Archive for October, 2017

ஸ்ரீ திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்- திரு நாராயண புரத்து ஆய் ஸ்வாமிகள் -என்னும் ஜனன்யாச்சார்யார் ஸ்வாமிகள் -வியாக்யானங்கள்-

October 30, 2017

(இரக்கமே உபாயம் -நிர்ஹேதுகம் -தடுக்காமையே வேண்டுவது –
விசேஷ கடாக்ஷம் -அநந்யார்கர்களுக்கு -அவனையே விரும்புவர்களுக்கு —
தேவதாந்தர உபாயாந்தர உபேயாந்தர சம்பந்த லேசமும் இன்றிக்கே –
வாஸூ தேவ சர்வம் இதி துர்லபம் -உண்ணும் சோறு இத்யாதி
இவை அனைத்தும் ஆச்சார்யர் அபிமானமே -என்று காட்டி அருளி ஆண்டாள் –
அம்பரமே -தண்ணீரே சோறே -அனைத்துமே கண்ணன் -அவனை தந்து அருளும் நந்தகோபன் –
என்னையும் என் உடைமையையும் ஸ்வ கைங்கர்யத்துக்கு உபகரணமாகக் கொண்டு அருள்வாய் -நியாஸ திலகம் –
என்றே பிரார்த்திக்க வேண்டும் -ஏகைக பல லாபாய சர்வ லாபாய கேசவ –
அவனைக் கொடுத்து அருளும் ஆச்சார்யர் தானே நமக்கு எம்பெருமான் –
இங்கே நந்த கோபனை எம்பெருமான் -என்றே அழைக்கிறார்கள்
யசோதை எம்பெருமாட்டி -ஆறு கால சிறு வண்டே -ஆச்சார்யர் பத்னி புத்ராதிகளும் பூஜ்யர் –
ஷட் பதம் -த்வயம் -வண்டு -இரண்டும் ஆச்சார்ய விஷயம் – )

ஈராயிரப்படி -அவதாரிகை –
கருந்தாளை யுருவித் திரு வாசல் காப்பானும் உள்ளே புகுருங்கோள்-என்று சொல்ல
உள்ளே புக்கவாறே பிள்ளைக்குக் காவலாகப் பெண்கள் களவு காணப் போவர்கள் என்று
நோக்கிக் கிடக்கிற ஸ்ரீ நந்த கோபரை எழுப்புகிறார்கள் –
(சித்ர லேகா -கனவில் கண்டு உஷைக்காக அநிருத்த ஆழ்வானை களவு கண்டார்கள் அன்றோ )

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-

பதவுரை

அம்பரமே–வஸ்த்ரங்களையே
தண்ணீரே–தீர்த்தத்தையே
சோறே–சோற்றையே
அறம் செய்யும்–தருமமாக அளிக்கின்ற
எம்பெருமான் நந்தகோபாலா–எமக்கு ஸ்வாமியான நந்த கோபரே!
எழுந்திராய்–எழுந்திருக்க வேணும்.
கொம்பு அனார்க்கு எல்லாம்–வஞ்சிக் கொம்பு போன்ற மாதர்களுக்கெல்லாம்
கொழுந்தே–முதன்மை யானவளே!-முதலில் வாட்டமும் செழிப்பும் கொழுந்துக்கு போல் இவளுக்கு
குலம் விளக்கே–(இக்) குலத்திற்கு (மங்கள) தீபமாயிருப்பவளே-தன்னையும் காட்டி பிரர்களையும் விளங்க வைப்பாள்
எம்பெருமாட்டி–எமக்குத் தலைவி யானவளே!-ஆத்ம குணம் -ஆச்சார்ய சம்பந்தம் -மந்த்ரம்- எம்பெருமான் -வைகுண்டம் படிக்கட்டுகள்
அசோதாய்–யசோதைப் பிராட்டியே!
அறிவுறாய்–உணர்ந்தெழு’
அம்பாம் ஊடு அறுத்து–ஆகாசத்தை இடைவெளி யாக்கிக் கொண்டு
ஓங்கி–உயர வளர்ந்து
உலகு அளந்த–எல்லா) உலகங்களையும் அளந்தருளின
உம்பர் கோமானே–தேவாதி தேவனே!-குத்தல் பேச்சு -தேவர்களுக்கு மட்டும் கார்யம் செய்து அந்தப்புர மக்களைக் கை விட்டவன்
உறங்காது–இனிக்) கண் வளர்ந்தருளாமல்
எழுந்திராய்–எழுந்திருக்க வேணும்
செம் பொன் கழல் அடி–சிவந்த பொன்னாற் செய்த வீரக் கழலை அணிந்துள்ள திருவடியை யடைய
செல்வா–சீமானே!
பல தேவா! –பல தேவனே!
உம்பியும் நீயும்–உன் தம்பியாகிய கண்ணனும் நீயும்
உறங்கேல்–உறங்காதொழிய வேணும்’

நந்தகோபன் எழுந்து இருந்து கார்ய கரம் -யசோதை கண் விழித்தாலே கார்யகரம்
ஊராகத் தொட்டவன் -உலகமாகத் தொட்டவன் –
மாணிக் குறளனே தாலேலோ -வையம் அளந்தானே தாலேலோ -தர்மி ஐக்யம்
உம்பி -உன் தம்பி –
ராமானுஜ-லஷ்மண பூர்வஜ-என்று ராமரை முன்னிட்டே இளைய பெருமாளையும்
லஷ்மணனை முன்னிட்டே பெருமாளையும் -சொல்லுமாறு

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
புடவை தண்ணீர் சோறோடு வாசியற வேண்டுவார்க்கு வேண்டிற்றுத்
தடை இன்றிக்கே கொடுக்கை –

அறம் செய்யும்
பல அபி சந்தி ரஹிதமாக ஆந்ரு சம்சயத்தாலே கொடுக்கை
( ஸ்வயம் பிரயோஜனமாக கொடுக்கை )

எம்பெருமான்
பெண்களுக்கு கிருஷ்ணனைப் பெற்றுத் தந்தவன் –
(ஏகைக பல லாபாய )சர்வ லாபாய கேசவ
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே -(6-7-1)
எல்லாமாய் இருக்குமவர்களுக்கு அவ்வொன்றையும் தாராய்

நந்த கோபாலா
கிருஷ்ணனைப் பெற்று தந்த நீர் நாங்கள் பெறும்படி பாரீர்
ஹித புத்தி பிதாக்கள் பாடே உண்டாகையாலே புகுருங்கோள்-என்றான் இறே

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
நாங்கள் வரும் தனையும் அன்றோ நீ காப்பது என்கை –
நாரிணாம் உத்தம –என்று பெண்களாய்ப் பிறந்தார்க்கு எல்லாம் தலையாகப் பிறந்தவளே-
(நீயே தலைவி -நாங்கள் வந்து விலக்காமையை அறிவித்த பின்பு நீயே ரஷித்து அருள வேண்டும் –
கொம்பு -இடை சிறுத்து -வைராக்யம் மிக்கு கண்ணனையே நாடும் -கோல் தோன்றி ஓடுமே )

குல விளக்கே
பெண்களாய் பிறந்தார்க்கு எல்லாம் த்ருஷ்டியான விளக்கே –
(தன்னையும் பிரகாசித்து மற்றவர்க்கும் பிரகாசிப்பித்து விளக்கு தானே விளங்க வைக்கும் –
ஆத்ம ஸ்வரூபத்தையும் பரமாத்ம ஸ்வரூபத்தையும் விளங்க வைக்கும் -)

எம்பெருமாட்டி
கிருஷ்ணனைப் பெற்றுத் தந்து எங்களுக்கு ஸ்வாமிநீ யானவளே –

யசோதா –
கிருஷ்ணனுக்கும் பெண்களுக்கும் உள்ள சேர்த்திக்கு உகக்குமவளே –
சஜாதியை ஆகையாலே நோவு அறியுமே-அவள் –
(ஆழ்வார்களை திரு உள்ளம் கொண்டு சஜாதீயை )

அறிவுறாய்
நீ அறிந்த அன்று எங்களுக்கு ஒரு குறை யுண்டோ –
நீ காவலாக அமையும் என்கை –
(மந்த்ரம் -அவனையும் சொல்லுமே -இருவரையும் ரஷிக்கும் இவள் அன்றோ )
அவள் அனுமதி பண்ணின மாத்திரத்தோடே கிருஷ்ணனை உள்ளே புக்கு எழுப்புகிறார்கள்

அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த-உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்-
பரதந்த்ரன் என்று கண் அழிவு சொல்ல ஒண்ணாது –
(நம் ஐயர் சொல்படி அன்றோ செய்வோம் -பெருமாள் –
உலகு அளந்த அன்றோ யார் சொல்லி பண்ணி அருளிற்று )
அவன் அனுமதி கொண்டோம் –
அநந்ய ப்ரயோஜனராய் வந்ததற்கு முகம் கொடுக்க ஒண்ணாதோ
ஆண்களுமாய் பிரயோஜனாந்தர பரர்க்கோ கார்யம் செய்யலாவது –
தேவர்களுக்குக் குடியிருப்பைக் கொடுத்த நீ எங்கள் குடியிருப்பை அழிக்கவோ பார்த்தது
(அவர்கள் பிரயோஜனாந்தர பரர்கள் -நாங்கள் அநந்யார்ஹர் -உன்னையே அர்த்தித்து வந்தோம் -)
உறங்குவாரைத் தழுவக் கடவ உனக்கு உணர்ந்து வந்தவர்களைத் தழுவலாகாதோ

நம்பி மூத்த பிரானை எழுப்பி நம்மை எழுப்பிற்றிலர்கள்-என்று
கிடக்கிறான் என்று பார்த்து அவனை எழுப்புகிறார்கள்

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா-உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-
பொற்கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே-எழுந்திராய் –

(பொற் கால் இட்ட ஸ்ரீ மான்
பொய்கையாழ்வார் -நாதமுனிகள் -ஆழ்வார் ஆச்சார்ய அவதாரங்களுக்கு
பொற் கால் இட்டு அருளிய ஸ்ரீ மான்கள் )

அவன் பாரதந்த்ரியத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும்-
இவன் ஆற்றாமையாலே கட்டிக் கொண்டு கிடக்கும் என்கை –
சந்தேசை சாம மதுரை-ப்ரேம கர்ப்பை ரகர் விதை –
ராமேண ஆஸ்வாசிதா கோப்ய ஹரிணா ஹ்ருத சேதச – ( ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்கிறபடியே
எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ என்கிறார்கள்
(கோபிகளுக்கு கண்ணனை விட்டுப்பிரிந்து விஸ்லேஷ ஆற்றாமையை
நம்பி மூத்த பிரான் ஆற்றினத்தை விளக்கிய ஸ்லோகம் )

வெறும் படுக்கையைக் கண்டு கொண்டு கிடக்க அமையுமோ –
சென்றால் குடையும் -இத்யாதியாக வேண்டாவோ –

————————————

ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

இப்பாட்டில் கீழ் எழுப்பின கோயில் காப்பான் அனுமதியால்
திருவாசல் காப்பான் உள்ளே புகுர விட
(உபகார ஆச்சார்யர் உத்தாரக ஆச்சார்யர் போல் இங்கும் இரண்டு காப்பான் )
முந்துற ஆச்சார்யனை எழுப்பி
நம்பி மூத்த பிரான் முன்னாக
ஈஸ்வரனை எழுப்புகிறார்கள் –

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்-
1-ஆத்ம ஸ்வரூபமான ஈஸ்வர முக விகாசத்தையும்
2-தத் வர்த்தகமான போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தியையும்-(நாம் போக்ய வஸ்து என்ற நினைவு )
3-தத் ஹேதுவான கைங்கர்யத்தையும்

ஓர் ஒன்றையோ இவன் கொடுப்பது என்னும்படி
தன்னுடைய ஆன்ரு சம்ச்யத்தாலே -அறம்
ஸுவயம் புருஷார்த்தமாக-செய்யும்
கொடா நின்றுள்ள
நமக்கு வகுத்த சேஷியாய்-எம்பெருமான்
ஆனந்த நிர்ப்பரனாய்-(நந்த )
ஆஸ்ரித ரஷகனான-கோ பாலன்
ஆசார்யனே -நீ உணர வேணும் –
இப்படி பாதங்கள் ஒவ் ஒன்றுக்கும் வியாக்யானம்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே –
குலவிளக்கே எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
நதி பிரவாஹங்களுக்கு வளைந்து பிழைக்கும் நீர் வஞ்சிக் கொம்பு போலே
சம்சாரிகள் உடைய அபிமானத்துக்கு அனுரூபமாக
தங்களை அமைத்து வைக்கும்
பகவத் மந்தரங்களுக்கு எல்லாம் ஸ்ரேஷ்டமாய்
(கோபால மந்த்ரம் ஐஸ்வர்யம்
ராம மந்த்ரம் புத்ராதிகள்
கொழுந்து ஸ்ரேஷ்டம் -மந்த்ராணாம் பரமமந்த்ரம் குஹ்ய தமம் -திரு மந்திரமே யசோதை )
பிரபன்ன குலத்துக்கு பிரகாசகமாய்
எங்களுக்கு நிருபாதிக ஸ்வாமியாய்-எம்பெருமாட்டி
தன்னை அனுசந்திப்பார்க்கு ஆபிஜாத்யாதி-யசோதை -குலம் தரும் -கண்ணனுக்கு அருகாமை கொடுக்கும் குலம்
சகல அதிசய பிரதமான
திருமந்த்ரமே -அறிவுறாய் –
திருமந்தரம் அறிவுறுகையாவது – ஸ்வார்த்த பிரகாசகமாகை-

அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்தஉம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்-
நிரீஸ்வர வாதம் பண்ணுபவர்களுக்கு
அவகாசம் அறும்படி அபிவிருத்தனாய்-(ஆகாசம் எங்கும் ஓங்கி) –
இவ் விபூதியைத் தன் திருவடிகளின் கீழே சேர்த்துக் கொண்ட
நித்ய ஸூரி நிர்வாஹகன் ஆனவனே-(உம்பர் கோமானே )
சம்சாரிகள் உறக்கம் தீர்க்க அவதரித்த நீ
உறங்காது ஒழிய வேணும்

இப்படி எழுப்பின இடத்திலும் எழுந்திராமையாலே
அவனை எழுப்புகைக்காக
நம்பி மூத்த பிரானை எழுப்பு கிறார்கள்
செம் பொற் கழல் அடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-
சிவந்து
ஸ்ப்ருஹணீயமான
ஸ்வர்ணத்தாலே செய்யப்பட்ட
வீரக் கழலை உடைய
ஸ்வ சேஷத்வத்திலே பகவத் சேஷத்வம் அந்தர்கதமாம் படியாய் இருக்கையாலே
திருவடிகள் விருது பூண்ட-( -அவனே அவனுக்குள் அடக்கம் வெற்றிக் கழல் ) என்றுமாம்
(அநந்தனையே தனது மடிக்குள் கிடத்தி யபடியால் இவனே அநந்தன் -இதுக்கே வீரக் கழல் )

செல்வா பலதேவா –
இப்படி சம்பன்னனான பல தேவனே

உம்பியும் நீயும் உறங்கேல்
(ஆஸ்ரித பாரதந்தர்ய குணத்தால் ) உனக்கு பவ்யனான கிருஷ்ணனும்
(ஸ்வரூபத்தால் ) கிருஷ்ணனுக்கு பவ்யனான நீயும்
உறங்காது ஒழிய வேணும்

———

(இரக்கமே உபாயம் -நிர்ஹேதுகம் -தடுக்காமையே வேண்டுவது –
விசேஷ கடாக்ஷம் -அநந்யார்கர்களுக்கு -அவனையே விரும்புவர்களுக்கு —
தேவதாந்தர உபாயாந்தர உபேயாந்தர சம்பந்த லேசமும் இன்றிக்கே –
வாஸூ தேவ சர்வம் இதி துர்லபம் -உண்ணும் சோறு இத்யாதி
இவை அனைத்தும் ஆச்சார்யர் அபிமானமே -என்று காட்டி அருளி ஆண்டாள் –
அம்பரமே -தண்ணீரே சோறே -அனைத்துமே கண்ணன் -அவனை தந்து அருளும் நந்தகோபன் –
என்னையும் என் உடைமையையும் ஸ்வ கைங்கர்யத்துக்கு உபகரணமாகக் கொண்டு அருள்வாய் -நியாஸ திலகம் –
என்றே பிரார்த்திக்க வேண்டும் -ஏகைக பல லாபாய சர்வ லாபாய கேசவ –
அவனைக் கொடுத்து அருளும் ஆச்சார்யர் தானே நமக்கு எம்பெருமான் –
இங்கே நந்த கோபனை எம்பெருமான் -என்றே அழைக்கிறார்கள்
யசோதை எம்பெருமாட்டி -ஆறு கால சிறு வண்டே -ஆச்சார்யர் பத்னி புத்ராதிகளும் பூஜ்யர் –
ஷட் பதம் -த்வயம் -வண்டு -இரண்டும் ஆச்சார்ய விஷயம் – )

(உதாசீனனாக நம்முள்ளே இருந்து தான் ஏற நாள் பார்த்து இருப்பான் அவன்
ஸ்வ அபிமானத்தால் அளியல் நம் பையல் என்ற ஈஸ்வர அபிமானத்தைக் குழைத்துக் கொண்ட இவனுக்கு
ஆச்சார்ய அபிமானம் தவிர வேறே விரகு இல்லையே
விண்ணோர்கள் -அந்தரங்கர் மூலம் 16-தொடங்கி ஐந்து பாசுரங்கள் -பிராட்டி பர்யந்தம் உண்டே)

(ஆத்ம குணம் -ஆச்சார்ய சம்பந்தம் -மந்த்ரம்- எம்பெருமான் -வைகுண்டம் படிக்கட்டுகள்)

(உம்பர் கோமானே–தேவாதி தேவனே!-குத்தல் பேச்சு -தேவர்களுக்கு மட்டும் கார்யம் செய்து அந்தப்புர மக்களைக் கை விட்டவன் )

(நம்பி மூத்த பிரான் கண்ணன் அவதாரத்துக்கு பொற் கால் இட்டார் –
பொய்கை ஆழ்வார் -ஆழ்வார்களுக்கு பொற் கால் இட்டார்
நாதமுனிகள் ஆச்சார்ய பரம்பரைக்கு பொற் கால் இட்டார்)

நாலாயிரப்படி-அவதாரிகை –
கருந்தாளை யுருவித் திரு வாசல் காப்பானும் உள்ளே புகுருங்கோள்-என்று சொல்ல
உள்ளே புக்கவாறே பிள்ளைக்குக் காவலாகப் பெண்கள் களவு காணப் போவர்கள் என்று
நோக்கிக் கிடக்கிற ஸ்ரீ நந்த கோபரை எழுப்புகிறார்கள் –
பேரனான அநிருத்த ஆழ்வானை அகப்படக் களவு காணக் கடவ அவர்கள்
சாஷான் மன்மத மன்மதனாய் அழகுக்கு வாய்த் தலையான இவனை விடுவார்களோ -என்று
காத்துக் கொண்டு கிடந்தார் -(மந்த்ர புஷ்பம் நித்ய அனுசந்தான ஸ்லோகம் சொல்கிறோம் )

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
புடவை யோடு தண்ணீரோடு சோற்றோடு வாசியற வேண்டுவார்க்கு வேண்டிற்றுத்
தடை இன்றிக்கே கொடுக்குமவனே என்கிறார்கள்
ஏவகாரத்தாலே இதுவேயோ இவன் கற்றது -என்னும்படி இருக்கை –

அறம் செய்யும்
பாலாபி சந்தி ரஹிதமாக ஆந்ரு சம்சயத்தாலே கொடுக்கை —
சக்ரவர்த்தியைப் போலே
மஹதா தபஸா ராம -என்ன வேண்டுவது இல்லையே –

(சாத்விக தானம் லக்ஷணம் கீதையில் -பிரதியுபகாரம் எதிர்பார்க்காமல் –
பிரயோஜனம் கருதாமல் -கண்ணன் திரு உள்ளம் உகக்கும் என்றே கொடுப்பதே)

வைத்த மா நிதி –
இவன் எடுத்த பேராளன் இறே –

எங்கள் தாரக த்ரவ்யத்தையும் தாராய் -என்கிறார்கள்

எம்பெருமான்
பெண்களுக்கு கிருஷ்ணனைப் பெற்றுத் தந்தவன் –
ஏகைக பல லாபாயா சர்வ லாபாய கேசவ -என்றும் –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் -என்று என்றே –
எல்லாமாய் இருக்குமவர்களுக்கு அவ்வொன்றையும் தாராய்

நந்த கோபாலா எழுந்திராய்
நந்த கோபன் குமரன் -என்று உம்முடைய ஆந்ரு சம்சயத்தைக் கண்டு
உம்முடைய பிள்ளை என்று அன்றோ நாங்கள் ஆசைப்பட்டது

(அர்த்த பஞ்சகம் சுருக்கி -ஸ்வ ஞானம் ப்ராபக ஞானம் ப்ராப்ய ஞானம் -மூன்றாக்கி -ப்ராப்யம் ஒன்றாக்குமா போல்)

குணைர் தசரதோபம்-(குணங்களால் தசரதனுக்கு சமம் -பெருமாள் தனது குண சம்பத்து சக்ரவர்த்தியாலேயே வந்தது என்பார் )
கிருஷ்ணனைப் பெற்று தந்த நீர் குறையும் நாங்கள் பெறும்படி பாரீர் -என்கிறார்கள்
ஹித புத்தி பிதாக்கள் பாடே உண்டாகையாலே புகுருங்கோள்-என்றான் இறே

உணர்ந்து அவரும் அனுமதி பண்ணின படி தோற்றக் கிடந்தார் -அவரை விட்டு
உள்ளே புகுந்து யசோதைப் பிராட்டியை எழுப்புகிறார்கள் –

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
நாங்கள் வரும் தனையும் அன்றோ நீ காப்பது என்கை –

யசோதைப் பிராட்டியை எழுப்பி ஸ்ரீ நந்த கோபரை எழுப்பாமல் ஒழிவான் என் என்னில்-
பிள்ளை மேல் சங்கத்தால் அவனுக்கு அணித்தாயும்
பர்த்ரு சம்ஸ்லேஷத்துக்காக இரண்டுக்கும் நடுவாக உள் காட்டிலே கிடக்கை யாலே
பிற்பட யசோதைப் பிராட்டியை எழுப்புகிறார்கள்

(ரக்ஷணத்துக்கு முதல் அகாரம் -மகாரத்துக்கு உகாரம் அருகில் இருக்க வேண்டுமே -ஆகவே உகாரம் நாட்யவில்
பெருமாள் சீதா மத்யே ஸூ மத்யமா இளைய பெருமாள் -நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனையோ)

கொம்பனார் -இத்யாதி
நாரிணாம் உத்தம –என்று பெண்களாய்ப் பிறந்தார்க்கு எல்லாம் தலையாகப் பிறந்தவனே
கொம்பு அனார்-வஞ்சிக் கொம்பு போன்றவளே –

குல விளக்கே
பெண்களாய் பிறந்தார்க்கு எல்லாம் த்ருஷ்டியான விளக்கே -இக் குடிக்கு மங்கள தீபம் என்னவுமாம் –

எம்பெருமாட்டி
கிருஷ்ணனைப் பெற்றுத் தந்து எங்களுக்கு ஸ்வாமிநீ யானவனே –

யசோதா –
கிருஷ்ணனுக்கும் பெண்களுக்கும் உள்ள சேர்த்திக்கு உகக்குமவள் அன்றோ -நீ
அஞ்ச யுரப்பாள் யசோதை -(3-9)என்றது பற்றாசாக அன்றோ நாங்கள் வந்தது

(கஞ்சன் வலை வைத்த வன்று காரிருள் எல்லில் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற விக்கன்னியரோமை
அஞ்ச யுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டிருக்கும் –
வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமையிலீ கூறை தாராய்--3-9-)

அறிவுறாய்
நீ அறிந்த அன்று எங்களுக்கு ஒரு குறை யுண்டோ என்கிறார்கள் –
இவர்கள் வந்தது தங்கள் ஆற்றாமை இறே –

உள்ளே புகுருங்கோள் என்று அவள் அனுமதி பண்ண அவள் சம்மானத்தோடே உள்ளே புக்கு
கிருஷ்ணனை எழுப்புகிறார்கள்

அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த-உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்-
என்கிறார்கள் -(பத்து தோறும் உலகு அளந்த சேஷ்டிதம் உண்டே -இரண்டாம் பத்து பாட்டுக்களில் இது )
உம்பர் கோமானே
அச் செயலாலே தேவர்களை எழுதிக் கொண்ட படி –
நித்ய ஸூரிகளை-என்னவுமாம்

ஐயரும் ஆய்ச்சியும் சொல்ல வேண்டாவோ என்ன
பரதந்த்ரன் என்று கண் அழிவு சொல்ல ஒண்ணாது -அவர்களை அனுமதி கொண்டோம் -எழுந்திராய் என்கிறார்கள்
அநந்ய ப்ரயோஜனராய் அணைய வந்தார்க்கு முகம் கொடுக்க ஒண்ணாதோ
ஆண்களுமாய் பிரயோஜனாந்தர பரர்க்கோ கார்யம் செய்யலாவது –
தேவர்களுக்குக் குடியிருப்பைக் கொடுத்த நீ எங்கள் குடியிருப்பை அழிக்கவோ பார்த்தது
உறங்குவாரைத் தழுவக் கடவ உனக்கு உணர்ந்து வந்தவர்களைத் தழுவலாகாதோ –
மண்ணைத் தழுவிய நீ பெண்ணைத் தழுவலாகாதோ அண்ணரை எழுப்பிற்றிலர்களோ என்ன

நம்பி மூத்த பிரானை எழுப்ப மறந்தோம் –
இது ஒரு தப்புப் பிறந்தது என்று நம்பி மூத்த பிரானை எழுப்புகிறார்கள்

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா-உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-
பொற் கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே-எழுந்திராய் –
பலதேவன் என்று திரு நாமம்-செல்வா பட்டம் –
பலை கதா மநி -(ஆளவந்தார் )
அவன் பாரதந்த்ரியத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும்-
இவன் ஆற்றாமையாலே கட்டிக் கொண்டு கிடக்கும் என்கை -(அடியான் அவன் விடான் -அன்பன் இவன் விடான் )

சந்தேசை சாம மதுரை ப்ரேம கர்ப்பை ரகர் விதை –
ராமேண ஆஸ்வாசிதா கோப்ய ஹரிணா ஹ்ருத சேதச -என்கிறபடியே
எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ என்கிறார்கள்
வெறும் படுக்கையைக் கண்டு கொண்டு கிடக்க அமையுமோ
திருவனந்த ஆழ்வான் இறே தமையனாய்ப் பிறந்தான்
சென்றால் குடையாம் -இத்யாதியாக வேண்டாவோ –
உன் படுக்கையை நீ விடாதாப் போலே- எங்கள் படுக்கையும் எங்களுக்குத் தாராய் என்கிறார்கள் –

(நாரங்களுக்கு ஆஸ்ரயம்-நாராயணனே எங்கள் படுக்கை நீ தான் தர வேண்டும் என்கிறார்கள்)

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய — ஸ்ரீ திரு நாராயண புரத்து ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் -என்னும் ஸ்ரீ ஜனன்யாச்சார்யார் ஸ்வாமிகள் -வியாக்யானங்கள்-

October 30, 2017

(வேதம் வல்லார்கள் -ஸ்தானம் -6-10-பத்து பெண்கள் -கண்ணனே அவர்கள் வசம் –
சொல்லும் அவிடு ஸ்ருதியும் -வேதமே இவர்கள் கைப்பட்டு பின் தொடரும்
இனி விண்ணோர்கள் ஸ்தானம் -கோயில் வாசல் காப்பான் க்ஷேத்ர பாலகர் -த்வார பாலகர் –
18-19-20-நப்பின்னைப் பிராட்டி திருவடிகளில் சரணம் புக்கு புருஷகாரமாக
மேலே -21 -29–நேராக-பிரதான சேஷி – அவனைப் பிரார்த்தித்து
30-தானான தன்மையுடன் அருளிச் செய்கிறாள் -)

ஈராயிரப்படி -அவதாரிகை –
கீழ்ப் பத்துப் பாட்டாலுமாக பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களையும் ஒருவருக்கு ஒருவர்
எழுப்பினமைக்கு உப லக்ஷணமாகையாலே
எல்லாரும் கூட எழுந்திருந்து
ஸ்ரீ நந்த கோபர் வாசலிலே வந்து நின்று
ஸ்ரீ நந்த கோபர் உள்ளிட்டாரை எழுப்பி
செய்யாதன செய்யோம் என்றபடி முறை தப்பாமே
முதலிகளையும்
பிராட்டியையும் முன்னிட்டுக் கொண்டு
எம்பெருமானை பற்றப் பார்க்கிறார்கள்

(வைகல் பூம் கழிவாய் -திரு வண் வண்டூர் -கடகரைப் -பற்றி –
அலர்மேல் மங்கை -மூலம் உறை மார்பனைப் பற்றியது போல் )

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-

பதவுரை

நாயகன் ஆய் கின்ற–(எமக்கு) ஸ்வாமி யாயிருக்கிற
நந்த கோபனுடைய–நந்த கோபருடைய
கோயில்–திரு மாளிகையை
காப்பானே-காக்குமவனே!
கொடி-த்வஜ படங்கள்
தோன்றும்-விளங்கா நிற்கப் பெற்ற
தோரணம் வாசல்–தோரண வாசலை
காப்பானே–காக்குமவனே!
மணி-அழகிய ரத்னங்கள் பதிக்கப் பெற்ற
கதவம்-கதவினுடைய
தாள்–தாழ்ப்பாளை
திறவாய்–திறக்க வேணும்’
ஆயர் சிறுமி யரோ முக்கு–இளமை தங்கிய இடைப் பெண்களாகிய எமக்கு
மாயன்–ஆச்சர்யச் செயல்களை யுடையவனும்
மணி வண்ணன்–நீல மணி போன்ற திரு நிறத்தை யுடையவனுமான கண்ண பிரான்(ஒளி க்காக சிகப்பு -நீலம் நைல்யம் சமஸ்க்ருதம் -கறு நீலம் -பச்சை மரகதம் மணி )
நென்னலே–நேற்றே
அறை பறை வாய் நேர்ந்தான–ஒலி செய்யும் பறைளைத் தருவதாக வாக்களித்தான்’
துயில் எழ–(அவ் வெம்பெருமான்) துயிலினின்றும் எழுந்திருக்கும்படி
பாடுவான்-பாடுகைக்காக
தூயோம் ஆய்–பரிசுத்தைகளாய்
வந்தோம்–(அடியோம்) வந்திருக்கின்றோம்’
அம்மா–ஸ்வாமி!
முன்னம் முன்னம்–முதல் முதலிலே
வாயால்–(உமது) வாயினால்
மாற்றாதே–மறுக்காதொழிய வேணும்’ (அன்றியும்)
நேசம் நிலை கதவம்–கண்ண பிரான் பக்கலில்) பரிவுற்றிருக்கும் நிலைமையை யுடைய கதவை
நீ–நீயே
நீக்கு–நீக்க வேணும்’

நீ நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்–கதவும் நேசம் உள்ளது -பரிவுடன் ரக்ஷிக்குமே –
ஆச்சார்ய முகேன அடைவதையே நீ நீக்கு -நீயே நீக்கு -என்று கொள்ள வேண்டும் –
ஆச்சார்ய நடு நாயகம் -கோதாக்ரஜர் – திரு உள்ளம் கொண்டு அருளிச் செய்த பாசுரம் –
நான்கு திக்குகளிலும் வாசல் கோபுரம் உண்டே
யாக சாலைகளில் இன்றும் பார்க்கலாம் -எட்டு பேர்களின் பெயர்களையும் எழுதி வைப்பார்கள்
தூயோமாய் வந்தோம்-உடல் உள்ளம் ஆத்மா அழுக்கு இல்லாமல் -காம க்ரோதாதிகள் இல்லாமல் –
அவனே உபாயம் உபேயம் -சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூப ஞானம் உள்ளவர்

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
யேஷாம் த்ரீண் யபதாநாநி யோநிர் வித்யா ச கர்மா ச –
தே சேவ்யாஸ் நைஸ் சமாயுக்த –சாஸ்த்ரேப் யோபி விசிஷ்யதே –
வைதிகாஸ் த்வதீய கம்பீர மநோநு சாரிண –
இவர்கள் சாஸ்த்ர தாத்பர்யங்களை அரைச் சந்தையாலே சொல்லி விடுவார்கள்
வேதம் வல்லார்களைக் கொண்டு இத்யாதி -(4-6-8-)
அவனைப் பெரும் இடத்தில் ததீயர்களை முன்னிட்டுப் பற்ற வேணும் என்கை –

(யோநிர் வித்யா ச கர்மா ச –பிறப்பு ஞானம் அனுஷ்டானம் உள்ளோர் -ஸாஸ்த்ரம் விட வணங்கத் தக்கவர்கள்
வைதிகாஸ் த்வதீய கம்பீர மநோநு சாரிண-பக்தி மிக்க மனசை வேதமே பின் தொடரும் )

கோயில் காப்பானே –
இவர்கள் லபிக்கிற எம்பெருமான் பக்கல் அன்று நாயகத்வம் –
இவர்கள் தங்கள் பக்கலிலே–
பிதாமஹம் நாதமுனிம் விலோக்ய -மத் விருத்தம் அசிந்யத்வாத் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்
புருஷகாரம் கார்யகரம் என்கை –

பட்டர் நஞ்சீயருக்கு -பெருமாளை தஞ்சம் என்று இரும் –
பெருமாள் தஞ்சம் என்று சொல்லுகையாலே நான் தஞ்சம் என்றபடி -என்று அருளிச் செய்தார்
ஆகையாலே ஆச்சார்யர்கள் உபகாரகர் என்று நாயகன் -என்கிறாள் –

(ச பூஜ்யவா யதாஹ்யயம் -என்னை பூஜிக்கும் அளவாவது பாகவதரை பூஜிக்க வேண்டும் -பகவத் வசனம்
உபகரித்த வஸ்துவின் பெருமையால் உபகாரகர் மஹிமை
சமுத்திர இவ காம்பீர்யம் -அவன் சங்கல்பித்து இப்படி ஆச்சார்ய பாகவத வைபவம் வைத்து அருளுகிறார் )

நந்தகோபனுடைய கோயில்
எம்பெருமான் பரதந்த்ரன் ஆகையாலே –
அடியார் நிலாகின்ற வைகுந்தம் இறே -(திருவிருத்தம் –75-)
அங்கு வான் இளவரசு வைகுந்த குட்டன் -(பெரியாழ்வார் –3-6-)
ஸ்ரீ சேனாபதி ஆழ்வானைப் போலே
இங்கும் ஸ்ரீ நந்த கோபர் -சக்கரவர்த்தியும் அப்படியே

(நந்தகோபன் குமரன் என்றும் சக்ரவர்த்தி திருமகன் என்று இருக்கவே அவதாரமும்
அங்கு பெரிய திருவடி சிறகுகளின் கீழேயும்
விஷ்வக் சேனர் கைப் பிரம்பின் கீழேயும்
திரு அனந்தாழ்வான் மடியிலும் இருப்பானே )

கோயில் காப்பானே
சிறு பெண்கள் ஆகையாலே அவன் தொழிலை இட்டுப் பேசுகிறார்கள் –

கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே
கோயில் காப்பான் என்று இங்குத்தைக்குமாய் அவன் தன்னையே வாசல் காப்பான் என்கை
அன்றிக்கே-
வேறே திரு வாசல் காப்பானைச் சொல்லிற்று ஆக்கவுமாம்
ஆர் விக்னம் பண்ணுகிறார் என்று அறியாமை பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள்
(விபீஷண ஆழ்வான் முதலிகள் அனைவரையும் புருஷகாரமாகப் பற்றினால் போல் )

மணிக் கதவம் தாள் திறவாய்
அழகு உள்ளே போவாரை வழி பறிக்கும் –
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -( பெரிய திருமடல் )
ச ததந்தாபுர த்வாரம் ஸமாதீத்ய ஐநா குலம் –
(சுமந்திரன் அந்தப்புரம் போகும் வழியில் அயோத்யா மக்கள் துவாரம் கடந்து போனால் போல் )
ஒரு வண்ணம் சென்று புக்கு -(6-1-7)

மணிக் கதவம்
இது உள்ளே புகுவாரைக் கால் காட்டும் –
அவன் புக்காரை புறப்படாதபடி கால் காட்டும் –

ஆயர் சிறிமியரோமுக்கு
திரு வாசல் காக்குமவன் –
1-இம் மத்திய ராத்ரிப் போதிலே யார் –
2-திறக்க அழைக்கிற நீங்கள் யார்-
3-பயம் மிக்கு இருக்கிற தேசத்திலே -என்ன

பயம் என் என்ன
சக்கரவர்த்தியும் திரு அயோத்யையும் ஆண் புலிகளும் மந்திரிகளான வசிஷ்டாதிகளும் இல்லையே
இங்கு சாது ஸ்ரீ நந்த கோபரும் சிறு பிள்ளைகளும் இடைச்சேரியுமாய் இருக்கிறதுக்கு மேலே
கம்சன் சத்ருவாயிற்று
ஆன பின்பு பயம் கெட்டு இருக்கலாமோ -என்ன

எங்களுக்கு பயப்பட வேணுமோ -பெண் பிள்ளைகள் அன்றோ -என்ன
சூர்பணகி ராக்ஷஸி அன்றோ என்ன
நாங்கள் இடைப்பெண்கள் என்ன
பூதனைக்குப் பின்பு இடைச்சிகளுக்கு அன்றோ பயப்பட வேண்டுவது என்ன

நாங்கள் க்ருத்ரிமைகள் இல்லாத கன்யகைகள் அன்றோ -எங்கள் பருவத்தைப் பாராய் என்ன
பருவம் பார்த்துக் கொள்ளுகிறோம் -வார்த்தையிலே அறியலாம் –
நீங்கள் வந்த கார்யம் சொல்லுங்கோள் என்ன

அறை பறை
நோன்புக்குப் பறை வேண்டி வந்தோம் என்ன –

அதுவாகில் கேள்வி கேட்க வேணும் என்ன
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
நேற்றே கேட்டு அவனும் தருகிறோம் என்றான் என்கிறார்கள்

மாயன்
கோஷ்டியிலே தாழ நின்று கையைக் காலைப் பிடித்த படி

மணி வண்ணன்
தாழ நின்றதிலும் அவன் வடிவே போறும் என்கை
பூ அலரும் போது பிடிக்கும் செவ்வி போலே வார்த்தை அருளிச் செய்யும் போதை அழகு-
வாக்மீ ஸ்ரீ மான் -( சொல்லின் செல்வன் )

நென்னலே
திரு முளையன்று
நேற்று கையார் சக்கரம் என்னுமா போலே

நென்னலே
உன் கால் பிடிக்க வேண்டுகிற இன்று போலேயோ-
அவன் (எங்கள் ) காலைக் கையைப் பிடிக்க இருந்த நேற்றை நாளும் ஒரு நாளே -என்கிறார்கள்

வாய் நேரந்தான்
ஓலக்கத்திலே ஒரு வார்த்தை சொன்னானாகில் மெய் என்று இருக்கவோ –
அந்தரங்கமாகச் சொல்ல வேண்டாமோ என்ன
ராமோ த்விர் நாபி பாஷதே யன்றோ –
சொல்லாது ஒழிந்த அன்று செய்யலாவது இல்லை –
சொன்ன பின்பு அவன் வார்த்தையிலே பழுதுண்டோ –

தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
தூய்மை அவனுடைய ரக்ஷையும் -அவன் பிரயோஜனமும் ஒழிய
ஸ்வ யத்னம் ஸ்வ பிரயோஜனம் இல்லாமல் இருக்கை-
(தூயோமாய் –5 -பாசுரத்தில் உண்டே
சர்வ தர்மான் காமான் பரித்யஜ்ய -உபாயாந்தரமம் உபேயாந்த்ரமும் இல்லாத தூய்மை )

திருவடி திருவாழி மோதிரத்தையும் தன் வடிவையும் காட்டாதே
தன் மிடற்றின் ஓசையைக் காட்டி விஸ்வசிப்பித்தால் போலே
தங்களுடைய ஆர்த்த த்வனியைக் காட்டுகிறார்கள்
பிரணாதஸ் ச மஹா நேஷ-என்ற ஆர்த்த நாதம் –
(ஸ்ரீ விபீஷணன் த்வனி பெரியதாக உள்ளது -பயந்து பேசுகிறான் -கைக் கொள்ளலாம் –
ஏற்கத் தக்கவன் -ஆர்த்த த்வனியைக் கேட்டு முதலிகள் )
ஆநயையம்-என்னப் பண்ணிற்று இறே
(இப்படி சொல்ல வைத்தது ஆர்த்த த்வனி தானே )

வந்தோம்
இங்கு வர்த்திக்கிற உனக்கு அடைவு தெரியாமல் இல்லை

துயில் எழப் பாடுவான்
சமயா போதித ஸூக ஸூப்த பரந்தப -என்று பிராட்டி உறங்குகின்ற படி கண்டு உகந்தாள்
நாங்களும் பெரியாழ்வார் பெண் பிள்ளைகள் –
படுத்த பைந்நாகணைப்பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு (–9-) –
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் -(நம்மாழ்வார் )
அரங்கத்தம்மா பள்ளி எழுந்திராய் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே
மனத்தினால் நினைத்தாலும் வாயாலே நெருப்பைச் சொரியாதே கொள்-
இவர்களுக்கு இவன் வாயது இறே வாழ் நாள்

யம்மா
அரங்கத்தம்மா படியே (தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் )

அம்மா
அவன் வாய் நேர்ந்தாலும் இவர்கள் நடத்தா விடில் கார்யகரம் ஆகாதே –
வத்ய தாம் என்றவாறே
அஸ் மாபிஸ் துல்ய -என்ன வேணும் இறே
(கொன்று விட வேண்டும் அதே வாயால் எங்கள் அனைத்து பேர் இடத்திலும் உள்ள
அன்பைக் காட்டு என்றதுமே கார்யகரம் ஆயிற்று )

நீ நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-
உள்ளே இருக்கிறவனோ எங்களுக்கு நாயகன் நீ அன்றோ –
வாசா தர்ம நவாப் நு ஹி-பண்ணாயோ ( சீதாபிராட்டி திருவடி இடம் அருளிச் செய்த படி )

இவர்களை தாளை யுருவிக் கதவைத் தள்ளிக் கொடு புகுருங்கோள்-என்ன
அது உன்னிலும் பரிவுடைய கதவு காண்-
எங்களால் தள்ள ஒண்ணாது –
நீயே திற -என்கிறார்கள்

கம்சன் படை வீட்டில் அடைய பிரதிகூலிக்கும் படி
இங்கு எல்லாரும் அனுகூலிக்கும் படி
படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே இத்யாதி –

————————————-

(வேதம் வல்லார்கள் -ஸ்தானம் -6-10-பத்து பெண்கள் -கண்ணனே அவர்கள் வசம் –
சொல்லும் அவிடு ஸ்ருதியும் -வேதமே இவர்கள் கைப்பட்டு பின் தொடரும்
இனி விண்ணோர்கள் ஸ்தானம் -கோயில் காப்பான் வாசல் காப்பான் க்ஷேத்ர பாலகர் -த்வார பாலகர் –
18-19-20-நப்பின்னைப் பிராட்டி திருவடிகளில் சரணம் புக்கு புருஷகாரமாக
மேலே -21 -29–நேராக-பிரதான சேஷி – அவனைப் பிரார்த்தித்து
30-தானான தன்மையுடன் அருளிச் செய்கிறாள் -)

(வானர முதலிகள் புருஷகாரமாக விபீஷணன் பெருமாளை பற்றியது போலவும்
ஆழ்வாரும் வைகல் பூம் கழிவாய் -திரு வண் வண்டூர் -கடகரைப் -பற்றி –
அலர்மேல் மங்கை -மூலம் உறை மார்பனைப் பற்றியது போல் )

(அவனே இவர்கள் கை புகுந்த பின்பு ஸாஸ்த்ர விஷயம் இவர்கள் அறிந்து பின் தொடர வேண்டாமே -)

(எம்பெருமானார் செல்லப்படுகிறார் -இவரே குரு பரம்பரையில் நாயகக்கல்
விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ -உத்தார ஆச்சார்யர் -)

———

நாலாயிரப்படி-அவதாரிகை –
கீழ்ப் பத்துப் பாட்டாலுமாக பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களையும்
ஒருவருக்கு ஒருவர் எழுப்பினமைக்கு உப லக்ஷணமாகையாலே
எல்லாரும் கூட எழுந்திருந்து
ஸ்ரீ நந்த கோபர் வாசலிலே வந்து நின்று
ஸ்ரீ நந்த கோபர் உள்ளிட்டாரை எழுப்பி செய்யாதன செய்யோம் என்றபடி
முறை தப்பாமே
முதலிகளையும்
பிராட்டியையும் முன்னிட்டுக் கொண்டு
எம்பெருமானைப் பற்றப் பார்க்கிறார்கள் –

வேதம் வல்லார்களைக் கொண்டு இத்யாதி -(4-6-8)
காலை நன் ஞானத் துறை படிந்தாடி –
துறையாகிறது இத் துறை(தீர்த்த பஹுளாம் சீதள அம்பு சந்தானம் -தேசிகன் )
இத் துறை தப்பினால் சூர்பணகை பட்டது படும் அத்தனை –
சீதைக்கு நேராவன் -என்றாள் இறே

(வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8-)

(காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – திரு விருத்தம் – -93 –)

(சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரிதான் வந்தாளை*–கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்* ஈராவிடுத்து -சிறிய திருமடல்)

உகந்து அருளினை நிலங்களில் புகுவார்க்குத் திருவாசல் முதலிகளை அனுமதி கொண்டு புக வேணும் என்று சாஸ்திரங்களில் சொல்லுமது –

பருவம் நிரம்பாமையாலே இவர்களுக்கு இரந்து புக வேண்டுகையாலே கோல் விழுக் காட்டிலே
(தானாகவே அமைந்தபடி )அனுஷ்ட்டித்தாராய் விட்டார்கள்

யேஷாம் த்ரீண் யபதாநாநி யோநிர் வித்யா ச கர்மா ச -தே சேவ்யாஸ் நைஸ் சமாயுக்த —
சாஸ்த்ரேப்யோபி விசிஷ்யதே -(குடிப்பிறப்பு கல்வி அனுஷ்டானம் -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை என்று இருப்பவர்கள் அன்றோ )
வைஷ்ணவர்கள் ஆசாரத்தை சாஸ்திரங்கள் பின் செல்லும் அத்தனை
வைதிகாஸ் த்வதீய கம்பீரமநோ நு சாரிண -(ஸ்தோத்ர ரத்னம் )சாஸ்திரத்தை வரியடையே கற்றாலும்
அதில் அர்த்த நிர்ணயத்துக்கும் அனுஷ்டானத்துக்கும் நெடும் காலம் செல்லும்
அவர்கள் அதின் தாத்பர்யத்தை அரைச் சந்தையாலே சொல்லி விடுவார்கள் –
அனந்தரத்திலே அனுஷ்ட்டிக்கலாய் இருக்கும்

கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-

கட்டின குளிகையைக் கையிலே கொடுத்தால் அப்போதே இரும்பைப் பொன்னாக்கி விடுமா போலே -என்று
ஜீயர் (நஞ்சீயர் )அருளிச் செய்த வார்த்தை
ஸ்ரீ ராமாயணம் சரணாகத வத்சலன் என்கிறது –
மஹா பாரதம் சரணாகத பக்ஷபாதி என்கிறது
அது சிறை இருந்தவள் நீர்மை சொல்லுகிறது –
இது தூது போனவன் நீர்மை சொல்லுகிறது

திருவனந்த புரத்திலே ஒரு பாகவதரோடே மூன்று பிள்ளைகள் ஸ்ரீ ராமாயணம்
அதிகரித்துச் சொன்ன வார்த்தையை நினைப்பது(வார்த்தா மாலா 364)

(மலை நாட்டிலே ஒருவனுடன் மூவரும் ஸ்ரீ ராமாயணம் வாசித்தார்கள் –
அவர்களில் முதலில் அதிகரித்தவனை அழைத்து உனக்கு இதில் பிரதிபன்ன அர்த்தம் ஏது என்று கேட்க –
சக்கரவர்த்தி திருமகன் பித்ரு வசன பரிபாலனம் பண்ணுகையாலே
மாத்ரு பித்ரு ஸூ ஸ்ருஷை தர்மம் என்று தோற்றிற்று -என்ன
நீ அத்தைச் செய் -என்றான்

இருவர் ஆனவனைக் கேட்க -சக்கரவர்த்தி திருமகனாய் சரீர பரிக்ரஹம் பண்ணினாலும்
உடம்பு எடுக்கை பொல்ல்லாதாய் இருந்தது –
ஆகையால் இவ் வுடம்பை அகற்றும் வகை விசாரிக்க வேண்டும் -என்றான் –
ஆகில் நீ தத் விமோசன உபாயத்தை பண்ணு என்றான் –

மூவர் ஆனவனைக் கேட்க -நம்முடைய புண் மருந்துகளால் ஒரு பசை இல்லை –
ராவணன் தானே யாகிலும் அவனை விடில் தரியேன் -என்ற சக்கரவர்த்தி திருமகன் கிருபை உண்டாகில் பிழைக்கலாம்
அல்லது பிழைக்க விரகு இல்லை -என்றான் –
ஆகில் நீ உள்ளதனையும் ஸ்ரீ ராமாயணத்தை பரிசயி -என்றான் –வார்த்தா மாலா 364)

உபநிஷத்தும் முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்று நின்றது –
அதுக்கு உப ப்ரும்ஹமணமான அபய பிரதானத்துக்கு வாசி(ஸ்ரீ ராமாயணத்துக்குத் தாத்பர்யமே அபய பிரதானம் தானே -)
அவனைப் பற்றும் இடத்தில் ததீயரை முன்னிட்டுக் கொண்டு பற்றுவது என்கை

(அபய தத்தம் -பெருமாள் வார்த்தை-இருவரும் ததீயரைப் பற்றியே நடந்ததே -)

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
நாயகனாய் நின்ற கோயில் காப்பானே என்னவுமாம்
எங்களுக்கு நாயகனான நந்த கோபனுடைய கோயில் காப்பானே என்னவுமாம்
இவர்களால் லபிக்கிற எம்பெருமான் பக்கல் அன்று நாயகத்வம் –
இவர்கள் தங்கள் பக்கலிலே

(நந்தகோபன் -ஸ்பஷ்டம் மூன்று பாசுரங்களில் -ஆற்றப் படைத்தான் மகனே -21 பாசுரம்)

பிதா மஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரசீத மத் வ்ருத்தம சிந்தயித்வா -என்றார் ஆளவந்தார்
சர்வ சாஸ்திரங்களையும் ஆராய்ந்தவர் ஆகையால் பெருப் பெருத்த உபாயங்களை பார்த்த இடத்தில் –
தன் தலையால் அவனைப் பெறலாய் இருந்தது இல்லை –
பகவத் சம்பந்தம் உடையார்யோட்டை சம்பந்தமே பகவத் கடாக்ஷத்துக்கு உறுப்பு என்றார்
அதாகிறது -இவன் அத்யாவசியம் போட்கனாய் (கிருத்ரிமமாய் )இருக்கும்
புருஷகாரம் வலிதாக அதுவே கார்யகரமாம் என்கை –

(அக்ருத்ரிம த்வச் சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்ம வந்தம் |
பிதா மஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்த யித்வா ||-ஶ்லோகம் 65 –

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.)

(பராங்குச பாத பத்மம் -மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -குறையல் பிரான் அடிக் கீழ் இன்றும் சேவிக்கிறோமே -அனுஷ்டித்துக் காட்டினார்)

(ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்)

வல்ல பரிசு தருவிப்பரேல் -என்று பெரியாழ்வாராலே பெருமத்தனையே -என்று
அறுதியிலிட்டால் போலே
பாபிஷ்ட க்ஷத்ர பந்துஸ்ச புண்டரீகஸ்ச புண்ய க்ருத் ஆச்சார்ய வத்தயா முக்தவ்
தஸ்மாத் ஆச்சார்யவான் பவேத் (சத்திர பந்துவும் பாரங்கதி கண்டு கொண்டானே )-என்னுமா போலேயும்

பட்டர் நஞ்சீயருக்கு -பெருமாளை தஞ்சம் என்று இரும் –
பெருமாள் தஞ்சம் என்று சொல்லுகையாலே நானும் உமக்குத் தஞ்சம் என்றபடி -என்று அருளிச் செய்தார்
ஆகையாலே ஆச்சார்யர்கள் உபகாரகர் என்று நாயகன் -என்கிறாள்

நந்தகோபனுடைய கோயில்
எம்பெருமான் பரதந்த்ரன் ஆகையாலே -ஸ்ரீ நந்தகோபருடைய கோயில் என்கிறார்கள்
பரமபதத்தில் அப்படியே -அடியார் நிலாகின்ற வைகுந்தம் இறே(திருவிருத்தம் )-அங்கு வான் இளவரசு (வைகுந்தக் குட்டன் -அங்கு ஈர் அரசு படாதே இங்கு ஆழ்வார் ஆதி நாதர் )
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழும் -திருவனந்த ஆழ்வான் மடியிலும் -திருவடி சிறகின் கீழும் வளரும்
இத்தனை இத் தத்துவம் போலே

யுவராஜ மம ந்யத -என்று சக்கரவர்த்தி பாரித்துப் போனான்(யுவராஜ  வான் இளவரசு-பாரித்தே இழந்தே போனான் அன்றோ )
ஸ்ரீ நந்த கோபர் பெற்றார் -நந்த கோபாலன் கடைத் தலைக்கே (நாச்சியார் -12)-(எடுத்த பேராளன் )
ஒரு தண்ணீர் பந்தலைக் கண்டால் இது வைத்த ஸ்ரீ மான் ஆர் என்னக் கடவது இறே
தயரதன் பெற்ற மரகத மணித்தடம் இறே
தங்களை சேஷியாக வைக்க இசைவாரோடே பரிமாற இறே இங்கு வருகிறது
இங்குத்தைக்கு ஸ்ரீ சத்யபாமை பிராட்டியை நாடாள விட்டு தான் பாண்டவர்களுக்கு சொல்லிற்று செய்து திரியும்

கோயில் காப்பானே
சேஷத்வ ப்ரயுக்தமான பேர் –
ஆத்மாவுக்கு நிலை நின்ற பேர் -யதோசிதம் சேஷ இதீ ரிதே ஜநை
சிறு பெண்கள் ஆகையாலே அவன் தொழிலை இட்டுப் பேசுகிறார்கள் –
இன்னது (சுந்தர பாண்டியன் )பிடிப்பான் என்னுமா போலே அவன் உகக்கும் பேராலே சொல்லிற்று ஆகவுமாம் –

(நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||ஶ்லோகம் 40-அநந்தன் இயல் பெயரைச் சொல்லாமல் ஆதி சேஷன் என்றே )

இவர்கள் இப்படி தன்னை ஸ்தோத்ரம் பண்ணினவாறே கண்ணாலே உள்ளே புகுருங்கோள்-என்றான்
கொடித் தோன்றும் தோரண-வாசல் காப்பானே
கோயில் காப்பான் என்று இங்குத்தைக்குமாய் அவன் தன்னையே வாசல் காப்பான் என்கை
அன்றிக்கே—
ஷேத்ராதிபதிகளை கோயில் காப்பானே என்று சொல்லி – வேறே திரு வாசல் காப்பானைச் சொல்லிற்று ஆக்கவுமாம்
ஆர் விக்னம் பண்ணுகிறார் என்று அறியாமை பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள்
திருத் தோரண வாசல் காக்குமவன் பக்கலிலே சென்று –
ஆர்த்த த்ராணத்துக்காக தோரணமும் கொடியும் நட்டு வைத்தால் போலே
பெண்கள் தடுமாற்றம் தீர முகம் தருகைக்கு அன்றோ உன்னை இங்கு வைத்தது

மணிக் கதவம் தாள் திறவாய்
என்கிறார்கள்

மணிக் கதவம்
கதவில் அழகு உள்ளுப் புகுவாரை வழி பறிக்கும் –
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு –
ச ததந்தா புரத்வாரம் ஸமாதீத்ய ஐநா குலம் -(சுமந்திரன் செய்தி சொல்ல பெருமாள் இடம் -ஜன சமுத்திரம் தாண்டி போனானே )
ஒரு வண்ணம் சென்று புக்கு

(என்னுறு நோய் யானுரைப்பக் கேள்மின்,* இரும்பொழில்சூழ்- மன்னு மறையோர் திருநறையூர் மா மலை போல்,*
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு,*என்னுடைய கண்களிப்ப நோக்கினேன்,* – பெரிய திருமடல்)

(ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண் கிளியே!
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திரு வண் வண்டூர்
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.-6-1-7)

மணிக் கதவம்
இது உள்ளே புகுவாரைக் கால் காட்டும் –
அவன் புக்காரை புறப்படாதபடி கால் காட்டும்

ஆயர் சிறிமியரோமுக்கு
திருவாசல் காக்குமவன் -கோயில் காப்பானே கொடுத்த தோன்றும் தோரண வாசல் காப்பானே என்று நம்மை —
இம் மத்திய ராத்ரிப் போதிலே யார் -திறக்க அழைக்கிற நீங்கள் யார் -பயம் மிக்கு இருக்கிற தேசத்திலே -என்ன

பயம் என் என்ன
காலமும் நல்லடிக் காலமுமாய் தமப்பனாரும் சக்கரவர்த்தியாய் –
ஊரும் திரு அயோத்யையாய் -தாங்களும் ஆண் புலி களாய் மந்திரிகளான வசிஷ்டாதிகளும் இல்லையே
இங்கு சாது ஸ்ரீ நந்த கோபரும் சிறு பிள்ளைகளும் –
தீம்பர்களாயும் – இடைச் சேரியுமாய் இருக்கிறதுக்கு மேலே கம்சன் சத்ருவாயிற்று –
எழும் பூண்டு எல்லாம் அஸூரப் பூண்டாவது
ஆன பின்பு பயம் கெட்டு இருக்கலாமோ -என்ன –

எங்களுக்கு பயப்பட வேணுமோ-நாங்கள் இடைச்சாதி அன்றோ என்ன

சுக சாரணர்கள் ஸ்ரீ சேனையோடே கலந்து புகுந்தால் போலே
இடையயரே அஸூரர்கள் கலந்து புகுரிலும் தெரிய ஒண்ணாது என்ன
அது உண்டோ நாங்கள் பெண்கள் அன்றோ என்ன –
சூர்பணகி பெண் பெண்டாட்டி அன்றோ என்ன
அவள் ராக்ஷஸி –
நாங்கள் இவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடிக்கும் இடையருக்குப் பிறந்த இடைச்சிகள் அன்றோ என்ன
பூதனைக்குப் பின்பு இடைச்சிகளுக்கு அன்றோ பயப்பட வேண்டுவது என்ன
நாங்கள் க்ருத்ரிமைகள் இல்லாத கன்யகைகள் அன்றோ -எங்கள் பருவத்தைப் பாராய் என்ன
பருவம் பார்த்துக் கொள்ளுகிறோம் -வார்த்தையிலே அறியலாம் -நீங்கள் வந்த கார்யம் சொல்லுங்கோள் என்ன

அறை பறை
நோன்புக்குப் பறை வேண்டி வந்தோம் என்ன –

அது வாகில் திருப் பள்ளி உணர்ந்தவாறே விண்ணப்பம் செய்து கேள்வி கொள்கிறோம் என்ன
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
அது வேண்டா
நேற்றே கேட்டு அவனும் தருகிறோம் என்றான் என்கிறார்கள்

மாயன்
எங்கள் கோஷ்டியிலே தாழ நின்று கையைக் காலைப் பிடித்த படி

மணி வண்ணன்
தாழ நின்றதிலும் அவன் வடிவே போறும் என்கை
பூ அலரும் போது பிறக்கும் செவ்வி போலே வார்த்தை செய்யும் போதை அழகு –
வாக்மீ ஸ்ரீ மான் -என்னக் கடவது இறே

நென்னலே
திரு முளை யன்று
நேற்று கையார் சக்கரம் என்னுமா போலே

நென்னலே
உன் கால் பிடிக்க வேண்டுகிற இன்று போலேயோ-
அவன் காலைக் கையைப் பிடிக்க இருந்த நேற்றை நாளும் ஒரு நாளே -என்கிறார்கள்

வாய் நேரந்தான்
ஓலக்கத்திலே ஒரு வார்த்தை சொன்னானாகில் மெய் என்று இருக்கவோ அந்தரங்கமாகச் சொல்ல வேண்டாமோ என்ன
ராமோ த்விர் நாபி பாஷதே என்றும் –
அந்ருதம் நோக்த பூர்வம் மே என்றும் –
க்ருஷ்ணே ந மே மோகம் வசோ பவேத் -என்றும்
சொல்லாது ஒழிந்த அன்று செய்யலாவது இல்லை –
சொன்ன பின்பு அவன் வார்த்தையிலே பழுதுண்டோ -(நேர்த்திக்கடன் போல் பிரதிஜ்ஜை தப்பாதே )

தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்-
பத்து எட்டுத் திரு முகம் மறுக்கப் பெற்றுடையோம் –
எங்கள் பணிக்கு அவனோ கடவன் -நாங்கள் ஆராயக் கடவோம் என்ன
உனக்கு ஆராய வேண்டும் பயம் இல்லை -நாங்கள் தூயோமாய் வந்தான் என்கிறார்கள்
தூய்மை அவனுடைய ரக்ஷையும் –
அவன் பிரயோஜனமும் ஒழிய ஸ்வ யத்னம் -ஸ்வ பிரயோஜனம்-இல்லாமல் இருக்கை
திருவடி திருவாழி மோதிரத்தையும் தன் வடிவையும் காட்டாதே
தன் மிடற்றின் ஓசையைக் காட்டி விஸ்வசிப்பித்தால் போலே தங்களுடைய ஆர்த்த த்வனியைக் காட்டுகிறார்கள்

பிரணாதஸ் ச மஹா நேஷ-என்ற ஆர்த்த நாதம் –
ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட-என்னப் பண்ணிற்று இறே
பண்டு சொன்ன தூயோமில் -(5-பாசுரம் -)வார்த்தை யடைய இவ் விடத்துக்கு ஆகரம்

வந்தோம்
இங்கு வர்த்திக்கிற உனக்கு அடைவு தெரியாமல் இல்லை –
அவன் செய்யக் கடவதை நாங்கள் செய்தோம்-என்கை
இப்படி பிரமாணம் என் என்று அவன் கேட்க

துயில் எழப் பாடுவான்
என்கிறார்கள் -உங்கள் ஆற்றாமை -பறையின் அளவள்ள- இன்னம் சொல்லுங்கோள் -என்ன
உறகல் உறகல்-என்று உணர்ந்து இருப்பாரையும் அசிர்க்கும் பெரியாழ்வார் பெண் பிள்ளைகள்
உன்னையும் அசிர்ப்போம் சிலர் என்கிறார்கள்
ச மயா போதித-என்று பிராட்டி உறங்குகின்ற படி கண்டு உகந்தாள்
இவர்கள் உணரும்படி காண ஆசைப் படுகிறார்கள் –
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு –
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் –
அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -என்னுமவர்கள் பெண் பிள்ளைகள் இறே இவர்கள் –
ஆகில் விடிந்தவாறே பார்த்துக் கொள்கிறோம் இப்போது போங்கோள்-என்றான் –

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா –
மனத்தினால் நினைத்தாலும் வாயாலே நெருப்பைச் சொரியாதே கொள்-
இவர்களுக்கு இவன் வாயது இறே வாழ் நாள்

யம்மா
அவன் வாய் நேர்ந்தாலும் இவர்கள் நடத்தா விடில் கார்ய கரம் ஆகாதே –
வத்ய தாம் என்றவாறே
அஸ் மாபிஸ் துல்ய -என்ன வேணும் இறே
தா நஹம் த்விஷத-என்றவனே
ததாமி என்றாலும் இவர்களுக்கு வேண்டாவிடில்
ந ஷமாமி கதாசன -என்னும் அத்தனை
பிதாமஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத

கோயில் காப்பானே
ஏஷ ஸூப் தேஷூ ஜாகர்த்தி என்கிறபடியே இவன் இசைவதற்கு முன்பு அவன் உணர்ந்து இவனை நோக்கும் –
இவன் இசைந்த பின்பு இவன் உணர்ந்து அவனை நோக்க அவன் உறங்கும்

(கட வல்லி -நாம் தூங்கும் பொழுதும் அவன் விழித்து நாம் விரும்புவதை நிறைவேற்ற)

நீ நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-
உள்ளே இருக்கிறவனோ எங்களுக்கு நாயகன் நீ அன்றோ –
நாங்கள் த்வார சேஷியை ஒழிய பர சேஷியை உடையோம் அல்லோம்
நீ அன்றோ எங்களுக்கு நிர்வாஹகன் –
ஆன பின்பு வாசா தர்ம நவாப் நு ஹி-பண்ணாயோ -என்று இவர்கள் அர்த்திக்க
இவர்களை தாளை யுருவிக் கதவைத் தள்ளிக் கொடு புகுருங்கோள்-என்ன
அது உன்னிலும் பரிவுடைய கதவு காண்-எங்களால் தள்ள ஒண்ணாது -நீயே திற -என்கிறார்கள்

நேச நிலைக்கு கதவம்
கதவும் நிலையும் செறிந்த செறிவாகவுமாம்

கம்சன் படைவீட்டில் அடைய பிரதிகூலிக்கும் படி இங்கு எல்லாரும் அனுகூலிக்கும் படி
படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே -என்னுமா போலே –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ — திரு நாராயண புரத்து ஆய் ஸ்வாமிகள் -என்னும் ஜனன்யாச்சார்யார் ஸ்வாமிகள் -வியாக்யானங்கள்-

October 29, 2017

உக்தி ப்ரத்யுக்தி இரண்டும் சாப்தமாக இதிலே மட்டும் உள்ளது –
கீழே ஒன்பது பாசுரங்களிலும் அர்த்தமாக அனுமானித்துத் தான் கொள்ள வேண்டும் –
பிரமாதா பிரமாணம் ப்ரமேயம் மூன்றுமே பத்து -உண்டே –

ஈராயிரப்படி -அவதாரிகை –
இவர்கள் தங்களிலே கூடிப் பாடின பாட்டைக் கொண்டு அசல் திரு மாளிகையிலே
கேட்டுக் கிடப்பாள் ஒரு பெண் பிள்ளையை
தன்னிலே நுடங்கிப் பாடுகிற படியைக் கேட்டு -எல்லே இளங்கிளியே -என்கிறார்கள் –
(நுடங்கு கேள்வி இசை என்கோ -உள்ளே வைத்து பாடும் இசை –
குயில் தானாகப் பாடும் -முன்னோர் மொழிந்த முறை ஓர்ந்து தான் பேச வேண்டுமே ஆகவே கிளி
மென் கிளி போல் மிழற்றும் என் பேதையே )

திருவான பேச்சு இருந்தபடி என் என்று கொண்டாடுகிறார்கள் –
(திருவான பேச்சு–வாக்மீ ஸ்ரீ மான் சொல்லின் செல்வன் -)
யாழியிலே இட்டுப் பாடி இனிதானவாறே
மிடற்றிலே இட்டுப் பாடுவாரைப் போலே முற்படப் பெண் பாடக் கேட்டு அவர்கள் பாடுகிறார்கள் –

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-

பதவுரை

இளம் கிளியே–இளமை தங்கிய கிளி போன்றுள்ளவளே!
எல்லே–(இஃது) என்னே!
இன்னம்–இத்தனை பெண் பிள்ளைகள் திறண்டு வந்த பின்பும்
உறங்குதியோ–தூங்குகின்றாயோ? (என்று உணர்த்த வந்தவர்கள் கேட்க;)
நங்கைமீர்–பெண்காள்!
போதர்கின்றேன்–(இதோ) புறப்பட்டு வருகிறேன்;
சில் என்று அழையேல்மின்–சிலுகு சிலுகென்று அழையாதேயுங்கள்; (என்று உறங்குகிறவள் விடைசொல்ல)
இளங்கிளியே !
வல்லை –(நீ வார்த்தை சொல்லுவதில்) வல்லமை யுடையவள்;
உன் கட்டுரைகள்-உனது கடுமையான சொற்களையும்
உன் வாய்-உன் வாயையும்
பண்டே-நெடு நாளாகவே
அறிதும்-நாங்கள் அறிவோம்; (என்று உணர்த்த வந்தவர்கள் சொல்ல,)
நீங்கள் வல்லீர்கள்–இப்படிச் சொல்லுகிற) நீங்கள் தான் (பேச்சில்) வல்லமை யுமையீர்
(அன்றேல்)–
நானே தான் ஆயிடுக–(நீங்கள் செல்லுகிறபடி) நான் தான் (வல்லவளாய்) ஆகக் கடவேன்;
(உங்களுக்கு நான் செய்ய வேண்டுவதென்? என்று உள்ளுறங்குமவள் கேட்க;
நீ–நீ
ஒல்லை–சீக்கிரமாக
போதாய்–எழுந்து வா
உனக்கு–(தனியே) உனக்கு மட்டும்
வேறு என்ன உடையை–(நீ) வேறு என்ன (அதிசயத்தை) உடையையாயிரா நின்றாய்? என்று உணர்த்த வந்தவர்கள் கேட்க;)
எல்லாரும்–(வர வேண்டியவர்கள்) எல்லாரும்
போந்தாரோ–வந்தனரோ? (என்று உறங்குமவள் கேட்க)
போந்தார்–(எல்லோரும்) வந்தனர்;
போந்து எண்ணிக்கை கொள்–(நீ எழுந்துவந்து) எண்ணிப் பார்த்துக் கொள்;
(என்று உணர்த்த வந்தவர்கள் கூற,)
(என்னை ஏதுக்காக வரச் சொல்லுகிறீர்களென்று உறங்குமவள் கேட்க;)
வல் ஆனை–(குவலயாபீட மென்னும்) வலிய யானையை
கொன்றானை–கொன்றொழித்தவனும்
மாற்றாரை–சத்ருக்களான கம்ஸாதிகளை
மாற்று அழிக்க வல்லானை–மிடுக்கு அழிந்தவர்களாகச் செய்தருள வல்லவனும்
மாயனை–அற்புதனுமான கண்ணபிரானை
பாட–பாடுகைக்காக
(ஒல்லை நீ போதாய், என்றழைக்கிறார்கள்)
ஏல் ஓர் எம்பாவாய்

இளங்கிளியே-
பேச்சிலும்
அழகிலும் -கிளி போன்றவள் –

கீழே சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாட -என்றதைக் கேட்டு
இவள் மிளற்ற -அத்தை கேட்டு -இந்த விழிச் சொல் –

இன்னம் உறங்குதியோ-நாங்கள் அனைவரும் வந்த பின்பும்
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்-சுருக்கு சுருக்கு என்று மனம் புண் படும் படி பேசுகிறீர்களே –
இவளே முதலில் குத்தி பேசுகிறாள் –
வல்லை-வாய் பேச்சில் சாமர்த்தியம் –
கட்டுரைகள் -கடுமையான சொற்கள்
பண்டே யுன் வாய் அறிதும்-நெடும் காலமாக இரண்டையும் அறிவோமே
வல்லீர்கள் நீங்களே-நீங்களே வாய் சாமர்த்தியம் -எதிர் வாதம் செய்து –

இது வரை வாத பிரதி வாதங்கள்
இனி நிலை மாறும்
பாம்பு தோல் தானே உரிப்பது போல் -கோபம் வந்தேறி என்று உணர்ந்து –
புத்தி ஞானம் ஆத்மா நித்யம் -கர்மா வந்தேறி -ஆகவே புத்தி வலிமை கொண்டது –
தர்ம பூத ஞானமே புத்தி -விவேக ஞானம்
முக்தன் கண் இல்லாமலே காண்பான் -ஞானத்தால்
இங்கு தானே ஞானம் பிரசுரிக்க இந்திரியங்கள் வேண்டும் –
புத்தி தூண்டி -விவேக ஞானம் -பிறந்து -தர்ம சாஸ்திரம் உரை கல்லில் -உரைத்து -உணர்ந்து –
விவேக ஞானம் கொண்ட நான் வேறே -கோபம் கொண்ட நான் வேறே –
ஆத்ம சோதனம் பண்ணி -முன் நின்ற நிலையை சிஷித்து –
நானே தான் ஆயிடுக -என்கிறாள்
மாற்றாரை மாற்றழிக்க வல்லானை -பாகவத சத்ருக்களின் விரோதத்தை அழிக்க வல்லவனை –
ஆத்மாவை அழிக்க முடியாதே -அழுக்கை தானே போக்க வேண்டும் –
மாயனை -மாயனை மன்னு -கீழே 5 பாசுரம் தொடங்கிய மாயன் சப்தம் இங்கு மீண்டும் –

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
இளங்கிளி -என்று கிளியை வ்யாவர்த்தித்த படி -தாங்கள் கிளிகள் -இவள் இளங்கிளி
பாட்டில் இனிமையும் அப்படியே –
இதொரு பேச்சே -என்று கொண்டாடுகிறார்கள் —

(கிளியும் இளம் கிளியும் கால ஷேப தலைப்பு -கார்ப்பங்காடு ஸ்வாமி
வேளுக்குடி வரதாச்சார்யரை முதலில் செய்ய சொல்லி அருளினாரே )

இவர்கள் பாட்டுக் கொண்டாடினத்தை –
(எல்லே இளம் கிளியே -முதலில் கொண்டாடி தானே விழிச் சொல் )
பயத்தாலே தங்களுடைய உடம்பும் வாயும் வெளுத்து இருக்க
கிருஷ்ண சம்ச்லேஷத்தாலே தன் உடம்பு பசுமை யுண்டாய்
வாயும் சிவந்து இருக்கிறது என்று ஒன்றும் பேசாதே கிடந்தாளாய் இருந்தவாறே

இன்னம் உறங்குதியோ
உத்தேச்யம் கை புகுந்தாலும் உறங்குவார் உண்டோ
(உத்தேச்யம்-கண்ணனும் -பாகவதர்களும் இருக்க )

சில்லென்று அழையேன்மின் –
தான் அனுசந்திக்கிற அனுசந்தானத்துக்கு இவர்கள் அழைக்கிற சொல் விக்நமாகையாலே-
சிலுகிடாதே கொள்ளுங்கோள் -என்கிறாள் –
திருவாய் மொழி பாடா நின்றால் செல்வர் எழுந்து அருளுகையும் அஸஹ்யமாமாம் போலே
(ஆஜ்ஜா கைங்கர்யம் விதி -செய்யா விட்டால் பிராயச்சித்தம் உண்டு –
அநுஜ்ஜா கைங்கர்யம் இழந்தது இழந்ததே -சந்த்யா வந்தனம் பின்பே செய்து கொள்ளலாமே –கூரத்தாழ்வான் )

நங்கைமீர் போதர்கின்றேன்
இவர்கள் சிவிடுக்கென்ன
நாங்களும் எங்கள் சொல்லும் ஆகாதபடி உன் குறைவறுகை இருந்தபடி என் என்ன
நீங்கள் அன்றோ குறைவற்றீர்கள் –
படுத்தாதே கொள்ளுங்கோள் -புறப்படா நின்றேன் -என்ன
(இப் பாட்டிலும் யுக்தி பிரதி யுக்தி அனுமானித்துக் கொள்ள வேண்டிய அம்சம் இதுவே )

வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
நீ சொல்லிற்றவற்றைச் சொல்லி எங்களதே குற்றமாம் படி வார்த்தை சொல்ல வல்லை என்னும் இடம்
இன்றே யல்ல அறிகிறது –
எத்தனை காலமுண்டு உன்னோடே பழகுகிறது -என்ன
(உன்னுடைய சுண்டாயம் நாம் அறிவோம் -பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –
பெருமாள் விஷயம் அங்கு -இங்கு பாகவத விஷயம் )

வல்லீர்கள் நீங்களே
உங்கள் வாசலிலே வந்து உங்களாலே படாதது உண்டோ -என்ன
அது சாத்தியம்– இது சித்தம் அன்றோ –
பிரத்யஷத்துக்கு அனுமானம் வேணுமோ -என்ன

நானே தான் ஆயிடுக
என்று ஸ்ரீ பரத ஆழ்வான் –
ந மந்தராயா -ந ச மாதராயா -ந ச ராகவஸ்ய -மத் பாபமே வாத்ர – என்றால் போலே –

(இல்லாத குற்றத்தை ஏறிட்டு சொன்னாலும் இல்லை செய்யாதே இசைந்து கொள்வதே தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வம் )
ஒருவனுக்கு வைஷ்ணத்வம் ஆவது ஸ்வ தோஷத்தை இல்லை செய்யாதே இல்லாததையும் சிலர் உண்டு என்றால்
அத்தை இசைகையே ஸ்வரூபம் என்னும் வேதார்த்தம் சொல்லிற்று ஆகிறது )

மத் பாக்ய சங்ஷயாத்- – ஸூந்தர –26-இறே
(ப்ராஞ்ஞன் க்ருதஞ்ஞன் ராகவன் இரக்கம் -சத் வருத்தர் -பிரசித்தம் -என்னிடம் மட்டும் இல்லையே –
எனக்கு பாக்ய குறைவே காரணம் )
பர ஸ்துதி யோடே ஒக்கும் ஸ்வ நிகர்ஷம்
(பிறர் ஸ்தோத்ரம் தாழ்வு போலே நம்முடைய குற்றம்
பரனான அவனை ஸ்தோத்ரம் செய்வது க்ருத்யமாமாம் போல் ஸ்வ நிகர்ஷம் அனுசந்திப்பதும்
க்ருத்யமாகுமே -என்றுமாம் –
பட்டர் நிந்தித்தவனுக்கு பரிசு கொடுத்த ஐதிக்யம் )

ஒல்லை நீ போதாய்
அவள் புகுரா விடில் தங்களுக்கு ப்ராண ஹானியாகையாலும்-
அவளுக்கும் அநர்த்தமாகையாலும் –
சடக்கெனப் புறப்பட்டுக் கொடு நில் -என்ன
வைஷ்ணவ கோஷ்ட்டியைப் பிரியாது இருக்கை நன்று –

யுனக்கென்ன வேறுடையை
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களுக்கு உள்ளது ஒழிய உனக்கு வேறே சில உண்டோ –
உன் ஸ்வயம்பாகம் இன்னம் தவிர்ந்து இல்லை –
பெரும் பானை கண்ட பின்பும் -என்கிறார்கள் –
அதாவது மத்யம பதமும் மூன்றாவது பதமும் –
(ஸ்வயம்பாகம் இல்லாமல் –ந ம -நான் எனக்கு உரியன் அல்லன் –
நாராயணாயா ப்ராப்த பந்துத்வம் -பாகவத சேஷத்வமும் அனுசந்தேயம் –
கண்ணனே புருஷார்த்தம் என்பதும் வேறுடையை ஆகுமே )

காட்டில் இளைய பெருமாளுக்கு ஸ்ரீ பரத ஆழ்வானைக் காண்கை அஸஹ்யமானவாறே
பெருமாள் -ஆகில் நீர் ராஜ்யத்தை ஆள வேணும் என்ன –
இளைய பெருமாள் தரைப் பட்டால் போலே –
இவளும் உனக்கு என்ன வேறுடையை -என்ன அப்படி தரைப் பட்டாள்-
சாது கோட்டியுள் கொள்ளப் படுவார் – (பெரியாழ்வார் 3-6-11-கண்ணன் உபாயம் இவர்கள் உபேயம் )-என்கை –
புருஷார்த்தம் இக் கோஷ்டிக்கு புறம்பாய் இருக்கைக்கு மேற்பட்ட அநர்த்தம் உண்டோ –
விஷயங்களைப் பற்றி புறம்பாய் இருக்கவுமாம் –
ஈஸ்வரனைப் பற்றி புறம்பாய் இருக்கவுமாம் –
ஆத்மாவைப் பற்றி புறம்பாய் இருக்கவுமாம் –
ச சைன்யம் பரதம் கத்வா ஹநிஷ்யாமி ந சம்சய –
ராஜ்ய மஸ்மை ப்ரதீயதாம்- ஸ்வாநி காத்ராணி லஜ்ஜயா –

(சைன்யம் உடன் கூடிய பரதன் இடம் சென்று வெல்வேன்
ராஜ்ஜியம் உனக்கு விருப்பமானால் பரதன் இடம் சொல்லிக் கொடுக்கச் செல்வேன்
பாஷம் -அப்படியே -ஓரே வார்த்தை மட்டுமே பதில் சொல்லுவான்
வெட்க்கி உடம்பு சுருங்கினானே -ராமன் நலத்திலே விருப்பம் –
பாகவத அபசாரம் கூடாது என்பதற்கு அன்றோ இச்சுடு சொல் )

எல்லாரும் போந்தாரோ
உங்களை ஒழிய எனக்கு ஒரு ஸூகம் உண்டோ –
உணர அறியாத சிறு பெண்களும் இழக்க ஒண்ணாது –
அவர்களும் உணர்ந்தால் புறப்பட வேணும் என்று கிடந்தேன் –

எல்லாரும் போந்தாரோ – போந்தார் போந்து எண்ணிக் கோள்
அடைய வந்து புறப்பட்டு மெய்க்காட்டுக் கொள்-என்ன
மெய்க்காட்டுகைக்கு பிரயோஜனம் தொட்டு எண்ணுகையும்-
தனித்தனி எல்லாரையும் தழுவுகையும் –

(அவனே உகந்து நெருங்கி வந்தானே இடை கழியிலே
பின்பு அழகிய பெருமாள் ஜீயர் நம்பிள்ளை திரு முதுகு வியர்வை பார்த்துப் பின்னே போவதே
புருஷார்த்தம் என்று இருந்தார் அன்றோ )

வல்லானை கொன்றானை
இனி உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன –
உன் அழகிய மிடற்றாலே –
வல்லானை கொன்றானை -என்னாய் என்கிறார்கள் –
ஒருநாள் செய்த உபகாரம் அமையாதா நமக்கு -என்று கொண்டாடுகிறார்கள்

வல்லானை கொன்றானை
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதான்-என்று வாசலிலே ஆனையை நிறுத்தி
பிள்ளையை ஆனை நலிந்ததாகக் கேட்ப்போம் இறே என்று
கம்சன் அம்மானாய் இருக்கப் பார்க்க அத்தைக் கொன்று அவ் வூரில் பெண்களையும் நம்மையும்
உளோமாம் படி பண்ணி ஜீவனமான தன்னை நோக்கித் தந்தவன்

மாற்றாரை மாற்றழிக்க-வல்லானை –
சக்ரவர்த்தி திருமகனைப் போலே -நாளை வா என்னாதே
அக்கணத்திலே கம்சாதிகள் நினைத்த நினைவை
அவர்கள் தங்களோடு போக்கி தாய் தமப்பன் காலிலே விலங்கைப் போக்கி வாழ்வித்தவன்

மாயனைப்
தன் கையில் எதிரிகள் அகப்படுமவற்றைத் தான் பெண்கள் கையிலே அகப்பட வல்லவன்

பாடேலோ ரெம்பாவாய்-
நமக்கு அவன் தோற்கும் தோல்விக்குத் தோற்றுப் பாட
இவ் விஷயத்திலே விஐயம் பிரணயித்தவத்துக்குக் கொத்தை –
ஆதலால் தோல்வி விஜயமான இடம் இறே இவ்விடம் –

கீழே கீர்த்திமை பாடி -இங்கு தோற்றது பாடி -இதுக்காக அன்றோ அவன் அவதாரம் –
ஆகவே அவன் உகப்புக்காகவே இவை இரண்டுமே

——————————————-

(திருப்பாவை ஆகிறது இப்பாட்டும் சிற்றம் சிறு காலை பாசுரமும்
இரண்டாலும் பாகவதர் நடக்க வேண்டிய முறையும் பகவான் நடக்க வேண்டிய முறையும் அறிவிக்கும் பாசுரங்கள்
மாயனை மன்னு வட மதுரை மைந்தனை – -5 தொடங்கி-மாயனை தாமோதரனைச் செப்பு-9- -இதில் மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-அங்கு ஏஷ நாராயணன் -இங்கு ஆகாதா மதுரா புரிம் -அங்கும் வடமதுரை அவதாரம் -இங்கும் வடமதுரையில் விரோதி நிரஸனம்
உக்திகளும் பிரதி உக்திகளும் வியக்தம் இதில் மட்டும் -கீழே அவ்யக்தமாக இருந்தது அன்றோ)

(எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ-வெளியில் உள்ளோர் வார்த்தைகள்
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்-உள்ளே இருப்பவள் வார்த்தை
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்-வெளியில் உள்ளோர் வார்த்தைகள்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக-உள்ளே இருப்பவள் வார்த்தை
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை-வெளியில் உள்ளோர் வார்த்தைகள்
எல்லாரும் போந்தாரோ-உள்ளே இருப்பவள் வார்த்தை
போந்தார் போந்து எண்ணிக் கோள்-வெளியில் உள்ளோர் வார்த்தைகள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்–வெளியில் உள்ளோர் வார்த்தைகள்)

நாலாயிரப்படி-அவதாரிகை –
பெண்கள் எல்லாருடையவும் திரளைக் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-

இவர்கள் தங்களிலே கூடிப் பாடின பாட்டான –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாட -என்ற பாட்டைக் கேட்டு
அசல் திருமாளிகையிலே கிடந்தாள் ஒரு பெண் பிள்ளை தன்னிலே கிடந்தது நுடங்கிப் பாடுகிற படியைக் கேட்டு
எல்லே இளங்கிளியே
திருவான பேச்சு இருந்தபடி என் என்று கொண்டாடுகிறார்கள் -(நுடங்கு கேள்வி இசை என்கோ -ஆழ்வார் )

யாழியிலே இட்டுப் பாடி -இனிதானவாறே-மிடற்றிலே இட்டுப் பாடுவாரைப் போலே- முற்படப் பெண் பாடக் கேட்டு அவர்கள் பாடுகிறார்கள் –

(குயில் போல் தனக்குத் தோன்றியதைப் பேசாமல் முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் -பொருளிலும் மதிப்பிலும் இனிமை கிளிக்கே)

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
எல்லே என்றது -என்ன ஆச்சர்யம் என்றபடி -சம்போதனம் ஆகவுமாம் –
இளங்கிளி -என்று கிளியை வ்யாவர்த்தித்த படி -தாங்கள் கிளிகள் -இவள் இளங்கிளி
பாட்டில் இனிமையால் உறங்கி இவள் பேச்சு கிடையாது என்னும்படி இருக்கை – –
இதொரு பேச்சே -என்று கொண்டாடுகிறார்கள் —

(கிளியும் இளம் கிளியும் கால ஷேப தலைப்பு -கார்ப்பங்காடு ஸ்வாமி
வேளுக்குடி வரதாச்சார்யரை முதலில் செய்ய சொல்லி அருளினாரே )

இவர்கள் பாட்டுக் கொண்டாடினத்தை தன் -பயத்தாலே தங்களுடைய உடம்பும் வாயும்
வெளுத்து இருக்க -கிருஷ்ண சம்ஸ்லேஷத்தாலே -தன் உடம்பு பசுமை யுண்டாய் வாயும் சிவந்து இருக்கிறது என்கிறார்கள்-
இவ்வளவில் வாய் திறக்கில் பழி இடுவார்கள் என்று நினைத்து நான் இங்கனே பசுகு பசுகு என்று
சிறகுகளும் தானுமாய் இருந்தேனோ என்று ஒன்றும் பேசாதே கிடந்தாள்

இன்னம் உறங்குதியோ
உத்தேச்யம் கை புகுந்தாலும் உறங்குவார் உண்டோ(கண்கள் துஞ்சுதலே முன்பு -பெற்ற பின்பு ஸதா பஸ்யந்தி – -ப்ராப்யத்திலே கண் வைக்க வேண்டுமே-கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் )
எங்களுக்கு கிருஷ்ண விரஹத்தாலே தளர்வதுக்கு மேல் உறக்கம் இல்லை –
அதுக்கு உன் கடாக்ஷமும் பெறாது ஒழிவதே
உன் பாட்டுக் கேட்கப் பெறாது ஒழிவதாய் உயிர்க் கொலையாக்கி இட்டு வைத்தால் தரிக்க ஒண்ணுமோ –

சில்லென்று அழையேன்மின் –
பிராட்டிமாரோடே கூட எழுந்து அருளி இருந்தாலும் படிக்கத்தோபாதி அந்தரங்கனாய்
இருக்கக் கடவ ஸ்ரீ நாரத பகவானை(ஜிதந்தேயில் இந்த சரித்திரம் உண்டே )
ஸ்வேத த்விபத்துக்கு எழுந்து அருளினை போது உள்ளே புகப் புக்கவாறே-
இவன் வெட்டத்தனம் அவர்களுக்குப் பொறாது என்று –
நீ இங்கே நில்லு -என்று எழுந்து அருளினால் போலே( அசுணமா முடியுமா போல் லௌகிக சப்தம் )
தான் அனுசந்திக்கிற அனுசந்தானத்துக்கு இவர்கள் அழைக்கிற சொல் விக்நமாகையாலே-
சிலுகிடாதே கொள்ளுங்கோள் -என்கிறாள் –
இவர்கள் வார்த்தை அஸஹ்யமோ என்னில் திருப் புன்னை கீழே
திருவாய் மொழி பாடா நின்றால் செல்வர் (கூட்டம் கலக்கி )எழுந்து அருளுகையும் அஸஹ்யமாமாம் போலே –

நங்கைமீர் போதர்கின்றேன்
இவர்கள் சிவிடுக்கென்ன நாங்களும் எங்கள் சொல்லும் ஆகாதபடி உன் குறைவறுகை இருந்தபடி என் என்ன
நீங்கள் அன்றோ குறைவற்றீர்கள் -படுத்தாதே கொள்ளுங்கோள் -புறப்படா நின்றேன் -என்ன

வல்லை யுன் கட்டுரைகள் பண்டே யுன் வாய் அறிதும்
நங்கைமீர் என்ற உறவற்ற சொல்லாலே
நீ சொல்லிற்றவற்றைச் சொல்லி எங்கள் திறத்தே குற்றமாம் படி வார்த்தை சொல்ல வல்லை
என்னும் இடம் இன்றே யல்ல அறிகிறது -எத்தனை காலமுண்டு உன்னோடே பழகுகிறது -என்ன

வல்லீர்கள் நீங்களே
இன்னம் உறங்குதியோ வல்லை யுன் கட்டுரைகள் -என்னும் வெட்டிமை உங்களதே —
நான் உங்கள் வாசலிலே வந்து உங்களாலே படாதது உண்டோ -என்ன
அது சாத்தியம்– இது சித்தம் அன்றோ -பிரத்யஷத்துக்கு அனுமானம் வேணுமோ -என்ன-

நானே தான் ஆயிடுக
பதகம் மூட்டினவாறே (பதக முதலை வாய் களிறு )சிறிது போதாகிலும் பேசாதே இருப்பார்கள் இறே என்று –
நானே தான் ஆயிடுக -என்கிறாள் –
ஒருவனுக்கு வைஷ்ணத்வம் ஆவது ஸ்வ தோஷத்தை இல்லை செய்யாதே இல்லாததையும் சிலர் உண்டு என்றால்
அத்தை இசைகையே ஸ்வரூபம் என்னும் வேதார்த்தம் சொல்லிற்று ஆகிறது

(துளஸீ மாலையும் பன்னிரண்டு திரு நாமங்களும் ஸ்ரீ வைஷ்ணவத்வ லக்ஷணம் இல்லை
இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை செய்யாதே
உண்டு என்று இசைகையே தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவத்வம்)

ஸ்ரீ பரத ஆழ்வான் -மத் பாபமே வாத்ர -நிமித்தம் ஆஸீத் வன பிரவேச ரகு நந்தனஸ்ய -என்றான் –

பர ஸ்துதி யோடே ஒக்கும் ஸ்வ நிகர்ஷம்(சொல்லிக் -கொள்வதும் சமமான கர்தவ்யம் பட்டர் சம்பாவனை செய்த ஐதிக்யம் )
அத் தோஷம் என் தலையிலே கிடக்கிறது -உங்களுக்கு இப்போது செய்ய வேண்டுவது என் என்ன
அரை க்ஷணம் தங்களுக்கு அவளை ஒழியச் செல்லாமையாலும் –
அவளுக்கு தங்களை ஒழியச் செல்லாமையாலும் சடக்கெனப் புறப்பட்டுக் கொண்டு நில் என்கிறார்கள்

ஒல்லை நீ போதாய்
உன் படுக்கையிலே கிடக்கிற கிருஷ்ணனை இட்டு வைத்து நீ கடுகப் போராய்
அரை க்ஷணம் வைஷ்ணவ கோஷ்ட்டியைப் பிரிய நின்று வரும் மாத்யஸ்த்யம் எனக்கு என் செய்ய –
என்கிற ஸூப்ராஹ்மண்ய பட்டர் வார்த்தையை ஸ்மரிப்பது -(பிணக்கு வர மத்யஸ்த்யம் நடுநிலை பண்ண வரச் சொல்ல -அவர் சொன்ன பதில் )

யுனக்கென்ன வேறுடையை
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களுக்கு உள்ளது ஒழிய உனக்கு வேறே சில உண்டோ –
உன் ஸ்வயம்பாகம் இன்னம் தவிர்ந்து இல்லை-எங்கள் -பெரும் பானை கண்ட பின்பும் -என்கிறார்கள் –
அதாவது மத்யம பதமும் மூன்றாவது பதமும் –

சோச்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா-என்னக் கடவது இறே
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் (5-8-ஸஹ போஜனம் )-என்னுமா போலே
இளைய பெருமாள் கைகேயின் மகன் வருகிறான் என்று ஸ்ரீ பரத ஆழ்வானைச் சீறி –
வில்லையோட்டிக் கொல்ல என்ன –
பெருமாளுக்கு அது அஸஹ்யமாய் -(போர் பெரும் கோலம் என்றாயே நீர்ப் பெரும் கோலம் பார் )பிள்ளைக்குச் சொல்லிக் கொள்கிறோம்
நீ இங்கண் அலமாக்கிறது ராஜ்யத்தை ஆசைப்பட்டு அன்றோ
நீ ராஜ்யத்தைப் பண்ணு-என்று சொன்ன வார்த்தையைக் கேட்டு
இளைய பெருமாள் தரைப் பட்டால் போலே -இவளும் உனக்கு என்ன வேறுடையை -என்ன அப்படி தரைப் பட்டாள்-

ச சைன்யம் பரதம் கத்வா ஹநிஷ்யாமி ந சம்சய – ராஜ்ய மஸ்மை ப்ரதீயதாம்- ஸ்வாநி காத்ராணி லஜ்ஜயா(மூன்றுக்கும் பிரமாணங்கள் )
சாது கோட்டியுள் கொள்ளப் படுவார் (பெரியாழ்வார் -3-6)என்று -புருஷார்த்தமான
இக் கோஷ்டிக்கு புறம்பாய் இருக்கைக்கு மேற்பட்ட அநர்த்தம் உண்டோ –
விஷயங்களைப் பற்றி புறம்பாய் இருக்கவுமாம் –
ஈஸ்வரனைப் பற்றி புறம்பாய் இருக்கவுமாம்
ஆத்மாவைப் பற்றி புறம்பாய் இருக்கவுமாம் –

எல்லாரும் போந்தாரோ
உங்களை ஒழிய எனக்கு ஒரு ஸூகம் உண்டோ –
உணர அறியாத சிறு பெண்களும் இழக்க ஒண்ணாது –
அவர்களும் உணர்ந்தால் புறப்பட வேணும் என்று கிடந்தேன் -இத்தனை –
எல்லாரும் போந்தார்கள் ஆகில் புறப்படுகிறேன் -என்றாள்-

எல்லாரும் போந்தாரோ – போந்தார் போந்து எண்ணிக் கோள்
அடைய வந்து புறப்பட்டு மெய்க்காட்டுக் கொள்-என்ன
மெய்க் காட்டுகைக்கு பிரயோஜனம் தொட்டு எண்ணுகையும்-
தனித்தனி எல்லாரையும் தழுவுகையும்

வல்லானை கொன்றானை
எல்லாரும் வந்தாராகில்
இனி உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன –வேறு உண்டோ –
உன் அழகிய மிடற்றாலே -ஒரு கால் -வல்லானை கொன்றானை -என்னாய் என்கிறார்கள் –

வல்லானை கொன்றானை
ஒரு நாள் செய்த உபகாரம் அமையாதா நமக்கு -என்று கொண்டாடுகிறார்கள்

வல்லானை கொன்றானை
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதான்-(பெரிய திருமொழி -6-5)என்று வாசலிலே ஆனையை நிறுத்தி
பிள்ளையை ஆனை நலிந்ததாகக் கேட்ப்போம் இறே என்று
கம்சன் அம்மானாய் இருக்கப் பார்க்க அத்தைக் கொன்று அவ் வூரில் பெண்களையும் நம்மையும்
உளோமாம் படி பண்ணி ஜீவனமான தன்னை நோக்கித் தந்தவன்

மாற்றாரை மாற்றழிக்க-வல்லானை –
சக்ரவர்த்தி திருமகனைப் போலே -நாளை வா என்று விடாதே அக் கணத்திலே கம்சாதிகள் நினைத்த நினைவை
அவர்கள் தங்களோடு போக்கி தாய் தம்மப்பன் காலிலே விலங்கைப் போக்கி வாழ்வித்தவன்

மாயனைப்
தன் கையில் எதிரிகள் அகப்படுமவற்றைத் தான் பெண்கள் கையிலே அகப்பட வல்லவன்

பாடேலோ ரெம்பாவாய்-
நமக்கு அவன் தோற்கும் தோல்விக்குத் தோற்றுப் பாட
இவ் விஷயத்திலே விஐயம் பிரணயித்தவத்துக்குக் கொத்தையாய் -தோற்க
அத் தோல்விக்கு அவனைப் பாட வேணும் –

(சோழ ஸிம்ஹ புரத்தில் பக்த உசிதன் -=பக்த லோசனன் கிடந்தவாறு எழுந்து இருந்து வாழி கேசனே
சொன்ன வண்ணம் செய்து அருளி –ஆஸ்ரித பாரதந்தர்யம் காட்டி நம்மை எழுதிக் கொள்கிறானே)

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் — ஸ்ரீ திரு நாராயண புரத்து ஸ்ரீ ஆய் -என்னும் ஸ்ரீ ஜனன்யாச்சார்யார் ஸ்வாமிகள் -வியாக்யானங்கள்-

October 29, 2017

காத்யாயினி மஹா மயி குறித்து அன்று கோபிகள் பாவை நோன்பு –
அநுகாரம் முதிர்ந்து -அனுபவ பரிவாஹம் -பாசுரமாக -வெளி வந்தது –
அபேக்ஷை உள்ள தர்மம் -துணைத் தேட்டம் -தேர் பலரும் இழுக்க வேண்டுமே –
லௌகிக காமத்துக்குத் தான் தனிமை வேண்டும் -கூடி இருந்து குளிர வேண்டுமே –
ரகு குணம் ஜடபரதர் -சம்வாதம் -பாகவதர் ஸ்ரீ பாத தூளி மஹாத்ம்யம் உண்டே –
அஹங்காரம் போக்க இதுவே சிறந்த உபாயம் –

ஈராயிரப்படி -அவதாரிகை –
இதுக்கு எல்லாம் கடவளவாய்-எல்லாருக்கும் முன்னே நான் உணர்ந்து
எல்லாரையும் உணர்த்தக் கடவளாக ப்ரதிஜ்ஜை பண்ணினாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

(மண்டோதரி வியத்தமாக தான் உணர்ந்து- சதுஸ்லோகி
ஏஷ மஹா யோகி –ஸ்ரீ வத்ஸ வஷ -சங்கு சக்ர கதா தரா -என்று உணர்த்தினாளே
முனி வராய பராசரர் தத்வ த்ரயம் உணர்ந்து -ஸ்வரூபம் ஸ்வ பாவம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் மைத்ரேயர் வியாஜ்யமாக நமக்கு உணர்த்தினார்
வியாச பகவான் -சதுர்வித புருஷார்த்தங்கள் உணர்ந்து -மஹா பாரதம் -ப்ரஹ்ம ஸூத்ரம் -புராணங்கள் -அருளிச் செய்து உணர்த்தினார் –
ரிஷிகள் உபதேசம் அதிக்ருதா அதிகாரம் -எல்லாரையும் உணர்த்த மாட்டார்கள்
ஆழ்வார்கள் -உணர்ந்து –நம்மாழ்வார் –16- சம்வத்சரங்கள் -ஷோடச கலா -தியானித்து தான் உணர்ந்து -கடாக்ஷம் மூலமாகவே உணர்த்தி –
திருமழிசை ஆழ்வார் சாக்கியம் கற்று -தீர்த்தகரராய் திரிந்து –
வேத வேத்ய வைதிக உபதேசம் ஆவித்யர் அளவிலே ..
அஜ்ஞர் ஜ்ஞானிகள் ஜ்ஞான விசேஷ யுக்தர் சர்வஜ்ஞன் என்னாமல் இவர் திருத்துவர்-
அறியாதார்க்கு உய்யப் புகும் ஆறும் இக் கரை எறினார்க்கு இன்ப வெள்ளமும்
நிலை அறியாதார்க்கு ஆழங் காலும் கரை ஏற்றும் அவனுக்கு நாலும் ஆறும் அறிவிக்க வேணும்
உணர்ந்த மெய் ஞானியர் யோகம் தோறும் -திருவாய் மொழி மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தோறும் —
பதி தோறும் -புக்கு திரியும் குணம் திகழ் கொண்டல் ராமானுஜன்
இங்கு உணர்ந்த மெய் ஞானியர்-ஆழ்வார் -உணர்வு -ஞான விசேஷம் -சேஷி தம்பதி -மிதுனம் –
ஆனந்த மய ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -சர்வ கந்த சர்வ ரஸம் -பரம போக்கிய ஸ்வரூபம் ரூபம் -அறிவதே உணர்வு
அது முதிர்ந்து கனிந்து பக்தியாக பரிமளிக்கும்
உணர்வு எனும் பெரும் பதம் அறிந்தேன் -திருமங்கை
அறிவும் அன்பும் கலந்ததே -பக்தியே -உணர்வு –
யதா வஸ்தித ஞானம் -உண்மை அறிவு -பக்தி முற்ற -பக்தி ஸித்தாஞ்சனம் –
மெய் ஞானம் -உண்மையான அர்த்த பஞ்சக ஞானம் -அறிந்து -அவா உந்த -நமக்கு உணர்த்தி ஆழப் பண்ணுவார்கள் )

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-

பதவுரை

உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள்-உங்கள் (வீட்டுப்) புழைக்கடைத் தோட்டத்திலிருக்கிற தடாகத்திலுள்ள
செங் கழுநீர்-செங்கழுநீர்ப் பூக்களானவை
வாய் நெகிழ்ந்து-விகஸிக்க,
ஆம்பல் வாய் கூம்பின-ஆம்பல் மலர்களின் வாய் மூடிப் போயின;-நிலப்பூ கரு நெய்தல் பூ
(அன்றியும்,)
செங்கல் பொடி கூறை வெண் பல் தவத்தவர்–காவிப் பொடியில் (தோய்த்த) வஸ்திரங்களையும் வெளுத்த
பற்களையுமுடையராய் தபஸ்விகளாயிருந்துள்ள ஸந்நியாஸிகள்,
தங்கள் திருக் கோயில் சங்கு இடுவான்-தமது திருக் கோயில்களைத் திறவு கோலிட்டுத் திறக்கைக்காக
போகின்றார்–போகா நின்றனர்;
எங்களை-எங்களை
முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்-முந்தி வந்து எழுப்புவதாகச் சொல்லிப் போன நங்கையே!
நாணாதாய்-(‘சொன்னபடி எழுப்ப வில்லையே!’ என்னும்) வெட்கமுமில்லாதவளே
நா உடையாய்-(இனிய பேச்சுக் பேசவல்ல) நாவைப் படைத்தவளே!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தட கையன்-சங்கையும் சக்கரத்தையும் தரியா நின்றுள்ள விசாலமான திருக் கைகளை யுடையவனும்
பங்கயக் கண்ணனை-தாமரைபோற் கண்ணனுமான கண்ண பிரானை
பாட-பாடுகைக்கு
எழுந்திராய்-எழுந்திரு;
ஏல் ஓர் எம் பாவாய்!

இதில் ததீய ஞானம் உடைய -அனுஷ்டானம் இல்லாத ஒருத்தியை உணர்த்துகிறார்கள்
பாடும் பொழுது பங்கயக் கண்ணான் என்றே தான் பாடுவார்கள் –
நங்காய் -குண பூர்த்தி -விபரீத லக்ஷணையால் குத்தல் பேச்சு –
நாணாதாய்-செய்யாமலும் இருந்து -அனுதாபமும் இல்லாமல் -பச்சாத் தாபம் -பஸ்ஸாத் -பின்பு தாபப்படுத்தல் இல்லாமை –
வாவி -வாபி -சமஸ்க்ருதம் -குளம் –
செங்கழு நீர் -பகல் புஷ்பம் -செங்கழு நீர் -தாமரைப் பூ –
ஆம்பல் இரவு புஷ்பம் -கரு நெய்தல் -(அல்லி பூ -மவ்வல் -மல்லி பூ )
வாயைத் திறந்து பேசுவதையும் பேசாததையும் சொன்னவாறு
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-உள்ளே யாவது சத்வம் -ரஜஸ் வெளி விட வேண்டுமே
சைவ சன்யாசிகளையும் த்ரி தண்ட ஸ்ரீ வைஷ்ணவ சந்யாசிகள்
திருக் கோயில் சங்கிடுவான்–பாஞ்ச ஜன்யமும் சாவியும்

வாய் நெகிழ்ந்து வாய் கூம்பின காண்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
இப்படி பதங்கள் கூட்டி வியாக்யானம்

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-
இவள் வாசலிலே வந்து போது விடிந்தது காண் -எழுந்திராய் -என்ன
விடிந்தமைக்கு அடையாளம் என் என்ன –
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களும் வாய் பேசுவாராம் பேராது இருப்பாருமாய் வந்து நிற்கிறது
விடிந்தமைக்கு அடையாளம் அன்றோ -என்று
செங்கழு நீர் வளர்ந்தால் போலேயும் ஆம்பல் மொட்டித்தால் போலேயும் -என்று தாங்கள் வாயைச் சொல்ல
உங்கள் வாய் நீங்கள் வேண்டின போது அலர்ந்து மொட்டியாதோ என்ன
வயலில் அவையும் அப்படியே -என்ன
நீங்கள் போய் அலர்த்தியும் மொட்டிக்கப் பண்ணியும் வைத்தீர்கள் -என்ன

தோட்டத்து வாவியும் அப்படியே என்ன
வயலில் அணித்து அன்றோ உங்களுக்குத் தோட்டத்து வாவி என்ன
புழைக்கடைத் தோட்டத்து வாவியும் அலர்ந்து மொட்டித்தது -என்ன
அது உங்களுக்குக் கை வந்தது அன்றோ என்ன
அ ஸூர்யம்பஸ்யமாய் கிருஷ்ணனுக்கும் புகுரா ஒண்ணாத புழக்கடையில்
தோட்டத்து வாவியில் செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் மொட்டித்தது -என்ன

(நாம் அவனை நோக்கி அத்வேஷம் மாறின உடனே ஆபி முக்கியாதிகளை தானே உண்டு பண்ணி
அருளி கைக்கொள்ளும் அவனைப் போலவே இவர்களும் அலரத் தொடங்கியதுமே -என்றவாறு )

அலரப் புக்க மாத்திரத்திலே கழிய எல்லாம் அலர்ந்தது என்றும் –
மொட்டிக்கப் புக்க மாத்திரத்திலே முட்ட மொட்டித்தது -என்றும் சொல்லுகிறீர்கள்
இது ஒழிய அடையாளம் உண்டானால் சொல்லுங்கோள் -என்ன

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-
அளற்றுப் பொடியிலே புடவையைப் புரட்டி ப்ரஹ்மசாரியம் தோற்றப் பல்லை விளக்கி
சபையார் பொடிகிறார்கள்-கோமுற்றவன் தண்டம் கொள்ளுகிறான் என்று
போது வைகிற்று என்று தபசிகளும் அகப்பட உணர்ந்தார்கள்

தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
அவர்கள் சொல்லும் பிரகாரம் —
சங்கு என்று குச்சியை (சாவியை ) சொல்லுகிறது –

சங்கு சமாராதனத்துக்கு உப லக்ஷணம்
(இப்பொழுது சொல்வது ஸ்ரீ வைஷ்ணவ திருக்கோயில் )
வெள்ளையை தவிர்ந்து காஷாயத்தை உடுத்து
போக உபகரணங்களைத் தவிர்ந்து தபஸ்சர்யை உடையராய் இருக்குமவர்கள்
சந்த்யா வந்தனாதிகள் சமைந்து அகங்களில் திரு முற்றத்திலே எம்பெருமான்களை
ஆராதிக்கும் காலமாயிற்று என்றுமாம்

இரண்டு பிரகாரத்தாலும்
சாத்விகரோடே
தமோ அபிபூதரோடு வாசியற உணர்ந்தது என்கிறார்கள்
தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாஸ் ச –
(வேதம் அறிந்தவர்கள் அனுஷ்டானம் பிரமாணம் வேதமும் பிரமாணம் அடுத்தது
பெரிய ஜீயர் -இன்றும் -காண்கிறோமே -தங்கள் திருக்கோயில் என்று
திருமலையைச் சொன்னவாறு என்பாராம் பெரிய திருமலை நம்பி -)

எங்களை முன்னம் எழுப்புவான் –
நேற்று எங்களை எழுப்புகிறேன் –
கிருஷ்ணன் பாடு கொடு போகிறேன் -என்றது கண்டிலோமே -என்கிறார்கள்

வாய் பேசும்
பொய் சொல்ல உகக்கும் கிருஷ்ணனோடு இறே பழகுகிறது –
பொய்யாய் நினைத்ததும் மேலே பிறர் அறிய வேணுமோ

நங்காய்
சொன்னத்தோடே சிலவாகிலும் கூட்டாதே இருப்பார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ -என்கை
(பேச்சு மட்டும் இருந்து அனுஷ்டானம் இல்லா விடில் நாய் வால் போலே வீணாகுமே )

எழுந்திராய்
இவர்கள் பேச்சே அமைந்தது இவளுக்கு –
எங்கள் குறை தீராய்-

நாணாதாய்
நீ இருந்த ஊரில் பூசணியும் காயாதோ என்கை –

நாவுடையாய்
வாயே இறே உனக்கு உள்ளது –
(நா அவகாரியம் -பெரியாழ்வார் செய்யக் கூடாததையும் அருளிச் செய்கிறார் )

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-
இவர்கள் தரிப்பிக்கைக்காக நாவால் உள்ள கார்யம் கொள்ளுங்கோள் என்ன –
அவன் திரு நாமங்களை பாடு என்கிறார்கள்

(வெள்ளைச் சுரி சங்கோடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் காடாகின்ற -திருவாய் 7-3-1 )

சங்கோடு சக்கரம்
இன்னார் என்று அறியேன் -இத்யாதி

பங்கயக் கண்ணானை
ஜிதம் தே புண்டரீ காஷ- நமஸ்தே விஸ்வ பவன -ஜிதந்தே –
சங்கு சக்கரங்களைக் கொண்டு திரு நாபி கமலம் போலே இருக்கை-
தூது செய் கண்கள்-9-9-9- இறே –
இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் -1-7-5-

(பங்கயக்கண்ணன் என்கோ
தாமரைக்கண்ணன் என்றே தளரும்
தாயாய் அளிக்கும் தண் தாமரைக் கண்ணன்
ரக்ஷகமும் போக்யமும் பரத்வமும் தாமரைக்கண்கள் சொல்லுமே )

—————————————-

(திரு நாம சங்கீர்த்தனம் பாடவே அழைக்கிறாள்
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி கேசவனைப் பாட
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவிக்க
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவில
முகில்வண்ணன் பேர்பாட
தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாட
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாட
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட
என்று சொல்லிக் கொண்டு எழுப்புகிறார்கள்)

(செங்கல் பொடி கூறை வெண் பல் தவத்தவர்-எம்பார் தாமஸ ப்ரக்ருதிகளைச் சொல்வது என்றும்
தாமஸ ப்ரக்ருதிகளே எழும் நேரமானதே -தங்கள் திருக்கோயில் -அவர்கள் கோயில் என்பர்
பெரிய திருமலை நம்பி ஸ்ரீ வைஷ்ணவ சந்யாசிகள் -சங்கு -சாவி என்றும் –
கொல்லை மண்டபத்துக்கு -பெரிய ஜீயர் ஸ்வாமி சாவி போட்டு திறக்க -என்று நிர்வாஹம்)

(ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வநபாயிநீ |
ததாயத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விஶ்ரமஸ்தலீ ||–எம்பார் தனியன்ம்

பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய |
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நமஸ்தாத் ||–பெரிய திருமலை நம்பி தனியன்)

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணான் -இரண்டுக்கும் சம்பந்தம் உண்டே
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன்-7-3-1-)
ஸூர்யன் சந்திரன் போல் தாமரைக்கண்கள் மலரவும் குவியவும் இவை -ஆங்கு மலரும் குவியும்-மூன்றாம் திருவந்தாதி —67-)

நாலாயிரப்படி-அவதாரிகை –
இதுக்கு எல்லாம் கடவளவாய்-எல்லாருக்கும் முன்னே நான் உணர்ந்து
எல்லாரையும் உணர்த்தக் கடவளாக ப்ரதிஜ்ஜை பண்ணினாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-
இவள் வாசலிலே வந்து -போது விடிந்தது காண் -எழுந்திராய் -என்ன
விடிந்தமைக்கு அடையாளம் என் என்ன –

பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களும் வாய் பேசுவாரும் பேராது இருப்பாருமாய் வந்து நிற்கிறது
விடிந்தமைக்கு அடையாளம் அன்றோ -என்று
செங்கழு நீர் அலர்ந்தால் போலேயும் ஆம்பல் மொட்டித்தால் போலேயும் -என்று தாங்கள் வாயைச் சொல்ல

உங்கள் வாய் நீங்கள் வேண்டின போது அலர்ந்து மொட்டியாதோ என்ன

வயலில் அவையும் அப்படியே -என்ன

நீங்கள் போய் அலர்த்தியும் மொட்டிக்கப் பண்ணியும் வந்திகோள் -என்ன

தோட்டத்து வாவியும் அப்படியே என்ன

வயலில் அணித்து அன்றோ உங்களுக்குத் தோட்டத்து வாவி என்ன

புழைக்கடைத் தோட்டத்து வாவியும் அலர்ந்து மொட்டித்தது -என்ன

அது உங்களுக்குக் கை வந்தது அன்றோ என்ன

அஸூர்யம்பஸ்யமாய் கிருஷ்ணனுக்கும் புகுரா ஒண்ணாத (உங்கள்) புழக்கடையில்
தோட்டத்து வாவியில் செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் மொட்டித்தது -என்ன

அலரப் புக்க மாத்திரத்திலே கழிய எல்லாம் அலர்ந்தது என்றும் –
மொட்டிக்கப் புக்க மாத்திரத்திலே முட்ட மொட்டித்தது -என்றும் சொல்லுகிறீர்கள்
இது ஒழிய அடையாளம் உண்டானால் சொல்லுங்கோள் -என்ன

(அபிசந்தி விராத மாத்திரம் -குற்றங்களை செய்யாமல் இருக்க சங்கல்பம் கொள்ள
சிந்திக்கும் பொழுதே எல்லாமே செய்ததாக அவன் கொள்ளுமா போலே)

சாத்விகாரோடே தமோ அபி பூதரோடே வாசியற உணர்ந்தது பார் என்கிறார்கள் –

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-
அளற்றுப் (காவி)பொடியிலே புடவையைப் புரட்டி ப்ரஹ்மசாரியம் தோற்றப் பல்லை விளக்கி
சபையார் பொடிகிறார்கள்-கோமுற்றவன் தண்டம் கொள்ளுகிறான் என்று போது வைகிற்று என்று
அஸூசிகளும் அகப்பட உணர்ந்தார்கள்(பிரியமாக போவான் சாத்விகன் -இவர்கள் பயத்தால் போகிறார்கள் )

தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
அவர்கள் சொல்லும் பிரகாரம் —

சிறு பதத் தூற்றத் துறையிலே ஒரு தபசி பரிசிலே ஏறி ஆற்றினுள்ளே புக்கு
காவேரி தேவிக்குச் சங்கு ஊதுகிறேன் என்று அங்கே ஊத-
பரிசிலே போகிற குதிரை மிதித்து அதில் ஏறின மனிச்சர் அடைய செத்துப் போச்சுது -என்று
எம்பார் அருளிச் செய்த வார்த்தை-

சங்கு என்று குச்சியை (சாவியை )சொல்லுகிறது -என்றுமாம்

வெள்ளையை தவிர்ந்து காஷாயத்தை உடுத்து
போக உபகரணங்களைத் தவிர்ந்து தபஸ்சர்யை உடையராய் இருக்குமவர்கள்
சந்த்யா வந்தனாதிகள் சமைந்து அகங்களில் திரு முற்றத்திலே எம்பெருமான்களை ஆராதிக்கும் காலமாயிற்று என்றுமாம்

சங்கு சமாராதனத்துக்கு உப லக்ஷணம்

தம பிரசுரர் லக்ஷணத்தையோ சத்வஸ் த்தரான நமக்குச் சொல்லுவது
தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாஸ் ச -என்று சத்வஸ்த்தர் படியைச் சொல்ல வேண்டாவோ -என்ன

சத்வ ஸ்த்தைகளான நாங்கள் சொன்னபடியையும் செய்கிறிலை என்கிறார்கள் –

நான் செய்தது என் என்ன

எங்களை முன்னம் எழுப்புவான் -வாய் பேசும்
நேற்று எங்களை எழுப்புகிறேன் -கிருஷ்ணன் பாடு கொடு போகிறேன் -என்றது கண்டிலோமே -என்கிறார்கள்

வாய் பேசும்
பொய் சொல்ல உகக்கும் கிருஷ்ணனோடு இறே பழகுகிறது –
பொய்யாய் நினைத்ததும் மேலே பிறர் அறிய வேணுமோ

நங்காய்
சொன்னத்தோடே சிலவாகிலும் கூட்டாதே இருப்பார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ -என்கை

எழுந்திராய்
இவர்கள் பேச்சே அமைந்தது இவளுக்கு -எங்கள் குறையையும் தீராய்-
இப்படிச் சொல்லி வைத்துச் செய்யப் பெற்றிலோம் என்னும் லஜ்ஜையும் கூட இன்றிக்கே இருப்பதே

நாணாதாய்
நீ இருந்த ஊரில் பூசணியும் காயாதோ என்கை(வெறும் வாய்ப்பந்தல் என்றபடி )

(தொட்டால் சுணை -அரிக்கும் சூடு சுரணை இல்லை -கொண்டு லஜ்ஜை இல்லை என்கிறாள்)

நாவுடையாய்
வாயே இறே உனக்கு உள்ளது(ஆர்ஜவம் இல்லையே மனஸ் வாக்கு செயல் மூன்றும் ஒன்றாக இருக்காமல் )
நாந் ருக்வேத விநீதஸ்யநா சாம வேத விதூஷா –இத்யாதி (விரிஞ்சனோ -கல்லாத கலை இல்லையே -திருவடி பற்றி வாக்மீ-என்று வால்மிகி கொண்டாடும் -பெருமாள்-பணிவு இருப்பதால் ருக் வேதம் அறிந்தவன் – அர்த்தம் தரிக்க இருந்தவன் ஆகையால் யஜுர் வேதம் அறிந்தவன் ஞானம் மிக்கு இருப்பதால் சாமவேதம் அறிந்தவன் -என்ற கொண்டாட்டம் போல் )இவள் எல்லாம் படுத்தினாலும் விட ஒண்ணாத நா வீறுடைமை
விண்ணப்பம் செய்வார் எல்லா அநீதிகள் செய்யிலும் சத்துக்கள் தலையால் சுமக்கிறது நா வீறு அன்றோ –

நான் உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்-பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-
இவர்கள் இது எல்லாம் சொல்லுகிறது தாங்கள் ஆர்த்தி இறே என்று பார்த்து –
இவர்கள் தரிப்பிக்கைக்காக நாவால் உள்ள கார்யம் கொள்ளுங்கோள் என்ன –
அவன் திரு நாமங்களை பாடு என்கிறார்கள்(வாஸா தர்மம் அவாப்நோதி -திருவடி இடம் பிராட்டி -)

ஏந்தும் தடக் கையன்
பூ ஏந்தினால் போலே திரு வாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி
அந்த ஸ்பர்சத்தாலே வளர்ந்த திருக் கை மலர்களை யுடையவனாய் இருக்கை-
(பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை )இன்னார் என்று அறியேன் -இத்யாதி -என்று மதி கெடுக்கும் கையில் திருவாழியையும் சொல்லுகிறது

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் –10-10-9-

பங்கயக் கண்ணானை
ஜிதம் தே புண்டரீ காஷ-
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை என்னப் பண்ணும் கண்ணை யுடையவனை –
ஆங்கு மலரும் -இத்யாதி —
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைச் சந்திரன் என்றும் திரு ஆழி ஆழ்வானை ஆதித்யன் என்றும்
திரு நாபீ கமலம் மொட்டிப்பது அலருவது ஆமா போலே கண்ணாகிய தாமரையும் மொட்டிப்பது அலருவதாம்-என்கை –
சந்த்ர ஸூர்யர்களையும் தாமரைப் பூவையும் ஒரு கலம்பக மாலையாகத் தொடுத்தால் போலே இருக்கும்படியைச் சொல்லுகை –

(பத்ம நாபன் கையில் ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து கீழே பார்த்தோம்)

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனைத் துழாய் விரைப்
பூமருவு கண்ணி எம்பிரானைப் பொன்மலையை
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நா அலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே! வள்ளலே!–2-6-3-

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து  —மூன்றாம் திருவந்தாதி —67-

பங்கயக் கண்ணானை
கண்ணாலே நமக்கு எழுத்து வாங்கி நம்மை எழுத்து வாங்குவித்துக் கொள்ளுமவன்
தூது செய் கண்கள் இறே-9-9-9-
இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான்-1-7-5-

(ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9–மாலைப்பூசல் )

(விடுவேனோ என் விளக்கை என்னாவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–விடவே செய்து-தூத்வ கிருத்யம் )

பாட
உன்னுடைய ப்ரீதிக்குப் போக்கு விட்டு எங்கள் வறட்சி கேட்டைத் தீராய் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -புள்ளின் வாய் கீண்டானை — திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள்

October 29, 2017

விடிந்தமை அடையாளம் -6-7-8-13-14-பாசுரங்களில் உண்டு –
போதரிக்கண்ணாய் இந்தப்பெண்ணின் விழிச் சொல் -ஞான சீர்மை –
அடுத்த பாசுரம் – நாவுடையாய் -பேச்சு வன்மை – வாக்கு வன்மை –
ஆச்சார்ய வைலக்ஷண்யங்கள் இவை இரண்டும்

ஈராயிரப்படி -அவதாரிகை
இவளை எழுப்புகிறது -அசலகத்தே கேட்டுக் கிடந்தாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–

பதவுரை

புள்ளின் வாய் கீண்டானை–பறவை யுருவம் பூண்டு வந்த பகாசுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவனும்
பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை-கொடியனான இராவணனை முடித்து
(அரக்கர் குலத்தை வேரோடு) களைந்தொழித்தவனுமான எம்பெருமானுடைய
கீர்த்திமை பாடி போய்-லீர சரிதங்களைப் பாடிக் கொண்டு சென்று
பிள்ளைகள் எல்லாரும்-எல்லாப் பெண் பிள்ளைகளும்
பாவைக் களம் புக்கார்-நோன்பு நோற்பதற்காகக் குறிக்கப்பட்ட இடத்திற்புகுந்தனர்;
வெள்ளி எழுந்து-சுக்ரோதயமாகி
வியாழம் உறங்கிற்று-ப்ருஹஸ்பதி அஸ்தமித்தான்,

(புனர் பூசமும் பூசமும் நக்ஷத்திரங்கள் என்று உள்ளே-இவர்கள் க்ரஹங்ககள்)

(அன்றியும்)
புள்ளும்-பறவைகளும்
சிலம்பின–(இறை தேடப் போன இடங்களில்) ஆரவாரஞ்செய்தன;
போது அரி கண்ணினாய்–புஷ்பத்தின் அழகைக் கொள்ளை கொள்ளா நின்ற கண்ணை யுடையவளே;
பாவாய்–பதுமை போன்றவளே!
நீ –நீ
நல் நாள்-கிருஷ்ணனும் நாமும் கூடுகைக்கு வாய்த்த காலமாகிய இந்த நல்ல நாளில்
கள்ளம் தவிர்ந்து-(கிருஷ்ணனுடைய குண சேஷ்டிதங்களைத் தனியே நினைத்துக் கிடக்கையாகிற) கபடத்தை விட்டு
கலந்து –எங்களுடன் கூடி
குள்ளக் குளிர குடைந்து நீர் ஆடாதே-உடமபு வவ்வலிடும்படி குளத்திற் படிந்து ஸ்நானம் பண்ணாமல்
பள்ளி கிடத்தியோ-படுக்கையிற் கிடந்துறங்கா நின்றாயோ?
ஆல்-ஆச்சரியம்!

புள்ளும் சிலம்பின் காண் -மீண்டும் -இங்கு -6 பாசுரத்தில் உண்டே –
அங்கு கூட்டில் இருந்த த்வனி -இங்கு இறை தேடப் போன இடத்தில் த்வனி –
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று-சுக்ரன் உதித்து குரு அஸ்தமித்தது
போதரிக் கண்ணி-பூவை வெல்லும் -உலாவும் மான் போன்ற கண் -பூவிலே வண்டு இருந்தால் போலே-
பாவாய் -இயற்கையான ஸ்த்ரீத்வம்
நன்னாளால்-ஸ்ரீ கிருஷ்ண சம்ஸ்லேஷம்
ஆல் -இது என்ன ஆச்சர்யம் -தனி அனுபவம் கூடுமோ
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ-கூடி இருந்து குளிராமல் -நாம் முன்பு செய்த சங்கல்பம் படி இருக்க ஒண்ணாவோ
(பகாசுரன் வாயைக் கீண்ட -கண்ணனை சொல்லி மீண்டும் அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -என்று
மனத்துக்கு இனியான் -ஜடாயுவை சொல்லி- இரண்டுமே ராமனுக்கு என்பாரும் உண்டு )

புள்ளின் வாய் கீண்டானை –
கொக்கின் வடிவு கொண்டு வந்த பகாசூரனைப் பிளந்தவனை

பொல்லா அரக்கனைக்
தாயையும் தாமப்பனையும் பிரித்த நிர்க்ருணனை
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன் -( பெரிய திருமொழி -5-7-7-)

பொல்லா
முன்பொலா இராவணன் (திருக் குரும் தாண்டகம் )-இறே –
பிராட்டி த்வம் நீசசசவத்-என்றாள் (முயல் குட்டி-குள்ள நரி- போல் நீ யானை போல் ராமன் -ஸூ உத்தர -21-16)
விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித – என்று நல்ல அரக்கனும் உண்டு என்கை
(இது சூர்ப்பணகை வார்த்தை -பெருமாளும் இவனை இஷ்வாகு வம்சரகா நினைத்து
ராக்ஷசர் பலம் என்ன – -நின்னொடு எழுவரானோம் -என்றாரே )

கிள்ளிக் களைந்தானைக்
மறுவலிடாத படிந் கிழங்கோடு வாங்கின படி –
தோஷ அம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –
குண அம்சம் ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
(ஆகாசம் கடல் ராம ராவண யுத்தம் மூன்றுக்கும் ஒப்பு அது அதுவே –
இருந்தாலும் பட்ட மஹிஷிக்கு இது அநாயாசேன செய்த கார்யம் )

கீர்த்திமை –
எதிரிகள் நெஞ்சு உளுக்கும் படி இறே பெருமாள் பராக்ரமம் இருக்கும் படி
சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்சனீயஸ்ய விக்ரமஸ்ய -என்னும்படியான வீர்யம் –
ராவணன் வீரியத்துக்கு இலக்கானான் –
தங்கை அழகுக்கு இலக்கானாள்-
தம்பி செல்லத்துக்கு இலக்கானான்

(ராமாவதார பிரதான குணமே ஸுவ்சீல்யம்
தசரதன் -ஸ்நேஹத்துக்கு தோற்றான் -தண்ணீர் பந்தல் வைத்தால் போல் இளைய பெருமாளை வைத்து
பாவம் தர்மம் க்ருதஜ்ஜை அறிந்து கைங்கர்யம்
கௌசல்யை மாத்ருவத் வாத்சல்யம்
கைகேயி ஸத்யவாக்யன் -என்றதும் தோற்றாள்
சுமித்ரை பரத்வம் -பிரபு -கவலைப்படாதே கௌசல்யைக்கு ஆறுதல் சொன்னாளே
பரதன் ஸ்வாமித்வம் –
லஷ்மணன் -சேஷித்வம்
குகப்பெருமாள் -மித்ரத்வம் தோழமை
சுக்ரீவன் -ரக்ஷகத்வம்
சத்ருக்னன் -ஸ்வாமிக்கு ஸ்வாமி
திருவடி -விசேஷமாக வீரம் -கனிவுக்கு தோற்று
வாலி -திரு உருவ அழகுக்குத் தோற்று -ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் –
தாரை -ஆபத் ரக்ஷகத்வம் -நாமி பலத்தால் சுக்ரீவன் அறை கூவுகிறான்
அயோத்யா வாசிகள் -ராமத்வம் -கல்யாண குண கூட்டம் –
கும்பகர்ணன் -அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ -ராமனே அம்ருதம் அறிந்தவன்
விபீஷணன் -சர்வ லோக சரண்யன்
இவையே கீர்த்திமை )

தங்களுக்கு பலமுண்டாக அவன் விஜயத்தையே அனுசந்திக்கிறார்கள் –
பரம சேதனன் உபாயமாம் இடத்தில் –
அது ஞான சக்தி கருணாஸூ என்கிற ஞான சக்தி கிருபைகள் வேண்டுகையாலே –
அவற்றை அனுசந்தித்து மார்விலே கை வைத்து உறங்குமவர்கள் இவர்கள்
குணவான் வீர்யவான் -இறே
(வால்மீகி நாரதர் –16- கல்யாண குணங்கள் -குணவான் சீலத்தவம்
கூரத்தாழ்வான் -ஞான சக்தி கருணை கூட்டம் வெல்லுமா பாபக் கூட்டங்கள் வெல்லுமா )

பாடிப் போய்
கால் கொண்டு போய் என்கை –
(பாதேயம் புண்டரீகாக்ஷம் நாம சங்கீர்த்தனம் )

பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்-
இன்னமும் உணர்ந்து உணராத சிறு பிள்ளைகளை எழுப்பிக் கொண்டு விடிந்தவாறே போகிறோம் -என்ன
அவர்கள் முன்னே உணர்ந்து கிருஷ்ணன் மெய்க்காட்டுக் கொள்ளும் இடம் புக்கார்கள் -என்கிறார்கள் –

பாவைக்களம்-
போர்க்களம் -நெற்களம் -என்பாரைப் போலே
(திருவஞ்சிக் களம் -திரு மூழிக் களம் -பின்னானார் வணங்கும் சோதி ஸ்ரீ ஸூக்தி –
அங்கு திரு மூழிக் குளம் என்பர் )

பிள்ளைகள் எல்லாரும்
எல்லாரும் நாம் சென்று எழுப்ப வேண்டும்படியான பாலைகளும்

பாவைக்களம்
சங்கேத ஸ்தலம் -அவர்கள் போனார்களாகிலும் அக்காலத்திலே போக வேணுமோ –
விடிந்தால் போருங்கோள் -என்ன

வெள்ளி எழுந்து –
நினைக்கிறபடியே வெள்ளி யுச்சிப் பட்டு

வியாழம் உறங்கிற்றுப்
வியாழனும் அஸ்தமித்தது -என்ன
நக்ஷத்திரங்கள் கண்டது எல்லாம் வெள்ளியையும் வியாழமாயும் அன்றே உங்களுக்குத் தோற்றுவது-
அவை புனர்பூசமும் பூசமுமாகக் கொள்ளீர்

மற்ற அடையாளம் உண்டோ -என்ன
நாங்கள் திரண்டு தோன்றுமது அல்லவோ என்ன
(புள்ளும்-உம்மைத் தொகை இருப்பதால் இந்த வியாக்யானம் )

நீங்கள் பிரியல் அன்றோ -திரள வேண்டுவது –
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் என்று இருப்பவர்கள் நீங்கள் அன்றோ
மற்ற அடையாளம் உண்டோ என்னில்

புள்ளும் சிலம்பின காண்
புள்ளும் சிதறிப் போந்தன

போதரிக் கண்ணினாய்
இக்கண்ணுடைய எனக்கு ஓர் இடத்தே புறப்பட வேணுமோ என்ன –
என் காலிலே விழுகிறார்கள் -என்று கிடக்கிறாயோ
(ஸ்வரூப ஞானம் உடையவள் -அவன் சேஷி சொத்தை தானே ஸ்வீ கரிப்பான்
என்ற சேஷத்வ ஞானம் உடையவள் )

அரி
வண்டு-
பூவிலே வண்டு இருந்தால் போலே –
அஸி தேஷ்ணை யாகையாலே அவனும் அவன் விபூதியும் கண்ணில் ஒரு மூலைக்குப் போராது-
இக்கண்ணாலே அவனைக் குமிழ் நீர் உண்ணப் பாராய்

குள்ளக் குளிரக்
ஆதித்ய கிரணங்களாலே நீர் வெதும்புவதற்கு முன்னே

குடைந்து நீராடாதே
தாங்கள் ஆகையாலே உள்ளே கிடந்தாலும் தாங்கள் சம்பந்தத்தாலே கொதிக்கும் என்று அறிகிறிலள்

பள்ளிக் கிடத்தியோ
பிள்ளைகள் தாங்களும் படுக்கையை விட்டுப் போகா நிற்க நீ படுக்கையிலே கிடப்பதே
அவன் கிடந்தது போன படுக்கை என்று மோந்து கொண்டு கிடக்கிறாயோ
பயிர் விளைந்து கிடக்க கதிர் பொருக்கி ஜீவிக்கிறாயோ
(திருக் கோவலூர் பெருமாள் இன்றும் முதல் ஆழ்வார்களை நெருக்கி இருந்த
வாசனையை முகர்ந்து கொண்டு உகந்து நித்ய வாசம் பண்ணி அருளுவது போல் )

பாவாய் நீ
தனிக் கிடக்க வல்லளோ நீ

நன்னாளால்-
அடிக் கழஞ்சு பெற்ற இந்நாளிலே –
இந்நாலு நாளும் போனால் மேலில் நாள்கள் ராவணனைப் போலே பிரிக்கும் நாள்கள்

கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–
சோரேண ஆத்ம அபஹாரிணா-என்று தத் வஸ்துவிலும்
த தீய வஸ்துவை அபஹரிக்கை யன்றோ பெரும் களவு

கலந்து குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே -என்று கிரியை –

————————

(ராம் காட் காத்யாயனி கோயில் இன்றும் சேவிக்கலாம் கோபிகளுடைய -நோன்பு நடந்த இடம்

விடிந்தமை அடையாளம் -6-7-8-13-14-பாசுரங்களில் உண்டு -)

(அடியார்களுக்கு தன்னைக் காட்டாமல் மறைந்து இருப்பது பகவத் கள்ளத்தனம்
பகவானை தனியாக அனுபவிப்பது பாகவதர்களது கள்ளத்தனம் )

(போதரிக் கண்ணாய் இந்தப் பெண்ணின் விழிச் சொல் -ஞான சீர்மை -போதரிக் கண்ணி-பூவை வெல்லும் -உலாவும் மான் போன்ற கண் -பூவிலே வண்டு இருந்தால் போலே- அடுத்த பாசுரம் – நாவுடையாய் -பேச்சு வன்மை – வாக்கு வன்மை – ஆச்சார்ய வைலக்ஷண்யங்கள் இவை இரண்டும்)

நாலாயிரப்படி-அவதாரிகை
இவளை எழுப்புகிறது -அசலகத்தே கேட்டுக் கிடந்தாள் ஒருத்தி-
தன் அபராதத்தை தீர உணர்ந்தாளாய்-
பெண்காள் இங்கும் ராம வ்ருத்தாந்தம் சொல்லி எழுப்பினி கோளோ-என்ன
ராம வ்ருத்தாந்தமும் சொன்னோம் –
கிருஷ்ண வ்ருத்தாந்தமும் சொன்னோம் –
ஸ்ரீ இராமாயண மஹா பாரதங்கள் இரண்டும் சொன்னோம் –
என்று கண் அழகியாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்-

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–

புள்ளின் வாய் கீண்டானை –
கொக்கின் வடிவு கொண்டு வந்த பகாசூரனைப் பிளந்த படி -(பிருந்தாவனம் 12 காடுகளில் ஓன்று இது நடந்த இடம் )
பள்ளத்தின் மேயும் –

(பள்ளத்தில் மேயும்*  பறவை உருக் கொண்டு* 
கள்ள அசுரன்*  வருவானைத் தான் கண்டு* 
புள் இது என்று*  பொதுக்கோ வாய் கீண்டிட்ட* 
பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய்!)

இத் தலைக்கு இசைவே இறே வேண்டுவது –
விரோதி போக்குகை அவன் படி என்று இருக்கை

நம்முடைய அநீதிகளுக்கு ஈஸ்வரன் பண்ணும் அனுமதி
வைஷம்ய நைர் க்ருண்யத்தில் புகாதாப் போலே இவ் வனுமதி உபாயத்தில் புகாது –
இருவர்க்கும் இரண்டு அனுமதிகளும் ஸ்வரூபத்திலே கிடக்கும் அத்தனை –

பொல்லா அரக்கனைக்
தாயையும் தமப்பனையும் பிரித்த நிர்க்ருணனை
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்

(சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறிகடல் நெறிபட மலையால்
அரி குலம்  பணி கொண்டு அலைகடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே-5-7-7-)

பொல்லா
முன்பொலா இராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து -இறே –

(முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே –திருக் குறும் தாண்டகம்-15-)

பிராட்டி -த்வம் நீச சசவத் ஸ்ம்ருத-என்றாள் (குள்ள நரி-முயல் குட்டி போல் நீ யானை போல் ராமன் -ஸூந்தர -21-16)
இவள் தானும் -அன்று இன்னாதான செய் சிசுபாலன் (நாச்சியார் 4-7-)-என்றாள் –
விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித – என்று நல்ல அரக்கனும் உண்டு என்கை

சீதாயாஸ் சரிதம் மஹத் -என்கிற பிராட்டி வ்ருத்தாந்தம் ஸ்ரீ ராமாயணம் ஆனபடி என் என்னில் -(பவ்லஸ்ய வதம் என்னும் பெயரும் வால்மீகி சூட்டுகிறார் )
குணவான் -என்றது அவனையும் அவளையும் கூட்டி வாழ நினைக்குமவர்களோடு பரிமாறின படி-(ஸுசீல்யன் என்றபடி )
வீர்ய வான் -என்றது பிரிக்க நினைத்தார் முடியும்படி
தர்மஞ்ஞ – என்றது அவர்கள் ஸ்வரூபம் உணர்ந்து இருக்கும் படி –

கிள்ளிக் களைந்தானைக்
மறுவலிடாத படிந் கிழங்கோடு வாங்கின படி–
திரு விளையாடு சூழலில் புழுத்த இடம் கிள்ளிப் பொகடுமா போலே
ஆஸ்ரிதர் குடியில் தோஷ அம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –

கீர்த்திமை
எதிரிகள் நெஞ்சு உளுக்கும் படி இறே பெருமாள் பராக்ரமம் இருக்கும் படி
சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய -என்னும்படியான வீர்யம் –
சத்ருக்களும் மேல் எழுத்து இட்டுக் கொடுக்கும் வீரம் –

க இதி ப்ரஹ்மணோ நாம -என்று பரரானவர்கள் (தஸ்மாத் கேசவ நாம என்று ருத்ரன் பார்வதிக்குச் சொன்னது )பகவத் பரத்வத்துக்கு மேல் எழுத்து இட்டுக்
கொடுக்குமா போலே ஆத்ம அபஹாரிகள் எதிர் அம்பு கோக்கை தவிர்ந்து –
நமோ நாராயணாய -என்று அவனுடைய சேஷத்வத்துக்கு மேல் எழுத்து இட்டுக் கொடுக்குமா போலே

(ராவணன் பெருமாள் இடம் மேல் எழுத்து -சிவன் கேசவன் இடம் மேல் எழுத்து -நாம் நாராயணன் இடம் மேல் எழுத்து)

ரஞ்ச நீயஸ்ய
தோளாலே நெருக்குண்ட பிராட்டிமார் சொல்லுமா போலே சொல்லுவதே –
உகவாதார் க்கும் விட ஒண்ணாத வீரம் உகந்த பெண்களுக்கு விட ஒண்ணாமைக்குச் சொல்ல வேணுமோ –

ராவணன் பெருமாள் வீரியத்துக்கு இலக்கானான் –
தங்கை அழகுக்கு இலக்கானாள்-
தம்பி ஸுசீல்யத்துக்கு இலக்கானான்
தங்கள் அபலைகள் ஆகையாலே தங்களுக்கு பலமுண்டாக அவன் விஜயத்தையே அனுசந்திக்கிறார்கள் –

கர்ம ஞான பக்திகள் உபாயமாம் இடத்தில் இவனும் கூட வேணும் -(பிரயத்தனம் சேதனன் செய்ய அவனே பல பிரதன் )
பரம சேதனன் இவன் தானே உபாயமாம் இடத்தில் -பாபிய சோ பீத்யாதி –த்வஜ் ஞான சக்தி கருணா ஸூ சாதீஷூ -என்று
ஞான சக்தி கிருபையே சஹகாரம் ஆகையாலே -அவற்றை அனுசந்தித்து
மார்விலே கை வைத்து உறங்குமவர்கள் இவர்கள் -(வாழும் சோம்பாராக கைங்கர்யம் செய்து கொண்டே இருக்க வேண்டும் )

(பாபிய சோ பீத்யாதி (சரணாகத சொன்ன என்னை நீ தள்ளுவது சரியில்லை ) –த்வஜ் ஞான சக்தி கருணா ஸூ சாதீஷூ
கர்மம் ஞானம் உதவும் பக்திக்குப் பத்தி உனது ஞானம் சக்தியால் வரும் கருணையே எனது பாபங்களை வெல்லும் -கூரத்தாழ்வான்)

பாடிப் போய்
இவர்களுக்குக் கால் நடை தருகைக்கு மிடுக்குக் கால் (காலுக்கு மிடுக்கு கொடுக்கும் உபகரணம் )கொண்டு போகை
ஸூ குமாரரான பிள்ளைகள் உண்டு உண்டு வழி போய் என்னுமா போலே —
பரஸ்பரம் தத் குணவாத ஸீது பீயூஷா நிர்யாபி ததேஹ யாத்ரா -(கல்யாண குணாம்ருதம் சொல்லிக் கொண்டே போகும் )
பாதேயம் இத்யாதி –
போழ்து போக உள்ள நிற்கும் புன்மை இல்லாதவர்கள் இவர்கள் –
அவர்களுக்கு வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் அன்றோ -(9-1-8-)இவர்களுக்குச் சொல்ல வேணுமோ –

(வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–9-1-8-)

பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்-
இன்னமும் உணர்ந்து உணராத சிறு பிள்ளைகளை எழுப்பிக் கொண்டு விடிந்தவாறே போகிறோம் -என்ன
அவர்கள் முன்னே உணர்ந்து கிருஷ்ணன் மெய்க் காட்டுக் கொள்ளும் இடம் (attendance)புக்கார்கள் -என்கிறார்கள் –

பாவைக் களம்-
போர்க் களம் -நெற் களம் -என்பாரைப் போலே

பிள்ளைகள் எல்லாரும்
எல்லாரும் நாம் சென்று எழுப்ப வேண்டும்படியான பாலைகளும்

பாவைக் களம்
சங்கேத ஸ்தலம் -அவர்கள் போனார்களாகிலும் அக் காலத்திலே போக ஒண்ணாது –
வெள்ளி எழுந்ததோ பாருங்கோள் என்ன –

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
நீ நினைக்கிற அளவு தப்பி வெள்ளி யுச்சிப் பட்டு
வியாழனும் அஸ்தமித்தது -என்ன

நக்ஷத்திரங்கள் கண்டது எல்லாம் வெள்ளியையும் வியாழமாயும் அன்றே உங்களுக்குத் தோற்றுவது-
அவை புனர்பூசமும் பூசமுமாகக் கொள்ளீர்(திருவாதிரை பெரிய நக்ஷத்ரம் -சூரியனும் நக்ஷத்ரம் என்பர் -)

மற்ற அடையாளம் உண்டோ -என்ன
நாங்கள் திரண்டு தோன்றுமது அல்லவோ என்ன –

நீங்கள் பிரியில் அன்றோ திரள வேண்டுவது -மற்ற அடையாளம் உண்டோ என்ன

புள்ளும் சிலம்பின காண்
புள்ளும் சிதறிப் போந்தன
பண்டு ஒரு கால் புள்ளும் சிலம்பின் காண் -6-பாசுரத்தில் -என்றது –
அப்போது கூட்டிலே இருந்து சிலம்பிற்று–
இப்போது பறந்து போகத் தொடங்கிற்று -என்கை –

போதரிக் கண்ணினாய்
உங்கள் வார்த்தை பழகிறிலன்-என்று பேசாதே கிடக்க
இக் கண்ணுடைய எனக்கு ஓர் இடத்தே புறப்பட வேணுமோ என்ன –

என் காலிலே விழுகிறார்கள் -என்று கிடக்கிறாயோ

போது அரி
பூவும் மானும் போன்ற கண்
வண்டு-பூவிலே வண்டு இருந்தால் போலே என்றுமாம் –
பூவோடு சீறு பாறு என்றுமாம்–
அஸி தேஷ்ணை யாகையாலே புண்டரீ காக்ஷன் பக்கல் போக வேணுமோ -என்னும்

தான் – நெடும் கண் இள மான் –
அவன் அனைத்துலகமுடைய அரவிந்த லோசனன் –
அவனும் அவன் விபூதியும் (இவள் )கண்ணில் ஒரு மூலைக்குப் போராது-

(நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத் தனையும் விடாள் அவன் சேர் திருக்கோ ளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10)

போதரிக் கண்ணினாய் -இத்யாதி
இக் கண்ணாலே அவனைக் குமிழ் நீரூட்டி
அவன் கண்ணிலே நாம் குமிழ் நீருண்ணப் பாராய் -என்கை –

குள்ளக் குளிரக்
ஆதித்ய கிரணங்களாலே நீர் வெதும்புவதற்கு முன்னே புறப்பட்டு –
பெண்களும் புறப்பட்டு நீர் வெதும்புவதற்கு முன்னே என்னவுமாம்

குடைந்து நீராடாதே
தாங்கள் ஆகையாலே உள்ளே கிடந்தாலும் தங்கள் சம்பந்தத்தாலே (விரஹ தாபத்தால் )கொதிக்கும் என்று அறிகிறிலள்

பள்ளிக் கிடத்தியோ
பிள்ளைகள் தாங்களும் படுக்கையை விட்டுப் போகா நிற்க நீ படுக்கையிலே கிடப்பதே
அவன் கிடந்தது போன படுக்க என்று மோந்து கொண்டு கிடக்கிறாயோ
பயிர் விளைந்து கிடக்க கதிர் பொருக்கி (உஞ்ச விருத்தி செய்து )ஜீவிக்கிறாயோ

பாவாய் நீ
தனிக் கிடக்க வல்லளோ நீ

நன்னாளால்-
அடிக் கழஞ்சு பெற்ற இந் நாளிலே-
இந் நாலு நாளும் போனவாறே பெண்களும் கிருஷ்ணனும் என்று புகுகிறார்கள் கிடாய்
இந் நாலு நாளும் போனால் மேலில் நாள்கள் ராவணனைப் போலே பிரிக்கும் நாள்கள் –

ஆண்டாள் திரு ஏகாதசி பட்டினி விட்டு பட்டரை தீர்த்தம் தாரும் என்ன–
இப் பெரிய திரு நாளிலே இது ஒரு திரு ஏகாதசி
எங்கனே தேடி எடுத்துக் கொண்டி கோள்-என்று அருளிச் செய்தார்

கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–
சோரேண ஆத்ம அபஹாரிணா-என்று தத் வஸ்துவிலும்
ததீய வஸ்துவை அபஹரிக்கை யன்றோ பெரும் களவு

என்னுடை நாயகனே (5-4)-என்னும்படியே ஸ்வாமித்வத்தைச் சொல்லி
சேஷ பூதனுக்கு சேஷத்வத்தை அபஹரித்தால் சேஷியை க்ஷமை கொள்ளலாம்
சேஷிக்குத் தன் சேஷித்வத்தை அபஹரித்தால் க்ஷமை கொள்ளுகைக்குப் பொறுத்தோம் என்பாரும் இல்லையே
குற்றம் நின்றே போம் அத்தனை(உள்ளே இருப்பவள் தானே சேஷி இவர்களுக்கு )

(எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -பெரியாழ்வார் -5- 4-3 –)

கலந்து குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே -என்று கிரியை-
தஸ்ய உபவந ஷண்டேஷூ -இத்யாதி –

(மந்தாகினியில் ஜ க்ரீடை செய்து பெருமாள் மடியில் சீதை சாய்ந்து இருந்தது போல் நாங்களும் உன் மடியில் கிடைக்க வேண்டாமோ)

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீதிருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி– ஸ்ரீ திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஸ்ரீ ஜனன்யாச்சார்யார் ஸ்வாமிகள் -வியாக்யானங்கள்

October 29, 2017

ஆண்டாளுக்கும்
ஆழ்வாருக்கும்
தசாரதாதிகளுக்கும் –
குகாதிகளுக்கும்
சத்ருக்களுக்கும் மனத்துக்கு இனியான் –

(பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம்
லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
ஸ்ரீ ராமாவதாரம் -சார்ங்கம் உதைத்த 4- அவ்யக்தம்
இங்கு தென் இலங்கை கோமானைச் பெற்றவன் -பெயர் சொல்லாமலே -மேல் –22-தென் இலங்கை செற்றான் போற்றி
ஓங்கி -உம்பர் கோமான் –17-உலகம் அளந்தாய் போற்றி –
பத்து பத்தாக பிரித்து பார்த்து ஒவ் ஒன்றிலும் ஒரு தடவை இரண்டு அனுபவம் –
மத் சித்தா மத் கத பிராணா போத யந்த பரஸ்பரம் -திரு நெடும் தாண்டகம் மூன்று பத்தாக பிரித்து அனுபவிப்பது போல் இங்கும்
அனந்தலோ –9- பெரும் துயில் -10- இங்கு பேர் உறக்கம் -அவளைப் போல் கும்பகர்ணனை வென்று வாங்காமல் –
எல்லாமே சரணாகதி -ஸூவ ரக்ஷண ஸ்வான்வயம் ஒழிவது -அவனே கொள்ளுவது பேர் உறக்கம் –
காம்பற தலை சிறைத்து -பரகத ஸ்வீ காரம் -தன்னேற்றம்
கீழே செல்வப் பெண்டாட்டி-பொற் கொடி யானவள் கோவலனைப் பற்றி அங்கு –
இங்கு நற் செல்வன் தங்காய் -அவன் உகப்புக்குக்காக செய்யும் கைங்கர்யமாகிய நற் செல்வம் –
அவனாகவே கைக் கொண்ட இவளது ஏற்றம்
கீழே செல்வம் -இங்கு நல் செல்வம் –
அது ஆஜ்ஜா கர்ம யோக ரூபா பகவத் ஆராதனம் –
இது அநு ஜ்ஜா விதி ப்ரேரித கைங்கர்யம் )

ஈராயிரப்படி -அவதாரிகை –
கிருஷ்ணன் வளர வளரத் தீம்பிலே கை புக்குவாறே இவனைக் காக்கைக்கு
இவனைப் பிரியாதே போகிறான் ஒருத்தன் தங்கையை எழுப்புகிறார்கள் –
(இளைய பெருமாளைப் போலவும் நம்பி மூத்த பிரானைப் போலவும் உடையவரைப் போலவும்
உள்ள நற் செல்வன் -இப்பாசுரம் ஸ்ரீ பெரும் புதூரில் இரண்டு தடவை சேவிப்பார்களே )

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்—12-

பதவுரை

இள கன்று எருமை-இளங்கன்றுகளை யுடைய எருமைகளானவை
கனைத்து–(பால் கறப்பார் இல்லாமை யாலே) கதறிக் கொண்டு
கன்றுக்கு இரங்கி–(தன்) கன்றின் மீது இரக்கமுற்று
நினைத்து–(கன்று ஊட்டுவதாக) நினைத்து (அந்நினைவினால்)
முலை வழியே நின்று பால் சோர-முலை வழியால் இடைவிடாமல் பால் பெருக, (அப் பெருக்கினால்)
இல்லம்-வீட்டை
நனைத்து – (முழுவதும்) ஈரமாக்கி
சேறு ஆக்கும் நல் செல்வன்-சேறாகப் பண்ணுகையாகிற சிறந்த செல்வத்தை யுடையவனுடைய
தங்காய்-தங்கை யானவளே!
பனி-பனியானது
தலை வீழ-எங்கள் தலையிலே விழும்படி
நின் வாசல் கடை பற்றி-உனது மாளிகையின் வாசற் கடையை அவலம்பித்துக் கொண்டு,
சினத்தினால்-(பிராட்டியைப் பிரித்தான் என்னுஞ்) சீற்றத்தினால்
தென் இலங்கை கோமானை-தென் திசையிலுள்ள லங்காபுரிக்கு அரசனான இராவணனை—தென்-அழகான என்றுமாம் திருவடி மதித்த ஐஸ்வர்ய
செற்ற-கொன்றொழித்தவனும்
மனத்துக்கு இனியானை–சிந்தனைக்கு இனியனுமான இராம பிரானை
பாடவும்-(நாங்கள் பாடா நிற்கச் செய்தேயும்
நீ-நீ
வாய் திறவாய்-வாய் திறந்து பேசுகிறாயில்லை,
இனித் தான்-எங்களாற்றாமையை அறிந்து கொண்ட பின்பாகிலும்
எழுந்திராய்-எழுந்திரு;
ஈது என்ன பேர் உறக்கம்-இஃது என்ன ஓயாத தூக்கம்?
அனைத்து இல்லத்தாரும்-(இச் சேரியிலுள்ள) எல்லா வீட்டுக் காரர்களாலும்
அறிந்து-(நாங்கள் உன் மாளிகை வாசலில் திரண்டு நிற்கிறவிது) அறியப்பட்டதாயிற்று:

சினத்தினால் மனத்துக்கு இனியான் –
அவன் கோபமும் நமக்கு இனிமை
இவன் தன்னைக் கோமானாக நினைத்துக் கொண்டதால் இவனைச் செற்ற வேண்டிற்று

கனைத்து
கறப்பார் இல்லாமையால் -இவ்வகத்துக்கு கன்று காலியாய் நாம் பட்டதோ -என்று கூப்பிடா நிற்கும்

இளம் கற்று எருமை
இளம் கன்று பாடாற்றாமை

கன்றுக்கிரங்கி-
எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் இருக்குமா போலே –
அவன் எருமை கறவா விட்டால் அவை படும் பாடு நாங்கள் உன்னாலே படா நின்றோம் –

நினைத்து
கன்றை நினைத்து பாவனா ப்ரகரஷத்தாலே முலையிலே வாய் வைத்தது என்று
பால் சொரியா நிற்கும்

முலை வழியே
கை வழியே தவிர

நின்று பால் சோர
கேட்பார் அன்றியே இருக்க ஆற்றாமையால் பகவத் குணங்களை சொல்லுவாரைப் போலே –
மேகத்துக்கு கடலிலே முகந்து கொண்டு வர வேணும் –இவற்றுக்கு வேண்டா –

நனைத்தில்லம் சேறாக்கும் –
பாலின் மிகுதியால் அகம் வெள்ளமிடும்-
அவற்றின் காலிலே துகையுண்டு சேறாகும்-
சேறாய் புகுர ஒண்கிறது இல்லை –

(மேல் பனி வெள்ளம்
கீழே பால் வெள்ளம்
நடுவில் மால் வெள்ளம்
உபய காவேரி வெள்ளம் -குண வெள்ளம் மூன்றையும் தவிர
பெரிய பெருமாள் திருக் கண்கள் கருணை வெள்ளம் தடுமாறாமல் இருக்கவே திரு மணத் தூண்கள்
இவர்கள் இவளது வாசல் கடை பற்றி -பாகவதர் பற்றி உஜ்ஜீவனம் நிச்சயம் அன்றோ )

நற் செல்வன்
லஷ்மனோ லஷ்மி சம்பன்ன –
தோற்றி மறையும் செல்வம் அன்று –
(யோகம் க்ஷேமம் வஹாம் அஹம் -கிடைக்காத கண்ணன் கிடைத்து மனத்தில் நிலைப்பது போல்
லஷ்மணன் ஊர்மிளை உடன் சேர்ந்து அக்னி கார்யம் செய்தால் அன்றோ இவனும் பால் கரப்பான் –
நித்யமாகவே கைங்கர்யம் இவர்களுக்கு-செல்வா பலதேவா -மேலே பார்ப்போம் – )
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -(6-7-2 )
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே (3-3-11 )-என்கிறபடியே இவனுடைய வைஷ்ணவ ஸ்ரீ இருந்தபடி –
சவ்மித்ரே புங்ஷவ போகாம் சத்வம் –

தங்காய்
குண ஹானிக்கு ராவணனைப் போலே –
ராவணஸ்ய அனுஜோ பிராதா -என்னும்படி இக்குணத்திலே தஸ்ய அனுஜனைப் போலே –
அந்தரிக்ஷ கத ஸ்ரீ மானுடைய மகளான அனலைப் போலே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் இல்லாத பிராட்டிக்குக் கைங்கர்யம் பண்ண உண்டு இறே அனலைக்கு –
(திரிஜடை -விபீஷணன் உடன் பிறந்தவள்
அநலா -பெண்
சரபா -மனைவி -மூவரையும் பிராட்டிக்கு கைங்கர்யம் செய்ய வைத்து அன்றோ வந்தான் )

பனித்தலை வீழ
மேலே பனி வெள்ளம் –
கீழே பால் வெள்ளம் இட
நடு மால் வெள்ளம் இட நின்று அலைந்து –

நின் வாசற்கடை பற்றிச்
தண்டியத்தைப் பற்றி நாலா நின்றோம் –
இத்தர்ம ஹானியை அறிகிறிலை-
இவர்கள் படும் அலமாப்புக் காண்போம் -என்று பேசாதே கிடக்க

சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
பறைச் சேரி என்பாரைப் போலே பெருமாளோடே கூடி இருக்கிற பிராட்டியைப் பிரித்த
படு குலைக்காரன் இருக்கிற இடம் இறே

கோமானை
யத் அதர்மோ ந பலவான் -(ஸூந்தர –49 )-என்று திருவடி மதித்த ஐஸ்வர்யம்

செற்ற
ஓர் அம்பாலே தலையைத் தள்ளி விடாதே –
தேரைத் தள்ளி –வில்லை முறித்து -படையைக் கொன்று -ஆயுதங்களை முறித்து –
தான் போலும் என்று எழுந்தான் -( 4-4-)-இத்யாதிப்படியே பின்னைத் தலையை அறுத்த படி –
(அஹோ ராத்ரி ஏழு நாள் யுத்தம் -இப்படி பயமுறுத்தி எப்பொழுதாவது அஹங்காரம் போய்
திருவடியில் விழுவானோ என்கிற நப்பாசை )

மனத்துக் கினியானைப்
வேண்டிற்றுப் பெறா விட்டால் -சொல்லாய் சீமானே-என்னுமா போலே

பாடவும் நீ வாய் திறவாய்
ராம வ்ருத்தாந்தம் கேட்டது உறங்குகைக்கு உறுப்பாயிற்றோ

வாய் திறவாய்
ப்ரீதிக்குப் போக்கு விட வேண்டாவோ –
தங்கள் ஒரு தலைப் பற்ற வேண்டி இருக்கிறார்கள் –

இனித் தான்
எங்களுக்காக உணரா விட்டால் உனக்காக உணரவும் ஆகாதோ
சூர்ப்பணகி உள்ளிட்டார்க்கு உள்ள இரக்கமும் உன் பக்கலில் கண்டிலோமே

எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
எம்பெருமான் பரார்த்தமாக உணரும்
சம்சாரிகள் ஸ்வார்த்தமாக உணருவார்கள்
இது ஒருபடியும் அன்று –
ஆர்த்தி கேட்டு உணராது ஒழிவதே

பையத் துயின்ற பரமன் –
பகவதஸ் த்வராயை நம -என்னும்படி ஆர்த்தி கேட்டால்
அப்படி படுமவனோடே வர்த்தித்து இங்கனே கிடப்பதே

அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்-
உன் வாசலிலே வந்து எழுப்ப நீ எழுந்திராதது எல்லாரும் அறியும்படி யாய்த்து
இனி உணராய் –
ஊரார் அறியாதபடி பகவத் விஷயத்தை அனுபவிக்க வேணும் என்று இராதே கொள்

———————

(ஸ்ரீவிஷ்ணு சித்த‌ குல‌நந்த‌ன‌ க‌ல்ப‌ வ‌ல்லீம்
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ யோக‌ த்ருஸ்யாம்|
ஸாக்ஷாத் க்ஷ‌மாம் க‌ருண‌யா க‌ம‌லா மிவாந்யாம்
கோதா ம‌நந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே || (1)

ஸ்ரீவிஷ்ணுசித்த‌ருடைய‌ குல‌மென்னும் நந்த‌ன‌த் தோட்ட‌த்தில் (தோன்றிய‌) க‌ற்ப‌கக்கொடியும்,
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னென்னும் ஹ‌ரிச‌ந்த‌ன‌ க‌ற்ப‌க‌ விருக்ஷ‌த்தை அணைவ‌தால் (ம‌ண‌ம் புரிவ‌தால்) பார்க்க‌த் த‌க்க‌வ‌ளாயும்,
க்ஷ‌மையின் வ‌டிவேயான‌வ‌ளாயும், (ஸாக்ஷாத் பூமிதேவியாயும்), க‌ருணையினால் ம‌ற்றோர் ல‌க்ஷ்மிதேவி
போன்ற‌வ‌ளாயுமான‌ கோதையை (வாக்கைய‌ளிக்கும் தேவியை) புக‌லொன்றில்லாவ‌டியேன் ச‌ர‌ண‌ம் ப‌ணிகிறேன்.)

(ஸ்ரீ விபீஷணனுக்கு பெருமாளுக்கு கைங்கர்யம் கிடைத்தது போல் திரிஜடை –இவளே நற் செல்வன் தங்காய் -பிராட்டிக்கு கைங்கர்யம்
நற் செல்வன் ஸ்ரீ விபீஷணன் உடைய தங்கை தாரம் மகள் மூவரும் பிராட்டிக்கு கைங்கர்யம் உண்டு
ஸ்ரீ ராமாவதா பிரஸ்தாபம் இதில் -மனத்துக்கு இனியன் -பெயர் சூட்டுகிறாள்-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் கண்ணுக்குப் பட்டம்
திரிவிக்ரமன் வியக்தமாக திருப்பாவையில் உண்டே)

(அனைத்து இல்லத்தாரும் அறிந்து – உலகோர் எல்லாம் அண்ணல் ராமானுஜன் தோன்றிய அப்பொழுதே நாரணற்கு ஆளாயினரே)

(மஹத்தான அந்தரங்க கைங்கர்யம் செய்த நற் செல்வன் -அதனாலே இவனைப் பற்றி பெருமையுடன் பாசுரத்தில் அருளிச் செய்கிறார்)

(விசேஷ தர்மம் இவன் -சாமான்ய தர்மம் முந்திய பாசுர கோவலன்-இத்தைச் செய்யாமல் சக்கரவர்த்தி இழந்தே போனானே -)

(அனந்தல்
ஆற்ற அனந்தல்- பெரும் துயில் -உபாயத்தில் விஸ்வாஸம் -பெரும் துயில் -மார்பில் கை வைத்து துயில்-பரகத ஸ்வீ காரம் -அங்கு கைங்கர்ய பிரஸ்தாபம் இல்லை
பேர் உறக்கம் இதில் -இவளும் உபாய பாவத்தில் அவளைப் போல் -ஆனால் கைங்கர்ய பாவத்தில் கண் துயில் அறியாள் -)

———–

நாலாயிரப்படி -அவதாரிகை –
கிருஷ்ணன் வளர வளரத் தீம்பிலே கை புக்குவாறே —
ஸ்ரீ நந்தகோபர் வ்ருத்தராகையாலும் –
நம்பி மூத்த பிரான் விலக்க மாட்டாதே அவன் வழியே போகையாலும் –
இவனைக் காக்கைக்கு இளைய பெருமாளை போலே இவனைப் பிரியாதே போகிறான்
ஒருத்தன் தங்கையை எழுப்புகிறார்கள் –

(பரதனும் தம்பி சத்ருக்கனனும் -இலக்குவனோடு மைதிலியும் -அங்கே சேர்த்தால் போல் இங்கும் பிரியாதே -பதம்
இளைய பெருமாள் ஊர்மிளை உடன் அக்னி கார்யம் செய்த போது இவனும் பால் கறப்பான்)

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்–12-

கனைத்து
இளைய பெருமாள் அக்னி காரியத்துக்கு உறுப்பாம் அன்று இறே இவன் எருமைகளை விட்டுக் கறப்பது –
தவிர்ந்தவனோடு செய்கிறவனோடு வாசி இல்லை –
இரண்டும் உபாயம் அன்று
யாது ஓன்று பேற்றை சாதித்துத் தருவது -அதுவே உபாயம்(கிருஷ்ணன் தர்மம் சனாதனம் )

அபிசாரத்தைப் பற்ற காம்ய கர்மம் புண்யம் –
ஜ்யோதிஷ்டோமாதிக்கு பக்தி தன்னேற்றம்
எல்லாத்தையும் விட்டு என்னைப் பற்று என்றவன் அடைய த்யாஜ்யமாம்

(மாம் ஏகம் என்றதால் விட்டுப் பற்றிய நானும் உபாயம் அல்ல
பக்தி இரண்டையும் பொறுக்கும்
இது இரண்டையும் பொறுக்காது)

ஜீயர் பிள்ளை திருநறையூர் அரையருக்கு அருளிச் செய்த வார்த்தை -விடுகையும் உபாயம் அல்ல -பற்றுகையும் உபாயம் அல்ல –
விடுவித்துப் பற்றுவிக்குமவனே உபாயம் -என்று
ந தேவ லோகா க்ரமணம் -(லஷ்மணன் வாக்கியம் குருஷ்ம -ராமன் ஏவிப்பணி கொள்வதே வேண்டும் )
பரி த்யக்தா –இத்யாதிப் படியே ப்ராப்ய விரோதிகளிலே நசை அற்றபடி யாகவுமாம்

(விட்டேன் பற்றுகிறேன் என்பது அழுக்கு போனதை அறிவித்து அவன் உகப்புக்கு ஹேதுவாகும்)

(அதிகார ஸ்வரூபம் காட்டவே நேற்றைய கோவலன் கணங்கள் பல கறந்ததும் இன்றைய நற் செல்வன் கறவாமல் அந்தரங்க கைங்கர்யம் செய்ததும் என்றவாறு)

கனைத்து
கறப்பார் இல்லாமையால் -இவ் வகத்துக்கு கன்று காலியாய் நாம் பட்டதோ -என்று கூப்பிடா நிற்கும்

இளம் கற்று எருமை
இளம் கன்று பாடாற்றாமை

கன்றுக்கிரங்கி-
எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் இருக்குமா போலே -(கஜேந்திர மோக்ஷம் )
அவன் எருமை கறவா விட்டால் அவை படும் பாடு நாங்கள் உன்னாலே படா நின்றோம் –

நினைத்து
கன்றை நினைத்து பாவனா ப்ரகர்ஷத்தாலே முலையிலே வாய் வைத்ததாய்க் கொண்டு பால் சொரியா நிற்கும்–நினைவு மாறில் இறே பால் சொரிவது மாறும்

முலை வழியே
கன்றின் வாய் வழியாதல் -கறக்கிறார் கை வழியாதல் அன்றிக்கே முலை வழியே

நின்று பால் சோர
கேட்பார் அன்றியே இருக்க -ஆற்றாமையால்-விம்மலாலே- பகவத் குணங்களைச் சொல்லுவாரைப் போலே –
மேகத்துக்கு கடலிலே முகந்து கொண்டு வர வேணும் –இவற்றுக்கு வேண்டா –

(தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் தான் இந்த சிறப்பு உள்ளது)

நனைத்தில்லம் சேறாக்கும் –
பாலின் மிகுதியால் அகம் வெள்ளமிடும்-அவற்றின் காலிலே துகை யுண்டு சேறாகும்-சேறாய் புகுர ஒண்கிறது இல்லை என்ன
அளற்றுப் பொடியிட்டுப் புகுருங்கோள் -அவ்வளவு இன்றிக்கே மேலே மேலே வெள்ளம் இட்டதாகில் ஓடம் ஏறிப் புகுருங்கோள் –

நற் செல்வன்
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -தோற்றி மறையும் நற் செல்வம் அன்று -நிலை நின்ற சம்பத்து

சம்பன்ன -(அனந்தம் பிரதம யுகம் தோறும் உண்டே )
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -(6-7)
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே -என்கிறபடியே இவனுடைய வைஷ்ணவஸ்ரீ யாலே
ஜகத்துக்கள் அடைய வைஷ்ணவத்வம் உண்டாம் படி இருக்கை –

(ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழிற் குரு கூர்ச் சட கோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–3-3-11)

சவ்மித்ரே புங்ஷ்வ போகாம் சத்வம் –
யத் விநா பரதம் த்வாம் சத்ருக்நம் சாபி மாநந-(உங்களை விட்டு நான் இல்லையே பெருமாள் )

தங்காய்
ராவணஸ்ய அனுஜோ பிராதா -என்னுமா போலே
குண ஹானிக்கு ராவணனைப் போலே குணத்துக்கு அவனில் இவளுக்குத் தன்னேற்றம்-
அந்தரிக்ஷ கத ஸ்ரீ மான் என்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு மகளான த்ரிஜடை போலே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் இல்லாத பிராட்டிக்குக் கைங்கர்யம் பண்ண உண்டு இறே இவளுக்கு –
அப்படியே இங்கு தமையன் கிருஷ்ணனுக்கு துணையாக திரிய இவள் நப்பின்னைப் பிராட்டிக்கு அடிமை செய்யப் பிறந்தவள் –

பனித் தலை வீழ
மேலே பனி வெள்ளம் -கீழே பால் வெள்ளம் இட நடு மால் வெள்ளம் இட நின்று அலைந்து –

(மாயோனை மணத் தூணைப் பற்றி நின்று-கருணா ப்ரவாஹம் சிக்கி விழாமல் இருக்க மரக்கலம் போல் )

நின் வாசற்கடை பற்றிச்
மேலப் படியையும் தண்டியத்தைப் பற்றி நாலா (தொங்கி )நின்றோம் –
இத் தர்ம ஹானியை அறிகிறிலை-என்கிறார்கள் –

இவர்கள் படும் அலமாப்புக் காண்போம் -என்று பேசாதே கிடக்க –
தீரா மாற்றமாக நெஞ்சாரல் பண்ணி முகம் காட்டாத கிருஷ்ணன் என்றால்(கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் )
பெண்கள் சிவிட் க்கென்று இதொரு பித்து என்பார்கள் என்று பார்த்து
கிருஷ்ணனால் பட்ட நெஞ்சாரல் அடையத் தீர்ந்து நெஞ்சுள் குளிரும்படி பெண் பிறந்தார்க்கு தஞ்சமான
சக்கரவர்த்தி திரு மகனைச் சொல்லுவோம் -இவர்கள் எழுந்திருக்க என்கிறார்கள் –

சினத்தினால்
ஆஸ்ரிதர் கார்யம் செய்யாதானாய் இரான் கிருஷ்ணனைப் போலே -இவன் தன் கார்யம் தானாய் இருக்கும் –

(ரக்ஷிதா ஜீவா லோகஸ்ய ஸ்வ கார்ய -லோக காரியமும் அந்தப் புரக்காரியமும் செய்வார் பெருமாள் )
தான் தன் சீற்றத்தினை முடிக்கும் -(6-4)

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன் சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.-6-4-7-

த்விஷ தன்னம் ந போக்த்வயம் –
ஆஸ்ரிதருடைய சத்ருக்களே தனக்கு சத்ருக்கள் –
பகவத் அபசாரம் பாகவத அபசாரம் என்று இரண்டு இல்லை போலே இருந்தது(மம பிராணா பாண்டவ -)
மம பக்த பக்தேஷூ ப்ரீதிரப் லத்திகா ந்ருப -என்று ஆஸ்ரிதற்கு நல்லவர்கள் தனக்கு நல்லவர்கள் என்று இருக்கும்(அருள் பெறுவார் அடியாருக்கு அருள் ஸ்ரேஷ்டம்)
மஹா ராஜருக்கு சீற்றம் பிறந்த போது வாலியை எய்தார் -அவர் அழுத போது கூட அழுதார்
சஞ்ஜாத பாஷ்ப(அடியார் அழ இவரும் அழுகிறார் )

தென்னிலங்கை
அவன் செய்த அநீதியை நினைத்து -பறைச் சேரி என்பாரைப் போலே-
அத் திக்கும் காண வேண்டாதே இருக்கிற படி
ஒரு பிராணனை இரண்டு ஆக்கினாப் போலே தாயையும் தாமப்பனையும் பிரித்த படி
கொலைக் காரன் இருக்கிற இடம் இறே

கோமானை
யத்ய தர்மோ ந பலவான் ஸ்யாதயம் ராஷேஸ்வர ஸ்யாதயம் ஸூரா லோகஸ்ய
ச சக்ரஸ் யாபி ரக்ஷிதா -என்று திருவடி மதித்த ஐஸ்வர்யம்

செற்ற
ஓர் அம்பாலே தலையைத் தள்ளி விடாதே–மொட்டும் நெம்பும் பாறும் கலங்கும் படி –
தேரைத் தள்ளி –வில்லை முறித்து -படையைக் கொன்று -ஆயுதங்களை அறுத்து –
தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் -என்று கிளர்ந்து எழுந்த அபிமானத்தையும் அழித்து-நெஞ்சாரல் படுத்தி
கச்சா நுஜா நாமி என்கிறபடியே படையைச் சிரைத்து விட்ட படியான எளிவரவு மூதலிக்கைக்கு
ஆள் இல்லையாம் என்று கொல்லாதே விட்டார் –

மாதங்க இவ -(ஸிம்ஹம் யானையைப் பிடித்தால் போல் நன்கு பரிபவப்பட்டு )
ப்ரஹ்ம தண்ட ப்ரகாசா நாம் என்று – தஸ்யாபி சங்க்ரம்ய ரதம் ச சக்ரம் சாச்வத்வஜச்ச தர மஹா பதாகம்-
ச சாரதிம் சாஸ நி ஸூல கட்கம் ராம பிரசிச்சேத சரைஸ் ஸூ புங்கை
ச ஏவ முக்தோ ஹத தர்ப்பை ஹர்ஷ நிக்ருத்த சாப நிஹாதாஸ்வ ஸூத சரார்த்தித க்ருத்த மஹா கிரீட விவேச லிங்கம் ஸஹஸா ச ராஜா –

மனத்துக் கினியானைப்
வேண்டிற்றுப் பெறா விட்டால் -சொல்லாய் சீமானே-என்னுமா போலே
வேம்பேயாக வளர்த்தாள்-என்னும் கிருஷ்ணன் அல்லவே –
பெண்களைக் கொன்று துடிக்க விட்டு வைத்துத் துளி கண்ண நீரும் விழ விடாதே நிற்கும் கிருஷ்ணனை ஒழிய
சஞ்ஜாத பாஷ்ப பரவீர ஹந்தா -என்று சத்ருக்களுக்கும் கண்ண நீர் பாய்ந்து
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து -தன்னைப் பிரிந்து நாம் படுமவற்றை நம்மைப் பிரிந்து தான் பட வல்லன்

பாடவும் நீ வாய் திறவாய்
இத உபரி ம்ருத சஞ்ஜீவனம் ராம வ்ருத்தாந்தம் (பராசர பட்டர் முன்னுரை ராம திரு நாமங்களுக்கு )-என்றத்தைக் கேட்டும் –
ராம வ்ருத்தாந்தம் கேட்டதும் – உறங்குகைக்கு உறுப்பாயிற்றோ

வாய் திறவாய்
ப்ரீதிக்குப் போக்கு விட வேண்டாவோ -தங்கள் ஒருதலைப் பற்ற வேண்டி இருக்கிறார்கள் –
இனித் தான்
எங்களுக்காக உணரா விட்டால் உனக்காக உணரவும் ஆகாதோ
எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்க வல்லை யாவதே
அகம்பனன் சூர்ப்பணகை உள்ளிட்டார்க்கு உள்ள இரக்கமும் உன் பக்கலில் கண்டிலோமே

எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
எம்பெருமான் பரார்த்தமாக உணரும்
சம்சாரிகள் ஸ்வார்த்தமாக உணருவார்கள்
இது ஒரு படியும் அன்று -ஆர்த்தி கேட்டு உணராது ஒழிவதே

பையத் துயின்ற பரமன் –
பகவதஸ் த்வராயை நம -என்னும்படி ஆர்த்தி கேட்டால் அப்படி படுமவனோடே வர்த்தித்து இங்கனே கிடப்பதே
அக் குணங்கள் தானே உன்னை உறங்குகிறதோ

அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்-
உன் வாசலிலே வந்து எழுப்ப நீ எழுந்திராதது ஒழிந்தாய்-என்கிற வேண்டற்பாடு (உனக்கு இருந்ததாகில் )எல்லாரும் அறியும்படி யாய்த்து-
அதுவும் செய்தது காண் -இனி உணராய் என்ன

கிருஷ்ணனையும் நம்மையும் சேர ஒட்டாத ஊரிலே- பதினைந்து நாழிகையில் வந்து- எல்லாரும் கேட்க –
மனத்துக்கு இனியான் என்பது- கிருஷ்ணன் என்பது- எழுந்திராய் என்பதாய்க் கூப்பிட்டால் நம்மை என் சொல்வார்கள் என்ன

நீ நீ யாக நாங்கள் நாங்களாக வந்து போய் ப்ரஸித்தமாயிற்று -இனி அத்தை விடாய் என்கிறார்கள்
ரஹஸ்யமாக பகவத் விஷயம் அனுபவிக்கும் அத்தனை ஒழிய புறம்பு இதுக்கு ஆளுண்டோ என்று இருக்கிறாயாகில்
நீ பிறந்த பின்பு இது ஒரு வ்யவஸ்தை யுண்டோ

எல்லாரும் உன்னைப் போலே யாம்படி அது போய் ப்ரஸித்தமாயிற்றுக் கிடாய் என்றுமாம்

எம்பெருமானார் திரு அவதரித்ததால் போலே காணும் இந்த நாச்சியார் திரு அவதரித்த பின்பு
எல்லாரும் பகவத் விஷயம் அறிந்தது –

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து– ஸ்ரீ திரு நாராயண புரத்து ஸ்ரீ ஆய் -என்னும் ஸ்ரீ ஜனன்யாச்சார்யார் ஸ்வாமிகள் -வியாக்யானங்கள்–

October 28, 2017

ஈராயிரப்படி -அவதாரிகை –
கிருஷ்ணன் ஊருக்கு ஒரு பிள்ளையானால் போலே
ஆபீஜாத்யம் உடையாளாய்
ஊருக்கு ஒரு பெண் பிள்ளையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

(கர்ம யோகம் மாறாமல் -நித்ய அனுஷ்டானம் விடாதவர்கள் இதில் –
கிருஷ்ண கைங்கர்யம் விடாதவர்கள் அடுத்த பாசுரம் நற் செல்வன் அடுத்த பாசுரம் –
அனுஷ்டானம் சாமான்ய தர்மம் செல்வம் இதில்
விசேஷ தர்மம் அடுத்த பாசுரம்
வர்ணாஸ்ரமம் இதி கர்த்தவ்ய தாக -விதி பிரேரிகம் -ஆஜ்ஜா கைங்கர்யம்-என்றும்
பகவத் த்யானம் ஆராதனம் -ராக பிரேரிகம் -அநு ஜ்ஜா கைங்கர்யம் )

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்–11-

பதவுரை

கன்று கறவை–கன்றாகிய பசுக்களின்னுடைய
பல கணங்கள்–பல திரள்களை
கறந்து–கறப்பவர்களும்
செற்றார்–சத்துருக்களினுடைய
திறல் அழிய–வலி அழியும்படி
சென்று–(தாமே படையெடுத்துச்)சென்று
செரு செய்யும்-போர் செய்யுமவர்களும்
குற்றம் ஒன்று இல்லாத-ஒருவகைக் குற்றமும் அற்றவர்களுமான
கோவலர் தம்-கோபாலர்களுடைய (குடியிற் பிறந்த)
பொன் கொடியே-பொன் கொடி போன்றவளே!
புற்று அரவு அல் குல் புனமயிலே–புற்றிலிருக்கிற பாம்பின் படம் போன்ற அல்குலையும் காட்டில்
(இஷ்டப்படி திரிகிற) மயில் போன்ற சாயலையுமுடையவளே!
செல்வம் பெண்டாட்டி-செல்வமுள்ள பெண் பிள்ளாய்!
போதராய்–(எழுந்து) வருவாயாக.
சுற்றத்து தோழிமார் எல்லாரும்-பந்து வர்க்கத்திற் சேர்ந்தவர்களும் தோழிமார்களுமாகிய எல்லாரும்
வந்து-(திரண்டு) வந்து
நின் முற்றம் புகுந்து-உனது (திரு மாளிகையின்) முற்றத் தேறப் புகுந்து
முகில் வண்ணன் பேர் பாட–கார் மேக வண்ணனான கண்ண பிரானுடைய திரு நாமங்களைப் பாடச் செய்தேயும்
நீ-(பேருறக்கமுடைய) நீ
சிற்றாது-சலியாமலும்
பேசாது-(ஒன்றும்) பேசாமலும்
உறங்கும் பொருள் எற்றுற்கு-உறங்குவது என்ன பிரயோஜனத்திற்காகவோ? (அறியோம்)
ஏல் ஓர் எம் பாவாய்-

பிஞ்சாய் பழுத்தால் போல் கன்றுகள் போல் இருக்கும் பசுக்கள்
கறவை -கறவைகள் -கறவைகள் கணம் -கறவைகள் கணங்கள் -கறவைக் கணங்கள் பல
கோவலர் -பன்மை -பலருக்கும் செல்வக் கொழுந்து இவள்
ஆயர் குலக் கொழுந்து அவன் -வேயர் குலக் கொழுந்து இவள் –
கோவலர் தம் பொற் கொடியே-பிறப்பு -அழகு -மதிப்பு மூன்று பெருமைகள்
புற்றரவல்குல் -அவயவ சோபை
புன மயிலே-லாவண்யம் -சமுதாய சோபை
செல்வப் பெண்டாட்டி-கண்ணனையே கையில் கொண்ட செல்வம் –
இவள் திருமாளிகையில் திரு முற்றம் அனைவருக்கும் இடம் கொடுக்கும்
அனைவருக்கும் -செல்வம் போன்றவள் –
சிற்றாதே-அசையாமல் –
பாகவத ஈட்டம் இல்லாமல் அவனைக் கொண்டாலும் அசன்நேவ பொருள் அல்லவே –

கற்றுக் கறவைக் –
கன்று நாகுகள் நித்ய ஸூரிகளைப் போலே பஞ்ச விம்சதி வார்ஷிகமாய் இருக்கை-
கிருஷ்ணனுடைய ஸ்பர்சத்தாலே கீழ் நோக்கின வயஸ்ஸூ புகும் இத்தனை –
(வா -முன் அழகு சேவித்து -போகு -பின் அழகு சேவித்து -இத்யாதி -வயஸ்ஸூ கீழ் நோக்கி போனால் போல்
கன்றுகளைப் பிரியாதே இருக்கும் கறவைகள் என்றுமாம் )
பிரணயத்துக்கு முலை பட்டார் ஆகாதாப் போலே ஆகாது என்கை –

கன்றுகளை ரஷிக்க வென்று வ்யவஸ்தை யுண்டோ என்னில்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்–(திரு நெடும் தாண்டகம் -16-இவனும் கரியான் ஒரு காளை )என்றும் –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி 10-3-10 -என்றும் –
(உகந்த -மாடுகள் இடம் -இனிது உகந்த இங்கு
பிரதமம்-நித்ய ஸூரிகள் ரக்ஷணம் மத்யமம்-பசுக்கள் ரக்ஷணம் சரமம் -கன்றுகள் ரக்ஷணம் )
நித்ய ஸூரிகளிலும் பசு மேய்க்க உகக்கும்

அவன் சரணாகத வத்சலன் ஆனால் சரணாகத வத்சலமாம் இத்தனை இறே
யதா தருண வத்சா (நிழல் போல் பெருமாளைத் தொடர்ந்து போவது போல் இவனும் இவற்றின் பின் போவான் )
கறவாத மட நாகு தன் கன்று உள்ளினால் போல் -( 7-1-1-)
சரணாகத வத்சலா (சீதா பிராட்டி ராவணனுக்கு உபதேசம் )
த்வயி கிஞ்சித் கிம் கார்யம் சீதையா மம (சுக்ரீவன் ராவணன் கிரீடம் பிடுங்கி வந்ததும் பெருமாள் வார்த்தை
(சுக்ரீவனுக்கு கொஞ்சம் அவமரியாதை கூட பொறுக்க ஒண்ணாதவன் -யுத்தம் -41-4–
எனது சரீரத்தாலும் பிரயோஜனம் இல்லை -வாத்சல்யம் )

கணங்கள் பல
நம்முடைய அனாத்மா குணங்களுக்கும்
அவனுடைய ஞான சக்த்யாதி குணங்களும் –
(அசங்க்யேய நிஸ்ஸீம நிரவதிக நிரதிசய கல்யாண குண கணங்கள் )
நார சப்தத்தில் சொன்ன நாரங்களினுடைய சமூகமானாலும் எண்ணலாம்
இவை எண்ணப் போகாது –
ரத குஞ்ஜர வாஜிமாந் (தேர் யானை குதிரைப்படைகள் )-என்னுமா போலே

பல கறந்து-
ஈஸ்வரன் ஒருவனும் சர்வ ஆத்மாக்களுக்கு நியமனாதிகள் பண்ணுமா போலே
ஜாதியினுடைய மெய்ப்பாட்டாலே செய்ய வல்ல சாமர்த்தியம் –
(நித்யோ நித்யானாம் ஏகோ பஹுனாம் -இத்யாதி –
பர ப்ரஹ்மம் பரமாத்மா பரஞ்சோதி ஒருவனாய் செய்வது போல் )

செற்றார்
சத்ரோஸ் சகாசாத் ஸம்ப்ராப்த -(சத்ருக்கள் பக்கல் வந்த விபீஷணன் -)என்ற அங்கதப் பெருமாளைப் போலே
இவ் வைஸ்வர்யம் காணப் பொறாதார் நமக்கு சத்ருக்களாய் இருக்கிற படி –

திறலழியச்
கம்சாதிகளை மறுமுட்டுப் பெறாத படி கிழங்கு எடுக்கைக்கு மிடுக்குடையார்கள் இவ் ஊரார் என்கை

சென்று செருச் செய்யும்
எதிரிகள் வந்தால் பொருகை அன்றிக்கே -இருந்த இடங்களிலே சென்று பொருகை –

குற்றமொன்றில்லாத
எடுத்து வரப் பார்த்து இருக்கும் குற்றம் இல்லை –
கையில் ஆயுதம் பொகட்டால் எதிரியை நிரசிக்கிற குற்றம் இல்லை
பகவத் பாகவத விஷயங்களில் குற்றம் செய்தாரை அக்னீஷோமீய ஹிம்சை போலே பாராதே
கொல்ல வல்லார்கள் -என்றுமாம்

கோவலர் தம் பொற் கொடியே
ஜனக ராஜன் திருமகள் போலே ஊருக்கு ஒரு பெண் பிள்ளை
(கர்ம யோக நிஷ்டர் ஜனக மஹா ராஜர் போல் இந்த கோவலர்
ஞான யோகத்தால் ஜட பரதர் -பக்தி யோகத்தால் -பிரகலாதன் )

பொற்கொடியே
தர்ச நீயமாய் இருக்கையும் கொள் கொம்பை ஒழிய ஜீவியாமையும்
கொடி தரையிலே கிடக்கலாமோ -ஒரு தாரகம் வேண்டாவோ –
எங்களோடு கூடி நில்லாய் என்கை
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் (திருவாய் -10-10-3-)

புற்றரவல்குல்
வெய்யிலடியுண்டு புழுதி படைத்த அரவு போல் அன்றிக்கே
தன் நிலத்திலே வாழும் பாம்பின் படமும் கழுத்தும் போலே இருக்கை-
இத்தனை சொல்லலாமோ என்னில்
பெண்ணைப் பெண் சொல்லுகிறது அன்றோ
யாஸ் ஸ்த்ரியோ த்ருஷ்ட வத்யஸ் தா பும்பாவம் மனசா யயு -என்று அவன் –
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரி -யானால் போலே
(ஆடவர் பெண்ணினை அளாவும் தோளினான் -இடை அழகு ஆசை சுருங்கி வைராக்யம் மிக்கு –
கண் -ஞானம் -முலை -பக்தி )

புன மயிலே
இது தன் நிலத்தில் நின்ற மயில் –
கிருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்ற வல்ல அனகபாரத்தை உடையளாய் இருக்கை
(அனகபாரம் குழல் -வாசனை -கந்தம் -சேஷத்வ பாரதந்தர்ய காஷ்டை )

போதராய்
சோபயன் தாண்ட காரண்யம்-போலே எங்களை வந்து களிக்கப் பண்ணாய் என்கை
(பெருமாள் நுழைந்ததும் ரிஷிகள் ஆனந்தப்பட்டால் போல் )

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்-முற்றம் புகுந்து-
நான் புறப்படுகைக்கு நீங்கள் எல்லாரும் வந்தி கோளோ-என்ன
உத்தரம் தீரமா ஸாத்ய (விபீஷணன் வந்து ஆகாசத்தில் நின்றால் போல் )-என்னும்படியே
எல்லாரும் வந்து பிராப்ய தேசமான உன் திரு முற்றத்தே வந்து புகுந்தது
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றேர் (பெரிய திருமொழி -10-8-5)-என்றும்
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து -(நாச்சியார் )-என்றும்
சேஷியானவனுக்கும் ப்ராப்யமான உன் திரு முற்றம் சேஷ பூதைகளான எங்களுக்கு பிராப்யம் என்னச் சொல்ல வேணுமோ
புகுந்து கொள்ளப் புகுகிற கார்யம் என் என்ன
(அரங்கன் திரு முற்றம் போல்
நீணிலா முற்றம் போல் –
திருக்கோவலூர் இடைகழி முற்றம் போல் )

முகில் வண்ணன் பேர் பாடச்
உகக்கும் திரு நாமங்களை நீ பாட –
நாங்கள் உன் பஷத்தே நின்று கூட்டம் பற்ற –
நீ அவன் அழகிலே ஈடுபட்டுப் பாட –
உன்னீடுபாடு கண்டு நாங்கள் ஈடுபட்டுப் பாட

சிற்றாதே பேசாதே
சேஷ்டியாதே -கண்ணையும் செவியையும் பட்டினி விடுவியா நின்றாய்

செல்வப் பெண்டாட்டி நீ
உன்னை நீ பிரிந்து அறியாயே-உனக்கு கூடு பூரித்து இருந்து என்றுமாம்

எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்–
குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் செய்வதோ இது
கைவல்ய மோக்ஷம் போலே தனி கிடக்கிற கார்யம் அன்றே -என்று –
(அந்தமில் பேர் இன்பத்து அடியவரோடு இருந்தமை வேண்டாவோ )

——————————————-

(தந்தை மகள் ஆய்ப்பாடி கோபி போல் இறுதியில் தந்தை ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூர் மூன்றும் உண்டே

குணக் கடல் கூட்டங்களையும் கூட எண்ண முடியாது போல் இங்குள்ள கற்றுக் கறவை கணங்கள் பல)

நாலாயிரப்படி-அவதாரிகை –
கிருஷ்ணன் ஊருக்கு ஒரு பிள்ளையானால் போலே
ஆபீஜாத்யம் உடையாளாய் ஊருக்கு ஒரு பெண் பிள்ளையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
அரியதைச் செய்ய வல்ல குடியிலே பிறந்து வைத்து (பாகவத சமாஹம் கூடாமல் இருப்பதால் )அரியதைச் செய்யாதே கொள் -என்கிறார்கள்
எளியராக வேண்டும் இடத்திலே அரியராக ஒண்ணாதே -(கண்ணன் அஹம் வோ பாந்தவ ஜென்மம் என்று இருக்கும் போல் இல்லையே நீ )

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே
புற்றரவல்குல் புன மயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்–11-

கற்றுக் கறவைக் –
கன்று நாகுகள் நித்ய ஸூரிகளைப் போலே பஞ்ச விம்சதி வார்ஷிகமாய் இருக்கை-(பிஞ்சாய் பழுத்த அவளைப் போலவே )
அவர்கள் இப்படி இருக்கிறது எம்பெருமானை அனுபவித்து அன்றோ
கிருஷ்ணனுடைய ஸ்பர்சத்தாலே கீழ் நோக்கின வயஸ்ஸூ புகும் இத்தனை –
ஸ்பர்சத்தால் வந்த தன்னேற்றம் பார்த்துக் கொள்ளுவது –
திருவாய்ப்பாடியிலே கன்றுகளுக்கு வாசி தெரியாது -பசுக்களுக்கும் வாசி தெரியாது

கற்றுக் கறவை –
பவாமி த்ருஷ்ட்வா ச புனர் யுயேவா(தசரதன் வார்த்தை )
பிரணயத்துக்கு முலை பட்டார் ஆகாதாப் போலே ஆகாது என்கை –

(வா போகு வா இன்னம் வந்து ஒருகால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லை செற்றாய்!
மா போகு நெடும் கானம் வல் வினையேன் மனம் உருக்கும் மகனே! இன்று
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப் போகாதே நிற்க்குமாறே! —9-4–)

கன்றுகளை ரஷிக்க வென்று வ்யவஸ்தை யுண்டோ என்னில்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்-என்றும் –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்றும் –
நித்ய ஸூரி களிலும் பசு மேய்க்க உகக்கும்

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்
கடி பொழில் சூழ் கண புரத்து என் கனியே! என்றும்
மன்றம் அர கூத்தாடி மகிழ்ந்தாய்! என்றும்
வட திரு வேம்கடம் மேய மைந்தா! என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய்! என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும்
துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே–16-

அவத்தங்கள்  விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர் தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-

கன்று மேய்க்கப் போனால் பசுக்களும் நித்ய ஸூரிகளோடு ஓக்க தள்ளுண்ணும் அத்தனை
பசு மேய்க்க உகக்கும் –
கன்று மேய்க்க இனிது உகக்கும் –
அதாவது ஸ்வ ரக்ஷணத்திலே அந்வயம் இல்லாதவரை இனிது உகக்கும் என்றபடி

காளாய்
அவை இளகிப் பதிக்கத் தானும் இளகிப் பாதிக்கும்
யா பூர்வ்யாய வேதஸே நவீயசே ஸூமஜ் ஜாநயே விஷ்ணவே ததா சதி —
யோ ஜாநமஸ்ய மஹதோ மஹிப்ரவத் சேது ஸ்ரவோபிர் யுஜ்யம் சிதப் யசத் –

(பழைய -ஆனால் நவோ நவோ -விஷ்ணு -சித்ரை ரேவதியின் இருந்து வைகாசி ரேவடிஜிக்கே ஒரு வயசு குறையும்)

மைந்தனை மலராள் மணவாளனை –

(நெஞ்சமே நல்லை நல்லை*  உன்னைப் பெற்றால்- 
என் செய்யோம்?*  இனி என்ன குறைவினம்?*
மைந்தனை மலராள்*  மணவாளனைத்,* 
துஞ்சும்போதும்*  விடாது தொடர்கண்டாய்.)

அவன் சரணாகத வத்சலன் ஆனால் சரணாகத வத்சலாமாம் இத்தனை இறே
யதா தருண வத்சா வத்சம் வத்சோ வா மாதரம் சாயா வா சத்துவம் அநு கச்சேத்(ஸ்ரீ பாகவத மங்கள ஸ்லோகம் )
கறவாத மட நாகு தன் கன்று உள்ளினால் போலே மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்-(7-1-நாகை -கன்று -அந்வயித்து-பட்டர் )
அபித்வா ஸூர நோநுமோ துக்தா இவ தேநவ

கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1-

சரணாகத வத்சலா(சீதாபிராட்டி வாக்கியம் )
கன்று இடுகின்ற முன்னாள் கோ மூத்ரமாதல் சாணமாதல் புல்லிலே பதில் மோந்து பார்த்து காற்கடைக் கொள்ளும் –
பிற்றை நாள் கன்றிடில் அக்கன்று சாணத்திலும் கூ மூத்ரத்திலும் புரண்டாலும் அது தன்னையே போக்யமாகக் கொண்டு நக்கா நிற்கும்
முன்னணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலே சூடும்
த்வயி கிஞ்சித் சமா பன்ன கிம் கார்யம் சீதயா மம(சுக்ரீவன் இடம் பெருமாள் )
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி

(சீதாபிராட்டி -சுக்ரீவன் -விபீஷணன் -நாம் -அன்று ஈன்ற கன்று போல் நமக்கும்
சர்வ பூதேப்யோ-அனைத்தும் முன் ஈன்ற கன்று – ததாமி-நமக்கு)

(அற்றம் உரைக்கில் அடைந்தவர் பால் அம்புயை கோன்
குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ -எற்றே தன்
கன்றின் உடம்பின் வழுவன்றோ காதலிப்பது
அன்று அதனை ஈன்று உகந்த வா –ஞானசாரம் 25-

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே – இராமானுச நூற்றந்தாதி –260 )

கணங்கள் பல –
நாரா என்னுமா போலே ஸமூஹங்கள் பல வென்னும் அத்தனை

பல
நார சப்தத்தில் நாரங்களினுடைய ஸமூஹங்களையும் –அஸங்கயாதமான பகவத் குணங்களையும்–
அவற்றையும் கூட வெல்லும்படி
மலிவான நம்முடைய அநாத்ம குணங்களையும் எண்ணிலும் எண்ணப் போகாது
சொல்லும் போது ரத குஞ்ஜர வாஜிமாந் -(சக்கரவர்த்திக்கு குதிரை யானை தேர்ப்படைகள் போல்)
என்றால் போலே பல வென்னும் அத்தனை
கழியாரும் கன சங்கம் இத்யாதி(திரு நறையூர் -சங்கங்களால் நடை பாவாடை )

பல கறந்து-
ஈஸ்வரன் ஒருவனும் சர்வ ஆத்மாக்களுக்கு நியமனாதிகள் பண்ணுமா போலே
ஜாதியினுடைய மெய்ப்பாட்டாலே செய்ய வல்ல சாமர்த்தியம் –

செற்றார்
சத்ரோஸ் சகாசாத் ஸம் ப்ராப்த(சத்ரு பக்ஷத்தில் இருந்து வந்ததால் இவனும் சத்ரு என்று சங்கை ) -என்ற அங்கதப் பெருமாளைப் போலே
இவ் வைஸ்வர்யம் காணப் பொறாதார் நமக்கு சத்ருக்களாய் இருக்கிற படி –

திறலழியச்
சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி எலும்பைப் பூண்டு திரியும் ருத்ரனும் –
ஒத்துப் போம் ப்ரஹ்மாவும்
அந்நிய பரனாய் இருக்கிற எம்பெருமானும்
சாது இந்திரனும் எனக்கு எதிரே என்று இருக்கும்
கம்சாதிகளை மறுமுட்டுப் பெறாத படி கிழங்கு எடுக்கைக்கு மிடுக்குடையார்கள் இவ் ஊரார் என்கை

சென்று செருச் செய்யும்
எதிரிகள் வந்தால் பொருகை அன்றிக்கே -இருந்த இடங்களிலே சென்று பொருகை –
அபி யாதா ப்ரஹர்த்தா ச

சென்று
சக்ரவர்த்தித் திருமகனைப் போலே ஊராகச் சக்ரவர்த்தி திருமகனோடு ஒப்பார்கள் வீரத்துக்கு –

சென்று செருச் செய்கை எங்கே கண்டோம் என்னில் –
பசு மேய்க்கிறார் இரண்டு இடையர் (பெயர்களே சொல்லாமல் இடையர்கள் உடன் புரையற க் கலந்தார்களே )குவலயா பீடத்தின் கொம்பைப் பிடுங்கி
விளையாடா நின்றார்கள் என்று கண்டோம் இறே

குற்றமொன்றில்லாத
1-எடுத்து வரப் பார்த்து இருக்கும் குற்றம் இல்லை –
2-கையில் ஆயுதம் பொகட்டால் எதிரியை நிரசிக்கிற குற்றம் இல்லை
3-இப்படி அழியச் செய்தார்கள் என்று எம்பெருமானுக்கு முறைப் பட்டால்
செய்தாரேல் நன்று செய்தார் என்னும்படி பிறந்தவர்கள் என்னவுமாம்

1-சாது ரேவ ச மந்தவ்ய-(கீதா ஸ்லோகம் )என்றும்
2-மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் -தோஷ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்றும்
3-குன்றனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும்-(முதல் திருவந்தாதி )என்றும் —

1-பகவத் அனுபவமே தேஹ யாத்ரையாய் இருப்பார்க்கு (உண்ணும் சோறு இத்யாதி)அநீதிக்குப் பெரு நிலை நிற்கும் –
2-வஸ்திர அன்ன பானாதிகளோடே ஓக்க பகவத் குணங்களும் கலசி தாரகமாய் இருப்பார்க்கு அநீதி பொறுக்கும்
3-அல்லாதார் அநீதி எம்பெருமானுக்கு அஸஹ்யமாய் இருக்கும்

நிர்தோஷம் வித்தி தம் ஐந்தும் பிரபாவாத் பரமாத்மந
பகவத் விஷயத்தில் ஓரடி புகுர நிற்கை இறே ஒருவனுக்கு ஸூத்தி யாவது என்கை -(தீர்த்தன் -உலகு அளந்த திருவடி )

1-ஆஸ்ரிதருடைய தோஷத்தை கடலுக்குத் தொடுத்த அம்பை மிருகாந்தரத்திலே விட்டால் போலே அசல் பிளந்து ஏற்றல்
2-பகதத்தனுடைய அம்பை மார்விலே ஏற்றால் போலே தான் அனுபவித்தல் –
3-அது தன்னையே புண்யமாகக் கொள்ளுதல் செய்யுமவன்

குற்றம் ஓன்று இல்லாத
அத்தியைவ த்வாம் ஹ நிஷ்யாமி–(சுக்ரீவன் இடம் அபசாரம் வாலி-பாகவத அபசாரம் )

ஹந்யா மஹாம்யமாம் பாபாம்-(கைகேயி தாயைக் கூட கொல்லுவேன்-பரதன் -பகவத் அபசாரம் )என்று சொல்லுகிறபடியே
பகவத் பாகவத விஷயங்களில் குற்றம் செய்தாரை
அக்னீஷோமீய ஹிம்சை போலே பாராதே கொல்ல வல்லார்கள் -என்றுமாம்

(வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் போல் -செற்றார் திறல் அழியச் செற்றாலும் குற்றம் இல்லாதவர்கள்)

கோவலர் தம் பொற் கொடியே
ஜனகா நாம் குல கீர்த்தி மாஹரிஷ்யதி மே ஸூ தா -என்னுமா போலே
ஜனக ராஜன் திருமகள் போலே ஊருக்கு ஒரு பெண் பிள்ளை

பொற் கொடியே
தர்ச நீயமாய் இருக்கையும் கொள் கொம்பை ஒழிய ஜீவியாமையும்

கொடி தரையிலே கிடக்கலாமோ -ஒரு தாரகம் வேண்டாவோ -(கோல் தேடி ஓடும் கொழுந்து )
எங்களோடு-பெண்களோடு – கூடிக் கொண்டு நில்லாய் என்கை
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் -(10-10-3)

(கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-)

புற்றரவல்குல்
வெய்யிலடியுண்டு புழுதி படைத்த அரவு போல் அன்றிக்கே
தன் நிலத்திலே வாழும் பாம்பின் படமும் கழுத்தும் போலே இருக்கை

இத்தனை சொல்லலாமோ என்னில் பெண்ணைப் பெண் சொல்லுகிறது அன்றோ
யாஸ் ஸ்த்ரியோ த்ருஷ்ட வத் யஸ்தா பும்பாவம் மனசா யயு -(திரௌபதி தோழிகள் ஆணாக மனசால் அடைந்து பேச்சு)
என்று அவன் –
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரி -யானால் போலே -(ஆடவர் பெண்மையை அளாவும் தோளினாய் )
ஆண்களை பெண்களாக்கும் இவள் பெண்களை ஆண்களாக்கும்

புன மயிலே
இது தன் நிலத்தில் நின்ற மயில் -கிருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்ற வல்ல
அனகபாரத்தை உடையளாய் இருக்கை

போதராய்
சோபயன் தாண்ட காரண்யம்-போலே எங்களை வந்து களிக்க-உள் தளிர்க்கப் பண்ணாய் என்கை –

போதராய்
உன்னுடைய அழகைக் காட்டி எங்களை உண்டாக்காய்

இத்தால் சொல்லிற்று ஆய்த்து பகவத் ஸ்பர்சம் உடையாருடைய
தேஹ குணத்தோடு
ஆத்ம குணத்தோடு வாசியற எல்லாம் ஆகர்ஷகமாய் இருக்கிறது என்கிறது –

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்-முற்றம் புகுந்து-
நான் புறப்படுகைக்கு நீங்கள் எல்லாரும் வந்தி கோளோ-என்ன

உத்தரம் தீரமா ஸாத்ய -என்னும்படியே எல்-லாரும் வந்து பிராப்ய தேசமான உன் திரு முற்றத்தே வந்து புகுந்தது
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றேர்(பெரிய திருமொழி 10-8)-என்றும்
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து(-நாச்சியார் திருமொழி 2) -என்றும்
சேஷியானவனுக்கும் ப்ராப்யமான உன் திரு முற்றம் சேஷ பூதைகளான எங்களுக்கு ப்ராப்யம் என்னச் சொல்ல வேணுமோ
புகுந்து கொள்ளப் புகுகிற கார்யம் என் என்ன

முகில் வண்ணன் பேர் பாடச்
உகக்கும் திரு நாமங்களை நீ பாட -நாங்கள் உன் பஷத்தே நின்று கூட்டம் பற்ற
நீ அவன் அழகிலே ஈடுபட்டுப் பாட -உன்னீடுபாடு கண்டு நாங்கள் ஈடுபட்டுப் பாட

(பெரிய பெருமாள் மேல் ஈடுபட்டு இருக்கும் பெருமாள் மேல் ஈடுபட்டு இருக்கும் சீதாபிராட்டி போல்)

சிற்றாதே
முகில் வண்ணன் என்றவாறே வடிவை நினைத்து விடாய் கெட பேசாதே கிடந்தாள்

சிற்றாதே பேசாதே
சேஷ்டியாதே -கண்ணையும் செவியையும் பட்டினி விடுவியா நின்றாய்

செல்வப் பெண்டாட்டி நீ
உன்னை நீ பிரிந்து அறியாயே–உன் கைங்கர்யம் -உனக்கு கூடு பூரித்து இருந்து என்றுமாம்

எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்–
அடியார்கள்  குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் செய்வதோ இது
இவ்வளவும் வந்தார்க்கு தனித்து பகவத் அனுபவம் பண்ணுவது குடிப் பழி

எனக்கு இங்கே கூடு பூரித்து இருந்ததோ என்ன

இல்லை யாகில் எங்கள் பாடு புறப்படாதே
கைவல்ய மோக்ஷம் போலே தனிக் கிடக்கிற கார்யம் என் -என்கிறார்கள் என்றுமாம் –

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்– திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள்

October 27, 2017

(இந்த்ர லோகம் ஆளும் -ஸ்ரீ வைகுண்டம் போல் இங்கும் ஸ்வர்க்க சப்தம்
ஸ்ரீ வைகுண்ட வாசல் நுழையும் -திருநாளாக அமைந்ததே
அஷ்ட புஜ பெருமாள் கோயிலில் மட்டும் திருக் காஞ்சியில் )

ஈராயிரப்படி -அவதாரிகை –
கிருஷ்ணனுக்கு அசலகமாய் இடைச்சுவர் தள்ளிப் பொகட்டு ஒரு போகியாக
அனுபவிக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
(நித்ய விபூதிக்கு தானே கூட்டிச் செல்வான்
ஸித்த உபாயமே நமக்கு என்று -நாம் பற்றினோம் என்ற எண்ணமும் இல்லாதவள் )

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஆற்ற வனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-

பதவுரை

நோற்று–நோன்பு நோற்று
சுவர்க்கம் புகுகின்ற–பகவத் ஸுகாநுபவம் பண்ணா நின்ற
அம்மனாய்–அம்மே!
வாசல் திறவாதார்–வாசற்கதவைத் திறவாதவர்கள்
மாற்றமும் தாராரோ–ஒருவாய்ச் சொல்லுங் கொடுக்க மாட்டாரோ?
நாற்றத் துழாய் முடி–நறு நாற்றம் வீசா நின்றுள்ள திருத் துழாய் மாலையை அணிந்துள்ள திரு முடியை யுடைய
நாராயணன்–நாராயணனும்,
நம்மால் போற்ற பறை தரும்–நம்மால் மங்களாசாஸனம் பண்ணப் பெற்றுப் புருஷார்த்தங்களைத் தந்தருள்பவனும்
புண்ணியனால்–தர்மமே வடிவு கொண்டு வந்தாற் போன்றவனுமான இராம பிரானால்
பண்டு ஒரு நாள்–முன் ஒரு காலத்திலே
கூற்றத்தின் வாய் வீழ்ந்த–யமன் வாயில் (இரையாக) விழுந்தொழிந்த
கும்பகரணனும்–கும்ப கர்ணனும்
தோற்று–தோல்வி யடைந்து
பெருந்துயில்–(தனது) பேருறக்கத்தை
உனக்கே தான் தந்தானோ–உனக்கே தான் கொடுத்து விட்டானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்–மிகவும் உறக்கமுடையவளே!
அரும் கலமே–பெறுதற்கரிய ஆபரணம் போன்றவளே!
தேற்றம் ஆய் வந்து திற–தெளிந்து வந்து, (கதவைத்) திறந்திடு;
ஏல் ஓர் எம் பாவாய்,

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்-கதவை திறக்கா விட்டாலும் பதில் வார்த்தை பேசக் கூடாதோ
போற்றப் பறை -போற்றுவதே பறை -கைங்கர்யமே நமக்கு கர்தவ்யம்
புண்ணியன் -நாராயணன் இங்கு -பின்பு கோவிந்தனை புண்ணியம் யாம் உடையோம் –
நீயே அவதரித்து வந்து அருளினாய் -கிருஷ்ணன் தர்மம் சனாதானம்
ஆற்ற வனந்தல் சரணாகதியே அழகான தூக்கம் -துரும்பு நறுக்க பிராப்தி இல்லை –
மார்பிலே கை வைத்து -ஸ்வாமி சொத்தைக் கொள்வானே -வாழும் சோம்பரை உகத்தி போலும்
உபாயமாக ஒன்றுமே செய்யாமல் சர்வ கைங்கர்யங்களும் செய்ய வேண்டுமே –

நோற்றுச் –
சித்த சாதனை -இவனுடையவும் தன்னுடையவும் ஸ்வரூபங்களை யுணர்ந்தால்
யத்னம் பண்ண பிராப்தி இல்லை –
நாராயணனே நமக்கே பறை தருவான் (1) -என்கிறபடியே அவன் தலையிலே பாரத்தைப் பொகட்டோமாகில் –
நமக்கு நீரிலே புக்கு முழுக வேணுமோ -என்று இருக்கிறாள் இவள்
உபேயத்துக்கு அன்றோ உபாயம் –
சித்த உபாய நிஷ்டர்க்கு விளம்ப ஹேது இல்லாமையால்
ப்ராப்யத்தில் த்வரை இல்லாதார் சேதனர் என்று இருக்கிறார்கள் அல்லர் –
(புருடன் மணி வரமாக -கௌஸ்துபம் -பரமாத்மா தானே ஜீவனை கூட்டிக் கொண்டு அனுபவிப்பான் அன்றோ )

அம்மனாய் –
ரஷ்ய ரஷக பாவம் மாறி நிற்கவோ பார்க்கிறது -அழகிதாக நிர்வாஹகையானாய்

சுவர்க்கம் புகுகின்ற
ஸூகம் அனுபவிக்கை –
யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்க —
(சீதா பிராட்டி பெருமாள் இடம் ஸ்வர்க்கம் யார் அபிப்ராயத்தாலே என்றாளே
உன்னைப் பிரிந்தால் நாடே சுடுமே )
நிர்வாஹகையாய் இருப்பார்க்குக் கண்ணுறங்க விரகுண்டோ
இவர்கள் பேச்சைக் கேட்டு ஈடுபட்டுப் பேசாதே கிடந்தாள்
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் —
(ஸூ ந்தர –31-திருவடி பேச பிராட்டி மதுரம் வாக்கியம் என்றாளே -செவிக்கு இனிய செஞ்சொல் )
பழி இடுவதே என்று பேசாதே கிடந்தாள் ஆகவுமாம் –

அம்மனாய் –
என்பதே -தங்கள் அடியேனாய் இருக்கிற என்னை –என்று பேசாதே இருந்தால் ஆகவுமாம்
ப்ரஹர் ஷேணா வருத்தா சா வ்யாஜஹார ந கிஞ்சன -என்று ப்ரீதியாலே விக்கிப் பேசாதே இருக்கிறாள் ஆகவுமாம்-
(பாகவத சம்பந்தம் கிட்டிற்றே நமக்கு கிருஷ்ண அனுபவம் சித்தம் என்ற ஆனந்தம் ப்ரீதி மண்டுமே
இனிமை
குற்றம்
தலைவி என்பதே
இவர்கள் வாய்ந்ததே இப்படி நான்கு காரணங்கள் )
இவர்கள் பொறுக்க மாட்டாமை

மாற்றமும் தாராரோ –
என்கிறார்கள் -ஏதேனும் ஒருபடியால் இவள் பேச்சே அமையும் இவர்களுக்கு
துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளால்- (பெரிய திருமொழி -2-7-2 ) -என்கிறபடியே
இவளுடைய பேச்சு உஜ்ஜீவனமாய் தாரகமாய் இறே இருப்பது

தர்மபுத்ரன் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் என் புகுகிறதோ என்று அஞ்சின அளவிலே யுத்தத்தில்
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வனியைக் கேட்டு தரித்தால் போலே
இவர்களுக்கு இவள் பேச்சு
உடம்பை கிருஷ்ணனுக்குக் கொடுத்தால் பேச்சாகிலும் தரலாகாதோ
மதுரா மதுரா லாபா கிமாஹ மம பாமிநீ இறே அங்கு செல்லுகிறது –
கண்ணின் பட்டினி தீராதாகில் செவியின் பட்டினி யாகிலும் தீர்க்கலாகாதோ –
(சீதை என்ன சொன்னாள் அங்கு பெருமாள் கேட்டார் -இவர்களுக்கு இவள் வார்த்தை கேட்க பிரார்தனை )

நீங்கள் பழி இடுகிறது என் -இங்கு அவன் உண்டோ என்ன
வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி –
மாளிகைச் சாந்து உன்னால் ஒளிக்கப் போமோ
அந்தியம் போதே வாசலைக் கைக் கொண்டீர்கள் -அவனுக்கு புகுர வழி யுண்டோ -என்ன

நாராயணன் –
அவனுக்கு எங்களை போலே கதவு திறக்கப் பார்க்க வேணுமோ –
புறப்படுகைக்கு வழி தேடும் அத்தனை அன்றோ

நம்மால்-
வெறுமையே பச்சையாக யுடைய நம்மால்

போற்றப்
குடிப் பிறப்பால் வந்தது –
உபாயம் அல்ல

பறை தரும்
இப்படி பெரியவன் நமக்குப் பறை தருமோ என்னில் –
நாராயணன் அன்றோ பறை தரும் -என்றுமாம்

புண்ணியனால்
கிருஷ்ணம் தர்மம் சநாதநம்

புண்ணியனால் பண்டொருநாள்
*ராமோ விக்ரஹவான் தர்ம )
முன்பும் உன்னைப் போலே ஒருத்தன் உண்டு காண் -உணராதே படுத்தினான் என்கை –

புண்ணியனால் கூற்றத்தின் வாய் வீழ்ந்த
கொடுவினைப் படைகள் வல்லையாய்-(9-2-10)
ததோ ராமோ மஹா தேஜா -என்று
நீரிலே நெருப்பு எழுந்தால் போலே சீறுகைக்கு உள்ள அருமை
(அந்த ராமனுக்கு அது வரை கோபம் வரவில்லை -திருவடி அடி பட்டவாறே கோப வஸ்யம் ஆனார் )

கும்பகர்ணனும்
பிராட்டியைப் பிரித்த ராஜ துரோகியோடே கூட்டுகிறார்கள்
அவன் ஒருத்தியைப் பிரித்து வைத்து உறங்கினான் –
நீ ஊராக பிரித்து வைத்து உறங்குகிறாய்

தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஸ்ரீ பரசுராமன் கையில் வில்லை சக்கரவர்த்தி திருமகன் வென்று வாங்கினால் போலே
கும்ப கர்ணன் நித்திரையை வென்று வாங்கிக் கொண்டாயோ –
(தேவர்கள் இல்லாமை -நிர்த் தேவத்வம் –கேட்க வந்தவன் -நிர்த்தார்த்தம் தப்பாக -கேட்டு தூக்கம் வரம் பெற்றான் )

ஆற்ற வனந்தல் உடையாய் –
இனி கிடங்கில் த்ரோஹிகள் ஆவுதோம்-என்று அஞ்சிப் புறப்பட்டு முகம் காட்டுவோம்
என்று உணர்ந்தபடி தெரிய
கிருஷ்ண கிருஷ்ண -என்றாள்-
நீ உணரும்படி கண்டு வாழ அமையாதா-

அருங்கலமே-
இனித் தெளிவு கண்டு அனுபவிக்க வேணும் –
ஹாரத்தைப் பண்ணினால் -அதுக்கு கல் அழுத்த வேண்டாவோ –
இக் கோஷ்ட்டியை சநாதம் ஆக்காய்-என்றவாறே பதறிப் புறப்படப் புக

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-
மேலில் நிலங்களில் நின்றும் தடுமாறி விழாதே தெளிந்து திற
சா ப்ரஸ்கலந்தீ –இத்யாதி வத்
(தாரை பரபரத்து வந்தாளே )

—————————–

(தேக யாத்திரை வேறே ஆத்ம யாத்திரை வேறே -அறிந்து –
தேக யாத்திரையும் பெருமாளை சார்ந்தே ஆழ்வார்களுக்கு –
அவனாலே இதற்காகவும் நிர்வஹிக்கப்படுகிறோம் என்ற எண்ணமும் வேண்டுமே –
வாழ்க்கைப்பட்டாள் -என்றாலே இதுவே -ஆத்மாக்கள் அனைவரும் பெண் பிராயர் தானே -)

(கீழேயும் அனந்தல் -இங்கும் ஆற்ற அனந்தல் -வாழும் சோம்பர் -நிஸ் சிந்தையாய் -மார்பில் கை வைத்து உறங்குவது
ஆனந்தம் ப்ரஹ்மண வித்வான் -அறிந்து அடைகிறான் -ஸ்வ கத ஸ்வீ காரம்
ஏஷ ஹ்யேவா -ஆனந்தம் ஊட்டுகிறான் -நாம் அனுபவிக்கிறோம் -அவனே கைக்கொள்ள்ளும் பாசுரம் இது-
பரதன் குகன் போல் இரண்டும்
வந்து உன் மனம் புகுந்தேன் -திருக்கமல பாதம் வந்து போல் இது –
அடியார் குழாங்கள் உடன் கூட அன்றோ அனுபவித்தால் அன்றோ சிறக்கும் –
எம்பெருமானார் போல் அனைத்து உலகும் வாழ அன்றோ இருக்க வேண்டும்
பறை அந்தரங்க கைங்கர்யமாகிய புருஷார்த்தம் -புண்ணியனால்-கிருஷ்ணன் தர்மம் ஸநாதனம் -உபாய உபேயம் இவனே -)

——

நாலாயிரப்படி -அவதாரிகை –
கிருஷ்ணனுக்கு அசலகமாய் (பக்கத்து வீடு )இடைச்சுவர் தள்ளிப் பொகட்டு ஒரு போகியாக
அனுபவிக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஆற்ற வனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-10-

நோற்றுச் –
நோற்கக் கடவ நோன்பும் இவ்விரவிலே நோற்று நோன்பின் பலமான கிருஷ்ணனாகிற
ஸ்வர்க்கமும் உன் கை புகுந்தது ஆகாதே செல்லுகிறது
கிருஷ்ணன் தர்மம் சநாதநம் -என்னுமா போலே
ஆபாச தர்மங்கள் இவளுக்கு அஞ்சிக் கைவிட்டது அத்தனை இறே
இவளுக்கு சாதனமான தர்மம் எம்பெருமானே இறே -(இவள் பரித்யஜிக்க வெண்டாதே ஸாஷாத் தர்மம் கை புகுந்தவள் )

(கிருஷ்ணனை அனுபவிக்கும் ஸூகம் என்று கூடச் சொல்லாமல் -கிருஷ்ணன் வேறே ஸூகம் வேறே என்று எண்ணாதவர்கள்

கோல மலர்ப்பாவைக்கு அன்பாவியா என் அன்பேயோ குணம் குணி வேறுபாடு இல்லையே)

சாதன அனுஷ்டானம் பண்ணாதே இவனே உபாயம் என்று அறுதியிட்டால் பலத்தில் அந்வயிக்கும் அத்தனை இறே
1-அவனுடைய ஸ்வரூபம் (ஸ்வாமித்வம் )உணர்ந்தார்க்கு யத்னம் பண்ண பிராப்தி இல்லை –
2-தன் ஸ்வரூபம் (பாரதந்தர்யம் )உணர்ந்தாருக்கும் யத்னம் பண்ண பிராப்தி இல்லை
3-விரோதிகளுடைய பாஹுல்யத்தை (இரு வல் வினைகள் ) உணர்ந்தாருக்கும் யத்னம் பண்ண பிராப்தி இல்லை-
4-ப்ராப்தியினுடைய சீர்மையை உணர்ந்தார்க்கும் யத்னம் பண்ண பிராப்தி இல்லை
5-இதர உபாயங்களுக்கும் அவனே வேண்டுகையாலே யத்னம் பண்ண பிராப்தி இல்லை என்று இருந்தாள்

(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூச
1-ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மா ஸூச
2-மாம் ஏகம் வ்ரஜ மா ஸூச
3-அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூச)

விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்த்வதோ யே தேஷாம் ராஜந் சர்வ யஞ்ஞாஸ் ஸமாப்த்தா -(ஸர்வே வேதா  -யஜ்ஜம் ஹோம குண்டம்-எல்லாம் கண்ணனே -அறிந்தவன் அனைத்தையும் செய்தவன் ஆகிறான் )
செய்த வேள்வியர் –
யே ச வேத விதோ விப்ரா -கிருஷ்ணம் தர்மம் ஸநாதனம் –
யோ மாம் அபி ஜானாதி ச சர்வவித் பஜதி மாம் சர்வ பாவேந பாரத(கீதை )
க்ருத க்ருத்யா -ப்ரதீ ஷந்தே(மிருத்யுவை பிரியமனான அதிதியாக பார்ப்பான் -இதிஹாச சமுச்சயம் )
ரஷ்ய ரஷக பாவம் வியவசிதமானால் ஞானமே இறே வேண்டுவது

(எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5-)

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கிறபடியே அவன் தலையிலே பாரத்தைப் பொகட்டோமாகில் –
நமக்கு நீரிலே புக்கு முழுக வேணுமோ -என்று இருக்கிறாள் இவள் -(நிர்ப்பரோ நிர்பயோஸ்மி )

இவர்களுக்கு உபாயம் என்கிற சப்தத்தைக் கொண்டு உஜ்ஜீவிக்கலாமோ
உபேயத்துக்கு அன்றோ உபாயம் -சித்த உபாய நிஷ்டர்க்கு விளம்ப ஹேது இல்லாமையால்
ப்ராப்யத்தில் த்வரை இல்லாதார் சேதனர் என்று இருக்கிறார்கள் அல்லர் –

சித்த உபாய நிஷ்டர்க்கு கர்மம் கைங்கர்யத்தில் புக்குப் போம் –

ஞானம் ஸ்வரூபத்திலே புக்குப் போம் –
பக்தி ப்ராப்ய ருசியில் புக்குப் போம்

பேசாதே இருக்க உபாயம் உண்டோ –
சிலர் முழுகி நோற்கவும் சிலர் பலம் அனுபவிப்பதாயேயாய் இருப்பது –
அழகியதாய் இருந்தது உன்படி -என்கிறார்கள்

அவர்கள் கிருஷணனோடு பலம் புக்கு இருக்கிலும்
இக் கோஷ்ட்டியில் உள்ளார்க்குத் தனியே அனுபவிக்கை கைவல்யத்தோபாதி குடிப் பழி –

(குரு பரம்பரையை முன்னிட்டு சொல்லாத த்வயம் கூட மந்த்ராந்தங்களுக்கு சமம் ஆகுமே)

அம்மனாய் –
ரஷ்ய ரஷக பாவம் மாறி நிற்கவோ பார்க்கிறது -அழகிதாக நிர்வாஹகையானாய்

(இதே போல் இது தான் பாகவதருக்கு இரண்டாவது முக்கிய கர்தவ்யம்)

சுவர்க்கம் புகுகின்ற
ஸூகம் அனுபவிக்கை -யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்க –(சீதாபிராட்டி பெருமாள் இடம் சுவர்க்கம் நரகம் விளக்கியது-கச்ச ராம மயா சஹா )
நிர்வாஹகையாய் இருப்பார்க்குக் கண்ணுறங்க விரகுண்டோ
அனுபவிப்பார் அனுபவிப்பது இடையும் முலையும் ஒழியவோ-

(“யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ்த்வயா விநா”
(உன்னுடன் கூடி யிருத்தல் – சுவர்க்கம்; உன்னைப் பிரிந்திருத்தல் – நரகம்) என்ற ஸ்ரீராமாயணம்)

இவர்கள் பேச்சைக் கேட்டு ஈடுபட்டுப் பேசாதே கிடந்தாள்
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் –பழி இடுவதே என்று பேசாதே கிடந்தாள் ஆகவுமாம் –

இவர்கள் பொறுக்க மாட்டாமை -பாடு ஆற்றாமை
மாற்றமும் தாராரோ –
என்கிறார்கள் -ஏதேனும் ஒருபடியால் இவள் பேச்சே அமையும் இவர்களுக்கு
படுகொலை யடித்தால் நாக்கு நனைக்கத் துளி தண்ணீர் இடவும் ஆகாதோ
வாசலைச் செம்பினால் வாயையும் செம்ம வேணுமோ

துளம்படு முறுவல் -இவர்கள் ஜீவனம் –
ஆசயா யதி வா ராம புநஸ் சப்தா பயேதி தி -(சுமந்திரன் பெருமாள் வார்த்தை சொல்லுவார் என்று காத்து இருந்தா)
இவர்களுக்குப் புகுருங்கோள்-என்னவுமாம் –
போங்கோள் என்னவுமாம் –

(துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள் துணைமுலை சாந்துகொண் டணியாள்,
குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள் கோலநன் மலர்க்குழற் கணியாள்,
வளம்படு முந்நீர் வையமுன் னளந்த, மாலென்னும் மாலின மொழியாள்,
இளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.2-7-)

தர்மபுத்ரன் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் என் புகுகிறதோ என்று அஞ்சின அளவிலே யுத்த மத்யத்திலே –
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வனியைக் கேட்டு தரித்தால் போலே இவர்களுக்கு இவள் பேச்சு-
உடம்பை கிருஷ்ணனுக்குக் கொடுத்தால் பேச்சாகிலும் தரலாகாதோ

மதுரா மதுரா லாபா(தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள்)
நீயும் அவனும் வாழ்ந்து எங்களுக்குப் பரிவட்டம் தருகிறபடியோ இது
நாங்கள் செய்தபடி செய்ய உன் ப்ரீதிக்குப் போக்குவிட்டு தரிக்க வேண்டாவோ
ஸூ க மாஸ்ஸ்வ
ரமஸ்வ ச(சுமந்திரன் பெருமாளை சக்ரவர்த்தி கூப்பிட சென்ற பொழுது சீதாப்பிராட்டிக்குப் பெருமாள் சொல்லிப் போன வார்த்தை )
கண்ணின் பட்டினி தீராதாகில் செவியின் பட்டினி யாகிலும் தீர்க்கலாகாதோ –

நீங்கள் பழி இடுகிறது என் -இங்கு அவன் உண்டோ என்ன
நாற்றத் துழாய் முடி –
உன்னைப் போலே புறப்படாத தத்துவமோ அவன் சூடின தத்வம்
விரை குழுவு நறும் துளவம்
மாளிகைச் சாந்து உன்னால் ஒளிக்கப் போமோ -என்ன –
அந்தியம் போதே வாசலைக் கைக் கொண்டீர்கள் -அவனுக்கு புகுர வழி யுண்டோ -என்ன

(குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென் நாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடிமேல்
விரை குழுவு நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே-10-6-7-)

நாராயணன் –
அவனுக்கு எங்களை போலே கதவு திறக்கப் பார்க்க வேணுமோ–
புகுகிற வழி தேட வேணுமோ -புறப்படுகைக்கு வழி தேடும் அத்தனை அன்றோ(அனைவர் உள்ளும் அவனே இருக்க அத்வேஷம் செய்து தள்ளப் பார்க்கிறோம் அன்றோ )
விடாதார்க்குப் பேர் அன்றோ இது(நாரங்களுக்கு எல்லாம் உள்ளே இருப்பதால் தானே நாராயணனன் பெயர் பெற்றான் )-

யுகாவாதாரையும் விடாதவன் உகந்த உன்னை விடுமோ -நீ விலக்கிடாய்
பதிம் விஸ்வஸ்ய  ஆத்மேஸ்வர -என்று அவன் அழகிதாகப் பொதுவாய் இருந்தான் –
நாராயண தத்துவத்துக்கு இன்று தொடங்கி நமஸ்காரம்(குத்தல் பேச்சு )
கௌசல்யா லோக பர்த்தாரம்-
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று துணிந்தார்க்கு இப்படியோ-
ரக்ஷகனாக வேண்டாவோ -பறை தரும் என்று க்ஷேபம்

நம்மால்-
வெறுமையே பச்சையாக யுடைய நம்மால்

போற்றப்
குடிப் பிறப்பால் வந்தது(வழி வழி ஆட் செய்கின்றோம் )-உபாயம் அல்ல

பறை தரும்
இப்படி பெரியவன் நமக்குப் பறை தருமோ என்னில் –
நாராயணன் அன்றோ -போற்றாதார் பாடும் புக்கு இருக்கிறவன் அன்றோ -தரும் என்னவுமாம்

புண்ணியனால்
கிருஷ்ணம் தர்மம் சநாதநம் –
புண்ணியன் ஆகையாவது –
சர்வ விஷயத்திலும் தண்ணீர் போலே பொதுவாய் இருக்கை யாயத்து –

உன் படிகள் அழகிதாய் இருந்தது -என்ன –
பின்னையும் அவன் பாசுரமாக ஓன்று பிறக்கக் காணாமையாலே (இவனும் உள்ளே இருக்க -விண்ணோர்களை எழுப்பிய பின்பு தானே இவர்கள் என்னிடம் வர வேண்டும் என்று இவனும் பேசாமல் இருந்தானே )அவனை விட்டு

இவள் நம்மில் ஒருத்தியாய் (பிராட்டியாரும் உபேயத்தில் அவனை அனுபவிக்க நம்முடன் சேருவாளே )ஓக்க நோன்பு நோற்று ஓக்க அனுபவிக்க இருந்து
நம் திறத்தில் செய்தபடி செல்லாதே மாற்றாராய்ச் செல்வதே -என்று அவளைத் திரிய எழுப்ப

திரியவும் நம்மைப் பிரித்தார்கள் ஆகில் நாம் பேசாதே கிடப்போம் என்று   அவள் வாய் திறவாதே கிடக்க
உறக்கத்துக்குக் கும்ப கர்ணனையும் ஜெயித்ததாய் இருந்ததீ -என்கிறார்கள் –

நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன்
இடைப் பெண்களும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –
இவர்கள் (ஆர்த்திகள்)-அர்த்திகள்- ஆகையாவது போற்றுகை போலே

(போற்றுதலே அர்த்தித்தல் -உபாயம் அல்ல -புருஷனால் அர்த்தித்தே -வேண்டியே -பெறுவது தானே புருஷார்த்தம் –
அறிவித்தல் பசி உள்ளது என்று காட்டுமா போல் அதிகாரி ஸ்வரூபம்)

புண்ணியனால் பண்டொருநாள் கூட்டத்தின் வாய் வீழ்ந்த
எல்லாரும் தண்ணீர் குடித்து உஜ்ஜீவிக்கிற ஏரியிலே கல்லைக் கட்டிக் கொண்டு வீழ்ந்து சாவாரைப் போலேயும் –
விளக்கு வீட்டில் போலேயும் சாவுகை

பண்டு ஒரு நாள் –
முன்பும் உன்னைப் போலே ஒருத்தன் உண்டு காண் -உணராதே படுத்தினான் என்கை –

(விழித்து இருக்காமல் தூங்கிக் கொண்டே படுத்தினான்
இவளும் பாகவத சமாஹம் தான் ப்ராப்யம் என்று உணராமல் படுத்துகிறாள் )

புண்ணியனால் கூற்றத்தின் வாய் வீழ்ந்த –
கொடுவினைப் படைகள் வல்லையாய்-
ததோ ராமோ மஹா தேஜா –கோஸ்ய வசமே -என்று நீரிலே நெருப்பு எழுந்தால் போலே சீறுகைக்கு உள்ள அருமை

(கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-)

(நீர் நெருப்பு -புண்ணியன் கூற்றம் -பெருமாள் கோபம் -சேராச் சேர்க்கைகள்)

கும்பகர்ணனும்
பிராட்டியைப் பிரித்த ராஜ துரோகியோடே கூட்டுகிறார்கள்
அவன் ஒருத்தியைப் பிரித்து வைத்து உறங்கினான் -நீ ஊராக பிரித்து வைத்து உறங்குகிறாய்
தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ

(எங்களைப் பிரித்து கிருஷ்ண அனுபவம் செய்தது கும்பகர்ணனுடன் ஒக்குமே
ஒருத்தியை பிரித்தான் அவன் -நீயோ எங்கள் அனைவரையும் பிரித்தாயே)

ஸ்ரீ பரசுராமன் கையில் வில்லை சக்கரவர்த்தி திருமகன் வென்று வாங்கினால் போலே
கும்ப கர்ணன் நித்திரையை வென்று வாங்கிக் கொண்டாயோ –

ஆற்ற வனந்தல் உடையாய் –
இனி கிடக்கில் த்ரோஹிகள் ஆவுதோம்-என்று அஞ்சிப் புறப்பட்டு முகம் காட்டுவோம் என்று உணர்ந்தபடி தெரிய
கிருஷ்ண கிருஷ்ண -என்றாள்-

எங்களுக்கு அங்கே போய்த் துயில் எழப் பாட வேணுமோ
நீ உணரும்படி கண்டு வாழ அமையாதா-

அருங்கலமே-
இனித் தெளிவு கண்டு அனுபவிக்க வேணும் -ஹாரத்தைப் பண்ணினால் -அதுக்கு கல் அழுத்த வேண்டாவோ –
இக் கோஷ்ட்டியை சநாதம் ஆக்காய்-என்றவாறே பதறிப் புறப்படப் புக

(இது தானே பாகவதர்களை எழுப்புவதில் நடுப் பாட்டு -கீழ் நான்கும் மேல் ஐந்தும் உண்டே)

(1-பிள்ளாய் –2-பேய்ப் பெண்ணே -(நாயகப் பெண் பிள்ளாய்)3-கோது கலமுடைய பாவாய் –4-மாமான் மகளே –
5-(ஆற்ற அனந்தல் யுடையாய் )அரும் கலமே-இப் பெண் பிள்ளை
6-புன மயிலே –7-நற் செல்வன் தங்காய் –8-போதரிக் கண்ணினாய் -(பாவாய் )- 9-(நங்காய் ) (நாணாதாய்) நாவுடையாய் 10-இளங்கிளியே )

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-
மேலில் நிலங்களில் நின்றும் தடுமாறி-தள்ளம் பாறி – விழாதே தெளிந்து திற –
ஊராகத் திரண்டு வந்து கிடக்கிறது -படுக்கையிலே கிடந்தபடியே வராதே -சதஸ்யை யாய்த் திற -என்றுமாம் –

அரும் கலமே
எம்பெருமானாரைப் போலே -(குரு பரம்பரை ஹார நாயக ரத்னம் அன்றோ )
மஹாதா தபஸா (பெரும் தவம் புரிந்து கௌசல்யை ராமனைப் பெற்றாள் )-(அவ்வாறு பெரும் தவத்தினால் )பெறலாமவள் அல்லள்-
தானே தன்னைப் பெறுமத்தனை-ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளைப் போலே (சீதா லங்கனா உத்பவ –கோதா துளஸீ கான உத்பவ போல்)

(அமுநா தபந அதிசாயி பூம் நா
யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி
விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி-ஸ்ரீ யதிராஜ சப்ததி-15-)

தேற்றம்
சா ப்ரஸ்கலந்தீ –இத்யாதி வத்-

(ப்ரஹர் ஷேணா வருத்தா சா வ்யாஜஹார ந கிஞ்சன … சா ப்ரஸ்கலந்தீ –இத்யாதிப்படியே
ஸ்ரீ இளைய பெருமாள் திரு உள்ளத்தில் சிவிட்கு ஆறும் படி
வார்த்தைகள் விண்ணப்பம் செய்த தாரை போல் இல்லாமல்)

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -தூ மணி மாடத்து– ஸ்ரீ திரு நாராயண புரத்து ஸ்ரீ ஆய் -என்னும் ஸ்ரீ ஜனன்யாச்சார்யார் ஸ்வாமிகள் -வியாக்யானங்கள் —

October 27, 2017

ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்சன” (தைத்ரீய உபநிஷத் 2:4:1) –
தூ மணி -நாம் சரணாகதி செய்து அவன் ஆனந்த மயன் என்று அறிகிறோம்
ஏஷ ஹ்யா -அவனே நம்மைப் பற்றி ஆனந்தம் ஊட்டுவது அடுத்த பாசுரம் –

ஈராயிரப்படி -அவதாரிகை
கீழில் பாட்டில் முக்தர் படி போலே இருப்பாள் ஒருத்தியை எழுப்பிற்று –
இப் பாட்டில் நித்ய முக்தர் படியே இருப்பார் ஒருத்தியை எழுப்புகிறது –
தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும்
இட்ட விடத்தே இருக்கும் ஸ்ரீ பரத ஆழ்வானையும் போலே –
(கோது காலமுடைய பாவாயுக்கும் மாமன் மகளுக்கும் வாசி
நிவ்ருத்தி மார்க்கம் இவளது )

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ
ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-9-

பதவுரை

தூ மணி மாடத்து–பரிசுத்தமான மாணிக்கங்கள் அழுத்திச் சமைத்த மாளிகையில்
சுற்றும்–நாற் புறமும்
விளக்கு எரிய–விளக்குகள் எரியவும்
தூபம் கமழ–(அகில் முதலியவற்றின்) வாசனைப் புகைகள் மணம் வீசவும்,
துயில் அணை மேல் கண் வளரும்–மென்மையான படுக்கையின் மீது நித்திரை செய்யா நின்ற,
மாமான் மகளே–அம்மான் பெண்ணே!
மணி கதவம்–மாணிக்கக் கதவினுடைய
தாள்–தாழ்ப்பாளை
திறவாய்–திறந்திடுவாயாக,
மாமீர்–அம்மாமீ!
அவளை–(உள்ளே உறங்குகிற) உன் மகளை
எழுப்பீரோ–எழுப்ப மாட்டீரோ?
உன் மகள்;–உன் மகளானவள்
ஊமையோ–வாய்ப் புலன் இல்லாதவளோ?
அன்றி–அல்லாமற் போனால்
செவிடோ–செவிப் புலன் இல்லாதவனோ? (அன்றி)
அனந்தலோ–பேருறக்க முடையவளாயிருக்கின்றாளோ? (அன்றி)
பெரு துயில்-பெரிய படுக்கையில்
ஏமப்பட்டாளோ–காவலிடப்பட்டாளோ? (அன்றி)
மந்திரம்பட்டாளோ–மந்திர வாதத்தினால் கட்டுப் படுத்தப் பட்டானோ?
மா மாயன்–‘அளவிறந்த ஆச்சரியச் செய்கைகளை யுடையவனே!’
மாதவன்–‘திருமகள் கேழ்வனே!’
வைகுந்தன்–‘ஸ்ரீ வைகுண்டநாதனே!’
என்று என்று–என்று பலகால் சொல்லி
நாமம் பலவும்–(எம்பெருமானுடைய) திரு நாமங்கள் பலவற்றையும்
நவின்று–(வாயாரக்) கற்றோம்;-நவின்று மாமீர் நீர் இவளை எழுப்பு என்றுமாம்
(இனியாகிலும் உன் மகள் உணரலாகாதா?)
ஏல் ஓர் எம் பாவாய்!

தூ மணி மாடத்து -தூய்மையான ரத்னங்களால் -சமைக்கப் பட்ட
ஏமப் பட்டாளோ-காவல் உண்டோ
மந்தரப் பட்டாளோ–
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று–
ஸுலப்ய -ஸ்ரீயப்பதித்தவ பரத்வ-சஹஸ்ர நாமங்கள்

தூ மணி மாடம்
துவளில் மா மணி மாடம்-(6-5-1-) -என்று
குந்தமுண்டாய் (குற்றமுண்டாய்) எடுத்துக் கழிக்க வேண்டாதே
எல்லா நன்மையுமுடைய மணிகளால் செய்த மாடம்
அது முக்தனுடைய அபஹத பாப்மத்வாதிகள் போலே –
இது அவனுடைய அபஹத பாப்மாத்வாதிகள் போலே –
திருத் தொலை வில்லி மங்கலத்துக்கு கழித்தவை கொண்டு செய்தது –
அந்தப்புரத்துக்கு நல்லது இட்டுச் செய்து அங்கு கழிந்தது இறே தந்தாமுக்கு மாளிகை செய்வது

சுற்றும் விளக்கெரியத்
தானுறுமாகில் நோற்று வருகிறான் -என்று இருக்கிறவள் இவள் –
மாணிக்கக் குப்பி போலே புறம்பே நிற்க உள்ளுள்ளது எல்லாம் தோற்றா நின்றது என்கை
ப்ரகாசத்துக்கு பிரகாசம் வேண்டாமையாலே விளக்கு மங்களார்த்தம்
புறம்புள்ள விளக்குகள் புகையா நிற்க என்றுமாம் –

தூபம் கமழத்
பரிமளம் ஸஹ்யமான படி எங்கனே தான் இவளுக்கு –
சீருற்ற வகில் புகை -(மாலைப்பூசல் மல்லிகை கமழ் -9-9-7)-இத்யாதிப்படியே இறே அவர்களுக்குச் செல்லுகிறது
புகை யுள்ளிட்டன வன்றிக்கே கந்தமே கமழ (சீர் உற்ற என்றதும் விளக்கம் )

துயில் அணை மேல்
மென் மலர்ப் பள்ளி வெம்பள்ளியாய் இறே (9-9-4-) இவர்களுக்கு இருக்கிறது –
இருவருக்குப் படுத்த படுக்கையிலே ஒருவருக்கு படுக்க -உறங்கப் -போமோ

கண் வளரும்
இளைய பெருமாளை போலே உறங்காமைக்குத் தாங்களும்
உறங்குகைக்கும் நீயுமாயிற்றே -என்கிறார்கள்

கண் வளரும்
இங்கனே யாகாதே ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுவது
படுத்த பைந்நாகணை இத்யாதிப்படியே (திருப்பல்லாண்டு -9-) தமப்பனார் பகவத் விஷயத்தில் சொல்லுவது எல்லாம்
ததீய விஷயத்திலே சொல்லுகிறாள் ( இவர்களும் மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் )

மாமன் மகளே –
இட்டீடு கொள்ளுகைக்கு விட ஒண்ணாத உறவை சம்பாதிக்கிறான்
(அகஸ்ய ப்ராதர் போல் -பேர் சொல்ல வேண்டாம் )

மணிக் கதவம் -தாள் திறவாய்-
எங்களுக்கு கதவும் சுவரும் தெரிகிறது இல்லை –
நீயே திற -என்கிறார்கள்
தேசிகர்க்கு அல்லது தாள் திறக்கத் தெரியாது என்கை
(ஆச்சார்யர் வழி காட்ட அன்றோ -அர்ச்சகர் மூலமாகவே கர்ப்ப க்ரஹம் செல்கிறோம் )

மாமீர்
அடியார் தம் அடியார் (3-7)
தொண்டர் தொண்டர் (7-1 )-என்று ஆழ்வாருடைய பாகவத சேஷத்வத்தில் எல்லை போலே
இவர்களும் இவளுடைய திருத் தாயாரான இவளை உறவாகச் சொல்லி தரிக்கிறார்கள்

அவளை எழுப்பீரோ
நீராகிலும் அவளை எழுப்பீரோ என்கிறார்கள் –
அவளை இவர்களுக்குத் தோற்றமோ என்னில் மாளிகையிலே தெளிவாலே தோற்றும்
தாயார் பாவஞ்ஜை யாகையாலே எழுப்பாள் -ஆகையால்

உன் மகள் தான்-ஊமையோ -என்கிறார்கள்

அன்றிக்கே
அன்றிச் செவிடோ
நாங்கள் சொன்ன வார்த்தை கேளாதபடி அந்நிய பரையானாளோ

வனந்தலோ
இரவு எல்லாம் கிருஷ்ணனுக்கு ஆடல் கொடுத்து இப்போதோ உறங்குகிறது

ஏமப் பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
ஆர்த்த நாதம் கேளாதபடி காவலிட்டுக் கொண்டு உணராதபடி உறங்குகைக்கு யாரேனும் மந்தரித்தார் உளரோ –
மந்த்ரம் இவளுக்கு பிரசித்தம் இறே
(ரஹஸ்ய த்ரயங்கள் -நமஸ் சபிதார்த்தம் அறிந்தவள் )
உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ (நாச்சியார் )-என்று மாயப்பொடி தூவினார் உண்டோ -என்கை

மா மாயன்
பெண்களுக்கு காணாச் சிறையாய்க் கிடக்குமவன்
(அடக்கமாய் -இஷ்ட விநியோக அர்ஹனாய் இருப்பானே )

மாதவன்
அதுக்கு குருகுல வாசம் பண்ணினவிடம்

வைகுந்தன்
பெண்களோடு ஓக்க ஆண்களை அடிமை கொள்ளுமவன்

என்றென்று-நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்–
மேன்மைக்கும் நீர்மைக்கும் ஏகாந்தமான திரு நாமங்களை அநேகம் சொன்னோம் -என்கிறார்கள்

நாமம் பலவும் நவின்று மாமீர் அவளை எழுப்பீரோ -என்று கிரியை யாகவுமாம் –
(மடக்கிளியை கை கூப்பி வணங்கினாள் -திரு நாமம் சொல்லி எழுப்பலாம் –
பாடி மாமீர் அவளை எழுப்பீரோ என்றபடி )

—————————————————–

(ஞானம் இடக்கை வலக்கை அறியாதவர்கள்
கர்மம் -கார்த்திகை கார்த்திகை மற்றும் குளிப்பார்கள்
ஆகவே கர்ம ஞான பக்தி இல்லாதவர்கள்
ஆனால் விசேஷ பகவத் அபிமானம் பெற்றவர்கள் -அனுபவத்துக்கு வேண்டிய ருசி மிக்கவர்கள் –
பெறுவதற்குத் தகுதியை விட அனுபவத்துக்கு அதிகாரம் வேண்டுமே -)

(தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயநாயா

அநந்ய சாத்யே-வேறே ஒன்றால் கிடைக்க மாட்டானே -அவனே அவனைத் தந்து அனுபவிக்கிறான்
துடிப்பு வேண்டுமே அனுபவிக்க
சித்த உபாயத்திலும் கைங்கர்யத்திலும் இரண்டு வகை என்பதை -8-9-10-மூன்றும் ஒரு கோவை
ப்ராப்யத்தில் இரண்டு வகை 8-9-
ப்ராபகத்தில் இரண்டு வகை 9-10-
ஜ்ரும்பணாஸ்ரமம் அடிபட்டு வெளியில் -மோஹனாஸ்ரமத்தால் அடிபட்டு உள்ளே
சோம்பரை யுகத்தி போலும் -வாழும் சாம்பார்
கூட சென்று கைங்கர்யம் செய்ய துடிப்பு இளைய பெருமாளுக்கு
பிரிந்து இருந்தாலும் பெருமாள் திரு உள்ளம் உகப்புக்காக கைங்கர்யம் பரதன்
கோது காலமுடைய பாவாய் இளைய பெருமாளைப் போல் மாமன் மகள் பரதனைப் போல்
துடிப்பு லஷ்மணன் பரதன் இருவருக்கும் உண்டே –
ஸ்வ கத ஸ்வீகாரம் மாமன் மகள்
பர கத ஸ்வீ காரம் நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற பாவாய் -)

( ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்சன” (தைத்ரீய உபநிஷத் 2:4:1)
தூ மணி -நாம் சரணாகதி செய்து அவன் ஆனந்த மயன் என்று அறிகிறோம்
ஏஷ ஹ்யா -அவனே நம்மைப் பற்றி ஆனந்தம் ஊட்டுவது அடுத்த பாசுரம் –
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று-மூன்று ஸஹஸ்ர நாமங்கள்
லோக நாத மாதவ பக்த வத்ஸல போல் இவையும்
மேன்மை ஸ்ரீ யபதித்தவம் எளிமை
இங்கு மாமாயன்-எளிமை முதலில் சொல்லி மேன்மை இறுதியில் சொல்லி இவற்றுக்கு நிதானம் ஸ்ரீயப்பதித்வம்
மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை -இவையும் ஒரு மூன்று உண்டே-

நாங்கள் நவின்றோம் என்றும் நவின்று மாமீர் நீர் இவளை எழுப்பு என்றுமாம்

தஸ்மிந் த்ருஷ்டே பராவரே இரண்டும் உண்டே -அருளிச் செயல்களில் எளிமை ஸ்வா பாவிகம் -பரத்வம் வந்தேறி)

——

நாலாயிரப்படி-அவதாரிகை –
கீழில் பாட்டில் முக்தர் போல் இருப்பாள் ஒருத்தியை எழுப்பிற்று –
இப் பாட்டில் நித்யர் படியையும்
மைத்துனர் முறைமையையும் உடையாள் ஒருத்தியை எழுப்புகிறது

தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும்
இட்டிடத்தே கிடக்கும் ஸ்ரீ பரத ஆழ்வானையும் போலே இருவரும்

(புதிதாக வந்தவர்கள் பரபரப்பாக இருப்பார்கள்
அங்கேயே உள்ளார் ஆறி இருப்பார்கள் அன்றோ –
ஆகவே முக்தர் நித்யர் படி என்கிறார்-இருவரும் ப்ராப்யத்தில் அனுபவத்தில் இருவகை தானே )

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ
ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-9-

தூ மணி மாடம்
துவளில் மா மணி மாடம் -(6-5-1)என்று குந்தமுண்டாய் -குற்றமுண்டாய் -எடுத்துக் கழிக்க வெண்டாதே
எல்லா நன்மையுமுடைய மணிகளால் செய்த மாடம்
அது ஜீவாத்மாவினுடைய அபஹத பாப்மத்வாதிகள் போலே –
இது அவனுடைய அபஹத பாப்மாத்வாதிகள் போலே –

திருத் தொலை வில்லி மங்கலத்துக்கு கழித்தவை கொண்டு செய்தது-ரசிகராய் இருப்பார் –
அந்தப்புரத்துக்கு நல்லது இட்டுச் செய்து அங்கு கழிந்தது இறே தந்தாமுக்கு மாளிகை செய்வது
நிர்தோஷமாய் உள்ளது எல்லாம் தெரியும்படி இருக்கிற ரத்ன மயமான மாடத்திலே-

சுற்றும் விளக்கெரியத்
மாணிக்கங்கள் ஒளியாலே பகல் விளக்குப் பட்டிருக்கச் செய்தேயும் –
மங்களார்த்தமாக விளக்கு எரிகிறது

புறம்பே நிற்கிறவர்களுக்கு உள்ளுள்ளது எல்லாம் தெரியும்படி எங்கனே என்ன
மாணிக்கக் குப்பி போலே புறம்பே நிற்க உள்ளுள்ளது எல்லாம் தோற்றா நின்றது என்கை

(மாலே மணி வண்ணா -திரு உள்ளத்தில் கோபிகள் மேல் இவனது அபிநிவேசம் நீரோட்டம் போல் தெரியுமே)

சுற்றும்
என்கிறது -இதஸ் தத -கிருஷ்ணன் கையைப் பிடித்துக் கொண்டு உலாவும் இடம் எல்லாம் எரிகை

(தானாக நடந்து போகும் விளக்கு போல் -சேர்த்திக்கு மட்டும் விளக்கு -நடத்திப் போகும் நில விளக்கு -சர விளக்கு -தொங்கும் விளக்குகள் போல் அல்லவே இங்கு)

எரிய
என்கிறது -எங்கள் அகங்கள் இருட்டிக் கிடக்க இங்கு
விளக்கு எரிகிறது வெறுமனே அன்று -என்கை
புறம்புள்ள விளக்குகள் புகையா நிற்க உள்ளுள்ள விளக்கு எரியா நின்றது என்கை –

தூபம் கமழத்
உணர்ந்த போதைக்குக் கண்ணுக்கு இலக்கு அன்றியே
க்ராண இந்த்ரியத்தாலே அனுபவிக்கும்படி இருக்கிற புகை

கமழ
பரிமளம் ஸஹ்யமான படி எங்கனே தான் இவளுக்கு –
சீருற்ற வகில் புகை -இத்யாதிப்படியே இறே அவர்களுக்குச் செல்லுகிறது

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப் புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-மாலைப்பூசல்

கமழ
புகை யுள்ளிட்டன வன்றிக்கே கந்தமே கமழ –

துயில் அணை மேல்
கிருஷ்ண விரஹத்தையும் மாற்றவற்றான படுக்கையிலே –
கிருஷ்ணன் வரிலும் இடம் பொரும்படியான படுக்கை
மென் மலர்ப் பள்ளி வெம்புள்ளியாய் இறே இவர்களுக்கு இருக்கிறது –

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

இருவருக்குப் படுத்த படுக்கையிலே ஒருவருக்கு படுக்க -உறங்க -போமோ
ப்ரஹ்மசாரி படுக்கையில் உறங்க மாட்டார்களே

கண் வளரும்
இளைய பெருமாளைப் போலே உறங்காமைக்குத் தாங்களும் உறங்குகைக்கும் நீயுமாயிற்றே -என்கிறார்கள்-
ஆர் தொடை குத்த உறங்குகிறது –
அங்குத்தைக்குத் தங்கள் ஒலியல் கொண்டு பரிசர்யை (மேல் உத்தரீயம் விசிறி போல் பரிமாறுதல் )பண்ண ஆசைப்படுகிறார்கள்

கண் வளரும்
இங்கனே யாகாதே ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுவது
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு – இத்யாதிப்படியே தமப்பனார் பகவத் விஷயத்தில்
சொல்லுவது எல்லாம் ததீய விஷயத்திலே சொல்லுகிறாள்-

தொண்டனூர் நம்பி திருவடிச் சார்ந்தார் என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவர் அடிமை செய்து போந்த படியாலே
திரு நாட்டுக்கு நடந்தார் (திரு நாட்டை அலங்கரித்தார் )என்னுங்கோள் -என்றால் போலே
நஞ்சீயர் பிள்ளை ஏறு திருவுடையார் தாசரையும் அப்படியே அருளிச் செய்து அருளினார் –

மாமன் மகளே –
ஸ்வாமினியாயும்
தோழியாயும் அனுபவித்தது ஒழிய
இட்டீடு கொள்ளுகைக்கு விட ஒண்ணாத உறவை சம்பாதிக்கிறான்

பெரியாழ்வார் பெண் பிள்ளை திருவாய்ப்பாடியில் தனக்கு உஜ்ஜீவனமாக
ஒரு பிராகிருத சம்பந்தமும் உண்டாக்கிக் கொள்ளுகிறாள்

மாமான்
வைஷ்ணவர்களோடு எல்லா உறவும் ஸ்லாக்யமாய் இருக்கிறபடி
மாட மாளிகை சூழ் மதுரைப்பதி நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு (4-5)-என்று
ஸ்ரீ மதுரையிலே ஓர் உறவும் ஒரு மாளிகையும் சம்பாதித்தாள் இறே

அங்குத்தைக்கு உறவு ஸ்ரீ மாலா காரர் –
தானும் ஒரு மாலா காரர் மகள் இறே
கிருஷ்ண ராமவ் முதா யுக்தவ் மாலா கார க்ருஹம் கதவ்

(ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹவ் உபாகதவ் —மால்ய உப ஜீவன
-ஆகதவ் -உபாகதவ் -கேஹம் உபாகதவ் -ப்ரஸாதம் பரமவ் நாதவ் –
மாலாகார: க்ருபாகார: கோகிலஸ் வர பூஷண: I … மஹாதே’வி வஸேத்தஸ்ய க்ருஹே ஸதா)

மாமன் மகளே
தங்கள் சம்பந்தம் சொல்லாதே தங்கள் ப்ராதான்யத்தைச் சொல்லி இவளைச்  சேவிக்கிறார்கள் –
ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே சகேதி-என்னுமா போலே
அர்ஜுனனுக்கு கிருஷ்ணனோட்டை மைத்துனமை போலே இவர்களுக்கு மைத்துனமை

(ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம் –ஹே கரிஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி.–
அஜாநதா மஹிமாநம் தவேதம் -மயா ப்ரமாதாத் ப்ரணயேந வாபி–৷৷11.41৷৷-அபராத ஷாமணம்  -பண்ணுகிறான் )

அகப்படச் சொன்னவாறே உணர்ந்து -நீங்களே திறந்து புகுருங்கோள் என்ன
அது மாணிக்கக் கதவு காண் -அப்பியாசம் இல்லாதார்க்குத் தெரியாது காண் -என்று இவர்கள் சொல்ல

மணிக் கதவம் -தாள் திறவாய்-
துரியோதனன் நீருக்கும் பளிங்கு மண்டபத்துக்கு வாசி அறியாதே அகப்பட்டால் போலே அகப்பட ஒண்ணாது
எங்களைச் சிரிக்கவோ பார்க்கிறது –
எங்களுக்கு கதவும் சுவரும் தெரிகிறது இல்லை -நீயே திற -என்கிறார்கள்
தேசிகர்க்கு அல்லது தாள் திறக்கத் தெரியாது என்கை –

இப்படிச் சொல்லவும் இவள் பேசாதே கிடந்தவாறே
இவள் திருத் தாயார் இக்காலத்தில் (சிற்றம் சிறு காலை )வந்த பெண் பிள்ளைகளுக்கு
இவள் வாய் திறவாதே கிடப்பதே என்று நொந்தமை தோற்ற
அவள் உணர்ந்தமையை அறிந்த பெண் பிள்ளைகள்
மாமீர் அவளை எழுப்பீரோ
என்கிறார்கள் –

அடியார் தம் அடியார்
தொண்டர் தொண்டர் -என்று ஆழ்வாருடைய பாகவத சேஷத்வத்தில் எல்லை போலே
இவர்களும்-
ஒரு மாதுலனும் ஒரு மாமியாரும் -என்று –
சிற்றம் சிறு காலை  சம்பந்த சம்பந்தம் – சொல்லுகிறார்கள் –
அவள் தம் படி -அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்று இலள்-என்று பொகட்டுப் போவள் –

(அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால்
மின்னியும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து
புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ ?–3-7-7-கள்வன் கொல் பதிகம்-அணி ஆலி புகுவர் கொலோ )

(பிள்ளையைக் கை தொழும் -அடியேனாய் இருக்கும் என்னை )தாய் என்று பழியிட்டு போக வேணுமோ
அடியேனாய் இருக்கிற என்னை என்னும் திருமங்கை ஆழ்வாரை வெட்டிமையர் என்றும்
எம்பெருமானாரை கோயில் அண்ணன் என்றும் ஆண்டாள் அருளிச் செய்யும்(கூரத்தாழ்வான் தர்மபத்னி இவ்வாறே எம்பெருமானைக் கூப்பிட )
அத்தை எம்பெருமானார் கேட்டருளி நான் அடியேன் அல்லேனோ –
என்னை இப்படி அருளிச் செய்வதே -என்றால் போலே இத்திருவாய்ப்பாடியும்

(அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற அடியேனை அண்ணன் என்று உறவு கொண்டாடி தள்ளி வைப்பதே-நான் அடியேன் அல்லேனோ -என்னை இப்படி அருளிச் செய்வதே என்றால் போலே)

அவளை எழுப்பீரோ
இவர்கள் தன் வாசலிலே நின்று அழைத்து நோவுபட இவள் பேசாதே கிடப்பதே என்று இவள்
நெஞ்சில் கிடக்கிறது முகத்திலே தோற்றின படியைக் கண்டு
நீராகிலும் அவளை எழுப்பீரோ என்கிறார்கள் –

அவளை இவர்களுக்குத் தோற்றமோ என்னில் மாளிகையிலே தெளிவாலே தோற்றும்
தாயார் தான் எழுப்பினாலோ என்னில் பாவஞ்ஜை யாகையாலே எழுப்பாள் –
இவர்கள் ஆற்றாமைக்கு உணராத இவள் இவளுடைய ஆந்ரு சம்ஸ்யத்துக்கு உணருமோ
ஆர்த்த த்வனி கேளாதவள் மத்யஸ்தர் வார்த்தையோ கேட்கப் புகுகிறாள் -என்னவுமாம் –
பின்னையும் உணரக் காணாமையாலே
ஆகையால் சிவிட்கென்று

உன் மகள் தான்-ஊமையோ –
என்கிறார்கள் -வ்யவஹார யோக்யை அன்றோ என்றபடி

அன்றிக்கே
அன்றிச் செவிடோ
நாங்கள் சொன்ன வார்த்தை கேளாதபடி அந்நிய பரையானாளோ

வனந்தலோ
இரவு எல்லாம் கிருஷ்ணனுக்கு ஆடல் கொடுத்து இப்போதோ உறங்குகிறது

ஏமப் பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
ஆர்த்த நாதம் கேளாதபடி காவலிட்டுக் கொண்டு -உணராதபடி உறங்குகைக்கு யாரேனும் சவித்தார் உண்டோ
மந்த்ரம் இவளுக்கு பிரசித்தம் இறே
உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ-என்று மாயப் பொடி தூவினார் உண்டோ -என்கை

திருத் தாயார் நீங்கள் இவளை எழுப்பும்படி அறிந்திலிகோள் -திரு நாமத்தை சொல்லுங்கோள் உணரும்படி என்ன

(இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன்-தன்னை   இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்து ஆய்
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி  திசை நான்கும் ஆய் திங்கள் ஞாயிறு ஆகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே     -திரு நெடும் தாண்டகம்      (4)  )

(வண் துவாரபதி மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுது ஆடுமே போலேயும்
முளைக் கதிரை -கிளி பாட உணர்ந்தால் போலேயும்)

நாங்கள் சொல்லாத ஸ்ரீ சஹஸ்ர நாமம் உண்டோ என்கிறார்கள்

மா மாயன்
பெண்களுக்கு காணாச் சிறையாய்க் கிடக்குமவன்

மாதவன்
அதுக்கு குருகுல வாசம் பண்ணினவிடம் -லஷ்மீ பதி

(இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-குருகுல வாசம் பண்ணினவிடம் -லஷ்மீ பதி)

வைகுந்தன்
பெண்களோடு ஓக்க ஆண்களை அடிமை கொள்ளுமவன்-
அப் பெரிய மேன்மை யுடையனாய்
ஸ்ரீ யபதியாய் இருக்குமவன் கிடீர் பெண்களுக்கு எளியனாய் இருக்கிறான்

என்றென்று-நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்–
மேன்மைக்கு ஏகாந்தமான திரு நாமங்களை அநேகம் சொன்னோம்
நீர்மைக்கு ஏகாந்தமான திரு நாமங்களை அநேகம் சொன்னோம்
ஸ்ரீ யபதித்வத்துக்கும் ஏகாந்தமான திரு நாமங்களை அநேகம் சொன்னோம் -என்கிறார்கள்

எழுந்திராதாரை எங்களால் செய்யலாவது உண்டோ என்கிறார்கள்
உணராதாரை நீரைச் சொரிந்து உணர்த்துங்கோள் என்னுமா போலே

நாமம் பலவும் நவின்று மாமீர் அவளை எழுப்பீரோ -என்று கிரியை யாகவுமாம் –

(நவின்று -நவின்றோம் ஆனாலும் எழுந்து இருக்க வில்லை -என்றும்
நீர் நவின்று எழுப்பப் பாரும் என்றுமாம் –
ஓம் நமோ நாராயணாய–என்றதின் பின் – பவேத்- ஸ்யாம்-என்று கொண்டு அர்த்தம் கொள்ளுகிறோம் இது மந்த்ரம் ஆகையால்)

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -கீழ்வானம் வெள்ளென்று– திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள் —

October 26, 2017

ஈராயிரப்படி -அவதாரிகை –
பின்னையும் ஒரு பெண் பிள்ளை வாசலிலே சென்று எழுப்புகிறார்கள் –

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்து -உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-8-

பதவுரை

கோதுகலம் உடைய பாவாய்–கிருஷ்ணனாலே மிகவும் விரும்பத் தக்க பதுமை போன்றவளே!
கீழ் வானம்–கீழ் திசைப் பக்கத்து ஆகாசமானது
வெள்ளென்று–வெளுத்தது ;
(அன்றியும்)
எருமை-எருமைகளானவை
மேய்வான்–(பனிப் புல்) மேய்கைக்காக
சிறுவீடு–சிறு தோட்டங்களில்
பரந்தன–சென்று புக்கன
போவான் போகின்றார்-(திருவேங்கட யாத்திரை போலே) போகையையே பிரயோஜனமாகக் கொண்டு போகின்ற
மிக்குள்ள பிள்ளைகளும்–மற்றமுள்ள எல்லாப் பெண் பிள்ளைகளையும்
போகாமல் காத்து–போக ஒட்டாமல் தடுத்து
உன்னை கூவுவான்–உன்னை அழைத்தர் பொருட்டு
வந்து நின்றோம்–(உன் மாளிகை வாசலில் வந்திரா நின்றோம்)
எழுந்திராய்–(எங்களுடன் கூடுவதற்காக) எழுந்திரு;
பாடி-(கண்ண பிரானுடைய குணங்களைப்); பாடி
பறை கொண்டு–(அவனிடத்துப்) பறையைப் பெற்று,
மா வாய் பிளந்தானை–குதிரை யுருவமெடுத்து வந்த கேசி யென்னுமசுரனுடய வாயைக் கீண்டெறிந்தவனும்
மல்லரை மாட்டிய–மல்லர்களை மாளச் செய்தவனுமான
தேவாதி தேவனை–அத் தேவ தேவனை
நாம் சென்று சேவித்தால்–நாம் அணுகி அடி பணிந்தால் (அவன்,)
ஆராய்ந்து–(நமது குறைகளை) ஆராய்ந்து
ஆ ஆ என்று அருளும்–ஐயோ! என்று இரங்கி யருள்வன்;
ஏல் ஓர் எம் பாவாய் !

கோதுகலமுடைய பாவாய் கீழ்வானம் வெள்ளென்று -வெளுத்ததே

உங்கள் முகம் ஒளியே பிரதி பலித்தது -வேறே அடையாளம் உண்டோ

எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் -பனிப்புல் மேய போனதே –

அக்னி கார்ய உள் மானம் புற மானம் அறியும் வேயர் குலப்பெண் இப்படி மெய்ப்பாடு -தன்மையீ பாவத்துடன் பேசுவதே

உங்கள் முக ஒளியால் -பிரதிபலிக்க இருள் கூட்டம் போவதை பிரமிக்கிறீர்கள் –
உங்கள் ஞானத்தில் தான் கொத்தை

போவான் போகின்றாரை-மிக்குள்ள பிள்ளைகளும்- போகாமல் காத்து-நீங்கள் தான் தூங்கி இருக்க –
ஒருத்தியை விட்டாலும் போக மாட்டோம் ப்ரதிஜ்ஜை செய்துள்ளோம் –
போவதே பிரயோஜனமாக கொண்ட மிக்கு உள்ளோரை தடுத்து –

பாடிப் பறை கொண்டு-நாட்டாருக்கு மழை -இவர்களுக்கு கைங்கர்யம் தானே பறை

மாவாய் பிளந்தானை -கேசியின் வாயைப் பிறந்தவன் -கேசவனை கீழ் இருப்பதை சேர்த்து

ஆராய்ந்து-விசாரித்து

ஆவா வென்று அருளேலோ ரெம்பாவாய்-ஹா ஹா ஹந்த -அநுக்ரஹிப்பான்

கீழ்வானம் வெள்ளென்று –
கிழக்கு வெளுத்தது எழுந்திராய் -என்கிறார்கள் –
ஆண்களும் வ்ருத்தர்களும் உணர்த்துவதற்கு முன்னே எழுந்திராய் என்கிறார்கள்

அநன்யா ராகவேண பாஸ்கரேண ப்ரபாயதா-
திங்கள் திருமுகத்து சேயிழையார் -என்கிறபடியே
(ஸூர்ய ஒளி சீதாப்பிராட்டிக்கு -சந்த்ர ஒளி இவர்களது -சந்த்ர வம்சம் அன்றோ )

நீங்கள் எல்லாம் கிழக்கு நோக்கி -விடிந்தது இல்லையோ -என்று பார்க்க –
உங்கள் முகத்தின் ஒளி கீழ் திக்கில் சென்று தாக்கி உங்கள் முகத்திலே வந்து பிரதிபலிக்கையாலே
கிழக்கு வெளுத்ததாய் இருக்கிறது அத்தனை –
இது அந்யதா ஞானம் -மற்ற அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள்-என்ன

(முத்து சிப்பி வெள்ளி -கயிறு பாம்பு -சங்க பீத போல் -பண்பை மாற்றி -அந்யதா ஞானம்
விபரீத ஞானம் பொருள் மாறாட்டம்
தேஹாத்ம அபிமானம் -விபரீத ஞானம்
ஆத்மாவின் பண்பை மாறாடி -சேஷத்வ பாரதந்தர்யம் மாற்றி ஸ்வதந்த்ரன் -நினைவு அந்யதா ஞானம் )

எருமை சிறுவீடு-மேய்வான் பரந்தன காண் –
சிறுவீடு -பனிப் புல்லு மேய்ச்சலுக்கு காலமே விட்டு அவை மேய்க்கைக்காக எங்கும் பரந்தன காண்
ஸ்ரீ நந்தகோபார்க்கு முத்திறமுண்டு-(பசு எருமை ஆடு -மூன்றும் உண்டே )

(பத்தர் முக்தர் நித்யர் -த்ரிவித சேதன -திருத்தவும் -வரவேற்கவும் கைங்கர்யம் கொள்ளவும் மூவரையும் –
ஐஸ்வர்யார்த்தி -கைவல்யார்த்தி -பகவத் லாபார்த்தி மூவரும் உண்டே -கதி த்ரய மூலத்வம் –
க்ருதக-பூ புவ சுவ -நைமித்திக பிரளயம் அழியும்
க்ருத அக்ருதக -மகர் லோகம் -அழியாது -மேலே போவார்
அக்ருதக -மேல் உள்ளவை -ஜன தப சத்யம் –
பர பக்தி பர ஞானி பரம பக்தர் -ஞான தர்சன பிராப்தி தசை
மனம் மொழி மெய்
பகவத் -பாகவத -ஆச்சார்யர் நிஷ்டை -)

அவற்றின் பின்னே கிருஷ்ணனும் போம் –
பின்னை யாரைக் காண்பது – எழுந்திராய் என்ன

உங்கள் முகத்தில் ஒளியைக் கண்டு இருள் திரண்டு போகிறது அத்தனை -என்ன
விடிந்தது இல்லை என்று உன்னால் சொல்லலாவது உண்டோ என்ன
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களுக்காக நீங்கள் இத்தனை பேரோ யுள்ளது –
அல்லாதார் உணராமையாலே விடிந்தது இல்லை என்ன

மிக்குள்ள பிள்ளைகளும்
அவர்கள் ஆராயாதே போனார்கள்-நீ எழுப்பக் கிடந்தாய் –

போவான் போகின்றாரை
போகை தானே பிரயோஜனமாகப் போனார்கள் என்ன
நாம் இனி அங்கு என் -அவர்கள் போனார்களாகில் -என்ன

போகாமல் காத்து –
அவர்களைக் காற்கட்டச் செய்தோம்-
திருவாணை நின் ஆணை-(10-10-2-இனி நான் போகல் ஓட்டேன் -பசு மேய்க்க -அங்கே ) -என்ன
வேண்டாவே இவர்களுக்கு (இவர்கள் ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் அறிந்தவர்கள் )

உன்னைக் கூவுவான்
நீங்கள் தான் எழுப்புகிறது என் என்ன-
இன்னார் வாசலிலே வந்து எழுப்பினார்கள் -என்னும் தரம் பெறுகைக்காக —
எங்களுக்கு இதுவே பிரயோஜனம்

வந்து –
உத்தரம் தீரமா ஸாத்ய-யுத்த –
(விபீஷணன் வருவதை பார்த்து -வடக்கு திக்கில் வந்து கரை அடைந்து -ஆகாசத்தில் நின்றான் –
பொறுமையுடன் நின்றானே முதலிகள் புருஷகாரத்துக்கு -வந்து நின்றோம் இரண்டுக்கும் பிரமாணம் )

நின்றோம்
கஸ்த ஏவ வ்யதிஷ்டத
கோதுகலமுடைய-பாவாய் எழுந்திராய்
எங்கள் திறத்தாரோ மிகுத் தள்ளுண்டார்

கோதுகலமுடைய
இங்கே புகுந்து போகவே எம்பெருமான் கைக் கொள்ள வேண்டும்படி அவனாலே கொண்டாடப் படுமவள்

பாவாய்
நாரீணாம் உத்தம வதூ -என்று நிரூபாதிகமான ஸ்த்ரீத்வம் யுடையளாகை

எழுந்திராய்
நாங்கள் உன்னை உணர்த்த உணர்ந்தாயாகிற பெரிய தரத்தை எங்களுக்குத் தாராய்
(ஆடுக செங்கீரை -யசோதை ஆட்டுவித்தாள் என்று பட்டம் பெற்றால் போல் )

ஆத்மாநம் பூஜயந் ராம -இத்யாதி
(சர்வஞ்ஞனான நீ ராமா எங்கள் இடமும் அபிப்ராயம் கேட்டு உன்னை உயர்த்திக் கொண்டாயே –
எங்களுக்கும் இப்படி பட்டம் கொடுக்கவே கேட்டாயே -வானர முதலிகள் -)

பட்டர் விடியும் தனையும் கண் வளர்ந்து அருள
சிஷ்யர்கள் எல்லாரும் திரு வாசலிலே வந்திருக்குமா போலே

பாடிப் பறை கொண்டு
நாட்டுக்கு நோன்புக்கு பறை –
தங்களுக்கு சேவிக்கை பலம் –
(பாடி அதுக்கு பலமாக வேறே பறையைக் கொண்டால் வியாபாரம் ஆகுமே
சேவிக்கை -சேவா காலம் -பாடுகை )

மாவாய் பிளந்தானை –
நாம் சென்றால் நம் அபேக்ஷிதம் செய்யுமோ என்னில்
நமக்காகக் கேசியைப் போக்கி நம்மையும் தம்மையும் உண்டாக்கித் தந்தவன் அன்றோ
ஸ்ரீ பிருந்தாவனம் கேசியோடே வன்னியம் அற்றது –
பின்பு பெண்ணுக்கும் பேதைக்கு பயம் கெட்டு உலாவித் திரியலாய்த்து –
(விபீஷணன் ஆகாசத்தில் கை கூப்பி நிற்பதைக் கண்ட சுக்ரீவன் — நாம் அனைவரையும் முடிக்க வந்துள்ளான் – –
பெருமாளை முடிக்க வந்தவன் -பெருமாள் முடிந்தால் நாமும் முடிவோமே என்றானே )

மல்லரை மாட்டிய-தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
இப்போது பெரிய நாகரிகனாய் நமக்கு விநியோகப்பட ஸூலபனாய் இருக்கை

மல்லரை மாட்டிய
ஸக்ய பஸ்யத -என்கிறபடியே
அவ் வூரில் பெண்களுக்கு உதவின இது தங்களுக்கும் உதவிற்று என்கிறார்கள்

தேவாதி தேவனை
ஜாதோசி தேவ தேவேச –
ஸோஹம் தே தேவதேவேச –
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –

சென்று நாம் சேவித்தால்
பத்ப் யாமபி க மாச்சைவ -என்றும்
விபீஷணம் உபஸ்திதம்-என்றும்
உபஸ் தேயை ருபஸ்தித-என்றும்
அவன் நெஞ்சு புண்படுகைக்கு உடலாக
அவன் இருந்த இடத்தே சென்று அவன் செய்வதை நாம் செய்து விடுகிறோம்

(நாம் சென்று சொல்லாமல் -சென்று நாம் -சென்றது நாம் -நாம் முக்கியம் –
அவன் வந்து இருக்க வண்டி -காத்து இருக்க வேண்டிய நாமே சென்று )

நாம்
ஏஹி பஸ்ய சரீராணி -என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறோம்
ப்ராது சிஷ்யஸ்ய தாஸஸ்ய —
ப்ரணயித்வம் போனாலும் பொதுவான ஆர்த்த ரக்ஷணம் விடுமோ

ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-
ஆந்ரு ஸம்ஸ்யம் பரோ தர்ம -என்று சொல்லி வைத்தும் அது அனுஷ்டியாதே இருக்குமோ
அவன் பக்கல் ஒரு தட்டில்லை-
நம் குறை அத்தனை –
கடுகப் புறப்பட வமையும்-என்கிறார்கள் –

——————————————-

(பெண் வீட்டுக்குப் போய் கல்யாணம் இன்றும் -அவனே வந்து ஜீவாத்மாவைக் கைக் கொள்ளுகிறான் -பரகத ஸ்வீ காரம்)

நாலாயிரப்படி -அவதாரிகை –
இதுக்கு முன்பு சென்ற காலங்களுக்கு எல்லாம் தப்பிக் கிழக்கு வெளுத்தது கிடாய் -என்று
(பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் என்று )உணர்ந்த பெண் பிள்ளைகளில்
எல்லாரிலும் கொண்டாட்டமுடையாள் ஒரு பெண் பிள்ளை வாசலிலே சென்று எழுப்புகிறார்கள் –

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்து -உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-8-

கீழ்வானம் வெள்ளென்று –
இடி விழுந்தாலும் கிடந்தது உறங்கும் எத்தனையோ –
கிழக்கு வெளுத்தது காண் -எழுந்திருந்து கொள்ளாய் -என்கிறார்கள் –
ஆண்களும் வ்ருத்தர்களும் உணர்த்துவதற்கு முன்னே எழுந்திராய் என்கிறார்கள் -ஆகவுமாம்

(இது உங்களது விபரீத ஞானம் அந்யதா ஞானம் என்று உள்ளே இருந்தவள் –
பொருளையே மாத்தி விபரீத ஞானம்
பொருளின் தன்மையை மாற்றிச் சொல்வது அந்யதா ஞானம்)

(ஆத்மாவையே தேகம் என்று விபரீத ஞானம் –
சேஷத்வம் அறியாமல் ஸ்வ தந்த்ரன் என்று நினைப்பது அந்யதா ஞானம்)

வெண்ணிறத்தோய் தயிர் -என்று தயிர் வெளுக்கத் தோய்ந்தவாறே விடிந்தது என்று
அறிகையாலே உறங்காதே பல கால் தயிரைப் பாரா நிற்பர்கள் –
(இடக்கை வலக்கை அறியாமல் பாலையையும் தயிரையும் பார்த்தே காலத்தை உணருமவர்கள் )அத்தாலே கிழக்கு வெளுத்தது -என்ன

இரவெல்லாம் கிழக்கு நோக்கி விடிந்தது இல்லையோ என்று பார்க்கிற உங்கள் முகத்தின் ஒளி கீழ் திக்கில் சென்று தாக்கி
உங்கள் முகத்திலே வந்து பிரவேசிக்கையாலே கிழக்கு வெளுத்ததாய் இருக்கிறது –
அது அந்யதா ஞானம் -மற்ற அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள்-என்ன

எருமை சிறுவீடு-மேய்வான் பரந்தன காண் –
சிறுவீடு -பனிப் புல்லு மேய காலத்திலே விட்டு அவை மேய்க்கைக்காக வயல்கள் எங்கும் பரந்தன காண் -என்ன –
ஸ்ரீ நந்தகோபார்க்கு முத்திறமுண்டு(பசு எருமை ஆடு )-அவற்றின் பின்னே கிருஷ்ணனும் போம் –
பின்னை யாரைக் காண்பது – எழுந்திராய் என்ன –

நீங்கள் திங்கள் திரு முகத்து சேயிழையார் ஆகையால் உங்கள் திரு முகத்தில் ஒளியைக் கண்டு
இருள் திரண்டு போகிறது அத்தனை -அந்யதா ஞானம்
அருணோதயத்துக்கு அஞ்சி இருள் சிதறிப் போகிறது என்னவுமாம்

மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள் -என்று இவள் தமப்பனார் எம்பெருமானை எழுப்பினார் –
(விஸ்வாமித்திரர்- விஷ்ணு சித்ரர் துளஸீ ப்ருத்யர்கள் திருப்பள்ளி எழுச்சி கைங்கர்ய ஸாம்யம்
புஷ்ப கைங்கர்யத்தாலும் ஸாம்யம் உண்டே )

இவர்கள்
பெரியாழ்வார் வயிற்றில் பிறந்து அக்னி ஹோத்ராதிகள் தன்மையைப் பற்றிப் பேசாமல்
இடைமுடியும் இடை நடையும் இடைப் பேச்சுமாய் இவற்றின் வாசி அறிவதே –

எருமை பரந்தது அல்ல –
ஆதித்ய கிரணங்களுக்கு உளைந்து இருள் சிதறிப் போகிறபடி காண் -என்று இவர்களுக்குச் சொல்ல

நாங்கள் பிரமித்தோம் ஆயிடுக -விடிந்தது இல்லை என்று உன்னால் சொல்லலாவது உண்டோ என்ன

பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களுக்காக நீங்கள் ஆயிரம் பெண்கள் இவ்வளவோ யுள்ளது –
அல்லாதார் எல்லாம் உணராமையாலே விடிந்தது இல்லை என்ன

அவர்களோ தவதவ நாறுகிறார்கள் உன்னிலும் பிள்ளைகள் -(ஆற்றாமையால் பரபரத்து போனார்கள் )
அவர்கள் ஆராயாதே -(உன்னைப் போல் கிழக்கு வெளுத்ததா இல்லையா என்று ஆராயாமல் ) போனார்கள் -நீ எழுப்பக் கிடந்தாய் –

போவான் போகின்றாரை
போகையே தானே பிரயோஜனமாகப் போனார்கள் என்ன

நாம் இனி அங்கு என் -அவர்கள் போனார்களாகில் -என்ன

போகாமல் காத்து –
அவர்களைக் காவலிட்டோ செய்தது –
செய்யாதன செய்தோம் என்ற வார்த்தையை அறிந்திகோளோ -என்று நம்முடைய வ்யவஸ்தையை
உணர்த்தி நீ வந்தது இல்லை என்ன
விலங்கு இட்டால் போலே நின்றார்கள் -காலை ஒழிய நடக்கப் போமோ

நீங்கள் அவர்களை ஆணை இட்டுத் தடுத்தி கோளோ-என்ன

வாசம் செய் பூங்குழலாள் திருவாணை -என்ன வேண்டாவே இவர்களுக்கு
நீ வந்திலை என்ன அமையும் -கால் போக மாட்டார்கள் –

(மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-இருபதாவது இனி இது -சரம பர்வ நிஷ்டர்களுக்கு இது வேண்டாவே )

நீங்கள் தான் நின்றது என் என்ன

உன்னைக் கூவுவான்
இன்னார் வாசலிலே வந்து எழுப்பினார்கள் -என்னும் தரம் பெறுகைக்காக —
எங்களுக்கு இதுவே பிரயோஜனம்

வந்து –
உத்தரம் தீரமா ஸாத்ய(விபீஷணன் வடக்குக் கரையை வந்து அடைந்தான் )

நின்றோம்
கஸ்த ஏவ வ்யதிஷ்டத(ஆலம்பனமான ராம பாதம் கிடைக்கும் வரை ஆகாசத்திலே நின்றான் )

(பொறுமையுடன் நின்றானே முதலிகள் புருஷகாரத்துக்கு -வந்து நின்றோம் இரண்டுக்கும் பிரமாணம் )

கோதுகலமுடைய-பாவாய் எழுந்திராய்
எங்கள் திறத்தாரோ மிகுத் தள்ளுண்டார்
புள்ளுவம் பேசாதே போகு நம்பி
கழக மேறேல் நம்பி என்னும் இங்குத்தைக்கு எங்களோடு அவனோடு வாசி என்

(நம்பி நம்மாழ்வாரும் குலசேகரப்பெருமாளும் -குண பூர்த்தி இல்லாதவனே

அவனைக் கதைவடைத்து தள்ளினால் போல் எண்களையும் பண்ணுகிறாயே )

கோதுகலமுடைய
இங்கே புகுந்து போகவே எம்பெருமான் கைக் கொள்ள வேண்டும்படி அவனாலே கொண்டாடப் படுமவள்
அவனிலும் ததீயரை உகக்கும் வேண்டப்பட்டு ஆகவுமாம்

பாவாய்
நாரீணாம் உத்தம வதூ -என்று
நிரூபாதிகமான ஸ்த்ரீத்வம் யுடையளாகை

எழுந்திராய்
நாங்கள் உன்னை உணர்த்த உணர்ந்தாயாகிற பெரிய தரத்தை எங்களுக்குத் தாராய்
ஆத்மாநம் பூஜயந் ராம ப்ருச்ச ஸ்யஸ்மாந் ஸூஹ்ருத்தயா -இத்யாதி

(நானும் பேசலாமா -பெருமாள் அபய ப்ரதான கட்டத்தில் -வானர முதலிகள் இடம் கேட்டதும்
இந்த வார்த்தை -எங்களுக்கும் மதிப்புக் கொடுக்கவே இவ்வாறு பேசுகிறீர்)

பட்டர் விடியும் தனையும் கண் வளர்ந்து அருள சிஷ்யர்கள் எல்லாரும்–கொண்ட கோலங்களும் தங்களுமாய்
திரு வாசலிலே வந்திருக்குமா போலே

பாடிப் பறை கொண்டு
நாட்டுக்கு நோன்புக்கு பறை –
தங்களுக்கு சேவிக்கை பலம் –

பாடி
ஹிரண்யாய நம-இறே பண்டு வாய் காவல் இடுவார்கள்
இப்போது அது வேண்டாவே

மா வாய் பிளந்தானை –
நாம் சென்றால் நம் அபேக்ஷிதம் செய்யுமோ என்னில் நமக்காகக் கேசியைப் போக்கி
நம்மையும் தம்மையும் உண்டாக்கித் தந்தவன் அன்றோ
ஸ்ரீ பிருந்தாவனம் கேசியோடே வன்னியம் அற்றது –
பின்பு பெண்ணுக்கும் பேதைக்கு பயம் கெட்டு உலாவித் திரியலாய்த்து –

(கைம்மா யானைக்கு -இங்கு மா துரங்கம் கேசி -கீழேயும் நாராயணன் மூர்த்தி கேசவ -கேசி வ்ருத்தாந்தம்)

மல்லரை மாட்டிய-தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
அவன் பண்டு அன்றோ காணாச் சிறையாய்க் கிடந்தது (கோகுலத்தில் அந்தர்யாமி போல் )அவன் இப்போது பெரியவனாய் –
மதுராம் ப்ராப்ய கோவிந்த -இத்யாதி படியே
நாகரிகனாய் நமக்கு வினைக் கொம்பாய் போனான் –
நம் கிருஷ்ணனை இப்போது ப்ராஹ்மணர் (பாராசாராதிகள் )அடைய சர்வேஸ்வரன் தேவதேவன் என்று காணும் சொல்லுகிறது என்ன

மல்லரை மாட்டிய
அங்குப் போயும் நம் கார்யம் அன்றோ செய்தது
ஸக்ய பஸ்யத -என்கிறபடியே அவ் வூரில் பெண்களுக்கு உதவின இது தங்களுக்கும் உதவிற்று என்கிறார்கள்(இது அன்றோ ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் )

தேவாதி தேவனை
ஜாதோசி தேவ தேவேச சங்கு சக்ர கதாதர –
ஸோஹம் தே தேவதேவேச -(அர்ச்சனை-ஸ்தோத்ரம் -பண்ண அறியோம் கிருபா மாத்ரத்தால் அருளாய் )
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –
அவன் வேண்டப்பாட்டோடு இருக்கிலோ -என்னில்

சென்று நாம் சேவித்தால்
அது ஆர்க்கு அழகு -நம் முறையை நாம் பெற்றோம் ஆகிறோம் –
அவன் முறை கெடில் அலைந்து இறே அவர்கள் இருப்பது

சென்று
பத்ப் யாமபி க மாச்சைவ -என்றும்
விபீஷணம் உபஸ்திதம் ஸர்வ லோக சரண்யாய -என்றும்
உபஸ்தே யை ருபஸ்தித-(தண்டகாரண்ய -நான் கிட்ட வேண்டி நீங்கள் வந்தீர்களே வெட்க்கி )என்றும் –
ஸம் ப்ராப்தம் -என்றும்-சரண்யே சரணாகதம் -என்றும் –
அவன் நெஞ்சு புண்படுகைக்கு உடலாக
அவன் இருந்த இடத்தே சென்று அவன் செய்வதை நாம் செய்து விடுகிறோம்

நாம்
ஏஹி பஸ்ய சரீராணி -என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறோம்
மாசுடை யுடம்போடு தலை யுலறி
உபவாச கிருஸாம் தீ நாம்(சீதாபிராட்டி )

(மாசுடை யுடம்பொடு தலை யுலறி வாய்ப் புறம் வெளுத்தொரு போதுமுண்டு
தேசுடை திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக் கோள் கண்டாய்
பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத் தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள் என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய்)

சேவித்தால்
ஸ்ரீ பரத ஆழ்வான் படுத்துமத்தை நாம் படுத்துகிறோம்
சிரஸா யாசதஸ் தஸ்ய வசனம் ந க்ருதம் மயா–என்னப் பண்ணுகிறோம்

ஏபிஸ் ச சசிவைஸ் சார்த்தம் -பெருமாள் இரங்குகைக்கு ஆர்த்தர் பலரையும் திரட்டிக் கொண்டு போனபடி
அவர்களுக்கு கைகேயீ சம்பந்தம் இல்லையே -இரங்கவுமாமே

சிரஸா யாசிதோ மயா -பசியாற வயிற்றைக் காட்டுமா போலே
திருவடிகளில் அடிமை செய்யப் பெறாமையால் உறாவின தலையைக் காட்டுகிறார்

யாவந் ந சரணவ்
ப்ராது
உம்முடைய தம்பி அல்லேனோ

சிஷ்யஸ்ய
உம்மோடே யன்றோ நாம் மந்த்ரங்கள் கேட்டது

தாஸஸ்ய –
உமக்கு விற்கவும் ஒத்தி வைக்கவும் அடியேன் அல்லேனோ

பிரசாதம் கர்த்தும் அர்ஹஸி
கீழ்ச் சொன்னவை ஒன்றுமே இல்லாவிடில் ஆபத்துக்கு கண்டால்
காகத்துக்கு இரங்கினால் போலே ஆகிலும் இரங்க வேண்டாவோ
ப்ரணயித்வம் போனாலும் பொதுவான ஆர்த்த ரக்ஷணம் விடுமோ

நாம் சேவித்தால்
அத்தலை இத்தலையானால் -ஆர்க்கு அழகு –
அவன் ப்ரணயித்தவம் போனாலும் பொதுவான ஆர்த்த ரக்ஷணம் போமோ

ஆவா வென்று ஆராய்ந்து அருளும்
ப்ரணயித்தவம் குடி (விட்டுப் )போனாலும் சத்தா ப்ரயுக்தமான ஆர்த்த ரக்ஷணம் போமோ
ஆந்ரு ஸம்ஸ்யம் பரோ தர்ம என்று சொல்லி வைத்து அனுஷ்டியாதே பேசாது இருக்குமோ
அவன் பக்கல் ஒரு தட்டில்லை –
நம் குறையே புறப்பட்டுக் கொள் -என்கிறார்கள் –

(அம்மான் அருகில் இருக்க அம் மானைக் கேட்டது சிறிய குற்றம்
இளைய பெருமாள் மேல் பாகவத அபசாரம் மஹத் குற்றம்
இரண்டுக்குமாக – எனக்குமாக- பெருமாளை தலை வணங்குவாய் என்று பிராட்டி அருளிச் செய்தது போல் இவர்களும்)

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.