தத்வ த்ரயம் – அசித் பிரகரணம்-சூர்ணிகை —102–140— –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

சூர்ணிகை -102-

இனி மேல் பூதன மாத்ர சர்கோ ய மஹங்காராதது தாமசாது -என்கிறபடியே
பூதாதி சப்த வாச்யமான தாமச அஹங்காரத்தில் நின்றும்
தந்மாத்ர பஞ்சகமும்
தத் விசேஷமான ஆகாசாதி பஞ்ச பூதங்களும் உத்பன்னங்களாம் க்ரமம் அருளிச் செய்கிறார் –

பூதாதியில் நின்றும்–தாமச அஹங்காரத்தில் நின்றும் என்றபடி –
சப்த தந்மாத்ரை பிறக்கும் –
இதில் நின்றும் ஆகாசமும் ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் வாய்வும் ரூப தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் தேஜஸ் ஸூம் ரச தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் அப்பும் கந்த தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் ப்ருதிவி பிறக்கும் –

தது மாத்திரம் -தன்மாத்ராம் -அது மட்டும் -விகசித்தமான ஆகாசத்தில் வேறே சிலவும் உண்டே –
சப்தம் தன்மாத்திரை ஆகாசமாக மலர்கிறது -மலர்ந்த பின்பு வேறே சிலவும் உண்டே
நெருப்பு வாயு இரண்டிலும் -விரோத பாவம் தண்ணீர் பிருத்வி -அனுகூல பாவம் – ஆகாசம் உதாசீன மூட பாவம்
சப்தம் ஸ்பர்சம் ரூபம் இவற்றில் விரோத அனுகூல பாவம் தெரியாதே –
அவிசேஷம் விசேஷம் -என்றும் பெயர்களும் உண்டு -தன்மாத்திரைகளுக்கும் பூதங்களுக்கும் –

அதாவது
பூதாதி சம்ஜ்ஞகமான–பெயர் பெற்ற – தாமச அஹங்காரத்தில் நின்றும்
ஆகாசத்தின் யுடைய ஸூஷ்ம அவஸ்தையான சப்த தந்மாத்ரை பிறக்கும்
இந்த சப்த தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய் வ்யக்த சப்த குணகமான ஆகாசமும்-
(அவ்யக்த சப்தம் -சப்த தன்மாத்திரை த்ரவ்யம்-வியக்த சப்த குணம் அத்ரவ்யம் )
வாயுவினுடைய சூஷ்ம அவஸ்தையான ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய் ஸ்பர்ச குணகமான வாயுவும்
தேஜசினுடைய சூஷ்ம மான ரூப தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த ரூப தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய ரூப குணகமான தேஜஸ்ஸூம்
அப்பினுடைய சூஷ்ம மான ரச தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த ரச தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய் ரச குணையான அப்பும்
பிருதிவினுடைய சூஷ்ம மான கந்த தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த கந்த தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையா கந்த குணையான பிருத்வி பிறக்கும் -என்கை –

ஆகாசமும் ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்
வாயுவும் ரூப தந்மாத்ரையும் பிறக்கும்
என்று உத்பத்தி சொல்லுகிற அளவில் பூதத்தை முற்படச் சொல்லி
தந்மாத்ரையை பிற்படச் சொல்லிக் கொண்டு வந்தது பூத உத்பத்திக்கு அநந்தரம்
தந்மாத்ர உத்பத்தி என்கிற க்ரமம் தோற்றுகைக்காக-
இந்த தந்மாத்ர அனந்தர உத்பத்தி க்ரமம் நம் ஆச்சார்யர்களுக்கு மிகவும் ஆதரணீயமாகப் போகும்
அத்க்கடி -அஷ்டௌ பிரக்ருதய ஷோடஸ விகார -என்கிற ஸ்ருதிக்கு ஸ்வரார்த்தம் சித்திக்கையாலே
ஈச்வராத பிரகிருதி புருஷௌ பிரக்ருதோ மஹான் மஹதோ
ஹன்காரோ ஹன்காராச சப்த தன்மாத்ரம் சப்த தன்மாத்ராதாகாசம்
ஸ்பர்ச தன்மாத்ராஞ்ச ஸ்பர்ச தன்மாதராத வாயு ரூப தன்மாந்த்ராஞ்ச ரூப தன்மாத்ராதா
தேஜோ ரச தன்மாத்ராஞ்ச ரச தன்மாத்ராதா தாபோ நந்த தன்மாத்ராஞ்ச கந்த தன்மாதராதா பிருத்வி -என்று
இந்த க்ரமத்தை யாதவ பிரகாசிதிகளும் ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்–

————————————-

சூர்ணிகை –103-

இனி பூதாத தந்மாத்ரா உத்பத்தி க்ரமமும்
சாஸ்திர சித்தம் ஆகையாலே அத்தையும் சங்கரஹேண அருளிச் செய்கிறார் –

ஸ்பர்ச தந்மாத்ரை தொடக்கமான
நாலு தந்மாத்ரைகளும்
ஆகாசம் தொடக்கமான
நாலு பூதங்களுக்கும் கார்யமாய்
வாயு தொடக்கமான
நாலு பூதங்களுக்கும் காரணமாய்
இருக்கும் என்றும்
சொல்லுவார்கள்
என்று அடுத்த பக்ஷமும்-சாஸ்த்ர சித்தம் —சப்தம் பிருத்வி எடுத்து நான்கு தன்மாத்திரைகளையும் நான்கு பூதங்களையும் மட்டும் காட்டி அருளுகிறார் –

அதாவது-பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும் –
சப்த தந்மாத்ரை நின்றும் ஆகாசம் பிறக்கும்
ஆகாசத்தில் நின்றும் ஸ்பர்ச தந்மாத்ரை பிறக்கும்
ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும்
வாயுவில் நின்றும் ரூப தந்மாத்ரை பிறக்கும்
ரூப தந்மாத்ரையில் நின்றும் தேஜஸ் பிறக்கும்
தேஜஸ் ஸில் நின்றும் ரச தந்மாத்ரை பிறக்கும்
ரச தந்மாத்ரையில் நின்றும் அப்பு பிறக்கும்
அப்புவில் நின்றும் கந்த தந்மாத்ரை பிறக்கும்
கந்த தந்மாத்ரையில் நின்றும் ப்ருதிவி பிறக்கும் -என்றபடி-

இந்த க்ரமம் ஸ்ரீ விஷ்ணு புராண சித்தம்
பூர்வ க்ரமம் புராணாந்தர சித்தம் -என்று சொல்வார்கள்
அது சொல்ல ஒண்ணாது இ றே
இரண்டுமே சித்தம் தான் என்றவாறு
அஷ்டௌ பரக்ருதியஷ ஷோடஸ விகாரா –கர்ப்ப உபநிஷத் -என்று ஆகாசாதி பூதங்கள் ஐந்தையும்–
பிரக்ருதிகள் எட்டு -விக்ருதிகள் -பதினாறு / பிரகிருதி மஹான் அஹங்காரம் தன்மாத்திரைகள் எட்டும் -விகாரம் அடைந்து மற்றவை பிறக்கும்
சப்த்தாதி குணங்கள் ஐந்தும் பதினோரு இந்திரியங்கள் விகாரம் என்றவாறு –
த்ரவ்யம் -24-/சப்தாதி குணங்கள் ஐந்தையும் சேர்க்க வேண்டாமோ / தன்மாத்திரைகள் குணங்கள் இரண்டில் ஒன்றையும் மட்டும் சேர்த்து -24-/
தன்மாத்திரைகள் ஐந்தையும் விட்டால் -முன் பாவம் பின் பாவம் தசா விசேஷம் தானே என்பர் /
குணங்களை விட்டால் -பஞ்ச பூதங்களுக்குள் உண்டே இவை என்பர் -/
இந்திரியங்களோபாதி கேவலம் விக்ருதிகளாக–கார்யங்களாக – சுருதி சொல்லுகையாலே
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே
ஆகாசச்து விகுர்வாண ஸ்பர்ச மாதரம் சசாஜா ஹி-என்று தொடங்கி–ஆகாசம் விகாரம் அடைந்து ஸ்பர்சம் தன்மாத்திரை ஸ்ருஷ்டிக்கப்பட்டது என்று
ஸ்பர்ச தன்மாத்ராதிகளுக்கு காரணமாகச் சொன்ன ஆகாசாதி பதார்த்தங்களையும்
தந்மாத்ர லஷணமான–அடையாளம் இட்டு – பூதங்களாக ஸ்ரீ பராசர பகவானுக்கு விவஷிதம் என்று நினைத்து
வியாக்யாதாக்கள் வியாக்யானம் பண்ணி வைக்கையாலே –
ஆகையால் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் பூதாத தந்மாத்ரா உத்பத்தி சாப்தமாய்த் தோற்றி இருந்ததே யாகிலும்
வியாக்யான பிரகிரியைப் பார்த்தால்
தன்மாத்ராத தந்மாத்ரா உத்பத்தி என்றே கொள்ள வேணும்-
நம் பூர்வர்களுக்கு இந்த பக்ஷம் ஆதரணீயம் என்று அருளிச் செய்தார் -இதனாலே தான் –
பூதாத தந்மாத்ரா உத்பத்தி பஷத்திலும்
அஷ்டௌ பரக்ருதியஷ ஷோடஸ விகாரா -என்று சொல்லுகிற
ஷோடஸ விகாரங்கள் ஆகிறது-அதே பிரமாணம் இந்த பாசத்துக்கும் –
எட்டு விகாரம் காரணம் -தன்மாத்திரை சேர்த்தா பூதங்களை சேர்த்தா என்று கொண்டு இரண்டு பக்ஷங்களும் வரும் –
பூதங்களை ஒழிய ஏகாதச இந்திரியங்களும் சப்தாதிகள் ஐந்தும் என்று
தன்மாத்ரங்களுக்கு பூதங்களோடு ஸ்வரூப பேதம் இன்றியிலே
அவஸ்தா பேதம் மாதரம் ஆகையாலே-
அஷ்டௌ பரக்ருதய -என்று
பிரகிருதி மஹான் அஹன்காரங்களையும்
ஆகாசாதிகள் ஐந்தையும் சொல்லுகிறது என்றும் ஸ்ருதி அவிரோதம் நிர்வஹிப்பார்கள்-
இது தான் வேத வியாச பகவானாலே
அஷ்டௌ பிரக்ருதய பரோகதா விகா ராசசாபி ஷோடஸ அய வயகதானி
சபதைவ பராஹூர தயாதம சிந்தகா அவயக தஞ்ச மகாமச சைவ
ததா ஹன்கார ஏவ ச பிருத்வி வாயு ஆகாசம் ஆபோ ஜ்யோதிஸ்ஸ பஞ்சமம்
ஏதா பிரக்ருதய சத வஷ்டௌ விகாராநபி மே சருணு ச்ரோதரம்
தவக சைவ சஷூசச ஜிஹ்வா காரணாஞ்ச பஞ்சமம்
வாக ச ஹச்தௌ ச பாதௌச பாயு மேடரம ததைவச சப்த சபாசௌ ச ரூபஞ்ச ரசோ
கந்தசத தைவச ஏதே விசெஷா ராஜேந்திர மகா பூதேஷு பஞ்ச ஸூ தச இந்த்ரியாண யதை தானி சாவி சேஷாணி மைதில மனஷ
ஷோடசமி தயா ஹூர தயா தமகதி சிந்தகா -என்று
மோஷ தர்மத்திலே யாஞ்ஞ்வல்க ஜனக சம்வாதத்திலே சொல்லப் பட்டது –
மிதிலா தேச மன்னன் ஜனகரை கர்மத்தால் சித்தி அடைந்தார்- என்று கிருஷ்ணனே கொண்டாடுகிறான் ஸ்ரீ கீதையில் –
ஞானம்–வேதாந்தம் -/ அனுபவம் அருளிச் செயல் / அனுஷ்டானம் ரஹஸ்ய த்ரயம் –மூன்றுமே வேண்டுமே
-ஆழ்வார்கள் நேராக திருமந்திரம் சொல்லாமல் நானும் சொன்னேன் –நீங்களும் நமோ நாராயணா சொல்லுமின் என்பர்
அவ்யக்தம் -மஹான் -அஹங்காரம் பிருத்வி வாயு -பூதங்கள் -பஞ்சமம் –ஆகிய எட்டும் -/விகாரங்கள் சொல்கிறேன் கேள் மே ஸ்ருணு -ஜனக அரசன் இடம்
–பஞ்ச ஞான இந்திரியங்கள் /கர்ம பஞ்ச இந்திரியங்கள் /மனஸ் சப்தாதிகள் –ஆகிய -16-/

அப்படியே
யம சுருதியிலும்
மநோ புத்திர ஹன்காரகா நிலாகா நிஜலானி பூ ஏதா பிரகருதய ச
தவஷ்டௌ விகாராஷ ஷோட சாபரே சரோதரா ஷிரசநாக ராண தவக ச சங்கல்ப
ஏவ ச சப்த ரூப ரச ஸ்பர்ச கந்த தவக பாணி பாயவ உபசதபாதாவிதி ச விகாரா ஷா ஷோடஸ சம்ருதா -என்று சொல்லப் பட்டது –
இந்த ஸ்ம்ருதியில் பிரக்ருதிகளிலே பரிகணிகையாலும்
பிரதமத்தில் எடுக்கையாலும் மந்த வயதையாலே மனஸ் என்று பிரதானத்வம் சொல்லப் படுகிறது –
மனஸ் சப்தம் பிரக்ருதியை குறிக்கும் இங்கு என்றபடி –இதுவும் எட்டு /-16-காட்டி /கடைசிலேயில் சங்கல்பம் என்றது மனசை சொன்னபடி –
சங்கல்ப சப்தத்தாலே தத் காரணமான மனஸ் லஷிக்கப் படுகிறது என்று ஸூ பால உபநிஷத்தில் வ்யாக்யானத்தில்
சுருதி பிரகாசராலே வியாக்யானம் ஆயிற்று
இப்படி இதிஹாசாதிகளிலே சொல்லப் படுகையாலே
அஷ்டௌ பிரக்ருதய என்கிற ஸ்ருதிக்கு
பூதாத தந்மாத்ரா உத்பத்தி பஷத்தில் விரோத அபாவம் ஸூ ஸ்பஷ்டம் -விரோதம் இல்லை என்றவாறு –

தவசா பீஜ மிவா வருதம-என்கிற திருஷ்டாந்த பலத்தாலே
தவிக்கில்லாத பீஜத்துக்கு அங்குர சக்தி இல்லாதவோ பாதி
ஆவாரகத்தை ஒழிந்த போது உத்தர கார்ய சக்தி இல்லை என்று தோற்றுகையாலும்
காரண குணத்தை ஒழிய உத்தர உத்தர விசேஷங்களிலே
ஆத யாத யஸ்ய குணா நேதா நாப நோதிச பர பர -என்று ஸ்வ விசேஷத்துக்கு
சொல்லுகிற குணாதிசயம் கூடாமையாலும்
ஆகாசம் சப்த மாத்ரனது ஸ்பர்ச மாதரம் சமாவிசத ரூபம் ததைவா விசா தசசப ஸ்பர்ச குணா யு பௌ
சப்த ஸ்பர்ச ரூபஞ்ச ரச மாதரம் சமா விசன தஸ்மாத் சதுர்குணாஹயாபோ விசேஷா சசேந்த்ரிய க்ரஹா –
என்கிற புராண வசனங்களின் யுடைய ஆனுகுண்யத்துக்காகவும்

பீஜம் –தோல் / ஆவரணம் தோல் -பஜ்ஜி -கடலை மாவில் தோய்த்து -தன்மாத்ரைக்கு மூடி தோல் எது -/தன்மாத்ரையில் இருந்து தன்மாத்திரை –
பிருத்விக்கு கந்தம் மூடி / சப்த தன்மாத்திரை மூடி ஆவரித்து பீஜம் உருவாகும் சக்தி கொடுக்கும் -குணம் கொடுக்கும் பூதங்களுக்கு -அங்குரிக்கும் சக்தி வேண்டுமே –

தேபய சதநமா தரே பயோ யதா சங்கய மேக தவதரி சது பஞ்சப்யோ பூதானா யாகாசா நிலாநல சலிலாவ நிருபாணி பஞ்ச ஜாயந்தே -என்று
இதில் அதிக்ருதனான சாங்க்ய வாசஸ்பதி சொல்லுகையாலும்
கார்ய உத்பாதங்களான தத்வங்கள் ஸ்வ ஸ்வ காரண ஆவ்ருத்தங்களாய்க் கொண்டு
உத்பாதிக்கிறது என்று சொல்ல வேணும் என்று தத்வ த்ரய விவரணத்திலே ஆச்சான் பிள்ளை அருளிச் செய்கையாலும்

பிரதாந தத்வ உத்போதம் மகா நதம தத் சமா வருணோத -ஸ்ரீ விஷ்ணு புராணம்-என்றும்
யதா பரதா நேன மகான மஹதா ச ததாவ்ருத -என்றும்
சப்த மாதரம் ததாகாசம பூதாதிச சசமா வருணோத -என்றும்
ஆகாசம் சப்த மாத்ரந்து ஸ்பர்ச மாதரம் சமா வருணோத -என்றும்
ஸ்பர்ச மாதரஸ்து வைவாயூ ரூப மாதரம் சமா வருணோத -என்றும்
ரச மாத்ராணி சாமபாமாசி ரூப மாதரம் சமா வருணோத -என்றும்
ஸ்ரீ பராசர பகவானாலே உக்தம் ஆகையாலும்
முன்புத்தை தன மாத்ரைகளோடு கூட்டிக் கொண்டு
உத்தர உத்தர தன மாத்ரைகள் ஸ்வ விசேஷங்களைப் பிறப்பிக்கையாலே-என்று
இவர் தாமே மேலே அருளிச் செய்கையாலும் ஆவரண க்ரமம் கொள்ள வேணும்

அப்படியே பூர்வ பாவ நியமத்தைப் பற்ற ஸ்பர்சாதி தன மாத்ரைகளுக்கு ஸ்வ ஸ்வ விசேஷங்களை
உத்பாதிக்கும் அளவில் ஸ்வ ஸ்வ பூர்வ பூர்வ சஹாயத் வமும் கொள்ள வேணும்
அதாவது பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும்
சப்த தந்மாத்ரையை பூதாதி ஆவரிக்கும்
இதில் நின்றும் ஆகாசம் பிறக்கும்
அநந்தரம் இந்த சப்த தந்மாத்ரையில் நின்றும் ஸ்பர்ச தன மாதரை பிறக்கும்
ஸ்பர்ச தன மாதரை சப்த தன மாத்ரையை ஆவரிக்கும்
இப்படி சப்த தன்மாத்ரா வருதையாய் ஆகாசத்தை சகாயமாய் யுடைத்தான
ஸ்பர்ச தனமாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும்
இந்த ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் ரூப தந்மாத்ரை பிறக்கும்
ரூப தந்மாத்ரையை ஸ்பர்ச தந்மாத்ரை ஆவரிக்கும்
இப்படி ஸ்பர்ச தன்மாத்ரா வருதையாய் வாயுவை சகாயமாக யுடைத்தான
ரூப தந்மாத்ரையில் நின்றும் தேஜஸ் ஸூ பிறக்கும்
இந்த ரூப தந்மாத்ரையில் நின்றும் ரச தந்மாத்ரை பிறக்கும்
ரச தந்மாத்ரையை ரூப தந்மாத்ரை ஆவரிக்கும்
இப்படி ரூப தன்மாத்ரையாய் வருதையாய் தேஜசைசகாயமாக யுடைத்தான ரச தன்மாத்ரையில்நின்றும் அப்பு பிறக்கும்
இந்த ரச தன மாத்ரையில் நின்றும் கந்த தன மாதரை பிறக்கும்
கந்த தந்மாத்ரையை ரச தந்மாத்ரை ஆவரிக்கும்
இப்படி ரச தனமாத்ரையாய் வருதையாய் அப்பை சகாயமாய் யுடசித்தான கந்த மாத்ரையில் நின்றும் பிருத்வி பிறக்கும் என்கை
சப்த தந்மாத்ரா வருத்தமாய் ஆகாசத்தை சஹாயமாக யுடைத்தான
ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும் என்று தொடங்கிச் சொன்ன விசேஷ உத்பத்தியில் க்ரமம்
பூதாத தன்மாத்ரம் உத்பத்தி பஷத்துக்கும் ஒக்கும்
பூர்வ பூர்வ பூதத்தில் நின்றும் உத்தர உத்தர தந்மாத்ரா உத்பத்தி
ஆகிற இது விசேஷம் -இது தத்வ த்ரய விவரணத்தில்
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த க்ரமம் –

ஒன்றை ஓன்று ஆவரிக்கும் -இரண்டையும் ஆவரிக்கும் -எதன் சகாயம் ஏத்துக் கொள்ளும் இதற்கும் இரண்டு நிர்வாகம் –
-அந்த தன்மாத்திரை அதன் விஷேகமான பூதம் இரண்டையும் -என்றவாறு -முன் உள்ள தன்மாத்திரை
பூதாதி -சப்தத்தையும் ஆகாசத்தையும் ஆவரிக்கும் –
தன்மாத்திரை அதன் விசேஷம் படைக்கும் போது தன பூதம் சகாயத்தை ஏத்துக் கொள்ளும்
முன் உள்ள பூத ஸஹாயமா -தன விசேஷமான பூதம் ஸஹாயமா -என்று கொண்டு இரண்டு பக்ஷங்கள்-

இங்கன் அன்றிக்கே தத்வ நிரூபணத்தில்-ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்- அருளிச் செய்ததும் ஒரு க்ரமம் யுண்டு –
அதாவது பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும்
சப்த தன்மாத்ரையில் நின்றும் அதனுடைய ஸ்தூல அவஸ்தையான ஆகாசம் பிறக்கும்
சப்த தன்மாத்ரையும் ஆகாசத்தையும் பூதாதி ஆவரிக்கும்
இப்படி பூதாதாயா வருதமாய் ஸ்தூல ஆகாச சஹகருதமாய்க் கொண்டு விக்ருதமான சப்த தன்மாத்ரையில் நின்றும் ஸ்பர்ச தந்மாத்ரை பிறக்கும் –
அதில் நின்றும் ஸ்பர்ச குணகமான வாயு பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான சப்த தந்மாத்ரை ஆவரிக்கும்
சப்த தன்மாத்ரா வருதமாய் வாயு சஹ கருதமாய் விகரித்த ஸ்பர்ச தன்மாத்ரத்தில் நின்றும் ரூப தந்மாத்ரை பிறக்கும்
அதில் நின்றும் ரூப குணகமான தேஜஸ் ஸூ பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான ஸ்பர்ச தந்மாத்ரை ஆவரிக்கும்
இத்தாலே ஆவ்ருதமாய் தேசச சஹ க்ருதமாய் விகரித்த ரூப தன்மாத்ரையில் நின்றும் ரச தந்மாத்ரை பிறக்கும்
அதில் நின்றும் ரச குணகமான ஜலம் பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான ரூப தந்மாத்ரை ஆவரிக்கும்
இத்தாலே ஆவ்ருதமாய் அம்பா சஹ கிருதமாய்க் கொண்டு விகரித்த ரச தன்மாத்ரையில் நின்றும்
கந்த தன்மாத்ரம் பிறக்கும்
அதில் நின்றும் கந்த குணகமான பிருத்வி பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான ரச தந்மாத்ரை ஆவரிக்கும் -என்கை
இதில் முற்பட்ட க்ரமத்திலே ஸ்பர்ச தன்மாத்ராதி சதுஷ்டயத்துக்கு
ஸ்வ ஸ்வ விசேஷ உத்பாதனத்தில்
பூர்வ பூர்வ பூத சஹாயத்வம் சொல்லப் பட்டது
பிற்பட்ட க்ரமத்தில் பூர்வ பூர்வ தன்மாத்ரத்துக்கு உத்தர உத்தர தன்மாத்ரம்
உத்பாதனத்தில் ஸ்வ ஸ்வ விசேஷ சஹாயத்வம் சொல்லப் பட்டது
ஆகையால் அன்யோன்ய விரோதம் இல்லை-

ஓர் ஒன்றிலே இரண்டும் அனுகதமே யாகிலும் இரண்டும் அபேஷிதம் ஆகையாலே
ஆவரண கதனத்திலும் பூர்வ பூர்வ தன்மாத்ரம் உத்தர உத்தர தன்மாத்ரதையும் தத் விசேஷத்தையும்
ஆவரிக்கும் என்று ஜீயர் அருளிச் செய்கையாலும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே
சப்த மாதரம் ததாகாசம் பூதாதிசச சமா வருணோத -என்ற விதுக்கு
சப்த மாதரம் -சப்த தன்மாத்ரம் ததாகாசம் ஸ்தூலா காசஞ்ச ச பூதாதி ரா வருணோத
யேதன பூர்வ பூர்வ தன்மாத்ரம் உத்தர உத்தர தன்மாத்ரம் தத் விசேஷஞ்ச வ்ருணோதிதி தர்சிதமே -என்று
பிள்ளை எங்கள் ஆழ்வான் வியாக்யானம் பண்ணுகையாலும்
தத்வ விவரணத்தில்
தன்மாத்ரத்துக்கு ஆவரணம் சொன்னவோபாதி தத் விசேஷத்துக்கு ஆவரணம் சொல்லிற்று இல்லை யாகிலும்
அது உப லஷணமாம் இத்தனை
அல்லாத போது அவ்விடம் தன்னில் பூதாத் தன்மாத்ரா உத்பத்தி சொல்லவும் போகாது
ஆகையால் இரண்டும் கொள்ள வேணும் –

தத்வ நிரூபணத்தில் தன்மாத்ரா தத் விசேஷங்கள் இரண்டுக்கும் ஆவரணம் சொல்லுகிற அளவில்
இரண்டையும் சேர்த்துப் பிடித்துச் சொல்லப் பட்டதே யாகிலும்
விசேஷ உத்பத்திக்கு முன்பே தன்மாத்ரத்துக்கு ஆவரணம் கொள்ள வேணும்-
பூநிலாய ஐந்துமாய் –சம காலத்தில் ஆவரித்தால் குணம் கொடுக்காதே -தன்மாத்திரத்தை ஆவரித்து பூதத்தை ஆவரிக்கும்
த்வகில்லாத பீஜத்துக்கு அங்குர சக்தி இல்லாதாப் போலே
ஆவாரகத்தை ஒழிந்த போது உத்தர கார்ய சக்தி இல்லை என்னும் இடம் கீழே சொல்லப் பட்டது இ றே-

இப்படி பூத தன்மாத்ர சிருஷ்டி சொல்லுகிற இடத்தில் ஆவரண க்ரமம் வக்தவ்யமாய் இருக்கச் செய்தேயும்
அருளிச் செய்யாது ஒழிந்தது அபேஷிதம் அல்லாமை அன்று
சங்கோசேன உத்பத்தி க்ரமத்தை அருளிச் செய்தார் இத்தனை
பெரிய வாச்சான் பிள்ளையும் இப்படி இ றே அருளிச் செய்தது-

——————————————

சூர்ணிகை -104-

ஆக பூத தன்மாத்ர உத்பத்தி க்ரமம் அருளிச் செய்தார் கீழ்
அதில் தன்மாத்ரங்கள் தான் எவை -என்கிற சங்கையில்
அருளிச் செய்கிறார் –

தன மாத்ரங்கள் ஆவன
பூதங்களின் யுடைய
சூஷ்ம அவஸ்தைகள் –

அதாவது -தஸ்மிம் சதஸ் மிம்ச்து தன்மாத்ரம் தேன தன்மாத்ரா ஸ்ம்ருதா
தன்மாத்ராண்யா விசேஷாணி அவி சேஷாஸ் ததோஹித
ந சாந்தா நாபி கோராச்தே ந மூடாச்ச விசேஷிண-என்று
சாந்தத்வ கோரத்வ மூடத்வ லஷணமான விசேஷங்களை
யுடைத்து அல்லாத
சப்தாதி மாத்ரத்தை குணமாக யுடைத்தாய் இருக்கிற ஆகாசாதி பூத சூஷ்மங்கள் –
இது மாத்திரம் என்பதையே -தன்மாத்ரம்-என்கிறது -பூதமாக விரிந்த பின்பே மற்றவை வரும் –
அகஸ்திய பிராதா -என்பது போலே -மாமான் மகளே போலே -அது மாத்திரம் என்கிற பெயரும் இதுக்கு -குணம் மட்டுமே இருக்கும் -சப்தம் மாத்திரம் ஒன்றில் இத்யாதி –
அதின் இடம் அதுவே இருக்கும் என்று சொல்ல வேண்டுமோ -ஆஸ்ரயம் -திரவ்யம் சப்தம் குணம் —-த்ரவ்யம் தான் ஆவரிக்கும் -ஆவரிக்கும் பொழுது குணத்தை கொடுக்கும்-
ஆகாசம் -மூடம் -அனுகூலமோ பிரதிகூலமோ இல்லையே /வாயு அக்னி கோருங்கள் -பிரதிகூலங்கள் / தண்ணீர் பிருத்வி அனுகூலங்கள் சாந்தம் –
சாந்தத்வம் மூடத்தவம் கோரத்வம் இதுவும் குணங்கள் -பூதங்கள் த்ரவ்யம் –
சத்வ குணத்தால் சாந்தித்வம் -தமோ குணத்தால் மூடத்தவம் -ரஜோ குணத்தால் கோரத்வம் –

சாந்தத்வம் ஆவது -அனுகூல வேத நீயத்வம்
கோரத்மவாது -பிரதிகூல வேத நீயத்வம்
மூடத்வமாவது -உதாசீன வேத நீயத்வம்
அதில் ஸ்வ பாவமே சாந்தங்களாய் இருக்கும் -பூமியும் ஜலமும் –
கோரங்களாய் இருக்கும்–தேஜஸ் ஸூம் வாயுவும்
மூடமாய் இருக்கும் -ஆகாசம்
-மேளனத்தாலே-கலப்படம் – எல்லா பூதங்களும் சாந்தவ கோரத்வ மூடத்வங்களை யுடையனவாய் இருக்கும்-பஞ்சீகரணத்தாலே
தன்மாத்ரைகளுக்கு இந்த சாந்தத்வாதி விசேஷம் இல்லாமையாலே அவை அவிவிசேஷங்கள் என்று சொல்லப் படுகின்றன
ஆகையால் தன்மாத்ரைகள் என்றும் அவிவிசேஷங்கள் என்றும் பர்யாயம்
அதில் அபி யுக்தரான யாதவ பிரகாசாதிகளும்
தன மாத்ராண்யா விசேஷா இதய நர்த்தாந்தரம்
சாந்தவ கோரத்வ மூடத்வ மிதி தரயோ விசேஷாஸ் தரை குண்யாத் மானச தேஷா மனுத்பவாத்
சூஷ்ம ஆகாசம் விசேஷ லஷணம் பவதி
தேன சப்த தன்மாத்ரம் உச்யதே
ஏவம் சூஷ்மோ வாயுஸ் சூஷ்மம் தேஜஸ் சூஷ்மா ஆபஸ் சூஷ்மா பிருத்வி -என்று சொல்லி வைத்தார்கள் இறே
ந அர்த்தஅந்தரம் -வேறு பொருள் இல்லாமல் ஒரே பொருளை குறிக்கும் அவிசேஷம் தன்மாத்திரை –
முக்குணங்களை ஸ்வரூபமாக உள்ள சாந்தத்வம் கோரத்வம் மூடத்தவம் உண்டாகாதாகையாலே-
பிரகிருதி சம்பவம் தானே இவை -m -உள்ளே ஒளிந்து இருக்கும் நீர் பூத்த நெருப்பு போலே உத்பன்னமாக தெரியாது-
சூஷ்மம் -அவஸ்தைகள் போலே -அவை உத்பவித்தது ஸ்தூலமாக தெரியும் பூதங்களில் –

ஆக த்ரிவித அஹங்காரத்திலும் வைத்துக் கொண்டு
சாத்விக அஹங்காரத்தில் நின்றும் ஏகாதச இந்திரியங்களும்
தாமச அஹங்காரத்தில்நின்றும் பூதத் தன்மாத்ரைகளும்
உத்பன்னமாம் க்ரமம் சொல்லி நின்றது-

——————————————————————-

சூர்ணிகை -105-

இனி ராஜஸ் அஹன்காரத்தின் கார்யம் சொல்லுகிறது –

மற்றை இரண்டு
அஹங்காரமும்
ஸ்வ கார்யங்களைப் பிறப்பிக்கும்
ராஜச அஹங்காரம்
சஹகாரியாய்
இருக்கும் –

அதாவது
சதவிக தாமச அஹன்காரங்கள் இரண்டும் வைகார்யங்களை
உத்பாதிக்கும் போது
பீஜத்தின் யுடைய அங்குரத்துக்கு ஜலம் போலவும்–முளை விட நீர் வேணும்
அக்னியினுடைய ஜலனத்துக்கு வாயு போலவும்–ஜ்வலிக்க வாயு வேண்டுமே –
ராஜச அஹங்காரம் சஹ காரியாய் இருக்கும் -என்கை –

இது சஹாகரிக்கை யாவது ரஜ ப்ரவர்த தகம தத்ர -தூண்டு கோல் -போலே என்கிறபடியே
இவற்றில் இந்த்ரிய ஹேதுவான சத்வ அம்சத்துக்கும்–சாத்விக அகங்கார காரியங்கள் தானே
பூத ஹேதுவான தமோ அம்சத்துக்கும்
சல ஸ்வ பாவமான ராஜச ஸூ பிரேரகமாய்க் கொண்டு பிரவர்த்திப்பிக்கை -நின்றவா நில்லா நெஞ்சு -போலே சல சல-ஸ்வ பாவம் -ரஜோ குணத்துக்கு –

————————————————

சூர்ணிகை -106-

இப்படி சாத்விக தாமச அஹன்காரங்களுக்கு சாதாரண சஹாகாரியை அருளிச் செய்தார் கீழ்
அநந்தரம்
சாத்விக அஹங்காரத்துக்கு அசாதாராணாமாய் இருப்பன சில
சஹகாரி விசேஷங்களை அருளிச் செய்கிறார் –
இந்திரியங்கள் சப்தாதிகளை கிரஹிக்க வேண்டுமே –அதனால் சஹகாரிகளாக -கொள்ளும் சப்தம் -காது
ஸ்பர்சம் தோலுக்கு /இத்யாதி அடைவே –
த்ரவ்யம் தானே சஹகாரி ஆகும் அதனால் தன்மாத்திரைகளை சஹகாரியாக கொள்ளும்

சாத்விக அஹங்காரம்
சப்த தந்மாத்ராதி பஞ்சகத்தையும்
அடைவே சஹகாரியாய் கொண்டு
ச்ரோத்ராதி ஞான இந்த்ரியங்கள்
ஐந்தையும் சிருஷ்டிக்கும்
தத சஹ க்ருதமாய்க் கொண்டு
வாகாதி கர்ம இந்த்ரியங்கள்
ஐந்தையும் சிருஷ்டிக்கும்
இவற்றை ஒழிய தானே
மனசை சிருஷ்டிக்கும்
என்றும் சொல்லுவார்கள் –

அதாவது
சாத்விக அஹங்காரம் இந்த்ரியங்களை சிருஷ்டிக்கும் அளவில் இவற்றின் யுடைய விஷய பிரதி நியமத்துக்காக–கண் பார்க்கவும் -காது கேட்கவும் -என்றவாறு
சப்த தன்மாத்ரையை சஹகாரியாகக் கொண்டு ச்ரோத்ரத்தையும்
ஸ்பர்ச தன்மாத்ரையை சஹகாரியாகக் கொண்டு தவக் இந்த்ரியத்தையும்
ரூப தன்மாத்ரையை சஹாகாரியாகக் கொண்டு சஷூஸ் சையும்
ரச தன்மாத்ரையை சஹாகாரியாகக் கொண்டு ஜிஹ்வையையும்
கந்த தன்மாத்ரையை சஹாகாரியாகக் கொண்டு க்ராண இந்த்ரியத்தையும்
சிருஷ்டிக்கும்
இப்படி சப்த தன்மாத்ராதி பஞ்சகத்தையும் அடைவே சஹகாரியாகக் கொண்டு
ச்ரோத்ராதி ஞான இந்த்ரியங்களையும் சிருஷ்டித்த அநந்தரம்
ச்ரோத்ர க்ராஹ்யமான சப்த விஷயமாயும்
தவக் இந்த்ரிய க்ராஹ்யமான ஸ்பர்ச விஷயமாயும்
சஷூர் க்ராஹ்யமான ரூபத்தில் ப்ரவ்ருத்தி ஹேதுவாயும்
ரசனா விஷய ரச ஆச்ரயச்மான ஜலத்தின் யுடைய நிசசரண ஹேதுவாயும்
க்ராண விஷய கந்த ஆச்ரயமான பிருத்வி அம்சமான அந்நாதிகளில்
ருஷீ ஷோதர்ச சாஜன ஹேதுவாயும்-
இப்படி ஞான இந்த்ரிய பஞ்சக சேஷமாய்க் கொண்டு
சப்தாதி பஞ்சகத்தையும் ஒட்டி இருக்கும்
கர்ம இந்த்ரிய பஞ்சகத்தை சிருஷ்டிக்கும் அளவில்
ச்ரோத்ர சஹ கருதமாய்க் கொண்டு வாக்கையும்
த்வக் சஹ கருதமாய்க் கொண்டுபாணியையும்
சஷூஸ் சஹ கருதமாய்க் கொண்டுபாதத்தை
ஜிஹ்வா சஹ கருதமாய்க் கொண்டு உபசஸ்தத்தையும்
க்ர்ணா சஹ கருதமாய்க் கொண்டு பாயுவையும்
சிருஷ்டித்து
ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் கர்ம இந்த்ரியங்களுக்கும் சஹகாரியாய்
உபாயதமகமான மனசை சஹகாரி நிரபேஷமாக தானே
சிருஷ்டிக்கும் என்று தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்கை-

இது தன்னை
ஸ்ரீ விஷ்ணு புராண வ்யாக்யானத்தில்
அயமதரே நதரிய சிருஷ்டிகரம் வைகாரிக அஹங்காரத க்ரமேண சப்த தன்மாத்ராதி பஞ்சக சஹாயாத க்ரமேண
ச்ரோத்ராதி ஞான இந்த்ரிய பஞ்சகச்ய சிருஷ்டி தசமாதேவ தத் சஹாயாத்-
வாகாதி கர்மேந்த்ரிய பஞ்சகச்ய அசஹாயாதது தஸ்மான் மனச்ச ஸ்ருஷ்டிருதி -என்று பிள்ளை எங்கள் ஆழ்வானும் அருளிச் செய்தார்-
சப்தாதிகளுக்கு ஞான இந்திரியங்கள் சஹகாரி -கர்ம இந்திரியங்களுக்கு ஞான இந்திரியங்கள் சஹகாரிகள் என்றவாறு –

———————————-

சூர்ணிகை -107-

அநந்தரம் இப்படி தாம் அருளிச் செய்த இந்த்ரிய உத்பத்தி க்ரமத்துக்கு விரோதி பஷத்தை
நிரசிக்கைக்காக அத்தை யுத்ஷேபிக்கிறார் –

சிலர்
இந்த்ரியங்களில்
சிலவற்றை
பூத கார்யம்
என்றார்கள் –

அதாவது -சிலர் -அவர்கள் ஆகிறார் க்ரணாதிகளான இந்த்ரியங்களை–ஞான இந்திரியங்களை –
பிருதிவ்யாதி பூத காரயமாகவே கொள்ளும்
நையாயிகாதிகள்
அவர்கள் தாம் ஆனுமாநிகர் ஆகையாலே
அனுமானத்தாலே இ றே அர்த்தத்தை சாதிப்பது-

————————————————

சூர்ணிகை -108-

அத்தை காலா தயயாபதேசத்தாலே தூஷிக்கிறார்

அது
சாஸ்திர
விருத்தம்

அதாவது
இந்த்ரியங்களை பூத கார்யம் என்று சொல்வது
இவற்றை ஆகங்காரி களாக சொல்லுகிற
இதிஹாச புராணாதிகளுக்கு விருத்தம் -என்கை-
அஹங்காரிகளில் இருந்து உத்பத்தி -ஆகங்காரிகள்-

———————————————

சூர்ணிகை -109-

அது என் என்ன மோஷ தர்மத்திலே –
சப்த ச்ரோத்ரம ததா காதி த்ரய ஆகாசம் சம்பவம் வாயோ ஸ்பர்சம்
ததா சேஷ்டா தவக் சைவ தரிதயம் சம்ருதம் ரூபம் சஷூஸ்
ததா வயகதி சதரிதயம் தைஜ உச்யதே ரச கலேதசச ஜிஹ்வா ச தரயோ ஜலகுணா சம்ருதா
கராணம் க்ரேயம சரீரஞ்ச தே து பூமிகுணா சம்ருதா -என்று சொல்லுகையாலே
இதிஹாசாதிகள் தன்னிலேயும் இந்த்ரியங்களுக்கு பௌதிகத்வம் சொல்லப் படுகையாலே
பூதங்கள் இவற்றுக்கு காரணமாக வேணுமே -என்ன –

பூதங்கள்
ஆப்யாயங்கள்
இத்தனை –

அதாவது
இதிஹாசாதிகளில் இந்த்ரியங்களுக்குச் சொன்ன பௌதிகத்வம் பூதங்களால் யுண்டான ஆபயாய நமாத்ரத்தைப் பற்ற வாகையாலே
இந்த்ரியங்களுக்கு பூதங்கள் ஆபயாயங்கள் இத்தனை
காரணங்கள் அன்று -என்கை –

ஆப்யாயகத்வம் ஆவது -போஷகத்வம்
இன்னமும் அஹங்காரத்தை இந்த்ரியங்களுக்கு நிமித்த காரணமாகவும்
இவற்றை உபாதான காரணமாகவும் சொல்லுகிற குத்ருஷ்டி மதம் யுண்டு இறே-இரண்டு வித பிரமாணங்களை சமன்வயப்படுத்தும் இத்தால் என்பார்கள் இவர்கள்
அஹங்கார சயே நதரியாணி பாரதி நிமித்தத்த மேவ
பூதானா மேவ உபாதானத்வம் அநனமயம் ஹி சோமாய மன
ஆபோமைய பராணசதேஜோ மயீ வாக இதி சருதேரித கேசிதா ஹூ தத் யுக்தம்
அஹங்கார சயைவோ பாதா நதவேபி பூதானா மாபயாயாக்தவே நாபி ததா நிர்தே சோப பத்தே -என்று
பிள்ளை எங்கள் ஆழ்வான் எடுத்துக் கழித்தது அதுவும்
மயம் வந்தாலே உபாதானம் ஆகும் ஸ்வர்ண மயம் ஆபரணம் அன்னமயம் மனாஸ் ஆபோ மயம் பிராண தேஜோ மயம் வாக்கு –

இந்த்ரியங்களில் சிலவற்றை என்று தொடங்கிஇவர் அருளிச் செய்த க்ரமம் தன்னாலே பிரதிஷிபதம்
அப்போதைக்கு -அது சாஸ்திர விருத்தம் -என்றது
ஏகாதசம மனசசாதர தேவா வைகாரி காச சம்ருதா -இத்யாதிகளாலே
இவற்றை சாத்விக அஹங்கார காரயமாகவே சொல்லுகிற புராணாதிகளுக்கு விருத்தம் -என்கை-
புராணாதிகளைப் பற்ற
அன்னமயம் ஹி சோமாய மன -இத்யாதி ஸ்ருதிக்கு பிராபல்யம் யுண்டே யாகிலும்
இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுபபரு மஹயதே-என்கையாலே
உப பருமண அனுகூலமாக அதுக்கு அர்த்தம் கொள்ள வேணும் என்று கருத்து –

ஆனால் உப பருமஹணங்கள் தன்னிலேயும் பௌதிகத்வம் சொல்லுகையாலே
இவற்றுக்கு பூதங்கள் காரணமாய் அன்றோ தோற்றுகிறது
என்ன -பூதங்கள் ஆப்யாயங்கள் இத்தனை -என்று நிர்வாஹம் –
க்ரணாதிகளான இந்திரியங்களுக்கு பிருத்வ்யாதி பூதங்களால் யுண்டான ஆபயாய நம சுருதி ச்ம்ருதிகளிலே பிரசித்தம்
இது தான் ஸூபால உபநிஷத் வ்யாக்யானத்திலே
க்ர்ணா தீ நாமி நாதரியாணாம் ஹி பிருதிவ்யாதி பூதை
ராப்யாயநம சுருதி ச்ம்ருதிஷூ பிரசித்தம்
அன்னமயம் ஹி சோமய மன ஆபோமய பிராண்ஸ் தேஜோமயீ
வாக் ச்ரோதரம் நபோ கராணமுக்தம் பிருதிவ்யா இதயாரபய வாயவா தமகம
ஸ்பர்ச நமாம நந்தி ன்பே சரோதரஞ்ச தன்மயம் இத்யாதிஷூ –
என்று சுருதி பிரகாசகராலே அபிஹிதம் ஆயிற்று

இப்படி இந்த்ரியங்களுக்கு பூதங்கள் எப்போதும் ஆப்யகங்களாய் இருக்கும் என்னும் இடம்
மோஷ தர்மத்திலே ப்ருகு பரத்வாஜ சம்வாதத்திலே
ஆபயாய ந்தே ச நித்யம் தாதவச தைசது பஞ்சாபி -என்று ஸூ வ்யக்தமாக சொல்லப் பட்டது –

ஆகையால் பூதங்கள் இந்த்ரியங்களுக்கு ஆப்யாயகங்கள் இத்தனை காரணங்கள் அன்று என்றது ஆயிற்று-

——————————————————

சூர்ணிகை -110-

ஆக இப்படி மஹதாதி பதார்த்தங்களின் யுடைய உத்பத்தி க்ரமம் அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –
இவற்றைக் கொண்டு ஈஸ்வரன் அண்ட ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும்படியை அருளிச் செய்கிறார் -மேல்

இவை கூடினால் அல்லது
கார்யகரம் அல்லாமையாலே
மண்ணையும் மணலையும் நீரையும்
சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிக்
சுவர் இடுவாரைப் போலே
ஈஸ்வரன் இவற்றை எல்லாம்
தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி
அதுக்கு உள்ளே
சதுர்முகனை சிருஷ்டித்து அருளும் –
பஞ்சீ கரணம் வரை சமஷ்டி ஸ்ருஷ்ட்டி -அப்புறம் வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி /
அதாவது –
இவை கூடினால் அல்லது கார்யகரம் அல்லாமையாலே –
நாநா வாயா பருதக் பூதாஸ் ததஸ தே சம்ஹிதம் விநா
நாசக நுவன பரஜாச ஷர ஷடு மசமாக மயகருதச நாசா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-என்கிறபடியே
சாந்தத்வ கோரத்வ மூடத்வங்களாலே
நாநா சக்தி யுக்தங்களாய் ப்ருதக் பூதங்களாய் -பிரிந்த பூதங்கள் –இருக்கிற
இம் மஹதாதி பதார்த்தங்கள் பரஸ்பர சமஹதம் ஆனால் அல்லது
அண்டரூபமான கார்யத்தை உத்பாதிக்க மாட்டாமையாலே -என்கை-
மண் பானை அரிசி நீர் நெருப்பு காற்று இடைவெளி வேணுமே சாதம் பண்ண -பஞ்ச பூதங்களும் சேர வேண்டுமே –
மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிக் சுவர் இடுவாரைப் போலே –
அதாவது -ப்ருதக் வீர்யங்களாய் ப்ருதக் ஸ்திதங்களாய் இருக்கிற
ம்ருத சிகதா சலிலங்களை-அந்யோந்யம் சேர்த்து
தத் சமுதாயாதமகமான தொரு த்ரவ்யமாகி
பித்தி ரூபமான தொரு கார்யத்தை நிர்மிப்பாரைப் போலே என்கை-அண்ட புத்தி சுவர் என்றபடி –
ஈஸ்வரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி –
அதாவது -ஜகத் ஸ்ருஷ்டாவான ஈஸ்வரன்
சமேதயா நயோ நய சம்யோகம் பரஸ்பர சமாச ரயா
ஏக சங்காத லஷ்யாசச சமபரா பயைகயம சேஷத மஹதாதயோ விசேஷா நதா ஹயண்ட முதபாதயந்திதே -என்கிறபடியே-
இவற்றை எல்லாம் அந்யோந்யம் சம்ஹதமாக்கி இவற்றாலே அண்ட சிருஷ்டியைப் பண்ணி -என்கை –
முன்பே அது அதுக்கு பிரதான குணம் உண்டு ஆவரித்தது குணத்தை புகுத்த -விதை முளைக்க தோல் போலே என்று முன்பே பார்த்தோம்
இங்கு அஞ்சும் கூடணும்–த்ரவ்யங்கள் சேர வேண்டும் பஞ்சீ கரணத்தில் -முன்பு குணத்தை புகுத்திற்று மட்டுமே –
இவ்வண்டத்துக்கு உள்ளே மஹதாதி கார்யங்களை அடையக் காண்கையாலே
மஹதாதி பதார்த்தங்கள் எல்லா வற்றையும் சேர்த்து அண்ட சிருஷ்டியைப் பண்ணினான் என்னும் இடம் ஸூவ்யக்தம் ஆகையாலே
பூதேப யோண்டம் மகா புத்தே பருஹ த்தது தகேசயம் -என்று
பூதங்களில் நின்றும் அண்டம் உத்பன்னமாம் அது உதகத்திலே கிடக்கும் என்று சொன்னதும்
அப ஏவ சசா ஜாதௌ தா ஸூ வீர்யம்பாச ருஜத ததண்டம் பவத தை மம சஹாஸ்ராமசுச சமபரபம் -என்று
அப்புக்களில் நின்றும் அண்டம் உத்பன்னமாம் என்று மனு பகவான் சொன்னதும் பூதாந்தரதுக்கும் உப லஷணம்-பெரிய நீர் படைத்து -அப ஏவ சராஜ்ய-
அதாவது பூர்வ பூதாம்சங்களோடேசம்ஸ்ருஷ்டமுமாய்
பிருத்வியும் தனக்கு உள்ளே கரைந்து கிடக்கிற ஜலத்தில் நின்றும் உத்பன்னமாய்
அதிலே கிடக்கும் -என்றபடி –
ஆபோ நாராயண -நாற்றத்தில் பற்றிய மீன்கள் வாழ அயனத்தை பற்றிய பராங்குச நாயகி துடிக்கவா -செங்கல் வாய் பாய் திருவரங்கத்தாய் –
இப்படி அண்ட சிருஷ்டியை பண்ணும் படியை அருளிச் செய்து
அநந்தரம்
இந்த பாஹ்யமான பூதங்கள் ஆந்தரமான ஆகாசாதிகளாய் பரிணமித்த பின்பு-
அண்டத்துக்கு வெளியே ஆகாசம் -அண்ட ஸ்ருஷ்டிக்கு முன்பே ஆகாசம் உண்டே -ஆகாசம் அண்டத்துக்கு உள்ளும் உண்டே –
அவற்றைக் கொண்டு லோக விபாகங்களைப் பண்ணுகைக்காகவும்
அந்த லோகங்களில் தேவாதி ஜீவ விபாகங்களைப் பண்ணுகைக்காகவும்
இவ்வண்டத்துக்கு உள்ளே பத்தாத்மா சமஷ்டி பூதனான ப்ரஹ்மாவை சிருஷ்டித்து அருளும் படியை அருளிச் செய்கிறார் –
அதுக்கு உள்ளே சதுர்முகனை சிருஷ்டித்து அருளும் -பூவில் நான்முகனைப் படைத்து –என்று
சதுர முகனுக்கு பத்தாத்மா சமஷ்டி பாவமாவது
இவ்வண்டத்துக்கு வேண்டும் காம வசய சேதனா -இவன் சரீரத்தில் யுண்டாய் கிடக்கை-
இப்படி சதுர்முகனை சிருஷ்டித்து இனி மேல் யுண்டான சிருஷ்டி எல்லாம் சத்வாரமாக நின்று செய்வதாக இறே –
ப்ரஹ்மானோ முகமாஸ்ய -வாயில் இருந்து ப்ராஹ்மணர் –நான்முகன் சரீரத்தில் இருந்து பிறக்கும் படி சமஷ்டி ஜீவன் இவனுக்குள் -இருக்குமே

————————————————-

சூர்ணிகை -111-

அது தன்னை தர்சிப்பிக்கைக்காக சமஷ்டி சிருஷ்டியிலும் வ்யஷ்டி சிருஷ்டியிலும்
சர்வேஸ்வரன் செய்யும் க்ரமத்தை அருளிச் செய்கிறார் மேல்

அண்டத்தையும்
அண்ட காரணங்களையும்
தானே யுண்டாக்கும்
அண்டத்துக்கு உட்பட்ட
வஸ்துக்களை
சேதனருக்கு அந்தர்யாமியாய் நின்று
யுண்டாக்கும் –

அண்டத்தையும் அண்ட காரணங்களையும் தானே யுண்டாக்கும் –
அதாவது -சமுதாய கார்யமான அண்டத்தையும்–சமுதாய பதார்த்தங்களின் கார்யம் -சமுதாயமே கார்யம் என்றுமாம் –
தத் காரணமான மஹதாதி பதார்த்தங்களையும்
சத்ய சங்கல்பனான தன்னுடைய அவயவஹித சங்கல்பத்தாலே யுண்டாக்கும் -என்கை –
-நடுவில் எதையும் இடையில் கொள்ளாத -என்றபடி -அவனே உபாயம் பல பிரதான அன்றோ -பக்திக்கும் அவன் தானே பலம் கொடுக்க வேண்டும் –

சோபிதயாய சரீராத சவாத சிசருஷூர் விவிதா பரஜாஅப ஏவ
சசா ஜாதௌ தா ஸூ வீர்யமபாசருஜத ததண்டம் பவத தை மம சஹஸ்ராம சு சம்பரபம் -என்னக் கடவது இ றே –
சதுர்முகாதி சேதனர்களுடைய ஹ்ருதயங்களில் இருந்து –ஸ்ரீ கீதை -15–15 -ஸர்வஸ்ய சாஹம் சன்னிவிஷ்ட்ய –
சங்கல்ப ஞானாதிகளை ஜெநிப்பித்துக் கொண்டு -அண்டாந்த்ர வர்த்திகளான சகலத்தையும் ஸ்ருஷ்டிக்கும்
யாதொரு சத்வ சமூகத்தால் -யாதொரு வாஸ்து ஸ்ருஷ்ட்க்கப்படுகிறதோ அதில் ஈஸ்வரன் காரணமாக இருக்கிறான் -அந்தர்யாமியாக -இருந்து -என்று ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஸ்ருஷ்டிக்கப்பட்ட அனைத்தும் ப்ரஹ்மத்தின் சரீரம் என்றதாயிற்று –
பிரக்ருதியும் இருக்கும் -ஒரு துளி பரிணாமம் அடைந்து சகலமும் -சகல கர்த்தாக்களுக்கும் சரீரீ -சகல சார்தரு சரீரீ -ப்ரஹ்மம் என்றதாயிற்று –

——————————————————————

சூர்ணிகை -112-

ஈஸ்வரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி -என்று
சர்வேஸ்வரன் மஹதாதி பதார்த்தங்களைச் சேர்த்து அண்ட சிருஷ்டியைப் பண்ணும்
என்னும் இவ்வளவு இறே கீழே அருளிச் செய்தது
இப்போது
1–இந்த அண்ட பஹூத்வத்தையும்
2—அவற்றின் யுடைய கட்டளை இருக்கும் படியையும்
3–அவை தான் சர்வேஸ்வரனுக்கு இன்ன விநியோகத்துக்கு உறுப்பு என்னுமத்தையும்
4–அவற்றின் யுடைய பரிணாம பிரகாரத்தையும்
அருளிச் செய்கிறார் –
ஆக நான்கையும் அருளிச் செய்கிறார் –

அண்டங்கள் தான் அநேகங்களாய்
பதினாலு லோகங்களோடே கூடி
ஒன்றுக்கு ஓன்று பதினாறு மடங்கான
ஏழு ஆவரண்ங்களாலும் சூழப் பட்டு
ஈஸ்வரனுக்கு கரீடா க நதுக சத்தா நீயங்களாய்
ஜலபுத புதம் போலே ஏக காலத்திலே
ஸ்ருஷ்டங்களாய் இருக்கும்-

நூறு கோடி யோஜனை -/50-/-60-கோடி யோஜனை என்பர் ஒவ் ஒரு அண்டமும் /மிதந்து கொண்டே இருக்கும் -அப்பு தேஜஸ் -வாயு ஆகாசம் அஹங்காரம் மஹான் தமஸ்–இத்யாதி ஏழு உறைகள் -/ ப்ரஹ்மத்தின் இடம் மிதந்து இருக்கும் -/பரிணாமம் அடையாத ஆகாசம் வெளியில் இருக்கும் -பரிணாமம் அடைந்த ஆகாசம் உள்ளே இருக்கும் –
நீர் குமிழி போலே ஒரே காலத்தில் அனைத்தும் உருவாகும் -பஹஸ்யாம் -சங்கல்பம் அடியாக தானே -நினைத்த உடனே -நடக்கும் –

அண்டங்கள் தான் அநேகங்களாய்-
அண்டா நாம து சஹாஸ்ராணாம் சஹஸ்ராணா யயுதானி ச
ஈத்ருசா நாம ததா தத்ர கோடி கோடி சதாநிச-என்னக் கடவது இ றே–
விஷ்ணு சித்தியம் வியாக்யானம் உண்டு ஸ்ரீ விஷ்ணு புராணத்துக்கு -முதல் அம்சம் ஸ்ருஷ்ட்டி -விவரிக்கும் –
அநேகம் கோடி அண்டங்கள் அந்த பிரக்ருதியில் இருக்கும் -தத்ர -சப்தம் -கடைசி உறை அது தான் -அவ்யக்தம் ஏழாவது உறை தானே –
பதினாலு லோகங்களோடே கூடி –
பதினாலு லோகங்கள் ஆவன -கீழில் அண்ட கபாலத்துக்கு ,மேல் -எண்பத்து மூன்று நூறாயிரத்து ஐம்பதினாயிரம் ,யோஜனை
உயர்த்தி யுடைத்தான கர்ப்போதகத்தின் மேலே–உதகம் தண்ணீர் -கர்ப்ப உதகம் –835000-யோஜனை –
சபததிசது சஹாஸ்ராணாம் தவி ஜோச்சராயோபி கதயதே
தச சஹச்ர மேகைகம பாதாளம் முனி சததம
அதலம் விதலஞ்சைவ நிதலஞ்ச கவசதிமத மகா ககாயம்
ஸூ தலாஞ் சாகாயம
பாதாளாஞ்ச சைவ சபதமம் –என்கிறபடியே
பாதாள லோகம் ஒவ் ஒன்றும் -16000-யோஜனை –ஏழு லோகங்கள் -ஏழாவது பாதாளம் -1-யோஜனை =10மைல் /
ஓர் ஓன்று பதினாலாயிரம் யோஜனத்து அளவும் உயர்தியையும் பரப்பையும் யுடைத்தாய்
தைதய தானவ பனனக ஸூ பாணாதிகள் வர்த்திக்கும் தேசமாய்– தைத்யர்கள் பாம்புகள் கருடன் போன்றோர் வசிக்கும் லோகங்கள்
சுக்ல கருஷண அருணா பீதாச சாககராச சில காஞ்சனா பூமயோயத்ர மைத்ரேய வர பராசாத சோபிதா -என்கிறபடியே
சுக்லங்களாயும் க்ருஷ்ணங்களாயும் அருணங்களாயும் பீதங்களாயும்
வாலுகா மயமான-மண் மயம் – சர்ககரா ரூபங்களாயும் சைலரூபமாயும் பொன்னாயும் இருக்கிற
ஸ்தல விசேஷங்களை யுடையவையாய் விலஷணமான மாளிகைகளாலேயும் ப்ராசாத தோரணங்களாலேயும் அலங்க்ருதமாய்
ச்வர்க்காதிகளிலும் காட்டில் நிரதிசய போக்யமுமாய்
அதலம் என்றும்
விதலம் என்றும்
நிதலம் என்றும்
கபசதிமதம் என்றும் சொல்லப்பட்ட தலாதலம் என்றும்
மஷாதலம் என்றும்
ஸூ தலம் என்றும்
பாதாளம் என்றும்
பேரை யுடைத்தாய் அதா லோகங்கள் ஏழும்
இதுக்கு மேலே எழுபதினாயிரம் யோஜனம் அகலத்தை யுடைத்தாய்
சப்த த்வீப சாகர பர்வதாதி விசிஷ்டமாய்
பாதசாரிகளான மனுஷ்யாதிகள் வர்த்திக்கும் தேசமாய்
பத்மாகாரமான பூலோகமும்
பூ லோகத்துக்கு மேலே ஆதித்யனுக்கு கீழே
நூறாயிரம் யோஜனத்து அளவு உயர்த்தியை யுடைத்தாய்
கந்தர்வாதிகள் வர்த்திக்கும் தேசமான புவர் லோகமும்
ஆதித்யனுக்கு மேலே த்ருவனுக்கு கீழே பதினாலு நூறு ஆயிரம் யோஜனத்து அளவு உயர்த்தியை யுடைத்தாய்
சாதிகாரான க்ரஹ நஷத்ர இந்த்ராதிகள் வர்த்திக்கும் தேசமான ஸ்வர் லோகமும் –
த்ருவனுக்கு மேலே ஒரு கோடி யோஜனத்து அளவும் உயர்த்தியை யுடைத்தாய்
விநி வருத்தாதி காரஸ்து மகாலோக நிவாசின –என்று
நிவ்ருத்த அதிகாரராய் அதிகார அபேஷரான இந்த்ரிராதிகள் வர்த்திக்கும் தேசமான மகா லோகமும்–அதிகாரம் இல்லாமல் ஆசைப்பட்டு இருக்கும் இந்த்ராதிகள் வசிக்கும் மக்கர் லோகம் –
அந்த மகா லோகத்துக்கு மேலே இரண்டு கோடி யோஜனத்து அளவும் உயர்த்தியை யுடையதாய்
ப்ரஹ்ம புத்ரர்களான சனகாதி பரம யோகிகள் வர்த்திக்கும் தேசமான ஜனர் லோகமும்
ஜனர் லோகத்துக்கு மேலே எட்டுக் கோடி யோஜனத்து அளவும் உயர்த்தியை யுடைத்தாய் தபோ லோகமும் –
தேஷாமேஷாம் கேசன ப்ரஹ்ம லோகா ருத்ரஸ் யாந்தே சந்தி ததரைவ லோகா –
விஷ்னே ரநய சநதி லோகா விசாலாச தாமச தான லோகான தானுபாசய வரஜ நதி -என்கிறபடியே
ப்ரஹ்ம விஷ்ணு சிவர்களும்
அவர்களை உபாசித்து தத் பிராப்தி பண்ணினவர்களும்
வர்த்திக்கும் தேசமான சத்ய லோகமும்
ஆக ஊர்த்வாத கடாஹங்களுக்கு நடுவு அறுபது கோடி யோஜனம் அண்டோச்சர்யமாய் இருக்கும்-
ஐம்பது கோடி யோஜனம் அண்டோச்சர்யமாய் இருக்கும் என்பாரும் யுண்டு
அதில் -சூர்யாண்ட கோள யோர்மத்யே கோடய சசயு பஞ்ச விம்சதி -என்கிற
சுக்ர வசனத்தின் படியே
சூர்யனுக்கு மேலே இருபத்தஞ்சு கோடியும்
கீழே இருபத்தஞ்சு கோடியுமாய் இருக்கும்-

இப்படி இருந்துள்ள சதுர்தச புவனங்களோடு கூட
ஒன்றுக்கு ஓன்று பத்து மடங்கான ஏழு ஆவரணங்களாலும் சூழப் பட்டு –
அதாவது
கீழ்ச் சொன்ன பதினாலு லோகத்தையும்
ஏத தண்ட கடா ஹேன திரச சோர்த்த்வம்த சததா கபித தஸ்ய யதா பீஜம் சர்வதோ வை சமாவ்ருதம்-2–7–என்கிறபடியே
திரஸ்ய ஊர்த்வம் குறுக்காயும் உயர்ந்தும் -என்றபடி
உள் வாயில் விளாம தசையை விளாவோடு எங்கும் ஒக்க ஆவரிக்குமா போலே
கோடி யோஜன மானச்து கடாஹச சமய வசதித -என்று
கோடி யோஜனம் எடுப்பம் அவகாசதயா உக்தமான படி
அண்ட கடாஹம் ஆவரித்து நிற்கும்–சைவ புராணம் ஒரு கோடி என்று சொல்லும் -கீழே -50-/-60-கோடி பார்த்தோம்
சாண்ட கடாஹமான இவ்வண்டம்
தசோததா ரேண பயஸா மைதரே யாண்டஞ்ச ததவருதம -என்கிறபடியே
தன்னில் பதிற்று -பத்து – மடங்கு பறந்து இருக்கிற ஜல தத்வத்தாலே ஆவ்ருதமாய் இருக்கும் –
பஞ்ச சதா கோடி விஸ்தார சேய முர்வீ மகா முனே சஹைவாண்ட கடா ஹேன
பூ மண்டலம் பஞ்சா சதகோடி விஸ்தாரமாகச் சொல்வாரும்
பூ மண்டலம் து சதகோடி விஸ்தாரம் சாண்ட கடாஹம் -என்று
ஸ்ரீ வராஹ புராணத்தில் சொல்லுகையாலும்
இப்படி ஸ்கந்த புராணத்திலே சிவ ரஹச்யத்திலே பரக்கச் சொல்லுகையாலும்
மேருவைச் சுற்றும் பஞ்சா சதகோடி விஸ்தாரத்தைக் கொண்டு
பூமியை சத கோடி விஸ்தாரமாகச் சொல்லுவாருமாய் இருக்கும்
இதில் இரண்டது ஒரு மரியாதையை தளமாக்கி அதில் பதிற்று -பத்து – மடங்கு
பெருத்த ஜல தத்வத்தாலே ஆவருதமாய் இருக்கும் என்றபடி-

அண்ட கடாஹத்தைப் பற்ற பதிற்று -பத்து – மடங்கு பெருத்த ஜல தத்வத்தாலே ஆவருதம் என்பாரும் யுண்டு-
இப்படி தசோத்ர மாயக் கொண்டு ஜல தத்தவத்தை தேஜஸ் தத்வம் ஆவரிக்கும்
அப்படியே அத்தை வாயு தத்காம் ஆவரிக்கும்
வாயுவை ஆகாசம் ஆவரிக்கும்
ஆகாசத்தை அஹங்காரம் ஆவரிக்கும்
அஹங்காரத்தை மஹத் தத்வம் ஆவரிக்கும்
அந்த மஹத் தத்தவத்தை அவ்யகதம் ஆவரிக்கும்
தத் அநந்தம் சங்காத் பரமாணம் -என்று அபரிமித பரமாண மான அவ்யத்துக்கு–முடிவில் பெரும் பாழ் அன்றோ -அளவில்லையே என்னில் – ஆவரண தத்வ பிரயுக்தமான
தசோதரத்வம் கூடும்படி எங்கனே என்னில்
ஆயிரத்தில் பத்தும் யுண்டாமா போலே அபரிமித சங்கையில் அதுவும் யுண்டாகையாலெ கூடும்-/

வாரி வஹ நய நிலாக சைஸ ததோ பூதாதி நா பஹி வருதம தச குணைர் அண்டம் பூதாதிர் மஹதா ததா
அவ்யக்த அனாவ்ருதோ ப்ரஹ்ம ந தைசசா வைஸ சஹிதோ
மகான்
ஏபி ராவரணை ரண்டாம் சபதபி பராக்ருதைர் வருதம –1–3-என்கிறபடியே
இப்படி தசோததரங்களான சப்த அவரண்ங்களாலும் சூழப் பட்டு ஈஸ்வரனுக்கு க்ரீடா கனதுக சத்தா நீயங்களாய்-அதாவது
க்ரீடா பரனானபாலனுக்கு கரீட நகங்கள் போலே
க்ரீடார சாநுபு பூஷுவான ஈஸ்வரனுக்கு லீலா உபகரணங்களாய் இருக்கை—
பிராக்ருதமான ஏழு ஆவாரணங்கள் -விளையாட்டு பந்து -பந்தார் விரலி -விபூதி ஒரு கையில் விபூதிமான் ஒரு கையில் –
ஹரே விஹர சி க்ரீடா கன து கைரிவ ஜந்துபி -என்றும்
மோததே பகவான் பூதைர் பாலக கரீட நகைரிவ-என்றும்
சொல்லுகிறபடியே ஈஸ்வரனுக்கு விபூதியாக லீலா உபகரணமாய் இ றே இருப்பது-

ஜலபுதபுதம் போலே ஏக காலத்திலேயே ஸ்ருஷ்டங்களாய் இருக்கும் –
அதாவது
இவ்வண்டங்களை ஈஸ்வரன் சிருஷ்டிக்கும் அளவில் ஓரிரு படையாக இட்டு அகல் எடுக்குமா போலே-அடுக்கு மாடி கட்டடம் போலே இல்லை –
க்ரமத்தில் பரிணமிக்கை அன்றிக்கே
ந க்ரமேண விவ்ருத தமத்த ஜலபுத புதவதசமம் -என்கிறபடியே
நீர் குமுழி போலே ஒருக்காலே உத்பன்னங்களாய் -யென்கையும்
ஏக காலேன சருஜயந்தே -என்கிறபடியே சகல அண்டங்களும்
ஏக காலத்திலேயே உத் பன்னங்களாய் -யென்கையும்-

ஆக –
அண்டங்கள் தான் அநேகங்கள் -என்னும் இடமும்
அவை தான் எல்லாம் ஓன்று போலே இருக்கும் என்னும் இடமும்
சொல்லிற்று ஆயிற்று –
அண்டாந்தர வர்த்திகளில் தான் வாசி உண்டு —

——————————————

சூர்ணிகை -113

பூத பஞ்சகங்களுக்கும் தனித்தனியே
விநியோகங்களைத் தர்சிப்பிக்கிறார் –

பூதங்களில்
ஆகாசம் அவகாச ஹேது
வாயு வஹ நாதி ஹேது
தேஜஸ்ஸூ பஐ நாதி ஹேது –
ஜலம் சேசன பிண்டி கரணாதி ஹேது
பிருத்வி தாரணாதி ஹேது
என்பார்கள்-

அதாவது –
பூதங்களில் ஆகாசம் அவகாச ஹேது –
சகல பதார்த்தங்களுக்கும் ஸ்திதி கமநாதிகளுக்கு இடம் கொடுத்து கொண்டு இருக்கிற இது-இதன் பயன் –
ஆகாசத்துக்கு விநியோகம் என்கை-
அஸ்ய தேஜச்ய வியதோ லாகவம்
வாயு வஹ நாதி ஹேது சௌஷமயமேவ ச சப்த ச்ரோத்ரம் பலம் ப்ரஹ்மன ஸூஷிரத்வம் விவிகததா -என்று
இதுக்கு அநேக விநியோகங்கள் யுண்டாய் இருக்க இது –ப்ராஹ்மணரே மைத்ரேயரே -பராசரர் சொல்கிறார் –
லாகவும் லேசாக இருக்கை—ஸூஷ்மமாக -சப்தம் ஸ்ரோத்ரமும் பலத்தை யுடைத்தாய் இருக்கையும் –
த்வாரங்கள் உடைத்தாய் இருக்கையும் -விவிக்ததா – அவகாசம் கொடுத்துக் கொண்டும் இருக்கும்
உத்பலாக -மாம்சத்தில் எண்ணம் இல்லாமல் சாமாக்கதிர் போலே இருக்கும் ரிஷிகள் -ராஜா வெட்ட ஆரம்பிக்க -உத்பலாக விமானம் அன்றோ திருக்கண்ணபுரம் –
அவகாசம் யுடைத்தாய் இருக்கையும் -உண்டே –ஒன்றையும் அருளிச் செய்தது
இதனுடைய ப்ராதான்யத்தைப் பற்ற -இது தான் மற்றை அவற்றுக்கும் உப லஷணம்

வாயு வஹ நாதி ஹேது –
வஹனம் வஹிக்கை-வாசனை வகித்து காத்து எங்கும் வருமே -தாதுக்களையும் எடுத்துக் கொண்டே வரும் –
ஆதி சப்தத்தாலே வயூஹன சேஷடாதிகளை சொல்லுகிறது–
இது தான் -வாயோ ச ச பாசேன தரியஞ் சேஷ்டாம கார்க்ககச்யம் சபர்சமேவ ச வயூஹநம் வாஹநம் தேஜஸ சவீகரோதி சதுததம் -என்று சொல்லப் பட்டது இறே –
ஸ்பர்ச இந்திரியம் -சேஷ்டை கிரியா ஆஸ்ரயம் -கடினமாக இருப்பதும்- வியாபாரிப்பதும் வகிப்பதும் உண்டே –
தொடு உணர்ச்சியும் தோலும் காற்றில் இருந்து பலம் பெரும் -/புயல் சூறாவளி காற்று கடினம் அறிவோம்
உடம்பு பிருத்வியிடம் இருந்து கெட்டித்தன்மை வாங்க வில்லை -காற்றில் இருந்து வந்ததால் வளையவும் நிமிரவும் முடிகிறது –

தேஜஸ்ஸூ பஐநாதி ஹேது –
பஐனம் ஆவது பாகம் பண்ணுகை–தளிகை பண்ணுவது -உஷ்ணம் பிரகாசம் இவையும் உண்டே
ஆதி சப்தத்தாலே ஔஷண்ய பிரகாசாதிகளை சொல்லுகிறது
இதுவும் அகனே ரௌஷண்யம் பிரகாசத்வம் ரூபேந்த்ரிய மமாஷணம்
சந்தாப சௌ ர்ய தை ஷண யானி வர்ணம் பசன சக்தி தாம ஆதததே சஹசா தேஜஸ சாஹசஞ்ச தவிஜாரிஷப-என்று
கதிதமாயிற்று-ஜாடராக்கினி உள்ளேயும் உண்டே –
உஷ்ணம் -பிரகாசத்வம் -ரூப இந்திரியம் -சகியாமை -சந்தானம் தபிப்பது சக்தி பராக்ரமம் உக்கிரமாக இருக்கும் -உடம்பு உஷ்ணம் -98–4-இருக்க வேண்டும்
ரூபம் -வடிவத்தை சொல்ல வில்லை -பளபளப்பை சொல்லிற்று —
/சரீரம் பிரகாசம் வாங்கிக் கொள்வது -கண்ணில் உள்ள ஒளியைச் சொன்னவாறு -இருட்டுக்கு பழகும் கண் –
தைர்யம் -மல் பயிற்சி -ஸுர்யம்- தேஜஸ் மூலம் பெறுகிறது -/
சிகப்பு மஞ்சள் கருப்பு மூன்றுமே ஜ்வாலையிலே உண்டே -அது போலே சரீரத்துக்கு வர்ணமும் இது கொடுக்கும் –
சாஹச வேலை செய்யும் திறலையும் கொடுக்கும் –

ஜலம் சேசன பிண்டி கரணாதி ஹேது –
சேசனம் ஆவது -நனைக்கை
பிண்டி கரணமாவது -திரட்டுகை
ஆதி -சப்தத்தாலே சைத்ய மார்த்வாதிகளை–குளிர்ச்சி மென்மை சொல்லுகிறது
இதுவும் அதபயச சைத்யம் சமாதததே சனிகததத்வம் ரசேந்தரியம் பிரசாதம் மார்த்வம்
பிண்டீ கரணம் கலேதநஞ்ச வை -என்று அபிஹிதம் ஆயிற்று –
பிண்டீகரணம் -திரட்டுகை–/சீதளம் -ரசனை இந்திரியம் தெளிவு மிருதுவாய் இருக்கையும் நனைக்கையும் உண்டே –
ஸ்நிக்த்வம் -வள வள கொழு -மஜ்ஜை முட்டியில் உள்ளதே -நீராகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் -இருக்குமே –
மனத்தெளிவு -நீரால் சரீரத்துக்கு வரும் –
தமஸா நீரில் வால்மீகி தீர்த்தம் -ராமணீயம் பிரசன்னம் அபு -சாத்விகர் உள்ளம் போலே தெளிந்து உள்ளது என்றாரே –
உள்ளம் நனைந்து மார்த்வம் உண்டே –

பிருத்வி தாரணாதி ஹேது என்பார்கள் –
தாரணம் -தரிக்கை-உடம்பில் ஒவ் ஒரு பாகமும் ஒவ் ஒன்றை தாங்குமே –
ஆதி சப்தத்தாலே மூர்த்ததிமத்வ குருத வாதிகளைச் சொல்லுகிறது–உருவத்துடன் இருக்கும் -பெரியதாக பாரமாக இருக்குமே
பூமோ கந்த குணம் காரணம் கரிமாணஞ்ச தாரணம் மூர்த்திமதத்வம்
சஹிஷ்ணுத்வம்
ச்வீகரோதி யதாத்தம் -என்று இதுவும் வயாஹ்ருத மாயிற்று
என்பார்கள் -என்றது -தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்றபடி –
கந்த குணம் / கிரண இந்திரியம் குருத்வம் தரிப்பது சகித்து கொண்டு -போல்வன உண்டே –

——————————————————

சூர்ணிகை -114-

இனி ஏகாதச இந்த்ரியங்களினுடைய வ்ருத்தி பேதத்தை அருளிச் செய்கிறார் –

ச்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள்
ஐந்துக்கும்
அடைவே சப்தாதிகள் ஐந்தையும்
க்ரஹிக்கை தொழில் –
வாகாதி கர்ம இந்த்ரியங்கள்
ஐந்துக்கும்
விசர்க சில்ப பக்த யுக்திகள் தொழில்
மனஸ் ஸூ இவை
இத்தனைக்கும் பொது –

சப்த தன்மாத்திரை முதலில் -அதனால் ஸ்ரோத்ராதி முதலில் /

அதாவது
ச்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்துக்கும் அடைவே சப்தாதிகள் ஐந்தையும் க்ரஹிக்கை தொழில் –
ச்ரோத்ரத்துக்கு சப்த க்ரஹணமும்
தவக் இந்த்ரியத்துக்கு ஸ்பர்ச க்ரஹணமும்
சஷூ ஸூ க்கு ரூப க்ரஹணமும்
ஜிஹ்வைக்கு ரச க்ரஹணமும்
க்ராணத்துக்கு கந்த க்ரஹணமும்
தொழில் –
தவக் சஷூர் நாசிகா ஜிஹ்வா ச்ரோத்ரம் அத்ர து பஞ்சமம்
சப்தா தீ நா மவாப்தயர்தம்
புக்தி யுகதானிவை த்விஜ-1–2-48- -என்னக் கடவது இறே
ஆத்மா ஞானம் மனசையோ அடைந்து கண்ணை அடைந்து கிரஹிப்பதால் அவாப்த யர்த்தம்
இந்த ஸ்லோகத்தில் இந்த்ரியங்களை வயுத் க்ரமமாக எடுக்கையாலே
இன்னாத்துக்கு இன்ன விஷயம் என்கிற நியமம் ந்யாயம் கொண்டு நிச்சயிக்க வேணும்-
தோல் -கண் -மூக்கு நாக்கு காது -என்று தொடக்கி சப்தாதிகள் -நேர் கிரமம் இல்லை -என்றவாறு –
ஜ்ஞான இந்த்ரியங்களுக்கு சப்தாதிகளை க்ரஹிக்கை தொழில் என்னும் இவ்வளவே பிரகாசிப்பது –
வாகாதி கர்ம இந்த்ரியங்கள் ஐந்துக்கும் விசர்க சில்ப யுக்திகள் தொழில் —
அதாவது -இப்படி வ்யுது க்ரமமாக அருளிச் செய்தது வாக்ய ஸ்வரஸ்யத்துக்காக
இத்தால்
வாக்குக்கு உக்தியும்
பாணிக்கு சில்பமும்-கைவினை என்றவாறு
பாதத்துக்கு கதியும்
உபஸ்தத பாயுகளுக்கு ஜல மல விசர்ஜனமும் தொழில் என்கை -பாயூப சததௌ கரௌ பாதௌ வாக் ச மைத்ரேய பஞ்சமீ
விசர்க சில்ப யுக்தி காம தேஷாஞ்ச கதயதே -என்னக் கடவது இறே

மனஸ் ஸூ இவை இத்தனைக்கும் போது –
அதாவது -ஜ்ஞான இந்த்ரியங்கள் ஸ்வ ஸ்வ விஷயங்களை கிரஹிக்கும் போதும்
கர்ம இந்த்ரியங்கள் ஸ்வ ஸ்வ கர்மங்களைப் பண்ணும் போதும்
மனஸ் சஹகாரம் வேண்டுகையாலே
உபயாத்மகமான மனஸ் ஸூ இவை இத்தனைக்கும்
சாதாரணமாய் இருக்கும் -என்கை –உபய சஹகாரி என்றபடி –

———————————————

சூர்ணிகை -115-

ஜ்ஞான இந்த்ரியங்களுக்கு விஷயமாகச் சொல்லப் பட்ட
சப்தாதிகள் ஐந்தும்
ஆகாசாதிகளுக்கு பிரதி நியத குணங்களாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

ஆகாசாதி பூதங்களுக்கு
அடைவே
சப்தாதிகள்
குணங்களாய் இருக்கும் –

அதாவது
ஆகாச குணம் -சப்தம்–பேர் இரைச்சல் கேட்க்கும்
வாயு குணம்- ஸ்பர்சம்
அக்னி குணம்- ரூபம்
ஜல குணம்- ரசம்
பூ குணம்- கந்தம்-
என்றபடி-
பூவுக்கும் பூமிக்கும் கந்தம் -புஷபமும் ப்ரித்வியில் இருந்து வந்ததே –

———————————————–

சூர்ணிகை -116-

இப்படி பிரதி நியத குணங்களான பூதங்களுக்கு
குண விநிமயம் வருகைக்கு அடி அருளிச் செய்கிறார் –

குண விநிமயம்
பஞ்சீ கரணத்தாலே –

குண விநிமயமாவது -ஏக பூதத்திலே பூதாந்திர குணங்களும் காணலாம்படி–ஒவ் ஒன்றிலும் ஐந்தையும் காணலாமே –சப்தாதி குணங்கள் அத்ரவ்யம் /தன்மாத்திரைகள் த்ரவ்யம் / குணம் அனுத்பூதமாய் இருக்கும் தன்மாத்ரையில் பூதத்தில் விளங்கும் – உத்பூதமாய் இருக்கும் என்று முன்பே பார்த்தோம் –
நிறம் மணம் குணம் கலந்து –வெண்ணெய் கலந்து -குணம் த்ரவ்யத்தை ஆஸ்ரயித்து தானே நிற்கும் -த்ரவ்யம் த்ரவ்யம் கலந்து குண கலப்பு ஏற்படும்
கண்ணுக்கு குண கலப்பு தான் தெரியும் குணமாக கலக்க முடியாது கலந்த பின்பு த்ரவ்யங்களை பிரித்து பார்க்க முடியாது
சாந்தோக்யம் தேஜோ வண்ணம் -தேஜஸ் அப்பு அன்னம் -த்ரிவிக்ரணம்-பஞ்சீ காரணத்துக்கு உப லக்ஷணம்
பூதங்களில் யுண்டான குணக் கலப்பு சுருதி பிரகாசிகாகாரர்
சுக பஷீயத்திலே
தேஜோ வாரி மருதாம யதா விநிமய -என்கிற விதுக்கு
விநிமய பரஸ்பரஸ் மமீ சரி கரணம் -என்றாரே இவரும்
பாகவத த்யான ஸ்லோகம் -தேஜா வாரி மிருத்யு -மூன்றும் -வினிமயம் பரஸ்பரம் கலந்து நன்கு கலந்து
பரஸ்பர சமமிசரீ கரணமே விநிமய சப்தார்த்தம்
அங்கு பூதங்களுக்கு அந்யோந்யம் கலப்புச் சொல்லிற்று-
இங்கு குணங்களுக்கு அந்யோந்யம் சொல்லுகிறது
குணங்களுக்கு அந்யோந்யம் கலப்பாவது பூதமும் பூதாந்தரமும் போலே
குணமும் குணாந்தரமும் தன்னிலே கலக்கை அன்று
ஒன்றினுடைய குணம் ஒன்றிலே புக்கு எல்லா வற்றிலும் எல்லாம் யுண்டாம்படி இருக்கை –
பரமாணுவைக் கலந்து -ஆகாசம் மஹா பூத்துக்குள் புகுந்து -குணத்துடன் போகும் –ஒன்றாக பிசிவது போலே -குண விநிமயம் வேணும் –

அதவா –
விநிமயமாவது ஒன்றைக் கொடுத்து ஒன்றைக் கொள்ளுகையாய்
தன குணத்தை பூதாந்தரங்களுக்கு கொடுத்து அதன் குணத்தை தான் பஜிக்கை -என்னவுமாம் –
இத்தால் தன குணம் அந்யத்தின் பக்கல் யுண்டாய்
அந்யத்தின் யுடைய குணம் தன பக்கலிலும் யுண்டாம்படி இருக்கையைச் சொல்லுகிறது –

இந்த குணா விநீயம் பஞ்சீ கரணத்தாலே -என்றதுக்கு கருத்து
குணங்கள் ஆகையாலே ஆச்ரயாத நயதோ வருத்தி இல்லை இ றே இவற்றுக்கு
ஆகையால் த்ரவ்யத்தின் யுடைய கலப்பே குணக் கலப்புக்கு ஹேது என்கை –

பஞ்சீ கரணமாவது –
ஏவம் ஜாதேஷூ பூதானி பரதயேகம சயுர் தவிதா தத சதுர்ததா பின்ன மே கைகமா ததமாததம்
ததா சததிதம வயோ மனோர்த்த பாகாசா சதவாரோ வாயு தேஜ பயோபுவாம் அர்த்தா நியானி வாயோ சது வயோ மதேஜ பயோபுவாம் -இத்யாதி
புராணங்களில் சொல்லுகிறபடியே
ஆகாசாதி பூதங்கள் ஐந்தையும் தனித் தனியே இரண்டு கூறாக்கி
அவற்றில் ஒரு கூறை நாலு கூறாக்கி
அந்த கூறு களை பூதாந்தரங்களிலே கூட்டி-ஒவ் ஒன்றின் அரைக்காலையும் அத்துடன் சேர்த்து -என்றபடி –
சர்வ பூதங்களிலும் சர்வமும் யுண்டாம்படி பண்ணுகை –

இப்படி பஞ்சீ கரணம் ஆனாலும் அவிபக்தமான அர்த்தங்கள் பிரதானங்களாய் நிற்கையாலே
ஆகாசாதி பூத பேத வ்யவஹாரத்துக்கும் குறை இல்லை –

——————————————————————————-

சூர்ணிகை -117-

ஆகாசம்
கறுத்துத்
தோற்றுகிறதும்
அத்தாலே –
நீலம் -தான் கறுத்துத் தோற்றும் என்பர்

அதாவது
அதி சூஷ்மதையாலே கண்ணுக்குத் தோற்றாத படி இருக்கும் ஆகாசத்துக்கு சஷூர் விஷயத்வமும்
யத க்ருஷ்ணம் தத பிருத்வி – என்று பிருதிவிக்கு உள்ளது ஒன்றாக சொல்லுகிற கிருஷ்ணத்வமும் யுண்டாயிற்று
அது பஞ்சீ கரணத்தாலே -என்கை-

முன்பே தன்மாத்திரை ஆவரிக்கும் என்று பார்த்தோம் -குணம் அடுத்ததுக்கு போக / ஆகாசத்தில் ஒரு குணம் –பிருத்வியில் ஐந்து குணம் வந்ததே –
விதைக்கு உறை போலே முளைக்க ஆய்வறிக்கை வேண்டும்
இதுவே பஞ்சீகரணம் இல்லையோ என்னில் -/ ஆவரித்தது ஒரு வழி பாதை / பிருத்வி குணம் ஆகாசத்தில் பார்க்க முடியாதே அங்கு –
பஞ்சீ கரணத்தில் தான் ஐந்திலும் ஐந்தும் இருக்கும்
பஞ்சீ கரணமே போதுமே ஆவரிப்பது எதுக்கு -என்னில்
படைக்க அதற்கு அதற்கு உண்டான குணம் கொடுக்க வேண்டுமே -தன்மாத்திரை உறை வேண்டுமே -தனக்கு முந்திய தன்மாத்ரையை எதிர்பார்க்கும் -/
ஆவரித்த பின்பு குணங்கள் சேரும் -சப்த தன்மாத்ரையால் ஆவரிக்கப்பட்ட ஸ்பர்ச தன்மாத்திரை ரூப தன்மாத்ரையை ஆவரிக்குமே —
கலப்பை வைத்து ஆவரிக்கும் பொழுது குணங்கள் சேர்ந்தே வரும் –
திருவாட்டாறுபெருமாள் பத்ம நாபிக்கு முன்னால் -போலே -அங்கு நாபி கமலமோ ப்ரஹ்மாவும் இல்லையே -திருவனந்தபுரத்தில் தானே பத்ம நாபன்
ஆவரித்த பின்பு விவகாரத்துக்காக தன்மாத்திரை உண்டா என்னில் வியவஹாரத்துக்கு தன்மாத்ரை வேண்டாமே
அனுபூதமாக இருப்பதால் பிரதானம் அப்ரதானம் பார்க்க முடியாதே –

இத்தால்–தேஜோ பன்னம் என்று தரிவருத கரணத்தைச் சொன்ன அநந்தரம் சுருதி தானே
யத கனே ரோஹிதம் ரூபம் தேஜஸ் ச தத் ரூபம் யச சுக்லம்
ததபாம யத் க்ருஷ்ணம் தத நன சய-என்று
அக்னியிலே தரிரூபத்வத்தை தர்சிப்பித்தால் போலே
இவரும் பஞ்சீ கரணத்தை அருளிச் செய்த அநந்தரம்
அது தன்னை சர்வத்தையும் பற்ற ஸூ ஷ்மமாய் இருப்பதொரு பூதத்திலே தர்சிப்பார் ஆயிற்று–
அக்னி உதாரணம் அங்கு ஆகாசம் உதாரணம் இங்கு -முதலில் தோன்றிய ஸூ ஷ்மமான ஆகாசம் –
ஒரு குணம் தான் நினைக்கிறோம் -பிருத்வியில் உள்ள குணத்தை சொன்னால் அனைத்தையும் சொன்னதாகுமே

இப்படி ஸ்ரீ பாஷ்யத்திலே
யதகனோ லோஹிதம ரூபம் தேஜஸ் ச ததுபாமாபி சுக்லம் க்ருஷ்ணம் பருதி வயாச சேதயகனா வேவ த்ரிரூபதா
ஸ்ருதயைவ தாசிதாதச மாத சர்வே சர்வதர சங்கதா –
ஏற்று ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தார் இறே –
அக்னியில் உள்ள சிகப்பு ரூபம் தேஜஸ் பூத பாகம் -வெள்ளை ஜலத்தின் பாகம் -பிருதிவி கறுப்பு பாகம் –
மூன்று ரூபங்களை -சொல்லி எல்லாவற்றிலும் எல்லாம் கலந்து என்றதாயிற்று

சாந்தோ கயத்தில் பஞ்சீ கரணம் சொல்லாத த்ரிவ்ருத காரணத்தை சொல்லுவான் என் என்னில்
அங்கு தேஜ உப பன்னங்கள் மூன்றும் யுடையவும் உத்பத்தி மாதரம் இறே சொல்லிற்று
ஸ்ருதியந்தரத்தில் சொல்லுகிற ஆகாச வாயுக்களின் யுடையவும்
அவ்யவகத மஹத் அஹங்காராதிகளின் யுடையவும் உத்பத்தி தானும் சொல்லிற்று இல்லை இறே
ஆகையால் தேஜோ உப பன்ன மாதரம் கதனம்
தத் வாந்தரங்களுக்கும் உப லஷணம் ஆனால் போலே
த்ரிவ்ருத கரண கதனமும் பஞ்சீ கரணத்துக்கும் உப லஷணம்
சர்வ சாகா பிரத்யய நியாயம் உண்டே –

இப்படி பஞ்சீ கரணத்தாலே சகல பூதங்களும் பரஸ்பரம் மிஸ்ரங்கள் ஆகையாலே
சப்தாதி குண பஞ்சகமும் சர்வ பூதங்களிலும் யுண்டாய் இருக்கும் என்று
குணா விநிமய ஹேது சொல்லிற்றாய் நின்றது –

—————————————————————

சூர்ணிகை -108-

இனி ஆகாசாதிகளில் பூர்வ பூர்வத்தைப் பற்ற உத்தர உத்தரவத்துக்கு
குணாதிக்யம் யுண்டாகைக்கு மூலம் அருளிச் செய்கிறார் –

முன்புத்தை தன மாத்ரைகளோடே
கூடிக் கொண்டு
உத்தர உத்தர தன்மாத்ரைகள்
ஸ்வ விசேஷங்களைப் பிறப்பிக்கையாலே
குணாதிக்யம் யுண்டாயிற்று
என்றும் சொல்வார்கள்-

அதாவது
சப்த தந்மாத்ரத்தாலே ஆவ்ருதமாய்க் கொண்டு
ஸ்பர்ச் தந்மாத்ரம் வைவிஷயமான வாயுவை ஜநிப்பிக்கையாலே
வாயுவுக்கு ஸ்பர்ச சப்தங்கள் இரண்டும் குணமாயிற்று
இப்படி சப்த தந்மாத்ரையாலே ஆவ்ருத்தமான ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் ஆவ்ருத்தமான
அவை இரண்டோடும் கூடி நின்று ரூப தந்மாத்ரம் ஸ்வ விசேஷமான தேஜசை ஜநிப்பிக்கையாலே
அத தத்வத்துக்கு சப்த ஸ்பர்ச ரூபங்கள் ஆகிற மூன்று குணங்களும் யுண்டாயிற்று
இப்படி பூர்வ தந்மாத்ராத்வய விசிஷ்டமான ரூப தந்மாத்ரத்தாலே ஆவிருத்தமாய்
அவை மூன்றோடு கூடி நின்று ரச தந்மாத்ரம் ஸ்வ விசேஷமான ஜலத்தை ஜநிப்பிக்கையாலே
அதுக்கு சப்த ஸ்பர்ச ரூப ரச குணங்கள் நாலும் யுண்டாயிற்று
இப்படி பூர்வ தன்மாத்ரதையா விசிஷ்டமான ரச தந்மாத்ரத்தாலே ஆவிருத்தமாய்க் கொண்டு
கந்த தந்மாத்ரம் ஸ்வ விசேஷமான பிருதிவியைப் பிறப்பிக்கையாலே
அதுக்கு சப்தாதிகள் ஆன அஞ்சு குணங்களும் உண்டாயிற்று -என்கை –

இத்தால் ஏகைகுண ஆச்ரயமான ஆகாசாதி பூதங்களுக்கு
குண விநிமயம் பஞ்சீ கரண பர யுக்தமானவோபாதி
உத்தர உத்தர பூதங்களில் குணாதிக்யம்
ஸ்வ ஸ்வ தன்மாத்ரங்களுக்கு யுண்டான
ஆவரண பரயுக்தம் என்றது ஆயிற்று
என்றும் சொல்லுவார்கள் என்று கீழ் சொன்னத்தோடே
இத்தையும் சமுச்சயித்து அருளிச் செய்கிறார்
இப்படி தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்கை –

ஆகாசம் சப்த மாத்ராந்து ஸ்பர்ச மாதரம் சமாவிசத
ரூமமத்தை வாசித
சப்த ஸ்பர்ச குணா யுபௌ சப்த ச ஸ்பர்ச ச ரூபஞ்ச ரசமாத்ரம்
சமாவிசத தச்மாச்ச
துர் குணாஹயாபோ விசேஷா சசேந்த்ரிய க்ரஹ -என்னக் கடவது இறே –

பஞ்சீ கரணத்தால் அஞ்சிலும் அஞ்சிலும் தோற்றும் -/ ஆவிருத்தத்தால் ஆகாசத்தில் உள்ள குணம் அடுத்துக்கும் –
இப்படி ஜாலம் நான்கு குணங்கள் – பிருத்வியில் ஐந்து குணங்கள் ஆனது என்றவாறு –
அனுபூதம் -தன்மாத்திரை -இந்த்ரியங்களால் கிரஹிக்கவே முடியாதே –
தன்னுடைய குணம் மாத்திரம் மட்டும் உத்பூதமா-ஆவரித்த பின்பு கீழே அவதரித்த இக்குணங்களும் சேர்ந்து உத்பூதமா –
கலவையான பின்பு உத்பூதம் இல்லையே –

————————————————–

சூர்ணிகை -119-

உத்தேச க்ரமத்திலே -சுத்த சத்வ -மிஸ்ர சத்வங்களின் -யுடைய
ஸ்வரூபாதிகளைத் தெளிய அருளிச் செய்தார் கீழ் –
இனி சத்வ சூன்யமாகிறது ஏது என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

சத்வ
ஸூன்யமாவது
காலம் –

அதாவது
சத்வ குணம் ரஜஸ் தமஸ் குணங்களுக்கும் உப லஷணமாய்
சத்வ ஸூன்யம் என்றது
சத்வாதி குண த்ரய ஸூன்யம் -என்றது ஆயிற்று
இத்தால் ‘
கேவல சத்வமாயும்
குணத்ரய ஆச்ரமாயும்
இருக்கிற அசித் த்வயத்தையும் பற்ற
இது வ்யாவ்ருத்த ஸ்வரூபமாய் இருக்கும் -என்கை —

——————————————————–

சூர்ணிகை -120-

இதனுடைய பிரகாரம் ஏது என்னும் ஆகாஙஷையிலே சொல்லப் படுகிறது மேல் –

1–இது பிரகிருதி
பிராக்ருதங்களின் யுடைய
பரிணாமங்களுக்கு ஹேதுவாய்
2–கலா காஷ்டாதி ரூபேண
பரிணமிக்கக் கடவதாய்
3–நித்யமாய்
4–ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய்
5–சரீர பூதமாய்
இருக்கும் –

அயம் காலோஸ்மி -காலத்தை சரீரமாக கொண்டு தூண்டப்பட்டு படைக்கிறேன் -என்றபடி /ஸ்ருஷ்ட்டி காலம் அளவு கழிந்த பின்பே சம்ஹாரம் -பிரளயம் அத்தனை காலம் இருக்கும் –
கால விசிஷ்டனாக இருப்பதால் சஹகாரி -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் நிமித்தம் – -சேதன அசேதன விசிஷ்டா ப்ரஹ்மம் உபாதானம் -இப்படி த்ரிவிதமாய் –

அதாவது –
இது பிரகிருதி பிராக்ருதங்களின் யுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய்-
பிரகிருதி என்கிறது அவ்யகதத்தை
ப்ராக்ருதம் என்கிறது வ்யகதத்தை
பிரகிருதி பிராக்ருதங்களின் யுடைய பரிணாமங்களுக்கு கால தத்வம் ஹேதுவாகை யாவது –
இவற்றை ஸ்வ சங்கல்பாதிகளாலே பரிணப்பிக்கிற சர்வேஸ்வரன்
காலத்தின் யுடைய அவஸ்தா விசேஷங்களைப் பார்த்து கொண்டு இருந்து
அவ்வவ காலங்கள் வந்தவாறே இவற்றை நிர்வஹிக்கையாலே
இவற்றின் யுடைய பரிணாமங்களுக்கு இது அவஸ்யம் அபேஷிதமாய் இருக்கை-

பிரக்ருதிம் புருஷஞ்சைவ பரவிசயாத மேச்சாயா ஹரி
ஷோபயாமாச சம பராபதே சர்வ காலே வ்யயாவதய யௌ–ஸ்ரீ விஷ்ணு புராணம்எ ன்றும்
காலே சமசதி யோக்யதாம் சிதசிதோரநயோ நய மாலிங்கதோ
பூதா ஹன்க்ருதி புத்தி பஞ்சீ கரணி ஸ்வாந்தா
ப்ரவருத்ததீ நதரியை அண்டா நாவரணை ச சஹச்ரமகரோத -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் –
என்கிறபடியே ஜகத் சிருஷ்டி பண்ணுகிற போது
அக்காலம் வரும் அளவும் பார்த்துக் கொண்டு இருந்து இறே சிருஷ்டித்தது
இது தான் ஸ்திதி யாதிகளுக்கும் ஒக்கும் இறே
இப்படி கால பிரதானமாக சர்வேஸ்வரன் நிர்வஹித்து அருளுகையாலே
இவ்விபூதியில் சகல பதார்த்தமும் கால க்ருத பரிணாமமாய் இருக்கும்
இவற்றின் யுடைய பரிணாமங்களுக்கு காலம் ஹேது என்னும் இடம்
இதனுடைய அந்வய வ்யதிரேகங்களாலே லௌகிக பதார்த்தங்களிலே காணலாம் இறே
ஆகையால் காலத்தின் யுடைய பிரகிருதி ப்ராக்ருத பரிமாண ஹேதுத்வம்
ஆகமத்தாலும் பிரத்யஷத்தாலும் சித்தம் –

அநந்தரம் கீழ் சொன்னதுக்கு உபயோகியான இதன் பரிணாம விசேஷத்தைச் சொல்லுகிறது –
கலா காஷ்டாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய்-
காஷ்ட்டடா பஞ்சதச காயாதா நிமேஷா முனி சத்தம் காஷ்டா தரிமசத கலா தரிமசத ‘
கலா மௌ ஹூர்த்ததிகோ வித தாவத சங்க்யை ரஹோராதரம்
முஹூர்த்த தைர் மானுஷம் சம்ருதம் அஹோராதராணி தவாநதி மாச பஷ த்யாத்மாக தைஷ ஷட் பிரயத்னம் வர்ஷம் தவே யனே
தஷிண உத்தர அயனம் தஷிணம் ராத்ரிதா தேவானா முத்தாரம் தினம் திவ்யையா
வாஷச ஹச ரைசது க்ருததரே தாதி சம்ஜிதம் சதுர்யுகம்
தவாத சபிச தத் விபாகம் நிபோதமே சதவாரி தரீணி தவேசைகம கருதா திஷூ யதாகரமம
திவ்யபதா நாம சஹாஸ்ராணி யுகேஷு வாஹூபுராவித
தத் பரமாணை ச ச தைச சனதயா பூர்வா ததராபி தீயதே
சந்த்யா மசகச்ச தததுலயோ யுக சயா நனதரோ ஹி ச
சந்தயா சந்த்யா மசரோந்தர்யா காலோ முனி சத்தம் யுகாகயச
ச து விஜ்ஞ்ஞேய க்ருததரே தாதி சம்ஜ்ஞின-என்று தொடங்கி-
ஏவந்து ப்ரஹ்மணோ வாஷமேவம் வாஷ சதா ந்து தத சதம் ஹி தஸ்ய வர்ஷாணாம் பரமாயுர் மகாதமன –
என்னுமது அளவாக காலத்தின் யுடைய பரிணாம விசேஷம்
ஸ்ரீ பராசர பகவானாலே கதிதமாயிற்று —

இது தன்னை நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர்
நிமிஷம் பதினைந்து கொண்டது காஷ்டை -கண்ணை இமைக்கும் நேர நிமிஷம் நிமி ராஜா பேரால் -நாம் சொல்லும் நிமிஷம் இல்லை –
காஷ்டை முப்பது கொண்டது கலை –
கலை முப்பது கொண்டது முஹூர்த்தம்/-
முஹூர்த்தம் முப்பது கொண்டச்து திவசம்-நாள்
திவசம் முப்பது கொண்டது -பஷ த்வய ரூபமான மாசம்
மாசம் இரண்டு கொண்டது ருது
ருது மூன்று கொண்டது அயனம்
அயனம் இரண்டு கொண்டது சம்வத்சரம்
இப்படி மானுஷ சம்வத்சரம் 360 கொண்டது ஒரு தேவ சம்வத்சரம் தேவ சம்வத்சரம் 12000 கொண்டது சதுர யுகம்
அதில்
கிருத யுகம் -4000
த்ரேதை -3000
த்வாபரம் -2000
கலியுகம் -1000
கிருத யுகத்துக்கு பூர்வ சந்த்யை-400-அபர சந்த்யை -400
த்ரேதைக்கு -பூர்வ சந்த்யை-300-அபர சந்த்யை -300
த்வாபரத்துக்கு பூர்வ சந்த்யை-200-அபர சந்த்யை -200
கலி யுகத்துக்கு பூர்வ சந்த்யை-100-அபர சந்த்யை -100
இப்படி 71 சென்ற சதுர யுகம் ஒரு மன்வந்தரம்
14 மன்வந்தரம் 1000 சதுர யுகம்
இது ப்ரஹ்மாவுக்கு ஒரு பகல்
ராத்ரியும் இத்தோடு சமமாய் இருக்கும்
இப்படி அஹோராதரங்களும் மாச சம்வத்சரங்க ளுமாய் பெருக்கி
சதாந் தமாக பரிகணிதமான ப்ரஹ்ம ஆயுஸ் ஸூ க்கு பரம் என்று பேராம் -என்று
ஸூ வ்யக்தமாக அருளிச் செய்தார்
ஆக காலத்தின் யுடைய கலா காஷ்டாதி ரூப பரிணாம பிரகாரம் சொல்லப் பட்டது-

நித்யமாய் –
இவ்விடத்திலே நித்யத்வம் ஆவது
அநாதிர் பகவான் -காலோ நாத தோசய த்விஜ விதயதே என்கிறபடியே
ஆதி அந்த ரஹிதமாய் இருக்கை –

ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் இருக்கை-
அதாவது -நிகில ஜகத் உதய விபவ லய லீலனான சர்வேஸ்வரனுக்கு
தத் தத் லீலா உபகரணம் ஆகை
பிரகிருதி புருஷ காலங்கள் மூன்றும் லீலா உபகரணமாய் இ ரே இருப்பது –
அதில் பிரகிருதி புருஷர்கள் ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு கர்மீபவித்து லீலா உபகரணம் ஆவார்கள் –
இது சஹகாரித்வேனலீலா உபகரணமாய் இருக்கும்
ஈஸ்வரன் ஸ்ருஷ்ட்யாதிகளை நிர்வஹிக்கும் இடத்தில்
ஸத்ய சங்கல்பனான தான் அடியில் பண்ணி வைத்த கால நியமம் தப்பாத படி
அவ்வ்வ்வ கால ஆகமனம் பார்த்து இருந்தே நிர்வஹிக்கையாலே
இது தன்னை நிமிஷ காஷ்ட்டாதி ரூபேண பரிணமிப்பிக்கையாலே
இது தான் சிருஷ்டி விஷயமாமுமாய் இ றே இருப்பது
ஆக இப்படிகளாலே ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் இருக்கும்
இத்தை க்ரீடா பரிகாரம் என்றே சொல்லுகையாலே காலக்ருத பரிணாமமே யாய்ச் செல்லுகிற
லீலா விபூதியிலே இதுக்கு விநியோகம்
ந காலச தாத்ரா வை பிரபு-என்கிற போக விபூதியில் இது கொண்டு அபேஷை இல்லை என்றதாயிற்று-

அநந்தரம்-ஏவம் பூதமான கால தத்வம் ஈஸ்வரனுக்கு அப்ருதக் சித்த விசேஷணமாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
சரீர பூதமாய் இருக்கும் -என்று –
அன்னலனுடை ஒருவனை நணுகினம் நாமே -பரத்வாஜர் ஆஸ்ரமம் -பரத ஆழ்வான் வர -அக்னி ஹோமம் புகை கண்டு அருளிய ஸ்லோகம் –
விலகி இருந்தால் அப்ருதக் விசேஷணம் போகுமே -விலகினால் அன்றோ அருகில் வர –உள்ளம் ஒத்துக் கொள்ள வில்லை –
பரஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் புருஷ பரமம் த்விஜ வ்யகதா வ்யகதே ததை வானயே ரூபே காலச ததா பரம -என்றும்
பிரதான புருஷா வ்யக்த காலாஸ்து பரவிபாகச ரூபாணி சத்தி சாகா நத வ்யக்தி சதபாவ ஹேதவ-என்றும்
விஷ்ணோ ஸ்வரூபாத பரதோதிதே த்வே ரூபே பிரதானம் புருஷச்ச விபர தசயைவ
தேனயேன தருதே வ்யகதே ரூபான்தரம் தத த்விஜ கால சம்ஜ்ஞ்ஞம் –1–2–49-என்றும்
சொல்லக் கடவது இ றே
பிரதானம் வியக்தம் -பிரகிருதி பிராகிருதம் என்றவாறு -புருஷனும் காலமும் இவையும் சரீரம் -விகாரத்வம் போக்த்ருத்வம் உண்டே இவற்றுக்கு
ஒரு சேதனனோடு ஒரு த்ரவ்யத்துக்கு யுண்டான பிருதக் சித்த யனாஹா ஆதார ஆதேய பாவமும்-
நியந்த்ரு நியாமய பாவமும்- சேஷ சேஷி பாவமும்
ஓர் ஒன்றே சரீர லஷணமாய் இ றே இருப்பது
கால சம்ஜஞக அசித் த்ரவ்யத்துக்கு -ஏதத் சம்பந்த த்ரவ்யமும்
ஈச்வரனோடு யுண்டாகையாலே இது அவனுக்கு சரீரமாய் இருக்கும் என்றதாயிற்று

இப்படி பிரக்ருதியாதி பரிணாம சஹகாரியான காலம் ஈஸ்வரனுக்கு சரீரமாய் இருக்கும் என்கையாலே
சஹகாரி காரணமும் ஈச்வரனே என்னுமதுக்கு விரோதம் இல்லை –

ஆக
சத்வ சூன்யமாகிறது இன்னது என்றும்
அது செய்யும் கார்யமும்
அதுக்கு உறுப்பான அதனுடைய பரிணாமமும்
அதனுடைய அநாதி நிதனத்வமும்
அது தான் ஈஸ்வரனுக்கு இன்னத்துக்கு பரிகரமாய் இருக்கும் என்றும்
அது தான் அவனுக்கு சரீரமாய் இருக்கும் என்றும்
சொல்லி நின்றது –

———————————————

சூர்ணிகை -121-

த்ரிவித அசித்தையும் அருளிச் செய்கிற விடத்தில் அவனுக்கு போக உபகரணமான கௌரவத்தைப் பற்ற
சுத்த சத்வத்தை பிரதமத்தில் அருளிச் செய்தார்
அநந்தரம்
அவனுடைய லீலைக்கு பிரதான உபகரணமாய்க் கொண்டு பிரதான சப்த வாச்யனான மிச்ர சத்வத்தை அருளிச் செய்தார் –
அநந்தரம்
அந்த பிரதான பரிணாமத்துக்கு சஹகாரியாய்க் கொண்டு லீலா உபகரணமாய் இருக்கும் சத்வ சூன்யத்தை அருளிச் செய்தார் –
இப்படி அசித் த்ரயத்தையும் சொல்லுகிற இடத்தில்
பிரகிருதி ப்ராக்ருதங்களின் யுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய்-என்று
கால தத்துவத்துக்கு விநியோகம் சொன்னாவோபாதி
பூர்வ அசித் த்வயத்துக்கும் விநியோகம் சொல்லப் பட்டது இல்லை இ றே
அத்தை அருளிச் செய்கிறார் மேல் –

மற்றை இரண்டு அசித்தும்
ஈஸ்வரனுக்கும்
ஆத்மாவுக்கும்
போக்கிய
போக உபகரண
போக ஸ்தானங்களாய்
இருக்கும் –

அதாவது
ஈஸ்வரனுக்கும் ஆத்மாவுக்கும் என்றது
சேதனர் இ றே அசேதனதுக்கு போக்தாக்கள்
சேதனராக உள்ளது ஈஸ்வரனும் ஆத்மாவும் இ றே
ஆனபின்பு உபயர்க்கும் போக்யாதிகளாய் இருக்கும் என்றபடி
ஆத்மாவுக்கும் என்ற ஏக வசனம் ஜாதி அபிப்ராயம் ஆகையாலே த்ரிவித சேதனரையும் சொல்லுகிறது –

இப்படி உபய அசித்தும் உபயர்க்கும் போக்யாதிகளாய் இருந்ததே யாகிலும்
கேவல பகவத் இச்சையாலே தத் போக அர்த்தமாக பரிணமிக்கையாலும்-
அநவரத அபரோஷித ஸ்வ பர ஸ்வரூபரான நித்ய முக்தரில்
திருமகளும் நீயும் -என்கிறபடியே
அம்மிதுனத்தினுடைய போகத்துக்கு கை தொடுமானமாய் இருக்குமது ஒழிய–சாதனம் கருவியாய் -இருக்குமது ஒழிய என்றவாறு –
அஹம் மம-என்று இருப்பார் இல்லாமையாலும்
சுத்த சத்வத்தின் யுடைய விநியோகம் ஈஸ்வர பிரதானமாய் இருக்கும்-

அங்கன் இன்றிக்கே
சேதன கர்ம அனுகுணமாக- பகவத் சங்கல்ப்பத்தாலே -பரிணமிக்கையாலும்-
சேதனர் எல்லாரும் தேவாதி சரீரங்களிலே அஹம் புத்தியைப் பண்ணி
ஸ்வ தந்திர போக்தாக்களாய் இருக்கையாலும்
ஈஸ்வரனுக்கு இந்த விபூதியில் லீலா ரசமே பிரசுரமாய்
போக ரசம் அத்ய அல்பம் ஆகையாலும்-திருப் புளிய மரத்தின் அடியில் உள்ள ஆழ்வார் விமல சரம திருமேனி போன்றது மட்டுமே போக்யம் அவனுக்கு இங்கு –
மிச்ர சத்வத்தின் யுடைய விநியோகம் பத்த சேதன பிரதானமாய் இருக்கும் –

——————————————————

சூர்ணிகை -122-

அந்த விபூதியில் போக்யங்கள் ஆவன அப்ராக்ருதமான சப்தாதிகள்
போக உபகரணங்கள் ஆவன திவ்ய மால்யாதிகளும் சத்ர சாமராதிகளும் கரணங்கள் தானும்-
போக ஸ்தானங்கள் ஆவன அப்ராக்ருத ரத்ன மயமான மண்டபம் என்ன மாளிகை என்ன இத்யாதிகளும்
பஞ்ச உபநிஷத் மயமான திவ்ய விக்ரஹங்களும்(பரமேஷ்டி -புமான் -விஸ்வம் -நிவ்ருத்தி -மற்றும் ஸர்வம் )

இப்படி நித்ய விபூதி பிரக்ரியையும் இவ்விடத்திலே அருளிச் செய்ய வேண்டி இருக்க
சங்கோசித்து
லீலா விபூதி பிரக்ரியா மாதரத்தை அருளிச் செய்கிறார் –

போக்யங்கள் ஆகிறன-விஷயங்கள்
போக உபகரணங்கள் ஆகிறன -சஷூராதி கரணங்கள்
போக ஸ்தானங்கள் ஆகிறன -சதுர்தச புவனமும் சமச்த தேஹமும் –

இது தான் உபய விபூதிக்கும் ஆனாலோ என்னில்
போக உபகரணங்களில் பிரதானங்கள் சொல்லாமையாலும்
போக ஸ்தானங்களில் வைஷம்யத்தாலும் சேராது–
(ஸ்ரீ வைகுந்தத்தில் வைஷம்யம் இல்லையே )

இங்கு சேதனருக்கு போகமாவது ஸூக துக்க ரூபமான அனுபவ ஞானம்
அந்த ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆகையாலே சப்தாதி விஷயங்கள் போக்யங்கள்-
அந்த ஜ்ஞானத்துக்கு உபகரணங்கள் ஆகையாலே இந்த்ரியங்கள் போக உபகரணங்கள் –
யாதொரு அதிகரணத்திலே நிற்கிற சேதனனுக்கு அந்த ஜ்ஞானம் பிறக்கிறது அது
போக ஸ்தான சப்தத்துக்கு அர்த்தம் ஆகையாலே
போக ஸ்தானங்கள் என்று லோகங்களையும் தேஹங்களையும் சொல்லுகிறது –
லோக விபாகம் கீழே சொல்லப் பட்டது
சமஸ்த தேஹங்கள் ஆவன ஸூர நர திர்யக் ஸ்தாவராத்மகமான சரீரங்கள்-

ஈஸ்வரனுக்கு இந்த விபூதியில் யுண்டான போக்ய போக உபகரணாதிகளையும்
அவதார கந்தமான ஷீரார்ணவ சயனத்திலும்
அவதார விசேஷங்களிலும்
அர்ச்சாவதார விசேஷங்களிலும்
யுண்டான விநியோக விசேஷங்களாலே கண்டு கொள்வது –

——————————————————-

சூர்ணிகை -123

அநந்தரம் த்ரிவித அசித்தின் யுடைய பரிணாமங்களை
அருளிச் செய்கிறார் —

இதில் முற்பட்ட அசித்துக்கு
கீழ் எல்லை யுண்டாய்
சுற்றும் -மேலும் -எல்லை இன்றிக்கே
இருக்கும்

நடுவில் அசித்துக்கு
சுற்றும் கீழும் எல்லை இன்றிக்கே
மேல் எல்லை யுண்டாய் இருக்கும்

காலம்
எங்கும் ஒக்க யுண்டாய் இருக்கும் –

பூர்வ அசித்துக்கு கீழ் எல்லை யுண்டு என்கிறது
மிச்ர சத்வ அவதி ஆகையாலே

நடுவில் அச்சிதுக்கு மேல் எல்லை யுண்டு என்கிறது
சுத்த சத்வ அவதி யாகையாலே

காலத்துக்கு அங்கன் ஒரு அவச்சேதம் இல்லாமையாலே
எங்கும் ஒக்க யுண்டாய் இருக்கும் என்கிறது

இப்படி சர்வத்ரிகமான காலம் தான்
உபய விபூதியிலும் நித்யம் என்று இறே தமக்குத் திரு உள்ளம் –

(நித்ய விபூதியிலும் கால தத்வம் உண்டு –
இருந்தாலும் இல்லாததுக்கு சமம் அங்கு –
சேர்த்து வைத்து இங்கே நம்மை படுத்தும் )

——————————————-

சூர்ணிகை -124-
இங்கன் அன்றிக்கே இதுக்கு விபூதி பாகத்தை இட்டு
ஒரு பேதம் சொல்லுவாரும் யுண்டு
என்கிறார்

காலம் தான்
பரம பதத்தில் நித்யம்
இங்கு அநித்யம்
என்றும் சொல்லுவார்கள் –

இப்படி சொல்லுகைக்கு அடி –
பரமபதத்தில் இதுக்கு உத்பத்தியாதிகள் யுண்டாக சாஸ்திரங்கள் சொல்லாமையாலும்
இந்த விபூதியிலே இதுக்கு உத்பத்தியாதிகள் சொல்லுகையாலும்
வ்யூஹ க்ருதயங்களை சொல்லும் இடத்தில்
கால சிருஷ்டியை அநிருத்த கிருத்யமாக சொல்லா நின்றது இறே

(அநிருத்த ஆழ்வான் இங்கே ஸ்ருஷ்டிக்கப்பட்டதாக சொல்லுமே
அதனால் அநித்தியம் இங்கு என்றவாறு –
ஸ்ருஷ்டிக்கு உணர்த்துவது காலம் என்று சொல்லி காலத்தை ஸ்ருஷ்டிப்பார் என்பது என் என்னில்
காலத்தை சரீரமாக இல்லாத ப்ரஹ்மம் உண்டோ என்னில் )

பிரக்ருதியை ஸ்ருஷ்டிக்கை யாவது
மஹதாதி ரூபேண பரிணமிக்கையானால் போலே-
(இல்லாததை உருவாக்குவது இல்லையே –அதே போலே )

காலத்தை ஸ்ருஷ்டிக்கை யாவது
நிமிஷ காஷ்டாதி ரூபேண பரிணமிப்பிக்கை

சத்த பரிணாமிநீ யான பிரக்ருதிக்கு–(ஸ்த்ரீ லிங்கம் ) மஹதாதி ரூபமான
ஸ்தூல பரிணாமம் போலே இறே–
சத்த பரிணாமியான
இதுக்கும் நிமிஷாதி ரூபமான பரிமாணம்

அந்த மஹாதாதியோபாதி நிமேஷாயாதியான இதுவும்
விநாசவத்தாகையாலே
இவ்வளவைக் கொண்டு காலம் இங்கு அநித்யமாய் இருக்கும் என்கிறது
பரம பதத்தில் ஈத்ருச பரணாம விசேஷ ப்ரயுக்தோதபத்யாதி
வ்யவஹார ராஹித்யத்தாலே நித்தியமாய் இருக்கும் என்கிறது –

இப்படி காலத்துக்கு பரிணாமம் கொள்ளாதே
ஏக ரூபத்தைக் கொண்டு-(ஏற்றுக் கொண்டு )
இப்படி இருந்துள்ள காலம் தான்
தன்னுடைய நிமிஷம் காஷ்டை முஹூர்த்தம் அஹோராத்ரம் தொடக்கமாக
பரார்த்தம் ஈறாக யுண்டான விசேஷ வ்யவஹாரத்துக்கு ஹேதுவான
நிமேஷோ நமேஷங்கள் ஆதித்ய கதி தொடக்கமான அவச்சேதங்களோடே சம்பந்தித்து இருக்கும்

ஆகையாலே ஷண லவாதி பேத வ்யவஹாரம் யுண்டாகின்றது என்று
சொல்லுவதும் ஒரு பஷம் யுண்டு இறே
இது விறே தத்வ த்ரய விவரணத்தில் பெரிய வாச்சான் பிள்ளை பிரதானயேன அருளிச் செய்தது
அந்த பஷத்தில் உபய விபூதியிலும் கால ஸ்வரூபம் ஏக ரூபமாய் இருக்கையாலே
பரம பதத்தில் நித்யம் இங்கு அநித்யம் என்ற இது சொல்லப் போகாது
ஆகையால் இது பரிணாம பஷத்தை அவலம்பித்து சிலர் சொன்னது என்று கொள்ள வேணும்
நம்முடைய தர்சன ஸ்தானங்களிலே இங்கனேயும் சிலர் அருளிச் செய்கையாலே
அத்தையும் தர்சிப்பித்து அருளினார் ஆயிற்று –

பொய் நின்ற ஞானம் –
(பொய் ஞானம் இல்லை -ஜெகதே பொய் என்பது இல்லை -மாறுதலுக்கு உட்பட்டு ஒருதலைப்பட்டு இருப்பதால் )
பரிணாமம் ஒத்துக் கொண்டால் தான் நித்யம் அநித்தியம்
பரிணாமம் இல்லாமல் அவச்சேதம் காரணம் என்றால்
நித்தியமாக இங்கும் அங்கும் என்பர்

—————————————–

சூர்ணிகை -125-

சிலர் காலத்தை
இல்லை என்றார்கள் –

காலம் தன்னை இல்லை என்று பௌத்தாதிகள் சொல்லுகையாலே -சிலர் -என்கிறார்
சர்வம் சூன்யம் என்பார்களே

——————————

சூர்ணிகை -126-

அத்தை நிராகரிக்கிறார்

பிரத்யஷத்தாலும்
ஆகமத்தாலும்
சித்திக்கையாலே
அது சொல்ல ஒண்ணாது –

பிரத்யஷமாவது ஸ்தாவர ஜங்கமாத்மகமானசமச்த பமார்த்தமும்
கால க்ருத பரிணாம மாகவே காணப் படுகிற இது
ஆகமமாவது ஸ்ருதியாதிகள் -கலா முஹூர்த்தா காஷ்டா ச சஹோராத்ராச்ச சர்வச -என்றும்
மதுச்ச மாதவச்ச வாசந்திகாவ் ருதூ சுகரச்ச சுசிச்ச கரைஷ மாவருதூ-என்று/ மது சித்திரை /மாதவ வைகாசி /
கால பரிணாம விசேஷங்களான -கலை காஷ்டை முஹூர்த்தம் அஹோராத்ரங்கள் ருது விசேஷங்களை
சொல்லா நின்றது இ றே சுருதி –
கால ஸ்வரூபம் விஷணோச்ச யந மயோகதம தவா நக -இத்யாதியாலே
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே இது தான் விஸ்தரேண சொல்லப் பட்டது இறே
புராணாந்தரங்களிலும் இதிஹாசாதிகளிலும் இப்படி கண்டு கொள்வது –
இதுக்கு என்னவே நிர்மிதமாய் அத்யய நாதி கால நியமங்களை பிரதிபாதிக்கிற
ஜ்யோதிஸ் சாஸ்த்ரத்தை வேதத்துக்கு திருஷ்டியாக சொல்லா நின்றது இறே
அந்த சாஸ்திரம் தன்னிலே இன்ன காலத்திலேயே இன்னது யுண்டாம் என்று சொன்னால்
அது பிரத்யஷிக்கலாய் இரா நின்றது இறே-
ஆகையால் பிரத்யஷத்தாலும் ஆகமத்தாலும் இப்படி சித்திக்கையாலே
கால அபாவம் சொல்ல ஒண்ணாது என்கை –

——————————————-

சூர்ணிகை -127-

பலரும் திக்கு என்று
தனியே ஒரு த்ரவ்யம்
யுண்டு
என்றார்கள் –

வைசேஷாதிகள் பிருதிவ்யாதிகளோ பாதி
திக்கு என்றும் ஒரு த்ரவ்யம் யுண்டு என்று சொல்லுகையாலே
இப்படி அருளிச் செய்கிறார் –
த்ரவ்யாணி பருதிவயபதேஜோ வாயவாகாச காலதி காதமம நாமாசி நவைவ —தர்க்க ஸங்க்ரஹம் -என்று இ றே அவர்கள் சொல்லுவது -ஒன்பதையும் சொல்வார்கள்
பூராபோ ஜ்யோதிர நிலோ நப காலச ததாதிச ஆத்மா மன இதி பராஹா த்ரவ்யாணி நவ ததவித -என்றான் இறே வரத ராஜன் —
தார்க்கிக்க ராஷா -12-நூற்றாண்டில் இருந்தவர் -பிள்ளை லோகாச்சார்யார் காலம் -நையாயிக வரதராஜன் –

————————————–

சூர்ணிகை -128-

அத்தை நிராகரிக்கிறார் –

பல ஹேதுக்களாலும்
ஆகாசாதிகளிலே
அந்தர்பூதம் ஆகையாலே
அதுவும் சேராது –

அதாவது –
நாலு பேர் நாலு திக்கிலும் நின்றால் நால்வர்க்கும் நடுவான
பிரதேசம்
ஒருவனுக்கு கிழக்காய்-ஒருவனுக்கு மேற்காய்-ஒருவனுக்கு வடக்காய் -ஒருவனுக்கு தெற்காய்
தோற்றா நின்றது இ றே
அதுக்கடி த்ரவ்யம் அன்றிக்கே பிரதியோக அணுகுண கல்பனம் ஆகை
நால்வருக்கு நடுவே இருக்கிற பிருதிவ்யாதிகள் த்ரவ்யம் ஆகையால்
இப்படி விப்ரதிபத்தி விஷயம் ஆகிறது இல்லை இ றே
இனித்தான் ஆதித்யன் உதிக்கிற இடம் கிழக்காகவும்
அவன் அஸ்தமிக்கிற இடம் மேற்காகவும் இ றே கொள்ளுகிறது -இரவிலும் சூர்யன் உண்டே -ரஸ்மி அனுசாரி சூத்ரம் –
அது தான் மகா மேருவுக்கு நாலு பார்ச்வத்திலும் பேதித்து இ றே இருப்பது
ஆகையால் இ றே நாலு பார்ச்வத்திலும் உள்ளவர்களுக்கு மகா மேரு வடக்காய் இருக்கிறது -மேரோகோ தக்ஷிண பார்ஸ்வ அனைவருக்கும் –
நைவாச தமய மரீ ககச்ய நோதயச தவீப வாஷாணாம் மேரு ருத தரதோ யத -என்று
இது தான் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் சொல்லப் பட்டது-
சூரியனுக்கு அஸ்தனமாம் உதயம் இல்லை தர்சனம் இல்லாதது கொண்டு உதயம் அஸ்தமனம் என்று பேரிட்டு உள்ளார்கள் -அனைவருக்கும் மேரு வடக்கில் உள்ளது

இப்படி பல ஹேதுக்களாலும் ஆகாசாதிகளில் அந்தர்பூதமாய்
தனக்கு என ஒரு த்ரவ்ய அவஸ்தை இல்லாமையாலே
திக்கு என்று ஒரு த்ரவ்யம் யுண்டு என்கிற வதுவும் சேராது என்கை –
ஆகாசாதி -என்கிற ஆதி சப்தத்தாலே பூமியைச் சொல்லுகிறது
இவற்றில் திக்கு அந்தர்பூதம் ஆகையாவது சூர்யனுடைய உதயாதிகளுக்கு ஈடாக
இவற்றுக்கு உள்ளே திக் விபாகத்தை கல்பித்துக் கொள்ளுகிறது-ஒழிய பிரித்துக் காணலாவது ஒரு வஸ்து இன்றிக்கே இருக்கை
அதுவும் சேராது என்றது முன்பேயும் ஒரு பஷத்தை நிஷேதிக்கையாலே சமுச்சயம்-

———————————————————-

சூர்ணிகை -129-

பிருத்வ்யாதி சதுஷ்டத்யோ பாதி ஆகாசத்தையும்
பாவ ரூப பதார்த்தமாகக் கொள்ளாதே–ஆவரண
அபாவ ரூபமாக கொள்ளுகிற பௌத்த மதத்தை
அருளிச் செய்கிறார் –
இல்லாத தன்மை -அபாய ரூபம் -எல்லாமே சூன்யம் என்பார்களே -இல்லாமையே அனைத்தும் –

சிலர் ஆவரண அபாவம்
ஆகாசம் என்றார்கள் –

ஆவரணம் மூடி–திரை / அபாவம் இல்லாமை தான் ஆகாசம்
கத்தியால் பலத்தை நறுக்குகிறோம் கர்த்தா கரணம் இரண்டு உத்பத்தி -கர்மணி -எத்தை செய்தாய்
கர்த்தரி கர்மணி கரணே மூன்றும் இந்த மூன்றும் உண்டே

அதாவது -ஆவரியதே அநேன -என்கிற கரண வ்யுதபுத்தியாலே
ஆவரணங்கள் ஆவன ஸ்த்தூல பதார்த்தங்களான பிருத்வ் யாதிகளாய்
அவற்றினுடைய அபாவமே ஆகாச சப்த வாச்யம் அல்லது
இது ஆகாசம் என்று காட்டலாம் படி–இதம் என்று சித்திக் காட்ட வல்ல –
பாவ ரூபமானதொரு பதார்த்தம் அன்று -என்கை –
நச பிருதிவ்யா தயபாவமா தரமாகாச கிதி வக்தும் சகயம் -என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தது –2–2–23-ஸூ த்ரம்-
அத்தை நிராகரிக்கிறார் -புத்த பஷத்தை -என்றபடி –

—————————————-

சூர்ணிகை -130-

அத்தை நிராகரிக்கிறார் –

பாவ ரூபேண
தோற்றுகையாலே
அதுவும் சேராது –
நன்கு இதம் என்று தோற்றுகிறதே

அதாவது –
பாவ ரூபத்வேன அங்கீ கரிக்கப் பட்ட பிருதிவ்யாதிகளோ பாதி
அத்ர சயனே பத்தி அத்ர க்ருதர பத்தி என்று சயேநாதிகளுடைய பதந்தத்துக்கு தேசமாய்க் கொண்டு
ஆகாசமும் பாவ ரூபமாய்த் தோற்றுகையாலே
பருந்து கழுகு விழுகிறது என்கிறோமே –
இத்தை ஆவரண பாவ ரூபமாகச் சொல்லுகிற அது சேராது என்கை
அதவும் -நிஷித்த சமுச்சயம்–
உம்மை தொகை -தள்ளலினவற்றை சேர்த்து அருளிச் செய்கிறார் –
இது தன்னை-ஆகாசே சாவிசே ஷாத–2–2—23 –என்கிற ஸூ தரத்தில்–வேறு பட்டு இல்லாத படியால் -ஆகாசம் துச்சம் இல்லை என்று வழங்கக் கூடாது –
பிருதிவி அப்பு போலே -இதுவும் சேராது -ஆகாச ச அவிசேஷாத் -சகாரம்–அபாதித ப்ரதீதி -பாதிக்க முடியாதே பிருத்வி அப்பு போலே –
ஆகாசத்தில் தும்சத்வம் சொல்ல முடியாது என்றபடி அபாதித ப்ரதீதி தடங்கல் இல்லா தோற்றம் உண்டே –
ஆகாசே ச நிருபாக கய்தா ந யுக்தா பாவ ரூப தவே நாப யுபகத
பிருதிவ்யாதி வத ஆகாச சயா பய பாதிதா ப்ரதீதி சித்த வாவி சேஷாத
ப்ரதீயதே ஹயாகாசோதர சயேன பத்தய தய க்ருத்ர பத்தி இதி சயே நாதி பதந்தே சத வேன-என்று தொடங்கி
ஸ்ரீ பாஷ்ய காரர் விஸ்தரேண அருளிச் செய்தார்-
ஆபாத ப்ரதீத சித்தத்துவத்தில் வேறுபட்டு இராமையாலே —

——————————————————

சூர்ணிகை -131-

இனி ஆகாசத்துக்கு நித்யத்வ நிரவயவதவ விபுத்வ அபரத
யஷத்வங்கள் கொள்ளுகிற
நையாயிக வைசேஷிக மதத்தை
அருளிச் செய்கிறார்

வேறே சிலர்
இது தன்னை
நித்யம்
நிரவயவம்
விபு
அப்ரத்யஷம்
என்றார்கள் –

—————————————–

சூர்ணிகை -132-

இது தன்னை நிராகரிக்கிறார் –

பூதாதியிலே பிறக்கையாலும்
அஹங்காராதிகள் இல்லாமையாலும்
கண்ணுக்கு விஷயம் ஆகையாலும்
அவை நாலும் சேராது

தாமச அஹங்காரத்தில் இருந்து தோன்றுவதால் -தோன்றினாலே நித்யத்வம் நிர அவயவத்வம் போகுமே /

அதாவது
பூதாதி சம்ஜ்ஞகமான தாமச அஹங்கார த்திலே உத்பன்னம் ஆகையாலும்
ஒன்றிலே நின்றும் உத்பன்ன மான தொன்றுக்கு
ச அவயவத்வம் சித்திக்கையாலும்
நித்யம் நிரவவயம் என்கிற இரண்டும் சேராது-
பூதாதியிலே பிறக்கையாலும் -என்றது
சப்த தன்மாத்ரையினுடைய ஸ்தூல அவஸ்தை ஆகையாலே
அதுக்கும் இதுக்கும் யுண்டான ஐக்யத்தைப் பற்ற –அதனுடைய தசா விசேஷம் தானே –
இனி விபுவாகில்
சர்வகதமாக வேணும் இ றே
த்ரி / பஞ்சீ கரணம் -அஷ்ட கரணம் நியாய சித்தாஞ்சம் -அஹங்காரம் மஹான் பிரக்ருதிகளையும் சேர்த்து
உத்பூதமாக-பிருத்வியில் ஐந்து குணங்களும் இருக்கும் –
குண வினீமயம் -ஐந்திலும் ஐந்தும் தோன்றும் பார்த்தோம் வாயுவில் ரூபம் தெரியாது என்பர் தேசிகன் அது அநுத்பூதமாகவே இருக்கும் -என்பர் /
ஸ்வ காரணமான அஹங்காரா திகளில் இதுக்கு வ்யாப்தி இல்லாமையாலே
அதுவும் சேராது–
ஆகாசம் வியாபிக்காத மூன்று தத்வங்கள் உள்ளனவே -அஹங்காரம் மஹான் பிரகிருதி -மூன்றிலும் -சுருங்கிய இருக்கும் இவை -அத்தை விரிக்கிறார் பெருமாள் மேலே
பஞ்சீ கரண பிரயுக்தமான ரூபத்வத்தாலே கண்ணுக்கு விஷயம் ஆகையாலே
அப்ரத்யஷம் என்கைக்கும் சேராது
ஆகாசம் கறுத்துத் தோற்றுகிறதும் அத்தாலே -என்றார் இறே கீழே
இது தன்னை -அண்டாந்தர வர்த்தி நச சாகாசச்ய த்ரிவ்ருத கரணோபதேச
ப்ர தாசித பஞ்சீ கரனேன ரூபவதத வாச சஷூ ஷதவே பய விரோத -என்று
ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தார் –2–2–23-ஸூ த்ர ஸ்ரீ பாஷ்யம் /
சாந்தோக்யம் த்ரிவிக்ரணம் தேஜா அபு அன்னம் மூன்றும் தானே அதனாலே உபலக்ஷணம் பஞ்சீ கரணம் என்கிறார் -அப்ரதிக்ஷம் என்று சொல்ல முடியாது –

——————————————

சூர்ணிகை -133-

வாயுவும் பிரத்யஷம் அன்று
ஸ்பர்ச அனுமேயம் என்று இ றே அவர்கள் சொல்லுவது
அத்தையும் நிராகரிக்கிறார் –

த்வக் இந்த்ரியத்தாலே
தோற்றுகையாலே
வாயு அப்ரத்யஷம் என்கிற
அதுவும் சேராது –

அதாவது
ஜ்ஞான இந்த்ரியங்களில் ஏதேனும் ஒன்றுக்கு
கோசரம் ஆனபோதே பிரத்யஷம் சித்திக்கையாலே
த்வக் இந்த்ரியத்தாலே தோற்றுகிற வாயுவை
அப்ரதியஷம் என்ன ஒண்ணாது -என்கை –
கண்ணுக்கு முன்னால் என்ற அர்த்தமானாலும் ஐந்துக்கும் உப லக்ஷணம்

————————————

சூர்ணிகை-134-

இனி பரஸ்பர விலஷண ஸ்வ பாவங்களான பூத விசேஷங்களில்
ஜ்ஞாதவ்ய அம்சங்களை அருளிச் செய்கிறார் –

தேஜஸ் ஸூ
பௌ மாதி பேதத்தாலே
பஹூ விதம் –
பவ்மாக்னீ பூமியில் இருந்து தோற்றுவதால்

அதாவது –
பௌமம திவ்யம் ஔதார்யம் ஆக்ரஜம்-என்கிற
பேதத்தாலே அநேக விதமாய் இருக்கும் -என்கை
பார்த்திவ மாத்ரேந்தமான தேஜஸ் ஸூ பௌமம் –இந்தநம் -விறகு எண்ணெய் போன்றவை பிருத்வியில் இருந்தே -அதாவது–தீபாதி
ஜல மாத்ரேந்தமான தேஜஸ் ஸூ திவ்யம் அதாவது ஆதித்யாதி
பார்த்திவ ஜலமாத்ரேந்தமான தேஜஸ் ஸூ ஔதர்யம்–மண் நீர் இரண்டையும் -ஜாடராக்கினி -தீர்த்தமும் அன்னம் இரண்டும் வேண்டும் -அதாவது ஜாடாராக்னி
நிரிநதமான தேஜஸ் ஸூ ஆக்ரஜம் -அதாவது -ஸூ வரணாதி–மண்ணோடு மண்ணாக இருந்து ஒளி விடுமே -தங்கம் போன்றவை

—————————————————-

சூர்ணிகை –135-

இதில் ஸ்த்திர அஸ்த்திர விபாகம் பண்ணுகிறார் –

அதில் ஆதித்யாதி
தேஜஸ் ஸூ ஸ்திரம்
தீபாதி தேஜஸ் ஸூ
அஸ்திரம் —

சிரகால வர்த் தித்வத்தாலே ஆதித்யாதி தேஜஸ் ஸூ ஸ்திரம் என்கிறது-நித்யம் இல்லை நீண்ட காலம் -சிரஞ்சீவி சிர காலம் -நிறைய என்றவாறு –
ஷிபர விநாசித்வத்தாலே தீபாதி தேஜஸ் ஸூ அஸ்தரம் -என்கிறது –
லலிதா சரித்திரம் திரி தூண்ட ரிஷியாக பிறந்ததே -எலி திரியை தூண்ட புண்ணியம் பெற்றதே –

——————————-

சூர்ணிகை -136-

தேஜஸ் ஸூ க்கு
நிறம்
சிவப்பு
ஸ்பர்சம்
ஔஷண்யம்-

தேஜஸ் ஸூ க்கு நிறம் சிவப்பு இத்தாலே-
தேஜ பதார்த்தங்களிலே வர்ண பேதம்
பதார்த்தாந்தர சம்சர்கஜம் என்கை// கண்ணாடி சம்பந்தத்தால் வேறே நிறமாக தெரியுமே -வாயு செலுத்தி -நீளமாக தெரியும் –
ஸ்பர்சம் – ஔஷண்யம்-இத்தாலே
உஷ்ண ஸ்பர்சம் சீத ஸ்பர்சம் அனுஷணாசீத ஸ்பர்சம் -என்கிற
த்ரிவித ஸ்பர்சத்தாலும் இதுக்கு ஸ்பர்சம் ஔஷண்யம் என்கை –
இது தான் தேஜ பதார்த்தங்களான ஸூர்வணாதிகளில் பலவத் சஜாதீய த்ரவ்யங்களாலே
அபிபூதம் ஆகையாலே தோன்றாது—மண்ணுடன் சேர்ந்த தங்கத்தில் தொற்றாது மண் பலவான் தானே -தங்கம் கொஞ்சம் தானே -அதனால் உஷ்ணம் -மறைக்கப் பட்டு இருக்கும்

———————————————–

சூர்ணிகை -137-

ஜலத்துக்கு நிறம்
வெளுப்பு
ஸ்பர்சம் சைத்யம்
ரசம் மாதுர்யம்

ஜலத்துக்கு நிறம் வெளுப்பு -இதுக்கு ஸ்வாபாவிக வர்ணம் இது
வர்ண பேதம் வந்த விடம் ஔபாதிகம்–உபாதை சம்பந்தத்தால் –
ஸ்பர்சம் சைத்யம் -இத்தால் த்ரிவித ஸ்பர்சத்திலும் இதுக்கு உள்ளது என்கை
ஆகையால் இதுக்கு ஸ்பர்ச பேதம் யுண்டாகிறதும் அந்ய -சம்சர்கத்தாலே
ரசம் மாதுர்யம் -இத்தால் இதுக்கு ஸ்வா பாவிக ரசம் இது
ரசநாதரபத்தி சம்சர்கஜம் என்கை —
சுவை அற்றது வர்ணம் அற்றது தண்ணீர் என்பர் -விஞ்ஞானிகள் இப்பொழுது அவர்களே மாற்றி -சொல்கிறார்கள் —

———————————-

சூர்ணிகை -138-

பூமிக்கு
நிறமும்
ரசமும்
பஹூ விதம் –

அதாவது -லோகத்தில் காணப் படுகிற
நாநாவித வர்ண ரசங்களுக்கு எல்லாம்
உத்பத்தி ஸ்தானம் இது -என்கை –

—————————————-

சூர்ணிகை -139-

ஸ்பர்சம்
இதுக்கும்
வாயுவுக்கும்
அனுஷணா சீதம்-அனுஷ்ன அஸீதம் இரண்டும் அற்ற தன்மை

அதாவது
திரிவித ஸ்பர்சத்திலும் வைத்துக் கொண்டு இவற்றுக்கு ஸ்பர்சம் இது என்கை
ஆகையால் இவற்றிலும் காதாசித்கமாக காணப் படுகிற ஸ்பர்ச பேதமும் ஔபாதிகம்-

——————————————

சூர்ணிகை -140-

இப்படி
அசித்து
மூன்று படிப் பட்டு
இருக்கும் –

இப்படி என்று
சிம்ஹாவ லோகன ந்யாயத்தாலே
முன்பு அருளிச் செய்தவற்றை எல்லாம்
கடாஷித்து
அனுபாஷித்துக் கொண்டு
அசித் தத்வ உபன்யாசத்தை
நிகமித்தார் ஆயிற்று –

—————————————-

ஆக
பிரதமத்திலே
அசித்து ஜ்ஞான சூன்யமாய் விகாராச பதமாய் இருக்கும் -என்று அசித்தின் யுடைய லஷணத்தைச் சொல்லி
அநந்தரம்
அது தான் சுத்த சத்வம் ஆதிபேதன திரிவிதமாய் இருக்கும் படியைச் சொல்லி
உத்தேச க்ரமத்தில்
பிரதமம் சுத்த சத்வம் ஆகிற அசித்தினுடைய பிரகாரத்தைச் சொல்லி
தத் அநந்தரம்
மிச்ர சத்வம் ஆகிற அசித் விசேஷம் இன்னது என்றும்
அது தான் சதுர் விம்சதி தத்வமாய் இருக்கும் என்றும்
அதில் பிரதம தத்வம் இன்னது என்றும்
அந்த தத்தவத்தின் யுடைய அவஸ்தா விசேஷங்கள் இருக்கும் படியையும்
அதில் நின்றும் தத்வாநதரங்கள் உத்பன்னம் ஆகைக்கு ஹேது அதனுடைய குண வைஷம்யம் என்றும்
அந்த குணங்கள் தான் இன்னது என்றும்
அவை தான் அதுக்கு அவி நாபூதங்களாய
அதனுடைய அவஸ்தா பேதங்களால் அனுத் பூதங்களாயும்
உத் பூதங்களாயும் இருக்கும் என்றும் அவைதான் கார்யனுமேயங்கள் என்றும்
அவற்றின் யுடைய வைஷம்ய பிரயுக்தமான மஹதாதி தத்வ உத்பத்தி க்ரமத்தையும் சொல்லி
அநந்தரம்
இப்படி உத் பன்னங்களான தத்வங்களின் யுடைய சமுதாய கார்யமான அண்ட உத்பத்தியையும்
அந்த அண்டத்துக்கு உள்ளில் சமஷ்டி புருஷ சதுர் முக உத்பத்தியையும்
ஈஸ்வரன் சமஷ்டி வ்யஷ்டி பதார்த்தங்களை அத்வாரமாகவும் சத்வாரமாகவும் நின்று
சிருஷ்டிக்கும் படியையும் சொல்லி
அநந்தரம்
அண்டங்களின் யுடைய பஹூத்வத்தையும்
அவற்றின் யுடைய கட்டளையையும்
அவை தான் ஈஸ்வரனுக்கு லீலா உபகரணங்கள் என்னுமத்தையும்
அவற்றின் யுடைய உத்பத்தி பிரகாரத்தையும் சொல்லி
அநந்தரம்
ஆகாசாதி பூதங்களுக்கு தனித் தனியே யுண்டான விநியோகத்தையும்
ஜ்ஞான கர்ம இந்த்ரியங்களுக்கும் உபயாதமகமான
மனசுக்கும் யுண்டான வ்ருத்தி பேதத்தையும்
ஆகாசாதிகளுக்கு சப்தாதிகள் பிரதி நியத குணங்களாய் இருக்கும் படியையும்
அவற்றுக்கு குண விநிமயம் வருகைக்கு ஹேதுவையும்
குணாதிக்யத்துக்கு ஹேதுவையும் சொல்லி
இப்படி மிச்ர சத்வத்தின் யுடைய பிரகாரத்தை விஸ்தரேண உபபாதித்து
அநந்தரம்
இதனுடைய பரிமாணங்களுக்கு ஹேதுவாய் இருந்துள்ள
சத்வ சூன்யம் ஆகிற அசித் விசேஷத்தையும்
சங்க்ரஹேண சொல்லி
அநந்தரம்
ஏதத் பூர்வ உக்தமான அசித் த்வயத்தின் யுடைய பரிணாமங்களையும் சொல்லி
ஏதத் தர்ச நைகதேசிகள் யுடைய
கால விஷய பிரதிபத்தி பேதத்தையும் காட்டி
அநந்தரம்
கீழ்ச் சொல்லப் பட்ட வற்றில்
பாஹ்ய குத்ருஷ்டிகள் யுடைய விப்ரபத்தி பிரகாரங்களையும்
அவை தான் அயுக்தம் என்னும் இடத்தையும் சொலி
அநந்தரம்
பரஸ்பரம் விலஷணமான பூத விசேஷங்களில் ஜ்ஞாதவ்ய அம்சங்களையும் தர்சிப்பித்து
இப்படி அசித் த்ரயத்தின் யுடைய பிரகாரத்தையும்
அருளிச் செய்து தலைக் கட்டினார் –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: