சூர்ணிகை -141-
இப்படி சித் அசித் ரூபமான தத்வ த்வயத்தின் யுடையவும்
ஸ்வரூப ஸ்வ பாவ விசேஷங்களை ஸூவ்யக்தமாம் படி அருளிச் செய்து
அநந்தரம்
ஷராத்மா நாவீ சதே தேவ ஏக -என்கிறபடியே–
தத் உபய நியந்தாவான ஈஸ்வரனுடைய ஸ்வரூபாதிகளை
சம்சய விபர்யயம் அற அருளிச் செய்கிறார் –
அதில் பிரதம சூர்ணிகை யாலே
ஈஸ்வரத்வம் அசாதாரண தர்மதயா வஸ்துவுக்கு நிரூபகம் ஆகையாலே
ஈஸ்வரன் என்றே வஸ்துவை நிர்தேசித்து -தத் ஸ்வரூபாதி வை லஷண்யத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார்-
அதில் பிரதமத்தில் குணம் ரூபம் ஆஸ்ரயமான -குணாதிகளுக்கு ஆஸ்ரயமான-ஆதாரமான – ஸ்வரூபத்தை -ஸ்வரூப வைலஷண்யத்தை அருளிச் செய்கிறார் –
ஈசன சீலன் நாராராயணன் -ஆதி சங்கரர் தானே அருளி -அம்ருத்ராக்ஷரம் ஹர -ஷரம் அக்ஷரம் இரண்டுக்கும் தேவ ஏக ஈசதே/
ஏகோ தேவ -ஏஷ சர்வ பூத அந்தராத்மா -அபஹத பாப்மா -திவ்ய தேவ ஏக -தான் ஒரு வேர் தனி முதல் வித்தாய் -நாராயண –
ஐயம் திரிபு இல்லாமல் சம்சயம் விபர்யயம் அற/ நியமன சாமர்த்தியம் இயற்கையிலே -ஈஸ்வரன் –
இன்றியமையாத தனியான தர்மம் இவன் ஒருவனுக்கே -அவ்யாப்தி அவியாப்தி இல்லாமல்
ஈஸ்வரன்
1–அகில ஹேய ப்ரத்ய நீக
2–அனந்த ஜ்ஞானா நந்தைக ஸ்வரூபனாய்-
3–ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனாய் –
4–சகல ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய்
5–ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ -என்கிற-சதுர்வித புருஷர்களுக்கும் ஆஸ்ரயணீயனாய்-
6–தர்மார்த்த காம மோஷாக்ய சதுர்வித பல ப்ரதனாய்-
7–விலஷண விக்ரஹ யுக்தனாய் –
8–லஷ்மி பூமி நீளா நாயகனாய் –
இருக்கும்
அதாவது
அகில ஹேய ப்ரத்ய நீக அனந்த ஜ்ஞானா நந்தைக ஸ்வரூபனாய்-
சமஸ்த ஹேய பிரதிபடமாய்-எதிராய்
த்ரிவித பரிச்சேத ரஹிதமாய்-தேச கால வஸ்து -விபு என்பதால் -தேசம் பரிச்சேத ரஹிதன் / அந்தராத்மா என்பதால் வஸ்து பரிச்சேத ரஹிதன்
ஸ்வயம் பிரகாசத்வ -ஸூ க ரூபவத்மே வடிவான
ஸ்வரூபத்தை யுடையவனாய் -என்கை –
சத்யம் ஜ்ஞானம் அனந்தம் ப்ரஹ்ம -என்றும்
விஜ்ஞ்ஞானம் ப்ரஹ்மம் -என்றும்
ஆனந்தோ ப்ரஹ்மம் -என்றும் சொல்லக் கடவது இ றே-
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந
ச்வேதர சமஸ்து வஸ்து விலஷண
ஆநந்த ஜ்ஞானா நனதைக ஸ்வரூப -என்று இறே எம்பெருமானார் அருளிச் செய்தது -கத்யத்திலே –
அப்படியே இவரும் அருளிச் செய்கிறார் –
ஆனால்
கல்யாணை கதா நத்வமும் -ச்வேதர சமஸ்து வஸ்து விலஷண த்வமும் இவர் அருளிச் செய்யாது ஒழிவான் ஏன் என்னில்
ஹேய ப்ரத்ய நீகதை-புக்க விடத்தே கல்யாணைக தாநத்வமும் வரும் என்னுமதைப் பற்றவும்
ஆநந்த ரூபம் சொல்லுகையாலே தன்னடையே சித்திக்கும்
என்னுமதைப் பற்றவும் கல்யாணை கதா நத்வம் அருளிச் செய்திலர் —
ச்வேதர சமஸ்து வஸ்து விலஷணதவம் உபய லிங்க விசிஷ்டத்வ பிரயுக்தம் ஆகையாலே
அர்த்தாதுகதம் என்று அருளிச் செய்திலர்-அனுமானிக்கலாம் என்றவாறு
ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனாய் –
ஆதி -சப்தத்தாலே குண சூர்ணையில் எம்பெருமானார் அருளிச் செய்த குணங்களை எல்லாம் சொல்லுகிறது –
குணங்களுக்கு கல்யாணத்வம் ஆவது -ஆஸ்ரிதர்க்கு பரம போக்யமாய் இருக்கை–நின் புகழில் வைகும் ஆனந்ததும் மற்று இனிதோ நீ அருளும் வைகுந்தம் எனும் வான்
கண சப்தம் சமூஹ வாசி –
பூஷிதன் ஆகையாவது -இவற்றாலே அலங்க்ருதனாய் இருக்கை-
திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு திவ்ய ஆபரணங்கள் போலே ஆயிற்று
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்துக்கு திருக் கல்யாண குணங்கள் ஔஜ்வல்ய கரமாய் இருக்கிற படி –
இத்தால் -யஸ் சர்வஜ்ஞ்ஞச சர்வ வித –முண்டக உபநிஷத் -என்றும்–அனைத்தையும் அறிந்தவன் அனைத்து பிரகாரங்களை அறிந்தவன்
பராசய சக்திர் விவிதைவ சரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞான பல கிரியாச -என்றும்
சமஸ்த கல்யாண குணா தமகோ சௌ-என்றும்
சொல்லுகிற கல்யாண குண யோகத்தை அருளிச் செய்தார் ஆயிற்று-
சகல ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய் –
ஜகத் -சப்தத்தாலே கார்ய வஸ்துவைச் சொல்லுகிறது
சகல -சப்தத்தாலே சமஷ்டி வ்யஷ்டி ரூபமான சமஸ்த பதார்த்தங்களையும் சொல்லுகிறது
சர்க்கமாவது -சிருஷ்டி
இதுதான் சத்வாரக அத்வாரக ரூபேண த்வி விதையாய் இருக்கும்
ஸ்திதி யாவ்வது -ரஷணம்-இதுவும் பாஹ்யாபயந்தர ரூபேண த்விவிதமாய் இருக்கும்
சம்ஹாரம் ஆவது -அழிக்கை-இதுவும் சத்வாரக அத்வாரக ரூபேண த்விவிதமாய் இருக்கும்
இவை எல்லாம் மேல் இவர் உப பாதிக்கிற இடத்தில் காணலாம்
யதோவா இமானி பூதானி ஜாயந்தே யேன ஜாதானி ஜீவந்தி
யத ப்ரயந் தய பிசமவிசநதி தத் விஜிஞ்ஞாஸ்வ தத் ப்ரஹ்ம -இத்யாதி
ஸ்ருதிகளாலே இவனுடைய சகல ஜகத் சர்க்காதிகள் சொல்லப் படா நின்றது இ றே–ஆதி மோக்ஷ பிரதத்வமும் உண்டே –
இத்தால் கீழ் சொன்ன குண விசிஷ்டன் ஆனவனுடைய வியாபார விசேஷங்களை அருளிச் செய்தார் ஆயிற்று –
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ –7–10-என்கிற சதுர்வித புருஷர்களுக்கும் ஆஸ்ரயணீயனாய்-கதி த்ரய மூலாஸ்ய -ஆளவந்தார்
ஆர்த்தனாவான் -முன்புண்டான ஐஸ்வர்யத்தை இழந்து அதைப் பெற வேணும் என்று ஆசைப் படுமவன்-துடிப்பு உள்ளவன் -முமுஷு மோக்ஷத்தில் போலே புபுஷு அன்றோ இவன்
ஜிஜ்ஞாஸூ ஆகிறான் -ஜ்ஞான ஸ்வரூபனான ஆத்மாவை அனுபவிக்க ஆசைப் படும் கேவலன்-கர்ம யோகம் ஞான யோகம் -கைவல்யம் இவற்றையே அறிபவன்
அர்த்தார்த்தி ஆகிறான் அபூர்வமாக ஐஸ்வர் யத்தை ஆசைப் படுமவன்-புத்த ஐஸ்வர்யம் கேட்பவன்
ஜ்ஞானி ஆகிறான் பரம புருஷார்த்தமான பகவத் பிராப்தியை ஆசைப் படுமவன்-பக்தி யோக நிஷ்டனை ஞானி சப்தத்தால் -ஞானமே பரிபக்குவப்பட்டு பக்தி ஞான விசேஷம்
ஸ்திதே –அஹம் ஸ்மராமி மத பக்திம்-சரணாகதனை பக்தன் என்ற சொல்லால் -அந்திம ஸ்மரணம் வர்ஜனம் -i
ஆர்த்த -பிரதிஷடாஹீந பரஷ்டைச்வர்ய புனச தத் பிராப்தி காம
அர்த்தார்த்ததீ -அப்ராப்த ஐஸ்வர் யதயா ஐஸ்வர்ய காம தயோர் முக பேத மாதரம்
ஐஸ்வர்ய விஷய தயா ஏக ஏவாதிகார-
ஜிஞ்ஞாஸூ -பிரகிருதி வியுக்தாதம் ஸ்வரூபாவ தீசசு ஜ்ஞானமே வாசாய ஸ்வரூபம் இதி ஜ்ஞ்ஞா ஸூ ரித யுக்தம்
ஜ்ஞானிச -இதஸ்த்வ நயாம பிரகிருதி வித்தி மே பராம இத்யாதி ந அபஹித பகவத் சேஷதை கரசாதம் ஸ்வரூபம் இத
பிரகிருதி வியுக்த கேவலாதம நயபாயாவ சயன பகவந்தம் பரேப ஸூ ர பகவந்தம் ஏவ பரமபராபயம் மனவான -என்று
சதுர்வித அதிகாரி வேஷத்தையும் ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் அருளிச் செய்தார் இறே-
பிரதிஷ்டா ஹீனன் ஐஸ்வர்யம் போனவன் -அதை அடைய ஆசைப்படுபவன் ஆர்த்தன்-
முக பேதம் -கொஞ்சம் பேதம் -பிரகிருதி -தொலைத்த கேவல ஆத்ம அனுபவம் இச்சிப்பவன் -ஞானமே ஸ்வரூபம் இவனுக்கு -அத்தை வைத்தே பெயர்
ஞானி -வேறான -சேஷத்தைக ரசம் ஆத்ம ஸ்வரூபம் அறிந்தவன் –பூமி ஆப அனலை கம் ஆகாசம் -இவை தாழ்ந்த சொத்துக்கள் -அபரா பிரகிருதி /
உயர்ந்த -வேறு பட்ட -ஆத்ம-பரா பிரகிருதி சைத்தன்யம் உள்ள -சேஷத்வம் அறிந்தவன் —
அவனே ஞானி -தத் சேஷத்தைக ஸ்வரூபம் -பக்தி யோக நிஷ்டன்-
இந்த சதுர்வித புருஷ சமாஸ்ரயணீயத்தை
சதுர்விதா பஜந்தே மாம் ஜனா ச ஸூ கருதிநோர்ஜுனா
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ அர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரத ரிஷப –7–14-என்றும்–புண்யசாலிகள் என்று கொண்டாடுகிறான் நால்வரையும் -நால்வரும் உதாரர்கள் –
சதுர்வித மம ஜனா பக்த ஏவ ஹி சே ஸ்ருதா
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ அர்த்தார்த்தீ ஜ்ஞாநீ சேதி பிருதக் பிருதக் –மோக்ஷ தர்ம உபதேசம் –என்றும்
தானே அருளிச் செய்தான் இறே
இத்தால் ஜகத் காரண பூதனாக கீழ்ச் சொல்லப் பட்டவனுடைய
சர்வ சமாஸ்ரயணீ யத்வத்தை அருளிச் செய்தார் ஆயிற்று -பெத்த பாவிக்கு விடப்போமோ –
கண்ணாவான் -சஷூஸ் தேவானாம் தானவாம் -அனைவருக்கும் -அஸ்தி நாஸ்தி இரண்டிலும் உள்ளான் -உளன் உளன் அலன் என்றாலும் உளன் –
தர்மார்த்த காம மோஷாக்ய சதுர்வித பல ப்ரதனாய்-
தர்மார்த்த காம மோஷாக்கிய புருஷார்த்த உதாஹருத -என்று
புருஷார்த்தம் சதுர்விதமாய் இ றே இருப்பது —
சகல பல ப்ரதோ விஷ்ணு
தர்மமாவது -இஷ்டா பூர்த்வங்கள்–
இஷ்டமாவது -யாகாதி பூர்த்தமாவது வாதாஷி–குளம் வெட்டுவது போல்வன
அர்த்தமாவது-ஸூவர்ண ரஜ சாதிகள்–தங்கம் வெள்ளி வைரம் போல்வன –
காமமாவது ஐஹிக பர லௌகிக போக்கிய பதார்த்த அனுபவ ஸூ கம் -விஷயாந்தர அனுபவம்
மோஷம் ஆவது ஆத்மா அனுபவ பகவத் அனுபவங்கள்
இவற்றில் -தர்மம் சாதனயா புருஷார்த்தமாய் இருக்கும்
அர்த்தம் சாதநதாயும் ஸ்வயமாயும் புருஷார்த்தமாய் இருக்கும்
காம மோஷங்கள் இரண்டும் ஸ்வயமாய் புருஷார்த்தமாய் இருக்கும்
ஏவம் விதமான சதுர்வித பலங்களையும் அதிகார அனுகுணமாகக் கொடுக்குமவன் -என்கை-
பிரார்த்தித்தே பெற வேண்டும் -புருஷார்த்தமாக புருஷனாலே ஆர்த்திக்கப்பட வேண்டுமே –
இத்தால் சர்வ சமாஸ்ரயணீயன் ஆன இவனுடைய
சகல பல பிரதத்வத்தையும் அருளிச் செய்தார் ஆயிற்று-
தேவேந்தரச த்ரிபுவன மாதத மேக பிங்கச சர்வாததிம
த்ரிபுவன சாஞ்ச கார்த்த வீர்ய
வைதேக பரமபதம் பரசாதாய விஷ்ணும் சம்ப்ராபதஸ் சகல பல பிரயோஹீ விஷ்ணு -என்னக் கடவது இ றே –
ஏக பிங்கன் குபேரன் சொத்தை பெற்றான் -விதேக ராஜர் பரமபதம் பெற்றார் -தேவேந்திரன் மூன்று லோகம் பெற்றான் -கார்த்த வீர்ய ராஜன் -இப்படி நால்வரையும் பற்றி அருளியது-
விலஷண விக்ரஹ யுக்தனாய் –
அதாவது -விக்ரஹம் தான் ஸ்வரூப குணங்களிலும் காட்டில் அத்யந்த அபிமதமாய் -என்று தொடங்கி
மேல் அருளிச் செய்கிற வைலஷண்யத்தை யுடைய விக்ரஹத்தோடே கூடி இருக்குமவன் -என்கை
நீல தோயாத மதயஸ்தா வித்யுல்லேக பாஸ்வரா-இத்யாதியிலே விக்ரஹ வைலஷண்யம் ஸ்ருதி பிரசித்தம்
இவ பாஸ்வர இது போலே -லேகா ரேகா -மின்னல் வெட்டு -கொடி போன்ற -கருத்த காள மேகத்தின் நடுவில் -தோயத -தண்ணீர் கொடுப்பதால் தோயதம்- சூல் கொண்ட மேகம்
தன் நடுவே கொடு இருக்கும்-என்றுமாம் -மின்னல் கொடி -அபூத உவமை -கருத்த மேகத்தை தனக்குள் வைத்துக் கொண்டு –
ஒளி அதீதமாக -வர்ணம் கறுப்பு என்பதால் காள மேகம் -பரஞ்சோதிஸ் -மின்னல் வெளுப்பாகுமே -சமன்வயப்படுத்த இப்படி –
ஸ்வ அபிமத அனுரூபைக ரூப அசிந்த்ய திவ்ய அத்புத
நித்ய நிரவதய நிரதிசய ஔஜ்வல்ய சௌந்தர்ய சௌகந்த்ய
சௌகுமார்ய லாவண்ய யௌவன அத்ய அநந்த குணநிதி திவ்ய ரூப -என்று
திவ்ய மங்கள விக்ரஹ லஷணத்தை அருளிச் செய்தார் இ றே -எம்பெருமானார்-
குமாரனார் தாதை -தாமரைக் கண்ணன் -கரி பூசி அருளிச் செய்யும் படி அன்றோ திவ்ய ரூபம் -தருணவ் ரூப சம்பன்னவ் ஸூ குமாரவ் மஹா புலவ் புண்டரீக விஷாலாஷவ் -என்று கொண்டாடும்படி அன்றோ
கண்டவர் மணம் வழங்கும் ரூப ஸுந்தர்யம் அன்றோ
இத்தால்
கீழ்ச் சொன்ன ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசமாய்
ஜகத் காரணத்வத்துக்கும்–கொப்பூழ் அழகர் -எழு கமலப் பூ அழகர் -அயனைப் படைத்ததோர் எழில் உந்தி அன்றோ காட்டும்
சர்வ சமாஸ்ரயணீயத்வத்துக்கும்–மண்ணுலகில் மனுஷர் உய்ய – இனிதாக திருக்கண் வளர்ந்து –
சர்வ பல பிரத்வத்துக்கும்-அலம் புரிந்த நெடும் தடக்கை -வாங்குபவன் போதும் என்ற சொன்னதும் தானே திரும்பும்
ஏகாந்தமான
திவ்ய விக்ரஹ யோகத்தை
அருளிச் செய்தார் ஆயிற்று-
லஷ்மி பூமி நீளா நாயகனாய் -இருக்கும்
அதாவது-
உனக்கே ஏற்கும் -என்னும்படியான வை லஷண்யத்தை யுடையளாய்
சேதனருக்கு புருஷகார பூதையாயும் –
பிராப்யையாயும்
இருக்கும் பிரதான மஹிஷியான பெரிய பிராட்டியாருக்கும்
அவளோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கும் பூமி நீளைகளான மற்றை இரண்டு பிராட்டிமாருக்கும்
அநுரூப நாயகனாய் இருக்கும் -என்கை
ஹரீச்ச தி லஷ்மீச்ச பத்ன்யௌ-என்று லஷ்மி பூமிகள் இருவரையும்
வேத புருஷன் சொன்ன இது நீளைக்கும் உப லஷணம்-சகாரம் -சமுச்சயம் உண்டே
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ சஹாயோ ஜனார்த்தன
உபாயயாம பூமி நீளா பயாம சேவித பரமேஸ்வர–சைவ புராணம் ஸ்லோகம் -என்னக் கடவது இ றே
லிங்க மஹாத்ம்யம் சொன்னதுக்கு பிராயச்சித்தமாக சொல்லும் ஸ்லோகம் -ஆஸ்தே பக்தைஸ் பாகவத சக -வைகுந்தது அமரரும் முனிவரும் -கைங்கர்ய மனன சீலர்கள் உண்டே –
ஸ்வ அபிமத நித்ய நிரவத்ய அநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய
சீலாதய நவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண ஸ்ரீ வல்லப
ஏவம் வித பூமி நீளா நாயக -என்று இ றே எம்பெருமானார் அருளிச் செய்தது
-சர்வ கந்த சர்வ ரஸா என்னுமவனுக்கும் கந்தமூட்டும் கந்தம் கமழும் குழலி அன்றோ –
இத்தால்
கீழ்ச் சொன்ன விக்ரஹ வை லஷண்யம்
காட்டில் எரித்த நிலா வாகாதபடி
அனுபவிக்கக் கடவரான பிராட்டிமாரோட்டை சேர்த்தியை
அருளிச் செய்தார் ஆயிற்று-
—————————————————————————
சூர்ணிகை -142-
இப்படி உக்தமான ஸ்வரூபாதிகளை விஸ்தரேண உபபாதித்து அருளுகிறார் மேல்
அதில் பிரதமத்தில் அகில ஹேய பிரத்ய நீகத்வத்தை உபபாதிக்கிறார் –
அகில ஹேய பிரத்ய நீகன்
ஆகையாவது
தமஸ் ஸூ க்கு
தேஜஸ் போலேயும்
சர்ப்பத்துக்கு
கருடனைப் போலேயும்
விகாராதி தோஷங்களுக்கு
பிரதிபடனாய்
இருக்கை –
ஹேயமாவது -தோஷம்
அகில ஹேயம் -என்கையாலே -த்ரிவித சேதன அசேதன தோஷங்களையும் சொல்லுகிறது
த்ரிவித சேதன அசேதன தோஷங்களும் ஈஸ்வரனுக்கு வாராது என்று
இது தன்னை வ்யக்தமாக மேலே அருளிச் செய்கிறார் இ றே
தமஸ் ஸூ க்கு தேஜஸ் ஸூ பிரதிபடமாய் இருக்குமா போலேயும்
சர்ப்பத்துக்கு கருடன் பிரதிபடமாய் இருக்குமா போலேயும் -என்கை –
விகாராதி தோஷங்கள் -என்கிற இடத்தில்
விகார சப்தத்தாலே த்ரிவித அசிததின் யுடைய பரிணாமத்தைச் சொல்லுகிறது
ஆதி -சப்தத்தாலே பக்த சேதனருடைய அஞ்ஞான துக்கங்களையும்
முக்தருடைய சேறு தோய்த்து கழுவினால் போலே
பிரகிருதி சம்ருஷ்டராய் விடுபட்ட ஆகாரத்தையும்
நித்யருடைய பரிச்சின்ன ஸ்வரூபத்வ பாரதந்த்ரியங்களையும் சொல்லுகிறது-விபு இல்லையே -இவர்கள் –
பாரதந்த்ர்யம் தோஷமோ என்னில் புருஷனுக்கு ஸ்தன உத்பேதம் போலே ஸ்வ தந்த்ரனுக்கு தோஷம் என்கை –
இத் தோஷங்களுக்கு பிரதிபடமாய் இருக்கை யாவது -தான் மாறாது இருக்கை –
பிரதிபடம் என்கையாலே -ஆத்மா ஜ்ஞான மயோமல-என்கிறபடியே
ஸ்வரூப நிபந்தனமாக மல சம்பந்தம் இல்லையே யாகிலும்
உபாதி நிபந்தனமான-கர்ம சம்பந்தம் உண்டே – மல சம்பந்தத்துக்கு யோக்யமான
ஆத்மா ஸ்வரூபத்தில் காட்டில் பகவத் ஸ்வரூபத்துக்கு வாசி தோற்றுகிறது –
தத் ப்ரஹ்ம பரமம் நித்யம்ஷ மஷய மவ்யயம் ஏக ஸ்வரூப
ந்து சதா ஹேயா பாவச்ச நிர்மலம் -என்றும்
சமஸ்த ஹேய ரஹிதம் விஷண வாக்கியம் பரமம் பதம் -என்றும்
அவிகாராய சுததாயா நித்யாய பரமாத்மனே -என்னக் கடவது இ றே –
அமலன் விமலன் நிமலன் நிர்மலன் -வீட்டைப்பண்ணி விளையாடும் விமலன் -சதைக ரூப ரூபாயா ஸ்வரூபத்துக்கும் ஸ்வ பாவத்துக்கு -திவ்ய மங்கள விக்ரஹமும் ஏக ரூபம்
ஹேய ப்ரத்ய நீகத்வம் ஆவது -ஆஸ்ரிதர் யுடைய ஹேய நிராசகத்வத்துக்கு அடியான ஹேய பிரதிபடத்வம் -என்னவுமாம்
துயர் அறு சுடர் ஆதி -துயர் அறுக்கும் என்றும் அறும் என்றும் உண்டே வல்வினை மாள்விக்கும் -அதை பார்த்து தான் துயர் அறும்-
என்னும் ஒரு யோஜனையும் யுண்டு இ றே-
கத்ய வ்யாக்யானங்களிலே நஞ்சீயர் ஆச்ச்சான் பிள்ளை முதலான ஆச்சார்யர்கள் அருளிச் செய்தது
சர்ப்பத்துக்கு கருடனைப் போலேயும் என்கிற த்ருஷ்டாந்தத்தாலே
அதுவும் இவ்விடத்து அர்த்தம் ஆனாலோ என்னில்
விகாராதி தோஷங்களுக்கு பிரதிபடமாய் இருக்கை என்கையாலே
இவ்விடத்தில் இவர்க்கு அது விவஷிதம் அன்று–
————————————————
சூர்ணிகை -143-
அநந்தரம் அனந்ததவத்தை உப பாதிக்கிறார் –
அநந்தன் ஆகையாவது
நித்யனாய்
சேதன அசேதனங்களுக்கு வ்யாபகனாய்
அந்தர்யாமியாய்
இருக்கை –
அந்தம் நாஸ்தி காலம் தேசம் வஸ்து -மூன்றாலும் வரை அறுக்க முடியாதே
அதாவது
தேசத காலதோ வஸ்து தச்ச அபரிச்சேத்யம்-
விபுதவாத் -தேச பரிச்சேத ராஹித்யம்
நித்யத்வாத் -கால பரிச்சேத ராஹித்யம்
ஸ்வ வய திரிகத சமஸ்த வஸ்துக்களுக்கும் பிரகாரியாய் இருக்கையாலும்
தனக்கு பிரகார்யாந்தரம் இல்லாதபடி நிற்கையாலும்
சத்ருச வஸ்து அபாவத்தாலே வஸ்து பரிச்சேத ராஹித்யம்
அத்தை அருளிச் செய்கிறார்-
நித்யனாய் சேதன அசேதனங்களுக்கு வ்யாபகனாய்
அந்தர்யாமியாய் இருக்கை -என்று இத்தால்
நித்யன் ஆகையாலே -இன்ன காலத்தில் உள்ளான் காலாந்தரத்தில் இல்லை என்கிற கால பரிச்சேதம் இன்றியிலே
சகல சேதன சேதனங்களுக்கும் வ்யாபகனாய்க் கொண்டு
விபுவாய் இருக்கையாலே -இன்ன தேசத்தில் உள்ளான் தேசாந்தரத்தில் இல்லை என்கிற தேச பரிச்சேத்யம் இன்றியிலே
சர்வாந்தர்யாமி யாகையாலே சர்வத்துக்கும் தான் பிரகாரியாய் தனக்கு பிரகாரந்தரம் இல்லாத படி இருக்கையாலே
இன்ன வஸ்து போலே என்கிற வஸ்து பரிச்சேதமும் இன்றியிலே இருக்கை என்றதாயிற்று
நித்யம் விபும் சர்வச்தம் ஸூ ஸூ ஷ்மம்-என்றும்
அந்த பிரவிஷ்டச சாஸ்தா ஜநா நாம் சர்வாத்மா -என்றும்–சாஸ்தா நியாமகன் -என்றவாறு
யச்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்றும்
நதத் சமாச்சா பயதிகச்ச த்ருச்யதே -என்றும் சொல்லக் கடவது இ றே-ஓத்தார் மிக்கார் இலாய மா மாயன் அன்றோ –
———————————————————–
சூர்ணிகை -144-
இவற்றோடு தான் ஒட்டு அற்று இருக்கை அன்றிக்கே
அந்தர்யாமிதயா அவஸ்திதனாய் இருக்குமாகில்
தத்கத தோஷங்கள் வாராதோ -என்கிற சங்கையை அனுவதிக்கிறார் –
அந்தர்யாமி
ஆனால்
தோஷங்கள்
வாராதோ
வென்னில் —
—————————————–
சூர்ணிகை -145-
அத்தை பரிஹரிக்கிறார்
சரீர கதங்களான
பால்யாதிகள்
ஜீவாத்மாவுக்கு
வாராதாப் போலே
த்ரிவித சேதன அசேதன
தோஷமும்
ஈஸ்வரனுக்கு வாராது –
பக்ஷம் – சாத்தியம்– ஹேது வைத்தே நையாயிக நியாய வாதங்கள் –
அதாவது
இந்த சரீரத்தை அதிஷ்டித்து ஸ்வா தீனமாக நிர்வஹித்துக் கொண்டு இரா நிற்கச் செய்தேயும்
தத்கதமான பால்ய யௌனாதி விகாரங்கள்
தத் அந்தர்வர்த்தியான ஜீவாத்மாவுக்கு வாராதாப் போலே
த்ரிவித சேதன அசேதனங்களுக்கும் அந்தர்யாமியாய்
இவற்றை சரீரமாகக் கொண்டு இரா நிற்கச் செய்தேயும்
தத்கத தோஷம் ஈஸ்வரனுக்கு வாராது -என்கை –
ஆவி சேர் உயிரினுள்ளான் யாதுமோர் பற்றிலாத பாவனை யதனைக் கூடில் யவனயும் கூடலாமே -3–4–என்று இறே ஆழ்வாரும் அருளிச் செய்தது
பற்றற்ற பக்தி பாவனையால் கூடலாம்– மற்ற வன் பாசங்களை முற்ற விட்டு -மால் பால் மணம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு இத்யாதி
சரீரியான ஜீவாத்மாவுக்கு சரீர கதங்களான பால்யாதிகள் வந்ததில்லை யாகிலும்
சரீர சம்பந்த நிபந்தனமாக துக்க அஜஞாநாதிகள் வருகிறவோபாதி
சரீர பூதமான இவற்றோட்டை சம்பந்தத்தால் இவனுக்கும் இங்கனே சில தோஷங்கள் வாராதோ என்னில்
வாராது -அதுக்கு அடி
பிரவேச ஹேது விசேஷம்-கிருபா இச்சா தயா கருணை அனுகம்பா அவனுக்கு
இவனைப் போலே கர்மம் அடியாக அன்றிக்கே–கர்மம் அடியாகவே தான் அனுபிரவேசமும் ஸூ க துக்க அனுபவமும் -ஆத்மாவுக்கு –
அனுக்ரஹம் அடியாக இ றே அவனுக்கு இவற்றில் பிரவேசம் இருப்பது
அனஸ்நன் நன்ய -என்றும்-ஒரு மரம் இரண்டு பறவை பழம் உண்ணாமல் ஒளி விஞ்சி -கர்ம அனுபவத்தால் ஆத்ம –சமானம் விருக்ஷம் ஹிருதய கமபத்தில் –
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா -என்றும்
விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே -என்றும் சொல்லிற்று இ றே–ஜிஷ்ணு அனைத்தையும் வென்றவர்
—————————————–
சூர்ணிகை -146-
அநந்தரம்
ஜ்ஞானாந்ததைக ஸ்வரூபத்தை உப பாதிக்கிறார் –
ஞானானநதைக
ஸ்வரூபன் ஆகையாவது
ஆநந்த ரூப
ஜ்ஞானனாய்
இருக்கை –
அனைவருக்கும் எல்லா ஞானமும் அனுகூலம் -பிரதிகூல்யமாக இருப்பது கர்மத்தாலும் – அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் என்ற அறிவில்லாமை யாலும் –
பயம் கவலை –அஹந்காராதி ரூபமான ஞானம் இல்லாமல்
ஞ்ஞாந ஆநந்தங்களையே ஸ்வரூபமாக யுடையனாய் இருக்கை என்று
சப்தத்துக்கு அர்த்தம் சொல்ல வேண்டி இருக்க
ஜ்ஞானம் என்றும் ஆனந்தம் என்றும் பிரித்துச் சொல்ல
இரண்டு அவஸ்தை இன்றிக்கே
ஜ்ஞானமே ஸ்வரூபமாய்
அது தான் அனுகூலமாய் இருக்கை –
ராவணனாதிகளை பார்த்து லீலைக்கு விஷயம் -ஆழ்வாராதிகளை பார்த்து போகத்துக்கு விஷயமாக இருக்குமே ப்ரஹ்மதுக்கு –
லோகத்தில் தான் ஞானம் ஆனந்தம் இல்லாமலே இருக்குமே
ஆனந்தம் ஆகையாலே ஆநந்த ரூப ஜ்ஞானனாய் இருக்கை என்று அருளிச் செய்கிறார் –
அனுகூல ஜ்ஞானமே ஸ்வரூபமாய் இருக்க
ஜ்ஞான ஆனந்தங்கள் என்று பிரித்துச் சொல்லுகிறது
இரண்டும் யுண்டாகைக்காக என்று இ றே
இவர் தாம் இட்டு அருளின கத்ய வ்யாக்யானத்தில் அருளிச் செய்தது-
பிள்ளை லோகாச்சார்யார் கத்ய த்ரய வியாக்யானம் அருளிச் செய்து இருக்க வேண்டும் –
————————————
சூர்ணிகை -147-
ஆநந்த ரூப ஜ்ஞானனாய் இருக்கை என்றது தன்னை உபபாதிக்கிறார்
அதாவது
கட்டடங்க
அனுகூலமாய்
பிரகாசமுமாய்
இருக்கை –
மீனுக்கு உடம்பு எங்கும் தண்ணீர் போலே -ஞான ஆனந்த ஏக ஸ்வரூபன் /உயர் நலம் உடையவன் உயர்வற என்றாரே ஆழ்வார் இத்தையே –
கட்டடங்க என்றது -ஸ்வரூபம் உள்ள பரப்பு எங்கும் -என்றபடி-ஸ்வரூபம் விபு தானே -அதனால் எங்கும் என்றபடி –
இத்தால் ஸ்வரூபத்தில் அ நனுகூலமாயாதல் அபிரகாசகமாயாதல் இருக்கும் இடம் இல்லை என்கை
ஜ்ஞானாந்த ஏக ஸ்வரூபம் என்ற இதில் ஏக சப்தார்த்தம் இது இ றே
அனுகூலத்வம் ஆவது ஆஹ்லாதகரத்வம்
பிரகாசத்வம் ஆவது -ஸ்வயம் பிரகாசத்வம்-
அநந்யாதீன பிரகாசத்வா வாஹ்லாதகரத்வ ரூப ஜ்ஞான மேவ யஸ்ய ஸ்வரூபம் ச ஹிஜ்ஞானாந்ததைக ஸ்வரூப -என்னக் கடவது இ றே
————————————-
சூர்ணிகை -148-
இப்படி ஸ்வரூப வைலஷண்யத்தை யுபபாதித்த அநந்தரம்
ஸ்வரூப ஆஸ்ரிதமான குணங்களின் யுடைய
வைலஷண்யத்தை அருளிச் செய்கிறார் –
இவனுடைய
ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குணங்கள்
1–நித்யங்களாய்
2–நிஸ்ஸீமங்களாய்
3–நிஸ் சங்கயங்களாய்
4–நிருபாதிகங்களாய்
5–நிர்த் தோஷங்களாய்
6–சமா நாதிக ரஹீதங்களாய்
இருக்கும் –
ஆதி சப்தத்தாலே –
பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் ஸூ க்களும்
வாத்சல்யாதிகளும்
சௌர்யாதிகளும்
ஆகிற குண விசேஷங்கள் எல்லா வற்றையும் சொல்லுகிறது-
நித்யங்கள் ஆகையாவது -உத்பத்தி விநாச ரஹீதங்களாய் இருக்கை
ஸ்வரூப அனுபந்திகள் ஆகையாலே யாவதாத்மா பாவிகளாய் இருக்கும் இ றே–ஸ்வரூபம் போலே இவையும் நித்யம் –
த இமே சத்யா காமா -சாந்தோக்யம் – என்று குணங்களின் யுடைய நித்யத்வம் ஸ்ருதி சித்தம்
காமயந்த இதி காமா கல்யாணகுணா த இமே சதயா நித்யா இத்யாதயா -என்று இ றே இந்த ஸ்ருதிக்கு அர்த்தம்
விரும்பப்படும் குணங்களை கொண்டவன் -ஸத்ய காமன் -சத்யம் நித்யம் என்றவாறு –
ஈறில வண் புகழ் -என்றார் இ றே ஆழ்வார்-
நிஸ்ஸீமங்கள் – ஆகையாவது -ஓர் ஒன்றே அவதி காண ஒண்ணாது இருக்கை
எதோ வாசே நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ–தைத்ரியம் -ஆனந்த வல்லி -என்று
மீண்டு விட்டது இ றே ஆநந்த குணத்தை எல்லை காணப் புக்க வேதம்
இது ஆநந்த குணம் ஒன்றிலும் அன்று இ றே
குணங்கள் எல்லாம் இப்படி இ றே இருப்பது
உபர்யு பாயபஜபுவோபி பூருஷாந பரகல்ப்ய தே யே சதமித்ய நுகாரமாத
கிரச தவ தேகைக குணாவதீ பசாய சதா ஸ்திதிதா நோதய மதோதி சேரதே -என்னக் கடவது இ றே-அப்யுஜன் நான்முகன் –
உயர் நலம் என்று இ றே ஆழ்வாரும் அருளிச் செய்தது-
உயர்வு நலம் உலகத்தில் சொல்வதை எல்லாம் உயர்வு அறுந்து போகும் படி அன்றோ இவனுடையது
நிஸ் சங்கயங்கள் -ஆகையாவது -இப்படிப் பட்ட குணங்கள் தான் எண்ணிறந்து இருக்கை –
யதா ரதநாதி ஜலதேர சங்கயேயாநி புத்ரக ததா குணா ஹயன நதஸ்ய
அசங்க யேயோ மஹாத மன -என்றும்
சமுத்திரத்தில் ரத்தினங்கள் போலே அளவற்றவை –
வாஷாயுதைர் யஸ்ய குணா நசகயா வக்தும் சமேதைரபி சர்வ லோகை
மகா தம நச சங்கு சக்ராசி பானே விஷ்ணோர் ஜிஷ்ணோ வசூதேவா தமசஜ்ச்ய –பீஷ்ம பர்வம் -என்றும்
யானும் ஏத்தி எழு உலகும் ஏத்தினாலும் -பேச சக்தி இல்லையே குணங்கள் எண்ணிறந்தவை
சதுர்முகா யுயாதி கோபிவக்தா பவேன நா கவாபி விசுததசேதா சதே குணா
நாமயுதை கம்ம சம வதேன ந வா தேவவா பரசீத–ஸ்ரீ வராஹ புராணம் -என்றும்
அபூத உவமை பிரம்மன் ஸ்ருஷ்டித்து கோடி வாய் கொடுத்து ஏக தேசம் குணத்தை சொல்ல முடியாதே
நஹி தஸ்ய குணா சசர்வே சர்வைர் முனி கணைரபி
வக்தும் சக்யாவியுகதச்ய சத்வாதயை ரகிலை குணை-என்னக் கடவது இ றே
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன் -என்றார் இ றே ஆழ்வாரும்
யேஷவே கஸ்ய குண சய விபு ருடபி வைலோகோ தாம ச்வாச்ராயம் குர்யாத் தாத்ருசா வைப வைர கணிதைர்
நிஸ் ஸீம பூமா நவிதை நித்யைர் திவ்ய குணை
சத்தோ திக சுபதவை காசபதா தமாஸ்ரையை ரிததம
ஸூ ந்தர பாஹூ மச்மி சரணம் யாதோ வநாதரீச்வரம் –
என்கிற ஸ்லோகத்தில் குணங்களின் யுடைய நித்ய – நிஸ் சீமதிச சங்கயத்வங்களை- அருளிச் செய்தார் இ றே ஆழ்வான் -ஸ்ரீ ஸூ ந்த்ர பாஹு ஸ்தவத்தில்
ஒவ் ஒரு குணத்தின் ஒரு திவலை மட்டும் -சொல்லி முடிக்க முடியாதே -பிரசித்தம் அன்றோ —
நிருபாதிகங்கள் –ஆகையாவது -பரதந்திர வஸ்து கதங்கள் ஆகையாலே
சவோயாதிகளிலே ஈஸ்வர இச்சை யாகிற உபாதியை அபேஷித்து இருக்கும்-
நம்முடைய குணங்கள் அவன் கிருபையை எதிர்பார்த்து இருக்குமே –
சேதன குணங்கள் போல் அன்றிக்கே ஸ்வா பாவிகங்களாய் இருக்கும் –
ஸ்ரீ பாஷ்யத்தில் –
ஸ்வ பாவதோ நிரசத நிகில தோஷா நவதிகாதிசய சங்க யேய
கல்யாண குணகண புருஷோத்தாமோ பிதீயதே -என்கிற
இடத்துக்கு வியாக்யானம் பண்ணுகிற ஸ்ருத பிரகாசகாரர்
அநவதிக அதிசய சப்தத்தாலே -நித்ய சித்தரை வ்யாவர்த்திக்கிறது என்று முந்துற ஒரு யோஜனை பண்ணி
அனுஷ்க தேன ஸ்வ பாவத இதி பதே நவா நித்ய சித்த வ்யாவ்ருத்தி
தேஷாம் தாத்ருச குணகத்வம் ஹி பகவன் நிதயே சசாதீ நம் -என்று
அனந்தர யோஜனையில் இவ்வர்த்தத்தை அருளிச் செய்தார் இ றே
பிரபாவத்தா நித்யர் களுக்கு -ப்ரஹ்மத்துக்கு ஸ்வா பாவிகம்-என்றவாறு -வந்தேறி அவர்களுக்கு வந்த காலம் தெரியாது அதனால் நித்யம் அவர்களுக்கு
-அனுக்ரஹத்தால் வந்தது என்றவாறு
ஸ்வ பாவிகீ ஜ்ஞான பல கிரியாச -என்று குணங்களின் யுடைய ஸ்வா பாவிகத்வத்தை ஸ்ருதியும் சொல்லா நின்றது இ றே
இந்த ஸ்ருதியில் கிரியை என்கிறது நியமநத்தை -நியமன சாமர்த்தியமும் ஸ்வா பாவிகம் -என்றவாறு -ப்ரஹ்மாதிகள் பிரார்த்தித்து பெற்றது
பரா சயேதி-ஜ்ஞான சக்த்யாதி நாம ஸ்வ பாவிகத்வ முக்தம் க்ரியா -நியமனம் என்று இ றே இதுக்கும்
ஸ்ருதி பிரகாசகாரர் வியாக்யானம் பண்ணிற்று-
நிர்த் தோஷங்கள் -ஆகையாவது ‘ஹேய குணா சம்சர்க்கம் ஆகிற தோஷம் இன்றிக்கே இருக்கை –
அபஹத பாப்மா விஜரோவிமிருத்யூர் விசோகா
விஜிகதஸ் சோபிபாசச சத்யகாமஸ் சத்யா சங்கல்ப–சாந்தோக்யம் -என்றும்
சதவாதயோ ந சநதீச யத்ரச பராக்ருதா குணா -என்றும்-பிராகிருத முக்குண சேர்க்கை இல்லையே -குண சூன்யம் என்று குத்ருஷ்டிகள் இதுக்கு –
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் அஸ்ய சேஷத -என்றும்
பகவத் சப்த வாச்யானி வினா ஹேயைர் குணாதிபி-என்றும்
தேஜோ பல ஐஸ்வர்ய மகா வைபோஸூ வீர்ய சக்த்யாதி குணைக ராசி–ஸ்ரீ விஷ்ணு புராணம் –என்றும்-குணங்களுக்கு ஒரே கொள்கலம் –
பர பராணாம் சகலா நயதரகாலே சாதயசச நதி பராவரேசே -என்கிறபடியே–ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகன் –
ஆச்ரயம் ஹேய பிரத்ய நீகம்ஆகையாலே இவற்றுக்கு
ஹேய குணா சம்சர்க்க தோஷா பத்திக்கு யோக்யதை இல்லை இ றே –
சமா நாதிக ரஹீதங்கள் -ஆகையாவது
சேதநாந்தர குணங்களை சமமாகவும்
ஈஸ்வர குணங்களை அதிகமாகவும் யுடைத்தாய் இருக்கும்
சேதன குணங்கள் போல் அன்றிக்கே
தனக்கு ஒத்ததும் மிக்கதும் இன்றிக்கே இருக்கை –
ந தத் சமச் சாபயதி கச்ச த்ருச்யதே -என்கிற சமாதிக தரித்திர வஸ்துவை ஆச்ரயமாக யுடையவை ஆகையாலே
இவையும் சமநாதிக ரஹீதங்களாய் இருக்கும் இ றே –
தோஷோ பதாவதி சமாதி சயான சங்க யா நிர்லேப மங்கள குனௌ கதுவா ஷடதே
ஜ்ஞான தைச்வர்யா சக்தி வீர்ய பலாச சிஷ சத வாம ரங்கேச பாச இவ ரத்னம் நாக கய நதி-உத்தர சதகம் -27–என்கிற
ஸ்லோகத்தில் இவை அத்தனையும் பட்டர் அருளிச் செய்தார் இ றே-
———————————————-
சூர்ணிகை -149-
இப்படி இருந்துள்ள குணங்கள் தான் மூன்று வகைப்பட்டு
இருக்கையாலே
அம்மூன்று வகைக்கும் விஷயங்களை வகுத்து அருளிச் செய்கிறார் –
இவற்றில்
வாத்சல்யாதிகளுக்கு விஷயம் அனுகூலர்-
சௌர்யாதிகளுக்கு விஜயம் பிரதிகூலர் –
இவற்றுக்கு காரணமான
ஜ்ஞான சக்தியாதிகளுக்கு
எல்லாரும் விஷயம் –
அதாவது –
வாத்சல்யாதிகள் -என்கிற ஆதி சப்தத்தாலே
சௌசீல்ய சௌலப்ய மார்தவ ஆர்ஜவ -வாதிகளான குண விசேஷங்கள் எல்லா வற்றையும் சொல்லுகிறது –
விஷயம் அனுகூலர் என்றது ஆஸ்ரிதர் -என்றபடி –
சௌர்யாதிகளுக்கு-என்கிற ஆதி சப்தத்தாலே பராக்ரமத்தைச் சொல்லுகிறது
விஷயம் பிரதிகூலர் -என்றது -ஆஸ்ரித விரோதிகள் என்றபடி
தவஷத் அன்னம் ந போக்தவ்யம்-தவிஷ நதம நைவ போஜ்யதே
பாண்டவ நத விஷசே ராஜன மம ப்ராணா ஹி பாண்டவா -என்று
ஆஸ்ரித விரோதிகள் தனக்கு சத்ருக்கள் என்று அருளிச் செய்தான் இ றே-
இவற்றுக்கு காரணமான ஜ்ஞான சக்தியாதிகள் -இங்கே ஆதி சப்தத்தாலே
பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் ஸூக்களைச் சொல்லுகிறது –
வாத்சல்யாதிகளுக்கும் சௌர்யாதிகளுக்கும் ஜ்ஞான சக்தியாதிகள்
காரணம் ஆகையாவது
பரக்ருஷ்டம் விஞ்ஞானம் பலமதுலம் ஐஸ்வர்யம் அகிலம் விமர்யாதம் வீர்யம் வரத பரமா சக்தி ரபிச பரம தேஜஸ் சேதி பரவர குண ஷட்கம்
பிரதம ஜம குணா நாம் நிஸ சீம நாம கணந விகுணா நாம பிரசவபூ –வரதராஜ சதகம் -என்றும்
அதுலமான பலமும் —விமரியாத வீர்யம் அடக்க முடியாத -உத்க்ருஷ்ட சக்தி தேஜஸ் -பிரதமஜம் -முதலில் எண்ணத்தக்க பிரசவ பூ உத்பத்தி ஸ்தானம் –
மங்கள குண ளாவாஷா ஷடேதா –ஸ்ரீ ரெங்கராஜா சத்வம் -என்றும் சொல்லுகிற படியே
அவற்றுக்கு ஊற்று வாயாய் இருக்கை –
அவை தான் வஸ்து உத்கர்ஷ பாதக ஷட் குணயாத்தகுணா பாவமாய்த்து இ றே இருப்பது
எம்பெருமான் யுடைய திவ்ய ஆத்ம குணங்கள் ஆவன ஜ்ஞான சக்த்யாதி குண ஷட்கங்களும்
அதிலே பிறந்த சௌசீல்யாதிகளும்-என்ற இவ் வாக்யத்துக்கு அர்த்தம் எழுதும் அளவில்
அதிலே பிறக்கை யாவது -வஸ்து உத்கர்ஷ ஆபாதக ஷாட் குண்ய ஆயத்த குண பாவம் -ஆகை -என்று இ றே விவரணத்தில்
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது –
உத்பத்தி என்றால் நித்யத்வம் குறையுமே –
இந்த குண ஷட்கத்தில் வைத்துக் கொண்டு ஞானம் ஆவது
அஜடம் ச்வாதம் சமபோதி நித்யம் சர்வாகஹானம் ஜ்ஞான நாம குணம் பராஹூ பிரதமம் குணசிந்தகா
என்கிறபடியே– என்றும் ஒக்க -சர்வ விஷய பிரகாசமுமாய்
ஸ்வ பிரகாசமுமான குண விசேஷம் –அஜாதம் -ஸ்வயம் பிரகாசம் -பிரத்யக்காயும் –சர்வ அவகாஹனம் –
சக்தியாவது -ஜகத் பிரகிருதி பாவோ யசஸா சக்தி பரி கீர்த்திதா -என்கிற
ஜகத் பிரகிருதி பாவமாதல்– அகடிதகட நா சாமர்த்தியம் ஆதல்
பலமாவது-சரமஹா நிசது யா சத்தம் குர்வதோ ஜகத் பலம் நாம குணசதஷ்ய கதிதோ குண சிந்தகை -என்கிற
ஜகத் காரணத்வ பிரயுக்தமான ஸ்ரமம் இன்றியிலே ஒழிகை ஆதல்
பலம் தாரண சாமர்த்தியம் -என்கிற சமஸ்த வஸ்து தாரண சாமர்த்தியம் ஆதல்
ஐஸ்வர்யம் ஆவது -கர்த்ருத்வம் நாம யத் தஸ்ய ஸ்வாதந்த்ர்யா பரிபருமகிதம ஐஸ்வர்யம் நாம தத் பரோகதம் குணா தத்வராதாதா சிந்தனை -என்கிற
கர்த்ருத்வ லஷணமான ஸ்வா தந்த்ர்யம் ஆதல்
சமஸ்த வஸ்து நியமன சாமர்த்தியம் ஆதல் –
வீர்யமாவது -தசயோபாத நபாவேபி விகார விரஹோ ஹி யா வீர்யம் நாம குணா சசோ யமச யுததவோ பரா ஹவய -என்று
ஜகத் உபாதானமாகா நிற்கச் செய்தேயும்
ஸ்வரூப விகாரம் இன்றியிலே ஒழியும்படியான அவிகாரயதை–விகாரம் அற்ற தன்மை வீர்யம் என்றவாறு – –
தேஜஸ் ஆவது -சஹ காரியா நபேஷா யா தத் தேஜஸ் சமுதாஹருதம -என்கிற
சஹாகார நைரபேஷம் ஆதல்
பராபி பவன சாமர்த்தியம் ஆதல் –
இவற்றுக்கு எல்லாரும் விஷயமாகை-ஆவது
அனுகூல ரஷணாதிகளுக்கும் பிரதிகூல நிரசனாதிகளுக்கும்
ஜ்ஞான சக்தியாதி விசிஷ்டனாய்க் கொண்டு
நிர்வஹிக்க வேண்டுகையாலே
இவற்றுக்கு சர்வரும் விஷயமாய் இருக்கை
———————————————————
சூர்ணிகை -150-
இப்படி குணங்களை மூன்று வகை யாக்கி அவற்றுக்கு விஷயங்களை தர்சிப்பித்த அளவு அன்றிக்கே குணங்களுக்கு பிரத்யேகம் விஷய நியமம் யுண்டாகையாலே
அத்தையும் தர்சிப்பிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி
கீழ் எடுத்த குணங்களில் சிலவற்றுக்கு தனித் தனியே குணங்களை தர்சிப்பிக்கிறார் –
ஜ்ஞானம் அஞ்ஞர்க்கு
சக்தி அசக்தர்க்கு
ஷமை சாபராதர்க்கு
கிருபை துக்கிகளுக்கு
வாத்சல்யம் சதோஷர்க்கு
சீலம் மந்தர்க்கு
ஆர்ஜவம் குடிலர்க்கு
சௌஹார்த்தம் துஷ்ட ஹ்ருதயர்க்கு
மார்த்த்வம் விஸ்லேஷ பீருககளுக்கு
சௌலப்யம் காண ஆசைப் பட்டவர்களுக்கு
இப்படி எங்கும் கண்டு கொள்வது-
ஜ்ஞானம் ஆவது-சேதனருடைய -ஹிதாஹித நிரூபணத்துக்கு உறுப்பான குணம் -ஆகையால்
கவாஹமத்யே நததுர்புத்தி கவசாத மஹித வீஷணம் யத்திதம் மமதேவேச ததா ஜ்ஞாப்ய மாதவ -என்கிறபடியே
ஸ்வ ஹிதாஹித நிரூபணாதிகளுக்கு அஞராய் இருக்குமவர்களுக்கு உறுப்பாய் இருக்கும் என்கை-
சக்தி -அசக்தர்க்கு -என்றது -சக்தியாவது அகடிதகட நா சாமர்த்தியம்
ஆகையால் ஸ்வ இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரங்களில் அசக்தராய் இருக்குமவர்கள் உடைய-கார்ய சித்திக்கு உறுப்பாய் இருக்கும் என்கை –
ஷமை சாபதாரர்க்கு என்றது -ஷமை யாவது அபராத சஹத்வம்
ஆகையால் அஹம் அஸ்ய அபராத நாம் ஆலய -என்கிறபடியே அபராத சஹிதராய் தங்களை அனுசந்தித்து இருப்பார்க்கு உறுப்பாய் இருக்கும் என்கை –
ஷமா சாபராதே நுதாபி நயுபேயோ கதம சாபராதேபி தருபதே மயி சயாத-என்று இ றே பட்டர் அருளிச் செய்தது-
-அபராதம் செய்தாலும் அனுதாபம் பட்டால் க்ஷமை கார்யகரம் ஆகும் -கர்வத்துடன் இருக்கும் என் விஷயத்தில் உன் கிருபை எப்படி காரியமாகும் -உத்தர சதகம் -96-
அருளாத நீர் -அபராத சஹத்வம் பற்றாசாக தூது -1–4-என் பிழையே நினைத்து –
கிருபை துக்கிகளுக்கு -என்றது
கிருபை யாவது பர துக்க அசஹிஷ்ணுத்வம் -ஆகையாலே
ஆவாரார் துணை என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று துளங்குகை முதலான
துக்கம் யுடையவர்களுக்கு உறுப்பாயிருக்கும் -என்கை
தயா பரவசாய நஹராபவவயதா ஸூ காயதே மம ததஹம தாயாதிக -என்று அருளிச் செய்தார் இ றே பட்டர் -உத்தர சதகம் -98-/
துக்கப்படவே இல்லையே -சம்சாரம் துக்கம் என்று சொல்லாமல் சுகம் என்று நினைக்கிறேன் -எனக்கு ஹிதம் அஹிதமே தெரியாதே /எந்த குணத்துக்கு விஷயம் ஆவேன்
வாத்சல்யம் சதோஷர்க்கு -என்றது வாத்சல்யமாவது -அன்று ஈன்ற கன்றின் உடம்பின் வழுவை ஆதரித்துப் புஜிக்கும் தேனுவைப் போலே
அன்று அதனை ஈன்று உகந்த ஆ போலே -செய்த குற்றம் நற்றமாகவே கொள்
ஆஸ்ரிதர் யுடைய தோஷங்களைப் போக்யமாக கொள்ளுவதொரு குணம் –
ஆகையால் அவித்யா காமாதி தோஷ சஹிதராய் தங்களை அனுசந்திப்பார்க்கு உறுப்பாய் இருக்கும் என்கை –
தோஷம் இருக்கு என்று நினைக்க வேண்டுமே -இருப்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் –
சீலம் மந்தர்க்கு -என்றது
சீலமாவது -பெரியவன் தாழ்ந்தவர்களோடே புரையறக் கலக்கும் ஸ்வ பாவம் –கஹா குணவான் இத்தை சொன்னது -ஸூ சீலன் யார் -என்றவாறு
ஆகையால் அவர்கள் யுடைய தண்மையை அனுசந்திப்பார்க்கு உறுப்பாய் இருக்கும் என்கை –
ஆர்ஜவம் குடிலர்க்கு -என்றது -ஆர்ஜவம் ஆவது -கரண த்ரயத்தாலும் செவ்வியனாய் இருக்கை
ஆகையாலே தங்கள் உடைய கரண த்ரய கௌடில்யத்தை நினைத்து இருப்பார்க்கு உறுப்பாய் இருக்கும் என்கை –
-38-வயசில் தன் சரித்திரம் சொல்லிய பெருமாள் சூர்பனகைக்கு முழுவதும் சொல்லிய பின் நீ யார் என்றாரே அது அன்றோ ஆர்ஜவம்
சௌஹார்த்தம் துஷ்ட ஹ்ருதயர்க்கு -என்றது சௌஹார்த்தம் ஆவது எப்போதும் நன்மையை சிந்தித்து இருக்கும் ஸ்வ பாவம்
ஆகையாலே சர்வ காலமும் தீமையே நினைத்து இருக்கும் துஷ்ட ஹிருதயராகத் தங்களை அனுசந்தித்து இருப்பார்க்கு
உறுப்பாய் இருக்கும் -என்கை–ஸூ ஹ்ருதயம் உள்ளவர் என்றபடி -இதை கொண்டே வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே என்று நாமும் போக நம்பிக்கை இத்தை கொண்டே
மார்த்வம் விஸ்லேஷ பீருக்களுக்கு -என்றது
மார்த்வம் ஆனது -ஆஸ்ரித விரஹம் பொறுக்க மாட்டாத மென்மையாகையாலே
தன்னுடைய விச்லேஷத்தில் பீரு உடையவர்களுக்கு உறுப்பாய் இருக்கும் என்கை –
வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -மகாத்மாக்கள் விசேஷம் தரிக்க மாட்டாத மார்த்வம் –
சௌலப்யம் காண ஆசைப் பட்டவர்களுக்கு -என்றது
சௌலப்யமாவது-அதீந்த்ரியமான விக்ரஹத்தை கண்ணுக்கு இலக்காம்படி பண்ணுகை
ஆகையால் தன்னைக் காண வேணும் என்று ஆசைப் பட்டவர்களுக்கு உறுப்பாய் இருக்கும் என்கை-
இத்தால்
இவனுடைய ஜ்ஞானத்தில் அபேஷை உள்ளது -தம்தாமுடைய ஹிதாஹித நிரூபணத்தில் அறிவு இல்லாதவர்களுக்கு ஆகையாலே ஜ்ஞானம் அஜ்ஞர்க்காய் இருக்கும் –
இவனுடைய சக்தியில் அபேஷை உள்ளது -ச்வேஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹாரத்தில் அசக்தராய் இருப்பார்க்கு ஆகையாலே சக்தி அசக்தருக்காய் இருக்கும் –
பொறை யில் அபேஷை உள்ளது அபராதம் உடையார்க்கு ஆகையாலே ஷமை சாபராதர்க்காய் இருக்கும் –
ஐயோ என்று இரங்க வேண்டுவது நோவு பட்டவர்க்கு ஆகையாலே கிருபை துக்கிகளுக்காய் இருக்கும்
தோஷத்தை போக்யமாகக் கொள்ள வேண்டுவது தோஷவான்களுக்கு ஆகையாலே வாத்சல்யம் சதோஷர்க்காய் இருக்கும் –
தண்மை பாராதே புரையறக் கலக்க வேண்டுவது தாழ்ந்தவர்கள் விஷயத்திலே ஆகையாலே சீலம் மந்தர்க்காய் இருக்கும்
கரண த்ரயத்தாலும் செவ்வியனாய்க் கொண்டு தன்னை அமைத்துப் பரிமாற வேண்டுவது
செவ்வைக் கேடர் விஷயத்தில் ஆகையாலே ஆர்ஜவம் குடிலர்க்காய் இருக்கும் –
தான் எப்போதும் நன்மை சிந்திக்க வேண்டுவது தம்தாமுக்கு தீமைகள் சிந்திக்கும்
தீ மனத்தர் விஷயத்தில் ஆகையாலே சௌஹார்த்தம் துஷ்ட ஹிருதயர்க்காய் இருக்கும்
விரஹம் பொறாத மென்மை வேண்டுவது விரஹத்துக்கு அஞ்சுவார் திறத்தில் ஆகையாலே
மார்த்வம் விஸ்லேஷ பீருக்களுக்காய் இருக்கும்
அதீந்த்ரமான விக்ரஹத்தை கண்ணுக்கு இலக்காக வேண்டுவது
அவ்வடிவைக் காண்கையில் ஆசை உடையவர்களுக்கு ஆகையாலே
சௌலப்யம் காண ஆசைப்பட்டவர்களுக்காய் இருக்கும்
என்று குணங்களின் உடைய விஷய பிரதி நியத்வத்தை தர்சிப்பித்தார் ஆயிற்று
இப்படி எங்கும் கண்டு கொள்வது -என்றது
கீழ் சொன்ன பிரகாரத்தில் அனுக்தமான குணங்கள் எல்லா வற்றுக்கும்
பிரத்யேகம் விஷயங்களை தர்சித்துக் கொள்வது -என்றபடி –
————————————-
சூர்ணிகை -151-
-ஏவம் பூத குண விசிஷ்டன் ஆகையாலே ஈஸ்வரன் ஆஸ்ரித விஷயத்தில் பரிமாறிப் போரும்படிகளை
விஸ்தரேண ஒரு சூர்ணிகையாலே அருளிச் செய்கிறார் மேல் –
இப்படி ஈஸ்வரன் கல்யாண குணங்களோடு கூடி இருக்கையாலே
பிறர் நோவு கண்டால் ஐயோ என்று இரங்கி
அவர்களுக்கு எப்போதும் ஒக்க நன்மையைச் சிந்தித்து
தனக்கேயாய் இருத்தல் -தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருத்தல் செய்யாதே –
நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே -பிறர்கேயாய்
தன்னை ஆஸ்ரித்தவர்கள் பக்கல்
ஜன்ம ஜ்ஞான வ்ருத்தங்களால் உண்டான நிகர்ஷம் பாராதே
தாங்களும் பிறரும் தஞ்சம் அல்லாத போது-தான் தஞ்சமாய்
சாந்தீபன் புத்ரனையும் வைதிகன் புத்ராதிகளையும் மீட்டுக் கொண்டு வந்தாப் போலே
அரியன செய்தும்
அவர்கள் அபேஷிதங்களை தலைக் கட்டியும்
அவர்களுக்கு த்ருவ பதம் போலே பண்டு இல்லாதவற்றையும் உண்டாக்கியும்
தம்தாம் ஸ்வம் தாம் தாம் விநியோகம் கொண்டாப் போலே இருக்கத்
தன்னையும் தன்னுடைமையும் வழங்கி
அவர்கள் கார்யம் தலைக் கட்டினால் தான் கிருதக்ருத்யனாய்
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் நினையாதே
அவர்கள் செய்த ஸூ க்ருத லவத்வத்தையே நினைத்து
அநாதி காலம் வாசிதங்களான ரசங்களை மறக்கும்படி
எல்லா தசையிலும் இனியனாய்
பார்யா புத்ரர்கள் குற்றங்களை காணா கண் இட்டு
இருக்கும் புருஷனைப் போலே
அவர்கள் குற்றங்களை திரு உள்ளத்தாலே நினையாதே
குற்றங்களைப் பெரிய பிராட்டியார் காட்டினாலும்
அவளோடு மறுதலித்து திண்ணியனாய் நின்று ரஷித்து
காமிநியினுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே
அவர்கள் தோஷங்களைப் போக்யமாய்க் கொண்டு
அவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலும் செவ்வியனாய்
பிரிந்தால் அவர்கள் வ்யசனம் குளப்படி என்னும்படி
தான் ஈடுபட்டு
அவர்களுக்கு பாங்காய் தன்னைத் தாழ விட்டு
அவர்களுக்கு கட்டவும் அடிக்கவும் படி எளியனாய்
அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி முன் அணைக் கன்றையும்
புல்லிட வந்தவர்களையும்
கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலே
பெரிய பிராட்டியாரையும் சூரிகளையும் விட்டு
ச்நேஹித்துக் கொண்டு போரும்-
இப்படி -என்று கீழ் உக்தமான குண யோக பிரகாரத்தை பராமர்சிக்கிறது –
ஈஸ்வரன் கல்யாண குணங்களோடு கூடி இருக்கையாலே -என்று
குண யோகத்தை ஹேதுவாக அருளிச் செய்தது
மேல் சொல்லுகிற பரிமாற்றங்கள் எல்லாம் ஓரோர் குணகார்யம் என்று தோற்றுகைக்காக-
பிறர் நோவு கண்டால் ஐயோ என்று இரங்கி -இது கிருபா கார்யம்
பிறர் நோவு கண்டால் ஐயோ என்று ஈடுபடுகிறது பர துக்க அசஹிஷ்ணு வாகையாலே இ றே-
அவர்களுக்கு எப்போதும் ஒக்க நன்மையைச் சிந்தித்து –
இது சௌஹார்த்த கார்யம்
எப்போதும் ஒக்க -என்றது இவர்கள் அறிந்த காலத்தோடு அறியாத காலத்தோடு வாசி அற
சர்வ காலத்திலும் -என்றபடி
ஆஸ்ரித சர்வ மங்கள அ ந்வேஷண பரனாய் இருக்கிறது சௌஹார்யத்தாலே இ றே-
தனக்கேயாய் இருத்தல் -தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருத்தல் செய்யாதே –
நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே -பிறர்க்கேயாய்-
இது ஆஸ்ரித பாரதந்த்ர்ய கார்யம்
ஸ்வ அர்த்த பரனாயே இருத்தல் ச்வார்த்த பரார்த்தங்கள் இரண்டுக்கும்
பொதுவாய் இருத்தல் செய்கை அன்றிக்கே
சந்தரிகாதி பதார்த்தங்கள் போலே பரார்த்த ஏக வேஷனாய் இருக்கிறது பாரதந்த்ர்யத்தால் இ றே –
தன்னை ஆஸ்ரித்தவர்கள் பக்கல் ஜன்ம ஜ்ஞான வ்ருத்தங்களால் உண்டான நிகர்ஷம் பாராதே –
இது சாம்யகுண கார்யம்-த்வார த்ரயத்தால் காட்டி அருளும் சாம்ய குணம் –
ஆஸ்ரிதர் பக்கல் ஜன்மாதிகளால் உண்டான தண்மை பாராமல் பரிமாறுகிறது-ஆதி சப்தம் –தனம் ஞானம் வ்ருத்தங்கள்
சமோஹம் சர்வ பூதேஷு -என்கிறபடியே
ஜன்மாதிகளால் உத்க்ருஷ்டரோடு அபக்ருஷ்டரோடு வாசி அற
ஆஸ்ரயணீ யதவே சமனாய் இருக்கும் ஸ்வ பாவத்தாலே இ றே-
விருப்பு வெறுப்பு இல்லாமல் -உத்க்ருஷ்டம என்று விருப்பமோ அபக்ருஷ்டர் என்று வெறுப்போ இல்லாமல் சமோஹம் சர்வம்-
தாங்களும் பிறரும் தஞ்சம் அல்லாத போது-தான் தஞ்சமாய் –
இது அசரண சரண்யத்வ கார்யம்
தாங்களும் தங்களுக்கு ரஷகர் அன்று -பிறரும் தங்களுக்கு ரஷகர் அன்று
என்று கை வாங்கின தசையில் தான் ரஷகன் ஆகிறது
பற்றிலார் பற்ற நின்றான்-7–2–7- -ஆகையாலே இ றே -நேரான தமிழ் மொழி பெயர்ப்பு அசரண்ய சரண்யன்
சாந்தீபன் புத்ரனையும் வைதிகன் புத்ராதிகளையும் மீட்டுக் கொண்டு வந்தாப் போலே
அரியன செய்தும் அவர்கள் அபேஷிதங்களை தலைக் கட்டியும் –
இது சத்யகாமத்வ கார்யம் –
மாதவத்தோன் புத்திரன் போய் மறிகடல் வாய் மாண்டானை -என்கிறபடியே
நெடும் காலத்திலே கடல் கொண்டு போன சாந்தீபன் புத்ரனையும்
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் -என்கிறபடியே
ஜனித்த போதே
என்னுடைய மனைவி காதல் மக்களை பயத்தாலும் காணாள்-என்கிறபடியே
பெற்ற தாயும் தர்சிக்கப் பெறாத படி நாச்சியார் தங்கள் ஸ்வா தந்த்ர்யத்தால் அழைப்பிக்க–கண்ணனை காண ஸ்வா தந்தர்யம் பயன்படுத்தலாமே –
தப்பின பிள்ளைகளை -என்கிறபடியே கை தப்பிப் போய்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியிலே கிடந்த வைதிகன் புத்ரர்களையும் உரு உருவே கொடுத்தான் என்றும்
உடலோடும் கொண்டு கொடுத்தவனை -என்றும் சொல்லுகிறபடியே
அவ்வவ ரூபன்களோடு மீட்டுக் கொடு வந்து கொடுத்தால் போலே துஷ்கரங்களைச் செய்தும் ஆஸ்ரிதர் அபேஷிதங்களைத் தலைக் கட்டுகிறது-
ஆஸ்ரித ரஷண விஷயோ மநோரத காம ச பரதிஹதோ அபவதீதி சத்ய காமா -என்கிற சத்ய காமன் ஆகையாலே இ றே –
சத்யகாமன் ஆகையாவது சாந்தீபன் புத்ரனை கொடு வந்தால் போலே சகல அபேஷிதங்களையும் முடிக்க வல்லனாகை
என்று இ றே நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் தத்வ த்ரயத்திலே அருளிச் செய்தது-
அவர்களுக்கு த்ருவ பதம் போலே பண்டு இல்லாதவற்றையும் உண்டாக்கியும் –
இது சத்யசங்கல்ப கார்யம் –
உத்தானபாத புத்ரனான த்ருவனுக்கு ஊர்த்த அவதியிலே அபூர்வமாய் இருப்பதொரு பதம்
கல்ப்பித்துக் கொடுத்தால் போலே
ஆஸ்ரிதர்க்கு பண்டு இல்லாதவற்றையும் உண்டாக்குகிறது –
அபூர்வ போக்யங்களை சிருஷ்டிக்க வல்ல அமோக சங்கல்பன் ஆகையாலே இ றே
சத்ய சங்கல்பன் ஆகையாவது த்ருவ பதம் போலே பண்டு இல்லாத வற்றையும் உண்டாக்க வல்லனாகை என்று
இதுவும் பட்டர் தாமே அருளிச் செய்தார் இ றே –
தம்தாம் ஸ்வம் தாம் தாம் விநியோகம் கொண்டாப் போலே இருக்கத் தன்னையும் தன்னுடைமையும் வழங்கி –
இது ஔதார்ய கார்யம்-கொள்ளக் குறைவிலன் -அலம் புரிந்த நெடும் தடக்கையன்
வரத சகல மேதத சம்சரிதார்த்தம் சகாத்த -என்கிறபடியே
தங்கள் உடைமையை தாங்கள் விநியோகம் கொள்ளுமா போலே
விநியோகம் கொள்ளலாம் படி ஆத்மா ஆத்மீயங்களை
ஆஸ்ரிதர்க்கு கொடுக்கிறது –
கொடுத்தோம் என்கிற அபிமானமும் தன நெஞ்சில் இல்லாதபடியாகவும் கொள்ளுமவர்களுக்கு
பிரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல் பட வேண்டாத படியாகவும்
கொடுக்கும் பரம உதாரன் ஆகையால் இ றே-
அவர்கள் கார்யம் தலைக் கட்டினால் தான் கிருதக்ருத்யனாய் –
இது கிருதிவ கார்யம்
ஆஸ்ரிதர் கார்யம் தலைக் கட்டினால் அவர்கள் கிருதக்ருத்யர் ஆகை அன்றிக்கே
அபிஷசைய ச லங்காயாம் -இத்யாதிப் படியே தான் கிருதகிருத்யனாகிறது –
ஆஸ்ரிதர் ரஷணம் பெற்றால் பேறு தன்னதாய் இருக்கும் ஸ்வ பாவத்தால் இ றே
கருதிகை யாவது -ஆஸ்ரிதர் உடைய அபேஷிதம்பூர்ணமானால் தான் க்ருதக்ருத்யனாகை-என்று இ றே பட்டரும் அருளிச் செய்ததே-
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் நினையாதே அவர்கள் செய்த ஸூ க்ருத லவத்வத்தையே நினைத்து –
இது க்ருதஞ்ஞதா கார்யம்
தன திறத்திலே ஒரு சரணாகதி முதலான ஸூ கருத லேசத்தை பண்ணினால்
அவர்களுக்கு தான் ஒரு எல்லா நன்மைகளையும் செய்தாலும் அவற்றை ஒன்றும் நினையாதே
அவர்கள் செய்த ஸூ க்ருத லவத்தையே நினைத்து இருக்கிறது
செய்த நன்றி அறியுமவன் ஆகையாலே இ றே
க்ருதஞ்ஞன் ஆகையாவது ஆஸ்ரிதர் உடைய ஸூ க்ருதலவத்தை ஒன்றையுமே நினைத்து
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் பாராதே இருக்கை -என்று இதுவும் பட்டர் அருளிச் செய்தார்-
அநாதி காலம் வாசிதங்களான ரசங்களை மறக்கும்படி எல்லா தசையிலும் இனியனாய் –
இது மாதுர்ய கார்யம் –
அநாதி காலம் பிடித்து கொளுந்திக் கிடக்கிற ப்ராக்ருத விஷய ரசங்களை விஸ்மரிக்கும் படி
சர்வ அவஸ்தையிலும் இனியனாகிறது
சர்வ ரச-என்கிறபடியே நிரதிசய போக்யனாய் இருக்கையால் இ றே-
பார்யா புத்ரர்கள் குற்றங்களை காணா கண் இட்டு
இருக்கும் புருஷனைப் போலே அவர்கள் குற்றங்களை திரு உள்ளத்தாலே நினையாதே –
இது சாதுர்ய கார்யம்
பார்யா புத்ராதிகளோடே கூடி வர்த்திப்பான் ஒரு புருஷன் அவர்கள் செய்கிற குற்றங்களைக் கண்டு இருக்கச் செய்தேயும்
காணாதாரைப் போலே இருக்குமா போலே
ஆஸ்ரிதர் செய்து இருக்கிற குற்றங்களை கண்டு இருக்கச் செய்தேயும் தன திரு உள்ளத்தாலே நினையாது இருக்கிறது
ஆஸ்ரிதர் தோஷங்களைத் தெரியாத படி மறைக்க வல்ல சாதுர்யன் ஆகையாலே இ றே-
குற்றங்களைப் பெரிய பிராட்டியார் காட்டினாலும் அவளோடு மறுதலித்து திண்ணியனாய் நின்று ரஷித்து-
இது ஸ்திரதவ கார்யம் –
சொன்னது செய்ய வேண்டும்படி தனக்கு அபிமதையாய்
சேதனர் குற்றங்களை பொறுப்பித்துச் சேர விடும் பெரிய பிராட்டியார்
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் -என்கிறபடியே குற்றங்களைக் காட்டினாலும்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் -என்று
அவளோடு மறுதலைத்து நிச்சலனாய் நின்று ரஷிக்கிற ஸ்திர ஸ்வ பாவன் ஆகையாலே இ றே-
காமிநியினுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே அவர்கள் தோஷங்களைப் போக்யமாய்க் கொண்டு –
இது பிரணயித்வ கார்யம்
காமினி விஷயத்தில் பிரணயித்வத்தாலே அவள் உடம்பில் அழுக்கை விரும்பும் காமுகனைப் போலே
ஆஸ்ரிதரான வர்களுடைய பிரகிருதி சம்பந்தாதி தோஷங்களை
போக்யமாகக் கொள்ளுகிறது பரம பிரணயி-ஆகையாலே இ றே –
த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் -நின்றார் அறியா வண்ணம் பராங்குச நாயகி உள்ளம் புகுந்தான் –
பிராட்டியும் அறியா வண்ணம் -குட்ட நாட்டுத் திருப் புலியூர் திருவாய் மொழி –
ஊற்றமுடையாய் ஸ்திர புத்தி /–பெரியாய் செய்தோம் என்று சொல்லிக் கொள்ளாமல் -புருஷோத்தமன் /
-உலகில் தோற்றமாய் நின்ற -ஸுசீலம்- சுடரே -தன் பேறாக கொள்பவன் அன்றோ –
அவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலும் செவ்வியனாய் –
இது ஆர்ஜவ கார்யம் -நேர்மை -செப்பம் யுடையாய் –
மனோ வாக் காயங்கள் மூன்றிலும் செவ்வைக் கேடராய் இருக்குமவர்கள் பக்கலிலே
நீர் ஏறா மேடுகளில் விரகாலே நீர் எற்றுவாரைப் போலே
தன்னை அமைத்து
த்ரிவித கரணங்களாலும் செவ்வியனாய் போருகிறது ருஜூ ஸ்வ பாவன் ஆகையாலே இ றே –
பிரிந்தால் அவர்கள் வ்யசனம் குளப்படி என்னும்படி தான் ஈடுபட்டு –
இது மார்த்த்வ கார்யம்
ஊர்த்த்வம் மாசான ந ஜீவிஷயே -என்றால்
ந ஜீவேயம் ஷணம் அபி -என்கிறபடியே-
தன்னைப் பிரிந்தால் ஆஸ்ரிதர் படும் வ்யசனம்
கடல் போன்ற தன வ்யசனத்துக்கு ஒரு குளப்படி மாதரம் என்னும் படி
தான் கிலேசப் படுகிறது
ஆஸ்ரித விரஹம் பொறுக்க மாட்டாத மென்மையாலே இ றே-
அவர்களுக்கு பாங்காக தன்னை தாழ விட்டு –
இது சௌசீல்ய கார்யம் –
ஜன்மாதிகளால் தண்ணியராய் இருக்குமவர்களுக்கு அனுகூலமாக சர்வேஸ்வரன்
சர்வ உத்க்ருஷ்டனான தன்னை தாழ விடுகிறது சீலவத்தையாலே இ றே-
அவர்களுக்கு கட்டவும் அடிக்கவும் படி எளியனாய் –
இது சௌலப்ய கார்யம்
அவதார தசையிலே நவநீத சௌர்ய வ்யாஜத்தாலே -சிக்கென வார்த்தடிப்ப -என்கிறபடியே
யசோதாதிகளுக்கு கட்டவும் அடிக்கவும் ஆம்படி எளியனாய் இருக்கிறது -எளிவரும் இயல்வினன்-1-3-2- -ஆகையாலே இ றே-
என் அவலம் களைவாய் -ஆடுக செங்கீரை -சர்வேஸ்வரனும் இவள் சொல்லி ஆடுகிறான்
மன்னு குறுங்குடியாய் -கண்ண புரத்து அரசே -கண்ணன் மட்டும் இல்லை இவர்களும் ஆட வேண்டுமாம் இவள் அவலம் களைய –
சிக்கென ஆர்த்து அடிப்ப –இடுப்பிலும் இடம் இல்லை இடுப்புக்கும் உரலுக்கும் இடைவெளி இல்லை –
-தாம்புகளால் படைப்பை -ஒளியா வெண்ணெய் உண்டான் –ஒண் கயிறு -ஸ்ரீ வேண்டுமே அவன் உடன் சம்பந்தம் கொள்ள – -அலர்ந்தான்-அலந்தான்
அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி முன் அணைக் கன்றையும்புல்லிட வந்தவர்களையும்
கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலே பெரிய பிராட்டியாரையும் சூரிகளையும் விட்டு ச்நேஹித்துக் கொண்டு போரும்-
இது வாத்சல்ய கார்யம்
அந்து தான் பெற்ற கன்றுக்கு தாயான பசு இரங்கி-அன்று தான் பெற்ற கன்றுக்கு ஆ -இங்கு -சரணாகதி செய்த இன்று –அப்ரஹ்மாத்வம் இல்லாத வஸ்து இல்லையே –
முன்பு தான் ச்நேஹித்துக் கொண்டு போந்த முன் அணைக் கன்றையும்
தனக்கு போக்யமான புல்லிட வந்தவர்களையும் உட்பட மூசிக் கொம்பிலே கோத்தெடுப்பது
குளம்பாலே மிதிப்பது ஆம்போலே
பரிரம பணாதிபோக உபகாரியான பெரிய பிராட்டியாரையும்
முன்பு சிநேக விஷயமாகப் போந்த நித்ய சூரிகளையும் தள்ளி விட்டு
இன்று ஆஸ்ரயித்தவர்களை ச்நேஹித்துக் கொண்டு போருகிறது வத்சல்யன் ஆகையாலே இ றே-
சமுத்திரம் தாண்ட அன்று ஈன்ற கன்றான -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இடம் கேட்க -சுக்ரீவனை சொல்ல -சரண் அடைய சொல்லி -ஏழு கடுக்காய் எருது கெட்டார்க்கும்-
—————————————
சூர்ணிகை -152-
ஆக
ஜ்ஞான சக்தியாதி கல்யாண குண பூஷிதனாய் -என்றதை விஸ்தரேண உபபாதித்தார் கீழ் –
அநந்தரம்
சகல ஜகத சர்க்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய் -என்றதை விஸ்தரேண உபபாதிப்பதாக யுபக்ரமிக்கிறார்
இவனே
சகல
ஜகத்துக்கும்
காரண
பூதன் –
அதாவது
இவன் -என்று கீழ் சொன்ன விலஷண ஸ்வரூப குண விசிஷ்டனான ஈஸ்வரனை பராமர்சிக்கிறது
அவதாரணத்தாலே -ஜகத் காரணத்வத்தின் யுடைய அந்யோந்ய வ்யவச்சேதம் பண்ணுகிறது –
ராமன் வில்லாளியே அயோக வியச்சித்தம்-பரம் -தொடர்பு உண்டு சேர்த்தி இல்லை -இல்லை என்பது இல்லை –
ப்ரஹ்மம் ஜகத் காரணமே /-மறுப்பை நிரசித்து ஸ்தாபனம்
ராமன் வில்லாளி அர்ஜுனன் வில்லாளி -ராமனே வில்லாளி -ப்ரஹ்மமே காரணம் -அவனே இங்கு என்றது அன்யா யோக விவச்சேதம் -வேறு இடத்தில் தொடர்பு இல்லை என்றவாறு –
சமன்வய -அவிரோத -சாதனா பல அத்யாய சதுஷ்டயம்
பொருந்த விடுதல் சமன்வயம் -ஜகத் காரணத்வம் ப்ரஹ்மத்துக்கு
விரோதம் வாராது -முதல் இரண்டாலே ப்ரஹ்மமே ஜகத் காரணமே நிரூபிதம்
காரணம் து த்யேயதா -அடுத்து -பக்தி சாதனம் -பலம் அடுத்து -156-அதிகரணங்கள் -நான்கும் சேர்ந்து –
உபநிஷத் கடலை கடைந்து வேத வியாசர் அருளி –
வேதாந்தத்திலே -சதேவ சோம்யே–இதம் அக்ர- ஏகமேவ ஆஸீத் -என்று சாந்தோக்யத்திலும்-சத் பொதுச் சொல் –
ப்ரஹ்ம வா இதமேக மேவாகர ஆஸீத -என்று வாஜச நேயகத்திலும்–குதிரை முகத்துடன் ஸூ ர்யன் உபதேசம் -கிருஷ்ண யஜுர் வேதம் காக்க -பறவைகள் பிடித்து வைத்து -ஸூக்ல யஜுர் வேதம் ஸூ ர்யன் உபதேசிக்க –
ப்ரஹ்மம் பொதுச் சொல் இங்கும் –
ஆத்மா வா இதமேக மேவ அக்ரே ஆஸீத் -என்று ஐதரேகத்திலும்
சத் ப்ரஹ்மாதமரூப சாமான்ய சப்தங்களாலே சொல்லப் பட்ட
காரண வஸ்து ஏது என்னும் ஆகாங்ஷையிலே
ஆத்மா என்று மீண்டும் பொதுச் சொல் –
கதி சாமான்ய நியாயத்தாலே-பொதுச் சொல்லால் சொல்லப்பட்ட -காரண வஸ்து –கதி-பர்யவசாயனம் -கொண்டு போய் சேர்க்க –
ஏகோஹ வை நாராயண ஆஸீத் -என்று மகா உபநிஷத்திலே விசேஷிக்கப் பட்ட நாராயணனே
ஜகத் காரண பூதனாக நிச்சயித்து இருக்கும் பரம வைதிகர் ஆகையாலே
இவனே என்று சாவதாரணமாக அருளிச் செய்கிறார்-
சிவன் சப்தம் மங்களம் -சிவ ஏவ -விசேஷித்து நாராயணன் / இந்திர =இதி பரம ஐஸ்வர்ய தாது –
அனைத்துக்கும் அந்தராத்மா -திரிசூலத்தை பற்றி யுள்ள சிவன் போன்ற வார்த்தைகளுக்கு -அக்னி முன்னேற்ற பாதையில் கூட்டிச் செல்லுமவன் –
சகல ஜகத்துக்கும் காரனபூதன் -என்றது
சமஷ்டி வ்யஷ்டி ரூப சமஸ்த கார்யங்களுக்கும் காரணபூதன் -என்றபடி –
பிரகிருதி தானே பரிணமித்து -நான்முகன் மூலம் செய்யும் ஸ்ருஷ்டியும் அந்தராத்மாதயா இவனே பண்ணுகிறான் என்றபடி
இத்தால் –சமன்வயமும் -அவிரோதமும் -சாதனமும் -பலமும் -ஆகிற அர்த்த சதுஷ்டத்தையும்
அடைவே பிரதிபாதிக்கிற உத்தர மீமாம்சையில்
அத்யாய சதுஷ்டயத்திலும் வைத்துக் கொண்டு
அததோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாசா -என்று ஜிஜ்ஞாசயமாக சொல்லப் பட்ட ப்ரஹ்மத்துக்கு லஷணமாக-அதனால் -அதன் பிறகு வருகிறான் -அறிய வேணும் என்ற ஆசையுடன் –
ஜனமாதயச்த யத -என்று ஜகத் காரணத்வத்தைச் சொல்லி-யார் இடத்தில் இருந்து ஜென்ம ஆதி -காத்தல் சம்ஹாரங்கள் -போன்றவை ஏற்படுமோ அதே ப்ரஹ்மம் –
அதனுடைய அயோக அந்யயோக வ்யவச்சேத முகத்தாலே
ஜகத் காரண வஸ்து பிரதிபாதிக சகல வேதாந்த வாக்யங்களுக்கும்
ப்ரஹ்மணி சம்யக அந்வயத்தை பிரதிபாதித்த பிரதம அத்யாயத்தின் அர்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று -முழுவதுமான அன்வயம் சம்யக அன்வயம்
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதீ லீலே –ரக்ஷிதி தீஷே –சுருதி சிரஸி விதீப்தே -ப்ரஹ்மணி ஸ்ரீனிவாஸ்
வேங்கடம் மேய விளக்கே —சேமுஷீ பக்தி ரூபா ஞானம் ஏற்படட்டும்
ஸ்ரீ பாஷ்யார்த்தம் முழுவதும் உள்ள மங்கள ஸ்லோகம் -/ மிதுனம் சேஷி -சம்ப்ரதாயம் ஸ்ரீநிவாஸே-என்று காட்டி அருளுகிறார்
———————————————-
சூர்ணிகை -153-
அவிரோத பிரதிபாதகமான த்விதீய அத்யாயத்தின் படியே
ப்ரஹ்ம காரணத்வ விரோதியான
பரமாணு காரணவாதிகளை நிராகரிக்கிறார்
சிலர்
பரமாணுவைக்
காரணம்
என்றார்கள்-
அணுக்கள் கூடி த்வை அணு ஆகும் -த்ரி அணு ஆகும் என்பான் -அவயவம் உண்டு என்றால் -தானே ஒன்றுடன் ஓன்று சேரும் -உடையும் பாவும் சேர்ந்து -வஸ்திரம் –
பரமாணு நிரவவயம் —
மஹாதீர்க்கஅதிகரணம் -ரசனாதிகாரணம் பிரதானம் காரணம் என்பவரை நிரசனம்
/பரிமண்டலம் பரம அணு -கூடுவதற்கு வாய்ப்பு இல்லையே அவயவம் இல்லை என்பதால் –
சிலர் என்று பௌத்த ஆர்ஹத வைசேஷிகாதிகளைச் சொல்லுகிறது
இதில் -புத்த ஆர்ஹதர்க்கு கேவல பரமாணுக்களே ஜகத் காரணமாக மதமாய் இருக்கும்
வைசேஷிகாதிகளுக்கு பரமாணுக்கள் உபாதான காரணமாய்
ஆனுமானிக ஈஸ்வரன் நிமித்த காரணமாக மதமாய் இருக்கும்–சாஸ்த்ர ஸித்தமான ஈஸ்வரன் இல்லை –
கர்த்தாவை ஈஸ்வரன் என்று அனுமானித்து -ஞான சக்தி அபரிச்சேதயம்
இவர்களில் பௌத்த வைசேஷிகாதிகள் பாரத்ததிவா அப்பயதை ஐஸ்வர்ய வீயங்கள் என்று
பரமாணுக்களை சதுர்விதமாகக் கொள்ளுவார்கள்
ஆர்ஹதர்-ஜைனர் – ஏகரூபமாகக் கொள்ளுவார்கள்
இங்கனே சில விசேஷங்கள் உண்டானாலும் பரமாணு காரண்த்வ அங்கீகாரம்
எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே சிலர் என்று சமுச்சியத உபாதானம் பண்ணுகிறார் –
————————————————————–
சூர்ணிகை -154-
இவர்கள் மஹீ மஹீதராதிப சகல கார்யங்களும் பரமாணு பரிமாணம் என்று இ றே சொல்வது –
அந்த பஷத்தை நிராகரிக்கிறார் –
பரமாணுவில்
பிரமாணம் இல்லாமையாலும்
ஸ்ருதி விரோதத்தாலும்
அது சேராது-
பிரத்யக்ஷம் அனுமானம் சப்த பிரமாணம் இல்லாமையாலும் -ஆகமம் சாஸ்திரமும் சித்தமும் இல்லை
அதாவது
ஜகத் காரணதயா அங்கீ கரிக்கப் படுகிற பரமாணுக்கள்
ப்ரத்யஷ சித்தமும் இன்றியே
ஆகம சித்தியும் இன்றியே
அனுமானத்தாலே சாதிக்கப் பார்க்கில்
அது ஆகம விருத்தமான அர்த்தத்தை சாதிக்க மாட்டாமையாலே
அனுமான சித்தியும் இன்றியே இருக்கையாலே
பரமாணு சத்பாவத்தில் ஒரு பிரமாணமும் இல்லாமையாலும்
ஈச்வரனே ஜகத் காரணம் என்கிற ஸ்ருதிக்கு விரோதம் ஆகையாலும்
பரமாணுக்கள் ஜகத் காரணம் என்ற வது சேராது -என்கை-
——————————————-
சூர்ணிகை -155-
அநந்தரம் -ஜகத்துக்கு பிரக்ருதியே ஸ்வதந்திர காரணம் என்று சொல்லுகிற கபில மதத்தை
நிராகரிக்கைக்காக அத்தை உத்ஷேபிக்கிறார் –
கபிலர்
பிரதானம்
காரணம்
என்றார்கள்
இயற்கையே போதும் -என்பர் -யுக்தி வைத்தே இவர்களை நிரசிப்பர்-
கபிலர் -என்கிறது கபில மத நிஷ்டரான சாங்க்யரை–சாங்க்ய யோகம் ஸ்ரீ கீதை -சொல்வது வேறே -சாங்க்யம் புத்தி -என்றவாறு
ஜெபா குஸ்மம் படிகங்கள் போலே ஆத்மா பிரகிருதி இரண்டுமே போதும் என்பர் கபிலர் -பிரகிருதி வேறே ஜீவன் விவேக ஞானமே முக்தி என்பர்
ப்ரஹ்மம் உபாதானம் என்றால் அஜடம் தானே ஜகத்தாகும் ஜகம் ஜடம் அன்றோ என்பர் -பொன்னை வைத்து மண் குடம் வராதே என்பர்
மிருதாத்மகமான கடத்துக்கு மிருத் த்ரவ்யமே காரணம் ஆகிறாப் போலே
சத்வ ரஜஸ் தமோ மய ஸூ க துக்க மோஹாத்மகமான ஜகத்துக்கும்
குண த்ரயங்களின் யுடைய சாம்ய ரூபமான பிரதானமே
ஸ்வ தந்த்ரமான காரணம்
ததி பாவேன பரிணமியா நிற்கும்
பயஸ் ஸூ க்கு அனநயாபேஷமாக ஆதயபரிஸ் பநனம் முதலான
பரிமாண பரம்பரை ச்வத ஏவ கூடுகிறாப் போலே யும்
பாலை தயிராக மாறுவதற்கு ஈஸ்வரன் தேவை இல்லையே
மேக விமுகதமாய் ஏக ரசமாய் இருக்கிற ஜலத்துக்கு நாரி கேள தால சூத கபித்த நிம்ப திநதரிண யாதி
விசித்ர ராசா ரூபேண பரிணாம பிரவ்ருத்தி காணப் படுகிறாப் போலேயும்–
எலுமிச்சம் பழம் ரசம் /இளநீர் /விசித்திர ரஸா பரிணாமம் நீருக்கு போலே
பரிமாண ஸ்வ பாவமாய்– பிரதிசர்க அவஸ்தையில்–சம்ஹார தசையில் – சத்ருச பரிணாமமுமாய் இருந்த பிரதானத்துக்கு
அனனயாதிஷ்டிதமாகவே -சர்க வவஸ்தையில் குண வைஷம்ய நிமித்தமான விசித்ர பரிமாணம் கூடும் ஆகையாலே
பிரக்ருதியே ஸ்வ தந்த்ரமாகக் கொண்டு ஜகத் காரணம் ஆகிறது என்று இ றே அவர்கள் சொல்வது –
—————————-
சூர்ணிகை -156-
அத்தை நிராகரிக்கிறார்
பிரதானம்
1–அசேதனம் ஆகையாலும்
2–ஈஸ்வரன் அதிஷ்டியாத போது
பரிணமிக்க மாட்டாமையாலும்
3–சிருஷ்டி சம்ஹார வ்யவஸதை
கூடாமையாலும்
அதுவும் சேராது –
அதிஷ்டானம் -குறுக்கே ஓன்று வேணும் -/சேதனன் அதிஷ்டானம் பண்ணி தானே கார்யம்
அதாவது
விசித்ர ஜகத் காரேண பரிணமிப்போம் என்று இருக்கைக்கு யோக்யதை இல்லாத படி
பிரதானம் சைதன்ய ரஹித வஸ்து வாகையாலும்
பிரக்ருதிம் புருஷஞ்சைவ ப்ரவிசயாத மேசசயா ஹரி ஷோபயாமாச சம்ப்ராப்தே சர்வ காலே வயயா வயயௌ -என்கிறபடியே
தன இச்சையால் புகுந்து -கலக்கி -ஒன்றுக்கு ஓன்று ஒவ்வாத இரண்டையும் கலக்கி -பிரதானத்தையும் புருஷனையும் -சரீரமே நான் என்று
அபிமானிக்கும் படி அன்றோ கலக்கி -கலக்குபன் இருந்தால் ஒழிய தானே கலங்க முடியாதே –
ஈஸ்வரன் அதிஷ்டித்த போது ஒழிய பரிணமிக்க மாட்டாமையாலும்
தத் அதிஷ்டானம் ஒழிய பரிணமிக்கும் ஆகில்
சர்வ காலமும் சிருஷ்டியாய் செல்லுமது ஒழிய
சம்ஹ்ருதயமாய்க் கிடக்கை என்னுமது கூடாமையாலே
கால பேதேன வருகிற சிருஷ்டி சம்ஹார வ்யவஸ்ததை கூடாமையாலும்
பிரதானம் காரணம் என்கிற அதுவும் சேராது என்கை
அதுவும் -என்று பூர்வ யுக்த பரமாணு காரண வாதத்தை சமுச்சயிக்கிறது —
ரசனா அனுபத்தேதே ச -பிரகிருதி தானே ரசனை பண்ணுவது பொருந்தாது என்றவாறு -அசேதனம் ஆனபடியால் -சைதன்யம்
ந அனுமானம் பிரவ்ருத்தேச –
யத்ர அபாவத்தா ச –
அன்யத்ர அபாவத் ச -த்ரினாவது-புல்லை போலே -புல்லை கொண்டு காளைமாடு பாலை தராதே என்று யுக்தி கொண்டே நிரசனம்
————————————
சூர்ணிகை -157-
இப்படி அசேதனமான பிரதானத்தை ஜகத் காரணமாகக் கொள்ளுகிற பஷத்தை நிராகரித்த
அநந்தரம்
சேதனனை ஜகத் காரணமாகக் கொள்ளும் பாசுபதாதி மதத்தை நிராகரிக்கிறார்
சேதனனும்
காரணம்
ஆகமாட்டான்
பொருந்தாதது அவனும் படைக்கப்பட்டவன் தானே -பசுபதியும் –
சப்தத்தாலே கீழ்ச் சொன்ன அசேதனத்தை சமுச்சயிகிறது
ஆகம சித்த ஈஸ்வரன் நிமித்த காரணம் என்றும்
ஆனுமானி கேஸ்வரன் நிமித்த காரணம் என்றும்
பாசுபத வைஷிகாதிகள் சொல்லுகிற ருத்ரன்
சேதனரில் அந்யதமன் இ றே
ஹிரண்ய கர்ப்பஸ் சமவர்த ததாகரே –இத்யாதி வாக்யங்களைக் கொண்டு
சேதனரில் அந்யதமனான ப்ரஹ்மாவையும் ஜகத் காரணமாகச் சொல்லுவாரும் யுண்டு இ றே
அவை எல்லா வற்றையும் திரு உள்ளம் பற்றி இ றே சேதனனும் -என்று பொதுவிலே அருளிச் செய்தது
காரணம் ஆகமாட்டான் -என்றது காரணமாக ஷமன் அல்லன் -என்றபடி-
—————————————————-
சூர்ணிகை -158-
எத்தாலே -என்ன அருளிச் செய்கிறார் –
கர்ம
பரதந்தனுமாய்
துக்கியுமாய்
இருக்கையாலே –
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி ஆபத் விமோசனம் -இவனே / ருத்ரன் நான்முகன் பதவி தானே –
அதாவது
சங்குசித ஜ்ஞான சக்திகனாய் கொண்டு தான் நினைத்த படி ஒன்றும் செய்ய வல்ல ஷமன் அல்லாதபடி
கர்மாதீனனுமாய்
ஆனந்தியாக் கொண்டு ஜகத் வியாபாரத்திலே மூளுகைக்கு
யோக்யதை இல்லாதபடி துக்கியுமாய் இருக்கையாலே -என்கை –
அபஹத பாபமா -என்கிறபடியே
அகர்ம வச்யனுமாய் -ஆனந்தமய -என்கிறபடியே நிரதிசய ஆனந்தியுமாய்
இருக்கிற அவனுக்கே இ றே அப்ரதிஹத ஜ்ஞான சக்திகனாய் மன ப்ரீத்தியை யுடையவன் பண்ணும் ஜகத் வியாபாரம் கூடுவது
ப்ரஹ்மா தயாச சகலா தேவா மனுஷ்யா பசவச ததா
விஷ்ணோர் மயா மஹா
வர்த்த மோஹாந்ததம சர்வ்ருதா ஆப்ரஹம ஸ்தம்ப
பர்ய நதா ஜகத நதா வ்யவச்திதா
ப்ராணின கர்ம ஜனித சம்சார வசவர்த் தின-என்கிறபடியே
கர்ம வச்யருமாய்
தத க்ரோத ப்ரீ தேன சமாகத நய நேன ச வாமாங்குஷ்ட நகா கரேண சின நம தஸ்ய சிரோ மய
யஸ்மாத் நபரா தஸ்ய சிரச் சின்னம் தவயா மம தசமாச சாப சமா விஸ்ட கபாலீதவம் பவிஷ்யசி -என்கிறபடியே
தலை அறுப்பாரும் அறுப்புண்பாருமாய்க் கொண்டு
துக்கிக்களுமாய் இருப்பார்க்கு
ஜகத் ஸ்ருஷ்டியாதி வியாபாரம் கூடாது இ றே-
————————————————————
சூர்ணிகை -159-
ஆக இப்படி விரோதி பரிஹாரங்களைப் பண்ணி
பிரதிஞ்ஞா அனுகுணமாக நிகமிக்கிறார்
ஆகையால்
ஈச்வரனே
ஜகத்துக்கு
காரணம்
ஆகையால் என்று
சேதன அசேதனங்கள் இரண்டும்
காரணம் இன்றிக்கே ஒழிகையாலே -என்கை -பரம சேதனனே காரணம் என்றவாறு
———————————————————–
சூர்ணிகை -160-
லோகத்திலே அவித்யா கர்ம நிபந்தனமாகவும்
பர நியோக நிபந்தனமாகவும்
காரணமாகை யுண்டாகையாலே -அவற்றைக் கழித்து
இவனுடைய காரண ஹேதுவை-அருளிச் செய்கிறார் –
இவன் காரணம் ஆகிறது
அவித்யா
கர்ம
பர நியோகாதிகளால்
அன்றிக்கே
ஸ்வ இச்சையாலே –
அவித்யாவோ கர்மமோ பிறரால் தூண்டப்பட்டோ லோகத்தில் காரணம் ஆகிறதே -/ஸ்வ இச்சா மாத்திரை நிதானம் -அவதார ரஹஸ்யம் -நான்கு ஸ்லோகங்கள் -ஆறு காரணங்கள் –
அதாவது
அவித்யா கர்ம நிபந்தனமான காரணத்வம் சகல ஜந்து சாதாரணம்
அதாவது -லோகத்தில் ஒன்றுக்கு ஓன்று உத்பாதகமாய்க் கொண்டு வருகிற காரணத்வம்
வைஷயிக ஸூ க பிராவண்ய ஹேதுவான அஞானத்தாலும் கர்மத்தாலும் இ றே–விஷய ஸூக ப்ராவண்யம் -ஹேதுவே அஞ்ஞானம் -அது கர்மத்தால் –
அதில் சாஸ்திர வச்யமான வற்றினுடைய உத்பாதகத்வம் கர்ம பிரதானமாய் இருக்கும்-பித்ருக்கள் கடனை தீர்க்க குழந்தை பெறுவது -கர்ம காரணம் என்றவாறு
அல்லாதது அவித்யா பிரதானமாய் இருக்கும்
இரண்டும் ஒன்றை ஓன்று விட்டு இராது
அதிகாரி புருஷர்களான ப்ரஹ்மாதிகள் யுடைய காரணத்வம் பர நியோக பிரதானமாய் இருக்கும்
பிரஜாபத்யம் த்வயா கர்ம பூர்வம் மயி நிவேசி தம் -என்றும்
யெதௌ தவௌ புருஷ சரே ஷட்டௌ பிரசாத க்ரோத ஜௌ சம்ருதௌ
தாதாதா சித்தப நனானௌ சிருஷ்டி சம்ஹார காரகௌ-இத்யாதிகளிலே கண்டு கொள்வது –
ஆதி சப்தத்தாலே இவர்க்கு விவஷிதம் –அவர்ஜீயமான -ராகமோ –என்று-விட முடியாத ஆசை என்றவாறு -தேவை இல்லை என்று தெரிந்தாலும் -வாசனை ருசி அடியாக –
நடிவில் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்தாராம் இத்தனை –
அந்த ஸ்ருஷ்டியாதி வியாபாரங்கள் எம்பெருமானுக்கு அவித்யா கர்ம நிபந்தனமோ
அன்றிக்கே அவர்ஜீயமான ராகமோ –
இல்லையாகில் பரப்ரேரிதனாய்க் கொண்டு செய்கிறானோ என்று இ றே
அவர் சங்கா வாக்யத்தில் அருளிச் செய்தது
இவற்றால் அன்றிக்கே -ஸ்வ இச்சையால் -என்றது -நிவாரகர் இல்லாத ஸ்வா தந்தர்யம் உண்டே அவனுக்கு
நிரவத்யம் நிரஞ்சனம் -என்றும்
அபஹதபப்மா -என்றும்
ந தசயேசகசசந-என்கிறபடியே
அவித்யாதி தோஷ பிரதிபடனாய்
தனக்கு ஒரு நியாமர் இன்றிக்கே இருப்பானாய்
இருப்பவன் ஒருவன் ஆகையாலே தன் இச்சை ஒழிய ஹேதவாந்தரம் இல்லை -என்றபடி –
அசித விசேஷிதா ந பிரளய ஸீம நி சம்சரத கரண களேபரைர் கடயிதும் தயமா நம நா
வரத நிஜேச சயைவ பரவாநகரோ ப்ரக்ருதம் மஹதபிமா நபூத கரணாவளி கோர கிணீம்-என்றும்
ப்ரளய சமய ஸூ ப்தம் சவம் சரீரை கதேசம வரத சிதசிதாககயம் ஸ்வ இச்சையா
விஸ்தருணாந கசிதமிவ கலாபம் சிதரமாததய தூன வன அனுசிகினி சிகீவ கரீடசி ஸ்ரீ சம்ஷம் –உத்தர சதகம் -44—என்று இ றே பட்டர் அருளிச் செய்தது —
பெண் மயிலை பார்த்து ஆன் மயில் தோகை விரிப்பது போலே உன் சரீர ஏக தேசத்தில் உள்ள சேதன அசேதனங்களை ஸ்ருஷ்ட்டித்தீர் –
அங்கீ கரித்து -பிராட்டி புருவ நெரிப்பே–பிரமாணமாக கொண்டீர் –
—————————————————————-
சூர்ணிகை -161-
இப்படி இச்சை யானாலும் இது தான் ஆயாச ரூபமாய் இருக்குமோ என்ன
அருளிச் செய்கிறார் –
ஸ்வ சங்கல்பத்தாலே
செய்கையாலே
இது தான் வருத்தம் அற்று
இருக்கும் –
அதாவது
யத்ன ரூபமான காயிக வியாபாரத்தால் அன்றிக்கே
அயத்னமான மானச வியாபார ரூப சங்கல்ப்பத்தாலே செய்கையாலே
இந்த ஜகத் சிருஷ்டி ரூப வியாபாரம் தான் இவனுக்கு அநாயாசமாய் இருக்கும் என்கை –
சோகாமயத் பஹூச்யாம் பிரஜாயேயேதி-என்றும்
மனசைவ ஜகத் ஸ்ருஷ்டும் சம்ஹாராஞ்ச கரோதி யா
தச்ய அரிபஷ ஷபனேகியா நுதயம் விசதர -என்றும்
நினைத்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய்
முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்துன் பெருமை மாசூணாதோ மாயோனே -என்றும்
சொல்லக் கடவது இ றே-
மனம் செய் ஞானம் -மானஸ சங்கல்பம் –
—————————————
சூர்ணிகை -162-
அநாயாசமாய் இருந்ததே யாகிலும் அவாப்த சமஸ்த காமத்தா
பரி பூர்ணனாய் இருக்கிறவனுக்கு
இந்த வியாபாரத்தால் பிரயோஜனம் என் -என்ன -அருளிச் செய்கிறார் –
இதுக்கு
பிரயோஜனம்
கேவல
லீலை –
அதாவது
இந்த ஜகத் சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனம் வெறும் லீலை -என்றபடி –
லீலை யாவது -தாதாத்விக்ம ரசம் ஒழிய காலாந்தரத்தில் வருவது ஒரு பலத்தை
கணிசியாமல் பண்ணும் வியாபாரமே யாகிலும் –
இதுக்கு பிரயோஜனம் -என்று
சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனமாகச் சொல்லுகையாலே
தாதத்விக்ம ரச மாதரத்தை சொல்லிற்றாகக் கடவது
இந்த சிருஷ்டி ரூப வியாபாரமான சார்வ பௌமரான ராஜாக்களுக்கு த்யூதாதிகள் போலேயும்
பாலர்க்கு மணல் கொட்டகம் போலேயும்
தாதாத்ரவிக ரசமாய் இருப்பது ஓன்று இ றே இவனுக்கு –
இத்தால் -லோகவ்தது லீலா கைவல்யம்-2–1–33- -என்கிற சூத்ரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று
கரீடதோ பால கச ஏவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய -என்று ஸ்ரீ பராசர பகவானும்
அப்ரமேயோ நியோஜ் யசச யத்ர காம கமோ வசீ
மோததே பகவான் பூதைர் பால கிரீட நகைரிவ-என்று ஸ்ரீ வேத வியாச பகவானும்
நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -என்றும்
இன்புறும் இவ்விளையாட்டுடையான் -என்றும்
அபியுக்தரும் இவனுடைய ஜகத் வியாபாரத்துக்கு பிரயோஜனம் லீலையாகவே சொன்னார்கள் இ றே-
ஆனால் –
சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி
ஓன்று ஒன்றி யுலகம் படைத்தான் -என்றும்
உய்ய வுலகு படைத்து -என்றும்
விசித்ரா தேக சம்பத்தி ரீச்வராய நிவேதிதம் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி சம்யுதா -விஷ்ணு தத்வம் -என்றும்
மாயன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை —ராமானுஜ நூற்றந்தாதி -என்றும்
அசித் அவிசேஷிதாந பிரளய ஸீ ம நி சமசரத கரண களேபரைர் கடயிதும் தயமான மநா -என்றும்
சேதனர் உடைய உஜ்ஜீவனம் பிரயோஜனமாக ஜகத் சிருஷ்டி பண்ணினான்
என்று சொல்லுகிற இவ் வசனங்களுக்கு வையர்த்யம் வாராதோ -என்னில் வாராது –
எங்கனே என்னில் –
உபய பிரயோஜனமும் உண்டாய் இருக்கச் செய்தேயும் லீலையே பிரயோஜனம் என்ற இது
ப்ராசுர்யத்தைப் பற்றச் சொன்ன இத்தனை யாகையாலே
ரூப பிரகார பரிணாம கருதவ்ய வசத்தம விச்வம் விபர்யசிம் அன்யதசசச கர்த்தும்
ஷாமயன் ஸ்வ பாவ நியமம் கிமுதீ ஷசே த்வம் ஸ்வதந
த்ரயம் ஐஸ்வர்யம் அபர்யநுயோஜய மாஹூ–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –என்கிறபடியே
நினைத்த படி செய்ய வல்ல சக்திமான் ஆகையாலே
சகல ஆத்மாக்களையும் யுகபதேவ -சக காலத்திலேயே – முக்தராக்க வல்லனாய்
இருக்கச் செய்தேயும்
ஸ்வா தீன ஸ்வரூப ஸ்தித்யாதிகரான ஆத்மாக்களை
கர்மத்தை வ்யாஜி கரித்து
கை கழிய விட்டு சாஸ்திர மரியாதையிலே வரவர அங்கீ கரிப்பன் என்று இருக்கிறது -லீலா ரச இச்சையாலே இ றே
லீலா விபூதி என்று இ றே இது தனக்கு நிரூபகம்
ஆகையால் இவ்விபூதியில் லீலையே ப்ரசுர பிரயோஜனமாகச் சொல்லுகையாலே
சூத்திர காராதிகள் எல்லாரும் சிருஷ்டி பிரயோஜனம் லீலையாகச் சொல்லுகையாலே
இவரும் -கேவல லீலை -என்று அருளிச் செய்தார் ஆயிற்று –
————————————————–
சூர்ணிகை -163-
இப்படி ஜகத் சிருஷ்டி பண்ணுகிறது லீலார்த்தமாக ஆகில்
சம்ஹார தசையில் லீலை குலையாதோ –
என்கிற சங்கையை அனுவதிக்கிறார்
ஆனால்
சம்ஹாரத்தில்
லீலை ‘
குலையாதோ
என்னில் –
————————————————–
சூர்ணிகை -164-
அத்தைப் பரிஹரிக்கிறார்
சம்ஹாரம்
தானும்
லீலை -யாகையால்
குலையாது –
அதாவது
கொட்டகம் இட்டு விளையாடுகிற பாலர்க்கு
இட்ட கொட்டகம் தன்னை மீள அழித்துப் பொகடுகிறது தானும்
லீலையாய் இருக்குமா போலே
இவற்றை சம்ஹரிக்கை தானும் ஸ்ருஷ்டியோபாதி லீலையாய் இருக்கையாலே
அப்போதும் லீலை குலையாது -என்றபடி –
அகில புவன ஜன்ம ஸ்த்தேம பங்காதி லீலே -என்றும்
நிகில ஜகத் உதய விபவ லய லீல-என்றும்
ஸ்ருஷ்டியோபாதி சம்ஹாரத்தையும் அவனுக்கு லீலையாக அருளிச் செய்தார் இ றே எம்பெருமானார்-
———————————————————————————-
ஆக
இதுக்கு கீழே
ஈச்வரனே ஜகத்துக்கு காரணம் -என்றும்
இவன் காரணம் ஆகிறது ஹேத்வந்தரங்களால் அன்று என்றும்
ஸ்வ இச்சையால் -என்றும்
சங்கல்ப மாத்திர வகலபதம் ஆகையாலே இதுதான் அநாயாசமமாய் இருக்கும் என்றும்
இது தனக்கு பிரயோஜனம் லீலை என்றும்
சொல்லி நின்றது –
————————————-
சூர்ணிகை -165-
இனி இவனுக்கு ஜகத்தைப் பற்ற உண்டான காரணத்வம்
கடபடாதிகளைப் பற்ற குலாலாதிகளுக்கு உண்டான
காரணத்வம் போலே நிமித்தத்வ மாதரமோ –
என்கிற சங்கையில் உபாதான காரணமும் இவனே
என்னுமத்தை அருளிச் செய்கிறார்
இவன் தானே
ஐகத்தாய்ப்
பரிணமிக்கையாலே
உபாதானமமாயும்
இருக்கும் –
பிரக்ருதிச் ச -உபாதானமும் அவனே ப்ரதிஞ்ஞா -வும் பொருந்துகிற படியால் -ஒன்றை அறிந்தால் அனைத்தும் அறிந்த படி ஸ்வேதா கேது –
இவன் -தானே பரிணமித்து ஜகத் —தான் தான் உபாதான காரணம் -பரிணமிக்கும் ஓன்று தானே உபாதானம் -தான் -விசுஷ்ட ப்ரஹ்மம் என்றபடி –
நிமித்தமும் உபாதானமும் ப்ரஹ்மம் அபின்ன உபாதானம் -ப்ரஹ்மம் என்றபடி –
அதாவது
லோகத்தில் கார்ய உத்பத்தியில் காரணம் நிமித்த உபாதான சஹகாரி ரூபேண த்ரிவிதமாய் இருக்கும்
இதில் -நிமித்த காரணம் ஆவது -உபாதானமான வஸ்துவை
கார்ய ரூபேண விகரிப்பிக்கும் கர்த்ரு வஸ்து
உபாதான காரணம் ஆவது கார்ய ரூபேண விகரிக்கைக்கு யோக்யமான வஸ்து
சஹகாரி காரணம் ஆவது கார்ய உத்பத்திக்கு உப கரணமான வஸ்து –
கடபடாதிகளுக்கு குலால குவின நாதிகள் நிமித்தமாய்–குயவன் நெசவாளி –
ம்ருத்தந்த வாதிகள் உபாதானமாய்–மண்ணும் நூலும்
தண்ட சக்ர வேமாதிகள் சஹ காரியாய் இருக்கும்
இங்கன் அன்றிக்கே ஜகத் ரூப கராய உத்பத்தியில் ஈச்வரனே த்ரிவித காரணமுமாய் இருக்கும் –
எங்கனே என்னில்
பஹூச்யாம்–சாந்தோக்யம் -என்கிற சங்கல்ப விசிஷ்டனாய்க் கொண்டு நிமித்த காரணனாயும்
நாம ரூப விபாக அநர்ஹமாம் படி தன்னோடு கூடிக் கிடக்கிற சூஷ்ம சித் அசித் விசிஷ்டனாய்க் கொண்டு உபாதான காரணமாயும்
ஜ்ஞான சக்த்யாதி விசிஷ்டனாய்க் கொண்டு சஹகாரி காரணமாயும் இருக்கும்
ஆகையாலே உபாதான காரணமும் இவனே -என்கிறார் –
இவன் -என்று கீழ் நிமித்த காரணமாகச் சொன்ன ஈஸ்வரனைப் பரமார்சிக்கிறது
சித் அசித்துக்கள் இரண்டும் அப்ருக சித்த விசேஷணமாய்க் கொண்டு
தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அந்தர்பூதமாம் படி இருக்கையாலே
தானே ஜகதாய்ப் பரிணமிக்கையாலே -என்கிறார்
உபதானமுமாயும் இருக்கும் -என்று கீழ்ச் சொன்ன நிமித்த காரணத்தோடு
உபாதான காரணத்வத்தை சமுச்சயிக்கிறது –
இத்தால் ப்ரஹ்மத்தின் உடைய ஜகத் காரணத்வத்தை பிரதிபாதிக்கிற வேதாந்த சூத்ரத்தில்
நிமித்த காரணத்வத்தை சாதித்த அநந்தரம்
பிரகிருதி ச்ச பிரதிஜ்ஞ்ஞா த்ருஷ்டான தா நுபரோ தாத -என்று உபாதான காரணத்வத்தையும்
சொன்னால் போலே இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று
பிரகிருதி ச்ச -என்றதை உட்கொண்டே இவரும் -உபாதானமுமாயும் -இருக்கும் என்றது-சக்கரம் உம்மைத்தொகை
அங்கு -பிரதிஜ்ஞ்ஞா த்ருஷ்டான தா நுபரோ தாத-என்று சாத்யம் முன்னாக சாதனத்தைச் சொல்லிற்று
ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் -முன்னே சொல்லி
இங்கு -இவன் தானேஜகத்தாய பரினமிக்கையாலே -என்று
சாதனம் முன்னாக சாத்தியத்தைச் சொல்லிற்று
பரிணாமம் அடைந்து ஜகத்தாக ஆனது -தானே முன்னே சொல்லி –
அங்கு -யேநா சரு நம ச்ருதம் பவதி அம்தம் மதம் அவிஞ்ஞாதம் விஞ்ஞாதம் சயாத-என்று
ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான பிரதிஞ்ஞையாலும்
யதா சோமயை கேன ம்ருத பிண்டேன சர்வம் ம்ருன்மயம் விஞ்ஞா தம ஸ்யாத்-என்கிற
தத் உத்பாதகமான த்ருஷ்டாந்தத்தாலும்–விளக்கும் த்ருஷ்டாந்தத்தாலும் –
ஏக வஸ்து பரிணாமம் ஜகத்து -என்று இ றே சொல்லிற்று –
அந்த ஏக வஸ்து ஆகிறது சூஷ்ம சிதசித் விசிஷ்டமான ப்ரஹ்மம் இ றே
அத்தை இ றே இவரும் -தானே -என்கிற சொல்லால் அருளிச் செய்தது –
ஆகையால் அந்த சூத்தார்த்தமே இது என்னத் தட்டில்லை –
ஏகமேவ அத்விதீயம் –மஹா வாக்கியம் -சத்தாகவே ஒன்றாகவே இரண்டாவது இல்லாமல் இருந்தது -சத் கார்ய வாதம் –என்றும்-நிமித்தம் தேட வேண்டாம் –
காரணமாக சத்தாகவே இருந்தது -உபாதானமாக சூஷ்மமாக இருந்தது –
தத்வமஸி -இதுவும் மஹா வாக்கியம்
நிர்விசேஷ சின் மாத்திரம் அத்வைதம் —
ததா தமா நம ஸ்வயம் குருத -என்றும்-அந்த ப்ரஹ்மம் தானே தன்னை செய்து கொண்டது உபாதானமாக -யானாய் தன்னைத் தான் பாடி –
ச்ருஷ்டௌ சருஜதி சாதமானம் விஷ்ணு பால யஞ்ஞ பாதி ச -உப சம்ஹரியதே சாந்தே சம்ஹாததா ச ஸ்வயம் பிரபு —ஸ்ரீ விஷ்ணு புராணம் -1–12-என்றும்
ச ஏவ ஸ்ருஜ்யதே ச ச சர்க கர்த்தா ச ஏவ பாதயந்தி ச பாலயதேச
ப்ரஹ்மா தயவ சத தாபி ரசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்ட்டோ வரதோ வரேண்ய-இத்யாதிகளால்
படைக்கப்பட்ட வையும் அவரே கர்த்தாவும் அவரே -பரிபாலிப்பவனும் அவனே
இந்த நிமித்த உபாதான யோர் ஐக்யத்தை
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஸூ வ்யக்தமாக சொல்லா நின்றது இ றே –
———————————————
சூர்ணிகை -166-
இப்படி தான் ஜகத்தாய் பரிணமிக்கும் ஆகில்
நிர்க்குணம் நிரஞ்சனம் நிஷ்களம் நிஷ்க்ரியம் சாந்தம் -என்றும்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றும்
அவிகாராய சுத்தாய -என்றும்
இவனை நிர்விகாரனாகச் சொல்லும்படி எங்கனே
என்கிற சங்கையை அனுவதிக்கிறார்
ஆனால்
நிர்விகாரன்
என்னும்படி
என்
என்னில்-
———————————–
சூர்ணிகை -167-
அத்தை பரிஹரிக்கிறார்
ஸ்வரூபத்துக்கு
விகாரம்
இல்லாமையாலே –
அதாவது
சித் அசித் ரூப விசேஷண விசிஷ்டனான– தானே– ஜகதாய்ப் பரிணமிக்கும் இடத்தில்–வ்யாவ்ருத்தி அர்த்தம் தானே விசேஷணம் —
விசேஷண விசிஷ்டமாக விசேஷயம் இருக்கும் அப்ருதக் ஸ்திதி பிரியாமல் இருக்கும் -/ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணம் அன்றோ ப்ரஹ்மம் /
-ஸ்வ ஆதீன த்ரிவித சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம்
விசேஷ்யமான ஸ்வரூபத்துக்கு விகாரம் இல்லாமையாலே
நிர்விகாரன் என்னக் குறை இல்லை என்கை –
சரீரம் -ஏக தேசம் தானே பரிணமிக்கும் -திருமேனியில் ஒரு ஏக தேசத்தில் ஒரு துளி தானே பரிணமிக்கும்
————————————————
சூர்ணிகை -168-
ஸ்வரூபத்துக்கு விகாரம் இல்லை யாகில்
இவன் தானே ஜகத்தாய பரிணமிக்கிறான் -என்ற பரிணாமம்
இவனுக்கு உண்டாம்படி எங்கனே
என்கிற சங்கையை அனுவதிக்கிறார் –
அதில்
பரிணாமம்
உண்டாம்படி
என்
என்னில் –
————————————————————————————–
சூர்ணிகை -169-
அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்
விசிஷ்ட
விசேஷண
சத்வாரகமாக –
சேதன அசேதன மூலமாக பரிணமிக்கிறார் ப்ரஹ்மம் -என்றவாறு -விசேஷணம் வழியாக பரிணமிக்கும் –
விசேஷணம் கூடியே இருக்கும் -விசிஷ்டமாகவே இருக்கும் –
ப்ரஹ்மத்தை விட்டு எப்போதும் பிரியமாட்டோம் என்கிற சிறப்புடன் கூடி இருப்பதால் -இவரே மாறுகிறார் என்றால் தப்பில்லை
ஸ்வரூபேண விகாரம் இல்லை –
விசிஷ்டஞ்ச தத் விசேஷணம் ச இ தி விசிஷ்ட விசேஷணம் -என்று-முன்னால் அடை மொழி -பெயர்ச் சொல் சித்த அசித் –
பிரதமம் கர்ம தாரயா சமாசத்தைப் பண்ணி
த்வாரேண சஹ வர்த்தத இதி சத்வாரகம் – என்று
அனனதர பதத்தை பஹூ வரீகித்து–அதை த்வாரமாக கொண்டு –
விசிஷ்ட விசேஷண -சத்வாரகம்
என்று த்ருதியாதத புருஷனாக சப்தத்துக்கு–இதனால் -சித்த அசித்துக்களால் -என்று – வ்யுத்புத்தி பண்ணிக் கொள்வது-
விசிஷ்டம் ஆவது -விசேஷ யுக்தமானதாய்
விசிஷ்டமான விசேஷணம் என்று தண்ட குண்டலாதிகள் போல் அன்றிக்கே-கழற்றி வைக்க முடியாத படி –
சரீர பூதம் ஆகையாலே ப்ருதக் சித்த யர்ஹம் அல்லாத விசேஷத்தை உடைத்தான
சித் அசித் ரூப விசேஷணத்தைச் சொல்லுகிறது –
அன்றிக்கே
விசிஷ்ட விசேஷணம் என்கிற இதுக்கு
சரீர பூதமாய்க் கொண்டு என்றும் ஒக்கத் தன்னோடு கூடி இருக்கிற விசேஷணம் என்றும் பொருளாம்
அப்போதும் பிருதக் சித்தி அர்ஹமான தண்ட குண்டலாதிகளில் வ்யாவ்ருத்தி சித்திக்கும் இ றே
விசேஷணத்தாலே சத்வாரகமாக என்றது
இப்படி அப்ருதக் சித்த விசேஷணம் ஆகிற ஹேதுவாலே
த்வார சஹிதமாக இவனுக்கு பரிணாமம் உண்டாகிறது என்கை
இத்தால்
அப்ருதக் சித்தமான சித் அசித் ரூப விசேஷண த்வாரா
இவனுக்கு பரிணாமம் உண்டாகிறது என்றது ஆயிற்று –
————————————————–
சூர்ணிகை -170-
இப்படி ஸ்வரூபத்துக்கு விகாரம் இன்றிக்கே இருக்க
ஸ்வ சரீர பூத விசேஷண த்வாரா
கார்ய ஜகத்துக்கு எல்லாம் இவனே உபாதானமாகக் கூடுமோ -என்ன
அருளிச் செய்கிறார்-
ஒரு சிலந்திக்கு
உண்டான
ஸ்வபாவம்
சர்வ சக்திக்கு
கூடாது
ஒழியாது இ றே
நூலை விட நினைத்து நூலை விட்டு சிலந்தி மாறாமல்
இருக்க -ப்ரஹ்மம் சொல்ல வேண்டுமோ என்றபடி
அதாவது
அல்ப சக்திகதமான சிலந்திக்கு ஸ்வரூப விகாரம் இன்றிக்கே இருக்கச் செய்தே
ஸ்வ சரீர பூத விசேஷண முகத்தாலே தத் அனுஜாதமாக கார்ய ஜாததுக்குத் தான் உபாதானமாம் படியாம் யுண்டான
ஸ்வ பாவம்-
பராச்ய சக்திர் விவிதைவ ஸ்ருயதே -என்று ஒதப் படுகிற சர்வ சக்திக்கு கூடாது ஒழியாது இ றே என்கை-
யாதோரண நாபிஸ் ஸ்ருஜதே கருஹண தே ச-முண்டக உபநிஷத் -என்றும்
ஊராண நாபிர் யதா ஸ்ருஷ்ட்வா ஸ்வயம் தத க்ரசதே-என்னக் கடவது இ றே
கார்யே நந்தே சவத நுமுகதச தவா முபாதா நாமா ஹூ ஸ
சா தே சகதிச ஸூ கர மிதரச சேதி வேலாம விலங்கய
இச்சா யாவத விஹரதி சதா ரெங்கராஜா நபேஷா சைவாச நாததி சயகரீ சோரண நாபௌ விபாவய–ஸ்ரீ ரெங்கராஜா சதகம் 2—31-என்று
அருளிச் செய்தார் இ றே பட்டர் -வரம்பிலாய மாய மாயன் -அன்றோ -சிலந்தி படைத்து அத்தை சாக்ஷியாக படைத்து -இத்தை காட்டி அருளினீர்
இப்படி நிமித்த உபாதான காரணத்வங்களை சொல்லி
சஹ காரி காரணத்வம் சொல்லாது ஒழிந்தது –
சர்வஞ்ஞத்வாதி குண யோகம் கீழே சொல்லுகையாலும்
நிமித்த உபாதானங்களுக்கு ஐக்யம் சொல்லுகையாலும்
தன்னடையே சித்திக்கும் என்னுமத்தாலே –
ஆகை இ றே வேதாந்த சூத்ரத்திலும் இதி விசேஷித்து சொல்லாது ஒழிந்தது –
———————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply