பிரஹலாதன் போல்வார் -உயிரை மட்டும் காப்பது ரக்ஷணம் -வந்து சேவை சாதித்தது பரித்ராணாம் -தொழும் காதல் யானைக்கு வரா விட்டால் மழுங்குமே –
-தர்மம் ஸ் தாபனம் -சம் ஸ்தாபனம் -தன்னையே சாஷாத் தர்மமாக ஸ் தானம் -ஆக்க அன்றோ அவதாரம் -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –
பெருமாள் சாமான்ய தர்மமும் காத்து-பித்ரு வாக்ய பரிபாலனம் – தன்னையும் தர்மமாக காட்டி அருளி – -கண்ணன் அப்படி அன்றோ -சாஸ்திரம் இவனை பின் தொடரும்
வெண்ணெய் திருடினது தப்பா இல்லையா பட்டி மன்றம் இல்லையே -பெருமாள் வாலி வாதம் பட்டி மன்றம் நிறைய உண்டே –
யுகம் தோறும் பிறக்கிறான் -/சாது பரித்ராணாமே பிரதானம் என்பர் ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் /
நஞ்சீயர் ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால் என்பர் –
அவன் தானே அருளிச் செய்த படியே தன பக்கல் பிரேம யுக்தராய்
தன்னுடைய அனுபவம் ஒழிய ஷண காலமும் செல்லாதே
தன்னைக் கான வேணும் என்று ஆசைப் பட்டு இருக்கும் சாது ஜனங்களைத்
தன்னுடைய ரூப சேஷ்டித அவலோகன ஆலாபன தான முகேன ரஷிக்கையும்
தத் விரோதிகளான துஷ்க்ருதிகளை நசிப்பிக்கையும்
தன்னுடைய ஆராதனா ரூபமாய் ஷீணமாய்க் கிடக்கிற வைதிக தர்மத்தை
ஆராத்யனான தன ஸ்வரூபத்தை தர்சிப்பித்து ஸ்தாபிக்கையும்
ஆகிற இம் மூன்றுமே பலம் -என்கை –
சாதவ்-உக்த லஷண
தர்ம சீலா
வைஷ்ணவ அக்ரேசரா
மத சமாஸ்ரயனே பிரவ்ருத்ததா
மன் நாம கர்ம ஸ்வரூபானாம்
வாங் மனஸா அகோசரதையா
மத தர்ச நேன வினா
ஆத்மதாரண போஷணாதி கம அல்பமானா
ஷண் மாத்ர காலம் கல்ப சஹாச்ரம் மன்வானா ப்ரதி சிதல
சர்வகாதரா பவே யுரிதி
மத ஸ்வரூப சேஷ்டித அவலோகன ஆலப நாதி தானேன தேஷாம் பரித்ராணாய
தத் விபரீதா நாம் விநாசாய ச
ஷீணச்ய வைதிகஸ்ய தர்மஸ்ய மத ஆராதனா ரூபச்ய ஆராத்ய ஸ்வரூப தாசநேன ஸ்தாபநாய
ச யுகே யுகே சம்பவாமி -கருத த்ரேதாதி யுக விசேஷ நியமோபி நாசதீ தயாதத-என்று இ றே–விதுர அக்ரூர மாலாகாரர் உத்தவர் சஞ்சயன் போல்வார்
இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –
யே பக்தா பவதேக போக மநசோநனயாதம சஞ்சீவன தத் சம்ச்லேஷண
தத் விரோதி நித நாதாய ததம வநாதரீச்வர
யதவாதரச ஸூர நராத யாகார திவ்யா கருதிச தேநைவ
தறி தசைர் நரை ச ச ஸூ கர்ம ஸ்வ பராததித்த பராத்த நம-ஸ்ரீ ஸூ ந்த்ர பாஹு ஸ்தவம் — -என்று இ றே ஆழ்வானும் அருளிச் செய்தது –

———————————–

சூர்ணிகை -196-

அவதாரம் இச்சம் என்று அறியாதே கர்ம நிபந்தனமாக நினைத்து மந்த மதிகள்
பண்ணும் பிரசனத்தை அனுவதிக்கிறார் –

பல
பிரமாணங்களிலும்
ப்ருகு சாபாதிகளாலே
பிறந்தான் என்கையாலே
அவதாரங்களுக்கு ஹேது
கர்மம் ஆக வேண்டாவோ என்னில்

கவிகளில் உசனா கவியாக இருக்கிறேன் -சுக்ராச்சார்யார் இந்த கவி -மாதா கவ்யா -பித்ருவுடைய தர்ம பத்னி –சாபம் கொடுத்து -ராம கிருஷ்ணா அவதாரம் அதனால் –
உத்தர ராமாயண ஸ்லோகம் –
ஜமதக்கினி பிருகு வம்சம் பார்க்கவ ராமரும் இந்த வம்சம்

அதாவது இதிஹாச புராண ரூபமான பல பிரமாணங்களிலும்
பதிவ்ரதா தர்மபரா ஹதா யேன மம ப்ரியா ச து பரியா விரஹித சிரகாலம் பவிஷ்யதி –
என்றால் போலே யுண்டான ப்ருகு சாபம் முதலான வற்றாலே
பிறந்தானாகச் சொல்லுகையாலே அவதார ஹேது இச்சை அன்றியே கர்மம் ஆக வேண்டாவோ -என்னில் என்கை –

——————————————

சூர்ணிகை -197-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

அவை தன்னிலே
சாபம் வியாஜ்யம்
அவதாரம் இச்சம்
என்று
பரிஹரித்தது-
அதே உத்தர ராமாயணம் இப்படி சொல்லுமே

அதாவது
தபசாராதி தோ தேவோ ஹய பரவீத பகவத தசல லோகா நாம சம்ப்ரியார்த்ததம் து சாபம் தம க்ருஹய முகதவான் -என்று
உத்தர ஸ்ரீ ராமாயணத்திலும்
சாபம் லோகங்களுக்கு பிரியார்த்தமாக ஏற்றுக் கொள்கிறேன் என்றாரே -அதனாலே இச்சையால் அவதாரம் –
சர்வாவாததே ஷூ வை விஷ்ணோர் ஜன நம ச்வேச்சசயைவ து
ஜரகாச்த்ரா சசலே நைவ ச்வேச்சயா கம நம ஹரே த்விஜ சாப சசலே நைவ அவதீர்ணோபி லீலையா -என்று
லிங்க புராணத்திலும் சொல்லுகையாலே
வேடன் அம்பு / உலக்கை -/ ஜரா வேடன் -கட்டை விரலில் பட -அது வியாஜ்யம் / த்விஜ சாபம் -ப்ராஹ்மணர் சாபம் -/பிரபாச க்ஷேத்ரம் –
பிருகு சாபாதிகளாலே பிறந்தான் என்கிற இவை தன்னில்
சாபம் வ்யாஜ மாதரம்
அவதாரம் இச்சாக்ருஹீதம்
என்று பரிஹரித்தது -என்கை –

——————————————-

சூர்ணிகை -198-

ஆக
இப்படி விபவத்தை உபபாதித்த அநந்தரம்
அந்தர்யாமித்வத்தை
உப பாதிக்கிறார்

அந்தர்யாமித்வம்
ஆவது
அந்த பிரவிசய
நியந்தாவாய்
இருக்கை –

கார்த்த ரூபம் -இரா மதமூட்டுக்குவாராய் போலே -நியமன அர்த்தமாக

அதாவது
ய ஆத்மா நம நதரோ யமயதி
என்றும்
அந்த பிரவிஷ்டச சாஸ்தா ஜனா நாம் -என்றும்
சாஸ்தா விஷ்ணுர் சேஷ சய ஜகதோ யோ ஹ்ருதி ஸ்தித -என்றும்–சாஸ்தா நியமிப்பவர் -அசேஷ -சமஸ்தத்துக்கும் உள்ளும் புறமும் வியாபித்து நியமனம் –
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே சேதனருடைய யுள்ளே பிரவேசித்து
சகல பிரவ்ருதிகளுக்கும் நியந்தாவாய் இருக்கை
அந்தர் யாமித்வம் -என்கை-

—————————————–

சூர்ணிகை -199-

இது தான் ஆத்மாவின் உள்ளே தன் ஸ்வரூபத்தாலே வியாபித்து நின்று
நியமிக்குமதுவும்
ச விக்ரஹனாய்க் கொண்டு
ஹிருதயத்திலே வியாபித்து இருந்து நியமிக்குமதுவும் கொண்டு
த்வி விதமாய் இருக்கையாலே
உபயத்தையும் அருளிச் செய்கிறார் –

உளன் கண்டாய் நாள் நெஞ்சே -உத்தமன் என்றும் -உள்ளூர் உள்ளத்து உளன் கண்டாய் –இரு வகை என்பதால் மீண்டும் –ஆழ்வார்கள் அனைவரும் அருளிச் செய்கிறார்களே -ஸ்புரித்து இவர்கள் போல்வாருக்கு –
பூ சத்தாயாம் தாது -அனைவர் உள்ளும் உண்டே சத்தைக்கும்-

ஸ்வர்க்க
நரக
பிரவேசாதி -சர்வ அவஸ்தை களிலும்
சகல சேதனர்க்கும் துணையாய்
அவர்களை விடாதே நிற்கிற நிலைக்கு மேலே
சுபாஸ்ரயமான திரு மேனியோடு கூடிக் கொண்டு
அவர்களுக்கு த்யேயன் ஆகைக்காகவும்
அவர்களை ரஷிக்கைக்காகவும்
பந்து பூதனாய்க் கொண்டு
ஹ்ருதய கமலத்திலே
எழுந்து அருளி இருக்கும் இருப்பு —

அதாவது –
அந்தர்யாமி ஸ்வரூபஞ்ச சர்வேஷாம் பந்துவத ஸ்திதம் -என்று தொடங்கி-
ஸ்வர்க்க நரக பிரவேசேபி பந்து ராதமாஹி கேசவ -என்று சொன்னபடியே
புண்ய நிபந்தனமாக ஸ்வர்க்கத்தை பிரவேசிக்கையும்
பாப நிபந்தனமாக நரகத்தை பிரவேசிக்கையும்
உபய நிபந்தனமாக கர்மத்தை பிரவேசிக்கையும்
முதலான எல்லா அவஸ்தை களிலும்
எல்லா சேதனர்க்கும் இரா மடம் ஊட்டுவாரைப் போலே
உள்ளேயே பதி கிடந்தது–பதம் -இடம் -பதி என்றவாறு –
அந்தர்யாமி உள்ளே இருந்து நியமிக்கை– அந்தராத்மா உள்ளே இருந்தால் தானே சத்தத்தையே —
சத்தையையே பிடித்து நோக்கிக் கொண்டு போருகையாலே
துணையாய்
அவர்களை ஒரு காலும் விடாதே–அவகாசம் பார்த்து இருப்பானே -சத்து என்றாலே ப்ரஹ்மாத்மகம் தானே -கேட்டு அலைந்த காலத்திலேயே விடாதவன் அங்கு சென்றாலும் விடுவானோ –
அந்தராத்மாவாய் நிற்கும் நிலைக்கு மேலே —
அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜயோ திரிவாதூமாக -என்றும்–புகை இல்லாத ஜ்வாலை போலே –
நீல தோயாத மதயஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா-என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே–மின்னல் விழுங்கிய கருப்பு மேகம் என்று கொள்ள வேண்டும் –
ஜ்யோதி ரூப மயமான ச்யாமளமான தன்னை முட்டாக்கிடும் படி
செம்பொனே திகழுகிற புகராலே நீல தோயத்தை விழுங்கின
வித்யுல்லேகை போலே இருக்கையாலே
பாஹ்ய விஷய பிரவணமான மனசை
அதில் நின்றும் பற்று அறுத்து
தன் பக்கலிலே பிரவணமாம் படிக்கு
சுபாஸ்ரயமான திரு மேனியோடு அந்த சேதனர்க்கு
த்யான ருசி பிறந்த போது த்யெயன் ஆகைக்காகவும்
புத்த்யாதிகளுக்கு நியாமகனாய்க் கொண்டு
அவர்களை ரஷிக்கைக்காகவும்
நாராயணத்வ பிரயுக்தமான குடல் துவக்காலே
பந்து பூதனாய்க் கொண்டு
பத்ம கோச ப்ரதீகாசம் ஹ்ருதயஞ்ச சாபயதோமுகம்-என்கிற ஹிருதயத்திலே
எழுந்து அருளி இருக்கும் இருப்பு -என்கை
அந்தராத்மதையை முதலில் சொல்லி
அதுக்கு மேலே ச விக்ரஹனாய்க் கொண்டு ஹிருதய கமலத்தில் இருக்கும் இருப்பைச் சொல்லி தலைக் கட்டிற்று –
விக்ரஹ யோக பிரயுக்தமான பரத்வாதிகளைச் சொல்லி வருகிற பிரகரணம் -ஆகையாலே-

——————————————————–

சூர்ணிகை -200-

ஆக அந்தர்யாமித்வத்தை உப பாதித்தாராய் நின்றார் கீழ் –
அநந்தரம்
அர்ச்சாவதாரத்தை உப பாதிக்கிறார் —

அர்ச்சாவதாரம் -ஆவது
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் -என்கிறபடியே
சேதனர்க்கு அபிமதமான த்ரவ்யத்திலே
விபவ விசேஷங்கள் போல் அன்றிக்கே
தேச கால அதிகாரி நியமம் இல்லாதபடி
சந்நிதி பண்ணி
அபராதங்களைக் காணாக் கண்ணிட்டு
அர்ச்சக பரதந்த்ரமான சமஸ்த வியாபாரங்களையும் உடையனாய்க் கொண்டு
கோயில்களிலும்
கிருஹங்களிலும்
எழுந்து அருளி நிற்கும் நிலை –

அர்ச்சா -ப்ரதிமா –அர்ச்சா பூஜ்யா என்றுமாம் / அவதாரம் -அவதாரத்துக்கு பிரதிநிதி -அர்ச்சாவதாரம் /அவதார ரஹஸ்யம் -நான்கு ஸ்லோகங்கள் -6-ரஹஸ்யம்
1–அவதாரம் மெய்-2- பெருமைகள் குறையாமல்-3- அப்ராக்ருதம் –4-கர்மத்தால் இல்லை கிருபையால்-5- -தர்மம் குலையும் பொழுது-6- சாது சம்ரக்ஷணத்துக்கு –
விருப்பப்பட்ட படி சேவை -அர்ச்சாவதாரமும் சேர்த்து -அருளி -/கிருஹர்ச்சா — கனிவார் வீட்டு இன்பம் -ஆழ்வார் /
பதி கிடந்து உறைவான் -அவனுக்கு மிகவும் ப்ரீதி-அன்றோ
மோந்து பார்த்து கொண்டு இருப்பான் -வியாக்யானம் -/
பரவாசுதேவன் வ்யூஹம் விபவம் சொல்லும் பொழுது அவனை விளக்கி அர்ச்சை என்றாலே திவ்ய தேசம் இது ஒன்றே நமக்கு போக்கிடம் –
ஆஜகாம முகூர்த்த யத்ர-ராம -ச லக்ஷ்மணன் கதையும் கையுமாக -ராமன் இருக்கும் இடம் வந்தார் -என்று சொல்லாமல் —
-ராமன் எங்கு லஷ்மணன் உடன் கூடி இருந்தாரோ அங்கு -இடத்துக்கு பிரதான்யம் -திருப்புல்லாணி -என்றவாறு –
திவ்ய தேசம் முதலில் -அப்புறம் தானே பெருமாள் வந்தார் -வண்டினம் முரலும் சோலை இத்யாதி -பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை அன்றோ –
எந்த திவ்ய தேசத்துக்கு மங்களா சாசனம் -சொல்கிறோம் -ஸ்ரீ ரெங்கம் மாலை பிரசாதம் என்கிறோம் -பெருமாளும் திவ்ய தேசத்துக்கு மாலை போலே எழுந்து அருளி உள்ளார் –
திருமங்கை ஆழ்வார் அர்ச்சாவதாரத்திலே மண்டி –
நீர் மலி வையத்து நீடு இருப்பாரே -திருக்கண்ணபுரம் இறுதி பதிகம் -கார் மலி கண்ணா புறத்து அடிகளை பாடினேன் இத்தை சொல்லி தெள்ளியீர் தேவர் அனுபவம் இங்கு தானே
பாணனார் திண்ணம் இருக்க –நாணுமோ–காணுமோ கண்ணபுரம் என்று காட்டுவாள் -எங்கு இருந்தும் பார்க்கலாம் –

அதாவது –
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே-முதல் திருவந்தாதி -44- என்கிறபடியே
ஆஸ்ரிதர் யாதொன்றை தனக்குத் திரு மேனியாகக் கோலினார்கள்-அத்தையே
தனக்கு வடிவாகக் கொள்ளும் என்றபடியே-
இச்சா க்ருஹீதானம் என்றது ஆஸ்ரிதர் இச்சைப்படி என்று அன்றோ கொள்கிறான் -அவன் திரு உள்ளபடி தானே வேதங்களும் இதிகாசங்களும் புராணங்களும் –
ஆஸ்ரிதரான சேதனர்க்கு அபிமதமான
ஸ்வர்ண ரஜதாதி சிலாபர்யந்தமான ஏதேனும் ஒரு த்ரவ்யத்திலே
அயோத்யா மதுராதி தேச நியமம் என்ன
பதினோராயிரம் சம்வச்த்ரம் நூறு சம்வச்தரம் என்றால் போலே யுண்டான கால நியமம் என்ன
தசரத வஸூ தேவாதிகள் என்றால் போலே சில அதிகாரி நியமம் என்ன
இவற்றை யுடைத்தாய் கொண்டு சந்நிதி பண்ணின
ராம கிருஷ்ணாதி விபவ விசேஷங்கள் போல் அன்றிக்கே –
பௌம நிகேத நேஷ வபி குடீகுஞ்ஜே ஷூ ரெங்கேஸ்வர -உத்தர சதகம் -72- -என்கிறபடியே–இல்லங்கள் தோறும் போகிறீர் -குடில்களிலும் -ஸ்ரீ ரெங்கேஸ்வரனே–
திரு நாகை ஏழும் இரண்டும் ஒன்றும் -ஸூவ அனுபவம் ஏழு – பர உபதேசம் மூன்று – பலம் சொல்லி தலைக்கட்டுகிறார் –
எல்லா திவ்ய தேசங்களையும் சேர்த்து திரு நாகை மங்களா சாசனம் –
ஒருதேச நியமம் இல்லாத படியாகவும்
அர்ச்சகனுடைய அபேஷா காலம் ஒழிய தனக்கு என்று ஒரு கால நியமம் இல்லாத படிக்கும்–தீர்த்தம் பிரசாதியாமல் –
64-சதுர் யுகம் திருக்கண்ணபுரம் அதுக்கு முன் திருவெள்ளறை —
ருசி யுடையார் எல்லாருக்கும் ஆகையாலே இன்னார் எனபது ஓர் அதிகாரி நியமம் இல்லாத படியாகவும்
சந்நிதி பண்ணி
சர்வ சஹிஷ்ணு -என்கிறபடி -சஹிஷ்ணு வாகையாலே
அவர்கள் செய்யும் அபராதங்களைக் காணாக் கண் இட்டு
அர்ச்சக பராதீநா கிலாதம் ஸ்திதி -என்கிறபடியே-
பார்க்காமல் முதலில் பார்த்து இதிலே உள்ளது உதாசீனரை போலே -தெரிந்தும் தெரியாமல் திருந்த அவகாசம் பார்த்து –
அர்ச்சக பரதந்த்ரமான ஸ்நான ஆச நாதிகளான
சமஸ்த வியாபாரங்களையும் உடையனாய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கும் நிலை அர்ச்சாவதாரம் -என்கை –
அர்ச்சா பூஜா பிரதிமயோ -என்கையாலே–அர்ச்சா சப்தம் பிரதிமா வாசி –

—————————————–

சூர்ணிகை -201-

இவ் வர்ச்சாவதாரத்தின் யுடைய
ருசிஜனகத்வாதி குண பூர்த்தியை
அருளிச் செய்கிறார் –

1—ருசி ஜனகத்வமும்
2–சுபாஸ்ரயமும்
3–அசேஷ லோக சரண்யதவமும்
4–அனுபாவ்யத்வமும்
எல்லாம்
அர்ச்சாவதாரத்திலே
பரி பூர்ணம் –

நான்கிலும் பரி பூர்ணம் -ருசி ஜனகத்வம் வைஷ்ணவ -வாமனத்தவம் -திருக்குறுங்குடி – பாதமே சரணாக தருவான் –உதார குணம் வானமா மலையில் கொழுந்து விடும்
பொது நின்ற பொன்னம் கழல் சாமான்ய அதி தைவம் -கண்ணாவான் மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் –
மருந்தும் விருந்தும் இவனே –

அதாவது
சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராய் போரும் சேதனர்க்கு தன்னுடைய
ரூப ஔதார்ய குணங்களாலே வைமுக்யத்தை மாற்றி
தன் பக்கலிலே ருசியை ஜனிப்பிக்கையும்–
ருசி பிறந்த அநந்தரம்
தன்னை பஜிக்குமவர்களுக்கு
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இனிதாம் படி
சுபாஸ்ரயமாய் இருக்கையும்–இரண்டு கோட்டையும் ஆக்ரமித்து நாட்டை க் கொள்வாரைப் போலே -மங்களம் ஏற்படுத்த வல்ல ஸ்தானம் சுபாஸ்ரயம் –
அவ்வளவு அன்றிக்கே தன்னையே உபாயமாக சுவீகரிக்கும் அளவில்
குணாகுண நிரூபணம் பண்ணாதே
சகல லோகங்களில் உள்ளவர்களுக்கும் சரண வர்ணார்ஹமாய் இருக்கையும்-சமோஹம் சர்வ பூதேஷூ –
உபாயமான மாத்ரமாய் ஒரு தேச விசேஷத்திலே போனால்
அனுபாவ்யமாம் படி இருக்கை அன்றிக்கே
வை லஷண்யத்தில் வாசி அறிந்தவர்களுக்கு
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்னும்படி
அனுபாவ்யமாம் படி இருக்கையும் ஆகிற
இவை எல்லாம் அர்ச்சாவதாரத்தில் பரி பூரணமாய் இருக்கும் என்கை –
விலக்ஷண ஞானம் உள்ளவர்கள் –தொண்டர் அடிப்படை ஆழ்வார் -திருப்பாண் ஆழ்வார் -போல்வார் —
ஸூ ருபாமா பிரதிமாம் விஷ்ணோ பிரச்னனவாத நேஷானாம்
க்ருதவாதமான ப்ரீதி கரீமா ஸ்வர்ண ரஜ தாதிபி தர்மசசயதே தாம பரணமேத
தாம் பஜேதே தாம் விசிந்தயேத் விசதய பாசத தோஷச்து தாமேவ ப்ரஹ்ம ரூபிணீம்-என்று
இவ் வர்ச்சாவதாரத்தில் ஆஸ்ரிதர் உகந்ததொரு த்ரவ்யத்தை
தனக்குத் திருமேனியாகக் கொண்டு
அவர்களுக்கு உபாசயனுமாய் பிராப்யனுமாய்
இருக்கும் என்னும் இடம் ஸ்ரீ சௌநக பகவானாலும் சொல்லப் பட்டது இ றே-
அரங்கத்து அமலன் முகத்து -அஞ்சேல் என்று வைத்த திருக்கைகள் – இரண்டு தூணுக்கு நடுவில் ஒரு முஹூர்த்தம் மட்டும் இல்லாமல் அனைவருக்குமான இருக்கும் அமலன் –
அடி தோறும் அர்ச்சை –வைபவமும் சர்ச்சையும் சேர்ந்தே அருளிச் செய்கிறார் -மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்றை யார் உய்யலாமே –
அநுகாரமும் அர்ச்சையில் -வடவரை நின்றும் வந்து இடவகை கண்ணபுரம் கொள்வது நானே -கடல் ஞாலம் செய்தெனும் யானே-நம் ஆழ்வார்
பாடவைத்த முக்கோட்டை திருக்கண்ணபுரம் -அருவி சோர் வேங்கடம் நீர் மலை என்று வாய் வெருவி–மெய்யம் வினவி -உருகினாள் உல் மெலிந்தாள்-பெருகு நீர் கணபுரம்-
முலையோ முழு முற்றும் போந்தில–பெருமாள் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் –
கண புரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்னப் பெறுவரோ -வாயால் சொல்ல முடியாத நிலையிலும் கை தொழுகிறாள் இவள் –
அக்னி கார்யம் செய்து ப்ரஹ்மம் – -யோகி ஹிருதயம்– சம தர்சனம் எங்கும்-காணலாம் – புத்தி இல்லா மந்த மதிகளுக்கும் விக்ரஹ ரூபம் அர்ச்சை –

————————————————-

சூர்ணிகை -202-

இன்னமும் இவ் வர்ச்சாவதார குணாதிக்யத்தை அருளிச் செய்யா நின்று கொண்டு
இப்பிரபந்தத்தைத் தலைக் கட்டி அருளுகிறார் –

ஸ்வ ஸ்வாமி பாவத்தை
மாறாடிக் கொண்டு
அஜ்ஞ்ஞரைப் போலேயும்
அசக்தரைப் போலேயும்
அசவந்தரைப் போலேயும்
இருக்கச் செய்தேயும்
அபார காருண்ய பரவசனாய்க் கொண்டு
சர்வ அபேஷிதங்களையும்
கொடுத்து அருளும் –

சர்வ அபேக்ஷித்ங்களையும் கொடுத்து அருளும் என்று பிரபந்தம் நிகமானம் -தானாகே அமைந்ததே

அதாவது
ஸ்வ தவமா தமநி சஞ்ஜாதம் ஸ்வாமி தவம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்கிறபடியே
சேதனனுக்கு ஸ்வத்வமும்-தனக்கு ஸ்வாமி தவமும் வ்யவஸ்திதமாய் இருக்க
இவன் தன் உடைமைகளோடு ஒக்க அவனையும் சஹபடிக்கும்படி–எல்லாம் எடுத்து வைத்து தீர்த்தம் முறுக்கு படுக்கை போலே பெருமாளையும்
-பெருமாள் பெட்டி என்று அன்றோ சொல்கிறான் -இவன் –
ஸ்வாமித்வம் இவன் பக்கலிலும் ஸ்வத்வம் தன் பக்கலிலும்
ஆக –தன் இச்சையால்– மாறாடிக் கொண்டு–இதுவும் அவன் ஸ்வாதந்தர்ய கார்யம் அன்றோ -மா முனிகள் அழகாக காட்டி அருளுகிறார்
யஸ் சர்வஜ்ஞ்ஞஸ் சர்வவித் பராசய சக்திர் விவிதைவ சரூயதே -என்றும்–அறிவு பூர்த்தி -சக்தி பூர்த்தி –
ந தசயேசே கச்சந -என்றும்–ஓத்தார் மிக்கார் இலையாக மா மாயன்
சர்வேச்வரச சர்வத்ருக் சர்வவேததா சமஸ்த சக்தி பரமேச்வராககைய -என்றும்–
சொல்லுகிறபடி
சர்வஜ்ஞ்ஞனாய்
சர்வ சக்தியாய்
நிரந்குச ஸ்வ தந்த்ரனாய்–அங்குசம் இட ஆள் இல்லையே
இருக்கிற தன்னை அமைத்துக் கொண்டு
தன் காரியமும் பிறர் காரியமும் அறிய மாட்டாத அஜஞரைப் போலேயும்
தன்னைத் தான் ரஷிக்க மாட்டாத அசக்தரைப் போலேயும்
தனக்கு என ஒரு முதன்மை இல்லாத அஸ்வதந்தரைப் போலேயும்
இரா நிற்கச் செய்தேயும்
விமுகரையும் உட்பட விட மாட்டாத படி கரை புரண்டு செல்லுகிற காருண்யம் இட்ட வழக்காய்க் கொண்டு-
சேதனன் இட்ட வழக்கு இல்லை -இவனது காருண்யம் இட்ட வழக்கு அன்றோ –
நேத்ர புத்ர விதரணம் முதலாக மோஷ ஸ்தான பர்யந்தமாக
யதாதிகாரம் சேதனருடைய சகல அபேஷிதங்களையும் கொடுத்து அருளும் என்கை –

அர்ச்சாவதார ரச சர்வேஷம் பாந்தவோ பக்த வத்சல
ஸ்வ தவமாத்மநி சஜ்ஞ்ஞாதம் ஸ்வாமித்வம் மயி ச ஸ்திதம் –விஷ்வக்சேனர் சம்ஹிதை -என்று
அர்ச்சாவதாரமானது சர்வர்க்கும் பாந்தவமாய் பகவத் ஸ்வம்மாய் இருக்கும்
ஸ்வத்வமானது ஆத்மாவின் பக்கலிலும் ஸ்வாமித்வம் ஆனது என் பக்கலிலும் வ்யவஸ்திதமாய் இருக்கும் என்றும்
இதிவ்யவஸ்திதே சாபி மமாயம் கேசவசச தவதி மமாயம் ராம இதயேவ தேவ பிரசுலாஞ்சந-என்றபடி
சேஷித்வம் வ்யவஸ்திதமாய் இருக்கச் செய்தேயும்
என்னுடைய கேசவன் என்றும்
பரசுவை அடையாளமாக உடையனான தேவனான ராமன் என்னுடையவன் என்றும்
மமாயம வாமனோ நாம நரசிம்ஹாக்ருதி பிரபு வராஹ வேஷா பகவான் நரோ நாராயணஸ் ததா -என்று
என்னுடையவன் இந்த வாமனானவன்
பிரபுவான நரசிம்ஹ ரூபியானவன்
வராஹ வேஷத்தை யுடைய பகவான்
அப்படியே நர நாராயணன் -என்றும்
ததா கிருஷ்ணச ச ராம்ச ச மமயாமிதி நிரதிசேத மதகராமவாசீ பகவான் மமைவேதி ச தீர் பவேத -என்னும்படி
கிருஷ்ணனும் ராமனும் என்னுடையவன் சொல்லா நிற்கும்
என்னுடைய கிராமத்தில் இருக்கும் பகவான் என்னுடையவன் என்றும் மமத்வ புத்தி யுண்டாகா நிற்கும்
சிந்தயேசச ஜகந்நாதம் சுவாமி நாம பரமார்த்தததா அசக்தம்
அஸ்வ தரஞ்ச ரஷ்யஞ்சாபி ஜநார்த்தனம் -என்று
பரமார்த்ததால் ஜகன்னாதனாய ஸ்வாமியான ஜனார்த்தனனை அசக்த னாகவும்
அஸ்வ தந்த்ரனாயும் ரஷ்ய பூதனாகவும் சிந்திப்பதும் செய்யா நிற்கும்–ஜகந்நாதன் ஸ்வா தந்தர்ய பலத்தால் இப்படி ஆக்கி நிற்குமே –
பொன்னுலகம் ஆளீரோ புவனா முழுவதும் ஆளீரோ–குருவி
காட்டும் மூலையில் குடில் கட்டி மிதுனம் வாழும் –
திசசயா மகா தேஜோ புங்க்தே வை பக்த வத்சல ஸ்நானம் பானம் ததா யதா ராம குருதே வை ஜகத்பதி –
என்று பெரிய தேஜஸ் சை யுடைய ஜகத்பதி யானவன்-பக்தனுக்கு வத்சலனாய்க் கொண்டு
அவன் இச்சித்த போது அமுது செய்யா நிற்கும்
அப்படியே ஸ்நானத்தையும் பானத்தையும் யாத்ரையும் பண்ணா நிற்கும் -என்றும்
ஸ்வ தந்த்ரச ச ஜகன்நாதோபி அஸ்வதந்த்ர்யோ யதா ததா
சர்வ சக்தி ஜகந்தாதாபி அச்சக்த இவ சேஷ்ட தே -என்று
ஸ்வ தந்த்ரனாய் ஜகன்நாதனாய் இருக்கச் செய்தேயும் அவன் யாதொருபடி
அஸ்வதந்த்ரன் -அப்படி யாகா நிற்கும்
சர்வ சக்தியாய் ஜகத்துக்கு ஸ்ரஷ்டாவாய் இருக்கச் செய்தேயும் அசக்தரைப் போலே சேஷ்டியா நிற்கும் என்றும்
சர்வான் காமான் தத ச்வாமயபி அச்சக்த இவ லஷ்யதே அபராதா நபி ஜஞச சன சதைவ குருதே தயாம -என்று
எல்லா கர்மங்களையும் கொடா நின்று ஸ்வாமியாய் நிற்கச் செய்தேயும்
அசக்தரைப் போலே காணப்படா நிற்கும்
அபராதங்களில் அறிவிலானாக நின்று கொண்டு எப்போதும் தயைப் பண்ண நிற்கும் -என்றும்

அர்ச்சாவதார விஷயே மயாபி உத்தேச தச ததா உகதா குணா ந சக்யந்தே வக்தும் வாஷச தைரபி-என்று
அவனுடைய யாதோ வாசோ நிவர்த்தந்தி–அவனுடைய மொழியைக் கடக்கும் விஷயம் அன்றோ –
அர்ச்சாவதார விஷயத்தில் என்னாலும் சுருங்கச் சொல்லப்பட்ட அத்தனை
குணங்கள் ஆனவை நூறு வருஷம் கூடினாலும் சொல்ல சக்யங்கள் அல்ல என்றும்
ருதே ச மத பிரசாத தவா ஸ்வதோ ஜ்ஞாநாகமேன வா -என்று
என்னுடைய பிரசாதம் ஒழிந்தாலும்
ஸ்வஸ் சித்தமான ஜ்ஞானம் இல்லாத போதும் சொல்ல முடியாது என்றும்
ஏவம் பஞ்ச பிரகாரோஹம் ஆத்மாநாம பத்தாம அத பூர்வ சமாதபி பூர்வ சமாத ஐயாயாம்ச சைவோத தரோ ததா -என்று
இப்படி பர வ்யூஹாதி பஞ்ச பிரகாரனான நான்
அத பதிக்கிற ஆத்மாக்களுக்கு
பூர்வ பூர்வ பிரகாரங்களில் காட்டில்
உத்தர உத்தர பிரகாரத்தில்
சௌலப்யத்தாலே ஸ்ரேஷ்டனாய் இருப்பேன் என்றும்
சௌலப்யதோ ஜகத் ஸ்வாமீ ஸூ லபோ ஹயுத்த ரோததர -என்று
ஜகத் ஸ்வாமியான தான் சௌலப்யத்தாலெ மேலே மேலே
ஸூ லபனாய் இருப்பேன் இ றே என்றும் –
சர்வாதி சாயி ஷாட குண்யம் சமஸ்திதம் மந்தரபிம்பயோ மந்தரே வாசயதே
மனா நித்யம் பிம்பே து க்ருபயா ஸ்திதம் -என்று
சர்வத்தையும் அதிசயிப்பதான ஷாட் குணிய ரூபமானது
மந்தர பிம்பங்களிலே நிற்கும் என்றும்
மந்தரத்திலே வாசயாதமநா நிற்கும்– பிம்பத்திலே கிருபையாலே நிற்கும் என்றும் –
இப்படி அர்ச்சாவதாரத்தின் உடைய குணாதிக்கியம்
விஷ்வக்சேன சம்ஹிதையிலே சர்வேஸ்வரன் தன்னாலே அருளிச் செய்யப் பட்டது இ றே-
அர்ச்சா திருமேனியில் ஷாட் கணங்கள் பரிபூரணம் -கிருபையால் இங்கு -மந்த்ர சொல்லின் பொருளால் அங்கு

ஆஸ்தாம தே குணாராசிவாத குணா பரீவாஹாதம நாம ஜன்மாநாம் சங்க்யா பௌம
நிகேத நேஷ வபி குடீ குஞ்ஜேஷூ ரெங்கேஸ்வர
அர்ச்சயச சர்வ சஹிஷ்ணு அர்ச்சக பராதீ நாகிலாத மஸ்திதி பரீணீஷி ஹ்ருதயாலுபிச
தவததச சீலாஜா ஜடீ பூயதே –உத்தர சதகம் -74–என்று
அவதாரங்களை அருளிச் செய்த அனந்தரத்திலே
அர்ச்சாவதார வைபவத்தை சங்க்ரஹேண ஒரு ஸ்லோகத்திலே அருளிச் செய்தார் இ றே பட்டர்-

————————————————————————————-

ஆக
ஈஸ்வரனுடைய ஸ்வரூப வைலஷண்யத்தையும்
அந்த ஸ்வரூபத்தையும் நிறம் பெறுத்தும் குண வைலஷண்யத்தையும்
அக் குணங்கள் அடியாக அவன் பண்ணும் ஸ்ருஷ்டியாதி வியாபாரங்களையும்
அப்படி காரண பூதன் ஆனவனுடைய சர்வ பல பிரதத்வத்தையும்
காரணத்வாத் உபயோகியான விலஷண விக்ரஹ யோகத்தையும்
அந்த விக்ரஹ வை லஷண்ய அனுரூபமான லஷ்மி பூமி நீளா நாயகத்வத்தையும்
அந்த விக்ரஹ யோக பிரயுக்தமான பரத்வாதி பஞ்ச பிரகாரத்வத்தையும்
அருளிச் செய்து
ஈஸ்வர தத்தவத்தை நிகமித்தார் ஆயிற்று –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: